மனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…?

மனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…?

 

மிருகங்களெல்லாம் என்ன செய்கின்றது…? தன் உடல் வலுவைத் தான் காட்டுகிறது.

நான் (ஞானகுரு) வேட்டைக்குப் போயிருக்கின்றேன். புலி கடினமானது அதை ஈட்டி வைத்துக் குத்த முடியுமோ… முடியாது…!

நல்ல கூர்மையான ஈட்டி வைத்துக் கொண்டு புலி அப்படி வருகின்றதென்றால் ஒரு பக்கமாகப் பம்பும். பம்பியவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் பார்வைக்குத் தாக்க வரும்போது இப்படி நேராக வைத்தால் சீறித் தாக்கும்.

ஆனால் இலேசாகச் சாய்த்து வைத்தால் போதும். மேலே வந்தவுடன் அது லபக்… என்று ஊடுருவிவிடும். விட்டுவிட்டோம் என்றால் தய்யா… தக்கா… என்று குதிக்கும்.
1.மனிதன் தன் எண்ண வலு கொண்டு… உறுதி கொண்டு
2.அந்த ஈட்டியை வைத்தான் என்றால் புலியைக் கொன்று விடலாம்.

புலி உடல் வலு கொண்டு தான் தாக்கும். மனிதனை ஒரு அடி அடித்தால் குடல் எல்லாம் பிய்த்துக் கொண்டு போட்டுவிடும்.

தெரிந்தோ தெரியாமலோ நான் வேட்டைக்குப் போகும்போது எனக்கு இந்த மாதிரி யுக்தி வரும். ஈட்டியைக் கையில் வைத்துக் கொண்டு புலி வருகின்றது என்று இப்படித் தாக்கினால் பிரண்டு ஓடும். ஈட்டி குத்தியிருந்தால் இன்னும் ஆவேசமாகத் துடிக்கும். கொஞ்ச நேரத்தில் இரத்தமெல்லாம் வெளியில் போய் விட்டது என்றால் சுணங்கி விடும்.

ஒரு கரடிக் கூட்டத்திற்குள் போகும் போதும் இதே யுக்தி கொண்டு ஈட்டியை வைத்தால் போதும்.

அது என்ன செய்யும்…? எதாவது கொடுத்தால் கையில் பிடித்து கொள்ளும். நாம் வலுக்கொண்டு நன்றாகப் பிடித்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பொசுக்கென்று கையை உருவிவிடும்.

நாம் வலுவாக இரண்டு கைப்பிடியை வைத்துக் கொண்டு பிடித்திருந்தால் மண்டி போடும் இப்படியே இழுக்கும். மண்டி போட்டு இழுக்கும் உட்கார்ந்து. நன்றாக இழுத்து வலுவாக விட்டு லபக் என்று விட்டோம் வயிற்றில் ஈட்டி குத்தும்.

மனிதனுடைய எண்ணங்கள் எப்படி இருக்கின்றது…? என்ற வகையிலே குருநாதர் ஒவ்வொரு செயல்களிலும் செய்து காட்டுகின்றார். எது…?

மனிதனின் எண்ண வலுக் கொண்டு எப்படி மிருகங்களைக் கொல்கின்றான்…? என்பதைக் காட்டுகின்றார்.

உணர்வுக்கொப்ப இசை கொண்டு ஊதும் போது பாம்பு மகுடியில் ஆடுகின்றது. அவன் கையில் “விழுது…” (பாம்பு மிரட்டி) வைத்திருப்பான். அந்த விழுதைக் கையில் வைத்தவுடன் பையிலிருந்து பாம்பை எடுத்துக் கொண்டால் படம் எடுப்பதைத் தாழ்த்திவிடும்.

1.மனிதன் எண்ண உணர்வினால் எதையும் அடக்கக் கூடிய வல்லமை பெற்றவன்.
2.நாம் அதிலிருந்து பிறந்து வந்தவர்கள் தான்
3.பல சரீரங்களில் ஒன்றுக்கொன்று இரையாகி வந்தவர்கள் தான்.
4.எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட நிலையில் அதை அடக்கக்கூடிய சக்தி மனித உணர்விற்கு உண்டு.

இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு போய் குருநாதர் கொடுக்கின்றார்.

சக்தி பெற்று சூட்சம நிலையில் இருக்கும் ஞானிகளின் இன்றைய முக்கியமான செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சக்தி பெற்று சூட்சம நிலையில் இருக்கும் ஞானிகளின் இன்றைய முக்கியமான செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மாறப் போகும் இஜ் ஜீவ உடலையோ மாற்றம் கொண்டு சுழலப் போகும் இப்பூமியின் நிலையையோ சலிப்பு நிலைப்படுத்தி எண்ணத்தை வளரவிடாமல் நம் ஆத்மாவின் உயர்ந்த நிலையை உயர்த்திடும் எண்ணத்தில் செயல் கொண்டு நடந்திடல் வேண்டும்.

1.பூமி ஆரம்ப நாள் தொட்டு வந்திட்ட உயிரணுவாய் உயிராத்மாவாய்… வளர்ந்த நற்ஜோதியின் நல்தெய்வங்களெல்லாம்…
2.இப்பூமியில் ஒவ்வொரு பிரளயத்திலும் பல நிலையிலும் வாழ்ந்து அந்நிலையின் தொடரினால்…
3.இன்றளவுமுள்ள நல் நிலையில் வந்திட்ட நல் ஆத்மாக்களின் சக்தி நிலையின் தொடராக…
4.சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே இன்று பல நிலைகளுக்கு…
5.நல் ஆத்மாக்களாகப் பலரை ஈர்க்கும் நிலைகொண்டு செயல்படுகின்றன.

இவ்வுலகில் இந்தியாவில்தான் ஞானிகளும் சித்தர்களும் வழி வந்ததின் நிலை அதிகம். இவ்வுலகனத்துமே இவ் இந்தியாவில் இருந்துதான் பல சித்தர்கள் சென்று ஆத்மீக வழியை வழி நடத்தினார்கள்.

இயேசு கிருஸ்து இந்தியாவில் சில இடங்களில் வந்து வாழ்ந்து சென்றார். முகமது நபியும் இவ்விந்தியாவில் வந்து வாழ்ந்தவர்தான். புத்தரின் நிலையும் அதுவே…!

“இந்தியாவை உயர்ந்த எண்ணத்தில் காட்டல் வேண்டும்…” என்ற நிலையில் விளக்கவில்லை. இப்பூமியில் உள்ள அனைத்து நிலைகளும் பொதுவானவையே…!
1.ஆத்மீக நெறியில் தொடர் நிலை வழி வந்த முதல் நிலை இங்குதான்.
2.ஆனால் இன்று நாம் எல்லாரும் முருகராய் வழிபடும் அப்போகரின் ஆரம்ப ஞான சித்து நிலை பெற்ற இடம் சீனாவில்தான்.

இன்று… இன்றைய மக்களினால் பிரித்த நிலைதான் சீனா… இந்தியா என்ற நிலையும்…! அந்நிலையில் வழிவந்தவர்தான் நம் போகர்.

போகர் சித்து நிலையின் தொடர் நிலையில் சூட்சுமத்தில் செயல் கொண்டிடும் சக்தி பெற்ற பிறகு இன்று மெக்கா மதீனா என்று புண்ணிய யாத்திரை ஸ்தலமாகச் சென்றிடும் இடத்தில் இதே நம் போகர்தான் முகமது நபியின் நாமத்தில் செயல் கொண்டு அந்நாட்டில் இப்பக்தி நிலையை அல்லா என்னும் நாமத்தில் வளர விட்டார்.

இன்றைய புண்ணிய ஸ்தலமாய் செயல் கொண்டு துதித்திடும் அம் மெக்கா மதீனாவின் திரைகளுக்குள் பூஜிக்கும் சக்தி நிலை என்ன..?

காட்சி – யானைச் சிலையின் மேல் லிங்க ஜோதியின் காட்சி…!

பல கோடி மக்கள் தரிசிக்கச் சென்றிடும் அந்நிலையிலுள்ள திரையின் மர்ம நிலையென்ன…?

1.ஆண்டவனின் சக்தி நிலை ஒன்றே
2.இஜ் ஜாதி இனம் போர்வையில் வழி வந்ததின் நிலைதான் இன்றுள்ள நிலை.
3.அங்குள்ளவர்கள் சிலருக்கு மட்டும் உண்மையின் நிலை புரியும்.

அல்லாவாய் அங்கு செயல்படுத்துபவர் யார்…?

காட்சி: மேடையில் ஜிப்பா அணிந்து தலையில் துணியுடன் ஒரு பெரியவர் காட்சியளிக்கின்றார்… புன்னகைத்தே தலையை மட்டும் அசைக்கின்றார்…! அடுத்து பெரிய வேல் எதிரில் நிற்கிறது…!

யாரென்று எண்ணுகின்றீர்…?

அல்லாவாய் செயல் கொண்டவரும்… முருகனாய் வழி வந்தவரும்… இலங்கையில் கதிர்காமத்தில் சில நிலைகளைச் செய்தவரும்… “அனைவருமே ஒரே சக்தி நிலை கொண்ட போகரின் நிலைதான்…”

சூட்சும நிலையில் எவ்வுடலையும் தனதாக ஏற்கும் சக்தி பெற்ற போகரினால் பல நாடுகளில் அவரது எண்ணத்தின் செயல் ஜோதி சக்தி “இன்றும்…” செயல் கொண்டு வருகின்றது.

அவர் வாழ்ந்த ஒவ்வொரு சூட்சும நிலையிலும் பல போதனை சக்திகளை வளரவிட்டுச் சக்தியளித்துச் செயலாக்கியுள்ளார். ஜாதகம் நாடி மருத்தவம் இப்படிப் பல நிலைகளைச் சித்து நிலை கொண்ட நாளிலேயே படரவிட்டுள்ளார்.

இன்று இவ்வுலகெங்கும் வெடி நிலையை ஆரம்பித்தவரே நம் போகர்தான். ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு வெடி நிலையினால் பல நிலைகளை ஆரம்ப நாளில் செயலாக்கிக் காட்டியவர் நம் போகர்தான்.

சித்து நிலையில் அவர் அறிந்த நிலைதான் இன்று இவ்வுலகம் முழுவதும் பரவியுள்ள மருத்துவ நிலையும். அந்நிலையின் தொடரை வைத்துத்தான் இன்றைய வளர்ச்சி நிலையெல்லாம்.

அவர் சீனாவில் வாழ்ந்த நாளில்தான் சூட்சுமத்தின் ஆரம்ப நிலையில் பல நிலைகளை முதன் முதலில் செயலாக்கி வெளிப்படுத்தினார். அன்றே பல சக்தி நிலையை சித்து நிலையினால் சூட்சும நிலை பெறும் நிலையெல்லாம் அறிந்து செயலாக்கினார்.

இவரின் நிலை போன்றே…
1.இவ்வுலகம் தோன்றிய நாள் தொட்டு தன் சக்தியைச் செயல் கொண்டு வந்திடும் நல் ஆத்மாக்களெல்லாம்
2.இக்கலியில் வாழ்ந்திடும் பிம்ப நிலை கொண்ட ஆத்மாக்களை
3.நல்லுணர்வு கொண்டு வந்திடும் சக்தி நிலைக்கு அழைத்துச் சென்றே
4.இம் மாறப்போகும் கலியின் பிடியிலிருந்து மீட்டே…
5.கல்கியில் நல் ஆத்மாக்களாய் செயலாக்கிட அழைத்துச் செல்கின்றனர்…!

பரமபதம்…!

பரமபதம்…!

 

புலி மிகவும் கொடூரமான விஷத் தன்மை கொண்டது. உதாரணமாக புலி ஒரு மானைத் தாக்கப்படும்போது அந்த விஷத்தின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள் ஊடுருவி அந்த உணர்வுகள் வலுப் பெறச் செய்கின்றது.

மான் இறந்து விட்டால் புலியின் ஈர்ப்பிற்குள் வந்து புலியாகப் பிறக்கின்றது. இப்படித் தான் பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.பல உடல்களுக்கு இந்த உடல் இரையாகி…
2.இரையாக்கிய உடலின் உணர்வின் சத்தை நுகர்ந்து தனக்குள் இரையாக்கி..
3.அந்த இரையின் உணர்வை உயிர் செயலாக்கப்படும்போது பரிணாம வளர்ச்சி அடைந்து…
4.இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது என்பதனை நாம் மறந்திடலாகாது.

இதை நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபதம் என்ற நிலையில் ஒரு அட்டையை வைத்திருப்பார்கள். அதிலே பார்க்கலாம்.

முதலில் தாயத்தைப் போடுவார்கள். விழுகும் தாயத்திற்குத் தக்க காய்களை வைத்து அங்கே நகட்டுவார்கள். சிறுகச் சிறுகக் காய்கள் நகற்றப்படும் போது.. பாதையில் ஏணி இருக்கும். ஏணியின் பக்கம் சென்று விட்டால் மேலே சென்று விடுகின்றது.

சிறு ஏணியில் ஏறினாலும் அதற்கடுத்த கட்டம் விஷம் கொண்ட பாம்பு இருக்கும். அது தீண்டிவிட்டால் மீண்டும் கீழே இழுத்துக் கொண்டு வந்துவிடும். நாய் நரி போன்ற நிலைகளை அங்கே போட்டுக் காட்டியிருப்பார்கள்.

அடுத்து மீண்டும் தாயத்தை உருட்டி மேலே செல்லும் போது மிகப் பெரிய ஏணி மூலம் துரித நிலைகள் கொண்டு மேலே சென்று விடுகிறோம்.

மிகவும் வேகமாக மேலே வந்துவிட்டோம்…! என்று இறுமாப்பு கொண்டலும் அடுத்த கணம் அருகிலே பெரிய பாம்பு காத்திருக்கின்றது.

தாயம் அதிலே விழுந்து விட்டால் அதன் வாயின் பக்கம் சென்ற பின் நேராகக் கீழே இறக்கிப் பன்றியின் பக்கம் கொண்டு வந்து விடும்.

பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை எப்படி நீக்கி நல்லதை எடுத்ததோ அதைப் போல மீண்டும் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி நீக்கித் தான் அடுத்து மனித நிலைகளைப் பெற முடியும் என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

1.அதாவது உயர்ந்த நிலையில் ஏணியில் மேலே சென்றாலும்
2.ஒரு விஷத்தின் தன்மை தாக்கப்படும்போது மீண்டும் கீழான பிறவிகளுக்குப் போய்விடுவோம் என்பதனை
3.இரவு முழுவதும் நாம் விழித்திருந்து சிவன் ராத்திரி… வைகுண்ட ஏகாதசி அன்று
4.இந்த விளையாட்டின் மூலமாக நம்மை உணரும்படி செய்தனர் ஞானியர்.

காரணம்… தீமைகளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நம் உயிரின் நிலைகள் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள்.. தீமையான உணர்விலே சிக்கினால் அதன் உணர்வு கொண்டு மீண்டும் இழி நிலையான சரீரத்தில் கொண்டு போய் நம்மைச் சேர்த்துவிடும் என்று இரவு விழித்திருக்கும் போது இத்தகைய பரமபதத்தை ஆடுவார்கள்.

மனிதர்கள் நாம் தெரிந்து கொள்வதற்காக சாஸ்திர விதிகள் இவ்வாறு கூறுகின்றது.

ஆக… பெரிய ஏணி எடுத்து தப்பிச் சென்றாலும் அடுத்து வரும் பெரிய பாம்பின் தன்மை வரும் பொழுது அதிலிருந்து தப்புவதற்கு என்ன வழி…?

பரமபதம் என்பது… இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் உணர்வு கொண்ட இருபத்தி ஏழு உணர்வுகளும் ஒன்றானால் அடுத்து பிறவியில்லா நிலை அடையும் நிலை.

1.என்றுமே பிறவியில்லா நிலைகள் கொண்டு எதுவும் எதிர்ப்பு இல்லாத நிலைகள் கொண்டு
2.அருள் உணர்வுகளைப் பெற்றால் இருளை அகற்றிப் பேரொளி என ஆக முடியும் என்பதனை
3.பரமபதம் என்று ஒரு காகிததை வைத்து அதிலே தாயத்தை உருட்டி விளையாடும் போது “தன் நிலையை அடையும் படி செய்கின்றனர்…!”

ஆனால் இதையெல்லாம் நாம் விளையாட்டிற்காக என்று நாம் பார்த்துத் தெரிந்து கொள்கின்றோமே தவிர இயற்கையின் உண்மையின் நிலைகளை அறியவில்லை.

சிவன் ராத்திரி என்று விழித்திருப்பதும் வைகுண்ட ஏகாதசி என்று விழித்திருப்பதும் அன்றைய நாள் ஒரு விளையாட்டு மூலமாக
1.பேருண்மைகளை எல்லாம் அறியும்படி நமது நாட்டின் சாஸ்திரங்கள் இருப்பினும்
2.நமது ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வினை இன்னமும் நாம் அறியாமல் தான் இருக்கின்றோம்…!

கலியிலிருந்து கல்கி உலக மாற்றம்… “பிரளயம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கலியிலிருந்து கல்கி உலக மாற்றம்… “பிரளயம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தெய்வ நிலை கொண்ட ரிஷிகளின் சக்தியினால் இப்பூமியில் இன்று வாழ்ந்திடும் மனித இன வர்க்கத்தின் தொடர் நிலையே அடுத்து மாறப்போகும் கல்கியில் வந்திடும் உயிரினங்களின் சக்தி இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை கொண்ட ஆத்மாக்களின் சக்தியைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற நிலை வரப்போகின்றது.

இப்பூமி தோன்றிய நாள் தொட்டு இம் மனித ஆத்மாக்களாய் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட்ட நிலைகள் மாறி மாறிப் பல தடவை (மூன்று) ஏற்பட்டுள்ளன.

இப்பூமியில் ஆரம்பத்தில்…
1.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் இயற்கையின் தாவர வர்க்கத்திலிருந்து மாறு கொண்ட உயிரினங்கள் வளர்ச்சி பெற்றன
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனித உடல் கொண்ட ஆத்ம நிலையும் வந்தது.

அந்நிலையின் வளர்ச்சி கொண்டு இப்பூமியின் பிரளய நிலை மாறி மற்ற நிலை வந்த பொழுதும் ஆரம்ப நாளில் இப்பூமியில் தோன்றிய உயிரணுக்களின் நிலைக்கும் இரண்டாவது மாற்றம் கொண்டு வளர்ந்திட்ட உயிரணுக்களின் நிலைக்கும் மாறு கொண்ட நிலை வந்தது.

அந்நிலையின் தொடர்ச்சியில் பல கோடி ஆண்டுகள் இப்பூமியின் தொடர்ச்சி நிலை இருந்தது. ஒவ்வொரு மாற்றம் கொண்ட நிலையிலும்
1.இப்பூமியின் நிலையும்… உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியில் வளர்ந்த தாதுப் பொருட்களின் நிலையும் மாறி மாறித்தான் வந்து கொண்டுள்ளன.

இன்று நம் பூமியில் பல நிலைகொண்ட உலோகங்கள் சில சில இடங்களில் வளர்ந்து வருகின்றன. ஆனால் உலோக சக்தியிலேயே உருளுகின்ற மண்டலங்கள் சில உள்ளன.

மற்ற அமில நிலைகளை ஈர்க்காமல் ஒரு நிலை கொண்ட ஒரே அமில சக்தியின் சக்தியை மட்டும் ஈர்த்து வளருகின்ற சிறிய மண்டலங்கள் சில உள்ளன.

நட்சத்திர மண்டலமாக உருளுபவை நிலையெல்லாம் இந்நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன. மாற்றம் கொண்ட மண்டலமும் உண்டு.

நம் பூமியில் மாறி மாறி வந்திடும் இப் பிரளய நிலையில் உயிரினங்களும் மாற்றம் கொண்டே சுற்றி வருகின்றன என்று சொன்னேன். உயிரினங்கள் சுவாசித்து வெளிப்படுத்தும் நிலைக்கொப்பத் தான் அவற்றின் சக்தி நிலையுள்ளது.

ஆனால் பூமி ஒவ்வொரு தடவையும் மாற்றம் கொண்டு சுழலும் நிலையில்
1.பூமியின் சுவாச நிலையும் மாற்றம் கொண்ட நிலையின் தொடரினால்
2.அந்நிலையிலிருந்து வளர்ச்சியுறும் இன வர்க்கங்கள் அதற்குகந்த நிலையில்தான் வளர்கின்றன.

ஆரம்ப நாளில் உலகம் தோன்றிய நிலையிலிருந்து பல பிரளய நிலை ஏற்பட்டு அன்று தோன்றிய உயிரினங்கள்
1.அன்றிலிருந்தே எவையுமே அழிந்திடாமல் பல எண்ண நிலையில் சக்தி நிலையின் தொடர்பு கொண்டு…
2.இன்றளவும் என்றென்றும் வாழ்ந்து கொண்டேதான் உள்ளன.

பல புராணக் கதைகளைக் கேட்டு வருகின்றீர்கள்… இவற்றின் நிலையெல்லாம் என்ன…?

ஒவ்வொரு பிரளயம் நடப்பதற்கும் முந்தைய வாழ்க்கையில் நடந்த நிலைகளை அவ்வாத்மாவின் தொடர் கொண்டு வந்திட்டவர்கள்… அடுத்த பிரளயத்தில்…
1.சக்தி கொண்ட நிலை பெற்றவர்களின் எண்ணத்தில் உதித்திட்ட நிலைகள்தான்
2.இன்று நாம் நம்ப முடியாமல் கேட்டிடும் புராணக் கதைகளெல்லாம்.

எவ்வெண்ணமும் முன் தொடரில்லாமல் வருவதில்லை…!

வாழ்க்கையில் நடப்பவைக்கும் கனவில் காண்பவைக்கும் மாறுபட்டுக் காண்கின்றோம். எவையுமே பொய்யல்ல…!

இவ்வுலகம் எத்தனை பிரளய நிலை ஏற்பட்டுச் சுற்றிக் கொண்டு வந்தாலும் எண்ணமும்… எண்ணத்தின் கலப்பினால் நாம் கண்டு பேசி வாழ்ந்திடும் நிலையெல்லாம்… “நம்மைத் தொடர்ந்து கொண்டேதான் வரும்…!”

விஞ்ஞான அறிவு கொண்டோரும் ஆத்மீக நெறி கொண்டு செயல்பட்டால் உலக மாற்றத்தைத் தடுக்க முடியும் – ஈஸ்வரபட்டர்

விஞ்ஞான அறிவு கொண்டோரும் ஆத்மீக நெறி கொண்டு செயல்பட்டால் உலக மாற்றத்தைத் தடுக்க முடியும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய இப்பூமியின் பூமத்திய ரேகையின் நேர் கோட்டை வைத்து அந்த நிலையில் இன்றைய விஞ்ஞானிகளால் மேலே வான மண்டலத்தில் வான இயல் நுட்பக் கருவிகளை வைத்து இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தைக் கண்டறிகின்றனர்.

அதைப் போல இப்பூமத்திய ரேகையின் மையத்தில் இப்பூமியின் உள் பாகத்தில் சில நிலைகளைச் செய்வித்தால் இப் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் தன்மையைக் கொண்டு…
1.இப்பூமியில் தற்பொழுதும் இனி நடக்கப்போகும் காலத்தின் இயற்கையின் சீற்றத்திலிருந்து
2.எந்தெந்த இடங்களில் நிகழப்போகும் பெரும் மாற்றத்தைக் கண்டறிந்து அந்த ஆத்மாக்களைக் காத்திடவும் முடிந்திடும்.

வான நிலையில்தான் இவர்களின் ஆராய்ச்சி நிலை எல்லாம் உள்ளது. பூமியின் உள் நிலைகளை அதிகமாகக் காண முயலவில்லை.

ஆனால் இப்பூமி கவர்ந்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்துதான் இப்பூமியைச் சுற்றியுள்ள வான நிலையும் உள்ளது.

வளர்ந்திட்ட விஞ்ஞானத்தின் சக்தி அறிந்த ஆத்மாக்களினால் அவர்களின் சக்தியையே செயல் கொண்டு காத்திடும் நிலைப்படுத்திடும் ஆத்மீக நெறியையும் கலக்க விட்டால் உலகைக் காக்கவும் முடிந்திடும்.

இவ்வுலகையே செயலாக்கிடும் சப்த ரிஷிகளின் சக்தி கொண்டு…
1.மனித உடலுடன் உள்ள விஞ்ஞான ஆத்மாக்களினால்
2.இவ்வுலகை இக்கலியின் கடைசி மாற்றத்திலிருந்து காத்திடும் சக்தி நிலையும் உண்டு.

ஒவ்வோர் ஆத்மாவிற்குமே ஆதி சக்தியின் செயல் சக்தி அனைத்தும் உண்டு. செயல்படுத்திட்டால் அந்த நற்சக்தியுடன் கலந்தே செயலாக்கிட முடியும்.

சக்தி பொதுவானதே…!

மெய் வழி செல்லும் பாதையைத் தான் எம்மால் காட்டிட முடியும்…. ஏற்றுக் கொள்வதும் அதன் வழி செயல்படுத்துவதும் அவரவர்கள் எண்ணத்தால் தான் அது முடியும்.

குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்கள் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்கள் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக வாலிப பருவத்தில் காதலிக்கின்றனர். ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர்.

ஆனால் குடும்பத்தில் பற்றுடன் இருப்போர் (தாய் தந்தையர்) இது எதற்கு…? இது நமக்கு ஆகாத நிலைகள்…! என்று உணர்த்துகின்றனர்.

இதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இதன்படி என்ன வாழ்க்கை…? என்று இருவருமே மடிந்துவிடுவோம்…! என்று தற்கொலை செய்கின்றனர்.

ஆனால் தற்கொலை செய்யும் இந்த உணர்வுகள் யாரால் இது ஏற்பட்டதோ… இந்த உணர்வின் தன்மை உடலை விட்டு சென்ற அந்த ஆன்மா அவர்கள் உடலில் சேர்ந்து இது உயிரின் தன்மையை அதனை வேதனைப்படச் செய்து இந்த உடலை வீழ்த்திவிட்டு மீண்டும் மனிதனல்லாத உருவுக்கு அழைத்துச் செல்கிறது.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்தாலும்… தற்கொலை செய்யும் உணர்வு வரப்படும்போது.. “இதிலிருந்து விடுபடலாம்…” என்று எண்ணுகின்றனர்

ஆனால் வெளிவந்தபின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் தான் செல்ல முடிகிறது. அந்த உடலையும் வீழ்த்தி விட்டு மிகவும் நஞ்சான நிலையில் வெளி வருகிறது.

தாய் தந்தையர் பற்றாக இருந்து பிளைகளை வளர்த்து ஆதரித்துப் பண்புள்ளவராக மாற்றினர். இவ்வளவு செய்தும் கடைசியில் தன் குழந்தை இப்படிச் செய்துவிட்டதே என்று அவ்ர்களும் கடும் வேதனைப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட வேதனையுடன் குழந்தையை எண்ணும் போது தற்கொலை செய்த அந்த ஆன்மா தாயின் உடலுக்குள் வருகின்றது.

தற்கொலை செய்யும் உணர்வுகளை அங்கே ஊட்டுகின்றது. அதுவும் பலவீனமாகின்றது. அந்த உடலையும் அதில் உள்ள நல்ல அணுக்களையும் மடியும் தன்மை செய்கிறது

இதன் வழி அந்த உயிரான்மா சென்றால் தான் எந்த நிலை பெற்றதோ அந்தத் தாயின் உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து அதன் வழி செயல்பட்டுத் தாயைக் கொல்லவும் செய்கின்றது… நரகலோகத்திற்குத்தான் அனுப்புகிறது. தானும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றது…!

1.ஆக சிறிது நேரம் சந்தோஷத்தை ஊட்டும் இந்த உணர்வுகளில் சிக்குண்ட நிலையில் (தற்கொலை)
2.அடுத்து மனிதன் அல்லாத உருவாகப் பாம்பாக… தேளாகத் தான் உருப்பெற முடியும்.

தாய் தந்தையரை வேதனைப்படச் செய்வோர் இதைப் போல் விஷத் தன்மையைக் கலந்தால் சிந்தனையற்ற நிலை கொண்டு விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுக்கும் உயிரினங்களாக நம்மை உயிர் மாற்றிவிடும் என்பதை மறந்திடலாகாது.

அதைக் காட்டுவதற்குத் தான் “சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…!” என்று உணர்த்தினார்கள்.

1.நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலிலே பதிவாகி
2.அதன் உணர்வைத் தொடர் வரிசையில் எண்ணும் போது அதனின் உணர்வின் அணுக்களாகி
3.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்குகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு தந்தையரின் அருள் துணை கொண்டு மகரிஷிகளின் அருளைப் பெற்று… “மெய் ஞானிகள் காட்டிய நெறியில் வாழ்வதே மிகவும் நல்லது…!”

தினசரி நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை

தினசரி நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை

 

குலதெய்வங்களான நம் மூதாதையர்களின் குல வழியில் தான் நாம் வந்தோம். அவர்கள் உணர்வுகள் தான் நம் உடல். அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அத்தகைய மூதாதையர்களை அதிகாலை துருவ தியானமிருந்து விண் செலுத்த வேண்டும்.

அந்த உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்து உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விட்டால் “பரம்பரை நோய்…!” என்று நம் குடும்பத்தில் வராது.

ஏனென்றால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் உயிரான்மாக்கள் செல்லும் பொழுது
2.அடுத்து உடல் இல்லாது கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நிலைத்திருக்கும்.
3.அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நம் மூதாதையரின் உயிரான்மாக்கள் உணவாக உட்கொண்டு
4.அதன் ஈர்ப்பு வட்டத்தில் பெருவீடு பெருநிலை என்ற நிலைகள் அடைந்து
5.பிறவியில்லா நிலை அடையவும் அழியா ஒளிச் சரீரம் பெறவும் இது உதவும்.

ஆகவே தியானம் இருப்போர் அனைவரும் நம் முதாதையரை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

மூதாதையர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொருத்தரும் சாப அலைகளை விட்டிருப்பார்கள். அந்த வேதனை உணர்வுகள் நம் குடும்பத்தில் பரம்பரை நிலைகளில் அது தொடர்ந்து வரும்.

அனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைப்போன்று மூதாதையர்களை விண் செலுத்தி விட்டால் சாப அலைகளோ தீய அலைகளோ நம்மைச் சாடாது பாதுகாத்துக் கொள்ள இது உதவும்.

ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் உங்கள் குடும்பத்தில் வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை ஒரு இரண்டு நிமிடமாவது எண்ணி அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து உடல் பெரும் உணர்வுகளைக் கரையச் செய்தல் வேண்டும்.

பிறிதொரு ஆன்மாக்களை நம் பழக்கவழக்கங்கள் காரணமாக அதிகமாக நேசித்து இருந்தால் அந்த ஆன்மாக்கள் நம் உடலிலே புகுந்திருக்கும்.

துருவ தியானத்தில் நாம் இருக்கும்போது…
1.என் உடலில் உள்ள அத்தகைய ஆன்மாக்களும் அது பிறவியில்லா நிலைகள் அடைந்து
2.எனக்குள் நல்லது செய்யும் தன்மைக்கு வர வேண்டும்…! என்று இப்படி எண்ணி ஏங்குதல் வேண்டும்.

காரணம் ஒரு உடலில் உருவான உணர்வுகள்தான் நம் உடலிலே வந்து அது இயக்கும். ஆனால் அதற்கு மேல் வளர்ச்சி இல்லை.

நம் இரத்த நாளங்களில் தான் பிறிதொரு ஆவியின் தன்மைகள் இருக்கும்.
1.அது நம் உயிரின் தன்மையில் உராயப்படும் பொழுதுதான் அதனின் உணர்ச்சிகளை ஊட்டும்
2.இரத்தங்களில் சுழன்று கொண்டே வரும்
3.இரத்தத்தின் வழியாக நம் கவன நரம்பு இருக்கும் பக்கம் சென்றபின்
4.அதன் நினைவாற்றல் தூண்டி அந்த உணர்வுகளை இயக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து தப்பிக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

நம் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும்போது அந்தத் தீய உணர்வு கொண்ட உணர்வின் அணுக்களையும் நம்மால் மாற்ற முடிகின்றது.

அந்த ஆன்மாக்கள் நமக்குள் இருந்து பிறவியில்லா நிலையும் அடையும் தகுதியும் பெறுகின்றது. நாமும் பிறவியில்லா நிலை அடைய இது உதவுகின்றது.

நாம் எத்தனையோ நண்பர்களிடம் பழகுகிறோம். அப்படிப் பழகிய நண்பர் திடீரென்று அகால மரணம் அடைந்தார் என்றால் இறக்கும் சமயம் நம் மீது அவர் எண்ணங்களைச் செலுத்தினால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

வந்து விட்டால் அவர்கள் உடலில் வாழும் காலத்தில் எப்படி அவஸ்தைப்பட்டனரோ அதையெல்லாம் நம் உடலுக்குள் வந்து சேர்த்துவிடும்.

இது போன்ற நிலைகளைத் தடுக்கவும் காலை துருவ தியானத்தில்
1.எங்களுடன் நண்பர்களாகப் பழகி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள்
2.அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அவர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற்று
4.பிறவி இல்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

ஞானிகள் கொடுத்த தத்துவங்கள் காலத்தால் மாற்றப்பட்டு அந்த நூல்கள் அனைத்தும் மாற்றம் கொண்ட உருவில் தான் இன்று உள்ளது

ஞானிகள் கொடுத்த தத்துவங்கள் காலத்தால் மாற்றப்பட்டு அந்த நூல்கள் அனைத்தும் மாற்றம் கொண்ட உருவில் தான் இன்று உள்ளது

 

வான்மீகி மகரிஷியினால் இயற்றப்பட்ட இராமாயணக் காவியத்தைக் காலப்போக்கிற்கும் அவரவர்கள் வாழ்ந்த எண்ண நிலைக்கொப்ப நாம் மாற்றப்பட்ட இக்காவிய நூலைப் போலவே
1.இன்று இவ்வுலகில் தோன்றிய ஒவ்வொரு நூலும்
2.கால நிலையில் எண்ண நிலைக்கொப்ப மாற்றம் கொண்ட உருவில் தான் உள்ளது.

இயேசு கிறிஸ்து இயற்றியதாக பைபிளை வெளியிட்டு அவ்வுருவில் அவரின் செயலை வெளிப்படுத்துகிறார்கள்.

எழுதியவர் யார்…? வழிப்படுத்துபவர் யார்..? இவ்வுலகம் எந்நிலையில் உருப்பெற்றது…? மனித ஆத்மாக்கள் தோன்றிய நிலையையே ஆதாம் ஏவாள் என்ற இருவரால் மனித வர்க்கம் வளர்ந்தது என்கின்றனர்.

அப்படி இருக்க இயேசு கிருஸ்துவின் உண்மையின் சக்தியான அன்பு ஆசையுடன் கூடிய எல்லா உயிரினங்களையும் ஒன்று போல் அன்புபடுத்திய அவ்வுடலில் ஏறிய மகானின் சக்தியையே பைபிளின் நிலையினால் “உயிரணுக்களை (மாமிசங்களை) உணவாக்கி உண்டிடும் நிலையில் அம் மகான் இருந்தார்…!” என்று உணர்த்துகின்றனர்.

ஏன்…?

அவரது சக்தி நிலையில் பொறாமை கொண்டவரின் எண்ணத்தினால் அம் மகானின் உடலையே அழித்துவிட்டு…
1.அன்று வாழ்ந்த மக்களின் எதிர்ப்பிலிருந்து மீள அவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட சக்திச் சொல்லை
2.பிறர் ரூபத்தில் வெளியிட்டதின் நிலைதான் இன்றைய பைபிளின் நிலை.

நீங்கள் புசித்திடும் அனைத்துமே அணுக்கள்தான். “ஒன்றை அழித்து ஒன்று வாழ்கின்றது…” என்பதனைத்தான் முன் பாடத்தில் உணர்த்தியுள்ளேன்.

உயிரணுவாய் வளர்ச்சி பெற்று மனித ஆத்மாவாகப் பல எண்ணங்களுடன் பல ஜென்மங்கள் பெற்று இவ்வெண்ண நிலையில் வந்திட்ட நிலையில் மிருகத்தின் நிலையையே உணவாக உண்டால் என்ன ஆகும்…?

நல் நிலையில் உணர்வு பெற்று மனித ஆத்மாக்களாய் உள்ள நிலையில்…
1.நம்மிலிருந்து கீழ் நிலைக்குச் சென்றிட்ட (மற்ற உயிரினங்களின்) எண்ண அணுக்களின் பிம்ப உடல்களைச் சமைத்து உண்ணும் பொழுது
2.நம் எண்ணமுடன் நம்மைக் காட்டிலும் பல எண்ண நிலைகளுடன் வாழ்ந்திட்ட அணு சக்திகள் நம் உடலில் ஏறி
3.நம் நிலையும் அவற்றின் நிலையுடன் சென்றிடும் நிலை தான் ஏற்படும்.

இம் மாமிச உணவுகளிலிருந்து மாறு கொண்ட உணவை உண்டால்…
1.நம் உடலுடன் பல தீய சக்திகளின் நிலைகள் ஏறாமல்
2.நம்மைக் காத்து கொண்டிட முடியும்.

அனைத்துமே அணுக்கள்தான். அணுவில் வந்த கனியும் ஒன்றுதான் பட்சிகளும் ஒன்றுதான். எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்திய பிறகு எல்லாம் ஒன்றே தான்.

இயேசுபிரான் தான் வாழ்ந்த காலத்தில் அவர் உடலில் ஏறிய அம் மகானுக்கு அனைத்துமே ஒன்றேதான். அன்புடன் அளித்திட்ட உணவு வகைகளை மறுத்திடாமல் எல்லாமே ஒன்றாக எண்ணிப் புசித்திட்டார்.

பாமர ஜென்மங்களாய் வாழ்ந்திடும் நாம்…
1.ஆத்மீக நெறி வழியில் ஆண்டவனின் சக்தி பெற்ற ஜோதிகளாய் வளர்ச்சி பெற்று வந்திட
2.நம் ஆத்மாவுடன் நாம் வாழ்ந்திடும் இந்த உடலில்
3.மற்ற அணுக்களின் எண்ணத் தாக்குதலில் இருந்து மீளத்தான்
4.நம்மைத் தீய சக்திகள் தாக்காமலிருக்கத் தான் வழி முறைகளை உணர்த்துகின்றோம்.

நமக்குள் பிரணவமாக்க வேண்டிய சக்தி

நமக்குள் பிரணவமாக்க வேண்டிய சக்தி

 

ஓ…ம் என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்.

நாம் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் நிலைகளை எல்லாம் உயிர் ஓ..ம்… ஓ…ம்… என்று பிரணவமாக்குகின்றது. பிரணவம் என்றால் அதை ஜீவன் பெறச் செய்து உடலுக்குள் ஜீவணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது உயிர்.

அதே சமயத்தில் நுகர்ந்த உணர்ச்சிகள் கொண்டு நம்மை இயங்கச் செய்வதும்… அந்த உணர்வே தன்மை நம் உடலை இயக்குவதும்… அதன் வழி நம் வாழ்க்கை வழி நடத்திச் செல்வதும்… நுகர்ந்தது எந்தக் குணமோ அக்குணமே நம்மை ஆள்கின்றது.

அதனால் தான் ஓ…ம்…! என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம் என்று சொல்வது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நுகர்கின்றோமோ பார்க்கின்றோமோ… நாம் எண்ணிய அந்தந்தக் குணங்களை வைத்து நம்மை ஆள்கின்றது. உயிர்… ஆண்டவனாக ஆளச் செய்கின்றது.

1.நமது உடல் ஒரு அரங்கம்
2.நாம் நுகரும் உணர்வுகள் ஒரு நாதம் (உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலிகள் கிளம்புகிறதல்லவா…”
3.கோபமான நாதங்களை எடுத்தால் அந்த உணர்வின் தன்மை நம்மை ஆளுகின்றது… நமக்கும் கோபம் வருகிறது.

அதைத் தான் “அரங்கநாதன்” என்று உயிருக்குக் காரணப் பெயர் வைத்து உடலுக்குள் அந்த நாதங்களை (எண்ணங்களை) எழுப்பிக் கொண்டே இருக்கின்றது உயிர் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆனாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை ஆளுகின்றது என்பதற்கு “ஆண்டாள்” என்று காரணப் பெயர் வைத்து
1.நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை நடத்த…
2.பண்படும் உணர்வுகளை நாம் வளர்க்க ஞானிகள் காவியமாகப் படைக்கின்றனர்
3.ஸ்தல புராணங்களாகவும் வடித்து வைத்துள்ளனர்.

அந்த ஸ்தல புராணங்களில் உள்ள உண்மையின் உணர்வுகளை நுகர்வோமேயென்றால் அந்தப் புராணத்திற்குள் மறைந்துள்ள உணர்வுகள் கொண்ட் நமக்குள் தெளிந்த மனதை ஊட்டவும் நம்மை அறியாது பிறருடைய தீமையின் உணர்வுகள் நம்மை இயக்கினால் அதை இயக்காது தடைப்படுத்திடவும் கொடுத்துள்ளார்கள்.

1.ஏனென்றால் அருள் உணர்வை நாம் பெருக்கி
2.அதன் வழி நமது உணர்வே நம்மை ஆள வேண்டும்
3.நமது செயலும் நமது எண்ண வழிப்படி செயல்படுத்திட வேண்டும் என்பதற்குத்தான்…!

ஆனால் தீமையின் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால் தீமையின் செயலும் தீமையான சொல்லும் சொல்லைக் கேட்போர் உணர்வுகளும் நம்மை எதிரியாக்கும் தன்மையும் பகைமையானவனாக மாற்றிவிடும்.

ஆகவே அருள் உணர்வு அனைவரும் பெற வேண்டும் என்று நாம் இத்தகைய நல்ல உணர்வை எண்ணும்போது நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி ஜீவன் பெறுகின்றது.

அதே சமயத்தில் இந்த உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும்போது
1.நமக்குள் தெளிந்த மணமும்..
2.நாம் எதிரிலே நம்மைப் பார்ப்போரை நல்லவராகவும் பண்புள்ளவராகவும் உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் உருவாகி
3.நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் அத்தகைய நிலைகளை மாற்றியமைக்கும்.

அதனால் தான் ஓ..ம் என்ற நாதமாக இயக்கும்… நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரை வணங்க வேண்டும்… உயிரின் துணையால் அருள் உணர்வுகளை நமக்குள் பிரணவமாக்க வேண்டும்…! என்று சொல்வது.

நம் ஆத்மாவை ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

நம் ஆத்மாவை ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஸ்ரீ இராமனாய் வால்மீகி மகரிஷியினால் எழுதப்பட்ட அக்காவியக் கதையில்
1.ஸ்ரீ இராமருக்கு உகந்த குண நிலைகளை அப்பாத்திரத்திற்கு ஏற்றி
2.ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குணநிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டும் என்ற ஆசை நெறியில்தான்
3.வான்மீகி மகரிஷியால் இயற்றப்பட்ட காவிய சக்தி ஸ்ரீ இராமநாதனின் சக்தி.

ஒவ்வோர் ஆத்மாவின் வாழ்க்கையிலும்…
1.குடும்பச் சூழ்நிலையில் ஏற்படும் தாய் தந்தை சகோதர பாசங்கள்
2.வாழ்க்கையுடன் கொடிய எதிர்ப்பு நிலைகள்
3.வாழ்க்கையுடன் உள்ள இயற்கையின் சூழ்நிலைகள்
4.வாழும் நெறி இவற்றையெல்லாம் பிணைத்துத் தாய் தந்தையரையே தெய்வமாக்கி
5.கற்புக்கு நெறி வழி அமைத்து வீரத்திற்குத் தக்க மன பலம் ஏற்றியும் அமைக்கப்பட்ட காவியம் தான் ஸ்ரீ இராம காவியம்.

வாழ்க்கை நெறியுடன் ஒவ்வோர் ஆத்மாவுமே வழிவந்திட வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டது தான் இந்தக் காவியம். ஸ்ரீ இராமனுக்கு மட்டும் அப்பலமும் செயல் திறமையும் அன்பும் பாசமும் சொந்தமல்ல.

ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குண நிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டுமென்ற நெறி முறையின் காவியத்தை… அன்றிலிருந்து பல கோணங்களில் மாற்றப்பட்ட அக்காவியத்தையே… இக்கலியில் நாம் ஸ்ரீ இராமனின் குண நிலையை நெறி வாழ்க்கையாக வழிபடுத்தி வழிநடத்தி வந்திடும் மன நிலையுடன் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இராமர் வாழ்ந்ததாகச் சொல்லிடும் அக்காவியத்தின் பிறப்பிடமான இராமேஸ்வர ஆலயத்தில்…
1.வான்மீகி மகரிஷியின் சக்தி நிலை இன்றும் செயல் கொண்டு வழி நடக்கின்றது.
2.அந்நூலின் உண்மை நிலையும் சக்தி நிலையும்
3.இவ்வியற்கையின் சீற்றத்திலிருந்தும் கால நிலையின் மாற்றத்திலிருந்தும்
4.அந்த ஆலயம் இன்றளவும் தப்பி வருவதின் உண்மை நிலையே அங்கு தவமிருந்த ரிஷிகளின் சக்தியின் நிலையினால்தான்.

உள்ளத்தில் சபல நிலை இல்லாமல் ஸ்ரீ இராமேஸ்வரத்தில் இராம தீர்த்தம் பெறுபவரின் உடலுக்கும் உள்ளத்திற்கும் அந்நல்லருளின் ஜெபத்தின் சக்தி பெற்றே வருகின்றனர்.

1.அந்த நல் எண்ணமேதான் ஒவ்வோர் ஆத்மாவிற்குமே வழி தெய்வம்
2.எவ் வழியில் வழி நடக்கின்றதோ அவ்வழியின் சக்தி நிலை ஒவ்வோர் ஆத்மாவுமே பெறுகின்றது.

எண்ண வழியில் ஆலயத்தில் நாம் வழிபடும் முறை கொண்ட அந்தச் சக்தி நம் ஆத்மாவிற்கும் உடனே வந்தடைந்து அச்சக்தியின் அருளைப் பெறலாம்.

ரிஷிகளினால் ஜெபம் கொண்ட ஆலயங்களில் எல்லாம் அவ்வாலயங்களுக்குச் சென்று நம் எண்ண வழியைச் செலுத்திடும் நிலைக்கொப்ப அவர்களின் அருளாசி நம்முடன் வந்து கலக்கின்றது.

ரிஷிகளினால் வழி நடத்தித் தந்திட்ட பொக்கிஷ வழியுடன் வாழ்ந்திடும் நாம் அந்நல்வழியின் தொடரையே நமதாக ஏற்று ஒவ்வோர் ஆத்மாவுமே ஸ்ரீ இராமனைப் போன்று வாழ்ந்து காட்டிடுங்கள்.

1.சொல்லிலும் செயலிலும் ஆத்மீக அறத்துடன் தியானிக்கும் போது நற்பாக்கியத்தைப் பெறுகின்றோம்
2.மகரிஷிகளின் அருளை நாம் பரிபூரணமாகப் பெறுகின்றோம்.
3.ஆகவே… “நம்முள் உள்ள ஆத்மாவையே ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிடுங்கள்…!”