குடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் எப்படி இயக்குகிறது..! என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு

Remote spiritual power

குடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் எப்படி இயக்குகிறது..! என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு 

குருநாதர் காட்டிய வழியில் ஒவ்வொரு நாளும் நான் கால் நடையாகச் செல்லும் பொழுது மக்கள் கஷ்டப்படுவதையும் குடும்பத்தில் கஷ்டப்படுவதையும் பார்க்கின்றேன்.

ஒரு சமயம் இமயமலைக்குப் போகும்படி சொன்னார் குருநாதர். வெறும் கோவணத் துணியுடன் தான் அங்கே போகச் சொன்னார்.

அங்கே குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக குருநாதர் சொன்ன உணர்வுகளை மட்டும் நான் எடுக்க வேண்டும். அப்பொழுது உடல் உஷ்ணமாகும். எனக்கு அந்தக் குளிர் தெரியாது.

இப்படி இருக்கும் பொழுது என்னுடைய கடைசிப் பையன் சிறியவன் மீது பாசமாக இருந்ததால்… அவன் நினைவு எனக்கு அங்கே வருகின்றது.

அவனைப் பற்றிய நினைவு சென்றவுடனே இங்கே குளிர் தாக்கி உடல் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்க ஆரம்பித்துவிட்டது.

1.பையன் மேல் ஆசை வைத்துப் பார்த்தேன்.
2.அவனைக் காக்க வேண்டும் என்று ஏதாவது உபாயம் செய்ய வேண்டும் என்பதற்காக எண்ணிப் பார்த்தேன்.

ஏனென்றால் என் பையன் வீட்டிற்கு வெளியே தெருவில் ஒரு ஓரமாக இரத்த இரத்தமாக வெளியே போய்க் கொண்டிருக்கின்றான். நானா..நானா.. (நைனா) என்று என்னை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றான்.

“அந்தக் குரல்” எனக்கு இங்கே இமயமலையில் கேட்கின்றது. அப்பொழுது குருநாதர் சொன்னதை என்னால் எடுக்க முடியவில்லை.

உடல் கிர்…! என்று இதயம் இரைய ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது தான் குருநாதர் உணர்த்துகின்றார்.

1.நீ உன் பாசத்தை அங்கே செலுத்துகின்றாய்
2.நீ இங்கே இப்பொழுது மடிந்து விட்டால் உன்னை யார் காப்பாற்றுவது..?
3.காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீ செல்லப்படும் பொழுது
4.உன் ஆன்மா பையன் உடலுக்குள் தான் புகும்.
5.அவனுக்குள் போய் நீ வேதனையைத்தான் உருவாக்க முடியுமே தவிர நல்லதைச் செய்ய முடியாது.

இப்பொழுது நீ எப்படிச் சிரமப்படுகின்றாயோ… இதே உணர்வின் தன்மை அவனுக்குள் இயக்கப்பட்டு… அவனும் சாமியாராக ரோடு ரோடாகச் சுற்ற வேண்டும் என்கிறார் குருநாதர்.

ஆகவே நீ என்ன செய்ய வேண்டும் என்பதை அங்கே தெளிவாக்குகின்றார். பின் குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்ட பின் என் குழந்தையின் உடல் நலமாக ஆனது.

அங்கே என்னுடைய வீட்டில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விறகுக் கடையில் வியாபாரம் சரியாக இல்லை. சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மோசமான சூழ்நிலையாக இருக்கின்றது.

இதை எல்லாம் பார்த்துப் பதட்டம் அடையப் போகும் பொழுது தான் எனக்கு மேலே சொன்ன அந்த நிலை எல்லாமே வந்தது.

பிறகு குருநாதர் சொன்ன காலக்கெடு முடிந்ததும் இமயமலையிலிருந்து இருந்து ஜோஸ்மெட் என்ற் இடத்திற்கு வந்தேன். போஸ்ட் ஆபீஸ் மூலமாக என்னுடைய புகைப்படத்தையும் ஒரு பத்து ரூபாயும் கவருக்குள் போட்டு அனுப்பினேன். எனக்கு மணியார்டர் செய்யத் தெரியவில்லை.

ரூபாய் வெளியே தெரியாமல்தான் காகிதத்திற்குள் வைத்து அனுப்பினேன். பணம் அனுப்பியிருக்கின்றேன் என்று கடிதமும் எழுதி இருந்தேன்.

இது அங்கே பதினைந்து நாள் கழித்து இவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்தப் பதினைந்து நாளுக்குள் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல…!

என் மனைவி தன் தாலியையும் அடமானம் வைத்துப் பிள்ளைகளைக்குச் சாப்பாடு போட்டிருக்கின்றது. ஒரு பத்து ரூபாய் வந்ததும் கடவுளைப் பார்த்த மாதிரி ஆர்வம் வருகின்றது.

ஆனால் கவரில் போட்ட அந்தப் பத்து ரூபாயை இடைவேளியிலே யாரோ எடுத்து விட்டார்கள்.

கடிதம் இருக்கிறது… என் படம் இருக்கிறது.. ஆனால் ரூபாயைக் காணோம்…! பிரிக்கும் பொழுது “கீழே விழுந்து விட்டதோ…!” என்று அங்கே தேடு…தேடு… என்று தேடுகின்றார்கள். இதையும் நான் அங்கிருந்து பார்க்கின்றேன்.

இது எல்லாம் அனுபவரீதியில் குருநாதர் எனக்குக் காட்டியது. ஒவ்வொரு குடும்பத்திலும் எதன் எதன் நிலைகள் எப்படி எல்லாம் சிரமப்படுகின்றார்கள் என்பதை அப்படியே படம் பிடித்தது போல் காட்டுகின்றார்.

ஆக…
1.பிறருக்கும் எமக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு தெளிவாக்குகின்றார்
2.இப்படித்தான் நான் உண்மைகளைத் தெரிந்து கொண்டேன்
3.வரும் இன்னல்களிலிருந்து தப்பும் உபாயங்களையும் சக்திகளையும் அனுபவபூர்வமாக அறிந்தேன்.

உங்களுக்கும் அந்த அரும் பெரும் சக்திகளைக் கிடைக்கச் செய்வதற்காகத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

நீங்களும் இதைப் போல் அந்த அருள் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அவர் செய்வாரா…? இவர் செய்வாரா..? என்று யாரையோ எண்ணுவதற்கு மாறாக
2.உங்களுக்குள் வரும் இன்னல்களை உங்கள் எண்ணத்தாலேயே நீக்கிக் கொள்வதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

ஆகவே யாம் அனுபவத்தால் பெற்ற இந்த உண்மையின் உணர்வுகளையும் அந்த அருள் மகரிஷிகளின் அருளையும் நீங்கள் பெற்று இந்த உபதேசத்தின் வாயிலாக கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அணுக் கருவாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.உங்கள் பார்வையால் பிறருடைய துன்பங்கள் மாய வேண்டும்
2.உங்களுக்குள் துன்பங்கள் சேராவண்ணம் தடைப்படுத்தும் அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான்
3.குருநாதர் மூலம் பெற்ற அனுபவங்களை எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

நாம் அடையப் போகும் “பேரானந்தப் பெரு நிலை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

shiva-parvati

நாம் அடையப் போகும் “பேரானந்தப் பெரு நிலை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தால் அணுக் கதிர்களின் (கதிரியக்கம்) செயலைக் கொண்டு மிக மிக நுண்ணிய வைத்திய முறைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

மேலும் அதை வைத்துத் தொழில் நுட்ப முறைக்கும்… வானக் கோளங்களின் தொடர்பு நிலைகளை அறியவும் இந்தப் பூமியின் உள் நிலையை அறியவும் முற்படுகின்றார்கள்.

இருந்தாலும் ஒவ்வொரு நாடுமே…
1.ஒன்றுக்கொன்று தெரியாத நிலையில்
2.பூமத்திய ரேகையின் மையப் பகுதியில் அணுச் சேர்க்கையின் நுண் அணு வீச்சுக் கதிர்களைக் கொண்டு
3.பூமியின் உள் பாகத்தில் கிடைக்கப் பெறும்
4.சில ஆக்கச் சக்தியின் அலைத் தொடர்பு வளர்ப்புக்களைத் தன் பாகத்திற்குத் திருப்பி
5.தன் நாட்டை வளப்படுத்துவதற்காகவும்
6.அதே சமயத்தில் தனக்கு மேல் விஞ்ஞானத்தில் வளர்ந்த சில நாடுகளை வளரவிடாத தன்மைக்காகவும்
7.பூமியின் உள் பாகங்களிலேயே விஞ்ஞானத்தால் இவ்வொளிக் கதிர்வீச்சினைப் பாய்ச்சி
7.அதாவது நீர் வாயு லேசர் இயக்க அலைகளைப் பாய்ச்சிப் பல பாகங்களில் பூகம்ப நிலை ஏற்படும் வண்ணம்
8.பல வேலைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர்
9.(வளர்ச்சி அடைந்த நாடுகள் செய்கின்றன இன்று வரையிலும்)

விஞ்ஞானத்தின் செயலைக் கொண்டு… உயிர் காக்கும் நிலைக்காக மருத்துவ ஞானங்கள் பல செயல்படுத்தியிருந்தாலும்… செயலின் வேகத்தில்… உண்மை உயர்வு வாழ்க்கை எது..? என்று மனிதன் இன்று அறியவில்லை.

தன்னுடைய இனம் புரியாத இன்பத்திற்காக உயர் குண உயிரை உணரும் பக்குவ நிலை இன்றித்தான் இன்றைய மனித வாழ்வு உள்ளது.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்ம உணர்விற்கு இன்பம் உண்டா…?

1.ஜீவ சக்தியின் சரீர வாழ்க்கையில் பெறும் இன்பம் தான் இன்பம் என்ற எண்ணம் மனிதனுக்கு உண்டே தவிர
2.ஆத்ம ஞானத்தில் உணரும் உயர் இன்ப நிலையின் உண்மை நிலை புரியவில்லை…!

சரீர நிலையில் உணரும் இன்பத்தைக் காட்டிலும்… “பேரானந்த பெரு நிலை…” என்று நம் முன்னோர்கள் உணர்த்திய உயர் நிலையின் உண்மை நிலையை வளர்ந்த ஆத்ம ஞானத்தின் சித்து நிலையிலே உணரலாம்.

உணவின் சுவையும்… மணத்தின் மகிழ்வும்… இசையின் இனிமையும்… இயற்கையின் எழிலையும்… பிள்ளைக் கனியமுதின் சொல் அமுதையும்…
1.இந்த உடல் வாழ்க்கையில் உணரும் பக்குவத்தைக் காட்டிலும்
2.ஆத்ம சித்து சக்தியின் தொடர்பினால் ஆத்மா பெறும்
3.இன்பத்தின் பெரு நிலையை உணரும் சக்தி நிலை பெற்றால்
4..சரீர வாழ்க்கையில் பெற்ற இன்பத்தைக் காட்டிலும்
5.பல கோடி இன்ப நிலைகள் சித்து ஞானத்தில் பெற முடியும்.

வாழ்க்கை நிலையில் கலந்து உறவாடும் எண்ணப் பரிமாற்ற நிலை எபப்டி உள்ளதோ… அதைப் போன்றே.. ஆத்ம தொடர் ஞான சித்துவின் வலுக் கொண்ட வளர்ச்சி பெற்ற தொடர்பு நிலையும் பலவாக உண்டு.

கூடிய வாழ்க்கையும்… கலந்துறவாடும் எண்ண நிலையும்… வாழ்க்கைத் தொடர்பில் எப்படி உண்டோ அதைப் போன்றே
1.ஞானச் சித்தின் ஞானிகளும் ஆத்ம சொந்தம் கொண்டு
2.இன்பம் கொண்ட இரு நிலை இன்பத்தையும் பெறுகின்றனர்.

ஜாதி… மதம்… உற்றார்… உறவினர்… என்ற பிடிப்பு வேலியற்ற “உயர் ஞான சொந்த பந்தங்கள்” ஆத்ம தொடர் கொண்டு அடையும் நிலையில்…
1.இரு நிலை இன்பத்தின் பெரு நிலை பெறும்
2.வளர்ப்பு நிலை இப்படி உண்டு.

அகோரியின் சாபத்திலிருந்து மீட்ட நிகழ்ச்சி

gnanaguru-venu gopal saamigal

அகோரியின் சாபத்திலிருந்து மீட்ட நிகழ்ச்சி

 

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் எத்தனை எத்தனை சிரமப்படுகின்றான் என்பதை அனுபவபூர்வமாக அறியச் செய்வதற்காக என்னை (ஞானகுரு) ஊர் ஊராகச் சுற்றச் சொல்லியிருந்தார் ஈஸ்வரபட்டர்.

ரோட்டில் நடந்து செல்லப்படும் பொழுது வீட்டில் சில பேர் மிகவும் அவஸ்தைப்பட்டுச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தந்த வீட்டில் நடப்பதைப் பற்றித் தெரிந்து கொள்வேன். அங்கே அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருப்பேன்.

ஒரு குடும்பத்தில் பார்த்தால்… ஒருவருக்கொருவர் நல்லவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஒருவர் வந்து பல தீமைகளைச் செய்து அவர்களுக்கு எத்தனையோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இருந்தாலும் ஒவ்வொரு நேரத்திலேயும் ஆண்டவனை வணங்கி… கடவுளை வணங்கி… ஆண்டவனுக்கு அபிஷேகங்கள் செய்து வந்தாலும் அவர்களுக்கு நன்மை பயக்கவில்லை…! ஆகவே அந்தத் தெய்வத்தையே நொந்து எத்தனையோ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தக் குடும்பமே சிறுகச் சிறுக நசிந்து கொண்டிருக்கின்றது. பம்பாயில் பார்த்த நிகழ்ச்சிகள் இது.

ரோட்டிலே செல்லப்படும் பொழுது இத்தகைய நிலைகளை உற்றுப் பார்த்து… அங்கே நடக்கும் செயல்களைப் பின் தொடர்ந்தே… அவர்களுடைய நிலைகளை வட்டமிட்டேன்.

அவர்கள் குடும்பத்தில் என்ன நடக்கின்றது…? எப்படிச் செயல்படுகின்றது..? என்ற நிலையை இரவிலே அவர்கள் குடும்ப வாழ்க்கையைத் தெரிந்து கொள்வேன்.

அதாவது ஒரு “சாமியாராக” இருந்தவன் பல நிலைகள் கொண்டு இவர்கள் வீட்டுக்கு யாசகம் கேட்டுக் கொண்டு வருகின்றான். ஆனால் இந்தக் குடும்பமோ “உண்மையில் கஷ்டப்படுகின்றார்கள்…” என்றால் அவர்களுக்குத் தர்மம் செய்யக் கூடியவர்கள்.

ஆனால் இந்தச் சாமியாரோ… பல பில்லி சூனியங்களைக் கற்றுக் கொண்டவன்.
இந்தக் குடும்பத்தார் பலருக்கு ஈகையுடன் தர்மம் செய்து உதவி செய்தாலும்
1.இந்தச் சாமியார் தவறு செய்கிறான்…! என்ற நிலையில்
2.அவனை அப்புறப்படுத்த… ஒரு கடும் சொல்லைச் சொல்கிறார்கள்.

அப்படி ஆன பின் அவன் என்ன செய்கின்றான்…? அவர்களுக்கு என்னென்ன தடைகள் ஏற்படுத்த வேண்டுமோ அதை எல்லாம் ஏற்படுத்தினான்.
1.பார்… உன்னை நடுத் தெருவில் நிறுத்துகின்றேன்…! என்ற
2.இந்த வாக்கினை (சாபம்) அங்கே பதிவாக்குகின்றான்.

அதனால் நன்றாக இருந்த குடும்பத்தின் தொழில்கள் சிதையத் தொடங்கியது… குழந்தைகள் உடல் நலிந்தது… அவர்கள் பல அவஸ்தைகள் பட ஆரம்பித்தனர்.

குருநாதர் இதைக் காட்டுகின்றார்.

அந்தக் குடும்பத்தார் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் அகந்தை கொண்ட அந்தச் சாமியார்.. பிறரிடத்திலிருந்து பணம் பறிக்கும் எண்ணம் கொண்டவன்… “சாது” என்ற நிலைகள் கொண்டு இத்தகைய நிலைகளைச் செய்கின்றான்.

காரணம் அவன் ஒரு “அகோரி…!” அமாவாசை அன்று பல பிணங்களைத் தின்று அதன் வழி கொண்டு வாக்குகளை இடும் பொழுது இந்த மாதிரி ஆகின்றது.

தான் பணம் கேட்டதைக் கொடுக்கவில்லையே… தன்னை மதிக்கவில்லையே என்று… இவன் எண்ணுகின்றான்.

அவர்களோ “இவனுக்கே ஏன் காசு கொடுக்க வேண்டும்…! ஏழைகளுக்குத் தானே காசு கொடுத்து உதவ வேண்டும்…” என்ற அந்த நிலையில் இருந்தார்கள்,

அதனால் அந்த அகோரி கொடூர நிலைகள் கொண்டு அப்படிச் சாபமிட்டான். நோய் நொடி என்று ஆகி தொழில்கள் எல்லாமே சிதைந்து விட்டது.

அவர்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதை நான் பார்க்கின்றேன். அனால் அவர்கள் தவறு செய்யவில்லை.
1.தெய்வத்தை வணங்கி வந்தவர்கள் தான்
2.ஆராதனைகளையும் அபிஷேகங்களையும் செய்பவர்கள் தான்.
3.பண்பு கொண்டு மற்றவர்களுக்குத் தர்மத்தைச் செய்தவர்கள் தான்.
4.அந்தத் தர்மங்கள் செய்திருந்தாலும் இவர்கள் வணங்கிய தெய்வம் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.

அந்த அகோரியினுடைய வாக்கின் வன்மை தீமைகளைச் செய்விக்கும் நிலை. பாலில் பாதாமைப் போட்டிருந்தாலும் அதிலே விஷம் பட்டால் எப்படியோ இதைப் போன்ற் அந்த விஷத் தன்மையான வாக்கின் உணர்வுகள் அந்தக் குடும்பத்தை இயக்கியது.

தொழில்கள் அனைத்தும் செயலற்ற நிலையாகி குடும்பத்தில் உள்ளோர் நோயாகப்படும் பொழுது அந்தக் குடும்பமே நசிந்து… தெருவில் அலைந்து…
1.“மாளிகையில் இருந்தவர்கள் குடிசையில் போய் வாழுகின்றார்கள்…”
2.அந்தக் குடிசையிலும் அவர்களுக்கு எதிர்ப்புகள் வருகின்றது.

பின் அவர்களைச் சந்தித்து குருநாதர் காட்டிய அருள் வழியைக் காட்டிக் கடைப்பிடிக்கச் செய்து அந்தத் தீமையின் செயலிலிருந்து அவர்களை விடுவித்தேன்.

அந்த அகோரி விட்ட சாப நிலைகளிலிருந்து விடுபட
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் எண்ணுங்கள்
2.அந்த உணர்வை குடும்பத்திலுள்ளோர் எல்லோரும் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.மீண்டும் நல் வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்னேன்.

அதன்படி செய்தார்கள் நன்றாக ஆனது… இது நடந்த நிகழ்ச்சி…!

இன்பம் எது…? துன்பம் எது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

happy and pleasure

இன்பம் எது…? துன்பம் எது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இச்சரீர பிம்ப உடலில் உணர்வின் எண்ணத்தில் காணும் இன்ப நிலை ஒன்றைத்தான் மனிதன் பெரு நிலையாக எண்ணத்தின் ஏக்கத்துடன் வாழ்கின்றான்.

1.உணவின் சுவை…
2.நுகரும் மணத்தின் நிலை…
3.உறக்கத்தின் இன்ப நிலை…
4.உடல் இச்சையின் காதல் களிப்பு நிலை.. இவற்றின் இன்பத்தையும்
5.ஒளி கொண்டு காணும் இயற்கை அழகு… கலை இன்ப நிலை…
6.நகைச்சுவை நிலை… பிள்ளைக் கனியமுதின் வளர்ப்பு நிலை…
7.அன்பு பாசம் பரிவு பரவசச் செயல் நிலை…
8.இவற்றின் தொடரில் எல்லாம் மனித உணர்வின் எண்ணம் இன்பம் கண்டு
9.இவற்றின் தொடரில் கிடைக்கப் பெறும் அமைதிக்காக
10.பொருள் சேர்க்கையின் வரவு நிலையிலும் இன்பம் உள்ளது என்ற தொடர் வாழ்க்கையில் “இன்பம்” அடைகிறான் மனிதன்

ஆனால் அதே சமயத்தில்…
1.உடல் உபாதையில் ஏற்படும் எதிர்ப்பு நிலையில் அவதிக்கும்
2.குடும்ப வாழ்க்கையில் உண்டாகும் மற்றவரின் எதிர்நிலையின் சோர்வுக்கும்
3.இன்ப நிலை என்று உணரும் தன்மையில் எதிர்ப்படும் மோதல் நிலை எதுவாகிலும்
4.”துன்ப வாழ்க்கை” என்ற சோர்வில் எண்ணத்தைச் சோர்வுப்பட்டு
5.முந்தைய நிலையைச் சுட்டிக் காட்டி இன்ப நிலைக்காக எதிர்படும் எவையுமே துன்பம் என்ற அச்ச உணர்வினால்
6.வாழ்க்கையில் ஏற்படும் எதிர்நிலை சோர்வைக் கொண்டு
7.எண்ணத்தின் உணர்வில் (முதலில்) ஏற்றிக் கொண்ட இன்பத்தைத்தான்
8.“மனித வாழ்க்கையின் இன்பமே அடங்கி உள்ளது…!” என்று மனித ஓட்டக் காலங்கள் ஓடுகின்றன இன்று.

ஆத்ம நிலையின் தொடர்பையும் அதில் உள்ள உன்னத நிலையையும் ஞானிகள் உணர்த்தினால்
1.வாழ்ந்த வாழ்க்கையில் சலிப்புற்ற நிலையில்… கடைசியாகத்தான்…
2.வாழ்க்கையிலிருந்து அடையக் கூடிய தெய்வீக பக்தி மார்க்கத்திற்காக
3.ஆத்ம ஞான போதனையைச் செலுத்த வேண்டும் என்ற உணர்வுடன் உள்ளார்கள் இன்றைய மனிதர்கள்.

ஏனென்றால் மனித சக்தியினால் இன்று முன்னேறிய தொழில்நுட்ப வைத்திய முன்னேற்ற செயலின் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டிலும் வளரும்
1.இவ்வாத்ம ஞானத்தைக் கொண்டு
2.ஆத்ம ஞானத்தின் ஆற்றலைக் கொண்டு
4.பல உன்னத உணர்வு ஞானத்தையே உருவாக்கலாம்.

மனிதனால் மட்டும் தான் “தெய்வ சக்தியை உருவாக்க முடியும்” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

self trust and confidance

மனிதனால் மட்டும் தான் “தெய்வ சக்தியை உருவாக்க முடியும்” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இச்சரீர உடலில் உணரும் எண்ண வேட்கைகள் யாவையும்… சாதாரண வாழ்க்கை நிலையில் உள்ள மனிதனுக்குப் பூமியின் ஈர்ப்புப் பிடியுடனே சிக்கி உள்ளது.

பூமியின் அலைத் தொடர்பை இவன் எடுத்து…
1.உணர்வின் பிடியை எண்ணத்தின் வேட்கைக்கொப்ப சம நிலை கொள்ளாத் தன்மையாலும்
2.சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வின் வேக உந்தலினாலும்
3.ஒவ்வொரு மனித உடலிலும் ஜீவனற்ற ஆத்மா உயிர்கள் குடியேறி உள்ளது.

அவ்வாறு “குடியேறிய ஆத்மாக்கள்” மனிதனின் எண்ண உணர்வையே தன் இச்சையில் செயல்படும் “ஞான அணு” வளர்ப்பை வளர்க்க விடாமல்… “அந்த ஆத்மாக்கள் வளர்க்கும்” உணர்வின் எண்ண நிலைக்கொப்ப வளரும் தன்மையே உருவாகின்றது.

அந்த மாறு கொண்ட தன்மையால் குடியேறிய ஆத்மாவின் அணு வளர்ப்பினால் சரீர பிம்பத்தில் ஏற்படும் தொல்லைகளில் ஆங்காங்கு ஏற்படும் உடலின் கட்டிகளினாலும் சில புண்களினாலும் கரப்பான் சொறி போன்ற சரும வியாதியினாலும் உதிரமே சீழாகி அச்சீழ் வளர்க்கும் அணுவை மேன் மேலும் வளர்க்கும் நிலையினால் கடுமையான நோய்களும் உருவாகின்றது.

ஆக மொத்தம்… உணர்வின் எண்ணத்தின் செயலுக்கொப்ப…
1.உட்கொள்ளும் உணவிலும் போதைவஸ்தின் ஈர்ப்பிலும் காம இச்சை வெறியிலும் இச்சரீர பிம்பத்தையே “அழுகும் மூட்டையாக்கி”
2.ஆத்மாவின் செயலையே இவ்வீர்ப்பின் ஆத்மாவாக்கி
3.பல காலமாக பல கோடி உயிர் தொடர் பிம்பத் தொடர்பில் எல்லாம் முலாம் பெற்ற ஆத்மாவை
4.உயர்த்த தெய்வ சக்தியாக செயல் கொள்ளும் எண்ணத்தால் எதனையும் செயல் புரியும் மனித சக்தி பெற்ற பிறகு
5.உடல் உணர்வின் உந்தலின் வேட்கைக்காக மனித ஆத்மாக்களின் இன்றைய செயல்
6.தன்னைத் தானே இழக்கும் நிலையாகச் (மனித வித்துக்கள்) சென்று கொண்டிருக்கின்றது.

அதை மாற்றிட தெய்வ சக்தி பெற்ற தேவர்களின் (மகரிஷிகளின்) தொடர்பைக் கொண்டு மேல் நோக்கிய வளர்ச்சியினால் நம் வளர்ப்பலையின் தொடர்பை எவ்வீர்ப்பு அலையிலும் சிக்காமல் சகல சக்திகளையும் உணர்ந்திடலாம்.

இயற்கைச் சக்தியின் செயலாகச் செயலாற்றும் சப்தரிஷிகளின் ஞானத் தொடர்பலையுடன் உணர்வின் எண்ணமுடன் அந்த ஞான ஈர்ப்புத் தொடர்பலையை பெற்றோமானால்
1.இஜ்ஜட சரீர அணு மூட்டையின் பிடிப்பிலிருந்து
2.உயர் கொண்ட ஞான ஈர்ப்பிற்குச் செல்லலாம்.

மனிதனைக் காட்டிலும் உருவத்திலும்.. பலத்திலும்… அறிவிலும்… சுவாச ஈர்ப்பு நிலையிலும்… சக்தி கொண்ட “யானைக்கே…” மனிதனை ஒத்த செயல் அங்கங்களோ சொல்லாற்றும் திறமையோ அற்றதினால் எல்லா நிலைகளும் உணர்வும் தன்மை இருந்தும் ஞானத்தை வளர்க்கும் வளர் நிலைக்குச் செல்ல முடியவில்லை. இதைப் போன்ற நிலை மிருகங்களில் பலவற்றுக்கும் உண்டு.

எறும்போ கொசுவோ மூட்டைப் பூச்சியோ உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் அவை மனிதனைத் தாக்கும் பொழுது அதன் கடி நிலைக்குப் பயந்து பல முன் ஏற்பாடுகளைச் செய்து பல நிலைகளைச் செய்கின்றான் மனிதன்.
1.ஒவ்வொரு நொடிக்குமே இச்சரீர ஜட பிம்பத்தின் ஈர்ப்பு எண்ண வேட்கைக்குத் தான் மனிதன் வாழுகின்றான்.
2.அதிலிருந்து மீண்டு ஆத்ம ஞானத்தின் உணர்வை மனித ஞானம் பெற முடியும்.
3.மனிதன் மட்டும் தான் அந்தத் “தெய்வ சக்தியை” உருவாக்க முடியும்.

அன்று போகன் தன் உடலால் பெற்ற சக்தியை இந்த உலகம் முழுமைக்கும் பரப்பும் நிலை கொண்டு தன் ஆத்மாவில் பெற்ற உயர் அலையின் தொடரை இந்த உலகம் முழுமைக்கும் அந்தந்த இடங்களில் ஜீவன் கொண்ட சக்தி அலைத் தொடர்புகளை பூமியில் பதிய வைத்துள்ளான்.

அவ்வலையின் ஞானத்தால் பல கோவில்களை அமைத்து மனிதனின் எண்ணத்தில் தெய்வ ஞான சக்தியை வளரச் செய்தான்.

போகரும் கோலமாமகரிஷியும் கொங்கணவரும் அகஸ்தியரும் ஐயப்பனும் ஆதிசங்கரர் போன்று பல எண்ணற்ற ரிஷிகளும் இன்றளவும் சரீரத்தின் தொடர்பு கொண்டு அன்று பதிய வைத்த அலைத் தொடர்பின் வழித் தொடர்பினால் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள்.

இக்கலியின் கடைசியில் எண்ணத்தின் உணர்வைக் கொண்டு நாம் எடுக்கும் தியானத்தால் அந்த உயர்ந்தோரின் உயர்வுடன் அவர்களின் செயல் நிலைக்கொத்த தன்மைக்கு நாமும் வளரலாம்.

மேல் நோக்கிய சுவாச அலையினால் எண்ணத்தின் உணர்வை ஞானத்தின் பால் செலுத்தி இச்சரீர ஜடப் பொருளை கொண்டு ஆத்மாவின் வலுவைக் கூட்டிக் கொண்டோமானால்
1.இப்பூமியிலே மனிதனாக பிறந்து சகல சித்தியும் அடைந்து
2.சப்தரிஷியாக வாழும் பலரின் நிலை போன்று நாமும் வாழ்வாங்கு வாழ முடியும்.

ஞானிகளைப் புகழ்வதனாலேயோ பணிந்து வணங்குவதனாலேயோ பலன் இல்லை…!

Mystic meditation experiences

ஞானிகளைப் புகழ்வதனாலேயோ பணிந்து வணங்குவதனாலேயோ பலன் இல்லை…!

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அனுபவரீதியிலே தான் எல்லாவற்றையும் அறியும்படி செய்தார்.
1.என் (ஞானகுரு) குடும்பத்தையே இன்னலுக்கும் ஆளாக்கினார்.
2.இந்த உணர்வு – தன்னை ஒட்டி வரப்படும் பொழுது தான் அனுபவ ரீதியில் யாம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு நொடியிலேயும் இந்த உணர்வுகள் உலகில் எப்படி இயங்குகின்றது…? உலக மக்கள் தன்னை அறியாது எப்படி இன்னல்கள் படுகின்றனர்..? எப்படி அவதிப்படுகின்றனர்…? என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான்
1.இருபது வருடம் என்னைக் கால் நடையாகவே இந்தியா முழுவதும் நடக்கச் சொன்னார்…
2.மூன்று இலட்சம் பேரைச் சந்த்திக்கச் செய்து அந்தக் குடும்பங்களில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டி
3.பல அனுபவங்களைப் பெறச் செய்தார் குருநாதர்.

அறிந்த உண்மையின் தன்மையில் பார்க்கும் போது சந்தர்ப்ப பேதத்தால் எத்தனையோ பேர் அவதிப்படுகின்றனர். அதிலிருந்து மீண்டிடும் நிலையாக மெய் ஞானிகள் காட்டும் அருள் வழியில் நீங்கள் நடந்தால்
1.உங்கள் எண்ணமே உங்கள் துன்பத்தைப் போக்கும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் காட்டிய மெய் வழியைக் கடைப்பிடித்து… அதை நீங்கள் அனுபவித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்… அதைப் பற்றுடன் பற்றி உங்களை அறியாது வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்…! என்று தான் சொல்கின்றேன்.

இதை ஏற்றுக் கொள்வார் இல்லை…!

சாமியைப் (ஞானகுரு) புகழ் பாட முடிகின்றது பாத நமஸ்காரம் செய்யத்தான் விரும்புகின்றார்கள். இது வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.

1.அருள் ஒளியைப் பெறுங்கள்…
2.உங்களுக்குள் தீமைகள் வருவதை அடக்கிப் பழகுங்கள்…
3.உங்களால் முடியும்…! என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.

ஒரு வட்டிக் கடைக்காரருக்கு… அவர் மற்றவருக்குச் செய்த தீங்குகளுக்குக் கிடைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

om-eswara-gurudev-judge

ஒரு வட்டிக் கடைக்காரருக்கு… அவர் மற்றவருக்குச் செய்த தீங்குகளுக்குக் கிடைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

 

வட்டிக் கடைக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பலருக்கும் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தார்.

என் (ஞானகுரு) மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் பொழுது எனக்கே அவர் தீங்கு செய்தார்.

திருமணத்திற்குப் பணம் தேவை…! என்ற நிலையில் அவரிடம் கேட்கும் பொழுது உங்கள் வீட்டை வைத்துக் கொடுங்கள்… திருமணச் செலவுக்குப் பணம் தருகின்றேன்…! என்றார்.

திருமண நாள் அருகிலே வந்த பின்… உங்கள் வீடு ஆறாயிரம் கூடப் பெறாது நீங்கள் பத்தாயிரம் கேட்கிறீர்களே…! என்று என்னிடம் மாற்றிப் பேசுகிறார் அந்த வட்டிக் கடைக்காரர்.

அதற்கு நான் சொன்னேன். அப்பா…! உன்னுடைய சொத்தாக இருந்தால் அதற்கு எப்படி விலை தருவாயோ அதைப் போல் நினைத்துப் பார்…! என்றேன்.

நினைத்துப் பார்ப்பது என்ன…? முதலில் “பத்தாயிரம் தருகிறேன்” என்று சொன்னேன். இப்பொழுது மற்றவர்களிடம் கேட்கும் பொழுது குறைந்து போய்விட்டது. நான் என்ன செய்வது…? என்று கல்யாணத்திற்கு மூன்று நாள் முன்னாடி இப்படிப் பேசுகிறார்.

நானோ குருநாதர் காட்டிய வழியில் ஊரை எல்லாம் சுற்றிக் கொண்டிருக்கின்றேன். என் மனைவியோ… “கடைசி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே…” என்று பதறுகின்றது.

கல்யாணத்திற்காக முன் பணம் கொடுத்து வேலைச் செய்பவர்கள் எல்லாம் வந்து நிற்கின்றார்கள். கடைசியில் திருமண நாள் அன்று தாலி எப்படிக் கட்டுவது…? என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த நேரத்தில் சுற்றுப் பயணத்தில் கோயம்புத்தூரில் இருக்கின்றேன். கல்யாண நேரத்திற்கு வந்து நீங்கள் ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள்.

நான் வந்தேன். ஆனால் கல்யாணம் நடக்கப் போகும் பொழுது என்ன நடந்தது…?

ஒரு அம்மாளுக்கு அருள் வந்துவிட்டது. மாரியம்மன் என்று சொல்லி அருளாடிக் கொண்டு “தாலி கட்டக் கூடாது… இந்தப் பெண் ஆகாது…” என்று சொல்கிறது.

பையன் வீட்டுக்காரர்கள் எல்லாம் அதை ஏற்றுக் கொண்டு ஐயோ.. “அம்மா” இந்த மாதிரிச் சொல்லிவிட்டதே..! கல்யாணம் செய்தால் குடும்பத்தில் கஷ்டம் வந்துவிடுமே…! என்று சொல்கிறார்கள்.

அருளாடிச் சொன்ன அந்த அமமாவுக்கு வயது தொண்ணூறு… பக்கத்துக் கிராமம்.

நான் வந்த நேரத்தில் தான் இது நடக்கிறது. அப்பொழுது நான் குருநாதரை நினைத்து
1.இந்த மாதிரிச் சொல்கிறார்களே…
2.இதற்கு என்ன விடை…? என்று கேட்டேன்.

குருநாதர் உணர்வுகள் இயக்கப்பட்ட பின் திடீர்… என்று அந்த முகூர்த்த நேரத்தில் வேப்ப மரத்தில் ஏறுகின்றது. அங்கிருந்து குதித்துக் கீழே வந்து… என்னைப் பார்த்து “வாடா மகனே…!” என்றது.

நான் தான்டா தாலியை எடுத்துக் கொடுப்பேன். தாலியைக் கொடுத்துக் கட்டுடா…! என்று சொல்லியது… கல்யாணம் முடிந்தது.

சடக் என்று இப்படி முடிந்ததும் சமையல் எல்லாமே மிச்சம். யாரும் சாப்பிடவில்லை…! ஏனென்றால் வந்ததும் தாலியைக் கட்டியதால் பொருள் எல்லாம் மிச்சமாகி விட்டது.

இங்கே பகுதி தான் செலவு… மாப்பிள்ளை வீட்டிலும் பகுதிதான் செலவு…! இரண்டு பேருக்குமே அன்றைக்குச் செலவு இல்லாமல் போய்விட்டது. நடந்த நிகழ்ச்சி.

என் பெண்ணும் வீட்டுக்காரரும் மைசூரில் இருக்கின்றார்கள். தியானத்தைச் செய்து கொண்டு நன்றாக இருக்கின்றார்கள். தபோவனத்திற்கு அவர்கள் ஒரு இலட்சம் வரை பணம் கொடுத்து உதவியும் இருக்கின்றார்கள்.

பிறகு அந்தச் செட்டியாருடைய நிலைகள் என்ன ஆனது…? ஒரு சமயம் அவர் காலையில் காபி சாப்பிடுவதற்காக வீட்டை விட்டு வெளியிலே சென்றிருக்கின்றார்.

அந்த நேரம் சரியாகத் திருடர்கள் வந்து அவர் வீட்டில் வைத்திருந்த நகைகள் காசு எல்லாவற்றையும் பூட்டைக் கூட உடைக்காமல் அதற்கென்று சாவியும் தயார் செய்து அலுங்காமல் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

எடுத்துச் சென்ற பொருளின் மதிப்பு குறைந்தது ஒரு கோடி ரூபாய் பக்கம் இருக்கும். என் மனைவி போட்டிருந்த ஒரு கம்மலும் அதிலே இருக்கின்றது. ஏற்கனவே அங்கே அடகு வைத்திருந்தது தான்.

சந்தேகக் கேசில் பிடிபட்ட அந்தத் திருடன் கோர்ட்டில் என்ன சொல்கிறான்…? உன் நகை தான் என்று நிரூபித்து எடுத்துக் கொள்…! என்கிறான். அதைத் திருப்ப முடியவில்லை. கொள்ளை அடித்தவன் ரசீது இருந்தால் கொண்டு வா…! என்று கேட்கின்றான். இது நடந்த நிகழ்ச்சி.

இப்படி நடந்து கொண்டிருக்கும் பொழுது நான் சேலத்தில் இருக்கின்றேன்.

அந்த வட்டிக்காரருடைய எண்ணங்கள் குறுகிய நோக்கில் இருந்ததால் பணம் எல்லாம் இப்படிப் போய்விட்டது. அப்பொழுது அந்த நேரத்தில் அதிகமாகச் சொத்து வைத்திருப்போர் சம்பந்தமாக மத்திய அரசாங்கம் (இந்திரா காந்தி அரசு) ஒரு சட்டம் போட்டிருந்தது.

போலீஸ் இவரைப் பிடித்துக் கொண்டு போய் உன்னுடைய நகைகளையும் பணத்தையும்… நீயே எங்கேயோ ஒளித்து வைத்திருக்கின்றாய்..! என்று சொல்லி அடி…அடி… என்று அடிக்கின்றார்கள்.

ஐயா… நான் அப்படிச் செய்யவில்லை… எவனோ எடுத்துக் கொண்டு போய்விட்டான்…! என்று சொல்கிறார்.

நீ சொல்வதை யார் நம்புவது…? என்று மீண்டும் அடிக்கின்றார்கள். பின் அவர்கள் இனங்கள் எல்லம ஒன்றாகச் சேர்ந்து அவரை (அந்த வட்டிக் கடைக்காரரை) ஒரு வழியாக விடுவித்துக் கொண்டு வந்தார்கள்.

அந்த மட்டுடன் நேராக சேலத்தில் இருக்கும் என்னைப் பார்க்க வந்தார். ஐயா…!! என்று நடு ரோட்டில் சொத்… என்று என் காலில் விழுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்…! என்றார்.

நான் எந்த நகையையும் திருடவில்லை.
1.உங்கள் குடும்பத்திற்கு அன்றைக்கு என்ன செய்தேனோ தெரியவில்லை…!
2.என்னை அப்படியே அலேக்காக அள்ளிக் கொண்டு போனார்கள். உதைக்கவும் செய்தார்கள்.
3.நான் சத்தியமாக ஒன்றுமே செய்யவில்லை… என்னை அடிக்கின்றார்கள்
4.எப்படியாவது அந்தத் திருடு போன பொருள் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று
5.என்னைக் குறுக்காட்டி இப்படிச் சொல்கிறார் அந்த வட்டிக் கடைக்காரர்.

என்னைத் தேடி அலைந்து கடைசியில் கண்டுபிடித்து சேலத்திற்கு வந்திருக்கின்றார்.

இனிமேல் பட்டு யாருக்கும் இந்த மாதிரித் தீங்கு செய்யாதே…! என்றேன். (ஆரம்பத்திலேயே சில புத்திமதிகளைச் சொல்லுயிருந்தேன்.. அதை அவர் கேட்கவில்லை).

இனிமேல் யாருக்கும் நான் தீங்கே செய்ய மாட்டேன். நான் உணர்ந்து விட்டேன். போலீஸ் அடியை நான் பார்த்துவிட்டேன். ஆனால் நான் உண்மையிலேயே திருடவில்லை என்றார்.

நீ திருடவில்லை என்று சொல்கிறாய். ஆனால்
1.எத்தனையோ பேருக்கு வட்டி என்ற பெயரில் கொடுமை செய்தாய் அல்லவா
2.அந்தச் சாபம் எல்லாம் உன்னைச் சாடும் அல்லவா.. நீ இனிமேல் இந்தத் தவறைச் செய்யாதே என்றேன்.

இந்த வட்டிக் கடையே எனக்கு வேண்டாம்  நான் தவறு செய்ய மாட்டேன் என்று சொன்னார். இது நடந்த நிகழ்ச்சி..!

ரிஷித் தன்மை கொண்டவர்களின் செயல்கள் எப்படிப்பட்டது…?

sages-siddhas

ரிஷித் தன்மை கொண்டவர்களின் செயல்கள் எப்படிப்பட்டது…?

 

தன் பெருமைக்காகவோ… புகழுக்காகவோ… சித்து நிலை வளர்ப்புப் பெற்ற ரிஷித் தன்மையின் ஆக்கத் தன்மை செயல்படவில்லை.

மனித இனத்தின்… வளர்ப்பின் ஞான வித்தின் வழித் தொடரை அந்த வித்து அழியாமல் செயல்படும் செயலுக்காகத் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

1.மனிதக் கரு உயர் ஞானம் பெற வல்லமை பெற்ற
2.அத்தகைய செயல் கொள்ளும் கோளங்களில் எல்லாம்
3.அவ்வித்தின் நிலை வளர்ந்திட சப்தரிஷிகளின் செயல் முறை செயல்படும் தன்மை தான்
4.ரிஷித் தன்மை பெற்ற வளர் குணத்தின் வளர்ப்பு நிலை.

நம் பூமியைக் காட்டிலும் ஞானத்தில் உயர்ந்து மனித குண வீரிய உயர் சக்தி கொண்ட ஞான வளர்ச்சி பெற்ற மக்கள் நம் சூரியக் குடும்பமல்லாதபடி பேரண்டத்தில் மற்ற இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் உண்டு.

ஆனால் விஞ்ஞானத்தைக் கொண்டு செயற்கையின் ஞானம் பெற்ற இனத் தன்மை நம் பூமியில் உள்ள மனிதனுக்குத்தான் உண்டு.

மற்ற கோளங்களில் உள்ள மனித இனங்கள் எல்லாம் ஞானத்தால் உயர்ந்து… “பறக்கும் தன்மை கொண்ட” சரீர உடல் வளர்ந்த பக்குவ வளர்ப்பாகச் செயல் கொள்கின்றனர்.

நம் பூமியில் தன் ஞானத்தை இயந்திரங்களில் செலுத்திப் பழக்கும் நிலையை இன்று கொண்டுள்ளான் மனிதன்.

இந்தப் பூமியில் ஆதியிலே உயிரணுத் தோன்றி வளர்ச்சி கொள்ளும் வளர்ப்புத் தன்மையில் மோதுண்டு… மோதுண்டு வளர்ச்சி பெறும் வளர்ச்சி நிலையில் கனி வளங்களும் தாவர இனங்களும் வளர்ச்சி கொண்டு… வளர்ச்சி கொண்டு வளர்ச்சியின் முற்றிய தன்மை கொண்ட பிறகு தான் “மனித இனங்களே” உருவானது.

தன் உணர்வின் எண்ணத்தால் செயல்படும் அங்க அவயங்களும் சொல்லாற்றும் திறமையின் வளர்ச்சியும் பெற்று வளர்ந்து வந்தாலும்
1.அநத் தொடரின் வளர் தன்மை
2.அடுத்த உயர்ந்த நிலைக்கு மனித இன வர்க்கம் செல்லாதபடி தடையாகி விட்டது.

இப்பூமியில் கிருஷ்ணாவதாரக் காலம் தொட்டே (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) பேராசைப் பிடி உல்லாச வாழ்க்கை எண்ண உரு வளர்ப்பு வளர்ச்சி பெற்றதனால் மனித வளர்ப்பின் சரீர செயல் எண்ண வளர்ப்பும் தடைப்பட்டு தன் ஞானத்தில் செயல்படும் நிலை மாறி விட்டது.

கல்வி என்பதும் அடிமை கொண்ட குண போதனை ஆகி விட்டது. குரு சிஷ்யன் என்ற குரு குலத் தொடர்பு நிலையில்
1.மனிதனின் எண்ணத்தில் தன் உயர்வின் பெருமையில்
2.பிறரின் நிலையை அடக்கி ஆளும் வழித் தொடரில்
3.ஞானிகளால் கொடுக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்ட போதனையாகி
4.இந்தப் பூமியில் வளர்ச்சி கொண்ட அந்த ஞான வித்தின் வித்தகத் தன்மையே
5.சூழ்ச்சி கொண்ட சூட்சம நிலையில் மறைக்கப்பட்டு விட்டது.

ஆனால் அதே சமயத்தில்…
1.சூட்சமத்தால் வெளியிடப்பட்ட சில சுவடிகளின்படி
2.உண்மையைக் காவியக் கதை கற்பனை ரூபமாக காட்டிய தொடர் கொண்டு
3.விஞ்ஞான ஆராய்ச்சியின் செயல் திறமையினால்
4.மனித உருவக வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சூரிய அலையுடன் சில அலைத் தொடர்களைப் பாய்ச்சி தன் விஞ்ஞானச் செயலுக்காக சில சக்தி அலைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டேயுள்ளார்கள்.

அதனால் மனித ஞானத்தை வளர்க்கவல்ல காந்த மின் அலையின் ஒளி அலையில்… “வெண்மை அணு சக்தியின் வளர் சக்தியே” தடைப்பட்டு… ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

இதிலிருந்தெல்லாம் எண்ணத்தின் வீரிய குணம் கொண்டு இந்தப் பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு ஒவ்வொருவரும் விண்ணுலக மகரிஷிகளின் அலைத் தொடர்பைப் பெறவேண்டும்.

இன்று பலவாக உள்ள எண்ண குண ஈர்ப்பின் சரீர உணர்வை… நல் அணு வளர்ப்பின் குணத் தன்மை கொண்டு… மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணத்தின் ஞானத்தால் “நேராக எடுக்கும்” பக்குவத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பெற்றால்…
1.தன் ஆத்ம பலம் பெற்ற தன்மையில் எவ்வீர்ப்புப் பிடியிலும் இந்த ஆத்மா சிக்காமல்
2.இந்தப் பூமியின் மாற்றத் தன்மை எதுவாக இருந்தாலும்
3.வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து
4.மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்.

அதற்குத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.