தீமை நமக்குள் எப்போதும் உருவாகாதபடி “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு நாம் வளர வேண்டும்

தீமை நமக்குள் எப்போதும் உருவாகாதபடி “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு நாம் வளர வேண்டும்

 

உதாரணமாக காரமான ஒரு பொருளைத் தனித்து உணவாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சியே முன்னணியில் நிற்கும்.

ஆனால் அந்தக் காரத்தை அடக்க “சப்…” என்று இருக்கும் காரம் இல்லாத பொருள்களை அதனுடன் இணைத்து உட்கொண்டால் அந்தக் காரத்தின் தன்மை குறைந்து சுவைமிக்க நிலைகளாக உருவாகின்றது

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது
1.உயிர் இருக்கும் ஈஸ்வரலோகத்தில் அது உருவாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் தான் முன்னணியில் இயக்கும்.
3.மற்ற நல்ல குணங்களின் வலு குறைகிறது.

காரணம் மற்றவர்களுடைய குறைகளையும் துன்பங்களையும் கேட்டறிந்து நுகர்ந்து தான் உதவி செய்கிறோம். நுகரும் போது தான் உயிரும் அதை இயக்குகிறது.

இருந்தாலும் அதைக் கேட்டறிந்த நிமிடத்திலேயே…
1.அவர்கள் கஷ்டங்களைச் சொல்வதற்கு முன் “ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடமே கேட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்வை அப்பொழுதே உயிரிலே இணைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

குழம்பு வைக்கும் போது பல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போல் நாம் கேட்டு… நுகர்ந்த மற்றவரின் உணர்வுக்குள் அந்த அருள் ஞானிகளின் உணர்வைக் கூட்டிவிட்டால் அதைத் தணித்து அருள் உணர்வின் அணுக்களாக மாற்ற முடியும்.

நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும்… சந்தர்ப்பத்தில் ஒருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை நமக்குள் அதிகரிக்கப்படும் போது நல்ல குணத்தின் தன்மைகள் குறைந்து விடுகிறது.

1.அப்பொழுது அந்த நல்ல குணத்தின் தன்மையை அதிகமாக்க…
2.அதை வலிமை பெறச் செய்ய வேண்டும் என்றால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அதனின் உணர்வின் கருக்களாக மாறுகிறது. வேதனையை வலுவிழக்கச் செய்கிறது.

“பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலையில் நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து அந்த உணர்வை நுகர்தல் வேண்டும்…
2.இரத்தத்தில் கலக்கச் செய்தல் வேண்டும்…
3.உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் அதை இணைத்தல் வேண்டும்.

இப்படி… தீமையான உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிட்ட வலிமையான மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தக் கருத்தன்மை உருவாக்கப்பட்டு… நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கப்பட்டு… அது இந்திரலோகத்தில் தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக அதை மாற்றுகின்றது.

அத்தகைய நிலைகளை நாம் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை வலுப் பெறப்படும் போது வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி விடுகிறது.

உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது…!
1.உடல் பெறும் விஷத் தன்மைகளை அங்கே கரைத்து விடுகின்றது.
2.ஒளியின் சரீரமாக… நம்மை ஒளியாக மாற்றுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் தெய்வ குணத்தைப் பெற்று ஆண்டவனாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு மனிதனும் தெய்வ குணத்தைப் பெற்று ஆண்டவனாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஒரு நாள் தோன்றி மறு நாள் மடிகின்றது காளான். அதே போல் ஒவ்வொரு தாவர வர்க்கத்திற்கும் அது அது ஜீவிக்கும் கால நிலைகள் உண்டு. ஆலமரம் பல நூறு ஆண்டுகள் உள்ளது. வைரம் பாய்ந்த ஆயிரம் காலத்து மரங்களும் பல உள்ளன.

ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம் உருவான ஆரம்பக் கால நிலையே காளானின் வழித் தொடர்ச்சி தான். இயற்கையின் தாவர இன முன்னோடி “காளான் தான்…!”

அவ்உயிரணு அவ்வமில வண்ணமுடன் இடியும் மின்னலும் தோன்றும் காலத்தில் ஒன்றுடன் ஒன்று இன வர்க்கங்கள் மோதும் நிலையில் அதற்கு மேல் இந்த மழை நீர் படும் பொழுது வெடிக்கும் தன்மை உருவாகிறது.

அப்படி வெடிக்கும் தருணத்தில்
1.இரண்டு வகை அமில குணத்தின் வெடிப்பில் தோன்றும் அமிலமானது இந்தப் பூமியில் மோதுண்டவுடன்
2.அதன் மேல் படும் ஒளி அலையின் ஈர்ப்பினால் உயிரணு தோன்றி தாவரம் வளர்ந்து
3.ஒவ்வொரு நிலை கொண்ட தாவர இன வர்க்கங்கள் மாறி மாறித் தோன்றுகிறது.

முதலில் காளான் தோன்றி அதன் ஆயுள் முடிந்தவுடன் அந்தக் காளானது அழுகிய நிலையில் பூமியில் படர பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் வெக்கை அதன் மேல் பட்டு அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தைக் கொண்டு மீண்டும் பூமியில் படர்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் உயிரணுவின் இன வளர்ச்சி சிறிது மாற்றம் கொண்டு மீண்டும் அதிலிருந்து சில வளர்ச்சி நிலைகள் மாறுகிறது.

மாற்றம் ஏற்பட்டு இப்படியே பல இயற்கை வளங்கள் தோன்றி ஒன்றுடன் ஒன்று அமிலத் தன்மைகள் மாறி மாறி உருவாகிப் பல வழிகள்… பலவித உயிரணுக்களும் கனி வளங்களும் வளர்ந்து கொண்டே மாறி மாறி வாழ்ந்து கொண்டே சுழன்று ஓடிக் கொண்டே உள்ளன.

ஓடும் ஓட்டத்தில் வெளிப்படும் அமில குணத்தில் பல உயிரணுக்கள் அந்த மோதலில் வெளிப்படுகின்றன. “ஒன்றில்லாமல் ஒன்றில்லை…” என்பதன் பொருளும் இதுவே..!

1.எந்த அணுவும் உதிக்க வேண்டும் என்றால் “இந்த மோதல் தான்…” காரணம். (இது முக்கியம்)
2.அமில குணங்கள் மோதுண்டு அதன் மேல் படும் மழை நீரின் ஜீவனால் வெடிப்பு நிலைப்பட்டு உருவாகின்றது உயிரணு.
3.அதன் தொடர்ச்சி நிலை சேர்க்கை தான் ஜீவனின் சேர்க்கையினால் இந்த ஜீவ அணு தோன்றுகிறது.

ஆண் பெண் சேர்க்கையினால் இந்த இரண்டு குண நிலை கொண்ட அமிலத்துடன் ஜீவன் கொண்ட மற்றோர் எண்ண அமிலமான உயிராத்மா தனக்குகந்த அமில குணம் கொண்ட தாயின் தந்தையின் பிறப்பில் கருவுக்கு வருகின்றது.

பல வகையான அமில குணங்களின் சேர்க்கை கொண்டது… இவ்வுலகின் ஈர்ப்பு அமில குணம் ஒன்று தான். இவ் ஈர்ப்பு நிலைக்கொப்ப பல நிலைகளை நம் பூமி வளர்த்துக் கொள்கிறது. பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் ஈர்ப்பில் பல குண நிலைகள் மாறு கொள்கின்றன.

பல வகையான அமில குணம் கொண்ட இந்தக் காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம் என்றாலும்… “நம் எண்ண நிலைக்கொப்ப சுவாச அமிலம் தான்…” நம் சுவாச ஈர்ப்புக்கு வரும்.

1.வெங்காயச் செடி அதன் கார அமிலச் சுவாசத்தை ஈர்க்கின்றது.
2.மிளகாய்ச் செடி நெடி கலந்த கார அமிலத்தை ஈர்க்கின்றது.
3.கருணை சேனை இவற்றின் குண அமிலம் அரிக்கும் தன்மை உடைய அமில குணத்தை ஈர்த்து அவை வளர்கின்றன.

ஒவ்வொன்றிற்கும் அதனதன் நிலைக்கொப்ப ஒரே தன்மையுடைய அமிலத்தைத்தான் ஈர்த்துப் பழக்கப்பட்டு வளரும் தன்மையுடையது தாவர வர்க்கங்கள்.

ஆனால் பலவற்றையும் புசிக்கும் மனித ஆத்மா தான் உண்ணும் உணவின் உணர்வைத் தவிர “எண்ணும் எண்ணத்தின் அமில குணத்தையும்” அறியவல்ல ஆற்றல் கொண்டவன்.

உடம்பின் மேல் மிளகாயின் காரம் பட்டவுடன் “எரிகிறது..!” என்று அறிகின்றோம். வெங்காயத்தின் காரத்தினால் “கண்ணில் நீர் வடிகிறது…!” சேனை கருணை போன்ற கிழங்குகளில் அமில நீர் பட்டவுடன் அவ்விடம் “பிய்ப்பு எடுக்கின்றது…”

இந்நிலையான அமில குணத்தை நம் உடலும் உணர்வும் ஈர்க்கா விட்டால் அதன் தன்மையின் பாதிப்பை நாம் அறிவோமா…?

மிளகாயின் குணம் நெடி கலந்த குணம்… வெங்காயத்தின் குணம் அதற்குகந்த கார குணத்தினால் அதன் தன்மையை உணரப்படுகின்றோம்.

எல்லாமே இந்தக் காற்றின் ஈர்ப்பில் தன் ஈர்ப்புக்கொப்ப வளர்கிறது. இந்நிலைகளைப் போன்று தான் நம் மனித ஆத்மாவின் எண்ண நிலைக்கொப்ப “அமில குணங்களைச் சேமிக்கிறது…” என்பதை அறியவில்லை.

நம் எண்ண நிலைக்குகந்த ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்தைக் கொண்ட நிலையுடனே எந்த எண்ணத்தில் எல்லாம் நாம் இருந்து கொண்டுள்ளோமோ… அதன் நிலைக்கொப்ப அமில குணங்கள் நம்முள் சேமிதம் கொண்டே வாழ்கின்றோம் நாம் எடுக்கும் சுவாசத்தினால்…!

“குண அமிலம்” என்பதன் நிலை புரிந்ததா…?

இந்தக் குண அமிலத்தின் நிலையை உணர்த்துவதன் உண்மை நிலை என்ன..?

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் பால்வெளி மண்டலங்களுக்கும் அதனதன் தன்மைக்குகந்த குண அமிலம் உண்டு. அதன் வளர்ச்சி வட்டத்திலே தான் இயற்கையின் அமில குணங்கள் செயல் கொண்டு வாழ்கின்றன.
1.இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட குண அமிலத்தைப் பெறவல்ல ஆற்றல்
2.அதாவது தனக்குகந்ததைப் பெறும் சக்தி மனித ஆன்மாவுக்கு உண்டு.

இயற்கை வளங்கள் ஒரு வகையான அமில குணத்தை ஈர்க்க வல்லது. ஆனால் மனித ஆத்மாவோ… எண்ண நிலைக்குகந்த அமில குணத்தை எல்லாம் ஈர்த்து ஈர்த்து வாழ்கின்றான்.

எண்ண நிலை கொண்ட மனிதனால் தனக்குகந்த அமில குணத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்றால்
1.இந்தக் குணங்களிலேயே சிறந்த குணமான
2.“ஆண்டவன்…” என்னும் நிலை கொண்ட குணத்தைப் பெற முடியும்.

இரத்தம் போகும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கும் தியானப் பயிற்சி

இரத்தம் போகும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கும் தியானப் பயிற்சி

 

இருதய வலி (நெஞ்சு வலி) போன்ற உபாதைகள் வந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது பின்னுக்கே சாய்ந்து சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் விண்ணிலிருந்து இழுத்துச் சுவாசியுங்கள். (ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக் கூடாது…)

1.மெதுவாக மூச்சை அடக்கி மறுபடியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அந்த மூச்சை எடுங்கள்.
2.இரண்டு நொடி உடலுக்குள் நிறுத்துங்கள். மறுபடியும் மெதுவாக விடுங்கள்.

காரணம் நம் சுவாச நாளங்களில் இரத்தங்கள் போகும் பாதையில் அடைப்புகள் இருக்கும்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகளில் புகையிலையோ அல்லது
2.பீடி சிகரெட் பிடிப்பவர்கள் புகை விடுவதை நுகர்ந்திருந்தாலோ
3.நாம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த மாதிரிப் பிடிக்கிறார்கள் என்று எண்ணினால் போதும்.
4.அது நம் சுவாசத்தின் வழியாகச் சுவாசப் பைக்குள் சென்று இரத்தங்கள் போகும் பாதைகளில் உறைந்து விடுகின்றது.

உறைந்து விட்டால் இருதத்திலிருந்து இரத்தம் ஒரு பகுதி வழியாகப் போகவில்லை என்றால் அடுத்த பகுதி வழியாகப் போகும்.

நுரையீரலுக்கோ மற்றதுக்கோ இரத்தம் பாயும் நிலைகளைத் தடைப்படுத்தும். இந்தப் பாதையும் அடைபட்டு விட்டால் இதே போல் அடுத்த பக்கமும் அடைபடும்.

மூன்று பாதைகளில் ஏதாவது ஒன்று வழியாகப் போனால் தான்.

இல்லை என்றால் அந்தப் பாதைகள் அடைபட்டு விட்டால் இருதயம் சீராக இயங்காதபடி இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வந்துவிடும். நெஞ்சு வலி அதிகமாகி மனிதனை மடியச் செய்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இடுப்பிலே கையை வைத்து அந்தச் சுவாசத்தை மேலே சொன்னபடி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும். அந்த அடைப்புகளை நீக்கிவிடும்.

ஒன்றும் செய்ய முடியவில்லை… மிகவும் தொல்லை கொடுக்கிறது என்றால் தியான வழியில் இருப்பவர்கள் ஒரு ஐந்தாறு பேர் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டமைப்பாக எண்ணுங்கள். அவருக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சுங்கள்.

இங்கே கொடுத்த விபூதியையோ அல்லது தண்ணீரையோ தியானத்திற்கு முன்னாடி வைத்து அதற்குப் பின் அந்தத் தீர்த்தத்தை அவரை அருந்தச் செய்யுங்கள்.
1.அவர் உடலில் உள்ள இருதய வலி நீங்கி… இருதயம் சீராக இயங்கி உடல் நலம் பெறவேண்டும் என்று இந்த எண்ணத்தில் நீங்கள் கொடுங்கள்.
2.அவர் குடிக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நீங்கள் சீர்படுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அவர்களுக்குள் இதைப் பாய்ச்சப்படும் போது இது நல்லதாகும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

மகரிஷிகளுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இந்தக் கலி முடிந்து அடுத்து வர இருக்கும் “கல்கி” மாற்றத்தின் சுழற்சியில் மீண்டும் மனிதர்கள் ஜீவனுக்கு வந்தாலும்
1.இந்த உலக மாற்றத்தின் பொழுது நம் உடலிலுள்ள ஆத்மா பிரியும் நிலை கொண்டு
2.அடுத்த பிறப்பிற்கு வரும் தொடரும் அதன் சுழற்சியிலே தான் செயல் கொள்ள முடிந்திடும்.

பிறப்பிற்கு வரும் நிலையில் முதல் கால கட்டத்தில் (கல்கி) வரும் தருவாயிலேயே “அறிவாற்றல் கொண்ட” எண்ணத்தின் நிலைக்கொப்பத் தாயின் கருவிற்கு வர முடியாது.

எல்லாமே மாறிய பிறகு புதிய உயிரணுக்கள் தோன்றும் தருவாயில் அந்த உயிரணுக்கள் ஜீவனின் வளர்ச்சி நிலை பல காலங்கள் தாவர இன வர்க்க வளர்ச்சியிலும் மற்ற கனி வளங்களின் வளர்ச்சி நிலையிலும் செயல் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அவை வளர்ந்து.. மடிந்து… அதிலிருந்து தோன்றும் உயிர்ப் பிராணி நிலை பெற்று மீண்டும் அதன் இன வர்க்க நிலை மாறி பல வளர்ச்சி நிலைகள் தானாக உயிர் பெறும் உயிரணுவிலிருந்து மாறிப் பல அமில குணத்தை ஈர்த்த உயிரணுக்களாக வேண்டும்.

அப்படி ஆன பிறகு உயிராத்மாவாகி அந்த உயிராத்மாக்களின் சேர்க்கைக் குணமுடன் மற்ற உயிரணுவின் பிறப்பு நிலை தோன்றிய பிறகுதான் ஜீவன் பெறும் நிலை கொள்கின்றது.

உயிரணுவிற்கும் உயிராத்மாவிற்கும் வேறுபாடு புரிகின்றதா…?

இந்தப் பூமியிலிருந்து வெளிப்படும் வெப்ப அலையின் அமில குணத்தின் ஈர்ப்பில் படர்ந்து இயற்கை வளங்களாக வளர்பவை எல்லாம் உயிரணுக்கள் கொண்ட நிலை.

உயிராத்மா என்பது… பிறப்பிற்கு வரும் இரண்டு ஜீவ உடல்களின் எண்ணக் கலவையின் சேர்க்கையில்… தன் நிலையை ஜீவிதம் கொள்ளும் ஆசையுடன் கர்ப்ப நிலைக்கு ஜீவன் கொள்வதெல்லாம் ஜீவ ஆத்மா பெறும் நிலை.

இப்படி இம் மாறும் கலியினால் நம் உயிரணு உருவிற்கு வரப் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் (இது முக்கியம்).

இந்த உலகச் சுழற்சியில்…
1.நம் எண்ணத்தை இவ்வுலகப் பிடியில் அடகு வைத்து விட்டால்
2.அதை மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் செல்லும்.

இவ்வெண்ண நிலையிலேயே பிரியும் ஆத்மாக்கள் தான் சேமித்த குண நிலையுடனே சுழன்று சுழன்று… மீண்டும் அறிவு நிலை கொண்ட ஞானம் பெறக்கூடிய உடல் பெறுவதற்குப் பல காலங்கள் சுழல வேண்டியதிலிருந்து மீட்டிட வேண்டும் என்பதற்குத் தான் இந்த உண்மைகளைப் புகட்டுகின்றேன்.

பரம்பொருளின் ஞானமான அச்சக்தி நிலை கொண்ட ஜோதி ஆத்மாக்களான அந்த மாமகரிஷிகளிடம் நம் எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

அந்தச் சப்தரிஷிகளின் எண்ண வட்டத்திற்குள் நாம் எடுக்கும் சுவாச அலைகள் பாயும் பொழுது அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும்.

மேன்மேலும் அந்தச் சக்தியை நாம் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தின் பொழுது அவர்களின் நிலையுடன் நாம் ஐக்கியப்பட்டு அவர்களைப் போன்று நாமும் சப்தரிஷியாகலாம்.
1.இந்தப் பூமி மட்டுமல்ல… எந்தப் பூமியையும் நமதாக ஏற்று
2.அந்த ஒளி வட்டத்திற்குள் நம் ஒளி பிரகாசிக்கத்தான்
3.யாமறிந்த (ஈஸ்வரபட்டர்) உண்மைகளைப் பலரும் அறிந்து கொள்ளவும்
4.அப்பரம்பொருளின் ஞான சக்தியை வழிப்பெறும் வழி ஆற்றலைப் புகட்டுகின்றோம்.

இவ்வுயிரணு தோன்றி மாறி மாறி எடுக்கும் அமில குணத்தின் வளர்ச்சியினால் ஏற்படுவது தான் சிறு எறும்பு முதல் கொண்டு சூரியன் சந்திரன் அதற்கும் அப்பாற்பட்ட எல்லாமே…!

எந்த உயிரணுவும் மடிவதில்லை. எப்பரம்பொருளிடமும் ஒன்றி நிற்பதுவும் இல்லை.

உயிரணுவாக உலகாய் உருவம் கொண்டே வளர்ந்து கொண்டே கலந்துள்ளது தான் அப்பரம்பொருளான ஆதிசக்தியின் ஒளி சக்தி.
1.ஒன்றுடன் ஒன்று மாறி மாறி உருப்பெற்றே சுழன்றே ஓடும் சிக்கலில்
2.உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகளின் ஞானம் பெறுவது தான் உயர் ஞானம்.

அந்த ஞான நிலை பெறும் வழித் தொடர் தான் இந்த மனித உடல் கொண்ட ஆத்ம ஞானம். மனித உடல் கொண்ட ஞானத்திலிருந்து தான் உயர் ஞானம் பெற முடியும்.

இந்த மனித உடல் கொண்ட அறிவு நிலை பெற பல உருமாற்றம் கொண்ட உருவ நிலையெல்லாம் பெற்றுப் பெற்றுத் தான் இந்த மனித உடலையே பெற்றிருக்கின்றோம்.

செயற்கையின் பிடியில்… கலியான இக்காலத்தில்… சோம்பேறி நிலை கொண்ட வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு மீளத் தெரியாமல் சிக்குண்டு வாழும் நாம்… இந்த மனித ஞானத்தைப் போற்றி நல் வழி பெறும் ஞானத்தைப் பெற்றிடுவோம்.

கண்ணாடியில் உள்ள தூசியைப் போக்கிட அழுக்குத் துணியால் தட்டினால் மீண்டும் இதன் அழுக்குத்தான் அதிகமாகப் படரும். சுத்தமான துணியை கொண்டு துடைத்தால் தான் அந்தக் கண்ணாடியில் உள்ள அழுக்கு நீங்கும்… ஏனென்றால்
1.அழுக்கை அழுக்கு கொண்டு அகற்ற முடியாது.
2.நம் அக அழுக்கைப் பக்தி என்ற பகவான் ஞானத்தைக் கொண்டு போக்கித் தான் நம் அழகை நாம் காண வேண்டும்.

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.
1.ஈஸ்வரா… என்று சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணி
2.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ…
3.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அதை ஏங்கிப் பெற வேண்டும்…
4.அப்படி ஏங்கினால் நல்ல முறையில் அது பதிவாகும்.

அகஸ்தியர் பிறந்த பின்… குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் போது விண்ணை நோக்கிப் பார்த்து எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்தாரோ… “அதை எல்லாம் பெற வேண்டும்…” என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.

அவர் கருவிலே இருக்கும் போது… தாய் தந்தையர்கள் எதை எதை எல்லாம் எண்ணிப் பெற்றனரோ அது அனைத்தும் அவருக்குள் வளர்ச்சி பெறுகிறது.

அவருடைய தாய் தந்தையர்கள் விஷமான அணுக்கள் தங்களை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள அவர்கள் உடலில் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துப் பூசிக் கொண்டனர்.

1.அவர்கள் உடலிலிருந்து அந்த மணம் வெளிப்படும் போது
2.நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுவோ விஷ ஜெந்துக்களோ
3.அவை அனைத்தும் அவர்களை அணுகாது இருந்தது.

அவர்கள் சூரியனைக் கண் கூசாது உற்றுப் பார்க்கின்றனர். சூரியன் தன் முகப்பில் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்களைப் பிரித்து உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு ஒளிக் கதிர்களாக வீசுகிறது.

பிரிக்கப்பட்ட அந்த விஷத் தன்மைகளை சூரியனின் வெப்ப காந்தங்கள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் உடலிலே விஷ முலாம்களைப் பூசியதால் அதைக் காண்கிறார்கள்.

1.அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடல்களில் பதிவானாலும்
2.கருவில் வளரும் அகஸ்தியனுக்குத் தாய் ரூபத்தில் அது பதிவாகிறது.

இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் போது அந்தச் சூரியனின் இயக்கங்களைப் பார்க்கின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதை மற்ற கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் போது சூரியன் அதை எல்லாம் தனக்குள் கவர்ந்து முகப்பில் அந்த விஷத்தைப் பிரித்துவிட்டுத் தனக்குள் ஒளிக்கதிராக மாற்றி அமைக்கிறது.
1.பிறந்த குழந்தையும் அதைப் பார்க்கின்றது… ஆனால் சொல்ல முடியவில்லை.
2.தனக்குள் கவர்ந்து கொண்ட இந்த உணர்வுகளைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்…!

அதே சமயத்தில் பிறந்த குழந்தை தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை.
1.இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது அந்த வண்டுகளும் பூச்சிகளும் மயங்கி விழுகிறது.
2.விஷ ஜெந்துக்களோ மற்ற மிருகங்களோ அப்பால் விலகிச் சென்று விடுகிறது.
3.மயக்கத்திற்கு அஞ்சி எல்லாமே விலகி ஓடுகிறது.

குழந்தை உடலிலிருந்து நிகழ்த்தக் கூடிய இந்த நிலைகளை அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் பார்த்தபின் அவனைக் கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…! என்றே எண்ணுகின்றனர்.

அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன் (ஞானகுரு). இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும்.
1.இந்த நினைவுடன் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்டதை…
2.நம் பூமியில் பதிந்துள்ள அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நுகர்ந்து அதைப் பார்க்க முடியும்
3.அகஸ்தியனின் அருள் ஆற்றல்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இது உதவும்.

ஞான மார்க்கத்திற்கு வழி காட்டும் நிலையோ ஏற்கும் நிலையோ இன்று இல்லாது போய்விட்டது…! – ஈஸ்வரபட்டர் சொன்னது

ஞான மார்க்கத்திற்கு வழி காட்டும் நிலையோ ஏற்கும் நிலையோ இன்று இல்லாது போய்விட்டது…! – ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.

அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.

அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.

அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும் சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவு பட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்ட முடியும்.

ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோக மார்க்கங்களும் பக்தி மார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.

பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.

அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு இந்நிலை பெற மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெற வேண்டும் என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.

இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?

1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்த நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.

அகஸ்தியன் நுகர்ந்த பல கோடித் தாவர இனங்களின் சக்திகளை நுகரப் பழகிக் கொள்ளுங்கள் (அகஸ்தியரின் அருள் மணங்கள்)

அகஸ்தியன் நுகர்ந்த பல கோடித் தாவர இனங்களின் சக்திகளை நுகரப் பழகிக் கொள்ளுங்கள் (அகஸ்தியரின் அருள் மணங்கள்)

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவு கொள்ளுங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகளையும் அவன் பிறந்த பின் அவன் பெற்ற சக்திகளையும் பெற வேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணித் தியானியுங்கள்.

1.அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்த உணர்வின் அறிவாகத் தனக்குள் உருபெற்றதை
3.விண்ணிலிருந்து வந்த உணர்வலைகளைத் தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த அந்த முதல் நிலைகளை எண்ணி
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியர் தாயின் கருவிலே பெற்ற சக்தி கொண்டு குழந்தைப் பருவத்தில் முதன் முதலில் விண்ணை நோக்கிப் பார்க்கும் போது சூரியனின் இயக்கத்தைப் பார்க்கின்றார்… கோள்களையும் நட்சத்திரங்களையும் பார்க்கின்றார்… அதை எல்லாம் தனக்குள் உணர்கின்றார்.

அன்று அந்த அகஸ்தியன் பார்த்த இந்தப் பிரபஞ்சத்தின் அதிசயங்களை நாமும் காண வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் அந்தக் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக வெளிப்படுத்துகின்றான். அதை நீங்கள் நுகரும் போது
1.உங்கள் உடலிலே உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று ஆகிறது
2.மகிழ்ச்சியான உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.அதே சமயத்தில் அந்த அகஸ்தியனின் அருளாற்றல்கள் உங்கள் உடலில் ஊடுருவி
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அந்த உனர்வின் அலையை எமக்குள் (ஞானகுரு) பாய்ச்சினார்.

அகஸ்தியன் பார்த்த விண்ணுலக ஆற்றலை எல்லாம் நம் குருநாதர் நுகர்ந்து இன்றும் அவர் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்,
1.அந்தக் குரு அருளின் துணையால்…
2.அகஸ்தியனின் உணர்வுகளை நீங்களும் பெறும் தகுதியை இப்பொழுது பெறுகின்றீர்கள்.
3.உங்கள் உடலுக்குள் அதை எல்லாம் உணரும் அறிவாகப் பதிவாகிறது.
4.அதனின் நினைவாக நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியையும்… சக்தியும் பெறுகின்றீர்கள்.
5.உங்கள் புருவ மத்தியிலும் சரி… உடலுக்குள்ளும் சரி ஒளிக் கதிர்கள் பரவுவதை உங்களால் உணர முடியும்
6.நீங்கள் ஒளியின் சரீரம் ஆவது போன்று உணர்வீர்கள்.

அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் போது தன் தாய் தந்தையை உற்றுப் பார்க்கின்றான். தாய் தந்தையர் உடலில் அவர்கள் பூசிய அந்தப் பச்சிலை வாசனைகள் வருவதை அகஸ்தியன் நுகர்கின்றான்.
1.அதை இப்பொழுது நீங்களும் நுகர்ந்து இழுத்துச் சுவாசியுங்கள்.
2.உங்களுக்குள் அந்த மணங்கள் பரவி உங்கள் உடலில் உள்ள பிணிகளைப் போக்கச் செய்யும்.

அகஸ்தியன் அவன் நினைவைத் தன் தாய் தந்தையரின் பால் செலுத்தும் போது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் போது அவன் மகிழ்ச்சியுற்ற உணர்வுகள் எவ்வாறோ அதைப் போன்று
1.உங்களுக்குள்ளும் அந்த மணங்கள் அனைத்தும் சென்று
2.உங்கள் உடலில் அறியாது சேர்ந்த கடும் தீமைகளை அடக்கும்
3.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்கள் உடலில் பரவும்… அதைப் பார்க்கலாம்… உணரலாம்…!

நாம் மலைப் பகுதிகளில் செல்லும் போது ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை நுகர்வது போன்று… அந்த அகஸ்தியன் சுவாசித்த அருள் மணங்கள் உங்கள் சுவாசத்தின் வழி உடலுக்குள் சென்று… “பல அற்புத மணங்களாக உங்கள் உடலிலே பரவும்…!” உங்கள் நினைவுகள் அனைத்தும் மகிழ்ச்சி பெறும்.

1.அண்டத்தின் அறிவைக் கண்டுணர்ந்து
2.அதன் அறிவின் தொடராக அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த அறிந்துணரும் சக்திகளை அனைவரும் பெற்று
3.அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது (ஞானகுரு). அகஸ்தியன் அருள் மணங்களை நுகர்ந்தால் எத்தகைய நஞ்சினையும் அடக்க முடியும்.

இன்றைய உலக மாற்றத்திலிருந்து நாம் தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்

இன்றைய உலக மாற்றத்திலிருந்து நாம் தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இருட்டில் உள்ள பொழுது ஒரு வெளிச்சத்தைக் கண்டவுடன் மகிழ்கின்றோம். வெயிலில் உள்ள பொழுது நாம் நிழலுக்கு ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையில் தான் உழன்று கொண்டுள்ளோம்.

அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலினுள் கூட்டிக் கொண்டுள்ளோம். இந்த நிலையை மாற்றி நம் ஒளியைக் காண முயல்கின்றோமா…?

கண்ணாடியின் தூசியை அகற்றித் தெளிவாக உருவைக் காணுகின்றோம்.
1.இந்த உடலில் உள்ள அசுத்த அலைகளையும் தீய எண்ணங்களையும் மாற்றி
2.நம்மின் உண்மை அழகைக் காண முயல்கின்றோமா…?

நம்மிடமுள்ள அசுத்த அலைகளை அகற்ற நாம் விழையாமல் “ஆண்டவன் வந்து தானாக அகற்றுவான்…! என்று ஆண்டவனை வேண்டி… அக அழகு காண முயல்கிறோம்…”

ஒரு செம்பில் உள்ள நீரில் அதற்கு மேன்மேலும் நல்ல நீர் ஊற்றும் பொழுது நல்ல நீரும் அசுத்த நீரும் கலந்து வெளிப்பட்ட பிறகு தானாக அனைத்தும் நல்ல நீராகி விடுகின்றது.

அதைப் போல் நமக்குள் உள்ள தீய அணுக்களை நாம் எடுக்கும் நல் உணர்வின் ஈர்ப்பினால்… மேன்மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வான அமில குணங்கள் அதிகப்படப்பட… இந்தத் தீய அணுக்கள் பல ரூபத்திலும் வெளிப்பட்டுவிடும்.

1.நம் உடலில் இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆவி ஆத்மா ஏறியிருந்தாலும்
2.தீய அமில குணங்கள் வெளிப்படும் பொழுது
3.அதன் குண அமிலத்திற்குகந்த ஆகாரம் கிடைக்காத தன்மையில்
4.அதன் பாதிப்பான குணத் தூண்டுதலும் நம்மை ஒன்றும் செய்திடாது.

இந்த நிலையை உணர்த்தும் தத்துவ ஞானத்தை உணர்ந்து இந்த ஆத்மாக்கள் உயர்ந்தால் தான் சக்தி நிலை கூடும்.

உலக சக்தியும்… அண்டசராசரங்கள் என்று உணர்த்துகின்றனரே… அந்த அனைத்துச் சக்தியையும் உணர்த்த வல்ல சக்தி இந்த உலக ஆத்மாக்களுக்குத் தான் உண்டு.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எந்தச் சக்திக்கும் இல்லை…!

இதை உணர்த்தும் நிலை இந்த உலகம் நம் பூமியின் நிலை கூடிக் கொண்டேயுள்ளது. உலகச் சுழற்சியில் பல அமில சக்திகளை நம் உலகம் ஈர்த்துக் கொண்டே சுழன்றுள்ள நிலையில் உலகின் உள் நிலையில் உள்ள பல அமிலங்கள் வெளிப்பட்டு விட்டது.

1.இயற்கையாக வெளிப்பட்டது மட்டுமின்றி
2.மனிதனால் பூமியிலுள்ள பல பொக்கிஷத்தை ஈர்த்து எடுத்ததினால்
3.மேல் பாகம் கனத்தும் உள் நிலை வலுவிழந்தும் உள்ள நம் பூமியின் நிலை
4.இந்தக் குறுகிய காலப் போக்கில் தன் நிலையைத் தானாக ஒழுங்குபடுத்தும் நிலை வருகின்றது.

அப்பொழுது நம் நிலை எல்லாம் என்னவாகும்..?

அதனை உணர்ந்து இந்த உடல் என்ற கோளத்தை நம் நிலைக்குகந்த அமிலங்களைச் சேமித்து… நம் உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து.. ஆத்ம ஞானம் பெறும் அறிவின் பொக்கிஷத்தின் வழித் தொடரை ஒவ்வொருவரும் உருவாக்குங்கள்… தப்ப முடியும்.

அகஸ்தியரின் ஆற்றலைப் பரிபூரணமாக பெறச் செய்யும் தியானப் பயிற்சி

அகஸ்தியரின் ஆற்றலைப் பரிபூரணமாக பெறச் செய்யும் தியானப் பயிற்சி

 

அகஸ்தியர் அமர்ந்த இடத்தில் குரு காட்டிய நிலைகள் கொண்டு நான் (ஞானகுரு) அமர்ந்து தியானிக்கும் பொழுது அகஸ்தியன் கண்ட விண்வெளியின் ஆற்றலையும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அறிய முடிந்தது.

அன்று ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்த நிலைகளை அந்த மிக மிகச் சக்தி வாய்ந்த அந்த நிலைகளை குரு பலத்தால் நுகர்ந்தறிய முடிந்தது.

ஏனென்றால் மிக மிகச் சக்தி வாய்ந்த ஞானிகளினுடைய உணர்வின் சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது. காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண் உலகம் சென்றவர்கள்.

விஷம் எப்படி மற்றொன்றை வீழ்த்துகின்றதோ அதைப் போல தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தான் அந்த மெய் ஞானிகள்…!

அவர்களுடைய உணர்வை இந்தச் சாதாரண மனித வாழ்க்கையில் இருக்கும் நாம் பெற வேண்டும் என்றால் நம் நினைவலைகளைச் சுத்தமாக மாற்றிவிடும்… செயலற்ற நிலைகளாக ஆகிவிடும்….! நம்முடைய சாதாரண எண்ணத்தால் அதைக் கவர்ந்து இழுக்க முடியாது.

அரசர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விஷத்தை சிறுகச் சிறுகக் கொடுத்து அந்த விஷத்தின் தன்மையை உடல் முழுவதும் சேர்க்கச் செய்து அதன்பின் பெரும் கொண்ட விஷத்தைக் குடித்தாலும் தன் குழந்தைகளைப் பாதிக்காத வண்ணம் அன்று எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போன்று தான் குருநாதரும் எனக்குள் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை பெறும்படி செய்தார்.

முதலிலே அவர் உணர்த்தும் போது வேறோரு நிலையில் தான் எனக்குக் காட்டினார். பின்பு அதன் வழியில் சிறுகச் சிறுக என்னுடைய எண்ணத்தின் ஏக்கத்தை நிலைபடுத்தச் செய்து அகஸ்தியர் சென்ற இடங்களுக்கெல்லாம் மலைப் பிரகாரங்களில் சுற்ற வைத்தார்.

அகஸ்தியன் தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். இந்த ஸ்டேஷனை நீங்கள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் இன்று மகரிஷிகள் ஆகிவிட்டார்கள் – நீங்களும் அவ்வாறு மகரிஷியாகலாம்.

1. அகஸ்தியர் தாய் கருவில் பெற்ற பல அற்புத சக்திகளையும் பச்சிலைகள் மூலிகைகளின் வாசனைகளையும் அருள் தாவர இனச் சத்துகளையும் நறுமணங்களையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2. தாய் கருவிலிருக்கும் போது நஞ்சையே ஜீரணித்து அடக்கிடும் சக்தியாக விளைந்த அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3. அகஸ்தியன் பிறந்த பின் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற பிரபஞ்சத்தின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4. அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளை தன் இன மக்கள் பெறவேண்டும் என்ற இச்சையில் வெளிப்படுத்திய மூச்சலைகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5. அகஸ்தியர் உணர்வுகள் அனைத்தும் எங்களுக்குள் பதிவாகி கருவாகி அணுவாகிட அருள்வாய் ஈஸ்வரா… அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே நாங்கள் சென்றிட அருள்வாய் ஈஸ்வரா
6. வானஇயல் புவியியல் உயிரியல் மூன்றையும் அறிந்த அகஸ்தியரின் ஆற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
7. தன்னை அறிந்த… விண்ணை அறிந்த அகஸ்தியரின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி எதனையும் அறிந்திடும் ஆற்றலை வளர்த்துக் கொண்ட அகஸ்திய மாமகரிஷியின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
9. எல்லாவற்றையும் வென்றிடும்… அடக்கிடும்… இயக்கிடும்… ஆற்றல் கொண்ட நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்த அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்ற அகஸ்தியரின் நுண்ணிய ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
11. மின்னலைப் போன்று எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் அகஸ்தியருடைய நினைவாற்றல் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
12. அகண்ட அண்டத்தையும் தன் எண்ணத்தால் எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்ட அகஸ்தியரின் அருளாற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
13. 27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்து ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
14. விண்ணின் ஆற்றலைப் பஸ்பமாக்கிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற்று என்றுமே அழியாத வேகா நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா
15. சர்வ ரோகங்களையும் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களையும் போக்கக் கூடிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. நஞ்சினை வென்றிடும் அகஸ்தியரின் அருள் உணர்வுகள் எங்கள் இரத்தங்களில் கலந்து அணுக்கருக்களாக உருவாகி நாங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
17. அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
18. நாங்கள் அனைவரும் அகஸ்தியரின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
19. நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகளைச் சேர்த்து சேர்த்து உயிரைப் போன்று ஒளியாக மாற்றிய எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்படி அகஸ்தியன்பால் கூர்மையாக நினைவாற்றல் செல்லும் பொழுது அவனின் உணர்வுகள் பதிவாவதும் அதை நுகரும் சக்தி பெறுவதும் உயிருடன் ஒன்றி உடலுக்குள் பரப்பும் சந்தர்ப்பம் உருவாகின்றது. இதன் மூலம் நாம் அனைவரும் ஒளி உடல் பெறுகின்றோம்.

நல்ல நேரத்தையும் காலத்தையும்… நாம் தான் உருவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

நல்ல நேரத்தையும் காலத்தையும்… நாம் தான் உருவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணியே வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.

பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும் என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.

இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.

ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.

நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடன் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.

கலாச்சார அடிப்படையில் வந்த உணர்வுகளை விலக்கி ஞானிகளின் கலாச்சாரத்தினை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.