ஞானிகள் கொடுத்த தத்துவங்கள் காலத்தால் மாற்றப்பட்டு அந்த நூல்கள் அனைத்தும் மாற்றம் கொண்ட உருவில் தான் இன்று உள்ளது

ஞானிகள் கொடுத்த தத்துவங்கள் காலத்தால் மாற்றப்பட்டு அந்த நூல்கள் அனைத்தும் மாற்றம் கொண்ட உருவில் தான் இன்று உள்ளது

 

வான்மீகி மகரிஷியினால் இயற்றப்பட்ட இராமாயணக் காவியத்தைக் காலப்போக்கிற்கும் அவரவர்கள் வாழ்ந்த எண்ண நிலைக்கொப்ப நாம் மாற்றப்பட்ட இக்காவிய நூலைப் போலவே
1.இன்று இவ்வுலகில் தோன்றிய ஒவ்வொரு நூலும்
2.கால நிலையில் எண்ண நிலைக்கொப்ப மாற்றம் கொண்ட உருவில் தான் உள்ளது.

இயேசு கிறிஸ்து இயற்றியதாக பைபிளை வெளியிட்டு அவ்வுருவில் அவரின் செயலை வெளிப்படுத்துகிறார்கள்.

எழுதியவர் யார்…? வழிப்படுத்துபவர் யார்..? இவ்வுலகம் எந்நிலையில் உருப்பெற்றது…? மனித ஆத்மாக்கள் தோன்றிய நிலையையே ஆதாம் ஏவாள் என்ற இருவரால் மனித வர்க்கம் வளர்ந்தது என்கின்றனர்.

அப்படி இருக்க இயேசு கிருஸ்துவின் உண்மையின் சக்தியான அன்பு ஆசையுடன் கூடிய எல்லா உயிரினங்களையும் ஒன்று போல் அன்புபடுத்திய அவ்வுடலில் ஏறிய மகானின் சக்தியையே பைபிளின் நிலையினால் “உயிரணுக்களை (மாமிசங்களை) உணவாக்கி உண்டிடும் நிலையில் அம் மகான் இருந்தார்…!” என்று உணர்த்துகின்றனர்.

ஏன்…?

அவரது சக்தி நிலையில் பொறாமை கொண்டவரின் எண்ணத்தினால் அம் மகானின் உடலையே அழித்துவிட்டு…
1.அன்று வாழ்ந்த மக்களின் எதிர்ப்பிலிருந்து மீள அவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட சக்திச் சொல்லை
2.பிறர் ரூபத்தில் வெளியிட்டதின் நிலைதான் இன்றைய பைபிளின் நிலை.

நீங்கள் புசித்திடும் அனைத்துமே அணுக்கள்தான். “ஒன்றை அழித்து ஒன்று வாழ்கின்றது…” என்பதனைத்தான் முன் பாடத்தில் உணர்த்தியுள்ளேன்.

உயிரணுவாய் வளர்ச்சி பெற்று மனித ஆத்மாவாகப் பல எண்ணங்களுடன் பல ஜென்மங்கள் பெற்று இவ்வெண்ண நிலையில் வந்திட்ட நிலையில் மிருகத்தின் நிலையையே உணவாக உண்டால் என்ன ஆகும்…?

நல் நிலையில் உணர்வு பெற்று மனித ஆத்மாக்களாய் உள்ள நிலையில்…
1.நம்மிலிருந்து கீழ் நிலைக்குச் சென்றிட்ட (மற்ற உயிரினங்களின்) எண்ண அணுக்களின் பிம்ப உடல்களைச் சமைத்து உண்ணும் பொழுது
2.நம் எண்ணமுடன் நம்மைக் காட்டிலும் பல எண்ண நிலைகளுடன் வாழ்ந்திட்ட அணு சக்திகள் நம் உடலில் ஏறி
3.நம் நிலையும் அவற்றின் நிலையுடன் சென்றிடும் நிலை தான் ஏற்படும்.

இம் மாமிச உணவுகளிலிருந்து மாறு கொண்ட உணவை உண்டால்…
1.நம் உடலுடன் பல தீய சக்திகளின் நிலைகள் ஏறாமல்
2.நம்மைக் காத்து கொண்டிட முடியும்.

அனைத்துமே அணுக்கள்தான். அணுவில் வந்த கனியும் ஒன்றுதான் பட்சிகளும் ஒன்றுதான். எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்திய பிறகு எல்லாம் ஒன்றே தான்.

இயேசுபிரான் தான் வாழ்ந்த காலத்தில் அவர் உடலில் ஏறிய அம் மகானுக்கு அனைத்துமே ஒன்றேதான். அன்புடன் அளித்திட்ட உணவு வகைகளை மறுத்திடாமல் எல்லாமே ஒன்றாக எண்ணிப் புசித்திட்டார்.

பாமர ஜென்மங்களாய் வாழ்ந்திடும் நாம்…
1.ஆத்மீக நெறி வழியில் ஆண்டவனின் சக்தி பெற்ற ஜோதிகளாய் வளர்ச்சி பெற்று வந்திட
2.நம் ஆத்மாவுடன் நாம் வாழ்ந்திடும் இந்த உடலில்
3.மற்ற அணுக்களின் எண்ணத் தாக்குதலில் இருந்து மீளத்தான்
4.நம்மைத் தீய சக்திகள் தாக்காமலிருக்கத் தான் வழி முறைகளை உணர்த்துகின்றோம்.

Leave a Reply