வேகாநிலை போகாப்புனல்

வேகாநிலை போகாப்புனல்

 

மகரிஷிகள் தன்னுள் கண்டுணர்ந்ததும்… தன்னை அறிந்ததும்… பேரண்டத்தையும் தன்னுள்ளே கண்டுணர்ந்து…
1.தனக்குள் கண்டுணர்ந்த உணர்வில் இருள் படர்ந்ததை… இருளை நீக்கி வாழ்க்கையில் பொருளறிந்து செயல்பட்டு
2.உணர்வினை ஒளியாக மாற்றி… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இன்றும் நிலை கொண்டுள்ளார்கள்.

அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து ஆற்றல்மிக்க உணர்வினை தன் உடலிலே வளர்த்து உயிருடன் ஒன்றி… துருவ மகரிஷியாக வளர்ந்து… துருவ நட்சத்திரமாக என்றும் 16 என்ற நிலையை அடைந்தான்,

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வினை எவர் எவர் கவர்ந்தனரோ அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவினை… ஏழாவது நிலையாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனின் உயர்ந்த நிலையாக… பிறவா நிலை என்ற பெருநிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் வழி… அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்…
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளினை நீக்கி இருளுக்குள் பொருள் கண்டுணர்ந்து
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இந்த வாழ்க்கையில் வாழவும்
3.இருளை நீக்கிடும் உணர்வின் ஆற்றலைத் தன்னுள் வளர்த்திடவும் முடியும்.

மனித வாழ்க்கையில் அதை எவர் பெறுகின்றனரோ அவரே அடுத்த எல்லையாக… இந்த உடலிலிருந்து பிறவா நிலை என்னும் பெருநிலை அடைகின்றனர்.

இதற்குப் பெயர் வேகாநிலை…!

ஆனால் இந்த வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ… அது சாகாக்கலையாக வளர்ந்து… உடலை விட்டு அகன்றாலும் அந்த (கலையின்) அந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகள் அமைகின்றது… மாறுகிறது.

சாகாக்கலை… வேகாநிலை… போகாப்புனல்…! என்று இந்த இருநூறு ஆண்டுகளுக்குள் இராமலிங்க அடிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை சாகாக்கலையாக வளர்த்து
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை வலுவாக்கி உயிருடன் ஒன்றிய ஒளியாக வேகாநிலையாக உருவாக்கி
3.இன்னொரு உடலுக்குள் புகாதபடி போகாப்புனலாக விண் செல்ல வேண்டும்…! என்பது தான் அவர் சொன்ன தத்துவம்.

மனிதன் தீயிலே குதித்தால் அந்த உயிர் வேகுவதில்லை… உடல் தான் கருகுகின்றது. ஆகவே உயிரை போன்றே உணர்வுகள் அனைத்தையும் அழியா நிலை பெறச் செய்து… உடலை விட்டு அகன்றால் இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்பதனைத் தான் அவர் உணர்த்தினார்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு ஓம் ஈஸ்வரா குருதேவா…! என்று உயிரை எண்ணி நாம் சொல்கின்றோம்.
1.நம் உயிரையும்… உயிரின் இயக்கத்தையும்… உயிரால் இயக்கப்பட்டு மனிதனான நிலையும்
2.மனிதனான பின் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையைச் சீராக்கிக் கொள்வதே நல்லது.

அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

சித்தன் போக்கு சிவன் போக்கு

சித்தன் போக்கு சிவன் போக்கு

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!
3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

ஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

இறந்தவர்களின் துக்கத்தை விசாரிக்கலாமா…?

இறந்தவர்களின் துக்கத்தை விசாரிக்கலாமா…?

 

எந்த ஒரு சூழ்நிலையிலும்… “ஒருவர் அகால மரணம் அடைந்து விட்டார்…” என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.தனித்து நின்று அவர்களை எண்ணி
2.“ஐயோ இறந்து விட்டாரே… உயிர் போய்விட்டதே ஈஸ்வரா…!”
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர் போக வேண்டும் என்று “முந்தி விடாதீர்கள்…”

ஏனென்றால் இப்படி எண்ணினால் அந்த ஆன்மா உங்களுக்குள் வந்து விடும்… இதை மறந்து விடாதீர்கள்…!

அதற்குப் பதிலாக… மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.முதலில்… இந்த வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
2.அதற்குப்பின் அந்த உயிரான ஈசனின்… ஆன்மாவின் முகப்பிலே சப்தரிஷி மண்டல உணர்வினை இணைத்து…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
4.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று சொல்லி விட வேண்டும்…!

அங்கிருந்து நாம் நகர்ந்து விட வேண்டும்…!

பின் கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு ஐந்து பேர் சேர்ந்து மேலே சொன்னபடி செயல்படுத்துங்கள். அவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது.

தனித்த மனிதன் எண்ணி இழுக்கப்படும் போது ஒரு சமயம் ஏமாந்து விட்டால்
1.ஈகையின் நிலைகள் கொண்டு வேதனை கலந்த நிலையில் எண்ணி விட்டால்
2.அந்த ஆன்மா விண் செல்வதற்குப் பதில் நம்முடன் அரவணைத்து விடும்.

ஆகவே கூட்டுத் தியானங்களை அமைத்து ஒரு ஐந்து பேர் சேர்ந்து செய்து ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுடன் இணைந்து வலுப் பெறும் நிலையாக செயல்படுத்தினால் விண் செலுத்த இது உதவுகின்றது.

மறவாது இப்படிச் செயல்படுத்துங்கள்.

1.எங்கே யார் இறந்தாலும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற ஏக்கத்துடன் நுகர்ந்து விடாதீர்கள்
2.ஏனென்றால் அந்த ஆன்மாக்கள் நம் பூமிக்குள் ஈர்க்கும் நிலையே வருகிறது… அல்லது நமக்குள்ளே வந்துவிடும்
3.இதிலே பங்கு விகிதாச்சாரம் எவர் அதிகமாக அவரை எண்ணி ஏங்குகின்றாரோ
4.வேதனை உணர்வு கொண்டு சோகம் அதிகமானால் அதனின் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுவர்.
5.அதன் வழி தான் அந்த ஆன்மா மறு பிறவிக்கு வருகின்றது.

அது போன்று இல்லாது கூட்டுத் தியானத்தின் மூலம் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து… ஆன்மாக்களை இந்த முறைப்படி விண் செலுத்துவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்

1.பிறிதொரு ஆன்மா ஒவ்வொருவர் உடலிலும் உண்டு
2.ஆன்மா இல்லாத மனிதரே இல்லை
3.எவ்வழியிலும் ஏதாவது ஒன்று நம் உடலில் ஒரு ஆன்மாவது இருந்துதான் தீரும்.

காரணம் மனிதன்… எதன் மீது பற்று கொள்கின்றானோ அதன் துணை கொண்ட உயிரான்மா உடலுக்குள் வந்துவிடும். எந்த மனிதன் தனக்குள் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டானோ எந்த உடலுக்குள் போனாலும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆனால்… ஆன்மாக்களை நீக்குவதற்கு ஜோதிடம் பார்ப்பதோ கோடங்கி அடிப்பதோ… மந்திரங்கள் எந்திரங்கள் செய்வதோ… முற்படாதீர்கள். அது ஒன்றும் வேலை செய்யாது… கெடுதலைத் தான் தரும்.

உங்கள் உடலுக்குள் கடின நிலைகள் கொண்டு ஆன்மா செயல்பட்டாலும்
1.உடலில் ஆட்டிப் படைக்கும் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.எங்கள் உடலில் அமைதி கொண்டு நல் வழி காட்டும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆன்மா ஒரு உடலில் இப்படி ஆட்டங்கள் ஆடினால் உள்ளிருந்து இயக்குவதை சப்தரிஷி மண்டலங்களுடன் உங்கள் நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்… அதன் வழி அதை அமைதிப்படுத்துங்கள்… தீமைகள் அகன்றுவிடும்

ஏனென்றால் அதனுடைய உடலில் துடித்த சாப வினைகள் தான் அதற்குக் காரணமாகின்றது. அந்தச் சாப வினைகளை நீக்க இதைப் போன்று நாம் அருள் உணர்வுகளை இணைத்து… ஆத்ம சுத்தி செய்து… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு இந்த எண்ணத்தின் வலுவை உடலில் உள்ள ஆன்மாக்களுக்குப் பாய்ச்சினால் தீமைகள் அகலுகின்றது

ஆகவே குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
1.எத்தனை முறை சொல்கிறீர்களோ
2.அந்த அளவுக்கு உங்களுக்குப் பலன் கிடைக்கும்.

சரீரம் ஒரு பாத்திரம்…! “அதில் நாம் சமைக்க வேண்டியது” மகரிஷிகள் அருள் சக்திகளை

சரீரம் ஒரு பாத்திரம்…! “அதில் நாம் சமைக்க வேண்டியது” மகரிஷிகள் அருள் சக்திகளை

 

இந்தச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது. உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும் இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
1.தியானம் என்ற அக்கினியில்… குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
2.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொண்டிட வேண்டியது
3.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்கப்படுவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்த்திடல் வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைக் கலயம் ஈர்ப்பது போல்
2.கலயத்தினுள் குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்… ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்…!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!

குரு (ஈஸ்வரபட்டர்) உணர்வு உங்களை இயக்கி” மகிழ்ச்சியை ஊட்டும்

குரு (ஈஸ்வரபட்டர்) உணர்வு உங்களை இயக்கி” மகிழ்ச்சியை ஊட்டும்

 

ஒருவன் கடுமையான பாவத்தைச் செய்வதை உற்றுப் பார்த்தாலே அவனுக்குள் விளைந்த அந்த வினைகள்… கூர்ந்து கவனிக்கும் போது அந்தப் பாவ வினைகளே நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஒருவன் சாபமிடுவதைக் கூர்ந்து கவனித்தால் அவனிட்ட சாப வினைகள் எதை அழிக்க வேண்டும் என்று எண்ணினானோ அதே உணர்வு நமக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.
1.சாபமிட்டோருக்கும் அதே நிலை… கேட்டோருக்கும் அதே நிலை
2.இது போன்ற தீமைகள் நமக்குள் தாக்காது தீய வினைகள் சாப வினைகள் நமக்குள் சேர்ந்திடாது
3.விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து அதைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

அதற்கே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு இத்தகைய அருள் உணர்வுகளைப் போதித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது உள் புகும் தீமைகள் அனைத்தையும் அகற்றும்படியாக வழி காட்டுகின்றார்.

தீய வினைகளை அகற்றி என்று மகிழ்ச்சியான சொல்களை நீங்கள் சொல்கின்றீர்களோ அப்போது எமது குருநாதரை உங்களில் நான் (ஞானகுரு) காணுகின்றேன். தீமைகளை அகற்றி என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் எம்மைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுது என் குருவை உங்களிடம் நான் பார்க்கின்றேன்.

தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு விண்ணுலகில் மகரிஷிகள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஒளியான அணுக்கள் இங்கே வந்து கொண்டுள்ளது.

குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அதைத் தான் உங்களை இப்போது பெறும்படி செய்து கொண்டுள்ளோம். அதை நீங்கள் சுவாசிக்கப்படும் போது
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கி
2.உங்களை அறியாத வந்த பாவ வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி சாப வினைள் நீங்கி
3.உங்களில் மகிழ்ச்சி பெறும் நிலைகளில் அது இருந்தால்
4.எமது குருநாதன் அந்த உணர்வின் இயக்கமாக உங்களுக்குள் இயக்கி
5.தீமைகளை மாய்த்து… மெய் வழி காணும் உணர்வாக மலர்ந்த முகத்துடன் உங்களைக் காண வைக்கின்றார்.

மகிழ்ச்சியுடன் அதை நான் காணும் நிலையாக வருதல் வேண்டும்.

உங்கள் உயிரான ஈசனை மதித்து… அன்னை தந்தையின் உயிரை ஈசனாக மதித்து… அவர்களைத் தெய்வமாக மதித்து அவர்களைக் குருவாகவும் மதித்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் வழிபடுத்திக் கொள்ளுங்கள்…!

எத்தகைய சந்தர்ப்பத்திலும்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி… அதைப் பற்றுடன் பற்றிக் கொண்டால் வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றிடாது (பற்றற்றதாக) செயல்படுத்த முடியும்.

ஆகவே… மறவாதீர்கள்…!
1.ஒவ்வொரு நாளும் கொடுக்கக்கூடிய உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி
2.வீட்டிலிருந்தே தியானித்து அந்த அருள் சக்திகளை நீங்கள் பெற முடியும்.
3.அந்த்த் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்று என் குருநாதரைப் பிரார்த்திக்கிறேன்.

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

 

கூட்டுத் தியானத்தின் வலு கொண்டு மகரிஷிகளின் ஆற்றலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கவர்ந்து நம் மூதாதையர்களான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே வீசினால்… அவர்கள் முதலிலே விண் செல்கின்றார்கள்… ஒளியின் சரீரம் பெறுகின்றார்கள்.

“நம்மைக் காத்திட்ட உணர்வுகள்” அவர்களுக்குள் விளைந்தது நமக்குள் உண்டு. அதை நினைவு கொண்டு குலதெய்வங்களின் உணர்வுகளை எளிதில் நாம் பருக முடியும்.

அதனின் உணர்வின் துணை கொண்டு மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி…
1.புவியின் பற்றற்ற நிலைகள் கொண்டு விண்ணின் பற்று கொண்டு
2.உத்தராயணம்… விண்ணிலிருந்து வந்தோம்… ஒளியின் சுடராக ஆனோம் என்ற நிலையாக
3.மகரிஷிகளுடன் நாமும் இணைந்திட முடியும்.

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ஏதோ கதை சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்…! (ஞானகுரு).

இத்தகைய இயற்கையின் நிலைகளைப் பித்தரைப் போன்று இருந்த நமது குருநாதர் எமக்கு உபதேசித்து அருளினார். அந்த அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார். அதிலே விளைந்த உணர்வினைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

இராமலிங்க அடிகள்… மனிதர்கள் தெய்வமாக வேண்டும் தெய்வ நிலை கொண்டு வேகாநிலை பெற வேண்டும் என்று அவர் பேசினார். அவரைப் போன்று மற்ற மகான்களும் அதைச் சொல்லியுள்ளார்கள்.

ஆனாலும் அவரைப் பின்பற்றியவர்கள் எல்லாம்… தன்னுடைய (மனித) வாழ்க்கைக்காக வேண்டித் தான் அவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்த மகான்களின் ஆன்மாக்களை விண் செலுத்துவோர் இல்லை என்று இருந்தது (அந்தக் காலத்தில்.

குருநாதர் இதை எல்லாம் எமக்குக் காட்டினார்.

1.மண்ணுலகில் உள்ளோர் இன்புற்று இருக்க வேண்டும்
2.அவர்கள் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
4.ஞானிகள் உணர்வை அவர்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்… சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்று பாடுபட்ட
6.மகாத்மா காந்தி போன்ற ஏனைய ஞானிகள் அதை உணர்த்தி இருந்தாலும்
7.மக்களின் பால் பற்று கொண்டு வாழ்ந்த நிலையில் உடலை விட்டுச் சென்ற
8.அந்த மகான்களை விண் செலுத்துவார் யாரும் இல்லாது போய்விட்டது

மக்கள் அனைவரும் மகான்களின் அன்பைப் பெற்றனர்… அதனின் துணை கொண்டு தன் வாழ்க்கைக்குத் தான் பெற்றார்கள். ஆன்மாக்களை விண் செலுத்தவில்லை.

இது எல்லாம் காலத்தால் மறைந்த நிலைகள்.

மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள்… பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள். இருந்தாலும்… சூரியன் எவ்வாறு தனக்குள் வருவதை எல்லாம் ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ… மகரிஷிகள் எவ்வாறு உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்களோ அத்தகைய விண் செல்லும் ஆற்றலை மகான்கள் கற்றுணரவில்லை.
1.மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.
2.விண் செல்ல வேண்டும் என்று அவர்கள் யாரும் எண்ணவில்லை.

அத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.அவர்களை முதலில் நீ விண் செலுத்து என்று
2.குருநாதர் சில உபாயங்களை எனக்குக் கொடுத்து அதைச் செயல்படுத்தும் படி சொன்னார்.
3.அதன்படி விண் செலுத்தினேன்.

முதலில் சொன்னபடி… அந்த மகானுடன் தொடர்பு கொண்டவர்கள் தன் உடலைச் சதம் என்று நோக்கத்திலேயே அவருடன் இருந்தார்கள்… சதமற்ற வாழ்க்கைக்கே ஜீவன் கொடுத்தார்கள்… சதமற்ற வாழ்க்கையே இன்று வாழ்ந்து கொண்டு சதமற்ற நிலையில் புழுவைப் போன்று துடித்துக் கொண்டுள்ளார்கள்.

இதிலிருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்று குருநாதர் உபதேசித்தார்.

ஆகவே நான் கொடுத்த ஞான வித்தை உனக்குள் வளர்த்து விடு. பிறரைக் காத்திட வேண்டும் என்று செயல்பட்ட மகான்களின் உயிரான்மாக்களை அவருடன் இருந்து “தனித்து நின்று நீ விண் செலுத்து…” என்றார். இப்படி…
1.புவியில் சுழன்று கொண்டிருக்கும் ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொடுத்தார்… குரு எம்முடன் இருந்தே…!
2.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கின்றது…?
3.அதற்கு எதனின் உணர்வை உனக்குள் நீ கவர வேண்டும்…?
4.எதனின் வலு கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்
5.உந்தி விண்ணிலே வீசிய பின் ஞானிகள் அருகே செல்லும்போது உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கி விட்டு
6.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது…? என்ற நிலையை தெளிவாகக் காட்டினார்.

அதே போன்று நம் குடும்பங்களிலும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையர் பாட்டன் பாட்டி என்று இருந்தாலும் அவருடைய சிரமத்தையும் பாராது நமக்கு எத்தனையோ உதவிகளைச் செய்தார்கள்.

அத்தகைய உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்று குருநாதர் (அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுதே) நேரடியாகக் காட்டினார்.

நான் இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் நான் அல்ல… குருநாதர் காட்டிய உணர்வின் தன்மை அவரின் செயலே இங்கே இயங்குகின்றது.

1.அவரில் விளைந்த ஆன்ம ஞானத்தை… மெய் உணர்வின் தன்மையை
2.விண்ணிலே இன்றும் வளர்ந்து கொண்டிருக்கும் அவர் உணர்வுகளைப் பருகும் மார்க்கத்தை
3.எமக்கு எப்படிப் போதித்தாரோ அதை அப்படியே உங்களுக்கும் வழி காட்டுகின்றோம்.

அதன் வழியிலேயே… நீங்களும் உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…!

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…!

 

ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்…?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன…? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து…
4.உயர் நிலை பெற வேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்…!”

அப்படியானால்… தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்…?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இருவித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்…!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழி வகைகளை ஞானிகள் காட்டினார்கள்…!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்…! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்…!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்… உருவத்தின் ஆனந்த லயமும்… அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்…
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்…”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை…!

நஞ்சுக்குள் மூழ்கிடாது நாம் விழித்திருக்க வேண்டும்… நீலகண்டா…!

நஞ்சுக்குள் மூழ்கிடாது நாம் விழித்திருக்க வேண்டும்… நீலகண்டா…!

 

பிற மண்டலங்களிலிருந்து வருவதை… 27 நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களாக அமைத்திருப்பது போன்று
1.நம்முடைய எண்ணத்தால் அருள் ஞானிகள் உணர்வை நம் முன் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.நமக்குள் தீமைகள் வராதபடி அந்தத் தீமைகளை விழுங்கி
3.தெளிந்த நிலையாக மாற்றி… ஒளியாக மாற்றுவதே உத்தராயணம்… பங்குனி உற்சவம்.
4.முருகனுக்கு உகந்த நாள் என்று அதைக் காட்டியிருப்பார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

ஞானிகள் உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி விண்வெளியில் எவ்வாறு சுழன்று கொண்டுள்ளார்களோ அவர்களுடன் நாம் இணைய வேண்டும்… உத்தராயணம்.

ஆனால் அப்படி இணையவில்லை என்றால் தட்சிணாயணம். மனிதருக்கு மனிதர் சாபம் இடும் போது அதைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சாப வினைகள் நமக்குள் சேர்ந்து தீயவினைகளாக மாறிவிடுகின்றது.

ஒருவன் தீமை செய்கிறான் என்றால் அதை உற்றுப் பார்த்தால் தீய வினைகளாக நமக்குள் சேர்ந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்று ஒருவன் பாவம் செய்கின்றான் பாவம் விடுகின்றான் என்றால் அந்தப் பாவ வினைகள் நமக்குள் சேர்ந்து பாவம் செய்வோராக நாமும் மாறி விடுகின்றோம். அப்படி மாறி விட்டால்
1.தீமைகளையே (நஞ்சினை) உணவாக உட்கொண்டு மற்றதைக் கொன்று புசித்து ரசித்து வாழும் உயிரினங்களாக
2.“தட்சிணாயணம்” மீண்டும் திரும்பி கீழே வந்து விடுகின்றோம்.

அவ்வாறு ஆகாதபடி நாம் திரும்ப வேண்டும் அது தான் உத்தராயணம்…!

துருவப் பகுதியின் வழியாக விண்ணிலிருந்து வருவதை ஆறாவது அறிவின் தன்மை கொண்டு… அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எவ்வாறு நிலை கொண்டு உள்ளானோ அதைப்போல நாமும் ஆக முடியும்.

நமது குருநாதர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை உங்களுக்குள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிவு செய்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து தீமைகளை அகற்றிடும் நிலையாக உங்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு விளையச் செய்து கொண்ட பின் உடலை விட்டு எப்போது அகன்றாலும்… என்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லலாம்.

ஆனால்
1.சாப வினைகளுக்குள்ளும் பாவ வினைகளிலும் சிக்கி விட்டால்
2.தட்சிணாயணம் தான்… மீண்டும் உடல் பெறும் நிலை தான்.

பரிணாம வளர்ச்சியில் மனித உடல் பெற்ற நிலையான மகா சிவன் ராத்திரி… சர்வத்தையும் அறிந்திடும் ஆற்றல் ஆறாவது அறிவு நமக்குள் இருக்கிறது என்றாலும் “சிவன் இராத்திரி நீ விழித்திரு…” என்றால் அதனின் உட்பொருள் என்ன…?

சிவனான இந்த உடலுக்குள் என்றும் விழித்திருக்க வேண்டும்… நஞ்சுக்குள் மூழ்கிடாது விழித்திருக்க வேண்டும்…
1.நீலகண்டா…! என்று சிவனின் தத்துவமாக நஞ்சினைத் தனக்குள் அடக்கி இருப்பது போன்று
2.நஞ்சு உள் செல்லாது என்றும் விழித்திருந்து… ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை ஒடுக்கி
3.வைரம் எவ்வாறு ஒளி வீசுகிறதோ… பாம்பினம் தனக்குள் எடுத்த நஞ்சினை நாகரத்தினமாக ஒளிச் சுடராக எப்படி மாற்றுகின்றதோ…
4.அதைப் போன்று ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “நாம் மாற்றிடும் விழிப்பு நிலையைக் காட்டுவதற்காக”
5.மகா சிவன் ராத்திரி என்று “ஆறாவது அறிவு கொண்டு நாம் விண் செல்ல முடியும்” என்று ஞானிகள் இதை எல்லாம் நமக்குக் காட்டினார்கள்.

காவியங்களில் தெளிவாக இது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது… இருந்தாலும் மகரிஷிகள் காட்டியது காலத்தால் மறைந்து விட்டது. ஆனால் குரு நமக்கு இன்று அதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

விஞ்ஞான உலகில் தன்னையே மறந்துவிடும் நிலை இருக்கும் பொழுது அதிலிருந்து மீண்டு சிந்திக்கும் ஆற்றல் பெற… மனிதன் என்ற முழுமை பெற… குருநாதர் நமக்கு வழி காட்டுகிறார்.

ஓ…ம் என்று பிரணவமாகிய யானைகள்

ஓ…ம் என்று பிரணவமாகிய யானைகள்

 

உலகோதய எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது).

அலைக்கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாது
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமுறும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொண்டிடும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்துதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி… சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

விண்ணிலிருந்து வந்த நாம்… (வாழ்க்கையின்) “திசையைத் திருப்பி” மீண்டும் விண்ணுக்கே செல்ல வேண்டும்

விண்ணிலிருந்து வந்த நாம்… (வாழ்க்கையின்) “திசையைத் திருப்பி” மீண்டும் விண்ணுக்கே செல்ல வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியாக… அதாவது மகா சிவன்ராத்திரி கண்ணில் புலப்பட்டது… விண்ணுலகில் கற்று உணர்ந்தது
1.அவை அனைத்தும் நமக்குள் சேர்த்துத் “தட்சிணாயனமாக” விளைந்து வருகின்றது
2.உடலின் ஈர்ப்புக்குள் நாம் இருக்கின்றோம் என்ற நிலையையே அவ்வாறு காட்டப்பட்டது.

அதே சமயம் பங்குனி உத்திரம்… உத்தராயணம் என்பது மனிதனின் ஆறாவது அறிவாக…
1.திசை மாற்றி ஒவ்வொன்றையும் இணைத்து
2.திருப்பி வளர்த்துக் கொள்ளும் நிலை பெற்றது.

அதாவது ஆறாவது அறிவின் துணையால் பிறவி இல்லா நிலை அடையும் தன்மை பெற்றது தான் உத்தராயணம் என்பது.

பங்குனி உத்திரம் (உத்தராயணம்) தினத்தை ஆறாவது அறிவான முருகனுக்கு விசேஷமாகக் காட்டினார்கள் ஞானிகள். அதனின் பொருள் என்ன…?

1.மாற்றி அமைக்கும் சக்தி கொண்டு… தன்னுடைய திசையை மாற்றி
2.உடல் பெறும் நிலையை மாற்றி… ஒளி பெற்ற ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து
3.ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்திடும் நிலையாக உருவாக்கப்பட்டது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் (முருகன்) என்பது.

ஒவ்வொரு சரீரத்திலும் எதனை எதனை இணைத்து அது உருபெற்றது என்ற நிலையை மனிதனாக ஆனபின் இவை அனைத்தும் அறிவிக்கும் நிலையாக (ஆறாவது அறிவு முருகன்) உத்தராயணம்.

மனிதனான பின்… தான் திரும்பி… மீண்டும் பிறவிக் கடலில் சிக்காதபடி) ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மகரிஷிகள் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். அது தான் உத்திரம்…!

பங்குனி உத்திரம் அன்று காவடி ஆட்டம் ஆடி பால் குடம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்தால்… இந்த வாழ்க்கைக்கு அவன் செய்து தரப்போவதில்லை.

தீர்த்தங்களை எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்கிறோம் என்றால்…
1.ஞானிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கள்… நல்ல உணர்வின் இயக்கங்களாக மகிழச் செய்யும் உணர்வின் தன்மையாக
2.சப்தரிஷிகளின் சக்தி நமக்குள் பெற முடியும்… அதனை நாம் நுகர்ந்து எடுக்க வேண்டும்.
3.மயில் நஞ்சானதை உணவாக எடுத்தாலும் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவது போன்று நாம் மகிழ்ந்த நிலை பெற முடியும் (மகிழ்வாகனா).

ஞானிகள் காட்டியது ஆடல் பாடலுடன் மகிழ்ந்திடும் நிலையாக மகரிஷிகளின் உணர்வை எடுத்து மனிதனை உற்சாகப்படுத்தும் நிலைகள் வர வேண்டும். ஆனால் மயிலின் தோகையை வைத்துக் காவடி ஆட்டம் ஆடுவார்கள்… இது வெறும் ஆட்டமே…!

உற்சாகத்தில் மறைந்து உடல் சோர்வடைவதும்… ஆடிய ஆட்டங்களால் கால்களில் தொய்வடையும் பொழுது அதனால் வேதனைகள் வருகிறது.

ஆக… பாலில் இனிப்பையும் பாதாமையும் கலந்து விட்டு அதற்குள் நஞ்சினை இணைப்பது போன்று
1.வேதனையைத் தான் நாம் உருவாக்க முடிகின்றதே தவிர
2.ஞானிகள் உணர்வை நாம் பருகுவதில்லை.

“ஐதீகம்…” என்றும் முருகனுக்காக வேண்டி தன் உடலை இம்சித்துக் கொண்டால்… அதாவது உடலில் ஊசிகளைக் கோர்ப்பதும் கொக்கிகளைக் கோர்ப்பதும் அதை வைத்து முருகனை இழுத்துச் சென்றால் அவன் மெச்சி நல்லது செய்வான்…! என்று வேதனையை உருவாக்கித் திசையை மாற்றித்தான் இன்று நாம் வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் உத்தராயணம் என்பது
1.மனித வாழ்க்கையில் இன்னொரு பிறவிக்கு வருவதைத் திரும்பிப் பார்க்காதபடி
2.உயிரின் துணை கொண்டு அருள் உணர்வுகளை இணைத்து
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றி விண்ணுலகம் செல்வது தான்…!.

எந்த விண்ணிலே தோன்றினோமோ (உயிர்) அது கீழே வரும் பொழுது தட்சிணாயணம்…! சூரியனின் ஈர்ப்பின் தன்மைகள் அதனின் ஓட்டத்தில் ஓடும் இதனுடைய சுழற்சி வட்டத்தில் வருவதை
1.மீண்டும் விண்ணை நோக்கித் திசை திருப்பி
2.அருள் உணர்வின் ஆற்றல் கொண்டு ஒளியின் சரீரமாகி
3.விண்ணுலகில் மிதந்து கொண்டுள்ளார்கள்.

மகரிஷிகள் அவருடைய வாழ்க்கையில் துருவப் பகுதியிந் வழி விண்ணிலிருந்து வரும் தீய உணர்வின் தன்மையை ஒளியாகத் தனக்குள் மாற்றி ஒளியின் சிகரமாகி… பிறவியில்லா நிலையாக… என்றும் பதினாறு என்று உயிருடன் ஒன்றி நிலை கொண்டுள்ளார்கள்.

பூமிக்கு(ள்) வரும் நிலைகள் தட்சிணாயணம்…! அது கவரும் நிலைகளை
1.உத்தராயணம் பகுதியில் இருந்துதான் வட துருவப் பகுதியிலிருந்து தான் இது கவர்கின்றது.
2.ஆறாவது கொண்ட மனிதன் அந்த வட துருவப் பகுதியில் நின்று (உத்தராயணம்) தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் இணைத்து… விண்ணிலிருந்து வரும் துகள்களைத் தனக்குள் உணவாக எடுத்து நஞ்சினை ஒடுக்கி
4.வைரம் ஒளியின் சிகரமாக (ஜொலிப்பது) இருப்பது போன்று ஒளி நிலை பெற்றவரே அந்த மகரிஷிகள்.
5.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த எல்லையை நாமும் அடைதல் வேண்டும்.