போகன் உருவாக்கிய “மனோசிலை… காயகல்பம்…!”

போகன் உருவாக்கிய “மனோசிலை… காயகல்பம்…!”

 

மனித உடலில் எடுத்த உணர்வின் ஒலிகளைப் பாய்ச்சி அந்த வலுவைக் கூட்டி மந்திர ஒலிகளால் பதிவான பின் அந்த மனிதன் மடிந்து விட்டால் அந்த உணர்வின் ஒலிகள் கொண்டு பல நிலைகளை அறியலாம்.

அதாவது இப்பொழுது நாம் பேசும் உணர்வுகளைப் போல ஒவ்வொரு உலோகத்திற்கும் தனித்த ஒலியின் நாதங்கள் உண்டு. அதனைத் தனக்குள் எடுத்து அந்த நாதங்களைப் பாய்ச்சி அந்த உணர்வுகளைத் தனக்குள் எந்தெந்த நிலை என்று ஒலியைப் பாய்ச்சி விட்டால்
1.எந்த மனிதன் இறந்தானோ அதனைத் திருப்பி எடுத்து நினைவு கொண்டு
2.பூமிக்கடியில் உள்ள பொருள்களை அறியும் நிலை கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3அங்கே அடியில் உள்ள உலோகங்களைக் காண முடிகின்றது.

ஏனென்றால் பல கோடி உணர்வின் தன்மை பெற்றவன் மனிதன். இதற்குள் இணை சேர்க்கப்பட்டு உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கொடுக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து கிளம்பும் அதிர்வுகளைப் பாய்ச்சியபின் தூரத்தின் தன்மை தனக்குள் கணக்கிடப்பட்டு
2.இந்த இடத்தில் நீர் உள்ளது… இந்த இடத்தில் உலோகங்கள் உள்ளது என்று
3.மனிதனின் உணர்வின் துணை கொண்டு அறிந்தார்கள் அக்காலத்தில்.

அதன் வழி கொண்டு தான் மனிதனுக்குள் பெற்ற வலிமையின் உணர்வுகள் அதைக் கண்டறியப்படும் பொழுது உலோகக் காலங்களாக மாறுகின்றது… மந்திரக் காலங்கள்.

உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது… பூமிக்குள் மறைந்த எதிர்நிலை கொண்ட மண்ணில் விளைந்த மனோசிலை கந்தகம் மற்ற பொருள்களைக் காணுகின்றார்கள்.

அதாவது… அது மண்ணில் விளைந்த உப்புச்சத்து. சூரியனுடைய காந்த சக்தி மண்ணிலே அமிலங்களாகக் கலக்கப்படும் பொழுது ஒரு வெட்கையின் தன்மை வரும்.
1.அதை மீண்டும் வேக வைத்து அந்த உப்பை உறையச் செய்து கந்தகத்துடன் அளவுகோல் கொண்டு இணைக்கச் செய்து
2.மோதும் பொழுது வெடிக்கும் தன்மையாக அதற்குண்டான நிலைகளைச் (வெடி பொருள்களை) சேர்க்கின்றான் அன்று போகன்.
3.மனோதத்துவ ரீதியில் உணர்வின் தன்மையை நீக்குவதற்கு மனோசிலை என்று கொண்டு வந்தான் போகன்

வைத்திய ரீதியிலே மருந்துகளை உலோக நிலைகளை எடுத்து விஞ்ஞானிகள் சேர்க்கை சேர்ப்பது போன்று மெய்ஞானியான போகர் பல நிலைகளைத் தனக்குள் உருவாக்கி “மனோசிலை” என்று உருவாக்குகின்றார்.
1.அதை மனித உணர்வின் எரிபொருளுடன் கலக்கப்படும் பொழுது அது உடலுக்குள் ஊடுருவி வெடிக்கும் தன்மையாக வந்து
2.அந்த அதிர்வால் தீமை செய்யும் அணுக்களை மடியச் செய்தான் அன்று.

பாறைகளைப் பிளக்க வேண்டும் என்றால் அதே மனோசிலை வைத்து எதிர் நிலையான நெருப்புகளை உருவாக்கப்படும் பொழுது அந்தப் பாறைகள் தகர்த்து எறியப்படுகின்றது.

அதே போல் அந்த மெய்ஞானியான அவன்… மனோசிலை கந்தகம் போன்ற பல பொருள்களை அளவுகோல்படி இடப்பட்டு
1.மருந்தின் தன்மையாகக் கொண்டு வரப்படும் பொழுது அழியாத் தன்மையும்
2.வெடித்த பொருள் போகத் தொக்கி நிற்பது… தீமையான அணுக்களுக்கு எதிர்நிலையாகிக் கொன்று விடுகின்றது உணர்வின் அதிர்வுகள்.

அப்போது நமக்குள் உணரலாம்.

ஆகவே இதைக் கண்டுணர்ந்தவன் போகன். இதைப் போல எத்தனையோ வகைகளில் ஒவ்வொரு நிலைகளைப் பெற்றவன் அவன்.

போகனைக் கண்டவுடன் குருநாதர் “திருடன்… திருடன்…” என்று சொல்வார். ஏன் சாமி…? அவனைத் திருடன் என்று சொல்கிறீர்கள் என்று நான் கேட்பேன்.

1.அவன் எல்லாவற்றையும் திருடும் சக்தி பெற்றவன்.
2.தாவர இனத்திலிருந்து வரக்கூடிய சத்தை நுகர்வான்… அதைத் திருடுவான்.
3.அதைத் தனக்குள் எடுத்து… தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குவான்.
4.இப்படி அவன் எல்லாச் சக்தியையும் திருடுகின்றானப்பா…! என்பார் குருநாதர்.

ஒரு தாவர இனச் சத்து என்று இருந்தால் அதை நுகர்வான். அதைத் தன் உடலுடன் போகிக்கின்றான். அதனால் தான் போகர் என்று சொல்வது. அதை “மோகிக்கின்றான்… போகிக்கின்றான்…” ஒரு பொருளின் சத்தை அறிய வேண்டும் என்று மோகம் கொள்கிறான் அந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இரண்டற இணைத்துப் போகிக்கின்றான்.

அதனால் தான் “போகர்…” என்று அந்தக் காரணப் பெயருக்குண்டான விளக்கத்தைக் குருநாதர் சொல்கிறார்.

கரு உருவாக்கப்படும் பொழுது இதனின் உணர்வின் தன்மை உதிரங்கள் நீக்குவதுண்டு. கரு உருவாக்கும் இதற்குத் தடையாக இருக்கும் உணர்வினை நீக்கப்படும் பொழுது கழிவின் தன்மை வருகின்றது.

அதனுடைய கருவின் தன்மை உருவாகப்படும் போது இந்த உணர்வின் அணுக்கள் ஹார்மோன் அதிகமாக இருக்கும் பெண்களின் உணர்வுகள் இது விந்தானாலும் அதனுடைய நிலைகள் மனோதத்துவப் பிரகாரம் பெண்களின் உணர்வுகளை இதனுடன் சேர்த்து அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

அது எவ்வாறு உருவாக்குகிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அதைச் சொன்னாண்.

கருக்களின் உருக்களில் சீனாவின் பக்கம் நெருங்கப்படும் பொழுது “அங்கிருக்கும் சீதோஷ்ண நிலைகளால்” அணுக்களின் கருக்கள் மனிதனுக்குள் ஏராளமாக உருவாகின்றது.

இதைக் கண்டுணர்ந்து
1.அந்த அணுக்களின் மோக உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அந்த எண்ணங்களை உருவாக்கும் பொழுது தான் அபின்களைக் கொடுக்கின்றான்.
2.அதைக் கொடுத்துத் தன் நிலையை மறக்கச் செய்து மோகத்தை உருவாக்கப்படும் பொழுது
3.அதனால் ஈர்க்கும் அணுக்களின் தன்மையைத் தாவர இனங்களை அதில் இணையச் செய்கின்றான்.

அவன் அன்று செய்தது.

சாதாரண அணுக்கள் வந்தது என்றால் மனிதனுக்குள் எடுத்து அது புழுக்களாக எப்படி உருவாகின்றதோ இதைப் போல பல அணுக்களின் தன்மை கொண்டு ஒவ்வொரு குணங்கள் கொண்ட நிலையும் அதற்குத் தக்க பச்சிலைகளை விரிக்கின்றான்.

இந்த மோகம் கொண்டு உணர்வின் தன்மை கவரப்படும்போது அதன் உணர்ச்சிக்குத் தக்க பச்சிலைகளில் அது ஒட்டுகின்றது. அந்தப் பச்சிலைகளில் ஒட்டும் பொழுது தான் இந்த உணர்வின் தன்மை ஜீவன் பெறும் தன்மையே வருகின்றது.
1.ஜீவன் வரப்படும் பொழுது தான் நாத விந்துகள் என்று கணக்கிடப்பட்டு
2.அந்த உணர்வினைத் தனக்குள் எடுத்துக் “காயகல்பமாக” அவன் மாற்றுகின்றான்.

அவன் சொன்ன முறைகள் வேறு. அதற்குப் பின் வந்தவர்கள் கற்றுணர்ந்த கவியின் புலமைகள் வேறு. ஒருவன் கற்றுணர்ந்த நிலையில் கற்பனையில் தான் மற்ற நிலைகளைச் செய்தார்களே தவிர அந்தப் போகன் அன்று சொன்ன நிலைகளை இவர்கள் செய்யவில்லை.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு எம்மைத் தெளிவாக்கினார்.

எதனையும் ஊடுருவித் திருடும் பழக்கம் பெற்றவன் போகன்….! இச்சையின் நிலைகள் கொண்டு ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை எப்படித் திருடுகின்றோமோ இதைப் போலத் தான் போகனும் எதனையும் கண்டுணரப்படும் பொழுது மோகம் கொள்கின்றான்.

அந்த உணர்வின் தன்மை கருவின் தன்மை தனக்குள் திருடுகின்றான்.
1.உலகெங்கிலும் பறக்கும் தன்மை கொண்ட அணுக்களைத் தனக்குள் சேமிக்கின்றான்.
2.ஒரு நொடிக்குள் இயக்கப்படும் போது கவன உணர்வின் அணுக்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டபின் “பறந்து செல்கிறான்…”

மந்திரக்கோலை வைத்து எவ்வாறு ஒரு பொருளின் தன்மை இணைத்துக் கொண்ட பின் கரையான் மந்திரம் என்று செயல்படுத்துவார்கள்.

கரையான் தன் மலத்தை இட்டபின் இயற்கையில் விளைந்த மரத்தின் சத்தை ஆவியாக மாற்றி உணவாக எடுத்துக் கொள்கின்றது. இயற்கையில் \மண்ணில் விளைந்த மரத்தை மீண்டும் மண்ணாக மாற்றுகின்றது. நம்மால் அவ்வாறு ஒரு மரத்தைச் சீக்கிரம் கரைத்து மண்ணாக மாற்ற முடியுமா…?

இதைப் போல உயிரணு அதற்குள் சேர்ந்த அமிலங்கள் இந்த மரத்தைத் துரித நிலை கொண்டு கரைகின்றது.

அதில் விளைந்த உயிரணுவையும் தன்னுடன் இணைத்து ஒன்று எளிதில் கரையக்கூடியதும் மற்றொன்றை உருவாக்கும் நிலைகள் பெற்று… இவர்கள் உருவாக்கும் நிலைகள்… மாந்திரீகமாக மாற்றுகின்றார்கள்.

உணர்வின் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் இணைக்கச் செய்து அந்த அணுவின் தன்மை உருவாக்கப்பட்டு மீண்டும் அதே ஒலிகள் வரப்படும் பொழுது அது கரைக்கப்படும்.

கரையான் மந்திரம் என்பது இதுதான். மனிதன் சில நிலைகளை எவ்வாறு செயல்படுத்துகின்றான் என்று குருநாதர் காட்டுகின்றார்.

ஆனால் போகன் கவனக் குளுவின் நிலைகள் கொண்டு எதனதனை உருவாக்கப்பட்டு எந்த எல்லையில் உருவாக்கப்பட்டதோ அதை எடுத்து உணர்வின் ஒலி அலைகள் பாய்வதைத் தனக்குள் இணைத்து நினைவின் ஆற்றலைக் கொண்டு ஜீவணுக்களை உருவாக்கப்படும் பொழுது பறவையின் உணர்வின் தன்மையைத் தனக்குள் கவர்கின்றான்.
1.அந்த உணர்வு வரப்படும் பொழுது எதனின் எண்ணங்களை எடுக்கின்றானோ உடல் எடையற்றதாக மாறுகின்றது.
2.குறித்த இடங்களுக்குச் அந்த எல்லையைச் சென்றடைகின்றான்.

அவன் உடலுக்குள் எடுத்துக் கொண்ட சக்திகள்…
1.ஒவ்வொரு இடங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை எப்படி வளர்க்க வேண்டும்…?
2.எதனைப் பெருக்க வேண்டும்…? என்று 5000 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தியவன் போகன்.

இதைப்போல் ஒவ்வொரு ஞானிகளும் பெற்ற சக்திகளைச் சுட்டிக் காட்டினார் குருநாதர்.

யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”

யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”

 

விஞ்ஞானி ஒரு பொருளைச் செய்கிறான் என்றால்… அதிலே இயக்கம் தடைப்படும் பொழுது
1.அந்தத் தடைக்குண்டான காரணத்தைக் கண்டறிவான்.
2.அதை நீக்க முயற்சி எடுப்பான்.

ஆனால் தொழில் செய்து கொண்டுள்ளவர்கள் அதைச் சரியாக இயக்கவில்லை என்றால் “எல்லாம் போய்விட்டது… என்ன செய்வது…?” என்று விட்டு விடுவார்கள். பின் அதைத் தெரிந்தவர்கள் வந்து தான் சரி செய்ய முடியும்.

இதைப் போல
1.உங்களுக்குள் அந்த அருள் ஞானத்தின் உணர்வுகளை அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை பதிவான பின்…
2.அந்த நினைவைக் கொண்டு வந்தால்…
3.வாழ்க்கையில் வரும் எந்தக் குறைகளோ அதை நீக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெறுகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் காடு மேடல்லாம் அலையச் செய்து… ஒவ்வொன்றும் எப்படி உருவானது…? என்று அந்த அகஸ்தியனைப் பற்றிக் கடைசி வரையிலும் கொண்டு வந்து… துருவன் அகண்ட உலகத்தைக் கண்டபின் இந்த உணர்வுகள்
1.“உலகம் எப்படி உருவானது…?” என்ற நிலையைக் காட்டப்படும் பொழுது என் நினைவுகள் இழந்து விட்டது.
2.”விட்டு அடித்தால்” (அந்த நேரத்தில் குருநாதர் எம்மை அடிக்கின்றார்) என் உடலில் “ஜிர்ர்…ர்ர்…” என்று சுருதி ஏறுகின்றது.
3.அவரின் நினைவுகள் வருகிறது… மற்ற தீமைகளை அகற்றும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.

இப்பொழுது நீங்கள் கூடச் சொல்லலாம். உங்கள் கஷ்டத்தை என்னிடம் சொல்லும் பொழுது எனக்கு “ஜிர்ர்…ர்ர்…” என்று கோபம் வரும். அந்த உணர்வு என்ன செய்கிறது…?

1.நீங்கள் சொல்லக்கூடிய கஷ்டம் எனக்குள் புகாதபடி முதலிலே தடைப்படுத்துவது.
2.தடைப்படுத்திய பின் அதே உணர்வின் தன்மை தீர்க்கப்படும் பொழுது
3.அவன் அறியாது இடும் சாப அலைகளை உணர்வான்… அவன் நொறுங்கிப் போவான் என்ற நிலைகளைச் சொல்வது.
4.இந்த உணர்வுகள் அங்கே தாக்கப்படும் பொழுது… “கஷ்டம் என்று சொல்பவருடைய” உணர்வின் வேகத்தைக் கூட்டுவது.

அதாவது…
1.கஷ்டமான உணர்வுகளை எனக்குள் வராது தடுப்பதும்
2.உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு நான் அழுத்தமாகச் சொல்லும் பொழுது
3.எதைக் குறை கூறுகின்றாரோ அவருடைய நினைவைக் கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது
4.“இந்த உணர்வுகள் ஆழமாகப் பதியும்…! சொல்வோர் உணர்வுகளில்…!”
5..அடுத்து… யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அங்கே நல்லதாக வளர்ச்சி பெறும்.

ஆகவே… “யாம் வெளிப்படுத்தும் இந்த வேகத் துடிப்பு” யார் எதைச் செய்தாலும் உடனடியாக அதை நல்லதாக மாற்றும்.

ஸொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆனால் இதைப் பார்த்த பின்… என்னடா…? சாமிக்குக் கோபம் வராது என்று சொல்கின்றார்கள். சாமிக்கே இங்கே “இப்படிக் கோபம் வருகிறது என்று…!”

“எனது கோபம்” எதைத் தடுக்கிறது…? தீமைகள் உங்களுக்குள் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பாக வருகின்றது.

ஆனால் “உங்களுடைய கோபமோ…”
1.மற்றவர்கள் எந்தத் தீமையைச் செய்தாரோ அந்த தீமையே உங்களுக்குள் விளைந்து
2.அவர்களைப் பொசுக்க வேண்டும் என்ற உணர்வாக வருகின்றது.

மீண்டும் தெளிவாக்குகின்றேன்…! தீமை எனக்குள் வராது தடுப்பதும்… அந்த நினைவாற்றல் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பை அருள் மகரிஷிகள் உணர்வுகளைச் சொல்லித் தீமைகள் வராது தீமை செய்வோர் எவரோ அவர்கள் உணர்வார்கள் என்று சொல்லப்படும் போது…
1.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அங்கே திருப்பம் வரும்.
2.எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற உணர்வுகள் வரும் பொழுது திரும்பும்.

ஆனால் நம்முடைய உணர்வுகள் (தியானம் செய்த) அங்கே பாய்ச்சப்பட்டு… அவன் அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்ற வரிசைத் தொடரைச் செய்யப்படும் பொழுது சிறுகச் சிறுகப் போய் அவன் உடலிலே விளையும்.
1.தீமைகளின் பாதிப்பால்… திரும்ப நன்மையை எண்ணி ஏங்குவான்.
2.அப்பொழுது நாம் இங்கே எண்ணி… அது யாரோ… அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கலந்து வெளியிட்டது அங்கே சென்ற பின்…
3.அவர்களுக்கு ஒரு “திருப்புமுனையாக” மாறும்.

அவர்கள் திரும்பி அதை ஏங்கிப் பெறும் அந்தத் தகுதி ஏற்பட்டால் அங்கே வருகின்றது. இல்லை என்றால் என்னதான் சொன்னாலும் அங்கே எடுபடாது.

காரணம்…
1.விஷத்தால் ஒடுங்கப்படும் பொழுது தப்பிக்கும் உணர்வுகள் வருகின்றது
2.தப்பிக்க ஏங்கும் நிலையில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவான நிலையில்
3.”அதிலிருந்து விடுபட வேண்டும்” என்ற உணர்வை நாம் கூட்டக் கூட்ட
4.இந்த உணர்வுகள் அங்கே மறைந்திருந்து தன் (அவர்கள்) உணர்வை மாற்றி அது திருப்புமுனையாக மாறும்.

அதனால் தான் சில நேரங்களில் உங்களிடம் யாம் கோபமாகப் பேசுவது.

ஆனால் வேறு விதமாக இதை எடுத்துக் கொள்கின்றார்கள் சாமிக்கே இப்படிக் கோபம் வருகிறது… சாமிக்குக் கோபம் வரலாமா…? இப்படிப் பேசுகிறார் என்று…!

1.என் கோபம் யாரையும் கெடுதலாக ஆக்காது.
2.தீமையான உணர்வுகள் உள்ளே போகாது தடுக்கும்.
3.இந்த உணர்வின் தன்மை அழுத்தமாகப் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வுகளை இயக்காது தடைப்படுத்தும்.

குருநாதர் அவருக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் “நான் அடி வாங்க வேண்டி வரும்…” என்னை அடித்த பின் அவர் சிரிப்பார். அப்புறம் விளக்கம் சொல்வார்.
1.உனக்குள் அந்தக் கெட்டது வராமல் இருப்பதற்காகத் தான் நான் கோபித்தேன்
2.என் உணர்வு உனக்குள் புகுந்து… கெட்டது நுழைய விடாது பாதுகாக்கும் என்பார்.

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய நிலைகளில் (நீங்கள்) கோபமாகப் பதிவு செய்து விட்டால்… இந்த உணர்வின் தன்மை எதிரியாகக் கருதி விட்டால் எதிரியின் தன்மையாகத் தான் வரும்.
1.ஆனால் அந்தக் கோபத்தின் தன்மை (சாமியின் கோபம்)
2.தன் இருளை நீக்க உதவும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தால் இருளை நீக்கும்.

ஆகவே ஒவ்வொருவரும்
1.எதை இணை சேர்த்து
2.எதனுடன் கொண்டு வந்தால் எதன் நிலை வருகின்றது…? என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தீ (நெருப்பு) சுடுகின்றது. அந்தத் தீயை வைத்துத்தான் பல ஆக்கப் பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கின்றோம். அந்த உணவுப் பொருள் சுடச் சுட வெந்து வருகிறது.

ஆனாலும் அதை அப்படியே சூடாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆசை வருகின்றது…! கையை வைத்தால் சுரீர் என்று சுடுகின்றது. இருந்தாலும் அதை ஆற்றி ஆற்றி உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு அப்படிச் சாப்பிடுகின்றோம்.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது சில மோதல் தன்மை வரும்.
2,அது நன்மை செய்யும் சக்தியாக வருகிறது என்பதை உணர்தல் வேண்டும்.

மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் “ஞானப் பாதை” அடைபட்டுவிடும்

மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் “ஞானப் பாதை” அடைபட்டுவிடும்

 

நட்பாக இருக்கிறோம் என்றால் நம்மிடம் ஆயிரம் கஷ்டத்தைச் சொல்வார்கள். அதையெல்லாம் உ…ம் கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம். அது நம் நல்ல அறிவை மூடிவிடும்.

1.கஷ்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்தால் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகள்.
2.யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வுகளை மூடி மறைத்து விடும்… நினைவுக்கு வராது.

ஆகவே… யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வு உங்கள் நினைவுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று அருள் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்த உணர்வின் தன்மை
1.அவன் இருண்ட உலகையும் கண்டான்… அது ஒளி பெற்ற உணர்வையும் கண்டான்… இந்தப் பிரபஞ்சத்தையும் கண்டான்.
2.அவனில் விளைந்த உணர்வுகள் அந்தந்தத் தொகுதிகளில் இதை இணைத்து விட்டால்
3.அவன் எவ்வாறு தன் தன் தொகுதிகளில் தீமைகளை நீக்கினானோ
4.ஒவ்வொரு வளர்ச்சியின் நிலைகள் ஒன்றோடு இணைக்கப்படும் போது வளராது தடுக்கும் நிலைகளை அவன் அகற்றினானோ
5.தனக்குள் தன்னைக் கண்டு உணர்வின் ஆற்றலாக எப்படிப் பெருக்கினானோ அதை நாமும் பெற முடியும்.

அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குவது.

ஆக… மற்றவர்கள் படும் வேதனைகளை நுகரக் கூடாது. மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் அவர்கள் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அவர் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று
1.“அவர் பெற வேண்டும்” என்று எண்ணினால்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

பாசத்தால் பரிவால் பண்பால் அதைக் கேட்டறிந்தோம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தால்… மூச்சே விடாதபடி கஷ்டத்தையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்நேரம் வரை யாம் பதிவு செய்ததை மறந்து விடுவீர்கள். நல்ல அணுக்களின் தன்மையை மாசுபடுத்தி விடும்.

குப்பைக்குள் மாணிக்கம் மறைந்திருந்தால் வெளியிலே வெளிச்சம் தெரியுமோ…? காரணம் அந்தக் குப்பை அடர்த்தி ஆகிவிடுகின்றது.

சூரியனின் ஒளிக் கதிர்கள் வெயில் அடிக்கும் பொழுது தெரிகின்றது. ஆனால் இங்கிருக்கும் தூசிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அதை மறைத்து விட்டால் சூரியனின் வெளிச்சம் தெரிவதில்லை… இருண்டு விடுகின்றது.

இதைப்போல் உயிரால் உணர்வின் ஒலிகள் நமக்குள் வரப்படும் பொழுது பிறர்படும் துயரத்தை அதிகமாகக் கேட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் தூசி போன்று நம்முடைய ஒளியையும் மங்கச் செய்கின்றது.

யாராவது உங்களிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள் என்றால்
1.அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களுக்குள் பொருள் காணும் சக்தி பெருகும் உங்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்…
3.திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்…. உங்களுடைய உணர்வுகள் தான் அங்கு அதிகமாக வர வேண்டும்,
4.இந்த உணர்வுகள் பதிவானால் அவருடைய இருளைப் போக்க உதவும்.

இல்லை என்றால் அந்தக் குப்பை நம்மை மூடி விட்டால் நம்முடைய ஒளியை அது மங்கச் செய்துவிடும்.

நான் எவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்தாலும் மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் இப்படி வந்துவிடும்.

குடும்பங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து இருப்பார்கள். சந்தர்ப்பத்தில் அவர்கள் இம்சைப்படுவார்கள். கணவன் அவருடைய சாப அலைகளால் நன்மை ஏற்பட விடாதபடி மனைவிக்குப் பல தீமைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

அந்தச் சாப அலைகளின் இயக்கம் வரும் போது பெண்களை மகிழ்ச்சியாக அங்கே வாழ விடாது செய்யும். நாம் கட்டிக் கொடுத்த பெண் அங்கே வேதனைப்பட்டால் நம் நிலை எப்படி இருக்கும்…?

அந்த உனர்வின் வேகங்கள் கூடும் போது பொழுது நான் இருளைப் போக்கும் நிலையாக உயர்ந்த சக்தியைக் கொடுத்தாலும் அதை மறைத்து விடும். நல்லதை எடுக்கும் திறன் இழந்து விடுவோம்.

நான் செய்தேன்… இருந்தாலும் என்னால் எங்கே முடிந்த்து…? எதை எடுப்பது…? என்ன செய்வது…? என்று முடியாத நிலைகள் வந்த பின்… அடுத்தாற்போல் என்ன நினைப்பார்கள்…!

செத்த பிற்பாடு என்ன ஆகப் போகின்றோம்…? போகட்டும் போ…! என்று இந்த உணர்வின் தன்மை சோர்வடைந்து சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது. ஆகவே… இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே வருகின்றது.

மற்றவரிடத்திலோ நண்பரிடத்திலோ உறவினர்களிடத்திலோ இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வின் வேகங்கள் கூடும். அந்த நண்பன் தியான வழியில் இருந்தாலும் இந்த வளர்ச்சி அதிகமாகப் போகும் பொழுது இதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்துவிடும்.

இந்நேரம் வரை உபதேசித்த உணர்வின் ஆற்றலை…
1.அகண்ட உலகையும் இருண்ட நிலைகளை நீக்கிய உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை இவ்வளவு தூரம் உபதேசித்து
2.பல வருடம் யாம் கஷ்டப்பட்டு வளர்த்த உயர்ந்த வித்தை உங்களுக்குள் ஊன்றினாலும் இதை அது மறைத்து விடும்…
3.சோர்வும் விரக்தியும் தான் ஏற்படும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குக் “கூடுமானவரை மற்றவருடைய துன்பங்களைக் கேட்டறிவதைத் தவிர்க்க வேண்டும்…”

அப்படி அவர்கள் சொன்னாலும் அடுத்த கணமே மகரிஷியின் அருள் ஒளி நீங்கள் பெறுவீர்கள் குடும்பத்தில் இருள் நீங்கும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெறுவீர்கள் என்ற இந்த உணர்வினைத் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்தல் வேண்டும்.
1.நாம் எடுத்த நல்ல உணர்வை அவர்கள் உணர்வு மறைத்திடாது
2.நினைவு கொண்டு அதை நாம் மாற்றுதல் வேண்டும்.

ஒரு சிலர் கஷ்டம் வந்து விட்டால் அதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். உங்களுக்குள் அது வரப்படும் போது அதனால் சோர்வடைந்து நீங்கள் போகும் பாதையை தடைப்படுத்தி விடும்.

அவ்வாறு ஆகாதபடி தடுப்பதற்குத் தான்
1.யாம் உபதேசம் கொடுக்கப்படும் பொழுது அந்த இருளான நிலைகளை இது மறைக்கும்.
2.அப்படி மறைத்துத் திரும்ப இந்த உயர்ந்த உணர்வுகளை அதனுடன் இணைத்து மீண்டும் இயக்குவது.
3.தீமை உங்களுக்குள் அடைத்திடாது அதை அகற்றும் உணர்வுகளை “அடுக்கடுக்காகச் செயல்படுத்திக் கொண்டே வருவது…”

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு எம்முடைய உபதேசங்களை அடிக்கடி நீங்கள் கேட்டுப் பதிவாக்கி… உங்கள் நல்ல அறிவை எந்த்த் தீமையும் மறைத்திடாது… வளர்ச்சியின் பாதையிலே தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்குத்தான் “திரும்பத் திரும்ப இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…”

The state of God today

The state of God today

The Kings who ruled the country in those days built temples so that their name may be remembered by the succeeding generations.

In the temples built by them they have made several carvings on stones giving their names with a desire that their names should become popular and should be known to the future humanity.
1.Many of the temples have been built with a desire to proclaim their names
2.and after their death their souls are roaming about in those temples.

Right from the Kings of those days to the people of today the names of the Gods are utilized to publish their names.

Do you realize the state of the Gods today…?

The character of the people of those days reflects in the character of the people of today. The same kind of breath is being taken by the people from those days.

Even when the souls go to the spirit world they retain the same desires.
1.Those thoughts are still being retained by the people of today.
2.The state in which the world remains today is due to the cravings of the people for “name and fame…”

The minds of the people are not only what they are now, but is a continuation of the several spirits which have influenced this soul.

Having become a slave of greediness for fame and name the thoughts of all the people of today is bent towards getting name and fame.

It is those kings of the olden days who have poisoned the atmosphere. It is those kings who have diverted the minds of people towards avarice and greediness in those days and the same thoughts continue even today.

How does this present state arise in which several images of deities are being stolen from temples…? Why not God capture the thief and give him good advice…? This is the question we ask God.

It is because the thief thinks that the idol is only a stone of fine workmanship, he is instigated by his greediness to steal the idol for its monetary value.

We find that the person who steals the idol from some of the temples vomit blood and die. In such temples the spirit of the person that built the temple is guarding it, which kills the culprit.

It is only from such temples which do not have any connection with spirits that thefts are going on.

1.If a theft is made from any temple which is guarded by a spirit, the culprit cannot escape.
2.There are several temples like this which are guarded by spirits.

It is the kings of those days who have brought God to this state.
1.Instead of developing godliness and good habits in the minds of people and guiding them in the spiritual path
2.men today are making the entire atmosphere poisonous and live having connection with poison.

In this state man has created the distinction of caste and creeds. All those who read this should refine their thoughts. Let truth be blended in your blood itself and treat love as your God.

Realize that is your soul… “that is God” and lead a life escaping from the poisonous effects of the present world. These lessons that I give and meditation will help you to realize yourself.

“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்

“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்

 

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் மனித உடல் அது எப்படி உருப்பெற்றது…? என்பதனைத் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் கொண்டு ஒவ்வொன்றாகத் தனக்குள் வளர்ச்சியாகித் “தன்னை அறிந்தான்…” தனக்குள் விளைந்த உணர்வின் வலுக் கொண்டு “அகண்ட பேரண்டத்தையும் அறிந்தான்…”

அவனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அதனை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இயற்கையின் உண்மையின் வளர்ச்சியை உங்களுக்குள் வலுவாக்கி அதன் உணர்வால் உருவாக்கும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.

1.நமது குருநாதர் அவர் உருவாக்கியது போல அவர் நமக்குள் உருவாக்கிட
2.அவரைப் போன்றே நினைவினை நான் செலுத்தப்படும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை கருவாக்கி உருவாக்கும் அந்த வலிமை பெறுகின்றது.
4.அதே வலிமையின் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகச் சொல்லப்படும் பொழுது
4.நீங்கள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி இந்த நினைவினை உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.
5.ஆகவே… நம்முடைய நினைவாற்றல் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவன் வழி செல்ல வேண்டும்.

நம்முடைய எல்லை எது…?

துருவன் பெற்ற அந்த எல்லையை அடைய வேண்டும் என்ற நினைவைக் கூட்டினால் இதனின் வரிசைத் தொடரில் அது வளர்ச்சியாகி பிறவி இல்லாத நிலை அடைந்து அந்த எல்லையை நாம் அடைகின்றோம்.

இல்லை…! என்னை இப்படிப் பேசினான்… அப்படிச் செய்தான்…! என்ற இந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால் இதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி… இந்த வேதனை நம்மை மீண்டும் கீழான நிலைகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

இதனின் வளர்ச்சி அதிகமாகி விட்டால் இப்போது உபதேசித்த இந்த உணர்வுகளை அது மேலே மூடிவிடும்.

ஆக… அப்படி ஆகாதபடி ஊழ் வினையாக இந்த உபதேச வாயிலாக அதை அமுக்கச் செய்து… இந்த உணர்வினை அணுவாக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவின் ஆற்றல் அந்த மெய் ஞானி சென்ற பாதையில் செல்லும்.

இந்தக் காற்று மண்டலத்தில் மனிதனின் இச்சை கொண்ட உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் உடலுக்குள் தீமை இயக்காது அதை இது மறைத்துவிடும்.

குப்பைக்குள் ஒரு மாணிக்கம் கிடந்தால்… மாணிக்கம் இருக்கிறது என்று கண்களுக்குத் தெரியுமா…? அந்தக் குப்பையை நீக்கி விலக்கிப் பார்த்தால் தான் அதற்குள் இருக்கும் ஒளிகளை நாம் காண முடியும்.

இதே போல இப்பொழுது உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் ஒளியின் உணர்வுகளை…
1.குப்பையைப் போன்று வாழ்க்கையில் அதனைக் கொண்டு மூடி மறைத்து விட்டால்
2.அந்த ஒளியின் தன்மை மின்னும் நிலையோ அதன் உணர்வின் தன்மை பளிச்சிடும் நிலையில்
3.அதன் அருகில் இருக்கக்கூடிய பொருளைக் காணும் நிலையோ தடுக்கப்படுகின்றது காண முடியாது.

ஆகவே அதைக் காணும் ஆற்றல் கொண்ட ஞானிகள் உணர்வினை இப்பொழுது பதிவாக்கி… அகண்ட பேரண்டத்தின் நிலைகளையும் துருவன் கண்ட நிலைகளையும் அவனில் அறிந்துணர்ந்ததையும் பெற்று… இனி எந்த இருளிலும் சிக்காது ஒளியின் தன்மையாக மாற்றிய உணர்வுகள் உங்களில் விளைய வேண்டும் என்பதற்குத் தான் உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எமக்குள் அதனை உருவாக்கினார்… அதை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்.
1.அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கின்றேன்.
2.நான் பெற வேண்டும் என்று அல்ல நீங்கள் பெற வேண்டும் என்று…!

“அந்த உணர்வின் ஒளியாக நீங்கள் பெற வேண்டும்” என்று ஏங்கப்படும் பொழுது
1.உங்களிடம் இருக்கக்கூடிய தீமைகளை நான் எண்ணுவதில்லை.
2.உங்களை அறியாது இயக்கும் கஷ்டங்களை நான் எண்ணுவதில்லை.
3.உங்களை அறியாத வந்த நோய்களை நான் எண்ணுவதில்லை.

யாம் உபதேசித்த வழியில் நீங்கள் அந்த அருள் ஞானத்தைப் பெற்றால் அந்தத் தீமைகள் அனைத்தும் அகன்று ஓடிவிடும்.

1.உங்களுக்குள் இருக்கும் கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் அறிய முற்பட்டு அதை அறிந்து கொண்டிருந்தால்
2.இந்த உணர்வின் தன்மை எனக்குள் இது தான் அதிகமாக வளரும்.

ஆகவே நாம் எண்ண வேண்டியது என்ன…? “தனக்குள் நோய் வந்தாலும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை வளர்த்தல் வேண்டும்.

அதே சமயத்தில்
1.எது எவ்வளவு வேதனையாகின்றதோ அந்த நேரத்திலே
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
3.இருளாக்கும் தீய வினைகள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் தனக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எமது உபதேசங்களைப் படித்து… அதனின் நினைவாற்றலைக் கூட்டிக் கொண்டு தியானிக்க வேண்டும்

எமது உபதேசங்களைப் படித்து… அதனின் நினைவாற்றலைக் கூட்டிக் கொண்டு தியானிக்க வேண்டும்

 

தாய் கருவிலே வளர்ந்த அந்த உணர்வின் ஆற்றல் தான் நஞ்சின் தன்மையை அடக்கும் சக்தியாக சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து…
1.அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சின் இயக்கத் தொடரைக் காணும் திறன் பெற்றான் துருவன் (அகஸ்தியன்).
2.அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.ஒவ்வொரு நொடியிலும் உங்களைச் சாடும் தீமையான உணர்வுகளை அது மாற்றிக் கொண்டே இருக்கும்.

இப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து நீங்கள் வேறு பக்கம் செல்லும் பொழுது என்ன நடக்கிறது…?

யாரும் உங்களைத் திட்டவே வேண்டாம். சும்மா இருக்கும் போது ஒருவன் மற்றவனைக் கடுமையாகச் சாடிப் பேசுகின்றான். அதை நாம் கேட்க நேர்கின்றது அந்த ஒலிகள் பட்டு அதைச் சுவாசித்த பின் நம்மை அறியாமலே அதே உணர்வுகள் இயக்கி விடுகின்றது… அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொருவன் கடுமையான ஆயுதத்தைக் கொண்டு மற்றவனைத் தாக்குகின்றான். அடிபட்டவன் அலறி ஓடுகின்றான். அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குப் பதட்டமாகின்றது. நம்மை அறியாமலே நடுக்கமும் பயமும் வருகின்றது.

அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஆனால் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் ஓ… என்று ஜீவணுவாக மாற்றித் தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறது.

பின் அவனில் விளைந்த உணர்வின் தன்மை நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கப்படும் பொழுது வினைக்கு நாயகனாக… நினைவு வரும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் தூண்டிக் கொண்டே இருக்கின்றது.

நினைவு வரும் போது இயக்கினாலும் நினைவு இல்லாத பொழுது அதனுடைய வலிமை என்ன செய்யும்…?
1.புலனடங்கிச் சாந்தமாக… வேலை இல்லாது அமைதியாக ஒரு இடத்திலே உட்கார்ந்து இருந்தோம் என்றால்
2.இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அது வலிமை பெற்றுவிடும்.
3.அடுத்து எந்த வேலைக்கும் போக விடாது…! பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும்
4.நுகர்ந்த உணர்வு அதனுடைய வளர்ச்சி அதிகமாகும் பொழுது இப்படி இயக்கத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சில குடும்பங்களில் வளர்ச்சி பெறும் குழந்தைகளின் உள்ளங்களில் இது போன்ற உணர்வுகளைக் கண்டு விட்டால் அது இயக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.

நீங்கள் நுகர்ந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து… யாருடன் பேசினாலும் கேட்போர் உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகள் பதிவாகி அவர்களையும் இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீட்டிடல் வேண்டும்.

அத்தகைய நிலைகள் உங்களுக்குள் வந்தால் பிறிதொரு உணர்வுகளை உங்களுக்குள் இந்தத் தீமை நம்மை இயக்கிடாது அதை அடக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான்
1.அருள் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதிவாக்கி
2.அந்த உணர்வின் வலிமை பெறச் செய்வது.

இந்த நினைவை நாம் வளர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கூட்டுத் தியானங்களில் யாம் வெளிப்படுத்திய உபதேசக் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களை எடுத்து அடிக்கடி படிக்க வேண்டும். கேட்டது நினைவில் இல்லை என்றாலும் அது வலுப்பெறுவதற்கு
1.அந்த அருள் ஞான நூல்களை மீண்டும் படிக்க வேண்டும்… நினைவாற்றலை மீண்டும் பெருக்க வேண்டும்.
2.கூட்டமைப்பில் மற்றவர்கள் செவிகளிலும் இது கலக்கப்பட வேண்டும்.
3.தியானத்தில் ஒருவர் இன்று படித்தார் என்றால் அடுத்து மற்றொருவரைப் புத்தகத்தைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அவருக்குள் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் கலக்கின்றது. கூட்டமைப்பில் எல்லோரும் சேர்த்துத் தியானிக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட பயத்தால் ஒரு சிலர் பயமான உணர்வுடன் இருப்பார்கள். அப்போது மனிதனை உருவாக்கிய மகிழச் செய்யும் அணுக்கள் பலவீனம் அடையப்படும் பொழுது… தனக்குள் இனம் புரியாதபடி நோய்கள் வருவதும் பிறர் வேதனைப்படும் உணர்வுகள் சிறுகச் சிறுக வந்து கடும் நோயாக விளையச் செய்து… நம்முடைய நினைவுகளை திசை மாற்றிக் கொண்டிருக்கும்.

அது போன்ற நிலைகளை நாம் அடக்க வேண்டும் என்றால்… அதற்கு அவசியம் யாம் வெளிப்படுத்திய அருள் ஞானப் புத்தகங்களை எடுத்துப் படியுங்கள்.
1.ஒரு பத்து பேர் இருந்தாலும் படிக்க வேண்டும்… ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் படியுங்கள்.
2.ஒருவரே என்று இல்லாதபடி தினமும் ஒருவரைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அது போன்ற கூட்டமைப்பாக அமைத்துத் தியானித்து முடிந்த பின் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்… அவர் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வினை அனைவரும் சேர்த்து அந்தப் பயந்தவரின் செவிப்புலனில் இயக்கப்படும் பொழுது வலிமை மிக்கதாக இது மாறி அவர் உடலில் இருக்கக்கூடிய பிணிகளை நீக்கும்.

தனித்த நிலையில் யாரும் இதைச் செய்ய வேண்டாம். காரணம்… ஒருவருக்குக் கடுமையான நோய் இருந்தாலும் அல்லது இன்னொரு ஆவி உடலுக்குள் புகுந்து இருந்தாலும் அதனுடைய வேகம் அதிகமாக இருக்கும்.

அதனுடைய உணர்ச்சிகளை பார்க்கப்படும் பொழுது அங்கிருக்கும் வெறுப்படைந்த உணர்வுகள் வேகத்தின் உணர்வுகள் அதற்கு வலு ஜாஸ்தி.
1.நமக்குள் நல்லதை எடுக்க விடாது முன் பகுதி இருந்து கொண்டு தடைப்படுத்தும்.
2.நல்ல உணர்வுகளை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது…?
3.இதைப் போன்ற வருவதைத் தடைப்படுத்துவதற்கு கூட்டமைப்பின் தன்மைகளை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

நாம் நுகரும் உணர்வின் தன்மை உயிலே பட்டுத் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செல்லும். ஆக அந்த்த் தீமை புகாது தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலுப்பெறச் செய்து உங்கள் வலிமையைக் கூட்டுகின்றோம்.

ஆனால் இந்த வலிமை வருவதற்கு முன் தீமையின் வலு சேர்ந்து விட்டால் நல்லது நமக்குள் வராதபடி ரிமோட்… தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது நல்லதை நுகர்வது எங்கே…? அந்த அறிவின் ஞானம் வருவது எங்கே…? இந்த வலிமையைப் பெறுவது எங்கே…?

ஆக நாம் எண்ணியதை உயிர் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீங்கள் அறிவதற்குத் தான் அகஸ்தியனைப் பற்றிச் சொல்வது. அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அணுவின் ஆற்றலை அறிந்தவன்… நஞ்சை ஒடுக்கியவன்… ஒளியின் சுடராக இருப்பவன்…! அதை நாமும் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். சாமி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று எண்ணுவார்கள்.
1.உங்களுக்குள் அதை இணைத்து “அவர்கள் பெற்ற வளர்ச்சியை” உங்களுக்குள் நினைவுபடுத்தியே ஆக வேண்டும்.
2.அப்போது அந்த உணர்வின் “தொடர்வரிசையாக” மீண்டும் உங்களுக்குள் அது இயங்கும்.

பலகாரம் சுடுபவர்கள் ஒரு தரம் மாவைப் போட்டுப் பிசைந்தார்கள் என்றால் அடுத்தடுத்து அதே மாவைப் போட்டுப் பிசைந்து சுட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் இப்படி திரும்பத் திரும்ப மாவைப் பிசைகின்றார்கள் என்று சொல்லக்கூடாது. முதலில் போட்ட அதே அளவுகளை மீண்டும் போட்டு அதைக் கொண்டு வரும் பொழுது தான் அதே ருசி… அதே மணம்… எல்லாமே ஒன்று போல் வரும்.

அவர்கள் எப்படிப் பலகாரங்களை மீண்டும் மீண்டும் சுவையாகச் சுடுகின்றார்களோ இதைப் போன்று தான் ஒவ்வொரு சமயத்திலும்
1.அந்த அருள் உணர்வுகளைச் சுவை மிக்கதாக வளர்த்ததை உங்களுக்குள் இணைத்து
2.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதை வளர்க்கச் செய்வபதற்குத் தான் திரும்பத் திரும்ப யாம் சொல்வது.

அதாவது… பிறிதொரு உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே கலந்துவிடாதபடி
1.அருள் உணர்வுகளைக் கூட்டி மற்ற தீமையின் வலுவைக் குறைக்கச் செய்வதற்கு தான் இவ்வாறு செய்வது.
2.எமது குருநாதர் எனக்கு இப்படித்தான் செய்தார்… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்வதும் திரும்பத் திரும்பச் சொல்வதும்.

ஏனென்றால்
1.இந்த மனித உடல் நமக்குச் சதமானது அல்ல.
2.உயிர் தான் சதம் என்று நமக்குத் தெரிகின்றது.
3.அதனுடன் உணர்வுகளைச் சதமாக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து விடாது அழியா ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அதற்குத் தான் பல வகைகளிலும் உங்களுக்கு விளக்க உரையாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

People live with association of spirits only

People live with association of spirits only

I have told you that we live in this world with the association of spirits and influenced by several atoms. I told you about the state of Taj Mahal.

There are several temples in the same state. What is the state of the big temple of Brahadeesvar at Tanjore in South India…?
1.That temple is the thoughts of the King Raja Raja Chola who ruled there.
2.The king’s soul left the body of the king with the same thoughts with which he built the temple and “remains there…”

The soul without taking a rebirth and not going to the mental region is roaming in the temple “with the same desires even today…”

There are other temples also which are in the same state. The people in those days built temples as per the states of their mind.

The people who live today in one place have the same kind of thoughts as those who lived there in olden days.

The souls that have left their bodies from one place with some of their desires not completely fulfilled
1.enter the bodies of the people who have the same kind of thoughts
2.and complete the works left unfinished by them.

Is this the state of all the people…? Is there no one without the association of other spirits…? Does this state apply only to India…? What about the states of people in other countries in this world…? Such questions may arise in the minds of people who read this.

When our mind is influenced by excessive greed, anger or hatred we are liable to be attacked by some spirits from the outside world.

Since our thoughts in our previous births and the way in which we live now are connected the thoughts of people in the same families differ. The atoms relating to our thoughts accumulate in our bodies.

When we sow a certain seed we will not get a different plant. Each person has contact with spirits according to his thoughts.

To get ourselves relieved from this state, our elders who are in the higher regions have shown us the way of idol worship avoiding of greed and anger and live a life of love.
1.The right way to live is to follow the way shown to us by those great souls
2.and not allow ourselves to be influenced by other spirits.

Astrology and viewing in a black ointment and finding out some facts are also done by help of some spirits. In some temples approval or disapproval of the deities are obtained by the use of flowers of their choice.
1.In some other temples the priest gets into a trance and gives some advice.
2.All these are done with the help of spirits.

These have come as a hereditary practice by which some spirits get their desires fulfilled using the name of God.

Today we find the spirits functioning in the name of God in our land. In this world thoughts of the people who lived in the various parts come in the bodies of various persons and act though they have gone to the spirit world.

In all parts of the world such states are worked with the help of spirits. A scientist shines in his work by the help of some spirit which acts through him.

In all parts of the world people live having association with spirits. It is only those who realize the real state of their self and live, that can go to the mental world.

Those who live in association with other spirits take several more births in this world. It will be good if a person takes several births as human beings but should not sink down from this state and take birth as animals, worms etc. and go on circulating in the cycle of birth and death subject to distress.

Once a person takes birth in an animal’s body
1.the soul will know about all that took place when it was in a human body.
2.Why should we think of what has taken place already in previous lives
3.brood over them and live as animals…?

It is only the illusive body that changes but not our thoughts which remain permanently for ever. Our thoughts are going round our soul in all our incarnations.

Everyone should realize this truth and try to cherish good thoughts in his mind always.

அருள் உணர்வுகளை நீங்கள் பெறப்படும் போது “பளீர்ர்…” என்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சம் வரும்

அருள் உணர்வுகளை நீங்கள் பெறப்படும் போது “பளீர்ர்…” என்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சம் வரும்

 

அகஸ்தியன் கண்டதை… துருவன் கண்டதை… எல்லோரும் காண முடியும். அந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நமக்குள் அது வளர்ந்து நம்மை அறியாமலே அதைக் காணும்படி செய்யும்.

எப்படி…?

உதாரணமாக கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் ஒருவன் துர்மரணம் அடைந்ததையும் சிதைந்து கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டதையும் நாம் கேட்டுணரப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது.

துர்மரணம் அடைந்தவன் வேகமாகவும்… கோபத்துடன் தாக்கும் உணர்வுகள் செயல்பட்ட்தையும்… அப்படிப் பதிவான உணர்வலைகள் இரவிலே தூங்கப்படும் பொழுது “கொடிய உணர்வின் சத்து…”
1.அந்த ஆவியின் அலைகளை உடல் அதை ஈர்த்துச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டு
2.புலனடங்கித் தூங்கும் நிலையில் முன் பின் பார்க்காதவர்களின் ரூபங்களைக் காணுவோம்.

தலை சிதைந்து அல்லது தலை இல்லாத மனிதனோ… அதாவது கொலை செய்யும் பொழுது தலை இல்லாத நிலையில் ஓடும். அந்த உடலில் இருந்து சிதைந்த உணர்வுகள் அணுக்களாக மாறியதை… பிறர் சொல்வதை நாம் கேட்டிருந்தாலும் கூட அது பதிவாகி இந்த நினைவுகள் அலைகளாக நம் சுவாசத்தில் புகுந்து கொடிய உணர்வுகள் சேர்க்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று அப்படி ரூபங்கள் தெரிய வரும்.

இரவிலே தூங்கும் பொழுது பார்த்தால் அது கையில்லாததாக இருக்கும் காலில்லாது இருக்கும். ஒருவரை ஒருவர் தாக்க எண்ணும் இந்த உணர்வுகள் நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களில் மோதியவுடன் நம்மை அறியாமல் வியர்த்து விறுவிறுத்து திடீரென்று முழிப்பாகி எழுந்து விடுவோம்.

இந்த உணர்வுகள் எப்படி நம் உடலை இயக்குகின்றதோ இதைப் போலத் தான்
1.இயற்கையின் நிலைகளைத் துருவன் கண்டுணர்ந்து தனக்குள் படிப்படியாக அவன் நுகர்ந்த ஆற்றல்மிக்க சக்திகளை
2.ஒன்றில்லாது ஒன்றில்லை என்ற நிலையில் அவனிடமிருந்து வெளிப்பட்ட தீமையை நீக்கிய உணர்வுகள் படர்ந்திருப்பதை
3.நினைவு கொண்டு அந்த உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால்
4.இரவில் தூங்கும் பொழுது சிலருக்கு அவர்களை வான மண்டலத்திற்கே அந்தப் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்வதையும் காணலாம்.

இந்தத் தியான வழியினைக் கடைப்பிடிப்போர் வானிலே மிதந்து கொண்டிருப்பதாகவும்… மிதந்து கொண்டே செல்வதாகவும் அந்த வான மண்டல இயக்கங்களைக் காணவும் முடியும்.

ஒரு சிலர் இரவிலே இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மிதந்து கொண்டே அதைப் பார்த்த உடனே இதிலே அச்சப்படுவோரும் உண்டு.

பூமிக்குள் வராது அப்படியே மேலே சென்று விடுவோமோ…? வீட்டிலே பெண்டு பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டுச் சென்று விடுவோமோ…? என்ற இந்த உணர்வுகள் கலந்து விட்டால் திடீரென்று உடலிலே வியர்வையாகி “பூமிக்குத் திரும்ப மாட்டோமோ…” என்று திடுக்கிட்டு… முழிப்பவர்களும் உண்டு.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை புவியின் ஈர்ப்புக்கு வரும் பொழுது இப்படியும் கனாக்கள் பல நிலைகளில் வருவது உண்டு.

கனாக்கள் வருவதே…
1.எதை நுகர்கின்றோமோ அந்த உணர்வுகள் உயிருடன் உராய்ந்து
2.உடலுக்குள் சேர்த்து அது மோதுவது தான் நினைவாற்றலாக வருகின்றது.

குருநாதர் எனக்குள் பதிவு செய்த… துருவன் கண்டுணர்ந்த உணர்வினை… அந்த நினைவின் ஆற்றலை நான் பெறுவதற்கு எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

இந்த உணர்வுகள் உன்னை எப்படி இயக்குகின்றது…? அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்ற உண்மையைச் சொல்லப்படும் பொழுதுதான் அவர் வழியில் துருவன் பெற்ற ஆற்றல்களை… அவன் எவ்வாறு எல்லாம் தனக்குள் வந்ததை மாற்றி அமைத்தானோ “அதையும் நான் பெறும் தகுதியாக குருநாதர் ஏற்படுத்தினார்…”

அவர் எவ்வழியில் உணர்த்தி இதைப் பெறும் தகுதியை எனக்கு ஏற்படுத்தினாரோ அதன் வழியில் உங்களுக்குள்ளும் இதைப் பதிவாக்கி அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இந்த உணர்வுகள் உருவானது என்ற நிலையையும் நினைவுபடுத்தி
2.அதனின் வலிமை கொண்டு நீங்களும் இதை அறிந்து உங்களுக்குள் இது விளைந்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி
3.உங்கள் சொல்… கேட்போர் உணர்வுகளிலும் ஆழமாகப் பதிந்து
4.அவருக்குள் விளைந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக இது உருவாக வேண்டும்.
5.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் பதட்டத்தையும் மற்ற தீமைகளையும் அடக்கி “வெளிச்சமாக…” உங்கள் உடலிலிருந்து வரும்.

பழனியில் இருக்கும் ஒருவருக்கு இது போன்று கிடைத்தது. அவர் எதையுமே கூர்மையாக உணரக்கூடியவர். இந்த உபதேசத்தைக் கொடுக்கப்படும் பொழுது கூர்மையாகக் கவனித்தார். இப்படி எல்லாம் நடக்குமா…! என்று ஆச்சரியக் குறியுடன் எண்ணினார்.

இரவிலே தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பளீர்ர்… என்று ஒளிகள் அவர் உடலிலிருந்து வெளிப்படுகின்றது. அவர் அரண்டு எழுந்திருக்கின்றார்… சப்தமிடுகின்றார்.

சப்தத்தைக் கேட்டு அவர் மனைவியும் எழுந்து பார்க்கின்றது. கணவர் உடலிலிருந்து வரும் வெளிச்சத்தை அதுவும் பார்க்கின்றது. அந்த இடமே வெளிச்சமாக மாறுகின்றது.

இந்த வயதிலேயே இதையெல்லாம் கண்டு விட்டால் நான் இனி என்ன செய்வது என்று தனக்குத் தானே அச்சுறுத்திக் கொண்டு என்னிடம் வந்து இதைக் கேட்டார்.

1.வெளிச்சத்தைப் பார்த்த நாளிலிலிருந்து எனக்குப் பயமாக உள்ளது.
2.மனிதனாகப் பிறந்தேன்… என் ஆசை எல்லாம் போய் விட்டால் நான் என்ன பண்ணுவது…? என்று அவர் இதைப் பிடிவாதமாகப் பிடிக்கின்றார்.
3.உண்மைகளை அவர் நுகர்ந்தாலும் அவருடைய பிடிவாத உணர்வுகள் அது இயக்கிக் கீழே அழைத்துச் சென்றது.

அவரின் பிடிவாதத்திற்குக் காரணம் என்ன…?

இந்த மனித வாழ்க்கையில் மற்றவர்களின் பழக்க வழக்கங்களைச் சேர்க்க விரும்புகின்றார். நண்பர்களுடன் அதிகமாகச் சேர்ந்து “மது குடிக்கும் பழக்கம் இருக்கின்றது…”

மதுப் பழக்கம் உள்ளவருடன் இணைந்து வரும் பொழுது அது அதிகமாகி விட்டது… தன் ஒழுக்கம் அவரிடம் மறைந்தே விட்டது.

1.உயர்ந்த சக்திகளைக் கொடுத்தும் இதை அவர் வலு சேர்க்கவில்லை.
2.தன் உடலின் இச்சை வரப்படும் பொழுது அதனுடைய மாற்றங்கள்…
3.மற்றவன் தான் செய்யும் உணர்வு வரப்படும் பொழுது அவருடைய நிலை ரொம்பவும் மோசமான நிலைக்குப் போய்விட்டது.
4.உயர்ந்த உணர்வுகல் கிடைத்தும் அவருக்குப் பலனில்லை.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை உடலின் இச்சைக்குத் தான் வருகின்றது. உடலின் இச்சைக்கு வந்தாலும் பல செயல்களைப் பார்த்துப் பலவீனம் அடையப்படும் பொழுது மன நிலை குழம்புகின்றது.

அதை அடக்குவதற்கு மதுவைக் குடிக்கின்றார்… தன் நிலையை மறக்கின்றார். மறக்கும் உணர்வுகள் தனக்குள் வளர்க்கப்படும் பொழுது தன் நிலையையே இழக்கச் செய்கின்றது.

1.ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் வரும் ஆசையின் உணர்வுகள்…!
2.அது வளர்ந்து விட்டால் நான் உயர்ந்த உணர்வுகளைக் கொடுக்கும் போது
3.அதை நீங்கள் “பயனற்றதாக ஆக்கி விடக்கூடாது… என்பதற்குத் தான் “உங்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கின்றேன்…”

அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலை அனவரும் பெற முடியும்

அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலை அனவரும் பெற முடியும்

 

அகஸ்தியரும் அவர் மனைவியும் தனக்குள் அறிந்த உணர்வுகளை இருவருமே ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற நிலையில் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்தனர்.

1.உயிர் எவ்வாறு மின்னல் போன்ற மின்னிக் கொண்டிருந்ததோ இதைப் போல
2.தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்து எதனின் ஈர்ப்பிலும் சிக்காது
3.இரு உயிரும் ஒன்றாகி இரு உடலில் விளைந்த உணர்வுகளும் ஒன்றாகி
4.இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் அனைத்தும் நம் பூமிக்குள் வரும் அந்தத் துருவதிலே நின்று அதனை ஒளியின் கருவாக உருவாக்கி
5.இன்றும் தங்கள் வாழ்க்கையில் அழியாத நிலைகள் கொண்டு “துருவ மகரிஷியாக…” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்

அந்தத் துருவ மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம். துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி நாம் ஏங்கித் தியானிப்போம்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

சப்தரிஷி மண்டலங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வலைகள்
1.உங்கள் புலனறிவுக்குள் ஈர்க்கப்பட்டு உங்கள் உடலுக்குள் ஊடுருவதும்
2.அதனைப் பின் தொடர்ந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியும் உங்கள் புலனறிவிலே ஈர்க்கப்பட்டு
3.உங்கள் உடலில் உள்ள அணுக்களில் அது இணையும்.

அந்த உணர்வின் ஒளிகள் இணைந்து வருவதை உங்கள் நினைவிலே உணர முடியும். உங்களுடன் இணை சேர்க்கும் பொழுது அதன் உணர்ச்சிகளை உங்கள் உடலில் உணர முடியும்.

உங்கள் எண்ண உணர்வுகள் அனைத்தும் இணைந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்தி உங்கள் ஈர்ப்பிற்குள் வருவதும்… உங்கள் நினைவலைகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வருவதையும்… அங்கிருந்து உங்கள் உடலுக்குள் பாய்வதையும் உணரலாம்.

1.மீண்டும் மீண்டும் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்திற்குள் சுழன்று வருவதும்
2.அந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் சுவாசங்களில் பல ஆற்றல்கள் உயிரிலே ஈர்க்கப்பட்டு
3.நுகரும் போது அந்த அகஸ்தியன் பெற்ற அரும்பெரும் சக்தி உங்கள் உடலுக்குள் ஊடுருவி அனைத்து அணுக்களிலும் அது கவரப்படும் பொழுது
4.துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளை விண்ணிலே எப்படிக் காண முடிகின்றதோ அதைப்போல
5.உங்கள் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஒளியாகப் பரவுவதைக் காணலாம்… காட்சியாகவும் தெரிய வரும்.
5.இப்பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியும் காட்சிகளாக உங்கள் உணர்வுகளிலே தென்படும்.

வான மண்டலத்தில் வெளிப்படும் பல வர்ணங்களைக் காட்சியாகவும் உங்கள் உணர்வுகளில் நுகர்ந்து அது மாற்றி அமைக்கும் சக்திகளை உங்களுக்குள் உணரலாம்.

யாம் உபதேசித்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய நிலையில்… அண்டத்தில் நமது பிரபஞ்சம் நட்சத்திர இயக்கங்களுடன் சுழன்று தனிப் பிரிவாகச் சுழல்வதை இப்பொழுது நுகர முடியும். உங்களுக்குள் அந்த உணர்வு தென்பட்டிருக்கும் என்று எண்ணுகின்றேன்.

பிற மண்டலங்களில் இருந்து வருவதை நட்சத்திரங்கள் ஈர்த்து ஒளிப்பிளம்புகளாக வெளிப்படுத்தும் போது பல வித வர்ணங்களாக வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள் உமிழ்த்தித் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வுகள் மோதப்படும் பொழுது பல பல வண்ணங்கள் உருமாறி பல பல வண்ணங்களாக மாற்றமடைந்து
1.அணுத்தன்மையாகப் பிரபஞ்சத்தில் மிதந்து வருவதையும் அதைக் கோள்கள் நுகர்வதையும்
2.கோள்கள் நுகர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியனின் காந்த சக்தி கவருவதையும்
3.சூரியன் கவர்ந்து அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டுத் தன் ஒளிப்பிளம்பாக மாற்றும் நிலைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

வான மண்டலங்களில் நட்சத்திரப் பொறிகளின் இயக்கத்தையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். பல வர்ணங்களில் வெளி வந்ததைப் பார்த்திருப்பீர்கள்.
1.அந்த வர்ணங்கள் பூமிக்குள் புகுந்து பாறைகளுக்குள் ஊடுருவதையும்
2.பிளந்து… அதாவது ஒரு குகைக்குள் நாம் நுழைவது போன்று நினைவாற்றல் வந்திருக்கும்.

அதே சமயத்தில் பூமிக்குள் கொதிகலனாகச் சேர்ந்து மாற்றம் அடைந்து இருப்பதையும் பூமியில் எதிரொலிகள் உள்ளே நிலநடுக்கங்கள் வருவதையும் உணர்ந்திருக்கலாம்.

அதனின் விரிவாக்கங்கள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
1.அண்டத்தில் இருப்பது பிண்டத்திற்குள் அணுக்களாக மாற்றமாகி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது பளீர்ர்… என்று வெளிச்சமாக உங்கள் உடலுக்குள் தெரிந்திருக்கும்.

இது எல்லாம் தெரியவில்லை என்று யாரும் சோர்வடைய வேண்டாம். எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ள முடியும் எல்லோருக்கும் இந்த உணர்வுகள் கிடைக்கும்படி அதை இணைத்து அந்த வளர்ச்சிக்குக் கொண்டு வருகின்றோம்.

செடிக்கு உரமிடும் பொழுது அதைத் தன்னுடன் இணைத்துத் தன் இனமான சக்தியைக் கவரும் பொழுது அது சீராக வளர்கின்றது. அதைப் போல்
1.அனைவரும் அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.அந்த நம்பிக்கையில் தான் சொல்கிறேன்.

எமது குருநாதர் அண்டத்தின் ஆற்றலைப் பெற எமக்குப் பயிற்சியாகக் கொடுத்தார். அவர் காட்டிய வழியில் அண்டத்தையும்… பிரபஞ்சத்தையும்… புவியின் ஈர்ப்பையும்…
1.அண்டத்தில் இருப்பது இந்தப் பிண்டத்திற்குள் அணுக்களாக எப்படி மாற்றம் அடைகின்றது என்பதையும்…
2.துருவ மகரிஷி தனக்குள் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றியதையும்
3.அதன் உணர்வைப் பின் வந்த மனிதர்கள் ஏழாவது நிலையாகப் பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழண்று கொண்டிருப்பதையும்…
4.இந்தப் பிரபஞ்சத்திற்குள் தனி சுழற்சியாக அது சுழன்று கொண்டிருப்பதையும் காண முடியும்.

நாளுக்கு நாள் உங்களுக்குள் தெளிவடையும் நிலையாக இது வளர்ச்சியடையும். அதை அறிந்திடும் அறிவும் வளரும்.

தியானமிருக்கும் பொழுது உங்கள் அனைவருக்குமே ஒரு மிதப்பது போன்ற உணர்ச்சி தோன்றி இருக்கும் வான மண்டலத்தை நோக்கி மேலே மிதப்பது போன்று தோன்றியிருக்கும். புவியீர்ப்பின் பிடிப்பைக் கடந்து எடை குறைந்ததாகத் தெரியவரும்.

அகஸ்தியன் தான் பெற்ற சக்திகளைத் தன் மனைவிக்கு எப்படிப் பெறச் செய்தாரோ மனைவி பெற்ற நிலையை மீண்டும் அவர் பெற்று இருவரும் ஒன்றாக இணைத்து மாற்றமடையச் செய்த அந்த அருள் சக்தியைத்
1.தியானத்தில் அமர்ந்திருக்கும் கணவன் மனைவி இருவருமே பெற்று நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்த முடியும்.
3.விண் செலுத்தி அந்த ஆற்றலைப் பெறும் பொழுது கணவன் ஒளிச் சரீரம் பெற்றதும் அதே போல் மனைவி ஒளிச் சரீரம் பெற்றதும் தெரிய வரும்.

ஏனென்றால் கணவன் உணர்வுகள் மனைவியிடம் உண்டு மனைவியின் உணர்வுகள் கணவனிடம் உண்டு. யாரும் பிரிந்தில்லை.

அதன் வழி எடுக்கும் அந்த ஆற்றல் பெருகும் போது அதன் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து மனித வாழ்க்கையில் கணவன் மனைவி எவ்வாறு ஒன்றி வாழ்ந்தார்களோ அதைப் போன்று “இரு உயிரும் ஒன்றாகிப் பெரு வாழ்வு வாழும் ஒளியின் சரீரமாக வாழும் நிலையாக மாற்றிக் கொள்ள முடியும்…”

இந்தத் தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு இரவு முழுவதும் வான மண்டலத்தில் உங்கள் நினைவுகள் சஞ்சரித்து
1.வானஇயல் புவியியல் உயிரியல் என்ற அடிப்படையில் நினைவு கொள்ளும் பொழுது பல அற்புதங்கள் விளையும்.
2.உங்கள் உடலில் உள்ள பிணிகள் குறையும்… மன பலம் பெறுவீர்கள்… அருள் ஞான உணர்வுகள் வளர்ச்சி பெறும்

அந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Get rid of spirits which are roaming around us

Get rid of spirits which are roaming around us

Several people during their life time in this world have contact with the souls in the higher regions. The Siddas and Gnanis from their higher states guide those who are spiritually minded in this world.

There are some other spirits or souls that get into the person who has got similar thoughts.
1.They do so without the knowledge of the person into whom they enter
2.and make the man a slave and obey the commands of the spirit inside him.

Some spirits which left their bodies in a good state remain in the higher world, having an affection for its blood relations, help their families to do some good things which they have left undone during their life time in this world.

They will go on doing such help till their blood relations are alive.
1.The family members might not know these
2.but will think that the good things for them are being done by God’s grace.

Such souls will take rebirth in an appropriate body only after their desires have been fulfilled.

Those souls that lead a life of revenge, greed and other bad qualities enter into the bodies of like minded persons and through them get do acts of revenge and hatred which they had during their life time in this world but could not execute.

Due to the effects of the bad spirit that has entered into his body, the man takes such breath that animals take and in his next birth he will get into an animals’ body and be born as an animal.

Our next birth depends upon the “nature of our life during this life time…”

Today what thoughts, intelligence and capacity a man has got, the animals and birds also have. Animals and birds can remember about their past lives better than man.

Dogs can know about all the states. But as the animals do not have the capacity of expression and limbs to act they brood over their defects and live as animals.

Man kills those animals and eats its flesh as a delicious food. By eating the flesh of animals and birds man gets into his body atoms of those beings. The characters of those atoms do not change by cooking them.

1.There are spirits in various states in this world
2.and we should not give room to bad atoms from those spirits to enter into our bodies.

The small depressed attitude that we may sometimes get should not be allowed to go round us and we should refine our state.

There are several states among these spirits. What is the state of the spirit called Mum Taj which remains in the famous Taj Mahal in Northern India…?

That spirit is going round in the building even to this day. The spirit of Sha-Jahan does not like to go to a higher state. Both the spirits are roaming about in the building not having a desire to go to any higher state or take any rebirth.

1.They are not able to go to the mental world either.
2.Both the spirits remain in a happy state there even today.
3.They will remain in that state for ever.

Since they could not lead a mutually happy life during their life time in this world they are leading an ideally happy life as told in legends.

There are several states in the spirit world which I will explain to you tomorrow.