விஷத்தை ஒதுக்கி விட்டால்… அது நம்மை ஒன்றும் செய்யாது – விளக்கம்

விஷத்தை ஒதுக்கி விட்டால்… அது நம்மை ஒன்றும் செய்யாது – விளக்கம்

 

சில பேர் என்னிடம் (ஞனகுரு) எதையாவது எதிர்பார்த்து வருவார்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் “என்ன சாமி இவர்…?” என்பார்கள்.

இவர்கள் எண்ணத்தைத் தான் நான் நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் யாம் சொல்வதை அவர்கள் வழிப்படுத்தி நடப்பதில்லை. அவர்கள் ஆசைக்கு நான் இணங்கி வர வேண்டும். இப்படி வரக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
1.யாம் சொல்லும் முறைப்படி குருநாதர் காட்டிய நெறிகளை எடுப்பதற்கு இல்லாதபடி
2.தவறின் நிலைகளிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்

சாமியிடம் சென்றேன்… ஏதோ சொன்னார்… பின் நடக்கும் என்றார்…! என்று
1.யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்ய வேண்டியதை விட்டு விட்டு
2.அவர்கள் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இப்படித்தான் இந்தச் சமுதாயம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இங்கே எம்மிடம் வந்து கஷ்டத்தைத் தான் சொல்கிறார்கள். “கஷ்டத்திலிருந்து நான் மீள வேண்டும்…” என்று யாரும் கேட்பதில்லை.

குடும்பத்தில் உள்ள குறைகளையும்… “தொழிலில் கடன் வாங்கியவன் தன்னை ஏமாற்றுகின்றான்…!” என்றும் இதைத் தான் சொல்கிறார்கள்.

1.வாங்கிச் சென்றவர்களுக்கெல்லாம் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எண்ணம் வர வேண்டும்
2.அதற்கு வேண்டிய வருமானம் அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ணும்படி
3.பல முறை சொல்லியிருக்கின்றேன்… அதை யாரும் கேட்பதில்லை.

நீங்கள் சண்டை போட்டாலும் பணம் வரப் போகின்றதா…? இல்லை…! கோர்ட்… கேஸ் என்று அலைந்து… மேற்கொண்டு பணத்தைச் செலவழித்து வேதனையாகி நோயாக ஆனது தான் மிச்சம்.

பாவிகள் இப்படிச் செய்துவிட்டனர்…! அதனால் எனக்கு நோய் வந்து விட்டது… என்று தான் சொல்ல வேண்டி வரும்.

யாம் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றினால் அங்கே நிச்சயம் மாறும்… அமைதி கிடைக்கும்… சாந்தம் கிடைக்கும்.

அவன் உடனடியாகக் காசைக் கொடுக்கவில்லை என்றாலும் கூட நம் எண்ணம் நம் செல்வத்தை வளரச் செய்யும். மன வேதனையாகி நோயாகாமல் தடுத்துக் கொள்ள முடியும். குடும்பத்தையும் சீராகக் காக்க முடியும்.

இப்படி…
1.விஷத்தை ஒதுக்கி விட்டால் அது நம்மை ஒன்றும் செய்யாது
2.ஆனால் நான் நன்றாகத் தானே சமைத்து வைத்தேன்… என் பொருளில் விஷம் விழுந்து விட்டதே…! என்று
3.அத்தனை பொருளையும் வெளியிலே தூக்கி எறிவதா…? என்று விஷம் பட்டதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…?
4.அந்த விஷம் நம்மைக் கொல்லத்தான் செய்யும்.

ஆக… எல்லோருக்கும் நான் நல்லதைச் செய்தேன். எனக்கு இந்த நிலையைச் செய்கின்றார்களே…! என்ற வேதனை (வேதனை என்பது விஷம்) உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அதைத்தான் செய்யும்

இருபது வருடம் அனுபவத்திலே இதையெல்லாம் தெரிந்து தான் உங்களுக்குச் சொல்கின்றேன். காடு மேடு எல்லாம் அலைந்து… குடும்பத்தில் உள்ள மனைவி பிள்ளைகள் அனைவரையும் விட்டுவிட்டு… குருநாதர் காட்டிய வழியில் உலக உண்மைகளை எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் இங்கு வந்து இதைச் செயல்படுத்த முடிந்தது.

அது வரையிலும்
1.என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனாதையாக இருந்து
2.செல்வத்தை இழந்து நரக வேதனைப்பட்டுத் தான் வாழ்ந்தார்கள்

ஆனால் இதை எல்லாம் அனுபவபூர்வமாக கொடுத்தாலும் குருநாதர் விளக்கத்தையும் கொடுக்கின்றார்.

உன் குடும்பம் நீ இல்லாத போது எத்தனை அவஸ்தைப்பட்டதோ… அதைப் போன்று
1.ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ தொல்லைகள் ஏற்பட்டு விடுகிறது
2.அதனால் அவர்கள் அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தை (உடலை) அசுத்தப்படுத்துகின்றார்கள்
3.அவர் அறியாமலே அதைப் புண்படுத்துகின்றனர்… அதை நீ அவர்களுக்கு உணர்த்து
4.உயிரான ஈசனை மதிக்கும்படி செய்… அவனால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை மதிக்கும்படி செய்…
5.உடலைச் சிவமாக மதிக்கச் செய்.
6.அவர்களுக்கு இதை நீ ஓதும் போது… உனக்கு அதிலே அந்தப் பங்கு கிடைக்கும்.

அவர்கள் தன் உடலை மதிக்கவில்லை என்று இருந்தாலும்…
1.மதிக்கக்கூடிய பண்புகள் அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால்
2.நீ எண்ணிய உணர்வு (இந்த உயர்ந்த எண்ணம்) உனக்குள் வளர்கின்றது.

ஒரு தீயவன் என்னைத் தவறாகப் பேசுகின்றான் என்றால் “இப்படிப் பேசுகின்றானே…” என்று மீண்டும் மீண்டும் எண்ணினால் அந்த உணர்வு எனக்குள் வளர்ந்து தீமையாகவே வருகின்றது.

அப்போது அந்த நேரத்தில்
1.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.அவனுடைய வேக உணர்வு… அந்தத் தீமையான உணர்வு நமக்குள் வருவதில்லை.

இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று மனதில் நிறுத்தி… பிறரின் உணர்வை நமக்குள் வளர்க்காதபடி… அந்த உயர்ந்த சக்தியை நாம் வளர்க்கப் பழகுதல் வேண்டும்.

பார்த்தால் “பாவமாக இருக்கிறது… பரிதாபமாக இருக்கிறது…!” என்று இரக்கப்பட்டால் நம்மை நாம் காக்க முடியாது – ஏன்…?

பார்த்தால் “பாவமாக இருக்கிறது… பரிதாபமாக இருக்கிறது…!” என்று இரக்கப்பட்டால் நம்மை நாம் காக்க முடியாது – ஏன்…?

 

1.உணர்வின் எண்ணத்தை எந்த ஒரு செயலின் எண்ணத்திலும்… நம் எண்ண ஈர்ப்பிலும் செல்லாமல்
2.இவ்வுடலின் அமில குணத்தை நற்குணங்களின் அமில வளர்ச்சியுடன் வளர விட்டாலும்
3.நம் எண்ணத்தின் உணர்வைச் சங்கடமும்… பரிதாபமும்… பச்சாதாபமும்… காட்டும் உணர்வலைக்குச் செலுத்திடலாகாது.

பரிதாபப்பட்டுப் பிறரின் எண்ணமுடனே நம் உணர்வின் எண்ணத்தையும் அவர்களின் உள்ள நிலைக்கு இரங்கி நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் நம் உணர்வும் அதே சுழற்சியில் சென்று விடுகிறது.

அப்பொழுது அவர்களின் உடல் அமிலக் கூட்டின் எண்ண அலையை நம் ஈர்ப்புக்குள்… “அவர்கள் பால் செலுத்தும் எண்ணத்தால்” எடுத்துக் கொள்கிறோம்.

நம் உணர்வுகள் “பாவம்…!” என்ற பரிதாபச் சுழற்சி வட்ட உணர்வு அமிலத்தை ஏற்பதினால்… நம்முள் உள்ள உயர் குண அமில சக்தியினைப் பிறர்பால் செலுத்தும் உணர்வின் எண்ணத்தால்
1.நம் நிலைக்கும்
2.நாம் செல்ல வேண்டிய வழிக்கும் தடை ஏற்படுத்துகிறது.

நற்சக்தியை… ஆண்டவன் என்ற நிலை அடைய… ஆண்டவன் பால் செல்ல எல்லா உயிர் ஆத்மாக்களிடமும் அன்பைச் செலுத்துங்கள்..! என்று இன்றைய கலியில் பல மகான்களாக ஞானத்தின் வழித் தொடரில் வந்த நாம் அறிந்த பலரும் கூறியுள்ளார்கள்.

இருப்பினும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பிம்ப உடலில் பல இன்னல்களைப் பெற்று அதே செயலில் உடல் பிம்ப வலுக் குன்றியதனால் அவர்களின் வாழ் நாட்களில் பல சக்திகளைப் பெற்றிருந்தும் இவ்வுணர்வின் எண்ண செயல்முறை செலுத்தும் வழி முறை அறியாமல் பிறரின் எண்ண உணர்வு நிலையின் சுழற்சியில் சிக்கி விட்டனர்.

இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ரமண மகரிஷியாகப் பலர் போற்ற இருந்தவரின் நிலையும் இன்னும் இவர்களைப் போல் ஞானத்தின் ஈர்ப்பில் வந்தவர்களும்
1.எண்ணத்தின் உணர்வைப் பிறர்பால் “பரிதாபம்” கொண்டு செலுத்தி
2.இவர்கள் செலுத்திய அன்பின் பரிதாப நிலையினாலேயே
3.அவர்களின் உணர்வு எண்ண அலையின் ஈர்ப்பு இவர்கள் உடலிலும் “சாடியது…”
4.அதனால் தான் ஞானத்தின் வழி பெற்றிருந்தும் உடல் பிம்பக் கூட்டைக் காக்க முடியவில்லை.
5.உடல் பிம்பக் கூட்டிற்கு மட்டுமல்ல… நாம் எடுக்கும் உணர்வின் எண்ண உயர் ஞானச் செயலுக்கும் “இவை எல்லாம் தடைக்கற்கள் தான்…!”

இம்மனித பிம்ப உடல் “உணர்வு எண்ண ஈர்ப்பிற்கு” மிகவும் சக்திவாய்ந்த நிலையுண்டு…!

எண்ணமுடன் எடுக்கும் சுவாச அலையில் காந்த மின் ஈர்ப்பு குண உயிரணுக்களாக இவ்வுடல் முழுமைக்கும் ஈர்த்தெடுத்து வெளிக் கக்கும் இவ்வலையின் ஈர்ப்பு நாம் எடுக்கும் எண்ணத்தில் ஈர்ப்புடன் மோதுகிறது.

இங்கு இப்பொழுது உணர்த்தும் முறை கொண்டு
1.பிறர்பால் அன்பு செலுத்திடலாகாதா..?
2.பிறரிடம் இரக்கம் காட்டிடலாகாதா..?
3.பிறருக்கு நம்மால் முடிந்த தான தர்மங்கள் அளித்திடலாகாதா..? என்று கேட்கலாம்…!

பிறர்பால் அன்பைச் செலுத்தாதீர்…!

“பிறருக்கு அன்பான குண நிலை பெற வேண்டும்…” என்ற
2.அன்பலையை அவர்கள் வளர்க்க
3.அவர்களுக்கு “நம் எண்ணத்தால் நல் நிலை பெறட்டும்…” என்று
4.இந்த உணர்வைச் செலுத்துங்கள் “அன்பாக்கி..!”

நம்மைச் சார்ந்தவரும் சரி… நாம் கண்டுணர்பவரும் சரி… அவர்கள் படும் துயரமுடன் நம் உணர்வையும் பரிதாபமாக்கி… நம்மையும் பரிதாபப்படுத்திக் கொண்டு..
1.அவர்கள் அலையுடன் நாம் ஒன்றாமல் – நம் சக்தி அலையைக் கொண்டு
2.அவர்களுக்கு நல் நிலை நடக்கட்டும்..! என்ற ஒளி அலையைப் பாய்ச்சுங்கள்.

அவர்கள் உயரவும்… உடல் நலம் பெறவும்.. நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
1.”நல் நிலை” அவர்கள் பெற நம் உணர்வின் எண்ணம் செல்ல வேண்டுமேயன்றி
2.நம் உணர்வையும் எண்ணத்தையும் அவ்வுணர்வின்பால் செலுத்திடலாகாது.

அதே போல் தர்ம நிலைக்கும்… இரக்கத்தின் உணர்வால் ஒன்றி தர்மம் செய்யாமல் “பல துயரங்களில் அவர்கள் உள்ளார்கள்…” என்ற இரங்கிய தர்மம் தராமல்
1.நாம் தரும் தர்ம ஈகையினால் அவர்கள் பெற்று உயர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி
2.நாம் தரும் தர்மம்… பெறுபவரையும் உயரும் எண்ணத்திற்குச் செல்லும் முறையில்
3.நம் தர்ம முறையும் இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நம் ஞானத்திற்கு…
1.பிறரின் ஈர்ப்பால்
2.அவர்களின் குண ஈர்ப்பின் எண்ணமுடன் நாம் ஒன்றியவுடன்
3.நம் நிலையும் மாறும். (இது முக்கியம்)

நாம் அறிந்த பல ஞானிகளும் அவர்கள் இரங்கிப் “பிறர்பால் செலுத்திய அன்பினாலேயே..” அவர்கள் ஞானமும் குறைந்தது.

யாம் சொல்லும் இத்தகைய பரிபக்குவ உணர்வைக் கொண்ட எண்ண ஜெபத்தில் எடுக்கும் நிலையைக் கொண்டுதான்
1.நம்முள் சேர்ந்துள்ள அமில குணத்தின் வளர்ச்சியினால்
2.சக்தி வாய்ந்த ஒளி அலையின் காந்த மின் அலையின் ஈர்ப்பை
3.அந்த மெய் ஞானிகளிடமிருந்து பெற முடியும்.

“திருடன்டா…… நீ…!” என்றார் குருநாதர்

“திருடன்டா…… நீ…!” என்றார் குருநாதர்

 

ஒரு சமயம் பழனியில் தாய் தந்தையுடன் ஏழு பேர் சேர்ந்து கிணற்றில் விழுந்து செத்துப் போனார்கள். அதனால் அந்தக் கிணற்றுப் பக்கமாகப் போவதற்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்.

குருநாதர் என்ன செய்தார்…? என்னை இங்கே வாடா…! என்று கூப்பிட்டார். நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! என்று சொல்லிக் குளத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.
அந்தக் குளத்திற்கு அருகில் உள்ள ஓரு கிணற்றுக்கு என்னைப் போகச் சொன்னார். நான் இங்கே இருந்து கொள்கிறேன்டா…! நீ (ஞானகுரு) அந்தக் கிணற்றில் ஒரு கல்லைக் கொண்டு போட்டு விட்டு வாடா…! என்கிறார்.

நான் எப்படி அங்கே போக முடியும்…?

ஏற்கனவே நிறையப் பேர் விழுந்து அதிலே இறந்திருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே போய் எத்தனையோ பேர் பயத்தாலே “நெஞ்சு வலித்தது…” என்று செத்துப் போயிருக்கின்றார்கள்.

இந்த எண்ணம் எல்லாம் எனக்குள் ஏற்கனவே பதிவாகி இருக்கின்றது. என்னை இராத்திரியில் ஒரு மணிக்குக் கல்லைக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் போடச் சொன்னால் எப்படி இருக்கும்…?

கல்லைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டேன். போடா…..! என்கிறார் குருநாதர்.

சாமி…! என்றேன் நான்.

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதடா… என்கிறார் குருநாதர்.

அங்கே நான் போகப் போக.. போகப் போக.. போகப் போக… அந்த உருவம் முதலில் வெள்ளையாகத் தெரிகின்றது. பிறகு அந்த அம்மா குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்தது… எல்லாமே அப்படியே தெரிகின்றது.

அங்கே கிணற்றில் விழுந்தது எல்லாம் தெரிகின்றது. “ஜல்…ஜல்…!” என்ற நினைப்பு அந்த எண்ணங்கள் அப்படியே குவித்து வருகிறது. அடுக்கடுக்காக அத்தனை உருவங்களும் தெரிகிறது.

இதைப் பார்த்தவுடனே எனக்கு என்னாகிப் போனது…? நான் சாப்பிட்ட ஆகாரம் ஜீரணிக்கவில்லை. பூராம் வயிற்றோட்டமாகப் போய் வேஷ்டியெல்லாம் அசிங்கமாகிவிட்டது. அவ்வளவு தைரியம் எனக்கு…!

இந்த அளவுக்கு ஆனவுடனே தலையிலிருக்கும் கல் தன்னாலே கிடு…கிடு…! என்று நடுங்கிக் கீழே வருகின்றது. விழுந்துவிட்டது.

கல் விழுந்தவுடனே குருநாதர் என்ன செய்து விட்டார்…?

டேய்…டேய்…டேய்…! என்னைக் காப்பாற்றுடா…. என்று சப்தம் போடுகின்றார். அந்த உருவம் இங்கே குருநாதரைச் சுற்றிக் கொண்டு அவர் மண்ணையைப் பிடிக்கின்ற மாதிரி (மூச்சுத் திணறல்) கழுத்தைப் பிடித்ததும் அலறுகின்றார்.

அட… இதென்னடா வம்பாகப் போய்விட்டது…? இவரே இப்படி இருக்கிறார்…! என்று சொன்னால் எப்படி…? நீ என்னைக் காப்பாற்றுடா… என்று குருநாதர் சொன்னதும் எனக்குப் பயம் இன்னும் அதிகமாகி விட்டது.

சரி…. அவ்வளவு தான் போலிருக்கின்றது என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால் என்னுடைய மனைவி இறக்கும் தருவாயிலிருந்து குருநாதர் காப்பாற்றினார். பின்
1.நான் சொல்வதை நம்புகிறாயா..?
2.நான் சொல்வதைக் காப்பாற்றுவாயா..?
3.இதிலிருந்து மாற மாட்டாய் அல்லவா…! என்று ஏற்கனவே வாக்கை வாங்கிக் கொண்டார்.

மனைவி இப்பொழுது தான் நன்றாக உள்ளது. சிறிய குழந்தைகளாக இருக்கின்றது. சரி இனி நமக்கு அவ்வளவு தான்…! இப்பொழுது வயிற்றோட்டம் போய்விட்டது… நாளைக்கு ஆள் இருக்கின்றனோ… இல்லயோ…? என்று இந்த எண்ணம் தான் எனக்குள் ஓடுகின்றது.

என் எண்ணம் இப்படி ஓடிக்கொண்டு இருக்கும் போது… குருநாதர் நான் சொன்னதைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாய் அல்லவா… என்னைக் காப்பாற்றுடா…! என்கிறார்.

அவரிடம் நெருங்கிப் போகிறேன்…! நடுக்கம் தான் வருகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை.

திடீரென்று குருநாதர் என்னிடம் “அதைக் கொன்று விடுவேன்…. என்று சொல்லுடா…! என்றார்

கொன்று விடுவேன்…! என்று சொன்னேன்.

அப்புறம் கொஞ்ச நேரத்தில் என்னாகிப் போகின்றது…? அந்த உருவம் “பட்…!” என்று விலகி விடுகின்றது… மறைந்து விட்டது…!

1.நீ என்னிடமே பெரிய வேலை பார்க்கிறாய்.
2.உன்னிடம் என்னென்னமோ சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றாய்.
3.அந்த ஆவியைப் போகச் செய்து விட்டாய்…!
4.வேஷ்டியெல்லாம் கழித்துவிட்டாய் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன்.
5.நீ திருடன்டா……!” என்கிறார் குருநாதர்.

சாமி…! நீங்கள் தானே அதைச் சொல்லச் சொன்னீர்கள்…! போகச் சொல்லிச் சொன்னதே நீங்கள் தானே…! என்று சொன்னேன்.

அதோடு விட்டாரா குருநாதர்…!

நீ இந்த வேஷ்டிய எடுத்துக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் இறங்கிக் கழுவித் துவைத்துச் சுத்தப்படுத்திவிட்டு வாடா என்கிறார்..!

எப்படி இருக்கும்..,?

ஏனென்றால் அந்தக் கிணறு உடை கிணறு. அதாவது காலை வைத்து இறங்கி உள்ளே போகப் படிக்கட்டுகள் இருக்கின்றது. திருடன்டா நீ…! போய் அலசி விட்டு வாடா…! போடா……! என்று சொல்கிறார் குருநாதர்.

இப்படி ஒவ்வொரு உணர்வுகளிலேயும் எனக்கு நேரடி அனுபவமாகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டினார்.

1.நீ பார்த்த நினைவால் அங்கே காற்றில் மறைந்து இருக்கக்கூடிய உணர்வுகள் அது எப்படிக் குவிகின்றது…?
2.அந்த நினைப்புக்கு அணைவாக அது எப்படி டி.வி.யில் சுவிட்சைப் போட்டவுடனே படம் தெரிவது போல் காற்றிலே பரவி இருக்கின்ற அலைகளைக் குவித்து உனக்குப் படமாக எப்படிக் காண்பிக்கின்றது…?
3.அங்கே கிணற்றுக்குள் விழுந்ததைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கின்றாய். இந்த உணர்வின் எண்ணம் வரப்போகும் போது அந்த அலைகள் படர்ந்திருப்பதை எப்படி குவிக்கின்றது…?
4.அது உன் உடலுக்குள் வந்தவுடனே மற்றவர்கள் சொன்ன உணர்வுகள் அந்த எண்ணங்கள் உனக்குள் அது இயக்கச் சக்தியாக எப்படி மாறுகின்றது…? என்று
5.இப்படி அனுபவத்தைக் கொண்டு வருகின்றார்.

“முதன் முதலில்…” என்னை ஒன்றுமே இல்லாமல் இப்படிப் பயப்படச் சொல்லி அந்த உணர்வுகளை எண்ணச் சொல்லி அது நடந்த நிகழ்ச்சிகளை இதே மாதிரிப் பார்த்து விட்டு வரச் சொல்கின்றார் குருநாதர்.

நாம் புலனறிவால் (கண் காது) நுகரும்போது சுவாசிக்கும் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகிறது…? உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது…? என்று காட்டினார்.

“சொல்வது…” உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா…!

ஞானத்தை வளர்க்க… நம் எண்ணத்தை “மகரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்”

ஞானத்தை வளர்க்க… நம் எண்ணத்தை “மகரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்”

 

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

ஆனால் ஆவி நிலையில்… “பல எண்ண அலையில்” உள்ளவர்களுக்கு என்ன ஆகிறது…?

அவர்களின் எண்ண வீரிய குண நிலைக்கொப்ப அவர்களின் உணர்வுடன் ஒத்த எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று போல் உள்ள நிலையில் “இவ்வுலகில் வாழ்ந்த பொழுது நிறைவேறா ஆசையுடன் சென்ற ஆவிகள்” (அதன் ஆசையை நிறைவேற்ற) இவர்களின் எண்ணத்தின் ஒத்த நிலை ஈர்ப்பு உள்ளதனால் இவர்கள் உடலில் அவைகள் ஏறிச் செயல்படத் தொடங்கிவிடுகிறது.

அப்படிச் செயல்பட்டாலும் அவ்வாவிகள் வளர்ந்த நிலையும் அவ்வாவிகள் வளர்த்துக் கொண்ட சக்தி அலையும் இவர்களின் உணர்வு ஞான சக்தி அலைக்கும் உகந்த செயல் வடிவ வளர்ச்சி ஓட்டத்தில் தான் “அதுவும்” அந்த உடல் உள்ளவரை தான் செயல்புரிய முடியும்.

ஆக…
1.எந்த ஒரு செயல் ஞானம் கொண்ட நிலை கொண்டுள்ளனரோ
2.அதே வட்ட உணர்வு வளர்ப்பில் வாழ்ந்து
3.தன் வாழ்க்கையில் அவர்களின் ஆசையின் மேம்பாடு என்று உணரும் ஒவ்வொரு செயலிலும்
4.அதனின் வளர்ச்சி ஓட்டத்தில் உடலுடன் உள்ளவரையிலும் (இறக்கும் வரை) அந்த ஞானம் செயல்பட்டு
5.உடலை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் இதே உணர்வலை சுற்றலைக் கொண்டு
6.எத்துறையில் உயர்ந்து உழன்று உருப்பெற்று வாழ்ந்ததோ அதே சுழற்சி ஓட்டத்தில்
7.மீண்டும் மீண்டும் அந்நிலைக்குகந்த வளர்ச்சி ஈர்ப்பிற்குத்தான் செல்கிறது.

முன்னேறிய விஞ்ஞானம்… விஷய ஞானம்… இசை ஞானம்…! எதுவாக இருந்தாலும் சரி…
1.ஓர் சுழற்சி வட்ட ஞான ஓட்ட வளர்ச்சி சுழற்றலில் தான் சுழன்று கொண்டே இருக்க முடியுமேயன்றி
2.உயர் ஞானச் செயலுக்கு ஒளி ஞானத்திற்குச் செல்ல முடியாது (இது முக்கியம்)

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி… நம் எண்ணத்தை அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் “மோதவிட வேண்டும்…”

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது
1.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம்
2.சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து
3.அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.