சூனிய மண்டலம் – சூனியக் காலம்

சூனிய மண்டலம் – சூனியக் காலம்

 

அண்ட சராசரங்களைக் கடவுள் எப்படி உருவாக்கினார்…? கடவுள் யார்…? என்ற இந்த உண்மைகளை எல்லாம் பல முறை சொல்லி உள்ளேன். எதன் வழி உலகம் உருவாகின்றது…? என்று வேத நூல்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதனை அறிந்து கொள்ளும் பொழுது
1.நாம் யார்…? எப்படி மனிதனானோம்…?
2.மனிதரான பின் உயிரின் உணர்வுகள் எப்படி ஒளியாகின்றது…? என்ற உண்மையையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒளியாகும் தன்மை பெற்றது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா. நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால்… நாம் அறிந்து கொள்ளும் உணர்வுகளில் அடுத்து இந்த உடலுக்குப் பின் உயிரைப் போன்றே உணர்வின் அணுக்கள் ஒன்றாகின்றது.

இவை அனைத்தும்… அகஸ்தியனால் கூறப்பட்டு அவனுக்குப் பின் வந்த வரிசைத் தொடரில் ஞானிகளால் வெளியிடப்பட்ட பல உண்மைகள் இந்த உலகெங்கிலும் பரவி உள்ளது.

அகண்ட அண்டம் என்பது சூனியம் நிலைகள் கொண்டது. இது சூனியக்காலம் என்று சொல்வார்கள். குண்டலினி யோகா ராஜ யோகம் செய்பவர்கள்
1.சூனியக் காலத்திற்குப் போகிறோம் என்பார்கள்.
2.சூனியக்காலம் என்பது இருண்ட உலகம்.
3.இருண்ட உலகில் தான் சிவன் இருக்கின்றார் என்று அவர்கள் உணர்வைச் செலுத்துகின்றார்கள்.

சூனியக் காலம் என்றால் என்ன…? என்பதைப் பற்றி அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.

இப்பொழுது நாம் காணும் அனைத்து நிலைகளும் “சூனியத்திலிருந்து உருவானது…” அது இருண்ட நிலைகள் பெற்றது.
1.நாளடைவில் அது ஆவித்தன்மை அடைந்து அந்த ஆவித் தன்மை அடைவதற்கே முதலில் வெப்பம் என்ற நிலை வருகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் பொழுது அசையும் நிலை அதாவது இயக்கும் தன்மை வருகின்றது.
3.வெப்பத்தன்மை வருவதற்கே சூனியம் தான் காரணம்… சூனியம் உருவாவதற்கு விஷம் தான் காரணம்.

அகண்ட அண்டம் இருண்ட உலகமாக இருந்ததால் அதைச் சூனிய உலகம் என்று சொல்வார்கள். வேதங்களில் இதைத்தான் சூனிய உலகம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… அது விஷமாக மாறி
1.விஷம் அடர்த்தி அடையப் படும்பொழுது விஷமற்றதைத் தாக்கி மோதலாகி வெப்பம் உருவாகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் போது… வெப்பமான பின் விரிந்து ஓடும் சக்தி பெறுகின்றது.
3.விரிந்து ஓடும் சக்தி வரும் பொழுது அதிலே ஈர்க்கும் காந்தமே வருகின்றது.

இதை உங்களிடம் பதிவு செய்கிறேன். பதிவு செய்ததை அடுத்து எண்ணி நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் உங்கள் உணர்வுகள் எல்லாம் வான்வீதியில் அகண்ட காலத்திற்கு சூனியக் காலத்திற்குச் சென்று
2.சூனியம் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் அறிதல் வேண்டும்.

சூனியத்திலிருந்து எப்படி வெப்பமானது…? வெப்பத்திலிருந்து அணுக்கள் எப்படி சுக்கு நூறாகச் சிதறி ஓடுவதும் அதிலே ஈர்க்கும் காந்தம் எப்படி உருவானது என்ற நிலையை நீங்கள் அறியலாம்.

குருநாதர் எமக்குக் கொடுத்த உண்மையின் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி அந்த நினைவினை நீங்கள் கூட்டிச் செல்லும் பொழுது இந்த முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

ஏனென்றால்
1.ஆதி… அந்த ஆரம்ப நிலையை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.
2.உலக இயக்கத்தின் உண்மைகளை நீங்கள் அறியும் சந்தர்ப்பம் வருகின்றது.
3.அதே சமயத்தில் அந்தச் சூனியம் எப்படி ஒளிமயமாகின்றது…? என்பதையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும்.

இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

காரணம் வாழ்க்கையின் நிலைகளை மட்டும் தான் அடிக்கடி பேசுகின்றோம்.

சூனியத்தைப் பற்றிப் பேசினாலும் அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை…! என்னமோ சாமி சொல்கின்றார்…! என்று சிலர் எண்ணத்தால் இதை மறுக்கின்றார்கள். மனத்தால் மறுத்து… சீக்கிரம் எதாவது சொன்னால் நாம் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பெறலாம் என்று தான் மனதை ஓட்டுகின்றார்கள்.

ஆகவே… சூனியத்திலிருந்து தோன்றப்பட்டது தான் “இயற்கையின் சக்திகள் அனைத்துமே…” என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

தியானம் செய்பவரின் கடமைகள்

தியானம் செய்பவரின் கடமைகள்

 

நாம் எதைச் சொந்தமாக்க வேண்டும்…?
1.நமது உயிருடன் ஒன்றி வாழ்ந்து
2.இந்த உயிருடன் ஒன்றி வாழும் அந்த ஒளியின் சரீரத்தை நாம் நமக்கு சொந்தமாக்க வேண்டும்.

ஆகையால் தியான வழி அன்பர்கள் ஒவ்வொருவரும் “உலகுக்கு எடுத்துக்காட்டாக…” இருக்க வேண்டும். நமது கடமைகளிலிருந்து தவறக் கூடாது.

அருள் ஒளி என்ற உணர்வுகளை நமது உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குரு வழியில் பாய்ச்சி அதைக் கடமையாக அமைத்து
2.அந்த அருள் வழியில் ஒளியாக மாற்றும் உணர்வைப் பெற வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிர்தான் நமக்குச் சொந்தம். உணர்வை எல்லாமே ஒளியாக மாற்றி விட்டால் “தனுஷ்கோடி…”

இதை நமக்குள் எடுத்து லட்சம் என்கிற பொழுது அந்த லட்சம் இந்த லட்சம் என்றும் ஒன்று இரண்டு மூன்று என்ற நிலைகள் வரும்போது, பல லட்சம் ஆகிறது.

அப்பொழுது எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்கும் போது “கோடி என்ற நிலைகளில் தனுஷ்கோடி ஆகின்றது…” எவ்வளவு அழகாக இராமாயாணத்தில் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆகையால் நாம் அனைவரும் இதனுடைய உணர்வுகளை வளர்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து… அதனுடன் சேர்த்த உணர்வின் தன்மை ஒன்றாக இணைத்துக் காற்றில் வரும் விஷ உணர்வுகளை நீங்கள் விடும் மூச்சலைகளால் மாற்றியமைத்து நாளை வரும் விஞ்ஞான அழிவிலிருந்து எல்லோரையும் காக்க வேண்டும்.

1.நியூட்ரான் என்ற நிலைகள் வரப்படும் பொழுது அது எப்படி எல்லாவற்றையும் விரட்டுகின்றதோ இதே போல்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நீங்கள் அனைவரும் பரப்பித் தீமைகளை எல்லாம் விரட்ட வேண்டும்.

ஒரு கிராமத்தில் இருக்கின்றோம் என்றால் அங்கே நோயோ, கலவரங்களோ இதைப் போன்ற சில நிலைகள் இருந்தால் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்திகளைக் கவர்ந்து அந்த மூச்சலைகளை அங்கே பரப்புங்கள். அப்பொழுது அந்தக் கிராமத்தில் உள்ள தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.

சில ஊர்களில் விவசாயம் மிக மோசமாக இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானமிருந்து
2.பயிரினங்களில் அந்தச் சக்தி படர வேண்டும் என்றும்
3.இதில் உருவாகும் அணுக்கள் தாவர இனத்தை வளர்க்கும் அணுவாக வளர வேண்டும் என்று
4.அந்த அருள் உணர்வுகளைப் பரப்ப வேண்டும்.

எனென்றால் காற்றிலிருந்து விஷத்தின் தன்மையை நுகர்ந்து அது அணுவாகி அதைச் சாப்பிடுகிறது. அதே சமயத்தில் நாம் எடுக்கும் உணர்வு கொண்டு அந்த விஷத்தன்மையை எடுத்தாலும் இது காற்றிலிருந்து வெளிப்படும் செடியின் சத்தை நுகர்ந்து அந்த உணர்வின் மலத்தை இடும்போது அது உரச் சத்தாக மாறும். அந்த அணுவும் வளரும்…! சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

நீங்கள் விடும் மூச்சலைகள் நல்ல அணுக்களாகின்றது. எனவே இதைப் போன்ற நிலைகளில் நாம்
1.நம்மைக் காக்க வேண்டும்.
2.நம் குடும்பத்தைக் காக்க வேண்டும்
3.நம் ஊரைக் காக்க வேண்டும்

இதைப் போல் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

“உலகுக்கு எடுத்துக் காட்டும் நிலைகளில்…” நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகளைப் பெறச் செய்து இதற்கு முன்னால் அறியாமல் சேர்ந்த நிலைகள் நம்மை இயக்கினாலும் அதையெல்லாம் தடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் ஒரு பொருள் கெட்டுப் போய்விட்டது என்றால் மறுபடியும் அதை திருப்பிச் செய்கிறோம். ஒரு கட்டத்தில் குறையானால் அதை நிறுத்தி நாம் செயல்பட வேண்டும்.

ஒரு செடியின் வளர்ச்சி குன்றினால் அதற்கு என்ன பக்குவம் வேண்டும்…? என்று மீண்டும் வளர்க்கச் செய்கின்றோம். இதைப் போல நாம் ஒவ்வொன்றிலும் பக்குவப்பட வேண்டும்.

வாழ்க்கையில் இப்படிச் செய்தேனே… இப்படி இருந்தேனே…! என்பதையெல்லாம் மறந்து விடுங்கள்.

நாம் எப்படி இருக்க வேண்டும்…?
1.நல்ல உணர்வுகளை வளர்க்க வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் சக்தி பெற வேண்டும்.
3.நம் குரு அருளால் அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலை நமக்குள் வரவேண்டும்.
4.அனைவரும் அந்த மெய்ப்பொருள் கண்டு அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.

இதை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை நாம் காண… சுவாசிக்க நேருகின்றது. விஞ்ஞான அறிவால் உலகைக் காக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் தன்னைக் காக்கத் தன் நாட்டைக் காக்க என்று பிழை கொண்ட உணர்வுகளைத்தான் இன்று செய்கின்றார்கள்.

ஆகவே இப்போது நாம் உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும் நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும் நாம் நல்லதை எண்ணும் போது இதனுடைய (விஷதன்மைகளின்) அழுத்தம் நல்ல குணங்களைச் சிந்திக்கும்படி செய்வதோ… நல்ல குணங்களைச் செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்.

அப்போது நமக்குள் இந்த எதிர்மறையான உணர்வுகளால் நல்ல உணர்வுகளைத் தூண்டும் நல்ல அணுக்களின் செயலைத் தடைப்படுத்தும்.

இதை மாற்ற வேண்டுமென்றால்
1.திசை திருப்புவது போல…
2.சக்தி வாய்ந்த நிலைகளில் குருநாதர் எமக்குக் கொடுத்த அரும்பெரும் அருள் சக்தியை
3.அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறோம்.

ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் அதை வளர்க்க வேண்டும்,..! எமது அருளாசிகள்.

“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்

“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்

 

தும்கூர் அருகே ஒரு மலைக் காடு இருக்கின்றது… கரடி இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் உலக அனுபவம் பெறுவதற்காகச் சுற்றுப்பயணம் சுற்றிக் கொண்டு வந்த இடத்தை எல்லாம் காட்டி
1.இந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த உணர்வை நுகந்தால் நீங்களும் எப்படி உலகை அறிய முடியும்…? என்ற காட்சிகளைக் கொடுத்தேன்.

ஆரம்பத்தில் குரு வழியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு (சத்தியத்தின் சக்தி நிலை) அதைக் காட்டித்தான் செயல்படுத்தியது. அதே போன்று
1.ஐவர் மலையில் பழைய காலக் குகைகள் எப்படி இருக்கின்றது…?
2.அங்கிருக்கக்கூடிய சில உண்மைகளையும் பிரார்த்தனை பண்ணித் தெரியும்படி செய்தேன்.
3.அந்த இடத்தில் மின்கதிர்கள் பாயப்படும் பொழுது அது எப்படி…? என்றும்
4.மின் ஒளிகள் எப்படியெல்லாம் அங்கே வருகின்றது…? என்றும்
5.அங்கே ஒளி வட்டங்களை எல்லாம் சுற்றும்படி செய்தேன்.

இத்தனை வேலைகளையும் செய்தேன். ஆரம்பத்தில் இதை எல்லாம் செய்து காட்டினாலும்… ஒன்றுக்கும் பயனில்லாது போய்விட்டது. இதெல்லாம் மனித உடல் இச்சைக்குத்தான் சென்றது.

பல அற்புதங்களைக் காட்டினாலும் உடல் ஆசை வந்து விடுகின்றது. “நான் தெரிந்து கொண்டேன்…!” என்ற நிலை வந்து விடுகின்றது,

அதை எல்லாம் விடுத்து விட்டு இப்பொழுது உங்களை அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்கின்றேன்.
1.சிறிது பேராவது நீங்கள் தயாராகி விட்டால்
2.கோடிக்கணக்கான மக்களை நல் வழியில் நீங்கள் வளர்க்க முடியும்.

அருள் உணர்வு கொண்டு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஞாபகப்படுத்துகின்றேன். காரணம் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம் இந்த உடலுக்குப் பின் நாம் எந்த நிலை அடையப் போகின்றோம்…? என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். அந்த நிலை அனைவரும் பெற வேண்டும்.

செல்வம் எவ்வளவு தேடி வைத்திருந்தாலும் அதைத் தட்டிப் பறிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது. கடைசியில் தேடிய சொத்தெல்லாம் போய்விட்டதே என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும்… பேரருளை எப்படியும் நாம் பெற வேண்டும். நீங்கள் அனைவரும் தயாராகி விட்டால் எனக்கு கொஞ்சம் சிரமம் குறைவாக இருக்கும். இல்லையென்றால் நான் இன்னும் சிரமம்தான் பட வேண்டி வரும்.

அந்தச் சிரமத்திலிருந்து நான் மீள்வதற்கு
1.ஒவ்வொருவரும் உங்கள் பார்வையில் சர்வ பிணிகளும் போக வேண்டும்
2.உங்கள் பேச்சு மூச்சும் பிறருக்கு நல்ல வழிகாட்டியாக அமைய வேண்டும்.
3.மற்றவர் குடும்பத்திலே சிக்கலை நீக்கக் கூடிய சக்தியாக வளர்ச்சிக்கு வர வேண்டும்.

மற்றவர்களால் முடியவில்லை என்கிற பொழுது… தியானம் செய்யக்கூடியவர்கள் செயல்படுத்தி உங்கள் பார்வையால் மூச்சால் எல்லா வகைகளிலும் மற்றவருக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.

அந்த நிலையத்தான் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்…!

இதில் “நான் பெரிது… நீ பெரிது…” என்ற நிலை இல்லாதபடி
1.எல்லோரையும் பெரியவராக்க வேண்டும் என்று உணர்வுக்கு வரவேண்டும்… அதன்படி நாமும் அந்த உயர் நிலை பெற முடியும்.
2.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் நாமும் உயர்கின்றோம்.

இதிலே சிறு குறை கூட வராதபடி குரு காட்டிய அருள் வழியில் நாம் வளர்ந்து காட்ட வேண்டும். அதைத்தான் நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

பல அற்புதங்களையும் நிகழ்ச்சிகளையும் காட்டத் தொடங்கினால் இந்த ஞானத்தையே கடைசியில் பேச முடியாதபடி அது தடையாகிவிடும்.

எமது அருள் உபதேசங்கள் ஒலி நாடாக்களில் வெளி வருகின்றது.
1.கூடுமான வரையிலும் ஒவ்வொருவரும் அதை எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
2.இந்த உணர்வின் ஞானம் உங்களுக்குள் வரட்டும்.
3.உணர்வின் தன்மை ஆழமாகப் பதிவாகும்… உங்களுக்குள் மெய் ஞானம் வளரும்.

காலங்கள் மிகக் குறுகியதாக இருக்கின்றது அதற்குள் நாம் அனைவரும் வளர்த்து தயாராக வேண்டும். அழியாச் செல்வமான ஒளிச் சரீரம் பெறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

வசிஷ்டரும் அருந்ததியும்

வசிஷ்டரும் அருந்ததியும்

 

அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் பதினாறு வருடங்கள் வளர்ச்சி பெறுகின்றான். பதினாறாவது வயதில் அக்கால மக்கள் அவனுக்குப் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். திருமணத்தைச் செய்து வைக்கும் பொழுது கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றார்கள்.

துருவன் தான் கண்ட உண்மைகளைத் தன் மனைவி பெற வேண்டும் என்று உணர்வுப் பூர்வமாகச் சொல்லுகின்றான்.

அவனுடைய மனைவி கேட்கின்றது. தனக்குள் பதிவு கொண்ட உணர்வின் துணை கொண்டு “விண்ணை நோக்கி ஏங்குகின்றது…” இவன் கண்ட பேருண்மைகளை அவளும் காணுகின்றாள்… அறிவுபூர்வமாக அறிகின்றாள்.

தன் கணவனால் பெற்ற சக்தியால் பேரின்பப் பேரானந்த நிலைகள் அடைகின்றாள்.

1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணரும் பருவமும்
2.அதை நுகர்ந்தறிந்து தனக்குள் மகிழ்வுறும் உணர்வாக வெளிப்படுத்துவதையும்
3.நஞ்சினை ஒடுக்கும் ஆற்றலாக… “தான் நுகரும் உணர்வு ஒளிக் கற்றைகளாகத் தன் உடலில் இருந்து வெளிப்படுவதையும்…” உணர்கின்றாள்.

இவ்வாறு தன் கணவனால் பெற்ற சக்தியால் இந்தப் பிரபஞ்சத்தை அறிந்திடும் உணர்வுகள் தனக்குள் வளரும் தன்மை பெற்று…
1.கணவன் அந்த உயர்ந்த நிலைகளை மேலும் மேலும் பெற வேண்டும் என்ற
2.ஏக்க உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றாள்.

துருவனோ தான் உபதேசித்த உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அதன்வழி தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வுகளைக் கண்டு அவனும் பேரானந்தப் படுகின்றான். அப்பொழுது இரு மனமும் ஒன்றாகி “ஒருவரை ஒருவர் உயர்த்தி எண்ணும் நிலை வருகின்றது…”

ஒருவர் சொல்லை ஒருவர் உயர்த்தும் நிலை வரும் பொழுது தான் அதற்கு நளாயினி என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள். தன் கணவன் சொல்லைச் சிரமேல் கொண்டு அதன் வழி நடப்பதை நாமெல்லாம் புரிந்து கொள்வதற்காக நளாயினி என்று காரணப்பெயரை வைக்கின்றார்கள்.

தன் கணவன் சொன்ன சொல்லைத் தனக்குள் உயர்த்தி அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணர்வதோடு மட்டுமல்லாது அகண்ட உலகில் நட்சத்திரங்கள் எவ்வாறு உணவை உட்கொள்கின்றது…? என்பதை அறியும் பருவம் வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள் உணவாக உட்கொண்ட உணர்வுகள் நமது பிரபஞ்சத்தில் பரவும் பொழுது சூரியன் அதை உணவாக உட்கொள்வதையும் அதன்வழி அது வளர்ச்சி பெற்று வெளிப்படும் உணர்வுகளால் கோள்களும் அணுக்களும் எப்படி உருப்பெறுகின்றது…? என்ற நிலையையும் அவள் அறிகின்றாள்.

1.தான் கண்ட உண்மையைத் தன் கணவருடன் ஒன்றி அந்த உண்மையின் தன்மைகளைச் சொல்வதும்
2.இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு அதன்ன் வழியில்
3.அகஸ்தியன் தன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும்… மனைவி உயர்ந்த சக்தி பெறுகிறதென்றும் உணர்கின்றான்.

அந்த உணர்வுகள் அனைத்தும் அவர்கள் உடல்களில் விளையப்பட்டு இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை பெறுகின்றது. இரு உயிரும் எதைக் கவர்ந்ததோ அதைக் கருவாக உருவாக்கும் திறன் பெறுகின்றார்கள்.

துருவனின் உடலில் விளையும் உணர்வுகள் துருவ மகரிஷியின் மனைவியின் உடலிலும் விளைகின்றது.

அதற்கு அருந்ததி என்று, காரணப் பெயரை வைக்கின்றார்கள். தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி அதனுடன் இணைந்து வாழ்ந்திடும் நிலையை அருந்ததி என்று பெயரை வைக்கின்றார்கள்.

வசிஸ்டரும் அருந்ததியும் என்றால் வசிஸ்டர் ஆண்பால் அருந்ததி தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகள்.
1.இருவரும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மையை இரண்டறக் கலந்து ஒன்றாக
2.உயிருடன் இணைக்கும் பருவம் பெறுகின்றார்கள்.

உயிருக்குள் வெப்பம் என்ற நிலைகள் இருப்பினும் ஈர்க்கும் காந்தம் பெண்பால் அருந்ததி என்றும் தன்னுடன் இயக்கும் உணர்வுகளை வசிஸ்டர் என்றும் காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

இவ்வாறு வளர்ந்த உணர்வுகள் “சத்தியவான் சாவித்திரி…” உயிருடன் ஒன்றிய உணர்வாக மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் தகுதி பெறுகின்றார்கள்.

இதைத்தான் நமது ஞானிகள் நாமெல்லாம் கண்டுணர்வதற்குச்
1.சந்தர்ப்பத்தால் ஏற்படும் இணைப்பும் அதனால் உருப்பெறும் சக்தியும்
2.அவைகளுக்குக் காரணப் பெயர்களை வைத்து அழைத்து அகஸ்தியன் தொடர்களை நாமும் கண்டுணரும்படிச் செய்கின்றார்கள்.

அவ்வழியில் வளர்ந்தவர்கள்தான் எதைக் கூர்மையாக எண்ணி அந்த உணர்வினை இருவரும் ஒன்றாக இணைந்துப் பெற்றனரோ… இணைந்து இன்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.

துருவ நட்சத்திரமாக வாழ்ந்தாலும் அகண்ட உலகின் தன்மையைத் தன் உணர்வுக்குள் பெறும் தகுதியும் பெறுகின்றனர்.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் வரும் நிலையைக் கவர்ந்து அது உமிழ்த்தும் உணர்வலைகள் பால்வெளி மண்டலங்களாகப் படர்கின்றது. அணுக்களின் தன்மைகள் சுழற்சியில் வரப்படும் பொழுது தூசிகளாக மாறுகின்றது.

இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பொருளைக் காற்று அழுத்ததால் அழுத்தப்படும் பொழுது அதை மிகவும் நுண்ணிய தூசிகளாக (பவுடர்) மாற்றுகின்றார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும், துருவ நட்சத்திரமாகும் பொழுது
1.பிற மண்டலங்கள் அகண்ட உலகில் அது பெறும் உணர்வுகள் தூசுகளாக வருவதையும்… பிரபஞ்சத்தில் அது பரவுவதையும்
2.பிரபஞ்சத்தில் பரவுவதை நமது பூமி துருவப் பகுதியில் ஈர்க்கப்படும் பொழுது இடைமறித்து அந்த உணர்வின் தன்மையை
3.எப்படி, நமது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் துருவப் பகுதியில் இடைமறித்து அதைத் தனக்குள் எடுத்து வளர்க்கின்றதோ
4.அதைப் போன்றுநமது பூமியில் விளைந்த இவர்கள் இருவரும் ஒன்றானபின்
5.அதைக் கருவாக்கும் நிலைகள் பெற்று ஒளியின் சுடராக இன்றும் மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் இருவரும் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வை ஒளியின் அணுவாக மாற்றியது போன்று அக்காலங்களில் பெற்ற மற்ற மக்கள் ஆறாவது அறிவு ஏழாவது நிலைகள் பெற்றுத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள். “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைந்து விட்டார்கள்.

ஆகவே நாம் அனவரும்
1.இதே வழியில் அதை உற்று நோக்கி அந்த உணர்வினைக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால்
2.நாமும் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து ஒளியின் சரீரமாவது திண்ணம். எமது அருளாசிகள்.

உலகம் சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!

உலகம் சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!

 

விஞ்ஞான உலகத்தால் வரக்கூடிய பேரழிவும்… மனிதன் ஆசையின் நிலைகள் கொண்டு வரும் பொழுது ஒன்றைக் காக்க என்று தீவிரவாதமும் மதத்திற்குள் மதம் தீவிரவாதமும்… இனத்திற்குள் இனம் தீவிரவாதம்… வீட்டிற்குள்ளேயே தீவிரவாதம்… தெருவிற்குள்ளும் தீவிரவாதம்… வளர்ந்து விட்டது.

என்னமோ பெரிய இவன் மாதிரிப் பேசுகின்றான் என்று இது போன்ற தீவிரவாத உணர்வுகள் எல்லோருக்குள்ளும் பெருகி வரப்படும் பொழுது
1.நல்லதைக் காப்பது யார்…? நல்லதை காக்கும் ஆள் இல்லை…!
2.ஆக… இந்த உலகமே சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான் இது போன்ற சந்தர்ப்பங்களில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!
3.நம் குருநாதர் கொடுத்த அருள் உணர்வு கொண்டு ஒவ்வொரு திசையிலும் மகான்களை நாம் தோற்றுவிக்க வேண்டும்.

ஒரு சமயம் நபிகள் நாயகம் தோன்றினார் அரக்க உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து தோன்றினார்.

இங்கே தீமையின் நிலைகள் அதிகரிக்கப்படும் பொழுது அதை மாற்ற வியாசகர் வந்தார்… அதே போல் வான்மீகி மகரிஷி வந்தார். மகாத்மா காந்தி வந்தார். தீமையிலிருந்து விடுபட இராமலிங்க அடிகளும் தோன்றினார்.

இராமகிருஷ்ண பரமகம்சரும்… பக்தி மார்க்கங்களில் எத்தனை அதர்மங்கள் நடக்கின்றது…? அதிலிருந்து மக்கள் மீள வேண்டும்…! என்று அவர் உணர்த்திச் சென்றார்.

1.இப்படிப்பட்ட மகான்கள் தோன்றி வளர்ச்சி பெற்றாலும் அது நிலைத்திருக்கிறதா…?
2.அது தோன்றி உருப்பெற்ற இடங்களில் இன்று பார்த்தால் “நான் பெரியவன்… நீ பெரியவனா…?” என்று தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
3.இராமகிருஷ்ணருக்குச் சீடராக வந்த விவேகானந்தருடைய தத்துவங்களையும் மாற்றி விட்டார்கள்.

கடவுளைக் காட்டுகின்றாயா…? என்று விவேகானந்தர் கேட்கின்றார். கடவுளைக் காட்ட முடியாது… ஆனால் உணர முடியும் என்று இராமகிருஷ்ணர் உணர்த்துகின்றனர்.

உனக்குள் உள் நின்று இயக்கும் உணர்வு எதுவோ… எதை நீ நுகர்கின்றாயோ அந்த உணர்வின் இயக்கமாக உடல் இயங்குகின்றது.
1.உள் நின்று இயக்குவதே கடவுளாகின்றது.
2.எதன் உணர்வு வலுவோ அதுவே உன் உடலில் இருந்து இயக்குகின்றது என்று தெளிவாக்குகின்றார் இராமகிருஷ்ணர்.

இதைத்தான் ஒவ்வொரு மனிதனும் எப்படி இயக்க வேண்டும் என்று… ஒரு மனிதனை நல்லவனாக்க வேண்டும் என்றால் “அந்த நல்ல உணர்வை நுகரப்படும் போது என்னை நல்லதாக்குகின்றது…” ஒவ்வொரு மனிதனுடைய எண்ணங்களையும் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது அது எந்த வகையில் ஒன்று சேர்த்து இணைகின்றது என்று விவேகானந்தர் தெளிவாகக் கூறியுள்ளார்.

கருவுற்ற காலத்தில்… சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வால் நடக்கும் சில விசித்திர நிகழ்வுகள்

கருவுற்ற காலத்தில்… சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வால் நடக்கும் சில விசித்திர நிகழ்வுகள்

 

உயிரினங்களில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையும் கர்ப்பமாக இருக்கும் உயிரினங்களில் மற்ற உயிரினம் துரத்தி வரப்படும் பொழுது அந்த உணர்வினை நுகரும் பொழுது
1.கருவுக்குள் இருக்கும் அந்தச் சிசுவுக்குள் இந்த உயிரினத்தின் உணர்வுகள் ஒட்டிய பின்
2.கருவிலேயே எப்படி எல்லாம் மாற்றமாகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

குரங்கை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ மாற்றங்கள் உண்டு, மற்ற மிருக இனங்கள் இதைத் துரத்தி வரும் நிலையில் உற்றுப் பார்க்கும் பொழுது கர்ப்ப நிலைகளில் அந்த உணர்வுகள் படப்பட்டுப் பரிணாம வளர்ச்சியிலும் அதனுடைய வளர்ச்சி தொடர்கள் எவ்வாறு வருகிறது…? என்று உருமாற்றங்கள் எப்படி ஆகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

மனிதர்களாக நாம் வாழுகின்றோம். கர்ப்பமாக இருக்கும் தாய் ஒரு ஊனமுற்ற குழந்தையை உற்றுக் கூர்மையாகப் பார்த்து அதனுடைய க்ஷேமத்தை விசாரித்து…
1.பரிவு கொண்டு அந்த குழந்தையைப் பற்றி அறியும் நிலையில் ஊனமுற்ற உணர்வினை நுகர்ந்து விட்டால்
2.தன் கருவில் இருக்கும் குழந்தையும் ஊனமான குழந்தையாக மாறும்.

இதைப் போலக் கருவிலே வளரும் உயிரினம் தன் தாய் கவரும் உணர்வுகள் கொண்டு எவ்வாறு விளைகிறது…? என்று கீதையிலே தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அதாவது கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!

கண்கள் மற்ற உணர்வினை நுகர்ந்து அந்தத் தாய்க்கு இந்த உணர்வைக் கொண்டு இயக்கினாலும் கருவில் வளரக்கூடிய சிசுவிற்கும் இந்த உணர்வுகள் பதிவாகி அந்த உணர்வு பதிவான பின்
1.கண்ணால் பதிந்த நிலைகள்… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது
2.அந்த அறிவின் தன்மை அங்கே வருகிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்கு
3.வியாசகர் கண்ணின் இயக்க நிலைகளை அப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்.

பல கோடிச் சரீரங்களில் உயிர் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நிலைகளையும்… அதிலே வளர்ச்சி பெற்று வந்த மனித நிலைகளையும்… ஊனமுற்ற குழந்தைகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்ற நிலையையும் குருநாதர் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டில் ஒரு புலி கர்ப்பமாக இருக்கின்றது. ஆனால் அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் தன் இரைக்காக ஒரு மானை அந்தப் புலி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் அடிபட்டு நகர முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால் கர்ப்பமாக இருக்கின்றது. தன் இரைக்காக எண்ணிப் பார்க்கின்றது.

அந்த மானையே எண்ணி எண்ணிக் கண்களால் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் அந்தப் புலியின் கருவிலே விளையத் தொடங்குகிறது.

அந்தப் புலிக்கும் மானுக்கும் உண்டான வித்தியாசங்கள் இருந்தாலும்…. அந்தப் புலி ஏக்கத்தால் மானையே எண்ணி ஏங்குகின்றது.
1.இந்த உணர்வின் சத்து கருவில் இருக்கக்கூடிய உயிரணுக்களில் இது இணைக்கப்பட்டு
2.அதற்குள் எவ்வாறு விளைகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

இதை உங்களிடம் லேசாகச் சொல்கிறேன். ஆனால் என்னைக் குருநாதர் பட்டினியாக இருந்து அதைக் காணும்படி செய்தார். எந்தப் பக்கமும் நகர விடவில்லை.

உயிரினங்களில் தான் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… கண்ணால் பார்த்து உணர்வை நுகர்ந்த உயிர் தனக்குள் உணர்வாக அமையப் பெற்று அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு உடலுக்குள் உணர்வுகள் பதிந்த பின் “கருவில் வளரும் சிசுக்களுக்கு எவ்வாறு அது ஒட்டுண்ணி போன்று உணர்வுகள் இயக்கப்படுகிறது…?” என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இரைக்காகத் தேடினாலும் புலியின் உணர்வுக்குள் மானையே எண்ணி ஏங்குகிறது. ஏனென்றால் உடலில் அடிபட்டிருப்பதால் தன் இரையைப் பிடிக்க முடியவில்லை.

கண் கொண்டு மானையே பார்த்து ஏக்கத்தின் உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய புலிக் குட்டிக்குள் இது படப்பட்டு இந்த உணர்வுகள் அதனுடைய ரூபம் எப்படி மாறுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

அந்தப் புலி குட்டி போடும் வரையிலும் இந்த இடத்தை விட்டு நகர விடவில்லை. அதனின் உணர்வும் வளர்ச்சியும் அறிவதற்காக அங்கேயே அமர்ந்து தியானிக்கும்படி செய்தார்.

ஜோசியம் பார்ப்பவர்கள் மற்றொருவர் உணர்வினை நுகர்ந்து “அவர்கள் என்னென்ன நினைத்தார்கள்…?” என்று சொல்கின்றார்கள் அல்லவா…!

இதைப் போலத் தான் அந்த உணர்வின் இயக்கமும் அதனின் அலைகள் எவ்வாறு தொடர்ந்திருக்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படி இந்த உணர்வின் அறிவை எனக்கு ஊட்டினார்.

அந்தக் கருவிலிருக்கக்கூடிய குட்டிக்கு மானின் உணர்வுகள் அதிகமாகப் பட்டபின்… மானின் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகள் இந்த புலி உடலுக்குள் எப்படி அடைகின்றது…?

அதைப் புலி சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்து வரும் பொழுது
1.கருவிலே விளையக்கூடிய சிசு புலியின் ரூபம் மாறி மானின் நிலைகள் எவ்வாறு இணைகின்றது…?
2.இரண்டும் கெட்டானாக அது விளைகின்றது… இதை நேரடியாகவே தெரியப்படுத்துகின்றார் குருநாதர்.

நீங்கள் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். உலகத்தில் சில இடங்களில் ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது. ஆனால் மனித உடல் இருந்தது… மனிதனின் தலையும் மிருக உடலும் இருந்தது என்றால்லாம் பார்த்திருப்பீர்கள்.

காரணம்… ஏக்க உணர்வு கொண்டு பிறிதொன்றை உற்றுப் பார்த்து நுகரப்படும் பொழுது கருவுக்குள் அப்படி எல்லாம் மாறி விளைகின்றது.

ஆகவே… விஞ்ஞான அறிவால் இன்று எத்தனையோ உண்மைகளை நாம் அறிகின்றோம். ஆனால் மெய் ஞானிகள் ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் கண்டுணர்ந்து புலனறிவாலேயே தனக்குள் விண்ணின் ஆற்றலைப் பருகி அவர்கள் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை குருநாதர் காட்டினார்.
1.என் கண் புலனறிவிற்கு அந்த ஊட்டச்சத்தை ஊட்டி அந்தப் புலனின் நிலையைக் கொண்டு உற்றுப் பார்த்து
2.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று அறியம்படிச் செய்தார்.

அந்த அனுபவத்தைத் தான் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் கல்வியறிவு அற்றவன். குருநாதர் உணர்வின் வலுப் பெற்று அந்த உணர்வின் துணையால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை
1.நீங்கள் அனைவரும் இதை அறிந்து கொண்டால்
2.நமது சாஸ்திரம் எத்தகைய நிலைகள் மெய் உணர்வை நமக்கு உணர்த்தி உள்ளது…? என்று அறியலாம்.

மகாபாரதமோ இராமாயணமோ கந்த புராணமோ சிவபுராணமோ இவை அனைத்திலும்… அதிலே கொடுக்கப்பட்ட உண்மைகள் சாஸ்திரப்படி மெய்.

இந்த உண்மைகளை மனிதன் உணர்ந்தால் அந்த ஞானிகள் சென்ற பாதையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை பெறுவது திண்ணம். நாம் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதை குருநாதர் தெளிவாக்கினார்.

லேசர் இயக்கம்

லேசர் இயக்கம்

 

கண்ணின் நினைவுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்…? வெகு தொலைவில் இருப்பான் எதிரி. அவனைக் கோபமாக நினைத்தவுடன் என்ன நடக்கின்றது…?

இந்தத் தீமையின் உணர்வுகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவன் செயலற்றவனாக ஆகின்றான், அவன் உணர்வு நமக்குள் இருப்பதால் கண் வழி நம் உணர்வைச் செலுத்தும் பொழுது இந்த லேசர் இயக்க ஒளிகள் அங்கே தாக்குகின்றது.

அன்று ஈராக்கில் யுத்த நேரத்தில் பாதாளத்தில் அவர்கள் மறைந்திருந்து பல வேலைகளைச் செய்தார்கள். ஆனாலும் அதைக் கண்டு கொள்வதற்காக லேசரைச் செயல்படுத்தினார்கள்.

மின் கதிர்களால் இயக்கப்பட்டது தான் சில நிலைகள். கதிரியக்கப் பொறிகளை அந்த இடத்திலே பாய்ச்சப்படும் பொழுது அங்கே உள்ளே இருக்கக்கூடிய நிலைகளைப் படங்களாக எடுத்துக் காட்டுகின்றது.
1.எக்ஸ்ரே எப்படி உடலுக்குள் ஊடுருவி படமாகக் காட்டுகின்றதோ இதே போன்று
2.லேசர் இயக்கங்களை பயன்படுத்தி அங்கே ஈராக்கில் மறைந்திருந்த நிலைகளைக் காணுகின்றார்கள்.

குண்டுகளைப் போட்டாலும் எதிர்த்துத் தாக்கும் தன்மையும் அதைத் தாங்கக்கூடிய கான்கிரீட்டுகளாகவும் அவர்கள் போட்டு வைத்திருந்தார்கள்.

எதிர்நிலை எக்கோ… பதிவு செய்யக்கூடிய நிலை இருந்தாலும் அதையும் அறிந்து லேசர் மூலம் வலுவாக இயக்குகின்றார்கள். அந்த லேசரைப் பாய்ச்சி அதன் துணை கொண்டு ஊடுருவி… கதிரியக்கங்களை உள்ளே பாய்ச்சி… அந்த கம்பிகளை உருவாக்கும் சக்தி கொண்டு வருகின்றான்.
1.பின்பு தான் குண்டுகளைப் போட்டு பாதாளத்தில் இருக்கும் அந்தச் சுரங்கங்களைக் கண்டறிகின்றார்கள்
2.ஏனென்றால் இப்படித்தான் அன்று யுத்தம் செய்தார்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் யாம் கண்டது தான், தெரிந்து கொண்டோம் என்றால் உங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டுமல்லவா…!

எத்தனையோ அடுக்குகளை வைத்துத் தான் எதிலும் நொறுங்கிவிடாதபடி அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். அதற்காக வேண்டி ஒவ்வொரு அடுக்கிலும் எதிர்ப்புணர்வை வைத்திருந்தார்கள்.

லேசர்… எதிர் நிலையை மாற்றி அந்த தாக்குதலை நிறுத்தக்கூடிய நிலைகளையும் கண்டுபிடித்துச் செயல்படுத்தினார்கள். ஆனால் லேசர் மூலம் ஒளி அலைகளைப் பாய்ச்சி அங்கிருக்கும் படத்தைப் பதிவாக்குகின்றார்கள்.

பூமிக்கு அடியில் இருப்பதை எப்படிக் காணுகின்றார்கள்…?

1.மேலே விமானத்தில் பறந்து கொண்டே உணர்வலைகளைப் பாய்ச்சி மோதப்படும் பொழுது
2.அது அப்படியே கோடு போட்டுக் கொண்டே செல்கின்றது.

அதை வைத்து இந்த இடத்தில் நீர் இருக்கின்றது இன்ன இடத்தில் எண்ணெய் இருக்கின்றது இன்ன இடத்தில் பழைய காலத்து உலோகங்கள் இருக்கின்றது இங்கே பல மிருகங்கள் இருக்கின்றது என்பதை விமானத்தில் பறந்து செல்லும் பொழுதே எதிர் நிலைகளை வைத்து லேசர் இயக்கத்தின் மூலம் தான் கண்டுபிடிக்கின்றார்கள்.

விஞ்ஞானி இப்படித்தான் கண்டு கொள்கிறான். ஆனால் மெய்ஞானி “தன் எண்ணத்தால்… அகண்ட அண்டத்தையும் அளந்தறிந்தான்…”

நாம் இந்தச் சூரிய குடும்பத்தில் தான் வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம் ஆனால் இதைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும் என்றால் ராக்கெட்டில் எவ்வளவு காலம் பிடிக்கிறது…?

நம் குருநாதர் என்ன செய்தார்…?
1.எண்ணத்தின் மனோநிலை ஆனாலும் நாம் எண்ணும்போது உடனடியாக அங்கே டச் ஆகின்றது (இணைக்கின்றது).
2.2000 சூரியக் குடும்பத்திற்கும் மனதைப் பாய்ச்சும்படிச் செய்கின்றார்.
3.ஒவ்வொரு சூரியக் குடும்பமும் என்ன செய்கிறது…? அதிலே ஒதுங்கிய தூசிகள் என்ன செய்கின்றது…?
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து எப்படி வாழ்கின்றது…? என்பதை எல்லாம் குருநாதர் காட்டுகின்றார்.

மரம் செடி கொடியாக இருந்தாலும் தனித்து வாழ முடியாது. ஒரு செடி உருவானாலும் “அதைத் தொடர்ந்த தாவர இனங்கள் மடிந்தால்…” இதற்குச் சத்து குறையும் இதுவும் வீழ்ச்சி அடையும்.

சில தாவர இனங்கள் கலந்து புதுப் புதுச் செடிகளாக உருவாகி இருக்கும். ஆனால் கலந்த செடிகள் மடிந்து விட்டால் சிறிது நாளைக்குத் தான் இந்தப் புதியதாக உருவான செடிகள் வளரும். கடைசியில் அதுவும் மடிந்துவிடும்.

இது எல்லாம் குருநாதர் தெளிவாக எமக்குக் காட்டிய நிலைகள்.
1.காடுகளுக்கு மேடுகளுக்கும் எம்மை அனுப்பி இந்த உண்மைகளை உணரும்படிச் செய்து
2.ஞானிகள் காட்டிய வழியில் மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்ற வழியைக் காட்டுகின்றார்.

உடலை வளர்க்க… கௌரவத்தை வளர்க்க… தன்னையே தான் மெச்சிக் கொள்ள… யாம் சக்தி கொடுக்கவில்லை

உடலை வளர்க்க… கௌரவத்தை வளர்க்க… தன்னையே தான் மெச்சிக் கொள்ள… யாம் சக்தி கொடுக்கவில்லை

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் இணைத்து விட்டால்
1.அது இந்த மனித வாழ்க்கையின் நிலைகளைத் தணித்து
2.அருள் உணர்வு என்ற நிலையை நமக்குள் பெருக்குகின்றது.

அது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

நான் இதையெல்லாம் உங்களிடம் சும்மா கொடுக்கவில்லை.
1.ஈஸ்வரபட்டர் எனக்குச் சும்மா கொடுக்கவில்லை.
2.அவர் உணர்வின் தன்மையைப் பதிவாக்கினார்.
3.அந்த நினைவின் தன்மை தான் நாம் எடுக்கின்றோம்.

இந்த உடலில் இச்சைக்காக வாழ கற்றுக் கொண்டோம் என்றால்
1.உடலை வளர்க்கவும்… அதிலே கௌரவத்தை வளர்க்கவும்
1அதை வைத்து என்னை மெச்சிக் கொள்ளவும் என்று நான் இருந்தேன் என்றால் “உடலின் இச்சைக்குத் தான் வாழ முடியும்…”

உடலுக்குப் பின் குருநாதர் கொடுத்த சக்தி பயனற்றதாகப் போய்விடுகின்றது.

ஆகவே உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் “உடலின் இச்சைக்கு என்று இல்லாதபடி…” எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆசையைத் தூண்டுதல் வேண்டும்.

நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை நான் பெறுகின்றேன். உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நான் அதைப் பெறுகின்றேன்.

இதைத்தான் குருநாதர் எனக்குள் உருவாக்கினார்.

ஆகவே இந்தப் பேருண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி அந்தப் பதிவை நீங்கள் வளர்ப்பதற்குத் தான் “தொடர்ந்து உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டு வருகின்றேன்…”

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையே தியானமாக அமைக்க வேண்டும் என்று சொல்வது அதுதான்.

இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”

இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”

 

ஆண்டவனின் நாமத்தையே மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டிருந்தால் “இறைவனை அடையலாம்…” என்று பலர் அக்காலத்தில் முயற்சி செய்துள்ளார்கள்.

சிவ தத்துவத்தில் எடுத்துக் கொண்டால் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று தொடர்ந்து அந்த ஒலிகளை எழுப்புகின்றார்கள். இந்த உணர்வின் இயக்கத்தின் தொடர் கொண்டு
1.தன் உடலில் உள்ள அணுக்களை தன்னுடன் இணைந்து இயங்கக் கற்றுக் கொள்கின்றார்கள்.
2.அந்த உணர்வின் ஒளி கற்றைகளாக ஆன நிலையில் சரீரத்தை மூடிவிட்டாலும்
3.அதே உணர்வுகள் நுகரப்பட்டு வெப்பத்தின் துணை கொண்டு உடலில் அது இயங்கிக் கொண்டே இருக்கும்.
4.அந்த உணர்வுகள் கடைசி நிமிடத்தில் எதுவோ எல்லாவற்றிலும் இந்த உயிரைப் போலவே இந்த உணர்வுகள் அடங்கி விடுகின்றது.
5.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற இந்த ஒலி மீண்டும் அது வந்து கொண்டே இருக்கும்… அதன் இயக்கமாக அது மாற்றி விடுகின்றது.
6.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் தன் உடலில் உள்ள அணுக்களுக்கு ஆன பின்
7.உடல் இருக்கும் ரசங்கள் குன்றும்… உடல் நலியும்… உயிர் உள்ளேயே இருக்கும்.

இதை நேரடியாக எனக்குக் காட்டுவதற்காக இமயமலைச் சாரலில் இரண்டு மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

முதலிலேயே ஹரித்வார் அருகில் மரத்துக்கடியிலே ஜெபித்துக் கொண்டிருந்தவரைக் காட்டினார். பெரிய வெள்ளத்தை வரவழைத்து கரைக்கச் செய்தார். கரைந்த பின் ஓ…ம் நமச்சிவாய…! என்று அங்கே சப்தம் வருகின்றது

அதை ஜெபித்தாலும் இந்த உடலுக்குள் தான் சிறைப்பிடித்து இருக்கின்றார். அதற்கு மேல் அவர் விண் செல்லவில்லை. உடலின் உணர்வுக்கே செல்கின்றார்.

ஆனால் கரைத்த பின் வேறு வழி இல்லை அடைப்பட்ட நிலையில் இருந்து எதிரொலி… உணர்வின் ஒலி வரப்பப்படும் பொழுது அவருக்கு மிகக் கஷ்டமாகி விட்டது.

அப்பொழுது குருநாதர் நேரடியாக நீ அவரைப் பார்க்கக் கூடாது என்றார். ஏனென்றால் அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நீ அவரை எண்ணி அந்த சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்தாய் என்றால் இது அவருக்குள் சேரும் என்றார்

காலை நான்கு மணிக்கு “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர் பெற வேண்டும்…” என்று இந்த உணர்வின் ஒலிகளை அங்கே பரப்பப்படும் பொழுது
1.அதன் ஈர்ப்பால் அந்த ஆன்மா வெளி வருகின்றது.
2.ஒளியின் சரீரமாக இருளுக்குள் அடைப்பட்டிருந்த நிலை ஒளியாக மாறி விண் செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
3.அதன்படி அந்த ஆன்மாவை நீ விண் செலுத்து என்றார் குருநாதர்.

இதே மாதிரி இன்னொரு இடத்திலே ஜோஸ்மெட்டுக்கு மேலே ஒருவர் புதையுண்டு இருக்கின்றார். அங்கே இராணுவப் பாதுகாப்பு இருக்கின்றது.

ஒரு பெரிய ஓடை வருகின்றது. அந்த ஓடைக்குள் திட்டுகள் இருக்கின்றது. மழை பெய்தால் தண்ணீராக வரும். ஆனால் கரையின் ஓரத்தில் திட்டுக்குள் அடங்கி இருக்கின்றார்.

ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதாவது ஹரி ஓம் நமோ நாராயணா என்றால் “சூரியனின் இயக்க நிலை…”

அந்த உணர்வின் தன்மையை எடுத்து ஒளியின் உணர்வாக அவரும் இந்த உடலுக்குள் தான் அடங்கி இருக்கின்றார்.

அதை எல்லாம் நேரடியாகவே எமக்குக் காட்டுகின்றார். உடலுக்குள் அடங்கியிருக்கின்றது… செவி கொண்டு அந்தச் சப்தத்தை நீ கேள் என்றார் குருநாதர்.

இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் வந்து என்ன செய்கின்றீர்கள்…? என்ன பார்க்கின்றீர்கள்…? என்று கேட்கின்றார்.

அங்கே நான் காதை வைத்து அந்தச் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் அல்லவா. ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டாம் என்று குருநாதர் சொல்லி விட்டார்.

நான் ஊரைச் சுற்றி பார்க்க வந்தேன். இங்கே மலைப்பிரதேசமாக இருக்கின்றது நிலநடுக்கம் ஏதும் வருகின்றதா…? என்று சும்மா பார்க்கின்றேன் என்று சொன்னேன்.

அதிலே தமிழர் ஒருவர் இருந்தார். அப்படிங்களா…! என்றார்.

ஆனால் அங்கே குளிர் அதிகமாக இருக்கின்றது அவர்களெல்லாம் சட்டை போட்டிருக்கிறார்கள். நான் வெறும் கோவணத் துணியைத் தான் கட்டி இருக்கின்றேன்.

என்னுடைய நிலையைப் பார்த்து அந்த மிலிட்டரிக்காரர்கள் எல்லாம் ஆசீர்வாதம் கேட்கின்றார்கள். என்னிடம் விபூதி எதுவும் இல்லை. அங்கிருக்கும் மண்ணை எடுத்துப் பிரார்த்தனை செய்து அதைத் தான் அவர்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்… உங்களுக்குத் தக்க உபாயமாகும் என்று சொன்னேன்.

ஏனென்றால் பேரீச்சம் பழம் பிஸ்கட் மட்டும்தான் அங்கு கொண்டு சென்றேன். விபூதியைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் நான் கொடுத்ததை அவர்கள் சந்தோஷமாக வாங்கிச் செல்கின்றார்கள்.

அங்கே ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள் சூரியனுடைய இயக்கமாக இருந்தாலும் கூட்டை விட்டு வெளியே வந்தால் இதே சூரியனால் கவரப்பட்டுத் தான் சுழல முடியும்.

அப்படிக் கவரப்படும் போது அவர் எந்த ஒலியினைத் தனக்குள் ஓங்கி வளர்த்தாரோ எப்படி இங்கே கூட்டுக்குள் ஒடுங்கினாரோ இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அவரையும் இது போன்றுதான் உட்கார வைக்கும்.

நாராயணன் செயல் என்ன…? என்று அங்கே தியானமிருக்கும்படி சொன்னார் குருநாதர்.
1.அதன்பின் சில உணர்வின் ஒலிகளை எடுத்து அங்கே பரப்பும்படி செய்தார் குருநாதர்.
2.அந்த உணர்வுகளை அவர்கள் எடுத்தார்கள் என்றால் அதைச் சுவாசித்து அவர்களும் விண் செல்ல உதவும் என்று
3.உணர்வின் எக்கோவாக (ECHO) அங்கே அதைப் பரப்பச் சொன்னார்.
4.அவர் சொன்ன முறைப்படி செயல்படுத்தினேன்.

ஏனென்றால் அந்த இமயமலைச் சாரலில் இது போன்று ஏராளமானோர் உண்டு. இன்னும் அந்தக் கூட்டுக்குள் தான் இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சத்தியவான் சாவித்திரி

சத்தியவான் சாவித்திரி

 

வீட்டில் கணவன் மனைவி வாழுகின்றார்கள். கணவனுக்கு அலுவலகத்தில் யாராவது இடைஞ்சல் செய்யும் நிலைகள் அதிகமாகி விட்டால் வீட்டில் மனைவி என்ன செய்ய வேண்டும்…?

மனைவி அந்த மாதிரி நேரங்களில் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் இரத்தத்தில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று எண்ண வேண்டும்.

பின் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் பெற வேண்டும். அவர் உடல் முழுவதும் படர வேண்டும். அவரைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று இதை உடலுக்குள் சமைத்துக் கணவரிடம் “நல்லது நடக்கும்…” என்று சொல்லிப் பாருங்கள்.
1.அவரால் இதை எண்ண முடியவில்லை… மனைவி இதைச் செய்ய வேண்டும்.
2.இரண்டு உயிரும் ஒன்றானால் இரு மனமும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றாகின்றது.
3.உணர்வு ஒன்றியபின் கணவரைப் பாதுகாக்கும் உணர்வை மனைவி செய்யவேண்டும்.
4.இது தான் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…” என்பது.

சங்கடம் வேதனை, என்ற உணர்வுகள் வரும் பொழுது அது நோயாக மாறி மனிதனை முடித்துவிடும் எமனாக மாறுகின்றது. இதை மாற்ற வேண்டும்.

எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ வேண்டும். அப்படியென்றால் கணவனும் மனைவியும், “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர வேண்டும். ..”

நளாயினி போன்று என்கிற போது கணவருக்கு ஒரு சங்கடம் வரும் பொழுது “அதை நிவர்த்திக்கக் கூடிய சக்தியாக…” அவர் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை மனைவி எடுக்க வேண்டும்.

சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்ற வேண்டும்.
1.கணவர் அருள் உணர்வு பெற வேண்டும் என்றும் அவருக்கு நல்ல எண்னம் வரவேண்டும் என்றும்
2.அவர் பார்ப்பது எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும் என்றும்
3.அவர் சொல்லைக் கேட்போரெல்லாம் இனிமை பெற வேண்டும் என்றும் பெண்கள் எண்ண வேண்டும்.

அப்பொழுது அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டே இருக்கும். நல்ல சிந்திக்கும் தன்மை வரும்.

கணவன் மனைவி வேதனைப்படும் பொழுது, அந்த வேதனை என்ற உணர்வுகள் இருவரையும் சிந்திக்க முடியாமல் செய்யும். அந்த மாதிரியான நேரங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாம் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணி உடலுக்குள் சேர்த்தவுடன் கணவருக்கு, அதைப் பாய்ச்ச வேண்டும்.
1.அந்த மகரிஷிகளின் அருளால் அவர் சொல்வதெல்லாம் நலம் பெற வேண்டும்,
2.அவர் பிறர் போற்றும் நிலைகள் பெற வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

அந்தப் பழக்கத்திற்கு வரவேண்டும்.

தியானம் என்பது… இதுதான் தியானம்.
1.உட்கார்ந்து சதா எண்ணுவது, தியானமல்ல.
2.அந்த அருள் சக்தி பெறுவதும் அதை இயக்குவதும்தான் தியானம்.

நமக்குள் வேதனை என்ற உணர்வுகள் ஆனபின் சிக்கலென்ற உணர்வு வருகின்றது. நுகரும் உணர்வுதான் நம்மை இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைதான் கூடும். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது.

மெய் ஞானிகள் காட்டியது…
1.பிறரின் உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது நம் நல்ல உணர்வுகளை உடைத்து, உள்ளுக்குள் சென்று விடுகின்றது
2.அந்த வேகமான உணர்வுகள், நமக்குள் வராதபடித் தடுக்க வேண்டுமென்றால்
3.அருள் உணர்வை நாம் அடிக்கடி சேர்த்து இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாம் பெற வேண்டும் என்று செருகேற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுது நமக்குப் பாதுகாப்பான நிலைகள் வரும்.

நமக்குள் தீமை வராது, தடுத்துப் பழகுவதுதான் தியானம். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எல்லா அணுக்களுக்குள்ளும் சேர்த்துவிட வேண்டும்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரப்படும் பொழுது தீமையிலிருந்து விடுபடும் உணர்வை சேர்த்துச் சேர்த்து வந்தோம். தீமையை நீக்கிய, துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
1.இந்தப் பதிவு கொண்டு துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.காற்றில் கலந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பயன்படுத்தும் பொழுது
3.நாம் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேருகின்றோம்.

ஆயுள் கால மெம்பர் குடும்பத்தில் யாம் சொன்ன மாதிரி கடைப்பிடிக்க வேண்டும். குழந்தை சுட்டித்தனமாக இருந்தால் உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணி மாற்ற வேண்டும்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் உடனே துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அதை எப்படிச் சரி செய்ய வேண்டுமென்ற நல்ல சிந்தனை வரும்.

கணவனும் மனைவியும் இந்தத் தியானத்தை எடுத்துக் கணவருக்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும், சிந்திக்கும் ஆற்றல் கிடைக்க வேண்டும், தொழிலில் நல்ல வீரிய சக்தி பெறக்கூடிய உணர்வு வரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

அவர் மனம் வலிமையாக இருக்க வேண்டும், எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும், அவர் செயல்களை அனைவரும் போற்றும் நிலைகள் வரவேண்டுமென்று எண்ணிப் பாருங்கள். எந்த வியாபாரமானாலும் அவரிடத்தில் பொருள் வாங்குவோர் எல்லாம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணிப் பாருங்கள்.

மனைவி இப்படி எண்ணினால்…
1.வேறு யாரிடத்திலும் யோசனை கேட்க வேண்டியதில்லை.
2.இந்த உணர்வுடன் கணவர் எங்கு சென்றாலும் எல்லாக் காரியத்திலும் வெற்றி பெறலாம்.
3.நாம் இந்த மாதிரி வாழ்ந்து காட்டவேண்டும்… அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.

மற்றவரிடத்தில் இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வு அங்கேயும் விளைய வேண்டும். அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் வெளிப்படுத்தும் மூச்சு நல் உணர்வாகப் படர வேண்டும்.

நம் தெருவிற்குள் நல்ல உணர்வலைகள் பரவ வேண்டும். அப்பொழுது ஒன்றுபட்டு வாழும் நிலை வரும். ஆயுள் கால மெம்பர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழ வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளினார்.
1.அவர் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்க வேண்டும்.
2.அவர் துருவ நட்சத்திரத்தின் அங்கத்தினர்… அவர் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி பட இருள் நீங்கும்.
3.அந்த அருளைப் பெற இருளை அகற்றும் சக்தியை நாமும் பெறலாம்.