October 2022 உபதேசம்

நீங்கள் மிகப் பெரிய டாக்டராக முடியும்

இன்று பெரும்பகுதியான மக்களுக்கு விஞ்ஞான அறிவால் வளர்ந்த நிலையில் உணவுடன் கலந்த விஷத்தன்மைகள் (பூச்சி மருந்துகள்) உடலில் பரவிக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையில் இயக்குகின்றது. அதனால் உடலில் கடுகடுப்பு அதிகமாக இருக்கும்.

நாம் தவறு செய்தோமா…? இல்லையே…!

விஞ்ஞான அறிவிலே சிக்கி இன்று இந்த நிலைகளில்தான் நாம் இருக்கின்றோம். குருநாதர் இதையெல்லாம் உணர்த்தினார்… கண்டேன். அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு)

மருத்துவம் படிக்கின்றார்கள்…
1.உடலில் இன்னென்ன குறைபாடுகள் இருக்கிறது
2.இன்னென்ன மருந்து இன்னென்ன வேலை செய்யும்
3.இன்ன மருந்தைக் கொடுத்து மாற்றினால் குறைபாடு நீங்கி உடல் சரியாகிவிடும் என்று அறிந்த பின்பு அதன் வழி செய்கின்றார்கள்.

ஆனால் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்…? என்ன ஆனதோ ஏது ஆனதோ…! என்று பதட்டம் அடைய வேண்டி இருக்கும்.

டாக்டர்கள் சில கருவிகளை வைத்து உடலில் அந்தந்த இடங்களில் நாடித் துடிப்புகளைப் பார்ப்பார்கள்.
1.இருதயத்தினுடைய வேகத் துடிப்பைப் பார்த்து… இந்த நிலைகள் தான் இருக்கும் என்று டாக்டர்கள் அறிகின்றார்கள்
2.சரியான மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… இந்த உலகம் எப்படி இயங்குகின்றது…? எந்தெந்த நிலையில் இருக்கின்றது…? என்ற ஞானத்தைக் கொடுத்து அதைத் தெரிய வைத்தார்.

அதற்கு 20 வருடங்கள் ஆனது. காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து தான் அதை எல்லாம் கண்டேன்… உணர்ந்தேன்.

“டாக்டராக” ஒருவர் வந்தாலும்… படிக்கப்படும் போது அவர்கள் ஆரம்ப நிலையில் இருந்து படிப்படியாகத்தான் அந்த அறிவினுடைய ஞானத்தில் வளர்ச்சியாகி வருகின்றனர்.

அது முழுமையாகும் போது தான்…
1.இது இன்ன நோய்…
2.அது இந்த நிலையில் இருக்கிறது…
3.அதற்கு இந்த மருந்து கொடுக்க வேண்டும்…! என்று பழக்கப்படுத்திச் செயல்படுகின்றார்கள்.

பழக்கப்படுத்தி… அதைச் சரியான நினைவு கொண்டு மீண்டும் அவர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தால் என்றால் அவர் உயர்ந்த டாக்டராக மாறுகின்றார்.

அதில் ஏமாந்து விட்டால் இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால்… ஒரு நொடி மாறினால்… இவர் கொடுக்கும் மருந்து நல்லது செய்வதற்குப் பதில் தீமைகளை உண்டாக்கிவிடும்.

ஒரே மருந்து தான் அந்த நோயைக் கேட்கும் ஒரே டாக்டர் தான் அந்த மருந்தினையும் கொடுக்கின்றார். இருந்தாலும்
1.மருந்து கொடுக்கப்படும் பொழுது இன்னொரு இடத்தில் துடிப்பு வேறாக இருக்கிறது என்றால்
2.அந்த எதிர்ப்பு நிலைகளைப் பரீட்சித்துப் பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி அதையும் அனுசரித்து
3,அதைத் தணிக்கும் மருந்துகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

சிலர்… அது என்ன…! இந்த டாக்டர் இத்தனை மருந்துகளைக் கொடுக்கிறார் என்றும் கேட்பார்கள்.
1.அறிந்து கொண்ட உணர்வு கொண்டு
2.அது வளர்ச்சியான நிலையில் கொண்டு செயல்படுத்துவது தான் அது.

ஆக… டாக்டருக்குப் படித்துக் கொண்ட மாதிரி உங்களுக்குள் வரக்கூடிய தீமைகளையும் நோய்களையும் நீக்கக்கூடிய சக்தியாக “பெரிய டாக்டராக… துருவ நட்சத்திரத்தின் உணர்வை…” உங்களிடம் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் “அத்தகைய டாக்டராக…” எப்படி வளர்ந்தது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அதைச் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.

அதை வைத்து “நீங்களும் பெரிய டாக்டராக ஆக முடியும்..!”

உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி ஒளியாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்.

அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.

மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்

ஐம்புலனை அடக்கிடவே அருள் புரியுங்கள் என்று பாடலைப் பாடுகின்றீர்கள். ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன…?

பார்த்தல்… சுவைத்தல்… கேட்டல்… நுகர்தல்… எண்ணல்… எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை…
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா…!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்…
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்…” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ்ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ்ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்…! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ்ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா…” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்…?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி… ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்…
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா…!

நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று…! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா…!

நான் சொல்வதெல்லாம்…
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக… அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்… பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல்… மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு…! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை…!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விளக்கினுள் ஊற்றப்படும் எண்ணெய் “இருட்டுதான்” ஆனால் எண்ணெயை எரித்தால் அதிலிருந்து “ஒளி” வருகின்றது – விளக்கம்

இன்று நாம் பல வகையான உணர்வுகளையும் இந்த மனித உடலுக்குள் நின்றே அறிய முடிகின்றது. இது தான் மகா சிவன் இராத்திரி.

நம் உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நம் உயிருடன் நினைவு கொண்டு வரப்படும் பொழுது அந்த நினைவின் ஆற்றலாக நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் துணையாக நம்மை அறியச் செய்கின்றது. தெளியச் செய்கின்றது.

ஆனாலும் நம் உடலுக்குள்… “இருளாக” இருக்கின்றது.

ஒரு விளக்கில் எண்ணையை ஊற்றும் பொழுது
1.எண்ணெய் இருண்ட நிலையாகத்தான் இருக்கின்றது.
2.அந்த எண்ணெயில் நாம் நெருப்பை வைத்து எரிக்கும்போது அது ஒளியாக மாறுகின்றது.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் எத்தனையோ வகையான குணங்கள் பதிவாகியிருக்கின்றது.

அந்த நினைவுகளை எண்ணும் பொழுது
1.அந்த மணம் (உணர்வுகள்) உயிருடன் ஒன்றி
2.உயிரிலே உராய்வாகும் பொழுது
3.அதனின் அறிவாக நம்மை இயக்கி அது அறியச் செய்கின்றது.

இது இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற இயற்கையின் தன்மைகளைத்தான் வேதங்கள் கூறுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் இணை சேர்க்கும் உணர்வுகளில் மாறுபடும் நிலையை “உபநிஷத்து” என்று உட்பிரிவுகளை உணர்த்திக் காட்டினர்கள் ஞானிகள்.

பல கோடிச் சரீரங்களில் நாம் கடந்து இந்த மனித உடல் பெற்ற பின் இந்த இருளுக்குள் மறைந்து
1.மறைத்து வைத்திருக்கக்கூடிய நிலைகளில் நாம் எதை நினைவு கொள்கின்றோமோ
2.அதனின் நினைவின் ஆற்றலாக நமக்குள் தெரியப்படுத்துகின்றது… அதை அறிகின்றோம்.
3.அதன் வழிகளில் வளர்கின்றோம். அதனின் வழிகளில் நாம் இயங்குகின்றோம்.

இவ்வாறு வருவதை நமக்கு உணர்த்துவதற்குத்தான் மகா சிவன் இராத்திரி என்றும் நம்மை நாம் அறிந்திடும் நிலையாக வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“நாம் யார்…?” என்று தன்னைத் தான் யார் என்று அறிந்து கொள்ளும் நிலைக்காக அன்றைய காலங்களில் அந்த மகரிஷிகள் காட்டிய உண்மையின் உணர்வுகள் வேதங்களில் உண்டு,

இன்று யாம் உபதேசிப்பது போன்று நமது குருநாதர் இதைப் போன்ற பல பேருண்மையின் நிலைகளை எமக்கு எடுத்து ஓதினார். அந்த உணர்வினைப் பதிவு செய்து “தான் யார்” என்ற நிலையில் என்னைச் சிந்திக்கச் செய்தார்.

இதில் வரும் எதிர்கொள்ளும் தீமைகளிலிருந்து விடுபடும் முறைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

நல்லதைக் காக்க ஒரு சக்தி உங்களுக்கு வேண்டுமல்லவா…!

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனை வந்து விட்டால் நம்மால் ஒரு கணக்கைச் சீராக பார்க்க முடிகிறதா… ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடிகிறதா… ஒரு சாமானை எடுத்துப் பத்திரமாக வைக்க முடிகிறதா…? இல்லை.

நாம் சரியாகச் செய்யவில்லை என்கிற பொழுது மீண்டும் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எது இயக்குகின்றது…? காரணம் என்ன…?

நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் பொழுது
1.திடீரென்று ஒரு தவறான நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறார்கள்..
2.தவறு செய்வோரை உற்றுப் பார்க்கின்றோம் அல்லது என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…
3.உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அது நமக்குள் வளர ஆரம்பிக்கின்றது.

அந்த நேரத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சரியாகச் செய்வதற்கு மாறாகத் தவறாகச் செய்து விடுகின்றோம். ஐயோ… இவ்வளவு தூரம் நாம் செய்தும் அது சரியாகவில்லையே… பலன் இல்லாமல் போய்விட்டதே… நஷ்டமாகிவிட்டதே…! என்ற வேதனை வந்து விடுகின்றது

1.தவறு நடக்கிறது என்ற அந்த உணர்ச்சிகளை ஊட்டும் பொழுது நமக்குள் ஜீவன் பெறுகின்றது
2.நாம் சுவாசிக்கும் ஆன்மாவிலே அது புகுந்து கொள்கின்றது
3.உயிரிலே பட்டபின் அதற்குத்தான் சாப்பாடு கிடைக்கின்றது… நல்ல குணங்களுக்கு நல்ல சாப்பாடு போவதில்லை
4.ஆகையினால் நல்லதை நம்மால் இயக்க முடியாமல் போய்விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் இயக்கத்திற்கு வருகிறது. நம் உடலில் அணுக்களாக விளைந்ததை மீண்டும் நினைவுபடுத்திய உடன் நமக்குள் இவ்வாறு சில மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்வதில்லை.

இதைப் போன்ற தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…? அதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா…!

அந்த சக்தி பெறுவதற்குத் தான் உங்கள் நல்ல குணங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்பொழுது ஊட்டமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கி வருகின்றீர்கள். உங்களுடைய உணர்வுகள் எதையெல்லாம்… எப்படி எல்லாம் அது இயக்குகிறது…? என்பதை உணரும்படி செய்கிறோம்.

எதன் வழி கொண்டு…!

குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் (ஞானகுரு) எனக்குள் கலந்து வைத்திருக்கின்றேன்.
1.உங்களுக்குள் அதைக் கலந்து உண்மையின் உணர்வுகளைத் தெரியப்படுத்துகின்றோம்.
2.அந்த நல்ல நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்… அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எண்ணத்துடனே இதை உபதேசிக்கின்றேன்.
4.கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணர்வுகளில் அதை இணைத்துக் கொண்டே வருகின்றேன்
5.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி தன்னாலே உங்களுக்கு வந்துவிடுகிறது

தன்னால் எப்படி வருகின்றது…?

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அப்போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த அந்தப் பதிவு உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுவில் சிறிதளவு இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து உங்களுக்குள் அதைப் பெருக்க ஆரம்பிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வளர வளர… உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக மாறும். தீமை அகற்றும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

யாகத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும்போது தான் ஆண்டவன் வருவானா…! யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

சாமியார்கள் என்றாலே வேஷதாரிகள்… ஏமாற்றுக்காரர்கள்… சூனியக்காரர்கள்… என்றும்… தான் வாழும் வழிக்குத் சாமியார் என்ற வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள்…! என்றும் உருவாக்கி விட்டார்கள்.
1.பல மதங்களைப் பரப்பி
2.பகவானைப் பணிவதற்குப் பல நிலைகளை மக்களுக்கு உணர்த்தி
3.பல கோடி ஜெபங்களை ஜெபித்து
4.ஆண்டவனை வணங்குவதையே மக்களின் மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வாக உண்டு பண்ணிவிட்டார்கள் இந்தப் பல வழிச் சாமியார்கள்.

இவர்களில் சிலர் பல மந்திரங்களை மக்களுக்குப் புரியாத பாஷையில் ஓதி ஒமகுண்டங்களை வளர்த்து அந்த ஓம குண்டத்தில் பொன்.. பட்டாடைகள்… பல வகைப் பதார்த்தங்கள்… இன்னும் பலவற்றைப் போட்டு ஓமங்கள் வளர்க்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் எட்டுப் பூசாரிகளை அமரச் செய்து அவ்வனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டவனைக் கோடியார்ச்சனை என்ற பேரில் புரியாத சமஸ்கிருத மொழியில் ஓதுகிறார்கள்.

இந்த வழியில் யாகக் குண்டத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும் பொழுது தான்
1.அந்த ஆண்டவன் வருவானா அந்நிலைக்கு…?
2.யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

அத்தகைய சாமியார்கள் மக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக யாகம் வளர்த்து மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ஆக
1.பொருள் தருபவனுக்கு (மக்கள்) அந்தச் சாமியார்கள் செய்யும் பூஜையில் ஆண்டவன் வந்து அருள் தருவானாம்…!
2.ஆண்டவனுக்கு இவர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) தூதுவர்களாம்…!

பல ஆயிரம் செலவு செய்து யாக குண்டம் வளர்த்து அந்தப் பூசாரிகளுக்கு அன்னமளித்து பொருள் தந்து அந்த ஆண்டவனை வணங்கினால் இவன் செய்த பாவங்களும்.. இவன் எண்ணமும் மாறி.. அந்த ஆண்டவன் வந்து அருள் புரிவானாம்..!

1.ஊரை ஏமாற்றி…
2.உள்ள நிலையைப் புரிந்திடாமல்…
3.தன் புகழைப் பரப்பப் பூஜை செய்பவர்கள் தான் பெரும்பாலனவர்களாக உள்ளார்களப்பா…!
4.இவர்களின் நிலைக்கெல்லாம் இந்தப் பல வழிச் சாமியார்கள் பெரும் தூதுவர்களப்பா…!

செய்த பாவத்தைக் கழித்திட பூஜை செய்துவிட்டால் பாவம் தீர்ந்துவிடுமா…? அவர்கள் தான் அதைப் பாவம் என்றே எண்ணுவதில்லையே…!

புகழுக்காகத் தான் சம்பாதித்த செல்வத்தை “அந்த ஆண்டவன் வந்து காப்பாற்றித் தர வேண்டும்…” என்பதற்காக அந்த ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பல பூஜை செய்கிறார்கள் இந்தப் பாமர மக்கள். “பெரும்பாலான பூஜை முறையே… இப்படித்தானப்பா உலகெங்கிலும் உள்ளது…!”

இந்த மனிதர்களை மாற்றிடவும் நல்வழியில் அழைத்துச் செல்லவும் நல் வழியில் பல சாமியார்கள் (நல் வழிச் சாமியார்கள்) இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்…!

பல ஜெபங்களை ஜெபிக்கச் சொல்லி மக்களின் மனதினிலே நல்ல உணர்வுகளை ஆழமாகப் பதிய வைக்க நல் வழிச் சாமியார்கள் எல்லாம் நாட்டம் கொண்டு நடந்திட்டார்கள்.

இன்னும் சில இடங்களில் சில சாமியார்கள் அந்த ஆண்டவனின் சக்திக்குப் பல வகை நாமங்களைச் சூட்டி புவனேஸ்வரி பூஜை… சௌண்டேஸ்வரி பூஜை… காமாட்சியம்மன் பூஜை…! என்று இன்னும் பல நாமங்களைச் சூட்டி அந்தச் சக்தியின் நிலைக்கே பல யாகங்களை வளர்த்துப் புகை மண்டலங்களை எழுப்பி
1.தான் வாழ… தன்னைச் சார்ந்தவர்கள் வாழ… தன்னை நம்பி வருபவர்களை வாழ வைக்க…
2.இப்படியும் பல நிலைகளைச் செய்கிறார்கள்.

நல்ல மணத்தைக் கொண்ட புகை மண்டலத்தை எழுப்பி அந்த ஆண்டவனை ஜெபிக்கும் பொழுது எந்நிலையில் நாம் ஜெபிக்கின்றோமோ அந்நிலையில் அவர் அவர்கள் ஜெபிக்கும் நிலைக்கு அந்தச் சக்தி நிலை வருகிறதப்பா…!

1.ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டாமப்பா…!
2.எல்லோருமே அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி அவன் அருளை எப்படியும் பெறலாமப்பா..!
3.அவனவன் எண்ணத்திலும் சுவாசத்திலும் தான் எல்லாமே இருக்கின்றதப்பா…!

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக…
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன்னை நான் பார்த்திடவே
என்னில் உன்னைக் கண்டிடவே
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன் வழியில் சத்தியத்தை
உன் வழியில் தர்மத்தை
உன் வழியில் நியாயத்தை
உன்னை எண்ணும் இதயத்தில்
ஊன்றிடுவாய் ஈசனின் சக்தியே

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமென்றாலும் உதவி செய்யலாம்… எந்த வகையிலும் நுகர்ந்தறியலாம்.

1.கஷ்டப்படுகின்றார்கள் வேதனைப்படுகின்றார்கள் தவறுகள் செய்கின்றார்கள் என்று
2.புறநிலைகளில் நாம் அறிந்து கொண்டாலும் அறிந்த பின்
3.மீண்டும் அது நமக்குள் அணுத் தன்மையாக கருவாகாதபடி
4.நாம் கேட்டறிந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் பிறருடைய தீமைகளையும் அவர்கள் கஷ்டப்படுவதையும் பார்த்து… கேட்டு… நுகர்ந்து… நமக்குள் வளர்த்து அதையெல்லாம் நாம் “பிடிவாதமாகப் பிடித்துக் கொள்கின்றோம்”.

அதைத் தடுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

சூரியன் உலகுக்கே ஒளியாக வழி காட்டுகின்றது.

அதைப் போல அகஸ்தியர் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ரிஷி என்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிருஷ்டித்துக் கொண்ட நிலைகளில் இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் மனைவி உயர வேண்டும் என்ற உணர்வை ஒன்றாகச் சேர்த்து இணைத்து அந்த ஒளியின் சரீரமாக ஆனவர்கள்.

இருவருமே அந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்து தனக்குள் எந்தத் தீமையும் புகாதபடி தீமைகளை அழித்தனர்.

அதனின் உணர்வு கொண்டு எந்தத் துருவத்தைக் கூர்மையாக எண்ணினார்களோ கூர்மை அவதாரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

பூமிக்குள் வருவதனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்,

நவராத்திரி கொலு முடிந்தபின் பத்தாவது நிலையாக விஜய தசமி என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

தசமி – நாம் எப்படிப் பத்தாவது நிலை அடைவது…?

விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்யும் உயிர் பல கோடிச் சரீரங்களில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றி விண் செல்லும் நிலையைத்தான் விஜய தசமி என்று காட்டினார்கள். அதை அறிவிக்கும் நாள் தான் விஜய தசமி.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. கல்கி என்று ஒளியின் நிலையாக அவர்கள் எப்படிப் பெற்றார்களோ அதன் வழி கொணடு அதை நாமும் பெற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து காலை 4 மணிக்கெல்லாம் ஒளி அலைகள் வெளி வருகின்றது. சூரியனின் காந்தசக்தி கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தோம் என்றால் நம் சிந்தனையைக் குறைக்கும் நஞ்சான உணர்வுகளை வெல்லும் ஆற்றல் பெறுகின்றோம்.

அதனின் வலிமை கொண்டு நமக்குள் பிடிவாதமாக இயக்கும் அத்தனை உணர்வுகளையும் அடக்க முடியும்.

1.இப்படிச் செய்தானே
2.அப்படிச் செய்கின்றானே
3.இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது…! என்ற நிலையில்
4.”பிடிவாதம் பிடிக்காதபடி” நமக்குள் அந்த உணர்வின் உண்மையை உணர்த்தும்.

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது.

அங்கே எடுத்தவுடன் எங்கே செல்கின்றான் நாரதன்…?

உயிரான விஷ்ணுவிடம் தான் செல்கின்றான். விஷ்ணுவிடம் சென்றபின் கண்ணாக இருக்கும் கண்ணனிடம் செல்கின்றான் நாரதன். “கண்ணா.., எல்லா உபாயமும் உனக்குத் தெரியும்” என்று சொல்கிறான்.

1.கண்களின் செயலாக்கமும்
2.எண்ணிய உணர்வுகள் நமக்குள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையையும்
3.அதிலிருந்து மீட்டிடும் உபாயங்களையும்…
4.ஒரு காவியத் தொகுப்பாக கீதாச்சாரம் என்று எழுதி அமைத்துள்ளார் வியாசகர்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

யாம் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் “விஷ்ணு தனுசாக உங்களுக்குள் பாயும்”

துருவ நட்சத்திரத்திலிருந்து அதிகமாகச் சக்திகள் நம் பூமிக்குள் வரக்கூடிய நேரம் அதிகாலை தான். நம் பூமி கவரக்கூடிய அந்த நேரத்தில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது…? என்று அந்த உணர்வுகளை உபதேச வாயிலாக உங்களுக்குக் கொடுக்கும் பொழுது
1.உங்கள் உணர்வுகள் ஒவ்வொன்றிலும் இது கலக்கின்றது.
2.உங்களிடம் இருக்கும் எல்லாக் குணங்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை இணைக்கும் ஒரு வித்தாக உருவாக்குகின்றோம்.

அக்ரிகல்ச்சரில் புது விதமாகப் பல வீரிய வித்துக்களை உருவாக்கிக் கொடுக்கின்றனர். அதற்குப் பிற்பாடு அதை விளைய வைப்பதற்கு எந்தெந்த நேரத்தில் நீரைப் பாய்ச்ச வேண்டும்…? உரங்களை எப்போது போட வேண்டும்…? அதற்கு வேண்டிய பக்குவங்களை எப்படிச் செய்ய வேண்டும்…? சொல்லிக் கொடுக்கின்றனர்.

அதைப் போன்று நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்திற்கு அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஆத்ம சுத்தி செய்து வந்தால் அந்தப் பேரருளை நிச்சயம் உருவாக்க முடியும்… பேரொளியாக நீங்கள் மாற முடியும்.

1.துருவ நட்சத்திரம் எப்படி அழியா ஒளிச் சரீரம் பெற்றிருக்கின்றதோ…
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எந்த விஷத்தையும் ஒளியாக அது எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றதோ…
3.அந்த உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஒளியான வித்துக்களாக உருவாக்குதல் வேண்டும்.

அவ்வாறு செய்து வந்தால் இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சில தீமைகளை நீங்களே விலக்கக்கூடிய நிலையும்… அதைச் சமப்படுத்தக்கூடிய நிலையும்… உணர்வுகளை ஒளியாக மாற்றக்கூடிய சக்தியும் எளிதில் பெற முடியும்.

அதற்குத் தான் அதிகாலை “துருவ நேரத்தில்…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அருள் ஞான வித்தாக உங்களுக்குள் ஆழமாக ஊன்றி அதைப் பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

தனுசுகோடி…! என்ற நிலைகளில் நான் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் தனுசாகப் பாய்ந்து உங்களுக்குள் அது முழுமை பெறக்கூடியதாக வளர்ச்சி பெறும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி இப்பொழுது ஏங்கித் தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்களுக்குள் ஈர்க்கப்படுகின்றது
2.அந்த ஒளி அலைகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அது ஒன்றென இணைந்து பேரருளாக… பேரொளியாக… உருவாகும் அருள் சக்தி உங்களுக்குள் இப்பொழுது உருவாக்கப்படுகின்றது… பதிவாக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ளும் அந்தத் தகுதியைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.

வசி…வசி…! என்ற வசிய மந்திரம்

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே மும்மூர்த்தியின் வடிவம் என்ன…? என்ற ஒரு அன்பரின் கேள்விக்கு ஈஸ்வரபட்டர் அளித்த பதில் இது.

எட்டுத் திசையை நோக்கி எட்டுத் திசையிலும் உள்ள பாலரை வசியம் செய்து உன்னுள் ஈர்க்கப் பார்க்கின்றாய்.
1.”ஈஸ்வர சக்தி” உன்னுள் இருப்பதை அறியாமல்
2.பல பாலரை ஏனப்பா உன் வசியத்தில் ஈர்க்கிறாய்…?

இது ஆவியின் நிலையில் மந்திரவாதிகள் மந்திரிக்கும் ஜெபமப்பா…! ஆவிகளை எல்லாம் தன் வசம் இழுப்பதற்காக இந்த நிலையில் வசியப்படுத்துவான்.
1.உன்னையே நீ யார்…? என்று புரிந்து கொள்ளாமல்
2.பல ஆவிகளை ஏன் இழுக்கின்றாய் உன் வசியத்திற்கு…?

ஆவிகளின் நிலை எல்லாம் தன் எண்ணத்திற்கு… தன் பசிக்கு… எங்கு அதற்கு ஆகாரம் கிடைக்கின்றதோ அந்த நிலைக்கு வந்துவிடும். ஆவிகளை வசியப்படுத்திக் கொண்டு தான் மந்திரவாதிகளின் வேலை எல்லாம் நடக்கின்றதப்பா. நடுத் தெருவிலும் நடுஜாமத்திலும் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் இது தானப்பா..!

குடுகுடுப்பை அடித்துக் கொண்டு வருபவன் நடுஜாமத்தில் மயானக் காட்டில் அமர்ந்து தன் வசியத்திற்கு ஆவிகளை அழைப்பான். இந்நிலையில் ஜெபித்துத்தான் அந்நிலையில் அந்த ஆவிகளுக்குப் பிடித்த ஆகாரத்தை அளிப்பான். பல உண்மைகளை அந்த ஆவிகள் இவனுக்கு உணர்த்திடும்.

நடுநிசியிலே அந்தக் குடுகுடுப்பாண்டி நடந்து வீதி உலா வந்திடுவான். அவன் நடப்பதுவும் அவன் சொல்வதும் அவனுக்கு ஒன்றும் தெரியாதப்பா. அந்த ஆவிகள் தான் அவன் உடலில் அவன் வசியப்படுத்திய வழியில் வந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சொல்லிக் கொண்டே செல்கிறது.

1.ஆனால் ஈஸ்வர சக்தியின் அருளைப் பெற்றவர்களின் இல்லத்திற்கு
2.இந்த ஆவிகள் சொல்லும் வாக்கெல்லாம் வந்து தாக்காதப்பா…!

நீ வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த ஆவிகளின் நிலையிலிருந்து எப்பொழுது தான் மீளப் போகின்றாய்..? ஜெப நிலையே இன்னும் நீ புரிந்து கொள்ளவே இல்லையப்பா..!

மந்திரக்காரர்ளும் மாந்திரீகம் செய்பவர்களும் அவர்கள் ஜெபிக்கும் இடத்தில் பல வாசனைத் திரவியங்களைப் போட்டுப் புகை மண்டலத்தை எழுப்பிப் பல வகை உணவுப் பதார்த்தங்களையும் ஜீவராசிகளின் உணவுகளையும் வைத்து மந்திரம் ஜெபிக்கின்றார்கள்.

அந்த மந்திரத் தன்மையில் ஜெபிக்கும் பொழுது அதன் நிலைக்குகந்த ஆவிகள்… தீட்சண்ய ஆவிகள்… அகால மரணமடைந்த ஆவேச ஆவிகள்… தற்கொலை செய்த ஆவிகள்… பிறரினால் கொலை செய்யப்பட்ட ஆவிகள்… இந்த நிலையில் உள்ள ஆவிகள் எல்லாம் இவர்கள் படைக்கும் உணவுக்காக வரும்.

இவர்கள் ஜெபிக்கும் ஜெபத்தில் ஜெபம் என்றால் என்ன என்று எண்ணுகிறாய்…?

ஆவிகளுக்குண்டான உணவை எல்லாம் படைத்துப் புகை மண்டலங்களை எழுப்பி வசி…வசி…! என்று அந்த ஒலியின் நாமத்தை துர்மரண ஆவியின் நாமத்தை வைத்து வசி…வசி…! என்று வசியப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.மந்திரம் சொல்வதும் தகட்டில் எழுதுவதும் ஓலையில் எழுதுவதும் எல்லாமே அந்த ஆவிகளின் வசியத்தின் மூலமாகத் தான்.
2.தன் பிழைப்புக்காக தன் உயிர் நிலையையே மாற்றிக் கொண்டு பல ஏவல்கள் செய்வதெல்லாம் அந்த ஆவிகள் தான்.

மாந்திரீகர்களின் மண்டை ஓட்டை வைத்து ஜெபிப்பது என்ன என்றால் எந்த ஆவியைத் தான் வசியம் செய்து வைத்துள்ளானோ அந்த ஆவியைத் தன் உடல் பின்னமாகி எந்த நிலையில் எங்கு அதனின் உடலின் மண்டை ஓடு உறுப்புகள் உள்ளது என்ற நிலையைச் சொல்லிவிடுகிறது.

அதை எடுத்துக் கொண்டு வந்து அவன் ஜெபிக்கும் பொழுது இன்னும் பன்மடங்கு அவனுக்கு அந்த ஆவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
1.மாந்திரீகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளும்
2.இந்த மண்டை ஓடுகளும் மற்ற எலும்பு உறுப்புகளும்
3.பிறருக்குத் தெரியாத நிலையில் இருக்குமப்பா…!

மன நிலையில் சோர்வுள்ளவர்கள் மகான் என்று எண்ணி அவன் போட்டிருக்கும் சாமியார் வேஷத்தை நம்பி அவனை அணுகுகின்றார்கள்.

மனச் சோர்வடைந்த மக்கள் அவனை நாடிச் செல்லும் பொழுது
1.விபூதி வரவழைத்தோ புஷ்பம் வரவழைத்தோ இப்படிப் பல பல பொருள்களை வரவழைத்துக் கொடுப்பான்
2.மக்கள் அவன் அளிப்பதை நம்பி வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலே வைக்கின்றார்கள்.

இல்லத்திற்குள் வைத்தவுடன் எல்லாமே நல்லதாகத்தான் நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் வேலை எல்லாம் இவன் உடலில் உள்ள அணுக்களை தன் நிலைக்குத் திசை திருப்பி அவன் உடலில் உள்ள அணுக்களைத் தன் வசப்படுத்த அவன் மன நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அந்த ஆவி தன் நிலைக்குகந்த ஆகாரத்தையோ தன் நிலைக்குகந்த எண்ணத்தையோ அவனை எண்ண வைத்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஆவிகளின் நிலை எல்லாம்
1.அவன் உயிரணுவுக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்து அவன் நிலையில் அவனை இருக்க விடாமல்
2.அவனையே தன் வசப்படுத்திக் கொண்டு அவனுக்குள் வந்து குடி அமர்கிறது அந்த ஆவி.

தன்னுள் இருக்கும் சக்தியை புரியாமல் மாந்திரீகரிடம் சென்று பல தீட்சண்ய ஆவிகளுக்குத் தன் நிலையையே விற்று விடுகின்றார்கள் புரியாத பாமர மக்கள்.

1.தேவர்களின் தேவனப்பா மனிதர்கள் எல்லாம்.
2.இந்த மனித உடலைப் பெறுவதே பெரும் பாக்கியமப்பா…! என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுங்களப்பா…!
3.மந்திர மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளின் இயக்கத்திலிருந்து விடுபடுங்களப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.ஆண்டவனாக இருப்பது நம் உயிர்.
2.ஈசனாக இருந்து உருவாக்குவதும் உயிர்.
3.நாம் எண்ணியதை உள் நின்று செயலாக்கும் தெய்வமாக இருப்பதும் அது தான்.

நம்முள் நின்று அது இயக்கப்படும் பொழுது அதுவே நம் எண்ணத்தால் உருவான அந்த அணுவின் தன்மை கடவுளாக இருக்கின்றது.

“தனித்த கடவுள்” எவரும் இல்லை.

உணர்வுக்கொப்ப அந்தச் செயலுக்கொப்பத்தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த நிலையை நாம் அறிந்து கொள்வதற்குத் தெய்வங்களாகக் காட்டப்படுகின்றது.

நாம் பார்க்கின்ற மாதிரி சிவன் இப்படி உருவத்தில் இல்லை. முருகன் இப்படி இல்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உருவங்களைக் காட்டிக் கடவுள் இப்படித்தான் இருந்தார் என்று அதன் வழி வகுத்துக் கொண்ட நிலைகள் தான் இன்று அவர்கள் கொடுத்த காவியத்தைப் பதிவாக்கி இந்த உணர்வே அவர்கள் உடலுக்குள் நின்று கடவுளாக உருவாகின்றது.

உலக மதங்கள் அனைத்திலும் இப்படித்தான் உருவாக்கிக் கொண்டார்கள்.

கடவுள் இப்படித்தான் இருந்தார் என்று கற்பனை செய்து கொண்டு அதற்குத்தக்க உருவத்தைக் கொடுகின்றார்கள்.
1.உருவம் இல்லாத நிலைகள் எதுவும் இல்லை.
2.கடவுள் உருவமே இல்லாதவர் என்று சொல்வார்கள்.
3,அரூபி என்றும் சொல்வார்கள்.
4.ஆலயங்கள் அமைக்கப்படும் பொழுது (எந்த ஆலயமாக இருந்தாலும் சரி) இந்த உருவத்தின் நிலையையே அங்கே உருவாக்குகின்றார்கள்.

அதற்குப் பெயரில்லை என்பார்கள். ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு ஞானிகளின் பெயரை வைத்திருப்பார்கள்.

மதங்கள் உருவமில்லாத நிலைகளில் அரூபியாகத்தான் கடவுள் செயல்படுகிறார் என்று சொல்வார்கள்.

இல்லை.

கிருஸ்தவர்கள் இயேசுவை உருவமாக வைக்கவில்லையா…! அதே மாதிரி இங்கே உருவமாக மசூதியை வைத்துத் திரையைப் போட்டு மூடவில்லையா…!. அதற்குள் மறைந்துள்ளார்கள் இன்னார் மகான் நல்லவர் என்பார்கள்.

இதுவும் உருவ வழிபாடுதானே.

1.நமக்குள் மறைந்த குணத்தின் செயலாக்கங்களை உருவமாக்கி
2.இன்னென்ன குணங்கள் இன்னது செய்யும்…! என்று தெய்வ நிலையாக்கி
3.நம்மை அறியும்படி செய்தார்கள் ஞானிகள்

இதுவும் உருவ வழிபாடு தான்.

பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

ஒரு நண்பன் மேல் பாசம் கொண்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். இந்த உணர்வு எனக்குள் பதிவாகின்றது. அதே நினைவுடன் கண் கொண்டு நண்பனைப் பார்த்த பின் மகிழ்ச்சியுடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றேன்.

நண்பன் என்று வளர்ந்தாலும் காலப் போக்கில் அவன் என்னை மதிக்கும் தன்மை குறைந்து விட்டால் என்ன ஆகிறது…?

நான் நண்பனை மதிக்கின்றேன். ஆனால் நண்பனோ என்னைச் சரியாக மதிக்கவில்லை… சீராக எனக்கு உதவி செய்யவில்லை…! என்று
1.இந்த எதிர்பார்ப்புகள் அதிகாமன பின் நண்பனை வெறுக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.அன்று அத்தனை உதவி செய்தேன்… இன்று எனக்கு இப்படிச் செய்கிறான்… என்று அகம் கொள்ளுகின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு அவனைக் குற்றவாளியாக்குகின்றது
4.முதலில் உதவி செய்த பண்புகளை மாற்றிவிட்டு அவனுக்குத் தீங்கு செய்யும் நிலையையே உருவாக்கி விடுகின்றோம்.

ஆக…. நமக்குள் இருக்கும் 108 அகமதிகளும் (108 விதமான குணங்கள்) அகங்கார நிலைகளும் “தன்னைத் தன்னைக் காத்திடும் நிலையாகவே” அது வருகின்றது.

விவசாயப் பண்ணைகளில் ஒரு செடியில் அதனுடன் மற்ற செடிகளின் கருக்களைச் சேர்த்த பின் அதற்குத்தக்க செடிகளில் மாற்றங்கள் அடைகின்றது.

இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு உயிரினங்களில் உள்ள அணு செல்களை எடுத்து மற்ற மற்ற உயிரினங்களில் இணைக்கும் போது உயிரினங்களிலே உருமாற்றங்களைச் செயல்படுத்தும் தன்மை மனிதனுக்கு வருகின்றது.

தாவர இனங்களை மாற்றுவது போல் உயிரினங்களை மாற்றுவது போல் தான் நாம் நுகரும் உணர்வுகளைச் சீர்படுத்தவில்லை என்றால்
1.அது நம் நல்ல குணங்களைத் தீமையின் உணர்வுகளாக மாற்றிவிடும்
2.உடலின் அமைப்பை மாற்றிவிடும்… குணங்களை மாற்றிவிடும்
3.பின் இருள் சூழும் நிலைகள் கொண்டு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்ததற்கு மாறாக தேய்பிறையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும்.

மனிதர்களான நாம் ஆறாவது அறிவு கொண்டு இன்று பல பொருள்களை இணைத்துச் சுவை மிக்கதாக உருவாக்கி உணவாக உட்கொள்கிறோம்.

அது போல… நமது வாழ்க்கையில் கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அதனதன் இயக்கத்திற்கு விடாதபடி நாம் சமப்படுத்த வேண்டும்.

நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் தனக்குள் சமப்படுத்தும் நிலை வருகின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழியே வழி பார்க்கின்றது

1.நண்பன் என்ற நிலையில் எண்ணங்கள் பாசத்துடன் வரும் பொழுது காக்கும் நிலைகளை உருவாக்குகின்றோம்
2.ஆனால் சிறிதளவு பகைமை என்று உணர்வுகள் வந்து விட்டால் அவனைத் தாக்க வேண்டும் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வே வருகின்றது

ஆகவே பற்றும் பாசமும் இந்த உலகில் நமக்குள் பல நன்மைகளையும் செய்கின்றது தீமைகளையும் செய்கின்றது.

ஆனால் பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை. அப்படி என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தான்…!

பிறிதொன்று நம்மை இயக்காதபடி அருள் ஒளி என்ற நிலைகளில்
1.அகண்ட அண்டத்திலும் நஞ்சின் தன்மை தன்னைத் தாக்கிடாது
2.அதை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.பகைமை உணர்வுகள் எப்பொழுது உருப் பெறுகின்றதோ அதை அடக்குதல் வேண்டும்;.

மிளகாய் காரத்தின் தன்மை கொண்டது தான். மற்ற பொருளுடன் இணைக்கப்படும் பொழுது அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் தணிகின்றது. உப்பு கைப்பாக இருக்கின்றது… அதை மற்றவைகளுடன் சமப்படுத்தும் போது சுவையின் தன்மை கூடி மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

எனவே எதனை நாம் நுகர்ந்தாலும் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.அந்த அகங்காரத்தை எடுத்து விடாதபடி
2.அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

அப்படி வளர்த்தோம் என்றால் நம்மை இருள் சூழாத நிலையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் ஆற்றலையும் நாம் பெறுகின்றோம்.

இன்றைய உலகில் மனிதனின் அடுத்த நிலை வளர்ச்சிக்கு உதவும் “திறவுகோல்…”

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான் மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவுகோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞானக் கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவர்கள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எந்த ஒரு அணுத் தன்மையை எடுத்துக் கொண்டாலும் மூன்று நிலைதான் வெப்பம் காந்தம் விஷம். அதே போல உயிரணுவின் தன்மை வரப்படும் பொழுது மூன்று நிலை.

ரேவதி நட்சத்திரம் பெண் பால் தன்மை கொண்டது. ஒரு உயிரணுவிற்குள் ரேவதி நட்சத்திரத்தின் தன்மை அதிகரித்திருந்தால் பெண்பாலாக உருவாக்கும் தன்மை வருகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் விகிதாச்சாரம் ஒரு உயிரணுவிற்குள் அதிகமாக இருந்தால் ஆண் பாலை உருவாக்கும் நிலை வருகின்றது.
1.இப்படி 27 நட்சத்திரங்களும்
2.வித்தியாசமான நிலைகளில் உயிரணுக்களைத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.

பூமியோ மற்ற கோள்களோ சுழலும் பொழுது வெப்பமும் ஒரு பகுதியில் ஈர்க்கும் தன்மையும் வருகின்றது.

சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ……கம்”.
1.அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து
2.தனக்குள் இழுத்து “கம்…” – “சோ……கம்”.
3.விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று
4.அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.

பூமியின் நாதம் “ஓ…ம்” என்று இருப்பினும் வியாழன் கோள் மற்ற நிலைகளுடன் மோதப்படும்பொழுது அதனுடைய சுருதியின் நிலைகள் பல விதமாக வரும்.

நாதங்கள் எதனெதன் நிலைகளில் மோதுகின்றதோ அதற்குள் “ஓஒஓ…ஓஒஓ…ஓஒஓம்…ம்…ம்”என்று இந்த மாதிரி அலைகள் தனக்குள் இசைகள் கூடியும் குறைத்தும் வரும்.

அது நுகரும் உணர்வுக்குள் மலரும் தன்மையும் வளரும் தன்மையும் என்ற நிலைகளில் இந்த ஒலி அலைகளைக் கண்டுணர்ந்தவன் ஆதியிலே அகஸ்தியன் என்றாலும் பின்னாடி வந்த வியாசகர் 4000 ஆண்டுகளுக்குள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட பேருண்மைகள் இது.

அதற்கு முன்பு பலர் பெற்றாலும் இந்த உண்மையின் உணர்வுகளை அவரவர்கள் அறிவிலே தெரிந்தது தான் வளர்ச்சி கொண்டது.

மற்ற கோள்கள் சுழலும் பொழுது வெப்பமும் தனக்குள் ஈர்க்கும் சக்தியால் உணவாக எடுத்து விளையும் தன்மையும் வருகின்றது.

1.இப்படி நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியும்
2,வியாழன் கோளின் சத்தும் மூன்றும் சேர்ந்து ஒரு உயிரணுவாக உருவாக்கப்படும் பொழுது
3.எதனின் நிலைகள் கவர்ந்ததோ அதனின் வழி கொண்டு தான் அந்த உயிரணுவின் இயக்கம்.

நான் செய்வது எப்படித் தவறாகும்… என்று கேட்பது நாம் தானா…! அல்லது சுவாசித்ததா…?

மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது – நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.

நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.

ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.

உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்… அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்… அகங்காரம் கொள்ளுகின்றது.

அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்…? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்… தான் நுகர்ந்த உணர்வுகள்… தான்… தனது… என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா…?

ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்… “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்…” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.

இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை… துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்…” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.

இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்… அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.

உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து சஞ்சலமற்ற… சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்… எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்… எடுக்க வேண்டிய முயற்சி நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெற வேண்டும். மனத் திறன் என்றால் என்ன…?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா…!
6.அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊண் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்…”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி… “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது…!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைக் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில் தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா…?

1.சுவாசிக்கும் சுவாசமானது… சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் – செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா…!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்…!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

சுபம்… சுபம்… சுபம்…!

நஞ்சை ஒளியாக மாற்றிடும் மார்க்கத்தைத் தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றோம் – ஞானகுரு

1.சூரியன் நஞ்சினைப் பிரிக்கின்றது
2.ஆனால் துருவ நட்சத்திரமோ நஞ்சினை ஒளியாக மாற்றுகின்றது.

சூரியன் தனது நிலைகளில் நஞ்சினைப் பிரித்து மற்றதுடன் மோதும் பொழுது தான் ஒளிக் கதிராக மின்னுகின்றது. நஞ்சின் தாக்குதலால் வெப்பத்தின் தணல் கூடி ஒளியின் தன்மையாக மாறுகின்றது.

ஆனால் மனிதனாகி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன பின் நஞ்சின் தன்மை தனக்குள் அருகில் வரும் பொழுது அதை ஒளியின் சிகரமாக மாற்றுகின்றான்.
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை அடக்கி ஒளியாக இணைத்து
2.ஒளியின் சிகரமாக மாற்றும் தன்மை நாமும் பெற வேண்டும்.

மனிதனாக ஆனவன் தான் இதை உருவாக்க முடியும். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்றும் முழு முதற் கடவுள் என்றும் காட்டுகின்றார்கள்.

ஆக… இந்த மனித உடல் பெற்ற பின் அருள் ஒளியினை உருவாக்கும் முழுமையான கடவுளாக நாம் ஆகின்றோம். அதன் வழியில்
1.மகா சாந்தம் என்ற நிலைகளில்
2.மகா என்று சர்வத்தையும் சாந்தப்படுத்தும் உணவுகளை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்.

நமக்குள் ஒன்றிணைந்து வாழும் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டால் எந்த நஞ்சினையும் வென்றிடும் சக்தியாக… உள் நின்று நஞ்சினை ஒளியின் சிகரமாகக் கூட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்ததைத் தான் விநாயகர் தத்துவத்தில் “முழு முதல் கடவுள்…” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் வாழ்வோம். நமக்குள் புகும் இருளை புகாது அதைத் தடுத்து நம்மைப் பாதுகாப்போம். அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஒருநிலைப்படுத்துவது தான் மெய்ஞான விழிப்பு

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்ளுதல்) என்றிட்ட ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்… அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தத்தம் செயலுக்கு சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்…” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்… உணர்தல்… தெளிதல்… என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால்… எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்…?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கூர்மை அவதாரம் – நாம் தெளிவாக உணர்ந்து கொள்வதற்காக ஒரு உருவம் அமைத்து ஆமையைப் போடுகின்றார்கள்.

உதாரணமாக ஒரு கண்ணுள்ள புழு பாறை மீது நகர்ந்து செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். தன் உணவைத் தேடிச் செல்கின்றது.

கண்களால் பார்த்துத் தான் உணவாக உட்கொள்ளும் தாவர இனத்தைத் தேடிச் சென்றாலும் சூரியனுடைய ஒளிக் கதிர்கள் சிறிது நேரம் வெயில் அதிகமாகி விட்டால் வெப்பம் அதிகமாகிவிடுகின்றது.

பாறை மீது நகர்ந்து செல்கின்றது. நகர்ந்து செல்வதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகிவிட்டால் பாறை வெப்பமாகிவிடுகின்றது. இந்தப் புழுவின் மெலிதான உடல் தாங்க முடியவில்லை என்றால் “துடிக்கின்றது…”

இதிலிருந்து…, “தன்னைக் காக்க வேண்டும்…” என்ற நிலைகளில் கூர்மையாகத்
1.தாவர இனங்களைப் பார்க்கின்றது.
2.அதே சமயத்தில் இந்தப் பாறைகளையும் பார்க்கின்றது.
3.இந்த வெப்பம் அந்தப் பாறைக்குள் பட்டுக் “கடினமான நிலைகள்” வருவதை நுகர்கின்றது.
4.இந்தப் பாறையைக் கூர்மையாக உற்றுப் பார்த்து
5.இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்கின்றது.

நுகர்ந்த உணர்வுகள் எல்லாம் “ஓ…ம்… நமச்சிவாய” என்று அந்த ஜீவ அணுவாக மாற்றி அந்த உடலாக மாற்றுகின்றது. அதனின் மலங்களை
1.இந்தப் பாறையைப் போன்று கடினமாக வெளிவிடும் அணுக்கள்
2.இந்தப் புழுவிற்குள் உருவாகின்றது.

ஆனாலும் இந்தத் துடிப்பின் தன்மை கொண்டு நுகர்ந்த உணர்வின் அணுக்களான பின் இந்த உடலைப் பிளந்து விடுகின்றது. புழு மடிகின்றது.

புழு கூர்மையாகக் கவர்ந்த உணர்வுகள் உடலிலே விளைந்து உயிரிலே சேர்ந்து அதற்குத்தக்க அடுத்த உடலாக “ஆமையாகின்றது”.

1.எந்தப் பாறையினுடைய வெப்பத்திலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்ததோ
2.(அந்த உணர்வின் சத்து) ஆமையின் ஓடு வலுவாகின்றது.
3.அதற்குள் வெப்பத்தைத் தாங்கும் சக்தி (பாறையைப் போன்று) வருகின்றது.

ஆமையை நெருப்பு இருக்கும் இடத்தில் போட்டுப் பாருங்கள். அந்த வெப்பத்தைத் தாங்கக்கூடிய சக்தி அதற்குண்டு.

இந்த உணர்வின் இயக்கங்கள் “எப்படி வந்தது…?” என்ற நிலையைக் கண்டுணர்ந்தவன் அன்று அகஸ்தியன்.

அதைத்தான் கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் நாம் எதைக் கூர்மை அவதாரமாக்க வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து வாழ்வோம்

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் இருளை அகற்றி ஒளியாக மாற்றிடும் அருள் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து வெளிப்படுத்தும் போது எல்லோருக்குள்ளும் அது ஓங்கி வளர்கின்றது.
1.இப்படி ஒருவருக்கொருவர் நாம் தொடர்பு கொண்டு பதிவான உணர்வுகளின் துணை கொண்டு
2.அடுத்து நாம் எங்கிருந்து தியானித்தாலும் அந்த அருள் உணர்வுகள் நமக்குள் ஒன்றாக இணைகிறது.

இப்படி வலுக் கொண்ட உணர்வின் துணை கொண்டு எல்லோரும் சேர்ந்து தியானித்து இந்த அருள் சக்திகளைப் பெருக்கி அதை நமக்குள் அடிக்கடி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போன்று வளர்ந்து வந்தாலும் கூட… சில சந்தர்ப்பங்களில் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வெறுப்பு வேதனை என்று ஏற்பட்டால் அதைக் கவர்ந்தால்… அது நாம் போகும் பாதையைத் தடைப்படுத்தும் நிலையாக வந்து விடுகின்றது.

1.தடைப்படுத்தும் நிலையாக வரும் பொழுதெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி… தடைகளை நீக்கி
2.நம்முடன் இணைந்து வாழும் நிலைகளை வளர்த்து அருள் ஒளியின் உணர்வாக உருவாக்கி
3.அருள் ஒளியின் சுடராக மாற்றி அமைத்தல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் நரகவேதனைப்படுத்தி ஒன்றுக்கு உணவாகி அதிலிருந்து மீண்டு… நஞ்சினை வென்றிடும்… வேதனையை அகற்றிடும்… சொர்க்க பூமியாகத் தான் இந்த மனித உடல் வளர்ந்து வந்துள்ளது.

நம் உயிரே சொர்க்கவாசலாக உள்ளது. சொர்க்கம் என்ற நிலையாக என்றும் எதனையுமே வென்றிடும் தன்மை பெற்று… அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை ஒளியின் சுடராக மாற்றி அமைக்கும் வேகாநிலையை நாம் அடைய முடியும்.

நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து அந்த அருள் சக்தியைப் பெருகுதல் வேண்டும். ஒருங்கிணைந்து அந்தச் சக்திகளைச் சேர்த்தது தான் துருவ நட்சத்திரம்.

நாம் அனைவரும்… “அனைவரும் நலம் பெற வேண்டும்…” என்று தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை வளர்க்க வளர்க்க… பகைமைகள் நமக்குள் சேராது நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பத்தை நாம் வளர்த்தல் வேண்டும். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை உருவாக்குதல் வேண்டும். உடலை விட்டு அகன்ற பின் பெரு வாழ்வாக அமைகிறது.

ஆகவே… இந்த உடல் வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் தெளிவாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1.இந்த உடல் நமக்கு சொந்தமல்ல… இந்த உடலை வைத்து அருள் ஒளியை நமக்குள் சொந்தமாக்குதல் வேண்டும்
2.ஒரு விளை நிலம் இருப்பினும் அதிலுள்ள மணலை நாம் உட்கொள்வதில்லை.
3.விதைகளை மண்ணிலே விதைத்து நமக்கு வேண்டியவைகளாக விளைய வைத்து உருவாக்குகின்றோம்
4.அதில் விளைந்ததைத்தான் சமைத்து உணவாக உட்கொள்கின்றோம்… உட்கொண்ட பின் உயிருடன் ஒன்றி வாழுகின்றோம்.

இதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மையை நமக்குள் விளைய வைத்து… அந்த ஒளியுடன் ஒன்றினால் அந்த உணர்வுக்குத் தக்க நாம் ஒளியின் சரீரம் பெறுவது உறுதி…!

ஆகவே…
1.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து
2.இந்த வாழ்க்கையில் வரும் துன்பங்களை நமக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டாதபடி
3.அதைத் தடைப்படுத்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

இரவு படுக்கும் முன் செய்ய வேண்டிய முக்கியமான தியானப் பயிற்சி

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு… “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே…” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது இல்லை)

1.அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால்
2.மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது.
3.அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்… உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது… பல நன்மைகளும் ஏற்படுமப்பா…!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்…
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு… கெட்டதும் உண்டு…! ஆனால் கெட்டது ஜீவன் பெறாதபடி அதனின் வினைச் செயலை மாற்றி… நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்…!”

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நட்சத்திரங்களில் இருப்பது ஒரு விஷத்தின் இயக்கம். அவைகள் கதிரியக்கப் பொறிகள் கொண்டது.

ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நிலைகள் நம் பூமிக்குள் நேரடியாக வந்தால் இடி மின்னலாக வரும் நிலைகளில் இவை அனைத்தும் ஊடுருவி நம் பூமியின் “நடு மையம்” செல்கின்றது.

அது கொதிகலனாக மாற்றி மின் அணுக்களாக மாற்றி அணுத் தன்மையாகி இந்தப் பூமிக்குள்ளே பிளந்து வெளிப்படுத்தும் நிலை வருகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களும் வரிசைப்படுத்தி வரும் பொழுது சூரியனுடன் சேர்ந்து சுழற்சியின் தன்மை “முன்…பின்…” வரும்.

ஒரு கூண்டை அமைத்து அதற்குள் ஒரு சைக்கிளை ஓட்டிக் காண்பிப்பது போல் – சுழன்று வரும் நிலைகளில் மையத்தில் இருந்து கொண்டு சூரியன் இயங்குகின்றது.

பல நட்சத்திரங்கள் உமிழ்த்தும் நிலைகள் பல பாகங்களிலிருந்து வருவதை இது மாற்றுகின்றது.

ஒரு ஐஸ் பெட்டியில் (REFRIGERATOR) மின்சாரத்தை வைத்து எப்படிக் குளிர்ச்சியை உண்டாக்குகின்றோமோ அதைப் போன்று
1.சனிக் கோள் தனக்குள் வருவதை
2.உறையும் தன்மையாகக் கொண்டு வருகின்றது.

அது சுழற்சியின் தன்மை அடைந்தாலும் குளிர்ச்சியின் தன்மையாக (ஐஸ் பாறையாக) மாற்றும் தன்மை வருகின்றது.

அப்படி மாற்றி எடை கூடும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து வெளி வருகின்றது. (சனிக் கோளில் உள்ள வளையங்கள்)

1.மற்ற அணுக்களுக்குள் இது எந்த அளவிற்குள் கலந்துள்ளதோ
2.அந்த அணுவிற்குள் சேர்த்து
3.மற்றொரு பொருளைத் தன்னுடன் இணைத்து
4.அந்த அணுத் தன்மை வளர்ச்சி பெறும் தன்மை அடைகின்றது.

மற்ற கோள்களில் திடப்பொருள்கள் உருவாக வேண்டும் என்றால் அங்கே “நீர் உற்பத்தி கிடையாது…”

இருந்தாலும் இந்த அணுக்கள் மற்ற கோள்களிலிருந்து வெளிப்படும் சத்தும் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய பொறிகளும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது இதை இந்தக் காந்தம் தனக்குள் இழுத்து வைத்துக் கொண்டு சேமிப்பு என்ற நிலைகள் வெப்பமல்லாத நிலைகள் குளிர்ச்சியை உண்டாக்கி (கண்ணுக்குத் தெரியும்) ஒரு பொருளாக உறையச் செய்கின்றது.

ஏனென்றால் அது திடப்பொருளாக அது உருவாக்கப்பட்டது… இதனுடன் சேர்த்தவுடன் அந்தத் திடப்பொருளாக
1.நீரைத் தன்னுள் இருந்து மோதப்படும் பொழுது
2.ஆவியாக மாற்றி
3.இதனுடன் இணையும் பொருளாக மாறுகின்றது.

இப்பொழுது (1997) யாம் சொல்வதைப் பிற்காலத்தில் விஞ்ஞானிகள் சொல்வார்கள். ஏற்கனவே யாம் சொன்னதையெல்லாம் சொல்லிக் கொண்டேதான் வந்துள்ளார்கள்.

அணுக்களுக்குள் எப்படி நீர் கிடைக்கின்றது…? நீர் இல்லை என்றால் எதுவும் வாழ முடியாது. நீர் சக்தியைக் கொடுப்பது சனிக் கோள் தான்.

ஆகவே நம் பிரபஞ்சத்திற்குச் சனிக்கோள் முக்கியமானது. இவைகள் எல்லாம் ஆதியிலே அகஸ்தியர் கண்டுணர்ந்த பேருண்மைகள்.

அகஸ்தியனைப் போன்று நாமும் “அனைத்தையும் ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்…”

1.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டுணர்ந்த பேருண்மைகளைத் தன் மனைவிக்குப் பாய்ச்சி
2.உணர்வை இரண்டறக் கலந்து ஒரு அணுவின் தன்மை உருவாக்கி அந்த உணர்வின் தன்மை மாற்றமடைந்து
3.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவன்.

எதை உற்று நோக்கி உணர்வின் தன்மை தனக்குள் கவர்ந்து… எதைப் பெற வேண்டும் என்று தன் உடலிலே உருவாக்கினார்களோ அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி “துருவ நட்சத்திரமாக” இன்றும் உள்ளார்கள்.

சூரியன் தனக்குள் உருவான பாதரசத்தைக் கொண்டு புறத்திலிருந்து வரும் விஷத்தைத் தாக்கி அதைப் பிரித்து விடுகிறது. அதனால் தான் அதைப் பிரிக்கப்படும் போது ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது.

எந்த விஷத்தின் தன்மை தனக்குள் மோதுகின்றதோ நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மின்னலாக வருகிறதோ அதைப் போல் பிரித்தபின் ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது… ஒளி அலைகளாக நம் பிரபஞ்சத்திற்குள் மாறுகிறது. இது சூரியனின் இயக்க நிலை.

அதைப் போன்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் விஷத்தின் தன்மைகளைத் தனக்குள் இணைத்து… விஷத்தின் தன்மையைப் பிரித்து விட்டு ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான் அகஸ்தியன்… மனிதனாக ஆன பின் அது முழுமையான கடவுளாகின்றது.
1.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டு
2.என்றும் பதினாறாக பிறவி இல்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டுள்ளான்… வளர்ந்து கொண்டுள்ளான்.

அதே சமயத்தில் அகண்ட அண்டத்தில் வெளிப்படும் எத்தகைய கடும் நஞ்சாக இருந்தாலும்… அதையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்… ஏகாந்த நிலை கொண்டு வாழ்கின்றான்.

அவனைப் பின்பற்றிச் சென்ற அனைவரும் அதே வழியில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சூரியனே அழிந்தாலும்… இதன் எதிர்காலம்…! நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து மற்ற விஷத்தன்மை அதிகமாகக் கவர்ந்து எடுத்து விட்டால் அதன் உணர்வின் தன்மை (பிரபஞ்சம்) மாற்றம் அடைகின்றது.

ஆனால் மற்ற நட்சத்திர மண்டலங்களின் சக்திகளை எடுத்து
1.நம் பூமிக்குள் பல பொருள்களுடன் சேர்த்து இணைத்துப் பல பொருளாக உருவாக்கும் நிலையும்
2.கதிரியக்கப் பொறிகள் கடலில் பட்ட பின் மணலாக மாறுவதும்
3.அதே சமயம் இந்த கதிரியக்கப் பொறிகளை அடக்கச் செய்யும் அந்த மோதலில்
4.நமக்குண்டான வெப்பத்தை… பூமியில் சமப்படுத்தும் உணர்வின் நிலைகளை உருவாக்கும் தன்மை பெற்றது 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்.

ஒவ்வொரு செடியிலும் இந்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகள் கலவை கலந்துள்ளது.
1.அந்த உணர்வின் பொறிகள் வரப்படும் பொழுதுதான் செடிக்குள் வெப்பமாகி
2.தன் இனம் எதுவோ புவியின் ஈர்ப்பால் தன் இனத்தின் உணர்வை இழுத்துக் கவர்ந்து செடியாக விளைகின்றது.

இது எல்லாம் இயற்கை நியதிகள்…. அன்று அகஸ்தியன் கண்டது.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே…! என்று இதை விட்டு விடாதீர்கள்.

1.எல்லாம் தெரிந்து கொண்டு யாரும் வருவதில்லை… எல்லாம் தெரிந்து கொண்டு நான் இதைச் சொல்ல வரவில்லை
2.குரு காட்டிய உணர்வு கொண்டு தெரிந்து கொண்டேன் அவர் உணர்வைத் தொடர் கொள்கின்றேன்
3.எனக்குள் இருளை அகற்றும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றேன்
4.உங்கள் செவிகளில் படுகின்றது… அதை நுகர்கின்றீர்கள்… உங்கள் இரத்தங்களிலே கலக்கின்றது
5.மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அகஸ்தியன் கண்டதை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்
6.அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடையலாம்.

மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனை

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ணக் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

விண்ணிலே உருவாகி மண்ணிலே வந்து மண்ணில் விளைந்த உணர்வை எடுத்து விண்ணை நோக்கி என்றும் விண்ணின் ஆற்றல்களைத் தனக்குள் எடுத்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான்.

“அவன் வழியில்…” நாம் செல்வோம் என்றால் பத்தாவது நிலை கல்கியை அடைய முடியும். அது தான் விஜய தசமி என்று ஒன்பது நாள் கொலு வைத்துப் பத்தாவது நிலையை நாம் அடையும் மார்க்கமாகக் காட்டப்பட்டது.

ஏகோபித்த நிலைகளில் நாம் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வின் தன்மை தீமைகளை அகற்றும். அப்பொழுது
1.அந்தத் தீமையான உணர்வின் தன்மையை நுகரும் நிலை இழக்கப்படுகின்றது.
2.தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை அதிகாலையில் நாம் அனைவரும் நுகர்ந்து எடுத்து வலிமை பெற்று விட்டால் நம்மிடமுள்ள தீமை செய்யும் உணர்வுகள் “அனாதையாகி விடுகின்றது…”.

நம் உடல் ஈர்க்காது உணர்வுகள் வெளிப்பட்டபின் காலையில் அந்தச் சூரியனின் ஒளிக் கதிர்கள் வரப்படும் பொழுது
1.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
2.சூட்சமமான நிலைகளுக்கு “சூனியப் பிரதேசத்திற்கு” அழைத்துச் செல்கின்றது.
3.பூமிக்கு வெளியிலேயும் போகாது… பூமிக்குள் கீழேயும் வராது.
4.அதாவது சூனியமான நிலைகளை அடைந்து விடுகின்றது.

சூனியப் பிரதேசத்தில் அடைக்கப்படும் பொழுது மழை நீரோ மற்றவைகளுடன் கலந்து மின்னல்கள் ரூபமாகக் கீழே வந்துவிடும்.
1.பின் கடலலைகளால் ஈர்க்கப்பட்டு
2.தீமை செய்யும் அந்த உணர்வுகள் அதற்குள் அமிழ்த்தப்படுகின்றது.

இதைப் போன்று தான் 12 மாதங்களிலும் மனிதன் தனக்குள் வரும் தீமைகளை அகற்றுவதற்காக ஞானிகள் உருவாக்கியது தான் நாம் கொண்டாடும் பண்டிகை நாட்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் நலம் பெற வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் எண்ணும் பொழுது அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் ஈர்க்கும் சக்தி இழந்த பின் சூரியன் காலை ஆறு மணிக்கு வரும் பொழுது ஈர்த்து மேலே அழைத்துச் சென்றுவிடுகின்றது.

கணவன் மனைவி இருவரும் அதிகாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர்ந்து குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். குழந்தைகளுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் குழந்தைகளைத் திட்டியிருப்போம். சாபமிட்டிருப்போம். அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் அந்த வெறுப்பு வளரும்.

இதைப் போன்ற நிலைகளில் நமக்குள்ளிருந்து வெளி வந்த அத்தகைய தீமையான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. இந்தக் காற்று மண்டலத்தில் (பரமாத்மாவில்) பரவியுள்ளது.

இந்தப் பூமியைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் விஜய தசமி அன்று அனைவரும் ஏகோபித்த நிலையில்
1.நாங்கள் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம் நலம் பெறவேண்டும்
2.நாங்கள் பார்த்தோர் குடும்பங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
3.அவர்கள் மலரைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் நம்மிடமிருந்து வரும் பகைமை உணர்வுகள் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து வைத்திருப்பதை
1.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இங்கே தடைப்படுத்திவிட்டால்
2.ஈர்க்கும் சக்தி குறைகின்றது (யாரும் ஈர்ப்பதில்லை)

சூரியனின் காந்தப்புலனறிவு இழுத்து மேலே கொண்டு சென்று விடுகின்றது. கடல் அலைகள் ஈர்த்துத் தனக்குள் அமிழ்த்திவிடுகின்றது.
1.இந்தப் பரமாத்மா சுத்தமடைகின்றது.
2.நம் ஆன்மா சுத்தமாகின்றது.
3.நமக்குள் ஜீவான்மா தெளிவடைகின்றது.
4.பின் உயிரான்மா ஒளியின் சரீரம் கொண்டு அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

மனதை நாம் நொறுங்கவிடக் கூடாது… மற்றவர் மனதை நொறுக்கவும் கூடாது

உதாரணமாக… கண்ணாடியில் எழுத்துக்களை எழுதும் பொழுது பக்குவமாகச் செயல்படுத்தவில்லை என்றால் கண்ணாடி உடைந்துவிடும். நமது மனதும் ஒரு கண்ணாடி போன்றது தான்…!

1.நமக்கு அனைத்துமே தெரிந்திருக்கலாம்
2.இருந்தாலும் அடுத்தவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி சமமாகப் பதிவாக்கவில்லை என்றால் அவரின் மனம் நொறுங்கிவிடும்.

“நன்மையாகவே இருந்தாலும்” அழுத்தத்தின் தன்மை கொண்டு பக்குவம் தவறி மற்றவர்களுக்குச் சொல்லால் சொல்லப்படும் போது மனது கண்ணாடி போன்று உடைந்து விடுகிறது.

மனம் உடைந்து விட்டால் திரும்பச் சரி செய்வதே கடினம். பக்குவ நிலைகளை இழந்தால் நம் மனம் நொறுங்கி விடுகின்றது ஆகவே அதைப் போன்று சிதறுண்டு போகாதபடி பக்குவ நிலைகள் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும்.

1.காரியம் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தின் தன்மை கொண்டு
2.கோப உணர்வையோ வேக உணர்வையோ எடுத்தால் சாந்த உணர்வுகள் சுக்கு நூறாகத் தெறித்து விடுகின்றது.
3.அன்பு கொண்டு அரவணைக்கும் மற்றவர்களின் நல்ல மனதையும் நமது சொல் சிதறச் செய்து விடுகின்றது.

வாழ்க்கையில் பரிபக்குவம் கொண்டு வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அருள் வழியைப் பெறுதல் வேண்டும். இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்.

நம் குரு காட்டிய வழியினை வெறும் “சொல்லால் மட்டும் சொல்லிவிட்டுப் போகாதபடி…” காலத்தை அறிந்து பக்குவ நிலை கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

1.அருள் ஒளியின் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தப் பக்குவம் தன்னாலே வரும்
2.அருள் சக்திகளை நுகர மறந்தால் பக்குவம் தவறி விடுகின்றது.

பலகாரம் செய்கிறோம் என்றால் அதிலே எண்ணை காயும் பருவத்தை அறிந்து எந்தப் பொருளை இணைக்கின்றோமோ அதற்குத் தக்க அதிலே சுவையின் தன்மை வருகின்றது.

வடையைச் சுடுகிறோம் என்றால் எண்ணை காய்ந்திருக்க வேண்டும் அது காய்ந்திருக்கின்றதா…? என்றும் நாம் முதலில் சரி பார்த்தல் வேண்டும்.

பார்த்தபின் மாவைத் தட்டிப் போட்டால் வடை சுவையாக இருக்கும். என்னை காயாதபடி வடையைச் சுட்டால் எனண்ணையை அதிகமாக ஈர்த்துவிடும்… சுவை கெட்டுவிடும்.

1.ஆகவே அடுத்தவரிடம் நாம் பேசும் பொழுது பக்குவம் பார்த்துச் சொன்னோம் என்றால்
2.இணைந்து வாழும் தன்மையும் அவர்களைத் திருத்தும் நிலையும் தன்னுடன் அரவணைக்கும் தன்மையும் வருகின்றது.

அதைத் தான் இராமன் அம்பை எய்தான் என்றால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்வான் என்று சொல்வது.

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ… அதுவே பதிலாக நமக்குள் வரும்.
2.ஒன்றி வாழ்வதும்… இணைந்து வாழ்வதும்… பிரிந்து வாழ்வதும்… எல்லாமே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் இணக்கத்திற்குள் தான் உண்டு.
3.நான் உங்களை மகிழச் செய்யும் நிலைகள் கொண்டு வந்தால்… அதே மகிழ்ச்சி என்ற நிலைகளை எனக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பாய்ச்சினோம் என்றால் கல்யாணராமன் ஆகின்றோம்.

நீங்கள் மகிழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டு நான் சொன்னால் உங்களுடைய உணர்வு எனக்குள் இணைந்து வாழும் தன்மையாக வருகின்றது. என் சொல்லும் உங்களுடன் இணைந்து வாழ்கின்றது. மகிழ்ச்சி பெறும் தன்மை கொண்டு மகிழச் செய்யும் உணர்ச்சியாக இயக்குகிறது.

எண்ணங்களின் இணக்கமும்… எண்ணத்தின் உணர்ச்சியும்… நமக்குள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று எண்ணத்தால் இயக்கும் நிலைகளை விஷ்ணுவின் மறு அவதாரம் இராமன் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

வெப்பத்தின் உணர்வு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக அது எவ்வாறு இயக்குகிறது…? என்று சூரியனின் இயக்கத் தொடர்களைக் காட்டி உணர்வின் இயக்கங்களை நமக்கு ஞானிகள் காட்டினார்கள்.

உணர்வின் இயக்கம் தனக்குள் வலுவாகப் படும்பொழுது உணர்த்த வேண்டும்… உணர வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற நிலையாக “எண்ணத்தால் தான் கண்கள் உருவானது…” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஞானிகள் நமக்குக் காட்டிய நிலைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.

நீரைக் குடித்துத் திகட்டலை அகற்றுவது போல்… “மகரிஷிகள் உணர்வைப் பருகி… மனதை அமைதிப்படுத்த வேண்டும்”

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம். நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா ஆத்ம சுத்தி என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆயுத பூஜை என்றால் அதனின் அர்த்தமே “இப்பொழுது” வேறு விதமாக இருக்கின்றது.

படங்களை எடுத்து வைப்பது புத்தகங்களை எடுத்து வைப்பது அரிவாள்மனையை எடுத்து வைப்பது கோடாலியை எடுத்து வைப்பது ஆட்டை அறுப்பவன் கத்தியை எடுத்து வைப்பது என்று இதற்கெல்லாம் பூஜை செய்வது.

ஆக ஆட்டை அறுத்தவன் இந்தக் கத்தியை வைத்து இத்தனை ஆடுகளை நான் அறுத்தேன்… அதனால் எனக்கு வருமானம் வந்தது என்று அவனும் “கத்தியை வைத்து ஆயுத பூஜை செய்கின்றான்”.

“பார்க்கலாம் நீங்கள்…” ஆடு அறுக்கும் கடையில் அல்லது வீட்டில் கத்தியை வைத்துப் பூஜை செய்கின்றான்.

கத்தியால் ஆட்டை அறுத்து அதைக் கொன்று விற்று நான் சாப்பிட்டேன். அதனால் இது நல்ல முறையில் இருந்தால் “இன்னும் எத்தனையோ ஆட்டை இதை வைத்து அறுப்பேன்…” என்று அவனும் இப்படிப் பூஜை செய்கின்றான்.

ஆயுத பூஜை அன்று இந்த வேடிக்கையெல்லாம் பார்க்கலாம்.

அதே சமயத்தில் நான் ஏமாற்றி எல்லாவற்றையும் விற்றேன் என்று தராசுகளையும் மற்றவைகளையும் வைத்துப் பூஜை செய்வார்கள்.

1.தன்னிடம் பொருள் வாங்கிச் செல்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும்
3.கொடுத்த காசு திரும்ப வரவேண்டும் என்று எண்ணினால் பரவாயில்லை.

ஆனால் அப்படி எண்ணுவதில்லை. தராசைச் சுத்தப்படுத்தி வைத்துவிட்டால் போதும்.

எத்தனையோ வகையில் ஒருவருக்கு அளவுகோலைக் குறைத்துக் கொடுத்திருப்பேன். இப்படியெல்லாம் எனக்கு நீ சம்பாரித்துக் கொடுத்தாய் சரஸ்வதி பூஜை என்று சொல்லிவிட்டு தராசை வைத்துப் பூஜை செய்வார்கள்…”

ஏனென்றால் திருடுவதற்கு அந்த ஞானத்தைக் கொடுத்தாய் என்று சொல்லி அந்தப் பூஜை செய்கிறவர்கள் தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

நன்றாக யோசனை செய்து பாருங்கள் சரஸ்வதி பூஜை… ஆயுத பூஜை அன்று நாம் என்ன செய்கிறோம்…? பெரும்பகுதியானவர்கள் இப்படித் தவறு செய்யும் நிலையாக உள்ளார்கள்.

செய்யும் தவறை நீக்குவதற்கு யாராவது எண்ணுகிறார்களா…, என்றால் “இல்லை…”

தொழிலில் என்னை அறியாது எத்தனையோ ஏமாற்றியிருப்பேன். ஏமாற்றும் நிலைகள் மாறி சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்
1.என் தொழில் சீராக வேண்டும்
2.என்னிடம் பொருள் வாங்குபவர்கள் மனம் நோகக்கூடாது
3.மனம் நோகும்படி என் செயல் இருக்கக்கூடாது
4.மனம் நோகும்படி என் சொல் இருக்கக்கூடாது
5.எல்லோரும் சந்தோஷமாக இருக்கக்கூடிய வழியில் நம் எண்ணங்களை
6.”இந்த ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்”.

எத்தனை பேர் சுத்தப்படுத்துகின்றோம்?

ஆயுத பூஜை அன்று சுண்டலை அவித்து எல்லோருக்கும் கொடுக்கத் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆயுத பூஜை அன்று இப்படியெல்லாம் படைத்துப் பூஜை செய்தால் கடையில் நன்றாக வியாபாரம் ஆகும்.

கடையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு சுண்டலை இனாமாகக் கொடுத்தால் கடையைத் தேடி வருவார்கள். இப்படிக் கொடுத்தால் இந்தக் கடையில் இந்தச் சரக்கு இருக்கின்றது என்று தேடி வருவார்கள் என்று இது விளம்பரப்படுத்துவதற்காகச் செய்கின்றார்கள்.

படிக்கும் குழந்தைகள் என்ன செய்கின்றார்கள்?

1.கல்வியில் ஞானம் பெறவேண்டும் என்ற
2.உணர்வின் கூர்மையை அது தூய்மைப்படுத்துகின்றார்களா…?
3.தூய்மைப்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களா…?

தாய் தந்தையரின் அருள் நாங்கள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் சக்தி பெற வேண்டும் இருளை அகற்றும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

மகரிஷிகள் உபதேசித்த உணர்வுகள் நாங்கள் நடக்க வேண்டும் அவர்கள் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்த அந்த ஒளியான நிலைகள் நாங்கள் பெற வேண்டும் என்று “இப்படி நுகர்ந்தால்… மனத் தூய்மை ஆகின்றது”.

இப்படி மனித வாழ்க்கையில் நம்மை அறியாது சேர்ந்த தீமைகளையும் தீய செயல்களையும் நாம் அறியாது செய்த தவறுகளையும் நீக்க வேண்டும் என்று “இந்த ஞானத்தை” எடுக்க வேண்டும்.

நம் உடலிலுள்ள அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றியமைக்கின்றோம். அந்த ஞானத்தின் வழி நமக்குள் சேர்க்கும் பொழுது எதை நுகர்கின்றோமோ அது “ஓ…” என்று பிரம்மமாகின்றது.

இந்த உணர்வுகளை நாம் கவர்ந்து கொள்கின்றோம். கவர்ந்து கொண்ட உணர்வுகளை நுகரப்படும் பொழுது உடலாகின்றது. அருந்ததி தன்னுடன் இணைந்து அந்தச் சக்தியாக நமக்குள் வேலை செய்கின்றது.

ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திங்கள் இதுதான்.

திடுக்… திடுக்… என்று பயமும் பதட்டமும் நமக்கு வரக் காரணம் என்ன…?

1.கண்ணின் கருவிழிக்குப் பேர் “ருக்மணி (படமாக்குவது)” என்றும்
2.கண்ணின் காந்தப் புலனறிவுக்குப் பேர் “சத்தியபாமா (உண்மையை உணர்த்துவது)” என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.
3.அந்த இரு சக்திகளையும் சேர்த்துத் தான் “கண்ணன்” என்றும் காரணப் பெயர் வைத்தனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே ஒரு பஸ் வேகமாக வருகின்றது… நம் கண்களின் கருவிழி அதை நம் உடலில் பதிவாக்குகின்றது.

நம் மீது மோதும் நிலைகள் கொண்டு வருவதை அந்த உணர்வலைகளைக் கவர்ந்து உயிருடன் இயக்குகின்றது. அப்போது “பஸ் நம் மீது மோதி விடுமோ…!” என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
1.அதனின்று விலகிச் செல்ல கண்கள் நமக்குப் பயன்படுகின்றது.
2.விபத்து ஏற்படாமல் அந்த நேரத்தில் காப்பது நமது கண்களே.

ஆகவே கண்ணன்… கண்கள் நம்மை வழி நடத்துகின்றது. தீமையான உணர்வுகளைக் கண்டபின் அந்தத் தீமையிலிருந்து விடுபட விபத்துகள் வரும் என்று கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து விபத்திலிருந்து நம்மைக் காக்கின்றது.

அப்படி விபத்திலிருந்து காத்தாலும் பஸ்ஸின் வேகத்தைக் கண்டு அந்த அச்ச உணர்வு உயிரிலே பட்டு வேகமாகப் படும் பொழுது “பயத்தை ஊட்டும் அதிர்வுகள்…” ஏற்படுகின்றது.

1.கண்கள் அந்த உண்மையை உணர்த்தினாலும்… நம்மைக் காத்தாலும்
2.நாம் நுகர்ந்த பயமான உணர்வை உயிர் இயக்கி உடலைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும்
3.நுகர்ந்த பயமுறுத்தும் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக… நம் உடலாக மாற்றி விடுகின்றது.

ஒரு இடத்தில் இருவர் சண்டை இடுகின்றனர்… கடுமையாக மோதுகின்றனர். பயங்கரச் சொல்களையும் விபரீதப் பேச்சுகளையும் பேசுகின்றனர்.

நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் கண்ணின் கருவிழி அதைப் பதிவாக்குகின்றது. அவர்கள் செயல்களை உற்றுப் பார்த்துச் சண்டையிடும் உணர்வின் தன்மை நுகரச் செய்கின்றது.

அவர்கள் தவறு செய்கின்றனர்… பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாம் நுகர்ந்ததைக் கண் உயிருடன் இணையச் செய்கின்றது
2.உயிரோ அந்த உணர்வினை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக உடலாக மாற்றி விடுகின்றது.

இது எல்லாம்… நாம் தவறு செய்யவில்லை என்று இருந்தாலும்
1.தவறு செய்பவருடைய நிலைகளை நம் கண்கள் உணர்த்துகின்றது.
2.ஆனால் பதிவாக்கிய பின் உயிரோ அதை உடலாக மாற்றி விடுகின்றது.

அச்சுறுத்தும் உணர்வு உடலுக்குள் அணுக்களாக மாறிவிட்டால் அந்த பயமுறுத்தும் உணர்வைச் சுவாசிக்கும்போது “உயிரிலே படும்போதெல்லாம்” நாமும் பயந்து அதற்குத் தக்கவாறு வாழ்க்கை அங்கே நடக்க நேர்கின்றது

பயமுறுத்தும் உணர்வுகள் அதிகமாகி அந்த அணுக்கள் பெருகத் தொடங்கினால்…
1.நம்மை அறியாமலே அடிக்கடி பதட்டமடையும் அல்லது நடுக்கம் அடையும் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.
2.ஒரு காரியத்தையோ தொழிலையோ செய்ய வேண்டும் என்று வலுவாக எண்ணினாலே பதட்டமும் பயமும் வரும்… மன உறுதி இழக்க நேரும்.

அதனால்… சோர்வும் சஞ்சலமும் அடைந்து “என்னால் முடியவில்லையே…” என்று வேதனைப்படும் பொழுது – வேதனை என்பது விஷம்…! நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் இந்த உடலில் விஷமான அணுவாக மாற்றி விடுகின்றது.

அதனால் தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை” என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நாம் எதையெல்லாம் எண்ணிச் சுவாசிக்கின்றோமோ அதனின் உணர்வினை உணர்த்தினாலும் அதனதன் அணுவாக உருவாகித் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

நாம் தவறு செய்யாமலேயே பல நிலைகள் இப்படி வருகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் பல கோடிச் சரீரரங்களில் தன்னைக் காட்டிலும் வலுவான மிருகங்களின் உணர்வுகளை எடுத்து ஒவ்வொன்றில் இருந்தும் பாதுகாப்பான உணர்வுகளை எடுத்துத் தப்பிடும் உணர்வுகளை எடுத்துத் தான் மனிதனாக வந்துள்ளோம்.

அதாவது வலுவான உணர்வை நுகர்ந்து நுகர்ந்து தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து… இன்று வந்துள்ளோம்..

முதலிலே சொன்ன மாதிரி இன்றைய மனித வாழ்க்கையில் பயமான உணர்வுகளையோ… சண்டையிட்டோர் உணர்வுகளையோ… அல்லது நோயாளியின் உணர்வுகளையோ எடுக்க நேரும் போதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.அதிலிருந்து வரும் உணர்வுகளை உயிர் வழியாக நுகர்ந்து
3.நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.

காரணம் அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சினை வென்றது… உணர்வினை ஒளியாக மாற்றியது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதிலே இரண்டறக் கலந்த செம்பு பித்தளையும் ஆவியாக மாறித் தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துன்பப்படுத்தும் உணர்வுகளை நம் கண் கவர்ந்தாலும்
2.அந்த உண்மைகளை உணர்த்தினாலும்
3.அதிலிருந்து விலகிச் சென்றாலும்
4.நுகர்ந்த உணர்வு நம் உடலுக்குள் ஜீவ அணுவாக மாறுவதற்கு முன்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்துக்களோ அல்லது அது போன்ற அதிர்ச்சியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலோ அந்தக் காலங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். பயமான உணர்வலைகள் நீங்க வேண்டும்… என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… நாங்கள் மன பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் நம் எண்ணத்தை வலுவாக்கும். அனுபவத்தில் பார்க்கலாம்…!

நெஞ்சுக் குழியில் இருக்கும் “தாய் மூச்சு நாடி”

கோப குணத்தின் உந்துதலால் அந்த நேரத்தில் நாம் ஈர்த்துக் கொள்ளும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இருபாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி…! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்… அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி… இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது…எது.. எப்பொழுது செயல்படுகிறது…? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி… மோகம்.. தாகம்…” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்… சுவாசமும்… செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்…!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்… மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்… ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி…
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்…!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே…
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உடல் என்ன செய்கின்றது…? நாம் சாப்பிட்ட உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு நல்லதை நம் உடலாக மாற்றுகின்றது.

அப்பொழுது நன்மை தீமை என்று தெரிந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கின்றது. தெரிந்தாலும் நாம் என்ன செய்கின்றோம்…?

மாடு ஆடு இவைகளை வளர்க்கின்றோம். சாணத்தை அங்கேயே தான் போடுகின்றது. அது மேலேயே தான் படுக்கின்றது. அதற்கு முடிந்த அளவு அது தான். வேறு வழியில்லை.

நாம் அவைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றோம். இவ்வாறு கட்டிப் போட்டு வைத்த நிலைகளில் வேறு வழி இல்லை என்கிற பொழுது அந்த நிலை ஆகின்றது.

கட்டிப் போட்ட நிலைகளில் இப்படி இந்த உணர்வு பழக்கமாகிவிட்டால் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றாலும் சாணத்தை இட்டபின் மீண்டும் அதிலேயே தான் படுக்கும்.

இயற்கையின் நிலைகள் இது. ஆக எதன் உணர்வு பட்டதோ அதனின் ஞானம் அங்கே வேலை செய்கின்றது.

இதைப் போன்று தான் நம் வழக்கிலும் நம்மிடம் நல்ல குணங்கள் இருப்பினும் பிறிதொருவர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகி விட்டால் அதனின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.அந்தத் தவறின் நிலையையே வளர்க்கச் செய்யுமே தவிர
2.தூய்மைப்படுத்தும் நிலை இல்லாது
3.மீண்டும் அந்த அசுத்தமான சொல்லில் செயலில் தான் வாழ்க்கை அமையும்.
4.அதனின் உணர்வாகத்தான் நம் சொல்லும் செயலும் அமையும்.

ஆகவே இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…? தூய்மைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்…?

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வு பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.பின் நம் குடும்பத்தில் எதனால் நஷ்டமானது…?
2.எதனால் ஒற்றுமை இழந்தது…?
3.குடும்பத்தில் நம் பிள்ளைகள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை செய்தார்கள்…?
4.பக்கத்து வீட்டுக்காரர் நம்மிடம் ஏன் சண்டை போட்டார்…?
5.அதிலிருந்தெல்லாம் நாம் எப்படி விடுபட வேண்டும்…?
6.கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பத் திரும்ப எண்ணுவதனால் உடலில் கை கால் குடைச்சல் எப்படி வருகின்றது…?
7.நாம் நுகர்ந்த உணர்வுகளால் வீட்டில் எப்படி வெறுப்பை உண்டாக்கச் செய்கின்றது…?
8.பிறர் சொல்லும் தீமையான நிலைகளை நமக்குள் அதிகமாகக் கேட்டால் குடும்பத்திற்குள் எப்படிப் பகைமை உண்டாகின்றது…?

இதைப் போன்ற சிந்தனைகளை நாம் செய்தோம் என்றால் சிந்தித்துச் செயல்படும் உபாயங்கள் கிடைக்கும். தீமைகள் வராதபடி நம் குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்ற அருள் வழியும் கிடைக்கும்.

ஆகவே நம் வாழ்க்கையில் தீமையின் நிலைகளை நாம் கேட்டறிந்தவுடன் தூய்மை செய்து பழக வேண்டும்.

எப்படி…?

அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு 10 நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உள் முகமாக இந்த உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

நண்பர்களிடத்திலோ மற்றவர்களிடமோ பகைமையாக இருப்போம். அவர்களை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
2.ஒன்றுபட்டு வாழும் நிலைகள் நாங்கள் பெற வேண்டும்.
3.ஒன்றுபட்டு வாழும் நிலைகள் நண்பருக்கும் வர வேண்டும் என்று
4.இப்படி இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டால் அந்தப் பகைமையூட்டும் நிலைகள் நமக்குள் வராது.

அவர்களும் இதே போன்று எண்ணினால் அவர்களுக்குள்ளும் உள்ள தீமைகள் அகலும்.

நம்மை ஒளியாக மாற்றும் பொறுப்பு உயிருக்கு இருக்கிறது

விண்ணிலே ஒளியின் சரீரமாகச் சுழன்று கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்தும்… அதனைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும்… வெளி வரும் ஒளிக் கற்றைகளை நமது பூமி துருவப் பகுதியின் வழி கவர்ந்து பரமான நம் பூமியில் பரலோகமாக மாற்றிக் கொண்டே வருகின்றது.

இந்த பரமான பூமியில் பரலோகமாகக் காற்றிலிருப்பதை நுகர்ந்தவர் அவரவர் உணர்வுகளுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.மனிதனான பின் அரும்பெரும் சக்தி பெற்ற அந்த உணர்வுகள் பூமியில் படர்ந்து இருப்பதை நமது குருநாதர் காட்டி
2.அருள் ஒளியினை எனக்குள் பதிவு செய்தார்… அதை உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.

அந்தப் பதிவினை மீண்டும் நினைவு கொண்டு நுகர்ந்தறியப்படும் போது அந்த அருள் ஒளியை அனைவரும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுதல் வேண்டும்.

தன்னம்பிக்கை கொண்டு இந்த வாழ்க்கை வாழும் போது
1.நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ அதை நமக்குள் உருமாற்றம் செய்வதும் உயிரே.
2.ஆக… உயிரே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது
3.நாம் நுகரும் அருள் உணர்வுகளை உடலில் பரவச் செய்கின்றது… இந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது
4.உணர்வுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.

இது உயிரின் வேலை.

நம் கண்ணின் வேலையோ நாம் எதிரில் இருப்பதைப் படமாக்கிப் பதிவாக்கி விடுகின்றது உடலுக்குள். ஆனால் நாம் செல்லும் பாதையில் இது பிழையான இடம்… இது தவறான இடம்… என்பதனை நம் கண் வழிகாட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி நம்மைக் காக்கின்றது.

நமது கண்களால் உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மை உயிரிலே கொடுக்கப்படும் பொழுது நுகர்ந்த உணர்வை அறிகின்றோம். நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலை உயிர் இயக்குகின்றது.

தீமை என்று கண் உணர்த்தினாலும்… அப்போது அந்தச் சமயத்தில் தீமையிலிருந்து விடுபட்டாலும்… நுகர்ந்த உணர்வு தீமையின் அணுக்களாக உருவாகி விடுகின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வுகளை… உயிர் அந்த உணர்வுகளின் வழி நம்மை வழி நடத்தினாலும் அந்த உணர்வின் சத்து ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாறுகிறது.

பரலோகத்தில் இருப்பதை – உயிரணு தாவர இனச் சத்துக்களை எல்லாம் நுகர்ந்த பின் தாவர இனச் சத்திற்கொப்ப அந்த உணர்ச்சிகள் வந்து உடல்கள் பெற்றது.

இதைப் போன்று பல பல எண்ணிலடங்கா தாவர இனத்தின் உணர்வுகளை நுகர்ந்து… பல பல உடல்கள் மாற்றம் அடைந்து… மனிதனாக உருவாக்கும் தன்மை பெற்றது… தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்றது.

இருந்தாலும் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் இந்தப் பிரபஞ்சத்தின் ஆற்றலையும் அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அவைகளின் இயக்கங்களையும் கண்டுணர்ந்தவன் “அகஸ்தியன்…”

1.அவனுக்குள் விளைந்த அந்த உணர்வுகளை நாம் கவர்ந்தால்
2.நமது நினைவாற்றல் அகஸ்தியன் கண்ட அந்த அகண்ட அண்டத்திலும் பரவி
3.அதை நாம் நுகர்ந்து பேரருள் பேரொளி என்ற உணர்வினை நமக்குள் உருவாக்கிட முடியும்.

தாவர இனங்களுக்கு உரமிட்டு அதனை எப்படிச் செழிப்பாக வளர்க்கின்றோமோ அதே போன்று
1,அகஸ்தியன் உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு வீரிய சக்தியை ஊட்டி
3.ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த மெய் ஞானி கண்ட உண்மையைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் பாய்ச்சுகிறோம்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து அகஸ்தியன் உணர்வை வளர்த்தால் வாழ்க்கையில் நீங்கள் நுகர்வதை எல்லாம் உங்கள் உயிர் ஒளியின் சரீரமாக மாற்றி அமைத்து விடுகின்றது.

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சியை ஊட்டி… நஞ்சு புகாது தடுத்து நிறுத்தும் நிலையாகவும் இது அமைகின்றது.

சுவாச நிலையை மாற்றாதபடி… நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி… பூரண நலம் கிடைக்காது

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெற வேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நூலாம்படைப் பூச்சி தனக்குள் உணவாக உட்கொண்டபின் தன் மலத்தை வலையாக விரிக்கின்றது. அந்த வலைக்குள் சிக்குவதை உணவாக உட்கொள்கின்றது.

வலைக்குள் சிக்கும் ஒரு ஈயிற்குள் தன் கூர்மையான மூக்கால் ஊடுருவித் தன் உணர்வைப் பாய்ச்சி அதற்குள் இருக்கும் நீர் சத்தை அனைத்தையும் குடித்து வாழ்கின்றது.

தன் மலத்தால் மீண்டும் காற்றுப் புகாமல் அந்த ஈயினைச் சுழற்றிவிட்டு தனக்குள் உருவான கருவை அந்த ஈயிற்குள் பாய்ச்சியபின் ஈயிற்குள் இருக்கக்கூடிய அணுக்களை இது எப்படி உருவாகியதோ அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் பல நூலாம்படைப் பூச்சிகளாக உருவாக்குகின்றது.

அதைப் போன்று குளவியை எடுத்துக் கொண்டால் தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கொண்டு மண்ணைப் பிசைகின்றது. கூடு கட்டுகின்றது. கூடு கட்டிய பின் ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வருகின்றது.

தூக்குவதற்கு முன் அதை ஒரு கொட்டு கொட்டிவிடுகின்றது. குளவியைப் புழு கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றது. கட்டிய மண் கூட்டிற்குள் அந்தப் புழுவைத் தள்ளுகின்றது.

தள்ளிய பின் மீண்டும் இரண்டு தரம் புழுவைக் கொட்டுகின்றது. புழு மயக்கமடைகின்றது. குளவியையே அந்தப் புழு நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

அந்தக் குளவியின் உடலில் உருவான உமிழ் நீரைக் கொண்டுதான் அந்தக் கூட்டைக் கட்டுகின்றது. புழுவின் உடலுக்குள் தன் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சுகின்றது.

புழுவைக் கூட்டிற்குள் செலுத்தியபின் மண்ணைக் கொண்டு மூடிவிடுகின்றது. மூடிய பின்பு கூட்டிற்கு மேலே வந்து குளவி “கிர்..ர்ர்..ர்ர்..” என்று இரைச்சல் கொடுக்கின்றது.

இந்த உணர்வின் அதிர்வுகள் புழுவிற்குள் இருக்கும் அணுக்களில் இது கலக்கின்றது. ஆனால் இந்த விஷமோ புழுவின் தோலைச் சருகு போல் ஆக்கிவிடுகின்றது.

புழுவின் தசைகள் அமிலங்களாக மாறுகின்றது. அந்த அமிலங்களுக்குள் குளவி கொட்டிய விஷத் தன்மைகள் அணுத் தன்மை கருவாக உருவாக்கும் நிலை அடைகின்றது.

அதற்குள் இருக்கும் விஷத்தைப் புழுவின் உயிரால் துடிப்பாகப்படும் பொழுது இதற்குத் தக்கவாறு அதனின் உடலின் அமைப்புகள் மாறுகின்றது.

இதைப் போன்றே விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எறும்புப் புற்றுக்குள்ளும் கரையான் புற்றுக்குள்ளும் அது எப்படி உருவாகின்றது…? என்று கண்டு கொள்கின்றனர்.

1.அன்று மெய்ஞானி தன் எண்ணத்தை வைத்து அதை ஊடுருவிப் பாய்ச்சினான்.
2.அந்த உணர்வின் இயக்கத்தை அறிந்தான்.

யார்…? அகஸ்தியன்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வு தான் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் பூமியில் பரவப்படும் பொழுது அந்த உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கும்.

நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கருவாகும். உணர்வின் தன்மையை வலுவாக்கும். அதன் உணர்வு கொண்டு நம்மை ஆள்வது நம் உயிர்.

அந்த அகஸ்தியமாமகரிஷி கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை
1.வான இயல் புவி இயல் உயிரியல் அடிப்படையில்
2.அணுவின் ஆற்றலையும் பேரண்டத்தின் இயக்கங்களையும்
3.நீங்களும் கண்டுணர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற ஒரு தெளிவான “முன் சிந்தனை (PLAN) வேண்டும்…”

புதிதாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் ஒரு இன்ஜினியரை வைத்து அதற்குத் தேவையான பிளானைப் போடுகின்றோம். தேவையான பொருள்களை வாங்கிக் கொத்தனாரையும் மற்ற ஆட்களையும் வைத்து அந்த வீட்டைக் கட்டுகிறோம்.

ஆக… வீட்டைக் கட்டுவதற்கு முன்னாடியே எப்படி…? என்ன…? ஏது…? என்று எல்லைகளை வகுத்து விட்டுத் தான் வேலைகளை நாம் செய்யத் தொடங்குகின்றோம்.

அதே போல் ஒரு பலகாரத்தை செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே அரிசியை ஊறவைக்கின்றோம். ஊறிய பின் அதை அரைத்து மற்ற பொருள்களை அதனுடன் சேர்த்து அதைப் புளிக்க வைக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து மாவினை எடுத்து வடையாகச் சுடும் போது அதற்குத் தக்க ருசியும் சுவையும் பலகாரத்தில் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எவ்வாறு நாம் தெளிந்து செயல்படுத்துகின்றோமோ அதைப் போல் நமது வாழ்க்கையிலும்… எதை… எக்காலத்தில்… எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற பக்குவ முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவை அரைத்து வைத்துவிட்டுப் பத்து நாளைக்குச் சேமித்து வைத்தால் அது அதிகமாகப் புளித்துப் போய் விடுகின்றது. ஆனால் பத்து நாள் சேமித்து வைக்க வேண்டும் என்றால் அதை ஒரு ஐஸ் பெட்டியில் பத்திரமாக வைத்தால் கெடாமல் இருக்கின்றது.

விஞ்ஞான அறிவில் வாழும் நாம் இப்படிப் பக்குவப்படுத்துவது போன்று
1.அந்த மெய் ஞானிகளுடைய உணர்வு கொண்டு நமக்குள் அருள் ஒளியைப் வளர்த்து
2.அதை வைத்துப் பக்குவப்படுத்தி… நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும்.
3.சமயம் வரும் பொழுதெல்லாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

பொருள்கள் கெட்டுப் போகாது அதை பாதுகாக்க எப்படிச் செயல்படுத்துகின்றோமோ அதைப் போன்று நமக்குள் தீமையான உணர்வு வந்தால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் கொண்டு அந்தத் தீமை நமக்குள் வளராதபடி பாதுகாத்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் ஒளியை நுகர்ந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பாதுகாத்து என்றும் வேகா நிலை பெறும் தன்மையை உறுதிப்படுத்தி இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து பழகுதல் வேண்டும்.

ஆகவே குரு காட்டிய அருள் வழியில்…
1.அருள் ஒளி பெறுவோம்
2.இருளை அகற்றுவோம்
3.ஒளியான உணர்வை வளர்ப்போம்
4.ஒளியின் சரீரமாக நிலைப்போம்
5.நிலையான ஒளி சரீரத்தைப் பெற இந்த வாழ்க்கையினை அருள் வாழ்க்கையாக மாற்றி அமைப்போம்.

புறத்தில் காணுவதை விடுத்துவிட்டு நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…! – இராமலிங்க அடிகள் சொன்னது

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்… என்றும் ஜோதி தரிசனம்… என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில்
1.“அறிவை அறிவால் அறிவர்…!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய்
2.அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது…?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்… திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா… கொள்…! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்…!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்…
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை…!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்… இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்…!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்…” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா…?

போற்றி…போற்றி…! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.ஆக “பூசத்தில் ஜோதி கண்டேன்… பிறவிப்பயன் பெற்று விட்டேன்…!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா…? பெற்றதின் பயனை…! ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலகோதயத்தில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா…?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்…! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே… உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்… சந்திரன்… ஜோதி விளக்கு… அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்…!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் – தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி… “அறிவின் ஒளியப்பா…!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.
3.அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும்
4.ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் திருமூலர்.

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த வான இயல் தத்துவத்தைப் பின் வந்த திருமூலர் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

“தில்லை…” என்பது ஒரு எல்லை. எல்லை இல்லாத உலகில் தில்லை என்ற உணர்வு வரப்படும் பொழுதுதான் ஒரு கோள் என்ற நிலைகள் வருகின்றது. பரம் என்ற நிலையும் பரம்பொருள் என்ற நிலைகள் உருவாகின்றது.

“தில்லை நடராஜா…” என்று நம் பூமியின் செயலுக்குக் காரணப் பெயரை வைத்தார். நம் பூமி “நிற்காமல்… சுழன்று கொண்டேயிருக்கின்றது” என்பதைத் தில்லை நடராஜா என்று பெயரை வைத்தான்.

1,அது உருவமில்லாத நிலைகள் கொண்டு அருவம் என்ற நிலைகள் உணர்த்தப்படும் பொழுது
2.“திரு ஆவடையச் சுழலச் செய்து…” மனித உருவைப் போட்டு இவனே சிவன் என்றும்
3.இயக்கத்தின் நிலைகளில் “நடனமாடுகின்றான்…” என்றும் காட்டினார் திருமூலர்.

அந்த உணர்வின் தன்மை உராயப்படும் பொழுது உணர்வுக்கொப்ப இங்கே உருமாறுவதும் உணர்ச்சிகள் எவ்வாறு வருகின்றது…? என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார்.

திருமூலர் கூறியது… “நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது…”

ஆதியிலே ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது அது ஆவியாக மாறி எடையற்றதாக மாறி நாளடைவில் விஷமாக மாறி நெடி கலந்த உணர்வாக மாறி நெடியின் தன்மை வரப்படும் பொழுது புதிதாக உருவாவதை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது “நெருப்பு” உண்டாகின்றது.

நெருப்பாகும் பொழுது உணர்வின் தன்மை தாக்குண்டு நகர்ந்து ஓடும் பொழுது அங்கே ஈர்க்கும் “காந்தம்” வருகின்றது.

ஓடும் நிலைகளில் தாக்கும் நிலையில் வெப்பமாகும் பொழுது பராசக்தி என்றும் தாக்குதலால் நகர்ந்து ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும் தாக்குதலால் இயக்கச் செய்த விஷத்தை ஆதிசக்தி என்றும் கண்டுர்ந்தார் திருமூலர்

1.“கருமாரி…” (கருமாரி – உருமாறி) ஒன்றுக்குள் ஒன்று உருவாகி
2.அது மாற்றலான நிலைகளைச் செய்கின்றது என்றும் கருமாரி என்று திருமூலர் பெயர் வைக்கின்றார்.

ஆதி இலட்சுமி பெண்பால் தான். ஆதிபராசக்தி வெப்பம். கருமாரி என்பது ஒரு விஷத்தின் தன்மை ஒன்றுக்குள் சென்றபின் அது “மாற்றமடைந்து… மாற்றமான” நிலைகளைச் செயல்படுத்தும்.

தாக்குதலால் வெப்பமானது… ஈர்க்கும் காந்தமானத… ஆனால், ஈர்க்கும் காந்தமான பின் அது எதனைக் கவர்கின்றதோ அந்த மணத்தை இந்த “விஷம் இயக்கிக் காட்டும் கருமாரி…”
1.எதனுள்ளும்… “ஊடுருவி” அது மாற்றலான உணர்வை
2.அது இயக்கிக் காட்டும் என்பதைக் காரணப் பெயராக வைத்தார் திருமூலர்.

இதைப் போன்று மோதுண்டு மோதுண்டு ஆவியாக மாறி இணைந்து கொண்டு இணைந்து கொண்ட அணுக்களின் உருமாற்றமாகி மோதலில் வெப்பமாகிக் கவர்ந்து கொண்ட உணர்வு ஆவியாகி மேகமாக மாறி மேகக் கூட்டத்திற்குள் அணுக்கள் மோதும் பொழுது நீராகி நீருக்குள் அணுக்கள் சிக்குண்டு ஓர் பரம்பொருளாகி “இப்படித்தான்.., உலகம் பிறந்தது…” என்று திருமூலர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆனால் திருமூலரின் தத்துவத்தை இன்று அதைத் திருமூல மந்திரம் என்று பறைசாற்றி மாற்றிவிட்டனர்.

திருமூலர் இந்த இயக்கத்தின் உண்மையை உணர்ந்து தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா.., என்று பெயர் வைக்கின்றார்.

தில்லை நடராஜா என்பது பூமி. தில்லை அம்பலம் என்பது நம் உடல். ஒரு எல்லையாக வாழ்கின்றது.

இந்த உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்ப இந்த உடலின் அமைப்பும் இந்த உடலுக்கொப்ப மனிதனின் இயக்கமும் இந்த உடலுக்கொப்ப அந்தச் செயலும் இந்த உணர்வுக்கொப்ப செயலும் உணர்வுக்கொப்ப உடலும் என்ற நிலையைத் திருமூலர் “தன் இன மக்கள் அறிய வேண்டும்” என்பதற்காகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதை யாராவது தெரிந்திருக்கின்றோமா..,? உணர்ந்திருக்கின்றோமா..,?” என்றால் தில்லையம்பதியில் வாழ்பவர்களுக்கே தெரியவில்லை.

தில்லை நடராஜா என்று “சூனியப் பிரதேசம்” ஆனாலும் திருமூலர் சமாதி தான் அதை அடக்கமாக வைத்து அங்கே “சிதம்பர இரகசியம்…,” என்று பொருள் பறிக்கின்றனர். உண்மையைப் பெறச் செய்யவில்லை.

பொருளுக்கு இச்சைப்படுகின்றான். இச்சைப்பட்ட பொருளால் இவன் வாழ்கின்றானா என்றால் இல்லை.

உடலையும் சொத்தையும் தான் பார்க்க விரும்புகிறோம்… உயிர் பிரிந்த பின் எதைப் பார்க்கப் போகின்றோம்…!

உயர்தரக் கல்வியை உருவாக்கி இந்த உணர்வின் தன்மைகளைத் தனக்குள் பதிவாக்கி அதன் மூலம் இன்று விஞ்ஞானத்தைப் பெருக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

ஒரு இன்ஜினியரோ அந்த விஞ்ஞான அறிவுப்படி இயந்திரங்களின் உறுப்புகளைப் புதிது புதிதாகச் செயல்படுத்தத் தொடங்குகிறான்.

ஒரு இயந்திரத்தில் அதனுடைய இயக்கப் பொறிகள் எங்கெங்கே அழுத்தங்கள் அதிகமாக இருக்கின்றதோ அதற்குத்தக்கவாறு ஒரு வலுகொண்ட சக்தியினை உலோகங்களின் மூலம் கொடுக்கின்றனர்.

அதே போன்று ஒவ்வொரு பொருளுக்கும் அந்த இயந்திரங்களை இயக்குவதற்கு இன்ஜினியர்கள் முதலில் ஒருவர் கண்டுணர்ந்து உருவாக்கி இருந்தாலும்
1.அடுத்து அதிலே சந்தர்ப்பத்தால் எப்படிப் பழுதடைந்தது…?
2.அந்தப் பழுதை எப்படி மாற்றுவது…? என்ற நிலைகளைக் கண்டுணர்கின்றனர்
3.துரித நிலைகள் கொண்டு பழுதடைவதை நீண்ட நாள் பழுதடையாமல் பாதுகாக்கும் யுக்திகளை எண்ணுகின்றார்கள்
4.நீண்ட நாள் பழுதடையாதபடி இயந்திரப் பாகங்களின் உலோகங்களை மாற்றி
5.அதனை எந்தெந்த நிலைகள் செயல்படுத்த முடியும் என்று உருவாக்குகின்றார்கள்

அதாவது சரி செய்ய வேண்டும் என்ற நிலையில் தன் உணர்வின் எண்ணங்களைக் கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி அந்தப் பாகங்களைச் செய்கின்றார்கள்.

பண்டைய காலங்களில் மனிதனுக்குப் பற்கள் இல்லை என்றால் அதை வைத்துத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான காலத்தில்
1.பழுதடைந்த பற்களை நீக்கிவிட்டு
2.அதற்கென்று புதிதாக உருவாக்கப்பட்ட பற்களை வைத்து மாற்றி
3.கடினப் பொருள்களை மென்று உணவாக உட்கொள்ளும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அதே போல் உடல் உறுப்புகளில் பின்னமாகிவிட்டால் கூடுமான வரையிலும் செயற்கை முறையில் அதே உறுப்புகளைச் செயலாக்கும் தன்மையும் வந்துவிட்டது.

இப்படி… மனிதனுக்குள் பழகிய நிலைகள் கொண்டு மனித உடலைத்தான் இவர்களால் பார்க்க முடிகின்றது.

ஆனால் ஞானிகளோ விஷத்தை வென்றிடும் உணர்வை தனக்குள் வளர்த்து விஷத்தை வென்றிடும் அருள் உணர்வுகளை தனக்குள் பெருக்கி இந்த பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை வந்தால் அதை அடக்கி தனக்குள் ஒளியின் தன்மையாக மாற்றிடும் சக்தி பெற்றனர்.

அதிலே ஆதியிலே தோன்றிய அகஸ்தியன்
1.மீண்டும் அவன் தான் பிறவிக்கு வராதபடி அத்தகைய உணர்வினைத் தனக்குள் வளர்த்து
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆகும் தன்மை பெற்றான்.

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து வாழ்ந்தனர்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவருமே விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று ஒளியான அணுக்களை உருவாக்கி உடலை விட்டுச் சென்ற பின் துருவத்தின் எல்லையில் இருந்து கொண்டு பூமி கவரும் உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டு உள்ளார்

அவர்கள் பெற்ற சக்திகளைத் தியானித்து அதை நுகர்ந்த அக்கால மக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

உயிரணு தோன்றி மனிதனாகி கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனதும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் வேகாநிலை அடைகின்றனர்.

1.இந்தப் பிரபஞ்சமே மடிந்தாலும் சூரியனே அழிந்தாலும் அவைகள் அழியாது
2.எத்தகைய விஷத்தன்மையும் அவர்களைப் பாதிக்காது அதனை ஒளியாக மாற்றிக் கொண்டு
3.அகண்ட அண்டத்தில் ஏகாந்த நிலையில் வாழ்கின்றனர்.

அவர்களைப் போன்று நாமும் நுகர்வதை எல்லாம் ஒளியாக மாற்றி மகிழ்ச்சி பெறும் உணர்வாக மாற்றிடும் அந்த சக்தி பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது ஒளியாக மாற வேண்டும்.

பல ஞானிகளும் மகரிஷிகளும் முனிவர்களும் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று கடும் தவம் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்.

அவர்களிடம் இருந்து வெளிப்படும் அந்த ஒளியான உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் பரவச் செய்து கொண்டேயுள்ளது.
1.அதனை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால் அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடையலாம்
2.அதை உருவாக்கும் நிலைக்குத் தான் என்னுடைய உபதேசமே (ஞானகுரு).

“வாய் பேசாமல்… காதிலே எதுவும் கேட்காமல்…” நம்மால் இயல்பாக இருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் “இடும்பன்” காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்ம சக்தியைக் கேடாக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்ற விதம் அறிந்துணரப்பட வேண்டிய ஒன்று.

தீமைகள் தாக்கும் நிலையில்…
1.உயிரான்ம மூலக்கலப்பு – உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும் இணையாத் தன்மை கொண்டு
2.பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாச் செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவைத் அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.அதாவது சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்… மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ… சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்ம சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.
2.பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எங்கேயோ ஆக்சிடென்ட் ஆகிறது. பல இடங்களில் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சிலர் அந்தச் சிதைந்த சரீரத்தை உற்றுப் பார்த்தபின்… “அஞ்சிவிடுவார்கள்…”

அவ்வாறு அஞ்சி எண்ணுபவர்களுடைய உணர்வுகள் “பயமாகி விட்டது…” என்று அவர் பார்த்த உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது.

பதிவானாலும் “ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…” என்று பயந்த உணர்வினைத் தன் உடலுக்குள் அணுக்களாக்கிய பின் இந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தும் பொழுது கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் இது பதிவாகின்றது.

பின் அந்த உணர்வைப் பதிவாக்கி விட்டால்…
1.எங்கே சிதைந்த உடல் இருக்கின்றதோ… அங்கே அந்த உணர்வுகள் பரவியிருப்பதை இவர்களும் நுகர நேருகின்றது.
2.அப்பொழுது அதனால் இவர்களை அறியாமலே அந்த வேதனையும் “அச்சுறுத்தும் உணர்வுகளும்” வந்துவிடுகின்றது
3.வளர்ச்சியில் அவர்கள் எந்தச் செயலும் மன உறுதியுடன் செயல்படுத்த முடியாத பலவீனம் ஏற்படுகின்றது.
4.பயத்தால் சிந்தனை குறைதலும் எதைக் கேட்டாலும் நடுக்கமும் கடைசியில் கடுமையான நடுக்க வாதமாகவும் மாறுகின்றது.

அதே சமயத்தில் சிதைந்த உறுப்புகளை உற்றுப் பார்த்து ஆழமாகப் பதிவாக்கி இருந்தால் அந்த உறுப்பு எப்படிச் சிதைந்திருந்ததோ அதே நிலையை அதே உறுப்பில் இவர்களுக்கும் சிதையும் அணுக்களாக மாறி உடல் நலிவடையத் தொடங்கும்.

ஆகவே அச்சுறுத்தும் உணர்வுகளிலிருந்து விடுபடும் அந்த உணர்வின் சக்தியைப் பெறுவதற்கு ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி பெற வேண்டும்.

அந்தத் தகுதி பெறும் தன்மைக்கே இப்பொழுது உங்களுக்குள் உபதேசிப்பது. அப்படி உபதேசித்த உணர்வுகளின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் எப்படிப் பெற வேண்டும்…?

உயிரணுவின் தோற்றமும் பிரபஞ்சத்தின் தோற்றமும் உயிரணுவின் வளர்ச்சியும் வளர்ச்சி அடைந்த மனிதரில் “துருவ மகரிஷி” எவ்வாறு உருவானாரோ அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம்.

இதைப் பதிவாக்கிய நினைவு கொண்டு உங்களுக்குள் உருவாக்கி விட்டால் இந்த உணர்வின் துணை கொண்டு காலையில் நான்கிலிருந்து அந்தச் சக்திகளைப் பெற ஏங்கித் தியானியுங்கள்.

காலையில் நான்கிலிருந்து ஆறு வரையிலும்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் பேரருள் பேரொளி உணர்வலைகள் வெளிவருவதை
2.நம் பூமி வட துருவப்பகுதியின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் அழைத்து வருகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அதன் தொடர் கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் பேரருள் பேரொளி உணர்வைக் கவர்ந்து அந்த நேரத்தில் நம் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உட்புகுத்துதல் வேண்டும்.

அவ்வாறு செய்தால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் வெள்ளியும் ஆவியாகி தங்கம் பரிசுத்தமாவது போல் நமக்குள் இருக்கும் தீமை செய்யும் நிலைகளை… பயமான உணர்வுகளை ஆவியாக மாற்றி நம்மைத் தூய்மைப்படுத்தும்.

நம் ஆன்மாவும் தூய்மை அடையும். பிறிதொரு தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் வராது ஒரு வலுவான “பாதுகாப்புக் கவசமாக..” அமையும்.

செயற்கைக்கோளை விண் செலுத்துவது போல் முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்

நம்முடைய முன்னோர்களையும் குலதெய்வங்களையும் வணங்கி வருகின்றோம். அவர்கள் குல வழியில் தான் நாம் வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் இறந்த பின் அந்த ஆன்மாக்கள் நம் குடும்பத்தில் வந்து “அருளாடத் தொடங்குகின்றது…”
1.அவர்கள் உடலில் வந்த நோயும் அவர்கள் அடைந்த கஷ்டமும் நம் குடும்பத்திற்குள்ளும் பாய்கின்றது…. அதனால் நாமும் துன்பப்படுகின்றோம்.
2.இப்படித் தான் நடக்கின்றதே தவிர அது நம்மைத் தெளிவாக்காது… நமக்குத் தெளிவான நிலைகளையும் அது உருவாக்காது.

இதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்…?

அருள் ஒளி பெற்று ஒளியின் சரீரமாக நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் நாம் நுகர்ந்து பழக வேண்டும். அதை நமக்குள் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும். அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அவர்கள் உடலில் பெற்ற நஞ்சின் உணர்வுகள் அங்கே கரைகிறது.
2.குலதெய்வங்களின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்தில் இணைகிறது
3.அருள் ஒளி பெற்றுப் பிறவில்லா நிலை அடைகிறது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் துணை கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் கோள்களையும் படமாக்குகின்றார்கள். அதை எலக்ட்ரானிக்காக மாற்றி ஒலி நாடாக்களில் பதிவாக்குகின்றார்கள்.

ஒலி நாடாக்களில் பதிவானதை ஒரு இராக்கெட்டின் முகப்பில் வைத்து செயற்கைக் கோளை இணைத்து விண்ணிலே ஏவுகின்றார்கள்.
1.அந்த முகப்பில் இருக்கும் நாடாவில்… எதனின் உணர்வின் இயக்கமாக எலக்ட்ரானிக்காக மாற்றினானோ
2.பதிவான அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நுழைந்து அந்தக் கோளின் சமீபத்திற்கே கொண்டு சென்று விடுகின்றது.

அங்கே சென்ற பின் அதன் உணர்வுகளை நுகர்கின்றது… ஒளி அலைகளைப் பரப்புகின்றது. அதை வைத்து அதில் இருக்கக்கூடிய நிலைகளைக் கவர்ந்து புவியில் இருந்து அந்த உண்மைகளை விஞ்ஞானி அறிகின்றான்.

இதைப் போன்று தான்
1.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து
2.அதை நம் குலதெய்வங்கள் முன்னோர்களின் உயிரான்மா முகப்புகளில் இணைத்து
3.உந்தித் தள்ளினோம் என்றால் நேரடியாக சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.

அதிகாலையில் இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் (மீண்டும் இன்னொரு உடல் பெறும் உணர்வுகள்) எல்லாம் கரைகிறது. கரைந்ததை ஆறு மணிக்கெல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சென்று விடுகின்றது.

அந்த நஞ்சுகளை எல்லாம் ஓசான் திரைக்கு அப்பால் தள்ளி மாற்றி அமைத்து விடுகின்றது. அதே சமயத்தில் ஒளி உணர்வு பெற்ற அந்த உயிரான்மாக்கள் பூமியைக் கடந்து சென்று விடுகிறது.

ஆனால் அருள் ஒளி என்ற உணர்வுகள் புவியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலுகின்றது. நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு வாழும் நிலை பெறுகின்றது.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால்… சூரியனே ஒரு சமயம் அழிந்தாலும் அல்லது செயலிழந்தாலும்… இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் கூட…
1.இதிலே விளைந்த உயிரணுக்கள் ஒளியின் சரீரம் பெற்ற பின்
2.ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் பயணம் செய்யத் தொடங்கிவிடும்.
3.அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாகவே வாழும்.

இங்கு மட்டுமல்ல… ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரணு தோன்றி மனிதரான பின் இப்படி ஒளி நிலை பெறுவது தான் கடைசி நிலை. ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலையாக ஒளி நிலை பெறுவது.

இதைத்தான் ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்…! என்று ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய கலர் ஆறு… ஒளி எழு. மனிதனுடைய அறிவு ஆறு… அதை வைத்து உணர்வுகளை ஒளியாக்கும் போது ஏழு.

சூரியனிலிருந்து வரக்கூடிய நிலையும்… மனித உடலில் உணர்வை ஒளியாக மாற்றிவிடும் நிலையும்… இந்த ஈரேழு லோகத்தையும் வெல்லக்கூடியவன் என்றும் நிலையான ஒளியின் சரீரம் பெறுவான் என்று காவியங்கள் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.

அந்த நிலையை நாம் அனைவரும் பெறுவோம்…!

“சக்கர வியூகம்” நம் உயிருக்கு வசப்பட (CONTROL) வேண்டும்

“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்திட தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்…! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழிமுறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன்னிஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரமத்திற்கு… அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி…
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உணர்தல்…
சுவைத்தல்…
நுகர்தல்…
செவிமடுத்துக் கேட்டல்…
விழியின் செயல் திறன்…
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வினைக் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும். இதற்கு முன் உங்களுக்குள் பதிவான தீமையை விளைவிக்கும் அந்த உணர்வுகளை அடக்குவதற்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிப்பது.

ஏனென்றால்…
1.“சாமி (ஞானகுரு) இப்பொழுது சொன்னார்… அப்பொழுதும் சொன்னார்…
2.அப்பொழுது சொன்னதைத்தான் திரும்பச் சொல்கின்றார்.
3.சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கின்றார் என்று சொல்வார்கள்.

ஆனால், “திரும்பத் திரும்பச் சொல்கிறார்…” என்று அப்படிச் சொல்பவர்களிடம் “சாமி என்ன சொன்னார்..,?” என்று கேட்டால் திருப்பிச் சொல்லத் தெரியாது.

உங்கள் சாமி… “நிறைய… சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்” என்று அந்த ஒரு சொல்லில் சொல்லி நிறுத்திவிடுவார்கள்.

மைசூர்பாகு இனிப்பு கிளறுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சீராகக் கிளறவில்லை என்றால் அனைத்தும் ஒன்றாகிக் “கட்டி… கட்டியாகிவிடும்…”

பின் சுவை ஏது? வருமா…?”

ஒரே மாதிரி மாவையும் விட்டு நெய்யையும் விட்டுச் சீராகக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுது…
1.அதில் விட்ட இனிப்புப் பாகும் நீரும் ஒன்றாகச் சேர்த்து
2.இந்த வெப்பத்தின் தணலால் நீர் ஆவியாகி
3.“நெய்யின் தன்மை அதற்குள் ஊடுருவும் பொழுது… அங்கே சுவை கொடுக்கும்…”

இதைப் போன்று தான் ஒவ்வொரு பொருளும் செய்யும் பொழுதும் சரி… அல்லது ஒரு மருந்தே காய்ச்ச வேண்டும் என்றாலும் சரி… அந்தப் பக்குவம் வேண்டும்.

உதாரணமாக குழம்பை வைக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அது வெந்து கொண்டிருக்கும் பொழுது பெண்களுக்குத் தெரியும்.

குழம்பு வெந்து கொண்டிருக்கும்பொழுது சில பக்கம் உறைந்தது இல்லாதபடி (கட்டியாக ஒன்றாக ஒட்டிக் கொள்ளாமல்) கரண்டியை அந்தந்தச் சமயங்களில் பக்குவமாகக் கிளறுவார்கள்.

அது சீராகச் செய்பவர்களுக்குத்தான் தெரியும்.

சமையல் செய்து கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அந்தச் “சரியான நேரம் வந்து.., குழம்பைக் கிளறுவார்கள்…”

அப்படிக் கிளறும் பொழுது குழம்பின் சுவை “ருசியாக..,” இருக்கும்.

அதே சமயத்தில் அடுப்பின் பக்கத்திலேயே அமர்ந்து சமையல் செய்து கொண்டிருப்பார்கள். அடுப்பு எரிவதை “அதிகமாக வைத்தால்…” குழம்பைச் சீக்கிரம் வைத்துவிடலாம் என்று செய்வார்கள்.

இந்தச் சூட்டின் தன்மை வரப்படும் பொழுது இதற்குள் என்ன செய்யும்…? மற்றதுடன் கலந்து கட்டி கட்டியாகச் சேர்த்து ஒன்றாக உறைந்துவிடும்.
1.குழம்பில் போடப்பட்டுள்ள “காய்க்குள்… உப்பின் தன்மை சேராது”.
2.இது எடுத்துக் கொண்ட சத்திற்குள் உப்பு உறைந்துவிடும். இது தனித்துவிடும்
3.அப்பொழுது காயில் பார்த்தால் உப்பு இருக்காது.

சில நேரங்களில் “காய்… உப்பை இழுத்துக் கொள்ளும்…” குழம்பின் சாறுகளில் உப்பின் தன்மை இருக்காது.

இதில் வேக வைக்கும் நெருப்பின் அந்தக் கொதிநிலைகள் எவ்வளவோ அதற்குத்தக்கதான் சுவை வரும்.

ஒரு சிலருக்கு அந்தப் பருவ நிலைகள் தனக்குள் பதிவு செய்து கொண்ட பின் தன்னை அறியாமலேயே அந்தக் “கூட்டுக் கலவையின் தன்மை வருவதற்காக…” சரியான நேரத்தில் சரியானபடி கிளறுவார்கள்.

அதன் தன்மை நன்றாக இருக்கும்.

அதே மாதிரி அவர்கள் சாதம் வைக்கின்றார்கள் என்றால் முதலில் அடுப்பின் வெப்பத்தைச் சீராக்குவார்கள். அந்த வெப்பத்திற்குத்தக்கவாறு சாதத்தைக் கிளறிவிடுவார்கள். சரியாக இருக்கும்.

ஆனால் அப்படிக் கிளறிவிடும் பருவத்தைத் தவறிவிட்டால் “நறுக் அரிசி” என்று சொல்வார்கள். அப்படி வந்துவிடும். அதாவது ஒரு பக்கம் வேகும். ஒரு பகுதி சுத்தமாக வெந்திருக்காது. சாப்பாடும் ருசி இருக்காது.

வீட்டில் கொஞ்சம் மனக் கலக்கம் உள்ளவரோ… கொஞ்சம் வெறுப்பான நிலையில் உள்ளவரோ… தன் குழந்தைகள் சேஷ்டை செய்கின்றானே என்று எண்ணுபவர்களோ… அவர்கள் அந்த எண்ணத்துடன் சமையல் செய்வதைப் பாருங்கள்.

போட்டவுடன் இந்த அரிசியிலேயே வித்தியாசம் தெரியும்.

நல்ல அரிசியைப் போட்டிருப்பார்கள். இவர்களின் இந்த உணர்வுக்குத் தக்கவாறு நெருப்பு எரிப்பார்கள். அடுத்துத் தண்ணீர் கொதித்து வருவதற்கு முன்னாடி அரிசியைப் போடுவார்கள்.

இந்த உணர்வுகள் பாய்ந்தபின் இந்த உணர்வில் எந்த அளவிற்கு மேக்னட் இருக்கின்றதோ அந்த “நம் உடலில் உள்ள இந்த உணர்வுகள்” (அதாவது முதலில் சொன்ன மாறுபட்ட உணர்வுகள்) அந்த நீருக்குள் உள்ள காந்தப்புலனுடன் கலந்தபின் “இந்த அரிசியையே.., சுவை மாற்றும்”.

ஒரே கடையில் நீங்கள் அரிசி வாங்கிப் பாருங்கள். அந்த அரிசியை நான்கு பேரிடம் கொடுத்துச் சமைக்கச் சொல்லிப் பாருங்கள். “வெறும் சாதம் தான்… அதிலே வேறு ஒன்றுமே போட வேண்டாம்…”

அவர்கள் சமையல் செய்து முடிக்கும் பொழுது “எப்படி இருக்கின்றது…?” என்று பாருங்கள். நான்கு விதமாக இருக்கும். இதெல்லாம் காந்தப் புலனறிவால் இயக்கப்படக் கூடிய நிலைகள்.

ஆனால் நாம் அவர்கள் “கைராசி…” என்று சொல்வோம்
1.அவரவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டு
2.அது சமைக்கும் பக்குவத்தில் அதிலுள்ள காந்தப் புலனுடன் இணையும் பொழுது
3.அதற்குத்தக்க தான் இயக்கமாகி அங்கே “சுவை வருவதும்.., சுவை அற்ற நிலை” ஆக்குவதும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆக நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட ஒரு தீமையான உணர்வைச் சுத்தப்படுத்தாதபடி அன்று சமையல் செய்தால் நிச்சயம் அங்கே குறைபாடுகள் வரும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

“சமையலுக்கு மட்டுமல்ல…” உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் ஆனாலும்
1.நாம் ஈர்த்து வெளிவிடும் உணர்வுகள் இணையும் தன்மை கொண்டு
2.அதற்குத்தக்க தான் காரியங்கள் நல்லதாவதும் கெட்டதாவதும்.

ஆகையினால் தான் அருள் வித்துகளைப் பதிவாக்குகின்றோம். பதிவானாதை நினைவாக்கும் பொழுது உங்கள் நினைவாற்றல் மகரிஷிகளின் பால் செல்லும். உங்களைச் சீர்படுத்தும் எண்ணங்கள் உதயமாகும்.

அதன்படி நடக்கும் பொழுது உங்கள் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
1.எனக்கு குருநாதர் எல்லாவற்றையும் இப்படித்தான் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எடுத்துக் கொண்டால்
3.அந்த உணர்வே அருள் வழியில் உங்களை அழைத்துச் செல்லும்… இதில் ஒன்றும் சிரமமில்லை.
4.மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்… பேரானந்த நிலை பெறுவீர்கள்.

பரலோகம்…! அது ஒரு உலகமாகத் தான் இயக்கிக் கொண்டுள்ளது

ஒருவன் தவறு செய்கின்றான் என்று நாம் பார்க்கின்றோம் அந்த உணர்வு நமக்குள் பதிவாகிறது. அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது உணர்வாக நாம் (சுவாசத்தின் வழி) நுகர்கின்றோம். உணர்வின் தன்மை நம்மை இயக்குகின்றது.

ஆக… மனிதனில் விளைந்த உணர்வுகள் தீயவையாக இருந்தாலும் நல்லவையாக இருந்தாலும் அது அனைத்தும் நம் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவி உள்ளது.
1.அதைத்தான் பரலோகம் என்பது.
2.இது ஒரு “உலகமாக” இயக்கிக் கொண்டுள்ளது.

பூமியில் உருவான தாவர இனங்கள் தனது சத்துக்களை வெளிப்படுத்தும் போது சூரியன் அதை எடுத்து இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக வளர்க்கின்றது. பரலோகத்தில் உருவாகும் நிலையாக அது மாறுகின்றது.

அதிலே விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது தன் தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அது உருப்பெறுகின்றது. இந்தப் பரலோகத்தில் தான் அந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

பரலோகத்தில் எந்தச் செடியின் சத்தை இது நுகர்ந்து கொண்டதோ நமது உயிர் அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அந்த உணர்வுக்கொப்ப ஈசனாக இருந்து ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.

இப்படி மாற்றுவதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத் தான்
1.பரலோகத்தில் இருந்து நாம் சுவாசிக்கும் பொழுது இமயம்
2.இரு இமைகளுக்கு மையமாக இருக்கும் நம் புருவ மத்தியில் இயக்கி
3.அந்த இமயத்திலிருந்து நாம் நுகர்வது அனைத்தையும் சிவலோகமாக மாற்றுகின்றது.

ஆனால்…
1.நாம் நுகர்வது சூட்சமமாக இருக்கின்றது (கண்ணுக்குத் தெரியவில்லை)
2.இருந்தாலும் உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

அடுத்து இந்திரலோகமாக மாற்றி இந்த உணர்வின் தன்மை உடலாக்கப்படும் பொழுது “உணர்வுக்கொப்ப செயலும்… செயலுக்கொப்ப உடலும்… உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பும்…” என்ற நிலையில் அமைக்கின்றது.

பரலோகத்தில் இருந்து நாம் எடுக்கும் உணர்வுகள் சிவலோகமாக “உடலாக” மாறுகிறது. அதைத்தான் “என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்…” என்று உயிரிடம் சொல்வது.

ஆகையினால்
1.நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் எதுவோ அதுவே உடலாக… சிவமாக மாறுகின்றது
2.இந்த உடலான சிவத்தை இயக்குகின்றது… உணர்வின் தன்மை கருவாக்குகின்றது
3.கருவின் தன்மை உருவாகும் போது பிரம்மம் ஆகின்றது
4.அதாவது எதனின் உணர்வு கருவாகின்றதோ மீண்டும் அது அணுவாக மாறும் பொழுது பிரம்மமாகிறது.
5.பிரம்மத்தின் நிலைகள் அடைந்த பின் அந்த அணுவின் மலம் உடலாக்கப்படும் பொழுது சிவமாக மாறுகின்றது.

சிவத்தின் தத்துவத்தை நமது ஞானிகள் இப்படித் தெளிவாக கூறியுள்ளனர். எங்கோ இருந்து யாரும் இயக்கவில்லை…
1.நமக்குள் நின்று உயிர் தான் இயக்குகின்றான்
2.நாம் ஏங்கிப் பெறுவதை உணர்த்துகின்றான்
3.உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றான்
4.உணர்வின் செயலாக அந்த உணர்வுகளே உடலாகின்றது
5.உடலின் உணர்வுகள் அதற்குத் தக்க தான் இயங்குகின்றது.

இது எல்லாம் இந்தப் பரலோகத்தில் பரவி இருப்பதை நாம் நினைவு கொண்டு வந்து எடுக்கும் போது நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

சிறுமூளை வழியாகத் திறக்கப்பட வேண்டிய ஞானக்கண்

பரவெளியின் பூதியில் சூரிய மண்டலங்களின் சந்திப்பில் யுகம் என்ற மறைபொருளாக விண்மீன்கள் விண் கோள்கள் அமையப் பெற்று ஓர் ஓட்ட கதியில் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் அந்தக் குடும்பத்தின் சுழல் ஓட்ட கதியில் சுற்றி வரும் சூரியனின் சக்தியில்
1.ஒன்றுடன் ஒன்று பிடர் வழி என்ற உந்தும் வீரிய குண சக்தியைக் கொண்டு
2.சக்தியை ஈர்த்துக் கொண்டும்… சக்தியை அளித்துக் கொண்டும்…
3.ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு வெளித் தள்ளும் சமைப்பு அமில குணத் தன்மைகளை ஒளி காந்தமாக வீசிக் கொண்டும்
4.தன்னைச் சுற்றி ஓடும் சுழற்சியின் சப்த நாதங்களை வளர்த்துக் கொண்டும்
5.தான் பெறும் சக்தியை ஈர்ப்பு நிலையில் குறைவுபடாத தன்மையாக வளர்த்துக் கொண்டும் உள்ளது.

அவ்வாறு ஓடுகின்ற ஓட்டக் கதியில் எல்லாம் எந்த மண்டலமோ அந்த மண்டலம் தன் சக்தியின் வலுவைக் கொண்டு
1.தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும்
2.தன் வலுவை விடக் குறைந்த சக்தி பெற்ற உருவாகும் கோள்களின் தொடரை
3.தான் ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஓர் சூட்சமம் உள்ளது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞான வழியில் முன்னேறி வரும் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சரீரம் உள்ள பொழுதே வீரியச் சக்தியின் தொடரை “வேகம் கொண்டு” எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகம் என்பது என்ன…?

எண்ணத்தின் வலு கொண்டு மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சக்தியின் உயிரான்மக் கலப்பின் முலாம் தனக்குள் வலுப் பெற்று விட்டால் ஞானக் கண் திறக்கும் திறப்புச் செயல் வேகம் கொண்டுவிடும்.

அத்தகைய வேகம் கொண்டால் யுகங்கள் தன் சந்திப்பில் ஓர் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் உருவாக்கும் ஆக்கம் எந்தக் கோளமும் தன் ஈர்ப்பின் வலுச் செயலினால் மூலத்தையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.
1.சக்தியின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வீரிய மண்டலமாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் உருக்கோலம் கொள்ள வேண்டும்.

நீங்கள் என்ற சொல் உங்கள் அனைவரின் தொடருக்கு வலுக் கொள்ளும் செயலை… அதாவது “அழுத்தமாகச் சுட்டிக் காட்டும்” அமில குணம் கொண்ட வீரியச் செயலாக… நட்சத்திர அலைகளின் விசேஷ வீரிய குணத் தன்மைகளை அறிந்து கொள்ளும் “உயிரான்மா – ஜீவாத்மா தொடரில்”
1.சரீரத்தின் மூலம் அமைத்துக் கொள்ளும் பக்குவச் செயலாக
2.கரங்களில் வெளிப்படுத்தும் உணர்வு நரம்புகளின் வீரியச் செயல் கொண்டு மண்டலமாக உருவாக்கிடும் உருக்கோலம் கொள்ள
3.”பிடர் வழி” என்றிட்ட மன எண்ணச் செயலில்
4.பரணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எலும்புகளின் வலுக்கொண்ட சேமிப்பாகக் கூட்டிக் கொண்டு
5.சரீரத்தில் உள்ள உயிரணுக்கள்… உயிரின் ஒளி காந்தத்தை நாடி… உயிர்ச் சக்தியினை வலுக்கூட்டப்படும் பொழுது
6.சரீரத்தின் கட்டளைக் கேந்திரமான (CONTROL PANEL) சிறுமூளையின் பாகம் திறக்கப்படும் ஞானக் கண் வழியாக
7.எண்ணத்தின் பிடர்வழி உந்தும் குண வீரிய எண்ணமாக ஆக்கப்படும் பொழுது
8.மண்டலத்தின் உருக்கோலத் தன்மைக்கு வித்திடும் வீரிய சக்தியாகப் பரிமளிக்கும்.

ஆக மகரிஷிகள் படைத்த “படைப்பின் படைப்பு” என்பது சூட்சம சரீரம் கொண்டு உயிரான்ம ஒளி காந்த சக்தியுடன் தன் நிகழ்வில் பெறப்படும் சக்திகளுடன் தான் ஒன்றி “ஞானக் கண் திறப்பின்” வழியாகத்தான் தன் வலுவை வீரியமாக்கிக் கொண்டனர்.

பூதியின் வீரிய நட்சத்திரமாகத் தனக்கென்று தன் ஆக்கத்தின் ஆக்கமான படைப்பின் படைப்பான ஒளி காந்த சக்தியைப் பெற்றுச் “சுய வீரிய சக்தி கொண்ட நட்சத்திரமாக உருக்கொண்டார்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கப்படும் பொழுது
1.“இப்படித் தவறு செய்கின்றானே…” என்று எண்ணுகின்றோம். ஆனால் அச்சமயம்
2.அவன் அந்தத் தவறு செய்யும் நிலைகளிலிருந்து “மீள வேண்டும்..,” என்று எண்ண முடியவில்லை.

ஆகவே அதற்காக வேண்டி ஆலயங்களை அமைத்துத் தூய்மைப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் ஞானிகள்.

அன்றாட வாழ்க்கையில் “உடல் அழுக்கைப் போக்குவது போல” நாம் வாழ்க்கையில் கேட்டுணர்ந்த தீமையின் தன்மைகளைப் போக்கிட “வானை நோக்கி…” எண்ணும்படிச் செய்தார்கள்.

1.“விண்ணிலிருந்து வரும்” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
2.நாம் கேட்டறிந்த “தீமைகளைத் துடைக்கும்படி… நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும்படி..” செய்தனர்.

இதை வழிப்படுத்தி நம் வாழ்க்கையில் யாரை யாரையெல்லாம் சந்தித்தோமோ… அவர்கள் எல்லாம் இத்தகைய நிலைகள் பெறும்படி “பல முறை செய்தல் வேண்டும்”.

அவர்கள் எண்ணுவதற்கு நேரமில்லை. இருப்பினும்
1.அவர்கள் “எல்லோரும் அருள் உணர்வுகள் பெற வேண்டும்…”
2.அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்.
4.அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மகிழ்ச்சி பெற வேண்டும்
5.அவர்கள் குடும்பமெல்லாம் நலம் பெற வேண்டும் “ஈஸ்வரா..,” என்று
6.நமக்குள் ஆண்டு கொண்டிருப்பவனிடம் இதைக் கேட்டால் அது “ஓ..ம் நமச்சிவாய.. “ஓ…ம் நமச்சிவாய…”

நாம் எத்தகைய உணர்வினை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது “ஓ…ம் நமச்சிவாய…”

“அனைவரும் நலம் பெற வேண்டும்” என்ற இந்த உணர்வினை நமக்குள் “சதா சிவமாக்க வேண்டும்…”

எண்ணங்கள் (சுவாசிக்கும் உணர்வுகள்) நம்மை எவ்வாறெல்லாம் இயக்கும்…? என்பதைத் தான் இராமாயணம் காட்டுகிறது

தீமையை நீக்கும் எண்ணங்கள் வரும் பொழுது தான் இராமன் சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான் என்று காவியம் காட்டுகிறது.

1.தாக்கும் உணர்வு வந்தால்… எதிர்த்துத் தாக்கும் உணர்வே வருகின்றது
2.ஆனால் அரவணைக்கும் உணர்வின் தன்மை இருந்தால்… தன்னுடன் இணைந்து வாழும் நிலை வருகின்றது.

அது தான் “கல்யாணராமா…”

அரவணைக்கும் தன்மை கொண்டு நாம் நண்பனை இணைத்தால்… இந்த உடலுக்குள் தன்னுடன் இணைந்து வாழும் சக்தியாக அது எவ்வாறு கொடுக்கிறது என்று இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகின்றது.

அதை நாம் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.

மூலக்கூறுகளை விடுத்து விட்டு அவரவர்கள் உணர்வுக்கொப்ப காரியங்களைத் தீட்டிக் கருத்தினை மாற்றி மனிதன் வாழ்க்கைக்குண்டான போர் முறைகளைக் கையாண்டு “ஏமாற்றுவதும்… ஏமாற்றி வாழ்வதே சரி…” என்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டனர்.

இராமன் மிகவும் வலிமை கொண்டவன் என்று காட்டுகின்றனர். அன்று விசுவாமித்திரர் தான் யாகம் செய்யும் போது அசுரர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக இளம் பிராயத்தவர்களான இராமனையும் இலட்சுமணனையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார்.

பல வித்தைகளையும் கற்றுக் கொடுத்து எனக்குப் பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்கிறார். அதன்படி அசுரர்கள் தாக்குதலில் இருந்து இராமன் விசுவாமித்திரனைக் காக்கின்றான்.

ஆனால் விசுவாமித்திரனோ மிகவும் கொடூரமானவன்… கோபக்காரன்… பல அரசாட்சிகளைப் பிடித்தவன்… யாகத்தை வளர்த்தவன்… வலிமை பெற்றவன் தான்.

இவ்வளவும் இருந்தும் மீண்டும் வலிமை பெற வேண்டும் என்ற ஆசையின் உணர்வு உண்டு உலகை அடக்க வேண்டும்… உலகை அடிமையாக்க வேண்டும் என்று உணர்வின் வேகம் கொண்டு யாக வேள்விகளை நடத்த விரும்புகின்றான்.

யாக வேள்விகள் நடத்தப்படும் பொழுது எதிர்கொண்டு தாக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இராம இலட்சுமணர்களை அழைத்துச் செல்கின்றான். அந்த யாக வேள்வியும் நிறைவடைகின்றது.

ஆனால் அப்பேர்ப்பட்ட நிலையில்…
1.மற்றவர்களைக் காக்கும் நிலையாக அசுரர்களைக் கொல்லும் திறன் பெற்றவன்…
2.அசுரர்களின் செயலாக்கங்களை அறிந்து அவர்களை வீழ்த்தக்கூடிய திறன் பெற்றவன்…
3.மிக வல்லமை பெற்றவன் இராமன் என்று இருந்தாலும் தன் மனைவியுடன் காட்டிற்குள் செல்லும் போது என்ன நடக்கிறது…?

காட்டிற்குள் செல்லப்படும் பொழுது சூட்சம நிலைகள் கொண்டு அசுரனான இராவணன் சீதாவைக் கடத்திச் செல்கின்றான்.

ஆனால் வலுக் கொண்ட இராமன் அதைக் கேள்விப்படும் போது “தன் மனைவி போய் விட்டதே என்று மயங்கி விழுகிறான்…!” என்றால்
1.அப்பொழுது இராமனின் செயல் என்ன…?
2.இதை ஏன் காவியத்தில் இவ்வாறு சித்தரித்துக் காட்டுகின்றார்கள்…? என்று சற்று சிந்தித்தல் வேண்டும்.

வலிமை கொண்டவன் “தன் மனைவி போய் விட்டதே” என்று எண்ணும் பொழுது இதைப் போல் பிறிதொரு மனிதன் வெளிப்படுத்திய வேதனையைத் தனக்குள் நுகரப்படும் பொழுது… அந்த வாலியின் தன்மையே (நல்ல உணர்வின் வலிமை குறையும்) இங்கே வரும்.

கோதண்டத்தை முறித்து வேதனைகளை நீக்கிச் சீதாவை திருமணம் செய்து கொண்டவன்… கல்யாணராமன் என்று சுயம்வரத்தில் வென்றவன்… சீதாவைக் காணவில்லை என்று
1.“அந்த வேதனையான உணர்வை… விஷத்தின் தன்மையைக் கொடுத்தால்…”
2.இவனுடைய எண்ணத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்…? என்பதைத்தான் இராமாயணக் காவியம் தெளிவாகக் காட்டுகிறது.

இதையெல்லாம் அவர்கள் உணர்வுகளுக்கொப்ப காவியங்களைத் தீட்டி உண்மையின் உணர்வை அறியாதபடி தீமையின் விளைவுகளுக்கே பயன்படும்படி செய்து விட்டார்கள்.

நீங்கள் அந்த மூலக்கூறுகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்துதலே நல்லது.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்…” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்…! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்… ஒலி நாதத்தின் அமில குணமும்… ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா…” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு…!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று… “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை…!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் – உண்மையை உணர்ந்து கொள்ளத்தானே தவிர
5.அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு – சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர
6.சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்…?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது… திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி… விபூதி…! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்…!)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எதை எதை எப்படிச் செய்தாலும் “நம் உயிரிடமிருந்து மட்டும்…” யாரும் தப்பவே முடியாது.

காரணம்…
1.நாம் எண்ணியது எதுவோ அதை ஒவ்வொரு நிமிடமும்…
2.“ஓ..ம் நமசிவாய… ஓ..ம் நமசிவாய”…” என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.
3.காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எண்ணிய உணர்வுகள் “நல்லவை – கெட்டவை…” அனைத்தும் நம் உடலாக அமைந்து விடுகின்றது.

இதைத்தான் “ஓ..ம் நமசிவாய… ஓ..ம் நமசிவாய”…” என்பது. அப்படியென்றால் “நம் உடலைச் சதா சிவமாக்கிக் (சதாசிவம்) கொண்டயுள்ளோம்…” என்று பொருள்.

எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த “மணத்தின் தன்மை” வருகின்றது. அந்தச் “சொல்லின் தன்மை” வரப்படும் பொழுதுதான் “சிவாய நம ஓம்…”

நாம் நுகர்ந்தது ஜீவனாகி நமக்குள் அணுவாகி சிவமாகின்றது. எது ஜீவனாகி அணுவாக சிவமாக ஆனதோ நமக்குள் இருந்து “அதனின் சொல்லாக… செயலாக வெளிவரும்…” – “சிவாய நம ஓம்…”
1.வெறும் வாயில் “ஓ..,ம் நமச்சிவாய.. “ஓ..,ம் நமச்சிவாய.. என்றால் அதில் பொருள் இல்லை… அது வெறும் சொல்லே.
2.ஓ…ம் நமச்சிவாய…! என்று சொன்னால் அந்தச் சிவன் இறங்கி வந்து
3.“என்னையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்…” என்று
4.எதையாவது ஓடி வந்து செய்வான்…! என்ற இந்த நம்பிக்கையைத்தான் ஊட்டியுள்ளார்கள்.

சாஸ்திர சாங்கியங்களின்படி “ஓம் என்றால் பிரணவம்…” இப்படிச் சொல்லி அதையே ஜெபித்தால் “எனக்குள் ஜீவன் வந்து விடும்…” இன்று தவறான வழிகளில் நாம் ஜெபித்துக் கொண்டுள்ளோம்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் திறன் நாங்கள் பெற வேண்டும்
4.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நாங்கள் ஒன்றி வாழ்தல் வேண்டும்.
5.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
6.எங்களைப் பார்ப்போர் அனைவரும் உடல் நலம் பெற வேண்டும்
7.எங்களைப் பார்ப்போர் தீமைகள் அகல வேண்டும்.

“இதைத் தான் நமக்குள் வினையாக்கச் செய்ய வேண்டும்…” மூஷிகவாகனா.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைச் சுவாசித்து அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் கண்டுணர்ந்த மெய்ஞானிகளின் அருள் சக்தி திறன் அனைவரும் பெற வேண்டும். அனைவரும் பொருள் கண்டுணரும் திறன் பெற வேண்டும். அவர்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அங்கே அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

இப்படி எண்ணி.. இதை வினையாக்கி… நம் உடலாக சதாசிவமாக ஆக்கும்படி சொன்னார்கள் ஞானிகள்.

இந்த உடலின் பற்றை அறுத்துவிடு… என்றார் குருநாதர்

குருநாதர் பல நிலைகளைச் செய்தாலும் கூட என் குடும்பம் வாழ வேண்டும் என்று ஆசை எனக்குள் (ஞானகுரு) இருந்தது.

இந்த ஆசை எவ்வாறு உருவாகின்றது…? அதனால் விளையும் தன்மைகள் என்ன…? என்பதை உணர்த்துவதற்காக குருநாதர் இமயமலைக்கு என்னை அனுப்பினார்.

பனிப்பாறைகள் மீது நடக்கச் சொன்னார். இப்பொழுது உடலிலே ஆடைகளை அணிந்திருக்கின்றோம். ஆனால் அன்று அதுவும் இல்லாதபடி வெறும் கோவணத்துடன் தான் அங்கே போகச் சொன்னார்.
1.நான் சொல்லும் உணர்வின் தன்மையை ஏங்கிச் சுவாசி
2.பனியின் குளிர் ஒன்றும் செய்யாது
3.உன் நினைவாற்றல் அருள் ஒளி பெறும் உணர்வுடன் ஒன்றும் போது வாழ்க்கையில் மன பலம் பெறுவாய்
4.ஆகவே உன் நினைவு நான் சொன்னதன் பால் இருக்கப்படும் பொழுது பனிப்பாறைகள் உன்னை ஒன்றும் செய்யாது என்றார்

அதன் படி பனிப்பாறைகளைக் கடந்து நான் செல்கின்றேன். சென்ற பின் திடு…திடு… என்று நான் வந்த பாதையில் இருந்த பனிப் பாறைகள் அனைத்தும் நொறுங்கிக் கீழே விழுகின்றது.

நான் வந்த பாதை இடிந்து போய் விட்டதே… இனி எப்படித் திரும்பப் போகின்றோம்…? குழந்தைகளையும் குடும்பத்தையும் நான் எப்படிப் பார்க்கப் போகின்றேன்…? என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

அப்போது இந்த உடல் பற்று வரப்படும் பொழுது “என் இருதயமே இறைகின்றது…” சிறிது நேரத்தில் உயிரே போய்விடும் போல இருக்கின்றது.

காரணம்… குருநாதர் கொடுத்த கவசம்… அவர் கொடுத்த உணர்வின் தன்மையை நுகர மறந்துவிட்டேன்.

இனி எவ்வாறு வாழ்வது…? என் குழந்தைகள் என்ன ஆவார்கள்…? என்று குடும்பத்தின் பற்று வரப்படும் பொழுது இந்த உடல் பற்று தன்னாலே வருகின்றது.

அப்பொழுதுதான் குருநாதர் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்…!

“மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே… தயங்காதே…!

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!
மனமே இனியாகிலும் மயங்காதே… மயங்காதே…!

நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ…?
நிலையில்லா இவ்வுலகம் சதமாமோ… சதமாமோ…?

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே… தயங்காதே…!” என்று
குருநாதர் இந்தப் பாடலை பாடிக் காட்சிகளைக் கொடுக்கின்றார்.

நீ இப்பொழுது இருக்கும் இந்த நிலையில் எல்லாம் போய் உன் உயிர் வெளியேறி விட்டால்
1.“பொன்னடி பொருளையும் சுகத்தையும்” காண முடியுமா…? நீ எதை எண்ணுகின்றாய்…?
2.நான் எதைச் சொன்னேன்…? எதை எண்ணி ஏங்குகின்றாய்…?
3.எதைப் பெறச் செய்கின்றாய்…? எதை நீ பெறுதல் வேண்டும்…?

ஆகவே…
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு… அந்த உணர்வின் தன்மையை அங்கே குடும்பத்தில் பாய்ச்சு…
2.அவர்கள் நலம் பெற வேண்டும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்து…
3.அந்த அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சு அவர்கள் நலமும் வளமும் பெறுவார்கள்.

பாசத்தால் “இப்படி ஆகிவிட்டதே…” என்று அவருடைய நிலைகளை எண்ணும் பொழுது இங்கே உன் உயிர் போய் விட்டால் அந்தப் பொன்னடி பொருளை எவ்வாறு நீ காணப் போகின்றாய்…?

நான் உனக்குப் போதித்த உணர்வுகளை நீ ஏன் மறந்தாய்…?

1.அருள் ஒளி பெறு… இருளை அகற்றிவிடு
2.இந்த உடலின் பற்றை அறுத்துவிடு
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை அனைவரும் பெறச் செய்யும் அந்த அருள் பற்றை உண்டாக்கு
4.அருள் வாழ்க்கை வாழ்ந்திடு… இருளை அகற்றிடும் சக்தி பெற்றிடு…
5.இருளை அகற்றிடும் வாழ்க்கை வாழ்ந்துவிடு
6.அருள் ஒளியின் பற்றாக வாழ்ந்திடு
7.அருள் ஞானிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றிவிடு
8.வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிவிடு
9.பிறவியில்லா நிலைபெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்துவிடு என்று இந்த உபதேசத்தை அங்கே கொடுக்கின்றார்.

ஆகவே… இந்த வாழ்க்கையை இன்னல்கள் வந்தாலும் நாம் பற்ற வேண்டியது எது…” அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிட வேண்டும்.

குரு வழியில் அருள் உணர்வுகளைப் பெறுவோம்… இருளை அகற்றிடும் அருள் வழியைப் பெறுவோம்… அருள் வழி வாழ்வோம்.
1.அனைத்துக் குடும்பங்களும் நலம் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் வாழ வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்…!

திருக்கூட்டம் தேவை இல்லை… கல்கி என்ற ஒளியான வித்துக்கள் தான் தேவை…!

1.உரைத்துவிடு ஈஸ்வரா…! என்று உரைத்தவனும் கவி மழை பொழிந்தவனும் உண்மையின் சொரூபத்தை உணர்ந்தே
2.நலம் பெற நல்லாக்க நிலையில் “நான்…” என்ற அகங்கார நிலையை விடுத்து
3.சகலமும் ஈஸ்வரர்…! என்ற அருள் ஜோதியைச் சிந்தித்து
4.எல்லா உயிராத்மாக்களையும் தன் உயிர் போல் பாவிக்கும் பாவனையில்
5.மௌனத்தின் உரையில் ஆத்மாவில் உரைக்கட்டும்.

அதுவே எமக்குகந்த ஆனந்த நிலை…!

சரீர பக்தி கொண்டு ஆடுகின்ற ஆட்டமெல்லாம் எத்தனை காலத்திற்கப்பா…? ஆண்டாண்டு காலமாகச் சமுதாய அமைப்பில் எத்தனையோ தவசீலர்கள் என்று பறைசாற்றியவர்களைப் பற்றி எத்தனை முறைகள் தான் எடுத்துக் கூறுவது…?
1.உன்னை நம்பு.. பிறரை நம்பாதே…!
2.உன் உயிரான்மா சக்தி பெற்றிட அது… பிறர் கொடுத்துப் பெறுவதல்ல…!

கலியின் சூட்சமமே மனித எண்ணங்களின் விஷமான மூச்சலைகளால் பூமியின் பொக்கிஷங்கள் குறைவுபட்டு விட்டது. இந்தக் கால கட்டத்தில் ஒவ்வொருவரும் தன் உயிர் ஆத்ம சக்தியை வலுகூட்டும் முயற்சியைத்தான் யாம் விரும்புகின்றோம்.

ஒவ்வொரு மனிதனின் நிலைக்கொப்ப அது பக்தியோ வியாபாரமோ அல்லது குடும்ப நலமோ அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப எண்ணம் சொல் செயல் மூன்றிலும் சத்திய நியாய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிலைகளுக்கும்…
1.அவரவர்களுக்கு ஏற்றாற்போல் மெய் ஞானத்தை உரைத்திட்டால் வெறும் திருக்கூட்டம் தான் பெருகும்.
2.யாம் சொல்ல வந்த கல்கியின் வித்துக்களை உருவாக்கிடவும் முடிந்திடாது.

ஏனென்றால் வெறும் கூட்டம் தேவை என்றால் “எத்தனையோ வழிகள் உண்டு…!” (இன்றைய கலியில் கூட்டம் எங்கெங்கே கூடுகிறது என்று பார்க்கலாம்) அது நமக்கு வேண்டியதில்லை.

நமக்கு வேண்டியது…
1.எண்ணத்தில் பிறரைப் பற்றிய தவறான கருத்துக்கள் கொள்ளாது
2.தான் கொண்ட சத்தியத்தில் பிறழாது வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

ஆனால் சத்திய சோதனையில் சோர்வு பட்டவனும் துவேஷக் கருத்துக்களை வைத்துக் கொண்டிருப்பவனும் “சக்தி பெறலாம்…!” என்ற நம்பிக்கையிலாவது வாழட்டும்.

கலி இன்னும் முடிந்திட எண்ணிறந்த காலம் செல்லும் என்று. அறிந்து சொன்னானா எம் உரையை…? உரைத்துவிடு ஈஸ்வரா… என்றவனுக்கே உரைக்கின்றேன் “சடையாண்டி மலையின் சூட்சமத்தை…!”
1.சப்தரிஷிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றன…
2.அது பொங்கிடும் நாதமே உரைத்த சூட்சம ஒலி.
3.ஞானம் பெற்றிட விழைவோன் யாராக இருந்தாலும் சமமான உணர்வுகள் கொள்ள வேண்டும்.

இன்னல் கண்டு கலங்காதே…! என்ற வாசகத்தை நினைவில் கொள்க. காலம் குறுகியது என்று பல பல காலம் உரைத்திட்டேன். மெய் ஞானத்தைப் பெறுவது எக்காலம்..?

உலகெங்கிலும் எத்தனையோ எரிமலைகள் வெடிக்கின்றன. அங்குள்ள உயிர்த் தொகைகள் மடிகின்றன. எது எங்கோ நடைபெறும் சம்பவம் என்று நினைக்க வேண்டாம். அது நாம் வாழும் இந்த இடத்தில் ஏன் இருந்திடக் கூடாது.

உண்மையும் அது தான்…! சடையாண்டி மலை என்ற பெயரை வாசிக்கும் பொழுதே அறிந்து கொள்ள வேண்டும். ஞானம் பெற விழைந்தது எதற்கு…? இடத்தையும் உரைக்கின்றேன்.

கொங்கு மண்டலத்தின் தென் திசையில் அமைந்துள்ளது சடையாண்டி மலை. கந்தக மண் சூழ்ந்த அந்த இடத்தில் ஒரு மலை மாத்திரம் அன்று மூன்று மலைகள் அடுப்புகள் கூட்டிய அமைப்பில் அமைவு பெற்று அதில் ஓர் மலையில் இரண்டடி உயரத்தில் மலையின் தாழ்வாரத்தில் மூன்று நீருற்றுக்கள் கிளம்பி ஓடிக் கொண்டே இருக்கின்றன.

தென் கையிலாயம் என்று உரைத்திட்டேன் குரு மலையை. குரு மலையில் இருந்து நாற்பது கல் தொலைவில் தெற்கு திசையில் அடர்வனத்தில் உள்ளது சடையாண்டி மலை.

1.சடையாண்டி மலைகள் குமுறிக் கொந்தளிக்கப் போகின்ற எரிமலைகள்.
2.பயம் காட்டுகின்றேன் என்று எண்ணிட வேண்டாம்.
3.இன்னும் இந்தக் கலியில் உடல் கொண்டு உலவும் சித்தர்கள் அறிந்துள்ளனர் அதனின் சூட்சமத்தை…!

யாம் கூறி வரும் உண்மை நிலைகளை எல்லாம் உணர்ந்து தெளிதல் பொருட்டு இந்தத் தியானத்தின் வழியாக ஒவ்வொரு உயிராத்மாவும் பேரின்பத்தில் திளைத்துப் பேரருள் செல்வத்தில் ஆதி சக்தியில் கலந்திடவே உரைக்கின்றோம்.

மகரிஷிகள் வேண்டுவதோ கல்கியின் வித்துக்களாகிய ஞானச் செல்வங்களைத்தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் ஆக்சிடென்ட் ஆகின்றான். “இப்படி ஆகிவிட்டதே…” என்று நாம் வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது “ஓ..ம் நமச்சிவாய..,” பய உணர்வுடன் எடுக்கும் பொழுது நம் உடலாக சிவமாக ஆகின்றது.

அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது. ஏன்.. அவ்வாறு ஏற்படுகின்றது…? நம்முடைய உயிர் எவ்வாறு அதை உடலாக மாற்றுகின்றது..?

1.கண்கள் அவன் செயலை உற்றுப் பார்க்கச் செய்கின்றது.
2.கருவிழி படமாக்குகின்றது… உணர்வின் அலையைக் கவரச் செய்கின்றது.
3.உயிரோ “ஓ..,” என்று பிரணவமாக்குகின்றது.
4.உணர்வினை உணர்த்துகின்றது… உணர்வின் தன்மை உடலாக உறையச் செய்கின்றது என்று
5.சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஒரு ஆக்சிடென்ட் ஆகின்றது என்றால் “வேண்டும் என்றே விழுகின்றார்களா..?” இல்லையே.

அவனுடைய வாழ்க்கைக்காகச் சென்றான். எதிர்பாராது ஒரு வண்டி மோதுகின்றது. அடிபட்டு அவன் துடிக்கின்றான். அவன் உடலிலிருந்து துடிக்கும் உணர்வலைகள் வெளிப்படுகின்றது.

சூரியனின் காந்தப் புலனறிவோ அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. கண்களோ துடித்தவனின் உணர்வை உற்றுப் பார்க்கின்றது. உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்குகின்றது.

ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்ட அலைகளைக் கண்ணின் காந்தப் புலனறிவு தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. நம் உயிரோ அதை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை உணர்த்துகின்றது. ஜீவ ஆன்மாவாக மாற்றுகின்றது.

1.நமக்குள் இருக்கும் புலனறிவு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது
2.அந்தத் தீமை என்ற நிலையை அந்தந்தச் சந்தர்ப்பங்களில் உணர்த்துகின்றது.
3.ஆனால் தீமையிலிருந்து விடுபடும் ஆறாவது அறிவு கொண்டு விடுபட வேண்டுமே…!

இதற்குத்தான் இந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று உயிருடன் ஒன்றி அந்த அருள் சக்திகளைச் சுவாசித்தல் வேண்டும்.

அப்படிச் சுவாசித்தால் “ஓ..ம் நமச்சிவாய…” “ஓ..ம் நமச்சிவாய…”

ஏனென்றால் அந்த மகரிஷிகள் தீமையை அகற்றியவர்கள் நஞ்சை வென்றவர்கள். உணர்வை ஒளியாக மாற்றியவர்கள்.

“சிவாய நம ஓ..ம்…” “சிவாய நம ஓ..ம்…” – நான் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும். அவர்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்சுதல் வேண்டும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான அறிவால் வளர்த்துக் கொண்ட நிலைகளில் பல நஞ்சான உணர்வுகள் பரவிக் கொண்டுள்ளது. உலகில் நடக்கும் பல கொடுமையான நிலைகள் இன்டெர்னெட் மூலமும் டி.வி. மூலமும் பத்திரிக்கை மூலமும் வந்து கொண்டே இருக்கின்றது.

அதில் எதையெல்லாம் மனித உடலில் படைத்தோமோ அவையெல்லாம் “சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது…” அதை நுகர்ந்தால் நம்மை அறியாமலே பல தீமைகளை உருவாக்கும் நிலைகள் உருவாகின்றது.

“யாரும் தவறு செய்யவில்லை” – புலனறிவால் நமக்குள் புகும் தீமைகளிலிருந்து நம்மைக் காக்க வேண்டுமல்லவா…!

சொர்க்கலோகத்தை உருவாக்குங்கள்

உதாரணமாக… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக உடலிலே உருவாகி விட்டால் நாம் எந்த லோகத்தை உருவாக்குகிறோம்…?

இந்திரலோகத்தில் (உடலில் உள்ள இரத்தங்களில்) வேதனை உணர்வுகள் கருவாகி அணுக்களாக வெடித்து அணுவின் மலம் அது சிவமாகிறது (உடல்).
1.ஆக “வேதனையான உணர்வின் செயலாக” இயக்கப்படும் பொழுது சிவலோகத்தில் எமனாக மாறுகின்றது.
2.பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று மனிதனாக வந்த நம் உடலுக்குள் எமலோகமாக மாறுகின்றது.
3.வேதனையால் இந்த உடலின் தன்மை நலிகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் “எந்தக் குணத்தின் வரிசையில் எடுத்தோமோ…” அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை நரக வேதனைப்படச் செய்து இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி சாகாக்கலையாக (அந்த வேதனை உணர்வு கொண்டு) அழைத்துச் செல்கின்றான்…! நம் உயிர்.

எங்கே…?

விஷத்தால் மற்ற உயிரின்ங்களைத் தாக்கி உணவாக உட்கொள்ளும் பாம்பினமாகவோ விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவாக எடுக்கும் தேளினமாகவோ மாற்றிவிடுகிறது.

அடிக்கடி வேதனை என்றோ… வேதனைப்படுபவர்களைப் பார்த்து இரக்கம் ஈகை என்றோ ஏங்கினால் அவர்களின் வேதனை உணர்வு நமக்குள் வளர்ந்து எமலோகமாக மாறுகின்றது.
1.நம் உடலில் உள்ள இந்திரலோகம் (இரத்தநாளங்கள் – இந்திரீகம்) எமலோகமாக மாறி
2.சொர்க்கலோகம் செல்லும் உணர்வைத் தடைப்படுத்திவிடுகிறது.

வேதனையினால் உடல் குறுகி உயிரான்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் எந்த வேதனையை அதிகமாக எண்ணினோமோ அத்தகைய வேதனைப்படும் உடலுக்குள் சென்று விடுகின்றது

அதாவது…
1.விஷத்தை உணவாகப் பாய்ச்சும் அதை உணவாக எடுத்துக் கொள்ளும்
2.அந்த விஷத்தன்மை நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் பட்டபின் இது வெளிவந்த பின்
3.பாம்பினங்களுக்கோ தேளினங்களுக்கோ… வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் இந்த உடல்களுக்குள் உணர்வுக்கொப்ப அழைத்துச் சென்று
4.அந்தப் பாசக்கயிறு…! – தொடர்ந்து எந்த வேதனையை எடுத்தோமோ அதன் தொடர் வரிசையில் நாம் சென்று
5.அந்த உடலுக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று நீ எதை எண்ணினாயோ அதுவாகின்றாய் என்ற தீர்ப்பைக் கொடுத்து
6.கண்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும் – பயத்தின் உணர்வு கொண்டு
7.இப்படிச் செய்தான்… செய்தான்.. செய்தான்… என்ற எண்ணத்திலே எண்ணும் பொழுது
8.தனக்குள் எமலோகமாக மாற்றி நரக லோகத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது.

ஆக மொத்தம் வேதனையை வளர்த்துக் கொள்ளப்படும் பொழுது கண்ணன் சாரதியாகச் செல்கின்றான். எப்படி…?

1.எதனை எண்ணி ஏக்கத்தின் நிலைகள் கொண்டோமோ…
2.எந்த விஷத்தின் தன்மை தனக்குள் வலுக்கொண்டதோ….
3.எந்தக் கண் காட்டி நம்மை காத்துக் கொள்ளும் உணர்வை கொடுத்ததோ
4.அதை மறந்து… காத்திடும் நிலைகளை மாற்றி… ஆறாவது அறிவின் தன்மையை இழக்கப்படும் பொழுது
5.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று வேதனைப்படச் செய்யும் உடலுக்குள் சென்று விடுகிறோம்.

பயந்து நாம் ஒடுங்கினாலும்… பின் நாம் எதை எண்ண வேண்டும்…? இதை மாற்றி அமைத்தல் வேண்டும். அச்சுறுத்தும் உணர்வில் இருந்து நாம் மீள வேண்டும். காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்விலிருந்து மீளுகின்றோம்.

எதை வைத்து…?

1.மகரிஷிகளின் அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் கண்டுணர்ந்த அருள் ஞானியின் உணர்வுகள் நான் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பரலோகத்தில் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் பதிவாகியுள்ளது. அதைக் கவர்ந்து நம் உயிர் வழி சொர்க்கவாசலாக அமைத்துச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.

பேரின்ப இரகசிய ஆனந்த நிலை

வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே…!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பத்தன்மை எவ்வளவு தான் கடுமை ஆனாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்…!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே…! நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்…! என்பதன் கருத்தை ஊன்றி… உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.தத்துவத்தில் “வினோதம்…!” என்பதெல்லாம்… – சூட்சம கதித் தொடர் என்பதில்
2.வெப்பம் என்று பாலைவனம் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில் சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்… சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ… அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு… சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து…” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து… “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது…”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடர் எண்ணங்கள் வருதல் வேண்டும்.
1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின…! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்ம சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயல்படும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெற வேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி…
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன…?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் “இனி… நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று சிந்தித்தல் வேண்டும்.
1.இந்த உடலே நமக்குச் சதமில்லாத பொழுது தேடி வைத்த செல்வங்கள் நமக்குச் சதமாகுமா..?
2.நிலம், பூமி, காடு, கரை எல்லாம் சதமாகுமா..?

ஏனென்றால்… அன்று வாழ்ந்த அரசர்கள் மற்ற நாட்டின் மீது போர் புரிந்து எத்தனையோ கொள்ளையடித்தார்கள். கொள்ளை அடித்த செல்வங்களை அவன் பித்ருக்கள் வைத்துள்ளார்களா..,? சந்ததிகள் வைத்துள்ளார்களா..,?

இல்லை…. அனைத்தும் மடிந்துவிட்டது. கட்டிய கட்டடங்கள் நகரங்கள் அழிந்து விட்டது.

“எவரோ ஆண்டார் என்றும்… இதனை எக்காலத்தில் “எவன் ஆண்டான்..” என்றும் பூமிக்குள் பல இயற்கையின் நிலைகள் சீற்றமாகி அடக்கமில்லாத நிலை வரும் பொழுது நீர் நிலைகள் பரவப்பட்டு “நாட்டையே அழித்துச் சென்றபின்…” அந்த மண் மேட்டிற்குள் அனைத்தும் அடங்கிவிடுகின்றது.

அவன் கலாச்சாரம்… அவன் செய்த நிலைகள் எல்லாம் மறைந்தது. அரசனும் மடிந்தான்… அவன் மீண்டும் மிருக நிலையையே அடைந்தான்.

அதைப் போன்ற நிலைகள் “மனிதனுக்குள் தீவிரவாதம்…” என்ற நிலைகளில் அதீதமாக வளர்ந்து இன்றும் மனிதன் சிந்தனை இழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளான்.

1.கடும் விஷத் தன்மைகளைப் பரவச் செய்துள்ளார்கள்.
2.அந்த விஷத் தன்மைகள் அனைத்தும் நம் பூமியின் மையைப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
3.அதனால் நம் பூமி கூடிய சீக்கிரம் நீர் நிலை அடையப் போகின்றது.
4.நீர் நிலை அடைந்தால் நாம் மீனின் நிலை தான் அடைவோம்.

சூரியனைக் கடந்து செல்லப்படும் பொழுது வியாழன் கோளைப் போன்று பனிப் பாறைகளாகி இந்தப் பூமி நகர்ந்து சென்றாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த விஷத்தன்மைகள் சூரியனுக்குள் சென்று “சூரியனே மடியப் போகின்றது…”

அதிலே கதிரியக்கப் பொறிகள் வரப்படும் பொழுது அந்தச் சூரியனுக்குள் கொதிகலனாகின்றது.

பூமிக்குள் இங்கே எரிமலை கக்குவது போல சூரியன் செயலிழக்கும் தன்மை வந்து கொண்டே இருக்கின்றது. இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் பிரபஞ்சத்தில் பரவப்படும் பொழுது மற்ற கோள்களுக்குள்ளும் செல்கின்றது.

இந்தச் சுழற்சி போய்விட்டால் இனி மனிதன் வாழும் இன்னொரு பூமிக்குள் சிக்கி அங்கே மனிதனான பின் தான் அதிலிருந்து மீண்டிட முடியும்.
1.ஆனால் அது வரையில் எந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க நேரும்.
2.இதிலிருந்து சிறிதளவேனும் காக்க வேண்டும்.

ஆகவே யாருடைய துன்பத்தின் நிலைகளைக் கேட்டறிந்தாலும் உடனே அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நோயால் வேதனைப்படுபவர்களைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று “அவர்களை எண்ணச் செய்யுங்கள்…” மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று நீங்கள் நலமடைவீர்கள் என்று “செவி வழி… இந்த உணர்வை ஓதுங்கள்…”

நினைவாற்றலை இதே போல அவரை எண்ணச் செய்யுங்கள்.

அதன் வழி வந்தால் அவர்களுக்குள் வரும் பகைமைகள் மறையும். அவர்கள் நினைவாற்றல் அந்த மகரிஷிகளின் பால் செல்லும். அதே சமயத்தில் அவரின் நோயின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகாது.

அந்த அருள் ஒளியின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது இது நமக்குள் தீமைகள் அடங்கிவிடுகின்றது.

அப்பொழுது அருள் ஒளியின் தன்மையே நமக்குள் வளர்கின்றது. அவர் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. அவர் உடலில் வந்த நோய் நமக்குள் வருவதில்லை.

இதை நாம் அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் உயிரை மதித்துப் பழக வேண்டும்
2.அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
3.அருள் வழியில் இருளை அகற்றப் பழகுங்கள்
4.உங்கள் நினைவின் ஆற்றலைத் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு செல்லுங்கள்.
5.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பழகுங்கள்.

இதுவே மனிதனின் கடைசி எல்லை.

பிரம்ம சூத்திரம்…!

“நாபிக் கமலம் என்ற ஜோதி…” தன்னுள் கிளைத்து… எழுந்த மூலப் பொருளாக விளங்கும் தன்மையின் சூட்சமம்… அறிவின் துணை என்னும் சாமரத்தால் வீசப்படும் காற்றும்… காற்று என்று பொருள்பட அறிவை உபயோகிக்கும் பொழுது… சிந்திக்கத் தலைப்படும் பொழுது தான் உயர் ஞானமாக எழும்.

அறிவின் நற்குணம் – சாந்தம் என்ற சாமரத்தால் வீசிப் பெறப்படும் காற்று… வீர குணத்தைக் கொண்டு எழும் ஜோதி…
1.மீண்டும் மீண்டும் இந்தக் குணங்களை எண்ணி வீசும் பொழுது வீசும் காற்றாகிய எண்ணச் செயலின் செயல்பாடு
2.வீர குணத்தின் விளை நிலமாக ஆக்கும் செயலுக்கு உறுதியாகி
3.படைப்பின் படைப்பாக தைரிய குணத்தால் சாந்த குணத்தால் எண்ணி எழும் செயலுக்கு வித்தாகப் “பிரம்ம ஞானம்” உதிக்கும்.

ஆகவே பிரம்ம சூத்திரமாகவே மாறும் செயல் நிலை என்பது “அடையும் வழி இது தான்…!” என எண்ணித் தெளிந்து… பின் கைக்கொள்ள வேண்டிய செயலாகச் சித்தன் காட்டிய வழியில் எல்லாம் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.மனித எண்ணத்திற்குள் எழும் மதமாகிய வீரியத்தை அடக்க அங்குசமும்
2.எண்ணமே உணர்வாகி அந்த உணர்வுகளின் வழி செல்லும் எண்ணமான செயல் காமத்தின் அடியாக எழும் மோகத்தை
3.அதே எண்ணச் செயல் உயர்வைக் கொண்டு வீழ்த்தும் நிலை கரும்பு வில்லும் கைக் கொண்டு
4.உயிர் ஆன்மப் பிணைப்பையே வலியுறுத்தப் பாசக்கயிறும்
5.தன் நிலை என்றென்றும் மணமாக எண்ணத்தில் நிலை பெறக் கையில் மலரைக் கொண்டு
6.சித்தன் காட்டிய தத்துவ செயலைக் கைக்கொள்ளும் ஞானி தன் சுவாச எண்ண ஓட்ட உயரிய நற்செயலால் அக்கினி ஜோதியாகி
7.நாபிக் கமலத் தாமரை மேல் அமரும் படைப்பின் படைப்பாக அமரலாம் என்பதே “பிரம்ம சூத்திரம்…!”

கர்ப்பமான தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும் கரு அதாவது அந்தச் சிசு ஆகாரம் எடுக்கும் வழி நாபிக் கொடி ஆகும். அது போல்
1.அமில நிலை ஆகார உயர்வின் சிறப்பாக நாம் எடுக்கும் சுவாசத் தியானத்தால்
2.கரு நிலையின் முதல் நிலையான நம் உயிர் தன்மையையே “ஜோதி ஸ்வரூபமாக்குதல்…” வேண்டும்.

படைப்பின் படைப்பாக இணைக்கும் உயர் தன்மை என்பது…
1.தாய் சக்தியும் அந்தத் தாய் சக்தியின் ஆன்மக் கலப்போ அல்லது
2.இல்லற வாழ்வில் சிவ சக்தி நிலையாக எண்ணத்தால் ஒன்றுபட்டு ஆத்ம ஐக்கிய நிலை பெறும் வழியோ
3.படைப்பின் படைப்பாவது மட்டுமல்லாது அது புரியும் தொழில் தன்மையாகக் “காத்தல்” என்பது
4.தான் முயன்று பெற்ற “உயரிய ஆன்ம சக்தியே” சூட்சமப் பொருள் ஆகும்

அழித்தல் என்பது
1.உயிர்ச் சக்தியின் செயலுக்கு உயர் நிலை எற்படுத்தாமல் மாறுபாடு ஏற்படுத்தப்படும் பொழுது
2.அந்தச் சிவமாகிய சக்தி அழிக்கின்றான்…! என்று பொருள் கண்டு தெளிந்து…
3.ஏனென்றால் அழிக்கப்பட வேண்டியது துர்க்குணங்களே..! என்று அதைச் சம்ஹரிக்கும் நிலையில்
4.உயிர்த் தன்மை ஆதி சக்திக்குள் கலக்கும் பொருளே “மறைத்தல்” என்றும்
5.படைப்பின் படைப்பான உருக்கோலமே… அன்பு நிலைக் குணமாக “அருளல்…” என்பதுவும்
6.இந்தப் பேருண்மையின் சாராம்சங்களை உணர்ந்து அந்த நிலையைப் பெறுதல் வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் நம் குடும்பத்தில் பையன் சீராக இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால் அவன் மற்றவருடன் பழகும் பொழுது அவனை அறியாது தீமைகள் இவனைச் சாடி அவனின் நற்குணத்தை அழித்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

அதற்குத்தான் ஆலயத்திற்குள் சென்றபின் விநாயகரை எப்படி வணங்க வேண்டும்…? என்று காட்டியுள்ளார்கள்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற இன்று இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக விளைந்து ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும். பின்…
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப்பொருள் காணும் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்
4.எங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
5.எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லோரும் இனிமை பெற வேண்டும்
6.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் மலரைப் போல மணம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும்
8.எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அகல வேண்டும்
9.சாப வினைகள் நீங்க வேண்டும் பாவ வினைகள் நீங்க வேண்டும்… பூர்வ ஜென்ம வினைகள் நீங்க வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து தீமைகள் அகல வேண்டும்
11.எங்கள் குழந்தை பொருள் காணும் சக்தி பெற வேண்டும்.
12.எங்கள் குழந்தை பொறுப்புணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
13.எங்கள் பார்வை குழந்தையை உயர்ந்தவனாக்க வேண்டும்.
14.எங்கள் சொல் அவனை உயர்ந்தவனாக்க வேண்டும் என்று இதைத் தனக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பின் இதே போல அந்தக் குழந்தையையும் விநாயகரை வணங்கச் செய்தல் வேண்டும். விநாயகர் தத்துவத்தில் காட்டிய முறைப்படி அவனையும் எண்ணத்தால் எண்ணித் தியானிக்கும்படி செய்தல் வேண்டும்.
1.என் அன்னை தந்தையரின் அருளாசி பெற வேண்டும்
2.என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்று அவனும் இங்கே எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பொருளை மையமாக வைத்துத்தான்…
1.குடும்பத்தில் தன்னை அறியாது சிக்கல் ஏற்படும் பொழுது
2.அதை இங்கே வந்து நமக்குள் நிவர்த்தி செய்யும் நிலைக்காகத்தான் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆனால் நீங்கள் எண்ணுகின்ற மாதிரி அந்தக் கடவுள் செய்வார் என்றால் அது இல்லை.

சாஸ்திர விதிப்படி நமது உயிர் கடவுள். “உள் நின்று..” இயக்குகின்றது. நாம் எண்ணிய உணர்வின் சத்தை ஓ… என்று ஜீவனாக்கி ம்… என்று உடலாகி நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது என்ற பேருண்மையை அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக அன்று எடுத்துரைத்தார் அகஸ்தியர்.

எண்ணியதை இயக்கிக் காட்டுவது உயிர். எண்ணிய உணர்வின் தன்மையை தன் உணர்வால் அது கடவுளாக இருந்து இந்த உணர்வின் சத்தை அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் தன்மை கொண்டு அது உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இதைத்தான் கடவுள் என்பது.

“உள் நின்று…” நாம் கேட்பது பார்ப்பது அனைத்தையும் அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த வினைக்கு நாயகனான “நம் உயிரையும் உடலையும்…” – விநாயகனை வணங்காதபடி ஆலயத்திற்குள் நீங்கள் சென்றால் பலன் ஏதும் இல்லை என்று அதனால் தான் சொல்வார்கள்.

பயிர் இனங்கள் சீராக விளையாதபடி மக்கள் மடியும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டனர்

விஞ்ஞான அறிவால் வந்த பேரழிவால் இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்படும் சக்திகளை இழக்கும் தருணங்கள் வந்துவிட்டது.

அதே சமயத்தில் தாவர இனங்கள் அதனுடைய கருவுறும் தன்மையும் இழந்து விடுகின்றது இழந்துவிடும் செயல்களை விஞ்ஞான அறிவால் உலகெங்கிலும் பரப்புகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பகுதியான இடங்களில்…
1.ஒரு தடவை பயிர் விளைந்ததோடு சரி… ஒரு வித்து வந்ததோடு சரி
2.அதில் விளைந்து வரும் வித்தினை மீண்டும் ஊன்றினால் அது மீண்டும் முளைக்காது… அது மலடாகிவிடும்.

நாம் குழந்தைகள் (குழந்தைப் பாக்கியம்) இல்லை என்று சொல்கின்றோம் அல்லவா. அந்த இனம் அழிந்து விடுவது போன்று தாவர இனங்களில் மலட்டுத்தன்மையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

சாதாரண தாவர இனங்களில் விளையும் அந்த சத்தினைக் கவர்ந்து கொண்டு விஷத்தன்மை கொண்ட தாவர இனங்களையும் உருவாக்குகின்றனர்.

முந்தைய ஆரம்பக் காலங்களில் மனிதனுக்கு மனிதன் ஒருவருக்கு ஒருவர் போரிட்டுத் தன்னை வளர்த்துக் கொள்ளச் செய்தனர்.

பின் மந்திர தந்திரங்களை மனித உடலில் விளைய வைத்து மந்திரத்தைப் பதிவு செய்து அந்த ஆன்மா வெளிவந்த பின் அதைக் கைவல்யப்படுத்தி ஆவிகளின் தொடர் கொண்டு ஒருவரை முடக்குவது என்ற நிலைகளில் போர்கள் நடந்தது.

ஆவிகளின் தொடர் கொண்டு செயல்படும் பொழுது பல உண்மைகளும் அறிய முடிகின்றது. மண்ணுக்குள்ளும் மற்ற நிலைகளிலும் ஊடுருவி அதில் உள்ள உண்மைகளை அறிந்து பூமிக்குள் இருக்கும் தாவர இனங்களையும் நீர் நிலைகளையும் உலோகங்களையும் கண்டுணரும் சக்தி கிடைத்தது.

பின் ஆவியின் நிலையில் கொண்டு மனிதனுக்கு மனிதன் எவ்வாறு இருக்கின்றார்கள்..? என்ற நிலையினைக் கொண்டு வருகின்றனர்.

அதே ஆவியின் தன்மை கொண்டு உலகத்தை அடக்கிடும் நிலையாக ஒவ்வொரு அரசும் செயல்பட்டது.
1.அரசை ஆட்சி செய்ய ஆண்டவனை வணங்குவதும்
2.ஆண்டவனுக்கு விரோதிகள் என்று மற்றவர்களைக் கொல்வதும் என்று ஆவியின் தொடர் கொண்டே செயல்பட்டனர்.

இஸ்ரேல் நாட்டில் இருந்து இத்தகைய நிலைகள் பரவி உலகெங்கிலும் பரவியது. இந்தியாவிலும் இது போன்ற நிலைகள் செயல்பட்டது

இதற்குப் பின் தான் உலோகங்களைக் கண்டறிந்து உலோகத்தில் ஆயுதங்களைத் தயார் செய்து அதை கொண்டு செயல்படுத்தினார்கள்.

அந்த ஆயுதங்களை வைத்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொல்வதும் என்ற நிலையில் செயல்படுத்தினர். அதற்குப்பின் வெடிபொருளைக் கண்டுபிடித்து வெடிக்கச் செய்து நாட்டையும் ஊரையும் தகர்க்கும் நிலை வந்தது.

இப்பொழுது…
1.அதைக் காட்டிலும் வீரியத்தன்மையாக அணுக்கதிர்கள் கொண்டு (அணு ஆயுதங்கள்)
2.கதிரியக்கத்தின் தன்மை கொண்டு நாட்டையே சீரழிக்கும் நிலையாக வந்தது.

லேசர் இயக்கம் என்று… மின்னலின் ஆற்றல் எவ்வாறு ஊடுருவி மற்றதைப் பிளக்கின்றதோ அதைப் போன்று
1.அணுக்கதிரியக்கங்கள் துணை கொண்டு லேசரை வைத்து பூமிக்குள் ஊடுருவச் செய்வதும்
2.மின்னல் தாக்கிய பின் கட்டடங்கள் எப்படி தகர்க்கின்றதோ அதைப் போல் பூமியைப் பிளந்து பூமிக்குள் இருப்பதைக் கண்டறிகின்றனர்.

வானில் வெகு தொலைவிலிருந்து கொண்டே தரையில் பூமிக்குள் என்ன எல்லாம் இருக்கிறது…? என்று கண்டறிகின்றனர் விஞ்ஞான அறிவு கொண்டு.

ஆனால் இவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் ஒரு நாட்டில் அங்கே விளையும் தானியங்களையும் தாவர இனங்களையும் விளையாதபடி செய்து விட்டால்
1.அந்த நாடு தனக்கு அடிமை ஆகிவிடும்.
2.மிருகங்களைப் போன்று நாம் ஆட்சி புரியலாம் என்ற நிலையில்
3.விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாடுகள் முன்னேறிச் சென்று விட்டது.

நாட்டுக்கு நாடு தன்னாட்டைக் காக்க மற்ற நாட்டை அழித்திடும் குரோத உணர்வுகள் அதிகரித்துத் தன் இனம் என்றோ… மனிதன் என்றோ அறியாதபடி… கொன்று குவிக்கும் உணர்வுகளே அதிகரித்து… மனிதனுக்குள் வெறித் தன்மையான உணர்வுகள் ஊட்டப்பட்டு…
1.அவனில் விளைந்த அத்தகைய உணர்வுகள் பூமியில் அதிகமாகப் பரவி விட்டது.
2.வெறித்தன்மையாகவும் சிந்தனை இழந்து செயல்படும் தன்மைகளும் தான் உருவாகிவிட்டது
3.மனிதனுக்கு உணவு இல்லாத செய்யும் சில நிலைகளையும் உருவாக்கி விட்டனர்.

ஆப்பிரிக்காவில் காடு வளங்கள் அதிகமாக இருப்பினும் சில பயிரினங்களில் அதனுடைய இனம் பெருகாதபடி செய்துவிட்டனர். அதற்குப்பின் அவர்கள் உணவுக்காக அலையும் நிலை வந்துவிட்டது.

மண்ணுக்குக் கீழ் புல் பூண்டுகளில் இருக்கும் கிழங்கை எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் நிலைகள் அதிகரித்து விட்டது அதுவும் கிடைக்காத பொழுது மடிந்து கொண்டும் உள்ளனர்.

பயிர் இனங்கள் சீராக விளையாதபடி மக்கள் மடிந்து கொண்டுள்ளனர் மழை நீர் பெய்தாலும் விஷத்தன்மைகளை அங்கே பாய்ச்சி விடுகின்றனர்.

மேகங்களில் விஷத்தன்மைகளைத் தூவப்படும் போது அந்த நாட்டில் மழையே இல்லாது போய் விடுகின்றது. இந்த விஷத் தன்மைகள் மேகமுடன் கலந்து உலகெங்கிலும் பரவி விட்டது. மனித இனத்தையே சீர்குலைக்கும் தன்மைகள் வந்து விட்டது.

1.நாகரீகம் என்ற பெயரில் அநாகரீக நிலைகள் தான் உலகெங்கிலும் வளர்ச்சி ஆகிக் கொண்டு வருகின்றது
2.மனிதனுக்கு மனிதன் கொன்று குவித்து ரசிக்கும் தன்மைதான் வளர்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா…?

ஐந்து எழுத்து மந்திரத்தின் உட்பொருள் என்ன…?

பஞ்ச பூத அமிலத் தத்துவம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் “ஜீவன் என்ற உயிராத்ம சக்தி” மூல சக்தியாக வளர்ச்சி பெற்றுப் “பேரருள்” சக்தியில் கலந்திட வேண்டும்.

பேரருள் சக்தியாக ஆகிட சிவ சக்தி கலப்பாகச் சக்திகளை ஈர்த்துச் செயல் கொண்டிருக்கும் பூமியின் தொடர்பில்
1.ஜீவன் கொண்டே நாம் சகல சக்திகளையும் ஈர்த்து
2.மெய் ஞான சக்தியின் வளர்ப்பாக வளர்ச்சிப்படுத்திக் கொள்ள முடியும்.

சூட்சமமாக ஈர்ப்பின் தொடரில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பூமியைப் போலவே
1.நாமும் நம் எண்ண வலுக் கொண்ட சுவாச ஈர்ப்பினால்
2.நம் சரீரத்திலேயே அனைத்துச் சக்திகளும் பெற்று
3.மனதின் திறன் என்ற “வைப்பாற்றல்” பெற்றிடலாம்.
(வைப்பாற்றல் என்றால் நாம் எண்ணிய நேரத்தில் எண்ணியபடி செயல்படுத்தும் தன்மை)

உயிரான்ம சக்தியைச் சூழ்ந்திருக்கும் பஞ்ச பூத சரீர சக்தி… ஓர் முகமாகச் சேமித்துக் கொண்டிடும் சக்தியே “மனோ சக்தி…!”

சரீர பிம்பத்தில் ஐந்து இடங்களில் பரவிக் கிடக்கும் அந்தச் சக்திகளை ஆற்றல்மிகு ஓர்மித்த வழி வகைகளின் செயலே நாம் காட்டும் இந்தத் தியானத்தின் மூலமாகச் சித்திக்கும்.

பஞ்ச பூதங்களை – “நமசிவாய” (சிவமயம்) தத்துவமாகக் காட்டப்பட்டதின் செயலையே மாற்று நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள். அந்தச் செயலை நீக்கிவிட்டு…
1.பஞ்ச பூத ஆற்றல் சக்தியை வீரத்தில் விளைந்த சாந்தமாக உயிர் சக்திக்குள் கலந்து
2.”ஈஸ்வர ஜோதி” என்ற சுயப்பிரகாச ஜோதியாக நிலையைப் பெற்றிடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இதைப் படிக்கும் அனைவரும் கடந்த காலத்தை நினைவில் வைக்காமல் “நிகழ் காலத்தில்… நாம் எவ்வாறு இருக்க வேண்டும்..? என்று எண்ணுங்கள்.

எதிர்காலத்தின் நிலையை உருவாக்குங்கள்.

நிகழ் காலமான இன்று…
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று
2.“நிகழ்ச்சி காலமாக” இதை நிகழ் காலமாக ஒவ்வொருவரும் வைத்துக் கொள்ளுங்கள்.
3.அப்பொழுது… எதிர் காலத்தில் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய “இன்றைய நிகழ் காலமே..” வழியாக அமைகின்றது.

எதிர்காலத்தை இவ்வாறு நிர்ணயிப்போம்.

வேதனை என்ற உணர்வை இந்த நிகழ் காலத்தில் உருவாக்கிவிட்டால் வேதனையின் தன்மை கொண்டு எதிர் காலத்தில் அது தான் செயல்படுத்துகின்றது. வேதனைப்படும் நிலைக்குத்தான் அழைத்துச் செல்லும். ஆகவே,
1.கடந்த காலத்தை மறந்து
2.நாம் நிகழ் காலத்தைச் சீராக வைத்து
3.எதிர்காலத்தின் உணர்வை உருவாக்குவோம்.
4.மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம்.
5.அருள் ஞானத்துடன் திகழ்வோம்… அருள் உணர்வுடன் வாழ்வோம்.
6.இந்த உலகையே… “ஒளி மயமாக்குவோம்”.

இந்த உணர்வின் தன்மை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால் நீங்கள் விடும் மூச்சலைகள் இங்கே பரவப் பரவ ஒவ்வொரு மனிதனும் தெளிவாகும் நிலை வரும்.

அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபடுவர். விஞ்ஞான வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுபடுவர். உணர்வின் தன்மை பிறவியில்லா நிலை அடைவர்.

இந்த உறுதி கொண்டு இந்த வாழ்க்கையின் பயணத்தை நாம் மேற்கொள்வோம். குரு வழியில் செல்வோம். அருள் வழி செல்வோம். அருள் வழி வாழ்க்கை வாழ்வோம்.

ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு உடலிலும் “ஒளி பெறும் உணர்வை… ஈசனாக…” உருவாக்குங்கள்.

ஒவ்வொருவருக்கும் இந்தத் துணிவு வேண்டும்.

மற்றவர்கள் இழித்துப் பேசும் உணர்வுகளைக் கண்டு பணிந்திட வேண்டாம்.
1.அவர்கள் அறியாது இருள்களிலிருந்து மீண்டிட வேண்டும் என்ற உணர்வினை வலுப்படுத்துங்கள்.
2.அவர்களை மெய் வழியில் அழைத்துச் செல்லுங்கள்.
3.அவர்கள் மெய் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாறாக அவர்களின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துவிட வேண்டாம் (இது முக்கியமானது).

இந்த மனித உடலின் வாழ்க்கையின் நிலைகளில் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே நிரந்தரமாக நாம் வாழ்ந்திட வேண்டும்.

அகஸ்தியர் நுகர்ந்த “வியாழன் கோள் சக்தியின் முக்கியத்துவம்…”

ஆற்றின் ஆழம் தெரியாமல் கடந்து சென்றுவிட எண்ணுபவன் செயல் போல் இல்லாமல் இலட்சிய நோக்கில் “விழிப்பாக இரு…!”

பால்வெளி மண்டலத்தின் சக்திகளை ஈர்த்து வலுக் கொண்டு பால்வெளிச் சூட்சமத்தின் பூதியை அறிந்து கொள்ளும் முன்
1.மாமகரிஷிகளின் அருளாசி பெறுவது…
2.சக்தியின் வலுவை வலுவாக்கிக் கொள்வது…
3.புவியின் காந்த நீர் சக்தியை ஈர்த்துச் செயல் கொள்வது என்ற
4.அந்தப் பாடத்தைப் படி… படி… படி… என்று சொன்னதெல்லாம்
5.இந்தப் படி தான்… இந்த வழி தான்…! என்று அறிந்து கொள்ளுதலும்…
6.நீர் சக்தியை வென்று காட்டினேன்… அதனுடன் ஒன்றியும் காட்டினேன்..! என்ற அகத்தியரின் கூற்று தான்.

இதனுடைய சூட்சமம் புரிகிறதா…?

நாம் வாழும் இந்தப் பூமித் தாயின் தொடர்பில் சக்தி பெற்று வலுக் கொண்டு மனிதனாக வளர்ந்த செயலுக்கு அன்று தாயின் பால் அருந்தினாய்.

இன்று சரீர வலுவின் வீரியத்தில் மண்டலங்களின் சுழற்சியினை (விண்ணுலகம்) அறியும் செயலுக்கு… எண்ண வலுவின் நேர் கோட்டில் அறிந்து கொள்ளும் செயலுக்கு
1.பூமித்தாய் புவி காந்த நீர் பாலை அமுதாக்கி அளித்திடக் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
2.வளர்த்து வலுக் கொண்டு சுயப்பிரகாச தனிச் சக்திச் சுழல் மண்டலமாக ஆக்கிடும் உங்கள் செயலுக்கு நானும் ஊட்டிவிட்டேன்…!

அகத்தியர் கூறிய அந்தச் சூட்சமப் பொருளைக் கூறுகின்றேன்.

1.நம் சூரியக் குடும்பத்தில் சுழன்று ஓடும் கோளங்களில் “குரு” என்று சிறப்பித்த வியாழன் கோள்
2.ஆதிசக்தியின் நீர் சக்தி அமில முலாமைத் தன் சக்திக்கு வலுக் கொண்ட செயலின் இரகசியம்
3.தன் ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் நெருங்கி வரும் அத்தனை வளரும் சுழல் சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு
4.அந்தச் சக்தியைத் தன்னுள் ஒன்றச் செய்து… தன் வலுவை வலுவாக்கி… வீரியம் கொண்டே சுழன்று ஓடிடும் செயலில்…
5.அந்த வியாழன் கோள் அலையை ஈர்த்திடும் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அகத்திய மாமகரிஷி அந்தக் கோளின் அலையைத் தன் வீரிய அமில ஈர்ப்பைக் கொண்டு தன் அமில வீரிய முலாமுடன் ஒன்றச் செய்து தன் சக்தியையே வலுக் கொண்டதாக்கிக் கொண்டார்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் என்ற தனித்துவமான மண்டலங்களாகச் செயல் கொண்ட செயலுக்கு “ஜெபத்தின் வேகம்…” என்று சொல்லிய சொல் நாதத்தின் குணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலை வீசாக்கடல் என்ற பால்வெளி சூட்சமத்தில் இப்படித் தனக்கென ஓர் சுய அமைப்பு மண்டலத்தை உருக்கொள்ளும் செயலின் கதிக்கு ஒவ்வொருவரும் வளர்தல் வேண்டும்.

தன் உயிராத்ம சக்தியின் வலுவிற்கு வலுக் கொண்டிடும் ஜெப நிலையில்
1.ஓர்முகப்படுத்தப்பட்ட எண்ண அம்பு…
2.பிரம்மாண்டமாகப் படைப்பின் படைப்பாக எய்தி
3.பூதியில் உருவாக்கப்படும் தன் ஒளி காந்த வட்டத்திற்குள் “ஒளி தீபம்…” ஏற்றப்பட வேண்டும்.

தாயை மகிழச் செய்தால் பேரானந்த நிலையை நாம் பெற முடியும்

நாம் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் வேதனையின் செயலாகவே உயிர் என்னைச் செயலாக்குகின்றது. வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது என் உயிரான ஈசன் உடலான சிவலோகத்தை உருவாக்குகின்றது.

சிவலோகத்தை உருவாக்கும் முன் இந்திரலோகமாக மாற்றுகின்றது அந்த உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

ஆகவே நம் வாழ்க்கையில் எத்தகைய உணர்வை நாம் நுகர வேண்டும்…?
1.அன்னையின் அருள் பெற வேண்டும்
2.நாம் பார்ப்பவை நலம் பெற வேண்டும் நாம் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்
3.என் செயல் அனைத்தும் அனைவரும் மகிழும் செயல் பெற வேண்டும்
4.அந்த அருள் வழியில் இருளை அகற்றிடும் அருள் ஒளி பெற வேண்டும்
5.அனைவரும் அருள் வாழ்க்கை பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்

இவை அனைத்தும் எவரால் உணர்ந்தோம்…?

தாய் தந்தை உயிரே கடவுள் ஆனது…!
1.நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்
2.நம்மைத் தெய்வமாகக் காத்ததும் அன்னை தான்
3.வாழ்க்கையில் நாம் நல்லவனாக வேண்டுமென்று நமக்கு உபதேசித்ததும் அன்னை தான்.

ஆகவே அன்னைக்கு நாம் செய்ய வேண்டிய சேவை என்ன…?

உதாரணமாக தீமை என்ற உணர்வை நாம் எண்ணினால் தீமை செய்யும் ஆன்மாவாக நம் ஆன்மா மாறிவிடுகின்றது.

அன்னையால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் தீமையின் செயலைச் செயல்படுத்தும் போது அதைத் தாய் பார்க்கப்படும் பொழுது வேதனைப்படுகின்றது.

ஆகவே தீமை உருவாகாதபடி…
1.அன்னையின் அருளால் நல்ல அறிவின் ஒளியை நமக்குள் பெற்று
2.அன்னையால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் “தீங்கு விளையாது”
3.அருள் ஒளியின் உணர்வை நமக்குள் வளர்த்து… அன்னையை மகிழச் செய்வதே அன்னைக்குச் செய்யும் சேவை.

அன்னையின் அருள் பெற வேண்டும் என்றால் தாயை மகிழச் செய்யும் தன்மை பெற வேண்டும்.

தாயை மகிழும் செயலாகச் செய்தால்
1.அன்னையின் ஆனந்தம் நமக்குள் பேரானந்த நிலையை ஊட்டும் நிலை பெறுகின்றது
2.ஆகவே வாழ்வில் உணரும் உணர்வை நல் ஒளியின் உணர்வாக நாம் பெற வேண்டும்.

அன்னை தந்தையின் அருளால் அருள் ஒளி பெற்று இந்த வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெற்றுப் பேரொளி என ஆவோம்.

மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று என்னை அறியாது வரும் இருளை நீக்கி
1.என்றும் பேரொளி பெறும் அருள் உணர்வை எனக்குள் பெறுவேன்
2.அருள் ஞானம் பெறுவேன் அருள் வாழ்க்கை வாழ்வேன்
3.குரு அருளால் அந்த அருள் ஞானத்தைப் பெறுவேன்… அகண்ட அண்டத்தையும் அறிவேன்
4.அருள் ஞானத்தை என்னுள் வளர்ப்பேன்.
5.பேரருள் பெறுவேன்… இருளை அகற்றிடும் நஞ்சை வென்றிடும் அருள் ஒளியைச் சேர்ப்பேன்…
6.அருள் வாழ்க்கை வாழ்வேன்… என்றும் ஏகாந்தம் என்ற நிலையைப் பெறுவேன்
7.அன்னையின் அருளால் பேரின்ப ஒளி என்ற உணர்வினை எனக்குள் வளர்ப்பேன்
8.அன்னை அருளால் அருள் ஒளி என்ற உணர்வினை எனக்குள் பெறுவேன்… அருளானந்தம் பெறுவேன்.

மனிதனுக்கு நோய் வருவது… சந்தர்ப்பத்தால் தான்…!

உடலுக்குள் ஒரு வேதனையாகி விட்டால் எம்மா… எப்பா… என்று சொல்வோம். ஆனால் நல்ல நிலைகள் இருக்கும் பொழுது “சம்பாரிக்க வேண்டும்…” என்று எண்ணுவோம். அது தடைப்பட்டால் வேதனை என்ற உணர்வுகள் வந்து விடுகின்றது.

வேதனை என்ற உணர்வு உடலில் விளையப்படும் பொழுது வேதனையை உருவாக்கும் அணுக்களாக உருவாகி விடுகின்றது. அது உருவான பின் அம்மா… அப்பா… என்று வேதனைப்படுகின்றோம்.

சம்பாரிக்க வேண்டும் என்ற நிலையில் தொழில் நிமித்தம் சென்றாலும் ஆசையின் நிலைகள் கொண்டு தன் பையன் சீராக அவன் செயல்பட வேண்டும் என்று எண்ணுவோம். அல்லது குழந்தை இல்லை என்றாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது…
1.தொழில் செய்யும் இடத்திலே தன்னிடம் வேலை செய்யும் ஒருவன் ஏதாவது அவன் செய்தான் என்றால்
2.வெறுப்பாகி… ஏன்டா…… இப்படிச் செய்கின்றாய்…? என்ற வேகமாகப் பேசுவோம்.
3.வெறுப்பைத் தான் அவனிடம் உருவாக்க முடியும்.

முதலாளி வேதனைப்படுகின்றார் நாம் உதவி செய்ய வேண்டும் என்று அவனும் எண்ணுகின்றான்.

ஆனால் முதலாளி சோர்வடைந்து… செயல்கள் குறைந்த நிலையில் நன்மை செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கின்றார். அதே சமயத்தில் வேதனையுடன் இருக்கப்படும் பொழுது… தான் எண்ணியதை வேலை செய்பவன் செயலாக்கவில்லை என்று வெறுப்பான நிலையில் சொல்லப்படும் பொழுது தன்னை அறியாமல் “அவனுக்குள்ளும்…” வெறுப்பு அதிகரிக்கிறது.

பாலுக்குள் பாதாமைப் போட்டாலும்… இனிப்பைப் போட்டாலும்… அதற்குப் பின் விஷத்தைப் போட்டுவிட்டால் பாதாமிற்குச் சக்தி இல்லாமல் போய் விடுகிறது. குடிப்போரை மயங்க வைக்கத்தான் செய்யும்.

அதைப் போன்று நல்ல குணங்கள் இங்கே இருப்பினும் வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது நல்லது மடிந்து விடுகின்றது.
1.மீண்டும் தன் நினைவாற்றல் கொண்டு கடுமையாகச் சொல்லப்படும் பொழுது அவன் வேதனை உணர்வுகளை நுகரத் தொடங்குகின்றான்.
2.முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பகைமைகளை ஊட்டி விடுகின்றது.

இதிலிருந்து நாம் எப்பொழுது மீள்வது…? செயின் தொடர் போன்று ஒன்றிலிருந்து ஒன்று தொடர்ந்து வருகின்றது.
1.வேதனை வேதனை என்று எடுத்தால் “கேன்சர்”
2.வேதனை வெறுப்பு என்று வரப்படும் பொழுது நல்ல குணங்களைக் கொல்லும் “டி.பி.”
3.வேதனை வெறுப்பு என்ற நிலைகள் நல்ல சுவாசத்திற்குள் இணைந்தால் “ஆஸ்த்மா”
4.அந்த அணுக்களின் தன்மை பெருக்கி அதனின் மலத்தைக் கூட்டும் போது நாம் சுவாசிக்கும் நிலையில் அடைப்பு… “மூச்சுத் திணறல்”
5.வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் கலந்து “உப்புச் சத்து” அதிகரிக்கின்றது.
6.அந்த உப்புச் சத்துகள் இரத்தத்தில் உறையப்படும் பொழுது இரத்தத்தின் வேகத் துடிப்பு கூடி “இரத்தக் கொதிப்பாகின்றது”
7.இரத்தங்கள் சீராகச் செல்லாதபடி அழுத்தத்தின் தன்மை கூடி… நகர்ந்து செல்லும் போது மற்ற உறுப்புகள் வேகமாகத் தனக்குள் ஈர்க்கும் சக்தி வரப்படும் போது அது முடியாத தன்மை வரும் பொழுது திணறல் “மயக்கம்…”
8.இப்படி மகிழ்ச்சி என்ற உணர்வின் தன்மை இழக்கப்படும் பொழுது நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) – எதிர்மறையான விளைவுகள் வந்து விடுகிறது.

பாலில் வெண்ணெய் என்ற சத்து இருந்தாலும் பால் பிருத்து விட்டால் அதனின் செயல் இழக்கப்படுகின்றது… வெண்ணெயை எடுக்க முடியுமா…? முடியாது.

இதைப் போன்று தான் நமக்குள் இருக்கும் இரத்தங்களில் நல்ல குணத்தின் தன்மையைப் பிரித்து விடுகின்றது… நல்ல குணங்கள் மடிந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் உருவாகாதபடி நம் உடலை நாம் எப்படிப் பண்படுத்த வேண்டும்…?
1.நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்தல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டவன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். நல்லதாக நாம் தான் மாற்ற வேண்டும். எப்படி…?

இயற்கை… சந்தர்ப்பம்…
1.நாம் நுகர்வதை எல்லாம் நமது உயிர் பிரம்மமாக உருவாக்குகின்றது.
2.தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அதனின் உணர்வை நமக்குள் உயிர் உருவாக்கிவிடும்.
3.சிந்திக்கும் திறனும் நம்மை அறியாது வரும் நோய்களை அகற்றும் அருள் சக்தியும் நாம் பெறுகின்றோம்.
4.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த நஞ்சினை அடக்கும் நிலையாக அவன் எவ்வாறு பெற்றானோ…
5.அருள் ஒளி என்ற உணர்வை இணைத்து ஒளி பெறும் அணுக்களாக விளைந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் எப்படிப் பெற்றானோ…
6.அதே போன்று நமது வாழ்க்கையில் அதைப் பெறுதல் வேண்டும்.

அகஸ்தியன் பெற்ற “கன நீரின் சக்தி”

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழியமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி…!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி… இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்… பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
5.அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது…!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர்ச் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ… நீர் மேல் அமரும் செயலில்… ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை… அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு… அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்…
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்…
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி… அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து…”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகின்றது என்று அறிந்து கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.

மேலும், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் எப்பகுதியில் எந்தெந்த இடங்களில் அவன் உணர்வுகளும் மூச்சலைகளும் பதிவாகியுள்ளதோ அங்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்றார்.
1.அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் பேருண்மைகளை அறியச் செய்தார்.
2.அவர் காட்டிய வழியில் உண்மைகளை அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது.

அறிந்து கொண்ட பின் எனக்குள் மட்டும் வளர்ந்தால் போதுமா..,? “நீங்களும்… அதைப் பெற வேண்டும் அல்லவா”.

ஆகவே, “எல்லோரையும்… அதைப் பெறச் செய்…” என்றார் குருநாதர்.

ஆனால். நீ சுயநலம் கொண்டு நான் வளர்த்துக் கொண்டேன்… “நான் பெரிய மகான்” நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்… என்று உனது பெருமையைக் காட்டினால் உனக்குச் சிறுமையே வரும்.

ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்தும்படி..,” நீ இதைப் பெறச் செய்தால் நீ உயர்கின்றாய்.., அவர்களை உயர்த்துகின்றாய். அந்த உயர்ந்த நிலைகளை நீ நுகர்கின்றாய்.

அவர்களும் உயர்கின்றனர்… அப்பொழுது நீயும் உயர்கின்றாய்… ஆக இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்.

நீ இத்தனையும் கற்றுணர்ந்தபின் எல்லாம் செய்த பின்… “நான் தான் இதையெல்லாம் செய்தேன்…” என்ற “அகம்” எப்பொழுது உனக்குத் தோன்றுகின்றதோ அப்பொழுது உண்மையை அறியும் தன்மையினை இழக்கின்றாய்.

1.“ஒருவர் உயர வேண்டும்” என்ற உணர்வினை எப்பொழுது நீ ஊட்டுகின்றாயோ
2.“அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்” என்று ஆசைப்படுகின்றாயோ
3.அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ… அந்த அருள் ஞானத்தை உருவாக்குகின்றாயோ…
4.உருவான அந்த உணர்வு “உன்னை… வலுவாக்கும்”.

அதே சமயத்தில் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களையும் காக்கும் நிலை வருகின்றது.

ஆகவே நீ இதை எவ்வாறு செய்யப் போகின்றாய்..,? எவ்வாறு வெளிப்படுத்தப் போகின்றாய்…? கடும் தீமைகள் எதிர்த்துத் தாக்கும் உணர்வின் உலகில் நீ வாழ்கின்றாய். இதிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…?

இப்படி அடிக்கடி எனக்குள் வினாக்களை எழுப்பி அந்த உண்மைகளை உணர்த்தி அகஸ்தியரின் அருளாற்றல்களைப் பெறும்படி செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

கடைசி நிலையில் இன்று நாம் இருக்கின்றோம்

நம்மை அறியாது தவறுகள் ஏற்பட்டாலும் அதை மாற்றி அமைப்பதற்குத் தான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானப் பயிற்சியே. அதை வைத்து நல்லதாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்ந்து விட்டால்
2.எந்தத் தீமையும் உங்களுக்குள் வராதபடி அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.

கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாகக் கழுவுகின்றோமா இல்லையா…? துணியில் அழுக்குப்பட்டால் துவைக்கின்றோமா இல்லையா…? வீட்டில் தூசி வந்தாலும் அதைத் தூய்மைப்படுத்துகின்றோமா இல்லையா…?

நேற்றுத் தான் கூட்டினேன். இன்று மறுபடியும் தூசி வந்து விட்டது என்று சொல்லி மறுபடியும் கூட்டாமல் விட்டுவிடுவீர்களா…?

அது போல் தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் (ஆன்மாவில்) அழுக்குகளாகச் சேர்ந்து விடுகிறது. அதைத் தூய்மைப்படுத்தத் தான் ஒவ்வொரு நிமிடமும் “சக்தி வாய்ந்த ஆயுதத்தை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி எடுத்துச் சுத்தப்படுத்திப் பாருங்கள்.
1.உயிருடன் ஒன்றிய அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொள்ளுங்கள்
2.பிறவி இல்லாத நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
3. உங்களை எல்லாம் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து விட்டோம்
4.அனுதினமும் தியானத்தின் மூலம் அந்தச் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

முந்தி எல்லாம் வேகமாகச் சொல்லிக் கொண்டே போவேன். அர்த்தமாகவில்லை என்று விட்டு விடுவார்கள். இப்பொழுது பொறுமையாக நிறுத்தி நிதானமாகப் பதிவு செய்கின்றேன்.

ஏனென்றால் சில விஷயங்களை நேரடியாகச் (PUBLIC) சொன்னால் தவறான வழிகளுக்கு அதைக் கொண்டு சென்று விடுகிறார்கள்
1.ஆனால் உங்களுக்கு அந்த உண்மைகள் கிடைக்கவும் செய்ய வேண்டும்
2.தவறான எண்ணங்களில் வருவோருக்கு அதைக் கிடைக்காதபடியும் செய்ய வேண்டும்.

ஒரு திருடன் என்ன செய்வான்…?

நான் இன்னாரைப் பார்த்து வந்தேன். அவர் மிகவும் நல்லவர். எனக்கு உதவி செய்தார். உங்களை பற்றிப் போற்றிப் பேசினார் என்று எதையாவது இரண்டை நம்மிடம் சொல்லிவிட்டு அதன் மறைவிலே தனக்கு வேண்டிய பொருளை நம்மிடமிருந்து அவன் வாங்கிச் சென்று விடுவான்
1.அதாவது நம்மை ஏமாற்றி விட்டுச் செல்வான்
2.ஏமாற்றுவதற்காக அப்படிப் பேசுவோர் உள்ளார்கள்
3.ஒவ்வொரு காரியங்களிலும் ஏமாற்றிய பழகியிருக்கின்றார்கள்.

ஆகையினால் தான் உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம். தனித்தன்மை வாய்ந்ததாகவே இப்பொழுது உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

இது ஒவ்வொரு நிமிடமும் உங்கள் சிந்தனைகளை உயர்வாக்கும்… தெளிவாக்கும். தீமைகளை அகற்றும் வல்லமை பெறுவீர்கள்… பேரருளை உங்களால் பெருக்க முடியும். அனைத்து உணர்வுகளும் ஒளியாக மாறும்.

கடைசி நிலையில் நாம் இருக்கின்றோம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அதை மாற்றி மாற்றி மாற்றி ஒளியாகக் கொண்டு வர வேண்டும்

தீமையிலிருந்து தப்பும் உணர்வுகளை எடுத்து எடுத்துத்தான் மிருகங்கள் மனிதனாக வருகின்றது. மனிதரான பின் கோடிக்கரை…! தீமைகளை வென்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதை எடுத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிக் கொண்டே வந்தால் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது.
1.சிறு பிழைகள் வந்தாலும் அது நமக்குள் வளர்ந்திடாது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கண்ணும் கருத்துமாகப் பேணிக் காத்தால் தான் ஞான வித்தின் மகசூல் காண முடியும்

உதாரணமாக கரும்பு பயிரிடும் ஒரு விவசாயி தான் பெறும் மகசூலை எத்தன்மை கொண்டு பாதுகாப்பாகப் பெறுவது…? என்பதிலும் நம் உயிரான்ம சக்தியின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்…” உள்ளது.

பூமியைப் பண்படுத்திச் செப்பனிட்டு உரமிட்டுக் காலமறிந்து கரும்பின் வித்தைப் பயிரிடும் செயலில் கரும்பு வளரத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பாதுகாப்பாக அந்த வித்தை வளர்த்திடும் தொடர் வேண்டும்.

தேவையான நீரை விட்டுக் கரும்பு வளர்ந்து வரும் காலகட்டத்தில் “சோகைகள்…” என்ற கரும்பின் இனத் தன்மைகள் அகற்றப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படாவிட்டால்
1.சிறு உயிரினங்கள் அதனுள் வாசம் செய்து கரும்பின் சுவையைக் கெடுத்துவிடும்.
2.அதனால் நல்ல பலன் பெற முடியாது.

நீர் பாய்ச்சும் செயலிலும் இயற்கையாக அதி தீவிர மழை நீர் பெய்து விட்டால் அவை நிலத்தில் தங்கினால் கரும்பில் நீர் சக்தி கூடி விடும். சுவை குறைவுபடும். ஆகவே தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும்.

பக்குவ காலத்தில் கரும்பை அறுவடை செய்யாமல் நாட்கள் என்ற கணக்கின் தொடர் நீண்டுவிட்டால் அந்தக் கரும்பின் சுவை சத்து ஈர்க்கப்பட்டு
1.கரும்பின் பூ என்ற தொடர் வளர்ச்சி ஆக்கும் செயலில்
2.வேண்டோடுதல் என்ற சொல் நாம குணத்திற்கொப்ப
3.அந்தக் கரும்பின் சுவை குணம் நீங்கிப் பலனில் மாற்றம் ஏற்படும்.

மனம் என்ற வயலைப் பக்குவப்படுத்தும் ஞானி… களைகளைக் களைந்து… தன் செயலில் ஒழுக்கம் என்ற பாத்தியிட்டு… நற்பண்பு என்ற ஜெப நீரைப் பாய்ச்சி… ஞான வித்தாம் கரும்பினைப் பயிர் செய்திடும் பக்குவம்… ஞானப் பயிர் காக்கப்பட வேண்டும் என்ற செயலுக்கு ஞான வித்தை ஈர்த்திடும் செயலே… விவசாயி கரும்பின் பயிரைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகின்ற வழி முறை போல் இருந்திடல் வேண்டும்.

ஞானப் பயிர் வளர்த்திடும் மனதில் தேவையற்ற களைகள் அகற்றப்பட்டு நல்லொழுக்க நீர் என்ற ஜெபம் என்ற சக்தித் தொடரினால் “நேர் செய்யப்பட வேண்டும்…!”

அப்படிச் செயல்படுத்தினால் பயிர் தனக்குத் தேவையான ஆகாரத்தைப் பூமியிலிருந்து பெற்றுச் சமைத்து வளர்வதைப் போல் நாம் தியானத்தின் மூலம் ஈர்த்திடும் எண்ண ஜெப நீரால் ஞானப் பயிர் நல்லொழுக்க முறைச் செயலுக்கு வளர்ச்சி பெற்றிடும்.

உலகோதய வாழ்க்கை முறை எதிர் மோதல் என்ற… கடும் மழைக் காலம் மிகுந்து விட்டாலும் விவசாயி பயிர் செய்யும் பூமியில் மழை நீர் தேங்கி அந்தப் பயிர் அழுகிப் போகாமல் நீரை நீக்கிட முற்பட்டும் ஓர் வழி அமைத்து வெளியேற்றுவது போல்
1.உலகோதய மழை நீர் தேங்கி
2.ஞானப் பயிர் வளர்ப்பின் முறையில் மாறுபாடு ஆகாதபடி
3.நாம் சுட்டிக் காட்டும் தியான வழித் தொடரில் அந்தத் தீமைகள் அனைத்தும் நீக்கப் பெற்று
4.நல்லாக்கம் பெறும் முயற்சியாக விவசாயி தன் பயிரைக் காத்திடும் செயல் போல் அமைத்திடல் வேண்டும்.

சரீரத்தில் வந்து மோதும் எதிர் அலை மோதல் ஈர்ப்பின் செயல் உடலிலிருந்து கழிவுகள் நீக்கப்படா விட்டால் எதிர் மோதல் குணத் அமிலத் தன்மைகள் சரீரத்தில் தங்கிப் பிணியாக உடலில் மாறிவிடும்.

ஆக உயரிய ஞான வளர்ப்பின் பயனைப் பெறுவதிலும் தடங்கல் ஏற்படாத செயலுக்கு எதிர் மோதல் குணங்கள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

கரும்பின் கழிவு என்ற சோகைகள் அடர்ந்து வளர்ந்து விட்டால் அதனுள் வாசம் செய்யும் சிறு உயிரினங்கள் தன்மை போல்
1.வாழ்க்கையில் வரும் எதிர் நிலையான குணங்கள் செயல்பட்டு
2.அந்தச் சிறு உயிரினங்களால் கேடுகள் உண்டாகிக் கரும்பின் பயிர் இனிய குணச் சுவையை நீங்கி புளிப்பின் சுவையைப் பெறுவது போல்
3.ஞான வளர்ச்சியின் செயலில் ஆகாதபடி “அதி தீவிர எண்ண வலு என்ற பாதுகாப்பு அவசியம்…!”
4.ஒவ்வொருவரும் விவசாயி போல் ஞானப் பயிரைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்தல் வேண்டும்.

அறுவடை செய்த கரும்பினைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கரும்பின் சுவை குணத்தில் உண்டாக்கப்படும் பல்பொருள்கள் என்ற செயலுக்கு முன்பே கடும் மழையால் அறுவடை செய்யப்பட்ட பயிர் நீரினுள் மூழ்கிவிட்டால்… பயிர் காக்கப்படா விட்டால் பலனை எப்படிப் பெற முடியும்…?

விவசாயியினால் காக்க முடியாமல் போன பலனை… பாதுகாப்பற்ற செயலின் தன்மை கொண்டு கேட்பாரற்று நீரில் மூழ்கிவிட்ட பயிரினை… ஒரு வியாபாரி பொருளுக்காக விற்பதின் செயலினால் விவசாயி என்ன செய்ய முடியும்…?

ஏனென்றால் அந்தக் கரும்பின் புளிப்பின் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்திடும் பொழுது தான் பயிர் செய்த நிலத்தின் பலனை
1.சோர்வு என்ற சலிப்பு என்ற சங்கட அலை உந்தும் செயலினால்
2.தன் முயற்சியில் பாதுகாப்பற்ற செயலினால்
3.தன் பயிரைத் தானே விலை கொடுத்து வாங்கிடும் செயல் நிகழ்வுகளின் வேடிக்கைகளை என்னவென்பேன்…?

அதாவது ஞானப் பயிர் யாருக்கு உரியதோ அவரின் முயற்சி இன்மையினால்… உலகோதய வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றின் செயல் குண நிகழ்வுகளின் மாற்றம்… எண்ணம் கொண்டு செயல்படுவதால் மனம் என்று கூறுவதெல்லாம் மன எண்ணச் செயல் நிகழ்வால் “மனமே பகை…!”

பகை என்ற தனித்துவம் ஞானத்தில் இல்லை என்ற செயல் உண்மை வாய்ந்தது. எதிர் மோதல் பகை என்ற குணங்கள் தாக்கினாலும் ஞானியின் ஈர்ப்பின் செயலில் உண்மையின் உயரிய உயர் ஞான எண்ண வலு பெற்றிருப்போன் அந்தப் பகை குண அமிலத் தன்மைகள் தன் ஞானத்தில் மோதினாலும் அனைத்தையும் அது துகள்களாக்கிவிடும்.

ஞானச் செல்வங்கள் பெற்றிடும் உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு
1.எந்த வித எதிர் மோதல் குணங்களும் தாக்கிடாத வண்ணம்
2.பக்குவப்படுத்தப்பட்டுச் செயல்படும் நிகழ்வனைத்தும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி என்ற எண்ண வலுத் தொடரில் நிலை பெற்று நின்று வளர்ப்பின் வளர்ப்பாக்கி
4.பேரண்டக் கோளத்தையே உருவாக்கிடும் செயல் சக்திக்கு… சக்தியின் முயற்சிக்கு… “என்றும் எனது ஆசிகள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அனுபவங்கள் பெறுவதற்காக காடு மலை மேடெல்லாம் அழைத்துச் சென்றார் குருநாதர்.

காட்டுக்குள் உன்னை அழைத்துச் சென்றதும் உனக்குள் துன்பப்படுத்தும் உணர்வுகள் ஏன் வருகின்றது…? என்று தெளிவுபடுத்தினார் குருநாதர்.
1.நானும் இதைத்தான் பெற்றேன்
2.“துன்பத்தில்தான்.., இன்பத்தைக் கண்டேன்…”
3.துன்பத்திலிருந்துதான் இன்பத்தைப் பெறும் அணுக்களை நீ உருவாக்குகின்றாய் என்றார்.

நீங்கள் இந்த உபதேசங்களைக் கேட்கும்பொழுதும் படிக்கும் பொழுதும் வீட்டில் சங்கடமென்றோ வெறுப்பென்றோ அதன் மேல் நினைவினைச் செலுத்திடாது அருள் ஒளியின் உணர்வினை நீங்கள் பெறுங்கள்.

அப்படிப் பெற்றால் துன்பத்தை நீக்கிடும் அருள் ஒளியின் உணர்வுகளை உங்கள் உயிர் “அந்த உயிரான ஈசன்.., கருவாக உருவாக்கி” அருள் உணர்வினை வளர்க்கச் செய்யும் இச்சக்தி பெறுகின்றது.

நீங்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.

ஆகவே உபதேசத்தைக் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும்..
1.என் உடல் நிலை சரியில்லை…
2.என் மனதே சரியில்லை…
3.என்னால் ஒன்றும் முடியவில்லை… என்ற எண்ணத்தைச் செலுத்தாதீர்கள்.

உபதேச வாயிலாக நுகரும் உணர்வுகள் உங்களுக்குள் இருக்கும் துன்பத்தைப் போக்கும். அந்த அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

அதே சமயத்தில் இப்பொழுது “கால் வலியாக இருப்பினும் சரி.., உடல் வலியாக இருப்பினும் சரி.. அல்லது எத்தகைய நோய் கொண்டவராக இருப்பினும் சரி.. சிறிது நேரம் இதைக் கூர்ந்து பதிவாக்குங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் பெற்ற அந்த உணர்வை நுகர்ந்து உணர்வினை யாம் வெளிப்படுத்துகின்றோம்.

அந்த உணர்வுகளை உந்தச் செய்யும்போது அதனின் நினைவின் ஆற்றல் கண்ணுக்கு வந்து ஞானிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

அதன் வழி உங்கள் உடலில் தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வுகள் படர்ந்து அதை அடக்கிடும் நிலை வரும் பொழுது அதை அடக்கிடும் அணுக்களாக உங்களுக்குள் பெருகும்.

இதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று தான் மணிக்கணக்கில் செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

உங்களுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நுகரச் செய்யவும் அணுக்களாக உருப்பெறச் செய்யவும் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம். துன்பத்திலிருந்து மீட்டிக் கொள்ளும் ஆற்றல்கள் உங்களிலே பெருகும்.

துன்பத்திலிருந்து மீட்டிய உணர்வுகள் உங்களிடமிருந்து மூச்சலைகளாக வெளிப்படும் பொழுது மற்றவர்களுக்கும் நல்ல உணர்வாகப் படரும். அதைச் சுவாசிக்கும் பொழுது துன்பத்திலிருந்து அவர்களும் விடுபடுவர்.

அறியாமல் வரும் துன்பங்களிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்திகளை ஒவ்வொருவரும் பெறும் நிலைக்குத்தான் “எழுத்தறிவு இல்லாத அக்காலங்களில்… ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்”.

ஆனால் இன்று சாங்கிய சாஸ்திரமாக “யாரோ செய்வார்..” என்ற நிலையில் தான் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

1.நாம் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது… நம் உடலாக மாற்றுகின்றது
2.உடலுக்குள் உருவான அனைத்தையும் நம் உயிரே குருவாக நின்று இயக்குகின்றது
3.இது தான் ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திரங்கள்.

துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே… இப்படி ஆகிவிட்டதே…” என்பதை எண்ணாமல் அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற வேண்டும்” என்று இச்சைப்பட்டால் துன்பங்கள் நீங்கி அங்கே மகிழ்ச்சி நிச்சயம் உருவாகும்.
1.எண்ணியதை… எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்… நம் உயிர் தான்…”
2.நம் உயிர் அதை உருவாக்கிக் கொடுக்கும்.

மந்திர ஒலிகளுக்குள் என்றுமே நாம் சிக்கக் கூடாது

சாமிக்கு சக்தி ஏற்றுகிறேன்…! என்று சொல்லிக் கோவிலிலே யாகம் செய்யும் பொழுது அதிலே புடவைகளைப் போடுவார்கள்… பட்டாடைகளைப் போடுவார்கள்… உணவுப் பொருள்களை எல்லாம் போடுவார்கள். பல வாசனைப் பொருட்களையும் போட்டுப் பொசுக்கி புகையை எழுப்புவார்கள். போடும் போது மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அதை எல்லாம்
1.நாம் கண்களில் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்… அதை நாம் சுவாசிக்கின்றோம்
2.அந்த வாசனையுடன் சேர்த்து மந்திர ஒலிகளும் நம் செவிகளிலே படுகின்றது
3.செவி… அந்த மந்திர ஒலிகளைக் கவர்கின்றது…
4.உயிரிலே படுகின்றது… உணர்ச்சிகள் கவரப்படுகின்றது
5.இப்படிப்பட்ட உணர்வுகள் ஆனபின் இதற்குப் பெயர் “வசியம்”
5.நாம் எண்ணி எடுக்கக்கூடிய எண்ணங்கள் அதர்வண…
6.அதாவது நம் எண்ணங்களை மாற்றி… அவர்கள் செய்வதை நமக்குள் ஏற்றி நம்மை வசியப்படுத்துகின்றார்கள்.

புரிந்து கொண்டீர்கள் அல்லவா…!

யாகத்தில் என்னென்ன சொன்னார்களோ அது எல்லாம் பதிவாகி விடுகின்றது… உடலிலே சேர்ந்து விடுகின்றது. மீண்டும் இதையே எண்ணி எடுத்து நாம் அர்ச்சனை அபிஷேகம் என்று மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருப்போம்.

அந்தச் சாமி நமக்குச் செய்யும் என்ற எண்ணத்தில் தான் போகின்றோம்.
1.கோவிலிலே சாமிக்கு சக்தி ஏற்றுவதாக அவர்கள் சொல்வார்கள்
2.ஆனால் யாருக்குச் சக்தி ஏற்றுகிறார்கள் என்றால் உங்களுக்குத் தான் ஏற்றுகிறார்கள்.

அர்ச்சனை செய்தால் இந்தச் சாமி நமக்கு எல்லாம் செய்யும். வாழ்க்கையில் ரொம்பக் கடினமாகிவிட்டால்… யாகத்தைச் செய்தால் சாமி நமக்குச் செய்யும்…! என்று இப்படித்தான் ஆலயத்திற்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

வசியம் எல்லாம் செய்த பிற்பாடு இந்த வாழ்க்கையின் முடிவில் இறந்த பின் என்ன செய்வார்கள்…? மந்திரத்தைச் சொல்லி அதில் என்னென்ன பொருள்களைத் தீயிலே போட்டுக் கருக்கினார்களோ… இதையே புகை மூட்டத்தின் மூலம் அதே மந்திரத்தைச் சொன்னால் (இறந்தவர் சொன்ன) அந்தப் பக்தி கொண்ட ஆன்மாக்கள் மந்திரம் சொல்வோருக்குக் கைவல்யமாகி விடுவார்கள்.

அக்காலத்தில் அரசர்கள் செய்த முறைகள் இது.

அரசன் இதை எடுத்துக் கொண்ட பிற்பாடு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உங்கள் உணர்வை… உங்கள் உயிரை… எப்படி எல்லாம் வேலை வாங்க வேண்டுமோ… அதை அவன் செய்வான். இல்லை என்றால் அவன் உடலுக்குள் போகலாம்.

அதை வைத்துப் பில்லி சூனியம் ஏவல் என்ற வேலைகளுக்குப் பயன்படுத்துவான். சில கருத்தன்மை உயிரிலே பட்டபின் அதற்குத் தகுந்த மாதிரி வேலை செய்யும். இது எல்லாம் மந்திரவாதிகள் செய்வது… அதையேதான் அரசர்கள் செய்தார்கள்.

நாடி என்ற நிலையில் அரசனுடன் பழகப்படும் பொழுது அதை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. இதே போன்று இன்னொரு குட்டி அரசன் செய்தான் என்றால் நாடி சாஸ்திரத்திலே மந்திர ஒலிகளாக எழுதி வைப்பான்.

மந்திரத்தைச் சொன்னால் சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் அவன் கூடு விட்டு கூடு பாயும் நிலையாக அரசன் செய்வான். அதற்குண்டான உணர்வுகளைத் தான் பதிவு செய்கின்றார்கள்.

பின் அந்த நாடியை எடுத்து வாசிப்பார்கள். அதிலே ஒரு முட்டையை வைப்பார்கள். வாசித்து முடித்த பின் முட்டைக்குள் அந்தக் கரு இருக்காது. அப்படி என்றால் அந்த உடலுக்குள் அவன் வந்து விட்டான்…! என்று அர்த்தம்.

அவன் வந்த பிற்பாடு…
1.இவன் சொல்லக்கூடிய வாக்குகள் அனைத்தும் பலிக்கும்.
2.நாடியில் எழுதி இருக்கும்… அதை அவன் சொல்லிக் கொண்டே போவான்
3.இன்னார் கூட வந்தேன்… இந்த மாதிரி வந்தேன்… இப்படியெல்லாம் இருந்தது… என்று கட கட… என்று சொல்லிக் கொண்டே போவான்.

இதைத் தான் நாடித் துடிப்பு என்று சொல்வது. நாடி என்றால் துடிப்புக்கொப்ப உயிர் ஆகின்றது.

அரசன் அவன் வாழும் காலத்தில் அந்த உடலில் சுகங்களை எப்படி அனுபவித்தானோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்து இங்கே இந்த மனித ரூபத்தில் மீண்டும் அனுபவிப்பான். இது சாகாக்கலை.

ஆனால் ஞானிகள் காட்டியது இது அல்ல. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் பெருக்கிக் கொண்டே வந்தால் அது வேகா நிலை.

நெருப்பிலே ஒரு மனிதன் குதித்தால் உயிர் வேகுவதில்லை ஆனால் உடல் கருகுகின்றது. கருகிய உணர்வுடன் வெளியிலே வரும் போது தன் நண்பன் மேலோ… அல்லது இன்னொரு பாசம் கொண்டவர் மேலோ… “இந்த உடலை விட்டுப் போகிறேன்…” என்ற வேக உணர்வுடன் சென்றால் போதும்.

அந்த உடலுக்குள் சென்றுவிடும். பின் “ஐய்யய்யோ… எரிகின்றதே…!” என்று சொல்லி அந்த எரிச்சல் தாங்காதபடி நெருப்பை வைத்து அவனும் தற்கொலை செய்து கொள்வான். இது எல்லாம் சாகாக்கலை.

1.ஆகவே மந்திர ஒலிகளிலே நாம் என்றுமே சிக்கக் கூடாது
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பற்றுடன் பற்றி
3.உயிரைப் போன்றே நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி வேகா நிலை பெற வேண்டும்.

ஞானிகள் நமக்குக் காட்டியது அதுதான்…!

சித்தன் போக்கு… சிவன் போக்கு

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!
3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

ஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமியை நம்புகின்றோம் சாமியாரை நம்புகின்றோம். ஜோசியத்தை நம்புகின்றோம் மந்திரத்தை நம்புகின்றோம் நல்ல நேரம் வருகின்றதா..,? கெட்ட நேரம் வருகின்றதா..,? ஜாதகம் பார்த்துத் திருப்பூட்டுகின்றோம்.

1.ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்த எத்தனை பேர் ஒன்றி வாழ்கின்றனர்..,? எத்தனை பேர் மரணமடைகின்றனர்…?
2,சாமிக்கு அபிஷேகமும் ஆராதனையும் அதே சமயத்தில் பாவத்தைப் போக்க எத்தனையோ யாகங்களைச் செய்கின்றார்கள். அவர்கள் எல்லாம் மடியாமல் இருக்கின்றார்களா..,?
3.துன்பங்கள் போய்விட்டதா..? சற்றுச் சிந்தியுங்கள்.
4.நம் எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றது…!
5.இந்த உடலில் இச்சைக்குத்தான் நாம் செயலாக்கிக் கொண்டுள்ளோம்.

நம் உடல் எவ்வாறு உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றுகின்றதோ அதைப் போல நஞ்சின் தன்மை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.

அதை “எல்லோரும் பெறுவீர்கள்” என்ற நம்பிக்கையில் தான் இதைப் பாய்ச்சுகின்றேன். குரு அருளைத் திரு அருளாக மாற்றி “அனைவரும் அருள் பெறும் மக்களாக” நீங்கள் உருவாக வேண்டும்.

1.உங்கள் பார்வையில் இருளைப் போக்க வேண்டும்.
2.உங்கள் பார்வையில் துன்பங்கள் போக்க வேண்டும்.
3.உங்கள் பார்வையில் பிணிகள் போக வேண்டும்.
4.உங்கள் சொல்லில் பிறருடைய இன்னல்கள் நீங்க வேண்டும்.
5.உங்கள் செயல்கள் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்.
6.உங்கள் செயல்கள் மற்றவர்களை உயர்த்தும் நிலைகள் வரவேண்டும்.

அந்த வளர்ச்சியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று “குரு அருள்… எமக்கு உபதேசித்த உணர்வை” உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

ஆயுள் மெம்பர் என்றால் வெறுமனே அல்ல… ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்

பூமியில் உயிரணு தோன்றி பல உடல்களைப் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆனபின் முதல் மனிதன் அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது விஷத்தை வென்றிடும் சக்தி பெற்றான்.

அவன் பிறந்த பின் எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான். அவனின் வளர்ச்சியில்
1.வானுலகில் வரும் மின்னல்களைத் தனக்குள் நுகர்ந்து
2.உயிரைப் போலவே உணர்வை ஒளியாக மாற்றினான்.

கணவன் மனைவியும் இருவரும் சேர்ந்து துருவத்தின் வழி வரும் ஆற்றல்களைக் கவர்ந்து ஒளியின் சரீரமாக ஆகி நம் பூமியின் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்… வளர்கின்றார்கள்.

அதிலிருந்து வரும் சக்திகளைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக இணைக்கின்றோம்
2.இணைத்தாலும் வெறுமனே ஆயுள் மெம்பராக இருக்கக் கூடாது.

குடும்பத்தில் ஆனாலும் சரி… அல்லது புறத்திலே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி… அல்லது தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி…
1.வேதனைப்படுவதோ வேதனைப்படுத்துவோரைப் பார்ப்பதோ…
2.சாபம் விடுவோரைப் பார்ப்பதோ அல்லது சாபமிடும் நிலைளுக்கு நாமே ஆளாகுவதோ…
3.இது எல்லாம் நுகர்ந்து… நுகர்ந்த பின் தான் அறிகின்றோம்
4.அறிந்து கொண்டாலும் அது நமக்குள் உருவாகாதபடி… விளையாதபடி ஆயுள் மெம்பர்கள் முதலிலே தடுத்து பழக வேண்டும் (இது முக்கியம்).

ஒரு வித்தை வேக வைத்தால் அந்த வித்து மீண்டும் மண்ணிலே ஊன்றினால் முளைக்காது. வேக வைத்த பொருள்கள் எதுவுமே மண்ணிலே போட்டால் முளைப்பதில்லை.

ஆகவே இந்த வாழ்க்கையில் வேதனையோ சலிப்போ சங்கடமோ கோபமோ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்ட நிலையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போல் பதிவு செய்திருக்கிறது.
1.தீமை என்ற நிலை வந்தால் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்
2.கண்களின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணின் நினைவ மேல் நோக்கி வானிலே செலுத்திக் குறைந்தது ஒரு நிமிடமாவது ஏங்க வேண்டும்.

காரணம்… எத்தகைய விஷத்தையும் வென்று அதை ஒளியாக மாற்றிக் கொண்டே இருப்பது துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத் தான் இந்நேரம் வரையிலும் உபதேசித்தது.

இந்த உணர்வை நீங்கள் சீராக எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சொல்லி விட்டால் இங்கே நின்று விடும்.
1.அதைத் தாண்டி உடலுக்குள் போவதில்லை
2.அதைத் தான் இராமன் வாலியைக் குகையின் மீது இருக்கும் பாறையைத் தட்டி வீழ்த்தி விடுகிறான் என்று காட்டுகிறார்கள்.
3.குகையை மூடிவிடுகிறான்… வாலி வெளியே வருவதற்கில்லை.
4.அவனுடைய செயலாக்கங்கள் தடுக்கப்படுகிறது.

வாலி என்றால் யார்…?

வேதனைப்படுவது கோபப்படுவது கொதிப்படைவது சலிப்படைவது சங்கடப்படுவது இது போன்ற மோசமான உணர்வுகள் எல்லாமே வாலி தான்.

ஒருவர் திட்டுகிறார்… நம்மைத் தவறாகப் பேசுகிறார்… என்றால் நமக்குள்ளும் அதே உணர்வுகள் வந்து உணர்ச்சியைத் தூண்டி இயக்கத் தொடங்குகிறது. நம்மால் அடுத்து நல்ல எண்ணங்களை எண்ண முடிகிறதா…? இல்லை.

இது நம் இரத்தங்களில் கலந்தால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்குள் விஷத் தன்மையாக மாறும். நம்மைச் செயலற்றதாக மாற்றும். அதனால் தான் வாலி யாரைப் பார்த்தாலும் அவர்களிடமிருந்து சம வலுவைப் பெற்று விடுவான் என்று சொல்வது.

அதை மாற்றுவதற்குத் தான் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்துடனே உங்கள் வாழ்க்கையை இணைக்கும்படி செய்கிறோம்.

ஈஸ்வர அனுபூதி

இந்தச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது. உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும்
1.இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
2.தியானம் என்ற அக்கினியில் குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
3.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொண்டிட வேண்டியது
4.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்கப்படுவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்த்திடல் வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைக் கலயம் ஈர்ப்பது போல்
2.கலயத்தினுள் குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்… ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்…!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது ஒரு கீரியும் நல்ல பாம்பும் போர் செய்து கொண்டிருக்கின்றது.

இது அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால் அது இதைத் தாக்க எண்ணுகின்றது.

பாம்பு சீறித் தாக்கினாலும் கீரி அதனிடம் சிக்குவதில்லை. கீரி தாவிச் சென்று அந்தப் பாம்பைத் தான் கவ்விப் பிடிக்க வேண்டும் என்று அதனின் விஷத்தன்மையைப் பாய்ச்சுகின்றது.

ஒரு மணி நேரம் போர் முறையாக இருக்கின்றது. நின்று பார்க்கும்படிச் சொல்கின்றார் குருநாதர். ஆனால் மனிதன் அருகே நிற்கின்றான்.. “தன்னைத் தாக்கிவிடுவான்” என்று இல்லை.

“எதிரியை வீழ்த்திவிட வேண்டும்…” என்ற உணர்வுகளில் தான் இரண்டும் போர் செய்கின்றது.

அங்கே நின்று வேடிக்கை பார்க்கின்றேன்…
1.பாம்பு மனிதனைக் கண்டால் சீறித் தாக்கும் அல்லவா..,? இல்லை.
2.எதனின் நிலைகளில் தன் எதிரியைத் தாக்க வேண்டும் என்று இருக்கின்றதோ அதிலேயே தான் இருக்கின்றது.

“அருகில் சென்று நில்…” என்கிறார் குருநாதர்.
1.அதனுடைய போர் முறையில் தான் இருக்குமே தவிர
2.உன்னைத் தாக்காது… என்று அருகில் சென்றே பார்க்கும்படி செய்கின்றார் குருநாதர்.

போர் செய்யும் பொழுது தவறி அந்தப் பாம்பின் விஷத்தன்மை கீரியின் உடலில் தாக்கிவிடுகின்றது.

விஷத்தின் தன்மை ஆனபின்… கீரி “கிறு…கிறு…” என்று சுழல்கின்றது.
1.சுழன்று சுற்றி வரப்படும் பொழுது
2.விஷத்திலிருந்து விடுபடும் அந்த மணத்தை எப்படி நுகர்கின்றது..? என்று உணர்த்துகின்றார் குரு.

அந்த மணத்தை நுகரப்படும் பொழுது விஷத்தை முறிக்கும் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் இருக்கும் “அந்தத் திசையை” நோக்கிப் போகின்றது.

கீரியின் மேல் விஷம் தாக்கப்பட்ட பின்… “முதலில் முடியாது” இருக்கின்றது. அந்த மணத்தை நுகர்ந்து… “போகப் போக… வேகம்…” அதிகமாகின்றது.

அதைப் பின் தொடர்ந்து “போய்ப் பார்…” என்று சொன்னார் குருநாதர்.

கீரியின் பின்னால் நான் சென்றேன்.

முதலில் மெதுவாகப் போனது. அந்தச் செடியின் அருகிலே செல்லும் பொழுது ரொம்பவும் வேகமாகப் போனது. போய் அந்தச் செடியின் மீது பிரள்கின்றது.

பிரன்டபின் அதற்குள் இருக்கும் நஞ்சின் உணர்வுகள் மாறுகின்றது. நான் கீரி எந்தச் செடியின் மீது பிரள்கின்றது…? என்று பார்ப்பதற்கு முன்னாடி “திருப்பி ஓடி வருகின்றது…”

ஓடி வந்த பின் மீண்டும் அந்தப் பாம்பைத் துரத்தி இரண்டும் சண்டையிடுகின்றது. பழி தீர்க்கும் உணர்வாக அது செயல்படுத்துகின்றது. பாம்பை இரண்டாகக் கத்திரித்து விட்டது.

பாம்பு சீறித் தாக்கினாலும்
1.எப்படித் தன்னைப் பாதுகாத்து இந்த உயிரினங்கள் எப்படி உருவாகின்றது…?
2.அதிலிருந்து ஒவ்வொன்றும் எப்படி படிப்படியாகத் தன் வளர்ச்சியில் வருகின்றது…?
3.விஷத்தை முறிக்கும் அந்த ஞானம் எப்படி வந்தது…? இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

அந்த விஷத்தின் தன்மை அதன் உணர்வுக்குள் பட்டபின் அதிலிருந்து தப்பிக்கும் அந்த உணர்வின் ஞானம் கீரிக்கு வருகின்றது.

இப்படித்தான் ஒவ்வொன்றிலும்… ஒவ்வொன்றும் நுகர்ந்து கொண்ட பின்
1.தீமைகளைப் போக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து
2.“இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது…” என்பதை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

அதே சமயத்தில் இத்தகையை விஷத் தன்மை கொண்ட நிலைகளிலிருந்து மீட்டிடும் உணர்வுகள் அதனுடன் இணைந்து அத்தகைய “விஷத்தை முறித்திடும் தாவர இனங்கள்.. எப்படி உருவானது…?” என்ற நிலையையும் காட்டுகின்றார்.

குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டி இப்படி அறிந்து வந்த உண்மையைத்தான் உங்களுக்குள்ளும் இதை உருவாக்குகின்றோம்.

சந்தர்ப்பத்தில் நீங்கள் செல்லப்படும் பொழுது மணத்தால் நுகர்ந்து இந்தச் செடியின் தன்மையை அறியும் பருவம் உங்களுக்குள்ளும் வரும்.

இதைப் போல உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் பெருகும். நீங்கள் வைத்தியமாகவும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் நீங்கள் நண்பர்களுக்குள் பழகுகின்றீர்கள். “வெகு தொலைவில்..,” இருந்தாலும் நண்பருக்கு நோய் என்று சொன்னால் அந்த நோய் நீங்க வேண்டும் என்று “உணர்வைச் செலுத்தினால்” அங்கே விஷத்தன்மைகள் குறைவதைப் பார்க்கலாம்.

இதைப் பரீட்சித்துப் பாருங்கள்.

உங்களுக்குள் இதனின் ஞானத்தின் வழி கொண்டு “தீமைகளை அடக்கிடும்.., தீமைகளைப் போக்கிடும்.., மெய்ப்பொருளை உணர்ந்திடும் அந்த ஆற்றலை…” உங்களுக்குள் பெருக்க முடியும்.

உயிரைக் கட்டிப்பிடித்தால் என்ன செய்யும்…?

இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கின்றேன் (ஞானகுரு). அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் ஒரு கருத்தன்மையாக உருவாக்கச் செய்கின்றேன்.

1.ஒரு கம்ப்யூட்டரில் சேமித்து வைத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்து விட்டேன்
2.எப்போழுது தீமை வருகிறதோ அந்த நேரத்தில் யாம் சொன்ன உபதேசங்களை நினைவுபடுத்தினால்
3.தவறை நீக்கக்கூடிய உபாயம் வரும்.

சந்தர்ப்பத்தில் வேதனையான நிலைகள் வந்தாலும் உடனடியாக ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திந் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வரும்.
1.அந்த இடத்தில் எப்படிச் செயல்பட வேண்டும்…?
2.நாம் எப்படி வாழ வேண்டும்…?
3.இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற நல்ல சிந்தனைகள் வரும்.

ஆனால் இன்று பெரும்பகுதி… ஒருவன் தவறு செய்கிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவு செய்து விட்டால் அவனை எப்படி மடக்க வேண்டும்…? என்று உணர்வு தான் வரும்.

அந்த உணர்வைச் சேர்த்த பின் அவனை இங்கே தட்டலாமா…? அங்கே தட்டலாமா…? என்று கால்குலேசன் பண்ணுவோம்.

பணம் இருப்பதால் தானே எவ்வாறு செய்கின்றான். பணம் வராமல் தடுத்தால் நம்மை எதிர்க்க மாட்டான் அல்லவா… கஷ்டப்படுவான் அல்லவா…! என்று இந்தச் சிந்தனைகள் ஓடுகின்றது.

ஆக… கம்ப்யூட்டரில் ஆணைகள் இடப்பட்ட பின் அது தன்னிச்சையாக இயக்குவது போல் நமது உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. நம் நுகர்வதை எலக்ட்ரானிக்காக மாற்றி
1.ஊழ்வினை என்ற வித்தாக்குகிறது
2.எல்லா ரெக்கார்டையும் சேர்த்து வைக்கிறது.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் படிப்படியாக வளர்ந்து சர்வத்தையும் உருவாக்கும் மனித உடலுக்குள் ஊனாக மாறிவிடுகிறது.

எந்த அணுவின் தன்மை வந்தாலும் அதன் கருத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்… எலும்புக்குள் இருக்கும் ஊன் என்ற வித்து…!

ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வளர்த்து அடுத்துப் பிறவியில்லா நிலையை அடையுங்கள்.
1.நாம் தேடிய சொத்து எதுவும் நம்முடன் வரப்போவதில்லை.
2.உடலையே காக்க முடியாது போகிறது… பின் தேடி வைத்த சொத்தைக் காக்க முடியுமா…?
3.செல்வம் கூடக் கூட வேதனைகள் கூடிக் கொண்டே வரும்
4.வேதனை கூடக் கூட எந்த செல்வத்தைப் பெற முடியும்…? வேதனை என்ற அழுக்குச் செல்வத்தை தான் தேட முடியும்.

ஒரு மிருகமாக ஆகிவிட்டால் செல்வத்தைப் பார்க்க முடியுமா…? அதை பார்த்தாலும் மிதித்து விட்டுத் தான் செல்லும். அதே போலத் தான் வேதனை என்ற உணர்வு அதிகரித்து விட்டால் நாம் மிருக உடலிற்குத் தயாராகி விடுகிறோம் என்று அர்த்தம்.

கடுமையான வேதனைக்கு உள்ளாகும் போது அழகான துணிகளையோ நகை நட்டுகளைப் பார்த்தால் நமக்கு வெறுப்பு தான் வரும். நோயுடன் நீங்கள் படுத்திருக்கும் பொழுது அப்படி அலங்காரம் செய்ய வேண்டும் இப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னாலே நமக்கு எரிச்சலாகும்.

அட… கொஞ்ச நேரமாவது நல்ல சட்டையைப் போடுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்…? போட வேண்டும் என்று சொன்னவர் மீது வெறுப்பு தான் வரும்.

மிருகம் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுத் தான் போகும். ஆகவே இந்த உணர்வின் தன்மை மிருக உடலுக்குத் தான் தயாராகின்றது.

அதைத் தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரம் காட்டுகிறது. ஒரு மனிதனுடைய தவறான நிலையைப் பார்க்கும் பொழுது சித்திரம். அவன் வெளிப்படுத்தும் உணர்வினை நமக்குள் சேர்த்த பின் புத்திரன். உடலில் அணுவாக உருவாகிறது.

புத்திரன் ஆன பிற்பாடு…
1.எந்த உடலில் இருந்து வந்ததோ அதே குணத்தை எடுத்து உடலுக்குள் கொடுத்து நாம் வளர்க்கின்றோம்
2.இதையே வழியாக அமைத்துக் கொண்டு அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு வரும்பொழுது
3.எந்தக் குணத்தை எடுத்தோமோ அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.

எமன் எது மேலே வருகின்றான்…? எருமை மீது…! சிந்தனையற்ற நிலைகள் ஆகும் போது எடுத்துக் கொண்ட பாசக் கயிறு அந்த உணர்வுக்குத் தக்கவாறு எமன் நரகலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றான் என்று தெளிவாகவே நமக்குக் காட்டுகின்றார்கள்.

அப்பொழுதாவது இந்த உண்மையை உணர்கின்றோமா என்றால் இல்லை.

“மார்க்கண்டேயன்…” என்றும் பதினாறாக சிவலிங்கத்தை… உயிரைக் கட்டிப்பிடித்துக் கொள்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.
1.உயிரை கட்டிப்பிடித்தால் என்ன செய்யும்…?
2.எமனால் அவனை இழுக்க முடியவில்லை…

அதாவது…
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக ஆக்கப்படும் பொழுது
2.எவரும் இழுக்க முடியாது என்று அதையும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

துருவ நட்சத்திரமும் சரி சப்தரிஷி மண்டலங்களும் சரி அது என்றும் பதினாறாக அழியாத நிலைகள் கொண்டது. அந்த எல்லையை நாம் அடைய வேண்டும்.

வாழ்க்கையில் எத்தனை சந்தோஷங்களை நாம் அனுபவிக்கின்றோமோ என்றும் பேரானந்தப் பெரு வாழ்வு பெற முடியும். இருளை அகற்றி மகிழ்ச்சி என்ற ஒரு கோட்டையாக அது அமைக்கும்.
1.இந்த உடலில் சந்தோஷம் எப்படி இருக்கிறதோ
2.அதே மாதிரி உணர்வு உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையாக மாறும்.

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…!

ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்…?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன…? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து…
4.உயர் நிலை பெற வேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்…!”

அப்படியானால்… தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்…?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இருவித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்…!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழிவகைகளை ஞானிகள் காட்டினார்கள்…!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்…! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்…!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்… உருவத்தின் ஆனந்த லயமும்… அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்…
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்…”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு உயர்ந்த குணம் கொண்டு நாம் தர்மத்தைச் செய்தாலும் பரிவுடன் உதவி செய்தாலும் நம்மால் உதவி பெற்றவர்களே அது திரும்பி நமக்கு எதிர்த்து நிற்பார்கள்.
1.“அடப் பாவி… நான் எப்படியெல்லாம் உதவி செய்தேன்…? நீ இப்படிச் செய்கின்றாயே…” என்று வேதனைப்படும்போது
2.அந்த வேதனையின் உணர்வுகள் உட்புகுந்து நாம் செய்த நன்மைகளை மாற்றி விடுகின்றது.
3.நன்மை செய்த நிலைகள் மாறி வேதனைப்படும் அணுவாக மாறி உடலுக்குள் விளையத் தொடங்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விழித்திருத்தல் வேண்டும்.

இதனை நாம் தெளிந்து அந்தத் தெளிந்த நிலைகள் கொண்டு நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும் நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும் என்றும் பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளை அறிதல் வேண்டும்.

உங்களைப் போற்றித் துதித்துவிட்டு அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகப் போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு. நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு.

ஆனால் அவர் எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும் என்று போற்றும் நிலைகள் வேறு.

இதைப் போன்ற நிலைகள் “ஏமாற்றும் அல்லது ஏமாறும் நிலைகள் அல்லாது நாம் வாழ வேண்டும்.

ஆனால் எல்லா உதவியும் செய்வார்கள். உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..
1.“பார்… அன்றைக்கு எல்லா உதவியும் நான்தான் செய்தேன்…”
2.இன்றைக்கு என்னைச் “சிறிதளவாவது அவன் மதிக்கின்றனா…? பார்…” என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.

ஆகவே செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் கௌரவம் என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.

“தன்னை மதிக்கவில்லையே..,” என்ற உணர்வு கொண்டு தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள். பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் இத்தகைய நிலைகளில் பகைமையை வளர்த்துக் கொண்டு நமக்குள் நல்ல அணுக்கள் வளராது தடைப்படுத்திடும் இந்த நிலைகளிலிருந்து மீட்டிடத்தான் சிவன் இராத்திரி அன்று “விழித்திரு..,” என்று காட்டினார்கள் ஞானிகள்.

மகா சிவன் இராத்திரி – ஓர் உயிரின் தன்மை உடல் பெற்ற பின் உடலுக்குள் மறைந்துவிடுகின்றது அந்த உயிர்.

அதைத்தான் இருளுக்குள் மறைந்த நிலைகளை சிவன் என்றும் உணர்வின் தன்மை ஈசன் என்றும் உணர்ச்சியின் தன்மை கொண்டு நம்மை வழி நடத்துகின்றது என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தாய் தந்தையரை எண்ணி ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று அந்த உணர்வுகளை எங்கிப் பெறுதல் வேண்டும்.

நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து… நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த வேதனையோ மற்றவர்கள் மேல் உள்ள பகைமைகளயோ நமக்குள் வளராமல் மாற்றிடலாம்.

நாம் செய்த நன்மை நமக்கும் பயனளிக்கும். பிறரின் உணர்வுகள் நம்மை இயக்காது.
1.அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் நம் நினைவுகள் செல்லும் பொழுது
2.இந்தப் புவியின் பற்று நமக்குள் வராது.

என்றுமே ஏகாந்த நிலை என்ற பேரானந்தப் பெருவாழ்வு வாழ முடியும்.

உருவம்… அருவம்… உருவம்…!

ஒரு கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்வது போல் தான் உங்களிடம் ஞானிகளின் அருள் ஆற்றலைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

1.யாம் உபதேசம் கொடுத்ததை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.வாழ்கையில் வரக்கூடிய தீமைகள் அனைத்தையும் நீக்கி
3.வல்லமை கொண்ட அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு உங்களுக்குள் சந்தோஷத்தை ஊட்ட முடியும்.
4.தீமைகள் உள்ளே புகாதபடி தடுக்க முடியும்.

அந்தச் சக்திகளைப் (அருவம்) பெறச் செய்வதற்குத் தான் ஆலயம்.

ஆலயத்திலே தெய்வங்களை உருவங்களாகக் காட்டி… சிலையாகத் தான் வைத்துக் காட்டுகின்றார்கள். அதாவது
1.உருவத்தைக் காட்டி அருவத்தைத் தெரிந்து கொள்ளும்படி தான் வைத்திருக்கிறார்கள்.
2.அருவ நிலை கொண்டு உருவத்தை நமக்குள் நாம் மாற்றலாம்.
3.இந்த இரண்டு வேலையும் இருக்கின்றது.

சொல்வது அர்த்தமாகிறதா…?

ஆனால் ஆலயத்தில் இவ்வாறு யார் செய்கின்றார்கள்…?

ஆலயத்தில் இது துவைதம். அந்தத் தெய்வீகக் குணங்களை நுகர்ந்து அறியும் பொழுது விசிஷ்டாத்வைதம். நுகர்ந்த உணர்வின் தன்மை உடலாகும் போது துவைதம்.

எதனின் இயக்கமாக நமக்குள் மாறுகின்றதோ…
1.இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…! என்று நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் அத்வைதம்.
2.நுகர்ந்து அது உள்ளே வரப்படும்பொழுது விசிஷ்டாத்வைதம்… நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
3.உணர்வின் தன்மை உடலாக உறையும் பொழுது துவைதம் (ஓளிச் சரீரம்)

இது தான் உருவ அமைப்பு. (உருவம்… அருவம்… உருவம்…)

சாதாரண மனிதனும் உருவத்தைப் பார்த்து உயர்ந்த உணர்வை எடுப்பதற்கும்… அந்தத் தெய்வமாக நாம் ஆவதற்கும் ஆலயத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள் ஞானிகள்.

அந்த ஆலயத்தின் பண்பின் பிரகாரம் உயர்ந்த உணர்வுகளை எடுத்து அதன் இயக்கமாக நம்மை நாம் மாற்ற வேண்டும். எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஏனென்றால்…
1.இந்த மனிதப் பிறவி என்பது கடைசி நிலை.
2.இனி உடல் என்ற நிலை இல்லாதபடி ஒளி என்ற நிலையாக மாறிப் பழகுதல் வேண்டும்.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்தையும் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்

உலகோதய எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது)

அலைக்கழிக்கபடுவதோடு மட்டுமல்லாது…
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமுறும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து… இறக்கும்… கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொண்டிடும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்துதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று சிலர் “தன் கணவரை இழந்துவிட்டோம்…” என்று எண்ணலாம். கணவரை எவரும் இழக்கவில்லை…!

அவருடைய உணர்வுகள் உங்கள் உடலுக்குள் உண்டு. “அந்த நினைவு கொண்டால்.., அவருடைய நினைவு கொண்டு “என்றுமே” வாழலாம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற கணவரின் ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கலாம். அவர் உடலில் பெற்ற நஞ்சினை அங்கே கரைத்து உணர்வின் தன்மை ஒளியாக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.

உங்கள் கணவர் எத்தகைய நோய்வாய்ப்பட்டு உடலை விட்டுப் பிரிந்திருந்தாலும் உணர்வை நீங்கள் நுகர்ந்தாலும் நோயின் உணர்வுகள் உங்களுக்குள் அணுக்களாக வளராதபடி அருள் ஞானத்தின் உணர்வை வளர்த்திட முடியும்.

1.உங்கள் கணவர் உங்களுடன் இருக்கின்றார் என்ற நினைவு கொள்ளுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும்.
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும். எங்கள் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்திடும் நிலைகள் பெறவேண்டும்.
4.இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதனின் உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளை எண்ணும் பொழுது.., எங்கள் பார்வையில் எங்கள் குடும்பங்களில் எங்கள் குழந்தைகளும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி சக்தி பெற வேண்டும்.

எங்கள் குழந்தைகளும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று ஒன்றி வாழும் நிலைகள் பெற்று அவர்கள் வாழ்க்கையில் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

மனிதனான நாம் அனைவரும் இந்த வழியில் சென்றால் அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் அவர்களுடன் ஐக்கியமாகலாம்.

“இருண்ட” உலகில்
தாக்குதலில் “ஒளி” என்ற உணர்வாகி
கோளாகி நட்சத்திரமாகி “சூரியனாகி”
அதற்குள் ஒரு “பிரபஞ்சமாகி”
பிரபஞ்சத்திற்குள் “உயிரணுக்களாகி”
உணர்வின் தன்மை நுகர்ந்து
“அறிவு” என்ற இயக்கத்தில் உருவாகி
“உயிர்” என்ற நிலைகள் கொண்டு
“மனிதன்” என்ற நிலைகள் உருவாகி
“அனைத்தையும் அறிந்திடும்” அறிவு பெற்று
இருளை அகற்றி “மெய்ப்பொருள்” காணும் சக்தியாக
கணவனும் மனைவியும் பெற வேண்டும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியை அனைவரும் பெற்று இருளை அகற்றி நஞ்சினை வென்று பேரின்பப் பெருவாழ்வு பெறும் சக்தி பெற்று “மகா… மகான்களாக” நீங்கள் திகழ வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் பற்றும் பாசத்தையும் வளர்த்து அனைவருக்கும் தெளிந்த மனதை ஊட்டி மகிழ்ந்த உணர்வை ஊட்டி உங்கள் ஊரிலும் தொழில் செய்யுமிடங்களிலும் அருள் உணர்வைப் பரப்பி “அருள் மகரிஷிகளாக” உருவாகுங்கள்.

வாழ்க்கையில் அறியாது தாக்கும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் மெய்ஞானத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.அகண்ட அண்டத்திற்கே ஓளி கொடுக்கும் சக்தி வாய்ந்த உயிராத்மாக்கள்
2.கணவன் மனைவி ஒன்றிய நிலைகளில் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு.
3.அத்தகைய நிலை நீங்கள் எல்லோருமே பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

மனிதனின் நல்ல சிந்தனைகள் குறைந்து கொண்டே வருகிறது…

கடலிலே மின்னல்கள் தாக்கினால் மணலாக மாறுகின்றது. அதில் உள்ள ஆற்றலைப் பிரித்து யுரேனியமாக மாற்றுகின்றார்கள்.

நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அதனின் உணர்வின் தன்மை மாற்றப்பட்டு
1.இரண்டு நட்சத்திரங்களின் உணர்வுகளை எடுத்து
2.பாசிட்டிவ் நெகட்டிவ் என்று எதிர்நிலை கொண்டு வருகின்றார்கள்.

இதை அடக்குவதற்கு… (தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு)
1.நீரில் உள்ள ஹைட்ரஜனை (கன நீரை) அழுத்தத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது
2.உப்புச் சத்தின் உறைவால் இதில் எது சூடானாலும் நீர் என்ற நிலையாகி…
3.சேமித்து வைத்த நிலையில் அணு பிளக்காமல் (வெடிக்காமல்) தடுக்கப்படுகின்றது.

இதே போன்று ஒவ்வொரு உடலிலும் இந்த நீர் சக்தி உண்டு. அந்த ஹைட்ரஜன் தாக்கப்படும் பொழுது மனிதனை அழிக்கும் தன்மையாக வருகின்றது.

விஞ்ஞானிகளுடைய சிந்தனைகள் இப்படிச் செல்கின்றது அழிக்கும் உணர்வுகள் தான் அவர்களுக்கு வந்ததே தவிர… மனிதனை வளர்க்கும் நிலை இல்லை.

ஆனால் மனிதனை வளர்க்கும் நிலையில் ஞானத்தின் வழி வளர்ச்சி பெற்றவன் தான் அகஸ்தியன். அவன் வழியில் பின் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் நமது சூரியன் 27 நட்சத்திரங்களின் ஆற்றலைத் தனக்குள் கவரப்படும் பொழுது அதிலுள்ள விஷத்தைப் பிரித்து வெப்பம் காந்தம் என்று அனுப்புகின்றது.

வெப்பம் காந்தம் என்று வந்தாலும் காந்தம் கடைசியில் பிரிந்து செல்லும் வலுவிழந்த விஷத்தினைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது.

“ஆதியிலே…” வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலை எப்படி உருவானதோ அதே போல ஒரு இயக்கச் சக்தியின் அழுத்தமாகச் சூரியன் தனக்குள் உருவான பாதரசத்தால் மோதி விஷத்தைப் பிரித்து வெப்பமும் காந்தமும் ஆக உருவாக்குகிறது.

1.விஷம் பிரிந்து வெகுதூரம் செல்வதற்கு முன் காந்தம் மீண்டும் கவர்ந்து
2.அந்த அழுத்தத்தைக் கொண்டு வரும் பொழுது மின் கதிர்களாக மாறுகிறது… வெயிலாக வருவது எல்லாம் அதுதான்.

பாதரசத்தின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இப்படி ஒன்றை எடுத்துக் கொண்ட பின் ஒன்று ஓடுவதும் பிரபஞ்சத்தை இப்படி இயக்கிக் கொண்டு இருக்கின்றது.

1.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் இரத்தங்களிலே கலந்த பின்
2.அதனதன் உணர்வுகளிலே மோதி அதனதன் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு
3.நமது உயிரும் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலையில் சூரியனைப் போன்றே
4.இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி அதை இயக்குகிறது.

விஞ்ஞான அறிவில் நீங்கள் இருப்பதால் உங்களுக்கு அதனுடன் இணைத்து மெய் உணர்வை அறிந்து கொள்வதற்கு இதை வெளிப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

அதே சமயத்தில் நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து எடுத்துக் கவர்ந்து கொண்டு வரும் அந்த அழுத்தமான உணர்வலைகள் மிகவும் கடுமையானது.. விஷத் தன்மை வாய்ந்தது.

சூரியன் தன் உணவுக்காக அதை எடுத்துக் கவரப்படும் பொழுது… பிரிந்து செல்லும் உணர்வைக் கண்ட பின் அழுத்தம் அதிகமாகி… வரும் பாதையில் இதைக் கண்ட பின் அஞ்சி நகர்ந்து ஓடுகின்றது.

அதாவது அழுத்தத்தால் மோதி விஷத்தினுடைய ஆற்றல் கொண்டு அதீதமான நிலைகள் பிரித்துச் செல்லப்படும் பொழுது “காந்தப் புலனறிவு” அதிகமாகின்றது.

1.இந்த அடர்த்திக்குள் அந்த விஷத்தின் தன்மை எடுக்கப்படும் பொழுது நியூட்ரான்…!
2.இந்தக் காந்தக் குவியல் ஒன்றாகச் சேர்த்து இணைத்துக் கொண்டால் நியூட்ரான்…!
3.இது ஊடுருவிச் செல்லப்படும் பொழுது இதைக் கண்ட பின் அஞ்சிப் பல பல விதங்களில் அணுக்கள் பல ரூபங்களாக மாற்றும் சக்தி வருகின்றது.

அதனால் தான் விஞ்ஞானி அதற்கு நியூட்ரான் என்று பெயரை வைக்கின்றான். புது விதமாக உருவாகுவதால் அந்தப் பெயரை வைக்கின்றார்கள் இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வான் வீதியில் காந்தப் புலனறிவால் கவரப்பட்ட அந்த உணர்வுகளை ஈர்த்துச் சேமித்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றான். இங்கே கொண்டு வந்து அதை வெடிக்கச் செய்யப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

அந்த விஷத்தின் ஆற்றல் காற்றிலே கலக்கப்படும் போது…
1.அதை நுகரும் உயிரினங்களின் உடலுக்குள் ஒன்றுக்கொன்று மோதிப் போர்முறையாகி…
2.சிந்தனை இழந்து விஷத் தன்மை கொண்ட நிலையில்
3.சுத்தமாகவே இந்த மனித உடலைச் சூனியமாக்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றார்கள்.

கட்டிடங்கள் இருக்கும்… செடி கொடிகள் எல்லாம் இருக்கும். ஆனால் மனிதனை இப்படிச் சூனியம் ஆக்கிவிட்டால் “தன் இனத்தை… தன் நாட்டைக் காத்துக் கொள்ளலாம்…” என்று விஞ்ஞானக் கணிப்பு இன்று சென்று கொண்டிருக்கின்றது.

மகேஸ்வரன்… லலிதா… நீலகண்டா…

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!

1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட…
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழி வழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெற வேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளிகாந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…! (நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்)

பேராசையினால் வருவது தான்… சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்

பேராசையினால் வருவது தான்… சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்

 

மனிதனாகப் பிறந்து வளர்ந்து சகல சம்பத்தும் பெற்றுச் சௌபாக்கியமுடன் வாழ வேண்டும்… சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு மனிதனும் வளரும் நிலையிலேயே எண்ணுகின்றான்.

1.அந்நிலையிலேயே பேராசை கொண்டும் எண்ணிவிடுகின்றான்.
2.அந்தப் பேராசையினால் வருவது தான் சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்.
3.அவன் எண்ணத்திலேயே தான் அவனுக்கு எல்லாமே வருகிறது.

தான் வாழ வேண்டும்… தன் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்… வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்… தன்னை ஒட்டியுள்ள தன் சந்ததிகள் என்றும் இன்பமுடன் வாழ வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் பல கஷ்டங்கள் பட்டு பல செல்வங்கள் சம்பாதித்து தான் இறந்த பிறகும் தான் குடும்பத்தார் நல்ல நிலையில் வாழ வேண்டும்…! என்று சொத்து சுகத்தைச் சேர்த்து விட்டுச் செல்கின்றான் மனிதன்,

1.ஆனால் தான் பிறந்து தன் ஆத்மாவிற்கு என்ன நிலையைத் தேடிக் கொள்கிறான்…?
2.தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை.

தன் ஆத்மாவிற்கு நல்ல நிலை ஏற்படுத்திவிட்டால்… நல்ல நிலை என்பது இன்று தான் வாழும் வாழ்க்கையில் பல ஜெப நிலைகளைப் பெற்று இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்ற நிலை தெரிந்து இந்த உடலிலேயே தன் ஆத்மாவுக்குண்டான சகல சக்தியையும் தன் ஜெப நிலையில் ஏற்றச் செய்தால்
1.உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.ஆவி நிலையில் அல்லல்படாமல் பெரும் “தெய்வீக நிலையை” அந்த ஆத்மா பெற்றுவிடும்.

இந்த உடலுடன் உள்ள பொழுதே அந்த ஆத்மாவிற்கு அந்தச் சக்தி நிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமப்பா…!

1.நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தானப்பா
2.நம் ஆத்மாவிற்கு நாம் வழங்கும் ஜெப நிலையை ஏற்றுக் கொள்ளும் தன்மை பெற முடிகின்றதப்பா..!

உடலுடன் உள்ள பொழுது எந்தக் கெட்ட அணுவும் அணுகாதபடி எந்தத் தீய சக்திகளும் அணுகாமல் எந்தத் தீய சக்திகளுக்கும் அடிபணிந்து அடிமையாகாமல்
1.தன் எண்ணத்தில் எவன் ஒருவன் உயர்ந்து நிற்கின்றானோ
2.அவனை எந்தத் தீய சக்திகளும் தீமையான அணுக்களும் வந்து அணுகிடாதப்பா…!

ஏனென்றால்..
1.நலிந்தோன் இதயத்திற்கு மேலும் மேலும் நலிந்த நிலை தான் வந்து அண்டிடும்.
2.நல்லோன் இதயத்திற்கு நல்ல நல்ல நிலைகள் தான் வந்து அணுகிடும் அப்பா…!

ஒருவன் எண்ணத்தில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் உள்ள அணுக்கள் தான் அவனை வந்து தாக்கிடும். (பூவின் வாசனை கருவாடு வாசனை கதை போல் தான்…!)

மனித உடலில் உள்ள பொழுதே இப்பொழுது நாம் உண்ணும் உணவும்.. உடுக்கும் உடையும்… வாழும் வாழ்க்கையும்… அன்றன்று மறைவது தான்..! என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றி நாம் சேமிக்கும் சொத்தெல்லாம் நம் ஆத்மாவுக்கு எந்த நிலை…? என்று புரிந்து சேமித்து வைக்க வேண்டுமப்பா…!

1.நாம் வேறு நம் ஆத்மா வேறு.
2.அந்த ஆத்மாவில் ஆண்டவன் தான் கலந்துள்ளான்.
3.நம் உடலில் அந்த ஆத்மாவுடன் அவ்வாண்டவன் கலந்து குடியிருக்கின்றான் என்ற எண்ணம் மட்டும் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்க வேண்டுமப்பா..!

காலம் அழிந்தாலும் நம் ஆன்மா அழிவதில்லை. இந்த உடலில் நாம் அந்த ஆத்மாவிற்கு எந்த நற்காரியத்தைச் சேர்த்து வைக்க முடியுமோ அந்த நற்பயனை நாம் சேமித்து வைத்திட வேண்டுமப்பா…!

குரு கவர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவரப் பழக வேண்டும்

குரு கவர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவரப் பழக வேண்டும்

 

ஆயுள் மெம்பர்கள் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த அருள் வழிகளை நமக்குக் காட்டினார்.
1.அவர் காட்டிய நெறிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்
2.அவருடன் ஒன்ற வேண்டும்.
3.அவருடைய ஒளி பட இருள் நீங்கும்
4.அருள் பெற நமக்குள் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறலாம்.

அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுது என் (ஞானகுரு) நெற்றியைப் பார்க்கச் சொல்கின்றேன். அதிலிருந்து நமது குருநாதரின் அருளை நீங்கள் பெற முடியும்.
1.குருநாதர் எனக்கு இப்படித்தான் செயல்படுத்தினார்
2.அவர் நெற்றியைப் பார்க்கும் பொழுது அவர் கண்ட உண்மை எல்லாம் எனக்குத் தெரிய வந்தது… அதே போன்று நீங்களும் காண வேண்டும்.

குருநாதர் நமக்குக் காட்டியது துருவ நட்சத்திரம். அதிலிருந்து ஒளி அலைகள் இங்கே வருகின்றது. அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள். துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க வளர்க்க உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெருகப் பெருகப் பேரருள் என்ற நிலைகளில் இருளை நீக்க கூடிய சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்

ஆகவே புருவ மத்தியை எண்ணுங்கள். ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த உணர்வின் சக்தியை நீங்கள் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
1.நமது குருநாதர் காட்டிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நான் நுகர்கின்றேன்
2.நுகர்ந்த உணர்வை நீங்கள் கவரக்கூடிய சக்தி பெறுகின்றீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி என் புருவ மத்தியைப் பாருங்கள்.

என் உயிரான ஈசனை வேண்டி… குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அகஸ்தியனின் அருளும்… அவன் துருவனான அந்த அருள் உணர்வும்… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.

அதன் வழி நீங்கள் ஏங்கும் போது அந்த உணர்வுகள் ஒளி அலைகள் இங்கே வந்து.. உங்கள் உடல்களில் உணர்ச்சிகள் பரவி அந்தப் பேரருளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைகின்றோம்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மனிதனைச் சோம்பேறித்தனமாக வாழும் நிலைக்குத் தான் அழைத்துச் செல்கிறது

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மனிதனைச் சோம்பேறித்தனமாக வாழும் நிலைக்குத் தான் அழைத்துச் செல்கிறது

 

காலம் செல்லச் செல்ல இன்றைய விஞ்ஞானிகள் அறிவு வளர்ந்து பல வகை அற்புதச் செயல்களைக் கண்டுபிடித்து மக்களுக்குச் சொல்கின்றார்கள்… செயல்படுத்துகிறார்கள்.

ஆனாலும் இன்றைய உலகில் இக்கலியில் அறிவு வளர்ச்சி வர வர விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் “சோம்பேறி வாழ்க்கை வாழும் நிலையை உண்டாக்கி…” மனித மூளையையே மங்கச் செய்கிறார்கள் சில விஞ்ஞானிகள் எனும் பேர் பெற்ற விஞ்ஞானிகள்.

ஆதியில் சித்தர்கள் கண்டுபிடித்த ஞான நிலையிலிருந்து இந்த மண்ணில் விளையும் பொருள்களை வைத்துப் பல பல பொக்கிஷங்களைக் கண்டு உணர்த்தியுள்ளார்கள்.
1.அவற்றினால் மக்களுக்கு என்ன நன்மை…?
2.வைரம் அணிந்தால் என்ன நன்மை…?
3.தங்கத்தினால் என்ன நன்மை…?
4.நாம் பிறந்ததின் மகிமை என்ன…?
5.மண்பாண்டத்தில் சமைத்து உண்பதின் ஆரோக்கிய நிலை என்ன..? என்ற
6.பல வகை உண்மைகள் எல்லாம்… “ஆதியில் வந்த நிலை தானப்பா இன்றும் உள்ளது…!”

முதலிலேயே சொல்லியுள்ளேன் இந்தப் பூமித் தாயின் பொக்கிஷமெல்லாம் அந்தச் சூரிய சந்திர ஒளிக்கதிரிலிருந்து எப்படி வருகிறது என்பதை…!

அந்நிலை எல்லாம் ஆதியில் உள்ள சித்தர்கள் அறிந்து எடுத்துத்தான் மனிதர்களின் நன்மைக்காகச் வெளியிட்டார்கள்.

மக்களின் செயலுக்கு அந்த உண்மை நிலையை உணர்த்தி அவர்களாகவே அதை எடுத்துப் பக்குவ நிலை செய்து பயன்படுத்தப் பல உண்மை நிலையைப் பரவவிட்டார்கள் மக்களிடத்தில் அன்றையச் சித்தர்கள்.

வைரம் வைடூரியம் என்ற இன்னும் பல வகை நிறம் கொண்ட பல கோடிக்கணக்கான கற்களையும் அவை மனித உடலில் பட்டால்
1.எந்தெந்த உடலுக்கு அந்நிலையெல்லாம் அந்த உடல் ஏற்கின்றது என்ற நிலை எல்லாம்
2.அன்றையச் சித்தர்கள் கண்டுபிடித்து வெளியிட்ட உண்மையிலேதான் இன்றும் உள்ளார்கள் மக்கள்.

மனிதன் வளர்ச்சி அடைந்து உயர் நிலைக்காகக் கொடுக்கப்பட்ட அந்நிலையை
1.இப்பொழுது இன்றையச் செல்வத்திற்காகவும்
2.தம்முடைய டாம்பீக வாழ்க்கைக்காகவும் பயன்படுத்திப் பாழ் செய்து விட்டார்கள்.

இந்நிலையை அறிந்து தான் பல கோடிச் சித்தர்கள் பல உண்மைகளை மறைத்து விட்டார்கள் இன்றைய கலியின் பேராசை கொண்ட மக்களுக்கு.
1.பல வகை மூலிகைகளை வைத்து அன்றையச் சித்தர்கள் பயன்படுத்தியதையும்
2.அந்த மூலிகைகளை உபயோகிக்கும் நிலையை உணர்த்தாமலே மறைத்து விட்டார்கள்.

தியானம் என்பது… ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான்

தியானம் என்பது… ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான்

 

ஒரு வேதனை என்ற உணர்வு ஆன பிற்பாடு (அழுத்தம்) நமக்குள் சிக்கலான உணர்வுகள் வருகின்றது. ஆக நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது… அந்த வேதனை உணர்வுகள் தான் கூடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று தெளிவாக நமக்குக் காட்டுகின்றார்கள்… விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.

மெய் ஞானிகள் காட்டியது
1.பிறருடைய உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது
2.அது நம் நல்ல உணர்வுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று விடுகின்றது.
3.ஆக அந்த உணர்வின் அழுத்தம் இந்த வேலையைச் செய்கிறது.

கோபம் அடிக்கடி வருகிறது என்றால் அதைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…

மகரிஷிகள் உணர்வை அடிக்கடி சேர்த்து நாம் இணைத்துக் கொண்டே வர வேண்டும். அப்பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் சார்ஜ் அதிகமாகிறது.

குடும்பத்தில் கணவன் மனைவி என்ன செய்ய வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் ஈஸ்வரா…
1.என் கணவர் அந்த அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் செய்யக்கூடியதில் பேரும் புகழும் அடைய வேண்டும்
3.அவர் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு நன்மையாக இருக்க வேண்டும் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எதிர்மறையான வேறு சில உணர்வுகள் குறுக்கே வந்தால் அதை மாற்றியமைக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து மீண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

1.அப்படி இதை எடுத்துக் கொண்டால் ஒரு பாதுகாப்பான நிலையாக வரும்.
2.தியானம் என்பது ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான்.
3.வாழ்நாளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க உடலில் உள்ல எல்லா அணுக்களிலும் அது பெருகுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் போது எத்தனையோ தீமைகளிலிருந்து விடுபடும் சக்தி பெற்றுத் தான் இன்று வந்திருக்கின்றோம்.

தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இப்போது பதிவு செய்கின்றேன். அது காற்றில் இருக்கின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதை எடுத்துப் பயன்படுத்தும் போது நாம் ஆயுள் மெம்பராக அதிலே சேர்கின்றோம். குடும்பத்தில் ஒவ்வொருவரும் அதைக் கடைபிடித்தே ஆக வேண்டும்.

குறைகளைச் சந்தித்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை அடக்கிப் பழக வேண்டும். குழந்தைகளுக்கு கணவனுக்கோ மனைவிக்கோ அல்லது யாராக இருந்தாலும் அந்த அருள் ஞானம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.

தொழில்களில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் நஷ்டம் என்று எண்ணக்கூடாது. நஷ்டம் என்று வந்தாலும் கூட அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால் அதை எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்ற நல்ல சிந்தனைகள் வரும்… உயர்ந்த எண்ணங்கள் வரும்.

கடையில் இப்படி இருக்கின்றது குடும்பத்தில் இப்படி இருக்கின்றது என்று கஷ்டங்களைச் சொல்லி அடுத்தவரிடம் கேட்டோம் என்றால்
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள்
2.கடைசியில் எல்லாவற்றையும் கேட்டுக் குழப்பிக் கொண்டு
3.தொழிலே செய்ய முடியாது போலிருக்கிறது என்று சோர்வடையப்படும் பொழுது
4.நம்மையே நாம் தாழ்த்திக் கொள்கின்றோம்

ஆகவே மனைவி அதிகாலை தியானத்தில் கணவனுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும். சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் தொழிலில் வீரிய சக்தி பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்துப் பாய்ச்ச வேண்டும்.

கணவனுக்கு மன வலிமை பெற வேண்டும்… அவருடைய எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும்… அவர் செயல் அனைவரும் போற்றும் நிலையாக வரவேண்டும்… கடையில் பொருள் வாங்குவோர் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று… மனைவி இப்படி எண்ணிப் பாருங்கள்.

மனைவி இவ்வாறு செய்தால் வேறு யாரிடமும் யோசனை கேட்க வேண்டியதில்லை.

கணவர் வேலைக்குச் செல்லும் போது “எல்லாக் காரியத்திலும் வெற்றி கிடைக்கும்…” என்று மனைவி நீங்கள் சொல்லி அனுப்புங்கள் ஆபீஸில் அனைவரும் போற்றும் நிலை வர வேண்டும் வியாபாரம் பெருக வேண்டும் என்று எண்ணுங்கள். வியாபாரத்திற்காகச் சென்றால் அங்கே நல்ல பொருளை தேர்ந்தெடுக்கக் கூடிய அந்த சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்படிச் செய்தால் கணவன் மனைவி இருவரிடமும் ஒன்றி வாழும் உணர்வுகள் உருவாக்கப்படுகின்றது
1.இப்படி வாழ்ந்து காட்ட வேண்டும்
2.இருவரும் வாழ்க்கையில் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மற்றவர்களிடம் “இந்த வழிப்படி நடங்கள்…” என்று சொல்லும்பொழுது நீங்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த உணர்வு அங்கே விளைய வேண்டும். அதே போல் அவர்களும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்.

ஊரில் இருக்கிறோம் என்றால் நம் வீட்டில் மட்டும் அல்ல நாம் வெளிப்படுத்தும் உணர்வு எல்லாக் குடும்பத்திலும் பரவி ஷேமமான நிலைகளில் உருவாக வேண்டும்.

நீங்கள் வசிக்கும் தெருவிற்குள் மகரிஷிகளின் அலைகள் பாய வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றுபட்டு வாழும் நிலையை அது உருவாக்கும்.

நம் “சுவாச நிலையும்… தியான நிலையும்…” ஒன்றுபட வேண்டும்

நம் “சுவாச நிலையும்… தியான நிலையும்…” ஒன்றுபட வேண்டும்

 

சூட்சம உலகத்திற்கு வருபவர்கள் எல்லாம் ஜெப அருளைப் பெற்று ஜெபத்தில் இருந்தால் மட்டும் தான் வருவார்கள் என்பதல்ல.

இந்த மானிட உலகில் பிறந்தவர்கள் ஜெப நிலையை அறியாமல்
1.தன் எண்ணத்திலும் செயலிலும் ஆண்டவன் அருளைப் பெற்று
2.அந்த ஆண்டவனுக்காக அஞ்சித் தன் வாழ்க்கை முறையில் பல நற்காரியங்கள் செய்து
3.தன்னையே “தான்…” என்ற கர்வமில்லாமல் தன்னால் இந்த உலகிற்கு என்ன பயன்…? என்று புரிந்து கொண்டு வாழ்பவனும்
4.தன் நிலை என்ன…? என்றே… தனக்கே தெரியாமல் பல வகை இன்னல்பட்டு மக்களுக்காகப் பல நன்மைகளைச் செய்பவர்களும் உள்ளார்கள்.

அதே போல் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் உள்ளார்கள். அந்த விஞ்ஞானிகள் எல்லாம் என்ன எண்ணுகிறார்கள்…?
1.தான் ஆண்டவனை நினைத்துத் தன் அறிவை உபயோகப்படுத்துவதாகவும்
2.அப்படிப்பட்ட தன் முயற்சியினால் தான் பல புதிய வார்ப்புகளையும் படைப்புகளையும் கண்டுபிடிப்பதாக…!
3.ஆனால் அதுவல்லப்பா அவர்கள் நிலை…!

இந்த மனித உடலில் உள்ள எல்லோருமே விஞ்ஞானியாகலாம்… மெய் ஞானியாகலாம்.. மகரிஷியாகவும் ஆகலாம்… பல கீழான நிலைக்கும் செல்லலாம்….!

அவனவன் ஆண்டவனை எண்ணும் நிலையில் அவன் அறிவை உபயோகப்படுத்தும் பொழுது அவன் நிலையில் சூட்சம உலகத்திற்குச் சென்ற ஆவி நிலையோ அல்லது அவன் நிலையில் விட்டுச் சென்ற விஞ்ஞானியோ அவன் உடலுக்குள் புகுந்து விடுகிறது.

அது புகுந்த பின் தான் ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் அவர்கள் பல வழிகளைக் காட்டுகின்றார்கள். ஆனால் அந்த விஞ்ஞானி என்பவன் தான் பெற்ற அருளைச் சிதறவிடாமல்
1.எந்த நிலையில் ஆண்டவனை எண்ணி ஒரு நிலையை ஆரம்பித்தானோ
2.அந்நிலை வரை அவன் நிலைக்கு அவன் உடலில் உள்ள அந்தச் சூட்சம அருள் பெற்ற அச்சித்தனின் அருள் செயல்படுகிறது.

என்றைக்கு அவன்… “தான்…!” என்ற எண்ணத்திற்கு வருகிறானோ அன்றே அவன் செயலும் அவன் எடுத்த முயற்சியும் வீணாகிறது.

“எல்லாமே அவன் செயல்…” என்று எண்ணுபவனுக்கு என்றுமே அவன் அருள் உண்டு. இந்நிலையில் உள்ளவர்களும் அந்நிலைக்கு வருகின்றார்கள் சூட்சம நிலைக்கு.

இப்படித்தான் பல பாடகர்களைப் பார்த்திருப்பாய். அவர்கள் பாடலில் இனிமை எங்கிருந்து வருகிறது…? பல கை தேர்ந்த மருத்துவர்களைப் பார்த்திருப்பாய். அந்த மருத்துவர்களின் திறன் எங்கிருந்து வருகிறது..?

இந்த உலகில் உள்ள பல கோடானு கோடி நல்லோர்களின் உயிரான்மாக்கள் மறு பிறவி எய்தாத நிலையில் பூமியிலே சுழன்று கொண்டுள்ளார்கள்.

இந்த உலகில் ஜீவித்த காலத்தில் உடலுடன் இருக்கும் காலத்தில் நடத்திச் சென்ற பாதையை அவ்வுலகுக்குச் சென்றும் சூட்சம உலகத்திலிருந்து தன் எண்ணத்திற்கு உகந்தபடி உதவியும் செய்கிறார்கள்.

எந்நிலை கொண்டு…?

இந்த மானிட உலகில் உள்ள மனிதன் எவனொருவன் அந்த ஆண்டவனை நினைக்கும் பொழுது எந்த வழிக்கு ஆண்டவனை நினைக்கின்றானோ… வேண்டுகின்றானோ… அந்த வழிக்கு அச்சூட்சம உலகத்தில் உள்ள பலரின் நிலைகள் செயல்பட்டுப் பல உதவிகளைச் செய்கின்றனர்.

இப்படிப்பட்ட அருள் பெற்றவர்கள் எல்லோருக்குமே
1.என்று அவர்களுக்குத் “தான்…” என்ற கர்வம் வருகின்றதோ
2.அன்றுடன் அதுவரை அவர்கள் பெற்ற பேறுகளும் மடிந்து விடுகின்றது.
3.அவர்களின் நிலைக்கு (மறைமுகமாக) உதவி செய்த அந்தச் சித்தர்களின் நிலையும் மறைகிறது.

ஆகவே சூட்சம உலகத்திற்குச் செல்பவர்கள் எல்லாம் ஜெபத்திலிருந்து… ஜெப அருளினால் மட்டும் தான்… செல்ல வேண்டும் என்பதல்ல.

இந்தப் பாட நிலையைப் புரிந்து கொண்டால் இஜ்ஜெப நிலையில் இருப்பவருக்கு இவ்வுலக நிலையில் உள்ள பொழுதே
1.தான் யார்…? நான் என்பது யார்…? என்று புரியும் நிலை வந்துவிடும்.
2.தான் பிறவி எடுத்த பயனும் தன் நிலைக்குத் தன் உயிர் நிலைக்கு ஒரு நிலைப்படுத்த எடுக்கும் இந்த ஜெப நிலை அருள் புரிகின்றது.

நம்முடைய சுவாச நிலையும் ஜெப நிலையும் ஒன்றுபட்டால் இந்த உலக நிலையையும் பல கோடிச் சித்தர்களின் நிலையையும் அறிந்து பல மண்டலங்களின் நிலையும் அறிந்து கொள்ள முடியும்.

1.உயிர் மட்டும் அழியாத உயிரல்ல…
2.உடலையும் அழியாது பாதுகாத்துத் தான் பிறவி எடுத்த பயனை அடைந்து
3.என்றுமே அதை இந்த உலக மக்களுக்காக உபயோகப்படுத்தலாம்.