நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! அரோகரா…! இப்படிப் பாடுவதன் உட்பொருள் என்ன…?

ultimate sage Agastyan

நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! அரோகரா…! இப்படிப் பாடுவதன் உட்பொருள் என்ன…?

 

மரம் செடி கொடிகள் இருக்கின்றது. அதிலே பல தாவர இனங்களைச் சேர்த்துப் புது புதுச் செடிகளை உருவாக்குகின்றனர்.

பூமியின் துணை கொண்டு அந்த வித்து இழுக்கப்படும் பொழுது
1.அதனின் பங்கின் விகிதாச்சாரம் கொண்டு
2.இந்தக் காற்றில் இருக்கும் தன் உணர்வை எடுத்து மரம் அதன் வழியே அது வளர்கின்றது.
3.செடியும் கனியும் ரூபங்கள் மாறுகின்றது,
4.அதற்கு யார் அறிவைக் கொடுத்தது…?
5.அதற்கு அறிவில்லை என்று யார் சொல்ல முடியும்…!

எதன் உணர்வோ அதன் அறிவாக அது இயக்கும்…! என்ற நிலை அங்கே தெளிவாகிறது.
1.அதன் உணர்வை உயிரினங்கள் (புழுவிலிருந்து மனிதன் வரை) நுகர்ந்தால்
2.ஜீவ அணு என்ற நிலையாக அதன் அறிவாக அந்த உணர்வின் தன்மை இயக்கி
3.அது நகர்ந்து செல்கிறது… நகர்ந்து செல்லச் செய்கிறது.

ஆனால் செடி கொடிகளோ தான் இருந்த இடத்திலிருந்து தன் உணர்வைக் கவர்ந்து அது வளர்கிறது. இது எல்லாமே நம் சாஸ்திரங்களில் உண்டு.

“சைவ சித்தாந்தம்…!” என்று சொல்வார்கள். இதை எல்லாம் வேதங்களாக மாற்றிக் கொண்டார்கள்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி… என்று “அவன்” கண்டுணர்ந்த உண்மையை எந்நாட்டவரும் அதைப் பெறலாம்.

1.ஏனென்றால் இருளை நீக்கி ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ நட்சத்திரம் அந்த அகஸ்தியன் தான்.
2.ஆனால் இந்தத் தென்னாட்டில் தோன்றியவன் தான் அத்தகைய ஒளியின் சரீரம் பெற்றான்.

இந்தப் பூமியில் உள்ள எந்நாட்டவரும் அவன் பெற்ற அருளைப் பெற்று அவர்களுக்குள் அறியாத இருளை நீக்க முடியும் என்ற நிலையைத் தெளிவாக உணர்த்தும் விதமாகத் தான் “தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..” என்று அகஸ்தியனுக்குப் பின் வந்தவர்கள் உணர்த்தினார்கள்.

நம் தென்னாட்டிலே தான் இத்தகைய சாஸ்திரங்கள் எல்லாம் இருக்கும். வட நாட்டிலே பார்த்தால் இது இருக்காது.

இங்கிருந்து புறப்பட்டது தான் மற்ற உலக நிலைகளுக்கு. ஆனால் மற்ற நாடுகளில் இது இல்லை. எதை எதையோ ஒரு தெய்வத்தை வைத்திருப்பார்கள். மற்றதைச் சொல்வார்கள்.

சூரியனைச் சொல்லப் போகும் பொழுது நாராயணன் என்று சொல்வார்கள். ஆனால் அந்த நாராயணன் யார்…? என்று தெரியாது.

1.அரோகரா… அரோகரா…! என்று சொல்வார்கள்..
2.நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! என்று பாடல்கள் எல்லாம் பாடுவார்கள்.
3.நம பார்வதி பஜே நமச்சிவாயா…! என்று சொன்னால்… கேட்டு அதையே நாமும் திருப்பிச் சொல்வோம்.

இதனுடைய உட்பொருளை நாம் அறிந்து சொல்கின்றோமா…? அதாவது
1.அரோகரா… சுழலும் உணர்வின் தன்மை நுகர்ந்ததை
2.நம் பார்வையில் படுவதை நாம் நுகரப்படும் பொழுது
3.அந்த உணர்வின் இயக்கமாக இயக்குகிறது
4.அப்பொழுது நமக்குள் நமச்சிவாய… நம் உடலாக மாற்றுகின்றது.

எதை நுகர்கின்றோமோ ஒரு இயக்கச் சக்தியாக மாறி நம் உடலாக மாற்றுகின்றது என்பதை ஒரு பாடல் வழியாகக் கூட ஞானிகள் நமக்கு இப்படிக் கூறியுள்ளனர்.

ஆனால் எல்லாம் பாடலைப் பாடிய பின் அரோகரா… பார்வதி பஜே நமச்சிவாயா…! என்று சொல்வோம் ஏன் சொல்கிறோம்…? எதற்காகச் சொல்கிறோம்…? என்று தெரியாமலே அல்லவா பாடுகின்றோம்.

ஆயிரத்தெட்டுக் குணங்களைப் பிரிக்கப்பட்டு மனிதன் உடலான நிலைகளில் இருந்து நாம் எப்படி மீள வேண்டும்…? அழியாத நிலைகள் எப்படிப் பெறவேண்டும் என்ற இயக்கத்தைத் தெளிவாக ஊட்டிய தென்னாடு தான் இது.

அதனால் தான் அந்தத் தென்னாட்டுடைய சிவனே போற்றி…! என்று அவன் (அகஸ்தியன்) கண்டுணர்ந்த உணர்வை நாமும் பெற்று அதே போல் எந்நாட்டவரும் பெற்றால்
1.தெளிந்து வாழ்ந்திட முடியும்
2.மனிதன் இனி பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஆக… பிறவியில்லா நிலை அடைந்த அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் இதே உணர்வு நமக்குள்ளும் இயக்கும்… மற்றவர்களையும் அது போல் இயக்கும்..!

“ஞானிகளின் அருகாமை… நமக்கு எப்பொழுது கிடைக்கும்…?”

Blessing and blessed

“ஞானிகளின் அருகாமை… நமக்கு எப்பொழுது கிடைக்கும்…?” 

 

தியானத்தில் அமர்ந்து குருநாதரால் உபதேசிக்கப்படும் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் ஈஸ்வரபட்டரின் உருவமும் அவர் ஆசியும் கிடைத்தது.

ஒரு பக்கம் அவரும் மற்றொரு பக்கமும் நானும் அமர்ந்துள்ள நிலையில் அவருடன் தொடர்பு கொண்டதின் சக்தியினால் அவரிடமிருந்து நான் பெற்ற அருள் மொழிகள்… அவர் உணர்த்திய உண்மைகள் எல்லாம் தியானத்தின் மூலம் அவரிடமும் ஞானகுருவிடமும் தொடர்பு கொண்டிருந்தாலும்
1.அவர் உணர்த்தும் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்
2.அவர் உபதேசித்த செயல் வடிவை என்னால் செயலில் காண முற்பட்டும் முன்னேறும் நிலை பெறவில்லை.

அவரிடம் தொடர்பு கொண்டவுடன்… என் எண்ணத்தில் “சகலத்தையும் அறியக்கூடிய உணர்வு எண்ணத் துடிப்புடன்” ஈஸ்வரபட்டரிடம் ஆசி கேட்டேன்.

உடனே தன் கையால் வாயை மூடிக் கொண்டார்…! எனக்கும் அவருக்கும் மத்தியில் மிகப் பெரிய நீளமான “திரைச் சீலை” ஓடியது.

திரைச் சிலைக்கு அப்பக்கம் மாமகரிஷி ஈஸ்வரபட்டரும் இந்தப் பக்கம் நானும் அமர்ந்துள்ள நிலையில் திரைச் சீலையின் இப்பக்கம் இருந்தே அவர் அமர்ந்திருப்பதுவும் பேசுவதும் கேட்கின்றது.
1.ஆனால் எனக்கும் அவருக்கும் மத்தியில் திரை…!
2.இந்தத் திரைக்குப் பொருள் என்ன…? என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

உடனே என் எண்ணத்தில் நான் இன்னும் பயந்த நிலையில் தான் இருக்கின்றேன்…. அவர் உணர்த்துவதை எடுத்துச் சொல்லும் பக்குவம் ஒன்று தான் உள்ளது.

அவர் அருளும் ஞானத்தின் வழி செயல் அடைய முடியாததற்கு இந்தப் பயம் தான் திரையாக உள்ளதா…? என்று எண்ணியவுடன் தலையை மட்டும் அவர் ஆட்டுவதை உணர்ந்தேன்.

பிறகு தியானத்தில் ஒரு நொடிப் பொழுதில் என் நினைவு இவ்வுலகக் குடும்ப எண்ணங்களுடன் மோதுண்டது.
1.என் உறவினரில் ஒருவர் அறியாது பெருமை கொள்ளும் செயலின் எண்ணம் வந்தது
2.பிறகு பிறரிடம் நெருங்கிய அந்த உறவினரின் குறையை நான் எண்ணிப் பார்க்கும் பொழுது
3.இதை எப்படியும் குருநாதர் நிறைவுபடுத்தித் தந்து விடுவார்… என்ற எண்ண மோதலில்
4.குருவிடம் அப்பொழுது அதை எண்ணித் தியானிக்கவும் செய்தேன்.

இப்படி வரிசையாக எண்ணங்கள் சென்ற பின் இப்பொழுது உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை எதற்கென்று புரிந்ததா…? என்று குருநாதர் கேட்டார்.

உன் குடும்பச் சுழற்சியில் எந்த ஒரு நிலைக்கும்…
1.எண்ணத்தின் ஈர்ப்பை அவர்களிடம் செலுத்தி
2.அவர்களுடனே ஒன்றி
3.அவர்களுக்காக வேண்டுகிறாய்.

பந்தம் பாசம் அன்பு பரிவு அனைத்தும் வேண்டியது தான். “பற்றற்ற நிலை…” என்ற உபதேசத்தை என்னிடம் பெற்றவரும் நீ தான். ஆனால் உன் ஞானத்தால் பற்றற்ற நிலையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மற்ற உறவினர்களைக் காட்டிலும் இரத்தத் தொடர்புடைய சொந்தங்களின் ஈர்ப்பு அதிவிரைவில் நம்மை வந்து சாடும்.

தியானத்தால் நல்வழிப்பட்டு ஞானத்தின் பால் நீ செல்ல வேண்டிய நிலையில்… பந்த பாசங்களின் உணர்வு எண்ணத்தை உன்னுள் அவர்களின் நிலையையெல்லாம் ஏற்றிக் கொண்டே வருகின்றாய்.
1.அவர்களுக்காக அதே சுழற்சி வாழ்க்கையிலேயே இருந்து
2.அவ்வெண்ணத்துடன் உன் எண்ணத்தைக் கலக்கவிடுவதனால்
3.உன் ஞான வளர்ச்சியும் வளர முடியாது.

பந்தபாசங்களை எல்லாம் நீ ஒதுக்கிவிட்டு ஞான வழிக்கு வா…! என்று உணர்த்தவில்லை.

அவர்களிடம் உள்ள குறையையும் நிறையையும் உண் எண்ணத்துடன் நீ ஏற்றிக் கொள்ள வேண்டியதில்லை.
1.அவர்களின் நிலைக்காக அவர்கள் எண்ணச் செயல் மோதும் பொழுதெல்லாம்
2.அவர்களுக்கு நல் உணர்வு தா ஈஸ்வரா…
3.அவர்கள் நிலை உயரட்டும்…! என்ற எண்ணத்துடன் இறைசக்தியின் அலையைச் செலுத்த வேண்டும்.

ஆகவே அவர்கள் உணர்வலையுடன் நீ கலக்காமல் நீ பெற்ற நற்சக்தியின் அலையைக் கொண்டு அவர்கள் உயர உன் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

பிறரின் எண்ணச் சுழற்சியில் “நீ சிக்காமல்…” உன் எண்ணச் சக்தியை இறை சக்தியின் செயலாக அவர்களிடம் செலுத்திவிடு…! என்று உபதேசம் அளித்தார் ஈஸ்வரபட்டர்.

இப்பொழுது தெரிகிறதா உனக்கும் எனக்கும் உள்ள திரை எதற்கென்று…? என்று மறுபடியும் வினா எழுப்பினார் குருநாதர்.

உண்ணாமல் இருப்பது விரதமா…! தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…?

MAHA SHIVRATRI

உண்ணாமல் இருப்பது விரதமா…! தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…?

 

சிவன் இராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.
1.ஆனால் எது விரதம்…?
2.தீமைகளை நுகராமல் இருப்பது தான் விரதம்.

சாப்பாடு சாப்பிடாமல் விரதம் இருக்கின்றேன் என்று உடலில் உள்ல நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அது எல்லாம் சோர்வடையும்.

சோர்வடைந்த நிலையில் என்ன நடக்கும்…?

ஏதாவது ஒரு சாமானை எடுத்து வரச் சொல்லியிருந்தால்.. அல்லது பிள்ளையிடம் சொல்லிக் கடையில் போய் வாங்கிக் கொண்டு வா..! என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே பையன் வரச் சிறிது காலதாமதமாகிவிட்டால் என்ன ஆகும்…?

டேய்… நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாயேடா…! என்று வேகமாகக் கோபம் வந்துவிடும்.

நீங்கள் விரதம் இருக்கும் பொழுது வெளியில் போய் ஒரு சாமானை வாங்கச் சொல்லி உங்களிடம் வந்து சொன்னால் உடனே… “உனக்கு இந்த நேரம் தான் கிடைத்ததா…? போடா…!” என்று விரட்டுவோம்.

அப்பொழுது எதை விரதமாக இருக்கின்றீர்கள்…!
1.நல்லதை வளர்க்காதபடி நாம் விரதம் இருக்கின்றோம்.
2.ஆக விரதம் என்றாலே நாம் என்ன என்றே தெரியாமல் இருக்கின்றோமே…!

விரதம் என்பது எது..? தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்து தீய அணுக்களாக விளையாதபடி தடுக்க வேண்டும். நல்ல அணுக்களுக்கு நாம் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். எதை…?

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு இந்த உணவைக் கொடுக்க வேண்டும்.

சண்டை போட்ட குடும்பங்கள் இருக்கும். அவர்கள் உணர்வை நாமும் நுகர்ந்திருப்போம். சண்டையிட்டதை நுகர்ந்தது நமக்குள்ளும் இருக்கும். அப்பொழுது அவர்களும் நாமும் பிரிந்து இல்லை.

அதே மாதிரி ரோட்டில் போகும் பொழுது ஒரு பிச்சைக்காரன் அவஸ்தைப் பட்டிருப்பான். பரிவுடன் அதைக் கேட்டறிந்து அவனைக் காப்பாற்றியிருப்போம்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்ந்த பின்னாடி ஓ…ம்… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலில் சேர்த்து விடுகிறது. அப்பொழுது அவனும் நாமும் பிரிந்தில்லை.

அப்பொழுது அந்த உணர்வுகள் அணுவாகி விட்டால் அவன் உணர்வுகள் இங்கே வந்ததும் என்ன செய்யும்…? நம் உடலிலும் அந்த அவஸ்தைப்படும் அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடும்.

ஆனாம் நாம் உதவி தான் செய்தோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் அதை நமக்குத் துடைக்கத் தெரியவில்லையே…!

நல்லது செய்யும் நிலையில் நம்மை அறியாமல் இந்த மாதிரி நமக்குள் வரும் தீமைகளைத் துடைப்பதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள்.

1.நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? என்பதற்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள்
3.உலகிலேயே வேறு எங்கும் இத்தகைய நிலைகள் கிடையாது,
4.இயற்கை எப்படி இயங்குகிறது… எப்படி விளைந்தது…? என்று
5.சூட்சம நிலைகள் (கண்ணுக்குத் தெரியாதது) நம்மை எப்படி இயக்குகிறது என்று
6.உருவம் அமைத்து அருவ நிலைகளை நாம் எப்படி நுகர வேண்டும் என்பதை
7.நினைவுபடுத்தும் ஆலயமாகத் தான் அன்றைய ஞானிகள் அதற்குள் உருவங்களை வைத்தார்கள்…!

ஆனால் அந்த உருவங்களை நாம் இன்று அவமதிக்கின்றோம். தெய்வங்களைப் பார்த்து ஆசைகளைத் தான் பெருக்குகின்றோமே தவிர
1.தன்னை அறியாது வந்த தீமைகளைப் போக்கும் ஆலயம் என்று எண்ணுவதில்லை.
2.தீமைகளைத்தான் சேர்த்துக் கொள்கின்றோமே தவிர தீமைகளை நீக்கும் அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் இல்லை.

சிவன் இராத்திரி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்…?

முதலில் சொன்ன மாதிரி ரோட்டில் எத்தனையோ உணர்வுகளைப் பார்த்திருப்போம்… ஒருவருக்கொருவர் சண்டையிட்டவர்களைப் பார்த்திருப்போம்… அந்த நினைவுகள் வரும்.
1.அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
2.அவர்களை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட வேண்டும்.
3.மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெறவேண்டும்.

இப்படி இந்த நினைவுகளை எல்லாம் அன்றைய நாள் முழுவதும் கூட்டி நல்லதாக நமக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமைகளையே நுகராதபடி… விரதம் இருப்பது என்பது இது தான்…!

கலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

EARTH TOMORROW

கலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியனின் ஒளி அலையின் தொடர்பின் பிம்ப நிலை கொண்டு சிவனாகவும் ஈர்ப்பு நிலை கொண்டு சக்தியாகவும் வளர்ப்பின் படைப்பைக் கொண்டு உருவான உலக சக்தியே சூரியனைக் காட்டிலும் சக்தி வாய்ந்த நிலை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய “சக்தி பூமி இது…!”

இக்கலியின் மாற்றத்திற்குப் பிறகு…
1.இப்பூமியில் இன்றுள்ள மனித ஆத்மாக்களின் நிலை மாறி உருவங்கள் மாறு கொண்டு
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் ஈர்ப்பு ஓட்ட சக்தி
3.சூரியனைக் காட்டிலும் துரிதம் கொள்ளக்கூடிய நிலை கொள்ளப் போகின்றது.

உருவத்திலே சூரியனை விடச் சிறியதாக இருக்கும் காலத்திலேயே இதன் ஈர்ப்பு சக்தியினால் இதன் ஓட்ட நிலை துரிதம் கொண்டு… இன்றெப்படி சூரியனைச் சுற்றி சூரிய குடும்பமாக சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலம் உள்ளதுவோ அதைப் போன்று “பூமியின் ஈர்ப்பில்…” சூரியனும் சுழலப் போகின்றது…!

சூரியனை மையம் கொண்டு இன்று சுழலும் நிலையே பூமியை மையம் கொண்டு சுழலக்கூடிய நிலை உருவாகப் போகின்றது.

உயர் படைப்பின் படைப்பில் பலவுண்டு…!

1.அப்படைப்பிலேயே வளர்ச்சி கொள்ளும் நிலை கொண்டு
2.படைப்பின் படைப்பைக் காட்டிலும் உயர் படைப்பாவது தான் சக்தி நிலையே அன்றி
3.படைப்பின் குறுகும் நிலையல்ல உயர் சக்தியின் நிலை.

இப்பூமியில் ஞானத்தின் சக்தி கொண்ட மனிதக்கரு வளர்ந்துய்யும் நிலை கொண்டு… சக்தியின் நிலையினால் மனிதனின் ஞான வலுவால் ஆத்ம பலம் கொள்ளும் நிலை பெற்ற நம்மைப் படைத்த அவ்வாதி சக்தியின் படைப்பின் வலுக் கொண்ட சப்தரிஷிகளின் படைப்புடன் மனித ஆத்மாவின் ஆத்ம ஞான வளர்ச்சியினால் பூமியின் நிலை வளர்ந்தது.

பூமியின் ஈர்ப்புச் சுற்றலின் ஓட்டம் துரிதம் கொண்டு சுழலும் தன்மையில் பூமியின் ஈர்ப்புடன் வாழக்கூடிய சக்தி நிலை மனித உரு நிலைக்கு ஒப்பாமலும்
1.பூமியை மையம் கொண்டு சுழலும் பூமியின் ஈர்ப்புக்கு வரும் பிறிதொரு மண்டலத்தில் (சந்திரன்)
2.மனிதக் கரு உருவம் வளரக்கூடிய நிலைக்கு இன்றெடுக்கும் ஆத்ம சக்தியின் பலத்தால் “மனித இனம் வளரும்…!”

நொடிக்கு நொடி மாறிக் கொண்டே சுழல்கின்ற அனைத்து நிலைகளிலும் இன்றுள்ள மனித ஆத்ம பிம்ப நிலைக்கொப்ப உருவம் தான் இருக்குமா…! என்றால் அதுவுமில்லை.

1.ஒன்றை ஒத்த நிலையில்… ஒன்றிலிருந்து மாறுபடும் உணர்வின் எண்ணமானது
2.ஆவி நிலை கொண்டு மீண்டும் மீண்டும் ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிப் பிம்பமாகும் தருணத்தில்
3.எந்த ஒரு குண அமிலத் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையில் கனி வளங்களின் ஆரம்பக் குண அமில வளர்ப்பில் வளர்ந்த தாவரங்களின் வளர்ச்சி நிலையில் மனிதக் கரு வளர்ச்சியும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் பூமியின் அமிலப் படைப்புக்கந்த இன வளர்ச்சியின் நிலைத் தொடரே பெற்றோம்.

நம் பூமியின் தாதுப் பொருட்களில் அதிகமாக உள்ளது எது…? இரும்பு தான் மற்ற தாதுப் பொருட்களைக் காட்டிலும் இப்பூமியில் அதிகம்.

ஆனால் இப்பூமியின் ஈர்ப்பு சுழன்று வேகம் அதிகம் கொள்ளும் நிலையில்… பூமியின் ஈர்ப்புச் சுழற்சி துரித ஓட்டத்தினால்… பூமி இழுத்து வெளிக்கக்கும் சுவாச அலையினால்… பூமியின் ஈர்ப்பிற்கு மற்ற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய அமில குணத்தின் நிலையைக் கொண்டு…
1.இன்று இரும்பையே அதிகமாகக் கொண்டுள்ள இப்பூமியின் கனி வளத்தன்மையே
2.இரும்பு உள்ள நிலைக்கொப்ப தங்கம் வளரப் போகிறது… இது உண்மை..!
3.சூரியனின் நிலத் தன்மையில் தங்கத்தைக் காட்டிலும் சக்தி கொண்ட தாதுப் பொருள் உண்டு.

இரும்பைக் காட்டிலும் தங்கத்தின் குணம் உயர்ந்ததா…? இரும்பைக் காட்டிலும் தங்கம் எத்தன்மைக்கும் இளகி வரும் குண நிலை கொண்டது. தங்கத்தை நுண்ணிய இழைகளாகவும் உருவாக்க முடியும்.

இரும்பை அதி உஷ்ணப்படுத்தித்தான் அதற்கு உருவங்கள் அமைக்க முடியும். மிகவும் உறுதி கொண்ட திடப்பொருள் இரும்பு. ஆனால் இளகும் தாதுப் பொருள் தங்கம்.

இன்று பூமியின் இரும்பின் குண அமிலம் நிறைந்த தாதுப் பொருள் உள்ள நிலைக்கொப்ப இப்பூமியில் வளரும் ஜீவன்களின் அமில வளர்ச்சியும் அதன் குணத்திற்கொப்ப இருக்கிறது.

இன்று ஓடும் பூமியின் சுழற்சி ஓட்டத்தின் வேகம் கொள்ளும் நிலைக்கொப்ப பூமியின் தாதுப் பொருட்களின் நிலையும் மாறுகொள்ளும்.

இரும்பெல்லாம் தங்கமாகும் நிலை உருவாகப் போகிறது. இப்பூமியில் இனி வரப் போகும் கல்கி காலத்தில் எல்லா நிலைகளும் ஒவ்வொரு நொடிக்கும் மாறிக் கொண்டு தான் உள்ளன.

1.ஆவி பிம்பமாகி..
2.பிம்பம் ஆவியாகிச் சுழலும் நிலைக்கொப்ப “உருண்டு வளரும் நாம்”
3.சுழற்சியுடன் ஒன்றிய எண்ணத்தின் வழித் தொடரில் இருந்தோமானால்
4.சுழற்சியுடன் சுழன்று கொண்டே ஆவியாகிப் பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் அதே சுழற்சியிலிருந்து பிம்பமான
5.பல கோடி கோடி ஆண்டுகளுக்குப் பலவற்றையும் வளர்க்கும் படைப்பாண்டவன் ஆகலாம்… (எதன் வழியில்..?)
6.இவ்வெண்ணத்தை ஞானமாக்கி… “ஞானத்தால் ஜீவ ஆத்ம பலம் உய்யும் வழித் தொடர் கொண்டு…!”

மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை

galaxy near ursa major

மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை

 

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைத் தொடர்ந்து நீங்கள் கேட்டுக் கொண்டே வருகின்றீர்கள். இதிலே மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அன்புடன் பண்புடன் கேட்டறியும் மற்றவர்களின் உணர்வுகள்
1.உங்களுக்குள் அது எப்படி அறியாது தீய வினைகளாக உருவாகின்றது…?
2.நல்ல அணுக்களை உருவாக விடாதபடி எப்படித் தடுக்கிறது…? என்பதை நீங்கள் அறிந்து
3.ஒவ்வொரு நிமிடத்திலும் அதை நல்லதாக மாற்றும் சக்தியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
4.முருகு..! – மாற்றியமைக்கும் சக்தி பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு.

கோபப்படுவோரைப் பார்த்துவிட்டால் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் புறக் கண்களால் பார்க்கப்படும் பொழுது நுகர்ந்தது நம் உயிரிலே பட்டுத்தான் நம் உயிர் அகக்கண்ணாக இருந்து நமக்கு உணர்த்துகின்றது. ஆகவே கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றப்படும் பொழுது இது நெற்றிக் கண்ணாகின்றது.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்…! என்று ஏற்றப்படும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

ஆகவே சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான். புறக்கண்களால் பார்த்த இந்தக் கோபத்தின் உணர்வுகள் இங்கே வரப்படும் பொழுது இதை அடக்குகின்றது.

இப்படி அடக்கிய நிலைகள் வரப்படும் பொழுது யார் கோபப்பட்டார்களோ அவர்களைப் பார்க்கும் பொழுது
1.அவர்களை அறியாது இயக்கும் தீமைகள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெறவேண்டும்
3.ஒன்று சேர்த்து வாழும் அந்தச் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

குழம்பில் பல சரக்குகளைப் போட்டு அதைச் சுவையாக மாற்றுவது போல் அந்தக் கோப உணர்வுகள் நமக்குள் வளராதபடி அருள் உணர்வை எடுத்துக் கலந்தால் அந்த அணுவின் தன்மையாக உருவாகின்றது.
1.அத்தகைய அணுவாகி விட்டால்
2.அந்த அருள் உணர்வு (துருவ நட்சத்திரம்) தான் அதற்கு உணவாகத் தேவை.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் கருவாக்கி அணுவாக உருவாக்குகின்றது நம் உயிர். உயிரின் வேலை அது தான்…!

செடி கொடிகளில் பல உணர்வைச் சேர்த்து ஒரு புதுச் செடியாக உருவாக்கும் பொழுது
1.எதன் பங்கு விகிதாச்சாரம் வருகின்றதோ
2.அதன் வழி அந்தச் செடி வளர்ந்து அதனுடைய கனிகளையும் வித்துகளையும் உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் தீமைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் இப்படிச் செயல்படுத்த வேண்டும்.

குருவின் முக்கியத்துவம்

Guru protection

குருவின் முக்கியத்துவம் 

 

இவ்வுலகம் தோன்றி உருளும் உணர்வில் ஒவ்வொரு அணுவும் தோன்றி வளரவும் உணர்வின் ஈர்ப்பு அமிலம் கொண்டே உருவாகி உணர்வாகி வந்த நிலையை நம் சித்தர்கள் காட்டிய வழியில் இராமாவதாரத்தில்
1.தந்தையின் குணத்தை உயர்த்தியும்
2.தந்தைக்குப் பின் தான் தாயின் நிலை காட்டப்பட்டுள்ளது.
3.அதே போல் உலகின் தெய்வமான சிவசக்தி என்ற சிவனை முதலிலும்
4.சக்தியின் நிலையைப் பிறகும் தான் உணர்த்தினர்.

ஆனால் நாம் வணங்கும் தெய்வத்தில் தாயை முதலிலும் தந்தையைப் பிறகும் தான் உணர்த்திக் காட்டி வணங்குகிறோம். இதன் உண்மை என்ன…?

எல்லாமே ஆதிசக்தியின் படைப்புத்தான்…!

1.ஆதிசக்தியின் படைப்பில் – “ஆவியான சக்தி நிலை”
2.திடம் பெறும் நிலைக்குச் “சிவன்” என்ற நாமத்தைச் சூட்டி
3.திடப்பட்ட பிம்ப நிலையின் ஈர்ப்புத் துடிப்பிற்குச் “சக்தி” என்ற பெண்ணின் நாமத்தைச் சூட்டினர்.

சிவ பிம்ப ஈர்ப்பு சக்தி நிலையை நம் சித்தர்களினால் ஆவியான அமிலம் திடம் கொள்வதை சிவன் என்ற நாமம் சூட்டி அதன் ஈர்ப்பு நிலைக்குச் சக்தி என்ற பெண்பாலை உணர்த்தினார்கள்.

அவ்வீர்ப்பின் சுழற்சி அலைத் தொடர் வளர்ப்பின் நிலையில் வழி கொண்ட ஜீவ சக்தியின் படைப்பில் “தாய் தந்தை” என்ற உண்மை நிலை உருப்பெறுகின்றது.

1.படைப்பின் படைப்புத் தான் சிவ சக்தியின் படைப்பு.
2.படைக்கப்பட்டவனின் படைப்பு தான் அனைத்து ஜீவாத்மாக்களின் படைப்பெல்லாம்.
3.இந்நிலையில் சக்தி கொண்டு ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று வளர “ஜீவ சக்தி கொண்ட குரு நிலை தேவை…!”

இராமாயண மகாபாரதக் காவியங்களில் எல்லாம் குருவின் நிலையை ஆண்டவனுக்கு முதலில் காட்டிய நிலை என்ன..?

ஞான சக்தி பெற… ஆரம்பத் தொடர் நிலைக்கு நம்மைக் காட்டிலும் சக்தி கொண்ட குரு நிலை தேவை.
1.நீரான சக்தி ஈர்ப்பில் (மனித பிம்ப உடலில்) காந்த மின் அலையின் தொடர் நிலையை
2.நேராக நாம் பெறுவது என்பது கடினமாகின்றது.
3.நம்மை ஒத்த ஜீவ உடல் கொண்ட ஞான சக்தியின் வழி பெற்ற குரு அமைந்தால்
4.நம் எண்ணத்தை அவர்பால் செலுத்த
5.அவர் எடுக்கும் அலையின் நிலையிலிருந்து
6.நம் ஞானத்திற்குகந்த அலையினைத் திருப்பி அனுப்பிட முடியும்.

ஜீவனற்ற சக்தியின் தொடர்பைக் காட்டிலும் ஜீவனுடன் கூடிய குரு நிலை அமைந்து அவர்பால் நாம் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப காந்த மின் அலையின் தொடரை நாம் ஆரம்பக் காலத்தில் எடுப்பதற்கு உதவி நிலை கிட்டுகிறது.

குருவின் உண்மை நிலை 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இந்நிலை தான் இருந்தது. காலப் போக்கில் குருவானவர்களே தன் ஞானத்தின் வழியைப் பிறர்பால் செலுத்தி “அவர்கள் தன்னைக் காட்டிலும் உயர் நிலை கொண்டு விடுவார்கள்…!” என்ற எண்ண ஓட்டத்தினால் எல்லாமே மாறிவிட்டது.

அதுவமல்லாமல் சிலர் எடுத்துச் செயல்படுத்திய வழி நிலையை உணர்ந்தெடுக்கும் ஜீவாத்மாக்களும் செயல்படுத்தவில்லை.

மனித உரு கரு வளர்ந்த காலம் முதல் கொண்டே குரு சிஷ்யன் என்ற வழித்தொடர் இருந்து கொண்டு தான் இருந்தது, இன்றும் உண்டு. ஆனால் பக்தி நிலை கொண்டு பணிந்து வணங்கும் நிலை தான் உண்டே தவிர ஞானத்தின் நிலையின் ஈர்ப்பு வழித் தொடருக்கு குருவின் செயலை எடுப்பாரில்லை.
1.குருவின் தொடர்பால்…
2.தானே கிட்டும் என்ற நிலை தான் இன்றும் உள்ளது.

ஆனால் சக்தி வாய்ந்த சக்தியிலிருந்து தான் பல சக்திகள் உருப்பெறுகின்றன.
1.உருப்பெற்ற நிலையிலிருந்து மாறி மாறி வழித் தொடர் கொண்டு
2.உயர் சக்தியின் படைப்பில் தான் சக்தி வாய்ந்த சக்திக்கு மேல் சக்தி கொள்கின்றது இந்தச் சக்தி.

இது தான் உண்மை…!

Archive

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அத்திரி மாமகரிஷி அருளாற்றல்களை இந்தப் பூமியிலே எவ்வாறு பெற்றார்…? அவர் ஆற்றல் பெற்ற நிலைகள் கொண்டு தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி எவ்வாறு விண் சென்றார்…? என்ற இந்தப் பேருண்மையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய வழியில் அந்த ஆற்றலை நுகர்ந்த பின் அந்த ஆற்றலின் சக்தியை ஜெபத்தால் மேலும் பெருக்கி அந்த எண்ண அலைகளை எல்லோருக்கும் பதியச் செய்ய வேண்டும் என்ற ஆசையிலே தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 93

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அரசாட்சி காலங்களில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்டுணர்ந்து… இதையெல்லாம் வெறுத்து… இனி நாம் ஒவ்வொரு மக்களின் நல் எண்ணங்களை நாம் பெற்றால் தான்… நாம் விண் செல்ல முடியும்  என்ற நிலைக்கு வந்து அரச நிலையைத் துறந்து… காடு வனம் என்ற நிலைகளில் திரிந்து ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெற்று… மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து… அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கித் தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றிச் சென்றவர் அத்திரி மாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

 

manrdra 92

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

பெரிய அரசனாக இருந்த அத்திரி தன் வாழ்க்கையில் இருக்கக்கூடியதைத் துறந்து அந்த மெய் ஞானியின் அருள் ஒளி பெற வேண்டுமென்று மக்கள் மத்தியிலே வந்தான்.

பின் ஒவ்வொரு உயிரின் தன்மையில் அவர்கள் எடுத்துக் கொண்ட நல்ல எண்ணமும் அந்த நல்ல எண்ணத்தை நாம் பெற்றால் அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மெய் உணர்வின் நிலைகளை நமக்குள் வளர்த்து அந்த மெய்யின் தன்மையான ஒளி நிலையைத் தான் பெற முடியும் என்ற பேருண்மையை அறிந்து உணர்ந்தவர்தான் அத்திரி மாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 91

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அத்தி மரத்தின் நிழலிலே அத்திப் பழங்கள் எப்படி தன் தண்டுகளில் உருப்பெறுகின்றதோ அந்த உணர்வின் எண்ணத்தைக் கொண்டு ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அது தோன்றும் உணர்வின் நிலைகள் கொண்டு ஒவ்வொன்றிலும் உருப்பெறச் செய்ய முடியும் என்று தன் உணர்வின் தன்மை கொண்டு அரசனாக இருந்தவன் அத்திரி.

நாட்டின் நிலையும் தனது குடும்பத்தில் தன் மக்கள் தன்னுடைய அரசுக்குள் போர் முறைகள் கொண்டு தனக்கு இந்தச் சொத்து வேண்டும் அந்தக் சொத்து வேண்டும் என்றும் இந்த அரசுக்குள் போர் முறைகள் கொண்டு இந்த அரசனையே (அத்திரியை) திருப்பித் தாக்கும் நிலை வரும்போது தான் ஆற்றல் மிக்க மெய் நிலைகளை உணர்ந்து அரச சபையைக் கூட்டி அதன் வழிகளிலே அரசை நடத்தி அந்தப் பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைப் பெறமுடியும் என்று இருந்தாலும் அரசனான அவனால் பெற முடியவில்லை.

அவனுடைய குடும்பத்தில் மக்கள் எதிர்நிலைகள் செய்யும்போது, இவனது சிந்தனைகள் குலைந்து நாட்டிற்குள் தன் பிள்ளைகள் என்று வரும்போது மக்கள் மத்தியிலே பல கொடூரத் தன்மைகளை விளைய வைத்து மக்களின் நிலைகளில் எல்லை கடந்த நிலைகளாகி அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையும் மழை நீர் பெய்யாத நிலையும், அது தவித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலைகளில்தான் இந்த அரச நிலையே வேண்டியதில்லை என்று உணர்கின்றான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 90

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

ஞானகுரு அவர்கள் சுமார் 6 வருட காலம் கொல்லூரில் இருந்தேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்குப் பின்பும் பல தடவை அங்கே சென்று வந்துள்ளார்.

அதாவது ஆரம்பத்தில் கோலமாமகரிஷி அவர்கள் கொல்லூரில் கடும் தவமிருக்கும் பொழுது அவர் உடலிலிருந்த வெறுப்புணர்வுகள் உயர்ந்த உணர்வுகளை எடுக்கவிடாது அவருடைய ஜீவான்மாவில் பதிவு செய்த நிலைகள் ஆன்மாவாக முன் நிற்கிறது. சுவாசித்த உணர்வோ தன்னைத் தான் வளர்த்துக் கொள்வதற்கு வேலை செய்கின்றது.

ஒவ்வொரு குணமும் தன்னை வளர்த்துக் கொள்ள முந்துகின்றது. முந்தும் பொழுது ஒரு நஞ்சான உணர்வை எடுத்துக் கொண்டால், நஞ்சின் தன்மை நல்ல குணங்களை அழிக்கும். தீமையை அகற்றும் சக்தியாக எடுத்தால், தீமைகளை அகற்றும் என்ற இந்தப் பேருண்மையை அறிந்து கொள்வதற்குத்தான் கோலமாமகரிஷி எதை எடுத்தார்…? எதை வெறுத்தார்…? எதை அறிந்தார்…? ஞானத்தால் எப்படித் தான் உணர்ந்தார்…? என்று அதை எல்லாம் அறிவதற்குத்தான் கொல்லூரில் பல வருட காலம் தங்கியிருந்து ஜெபமிருந்தோம் என்று ஞானகுரு சொல்கிறார்.

ஆகவே… அன்று கோலமாமகரிஷி எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் இங்கே இதை எல்லாம் வெளிப்படுத்துகின்றார்கள். அவ்வாறு அவர்கள் வெளிப்படுத்தும் அந்த உணர்வின் ஆற்றலைப் பெற நாம் தியானிப்போம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 89

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

ஆதிசங்கரர் சொன்னது… உயிர் ஈசன்… எண்ணும் எண்ணங்கள் சுவாசிக்கும் பொழுது உயிரான ஈசனிடத்தில் அந்த சுவாசங்கள் பட்டு அது உறைகின்றது. எந்தெந்தக் குணங்களை எண்ணுகிறோமோ அந்த குணமே நம் உயிரில் பட்டு அபிஷேகமாக நடக்கின்றது

நாம் பாலைப் போல மனம் வேண்டுமென்று எண்ணினால் பால் எவ்வளவு தூய்மையான சத்தாக இருக்கின்றதோ அதைப் போல பிறருடைய எண்ணம் கண்டு கலக்கமில்லாத நிலைகள் ஏற்படுத்தி நல்லது செய்ய வேண்டும் என்று சுவாசிக்கும் போது அது உயிரிலே பட்டு அந்த உணர்வின் அலைகள் உயிரான ஈசனுக்கு அபிஷேகமாகின்றது. அந்த அலைகள் உடல் முழுவதற்கும் சென்றவுடன் நம் உடலிலிருக்கும் நல்ல குணங்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும். இது தான் உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 88

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் சொல்லும்போது… துவைதவாதிகள் “நீ இந்த வேள்விகள் செய்யா விட்டால் அவஸ்தைப்படுவாய்…” என்று சொன்னார்கள். சொன்னதோடு மட்டுமல்லாது ஏவல் செய்து ஆதிசங்கரருக்கு வயிற்று வலி வரவைத்து விட்டார்கள்.

வயிற்று வலி வந்தபின் இவர் கடும் நிலைகளில் சுவாசித்து அத்வைத நிலைகளில் தன் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து அந்தத் தத்துவத்தை தன் நிலையை அங்கே நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

நாம் சுவாசிக்கும் இந்த உணர்வின் தன்மைகள் எந்த குணத்தைக் கொண்டு சுவாசிக்கின்றோமோ அது உயிருடன் சேர்க்கப்படும்போது “விஸ்வ விநோதினி”,

அன்றைய துவைதவாதிகள் ஆதிசங்கரரை “நீ காசியில் இருக்கும் அந்த விநாயகருக்கு யாகங்கள் செய்து வந்தால்தான் நல்லது” என்கிறார்கள், ஆதிசங்கரர் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றார்.

உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் உண்டு. எண்ணத்தாலே எடுத்து அதைச் சுவாசிக்கும்போது உயிரின் துடிப்பைக் கூட்டி மெய் ஞானியின் அருள் உணர்வைச் சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார் ஆதிசங்கரர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 86

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

சூட்சம நிலையில் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையை அது எவ்வாறு செயல்படுகின்றது என்ற நிலையில் ஆதிசங்கரர் தன் தாயின் ஆற்றலைச் செயல்படுத்தும்போது பாடுகின்றார்… “ஐகிரி நந்தினி நந்திதமேதினி விஸ்வ விநோதினி நந்தினிதே”

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஐந்து அறிவின் புலனறிவு தான் அதாவது வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு. வெப்பத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய காந்தம் அது ஈர்க்கும் சக்தி (1), ஆனால் அந்த வெப்பத்தை உருவாக்கும் அணுவின் தன்மையை அது பொருளைக் கொடுத்தவுடன் உருவாக்கவும் செய்கின்றது. அது மற்றதை மறைக்கவும் செய்கின்றது.

ஒரு உணர்வின் தன்மையை மறைத்து மாய்த்துவிட்டு ஒன்றைத் தனக்குள் எடுத்து அது வளர்க்கச் செய்யும். ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும்போது ஒரு கருவின் தன்மை மாய்த்துவிட்டு ஒரு சக்தியின் தன்மையை உருவாக்கும் (2,3)

எந்தக் கோளின் தன்மையை எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வின் சக்தி அணுவுக்குள் சேர்க்கப்படும்போது இந்த அணுவின் தன்மை அந்த மணத்தை வெளிப்படுத்தும்(4).  அதே சமயம் அந்த உணர்வின் தன்மை ஒரு பொருளுக்குள் சேர்ந்தவுடன் இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு இயக்கும்(5) – ஆக ஐந்து.

மனிதனுக்குள் இருக்கும் புலனறிவு – ஐந்து. அதுதான், “ஐகிரி நந்தினி, நந்திதமேதினி விஸ்வ விநோதினி, நந்தினிதே” என்று சொல்லும்போது ஐந்து புலனறிவுகள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 85

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

கோலமாமகரிஷி ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று விண் சென்றார். ஆதிசங்கரருடைய உயிராத்மாவும் விண்வெளி சென்று விட்டது. அவர்களெல்லாம் இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

கோலமாமகரிஷி தன் தத்துவத்தினுடைய நிலைகளை அத்வைதம் துவைதம் என்ற நிலைகள் கொண்டு அவருடைய ஆற்றல் இந்த உலகம் முழுவதற்கும் ஆதிசங்கரர் மூலம் வெளிப்பட்டது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 84

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம் 

அரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே அதையே பற்றிக் கொண்டு தன் வலிமையினாலே இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான் அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் “மூகாம்பிகை” என்று கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.

கோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே கோள்களின் ஆற்றலின் பேருண்மைகளை அறிந்தவர் ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 83

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம் 

கோலமாமகரிஷி அரச நிலைகளில் வந்தவர். அவர் அரச நிலை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மெய் ஒளியைக் காண வேண்டும் என்று வந்தவர்.

அவர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் என்ற ஊருக்கு அருகில் “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய்த் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும் இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று. கடும் தவமிருந்து தான் அதிலிருந்து அவர் மீண்டார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 82

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வேதங்கள் என்றாலே “நாதங்கள்…” என்று பொருள். ஒலிக்கொப்ப உணர்வும்… உணர்வுக்கொப்ப ஒலியும்… உணர்வுக்கொப்ப ரூபமும்… பெற்ற நாம் அடுத்து எந்த ரூபத்தை அடைய வேண்டும்…? என்பதை வேதங்களின் மூலமாக வியாசகர் காட்டியுள்ளார்

உருவம் திடப் பொருள் ரிக் அதிலிருந்து வரும் மணம் சாம மற்றொரு பொருளுடன் இணைந்து உருமாற்றும்போது இரண்டுமே தன் நிலை இழக்கின்றது அதர்வண. இரண்டும் மாறி ஒன்றாக இணைக்கப்படும்போது “யஜூர்”.

எதை அதிகமாக நுகர்ந்தோமோ அதனின் கணக்கின் பிரகாரம் தான் அடுத்த உடலின் ரூபம் அமைகின்றது என்பதே வியாசர் காட்டிய உண்மை.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 81

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சூரியனிலிருந்து வரும் வெப்பம் காந்தம் விஷம் ஒரு உணர்வின் தன்மையை எடுத்தால் அந்த உணர்ச்சி கொண்டு தாக்கி இயக்கும் போது – அர்ச்சுனன். கவர்ந்து கொண்ட உணர்வுகள் காந்தம் – நகுலன். எடுத்து இணைந்து செயல்படுத்தும் தன்மையாக வருவது வெப்பம் – சகாதேவன். நுகர்ந்தது வலிமையாகி அணுவானால் – பீமன். அந்த உணர்வு தன்னைக் காக்கும் வலிமை பெறுகின்றது

எல்லாம் சேர்த்து உடலாக்கப்படும்போது – தர்மன். எதனின் உணர்வின் தன்மை எதை எடுத்ததோ அதைத்தான் வளர்த்துக் கொள்ளும் தன்மை வருகின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், இந்த உணர்வுகள் நமக்குள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை எப்படி இயக்குகின்றது? என்று மகாபாரத்தில் வியாசகர் சாதாரண மக்களும் புரியும்படி தெளிவாக உணர்த்தியுள்ளார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 80

manrdra 79

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

கண்கள் உபதேசிக்கும் பொழுது நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.

எதை நினைத்தாலும் என் வழி கொண்டு தான் நீ அறிய முடியும்.

நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.

நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.

என் நிலையையே நீ அறிவாய் என்று இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

கண்ணன் என்ற கண்கள் உண்மையை உணர்த்தினாலும் ஒருவன் தவறு செய்கின்றான் என்ற உணர்வை நுகரப்படும்போது உயிரிலே பட்ட பின் நம் உயிர் என்ற உணர்வுகள் கண்ணனின் சகோதரியாகத்  திரௌபதை அது கவர்ந்து சொல்கின்றது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 78

manrdra 77

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சிறு சிறு துளிகளாக அணுக்களாகச் சேர்ந்து ஒரு மலையாகப் பாற்கடலில் தோன்றியது நமது பூமி தன் சுழற்சியால் ஏற்படும் உராய்வின் தன்மை கொண்டு அது இயங்குகின்றது. வாசுகி,

பாற்கடலிலே நமது பூமி சுழலும் பொழுது அதாவது கடையும் பொழுது பாறைகளாகவும், கற்களாகவும், மரம், செடி, கொடிகளாக விளையச் செய்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் சத்தை, விண்ணிலிருந்து வந்த உயிரணு கவரும் போது அந்தச் சத்து அணுத்திசுக்களாகி புழுவிலிருந்து மனிதனாக வருவதை அவரவர்கள் விழுங்கிய நிலைகள் கொண்டு உடல்களாக உருப்பெற்றது என்பதை மகாபாரதம் என்று உணர்த்துகின்றார் வியாசர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 76

manrdra 75

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படித் தனக்குள் கண்டறிந்தானோ அந்தப் பேருண்மைகள் எல்லாம் வியாசனான ஒன்றுமறியாத அந்த மீனவனுடைய உடலிலே தென்படுகின்றது.

ஆதிசக்தி எவ்வாறு உருபெற்றது…? அது சூரியனாக எவ்வாறு தோன்றியது…? என்பதையும் பிரபஞ்சத்திற்குள் நமது பூமி மேரு என்ற மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் வைத்து பாற்கடலிலே கடைந்தெடுத்தான் என்று மகாபாரதத்திலே வியாசர் அருளினார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 74

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

அன்று வாழ்ந்த பெரும்பகுதி மக்கள் அனைவருமே சூரியனை வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி தான் தவறு செய்தேன்… ஆனால் இந்த மீன் இனம் என்னைக் காத்தது என்ற உணர்வை மேல் நோக்கி வானிலே நினைவைச் செலுத்துகின்றான் மீனவனான வியாசகன்.

இது நடந்தது காலை நான்கு மணி. கடல் பகுதியில் செல்பவர்கள் நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்தை நன்றாகப் பார்க்க முடியும். அதே சமயத்தில் சூரியன் அந்த துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வரும் நேரம் அது.

அந்த நேரத்தில் வியாசகன் இவ்வாறு எண்ணுகின்றான். அப்படி எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவன் நுகர நேருகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கிறது என்று அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை வியாசகன் நுகர்கின்றான். வியாபித்திருக்கும் உணர்வை வியாசகன் கண்டுண்ர்ந்தான். மெய்ஞானியாக ஆனான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 73

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வியாசகன் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் கிக்கிப் படகு கவிழ்ந்து கடலிலே விழுந்து விடுகின்றான். அப்படித் தத்தளிக்கும்போது தான் எப்படியும் மீளவேண்டும் என்ற மனப் போராட்டம் அதிகமாகின்றது.

தான் எப்படியும் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வின் ஏக்கம், உடலின் உணர்வுகளை மறந்து தன் உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஒரே எண்ண ஒலிகளை ஈர்த்து அதனின் இயக்கத்திலிருக்கும் பொழுதுதான் அவன் எந்த மீனைப் பிடித்து வேட்டையாடி அதைப் புசித்து அதன்வழி கொண்டு அவன் வாழ்ந்தானோ அதே மீன் இனம் வியாசரைக் காக்கின்றது இவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கின்றது.

நாம் எதைக் கொன்றோமோ அந்த மீன் இனமே தன்னைக் காத்தது என்று திரும்பிப் பார்ர்கும்போது தன் தவறை உணர்ந்து உயரந்த குணங்களை எண்ணி ஏங்குகின்றான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 71

 

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று நுகர்ந்தால் “லவ குசா…!”

நாம் எடுக்கும் மெய் உணர்வுகள் உடலுக்குள் (சீதாவிற்குள்) விளைந்தபின் நம்மைப் பற்றியும் நமக்குள் இயங்கும் அனைத்தையும் அறிந்து அது வெளிப்படுத்திக் காட்டும். தன்னைத் தான் அறியும் நிலையாக நாம் நம்மை அறிய முடியும் என்றும் வான்மீகி காட்டினார்.

ஆகவே இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த நாம் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களைக் காத்திடல் வேண்டும் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து தப்பிட இச்சைப் பட வேண்டும் என்று தெளிவாக உணர்த்துகின்றார் வான்மீகி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 71

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

காவியத்திலே காட்டும் போது கர்ப்பமாக இருக்கும் சீதாவை மக்களின் உணர்ச்சியால் உந்தப்பட்டு உண்மையின் உணர்வை அறியாதபடி சீதா என்ற சுவையைப் புண்படும்படிச் செய்து விட்டனர். ஆனால்… அதிலே வரும் வேதனை என்ற கருவை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகச் சீதாவின் மனதை மாற்றி அருள் உணர்வைச் செவி வழி ஊட்டி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கூட்டிக் கருவிலே வளரும் குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுவதாகக் காட்டினார் வான்மீகி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 70

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சீதை மானுக்காக வேண்டி ஆசைப்படுகிறாள் என்றால் சீதையினுடைய ஆசையில் அவள் எண்ணிய நிலைகள் தான் அந்த மான். இது பொய் மான். நேரிலே பார்க்கப்படும் நிலைகள் வேறு ஆனால் எண்ணங்களில் ஆசைகளைக் (பொய்யாக) கூட்டப்படும் போது அது எவ்வாறு நம் வாழ்க்கையைத் திசை திருப்புகிறது…? அதிலே எப்ப்டிச் சிக்குகின்றோம் என்று நமக்கு முன் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலைகளைத்தான்… “பொய் மான்…!” என்று அவ்வாறு மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

இப்படி ஒவ்வொரு நாளும் நமது எண்ணத்தால் இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ துயரங்கள் வருகிறது…! இந்த உடல் வாழ்க்கையில் வந்த அந்தத் தீய வினைகள் தீமைகள் துன்பங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்…! அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற உணர்வை நாம் எடுத்து உயிருடன் ஒன்றி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும் என்று உணர்த்துகின்றார்கள்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 69

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

இராமாயணம் நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம். துருவ நட்சத்திரம் எந்த வழிகளிலே அது ஒளியாக மாறியதோ, அந்த உண்மையின் ஆற்றல் பூராவுமே வான்மீகியின் உடலுக்குள் நின்று வெளிப்படுத்தியதுதான் இந்த இராமாயணக் காவியம்.

(உயிர் – விஷ்ணு; உயிரின் காந்தம் –  இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; ஆஞ்சநேயன் – எண்ணங்கள் வாயுவாகச் செல்வது; வாலி – விஷம் தீமை செய்யும் உணர்வு.. உடலின் இச்சை – இராவணன்; சுக்ரீவன் – துருவ நட்சத்திரம் லவ குசா – மகரிஷிகள் உணர்வு)

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 68

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வான்மீகி மூடராக இருந்தார் கொலைகாரராக இருந்தார் கொள்ளைக்காரராக இருந்தார். இருந்தாலும், பட்சியின் பாச உணர்வு இவரிடம் வரும் பொழுது, பட்சியின் துடிப்பை உணர்ந்தார். தவறிலிருந்து மீண்டிடும் ஏக்கம் கொண்டு, விண்ணை நோக்கி ஏகுகின்றார்.

அன்று அகஸ்தியன் தான் எந்தப் பாசத்தைச் செலுத்தி தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றானோ அந்த ஆற்றலை இவர் நுகர நேருகின்றது. “வான்மீகி” என்று அப்பொழுதுதான் பெயர் வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 67

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வான்மீகி மூடராக இருந்தார் கொலைகாரராக இருந்தார் கொள்ளைக்காரராக இருந்தார். இருந்தாலும், பட்சியின் பாச உணர்வு இவரிடம் வரும் பொழுது, பட்சியின் துடிப்பை உணர்ந்தார். தவறிலிருந்து மீண்டிடும் ஏக்கம் கொண்டு, விண்ணை நோக்கி ஏகுகின்றார்.

அன்று அகஸ்தியன் தான் எந்தப் பாசத்தைச் செலுத்தி தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றானோ அந்த ஆற்றலை இவர் நுகர நேருகின்றது. “வான்மீகி” என்று அப்பொழுதுதான் பெயர் வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

போகர் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தியைக் கண்களாலே, காதாலே, வாயாலே, உடலாலே, சுவாசத்தாலே எடுத்து நமக்குள் சேர்த்தால் அது பஞ்சாபிஷேகம.

இவ்வாறு புலனறிவில் கவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தும் பஞ்ச அமிர்தமாக நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர்கிறது.

அந்தப் பஞ்ச அமிர்தத்தை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதற்குத்தான் முருகன் சிலையை உருவாக்கினான் போகன்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 65 png

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

மனிதனைப் போன்ற ஒரு உருவச் சிலையாக அமைத்து NEGATIVE POSITIVE அதாவது சத்ரு மித்ரு என்ற நிலைகளில் இயக்கப்படும் போது எப்படி மின் அணுவின் நிலைகளில் விளக்கு எரிகின்றதோ… காந்தக் கட்டைகளைச் சுழற்றும் போது காந்தப் புலனறிவு இயங்குகின்றதோ அதைப் போன்று உயிருள்ள சிலையாக உருவாக்கினான்.

மனிதனைப் போன்ற இந்த உணர்வின் சத்தை அது உருவாக்கி மக்கள் அனைவரும் சிலையிலிருந்து வெளிப்படும் மணத்தை நுகரச் செய்து மனித வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அது உள் நின்றே பொசுக்கி மக்களை இன்னல்களிலிருந்து விடுபடச் செய்யும் தத்துவத்தை உருவாக்கினான் போகன்.

போகர் எதைக் காட்டினாரோ அந்தச் சக்திகள் அனைத்தும் முருகன் சிலைக்குள் உண்டு. முருகன் சிலையிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மையை நாம் சுவாசித்தால் நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத் தன்மைகளை அது மாய்த்துவிடும்.. அறியாது சேர்ந்த கடும் பிணிகளும் போகும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 64 png.

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

பாதரசம் நம் உடலிலும் உண்டு. தாவர இனத்திலும் உண்டு. கல்லிலும் உண்டு. எவை எவைகளில் எதனின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றன என்ற நிலைகளை உணர்ந்தவன் போகன்.

கண்ணாடிக் கற்களைக் (QUARTZ – CRYSTAL) கண்டுபிடித்தவன் போகன். ஏனென்றால் ஒளியின் தன்மை கொண்டு தெளிவாக உணர்த்தும் அந்த உணர்வின் தன்மையை அதை உரசி அதையும் சிலை செய்ய இணைத்துக் கொண்டான்.

மனிதனின் எண்ணத்தின் சிந்தனைகள் உருவாகக் காரணமான பல கோடித் தாவர இனங்களைத் தேடி அலைந்து அவைகளையும் முருகன் சிலைக்குள் இணைத்தான்.

சிந்தனைத் திறன் கூடி தீமைகளை அகற்றிடும் உணர்வின் ஞானங்கள் மனிதனுக்குள் எவ்வாறு வளர்ந்தது என்ற நிலையும் அந்த ஆற்றல்கள் எந்தெந்தத் தாவர இனச் சத்திற்குள் இருக்கின்றது என்பதையும் நுகர்ந்தறிந்தான். தன் உயிரின் துணை கொண்டு அதை எல்லாம் அறிந்தான் போகன்.

அத்தகைய பல கோடி உணர்வின் சத்தையும் காந்தப் புலனின் நிலைகள் கொண்ட பாதரசத்தையும் அதற்குள் இணைத்துத் தீமைகளை அகற்றும் ஆற்றல்களையும் நஞ்சினை அகற்றிடும் உணர்வின் சத்துக்களையும் முருகன் சிலையில் சாரணையாக ஏற்றினான் போகன்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 63 png

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

ஒவ்வொரு தாவர சக்தியை நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தன் உடலில் ஆற்றல் மிக்கதாகச் சேர்த்து அதற்கொத்த நிலைகள் கொண்டு தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி வந்தார்,

போகர். தான் வளர்த்துக் கொண்ட நிலைகளை மற்றவர்களும் பெற எண்ணி ஏங்கினார்.

நட்சத்திரங்களால் விளையப்பட்ட வைரங்களையும் நவபாஷாணத்தையும் சூரியனிலிருந்து வெளிப்படும் பாதரசத்தையும் மூன்றையும் ஒன்றாக இணைத்து முருகன் சிலையைச் செய்தார் போகர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 62 png.

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

விஷம் தீண்டி தன் தாய் விஷத்தாலே மடிய அதனின் வலுக் கொண்டு அதனில் ஏங்கி இந்த உணர்வின் ஆற்றலை தனக்குள் எண்ணி ஏங்கி விண்ணை நோக்குகின்றார் போகர்.

அவ்வாறு ஏங்கிய நிலைகள் கொண்டு ஏக்கத்தாலே சுவாசிக்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட அந்தப் பேரொளி இவர் சுவாசத்திலே ஈர்க்கப்பட்டது.

ஈர்க்கப்பட்டபின்… அந்த மாமகரிஷிகளின் வானஇயல் தத்துவத்தை எப்படி உணர்ந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் போகருக்குள் இது பிரம்மமாகின்றது. உருப்பெறுகின்றது.

அவருடய வ்ளர்ச்சியில் எந்த விஷமான சக்தியும், அவரை ஒன்றும் பாதிக்காத நிலையைச் செயல்படுத்தினார்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 61 png

death

மரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…?

உதாரணமாக ரோட்டிலே நாம் போகும்போது அது கோள்களைப் போன்ற நிலை தான். அங்கே பிறிதொருவர் செய்யும் தவறைப் பார்க்க நேர்கின்றது. கூர்ந்து கவனித்தால் அதை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோம்.
1.எந்தக் குணத்தில் எண்ணிச் சுவாசித்தோமோ அது நம் உடல் முழுவதும் பாய்கின்றது.
2.நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணம் கெட்ட குணம் எல்லாவற்றிலும் அது மோதும்.
3.அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் முழுவதிற்கும் செலுத்தும்போது அந்த உணர்வின் துடிப்புகள் அதிகமாகின்றது
4.அப்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணங்களைப் பதறச் செய்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்த அந்த உணர்வுகள் உள்ளே சென்றவுடன் உடலோடு அமைப்பாக இருக்கும் மற்ற அணுக்கள் ஒவ்வொன்றும் அதற்குத்தக்கவாறு நெளிந்து கொடுக்கின்றது.

அதாவது நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் பூமியில் பல சக்திகள் வருகின்றது. இந்த வேப்ப மரத்திலிருந்து கசப்புகள் வருகின்றது. அந்தப் பக்கம் குப்பையைக் கொட்டி வைக்கின்றார்கள். இன்னொரு பக்கம் ஒரு தொழிற்சாலையிலிருந்து விஷமான நிலைகள் வெளி வருகின்றது.

ஒரு காற்றடித்தால் இத்தனை விதமான மணங்களும் நமக்கு அடிக்கின்றது. நம் உடலுக்குள் மற்ற மற்ற அந்த அணுக்களின் தன்மை இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் நாம் சுவாசிப்பது உடல் முழுவதற்கும் எல்லா பாகத்திற்கும் போய்க் கொண்டுதான் வரும்.

நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் உறவாடுகின்றது.

ஆனால் தீமையாக இருக்கும் பட்சத்தில் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் அது மோதும் போது அப்பொழுது நமக்குப் பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

இப்படி நாம் சுவாசிக்கக் கூடிய நிலைகளில் அடிக்கடி நாம் கெட்டதைச் சுவாசித்தால் என்ன ஆகின்றது…? உடலில் நோய் வருகின்றது…!

நாம் சலிப்பான நிலை கொண்டு “அசிங்கம்” என்ற நிலைகள் கொண்டு மனம் சோர்வடைந்து பேசுகின்றோம். ஒரு நெடியான வாசனைக் கண்டவுடனே உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது. இதைப் போல…
1.நாம் சுவாசிக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும்
2.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடனே
3.அது நம் உடலுடன் சேர்த்து இயக்கப்படும்போது சிறுகச் சிறுக மாசுபடும் நிலையாக வருகின்றது.

இவ்வாறு… வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சேர்க்கும் இத்தகைய நிலைகளினால் அசுத்தமாகின்றது.

1.உதாரணமாக ஒரு சண்டை போடும் உணர்வைப் பார்க்கும் போது அடுத்து நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகி விடுவோம்.
2.அடிக்கடி பயத்தினுடைய நிலைகளில் இருப்பதைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்.

இதைப் போன்ற உணர்வின் தன்மை அது வளர்ச்சியான பின் அந்த நிலைக்கே நம்மை அது “திசை திருப்பி விடுகின்றது…!” அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் தன்மை அனைத்தும் மாறிவிடும்.

ஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் அதிலே உப்பை அதிகமாகப் போட்டு விட்டால் அந்தக் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே சமயம் காரம் அதிகமாகி விட்டாலோ நாம் வெறுக்கின்றோம்

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் நம் உடலுக்குள் இருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சஞ்சலமோ கோபமோ ஆத்திரமோ இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே சேர்ந்து விடுகிறது.

ஏனென்றால் பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் நாம் பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றது.

1.அன்றைய தினத்தில் நாம் எதை எதையெல்லாம் பார்த்தோமோ அ
2.தற்குத் தகுந்த மாதிரிதான் அன்றைக்கு நமது செயல் எல்லாமே இருக்கும்.

இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தால் ஆத்திரமும் பயமும் நாம் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப வேகமாக இந்த அலைகள் கொண்டு அன்றைய இரவில் காது சம்பந்தப்பட்ட வலியோ கண்ணிலே வலியோ ஏற்படும்.

ஏனென்றால் அந்த ஒளி… ஒலிகளை இழுத்துப் பேசும் அந்த மேக்னெட் பவரும் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகிவிடும் ஒரு மோட்டாரை இயக்கினாலும் அதிலே லோடு அதிகமாகி விட்டால் சுழன்றால் அது சூடாகிவிடுகின்றது.

அதைப் போல் சமமான அந்த உணர்வுகளை இழுக்கும்… ஒலியை நமக்கு ஊட்டக் கூடிய அந்த காதுகளில் காந்தம் தேய்மானமாகின்றது. சூடாகும்போது அதனுடைய காந்த சக்தி குறையும்.

பயமோ ஆத்திரமோ இவைகளை அதிகமாக எடுத்தால் நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் பலவீனமாகிவிடும். இதைப்போல சோர்வு சஞ்சலம் அதிகமாக எடுத்தாலும் கரு விழியில் இருக்கக்கூடிய நிலைகள் அது இயக்கச்சக்தி என்ற நிலைகள் கம்மியாகும்.

சஞ்சலமும் சோர்வும் மற்ற உணர்வின் தன்மையும் அடிக்கடி எடுத்தால் செவியில் இருக்கக்கூடிய நாதங்களை இயக்கும் நிலைகள் மந்தமாகச் செய்து அதனுடைய நிலைகள் பதிவாகிவிடும்.

இப்படி கண் காது மூக்கு முதற் கொண்டு நம் உடலில் உள்ள எல்லாவ்ற்றிலுமே அது கலந்துவிடும். நாம் அடிக்கடி சுவாசிக்கும் இந்த உணர்வின் நிலைகள் எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளிலும் அது படருகின்றது.

அந்த எலும்புகளில் இருக்கும் காந்த சக்தியினால் தான் நம் உயிருக்கே கரண்ட்டை உற்பத்தி செய்ய கூடிய காந்தம் உருவாகி அதன் மூலம் இந்த உடலை இயக்க முடிகின்றது.

1.அதாவது… உயிரின் துடிப்பு வரப்படும்போது காந்த அலைகள் உருவாக
2.அந்தக் காந்தம் இருந்தால்தான் (உடலிலே) உயிரே துடிக்கும்

இல்லை என்றால்… காந்த உற்பத்தி குறைவாகி விட்டால்…
1.உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த துடிப்பு கொண்டு
2.இந்த உடலில் இருக்கும் காந்தத்தை இழுக்காமல்
3.வெளியில் இருக்கக்கூடிய காந்தத்தில் இழுத்துவிடும்… ஈர்க்கப்பட்டு விடும்.

இந்த உடலில் விளைய வைத்ததின் நிலை இது தான் மரணம் என்பது…!

புவியின் ஈர்ப்பிற்குள்… அந்தத் துடிப்பின் நிலை “நம் காந்தம்…” என்றைக்குக் கம்மியாகின்றதோ அந்தச் சமயத்தில் இந்த உயிராத்மா வெளியே வந்துவிடும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிய… மகரிஷிகளின் எண்ண ஒளிகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இந்தக் காற்றிலே மிதந்து கொண்டு இருக்கின்றது.
1.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உபதேசமும்
2.அதன் வழி செயல்பட வேண்டிய தியானமும்.

அபிராமிப்பட்டர் சரபோஜியிடம் சொன்னது – மனிதனுக்குத் திதி கிடையாது 

நட்சத்திரத்தை அறிந்த பிருகுவின் மகன்கள் தாய் கருவில் எடுத்த உணர்வின் இயக்கம், அத்திரி  

விவேகானந்தர் கடவுளை இராமகிருஷ்ணரிடம் உணர்ந்த விதம் – சிகாகோ உபதேசம்

soul parameters

ஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.

சுவை ஏழு… வண்ணம் ஏழு… நாதம் ஏழு… மணம் ஏழு… என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்… ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத் தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.

ஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.

1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்
2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்…? என்ற ஞானத்தைத்தான்
3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.

நாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.

உண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று
1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.
2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது
3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று
4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ
5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்…
1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற
2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.

நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்… நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது

அதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.

1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.
2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.

தன் பிம்பத்தைத் தானேக் கண்டு… தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று… ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்…
1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியது
2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை…!

உடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது…”

ஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு
1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி…
2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து…
3.ஆத்மாவைப் பேரொளியாக ஆக்கி…
4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.
5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.

Guru protection

நல்லது செய்பவர்களுக்கு நிறையத் தொல்லைகள் வருகின்றது ஆகவே அந்த நல்லவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி

நீங்கள் நல்லதைச் செய்து கொண்டே வந்தால் என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?

1954ல் ஒரு சமயம் நான் (வேணுகோபால் சுவாமிகள்) பழனியில் மில்லில் மேஸ்திரியாக வேலை பார்க்கும் போது செல்லையா என்று ஒருவர் வந்தார். மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். அவர் தரித்திரமாக அதாவது ஒன்றும் இல்லாத நிலையில் வந்தார்.

தரித்திரமான நிலையில் வரப்படும் போது நான் என்ன செய்தேன்?

அவரை நன் வேலை பார்க்கும் மில்லிற்கு கூட்டிக் கொண்டு வேலை பழகிக் கொடுத்தேன். அந்த மில்லில் எனக்கு உதவியாக வேலைக்கும் சேர்த்துக் கொண்டேன்.

கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவர் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவர் அவர் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மில்லை விலைக்கு வாங்கினார்.

மில்லை வாங்கிய பின்னர் அவருடன் சேர்ந்த ஒரு குரூப் நெய்க்காரப்பட்டியிலிருந்து அங்கே வேலைக்குச் சேர்ந்தது.

புதிதாக ஆள்கள் எல்லாம் போட்டு வேலை செய்யும் போது நான் வேலை பழகிக் கொடுத்து வேலைக்குச் சேர்த்தவன் உயர்ந்த பிற்பாடு என்ன செய்தான்?

இந்த மில்லை கிருஷ்ணமூர்த்தி வாங்கியவுடனே அவர்கள் ஆட்களாகக் கொண்டு வந்து வேலைக்குச் சேர்த்தவர்களுக்குள் ஒரு மேஸ்திரியும் வந்தார்.

நான் ஒரு மேஸ்திரி. அவர் ஒரு மேஸ்திரி.

நான் எல்லாரையும் தட்டிக் கொடுத்து அனுசரித்து வேலை வாங்கியதால் நான் வேலை பார்க்கும் ஷிப்டில் “உற்பத்தி…” அதிகமானது.

அந்த மேஸ்திரி அடுத்த ஷிப்டில் இருக்கிறார். நான் மற்றொரு ஷிப்டில் இருக்கின்றேன்.

புதிதாக வந்த மேஸ்திரியோ “தான் முதலாளி ஆள்…” என்று வேலை பார்ப்பவர்களை மிரட்டிக் கொண்டே இருந்தார். அதனால் அங்கே புரடக்ஸன் ஆகவில்லை.

நான் மற்றவர்களுடன் சேர்ந்து சந்தோஷத்தை ஊட்டி வேலை செய்வதால் என் ஷிப்டில் புரடக்ஸன் நன்றாக ஆகின்றது.

தினமும் உற்பத்தி சம்பந்தமான ரிபோர்ட் (PRODUCTION REPORT) போகும் போது மேலே விவரம் கேட்கிறார்கள்.

என் ஷிப்டில் உற்பத்தி அதிகமாகின்றது. அவர்கள் கூட்டிக் கொண்டு வந்த ஆட்கள் வேலை செய்யும் ஷிப்டில் புரடக்ஸன் சரியாக வரவில்லயே… “ஏன்…?” என்று கேட்கிறார்கள்.

இதற்காக வேண்டி என்னைக் குற்றவாளியாக ஆக்குவதற்காக அந்த மேஸ்திரி முயற்சிக்கின்றார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது யாரை?

நான் முதலாளியிடம் சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்தேன் அல்லவா. அந்தச் செல்லையாவைக் கைக்குள் போட்டுக் கொள்கின்றார்கள்.

புதிய மேஸ்திரி – நான் சொல்வது போலச் செய்யவேண்டும் என்று சொன்னவுடன் நீங்கள் சொல்வது போலச் செய்கின்றேன் என்று செல்லையாவும் சொல்லிவிட்டான்.

“என்னைக் குற்றவாளியாக்குவதற்காக” – உற்பத்தியைக் கூடக் காண்பிப்பதற்காக வேண்டி ஏற்கனவே உற்பத்தியான நூல்களை மீண்டும் மீண்டும் எடை போடுகின்றார்கள்.

மில்லில் மிஷின் ஓடுகின்ற இடத்தில் அண்டர் கிரவுண்ட்க்குள் (UNDER GROUND) வயர் போகும். அங்கே கொண்டு இந்த நூல்களைக் கூடையில் போட்டு திட்டமிட்டு மறைத்து வைத்து விட்டார்கள்.

மறைத்து வைத்ததும் என்ன ஆனது?

இது எனக்குத் தெரியாது. நான் தான் ஷிப்ட் முடிந்து போய் விடுகிறேன் அல்லவா…!

நான் அதை எடுத்து இவ்வாறு ஒளித்து வைக்கச் சொன்னதாகவும் அதற்குச் சாட்சிக்காக செல்லையாவை வைத்துக் காட்டலாம் என்று அவ்வாறு முடிவு செய்தார்கள்.

எதற்காக எடுத்து வைத்திருக்கிறார்கள்? இரண்டாவது முறையாக நாளைக்கு எடை போட்டுக் “கூடுதலாகக் காட்டுவதற்காக… நான் வைத்துள்ளேன்” என்று இப்படி ஜோடிக்கின்றார்கள்.

இதற்கு மாஸ்டர்கள் எல்லாம் சாட்சி. அடுத்த ஷிப்டில் ஆள்கள் வந்தவுடனே அவர்களிடம் எல்லாம் சொல்லிவிடுகிறார்கள். ஆட்களிடம் சொன்னவுடனே இதைப் பார்த்துக் கொண்டார்கள்.

அடுத்தாற்போல என்ன செய்கிறார்கள்? நான் ஷிப்ட் முடிந்து போனதும் ஓடுகின்ற மிஷினில் உள்ள பினியன் (பல் சக்கரம்) இருக்கிறது. ஓடுகின்ற அதன் (LOCK) லாக்கை “வேண்டும் என்றே..” எடுத்து விடுகின்றார்கள்.

அதை எடுத்து விட்டால் சக்கரம் இறங்கிப் போகும். ஓடாது. இந்த மாதிரி 2-3 மிஷினில் செய்து வைத்து விட்டார்கள்.

அவ்வாறு செய்து அப்பொழுது நான் உற்பத்தியைக் குறைத்துவிட்டேன் என்று காண்பிக்கின்றார்கள்.

பல் சக்கரம் சரியாக இல்லை என்றால் நூல் வெளியில் வந்து தூசியாகப் பறக்கும். இப்படிச் செய்து வைத்துவிட்டுப் போய்விட்டார் (நான் செய்ததாக). அதனால் “நாங்கள் எப்படிப் புரடக்சன் எடுப்பது…?” என்று என்னைப் பற்றித் தவறாகச் சொல்கிறார்கள்.

இதெல்லாம் நான் தான் செய்யச் சொன்னதாகவும் நான் சொன்னதால் அவ்வாறு செய்ததாகவும் அந்தச் செல்லையாவே சொல்கிறான்.
.
நான் தரித்திர நிலையில் வந்தவரை வேலைக்குச் சேர்த்து யாரைப் காப்பாற்ற நினைத்தேனோ அவர் (செல்லையா) இப்படிச் சொல்கிறார், இந்த மாதிரி எல்லாம் பல் சக்கரத்தை என்னை வைக்கச் சொல்லிச் சொன்னார் என்று.

ஏனென்றால் முதலாளி மாறிவிட்டார்.

அவரிடம் சலுகை பெறுவதற்காக அந்த மேஸ்திரி செல்லையாவைக் கைக்குள் போட்டு அவனுக்கும் கொஞ்சம் காசைக் கொடுத்து இந்த மாதிரிச் செய்கின்றார்.

நல்ல மனம் படைத்தவர்களுடைய நிலைகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய அனுபவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி மாதா மாதம் செய்து “பொய்யான ரிக்கார்ட்” உருவாக்குகின்றார்கள்.

இப்போது அவரைக் (என்னை) கேட்க வேண்டாம். அவர் (நான்) செய்கின்ற தவறை எல்லாம் பாருங்கள். எனக்குப் (புதிய மேஸ்திரிக்கு) புரடக்ஸன் ஏன் சரியாக ஆகவில்லை என்று அப்புறம் நீங்கள் நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் என்று முதலாளியிடம் சொல்கிறார்.

ஒவ்வொரு நாளும் நடந்ததை என்னைப் பற்றிய ரிப்போட் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதாவது உற்பத்தியைக் கூடுதலாகக் காட்டினார். பல் சக்கரத்தை இறக்கிவிட்டார். அதை உடைத்தார். இதை உடைத்தார் என்று இப்படி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாகச் செய்தார் என்று ரிப்போர்ட் எழுதி வைத்துள்ளார்கள்.

என்னிடம் விசுவாசமாக வேலை பார்த்தவர்கள் இருக்கிறார்களே அவர்கள் என்னிடம் வந்து உண்மைகளைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிச் செல்லையா என்பவன் உங்களைப் பற்றித் தவறாகப் பல ரிப்போர்ட் கொடுக்கின்றான் என்று என்னிடம் சொல்கிறார்கள்.

செல்லையா ரிப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னவுடன் “சரி… அவரவர் செயலை அவரவர் எடுத்துக் கொள்ளட்டும்…! போகட்டும்…!” என்று நான் சொல்லி விட்டு விட்டேன்.

ஏனென்றால் அப்போது எனக்கு இரண்டு ஷிப்டிலும் நல்ல மரியாதை உண்டு.

கஷ்டப்படுகிறவர்களுக்கு வெளியில் ரேஷன் அரிசி எல்லாம் கொடுத்து உதவி செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் முக்கால் ரூபாய் தான் சம்பளம்.

செல்லையா துண்டு கூட இல்லாமல் வந்தவன். அவனுக்கு நான் வேலையே வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவன் இப்படிச் செய்கிறான்.

அப்புறம் என்ன ஆனது?

முதலாளி கூப்பிட்டுக் கேட்கிறார். அவருக்கு என் மேல் நம்பிக்கை உண்டு.

இருந்தாலும் இதெல்லாம் உன்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார்கள். என்று கேட்கிறார். ஏனப்பா இந்த மாதிரி எல்லாம் செய்கிறயாமே…?

என்னங்க…? என்று கேட்டேன்.

செல்லையாவைக் கூப்பிடுகிறார்கள்.

அவன் என்னிடம் கேட்கிறான். ஏனுங்க…! அண்ணா…! நான் உடலில் கட்டிக் கொள்வதற்கு துண்டு இல்லாமல் இங்கே வந்தேன் அல்லவா?

ஆமாம்.

அப்பொழுது கட்டிக் கொள்வதற்கு வேஷ்டி கொடுத்தீர்கள். உங்கள் சட்டையைக் கழற்றிக் கொடுத்து விட்டு பனியனுடன் வீட்டுக்குப் போனீர்கள் அல்லவா?

ஆமாம்.

எனக்குச் சாப்பாடு இல்லை என்கிற பொழுது உங்கள் வீட்டிலிருந்து தினமும் சாப்பாடு கொடுத்தீர்கள் அல்லவா.

ஆமாம். அதற்கெல்லாம் இப்பொழுது என்னப்பா…? என்றேன் நான்.

இப்படி எல்லாம் நீங்கள் பல வகையிலு உதவி செய்திருக்கும் போது “நான் உங்களுக்குத் துரோகம் செய்வேனா…?” என்று என்னிடம் கேட்கிறான்.

இது நடந்த நிகழ்ச்சி.

1.இந்த உதவி செய்ததே…
2.எனக்கு எப்படி எதிரியாக மாறுகிறது… என்று
3.இந்த உலகம் எப்படி என்று பாருங்கள்.

உங்களுக்கு என் (செல்லையா) மீது நம்பிக்கை இருக்கிறது அல்லவா. நான் எப்படிச் செய்வேன் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா…! எனக்கு இத்தனை உதவி செய்தீர்கள்.

1.நீங்கள் தானே இந்தப் பல் சக்கரத்தில் ஆணியை வைக்கச் சொன்னது.
2.நீங்கள் தான இந்த நூலை அங்கே கொண்டு ஒளித்து வைக்கச் சொன்னது என்று கூசாமல் சொல்கிறான்.

எப்படி இருக்கும்…? எனக்கு…! எப்படி இருக்கும் உங்களுக்கு…?

இதை எல்லாம் கேட்டவுடன் மற்ற தொழிலாளிகள் பொரிகிறார்கள். இவனைல் (செல்லையாவை) கொன்று விட வேண்டும் என்ற உணர்வு வருகிறது.

என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை அனுபவித்துச் சொல்கிறேன்.

அப்புறம் மேனேஜரிடம் சொன்னேன்.

நான் அவருக்கு நன்மை தான் செய்திருக்கிறேனே தவிர எந்தத் தீமையும் செய்யவில்லை. மில்லுக்கு நான் நன்மை தான் செய்திருக்கின்றேனே தவிர தீமை செய்யவில்லை.

எல்லாரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று தான் உழைத்தேன். இப்படித் திருட்டுத்தனமாக வாழ வேண்டும் என்று இல்லை.

எனக்கு எல்லாத் தொழிலும் தெரியும். நான் வெளியிலே போனால் பிழைத்துக் கொள்வேன். இந்தக் குற்றத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நான் வேலையை விட்டே போய்விடுகிறேன் என்றேன். வேலையை விட்டு வந்து விட்டேன்.

இனி இவனை எல்லாம் விட்டோமென்றால் சரி கிடையாது. செல்லையா தவறு செய்யவில்லை. அவன் அந்த மேஸ்திரி தான் எல்லாத் தவறையும் செய்திருக்கின்றான். அந்த மேஸ்திரியைத் தீர்த்துக் கட்டினால் சரியாகப் போகும் என்று சொல்லி அந்த வெறுப்பிலேயே போய்க் கொண்டிருந்தேன்.

பழநி மலையில் போய் பின்னாடி உட்கார்ந்துவிட்டேன். அப்போது முருகன் மேல் பக்தி. முருகனிடம் சொல்வதற்குப் போய்விட்டேன். அங்கே இரவு முழுவதும் இருந்தேன்.

பின்னாடி அழகு நாச்சியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. அடுத்தாற்போல துர்க்கை. வனதுர்க்கைக் கோயில் இருக்கிறது.

வன துர்க்கை…, “அவன் எல்லாம் இப்படிச் செய்தானே… நீ ஏன் என்று கேட்க மாட்டாயா…” என்று சொல்லிவிட்டுச் சுற்றிப் பின்னர் ரணகாளி கோவிலுக்குப் போனேன்.

“நான் தவறு எதுவும் செய்யவில்லையே…! அவன் இந்த மாதிரிச் செய்கிறானே என்று சொல்லிவிட்டு நீயே கேள்….!” என்று அதைத்தான் சொல்லிப் போய்க் கொண்டு இருக்கிறேன்.

இதை நினைக்க நினைக்க இந்த வனதுர்க்கை ரணகாளி மகேஸ்வரி எல்லாம் பார்த்த பின் “அவனைக் கொல்ல வேண்டும்…” என்ற உணர்ச்சி தான் எனக்குள் வருகின்றது அடக்குவதற்க்கு வழி இல்லை.

அவனைக் கொன்று போட்டுவிட்டு வேறு வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

வீட்டுக்கு வந்தேன்.

நான் ஏற்கனவே சுதந்திரப் போராட்ட காலங்களில் தற்காப்புக்காக வேண்டி மிலிட்டரிக்கார் கொடுத்த ஒரு பிரெஞ்சு துப்பாக்கி அதை மறைத்து வைத்திருந்தேன். ஒரே சமயத்தில் அதில் பன்னிரண்டு குண்டுகள் பாயும்.

சுதந்திரப் போராட்ட காலங்களில் அதைப் பயன்படுத்தவில்லை. ஏதாவது ஆபத்து வந்தால் தப்பித்துக் கொள்வதற்காக மட்டும் வைத்திருந்தேன். அது மட்டும் கடைசி வரை ஒளித்து வைத்துக் கொண்டேன்.

சுதந்திரத்திற்காக காந்திஜி வழியில் போய் அடி வாங்கினேனே தவிர யாரையும் நான் கொலை செய்யவில்லை.

ஏனென்றால் என்னுடைய சரித்திரத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் சிறிது நன்றாக இருக்கும். அதற்காகச் சொல்கிறேன்.

வீட்டுக்கு வந்து பிஸ்டலை எடுத்துக் கொண்டேன். முக்கால் ரூபாய் இருந்தது. முக்கால் ரூபாயையும் என் இரண்டு பையன்களிடம் கொடுத்தேன்.

இரவு பன்னிரண்டு மணிக்கு நான் என்ன செய்தேன்?

நடு இரவில் அந்தச் செல்லையா என்கிறவனைக் கட்டி குழி தோண்டிப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதைப் பார்த்ததும் அடப்பாவிகளா…! அவன் தவறு செய்யவில்லை. அந்த மேஸ்திரி தானே தவறு செய்தான் என்று எனக்கு “இன்னும் கொஞ்சம் வீரியம்…” ஜாஸ்தியாகி விட்டது.

அவன் சோற்றுக்கு வந்தவன். கஷ்டப்படுபவன். பிழைப்புக்கு வழி இல்லாமல் அவன் கூடச் சேர்ந்து கொண்டான். இதை விட்டுவிட்டால் மறுபடியும் தரித்திரம் ஆகிவிடுமோ என்ற நிலையில் அறியாத நிலையில் அவனுடைய உணர்வு இப்படி இயக்குகின்றது.

நேராக வந்து வாழைத் தோப்புக்குள் கட்டி வைத்த செல்லையாவைக் கழற்றி விட்டேன்.

“தப்பித்துப் போயிருப்பா…” என்று சொல்லிவிட்டேன். எல்லாரும் சேர்ந்து குழி தோண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இவரைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அவிழ்த்து விட்டு என்கூட வா என்று சொல்லிப் போகச் சொல்லிவிட்டேன். காந்திய வழியில் அவரைத் தப்பித்துப் போகச் சொல்லி விட்டேன்.

அவனைக் கழற்றி விட்டுவிட்டு நான் வேறு பக்கம் போய்விட்டேன். போய்விட்டு பின்னர் காலையில் ஆறு மணி ஏழு மணி ஷிப்டிற்கு அந்த மேஸ்திரி வருவான் அல்லவா…!

6.30 மணிக்கு அந்த நேரத்தில் அவரை கேட் முன்னாடி வைத்துச் சுட்டு விட வேண்டும் என்று நினைத்துப் போகின்றேன். இந்தத் திட்டத்தில் போகின்றேன். துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டு போகின்றேன்.

செல்லையா தவறு செய்யவில்லை. அவன் தவறு செய்கிறான். ஆனால் அவர் இன்னும் எத்தனை பேருக்கு இந்தக் கெடுதல் செய்வாரோ என்ற எண்ணம் ஆத்திரமாகிவிட்டது,

செல்லையா ஏமாந்திருக்கிறார். அவர் வழியில் இவரைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.

அப்புறம் சண்முகநதிப் பாலத்தின் மீது போனேன்.

என் பிள்ளைகளுக்குக் காசு கொடுத்திருந்தேன் அல்லவா…! இந்த உணர்வு என்ன செய்கிறது?
1.“நைனா… நைனா…” என்று என் கையைப் பிடித்து இழுக்கின்ற மாதிரி இருக்கின்றது.
2.அது போல ஒரு பிரமை.
3.அப்புறம் அந்தக் கற்பனைகள் எட்டுகின்றன.

நாம் இப்படிச் செய்தால் அந்தக் குழந்தைகள் எல்லாம் அனாதையாகிவிடும். அனாதையாகி விட்டால் நாம் என்ன செய்வது…? என்ற உணர்வுகள் திரும்புகின்றன.

அப்புறம் சண்முகநதிப் பாலத்தில் இருந்து நேராக ஆற்றிலே போய்க் கொண்டே இருக்கின்றேன். அப்போது இரயில் எஞ்சின் (புகை வண்டி) ஒன்று பழனி இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அதில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
நல்ல தண்ணீர் என்று அங்கே இரயில் நின்று கொண்டு இருந்தது. அந்த இடத்தில் பிஸ்டலைத் தூக்கிப் போட்டுவிட்டேன்.

அவனைக் கொல்ல வேண்டும் என்று நினைத்து வந்தேன். ஆனால் நாம் தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணினேன். அதனால் பிஸ்டலை அங்கே போட்டு விட்டேன்.

அதை போட்டுவிட்டு இரயிலில் ஏறி “ஜம்..” என்று உட்கார்ந்தேன். டிக்கெட்டும் எடுக்கவில்லை.

என்னுடன் பூலாங்கிணறு பிரீமியர் மில்லில் வேலை பார்த்தவர்கள் நிறையப் பேர் உண்டு.

ஏற்கெனவே ஒரு சமயம் மதுரையில் இருக்கும் பொழுது அங்கே ஒருவரை சில ஆபத்தில் இருந்து காப்பாற்றினேன். அவர் பிரிமியர் மில்லில் இருக்கிறார்.

அப்படி என்னிடம் வேலை செய்ததில் கொஞ்சப் பேர் இருந்ததனால் அங்கு போய் இறங்கிவிட்டேன். என் கையில் காசு இல்லை. இறங்கினால் அங்கு டிக்கெட் பரிசோதனைக்கு ஒருவரும் இல்லை. நான் பாட்டுக்கு இறங்கிப் போய்விட்டேன்.

அது லோக்கல் வண்டி. பூலாங்கிணறு வந்தவுடன் இறங்கிவிட்டேன்.

இறங்கி அங்கே போனவுடன் என்னைப் பார்த்தவுடன் எல்லோரும் வாங்க வாங்க என்று வரவேற்பு பலமாக இருந்தது, லட்டு ஜிலேபி என்று என்னென்னமோ பலகாரமெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள்.

ஆனால் என் நிலையோ மோசமாக இருக்கிறது.

இந்த மாதிரி நிலையில் நான் அங்கு போனால் எல்லோரும் ஆதரிக்கிறார்கள். ஆனால் என் மனதிற்குள் இப்படி இருக்கிறது.

அவர்களிடம் பொய் சொன்னேன்.

பழனியிலிருந்து புறப்பட்டு வந்தேன். உடுமலைப் பேட்டை வருவதற்கு முன்னாடி கையில் இருந்த காசை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்களிடம் இப்படிப் பொய் கூறினேன்.

இப்பொழுது கையில் காசு இல்லை. மில்லில் இருந்து சாமான்கள் வாங்கி வரச் சொன்னார்கள். வாங்கிக் கொண்டு போகவில்லை என்றால் நாளைக்கு என்னைக் குற்றவாளியாக ஆக்குவார்கள் என்று சொன்னேன்.

அதனால் ஒரு ஐநூறு ரூபாய் வேண்டும் என்றேன்.

ஐநூறு ரூபாய் என்ன…? உனக்கு ஆயிரம் ரூபாய் கூடக் கொடுக்கிறேன் என்றார்கள். அப்புறம் எல்லோருடனும் உட்கார்ந்து சாப்பிட்டேன்.

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் அப்படியே புறப்பட்டுப் போய்விட்டேன். கோயம்புத்தூருக்கு வந்துவிட்டேன்.

கோயம்புத்தூர் போனால் அடுத்து எங்கே போகின்றேன் எனக்கே தெரியவில்லை.

இங்கு சிறிய ரயில். அங்கே பெரிய ரயிலாக இருக்கிறது.

பெங்களூர் போவதற்குத் தெரியாது என்று அங்கு மேஸ்திரி ஒருவர் இருந்தார். அவர் மருமகனிடம் சொல்லி “டிக்கெட் எடுக்க வேண்டும்” என்றேன்.

எங்கே போகவேண்டும்?

அகமதாபாத் போகவேண்டும். சாமான்கள் வாங்க இங்கே கம்பெனியில் அனுப்பினார்கள் என்று அப்படிச் சொன்னேன்.

அவர் வந்து விவரம் கேட்டு என் கையில் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறார்.

கொடுத்தவுடனே முதலில் பெங்களூர் வண்டியில் ஏறி என் தம்பியை (ராதா) இருக்கின்றாரா என்று பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்து பெங்களூரில் இறங்கித் தம்பியைப் பார்க்கச் சென்றேன்.

என் தம்பி அங்கே இல்லை. ஊட்டி போனபோது வண்டி ஆக்ஸிடண்ட் ஆகி உங்கள் தம்பி தொங்கிக் கொண்டு வந்தார். மிலிட்டரியில் எந்த ரகசியமும் சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். தம்பி இங்கே இல்லை என்றார்கள்.

அப்போது கையில் பணம் இருக்கிறது. எனக்கு வெளியில் போய் ரூம் எடுத்துப் பழக்கம் இல்லை.

மிலிட்டரியில் நமக்குத் தெரிந்தவர்கள் சிறிது பேர் இருக்கிறார்கள். இந்த கேம்ப்ல இருக்கார். அந்த கேம்ப்ல இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.

கையில் காசு இருக்கிறது. அதனால் ஹோட்டலில் சாப்பிடுவது மற்றும் ரூம் எடுக்கத் தெரியவில்லை. அதனால் திண்ணையில் படுத்து கொள்கிறேன்.

மேலே போர்த்தியுள்ள பெட்சீட்கூட நனைந்து போய்விடுகிறது பெங்களூரில் விறு விறு என்று ஆகின்றது.

அப்புறம் தம்பி வந்தார். வந்தவுடன் கூட்டிக்கொண்டு போகிறார். அப்புறம் கூப்பிட்டுப் போய் என் அண்ணன் இவர் தான் என்று சொன்னார்.

இவர் எப்படி மில்ட்டரிக்கு போனார்….! என்றால் என் அம்மா பெட்டியில் உள்ள செயின் ரூபாய் எல்லாவற்றையும் எடுத்து விற்றுவிட்டு மிலிட்டரிக்குப் போய்விட்டார்.

“வரட்டும் அவனை உதைக்கிறேன்..” என்று அப்பா சொல்கிறார்கள். அப்பொழுது அவன் சிறிய பையன்.

அப்பா என்ன செய்கிறார். வந்தால் அவனைக் கொன்று விடுவேன். ஒரு தடவை விடுமுறை அன்று வந்தபோது கூட வெளியில் தான் நிற்க வைத்தார். அவ்வாறே அனுப்பினார்.

பணத்தை எடுத்துச் சென்றதால் அப்பா என்றால் பயம்.

அப்போது நான் மெலிந்திருக்கின்றேன் என்று ஒரு பத்து நாள் மிலிட்டரியில கொஞ்சம் சாப்பாடு எல்லாம் கொடுத்து என்னைத் தேற்றிவிட்டார்

அப்புறம் நான் தம்பியிடம் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன், டெக்ஸ்டைல் கம்பெனிக்கு போகிறேன் என்று சொல்லி அவரிடம் கொஞ்சம் 100 – 200 ரூபாய் வாங்கி்க் கொண்டு கிளம்பினேன்.

அடுத்து இன்னொன்று நடந்தது.

அதாவது பம்பாய்க்குப் போகவேண்டும் என்றால் பூனாவில் இருந்து இரயில் மாறிப் போக வேண்டும். மாறிப் போகும்போது அங்கே ஒருவன் நான் டிக்கெட் எடுத்துத் தருகிறேன் என்று அரை குறையாகத் தமிழ் பேசினான்.

“சரி…” என்று சொல்லிவிட்டு டிக்கெட் எடுத்து வருவார் என்று உட்கார்ந்திருக்கின்றேன். அந்தக் காசை வாங்கி அவர் எடுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டார்.

“இவனை என்னடா செய்வது…?” என்று அந்த வண்டியிலே டிக்கெட் இல்லாமலே ஏறிவிட்டேன். வண்டி போகிறது என்று சொல்லிவிட்டு அங்கே போய் அகமதாபாத் போய் இறங்கினேன். அவரும் இறங்கினார்.

பின்னாடியே போனேன். எங்கே போகிறார்? என்று இடைவெளியில் எதுவும் செய்யக்கூடாது என்று பேசாமல் போகிறேன்.

அப்போது என் சித்தப்பா ஒருவர் மில்லில் மேஸ்திரியாக இருக்கிறார். அவரைப் பார்க்கலாம் என்று போகிறேன்.

அப்போது இங்கே போனவுடனே இவர் போனால் கூடவே போகிறேன்.

அப்போது எனக்கு கொஞ்சம் நரம்பு அடி எல்லாம் தெரியும். என்னை ஏமாற்றியவனை அடித்து விட்டேன். என்னை ஏமாற்றிவிட்டாயே என்று சொல்லி அடித்தேன்.

பெண்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள். யார் என்ன என்று கேட்டால் எங்களுக்கு என்ன தெரியும்..? என்று சொல்கிறார்கள்.

அப்புறம் போனால் அங்குள்ள ஒருவர் நீங்கள் யார்? யாரைப் பார்க்க வேண்டும் என்றார்.

இந்த மாதிரி மதுரையிலிருந்த ஒருவர் அம்பிகா மில்லில் வேலை செய்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்றேன்.

ஓகோ மதுரை ஆளா?

அம்பிகா மில்லில் வேலை பார்க்கும் அவர் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய்விட்டார். அவரை வைத்து மில்லில் நான் சொன்ன கம்பெனிக்குப் போய் வேலை பார்த்தேன்.

அப்போது வேலை கிடைத்தவுடனே அங்கேயும் போய்ச் சைக்கிள் கடை வைத்தேன். சைக்கிள் கடை வைத்துச் சம்பாதித்துக் காந்திஜி ஆசிரமத்திற்குப் போய் ஞாயிற்றுக் கிழமை அங்கே போய் உட்கார்ந்து விடுவேன்.

அங்கே போனால் அமைதியாக இருக்கிறது.

காந்திஜி ஆசிரமத்தில் சபர்மதி ஆசிரமத்தில் போய் உட்கார்ந்துவிட்டு அப்படியே வருவது. மறுபடியும் வேலை செய்வது. அந்த ஆசிரமத்திற்குப் பணம் கொஞ்சம் கொடுக்கிறது. இப்படியே இருந்து கொண்டிருந்தேன்.

“ஐயா… பசிக்கிறது…!” என்று வருவார்கள்.

அப்போது அவர்களுக்குச் சில வேலை எல்லாம் பார்த்து ஒரு இடத்தில் மூன்றாவது ஷிப்டுக்கு ஆள்களைச் சேர்த்து ஒவ்வொரு இடத்திலும் சம்பாதித்து அங்கே பாபுசிங் என்பவரிடம் பணத்தைக் கொடுத்து விடுவேன்.

வருகின்றவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடுவது. உதவிகள் செய்வது. 1954ல் ரேஷன் கடைகளும் மளிகைச் சாமான்களும் விலை ஏறி ரொம்பத் தரித்திரமாக இருந்தது. அங்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.

ஏனென்றால் நான் பல அவஸ்தைகள் பட்டவன்.
1.ஒவ்வொரு மக்களும் எந்தெந்த வகையில் சந்தர்ப்பத்தில் இயங்குகிறார்கள்?
2.அவர்களுக்கெல்லாம் ஒரு ஞானம் கிடைக்கவேண்டும்.
3.வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்.
4.இதற்காக வேண்டித்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நான் சொல்கி்றேன்.
5.அனுபவித்துச் சொல்கிறேன்.

மூன்றாவது சிப்ட் வேலைக்கு வருகிறவர்களுக்கெல்லாம் சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறது. எங்கே இருந்தாலும் போய் வேலை வாங்கிக் கொடுக்கின்றது. இந்த மாதிரி எல்லாம் செய்தேன்.

அந்தப் பாபுசிங் என்கிறவர் கொஞ்சம் போக்கிரியும் கூட.

நான் உதவி செய்வதைப் பார்த்து என் மேல் இரக்கப்பட்டுச் உனக்கு வேலை தெரியும் என்றால் சைக்கிள் கடை வைத்துக் கொடுக்கிறேன் என்றார்.

மில்லில் வேலையும் செய்துவிட்டு சைக்கிள் கடையும் வைத்துக் கொண்டதால் கொஞ்சம் காசு நிறைய வந்தது.

அந்த இடத்தில் சைக்கிளுக்குக் காற்று அடிக்க வேண்டும் என்றால் ஒரு அனா.

நான் காசே வாங்காமல் காற்று அடிக்கிறேன் என்றவுடன் கூட்டம் கூடியது. அங்கு பஞ்சர் பார்த்த வகையில் அதிகமான பணம் வருகின்றது.

பிரியம் இருந்தால் காசு போடுங்கள் என்று சொன்னவுடன் ஒரு அனா போடுவதற்குப் பதிலாக நாலனா போட்டுவிட்டுப் போகின்றார்கள்.

சாயங்காலம் பார்த்தால் 200, 300 ரூபாய் இருக்கும். இருக்கும் பணத்தை வைத்து எல்லாருக்கும் சாப்பாடு போட்டுவிட்டு மீதியைப் பாபுசிங்கிடம் கொடுத்துவிடுவது.

சைக்கிள் வேலை தெரிந்தது என்பதால் ஸ்பிரே பெயிண்ட் அந்தப் பெயிண்ட் எல்லாம் அடித்தவுடன் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அந்தச் சைக்கிள் கம்பெனிக்காரர் என்ன செய்துவிட்டார்.

நன்றாக வியாபாரம் ஆகிறதென்று சைக்கிளுக்கு வேண்டிய சாமான்கள் கொடுத்தார்கள். ஒரு கோன் வந்து அரை அனா. இவர்கள் ஜோடி ஒரு ரூபாய் என்று விற்கிறார்கள்.

அரை அனா கிரையம் போக ஒரு அனா லாபம் கிடைக்கும் என்று சொல்லிப் போட்டவுடனே எல்லாம் வந்து மொய்க்கின்றார்கள்.

சம்பாதித்த பணத்தை அங்கே காந்திஜி ஆசிரமத்தில் கொடுப்பது. அங்கே போய் அமைதியாக இருந்து கொள்வது.

மசால் தூள் அப்பொழுது அங்கே பிரசித்தம். ஒரு பாக்கெட் ஒன்னேகால் ரூபாய்.

நான் என்ன செய்தேன். மிளகாயே அரை ரூபாய் தான். ஒன்னேகால் ரூபாய்க்கு ஒன்னேகால் ரூபாய் சரிக்கு சரி லாபம் கிடைக்கிறது. தனியா கம்மி மசாலா சேர்த்துப் போட்டவுடனே இந்த பாக்கெட்டை வாங்குகிறார்கள்.

அடுத்த ஊருக்குக் கொண்டு போய் இதை அங்கே அரைப்பது. அரைத்த தூளை இங்கே கொண்டு வந்து விற்கிறது. இது மெட்ராஸ்லிருந்து, வருகிறது என்று சொல்லி அங்கிருக்கும் ஊரிலே அரைத்து அங்கேயே விற்கிறது.

இப்படியும் ஏமாற்றினேன்,

இந்த வேலையைச் செய்து வேறு ஒருவனுக்குக் கொடுத்தேன். நான் மில்லுக்குப் பிட்டர் வேலைக்குப் போய்விடுவேன். சம்பாதித்து வந்து “ஐயா…” என்று கேட்டு வருபவர்களுக்குச் சாப்பாடு போடுவது.

இப்படி இருந்த நேரத்தில் அங்கு ஒருவனுக்கு இந்த மசால் அரைத்து விற்குகம் வேலையைக் கொடுதேன்

அவன் ஊர் வேலூர் என்று சொன்னார்கள். நீயே இந்தத் தொழிலைப் பார்த்துக் கொள். சம்பளம் எடுத்துக் கொள். வீட்டுக்கும் கொடு. மீதம் வந்தால் மற்றவர்களுக்குச் சாப்பாடு போட்டுவிடு என்றேன்.

அவர் என்ன செய்தான்?

அந்த இடத்திற்குப் பக்கத்தில் சாராயம் வியாபாரம் செய்கிறார்கள். நான் அவனிடம் மசால் தூள் தொழிலைக் கொடுத்துவிட்டு வந்தால் அவன் சாராய வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

திடீர் என்று பார்த்தால் அவனைக் கைது செய்துவிட்டார்கள் என்று செய்தி வருகிறது.

நான் வேலைக்கு போய்விட்டு அப்பொழுது தான் வருகிறேன். பாபுசிங் அங்கே தான் இருந்தார். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அவனைக் போய்க் கொல்லுடா என்கிறார். ஏனென்றால் அவர் ரவுடி.

இங்கே வந்து சாராயமா விற்கின்றான்? அப்படியே அவரைக் தூக்கிக் கொண்டு வந்து அவருக்கு முன்னாடியே உதைக்கிறார்கள்.

நாம் இல்லாதவனான அவனுக்கு உதவி செய்து உன் சம்பளத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கும் கொடு என்று சொன்னால் அவன் இந்த மாதிரிச் சாராயம் விற்றுக் கொண்டிருக்கின்றான் (நான் சாராய வியாபாரம் செய்தேன் என்று). இந்த மாதிரி
1.எல்லாம் நல்லது செய்யப் போக
2.”எத்தனையோ தொல்லைகள் அனுபவித்தேன்”
3.நல்லது செய்பவர்களுக்கெல்லாம் எத்தனை தொல்லைகள் வருகின்றது?
4.எவ்வளவு வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியுமா?
5.உதவி செய்யப் போகும் பொழுது நல்லவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகின்றார்கள்?
6.அதற்காக வேண்டி நல்லவர்கள் காப்பாற்றப்படவேண்டும்.
7.நல்லதைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு ஞானம் வேண்டும்.
8.அதற்குண்டான சக்தி வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த சக்தியை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

சில உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்கிறேன். நன்மைகள் செய்யப் போகும் போது நாம் எப்படி இருக்கவேண்டும்?
1.அதற்குண்டான மன வலு வேண்டும்.
2.அது இல்லை என்றால் அந்த நன்மைகள் பலன் தராது.
3.ஆகையினால் அதற்கு வேண்டிய சக்தி நல்லவர்களுக்கு வேண்டுமா… வேண்டாமா…?
4.அதனால் தான் உங்களிடம் துருவ நட்சத்திரத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்வது.

நான் அகமதாபாத் போயிருக்கும் போது கூட ஒரு நாள் குருநாதர் அங்கே வந்தார்.

டேய்… சாயா சாப்பிட வாடா…! என்கிறார்.

ஏன் சாமி…! நீங்கள் அங்கே பழனியில் இருந்தீர்கள், இப்போது இங்கே எப்படி வந்தீர்கள் என்றேன்.

“நான் சும்மாங்காச்சியும் (சும்மாதான்) வந்தேன்டா…!” என்கிறார். அப்புறம் டீ வாங்கி என்னைக் கொடுக்கச் சொல்கிறார். நான் எங்கே சென்றாலும் என்னைத் துரத்திக் கொண்டே தான் குருநாதர் வந்திருக்கின்றார்.

அப்புறம் என்னென்னமோ சொல்லிவிட்டு போயிட்டார்.

இந்த மாதிரி குருநாதர் என்னுடைய குணத்திற்கோ என்னமோ அல்லது பூர்வ புண்ணியத்திற்காகவோ தெரியாது. ஆனால்
1.என்னைத் தேடி வந்து தான் இந்தச் சக்தி கொடுத்தார்.
2.நான் உங்களை தேடி வந்து இதைச் சொல்கிறேன். “சொல்வது அர்த்தமாகின்றதா…!”

உங்களை தேடி வந்து அந்த நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறேன். என்னைத் தேடி வந்து குருநாதர் கொடுத்த அந்த அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்.
1.நீங்கள் தீமைகளிடமிருந்து விலக வேண்டும்.
2.அந்தத் தீமைகளிடம் இருந்து நீங்கள் விடுபடவேண்டும்.
3.அந்தப் பேரருள் பேரொளி நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் இவ்வளவு நேரம் சொல்கிறேன்.

அதனால் தான் நன்மைகள் பல செய்ய துணிவோம் என்று சொல்வது.

அருளைத் தேடினால் பொருள் தானே வரும் அம்மா.

1.நல்லது வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும்
3.எனக்கு நல்லது மட்டும் வேண்டும் என்று வலுவாக எண்ணுங்கள்

விடை (நீங்கள் தேடும் நல்லது) உங்களைத் தேடி வரும்

முடிந்தால் இந்தச் சக்கரத்தை ஒரு கலர் PRINT எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பார்த்து வலுவான ஏக்கத்துடன் தியானித்து விட்டு எந்தக் காரியாமாக இருந்தாலும் ஆரம்பியுங்கள்.

உறுதியாக நடக்கும்.

குருநாதர் தவமிருந்து கொடுத்த அருள் ஞானச் சக்கரம் இது.

வெளியில் எங்கே செல்ல வேண்டும் என்றாலும் இதைப் பார்த்து ஆத்ம சுத்தி செய்து விட்டுச் செல்லுங்கள். உங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அருள் வட்டமாக வரும்.

வியாபாரத்தில் நஷ்டம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 

மனித வாழ்க்கையில் நாம் பெற வேண்டியதும் பெறக் கூடாததும் 

பேரரசர்கள் சம்பாரித்த சொத்து இன்று இருக்கின்றதா…?

Divine world

உடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்

என்னை (ஈஸ்வரபட்டர்) அணுகியோர் பலர் உண்டு. பல அற்புதங்களைச் செய்து காட்டினேன். அந்த அற்புதத்தில் மயங்கி இருந்தோர் பலர் உண்டு.
1.அவர்கள் எல்லாம் என்னிடத்தில் எப்படி எல்லாம் வந்தார்கள்…!
2.எதை நாடி வந்தார்கள்… எதைச் சொன்னார்கள்… கேட்டார்கள்…?

தனக்குச் சொத்து வேண்டும்…. சுகம் வேண்டும்… உடல் நலம் வேண்டும் என்றும் தன் காரியத்திற்காக வேண்டி அந்த அருள் வேண்டும்… இந்த அருள் வேண்டும்… என்று தான் கேட்டார்கள்.

1.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
2.உலகம் நலமாக இருக்க வேண்டும்…. உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும்.
3.பிறருடைய குடும்பங்கள் நலமாக இருக்கக்கூடிய சக்தி நான் பெற வேண்டும்
4.என் பேச்சால் மூச்சால் நான் பார்ப்போருடைய குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால்… இதைப்பற்றி என்னிடம் யாரும் கேட்பார் இல்லை.

ஆகவே தனக்குத் தான் கேட்டார்களே தவிர… “எல்லோரும் நலம் பெற வேண்டும்…!” என்ற கேள்வி அங்கே எழவில்லை.

எல்லோரும் அந்த அருள் ஞான சக்தி பெற வேண்டுமென்று நான் (ஈஸ்வரபட்டர்) எண்ணினேன்… அதைப் பெற்றேன். அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலைவிட்டு நான் வெளி செல்லப் போகின்றேன்…!

ஆனால் நீ எதை எண்ணப் போகின்றாய்..? எதை நீ பெறப் போகின்றாய்…? என்ற இந்த வினாக்களை எழுப்பினார்.

வைகுண்ட ஏகாதசி வருவதற்கு முன்னாடி இப்படி ஒரு மாதமாக என்னை (ஞானகுரு) பல கேள்விகளைக் கேட்டு பல உணர்வின் தன்மையை தெளிவாக்கினார்.
1.நீ பெற வேண்டிய தகுதிகள் எது…?
2.நீ பெறுவது எப்படி என்ற இந்த உணர்வைத் தெளிவாக்கிக் காட்டினார்.

மேலும்… இந்த உடலை விட்டுச் சென்ற பின்…
1.என்னுடன் நீ இணைந்து நீ வர வேண்டுமென்றால்
2.நீ எதை எண்ண வேண்டும் என்று கேட்கின்றார்…?

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி என் குரு பெற வேண்டும். அவர் என்றுமே ஒளி சரீரம் பெற வேண்டும். அவர் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும். அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.
1.அந்த அருள் வழி “என் குரு பெற வேண்டும்…” என்று நீ எண்ணினால்
2.அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்.

உங்களுக்குச் சொல்வது அர்த்தமாகிறதா…? இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்…!

ஆகவே அவ்வாறு எண்ணும் போதுதான்… என்று நீ இப்படி எண்ணுகின்றாயோ அப்பொழுது நீ அதுவாகின்றாய்…! என்று இந்த நிலையை அன்று தன் உடலை விட்டுப் பிரிவதற்கு முன் ஈஸ்வரபட்டர் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷிகளின் அருள் ஒளியும் பெறும் தகுதியும் பெற்று இதன் வழி கொண்டு அந்தக் குருவை நீ எப்படிச் செலுத்த வேண்டும்…? எதை நீ உருவாக்க வேண்டும்…? என்ற பேருண்மையை உணர்த்திவிட்டுத்தான் அந்த வைகுண்ட ஏகாதசி அன்று அந்த உடலைவிட்டு அவர் ஆன்மா பிரிகின்றது.

உடலைவிட்டுச் சென்ற பின்…
1.அந்தக் குருவின் நினைவும் அதன் உணர்வு இங்கே விளையவும்
2.மனித உடலுக்குள் இருந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தையும்
3.மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு வரப்படும்போது
4.அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழிகளிலே சென்று ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்

ஏனென்றால் அந்த வரிசை… ஒன்றை வைத்துத் தான் ஒன்று விண் செல்ல முடியும்…!

இந்த மெய் வழியை நீ பெறு… மற்றவருக்கும் இந்த நிலையைக் காட்டி அவர்களையும் பெறச் செய். அவர்கள் பெற வேண்டுமென்று நீ ஏங்கு… அதன் வழி பெறும் தகுதியை அவர்களைப் பெறச் செய்…!

அடுத்தவருடைய நிலைகளும் இதைப் போன்று எண்ணும் போது
1.நீயும் அங்கே எளிதில் செல்கின்றாய்.
2.பிறரும் அந்த நிலைகளைப் பெறுகின்றனர்.
3.ஆகவே இதனை நீ வழிப்படுத்து…! என்று சொன்னார் குருநாதர்.

Magnetic power of human body

கோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…?

உதாரணமாக ஒரு பல்பிற்கு (ELECTRICAL BULB) அது எரிதற்குத் தகுந்தவாறு கரண்ட் இருந்தால்தான் அந்த பல்ப் சுடராக… வெளிச்சமாக இருக்கும்.

அது போல் சாதாரண மனிதனின் எண்ண அலைகளை எடுத்துக் கொள்வதற்கு நாம் இப்பொழுது எடுக்கும் மூச்சலைகளே போதுமானது.

அது போதுமானதாக இருந்தாலும் ஒரு மனிதனுக்குக் கோபமோ அல்லது பயமோ வந்து விட்டால் நம் உடலிலே காந்த சக்தி (POWER) குறையத் தொடங்கும்.

காந்த சக்தி கம்மியாக இருக்கும்போது…
1.ஒருவர் தவறு செய்கிறார்… என்ற அந்த வேகமான உணர்வுகளை நாம் இழுக்கப்படும் பொழுது
2.அதைச் சரியான முறையில் இயக்க முடியாத நிலைகளில் நம் உடல் அனைத்துமே நடுங்கும்.

ஒரு மோட்டாருக்குக் காந்த சக்தி (HORSE POWER) கம்மியாக இருக்கும் போது லோட் (LOAD) அதிகமாகி விட்டால் அதற்கு மேல் அந்த மோட்டார் சூடாகிவிடும்.

இதைப் போலத்தான் மனிதர்கள் நமக்குள் இருக்கக்கூடிய நிலைகளும்.

நம் உடலில் அடிக்கடி கோபம் சலிப்பு பயம் போன்ற உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்தால் நம் உடலில் காந்தத்தை உற்பத்தி செய்யும் சக்திகள் குறைகின்றது.

அப்படிக் குறையப்படும் போது…
1.முன் பகுதி ஏதோ கோபமாக பேசி இருப்போம் ஆத்திரமாகப் பேசி இருப்போம்.
2.அதைப் போன்ற உணர்வின் சத்துகளை அதிகமாகச் சுவாசித்து
3.நம் உடல்களில் சேர்க்கப்படும்போது பல வியாதிகளுக்கும் அது காரணம் ஆகின்றது.
4.அதே சமயம் நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்தியும் தேய்வாகின்றது.
5.அவ்வாறு தேய்ந்து விட்டால் நாம் எடுக்கும் எந்த ஒரு எண்ணத்தையும் அது சீராக இயக்கவிடாது.

ஒரு சங்கடமான நிலைகள் ஒருவர் சொல்கின்றார் என்றால் அதை நாம் காதுக் கொடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும்

அந்த உணர்வை இழுத்து அதைக் கிரகிக்க கூடிய தன்மை இல்லாதபடி வெறுப்பு ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகள் தான் நமக்குள் தோன்றும்.

ஆக அதைத் தாங்கும் நிலை நம் உடலில் இல்லாது போகின்றது. காரணம்… நம் உடலில் காந்தப்பவர் உற்பத்தி செய்யும் திறன் கம்மியாவதால் தான்.

ஆனால் உயிரின் துடிப்போ அது எப்போதும் ஒரே சீராகத்தான் துடித்துக் கொண்டிருக்கும்.

பூமி நிலைகள் விண்ணிலே ஓடும் போது அது சூரியனுடைய எந்த ஈர்ப்பில் இருக்கின்றதோ ஒரே சீராக… ஒரே ஓட்டமாகத் தான் ஓடிக் கொண்டிருக்கும்.

அப்படி ஓடினாலும் நமது பூமிக்குள் எந்த அளவுக்குக் காந்த சக்திகள் இருக்கின்றதோ
1.அதற்குத் தகுந்தவாறுதான் விண்ணிலே ஓடும் போது இதனுடைய சுழற்ச்சியின் தன்மை இருக்கும்…
2.அதற்குத் தகுந்தவாறு தான் காந்தத்தை உற்பத்தி செய்யும்.

சந்திரனிலே காந்தப் பவர் கம்மியாக இருப்பதனாலே பூமியின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் இதனுடைய சம பங்கு கொண்டு பூமியைச் சுழன்று வருகிறது.

ஆனால் சந்திரனுக்குக் காந்தப் பவர் அதிகமாகி விட்டால் அந்தக் காந்தத்தின் சக்தி கொண்டு வந்தால் பூமியின் ஈர்ப்பை விட்டு விலகி சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றுவிடும். (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)

சூரியனுடைய காந்தப் பவர் அதிகம். அந்த சூரியனுடைய காந்தம் அதிகமாக ஈர்க்கப்படும்போது சந்திரன் அதனுடைய சுழல் வட்டத்திற்குத் தனித்துப் பிரிந்து சென்றுவிடும்.

சந்திரனில் அந்தக் காந்தப் புலன் குறைவாக இருப்பதால் தான் பூமியின் காந்த வட்டத்திற்குள் அது எடுத்து இதிலிருந்து பிரியாது இதற்குள் பகிர்ந்த நிலைகள் கொண்டு நம் பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு
1.வாழ்க்கையில் பயமோ ஆத்திரமோ சங்கடமோ கோபமோ வந்தால்
2.அது வளர்ந்து விடாதபடி தடுக்கும் எண்ணம் கொண்டு
3.மகரிஷிகள் அருள் சக்தியை நமக்குள் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்.
4.இதனால் நம் எண்ணங்களும் தூய்மை அடைகிறது
5.நோய் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளவும் முடிகின்றது

கவலை எல்லாம் மறந்து… நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் குடிக்கின்றேன்…! என்றாலும் உடலுக்குப் பின் நரகம் தான்…!

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…! 

போகரை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர்

Astral powers of human soul

தெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.சிவனான ஆண் குண வலுவைக் கொண்டு
2.சக்தியான பெண் உணர்வின் எண்ண அமில ஈர்ப்பின் ஜீவித தொடர்பால்
3.இரண்டு ஆத்மாக்களின் ஈர்ப்பு வட்டம் ஒன்றின் தொடர்பு கொண்டு எடுக்கப்படும் தியான அலையின் வலுவைக் கூட்டக் கூட்ட
4.அவ்வலுவின் வளர்ச்சியால் ஆத்ம ஐக்கிய உணர்வு சரீர வாழ்க்கை பந்தத் தொடர்பில்
5.ஒரே எண்ண குண தொடர்பின் சுழற்சியில் வளர வேண்டும்.

ஏனென்றால் அப்படிப்பட்ட உயர் நிலையில் வளர்ச்சிக்கு வரும் இந்த மனித சக்திகளால் தான் ஒவ்வொரு கோள்களாகவும்.. ஒளி சக்தி கொண்டு ஒளிரும் சக்தியாகவும்… நம் பூமியில் சூரியனின் ஒளி அலைகள் வீசத்தக்க ஈர்ப்பின் தொடர் கொண்டு வளர்ந்துள்ள இயற்கை வள கனி வளங்களும் தாவர இனங்களும் உருவக அமைப்பின் தன்மையும் எல்லாமே உருப்பெற்று உள்ளன.

இன்று ஓர் பலூனை ஊதும் பொழுது… எந்த வடிவ அமைப்பில் அது உள்ளதோ… எந்த அளவுக்குக் காற்றின் அழுத்தத்தைச் சேமித்து உப்பக்கூடிய நிலை அதற்குள் இருக்கின்றதோ… அதனுடைய வடிவை அது பெறுகிறது. அதிகப்படும் பொழுது பலூன் வெடித்து விடுகின்றது.

அதைப் போன்று தான் உயிரணுவின் தோற்றத்தின் உருவ நிலைகள் யாவுமே…! மரம் செடி கொடிகள் மற்ற இன வர்க்கங்கள் ஒவ்வொன்றுமே
1.அதனதன் ஆத்ம அமிலச் சேர்க்கையின் நிலைக்கொப்ப
2.உயிர் பெறும் உருவக அமைப்பில் இப்பூமியின் காற்றழுத்த ஈர்ப்பின் வளர்ச்சி கொண்டு வளரும் தன்மை பெறுகிறது.
3.ஆனால் இது பிற கோள்களின் நிலையில் மாறுபடுகின்றது.

மனித உயிர் ஆத்மாவின் அமிலக் கூறின் உயிர் பெற்று ஜீவ வளர்ச்சியின் பருவக்காலம் வரை சேமிப்பின் அமில உருவக நிலை வளர்ந்தாலும் உருவ வளரச்சி நிலை பருவ காலத்திற்குப் பின் உயரும் நிலை தடைப்பட்டு விடுகின்றது.

இப்பூமியின் எந்தெந்த இடங்களில்… எக்காற்றின் அலைத் தொடர்பில் ஜீவன் பெறுகின்றதோ… அதற்கொப்பத்தான் அங்கங்குள்ள மனித இனங்களும்… மற்ற தாவரங்களும்… பிராணிகளும் உருவகம் பெறுகின்றது.

ஏறக்குறைய இப்பூமியின் அமைப்பின் சுழற்சியிலேயே சிறிது சிறிது மாற்றங்களுடன் உருவக வளர்ச்சி நிலைகள் யாவையும் வளர்கின்றன.

சில அபூர்வமாக உயரமாக வளரக்கூடிய தன்மைகள் மட்டும் அமிலத்தின் சேர்க்கை விகித நிலைக்கொப்பக் கூடியும் குறைந்தும் வளர்கின்றது.

இன்று நம் பூமியின் தன்மைக்கும் மற்றக் கோள்களின் தன்மையும் மாறுபாடான நிலை தான் உண்டு. உதாரணமாக சனி கிரகத்தில் மனித ஜீவனின் உணர்வின் எண்ணம் கொண்டு வாழக்கூடிய தன்மைக்கு சனிக் கோளின் அமைப்பு நிலை மாறுபட்ட தன்மையாக உள்ளது.

ஜீவனுள்ள உயிர் அணுக்கள் அங்கு வளர்ந்தாலும் இங்கு எப்படி கல் மண் மேல் படிந்துள்ள பாசி போன்று அங்கங்கு உள்ள ஜீவ வளர்ச்சி நிலையில் உள்ளது போல் தான் உண்டு. நம் பூமியில் உள்ளது போல் அவைகள் நகரும் தன்மையோ நடந்து பறக்கும் நிலை போன்று அங்கில்லை.

ஓர் ஜீவ உயிர் சனியில் பிறந்ததென்றால் அப்பூமியின் பிடிப்பில் ஒன்றியே பிறப்பெடுத்து இறுகிய நத்தைக்கும் மற்றச் சில பிராணிகளுக்கும் இருப்பதைப் போன்று கெட்டியான ஓடுகளுடன் பிறப்பெடுத்து அப்பிறப்பின் இறப்பிலேயே மாறும் தன்மையும் உள்ளது.

சனிக்கோள் அதி குளிரின் ஈர்ப்புப் பிடிப்பிற்கொப்ப சுழல்வதால் பிற கோள்களின் சந்திப்புச் செயல்நிலை இருந்தாலும் உஷ்ண அலையின் சமைப்பு நிலைக்கு நம் பூமியின் தன்மை போன்ற நிலை இல்லாததினால் மனிதர்கள் யாரும் அக்கோளில் பிறப்பெடுக்க முடியாது.

நம் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் பௌர்ணமி நிலவு தெரிவதைப் போன்று தான்… சனியைச் சுற்றியுள்ள பன்னிரண்டு கோள்களின் நிலையிலும்… சனிக்கோளின் சுழற்சி சந்திப்பிற்கொப்ப இங்கெப்படி அமாவாசை பௌர்ணமி என்று ஒரு சந்திரனின் தொடர்பில் அறிவது போன்ற நிலை உண்டு.

சனிக் கோளின் தொடர்பு கொண்ட பன்னிரண்டு கோள்களும் அவை எடுத்து வெளிக் கக்கும் அலை அமில நிலைக்கொப்ப சனியின் சுழற்சி ஓட்டமும் பூமியைக் காட்டிலும் குறைவான நிலையிலும்
1.இரவில் சந்திர ஒளியின் வெளிச்ச அலையை எப்படி நாம் இங்கு காண்கின்றோமோ அதற்கொப்ப
2.குளிர்ச்சியில்… சனிக்கோளும் சனிக்கோளின் உப கோள்களும் மிகவும் ரம்மியமாய் செயல்படக் கூடிய நிலையில்
3.நம் சூரியக் குடும்பத்தில் ஜீவனைத் தரக்கூடிய மையமாக உள்ளது
4.சனியின் தொடர்பு நமக்குக் கிட்டும் வலுவில்தான் நம்முடைய ஜீவ நாடியே உள்ளது

சனிக் கோள் நம் சூரியக் குடும்பத்தின் ஜீவனான நீர் சக்திக்கே மிகவும் முதன்மையானது.

இரத்தக் கொதிப்பு, கோபம், இராவணன் மூன்று உலகை அடக்கும் நிலை

இராமன் வீரன் என்றால் வாலியை ஏன் மறைந்திருந்து தாக்கினான் 

இராமாயணம் – விரிவாக்கம்

Konganar -tirupathi

நம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி

அன்று மகரிஷிகள் எந்த அருள் வழியைக் காட்டினார்களோ அதன் வழியில் நம் உள்ளத்தைத் தங்கமாக்க வேண்டும்.

தங்கம் என்ன செய்கின்றது…? தங்கத்திற்கு என்ன குணம் இருக்கின்றது..?
1.தங்கம் எதிலையும் அது மாசுபடுவதில்லை.
2.அதாவது வெள்ளி செம்பு போன்று அதனுடைய நிறம் கருப்பதே இல்லை.

அதைப் போன்று தான் அந்தத் தங்கத்தைப் போன்று ஒவ்வொரு எண்ணத்தையும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டால்
1.ஒருவர் நம்மைத் திட்டினாலும் நம்மை
2.நல்ல எண்ணத்திலிருந்து மாசுப்பட்டு நம்மை அழிக்காது.

இதைத் தான் மனதைத் தங்கமாக்குவது என்று சொல்வது…! ஏனென்றால் தங்கத்தில் உள்ள அழுக்கு நிற்குமோ…? நிற்காது… அதனுடைய நிறத்தை மாற்றாது.

நம்முடைய உணர்வின் நிலைகளை பிறர் நம்மைச் சங்கடப்படுத்துகின்றார்கள்… நம்மைப் பழித்துப் பேசிவிட்டார்கள்..! என்ற இத்தகைய உணர்வுள் வந்து விட்டால் செம்பிலேயோ வெள்ளியிலேயோ அழுக்குப்பட்ட மாதிரி உள்ளே மறைந்து விடுகிறது.

அது பக்கு பக்காக நீங்கள் தேய்க்க தேய்க்கத் தேய்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தத் தங்கத்தினுடைய நிலைகள் மாசில்லாத நிலைகளாக இருக்கப்படும் போது பளிச்… என்று பளபளப்பாக… இருக்கும்.

நம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்கள்… இருள் சூழும் நிலைகள் வந்து விட்டால் உடனே இங்கே இந்த ஞானத்தை ஊட்டும் நிலைகள் மறையும். நாம் அறிந்து இந்த அந்த இருளை எப்படி மாற்றுவது…? என்ற அந்த எண்ணத்தை அகற்றிவிடும்.

அப்படி ஆகாமல் மாற்றுவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிக்கும் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு
1.மனதைச் சுத்தப்படுத்துவோருக்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி
3.மாசுபடும் நிலைகளை மாற்றி நமக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் எண்ணத்தையும் தங்கமாக மாற்ற வேண்டும்.

இது தான் கொங்கணவர் தன் மனதைத் தங்கமாக்கிய நிலைகள்.

ஆகையினால் அதே மாதிரி நீங்களும் செயல்படுத்துங்கள்.
1.உங்கள் வாழ்க்கையில் செல்வம் வரும்
2.உங்கள் மனதில் மகிழ்ச்சி வரும்
3.உங்கள் சொல்லிலும் செயலிலும் தெளிவும் வரும்.

soul eswaran

ஒவ்வொருவரும் ஈசனாகும் மகத்துவம்…!

அகண்ட அண்டம் இருண்டதாக இருப்பினும் அண்டத்தின் நிலை கோளாகும்போது இருண்ட நிலை தான். ஆனால் அந்தக் கோளின் தன்மை
1.நட்சத்திரமாகும் போது ஒளியின் நிலை அடைகின்றது.
2.நட்சத்திரமாகும் போது உணர்வை வளர்க்கும் நிலைக்கு வருகின்றது.

இருண்ட நிலையில் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கோள்களில் புழு பூச்சிகளாக உருவானால் அதுவும் இருண்ட நிலை தான். அதே சமயத்தில் அதிலே பரிணாம வளர்ச்சிகள் அடைந்து… அடைந்து…
1.உணர்வின் தன்மை கொண்டு அறிவின் தன்மை கொண்டு உடலாகும் போது நட்சத்திரம்
2.அதாவது நாம் மனிதனாகும் போது நட்சத்திரம்
3.மனித நிலையில் அனைத்தையும் பக்குவப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற்றால் நாம் இவ்வுலகின் சூரியன் ஆகின்றோம்.

ஆகவே உணர்வின் தன்மை உயிராக உருவாக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான நாம் ஒவ்வொருவரும் ஈசனாக மாற வேண்டும். நம் உணர்வு ஒவ்வொன்றையும் ஈசனாக மாற்றிடல் வேண்டும்.

உயிர் ஈசனாக இருந்து உணர்வின் அறிவை ஊட்டுகின்றது. ஆறாவது அறிவின் தன்மை இருளை அகற்றும் உணர்வாக வருகின்றது.
1.அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு இந்த உயிர் என்றும் அழியா நிலைகள் கொண்டு வந்தது.
2.உயிரின் துணை கொண்டு அருள் ஒளியின் உணர்வாக
3.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும். ஆக

நாம் எண்ணியதை நமக்குள் உருவாக்குவது நமது உயிரே. எண்ணிய வழிப்படித் தான் இந்த உடலை உயிர் இயக்குகின்றது.

ஆகவே நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குவோம். அருள் ஒளியின் சுடராக மாறுவோம். பிறவியில்லா நிலைகளை அடைவோம். அண்டத்தில் அகண்ட அண்டத்தில் என்றும் பெரு வீடு என்ற நிலையை அடைவோம்.

1.இதைப் படித்துப் பதிவாக்குவோர் அனைவரும் மகானாக வேண்டும்… மகரிஷிகள் ஆக வேண்டும்.
2.உயிரின் தன்மை ஈசனாக மாற்ற வேண்டும்
3.ஒவ்வொரு அணுக்களையும் ஈசனாக மாற்ற வேண்டும்.

அருள் வழியில் அருள் ஞானத்தின் தன்மை உங்களுக்குள் வளர்த்தால் அந்த ஈசன் என்ற நிலை வரும்போது இதே உணர்வுகள் நோயுற்றவருக்குள் சென்றாலும் அங்கே ஈசனாக… அருள் ஒளி சுடரின் தன்மையாக அவர் நோயை நீக்கி… ஒளியின் உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது
2.நமது உணர்வுகள் அனைத்தும் ஈசனாக வேண்டும்.
3.நம்முடைய சொல் ஒவ்வொரு உடலிலும் பாய்ந்து ஈசனாக மாற வேண்டும்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும் என்று நிலை கொள்ளுங்கள். யாரோ செய்வோர்…! எவரோ செய்வார்…! என்று எண்ண வேண்டாம். யாருக்கோ காசு கொடுத்து இதைச் செய்ய வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உணர்வின் வலுவைக் கூட்டினால் அதுவே உங்களில் உருவாக்கும். உங்கள் வலுவின் தன்மை பிறரின் தீமையைப் போக்கும்.

பொருளுக்காக பல மனித உணர்வுகளை வைத்து மாயாஜாலங்களைச் செய்கின்றனர். அதனால் பொருள் அவனுக்கு வருகின்றது.

அனைவருக்கும் சொல்கின்றான். இருந்தாலும் அவன் அழிகின்றான். ஏனென்றால் அவன் வளர்த்த சொத்தை அவன் பிள்ளையே அழிக்கின்றான். இலட்சம் இலட்சமாகச் சம்பாரித்தார்… எல்லாம் போய் விட்டது என்று நம் கண் முன்னாடியே பார்க்கலாம்.

1.ஏனென்றால் தவறான வழிகளில் செல்வத்தைச் செலவழித்தால் தவறான மகனே பிறக்கின்றான்.
2.தந்தையின் உணர்வை பிள்ளை தனக்குள் அங்கே கலக்கின்றான்.
3.அந்த உணர்வின் தன்மையில் சொத்தை இவன் அழிக்கின்றான் என்ற இந்த நிலைகள் தான் வருகிறது.

யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள்…? என்று சற்று சிந்தியுங்கள்.

1.உங்கள் உயிரின் தன்மைக்காகப் போர் செய்யுங்கள்
2.அருள் வழியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.இருளை அகற்றும் ஆற்றலைப் பெறுங்கள்.
4.அருள் ஞானியின் உணர்வை உருவாக்கும் அதையே ஈசனாக மாற்றுங்கள்

உங்கள் உணர்வின் தன்மை மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து அவருக்குள்ளும் அந்த ஈசனின் உணர்வை அது உருவாக்கும்.

இதன் வழி உணர்வின் ஆற்றலைப் பெருக்குவோம்… குரு வழியில் செல்வோம்…. அருள் ஆனந்தம் பெறுவோம்…. அருள் வாழ்க்கையை நடத்துவோம்… இருளை அகற்றுவோம்…. மெய் உணர்வுடன் ஒன்றுவோம்… மெய் ஞானத்துடன் வாழ்வோம்…. மெய் உணர்வுடன் வாழ்வோம்…. மெய் உலகாக மாற்றுவோம்…. ஒவ்வொரு மனித உடலிலும் மெய்யை அறிந்திடும் உணர்வின் தன்மை பெற தியானிப்போம்… தவமிருப்போம்…!

நிறைந்த மனம் கொண்டு இதைச் செய்யுங்கள். அனைவரையும் நிறைவுபடுத்தும் மனமாக உயர்ந்த பண்புடன் சொல்லுங்கள். பண்பு கொண்ட உணர்வை வளர்த்திடுங்கள்.

இத்தகைய உயர்ந்த பண்புடன் அரவணைக்கும் நிலை கொண்டு நமக்கு மதம் அல்ல… இனம் அல்ல… என்று செயல்படுத்துங்கள். இனமும் மதமும் நம்மைப் பிரிக்கும்.

ஆனால் அருள் ஒளி நம்மை என்றும் ஒளியாக சுடராகப் போற்றும் என்ற இந்த நினைவு கொண்டு இந்த வாழ்க்கைப் பயணத்தை குரு வழியில் வழிபடுத்துவோம்.

நம் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை அகற்றுவோம். அனைவரும் ஒன்றென்ற நிலைகளில் உருப்பெறச் செய்வோம்.
1.அனைவரையும் மகிழ்சி பெறச் செய்யும் உணர்வினை உருவாக்கும் ஈசனாக
2.நம் உணர்வின் தன்மை ஒவ்வொரு உடலிலும் ஈசனாக உருவாக வேண்டும்.

அருள் ஒளிச் சுடராக நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு நாம் எண்ணுவதே நமக்குள் ஈசனாகின்றது. அந்த அருள் வழியின் நிலைகள் வளர வேண்டுமென்ற நிலைகள் கொண்டு இதை மனதில் வைத்துக் குரு அருளின் துணை கொண்டு நாம் இதைச் செயலுக்குக் கொண்டு வருவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.

இராவணனிடமிருந்து சீதாவை மீட்டு வந்தாலும் மக்கள் ஏற்காத போது இராமனின் செயல்கள் என்ன ஆனது

இலங்கையில் சீதாவை அடைத்தான் இராவணன்

குகனைப் பற்றி இராமாயணத்திலும் கந்த புராணதிலும் காட்டியுள்ளார்கள்

husband-and-wife-unity

இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து கொண்டே உயர் ஞான நிலையில் வளர்ச்சியைப் பெற முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு… எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.

இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.

வாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்
1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா…?
2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அடக்கும் பக்குவம் உகந்தந்தா…?
3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது…? என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.

அதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா…? பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

ஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.

அதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.

நீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.

இவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்
1.அன்பான உணர்வின் குணம் தான்
2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை…”

தன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்… உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.

உதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்
1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்
2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்… ஆதிசக்தியாலுமே… வளர்க்க முடியாது.
3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.

உயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா…? சிறுவர்களும் புதிதாக மணமான தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே… அன்பென்னும் ஆசையில்… பாசம் கொண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்… சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,

1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ
2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ
3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே
4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி
5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்
6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று
7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்
8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்
9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.

நாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு… தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை…
1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்
2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு
3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.

வாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா…? உயர்ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது…? என்ற வினா எழும்பலாம்.

உணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்… ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்
1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்
2.உணவின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்
3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்றுவிட்டால்
4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு
5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).

ஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை… ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு… இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்… எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.

ஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்
1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி
2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே
3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு
4.நிச்சயம் செயல்படுத்திட முடியும்.

லவ குசா சீதா இராமன் – வான்மீகி கூறும் உடலுக்குப் பின் நிலை விளக்கம்

இராமன், சீதா, பரதன், இராவணன் – விளக்கம்

இராமன், சீதா, பரதன், இராவணன், சூர்ப்பணகை – விளக்கம்

greatest

“உயிர்…” ஞான வழியை… அறியக்கூடிய நிலை மனிதனுக்கு மட்டும் தான் உண்டு என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.ஆதியின்… படைப்பின் கடவுள்… இறைவன்… தெய்வம் என்ற தொடரில்…
2.மனித ஒளி சரீரத்தின் ஒளித் தன்மை கொண்டு…
3.அவ்வொளியின் நாத உயர்வில் இறை நிலை பெற்ற மனிதன் “தெய்வத் தன்மை பெறுகின்றான்…”

பூமிக்கும்… பூமியில் வளரும் சகல ஜீவராசிகளும் ஒளித் தன்மையின் நிலை பெற்றிருந்தாலும்… ஒவ்வொன்றின் தொடர்பலையில் வலுக் கொண்ட ஒளி நிலை பெற்று… ஒளி சக்தியை வளர்க்கும்
1.உயிர் ஞான வழியை அறியக்கூடிய நிலை
2.மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

குயில் அழகாக… இனிமையாக… அதனுடைய குரல் ஒலியை எழுப்பினாலும்… மனிதனின் எண்ணத்தின் உணர்வு ஞானம் அதற்கு இல்லை.

மனித உணர்வுடன் ஒட்டி… ஒன்றின் தொடரில் வளர்ச்சியின் நிலை பெருக்கத் தொடருக்கு… ஞானத்தை உயர்த்தித் தன் பகுத்தறிவைக் கொண்டு “பல நிலைகளை மாற்றியமைக்கும்” செயல் மனிதனுக்குத் தான் உண்டு.

ஒலியின் நாதத்தை உணர்வின் எண்ண ஊட்டத்தில் பகுத்தறியும் ஞானத்தால் மனிதன் இச்சரீர உயர்வை எண்ணி… இவ்வுணர்வால் இறை சக்தியின் உன்னத நிலையான இவ்வுயிர் ஆத்மாவை… இறை குணத்தை… உணர்வின் எண்ண ஞானத்தால் பகுத்தறியும் செயலைக் கொண்டு இவ்வுடலையே இறையாக்கி… இறைவன் படைப்பில் இறை சக்தியை எடுக்கக்கூடிய ஒலி நாதத்தைத் தன் ஆத்ம உயிருக்காக இறை உணர்வு பெற்றுத் “தெய்வ நிலை பெறும் சத்திய நிலையை…” மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதன் இன்று எடுத்துள்ள உடல் பிம்ப வாழ்க்கைக்குகந்த பேராசைப் பிடிப்பையே தெய்வ நிலை பெறக்கூடிய பேராசையாய் உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

ஒளியின் ஒளிப் பெருக்கை பெருக்கவல்ல தொடரைப் பூமியில் படைத்த
1.ரிஷிகளின் சக்திக்கு ஒளி கூட்டும் ஒளி நிலை பெற
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஒலி கொண்டு
3.நம்முள் உள்ள இருளகற்றி ஒளி நிலையை நாம் பெற்றோமானால்
4.ஒளி கொண்டு மற்ற இருளையும் அகற்றும் சித்தை
5.நம் சித்தத்தின் உணர்வால் ஒவ்வொருவரும் பெறலாம்.

இச்சரீர அமைப்பைச் சிருஷ்டிக்கவல்ல சித்து சக்தியையே… இக்காற்றலையில் கலந்துள்ள சகல சத்திலிருந்து உருவை உருவாக்கும் சக்தியைப் பிரித்தெடுத்துச் செயலாக்கும் முறையை உயர் ஞானி அன்றைய தன் ஞானத்தால் செயல்படுத்திக் காட்டினான்.

ஆனால் இன்றைய விஞ்ஞானி தன்னைத்தான் தான் நம்பாமல் “இயந்திரங்களின் இயக்க ஒலி சக்தி கொண்டு தான்” விஞ்ஞானத்தில் சாதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளான்.

பல முன்னேற்றங்கள் விஞ்ஞானத்தால் இன்று வளர்ந்திருந்தாலும் தன் ஆத்ம உயிருக்குக் கூட்டக் கூடிய ஒளியின் உயர்வைக் கூட்டாததால் அழிக்கும் நிலைக்குத் தன் உயிர் ஆத்மாவை மங்கச் செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அன்று ஞானிகள் காட்டிய உண்மைகளை எல்லாம்… ஞானிகள் தொடர்பால் இன்றும் எல்லோராலும் பெற முடியும்.

எண்ணத்தின் உணர்வை மனிதனுக்கு மனிதன்… தான்… எவ் ஒலி இறை உணர்வைப் பெற்று இச்சரீர உணர்வால் செயல்படுகின்றானோ அதே தொடர்தான் தன்னை ஒத்த மனித உணர்விலும் உள்ளதை அறிந்து கொண்டால்
1.தன் ஆத்ம பலத்தின் உயர்வைக் கூட்டிக் கொள்ளக் கூடிய உரம்
2.மனித உணர்வுடன் ஒட்டிய தொடர்பால்
3.பிறரிடம் இருந்து எதிர்படும் மூச்சலைகள்
4.நல் அலையின் உணர்வு கொண்டு பெறப்படும் தொடர்பால்
5.மனித உணர்வின் ஆத்ம உயிர் ஒலித் தன்மையின் வலு நிலையை
6.சம குணத்தின் அறுகுண ஈர்ப்பால் உயர்ந்த ஒளி ஞானியாகலாம்.

அதாவது… மனித உணர்வின் எண்ண வேட்கையின் சமைப்பின் ஒளி நிலை கொண்டு
1.ஒருவரின் மேல் உயர்ந்த குணத்தைப் பலரும் செலுத்தச் செலுத்த
2.அவ்வுரத்தின் உணர்வால் மனிதன் தெய்வமாகும் நிலையை
3.அன்றைய ஞானி உணர்ந்ததால் தான் அன்பையே தெய்வமாகக் காட்டினான்.

உணர்வுகள் உந்தப்பட்டாலும் அதைச் சமமாக்கும் பக்குவத்தை எவனொருவன் செயல்படுத்தி.. செயல் வழியில் உரத்தைப் பெறுகின்றானோ… அன்றே தெய்வ நிலை கொண்ட ஒளித் தன்மையில் செயல் கொள்ள முடியும்.

இக்காற்றலையின் சுழற்சியில்… மனித உணர்வில் பல உணர்வின் வேட்கை அலைக்கு மத்தியில்… “தன் ஞானத்தை உயர்வாக்க… உயர்ந்த ரிஷி சக்திகளின் எண்ண ஜெபத்தால்… உயர் காந்த மின் ஒளியின் தியானத்தைக் கொண்டு… மனிதன் தன்னைத் தானே தான் உணர்ந்து… தெய்வ நிலை பெறும் வழி நிலையை… அமைத்துக் கொள்ளல் வேண்டும்…”

இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்கு நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்று இராமாயணம் காட்டுகின்றது

உயிருடன் ஒன்றும் உணர்ச்சி நம்மை மகிழ்ச்சி பெறச் செய்யும் – இராமாயணம்

telepathy-meditations

உயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…’ என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் அவரவர்கள் உயிரை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.

நமது குருநாதர் பெயரும் ஈஸ்வரன் தான்…! நம் உயிருக்குப் பெயரும் ஈஸ்வரன் தான்…!

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் அணுக்கருக்களாக உருவாக்குகின்றது. கருவான பின் உருப் பெறுகின்றது. உருப் பெறச் செய்கின்றது.

1.நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ
2.அவை அனைத்தையும் கருவாக்கி நம் இரத்த நாளங்களிலே மிதக்க விடுகின்றது. (1)
3.அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகளை ஊழ் வினை என்ற வித்தாக எலும்பினுள் அது பதிவாக்கி விடுகின்றது. (2)

இது எல்லாம் நம் உயிரின் வேலைகள்.

இப்போது மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றி இங்கே பேசும்போது நீங்கள் கூர்மையாகப் பார்த்து இந்தப் பேச்சின் உணர்வை நுகர்ந்தறியும் போது… அந்த உணர்வின் செயலாக உணர முடிகின்றது. உணரும் தன்மையை கருவாக உருவாக்கி… இரத்தத்தில் அது மிதக்க விடுகின்றது.

1.நாம் எக்குணத்தின் தன்மை பெற்றோமோ
2.அக்கருவின் தன்மை அக்குணத்தை உருவாக்கும் அணுவாகத்தான் அது வெளிப்படுகின்றது.

அதே சமயத்தில் கூர்மையாகப் பார்த்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்பினுள் பதிவாகி விடுகின்றது.

ஏனென்றால் முதலில் வித்தை ஊன்றினால் தான் வித்து தனது சத்தைக் கவர்ந்து… அது இலையையும் தனது மலரையும் தன் விதையையும் அது உருவாக்கும்.

இதைப் போன்று நாம் எதைக் கூர்மையாக உற்று நோக்கி அந்த உணர்வினைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ அவை நம் எலும்பினுள் உள்ள ஊன்களில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்படுகின்றது. (மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்)

நாம் எக்குணத்தின் தன்மையை நுகருகின்றோமோ… அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நம்மை அறியச் செய்கின்றன… உணரச் செய்கின்றன… உணர்த்துகின்றன….
2.இந்த மூன்று வேலையும் செய்கின்றன.

உணர்த்தினாலும் இரத்தத்தில் அது கருவாக மாற்றி விடுகின்றது… ஒரு முட்டையாக…! அவ்வாறு கருவாக உருவாகி விட்டால் நம் இரத்த நாளங்களிலே மிதக்கச் செய்கிறது.

நாம் எண்ணக்கூடியதை ஓ…! என்று பிரணவமாக்கி (ஜீவன் பெறச் செய்து) நாம் எண்ணிய உணர்வை ஓ… ம்… என்று ஜீவ அணுவாக நம் உடலாக இணைத்து விடுகின்றது உயிர். இது தான் ஓ…ம் ஈஸ்வரா.

நாம் எண்ணுவது அனைத்தையும் நம் உடலுக்குள் உருவாகி விட்டால் அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று எண்ணும் போதெல்லாம் அல்லது சொல்லும் போதெல்லாம் அவரவர் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும்.

அவரவர்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் இந்த உயிரே குருவாக இருக்கின்றது.

உயர்ந்த ஞானத்தின் வழிகளில் இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.நமது குருநாதர் “ஈஸ்வரர்…” அவர் அவருக்குள் உருவாக்கிய உணர்வை
2.எமக்குள் (ஞானகுரு) ஓதப்பட்டு அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
3.அதே உணர்வை மீண்டும் உங்களில் ஓதப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் உங்களுக்குள் அந்த உங்கள் உயிரான ஈசனிலே பட்டு ஜீவன் பெற்று
5.நம் குரு ஈஸ்வரரால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வும் இரண்டும் கலந்து ஒன்றாகி
6.அவர் உருவாக்கிய அருள் ஞானத்தை இங்கே ஈசனாக உருவாக்கும் செயலாக உருப்பெறுகின்றது.

ஆகையினால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரையும்… உயர்ந்த ஞானத்தை ஊட்டும் அந்த உணர்வின் கருவாக உருவாகும் அச்சக்தியை ஈசனாகவும்… மதித்தல் வேண்டும்.

அப்படி மதித்து நமது குரு காட்டிய அவருள் விளைய வைத்த உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வை நமக்குள் உருவாக்கும். குரு பெற்ற சக்தியை குரு அடைந்த ஒளி நிலையை நாமும் பெறலாம்.

great bliss

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக வளரக்கூடிய சந்தர்ப்பம் எது…?

மெய் ஞானியின் அருள் உணர்வை செவி வழியாக உங்களுக்குள் ஈர்க்கச் செய்து அந்த மெய் ஒளி பெறும் சந்தர்ப்பத்தை இந்த உபதேச வாயிலாக உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்திக் கொண்டு
1.நாம் மெய் ஒளி பெறுவேன்…
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவேன்…
3.நான் அழியா ஒளி நிலை பெறுவேன்…
4.என் மூச்சும் பேச்சும் இருளை மாய்த்து ஒளியாகக் கூட்டும் அலைகளாகப் பெறுவேன்…! என்ற நிலைக்கு வளர வேண்டும்

தன்னம்பிக்கையுடன் நீங்கள் வளர வேண்டுமென்ற அந்த ஆசையில் தான் இதை உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு). ஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு அவர் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அதை நீங்கள் பெறுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் சொல்வது போல “என்னத்த…!” என்று சோர்வை ஊட்டி கொடுக்கும் நல்ல உணர்வை அழித்துவிடாதீர்கள்.

இந்த மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றிவிட்டு நிச்சயம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்திந்தாலும்…
1.அந்தத் துன்பம் வரும் நேரம் தான்
2.மெய் ஒளியின் உணர்வைக் கூட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

எப்பொழுது துன்பம் உங்களைத் தாக்குகின்றதோ அப்பொழுது ஈஸ்வரா……..! என்று உயிருடன் தொடர்பு கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெற வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
3.இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்தும் போது
4.நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடனே அதில் உள்ள விஷத்தை மாய்ப்பது போல்
5.துன்பத்தை ஊட்டும் உணர்வுகளை அது ஒடுக்கி விடுகின்றது.

பாலுக்குள் விஷத்தைப் போட்டால் அதைக் குடிப்போரை மயங்கச் செய்கின்றது. மகிழ்ச்சியான நிலைகளில் நாம் இருக்கும்போது வேதனைப்படும் நிகழ்ச்சிகள் நடந்தால் அது நம்மைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது… நல்லதைச் சிந்திக்கும் செயலை இழந்துவிடுகின்றோம்.

ஆனால் நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடன் விஷத்தின் தன்மை மாய்ந்து… நெருப்பின் சுடர் பெருகி… ஏகமாக அங்கே ஒளியாகக் காண முடிகின்றது.

அதைப் போன்று தான் எத்தகைய துன்பம் வந்தாலும் அந்த விஷத்தின் தன்மையை அந்த மெய் ஞானியின் அருள் ஒளி கொண்டு… அந்த நெருப்பான சக்தியை நமக்குள் கூட்டும்போது…
1.அந்த விஷத்தின் தன்மை மாய்ந்து
2.நம் எண்ணங்கள் தெளிவாகி சிந்திக்கும் நிலை பெருகி
3.மறைந்த பொருளை அறிந்துணர்ந்திடும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கவும் இது உதவும்.

ஆகவே வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை மறந்து அந்த மெய் ஞானியின் அருளைப் பெறுவோம். அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகிற்கு ஒளிச் சுடராக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்படிப்பட்ட உறுதியான நிலைகளை நீங்கள் பெறுவதற்கு
1.எந்த மகரிஷிகள் அந்த ஆற்றலை அவர்களுக்குள் விளைய வைத்தார்களோ
2.அந்த உணர்வின் சக்திகளை எல்லாம் உங்களுக்குள் அந்த சிலிகன்களாகப் பதிவு செய்திருக்கின்றோம்.
3.அதை உங்களுக்குள் கூட்டிப் பெருக்குவது இனி உங்கள் கையில் தான் இருக்கின்றது.

நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. அதை நான் (ஞானகுரு) பதிவு செய்கின்றேன். என் மூச்சும் பேச்சும் உலக நன்மை பெற வேண்டுமென்று எண்ணத்தைச் செலுத்தி அதையே உங்களிடம் பரப்புகின்றேன்.

அதே போல் நீங்களும் எடுத்து உங்கள் உடலுக்குள் பெருக்கும்போது உங்கள் மூச்சின் நிலைகள் பிறரை நன்மை பெறச் செய்யும் சக்தியாக மலரத் தொடங்குகின்றது.

குருநாதர் காட்டிய அருள்வழிப்படி இதைப் பெறுவோம்…! விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்…! என்று உறுதி கொள்ளுங்கள்.
1.உடலை விட்டு எப்போது சென்றாலும் அந்த மகரிஷிகளின் ஒளி அலைகளுடன் கலந்து
2.ஒளியுடன் ஒளியாக நாம் பேரொளியாகக் கலப்போம்.

கல்யாணராமா, குகன், இராவணனின் தங்கை, உடலுக்குள் தோன்றும் எண்ணங்கள்

காண்டீபத்தை ஒடித்தவன் இராமன் – சக்தி வாய்ந்தவன்

சுக்ரீவன் துணை கொண்டு இராமன் சீதாவை மீட்டினான்

லவா குசா – இராமாயனணத்தில் காட்டப்பட்டுள்ள உண்மை நிலை

virus

உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் உருவான விதம்

1.அணு குண்டும் ஹைட்ரஜன் குண்டும் போய்…
2.மனிதனுக்கு மனிதன் தீவிரவாதம் என்ற நிலைகளும் போய்
3.அவைகளிலிருந்து வந்த விஷத் தன்மைகள் கலந்து மற்ற விஷப் பூச்சிகளில் பட்டு அது இறந்து
4.விஷக் கிருமிகளாக மாறி மனிதனைக் கொல்லும் தன்மைக்கு இன்று வந்து விட்டது.

அதே சமயத்தில் நாம் சுவாசித்த இந்த உணர்வுகளோ நம் உடலுக்குள் போய் நல்ல அணுக்களை எல்லாம் மாற்றி
1.விஷ அணுக்களாக உருவாக்கி நமக்குள் நோயும்
2.நம் உடலிலிருந்து வரக்கூடியது நம்மைச் சார்புடையோர்களுக்கும் பாய்ந்து
3.அவர்களுக்கும் இந்த நோய்கள் வந்துவிடுகின்றது.

உலகம் முழுவதும் இப்படிப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று நம் உடலுக்குள் நாம் இதைப் பெருக்கி கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பத்திரிக்கை வாயிலாகவோ டி.வியின் நிலைகளாகவோ உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை பதிவாகிக் கொண்டே உள்ளது.

அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த விஷத்தின் தன்மையை உடலில் வளர்த்து நமக்குள் விஷக் கிருமிகளைத் தான் உருவாக்குகின்றோம். அதனா நமக்குள் கடும் நோய்களே வந்து விடுகின்றது.

புதுப் புது நோய்கள் வரக் காரணமே…. இதைப் போன்று கேட்ட உணர்வை நுகர்ந்து… பதிவாக்கி… மீண்டும் அதையே நுகரும் நிலை ஆகி… அது நம் இரத்த நாளங்களிலே விஷக் கிருமிகளாக மாறுகின்றது.

இதன் உணர்வைச் சொல்லாகவோ… செயலாகவோ… நம் பார்வையில் பார்க்கப்படும்போது நமக்குள்ளும்… நம்மை சார்புடையோர் உடல்களிலும்… பாய்ச்ச முடிகின்றது.

இப்படி விஷத்தின் தன்மை கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரான ஈசனைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.

அவன் தான் (உயிர்) நம்மை இந்த உடலை உருவாக்கியவன் என்றும் இந்த மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைக் காக்க
1.ஞானியர் கண்ட உண்மையின் உணர்வை இங்கே உபதேச வாயிலாகப் பதிவு செய்வதை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.விஷக் கிருமிகளை ஒடுக்கி உங்கள் உடலுக்குள் அறியாத சேர்ந்த தீமைகளைத் தூய்மையாக்கிப் பழக வேண்டும்.

தங்கத்திற்குள் செம்பும் வெள்ளியும் வைத்து ஆபரணங்கள் செய்தாலும் அவைகளும் அதிலே இரண்டறக் கலந்து விடுகின்றது. மீண்டும் நகை செய்ய வேண்டும் என்றால் அவைகளைப் பிரிக்க நாம் திரவத்தை ஊற்றித் தங்கத்தைச் சுத்தமாக்குகின்றோம்.

இதைப் போலத்தான் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்… உடலிலுள்ள உறுப்புகளில் அதை அடிக்கடி செலுத்தப்படும்போது
1.விஷக் கிருமிகள் காற்றுடன் வந்து நம்முடன் கலந்திருந்தாலும்
2.அது பலவீனமாகி நல்ல உணர்வின் தன்மையாக மாற்றிவிடும்.

ஆனால் நோய்களையும் கிருமிகளையும் அகற்ற விஞ்ஞான அறிவு கொண்டு உடலில் உள்ள இரத்தங்களில் மருந்துகளைச் செலுத்தப்படுபோது உடல் முழுவதும் பரவி தீமையின் உணர்வை மாற்றுவது போல மாற்றினாலும்
1,கடுமையான மருந்துகளைக் கொடுக்கப்படும் போது
2.உடலில் உள்ள கிட்னிக்கு வரப்படும்போது அதைப் பலவீனப்படுத்தி
3.மறுபடியும் வேறொரு நோய் வருகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முறைப்படி நீங்கள் செயல்படுத்தும் போது உங்களுக்குள் வந்த தீமைகளையும் நோய்களையும் நீக்கும்… நம் கிட்னியையும் வலுவாக்கும்.

வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்ற நிலைகளையும் நாம் பெற முடியும்.

ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான். இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வால் வேதனைப்படுவதும் கவலைப்படுவதும் வெறுப்படைவதும் கோபப்படுவதும் தற்கொலை பண்ணுவதும் இந்த மாதிரி நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

ஆக மனிதனின் ஆசைகள் நிறைவேறவில்லை என்றால்…
1.நல்லது செய்து நல்லதைப் பழக்கப்பட்ட மனிதன்…
2.நல்லது செய்தே நொந்து போன மனிதன்
3.இது என்ன வாழ்க்கை…? என்று பேய் மனமாகி
4.இன்னொரு உடலுக்குள் சென்று அதே ஆசையின் உணர்வுகளாகி அவனையும் வீழ்த்தி
5.அதிக வேதனையை உருவாக்கிக் கொண்டு அடுத்து மனிதனல்லாத பிறவிக்கே போய் விடுகின்றது.

இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு அருள் உணர்வு பெற்று அருள் வாழ்க்கையில் நீங்கள் வாழ எமது ஆசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குரு அருள் பெற்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… சந்தர்ப்பத்தால் அறியாது சேரும் தீய வினைகளை நீக்கி… அருள் உணர்வைப் பெருக்கி… உடல் நலம் பெற்று மன பலம் பெற்று… இந்த வாழ்க்கையில் அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து… பிறவியில்லா நிலை அடையும் அந்த அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும்.

குடும்பத்தில் பண்பும் பாசமும் பரிவும் வளர்ந்து… தொழிலில் அரவணைத்து அன்புடன் வாழும் அருள் சக்தி பெற்று… தெளிந்த மனமும் மகிழ்ந்த உணர்வும் பெற்று… அருள்வாழ்க்கை வாழ்ந்து பேரின்ப பெருவாழ்வு பெற
1.இங்கே உபதேசித்த உணர்வுகள் உள் நின்று உங்களுக்கு நல்வழி காட்டி
2.அருள்வழி வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள்சக்தி பெற
3.எமது அருளும் குரு அருளும் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

Maharishis worlds

சாதாரண வாழ்க்கையிலிருந்தே மெய் ஞானத்தைப் பெற்ற ஞான ரிஷிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.இச்சரீர உணர்வில் பெறும் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும்
2.அதிலே வரும் அந்தத் துன்ப உணர்விலிருந்து மீளும் நிலை எப்படி…? என்று அறிந்து
3.தன் வாழ்க்கையில் மோதப்பட்ட அத்தகைய சம்பவங்களினால் தான் சகல ஞானிகளும் மகரிஷிகளும் உருவானார்கள்.

வால்மீகியார் வேட்டையாடிப் புசிக்கும் வேடுவ குலத்தில் பிறந்து வேட்டை ஆடச் சென்ற காலத்தில் ஜோடியாக இருந்த இரண்டு புறாக்களில் ஒன்றை அம்பெய்து வீழ்த்துகின்றார்.

வீழ்ந்த புறா வேதனையில் துடிப்பதையும் வேதனையில் துடிக்கும் புறாவின் நிலையை அதனுடைய ஜோடிப் புறா பார்த்துத் துடிதுடிக்கின்றது.

பாச உணர்வால் துடிதுடிக்கும் புறாவின் வேதனையை தன் எண்ணத்தின் உணர்வில் உற்றுப் பார்த்த வேடனான வால்மீகியார்…
1.தாக்கும் நிலையை விடுத்துத் தன் ஞானத்தின் உயர்வை
2.வானை நோக்கி ஏகும் போது உண்மையை உணர்கின்றார்.

அந்த எண்ண அலைத் தொடரைக் கொண்டு அன்று அவருக்குப் பிறந்த ஞானம்தான் இராமாயணக் காவியமாக உருவாகியது.

அதற்குப் பிந்திய காலத்தில் மீனவனாய்ப் பிறந்த வியாசர்… மீன் பிடித்துத் தன் வாழ்க்கையை நடத்திச் சென்ற வழித்தொடரில்… கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொழுது கடலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மீன் (டால்பின்) அவரைக் கரை சேர்க்கின்றது.

1.எந்த மீன் இனத்தைத் தான் இம்சித்தோமோ அதே இன ஜீவன்
2.தன்னைக் காத்ததை எண்ணி அப்பொழுது ஏங்குகின்றார்.

அந்த நேரத்தில் உதித்த ஞானத்தின் உணர்வுதான் அவரின் உயர் ஞான சித்தில் மனித வாழ்க்கைக்கு உயரும் பக்குவமான “கீதையின் உபதேசமாகத் தன் தத்துவத்தை” வடித்து வெளிப்படுத்தினார்.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்… இந்த மனித வாழ்க்கையில் மனிதன் எந்த நிலைக்குச் செல்ல முடியும்…? எதை எதைப் பெற முடியும்…? என்ற ஞான உணர்வில் அகஸ்தியர் காடுகளில் ஜெபமிருந்தார்.

அப்பொழுது ஓரிடத்தில் பிரசவ வேதனையுடன் ஓர் பெண்ணின் அழு குரல் கேட்டு அருகில் சென்று பார்க்கும் பொழுது… குழந்தையைப் பிரசவித்த நிலையில் நீருக்காக அத்தாய் அழுவதைப் பார்க்கின்றார்.

அது படும் வேதனையைப் பார்த்து அப்பெண்ணைக் கூட்டி வந்த பெண்ணும் தாகம் தீர்க்கத் தண்ணீருக்கு ஓடிய நிலையைக் கேட்டு அறிகின்றார்.

அப்பெண் தாகத்திற்காகத் துடிக்கும் நிலையறிந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் தாகத்தால் அந்தத் தாய் உயிர் நீத்துவிடுகின்றது.

இதைக் கண்ட அகஸ்தியர் இத்தனை காலங்களாக தன்னால் சாதிக்க முடியாத ஜெப சக்தியை நாம் பெற்றுள்ளோம். இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் தாகத்திற்கு
1.நீரைக் கொடுக்கக் கூடிய சக்தி இருந்திருந்ததென்றால்…
2.தாகத்தால் உயிர் நீத்த அத்தாய்க்கு
3.தன்னால் நீர் தர முடிந்திருக்கும் என்ற உணர்வின் ஏக்கம் கொள்கின்றார்.

அந்த எண்ணத்தைக் கொண்டு வீரிய ஜெபம் இருக்கின்றார். அதன் வழி வந்த ஞானத்தால்
1.தான் பெற்ற அகத்தின் உணர்வின் ஸ்திரத்தால் அகஸ்தியர் என்ற நாமம் பெற்று
2.அவரின் சித்தின் உயர்வின் ரிஷி சக்தியால்…
3.அவர் அமர்ந்திருந்த இடங்களில் எல்லாம்
4.ஜீவ நதிகள் உற்பத்தியாகும் வழித்தொடர் உருப் பெறுகின்றது

மனித உணர்வுக்கு ஒத்த ஜீவ நீர் அலைத் தொடரில் “தன் சக்தியை” இன்றும் செயலாக்கிக் கொண்டுள்ளார்.

இப்பூமியில் குறுகிய காலத்தொடரில் கொங்கணவர் பெற்ற வழித்தொடரும் இதே முறையில் தான்.
காட்சி:
குன்றுகள் போன்று சிறு சிறு மலைகள் தெரிகின்றன. மேடான ஒரு மலையில் ஓலை வேயப்பட்டுச் சிறு சிறு குடிசைகளும் அதற்குப் பக்கத்தில் சாணியைக் கொண்டு மெழுகிய தரை விசாலமாகவும் தெரிகின்றன.

அதற்குச் சிறிது தூரத்தில் சிறு சிறு பையன்கள் குதித்து விளையாடுவதைப் போன்றும், விளையாடும் பையன்களைப் பார்த்து அந்த வழியாகச் சிறு மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வந்த பையன் மற்றச் சிறுவர்களுடன் தானும் விளையாடப் போகின்றான்.

எதிர்பாராது ஓர் கூர்மையான கல்லில் இடிபட்டுப் பலத்த காயமுடன் விழுந்து அலறுகின்றான். குடிசையிலிருந்த ஓர் தாய் அச்சிறுவனை அக்குடிசைக்குள் படுக்க வைத்து அச்சிறுவனுக்கு உண்டான காயங்களுக்கு மருந்திட்டுப் பாதுகாக்கின்றது.

பின் அதே சிறுவன் அத்தாயுடன் சிறிது வளர்ந்த நிலையில் அத்தாய்க்கு உதவியாக மருந்து அரைத்துத் தருகின்றான்.

அதன் பிறகு ஓர் கல்லறையும் அக்கலறையில் மண் மேட்டில் அதே சிறுவன் மீண்டும் வளர்ந்த நிலையில் அக்கல்லறையின் கால்மாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அக்கல்லறையிலிருந்து அச்சிறுவனுக்கு உதவிய தாயே வெளிச்சமுடன் கூடிய உருவமாய் அச்சிறுவனின் உருவமுடன் ஒன்றியதைப் போன்றும்… மேடான ஓரிடத்தில் ஓர் மரத்தை வெட்டி அம்மரம் ஐந்து ஆறு அடி உயரத்தில் உயர்ந்த மேடை போன்று இருப்பதைப் போன்றும்… அந்த இடத்தில் சிறுவனாய் இருந்து பெரியவனான அப்பையன் அமர்ந்திருப்பதைப் போன்றும்… அதே பையனின் உருவம் வயது முதிர்ந்த நிலையில் தெரிகின்றது.

மற்ற ரிஷிகள் தெரியும் பொழுது அடர்ந்த முடி தெரியும். ஆனால் இவரின் நிலை சிறு சிறு முடியுடன் சன்னமான தேகமுடன் அமர்ந்திருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அவரை வணங்கி யாரோ ஆசீர்வாதம் கேட்கும் பொழுது… என்னிடம் ஒன்றுமில்லை… அத்தாய் சக்திதான்…! என்று அத்தாயை எண்ணி அவர் வணங்குகின்றார்.

அவருக்கு முன் ஒளியாக அத்தாயின் உருவம் தெரிந்து அத்தாயிடம் தான் ஆசீர்வாதம் பெற்றுத் தன்னிடம் ஆசீர்வாதம் வேண்டி நின்றவர்களுக்கு இவர் அருள் புரிகின்றார்.

இதனுடைய உண்மைத் தத்துவம் அனாதையான சிறுவன் பட்ட துன்பத்தை நிவர்த்தித்து ஆதரவு தந்து அத்தாயின் சக்தியால் உயர்ந்த கொங்கணவர்…
1.அத்தாயின் உணர்வுடனே தன்னையும் ஐக்கியப்படுத்தி
2.தனக்கு ஆதரவு தந்து தன்னை உருவாக்கிய அத்தாய் சக்திக்குத்தான் தன் சக்தி சொந்தமென்று தவிர்த்து
3.தன்னை உயர்த்திக் கொள்ளாமல் தாயின் ஜெபத்துடனே தன் உயர்வைக் கொண்டு
4.தாயின் உயர்வுடனே சகல சித்துத் தன்மையையும் பெற்ற பக்குவ நிலை கொண்டு செயல்பட்டார்.

ரிஷி சக்திகளின் உண்மைத் தொடர்பு ஆரம்ப வாழ்க்கை நிலைகள் எல்லாமே சகல மனிதர்களை ஒத்த நிலைதான்…!

ஆனால்… தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
1.எண்ணத்தின் உணர்வில் எதிர்ப்படும் மோதல் காலங்களில்
2.ஞானத்தின் உயர் ஞானத்தைக் கொண்டு உயர்ந்தவர்கள் தான் சகல மாமகரிஷிகளும்.

வாலி – விஷம், சுக்ரீவன் – துருவ நட்சத்திரம் இருவரும் சகோதரர்கள்

விநாயகனை ஏன் முழு முதல் கடவுள் என்று சொல்கிறோம்…?

நாத விந்துகள் ஆதி நமோ… நமோ… அருணகிரிநாதர் சொன்னது…

சாஸ்திரங்கள் நமக்குக் கூறும் தெளிவான நிலைகள்

greatest in life

ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் வந்தாலும்…
1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் நமக்குள் “அது பெரிது… இது பெரிது” என்ற நிலையை உதறித் தள்ளிவிட்டு
2.நாம் பெறும் மெய் வழியே பெரிது…! என்றும்
3.நாம் செயல்படுத்தும் செயல்களினால் பிறர் மகிழ…
3.அவர்களின் மகிழ்ச்சியை நாம் பார்ப்பதே நமக்குப் பெரிது…! என்றும்
4.அந்த மகிழ்வான உணர்வால் நமக்குள் விளையும் அந்த ஒளியின் தன்மையே நமக்குப் பெரிது…! என்றும்
5.இந்த மகிழ்ச்சியின் ஓட்டத்தையே நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டுமென்றும்
6.இந்த எண்ணத்துடனேயே நம் வாழ்க்கையை வழி நடத்திட வேண்டும்,

ஏனென்றால் இப்படி எந்த உயர்ந்த நோக்குடன் இந்தக் கருத்துக்களை உற்று நோக்குகின்றீர்களோ அந்த மெய் ஞானிகள் சென்ற மெய் வழியை நீங்கள் எளிதில் பெற முடியும்.

இங்கே உபதேசிக்கும் மெய் ஞானிகளின் எண்ண ஒளிகள் உங்களுக்குள் பதிய வேண்டுமென்றால் அதைப் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு நீங்கள் ஏங்கிச் சுவாசிக்கின்றீர்களோ அது எல்லாம் உங்களுக்குள் அருள் ஞான வித்துக்களாகின்றது.
1.உங்கள் உயிருக்குள் இது பட்டு…
2.அந்த மெய் ஞானியின் உணர்வின் அலைகளை உங்களுக்குள் ஓங்கச் செய்யும்.

ஆகவே இங்கே கொடுக்கும் உபதேசங்களை நீங்கள் வரிசைப்படுத்தி எண்ணிப் பாருங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள்… எளிதில் நீங்கள் அதைப் பெற முடியும். உங்களுக்குள் ஒளியான உணர்வை வளர்க்க முடியும் ஏனென்றால் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள் தான் நாம்.

ஒரு பலகாரம் செய்யும்போது அதைப் பக்குவப்படுத்திச் சுவை கொண்டதாக ஆக்குவது போன்று
1.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் மெய் ஞானியின் அருள் சக்திகளை
2.தியானத்தால் எடுத்து அதைச் சுவாசித்து அதை வலுவாக்கிக் கொண்டால்
3.நம் சொல்லுக்குள் இனிமையும் செயலில் புனிதமும் பெறும்
4.அந்த ஆற்றலின் தன்மை நாம் பெற்று. நாம் மகிழலாம்
5.நம் மூச்சு பிறரை மகிழச் செய்யும்… நலம் பெறச் செய்யும்… இன்புறச் செய்யும்.

இதைப் போல நாம் ஒவ்வொன்றும் பெறுவோம்…! என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கனிக்குள் மறைந்த வித்தினைப் பெறும் நிலை -சித்திரைக் கனி விளக்கம்

சித்திரை – சிறு திரையை நீக்கும் முறைகள்

ஒரு நெல் தன் வாய் திறந்து காந்தப் புலனறிவைக் கவர்ந்து தனக்குள் சத்தைக் கவர்ந்து எப்படி மூடிக் கொள்கின்றது

பிறர் உணர்வுகள் அவர்களுக்குள் கனியானது நமக்குள் வித்தாக எப்படி இணைகின்றது

scince addiction

ஆதிசங்கரர் காலத்திற்குப் பின் மெய் வழி செல்லும் பாதையே மாறி விட்டது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும் ஆத்ம வலுக் கொண்டு ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு உயர் காந்த மின் ஒளியை ஜெபத்தால் எடுக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
1.இப்படிப்பட்ட வாழ்க்கை தொடரில் வளர்த்துக் கொள்ளும் உயிராத்மா இணைப்பில்
2.கணவன் மனைவியின் கூட்டு ஜெபத்தால் மனிதன் தெய்வ நிலை பெற முடியும்.

அண்டத்தின் அகிலமாய்… ஆதி சக்தியின் அனைத்துப் படைப்பிலும்…
1.ஆண்டவன் என்ற உயர்ந்த நிலையில்
2.அதன் தொடர் பெற்று வளரும் தன்மையை இறை நிலையாக்கி
3.இறை சக்தி கொண்டு… இறை உணர்வு பெற்று…!
4.தெய்வத் தன்மை கொள்ளும் தொடர்பு நிலை தான் “இயற்கையின் உண்மை நீதி நிலை…!”

மனிதனின் எண்ணத்தின் உணர்வில் பகுத்தறியும் உயர் ஞானத்தின் வழித் தன்மை கொண்டு இறை நிலை பெற்று… இறை சக்தியாய்… இறை உணர்வு குணத்தை… இச்சரீர வாழ்க்கையில் வலுப்பெறும் வளர்ச்சிக்கொப்ப… மனிதன் தெய்வமாகும் நிலை உண்டு.

மனித வாழ்க்கைக்குத் தேவையானதை… நாளை செயல் கொள்ள இன்றே சேமிக்கும் செயலை… அந்தத் திறமை கொண்டு வழி அமைக்கும் பக்குவம் “மனிதனுக்குதான் உண்டு…!”

வாழ்க்கையின் நடைமுறைக்கு உழுது பயிரிட்டுப் பலன் பெற்றுத் தான் இன்றைய மனிதன் சமைத்து உண்ணுகின்றான்.

உடலின் சுக நிலைக்கு ஏற்ற பல வழி முறைகளைத் தன் ஞானத்தால் மனித வாழ்க்கை நடைமுறையில் செயல்படுத்தும் நாம்…
1.நம் ஞானத்தின் உயர்வால் உயிராத்மாவைத் தெய்வத் தன்மை கொள்ளும் பக்குவத் தொடர் தான்
2.இங்கே இந்த உபதேச வாயிலாக விளக்கப்படும் இயற்கையின் உண்மையின் நியதிகள்.

மிருகங்கள் தனக்குக் கிடைத்ததை உண்டு உறங்கும் வாழ்க்கையாக அதனின் உணர்வின் எண்ணத்தின் நிலை இருந்தாலும் உயர் ஞானத்தால் செயல்பட முடியாத உண்மை நிலையை அன்றே ஞானிகள் தன் உணர்வின் எண்ணத்தால் கண்டுணர்ந்தனர்.

ஆனால் காலப் போக்கில் ஞானத்தின் வழி செல்வது என்பது பல நிலைகளில் மாற்றப்பட்டு… உண்மைத் தத்துவங்கள் மறைக்கப்பட்டு விட்டது.

தன்னுள் உள்ள இறை சக்தியை இறை உணர்வாக்கும் நிலையை மனிதன் அறிய முடியாமல்
1.இறைவன் என்பதையே யாரென்று அறிய முடியாமல்
2.பூஜித்துப் பலன் காணும் வேத விற்பனர்களிடம் அடிமைப்பட்டு
3.சிதறுண்ட நிலையாகத் தான் இன்றைய நிலை உள்ளது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உணர்வின் எண்ணத்தில் தன் எண்ணத்தாலே சக்தி பெற்று… உயர்வை வளர்க்கும் உயர்ந்த தத்துவத்தை ஆதிசங்கரர் அத்வைத முறைப்படுத்திக் காட்டினார்.

அதற்கடுத்து வந்தவர்கள் நான்கு வகை வேதங்களாக்கி… மனித உருவங்களை அமைத்து… மந்திர ஒலி எழுப்பி… அறியக்கூடிய நிலைக்கும் பக்தி மார்க்க நிலைக்கும்… வானசாஸ்திரத்தின் தொடரை அறியவும் கொண்டு சென்றனர்.

அந்த நான்கு வேதங்களின் தொடரில் இது தான் பெரிது… இல்லை அது தான் பெரிது… என்று பல வேதங்களைப் பிரித்து மனிதனின் எண்ண உணர்வால் தெய்வத் தன்மை பெறக்கூடிய வழியை மாற்றி விட்டனர்.

அரசு நிலைக்கும்… குடிமகன் நிலைக்கும்.. நாட்டியக்கலை மற்ற இசைக்கலைகளுக்கும்… வேதத்தின் விற்பன்னர்களுக்கும்… என்று நான்கு மறையாக்கி வகுக்கப்பட்ட நிலையில் அந்தந்தத் தொடருக்குப் பல நிலைகளைப் பிரித்தனர்.

அது மட்டுமல்லாமல் காலப்போக்கில் ஒலி அலையின் தொடர் பெற்று உருவகங்கள் மாறி மாறி
1.அன்று கண்ட ஞானியின் உண்மைத் தத்துவத்தை
2.இன்றைய நிலையில் உணரும் தன் ஞானமும் அற்றுப் போய்
3.விஞ்ஞானப் பிடிப்பிலேயே வாழுகின்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால்… ஞானத்தின் வழித் தொடரில் உயர் ஞானமாக்கும் ஆத்ம தியானத்தால்… தன்னைத்தான் தான் உணரும் பக்குவம் பெற்று மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான “தெய்வ நிலை” பெற முடியும்

 தீய உணர்வுகள் கனியாவதற்கு முன் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டும்

சித்திரை – சிறு திரை விளக்கம்

கார்த்திகையன்று மெய்ஞானச் சுடரை உயிருடன் ஒன்று ஏற்றிடல் வேண்டும்

12 மாதங்களிலும் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் நம் சாஸ்திரங்கள்

WORLD PROTECTION

அன்றைய ஞானி எப்படித் தன் உயர் ஞானத்தால் ரிஷி சக்தி பெற்றான்..? இன்று நம் நிலை என்ன…?

 

அன்று பேராசையின் நிலைகள் கொண்டு… பொருளுக்காக ஏங்கி அரசனாக இருந்து ஆட்சி செய்தவன் தான் அத்திரி. தன் குடிமக்களினுடைய ஆசையை நிறைவேற்றித் தன் புகழுக்காக ஏங்கியவன் தான் அத்திரி

இருந்தாலும் தன்னுடைய மக்களின் ஆசை தன்னுடைய பிள்ளை என்ற நிலைகளை மறந்து தன்னுடைய ஆசையென்ற நிலையையே வளர்த்துக் கொண்டான்.

அவன் செய்யும் தவறின் நிலைகள் தாங்காது அங்கே குடிமக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கப்படும்போது பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை உணரத் தொடங்குகின்றான்.

மனிதன் இறந்தபின் என்ன ஆகின்றான்…? என்ற நிலைகள் சிந்திக்கின்றான்… உணர்கின்றான். அரசைத் துறந்து காட்டுக்குள் சென்று கடுந்தவங்கள் செய்து அகஸ்தியரின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெறுகின்றான்.

1.ஒவ்வொரு மனிதனையும் மகிழச் செய்வதற்கு என்ன வழி…? என்று அறிந்து
2.மீண்டும் மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து
3.தன் உணர்வின் நல் எண்ணத்தைப் பாய்ச்சி ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து
4.அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து
5.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
6.தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றி விண் சென்றார் அத்திரி மாமகரிஷி.

அன்று அரசனாக இருந்த நிலையில் எல்லை கடந்த நிலைகள் சென்ற பின் தான் தன்னை உணர்ந்து… அரசைத் துறந்து… உயர்ந்த ஆற்றலைப் பெற்று விண்ணுலகம் சென்றார் அத்திரி.

அது போன்று தான் இன்று மிகவும் விஷத் தன்மையான ஆற்றல்மிக்க நிலைகள் பரவிக் கொண்டுள்ளது. ரேடியோ டி.வி. இவைகளை எந்த அளவுக்குக் கவனிக்கின்றோமோ அந்த அலை வரிசைகள் எல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

விஞ்ஞானிகள் பூமிக்கு வெளியிலே பல செயற்கைக் கோள்களை அமைத்துள்ளனர். அதன் மூலமாகத்தான் இன்று டி.வியும் ரேடியோவும் மற்றதும் நாம் பார்க்க கேட்க முடிகின்றது.

இருந்தாலும் அந்தச் செயற்கைக் கோள்களை அமைத்த நிலைகள் கொண்டு அதன் மூலம் மற்ற விண்ணிலிருக்கும் விஷத் தன்மையான நிலைகளும் அதிலே கலக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்படும்போது சிறுகச் சிறுகச் சேர்க்கின்றனர்.

செயற்கைக் கோளின் வழியாக வரும் அலைகளை வீட்டிலே அமர்ந்த இடத்திலிருந்து ரேடியோவும் டி.வி.யும் வைத்து ரசித்துக் கொண்டிருக்கின்றோம்.

உணர்வைத் தூண்டும் நிலைகளில் நாம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில எதிர்நிலையான கதிர்வீச்சுகளை அவைகளில் கலந்து விட்டவுடனே கேட்டுக் கொண்டிருப்போரின் புத்திகள் சிதறிவிடும்.

என் பிள்ளை எது…? என் வீடு எது…? என்ற நிலையில் எல்லாவற்றையும் நொறுக்கி விட்டுத் தன் பிள்ளைகளையும் கொன்று விட்டு… இது என்ன உலகம்…? என்ற இருண்ட நிலைகளுக்குப் போகும் காலம் நெருங்கிவிட்டது.
1.கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
2.இது கூடிய சீக்கிரம் நம் விஞ்ஞானத்தில் நடக்கும்.

விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் கண்டு கொண்டார்கள்… பேரண்டத்தின் நிலைகளையும் கூடக் கண்டு கொண்டார்கள். இவர் (ஞானகுரு) என்ன பைத்தியக்காரர் மாதிரி எதையோ சொல்கிறார்…! என்று நினைக்க வேண்டாம்.

ஆனால் அந்த மாதிரியான அழிவின் நிலைகள் நெருங்கிவிட்டது…! இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த மெய் ஒளியைப் பெற்றால் தான் முடியும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காப்பதற்காக வேண்டி நமது குருநாதர் காட்டிய முறை கொண்டு சில உணர்வுகளினுடைய நிலைகளில் தொடர்பு கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

குருநாதர் எமக்குத் தெரியாமல் எமக்குள் பல சக்திகளைக் கூட்டினாரோ அதே மாதிரித் தான் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தெரியாமலே பல சக்திகளை உங்களுக்குள் ஊட்டிக் கொண்டே இருக்கின்றேன்.

1.ஆகவே விஞ்ஞானத்தால் விளைந்த அந்த அலைகள்
2.உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது அதை மாற்றும் நிலைக்கு நாம் வர வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஒரு பத்து நிமிடமாவது தினசரி எடுத்துக் கொள்ளுங்கள்
4.நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டியபின் மகரிஷிகளின் ஒளியை நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் பெறுங்கள்.
5.அந்த அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

இலட்சுமி இலட்சுமணா – விளக்கம்

முருகா அழகா…!

விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்

cosmic relativity

உயர்ந்த சக்தி பெற்ற மகரிஷிகள் மனிதரைத் தேடி வருவதன் காரணம் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி: பிரகாசமாக சூரிய வட்டம் தெரிந்து பல ரிஷிகளின் உருவமும் அவர்களின் செயல் முறையும் தெரிகின்றது. உருவம் தெரிந்து அவ்வுருவம் அப்படியே பிரிந்து… ஒளியாக ஒரு உருவம் பிரிந்த பிறகு… மீண்டும் பல உருவங்களாகவும் தெரிகின்றது.

பல கோடி ரிஷிகள் உள்ள பொழுது இப்பூமியில் இன்று தன்னைத் தானே உணர முடியாமல் வாழ்கின்ற மனிதனின் மேல்
1.அவர்கள் வளரத் தன் சக்தியை ஏன் உபயோகித்துச் செயல்பட வேண்டும்…?
2.சிருஷ்டியின் தன்மையையே சிருஷ்டிக்கும் ரிஷிகள்
3.மனிதனின் உணர்வுடன் ஒட்டிச் செயல்படும் நிலைகள் எதற்கு…? என்ற வினா எழும்பலாம்.

சூரியனும் பூமியும் ஒன்றின் ஈர்ப்புத் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் தொடர்ந்து ஓடிக் கொண்டே செயல்படுகின்றது. ஈர்ப்பின் பிடிப்பில் இருந்து எந்த மண்டலமும் தனித்த ஒன்றாகச் சுழன்று செயல்பட முடியாது.

1.ஒன்றின் தொடர்பு பெற்று…
2.ஒன்று ஓடும் ஜீவ வளர்ச்சி ஏற்படும் தொடரில் தான்
3.எல்லா மண்டலங்களின் சுழற்சியும் உள்ளது.

இச்சுழற்சியின் மையக் கருவாக ஈர்க்கப்படும் சக்தியின் தொடர் வளர்ச்சியுற்றுக் கொண்டே… அத்தொடரின் வலுக்கொண்டு வளரும் தொடரில் தான்… மண்டலங்களும் அதில் வளரும் தொடரும் செயல் கொள்கின்றது.

அதைப் போன்று தான் சகல சித்து நிலையின் படைப்பின் படைப்பையே படைக்கவல்ல “ரிஷிகளின் தொடர்பிற்கு…” உணர்வின் எண்ணம் கொண்ட ஜீவ காந்த ஒலி சரீரத் தொடர்பின் எண்ணம் கொண்டுதான் அந்த ரிஷி சக்திகளின் மூலக்கருவே செயல் கொள்கின்றது.

1.தன்னுடைய வலுவின் தொடர் வலுவில் வளர்ப்பை வளர்க்கவல்ல நிலைக்கு…
2.ஜீவ காந்த உணர்வு எண்ண செயல் சக்தியைக் கொண்டு…
3.ரிஷிகளின் தொடர்புடன் மனித எண்ணத்தின் தொடர்பு சுழற்சி வலுப் பெறப் பெற…
4.ரிஷிகளைக் காட்டிலும் மனித உணர்வால் ஜீவ செயலில் உபதேசிக்கும் உண்மை உயர் ஞானத் தத்துவ ஈர்ப்பினால்…
5.மனித உணர்வின் அன்பைப் பெற்றானானால்…
6.மனிதச் சரீரத்தில் இருந்தே பலரின் அன்பான அலையின் வலுவைக் கொண்டு…
7.இச்சரீர ஆத்மாவிற்கு உயர்ந்த முலாமை வளர்த்துக் கொண்டு…
8.இச்சரீரத்தில் இருந்தே அஷ்டமாசித்தின் ஒளி சக்தி பெற்று உயர்வு நிலை பெற…
9.இச்சரீரத்தின் எண்ணத்தின் உயர்வில் வலு நிலை கூடுகின்றது.

முருகன் சூரனை அடக்கிய நிலை 

கண்ணன் துகிலை உறிந்தான்

பீஷ்மரைப் பற்றியும் வாலியைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகள்

lightning

குருநாதர் என்னை மின்னலைப் பார்க்கச் சொன்னதன் உட்பொருள்

ஒரு சமயம் குருநாதர் என்னை (ஞானகுரு) “மின்னலைப் பார்…!” என்றார்.

மின்னலைப் பார்த்தால்… “என் கண்கள் குருடாகிவிடும் சாமி…!” என்று சொன்னேன்.

நான் சொல்கின்றேன்… நீ மின்னலைப் பார்…! என்று மீண்டும் குருநாதர் சொன்ன பின் மின்னலைப் பார்த்தேன்.

ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அணுக் கதிரின் புலன் இயக்கங்கள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து எதிர்மறையாக மோதப்படும்போது
1.அது எப்படி மின்னல்களாக உருப் பெறுகின்றது…?
2.மற்றதை எப்படி மாய்க்கின்றது…?
3.மற்றொன்றோடு எப்படி இணைகின்றது…?
4.அணுக்களோடு எப்படி இணைகின்றது…?
5.இணைந்த பின் அந்த இசைந்த ஓசைகள் எவ்வாறு மாறுபடுகின்றது…? என்று
6.இதை எல்லாம் தெளிவாக்குவதற்குத் தான் மின்னலைக் காட்டுகின்றார் குருநாதர்.

உயிரே கடவுள் என்ற புத்தகத்தில் மின்னலைக் கண்ட அனுபவத்தை முதலில் எழுதியுள்ளேன். ஆனால் அன்று விளக்கவுரையை முழுவதும் கொடுக்கவில்லை. இன்று அந்த விளக்கவுரைக் கொடுக்கின்றேன்.

உண்மையின் நிலைகளை ஒரு முறை காட்டும் சில விதிமுறைகளைத் தான் அதிலே அங்கே வெளிப்படுத்தியது. ஏனென்றால் அதை ஒவ்வொரு தருணத்திற்குத் தக்கவாறுதான் வெளிப்படுத்த முடியும்.

1.ஒரு உணர்வில் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.உணர்வின் இயக்க இசைகள் மாறுவதும்
3.மணங்கள் மாறுவதும்
4.உணர்ச்சிகள் தூண்டுவதும்
5.உணர்ச்சிகள் ஒதுங்குவதும் என்ற நிலைகள் எல்லாம்
6.வேதங்களில் உள்ள உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுளது.

எதை எதனுடன் சேர்த்து… எதனின் உணர்வு கொண்டு அது உருப்பெறுகின்றதோ… அதை ரிக் என்றும் அதனின்று வெளிப்படும் உணர்வின் சத்தை சாம என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

உதாரணமாக ஒரு பூனை தன் கடுமையான உணர்வின் நிலைகள் கொண்டு ஒன்றைத் தனக்குள் இரையாக்கி தனக்குள் இரையாக்கிய உணர்வின் இசையாக அதிலிருந்து வெளி வருகின்றது.

அதே சமயத்தில் அந்தப் பூனையை உற்றுப் பார்க்கும் ஒரு எலியோ…
1.நுண்ணிய அலைகள் கொண்டு தன் செவிகளை ஒவ்வொரு திசையிலும் திருப்புகின்றது.
2.அந்தத் திசை திருப்பும் நிலைகள் வரும்போதுதான்
3.தன் செவிகளைக் கொண்டு இசைகள் ஒலிப்பதை நுகர்கின்றது.

அப்பொழுது சுருதிகள் (பூனையின் ஒலி ஓசைகள்) அதிகமாகும் போது எலிக்குள் இருக்கும் அதனின் உணர்வின் தன்மையை அது அடக்குகின்றது.

இந்த ஓசையின் உணர்வுகள் எலி உடலை உருவாக்கிய அணுக்களில் இணைந்தபின் அது ஒடுங்கி விடுகின்றது. இப்படி அது அடக்கும் நிலைகள் பெறுவதைத்தான் “அதர்வண” என்று பிருகு அன்று இதைச் சொல்லுகின்றார்.

ஏனென்றால் நட்சத்திர இனங்கள்…. ஒளி அலைகளை ஒளி பரப்பும் அந்த உணர்வின் அணுக்கள்… மற்றொன்றோடு சேர்த்து அதனை இணைத்து… இணையும் உணர்வாக மாற்றும் உணர்வு கொண்டது.

இப்போது லேசாக உங்களிடம் பதிய வைத்து விடுகின்றேன். இதனின் உணர்வின் நிலைகளை நீங்கள்
1.உங்களுக்குள் ஞானத்தால் பெருக்கிக் கொள்ளவும்
2.தீமைகளை அடக்கிடவும் அந்த மெய் ஞானியின் உணர்வை நீங்கள் பெறவும் இது உதவும்.

மனிதனாகப் பிறந்த நாம் நமக்குள் ஏற்படும் தீமைகளை அடக்கி… உணர்வினை அறிவின் ஒளியாக மாற்றி… ஒளியுடன் ஒன்றி “ஒளியின் சரீரமாக…” நிலை கொள்ள இது உதவும்.

Moogambika

மூகாம்பிகை என்ற மூன்று சக்தியின் இயக்கத்தைப் பற்றி கோலமாமகரிஷி உணர்த்திய உண்மைகள்

மூகாம்பிகை என்றால் மூன்று சக்தியின் தொடர்பு கொண்ட இயக்கம். ஒரு உயிரணுவிலும் அதே இயக்கமாகத் தான் இயக்குகின்றது. பூமியிலும் அதே நிலைகள் கொண்டு தான் இயங்குகின்றது.

1.பூமி சுழலும் போது வெப்பம் (1) ஆகின்றது
2.சுழற்சியால் ஏற்படும் வெப்பத்தால் ஈர்ப்பு சக்தி (2) வருகிறது.
3.அந்த ஈர்க்கும் சக்தியால் தான் எதைக் கவர்ந்து கொள்கின்றதோ (3) அதன் செயலாக
4.இந்த மூன்று நிலைகள் கொண்டு பூமி இயங்குகின்றது என்ற நிலை தான் “மூகாம்பிகை” என்பது.

ஆக… தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுவே மணம் ஞானம்.

அதே பொல் உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு அந்த இயக்கத்தால் வெப்பமாவதும்… அந்த இயக்கத்தினால் ஈர்ப்பு சக்தியாவதும்… ஈர்ப்பால் தனக்குள் கவர்ந்து எத்தகைய நிலையைத் தன்னுடன் இணைத்து அது இயங்குகின்றதோ அந்த இயக்கமே மூன்று சக்தி… “மூகாம்பிகை” என்று பெயர் வைத்தார்கள்.

அதனுடன் இணைக்கும் பொருள் எதுவோ… அப்பொருளின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதனையே கோலமாமகரிஷி மக்களுக்குத் தெரியப்படுத்தியது. ஆகவே அதற்குப் பெயர் மூகாம்பிகை என்று வைத்தார்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பத்திற்குப் பெயர் பராசக்தி அதனுடன் இணைத்து இயங்கும் சக்தியின் பெயர் லட்சுமி. என்றும் இவை அனைத்தும் சூரியனைக் கடந்து வெளி வரப்போகும்போது விஷம் இயக்கச் சக்தி… இந்த மூன்றும் சேர்த்து அது ஒரு சக்தியாகின்றது.

இயக்கத்தின் நிலைகள் கொண்டு சூரியன் சுழற்சியாகும் போது உருவாகும் வெப்பம் பராசக்தி என்றும் அதனுடன் இணைந்த காந்தத்திற்குப் பெயர் லட்சுமி என்றும் அதைக் கடந்து அந்த விஷத்தின் நிலையைத் தனக்குள் அது கவர்ந்து வரப்படும்போது ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

மூன்று சக்திகள் கொண்டு இயங்குவதால் அதையும் மூகாம்பிகை என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் நம் உயிரின் இயக்கம்…
1.தான் கவர்ந்து கொண்ட மணம்… ஞானம் என்ற நிலையில்
2.எதன் நிலைகள் கொண்டு அது கவர்கின்றதோ
3.அதன் இயக்கமாகத் தான் இயங்குகின்றது என்ற இந்த நிலையை நாம் உணர்வதற்குத்தான்
4.மூகாம்பிகை ஆலயமாக வைத்தார் கோலமாமகரிஷி.

இந்த கோலமாமகரிஷி. கடும் தவத்தால் கண்டுணர்ந்து தனக்குள் விளைய வைத்த சக்தியால் மண்ணாகி அணுக்களின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது என்றும் தனக்குள் கவர்ந்துணர்ந்த நிலை. இருப்பினும் அது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனால் கண்டுணர்ந்து உணர்த்தப்பட்ட உணர்வுகள் தான்…!

1.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வலைகள் அனைத்தும் இன்று நம் பூமியில் படர்ந்துள்ளது.
2.அதை நுகர்ந்தவர்கள் அனைவருமே மகரிஷிகள் ஆகின்றனர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று தனக்குள் அனைத்து சக்தியையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெறுபவர் எவரோ அவர்கள் அனைவரும் “மகரிஷி ஆகின்றார்கள்…!”

அதனால் தான் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமென்று திரும்பத் திரும்பச் சொல்வது…! அர்த்தமாகிறதல்லவா…!

மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே இருந்தாலும் பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும் போது
1.அதை உணரத்தான் பயன்படுத்த வேண்டும்
2.உணர்ந்தபின் அதை நீக்குதல் வேண்டும்.
3.அதாவது இன்று தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
4.ஆனால் தெரிந்த உணர்வுகள் நம் உடலிலே இணைந்திடக் கூடாது அதை நீக்கிடல் வேண்டும்.
5.தீமைகள் எதுவோ அதனை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ.. அதை ஆக்கப்பூர்வமாக மாற்றிடல் வேண்டும்.

காரத்தைத் தனித்து நாம் உணவாக உட்கொண்டால் காரத்தின் வேக உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது. ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவையோடு இணைக்கும் பொழுது சுவை மிக்கதாக மாற்றுகின்றது.

இதைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்… பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள் படும் வேதனையைப் பார்த்து சொல்லால் கேட்டுணர்ந்தாலும்… உணர்ந்த அச்சக்திகளை எல்லாம் நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம்… ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீவினையாகச் செயல்படும் நிலைகளை மாற்றிடல் வேண்டும்.

பிறர் தீமையைக் கேட்டுணர்ந்து தீமையிலிருந்து விடுபட நாம் உதவி செய்கின்றோம் ஆனாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நாம் கேட்டுணர்ந்தபின் அடுத்த கணம்…
1.நம் முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை நாம் கவர்ந்து
2.நமக்குள் அடுத்து தீமை விளைவிக்கும் நிலையை
3.அந்தத் தீமை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.

அதைத்தான்… அகஸ்திய மாமகரிஷி தன்னுள் கற்றுணர்ந்த உணர்வுகளை கோல மாமகரிஷி கவர்ந்து அன்றைய மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் எவ்வாறு எடுத்துரைத்தாரோ அதனை நாம் கவர்ந்து கொண்டால் நம்மில் இருக்கும் தீமைகளை அகற்ற இது உதவும்.

வசிஷ்டாத்வைதம் – விளக்கம்

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகள்

மகாமகம்

தமிழர் திருநாள் வீர விளையாட்டு எது..?

soul protecting importance

“பல நாள் பெற்ற ஆத்ம சக்தியைக் காக்கும் நிலையில்தான்” நம் ஜெப நிலை இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சாதாரணமாக ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டோமானால சில நாட்களில் அந்நீர் வழுவழுப்புத் தன்மை கூடி பாசி பிடிக்கின்றது.

“அவ்வழுவழுப்பு நிலை” ஏற்பட்ட பிறகுதான் அடுத்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே வளருகின்றது. “பிசின்” போன்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் அதன் ஜீவத்தன்மை முதிர்வு நிலை கொள்கின்றது.

அதுவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி காய்ச்சும் பொழுது அப்பாத்திரத்திற்கு அடியில் மண் போன்று படிவங்கள் வெள்ளையாகப் படிந்து விடுகின்றது.

இதைப் போன்று…
1.மனித உணர்வில் எடுக்கப்படும் அலைத் தொடர்பின் உணர்வு
2.சரீரம் சமைக்கும் நிலை கொண்டு ஆத்ம அலையின் “படிவமாகி விடுகின்றது…”

ஆத்மாவின் வண்ணத் தன்மை கொண்டு பிரகாச நிலை ஒளி சக்திகளை இச்சரீர சமைப்பினால் மனிதன் பெற்றானானால் மனித சக்தியில் சித்து நிலை பெற முடியும்.

மகரிஷிகளின் உயர் காந்த அலையை… உணர்வின் எண்ணம் கொண்டு “விழி கொண்டு ஒளி பார்த்து இச்சரீரத்தின் உணர்வில் எடுக்கும் ஜெப முறையினால்…” மனித உணர்வின் சஞ்சலமற்ற சம உணர்வு வளர்ச்சியின் தியானத்தின் முறை அறிந்து… தன்னைத்தான் தான் உணரக்கூடிய வழி அறிந்தானானால்… தன் வாழ்க்கை செயலில் அமைதியையும் தன் ஆத்மாவின் உயர்வின் வழியையும் ஒவ்வொருவரும் பெறலாம்.

நம் தேவைக்குகந்த நெல்லைப் பயிரிடுகின்றோம். நிலத்தை உழுது பருவம் பார்த்துப் பயிரிட்டு அதற்குகந்த பாதுகாப்பு எல்லாம் செய்கின்றோம். பின் அதனுடைய பலனை நாம் கண்டு நெல்லை அறுத்து பக்குவமாய் சேமிக்கவும் முற்படுகின்றோம்.

ஆனால் அதை நாம் எடுத்துச் சேர்ப்பதற்குள் பெரிய மழை வந்தால் எல்லாம் அழிகின்றது. அதைப் போன்று…
1.தியானத்தின் மூலம் பல பக்குவமான முறைகளை இச்சரீரத்தில் வளர்த்துப் பலன் பெறும் பக்குவத்தில்
2.உணர்வில் மோதும் பலமான மாற்றத்தினால் பல நாள் செயலின் பலனை இழந்துவிடும் நிலை போன்று
3.சரீர உணர்வால் எண்ணத்தில் பலமாக மோதும் எதிர்ப்பைத் தாங்காமல்
4.தவறிவிடும் நிலை உணர்வின் எண்ணத்தில் மோதுவது உண்டு.

ஆகவே… நெல்லை அறுக்கின்றோம் என்றால் அந்த நேரத்தில் மழை வருகிறது என்றால் அதற்குண்டான வேகத்தைச் செலுத்திப் பெற்ற பலனைப் பாதுகாக்கத் துரிதம் கொள்கின்றோம் அல்லவா…!

அது போன்று… நம் வழிமுறையில் நல்லொழுக்கத் தொடரில் வளர்த்த வலுவை…
1.எதிர்ப்படும் மோதலிலிருந்து பாதுகாக்கும் துரிதமாக
2.எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதாமல்
3.நல்லதைப் பாதுகாக்கும் உணர்வு ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்…! தன்னைத்தான் தான் உணரும் பக்குவத்திற்கு…!

peace and silence

“உரமேறிய கட்டையாக” நம்மை ஞான வழியில் உயர்த்திக் கொள்ளும் பக்குவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனுக்குத்தான் உணர்வின் எண்ணங்கள் பல நிலைகளில் பல வளர்ச்சியை வளர்க்கத்தக்க ஒளி நிலை கொண்ட உயிர் ஆண்டவனின் பிம்ப நிலை உண்டு.
1.உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்ற
2.அந்த வழித் தொடரில்தான் ஞானமே பிறக்கும்.

உணர்வில் கார அலைகள் (கோப அலை) உந்தா விட்டால் வீரம் பிறக்காது. ஆனால் அந்தக் கோப உணர்வு ஏற்படும் காலத்தில் அதன் வளர்ச்சியை சரீரம் அதே தொடர்பில் வளர்த்துக் கொண்டதென்றால் விளைவு வேறாகிவிடும்.

காரமான மிளகாய் விதையை மண்ணிலே ஊன்றியவுடன் அது வளர்ந்து மூன்று மாதத்திற்குபின் அதன் வளர்ச்சியின் பலனை அம்மிளகாய் விதை வளர்த்த மிளகாயை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்று
1.இக்கார உணர்வான கோப நெடியை நாமெடுக்க
2.அதே உணர்வைச் சரீரம் வளர்க்க இதன் தொடர் அன்றே தெரியாது.
3.கோப குணத்தின் அணுக்கள் சரீரம் முழுவதும் வளர்ந்து அதனுடைய பலனாக
4.மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குப் பிறகு
5.வாதமோ இரத்தக் கொதிப்போ இதய வலியோ மனிதன் நிச்சயம் பெறுகின்றான்.

ஆகவே கோப உணர்வு உந்தும் நிலையிலேயே அதைத் தன் ஞானத்தால் வீரமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி அந்த வீர உணர்வை நாம் பெறும் பொழுது
1.எண்ணத்தின் வலுக் கொண்டு உயர் ஞானம் பிறந்து
2.மீண்டும் அக்கோபமான உணர்வில் நாம் சிக்காமல் இருக்கும் நிலையாக
3.பாதுகாப்பு வேலியான சாந்த குணத்தை நாம் நமக்குள் அவசியம் வளர்க்க வேண்டும்.

கோப குணத்தின் காரமான உணர்வால் எப்படி உடலில் நலிவை ஏற்படுத்திக் கொள்கின்றோமோ அதைப் போன்று
1.அதே கோபத்தை வீரமாக்கும் ஞானத்தின் சாந்தத்தால்
2.ஆத்ம வலு சரீரத்தையே உறுதியான தன்மைக்கு
3.எதற்கும் அஞ்சாத “உரமேறிய கட்டை அவன்…” என்ற ஞானத்தின் வழித் தொடரைப் பெற முடியும்.

ஆக… உறுதியான எண்ணத்தின் செயலுக்கு இச்சரீரத்தை இக்கோப உணர்வு உந்தினால்தான் அதைச் செலுத்தும் நிலைக்கொப்ப “உறுதி நிலையோ… அல்லது நலிவு நிலையோ…” ஏற்படும் தன்மை கொள்கின்றது.

இதைப் போன்று தான் மனித உணர்வின் எண்ணத்தில் உந்தப்படும் குணத் தன்மை ஒவ்வொன்றையுமே “தன் ஞானத்தால்” பக்குவ குணத்தை நாம் பெறல் வேண்டும்.

இதன் தொடரில் தான் பய உணர்வு ஏற்படும் பொழுது பயத்தின் தொடர்பில் “மரண பயம்” என்ற கோழை உணர்விற்குச் செலுத்தாமல்
1.தைரியம் என்ற பல உணர்வைச் சாந்தமுடன் நாம் செலுத்தும் பொழுது மன பலம் கூடி
2.ஞானத்தால் சிந்திக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

குழந்தைகள் வளரும் நிலையிலேயே பயமுடன் கூடிய தைரியத்தில் மன பலம் கூடும் பக்குவத்தை வளர்க்கும் செயல் தான் “தந்தை சொல் மிக்க மந்திரமல்லை” என்று சொன்னதன் பொருள்…!

வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உபதேச உணர்வுகளை ஊட்டி குழந்தைகள் உயர் ஞானத்தை சிந்திக்கவல்ல மன பலம் கொண்ட தைரியத்தை ஊட்டி நாம் அவசியம் வளர்க்க வேண்டும்.

ஆனால் வெறுமணே பயத்தை ஊட்டி மரண பயம் என்ற உணர்வில் அச்சத்தை ஊட்டும் குழந்தை கோழையாகிவிடும்.

மேலும் அந்தப் பய உணர்வின் எதிர் அலையால் அக்குழந்தையே விபத்தில் சிக்கும் சந்தர்ப்பம் உண்டாகின்றது. விபத்துகள் நடப்பதெல்லாம் அச்சத்தின் உணர்வு வளரும் இத்தகைய பய அலையினால்தான்.

ஆக மொத்தம்…
1.மனித உணர்வின் எண்ணம் எதை எடுக்கின்றதோ
2.அதில் ஜீவன் பெறுவதைத்தான் மனைவியாக அன்று ஞானிகள்
3.தத்துவ நூல்களில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்கள்.

இப்படி… எந்தெந்த எண்ணத்தை எக்குணத்தில் இச்சரீரம் வளர்த்துக் கொள்கின்றதோ… அஜ்ஜீவ வளர்ச்சியின் பலனை சாந்தமான நற்குணத்தைக் கொண்டு… இருபாலரும் இல்லற இணைப்பின் இறை சக்தியின் உண்மையை உணர்ந்து…
1.உயர் காந்த மின் சக்தியை
2.உணர்வின் எண்ணத்தால் வளர்க்கும்
3.ஆத்ம ஐக்கிய இணைப்பினால் ரிஷித் தன்மை பெறலாம்.

நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! அரோகரா…! இப்படிப் பாடுவதன் உட்பொருள் என்ன…?

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும் 

நாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…?

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்..?

thavasi

“பிரம்மச்சரியத்தால்” எந்தத் தவசியும் ரிஷியும் உருவாக முடியாது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மெய் ஞானி அன்று தன் ஞானத்தின் உண்மை நிலையில் உணர்த்திய தத்துவ வழி முறையில்
1.தெய்வத்தின் செயல் நிலையில் சுட்டிக் காட்டிய விக்கிரக வழிபாட்டு முறையிலேயே
2.ஒரு உயிர் அணு மூல முதலாக வளர்ச்சியுற்ற வழித் தொடருக்கு
3.விநாயகன்…! என்ற யானையின் தோற்றமுடன்…
4.மனித உரு முருகா…! என்ற அறு குண அழகனைக் காட்டினார்கள்.

உருவத்தில் பெரியது யானை…. எண்ணத்தில் உயர்ந்தவன் மனிதன். அவ்வுயிரணுவைத் தெய்வமாகத் தொடர்புபடுத்திச் சுட்டிக் காட்டிய வழித் தொடரில்… உருவ அமைப்புகளில் ஆதியில் மெய் ஞானிகள் வழிகாட்டிய தத்துவத்தில் “பல உண்மைகள் உண்டு…”

சில தெய்வங்களுக்குக் கிருஷ்ணாவதார கீதையின் தத்துவத்தில் ஒருவனுக்குப் பல ஆயிரம் மனைவிகளைச் சுட்டிக் காட்டினார்கள். அதன் உண்மைத் தத்துவத்தை நம் ஞானத்தால் எடுத்தால் அவ்வுண்மை நமக்குப் புரியும்.

மனிதன் பெற்ற ஒளி சக்தியில்… மனித எண்ண ஞானம்.. தான் பகுத்தறிவில் உயர் தன்மை கொண்டு மனித உடல் ஜீவனுடன் உள்ள பொழுது
1.உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எடுக்கப்படும் குணங்களின் வளர்ப்பு ஒவ்வொன்றையுமே ஜீவிதம் கொண்ட மனைவியாய்
2.பெண் சக்தி மனிதனுக்குள் வளரும் நிலை பெண் தன்மை கொள்ளும் குணங்களை எல்லாம் மனைவியாகச் சுட்டிக் காட்டி
3.கீதையின் தன்மையை நமக்கு அன்றே மெய் ஞானிகள் புகட்டினார்கள் பாடநிலையாக…!

இராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் எந்த அவதாரமாக இருந்தாலும்…
1.மனிதன் பிரம்மச்சரியம் கொண்டு எச்சக்தியையும் பெறமுடியாது என்ற நிலையைத்தான்
2.மெய் ஞானிகளும் ரிஷிகளும் சுட்டிக் காட்டினர்
3.தானும் அவ்வழியில்தான் தன் ஞானத்தை வளர்த்தனர்.

இல்லற உணர்வில் எண்ணத்தில் வளர்க்கும் குணத்தில் இரு நிலை வளர்ச்சியின் அன்பால் பெறும் நிலையின் மகவுகளின் பரிவு பாசம் வளருமேயன்றி உணர்வின் எண்ணத்திலேயே
1.அன்பின் ஜீவிதத் தொடர்பின் உணர்வு பிணைப்பு வளரா விட்டால்
2.எத்தவசிகளும் ஞானிகளும் “சரீரம்” பெற்றிருக்க முடியாது.

ஜீவ உணர்வின் எண்ணத்தில் வளரும் குணத்தின் பிடிப்பு நிலை கொண்டு… தொடரும் இல்லறப் பிணைப்பின் உடல் தொடர்பின்… “ஆத்ம தொடர்பு கூடும் இரு எண்ணங்களும்…” ஒன்றாய் வலுக் கூடத் தொடங்கும்.

அப்படிக் கூடப்பெறும் எண்ணத்தின் உயர் ஞான தியானத்தால்… ரிஷி பத்தினி சக்தியின் வளர்ச்சி ஈர்ப்பில்… இரு நிலை கொண்டு ஒரு நிலை வளர்க்கும் செயல் வழி சரீரப் பிணைப்பில் மக்கள் தொடரும்.. ஆத்மப் பிணைப்பின் உயர் ரிஷி சக்தி பெறக்கூடிய படைப்பின் படைப்பிற்கு… இவ்விரு ஆத்மாவின் ஐக்கிய தொடர்பில் பிணைக்கப்பட்டு மூலக்கரு வளர்ச்சியுறும்.

தைப் பொங்கல் அன்று சுவைமிக்க உணவை உருவாக்குவதன் காரணம் என்ன…?

மகாபாரதத்தில் திரௌபதியை அவமதிப்பதாகக் காட்டுகின்றார்கள் – விளக்கம்

விநாயகர் தத்துவம்

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் 48 நாள்களுக்குள் எங்கே செல்கிறது…?

mosquito bite

நசுக்கினாலே உருவம் தெரியாது போகும் கொசுவிடம் இருக்கும் “வலுவான ஆற்றல்”

கொசுத் தொல்லையாக இருக்கின்றது..! என்று கொசுக்களை எல்லாம் கொல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அது எத்தகைய வேதனைப்படுகின்றதோ அந்த வேதனை உணர்வுகள் கொசுவின் உயிரான்மாவுடன் கலக்கின்றது.

“கொன்று விட்டோம்…!” என்று நாம் எண்ணும் போது எந்த எண்ணம் கொண்டு கொன்றோமோ கொசுவின் உயிர்கள் நம் உடலுக்குள் வருகின்றது.

உதாரணமாக ஒரு கொசு நம் மீது அமர்ந்து அது இரத்தத்தை குடிக்கும் போது உற்றுப் பார்த்து “அதை நசுக்க வேண்டும்…” என்று மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நம் கை கொண்டு அடிப்பதற்கு முன்னாடி அந்தக் கொசு பறந்துவிடும். மனிதனை ஒத்த அறிவு அதற்கு இல்லை என்றாலும்
1.மனிதனின் அறிவின் ஞானத்தைப் பெற்ற “இரத்தத்தை” (மனித உணர்வுகள் கலந்த) அது புசிக்கும் போது
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதற்குள் அந்த உயிர் அதை இயக்கிக் காட்டும்
3.ஆகவே அது தப்பித்துக் கொள்ளும்… இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

கொசு நம்மைக் கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தால் நமக்குள் அரிப்பும் தடிப்பும் ஏற்படுகின்றது. ஆயிரம் கொசுக்களை நாம் நசுக்குகின்றோம் அல்லது கொல்கிறோம் என்றால் அந்தத் தடிப்புகள் உடல் முழுவதும் நிச்சயம் வரும்.

சில பேர் அமாவாசை அன்று உடலெல்லாம் தடிப்பு வருகின்றது… மேல் எல்லாம் அரிப்பு வருகின்றது என்று கூடச் சொல்வார்கள். இது எல்லாம் இறந்த அந்தக் கொசுக்களின் நஞ்சு கலந்த நிலைகள் உடலுக்குள் சென்ற நிலையில் இயற்கையின் செயலாக அப்படி உருப்பெறும்.

யானையின் தோல் மிகவும் முரடானது. ஈட்டியால் குத்தினாலும் உடம்புக்குள் இறங்குவது கொஞ்சம் கடினம். ஊசியால் குத்தினாலும் ஊசி வளையுமே தவிர ஊசிக்கு வலு இல்லை என்று கூடச் சொல்லலாம். யானையின் தோலுக்கு அவ்வளவு சக்தி உண்டு.

ஆனால் கொசுவைக் கையால் நசுக்கி விட்டால் அதனுடைய உருவத்தையே நாம் காண முடியாது. அப்படி நசுக்கப்படும் நிலை பெற்றாலும் “தனது மூக்கால்…” ஊசி போல யானையின் தோலுக்குள் ஊடுருவி அதனின் இரத்தத்தைக் குடித்துவிடும்.

கொசுவிற்கு அவ்வளவு பெரிய வலு உண்டு…!

கொசுவின் முகத் துவாரத்தில் இருக்கும் நஞ்சின் தன்மையை அது பாய்ச்சியபின் அந்த யானையின் தோல் விலகுகின்றது. கொசு தன் முகவாயை உள் செலுத்துகின்றது.

உள் செலுத்தி அது தன் மணத்தால் இரத்த நாளங்கள் ஓடும் பாகத்தை நுகர்ந்தறிந்து அந்த இரத்தத்தைக் குடிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் யானைக்குத் தான் வலு என்று. யானையைக் காட்டிலும் கொசு மிகச் சிறிதாக இருப்பினும் அதனுடைய வலுவைக் காட்டிலும் அதைப் பிளந்து அது உணவாக உட்கொள்ளும் திறன் அதற்கு உண்டு. கொசுவை எளிதில் மதிக்க வேண்டாம்…!

ஒரு சமயம் காட்டிற்குள் கொசு தாக்காமல் இருப்பதற்காக சில உணர்வலைகளைப் பரப்பச் செய்தார் குருநாதர். அப்பொழுது என் அருகில் கொசுக்கள் வரவில்லை.

காட்டுக் கொசுவிற்கு வலிமை ஜாஸ்தி. மற்ற மிருகங்களின் இரத்தத்தைக் குடித்துப் பழகி இருப்பதனால் மனிதனக் கடித்தால் மிகக் கடுமையான வேதனைகள் வரும்.

குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். முதலிலே அவர் சில் அலைகளைப் பாய்ச்சி விட்டார். அதனால் நான் படுத்து உறங்கும்போது அந்தக் கொசுக்கள் கடிக்காதபடி ஆனந்தமாகத் தூங்கினேன்.

சிறிது நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அவர் செயலைக் காட்டி விட்டார்…!
1.கொசுக்கள் வராதபடி செய்த அலைகளை எடுத்து விட்டார்.
2.எல்லாக் கொசுக்களும் ஏகக் காலத்தில் என்னைக் கடிக்கத் தொடங்குகின்றது.

என் இரத்தத்தைப் பூராமே அது குடிக்கின்றது. என் உடல் முழுவதும் அரிப்பு எடுத்து விட்டது. என்னால் வேதனை தாங்க முடியவில்லை. கல்லை வைத்துத் தேய்க்கின்றேன்.

இரத்தம் ஒழுகினாலும் தேய்க்கத் தேய்க்க அதன் மேல் ஆனந்தம் வருகின்றது. அரிப்பின் தன்மை தாங்காது நகத்தால் சுரண்டினாலும் அதற்கு அவ்வளவு ஆனந்தம் வருகின்றது.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கிறார்…! நீ வலு பெற்றவனாக இருக்கின்றாய்.. இருந்தாலும் அந்தக் கொசுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது என்று பார்…!

அதே சமயம் அதை எல்லாம் நீ தேய்த்துக் கொல்லும்போது அதனுடன் கலந்த விஷத்தின் உணர்வின் தன்மை உன் உடலுக்குள் எவ்வாறு புகுகின்றது…?

உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தபின் அதுவும் (கொசுவின் உயிர்) கலந்து அது குடி கொண்டு இருக்கும் காலத்தில் இன் இரத்தத்தைத் தனதாக மாற்றி… அது எப்படி ஜீவ அணுவாக மாறுகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஒரு தட்டாம்பூச்சி தன் உடலில் விளையும் கருவின் தன்மையை அது மற்ற தாவர இனங்களில் இட்டுவிட்டால் அதனின் சத்தை இது நுகர்ந்து அதனின் உணர்வின் செயலாகப் பட்டாம் பூச்சியாக அது விளையும்.

1.தாவர இனத்தின் சத்தை எடுத்து அந்தப் பூச்சி உருவாவது போல…
2.நம் உடலுக்குள் வந்த இந்தக் கொசுவின் உயிரான்மா
3.அது எத்தகைய நிலையைச் செயல்படுத்தி தன் உணர்வின் நிலைகளை பரப்பி
3.இரத்தத்தையே மாற்றி அது அதன் உணவாக எப்படி எடுத்துக் கொள்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்த உணர்வின் தன்மை மாற்றம் அடையும் போது கொசு மனிதனுக்குள் மனிதனாக உருப்பெறும் அணுவாக மாறுகின்றது.

முதலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றது. தன் உணவைத் தேடுகின்றது. நம் உடலில் உள்ள உணர்வின் தன்மை அதனின் உணர்வுகள் மாற்றமடைந்து மனிதனில் உருவாகும் கருவாக மாறுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!

kannappar

கண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்

கண்ணப்பநாயனார் வேட்டையாடிப் பிழைத்தாலும் பக்தி நிலைகள் கொண்டு ஆண்டவனுக்காக வேண்டி தான் வேட்டையாடியதைக் கொடுத்தார்.

ஆனால் கொடுத்து வந்தாலும்… ஒரு நாள் ஈசன் கண்ணிலிருந்து இரத்தம் ஒழுகப் போகும்போது விரலை வைத்துத் தன் கண்ணை நோண்டி எடுத்துக் கொடுத்தார். பக்திப் பெருக்கத்தில் இப்படிக் கொடுத்தார்.

கண்ணப்பநாயனார் ஈசனுக்குக் கண் கொடுத்தார் என்றால் எதை அவர் கொடுத்தார்…?

தன்னுடைய நிலைகள் கொண்டு இதை அடைத்து (இரத்தம் ஒழுகுவதை) அதைக் கொடுத்தார். எதை…?

தான் கொன்று புசித்த உணர்வின் தன்மை எவ்வாறு…? என்ற நிலைகளைத் தான்.. தன் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு நிலைகள் வேதனைப்படுவதை எல்லாம் அடைத்தார்…! என்பதே கண்ணப்பநாயனாருடைய கதை.

1.தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகளை… அதை அழுத்தி
2.அந்தக் கண் ஒளியின் தன்மை எதை இறையாகத் தேடுகின்றது…? (தேட வேண்டும்…!) என்ற
3.சூட்சமத்தை உணர்த்துவதற்காகத் தான் இப்படிப்பட்ட காவியங்கள் எல்லாம் படைக்கப்பட்டது.

ஆனால் பக்தி மார்க்கங்களில் இவர்களுக்குத் தகுந்த மாதிரி தான் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்களுடைய உணர்வு எதுவோ அதற்குத் தகுந்தவாறு எண்ணுகின்றார்கள்

கண் என்றால் இப்பொழுது “ஆயிரம் கண்ணுடையாள்” என்று சொல்வார்கள்.
1.நமக்குள் எந்தெந்தக் குணங்கள் இருக்கின்றதோ
2.அதனதன் நினைவு வரப்படும்போது (கோபம் பயம் ஆத்திரம் வேதனை அன்பு பரிவு பாசம் மகிழ்ச்சி போன்ற எத்தனையோ குணங்கள்)
3.அதன் உணர்வின் அலையையே தனக்குள் அறிந்து தனக்குள் அதைக் கவர்ந்து கொள்ளும்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நமக்குள் சக்தியாக இருக்கும் நிலைகள் எந்தெந்தக் குணமோ இவை எல்லாம் அதன் வழி தான் காட்டும்… உணர்த்தும்… இயக்கும்.

உதாரணமாக… என் நண்பனைப் பார்க்கின்றேன்.. அவனைப் பதிவு செய்து கொள்கின்றேன். இருந்தாலும் அந்த நண்பனைப் பற்றி நான் நினைக்கப்படும் போதெல்லாம்
1.இந்தக் கண்கள் தான்…
2.நண்பனைப் படமாக மீண்டும் காட்டுகின்றது

ஏனென்றால்… நண்பனைப் பார்த்துப் பதிவான உணர்வுகள் விளைந்து அணுக்களாக இங்கே இருக்கின்ற்து. இதே கண் தான் அங்கே படம் எடுத்தது. அதே உணர்வு தான் எனக்குள் பதிவானது.

அதை அறிந்தாலும் அந்த உணர்வின் சத்தை அதை மீண்டும் கவர்ந்து வளர்க்கச் செய்கிறது.

1.ஒரு செடி தாய் மரத்தின் சத்தைத் தனக்குள் எடுக்கின்றது என்றால்
2.அந்த மணத்தை நுகரப்படும் போது அது கண்..
3.தன் இனமான சத்தை அதனுடைய நிலைகளைத் தெரிந்துதான் எடுக்கின்றது.

இதைப்போல தான் கண்ணப்பநாயனார் காவியத்திலும் காட்டப்பட்டுள்ளது.

அதாவது
1.உடலான சிவத்திற்குள் அந்தத் தீமை என்பதை நீக்கிட
2.அந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை
3.கண்ணின் நினைவு கொண்டு (கண்ணை எடுத்து உயிரிலே.. அந்த ஈசனுக்குப் பொருத்துவதாக) இதை அழுத்திக் காண்பித்தார் என்று
4.சாதாரண மக்களுக்கும் இந்தத் தத்துவத்தை உணர்த்த இந்த காவியங்களைக் கொண்டு வருகின்றார்கள்.

உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் உயிருடன் ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும் என்பதற்குத்தான் “தன் கண்களைப் பிடுங்கி ஈசனுக்கு அவர் கொடுத்தார்…” என்று தெளிவாக்குகின்றார்கள்.

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றான்…?

ஒரு தெய்வத்தை வணங்குபவர் அடுத்த தெய்வத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்…?

கடவுள் ஒருவனே என்றால் அது எப்படிச் சரியாகும்…?

பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்ற கைகேயியின் உணர்வுகள்

realization-of-gods

வழி தெரியாதபடி செல்லும் இன்றைய நிலையிலிருந்து மீள… ரிஷிகள் காட்டும் வழியில் மனிதன் செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தன்னைத்தான்… தான்… தான் உணர்ந்து…
தன்னைத்தான்… தான் நம்பி

தன்னைத்தானே… தான் வளர்த்து…
தன் வழியின்… வழியறிந்து

தன் வழியை… தான் அமைத்து…
தன் உயர்வை… தான் வளர்க்க

தன்னில் தான்… இறை உணர்ந்து…
தன்னையே தான்… இறையாக்கி

தனதான இறை உயிரை…
தன்னில் தானே… இருள் அகற்றி
தன்னில் தானே… ஒளியாகலாம்…!

மனிதன் தன்னைத்தான் தான் உணர்ந்து… தன் வழியில் தன்னை நம்பி…
1.உண்மை நிலையை அறிந்து
2.தன் உயர்வை வளர்த்துக் கொள்ள
3.இப்பூமியில் மனித உணர்வு எண்ணம் செயல்பட்ட காலத்திலேயே
4.சித்தர்களும் சப்தரிஷிகளும் பல உண்மையை உணர்த்தியும் செயல்படுத்தியும் காட்டினர்.

ஆதிசங்கரின் காலத்தில் அத்வைதத் தத்துவப்படி… மனிதன் உணர்வின் எண்ணத்தை உயர் ஞானமாக்கி… உயரும் மார்க்கத்தை அணுவுக்குள் அணுவாக உணரும் பக்குவத்தை மனிதனுக்கு உணர்த்தினார்.

அதன் தொடரில் மனிதன் தன்னைத்தான் தான் நம்பி உயரும் பக்குவத்தை அவருக்கு அடுத்த நிலை நான்கு வகை வேதங்களாக்கி தன் வாழ்க்கை நிலைக்கு ஒத்த சௌகரியப்படி காலப்போக்கில் மாற்றி விட்டனர்.

1.வேத மந்திர உச்சரிப்புகளும் பலி பீட மந்திரங்களும் பல வழியில் பிரிக்கப்பட்டு
2.மகரிஷிகளினால் வழிப்படுத்தப்பட்ட தன்மைகள் எல்லாம்
3.மத வழிகளிலும் அரசாட்சியின் பிடிப்புக்கொப்ப மாற்றப்பட்ட தன்மையினால்
4.இன்று தெய்வத் தன்மையின் உண்மை நிலையையே அறிய முடியாமல் போய்விட்டது.

இன்றைய காலப்போக்கில் “பூஜையும்… பக்தியும்…” வழி தெரியாத முறையில் மனிதனின் நாட்டங்கள் சென்று கொண்டிருக்கும் சிதறுண்ட இத்தன்மையை மாற்றி
1.மனிதன் முதலில் தன்னைத்தானே தான் உணர்ந்து
2.தன்னை நம்பி… தன் வழியை மெய் அறிந்து…
3.உயர வேண்டிய ஒளித் தன்மையின் சத்தியத்தின் உண்மை நிலை அறிந்து செயல்பட வேண்டும்.

முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு இன்றும் நாம் செய்யும் சாங்கியத்தின் விளைவுகள்

வாசல்படிக்குப் போடும் கல்லை வைத்துத்தான் சாமி சிலை செய்கிறார்கள்

யாகம் என்றால் என்ன எப்படிச் செய்ய வேண்டும்..?

சுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…?

சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?

முருகன் காட்சி கொடுப்பானா… எந்த வழியில் கொடுப்பான்…?

ஒரு தெய்வத்தை வணங்குவோர்… அடுத்த தெய்வத்தை வணங்க நான் மாட்டேன் என்று சொல்வதில் என்ன உண்மை உள்ளது…?

FIRST STEP IN DHIYANAM

நம் காரியங்கள் சித்தியாக வேண்டும் என்றால் செய்ய வேண்டிய “முதல் பிரார்த்தனை”

மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது “ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் நம் உயிர் உடலுக்குள் நின்று ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது.

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அனைத்தையும்…
1.சுவாசிக்கும் அந்த உணர்வின் சத்தை
2.அந்த உணர்வின் அணுவாக
3.ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது.

இது தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

காலையிலிருந்து இரவு வரைக்கும் நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அனைத்தும்… நம் உடலுக்குள் நம் வாழ்க்கையில் இவ்வாறு சதாசிவமாக (உடலாக) ஆகிக் கொண்டே உள்ளது.

அதே சமயத்தில் நம் உடலான சிவனுக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களுக்கும் “நம் உயிரே குருவாக” இருக்கின்றது.

ஆகவே…
1.நாம் ஒவ்வொரு முறையிலும்
2.ஒவ்வொரு தியான நேரத்திலும்
3.எந்தக் காரியங்களுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணினாலும்
4.அம்மா அப்பாவை எண்ணி அவர்கள் உயிரைக் கடவுளாக மதித்து
5.அவர்கள் நம்மைக் காத்தருளிய குணங்களைத் தெய்வமாக மதித்து
6.ஒவ்வொரு நொடியும் நமக்கு நல் உணர்வுகளை ஊட்டி நல் வழி காட்டிய அவர்களைக் குருவாக மதித்து
7.ஈஸ்வரா என்று அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
8.எங்கள் காரியங்கள் வெற்றி பெறவேண்டும்
9.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
10.என் செயல் அனைத்தும் எல்லோருக்கும் நன்மை பயக்கும் செயலாக இருக்க வேண்டும்
11.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்ற உணர்வினை முதலிலே செலுத்த வேண்டும்.

இந்த முறைப்படி நாம் எண்ணும் போது அத்தகைய குணங்களை உயிர் நமக்குள் ஓ… என்ற ஜீவ அணுவாக மாற்றிவிடுகின்றது.

அதன் பின் அந்த எண்ணங்களே… அந்தக் குணங்களே… “குருவாக நின்று” நாம் சொல்லால் சொல்லப்படும் பொழுது செயலுக்கும் அந்தக் குணங்களே குருவாக நின்று கேட்போர் உணர்வுகளிலும் நல்ல உணர்வுகளாகப் பாய்ந்துவிடும்.

அந்த நல் உணர்வுகள் பாய்ந்த பின்..
1.அவர்களும் நமக்கு நன்மை செய்யும் பயன்களை உருவாக்க இது உதவும்.
2.அதே போல் நம் சொல்லிலே இனிமையும்… நல் செயலை ஊட்டும் குணங்களாக நமக்கும் இது அமைகின்றது.

ஆகவே ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தக் காரியங்கள் செய்தாலும் அல்லது செய்ய எண்ணினாலும் நம் உயிரை ஈஸ்வரா.. என்று எண்ணிவிட்டு அடுத்த காரியங்கள் எது நன்மையோ அவைகளை மேலே சொன்ன முறைப்படி எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது அத்தகைய நல்ல அணுக்களாக உடலுக்குள் உருவாகி அந்த உணர்வின் செயலாக
1.அந்தக் குணங்களே நமக்குக் குருவாக நின்று
2.நல்வழிப்படுத்தும் நற்செயலாக நம் வாழ்க்கையில் அமைவதும்
3.நாம் எண்ணிய நல்ல உணர்வுகள் நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்கி
4.நம் உடலைப் பாதுகாக்கும் நல்ல குருவாகவும் அது அமையும்.

நாம் ஒவ்வொருவரும் இரவிலே தூங்கச் செல்லும் போதும் சரி… காலையில் எழுந்தாலும் சரி… அவசியம் இதைப் போன்று நாம் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் நாம் வெளியிலே செல்லும் போதும் சரி இதைப் போன்ற நல்ல எண்ணங்களை நாம் எண்ணி
1.அந்தச் செயல்களை செவ்வனே செய்ய வேண்டும் என்று எண்ணினால்
2.செவ்வனே செய்யும் அணுக்களாக நமக்குள் உருவாகும்
3.உருவான அந்த அணுக்கள் தன் உணவுக்காக ஏங்கும் போது
4.மீண்டும் அதே உணர்வுகளைச் சுவாசிக்கும் போது அந்த உணர்ச்சிகள் நம்மை நல்வழியில் செயல்படுத்தும் நிலை உருவாகும்.

இதுவே நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் நல்ல உணர்வாகப் பதிந்து நம்முடன் இணக்கமாகச் செயல்படும் அந்த உணர்ச்சிகளை ஊட்டும்…! பகைமையை அகற்றி மகிழ்ந்து வாழச் செய்யும்.

பூமிக்குள் நடக்கும் செயல்களை அறிந்து கொள்ளுங்கள்

கறிவேப்பிலைச் செடி எப்படி உருவாகின்றது

வேதங்களும் உபநிஷத்துக்களும்

Saptarishis

சஞ்சலமில்லாத எண்ணத்துடன் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வால் பெற்ற சஞ்சல அலையின் உண்மைகளைப் புரிந்து உணர்ந்து பெற்ற உயர் ஞானத்தால் தான் அந்த ரிஷி சக்தியைப் பெற்றார்கள்.

அதே போல் மனிதன் தன் உணர்வின் சஞ்சலத்தைப் போக்கி…
1.தன்னைத்தான் தான் உணர்ந்து
2.தன்னிடமுள்ள திரையை விலக்கி
3.உயர் ஞானத்தின் உண்மையின் ஒளி சக்தி பெற
4.உணர்வின் குணத்தைச் சமப்படுத்தி அறியும் பக்குவத்தைப் பெற
5.ரிஷிகளாய் அன்றும் இன்றும் தன்னுடைய உயர் தத்துவத்தை
6.மனித எண்ணத்தின் உணர்வின் வலுவிற்கு வழி காட்டுகின்றனர்.

தன்னைத்தான் உணரக்கூடிய வழி முறையில் தன் ஞானத்தைப் பெறும் பொழுது…
1.கோபம் வேதனை பயம் சலிப்பு போன்ற குணங்கள் உந்தப் பெறும் பொழுது
2.அந்த உந்தல்களைச் சமப்படுத்திட…
3.தைரியத்தின் உயர் ஞானம் கொண்டு உயரக் கூடிய வளர்ச்சிக்கு
4.இச்சரீர உயிர் அணு… உயிராத்மாவின் வலுவைக் கொண்டு…
5.உயர்ந்த ஒளி சக்தியை மனித ஞானம் வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு
6.மெய் வழி காட்டும் தொடரில் ரிஷிகள் படைத்த காவியங்களில் பல உன்னதத் தத்துவங்கள் உண்டு.

ஒன்றை ஒத்து ஒன்று… ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறத்தக்கதே இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தின் நியதி.

பூமியின் ஆரம்ப உயிர் அணுத் தோன்றி மனித உணர்வின் எண்ண குணங்கள் வளர்ந்தமைக்கும்… இன்றைய கலியில் மனிதப் பெருக்கத்தின் எண்ணத்தின் ஈர்ப்பலையும்… மின் காந்த வானொலி அலைத் தொடரும்… செயற்கையின் விஞ்ஞான அமிலத்தின் செயலும்… இக்காற்றலையில் அதிகமாக இன்று படர்ந்துள்ளது.

அன்று ரிஷிகள் காட்டிய தத்துவ முறைக்கும் இன்றைய கலியின் நடைமுறைக்கும் பல கோடி மாற்றங்கள் ஆகி விட்டது. நம் உணர்வின் ஞானத்தைச் சஞ்சலமில்லா சாந்தத் தொடரில் ரிஷிகளின் எண்ணமுடன் கலந்து… நாம் எடுக்கும் நேரடி சுவாச மின் காந்த உயர் சக்தியின் வலுவை.. இச்சரீரம் பெறப் பெற… இச்சரீரமே “ஒளித் தன்மை கொள்ளும்…!”

பக்தி மார்க்க வழித்தொடரில் மனதை அந்தந்தத் தருணங்களில் இனிமை கலந்ததாகப் பக்குவப்படுத்தலாமே தவிர தன் ஞானத்தை உயர் ஞானமாக்கும் நிலை இல்லை.

உணர்வின் எண்ணத்தைச் சஞ்சலமில்லா ஒளி சக்தியின் ரிஷி சக்தியின் தொடர்பால் அவர்கள் பெற்ற சக்திகளை நம் உடலுக்குள் பெருக்கி அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நம் எண்ணத்தின் உணர்வு வீரியம் கொள்ள வேண்டும். அவர்கள் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இக்கர்ம காரிய வாழ்க்கையில் பலவாக பல கோடி ஆண்டுகளாய் பல கோடி மனிதர்கள் எடுத்து வளர்த்த உணர்வலையின் சுழற்சியின் மத்தியில் வாழும் நம் உணர்வின் எண்ணத்தை இவ்வுலக ஈர்ப்பில் செலுத்தும் பொழுது தன்னைத்தான் உணர முடியாத நிலைக்கு இன்றைய உலக நிலை வந்துவிட்டது.

மேலும் இக்காற்றலையில் உள்ள உணர்வுகளின் வலுவையும் நம் ஆத்மாவில் ஏற்றிக் கொண்டு அதன் குறைவு நிறைவில்…
1.நம் சரீரத்தில் வளரும் உயிரணுக்களையும் உயிர் ஆத்மாவையும்
2.குறை உணர்வின் மத்தியில்
3.குறைவான எண்ணத்தில்
4.குறை கொண்ட வாழ்க்கையாக அமைந்து விட்டது.

இதிலிருந்து மீள ஒளி சக்தியின் வீரியம் கொண்ட மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு… ஞானத்தால் உணரக்கூடிய “உயர் ஞான திருஷ்டி” என்ற சில உண்மைகளை உணர்த்தி வரும் அவர்கள் தொடர்பில் நாமும் வளர்ந்திடல் வேண்டும்.

அவர்கள் மூலம் பெற்ற நல் உணர்வின் சுவாசம் கொண்டு… நாம் வளரும் பூமியில்… நம் உணர்வின் சேவை… “பிறரையும் வளர்க்க…” சஞ்சலமில்லா உணர்வைச் சாந்தமுடன் நாம் பெற வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வை உரமாக ஏற்றி ஆத்ம சுத்தி செய்யுங்கள் 

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் பற்றிட வேண்டும் 

எத்தகைய தீமையும் பகைமையாகக் கருதாது தனக்குள் அடங்கி தன்னுடன் இணைந்து இயக்கும் நிலை – கல்யாணராமன் 

trust-yourself

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…!

“ஞானிகளைப் பற்றிய முழு உண்மைகளையும் நீங்கள் கேட்க வேண்டுமென்றால்” வருடக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டும் உங்களுக்குப் பொறுமை பத்தாது.

உணவு உட்கொள்ளாமல் உங்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அதை உங்களால் ஜீரணிக்க முடியாது.
1.ஆனால் எப்படியும் சுருங்கச் சொல்லி அதை எல்லாம் பதிவு செய்ய வேண்டும்
2.மகரிஷிகள் நினைவுகள் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்கே தான் இதையெல்லாம் தொடர்ந்து சொல்கின்றேன் (ஞானகுரு)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் விண்ணின் ஆற்றலை எவ்வாறு பதிவு செய்தாரோ இது போல் உங்களிடமும் பதிவு செய்கின்றேன். அந்தப் பதிவை நீங்கள் எண்ணி மீண்டும் வளர்த்து வந்தால்
1.மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

ஏனென்றால்…
1.அறிவு இல்லை என்ற நிலைகளை எண்ண வேண்டாம்.
2.கற்கவில்லை என்று எண்ணவும் வேண்டாம்.
3.ஞானகுரு சொல்வதை எல்லாம் நாம் எப்பொழுது பெறப் போகின்றோம்…! என்ற ஏக்க நிலையும் வேண்டாம்.
4.பெற முடியும்…! என்ற ஏக்கத்தின் நிலைகள் வரும்போது
5.நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் இதைப் பெற முடியும்.

அதற்கேதான் இதை உங்களிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்வது.

ஏனென்றால் “பௌர்ணமி போன்று” பூரண நிலைகள் நாம் பெற முடியும். இருள் சூழ்ந்த சந்திரன் இன்று ஒளி கொண்டு பௌர்ணமியாக ஒளியின் சுடராக வீசுவது போல
1.ஒரு உயிர் கொண்ட உணர்வின் தன்மை
2.புழுவாக இருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வரும்போது
3.உலகை அறிந்திடும் உணர்வு பெற்ற… பூர்ண பௌர்ணமியாக
4.ஒளியின் உடலாகப் பூரண நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

இருளை மாய்த்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றதுதான் “எண்ணிலடங்காத சப்தரிஷிகள்…” சப்தரிஷி மண்டலமாக இன்றும் இருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்து உடலை விட்டு அகன்ற நமது குலதெய்வங்களான உயிராத்மாக்களை அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைத்து விண் செலுத்த வேண்டும்.

அவர்கள் எப்படி உடலைக் கருக்கினரோ அதைப் போன்று உடல் பெறும் உணர்வை மாய்த்துவிட்டு ஒளியின் தன்மையாக அடையச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் சப்தரிஷிகள்தான்.

உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு செயல்படுத்தும் நிலைகளில் முதலில் அவர்கள் ஆனார்கள் என்றால் அவர்களைத் தோடர்ந்து நாமும் இதைப்போல் அங்கே நிலை கொள்ள முடியும்.

ஆறாவது நிலையிலிருந்து ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றதுதான் சப்தரிஷி.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா… பன்றியிலிருந்து மனிதன் பிறந்தானா…?

 

பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கி அதனுள் உள்ள நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் நுகர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக அடுத்து மனிதனாக, “பரசுராம்” அவதாரமாக உருப்பெறும் நிலை பெறுகின்றது.

 

மனிதனானபின் நமது உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள நஞ்சினை மாற்றிவிட்டு “நல்ல உணர்வைச் சமப்படுத்துகின்றது” என்ற நிலையே பரசுராம் அவதாரம்.

 

கடவுளின் அவதாரத்தில் ஒரு பொருளைத் தன்னுள் இணைத்து.., “நன்மை என்றும்.., தீமை என்றும்.., அறிந்து சமப்படுத்தும் நிலைக்குப் பரசுராம்” என்று காரணப் பெயர் சூட்டினார்கள் ஞானிகள்.

 

தீமைகளை ஒடுக்கிடும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கணவன் மனைவி இரண்டு பேரும் கவர்ந்து தமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான் சமப்படுத்த முடியும். இது பரசுராம்.

மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்கவே இந்த உபதேசம்

ஜீரண சக்தியைப் பாதிக்கும் உமிழ் நீர் பற்றிய உண்மைகள் 

நாடித் துடிப்பு, scan பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் 

EVERLASTING life of sage

மகரிஷிகளும் ஞானிகளும் ஏன்… எதற்காக… ஒளி நிலை பெற்றார்கள்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தன் ஞானத்தின் வலுவை வலுப்படுத்தி… உயர் தியானத்தால் ஒளி சக்தியின் சக்தியை வலுப்படுத்தியதின் உண்மைத் தன்மை யாது…? (எதற்கு) என்பதை அறிதல் வேண்டும்.

ஒவ்வொரு செயலிலும் ஒன்று வளர்ந்து… அது மாறிப் பிறிதொன்றாய் வளர்ந்து தொடர் நிலை கொள்கின்ற வளர்ச்சி பெறும் உருவக அமிலத்தன்மையில்… பொருள் நிலை மாறினாலும் மூல ஒளி நிலை பெற்ற உயிர் அணு எவையுமே மடிவதில்லை…!

உயிர்களுக்கு என்றுமே அழிவில்லை…! ஆகையினால்..
1.ஒளி நிலை பெற்ற அந்த உயிரணுக்களின் கூட்டுச் செயல் நிலை வளர்ந்தால் தான்
2.அத்தொடரின் வலுவில் வலுவாகக் கூடிய மண்டல வளர்ச்சி உருப் பெற உரம் தர முடியும்.

அமிலமாய்… உருவாய்… ஆவியாய்… உருவாகும் உருத்தொடரின் உயிரணுக்களில்… வீரிய நிலை பெற்ற வளர்ச்சி உரு முதிர்வு நிலை என்பது “மனித உணர்வின் எண்ண ஓட்டச் செயல் நிலைதான்…!”

இச்செயல் நிலையையும் ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் வளர்ப்பு கொண்டுதான் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அத்தொடரின் அழியா நிலை பெற… அன்று மாமகரிஷியாக உயர்ந்த மனிதன் தன் வலுவைக் கூட்டிக் கொள்ள மனித அறிவில் தன் உணர்வைச் செலுத்தி வளர்ச்சியுறத்தக்க நடைமுறை செயலுக்கு அன்று உள்ள மனித ஜனத்தொகை மிக மிக சொற்பம்… மிருக உணர்வின் தொடர்பில் உயர் ஞான எண்ணச் செயல் குறைவு,

அதன் தொடரில் தன் உயிராத்மாவிற்கு உயர் நிலை பெற தாவர இனத் தொடர்பில் தன் சரீரத்தைப் பல பக்குவங்களுக்கு உட்படுத்திக் “காயகல்ப சித்தி” பெற்றார்கள்.

ஆனால் இக்கலியில் நாம் இன்று வாழக்கூடிய வாழ்க்கைத் தொடரிலேயே….
1.எச்சக்தியையும் பெறக்கூடிய வலுவிற்கு
2.அன்று பெற்ற ரிஷி சக்திகளின் எண்ணமுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையை நம் ஜீவகாந்த சரீரத்திற்குச் செலுத்தச் செலுத்த
4.உயிரின் பரிமாணமும் உயிரணுக்களின் பரிமாணமும் கூடக் கூட
5.இவ்வாத்மாவின் ஒளி வட்டம் தன் இயக்கச் செயலினால்
6.தனித்து இயங்கும் ஒளி சக்தியின் வலுவைச் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

பாம்பாகப் போ… பேயாகப் போ… சாபத்தின் விளக்கம்

ஞானிகள். “நீ பாம்பாகப் போ…!” என்று ஒரு ரிஷி சாபம் கொடுத்தார் என்று கதையைச் சொல்வார்கள்.

 

ஏனென்றால் வீட்டில் வேதனைப்படுவார்கள். “என் வீட்டில் அப்படி இருக்கின்றது… இப்படி இருக்கின்றதே… அது இருக்கின்றதே… இது இருக்கின்றதே…! என்று வேதனைப்படுகின்றார்கள். இதெல்லாம் விஷத்தை வளர்த்துக் கொள்வது தான்

 

நம் உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்களில் நஞ்சினை வென்று நம்மை மனிதனாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது. நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்த்து வந்தது. ஆனால் நம் ஆசையை வைத்துக் கொண்டு “அவன் அப்படிச் செய்கின்றானே… இவன் இப்படிச் செய்கின்றானே… இதைச் செய்கின்றானே…!” என்று வேதனையை அதிகமாக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் தன்மை எல்லாம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

 

அதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்று சொல்லப்பட்டது. அந்த வேதனை உணர்வுகள் உடலிலே விளைந்து உயிராத்மாவில் விஷம் அதிகமான பின் உடலை விட்டுச் சென்ற பின் பாம்பாகப் பிறக்கின்றது. பாம்பு விஷத்தை உமிழ்த்தி அதை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றது.

 

உயிர் எத்தனையோ தரம் காப்பாற்றியது. இப்படி வேதனையை வளர்த்த பின் “நீ பாம்பாகப் போ…!” என்று உயிர் அந்த அளவுக்கு வளர்த்து விடுகின்றது… அந்த ரிஷி சாபமிடுகின்றான்…! என்று காட்டுகின்றார்கள்.

 

உயிர் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது. அதனால் உயிரை ரிஷி என்றார்கள் ஞானிகள். (நீ பாம்பாய் போ என்று உயிர் சொல்வதாகத் தெளிவாகக் காட்டுகின்றனர்) அப்பொழுது “ஐயனே என்னை அறியாத இந்தப் பிழையிலிருந்து நான் விடுபடும் உபாயத்தை நீங்கள் காட்ட வேண்டும்.” ”நான் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும்” என்று கேட்கின்றார்.

 

நமக்குத் தெளிவாக்குவதற்கு இந்தக் குட்டிக் கதையைப் போடுகின்றார்கள். சரி… “நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய்… அவன் கை படும்… நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்….!

 

பாம்பு கடிக்க வந்தவுடனே நாம் என்ன செய்வோம்..? அடிப்போம். அப்போது அந்த மனித உடலுக்குள் பாம்பின் உயிர் போகின்றது. பாம்பு மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.

gnana pokisham 2

செடிக்குத் தினமும் நீர் ஊற்றுவது போல் தான் எம்முடைய உபதேசம்…!

உபதேசங்களைத் திருப்பிச் திருப்பிச் சொல்லுகின்றேன் (ஞானகுரு) என்று சிலர் நினைக்கலாம்…! ஆனால்
1.அடுத்தாற்போல் கேட்டால் மட்டும் சொல்லத் தெரியாது
2.அதை நினைக்கவும் தெரியாது… அதை பார்க்கவும் முடியாது.

சாமி போன தடவை சொன்னார்… இப்பொழுதும் சொல்கின்றார்… திருப்பியும் சொல்கின்றார்…. என்பார்கள்.

சாமி என்ன சொன்னார் என்று திருப்பிக் கேட்டால் அது தெரியாது.
1.என்ன சொன்னார்..?
2.எந்த வழியில் நடக்க வேண்டும்…? என்று தெரியாது.
3.தனக்குள் பதிய வைக்கத் தெரியாது… அதன் வழி நடக்கவும் தெரியாது.

ஒரு வார்த்தை திரும்ப வந்து விட்டால் போதும்… சாமி…! இதை நேற்றே சொன்னார். போன வாரம் சொன்னர். இந்த வாரமும் சொல்கின்றார் என்று
1.தனக்குள் பதிவு செய்யும் நிலையை
2.தனக்குத் தானே தண்டனை அனுபவித்து கொள்கிற மாதிரி தடைப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக இது மட்டும் தெரியும்.

ஏனென்றால் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். “தெளிந்த நிலைகள் பெறும்” அந்த உணர்வின் சக்தியை வளர்ப்பதற்குத் தான்
1.மாதம் தோறும் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துவதும்
2.அந்த உணர்வின் ஆற்றலை – மகரிஷிகள் காட்டிய நெறிகளை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்லவில்லை. உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். நிறையச் சொல்லிவிட்டால் முந்தி ஏன் சொல்லவில்லை… இப்பொழுது மட்டும் ஏன் சொல்கிறார்…? என்பார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சொல்லிக் கொண்டு வரவேண்டி இருக்கிறது. நிறையச் சொன்னாலும் ஜீரணிக்க முடியாதல்லவா…!

இருந்தாலும் இப்பொழுது சொல்வதை நாளைக்குக் காலையில் கேட்டால் தெரியாது. காலையில் என்ன…? இப்பொழுது கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டாலும் தெரியாது…!

நாளைக்கு நான் இதைத் திருப்பிச் சொன்னால்… உடனே சாமி நேற்று சொல்வதைத் தான் சொல்கின்றார்…!
1.இது நேற்றுச் சொன்னது தானே…
2.சரி சொல்லட்டும்… பார்த்துக் கொள்ளலாம்…. என்று சொல்லிக் கொண்டு
3.காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

அதைத் தான் நேற்று சாமி சொல்லிக் கேட்டோம் அல்லவா.. அதிலே இன்று என்ன பொருள் வருகின்றது என்று பார்த்தால் அது நல்லது.

உதாரணமாக ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் தான் முளைக்கும். தண்ணீர் ஊற்றவில்லை என்றால் எப்படி வளரும்…?

தன் உணர்வை உந்தி எடுத்தால் தான் அந்தச் செடி வளரும். ஆக அந்த உணர்வை எடுக்க மறந்து விட்டால் என்ன செய்யும்…? அது தன் இனத்தை வளர்க்குமா…?

அன்றைய இராமயாணத்தை இன்றைக்கும் சொல்கின்றார்கள் என்றால் அதே இராமயாணத்தை விடிய விடிய சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால் இராமயாணம் என்ன என்றே தெரியாத வகையில் கதையைக் கேட்டு அதைப் பதிவு செய்து கொண்டு பாடத்தை ஒப்பிக்கின்றோம்.

ஆக… இராமாயணத்தின் சொன்னதை வாழ்க்கையில் ஒழுங்காகக் கடைப்பிடிக்கின்றோமா என்றால் இல்லை.

மகாபாரதத்தை பற்றியும் பேசுகின்றோம் அதிலே என்ன சொல்கின்றார்கள்..! என்றால் கதையைப் படிக்கின்றோம். ஆகா என்று…!

இராமயாணத்தையும் கேட்டேன்… மகாபாரதத்தையும் கேட்டேன்… கீதையில் கண்ணன் கூறியதையும் கேட்டேன்… எல்லாம் பார்த்தேன்…! என்ற உணர்வுதான் இருக்கும்.

அந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டோமா என்று பார்ப்பதில்லை. ஆனால் அதை மட்டும் திருப்பித் திருப்பிச் சொல்வார்கள்.

இப்பொழுது சொன்ன உபதேசத்தைத் திருப்பி ஒரு மாதம் கழித்து மீண்டும் சொல்லும் போது… மீண்டும் அது நினைவில் இருக்கின்றதா இல்லையா என்று பார்த்து அந்த உணர்வை வலுவாக எடுத்து வளர்க்க வேண்டும் என்பதற்குத் தான் யாம் திரும்பத் திரும்பச் சொல்வது.

ஆனால் அப்படி இல்லாதபடி… நேற்றே சாமி சொன்னார்…. சரி விடு… போ…! என்று இருப்பார்கள்.

யாம் உபதேசம் செய்யும்போது பக்கத்திலே அடுத்தவர்களைக் கண்டால் அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் நாம் இரண்டு பேரும் எதாவது பேசிக் கொண்டிருப்போம்.
1.”கேட்காதவர்கள் கேட்கட்டும்…!” என்று இப்படியும் இருப்பார்கள்.
2.இது தான் சிலருடைய நிலைகள்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

நட்சத்திரங்களுக்குள் இருக்கும் அற்புத சக்திகள்…!

எது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும் 

துருவ நட்சத்திரத்தின் ஆயுள்கால மெம்பராகச் சேர்ந்தவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்…? 

cosmic power of gurudevar

கோழியை (கோடி) அறுத்துக் சாப்பிடுடா…! என்பார் குருநாதர் (கோழி என்று உச்சரித்தால் தெலுங்கில் “கோடி” என்று பொருள்)

 

கோடி… கோடி… கோடி.. என்கின்றபோது எங்கேயோ தோன்றிய நிலைகள் பேரண்டத்தில் இருந்த உணர்வுகளும் “கோடிக் கோடியாக…” மாறுகின்றது.

பல கோடிக்குள் மற்றதின் அணுக்கள் சேர்த்து
1.இன்று நாம் மனிதனாக வருவதற்குக் கோடியில்… கோடி
2.எத்தனையோ கோடியில் கோடி… கோடியில் கோடி… கோடியில் கோடி…!

இப்பொழுது எண்ணம் கொண்டு பேசுகிறோம் என்றால் இதைப் போல் வான் வீதியில் இருக்கக்கூடிய உணர்வுகள் தான் இங்கே (அந்தப் பேச்சாக) வருகின்றது.

இப்படி மனிதனுக்குள் அது பட்டபின் இதனின் நிலை தனக்குள் மாறுகின்றது என்பதனை உணர்வதற்குத்தான்
1.எனக்கு (ஞானகுரு) அடியைக் கொடுத்து
2.அடித்த அடியில் என்னைப் பிரமைப் பிடித்த மாதிரி ஆக்கி
3.அந்த வேகத்தில் விண்ணை நோக்கி ஏகச் சொன்னார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்)

அவர் என்னை நேரடியாக அடித்தார். உங்களுக்கு நான் சொல் அடி கொடுக்கின்றேன். இந்த உபதேசத்தின் உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிந்தபின் இது சீதாராமா ஆக… அம்புகளாகப் பாய்கின்றது. இந்தச் சொல் உங்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றது.

கோடியில் கோடி… என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வை ஒளியாக மாற்றிய குருநாதர்…
1.அவர் கண்டுணர்ந்த உணர்வை “அடி” (உதைத்து) மூலம் எனக்குக் கொடுத்து
2.உணர்வின் தன்மை என்னை அங்கே ஒன்றச் செய்து
3.விண்ணுலக உணர்வின் அளவுகோலை அறியும்படிச் செய்தார்.

அவர் அடிக்கும் அடி மூலம் எப்படி அவருடைய சக்தி உறைகின்றதோ இதைப் போன்றுதான் அந்த உணர்வின் தன்மை விண்ணின் ஆற்றலும்… அது உருவாகும் மாற்றமும்… மண்ணுலகில் வரப்படும்போது கோடிக் கோடிக் கோடி… என்ற நிலையில் வருவதைக் காட்டுகின்றார்.

இங்கே நீ இந்த கோழியை அறுத்துச் சாப்பிடுகிறாய். கோழியைச் சாப்பிட்டவுடன் நீயும் கோழியாகப் பிறப்பாய். ஆகவே… அந்தக் கோடியை நீ சாப்பிட்டால்… இந்தக் கோடியினுடைய நிலைகளை நீ வெல்வாய்…! என்பார்.

(ஞானகுரு தெலுங்கு பேசுபவர். தமிழில் கோழி என்று சொன்னால் அது தெலுங்கில் கோடி…! தமிழில் கோடி என்று சொன்னால் அது தெலுங்கில் கோழி..! இதை வைத்தே ஞானகுருவும் ஈஸ்வரபட்டரும் சொல் தொடரில் சூட்சமமாக இயற்கை உண்மைகளைப் பேசுகிறார்கள்)

நான் (ஞானகுரு) கோழி என்று சொல்லும்போது நீ இந்தக் கோழியை நீ அறுத்தாய் என்றால் நீ அடுத்தாற்படி கோழியாகப் பிறப்பாய். அப்படியென்று சொல்லிவிட்டு அந்தக் கோழி… “அந்தக் கோடிடா…!” என்பார்.

“அந்தக் கோடி…!” என்றால்…
1.சப்தரிஷி மண்டலங்களில் உள்ள பல கோடி உணர்வுகள்
2.கோடிக் கோடிக் கோடி… என்ற நிலைகளில் தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு
3.உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்தக் கோழிடா..
4.அதை அறுத்துச் சாப்பிடுடா…! என்கின்றார்.

குருநாதர் சும்மா சாதாரணமாகப் புரிய வைக்கவில்லை… இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்.

சாதாரண நிலைகள் உணவாக உட்கொள்ளும் நிலைகள் இருந்தாலும் அதை நீ… எதை… எப்படி உருவாக்க வேண்டும்…? என்ற நிலைகளை
1.நான் தெரிந்தோ தெரியாமலோ கேள்வி கேட்டாலும்
2.அந்த கேள்விக்குள்ளேயே கேள்வியைக் கேட்டு
3.கேள்வியின் உணர்வைக் கொண்டே பதிலையும் கொடுப்பார்.

அது எவ்வாறு இயக்குகின்றது…? நீயா…? அல்லது நானா…? ஆக நீ பேசுவது நீயா…? நான் பேசுவது நானா…? ஆக நான் என்பதற்கு எதுவாகின்றது…? என்பார் ஈஸ்வரபட்டர்.

எடுத்துக் கொண்ட உணர்வு உயிருடன் இயக்கத்தைக் கொண்டு வரும்போதுதான் “நான்…” இங்கே மைக்கிலே (MIC) பேசிய உணர்வின் தன்மை கொண்டு கரண்ட்டில் இயக்கப்படும்போது அந்தச் சொல்லின் தன்மையை அது இயக்கும்.

நம் உயிரின் ஓட்ட நிலைகளும் இதே போன்று தான். உணர்வுகள் எதுவோ அதைத் தான் உயிர் இயக்கும் என்ற இந்த நிலைகளையும்… மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை அது எவ்வாறு…? என்ற நிலைகளையும்… பூமிக்குள் மண்ணாவதற்கும்… கல்லாவதற்கும்… வைரம் ஆவதற்கும்… “மூலம்” பல கோடி நிலைகளை இது விழுங்கியதுதான்…!

அந்த உணர்வின் தன்மை விளைந்து அதிலே தாவர இனங்களாக விளைந்து மனிதனுக்குள் எண்ணமாக வருவது என்றால் அது கோடி தான்… கோடி என்று இல்லாதபடி வேறு எதுவும் இல்லை.

இந்தக் கோழிக்கும் கோடிக்கும் வித்தியாசம் சொல்லின் தொடர்கள் எதுவாக இருப்பினும் அது பாஷையின் முறை கொண்டு அது வேறாக மாறினாலும் நான் கோடி என்கின்றேன் நீ கோழி என்கின்றாய் என்பார் குருநாதர்.

இதைப் போல விண்ணின் ஆற்றலை என்னை நேரடியாகவே நுகரும்படி செய்கிறார் குருநாதர்.
1.என் உடல் இங்கே இருக்கும்
2.குரு என்னை உதைத்ததும் அந்த உதைத்தத்ன் உணர்வுகள் அவரோடு ஒன்றும்
3.ஒன்றிய உணர்வுகளை அங்கே விண்வெளியில் பரப்பச் செய்வார்.
4.அந்தப் பரவிய உணர்வுகள் அங்கே அடையும்.
5.அடைந்த உணர்வுகள் என்னை அடித்த உணர்வுகள் கொண்டு இங்கே இழுக்கும்.
6.அப்படி இழுத்த உணர்வு கொண்டு தான் எனக்குள் விண்ணுலகை அறிவித்தார் ஈஸ்வரபட்டர்.

நீ யார்…? எப்படி வந்தாய்…? எந்தெந்த வழியில் எல்லாம் வந்தாய்…? என்று குருநாதர் கேட்டுவிட்டு கனவு காணுவது போல் காட்டுகின்றார்.

அணுவாகத் தோன்றி உயிரணுவாக (நீ) உன் உயிரே உண்டானது என்ற நிலைகளையும்… விண்ணிலே உயிர்கள் உண்டாகுவதற்கும் இதிலேயும்… பல கோடிக் கோடிக் கோடி… என்ற நிலைகளைப் பார்த்தால் “உயிரின் துடிப்பு” ஒன்றாக இருக்கும்.

எத்தனை கோடி உணர்வுகள் கலந்து.. உயிரின் துடிப்பிற்குள் இணைந்து… அது இயக்கமாக உருவாகின்றது…? என்ற நிலைகளும் ஒரு அணுவின் தன்மை மற்ற கோள்களின் நிலைகள் கலந்து வரப்படும்போது இந்த உணர்வின் தன்மை கோடி… கோடி… கோடி… கோடி… கோடி…

அந்தக் காரத்தின் உணர்வின் தன்மை எவ்வாறு ஆனது…? எத்தனை கோடி சேர்ந்து கசப்பாக மாறுகின்றது….? இதைப்போல சுவையின் உணர்வும் மணத்தின் நிலைகள் எது இணைந்ததோ அது மணமாக எப்படி மாற்றுகின்றது…? இவையெல்லாம் சேர்த்துத் தான் கோடி…கோடி…கோடி..! என்பது.

கொடூரமான ஒரு புலி பாம்பின் வாயில் சிக்கி இறந்த பின் பாம்பாகப் பிறக்கின்றது

ஒரு சமயம் காட்டுக்குள் செல்லும் போது கொடூரமாகத் தாக்கும் சக்தி கொண்ட புலி என்னை அடிக்க முற்பட்டு வந்தாலும் அதனின் பாதைய்ல் சந்தர்ப்பத்தால் ஒரு பாம்பின் வாயில் சிக்கிக் கொண்டது.

 

அவவளவு பெரிய புலி பாம்பின் வாயில் மாட்டிக் கொண்டு தவிப்பதைப் பார்க்கும்படி செய்தார். அதை அப்படியே முழுவதும் பாம்பு விழுங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து உடலுக்குள் செல்கிற்து. பின் அந்தப் புலி பாம்பின் நினைவு கொண்டு பாம்பாக அடுத்துப் பிறக்கிறது என்று குருநாதர் உணர்த்துகின்றார். 

Artificial intelligence

இன்றைய மனிதன் இயந்திர மனிதனாகவே (ROBOT) மாறி விட்டான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அலை வரிசைகளின் மூலம் இன்று நாம் பார்த்து.. கேட்டுக் கொண்டிருக்கும் ரேடியோ… டி.வி. இண்டெர்னெட்… எல்லாமே எவ்வமிலத்தில் உலோகத்தைப் பூசி ஒலி பரப்பப்பட்டதோ.. அது காற்று மண்டலத்தில் பரவி… எத்தொடரில் ஒலிபரப்பானதோ… அவ்வொலியின் பலவாகப் பரவும் செயல் ஜீவன் கொண்டு… ஒரு இடத்தில் ஒலிப்பரப்பப்பட்ட நிலை இக்காற்று மண்டலம் முழுமைக்கும் பல மைல்களுக்கப்பால்… அதன் தன்மை கொண்ட அமில மோதல் தொடர்பில் ஜீவன் பெற்று விடுகிறது.

அந்த இணைப்பு பெறும் தொடர்பிலெல்லாம் ஒலிப்பரப்பாகும் ஒலியை நாம் அவ் ஈர்ப்பில் கேட்கும் பொழுது
1.எவ்விஷ அலையின் முலாம் பூசப்பட்ட அமில ஈர்ப்பின் ஒலிப்பதிவு
2.இந்தக் காற்று மண்டலத்தில் ஜீவன் பெற்றதோ
3.மீண்டும் அதே அலையின் உணர்வை நம் எண்ண உணர்வு எடுக்க எடுக்க
4.இவ்வுடலும் அவ்விஷ அலையின் ஈர்ப்பிற்குத்தான் செல்ல முடியும்.

எப்படி இயந்திரங்களை ஒன்றின் இணைப்பு கொண்டு பிறிதொன்றை இணைத்து ஓட்டும் பொழுது… அதன் தொடர்பில் இதுவும் ஓடுகின்றதோ அதைப் போன்று… உணர்வின் எண்ண அலையின் தொடர்பு அலையில் எத்தொடர்பில் ஒலி அலை.. ஒளி அலை பதிவு பெற்றனவோ… அவற்றின் ஈர்ப்பிற்கு மனிதர்கள் தம் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது… அவ் ஓட்டத்தின் சுழற்சியில் தன் உணர்வும் சிக்கி… அவ்விஷ அலையில்தான் இம்மனித ஆத்மாவும் செயல் கொள்ளத் தொடங்கி விட்டது.

இந்தக் குறுகிய நூற்றாண்டில் வளர்ச்சி கொண்ட இவ் அலையின் தொடர்பினால்… “பல கோடி ஆண்டுகளாக” வளர்ச்சியுற்ற வலுக் கொண்ட இவ்வுயிர் ஆத்மாவை நல் உணர்வின் ஞானமுடன் செயல்படுத்த முடியாத நிலை ஆகி விட்டது.

இன்றைய செயற்கை மின் காந்த ஒலி… ஒளிக் காட்சிகளின் தொடர்பினால்…
1.ஆத்மாவானது உயரும் நிலை பெறாமல்
2.உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன்
3.உயிருடன் வலுக் கொண்டு… உயிருடன் ஆத்மா வலுப் பெறாமல்
4.ஆத்மா சிதறுண்ட நிலையில் இக்காற்று மண்டல சுழற்சியில்
5.மனித உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அந்தந்த மோதல் நிலை பெற்று
6.தன் வலு நிலையை இழந்து விடுகின்றது.

ஆகவே.. ஆத்மாவுடன் கூடிய உயிரும்… ஆத்மா பிரிந்த அவ்வுயிரும் வலுவிழந்த நிலையில்… பிறப்பின் தொடருக்கு மீண்டும் மிகவும் கீழ் நிலையான உயிரின நிலைக்குத்தான் செல்ல முடிகின்றது.

இன்று இக்காற்று மண்டலமே மிகவும் நஞ்சாக உள்ளது. மனித உணர்வின் எண்ண ஆத்மாவிற்கு வேண்டிய உயர் காந்த மின் அலையை எடுக்கும் உயர் ஞானத்தின் சக்தி நிலை பெறத்தக்க சூழ் நிலையை
1.இன்றைய விஞ்ஞானம் காற்று மண்டலத்தில் கலக்க விட்டுள்ள பல அலையின் செயலினால்
2.அந்த மனித சக்தியையே வலுவிழக்கச் செய்துவிட்டது.

விஞ்ஞானத்தில் செயல்படும் நிலையே தன் ஞானம் செயல்படக்கூடிய வழி வளர்ந்த தொடரில் வளர்ந்திருந்தது என்றால்
1.இன்று இப்பூமியில் கலியின் கடைசியை அழிவு நிலை இல்லாமல்
2.மனிதனின் உயர்வு வளர்ச்சியான அடுத்த கல்கி அவதாரத்தை மனிதர்கள் பெற்றிருக்கலாம்.

சில நிலைகள் வெளிப்படுத்திய நிலையும் யூதர்களினால் அன்று மனித உணர்வின் ஆத்மா வலுப்பெற்ற நிலையும் அழிவு நிலைக்குச் சென்று விட்டது.

 

அன்றைய ஞானிகள் மனித ஆத்மா உயர்வு பெற மனிதன் எச்சக்தியையெல்லாம் பெற முடியுமென்ற தத்துவத்தை விளக்கிக் காட்டினர்.

1.அதை வளர்க்கும் நிலையைக் காட்டிலும் எதிர்க்கும் நிலையும்
2.தன் தேவைக்குத் தந்திரமான முறையில் செயல்படுத்தப்பட்டதினால்
3.இன்று அவை எல்லாம் வேறு ரூபமெடுத்துவிட்டன.

Power of Eswarapattar

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “கோடி… கோடி… கோடி…” என்று அடிக்கடி சொல்வதன் உட்பொருள்

 

அதாவது இந்த விண்வெளியில் எத்தனையோ வகையான நட்சத்திரங்கள் இருக்கின்றது. அந்த நட்சத்திரத்திற்குள் இந்தத் தூசி (துகள்கள்) வருவதற்கு… ஒளிகள்… நிறங்கள் கவர்வதற்கு எத்தனை கோடி அண்டங்களிலிருந்து சக்தி கிடைக்கிறது தெரியுமா…? என்பார்.

ஒரு நட்சத்திரம் ஒளியைக் கொடுப்பதற்கு எத்தனையோ கோடி நட்சத்திரங்களின் அந்தச் சக்தி சேர்த்துத் தான் வருகின்றது.
1.இந்த நட்சத்திரம்… இது கோடி…!
2.அது கோடி… கோடி… கோடி…

அதிலிருந்து கோடியாக வரப்படப்போகும் போது இந்தத் தாவர இனங்களில் அது ஒவ்வொன்றும் காரமாக வருவதற்கு எத்தனை காரம்…? தெரியுமா..?

உடனே “மிளகாய் கோடி… கோடி… கோடி…” என்பார்.

இந்தக் காரம்… கோடிக்குள் கோடியாக எப்படி உண்டானது…? அந்தக் கோடியின் உணர்வுகள் காரத்தின் ருசியாக வருவது போல்..
1.நமக்குள் இதே மாதிரியான எண்ணங்கள் பல சேர்த்து
2.அது கோபத்தின் உணர்ச்சிகளாக உருவாகும்.

கோபத்தின் உணர்ச்சிகள் உடலுக்குள் வளரப்படும்போது இந்த உணர்வின் பொறிகள் எப்படி நோயாக மாறுகின்றது…? என்று இப்படிக் கேள்வி எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிக் கோடி… கோடி… கோடி… என்று அன்று பூராம் எனக்குச் சோறு அந்த அடி தான்…! (குருநாதர் கோடி கோடி என்று சொல்லி அடிப்பார்)

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் சொல்கிறோம். என்னமோ… சாமி லேசாக உங்களிடம் வந்து சொல்கின்றேன் என்று இல்லாதபடி உங்களுக்குள் குருநாதர் காட்டிய உணர்வலைகளை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே நம்மை கோபக்காரனாக ஆக்கி விடுகிறது…. வேதனைப்படுவோனாக ஆக்கி விடுகிறது… தாய் தந்தையை மறக்கச் செய்து விடுகின்றது….!

1.தாய் தந்தை நம்மை நன்றாக வளர்க்க வேண்டுமென்று எண்ணினாலும் இடைப்பட்ட உணர்வுகள் தடுக்கின்றது.
2.தன் தாய்க்கும் தன் மனைவிக்கும் ஆகாது. என்கிற நிலை வரும்போது இந்த உணர்வை இழுக்கின்றது
3.இதைப் பிளந்து தள்ள வேண்டுமென்றாலும் முடிவதில்லை.

சில குடும்பங்களில் இப்படி எல்லாம் இருக்கிறது. அதே சமயத்தில் தாய்க்கும் மகனுக்கும் ஆகவில்லை. தாய் தான் கடவுள் என்கின்றோம் தாய் தான் தெய்வம் என்கின்றோம் தாய் தான் குரு என்கிறோம்.

ஆனால் யாம் சொன்னதற்கும் இதற்கும் புறம்பாகப் போகின்றது. காரணம்… ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மையை அந்தக் குணத்தின் வித்தினை விளைய வைத்தால் அது பல கோடி ஆகின்றது.

ஒரு உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு மற்ற உணர்வோடு அதைச் சேர்க்கப்படும்போது இங்கே மனிதன் என்ற தன்மையே பிரிக்கப்படும். இந்தப் பிரிவிலிருந்து மீள்வதற்கு முடியவில்லை.

மிளகாயை இணைத்துவிட்டால் காரம்… காரம் தான்…! என்று சொல்லும். அதற்குப் பக்கத்தில் இஞ்சியை எடுத்துக் கொண்டால் அதையும் காரம்… காரம்… என்று தான் சொல்லும்.

ஏனென்றால் இந்த உணர்வு அதைத் தான் சொல்லும். காரத்திற்குள் இஞ்சி மிளகு எல்லாம் ஒன்றாகுவதுபோல் இந்தக் கோப குணங்களிலே நியாயங்களையும் பேசும்.

ஆனால் அந்தக் கோபங்கள் என்ன செய்யும் என்றால் தன் இருப்பிடத்தை வலுப்படுத்திக் கொண்டே இருக்கும். அதைப் போக்க வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது சொல்வது.

காரணம் இதையெல்லாம் குருநாதர் என்னிடம் இருக்கக்கூடிய வெறுப்புகளை எல்லாம் வெளியே கொண்டு வந்து குருநாதர் என்னை அடித்து அந்த விண்ணுலக ஆற்றலைக் காட்டினார்.

அப்பொழுது தெரியவில்லை என்று நான் சொன்னால் அதற்கு ஒரு அடி விழும் திடீரென்று…!

உன்னை பேய் பிடித்து ஆட்டுகின்றது என்பார்.

பேய் என்றால் என்ன….?

1.ஒரு மனிதனின் உடலின் விளைந்த உணர்வுகள்
2.அவனை ஆட்டிப்படைத்த அதே செயல்
3.அவன் எந்த உடலை அழிக்க எண்ணினானோ
4.தன் உடலையோ அல்லது மற்றவர் உடலையோ அழிக்க வேண்டும் என்ற ஆணவம் கொண்ட உணர்வுகள் அங்கே விளைந்தது.
5.அந்தக் கார உணர்ச்சிகளுடைய உணர்வுகளை நீ வேடிக்கையாகப் பார்க்கின்றாய்
6.தர்மத்தை நீ கடைபிடிக்கின்றாய்… ஆனாலும் அவனைப் பார்த்த அந்தப் பேய் குணம்
7.உன்னில் வந்து உனக்குள்ளும் அதைப் படைத்துவிடுகின்றது.

உனக்குள் அதைப் படைத்தபின் உன்னுடைய நியாயம் இந்தக் கோபத்தைக் கொண்டே அதை நீக்க வேண்டும் என்று சொல்கின்றது.

உதாரணமாக நாம் சொல்லிப் பார்க்கின்றோம்… கேட்கவில்லை… தப்பாகச் சொன்னால் இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் வருகின்றது.

நம் நல்ல குணத்தை மாற்றிவிட்டு இரு நான் பார்த்துவிடுகின்றேன் என்று வருகிறது. இதுதான் ஓம் நமச் சிவாய சிவாய நம ஓம். நம் உணர்வின் செயல்கள் இப்படி எல்லாம் வந்து சேர்ந்து விடுகின்றது

இதைப் போன்ற நிலை எல்லாம் மாற்றிட வேண்டும் என்பதற்குத்தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

கூர்மை அவதாரம்

கண்ணன் காட்டிய உபதேசம் என்பது, “ஒன்றைக் கூர்ந்து.., கவனித்து.., கூர்ம அவதாரமாக..அதுவாக நீ மாறு”. ஒன்றின் வலுவை உனக்குள் சேர்த்தால், இப்பொழுதுள்ள உடல் இழக்கப்பட்டால் எதனின் உணர்வை வலுவாகச் சேர்த்தாயோ அதனின் உடலை நீ பெறமுடியும்” என்று கீதையிலே ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு போர் முறையின் மூலம், உணர்வின் செயல்களைப் பற்றி எடுத்துக் காட்டப்பட்டன.

 

உணர்வுகள் மறைகின்றது.

உணர்வுகள் வளர்கின்றது.

உடல்கள் மடிகின்றன.

உணர்வுகள் கலக்கின்றன. பின் விளைகின்றன.

 

 

உணர்வின் வலுகொண்டு எதனை நுகர்ந்ததோ, அதனின் உணர்வின் துணைகொண்டு, “இன்னொரு உடலுக்குள் போகின்றது..,” என்ற நிலைகள் நமக்கு ஞானிகள் காண்பித்த பேருண்மைகள்.

சாந்தம் கொண்டு செயல்படுவதன் ஆற்றல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 

பிறர் சொல் நம்மை இயக்காதபடி தடுக்கும் ஒரு பயிற்சி 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அணுக்களாக விளையை வைக்கும் முறை

drink addictin

கவலை எல்லாம் மறந்து… நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் குடிக்கின்றேன்…! என்றாலும் உடலுக்குப் பின் நரகம் தான்…!

குடிப் பழக்கம் உள்ளவரை நீங்கள் அணுகி அவரிடம் இரண்டு மூன்று தடவை பேசிப் பாருங்கள். அந்த உணர்வின் அணுக்கள் ஆகிவிடும். அப்புறம் அந்த நினைவு நமக்குள் வரும்.

அந்த நினைவு வந்தபின் கொஞ்சம் குடித்துப் பாரப்பா…! என்று அவர் சொன்னால் அந்தப் பழக்கம் நமக்கும் வந்துவிடும்.
1.அப்புறம் ஒரு தரம் குடித்து விட்டால் அந்த அணுக்களுக்கு அது குடித்துத் தான் ஆக வேண்டும்.
2.குடிக்கவில்லை என்றால் இது விடாது…. அங்கே இழுத்துக் கொண்டே போகும்.

அப்புறம் என்ன செய்யும்…?

அந்த உணர்வின் தன்மை ஆனபின் நாம் சிந்திக்கும் நிலையே மறக்கும். இதனின் உணர்வு பட்டபின் இதைப் போல குடித்துக் கொண்டிருந்தால்
1.கடைசியில் நாம் இறந்துவிட்டால்
2.ஆன்மா அந்தக் குடியின் மணத்துடன் இருப்போர் உடலுக்குள் தான் போகும்.

குடிப்போர் உடலுக்குள் புகுந்து விட்டால்… குடிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் எவ்வளவு தான் எண்ணினாலும் இது விடாது. அது குடிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
1.ஏனென்றால் அதற்கு உணவு தேவை
2.அப்புறம் குடித்துக் கொண்டே இருக்கச் சொல்லும்.

அதர்வண வேதத்தில் இந்தப் போதை மருந்தைக் கொடுத்துதான் மாமிசத்தையும் கொடுத்து… இந்த உணர்வின் தன்மை நினைவிழக்கச் செய்வார்கள். பின் தீயில் இட்டுப் பொசுக்கி அதிலே எடுக்கும் மந்திரத்தைச் சொல்லி இந்த உணர்வினைக் கவர்ந்து இழுப்பார்கள்.

அதாவது அந்த அதர்வண வேதப்படி… மனிதன் உணர்வுக்குள் மந்திரங்களை ஓதி அதனின் தன்மை கொண்டு உருவாக்கி அவனின் நினைவை இழக்கச் செய்து இந்த மதுவை அவருக்குள் கொடுத்து இது சிறுகச் சிறுக இந்த எண்ணத்தை அங்கே அது பதியச் செய்வார்கள்.

மது குடித்தவர்களைப் பாருங்கள்… அது எதாவது யார் மேலயாவது கோபம் வந்தால் சரி. அதிலேயே தான் நிற்கும்.
1.யாரை நினைத்துக் குடித்தார்களோ…
2.இன்றைக்கு அவரை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த இரண்டில் ஒன்று பார்க்கச் சொல்லும்.

அப்புறம் அந்தச் சண்டையில் சமரசத்திற்கு ஆயிரம் பேர் சொன்னாலும் கேட்காது.

இதைப்போல அன்று மந்திரத்தில் இந்த மதுவினைச் செருகி மந்திரத்தை ஏற்று… இந்த உணர்வின் தன்மை செருகாக்கிய பின் அது கேட்டுணர்ந்தபின்
1.இந்த மனிதன் இறந்தான் என்றால்
2அதே மந்திரத்தைச் சொல்லி மதுவையும் வைத்தால் அந்த ஆன்மா இவர் கைவல்யம் ஆகும்.

இப்படி அந்த மது அருந்ததுவோரின் உணர்வுகள் எல்லாம் மந்திரக்காரன் கையில் சிக்கி அது என்னென்ன எண்ணங்களுக்குப் பயன்படுத்துகின்றாரோ அதற்குப் பயன்படும்.

நாம் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் இந்த மதுவின் வேலைகள்… அந்த அதர்வண வேதத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தியது.

ஏனென்றால் அதர்வண என்ற நிலைகளில்
1.தீமையை விளைவிக்கும் விஷத்தின் தன்மை கொண்டு
2.ஒரு மனிதனுக்குள் இருந்து எடுத்து
3.அந்த நல்ல குணத்தை அழித்துவிட்டுத் தன் எண்ணத்தைப் புகுத்தி
4.அதனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மனிதன் இறந்தபின்
5.இந்த மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அங்கே கைவல்யம்.

மதுவின் தன்மை வைத்து அந்த உணர்வின் தன்மை கவரப்படும்போது தன் இச்சைக்கு அது வரும்.

அந்த அதர்வண வேதத்தில் இந்த மந்திரம் ஓதுவோர் அனைவரும் மதுவை வைத்திருப்பார்கள்… மாமிசத்தை வைத்திருப்பார்கள்.

அதை வைத்துத்தான் இந்த மந்திரங்கள் ஓதி மற்ற ஆவிகளை அவர்கள் கைப்பிடிப்பார்கள். இத்தகைய நிலையை மனிதனைக் கைவல்யப்படுத்தி விட்டால் அவன் ஆட்டிப் படைக்கும் படைப்பாகப் போய்விடும்.

ஆகவே உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்…! என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இந்த வாழ்க்கையில் எங்கே போகப் போகின்றோம்…? என்ற எண்ணத்தில்
1.இருக்கும்வரை… “தன்னை மறந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு…”
2.அவர்கள் செய்தார்கள்… இவர்கள் தப்பு செய்தார்கள்…! என்று எண்ணத்தில் குடித்தால்
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அடுத்த கணம் மந்திரவாதி கையில் நேரடியாகப் போய்ச் சேரும்.

இல்லையென்றால் இன்னொரு உடலுக்குள் சென்று அந்தக் குடிப் பழக்கம் உள்ளவர் உடலில் சென்று இன்னும் கொஞ்சம் குடிக்கச் செய்யும். அந்த இரண்டும் ஒன்றாகி விட்டால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் மீண்டும் அதே மந்திரவாதி கையில் சிக்கும்.

ஒன்றை ஆயிரமாகப் பெருக்கி அந்த உணர்வின் எண்ணத்தைப் பெருக்கிவிட்டால் அது அதர்வண என்று பொருள்

ஆகவே எதனின் மதுவை வைத்து இதை செய்கின்றார்களோ இன்னொரு ஆன்மாவைக் கைவல்யப்படுத்துகின்றான்.

ஆகவே இது போன்ற நிலைகளில் சிக்குண்டு தவிப்பதிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

பண்டிகைகள் மூலம் நாம் பெற வேண்டிய உயர்ந்த சக்தி

மனிதனுக்கு மத்தியில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குவதற்காக பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நிலைகளைக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தப் பன்னிரண்டு மாதங்களுக்கும் முப்பது நாளைக்கு ஒரு தரம் தீமைகளைக் கழித்துச் சுத்தப்படுத்தும் முறைகளைக் காட்டுகின்றார்கள்.

 

பொங்கல்… சிவன் இராத்திரி… சித்திரைக்கனி… ஆடிப் பெருக்கு.. விநாயகர் சதுர்த்தி.. விஜய தசமி… தீபாவளி.., கார்த்திகை தீபம்… வைகுண்ட ஏகாதசி… என்று ஒவ்வொரு மாதத்திலும் விழாவை வைத்து ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொள்ளும் முறைகளைக் கொடுக்கின்றார்கள்.

 

விஜயதசமி – நம் உயிர் விண்ணிலிருந்து இங்கே பூமிக்குள் வந்த பின் பத்தாவது நிலை அடையக்கூடிய முறையைக் கொடுக்கின்றார்கள்.

 

கார்த்திகை ஜோதி. என்றால் ஆறாவது அறிவு கார்த்திகேயா. விளக்கை நம் வீட்டு வாசற்படியில் வைத்து வீட்டுக்குள் வருகின்ற இருளை நீக்குகின்றோம். ஆகவே கார்த்திகை தீபம் ஏற்றி இருளை நீக்குவது போல் எல்லாக் குடும்பமும் ஒளியாக வேண்டும் என்று எண்ணும்படி செய்கிறார்கள்.

 

மிக மிகச் சக்திவாய்ந்த உணர்வுகளை பௌர்ணமி தோறும் பதியச் செய்கின்றோம்

சாமியிடம் விபூதி வாங்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் சொல்வதைச் செய்வதில்லை

சாமி சொல்வது மிகவும் அற்புதம் என்று போற்றிவிட்டு சொன்னதைச் செய்யவில்லை என்றால் பலன் இல்லை

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நாம் உயர்ந்த நிலையில் நினைப்பவர்களை… மற்றவர் குறையாகச் சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…?

மெய்ப் பொருள் எது – விளக்கம் 

 

1. “கீதா உபதேசம்” செய்வது யார்? நமது கண்களே

நமது கண் தான், நாம் எண்ணிய நிலைகளை அது கவர்ந்து அலைகளை எடுத்து “கீதா உபதேசம்” என்ற நிலைகளில் உபதேசிக்கின்றது.

 

 

 

பிறர் தவறு செய்கின்றார் என்றால், அந்தத் தவறான உணர்வைக் கண் கவர்ந்து, இழுக்கப்பட்டு, உயிரில் பட்டு அவன் தவறு செய்கின்றான் என்று உபதேசிக்கின்றது கண்.

 

ஆனால், தவறு செய்கிறான் என்று காட்டினாலும், அந்த உணர்வின் நிலைகள் நமக்குள் அது பதிவாகின்றது.

தவறு செய்கின்றான் என்று உணர்த்துகின்றது.

தவறில் இருந்து விடுபடவும் வழி செய்கின்றது.

தவறு செய்பவனைத் தண்டிக்க வேண்டும்

என்ற உணர்வும் தோன்றுகின்றது.

 

நாம் தவறிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணும் பொழுது, அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைவது இல்லை.

 

தவறு செய்பவனைத் தண்டிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது, இந்த உணர்வு நம் கண்ணின் நிலைகளுக்கு வந்து,

நாம் எப்படியெல்லாம் வளைத்துப் பார்க்க வேண்டும்?

எந்த நிலைகளில் மறைமுகமாக இருக்க வேண்டும்? என்று

நாம் எடுத்துக் கொண்ட கண்ணின் உணர்வலைகள், ஞானத்தின் நிலைகொண்டு அவனைத் தாக்கும் நிலையே உருவாக்கும்.

 

அல்லது அவனை ஏசும் உணர்வு கொண்டு, அவன் யாரிடம் எதைச் சொன்னான்? அது என்னவாகும்? என்று எண்ணும் பொழுது, அவனுடன் பழகிய நிலைகள் கொண்டு,

அதை நினைவிற்குக் கொண்டு வரச் சொல்லி,

அவன் சொன்னதை, அவனிடம் சொல்லி

எப்படியும் மடக்க வேண்டும் என்ற நிலையில்

ஞானத்தை ஊட்டுவது கண்.

2. கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் – விளக்கம்

 

எந்தெந்த நிலைகளில் நாம் எண்ணங்களை எண்ணுகின்றோமோ, அவற்றை இயக்கிக் காட்டுவது கண். கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் சென்றான் என்று காவியமும் உண்டு.

அர்ச்சுனன் என்பது,

நாம் புழுவிலிருந்து மனிதனாக உருப்பெரும் நிலைகளில் விளைந்த

ஒவ்வொரு எண்ணமும் வலுப்பெற்று,

பரிணாம வளர்ச்சியில் வளரச் செய்தது.

அர்ச்சுனனுக்குக் கண்ணன் சகலகலா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தான் என்று காவியங்கள் உண்டு.

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், இந்தக் கண்ணே அந்தந்த நிலைகளில்

எதிரியைக் காணும் பொழுது,

அதிலிருந்து தப்பிக்கும் நிலையும்,

எதிரி நெருங்கிவிட்டால் எப்படித் தாக்க வேண்டும் என்ற நிலையும்

எதிரி தன்னை நெருங்கித் தாக்க வரும் பொழுது,

அந்தத் தாக்கும் உணர்வின் உணர்ச்சியைக் கவர்ந்து, இழுத்து,

ஓடும் உபாயத்தைக் காட்டி,

தப்பித்து ஓடும் வேகத்தைக் கொடுக்கின்றது, கண்கள்.

 

இருப்பினும், எதிரி வலு கொண்டு தாக்கும் நிலை வந்துவிட்டால், எதிர்த்து நீ தாக்கு என்ற இந்த உணர்வை ஊட்டி, அந்த எதிரியைத் தாக்கச் செய்கின்றது.

ஆக, எதிரியைக் கூர்ந்து கவனித்து,

அதைத் தாக்க வேண்டும் என்ற

எண்ணத்தின் வேகத் துடிப்பைத் துடிக்கச் செய்து,

எதிரியைத் தாக்கச் செய்கின்றது கண்.

 

ஆனால், எதிர் நிலை அதிகமாகும் பொழுது, எதிரி தன் வலு கொண்டு

இதை அழித்துவிட்டால்,

இதன் உடலில் இருந்த உயிரான்மா எதிரியின் உணர்வைக் கவர்ந்து,

அதனின் வலு பெற்று, வியூகத்தைத் தகர்த்து,

அதன் உடலுக்குள் சென்று,

வலிமை இழந்த இந்த உயிர் உட்புகுந்து,

அதனின் உணர்வை அது கவர்ந்து,

அதனின் நிலை பெறும் என்று

கீதையிலே கண்ணான கண்ணனின் செயல்களை, கீதா உபதேசம் என்று (கீதாச்சாரம்) இதையெல்லாம் அன்று மெய்ஞானிகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

கடவுளின் அவதாரம்

உயிரணுவின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும், மனித சரீரத்தையும் மனிதர் தம் உயிராத்மா பெறவேண்டிய நிலை எது? என்பதையும் நமக்கு உணர்த்துவதற்காக ஒரு உயிரணுவின் உள் நின்று இயக்கும் வெப்பத்தைக் கடவுள் என்று பெயரிட்டார்கள்.

உயிரணு தம்முள் உள்ள வெப்பத்தின் தன்மை கொண்டு, உணர்வினைக் கவர்ந்து தன்னுள் இணைத்துக் கொண்ட உணர்வுக்கேற்ப எவ்வாறு தன் வளர்ச்சி பெறுகின்றது என்பதை ஞானிகள் நமக்குத் தெளிவாக்கினர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மைக் காக்க வேண்டும்

துருவ தியானத்தில் எடுக்க வேண்டிய சக்தி எது…?

ஆயுள் மெம்பர் கணவன் மனைவி தியானம்

Spiritual circle of sages

அழிவை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து மீண்டு “மகரிஷிகள் காட்டும் வழியில்” செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனின் உணர்வின் எண்ணம்… தன் ஞானத்தின் உயர் ஞானத்தால் படைப்பின் பல பொருள்களை எல்லாம் இவ்வுடல் தேவைக்குச் செயலாக்கித் தன் சரீர ஜீவிதத்தை இன்று பக்குவப்படுத்திக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இவ்ஈர்ப்புப் பிடிப்பில் பூமியின் சுழற்சியுடன் சிக்குண்ட இஜ்ஜீவ உடலின் “உயிரையும்… உயிரணுக்களையும்…” இந்த உடலில் உள்ள பொழுதே இது வரை யாம் சொன்ன வழித் தொடர்பினால் உயர் காந்த மின் அலைகளை எடுத்துச் சேமிக்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

1.இஜ்ஜீவ காந்த சரீரம் இப்பூமிப் பிடிப்பின் சுவாசத்தை எடுத்து
2.சாதாரண வாழ்க்கையில் வளரும் நிலையிலிருந்து
3.உயர் தன்மைக்கு வீரியத்தைச் செலுத்திடல் வேண்டும்.
4.இப்படி மேல் நோக்கி ஈர்க்கப்படும் தொடர் சுழற்சியினால் இக்காற்று மண்டலப் பிடிப்பில் சிக்காமல் தப்ப முடியும்.

(உடலை விட்டுச் சாதாரண நிலையில் பிரியக்கூடிய உயிராத்மா இந்தப் புவியின் காற்று மண்டலப் பிடிப்பில் தான் சுற்ற முடியும்)

ஆக… வீரியத் தன்மை கொண்ட இவ்வுயிராத்மா மேல் நோக்கிப் பெற்ற உயிர் காந்த மின் அலையின் வளர்ச்சியினால்….
1.உயிருடன் உயிர் அணுக்களும் சேர்ந்த ஈர்ப்பின் உந்தலை
2.எண்ணத்தின் உந்தல் கொண்டு ஒளி கொண்ட ரிஷியின் ஈர்ப்பில் செலுத்தும் நிலையால்
3.ஒளியின் ஒளியாகப் பிரகாச நிலை அடைந்து
4.இந்த மனித உடலிலிருந்தே மனிதன் “பறக்கும் நிலை” பெற்றிருக்கலாம்.

ஆனால் உணர்வின் எண்ணம் இந்த உடல் வாழ்க்கையில் பூமிப் பிடிப்பில் தொடர் நிலையுடன் ஓடும் தன்மையால் சரீரம் அழுகிய நிலையில் உடலின் ஆத்மா பிரிந்ததென்றால்… உடலின் உயிரணுக்களும் வலுவிழந்த தன்மையால் பெற்ற உயிர் சரீர நிலையைக் காட்டிலும்… மீண்டும் பிறப்பு நிலையில் மனிதப் பிறப்புக்கே வந்தாலும் ஞானமும் அங்க அவயங்களின் தன்மையும் “குறுகிய நிலை தான்” பெற முடியும்.

விவசாயத்தில் இன்றெப்படி அதற்குகந்த வீரிய இரசாயண உரங்களைச் செலுத்தி மகசூலில் அதிக நிலையும் காய்கறிகளின் தன்மையை வீரியப்படுத்தி விவசாயம் வளர்ந்துள்ளது. அதைப் போன்று….
1.இச் சரீர உடலின் உயிராத்மாவிற்கு வீரியத் தன்மை தரும்
2.உயர் ஞானத்தின் செயலை மனிதன் செயலுக்குக் கொண்டு வராமல்
3.உடலின் ஆரோக்கியத்திற்கும்… உணவின் சுவைக்கும்தான்… தன் ஞானத்தைச் செலுத்தி விட்டான்.

உயிருக்கும் உயிரணுவிற்கும் தரப்படும் வீரியத் தன்மையில் உணர்வின் எண்ணத்தில் “பிற நிலையின் ஈர்ப்பு நிலையற்று… தன் செயலை வீரியப்படுத்தும் நிலையினால் தான்…” உயர்வு நிலைக்குச் செல்ல முடியும்.

உணர்வுகள் மாற்றப்பட்டு எண்ணத்தின் செயல் பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிற்குச் செலுத்தும் பொழுது மகான்களினால் அன்று வெளிப்படுத்திய சில உண்மை நிலைகளில் மருத்துவ நிலையும் இன்று விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் எடுத்து விட்டதைப் போன்று
1.அழிவு நிலைக்குச் சென்றுவிடும் பக்குவத்தின் பலனை அறிந்து
2.அதிலிருந்து மீண்டிட மகரிஷிகள் காட்டும் வழியில் செயல்படல் வேண்டும்.

பழனி முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் மணங்கள்

 

போகரால் உருவாக்கிய நவபாஷாண முருகன் சிலைக்குள் பார்க்கலாம். அந்தச் சிலையின் மேல் நீரை விட்டவுடன் அந்த இருட்டறைக்குள் வைக்கப்படும் பொழுது ஏற்படும் பூமியின் வெப்பத்தால் மலையின் வெப்பத்தை அது எடுக்கும் பொழுது ஒரு சொட்டு நீர் பட்டால் அதற்குள்ளிருந்து வரும் மூச்சலைகள் நாம் எந்த ஏக்கத்துடன் செல்கின்றோமோ நாம் அதைச் சுவாசித்தவுடன் நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத் தன்மைகளை மாய்க்கக் கூடிய சக்தியை அது பெறுகின்றது. 

Good and bad segregation

ஆன்மீகப் பாதையில்… மற்ற வழிகளைப் பின்பற்றுவோரிடம் வாதம் செய்யத் தேவையில்லை…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எவ்வாறு பெறவேண்டும்…? என்று யாம் (ஞானகுரு) தொடர்ந்து உணர்த்தினாலும்… பக்தி கொண்டவர்கள் சிலர்… முனித் தன்மை கொண்ட பாடல்களைப் பாடிப் பழகிக் கொண்டால் அந்தப் பாடலின் உணர்வுகளே அவர்களுக்கு முன்னாடி வரும்.

1.அது முன் வரப்படும் பொழுது
2.இங்கே கொடுக்கப்படும் அருள் ஞான இணைப்பை அது இணைக்க விடாது தடுக்கும்.

முனித் தன்மை கொண்ட பக்தி மார்க்கங்களிலும்… மதத்தின் அடிப்படையால் அவர்கள் கவிப் புலமையால் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளையும் மற்ற பாடலுடன் பதிவு செய்து கொண்டால் அந்தப் புலமைகள் கொண்ட புலவர்கள் பால் எடுத்துக் கொண்ட உணர்வே முன் நிற்கும்.

இங்கே உபதேசிக்கும் பொழுது அது முன் எழுந்து நின்று விடும்.

இந்தப் புவியின் பற்றை அற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைக்கத் தொடங்கினாலும் அவர்களுக்கெல்லாம் இணைப்பது மிகவும் கடினம்.

அந்த வகையில்… பக்தியின் புலமையில் அதிகமாக எடுத்துக் கொண்டோரின் நிலைகளிலும் ஒரு சிலரே மீள்வர். நூற்றுக்கு ஒரு பத்துப் பேர் தேறுவதே மிகக் கடினம்.

காரணம்… அவர்கள் மதத்தின் நிலைகள் கொண்டு ஞானிகள் என்ற நிலைகளும் புலமைகள் பாடியும்… பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த உயிரினங்களின் உணர்ச்சியைப் பற்றிப் புலமைகள் பேசினாலும் “அந்தப் புலமைகளே முன் வந்து எழும்…”

ஆனால் மூலத்தை இவர்கள் அறியார். மூலமற்ற நிலைகள் கொண்டு வாதிக்கும் நிலையே தான் அவர்களுக்குள் அதிகமாக விளையும்.
1.வாதிடும் திறமைகள் உண்டு.
2.ஆனால் மெய் ஒளி பெறும் உணர்வினை ஏற்றுக் கொள்ளும் மனப் பண்பு வராது.

வாதிடும் திறமைகள் ஆகப் படும் பொழுது அந்த முனித் தன்மை என்ற நிலையே இங்கே அடையும். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும்.

ஏனென்றால் இந்த முனித் தன்மை கொண்டோரிடம் வாக்குவாதத் தன்மை அதிகமாகி விட்டால்… “சாமி நமக்குன் இவ்வளவு சொல்லி இருக்கின்றாரே…!” என்ற நிலைகளைக் கலந்து…
1.எதிர் மறையான பொறிகள் – ஒரு கல்லுடன் உராயப்படும் பொழுது பொறிகள் எழும்புவது போல்
2.நமக்குள் வெறுப்பும் வேதனையும் அதிகமாகத் தொடர்ந்து விடும்.

இதனால் நமக்குள் உறைந்திடும் உணர்வு கொண்டு கலவைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்துவது போல் நம் உயர்ந்த குணத்திலேயும் மாற்றம் ஏற்படும் நிலையே வந்துவிடுகின்றது.

ஏனென்றால் பல நிறங்கள் தனித் தன்மையாக அவை இருப்பினும் அதனுடன் மற்ற நிறத்தை இணைக்கப்படும் பொழுது… நீங்கள் என்ன தான் வாயிலே சொன்னாலும்… சொல்லச் சொல்ல… அவர்கள் வெறுக்க வெறுக்க… அந்த மாற்றுப் பொருளாகச் சொல்வார்கள்.

அப்பொழுது உங்கள் உணர்வுகளும் அதைப் போல மாறுபட்டு நாம் போகும் பாதைக்கே ஒரு தடை விதிக்கும் நிலையாக வந்துவிடும்.

“இதிலே மிகவும் கவனம் தேவை…!”

காரணம் அதைப் போன்ற நிலைகள் வந்தாலும் உங்களுக்குக் காட்டிய அருள் வழி கொண்டு யாம் கொடுத்த…
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும்…! என்று எண்ணத்தால் எண்ணி
2.அதைப் பல முறை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.அவர்கள் மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

அவர்கள் உண்மையை உணர வேண்டும்.. நிச்சயம் உணர்வார்கள்…! என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும்.

அமெரிக்கா மற்ற நாடுகளை அடிமைப்படுத்தும் விதம்

ஏமாற்றும் உணர்வுகள் கொண்டவர்களின் செயல்களும் விளைவுகளும்

இந்தக் காலத்தின் கடைசிக் கட்டத்திலிருக்கிறோம்

ஆலயப் பண்புகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா…

கோயிலைச் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் நம்முடைய ஒழுக்கப் பண்பாடுகளை வளர்ப்பதற்கு எவ்வளவு தெளிவாகச் செய்துள்ளார்கள் ஞானிகள்.

“சாதாரண மனிதர்களும் பிறவியில்லா நிலை பெறவேண்டும்…!” அகஸ்தியர்  கண்டுணர்ந்த உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்ற நிலைக்காக வேண்டி ஞானிகள் காவியங்களையும் ஆலயங்களையும் படைத்தார்கள்.

full moon power

மிக மிகச் சக்திவாய்ந்த உணர்வுகளை பௌர்ணமி தோறும் பதியச் செய்கின்றோம்

இன்று மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ வகையில் நம் உடலை அழகுபடுத்துகின்றோம். அடுத்து ஒரு சிறிய மாற்றமான சொல் வந்தால் போதும்…!

என்னை இப்படிப் பேசி விட்டார்களே..!. என்ற தாங்க முடியாத உணர்வு கொண்டு… விஷத்தையே உட்கொள்ளச் செய்யும். ஒரு நொடிக்குள் இந்த உடலையே அழிக்கும் உணர்வு கூட வந்து விடுகின்றது.

இப்படி மற்றவர்களுடன் கலந்து உறவாடப்படும் பொழுது அவருடைய கஷ்டங்களும் மற்றவைகளும் கேட்டுணர்ந்தோர் உங்கள் உணர்வுகளில் படுகின்றது.

உயர்ந்த குணத்துடன் நஞ்சு கொண்ட உணர்வுகள் கலந்த பின் நம் நல்ல குணங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இதே எண்ணம் தான் அங்கே உயர்த்தவும் சொல்கிறது.

1.ஒவ்வொரு நொடியிலேயும் நம்மைத் தாக்கிடும் அதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட…
2.நம் கண்ணின் நினைவை விண்ணை நோக்கிக் கூர்மையாகச் செலுத்தி
3.நஞ்சை வென்ற அந்த மகரிஷியின் உணர்வை அதைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
4.உங்களுக்கு மன பலம் கிடைக்கும்.. அதிலிருந்து விடுபடும் ஞான்மும் கிடைக்கும்.

இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் அவரவர் கஷ்டங்களை என்னிடம் சொன்னால் அதை நான் கேட்டுணரும் போது அவை யாவும் என்னிடம் கலக்கின்றது.

இருப்பினும் குருநாதர் காட்டிய அருள் வழியில் எனக்குள் வரும் அந்தத் தீமைகளை எல்லாம் நீக்கிக் கொள்கின்றேன்.

அதே சமயம் இந்த உபதேசங்களைக் கேட்டு அதன் வழியில் தியானிக்கும் நீங்களும்… பிறருடைய கஷ்ட நஷ்டங்களைக் கேட்டுணரும் போது
1.அந்த உணர்வுகளை நீக்க
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு உறுதுணையாக இருந்து
3.அந்த வழியில் தீமைகள் சேராவண்ணம் பாதுகாப்பாக இருந்து செயல்படுத்துகின்றேன்.

இருப்பினும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. போன்ற வகைகளிலும் உலகில் நடக்கும் தீமைகளையும் அசம்பாவிதங்களையும் கேட்டுணர்ந்த பின் உடனே உங்களுக்குக் கொடுத்த தியான சக்தியின் துணை கொண்டு “ஆத்ம சுத்தி செய்து கொள்வதே நலம்…”

அதைப் பெறச் செய்வதற்குத்தான் அடிக்கடி உபதேசிப்பது…!

1.மிகவும் சக்திவாய்ந்த மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அந்த அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறவும்
2.பௌர்ணமி நாள்களில் உங்களுடைய எண்ணம் விண்ணை நோக்கிச் செல்லவும்
3.விண்ணிலே உங்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் சேர்பித்தலும்
4.மூதாதையர்களின் உடலில் உள்ள மற்ற உடல் பெறும் உணர்வை அங்கே கரைப்பதும்
5.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அந்த உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்டு
6.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதும் தான் எமது வேலை (ஞானகுரு).

பௌர்ணமி அன்று மிக மிக சக்திவாய்ந்த உணர்வுகளை உங்களில் பதியச் செய்கின்றோம். தியானித்து அதைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

Maharishikaludan Pesungal - gnana

உடலைக் காக்க முற்படும் இன்றைய மனிதனின் ஞானத்தால் தன் உயிராத்மாவைக் காக்க முடியாதா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று விஞ்ஞானத்தில் மருத்துவத்துறையிலும் மற்ற தொழிலும் அணுக் கதிர்கள் செயல்படுத்தக் கூடிய நிலைக்கும் ஜீவ காந்த சரீரத்தின் வ:ளர்ச்சியில் இச்சரீர செயலுக்கும் உயிர் அணுக்களின் செயல் எப்படிச் செயல் கொள்கிறது…?

மருத்துவ விஞ்ஞானத்தின் மூலமாக… மனித உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு… அதாவது நோயின் தன்மை அறிய உடலிலிருந்து வெளிப்படும் சிறு நீர் மலம் கபம் இவற்றையும் உதிரத்தையும் எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்த சில கால கட்டத்தில் அதிலுள்ள உயிரணுக்கள் பிரியா நிலையில் ஆராய்ந்து அதனுடைய தன்மையை அறிகின்றார்கள்.

உடலிலிருந்து வெளிப்பட்டு… “சில மணி நேரங்களுக்குள் அதைப் பரிசோதனைப்படுத்தினால் தான்…” அதிலுள்ள உயிரணுக்களின் தன்மையைக் காண முடிகின்றது.

செயலுடன் கூடிய ஜீவ ஓட்டத்தில் உயிர் கொண்ட உயிரணுக்கள்…
1.ஜீவ ஓட்டம் அற்றுப் பிரியும் பொழுது… ஈர்ப்பின் ஓட்ட நிலை இல்லாமல்
2.அந்த உயிரணு பிரிந்து காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றதல்லவா…?
3.அதைப் போன்று தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும்
4.இஜ்ஜீவ ஓட்டப் பிடிப்பு மாறியவுடன் காற்று மண்டலத்தில்
5.உயிரும் இந்த உடல் அணுக்கள் யாவையும் சுழலும் நிலை ஏற்படுகின்றது.

இதனுடைய தொடரிலிருந்து… உடலில் ஏற்படக்கூடிய சில வகை வியாதிகளுக்கு விஞ்ஞான மருத்துவ முறையில் மின் கதிரியங்களைச் செலுத்தி…
1.வளர முடியாத சில அணுக்களை வளர்க்க…
2.அதற்குகந்த மருந்தைச் செலுத்தி… அதற்குகந்த வீரியத்தைத் தர (உயிரணு வளர)
3.கதிரியக்க முறை விஞ்ஞான மருத்துவத்தில் மனிதன் முன்னேறி இருக்கின்றான்.

தன் ஞானத்தால் இந்த உடலில் வளரும் உயிரணுக்களுக்கு அடுத்த நிலை பெறக்கூடிய நிலையை… “வீரிய மருத்துவத்திலும்… மற்ற பல செயலிலும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞானம்…
1.தன் ஞானத்தைக் கொண்டு மனிதன் இன்று பறக்கும் நிலைக்கும்
2.எண்ணியதைச் செயலாக்கும் உயர் தெய்வ நிலைக்குச் செயலாக்கி இருக்கலாம்.

கம்ப்யூட்டர் மூலம் ஏற்படப் போகும் தீமைகள் 

கம்ப்யூட்டர் மூலம் வைத்துள்ள control செயலிழந்தால் நாமெல்லாம் என்ன ஆவோம் என்று சொல்ல முடியாது…!

காய்கறி விற்பவர்கள் சிலர் பூச்சி மருந்தைத் தூவித்தான் விற்கிறார்கள் 

Gnanaguru Blessings

தியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது…? நடந்த நிகழ்ச்சி

வட இந்தியாவில் ஒரு சமயம் நானும் (ஞானகுரு) குருநாதரும் (ஈஸ்வரபட்டரும்) போய்க் கொண்டிருக்கின்றோம். அப்பொழுது குருநாதர் என்னிடம் காண்பிக்கின்றார்.

ஒரு கூனி இப்படி நடந்து போகின்றான் பார். அவன் கூனியாக (முதுகு வளைந்து) இருக்கின்றான். அவனுடைய சந்தர்ப்பத்தை இப்பொழுது பார்..! என்கின்றார்.

வெகு காலமாக இவன் இப்படிக் கூனிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றான். சிறு பிள்ளையிலேயே இவனுக்கு இப்படி ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து வளர்ச்சியாகி… வளர்ச்சியாகி… அது அவனை வளர விடாமல்… நிமிர முடியாமல்.. இந்த நிலையில் இருக்கின்றது

அவன் குனிந்து கொண்டே போகின்றான். அவனுடைய சந்தர்ப்பம் நீயும் நானும் அவனைப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுக்கு ஒரு அதிர்ஷ்டம் வந்திருக்கின்றது.. இப்பொழுது பார்…! என்று சொல்கிறார் குருநாதர்.

என்ன சாமி அதிர்ஷ்டம்…? அவன் வேதனைப்பட்டுக் கொண்டல்லவா போகின்றான்…! என்றேன் நான்.

அவன் முதுகுத் தண்டிலே இங்கே உன் கண்ணிலிருந்து நீ அலைகளைப் பாய்ச்சுடா…! என்கின்றார். குருநாதரும் அவனப் பார்க்கின்றார்

உடனே அவனுக்கு அங்கே முதுகிலே அரிப்பு ஆகின்றது. அரிப்பு ஆனவுடனே அவன் என்ன செய்கின்றான்…?

அங்கே ஒரு தூணிலே போய்ச் சாய்ந்து கொண்டு முதுகை வைத்துத் தேய்.. தேய்… என்று தேய்க்கின்றான். தேய்த்ததும் நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விட்டான்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் அங்கே பரிட்சைக்குப் பார்க்கப்படும்போது அவன் முதுகுத் தண்டில் பார்த்தவுடனே அவனுக்கு அரிக்கின்றது. அப்பொழுது அதைத் தாங்க முடியவில்லை என்று தூணிலே போய்த் தேய்க்கின்றான்.

அதைப் பார்த்ததும் அங்கே இருக்கின்றவர்கள் ஏனப்பா இப்படி…? என்று கேட்கிறார்கள்.

இல்லைங்க… என்னால் அரிப்பு தாங்க முடியவில்லை… என்று சொல்லிவிட்டுத் தூணிலே சொறிந்து கொள்கிறான். நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விடுகின்றான். இது நடந்த நிகழ்ச்சி…. அவனுடைய சந்தர்ப்பம்…!

1.ஏனென்றால்… அவனை உற்றுப் பார்த்து
2.இந்த உணர்வின் தன்மையை அவன் பெற வேண்டுமென்ற உணர்வைப் பார்க்கப்படும்போது…
3.முதுகு தண்டில் அரிப்புக் கொடுக்கும்போது…
4.இந்தச் சந்தர்ப்பம் அது புற நிலைகளில் இருந்து தாக்கப்படுகின்றது.

உன் பார்வை அவன் மீது பட்டதும் அரிப்பு ஆகி உடனே தேய்க்க ஆரம்பித்து விடுகிறான்… அப்படியே அந்தப் பிடிப்பு விடுகின்றது…! என்று என்னிடம் உணர்த்துகின்றார் குருநாதர்

அவன் சிறு குழந்தையாக இருக்கும் போது “அச்…ச்..” என்று தும்முகின்றான் இரண்டு நரம்பு பிடித்துக் கொள்கின்றது. முதுகை வளைய விடாதபடி செய்கிறது. நிமிர்ந்தால் வலிக்கின்றது.

இப்படியே அந்தக் குழந்தையிலிருந்து வளர்த்து வளர்த்து யாரும் ஒன்றும் செய்யாததனால் அவன் முதுகுத் தண்டு அப்படியே இறுகிப் போய் விட்டது.

அவன் சந்தர்ப்பம் இப்பொழுது அரிக்கப்படும்போது…
1.உணர்வுகள் வேகம் அந்த வாடிய உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அந்தப் பிடிப்பு அகன்றது. அவன் முதுகு நேராகி விட்டது.

ஆனால் இதை எல்லாம் அவனிடம் சொல்லாமல் நானும் குருநாதரும் அப்படியே சென்று விட்டோம். குருநாதருடன் யாம் இப்படிச் சுற்றி வரப்படும் பொழுது சந்தர்ப்பம்… சில பேருக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு இப்படி நல்லதாகின்றது.

ஆகவே… ஒவ்வொரு நிமிடமும் நாம் வலுவைக் ஊட்டிக் கொள்ள வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது.

குழந்தைகளுக்கு இது மாதிரியான குறைகள் வந்தால் உடனே நாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

அதாவது சில குழந்தைகளுக்கு ஊனக் குறைவோ… சிந்தனை இல்லாதோ.. மூளை வளர்ச்சி இல்லாமலோ… இருக்கும். மேலே சொன்ன மாதிரி எண்ணி அந்த மகரிஷிகளின் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் அதை அவர்களுக்குப் பாச்சுதல் வேண்டும்.

நம்மில் கரு உண்டானதுதான் அந்தக் குழந்தைகள். இதைப்போல அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்ற உணர்வினைக் கூட்டி
1.எங்கள் குழந்தை மகரிஷிகள் உணர்வுகள் பெற வேண்டும்.
2.அது சிந்தனையை வளர்ச்சி பெற வேண்டும்.
3.ஞானத்தின் தன்மை குழந்தையிடம் வளர வேண்டும் என்ற இந்த எண்ணத்தை வலுவாக்கிவிட வேண்டும்.

வலுவாக்கிய சக்திகளை குழந்தைகளுக்கு ஒவ்வொரு நொடியும் உணவு கொடுக்கும் போது இது மாதிரிச் செய்யலாம். அதை தலை வாறும்போது இதைப் போலச் செய்யலாம். அதை பார்க்கும் போதெல்லாம் இந்த நிலை வளர வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள்.

இதைப் போன்று எண்ணும்போது இந்த உணர்வுகள் நம் குழந்தையைப் பற்றி நமக்குள் மன வலுப் பெறச் செய்வதும் நாம் பாய்ச்சும் அலைகள் குழந்தையின் மேல் படரப் போகும்போது நலமாகும் சந்தர்ப்பத்தை அது உருவாக்கும்.

ஏனென்றால் இவ்வாறு எண்ணிய உணர்வுகள் செயல்படும்போது இது கடவுளாகின்றது. செய்து பாருங்கள்…!

தீமையைப் பிளக்கும் உயிர் வழி சுவாசம்

 

ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டுவிட்டு நம் உயிர் நம்மை இயக்கும் இந்த வழி கொண்டு… நம் உயிரை ஈசனாக மதித்து அந்த வாசலின் வழியாகச் சென்று… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்… எங்கள் உடலில் உ:ள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தப் பழக வேண்டும்.

view-of-jupiter

அழிப்பதற்காகப் பயன்படுத்தும் சக்தியை… மனிதன் ஆக்கபூர்வமான செயலுக்காகப் பயன்படுத்துவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“பல நூறு டன் எடையுள்ள மணலிலிருந்து” விஞ்ஞானத்தின் செயலில் ஒரு அவுன்ஸ்க்கும் குறைவான சில ரசாயன சக்தியை (URANIUM) மனிதன் பிரித்தெடுத்து இவ்வுலகத்தையே அழிக்கவல்ல வெடி குண்டுகளைச் செய்விக்கின்றான்.

மனிதனின் எண்ணமும் செயலும் எப்படித் தன் ஞானத்தைச் செயல்படுத்திச் சில சக்தி வாய்ந்த அழிவு நிலைக்கு உட்படுத்தும் குண்டுகளை உருவாக்குவது போல்
1.எண்ணத்தின் உணர்வை மாற்றியமைக்கும் உயர் ஞானத்தைக் கொண்டு
2.இவ் உடலின் ஒவ்வொரு அணுவையுமே வீரியத் தன்மைக்கு
3.சம உணர்வு கொண்டு பரிமளிக்கும் செயலினால்
4.மனிதன் தெய்வ நிலை கொண்டு வளர் சக்திகளை உருவாக்க முடியும்.

விஞ்ஞானத்தில் மனிதக் கருவையே உருவாக்கக் கூடிய ஞானமும் செல்கின்றது. தாய் தந்தை இல்லாமல் அமிலச் சேர்க்கையின் உயிரணு வளர்ச்சி கொண்டு, ஜெட பிம்ப வளர்ப்பிற்கு விஞ்ஞானம் செல்கின்றது.

ஆனால் செயலின் பலன் எதிர் நிலையான உணர்விற்குச் சென்று விடும். அப்படி உருவாகும் சிசுக்கள் மனிதனைக் காட்டிலும் வீரிய விஷச் சக்தி கொண்ட பிம்பமாய்த்தான் செயல்படுத்த முடியும்.

இந்தப் பூமியில்… விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை இக்கலி கடைசியில் இன்றெப்படி மனிதன் செயல்படுத்துகின்றானோ அதற்கு மேல் வீரிய சக்தி கொண்டு வியாழனில் இருந்த மனிதர்கள் அன்று செய்தார்கள்,

1.நம் பூமியில் இப்பொழுது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தைக் காட்டிலும்
2.பல மடங்கு வீரியத் தன்மை கொண்ட விஞ்ஞானச் செயல்
3.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டதுண்டு.
4.அந்தச் செயலின் தொடர் இன்றளவும் சில நிலைகளில் தொடர் கொண்டுதான் உள்ளது.

தன் ஞானத்தின் உயர் ரிஷி சக்தியை… மனித உணர்வு வளரும் செயலுக்கு
1.தியானத்தில் சம உணர்வு கொண்டு எடுக்கப்படும் உயர் காந்த மின் சக்தியைக் கொண்டு
2.இஜ்ஜீவகாந்த சரீரத்தின் உயிர் ஆத்மா பெறும் உயர்வுதான்
3.ஒளியின் ஒளியாய் எதையும் வளர்க்கும் பிம்பச் செயலுக்குச் செயல்படுத்த முடியும்.

பரப்பிரம்மமாய்.. பிம்பமாய்… பரப்பிரம்மமாகச் செயல் தொடர் பெற.. எண்ணத்தின் உணர்வைக் கொண்டு இஜ்ஜீவகாந்தம் உயர் காந்த மின் ஒளியாய் ஒளி பெறும் தன்மை கொண்டுதான் ரிஷி சக்திக்குச் செல்ல முடியும்.

எண்ணத்தின் உணர்வை இச்சரீர கர்ம காரியத்தில் பொருளீட்டி… உண்டு… உறங்கி… கழித்து… வாழும் வாழ்க்கையில் இச்சரீர ஆசையை வைக்காமல்… எண்ணத்தின் உணர்வை உயர் ஞானத்தில் உய்யும் வழியை உணர்ந்தே… ஒளி பெறல் வேண்டும்.

வாழ்க்கையில் எவ் அலை சுவையை இவ்வெண்ண உணர்வு பெற்றதோ அதன் உந்தலுக்குகந்த இச்சையில்தான் நாம் வாழுகின்றோம்… வாழவும் முடியும்.

ஆனால் மனிதனின் உயர்ந்த தத்துவ சக்தியைக் கொண்டு ஞான ஒளி பெறும் வளர்ச்சிதானப்பா உயர்ந்த வளர்ச்சி…!

 

1.எல்லா உயிரனங்களிலும் உயர்ந்த நிலை கொண்ட இம்மனிதக் கரு வளர
2.சமமான எண்ணம் கொண்ட சாந்த உணர்வுடன் கூடிய ஜெபத்தால் பெறும்
3.உயர் காந்த மின் சக்தியின் அணுக்களைக் கொண்டு
4.இவ்வுயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே உயர்வு நிலை பெறச் செய்ய முடியும்.

 

கணவன் மனைவிக்குள் எதிர்நிலையான உணர்வுகளின் இயக்கத்தால் வரும் விளைவுகள் 

மனைவி கணவன் மேல் வேதனை உணர்வைப் பாய்ச்சினால் தீங்கு விளையும்

ஜாதகம் பார்த்து நாம் கல்யாணம் செய்வதும், அகஸ்தியனும் மனைவியும் ஒன்றி வாழ்வதும்

Lord shiva and arjuna

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த காவியங்களில் உள்ள மூலப் பொருள்களை (இரகசியங்களை) அறிந்து கொண்டால் நல்லது

நம் கண்ணில் உள்ள கரு விழியில் அந்த மகரிஷிகளின் நினைவாற்றலைக் கொண்டு வந்து தனக்குள் பதிவு செய்யும்போது அந்தக் கரு விழி… ருக்மணியாக மாறுகின்றது – கண்மணி.

அதாவது… கண்ணுக்குள் இருக்கும் மணி நமக்குள் பதிவு செய்யும் நிலைகளாக மாறுகின்றது. அது தான் ருக்மணி….!
1.கண்மணி ருக்மணியாக மாறுகின்றது.
2.பின் அந்த உணர்வின் தன்மையைக் கவரப்படும்போது உண்மையைச் சொல்லும் சத்தியபாமாவாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தீமை செய்பவனை உற்றுப் பார்க்கும்போது “தீமை செய்கின்றான்…” என்ற உண்மையை உணர்த்துகின்றது சத்தியபாமா.

ஆனால் அந்தச் சமயத்தில் தீமையை அகற்றிய உணர்வின் தன்மையை கண்மணியில் பதிவு செய்து புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டப்படும்போது
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி தனக்குள் வலுப் பெறும் நிலையாக உணர்த்தி
2.சத்தியபாமாவாக தீமையை அகற்றும் உண்மையின் நிலைகள் நமக்குள் வளருகின்றது.

அந்த மூலப் பொருளை நாம் அறிகின்றோம்.

மகாபாரதப் போரை குருக்ஷேத்திரப் போரை நடத்தியது யார்…? இந்தக் கண் தான்.

இந்தப் பாரதமான நிலைகள் படர்ந்திருப்பதை… நம் உடலுக்குள் அணுக்களாகப் பதிந்திருப்பதை வழி நடத்திக் கொண்டே இருக்கின்றான் கண்ணன். ஆனால் உயிரான ஈசனோ அதை உருவாக்கிக் கொண்டுள்ளான்.

இதைப் போன்றுதான் நமக்குள் அர்ஜுனன் இருக்கின்றான் நகுலன் இருக்கின்றான் சகாதேவன் இருக்கின்றான். சகாயம் செய்பவனும் இருக்கின்றான். வலிமை பெற்ற குணமும் நமக்குள் இருக்கின்றது.

அது தான் மகாபாரதப் போரில் ஒவ்வொரு குணங்களின் இயக்கங்களை அதனதன் தன்மை கொண்டு ஒருக்கிணைந்து தன் நிலைகளில் வலுப் பெறச் செய்வது. எப்படி..?

1.மிகச் சக்தி வாய்ந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்தோமென்றால்
2.இது அனைத்தையும் அது ஒன்று சேர்த்து
3.நமக்குள் ஒவ்வொரு நிலையும் சகாயமாக
4.வலுவின் தன்மையாக அரவணைத்துச் செல்லும்…!

தர்மர் தன் நிலைகளை இரக்கத்துடன் செய்தாலும் சூழ்ச்சியால் அங்கே அடக்கப்படுகின்றது. அதாவது நல்ல குணங்கள் கொண்டு இருப்பினும் ஏமாற்றுவோர் கையில் தான் நாம் சிக்க முடிகின்றது…! என்று காட்டுகின்றார்கள்.

அவன் சூழ்ச்சிக்குள் சிக்கப்பட்டுத் தன் குடும்பத்தையே அடமானம் வைத்து சூதாடுகின்றான் என்றால்… தன் நிலைகள் அறியாது செயல்படுகின்றது நம் உணர்வலைகள்…!

இது போன்ற நிலைகளில் கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் உண்டு. அந்த உணர்வுகளில் வலுப் பெற்ற நிலைகளை
1.நூறு பேர் சகோதரர்களாக இருப்பதன் வலிமையும்
2.ஐந்து பேர் சகோதரர்களாக இருப்பதன் வலிமையையும்
3.ஒரு தந்தைக்குப் பின் ஒரு தாய்க்கு வளர்ந்த நிலைகள் இவ்வாறு என்று பிரித்துக் காட்டுகின்றான்.

அதன் வழியில் ஒவ்வொரு நிலைகளிலும் இந்தப் பூமியில் உருவான உணர்வின் தன்மை நமக்குள் எப்படிப் போராக நடக்கின்றது…? என்ற நிலையை அது தெளிவாக்கப்படுகின்றது மகாபாரதப்போராக…!

ஆனாலும் இது அனைத்தையும் வழி நடத்திச் செல்வதே கண்ணன்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து அதை வைத்துக் குருக்ஷேத்திரப் போராக நடத்தி அந்த தீமைகளை அடக்க வேண்டும். அருள் ஞானியின் உணர்வினை நமக்குள் முன்னணியில் கொண்டு வர வேண்டும்.

1.ஆக… அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வினைக்கு நாயகனாக்க வேண்டும்.
2.இந்த உடலில் உள்ள அனைத்தையும் அடக்கிடும் அரசனாகக் கணங்களுக்கு அதிபதியாக மாற்றிடல் வேண்டும்.
3.அப்படி மாற்றினால் தான் தீமையின் உணர்வு தனக்குள் வராது
4.எத்தகைய தீமையையும் நீக்க முடியும்…! என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

நாம் அந்த விநாயகரை நாம் எண்ணும்போது துவைதம். அங்கே பார்க்கும் போது ஞானிகள் காட்டிய அருள் சக்தியை நாம் நினைவில் கொண்டு இந்த உணர்வின் தன்மை விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.

சேர்த்து… நம் உடலுக்குள் உள் புகுந்து எதிரியாக இருக்கும் வலிமை மிக்க வாலியை வீழ்த்திட வேண்டும். மகரிஷிகளின் பால் நம் எண்ணம் செல்லும் போது அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து வாலி என்ற எதிரியை… (தீமை செய்யும் உணர்வை) வீழ்த்துகின்றது.

நமது காவியத் தொகுப்புகள் எதுவும் தப்பில்லை. ஆனால் தனித்துப் பிரித்து பார்த்தால் உண்மையைப் பார்க்க முடியாது…!

ஒரு இயந்திரத்தைக் காண்பித்த பின் இது இன்ன வேலை செய்யும் என்று அதை வைத்து விட்டால்… அது தான் முக்கியம்…! என்று அதனை மட்டும் பார்த்தால் என்ன ஆகும்..?

அதனுடன் இணை சேர்க்கும் நிலைகளைக் கவனிக்காமல் இருந்தால் அந்த இயந்திரம் சரியாக இயங்காது.
1.இதிலேதான் தப்பு… இல்லை இல்லை… அதிலே தான் தப்பு…! இருக்க வேண்டும் என்று
2.சரியாகக் கவனிக்காமல் அதை விட்டால் அந்த இயந்திரம் அப்படியே தான் இருக்கும்
3.அதனுடைய முழுப் பலன் கிடைக்காது…!

இதைப் போன்ற போர் முறைகள் வருவது போல் நமக்குள் வரும் தீமையின் செயல்கள் எவ்வாறு இயக்குகிறது..? என்ற நிலையில் அந்த இயந்திரத்தை எப்படி நாம் கண் கொண்டு பார்க்கின்றோமோ… இந்த உணர்வின் இயக்கங்களே நம்மை இயக்குகின்றது… என்ற நிலையில் நம்மை இயக்கும் உணர்வின் இயக்கங்களை அறிய வேண்டும்.

1.ஏனென்றால் ஒவ்வொரு உணர்வுமே வலிமை பெற்றது தான்…
2.இருந்தாலும் அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அதைக் காட்டிலும் வலிமை பெற்றது.

ஆகவே அத்தகைய சக்தியை மகரிஷிகள் காட்டிய அருள் வழியை நாம் பெறுதல் வேண்டும். அந்தச் சக்தியை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

சண்டை போடுபவர்களை எல்லாம் பார்க்கின்றீர்கள்.. சண்டை போடுகின்ற சக்திகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. சண்டை போடுபவர்களை எல்லாம் உங்களிடம் பதிவு செய்து வைத்துள்ளீர்கள். எண்ணினால் மீண்டும் அந்தச் சக்திகள் அந்து உங்களையும் சண்டை போட வைக்கும்.

இதைப் போல் தான் தீமைகளை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளை உங்களிடம் சொல்கின்றேன்… இது காற்றிலே படர்கின்றது… அதே சமயத்தில் உங்களிடமும் பதிவாகின்றது.

1.உங்கள் எண்ணங்களைக் கிளரச் செய்து ஞானியின் உணர்வை இணைக்கின்றோம்
2.ஒவ்வொரு நிமிடத்திலும் இப்பொழுது நீங்கள் சுவாசிக்கும்போது
3.அந்த ஞானியின் உணர்வை நுகரச் செய்து தீமைகளை அடக்கும் சக்தியை
4.உங்களுக்குக் கிடைக்கப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம்.

நினைவு கொண்டு இதை நீங்கள் பருகுவீர்கள் என்றால் இந்த உணர்வின் வலிமை கூடி உங்களுக்குள் தீமை வராது அதை அடக்கும். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…?

சொர்க்கவாசல் – புருவ மத்தி வழி… உயிர் வழி

பரமபதம் என்று ஒரு விளையாட்டை ஞானிகள் உருவாக்கி மனிதன் விண்ணுலகம் செல்லும் மார்க்கத்தைத் தான் அதிலே காட்டினார்கள். சொர்க்க வாசல் என்பது அது நம் புருவ மத்தி வழி தான்.

 

ஒவ்வொரு ஆலயங்களுக்குச் செல்லும் பொழுதும், நேர் வாசல் மூலம்தான் செல்கின்றோம். ஆனால்,  வைகுண்ட ஏகாதசி அன்று, “சொர்க்கவாசல்” என்று மற்றொரு வாசல் மூலம், உள்ளே வரும்படிச் செய்கின்றார்கள்.

 

அதாவது நாம் ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டுவிட்டு, நம்மை இயக்கும் உயிரான ஈசனை மதிக்கும் நிலையாக, இந்த ஆலயங்களில் செல்லும்படிச் செய்கின்றார்கள்.

 

அந்த வாசல் வழியாகச் சென்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, நாம் பெறவேண்டும்.  

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடல் முழுவதும் படர்ந்து, நம் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும், என்று இதனின் உணர்வை நமக்குள் செலுத்தி, இந்த ஆலயம் வருவோர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து, அவர்களது உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று ஆலயம் வருவோர் அனைவரையும் எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

 

அவர்கள் உணர்த்திய உணர்வின்படி ஆலயங்களை அமைத்து,  “மூக்குவழி சுவாசிப்பதைக் காட்டிலும்,  புருவ மத்தியில் நல்லுணர்வை ஈர்த்துப் பருகும் நிலையை நாம் பெறவேண்டும்” என ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

 

இப்படி நாம் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று நமக்குள் உயிர் வழி சேர்த்து, வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது, இந்த “ஆலயம் வருவோர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், தெய்வ குணங்கள் பெறவேண்டும், தெய்வ நிலைகள் பெறவேண்டும், அவர்கள் குடும்பங்களில் அமைதி பெறவேண்டும், அருள் ஒளி படரவேண்டும்” என்று நாமும், மற்றும் அனைவரும் எண்ணும்பொழுது, நம்முள்ளும், மற்றும் ஆலயம் வருவோர் அனைவரிடத்திலும், நல்ல உணர்வுகள் விளைகின்றன.

 

நமது உணர்வின் தன்மை நம்முள் விளைந்து,  ஒளியின் சரீரம் பெறும் தகுதி, நாம் அனைவரும் பெறுகின்றோம். ஞானிகள், மகரிஷிகள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைகின்றோம். இதுதான் வைகுண்ட ஏகாதசி.

Polariss

பூமியின் பருவ கால மோதலினால் ஏற்படும் மாற்றங்கள் போல் தான் மனிதனுக்கும் ஏற்படுகிறது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எப்படி ஒவ்வொரு கோளத்தின் சந்திப்பினால் கால மாற்றங்கள் இப்பூமியின் பருவ காலம் பெறுகின்றதோ அதைப் போன்று இச்சரீரமும் பெறுகின்றது.

பூமியின் பருவ காலத்தில் சில அதிர்வு நிலைகளால் கடல் பொங்குவது… சூறாவளி… காற்று வீசுவது… எரிமலை வெடிப்பது… பூகம்பம் வருவது…! இத்தன்மை போன்று மனித உடலின் தன்மைக்கும் ஏற்படுகின்றது.

கால மாற்றத்தில் பிற மண்டலங்களின் சந்திப்பில் பூமி ஈர்க்கும் அலையின் தன்மையில் அதிர்வு ஏற்படுகின்றது. அதைப் போன்றே….
1.இம்மனித ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஏற்காத் தன்மை மோதும் பொழுது
2.அதிர்வு நிலைகளை இச்சரீர இயக்கமும் பெறுகின்றது.

இந்தப் பூமியில் எந்த நிலை கொண்டெல்லாம் கால மாற்ற சீதொஷ்ண நிலை மாறுபடுகின்றதோ அதற்கொப்ப இந்த உடல் பிம்பச் செயல்களில் “உணர்வுகள் மாறும் போது..”
1.இச்சரீர ஆரோக்கியத் தன்மையிலும்
2.எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞான வழியிலும்… பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடனே மனிதன் நான் எண்ணியது ஓன்று… நடப்பது ஒன்றாக உள்ளது… “எல்லாம் விதியின் செயல்…!” என்று எண்ணி விடுகின்றான்.

எண்ணத்தின் வாழ்க்கைத் தொடரில் செயல் கொள்ளும் ஞானம்… ஓர் மாற்று நிலைக்குச் செயல்படும் பொழுது… உணர்வின் உந்தலால் உடலையே பாதிக்காத தன்மைக்குத் தன் ஞானத்தைக் கூட்டி… மதியைக் கூட்டி வென்று
1.சம உணர்வின் சாந்த குணமுடன்
2.இச்சரீர இயக்கத்தின் அணு சக்திகளை வீரியமாக்கி
3.உயிராத்மாவை ஒளிரச் செய்தல் வேண்டும்

மணலை அதி உஷ்ணமாக்கிக் கண்ணாடி செய்து தன் பிம்பத்தையும் எதிர் படும் எதனையும் அக்கண்ணாடியில நாம் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று இந்த உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் சம உணர்வுபடுத்தும் செயலில் விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒளி அலையை எடுத்து உணர்வின் எண்ணத்தால் வீரிய சக்தியாக உடலிலே வளர்த்திட வேண்டும்.

 

1.அத்தகைய உயிராத்மாவின் சமைப்பினால்…
2.மனிதன் “ஞான திருஷ்டி” என்ற சகல சித்து நிலையையும் பெற முடியும்.

திருடும் நோக்கத்துடன் வருபவர்களிடமிருந்து தப்பும் வழி 

தீமை செய்வோரின் உணர்வும், வேதனைப்பட்டோரின் உணர்வும் நமக்குள் வந்தால் என்ன ஆகும்…?

பணத்திற்காகவும், பொருளுக்காகவும் வேதனைப்படுத்தும் மாமியாரின் நிலை என்ன ஆகின்றது…!

self realizations

“நம்மை நாம் அறிந்தால் தான்…” நம்மைக் காக்கும் திறனைப் பெற முடியும்

உயிரணுவை வளர்ப்பதும்… “உயிரின் நிலைகள் கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளுக்கும்” மனிதனான பின் தான் இது முடிகின்றது.

இதெல்லாம் கொஞ்சம் கடினமாக இருக்கும்…! ஆனால் இதை உங்களுக்குள் பதிவு (ஞானகுரு) செய்கின்றேன்… உங்களைக் காக்க இந்த எண்ணம் உதவும்.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் நமக்குள் எவ்வாறு இருக்கின்றது…? என்ற நிலையை நாம் உணர்ந்து கொண்டால் போதும். “தன்னை அறிதல்…!” என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.

ஈஸ்வரபட்டர் இதைப் போன்று தான் எனக்குக் கொடுத்தார்…
1.விண்ணின் ஆற்றல் உன்னில் எவ்வாறு அது இயங்குகின்றது…? என்ற நிலையை உன்னை நீ அறி
2.உனக்குள் இயக்கத்தை நீ பார்
3.காலத்தால் இயக்கும் உணர்வுகள் மாறுபடுவதும்
4.அதனின் இயக்கத்தால் ஏற்பட்ட உன்னுடைய மாற்றங்களையும்
5.நீ உருவான நிலைகள் கொண்டு உன்னை அறிந்தால் உன்னைக் காக்கலாம்.
6,உன்னை அறியவில்லை என்றால் உன்னைக் காக்கும் திறனே இழக்கப்படுகின்றது
7.உன்னைக் காக்கும் திறன் வந்தால் உன்னைச் சார்ந்தோரையும் காக்க முடியும்.
8.அவரைக் காக்கும் எண்ணம் வளர்த்தால்… அவர் வளர… உனக்கும் காக்கும் உணர்வுகள் வளரும் என்ற
9.இந்தப் பேருண்மையைத்தான் தன்னில் தன்னை அறிந்துடும் எண்ணங்களை எனக்குள் பதிவு செய்தார்.

ஆகவே அதைத்தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன். இதன் மூலம் சந்தர்ப்பத்தில் இது நினைவுக்கு வந்து உங்களைக் காத்திடும் உணர்வுகள்… எண்ணங்கள்… தோன்றும். அந்த எண்ணத்தைக் கொண்டு உங்களைக் காத்திடவும் இது உதவும்…!

ஏனென்றால் யாம் உபதேசிக்கும் போது “புரியவில்லையே…!” என்று உங்களுக்குள் மடக்கி விட்டால் இது புரியாது போகும்.

1.புரியும் நிலைகள் எனக்குள் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் நுகர்ந்தால்
2.உணர்வின் தன்மை பதிவாகி…
3.அதன் உணர்வின் அலை மீண்டும் தொடரப்படப் போகும்போது
4.அதனுடைய நினைவே உங்களுக்குள் அது புரிந்திடும் நிலையும்… அறிந்திடும் ஆற்றலும்…
5.அறிந்து நுகர்ந்திடும் நிலையும் உங்களுக்குள் உருவாகும்.

ஏதோ சாமி சொல்கின்றார்… எனக்குப் புரியவில்லையே…! என்று இடைமறித்துத் தடைப்படுத்தினால் அது புரியாத நிலைகளாக உங்களை மறைத்துக் கொண்டு இருக்கும்.

ஒரு ஒளியின் தன்மை வரும்போது அதற்கு முன்னாடி ஒன்றை வைத்து அடைத்து விட்டால் வெளிச்சத்தால் இங்கு எதையும் அறியும் தன்மை வராது.

இதைப் போலத்தான் “நமக்குப் புரியவில்லையே…” என்ற உணர்வினை நீங்கள் இடைமறித்து விட்டால் அது புரியாத தன்மையே ஆகிவிடும்.

உதாரணமாக… ஒருவர் சண்டையிடுகின்றார் என்ற நிலைகளில்
1.அந்த சண்டையின் அர்த்தத்தைக் கேட்காமல் இருந்தால்
2.நமக்கு எதுக்கு ஊர் வம்பு என்று எண்ணிவிட்டால்
3.மீண்டும் அவர் தவறு செய்த எண்ணங்கள் நமக்குள் வராது.

ஆனால் என்ன செய்தார்…? ஏன் சண்டையிட்டார்…? என்ன பேசினார்…? என்று கூர்மையாகப் பார்த்தால் அவர் சண்டை செய்த நிலையயும்… அவர் இப்படி இப்படியெல்லாம் செய்தார்… என்றும் அடுத்தவர்களிடம் சொல்ல முடியும்.

அப்படிச் சொல்லும்போது..
1.அவரின் உணர்வை நுகர்ந்து அவனிட்ட சண்டையை நமக்குள் வளர்க்க முடியும்.
2.அந்தச் சண்டையிடும் உணர்வுகள் நமக்குள்ளும் விளையும்.

நமது உயிரின் வேலை இவ்வாறெல்லாம் செயல்படுகின்றது…! ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆகவே “தன்னைத்தான் அறிதல் வேண்டும்…” என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் தெரியப்படுத்துவது.

சண்டையிடுவோரின் உணர்வைப் பதிவாக்குவது போல் இங்கே உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கண்ட அனைத்தையும் உங்களால் புரிய முடியும்… அறிய முடியும்… உணர முடியும்… காண முடியும்…!

எனது தியானமும் தவமும் (ஞானகுரு)

 

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றும் எம்மை எண்ணுவோருக்குக் குருவின் அருளைப் பெறச் செய்வதும் தான். நீங்கள் மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் இருளை நீக்கி ஒளியின் தனமை பெற வேண்டும். இதே தவத்தை நீங்களும் மேற்கொள்ளுங்கள். குரு அருள் உறு துணையாக இருக்கும்.

SIDDHAS WORLD

பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலையை” மனிதன் பெறவேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தாவரங்களில் எப்படி அதனுடைய முதிர்வுத் தன்மையில் அத்தாவரத்தின் பலன் வெளிப்பட பூவும் பிஞ்சும் பிடிக்கும் தருணத்தில் பால்பிடித்து அதனுடைய முதிர்வின் பலனை அந்தந்த இன வளர்ச்சிக்கொப்ப பலனைத் தருகிறது…?

இதில் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுகிறது. இதில் சில மரங்கள் தன் வளர்ப்பின் பலனானக் காய் கனிகளை வெளிப்படுத்துவதில்லை.

ஆனால் தன்னுடைய முதிர்வின் ஈர்ப்பில் விழுதுகளையும் ரோமம் போன்ற முதிர்வின் செயல் வெளிப்பட்டு அதனுடைய வளர்ச்சித் தன்மையின் தொடர் கொண்ட சில மரங்கள்… பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமே மலையாகும் ஈர்ப்பு வளர்ச்சி முதிர்வு செயல் கொள்கின்றது.

பலன் தரத்தக்க மா… பலா… இப்படி உள்ள மரங்கள் சில நூறு ஆண்டுகளுக்குப் பலனைத் தந்த பிறகு மரமே பட்டுவிடுகின்றது. ஜீவத்தன்மையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை பெற்று உடல் மாறும் வரை தன் பிறப்பின் பிறப்புத் தொடரைச் செயல்படுத்தி மடிகின்றது.

இத்தொடரில் இருந்தெல்லாம் சில மிருகங்களின் நிலையும் மனிதனின் நிலையும் மாறு கொள்கின்றன.

ஆனால் பிறப்பிலிருந்து வளர்ச்சி பெற்றுப் பிறப்பு நிலை வளர்க்கும் காலங்களுக்கு எல்லாத் தன்மையிலுமே… எப்படி பூ பிஞ்சில் பால் பிடித்து பலன் தருகின்றதோ… அதைப் போன்று மனித மிருக நிலையிலும் பருவ முற்றலில் பால் உணர்வு கொண்டு இரு நிலை கொண்ட சேர்க்கையில் பிறப்பின் தொடரை (கரு) வளர்க்கும் வழி நிலை பெறுகின்றதல்லவா…!

மனித உணர்வில் பருவம் பெற்று பெண் தன்மையில் கரு வளர்க்கும் வயது வரம்பு காலத்திற்குப் பிறகு இயற்கையின் கர்ப்ப கால தன்மை மாறி மாதவிடாய் நின்று மீண்டும் குழந்தைப் பருவ நிலைக்கொப்ப உடல் நிலை பெறுகின்றது.

இடைப்பட்ட தருணத்தில் கரு வளர்க்கும் காலம் ஆரம்ப வளர்ச்சி வளரும் நிலையும் முதிர்வு நிலைக்கு மீண்டும் எந்த் நிலையுமற்ற தன்மை கொண்டு சரீர இயக்கமே தான் பெற்ற அமிலக் கூறின் வளர்ச்சிக்கொப்ப முதிர்வு நிலை என்ற ஓர் நிலை பெற்ற பிறகு கரு வளர்க்கும் நிலையற்றதாக ஆகிவிடுகின்றது.

இச்செயல் நிலைக்கும் ஓர் அடுத்த நிலை உள்ளதல்லவா…?

மனிதப் பிறப்பு இறப்பில் வயது நிலையற்றுச் சரீர உணர்வில் எடுக்கும் அலை நிலைக்கொப்ப பிறப்பு இறப்பு நிகழ்கின்றன. ஆனாலும்… பிறந்த சிசுவிலிருந்து வயது முதிர்ந்த நிலை வரையிலும் எத்தருணத்திலும் இறப்பு நிலை ஏற்படுகின்றது.

இத்தன்மையின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா
1.வயது வரம்பு கொண்டு முதிர்வு நிலை பெறுகின்றதா…?
2.ஆத்மாவிற்கு முதிர்வுத் தன்மை எப்படிக் கூடுகின்றது?

மாமரத்தில் பூ பிடிக்கும் தருணத்தில் இம்மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு அதிகமாகப் பூக்கள் பிடிக்கின்றன. ஆனால்… நல்ல கனியாகி பலன் வெளிப்படுத்தும் விகித நிலை “நூற்றில் ஒரு பாகம் கூட… முதிர்வு நிலைக்கு வருவதில்லை…!”

ஆனால் முதிர்வு நிலை பெற்ற கொட்டைகளைப் பதித்தால் தான் மீண்டும் மாங்கன்று வளருகின்றது. கனியில் சொத்தை விழுந்த கொட்டைகள் வளர்ச்சிக்கு வருவதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு விதைத் தன்மையிலுமே உள்ளதல்லவா…?

இம்மனித உயிர் ஆத்மாவானது தன் பிறப்பின் கருவைப் பருவ வளர்ச்சிக் காலத்தில் கருவின் தொடரை வளர்க்கின்றது. சில தாவரங்களைப் போன்று தன் வளர்ப்பின் பலன் தந்த பிறகு மரத்தின் நிலை பட்டுப் போவதைப் போன்று கருத்தரித்த பிறப்பு நிலை வளர்க்கும் கால நிலை மாறினாலும் மனித வாழ்க்கையின் செயல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட… மீண்டும் பல வருடங்களுக்கு வாழ முடிகின்றது.

1.இம்மனித அமிலம் தான் எல்லாத் தன்மையிலும் முதிர்வு பெற்ற உயிராத்மா கொண்டது.
2.இதிலும் அடுத்த நிலை பெறுவதென்பதுதான் ஞானத்தால் ஒளி நிலை பெறும்
3.பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை…”

சிறு வயதில் தான் எடுத்த உணர்வின் இச்சையை மாற்றாமல்
1.தன் குண வளர்ப்பில் ஆத்ம பலம் பெறாத சிசுக்களோ சிறுவர்களோ
2.அல்லது வாழும் பருவத்தில் பாதி நிலையில் உணர்வின் இச்சையினால் தற்கொலையும் விபத்துக்களும் ஆளானவர்களோ
3,தன்னைத் தான் மறக்கும் குடி வெறிகளிள் சிக்கியவர்களோ
4.கொலை செய்யப்பட்டோ வாழும் பருவத்தில் அதிவேதனையால் உடல் அழுகிய நிலையில் பிரியும் உயிராத்மாக்களோ
5.இவை எவையும் மீண்டும் பிறப்பிற்கு வருவது என்பது…
6.எப்படி சொத்தை விழுந்த மாங்கொட்டையை விதைத்தாலும் அதன் வளர்ச்சி நிலை வளர்வதில்லையோ
7.அதைப் போன்று இம்மனித உணர்வின் எண்ண ஞானத்தின் செயல் உருவ அங்க அவயங்களின்
8.அழகின் பொலிவு கொண்டு பிறப்பு நிலை பெற முடியாது (இது முக்கியம்)

பிறப்பு நிலைக்கு வந்தாலும்.. எத்தொடர்பில் ஆத்மா பிரிந்ததோ அதே நிலையில் அங்ககீனமுள்ள நிலையில் தான் பிறக்க நேரும். ஞானமுடன் கூடிய அறிவு வளர்ச்சியற்ற குழந்தைகளாகத்தான் சாதாரண வழித் தொடரிலேயே பிறப்பு இறப்பு செயல் கொள்கின்றது.

(இன்று அங்ககீனமுள்ள குழந்தைகளும்… மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அதிகமாகப் பிறப்பதன் காரணம் புரிந்ததா…!)

 

எண்ணத்தின் வலுக் கொண்ட… “ஆத்ம பலம் பெற்ற ஆத்மாக்கள் தான்..” மீண்டும் தன் இனத் தொடர்பில் பிறப்பு பெற்று… முதிர்ந்த கொட்டைகள் பக்குவமான வளர்ச்சிக்கு வருவதைப் போன்று… மனிதப் பிறப்பு பெற்று வருகின்றது.
1.இதில் அடுத்த நிலை பெறுவது என்பதுதான்
2.இங்கே உணர்த்தப்படுகின்ற மனிதன்… “தெய்வ நிலையாகும்” தன்மை.

FM ரேடியோவில் ஞானகுருவின் உபதேசங்கள்

உயிரைக் காப்போம்….!
 
தினசரி மாலை 6 மணிக்கு சாமிகள் (ஞானகுரு) உபதேசம் ஒலி பரப்பாகிக் கொண்டுள்ளது.
 
இன்றைய காலகட்டத்தில் உயிரைக் காக்க… உயிரின் துடிப்பைச் சீராக்க… சுவாச நிலையைச் சீராக்க… சுவாசிக்கும் காற்றைச் சீராக்க… இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்த நமக்கு ஒரு சக்தி தேவைப்படுகின்றது.
 
தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அந்தத் துருவ நட்சத்திரத்தை எந்த அளவுக்குப் புருவ மத்தியில் எண்ணி நினைவுக்கு மீண்டும் மீண்டும் நாம் அழுத்தமாகக் கொண்டு வருகின்றோமோ அந்த அளவுக்கு உயிருக்கு அது ஒரு கவசமாக (MASK) அமைகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரின் இயக்கத்திற்குள் முழுமையாக இணைந்து விட்டால் நம்மிடமிருந்து வெளிப்படும் சக்தி இந்தக் காற்று மண்டலத்தைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக மலரும்.
 
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாக மனிதர்கள் கவர்ந்தால் தான் இது சாத்தியமாகும். அத்தகைய நிலை சீக்கிரமே உருவாக வேண்டும்…!
 
ஞானகுரு உபதேசக் கருத்துக்களை மனதில் ஊன்றிப் பதிவாக்குவோம். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை ஒவ்வொரு உயிராத்மாவும் பெற தியானிப்போம்.. தவமிருப்போம்…!
 
கீழே கொடுக்கப்பட்ட லிங்கை உபயோகித்துக் கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.
 
உபதேசத் தொகுப்பு :- https://wp.me/p3UBkg-4BE

super-computers

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் செயற்கையாக உருவாக்கப்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும்

 

இன்றைய உலகில் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகள் நமக்குள் புகாது தடுக்க வேண்டும்…!

காரணம்… விஞ்ஞான அறிவால் டி.வி. கம்ப்யூட்டர் (எலெக்ட்ரானிக்) மூலமாகவோ அல்லது உணவுப் பயிர்களுக்குள் தூவப்படும் பூச்சி மருந்துகளினாலோ பல வகையில் நஞ்சின் தன்மை தாவர இனங்களில் படர்ந்து கொண்டுள்ளது.

அது உணவுடன் கலந்து உடலுக்குள் கலக்கப்படும் பொழுது
1.நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து
2.விஷத் தன்மையை அதுவும் ஈர்க்கும் நிலை பெற்றுவிடுகின்றது.

விஷத் தன்மையை ஈர்க்கும் சக்தி பெறப்படும் பொழுது கை கால் குடைச்சல் சோர்வு விஷக் காய்ச்சல் இதைப் போன்ற பல நோய்கள் வரக் காரணமாகின்றது.

விஷத் தன்மைகள் அதிகமான அளவில் உணவுடன் கலந்து வருவதால் கேன்சர் நோயும் அதிகமாகப் பரவுகின்றது. அதே போல் எய்ட்ஸ் என்ற நோயும் விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டது தான்.

ஒவ்வொரு நாட்டில் உள்ள மூட்டைப் பூச்சிகளையும் கொசுக்களையும் பரீட்சித்துப் பார்க்கின்றேன் என்று கொண்டு சென்று அதை அவர்கள் மற்ற கெமிக்கலில் கலக்கச் செய்து விஷமான அணுக்களை மீண்டும் உருவாக்கி அதிகரித்து விட்டனர்.

அதையே புதிதாக ஒரு பொருளாக உருவாக்கி… மனிதனுக்குள் கலக்கச் செய்து… விஷத் தன்மைகளைப் படரச் செய்து… (எயிட்ஸ் நோய்)
1.மக்களின் உடலைச் சிறுகச் சிறுக நலியச் செய்து
2.அந்த நாட்டையே சூனியமாக்கும் நிலைக்கு அமெரிக்காவில் அதைச் செய்தார்கள்.

ஆனால் அவன் நாட்டிலேயே முதலில் பரவியது. அங்கே பரவிய அதனுடைய தொடர்கள் மனிதனுக்கு மனிதன் பேசும் பொழுதே பரவு தன்மை வந்தது.

ஏனென்றால் அந்த எயிட்ஸ் நோய் அணுக்கள் மிகவும் விஷம் கொண்டது… அது வீரியமாகப் பரவும் தன்மை பெற்றது.

“எயிட்ஸ் நோய் உள்ளவர்கள்” அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று அதிகமான அளவில் எடுத்துக் கொண்டால் அந்த நோய் மாறிவிடும்.

இதைப் போல் கேன்சரில் இருந்தும் மற்ற நோயிலிருந்தும் விடுபட வேண்டும். சர்வ நோய்களையும் நீக்கும் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
1.இந்தத் தியானத்தின் மூலமாக அந்த அணுக்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அனுதினமும் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

  • குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தி… குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ… அவர் நினைக்கும் பொழுதெல்லாம்… குரு… தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும்.
  • எளிதில் செயல்படுத்த முடியும். தீமை என்ற நிலைகள் தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 60 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

  • பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இணைந்தவர் நம் குருநாதர்.
  • அதன்வழி நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு  மற்ற உயிர்களிலே அது விளைந்து பலவாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு அந்தந்த உணர்வுகள் பட்டு… அந்தந்த உடல்கள்… அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி உள்ளனர்.
  • அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக இதைப் போன்று எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து விண் சென்றுள்ளார்கள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 59 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

  • பேரண்டத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்த இயக்கம் அவருக்குள் இருந்தாலும்… அதன் வழிகொண்டு எதை எதை… எவ்வாறு பெறவேண்டும்…? என்று உபதேசித்து அருளினார்.
  • அவருக்குள் விளைந்த ஆற்றல்மிக்க சக்திகள்… அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வின் அலைகள் இங்கே படர்ந்து கொண்டுள்ளது… எல்லோருக்கும் கிடைக்கும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 58

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

  • பித்தரைப் போன்றுதான் அவர் இந்த உலகிலே உலாவிக் கொண்டிருந்தார். ஏனென்றால் இந்தப் பித்தனான உலகிலிருந்து மக்கள் பித்தைப் போன்று வாழ்க்கை வாழ்ந்திடும் “ஒவ்வொரு பித்து நிலைகளிலிருந்து அவர்கள் மீளவேண்டும்…” என்ற சிந்தனைதான் எனக்கு…! என்று அடிக்கடி உபதேசிப்பார்.
  • ஆனால் இளமையிலே ஏழ்மையில் வாடிவந்த நிலையிலிருந்து தீமைகளிலிருந்து விடுபட்டு… அவர் உடலிலே விண்ணின் ஆற்றல்களைப் பெருக்கி அந்த உணர்வு கொண்டு ஒளியின் சரீரம் பெற்று… இன்றும் அவர் விண்ணின் ஆற்றலுடன் சுழன்று கொண்டுள்ளார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 57

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

  • ஐந்து அல்லது ஆறு வயதில் வெளியே கிளம்பி இந்த பூமி முழுவதும் வலம் வந்துள்ளார். 
  • இந்த பூமிக்குள் எத்தனை பாஷைகள் உண்டோ அத்தனையும் இவருக்குத் தெரியும். 
  • நமது சூரிய குடும்பத்தின் தொடர் கொண்ட 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. இப்படி ஏனைய எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருப்பினும் இந்த 2000 சூரியகுடும்பத்தின் உண்மை நிலைகளையும் உணர்ந்தறிந்தவர் நமது குருநாதர். 
  • அவர் அறியாது அவருக்குள் இருந்த ஆற்றல்மிக்க சக்தியின் நிலைகள் கொண்டு பேரண்டத்தின் நிலைகளை அவர் அறிய முடிந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 56

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம் – 1

இளமைப் பருவத்திலேயே உலகம் முழுவதற்கும் ஈஸ்வரபட்டர் சுற்றுப் பயணம் செய்துள்ளார். இளமைப் பருவத்தில் இவர் அறியாதபடியே பல ஆற்றல்களை அவர் பெற்றார்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 55

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 54

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 53

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 52

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 51

அகஸ்தியரின் அற்புத சக்திகளைப் பெறுவோம்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அகஸ்திய மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 50

அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகள் ஆகிவிட்டார்கள்… நாமும் கவர்ந்து மகரிஷியாக ஆவோம்…!

அகஸ்தியன் தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை நம் ஞானகுரு உபதேசித்த அருள் வழிப்படி நமக்குள் ஆழமாகப் பதிவு செய்வோம். அகஸ்தியரின் ஸ்டேஷனை நாம் வலுவாக்கிக் கொண்டு ஒவ்வொரு நொடியிலும் நஞ்சை வெல்வோம்.. ஒளியாக மாற்றுவோம்…!

mantra 49

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி… நமக்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகளை அடக்கி… உலக மக்கள் அனைவரும் ஒன்றென்ற நிலையில் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்

இந்தப் பூமி தான் நமக்குத் தாய்…! எந்தெந்த நாட்டிலே… ஊரிலே… நாம் பிறந்திருந்தாலும் நமக்குத் தாய் இந்தப் பூமியே…!

mantra 48

நமக்குள் மகரிஷிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும்… அந்த உயர்ந்த சக்திகளை வலுவாகக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

சிரமங்கள் பட்டுக் கொண்டுள்ளோருக்கு அந்த மகரிஷிகள் அருள் உணர்வுகளை எடுத்து நாம் பாய்ச்சுதல் வேண்டும்… அவர்களையும் துன்பங்களிலிருந்து மீட்க வேண்டும். 

mantra 47

அன்று அகஸ்தியன் செய்தது போன்று மீண்டும் இந்தப் பூமியைச் சீராக்க நம்மால் முடியும்

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் விண்ணிலே நினைவைச் செலுத்தி… அவர்களின் அருள் வட்டத்தில் இருந்து… நம் உடலைக் காக்கவும் நம் நாட்டைக் காக்கவும் முடியும்…!

mantra 46

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நினைவினை மேகங்களில் செலுத்தி மழை பெய்யத் தியானிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்

மனிதர்களான நாம் எதை அழுத்தமாக எண்ணுகின்றோமோ… அந்த வலிமை கூடி… மழை பெய்ய வேண்டும் என்ற எண்ண அலைகளை எங்கே நினைவைச் செலுத்துகிறோமோ அங்கே பாய்கின்றது… அந்த உணர்வுகள் படர்கின்றது. மழை பெய்ய வைக்கின்றது…!

mantra 45

நாம் கனியின் தன்மை அடைந்து… ஒளியான வித்துக்களாகப் பேரொளியாக மாற வேண்டும் 

திரை மறைவாக இருக்கும் உயிருடன் ஒன்றி … மகரிஷிகள் அருள் ஒளியை ஏடுத்து முழுமை அடைந்தால் நாம் கனியாகின்றோம்.. அழியாத ஜோதி நிலை அடைகின்றோம்…!

mantra 44

மகரிஷிகளின் அருளைச் சேமிப்பதே உயிராத்மாவிற்கு அழியாத சொத்து

விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த… உயிரால் உருவாக்கப்பட்டது தான் உடல். இந்த உடல் வாழ்க்கையில்… இருளைப் போக்கிடும் அருளைப் பெருக்கி “பேரருள் பேரொளியாகப் பெருகுவதே” படைப்பின் முக்கிய நோக்கம் 

mantra 43

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து  நாம் வாழும் இடங்களில் அடர்த்தியாக அதைப் பரவச் செய்ய வேண்டும் 

நஞ்சை அடக்கி அதைப் பேரொளியாக மாற்றும்… துருவ  நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி… இந்தப் பூமி முழுவதும் பரவிப் படர்ந்து… பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் நீங்கிட… அருள்வாய் ஈஸ்வரா 

mantra 42

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்  நுரையீரலுக்குள் பாய்ச்சி அதை வலுவாக்கி எந்த நச்சுத் தனமையான காற்றும் நம் அருகே வராது தடுத்துக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா 

mantra 41

ஆண்டவன் செய்யவில்லை… அவனாகவே செய்வதுதான் அவன் வாழ்க்கை நிலை எல்லாம்…!

தான் எடுத்த ஈஸ்வர சக்தியின் துணை கொண்டு தன்னைக் காத்து.. அந்த அருள் ஒளியை மற்றவருக்குள் பாய்ச்சுவது தான்…! தன் நிலையில் இருப்பது என்பது…!”

mantra 40

உயிரே கடவுள்…! உடலே ஆலயம்…! சுவாசிக்கும் உணர்வே தெய்வமாக இருந்து இயக்குகிறது

“சுவாச நிலையில்” உயர்ந்த சக்திகளைப் பெறுவதே தியானம் செய்வதன் முக்கியமான நோக்கம். மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தால் நம் உயிராத்மா ஒளி நிலை பெறும்.

mantra 39

தீமை என்ற துவாரங்களை அடைத்தால் தான் அருள் ஒளி நமக்குள் கூடும்

இனி நாம் செய்வதெல்லாம் நமக்கும் நம் நாட்டிற்கும் உலகுக்கும் நன்மை பயப்பதாக அமையட்டும்.

mantra 37

வாழ்க்கையில் திரும்பத் திரும்ப வரும் தடங்கல்களை எண்ணிச் சலிப்படைய வேண்டியதில்லை

சலிப்பையும் சோர்வையும் அண்ட விட்டால் அது ஒரு பகடைக் காயைப் போல் நம்மை ஆட்டிப் படைத்துவிடும். மகரிஷிகளின் உணர்வு கொண்டு நாம் மீண்டும் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும்.

mantra 38

மாமகரிஷிகளுடன் இணைந்த நிலையில் நாமும் தியானிப்போம்

மகரிஷிகளின் செயல்கள் இந்தப் பூமியில் இனி வெளிப்படும் காலம் வந்து விட்டது.

mantra 36

நாம் எண்ணும் எண்ணத்தால் வருவது தான் எல்லாமே…! 

அடுத்தவர் கொடுத்து நாம் பெறுவதல்ல அருள்…! வரும் இன்னல்களிலிருந்து மீண்டு பெறுவது தான் அருள்…! அப்படிப் பெறும் அருள் என்றுமே நமக்குள் நிலைக்கும்… வளரும்..!

mantra 34

எத்தகைய நிலை வந்தாலும் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்தியை  எடுத்து நமக்குள் வலுப்படுத்தும் பழக்கம் வர வேண்டும் 

நமக்காக வேண்டிப் பிரார்த்திக்கக்கூடிய குரு இருந்தாலும்… நாம் நமக்குள் இருக்கும் ஈசனிடம் நினைவைச் செலுத்தி… அவனிடம் அழுத்தமாக வேண்டினால் தான் நம் உயிர் அதை உருவாக்கும்… அந்த ஆற்றல் நமக்குள் கூடும்…!

mantra 35

எலும்புகளுக்குள் இருக்கும்  ஊழ்வினையின் பதிவே நம் வாழ்க்கையின் வினைப் பயன் ஆகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா…!

mantra 33

அழியாச் செல்வம் என்பது அவரவர்களின் உயிராத்மா தான்…! வேறு எதுவும் இல்லை…! 

உயிரே நமக்குச் சொந்தம்… அருள் மகரிஷிகளே நமக்குப் பந்தம்…!

mantra 32

ஒவ்வொரு நிமிடமும் உடல் நலத்துடன் வாழ மகா பச்சிலைகளின் மணங்களைச் சுவாசிக்க வேண்டும்  

அகஸ்தியன் பெற்ற பல கோடித் தாவர இனச் சத்துகளும்… அருள் ஞான மூலிகைகளின் மணங்களும்… பச்சிலை வாசனைகளும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! 

mantra 31

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் முறை 

இதிலே கொடுக்கப்பட்ட ஐந்தையும் ஒரு பழக்கமாகப் பயிற்சியாக எடுத்துக் கொண்டே வந்தால் மகரிஷிகளைப் பற்றிய உணர்ச்சிகள் நேரடியாகக் கிடைக்கும்

mantra 30

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரை எண்ணி அவர் விட்ட மூச்சலைகளைச் சுவாசியுங்கள் 

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் அகஸ்தியரின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா…!

mantra 29

ஞானகுருவின் உபதேச ஒலிகளுக்குள் எண்ணிலடங்கா மகரிஷிகளின் உணர்ச்சிகள் (சூட்சம சக்திகள்) உண்டு 

மகரிஷிகளின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டால் தான் அதனின் இயக்கமாக நாமும் ஞானிகளாக ஆவோம். (கேட்க விரும்புவோர் இந்த இரண்டு லிங்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் – https://wp.me/p3UBkg-1Uc  https://wp.me/p3UBkg-1Yh )

mantra 28

மீண்டும் இன்னொரு (உடலுக்குள்) பிறவிக்கு நாம் வந்து விடக்கூடாது 

நாம் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற “ஒரு உயிரான்மாவையாவது” சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும் 

mantra 27

“தீமைகளை மறக்க” நாம் அவசியம் பழகித் தான் ஆக வேண்டும் 

தீமைகளை மறந்தால் தான் நம் நல்ல குணங்களும் சிந்தனைகளும் சீராக… வலுவாக… உறுதியாக… தெளிவாக… உத்வேகமாக.. இயங்கும்

mantrta 26

மகரிஷிகள் உணர்வைச் சுவாசித்தால்  “நல்லதாக்க வேண்டும்… நல்லதாக்க முடியும்…” என்ற எண்ண வலு கூடிக் கொண்டே வரும் 

“உயிர் பற்று கொண்டு…” நாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் பாசம் எந்த வகையிலும் நம்மை நல் வழிப்படுத்திக் கொண்டேயிருக்கும்

mantra 25

பாசம் வைப்பது தப்பா…! அது எப்படித் தப்பாகும்…? என்று தான் கேட்போம் 

நம்முடைய பாசமும் பற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதில் தான் இருக்க வேண்டும் 

mantra 24

நம் சுவாசம் மேல் நோக்கியதாக இருக்க வேண்டும்

விண்ணிலிருந்து எடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இங்கிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

mantra 23

பிறரை ஏமாற்றத் தந்திரமாக வேலை செய்து வாழ்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…!

கோபப்பட்டால் உடனே முகம் கறுத்து விடுகின்றது… ஏன்..?

ஒருவருக்கொருவர் நாம் பிரிந்து இல்லை 

Father mother

நம்மைக் காக்க வேண்டும்… என்று “நம் தாய் ஊழ்வினையாகப் பதிவு செய்த நல்ல உணர்வுகளை” நாம் எடுத்தே ஆக வேண்டும்

உதாரணமாக பள்ளிகளில் பாடங்கள் படிக்கின்றார்கள் குழந்தைகள். நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கின்றது.

ஆனால் பாடங்கள் தான் நினைத்தபடி வரவில்லை என்று
1.“எனக்கு ஞாபகம் இல்லையே…!” என்ற உணர்வினை
2.ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் அந்த உணர்வு “ஒரு வித்தாக” மாறுகின்றது.
3.பதிவாகவில்லை… பதிவாகவில்லை… பதிவாகவில்லை…! என்ற இந்த ராகம் தான் வரும்.

மீண்டும் எப்படிப் படித்தாலும் இதனுடன் கலந்து அந்த உணர்வு வரப்படும்போது… தன் நினைவை இந்த அலையுடன் கலந்து “நினைவற்றதாக மாற்றுகின்றது…”

அதை மாற்ற வேண்டும் என்றால் எந்த முறையைக் கையாள வேண்டும்…?

1.தன் தாயை எண்ண வேண்டும்…!
2.தாய் அன்பு கொண்டு நமக்குள் பதிவு செய்த அந்த தாயின் அன்புள்ளம் எனக்குள் பெருக வேண்டும்
3.அவர்கள் எனக்கு எந்த ஆசிர்வாதம் கொடுத்தாரோ அந்த ஆசியின் வழிப்படி கல்வியில் சிறந்தவனாக வர வேண்டும்
4.என் அன்னையின் அருள் என்றும் எனக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.
5.கல்வியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
6.சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை நிச்சயம் அகற்ற முடியும்.

ஏனென்றால் தாய் எப்போதுமே தன் குழந்தைகள் எல்லோரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்ற எண்ணத்தைத் தனக்குள் உருவாக்கி “ஊழ் வினை என்ற வித்தாக” நமக்குள் போட்டுள்ளது.

ஆனால் அதை நினைவு கொண்டு யாரும் எடுப்பதில்லை.

குழந்தைகள்… தன்னைத் திட்டியவர்களையும்… விளையாட்டுத்தனமாகப் பிறர் பேசும் தீமைகளையும்… தீமையான செயல்களையும் பதிவு செய்து… அதன் உணர்வின் நினைவாக அந்த எண்ணங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்.

பின்… இவர்கள் பாட நிலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

ரோட்டிலே செல்லப்படும்போது ஒருவன் தீங்கான செயல்களைச் செய்கின்றான். இந்தக் குழந்தையோ நல்ல குழந்தை ஆனால் உயர்ந்த ஞானம் பெற்ற குழந்தை.

ஆனால் தீங்கான செயலைச் செயல்படுத்துவோரின் தாக்கும் உணர்ச்சியின் வேகம் வரப்படும்போது அன்பும் பரிவும் கொண்ட இந்தக் குழந்தை அதைப் பார்த்தபின் பயமும் பதட்டமும் அதற்கு வந்து விடுகின்றது. இது பதிவாகி விடுகின்றது.

அதற்கு அடுத்து… பள்ளிக்குச் சென்றபின் அதே பதட்ட நிலையில் இருக்கின்றது. அந்தச் சந்தர்ப்பத்திலிருந்து…
1.பாட நிலைகளைத் கவரும் போதெல்லாம்
2.அது இதனுடன் மோதும் போது… பய உணர்ச்சிகள் தோன்றி
3.நல்ல நினைவாற்றல் வராது சென்று விடுகின்றது… ஞாபக சக்தி குறைகின்றது.

அந்த ஞாபக சக்தி கூட வேண்டுமென்றால்… நான் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேசித்த உணர்வின் தன்மையையும் அம்மா அப்பா அருளாசியையும் நாங்கள் பெற வேண்டும் என்று குழந்தை எண்ணுதல் வேண்டும்.

தாய் அன்புள்ளம் கொண்டு… தனது குழந்தை கல்வியில் உயர்ந்த நிலை பெற வேண்டும்… உயர்ந்த ஞானம் பெற வேண்டும்…! என்று எண்ணி அது உடலில் உருவாகிய அருள் ஞானத்தைக் குழந்தை மேல் பாய்ச்சி வைத்துள்ளது.

தன் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்… என்ற எண்ணத்தை ஊட்டி அதை அவர்கள் வெளிப்படுத்திப் பதிவு செய்த நிலைகளும் குழந்தையிடம் உள்ளது.

ஆகவே குழந்தைகள் ஒரு அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் உடனே…
1.ஈஸ்வரா…! என்று எண்ணியதை உருவாக்கும் உயிரைப் புருவ மத்தியில் நினைவில் கொண்டு
2.அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.தன் அம்மாவை நினைத்தால்… இந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்

பெற்று விட்டால் யாரைக் கண்டு அஞ்சினோமோ அந்த உணர்வினை “தாய் அன்பும்… அதன் வழியில் யாம் உபதேசிக்கும் அருள் ஞானமும் கலந்து…” அச்சுறுத்தும் உணர்வுகள் விளையாது அதை அடக்கும்.

இது தான் கல்யாணராமன் என்பது.

இந்த வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகள் பெற்றாலும் மேலே சொன்ன முறைப்படி நினைத்து அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
1.தீமையின் செயலாக்கங்களை அது அடக்கி… அச்சுறுத்தும் உணர்வுகளை அடக்கி…
2.அந்த ஞானியின் உணர்வின் துணை கொண்டு மெய்ப் பொருள் காணும் அந்த வலிமையான நிலைகள் பெறச் செய்யும்.

.

தியானப் பயிற்சி

தியான வாசகங்கள்… அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பாடல்… தியானம்… தவம். நினைக்கும் பொழுதெல்லாம் உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும். குரு அருள் உறுதுணையாக இருக்கும்.

divine workers

எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ… அந்தத் தெய்வமாகவே அவன் ஆக முடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒவ்வொரு செயலிலும் அதன் வளர்ப்பின் முதிர்வு நிலை (பலன்) எவ்வாறு தெரிகின்றதோ… அதைப் போன்ற மனிதன் பெறும் ஒளி சக்தியைக் கொண்டு…

1.இவ்வெண்ணத்தின் உயர் ஞானத்தால்
2.எதனையும் தெய்வம் நமக்குத் தரும்…! என்ற மனிதனின் உயர்வு குணமாய்
3.எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ… அத்தெய்வமாய் மனித நிலை ஆக முடியும்.

மனித உணர்வின் எண்ணத்தில் இப்புவியில் வளரவல்ல ஒவ்வொரு தொடரிலும் தன் ஞானத்தைச் செலுத்தி அதன் தொடர் வளர்ப்பின் செயலைப் பார்த்தால்… செயலின் முதிர்வின் தொடர் நிலை வளர்ப்பு முற்றலை அறியலாம்.

நீரின் சுவையே… ஒன்றிலிருந்து வளர்ப்பின் தொடர் பெற்றுப் பிரியும் பொழுது… “உராயும் தன்மையில்” தொடர் நிலை அச்சுவையுடன் ஒட்டி அச்சுவை சக்தியின் ஆவியாகி… அதே தொடரின் பிறிதொன்றில் அந்நீர் ஆவித் தன்மை திடம் கொண்டு… செயல் மோதலின் சுழற்சியில் பல செயல்கள் மாறி மாறி வளர்கின்றன. (நாம் சமைக்கும் நிலையிலிருந்து இயற்கையில் உருவாகும் அனைத்துமே இதற்கு உதாரணம் தான்)

எல்லாச் செயலுக்கும்… காற்று மண்டலத் தொடரில் இந்நீர் ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு மீண்டும் அதிலிருந்து பிரிக்கப்படும் தொடர் நிலையில் “கனம் கொள்ளும் செயல் வளர்ச்சி தான்..!”

“நீரான ஆதி சக்தியின் சக்தித் தொடர்” இஜ்ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து இச்சரீரத்தை இயக்கும் உயிர் பிரிவதற்குள்ளேயே… இச்சரீரத்தின் ஜீவ ஜெனிப்பில் நீர் சக்தியின் வளர்ப்பின் சத்தாய் இச்சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்… இஜ்ஜீவ நீரின் உணவைப் பெற்று வாழும் இதன் உணர்வின் எண்ணத்திலேயே உயர் நிலைபெற… நம் செயல் இருக்க வேண்டும்.

எப்படி நீரை ஊற்றி விதைப் பயிரில் அதன் பலன் மகசூலைத் தாவரம் தருகின்றது…?

எப்படி நீர் சக்தியின் தொடர்பில் பூமியில் கனி வளங்கள் அதனதன் வளர்ச்சிக்கொப்ப முற்றிய நிலை பாறையே தன் வளர்ப்பின் முற்றலாய் வைரத்தை வளர்க்கின்றது…?

மண் படிவங்கள் எத்தொடரில் எவ் உலோக வித்து வளர்ந்தாலும் அதன் முற்றலில் படிவங்களாக அதது எடுக்கும் நீர் சக்தியில் தங்கமே மண்ணுடன் கலந்த நிலையும் படிப்படியாகக் குவிந்த தன்மையில் அடர்த்தியாகத் தன் இனத்தைப் பெருக்கும் வளர்ப்பில் அதனதன் இனத் தொடரில் முதிர்வுத் தன்மை பெறுகிறது.

அதனின் தொடர் வளர்ப்பில் கனி வளர்ச்சிக்கு அடுத்த நிலை வளர்ப்பான… மண் வளத்தின் ஆவி அலையில் தாவர இன வளர்ப்பில்… புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, இப்படி வளர்ப்பின் முதிர்வுத் தொடர் வரிசையாக வருகின்றது.

இவை ஒவ்வொன்றிலுமே பல மாற்றத்தின் சுழற்சி ஓட்டம் அந்தந்தப் பூமியில் அது எடுக்கும் அலைத் தொடர்புக்கொப்ப ஆதி சக்தியுடன் ஜீவ சக்தியாய் நீர் சக்தியில் சுழற்சி ஓட்டம் சுழலும் முதிர்வில் மனித உரு வருகின்றது.

மனிதனான பின் அறியும் ஞானத்தின் உயர் ஞானப் பகுத்தறிவில் ஜீவநீர் இச்சரீரத்திலேயே முதிர்வின் தொடர் பெற்ற மனிதக்கரு உரு சொல் செயல் எல்லா நிலைகளையும் பெற்ற தன்மையினால் இத்தன்மைக்கடுத்த உயர் செயலுக்கு எண்ணத்தை உயர் காந்த மின் அணுக்களைக் கவரும் ஆற்றல் பெறுகின்றது.

ஆகவே நீருடன் கூடிய இச்சரீரத்தின்
1.ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையுமே வீரிய ஒளி பெறச் செய்ய…
2.எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தி வலுக் கூட்டி
3.எவ்வுணர்வின் அலையும் இச்சரீர இயக்கத்தில் வந்து மோதாமல்
4.இச்சரீர உணர்வின் அலை மட்டும் வீரியத் தன்மை பெற
5.எண்ணத்தின் செயலைக் கொண்டு உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வலுக் கூட்ட வேண்டும்.

அத்தகைய வலுக்கூட்டிக் கொண்ட… வீரிய சக்தி பெற்ற உயர் காந்த வலு ஆத்மாவை… இப்பூமி இயக்கத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும்… வார்த்தையோடும்… எந்த எண்ண உணர்வும் அது பாதிக்காது.

இவ்வாத்மாவின் வளர்ப்பும் இச்சரீர ஜீவ காலத்திலேயே ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ணத்தில் ஒளி சக்தியை ரிஷி சக்தியின் சக்தித் தொடர்புடன் வலுக் கூட்டும் செயலுடனே செயல்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.

1.இப்பூமியின் பிடிப்பிலிருந்தும்… வேறு எப்பூமிப் பிடிப்பிலும் சிக்காமலும்
2.எப்பூமியின் எம்மண்டலத்தின் தொடர்பையும் அறியும் வலுவையும் கூட்டி…
3.கூட்டப் பெற்ற வலுவின் செயலை… இச்சரீர இயக்கத்தின் தொடர்பில்
4.புதிய நிலையை ஜீவப் படைப்பில் படைக்கும் வழித் தொடருக்கு ஞானத்தைச் செலுத்திட வேண்டும்.

அத்தகைய முதிர்வை மனிதனால் தான் படைக்க முடியும்.

அன்று சித்தர்கள்… ரிஷிகள் எழுதிய காவியத்தில்…
1.மனித உருவம் கொண்ட தெய்வத்தைக் காட்டி
2.அத்தெய்வத்திற்கு நெற்றியில் கண்ணும் பல கைகளும்
3.ஒரு பாதி பெண்ணாகவும் மறு பாதி ஆணாகவும் காட்டிய தன்மையின் உள் அர்த்தங்கள் பல உண்டு.

ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் அறிந்து உயர்வு நிலைக்குச் செயல் கொள்ளும் மார்க்கத்தில்… காற்று மண்டலத்தில் தன் வளர்ப்பின் உயர்வை அறியும் ஞானத்திற்குப் பல சக்திகளை சரீர ஜீவிதத்தில் ஒளி பெற்றுப் பல நினைவுகளை அறியலாம்.

கண் பட்டு விட்டது… கண் திருஷ்டி..! என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…?

தங்க நகைகளை அணியும் போது எந்த எண்ணத்துடன் அணிய வேண்டும்…?

தீமைகளை நீக்கிடும்… “தூய்மைப்படுத்தும் சக்தி கொண்ட ஆன்மாவாக” மாற்றிக் கொள்ளுங்கள்

Body cells formation

ஊழ்வினை என்று எலும்புக்குள் பதிவாகும் வித்தினைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

ஒரு சமயம் காட்டிற்குள் செல்லும் போது (ஞானகுரு) ஒரு சிறு பூச்சி ஒன்று என்னைக் கடிக்கின்றது. அது கடித்தபின் எனக்கு மயக்கமே வருகின்றது.

குருநாதர் அதை விட்டுக் கடிக்கச் செய்கின்றார். என் உடல் முழுவதும் நஞ்சு பாய்கின்றது. அந்த விஷம் ஓடும்போது உடலில் ஒரு கருக்கல் போல்… அது இரத்த நாளங்களில் பட்டபின் இரத்த நாளங்களே கருப்பாகின்றது.

அப்பொழுது அதனின் உணர்வுகள் எவ்வாறு…? என்று எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.

நீ இவ்வளவு பெரிய மனிதனாக ஆகியுள்ளாய். ஆனால் இதற்கு முன்னாடி இதைப் போன்ற பூச்சியாகவும் இருந்தாய். அந்தப் பூச்சியின் நிலைகளில் இருந்து தான் மீண்டாய்.

இப்பொழுது மீண்டும் அதே பூச்சி உன்னைக் கடிக்கும்போது உன் உணர்வின் நினைவாற்றல் அங்கே செல்கின்றது…?

அதனுடைய விஷம் படர்வதைப் பார். உன் கவன நரம்புகளைத் தாக்குவதைப் பார்… அங்கே தாக்குவதற்கு முன் நீ சிந்தித்துப் பார். ஆனால் இது உன் கவன நரம்பில் தாக்கிவிட்டால் உனது நினைவுகள் மறைந்துவிடும். நீ எங்கே செல்வாய்…? என்ற உணர்த்திக் காட்டுகின்றார்.

அந்த உணர்வலைகள் எனக்குள் படர்வதையும் என் நினைவாற்றல் முழுவதும்..
1.இந்தப் பூச்சி கடித்துவிட்டதே…
2.நான் மடிந்துவிடுவேனே…
3.இந்த உடலை விட்டுப் போய்விடுவேனே…! என்று
4.இந்த உணர்வுகள் தான் தோன்றுகின்றதே தவிர
5.தன்னைக் காக்கும் உணர்வுகள் வரவில்லை.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் பூச்சியாக புழுவாக இருக்கப்படும்போது இன்று பார்க்கின்றோம். ஒரு பட்சி ஈயை விழுங்குகின்றது அதனைத் தன் இரையாக்கி கொள்கின்றது. ஆனால் ஈயின் உயிரோ பலியாகின்றது.

அதே சமயத்தில் பல்லியை ஒரு தேள் கொட்டுகின்றது. விஷத்தைப் பாய்ச்சுகின்றது. அது தசைகளை உணவாக உட்கொள்கின்றது.

இது போன்று பல கோடிச் சரீரங்களில் நீ எத்தனை இம்சைப் பட்டிருப்பாய்…? என்றார் குருநாதர்.

அதிலிருந்தெல்லாம் மீண்டிடும் நிலைகள் பெற்ற நீ.. மீண்டிடும் சக்தி பெற்றபின் உன்னால் ஏன் முடிவதில்லை…! ஒரு சிறு விஷம் கொண்ட அணு தான் இது…! ஆனால் கடித்தபின் அதனுடைய வலிமை உனக்கு எவ்வளவு பெரிய வேதனையாகின்றது.

உயர்ந்த ஞானங்கள் பெற்று உயர்ந்த நிலைகள் பெற்றதனால் அடுத்து விஷத்தை முறிக்கும் ஒரு மருந்தினை இதனுடன் இடப்படும்போது உனக்குள் அதைத் தடைப்படுத்துகின்றது.

ஆனாலும் அந்த விஷப் பூச்சி உன்னை கடித்ததல்லவா…!
1.அது கடித்தது உனக்குள் ஒரு வித்தாக ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.
2.மருந்தைக் கொண்டு புண்ணை ஆற்றிவிடலாம்…. இன்று நீ தப்பிவிட்டாய்.
3.ஆனாலும் இந்த விஷ அணுக்கள் ஊழ்வினையாகப் பதிவான பின் வித்தாகின்றது.

முதலிலே நீ நுகர்ந்த உணர்வுகள் ஓ… என்று இந்த உடலிலே அணுவாக மாறுகின்றது. மருந்தைக் கொடுத்து விஷத்தை நீக்கி நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன்.

1.கடித்த உணர்வின் தன்மை உன் எலும்புக்குள் அந்த விஷம் வித்தாக ஊன்றிவிடுகின்றது.
2.நீ நுகர்ந்ததோ ஓ என்று ஜீவ அணுவாக மாறுகின்றது
3.அந்த அணுவின் மலம் உன் உடலாக மாறுகின்றது.

நான் மருந்து கொடுத்து விட்டேன்… விஷத்தையும் முறித்துவிட்டேன்…! இதை நீ தெளிவாகத் தெரிந்து கொண்டாய்..
1.ஆனால் விஷத்தை உருவாக்கும் அந்த வித்து
2.உன் உடலுக்குள் ஊழ்வினையாக ஊன்றியுள்ளது.
3.இதை அடக்க முடியாது.

நிலத்திலே களைகளைப் பிடுங்குவது போல் மருந்தால் அந்த அணுக்களைக் கொன்றாலும் மீண்டும் அதை நினைவுபடுத்தினால் அந்த அணுக்கள் வளரத் தான் செய்யும். இதை நீ தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால்… இது போல் ஒவ்வொன்றும் தன் நினைவிற்கு வரவேண்டும்.

இந்தச் சந்தர்ப்பம் விஷம் என்று நீ அறிந்தது. இந்த உணர்வின் தன்மை பதிவானால் தான் அதே இனத்தின் தன்மை மீண்டும் வரப்படும்போது
1.இது தன் இனம் என்று கவர்ந்து… சுவாசித்து… உயிரிலே பட்டு…
2.இன்ன விஷம் கொண்டது என்பதனை நீ தெரிந்து கொள்ள உதவும்
3.மீண்டும் அத்தகைய விஷத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.

இத்தகைய அறிவில்லை என்றால் உனக்கு நினைவில்லை என்று எனக்குத் தெளிவாக உணர்த்துகின்றார் குருநாதர்.

கணவன் மனைவி ஒன்றி வாழும் நிலை

ஜாதகம் ஜோதிடம் எல்லாம் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றோம். ஆனாலும் கல்யாணம் ஆன சிறிது நாளிலேயே பிரிந்து விடுகின்றார்கள். கேட்டால் விதி என்பார்கள்.

அது போன்றில்லாதபடி வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து வாழ்வது போல் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகி என்றுமே வாழ முடியும்.

hold the truth

இன்றைய மனிதர்களின் உண்மை நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

விஞ்ஞானத்தில் இன்று வரையிலும் இப்பூமியில் ஒலி அலைகளையும் ஒளிக் காட்சிகளையும் காற்றலையில் கலக்கவிட்டுப் பதிவு செய்கின்றார்கள்.

மேலும் இப்பூமிக்கும் மற்றக் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய… விஷமான அமிலத்தை (CHEMICALS) உலோகத்தில் செலுத்திப் பிற மண்டலங்களிலிருந்து இப்பூமியின் தொடர்பிற்கு வலுவாக்க… வளர்ச்சியுறும் உண்மை நிலை அறிய… விஞ்ஞான சாதனைகளைச் செயல்படுத்தவும்… மனிதனின் எண்ண உணர்வு செயல் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சரீர ஜெனிப்பில் சாதாரண வாழ்க்கை நிலையில் ஆயுட்காலம் அதது எடுக்கும் தன்மை கொண்டு எப்படியும் சராசரி அறுபதோ எழுபதோ எண்பதோ ஆண்டுகள் தான் இருக்கப் போகின்றது.

விஞ்ஞானத்தால்… பிற மண்டலங்களுக்குச் செல்லவும் அங்குள்ள உண்மை நிலையறியவும் கருவிகளின் நிலையால்
1.இன்றைய கருவியின் செயற்கைக்கு மின் காந்த அலையை
2.இயற்கையில் மனிதனின் உணர்வு எண்ணத்தை வளர்க்கவல்ல உயர்காந்த நுண்ணிய மின் அணுக்களை
விஞ்ஞானிகள் செலுத்தும் செயல் சாதனைக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் கிடைக்கப் பெற முடியாது…!

இன்று மனிதனால் பெறப்பட்டு வளரும் உயர் காந்த மின் அலையின் செயல்… இக்கோள்களில் (SATELLITES) செலுத்தப்பட்டு செயற்கையில் ஒலி பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் ஒளிப் படங்கள் வண்ண ஒளிப் படங்கள் ஒலி அலை வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றும் பல மின் ஒளிச் சாதனங்களுக்காகப் பிரித்து எடுக்கின்றனர்.

இவ்வாறு மின் காந்த அலைகளைப் பிரிப்பதினால் மனித எண்ண உணர்விற்கு நேரடியாகக் கிடைக்கப் பெற வேண்டிய… உயர் ஞான எண்ணத்தை அறியவல்ல… தன்னைத்தான் உணர்ந்து செயல்படச் செய்யும் இயற்கையான சக்திகளைப் பெற முடியாத நிலை உருவாகி விட்டது.

தனக்குள் உள்ள இறை சக்தியை.. எண்ணத்தின் உணர்வால் வலுவாக்கி வளரும் ஜீவித சரீரத்தை “இச்செயற்கை அலைகள்… சூழ்ந்து விட்டது…!

ஜீவ சரீரத்தில் ஜீவ சரீரமுடன் மனிதனுக்கு மனிதன் பேசப்படும் உறவு படுத்திக்கொள்ளும் உணர்வின் செயல் வளர்ப்பிற்கு…
1.வானொலியில் கேட்கப்படும் ஒலி அலைக்கும்
2.தொலைக் காட்சியில் காணும் ஒளி அலைக்கும்
3.இச்சரீரத்தின் உணர்வைச் செலுத்தும்பொழுது
4.அதே உணர்வைத்தான் இச்சரீரம் எடுக்க முடியும்.

செடிக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைத் தனக்குச் சத்தாக எடுத்து வளருகின்றது. அதுவே காய்ச்சிய நீரை… ஆற வைத்து ஊற்றினாலும் அச்செடிக்கு வேண்டிய ஜீவ சக்தி கிடைக்காது. அதனால் அத்தாவரம் வளர்வதில்லை.

அதைப் போன்று இச்சரீர உணர்விற்கு செயற்கை மின் காந்த ஒலியைக் கேட்கும் உணர்வினால் இச்சரீர ஜீவ ஆத்மாவானது…
1.தன் உயர்வு நிலைக்குத் தேவையான எண்ணத்தின் உணர்வு எடுக்கும் கவன நரம்பின் பொட்டின் பதிவிற்கு
2.உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி நிலை குன்றி விட்டது.

ஏனென்றால் எண்ணத்தின் உணர்வுகள் எவ்வலையை எடுக்கின்றதோ அதே நிலையைத்தான் இச்சரீர நிலைஇல் வளர்க்கும் நிலை உள்ளது.

இன்றைய மனித உணர்வின் எண்ணங்களே… செயற்கை அலையை அதிகமாகக் கேட்டு… பார்த்து… பழக்கப்படுத்தி வளர்த்துக் கொண்ட வலுவினால்… எதனையும் உணரும் பக்குவம் மாறி… இவ்வாத்மாவையே செயற்கை அலையுடன் செயல்படுத்தும் முறைக்கு மாறி விட்டது.

ஆகவே.. இவ்வாத்மாவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு அடகு வைக்கும் வாழ்க்கையையும்… தன்னைத்தான் உணராமல் பித்தனாக வாழும் மனிதச் செயல்களையும்… தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு மாற்றி ரிஷிகள் காட்டிய மெய்யை வளர்க்க வேண்டும்.

இப்பூமியின் மண் வளங்கள் அது எடுக்கும் அலை ஒன்று. அதே மண் வளத்தின் தொடர்பில் வளரும் தாவரம்… தன் உணவை எடுத்து வளர்ந்து பலன் தருகிறது. ஆனால் எண்ணமில்லாத உணர்வு… செயலுடன் அது வளருகின்றது.

மிருகத்தின் நிலையோ… தனக்கு வேண்டிய உணவைத் தேடவும் புசிக்கவும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறங்கவும் தன் உணர்வின் இச்சையில் தேவையை அறிந்து கொள்ளவும் தன் ஐந்தறிவைக் கொண்டு வாழ்கிறது.. வளர்கிறது.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இக்குறுகிய நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் பெருக்கத்தால் தன்னைத் தானே உணராத நிலைக்குச் சென்று செயற்கையின் பிடிப்பிலேயே சிக்குண்டு விட்டான்.

1.செயற்கை ஒலி அலைகளையும் தொலைக்காட்சி ஒளி அலைகளையும்
2.தன் எண்ணத்தின் உணர்வில் பதியவிடும் அலையினால்
3.மனிதனுக்குக் கிடைத்துள்ள ஆறறிவு பொக்கிஷமான பகுத்தறியும் உயர் ஞானத்தையே
4.தவற விடும் நிலைக்கு இன்று கொண்டு வந்து விட்டார்கள்.

இது தான் இன்றைய உண்மை நிலை…!

மகரிஷிகளின் அருளுடன்… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் புகுத்தி… மகரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்

அருணகிரிநாதரின் முழு சரித்திரம்

விவேகானந்தர் சரித்திரம் 

Curse and scolding

நாம் உயர்ந்த நிலையில் நினைப்பவர்களை… மற்றவர் குறையாகச் சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…?

உபதேசம் எல்லாம் கேட்போம்…! கேட்டுக் கொண்டிருக்கும்போது அந்த உயர்ந்த நிலைகளில் நாம் இருக்கின்றோம்…! என்கிற பொழுது என்ன அவர் பெரிய சாமியா…? என்று (ஞானகுருவை) யாராவது சொன்னால் உடனே அந்த உயர்ந்ததை விட்டுவிடுவோம்.

சாமிக்கு என்னய்யா தெரியும்…? என்று சொன்னால் உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். ஆனால் சமாளிக்கக்கூடிய திறன் வராது. அவர்களுடைய உணர்வுகள் நம்மை மாற்றிவிடுகிறது.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

ஞானிகள் கொடுத்த உணர்வின் வலுக் கொண்டு…
1.அவர் அறியாமை நீங்க வேண்டும் என்று “மௌனம் சாதித்து…”
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர் பெற வேண்டும்.
3.உண்மையை நிச்சயம் அவர் உணர்வார்… உணரும் பருவம் வரும் என்ற
4.இந்த உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வின் பலனை நீ சிக்கிரம் உணர்வாய்… பாரப்பா…! என்று இந்த உணர்வை அங்கே பதிவு செய்யுங்கள்.

அப்புறம் அப்படி…இப்படி.. என்பார்…! திரும்பித் திரும்பிப் பார்ப்பார்…! இந்த உணர்வுகள் உள்ளே போனவுடனே அவருக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை நிச்சயம் உணர்த்திக் காட்டும்.

1.நீ புரிந்து கொள்வாய்… புரிந்து கொள்ளக்கூடிய காலம் வரும்
2.நீ நிச்சயம் புரிவாய்… உன்னை நீ அறிவாய்
3.இந்த உலக இருளைப் போக்குவாய்…
4.உண்மை நிலையை நீ அறிவாய் என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள்.

அப்படி இல்லாமல் அவரிடம் கடைசியில் எங்கள் சாமியைப் பற்றி இப்படிச் சொல்கிறாயா…? இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்…! என்று சொன்னால் அவர் உணர்வு தான் உங்களைப் பார்க்கும்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால் அந்த உணர்வின் சக்தியை நாம் அறிந்திடல் வேண்டும்.

இதே மாதிரி வேறு சில நிலைகளையும் சொல்வார்கள். ஆனால் பற்று இருக்கும். நான்கு பேர் அப்படிச் சொன்னவுடனே அவர்கள் கோபம் குறைகளை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள்.

கடைசியில் போகும் பாதையை விட்டுவிட்டு என்ன சொல்வார்கள்..?

செ…! எங்கே பார்த்தாலும் அவன் இப்படிப் பேசுகிறான்.. இவன் இந்த மாதிரிப் பேசுகின்றான் என்று அந்தச் சண்டைகளை எல்லாம் கொண்டு வந்து வீட்டிலே விடுவார்கள்… தொழிலிலேயும் விடுவார்கள்.

அப்புறம் நல்ல சிந்தனை செய்யும் நம் நிலையே மாறி நமக்கு நாமே தண்டனைக் கொடுக்கும் நிலை ஆகிவிடும்.

நம் உடல் உணவாக உட்கொண்ட உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றி… நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது ஆறாவது அறிவின் மணம் கொண்டு…!

அத்தகைய தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்ட நாம் கேள்விப்பட்ட தீமையான நஞ்சினை நீக்கி… நல்ல உணர்வினைப் படைத்திடும் ஆற்றலைத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.

அப்படிப் படைக்க வேண்டும் என்றால்…
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்களுக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத்தான்
2.பல வட்டங்களை எழுப்பி இங்கே உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வின் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து… அந்த மகரிஷிகளின் பால் இணைத்து உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை தாவர இனங்களுக்கு உரம் கொடுப்பது போல் ஏற்படுத்துகின்றோம்.

ஆனால் நீங்கள் அதை நினைவு கொள்ள வேண்டும்

1.பிறருடைய குறைகள் எது வந்தாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக் கூடாது.
2.வந்தால்… உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற நினைவினை
3.அங்கே அதிகமாக்கி அந்தச் சித்திர புத்திரன் கணக்கைக் கூட்ட வேண்டும்.

நம்மையும் இந்தப் பூமியையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்

 

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும் நாம் பெறுதல் வேண்டும். வென்ற உணர்வை நுகர வேண்டும். ஏனென்றால் விண் செல்ல பலர் முயற்சித்தாலும் அதிலே தோல்வி ஆன நிலைகளும் உண்டு. அதை நாம் கவர்ந்து விடக் கூடாது.

third eye key

பொட்டு வைக்கும் இடத்தில் “பருப்பு போன்று” சிறு அளவில் செயல்படும் கருவி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நாம் மேல் நோக்கிப் பார்த்து எடுக்கின்ற சமமான உணர்வு கொண்டு வளர்க்கப்படும் எண்ணத்தின் உணர்வைப் புருவ மத்தியில் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நான்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அத்தகைய நுண்ணிய அலைகளைச் சுவாசித்து எடுக்கும் பொழுது நம் எண்ணங்கள் அனைத்தும் ரிஷிகளின் எண்ணமுடன் கலக்கின்றது.

ஆக… சப்தரிஷிகளினால் இன்று இப்பூமியில்… எப்பூமியிலிருந்து தான் வளர்ந்து வலுக்கூட்டி… இன்றும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக மனித எண்ணத்தின் பகுத்தறிவை வழி நடத்துகின்றனரோ… அவர்களின் எண்ணமுடன் நம் எண்ணத்தை செலுத்தி… அனுதினமும் தியானித்து அந்தச் சக்திகளை நாம் ஈர்க்க வேண்டும்.

அத்தகைய தியான ஒளி ஈர்ப்பினால்
1.இச்சரீரத்தை இயக்கவல்ல ஆத்மாவில்…
2.அன்று சித்தர்கள் காட்டிய ஞானக்கண் என்ற கவன நரம்பின் பொட்டுத் தன்மையின் மூலம்
3.நாம் எடுக்கும் சுவாசத்தால் எந்த ரிஷிகளின் அலையை எடுக்கின்றோமோ
4,அவ்வலையைச் சிறு மூளைக்குச் செலுத்தி
5.ஆத்மாவின் செயலுக்கு வலுத் தருகின்ற புருவத்தின் நடு மையத்தில் பொட்டில்
6.கவன நரம்பு செயல்படுகின்ற “பருப்பு போன்று… சிறு அளவில் செயல்படுகின்ற கருவி…”
7.இப்பூமியின் சமைப்புக்கு முன் நாம் எடுக்கின்ற நேரடி ஈர்ப்பால்
8.அதற்குகந்த எண்ணத்தின் வளர்ச்சியின் வலுவை அந்தக் காந்த நுண் அலைகள் மூலம் பெற முடியும்.

இயல்பாக… நம் கண்ணின் ஒளியில் எதிரில் காணும் பொருள்களை எல்லாம் சூரியனின் ஒளியோ மற்ற ஒளிகளோ உள்ள வெளிச்சத்தில் தான் கண் பார்த்துப் படம் எடுக்கின்றது.

ஆனால் இக்கவன நரம்பில் பொட்டின் பதிவு பெறும் காந்த நுண் அலையின் வளர்ச்சி கொண்ட வலுத் தன்மையினால் விழியை மூடிக் கொண்டே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் நிலைகளை
1.இருட்டிற்குள் எப்படி வெளிச்சத்தைக் காட்டி அதிலுள்ள உண்மைகளை இவ்விழி படமெடுத்து அறியும் இன்றைய நிலையை
2.வலுப்படுத்தப்பட்ட ரிஷிகளின் ஒளியிலிருந்து எடுக்கப்பட்ட காந்த நுண் அலைகள் கொண்டு
3.இச்சரீரத்தில் வளருகின்ற பல கோடி அணுக்களின் வீரியத் தன்மை உணர்வையும்
4.இப்பொட்டில் பதிவாக்கப்பட்ட ஒளித் தன்மை வளர்ச்சியினால்
5.விழியை மூடிக் கொண்டே பிரகாசத் தன்மையில் நாம் காணலாம்.

இதன் வலு வளர வளர… நாமிருக்கும் இடத்திலிருந்தே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி மண்டலத்தின் உருத்தன்மையும்… உருப்பெறும் மாற்றுத் தன்மைகளையும் அறிய முடியும்.

நடக்க இருக்கும் நிலைகளையும் முன் கூட்டியே அறிந்திட முடியும்…!

மறதிப்பூடு, மிருக இனங்கள் இறந்த இடத்தில் உருவாகும் தாவர இனத்தின் மணத்தின் இயக்கங்கள்

தற்கொலையின் நிலைகள் – பாம்பாகப் பிறக்க நீங்கள் தயாரா 

விபத்து நடந்த இடத்தில் பதிவான இறந்த மனிதனின் உதிரத்தின் உணர்ச்சிகள் 

Lord Markandeya

எமனுக்கு நாம் எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும்…?

காட்டிற்குள் சென்று தனித்து உட்கார்ந்தாலும் இந்த உடலான காட்டிற்குள் இருந்து யாரும் தப்ப முடியாது. இங்கே புலியும் இருக்கின்றது கரடியும் இருக்கின்றது பாம்பும் இருக்கின்றது.

ஒருவன் கோபமாகப் பேசினான் என்றால் அதை நாமும் கேட்டால் நமக்குள்ளும் இந்தக் கோபம் வரும். அதற்குச் சாப்பாடு வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் பதிவான அந்தக் கோப உணர்வு என்ன செய்யும்…?

இவர் ஜம்… என்று மகிழ்ச்சியாக உட்கார்ந்திருப்பார். அடுத்தாற்படி அது என்ன செய்யும்…?
1.யாராவது குறை கூறியிருந்தார்கள் என்றால் அதை எல்லாம் இழுத்துக் கொண்டு வரும்.
2.உடனே அந்தக் குறையான எண்ணங்கள் வரும்… வரிசையாக் ஓடும்.
3.இரு… நான் கொஞ்சம் சாப்பிட்டுக் கொள்கின்றேன் என்று அது தன் உணவை எடுத்துக் கொள்ளும்.

பையன் மேல் பாசமாக இருப்பார்கள்…! ஆனால் இவ்வளவு தூரம் சொல்லி அவனுக்காகச் சம்பாரித்து வைத்தேனே. அவன் அதைப் புரிந்து கொள்ளாதபடி “இப்படிச் செய்கின்றானே…!” என்ற அந்தக் குறையான எண்ணம் வரும்.

ஆக… ஒருமித்த நிலைகளில் (மன அலை பாயாமல்) நான் இருக்க வேண்டும்…! என்று நினைக்கின்றேன். என்னால் முடியவில்லையே…! என்பார்கள்.

எந்தச் சாமியாராகப் போனாலும் சரி… குடும்பத்தை எல்லாம் துறந்து விட்டு “நான் காட்டிற்குள் சாமியாராகப் போவேன்…” என்றால் இந்த உடலான காட்டிற்குள் இருந்து தப்பவே முடியாது.

அதனால்தான் சீதாராமா…! என்ற நிலையில் அவர்கள் சீதாவும் இராமனும் காட்டிற்குள் சென்றார்கள். ஆனால் இந்த எண்ணத்திற்குள் எந்த சீதா இராமனாக இருக்க வேண்டும்…?

சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணங்கள்.
1.சுவைமிக்க உணர்வுகள்
2.சுவையாக என்றும் சுவைத்திட்ட உணர்வுகள் கொண்டு
3.சுவையான அந்த மகரிஷிகளின் உணர்வை
4.சீதா…! என்ற அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து
5.இராமனாக நம் சொல்லின் நிலைகளும் நினைவின் ஆற்றலும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

ஒருவன் தூய்மையற்று அவதூறாகப் பேசுகின்றான் என்றால் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா.. என்று இந்த சுவையைக் கூட்டிக் கொண்டு அதை தூய்மைப்படுத்திட வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வைச் சித்திர புத்திரனாக்கி… அதன் மீது பாசமாகி… அதையே நாம் தொடர வேண்டும்.
1.அந்தக் கயிறின் தன்மை கொண்டு எமனுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும்.
2.நீ அல்ல… சீவலிங்கம்…! என்று உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.அவனைப் (உயிரான ஈசனை) பற்றிட வேண்டும்…!

அதைத் தான் ஒரு உருவத்தை வைத்து மார்க்கண்டேயன் என்று காட்டுகின்றார்கள். என்றும் பதினாறு…! என்ற நிலை அடைவதற்கு அந்த மார்க்கண்டேயன்…
1.ஆவடை… உடலைப் பற்றிக் கொள்ளவில்லை
2.லிங்கம்… தன் உயிரைப் பற்றிக் கொண்டுள்ளான் என்ற நிலையை
3.ஒரு சித்திரத்தை எழுதி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் வைத்துள்ளனர் ஞானியர்.

அதை எல்லாம் நாம் புரிந்து கொள்ளாதபடி அபிஷேகம் ஆராதனை சாங்கியம் என்ற நிலைகளைச் செய்து கொண்டுள்ளோம். நம் நல்ல குணங்களைக் காக்க முடியாது அவைகளளைச் சீர் குலையச் செய்து விடுகிறோம்.

இதிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் இதை நினைவுபடுத்திக் கொண்டு வருகின்றோம்.

குரு கொடுத்த வழிகளில் நிலைகளில் அதைச் சித்திர புத்திரனாக்கி அதனில் விளைந்த அந்தக் கணக்கின் பிரகாரம் இங்கே அந்தச் சொல்லாக வெளிப்படுகின்றது.

அந்தச் சொல்லின் நிலைகள் தான் சீதா ராமா….! ஞானிகளைப் பற்றிய இந்தச் சொல்லின் தன்மை (உபதேசம்) உங்களுக்குள் ஊடுருவி அவர்களின் உணர்வின் நினைவாற்றலாக உங்களுக்குள் அது உந்தச் செய்யும்.

சீதா ராமா என்று அத்தகைய சொல்லாக உங்களுக்குள் சொல்லும்போது அருள் ஞானியின் உணர்வுகளுடன் உங்கள் உணர்வுகள் ஒன்றும்.

வாழ்க்கையில் என்றுமே
1.உங்களின் நினைவின் ஆற்றல் விண்ணை நோக்கிச் சென்று…
2.அந்தச் சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம்
3.உயிரோடு ஒன்றிய நிலைகளாக உங்கள் உணர்வுகள் செல்லும்.

எல்லா உணர்வையும் அறிவிக்கும் ஆறாவது அறிவு கொண்டு அறிந்து கொண்டது போல் ஒளியின் உணர்வாகப் பெருகி… ஒளி பட்டபின் இருள் விலகுவதுபோல் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் நிலை கொண்டு வாழ்ந்திட முடியும் என்பதைத்தான் உங்களுக்குள் தெளிவாக உணர்த்துவதும்… இதனைப் பதிவு செய்வதும்…!

களிமண்ணால் செய்த விநாயகரைக் கடலில் கரைப்பதன் காரணம்

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த உணர்வினை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வருகின்றது.

 

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணத்தால் பதிவு செய்திருந்தால் இந்த நினைவு கொண்டு காலை சூரிய உதய நேரத்தில் அதை எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவையும் ஜீவான்மாவையும் பரிசுத்தப்படுத்த வேண்டும்

 

பின் நம் வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். நம் வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் இந்த நிலைகள் பெறவேண்டும் என்று இந்தப் பகைமை உணர்வை சதுர்த்தி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

அப்பொழுது நாம அனைவரும் ஈர்க்க மறுக்கும் அந்தத் தீமைகளை விளையவைக்கும் உணர்வுகள் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் செல்வதில்லை.

 

அதே சமயம் சூரியனின் காந்தப் புலனறிவு வெளிவரும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் தீமை செய்யும் உணர்வுகள் சிக்கி, தாவர இனங்கள் வளரும் நிலைகளுக்கு அப்பால் அது சென்றுவிடுகின்றது.

 

பின், பூமியின் மைய வட்டத்திற்குத் தரை மார்க்கத்திற்கு வருவதில்லை. அவ்வாறு அது அலைகளாகச் செல்லும் பொழுது கடலின் ஈர்ப்பலைக்குள் சிக்கிவிடும்.

 

அதிலுள்ள ஹைட்ரஜன் அந்த வலுக் கொண்ட உணர்வின் அலைகள் கொண்டது, ஹைட்ரஜன் என்றால் தீமைகளை விளைய வைக்கும் உணர்வின் சத்து கொண்டது.

 

அதற்குள் உள்ள காந்தப் புலனறிவு அது தன் இனத்தை அதாவது நாம் அனைவரும் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான அலைகளை அது கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்திவிடுகின்றது.

 

 

அதனால், இந்தப் பரமான பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்களும் அது பரிசுத்த அணுக்களை விளையவைக்கும் தன்மை உருவாகின்றது.

spirituality 1

“சப்தரிஷிகளின் நேரடி வலுவில்” நாம் இருந்தால் இன்றைய நச்சுக் காற்று நம்மைப் பாதிக்காது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இதுவரை சுட்டிக் காட்டிய எண்ணத்தின் உணர்வை “இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…!” என்ற பகுத்தறிவில் மனிதனின் எண்ண உணர்வை இப்புவி ஈர்ப்பில் கர்ம காரிய வாழ்க்கையிலிருந்தே தன் எண்ணத்தின் ஞானத்தை “உயர் ஞானமாக்கிடல் வேண்டும்…”

இப்புவியில் தோன்றி இப்புவியிலுள்ள உயர் சத்தைத் தனதாக வளர்த்துக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

சூரிய மண்டலத்தின் சமைப்பில் தன் சப்த ஒளியைப் பாய்ச்சி… ஒளி கொண்ட வண்ண அமில உயிர் ஜீவ வித்து இப்பூமியில் மீண்டும் எண்ண உணர்வுடன் கூடிய செயல் தன்மைக்கு வளர்ப்பவர்களும் “அவர்கள் தான்…”

சப்தரிஷிகளின் செயல் தன்மையால் வளரும் நாம்… நம் எண்ணத்தின் உணர்வை விண்ணிலே செலுத்தி… அவர்கள் பால் நினைவைச் செலுத்தி அவ்வொளியின் நேரடி அலையை இஜ்ஜீவ ஆத்மாவில் வளரக்கூடிய உயிர் அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.

1.இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…! என்ற நிலையில்
2.உயிர் தெய்வம் எப்படிச் செயல் கொள்கின்றதோ
3.அச்செயலின் தெய்வத்திற்கு… இவ்வுடலில் வளரும் ஒவ்வொரு அணுவையுமே
4.தெய்வமாக்கும் உயர் காந்த ஈர்ப்பில் செயல் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்து உதித்த நம் உயிர்… அவ்வுயிரின் உயிரணுக்களெல்லாம் உயிர் தெய்வ அணுக்களால் வளரும் காந்த ஜீவ வீரியத்தை… சப்தரிஷிகளால் பாதுகாத்து பக்குவப்படுத்தப்பட்ட சமைப்பின் தொடரை… நம் உணர்வின் எண்ணத்தை சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலந்து செயல்படும் பொழுது…
1.நாம் வேறல்ல…
2.அந்த ரிஷிகள் வேறல்ல…! என்ற நிலையை எய்துகின்றோம்.

அப்படிப்பட்ட ரிஷிகளின் தொடர்புடன் இஜ்ஜீவ ஆத்மா வலுப்பெறக் கூடிய வளர்ச்சியினால்… தினசரி வாழ்க்கையில் ஏற்படுகின்ற செயலில் எல்லாம்… தான் பெற்ற உயர் ஞானத்தால்… சமமான உணர்வு சமைப்பு கொண்ட நிலையில் செயல்படும் பொழுது… எத்தகைய தீய உணர்வுகளும் நம் சரீரத்தைப் பாதிக்காது.

இவ்வாறு நம் ஆத்மாவின் அலை வீரிய உணர்வு பெறும் பொழுது
1.இக்காற்றலையில் பலவாகக் கலந்துள்ள பல நிலை கொண்ட அமிலக் கூறுகளும்
2.பல உணர்வில் ஜீவன் பிரிந்த ஆவி ஆத்மாக்களின் அலையும்
3.இப்புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டுள்ள இன்றைய நச்சான காற்று மண்டல அலையும்
4.சப்தரிஷிகளின் நேரடி வலுவில் ஜெபம் கொள்ளும்போது
5.எந்த அலையும் நம் நிலையைப் பாதிக்காது.

மனித வாழ்க்கையில் இருந்தே…
1.புருவ மத்தியில் எடுக்கும் ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒளி நாதத்தின் சமைப்பால்
2.இச்சரீர வாழ்க்கையில் எந்நிலையயும் உணரும் பக்குவத்தையும்
3.முன் கூட்டி அறியும் செயலையும்
4.வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நடைமுறை நிலைகளுக்கும் தெளிவு காணும் பக்குவத்தையும்
5.முதலில் நாம் பெற வேண்டியது அவசியமாகும்…!

பல கோடி வருடங்களாய்… உயிர் பெற்று உருவாகி உருவாகி… உயர் தன்மை பெற்ற இம்மனித எண்ண உணர்வு சரீரத்தில்… ஒவ்வொரு உயிரும் ஒன்றைப் போன்று ஒன்றில்லாமல்… தான் வளர்ந்த வீரிய உணர்வின் அடுத்த நிலைக்குத் தனக்குள் உள்ள இறைவனை… தனக்குள் வளரும் இறை அணுக்களை… “இறைவனுக்கும் வீரியத் தன்மையாக…!” மகரிஷிகளின் அருள் ஒளியிலிருந்து எடுக்கும் ஜெபத்தால்… நிச்சயம் செயல் கொள்ள முடியும்.

 

நமது எல்லை எது…?

பேரருள் பெறச் செய்த நமது பிரபஞ்சத்தைப் போற்றுதல் வேண்டும்

விண் செல்லும், விண் செலுத்தும் மார்க்கம் – முன்னோர்களை விண் செலுத்தினால் நாமும் எளிதில் விண் செல்ல முடியும்

Diamond soul sparkling

வைரத்தின் ஈர்ப்பாக… மரமே மலையாக…! ஆவது போன்று மனிதப் பிறவியின் பலன் இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கார்மேகக் கண்ணன் அகிலத்தையும் தன் வாயில் காட்டியதாகவும்… பெண்களிடம் தான் லீலா விளையாட்டுகளை நிகழ்த்தியதாகவும்.. கிருஷ்ணாவதாரம் வியாசரால் எழுதப்பட்டுள்ளது.

அந்தத் தத்துவத்தில் பல உண்மைகள் உண்டு… கதை ரூபத்தில் நாம் அதை கேட்கின்றோம்… படிக்கின்றோம்…!

இம்மனிதக்கரு எண்ணத்தின் உணர்வு ஒவ்வொன்றையும் கிருஷ்ணனாகக் கண்டு… அக்கிருஷ்ணனின் பிம்பம் பெற்று… அப்பிம்பத்தின் தொடர் கொண்டு நிகழும் வழித் தொடர் ஒவ்வொன்றுமே
1.உயிர் ஆத்மா உயரும் பரமாத்மாவின் தொடர்பைக் குறிக்க
2.கீதையில் சூட்சும ரூபங்கள் பல உண்டு.

தன் உயிர் ஆத்மாவின் உண்மை ஜெனிப்பை நாம் உணர்ந்து நம்முள்ளுள்ள வீரிய சக்தியை இக்கர்ம காரியத்தில் மோதும் உணர்வுகளுக்கு ஞானத்தைக் கூட்டி தன் உயர் ஞானத்தின் உண்மை எது…? என்ற பகுத்தறியும் எண்ண வாதத்தால்… எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கக் கூடிய வீரத்தின் ஞானமுடன் ஒவ்வொரு ஆத்மாவும் செயல்பட்டதென்றால்…
1.அன்று ரிஷிகளினால் உணர்த்தப்பட்ட…
2.இன்று கதையாய் உருவம் தந்துள்ள வழி ஒவ்வொன்றையுமே
3.நம் உயிர் ஆத்மாவின் சித்தில் நாமும் பெற முடியும்.

இவ்வெண்ணத்தின் பகுத்தறியும் உயர் ஞானத்தைக் கொண்டு அறிவின் வளர்ச்சியைச் சாந்த குண உணர்வுடன் அறியக் கூடிய தொடர்புக்குச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சில தாவரங்கள் விதைக்கப்பட்டு அதனுடைய சத்து நிலை உள்ள காலம் வரை பலன் தந்து ஒரு மாதம்… மூன்று மாதங்கள்… இப்படித் தன் சத்தின் பலனைத் தந்துவிட்டு மக்கி விடுகின்றன.

ஆனால் சில மரங்கள்…
1.“பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்குத் தான் எடுத்த சத்தின் தொடரினால்”
2.அம்மரமே வைரம் பாயும் தன்மைக்கு வளர்ந்து…
3.மரமே மலையாகிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பூமியின் சுழற்சியில் வலுக் கொள்கின்றது…!

காற்றலையின் சுழற்சியில்தான் எல்லா அமிலங்களும் சுழல் கொள்கின்றன.

மரத்தின் வலுவான வளர்ச்சி முற்றலில் அவ் ஈர்ப்பின் பிடிப்பிற்கு வைரத்தை வளர்க்கவல்ல அமிலத்தைத் தன் ஈர்ப்பில் பெற்று அது வளருகின்றது.

சிறு விதையான மிளகாய் விதை இக்காற்றலையில் கலந்துள்ள கார உணர்வின் சத்தைத் தன் வளர்ப்பிற்கு வலுக் கூட்டித் தன் வளர்ப்பின் பலனாய்ப் பலவற்றைத் தருகின்றது.

எண்ணத்தின் உணர்வை….
1.சிறு விதை எடுத்த பலனைப் போல்… வளர்ச்சியைப் போல்… பலன் தன்மை பெறத்தக்க செயலும் உண்டு…
2.வைரத்தின் ஈர்ப்பாக… மலையாகும்… மரத்தின் தொடர்பைப் பெறும் செயலும் உண்டு…!
3.மனிதன் எடுக்கும் அறிவின் ஞானத்திற்கு…!

பயத்தை அடக்கி மன பலம் பெறுங்கள்

 

பதிவான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகினறது என்று தெளிவாகத் தெரிந்து கொண்டால் எத்தகைய தீமையையும் நீக்க முடியும். நம் நல்ல குணங்களைக் காக்க முடியும். மன பலத்துடன் ஞானிகள் சென்ற பாதையில் சீராகச் செல்ல முடியும். அதற்கே ஞானிகள் கண்ட பல பல உண்மைகளை உபதேசமாகக் கூறுகின்றோம் (ஞானகுரு).

WORD POWER

நம் சொல்லை…! நயம்பட உரைக்க வேண்டிதன் முக்கியத்துவம்

ஒரு வீணையை ஏழாக வாசிக்கின்றோம். ஒன்றோடு ஒன்று இணையாக வாசிக்கும்போது அது இனிமையாக இருக்கின்றது. அதிலே சுருதியைச் சீராக இயக்கவில்லை என்றால்… அதைக் கேட்டாலே வெறுப்பாகத்தான் வருகின்றது.

இதைப் போலத்தான் சொல்லின் “நயம்” மாறினால் வெறுப்பின் தன்மை ஊட்டுகின்றது.

ஒரு சிலரைப் பாருங்கள்…! பேசும் பொழுது வெறுத்துச் சொல்வார்கள்…! நியாயத்தைச் சொல்வார்கள்.. ஆனால் சும்மா வள…வள… என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
1.அதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்
2.சொன்னவுடன் அவர்களைப் பார்த்தவுடனே அடுத்தாற்படி வெறுப்பு வரும்.

அதே சமயத்தில் அவர்கள் உள்ளடக்கி என்ன சொல்வார்கள்….?

தன்னை நியாயவாதியாக நல்லவர்களாகக் காட்ட எண்ணுவார்கள்… உள்ளுக்குள்ளே எல்லாம் வெறுப்பாக இருக்கும்…. சொல்களில் நயம் மாறும்…!

சொல்வது அரத்தமாகின்றதல்லவா…?

இது அப்படி இருக்கின்றது… அது இப்படி இருக்கின்றது… என்று சொல்லிக் கொண்டே போவார்கள். அப்படிப்பட்ட உணர்வு பட்டவுடனே அந்த நயம் மாறும்.
1.அவர்களிடம் அந்த உணர்வின் குணம் மாறும்
2.முகத்திலே…. கண்ணிலே எல்லாம் மாறும்… சொல்லிலும் பார்க்கலாம்…
3.நம்மை ஏமாற்றுகின்றார்கள் என்று தெரிந்துவிடும்.

உள்ளடக்கி எத்தனையோ தீங்கு செய்கின்றார்கள். மற்றவர்களை எல்லாம் தீங்காகச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். தன்னை நல்லவர்களாகச் சொல்வார்கள்.

இதைக் கேட்டாலே நமக்கு வெறுப்பு வரும்…!

திரும்பத் திரும்ப இடைஞ்சல் பண்ண வேண்டுமென்று அவர்கள் சொல்லும் பொழுதெல்லாம்… அந்த உணர்வுக்குத் தக்கவாறு மணம்… அவர்களுடைய முகம்… அவர்களுடைய கண்ணும் மாறும்

கேட்கும்போது டக்கு… டக்கு… டக்கு… என்று நமக்கு உணர்வுகள் ஒவ்வொன்றாக மாறும்.

ஏனென்றால் அவர்களுடைய நினைவலைகளில் எதைக் கலக்கின்றார்களோ… இதனுடன் கலந்து வரப்படும்போது அந்தக் கலர் மாறும் எதிலே கொண்டு போய்விட்டாலும் இந்தச் சுவை வெளிப்படுத்தியே விடும்.

ஏனென்றால் மனிதனுக்கு இந்த உணர்வுகள் தன்மை…!

1.ஆனால் திரும்பத் திரும்ப நல்லவர்களாகச் சொல்லக்கூடிய நிலைகள் வேறு…!
2.அவர்கள் உண்மையிலே நல்லதாகச் சொல்வார்கள்.
3.அந்த நல்லதைத் அதை திரும்பத் திரும்பச் சொல்லும்போது பார்த்தால்
4.நமக்குள் அந்த மகிழ்ச்சியின் தன்மையே ஊட்டிக் கொண்டு இருக்கும்.

முந்தி எல்லாம் ஒரு மனிதனைப் பார்த்தவுடனே கோபமாக இருக்கும்போது எந்தக் கலரில் வருகின்றது…? வேதனைப்படும்போது அந்த உடலில் இருந்து உற்பத்தியாகும் கலர்கள் எப்படி மாறுகிறது என்று காண்பிப்பேன்.

அதுவெல்லாம் இந்த கண்ணிலே எப்படி வருகின்றது…? இந்த அலைகள் எப்படி உற்பத்தியாகின்றது…..? நாம் சுவாசிக்கும்போது இந்த உணர்வுகள் பட்டபின்…
1.நல்லதை எல்லாம் விலக்கி விட்டுவிடுகின்றது.
2.இந்த உணர்வுகள் அது சராமாரியாகப் போகின்றது…
3.உள்ளுக்குள் சுற்றி வரப்போகும் போது மற்ற எதற்கும் இடம் கொடுக்காது.
4.அப்பொழுது கை கால் எல்லாம் இந்த அலைகள் பாயும்
5.ஆன்மாவிலே இதுதான் பெருகும்…. மற்றதெல்லாம் உள்ளுக்குள் அடங்கிவிடும்.

இத்தகைய நிலை ஆனால் அடிக்கடி வேதனையாகும்…! இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே விளக்கமாகச் சொல்கிறேன்.

அகஸ்தியன், திருஞானசம்பந்தர் – தாய் கருவில் பெற்ற அதிசயமான ஆற்றல்கள் 

உலகைக் காக்கும் அருள் ஞானிகளை உருவாக்குங்கள் 

அழகான அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்குங்கள் 

inner peace meditation

சாந்தம் கொண்டு செயல்படுவதன் ஆற்றல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 

எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்த்துத் தான் ஒரு சொல்லின் உணர்வுகளே வருகின்றது…. தனித்து வராது..! அதாவது அதனுடைய சுருதிகள்…!

ஒருவர் சிலர் பேசுவதைப் பார்த்தால் ரொம்பவும் எளிமையாகப் பேசுவார்கள் அதே சமயத்தில் அவர்களிடம் சாந்த குணம் இருக்கும்.

சாந்த குணங்கள் இருக்கிறதென்றால்…
1.மனதில் அந்த உணர்வுகள் ஜாஸ்தி இருக்கும்…
2.எண்ணத்தால் பாய்ச்சுவார்கள்….!
3.இது அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வு.

சில பொருள்களை வெளியிலே பார்த்தால் ஒன்றும் செய்வதில்லை. எடுத்து உள்ளுக்குள் சாப்பிட்டவுடனே குடலுக்குள் போய் அரிப்பைக் கொடுக்கின்றது…. எதிர்மறையாகின்றது.

இதே மாதிரித் தான் ஒரு சிலரின் உணர்வுகள் அதாவது ரொம்ப சாந்தமாக இருப்பார்கள்.
1.சாந்தமாக இருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோம்
2.அங்கே அவர்களுக்குள் எண்ணங்கள் பல விதமாக ஓடும்.
3.ஆனால் அவனுடைய நினைவுகள் வெளிப்படும்… (சொல் வராது)
4.மற்றவரின் உணர்வுகள் அவர்களுக்குள் இது சேராது.
5.மற்றவர் உணர்வின் தன்மைகளைக் கெடுதலாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்
6.ஆனால் இவர்களுடைய நினைவுகள் அதை அடக்கும்.

இப்படி இயற்கையிலே சிலருக்கு விளையும்.

ஆகையினாலே கோடி… கோடி… கோடி… என்பதே மிளகாய்க்குள் காரம் ஆகவேண்டுமென்றால் பல கோடி உணர்வுகள் சேர்த்துத்தான் அந்த ஒரு காரம் ஆகின்றது.

அதே போல் பல கோடி உணர்வுகள் சேர்த்துத்தான் மிளகு ஆகின்றது. ஆனால் அதனுடைய காரம் வேறு..!

எதனுடைய உணர்வு அதிகமாக கூடுகின்றதோ அதற்குத் தக்கவாறு சுவைகள் மாறும்… குணங்கள் மாறும்…. நிறங்கள் மாறும்…!
1;கோபமாகி… அடிக்கடி வேதனையில் இருந்து பாருங்கள்…. ஒரு விதமான நீல நிறமாக இருக்கும்.
2.அதிகமான நிலையில் ரொம்ப இருட்டடைந்த நிலையில் என்ன வாழ்க்கை என்று வெறுப்பான நிலையிலிருந்து பாருங்கள்.. முகம் கருக்கும்.

அதே சமயத்தில் கோபத்தின் உணர்வை அதிகமாக எடுத்துப் பாருங்கள். மற்றவர் உணர்வால் உணர்ச்சிகள் உந்தப்பட்டால் நரம்புகள் எல்லாம் ரொம்ப இறுக்கமாக (TIGHT) ஆகும்.

ஆகவே… எந்த காரணத்தைக் கொண்டும் வெறுப்பு வேதனை கோபம் குரோதம் இதெல்லாம் ஆழத்தில் கொண்டு போய் நம்மைத் தள்ளி விட்டு விடும். குரோதங்கள் வராது அவசியம் தடுக்க வேண்டும்.

கோபம் அதிகமானலும் கூட அடுத்து இந்தக் காரத்தை தணித்து விட்டால் சிந்திக்கும் திறன் வரும்.
1.ஆனால் இந்தக் குரோதம் இருக்கின்றது பாருங்கள்…!
2.எதைச் சொன்னாலும் கேட்காது…
3.தெரிந்து கொண்டேன்…! என்ற நிலையில் நல்லதை யார் சொன்னாலும் எடுக்காது.

ஆகவே… அனைத்தையும் தெரிந்து கொண்டோம் என்ற இந்த நிலைகள் நமக்கு வேண்டாம். தெரிந்து கொண்டே இருக்கின்றோம் என்ற நிலையில்…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.பொருளுக்குள் பொருள்… மூலத்திற்குள் மூலம்… ஓமுக்குள் ஓ…ம்…!

தீமை உருவாகக் காரணம்

வேதனையாக உள்ளோருக்கு உயர்ந்த உணர்வுகளைச் சொன்னால் அதை அவர்களால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் வேதனைப்படும் சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தால் ரசித்துக் கேட்பார்கள். தன் வேதனை தெரியாது.

ஏனென்றால் எதை நுகர்ந்து ஆழமாகப் பதிவாக்குகின்றோமோ அதுவே நமக்குள் அதிபதியாகி அதனின் இயக்கமாகவே நம்மை ஆக்குகின்றது. கையிலே அழுக்குப் பட்டால் நல்ல நீரைக் கொண்டு தான் அந்த அழுக்கை அகற்றுகின்றோம். அது போல் தீமை என்று வந்தாலே அதை நீக்கிய ஞானிகளின் உணர்வைப் பெற்றுப் பழக வேண்டும்.

courage meditation

“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற எண்ணத்தின் மனோ வலிமை வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மண்டலங்களில் நம் சூரியனின் சக்தி பல மண்டலத்தின் அமிலத்தைப் பெற்று தன் சமைப்பின் சத்தான உயர் அலை ஒளியை வெளிக்கக்கி ஒன்றின் தொடர் சுழற்சி ஓட்டத்தில்யே தன் வட்ட ஓட்ட மையச் சுழற்சியுடன் சுழன்று கொண்டே உள்ளது.

சனி மண்டலம் தன் தொடர்பில் சந்திக்கின்ற அமிலங்களின் தொடர்பைத் தான் எடுத்துத் தனக்கு வேண்டிய சத்தை வளர்ச்சிக்கு எடுத்து வேண்டாத் தன்மையை கரையக்கூடிய நிலைக்கு வெளிக்கக்கி கொண்டேயுள்ளது.

எல்லாத் தொடர்பின் வலுவின் மோதலினால் உருப்பெறுவதுதான் ஆதிசக்தி நீர்.
1.ஆதிசக்தியின் அமிலம் சிவனாய் உணர்த்தி
2.சிவனான பரப்பிரம்மமாகி பிரம்மமாய் சக்தி பெற்று
3.ஜீவித தொடர் சக்திக்கு எண்ணத்தின் உணர்வு செயல் நிலை கொண்ட இம்மனித பிரம்மம்தான் “உயர்ந்த பிரம்மத் தன்மை….”

“ஒரு சுழற்சி ஓட்டத்தில்” பலவற்றையும் வளர்க்கும் சூரியனே செயல் கொள்கின்றது. பலவாக ஓடும் எண்ணத்தின் ஓட்டத்தில்… பலவற்றையும் அறியக்கூடிய உணர்வின் எண்ணச் செயல்… மனித ஞானத்தில் செயல் கொள்ள…
1.மனிதன் தன்னுள் ஓடும் எண்ணத்தின் உணர்வை
2.சமமான சாந்தத்திற்குச் செயல் கொள்ள
3.கர்ம காரியத்தில் ஞானம் பெறல் வேண்டும்.

காட்டிற்குச் சென்று தனித்து ஜெபம் பெறும் காலத்தில்… மனித உணர்வுகள் மோதும் தருணமோ மற்ற எதிர்மறை செயல் எதுவாகிலும் மோதும் பொழுது “உணர்வுகள் மோதலினால்… உணர்வுகளினால் சாந்தத்தின் உயர் வலுவை மாற்றிக் கொள்ளும் பொழுது…” எதிர் நிலையின் பாதிப்பால்…
1.எடுத்த பலனின் செயல் விரையப்பட்டு
2.மீண்டும் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வலுவாகச் சிக்க வேண்டி உள்ளது.

ஆகவே… கர்ம காரியத்தில் மோதப் பெறும் எச்செயலானாலும் தன் ஞானத்தினால் உயர் ஞானத்தைச் செலுத்தி… ஏற்படக் கூடிய மாறு கொண்ட உணர்வுகளுக்கு வாழ்க்கைச் செயல்… தன் குடும்பம்.. ஆரோக்கியம்… தொழில்… சமுதாயம்…. எதுவாகிலும்… “அதிலிருந்து ஒதுங்குவதல்ல உயர் ஞானம் பெறுதல் என்பது…!”

வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதப் பெறும்…
1.ஒவ்வொரு செயலையும் ஒதுக்கப்படாத தன்மையிலும்
2.தன் ஈர்ப்பின் சுழற்சியில் அதே எண்ணத்தின் ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள நிலைக்கும்… எண்ணத்தைச் செலுத்திடாமல்
3.ஏற்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் தன் எண்ணத்தில் உயர்வைக் கூட்டி
4.அதற்குகந்த வழி நிலைகளை வகுத்துச் செயல்படுத்தக் கூடிய அறிவினால்
5.இக்கர்ம காரிய வாழ்க்கையில் தன் உயர் ஞானத்தைக் கொண்டு
6.உயர்ந்தோரின் ரிஷித் தொடர்பைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

ஆனால்… முதன் முதலில் ஜெபத்தில் அமர்ந்தால் உடலுடன் கூடிய வாழ்க்கையில் எடுத்த அலைச் சமைப்பின் தொடர்பு வாசனை எண்ணம்தான் ஏற்படும்.

ஆகவே… உயர்வின் ஞானத்தை நாம் பெற வேண்டும் என்றால் கர்ம காரியத்தில் தன் வாழ்க்கையில் செயல் கொள்ளும் எந்தச் செயலையும் அறிவின் உயர்வால் அதற்குகந்த வழி நிலைகளைத் தான் பெற்ற ஜெப உணர்வு அலையினாலேயே கொண்டு வர வேண்டும்.

1.எண்ணத்தில் சஞ்சலத்தையும் சலிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்
2.“இது தான் நடக்கும்…!” என்ற எண்ணத்தின் வலுவைச் செலுத்தி
3.அதற்குகந்த தீர்வுகளைச் செயல்படுத்தி
4.எண்ணத்தின் மனோ வலிமையினால்…
5.ஜெபத்தில் ரிஷித் தொடர்புடன் – எவ்வெண்ணத்தை நாம் செலுத்தி ஜெபம் இருக்கின்றோமோ
6.அதற்குகந்த வலுவின் மின் காந்த வண்ண ஒளித் தன்மையை இச்சரீர ஆத்மா “நிச்சயம் பெற முடியும்…!”

புதையல் எடுப்பதாக ஒரு மந்திரவாதி 8 பெண்களைப் பலி கொடுத்த நிகழ்ச்சி

அமாவாசைக்கு முன்னோர்களை அழைத்தால் குடுகுடுப்புக்காரன் அந்த ஆன்மாக்களை எப்படிக் கவர்ந்து கொள்கின்றான்

ஏமாற்றும் சாமியார்களைப் பற்றிய நிலைகள்

soul protections

பிறர் சொல் நம்மை இயக்காதபடி தடுக்கும் ஒரு பயிற்சி

ஒருத்தர் உடலில் ஆவி (ஆன்மா) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் நாம் அவரிடம் பேசினால் அங்கே போகாதே… போகாதே…! என்று மற்றவர்களிடமும் சொல்லும்.

நாம் அவரிடம் பேசினால் போதும்… நம் உணர்வுகள் பட்டவுடனே… போகாதீர்கள்… போகாதீர்கள்…! என்று சொல்லும். காரணம்… அதற்கு ஆகாது.

அதே உணர்வை நாம் கேட்டோம் என்றால்…
1.மகரிஷிகளின் அருள்சக்தி அது பெற வேண்டும்
2.அது இருள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வு வளர வேண்டும் என்று எண்ணி
4.ஒரு பத்து தடவை செய்துவிட்டு உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

அப்புறம் தன்னாலே மயங்கி விழுந்தாலும் விழும்…. போய் விடும்….! ஏனென்றால் சில சாப அலைகள் ஒருவருக்கொருவர் பாய்ந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது.

அந்த மகரிஷிகள் தனக்குள் கோடி… கோடி… கோடி…! என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள். ஆகவே அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் எடுத்து இதை அவருக்குள் புகுத்த வேண்டும்.

அப்படிப் புகுத்தினோம் என்றால் அவர்கள் உணர்வு நீங்கும். “புகுத்த வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் வலுப் பெறும். இந்த அலைகள் படரும். நம் நினைவு அங்கே மகரிஷிகள் பால் போகும்.

ஆகவே… எதை எடுத்தாலும்… நாம் அந்த விண்ணின் பற்றிற்கே வருகின்றோம்…!

இல்லையென்றால் நம் வாழ்க்கையில் இப்படி இருக்கின்றார்களே…! என்ற இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.

ஆகவே…
1.அந்த விண்ணின் பற்றுடன் ஒவ்வொரு நிமிடத்திலேயும் இதைப்போல எண்ணி ஆத்ம சுத்தி செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இந்த நினைவினை எடுத்து இங்கே கொண்டு வர வேண்டும்.

அதாவது… இங்கே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். எங்கே…?

பயிற்சி:
1.கண்ணின் நினைவினை விண்ணிலிருந்து சிந்தனையை எடுத்துப் பாருங்கள்.
2.அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்ற மாதிரி இருக்கும்
3.செவிகள் கேக்கும்…. இரண்டும் கலக்கும்…. அதை உணர்த்தாது…. வந்தாலும் அது நம்மை இயக்காது.
4.சரி…! என்று எதிர் பதில் சொல்லச் செய்யும்.

அவர்கள் பேச்சை நீங்கள் கேட்கும்போது நேராக மட்டும் அவர்களைக் கண்ணுற்று மட்டும் பார்க்காதீர்கள். (இது முக்கியம்)

சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்தீர்கள் என்றால்
1.அது உங்களை இயக்காதபடி அப்புறம் உங்கள் சொல்லால் சொல்லும்போது அது இயங்கும்.
2.அவர்களை இயக்கி மாற்றிவிடும்….! ஏனென்றால் இந்தப் பதிவுகள் நமக்கு அதிகம் தேவைப்படும்.

விஞ்ஞான அறிவால் உன் மனைவியைக் காக்க முடிந்ததா…? என்றார் குருநாதர்

 

உன் மனைவி எப்படி நோயினால் துயரப்பட்டது…? மருத்துவத்தால் மீட்க முடிந்ததா…! ஆனால் மரண வாயிலிருந்து நான் மீட்டேன் என்றார் குருநாதர். ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி விட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருளை எடுத்து அதை மக்களைப் பெறச் செய்ய வேண்டும் என்றார் ஈஸ்வரபட்டர்.

spiritual forces of human

பரப்பிரம்மம் பிரம்மமாகி… தெய்வமான வழிச் செயல் மீண்டும் மீண்டும் செயல்பட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.பிரம்மத்தின் பிரம்மாவாய்… ஒவ்வொருவரும் தன் எண்ணத்தின் கர்ம காரியத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தில்
2.மாற்றம் கொள்ளக்கூடிய செயல் நிலை ஒவ்வொன்றிலுமே
3.இன்னலில் இருந்து தன் ஞானத்தைக் கூட்டி உயர் ஞானமாக்கும் சித்தம் கொண்டால்
4.பரப்பிரம்மத்தில் பிரம்மாவாய்ப் படைப்பில் பிம்பம் பெற்ற நாம்
5.வாழ்க்கை நிலையிலிருந்து செயல் கொள்ளக்கூடிய எண்ணத்தின் உணர்வை
6.தடைப்படக்கூடிய கர்ம காரியத்தில் சலிப்பு சோர்வு என்ற சஞ்சல உணர்வை வளர்க்காமல்
7.தடைபடும் காரியங்கள் ஒவ்வொன்றையுமே உயர் ஞானத்தைக் கூட்டி மாற்றியமைத்து
8.வளரும் தொடருக்கு வாழ்க்கையின் நிறைவை வளர்த்து
9.எண்ணத்தின் உணர்வைச் சமமான குண நிலைக்கு
10சாந்தமான ஞானத்தின் வீரத்தை வளர்த்துக் கொண்டோமேயானால்
11.யாம் வழிகாட்டியபடி மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கவல்ல காந்த மின் நுண் அலைகள் மூலம்
12.இச்சரீரம் முழுமைக்குமே வலுக்கொள்ள வழி அமையும்.

எப்போது ஆறு வண்ணங்களின் முலாம் கொண்ட இஜ்ஜீவ ஜடபிம்ப பிரம்ம உடல் பெற்றோமோ… அப்போதே அதற்கடுத்த வான்மீகியாரால் சுட்டிக் காட்டப்பட்ட ஒளிப் பிம்பமான… நீர் மூர்த்தி உருவங்களைத் தெய்வ குணாம்ச வித்தகராய்ப் படைத்த… காவிய ரூபத்திற்கொத்த கருத்தின் ரூபமாய் இராமனைப் போன்றும் கிருஷ்ணரைப் போன்றும்..

1.இச்சரீரத்தின் ஆத்ம ஒளியைச் விண்ணிலிருந்து எடுக்கும் உயர் காந்தமின் அணு வளர்ப்பினால்
2.நீல வண்ண ஒளி சரீரமாய் இச்சரீர ஆத்மாவையே ஒளிப் பிழம்பாக ஆக்கி
3.இச்சரீரத்தில் இருந்து கொண்டே அந்த (நம்) ஆத்மாவின் ஒளியை நாம் காண முடியும்.

அப்படிப்பட்ட ஒளியால் ஒளிரக் கூடிய வலுப்பெறும் சித்துத் தன்மையினால் எதனையும் ஊடுருவும் செயல் தன்மை இம்மனித சரீர வாழ்க்கை உணர்வு எண்ணத்திலேயே நாம் பெற முடியும்.

நல்ல ஒழுக்கமாக இருந்தாலும் தீமையை நீக்கவில்லை என்றால் நல்ல அறிவை மாற்றிவிடும் 

குறைகளைக் காணாதே, குறைகளிலிருந்து மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய் 

நல்ல உணர்வுக்குள் மெய்ஞான உணர்வை எப்படி வலு ஏற்றிக் கொள்வது 

jodhi nilai

உயர் ஞானத்தை வளர்க்கும் சக்தியாக நாம் மாற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியன் எத்தன்மை கொண்டெல்லாம் மற்ற மண்டலங்களில் இருந்து வெளிக் கக்கும் அமிலத்தைத் தனக்காக ஒளியாக்கி… அவ்வொளியின் வளர் சத்தில் தானும் வளர்ந்து… தன் ஈர்ப்பு வட்டத்திலுள்ள மற்ற கோளங்களையும் வளரச் செய்து செயல் கொள்கின்றதோ…
1.அத்தொடர்பின் வளர்ச்சியில் முதிர்ந்த வித்து நிலை தான்
2.மனித உரு எண்ண உணர்வின் பகுத்தறிவின் வளர் ஞான நிலை…!

ஒவ்வொன்றின் சத்தில் முதிர்ந்த வித்தைக் கொண்டு தான் பிறிதொரு வளர்ப்பின் செயல் நடக்கின்றது.

அதைப் போன்று தான் சூரியனின் சமைப்பில் பலவற்றின் மூலம் கொண்டு உயர்ந்த வளர்ச்சியில்… முதிர்வின் வித்துத் தன்மையான… “இப்பூமியின் மனித கரு உருவிலிருந்து” வளர்ச்சியின் வளர் தன்மை வித்தைச் செயல்படுத்துகின்றனர் ரிஷி சக்திகள்.

“மாவிதை” வளர்ந்து மரமாகிப் பல இலைகள் பூக்கள் கனிகளாக வளரும் தருணத்தில் எல்லாப் பூக்களும் கனியாகிப் பலன் தருவதில்லை. பூவிலும் பிஞ்சிலும் உதிர்ந்து விடுகின்றது.

வித்தின் சத்தெடுத்துக் கனி பெறும் நிலை அம்மரத்தின் தருண நிலைக்கொப்ப முற்றிய தன்மை வளர்ப்பு தன்மையைக் காட்டிலும் குறைவாய்த்தான் உள்ளது.

அதைப் போன்று…
1.மனித உருக் கருவின் எண்ணத்தில் உணர்வு நிலை பெற்று வாழ்க்கைத் தொடரில் வாழ்ந்தாலும்
2.வாழ்க்கையின் முதிர்வான உயர் ஞானம் பெறும் ஆத்மாக்கள்
3.குறைவாய்த்தான் செயல் கொள்கின்றன.

உண்மையின் வழித் தொடர் மாமரத்தின் பூவும் பிஞ்சும் அதிகமாய் வளர்ந்தாலும் அது எடுக்க வேண்டிய சத்து நிலை குறையும் பொழுது பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சான நிலையில் கரடு தட்டி உதிர்ந்து விடுகின்றன. அப்பிஞ்சுகள் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு வருவதில்லை.

“முற்றிய கொட்டைகள்” கொண்ட கனிகள் தான் வளர்ச்சி நிலை பெறுகின்றன…!

அதைப் போன்றே இம் மனிதக் கரு உரு பிறப்பிற்கு வரும் நிலையும்… ஞானமுடன் கூடிய எண்ண உணர்வும்… செயல் அங்க அவயங்களின் அழகும் பொலிவும் பெற்ற நிலையில் வாழ… சூரியனின் வளர்ச்சியின் முற்றிய நிலையில் வித்தாய்ப் பெற்ற சக்தியில் வளரப் பெற்ற நிலை மனிதக் கரு உரு நிலை.

மனித ஜீவ எண்ணத்தின் உயர் ஞான ஒளியின் உயர் ஆத்மாவின் வளர்ச்சியைக் கொண்டுதான்…
1.சகலத்தையும் அறியவல்ல சித்துத் தன்மையின் ரிஷி சக்தியால்
2.எவ் ஈர்ப்பு வட்டத்திலும் வீரிய சக்தி பெற்ற இவ்வொளி ஆத்மா சிக்காமல்
3.வளர்ச்சியின் வித்தைப் பிறப்பு நிலை வளர்க்க வழி அமைக்கும் வித்தின் மனிதக் கரு உரு ஜீவ உடலுக்கு உண்டு.

ஆனால்… தான் பெற்ற “மகத்தான உண்மை” நிலை அறியாத மனிதன் தன் உணர்வின் எண்ணத்தை விஞ்ஞான செயற்கை மின் காந்த அலையில் அடகு வைத்த “குறுகிய நிலையில்” இன்று வாழுகின்றான்.

ஆத்ம ஜீவ உடலிலும் எடுக்கும் உணர்வின் எண்ணத்திற்கு ஒப்ப எவ்வலையின் உணர்வின் எண்ணம் செல்லுகின்றதோ அதற்குகந்த அணுக்கள் தான் உடலின் அமிலத்தில் வளர்க்கும் நிலைக்கொப்ப ஆத்ம வலு வலுக்கூடும்.

இன்று காற்றலையில் ஒலிப்பரப்பு ஆகியுள்ள மின் காந்த ஒளி அலையின் ஈர்ப்பில் மனித உணர்வு சிக்குண்டுள்ளது.

இக்காற்றலையில் மின்காந்த ஒலி பரப்பில் (வானொலி டி.வி. அலை) அவ் ஈர்ப்பின் வட்டத்தில் மனிதன் அதைக் கேட்டும் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அதே படத்தை இச்சரீரம் உணர்வின் படமாக எடுத்துணரும் வழித்தொடரிலேயே உள்ளான்.

அதாவது காற்றலையிலுள்ள இயற்கைச் சத்தெடுத்து வளரும் வலுவைக் காட்டிலும் மின்காந்த ஒலியலையில் கேட்டும் பார்த்தும் செயல் கொள்ளும் மனிதனின் உணர்வு அதே அலை உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

1.ஆக… தன் ஆத்மாவின் வளர்ச்சிக்கு இயற்கையின் வித்தின் சத்தை உரமாக செலுத்துவதைக் காட்டிலும்
2.சமைக்கப்பட்ட வலுவிழந்த மின் காந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அளிக்கும் சத்தாகவே உள்ளது.

செடி கொடிகளுக்கு நீரை நாம் ஊற்றி வளர்த்தால் நீரின் சத்தில் அது வளர்ந்து பலன் தருகின்றது. அதே செடிக்குக் “காய வைத்து ஆறிய நீரை ஊற்றினால்…” செடிக்குகந்த சத்து பெற முடியாமல் செடியும் கருகி வளர்வதில்லை.

அதைப் போன்று உடலிலுள்ள இவ்வுடலை இயக்கும் உயிராத்மாவை மீண்டும் இதே நிலை கொண்ட பகுத்தறியும் ஞானக் கரு உரு மனித ஜீவ வளர்ச்சியை வளர்க்க முடியாத நிலை இன்றுள்ளது.

1.இயற்கையின் சத்து உரத்தை ஆத்ம வலுப் பெற்று வளரும் நிலையை
2.செற்கை மின் காந்த சமைப்பின் சத்தை நாம் செலுத்தி
3.கரடு தட்டிய பிஞ்சின் உதிரும் மாம்பிஞ்சுகளைப் போன்று
4.இஜ்ஜீவ சரீரத்தில் வலுப் பெறும் ஆத்மாவை வலுவற்ற நிலைக்கு
5.செயற்கை மின் காந்த ஈர்ப்பையே இஜ்ஜீவ காந்த சரீரத்தில் வளர்க்கும் செயல் இக்கலியின் கடைசியில் வளர்ந்தோங்கி விட்டது.

இத்தகைய விஞ்ஞானச் செயற்கைப் பிடியில் இருந்து ஒவ்வொரு மனிதனும் உயர வேண்டுமென்றால்… எண்ணத்தின் உணர்வைச் சஞ்சலத்திலும் செயற்கையின் ஆசைப் பிடியிலும் செயல்படுத்தாமல்…
1.அன்று மகரிஷிகள் நமக்கு காட்டிய உன்னத குண வழிகள் கொண்டு
2.நம் உணர்வின் எண்ணத்தால் நமக்குள் பெற்றுள்ள சூரியனின் வளர்ப்பின் வித்தை மீண்டும் மங்காமல்
3.சூரியனுக்கு மேல் உயர்ந்த ஜோதி நிலை பெறத்தக்க வழியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

ரிக் சாம அதர்வண யஜூர் வேதங்கள்

 

திடப் பொருள் – ரிக்

வெளிப்படும் மணம் – சாம

ஒன்றுடன் ஒன்று கலந்து மாறுவது – அதர்வணம்

புதிதாக உருவான பொருள் – யஜூர் (வித்து)

மீண்டும் அதிலிருந்து வெளிப்படும் மணம் – சாம

 

நான்கு வேதங்களுக்குள் தான் இந்த உலகமே அடங்கி உள்ளது என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது

mantra 1

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மைக் காக்க வேண்டும்

மின்னல்கள் கடலில் தாக்கப்படும்போது மணலாகின்றது. கடல் ஓரங்களில் அது மறைந்து விடுகின்றது. அந்த மணலுக்குள் இருப்பதைத்தான் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான் விஞ்ஞானி.

அதிலே பல பல நட்சத்திரங்கள் எதிர் நிலை கொண்டு கலந்திருப்பதை… அது எதிர்மறையாக எப்படி வெடித்ததோ (மின்னலாக) அதைப் போல எதிர் மறை கொண்ட உணர்வின் தன்மையைச் சேர்த்து… அதைத் தனித்துப் பிரித்து.. மீண்டும் எதிர்மறையாக மாற்றப்படும்போது வெடிக்கும் தன்மைக்கு (அணுக் கதிரியக்கம்) வைக்கின்றான்.

அது வெடித்தால்… எந்த மின்னலின் தன்மை அந்த நட்சத்திரங்கள் உணர்வுகள் கொண்டு ஊடுருவி…
1.அது இரண்டும் மோதும்போது இரும்பானாலும் உலோகமானாலும் அதைக் கருக்கிவிட்டு
2.தன் இனத்தின் தன்மையைப் பிரித்து விடுகின்றது.

இப்படி அதனுடைய வீரிய உணர்வுகள் அணு குண்டை வெடித்தால் நம் உடலில் இருக்கக்கூடிய அதே நட்சத்திரத்தின் உணர்வைத் தாக்கித் தன் இனத்தைப் பெருக்கி “இந்த உடலையே அழித்துவிடும்…!”

இப்படி வெடிக்கப்பட்ட கதிரியக்கங்களின் தன்மை அதிகரித்து சூரியன் பக்கம் போகும்போது… அதனின் எதிர்மறையான நிலைகள்
1.எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் சூரியனின் இயக்கத்திற்குள் செல்லும்போது
2.எதிர்மறையான நிலைகள் அங்கே அதிகரிக்கும்
3.அப்பொழுது இரு மடங்கான கரண்ட் உற்பத்தியாகும்.

உதாரணமாக இரண்டு கரண்ட் வயர் ஒன்றுடன் ஒன்று மோதினால் என்ன ஆகும்…?

அதாவது சூரியனின் காந்தப்புலன் 27 நட்சத்திரங்களின் உணர்வைக் கவர்ந்து அது ஒன்றோடு ஒன்று மோதும் போது எப்படிச் செயல்படுகின்றதோ இதைப் போலத்தான்
1.இந்த உணர்வின் தன்மை பாய்ச்சப்படும்போது (அணுக் கதிரியக்கங்களை)
2.அதன் அலைவரிசையில் மோதப்படும்போது இங்கிருக்கும் பொருளைக் கருக்கிவிட்டு
3.செயலற்ற நிலைகளாக்கி மற்ற எல்லாவற்றையும் கவர்ந்து கொள்கின்றது.

இந்த உணர்வின் தன்மை கூடி ஆவி மண்டலங்களாக மாறும்போது இதனைச் சூரியன் எடுத்துச் செல்லுகின்றது. போகும் பாதையில் பல கோள்கள் எடுக்கின்றது.

அதிலிருந்து வடித்து மீண்டும் சூரியனுக்கு வரப்படும்போது இதே தீமையின் விளைவுகள் வரப் போகின்றது. இரண்டு வயர் மோதினால் எப்படி எர்த் (EARTH) ஆகின்றதோ அதைப்போல
1.அந்த அதிர்வின் தன்மை ஆனபின் நம் உயிரின் துடிப்பு அதிகரித்துவிடும்
2.அந்தத் துடிப்புக்கு ஈடுகட்டும் நிலை நம் உடல் அணுக்களுக்கு இல்லை
3.அந்த உணர்வுகள் எல்லாம் செயலிழந்து விடும். (FUSE)

ஒரு பல்பிற்குள் மின்சாரம் அதிகமாகி விட்டால் அது எப்படி அதனுடைய இயக்கங்களை ஒளி காட்டுவதை இழந்துவிடுகின்றதோ (FUSE) அதைப்போல மனித அறிவின் தன்மையை இழக்கச் செய்துவிடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வது எவ்வாறு…?

இன்று விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ள நிலையில்… எத்தனை கடவுளை வணங்கினாலும்… எத்தனை பக்தி கொண்டிருந்தாலும்… என்ன ஆகும்..?

நல்ல ஒழுக்கங்களை எல்லாம் கடைப்பிடிக்கலாம். இருந்தாலும் இத்தகைய தீமை என்ற நிலைகள் நடந்தால் எல்லாமே பாழடைகின்றது.

ஆகவே… அந்தத் தீமை என்ற உணர்வை நமக்குள் வளராது தடுக்க வேண்டுமென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தே ஆக வேண்டும்
2.அதை எடுத்தால் நீங்கள் உங்களைக் காக்கலாம்…பிறவியில்லா நிலை அடையலாம்.
3.உங்களை நம்பிப் பழக வேண்டும்.

இந்தச் சாமியார் செய்வார்… அந்தச் சாமியார் செய்வார்… அந்தக் கடவுள் செய்வார்… இந்தக் கடவுள் செய்வார்…! என்ற நிலையை விடுத்துவிடுங்கள்

உங்கள் உயிரே ஈசனாக இருக்கின்றான்… ஆண்டவனாக இருக்கின்றான்… கர்த்தராக இருக்கின்றான்…. கடவுளாக இருக்கின்றான்…! ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை வைத்துதான் இந்த உயிரை அழைக்கின்றனர்.

அந்த உயிர் இயக்கும் தன்மை வரப்படும்போதுதான் பல வண்ணங்களில் பல நிலைகளில் பேசி அதைக் கடவுள் என்று சொல்கின்றனர்.

நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதாவது
1.உள் நின்று இயக்குவதைக் கடவுள் என்றும்
2.அந்த உணர்வின் தன்மை மீண்டும் இயக்கித் தன் இனத்தை உருவாக்கும் பொழுது ஈசன் என்றும்
3.அது இயக்கும் தன்மை மீண்டும் உருவாக்கும் போது பிரம்மன் என்றும்
4.அந்த உணர்வின் தன்மை உடலாக்கும்போது சிவன் என்றும்
5.இப்படித் தெளிவான நிலைகளை நம் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நம் உடலுக்குள் இயக்கும் நிலையே கடவுள். உள் நின்று இயக்கும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் செயல்படுகின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

எந்த நேரமும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை நீங்கள் பெற முடியும். அதைப் பெற்று “உயிரின் துடிப்பைச் சீராக்க முடியும்…!”

Dazzling soul light - blue

இராமனையும் கண்ணனையும் நீல வண்ணமாகக் காட்டியதன் உட் பொருள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரகாசிக்கும் தருணத்தில்… நம் பூமியில் மழை பெய்யும் தருணத்தில் மேகக் கூட்டங்கள் விலகி மப்பும் மந்தாரமுமாய் மழைத் துளிகள் விழும் தருணத்தில் சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் பட்டுப் பிரகாசிக்கும் சமைப்பு அலையினால் “வானவில்” ஒளியின் வண்ணத்தை நாம் காண்கின்றோம்.

இராமாவதார காலத்தில் வான்மீகி எழுதிய காவியத்தில் வண்ணத்தின் ஒளியில் வளரும் குண உருவ இராமனை “நீல உருவாய்க்” காவியத்தில் காட்டினார்.

சூரியனுக்கும் பூமிக்கும் வான மண்டலப் பால்வெளியில் சமைக்கப்படும்
1.பூமி எடுக்கும் சத்தின் வளர்ச்சி வண்ண ஒளியின் தொடர் வளர்ச்சியை
2.வான்மீகி மகரிஷி பெற்ற ஜெபத்தின் தத்துவக் காவியத்தில்
3.உருவக நிலை உருவாகும் வண்ணத்தின் சேர்க்கையின்… ஆத்ம குணத்தின்… வளர்க்க வேண்டிய ஜீவ சரீரத்தைப் பற்றி…
4.இராமாயணத்தின் மூலம் அன்றே நமக்குப் பல உண்மைகளை உணர்த்தியுள்ளார்.

வானவில்லில் எப்படி வண்ணங்களைக் காணுகின்றோமோ அதற்கொத்த வண்ணத் தன்மை ஆறு வண்ணங்கள்… வலுக்கூடிய ஏழாம் வண்ணமான உருவக வண்ணம் கொண்ட செயல் நிலையில் தான்… மனித ஜீவனும் பிறக்கின்றது.

இச்சரீரத்தை இயக்கும் ஆத்மாவின் வண்ணம் ஆறு. வானவில்லின் ஒத்த வண்ணத்தின் வலு ஒளி பெற வேண்டும் என்றால்…
1.ஆத்மாவின் இயக்கத்தால் ஜீவ சரீரத்தின் உருவகத்தின் மூலம்
2.பகுத்தறியும் ஞான மனிதனை ஒளிச் சரீரமாக (வெண்மை நிறம்) வளர்க்க முடியும்.

ஆறு வண்ணத்தின் திரு உருவாய் ஆறுகுணத்தின் அறுசுவை உண்டு செயல் நிலைக்கு மனிதக்கரு உரு வளர வளர்ச்சி பெற்ற அடுத்தநிலை தான் இராமனும்… கிருஷ்ணனும்…!

அதாவது… ஆத்ம வலுவின் ஒளியைப் பெற்ற… அடுத்த தெய்வ நிலை பெற்ற…
1.அடுத்த தெய்வ நிலை பெறும் ஒளியைக் குறிக்க
2.ஜீவ உடலின் ஆத்ம வலுவின் மனிதனுக்கடுத்த வளர்ச்சி ஒளி நிலையான
3.தெய்வ நிலை பெறும் வண்ணத்தைக் குறிக்கும் ஒளி தானப்பா “நீல ஜோதி ஒளி நிலை…!” (இராமனும்… கிருஷ்ணனும்)

இராமரையும் கிருஷ்ணரையும் நீல வண்ணத்தில் உருவகம் தந்து தெய்வங்களாகக் குறிப்பு காட்டிய வான்மீகியார் தந்த காவியத்தில் இப்படிப்பா பல உண்மைகள் உண்டு.
1.ஜீவ சரீரத்தின் அடுத்த நிலை பெறும் சூட்சும மார்க்கங்கள் அனைத்தையும் குறிப்புகளாக
2.காவிய உருவத்தில் ரூப கர்ண நாமங்களைச் சூட்டி வடித்துள்ளார் வான்மீகியார்.

மிளகாயின் விதையை விதைத்தால் அதிலுள்ள காரத் தன்மைக்கு ஜீவ நீர் சேர்த்து வளரும் தருணத்தில் அதன் உணர்வின் நிலைக்கொப்ப இக்காற்று மண்டலத்திலுள்ள தனக்குகந்த கார அமில உணவைத் தன் வளர்ப்பின் சத்திற்கு எடுத்து வளர்கிறது.

மிளகாய்ச் செடி அதன் ஊன் நிலை வெளிக்கக்கும் ஆவி உஷ்ணத்தினால் இலைகள் எல்லாம் முதிர்ச்சியுற்றுப் பூவாகிக் காயாகி முற்றிய பிறகுதான் மிளகாயாகவும் வித்தாகவும் பலனைத் தருகின்றது.

இப்படி அந்த வித்தின் தொடர் வளர்ச்சியில் மிளகாயின் பலனை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்றுதான் நம் ஆத்ம உயிர் வித்தின் பலனும்.

இச்சரீரக் காலத்தின் முதிர்வில் சரீரத்திலுள்ள எலும்புகளின் ஊன் நிலை அது வெளிக்கக்கும் அலை உணர்வின் வளர்ப்பு நிலை வளரும் குழந்தைப் பிராயத்தில் பருவ நிலையில் சரீர மாற்று உணர்வு வளர்ச்சி முற்றுகின்றல்லவா..?

ஏனென்றால் உணர்வின் வளர்ச்சி முற்றல் ஜீவ வளர்ச்சி வளர்க்கும் பக்குவ காலமே… “பருவ காலம்…”

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வால் ஆத்மாவின் வளர்ச்சி முற்றும் வலு நிலை கூட வேண்டும் என்றால்…
1.ஆத்மா ஜெபத்தால் பெறும் வீரியத் தன்மையால்
2.சமமான குண வலுவைக் கொண்டு
3;ஆறு வண்ணங்களின் உரு வண்ணத்தைப் பெற்ற சரீரத்தை
4.ஒளி வண்ணத்தின் ஒரு வண்ணமாய் நீல வண்ண ஒளி ஆத்மாவாய்
5.இவ்வுயிராத்மா வலுப்பெறும் அந்த வளர்ச்சியின் உண்மையை
6.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

(குறிப்பு:- சரீர ஜீவ உருவக வாழ்க்கையிலேயே சாதாரண பிறப்பு இறப்புக்கு… அடுத்து ஜென்மத் தொடர் பெறுவதற்கும்… ஆத்ம வலு நிலை கூடியிருந்தால் தான் பிறப்பிற்கு வர முடியும்)

உண்மையான பக்தியும் உண்மையான தியானமும்

நெற்றியில் திலகமிடும் பழக்கத்தை ஞானிகள் நமக்கு ஏற்படுத்தியதன் சூட்சமம் என்ன…?

நம் உடலான கோவிலைச் சரியாகத் தூய்மைப்படுத்துகின்றோமா…?

27 Star Constellations

துருவ தியானத்தில் எடுக்க வேண்டிய சக்தி எது…?

அகஸ்தியன் காட்டில் விளையும் தாவர இனங்களை எல்லாம் நுகர்ந்தறிந்தான். அதன் இயக்கங்கள் எவ்வாறு…? என்று அவன் அறிந்த உணர்வைத்தான் நானும் நுகர்ந்து உனக்குள் சொல்ல முடிகின்றது என்றார் ஈஸ்வரபட்டர்.

அவன் முதலிலே துன்பப்பட்டான்… உணர்ந்தான்… அவனுக்குள் விளைந்தது. அதை எல்லாம்… எனது சந்தர்ப்பம் நுகரும் அறிவு வந்தது. அறிந்த உணர்வுகள் கொண்டு அது எனக்குள் வலுப்பெறும் தன்மையும் வந்தது.

அகஸ்தியன் துருவனாகும்போது வானை உற்று நோக்கி துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்குகின்றான். 27 நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகள் எப்படித் துருவத்தை நோக்கி வருகிறது…? என்று அதன் உணர்வின் அறிவாக அவன் அறிந்து கொள்கின்றான்.

திருமணம் செய்யும்போது அதை எல்லாம் தன் மனைவிக்குப் போதித்தான். அந்த உணர்வின் வலுவைவைத் தன் மனைவிக்கும் செருகேற்றி “இருவரும் சமம்” என்ற உணர்வுகள் பெற்றனர்.

அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் உணர்வினை இருவருமே நுகர்ந்து இரு உயிரையும்… இரு உணர்வையும்… ஒன்றாக்கிக் கொண்டனர்.

1.நட்சத்திரங்களின் தாக்குதலால் உயிரணு தோன்றியது போன்று
2.பல பல நட்சத்திரங்கள் வெளிப்படும் உணர்வினை இருவருமே உற்று நோக்கி
3.அந்த ஒளிக் கற்றைகளைக் கணவன் பெற வேண்டுமென்று மனைவியும்…
4.மனைவி பெற வேண்டுமென்று கணவனும்… இருவருமே எண்ணுகின்றனர்.

இப்படி அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் விஷத் தன்மைகளை அடக்கிப் பழகிய
1.அவர்கள் இருவர் உணர்வுகளும் ஒன்றாக்கப் படும்போது
2.அத்தகைய அணுத்தன்மை உருவாகும் கருவாக அவர்களுக்குள் உருவாகி
3.அந்த உணர்வுகள் இருவர் உடல்களிலும் அணுக்களாக விளைகின்றது.

அத்தகைய அணுக்கள் உருவான பின் அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் சிதைவுகளை உற்று நோக்கினால் அந்த ஒளி அலைகளைக் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்ளும் நிலை அகஸ்தியனுக்கும் அவர் மனைவிக்கும் வருகின்றது.

நட்சத்திரங்களின் சக்தியால் உயிர் துடிப்பின் நிலை பெற்றது. அதே உயிரின் தன்மை கொண்டு… 27 நட்சத்திரங்களின் சக்திகளைச் சமப்படுத்தி ஒன்றென இணைத்துக் கொண்டனர்.

27 நட்சத்திரங்களின் ஒளிகளைச் சூரியன் தனக்குள் பாதரசங்களை எடுத்து உலகையே ஒளிக்கற்றையாகச் சூரியன் எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போன்று
1.27 நட்சத்திரங்களின் உணர்வின் அணு செல்கள் விளைந்து
2.உயிருடன் ஒன்றி ஒளியின் அணு தன்மையாகப் பெற்றது தான் இந்தத் துருவ நட்சத்திரம்.

அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி வந்தது…? என்று அந்த அகஸ்தியன் அறின்றான்…!

கடல் வாழ் நிலைகள் சனிக் கோளின் சக்தியால் புயலால் ஈர்க்கப்பட்டு அதன் உணர்வுகள் மேகங்களில் பரவப்பட்டுப் பரவிய பின் கடல் வாழ் உயிரினங்கள் தரை வாழ் உயிரினங்களின் நிலைகளாகச். சிறு சிறு சங்குகள் நத்தைகளை நீர் நிலைகளில் பார்க்கலாம். (புயல் காலங்களில் பெய்யும் மழை நீரில் நம் வீடுகளிலேயே பார்க்கலாம்)

கடல் வாழ் நத்தைகளைப் போன்று நிலங்களில் உள்ள மற்ற குளம் குட்டைகளிலும் பார்க்கலாம்…. நத்தைகளும் வருகின்றது தவளைகளும் வருகின்றது நீர்ப் பாம்புகளும் தரை வாழ் பாம்புகளும் நீரில் கலக்காத பாம்பினங்களும் உருவாகின்றது

அதனதன் உணர்வுக்கொப்ப அதனுடைய வாழ்க்கையின் தன்மை அமைகின்றது என்பதனை… “இவன் தன்னை அறிகின்றான் அந்த அகஸ்தியன்….!”

விஷத்தின் தன்மை ஒடுக்கியபின்…
வான் வீதியில் தோன்றிய உயிர் முதலில் கடல் வாழ் நிலைகள் பெற்று
2.பின் அதிலிருந்து சனிக்கோளால் கவரப்பட்டு
3.அதன் உணர்வின் தன்மை மேகங்களில் படரப்பட்டு
4.அதன் வழிகள் கொண்டு தரை வாழ் நிலைகளாகப் புழு பூச்சிகளிலிருந்து
5.தரை வாழ் மனிதனாக நாம் எப்படி விளைந்தோம்…? என்ற உண்மையினை உணர்ந்து
6.நட்சத்திரங்களின் உணர்வால் உயிர் எவ்வாறு ஆனது…? என்ற நிலையும் அகஸ்தியன் அறிந்துணருகின்றான்.

தன் உடலில் உள்ள அணுக்களில்…
1.நட்சத்திரத்தின் உணர்வுகள் அது ஒவ்வொன்றையும் மின் கற்றைகளைச் சேர்த்து… தனக்குள் இணைத்து…
2.உயிருடன் ஒன்றி… ஒரே ஒளித் தன்மையாக.. கணவனும் மனைவியும் இதைக் கருவுற்று
3.கருவின் நிலையாக அந்த ஒளியின் அணுவாக உருவாக்கி…
4.அவர்கள் இருவரும் எதை உற்று நோக்கினார்களோ
5.அந்தத் துருவப் பகுதியை எல்லையாக வைத்து அவர்கள் இரு உயிரும் ஒன்றி வாழுகின்றது…. துருவ நட்சத்திரமாக…!

அவன் பெற்ற ஒளி சக்தியை எடுப்பதே துருவ தியானத்தின் நோக்கம்..!

சிவனுக்கு முந்தியவன் விநாயகன்

சிவனுக்கு முந்தியவன் வினை தான். அந்த உணர்வின் தன்மை “ஓ…!” என்று பிரணவமாகி இந்த உடலாகும் போது சிவன். உடலாகும் போது சிவன். சிவனின் பிள்ளை விநாயகன். ஆகவே பிரணவத்திற்குரியவன். எது…? இந்த வினை.

ஒரு உயிரணுவிற்குள் எந்தச் செடியின் சத்து மோதுகிறதோ அது பிரணவம். ஜீவ அணுவாக மாற்றும் சக்தி பெற்றது உயிர். (உயிரணுவிற்குள் துடிப்பும் அதனால் வெப்பமும் உருவாகிறது). செடியின் சத்தை அந்த உயிரணு நுகர்ந்தால் பிரணவமாகிறது. ஆகவே அந்தச் சத்து வினையாகிறது. அதனால்தான் அந்த வினை உயிருடன் சேர்க்கப்படும் போது “விநாயகா…!” என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள். இந்த மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு செடியின் சத்தை நுகர்ந்தால் அது வினை. அதனால் தான் சிவனுக்கு முந்தியவன் விநாயகன். செடியின் சத்தை அது நுகர்ந்தபின் “ஓ…!” என்று பிரணவமாகி “ம்…!” என்று உடலாகும் போது விநாயகன். (சிவம் என்பது திடப்பொருள்)

 

எந்தச் செடியின் சத்தை உயிரணு நுகர்ந்ததோ மூஷிக வாகனா…! அதாவது அந்த மணமே இயக்கி அந்தச் செடி இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும் இயக்கச் சக்தியாக மாறுகிறது. இது தான் விநாயகன்.

போற்றுவது எது…? போற்ற வேண்டியது எது…? போற்றல் எது…?

கிரேதா, திரேதா, துவாரபகா, கலி, கல்கி யுகங்கள், ரிக், சாம, அதர்வண, யஜூர், துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் – விளக்கம்

கல்வியுடன் சேர்ந்த மெய் ஞானம் வேண்டும்

Eye antenna

எது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும்

தீமையை நீக்கிடும் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப இதைச் சொல்வது

என்னடா…! சாமி (ஞானகுரு) திரும்பத் திரும்ப சொல்கின்றார் என்று நினைக்கலாம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகளை ஆழமாகப் பதிவு செய்து விட்டால்
2.மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் உணர்வினை எளிதில் நுகர்ந்து
3.நம் உடலுக்குள் அந்த ஒளிக்கற்றைகள் வரும்போது
4.நமக்குள் தீமைகள் வராது தடுக்கவும் இது உதவும்.

ஆகவே அந்த வலுவான உணர்வை எடுத்து நமக்குள் உருவாக்கி விட்டால்… அது மீண்டும் அது தன்னிச்சையாக நல் மணங்களை நமக்குள் கொண்டு வருவதும்… தீமையில் இருந்து நம்மை விடுபடுவதுமாக… அது நம்மைச் செயலாக்கும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு தான் பிறருடைய வேதனைகளைக் கேட்டறிகின்றோம். நாம் கேட்டறிந்த உணர்வை உயிர் நுகர்ந்த பின் அதே வேதனை என்ற அணுக்களை அது உருவாக்கி விடுகின்றது.

பின் அது தன் உணர்வுக்காக உணர்ச்சிகள் உந்தும்போது அந்த வேதனை உணர்ச்சியே நமக்குள் வருகின்றது. நல்ல எண்ணங்களுக்கு நாம் செல்ல முடிவதில்லை.

தியானத்தில் உட்கார்ந்து இருந்தால் இந்த மாதிரித் தான் இருக்கும்….!

ஆகையினால் பிறிதொன்று நம் உடலுக்குள் வந்து… அந்தத் தீமை விளைவிக்கும் சக்தியாக அது இயங்கிவிடக்கூடாது.

அதிகாலையில் நாம் எப்படி எந்த நிலையில் இருந்தாலும் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிவிட்டு அந்த உணர்வுகளுக்குச் சக்தி ஊட்ட வேண்டும்.

அப்போது அந்த உணர்வுகள் வலுப் பெறும்போது நம் உடலுக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் சக்தி வருகின்றது.

1.நான் சொல்வது லேசாக இருக்கலாம்…
2.ஆனால் அனுபவத்தில் வரும்போது கடினமாக இருக்கும்…
3.நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் அது எளிதாகிவிடும்.

புதிதாக ஒருவர் தையல் மிஷினில் உட்கார்ந்து தைக்கத் தொடங்கும் போது… துணியை வைத்தால் கோணல் மாணலாகப் போகும். ஆனால் பழக்கப்பட்டவர்கள் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார்கள்.

காரணம்…. அந்தக் கை பழக்கம்…!

அதைப் போன்று தான் சிறிது நாள் பழகிக் கொண்டால்…
1.நாம் எடுத்துக் கொண்ட அந்த அருள் உணர்வின் தன்மை
2.நமக்குள் அது தன்னிச்சையாக இயக்கும்… நல்வழியும் காட்டும்.

ஆகையினாலே இதை நமக்குள் சக்தி வாய்ந்ததாக உருப்பெறச் செய்வோம். எத்தகைய தீமை வந்தாலும்… நம் கண்ணின் பார்வையில் அந்தத் தீமையான சக்திகளை ஒடுங்கச் செய்வோம்.

தீமைகளை வென்று விண் சென்ற ஈஸ்வரபட்டரின் சக்தியைப் பெறுவோம்

காற்றில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளைப் பிளக்கும் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் சென்றால் அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும். இந்த வாழ்க்கையில் பேரானந்த நிலையை அடைய முடியும்.

 

நம் முன்னோர்கள் குலதெய்வங்களையும் விண்ணுக்குச் செலுத்த முடியும். தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அவர்களையும் விண் செலுத்த முடியும். நாமும் இந்த வாழ்க்கையில் முழுமை அடைந்து நம் குருநாதர் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடையலாம்.

GLORIOUS HUMAN SOUL

மனித உயிராத்மா பெற வேண்டிய “வீரியத் தன்மை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கரடு முரடான காடுகளில் புல் பூண்டே இல்லாத இடத்திலும் மழை நீர் பட்டவுடன் பூமி எடுத்த அந்தந்த இடங்களின் அமில நிலைக்கொப்ப ஜீவ வளர்ச்சி புல் பூண்டுகள் வளருகின்றன.

வளர்ந்தாலும் நீர்ச்சத்துக்குகந்த அமிலத் தன்மை கொண்டு காற்றின் உராய்வு வளர்ச்சிக் காலம் முற்றிய பிறகு அதன் நிலை மீண்டும் மக்கி விடுகின்றது.

அதன் நிலை மக்கினாலும்…
1.அவ்வமிலக்கூறு ஜீவன் பெற்று மக்கிய தன்மை
2.எவ்வுணர்வு கொண்டு ஜீவ வித்து பிறந்து வளர்ச்சியுற்று மாற்றம் கொண்டதோ
3.அம்முலாமுடன் கூடிய உயிரணு காற்று மண்டலத் தொடர்ச்சியில்
4.தனக்குகந்த அமில உயிர் வித்தாய்ச் சுழற்சி பெற்று
5.மீண்டும் தன் பிறப்பிற்கு ஏற்ற கால அமிலத் தொடர்புடன் பிறிதொரு வீரிய வளர்ச்சிக்கு வருகின்றது

ஒன்று உயிர் பெற்று… கரைந்து… மீண்டும் ஜீவிதம் பெற்று… மாறி… மாறி… வரும் தொடர்பின் வீரியத்தால்… செயல் நிலை கூடுகின்றது.

அதைப் போன்று மனித சரீரப் பிம்பத்தில் எல்லா நிலைகளையும் அறிந்து… சொல்லாற்றிச் செயலாற்றும் உயர் வளர்ச்சியை… உணர்வின் எண்ணத்தைக் கொண்டு… மனித உயிர் ஆத்மாவை வீரிய நிலைப்படுத்த “இரண்டு நிலை மார்க்கங்கள் உண்டு…!”

மனித எண்ணத்தின் உணர்வை எதில் வீரியத் தன்மை காட்டுகின்றோமோ அதனுடைய வளர்ச்சியின் வேகம் நிச்சயம் வளருகின்றது.

வழி 1: (தெய்வீகம்)
வளரும் வேகத்தை… தெய்வமான உயர்வு நிலைக்கு உணர்வின் எண்ணத்தில் ஏற்படக்கூடிய குணநிலைக்கொப்ப நற்குணத்தின் சமைப்பாய்ச் சரீர பிம்பத்தையே வளர்த்துக் கொள்ளலாம்.

அந்த உயர் ஞானத்தின் வழியில்
1.இப்பூமியின் பிடிப்பிலிருந்து விடுபடும் நிலையாக
2.விண்ணிலிருந்து வரும் உயர் காந்த மின் சக்திகளை
3.சரீர பிம்பத்தின் எண்ண உணர்விற்கு வீரிய உரமாய் செலுத்தி
4.அதில் வளரும் வளர்ச்சியின் பலனாகத் தெய்வ நிலை பெற்ற
5.இறைத்தன்மை கொண்ட வளர்ப்பின் வளர்ப்பான ஒளி நிலை பெறலாம்.

வழி 2: (மீண்டும் பிறவி)
உணர்வின் எண்ணத்தை வீரியத்தன்மையில் செலுத்தினாலும்… “அறியாமல் செய்யும் மாற்றுத் தன்மையில் சிக்கும் நிலையினால்” எவ்வொலி கொண்டு எண்ணம் பிறந்து உணர்வின் செயல் வெளிப்படுகின்றதோ… அதற்குகந்த ஒலி வட்டத்தில் சிக்க நேரலாம்.

அதே ஒலி நிலைக்கொப்ப
1.பூமியின் பிடிப்பில் ஜீவனற்ற வலு நிலை வளர்த்த உயிர் ஆத்மாக்களின் ஒலி ஈர்ப்பும் (ஆவி உலக ஆன்மாக்கள்)
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலியுடன் செலுத்தப்படும் உணர்வு வட்டத்தில் சிக்கிய தன்மையினால்
3.எண்ணத்தினால் எவ்வீரியத் தன்மை கொண்ட செயல் உணர்வில் மனிதன் செல்கின்றானோ
4.அவ்வீரிய முலாமும் காற்றலையின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள ஒத்த நிலையும் கூடி இத்தொடர்பு வலுப் பெறுகின்றது.

இப்படி… மனிதன் செய்யும் எச்செயலாய் இருந்தாலும்… உணர்வின் நிலைக்கொப்ப வீரியத் தன்மை… இஜ்ஜீவ காந்த சரீரத்தில் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப… அச்செயலின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருக்கும்.

மாந்திரீக மார்க்கமும்… பக்தி மார்க்கமும்… வாழ்க்கைச் செயல் தொழில் எம்மார்க்கமாயினும்… ஜீவ ஆத்மாவின் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அதற்குகந்த வலுத் தன்மையினால் மீண்டும் மீண்டும் வலுவாக்கினால் “இன்றைய உலக நிலை போல் தான் இருந்திடும்…!”

அதனால்… பல மோதலில் பல கோடி ஆண்டுகளாய் வளர்ச்சியுற்று…
1.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்த உயர் ஞான வாழ்க்கையை
2.உயர் சக்தியின் தெய்வ நிலை பெறும் வழித்தொடரை உண்மையின் வழி அறியாமல்
3.வர இருக்கும் பூமியின் மாற்றத்திற்கொப்ப இச்சரீரத்தை அடகு வைக்கும் நிலை தான் முடிவாகும்.

இதிலிருந்து மீண்டு மனித நிலை உயர வேண்டுமானால்… தன்னைத் தான் உணர்ந்து… தான் பெற்ற இம்மகத்துவமான உயர் ஞானத்தை அறியவல்ல எண்ணத்தின் உணர்வை…
1.நற்குண வழியில் செலுத்திடல் வேண்டும்
2.இறை நிலை பெற்ற ரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்

தன்னுள் உள்ள உயர் ஆத்ம உயிர் இறை சக்தியின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் சக்திகளை வளர்த்துத் தன் ஞானத்தின் உயர்வைக் கொண்டு…
2.சலிப்பு சோர்வு சங்கடம் போன்ற நிலைகளையும்
3.வாழ்க்கையில் மோதும் எத்தகைய மாற்றுத் தன்மைகளையும்
4.தன் உணர்வின் எண்ணத்தைப் பாதிக்காத வண்ணம்…
5.சாந்தமான வீரத்தைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

நம்மிடம் செல்வம் இருக்கின்றது…! என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…?

வேதனைப்படுவோரைக் கண்டு நாம் ரசிக்கக் கூடாது… ரசித்தால் நமக்கும் அதே நிலை தான்..!

அருளைத் திரும்பத் திரும்ப எடுக்க வேண்டியதன் அவசியம் 

galaxy near ursa major

உடலை இயக்கித் தொழிலுக்குகந்த வேலை செய்வது போல்.. “தன் எண்ணத்தின் உணர்வால்… பெற வேண்டிய உயர் ஞானம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
கத்தியைக் கையில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் கல்லில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

விளக்கம்:
நாவிதன் (முடி எடுப்பவன்) தன் தொழிலில் செயலுக்கொப்பத் தன் உணர்வையே செயல்படுத்திச் செயல்படுகின்றான்.

முடியைச் சிராய்த்து எடுக்கும் பொழுது…
1.கத்தியின் ஒட்டியுள்ள முடியை தன் உள்ளங்கையிலேயே தீட்டி…
2.கழுத்தில் காதின் ஓரங்களிலும் உள்ள மடிப்பிற்கொப்ப
3.கூர்மையாய்த் தீட்டப்பட்ட கத்தியை மிகவும் சாதூர்யமான முறையில்

4.தன் உணர்வையே அதுவாகப் பக்குவப்படுத்திக் கொண்ட முறையினால்
5.தன் தொழிலின் செயலை உணர்வு கொண்ட பக்குவத்தில்
6.பிறரிடம் பேசிக் கொண்டோ… எண்ணங்களை வேறோட்டத்தில் ஓட்டிக் கொண்டோ…
7.உணர்வின் நிலைக்கொப்பத் தொழில் செய்கின்றான்.

உணர்வால் வடிக்கப் பெற்ற உணர்வின் செயல் கொண்ட சரீரத்தைப் பக்குவப்படுத்தத்தக்க பயம்… அச்சம்… நாணம்… என்ற இயக்க ஓட்ட வடிப்பின் எண்ண செயலைத்தான் சரீரங்கள் செயல் கொள்கிகின்றன.

எவ்வுணர்வின் சுவை கொண்டு சரீரப் பக்குவம் உருவானதோ… அவ்வுணர்வின் குணமும்… செயலும்… கொண்ட வாழ்க்கையில் நடைமுறை செல்கின்றது.

அவரவர் எடுக்கும் செயலுக்கொப்பத் தொழில் முறையில் மனிதன் “தன் உடலையே” தொழிலுக்குகந்த உணவாகப் பக்குவப்படுத்த முடிகின்றது. ஆக…
1.இப்பூமியின் பிடிப்பிற்கும்… வாழ்க்கையின் செயலுக்கும்…
2.தன் உணர்வின் எண்ணத்தை அடகு வைத்துள்ள இன்றைய மனிதன்
3.உயர் ஞானத்தைப் பெறத் “தன் எண்ணத்தின் உணர்வைப்” பக்குவப்படுத்திடல் வேண்டும்.

உபதேசத்தை உற்று நோக்கிப் பதிவாக்கினாலே போதும்

 

யாம் (ஞானகுரு) சொல்வது புரியவில்லை…! என்று யாரும் எண்ணவே வேண்டாம். இந்தப் பதிவு உங்களுக்கு அவ்வப்பொழுது சரியான ஞானத்தைக் கொடுக்கும். நோயை நீக்கலாம்… சாபங்களை நீக்கலாம்.. பகைமைகளை நீக்கலாம்… குடும்பத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். உங்கள் அனுபவம் பேசும்.

cosmos-galaxy

நட்சத்திரங்களுக்குள் இருக்கும் அற்புத சக்திகள்…!

1.27 நட்சத்திரங்களின் நிலைகளை அகஸ்தியன் நுகர்ந்து… தீமைகளை வென்று..
2.பேரருள் உணர்வை வளர்த்து… பேரொளியாக மாறி துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அகஸ்தியன் ஆதியிலே வானஇயல்… புவிஇயல்… உயிரியல்… அடிப்படையில் அகண்ட் அண்டத்தைக் கண்டாலும் அவன் உணர்வுகள் வெளிப்படுத்தியதைப் பிற்காலத்தில் வியாசகன் நுகர்ந்தான்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானாலும் அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இந்தச் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் உள்ளது.

வியாசகன் தான் மீன் பிடிக்கச் செல்லும் பொழுது அவன் சந்தர்ப்பம் புயலில் சிக்கிக் கடலில் விழுந்து விடுகின்றான். அப்பொழுது அதிலிருந்து அவன் எப்படியும் மீள வேண்டுமென்ற மனப் போராட்டம் அதிகமாகின்றது.

அப்பொழுது கடல் வாழ் மீன் இனம் இவனைத் தன் முதுகில் சுமந்து இவனைக் காப்பாற்றுகின்றது. கடல் வாழ் மீன் இனம் காப்பாற்றிய பின் அவன் சிந்திக்கின்றான்.
1.நாம் எந்த மீனைக் கொன்றோமோ…
2.அந்த மீன் இனமே தன்னைக் காப்பாற்றுகின்றது என்று
3.திரும்பி பார்க்கும் போது தன் தவறை உணர்கின்றான்
4.அதனின் உயர்ந்த குணங்களை எண்ணி ஏங்குகின்றான்.

அன்றைய காலங்களில் பெரும்பாலானோர் எல்லா மக்களும் சூரியனை வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி..
1.நான் இப்படித் தவறு செய்தேன்…
2.ஆனல் அந்த மீன் இனமே என்னைக் காத்தது…! என்ற ஏக்க உணர்வுடன் மேலே ஏங்குகின்றான்.

கடலின் பகுதியில் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம். அதிலிருந்து வரும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து விடுகின்றது.

அப்போது இவன் மேல் நோக்கி ஏங்கி எண்ணும்போது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைத் தனக்குள் நுகர நேருகின்றது. அப்படி அவன் நுகரும்போதுதான்
1.அகஸ்தியன் தன் வாழ் நாளில் அகண்ட அண்டம் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கின்றது என்று
2.அவன் உணர்ந்து வெளியிட்ட உணர்வுகளை எல்லாம் வியாசகன் நுகர்கின்றான்.

வான வீதியில் இருந்து வந்து உருவான உயிர் முதலில் கடலில் தான் விழுகின்றது. வான வீதியிலிருந்து பல உணர்வுகள் இங்கு ஆகும் பொழுது சூரியனின் ஒளிக்கற்றைகள் அது சிறுகச் சிறுக விளைந்து பாஷாணமாக மாறுகின்றது.

அந்த பாஷாணத்தில் சேர்க்கையாக மற்ற மின்னல்கள் தாக்கப்படும்போது 27 நட்சத்திரங்களில் எதன் எதன் உணர்வு அதிகமாகின்றதோ அதற்குத்தகுந்த செடியின் கருக்கள் உருவாகின்றது

இவ்வாறு கடல் வாழ் நிலைகளில் பல விதமான செடி கொடிகள் உருவாகின்றது. அதை உணவாக உட்கொள்ளும் நிலைகள் பல உயிரினங்கள் உண்டு.

எதை எதை எடுத்து… எதன் வழியில் உருவானதோ… அதை அதை எடுத்து அதன் நிலைகள் உணவாக உட்கொள்ளும் சக்தி வருகின்றது. இப்படித்தான் கடல் வாழ் நிலைகள் உருவானது…! என்று முதன் முதலில் கண்டது அகஸ்தியன்.

அவன் கண்ட உண்மையின் உணர்வை வியாசகன் காண்கின்றான். அவன் செம்படவன் தான்….!
1.இவன் கடலில் தத்தளித்து வருவதை ஒரு மீன் காக்கப்படும் போதுதான்
2.அந்த அகஸ்தியன் உணர்வுகள் எல்லாம் இவனுக்குள் வருகின்றது.
3.அப்பொழுது தான் அவன் “தன் நிலையை” உணர்கின்றான்…. ஞானியாகின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடியதை நாமும் பெற்றால் அவன் வழியிலே நமக்குள் இது பெருகப் பெருக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைகின்றோம்.

அகஸ்தியன் எப்படி நட்சத்திரங்களின் ஒளி அலைகளைப் பெற்றானோ… அதைப் போல நாமும் பெற்று.. நஞ்சினை வென்று.. ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

நான் மனமுவந்து கொடுப்பதை நீ பெற்றுக் கொள்…! என்றார் ஈஸ்வரபட்டர்

கோகர்ணத்திலும் காட்டுக்குள்ளும் பெற்ற அனுபவங்கள்

பக்தி கொண்ட ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்த வித்தை

Eswarpattar blessings

குருநாதர் கொடுக்கும் “கோடி…கோடி..” என்ற ஒளியான உணர்வின் ஆற்றல் எபப்டிப்பட்டது…?

நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்குக் கொடுத்த கோடி…கோடி… என்ற உணர்வுகளை உங்களுக்கும் கொடுக்கின்றோம். அதாவது…
1.தீமையை நீக்கி ஒளியின் தன்மையாக ஆக்கிய அந்தக் கோடி…கோடி என்ற உணர்வின் தன்மையைத்தான்
2.உங்களிடமும் இணைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு)

அந்த உணர்வுகளை நீங்கள் இணைத்துக் கொண்டபின் மற்றவர்களை நீங்கள் பார்த்தால் சில உணர்வுகளை உணர்த்தும். அவர்களைக் கேட்டறிந்து நீங்கள் திருப்பிச் சொல்ல வேண்டியதில்லை.

அப்படிக் கேட்டறிந்து திருப்பிச் சொல்ல வேண்டும் என்றால்… நானே திருப்பிச் சொல்ல முடியாது. அப்படித் திருப்பிச் சொல்லும் நிலை வந்து விட்டால் அது வெறும் “பாட நிலைதான்” ஆகும்.

ஆகவே நாம் ஒருவரைப் பார்க்கப்படும்போதே அவருடைய நிலைகளை நமக்குள் உணர்த்தும்.
1.அப்பொழுது அங்குள்ள தீமை நமக்குத் தெரிய வரும்.
2.அந்தத் தீமை நீக்குவதற்கு என்ன வழி…? என்ற நிலைகளை நாம் எடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று இந்த உணர்வை எடுத்து விட்டால் நமக்குள் தீமை சேராது
1.அந்தத் தீமையை நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.
2.அத்தகைய சொல்லை அங்கே பதிவு செய்து விட்டால்…
3.அவர்கள் அதைக் கேட்டுணர்ந்தால்… அவர்கள் அதைத் திருப்பி எண்ணினீர்கள் என்றால்….
4.அவர்கள் தீமையை அவர்கள் போக்க முடியும்.

நமக்கு அந்த “அறிதல்…” என்ற நிலையில் வரும். அதே போல் யார் நம்மைப் பார்த்தாலும்… அவர்கள் பேச ஆரம்பித்தாலே போதும்…
1.இப்படித்தான்…! என்று நமக்குத் தெரியும்.
2.தெரிந்தவுடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
3.தெரிந்ததை அவர்களிடம் சொல்லக் கூடாது.

வர வர (அவர்கள் பேசப் பேச) நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்…! என்ற அந்த நினைவினைக் கண்ணை வைத்து உற்றுப் பார்க்க வேண்டும்.

சொல்லவே வேண்டியதில்லை. கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள் அவர் சொல்லும்போது நமக்குக் கோபம் வரும்.. உடனே சிந்தனையில் “அருளை எடுத்துப் பாருங்கள்…!”

சரி… அப்படியா…! என்று சொல்லிவிட்டு நீங்கள் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பாருங்கள். இவ்வாறு செய்தாலே…. யாராவது தப்பு சொல்பவர்கள் வந்தாலும் திருப்பித் திருப்பிச் சொல்ல முடியாது

பிரேக்காகும்…! வேண்டுமென்றால் பாருங்கள். இது போய் இடைமறிக்கும். குறைகளைச் சிந்தித்துப் பார்க்கும் பொழுது அங்கே தடையாகும்.
1.அவர்கள் உணர்வு நம்மிடம் வராது
2.நமது உணர்வு என்ன செய்யும்…? அந்தத் தப்பை அடக்கும்…!
3.இது கண்டிப்பாக வேண்டும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் எங்கே குறை கண்டாலும்… அவர்கள் தவறு செய்யவில்லை… அவர்களை அறியாத நிலைகளில் தான் அது வருகின்றது. ஆகவே அங்கே குறைகள் வளரக் கூடாது.

மகரிஷிகளின் அருள் ஒளி அங்கு பெற வேண்டும்…. அங்கு மெய்ப் பொருள் காணும் நிலை வரவேண்டும் என்று எப்படொ எண்ணிப் பாருங்கள்.

ஆனால் தப்பாகப் பேசினார்… என்ற குற்றம் சாட்டும் நிலை வந்தால்…
1.அவர் உணர்வு தான் உங்களுக்குள்ளேயும் சேர்ந்து வளர்ந்துவிடும்.
2.உடனே இரண்டு பேருக்கும் சண்டை வரும் நீ பெரியவனா… நான் பெரியவனா…? என்று

தியான வழியில் இருக்கின்றவர்கள் இதை எல்லாம் முதலில் சொன்ன மாதிரி மாற்றி அமைத்துப் பழக வேண்டும். ஏனென்றால் நாம் பேசக்கூடிய இந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தி அலைகளாகப் பரப்பச் செய்கின்றது.

ரேடியோ டி.வி.யில் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதைப் போல ஞான வித்துகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அவ்வப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த எண்ணம் வரும். அப்பொழுது உங்கள் ஆன்மா வலுப் பெறும்.

இருந்தாலும்…
1.தீமைகளை நீங்கள் உணர முடியும். ஆனால் உள்ளுக்குள் விடாது.
2.யாம் சொன்ன முறைப்படி எண்ணி நீங்கள் செய்து பாருங்கள்
3.அந்த அருள் உணர்வுடன் உங்கள் பார்வையை மட்டும் மற்றவருக்குச் செலுத்திப் பாருங்கள்.

பிறரின் குறைகள் நமக்குள் வளராது… அவர்களின் உணர்ச்சிகள் நம்மை இயக்காது… நமது உணர்ச்சிகள் அங்கே ஒடுங்கச் செய்யும்.
1.இல்லை என்றால் கொதிக்கச் செய்யும்
2.இல்லை என்றால் விட்டு விட்டு ஓடி விடுவார்கள்… பயமாகும்…!

ஞான உலகம் உருவாகும் காலம்

 

தீவிரவாதங்கள் எல்லாம் ஒடுங்கும். கருவில் உருவாகும் ஞானக் குழந்தைகள் மெய் ஞானத்தை வளர்த்து இந்த உலகை ஞான உலகமாக உருவாக்கும் சந்தர்ப்பம் வரும். வாழ்க்கையில் வந்த சாப அலைகள் தீய அலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட முடியும். நீங்கள் ஒவ்வொருவருமே ஞானியாக வளர்வீர்கள்.

spiritual-stiffnesses

“முக்காலமும் அறியும் சக்தியை” எப்படிப் பெறலாம்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இஜ்ஜீவ காந்த சரீரத்தில்… எண்ணத்தின் அலைத் தொடர்பு அனைத்தும்… நினைவின் வளர் காலம் (நினைவு தெரியும்) முதற் கொண்டு பூமியில் பிறந்த சரீரத்தின் ஆத்ம அலையுடன் பதிவு பெற்று விடுகின்றது.

மீண்டும் மீண்டும் எண்ணும் எண்ணம் இச் சரீர ஜீவகாந்த அலையுடன் மோதப் பெற்று… இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம அலையில் பதிவு நிலை பெற்று…
1.ஒலியின் எதிர் தொடர்புடன் எண்ணத்தின் செயல் வாழ்க்கை
2.இப்பூமி ஈர்ப்பு பிடியில் நாம் வாழுகின்றோம்.

அதாவது மின்காந்தத்தால் ஒலி அலையை நாடாக்களில் பதிவு செய்து மீண்டும் அதே மின் காந்தத்தைப் பாய்ச்சி பதிவான ஒலியை கேட்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று… ஜீவ காந்த சரீரத்தின் உணர்வுடன் கூடிய எண்ண அலைகள்… ஆத்மாவில் பதிவானதை… மீண்டும் அவ்வலைத்தொடர் இச்சுவாசமுடன் ஜீவகாந்த அலையுடன் மோதியவுடன்… அதன் பிடிப்பிலேயே மீண்டும் மீண்டும் பூமியின் பிடியிலேயே சிக்க வேண்டியதிருக்கும்.

இப்பூமிப் பிடிப்பிலிருந்து விடுபடத் தன் ஆத்ம வலுவைப் பெற வேண்டுமென்றால் இஜ்ஜீவ காந்த சரீர உணர்வின் எண்ணத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொடர்பு நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

வலுவான ஒலி சக்திகளை… காந்த மின் அலைத் தொடர்பைப் பெற்று… உணர்வின் எண்ணத்தில் இப்பூமி வளரத் தொடர்பு கொண்ட நம் சூரிய குடும்ப ஒளி சக்திகளுடன் எண்ணத்தைச் செலுத்தி பல சமைப்பின் முலாமைப் பெற வேண்டும்.

அதனின் வளர்ச்சியில்… பகுத்தறியும் விழி ஒளியைப் பாய்ச்சி எதிர்படும் பொருளறிந்து வழி செல்லும் வாழ்க்கைதனை… “ஞான ஒளி பாய்ச்சி” எதனையும் அறியும் தொடர்பைப் பெற முடியும்.

இஜ்ஜீவ காந்த சரீரத்தில் இன்று செயல்படும் ஆத்ம வலுவின் வளர்ச்சித் தொடருக்கு மேலும் வலுக்கூட்டும் “சப்தரிஷிகளின் தொடர்பில்” உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி…
1.ஜீவகாந்த சரீரத்தின் எண்ண அலைக்கு
2.வலுவான ஒளி காந்தத்தை மேன்மேலும் நாம் எடுக்கும்போது
3.ஞானத்தின் ஒளி நிலையைப் பெற முடியும்.

ஞானத்தின் ஒளித் தன்மையை இவ்வாத்மாவின் பதிவு நிலைப்படுத்தப்பட்ட வீரிய சக்தியினால்… “முக்காலமும் அறியும் மூல மந்திரத்தை” ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

ஆதிசக்தியின் சக்தியாக… ஜீவசக்தியின் சமைப்பு நிலைக்கு நம் சூரியக் குடும்பமல்லாத
1.வேறு பல சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷி சக்திகளின் சமைப்பு நிலை கொண்டு
2.அதற்குகந்த வலுக்களை… ஒளியின் வண்ணச் சமைப்புகளால் சுவை கூட்டும் ரிஷித் தொடர்பில்தான்
3.கரு உரு வார்ப்பக வழித் தொடர்கள் வளருகின்றது.

அத்தகைய வழித் தொடர் பெற்று உயர்ந்த நிலையில் வளரும் மனித உயிராத்மாக்களுக்கு மீண்டும் உரம் சேர்க்கும் வளர்ப்பிற்கு வளர் சக்தியின் ஒளி சக்தியான “ரிஷி சக்தியின் ஒளித் தொடர்பால் தான்” உயர்வு நிலை கிட்டும்.

kidney பழுதடைந்து அதனின் விளைவாக இதயம் எப்படிப் பாதிக்கிறது…? 

நன்றாக இருப்பவர்களுக்கு heart attack kidney failure எப்படி வருகிறது..?

விஷத்தை வடிகட்டும் நம் உறுப்புகளின் இயக்கங்கள் 

polaris and soul pulse

உயிர் துடிப்பு மாறும் போது நம் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

இன்று எலெக்ட்ரானிக் கடிகாரத்தின் மூலம் மணிகளைக் காட்டுகின்றார்கள். “அதில் உள்ள எலக்ட்ரானிக்” அதன் குறித்த நிலைகள் வரப்படும்போது அது வந்தவுடனே மணிகளையும் தேதிகளையும் மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

1.ஆனால் அதில் சிறிது நீர் பட்டுவிட்டால் எல்லாம் மறைந்து விடுகின்றது.
2.எதிர்மறையான உணர்வுகளை அங்கே பதியச் செய்யும்போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அதில் உள்ள பேட்டரி சார்ஜ் கம்மியாகி விட்டாலோ தப்பான கணக்கைக் கொடுக்கின்றது.

இதைப் போலத்தான் நம் உயிரின் இயக்கமும்…!

நாம் எண்ணும் சோர்வு சங்கடம் வேதனை போன்ற எண்ண அலைகள் அதிகமாகச் சேர்த்த பின்…
1.நமது உயிர் அந்த உணர்வின் தன்மைகளை இயக்கப்படும்போது
2.இயக்கத்தின் துடிப்பு கம்மியாகின்றது.

அப்படிக் கம்மியாகும்போது உடலின் சுருக்க… அந்த உணர்வுகள் குறையத் தொடங்கி விடுகின்றது. அந்த நேரத்தில் சீரான நிலைகளிலே கணக்கைப் பார்க்க முடியாது. நம்முடைய சொல்லும் சீராகச் சொல்ல முடியாது.

ஏனென்றால் நமது உயிர் “எலெக்ட்ரிக்காக” இருந்து… நுகரும் உணர்வுகளை “எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக)” அது உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.

1.அதில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ
2.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
3.அந்த உணர்வுகளில் மாற்றங்கள் எதுவோ கண் விழி கொண்டு கலர்கள் மாறும்.
4.வெளி வரும் சொற்கள் கொண்டு உணர்ச்சிகள் மாறும்.
5.அந்த உணர்வின் சத்து கொண்டு உடலில் நிறங்கள் மாறும்.

இந்தத் தியான வழியில் சீராக இருந்தால் நீங்கள் ஒருத்தரைப் பார்த்தவுடனே ஜோசியம் சொல்லி விடலாம். ஆனால் இதைத் தெரிந்து நீங்கள் ஜோசியம் சொல்லத் தொடங்கி விடாதீர்கள்.

ஏனென்றால் இதை “அங்கக்கலை…!” என்று சொல்வார்கள். பார்த்து ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் எலலா உண்மைகளும் வெளியில் வரும்.

உங்களிடம் நான் (ஞானகுரு) சில நேரம் கேள்விகளையும் கேட்பேன். அப்பொழுது பதிலாக உங்களிடம் இருந்து என்னென்ன வருகின்றது…? என்றும் பார்ப்பேன்.

அதைத் தெரிந்து கொண்ட பின் உங்களுக்கு என்ன நல்ல மாற்றங்களைக் கொடுப்பது…? என்ற நிலையில் சிலதுகளை இணைத்துக் கொடுப்பேன்.

அதாவது உங்கள் சொல்லுக்குள் வேறு ஏதாவது நாம் மாற்றிச் சொல்லும் பொழுது… இந்த உணர்வு வந்தவுடன் உங்களுக்குள் இருப்பதை எல்லாம் கக்கிக் கொண்டே இருப்பீர்கள்.

இந்த அலைகளை தொடர்ந்தவுடன் எந்த அருள் உணர்வை எதை எதை இணைத்து உங்களுக்குள் கலக்க வேண்டும் என்று சொல்லி யாம் கொடுக்கின்றோம்..
1.தமாஷாகச் சொல்வது போல் இருக்கும்…
2.ஆனால் அதற்குள் ரொம்ப விஷயம் இருக்கும்.

அதாவது உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்ற வகையில் கொடுக்கின்றோம். ஆகையினால் இது “குரு வழி…!”

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்றால் வாத்தியாருக்கு ஒருத்தர் மேல் வெறுப்பாகி விட்டது என்றால் அந்த வெறுப்பின் தன்மையினால் அவர் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லுவார்.

வாத்தியார் அழுத்தமாகச் சொன்னவுடன் அந்த மாணவனுக்குப் பயத்தின் உணர்வு வந்தது…! என்றால் வாத்தியார் என்ன சொன்னாலும் இங்கே அவனுக்குள் பதிவாகாது. ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கத்தின் நிலைகள்.

1.அதே சமயத்தில் பார்வையின் நிலைகள் என்னவாகும்…? இருட்டாகும்… கலர் கறுப்பாகும்.
2.எந்த நல்லதையும் பார்க்க முடியாது.
3.இருள் சூழ்ந்த நிலையாகும். உடலுக்குள் அது நஞ்சாகும்.

ஏனென்றால் நல்ல பொருளுக்குள் நஞ்சு கலந்தால் எப்படியோ அது போல் நல்ல சிந்தனை வராது. விஷத்தின் தன்மை கொண்ட உணர்வாக மாறிவிடும்.

அச்சமயம் பதிவு செய்த நிலைகள் அது சீராக வராது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…!

இது எல்லாம் நமக்குள் மோதும் எதிர்மறையான இயக்கங்களால் வரும் போது ஏற்படும் நிலைகள் தான்…!

வீட்டிலிருந்தே நோய் நீக்கும் சக்தியைப் பெற முடியும்

 

காட்டுக்குச் சென்று… அலைந்து திரிந்து நான் (ஞானகுரு) உயர்ந்த சக்தி பெற்றேன். நீங்கள் இருந்த இடத்திலேயே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடியும். உங்கள் உடல் நோயை நீக்க முடியும் மன நோயையும் நீக்க முடியும். உங்களால் முடியும்.

Sages of Himalayas

ரிஷிகள் செயல்படும் ஞான மலை தான் இமயமலை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

போகர் தன் உயிராத்மாவின் வளர் சக்திக்காக… முருகா என்ற ஆறுகுண. அமில வழி… ஜீவித நீர் நிலை வளர்க்கும் மூல வித்தினை… இப்பூமியின் ஜீவ வளர்ப்பில்… புவனம் வளர்க்கும் புவனேஸ்வரித் தாய் சக்தியை வணங்கி… முருக குண வித்தை வளர்க்க… நவபாஷண அமிலத்தை முருக குணச் சமைப்பாக்கிச் சிலை செய்து வைத்துள்ளார்.

1.எச்சிலையை நவபாஷணத்தால் முருகனின் உருவத்தைச் செய்தாரோ
2.அதன் தன்மையில் அமில ஜீவ வளர்ப்பின் வித்து இப்பூமியில் வளரும்
3.ஜீவ முருக அறுகுண வண்ண அமிலத்தின் வலுவைக் கூட்டும் முருக குண சக்தி நிலை
4.போகரினால் இப்பூமியில் இன்று செயல்படுகின்றது.

இப்பூமியின் இமயமலையில் பல ரிஷிகளின் செயல் நடக்கின்றது…!

“ரிஷிகளின் ஜெபமிடம் அதுதான்…!” என்ற நிலை மட்டும்தான் மனித உணர்வில் தெரிகின்றதோ தவிர உண்மையில் இமயமலையின் உச்சியில் நடுத் தாழ்வான ஓர் இடத்தில் உச்சிக்கு அப்பால் இந்திய கண்டத்தின் பின்புறத்தில் “சப்தரிஷியின் ஜீவித மனித ஆத்மா வளரும் வித்தின் உணர்வு சமைப்பு தாவர வலுவிற்கு… அங்கு குளம்…” ஒன்று உண்டு.

அந்நீர் கொப்பளிக்கும் தன்மையில் செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

1.போகர் எப்படி நவபாஷணத்தால் முருகன் சிலையைச் செய்வித்தாரோ…
2.அதைப் போன்று ஜீவ நீரில் வடித்தெடுத்த அமில சேர்க்கையால் திடமாக்கப்பட்ட
3.சிவலிங்கம் ஒன்றை அங்கு ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.

அதற்குச் சுற்றிலும் அந்நீர் நிலை கொதி நிலை பெற்றுச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதன் தொடர்பில் பல மாற்று நிலைகள் இப்பூமிக்கு மனித உணர்வின் செயல் வலுவைச் சப்தரிஷிகளினால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆக சப்தரிஷிகள் செயல்படும் ஞான விருட்சக மலை தான் இமய மலை…!

1.இயற்கையின் மாற்றத்தில் மனித நிலை வாழ வலுக் கூட்டும் ரிஷி சக்தியுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
2.இஜ்ஜீவ காந்த சரீரத்தில் ஒளிக் காந்தத்தின் மின் அலையை செலுத்தச் செலுத்த
3.விழி பார்த்துப் படமெடுக்கும் வாழ்க்கையை ஞான விழி கொண்டு ஜோதி நிலைக்கு மனித நிலை உயர முடியும்.

அகஸ்தியன் அமர்ந்த இடங்களின் அதிசயங்கள் – நெய்யை விட்டால் வெண்ணையாக மாறும் 

ஆயுள் மெம்பரின் இயக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்…?

27 நட்சத்திரங்களின் ஆற்றலை எடுத்த அகஸ்தியன் பெற்ற நிலையை குருநாதர் எல்லோரையும் பெறச் செய்கின்றார் 

eternal heaven

நம் முன்னோர்களை விண் செலுத்தும் பயிற்சி

யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து… சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துத் தியானித்ததனால் அதனின் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை விண் செலுத்த முடியும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற
1.நம் குலதெய்வங்களான உயிராத்மாக்களும் சரி
2.நண்பர்களின் உயிரான்மாவும் சரி
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று உந்தித் தள்ளினால்
4.அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது.

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளுடன் இந்த ஆன்மாக்கள் பட்டபின் இந்த உடலில் பெற்ற நஞ்சு என்ற உணர்வை கரைத்துவிட்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழத் தொடங்கும்.

1.துருவ நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் இருந்து வரும் உணர்வை உணவாக எடுத்துக் கொள்கின்றது.
2.துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை உணவாக உட்கொண்டு தான்
3.சப்தரிஷி மண்டலம் வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டு உள்ளார்கள்.

நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலங்களில் அவர் உடலில் பெற்ற உணர்வு நமக்குள் இருப்பதனால்… நாம் தியானத்தை வலுக்கூட்டி இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களை விண் செலுத்தினால் அது பிறவியில்லா நிலை அடையும்.

இதை மனிதன் ஒருவன் தான் செய்ய முடியும்…!

நண்பர்களுடன் பழகுகின்றோம்… நம் குடும்பத்தில் பழகுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்பத்தால் நண்பர் வேதனையோடு அவதிப்படும்போது அவர் மேல் இருக்கும் பற்றால் அந்த வேதனையான உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் நம் உடலுக்குள் அது வளர்கின்றது.

வேதனை வரும் பொழுதெல்லாம் நாம் எந்த உடலில் இருந்து வேதனையை எடுத்தோமோ அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்து அவர் பெற்ற அவதியெல்லாம் நாமும் பெறுகின்றோம்.

அல்லது… ஒருவரிடத்தில் அந்த ஆன்மா சென்றாலும் மற்றவர்கள் கேட்டறிந்த அந்த உணர்வுகளில் அவர்கள் பட்ட உண்ர்வுகளை நாம் நுகர்ந்தறியும்போது அதை அடுத்து “மரபணுக்கள்” நமக்குள் விளைய தொடங்கி விடுகின்றது.

இது போன்ற நிலைகள் நமக்குள் வளராது தடுக்க வேண்டும்.

ஆகவே கூட்டு தியானத்தின் மூலம் நாம் அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தால் அது அங்கே கரைந்து விடுகின்றது.

சப்தரிஷிகளுடன் ரிஷிகளாக அவர்கள் வாழப்படும்போது…
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளையும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் நாம் எளிதில் பெற்று
3.நம் உடலில் ஏற்படும் தீமைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள முடியும்

இப்பொழுது விஞ்ஞானி செய்கின்றான்…! அதாவது கண்ணாடி மூலம் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் வானில் உள்ள கோள்களைப் பதிவாக்கி அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றான்.

அந்த உணர்வு அதற்குள் பதிவானபின் அதை நாடாக்களில் பதிவாக்கி அதை ராக்கெட்டில் வைத்து விண்ணிலே பூமியைக் கடந்து வெளியே வீசச் செய்கின்றான்.

1.எந்த கோள்களில் இருந்து அலைகள் வருகின்றதோ
2.அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு வீசப்படும்போது
3.அந்த நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ராக்கெட்
4.கோள்களின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது.

அங்கே சென்ற பின் அந்த உணர்வுகளைக் கலந்து அதைக் கவர்ந்து மீண்டும் நாடாக்களில் பதிவாக்கி அலைகளாக மாற்றித் தரையில் இருக்கும் அந்த நிலைகளுக்கு மாற்றுகின்றது.

இதைப் போலத்தான் நம் மூதாதையர்களின் ஆன்மாக்காளையும் நண்பர்களின் ஆன்மாக்களையும் சப்தரிஷி மண்டலத்தினுள் செலுத்தி விட்டால் இந்த உடலில் பெற்ற நஞ்சுகளை கரைத்துவிட்டு
1.அந்த உணர்வின் தன்மை அதற்குள் பதிவாக்கப்படும்போது
2.அவர் உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் நம்முடைய எண்ணம் அவர் ஒளியான உணர்வை எளிதில் கவர்ந்து
3.நாம் அந்த பேரருள் என்ற உணர்வை நமக்குள் வளர்க்கவும்
4.பிறவியில்லா நிலை அடையவும் உதவும்.

அதே சமயத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் நம் உடலுக்குள் இருக்கும் தீமையின் உணர்வுகள் அதாவது.. அவர் உடலில் நோய்வாய்ப்பட்ட உணர்வுகள் நமக்குள் வளராது தூய்மைப்படுத்த முடிகின்றது. (இது முக்கியம்)

அதே சமயத்தில் அவர் விண் சென்ற உணர்வின் பால் நம் பற்று வரப்படும்போது இந்த உடலுக்குப் பின் அதைப் பற்றுடன் பற்றி நாம் பிறவியில்லா நிலைகள் அடையவும் முடிகின்றது.

இல்லையென்றால் இந்த வாழ்க்கையில் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக நமக்குள் வளர்த்துக் கொண்டால் மீண்டும் பிறவியின் நிலைக்கே நம்மை அழைத்து வருகின்றது.

ஆகவே பிறவியில்லா நிலை என்ற அந்த ஏகாந்த நிலைகள் பெறுவதற்குத் தான் இதைச் சொல்கின்றோம். இப்பொழுது உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களை விண் செலுத்தத் தியானிப்போம்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் எஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் நினைவைச் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசித்து அதை உங்கள் உடலில் உருவாக்குங்கள்.

அந்த வலுவின் துணை கொண்டு… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் மூதாதையரான அந்தக் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் அந்த உடலில் பெற்ற உணர்வுகள் நஞ்சுகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உந்தித் தள்ளுவோம்.

எங்களுடன் நண்பர்களாகப் பழகி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

நச்சுத் தன்மையிலிருந்து நம்மைக் காக்கும் சக்தி

அழியாச் சொத்தான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கொடுக்கும் அருள் பிரசாதத்தைச் சீராகப் பயன்படுத்துங்கள். எங்கே சென்றாலும் அதை எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.

light worlds

மனிதப் பிறப்புக்கு அடுத்த வளர் நிலையான “சத்தியத்தின் சக்தி நிலை” பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தீக்குச்சியில் பூசப்பட்ட மருந்தும் பெட்டியில் பூசப்பட்ட மருந்தும் உராயும் பொழுது தீக்குச்சி எரிந்து அம்மருந்தின் வேகம் உள்ளவரை ஒளி தருகின்றது.

இவ்வுராய்வைப் போன்றே திரவக எரி பொருளும் அதன் தொடர்பு கொண்ட உராய்வுக் கல்களைச் செலுத்தும் பொழுது தன் ஒளி தருகின்றது.

ஒன்று போல் உள்ள இரண்டு கற்களை உரசும் பொழுதும் அதிலிருந்து ஒளி பிறக்கின்றது.

இப்படி உலக உணர்வில் மனித ஞானத்தின் சமைப்புத் தன்மை கொண்டு செயற்கை ஞானத்தில் வழிப்படும் உண்மைகளும்… இயற்கையின் உணர்வில் பிறக்கப்பட்ட உண்மையும்… சூரியனின் சமைப்பு தன்மையால் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

சூரியனின் ஈர்ப்புப் பிடியில் உந்தித் தள்ளும் காற்றலையில் மோதப் பெறும் அமில ஒளி நிலையில் ஜீவன் கொண்ட “உயிரணு…”
1.சூரியனின் பிடிப்பலையை விட்டுக் காற்று மண்டல நிலையற்ற பால் வெளி மண்டலத்தில் மிதந்து வரும் அவ்வுயிரணு
2.பூமியின் ஈர்ப்புப் பிடியில் தான் எச்சுவைக் கொண்டு உயிர் பெற்றதோ
3.அதன் தொடர்பில் ஜீவ வளர்ப்பு நிலை மாற மாற
4.ஒன்றின் சமைப்பிற்கு முலாம் பெற்று… ஜீவ வளர்ச்சியின் உஷ்ண நிலையில் ஓர் தொடர்பு வளர்ச்சி நிலை மாறி
5.மீண்டும் பிறிதொரு வளர்ச்சிக்கு வரும் வழித் தொடர் மாற
6.அவ்வுயிரணுவின் வலுத்தன்மையைக் கூட்டிக் கூட்டி… உயிரணுவின் பரிமாணம் கனம் பெற்று
7.எல்லாவற்றையும் அறியக்கூடிய செயல்… சொல்… ஞானம் பெறும்… சரீர நிலைக்கு (மனித உடல்)
8.அவ்வுயிர் காந்தம் ஜீவ காந்த உணர்வு நிலை செயல் கொள்ளப் பல சமைப்பில் புல்லாகி பூண்டாகி என்ற வழி நிலைக்கொப்ப
9.பல கோடி அமிலத் தன்மையில்… பல மோதலில்… பிம்ப நிலை மாற்று நிலை மாறி… மாறி…
10.சமைப்பின் அமில வீரிய சக்தியான உயிர் ஜீவாத்மா ஒளி பெற்ற சரீர இயக்கத்தில்
11.பல மோதலில் உருப்பெற்ற உணர்வின் எண்ணச் சரீரத்தில்
12.மெய் ஞான சக்தி பெறுவதுதான் மனிதனுக்கு அடுத்த நிலை.
13.மெய் என்றால் உண்மை என்ற பொருள் தான்… உலக இயல்பின் செயல்படும் உண்மையாக உள்ளது.
13.இன்று நடப்பவை சொல்லப்படும் சொல் சத்தியம் என்றால் அதுவே நாளை கனவாகி விடுகின்றது.

இவ்வுடலில் உயிர் இயக்கமும்… வாழும் வாழ்க்கையும்… “சத்தியம்” என்றால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின் எது சத்தியமாகின்றது…?

சொல்லப்படும் சொல்லிலேயோ வாழும் வாழ்க்கையிலேயோ சுழலும் ஓட்டத்தில் சத்தியம் இல்லை. சத்தியத்தின் உண்மை நிலையை ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

1.சூரியனின் ஒளி பூமியில் படும் போதுதான் பூமிக்கு வெளிச்சம்.
2.பூமியின் மேல் சூரியனின் ஈர்ப்பு வட்டம் இல்லா இடத்தில் அங்கு சத்தியம் செயல்படுவதில்லை.
3.சூரியனின் ஒளி நிஜம் இல்லை என்று இரவில் பூமி சொல்ல முடியுமா…?

ஒளிரும் மங்காத் தன்மையான உயிர் ஜீவ ஜோதி நிலை தான் “சத்திய நிலை…!” சத்தியத்தின் ஒளியை ஒளிரச் செய்யும் சக்தியாகத் தான் மனித உணர்வின் எண்ணத்தின் ஞானத்தைச் செயல்படுத்த வேண்டும்.

உலகப் பிடிப்பில் நீ சிக்காதே…
உலகத்தையே நீ வெறுக்காதே…
உலகத்தையே நீ உனக்கு சொந்தமாக்கு…!

உலகம் உனக்குச் சொந்தமல்ல…
உலகுக்காக நீ வாழவில்லை…
உலகத்தில் தான் நீ வாழுகின்றாய்…!

உலகம் உறங்குவதில்லை…
உலகத்தில் நீ உறங்காதே…
உலக சுகத்தை நம்பாதே…!

உலகத் தேரில் பவனி வா…!
உலக ஞானம் நீ பெற்றால்…
உலகையே நீ படைக்கலாம்…!

ஆன்மாவில் பட்ட எரிச்சலை நீக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எடுக்க வேண்டும்

நம் உடலிலுள்ள தீமை என்ற ஓட்டைகளை அடைக்கும் வழி 

நம் சொல்லையும் செயலையும் புனிதமாக்கும் பயிற்சி 

soul and body - thoughts

எண்ணத்தின் வலுவை எப்படிப் பெற முடியும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனித எண்ண ஓட்டங்கள்… உணர்வின் எண்ணம் கொண்டும் எண்ணத்தின் உணர்வு கொண்டும் பலவாக ஓடிக் கொண்டே உள்ளது. உறக்கத் தன்மையிலும் மயக்க நிலையிலும் கூட ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் அவயங்கள் சோர்வுபட்டு உறங்கும் தருவாயில்
1.எண்ணத்தின் அலை உறக்க நிலையில் சரீரமுடன் சுவாசத்தில் மோதப் பெறும் காற்றலையின் அலைத் தன்மை
2.சுவாசம் எடுத்துக் கவன நரம்பில் மோதும் பொழுது
3.காற்றலையில் ஏற்கனவே பதிவு பெற்ற அலைத் தொடர்பின் தொடர் தன்மை
4.உடல் கூறின் அமில சமைப்பு வலுத் தன்மையின் ஈர்ப்புடன் மோதும் பொழுது உணர்வுடன் ஒத்த தன்மையும் மோதுகின்றது.

இந்த உடலிலிருந்து வெளிக் கக்கும் அமிலத் தொடர்பின் ஈர்ப்புக்கு வரும்… “காற்றலையின் சந்திப்பும்” இச்சுவாசத்தில் மோதும் பொழுது… உறக்க நிலையில் காணப்படும் கனவுகள்… வாழ்க்கைத் தொடரில் விழிப்புடன் உள்ள செயலுக்கொத்த தொடர் போன்றே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே காணுகின்றோம்.

இப்படிக் காணக்கூடிய கனவின் செயலும்… இஜ்ஜீவ காந்தச் சரீரத் தொடருடன் எடுக்கப்படும் அலையினால் “வலுவான சில கனவுகள்” தம் எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவிலும் பதிவாகி விடுகின்றது.

நினைவின் உணர்வுடன் உள்ள பொழுது… மீண்டும் கனவில் நடந்த அந்த நிலை நம் நினைவிற்கு வருகின்றது.

ஆத்மாவின் “பதிவு” தான் எண்ணத்தின் ஓட்டம்…!

ஆத்ம இயக்கம் இச்சரீர வாழ்க்கையில் வலுக் கொள்ளும் தன்மையும்… சரீரமுடன் கூடிய ஜீவ காந்த மின் அலையின் வலுக் கொண்டுதான்… ஆத்மாவை மீண்டும் வலுவாக்க முடியும்.

முந்தைய பாடங்களில் சொன்னபடி உயிர் ஆத்மா உடல் பிம்ப சரீரத்தின் தொடரை உணர்த்தியுள்ள முறையில் “ஆத்மாவின் செயலை” உணர்ந்திருப்பீர்.

இச்சரீரக் கூறில் சேர்க்கப்பட்ட சுவையின் அமிலத்தின் வார்ப்பு ஜீவ சரீரச் செயலுக்கொப்ப…
1.ஆத்மாவின் செயல் எண்ண அலையின் மோதலைக் கொண்டு
2.எண்ணத்தின் உணர்வும்… உணர்வின் எண்ணமும்… செயல் கொள்கின்றன.
3.பலவாக ஓடும் எண்ணத்தின் ஆத்மாவின் பதிவில் உள் மனம் வெளி மனம் என்று
4.இப்படி ஒரே சமயத்தில் பல நினைவு கொண்ட செயலில் எண்ண ஓட்டம் செயல் கொள்கின்றது.

பூமி சமைப்பில் சரீரத் தொடர் வாழ்க்கையில் சாதாரணத் தொடர்பு கொண்டு நாம் பெற்ற ஒலித் தன்மைக்குகந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழும் போது என்ன நடக்கின்றது…?

நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் பெற்று வளர்ந்து வந்த வளர்ச்சிக்கு உரம் செலுத்தாமல்… பெற்ற வலுவைச் சரீர எண்ண ஓட்ட சமுதாய எண்ணப் பிடியுடன் செயல்படுத்தும் உணர்வினால்…
1.மீண்டும் மீண்டும் இப்பிடிப்பலையில் சிக்கி
2.வலுப் பெற்ற ஆத்ம ஒளியை மங்கவிடும் இழி நிலை தான் ஏற்படும்.

ஆகவே வாழ்க்கையில் உணர்வின் எண்ணத்தில் மோதப்படும் குண நிலையில் நாம் சிக்கக் கூடாது. மேலும் எண்ணத்தில் செயல்படும் பல நிலை கொண்ட நினைவு எண்ண ஓட்டத்திலும் சிக்கிடக் கூடாது.

சந்தர்ப்பத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு சஞ்சலப்படும் காலங்களில் எல்லாம்
1.நம் உணர்வின் எண்ணத்தை வலுவாக்கும் முறையான
2.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு மின் காந்த ஒளி சக்தியின் உரத்தை
3.அந்த மாமகரிஷிகளின் ஒளி காந்த சக்தியை நுகர்ந்து.. சுவாசித்து.. உடலுக்குள் செலுத்தும் பொழுது
4.பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கலாம்.

ஒளி நிலை பெற்ற அந்த ஒளி சக்தியை… இச்சரீர உணர்வில் எடுக்கும் பொழுது நம் எண்ணத்தின் வலுக் கூடும். ஆத்மாவின் வலுவையும் வலுவாக்க முடியும். மெய் ஞானத்தில் தொடர் வளர்ச்சி காண முடியும்…!

திருப்பதி கோவில் மலையில் குருநாதர் கொடுத்த பயனுள்ள் அனுபவங்கள்

மலை மேலே உள்ள சில குகைகளின் சூட்சமங்களைக் குருநாதர் காட்டினார். பின் அங்கே தியானமிருக்கும் பொழுது கரடிக் கூட்டம் வருகிறது. பின் குரங்குக் கூட்டம் வருகின்றது. அதைப் பார்த்ததும் என் குடும்பத்தின் ஞாபகம் எல்லாம் வருகின்றது. அமர்ந்திருந்த இடத்திற்கு அடியில் தங்கக் காசு வருகின்றது.

 

திருத்தணிக்கு நடந்து வரும் வழியில் வெயில் கடுமையில் தாகம் எடுக்கின்றது. பின் அதைத் தாண்டி வந்தேன். திருத்தணியில் ஒரு தம்பதியினர் எம்மைச் சந்தித்து “ஈஸ்வரபட்டர் கனவில் வந்து நீங்கள் வரப் போவதைச் சொன்னார்…!” என்று எம்மிடம் சொன்னார்கள். 

POLARIS

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி

அகஸ்தியன் தனது தாய் கருவில் இருக்கப்படும் பொழுது
1.விஷத்தினை வென்று
2.மெய் என்ற உணர்வை அறிந்து
3.தனது வாழ்க்கையில் இருளை அகற்றி
4.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற்ற
5.”அந்த அகஸ்தியன் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள்” நம் பூமியில் படர்ந்துள்ளது.

அகஸ்தியன் பெற்ற… அவனில் விளைந்த அந்த அருள் சக்தி கொண்டு துருவனாக ஆனான்.
1.துருவனாகும் பொழுது அணுவின் இயக்கத்தை உணர்ந்து
2.துருவத்தை உற்று நோக்கி
3.துருவத்தின் வழியாக நம் பூமிக்கு வரும் அந்த அரும் பெரும் சக்தியை நுகர்ந்து
4.அதன் உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

அவ்வாறு அகஸ்தியன் பெற்ற சக்திகளை எல்லாம் அவனுக்குத் திருமணம் ஆகும் போது தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான்.

கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து அந்த உணர்வின் தன்மை தங்கள் உடலுக்குள் அதை உருவாக்கப்படும் பொழுது துருவ மகரிஷியாகின்றார்கள்.

ஆண் பெண் என்ற நிலைகள் வரும் பொழுதுதான் தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் இங்கே கரு என்ற நிலைகள் உருவாகின்றது.

கணவன் மனைவி இருவருமே… அந்த அருள் ஒளி தன் கணவன் பெற வேண்டும் என்று மனைவியும்… தன் மனைவி அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று கணவனும் அந்த உணர்வினை இருவரும் ஒன்றப்படும் பொழுது அது ஜீவன் பெறும் அணுவாக மாறுகின்றது.

வேதனைப்படும் ஒரு மனிதனின் உணர்வை எடுத்தால் அது முனியாகின்றது. அதன் உணர்வின் தன்மை தான் அது செயலாக்குகின்றது. வேதனையை நீக்கிடும் அருள் ஒளி என்ற உணர்வினை…
1.தன் மனைவி பெற வேண்டுமென்று கணவனும்
2.தன் கணவன் பெற வேண்டுமென்று மனைவியும்
3.இருவரும் இவ்வாறு எண்ணி எடுத்தால் ஞானத்தைச் சிருஷ்டிக்கும் “ரிஷியாகின்றது..”

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் பூமியின் துருவப் பாதையின் வழியாக இந்தப் பூமிக்குள் வருகின்றது. அதை உற்று நோக்கி… அதையே எல்லையாக வைத்து… அகஸ்தியனும் அவர் மனைவியும் நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அந்த உணர்வின் தன்மைகளை
1.உயிரைப் போல தங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும்
2.ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றனர்
3.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக நிலைத்து வாழ்கின்றனர்.

இருளை அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின்று வரும் உணர்வினைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் நினைத்து
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.உங்கள் நினைவு அனைத்தையும் இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.
6.உங்களுள் அந்த பேரருளை உருவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி
1.உங்கள் உடல் முழுவதும் ஊடுருவிப் பாய்வதையும்
2.அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் பரவுவதை நீங்கள் உணரலாம்.
3.நீங்கள் நுகர்வது அணுவாக உருவாக்கும் அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் பெறுவதையும் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெண்கள் தங்கள் கணவர் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற ஏங்கித் தியானியுங்கள்.

ஆண்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தங்கள் மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கணவன் மனைவிக்குப் பெற வேண்டுமென்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டுமென்றும் ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியனும் அவர் மனைவவியும் பெற்ற உணர்வை நீங்களும் (கணவன் மனைவி) பெற்று… இருளை அகற்றும் வல்லமை பெற்று… இந்த பிறவியில்… பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியை நீங்களும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி… கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து… இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி… நஞ்சினை வென்று… பேரருள் என்ற நிலைகளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்கே… “ஊழ்வினை என்ற ஞானவித்தாக” பதிவு செய்கின்றேன்.

அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது…!

உயிருடன் ஒன்றி ஒளியாக்கிய ஈஸ்வரபட்டரின் உணர்வுகளை உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து உரமாக ஏற்றுகின்றோம்

எப்படிப்பட்ட எண்ணத்துடன் குருவை அணுக வேண்டும்… என்று அறிந்து கொள்ளுங்கள்

சாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார் போரடிக்கிறது என்கிறார் ஒருவர்

smell and breathing

கோபப்பட்டால் உடனே முகம் கறுத்து விடுகின்றது… ஏன்…?

 

எத்தனையோ கோடி உணார்வுகள் சேர்த்துத் தான் ஒரு நாதமாகின்றது. ஆகவே அணுவின் தன்மை பல கோடி ஆனாலும் இந்த உணர்வின் தன்மைகள் இணைத்து இணைத்து பல கோடி ஆகின்றது கோடி…கோடி… என்று…

இந்தக் “கோடி” என்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான்
1.ஒரு சொல் எவ்வாறு வருகின்றது…?
2.அதனுடைய மணம் எவ்வாறு வருகின்றது…?
3.அதனுடைய குணம் எவ்வாறு இயக்குகின்றது…?

இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு செடியை எடுத்துக் கொண்டால்
1.அதனுடைய “மணம்” வேறு.
2.அதை நாம் சுவையாகச் சுவைக்கப்படும்போது “குணம்” வேறு.
3.அதுவே நம்முடைய எண்ணத்துடன் சேர்த்து “உணர்வாக” இயக்கும் நிலைகள் வேறு.
4.அதுவே உடலாக இயக்கி உணர்வாக வரும்போது “அமுங்கும்” நிலை வேறு.
5.ஒரு காரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் நமக்குள் “கோபமே” அதிகமாகச் சேரும்
6.அதே சமயத்தில் நம்மைப் பார்ப்போருக்கும் உடலில் “எரிச்சல்” வரும்.

இதைப் போல பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் வரும்போது ஒருத்தரைப் பார்த்தவுடனே வெறுப்பு வருகின்றது. அவருடைய மணத்தை நாம் சுவாசிக்கும்போது
1.அந்த உணர்வுகள் நம்மை அறியச் செய்கின்றது
2.இந்த உணர்வின் சத்து சொல்லாக வெளிப்படுகின்றது
3.”அயோக்கியன்” என்று. அந்த உணர்வின் சொல்லாக நாதங்களாக மாறும்.

அதாவது…
1.நாம் நுகர்ந்து பார்க்கும்போது “மணமாகின்றது…”
2.உயிரோடு ஒன்றி இயக்கப்படும்போது “உணர்வாகின்றது..”..
3.இது சொல்லுடன் இணைத்து வரப்படும்பொழுது சுருதி மாறுகின்றது.

இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள் என்றால் அதிலே இனிமையானவனைப் பார்க்கப்படும்பொழுது வாடாக் கண்ணு…! என்ற சொல் வருகிறது.

இன்னொருத்தன் மோசமான நிலைகளைப் பேசப்படும்போது அவனைப் பார்க்கும்போது ஒரு மாதிரியாக இருக்கும் அவனைப் பார்க்கும்பொழுது என்ன… என்னப்ப்பா…?! என்போம்.

ஏனென்றால் அந்த உணர்வுகள் எதுவோ அதற்குத் தகுந்த “சுருதி” இங்கே வரும். நம்முடன் இணையும் சுருதிகள் எதுவோ அதற்குதகுந்த “நிறங்கள்” வரும். நிறங்கள் எதுவோ அதற்குதகுந்த “மணங்கள்” வரும். மணங்கள் எதுவோ அதற்கு தகுந்த “எண்ணங்கள்” வரும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…?

கோபமாக அடிக்கடி பேசிப் பாருங்கள்…
1.அந்தக் கோபம் வருவோருக்கு அவர்கள் உடல் முதலில் “சிவப்பாக” இருக்கும்.
2.கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபம் கூடிக் கொண்டே வந்தது என்றால் உடல் “கருத்துவிடும்…”

அப்பொழுது அந்த மணமும் அந்தச் சுவையும் மாறும். எடுத்துக் கொண்ட உணர்வு அதிகமாகக் கோபித்து வரும்போது நிறம் மாறிக் கொண்டே வரும்.

அதைப் போல ஒரு கோபித்தவரை வேகமாகப் பார்க்கின்றீர்கள். அந்தக் கார உணர்வுகள் பட்டவுடன் கண் சிவந்து போகின்றது…. உடலில் நடுக்கமாகின்றது. அந்த உணர்வின் இயக்கம் அதுவாகின்றது.

அந்த மணத்தின் தன்மை… உமிழ் நீர் நாக்கில் சுவை மாறுகின்றது. கோவித்துவிட்டுப் போய் நல்ல சுவையான சாப்பாடைச் சாப்பிட்டோம் என்றால் இந்த கோபத்தின் உணர்வுகள் வரும். நல்ல சுவையை அறிய முடிவதில்லை.

கோபத்தால் நினைவுகள் வரும்பொழுது நல்லதை நாம் அறிய முடியாது… உணர்வால். ஏனென்றால் நாம் மணத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது என்ற நிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியாகப் பேசும்போது பார்த்தால்… முகத்தில் “பளிச்…” என்று நிறம் மாறும். நான் (ஞானகுரு) பேசும் பொழுதே நீங்கள் பார்த்திருக்கலாம்…!
1.ஒவ்வொரு ஞானியின் உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுதும் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே வரும்.
2.அந்தந்தக் குணத்திற்குத் தகுந்த மாதிரி இந்தச் சுருதிகள் மாற மாற சொல்லிலும் மாறிக் கொண்டே வரும்.
3.அதே சமயத்தில் கண்ணில் பார்க்கும்போது ஒளி வேறு விதமாக தெரியும்.
4.தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டு வரப்படும் பொழுது “ஒலிகளே” வித்தியாசமாகத் தெரியும்.

அப்பொழுது அந்த அருள் ஞானிகளின் உணர்வு “ஒளிகளாகப் படரப்படும் பொழுது” நீங்கள் உற்றுப் பார்த்தால் இந்த உணர்வே உங்களுக்கு அறிவின் ஞானமாகக் கொடுக்கும்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறேன்.

திருவேங்கடாசலபதி

“ஏழு கொண்டலவாடா…” என்று சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக “ஒளியாக மாற்ற வேண்டும்” என்று பொருள். ஏனென்றால் இந்த ஆறாவது அறிவை இயக்குவது உயிர்இந்த உடலை ஆள்வது “பெருமாள்…”

 

திருவேங்கடாசலபதி…! இங்கே இந்த உடலில் இருப்பது எல்லாவற்றையும் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

 

அதை நாம் யாராவது புரிந்து கொண்டோமோ…? தத்துவத்தை நமக்குத் தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்… யாரும் அதை மதிப்பதில்லை. 

humanbody soul

உயிர் அணுக்களின் வீரியத்தைக் கூட்டி “உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்கும் செயல்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அண்டத்தின் தன்மையை நாம் அறிய முடியும். ஆனால் அண்ட கோளங்கள் நம்மை அறியாது.

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு மனிதனின் பகுத்தறிவு உணரும் பக்குவத்தில்…
1.ஆதிசக்தியின் படைப்பான உயிர் காந்தத்தில் வளர்க்கப்பட்ட
2.ஆத்ம சரீர உயிர் அணுக்களின் வலுவைக் கொண்டுதான்…
3.சரீர ஆத்ம உயிரின் வலுவின் பரிமாணத்தை
4.மங்காச் செயல் நிலைக்குச் செயல் கொள்ள முடியும்

அதாவது எண்ணத்தின் உணர்வைச் சமம் கொண்டு நாமெடுக்கும் சுவாச உணர்வின் ஜெப அலையில் சேர்க்கப்படும் மகரிஷிகளின் மின் காந்த அலையின் தொடர்பினால் “அது சாத்தியமாகும்…”

தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது அங்கங்கள் உருப்பெறும் காலத்தில் அதற்குகந்த உஷ்ண அலையின் இயக்க உருவக அமைப்பாய் நுரையீரலும் இதயமும் சதையும் மயிர்க்கால்களும் நகமும் பல்லும் உருவாக ஊன் தன்மையின் அலை சக்தியில் ஆவியாகி எலும்பின் வளர்ச்சியைக் கொண்டு உருப்பெற்று அங்கத்தின் கூட்டு இயக்கங்களாய் உயிர் அணுக்களின் வளர்ச்சி பெற்று பிறப்பு நிலை பெற்றோம் அல்லவா…!

அதைப் போன்று… சரீர இயக்கத்தில் மனித உணர்வின் எண்ண வளர்ச்சியில்… ஆத்ம உயிர் இயக்கத்தின் வலு நிலை கூடக் கூட… அங்கங்களின் உயிர் அணுக்கள் வீரியத் தன்மை பரிமாணம் பெறும்.

1.உடலின் பசிக்கு உணவும் உணர்வின் உந்தலுக்குகந்த செயலும் கொள்ளும் தன்மை தான் மனிதச் சரீர இயக்கம் உள்ளது.
2.பல கோடிச் சரீரங்களில் இந்த உயிராத்மா பெற்ற வலுத் தொடரை
3.சரீர வாழ்க்கைத் தொடர்பு காலங்களில் சேர்க்கப்படும் சலிப்பு சஞ்சலத் தொடர்புடன் சரீர வாழ்க்கை முடிவுற்று
4.உயிராத்மாவின் ஒளியைச் சரீர இயக்கமுடன் முடிவுற்று மங்கச் செய்யாமல்
5.ஆதியிலே எந்த ஒலி கொண்டு ஒளி பெற்று ஆத்ம உயிரின் உயிர் அணுக்கள் வளர்ந்து…
6.ஒலி… ஒளி… சுவை… உணர்வு… மணம்… குணம்… ஆகியவற்றை இச்சரீரம் பெற்றதோ
7.அத்தன்மையில் வளர்ச்சியின் வலுத் தொடரை மனித வாழ்க்கையில்
8.அடுத்த நிலைக்கு உணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு வலுவாக்கினால்
9.மனிதத் தன்மையின் சித்துத் தன்மையைச் செயலில் ஒவ்வொருவரும் காண முடியும்.

சாதாரண வாழ்க்கை நிலையில் கிடைக்கும் ஞான வளர்ச்சி… ஆரோக்கிய நிலை… அங்கங்களின் செயல் தன்மை… இவற்றின் நிலையைக் காட்டிலும்
1.ஜெப சக்தியின் உயிர் அணுவின் வீரிய வளர்ச்சியின் செயலைக் கொண்டு – “ஒளி பாய்ச்சி”
2.நினைத்ததை மனிதன் செயலாக்கக் கூடிய வலு வீரியத் தன்மை செயல் கொள்கின்றது.

ஆங்காங்கு உள்ள சிற்றாறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் கடலாகச் செயல்படுகிறது. அதைப் போன்று நம் செயலின் தன்மையில் வேகத்தைக் கூட்டும் பொழுது “துரிதத் தன்மை” ஒவ்வொன்றிலும் ஏற்படுகிரது.

ஆக… இச்சரீர இயக்கத்தின் உயிர் அணுக்களை வீரியப்படுத்த வேண்டும் என்றால்
1.ஒலி நாதத்தைக் கொண்டு ஒளி பாய்ச்சி
2.எண்ணத்தின் கூர்மையால் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் வீரியப்படுத்தி
3.“உயிரின் பரிமாணத்தின் வளர்ச்சி கொள்ள…” எண்ணத்தால் எடுக்கும் தியானத்தைக் கொண்டு
4.மங்காத் ஒளித் தன்மையைப் பெற முடியும்.

தாய்க்குண்டான சக்தி – அஸ்ஸாம் Ranger, பாப்பம்பட்டி பையன் அனுபவம்

என்னிடம் (ஞானகுரு) கேட்கவேண்டியதில்லை, உங்கள் தாயை எண்ணினால் அருளை எளிதில் பெறலாம் 

தாயை நாம் மதித்தோம் என்றால் உயர்ந்த குணங்களையும், குருவையும் கொடுத்துக் கொண்டேயிருக்கும் 

தாய் கருவில் பெறும் ஆற்றல் மிக்க சக்திகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 

diamond lights

மண்ணிலே வளரும் வைரமே மங்கா ஒளி பெறும்போது உயிராத்மாவை ஒளியாக்க முடியாதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:
எண்ணெயை ஊற்றி விளக்கு எரிகின்றது… மெழுகுவர்த்தி எரிகின்றது… தீவட்டி எரிகின்றது… மின்சார ஒளி பல்புகளும் எரிகின்றன. இதைப் போன்றே காட்சியில் ஒவ்வொரு எரிக்கப்பட்டு ஒளி தரும் சாதனமும் தெரிகின்றது.

சூரியனும் நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் ஒளியும்… வைரக் கற்களின் ஒளித் தன்மையும்… மாணிக்கக் கல்லின் ஒளியும்… சிறு மின் மினிப் பூச்சியின் ஒளியும்… வரிசையாக இன்னும் பலவும் காட்சியில் தெரிகின்றன.

விளக்கம்:
செயற்கையில் எரிக்கப்படும் பொருள் ஒவ்வொன்றுமே நம் தேவையின் பலனுக்குகந்த ஒளித் தன்மை பெற அதற்குகந்த பொருளைச் செலுத்தித் தொடர்ந்து ஒளியைக் காண்கின்றோம்.

பூமியும் சூரியனும் மற்றக் கோளங்கள் யாவையும் தன்னைத் தானே சுழன்று ஓடும் ஓட்டத்தில் மற்றக் கோளங்களின் தொடர்பைக் கொண்டு தன் சுழற்சி ஓட்டத்தில் ஒளியை வெளிப்படுத்துகின்றது. தன்னையும் ஒளியாக்கி பிறவற்றையும் ஒளிப்படுத்துகின்றது.

பூமிக்கு பூமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூரியனின் வளர்ச்சித் தன்மையின் குழந்தையாய்… சூரிய ஈர்ப்புப் பிடியில் தொடர் கொள்ளும் ஓட்டத்தில் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.

சம நிலை வெளிச்சமும் சம நிலை இருளும் கொண்டு பூமி சுழன்று கொண்டே ஓடினாலும் சூரியனின் சந்திப்பு ஏற்படும் இடத்தில் மட்டும் வெளிச்சம் கொண்டு பூமியின் இயக்கம் உள்ளது.

வளர்ச்சியின் வளர் நிலை கொண்ட பூமியைப் போன்றுதான் சூரியக் குடும்பங்களில் ஒவ்வொரு மண்டலமுமே ஒளி நிலை கொள்ளுகின்றது. ஆனால் சூரியனுக்குப் பகல் இரவு என்ற இருள் தன்மை குறைவாக உள்ளது சூரிய பூமியில்.

சூரியனுக்கு அதன் வளர்ப்பு மண்டலங்களின் (மற்ற பிரபஞ்சங்கள்) அமைப்புத் தன்மையினால்… வளர்ந்த பெரிய கோளமாய் வளர்ச்சியுற்றுச் செயலுறும் ஈர்ப்புத் தொடரில்…
1.சூரியனுக்கு மேல் வளர்ந்த சூரியக் குடும்பமில்லா இரண்டு கோளங்களின் எதிர் எதிர் தன்மையினால்
2.மற்றக் கோளங்களுக்கில்லா ஒளித் தன்மையும் உயர் வளர்ப்பு செயல் தன்மையும் நம்மை வளர்த்த சூரியனுக்கு உண்டு.
3.அண்ட சராசரங்களில் சூரியனை ஒத்த பெரிய கோளங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்
4.நம் சூரிய வளர்ப்பின் வளர் ஞான எண்ணச் செயல் பகுத்தறியும் சரீர உருநிலை பெற்ற
5.ஜீவத்தன்மை கொண்ட வளர்ச கதியின் சூரிய சக்தியின் நிலை ஒத்தவை சில தான்.

இப்பூமியில் மண் வளத்தில் வளரும் வைரத்தின் ஜொலிப்பும்… மாணிக்கமும்… இன்னும் ஒளி நிலை பெற்ற கற்கள் எத்தனையோ…
1.மண்ணின் சத்தை எடுத்து ஒளியின் மங்காத நிலை பெற்று
2.ஒளி வீசும் அத்தன்மையின் முதிர்வைப் பூமியின் வளர்ப்பே வளர்க்கும் பொழுது
3.எண்ணத்தின் பகுத்தறிவைக் கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி நிலை கண்டு உண்மை உணரும் வழி நிலையில்
4.எதிர்படும் பிம்பத்தைப் படமாக்கிக் காணும் நாம்
5.எண்ணத்தின் பகுத்தறிவின் ஞானத்தால் ஞான ஒளியின் கூர்மையைக் கொண்டு
6.அனைத்தையும் அறிந்து பார்த்து செயல்படுத்தும் ஒளி ஞானம் கொண்டு
7.ஒளியின் ஒளி வித்தின் வளர் ஞானத்தின் சித்து நிலை பெற்று
8.சிவசக்தி என்ற வளர்ப்பின் வளர்ப்பை என்றுமே மங்கா ஒளி நிலைத் தன்மையால் வளர்ச்சிப்படுத்தலாம்.

தங்கம் செய்யும் வித்தை

 

தங்கம் எப்படிச் செய்ய முடியும் என்று காட்டுக்குள் கூட்டிக் கொண்டு குருநாதர் காட்டினார். அதை வைத்து என் (ஞானகுரு) பின்னாடி சுற்றிக் கொண்டு வந்தவர்கள் நிறையப் பேர். ஆனால் அதன் மூலம் ஈஸ்வரபட்டர் உன் மனதைத் தான் தங்கமாக்க வேண்டும் என்று எனக்கு உணர்த்தினார். 

Sages world - agastyar

மகரிஷிகளின் அருளுடன்… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் புகுத்தி… மகரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்…!

நம் உயிருடைய வேலை அது நெருப்பிற்குச் சமம் தான். அதிலே எப்பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ அதிலே வேக வைத்த பொருளின் மணம்… சுவை… வருவது போல
1.நம் உயிரின் தன்மை நாம் நுகர்ந்தது எதுவோ
2.அதனின் உயிர் அணுக்களாக மாற்றி அது படைத்துவிடுகின்றது.

எதனின் உணர்வின் தன்மையோ அதை நாம் கண்ணால் பார்க்கும்போது உணர்வால் நுகரும் தன்மை வருகின்றது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் நிலையாக உடலின் அமைப்பு வருகின்றது.

நாம் எதனின் நிலைகளை உற்று நோக்கி… அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் பதிவாக்கி அதனின் கணக்கின் பிரகாரமே அடுத்த நிலை.

ஆகவ… அந்த மெய்ஞானியின் உணர்வு கொண்டு
1.நாம் என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலையை
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!

அவனுடன் இணைந்து இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தனையோ இடையூறுக்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உனர்வை இணைத்து இணைத்து அந்த அருள் ஞானிகளின் உணர்வை யாம் கொடுக்கின்றோம்.

தாவர இனங்களுக்கு ஊட்டம் கொடுக்கும் பொழுது முதலில் ஒரு முறை கொடுக்கின்றோம். ஒரு முறை எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை தாவர இனத்தைப் புதுப்பிக்கின்றோம்.

அப்படி… அதற்குத் தக்கவாறு அதனுடன் இணைத்துக் கொண்டு தான் புது வித்தின் தன்மையாக மாற்ற முடியும்.
1.ஏனென்றால் ஒரு வித்தின் தன்மை எடுத்த பின் நேரடியாக அதை மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு சிறுகச் சிறுக இணைத்து இணைத்து
3.அதை மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி இதை சீராக ஒன்றிணைக்கும் நிலைகள் கொண்டுதான் மாற்ற முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்.
2.பகைமையான உணர்வுகளை வளர்த்துக் கொண்ட வித்துகள் ஏராளம் ஏராளம்.
3.தன்னைக் காக்க தான் எடுத்துக் கொண்ட கோபத்தின் தன்மை ஏராளம் ஏராளம்.

இதைப்போல நமக்குள் வித்துகள் அதிகமாக பெருக்கி இருக்கும் வேலையில்… இவை அனைத்தும் ஒருக்கிணைந்து….. இதையெல்லாம் இணைத்து… அரவணைத்து… அதை அடக்கி…
1.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய… அருள் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டுதான்..
2.உங்களில் இணைந்து வரும் குணத்துடன் இணைத்து இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை இதைப் போன்று பிணைத்து
4.இந்த உணர்வின் தன்மை உங்கள் குணத்துடன் ஒன்றச் செய்து
5.நினைவு கொண்டு நீங்கள் பெறும் ஆற்றல் பெற அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் (எம்முடைய வேலை)

அது அல்லாது செய்தோம் என்றால் வெறும் பாடப் புத்தகங்களை படித்துவிட்டு ஆகா…! நன்றாக இருக்கிறது என்ற நிலைகள் கொண்டு தூக்கி எறிவது போன்று ஆகிவிடும். அடுத்த நினைவுகள் வராது…!

ஆகையினால்… எந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நினைவாற்றல் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்

இதைப் படிப்பவர் அனைவரும் இதை மனதில் பதிவு செய்யுங்கள்….!

உங்களுக்கு எது சொந்தம்…? அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் பெருக்குங்கள். இந்த வாழ்க்கையில் அதைச் சொந்தமாக்குங்கள்.

1.அதே சமயத்தில் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய குறைகளைச சொந்தமாக்க வேண்டாம்.
2.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.

அந்தச் சொந்தத்தைக் கொண்டாடி விட்டால் பகைமை உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்திற்குச் சென்றாலும். அதனின் இனப் பெருக்கமாக மாறிவிடும்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்களாகத் தான் பெருகும்.

மான் அதனின் கூட்டமைப்பாக வாழ்கின்றது. அதே சமயம் மற்ற மான்களின் குணங்களுக்கொப்ப வகை வகையான மான்கள் வருகின்றது. பல வகைகள் இருந்தாலும் அதனதன் கூட்டம் அதோடு சேர்ந்து விடுகின்றது.

இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் பெருக்கத்தை அதிகமாகக் கொண்டாருகின்றோமோ நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாறிவிடும்.

அப்படி மாறினால்… அதனுடைய கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அதனுடைய கூட்டமைப்பு எங்கே வாழுகின்றதோ…
1.அங்கே நம் உயிரான்மா சென்று
2.அந்தக் கூட்டமைப்புக்குள் சுற்றி
3.அதனின் உணர்வுக்குள் நுழைந்து
4.அந்த உணர்வின் ஆற்றலாக உடலை மாற்றிவிடும்.

ஆகவே இதையெல்லாம் தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தைப் படித்து விட்டு உங்களிடம் பாடவில்லை.. எனக்குக் கூடுவிட்டு கூடு பாயும் வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் குருநாதர் எம்மை மாட்டுக்குள்ளும் புகுரச் செய்தார்… பாம்புக்குள்ளும் போகச் சொன்னார்… யானைக்குள்ளும் போகச் சொன்னார்… அதை எவ்வாறெல்லாம் பெற வேண்டுமென்று…!

இதை எல்லாம் உங்களிடம் எளிதில் சொல்லவில்லை…! முன்னாடி சொல்லியிருக்க மாட்டேன்…!

வித்தை எல்லாம் தெரிந்து கொண்டு தான் அதற்குள் போகின்றேன். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை பெருகி விட்டால் ஆன்மாவின் தன்மை எப்படி ஆகும்…?
1.அதற்கு முன்னாடியே குருநாதர் என்னை கைவல்யம் செய்து
2.எப்பொழுதுமே கைப் பிடித்து வைத்திருந்தார்.

ஆகவே இதைப்போல அந்த உணர்வை இயக்கச் செய்து உணர்வின் தன்மை கவர்ந்து கொண்ட பின் இந்த உணர்வின் ஆன்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.அதிலே எது பெருகுகின்றது…?
2.எதனின் உடலில் ஆன்மாவை அழைக்கின்றது…?
3.மனித உடலில் பெருகிய பின் அந்த உடலுக்குள் போய் எப்படி இயக்குகின்றது..?
4.மீண்டும் நீ வெளிவர வேண்டும் என்றால் என்ன செய்வது…?

மனிதனின் உடலில் இது உருவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகின்றது…?.என்று தெளிவாக்கினார் குருநாடதர்

இதுதான் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை…!

அகஸ்தியரையும் அவரைப் போன்ற மற்ற மகரிஷிகளியும் காண வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

தியானம் ஏன் செய்ய வேண்டும்… எப்படிச் செய்ய வேண்டும்…?

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்

ardhanareeswara

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இச்சரீரக் கோளம் ஆணாயும் பெண்ணாயும் சிவசக்தித் தன்மை கொண்டது.

எத்தன்மையின் செயல் உடல் உருவம் பெறவும்… அதிலே சேர்க்கையின் அமில அணுக்கள் ஜீவன் பெற்று… உருவ உருப்பெறும் தன்மையில் எதன் நிலை அதிகமாக உருநிலை கொள்கின்றதோ…. அத்தன்மையின் உருவக ஜெனிப்பு ஆணாகவும்… பெண்ணாகவும்… உரு நிலை கொள்கின்றது.

ஆண் இன அமிலச் சேர்க்கையும்… பெண் இன அமிலச் சேர்க்கையும்…
1.வார்ப்பகத்தில் இரண்டு நிலை கொண்ட மோதல் நிலை கூடும் பொழுதுதான்
2.ஜீவ சக்தி சேர்ந்தவுடன் “உருவ நிலை” ஒன்று உருவாகின்றது.

ஆண் உடலிலும் பெண் இன அணுக்கள் உண்டு. பெண் இன அணுத் தன்மை இல்லா விட்டால் உயிர் ஜீவத் துடிப்பணுக்கள் உருநிலை பெறாது.

பெண் சரீரத்தில் ஆணின் அமிலத் தன்மையின் செயல் கொண்டுதான் பெண் உருவ உடலும் சுவாசத்தின் அமில மோதலின் ஜீவத்தன்மை பெண்ணாகி… செயல்நிலை கொள்ளும் சிவ சக்தியாய் ஒவ்வொரு உடல் தன்மையும் உருவ நிலை ஜீவிதம் பெறுகின்றது.

ஆண் பெண் அமிலச் சேர்க்கையின் ஜீவ சக்தியில் சேர்க்கப்படும் அமிலக் கூட்டின் விகிதத்தன்மையில் கூடப் பெறும்
1.ஆண் அமில… பெண் அமிலச் சேர்க்கை… விகிதத்தின் வீரியத் தன்மை கொண்டு
2.கூடும் தன்மையில் எது அதிகமாக உள்ளதோ அதற்குகந்த உருவ உடல் தன்மை கொள்கின்றது.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்று உணர்த்திய உண்மை நிலை தான் இது.

மூலத்தின்… ஆதி மூல ஆதிசக்தியின் படைப்பு அனைத்தும்… மூலம் சிவனாகி… உருவாகும் உருநிலை சக்தியாகி… ஜெனிப்புத் தொடர் உருவாகும் திட உருவத் தொடரில்… ஆவியாகி… அமிலமாகி… தொடர் பெறும் தொடரில்
1.ஆண் பெண் இனச் சேர்க்கை மாற்றச் செயலில்
2.ஆண் பெண் எல்லாமே ஒன்றுதான்..!.

இரண்டு தன்மையின் அமிலம்… ஈர்ப்பு வளர்ப்பின் உயிரணு… இவற்றில் ஆண் பெண் சேர்க்கையின் உயிரணு “ஆதி சக்தியின் தெய்வமாகின்றது…” உயிரணு யாவையுமே படைப்பின் படைப்புத் தெய்வம் தான்.

படைப்பின் படைக்கப் பெற்ற தொடர் நிலை… அது அது சேர்க்கப்படும் செயல் தன்மை தான் அவரவர்களுக்குச் சொந்தமாகின்றது.

உயிரின உயிரணுத் தன்மையில் ஆண் பெண் இன “வேறுபாடில்லை…”

சேர்க்கப்படும் அமிலக் கூறின் ஆத்ம பிம்பம் தான் இனத் தன்மையின் (அமிலத் தன்மை) சேர்க்கப்படும் விகித நிலைக்கொப்ப ஆண் பெண் திடச் சரீர உரு நிலை அமைகின்றது.

மனிதனுக்கு மட்டுமல்லாமல் உருவாகும் உருவ நிலை அனைத்திற்குமே… இதன் தொடர்ச்சி செயலில் தான் அண்ட சராசர கோளங்களும் அவற்றின் வளர்ப்பு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே… இத் தொடரில் வடிவம் பெறுகிறது.

அவ்வாறு வடிவம் பெற்று வளரும் தன்மையில்…
1.ஆதிசக்தியின் பொதுத் தன்மை கொண்ட உயிரணுவின்…
2.வலுத் தன்மையின்… ஒளித் தன்மை மங்காத் தன்மை கொண்டு
3.ஒளியின் ஒளி வீரியம் கொண்ட பிரகாசத்தின் வளர்ச்சியை…
4.மனித எண்ணத்தின் வளர்ச்சியின் பகுத்தறிவால் (தான்) வளர்க்க முடியும்.

உயிரை மணியாக்க வேண்டும்

 

பாதரசத்தை வைத்துச் சிலர் பல வேலைகளைச் செய்வார்கள். நம் குருநாதர் ஈஸ்வரபட்டரும் அதை வைத்துச் சில உண்மைகளை மக்களுக்கு உணர்த்தி அதன் மூலம் நம் உயிரை எப்படி மணியாக (ரசமணியாக – ஒளியாக) மாற்ற வேண்டும் என்று உணர்த்தினர்.

spiritual-need

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

எத்தனையோ நிலைகளில் இன்று இருந்தாலும் இந்தச் சரீரத்தை விட்டு ஆன்மா பிரிந்து சென்று விட்டால் நம் அழகையும் அல்லது நாம் போற்றித் துதித்த தருமத்தையும் யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…?

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள்…! என்று தான் சொல்கின்றார்கள்.

அங்கே எரிக்கும் இடத்தில் என்ன செய்கின்றனர்…? நெருப்பிலே இட்டு எரிக்கும் பொழுது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…! என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் உடலைப் போடும்போது அதை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? நம்மைச் சேர்ந்த சொந்தக்காரர்கள் தூக்கிப் போடுகின்றார்களா…? என்றால் இல்லை…!

யாரையாவது வைத்துத் தூக்கி போடுங்கள்…! என்று தான் போடுகின்றோம். அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு “அவர்கள் அதற்குதான்…!” என்கின்றார்கள்.

ஏனென்றால் இவர்களை அது சாடிவிடுமாம்…!

ஆனால் இறந்தவர்களின் சொத்து தேவை… வீடு வாசல் பணம் எல்லாம் தேவ…!. ஆகவே இப்படித்தான் நமது உணர்வு வருகின்றது.

1.இந்த உடலை “நமக்குச் சொந்தம்…!” என்று ஆக்க வேண்டாம்
2.இந்த உடலில் சொந்தம் கொண்டாடி அதிலே அறியாது வளர்த்துக் கொண்ட தீய வினை சாப வினைகள நீக்கி
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி அதிலே நிலை கொள்ள வேண்டும்.

என்றுமே நிலையான சரீரம் நமக்கு வேண்டுமென்றால் நம் பற்று எதிலே வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் உணர்வில் நமக்குப் பற்று வேண்டும். அந்தப் பற்றினை வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் அங்கே மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்கின்றோம்.

இல்லை என்றால்… சாப அலையில் தீய அலையில் சிக்கியவர்கள்… நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற இந்த எண்ணம் கொண்ட உணர்வுகள் வளர்ந்து… தாவர இனத்தை புசித்து வாழும் உடல் நிலை மாறி… மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் உடலாக வரும்.

அப்படிக் கொன்று மற்றொன்றின் உடலுக்குள் புகுந்து…
1.இப்படி பல நிலைகள் மாறி மாறிப் பல நரக லோகத்தைச் சந்தித்த பின்… அ
2.ந்தத் தண்டனைகளை எல்லாம் அனுபவித்த பின் தான்
3.மீண்டும் மனிதனாக வர முடியும்.

சாதரணமாக மனிதனின் கையில் சிக்கி அத்தகைய உயிரினங்கள் சாகாது தன் பசிக்காக ஏங்கி இருக்கும் மிருகங்களின் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி இதை அடித்துக் கொல்கிறதென்றால் அப்பொழுது புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பினத்தில் சிக்கித் தவிக்கிறது என்றால் அடுத்த பிறப்பில் அந்த உயிர் பாம்பாகதான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

1.எமக்கு குருநாதர் அந்த விண்ணுலக ஆற்றலையும்
2.மண்ணுலக நிலையில் உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

அவர் காட்டிய அந்த அரும் பெரும் சக்திகளை… உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் வந்த குணங்களும்… நீங்கள் வளர்ந்து வந்த நிலைகளும் அவைகளுடன் இணைத்தே உபதேசிக்கின்றோம் .

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய நிலைகளை
1.அந்த அண்டத்தில் இருக்கும் நிலைகளை
2.பிண்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உணர்வோடு இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளுக்கு உங்களை உருவாக்குவதுதான்…! என்னுடைய வேலை..!

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப்போல உங்களையும் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் அந்த மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

diamond soul

“வைரம்…” பாய்ந்த மரம் போன்று நட்சத்திரங்களின் ஒளியை உயிராத்மா பெற்றுப் “பிரகாசிக்க வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பூமியில் வளர்ப்பு கனிவளத்தில் எப்படி தங்கத்தின் நிலை மங்காத ஜொலிப்புடன் வளருகின்றது…? வைரத்தின் நிலை ஒளித் தன்மை கொண்டு எப்படிப் பிரகாசிக்கின்றது…?

பூமீயின் மார்பகச் சத்து வளர்ச்சியில் உயர் நிலை பெற்ற உலோகங்கள் பல நிலைக் கற்களாக… பல நிலைகளில் வளர்கின்றன.

அந்தந்த இடங்களில் வளரக்கூடிய வளர்ச்சி நிலை கொண்டு… காலத் தன்மைகளுக்கு மங்காத் தன்மையில் வெளிக் காக்கும் அமிலத்தின் தொடர் பாயப் பெறும் தருவாயில்… பூமியின் வளரும் உலோகங்களிலேயே இத்தன்மை கொண்ட “மங்காத் தன்மையும்… ஒளிக் கற்களும்” வளர்வதைப் போன்று… சில தாவரங்கள் பல காலங்கள் வளர்ந்து முற்றிய நிலை ஏற்பட்ட பிறகு அம்மரத்தின் வலுவில் வைரம் பாய்ந்த வைரத்தின் வளர்ப்பு நிலை வளர்கின்றதல்லவா…!

அம்மரத்தின் வளர்ப்புக் காலத்தின் வலுக்கூடிய வளர்ச்சி முற்றலினால்…
1.மண்டலங்களின் சந்திப்புக் காலங்களில்
2.இம்மரங்களின் ஈர்ப்பிற்கு அவ்வொளித் தன்மை பாய்ந்தவுடன்
3.வைரம் பாய்ந்த மரமாகி வளர ஆரம்பிக்கின்றது.

பூமியின் நிலத் தன்மையில் ஒளித் தன்மையும் தாவரங்கள் பெற்ற ஒளித் தன்மையும்
1.சில நிலைகளில் எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்றும்
2.மாணிக்கத்தை ஒளியாய் வளர்த்துக் காக்கும் ஜீவ இனப் பாம்பின் ஒளித்தன்மை போன்றும்
3.பூமி தாவர ஜீவராசிகள் இவற்றிக்கில்லா பகுத்தறியும் எண்ணத்தை மனிதன் உணரும் பக்குவத்தால் இவ்வுயிராத்மா ஒளியைத் தங்கத்தின் மங்காத் தன்மை போன்றும்
4.வைரத்தின் ஒளி கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் போன்றும் பிரகாசிக்கச் செய்ய முடியும்…!

எப்படி…?

உணர்வின் எண்ணத்தைச் சமம் கொண்டு ஓ…ம் என்ற நாதத்தின் ஜெபநிலை கொண்டு புருவ மத்தியில் நினைவச் செலுத்தி மகரிஷிகளின் காந்தமின் அலைத் தொடர்பைப் பெற்றிடல் வேண்டும்.

அந்த எண்ண சுவாசத் தொடரினால் உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே அந்தக் காந்த மின் சக்தியின் வலுவை வளர்க்கவல்ல வளர்ச்சியில் செயலைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை உருவாக்க முடியும்.

பாம்பு தான் எடுத்த அமிலக் கூட்டின் வளர்ப்பு வலுவைக் கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் பெறுவது போன்று… மரத்தின் அமிலக் கூட்டிற்கொப்ப அம்மரம் பெற்ற ஜீவ ஒளித் தன்மையை வலுவைக் கொண்டு அதன் ஈர்ப்பை வைரம் பாய்வது போன்று… பூமியின் சில இடங்களில் சில உயர்ந்த தாதுப் பொருள்கள் அந்தந்த இடங்களில் அமில வளர்ப்பு உயிர் வலுவின் தன்மைக்குகந்த வளர்ப்புகள் வளர்வதைப் போன்று…
1.இஜ்ஜீவ சரீரத்தின் (மனித) உயிராத்ம வலுவின் காந்த சக்தியின் ஆத்ம வலு கூடிய தன்மையில்
2..பூமி சந்திப்பு ஓட்டத்தில் செல்கின்ற மண்டலங்களின் உயிர் ஒளித்தன்மை
3.இச்சரீரத்திற்கு நேராகவே பாயும் தன்மை ஏற்படும்.

சரீர ஜீவனில் அப்படி மோதப் பெறும் ஒளித் தன்மையைக் கொண்டு உயிராத்மாவின் ஒளி வட்டம் பிரகாசிக்கும்… ஜொலிப்புத் தன்மை பெறும்….!

இப்படி ஆனவர்கள் தான் மாமகரிஷிகள்…!

இராமாயணக் காவியத்தை அடிக்கடி சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

ஈஸ்வரபட்டர் எனக்குள் உண்மையை எப்படி உணர்த்திக் கொண்டு வந்தாரோ அதே வழியில் தான் எல்லாவற்றையும் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றேன். (ஞானகுரு)

என்னால் தியானமே செய்ய முடியவில்லை… என்பார்கள்

உட்கொள்ளும் உணவுகளில் கலக்கப்படும் விஷத் தன்மைகளை அகற்ற நாம் செய்ய வேண்டிய பயிற்சி

 

நோயுடனும் துன்பமுடனும் வருபவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய தியானப் பயிற்சி

Inner peace

உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போர்… உடலுக்குள் போனால் மகாபாரதப் போர் – விளக்கம்

 

ஒவ்வொரு நிமிடமும் நாம் நல்ல குணங்கள் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கின்றோம். இருந்தாலும் நம் நண்பர் வேதனைப்படுகின்றார் என்றால் அதை நுகர்ந்தால் குருஷேத்திரப்போர் ஆகின்றது.

1.நம் உடலுக்குள் குருவாக இருக்கின்றது உயிர்.
2.உயிரிலே (சுவாசித்தது புருவ மத்தியில்) பட்டபின் குருஷேத்திரப்போர் நடக்கின்றது.

என் நண்பனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று ஏங்கிப் பெற்றால் நம் உடலுக்குள் போனால் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் நடக்கின்றது மகாபாரதப் போர்.

இப்படி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் போர்கள் நடந்து கொண்டே இருக்கின்றது.

அதாவது கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருஷேத்திரப் போர்…
1.வேதனைப்படும் உணர்வைக் கண்கள் கவர்ந்து உயிரிலே மோதும் போது
2.அந்த வேதனை என்ற உணர்வுகளைச் சங்கநாதம் ஊதுகின்றது.

ஆனாலும்… வேதனைப்படுகின்றான் என்ற இந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுடன் கலக்கப்படும்போது இங்கே குருஷேத்திரப் போர் நடக்கின்றது. ஏனென்றால் உடலுக்குள் இருக்கும் அனைத்து நல்ல குணங்களுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

அதே சமயத்தில்… வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அந்த உணர்ச்சிகள் உடலுக்குள் சென்ற பின்…
1.உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் இது தாக்கப்படும் போது
2.பதட்டமும் பயமும் ஏற்பட்டு மகாபாரதப் போர் ஆகின்றது.

இப்படி உடலுக்குள் வேதனை என்ற உணர்வு புகுந்து விட்டால் விஷத்தின் தன்மை நமக்குள் வளர்ச்சியாகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு நொடிக்கு நொடி குருக்ஷேத்திரப் போரும் மகாபாரதப் போரும் நடந்து கொண்டேதான் உள்ளது.

“சந்தோஷம்…” என்ற சீதா ராமனாக.. அதாவது சந்தோஷம் என்ற எண்ணங்கள் (ராமன் எண்ணம்… சீதா மகிழ்ச்சி) கொண்டு வாழ்ந்தாலும் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்தால் வாலி ஆகின்றது.

அந்த வாலி என்ற உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம் நல்ல குணங்களைக் கொல்லத் தொடங்குகின்றது…இரண்யன்.

நாம் மகிழ்ச்சி என்ற உணர்வைத் தான் தோற்றுவிக்க எண்ணுகின்றோம்.

ஆனால் நண்பனைப் பார்த்து வேதனைப்படும்போது அதை நுகர்ந்தால் வாலியாகி… நமது நல்ல குணங்களை எப்படி அழித்து மாற்றிவிடுகின்றது…? என்று
1.சுவையின் உணர்வுகள் அந்த உணர்ச்சிகள்
2.நமக்குள் எப்படி இயக்குகின்றது…? என்று இராமயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

அதை யாராவது நாம் மதிக்கின்றோமா…?.

நம் எண்ணங்கள் எப்படிச் செயல் படுகின்றது…? வேதனை என்ற உணர்வை நுகர்ந்த அது நம் நல்ல குணங்களைக் கொன்றிடும் இரண்யனாகின்றது என்பதை ஞானிகள் காட்டுகின்றனர்.

தசரத சக்கரவர்த்தி என்பது பத்தாவது நிலை அடையக்கூடிய உயிர். நாம் எண்ணும் உணர்வுகள் நமக்குள் இரையானாலும் வேதனை என்ற உணர்வு வரும்போது
1.அந்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி
2.மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை அது கொன்று விடுகின்றது “தசப்பிரியன்…”

அதன் மூலம் நாம் அடிக்கடி வேதனைப்பட்டு இந்த உடலை வளர்ப்பதற்கும்… மற்றொருவரைக் கொன்று புசிப்பதற்கும்… மற்றவருக்குத் தொல்லை கொடுக்கும் நிலையே நமக்குள் வருகின்றது. ஆனால் இதே தொல்லை கொடுக்கும் உணர்வை நுகரும்போது தசப்பிரியன் ஆகின்றது.

பத்தாவது நிலை அடையக் கூடிய உயிரில் நாம் எடுக்கப்படும்போது இதே உயிர்தான் அதையும் வளர்க்கின்றது. அந்தக் கோபம் என்ற உணர்வு உயிரிலே பட்டபின் அசுர உணர்வை வளர்க்கின்றது. நம் நல்ல குணங்களை கொல்கின்றது.

சீதா – சுவை மகிழ்ச்சி… என்ற நிலை வரப்படும் பொழுது உடலான இந்திரலோகம் நம்மை மகிழச் செய்கிறது. ஆனால் சந்தர்ப்பத்தால் வந்த வேதனை என்ற உணர்வுகள் இந்த இந்திரலோகத்தில் வந்தால் நல்லதை உருவாக்காதபடி தடையாகின்றது.

அதாவது மகிழச் செய்யும் இந்திரலோகத்தைச் சிறைப் பிடித்து விடுகின்றான் இரண்யன். நம் ஆறாவது அறிவு இயக்கமற்ற நிலைகள் மாற்றும் போது அசுர உணர்வுகள் நமக்குள் வரப்படும்பொழுது இந்த உடலில் எப்படி விளைகின்றது…? என்பதனைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் அந்தத் தசப்பிரியன் என்ற நிலை வரும்போது அவன் எண்ணும் உணர்வுகள்.. அவனும் விஷ்ணுவை (உயிரை) நோக்கித் தான் தவமிருக்கின்றான்.

1.நான் சொன்னபடிதான் இந்த உயிர் கேட்க வேண்டும்…! என்று
2.விஷ்ணுவை அடிமைப்படுத்தக் கடும் யாகங்களைச் செய்கின்றான்…!
3.என் வழிக்குத் தான் நீ வரவேண்டுமே தவிர உன் வழிக்கு நான் வர முடியாது என்று
4.நம் உணர்வின் தன்மை உயிர் பத்தாவது நிலை அடைந்தாலும் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது
5.நம் உயிரான ஈசனை நமக்குள் நல்லதை உருவாக்காதபடி எப்படித் தடையாகிறது என்று காட்டுகின்றார்கள்.

நெருப்பிலே நீங்கள் எந்தப் பொருளைப் போடுகின்றனரோ அந்த மணம் தான் அதிலிருந்து வரும். நம் உயிர் ஒரு நெருப்பு. அதிலே வேதனை என்ற விஷத்தின் தன்மையைப் போட்டால் விஷத்தின் தன்மைதான் இயக்கும்.

உயிருடைய வேலை அதுதான்…! என்பதனை இங்கு தெளிவாகக் காட்டப்படுகின்றது

இந்த உடலில் விஷத்தின் தன்மை அதிகமானால் விஷத்தை உடலாக்கிக் கொண்ட மற்ற உயிரினங்கள் எப்படியோ அந்த நிலை அடையச் செய்கின்றது.

இந்த ஐந்தாவது அறிவிலிருந்து ஆறாவது அறிவு வரும்போது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.
1.தீமைகளை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்ற மனிதனுக்குள்
2.விஷத்தின் தன்மை தோயப்படும்போது அது மனிதனை எப்படி மாற்றுகின்றது…?
3.இதிலிருந்து எப்படி மனிதன் மீள்தல் வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது இராமயாணம்.

ஆகவே தான் கோவில்களிலே நம் மனதைக் குவித்து… பகைமையற்ற நிலைகள் கொண்டு எல்லோரும் பேரின்பம் பெற வேண்டுமென்று காட்டப்பட்டுள்ளது.

1.நல்ல குணத்தை வளர்க்க…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் இணைத்து
2.எப்படி வளர்க்க வேண்டுமென்று கோவில்களில் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

உயிரிலே பட்டு விட்டால் அது இயக்கத்தான் செய்யும் – விளக்கம் 

ஓம் என்ற நாதமாக நம்மை இயக்கும் உயிரை நம்மை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்

நம் உயிரின் சாபம் எப்படிப்பட்டது…?

polaris - north

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரத் தியானிக்க வேண்டிய முறை

 

அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி… அம்மா அப்பா அருளால் நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்… அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களையும் “ஒன்றாகச் சேர்த்து”
2.உங்கள் கண்ணின் வழி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வை
3.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கி இருங்கள்.

அதைப் பெற வேண்டும் என்ற இச்சைப் பட வேண்டும். அந்த உணர்வை உங்களுள் கிரியையாக்கி… ஞானத்தின் வழி உங்கள் வாழ்க்கையை வாழ இது உதவும்.

1.உங்கள் உடலுக்குள் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி
3.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த கண்ணின் ஈர்ப்பிற்கே வரும்….!

அந்தச் சக்திவாய்ந்த நிலைகள் ஈர்ப்புக்கு வரும்போது உங்கள் கண் “கனமாக” இருக்கும் வெகு தொலைவில் இருந்து வரக்கூடிய உணர்வை… எண்ணி ஏங்கும்போது…! அது நம் பூமியில் படர்ந்து வருவதை எளிதில் பெற முடியும்.

யாம் (ஞானகுரு) பதிவாக்கிய அந்த உணர்வின் தன்மை பெறச் செய்யும்போது.. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் நோக்கத்துடன் ஏங்கித் தியானியுங்கள் ஒரு இரண்டு நிமிடம்.

இப்பொழுது அந்தச் சக்திகள் உங்கள் கண்ணுக்கே வரும்.
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்துங்கள்.
2.கண்ணை மூடுங்கள்….!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களை இயக்கி கொண்டிருக்கும் “உயிரான ஈசனிடம்” இந்த உணர்வைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செலுத்துவதனால் உங்கள் உடலுக்குள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை போன்ற வேண்டாத உணர்வு கொண்ட அணுக்கள் இருந்தால்
1.அவைகளுக்கெல்லாம் ஆகாரம் செல்லாதபடி
2.உங்கள் இரத்தத்தில் மாசுபடும் நிலை வராதபடி தடுக்க இது உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தி வரப்படும்போது இப்பொழுது கனமாக இருக்கும். சிலருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள் உங்கள் புருவத்தில் மோதும்போது ஒளிக் கற்றைகள் தெரிய வரும்.

எனக்கு குருநாதர் எப்படிச் செய்தாரோ அதன் வழிப்படியே உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி உங்களுக்கும் அந்த அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அதன் வழியிலேயே நீங்கள் கவருங்கள்.

இப்பொழுது..
1.உயிர் வழி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிலிருந்து வரும் பேரருளை அது கவருகின்றது
2.உங்கள் உயிரின் தன்மை அது வலுப் பெறுகின்றது.
3.தீமைகள் புகாது தடைப்படுகின்றது.

உங்கள் மனதில் அமைதி கிடைக்கும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் நல்லவை எல்லாம் கேட்டறிந்தாலும் இந்த உணர்வுகள் இயக்கணுவாக… உங்கள் இரத்ததில் வந்தவுடனே ஜீவணுவாக மாறுகின்றது.

உங்கள் கண்ணின் நினைவினை அந்த ஜீவணுக்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணும்போது இந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த உடலில் உள்ள ஜீவணுக்களும் அதைப் பெறுகின்றது.

“ஜீவான்மா…!” இன்னொரு உடலில் விளைந்தது ஆன்மா…! நீங்கள் பாசத்தோடு பண்போடு பிறருக்கு உதவி செய்தாலும் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அவர் உடலில் விளைய வைத்த அந்த வேதனை விஷத் தன்மை கொண்டு உங்கள் உடலுக்குள் வருகின்றது.

ஆக… அந்த ஆன்மாவுக்கு அது மாற்ற முடியாது…. மாற்றத் தெரியாது.

விஷமாக இருப்பதனால் இந்த இரத்தத்தில் இருந்து இரத்தத்தையே மீண்டும் மாசுப்படுத்தி அதனால் வந்த ஜீவணுக்களுக்கு ஆகாரம் கொடுத்து அதை வளர்க்கும் அதன் உணர்வே உங்கள் செயலில் வரும்.

இதைப்போன்ற நிலைகளை மாற்றி அமைக்க துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உங்கள் இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது உங்கள் உடலில் புது உணர்ச்சி அந்த இரத்த நாளங்களில் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து.,.. எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்

1.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள் அந்தச் சக்தி பெற
2.அந்த அணுக்களை எண்ணி நான் (ஞானகுரு) ஏங்கித் தியானிக்கின்றேன்.

நீங்களும் அதே போல் எண்ணி ஏங்கும் பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் சந்தர்ப்பமும்…
2.அதைக் கவரும் சக்தியும்
3.அது வளரும் வாய்ப்பும் கிடைக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். உங்கள் உடலைச் சுற்றி “ஒரு வெளிச்சம் வரும்…!”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறும் பயிற்சி

செல் ஃபோனில் பதிவு செய்வது போல் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்கின்றேன். மிக மிக எளிதாக நீங்கள் எடுக்க முடியும்.

 

ஏனென்றால் அந்தப் பதிவு இருந்தால் எடுக்க முடியும். அதற்குத்தான் பதிவு செய்து வேண்டும் என்று சொல்வது.

nadi chakkar cleanings

உடலைக் காக்கும் மருத்துவர்கள் போல் தான் “உயிரான்மாவை ஞானிகளும் காத்தார்கள்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எல்லாமில் எல்லாமாய் உள்ள “இறை சக்தி” பொதுவான சக்தியாய்ச் செயல் கொள்ளும் தன்மைக்கு அவரவர்களின் எண்ணச் செயலை ஒவ்வொரு சாராரும் தன் எண்ணத்திற்குகந்த செயலைச் செய்விக்கத் தெய்வத்தின் துணையை நாடுகின்றனர்.

தெய்வத்தின் துணையை எப்படி அவரவர்கள் பெறுகின்றனர்…?

மருத்துவர் தன் மருத்துவத்தில் கற்ற செயலுக்காகவும்… தன் ஜீவாதாரப் பொருளுக்காகவும்… தான் கற்ற மருத்துவத் தொழிலுக்காக வியாதியஸ்தன் வரவேண்டும் என்று எண்ணுபவனும் உண்டு.

தன் தொழில் நடக்க வேண்டும் என்று எண்ணுவதே தன் சுயநல வளர்ப்பிற்காகத்தான்…!

வியாதியஸ்தன் தன் வியாதியைக் குணமாக்க தெய்வத்திடம் எண்ணத்தைச் செலுத்துகின்றான்.
1.வைத்தியனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வருவாய்க்காக)
2.வியாதியஸ்தனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வியாதி நீங்க)

இந்த இரு சாரரில் யாருக்கு அந்த இறைவன் சொந்தம்…?

வைத்தியன் மற்றவர்களுக்கு வியாதி வந்து அவதிப்பட வேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் தன் ஜீவாதார தேவைக்காகவும் தான் வளர்த்துக் கொண்ட… வழி முறை செயல் வளரவும் தெய்வத்தை வேண்டுகின்றான்.

வைத்தியனின் வைத்திய முறையில் அவன் கற்ற திறமை கொண்டு அந்தத் திறமைக்குகந்த ஜீவ ஆத்மாக்கள் அவனை நாடி வருகின்றன.

நோயாளியின் தன்மையிலும்…
1.தன் வியாதி குணமாக வேண்டுமென்ற உந்தலில் எடுக்கப்படும் எண்ணத்தால் ஆத்ம செயல் உருவாகி
2.அவனுள் உள்ள இறை சக்தியே அவனுக்கு அவன் வியாதியை சொஸ்தப்படுத்துகின்றது.

ஆகவே தெய்வத்தின் செயல்… நன்மை தீமை பார்த்துச் செயல்படவில்லை…!

உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு… சாதாரணத் தலைவலி போன்றவைகளுக்கு தலையில் மட்டும் மருந்தை தேய்க்கின்றோம்.

அதுவே நிற்காமல் அதிகப்படும் பொழுது… மாத்திரைகளாக உட்கொள்கின்றோம். அது ஆகாரமாகி… ஆவியாகி.. அதன் செயலைச் செய்கின்றது.

அதற்கும் முற்றிய நோய்களுக்கு… உதிரமுடன் கலக்கச் செய்யும் வீரிய மருந்துகளை ஊசியின் மூலம் ஏற்றுகின்றார்கள். அதற்கும் அடுத்தநிலை நரம்புகளிலேயே மருந்துகளை செலுத்துகின்றார்கள்.

அதற்கும் முற்றிய நிலையில்… எலும்புகளில் துவாரமிட்டு அதன் தொடரில் வைத்திய நிலை முற்றியுள்ள விஞ்ஞானச் செயலில் உடல் உபாதையை அகற்ற மருத்துவம் செயல்படுகின்றது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்…!)

இவைகளைப் போன்றே
1.இவ்வுடலில் நாமெடுக்கக் கூடிய மகரிஷிகளின் மின் அலைத் தொடர்பினால்
2.ஊடுருவல் நிலை கொண்டு அதைச் சுவாசமாக்கி
3.அதன் வளர்ச்சியில் உதிரமாகி… நரம்பு கோளங்கள் வலுப் பெற்று
4.உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊன் நிலையில் வலுவாகும் வழி முறையில் தான்
5.உயிரத்மாவிற்கு நாம் வலுக் கூட்ட முடியும்…!

அகஸ்தியரையும் அவரைப் போன்ற மற்ற மகரிஷிகளியும் காண வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானிக்கும் முறை 

நாம் எடுக்க வேண்டிய பிரமாணம் 

pitutary glands

நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “முன் கூட்டியே அறிய முடியுமா…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:
ஆற்றின் குறுக்கே பழைய பாலம் ஒன்று; புகை வண்டியின் போக்குவரத்தின் தண்டவாளமுடன் தெரிகின்றது.

அதிவேகமாய் ஒரு புகை வண்டி வருவதைப் போன்றும்… வரும் வேகத்தில் ஓடக்கூடிய நிலையில் அப்பாலத்தின் நடு மையம் சரிந்து… புகைவண்டிப் பெட்டிகள் எல்லாம் பாலத்துடன் ஆற்றில் விழுவதைப் போன்றும்… இரண்டு பெட்டிகள் மட்டும் பாலத்தின் இக்கரையில் உடையப் பெற்று நிற்கும் பாலத்தில் நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

இதன் பொருள் என்ன…?

இயற்கையில் தன் இச்சையுடன் சுழலத்தக்க மண்டலங்களின் கால நிலை… அவைகளின் சந்திப்புத் தன்மை… சீதோஷ்ண நிலை… வரப் போகும் மாற்றத்தின் முன் அறிவிப்பு… நிகழ் இயற்கைத் தன்மை… பூகம்பம்… கடல் கொந்தளிப்பு… காற்று… மழை…
1.பூமியில் அந்தந்த இடங்களில் எந்தெந்தக் காலத்தில் உஷ்ண நிலை மாறும் கொள்ளும் செயல்
2.இப்படி இயற்கையில் வரும் தன்மை வருவதற்கு முதலிலேயே
3.இன்றைய மனித விஞ்ஞானத்தில் அறியும் ஆற்றலைச் செயல்படுத்தி அறியும் விஞ்ஞானத்தின் செயலைப் போன்று
4.தன் ஞானத்தினாலேயே… அன்றையக் கால நிலையை அறியும் ஜோதிடத் தன்மையில்… இவ் ஒலி ஒளித் தன்மையை உணர்த்தினர் ஞானியர்.

கால ஜோதிட விஞ்ஞான கால சாஸ்திர செயல் முறையிலும் இயற்கையில் நிகழப்போகும் நிலையை அறியும் நிலையுண்டு.

காட்சியில் கண்ட செயற்கையின் விபத்துகளை உணர முடியுமா…?

காட்சியில் கண்ட செயற்கை நிலையில் நிகழும் விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மை எப்படி ஏற்படுகின்றது…?

சில பொருட்களின் உறுதியையும் தேய்மானத்தையும் கணக்கில் கொண்டு… பார்க்கும் பொருளின்… அதன் உறுதியான உழைக்கும் காலத்தைக் கணக்கிடுகின்றோம்.

எதிர்பாராமல் நடக்கும் செயற்கை விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மைகளை…
1.இச்சரீர உணர்வு எடுக்கும் ஒலியைக் கொண்டு ஒளி அலையை…
2.இக்காற்றின் அமிலத் தன்மைக்கும்… இச்சரீரத்தில் வளர்த்துக் கொண்ட காந்தமின் அலையின் வீரிய நிலையான அமிலத் தன்மைக்கும்
3.இரசத்தன்மையின் (அதாவது பாதரசம்) உணர்வின் எண்ணமுடன் ஜீவ சரீர இயக்கத்தில் மோதும் பொழுது
4.இச்சரீர உணர்வு எண்ண ஒலி கொண்டு ஒளி நிலை பெற்ற தன்மையினால்
5.இப்பூமியின் வளர்ச்சித் தன்மையின் மாற்று நிலை நிகழப் போகக் கூடிய இடங்களின் செயலை அறியலாம்.

இச்சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒளி சக்தியில்… ஆத்ம வலுவின் ஒளி கூடிய தன்மையில்… சூரிய ஒளிக்கும் பூமியின் ஒளிக்கும் இடையில் மாறு கொள்ளும் தன்மையில்… பூமி எடுத்து வெளிப்படுத்தும் அலைத் தன்மையை “இச்சரீர இயக்கம் ஒளி கொண்டு காண முடியும்…!”

புகைவண்டி விபத்துக்குள்ளாகின்றதென்றால்…
1.விபத்து நடக்கக்கூடிய காலத்திற்கு முன்பாகவே
2.பூமியின் அலையில் பூமி வெளிப்படுத்தும் ஆவித்தன்மையில்
3.அந்தந்த இடங்களில் நடக்கும் செயல் நிலை “தடுமாற்றம் கொள்ளும்…”

பூமியில் சில இடங்களில் மட்டும் எப்படிச் சூறாவளி என்ற சுழல் காற்று சுழல்கின்றதோ… அதைப் போன்று பூமியின் உள் நிலையிலிருந்து வெளிக்கக்கும் ஆவி அமிலத் தன்மையிலும் சில நிலைகள் வெளிப்படும்.

அத்தகைய காலத்தில்… அந்த இடங்களில் செயல் கொள்ளும் மனித உணர்வே… புகைவண்டியில் பலர் சென்றாலும்
1.ஜீவ சரீர உணர்வின் அலையுடன் அத்தொடர்பலை மோதியவுடன்
2.திகில் கொண்ட தடுமாற்றம் ஏற்பட்டு… அதனால் செயல்கள் மாறி விபத்துக்கள் ஏற்படும்.

மனித செயலினால் செயல்படுத்தப்பட்ட தண்டவாளத்திலும்… பாலத்தின் வலுத் தன்மை குறைந்திருந்தாலும்… இப்பூமியின் இயக்கமும் ஒன்றி… இப்பூமியின் வளர்ப்பில் சரீர இயக்கத்தில் ஒளி சக்தி பெற்ற தன்மையினால் செயல் தன்மை வலுக் குன்றி… விபத்துக்கள் உண்டாகும்.

இப்படி நடக்கக்கூடிய தன்மையை… உணர்வின் ஒலி சக்தி கொண்டு ஒளித் தன்மையால்
1.அணுவுக்குள் அணு ஊடுருவும் செயல் தன்மையில்
2.மாற்றுத் தன்மையினால் நிகழும் விபரீதங்களையும் ஞான ஒளியினால் அறிய முடியும்.

இச்சரீரமே ஒளி நிலை கொண்ட ஞான ஜோதியாய் ஒளித் தன்மை கொள்ளும் வளர்ப்பினால்
1.இயற்கை மாற்றம்…
2.செயற்கை வழி… செயற்கை மாற்றம்…! ஒவ்வொன்றையும் அறிய முடியும்.

ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் செயல் முறையில் இயற்கை செயற்கை எல்லாமே இவ்வொலித் தன்மையின் ஒளி நிலை பெற்ற ஆத்ம சரீரத்தில் அறிய முடியும்.

ஜெபம் கொண்டு தியானத்தால் தன் உணர்வைச் சமப்படுத்தி அறியும் நிலை இது.
1.சரீர இயக்கச் செயலுடனும்
2.சரீரமற்ற ஆத்ம உயிரின் தொடர்புடனும்
3.சித்து விளையாட்டின் சித்துச் செயலிலும் நிகழும் நிலையை அறிய முடியும்.

ஆனால்… பலனற்ற தன்மை தான் சரீரமற்ற உயிராத்மாவின் (ஆவி…. ஏவல்… மந்திரம்) தொடர்பு கொண்டு செயல்படுத்தும் முறை

ஆகவே… ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குள் உள்ள குருவான தன்னுயிரைத் தெய்வமாக்கி…
1.ஒலி கொண்டு ஒளி பெறும்
2.எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும். அறியும் ஞானத் தொடர் கொண்டு
3.தன் ஜீவ ஆத்மாவில் இருந்தே “வளர்ச்சி நிலை” ஒவ்வொன்றையும் அறியலாம்.

இரவு படுக்கும் முன்… காலை எழுந்ததும் செய்யும் பிரார்த்தனை

நம் உடலுக்குள் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு… அதிலே அறியாது வந்த தீமைகளும் உண்டு. அத்தகைய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு கோணங்களிலும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். (ஞானகுரு)’

காலை எழுந்ததும் (கண் முழித்ததும்) துருவ தியானத்திலும் இரவு படுக்கும் முன்னும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்…. காற்று மண்டலத்தில் வரும் நச்சுத் தன்மையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

Meditating - protection

தியானம் செய்வது எதற்காக…?

 

வாழ்க்கையில் இப்போது நாம் எல்லோரும் நல்லது தான் செய்கின்றோம்… யாரும் தவறு செய்வதில்லை.

ஆனால் நல்லது செய்யும் போது
1.நம்மைக் காட்டிலும் கடுமையான உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்.
2.அந்தக் கடுமையான உணர்வு நமக்குள் வந்தவுடன்… நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றது.

நம் நல்ல குணங்கள் மறையாமல் தடுப்பதற்காக எல்லாவற்றையும் ஒளியாக மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் மறவாது எடுத்தல் வேண்டும்.

அதன் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து நாம் ஒவ்வொரு அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உரமாக ஏற்ற வேண்டும். “அது தான் தியானம்…!”

ஒரு நிலத்தில் வித்துக்களை ஊன்றுகின்றோம். பல விதமான குப்பைகளைப் போடுகின்றோம். அந்தக் குப்பையில் இருக்கக்கூடிய சத்தை எடுத்து அந்தச் செடி நல்ல பலனை எப்படித் தருகின்றதோ இதைப்போல நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களுக்கு… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகேற்றினால் வலிமை பெற்று விடும்.

ஏனென்றால்…
1.இந்தக் கஷ்டம் என்பதை விட்டு விட வேண்டும்…
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “நல்லதாக இருக்க வேண்டும்…!” என்று எண்ணித் தான் ஆக வேண்டும்.

இதை எடுத்தீர்கள் என்றால் உடலுக்குள் வந்த தீமைக்கு வலிமை கிடைக்காது. நம்முடைய நல்ல எண்ணம் வலிமை சேர்த்துவிடும். ஆக… நம் உடலுக்குள் பல அசுத்தங்கள் இருந்தாலும்… தீய உணர்வு இருந்தாலும்… இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஜீவணுக்களுக்குச் செருகேற்ற வேண்டும்.

தினமும் காலையில் 4 மணிக்கெல்லாம் ஒரு ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடமாவது கட்டாயப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி ஜீவன் ஊட்டிக் கொண்டு வந்தால்… இதற்கு முன்னாடி நாம் செய்த பிழைகள் எது இருந்தாலும்… அல்லது நமக்குள் தீமைகள் எது வந்தாலும்… அதை நல்லதாக மாற்ற முடியும்.

எப்படி…?

1.செடிகளுக்கு அந்தக் குப்பைகள் எப்படிச் சத்தாகின்றதோ அதைப் போல துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைத்துக் கொண்டால் அந்த உணர்வுகள் ஒளியாகின்றது.
2.அதே போல குப்பைகளை எல்லாம் போட்டு எரித்து எப்படி நெருப்பாக (ஒளி) ஆக்குகின்றோமோ இதைப் போல நமக்குள் வரும் எந்த உணர்வின் தன்மையாக இருந்தாலும் நமக்குள் அதை ஒளியாக்கிட முடியும்.

இதெல்லாம் ஒன்றும் கஷ்டமில்லை…!

உங்களுக்கு அந்தச் சக்தி பெறுவதற்குத் நான் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றேன். நீங்கள் வந்த சந்தர்ப்பம் நல்ல சந்தர்ப்பம் இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

எல்லாமே உங்கள் ஆசை தான்…!
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் கிரியை ஆக்க வேண்டும்.
3.அதன் ஞான வழிப்படி இந்த உணர்வுகள் இந்த வாழ்க்கையில் உங்களைச் செயலாக்கும்…! (அனுபவத்தில் பார்க்கலாம்)

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலிமையாக ஆக்க அந்தச் சக்தியை ஆசைப்பட்டோமென்றால் அதன் உணர்வின் தன்மை நமக்குள் விளையும். அப்பொழுது அது தெய்வ ஆணையாக மாறுகின்றது. நமது உணர்வுகள் “தெய்வ ஆணையாக” மாறும்

உங்கள் உயிரான ஈசனை மதித்து வாழுங்கள். உங்கள் உயிரான ஈசனை மதித்து வாழும் ஆலயம் தான் கோவில்.

1.நமக்குள் பல பிரிவுகள் (எண்ணங்கள்.. குணங்கள்… உணர்வுகள்…) இருப்பினும்
2.அது எதனதன் பிரிவில் தீங்கு விளைவிக்கின்றது…?
2.நாம் அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று தான்
4.பாமர மக்களுக்கும் ஞானிகள் தெரியச் செய்து
5.இந்த உடலுக்குப் பின் “பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…” என்று காட்டியுள்ளார்கள்.

பல துயர்கள் பட்டாலும்… அதிலிருந்து மீண்டு அருள் ஒளி பெற வேண்டும்… பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… ஏகாந்த நிலை பெற வேண்டும்… என்று காட்டினார்கள்.

“தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று நம் தென்னாட்டிலே காட்டப்பட்ட நமது ஆலய பண்புகள் அவ்வளவு “அற்புதமானது…!”

கதிரியக்கமும் பூகம்பமும் நிலநடுக்கமும்

லேசர் மூலம் இயக்கும் விஞ்ஞானிகளின் செயல்கள்

நம்மை அறியாமல் இயக்கும் சில சக்திகள்

headache

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்

 

வைரம் எவவறு நஞ்சின் தன்மை எதுவாக இருப்பினும் அது ஒளியாக மின்னுகின்றது. நஞ்சின் தன்மை இதற்குள் உயிர் ஊட்டுகின்றது.

ஒரு பாம்பினம் தன் நஞ்சினைப் பாய்ச்சியே மற்ற உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றது. அதன் வழியில் நஞ்சினைப் பெருக்கிய பின் அந்த நஞ்சே வைரக் கல்லாக… நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் வாழ்வில் எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் அருள் ஞானிகள்.

அந்த நஞ்சினை அடக்கிய அருள் ஞானியின் உணர்வைப் பெறும் நிலையாக..
1.கூர்மையாக விண்ணை நோக்கி நாம் ஏங்கி
2.அந்த ஞானிகளின் உணர்வின் சத்தைப் புத்திரனாக்கி
3.அதனுடைய நிலைகள் பெற வேண்டுமென்ற பாசத்தின் உணர்வுடன் உந்தி… அதைக் கயிறாக மாற்றி…
4.உயிருடன் ஒன்றி அந்த அருள் ஞானி உணர்வுடன் நாம் சேர்ந்தே இருந்தோம் என்றால் நல்லது.

அப்படி இல்லாமல் ஒரு வேண்டாதவரைப் பார்த்து அவருக்கு அப்படித்தான் வேண்டும்… வேண்டும்…! என்று அவர் படும் வேதனையைக் கண்டு ரசித்தால்… இந்தப் பாசம் என்ன செய்யும்…?

இது அப்படியே கயிறாக மாறும். அவர் எத்தனை வேதனைப்படுகின்றாரோ அதெலெல்லாம் இங்கே சிருஷ்டியாகத் தொடங்கும். இது உங்களுக்கு தெரியாது… யாருக்கும் தெரியாது.

பாருங்கள்…. நான் பேசிக் கொண்டே இருக்கின்றேன்.. அயோக்கியத்தனம் செய்கின்றான் என்பார்கள். ஆக…
1.தான் சொல்வதைச் சொல்லி விட்டு “அவன் அயோக்கியத்தனம் செய்கிறான்..
2.இப்படி இருந்தால் என்னங்க செய்வது…?” என்று அடுத்தவரிடம் நியாயத்தைப் பேசுவார்கள்.

இப்படி இங்கே அந்த உணர்வுகளை நுகர்ந்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும்.

எப்படிப் பாம்பினம் தனக்குள் விஷத் தன்மையைக் கூட்டிக் கொள்கின்றதோ அதைப் போல் இந்த அணுக்கள் உடலில் விளைந்து அதன் துணை கொண்டு அடுத்து பாம்பாக நிச்சயம் பிறக்கச் செய்துவிடும் உயிர்.

ஆனால் இதனை அடக்கிய அருள் ஞானிகள் உணர்வின் மீது நாம் இச்சைப்பட்டு அதன் உணர்வின் தன்மையை நாமெடுத்தால் நஞ்சை அடக்கிடும் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும்.

ஏனென்றால் இந்த மனிதனின் வாழ்க்கையில் தண்டனைக்குரியது எது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1.ஒருத்தர் மேல் வெறுப்பாகும் பொழுது அது எந்த அளவு கோலுக்கு அதிகரிக்கின்றதோ அவர் படும் துயரமெல்லாம் தனக்குள் வரும்.
2.பாசத்தால் அன்பால் பரிவால் இப்படி வேதனைப்படுகின்றானே…” என்று அடிக்கடி எண்ணினால் அதன் கணக்கின் பிரகாரம் அதுவே தண்டனையாகக் கிடைக்கும்.
3.எடுத்துக் கொண்ட அந்த நஞ்சான உணர்வு கொண்டு அடுத்த உடலைப் பெறுவோம்.

புலி இரக்கமற்று மற்றதை அரக்கத்தனமாகக் கொன்று விழுங்குகின்றது. இதைப் போல தன் வலுவின் தன்மை கொண்டு மற்றவரைப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்பட்டால் அதன் கணக்கு அதிகமாகக் கூடி விட்டால் அடுத்து புலியாகப் பிறப்பாய்…! சித்திர புத்திரன் கணக்குப் போட்டு இவ்வாறு காண்பிக்கின்றான்…! என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

அடுப்பிலே பாத்திரத்தை வைத்து… அதிலே எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிச் சமைக்கின்றோமோ… அதனின் சுவையாகத் தான் மாறும். அதைப் போன்று தான் நம் உடலிலும் நிகழ்கின்றது.

மதத்தின் அடிப்படையில் காட்டிய உணர்வை எடுக்கப்படும் பொழுது நல்ல நேரம்… கெட்ட நேரம்..! என்று. எழுதி வைத்ததைக் கேட்டறியப்படும்போது “உனக்கு இப்பொழுது “ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது…!” என்றால் அதை மனதிலே பதிய வைத்துக் கொள்கின்றோம்.

அதன்படி எண்ணி… அதையே சிருஷ்டித்து… காலங்களையும் நேரங்களையும் நமக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றோம். கெட்ட நேரம் என்று பதிவாக்கி… அந்தக் கெட்டதையே உருவாக்கி விடுகின்றோம். (கேட்டால் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… என்று சொல்லி அதையே ஏற்றுக் கோள்வோம்)

இப்படி அவன் கொடுத்த காலத்தை நமக்குள் சிருஷ்டிப்பது போல்
1.தீமையை அகற்றிடும் உணர்வை… தீமைகளை அகற்றிய மகரிஷிகளின் உணர்வை
2.நமக்குள் இணைத்திடும் பழக்கம் வந்து விட்டால்
3.எந்த நேரமானாலும்… தீமையில்லாத உலகை நாம் சிருஷ்டித்து விடலாம்.

ஏனென்றால் இனி வரும் எதிர்காலத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அது நமக்குள் வளராது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகி… அதன் மேல் பாசத்தைச் செலுத்தி… அதையே வளர்த்திடல் வேண்டும்….!

உடலுக்குள் ஆன்மா (ஆவி) எப்படி வருகிறது…?  

நண்பர்களுக்குள் அல்லது சிநேகிதிக்குள் அதிகமாகப் பழகுகின்றார்கள். ஆனால்  தன் குடும்பத்தில் தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் தற்கொலை செய்து விடுகின்றார்கள்.கூடப் பழகிய நண்பனோ அல்லது தோழியோ இறந்து விட்டார்… “ஆ…!” என்று எண்ணினால் பாசத்தால் உள்ளுக்குள் வந்து விடுகின்றது. வந்த பின் பல தொல்லைகளை ஏற்படுத்தத் தொடங்குகின்றது.

human-birth-treasures

மனித வித்தின் மகசூலே “ஞான வளர்ப்பின் பலனைக் கூட்டுவது தான்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கடலைக் காயை நாம் பயிரிடும் பொழுது தனி விதையாகத் தான் பயிரிடுகின்றோம். ஆனால்… செடி வளர்ந்து பலன் தரும்போது அக்கடலைக்காய் “இரண்டு விதையுடன்… பெட்டி போன்ற அமைப்பு பெற்று…” தன் வளர்ப்பின் வளர்ப்புப் பலனாக… அது எடுத்த சத்தின் ஊட்டப்பலனைப் “பலவாய்த் தருகின்றது…”

அப்பலனின் தொடர்பலன் அதன் பயிர் நிலை ஒரே தன்மையில்தான் வளர்ந்து கொண்டுள்ளது. அது எடுத்த அமிலத் தன்மைக்கொப்ப சத்தின் வித்து பலன் தருகின்றது.

அந்தக் கடலையை நம் தேவைக்கொப்ப உணவாகவும்… எண்ணையாகவும்… எடுத்துக் கொள்கின்றோம்…

அதே போல அச்செடியிலிருந்து வெளிப்பட்ட வளர்ப்புத் தன்மை யாவையும் பல நிலைகளில் கலக்கப்படுகின்றன.
1.கடலைச் செடியை மாடுகள் உட்கொண்டாலும்…
2.மாட்டின் சத்தான பாலைத் தான் அது தருகின்றது.

அதே கடலைச் செடியை உரமாக வேறு பயிர்களுக்குச் செலுத்தினோமானால்… எந்தப் பயிருக்கு கடலைச் செடியின் சக்கையை உரமாக இட்டாலும்…
1.நெல்லுக்கோ மற்ற பயிர்களுக்கோ இவ்வுரத்தைத் தந்தாலும்
2அதனுடைய சத்தை எடுத்து நெற் பயிர் தன் பலனைத்தான் தருகின்றது.

அதாவது… ஒரு பொருளின் தன்மை பலவாகப் பலவற்றில் கலக்கப் பெற்றாலும்… பலவற்றில் சேர்ந்தாலும் சேர்க்கப்படும் செயலினால் தன்னுடைய உண்மை நிலையைத் தான் பெறுவதில்லை…! பிற செயலுக்குச் சத்தாய்த்தான் அது அமைகிறது. ஆனால்…
1.தன் வித்தின் பலன்
2.தான் வளரும் பொழுது
2.தன் சக்தின் உண்மை வளர்ச்சியை வளர்த்துக் கொண்டே உள்ளது.

இத்தன்மையைப் போன்றுதான் பூமியின் வளர்ப்பின் வளர்ப்புகளுக்கு மற்றெல்லா வளர் தன்மைகளும்,..!

இதன் தொடரைப் போன்று… மனித ஆத்ம ஞானத்தில் பெறப் பெற்ற ஒலித்தன்மையின் ஒளி ஞானத்தைப் “பிற ஈர்ப்பில் எண்ணத்தைப் பலவாகக் கூட்டப்படும் உணர்வினால்” தன்னுடைய உண்மைத் தன்மையின் சத்துநிலை வளர்க்கும் வளர் தன்மை இழக்கப்படுகின்றது.

கடலைக் காயின் வித்தை மீண்டும் ஊன்றி வளர்க்காது அதை உணவாகவும் எண்ணையாகவும் மற்றவைகளுக்கு உரமாகவும் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி தடைப்படுவது போல் மனிதன் உணர்வின் எண்ணத்தைப் பலவாக மோதச் செய்து விட்டால் “ஞானம் என்ற உயர்வின் வளர்ச்சி” தடைப்படுகின்றது.

ஆகவே ஞானம் என்ற உண்மை வித்தை மனிதன் ஊன்றச் செய்து தனக்குள் உள்ள சத்தின் பலனை வளர்ச்சி கொள்ளும் பலனினால்தான்
1.மனித உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவுமே வித்தாகிப்…. பலவாகி…
2.பல ஞான வளர்ப்புகளைத் தன் வளர்ப்பால் வளர்க்க முடியும்.

தன் உணர்வின் எண்ணத்தில் கலக்கப்படும் ஒவ்வொரு சத்திற்கும் இவ்வுடலே செயல் கொள்கின்றது. எண்ணமுடன் மோதும் எவ்வெண்ணமும் உணர்வாகி… இவ்வுடல் தன்மையின் செயலுடன்… அதற்குகந்த வளர்ப்புத் தன்மையில் உருவாகிறது.

இத்தொடரிலிருந்து தன் ஞானத்தை அறியக் கூடிய உருவாக எண்ணத்தில் மோதும் செயலைச் சமமாக்கி…
1.இவ்வாத்ம பிம்ப சரீரக் கோளமெடுத்த ஒலி சக்தியின் ஒளியை…
2.எண்ணமும் பகுத்தறியும் ஆற்றலும் செயல் திறமையும் கொண்ட ஒளி சக்தியை
3.ஞான சக்தியாக உயர் ஞானச் சக்தியாக வளர்க்க வேண்டும்

சூரியனைச் சுற்றி அதனின் குடும்பக் கோளங்கள் சுழன்று ஓடினாலும்… அதன் சத்தைத் தானெடுத்துத் தன் சமைப்பின் ஒளியாகச் சூரியன் தன்னைத்தானே ஒளிப்படுத்தி… தன் ஒளியின் பலனாய்த் தன் தொடர்பில் வளரும் மண்டலங்களை வளர்த்து… தன் ஒளியைக் கொண்டு பிறவற்றையும் வளர்க்கின்றது.

அதைப் போன்று
1.தன்னுள் உள்ள நாத விந்துவை “குருவாக… ஒளி பெறும் ஜோதி நிலையாக்க…”
2.எண்ணத்தின் உணர்வைத் தனக்கேற்ற சத்தாக எடுத்து
3.தான் பெற்ற நாத ஒலியின் உண்மை வளர்ப்பின்… நாத விந்துகள் வளரும் வளர்ப்பில்தான்
4.எண்ணத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

தாவரங்களுக்கோ… கனிவளங்களுக்கோ… எண்ணத்தின் உணர்வு பகுத்தறியும் செயல் நிலை இல்லாததினால் தன் தன் சத்தின் வளர்ப்பு ஜீவநிலையுடன்… அது அது வளர்ச்சி கொண்ட அமிலத் தொடர்புக்கொப்ப தொடர் வளர்ச்சி வளர்கின்றது.

இதை எல்லாம் “இயற்கை” என்கின்றோம்.

ஆனால்… எல்லாவற்றையும் பார்த்து… உணர்ந்து… செயல் கொண்டு அறியும் மனிதன்… தன் எண்ணத்தின் உணர்வை இயற்கையின் தொடர்பற்ற “செயற்கையின் நிலையைப் பெறுகின்றான்..”

இதை ஒவ்வொருவரும் உணர்ந்து… தன்னுள் உள்ள ஜீவகாந்த நாத விந்துவை வளர்க்கும் உயர் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செலுத்துவதே மனித வளர்ப்பின் உண்மையான ப்லன்…!

அகஸ்தியன் உணர்வுகளை நுகர்ந்து தீமைகளைப் பிளந்திடும் மூச்சலைகளாக இந்தக் காற்று மண்டலத்தில் பரவச் செய்ய வேண்டும்

விஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும்… தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…!

தாவர இனங்களில் பரவும் விஷத் தன்மையும் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பும் 

Soul Alive

பிறரை ஏமாற்றத் தந்திரமாக வேலை செய்து வாழ்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…?

 

வாழ்க்கையில் சிலர் நரித் தந்திரம் எல்லாம் செய்வார்கள். பிறருடைய வேதனையை அறிய மாட்டார்கள் அவர்களைச் சுலபமாக எண்ணுவார்கள். ஆனால் இந்த நரித் தந்திரம் என்ன செய்யும் என்றால் அதற்குள் இருக்கக்கூடிய விஷம் மற்றொன்றை விழுங்கும் நிலைகள் கொண்டது.

மனித வாழ்க்கையில் நரித் தந்திரம் செய்தார்கள் என்றால் அதனால் வரப்படும் எதிர்மறையான வேதனைகளை… அந்த நஞ்சுகளை அது உணவாக உட்கொள்ளும் தன்மை பெறும்.

அதாவது காட்டில் உள்ள நரி தந்திரமாக மற்றதை எப்படிக் கொன்று புசிக்கின்றதோ இதைப்போல
1.அவர்கள் பிறருடன் (தன்னை) மெச்சிக் கொள்வார்கள்
2.கடைசியில் நான் ஒன்றுமே செய்யவில்லை…! என்று சொல்லி விடுவார்கள்.

ஆக… தந்திரமாகச் சொல்லிப் பிறரை மெச்சச் செய்துவிட்டு அவர்களைப் பல இம்சைகளுக்கு ஆளாக்குவார்கள். அப்படி அந்த வேதனையான உணர்வுகளுக்கு ஆளாக்கும் இந்த தந்திரத்தை அங்கே கற்பிக்கலாம்.

1.ஆனால் தன் உயிரான ஈசனிடம் இந்தத் தந்திரம் எல்லாம் ஒன்றும் செல்லாது.
2.எந்த வேதனையை அங்கே படச் செய்ததோ… அங்கே பதிவு செய்தது எதுவோ அந்த வித்து இங்கே நுகரத் தொடங்கும்.
3.வேதனையை ரசிக்கும்… வேதனையை ரசித்திடும்… உணர்வே இங்கே வளரும்.

அவனுக்கு இப்படித்தான் வேண்டும்.. அவன் இப்படித் தான் தொலைய வேண்டும்…! என்று சொல்வார்கள். இந்தப் பாசம்… இந்தக் கயிறு… அதே உணர்வின் தன்மை கொண்டு நம்மை எங்கே அழைத்து செல்லும்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நரியைப் போன்று தந்திரம் செய்து அவர்களுக்கு இம்சைகள் செய்திருந்தாலும்… பிறருடைய வேதனையை எந்த அளவுகோலுக்கு ரசித்ததோ அதே உணர்வின் தன்மை கொண்டு இன்னொரு உடலுக்குள் தந்திரமாக உள்ளுக்குள் செல்லும்

1.முதலில் உருவாக்கிய அந்த நஞ்சினை புகுந்த உடலிலும் அதிகமாக வளர்த்துக் கொள்ளும்
2.மனிதனையே (மனித உணர்வுகளையே) மறந்துவிடும்
3.நரியின் உணர்வுகளாகவே வளர்த்துவிடும்

அந்த உடலை விட்டு வெளியே வந்தபின் பரமாத்வில் (காற்று மண்டலத்தில்) கலந்துவிடும் பரமாத்மாவில் கலந்தபின்… பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நரியின் உணர்வாக… அதன் இனத்தை தேடி… அதற்குள் சென்று… அதனின் உணர்வின் தன்மையைக் கருவாக்கி “நரியாகத் தான் பிறக்கச் செய்யும் இந்த உயிர்…!”.

நாம் என்னமோ நினைக்கின்றோம்…! யாருக்கும் தெரியாமல் தானே செய்தோம்.. என்று…!

ஆனால் பிறருக்குத் தெரியாமல் ஏமாற்றி கொண்டிருந்தால் கடைசி நிலை அது தான்…! சொல்வது அர்த்தமாகின்றதா…?

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான். சிந்தனையில்லாமல் செய்தால் அது எருமையின் உணர்வுக்கொப்பானது. ஏனென்றால் எருமைக்குப் புத்தியில்லை.

எடுத்துக் கொண்ட சிந்தனையற்ற நிலைகள் அந்த அசுர உணர்வு கொண்டு நாம் செயல்படுவோமே என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளர்ந்து விடுகின்றது. அப்பொழுது இதனுடைய “பாசக்கயிறு” என்ன செய்கின்றது…?

எருமை என்ன செய்யும்…? வெயில் தாங்கவில்லை என்றால் சாக்கடைக்குள் போய் அல்லது ஏதோ ஒரு சேறுக்குள் பிரண்டு அந்த வெக்கையைத் தணித்து கொள்கின்றது.

இதைப் போன்ற சிந்தனையற்ற உடலுக்குள் தான் போகும்…! ஆகவே அதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க வேண்டுமா இல்லையா…!

1.நம் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும்
2.நம் பாசம் அந்த மகரிஷிகளின் பால் தொடருமே என்றால்
3.நாம் அதனின் நிலைகள் கொண்டு.. அந்த மகரிஷிகளின் புத்திரனாக நாம் மாறுகின்றோம்.

ஏனென்றால் இந்த உடலை உருவாக்கியது “உயிரே…!” எடுத்துக் கொண்ட நல்ல உணர்வின் இணைப்பு எதுவோ அதற்குத்தக்க மனிதனாக உருவாக்கியது.

1.மனிதனானபின் வரும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டால்
2.உயிருடன் ஒன்றி நிலையான ஒளிச் சரீரமாக உருவாக்கும்
3.வரும் நஞ்சுகள எதுவாக இருந்தாலும் அதை அடக்கி… அதையே ஒளியாக மாற்ற வைக்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தின் விளைவுகளை முன்னரே வெளிப்படுத்தியிருந்தார் குருநாதர்

 

பூமிக்கடியில் குகைகளுக்கு அடியில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த தீவிரவாதிகளை விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் வானிலிருந்தே கண்டார்கள்.. அங்கிருந்தே வீழ்த்தினார்கள். மேலும் மனிதனையே உருவாக்க முடியும் என்று செயல்படுத்திக் காட்டினார்கள் (CLONING). தாய்லாந்து சீனா போன்ற நாடுகளில் கரு சிதைந்த குழந்தைகளை மிருகத்தனமாக அன்றே உணவாக உட்கொண்டார்கள். அதனால் விளைந்த விளைவுகளை இன்று நாம் காண முடிகின்றது.

growth-in-meditations

மகரிஷிகளின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பை நாம் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எறும்பிலிருந்து யானை வரை ஊர்வன… பறப்பன… நடப்பன… எல்லா ஜீவ சரீரத்திற்கும் அவை பெற்ற “ஆத்ம உயிரின் ஒளி” ஒன்று போல் தான் இருக்கின்றது.

ஆனால் ஜீவ காந்த சரீர உணர்வின் நாத ஒலி கொண்ட செயல்… இம்மனித சரீரத்தின் இயக்கத்தில் அதிகம் உள்ளது.

உணர்வின் எண்ணச் செயலை இச்சரீர இயக்கம் செயல்படுத்தக் கூடிய அங்கக்கூறுகள் பெற்ற ஜீவ காந்த சரீரத்தைப் பக்குவப்படுத்தி… அதன் பக்குவத்திற்குகதந்த ஆகாரத்தை நாம் செலுத்த ஜீவ இயக்கத் தொடர் தேவை.

மின்சாரத்தின் மூலம் விளக்கின் ஒளியைப் பெற அவ்வொளியின் செயலுக்குகந்த காந்தமின் அலை தொடர்பைச் செலுத்திக் கொண்டே இருப்பதால் தான் விளக்கின் மூலம் ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.. தொடர்பு அற்றால் ஒளி பெறும் தன்மையும் தடைப்படுகின்றது.

அதைப் போன்றே…
1.ஜீவ காந்த மின் அலையின் தொடர்பிற்கு
2.தன் ஒளி என்றுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் வளர் ஒளியை வளர்க்க
3.ரிஷிகள் தம் வட்டத்தின் வளர்ப்பின் தொடருக்கு
4.உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்பங்களின் ஜீவ காந்தத் தொடர்புடன்
5.தான் பெற்ற வலுத் தன்மையின் தொடரை இப்பூமியிலே பதியச் செய்து
6.அத்தொடரின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து தன் வலுவை வலுவாக்கிக் கொண்டே
7.தொடர் ஜீவ சத்தைத் தன் தொடர் வட்டத்தின் சுழற்சி கொண்டு எடுத்துக் கொண்டே
8.அத்தொடர் அலை பிரியா வண்ணம் உணர்வின் எண்ண ஜீவித தொடர்பில்
9.தன் நினைவைப் பதிய வைத்த நிலையிலேயே செயல் கொள்கின்றனர்.

அதைப் போன்றே… எண்ணத்தின் உணர்வு கொண்ட தொடர்பானது ஜீவகாந்த மின் அலை செலுத்தும் உணர்வினால் எந்த ரிஷி பெற்ற தொடர்பிலும் எண்ணத்தைச் செலுத்திட முடியும்.

அவ்வாறு செலுத்தித் தன் ஞானத்தை வளர்க்கும் வலுவை… அறிய வேண்டிய எண்ணமுடன் தொடர்பைக் கொண்டு செலுத்தக் கூடிய எண்ணத்தின் தொடர்பினால்…
1.ரிஷித் தொடர்பின் அலையை வளர்க்க
2.அந்த காந்த மின் அலைத் தொடர்பை எண்ணத்தின் பால் எடுக்கப்படும் வலுவைக் கொண்டு
3.நம் வளர்ப்பின் தொடர் சுழற்சி வலு கூடிக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் ஒருவர்பால் ஒருவர் செலுத்தக்கூடிய உணர்வின் எண்ணத் தொடர்பில் தொடர் கொள்ளக் கூடிய மின் காந்த ஜீவ இயக்க வலுத் தன்மை நம் வளர்ப்பின் வலுவிற்கு மிகச் சக்திவாய்ந்ததாக அமைகின்றது.

இதே ஜீவ காந்த வலுவை பிராணிகளிடத்திலிருந்தும் பட்சிகளிடத்திலுருந்தும் நம் உணர்வைச் செலுத்தத்தக்க வழி முறைக்கொப்ப வலுத் தன்மை பெற முடியும்.

ஜீவ காந்த சரீர எண்ண உணர்வின் செயலை…
1.நமக்குள் உள்ள உயர்ந்த தெய்வத் தன்மையை வளர்க்கும் ஞான வலுவைக் கொண்டுதான்
2.வளர வேண்டிய வலுவிற்கே சக்தி கூடுகின்றது.

விஞ்ஞானத்தால் மின் காந்த தொடர்பில் இன்று நாம் சிக்குண்டு… நாத ஒளி ஈர்ப்பை மின் அலைத் தொடர்புடன் அதிகமாகப் பெற்று… அவ்வலையின் செயலையே இப்பூமியின் காற்று மண்டல அலைத் தொடர்பில் அதிகமாய்ச் சுழல விட்டுக் கொண்டுள்ளோம்.

அதிலேயே சிக்குண்டு அதன் பிடியிலேயே எண்ணத்தைச் செலுத்தி அந்த ஒலி நாதங்களையே பெறுவதினால்
1.செயற்கை மின் காந்த செயலுக்கு…
2.இச்சரீர இயக்கமே அடிமைப்பட்டு… அதன் செயலாக ஆகிவிடுகின்றது.

ஆக.. ஒரு ரேடியோ… காற்றில் கலக்கப்படும் செயற்கைப் பதிவின் ஒலிகளை ஏரியல் மூலம் எடுப்பதைப் போன்று இச்சரீர இயக்கத்தின் ஒலி நாதத்தால்… நாதத்தின் ஒலித் தொடர்பை…
1.எண்ணத்தின் உணர்வு அறியும் தொடர்பு கொண்ட
2.எத்தொடர் அலையையும்… பதிவு கொண்ட ஒலி அலை யாவையும்… கேட்க முடியும்.
3.ஒலி பாய்ச்சிக் கேட்கும் ஒலியையும் காட்சியாகப் பார்க்க முடியும்.

இச்சரீர உணர்வின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பைச் செயல்படுத்தும் ஜெப சக்தியினால் நம்மையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

பின்… நம் வலுவைக் கொண்டு பிறருக்கும் அந்த அலைத் தொடர்பை ஊட்டி…
1.அத்தொடர்பின் வலுவை நாம் பெற்று
2.நம் வலுவை வளர்த்தோரின் (ரிஷி சக்திகள்) வலுவுடன் செலுத்தி
3.அறிவோம்…! என்ற நிலை பெற்றுத் தன்னுள் இருக்கும் தெய்வத்தின் செயலை உணர முடியும்.

 

படைப்பின் படைப்பாகப் பலவற்றையும் படைக்க… ஒவ்வொரு உயிரணுவிலும் தெய்வத்தின் செயல் தன்மை செயல்படுத்துவதை செயலாக்க கூடியது இவ்வெண்ணம் தான்…!

 

எண்ணத்தின் உணர்வைக் கர்ம காரியத்தில் உள்ள இருளில் உள்ள உண்மையை… “ஒளி கொண்டு அறிந்து…!” ஆத்ம உயிரை வலுவாக்கி… வளர்ச்சி கொள்ளும் “தெய்வ வளர்ப்பாய்…” ஒவ்வொருவரும் வளரலாம்.

கணவன் மனைவி அடிமையாக அடக்கி வாழும் நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகள்

கணவன் மனைவி அருள் வழியினைப் பக்குவப்படுத்துங்கள்

கணவனை விட்டு மனைவியும் மனைவியை விட்டு கணவரும் – நாங்கள் பிரிய மாட்டோம்…!

light-worlds

சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்… என்று சபதம் எடுப்போம்…!

 

1.அருள் ஞானத்தின் நிலைகளையே நீங்கள் பெறுங்கள்….
2.என்றும் அழியாத செல்வத்தையே தேடுங்கள்.
3.என்றும் அழியா ஒளி உடலையே பெறுங்கள்

“உடல் மாற்றும் நிலை” நமக்கு வேண்டாம்…!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த உடலின் மாற்ற காலங்கள் வருவதற்கு முன் இந்த உலகத்தின் நிலைகள்…
1.இந்தப் பூமியே நிலை தடுமாறப் போகின்றது
2.இன்னொரு ஆயிரம் ஆண்டுகளுக்குள்…!

ஆயிரம் ஆண்டுகள் நாம் வாழ்வோம் என்பதை விட இந்த உயிரின் தன்மைகள் கொண்டு உடலின் மாற்றங்கள் ஆனாலும்… “மனிதனின் நினைவு இருக்காது…!” (உடல் இருக்கும்… மனித சிந்தனை இருக்காது)

ஆகவே அதில் சிக்குண்டு நரக வேதனையை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.

நம் பூமி சூரியனை விட்டு அகண்டு… ஆயிரம் ஆண்டுகளில் இது பிரிந்து சென்றால் இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை முடிந்தது.
1.பூமி முழுவதும் பனிப் பாறைகளாக மாறும்.
2.வியாழன் கோள் போல் விளையச் செய்யும்.
3.இந்தக் குடும்பம் சிதறுண்டு ஓடிவிடும்.

ஆகவே நட்சத்திரங்கள் (நம் பிரபக்சத்தைச் சேர்ர்ந்த 27 நட்சத்திரங்கள்) குடும்பங்களை மாற்றிக் கொள்ளும். எந்தெந்த நட்சத்திரங்கள் பிரிந்து செல்கிறதோ… அது அது முழுமை பெற்று
1.இதிலே சரிபாதிக்கு மேல் தாண்டி விட்டால்
2.அந்த நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியக் குடும்பங்களாக மாறும்.
3.ஒன்றி ஒரு வட்டமாக… 2000 சூரியக் குடும்பத்தில் ஒரு வட்டப் பெருக்காக மாறிவிடும்.

இதைப் போன்று காலம் மாறும் நிலைகள் வருகின்றது.

நம் குருநாதரும்… மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்த இந்த உண்மையின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இதிலுருந்து விடுபட்டு
1.என்றும் அழியாப் பெருவாழ்வு என்ற நிலையில் ஒளிச் சரீரமாக்கி
2.நஞ்சினை மாய்த்திடும் ஒளியின் நிலைகளைக் கூட்டி அதனின் இயக்கமாக ஆக வேண்டும்.

மகரிஷிகள் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்று இதைச் சபதமாக நீங்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும்
1.இனி எத்தகைய தீமைகளையும் உங்களை அணுக விடாதீர்கள்…
2.அருள் ஞானிகளின் உணர்வைக் கொண்டு அவைகளைத் துரத்தி அடியுங்கள்…!

இந்தப் பழக்கத்திற்கு வாருங்கள்.

அதன் வழி கொண்டு தொடர்ந்து சென்றால் அழியாப் பெரு வாழ்வு என்ற அழியாச் செல்வம் பெறலாம். ஆகவே இந்தச் செல்வத்தைத் தேடிச் செல்லலாம்… அது என்றும் நிலைத்து இருக்கும்…!

மற்ற செல்வம் குணச் செல்வம் இருந்தாலும் கூட அது சிறிது காலமே…! அது அழிந்து விடும். ஆனால் அழியா ஒளிச் சரீரம் என்றும் அழியாது.
1.நீங்கள் அனைவரும் அந்த அழியாப் பெரு வாழ்வு பெறுவீர்கள்.
2.நிச்சயம் அந்த வழியில் செல்வீர்கள்

நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு வாழ்க்கையில் இதை நீங்கள் பயன்படுத்திச் செயல்படுத்த வேண்டும். அனைவரும் ஒரு குடும்பம் என்ற நிலைக்கு வர வேண்டும்.

ஒரு பிரபஞ்சம் எவ்வாறு இயக்குகின்றதோ குரு வழியில் அதாவது…
1.நமது குருநாதர் இயக்கத்திற்குள் பெரும் பிரபஞ்சமாகி
2.உலகில் வந்த தீமைகளை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைந்து
3.தீமைகளை நீக்கிடும் சக்தியாக ஒருக்கிணைந்த நிலையில் நாம் ஒன்றுபடுவோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவோம்… உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் விளைய வைப்போம்…. நம் பார்வையால் உலகம் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக வளரட்டும்…!

எல்லா மகரிஷிகளையும் வேண்டுவோம்… தியானிப்போம்… தவமிருப்போம்.

குருநாதர் காட்டிய வழியில் “தன்னைத் தான் அறிதல்”

 

குரு அருளைப் பெற்று வாழ்க்கையில் வந்த இருளைப் போக்க முடியும். ஒன்றுமறியாத மீனவன் வியாசகன் அவன் சந்தர்ப்பத்தில் வானை நோக்கி ஏகி அகஸ்தியன் உணர்வை… அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நுகர்ந்தான்…! உயர்ந்த ஞானியாக ஆனான்.

sparkling souls power

“ஆத்ம ஜோதி – ஜொலிக்கும் நிலை” பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கர்ம காரிய இருளிலிருந்து ஒளியான ஞானம் பெற உணர்வின் எண்ணத்தைக் கர்ம காரிய வாழ்க்கை இருளிலிருந்து உண்மையை… “ஒளி பாய்ச்சி” அறிதல் வேண்டும்.

சூரியனின் மோதல் பூமியின் மேல் நேர் பார்வையில் மோதும் பொழுது தான் இருளான இப்பூமியின் ஒளி வெளிப்படுகின்றது. அதைப் போன்று…
1.உணர்வின் எண்ணத்தை… “அறிவோம்” என்ற ஞான வழிக்கு இவ்வெண்ணத்தைக் கூட்டும் பொழுதுதான்
2.வாழ்க்கையில் ஏற்படும் கர்ம காரியச் செயலில் இருந்தெல்லாம்
3.நம் ஆத்ம ஒளிக்கு ஒளி பெற முடியும்.

பூமியின் நீர் நிலை உப்புக் கலந்ததாய் உள்ளது. கடல் நீரும் உப்பு. இப்பூமியில் கடல் மட்டத்திற்கு மேல் பல ஆயிரம் அடிகள் உயர்வாக உள்ள மலைப் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீரும் உப்பாய் உள்ளது.

ஆனால்…
1.ஆழ் கடலிலும் ஆங்காங்கு பல இடங்களில் உப்பில்லாமல் “நல்ல நீர்” கிடைக்கின்றது.
2.அதே போல் இப்பூமியிலிருந்து வெளிப்படும் ஆவி அலையின் சத்தில் பெய்யும் மழை நீரும் உப்புக் கரிப்பதில்லை.

மழை நீர் குணம் கொண்டதாக… இப்பூமி சுழற்சியில் பெய்யும் மழைநீர் எல்லாமே சுவை கொண்டதாகத்தான் பெய்கின்றது. பூமியுடன் கலந்து செயல்படும்போது அந்த நீர் உப்பாகி விடுகின்றது.

அதைப் போன்று…
1.இவ்வாழ்க்கை கர்ம காரிய உடலில் இருந்து வெளிப்படும் இருளான உண்மையிலிருந்து
2.ஒளி கண்டு… காணும் அறியும் நிலையை…! நாம் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அதாவது… கடல் நீரும் கிணறுகளில் உள்ள நீரும் உப்பாயிருந்தாலும் கடலின் மத்தியிலே சுவை கொண்ட நல்ல நீரை நாம் காண்பது போன்று
1.இவ்வுடலில் ஏற்படக்கூடிய உணர்வின் எண்ணச் செயலில் மோதும் எச்செயலையும்
2.இருளான நிலைப்படுத்தி மோதும் அந்தச் செயலிலுள்ள உண்மை ஒளியை
3.நமக்குகந்த சத்தாக… “ஒளி” பெற வேண்டும்.

பூமியில் பல கோடி மண் வள கனி வள சத்து நிலைகள் மாறி மாறிப் படர்ந்திருந்தாலும் அச்சத்தின் சத்தாய் அங்கங்கு… சில இடங்களில்… வைரத்தின் ஒளிக் கற்கள் (வைரங்கள்) வளர்கின்றதல்லவா..!

அதைப் போன்று இவ்வுடலின் உணர்வு எண்ணக் கோள கர்ம காரிய சரீர இயக்கத்தில் உள்ள உண்மை வெளிப்பட…
ஞானமென்ற ஒளியை…
காரிய சிந்தையை…
காரிய சித்தாய்
“நம் ஒளி ஞானம்” செயல்படல் வேண்டும்.

பிறர் பால் உள்ள குறைவினாலேயே… உயர்வினாலேயே… நம்மை உயர்த்தியும்… குறைத்தும்… எண்ணத்தைச் செலுத்தாமல்…
1.அறியும் ஞான ஒளித் தொடரில் மோதப்படும் ஒவ்வொரு நிலையில் இருந்தும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு ஜீவ காந்த வளர்ப்புக்குகந்த சத்து நிலை உணர்வில்
3.நாம் கூட்டும் ஒளி நிலை கொண்டு தான்… ஆத்ம ஜோதி ஜொலிக்க வேண்டும்.

எண்ணமுடன் கூடிய உணர்வினால்தான்… ஒளி நிலையான ஜோதி நிலைக்கு… “இவ்வாத்ம உயிரை” ஜீவ காந்த மின் அலையைக் கொண்டு… வலு கூட்ட முடியும்.

இஜ்ஜீவ காந்தமின் அலை உணர்வு சரீரத்தைக் கர்ம காரியத்தில் சுழலும் மாய வாழ்க்கை இருளிலிருந்து எண்ணத்தை அறியும் ஞான ஒளி பாய்ச்சி உண்மையை உயிராத்மா வலுக் கூட்டிக் கொள்ள வளர் ஞானம் கொள்ள வேண்டும்.

அந்த வளர் ஞானம் கொண்டோமானால்… இன்றெப்படி வாழ்க்கையில் சுவை… மணம்… உணர்வு… உறக்கம்… போன்றவற்றில் இன்ப நிலையை உணர்கின்றோமோ…
1;இவற்றிற்கு மேல் பேரின்ப நிலையான ஒளி சக்தியைக் கொண்டு
2.மனித பிம்பத்தில் உணர முடியாத உன்னதமான… இனிமையான…
3.சுவை கலந்த இன்ப நிலையைப் பெற முடியும்

lord krishna - blue color

ஒவ்வொருவரும் “நீலவண்ணக் கண்ணனாக…” ஆக வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.எப்படி ஒன்றை ஒத்த முறையில் ஒன்றில்லாமல்
2.ஒவ்வொன்றுமே “வளர் சக்தியில் வளர்கின்றதோ”
3.அதைப் போன்று இவ்வுடல் ஆத்மாவின் வளர் நிலையும் அப்படித்தான்…!

இந்த ஜீவ சரீரக் கலவையில் இப்பூமி எடுக்கும் சத்து அனைத்தும் உள்ளத்தினால் இச்சரீர பிம்பச் செயலில் கூட்டும் ஞானச் செயலுக்கும் “அந்தந்தக் கலவைக்குகந்த ஒளி பெறலாம்…”

சூரியன் சமைத்த வண்ணம் “ஆறு…” சமைப்பின் சக்தி ஒளியாய் “ஏழாம்…” அதாவது ஒளி பெறும் அந்தப் பூமியின் “வெளிச்சம்” என்பது
1.சூரியனின் சமைப்பு அமில வண்ணம் மோதியவுடன் தான்
2.பூமிக்கு வெளிச்சமே ஏற்படுகின்றது

ஆக… ஏழாம் நிலையாகச் சூரிய சமைப்பின் கலவையைப் பூமி பெறும் ஒளியில் பிரகாச நிலை கொண்டு… அந்தந்த இடங்களுக்கு ஏற்படும் வண்ணக் கலவையின் விகிதாச்சார படிவத்திற்கொப்ப… பூமியின் நில வள உலோக வளர்ச்சி ஏற்பட்டு… அத்தொடரின் வளர் சக்தி வலுக்கொள்கின்றது.

நாம் சாதாரண அடுப்பை எரிக்கும் பொழுது அதனின் வண்ணம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ பச்சையாகவோ வெண்மையாகவோ எரிகின்றது.

மேலே சொன்ன நிறங்களில் நெருப்பின் ஜுவாலை எரிந்தாலும் அந்த உஷ்ண நிலை அதனுடைய பக்குவ நிலைக்கு ஏற்படாமல்… வைக்கப்படும் பாத்திரத்தில் “கரி” மண்டுகின்றது… ஒரு பக்கமாக எரிகின்றது… அதனால் “தணல் கக்கும் உஷ்ண நிலை” சீராக அமைவதில்லை.

ஆனால் எரிவாயுவின் பக்குவ எரி ஒளி நிலை “நீலமாக…!” எரியும் பொழுதுதான் அதனுடைய “உஷ்ணம்” பக்குவ நிலை கொள்கின்றது. அதைப் போன்று இவ்வொளி வண்ணங்கள் ஆறு நிலை கொண்டதாகச் சூரிய சமைப்பு வெளிப்படுத்துகின்றது.

ஆகவே…
1.ஜோதி நிலையான நீல வண்ணத்தின் ஒளி சமைப்பு நம் ஆத்மாவாக வேண்டும்.
2.காலை சூரிய ஒளியும் மாலை ஒளியும் நீல நிறமாக நம் கண்ணிற்குத் தெரிகின்றது.
3.நம் அருகில் உள்ள நீர் வெண்மை கொண்டதாகத் தெரிந்தாலும்
4.கடல் நீரோ… இப்பூமியின் சமைப்பு அலையின் நிறமாக… நீல வண்ணமுடன் நமக்குத் தெரிகின்றது.

ஆகாயத்தைக் காணும் பொழுது கருமையும்… வெண் புகை நிலையும்… மஞ்சளான ஒளித் திட்டுக்களும் தெரிந்தாலும்… ஆகாயத்தை ஊன்றிப் பார்க்கும் பொழுது “நீல மேகமாகத்தான்” தெரிகின்றது.

அத்தகைய “நீல வண்ண ஒளியை” நம் ஜீவ ஆத்ம ஒளி ஒளி பெற… இச்சரீர கோளத்தில் உள்ள வண்ணங்களை நீல சக்தியாக ஒளி கொள்ள… இங்கே உபதேசித்து வரும் வழி முறையை ஒவ்வொருவரும் செயல் கொண்டிடுங்கள்.

கீதா உபதேசத்தில் கண்ணணைக் காட்டி…
1.கண்ணணின் வாயைத் திறந்தால் உலகமே தெரிந்தது என்றும்
2.கண்ணனின் விளையாட்டுத் தரத்தை உலகமாய கர்ம காரியத்தில் இவ்வாத்மா விளையாடிச் சத்து பெறும் வழியையும்
3.”நீலவண்ணக் கண்ணன்” என்று நாமமிட்டனர் அன்றிய ஞானிகள்.

நம் உருவத்திற்கே “நீல நிற ஒளி…!” பெற வேண்டும் என்றும்… கீதையில் பல உன்னத உயர்ந்த சக்தி நிலை பெற
1.ஒவ்வொரு சரீரத்தையும் மாயக் கண்ணனாக்கி
2.அச்சரீரத்தில் வளர்க்கும் நீல வண்ண ஒளித்தன்மை பெற
2.பல வழி சூட்சுமங்கள் அந்தக் கீதையில் உண்டு.

இக்கலியில் செயற்கை விஞ்ஞான வார்ப்பு உடலாக இச் சரீர வார்ப்பு செயல் கொள்ளும் செயல் முறையை… உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞானத்தால் “ஜோதி நிலை பெற்று” வளர் தொடர் வளர்ப்பில் நம் வளர்ப்பு செல்லும்.

இங்கே காட்டப்படும் வழித் தொடரில் ஒவ்வொருவரின் ஞானத்தையும் கூட்டி… எண்ணத்தின் செயலை “ரிஷித் தொடர்புடன் தொடர்பு படுத்தியே” ஆத்ம சொத்தாக வழி பெறும் “ஒளி நிலைக்கு” உயர முடியும்..

1.கர்ம காரிய சரீர ஜீவ பிம்பத்திலிருந்து “ஆத்ம உயர்வுக்கு”
2.ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் உயர் ஞானம் பெற்று
3.சித்து நிலை கொண்டு ரிஷித் தொடர்புடன் “ரிஷியாகலாம்…!”

உணர்வின் எண்ணப் பகுத்தறியும் செயல் வலுவை மனிதன் விரயப்படுத்தாமல் “தன் ஞானம் கொண்டு… ஆத்ம ஞானத்தால் ஒளி ஞானம்..” பெற வேண்டும்.

ஒளி ஞானத்தின் நிலை பெற்றால்… ஒளியின் வழி செயல் “என்றுமே வளர்ச்சி கொள்ளும்…!”

பிச்சைக்காரனிடம் இல்லை என்று சொன்னாலும் அவன் மூச்சலையை நுகர்ந்தால் வரும் தீமைகள் 

பிச்சைக்காரன் மேல் ஏற்படும் வெறுப்பு நம்மை எங்கே கொண்டு செல்லும்..?

உங்களால் அணுகுண்டையும் செயலிழக்கச் செய்ய முடியும்

கேன்சர் நோயை நீக்கும் மூலிகை எப்படி உருவாகிறது என்று காட்டுக்குள் அனுபவம்

 

 

காட்டிலே செத்துக் கிடந்த ஒரு புலிக்கு முன்னாடி குருநாதர் என்னைப் பத்து பதினைந்து நாள் உட்காரச் சொன்னார். அந்த அழுகிய உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளும் காற்றில் சில தாவரங்களும் கலந்து ஒரு வித்தாகி மின்னல் பாயும் பொழுது கொடியாக உருவாகிறது. அதை அடையாளம் போடச் சொன்னார். அது வளர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பின் அங்கே மீண்டும் வந்து அந்தக் கொடி என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார். ஒரு கத்தியையும் கொண்டு போகச் சொன்னார்….

milky way

தீமைகளை நீக்கிடும்… “தூய்மைப்படுத்தும் சக்தி கொண்ட ஆன்மாவாக” மாற்றிக் கொள்ளுங்கள்

 

அற்புத சித்துகளை எல்லாம் உங்களுக்கு நான் (ஞானகுரு) கற்பித்துக் கொடுக்கலாம். அந்த மாதிரிக் கொடுத்தவர் யாரும் கரை சேர்ந்ததில்லை.. நல்ல நிலையிலும் இல்லை…!

அவரவர்கள் ராஜாவாக… தனிக்காட்டு ராஜாவாக “நான் சர்வத்தையும் அறிந்து கொண்டேன்…!” என்ற நிலைக்குப் போய் விடுகின்றார்கள்.

ஆகவே அந்த அற்புதங்கள் நமக்குத் தேவை இல்லை. நமக்குள் இருக்கும் அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?

1.நமது பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது பார்வை அவர்களுக்குள் அருள் ஞானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.
3.நம்மைப் பார்ப்போர் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று மனம் மகிழ வேண்டும் என்ற
4.இத்தகைய நிலையை நாம் பெறுவோம் என்றால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

என்னைப் பார்ப்போர் மனம் மகிழ வேண்டுமென்றால்… நாம் படுகின்ற வேதனையைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.நம் சொல்லால்
2.நம் பேச்சால்
3.நம் செயலால்
4.நம் பார்வையால்
5.அவர்கள் அதைப் பார்த்து… “நான் நல்லதானேன்…!” என்று அந்த மகிழ்ச்சி அங்கிருந்து வர வேண்டும்.

ஆகவே… உங்கள் பார்வை பிறருடைய தீமையை நீக்கும் சக்தியாக வர வேண்டும். உங்களுடைய உணர்வின் தன்மை “தூய்மைப்படுத்தும் சக்தியின் ஆன்மாவாக” மாற்ற வேண்டும். தூய்மையான நிலைகள் கொண்டு தீமையைத் தனக்குள் வராமல் ஒளியாக மாற்ற வேண்டும்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் மற்ற பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய நிலைகளை (பெரும் பெரும் பாறைகளை) நொறுக்கி அதனுடைய நிலைகள் துகள்களாகப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது. அதைத் தூசியாக மாற்றி மற்ற கோள்கள் எடுக்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து துகள்களாக மாறுகின்றது பின் அதன் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனின் தன்மை தனக்குள் கவர்ந்து “ஒளிச் சுடராக” மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.மாமகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.உங்களுக்குள் இருக்கும் எண்ணிலடங்காத குணங்களில் இதை இணைத்து இணைத்துக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய நஞ்சுகளையும் அதனின் தன்மைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே… அதன் உணர்வின் தன்மை பெற வேண்டுமென்ற இந்த நோக்கத்துடன் தான் இதை உபதேசிக்கின்றோம்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகள் உங்களிலே இயங்கி
2.தீமையை அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மைகள் உங்களிலே விளைந்து
3.இந்த உடலை விட்டு அகன்றால் “என்றும் தூய்மையின் நிலைகள் பெறமுடியும்…!” என்ற
4.தன்னம்பிக்கை உங்களுக்கு வரவேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்வது.

uplifting meditation

அமைதியாக இருந்தாலும் பல எண்ண மோதல்கள் வரும் சமயம் அதிலிருந்து “ஞானம் பெறுவது” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நீந்தத் தெரியாதவன் நீரில் சிக்குண்டு தவிக்கும் பொழுது… தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவியை நாடுவதைப் போன்று தான் வாழ்க்கையின் கர்ம காரியக் கடலில் ஏற்படக்கூடிய இன்னலிலிருந்து தப்ப எண்ணும் நிலையும்….!

நீந்தத் தெரிந்தவன்… ஆயிரம் அடி (ஆழம்) கடல் நீரிலும் தன்னைப் பாதுகாக்கும் சாதனைத் திறன் பெற்ற நீச்சலினால் தத்தளிக்கும் நிலையோ… பாதுகாப்பை நாடும் நிலையோ இன்றி… தன்னைக் காத்து கொள்கிறான்.

அதைப் போன்று தான்..
1.உணர்வின் எண்ணத்தைச் சமமாக்கி… ஆத்ம பலம் பெற்று
2.உடல் என்ற இக்கோளத்தில் உருவாக்கும் உயிரணுவின் வளர்ப்பைக் கொண்டு
3.தன் நிலையைத் தான் உணர்ந்து
4.எந்த நிலையான கர்ம காரிய சஞ்சலங்கள் ஏற்பட்டாலும்
5.தன்னை அது தாக்காமல் தன்னைத்தான் பாதுகாத்துத் தன் வலுவைக் கூட்டி
6.ஆத்ம ஞானத்தால் – இரு விழியால் பார்க்கும் படர் ஒளியின் பார்க்கும் இவ்வுடல் உறுப்பின் பார்வை நிலையையே
7.இவ்வுடலின் ஒவ்வொரு உயிரணுக்களையும் “ஒளி நிலை காணும்… விழி நிலை ஆக்கலாம்…!”

உடல் கோளத்தின் ஜீவ சரீரம் செயல் கொள்ள சுவை மிக்க உணவை உண்டு உணர்கின்றோம். உண்ணும் பொழுதும்… சுவைக்கும் பொழுதும்… ஏற்படும் உணர்வு உண்ட பின்… கழிவு நிலையாகச் சென்று விடுகின்றது.

மீண்டும் பசியெடுத்து அதன் சுவை கொண்டு அந்தந்தக் காலத்தின் நிலையில் உணவைச் சுவைப்படுத்தி உண்கின்றோம்.

உண்ணும் பொழுதோ… சுவை உணரும் பொழுதோ… அவ்வின்பத்தின் உணர்வு தவிர உடலைப் பற்றியோ… உண்ணும் உணவு உடலில் செயல்பட்டு உடல் வலுவை வளர்க்க வழி பெறுகின்றது… என்ற எவ்வெண்ணத்தையும் நாம் கூட்டுவதில்லை.

ஆசையின் உந்தலுக்குகந்த சுவையை மட்டும் தான் அந்தந்தத் தருணத்தில் நாடுகின்றோம்.
1.உடலின் தேவை நிலை உந்தலின் செயலை நாம் அறியாமல்
2.எண்ணத்தில் உணர்வு மோதலைக் கொண்டு ஆசை உணர்வால் செயல்படும் இந்நிலை
3.ஜீவ பிம்ப உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் தன்னிச்சையில் செயல் கொள்கின்றது.

ஆக… ஆத்ம உணர்வின் வேட்கை நிலைக்கு எண்ணத்தின் உணர்வை நாம் யாரும் செயலாக்குவதில்லை.

புற உலக வாழ்க்கையில் ஒன்றை ஒத்து… ஒன்று கண்டு… வளர்த்து… வாழ வேண்டும்…! என்று “எதிர்ப்பலன் எண்ண உணர்வுதான்” செயல்படுகின்றது.

ஒவ்வொன்றின் வளர்ப்பிற்கும் உருவாக… மாற்று நிலை ஏற்பட்ட பிறகு தான் பிறிதொரு செயல் நடக்கின்றது.

தருண காலத்திற்கொப்ப உயிரணுத் தோன்றிக் கருவாகி… உருவாகி… வளர்ச்சி பெற்று… உணர்வின் உந்தலின் இரு நிலை மோதலுக்குப் பிறகு உருவாகும் பிறிதொரு நிலை போன்று… வழித் தொடர் ஒவ்வொன்றிலும் உருவாகின்றது அல்லவா…!

அதைப் போன்று தான்
1.இவ்வுடல் பிம்பச் சரீர கோளத்தின் ஆத்ம ஞானம் பெற
2.சமமான எண்ண உணர்வுகள் ஏற்படும் காலத்தில்
3.பல உணர்வு மோதல்கள் ஏற்படும் செயலிலிருந்து “ஞானம்…” பிறக்க வேண்டும்.

அறிந்த நிலை…
அறிய வேண்டிய நிலை…
அறியும் நிலை… ஆகிய ஒவ்வொரு ஆத்ம நிலையும்
1.தன்னுள் உள்ள உயர் சக்தியான தன் ஞானகுருவான உயிராத்மாவை உயர்வுபடுத்த
2.எண்ணத்தில் ஏற்படும் மோதலைக் கொண்டு பகுத்தறியும் நல் வழியில் தன் ஞானத்தைக் கூட்டி
3.உயர்வு கொள்ளும் ஒளி நிலையாய்
4.சூரியனின் நேர் நிலை பூமியின் மேல் படும்பொழுது பூமி எப்படி தன்னைத்தானே ஒளிப்படுத்திக் கொள்வது போன்று அறியும் நிலைப்படுத்தி
5.அறிந்தோரின் (மகரிஷிகள்) தொடர்பு கொண்டு
6.மனித ஜீவித வாழ்க்கைக் காலத்திலிருந்தே தான் எடுக்கும் அறிவென்ற ஞான வழித் தொடரினால்
7.இச்சரீர பிம்ப கோள உயிரணுக்கள் யாவையுமே விழி நிலைகொள்ளும் ஒளி நிலையை
8.எண்ணத்தின் உணர்வால் நிச்சயம் பெற முடியும்.

எலக்ட்ரானிக் அட்டை வேலை செய்வது போல் நல்லதைத் திறந்து தீமைகளை அடைக்க முடியும்

பச்சைக் காய்கறி மாமிசம் சாப்பிட்டால் எங்கே செல்வோம்…?

உண்மையான பரிணாம வளர்ச்சி எது…?

Thilagam

நெற்றியில் திலகமிடும் பழக்கத்தை ஞானிகள் நமக்கு ஏற்படுத்தியதன் சூட்சமம் என்ன…?

 

நெற்றியில் திலகம் வைத்தாலும் அந்தத் திலகத்தின் தன்மை எதுவாக இருக்க வேண்டும்…? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் குறித்துக் கொள்ளுங்கள்

வீட்டில் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மாற்றிவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எனக்குள் மன பலம் பெற வேண்டும்… மன வளம் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
4.குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப் பட்டிருந்தாலும் அவர்கள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
5.அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று
6.விரலால் தொட்டு அந்தத் திலகம் இடுவதற்கு முன் இந்த நினைவலைகள எண்ணுங்கள்.
7.நீங்கள் எண்ணிய அந்த உணர்வின் நிலைகள் உங்கள் உடலுக்குள் அலை அலையாகப் பரவிப் படர்கின்றது.

இந்த எண்ணத்துடன் திலகத்தை இடுங்கள்.

அதைப் போல யார் யாரெல்லாம் நலம் பெற வேண்டுமோ திலகம் இடும் பொழுது எண்ணி அவர்களை எல்லாம் நலம் பெறச் செய்யுங்கள்

யார் யாரெல்லாம் நம் மேல் வெறுப்பு அடைந்தனரோ… அந்த வெறுப்பை அகற்ற அவர்களுக்கும் தெளிந்த மணங்கள் வர வேண்டும்…! என்று எண்ணத்தை எண்ணி நீங்கள் திலகமிடுங்கள்

ஏனென்றால் “தொட்டுக் காட்டுவது” (பொட்டில்) என்று சொல்லும் பொழுது
1.பிறர் தொட்டுக் காட்டுகிறார்… என்றால்
2.அவருடைய எண்ணங்களைத் தொட்டுக் காட்டும் பொழுது
3.அவருடைய நிலைகளைத் தான் நமக்குள் நாம் எண்ணிச் சுழலச் செய்கின்றோம்.

ஆகையால் அதைப் போன்று இல்லாது நீங்கள் உயர்ந்த எண்ணங்களை எண்ணி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஐம்பது முறையாவது எண்ணி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் குடும்பத்தில் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த வகையில் அவர்கள் நன்மை பெற வேண்டுமோ அவர்களுக்கு எல்லாம் எண்ணத்தால் எண்ணிப் “புருவ மத்தியில்” திலகத்தை வையுங்கள்.

அப்போது இந்த உணர்வுகள் அங்கு ஆழப் பதியும்… நினைவலைகளாகத் தெளிவாக வரும்…. உங்கள் சிந்தனைகள் சீர்குலையாது. வெறுப்பின் அலைகள் உங்களுக்குள் புகாது அதைத் தடுக்க இந்த முறைப்படி நீங்கள் திலகமிட வேண்டும்.

இன்று நீங்கள் உடைக்குத்தக்க பல அணிகலன்கள் அணிகின்றீர்கள். அது எத்தனையோ ஃபேஷனாக இன்று வந்துவிட்டது.

ஆக… நாம் எப்படி ஒருவருடைய நிலைகளை மகிழ்ந்திடும் நிலைகள் செய்கின்றோமோ அதைப் போல “நம் எண்ணங்களை உயர்ந்ததாக்கி” அதையே நாம் ஆபரணங்களாக அமைக்க வேண்டும்.

என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும்… எப்போதும் மகிழ்ச்சி பெற வேண்டும்…! என்று இந்த முறையைச் சிறிது காலம் சொல்லிப் பாருங்கள். அது உங்களுக்குள் தெளிவான நிலைகளாக வரும்.

இப்படி அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நாம் செயல்படுத்துதல் வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் நமது பற்று அந்த மகரிஷியின் பால் செல்கின்றது. அந்த மகரிஷியின் உணர்வு ஓங்கி வளருகின்றது.

அத்தகைய பற்றின் தன்மை
1.அந்த மகரிஷிகளின் சக்திகள் கணக்கு எந்த அளவுக்குக் கூடுகின்றதோ
2.அதன் வழிப்படி நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

அதே சமயம் நம் குடும்பத்தில் வரும் எத்தகைய தீமையும் நம்மை அணுகாது பார்த்துக் கொள்ளுகின்றோம். நம் நினைவின் ஆற்றல் விண்ணை நோக்கிச் செல்லுகின்றது.

விண்ணை நோக்கி செல்லும் நிலையை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால்
1.“சித்திர புத்திரன்” கணக்கின் பிரகாரம் தான் உடலுக்குப் பின் அடுத்த நிலை என்பது போல்
2.எந்த விண்ணின் பற்றை நாம் அதிகமாகக் கூட்டுகின்றோமோ
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் அனைவரும் ஐக்கியமாகின்றோம்.

நேரம்… காலம்… மனிதனுக்கு உண்டா…?

 

“நாம் பதிவு செய்த எண்ணம் தான்” நம்மை வழி நடத்துகின்றதே தவிர நல்ல நேரம் என்றோ… கெட்ட நேரம் என்றோ… அப்படி ஒன்றும் இல்லை. ஏனென்றால் இன்று இதை எல்லாம் விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. மனிதர்கள் செய்யாமல் போகும் அல்லது ஏமாற்ற நினைக்கும் ஒரு வேலையை ஒரு ரோபோ மூலம் இயக்கிக் காட்டுகின்றனர்.

Prayer Bhakti

உண்மையான பக்தியும் உண்மையான தியானமும்

கோவிலுக்குச் செல்வோர் சிலர் வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்…?

தாய் தன் பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கும். கோவிலுக்குள் போனவுடனே… “ஆண்டவனே என் பிள்ளை இப்படிச் செய்கின்றானே…? நான் பிள்ளையக் கஷ்டபட்டு வளர்த்தேனே… ஊரெல்லாம் அவனை இப்படிச் பேசுகிறதே…! அவன் என்றைக்குத் தான் திருந்துவானோ…?

பையன் தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் விநாயகனிடம் போய் “ஊரெல்லாம் பேசுகிறதே… திமிராகப் பேசிக் கொண்டிருக்கின்றானே… என்றைக்குத் தான் திருந்துவானோ…? நீ என்றைக்குத் தான் பார்க்கப் போகின்றாயோ…? என்று இத்தகைய இந்த வினைகளைத் தான் சேர்த்துக் கொள்கின்றோம்.

நல்ல ஒழுக்கங்களை எப்படி நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் இந்த நிலைகள் இப்படித்தான் இருக்கின்றது.

முதியவர்களை எடுத்துக் கொண்டால் தெய்வத்தின் மேல் நல்ல பக்தி இருந்தாலும்.. தெய்வத்தின்மேல் நல்ல ஒழுக்கம் நம்பிக்கை இருந்தாலும்… ஞானிகள் காட்டிய வழிப்படி
1.நாம் தெய்வமாக வேண்டும் என்று சொல்லியிருந்தாலும்
2.அந்தத் தெய்வமாக யாரும் ஆகுவதில்லை.

நாம் எண்ணிய எண்ணங்கள் எதுவோ சுவாசித்தது எதுவோ… அதை எல்லாம் நம் உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தை “ம்…” என்று உடலாக்கி… நினைவின் ஆற்றலை தெய்வமாக நமக்குள் இயங்க வைக்கின்றது. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தியானத்தில் இருப்பவர்கள் நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் தியானமும் செய்கின்றார்கள்… ஆனால் அங்கே கோவிலுக்கும் போகின்றார்கள்…! என்று இப்படிச் சொல்லாதீர்கள்.

கோவிலுக்குப் போக வேண்டும். ஞானிகள் காட்டிய அருள் வழியை மற்றவர்களைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஏனென்ரால் கோவில் நம்மைப் புனிதப்படுத்தக் கூடிய இடம்தான். அதனால் அதை முறைப்படுத்திக் காட்ட வேண்டும். ஆகவே யாம் சொல்லக்கூடியதை நினைவுபடுத்துங்கள்

நீங்கள் செய்வதைக் கண்டால் மற்றவர்களும் என்ன..? என்று பார்ப்பார்கள். கோவிலுக்குச் சென்றால் இந்த மாதிரி கும்பிடச் சொன்னார்… குருநாதர்.

ஆகவே இவ்வாறு கும்பிட்டால் நாம் தெய்வமாக மாறுவோம்…! என்று நீங்கள் சொல்லுங்கள் இது தான் பக்தி.
1.நல்லதைப் போற்ற வேண்டும்…
2,எல்லாரும் போற்றும் நிலைக்கு வளர வேண்டும்…
3.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.விநாயகரை வணங்கும் போதெல்லாம் இப்படி எண்ணுதல் வேண்டும்.

கடை வைத்திருக்கின்றோம் என்றால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் நம் பிள்ளைகளிடம் சொல்லும் பொழுது.. விநாயகரிடம் போய்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பா…!
3.இது போல் நீ வேண்டிக் கொண்டு வந்தால் உனக்கு நன்றாக இருக்கும் என்று நாம் போதிக்க வேண்டும்.

இது பக்தி… இதையே நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தான் தியானம். நாம் அந்த உயர்ந்த எண்ணங்களைத் திருப்பி எண்ணும்போது நூறு முறை சொல்ல வேண்டும்

ஏனென்றால் இதை எல்லாம் குருநாதரிடம் அடிபட்டு உதைபட்டுத்தான் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டேன். அடி உதை எதுவும் இல்லாமல்… சொல்லால் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்கின்றீர்கள்.

இதை நீங்கள் சீராகத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் பக்தி கொண்டு கோவிலுக்குச் செல்வது நல்லது தான். ஆனால் கோவிலுக்குப் போனால் எப்படிச் சாமி கும்பிட வேண்டும்…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் வீடு நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் குடும்பங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே கோவிலுக்குச் சென்று விநாயகரை வணங்கும்போதெல்லாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள்.
4.இதைக் கணங்களுக்கு அதிபதியாக ஆக்குங்கள்.
5.இதையே பக்தியாகக் கொண்டு வாருங்கள்.
6.இதையே தியானியுங்கள்…. இந்தத் தியானமே உங்களுக்குக் கைகொடுக்கும்.

அந்த நிலை பெறுங்கள்… எமது அருளாசிகள்…!

தன்னை அறிந்து செயல்படும் நிலையே விநாயகர் தத்துவம்

அக்காலங்களில் ஆற்றங்கரையில் தான் விநயகர் கோவில் இருக்கும். கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆற்று நீரில் குளித்து உடலையும் உடைகளையும் தூய்மையாக்குகின்ற மாதிரி நம் மனதை… நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் தத்துவத்தைத்தான் விநாயகர் தத்துவமாக ஞானிகள் அழகாகக் கொடுத்து இருக்கின்றார்கள். மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதன் மீது பற்று அதிகமானால் நாம் அங்கே போகின்றோம்.

அப்படி இல்லாதபடி… விநாயகரைப் பார்த்து எல்லோருக்கும் உதவி செய்தேன்…! கடனை வாங்கியவன் திரும்பக் கொடுக்கவில்லை நீ பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றாய்…! நான் உதவி செய்தவனே எனக்கு இடைஞ்சல் செய்து கொண்டு இருக்கின்றான்… உனக்கு எல்லா நைவேத்யமும் செய்தேன்… கண ஹோமம் எல்லாம் செய்தேன்…! என்று எண்ணினால் இங்கே தான் சுழன்று கொண்டிருக்க வேண்டும்…!

எங்கே…? யார் மேலே வருத்தப்படுகின்றீர்களோ… யாரை எண்ணிக் கோபப்பட்டீர்களோ அந்த உணர்வை எடுத்து அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலுக்குள் சென்று நோயை மீண்டும் உருவாக்கி அவனையும் வீழ்த்திவிட்டு மனிதன் அல்லாத உருவைத் தான் அங்கே உருவாக்கும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலேயும் குறைகளைக் கண்டால் கணவனும் மனைவியும் அந்த உணர்வை உள்ளே விடாதபடி “ஈஸ்வரா…!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஊட்டி இங்கே அடைத்திடல் வேண்டும்.

குடும்பத்திற்குள் இருந்தாலும் சரி நமது கர்ம காரியங்கள் செய்யும் போது அத்தகைய நிலை ஏற்பட்டாலும் சரி துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தடுத்து நிறுத்திப் பழகவேண்டும்.

ஏனென்றால் மனிதனுக்குத்தான் தெய்வ சக்தியைப் பெறக்கூடிய அந்தத் தகுதி உண்டு. கணவன் மனைவி இரண்டு உயிரும் ஒன்றாக இணைந்தால் அதற்குப் பின் பிறவியில்லை…! விநாயகர் தத்துவத்தின் மூலம்…!

12 மாதங்களிலும் ராசிகளை வைத்துத் தீமைகளை நீக்கச் சொன்னார்கள் ஞானிகள்

 

ஒவ்வொரு வருடத்திலும் பனிரெண்டு மாதம் என்றால் ஒவ்வொரு மாதத்திலும் சூரியனிலிருந்து வெளிப்படும் உணர்வின் கதிர் இயக்கங்களும் மற்ற கோள்களில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளும் மற்ற நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளும் இந்த மூன்றும் கலவைகள் ஆவதை “ராசிகள்” என்று காட்டினார்கள்.

 

ஒவ்வொரு நட்சத்திரத்தின் தொகுப்பிலிருந்தும் பனிரண்டு மாதங்களிலும் அது கவர்ந்து எந்தெந்த நட்சத்திரங்கள் இந்த மாதங்களில் மூன்றும் ஒன்றாக அருகிலே கலந்து அது கவர்ந்து கொண்ட சக்திகளை மற்ற கோள்கள் கவர்ந்து அது எவ்வாறு நமது பூமிக்குக் கிடைக்கின்றதென்ற நிலையையும் அதே உணர்வின் சத்தை எவ்வாறு பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்படுத்துவதற்குத் தான் மாதங்களைப் பனிரண்டு ராசிகளாகப் பிரித்தார்கள்.

ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாதத்திலும் மனிதன் எவ்வாறு தனக்குள் நல்ல நினைவுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும்…? தன் உயிரான்மாவை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும்…? உயர் ஞானத்தை எப்படித் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று சிந்திக்கும்படி செய்தார்கள்

cosmic breathing

ஜோதி நிலை பெறுவதற்கு… மேல் நோக்கிய சுவாசத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று நாமுள்ள நிலை பூமிப் பிடிப்பில் சிக்குண்டு சுழலும் நிலைதான்.

உருளுகின்ற உலகினிலே உதித்த உயிரணுக்கள். அவற்றின் பிடிப்புச் சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பில் தான் சுழற்சியுடன் சிக்குண்ட நிலையில் சுழலுகின்றோம்.

1.உணர்வில் குளிரும் வெயிலும் ஏற்படுத்து.ம் உணர்வு எண்ணமுடனும்
2.சுவை உணர்வு… உடல் இச்சையின் தேவை உணர்வு எண்ணத்தில் மோதும் எண்ண அலை உணர்வுடனும்…
3.இதைப் போன்ற விழியெடுக்கும் பட உணர்வும்… செவி கேட்கும் நாத ஒலியின் உணர்வுடனும் நாமெடுத்து
4.அவற்றின் பிடிப்புத் தொடரில் பூமியில் சிக்குண்டு தான் உருளுகின்றோம்.

அதே சமயத்தில்
1.பூமியின் இயக்கத்தில் வளரும் தாவர கனி வள திரவ நீர் இவைகள் “பிடிப்பு” நிலையிலும்…
2.ஊர்வன பிடிப்பில் “ஊரும்” தன்மையிலும்…
3.ஜீவராசிகள் “ஓடவும் நடக்கவும்” இடம் விட்டு மாறிச் செல்லவும் வளர்ச்சி பெற்றும்
4.ஜீவ சரீரம் கொண்ட பட்சிகள் “பறக்கும்” நிலை பெற்றிருந்தாலும் அதன் தொடரிலும் வந்து அமரக்கூடிய பூமி ஈர்ப்புடன் தான் வளம் பெற்று வாழ்கிறது.

இருளான இப்பூமி… தன் சுழற்சி வட்டத்தால் ஒளி பெறும் தன்மையை சூரியன் பூமிக்கு எத்திசையில் சந்திப்பு கொள்கின்றதோ அந்நிலைக்குப் பூமி ஒளி பெறுகின்றது.

அதைப் போன்று பூமிக்கு மேல் எண்ண செயல் கொண்ட இம்மனித ஞானத்தால் எண்ண உணர்வைச் சமமானதாக்கி “இருளிலிருந்து ஒளி பெறும் வலுவை” நாம் கூட்ட வேண்டும்.

சூரியன்… பூமியின் நேர் பார்வையில் வரும்போது தன்னைத்தானே சுழன்று ஓடும். ஓட்டத்தில் சூரியனின் தொடர்பு கொண்டவுடன்… “ஒளி பெற்று” பூமியின் அந்தந்த இடங்களில் வளரும் வளர் சக்திக்கு வலு கூட்டிக் கொள்கின்றது.

அதைப் போன்று
1.சம உணர்வு தொடர்பு எண்ணத்தை இச்சரீர இயக்கம் செயல் கொண்டவுடன்
2.நற்சக்தியின் வலுத் திறமையைப் பகுத்தறியும் ஞான எண்ணமுடன் விண்ணிலே எண்ணத்தைச் செலுத்தி
3.இவ்வுடல் பிம்பத்தில் பூமி எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தைக் கீழ் நோக்கி எடுக்காமல்
4.மகரிஷிகளின் அருள் அலையை நேராக மேல் நோக்கிய சுவாசமாக
5.இச்சரீர இயக்கச் சுவாசத்திற்கு எடுக்கும் பழக்கம் வருதல் வேண்டும்

இருளான இப்பூமி சூரியனின் நேர் சந்திப்பு பெற்றவுடன் ஒளி பெறுவதைப் போன்று ஒளி வளர்ப்புச் சரீரமாய் இச் சரீர அணுக்கள் வலுக்கொண்டு “நம் உயிராத்மா ஜோதி நிலை பெற்றவுடன்” உடலின் இயக்கத் தொடர்புடன் ஆத்ம ஒளி எத்தன்மையையும் அறியும் ஆற்றலையும்… வளர்க்கும் வலுத்தன்மையும் பெற்று விடுகின்றது.

பாம்பின் சுவாசம் மேல் நோக்கிய தன்மை கொண்டது,

விஷமான உடலைக் கொண்ட பாம்பு அது எடுக்கும் சுவாச அலை உணர்வு கொண்டு மனிதனை ஒத்த பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் இல்லா விட்டாலும் அதன் சுவாச இயக்கத்தில் எடுக்கும் அலை உணர்வினால் விஷமான உடலில் பல காலங்களுக்கு அவை உயிர் வாழும்,
1.தன் உடலிலேயே மாணிக்கக் கல்லை வளர்க்கும் வலுவைப் பெற்று
2.ஒளி கொண்ட கல்லைப் பாம்பு தருகின்றதல்லவா…!

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வை ஜீவ காந்த சரீர இயக்கத்தில் சமமான நிலைபடுத்தி… சாந்தமுடன் கூடிய வலுத் தன்மை கொண்டு ஞான்னிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களை இஜ்ஜீவ காந்த சரீரம் வளர்த்ததென்றல்
1.இச்சரீரமே மண்டல சக்திக்கு உருவாகும் ஒளி சக்தியாக
2.ஒளி கொண்ட சக்தி நிலையாய் அழியா ஆனந்த நிலை பெற முடியும்.

golden jewellery

தங்க நகைகளை அணியும் போது எந்த எண்ணத்துடன் அணிய வேண்டும்…?

தங்க ஆபரணங்களை நீங்கள் அணிந்திருந்தால் அந்த ஆபரணங்களை எண்ணி… நம்மைப் போன்றே மற்றவருக்கும் இது கிடைக்க வேண்டும்…! என்று எண்ணுங்கள்.

1.அந்தத் தங்கத்தைப் போன்ற நல்ல மனம் எங்களுக்குள் வளர வேண்டும்.
2.எங்களைச் சார்ந்தோர்… எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் “தங்கத்தைப் போன்ற மங்காத மனம்” கிடைக்க வேண்டும்.
3.வாழ்க்கையில் தங்கத்தைப் போன்ற பளிச்சென்ற மங்காத நிலைகள் எல்லோரது மனதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏனென்றால் வெறும் நகையாக மட்டும் தங்கத்தை அணிந்து கொண்டிருப்பதற்கு அல்ல…!

தெய்வங்களுக்குத் தங்கத்தை மாலைகளாகப் போட்டு பல விதமான ஆபரணங்களாக அணிந்து பார்க்கின்றோம் அல்லவா…! அந்தத் தங்கம் எவ்வாறு மங்காது இருக்கின்றதோ… இதைப் போன்று நமது எண்ணங்கள் மங்காது அனைவருடைய அரவணைப்புடன் இருக்க வேண்டும்.

காரணம்… குடும்பத்திற்குள் எல்லோருடனும் நாம் மகிழ்ச்சியாக இருப்பினும் அந்த மகிழ்ச்சிக்குள் சிறிது குறை ஏற்பட்டால் உடனே அவர்கள் மேல் கோபமோ ஆத்திரமோ வேதனையோ ஏற்பட்டு நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள் மறையத் தொடங்குகின்றது.

அப்பொழுது நம் நல்ல எண்ணங்கள் மறையாது இந்தத் தங்கத்தைப் போன்று மங்காது பாதுகாத்திடல் வேண்டும்.

அவர்களுடைய குறை உணர்வுகள் நமக்குள் வந்ததைத் துடைத்துவிட்டு “பளிச்…” என்ற நிலையில் அவர்களுடைய உணர்வும் தெளிந்திட வேண்டுமென்ற எண்ணத்தை நாம் எடுத்து நமக்குள் வளர்த்திட வேண்டும்.

ஏனென்றால் தியானம் என்றாலே இது தான்…! நமக்காக மட்டுமல்ல…!

சூரியன் எவ்வாறு பிற கோள்களின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து அதிலுள்ள தீமைகளைக் கழித்துவிட்டு ஒளியின் நிலையாக அது உருப்பெற்று வளர்ந்து கொண்டே இருக்கின்றதோ இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கின்றதோ… இதைப் போல நமது எண்ணங்கள் எப்போதுமே அந்தப் பிரகாச நிலைகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

பிறர் மேல் இருக்கும் குறையோ… குற்றமோ… வெறுப்போ,,, நாம் நுகர்ந்து அறியப்படும்போது… அது நமக்குள் வளராது…
1.அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு பளிச்சிடச் செய்து
2.”தங்கம் கருகாது” எப்படி அதனுடைய உணர்வு என்றுமே ஒளி வீசுவது போல்
3.நம் ஒவ்வொருவருடைய மனதையும் தங்கத்தைப் போன்று மங்காத நிலை பெறச் செய்து
4.நாம் எதிலே ஈடுபட்டாலும் நம் உணர்வுகள் மங்காத நிலைகள் பெறச் செய்ய வேண்டும்.

இதை நாம் வழிப்படுத்த வேண்டும்.

தீமை செய்யும் உணர்வு இரத்தத்தின் வழி சென்று உருவாவதற்கு முன் நாம் சுத்தப்படுத்த முடியும்

துணிகளை வெளுத்துத் தூய்மையாக்குவது போல் தீமைகளைப் போக்க வேண்டும்

குரு காட்டிய வழியில் நாம் தீமைகளை அகற்றுதல் வேண்டும்

power of eyes

கண் பட்டு விட்டது… கண் திருஷ்டி..! என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…?

 

சில பேர் நகை நட்டெல்லாம் நிறையப் போட்டிருப்பார்கள்…. கடை வைத்திருப்பார்கள்…. கடையிலும் நன்றாக வியாபாரமாகும்.

அதைப் பார்ப்பவர்கள்… பரவாயில்லை… உங்களுக்கு என்னங்க குறை…! என்று சொன்னால் போதும். இந்த மாதிரி ஒரு நான்கு பேர் சேர்ந்து சொன்னால் போதும்

என்னைப் பார்த்து… கடையில் நடக்கும் வியாபாரத்தைக் கண்டு “உலகமே கண் பட்டு விட்டது…!” என்று எண்ணுவோம். இது பக்தி இல்லை.

நன்றாக இருக்கின்றீர்கள்..! என்று அடுத்தவர்கள் சொன்னால்
1.இனி உன் வாக்குப் பிரகாரம் எல்லாமே நன்றாக வேண்டும்
2.என்னைப் போல் நீயும் நன்றாக ஆக வேண்டும்…! என்று
3.திருப்பி சொல்வதற்கு என்ன வந்தது…?

ஆனால் அதைச் சொல்ல மாட்டார்கள்.

நகை போட்டிருக்கின்றேன்…! எங்கே பார்த்தாலும் பொறாமையிலே இப்படிப் பேசுகின்றார்கள்…! என்று அவர்கள் மேல் வெறுப்பு உண்டாக்கி விடுவார்கள்.

யாருடனாவது பேசும் பொழுது இவர்களைப் பார்க்கும் போது சிரித்து பேசினால் போதும். அல்லது அப்படி இல்லையென்றாலும் பார்த்தவுடனே நேற்று பார்த்தோமே…! என்று சிரித்தால் போதும்..! இங்கே உணர்வுகள் மாறிவிடும்.

நான் போகும் பொழுதும்.. வரும் போதும்.. என்னைப் பார்த்தாலே இளக்காரமாகத் தெரிகிறது… என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். இப்படிப்பட்ட உணர்வுகள் எல்லாம் பதிவு செய்தால் அதனின் உணர்வாகத் தான் வருகின்றது.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் பெண்கள்… இதையெல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் பழக்கத்தில் இருக்கின்றோம். அந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்று அறிய வேண்டும். மற்றவர்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு முறை பள்ளிக்கூடத்தில் ஒருவர் தன் குழந்தையை “ஏதோ சொல்லி விட்டார்கள்” என்று கேள்விப்பட்டதும்
1.என் மனதே தாங்கவில்லை…
2.நான் இந்தப் பள்ளிக்கூடம் பக்கமே போக மாட்டேன்
3.ஐயோ… எனக்குத் தூக்கமே வரவில்லை…! என்று அந்த அன்பர் (குழந்தையின் தாய்) எம்மிடம் வந்து சொன்னார்.

அப்படி என்றால் இந்தத் தியானத்திற்கு வந்ததன் காரணம் என்ன…?

யார் அந்தக் குழந்தையை ஏசிப் பேசினார்களோ… யாம் சொன்ன முறைப்படி அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள் பெற வேண்டும்… பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்… தெய்வீக அன்பும் பண்பு அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாம் உபதேசித்த வழிப்படி அவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைகக வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதை விடுத்துவிட்டு அந்த அம்மா சாமி… சாமி…! என்று என்னை உயர்த்தித் தியானித்து விட்டு மற்றவர்களை எல்லாம் குற்றவாளி ஆக்கிவிட்டது. இது எப்படிச் சரியாகும்…?

சண்டைக்குப் போவது… வெறுப்பை உண்டாக்குவது என்ற நிலையில் இப்படி ரொம்பப் பேர் இன்றும் செயல்படுகின்றார்க்சள். இது தியானமே அல்ல…!
1.ஆகவே நாம் எதைத் தியானிக்கின்றோம்…?
2.அசுத்தத்தையும் தீமையான உணர்வையும் தான் தியானிக்கின்றோம்.
3.அதைத் தான் பக்தியாகப் பற்றுகின்றோம்.

ஆக மொத்தம் இன்று உங்கள் கடையில் வியாபாரம் இன்று அமோகமாக நடக்கிறது…! என்று இரண்டு பேரை வந்து சொல்லிப் பார்க்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

உடனே இரண்டு மிளகாயை எடுத்துச் சுற்றி வைத்து விடுவார்கள்…! ஏனென்றால் கண் பட்டுவிட்டதாம்…! (திருஷ்டி)

நல்லது தான் சொல்கின்றார்கள்… இன்னும் கொஞ்சம் உங்கள் வாக்கினால் நல்லாக வேண்டும். நீங்களும் இனிமேல் இது போன்று உயர வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அது போன்று வந்துவிட்டால் “அவர்கள் சொன்ன வாக்கு” நமக்குள் பதிவாகிவிடும்.

அவர்கள் என்ன செய்கின்றார்கள்…!

1.“வியாபாரம் நன்றாக ஆகிறது… பரவாயில்லையே…!” என்று சந்தோஷத்தில் சொல்கின்றார்கள்.
2.அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனது இல்லை.

ஏனென்றால் இது எல்லாம் “பக்தி” என்று சொல்லிக் கொண்டு என்ன செய்கின்றார்கள்…? கண் திருஷ்டி… ஓமழிப்பு…! என்று தான் எண்ணிக் கொள்கிறார்கள்.

அடுத்தாற்போல் சரக்கு வாங்கப் போகும் போதெல்லாம் இந்த எண்ணம் தான் வரும். அந்தக் குறை உணர்வுடன் அங்கே சென்றால் மட்டமான சரக்காகப் பார்த்து எடுத்து வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள்.

மட்டமான சரக்கு கடையிலே சரியாக வியாபாரம் ஆகாது. உடனே என்ன நினைப்பார்கள்…? கண் திருஷ்டி பட்டதிலிருந்து என் சரக்கே வியாபாரம் ஆகவில்லை என்பார்கள்.

அதே மாதிரி வீட்டிற்குள் மற்றவர்கள் வந்து உங்கள் குழந்தை அழகாக இருக்கின்றது…! என்று தொட்டு விட்டால் போதும்.

ஐய்யய்யோ…! என் குழந்தைக்குக் கண் பட்டு விட்டது.. என்ன ஆகுமோ..? என்று எண்ணுவார்கள். திருஷ்டி கழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். காரணம் இது எல்லாம் பக்தி…!

குழந்தை அழகாக இருக்கின்றது என்று ஒருவர் சொன்னால்…
1.உங்கள் அருளால் என் குழந்தை நன்றாகச் சாப்பிட வேண்டும்
2.குழந்தைக்கு நல்ல ஜீரண சக்தி கிடைக்க வேண்டு,ம்
3.உங்கள் வாக்காலே குழந்தை என்றுமே நன்றாக இருக்க வேண்டும்…! என்று
4.இந்த எண்ணம் தான் நம் மனதில் வர வேண்டும்.. அதைச் சொல்ல வேண்டும்.

அவர்கள் யதார்த்தமாகக் குழந்தையைப் பார்த்தவுடன் அந்த மகிழ்ச்சி வருகின்றது. அதை வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் மனது நம்மிடம் இல்லை.

இப்படிச் செய்கின்றார்களே…! என்று குழந்தைக்குப் பால் கொடுக்கும் போதெல்லாம் இந்த உணர்வு வரும். அந்த உணர்வு வந்தவுடன் அந்த பிள்ளைக்கு தலை வலிக்கும்… மேல் வலிக்கும்… எல்லாம் வலிக்கும்… வீர்… வீர்… என்று கத்தி அழுகும்.

யார்…? உங்களால் தான் குழந்தைக்கு இப்படி வந்தது…! என்று தெரியாது.

அவர்கள் பார்த்தார்கள்.. என் குழந்தைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது. உடனே மிளகாயையும் உப்பையும் எடுப்பார்கள். குழந்தைக்குச் சுற்றுவார்கள். அடுப்பில் போடுவார்கள். போட்டவுடனே அதிலே நெடி எதுவும் வராது.

பாவிகள்…! என்ன செய்திருக்கின்றார்கள் பாருங்கள்..?

“நெடி வரவில்லை…!” என்றால் நாம் எடுத்துக் கொண்ட வெறியான உணர்வுகள்… அந்த வெறுப்பான உணர்வுகளுடன் கையில் எடுத்துச் செல்லும் போது அது அந்தக் காரத்தையே போட்டு அமுக்கி விடுகின்றது. நம் எண்ணம் அப்படித் தான் இயக்கும்.

ஆகவே அடுப்பில் அதைப் போட்டாலும் அந்த நெடி தெரிவதில்லை. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…?

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பக்தியில் இது என்ன செய்கின்றது…? நல்லதை நினைத்தால் கூட எடுத்துக் கொள்வதற்கு இல்லை.

காசைக் கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்து… அபிஷேகம் செய்தால்… “சாமி காப்பாற்றும்” என்றால் இது பக்தி அல்ல. இந்த முறையை மாற்ற வேண்டும்.

1.கோவிலுக்குச் சென்று எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.இது தான் பக்தி. இதுவே தான் தியானம்…!

ஆனால் அன்று நான் உனக்குப் (சாமிக்கு) பூமாலை போட்டேனே… உன்னைத் தேடி வந்தேனே… என்னை இப்படிச் சோதிக்கின்றேயே…! என்ற வகையில் எண்ணினால் இந்தப் பக்தி தான் அங்கே தியானமாகின்றது.

நீ எதை எண்ணுகின்றாயோ… நீ அதுவாகின்றாய்.. கோவிலுக்குச் சென்றாலும் அங்கே நாம் வேதனையைப்பற்றி அதிகமாக எண்ணினால் அதுவாக வளர்ந்து… அதுவாக நாமாகி…. அதுவாகின்றோம்.

ஆகையினாலே நாம் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். இது தான் உண்மையான பக்தி…!

ஹார்ட் அட்டாக் (HERT ATTACK) எப்படி வருகின்றது…?

 

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்பத்தால் தவறு செய்பவர்களை உற்றுப் பார்த்து வேதனையுடன் அதை நுகர்ந்தறிந்தால் உமிழ் நீராகி உணவுடன் கலந்து இரத்தங்களில் அது மாசு படுகின்றது. சுத்தப்படுத்தாத அந்த விஷ அணுக்கள் சிறுநீரகங்கள்… இதயம்… சிறு மூளை பாகம்,,, சென்றால் அடைப்பு போன்று ஆகி இரத்தம் போவதைத் தடைப்படுத்தத் தொடங்குகின்றது.

soul and its atoms

வணக்கத்திற்குரிய நம் குருவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எப்பொருளைச் செய்விக்கவும் அதற்குகந்த சத்து நிலை.. பொருள்.. எல்லாம் தேவைப்படுகின்றது. பலகாரம் பட்சண்ங்கள் செய்யும் பொழுது அந்தந்தப் பொருளைக் கூட்டும் நிலை கொண்டு தான் அதற்குகந்த நாமம் பெறுகின்றது.

அதைப் போன்று தான்
1.“மனிதக் கரு அமிலச் சேர்க்கையில் வளர்ச்சி பெற”
2.இவற்றின் மூல வித்தை இந்தப் பூமி எடுக்க
3.பல வழிகள் ரிஷிகளினால் வளர்க்கப் பெற்று இன்றளவும் வளர்ந்து கொண்டுள்ளன.

அவர்கள் வகுத்த வளர்ப்பில் சூரியனின் ஒளிச் சமைப்பை இந்தப் பூமி எடுக்க… இந்தப் பூமி சமைப்பமில வளர்ப்பாகப் பல வளர வழி காட்டிய வழியில் வந்த நமக்கு…
1.குரு என்பது
2.நம் உயிராத்மாவே தான்.

உயிராத்மாவின் உயர்வை எண்ணத்தால் உணரும் பக்குவத்தைக் கொண்டு இந்த உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களுக்குச் சேவை செய்து குருவை வணங்கிட வேண்டும். ஆக… வணக்கத்திற்குரிய குரு நம் உயிராத்ம குரு தான்.

அந்தக் குருவிற்கு எண்ணத்தால் நாம் எடுக்கும் உயர்ந்த உணர்வு கொண்டு
1.இந்த உடலின் கோடானு கோடி அணுக்களும் இந்த ஆத்ம உயிரை வணங்கியே…
2.தெய்வமாக்கியே… தெய்வமாகியே…
3.ஆதம உயிரின் தெய்வக் குழந்தைகளாக…
4.உடல் உறுப்பில் வளரும் அணுக்கள் அனைத்தையும் ஒன்று போல
4.குருவின் உயர்வில் ஒவ்வொரு அணுக்களும் ஒவ்வொரு “ஒளி ஜோதிநிலை…” பெறுகின்ற செயல் நிலைக்கு
5.நம் எண்ண உணர்வைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இந்த எண்ணத்தால் உணர்வைக் கூட்டும் குண நிலைக்கொப்பத்தான் உடலின் அணுத் தன்மையே வளர்கின்றது. நம் உடலை நாமே இம்சித்துத்தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாம் எடுக்கும் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப உணவைத்தான் உடல் பெறுகின்றது. எதை நாம் இந்த உடலில் செலுத்துகின்றோமோ அதன் சத்தைத்தான் இந்த உயிராத்மாவும் பெறுகின்றது.

வஞ்சனை கோபம் ஆத்திரம் சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை ஆகியவற்றில் எதை எடுக்கின்றோமோ அதைக் கொண்டு தான் நம் உயிராத்மாவிற்கு… நாம். நம் குரு தெய்வத்திற்கு… அபிஷேகம் செய்கின்றோம்.

உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் வழியிலேயே…
1.ஞானிகள் மகரிஷிகள் காட்டிய வழியில் நடப்பதற்கு ஆசையைக் கூட்டுங்கள்
2.நடக்க வேண்டும்…! என்ற செயலை ஞானம் கொண்டு செய்யுங்கள்.
3.எண்ணும் அந்த எண்ண நிலைக்கொப்ப நன்மையாகவே முடியும்.

ஆனால்… செய்யும் செயலுக்கு அதி பேராசையைக் கூட்டி… ஆர்வத்தின் உந்தலை அதிகமாக்கித் தடைப்படும் சமயத்தில் சஞ்சலமும் சோர்வு கொண்டு…
1.செயலின் வேகத்தைச் சாந்தமில்லா முறையில் செலுத்தினால்
2.அதிலே எதிர்ப்படும் நிலையை இந்த உடல் தாங்குவதில்லை.

 

சமமான நல் உணர்வு எண்ணத்தை நாம் எடுக்க… செயலின் வேகத்தைச் செலுத்தும் செயலும் நல் வழி பெற… “இவ்வெண்ணத்தைக் கூட்டும் உணர்வைப் பக்குவமாக்குங்கள்…!”

நல்லதே நடக்கும்.

ஞானிகள் வாழ்ந்த நம் நாட்டின் உயர்ந்த பண்புகளை உணர்ந்து அதன் வழி செயல்பட முற்படுங்கள் 

நபிகள் ஞானம் பெற்ற நிலை – அரசர்கள் அவர் தத்துவத்தை மாற்றியது 

முகம்மது நபி ஞானம் பெற்ற நிலை

Gnanaguru - papanasam

எப்படிப்பட்ட எண்ணத்துடன் குருவை அணுக வேண்டும்…? என்று அறிந்து கொள்ளுங்கள்

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் எனக்கு (ஞானகுரு) உபதேசித்தார்… ஞானிகள் கண்ட பேருண்மைகளை உணர்த்தி அருளினார். அதே சமயத்தில்
1.ஒவ்வொரு காலத்திலேயும் அவர் என்னை அடிப்பார்…
2.சிந்தனையை மேல் நோக்கிச் (வானை நோக்கி) செலுத்தும்படி உணர்த்துவார்.
3.அவருக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மை இதே தான்.

ஆனால் நான் உங்களை அடிப்பதில்லை சில நேரங்களில் நீங்கள் தவறு செய்வதைக் கண்டுணர்ந்தபின் “அந்த உணர்வை நீக்க…” அதற்கு அதிர்வின் நிலைகளை ஊட்டி… அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று தான் உங்களிடத்தில் நான் கோபிப்பது.

அருள் உணர்வின் தன்மை பதிந்து… அறியாத இருள்கள் பிளந்திட வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நினைவிற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் ஈஸ்வரபட்டர் என்னை அடித்தார்.

அதைப் போன்று உங்களிடம் உள்ள தீமைகளை பிளக்கும்படியாகத்தான் ஒரு சொல்லால்… அந்தச் சொல்லின் வாக்கினைக் கடுமையாகச் சொல்லி யாம் உணர்த்துவது.
1.அதை நீங்கள் வேறு விதமாக… வாழ்க்கையின் நிலைகள் கோண்டு…
2,தவறாக எடுத்துக் கொண்டால்… அது உங்களுடைய பிழைகள் தான்.

ஏனென்றால் உங்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தின் நிலைகளிலிருந்து நீங்கள் மீள்தல் வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செய்கின்றேனே தவிர… இதனால் பல நன்மைகள் உண்டு.

இன்று உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளையும் துன்பங்களையும் குறைகளையும் நீங்கள் கேட்கின்றீர்கள்… பார்க்கின்றீர்கள். அந்தக் கஷ்டங்கள்… வேதனைகள்… அனைத்தும் உங்களில் இணைந்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு ஆற்றில் தண்ணீர் போகிறது என்றால் அந்த ஆற்றுக்கு மீறிய அளவில் அதிலே சாக்கடை கலந்தால் என்ன ஆகும்…? ஆறே சாக்கடை மணமாகத் தான் வீசும்.

அதே போல் நீர் போகும் வாய்க்காலில் ஒரு வீட்டின் கழிவு நீர் சென்றால் அந்த வாய்க்காலின் நீரே கெட்டுப் போய் விடுகின்றது.

அதைப் போல பெரும் வெள்ளமாகச் சென்றாலும் அதில் ஊரிலிருந்து வரும் சாக்கடைகள் சேர்க்கப்படும்போது அது என்ன ஆகும்…? அந்த சாக்கடையின் நாற்றமே அந்த ஆற்றில் கலந்துவிடும்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் சக்தியை எனக்குள் (ஞானகுரு) சதா எடுத்துக் கொண்டாலும் எம்மிடம் வருவோர் அனைவரும்
1.எனக்குக் கஷ்டம்… எனக்குத் துன்பம்… அதிலே குறை… இதிலே குறை… என்ற வகையில் அடிக்கடி என்னிடம் சொல்லி
2.அந்த ஆறாக ஓடும் நிலைகள் கொண்டு இதை இணைத்தால் அது என்னவாகும்…?

இதைப் பிளப்பதற்கு யாம் எத்தனை கஷ்டப்பட வேண்டும்…?

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். குருவை எப்படி அணுக வேண்டும்…? என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் வரும் சிரமங்கள் எதுவாக இருப்பினும் அந்தச் சிரமங்களை எல்லாம்
1.இவைகள் எல்லாம் இன்னது எங்களை இயக்குகின்றது.
2.இதிலிருந்து நாங்கள் மீள வேண்டும்.
3.குரு அருள் எங்களுக்கு வேண்டும்… மகரிஷியின் அருள் எங்களுக்கு வேண்டும்…
4.நாங்கள் பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று இப்படித் தான் கேட்டுப் பழகுதல் வேண்டும்.
5.அப்படி ஏற்றுக் கொள்ள வேண்டிய பருவம் வரும் பொழுதுதான் உங்களுக்கு நல்லதாகின்றது.

ஆனால் ஒரு சிலர் என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லையே…! என்று “ஓ…!’ என்று அழுகின்றார்கள்.

யாம் நல்லாகிப் போகும் என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் எங்கங்கே அது நல்லாகின்றது…? என்று தான் கூறுகின்றார்கள். அந்த நிலையிலிருந்து அவர்கள் விடுபடுவதில்லை

யாம் எவ்வளவு நல்லதைச் சொன்னாலும் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் முன்னணியில் வைத்து விட்டால் நான் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குள் ஜீவன் பெற முடியாது.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் என்னுடைய ஜெபமே உங்கள் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்பது தான்…!

“உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று யாம் தவமிருக்கும் பொழுது நீங்களும் குரு துணையால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

.

பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா

 

காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்த்து எண்ணிக் கவர்ந்து கொண்ட உணர்வின் சக்திகள் அனைத்தும் நமது உடலாகின்றது என்பதை உணர்த்தும் விதமாகபார்வதி பஜே.., ஹரஹரா சம்போ மகாதேவா..,” என்று சிவ தத்துவத்தில் தெளிவாக்கியுள்ளார்கள்.

 

பார்வதி பஜே  பார்த்த உணர்வின் உணர்ச்சிகளை உயிரானது நமது உடலுக்குள் ஊட்டி

ஹரஹரா அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி

சம்போ நாம் பார்த்த இந்த சந்தர்ப்பம்

மகாதேவா நாம் பார்த்த உணர்வுகளையெல்லாம் நமக்குள் உருவாக்கக்கூடியதாக நம் உயிர் இருக்கிறது.

 

பார்வதி பஜே நமச்சிவாயஎன்று பாடினார்கள். அதாவது கண்களால்பார்க்கப்படும் உணர்வுகள்நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் உயிரில் மோதும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்படுகின்றது.

 

உயிரில் பட்டு அந்த உணர்வின் இயக்கமாக.., “பஜே நமச்சிவாயஇந்த உடலுக்குள் அதனின் உணர்வை இயக்கும்உணர்வின் ஒலிகளை எழுப்பும் உடலாக.., அமைந்துவிடுகின்றது என்பதை உணர்த்துவதற்காக பாடல்களாகப் பாடினார்கள்.

 

நாம் எதையெல்லாம் பார்த்தோமோ அவை அனைத்தும் நம்முள் சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது (நம் உடலாக) என்பதைச் சிவ தத்துவம் நமக்குத் தெளிவாக்குகின்றது.

 

வாழ்க்கையில் நாம் நம்மிடத்தில் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து மன உறுதியை மன வலிமையைப் பெருக்கினோம் என்றால் நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கித் தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறமுடியும்.

 

இந்த உடலில் அருள் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க உடலில் விளைந்த உணர்வுகள் உயிருடன் ஈஸ்வரனுடன் ஒன்றிஅவனுடன் அவனாக..,” நாம் அழியா நிலைகள் கொண்டு என்றுமே பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்பதே நம் சாஸ்திரங்களில் கூறப்பட்ட உண்மைகள்.

divine pathway

மீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்…!

மெய் உணர்வுகளை குருநாதர் எனக்குக் கொடுத்தார். அதன் உணர்வின் தன்மையை எனக்குள் வளர்த்தேன். அந்த அருள்வழிப்படி அவர் உபதேசித்த உணர்வின் வழிப்படியே தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

1.ஏனென்றால் முந்திச் சொன்னது எல்லாம் வேறு..!
2.இதனுடைய உண்மையான பற்றுக்கு வரும் பொழுது அது வரும்.

தூண்டிலிலே ஒரு மீனுக்கு இரை போடுகின்றோம் என்றால் அதை உட்கொள்ளும் நிலையில் பிடித்து எடுத்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரித்தான் உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆசையின் உணர்வுகளுக்கு அந்த இரைகளைப் போடும் பொழுது “தொழில் நடக்க வேண்டும்… இலாபம் வேண்டும்…! என்று வருகின்றீர்கள்.

அப்படி வரும் பொழுது அதன் வழிகளிலே எடுத்து அந்த அருள் ஞானத்தின் வித்தை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

பதியச் செய்த வழியில் அந்த அருள் உணர்வை நீங்கள் பின்பற்றினால்… இந்த ஆசையின் நிலைகள் எதுவோ
1.நீங்கள் தேடாமலே செல்வம் தேடி வரும்
2.தேடாமலே மகிழ்ச்சியும் தேடி வரும்.
3.மகிழ்ச்சி உருவாக்கப்படும் பொழுது செல்வத்தைத் தாரளமாகச் செலவழிக்க வேண்டி வரும்.

ஆனால் இப்பொழுது செல்வம் இருந்தாலும் என்ன நடக்கிறது…?

இதைப் பாதுகாக்கும் ஞானம் இருக்காது. சிக்கனம் செய்வோம்… சாப்பிடாமல் பண்ணுவோம். பணம் இருக்கிறது என்றால் ஒருவரை வெறுத்துப் பேசுவோம் இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் அடுத்தவரிடம் சண்டைக்குப் போவோம்… அதன் வழியில் பணத்தைச் செலவழிப்போம்,

அதே சமயத்தில் பண்புடன் இருப்போம். பரிவுடன் இருப்போம் வேதனையுடன் இருக்கின்றார் என்று ஒருவருக்கு உதவி செய்வோம். அந்த வேதனையைத் துடைக்கத் தெரிவதில்லை. ஆக வேதனைப்பட்டோர் உணர்வு உள்ளுக்குள் வந்தவுடன் நோய் வந்துவிடுகின்றது.

காசைக் கொண்டு அதற்குச் செலவழித்தாலும் செல்வம் குறையத் தொடங்கும். நோயைப் போக்க செல்வம் போனாலும் கூட உடலை வாங்க முடியாது…!

1.காசை வைத்து ஆன்மாவை விலைக்கு வாங்க முடியாது…!
2.அருள் ஞானியின் உணர்வை அந்த அழியாச் செல்வமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
3.அந்த மெய் ஞானிகளின் உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.
4.நம் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் அரை மணி நேரம் தியானித்தால் எனக்குச் சக்தி கிடைக்கும் என்பது உட்கார்ந்திருந்தால் உணவுக்கு என்ன செய்வது…?

உட்கார்ந்து… தியானம் மட்டும் செய்து கொண்டிருந்தால் சோற்றுக்கு அப்புறம் என்ன செய்வது…? சோறு யாரும் கொடுக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் நாம் ஏங்க வேண்டியிருக்கும்.

ஆகவே நமக்குள் அந்த மன வலு கொண்டு தொழிலையும் இந்த உடலையும் காக்க வேண்டும் என்றால் அதற்குப் பொருளும் வேண்டும். அதற்குத்தான் ஞாபகார்த்தமாகப் பிரசாதம் கொடுக்கும் பொழுது நான் (ஞானகுரு) காசையும் சேர்த்துக் கொடுக்கின்றேன்.

அதை வாங்கிய பின் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி வரும்.
1.நீங்கள் அதையாவது எடுத்து அந்த அருள் ஞானத்தை வளர்த்துக் கொண்டால்
2.செல்வம் தன்னாலே வரும்…! என்று சொல்கிறோம்.

eswarapattar blessings

பழனியில் “பித்தரைப் போன்று” இருந்த ஈஸ்வரபட்டரின் அபூர்வமான செயல்கள் 

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பழனியில் ஒரு பித்தரைப் போல இருப்பார் என்றாலும் பிறர் அவரைப் “பித்தர்” என்றே எண்ணுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பித்துப் பிடித்துச் செல்வம் தேட வேண்டும் என்று எண்ணுவான். அதே சமயத்தில் செல்வத்தில் குறை என்றால் பித்துப் பிடித்து “வெறி பிடித்தவன்” போல் மற்றவரை எப்படித் தாக்குகின்றான்…!

பித்துப் பிடித்து மற்றவர்களுக்கு எப்படித் தொல்லைகள் கொடுக்கின்றான்…! ஒவ்வொரு மனிதனும் “பித்துப்பிடித்துத்தான் அலைகின்றான்” என்று சொல்வார்.

குருநாதர் போஸ்ட் கம்பத்தில் கல்லைக் கொண்டு தட்டுவார். அலோ.., ஹலோ.., என்பார்.

“ஏன் சாமி.., கல்லைக் கொண்டு போஸ்ட் கம்பத்தில் தட்டுகிறீர்கள்..,?” என்று கேட்டேன்

நீ தான்டா.., கேட்கின்றாய். மற்ற எல்லோருமே என்னைப் “பைத்தியக்காரன்..,” என்று சொல்கின்றார்கள். நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார்.

என்ன சாமி டெலிபோன் செய்கின்றீர்கள்?

இந்தக் கம்பத்தின் மூலம் ஆண்டவனுக்கே அனுப்புகின்றேன். அந்த ஆண்டவன் என்பது “யார் தெரியுமா..,?” என்றார்.

நான் தட்டும் உணர்வுகள் சேர்த்து “உயிரில் பட்டபின்” அந்த ஆண்டவன் என்ன செய்கின்றான்? இந்த உணர்வை என்னைச் செயல்படுத்தச் சொல்கின்றான்.

தட்டும் பொழுது நான்.., எதை எண்ணித் தட்டுகின்றேன்?

ஏனென்றால்.., “தட்டும் பொழுது.., சப்தம் வருகின்றது”. ஒவ்வொரு பொருளிலும் தட்டும் பொழுது அதில் என்னென்ன நாதம் வருகின்றது?

கல்லில் தட்டினால் ஒரு நாதம் மண்ணிலே தட்டினால் ஒரு நாதம் மரத்தில் தட்டினால் ஒரு நாதம் உலோகத்தில் தட்டினால் அது ஒரு நாதம்.

ஆக, உணர்வின் ஒலியின் நிலைகள் நான் தட்டும் பொழுது என் உயிரான இவனுக்கே எட்டுகின்றது. அப்படி எட்டும் பொழுது நான் என்ன செய்கிறேன்?

1.இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தெரிந்து வாழ வேண்டும்.
2.அந்த ஆண்டவன் கட்டிய ஆலயத்தில் அவர்கள் பரிசுத்த நிலைகள் பெறவேண்டும்.
3.அவர்கள் புனிதம் பெறவேண்டும்.
4.புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.புனிதமான ஆலயமாக மாற்றவேண்டும்.

இப்படி இதை நினைத்து நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார் குருநாதர்.

ஆனால், வழக்கமாக நாம் டெலிபோன் செய்தால் மற்றவர்களிடம் என்ன கேட்கின்றோம்?

உங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கின்றார்களா? என்ன..,? ஏது…? என்று கேட்கின்றோம்.

அதனால் என்னை ஆளும் ஆண்டவனுக்கு இதைத் தட்டி அவனுக்குள் இந்த உணர்ச்சியை ஊட்டுகின்றேன் என்கிறார் குருநாதர்.

1.உலக மக்கள் தன்னையறியாமல் எத்தனையோ நிலைகளை செய்கின்றனர்.
2.இந்த உடலாசை கொண்டு அவர்களை இயக்கும் ஆண்டவனை மறந்துவிட்டார்கள்.3.அவர்களை ஆளக்கூடிய ஆண்டவனை மறந்து வாழ்கின்றனர்.

அவர்களுக்கெல்லாம் “அந்த ஆண்டவனை நினைவுபடுத்துவதற்கு” இதை நான் பாய்ச்சினேன்.

என்னைப் “பித்தன்..,” என்கிறான். ஆனால் அவன் பித்தனாக இருக்கின்றான்.

தன் காரியம் செயல்படுத்தவில்லை என்றால் “எத்தனாகவே.., மாறிவிடுகின்றான்”. பிறருக்குத் தொல்லை கொடுத்து வாழும் எத்தனாக வாழ்கின்றான்.

இவனை எத்தன் என்று மற்றொருவன் சொல்கின்றான். ஆக அவனும் பித்தனாகவே மாறுகின்றான். அடுத்து அவனும் எத்தனாகவே மாறிக் கொண்டிருக்கின்றான்.

அவன் உடலிலே வாழும் “அவன் உடலை உருவாக்கிய.., அந்த உணர்வின் ஈசனை மறந்து விட்டான்”. அந்த ஈசனே இவனை ஆள்கின்றான் என்று அந்த ஆண்டவனை மறந்து மனிதனான பின் மறந்தே வாழ்கின்றார்கள்.

எமக்குள் (ஞானகுரு) இதைத் தெரியப்படுத்துகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

“நீ தான்.., கேட்டாய்… அதனால் உனக்குச் சொல்கின்றேன்”.

“மற்ற எவனும்” கேட்கவில்லை. அவனுக்குச் சொல்லவில்லை. அவனுக்கு டெலிபோன் பண்றேன்.

அவன் உடலில் உள்ள “ஆண்டவன்” அவனை ஆள்கின்றது. அவனுகெல்லாம் “நல்ல சிந்தனை கொடு..,” என்று அவனுக்கு (ஆண்டவனுக்கு) நான் டெலிபோன் செய்கின்றேன்.

இப்பொழுது யாம் உபதேசிப்பதை நீங்கள் கேட்டால் உங்களுக்குக் கிடைக்கின்றது.

ஆனால் கேட்டுக் கொண்டிருந்தாலும்.., “ஏதோ பைத்தியக்காரன் சொல்கின்றான்.., ஊரை ஏமாற்றுகின்றான்..,” என்று சொன்னால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? அவரவர்கள் ஆசை கொண்டு (அவர்கள்) பைத்தியமாக இருக்கின்றார்கள்.

ஆனால், நான் என்ன செய்கின்றேன்? என்று (குருநாதர்) என்னிடம் கேட்கின்றார். என் உடலில் உள்ள துணியை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டேன். ஏனென்றால், எனக்கு “இந்த ஆடை” பாதுகாப்பாக இல்லை.

அவர்களுக்குள் இருக்கும் எல்லா ஆண்டவனுக்கும் டெலிபோன் செய்கின்றேன்.

1.அந்த உடலை நீ பாதுகாத்துக் கொள்
2.அந்த உடலுக்குள் நல்ல நிலைகளைச் செயல்படுத்து.

எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லும் பொழுது எனக்குள் என்ன நடக்கின்றது.

“நான் எண்ணக்கூடியது.., (இந்த ஆடை) இந்த  ஆன்மா” எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. “நான் இந்த ஆடையைத்தான்.., விரும்பினேன். ஆனால், என் கிழிந்த ஆடையைப் பார்த்தவுடனே “என்னைப் பைத்தியம்” என்று சொல்கின்றார்கள் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

இதைக் கேட்டவுடனே எனக்கும் (ஞானகுரு) அந்த அழகான ஆடை “என் உள் மனது என்னை அழகுபடுத்துவதும்.., உயிருடன் ஒன்றி மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது”

உங்கள் ஒவ்வொரு உயிரையும் ஆண்டவனாக மதித்து நான் சொல்லும் பொழுது எனது சொல்லைக் கேட்கும் பொழுது உங்களுக்கும் அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் கிடைக்கும். இந்த உணர்வு பெறவேண்டும் என்பவருக்கு அங்கே மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்.

அதே சமயத்தில் என் கிழிந்த துணிகளைப் பார்த்து மற்றவர்கள் “என்னைப் பைத்தியம்..,” என்ற நிலைகளை எண்ணும் பொழுது அவர்கள் பைத்தியத்திலிருந்து மீள முடியவில்லை.

ஆக மொத்தம் ஒவ்வொரு மனிதனும் பித்துப் பிடித்துத்தான் அலைகின்றனர். தன் பிள்ளையைச் சீராக வளர்க்க வேண்டும் என்று பித்துப் பிடிக்கின்றான்.

தன் பிள்ளை சரியாக வரவில்லை என்றால் எத்தனாகவே மாறுகின்றான். பிள்ளையை உதைக்க ஆரம்பிக்கின்றான்.

இந்தப் பித்து எத்தனாக மாறுகின்றது. என்ன சொன்னாலும் என் பையன் கேட்க மாட்டேன் என்கிறானே.., என்ற இந்த உணர்வு கொண்டு நாம் தாக்குகின்றோம்.

இதைப் போல தொழிலில் ஒருவருக்கு உதவி செய்கின்றோம். அதைச் சரியானபடி நாம் செய்தாலும் நாம் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் “எத்தனகாகப் பேசுகின்றோம்.., திட்டுகின்றோம்”.

இப்படிப்பட்ட உணர்வுகளை எடுத்துப் பித்தனாகத்தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றானே தவிர என்னைப் பித்தன் என்கின்றனர். இந்த ஆடையும் அலங்காரமும் எனக்கு ஒன்றும் செய்யவில்லை.

அழகான ஆன்மாவை.., நான் சேர்க்கின்றேன்..,. “பாருடா..,” என்று என்னிடம் சொல்கின்றார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.அவரை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அவருக்குள் “அகண்ட அண்டத்தின்” உணர்வின் தன்மை
3.”அவருடைய ஆன்மாவில்.., எப்படிக் கலந்துள்ளது” என்று அறிய முடிந்தது.

குருநாதர் எனக்குக் (ஞானகுருவிற்கு) காட்டிய இந்த நிலைகளை எல்லாம் நீங்களும் பார்க்கலாம். “எந்த அளவிற்கு.., ஆர்வமுடன் இருக்கின்றீர்களோ..,” அதைப் பார்க்கலாம்.

அவரின் ஆன்மாவை “என்னில் பார்..,” என்று அவர் சொல்கிற பொழுது அவரின் உணர்வுகள் அந்த மகிழ்ச்சிக்குரிய நிலைகள் வருகின்றது.

அவரைப் பார்த்தபின்.., “எனக்கும் ஏகாந்த நிலை.., என்ற மகிழ்ச்சி” வருகின்றது.

என்னுடைய ஆடை எப்படி இருக்கின்றது? மற்றவர்களுடைய ஆடை எப்படி இருக்கின்றது.

மற்றவர்கள் ஆடை வெளுப்பாக இருக்கின்றது. ஆனால் சொல் எப்படி இருக்கின்றது? வேதனை என்ற உணர்வுடன் தான் வருகின்றது. அந்த வேதனையை நீ நுகர்ந்தால் உன் நிலை என்னாகின்றது? என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிப் பித்தர்களாக வாழும் நிலை தான் இன்று இருக்கின்றது. யாரையும் தவறாகச் சொல்லவில்லை. அவன் படும் ஆசை அவனுக்குள் செயல்படுகின்றது. அவரவர் ஆசையே அவருக்குள் மாற்றிக் கொண்டுள்ளது.

இந்த உடலின் இச்சையிலிருந்து நாம் மாற்றி “ஒளியின் உணர்வின்.., ஆன்மாவைச் சேர்த்தால்..,” இன்றைய செயல் நாளைய உடலாக மாறுகின்றது என்று காட்டுகின்றார் குரு.

அவர்களுக்குள் அருள் ஒளி என்ற இந்த உயர்ந்த ஆசையை ஊட்டும் பொழுது அதைப் பெற்றால் அவருக்குள் இருளச் செய்யும் அந்தத் “தீமையான உணர்வுகள் மாறுகின்றது”.

ஒவ்வொரு உயிரும் கடவுள் என்று.., “அவன் வீற்றிருக்கும் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்..,” என்று தான் இந்தக் கல்லை வைத்து போஸ்ட் கம்பத்தில் அடிக்கின்றேன்.

உன்னையும் இப்பொழுது “அடித்தேன்டா…,” என்கிறார் குருநாதர்.

உனக்குள் செவிகளில் அந்த நாதம் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு.., “ஏன் சாமி அடிக்கின்றீர்கள்..,?” என்று கேட்டாய்

நீ இதன் மேல் இச்சைப்படுகின்றாய். இந்த இச்சையின் உணர்வு “உனக்குள் செயலாக்கும்” என்று சொன்னார்.

தன் ஆன்மாவைப் பார்க்கச் செய்து பார்த்துக் கொண்ட உணர்வு கொண்டு அகஸ்தியன் அக்காலத்தில் எப்படி வாழ்ந்தான் என்று அவன் வாழ்ந்த காலத்திற்கே என் உணர்வினைக் கொண்டு செல்கின்றார்.

அவன் இன்று துருவ நட்சத்திரமாக வாழ்வதைக் காட்டி அவன் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடைவதே “உன் வேலை” என்று தெளிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் எல்லோரும் அருள் ஒளி என்ற உணர்வினை வளர்த்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற்றிடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டு  நச்சுத் தன்மைகளைச் “சுட்டுப் பொசுக்க வேண்டும்” 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தச் சக்தியை நுகர்ந்தால் நஞ்சுகளை எல்லாம் வேக வைக்க முடியும்.

mantra 22

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் வாழ வேண்டும்

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…. மெய் ஞானிகளாக உயர்ந்திட வேண்டும்…! என்று நாம் எண்ணினால் மகரிஷிகளின் ஈர்ப்பு ஒளி வட்டத்திற்குள் நாம் செல்ல முடியும்.

mantra 21

ஞானகுருவின் கண்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய “ஊடுருவும் சக்தி” 

ஞானகுருவின் கண்கள் கூர்மையாக இருந்தாலும் பார்வை எங்கே நிலை குத்தி இருக்கிறது…? என்பதை நாமும் அதைச் செய்து பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் லேசர் (LASER) போன்று அறியலாம்… இயக்கலாம்…!

MANTRA 20

புவியின் ஈர்ப்பைக் கடந்து நம் கண்ணின் நினைவாற்றல் விண்ணுலகம் செல்ல வேண்டும் – பயிற்சி

கண்களைத் திறந்து செய்யும் தியானத்தின் மூலம் நம்முடைய புலனறிவு ஆற்றல் மிக்கதாகின்றது. ஆண்டென்னா சரியாக இருந்தால்  டி.வி ரேடியோ சரியாக வேலை செய்வது போல் நம் “கண்கள் +சுவாசம்” இரண்டும் ஒன்றாக இருந்தால் அதன் மூலம் நம் நினைவாற்றல் விண்ணுலகிற்கு எளிதில் செல்லும். தொடர்பு  (NETWORK) விண்ணுடன் இருப்பதால் இந்தக் காற்று மண்டலத்தின் நச்சுத் தன்மை நம்மை ஒன்றும் செய்ய முடியாது. 

MANTRA 19

இருளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றும் திறன் பெறுவோம் 

துருவ நட்சத்திரம் தன் அருகில் சிறிதளவு நஞ்சு வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது. அந்தச் சக்தியை நம் உயிருக்கு உணவாகக் கொடுப்போம்

mantra 18

உயிர் காக்கும் பாதுகாப்புக் கவசம் 

விண்ணிலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளை நம் உயிரில் சேமிக்கும் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

mantra 17

ஓ…ம் ஈஸ்வரா… என்ற நெருப்பைக் கூட்டி தீமைகளைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் 

தியானம் என்றாலே  உயர்ந்த சுவாசத்தை எடுக்க வேண்டும் என்று தான் பொருள் 

mantra 15

நல் சுவாசத்தை எடுத்தால் தப்பலாம் 

மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நாம் என்றும் வாழ்ந்திட வேண்டும் 

mantra 14

காற்று மண்டலத்தையே நாம் முழுமையாகப் பரிசுத்தப்படுத்த முடியும் 

அகஸ்தியரைப் போன்று நாம் வெளிவிடும் சக்தி வாய்ந்த மூச்சால்  விஷக் காற்றையே புனிதமாக்க வேண்டும் – மனித குலத்திற்கு இன்று நாம் செய்ய வேண்டிய சேவை இது தான்…!

mantra 13

நாம் பற்ற வேண்டியது மகரிஷிகளின் அருள் உனர்வை…!

எந்த நோய்க் கிருமியும் நமக்குள் ஜீவன் பெற முடியாது

mantra 11

விஷத்தை வென்றிடும் எம அக்னியை நமக்குள் சேர்த்துக் கொள்வோம் 

நெருப்பைக் கொண்டு தான் விஷத்தை வெலல வேண்டும்… வெல்ல முடியும். 

mantra 10

எந்த ஒரு காரியத்திற்கும் புருவ மத்தியிலிருக்கும் ஈசனை அழைத்துச் செல்வோம்…! 

எந்தச் சிக்கலாக இருந்தாலும் எத்தகைய கடுமையான நிலையைச் சந்தித்தாலும் அடுத்த கணம்  நினைவு ஈசனிடம் தான் செல்ல வேண்டும்.

mantra 9

புருவ மத்தியில் இருக்கும் ஈசனிடம் வேண்டுவோம்

இரு கண்களுக்கு மத்தியில் இருக்கும் உயிரிடம் ஈசனிடம் வலுக் கூட்டி உணர்வு மாறாது வேண்டுவதே ஊசி முனைத் தவம்

mantra 9

எத்தகைய நஞ்சையும் ஒடுக்குவோம்…! 

அகஸ்தியன் நஞ்சை ஓடுக்கிய வழியிலேயே நாமும் செயல்படுவோம்

mantra 8

நடப்பதெல்லாம் நன்மைக்கே…! 

எது நடந்ததோ… அது நன்றாகவே நடந்தது… எது நடக்கப் போகின்றதோ… அதுவும் நன்றாகவே நடக்கும்..! என்ற இந்தச் சிந்தனை தான் நமக்கு வேண்டும்.

mantra7

மரண பயத்தை அகற்றுவோம்…! 

பயத்தின் துடிப்பை வைத்தே அதீதமாக மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெற்றுப் பழகுவோம்

mantra 6

நல்ல மூச்சை விடுங்கள்… நல் சுவாசமே எடுங்கள்…! 

உங்கள் சுவாச நிலையை உயிர் வழியாக மாற்றுவதற்காகத்தான் இந்த உபதேசமே…!

mantra 5

சுவாச நிலையை மாற்றுங்களப்பா…!

கீழ் நோக்கிய சுவாசத்தை மாற்றி விண்ணிலிருந்து வரும் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

mantra 4

தூசிகளைத் தட்டி விடுவது போல்

தீமைகளைத் தட்டி விட வேண்டும்

AGATHIAR2

நல்லதைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்துத்

தீமைகளை நம் அருகில் வராதபடி விரட்டி அடிப்போம்

mantra 2

உயிர் காக்கும் ஒரே மருந்து

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைப்பது தான்

mantra 1

நண்பர்களுக்குள் பற்று கொண்டு மருந்தைக் குடித்து இறந்தால் என்ன நடக்கின்றது

தற்கொலை செய்து கொள்பவர்களின் உணர்வு தொடர்ந்து குடும்பத்திற்குள் இயக்கும் நிலைகள் 

வான்வீதியில் சூட்சமத்தில் சுழலும் மெய்ஞானிகள் யாரும் உடலுடன் இல்லை

eternal-light-destinations 1

நமது எல்லை எது…?

மதத்தின் அடிப்படையில் காட்டப்பட்ட சாஸ்திரங்களையும் கோட்பாடுகளையும் அதிலே வடித்துக் கொண்ட வேதங்களையும் மீண்டும் மீண்டும்… படித்துப் படித்துப் படித்து… அதனை உருவாக்கிவிட்டால் அந்த மதத்தின் பிடிப்பிலிருந்து எவரும் விலகுவதில்லை.

மதத்தின் பிடிப்பிலே போகும்போது அதிலே நஞ்சின் தன்மை வரப்படும்போதுதான் அந்த மதத்தை விட்டு விட்டு அடுத்த மதத்திற்குத் தாவி… “எனக்கு இந்தக் கடவுள் செய்வாரா…?” என்ற நிலைகளில் பிரிந்து செல்லும் நிலைகள் வருகின்றது.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வேத சாஸ்திரங்கள் உண்டு. அந்த வேதத்தின் தன்மையைத் தன் மதத்தின் அடிப்படையில் அவர்கள் கொடுக்கப்பட்டு அந்த மதத்திற்கு என்று அரசனாக்கி அந்த அரசனின் வழியிலேயே அந்தந்த நாட்டின் தன்மைகள் உள்ளது.

அதிலே விளைந்த உணார்வின் தன்மைகள் தான் இன்று நமக்குள்ளும் விளையப்பட்டு
1.அவர்கள் செருகிய வித்தின் உணர்வு கொண்டு
2.நாம் அதிலிருந்து மீள முடியாத உணர்வுகளாக இன்றும் இயக்கிக் கொண்டேயுள்ளோம்.

ஒவ்வொரு மதத்திற்கும் மந்திர ஒலிகள் உண்டு. அந்த மந்திர ஒலிகளின் தன்மை பெருகப்பட்ட உணர்வு கொண்டுதான் அதனதன் மதத்தைப் இறுக்கிப் பிடித்து… மற்ற மதத்தைப் பழித்துப் பேசுகின்றது.

ஒரு தாவர இனம் தன் மணத்தின் தன்மை கொண்டு மற்றதைத் தனக்குள் வராதபடி… “தன் சத்தை மட்டும்” காற்றிலிருந்து கவர்ந்து கொள்கின்றது. தன் உணர்வால் கவர்ந்து கொள்கின்றது.

இதைப் போன்று தான் மதத்தால் கொடுக்கப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் தன் எண்ணத்தால் கவர்ந்து கொண்டாலும் அதிலே ஏற்பட்ட மணம் தான் அது…!
1.மற்றவர்கள் எதைச் சொன்னாலும் அந்த மணம் தடுக்கதான் செய்யும்.
2.மற்ற மதங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது.
3.மற்ற இனங்களிலும் இதே போன்றுதான்…!

இனத்தின் தன்மை மந்திரத்தால் உருவாக்கிப் பெற்றால் அந்த உணர்வின் தன்மை மணத்தால் அதிகமாகின்றது. உணர்வின் தன்மை கொண்டு அது உணவாக எடுத்துக் கொண்டு விளைகின்றது.

இதைப் போன்றுதான் மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி
1.மீண்டும் மீண்டும் அந்த விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் ஆற்றலை
3.உங்களுக்குள் உரமாக ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.
4.வீணான பேச்சு இல்லை…. விரயம் ஆக்கும் தன்மை இல்லை…!

அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு கண்டுணர்ந்தார்களோ… அந்த மகரிஷியின் உணர்வின் சக்திகளை உங்களுக்குள் இணைத்து… இணைத்து… இணைத்து… இந்த இணைப்பின் வலு கொண்டு… உங்களுக்குள் உரமாக்கி விட்டால்… இந்த எண்ணத்தால் நீங்கள் வளரும் பருவம் பெறுகின்றீர்கள்.

அது வந்து விட்டால்…
1.உங்கள் நினைவின் ஆற்றல் மகரிஷிகள் வாழும் இடத்திற்கே வருகின்றது.
2.அந்தப் பேரானந்தச் பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்திட இது உதவும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமாக இருப்பினும் பதிவான மகரிஷிகளின் உணர்வை உந்தச் செய்து அந்த மகரிஷிகளின் சக்திகளை ஏங்கிப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

கடந்த கால வாழ்க்கையில் வந்த தீமைகளையும்… மதத்தால் ஏற்பட்ட உணர்வுகளையும் மாற்றி… நம்மைக் காத்திடும் உணர்வாக மகரிஷிகளின் அருள் உணர்வை அதனுள் இணைக்க வேண்டும்.. அந்த அருள் உணர்வுகளை விளைய வைக்க வேண்டும்.

அதற்குத்தான் யாம் தொடர்ந்து… தொடந்து சொல்வது மகரிஷிகள் காட்டிய உணர்வை இணைத்துக் கொண்ட பின் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கின்றது.

அன்றைய அருள் ஞானிகள் மதத்தால் வந்த தீமைகளை எப்படிப் பிளந்தார்களோ… தீமைகளைப் பிளந்திடும் உணர்வை அவர்களுக்குள் எப்படி விளைய வைத்தாரோ… அதை எல்லாம் நுகரும் சக்தியும் கவர்ந்திடும் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் இதை நம் நினைவில் கொண்டு நமது எல்லை எது…? இன்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு ஒளியான நிலைகள் கொண்டு எந்த எல்லையாக அடைந்தனரோ…
2.ஒளீயான குழுமைக் கூட்டமாக இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றனரோ…
3.அதைத்தான் நமது எல்லையாக வைக்க வேண்டும்…!

புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானி உருவாக்குவது போல் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும்

 

செத்த பிற்பாடு… “கொள்ளி வைக்கக் குழந்தை வேண்டும்” என்ற சாங்கிய சாஸ்திரப்படி குழந்தை இல்லாதவர்கள் கூட தத்து எடுத்துக் குழந்தையை வளர்க்கின்றனர். ஆனால் ஞானிகள் சொன்ன மூலத்தை மாற்றி விட்டோம். அவர்கள் சொன்ன முறைப்படி ஞானக் குழந்தைகளை உருவாக்கினால் அவன் நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வான்.. ஏகாந்தமாக நம்மை வாழச் செய்வான். 

Polaris-direct-links

ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.

மண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.

எந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.

ஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.

சூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.

சூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.

சாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது. சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்… “அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.

பூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…
1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு
2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.

பூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.

நிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.

இத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…

.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற
2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீர்த்தை மணமாக்கி
3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச் சரீரம் வளர்த்து
4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வகு ஏற்றி
5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி
6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு
7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…
8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது எல்லை எது…?

என்றுமே மாறாத வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும்…?

உடல் பற்று கொண்ட சகோதரரின் நிலை – சாமிகள்

Venugopalaswamigal

உயிருடன் ஒன்றி ஒளியாக்கிய ஈஸ்வரபட்டரின் உணர்வுகளை உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து உரமாக ஏற்றுகின்றோம்

 

ஆயிரம் தான் சொல்லுங்கள்…! மீண்டும் ஜாதகத்தை தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்ற நிலைகளைத்தான் தேடிச் செல்ல முடியும்.

நல்ல நேரமாக உங்களால் மாற்ற முடியாது…!
1.ஏனென்றால் இந்த உடலுக்கென்று நல்ல நேரத்தைத் தேடி அலைவீர்கள்.
2.பதிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஆசையைத் தூண்டிக் கொண்டிருக்கும்.
3.அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக் கொண்டிருக்கும்
4.தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும்
5.அதனின் நிலைகள் மனித உருவைச் சீர்குலைத்துவிடும் நிலைகளாகத் தான் வரும்.

மனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஆறாக இருப்பினும் அடுத்து ஏழாவது நிலைகளைப் பெறவில்லை என்றால் மனிதன் தேய்பிறைக்குத் தான் செல்ல நேரும்.

ஆகவே அறிந்திடும் அறிவின் துணை கொண்டு இருளைப் போக்க வேண்டுமே தவிர இருளை சேர்த்திடுதல் கூடாது.

மனிதன் நாம் ஆறாவது அறிவைக் கொண்ட பின் பொருளைக் காணுகின்றோம் பொருளைக் கண்டபின் அதற்குள் மறைந்திருக்கும் இருளை நீக்கிவிட வேண்டும்.

நம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினைப் பிளக்கின்றது. நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. அந்த நல்ல உணர்வின் தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.

1.அந்த அறிந்திடும் அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள் இருக்கும் இருளைப் பிளந்திடல் வேண்டும்.
2.இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலைகள் பெறவேண்டும்
3.இது தான் நம் ஞானிகள் காட்டிய அறநெறிகள்.

அதனை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.

செடிகளுக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு உணர்வுகள் உண்டு. அத்தகைய பல கோடித் தாவர இனங்களின் சத்தை உணவாக உட்கொண்டு அந்த உணவின் சத்தே உடலாக ஆனது உயிர் ஜீவ அணுக்களாக உருவாக்கியது. அதனின் மலமே உடலாக உருவானது.

ஆக… இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகளில் வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு… வாடிய உணர்வுகள் பலவும் உண்டு

அருள் ஞானியின் உணர்வின் நிலைகளை நினைவு கொண்டு… அவருடன் நிலை கொண்டு… அதனை எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் உணர்வின் தன்மையாகத் தான் இந்த உபதேசமே யாம் (ஞானகுரு) கொடுக்கின்றோம்.

விவசாயத்தில் (AGRICULTURE) வாடிய பயிரை வளமாக வளர்க்க… எவ்வாறு பல அணுக்களின் வீரியச் சத்து கொண்ட உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்துகளை உருவாக்குகின்றனரோ… இதைப்போலத்தான்
1.அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை
2.மகரிஷிகள் உணர்த்திக் காட்டிய நிலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணை கொண்டு உரமாகக் கொடுக்கின்றோம்.

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் பேரண்டத்தின் நிலைகளை அறிந்து… அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து… தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைத் தன்னுள் விளைய வைத்தார். விளைந்த உணர்வு கொண்டு உயிரோடு ஒன்றி இன்றும் ஒளியாக இருக்கின்றார்.

1.ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை நினைவு கொண்டு
2.உங்களுடன் இணைத்து… இணைத்து… இணைத்து…
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் உரமாக இணைப்பதே என்னுடைய வேலை…!

ஆற்றல்மிக்க சக்திகளை எலெக்ட்ரானிக் முறைப்படி அழுத்தமாகக் கொடுக்கின்றோம்

 

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் இயக்கம் போல் உயர்ந்த அழுத்தம் கொண்ட மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

 

தையல் வேலையை நன்கு  பழகிக் கொண்டவர்கள் பேசிக் கொண்டே சரியானபடி தங்கள் வேலையைச் செய்வார்கள். அவர்கள் கை தன்னாலே வேலை செய்யும். அது போல் குருநாதர் காட்டிய வழியில் அருள் உணர்வுகளைப் பெற்றுப் பழகிக் கொண்டால் எளிதில் தீமையை நீக்கலாம். உயிருடன் ஒன்றிய ஒளி நிலை பெறலாம்.

first gods

பூமியின் பொக்கிஷமான கடல் நீரையும்… மனித உடலின் நரம்போட்ட உப்புச் சத்தைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

“இம்மனிதச் சரீர அமைப்பு” உருவாகும் வளர்ச்சியே… இப்பூமியின் சத்து நிலையின் உயர் குணமாய் இப்பூமி வளர்த்த வலுவின் முற்றல் தான்…!

1.பலவாக மோதுண்டு… பல பல கோடி மாற்றங்களுக்குப் பிறகு
2.உயர்ந்த சத்தாய் உருவகம் பெற்ற நரம்போட்ட உப்பின் சுவை உணர்வில்
4.உரு வளர்ச்சி தரவல்ல உருவம் இது.

மனிதச் சுவை ஆறு…! பல சுவையை உண்டு உரமாக உடலெடுக்கும் சத்து வளர்ச்சியை… வளர்ச்சியின் ஓட்டத் தொடரில்…
1.நாவின் சுவைக்கொப்ப உணவுண்டு வாழுகின்ற வழித் தொடரில் உள்ள நாம்
2.இந்த வாழ்க்கைக்குப் பிறகு நடக்கும் நிலை என்ன…? என்று நாம் உணரவில்லை.

மனிதச் சுவை இப்பூமியின் ஆறு வண்ணத்தைப் போன்று அறு சுவையை உண்டு உணரும், எண்ண நிலை பெறத்தக்க வளர்ப்பில் நீர், கனி வளங்கள், திரவங்கள், தாவரங்கள், புழு பூச்சிகள் இவற்றிலிருந்தெல்லாம் வார்ப்பு கொண்டு வார்ப்பு கொண்டு ஒவ்வொரு முலாமையும்

இப்பூமியிலுள்ள அனைத்து அமிலத் தொடர்புடனும் இச்சரீரக் கோளம் உராய்வு பெற்று…
1.எண்ணம் சுவை குணம் என்ற வார்ப்பில் வடிவம் கொண்டுள்ள
2.மனித வளர்ச்சியை வளர்க்கும் நிலைக்கு வடிகாலாய் அமைந்துள்ள எண்ணத்தின் உணர்வு வழித் தொடர்பை
3.உயர்வு வழியினால் இவ்வுடல் கோளத்திற்கு ஏற்படுத்திக் கொள்ளும் வலுவை வளர்க்கும் நிலை யாது…?

ஒவ்வொரு செயலிலும் அச்செயலுக்குப் பிறகு “வளரும் நிலை” ஒன்று உண்டு. மாறி மாறி உருவாகும்… உருண்டோடும்… இப்பூமியின் வளர்ச்சிக்கே வலுத் தந்து கொண்டுள்ளவைகள் தான் “வட துருவ தென் துருவங்கள்…”

அதிலே மையம் கொண்டுள்ளது தான் “இப்பூமியின் பொக்கிஷமான கடல் நீர்…!” அந்தக் கடலில் ஏற்படும் உப்பின் சுவையினால் தான் இப்பூமி வளர்க்கும் வளர் செயலின் உயிரணுவின் ஜீவித வளர்ச்சி நிலை உள்ளது.

கடலில் உப்புத் தன்மை இல்லாவிட்டால் ஜீவ சக்திக்கு ஜீவித வாழ்க்கையில்லை. “கடல் நீர் உப்புக் கரிக்கின்றது” என்ற சாதாரண எண்ணத்தில்தான் நம் எண்ணம் செல்கின்றது.

ஆனால் இப்பூமியில் வளர்ச்சி கொள்ளும் வளர்ச்சி வார்ப்பகங்கள் எல்லாவற்றுக்குமே மூலப் பொருளை அளிப்பது நம் கடல்தான்.

1.வட துருவமும் தென் துருவமும் எதிர்கொள்ளும்
2.எதிர் எதிர் செயலினால் உருவாகும் உருவகங்கள்தான்
3.ஜீவ பிம்ப சரீரமும் மற்றெல்லா உயிர் வளர்ப்பின் வளர்ச்சியும்.
4.பாற்கடலில் பள்ளி கொண்டான் “மூலவன்…!” என்று
5.சூட்சமத்தில் மறைக்கப்பட்ட புராண காவியத்தின் உண்மையும் இதுவே…!

கடலின் உண்மை நிலையை உணர்த்தும் செயலின் பொருள் யாது…? என்ற வினா எழும்பலாம்.

உண்மை நடை முறையை உணர்த்தி… ஆத்ம உயிரை வலுவாக்க வேண்டிய வழியை முறைப்படுத்தி…
1.விளக்கிடும் இந்த உண்மை நிலையிலிருந்து
2.ஒவ்வொருவரும் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள
3.இச்சரீர இயக்கத்தின் வலுவை வளர்த்துக் கொள்ள வழி காட்டுகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

 

கருவிலேயே அருள்ஞானிகளை உருவாக்கி உங்களையும் உலகையும் காத்துக் கொள்ளுங்கள் 

கர்ப்பிணிப் பெண்கள் சாமி படங்களைப் பார்த்து எதை எண்ண வேண்டும் 

அகஸ்தியன் சிறு வயதில் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள் எதன் மூலம் பெற்றான் 

Arul Gnanigal

விஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும் தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…!

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் 2000 சூரியக் குடும்பங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கின்றேன். அதை எல்லாம் இலேசில் சொல்லகின்றேன் (ஞானகுரு) என்று எண்ண வேண்டாம். என்னை அங்கேயே அழைத்துச் சென்றார் குருநாதர்…!

அந்த அண்டங்களிலே எவ்வாறு இயக்குகின்றது….? அங்கேல்லாம் எடுத்துக் கொண்ட உயிரணுக்களின் வளர்ச்சி எப்படி இருக்கின்றது…? அந்த 2000 சூரியக் குடும்பங்களில் உள்ள பூமிகளில் மனிதர்கள் முடி இருப்போரும் உண்டு… கூழையாக இருப்போரும் உண்டு… நம் பூமியைக் காட்டிலும் மிகவும் விஞ்ஞான அறிவில் உயர்ந்தோரும் உண்டு.

விஞ்ஞான அறிவின் நுண்ணிய அலைகள் கொண்டு
1.இங்கே நாம் எப்படி எலக்ட்ரானிக் நிலைகளைச் செயல்படுத்துகின்றோமோ இயந்திரங்களை மாற்றுகின்றோமோ…
2.மந்திர ஒலி கொண்டு மனிதனை உருக்குலையச் செய்து ஆவியாக மாறுகின்றானோ…. கூடு விட்டு கூடு பாய்கின்றானோ… இதைப்போன்று
3.நம் பூமியில் இருப்பது போல 2000 சூரியக் குடும்பங்களில் நான்கு சூரிய குடும்பங்களில் இது உண்டு.

அவர்கள் தன் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து… உடலையே ஒளியாக மாற்றி… “எங்கு வேண்டுமானாலும் செல்லும் சக்தியாக” மந்திர ஒலியால் உருவாக்கிக் கொண்டவர்கள்.

நம்மைக் காட்டிலும் அங்கே மந்திர ஒலிகளைக் கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி மற்ற இடங்களுக்கு ஊடுருவிச் செயல்படும் தன்மைகள் உண்டு.

இது எல்லாம் குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள்…!

ஏனென்றால் இதைப் பற்றி முந்தி சாமி (ஞானகுரு) சொல்லவில்லையே…! என்று எண்ணலாம். எதை எதைச் சொல்வது…? எதை மனதில் பதிய வைப்பது…? என்று அந்தந்தக் காலம் வரும்போது தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

எலக்ட்ரானிக்….! என்று ஒரு பொருளின் தன்மையை ரூபமாக மாற்றி இன்று எப்படிக் காட்டுகின்றாரோ இதைப் போலத்தான் மற்ற சூரியக் குடும்பத்திலிருந்தும் அவர்கள் விண் விசையின் தன்மையை எலக்ட்ரானிக்காகத் தனக்குள் மாற்றி
1.நம் பூமிக்கும் வந்து செல்கின்றார்கள் (ALIENS)
2.பறக்கும் தட்டு… அந்தத் தட்டு…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆக… எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். தன் உந்து விசையின் தன்மையால் இழுக்கின்றார்கள்… குவிக்கின்றார்கள். தன்னுடைய நிலையை “அடுத்தவர்கள் வருவதற்கு முன் மறைந்து விடுவார்கள்…!”

இங்கே நம் பூமியில் இவர்கள் செய்யும் (எலக்ட்ரானிக்) விஞ்ஞான அறிவைப் போல அவர்கள் மேன்மை கொண்டவர்கள். நம் பூமியில் வந்து செல்கின்றார்கள் அந்த உணர்வலைகளை நம் பூமி கவர்கின்றது.

1.உணர்வின் தன்மை எலக்ட்ரானிக்கில் இணைத்த பின் அலைகளாக மாற்றி
2.மீண்டும் எங்கேயும் ஊடுருவி… இந்த உணர்வின் தன்மை எங்கு வேண்டுமானாலும் செலுத்தப்பட்டு
3.எலக்ட்ரானிக்கின் கருவி கொண்ட மற்ற இயந்திரங்களையோ சாதனங்களையோ இயக்கி விட்டு
4.இனம் புரியாத நிலைகள் செல்லும் நிலைகளும் உண்டு.

இந்த எலக்ட்ரானிக் நிலைகளை அலைகளாக பிரிக்கப்படும் நிலைகள் நம் பூமியிலும் இது நடக்கின்றது. நம் பூமியில் லேசர் (LASER) கதிரியக்கப் பொறிகளைக் கொண்டு மற்றொரு நாட்டிற்குள் ஊடுருவச் செய்கின்றார்கள்.
1.அந்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற கதிரியக்கங்களைப் பாய்ச்சியபின்
2.அது மின்னணுவாக அதனுடைய அதிர்வின் நிலைகளைக் கொண்டு
3.அந்த நாட்டில் இருக்கக்கூடிய நுண்ணிய அறிவுகளையும்
4.இயந்திரத்தின் மூலமாக (அவர்களுக்குத் தெரியாமல்) காண்கின்றார்.

மிக மிகச் சிறிய நிலைகளை நாம் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும்
1.அதற்கென்று ஒரு சாதனத்தை… ஊசி முனை (PROBE) என்ற அளவுகோலை வைத்து
2.விமானத்தின் மூலம் விண்ணிலே பறந்து கொண்டே பார்க்கும் நிலைகளுக்கு
3.விஞ்ஞான அறிவு நம் நாட்டிலேயே வந்துவிட்டது.

காரணம்… இதனுடைய நுண்ணிய அறிவினைக் காட்டப்பட்டு அதனைக் கொண்டு வளர்க்கின்றார்கள். இப்போது சாதாரண கருவிகளின் உணர்வின் தன்மையைப் பிளக்கப்பட்டு… “கதிரியக்கத்தால் அ8லைகளாகப் பிரிக்கப்பட்டு…” அதனுடைய அளவுகோலை எல்லாம் அளந்து அறிகின்றார்கள்.

ஒரு அலையின் தன்மை எந்த அளவு இருக்கின்றதோ… அதனின் நுண்ணிய உணர்வின் அதிர்வுகளைக் கண்டுணர்ந்து… அதனின் செயலாக்கங்கள் இன்னது தான்…! என்று அவன் காணுகின்றான்.

அதைப் போலத்தான் பூமிக்குள்ளும் கதிரியக்கச் சக்திகளை ஊடுருவச் செய்து அதனை நுண்ணிய அளவுகோல் கொண்டு அளந்தறிந்து… பூமிக்குள் இன்னென்ன பாகங்களில் இன்னென்ன உலோகங்கள்… நீர் வளங்கள்… எண்ணெய் வகைகள்… மற்ற பொருள்கள் அங்கே விளைகின்றது..! என்ற கண்டுபிடிக்கும் உணர்வுகள் விஞ்ஞான அறிவால் வந்து விட்டது.

ஆனால் மெய் ஞானிகளோ…
1.அவர்கள் கண்ணின் நினைவை எதன் பக்கம் பாய்ச்சுகின்றனரோ… அதற்குள் ஊடுருவி..
2.அதன் உணர்வின் தன்மையை அறிந்து… தனக்குள் அதை நுகர்ந்து
3.தான் யார்…? என்று தன்னை அறிந்து கொண்டவர்கள்…!

விண்ணுலக ஆற்றலையும் பேரண்ட உணர்வுகளையும் தனக்குள் அவர்கள் கவர்ந்து
1.மனிதனுக்குள் வந்த தீமைகளைப் பிளந்து…
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகளைக் கதிரியக்கங்களாக மாற்றிக் கொண்டார்கள்
3.தன் உணர்வின் செயல் அனைத்தையும் அவ்வாறு மாற்றிக் கொண்டார்கள்.

தன் எண்ணங்கள் கொண்டு எல்லாவற்றிலும் ஊடுருவி ஒவ்வொன்றையும் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் செயலாக்கங்களைத் தனக்குள் பிளந்திடும் சக்தியாக… அணுக்களாக வளர்ச்சி செய்யப்பட்டு தன் உடலில் வந்த தீமையான நிலைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கினார்கள் அந்த மெய் ஞானிகள்.

 

1.இருளைப் போக்கும் உணர்வைத் தனக்குள் விளைய வைத்தான்.
2.உயிருடன் ஒன்றினான்… துருவ நட்சத்திரமானான்…
3.அவனைப் பின்பற்றி சென்றவர்கள் அனைத்தும் தீமையை விலக்கிடும் சக்தி பெற்று
4.அவன் ஈர்ப்பிலே சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்

விஞ்ஞானிகளோ அணுவைப் பிளந்து… அணுவின் தன்மை கொண்டு கதிரியக்கங்களாக மாற்றி… அந்தக் கதிரியக்கப் பொறிகளை ஒன்றுடன் பாய்ச்சப்படும்போது ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து (லேசராக)
1.அதனுடைய இயக்கம் எவ்வாறு…?
2.அதனுடன் கலந்த நிலைகள் எது..? என்று
3.தனக்குள் விரிவுப்படுத்தி அறிகின்றார்கள்

இதைப் பற்றிய விஞ்ஞான அறிவு கொண்டோர் யார் இருந்தாலும் சரி.. நான் (ஞானகுரு) சொல்லும் பொறிகளின் நிலைகளைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பொறியின் அளவுகோலைப் பற்றிச் சொன்னதை எல்லாம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்துவார்கள்.

ஏனென்றால்… நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) விஞ்ஞானிகள் எவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்…? என்ற நிலைகளை உணர்த்தினார்.

அதனுடன் தொடர்பு கொண்டு விண் அணுக்களின் நிலைகளையும் அதே சமயத்தில் கதிரியக்கப் பொறிகளின் நிலைகளையும்…
1.உணர்வுகள் எதனுடன் ஊடுருவுகின்றது…?
2.அது எவ்வாறு பிளக்கின்றது…?
3.பிளந்த நிலைகளைள எவ்வாறு அதிர்வுகளால் அறிகின்றான்..?
4.அதை இணைத்துக் கொண்டபின் எவ்வாறு இயக்குகின்றான்…? என்ற நிலையை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தார் குருநாதர்.

இவ்வளவையும் படிக்காதவன் நான் சொல்லி விட்டால்.. அப்புறம் படித்தவர்கள் விஷயத்தை நிறைய எடுத்துக் கொள்ளுவார்கள். எடுத்து அவருடைய ஆராய்ச்சிக்குத் தான் கொண்டு போவார்கள். விஞ்ஞான அறிவுக்குத் தான் பயன்படும்… தீமைகளைப் பிளக்க முடியாது…!

1.ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வின் அதிர்வுகளை நமக்குள் செலுத்தினால்
2.இந்த உணர்வின் எண்ணத்தோடு பாய்ச்சப்படும்போது எத்தகைய தீமைகளையும் பிளக்க முடியும்.
3.விஞ்ஞானத்தால் வரும் கடுமையான விஷங்களையும் ஒடுக்க முடியும்
4.மெய் ஞானிகளுடன் ஒன்றி என்றுமே ஏகாந்தமாக வாழ முடியும்.

அஞ்சனை… ஆஞ்சநேயன் – சுக்ரீவனின் மந்திரி

 

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இது ஒரு பெரிய குளம். அதிலே நாம் பிறர் படும் கஷ்டங்களையோ வேதனைகளையோ நுகரப்படும் போது நாம் அதிலே விழுந்து விடுகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காக காவியத் தொகுப்புகளைத் தெளிவாக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

 

நமது பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் இத்தகைய விஷத் தன்மை பெரும் குளமாக இருக்கின்றது. அந்த உண்மைக்கு மாறான நிலைகள் நடப்பவைகளைப் பார்த்து நாம் விழுந்து விட்டால் எப்படி மாற்றம் அடைகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக ஒரு காவியமாகப் படைத்தனர் ஞானியர்கள்.

 

நம்மை அறியாமலே பிறருடைய நிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் “இப்படி வேதனைப்படுகின்றானே..,” என்று (குளத்தில் பட்டால்) அவன் உணர்வை நாம் எடுத்தால் இந்த உடலுக்குள் என்ன ஆகின்றது? நாம் பல வேதனைகள் படுகின்றோம் என்பதனைக் காட்டுகின்றனர்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று இணைத்தால் அந்த வேதனைகளைத் தடுத்து விடுகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துகின்றது.

 

 

இப்படி நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேருளைப் பெறவேண்டும் என்று செலுத்தப்படும் போது இங்கே புருவ மத்தியில் அந்த உயிரின் நிலைகளில் உள்ளே செல்லாது தடுப்பதும் நம் உடலுக்குள் இரத்தத்தில் கலந்தபின் அந்த விஷத்தின் தன்மை நுகராது தடுப்பது தான் இந்த உண்மையான நிலைகள். தியானம் என்பது முறைப்படி இது தான்.

அமாவாசை அன்று முன்னோர்களை எண்ணிச் செய்யும் நிலைகள் அனைத்தும் தவறானது

சாப அலைகளின் இயக்கங்கள் 

பாவ வினைகள் என்றால் என்ன – எப்படி நீக்குவது…?

 

Kalki Flying state

பறக்கும் யுகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
நீரே பெரும் கடலாகத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் கடல் தான் பூமிக்கு முதல் நிலையா…? என்ற எண்ணம் தோன்றியது.

அந்த எண்ணத்திற்கு “இல்லை…!” என்ற சொல் ஒலித்தது. பிறகு வரிசையாக ஒலி ஒளி நீர் செடி கொடி புழு பூச்சிகள் தெரிந்து கடைசியில் மனித உருவமும் தெரிந்தது.

பிறகு இது எதுவும் நம் பூமிக்கு முதல் நிலையல்ல…! என்ற சொல் ஒலித்தது.

வானத்தில் கறுத்த மண் போன்ற… மண் என்பது கரியை இடித்த சாம்பல் போன்ற கறுப்பான சில மணங்கள் உருள்வதைப் போன்றும்… அதுவே கட்டியாகிச் சிறு சிறு வெண்மையான மின்னும் மணல்களைப் போன்றும்… கறுப்பு மணலிலிருந்து வெள்ளை மணல் தெரிந்தது.

அதன் பிறகு பல வண்ணங்கள் கொண்ட மண்கள் மண் வடிவம் போன்றும்… வெள்ளி தங்கம் போன்ற பல உலோக வண்ணங்கள் மாறி மாறித் தெரிந்தது.

அதன் பின் பச்சையான படிவக் கற்களும் அதற்கு உள் ஊடுருவலில் ஒளியான வைரப் படிமனின் ஒளியும் அப்படித் தெரிந்த படிவங்களிலிருந்து – அந்தந்தப் படிமன் வண்ண உலோகத்திலிருந்து ஆவியாக மேலே செல்வது போன்றும்… அந்தந்த ஆவி சுழல் ஒலியும்… அதிலிருந்து ஒளியும்… பிறகு அந்த ஒளி கடல் நீரின் மேல் மோதுவதைப் போன்றும்… அந்த நீரிலிருந்து பல திரவ வண்ண நீர்கள் தனித் தனியாக அந்தந்த இடங்களில் தெரிகின்றன.

பின்… பாதரசத் திரவமும் சில இடங்களில் பழுப்பு வண்ணம் போன்ற ஒரே திடமாக பூமியின் ஈர்ப்பில் கொதிப்பதைப் போன்றும் மாறி மாறித் தெரிகின்றது.

மனித எண்ண உணர்வு… (சரீரத்தின் சுவை) அறு சுவையை உணர்ந்து இச்சரீரச் சமைப்பின் சுவை ஏழாகி ஆத்ம வளர்ச்சிக்கு உரம் தருகின்றது.

“சூரியனின் சத்தை…” மற்றக் கோளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வெளிப்படுத்துவதை இந்தப் பூமி எடுத்து வளரும் வழிக்கு சூரியனின் அமிலச் சத்தை பூமி தனக்குகந்த சத்தாகப் பெறத் தன்னைத் தானே ஒலி கொண்டு ஒளி பெற்று எடுத்துக் கொள்கிறது.

பூமி வளர்த்த ஜீவ வளர்ப்புகளான உலோகங்களாகி… அத்திடத்திலிருந்து ஆவி மீண்டும் வெளிப்பட்டு…
ஆவி…
திடம்…
உராய்வு… என்று
மீண்டும் மீண்டும் ஆகித் தான் எல்லாமே வளர்ந்தது.

இப்படி… பூமி தான் பெற்ற வழித் தொடரிலிருந்தே வளர் தொடர் கொண்ட கனி வளங்களை (உலோகங்கள்) வளர்த்து
1.பல உன்னத உலோகங்களின் திரவக வளர்ப்பில் உயர் நிலை வளர்ப்பாகப் பல கோடி கோடி ஆண்டுகளாக வளர்த்து
2.அத்தொடரின் சத்தில் சத்தாக… உயர்ந்த சத்து குணம் கொண்ட மனித உருவங்கள் வளர்ந்து
3.எண்ணம் உணர்வு சுவை ஞானம் என்ற சக்தி பெறப் பெற்ற இந்த மனிதச் சரீரம் ஒவ்வொன்றிலுமே
4.ஆறாவது அறிவு கொண்ட மனித சக்தியின் உன்னதச் செயலை
5.ஏழாவது உயர் ஞான வளர்ச்சிக்கு வலுக் கூட்டினால்
6.கல்கி யுகம் என்ற பறக்கும் யுகத்தை நாம் உருவாக்க முடியும்.

நம்முடைய பழைய ஊழ்வினைகளை (விதியை) எப்படி மாற்றவேண்டும்…?

 

வயலில் களைகள் முளைக்க யாரும் விதை போடுவதில்லை. ஆனால் களைகளைப் பிடுங்கவில்லை என்றால் நல்ல பயிர் வளராது.

 

அந்த வயலில் களை முளைப்பது போல் தான் அறியாமலே தீமைகள் நமக்குள் வருகிறது. ஆக மனிதனுக்குள் ஊழ் வினையாகப் பல வித்துகள் உண்டு.

 

அவைகளை அவ்வப்பொழுது வளரவிடாது தடுக்கவில்லை என்றால் மனிதன் செயல் இழந்து விடுவான். அதைத் தடுக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் வித்துக்களாக அதே ஊழ் வினைக்குள் ஊன்றிப் பழக வேண்டும்

இது வளர அது குறையும். மனிதன் நாம் ஞானியாக முடியும்.

Magic stone - destination

நம்மிடம் செல்வம் இருக்கின்றது…! என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…?

தொழில் செய்கின்றோம்… செல்வத்தைச் சம்பாரிக்கின்றோம். செல்வம் வந்தால் மகிழ்ச்சி பெற முடியும்…! என்கின்றோம். ஆனால் அந்த செல்வத்தின் தன்மை வளர்ந்ந்து வந்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?

என் பையன் இப்படிச் செய்கின்றானே… நம் சொத்தைக் காப்பானா…? எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று இப்படி எத்தனையோ எண்ணங்களை எண்ணி அதனால் வேதனைப்படுகின்றோம்.

1.இவ்வாறு வேதனைப்படும் பொழுது அது நோயாக வருகின்றது.
2.நோயாக வரும்போது செல்வம் அதிகமாக இருப்பினும் வேதனைதான் அதிகமாகின்றது.

வேதனையோடு நாம் இருக்கும் நேரத்தில் நாம் எண்ணியபடி நம் பிள்ளையோ… மனைவியோ… மக்களோ… அல்லது உற்றார் உறவினரோ.. எண்ணவில்லை என்றால் அவர்களைப் பற்றிய வேதனையைத்தான் நாம் அதிகமாக எண்ணுகின்றோம்.
1.செல்வத்தைச் சம்பாதித்தோம்…
2.நாம் எந்த மகிழ்ச்சியைக் கொண்டோம்…?

செல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று வளர்ந்து வந்த நிலையில் மற்றவருக்கு உதவி செய்தாலும்… அந்த உதவியால் அவர்கள் நல்லவராக ஆகவில்லை என்றால் அவர்களைக் கண்டு நாம் வேதனையைத்தான் படுகின்றோம்.

இப்படித்தான் செல்வம் ஒரு பக்கம் இருப்பினும்
1.செல்வத்தால் வேதனை என்ற நிலை அதிகரித்துக் கடைசியில்
2.பூமியின் பற்றை அதிகமாக வளர்த்து கொள்கின்றோம்.

அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை… தெளிந்த குணங்களை… நாளுக்கு நாள் மறையச் செய்கின்றது. இதைப் போன்று வரும் நிலைகளில் இருந்து நாம் எப்படி மீளுவது…? எந்த வகையில் மீளுவது…?

நம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாது பல பல தீய வினைகள் நமக்குள் சேர்ந்திருந்தாலும் அந்தத் தீய வினைகளைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பினும்
1.வேதனைப்படுவோரைப் பார்க்காமல் இருக்க முடியாது…
2.வேதனைப்படுவோரின் சொல்லை கேட்காமல் இருக்க முடியாது.
3.ஒருவர் குற்றம் செய்கின்றார் என்றால் குற்றம் செய்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.

குற்றத்தைப் பார்த்தாலும் குற்றத்தைச் செய்தபின் அதிலே நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்தால் தெரியும்.
1.அறிவால் அதை எல்லாம் அறிகின்றோம்…
2.அறிந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நிலைகள் பட்டாலும்… பார்த்தாலும்,,, அறியும் உணர்வுகள் கொண்டு அறிந்து கொண்டாலும்…
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இருந்தாலும் (கார்த்திகேயா)
2.தீமை என்று அறிந்ததை நீக்கிடும் “அந்த அறிவு வேண்டும்…” (இது தான் மிக முக்கியமானது..!)

அமாவாசை அன்று முன்னோர்களை எண்ணிச் செய்யும் நிலைகள் அனைத்தும் தவறானது

சாப அலைகளின் இயக்கங்கள் 

பாவ வினைகள் என்றால் என்ன – எப்படி நீக்குவது…?

Kalki Flying state

பறக்கும் யுகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
நீரே பெரும் கடலாகத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் கடல் தான் பூமிக்கு முதல் நிலையா…? என்ற எண்ணம் தோன்றியது.

அந்த எண்ணத்திற்கு “இல்லை…!” என்ற சொல் ஒலித்தது. பிறகு வரிசையாக ஒலி ஒளி நீர் செடி கொடி புழு பூச்சிகள் தெரிந்து கடைசியில் மனித உருவமும் தெரிந்தது.

பிறகு இது எதுவும் நம் பூமிக்கு முதல் நிலையல்ல…! என்ற சொல் ஒலித்தது.

வானத்தில் கறுத்த மண் போன்ற… மண் என்பது கரியை இடித்த சாம்பல் போன்ற கறுப்பான சில மணங்கள் உருள்வதைப் போன்றும்… அதுவே கட்டியாகிச் சிறு சிறு வெண்மையான மின்னும் மணல்களைப் போன்றும்… கறுப்பு மணலிலிருந்து வெள்ளை மணல் தெரிந்தது.

அதன் பிறகு பல வண்ணங்கள் கொண்ட மண்கள் மண் வடிவம் போன்றும்… வெள்ளி தங்கம் போன்ற பல உலோக வண்ணங்கள் மாறி மாறித் தெரிந்தது.

அதன் பின் பச்சையான படிவக் கற்களும் அதற்கு உள் ஊடுருவலில் ஒளியான வைரப் படிமனின் ஒளியும் அப்படித் தெரிந்த படிவங்களிலிருந்து – அந்தந்தப் படிமன் வண்ண உலோகத்திலிருந்து ஆவியாக மேலே செல்வது போன்றும்… அந்தந்த ஆவி சுழல் ஒலியும்… அதிலிருந்து ஒளியும்… பிறகு அந்த ஒளி கடல் நீரின் மேல் மோதுவதைப் போன்றும்… அந்த நீரிலிருந்து பல திரவ வண்ண நீர்கள் தனித் தனியாக அந்தந்த இடங்களில் தெரிகின்றன.

பின்… பாதரசத் திரவமும் சில இடங்களில் பழுப்பு வண்ணம் போன்ற ஒரே திடமாக பூமியின் ஈர்ப்பில் கொதிப்பதைப் போன்றும் மாறி மாறித் தெரிகின்றது.

மனித எண்ண உணர்வு… (சரீரத்தின் சுவை) அறு சுவையை உணர்ந்து இச்சரீரச் சமைப்பின் சுவை ஏழாகி ஆத்ம வளர்ச்சிக்கு உரம் தருகின்றது.

“சூரியனின் சத்தை…” மற்றக் கோளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வெளிப்படுத்துவதை இந்தப் பூமி எடுத்து வளரும் வழிக்கு சூரியனின் அமிலச் சத்தை பூமி தனக்குகந்த சத்தாகப் பெறத் தன்னைத் தானே ஒலி கொண்டு ஒளி பெற்று எடுத்துக் கொள்கிறது.

பூமி வளர்த்த ஜீவ வளர்ப்புகளான உலோகங்களாகி… அத்திடத்திலிருந்து ஆவி மீண்டும் வெளிப்பட்டு…
ஆவி…
திடம்…
உராய்வு… என்று
மீண்டும் மீண்டும் ஆகித் தான் எல்லாமே வளர்ந்தது.

இப்படி… பூமி தான் பெற்ற வழித் தொடரிலிருந்தே வளர் தொடர் கொண்ட கனி வளங்களை (உலோகங்கள்) வளர்த்து
1.பல உன்னத உலோகங்களின் திரவக வளர்ப்பில் உயர் நிலை வளர்ப்பாகப் பல கோடி கோடி ஆண்டுகளாக வளர்த்து
2.அத்தொடரின் சத்தில் சத்தாக… உயர்ந்த சத்து குணம் கொண்ட மனித உருவங்கள் வளர்ந்து
3.எண்ணம் உணர்வு சுவை ஞானம் என்ற சக்தி பெறப் பெற்ற இந்த மனிதச் சரீரம் ஒவ்வொன்றிலுமே
4.ஆறாவது அறிவு கொண்ட மனித சக்தியின் உன்னதச் செயலை
5.ஏழாவது உயர் ஞான வளர்ச்சிக்கு வலுக் கூட்டினால்
6.கல்கி யுகம் என்ற பறக்கும் யுகத்தை நாம் உருவாக்க முடியும்.

நம்முடைய பழைய ஊழ்வினைகளை (விதியை) எப்படி மாற்றவேண்டும்…?

 

வயலில் களைகள் முளைக்க யாரும் விதை போடுவதில்லை. ஆனால் களைகளைப் பிடுங்கவில்லை என்றால் நல்ல பயிர் வளராது.

 

அந்த வயலில் களை முளைப்பது போல் தான் அறியாமலே தீமைகள் நமக்குள் வருகிறது. ஆக மனிதனுக்குள் ஊழ் வினையாகப் பல வித்துகள் உண்டு.

 

அவைகளை அவ்வப்பொழுது வளரவிடாது தடுக்கவில்லை என்றால் மனிதன் செயல் இழந்து விடுவான். அதைத் தடுக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் வித்துக்களாக அதே ஊழ் வினைக்குள் ஊன்றிப் பழக வேண்டும்

இது வளர அது குறையும். மனிதன் நாம் ஞானியாக முடியும்.

Magic stone - destination

நம்மிடம் செல்வம் இருக்கின்றது…! என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…?

தொழில் செய்கின்றோம்… செல்வத்தைச் சம்பாரிக்கின்றோம். செல்வம் வந்தால் மகிழ்ச்சி பெற முடியும்…! என்கின்றோம். ஆனால் அந்த செல்வத்தின் தன்மை வளர்ந்ந்து வந்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?

என் பையன் இப்படிச் செய்கின்றானே… நம் சொத்தைக் காப்பானா…? எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று இப்படி எத்தனையோ எண்ணங்களை எண்ணி அதனால் வேதனைப்படுகின்றோம்.

1.இவ்வாறு வேதனைப்படும் பொழுது அது நோயாக வருகின்றது.
2.நோயாக வரும்போது செல்வம் அதிகமாக இருப்பினும் வேதனைதான் அதிகமாகின்றது.

வேதனையோடு நாம் இருக்கும் நேரத்தில் நாம் எண்ணியபடி நம் பிள்ளையோ… மனைவியோ… மக்களோ… அல்லது உற்றார் உறவினரோ.. எண்ணவில்லை என்றால் அவர்களைப் பற்றிய வேதனையைத்தான் நாம் அதிகமாக எண்ணுகின்றோம்.
1.செல்வத்தைச் சம்பாதித்தோம்…
2.நாம் எந்த மகிழ்ச்சியைக் கொண்டோம்…?

செல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று வளர்ந்து வந்த நிலையில் மற்றவருக்கு உதவி செய்தாலும்… அந்த உதவியால் அவர்கள் நல்லவராக ஆகவில்லை என்றால் அவர்களைக் கண்டு நாம் வேதனையைத்தான் படுகின்றோம்.

இப்படித்தான் செல்வம் ஒரு பக்கம் இருப்பினும்
1.செல்வத்தால் வேதனை என்ற நிலை அதிகரித்துக் கடைசியில்
2.பூமியின் பற்றை அதிகமாக வளர்த்து கொள்கின்றோம்.

அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை… தெளிந்த குணங்களை… நாளுக்கு நாள் மறையச் செய்கின்றது. இதைப் போன்று வரும் நிலைகளில் இருந்து நாம் எப்படி மீளுவது…? எந்த வகையில் மீளுவது…?

நம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாது பல பல தீய வினைகள் நமக்குள் சேர்ந்திருந்தாலும் அந்தத் தீய வினைகளைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பினும்
1.வேதனைப்படுவோரைப் பார்க்காமல் இருக்க முடியாது…
2.வேதனைப்படுவோரின் சொல்லை கேட்காமல் இருக்க முடியாது.
3.ஒருவர் குற்றம் செய்கின்றார் என்றால் குற்றம் செய்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.

குற்றத்தைப் பார்த்தாலும் குற்றத்தைச் செய்தபின் அதிலே நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்தால் தெரியும்.
1.அறிவால் அதை எல்லாம் அறிகின்றோம்…
2.அறிந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நிலைகள் பட்டாலும்… பார்த்தாலும்,,, அறியும் உணர்வுகள் கொண்டு அறிந்து கொண்டாலும்…
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இருந்தாலும் (கார்த்திகேயா)
2.தீமை என்று அறிந்ததை நீக்கிடும் “அந்த அறிவு வேண்டும்…” (இது தான் மிக முக்கியமானது..!)

நம் உடலை உருவாக்கிய அணுக்களும் அதனைப் பற்றிய பேருண்மைகளும்

கோவில் கோபுரக் கலசத்தில் உள்ள வரகு எதற்காக வைக்கப்பட்டுள்ளது…?

பட்டுச் சேலை கட்டினால் ஏற்படும் சில உணர்வின் இயக்கங்கள்

image vision

அகஸ்தியரையும் அவரைப் போன்ற மற்ற மகரிஷிகளியும் காண வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

குருநாதர் காட்டிய வழியில் நாம் இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் நினைவை வானை நோக்கி ஏங்கித் தியானியுங்கள்.

1.அந்த அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை
2.அதனை நுகரும் தன்மை கொண்டு நினைவாற்றலைச் செலுத்தி
3.உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் பதிவாக வேண்டுமென்று எண்ணினால்
4.உங்கள் கண் அதன் உணர்வு கொண்டு இரத்த நாளங்களிலே பதிவாக்குகின்றது.

உதாரணமாக நம் நண்பன் வெகு தொலைவில் இருப்பினும் அவனை இங்கிருந்து எண்ணிப் பார்க்கும்போது அவன் உடலில் இருந்து உணர்வின தன்மை நாம் நுகர்ந்து “அந்த உருவத்தை” நாம் பார்க்க முடிகின்றது.

நண்பன் என்று பழகிய பின் வெகு நாள் பார்க்கவில்லை என்றால் அந்த ஏக்கத்தில் நண்பனைப் பார்க்க வேண்டுமென்ற உணர்வினை நமக்குள் பதிவாக்கிய பின்
1.அந்த நண்பனை எண்ணினால்
2.அந்த உணர்வின் அலைகளாக
3.நமக்குள் நிழல் படமாக “உருவம் தெரிகின்றது…!”

இதைப் போன்றுதான் அகஸ்தியமாமகரிஷி வாழ்ந்த அக்காலத்திற்கு எண்ணங்களைச் செலுத்தி அகஸ்தியன் உணர்வைப் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டுமென்று
1.நினைவினை விண்ணை நோக்கி ஏங்கி… அக்காலத்தை எண்ணி…
2.அவனுக்குள் விளைந்த உணர்வின் சத்தை
3.உங்கள் நினைவுக்குள்… உங்கள் உடலுக்குள்… உங்கள் இரத்த நாளங்களில் பதிவாக வேண்டும்…
4.அணுக் கருவாக வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

கண்ணின் கரு விழியால் நாம் இப்படி எண்ணும்போது அகஸ்தியன் பெற்ற உணர்வு உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

மீண்டும் மீண்டும் அந்த நினைவின் தன்மை கொண்டு வரப்படும்போது கண்ணின் புலனறிவு கொண்டு எதனைப் பதிவு செய்தோமோ… அந்த அலைகளை நாம் உற்று நோக்கி வெகு தூரம் செலுத்தினாலும் அந்த உணர்வலைகள் காற்றில் கலந்திருப்பதைக் கவர்ந்து.. நம்மை நுகரச் செய்கின்றது.

நுகரப்படும்போது நினைவினை நம் உடலுக்குள் இரத்த நாளங்களில் சேமிக்கும் தன்மையாக நாம் எண்ணுதல் வேண்டும். அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற “இது உங்களுக்குப் பயிற்சி…!”

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்ற ஆசையுடன் கண்ணைத் திறந்து ஒரு நிமிடம் ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் நினைவை செலுத்துங்கள்.
1.விஷத்தை வென்றிடும் மூலிகையை அவர் நுகர்ந்ததனால்
2.அந்த விஷத்தை வென்றிடும் மூலிகையின் மணம் உங்களுக்குள் இப்போது வரும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று ஏங்கி இதைப் பெறுங்கள்.
1..இப்போது அந்த நறுமணங்கள் வரும்.
2.நஞ்சை வென்றிடும் மணங்கள் வரும்.

கண்ணை மூடுங்கள்… கண்ணின் நினைவினை உங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டுமென்ற நினைவினை உள்முகமாகச் செலுத்துங்கள்.

இப்பொழுது…
1.உங்கள் இரத்த நாளங்களில் (அகஸ்தியன் உணர்வுகள்) கலக்கும் உணர்ச்சிகளை நீங்கள் உணரலாம்.
2.இரத்த நாளங்கள் வழி கொண்டு உங்கள் உடல்களில் மெல்ல ஊர்ந்து செல்லும் உணர்ச்சியை நீங்கள் உணரலாம்.
3.ஊர்ந்து செல்லும் போது உங்களுக்குள் தொல்லை கொடுத்து கொண்டிருந்த அணுக்கள் அது நுகரும்போது அவை ஒடுங்கும்.
4.இப்போது உங்கள் உடல்களில் உள்ள வலியோ மற்ற எது இருந்தாலும் குறையத் தொடங்கும்.

தீய அணுக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது மடிந்துவிடும். ஏனென்றால் நஞ்சினை வென்றிடும் அகஸ்தியனின் உணர்வுகள் இரத்தங்களில் பரவப்படும்போது அந்த அணுக்கள் மயங்கிவிடும்… வலிகள் குறைந்துவிடும்… இப்போது இதை உணரலாம்…!

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணு ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று. புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு வாருங்கள்.

இப்போது அந்தப் புருவ மத்தியில் இருந்து அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவாற்றலை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். அந்தச் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று மீண்டும் உங்கள் நினைவைப் புருவ மத்திக்கு கொண்டு வாருங்கள்.

கண்ணின் நினைவாற்றலை உங்கள் உடலுக்குள் செலுத்தி இதன் சுழற்சியின் நிலைகள் கொண்டு உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் பெற வேண்டும் என்ற ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

மீண்டும் ஈஸ்வரா…! என்று அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் தொடர்பு கொள்ளுங்கள்.

யாம் சொன்ன முறைப்படி
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரான ஈசனுடன் வேண்டித் தியானிக்கும் பொழுது
2.உயிரின் வழி அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பரவும் உணர்ச்சிகளை உணரலாம்.
3.திரும்பத் திரும்ப இதைப் போல எண்ணுங்கள்… ஏங்கிப் பெறுங்கள்… ஏங்கித் தியானியுங்கள்..!
4.இனிமையான உணர்ச்சிகளை உங்கள் உடல்களில் இப்பொழுது தோற்றுவிக்கும்.

இதுவே தியானம்…!.

அகஸ்தியன் துருவ மகரிஷியான பின் அவர் உடலிலே விளைந்த உணர்வுகள் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் துருவ மகரிஷியாக ஆன பின் ஒளியின் சரீரமாக உருப் பெற்றுத் துருவத்தை எல்லையாக வைத்து துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் படர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப இந்த உணர்வினை உங்கள் உடலுக்குள் உருவாக்குங்கள்.

1.இளம் நீலமான ஒளிக் கதிர்கள் உங்கள் புருவ மத்தியில் அந்த உணர்ச்சிகளை ஊட்டும்
2.ஒளியின் நிலையாக அருள் ஒளியை நீங்கள் உணரலாம் காணலாம்
3.அறியும் தன்மை வருகின்றது… தெரியும் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது உங்கள் எடை குறையும் மெதுவாக இருப்பது போன்று
2.பூமியின் ஈர்ப்பின் பிடிப்பை விட்டு மிதப்பதைப் போன்று. உங்கள் உடல் லகுவாக இருக்கும்.

அகஸ்திய மாமமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இதை நுகரும்போது அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் வரும் பொழுது அந்த உணர்புகள் ஒளி அலைகளாக உங்களுக்குள் காட்சியாகத் தெரியும்.

உலக மாற்றத்தைப் பற்றி அன்றே குருநாதர் உணர்த்தியுள்ளார்

 

இன்று இந்த உடலை இழந்தால் மீண்டும் மனிதாக உருப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் மனிதனாக இன்று இருந்தாலும் வேதனைப்படும் உணர்வையே நுகர நேர்ந்தால் உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி அதை அனுபவிக்க நேரும். விஞ்ஞான அறிவின் வீரியத்தால் நம் பிரபஞ்சமே செயலிழக்கும் தருணம் வந்து கொண்டிருக்கின்றது. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பே குருநாதர் இதைக் காட்டினார். 

divine frequency

உடலில் ஆன்மா எப்படி இயங்குகிறது… இயக்குகிறது… வலுப் பெறுகின்றது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுக்கும் பலதரப்பட்ட குணங்களில் புளிப்பு இனிப்பு துவர்ப்பு கரிப்பு கசப்பு எரிப்பு போன்ற ஆறு வகைச் சுவையை உடல் சமைக்கும் ஏழாம் சுவை அமில வளர்ப்பைக் கொண்டு… உடல் அணுக்கள் வளர்ச்சியில் வளரும் வலுவை… உடலை இயக்கும் ஆத்மாவானது அச்சுவையின் அலையை எடுத்து இயங்குகிறது… இயக்குகிறது… வலுப் பெறுகின்றது.

அலை என்பது… என்ன…?

1.உடல் சமைக்கும் ஆவி உணர்வை ஆத்மா இழுத்து ஆத்மாவின் உடல் இயக்க உயிர் செயல் கொள்ள
2.நாம் எடுத்த உணர்வு நிலைக்கொப்ப… உடல் என்ற சட்டியில் அது சமைக்கப்பட்டு… உடல் வெளிப்படுத்தும் வெக்கை நிலைக்கொப்ப
3.எச்சுவையின் வார்ப்பகத் தன்மையில் இந்த உடலின் இயக்கம் செயல் கொள்கின்றதோ
4.அதற்குகந்த அலை காற்றுடன் கலந்துள்ள அமிலம் காந்த ஜீவத் துடிப்பு கொண்ட ஆத்ம ஈர்ப்பிற்கு வலுக்கூட்டி
5.எச்சுவையின் தன்மையை உடலின் இயக்கம் அதிகப்படுத்தி (முன்னணியில் உள்ள குணம்) வளர்ச்சி கொள்கின்றதோ
6.அத்தொடருக்குகந்த வலுத் தொடரைத் தான்
7.உடல் வளர்க்கும் அணு வளர்ச்சியின் ஈர்ப்பிற்கு இந்தக் காற்றலையின் தொடரிலிருந்தும் பெறுகின்றோம்.

உதாரணமாக மிளகாய்ச் செடியின் வித்து நீர் சக்தியைக் கொண்டு உயிர் சக்தி ஜீவ வளர்ப்பு சக்தியை எப்படிப் பெற்றதோ… அத் தொடரின் வலுவைக் கூட்டி அச்செடி வளர்ந்து… அது எடுத்த கார உணர்வின் வளர்ப்பு நிலை கூடி… வித்து நிலையில் காரமுடன் கூடிய “மிளகாயின் பலன்” கிடைக்கின்றது.

இதைப் போன்று…
1.எந்தச் சுவையில் எந்த உயிரணு ஜீவன் கொண்டதோ…
2.அதற்குகந்த வளர்ப்புத் தொடரில் பல மாற்றத்திற்குப் பிறகு
3.வலுக்கூடிய வளர்ச்சி உன்னத உயிர் ஆத்ம நிலையில்
4.எண்ண உணர்வுடன் இயங்கக்கூடிய இவ்வுடல் கோளத்தின் சமைப்பில்
5.குணங்களைக் கொண்ட உணர்வு… உணர்வுக்குகந்த சுவை… சுவைக்குகந்த செயலாக… மனித வாழ்க்கை நிலை ஓடும் வழித் தொடரை…
6.நம் எண்ணத்தால் குண நிலையை நல்வழிப்படுத்தி
7.சாந்தமுடன் கூடிய வீரமான ஞானத்தைக் கொண்டு
8.இதுகாறும் இந்த உடல் இயக்கத்தில் நம்மை அறியாமல் நாம் வளர்த்துக் கொண்ட
9.குணமும் சுவையும் செயலும் வழித் தொடர் கொள்ளும் வழி நிலையைச் சமமான குணம் கொண்டு
10.நமக்கு மேல் வலுவாகத் தெய்வ நிலை பெற்ற… தெய்வ சக்தி பெற்ற “மகரிஷிகளின் தொடர்புடன்”
11.மேல் நோக்கிய காந்த மின் அலைத் தொடர்பினை நம் சுவாசத்தால் எடுக்க
12.நாம் இந்த உடலின் இயக்கத்தை உட்படுத்தினோம் என்றால்
13.மனித சக்தியின் உயர்ந்த உன்னத சக்தியை ஒவ்வொரு உயிராத்மாவும் பெற முடியும்.

கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தவற்றை விளையாட்டுத்தனமாக உபயோகம் செய்யக்கூடாது 

தீயவர்கள் நல்லவராக வேண்டும் என்று எண்ணினால் நல்லதை நமக்குள் கொண்டு வருகின்றது

தூய்மையற்றதை மகரிஷிகள் அருள் சக்தி கொண்டு தூய்மையாக்குவதே தியானம்

eswarapattar ori.

ஈசனைப் பற்றியும்… ஈஸ்வரபட்டரைப் பற்றியும்… தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்

 

குருநாதர் பெற்ற அந்தச் சக்தி எமக்குள் ஞான வித்தாக வளர்த்த அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் நினைவைக் கூர்ந்து கேட்கும்படி செய்து அருள் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

அந்த வித்தினை வளர்க்க நாம் தியானிக்க வேண்டும். எந்த வித்தின் தன்மை அவர் பெற்றாரோ அந்த நினைவைக் கொண்டு நீங்கள் ஏங்கி அந்த வித்தினை வளர்க்கும் தன்மை தான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

இந்தத் தியானத்தின் நினைவு கொண்டு உங்களுக்குள் வளர்த்து…
1.அருள் ஞானச் சத்தாக உங்களுக்குள் விளைய வைத்து
2.அருள் ஒளியின் சுடராக உங்கள் எண்ணங்கள் சென்று
3.அந்த உணர்வின் நிலையை உடலின் உணர்வின் ஒளியாக மாற்றிட
4.இது உங்களுக்குள் உபயோகமாக இருக்கும்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம் ஜீவ அணுவாக இருந்து நமது உயிர் தனக்குள் சேர்த்துக் கொண்ட அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது என்று எண்ண வேண்டும்.

நமது குரு அண்டசராசரத்தைத் தனக்குள் கண்டுணர்ந்தார். தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு
1.அருள் ஞான வித்தாக நமக்குள் தெளித்த உணர்வுகள்…
2.அவரின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யப்படும்போது
3.அந்தக் குருவை நீங்கள் நினைவில் கொண்டால்
4.அவர் பெற்ற உணர்வின் சக்தியும் அவரின்று வெளிப்பட்ட உணர்வையும் அது உங்களுக்குள் இயக்கப்பட்டு
5.அவர் அருள் ஞானம் பெற்ற அருள் வழியில் அது குருவாக உங்களுக்குள் நின்று
6.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் உணர்வின் குருவாக உங்களுக்குள் அமைந்து
7.அருள் வழியாக உங்களுக்குள் சேர்த்து இருளை அகற்றிடும் உணர்வாக விளைந்து
8.அதன் வழி இன்று குரு அமர்ந்திருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை அழைத்துச் சென்று..
9.நம்மை அரவணைத்துப் பிறவியில்லா நிலைகளை அடையச் செய்யும்…!

ஆகவே நாம் அந்தக் குரு வழியில் செல்வோம்.

இந்த வாழ்க்கையில் என்னைத் துன்பப்படுத்தினார்…! என்ற உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அது ஓ… என்று ஜீவ அணுவாகி விடுகின்றது. அந்த துன்பப்படுத்தும் உணர்வை நமக்குள் அதிகமாக வளர்த்தால் அது குருவாகின்றது.

அது குருவானால் இந்த உடலைத் துன்பப்படுத்தி எவர் துன்பப்படுத்தினாரோ அவர் உடலுக்குள் அழைத்துச் சென்று அதன் குரு வழி கொண்டு அவனுள் நம்மைச் சேர்த்துவிடும். இருள் சூழ்ந்த நிலைகளை நமக்குள் உருவாக்கிவிடும். ஆகவே
1.நாம் எண்ணியது எதுவோ…
2.நாம் எதன் வழி செயல்படுகின்றோமோ
3.அதுவே நமக்குள் குருவாகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது அனைத்திற்கும் உணர்வின் தன்மை நமது உயிரே குருவாக இருக்கின்றது.

ஆனால் நமது குரு அண்டசராசரத்தையும் தனக்குள் வளர்த்து நஞ்சினை வென்றிடும் உணர்வினைத் தனக்குள் பெற்று அதனின் அருள் ஞான வித்தாக எனக்குள் பதிவு செய்தார். அதை வளர்த்துக் கொண்டேன்.

அவர் காட்டிய வழியில்… நீங்களும் அந்த அருள் ஞானச் சக்தி பெற வேண்டும் என்று… அருள் ஞான வித்தை உங்களுக்குள் இதனை உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

இந்த உயிர் எப்படி மனிதனானதோ மனிதனானபின் ஒளிச் சரீரம் எப்படிப் பெற்றேன்…? என்று குரு கண்ட உணர்வின் தன்மையை அந்த அருள் ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றோம்.

உயிர் உடலை வளர்த்ததையும் உணர்வின் தன்மை பெற்றதையும் இதனின் தன்மை உங்களுக்குள் பதிவு செய்ததை
1.மீண்டும் நினைவு கொண்டு அந்தக் குருவினைக் கண்டால்
2.அவர் ஒளிச் சரீரம் பெற்ற நிலையில் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
3.அவர் அரவணைப்பில் வைத்துக் கொள்ளும்…
4.இன்னோரு உடல் பெறா நிலையை உருவாக்கும்.

நம் உயிர் குரு என்றாலும்…
1.நம் குருநாதர் பெயரும் ஈசன் தான்
2.நம் உயிர் பெயரும் ஈசன் தான்…!

ஆகவே இந்த இரு உணர்வும் ஒன்றி…

1.உயிர் உருவாக்குவது போன்று நம் குருநாதர் உருவாக்கி
2.அது ஜீவ அணுக்களாக மாற்றும் திறன் பெற்றதனால்
3.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
4..நம் உயிரையும்
5.நம் குருநாதர் காட்டிய அந்த ஈசனான நிலையையும்
6.இரண்டு தரம் நினைவில் கொண்டு வாருங்கள்.

இந்த நினைவின் அடிப்படையில் நாம் எண்ணும்போது குரு பெற்ற அருளை நாம் முழுமையாகப் பெறுகின்றோம்…!

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

கஷ்டம் என்று சொல்லாதீர்கள்.. நிவர்த்திக்கும் சக்தி வேண்டும் என்று கேளுங்கள்

 

தியானம் செய்யும் பொழுது தீமைகள் அகல வேண்டும் என்றே எண்ணுங்கள். துன்பங்களையும் துயரங்களையும் எண்ணாதீர்கள்…!

meditate on sages

இன்று நடக்கும் விபரீத விளைவுகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித ஞானம் பெற்றுள்ள இன்றைய வளர் நிலைத் தொடர் நிலையையும்… மனிதன் தன் உயர்வின் வழி தெரியாமல் வாழ்க்கை ஓட்ட உருவ பிம்ப சரீர இச்சைக்கொப்ப மனிதனின் ஞானம் செயல் வழி சென்றதன் விளைவுகளையும்… காணும் நிலை வந்து விட்டது.

விஞ்ஞான விபரீதத்தால் அணுக் கதிர் இயக்க வீச்சின் விஷத் தன்மை அதிக அளவில் பரவியதால் இக்கலிக்குப் பிறகு பூமியின் பிரளய மாற்றமும் அதற்குப் பின் அடுத்த இன வளர்ச்சி நிலை… மனித வித்தின் ஞானம் செயல்படா வண்ணம்… செயலின் தொடரே மாறப் போகின்றது.

எந்த வளர்ச்சியில் மனிதக் கரு பல ஆயிரம் வருடங்களாக வளர்ச்சியுற்று வளர்ந்ததுவோ… அவ்வளர்ச்சியின் தொடர் வலுத் தன்மை வளரக் கூடிய வளர்ச்சி நிலை… பூமியின் விஷ அலையினால் மாற்றமாகிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே மாறப் போகும் இத்தருணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உயர்வின் ஞானத்திற்கு உணர்வின் எண்ணத்தை உயிரின் ஆத்மாவிற்கு வலுக்கூட்டிக் கொள்வதே நல்லது.

வரப் போகும் விஷ அலையின் மாற்றத்திலிருந்து…
1.மனிதன் பெற்ற உயர்ந்த சக்தி நிலையான
2.பகுத்தறியும் ஞான வளர்ச்சி… செயல் திறமை… சொல்லாற்றலின் செயல் நிலை… யாவற்றையும்
3.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு சமமான சாந்த குணத்தால்
4.உடலில் உருவாகும் உயிரணு யாவற்றையும் உயர் ஞான அணுக்களாக
5.உயிர் ஆத்மாவின் வலுவுடன் வலுச் சேர்க்கும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செலுத்த வேண்டும்.

அதற்கு… மெய் ஞானிகளின் அலைத் தொடர்பைப் பெற்று இச்சரீர இயக்க ஓட்டத்தில் எண்ணத்தால் எடுக்கக்கூடிய வலுவைக் கொண்டு உயிர் ஆத்மாவின் வலுச் சக்தியைக் கூட்ட வேண்டும்.

காந்த மின் அணுக்கள் தன் இனமுடன் இனத்தை எப்படிச் சேர்த்துக் கொள்கின்றதோ அதைப் போன்று இச்சரீர இயக்கத்தில் ஓடும் அணுத் தன்மை யாவையும் மெய் ஞானிகளின் உயர் காந்த மின் அலையை ஜெபதபத்தினால் எடுத்துப் பழக வேண்டும்.

1.அதனின் வளர்ச்சி கொண்டு இயக்கப்படும் இணைப்பைக் கொண்டு
2.உயிராத்மாவின் வலுக்கூடக் கூட
3.இந்த உடல் என்ற கோளத்தின் உருண்டோடும் அணுவின் வளர்ச்சியில் இருந்து
4.ஆத்ம உயிரின் கன நிலை கூடிக் கொண்டே செயல் கொள்கின்றது.

சூரியன் தான் வளர்க்கும் கோளத்திலிருந்து… சூரியனின் தொடர்பு கொண்டு ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வலுக் கூடி வளர்ந்து கொண்டே உள்ளதோ அதைப் போன்று இச் சரீரத்தின் ஆத்ம உயிரின் வலுவும் வளர்கின்றது.

ஓர் உயிராத்மா பிறப்பெடுத்து வளர்ச்சி நிலை குறிப்பிட்ட வயது வரம்புடன் ஆத்ம வித்து வலுக் கொண்ட தன்மை கொண்டு உருவக வளர்ச்சி நின்று விடுகின்றது.

இந்தப் பூமி வளர்க்கும் ஜீவ சரீர இயக்கமும் தாவர வளர்ச்சியும் அவை எடுத்த வித்தின் உயிர் ஆத்ம வலுவின் நிலைக்கொப்ப வளர்ச்சி நிலை வாழும் காலம் மாறி மாறிச் செல்கிறது.

மாறி மாறி என்பது…
1.விதை ஒன்று போட்டு
2.அவ்விதையில் மரம் வளர்ந்து பலன் தந்து
3.அதன் சத்து நிலை உள்ள காலங்கள் வரை சததெடுத்து வளர்ந்து
4.பலன் தந்து கடைசியில் பட்டுவிடுகின்றது.

அதே சமயத்தில் இந்தப் பூமியின் உள் பகுதியில் உள்ள நீர்… மண் வளம்… கனி வளம்… இவற்றின் வளர்ப்பு நிலை கூடிக் கொண்டே உள்ளது. ஆக… உருவகத்தில் கனத்துக் கொண்டே “பூமி வளர்க்கும் உயிர் வளர்ப்பு யாவையும்” குறிப்பிட்ட சத்து நிலைக்கொப்ப தாவரமும் ஜீவராசிகளும் வாழ்ந்து மடிகின்றன.

ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற தொடர்புடனேயே மீண்டும் மீண்டும் சுழல விடாமல் உடல் கோளத்தின் உயிராத்மாவை என்றும் அழியா நிலைக்கு உயர்த்த வேண்டும்.

சூரியனுக்கும் பூமிக்கும் மற்றெந்தக் கோளத்திற்கும் இல்லா உயர் செயலை… நம் ஆத்ம உயிர் வலுவைக் கொண்டு
1.இன்றெப்படி சுவை எண்ணம் உணர்வு செயல் ஞானம் எல்லா இன்ப நிலைகளில் உடலில் பெறுகின்றோமோ
2.அதைக் காட்டிலும் இந்த உடலில் உள்ள எதிரிகளின் எதிர்ப்பு நிலையற்று மகிழ்ந்து வாழலாம்.

எதிரி என்பது இந்த உடல் அவயங்களில் ஏற்படக்கூடிய சோர்வு… பிணி… பசி… தூக்கம்… இத்தகைய எதிரிகளின் நிலையுமன்றி ஆத்ம வலுவின் வலுவைக் கூட்டி வலுவாக்கிக் கொண்டோமானால் வளர் தொடர் வளர்ச்சியின் வலுவாக நம் இயக்கச் செயல் “பிறவா நித்திய நிலையாகச் செயல் கொள்ளும்…!”

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

உமிழ் நீரை வைத்துத் தங்கம் செய்யச் சொன்னார் குரு 

தொண்ணூறு வயது கிழவிக்குள் செயல்பட்ட வீரியமான ஆன்மா 

காசியிலும் கங்கைக் கரையிலும் பெற்ற சில அனுபவங்கள்

life motto

நான் மனமுவந்து கொடுப்பதை நீ பெற்றுக் கொள்…! என்றார் ஈஸ்வரபட்டர்

 

“உயிரை மதிக்காது…” நாம் வேதனை உணர்வை எடுத்தால்
1.நீ எதை நினைத்தாயோ நீ அதுவாகு…! என்று உணர்வை வளர்த்து
2.அடுத்து நம்மைப் பாம்பினமாக மாற்றிவிடுகின்றது நம் உயிர்.
3.மறந்து விடாதீர்கள்…! இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

அவர் காட்டிய வழியில் நாம் செயல்பட வேண்டிய முறைகளை உங்களுக்குள் அந்த அருள் ஞானத்தைப் பதிவு செய்கின்றேன்.

பிறருடைய கஷ்டங்களைக் கேட்டுணர்ந்தால் அது நம் உடலுக்குள் அணுவாக மாறுவதற்கு முன் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து அந்தத் தீமை புகாது அதை அடக்கிப் பழக வேண்டும்.

“அத்தகைய சக்தி பெறுவதற்கே” உங்களுக்குத் திரும்பத் திரும்ப பல வழிகளிலும் தெளிவாக உணர்த்தி அதை நுகரச் செய்கின்றோம்.

உபதேசிக்கும் போது..
1.ஞானிகளின் உணர்வை நான் (ஞானகுரு) வேகமாகச் சொல்வதும்
2.சில நேரங்களில் எளிதாகச் சொல்வதும்… மெதுவாகச் சொல்வதும்…
3.நீங்கள் கேட்டுணர்ந்து வரப்படும் பொழுது ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் ஈர்ப்புடன் பதிவாக வேண்டும் என்று
4.முதலில் மெல்லச் சொல்லி… அதன் பின் சிறுகச் சிறுகச் சிறுக உயர்த்தி…
5.அந்த உணர்வுகள் உங்கள் ஈர்ப்புக்குள் புகப்பட்டு… அந்த உணர்வின் கருவாக வருவதற்குத்தான் “வேகமாகச் சொல்வேன்…!”

நீங்கள் எம்மை “உற்று நோக்கும் பொழுது” உணர்வின் தன்மை அந்தக் கருவின் தன்மை அடைய வேண்டும்…! என்ற நோக்கத்துடன் தான் அவ்வாறு செய்வது.

அந்த அணுவின் கருவாக… அறிவின் உணர்வின் தன்மை விளைந்து விட்டால் அந்த (உபதேசங்கள்) உணர்ச்சியின் தன்மை உங்களை அந்தச் செயலுக்குக் கொண்டு வந்துவிடும். அதற்கே நான் இதைச் செய்வது.

சாமி வேகமாகச் சொல்கின்றார்… என்னால் அர்த்தம் புரியவில்லை…! என்றால்
1.அதைப் பெற வேண்டும்…
2.அதை அறிய வேண்டும்…
3.அந்த உணர்வை நாம் பெற வேண்டும்… என்ற ஏக்கத்துடன் இருந்தால்
4.அந்த உணர்வுகள் உங்களுக்குள் அது அணுக் கருவாக மாறிவிடுகின்றது.

பின் அணுவாக உங்களுக்குள் மாறிவிட்டால் அது தன் உணவுக்காக ஏங்கும் பொழுது.. “உணர்ச்சிகள்” உங்களுக்குள் அந்த எண்ணங்களைக் கொண்டு செயலாக்கும் வன்மை பெறுகின்றது.

எமது குருநாதர் இப்படித்தான் செய்தார்…! பாஷை புரியாத நிலையில் ஏதோதோ சொல்வார். என்னென்னமோ சொல்வார்…! அது எனக்குத் தெரியாது.

1.தெரியாது…! என்று சொன்னாலும் வம்பு..
2.தெரியும்…! என்று சொன்னாலும் நீ எப்படித் தெரிந்து கொண்டாய்…? என்பார்.

இப்படி வழக்கத்திற்கு மாறாக நிலைகள் செய்து அந்த உணர்வைத் தனக்குள் செய்யச் செய்து
1.“சக்தி வாய்ந்த உணர்வை” அவர் எனக்குள் போதிக்கப்படும் பொழுது
2.அந்த உணர்வுகள் வளர்ந்த பின் “இப்பொழுது எப்படி இருக்கிறது…?” என்று கேட்பார்.

தாங்க முடியாத கஷ்டம் வரும் பொழுது… எனக்குள் “மறைமுகமாக” சொல்வார். அதைச் சொல்லிவிட்டு
அதைப் பார்…
இதைப் பார்…
இப்படிப் பார்…
அப்படிப் பார்…! என்பார்.

என்னமோ சொல்கின்றார் என்ற நிலையில் அதை எண்ணும் பொழுது என்ன சொல்கிறார்…? என்று நான் நினைப்பேன்.

அப்படி நினைத்து விட்டால்… ஏண்டா… திருடா…?! நீ இதைத் திருடாமல் அதைத் திருடுகிறாயேடா…! நான் சொல்வதை விட்டுவிட்டு… “நீ எதை எதையோ (என்னமோ ஆகின்றது என்று) திருடிக் கொண்டிருக்கின்றாய்…!”

1.அதைத் திருடினால் நீ திருடனாகின்றாய்..
2.ஆனால் நான் சொல்லும் உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெற்றால்
3.நீ திருடனல்ல… என்னிடம் கேட்டு வாங்குகின்றாய்..
4.ஆகவே நான் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீ ஏங்கிப் பெறு…!

 

பிறர் சொல்வது போல் குருநாதர் சொல்வது அர்த்தமாகவில்லை…! அது அதாகின்றது… இதாகின்றது…! என்று நீ “திருட்டுத்தனமாக” உனக்குள் குறையின் உணர்வை எடுத்துக் கொள்கின்றாய்… அது உன் திருட்டுத் தனத்தைக் காட்டுகின்றது.

நான் கொடுக்கின்றேன்… நீ எடுத்துக் கொள்…!
1.கொடுப்பதை எடுப்பதை விட்டு விட்டு
2.கிடைக்காததை நீ எங்கேயோ எண்ணி நினைவைச் செலுத்துகின்றாய்

நான் “மனமுவந்து” கொடுக்கும் உணர்வை நீ நுகர்ந்தறிந்தால் அந்த உணர்வின் அறிவாக வரும். இதனின் உணர்வை உனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…! என்று இப்படித்தான் அவருடைய சொல் செயல் இவை எல்லாம் எனக்குள் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்.

ஏனென்றால் எனக்குக் கல்வி அறிவு இல்லை. இருந்தாலும் “மூடனாக இருக்கும் நிலையில்… என் மூடத்தனத்தை நீக்கி…” அருள் ஞானத்தை எப்படி வளர்க்க வேண்டும்..? என்று குருநாதர் என்னை வளர்த்தார்.

அதன் வழிப்படித்தான் என் குரு எனக்குள் சொன்ன வழியில் தான் உங்களுக்குள்ளும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன். அதன் வழியில் கடைப்பிடித்து வருவோருக்கு இந்த உணர்வுகள் சீராக வரும்.

ஈஸ்வரபட்டரின் அருள் ஆசி – அருள் பிரசாதம்

அகஸ்தியன் இருக்கும் இடத்திற்குச் சென்றவர் ஈஸ்வரபட்டர். குரு அருளின் வரப்பிரசாதம் உங்களுக்குள் ஊடுருவட்டும். உங்களுக்குள் ஈஸ்வரபட்டரின் அருள் பரவி வருவதை உணர முடியும். உங்களைச் சுற்றி ஒளி வட்டம் வருவதை உணரலாம். 

world changes

பிரளய கால மாற்றத்திற்குப் பின் மனித உரு எப்படி இருக்கும்…! என்பதைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய மனிதக் கரு ஜீவ சக்திகளும்… இப்பூமியில் பிறப்பெடுத்து உடலற்ற ஆத்ம உயிர்களும்…
1.இன்றுள்ள விஷ நிலையான எண்ண வளர்ச்சித் தொடர்பலையினால்
2.இன்றைய அறிவு… ஞான செயல்… திறமை… உருவ அழகு… இவற்றின் நிலை யாவையுமே
3.இனி நிகழப் போகும் பிரளய காலத்திற்குப் பிறகு மாறப் போகின்றன.

மனித உணர்வின் எண்ணமே விஞ்ஞான அணுக் கதிரியக்கச் செயற்கைப் பூகம்ப நிலையாலும்.. லேசர் இயக்கச் செயலுக்காக சூரிய அலையில் பூமிக்கு எவ்வலையை பூமி சமைத்து வடிகட்டிப் பூமி வளர்ந்து வாழுகின்றதோ சூரிய சக்தியிலிருந்து அதைப் பிரித்ததாலும் பல பல மாற்றங்கள் ஆகிவிட்டது.

(அந்த அமில வண்ணம் (ULTRA VIOLET) பிரகாசமான VIOLETt கலர் காட்சியாகத் தெரிகிறது)

இப்படி அந்த அணுக் கதிர்களை விஞ்ஞானச் செயலுக்காகச் சில நாடுகள் பூமி எதைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்காமல் பூமியின் சுழற்சியில் வடிகட்டி (FILTER செய்து) தன் வளர்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளதோ அதையே மனித விஞ்ஞானம் தனித்துப் பிரித்து விட்டது… அதனால் விஷம் கொண்ட காற்றாக இன்று மாறி விட்டது.

ஆத்ம ஜீவ வாழ்க்கை சக்தியின் உன்னத ஞான வாழ்க்கையை உணர்ந்து வாழாமல்… செயற்கை வாழ்க்கை விஞ்ஞானச் செயலுக்காக… மனிதனின் தன் நிலை மறந்த “போதை” உணர்வு வலு நிலைக்கு உணவு நிலையாக… விஞ்ஞான அணுக் கதிர்களை உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர்.

நிகரில்லா நிலை பெற்ற.. நித்தியமான நிலையில் வளரும் மனித ஞான வளர்ச்சியையே குரோத வஞ்சனை வெறி தேச மத உணர்வு நிலையில் ஒருவரை ஒருவர் அழிக்க வந்துவிட்டனர்.

தன்னுடைய பேராசையாலும் குரோதத்தாலும் விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு இவ் அணு சக்தியை சூரியனிலிருந்து பிரித்தெடுத்து
1.அழிவுச் சக்திக்காகப் பயன்படுத்துகின்றோம்…! என்ற உண்மையை மறைத்து
2.திரை போட்டு ஆக்கச் சக்தியென்ற வழியைச் சொல்லி
3.மனித விஞ்ஞானம் இன்று வளர்ந்துள்ளது.

அதனால் இன்றைய மனித உணர்வின் எண்ணச் சிதறல்களும் தன்னைத் தான் உணராத நிலையும் ஏற்பட்டு விட்டது.

இத்தகைய தருணத்தில் தனக்குள் உள்ள இறை நிலையை உணர்ந்து… தான் உடல் பெற்று… உணர்வு பெற்று… சுவையும் குணமும் பெற்று… சரீர ஞானச் செயல் கொண்ட மனித வாழ்க்கை உன்னதச் செயலில் இருந்து உயர்வு நிலை கொள்ளும் வழித் தொடரை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊசி முனைக்கு மேல் உருவத்தில் ஆயிரம் மடங்கு சிறிதாயுள்ள உயிராத்மா உருவக சரீர ஜெட ஜீவச் செயல் பெற்றுச் செயல் புரியும் உயிராத்மாவை நல்லுணர்வின் ஞான ஜெபத்தால் வளர்த்திட வேண்டும்.

இச்சரீர அணு அனைத்தையுமே உயர் ஞான உணர்வு எண்ணம் கொண்டு செயல்பட்டு ஜோதி நிலையான ஒளி நிலைக்கு ஆத்ம உயிரின் வலுவைக் கூட்ட வேண்டும்.

தெய்வம் என்பது நம் உயிரே நமக்குத் தெய்வம் தான் என்று உணர வேண்டும். ஆகவே… நமக்குள் உள்ள தெய்வ உயிரைப் பிறிதொரு ஈர்ப்புப் பிடியில் தன் உணர்வற்ற இன்பம் என்ற உணரும் சுவை ஈர்ப்பில் சிக்க விடக் கூடாது.

போதை… காமம்… அதி விரைவு… வெறியான சுவை உணவின் இச்சை… போன்ற இவ் இன்ப உணர்வின் தொடர்பிலெல்லாம் எண்ணத்தின் வலுவைச் செலுத்தாமல்
1.தன்னுள் உள்ள இறை உயிர் ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ள
2.உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையுமே
3.உயர்வு ஞான நற் குண ஜெப நிலையினாலும்
4.சம நிலைகொண்ட சாந்த உணர்வு வலுத் தொடரினாலும் உயர்த்திட வேண்டும்.

ஏனென்றால்… இன்றுள்ள தன்மை பிரளய மாற்றத்திற்குப் பிறகு பூமியின் மாற்றுச் சக்தியால் பூமி வளர்த்த அணு யாவையும் எப்படி நெற் செடியில் அதற்குகந்த ஆகார நிலை கிடைக்கவில்லை என்றால் “பதர் அரிசி மணி” வளர்கின்றதோ அதைப் போன்று மனித ஆத்ம உயிர்கள் ஜீவ உயிர்கள் யாவையுமே பிறப்புப் பெற்றாலும் சரீரம் எண்ணம் செயல் ஒலி ஒளி ஆகிய எவையுமே இன்றுள்ள நிலை பெற முடியாது…!

தனக்குகந்த ஆகார சக்தி கிடைக்கா விட்டால் காய்கறி கனிகளில் கரடு நிலை தட்டிய காய் கனிகள் வளருவதைப் போன்று தான் வரும்.
1.சில பிராணிகள் ஜீவ சக்தி பெற்றிருந்தாலும் “தேவாங்கு” போன்று
2.அமர்ந்தது அமர்ந்த நிலையிலேயே பிறப்பெடுத்து வாழ்ந்து மடிகின்றதோ
3.அதைப் போன்ற பிறப்பு நிலைதான் பிரளய நிலைக்குப் பின் வரும்.

பிறப்பு நிலை இன்றைய நிலை போல் மீண்டும் வளராது…!

கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ நோய் இருந்தால் அதை நீக்க “விடாப்பிடியாகத் தியானிக்க வேண்டிய முறை”

நோயுற்றவர்களுக்குத் தியானத்தின் மூலம் கொடுக்க வேண்டிய மருந்து

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் செயற்கையாக உருவாக்கப்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும்

menberships

அகஸ்தியன் உணர்வுகளை நுகர்ந்து “தீமைகளைப் பிளந்திடும் மூச்சலைகளாக” இந்தக் காற்று மண்டலத்தில் பரவச் செய்ய வேண்டும்

 

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ விதமான நிலைகள் வருகின்றது… பார்க்கின்றோம்…!
1.அவை எல்லாமே நமக்குள் அப்படியே புகாதபடி
2.தீமைகள் வளர்ந்திடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தீய செயல்கள் எது நடந்தாலும்…
1.நாளை நடப்பது அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்..!
2.தீமை செய்வோர் அவர்களுக்குள் அறியாத நிலைகள் நீங்க வேண்டும்
3.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் நிலைகள் பெறவேண்டும்
4.அவர்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்று
5.இதைத் தான் நாம் சொல்லிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் எடுக்கும் இத்தகைய உணர்வுகள் இது பெருகப் பெருக இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை மாற்றும் திறனாக அது வளரும்… நாம் வெளிப்படுத்தும் இந்த உயர்ந்த உணர்வுகள் “மூச்சலைகளாக” இது பரவும்.

உங்கள் அருகில் உள்ள நண்பர்களுக்கோ மற்றவர்களுக்கோ இதைப் போலச் சொல்லி அவர்கள் குடும்பங்களிலும் கூட்டுத் தியானங்கள் அமைத்து “அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும்” என்ற இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.

இப்படிப் பரப்பப் பரப்ப அவர்களுக்குள்ளும் இது பரவுகின்றது.

1.இப்படி எத்தனை பேர் அதிகமாகின்றனரோ
2.அவர்கள் வெளிப்படுத்தும் அத்தனை அருள் உணர்வுகளும்
3.இந்தக் காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள நச்சுத் தன்மையை நீக்கக் கூடியதாக வளரும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் அவன் துருவ நட்சத்திரமாக இருப்பதால்
1.எந்நாட்டவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
2.அவர்களும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே நாம் செல்ல வேண்டும். நமக்குள் அவன் உணர்வைச் சேர்த்து… அவன் உணர்வைப் பூமியில் பரவச் செய்து… விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளை நீக்கச் செய்திட வேண்டும்.

காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை எல்லோரும் எடுக்கும் பொழுது
1.“கடவுளின் அவதாரம் வராக அவதாரம்” என்ற நிலையில்
2.தீமைகளைப் பிளந்து நல் உணர்வை நுகரும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

எலும்புக்குள் இருக்கும் ஊனை மாற்ற விஞ்ஞானத்தால் மாற்ற முடியாது

 

ஊசி மருந்தைச் செலுத்தித் தசைகளில் உள்ள நோய்களை விஞ்ஞானம் நீக்கினாலும் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினையை மாற்ற முடியாது. அதை மாற்றினால் தான் நம் பிறப்பின் பலனை அடைய முடியும்.

 

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வை வலுப்படுத்திக் கொண்டால் அந்த ஊழ்வினையை மாற்றலாம்.

cosmic existence

திடமாக இருக்கும் எந்தப் பொருளுமே நிலையாக இருப்பதில்லை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு உருவாகும் உருவக சக்தி அனைத்திற்குமே “ஒளி நிலை கொண்ட ஈர்ப்பு சக்தி நிலை” செயல் கொண்டால் தான் திட பிம்ப வளர்ச்சி வருகின்றது.

அண்டசராசரத்தில் உள்ள அனைத்து வளர்ச்சியிலும்..
1.திடச் செயல்களில் நிலைத்திருப்பது எவையுமே இல்லை.
2.மாறிக் கொண்டே சுழலுகின்ற சுழற்சி ஓட்ட வஸ்துவாய்த்தான் வளருகின்றது… மாறுகின்றது… ஒவ்வொரு திடச் செயலுமே.

திடச் செயல் கொள்ள ஒளி நிலை கொண்ட ஜோதி நிலை வளர்ந்தால்தான் வளர்ச்சி நிலை கொள்கின்றது.

அண்டத்தின் அமிலச் சுழற்சி சுழலுகின்ற வழித் தொடரில்… அதனதன் அமிலச் சேர்க்கையின் திட நிலையில்… ஒளி நிலை ஈர்ப்பு கொண்டவுடன்… செயல் நிலை சேர்க்கையின் அமில நிலைக்கொப்ப வழி பெறுகின்றது.

உயர்வு எது…? தாழ்வு எது…? நன்மை எது…? தீமை எது…? என்ற பாகுபாடின்றி அண்டசராசரக் கோளங்கள் வளர்ச்சி நிலை கொள்ளவில்லை.

அதனதன் ஈர்ப்பின் சுழற்சி வலு நிலை வளர்ந்து ஓடினாலும்…
1.இன்றைய விஞ்ஞானத்திற்கு எட்டாத உயர்வு ஞானத்தால்
2.ரிஷி சக்திகளின் கூட்டுக் குடும்பச் செயலாய்த்தான்
3.ரிஷிகளின் ஒளி சக்தி வலுவைக் கொண்டு மண்டலக் கோளங்கள் குடும்பம் குடும்பமாகச் சுழன்று கொண்டுள்ளன.

இக்குறிப்பைக் கொண்டு விஞ்ஞானிகள் குறிப்பெடுக்கட்டும்…!

நம் சூரியன்… சூரியனின் சுழற்சி ஓட்டக் குடும்பமாக நாற்பத்தி ஏழு… சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டாகக் கோளங்களின் அங்கங்கள் கொண்டு சனி வளர்க்கும் பன்னிரண்டு கோளங்களுடன் அறுபது கோளங்கள் சூரிய குடும்பச் சுழற்சியில் சுழன்று கொண்டே வருகின்றது.

மனிதனுக்கு… ஆத்மா இயக்க உடலும்… உடலின் அங்க அவயங்களும்… இவ் அங்க அவயவத்தில் சேர்க்கவல்ல அமிலத்திலேயே சதையாயும் நகமாயும் ரோமமாகவும் பல்லாகவும் பல மாறு கொண்ட வளர்ச்சி உண்டு.

அவைகளின் கூட்டு அமில உலோக ஈர்ப்புத் தொடர்பில்… இச்சரீர அங்கத்தின் உருவ நிலையில் எலும்பும் மண்டை ஓடுகளும் வலுக் கொண்ட இரச சக்தியின் வளர்ச்சி கொண்டு
1.ஓர் சரீரத்தில் பல நிலை கொண்டு
2.இயக்க ஓட்ட மனிதச் செயல் நடக்கின்றதோ
3.அதைப் போன்று தான் தனித்த சூரியனுக்கு சக்தி இல்லை.

சூரிய ஆத்மாவின் உருவ… திட… பிம்பக் கோளம் சூரியக் கோளமென்றால் சூரியன் அங்க அவயங்கள்தான் பூமியும் சந்திரனும் வியாழன் செவ்வாய் எல்லாமே. ஒவ்வொரு கோளமும் சூரியனுக்கு அங்கமாகச் சுழலுகின்றது.

நம் சூரியக் குடும்பம் மட்டுமல்ல… இரண்டாயிரம் குடும்பச் சுழற்சி ஓட்டங்கள் சுழலுகின்றன இவ்வண்ட வெளியில்…!

அவையும் அல்லாமல் உருவாகி உருவாகி மாறுகின்ற நட்சத்திரக் கோளங்கள் எண்ணிலடங்கா வளர் நிலையில் வளர்ந்தோடுகின்றன.

ஒன்றின் தொடர்புடன் ஒன்று சுழலும் இவ்வண்டக் கோளத்தில் இரண்டாயிரம் குடும்ப நிலையில்… சூரியக் குடும்பத்தின் அறுபது கோளங்களில் வளர்ந்த மிகப் பெரிய கோளம் ஒன்று பிரிந்து… கரைந்து… மாறு கொண்டு… தன் வளர்ச்சி நிலை செயலற்றுச் சுழற்சி ஈர்ப்புப் பிடியிலிருந்து நழுவி விட்டது.

நாற்பத்தி எட்டு கோளத்தில் ஒன்று கரைந்ததனால் நாற்பத்தி ஏழாய் இச்சூரியக் குடும்பம் சுழல்வதோடு அல்லாமல் சனி வளர்க்கும் பன்னிரண்டு கோளங்களில் தனித்து இயங்கும் திடமாகக் கூடிய வலுக் கோளமாய் இரண்டு கோளங்கள் ஒன்று படப்போகின்றன.

சனி வளர்க்கும் பன்னிரண்டு கோளம் என்பது பூமியை ஒத்த திடக்கோளமல்ல…! ஒவ்வொரு பருவக் காலத்திலும் பல நூறு மைல் அகல அளவிலும் அதே சுற்றுக் கன அளவிலும் பாதரசமணி எப்படி உள்ளதோ அதைப் போன்று திடமும் அல்ல… நீரும் அல்ல… வெண்மையும் கருமையும் கொண்ட வெள்ளியின் வண்ண நிலைக்கொப்ப அமில உலோகக் கோளமாய்த்தான் வளர… கரைய… பருவ கால நிலைக்கொப்பச் செயல் கொள்ளும்.

1.இக்கோளத்தின் பல மாற்று நிலைகள்
2.இனி வரப்போகும் “பிரளய காலத்தில்” செயல் கொள்ளப் போகின்றன.

அகஸ்தியனைப் பின்பற்றி நாமும் பூமியைச் சமப்படுத்துதல் வேண்டும் 

கணவன் மனைவி ஒன்றாக உயிர் பிரிந்தால் அடுத்த உடல் எப்படி இருக்கும் – அகஸ்தியன் தாய் தந்தையர் 

அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிந்துள்ள ஆற்றல்களையும் அகஸ்தியர் பெற்ற பச்சிலைகள் மணங்களையும் பெறும் வழிகள் 

trust-yourself-3

“நம்மைக் காக்கும் சக்தியை” நமக்குள் நாமே பெருக்கும் வழி

 

சர்க்கரையைத் தயாரிக்கும் போது கரும்பில் இருக்கக்கூடிய சாற்றில் இருக்கும் விஷத்தைப் பிரிப்பதற்கு கெமிக்கலைத் தான் போடுகின்றார்கள்.

1.அந்தக் கெமிக்கலை ஒரு துணியில் போட்டால் துணி வெந்து போகும்.
2.ஆனால் அதைத்தான் சர்க்கரையில் போட்டு நாம் சாப்பிடுகின்றோம்.
3.பார்ப்பதற்கு அழகாக (சீனி) இருக்கின்றது ருசியாகவும் இருக்கின்றது.

இப்படி அந்தக் கெமிக்கலைக் கலந்து அழுக்குகளை நீக்கினாலும் அது சிறிது சர்க்கரையுடன் கலந்துவிடுகின்றது. இப்படி விஞ்ஞான அறிவால் ஒரு பொருளைத் தெளிவாக்கினாலும் விஷத் தன்மை நம் உடலுக்குள் சேர்கின்றது.

1.குடிக்கும் நீரிலும் இதைப் போன்றே தூய்மைப்படுத்துகின்றார்கள்.
2.நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய் வகைகளிலும் கெமிக்கலைப் பயன்படுத்துகின்றனர்.

எண்ணையிலுள்ள கொழுப்பு சத்து மற்றவைகளை எடுப்பதற்காக கெமிக்கலைப் போட்டுச் சுத்தப்படுத்துகின்றனர். ஆனால் அது வேண்டாதவைகளை எடுத்து விடுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் அந்தக் கெமிக்கல் கலந்த எண்ணை சென்றுவிடுகின்றது. நம் உடலுக்குள் சென்றவுடன் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.

இதைப் போன்ற கடும் விளைவுகள் வருவதனால் இதிலிருந்து தப்புதல் வேண்டும். ஆகையினால் இதை நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெற்று அந்த உணர்வுகளை நமக்குள் வளராது தடுத்துப் பழக வேண்டும்.

1.இன்று இந்தக் காற்று மண்டலத்தில் பல வகையிலும் படர்ந்து வரும் நச்சுத் தன்மையால்
2.இந்த விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து
3.சிந்தித்துச் செயல்படும் திறன் எல்லோருக்கும் இழந்து விட்டது.

அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படுவதும்… தவறு செய்யக்கூடிய உணர்வுகளைத் தூண்டுவதும்… சிந்தனை இல்லாத செயல்களைச் செயல்படுத்தும் நிலைகள் வருகின்றது. (எல்லோருக்கும் இப்படித்தான்…!)

 

இதைப் போன்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான் போக்குவரத்துகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் விபரீத விபத்துக்கள் ஏற்படுகின்றது.

மேலும்…
1.மனிதனுக்கு மனிதன் விபரீதச் செயல்களைச் செய்து (இன்றைய நிலை)
2.மனிதன் என்ற நிலை இல்லாதபடி இரக்கம் ஈகையற்ற நிலைகளில்
3.தாக்கிக் கொன்று கொண்டிருக்கும் உணர்வுகள் பெருகிவிடுகின்றது.

ஏனென்றால் ஒரு பொருளில் விஷம் பட்டால் அதை உட்கொண்டால் சிந்தனை சிதறிவிடுகின்றது. இதைப் போன்று விஷத் தன்மையை நமக்குள் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க நம்மை அறியாமலே தவறு செய்யும் நிலைகளாக மாறுகின்றது… கடும் நோயாகவும் விளையும் தன்மை வருகின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் நாம் மீள வேண்டும் என்றால் அதிகாலை துருவ தியானத்தை எப்படியோ நீங்கள் படுக்கையை விட்டு எழுந்தவுடனே எடுத்துத் தியானிக்க வேண்டும்.

தியானித்துவிட்டு…
1.மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
2.கணவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
3.குழந்தைகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்றும்
5.கட்டாயப்படுத்திச் செய்ய வேண்டும்.

குழந்தைகளையும் இவ்வாறு எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று நாளைக்கு அவர்களுக்குச் சொல்லிச் சொல்லி நீ மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறு… உடல் நலம் பெறுவாய்… உனக்கு நன்றாகப் படிப்பு வரும்… நல்ல ஞான சக்தி கிடைக்கும்…! என்று இது ஒரு பழக்கத்திற்கு வந்துவிட வேண்டும்.

காலை ஐந்து அல்லது ஐந்தரைக்குள் எழுந்து ஒரு பத்து நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று தியானித்தால் போதும்.

இந்த மாதிரி எண்ணி எடுத்து அந்தச் சக்திகளைப் பெருக்கிப் பழக வேண்டும். நம்மைக் காக்கும் சக்தியை நமக்குள் நாமே பெருக்கும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

உடல் உறுப்புகள் தியானப் பயிற்சி

 

உடலில் உள்ள உறுப்புக்களான சிறு குடல் பெரும் குடல்… கணையங்கள்… கல்லீரல் மண்ணீரல்… நுரையீரல்… சிறுநீரகங்கள்.. இருதயம்… கண்களில் உள்ள கருமணிகள்… நரம்பு மண்டலம்… எலும்பு மண்டலம்… நெஞ்சின் பாகம் உள்ள விலா எலும்புகள்… எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன்… தசை மண்டலம்… தோல் மண்டலம்… போன்ற எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி இணைக்க வேண்டும் என்ற தியானப் பயிற்சி.

scintific invention

பகுத்தறிவின் ஞானமுடைய விஞ்ஞானம் மனிதச் சரீரத்திற்கு அடுத்த உயர்வு நிலைக்கு ஏன் செல்லவில்லை…? என்பதைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பக்தி மார்க்கத்தில்… ஜெப நிலையில்… மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே எத்தனையோ காலங்களாகத் தெய்வ சக்தி கிட்டும் என்ற எண்ணத் தொடரில் சுழற்சி வட்டத் தொடரில் ஜெப மந்திரங்களை ஓதி யோக நிலை பக்தி நிலை என்ற நிலையில் எல்லாம் கால நிலையைக் கடத்தி ஆழ் நிலையில் இச்சரீரத்தையே பயிற்சி செயலில் ஆரோக்கிய நிலையில் செயலாக்கி இருந்தாலும் காணப் போகும் பலன் என்ன…?

1.எண்ண நிலையைக் கொண்டு அறியும் ஞான வழியின்
2.காந்த மின் நுண் அலை கூடிய வலுவாகிய உடல் சமைப்பின் ஆத்ம உயிரின் வலு நிலை பெற்றால் தான்
3.பக்தி மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் மற்ற எந்த விஞ்ஞான மார்க்கமானாலும்
4.இத்தொடர் நிலையை மனித ஆத்மா பெற்றதென்றால்தான்
5.மனித சக்தியின் தெய்வ சக்தியை இவ்வுடல் சமைக்கும் உணர்வின் எண்ணத்தை – அறியும் ஞான ஆற்றலை
6.அறிந்தோரின் ரிஷி சமைப்பின் அலைத் தொடரை உணர்வின் எண்ணத்தில் அறிந்து உயர்வு நிலையை நாம் பெற முடியும்.

இப்பூமி சமைக்கும் வழித் தொடரில் சுழலும் எண்ண நிலையை இப்பூமியையே இயக்கவல்ல உயர் வழியை அறிய இவ்வண்ணத்தைக் கொண்டு அறியும் நிலை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டி இச்சரீரக் கோளத்தின் அணுக்கோடிகளுக்கெல்லாம் ரிஷித் தொடர்பை ஏற்படுத்தி உயர் ஞானம் அறிந்த அந்தச் சமைப்பு நிலை கொண்டு
1.இச்சரீரத்தைக் கொண்டே உயர்வு நிலை பெறவல்ல செயலுக்கு
2.நம் உணர்வின் எண்ணம் அறியும் தன்மை கொண்டு
3.நம் தியான நிலை செயல்பட வேண்டும்.

பொருள் சேர்க்கையும்… சரீர பிம்பத்தைக் காக்கும் வழி முறையும்… இத்தொடரில் வாழ்க்கை நிலையில் மோதப்படும் வழி முறைக்கு மட்டும்… எண்ணத்தின் உணர்வைச் செலுத்திச் சுழல் வட்டத்தில் சுழலும் வாழ்க்கையில்…
1.பிறப்பும் இறப்பும் இயற்கை நிலை என்று எண்ணத்தைச் செலுத்தி விடாமல்
2.எண்ணத்தின் ஞானத்தைக் கொண்டுதான் இயற்கை நிலையே உருப்பெறுகின்றது…! என்பதை மனிதன் உணரல் வேண்டும்.

ஆதிசக்தியின் அமில சக்தி உருவாகிப் பல கோடி மாற்றங்களில் சுழலுகின்ற சுழல் வட்டத்தில்… மனித எண்ணத்தைக் கொண்டு அறியும் வழித் தொடரில் உருவாகும் உயர்வு நிலை சமைப்பு தன்மை மாறவே… ஒன்றில் இருந்து ஒன்று மாற “இவ்வெண்ண நிலையின் தொடர் நிலை உருவாக்கித் தந்த உரு நிலை தான் இப்பூமியின் நிலை…!”

பிறப்பு இறப்பு இயற்கை என்றால்…!
1.இயற்கையாக வாழ்க்கை நிலையை மனிதன் ஏன் ஒன்றி விடாமல்
2.ஒவ்வொரு செயலையும் பக்குவம் கொண்டு பகுத்தறிவினால் செயல்படுத்துகின்றான்…?

விஞ்ஞானம்… மருத்துவம்… விவசாயம்… போன்ற எல்லா துறைகளையும் மனிதனின் எண்ணம் பகுத்தறியும் நிலைக்குச் செல்லும் பொழுது
1.மனித சரீரத்திற்கு அடுத்த உயர்வு நிலைக்கு
2.தன் பகுத்தறிவின் ஞானத்தை ஏன் செலுத்தவில்லை…?!

பிறருடைய கஷ்டத்தைக் கேட்டால் “ஆத்ம சுத்தி செய்வதை மறந்து” விட்டுவிடுகின்றோம்

 மன பலம் எப்படிப் பெறுவது…?

தீமைகள் புகாது தடுக்கும் நரசிம்ம அவதாரம் 

super-computers

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் செயற்கையாக உருவாக்கப்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும்

 

இன்றைய உலகில் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகள் நமக்குள் புகாது தடுக்க வேண்டும்…!

காரணம்… விஞ்ஞான அறிவால் டி.வி. கம்ப்யூட்டர் (எலெக்ட்ரானிக்) மூலமாகவோ அல்லது உணவுப் பயிர்களுக்குள் தூவப்படும் பூச்சி மருந்துகளினாலோ பல வகையில் நஞ்சின் தன்மை தாவர இனங்களில் படர்ந்து கொண்டுள்ளது.

அது உணவுடன் கலந்து உடலுக்குள் கலக்கப்படும் பொழுது
1.நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து
2.விஷத் தன்மையை அதுவும் ஈர்க்கும் நிலை பெற்றுவிடுகின்றது.

விஷத் தன்மையை ஈர்க்கும் சக்தி பெறப்படும் பொழுது கை கால் குடைச்சல் சோர்வு விஷக் காய்ச்சல் இதைப் போன்ற பல நோய்கள் வரக் காரணமாகின்றது.

விஷத் தன்மைகள் அதிகமான அளவில் உணவுடன் கலந்து வருவதால் கேன்சர் நோயும் அதிகமாகப் பரவுகின்றது. அதே போல் எய்ட்ஸ் என்ற நோயும் விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டது தான்.

ஒவ்வொரு நாட்டில் உள்ள மூட்டைப் பூச்சிகளையும் கொசுக்களையும் பரீட்சித்துப் பார்க்கின்றேன் என்று கொண்டு சென்று அதை அவர்கள் மற்ற கெமிக்கலில் கலக்கச் செய்து விஷமான அணுக்களை மீண்டும் உருவாக்கி அதிகரித்து விட்டனர்.

அதையே புதிதாக ஒரு பொருளாக உருவாக்கி… மனிதனுக்குள் கலக்கச் செய்து… விஷத் தன்மைகளைப் படரச் செய்து… (எயிட்ஸ் நோய்)
1.மக்களின் உடலைச் சிறுகச் சிறுக நலியச் செய்து
2.அந்த நாட்டையே சூனியமாக்கும் நிலைக்கு அமெரிக்காவில் அதைச் செய்தார்கள்.

ஆனால் அவன் நாட்டிலேயே முதலில் பரவியது. அங்கே பரவிய அதனுடைய தொடர்கள் மனிதனுக்கு மனிதன் பேசும் பொழுதே பரவு தன்மை வந்தது.

ஏனென்றால் அந்த எயிட்ஸ் நோய் அணுக்கள் மிகவும் விஷம் கொண்டது… அது வீரியமாகப் பரவும் தன்மை பெற்றது.

“எயிட்ஸ் நோய் உள்ளவர்கள்” அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று அதிகமான அளவில் எடுத்துக் கொண்டால் அந்த நோய் மாறிவிடும்.

இதைப் போல் கேன்சரில் இருந்தும் மற்ற நோயிலிருந்தும் விடுபட வேண்டும். சர்வ நோய்களையும் நீக்கும் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
1.இந்தத் தியானத்தின் மூலமாக அந்த அணுக்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அனுதினமும் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடியிருந்த கோவில் எது…?

 

அசாம் காட்டுக்குள்ளும் பழனி பாப்பம்பட்டி மலையிலும் நடந்த நிகழ்ச்சிகள் 

growth in meditation

மனிதன் பெறவேண்டிய “ஞான வளர்ச்சியின் முக்கியத்துவம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

விஞ்ஞானி ஓர் பொருளை அறிந்து உருவாக்குகின்ற செயலில் அப்பொருளின் தேவை நிலையில் “சிக்கல்கள் ஏற்படும் போது…”
1.மாற்று நிலை என்ன செய்யலாம்…? என்ற அறிவின் ஞானத்தைக் கூட்டி
2.தன் தேவைக்குகந்த செயலைச் செயலாக்கிட
3.மீண்டும் வளர்ந்த புதுப்பிக்கும் அறிவு ஞானத்தைக் கொண்டு
4.வளர்த்துக் கொண்டே செல்கின்றான் – விஞ்ஞானத்தில்.

காட்சி:-
ஆதிகாலத்தில் இருந்த இரண்டு சக்கரமுடன் கூடிய வண்டியைப் போன்றும்… அவ்வண்டியே அடுத்த நிலையில் பெரிய சக்கரமாக அமையப் பெற்றதைப் போன்றும்… அச்சக்கரத்தில் டயர் வைத்து உருள்வதைப் போன்ற வண்டியும் தெரிகின்றது.
1.ஆரம்பக் காலத்தில் இருந்த வண்டியும் இன்று நூதனத்தில் அமைக்கப்படும் வண்டியும்
2.அதைப் போன்றே ஆரம்பக் காலத்தில் ஓடிய நான்கு சக்கரங்கள் கொண்ட குதிரைகள் பூட்டிய ரதத்தையும் அதற்குப் பின் உருவான மோட்டார் வாகனத்தையும்
3.அதன் தொடரில் இன்றைய நூதன வசதியுடன் கூடிய மோட்டார் வாகனமும் காட்சியில் மாறி மாறித் தெரிகின்றன.

மெய் ஞான வழித் தொடரிலும்… மனித ஆத்மா தன் ஞானத்தைக் கூட்டி மனித ஆத்மாவின் உயர்வு நிலைக்கு வழிகாட்டிய பக்தி மார்க்க நெறி முறைகளை நம் அறிவின் ஞானத்தைக் கொண்டு உயர்த்திப் பார்ப்போமானால் “அதிலுள்ள உண்மை விளக்கங்களையும்… அதன் தொடரில் அறியக்கூடிய ஞானச் சித்துவையும்…” மனிதன் பெற முடியும்.

எண்ணத்தின் பகுத்தறியும் அறிவு நிலையினால் மனிதன் ஒன்றின் உருவகத்தில் பிறிதொன்றைச் சேர்த்து வாழ்க்கை வசதிக்கு அறிவின் ஞானச் செயலினால் முற்படுத்துகின்றான்.

காட்சி:-.
ஓர் ஓவியன் ஓவியம் வரைவதைப் போன்றும் பிறகு ஒரு பெண் தலையில் மல்லிகைப் புஷ்பத்தைச் செண்டாக்கி வைப்பதைப் போலவும் காட்சி தெரிகின்றது.

இதன் பொருள் யாது…?

போதனையில் புகட்டப்படும் பாட முறைக் கல்வியை… செயல் முறையில் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் ஆரம்பக் காலம் தொட்டு வெறும் போதனையை ஒத்த செயலுடன் நின்றிருந்தால்… எந்த மனிதனின் அறிவுத் திறனும் வளர முடியாது.

ஓவியன் தன் எண்ணத்தைக் குவித்து ஓவியம் எழுதும் பொழுது…
1.தன் ஞானத்தில் அந்தந்த இடங்களுக்குகந்த பகுத்தறிவைக் கொண்டு வண்ணங்களைச் செலுத்தினால் தான்
2.அந்த ஓவியத்தின் அழகே பொலிவு பெறுகின்றது.

பெண்ணிற்குத் தலையில் பூச்சூடும் வழி நிலையே நம் முன்னோர்கள் தான் வழிகாட்டியுள்ளார்கள். அதில் பல ஜீவ சக்தியுடன் கூடிய உண்மை நிலைகள் அதில் பொருந்தியுள்ளன.

இயற்கைத் தாவரத்தில் மலருடன் தன் சக்தியை வெளிப்படுத்தும் தாவரமும்… பூவாகிக் காயாகிக் கனி தரும் தாவர இனமும் இப்படி பல உண்டு.

மணமுடன் கூடிய மல்லிகையின் அமில குணமானது பெண் இன ஜீவ சக்திக்கு ஈர்ப்பு சக்தியை தரவல்லது.

மல்லிகை மலரைத் தலையில் சூடும் பொழுது
1.மனித இயக்கத்தின் அறிவு ஞானத்தை வளர்க்கும்
2.கவன நரம்பின் சிறு மூளை இயக்கத்தில் ஏற்படும் உஷ்ன அலையை
3.மல்லிகையின் மணமுடன் கூடிய அமிலத் தன்மை பின் தலையில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையில் மோதும் பொழுது
4.அதனுடைய குண நிலை – பெண்களின் அறிவின் ஞான வளர்ச்சியில் ஏற்படும் உயர்வு நிலைக்கு “வித்தாகின்றது…”

முன்னோர்கள் உணர்த்திய இத்தகைய வழியிலும் நாம் அறியாத பல உண்மைகள் உண்டு. ஆகவே எண்ணத்தின் உணர்வை அறியும் ஞானம் கொண்டு வளர்க்கும் ஜெப நிலையில்…

1.வளர்ந்தோரின் தொடருடன் செலுத்தி
2.மேல் நோக்கிய எண்ணமுடன்
3.அவர்களிடமிருந்து உயர்வு ஞானத்தை நம் ஆத்மாவில் பதித்துக் கொள்ள வேண்டும்.

சாமியையும் குருவையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை

ஞானிகளைப் பற்றிய உபதேசங்களைக் கேட்பதால் கிடைக்கும் பலன்கள்

உங்கள் உணர்வுகள் மாறினாலும் அதை அருள் வழியில் திருப்பவே உபதேசிக்கின்றோம்

Natural intelligence

ஐம்புலனை அடக்கும் ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைத்தாலும் “உயர் நிலைக்குச் செல்ல முடியாது” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உதாரணமாக நத்தையை ஒத்த பல பிராணிகள் உருவ நிலைக்குகந்த உணர்வு நிலையிலேயே அதன் உருவத்திலேயே “பாதுகாப்பபு நிலை கொண்டு” (ஓடு) அறிவின் எண்ண நிலை பெறுகின்றது.

எப்படிப் பாலை உஷ்ணப்படுத்திய பின் அதன் ஆவி நிலை வெளிப்பட்டு ஏடு (ஆடை) நிலை அடைகின்றதோ அந்நிலையின் தொடர் போன்று
1.தாய் எடுக்கும் சுவாசத்தில்
2.தாயின் உடல் நிலையின் உதிரத் தொடர்புடன் உருக்கொள்ளும் கர்ப்ப சிசு
3.உதிரத்தின் தொடர்பு உஷ்ண நிலை பெற்று
4.அதனுடைய அமில நிலைக்கொப்ப உராய்வு நிலை கொண்டு உருவ நிலை (மனித உடல்) பெறுகிறது.

அதனின் வளர்ச்சி நிலை முற்றிய தன்மையில் உணரும் நிலையும் எண்ண நிலையும் பெறுகின்றது. “எண்ண நிலை” என்பது அதனுடைய ஆவி (ஆத்ம) நிலையிலேயே அதற்குத்தக்க எண்ண நிலையில் தான் தாய் உடலில் புகுந்து பிறப்பிற்கே வருகின்றது.

பிறப்புத் தொடரில்… ஜீவ சக்தி கொண்ட சரீர நிலை முற்றிய நிலையின் பிறப்பு நிலை கொண்ட பிறகு தான் சரீர மனித நிலை செயல் நிலை யாவும் “பகுத்தறிந்து…” செயல் கொள்கின்றன.

1.இதற்குப் பின் வளரும் நிலைக்கும்…
2.வழி கொள்ளும் வளர்ச்சி நிலைக்கு வழி காட்டும் நிலைக்காகவும் தான்
3.இயற்கை நிலையையும் இயற்கைத் தொடர்பு நிலையையும்
4.அதில் வளர்ச்சி கொண்டு மாற்றப்படும் தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன் (ஈஸ்வரபட்டர்).

ஆனால் தான் வளர்ந்த தொடரிலேயே பகுத்தறியும் அறிவு நிலை கொண்ட மனித ஆத்மாவும் “இயற்கை” என்ற பிடிப்பிலேயே சிக்குண்டு வாழ்ந்து விட்டால் “பிறப்பின் பலன்” இல்லாது போகின்றது.

ஏனென்றால் எண்ணத்தின் தொடர்பைக் கொண்டு உருவாக்கும் ஆதி சக்தியின் அகில சக்தியுடன் தெய்வ சக்தி கொண்டு படைப்பு நிலையைப் படைக்கவல்ல சக்தி கொண்ட பகுத்தறியும் எண்ணத்தால் உயரவல்ல நிலையை அடைய வேண்டும்.

இயற்கை என்ற சுழற்சியிலேயே சுழன்று… தன் சக்தியை உணராமல்… முக்தி நிலை பெறும் மார்க்க நிலைக்குச் சிலரின் உபதேச நிலைகளைக் கேட்டு… ஐம்புலனை அடக்கி ஆழ்நிலையில் உயர்வு நிலை பெறலாம்…! என்ற வழி காட்டும் தொடரில் சென்றால்… சரீர வாழ்க்கை நிலையில் மட்டும் தான் ஆரோக்கிய நிலையும் அமைதியும் கிட்டும்.

உயர்வு நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால்
1.உணர்வின் எண்ணம் பகுத்தறியும் எண்ணத்தால்
2.அறியும் ஞான வழியில் தான் உயர்வு நிலை கொள்ள முடியும்.

குரு வழியில் உலகுக்கே எடுத்துக் காட்டும் அருள் ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்

 

மெய் ஞான உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். நீங்கள் பண்பட வேண்டும்.

Deep meditation

நோயுடனும் துன்பமுடனும் வருபவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய தியானப் பயிற்சி

 

இன்றைய கால கட்டத்தில்… நாம் செய்யும் தியானத்திற்குப் புதிய அன்பர்கள் வந்தால் உதாரணமாக அவர்களுக்கு நோய் என்று சொன்னால் கூட்டுத் தியானங்களில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தியானமிருந்த பின் அவர்களுக்கு உடல் நோயோ குடும்பத்தில் கஷ்டமோ இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
2.குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்பட வேண்டும்
3.அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று
5.கூட்டுத் தியானத்தில் அனைவரையும் சொல்லச் செய்து இந்த வாக்கினைப் பரவச் செய்யுங்கள்.

இது பதிந்து அவர்கள் மீண்டும் அந்த அருள் சக்திகளை எடுக்கத் தொடங்கினால் அவர்கள் சிரமங்களும் நீங்கும். அப்பொழுது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.

நீங்கள் கொடுக்கக்கூடிய அருள் வாக்கு அவர்களுக்கு நல்ல முறையில் விளைந்து மகிழ்ந்த நிலைகள் பெறுவார்கள்.

யாராவது கோபமாகவோ வெறுப்பாகவோ பேசினால் உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர்கள் அறியாமை நீங்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தச் சக்திகளைப் பெறவேண்டும்… அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நிலையும்… நல்ல பண்பும் அன்பும் பெருகக்கூடிய சக்தி பரவும்…! என்று சொல்லிப் பழக்கப்படுத்தச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இதே மாதிரி செய்து வந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்தி நாம் எதை எண்ணுகின்றோமோ ஓம் நமச் சிவாய… ஓம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் அந்தச் சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த அணுக்களும் பெருகிக் கொண்டே இருக்கும்.

ஆனால் குறைகளை அதிக நேரம் கேட்டு குறைகளைக் கேட்க ஆரம்பித்தால் அவர்கள் வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

அப்படிச் சொன்னால்…
1.எங்கள் குடும்பத்தில் இந்தக் குறை இருக்கிறது… அது நீங்க வேண்டும்…! என்று சொல்லி அப்படிக் கேட்கச் சொல்லிப் பழக்குங்கள்.
2.எங்கள் உடலில் இந்த நோய் இருக்கின்றது… அது நீங்கி என் உடல் நலமாக வேண்டும்…! என்று சொல்லச் சொல்லுங்கள்.
3.இருப்பதைச் சொல்லி விட்டு… அது நீங்க வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…! என்ற உணர்வை ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

ஏனென்றால் எது இருக்கிறது என்று தெரிய வேண்டும் அல்லவா…! சரவாங்கி நோய் இருக்கிறது… கை கால் மூட்டுகள் வலிக்கிறது… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் மூட்டு வலி நீங்க வேண்டும். என் உடல் நலமாக வேண்டும்…! என்று எண்ணி இதை ஒரு பழக்கமாக்க வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் இந்த மாதிரிச் சிக்கல் இருக்கின்றது மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து சிக்கல் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் எங்கள் தொழில் வளம் பெறவேண்டும் என்று சொல்லிக் கேட்க வைக்க வேண்டும்.

 

1.இப்படி நல்ல எண்ணங்களை உருவாக்கி
2.அவ்வாறு எண்ணிய நல்ல சக்திகளை அவர்கள் பெற்று உடல் நலம் பெறச் செய்யவேண்டும்.

அன்னை தந்தையருக்குச் செலுத்த வேண்டிய காணிக்கை 

அம்மா என்ற மந்திரச் சொல்லின் மகிமை

உன் தாய் எடுத்த உணர்வால் தான் நான் உன்னை (ஞானகுரு) அணுக முடிந்தது என்றார் குருநாதர்

rameswaram ramalingam

“மனதைக் குவித்தான்…” என்பதை மணலைக் குவித்தான் என்று திரிபு செய்து விட்டார்கள்

 

இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் வேதனையும் வெறுப்பையும் அதிகமாக வெளிப்படுத்துகின்றான். அதே சமயத்தில் தொழிற்சாலைகளிலும் மற்ற இடங்களிலிருந்தும் விஷப் புகைகளையும் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் காற்று மண்டலத்திலே ஊட்டுகின்றனர்.

1.இவை அனைத்தும் மேகங்களில் கலந்து
2.விஷத் தன்மையான மழை நீராகப் பெய்து கொண்டுள்ளது.

ஆக… மனிதன் விட்ட வேதனை உணர்வுகள் மேகங்களில் கலந்து மழையாகப் பெய்த பின் அந்த நீருடன் கலந்த விஷமான உணர்வுகள் பயிரினங்களில் படப்படும் பொழுது
1.மழைக் காலங்களில் எல்லாம் விஷம் கொண்ட பூச்சிகளாகவும் புழுக்களாகவும் எண்ணிலடங்காத அளவில் உருவாகி
2.நாம் பயிரிட்ட செடி கொடிகளைக் கொன்று தின்னும் நிலைகள் வளர்கின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் தியானத்தின் மூலம் அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து “நம் மூச்சலைகள் மூலம்” அதை மேகங்களிலே கலக்கச் செய்ய வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகள் கலந்த மேகங்கள் மழை நீராகப் பொழிந்து பூமியில் படரப்படும் பொழுது
1.அது நல்ல அணுக்களாக உருவாகின்றது
2.அதன் மலங்கள் தாவரங்களில் சேர்க்கப்படும் பொழுது அருள் சக்தியாக வளர இது உதவும்.

ஏனென்றால் நீங்கள் விடும் மூச்சலைகள் வீணாகாது. மழை மேகங்களில் கலந்து மழை நீருடன் கலக்கப்படும் பொழுது அதிலிருந்து இந்த நாட்டில் வரும் தீமையின் உணர்வை மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக வரும்.

ஆகவே நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். பேரானந்தம் பெறுவோம்… பேரின்பத்தைப் பெறுவோம்… அனைவரையும் பேரானந்தம் பெறச் செய்வோம்…!

1.நமக்குள் இங்கே நம் மனதை ஒன்றாக்குவோம்.
2.பேரன்பைப் பெருக்குவோம் என்ற இந்த உணர்வுடன் இதை நாம் செயல்படுத்துவோம்.

இதை அன்றே வான்மீகி காட்டியுள்ளார்..! அவர் நமக்குக் காட்டிய இராமாயணம் என்பது சாதாரண காவியம் அல்ல. இராமன் மனதைக் குவித்து இராமலிங்கமாக்கிப் பூஜித்தான் என்று அவர் காட்டியதை
1.மனதை… என்று சொன்னதை “மணலை..” என்று மாற்றிவிட்டார்கள்.
2.அன்றைய வாழ்க்கையின் எழுத்து வடிவுகள் வேறு
3.அதன் பின் வந்தோர் தவறின் பாதையில் நம்மை அழைத்துச் சென்று விட்டார்கள்.

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் அதைத் தெளிவாக்கினார். ஆகவே மனதை ஒன்றாக்கினால் பேரன்பு அங்கே பெருகும்.

நம் வாழ்க்கையில்..
1.எல்லோரது நிலையும் மனதை ஒன்றாக்கப்படும் பொழுது பேரின்பப் பெருவாழ்வாக
2.என்றுமே பிறவி இல்லாத நிலையாக நாம் அடைய முடிகின்றது.

உலகில் இனி வரும் தீமைகளிலிருந்து விடுபட இதைத் தவிர வேறு வழி இல்லை..!

உலகைக் காக்கும் சக்தி எது..? 

உயிரில் படும் உணர்வின் இயக்கங்களும் உயிரின் துணையால் தீமைகளை மாற்றும் வழிகளும் 

பல கோடி தீமைகளிலிருந்து விடுபட்ட தீமையை நீக்கிடும் அந்தச் சக்தி எனக்கு வேண்டும் ஈஸ்வரா 

தீமைகளைப் பிரித்து உயிரை இரசமணியாக மாற்றுங்கள் 

Diabetes

நோயுற்றவர்களுக்குத் தியானத்தின் மூலம் கொடுக்க வேண்டிய மருந்து

உதாரணமாக குடும்பத்தில் ஒருவருக்குச் சர்க்கரை வியாதி (அல்லது வேறு எந்த வியாதிகாக இருந்தாலும்) இருக்கிறது என்றால் அதைக் கூட்டுத் தியானத்தின் மூலம் போக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்துமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… என்று “முதலில்…” நாம் நமக்குள் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் சர்க்கரைச் சத்து உள்ளவர் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அவர் உடல் நலம் பெறவேண்டும்… என்று
1.எல்லோரும் சேர்ந்து தியானித்து
2.அந்த அருள் உணர்வுகளை அவர் பால் பாய்ச்சுதல் வேண்டும்.
3.கூடுமான வரையிலும் அந்த நோயிலிருந்து விடுபட முடியும்.

இது ஒரு பழக்கமாக வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் இதைப் போல் சொல்லி “அங்கே நோய் நீங்க வேண்டும்” என்ற வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.

அவர்களும் அந்த அளவுக்கு வளர்ந்து வந்துவிட்டால் நாம் ஒருவருக்கொருவர் நம் பார்வையில் பல தீமைகளைப் போக்க முடியும்.

1.ஒரு இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஐந்து பேர் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை அமைத்து
2.நோய்கள் அகல வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெறவேண்டும்
3.குடும்பங்களில் எல்லோரும் நலம் பெறும் சக்தியாக வாழ்ந்திட வேண்டும் என்று தொடர்ந்து செய்யுங்கள்.

ஒரு பிரசாதத்தையோ அல்லது வெறும் தண்ணீரையோ வைத்துத் தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அவர்களுக்குக் கொடுங்கள்.
1அப்படிக் .கொடுத்தீர்கள் என்றால் அந்த தண்ணீரே மருந்தாக மாறும்.
2.நோய் உள்ளவர்கள் குடித்தால் பச்சிலையோ மூலிகையோ கலந்த மாதிரி கசப்பாக இருக்கும்… அதுவே மருந்தாக மாறும்.
3.அதைச் சாப்பிட்டாலே உடல் நலம் பெறுவார்கள்.

இத்தகைய நிலைகளை நாம் உருவாக்கிப் பழக வேண்டும்.

எப்படித்தான் இந்த உடல் நலமாக இருந்தாலும் கடைசியில் முதுமை அடையும் பொழுது இந்த உடலை விட்டுப் போய்த்தான் ஆகவேண்டும். அப்பொழுது உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் நாம் அடுத்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

ஆகவே… எந்த நிலையிலும்
1.நோயைப் போக்குவதற்கும்
2.இந்த அருள் ஞானத்தை நமக்குள் கூட்டிக் கொண்டே இருப்பதற்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் வலுவை நமக்குள் பெற்றிருந்தால்
4.உடலை விட்டு ஆன்மா எப்பொழுது சென்றாலும் நம் நிலை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்துவிடும்.

அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்து உயிருடன் ஒன்றிய நிலையாக

1.இப்பொழுது நாம் எடுக்கும் அந்த ஒளியான உணர்வே நிலைத்து நின்று
2.ஏகாந்த நிலை என்ற நிலையை அடைச் செய்யும்…!

இது… மனிதனான பின் நாம் உருப்பெற வேண்டிய நிலைகள்/ ஆகவே இதை நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

தமிழ் நாடு உலகுக்கே எடுத்துக்காட்டாக வரும்

நாம் எல்லாம் ஞானிகளாக உருவானால் உலகிலேயே ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக நம் தமிழ் நாடு அந்த உயர்ந்த நிலைகளாகப் பெறும். இந்த உலகைக் காக்கும் அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வை நாம் மீண்டும் வளர்த்து உலக மக்களுக்குத் தெளிவான நிலைகளை ஊட்டும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

heat-is-god

மாறி மாறி ஏற்படும் “வெப்பத்தினாலும்… குளிர்ச்சியினாலும் தான்…” சிருஷ்டியே நடக்கின்றது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அண்ட கோளத்தில் அமில சுழற்சியில் சுழன்று கொண்டே மிதந்து கொண்டுள்ள அமில நிலைகள் அவை அவை சுழற்சி ஓட்டத்தில் சந்திக்கின்ற சீதோஷ்ண நிலையின் தொடர்பு நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகளை ஏற்படுத்தி சீதோஷ்ண நிலை மோதலின் தொடரைக் கொண்டு அதனுடைய குணத் தன்மையில் வலுத்தன்மை பெறுகின்றது.

உதாரணமாக நாம் பால்… காபி… கஞ்சி… போன்ற வஸ்துக்களைச் சமைத்து வைத்துள்ள நிலையில் அதைக் காய்ச்சி வைத்துள்ள பாத்திரத்தில் அதைக் காய்ச்சி அப்படியே வைத்தவுடன்
1.அதிலுள்ள ஆவி நிலை வெளிப்பட்டு மேல் நிலையில் “ஆடையாக” திடம் கொண்டு படிந்து விடுகின்றது.
2.உஷ்ணம் உள்ள வரை பாலில் ஆடை கட்டுவதில்லை
3.குளிர்ந்த நிலையிலும் அதே தன்மையில் அது உள்ளது.

ஆனால் உஷ்ணப்படுத்தி ஆறிய நிலையில் அதன் குறிப்பிட்ட கால நிலைக்குப் பிறகு அதன் நிலையில் புளிப்பு நிலை கொண்டு மாற்று நிலை ஏற்பட்டு அதை எடுக்காமல் அப்ப்டியே வைத்து விட்டால் என்ன நடக்கின்றது…?

அதில் இரண்டு மூன்று நாட்களில் பூமியின் உஷ்ண நிலைக்கொப்ப புழுக்கள் வளர்கின்றன. அந்தப் புழுக்கள் வளரும் நிலையில் அதையும் அப்படியே விட்டு விட்டால் மேலும் என்ன நடக்கின்றது…?

அதுவே பாலில் அதிகமாக வளர்ந்த புழு ஒன்றை ஒன்று உட்கொண்டு… அதற்குகந்த ஆகாரம் வேண்டி நிலையில் ஒன்றுக்கொன்று உட்கொண்ட நிலையில் பெரும் புழுக்களாகின்றது.

1.பின் ஆகாரம் கிடைக்காத நிலையில் அதனுடைய ஜீவ நிலை பிரிந்து
2.நீர் சக்தி வெளியாகி படிம நிலைக்கு அந்தப் புழு உட்படுகின்றது.
3.இதற்குப் பிறகும் அத்தொடரில் பல நிலைகள் மாறு கொள்கின்றன.

இத்தொடரைப் போன்றே அண்டத்தின் அமிலத் தொடரும் உஷ்ண நிலைக்கொப்பவும் குளிர் நிலைக்கொப்பவும் அமில நிலைச் சேர்க்கைக்குச் சமைப்பு நிலையில் “பல பல உருக்கள்…” உருப்பெறுகின்றன.

சூரியன் சமைத்த ஆறு வகைக் குணத்தின் வண்ண நிலை பூமி சமைக்கும் ஏழாம் வண்ணமாகி மோதலுடன் தொடர்பெடுத்து பூமியின் ஈர்ப்பு நிலைக்கு பூமித் தொடர்பு கொண்ட பூமி சுழற்சியுடன் சுழலுகின்ற அமிலச் சமைப்பில் தொடர் வளர்ச்சியின் தன்மையைத்தான் “இயற்கை” என்றுணர்த்துகிறோம்.

 

1.இதிலே மாற்ற நிலைகள் பலவாக உருப்பெற்று மாறி மாறித் தொடர்கின்ற நிலையினில்
2.ஜீவ சக்தி கொண்டு உயிரணுத் தன்மை உருவான நிலையில்
3.உணர்வுத் தன்மை வளர்கின்ற இயற்கைத் தாவர நிலை மாறி
4.சரீர நிலை உணர்வு கொள்ளும் பொழுது அறிவு நிலை கொண்ட எண்ண நிலையும் உருவாகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உடலான காட்டிற்குள் செலுத்தி அதைத் தபோவனமாக மாற்றுங்கள்…!

தினசரி நாம் செய்ய வேண்டிய ஈஸ்வர தியானம்

நன்மைகளைச் செய்யச் சக்தியும் துணிவும் கொடுக்கின்றோம்… செயல்படுத்திப் பாருங்கள்

full meals

நாம் உட்கொள்ளும் உணவுகளில் கலக்கப்படும் விஷத் தன்மைகளை அகற்றச் செய்ய வேண்டிய பயிற்சி

 

இன்று நாம் உணவாக உட்கொள்ளும் உணவு வகைகளிலும் சரி… பயிர் செய்யும் பயிர்களிலும் சரி…
1.பல விதமான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தூவப்படும் பொழுது
2.அது செடிகளில் பட்டு அதில் வரும் வித்துகளிலும் கலந்து வருகின்றது.
3.கலந்து வரும் நிலையில் அதைத்தான் உணவாக உட்கொள்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் பொழுது அதுவும் நமக்குள் அணுவாக மாறுகின்றது. எந்த வித்திலே விஷம் கலந்ததோ அந்த விஷத்தையே நாமும் கலந்து நுகர நேருகின்றது.

அப்படி நுகரும் பொழுது விஷ அணுக்களின் தன்மை ஊடுருவி நம் உடலில் “கை கால் குடைச்சல்” போன்ற நோய்களை உருவாக்குகின்றது.

பூச்சிகளைக் கொல்லும் விஷம் கலந்த உணவுகளாக இருந்தாலும்
1.உணவு உட்கொள்ளும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
3.அது இந்த உணவு முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
4.சாப்பிட உட்கார்ந்தவுடனேயே இந்த மாதிரி எண்ணும் ஒரு பழக்கம் வர வேண்டும்.
5.எனக்குள் உடல் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும் என்ற உணர்வுடனே உணவை உட்கொண்டு பழகுங்கள்.

அந்த அருள் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை அகற்றிவிடுகின்றது.

இப்படிச் செய்யவில்லை என்றால் இந்த விஷத் தன்மை உடலில் அதிகமாகச் சேரச் சேர
1.உடலில் புதுவிதமான பல விதமான வருவதும்
2.சில நேரங்களில் சிந்தித்து நாம் பதில் சொல்லும் நிலைகள்
3.அதைச் சீராக சொல்ல முடியாத நிலையாக அதனுடைய நிலைகள் நம்மை மறைத்து விடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.

ஏனென்றால்…
1.காற்றில் இருக்கும் அதே விஷமான உணர்வுகள்
2.எதனுடன் கலந்து எதை நம்முடன் சேர்க்கின்றதோ
3.அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.

அவசியம் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறோம்.

ஈஸ்வரபட்டரின் அருளையும் துருவ நட்சத்திரத்தின் அருளையும் எளிதில் பெறச் செய்யும் தியானம்

“சரியான குரு யார்…?” என்று உங்களுக்குக் காட்டுகின்றோம். அவரின் காட்சியும் உங்களுக்கு நிழற்படமாகத் தெரியலாம். உங்கள் உடலில் அது புது உணர்வாகப் படரும்… மகிழ்ச்சியான உணர்வையும் ஊட்டும். உலகையே காக்கும் ஞானிகளாக உங்களை இந்தத் தியானம் உருவாக்கும்.

Two way thinking

நம் நினைவுகளுக்குள் ஏற்படும் “இரு நிலைப் போராட்டம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பிறப்பெடுத்த நாளிலிருந்து நாம் இறக்கும் காலம் வரை… “நினைவின் ஓட்ட நிலை” சுழன்று கொண்டே தான் உள்ளது.

எண்ணத்தின் சரீர உணர்வின் நினைவு நிலை இச்சரீர வாழ்க்கையில் மட்டும் தானா…? ஆவி நிலையில் கர்ப்பக் காலத்தில் இதன் ஓட்ட நிலை யாது…? என்ற நிலையை உணரல் வேண்டும்.

ஆத்ம பிம்பத்தில் இந்நினைவலைகளின் சுழற்சி ஓட்ட எண்ண உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஓடக்கூடிய நிலைக்கொப்ப எண்ணத்தின் நினைவின் ஆணைக்கொப்ப சரீரச் செயல் சொல்லாகவும் செயலாகவும் நடைபெறுகின்றது.

எண்ணத்தின் ஓட்ட இயக்க நிலைக்கொப்பச் சரீரச் செயல் நடக்கவும்… உண்ணவும்… எழுதவும்… சரீரத்தால் இயங்கத்தக்க அவய நிலைகள் எண்ணத்தின் உணர்வு உந்தியவுடன்… தன் தன் செயலைப் புரிகின்றது.

எண்ணத்தின் நினைவோட்டத்தை
1.செய்த நிலை… செய்யப் போகும் நிலை… செய்யும் நிலை என்ற தொடரில் எண்ணத்தைச் செலுத்தும் நிலையிலும்
2.சரீர அங்கத்தின் செயல் நிலை செயல் கொள்ளா எண்ண நிலையிலும்
3.எதில் எதிலெல்லாம் எண்ணத்தின் உணர்வுகள் உருள்கின்றதோ அத்தொடரில் எல்லாம்
4.ஜீவ சக்தியுடன் கூடிய உஷ்ண அலை கொண்ட இச்சரீர ஓட்ட இயக்கத் தன்மையிலேயே
5.சுவாசத்தின் மோதலில் – நடக்கப் போகும் நினைவின் எண்ண உணர்வு செலுத்தக் கூடிய தருணத்திலும்
6.சுவாச அலையின் துடிப்பு நிலை அணு வளர்ப்பைக் கொண்டு
7.நினைவலையின் எண்ண உணர்வை இச்சரீர பிம்ப வாழ்க்கையில்
8.ஆத்மா தன் பதிவு நிலைக்குப் பதித்துக் கொள்கின்றது.

ஆனால் நடை முறையில் அவரவர்கள் உடல் அமைப்பு நிலைக்கொப்ப நினைவின் எண்ண ஓட்டம் சுழன்று கொண்டேயுள்ள நிலையில் “ஒரே சமயத்தில்” இரண்டு நிலையான போராட்ட நிலையும் இச்சரீரத்திற்கு உண்டு.

நினைவின் எண்ணத்தால் ஆத்மாவில் பதியப் பெற்ற எண்ண நிலையும்… எண்ணத்தின் உணர்வை ஆத்மா சமைக்கும் தருண நிலை மோதலில் “பதிவு பெற்ற நிலை… பதிவாக்கும் நிலை…!” இந்த இரண்டு நிலையில் ஒன்றை நாம் முடிவெடுக்க எண்ணத்தைச் செலுத்தும் தருணத்தில் போராட்டமாகின்றது.

எச்செயலுக்காக எண்ணத்தைச் செலுத்திச் செயல் கொள்ள விழைகின்றோமோ அதே செயலைச் செய்விக்க வேண்டிய நிலைக்காக
1.ஆத்மாவின் பதிவு நிலையில் ஏற்கனவே பதியப் பெற்ற நிலையில் எண்ணங்கள் மோதும் பொழுது
உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலையான ஓட்ட நிலையில் மோதும் எண்ணச் செயலை
3.இச்சரீர பிம்ப வாழ்க்கையில் காண்கின்றோம்.

அதில் சில போராட்ட நிலைகளும் எண்ணத்தில் ஏற்பட்டு அதன் வழியிலும் சில முடிவுகள் ஏடுக்கின்றோம்.

சரீர அங்கத்தில்… ஆத்மாவின் செயல் இயக்கும் பிறப்பு இறப்பு கால ஓட்டத்தில்… எண்ணத்தின் நினைவோட்ட நிலை “இரண்டு நிலையில்” செயல் கொள்ளும்.
1.இத்தகைய இரண்டு நிலையே
2.மனிதனின் அறிவு… பகுத்தறியக் கூடிய உயர் ஞானத்திற்கு வித்தாக அமைந்துள்ளது.

மிருகங்களின் செயலில் இத்தகைய இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்ட அறிவின் பகுத்தறியும் தன்மை நிலை குறைவாக உள்ளது. மேலும் சரீர அங்கத்தின் செயல் தன்மையும் மனிதனை ஒத்த சொல்லாற்றல் நிலையும் குறைவு.

ஆகையினால்… சரீர உணர்வின் நிலைக்கொப்ப ஆத்மாவின் பதிவு நிலை செயலை “எண்ண உணர்வின் மோதாத சரீர எண்ண நிலைக்கொப்ப… ஒரு நிலையில் தான்” மிருகத்தின் செயல் உள்ளது.

ஆனால் மனித ஞானத்தில் உயர்ந்த சக்தி நிலையாக ஆத்மாவின் பதிவு நிலை செயல் ஞானம் அமைந்துள்ளது.

உடலுடன் உள்ள சரீர ஜீவ சக்தியின் செயலினால் மனித ஆத்மாவின் உயர்வு நிலையே “உள் மனம்… வெளி மனம்…” என்ற நினைவின் எண்ண உணர்வு செயல் கொள்ளும் செயலினால்…
1.அறிவின் பகுத்தறிவு நிலை கொண்டு
2.ஞானத்தின் வளர்ச்சியை எந்நிலைக்கும் வளர்த்துக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆத்மாக்கள்… சரீரத்தில் உள்ள பொழுது பதித்துக் கொண்ட அதனின் நினைவோட்டங்கள் ஆத்மாவுடன் பதிவாகி… ஆவி நிலையில் சுழன்று ஓடினாலும் எவ் எண்ண அலையாக இந்த ஆத்மா பதித்துக் கொண்டதோ அதே எண்ண நிலைக்கொப்பத்தான் சுழல முடியும்.

அவ்வாறு சுழலும் நிலையில் தான் பெற்ற சுவை குண எண்ண நிலைக்கொப்பச் சரீரங்கள் கிடைக்கும் பொழுது அவ் ஈர்ப்பில் இவை சிக்கி ஆவி நிலையில் உள்ள ஆத்மா சரீர ஈர்ப்பில் உட்புகுந்து விடுகின்றது.

 

அதாவது…
1.ஜீவ சக்தி கொண்ட அலை கிடைத்தவுடன்
2.தன் ஆத்மாவின் வலுவை வளர்க்க நீர் சத்தின் உஷ்ண நிலை கிட்டியவுடன்
3.அதனுடைய வளர்ப்பு நிலை வளர்ச்சி கொண்டு பிறப்பு நிலைக்கு வருகின்றது.

பூமியின் நடு மையத்தில் ஏற்படும் விஷத்தின் தன்மைகள்

புதையல் ஆசை – குஜராத் பூகம்பம் 2001

நியூட்ரான் குண்டு – ஊரையே நாசமாக்கும் நிலைகள்

soul-cleaning-dhiyanam

பிறருடைய கஷ்டத்தைக் கேட்டால் “ஆத்ம சுத்தி செய்வதை மறந்து” விட்டுவிடுகின்றோம்

 

நமக்கு வேண்டிய ஒருவர் “கஷ்டம்” என்று நம்மிடம் வந்து சொல்லியிருப்பார். அந்த உணர்வை நாம் கேட்டுக் கொண்டேயிருந்தோம் என்றால் என்ன நடக்கின்றது…?

அவருக்குள் எந்த வகையான அணுக்கள் உருப்பெற்றுக் கஷ்டம் என்ற நிலை வந்ததோ அவரை எண்ணும் பொழுது நமக்கும் அதே கஷ்டமான உணர்வைத் தூண்டுகின்றது.

என் குடும்பத்தில் பல தொல்லைகள் வருகின்றது… எனக்கு வியாபாரம் மந்தமாக இருந்தது… அதிலே குறைபாடுகள் வந்தது… என் உடலிலே நோயாக மாறி விட்டது என்று அவர் சொல்லச் சொல்ல
1.நாம் அதைக் கேட்டால்
2.அதே உணர்வின் அணுக்கள் விளளைந்து விட்டால்
3.நம்மை அறியாமலே “கஷ்டமாக இருக்கின்றது: என்று சொல்ல வந்துவிடும்.
4.நம் வியாபாரத்திலும் அவருக்குண்டான நிலை நமக்கும் மாறிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணுங்கள். விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.அது எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
3.குறைந்தது ஒரு ஐந்து நிமிடமாவது எண்ண வேண்டும்.

இப்படி வலுப்படுத்திக் கொண்ட பின் கஷ்டம் என்று நம்மிடம் சொன்னவரைப் பார்த்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவீர்கள்
2.இனி உங்களுக்குக் “கஷ்டம் இல்லை…!” என்று சொல்லிப் பழகுங்கள்.

ஆகவே நம் வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் அடுத்த கணம் இந்த முறைப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கஷ்டப்படுபவர்கள் சொல்லும் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் இரத்தநாளங்களில் கலக்கின்றது. ஆனால் அதிக நேரம் கேட்டுக் கொண்டிருந்தோம் என்றால் இது அதிகமாக நமக்குள் சேர்ந்துவிடும்.

ஒரு ஐந்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அதை இரத்தங்களில் அதிகமாகக் கலக்கச் செய்தல் வேண்டும்.
1.அப்பொழுது இதனுடைய வலு அதைக் குறைக்கும்.
2.இதைத் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கி அவனை வீழ்த்தினான்…! என்று சொல்வது.

ஆகவே ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மையை நாம் அதிகமாகச் சேர்த்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.நமக்குள் படும் உணர்வுகள் – அவர்கள் பட்ட வேதனையோ அவர்கள் பட்ட கஷ்டங்களோ
2.நமக்குள் வளராது தடுக்கும்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் பழக வேண்டும்.

அருள் ஞானிகளைப் பற்றிய உபதேசம் சொல்கிறோம். கேட்டுக் கொண்டே இருப்போம். இருந்தாலும் மற்றவர்கள் சொல்லும் கஷ்டத்தைக் கேட்க ஆரம்பித்ததும் இதை விடுத்து விட்டு
1.அவர்களுடன் ஒன்றியே… நாமும் பேச ஆரம்பித்துவிடுவோம்.
2.அவர்கள் உணர்வுகள் இங்கே பட்ட பின் ஆத்ம சுத்தி செய்வதையே மறந்து விடுவோம்
3,இப்படியும் அடிக்கடி ஆகின்றது.

ஆகையினால் ஒவ்வொரு நொடிக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும். எல்லா நேரத்திலும் நம் நினைவோடு இதை எடுத்து வலுப் பெறச் செய்ய வேண்டும் (முக்கியமானது).

தவமிருக்கும் தபோவனம் – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தியான மண்டபத்தை அமைத்திருக்கிறோம். அங்கே அமர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்களை உலகம் முழுவதற்கும் படரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

 

உலகத்தையே அழித்துக் கொண்டு இருக்கும் விஷத் தன்மை ஒரு பக்கம் படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அது அழித்துக் கொண்டு இருந்தாலும் அந்த விஷத் தன்மையிலிருந்து எல்லோரையும் மீட்ட வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகள் கற்பித்த நிலைகள் நான்கு திசைகளிலும் பரவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உலக மக்கள் அனைவரும் பெறும் தகுதியாக இப்போது அதுவும் வளர்ச்சியாகிக் கொண்டே வருகிறது.

 

தியானத்தை நாம் மட்டும் செய்யவில்லை…! உலகில் எல்லாப் பாகங்களிலும் இதைப் போன்ற தியானத்தின் உண்மைகளை உணர்ந்து “உலகைக் காக்கும் சக்தியாகத் திசை திரும்புகிறது…!” அந்த மாமகரிஷிகள் ஒவ்வொரு பாகங்களிலேயுமே இதைப்போல அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

 

நமது மனதை வலு பெறச் செய்யும் சக்தியாக நமது எல்லையில் நம்மை அணுகி உள்ளவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் செயல்படுத்தியது.

 

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்  தபோவனத்திற்குள் வந்தாலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று நீங்கள் இடும் மூச்சுகள் அனைத்தும் உலக நன்மை பயக்கும் அருள் சக்தியாகவும் மற்றவர்களின் தீமையை அகற்றி அவர்களுக்குள் நல் உணர்வின் சக்தி விளையும் தன்மையாகவும் அதைச் செயல்படுத்தும் நிலையாகத் தான் இங்கே அமைத்திருக்கின்றோம்.

 

இந்தத் தபோவனத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டாலே மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஆத்மசுத்தி செய்து விட்டு அடுத்து உங்களுக்கு எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ அதை எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு அந்தச் சக்தி கிடைத்து நல்லதே நடக்கும்.

sharpness of thought

நம் எண்ணத்தின் கூர்மையைப் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் செவியில் படும் ஒலி நாதத்தின் ஈர்ப்பிற்கொப்ப… எண்ண உணர்வு சமைக்கப்படும் அணு வளர்ச்சி கொண்டு தான் “உடல் வாழ்க்கை” நடக்கின்றது.

உடலின் இயக்கத்தால் எடுக்கக்கூடிய நம் எண்ண நிலையின் செயல் உணர்வு நிலைக்கொப்ப அணு வளர்ப்பின் முலாமைத் தான் (ஆத்மாவில்) நாம் பெறுகின்றோம்.

அதனால் வாழ்க்கையுடன் ஒன்றிய ஈர்ப்பு வட்டத்தில் ஒலி கொண்டு ஒலி பெறும் இச் சரீர இயக்கத்தை
1.உயர் நாத விந்து வளர்ப்பு நிலை பெறத்தக்க
2.ஒலி நிலை கொண்ட ஒளி பெறும் (மகரிஷிகளின் அருள் சக்தி)
3.காந்த மின் அலைத்தொடர் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

உயர் ஞான சக்திகளின் வளர்ப்பாக உடலில் ஒளியான அணுக்களை உருவாக்கி… அதன் மூலம் உடலின் எலும்புகளின் ஊன்களை உறுதியாக்கும் தன்மை பெற்றால் நம் ஆத்மாவே ஒளி நிலை கொண்ட “ஜோதி நிலை” அடைகின்றது.

1.எதனின் ஈர்ப்புப் பிடியிலும் சிக்காத இந்த ஆத்மாவின் ஒளிப் படர்வின் செயலினால்
2.ஒளி பெற்ற ஆத்ம சரீர அலையிலிருந்து வெளிப்படும் ஒலி அலைகள்
3.ஒளி கொண்டு திக்கெட்டும் பாயும் உயர் ஞான ஒலிகளாக…!

ஒலி பாய்ச்சி ஒளி கொண்டு எத்தொடரில் உயர் ஞான சக்தியினால் எடுக்கப்பட்ட சொல் நாதம் ஒலிக்கின்றதோ அச்சொல்லின் செயல் “வாக்காகச் செயல் கொள்ளும்…”

“சொல் வாக்குப் பெற்ற சக்தி நிலை” என்பது விழி கொண்டு பாய்ச்சப்படும் ஒளியின் கூர்மை கொண்டு… ஒளி வழித் தொடர் அலையின் உயர்வு நிலை… “ஒளி பட்ட இடத்திலேயே செயலாக்கம் ஆகும்…”

அதாவது… எரியும் பொருள்களில் சிறு நெருப்புப் பொறி பட்டவுடன் சிறு நெருப்புப் பொறியானது பெரும் நெருப்பாகச் சகலத்தையும் பஸ்பமாக்குகின்றது.

அதைப் போன்று இவ்வொளியைப் பாய்ச்சி உயரக்கூடிய வழி நிலைக்கும்
1.ஒலி கொண்டு ஒளி பெற்ற “விழி ஒளியின் கூர்மை கொண்டு”
2.எந்த அலைத் தொடரையும் மாற்றவல்ல “ஒளி நிலை பெறலாம்” இந்த ஒளி நிலை ஞானத்தால்.

 

சரீரத்தின் எண்ண உணர்வைச் செலுத்தப்படும் செயல் கொண்டு
1.செயலின் வழி ஞானம் மிகவும் கூர் பாய்ச்சிய தன்மையில்
2.வாழ்க்கை வழி முறையில் அதை மிகவும் சாந்தத் தன்மையில் செயல்படுத்த வேண்டும்.

இன்று மக்கள் துரித கதியில் இயங்குவதற்கும் வன்முறை உலகம் முழுவதும் பரவுவதற்கும் காரணம் என்ன…?

நாம் உடுத்தும் துணிகளுக்குப் போட்ட சாயங்களில் மறைந்துள்ள விஷத் தன்மைகள் 

மனிதனுக்குள் அழிக்கும் எண்ணம் வளர்வதற்குக் காரணம் 

Husband and wife divine powers

கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ நோய் இருந்தால் அதை நீக்க “விடாப்பிடியாகத் தியானிக்க வேண்டிய முறை”

 

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு நிமிடத்திலேயும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… அவர் உடல் முழுவதும் படர வேண்டும்… அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்… என்று ஏங்கி விட்டு அவர் உடலில் எந்த நோய் இருக்கின்றதோ அது நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் உடலில படர்ந்து…
1.”சர்வ நோய்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெறவேண்டும்” என்று
2.மனைவி கணவனுக்கு எண்ணுவதும் கணவன் மனைவிக்கு இந்த மாதிரி எண்ணி
3.அந்த அருள் சக்திகளை ஒருவருக்கொருவர் கூட்டிப் பழக வேண்டும்.

“எத்தகைய நோய்” இருந்தாலும் உங்களால் போக்க முடியும்.

கணவனைப் பார்த்து ஒரு பத்து நிமிடம் தியானித்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவர் பெற வேண்டும்… அவர் உடலில் சர்க்கரைச் சத்தை நீக்க்கக்கூடிய அருள் சக்தி கிடைக்க வேண்டும்… அந்தச் சர்க்கரைச் சத்து நீங்கி அவர் உடல் நலம் பெறவேண்டும்…! என்று எண்ணுதல் வேண்டும்.

இதைப் போல் எத்தகைய நோய் இருந்தாலும்…
1.அது நீங்க வேண்டும் என்ற ஒரே….. நினைவுடன்…
2.கணவர் புருவ மத்தியைக் கண்களால் பார்த்து அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

அதே போல் மனைவிக்கு நோய் இருந்தால்
1.கணவன் ஒரே….. நினைவுடன்… மனைவி புருவ மத்தியைக் கண்களால் பார்த்து
2.அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

இந்த உணர்வுகளை அவர்கள் நுகர நுகர இந்தத் தீமைகளை நிச்சயம் வெல்லலாம். இதற்கு முன் நமக்குள் அறியாது சேர்ந்த நோய்களை மாற்ற இப்படித் தினமும் செய்தல் வேண்டும்.

 

காலையில் இதைப் போல் துருவ தியானம் இருந்த பின் மனைவி கணவருக்கு நல்ல நிலைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் உடலில் அறியாது வந்த நோய் நீங்க வேண்டும் என்றும் அதே போல் மனைவிக்கு அதே மாதிரி அந்த நோய் நீங்க வேண்டும் என்றும் உடல் நலம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று “வலிமையாக” எண்ணுதல் வேண்டும்.

நோய் என்று யார் சொன்னாலும் கேட்ட அடுத்த கணமே “ஈஸ்வரா…” என்றுப் புருவ மத்தியில் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள்.

நோய் என்று வரப்படும் பொழுது அவர் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்வதனால் அதற்கு “வாலி” என்று காரணப் பெயர் வைக்கின்றனர். வாலி என்றால் வலிமை மிக்க சக்தி.

1.வாலி எவரைப் பார்த்தாலும்…
2.அவர் வலுவைச் சரி பகுதி பெற்றுக் கொள்வான்…! என்று
3.”எண்ணங்களைப் பற்றித்” தெளிவாக இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

வாலி என்ற நிலை வரும் பொழுது அவனை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். சுக்ரீவனின் துணை கொண்டு அவனை வென்றான். சுக்ரீவன் என்றால் துருவ நட்சத்திரம்.

மகிழ்ச்சி என்ற உணர்வை உருவாக்கி மகிழச் செய்யும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.எங்கள் இரத்தநாளங்களில் அந்தச் சக்தி படர வேண்டும் என்று அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் வரும் சர்வ தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபடுங்கள்.

சீதா கடைசியில் மண்ணுக்குள் போகிறது – நம் உடலும் கடைசியில் மண்ணுக்குள் தான் போகிறது…!


சீதா என்ற நிலை இராமனிடம் பட்ட துன்பங்களும் அது எண்ணாதபடி அதன் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது எத்தனையோ இன்னல்களை இராவணனிடத்தில் பட்டது.

 

சீதா பட்ட இன்னல்கள் இன்னது என்று சொல்ல முடியாது.

 

அத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு உயிரின் உணர்வின் தன்மையை உண்மையை நிலைப்படுத்திய அந்த உணர்வுகள் இந்த உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா சொர்க்கத்தை அடைந்தது.

 

இந்த உடல் என்ற சீதா பூமிக்குள் மண்ணைப் பிளந்து மீண்டும் மண்ணுடன் மண்ணாக மற்றவைகளுக்கு உணவாக மக்கியே விட்டது.

 

இதை இராமாயாணத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

 

மனித உடலின் கடைசி முடிவையும்… உயிராத்மா அடைய வேண்டிய எல்லையையும்… இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார். உடல் அழியக்கூடியது. உடல் நமக்குச் சொந்தமல்ல. உயிர் என்றும் அழிவதில்லை. உயிர் தான் நமக்குச் சொந்தமானது.

 

விண்ணிலிருந்து வந்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சத்துகளை எடுத்து பல உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகின்றது.

 

மனிதனான பின்பு அனைத்தையும் அறியும் அறிவாக ஒளியின் உணர்வாக வளர்ந்து நான் “விண் செல்ல வேண்டும்”

 

இராமன் என்பது நம் எண்ணங்கள். சீதா என்பது சுவை (உடல்). சுவைக்கொப்ப நமக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றது. சீதாராமன் தான். இராமாசீதா அல்ல.

 

இராவணன் என்பது நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட ஒலிகள் (நாதங்கள்).

 

லவ குச என்பது நஞ்சை வென்று உயிருடன் ஒன்றி ஒளியான “விண்ணுலக ஆற்றல்”

 

வான்மீகி மகரிஷி தான் கண்டறிந்த பேருண்மைகளை சீதாவின் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஓதினார் என்று காவியப் படைப்பு உண்டு.

 

அதாவது மனித உடல் பெற்ற நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று நுகர்ந்தால் “லவ குசா…!” ஒளியான அணுக்களாக நமக்குள் உருப்பெறும்.

 

லவ குசா வளர்ந்த பின் இராம காவியைத்தைப் பாடுகின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்…?

 

நாம் எடுக்கும் மெய் உணர்வுகள் உடலுக்குள் (சீதாவிற்குள்) விளைந்தபின் நம்மைப் பற்றியும் நமக்குள் இயங்கும் அனைத்தையும் அறிந்து அது வெளிப்படுத்திக் காட்டும்.

 

தன்னைத் தான் அறியும் நிலையாக நாம் நம்மை அறிய முடியும்.

 

மனித உடலுக்குப் பின் ஒளியின் சரீரம் பெற்று அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்பதை வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார்.

 

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

Intellectual thinking - sages

கழுதை கத்தும் விகார ஒலியைப் பற்றியும்… சகுணத்தைப் பற்றியும்… ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கழுதையின் சரீரச் செயலே பல சுமைகளைச் சுமக்கவல்ல ஜட உணர்வு கொண்ட அமைப்பில் உள்ளது. கழுதை அதன் கூட்டமைப்பு உருவம் பெற்ற ஜெனிப்புத் தன்மைக்கொப்ப அதனுடைய ஒலித் தன்மை “விகார நிலையில் ஒலிக்கின்றது…!”

இதனை நம் முன்னோர்கள் ஒலியின் விகாரத்தை மனித உணர்வு பெற்றால் என்ன நடக்கும் என்று உணர்த்தினார்கள்.

ஒரு விகாரமான ஒலித் தன்மையை செவி நிலை பெற்று அதன் மூலம் அமையும் சுவாசத்தின் அணு வளர்ப்பு வளர்க்கும் நிலைக்கொப்ப எண்ணத்தின் உணர்வு செயல்படுவதை அன்றே நம் முன்னோர்கள் காட்டினார்கள்.

அதாவது மனித வாழ்க்கைக்கு… பூமி சுழற்சியில் பிறப்பெடுத்த ஜீவ ஜெந்துக்களின் தொடர்புடன் வாழ்க்கை நிலை ஒன்றியதனை
1.ஒலியின் நாதத்தால் மனித உணர்வு ஞானம் வழித் தொடர் அமையவல்ல நிலையை
2.நன்மை தீமை என்ற சகுணங்களை அடிப்படைக் குணமாகக் காட்டி
3.கழுதை கத்தும் ஒலியையே நன்மை என்ற சகுண நிலையைக் காட்டி
4.நல்லது நடக்க கழுதையின் கத்தல் உகந்தது…! என்று உணர்த்தினார்கள்.

மனித வாழ்க்கை அமைப்பில் மோதுண்டு சுழலுகின்ற ஜீவ ஜெந்துக்களின் தொடர்பில் இருந்தெல்லாம் மனித ஒலி ஒளி சமைப்பு நிலைக்கொப்பத் தான் மனிதனின் எண்ண உணர்வு செயல்முறை எண்ண வளர்ச்சி ஆகியன வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் தான் இதை இப்படி வழிப்படுத்தினர்.

இன்றல்ல நேற்றல்ல்ல்…! பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
1.ஒளியின் ஒலி நாதம் கொண்டு
2.உயருகின்ற உயர்வு நிலைக்காக வழியமைத்துக் காட்டினார்கள்.

ஒலி கொண்டு சேமிக்கப்பட்ட அமில உணர்வு எண்ண நிலைக்கொப்ப அதனதன் அணு வளர்ந்து… அந்த அணுவிற்குகந்த அமில முலாமின் கரைசலை ஜீவ சரீரங்கள் பெற்று… வளருகின்ற வளர்ச்சி நிலை ஒவ்வொன்றின் தொடரும் “ஒலி கொண்டு ஒளிரும் நிலை பெற்றது தான்…!”

அந்தந்தச் சரீரக்கூறின் அமிலச் சேர்க்கைக்கு ஒப்பத்தான் ஒலித் தன்மை ஒலிக்கின்றது.

கழுதை கத்தும் தருணத்தில்… அதனுடைய உணர்வின் சந்தோஷ மிகுதி உந்தும் வேளையில் அதன் கத்தும் ஒலியானது ஜீவ உணர்வுடன் தான் வெளிப்படுகிறது. அதை நாம் கேட்கும் பொழுது
1.அதனுடைய (சந்தோஷ) இனிமை உணர்வுக்கொப்ப இனிமை பெற்று
2.இனிய நற்காரியங்கள் நடைபெறுவதை உணர்த்தியது
3.நம் முன்னோர் காலத்திலிருந்தே வழி வழியாக வந்தது தான்.

ஒலிக்கும் ஒலியைக் கொண்டு…
1.அவ்வொலியை நாம் ஈர்க்கும் நிலைக்கொப்ப…
2.நம் எண்ணத்தின் உணர்வு எடுக்கும் அலைத் தொடரைக் கொண்டு
3.மனித வாழ்க்கையில் செயல் கொள்ளகூடிய செயல் முறை உந்தல் நடைபெறுகின்றது என்று தெளிவாக்கினார்கள் முன்னோர்கள்…!

தண்ணீ போடும் கணவர்களை (பெண்கள்) மாற்றிடும் உபாயங்கள்

கணவன் மனைவி – குடும்பத்தில் மகிழ்ச்சி

அகஸ்தியனும் அவர் மனைவியும் போன்று கணவனும் மனைவியும் மகிழ்ந்து வாழுங்கள் – தியானம்

MEDITATION - CONCENTRATION

என்னால் தியானமே செய்ய முடியவில்லை… என்பார்கள்…!

 

சில நேரங்களில் நம்மை அறியாமலே சிந்தனை இல்லாமலே வேறு சிந்தனைகள் வரும். நாம் தியானிக்கும் பொழுது இந்த மாதிரி வரும்.

ஏனென்றால் சிலருடன் நாம் அதிகமாகப் பழகியிருப்போம். அவர்கள் கஷ்டமாக இருந்திருப்பார்கள்.
1.அதை நாம் நுகர்ந்து விட்டால்
2.அந்த அணுக்கள் நம் உடலில் விளைந்து விட்டால்
3.தியானிக்கும் நேரத்தில் நம்மை அறியாமலே அவர்களைப் பற்றிய எண்னங்கள் வரும்.

பலருடைய உணர்வுகள் எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் கவர்ந்த பின் அந்த அலையை எடுத்து நம் ஆன்மாவாக ஆன பின் நமக்குள் இது தான் முன்னணியில் வருகின்றது.

நாம் தியானிக்கும் நிலையே மாறி விடுகின்றது. சாதாரணமாகப் பேசிக் கொண்டே இருந்தாலும் திசை மாறிப் போய்விடும்.

அதே போல் நாம் வியாபாரம் செய்யும் பொழுது ஒருவன் ஏமாற்றியிருந்தால் கொடுக்கல் வாங்கலில் அவருடைய உணர்வுகள் திரும்பத் திரும்ப வரும்… நமக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்திருப்போம்.

அப்படிப் பதிவு செய்திருந்தால் ஏமாற்றம் அடைந்த நிலைகள் நமக்குள் இருக்கப்படும் பொழுது அந்த உணர்வுக்கெல்லாம் “வலு ஜாஸ்தி…!”
1.அப்பொழுது தியானத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.அந்த விஷம் கொண்ட உணர்வுகள் (உடலில் உள்ள அணுக்கள்) அது உணவுக்காக
3.தன் அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது நம் ஆன்மாவாக அதிகமாகச் சேர்க்கின்றது.
4.அதைச் சுவாசித்தோம் என்றால்… நாம் தியானிப்பது துருவ மகரிஷி என்று…!
5.ஆனாலும் அந்த ஏமாற்றப்பட்ட உணர்வுகள் தான் நமக்குள் வருகின்றது.

இந்த மாதிரி நினைவுகள் வந்தாலும் நாம் கண்களை மூடித் தியானிக்கின்றோம். உடனே கண்களைத் திறந்து நம் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்திட வேண்டும்.

“கண்களைத் திறந்து” துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று திரும்பத் திரும்ப எண்ணி அப்படியே கண்களை மூட வேண்டும்.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் ஏமாற்றியவர்களின் உணர்வை நமக்குள் இழுப்பது குறையும்.

ஆகவே… ஒவ்வொரு சமயத்திலும் நாம் தியானிக்கும் பொழுது இத்தகைய நிலை வந்தால் இதைப் போல் நாம் சமாளித்துப் பழக வேண்டும்.

நமக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளுக்கு… தியானத்தில் குறுக்கே வரும் – நாம் நுகரும் அந்த உணர்வுகள் இரத்தநாளங்களிலே கலக்கப்படும் பொழுது இது அதிகரித்து விடுகின்றது.

அப்படி நம் உடலில் உள்ள அந்த வெறுப்பான உணர்வுகளைச் சுவாசிக்கும் அணுக்களுக்கு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் இரத்தநாளங்களில் கலக்கப்படும் பொழுது
2.உணவு கிடைக்காது வெறுப்படையும் உணர்வுகளைத் தடைப்படுத்தும்.

அதாவது நம் ஆன்மாவில் வெறுப்படையும் உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது நம் நல்ல குணங்களுக்கும் மற்றதுக்கும் நம்மை அது தடைப்படுத்துவது போல்
1.நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.கண்களைத் திறந்து சிறிது நேரம் உடலுக்குள் செலுத்தினோம் என்றால்
3.இரத்தங்களில் கலந்த பின் அந்த அணுக்களுக்கு இதை வலுவான நிலைகள் கொண்டு போனால்
4.அந்தத் தீமை செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்திவிடும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை இரத்தநாளங்களில் கலக்கப்படும் பொழுது அதனுடைய உணர்வுக்குக் கிடைக்கவில்லை என்கிற பொழுது அது ஒடுங்கும்.

இப்படி அதை ஒடுக்கி ஒடுக்கி நாம் பழக வேண்டும். இப்படிப் பழகினோம் என்றால் அந்தத் தீமை விளைவிக்கும் அணுக்கள் அனைத்தும் மாறுகின்றது.

ஆனால் இவ்வாறு செய்யத் தவறினால் நமக்குள் நோய்களை உருவாக்கும் தன்மையாக உருவாகின்றது. இதை எல்லாம் நாம் மாற்றி அமைக்கத் தியானிக்க வேண்டும்.

ஆகவே எப்பொழுதுமே தியானத்தில் அமர்ந்ததும் நம் எண்ணங்கள் சிதறுகிறது என்றால் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

அந்த அருள் ஒளி படர வேண்டும். எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள தீமைகள் அனைத்தும் செயலிழக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.
1.உங்கள் தியானம் சீராகும்..
2.அருள் சக்திகளை நமக்குள் வலுவாகச் சேர்க்க முடியும்.

ஏமாற்றுபவன் தான் இன்று நன்மை பெறுகின்றான்


நாடு நலம் பெறவேண்டும் என்றால் நாம் எல்லாம் ஞானிகளாக வேண்டும். நல்ல உணர்வுகளைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும். நல்லவர்களை உருவாக்கிப் பழகுதல் வேண்டும். நல்ல நிர்வாகத்தை உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

 

நல்லது என்றால் மற்றவர்களைக் குறை கூறுவதல்ல…!

Omm

ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக நாம் வளர்க்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சப்த கோடிகளே….
சகல நாத விந்துக்களே…
மணமாகி ஒளியாகி நீராகி நிகழுகின்ற உருக்கோல ஜீவ திட சக்தி தொடர் நிலைகளே…
“கல்கி நிலை உருவாக உருத்தாருங்கள்…!”

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலிக்கின்ற “ஓ…ம்” என்ற இப்பூமியின் நாத சுழற்சியில்… ஓ…ம்ம்ம்ம்… என்ற நாதத்தில் தான் நம் பூமி ஜெனித்து ஓடிக் கொண்டுள்ளது.

பூமியின் நாதத்தில் வளர்கின்ற பல கோடி நாதத் தொடர்பால் ஒலி கொண்டு ஒளி பெற்ற இச்சரீர (நம் உடல்) கோள நாதமாக
1.ஓமுக்குள் ஒமாக… நாதத்திலிருந்து நாதமாக
2.நம் நாத ஒலி சுழற்சியில் ஓம் என்ற கோளமாக
3.பிறிதொரு கோளத்தை உருவாக்கும் நாத விந்து வளர்ச்சியை நாம் பெற வேண்டும். (அது தான் மண்டலப் படைப்பு)

அதைப் பெற்றோமானால் ஓ…ம் என்ற நாதத்துடன் உருளுகின்ற உலகைப் போல் இம்மனித சரீர பிம்பத்தில் ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி சுவாச நாதம் வளர்க்கும் விந்துவின் இந்திரிய வலுவைக் கொண்டு உடலை இயக்கும் ஆத்மாவின் ஈர்ப்பு வட்டத்தில் ஜோதி நிலை (ஓளி நிலை) அடையலாம்.

சூரியன் தன் ஒளியின் நாத சுழற்சியைக் கொண்டு சூரிய வட்டத்தில் உள்ள பல கோள்களுக்கும் “ஒளி தந்து…” ஒலி பெற்று… தன் சுழற்சியின் கூட்டமைப்பின் சக்தியுடன் ஒன்றித் தானும் வளர்கின்றது.

அதே போல் நம் பூமியும் ஓ…ம் என்ற நாதத்துடன் “ஒளி பெற்று” ஒளியாக்கிச் சுழலும் தொடர்பைப் போன்று தான் மனித சரீரம் பல கோடி ஒலித் தொடர்புடன் ஒளி பெற்றுள்ளது.

அவ்வாறு உருவான இந்த ஆத்மாவிற்கு வலு கூட்டிக் கொள்ள சூரியனின் நிலையை ஒத்த குண சமைப்பைப் போன்று சரீர உணர்வின் எண்ண சமைப்பு பிறிதொரு ஆத்மாவின் மேல் “ஒளி பாய்ச்சி” ஒலி பெற்று வலுக் கூட்ட வேண்டும்.

“ஒளி பாய்ச்சி” என்பது என்ன…?

இந்தப் பூமியின் சுழற்சியில் திடம் பெற்ற பல கோடிச் சரீரங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை. ஒருந்தாலும்… ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சக்தி நிலை “உயர்வு” கொண்டு இயங்குகிறது.

அவ்வாறு இயங்கக்கூடிய ஒலி… ஒளி… ஞானம்… செயல் திறன்… பொருந்திய சரீர உணர்வு கொண்ட எண்ண உணர்வுடன் தான் நாம் மனிதர்கள் செயல் கொள்கிறோம்.

சரீரத் தொடர்புடன் நம்முடைய உணர்வின் எண்ணம் செலுத்தும் வழிதனில்…
1.ஒருவரை நாம் பார்க்கும்… ஒளி பாய்ச்சும் நிலையிலேயே…
2.விழி படமெடுத்து…
3.நாசி சுவாசம் எடுத்து
4.ஒளியின் ஒலியாக நாத விந்துக்கள் உடலின் இந்திரிய அணு வளர்ப்பாக வளர்ந்து விடுகிறது.

 

இப்படி… “ஒளி பாய்ச்சி” ஒலி பெறும் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சரீர சமைப்பு சுழற்சி சுழன்று கொண்டேயுள்ள இத்தொடரில்
1.நம்முடைய உணர்வின் எண்ணத்தைப் பிறிதொரு ஈர்ப்பில் சிக்காமல்
2.நம் ஆன்ம வளர்ப்பு நிலையின் வலுத்தன்மை கொண்டு
3.ஞான குண ஒளி பாய்ச்சும் தன்மையினால்
4.எந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு பிறிதொருவரின் மேல் நாம் ஒளி பாய்ச்சுகின்றோமோ
5.அதன் தொடர் காந்த மின் அலை ஒளி ஈர்ப்புடன்
6.இச்சரீர ஈர்ப்பிற்கு சுவாச ஒலி எடுத்து வித்துக்கள் வளர்ந்து
7.”ஆத்மாவின் வலு” ஒலி “ஒளியாகப் பதிவு கொள்கின்றது…”

உங்கள் கருவிழிகளில் யாம் பதிவாக்கும் தீமையை நீக்கும் ஆற்றல் 

உங்கள் கஷ்டத்தை மாற்ற நீங்கள் எண்ணினால் தான் மாறும் 

ஒரே எண்ணத்தில் நாம் இருக்க முடியுமா – ஆன்மாவில் பதிவானதன் இயக்கங்கள் 

காணாமல் போகும் பொருளைக் கண்டுபிடிக்கும் வழி 

Tension stress - relief

“பதட்டமான உணர்வுகளை” உயிரிலே (புருவ மத்தியில்) மோத விடக்கூடாது

 

நம்முடைய வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் விலை உயர்ந்த பொருளைத் தவற விட்டால் ஐயோ… “போய்விட்டதே… போய்விட்டதே…! என்று பதட்டம் அடைகின்றோம்.

அடுத்தாற் போல் நாம் ஒரு கூடையையோ பையோ கையில் எடுத்துக் கொண்டு செல்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஏற்பட்ட பதட்டத்தினால்… தூக்கிக் கொண்டு வந்த பையை எங்கேயாவது வைத்து விட்டு என்ன செய்வோம்…?

பையைக் கையில் எடுத்துக் கொண்டு தான் வருகின்றோம்…! என்ற நினைப்பில் நாம் பாட்டுக்கு வந்து கொண்டிருப்போம்.

பின்னாடி… ஐய்யய்யோ…! நான் பையை எங்கேயோ வைத்து விட்டேன்…! என்று அந்தப் பதட்டத்தில் இருக்கின்ற பொருளையும் விட்டு விட்டு “காணோம்… காணோம்…!” என்று சொல்லத் தொடங்குவோம்.

ஆனால் கடைசியில் பை கையில் தான் இருக்கும்.

ஆகவே இது எது செய்கின்றது..? நாம் நுகர்ந்த அந்தப் பதட்டமான உணர்வுகள் அதர்வண…! நம் நல்ல சிந்தனையை இழக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.உங்களுக்குள் வலிமையாக வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
3.ஏனென்றால் உங்களுக்கு எல்லாச் சக்தியும் கொடுக்கின்றோம். நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்… இனி வரும் காலம் விஷத் தன்மை வாய்ந்ததாக வரும் பொழுது உங்களை மீட்டிக் கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறேன். பதிவு செய்கின்றேன்… அருள் உணர்வுகளை எல்லாம் காற்றிலே பரவச் செய்கின்றேன்…!

நீங்களும் அந்த அருள் உணர்வை எடுத்து
எங்கள் தீமைகள் அகன்றது…
எங்கள் துன்பங்கள் அகன்றது…
எங்கள் பகைமை அகன்றது…
நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்…! என்ற நிலைக்கு வளர்ந்து வருதல் வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் போல்” பிறரின் தீமைகளை நீக்குபவர்களாக மாற வேண்டும். நல்ல சிந்தனை உள்ளவர்களாக மாற்றி அமைக்கும் சக்தி “நமக்கு உண்டு…!” என்ற நிலையில் வளர்ந்து வர வேண்டும்.

1.சோகத்திற்கும்… சலிப்பிற்கும்… சங்கடத்திற்கும்… வெறுப்பிற்கும்… வேதனைக்கும்…
2.நாம் இந்த உணர்வுகளை நம் உயிரிலே மோத விடக்கூடாது.

மனிதனை உருவாக்கிய நல்ல சிந்தனை கொண்ட உணர்வுகளில் விஷங்கள் படர்ந்து விட்டால் நம் உடலிலே உள்ள நல்ல குணங்களை அது மாற்றி விடுகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு… அவர் அருள் துணை கொண்டு… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதை எல்லாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

உங்களால் முடியும் உங்களை நீங்கள் நம்புங்கள்..!

திருடு போன பொருளை மீட்கும் வழி

 

பணத்தையோ பொருளையோ எடுத்துச் சென்றவன் “போலீஸிடம்” சிக்க வேண்டும்… நம் பொருள் கிடைக்க வேண்டும்…! என்று எண்ணித் தியானித்துப் பாருங்கள். உங்கள் பொருள் நிச்சயம் திரும்பக் கிடைக்கும். உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்…!

destination-of-spirituality

எந்தக் குறிக்கோளுடன் தியானம் செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய மனித வாழ்க்கையில் பக்தி வழியில் நந்நெறியில் வாழ வேண்டும் என்று எண்ணி நடந்தாலும் நம் வாழ்க்கை நாம் எண்ணியபடி அமைவதில்லை.
1.அதற்கு ஊழ்வினை காரணம் என்று சொல்லப்படுகின்றது.
2,அதாவது விதி வழித்தான் எல்லாமே நடக்கும் என நம்புகின்றோம்.

துன்பங்களிலிருந்து மீள தெய்வ வழிபாடு முதலியன செய்கின்றோம். இருந்தாலும் முழுப் பயன் எவருக்கும் கிட்டுவதில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களும் மகரிஷிகளும் மனிதன் மெய் ஞானம் கொண்டு “விதியை மதியால் வெல்லலாம்” என்று சொல்லியுள்ளார்கள்.

“அந்த வழியில் மனித இனம் இது வரையிலும் கவனம் செலுத்தவில்லை…!” ஆனால்…
1.இன்றைய நிலை முழுக்க முழுக்க விஞ்ஞானத்தைப் போற்றும் நிலைக்கும்
2.விக்ஞான வாழ்க்கைக்கு நம்மை அடிமையாக்கும் நிலைக்கும் வந்துள்ளோம்.

ஏனென்றால் விஞ்ஞான முன்னேற்ற வசதிகள் எல்லாம் இந்த உடல் வாழ்க்கைக்குத் தான் பயன்படும். இன்னும் சொல்லப் போனால் இன்று இந்த விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக “சகல ஜீவராசிகளும் மடிந்து போகும் தருணம்” வந்து விட்டது என்று உலகமே நடுங்கும் நிலைக்கு வந்து விட்டது.

இங்கே பாரத புண்ணிய பூமியில் ஞானிகள் சொன்னதெல்லாம் மறந்து விட்டோம். ஆனால் விஞ்ஞானியால் எதைச் செய்ய முடியுமோ அதை விட அதி அற்புத சக்தி வாய்ந்த எந்தச் செயலியும் மெய் ஞானிகளால் செய்ய முடியும்… அடைய முடியும்.

இப்படி இந்த உலகமே கேள்விக்குறியில் நிற்கும் இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன…?

மாமகரிஷிகள் மனித இனம் உய்ய மெய் வழியைக் காட்டுகின்றார்கள். அதன் வழியில் நடந்திட வேண்டும்.

1.முதலில் தாய் தந்தையரை தெய்வமாக வணங்கி
2.உயிரான ஈஸ்வரனை புருவ மத்தியில் எண்ணி வணங்கி
3.உணர்வுடன் கூடிய தியானத்தில் மகரிஷிகளை எண்ணி
4.அனு தினமும் தியானிப்பதன் மூலம் நம் உடலில் உயர் காந்த மின் நுண் அலைகள் பதிவாகும்
5.அதன் வளர்ச்சியைப் பொருத்து நம் ஊழ்வினையான தீய வினைகளைச் சக்தி இழக்கச் செய்ய முடியும்.

முருக குணங்களான அன்பு… பரிவு… பாசம்… வீரம்… ஞானம்… சாந்தம்.. மூலம் உயரிய சக்திகளைப் பெற்று… அதன் மூலம் நம் உயிராத்மாவிற்கு வலுக் கூட்டி… நாம் எண்ணியபடி வாழ்வை அமைத்துக் கொள்ள “மகரிஷிகள் தியானம்” ஒன்றே வழி.

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தியானிப்பதன் மூலம்
1.நம்மை விட மேம்பட்ட சக்திகளான
2.மாமகரிஷிகளின் நேரடித் தொடர்பு கிடைக்கும்
3.அவர்கள் துணையும் கிடைக்கும்.

ஆனால் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சமம் எந்தக் குறிக்கோளுடன் தியானம் செய்வது என்பது தான். நம் ஆத்மாவுக்கு வலுக்கூட்டிப் பிறவா நிலை என்னும் “தெய்வ சக்தி” நிலையைப் பெறுவது தான் நம் குறிகோள்.

 

அதற்கு நம் எண்ணம் பரிசுத்தமாக வேண்டும். தியானத்தின் மூலம் எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்த முடியும். இத்தகைய முறைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மகரிஷிகளின் துணை எளிதில் கிடைக்கும்.

வெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்

பிள்ளைக்குத் திருமணம் தடையாகிக் கொண்டே போகிறது என்று எண்ணுபவர்களுக்கு..

கேட்க விரும்புவோருக்கு இந்த ஞான வழியினை எடுத்துச் சொல்லி வழி காட்டுங்கள்… விரும்பாதவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை…!

real yaga

இந்த உண்மையான யாகத்தை ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டும்

 

சாமி (ஞானகுரு) கஷ்டத்தை எல்லாம் நீக்குகின்றார் என்று சொன்னால் போதும் சாமி…! என் குடும்பத்தில் இப்படி எல்லாம் கஷ்டம் இருக்கின்றது…! என்று வேகமாக வந்து சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

1.என் பையன் நன்றாக இருக்க வேண்டும்
2,நாங்கள் நல்லபடியாக வாழ வேண்டும்
3.அந்த அருளை எங்களுக்குக் கொடுங்கள்..! என்று கேட்பதற்கு வாயே வர மாட்டேன்…! என்கிறது.

ஏனென்றால் கோவிலில் போய்ச் “சரணாகதி” (அடிபணிந்து) தத்துவத்தைச் சொன்னதனால் அந்த நிலை வருகின்றது.

1.கஷ்டத்தை எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் போ…!
2.மிகவும் மீறி விட்டது என்றால் அவன் பேரில் அர்ச்சனை செய் போ…!
3.அதிலேயும் மீறி அவன் அடங்கவில்லை என்றால் யாகத்தைச் செய் போ…!
4.சண்டாள யோகம் என்று கூட இருக்கின்றது…. அந்த யாகத்தை வளர்த்துக் கொண்டு போ…!
5.இப்படிக் காசைக் கொடுத்துப் போகும் நிலை தான்…! இன்று உள்ளது.

உண்மையான யாகம் எது…? என்பது அறியவில்லை. உண்மையான நெருப்பு எது…? நம் உயிர் தான்.

இன்று யாகக் குண்டத்தில் பலவிதமான பொருள்களைப் போடுகின்றனர். மயக்க நிலையை உருவாக்கும் பொருள் ஒன்றையும் போடுவார்கள்.

அதாவது போடும் பொருளில் அந்த மரக்குச்சிகளிலேயே விஷத் தன்மை வாய்ந்த மயக்கத்தைக் கொடுக்கும் நிலையும்… சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் தன்மையும்… உண்டு.

சோமபானம் என்ற மருந்தும் உண்டு. அதையும் ஊற்றுவார்கள். அதை ஊற்றி வெளி வரும் புகையைச் சுவாசித்தால் மயக்கத்தை ஊட்டும்.

உதாரணமாக ஒருவன் கஞ்சா அடிக்கின்றான் என்று பார்த்தால் நமக்கும் தலையைச் சுற்றும். ஏனென்றால் அவன் அடிக்கின்றான்… நாம் நுகர்கின்றோம்… அதனால் அப்படி ஆகின்றது.

இதே மாதிரித்தான் சோமபானத்தை நெருப்பிலே போடப்படும் பொழுது உற்றுப் பார்த்தால் நம் உணர்வின் தன்மை அதைப் பதிவாக்கி விடுகின்றது.

ஆகவே…
1.உண்மையான நெருப்பில் (உயிரில்)
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வு பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

மற்றவர்கள் தீமைகளையோ… குறைகளையோ… துன்பங்களையோ… எண்ணாது அதிலிருந்து “அவர்கள் விடுபட வேண்டும்…” என்ற உணர்வைச் செலுத்துங்கள். உங்கள் உயிரிலே (புருவ மத்தியிலே) செலுத்துங்கள்.

1.அவர்கள் அனைவரும் தெளிவானவர்களாகவும்
2.இந்த உலகுக்கே நன்மைச் செய்பவர்களாகவும் வர வேண்டும் என்று எண்ணுங்கள்.

ரோட்டிலே போகும் பொழுது இனம் தெரியாதபடி இரண்டு பேர் சண்டை போடுகின்றார்கள் என்று உற்றுப் பார்த்தால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுத் தீமைகள் புகாது முதலிலே தடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அவர்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த நிலை வர வேண்டும் என்று எண்ணுங்கள். உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இப்படிச் செய்தால்…
1.மற்றவர்கள் உணர்வு நம்மை இயக்காது
2.நமக்குள் பக்குவப்படுத்திக் கொள்ள முடியும்.
3.தீமையான உணர்வுகள் வந்தாலும் அதை நமக்கு வேண்டியதாக மாற்றிக் கொள்ளலாம்
4.நம் உயிரான நெருப்பிலே…!

ஏனென்றால் நெருப்பிலே நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். ஆகவே ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் இந்த உண்மையான யாகத்தை நடத்துங்கள்.

1.உங்கள் உயிர் நெருப்பு
2.அதிலே நல்ல உணர்வுகளைச் செலுத்துங்கள்.
3.அந்த உணர்வு உங்கள் எண்ணம் சொல் செயல்களை நல்லதாக மாற்றும்.

இதைப் பெறச் செய்வதற்குத் தான் ஞானிகள் இந்த யாகத்தைக் காட்டினார்கள்.

நான்கு வேதங்களின் இரகசியம்

 

மற்றவருடைய வேதனைகளையும் குறைகளையும் நாம் உற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் உயிரிலே பட்ட பின் நம் நல்ல குணங்களை மறையச செய்கின்றது… அதர்வண…! திரும்பத் திரும்ப எண்ணினால் அது நமக்குள் ஒரு வித்தாகின்றது… யஜூர்.

 

நமக்குள் வித்தாக உருவான பின் அதே கோப உணர்ச்சியோ வேதனை உணர்ச்சிகளையோ தூண்டி நம்மையும் அதே வழியில் பேசச் செய்கின்றது… சாம…!

 

அதே சமயத்தில் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அது நம் இரத்தநாளங்களில் கலந்து தீமைகளை அடக்குகின்றது.. அதர்வண…! அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் நமக்குள் விளைந்தால் யஜூர்…!

 

அதன் பின் நாம் வெளிப்படுத்தும் சொல் செயல் எல்லாம் நல்லாதாகின்றது… சாம…!

Power of God within us

ஒவ்வொருவரும் “தெய்வ சக்திகளாக உருவாக வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சொந்தபந்தம்…
தொழில்…
சுற்றுப்புறம்…
விஞ்ஞானம்…
வியாபாரம்…
மருத்துவம்…
இதிலே ஏதாவது ஒன்றிலே இன்றைய மனித வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

இந்த வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த வாழ்க்கைப் பிடிப்பைத் தான்
1.மனிதனின் முற்றிய நிலை என்று இன்பத்தைக் கொள்ளாமல்
2.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

இதைத் தொடர்ந்து படிப்போர் பதிவாக்கி அதைச் செயலாக்கி வரும் நிலையில் “இதில் உணர்த்தபப்டாத பல உண்மைகளும் உண்டு…!”

நேரடியாக உணர்த்தப்படாத அவைகளைத் தங்களின் ஞானத்தைக் கொண்டு உணர்ந்து உயரக் கூடிய நிலைகளுக்குத் தான் அவ்வாறு விடப்பட்டுள்ளது.

இனி வரப் போகும் கால நிலையில் துர்மார்க்க… அச்சம் கொள்ளும் அலை உணர்வு தான்… காற்றலையில் நச்சுத் தன்மையாக வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.

 

இதிலே மனிதன் தன்னைத் தான் உணர்ந்து
1.தன் ஆத்ம வலுவைக் கூட்டி
2.பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்
3.உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு
4.வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களான சகல சக்திகளையும் சமைக்கவல்ல
5.பேராற்றல் கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

 

ஆகவே… உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உயர்ந்தே செல்லும் வழி முறைக்காக
1.இங்கே வழி காட்டும் உண்மையை ஏற்று
2.ஞான விளக்கப் போதனைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
3.மனித சக்திகளைத் “தெய்வச் சக்தியாக” உருவாக்குங்கள் ஒவ்வொருவருமே.

காந்திஜி சிறு வயதில் செய்த தவறுகளும் தென்னாப்பிரிக்காவில் பெற்ற ஞான உணர்வுகளும் 

கோபமாகத் தாக்குவது கோழை, மன உறுதி கொண்டு அவர் மனதைச் சீர்படுத்துவது மன பலம் 

தீமைகளை வென்ற ஞானிகளிடம் எதைக் கேட்க வேண்டும் 

ancient india

ஞானிகள் வாழ்ந்த நம் நாட்டின் உயர்ந்த பண்புகளை உணர்ந்து அதன் வழி செயல்பட முற்படுங்கள்…!

 

எனது தியானமே அனைவரும் இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்றும் விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழும் அதிலிருந்து மெய் ஞான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று தான்
1.இந்த மனிதனின் கடைசி நிலையாக
2.என்றும் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

இதனின் வழியை நீங்கள் பெற்றால் உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமையை நீக்கும்… இருளை அகற்றி அருள் ஒளியின் சுடராக்கச் செய்யும். அத்தகைய மகிழ்ந்து வாழும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்…! என்று தான் இதை உபதேசிப்பது.

நான் (ஞானகுரு) ஒருவனே செய்து… “நான் பெரியவன்…” நான் அப்படிப்பட்டவன்…!” என்ற நிலையை இல்லாது
1.நாம் அனைவரும் சேர்ந்து அந்த உயர்ந்த நிலையைச் செய்ய முடியும்.
2.குரு அருளைப் பெற்று எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
3.அகண்ட அண்டத்தின் ஆற்றலைப் பெற்று இருளைப் போக்க முடியும்.

இதன் வழியில் நீங்கள் எல்லாம் தயாரானால் கடுமையான வெயில் இருந்தாலும் மேகங்களைக் கூடச் செய்து சிறிது நேரத்தில் இங்கே நிழலாகக் குளிர்ச்சியை ஏற்படுத்தலாம். மழை வேண்டும் என்றால் அதையும் வரவழைக்கலாம்.

ஏனென்றால் அந்தக் காலங்களில் எல்லாம் குடங்களை எடுத்துக் கொண்டு செல்வார்கள். காட்டுக்குள் போனவுடனே “மழை வேண்டும்” என்று வேண்டுவார்கள். திரும்ப வரும் பொழுது மழையை அழைத்து வருவார்கள்.

இந்தப் பழக்கம் எல்லாம் இந்தியாவில் உண்டு.

1.நம்பிக்கை கொண்ட உணர்வுடன் தெய்வீகப் பண்புடன் பற்றுடன் வாழ்ந்த மக்கள்
2.பகைமை என்ற நிலைகள் அகற்றி மனிதன் என்ற பண்புகள் மதித்து
3.அன்றைய ஞானிகள் போல மக்களும் வாழ்ந்தனர்.

யதார்த்த உள்ளத்துடன்… “நாம் வருண பகவானை அழைத்து வருவோம்… இனி நாம் பஞ்சத்தைப் போக்குவோம்…!” என்று மழை நீர் இல்லை… என்றால் இவ்வாறு செய்வார்கள்.

குடத்தில் தண்ணீருடன் சென்று வரும் பொழுது மழையை அழைத்து வருவார்கள். ஊர் எல்லைக்குள் வருவதற்கு முன்னாடி நனைந்து கொண்டே வருவார்கள்.

இத்தகையை பண்பு பெற்ற நாடு நம் நாடு…!

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று எந்நாட்டவரும் அந்த அகஸ்தியன் வழியினைப் பின்பற்றினால் அந்த உணர்வின் தன்மையை இரையாக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையாக உருவாக்க முடியும்.

1.இப்பொழுது நாம் வாழும் இந்த உடல் நமது அல்ல
2.உயிரால் உருவாக்கப்பட்ட உடல் என்ற இந்த நிலையை நாம் தெரிந்து கொண்ட பின்
3.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மனித வாழ்க்கையை வென்றிட்ட அருள் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்
4.இந்த மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றிட்டு நஞ்சை வெல்லும் உணர்வை நமக்குள் வளர்த்து
5.என்றும் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

உயிர் நெருப்பு… அதிலே எதைப் போட்டு யாகம் நடத்த வேண்டும்…?

 

உண்மையான நெருப்பில் அந்த அருள் ஞானிகளின் உணர்வு பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

 

மற்றவர்கள் தீமைகளையோ குறைகளையோ துன்பங்களையோ எண்ணாது அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள். உங்கள் உயிரிலே (புருவ மத்தியிலே) செலுத்துங்கள்.

 

அவர்கள் அனைவரும் தெளிவானவர்களாகவும் இந்த உலகுக்கே நன்மைச் செய்பவர்களாகவும் வர வேண்டும் என்று எண்ணுங்கள். உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்கு வளர்த்துக் கொள்ளுங்கள்.

 

மற்றவர்கள் உணர்வு நம்மை இயக்காது நமக்குள் பக்குவப்படுத்திக் கொள்ள முடியும். ஆக தீமைகள் வந்தாலும் அதை நமக்கு வேண்டியதாக மாற்றிக் கொள்ளலாம் இந்த உயிரான நெருப்பிலே…! 

 

ஆகவே ஒவ்வொருவரும் இந்த உண்மையான யாகத்தை நடத்துங்கள். உயிர் நெருப்பு அதிலே நல்ல உணர்வைச் செலுத்துங்கள்.

third eye answer

நாம் அறிய விரும்பும் உண்மைகளைத் தியானத்தின் மூலம் எப்படித் தெரிந்து கொள்வது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆண் பெண் ஆத்மக் கூட்டு ஐக்கியத் தொடருடன் பிறக்கும்… ஒளியின் உயர்வு வட்ட வளர் தொடர் சக்தியான “ஆதிமூலம்” என்று உணர்த்தும் மூலத்தையே
1.ரிஷி பத்தினி மூலத்தால் உருவாகும் வழியில் செல்லும் வழி முறைகளையும்
2.மனித ஆத்மாவின் உணர்வு எண்ண மோதலைக் கொண்டு தெய்வ குண சக்திகளைப் பெறும் நிலைக்கு
3.மனிதனின் எண்ண ஓட்டச் சமைப்பினால் செல்லும் வளர் முறைகளை இது நாள் வரை வழிப்படுத்தி வந்துள்ளேன்.

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இங்கே காட்டியதைச் செயல் முறைப்படுத்தி வளர்ந்து வரும் தொடரில் தங்களுக்கு ஏற்படும் வினாக்களைத் தெளிவு முறை பெறும் மார்க்கத்திற்கு வழி உண்டு.

அதாவது இதைப் படிக்கும் போது ஏற்படக்கூடிய எண்ண மாற்ற நிலைகளைத் தெளிவு காணும் அறியும் நிலைக்கு… நீங்கள் எதை அறிய விரும்புகின்றீர்களோ
1.அறியும் எண்ணத்துடன் புருவ மத்தியில் நினைவைக் கூர் பாய்ச்சிச் செலுத்துங்கள்..
2.பின் மேல் நோக்கிய சுவாசத் தொடர்பினால் உயர்ந்தோரின் நிலையுடன் எண்ணத்தைச் செலுத்துங்கள்…
3.வளர்ந்த ரிஷிகளுடன் நம் அறியும் எண்ண ஞானத்தைச் செலுத்துங்கள்.

 

அறிந்து கொள்ளும் உயர் ஞான அறிவாற்றலினால் இவ் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
1.உயர் ஞானம் பெற்ற அலை சக்தியின் தொடர் நமக்குக் கிடைத்து
2.நம் உடலின் காந்த நுண் அலை ஈர்ப்பில்
3.நமக்கு அறிய விரும்பிய அனைத்திற்கும் விடைகள் அனைத்தும் கிடைக்கும்.

பேரரசர்கள் சம்பாரித்த சொத்து இன்று இருக்கின்றதா…?

வியாபரத்தில் கூட இருக்கும் நண்பன் மேல் தொழில் இர்கசியம் என்று சந்தேகப்பட்டால் அதன் விளைவுகள்

தொழில் செய்யும் இடங்களில் குறைபாடுகளை நீக்க ஆத்ம சுத்தி செய்யும் முறைகள் 

deleting evils

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் தீமைகளை நீக்குவதே… “நம்முடைய பழக்க வழக்கமாக” இருக்க வேண்டும்

 

குருநாதர் சொர்க்கம் அடைந்த வைகுண்ட ஏகாதசி நாளில் அவர் நினைவின் தன்மை கொண்டு வரும் பொழுது
1.அவர் எப்படி எல்லாம் பேரன்பைப் பெற்றாரோ பேரொளியாக ஆனாரோ
2.அதைப் போல நாமும் ஆக வேண்டும்…! என்று ஆசைப்படுங்கள்.. இச்சா சக்தி…!

“தீமையை நீக்கிய குருவின் உணர்வில்…” இச்சைப்பட்டு அதை நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டு அது கிரியையாகும். அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் செயலாக்குகின்றது.

பின் அந்தக் குருவின் ஞான வழிப்படி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி. அந்த ஞானத்தின் வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

சிறிது காலம் கொஞ்சம் பழகிக் கொண்டால் போதும்…!

உதாணமாக… சில விளையாட்டுகளை விளையாடுகின்றார்கள். கேரம் போர்ட் விளையாட்டில் அதற்கென்று ஒரு காயை வைத்துக் குறி பார்த்துத் தள்ளி மற்ற காய்களைத் தள்ளுகின்றார்கள்.

அது எல்லாம் அனுபவம் தான்…!

பழகாத நாம் அதைத் தட்டினால் எங்கேயோ போகின்றது. ஆனால் பழகியவர்கள் தட்டினால் ஒர் காயை வைத்து மூன்று நான்கு காயைக் கூடத் தள்ளிக் கொண்டு போகின்றது. ஏனென்றால் அவர்களுடைய அனுபவம் இது.

இதைப் போல்.. நம் அனுபவத்திலே எதைக் கொண்டு வர வேண்டும்…?

1.நாம் பல தவறுகள் செய்தாலும் அந்தத் தவறுகளைத் தள்ளி விட்டு
2.மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து நல்ல ஞானத்தைப் பெருக்க வேண்டும்.

நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் சிறிது காலம் அனுபவித்துப் பாருங்கள்.

சாமி செய்ய முடியாததை…
சாமியார் செய்ய முடியாததை..
கடவுள் செய்ய முடியாததை..
“உங்களுக்குள் கடவுளாக நின்று..” தீமைகளை அகற்றும் அருள் சக்தியாக இது விளையும்.

 

ஜோதிடம் செய்யாததை…
ஜாதகம் செய்யாததை… இதை எல்லாம்
இந்த உணர்வு உங்களுக்குள் செய்யும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையில் தீமையை நீக்கும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.

கஷ்டம் என்ற உணர்வை உங்களுக்குள் விடாதீர்கள்…!

தீமையை நீக்கிப் பழகிய குரு உணர்வு மீது நாம் இச்சைப்பட வேண்டும்

 

குருநாதர் பேரொளியாக மாறியது போல் நாமும் ஆக வேண்டும்…! என்று ஆசைப்படுங்கள். தீமையை நீக்கிய குருவின் உணர்வில் இச்சைப்பட்டு அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு அது கிரியையாகும். பின் அந்தக் குருவின் ஞான வழிப்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

arthanreeswarar

அர்த்தநாரீஸ்வரர் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சக்தின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கை திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.

இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் “அர்த்தநாரீஸ்வரர்” என்று காட்டினார்கள்.

ஆண் பாதி… பெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலையுடன் சுழற்சியுடன் இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளை சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று

ஆத்மாவினால் ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞான சித்தால் “ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்.

ஞானச் சித்து கொண்டு “இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளா தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்… தன் வளர்ப்பின் நிலைக்காக…!

பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி “இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத் தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.

உடலுடன் யாரும் சொர்க்கம் அடைய முடியாது 

உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்

எந்த மெய்ஞானியும் இன்று உடலுடன் இல்லை 

practice-make-perfect

இரு நிலையாகவோ… பல நிலையாகவோ… இருந்தாலும் அதை ஒரு நிலைப்படுத்தும் வழி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.

1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணதின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.

மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.

ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை
4.ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.

இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?

அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.

ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாக காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல…!

1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.

மணிக் கணக்கில் உட்கார்ந்து செய்வது தியானம் அல்ல…!

 

நாம் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஜெபம் இருந்து ஆண்டவனை அடைவேன் அந்தச் சக்தியைப் பெறுவேன் என்றால் அது முடியாது.

 

அப்படி மணிக்கணக்கில் ஜெபமிருந்து முடிந்தாலும் முடிந்த பின் வாழ்க்கைக்கு வரும் பொழுது தீமைகள் வரும். அப்படி ஜெபமிருந்து பல நிலைகளைப் பெற்றாலும் அது “முனி” என்ற நிலையாகத்தான் வரும். ஒரே வைராக்கிய நிலைகள் கொண்டு “மற்றதைச் சிந்திக்கவிடாது” செயல்படுத்தும் நிலைகள் தான் வரும்.

 

ஆகவே, அருள் ஞானத்தை வளர்த்து மெய்ப்பொருள் காணும் நிலையை இந்த உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த உபதேசங்களை ஒவ்வொரு நாளூம் திரும்பத் திரும்பப் படியுங்கள். வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தால் ஒரு 10 நிமிடமாவது இதைப் படியுங்கள்.

 

இதுவே ஒரு தியானமாகின்றது. இதைப் படித்து முடித்த பின்பு “எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள். அப்பொழுது இந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மற்றவர்களை நலமாக்க இது உதவும்.

 

அருள் ஒளி பெறுவோம். இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் எகாந்த நிலை என்ற நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.

 

அருள் உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றியே நிலைத்தே வாழ்வோம். அவனுடன் நாம் ஒன்றியே வாழ்வோம். என்றும் எதனையும் அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம். எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.

 

பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம். பகைமையான உணர்வுகள் சேராது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குவோம். நம் பார்வையில் பகைமை உணர்வு ஓடவேண்டும்.., நஞ்சு கொண்டோர் உணர்வுகள் நீங்க வேண்டும்,

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற்றோம் என்றால் நம் பார்வை பிறருடைய நஞ்சை போக்கும். அவருடைய நஞ்சின் தன்மை நமக்குள் வராது காக்கும்.

 

ஏனென்றால் நாம் இந்த மனித உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் ஒரு பிறவிக்கு வரக்கூடாது. இன்னொரு உடல் பெறக்கூடாது.

1000 Pillar

கல்லைக் கடவுளாக்கி விட்டோம்… நம் மனதைக் கல்லாக்கிக் கொண்டே வருகின்றோம்…!

ஆலயங்களில் ஞானிகள் சிலையை உருவாக்கி வைத்துள்ளனர். நாம் அந்தச் சிலையைக் கல்லாகத்தான் மதிக்கின்றோமே தவிர சிலைக்குள் மறைந்துள்ள உண்மையை அறிவதில்லை.

1.நீ இந்தத் தெய்வீகக் குணத்தைப் பின்பற்றினால்
2.உன் குடும்பம் நலமாக இருக்கும்
3.உன் குணங்கள் நன்றாக இருக்கும் என்று ஸ்தல புராணங்களை வடித்து வைத்திருக்கின்றார்கள்.
4.வடித்து வைத்திருந்தாலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியினைப் பின்பற்ற வேண்டும்…! என்றும் சொல்லியுள்ளார்கள்.

ஆனால் அந்தச் சிலை தான் நமக்குச் செய்கின்றது…! என்ற எண்ணத்தில்… அதற்கு அபிஷேகம்… ஆராதனை… செய்து விட்டால் அவன் செய்து தருவான்…! என்று எண்ணுகின்றனர்.

அந்த எண்ணத்தில் தன்னுடைய துயரத்தை எல்லாம் அங்கே கொட்டுகின்றனர்.
1.எனக்கு இந்தப் பாவிப் பயல் மோசம் செய்தான்…
2.என் பையன் சுட்டித்தனம் செய்கின்றான்… அவன் என்றைக்குத்தான் திருந்துவானோ…?
3.கடன் வாங்கிச் சென்றவர்கள் பணத்தைத் தரவே மாட்டேன் என்கிறார்கள்…! என்று
4.மீண்டும் மீண்டும் வேதனயைத் தான் சுவாசிக்கின்றனர்.

இதுகள் எல்லாம் நம்முடைய அறியாமை…! ஆசையின் நிமித்தம் இந்த உணர்வின் தன்மை பெற்று
1.உடல் இச்சைக்குத்தான் மாற்றுகின்றோம்
2.இந்த உடலைக் காக்கும் இச்சை வரவில்லை.
3.தீமைகளை அகற்றத் தெரியாத வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம்.

தீமைகளை எப்படிப் போக்க வேண்டும்…? என்பதற்குத்தான் அந்த அருள் ஞானிகள் ஒவ்வொரு குணங்களுக்கும் சிலைகளை அமைத்துத் “துவைதம்” என்று காட்டினார்கள். (துவைதம் என்றால் கண்ணுக்குத் தெரிவது)

அந்தத் தெய்வத்திற்கு அவன் எழுதிய காவியம் “அத்வைதம்” (அத்வைதம் என்றால் கண்ணுக்குப் புலப்படாதது) அதை உற்றுப் பார்த்து நுகர்ந்து அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டால் “விசிஷ்டாத்வைதம்”

1.இந்தக் கோவிலுக்கு வருகின்றவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
3.அவர்கள் தொழில் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கப்படும் பொழுது
4.நமக்குத் தொழிலில் நஷ்டம் வந்தாலும்… மற்ற கஷ்டம் வந்தாலும்…! “அதை எல்லாம் மறந்து விடுகின்றோம்….”

மலரைப் போன்ற மனம் நாங்கள் பெறவேண்டும் இந்தக் கோவிலுக்கு வருகின்றவர்கள் எல்லாம் மலரைப் போன்ற மனம் பெறவேண்டும் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் மலரைப் போன்ற மனம் பெறவேண்டும் என்று கோவிலுக்கு வரும் ஒவ்வொருவரையுமே எண்ணும்படி வைக்கின்றார்கள்.

ஆனால் இன்று கோவிலுக்கு முன்னாடி என்ன நடக்கின்றது…?

கடையில் மாலையை வாங்கினால் அவன் அதிக விலை சொல்கிறான். மற்ற இடங்களில் இருபது அல்லது முப்பது என்றால் கோவிலில் உள்ள கடையில் ஐம்பது ரூபாய் என்பான்.

ஏன் அதிக விலை சொல்கிறாய்…? என்று கேட்டால் கோவிலில் கடைக்கு வாடகை எக்கச்சக்கமாகக் கேட்கின்றார்கள், வெளியிலே கடை வாடகை 3000, 4000 என்றால் இங்கே பத்தாயிரம் ரூபாய் கேட்கின்றார்கள்.

நாங்கள் இங்கே வாங்கித்தானே கொடுக்க வேண்டும்.. நாங்களும் பிழைக்க வேண்டும் அல்லவா…! என்கிறார்கள்.

கோவிலுக்குச் சென்று யாகத்தைச் செய்தால் பாவத்தைப் போக்கலாம். என்று ஞானிகள் சொன்ன உண்மையின் உணர்வை நுகரும் தன்மையையே இழக்கச் செய்து விட்டார்கள்.

ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகளை மறந்து தான் இன்று இருக்கின்றோம்.

 

ஞானிகள் காட்டிய வழியில் ஆலயத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும். கோவிலுக்கு வரும அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணுவதே “உண்மையான பக்தி…!”

இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் நம்முடைய கடைசி நினைவு எதன் மீது இருக்க வேண்டும்…?

என்ன வாழ்க்கை இது…? என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்

மனித (உடல்) வாழ்க்கையின் பற்றை வளர்ப்பதைக் காட்டிலும் ஞானிகளைப் பற்றுடன் பற்றுவதே நல்லது…! ஏன்…?

Treasure hunt

மனிதனுடைய பரம்பரை வழியில் உடலைக் காப்பதா…? ஞானிகள் வழியில் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதா…? – நடந்த நிகழ்ச்சி

 

சுமார் 12 அல்லது 13 வயது பெண் குழந்தை ஒன்று ஆஸ்த்மா நோயினால் மிகவும் வாடிக் கொண்டிருந்தது. எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்து விபரம் கேட்டார்கள்.

நோயின் கடுமையினால் வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு
1.விஷத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதன் அல்லாத பிறவியாகத்தான் பிறக்கும்..
3.ஆனால் அந்த உடலிலேயே அருள் மகரிஷிகளின் உணர்வை ஏற்றுக் கொண்டால்
4.இந்த உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியிலலா நிலை அடையும்…! என்று தெளிவாக்கினேன்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை அந்தக் குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வுடனே தொடர்ந்து அதைச் செயல்படுத்தினார்கள்.

நுரையீரல் பாகத்தில் அதிகமான விஷ்த் தன்மை சேர்ந்து… நரம்பு இழுத்துப் பிடித்திருப்பதனால் அது அவஸ்தைப்படுகின்றது. அவர்கள் பரம்பரையில் அந்தப் பெண்ணின் அப்பாவிற்கு ஆஸ்த்மா இருந்தது.. தாத்தவிற்கும் உண்டு.

இப்படிப் பரம்பரை வழியாக வந்திருப்பதனால் இந்தப் பின்னம் அதிகமாக இருக்கும். இதிலிருந்து (பரம்பரை) விடுபட்டால் தான் நோயிலிருந்து தப்ப முடியும்.

இருந்தாலும்…
1.இந்த ஆன்மா பெண் குழந்தையாக இருக்கும் பொழுது அடுத்துத் திருமணமாகி
2.அதன் பின் இதன் வாழ்க்கையில் மீண்டும் அதீதமாக வேதனைப்பட்டால்
3.மனிதனல்லாத உருவாக உருவாக்கிவிடும்.

அதற்கு முன்னாடி… எம்மைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அருள் ஒளியைச் சேர்க்கும் பருவமாக வரப்படும் பொழுது
1.இந்த ஆன்மா அருள் ஒளியின் தன்மை கொண்டு
2.மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சை வென்றிடும் உணர்வுகள் இதற்குள் பெறப்பட்டு
3.அதனுடைய வளர்ச்சியில் உடலை விட்டுப் பிரிந்தால்
4.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்… உடல் பெறும் உணர்வுகள் கரையவும்…
5.பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவரின் நிலைகளை அது மாற்றி அமைக்க வேண்டும். ஆனாலும் அந்தப் பெண்ணின் தாய் வேதனையை எடுக்கின்றது.

அதிலிருந்து மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு “இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும்…” என்ற நினைவை அங்கே கூட்டச் சொன்னேன்.

1.அதன் வழி பின்பற்றினால் எளிதிலே அங்கே சப்தரிஷி மண்டலம் போய்ச் சேரும்..
2.உடல் பெறும் உணர்வுகள் கரையும்…! என்றும் விளக்கமாகச் சொன்னேன்.

ஆகவே… மனிதன் இந்த உடலுக்கு இச்சையை அதிகமாகக் கூட்டாது அருள் ஒளி பெறவேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும்…! என்ற உணர்வை வலுவாக எடுத்தால் போதும்.

 

1.குறித்த காரியங்கள் பெறவேண்டும்…! என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியின் உணர்வுகள் வரும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்.
3.அப்பொழுது வழி அறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்.
4.சோர்வென்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.

ஆகவே எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த அரும் பெரும் சொத்தே… நமக்கு மிகப் பெரிய செல்வம் ஆகும்…!

நாம் தேடிச் செல்லும் எந்தச் செல்வங்களும் நம்முடன் வருவதில்லை. அழகான உடலும் நம்முடன் வருவதில்லை. அலங்காரப் பொருள்களும் நம்முடன் வருவதில்லை. ஆடம்பரமாகக் கட்டிய வீடும்… காரும்… நம்முடன் வருவதில்லை.

அருள் ஞானத்தை இந்த உடலில் வளர்த்துக் கொண்டால் உயிருடன் ஒன்றிய ஒள்யின் சரீரமாக நிலை பெறும். ஆகவே எதிலேயும் வேகாத நிலையாகப் பிறவி இல்லா நிலை அடைந்து… “அகண்ட அண்டத்தில் என்றுமே வாழலாம்…!”
1.அகண்ட அண்டத்தில் வாழும் பருவத்தை
2.இந்த உடலிலே சேர்த்தால் தான் அடுத்த நிலை வரும்.

ஏனென்றால் இந்த உடல் எந்த நேரத்திலும் போகத்தான் செய்யும். மிஞ்சிப் போனால்… கூட ஒரு பத்து இருபது வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!

பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது “சீரான உடல் அமைப்பு இல்லை…” என்றால் திருமணம் ஆனாலும் மிகவும் வேதனைப்படும், குழந்தைப் பேறு போன்ற பருவங்கள் வரும் பொழுதெல்லாம் வேதனைப்படும்.

ஆகவே இந்த உடல் தேறாது என்ற நிலை வந்தவுடன் தேறுவது எது…?
1.அருள் உணர்வின் ஒளியே தேறும்.
2.அதுவே என்றும் பிறவியில்லா நிலை
3.இந்தப் பருவத்தில் ஒளியாகி விட்டால் நலமாகும்.

மாறாக… குழந்தை மேல் பாசமாக எண்ணி ஏங்கி விட்டால் அந்தப் பெண்ணின் ஆன்மா தாயின் உடலுக்குள் மீண்டும் வரும். இந்த உடலில் எந்த வேதனையை அது பட்டதோ தாயின் உடலுக்குள்ளும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.

ஆனால் வேதனை உணர்வை அருள் உணர்வுகள் கொண்டு மாற்றப்படும் பொழுது தாய்க்கும் தொல்லை இல்லை. இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாறும் பொழுது எல்லோருக்கும் நன்மை ஏற்படும்

அதனால் தான் அந்த ஆன்மா பிறவியில்லா நிலையை அடையும்படி இதைச் செய்தது.

கடும் விஷத் தன்மையாக மாறிக் கொண்டிருக்கிறது இந்த உலகம்

 

நீர் நிலம் எல்லாம் ஏற்கனவே மாசடைந்த நிலையில் இன்று இந்தக் காற்று மண்டலமும் மிகவும் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது. தப்பும் வழியில்லை.

 

உயிர் இருக்கும்… ஆனால் மனிதனுடைய சிந்தனைகள் அழியும் தருணம் வந்து விட்டது. அருள் உணர்வை எடுத்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறும் பக்குவத்திற்கு வாருங்கள். 

golden plating for soul

ஆத்ம உடலைப் பாதுகாக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நீர்ச் சத்து நிறைந்த பொருளை உஷ்ணப்படுத்தி வேக விடும் தருணத்தில் நீர் சத்து சுண்டி அப்பொருளும் வெந்து விடுகின்றது.

அதையே இன்னும் அதிக உஷ்ணமுடன் வேக விட.. வேக விட… உஷ்ணத்தினால் எரிசக்தியின் காந்தலுக்குகந்த கருகும் நிலை கொண்டு எந்தப் பாத்திரத்தில் வேக விடுகின்றோமோ கருகிய நிலையுடன் அதிலே ஒட்டி உலர்ந்த பக்குவம் பெற்று விடுகின்றது.

அதுவே நீர் சக்தி இல்லாத எண்ணை வித்தை ஓர் வாணலியில் எண்ணை விட்டு அதைக் காய்ச்சும் பொழுது
1.எவ்வளவு நேரம் அந்த எண்ணை காய்ந்தாலும்
2.மெழுகு போல் திடம் கொண்டு… பிசின் போன்ற நிலை பெறுகின்றது.
3.உலர்ந்த தன்மை பெறுவது இல்லை.

இதைப் போன்றுதான் நம் உடலில்… ஜீவ உணர்வு எண்ண பூமி சமைப்பின்…
1.நீர் சக்தியுடன் நாம் எடுக்கும் சுவாச அலையானது…
2.பூமி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றிய சரீர இயக்க வலுத் தன்மையாக
3.இந்தப் பூமி சமைக்கும் நிலைக்கொப்ப ஒன்றிய உடல் வாழ்க்கையாக நிலை அமைகின்றது.

ஆனால் வலுக் கூடிய வளர்ச்சி கொண்ட… இந்தப் பூமியின் வலுப் பெற்ற… பிற மண்டலத்தில் இருந்து அகிலத்தையும் அறியவல்ல ஆற்றல் கொண்ட ரிஷிக் கோடிகளான தேவாதி தேவர்களின் சக்தியை நாம் பெற வேண்டும்.

அத்தகைய வலுக் கொண்டோரிடம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும் சுவாச வலுவால்
1.சரீர இயக்க வலுத்தன்மையும்
2.எலும்புகளின் உறுதி ஊட்டச் சத்தும்
3.உண்ணும் உணவைக் காட்டிலும் சத்தாக
4.எலும்புகளின் வளர்ச்சி முற்றி ஆத்ம வலு நிலை கொள்கின்றது.

நீரின் சத்தை எடுத்துத்தான் வித்தாகின்றன எண்ணைச் சத்து தரும் வித்துக்கள். அதைப் போன்று நம் ஆத்மாவை “சரீர ஜீவ நீர் சத்தைக் கொண்டு”
1.எலும்புகளை எல்லாம் எண்ணை வித்தின் வளர்ப்பு நிலை போன்று வலுவாக்கி
2.அந்த வலுவின் தொடரைக் கொண்டு ஆத்ம இயக்கம் செயல் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நீர் சத்தால் துருப்பிடிக்கும் இரும்பு உலோகத்தை எண்ணைச் சத்தை இட்டு அதைத் துருப்பிடிக்காமல் செய்கின்றோம் அல்லவா…!

அந்த இரும்பைப் பாதுகாக்கும் செயல் தன்மை போன்று நம் ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்.

 

அதாவது…
1.ஜீவ இயக்க எண்ண உணர்வானது இந்தப் பூமி சமைப்பின் உணர்வு எண்ண
2.கர்ம காரிய வாழ்க்கையுடன் சிக்கித் துருப்பிடிக்கும் கரையும் நிலை போன்ற நிலைப்படுத்தாமல்
3.எண்ணை வித்தைப் போன்று
4.சத்து நிலை பூண்ட… சத்து குண வலுக் கொண்டோரின் வலுவைப் பூசி
5.ஆத்ம உடலைப் பாதுகாத்திடல் வேண்டும்.

அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற ஆற்றல் 

புலஸ்தியர் – அகஸ்தியர் உருவான நிலையும் அவனின் ஆற்றலும் 

படிப்பறிவு இல்லாத அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற சக்திகள் 

divine destination

மனித (உடல்) வாழ்க்கையின் பற்றை வளர்ப்பதைக் காட்டிலும் ஞானிகளைப் பற்றுடன் பற்றுவதே நல்லது…! ஏன்…?

 

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பற்றுடன் பற்றப்படும் பொழுது “அருளை…” நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் நடக்கின்றது… நல்ல முறையில் சித்தியாகின்றது…!

ஆனால் வாழ்க்கையில் குடும்பப் பற்றை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றைக் குறைக்கப்படும் பொழுது என்ன ஆகும்…?
1.குடும்பப் பற்று வந்தாலே அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.
2.தன் பிள்ளைகளுக்கு இப்படி ஆக வேண்டும்… அப்படி ஆக வேண்டும்… என்ற உணர்வு வந்துவிட்டாலே போதும்
3.நமக்குள் ஏற்கனவே பதிந்திருந்த பழைய உணர்வுகள் அனைத்தும் முன்னாடி வந்துவிடும்…!
4.அது முன்னாடி வந்துவிட்டாலே “அதைக் காப்பது” என்பதே பெரிய சிரமம்.

ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலேயும் “ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டும்…” என்றால் நாம் மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும்… வாழ்க்கையில் எல்லாம் தெளிவாக வேண்டும்…! என்ற உணர்வுகளைக் கூட்டிக் கொண்டு வந்தால் சரியாக இருக்கும்.

கூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

1.கண்ணைத் திறந்து விண்ணை நோக்கிப் பார்க்க வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று நினைவை விண்ணிலே செலுத்தி
3.ஒரு ஐந்து நிமிடமாவது சுவாசிக்க வேண்டும்.

 

பின்… எது நம் வாழ்க்கையில் குறையாகத் தென்படுகின்றதோ அது நிறைவு பெறவேண்டும்… வாழ்க்கையில் நிறைவு பெறவேண்டும் தொழில் சீராக வேண்டும்… பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகவேண்டும்… சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆனால் குறித்த காலத்தில் நடக்கவில்லை என்கிற பொழுது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது… திருமணம் ஆகவில்லையே…! என்ற ஏக்கம் வருகின்றது… சோர்வடைகின்றோம்.

சீக்கிரம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் “வலுவாக” இருந்தால் இந்தச் சோர்வே வராது.

அப்படி எண்ணவில்லை என்றால் விஷத் தன்மைகள் அதிகமாகி…
1.இந்தப் புவியின் பற்று கூடி… உடலின் பற்று அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.

ஆனால் அருள் ஞானிகளின் பற்றைக் கூட்டினால் தான்
1.வாழ்க்கையில் வரக்கூடிய மற்ற பற்று
2.அது எதுவாக இருந்தாலும் வெல்ல முடியும்…! (முக்கியமானது)

ஆக.. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் எடுக்கும் உணர்வுகள் வேகமாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது அதிலே கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மைகளைக் கூட்டிவிடுகின்றது.

இப்படி… இந்த மனிதனின் “வாழ்க்கையின் எண்ணங்கள்” கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி தான் வருகின்றது.

அதே சமயத்தில் வீட்டில் வயதான தாய் நோயாக இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவர்கள் நலம் பெறவேண்டும் என்று வீட்டில் உள்ள பிள்ளைகள் எண்ணுகின்றோம்.

நம்பிக்கையுடன் மகரிஷிகளின் உணர்வுகளைத் தாய்க்குப் பாய்ச்சப்படும் பொழுது அருள் உணர்வின் தன்மை அங்கே உருவாக்கப்படுகின்றது.

நலம் பெறவேண்டும் என்று பாய்ச்சப்படும் உணர்வுகளால்
1.தாய்க்குள் வேதனை என்ற உணர்வுகள் வளராது
2.அருள் ஒளி பெறுவோம்..! என்ற உணர்வுகள் தாயிற்கு வளரத் தொடர்கின்றது.

அவ்வப்பொழுது தெளிவாகின்றது… தெளிந்த மனமும் தாய்க்கு வருகின்றது. நலம் பெறும் எண்ணத்தில் எல்லோரும் இருக்கும் பொழுது பிள்ளைகள் எண்ணும் உணர்வுகளால்.. ஒளியின் தன்மையைப் பெறும் தகுதியைத் தாய் பெறுகின்றது.

1.அப்பொழுது உடல் பற்று வராது… அருள் பற்று அங்கே வருகின்றது.
2.அந்த அருள் பற்று அங்கே வரப்படும் பொழுதுதான்…
3.தாய் வேதனையற்ற நிலைகள் கொண்டு வேதனை என்ற எண்ணமே எடுக்காது
4.அருள் ஒளி பெற வேண்டுமென்ற அனைவரது கூட்டு ஐக்கிய உணர்வுகளும் கிடைக்கின்றது.

ஏனென்றால் தாயின் உணர்வு தான் பிள்ளைகளாகிய உங்கள் உடல். பின் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்த பின் தாய் சூட்சம நிலை அடைகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியாக எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வின் தன்மை கொண்டு அவர்களை விண் வெளி செலுத்தி உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கும் தன்மை வருகின்றது.
1.அருள் ஒளி கூடுகின்றது…
2.தாயின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளியாகின்றது.

அவர்கள் அங்கே இணைந்த பின்… சப்தரிஷி மண்டலத்தின் ஒளி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் படர வேண்டும்.. எங்கள் குழந்தைகளுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்…! என்ற இந்த உணர்வினைக் கூட்டுதல் வேண்டும்.

அருள் வழியில் வாழ வேண்டிய முறைகள் இது…!

மனதை ஒன்று சேர்த்தால் தன்னாலே மகிழ்ச்சி வரும்.. கல்யாணராமா…!

 

தீமை செய்யும் உணர்வுகளை அகற்றினால் உங்களுக்குள் எண்ணங்கள் ஒன்றாகிச் சந்தோஷம் வரும். எண்ணங்களை எல்லாம் ஒன்று சேர்த்து வாழக்கூடிய வாழ வைக்கக் கூடிய இடம் ஆலயம் என்ற நிலைகளைத்தான் ஞானிகள் காட்டினார்கள். 

divine-spiritual-ray

உள் மனம் வெளி மனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சில நேரங்களில் மனித உணர்வின் எண்ணம் செயல் கொள்ளும் காலங்களிலேயே “உள் மனம்… வெளி மனம்…” என்ற இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்டங்கள் உருவாவதை அறிகின்றோம்.

1.ஆத்ம இயக்கத்தின் சரீர உந்தலில் சரீரம் சமைக்கும் எண்ண உணர்வு
2.ஆத்மாவின் பதிவு – சரீர மோதலின் எண்ண உணர்வு என்ற
3.இந்த இரண்டு வகையான போராட்டக் காலங்களில் தான்
4.மனிதன் சொல்லும் உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலை கொண்ட எண்ணங்களே ஓடுகிறது.

சில ஆத்மாக்களுக்குச் சபல நிலையின் இரண்டு குண மோதலில்… வாழ்க்கை நிலை நடைபெறும் நிலையும் நிகழ்கின்றன.

1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து போன்றது
2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.

நம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் சக்தி வாய்ந்தது. ஆத்ம உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்… அதைக் காக்கும்…!

வெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும்…. அல்லது வலிமை இருக்காது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று அறிந்து கொண்ட நிலையில்.. மேல் நோக்கிய சுவாசமாக எடுக்கும் ஞானியரின் உணர்வுகளை ஆழமாக நமக்குள் பதிவாக்கிடல் வேண்டும். அதை வலுக் கொண்ட பதிவாக நம் ஆத்மாவில் ஏற்றிடல் வேண்டும்.

 

1.ஆத்மாவின் அத்தகைய வலுவைக் கொண்டு சரீரத்தை மட்டுமல்ல…!
2.சகல சித்துக்களையும்… சகல நிலைகளையுமே… அந்த ஆத்ம வளர்ச்சியினால் மட்டும் தான் வலுப்படுத்திட முடியும்.

அங்கக் குறைபாடு… மூளை வளர்ச்சி குறைவு… கொண்ட குழந்தைகள் இன்று அதிகமாகப் பிறக்கின்றது… அதன் காரணம் என்ன…?

பொய்ச் சாட்சியும் பொய்யாக நீதி சொல்வோர் குடும்பங்களில் ஏற்படும் தீமைகள் 

மோசமானவன் மோசமானவன் என்று சிலர் சும்மா குறையாகவே பேசிக் கொண்டிருப்பார்கள் 

youth power

ஆண் பெண் பருவ கால வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூமியின் ஈர்ப்புக்குள் சரீர வாழ்க்கை உணர்வின் எண்ணத்திற்கு உட்பட்ட ஒரு உயிரணு அதன் வளர்ச்சியில் “வித்தாக… முற்றிய தன்மை” எத்தருணத்தில் அதற்கு ஏற்படுகின்றது…?

மனித உடல் பெற்ற பின்… ஆண் பெண் அமில ஜீவனின் கூட்டுடன் வளர்ச்சி கொள்ளும் அணு வளர்ப்பின் வலு நிலையானது கர்ப்பக் காலத்தில் தாயின் உதிரத்தில் சிசுவாக உருப் பெறுகின்றது.

பிறந்த பின்… உண்டு… உறங்கி… சுவாசித்து… மனித ஓட்ட நடைமுறை யாவையும் வளர்ச்சி கொண்டு பார்த்து… கேட்டு… சுவைத்து… வளரும் அந்தந்தக் கால வளர்ச்சி முற்றிய முதிர்வுக்குகந்த தவழ்ந்து… நடந்து… ஓடி.. பேசி… வளர்ச்சியுற்றுத் தன் அறிவின் ஞானத்தை உயர்த்திக் கொள்கின்றது.

அதே சமயத்தில் உடலின் உருவக வளர்ச்சியும்… உணர்வின் எண்ண அணு வளர்ப்பினால் எடுக்கவல்ல… வலுவின் முற்றிய தன்மையின்… ஆண் பெண் இரு பாலரின் எண்ணத்தின் வலு நிலைக்குகந்த உணர்வின் எண்ணத்தின் சமைப்பு நிலையில் “மாற்று வளர்ச்சி நிலையும்” பெறுகின்றது.

மாற்று நிலையின் காலம் என்பது… பருவ கால வளர்ச்சியே ஆகும்.

1.மனித இனம்.. வளர்ச்சியின் நிலையை அடையும்
2.அந்தப் பருவ காலங்களில் எடுக்கும்
3.உணர்வின் எண்ண குண உந்தலின் அணு வளர்ப்பு அமிலச் சேர்க்கையால்
4.மனித வாழ்க்கையின் ஆயுட்காலம் அமைந்து
5.அதுவே மனிதப் பிறப்பின் “பிறப்புப் பலன் தரவல்ல” காலமாகின்றது.

பிறப்பின் பலன் தரவல்ல காலம் என்பது உடலில் அணு வளர்ச்சியின் வலுக்கூடிய நிலையில்… பிறப்பின் பிறப்பு நிலையை வளர்க்கவல்ல அமிலக் கூறுகள் வளர்ச்சியுற்ற நிலையில்… ஜீவ சக்தியை ஜீவிக்கச் செய்யும் அந்த வளர்ச்சிப் பருவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் “பதினான்கிலிருந்து பதினெட்டு வயதிற்குள் தான்…!”

 

இரு சாராரின் ஞானத்தை எடுத்துச் செயல்படும் காலமும் அதே காலம் தான்…! அந்த வயதில் மனித உணர்வின் எண்ண வேட்கை (ஆசை) செலுத்தும் நிலைக்கொப்ப
1.உடலின் வலுத் தன்மையும்
2.ஆத்மாவின் வலுத் தன்மையும் கூடப் பெறும் தருணத்தில்
3.உணர்வின் எண்ணம் கொண்டு செயலாக்கும் ஆத்மாவின் பதிவு நிலை வலுத் தன்மை எல்லாமே அமையப் பெறுகின்றன.

அணுவின்… அணு வளர்ப்பின் வளர் தொடர் அணு சமைப்பு… சரீர மலம் தான் இந்த உடல் பிம்பக்கூறு. இக்கூறின் வலுவை எடுத்துக் கொள்வது ஆத்மா தான்.

1.ஆத்மாவின் உண்மை வலுவைக் கூட்டிக் கொள்ள
2.உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் பதிவு நிலை தான் “மனித வாழ்க்கை…!”

ஆகவே வாழ்க்கைக்கடுத்த மனிதச் சக்தியின் உயர் தெய்வ சக்தியான ஆத்மாவைக் கொண்டு உடலை இயக்கும் வழித் தொடர் ஞான அலையை வளர்க்கும் பக்குவத்தை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

ஆனால் ஆரம்ப கால உணர்வின் உந்தலால் உட்படும் உயிரணு… தன் வளர்ச்சியின் வளர் நிலையின் சரீர எண்ண ஓட்ட உணர்வுப் பிடியில் வாழும் வாழ்க்கை கதியின் பிடிப்பிலேயே வாழ்ந்தால்… பாடத்தில் இது நாள் வரை உணர்த்திய படி…
1.உணர்வின் எண்ன வேட்கை (ஆசை உணர்வுகள்) சமைப்பில் எத்தனை காலங்கள் வாழ்ந்தாலும்
2.கண் காது மூக்கு வாய் இவற்றின் செயல் உணர்வு அணு வளர்ச்சி வார்ப்பாகச்
3.இந்தச் சரீர இயந்திர ஓட்டத்தின் இச்சையின் எண்ண ஓட்டத்திற்கு அடிமைப்பட்டே தான் வாழ்ந்திட முடியும்.

அதை மாற்றி அமைக்கும் நிலையாக… வாழ்க்கையின் வழித் தொடரிலேயே “சமமாக ஏற்கும் எண்ண உணர்வுடன்… மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பால்… உயர் ஞானிகளின் அலை ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்தி…” அதைப் பெறும் பழக்கம் வர வேண்டும்.

இந்தப் பூமி சமைக்கும் அலையுடன் ஒன்றி வாழும் இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பான நாம் வளர்ப்புடன் ஒன்றிய நிலையிலிருந்து காந்த மின் அலை ஒளித் தன்மையை ஆத்மாவின் வலுவாக வலுப்படுத்தும் வளர்ச்சி ஞானத்தைக் கொண்டிடல் வேண்டும்.

ஆகவே…
1.சரீர உணர்வு எண்ணத்தில் வாழும் வழி முறையிலிருந்து
2.ஆத்மாவின் இயக்க வலுவாகச் இச்சரீரத்தை இயக்கவல்ல வாழ்க்கை நிலைக்கு
4.வாழ்க்கை நிலை மட்டுமல்ல…! வளர்ச்சியின் வளர்ப்பான ஆதிசக்தியின் நிலைக்கே உயரலாம்.

சிலைக்குள் மறைந்துள்ள உண்மைகளை அறிந்திருக்கின்றோமா…?

 

இந்தத் தெய்வ குணத்தைப் பின்பற்றினால் உன் குடும்பம் நலமாக இருக்கும் உன் குணங்கள் எல்லாம் நலமாக இருக்கும் என்று புராணங்கள் காட்டியிருந்தாலும் அந்த மகரிஷிகளைப் பின்ன்பற்றாது அந்தச் சிலை தான் நமக்கு எல்லாம் செய்கிறது என்ற எண்ணத்தில் ஆராதனை அபிஷேகம் செய்கின்றோம். மேலும் அங்கே வேதனையைத்தான் கொட்டுகின்றோம். தீமையை அகற்றத் தெரிவதில்லை.

spiritual-success

பிள்ளைக்குத் திருமணம் தடையாகிக் கொண்டே போகிறது என்று எண்ணுபவர்களுக்கு…!

உதாரணமாக… தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்
1.”ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை…!” என்ற அந்தக் குறைகளைத் தாய் கேட்டுப் பதிவாக்கியிருந்தால்
2.அந்த அதிர்ச்சியான உணர்வலைகள் அந்தக் கருவிலே விளைந்துவிடும்.
3.இது பூர்வ புண்ணியமாக அமைந்து… அதனால் பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்குத் திருமணத் தடை வருகின்றது.

ஆனால் இப்படித் தடைகள் வந்தாலும் அதை நாம் மாற்றி அமைக்க முடியும்.

என் குழந்தை அருள் ஞானம் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தையின் உடலிலே படர வேண்டும். திருமணமாகி எங்கே சென்றாலும் அந்தக் குடும்பத்தில் தொழில் வளம்… செல்வம்.. செல்வாக்கு பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆனால் குழந்தை மீது பாசமாக இருக்கும் பொழுது பிள்ளைக்கு வயதாகின்றதே… திருமணம் ஆகவில்லையே…! என்ற சோர்வும் அதனால் வேதனையும் வரும் பொழுது பாலிலே பாதாமைப் போட்டாலும் பாதாமிற்குள் சிறிது விஷம் பட்டால் என்ன செய்யும்..?

பாதாமிற்குச் சக்தி இழந்து விடும்.

பக்தி மார்க்கங்களில் நாம் சென்றாலும்… நல்லது நடக்கும் பொழுது மகிழ்ச்சி வரும். கொஞ்சம் குறையானால் அந்த குறையைத் தாங்கும் நிலையற்றுப் போய்விடுகின்றது.

வாழ்க்கையில் வரும் குறையை நிவர்த்தி செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியானத்தை உங்களுக்குச் சொல்கிறோம்.

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரத்தைக் காட்டினார்கள் ஞானிகள். பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து பல கோடிச் சரீரங்கள் எடுத்துக் கொண்ட பின் வராகனகாக வரும் பொழுது சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கிவிட்டு நல்ல உணர்வை நுகர்கின்றது.

1.அதன் வாழ்க்கையில் அது அறிந்து நுகரவில்லை….!
2.சந்தர்ப்பத்தில் விளைந்து கொண்ட உணர்வை அது நுகர்கின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் அதன் உடலிலே சேர்கின்றது.
4.நல்லதை நுகர்ந்த உணர்வோ அந்தப் பன்றி உடலைப் பிளக்கின்றது.
5.பன்றி உடலைப் பிளந்த பின் பரசுராம்… மனிதனாகப் பிறக்கின்றது
6.தீமைகளை நீக்கும் அந்த அருள் சக்தியை மனித உடலில் பெறுகின்றது.
7.ஏனென்றால் சமப்படுத்தும் உணர்வுகளாக அந்த எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கும்.

இதன் வழிப்படுத்தி மனிதன் வாழக் கற்றுக் கொண்டால் தீமையை அகற்றிக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொன்றையும் சமப்படுத்தி நாம் வாழ்வோம் என்றால் நமக்குள் அருள் என்ற நிலைகளும்… ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்ட பின்.. இனிப் “பிறவியில்லா நிலை..” என்ற நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் பற்றின் நிலை கொண்டு எனக்கு வரவில்லையே.. ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லையே…! என்ற எண்ணத்திற்குப் போக வேண்டியதில்லை.

இந்த மனித வாழ்க்கையில் குடும்பத்தில் எல்லோரும் நலமாக வேண்டும்…! என்ற பற்றுடன் தான் இருக்க வேண்டுமே தவிர
1.கல்யாணம் நடக்கவில்லையே…! என்ற பற்றைக் கூட்டினால்
2.அந்த உணர்வின் தன்மை முன் நின்று நடத்தச் செய்யும் நல் உணர்வுகளைத் தாழச் செய்யும்.
3.நாம் செய்யக்கூடிய காரியங்களுக்குத் தடையாகும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ இதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ஓ..ம் நமச்சிவாய…! என்று உடலாக நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

சிவாய நம ஓம்…! நமக்குள் பதிவு செய்த உணர்வுகளே மீண்டும் நமக்குள் அந்த எண்ணங்களாகத் தோற்றுவித்து நம்மைச் சோர்வடையச் செய்யும்.

நம் பெண்ணைப் பார்க்க வருவோருக்கும் இந்தச் சோர்வான உணர்வுகள் படப்படும் பொழுது வருவர்கள்… பார்ப்பார்கள்… போய் விடுவார்கள்…! இதைப் போன்ற நிலையில் நம் மனம் தான் வருவோரை அகற்றுகின்றது

தாயின் கருவின் மூலம் வந்த அந்த உணர்வின் தன்மை நமக்குள் வித்தாக வளர்த்து அந்த உணர்வின் தொடர் வரிசையிலேதான் இந்த வாழ்க்கையில் இப்படி ஒரு தடை வருகின்றது. இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் அல்லவா…!

மேலும் இந்தக் காற்று மண்டலமே இன்று நச்சுத் தன்மை ஆகிவிட்டது. இதிலிருந்து மனிதர்கள் நாம் எப்படி மீள வேண்டும்..? என்பதற்குத்தான் ஆத்ம சுத்தியையும் தியானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

 

ஆகவே ஒவ்வொரு நிலையிலும் தியானத்தின் மூலம் அருள் சக்திகளை அதிகமாகக் கூட்டிக் கொண்டு
1.வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி மாற்றிட வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும்… அருள் வழியில் வாழ்க்கை நலம் பெறவேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெறவேண்டும் என்ற இத்தகைய உணர்வுகளை வளர்த்துக் கொண்டே வந்தால்
6.அருள் உணர்வின் கரு நமக்குள் உருவாகும்… இந்த உணர்வின் அலைகள் நமக்குள் பெருகும்.

அதன் மூலம் நம் சொல் அனைவருக்கும் நலமாகின்றது. நாம் எண்ணிய காரியங்கள் ஜெயிக்கும் தன்மையாக அதன் உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து வரும்.

இறந்தவர்கள் அஸ்தியைக் கரைப்பதன் உண்மையான பொருள் என்ன…?

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாவிற்குள் இருக்கும் நிலைகள் என்ன…?

என்றும் பதினாறு அடைந்த அந்த மாரக்கண்டேயன் யார்… என்றும் பதினாறு என்றால் அர்த்தம் என்ன..?

Treasure hunt for soul

தினசரி நாம் செய்ய வேண்டிய ஈஸ்வர தியானம்…!

 

உங்கள் நினைவைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியரின் பால் செலுத்துங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…!

அவரிடம் இருந்து வெளிப்பட்ட அரும் பெரும் சக்தியை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் உடலுக்குள் அதன் உணர்வின் சக்தியை உணரலாம்.

1.ஆகவே தியானிக்கும் பொழுது
2.அந்த அகஸ்தியரின் அரும் பெரும் சக்தி
3.“மனப்பூர்வமாக எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்…” என்று ஏங்கிப் பெறவேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.“ஈஸ்வரா…” என்று சொல்லும் பொழுது
2.உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…!
1.எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட என்று சொல்லும் பொழுது இரத்தத்திற்குள் நினைவைச் செலுத்துங்கள்.
2.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது உங்கள் புருவ மத்தியில் உயிரிடம் நினைவைக் கொண்டு போங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவி உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று குழந்தைகள் (திருமணம் ஆகாதவர்கள்) ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
துருவ மகரிஷியாக ஆன பின் அவர் பெற்ற உணர்வுகள் அவரிடமிருந்து வெளிப்பட்டதை நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த அரும் பெரும் சக்தி உங்கள் இரத்தநாளங்களில் கலக்கும்.
2.சர்வ பிணிகளையும் போக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.அங்கிருந்து துருவப் பகுதியின் வழியாக வரும் அருள் சக்தியை நுகர்ந்து
2.எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளையும் துருவ மகரிஷிகளையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணி இவ்வாறு தியானிப்பதால்
1.நம் உடலில் நல்ல அணுக்களை உருவாக்க இது உதவும்.
2.அதே சமயத்தில் நம் உடலில் அறியாது சேர்ந்த
3.தீய வினைகள்ளோ சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகலும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது இரத்த நாளங்களிலும் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தியானமிருக்கும் இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு குடியிருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற்று… அருள் வழியில் அவர்கள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் பெற்று.. தெளிந்து… தெரிந்து… வாழும் அருள் ஞான சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து தொழில் வளம் பெருகி அருள் ஒளி பெருகி அருள் வழியில் தொழில்கள் சீராகி வாடிக்கையாளர்கள் பெருகிட அருள்வாய் ஈஸ்வரா.

இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களின் பால் நினைவைச் செலுத்துங்கள்.

சப்தரிஷி மண்டலங்களிண் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியை இபப்டி எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் நம்முடைய முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்த பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து நேரே அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்…

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

இதைப் போன்ற தியானம் தினசரி நாம் செய்தல் வேண்டும்.

நீங்கள் எல்லோரும் ஞானிகளாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்

 

நீங்கள் செய்த நன்மை நன்மையாகவே இருக்கும். உங்களுக்குள் தீமைகள் வராது எப்பொழுதும் தடுத்துக் கொள்ள முடியும். அத்தகைய அதிகாரத்தைக் கொடுக்கின்றோம். 

divine lights

கண் வழி கவர்வதையும் செவி வழி கேட்பதையும் தான் நமக்குள் இயக்கமாக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு நொடிப்பொழுதும்
1.ஒளி… ஒலி… மணம்… இவற்றின் மோதலின் உணர்வு கொண்ட…
2.எண்ண ஓட்டச் சரீர வாழ்க்கை வழி முறையில் தான் நாம் வாழுகின்றோம்.

இத்தகைய தொடர் நிலைக்கொப்ப வாழும் சுழற்சித் தொடர்பில் ஒன்றி அந்தந்த உணர்வைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளோம்.

இதனின் பிடிப்புச் சுழலில் சிக்குண்டு அந்த வழி நிலையிலேயே வாழுகின்றோமே அன்றி அதை மாற்றும் நிலையை நாம் மேற்கொள்வதில்லை.

ஒன்றைப் பார்த்தவுடன் ஒளியின் விழி நிலையின் உணர்வு நிலை செயல் கொள்கிறது. ஒளி கொண்டு காணக்கூடிய விழி நிலையின் ஒளி உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் எண்ணத்தின் உணர்வுடன் மோதிய அலை அணுக்களையே வளர்த்துக் கொள்கின்றது.

ஆனால் பார்வையில் எதிர்ப்படும் செயலில் ஏற்படும் நிலைக்கொப்ப “மாற்றி அமைக்க வேண்டும்…” என்ற நிலை வருவதில்லை.

இப்படி… சாதாரண நடைமுறையில் பழக்கப்பட்ட விழி நிலையில் காணும் ஒளி அலை உணர்வு எண்ண வேட்கைக்கொப்ப அணு வளர்க்கும் வளர் தன்மை மிக அழுத்தமான இயக்கம் வந்தால் மாற்றமாகின்றது. எப்படி…?

அதிர்வு…
ஆனந்தம்…
இனிமை…
கடுமை…
இதைப் போன்ற குணம் கொண்ட ஒளியின் விழி ஊடுருவல் செயல்படும் தன்மையால் அதற்குகந்த உனர்வின் எண்ண நிலைக்கொப்ப அணுத்தன்மை இச்சரீரத்தின் (இயந்திர) செயல் மாறிச் செயல்படுகின்றது.

அதாவது ஒளியினால் காணும் விழி நிலையின் உணர்வுக்கொப்ப பல பல ஒலிகளை வெளிப்படுத்துகின்றோம்..

1.அதிர்வு நிலை ஏற்படத்தக்க காட்சிகளைக் காணும் பொழுது
2.நம்மை அறியாமலேயே காணும் காட்சிக்கொப்ப
3.ஆ… இ… இச்.. இச்…! என்ற ஒலிகளை எழுப்புகின்றோம்.
4.இனிமை கலந்த காட்சி நிலையைக் காணும் பொழுது அதற்குகந்த ஆனந்த ஒலியை
5.நம்மை அறியாமலே ஆஹா… ஓஹோ…! என்று இனிமையுடன் கூடிய ஒலியைச் சிரிப்பலையுடன் வெளிப்படுத்துகின்றோம்.

இதன் தொடரிலேயே ஒலி அலையை ஈர்க்கவல்ல… செவி ஈர்ப்பு.. ஒலி கேட்கும் மோதலின் ஈர்ப்புக்கொப்ப… எண்ணத்தின் உணர்வு செயல்படுகின்றது.

ஆக… தான் கேட்கும் ஒலி ஈர்ப்புக்கொப்ப உணர்வின் எண்ணச் சுவாசத்தால் உடலின் அணு வளர்ப்பு நிலையும் ஏற்றத் தாழ்வு பெறுகின்றது.

இதன் தொடர்பைப் போன்றே…
1.சுவாசத்தில் மோதும் மணமும்
2.சுவையில் உண்ணும் உணவும்
3.மனித உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் அந்தந்த குண நிலைக்கொப்ப
4.அமில உணர்வின்… அணு வளர்ப்பின்… இந்திரிய ஆவி நிலையின் உதிர ஓட்டமாக சரீரத்தின் செயல் நடைபெறுகிறது.

இத்தகைய வாழ்க்கைச் செயலில் வாழும் நாம் இவ்வாழ்க்கையின் ஜீவாதார குறுகிய ஆண்டுகளில் பிம்ப உடலில் சமைக்கும் அணு வளர்ப்பின் ஆவி நிலையின்… “ஆத்ம உயிரின் உண்மை நிலை” புரியாமலேயே வாழ்கின்றோம்.

ஏனென்றால் இந்த மனிதத் திட பிம்பத்தின் இயந்திர ஓட்டச் செயல் சமைப்பின் வலுவைக் கொண்டு தான் மனிதனின் ஆரோக்கிய நிலையும்… ஞானத்தின் வழியில் செல்லும் குணச் செயல் முறையும்… அமைகின்றன.

உணர்வின் இந்திரிய ஓட்டத்திற்கொப்ப ஒருவரின் செயல் திறன் ஞானம் வெளிப்படுகின்றது. அந்த ஞானத்திற்கொப்பத்தான் வாழ்க்கையின் மேம்பாட்டு நிலையும் செயல் கொள்கின்றது.

இத்தொடரின் வழி நிலை வாழ்க்கையில் எப்படி ஒன்றியுள்ளதோ அத்தொடரைக் காட்டிலும் மிகத் துரித நிலையில் உயர்வு நிலைக்குச் செல்லக்கூடிய ஞான மார்க்கம்… சித்து மார்க்கம்…! இவ்வழியில் எண்ணத்தின் உணர்வைச் செலுத்திடல் வேண்டும்.

 

1.விழி ஒளி
2.செவி ஒலி
3.சுவாச மணம்
4.வாயின் சுவை
5.இவ் அலை உணர்வு எண்ணத்தில்
6.உயர்வு வழித் தொடர் நிலையில் செல்லும் செயல் முறைக்கு
7.இவற்றின் செயலால் உந்தப்படும் வேட்கையின் வழி முறையை வழியமைக்கும்
8.ஞான ஒளியை நாம் அறிதல் வேண்டுமப்பா…!

நாம் கவர்ந்து வெளிப்படுத்தும் உணர்வின் ஒலிகளுக்கொப்பத்தான் நம் உருவத்தின் மாற்றம்

இருளை ஒளியாக மாற்றும் அகஸ்தியனின் ஆற்றல் – மெய் ஞானப் பாடம்

கோடிக்கரை தனுசு கோடி இராமேஸ்வரம் விஷ்ணு தனுசு – விளக்கம்

Gnanaguru saamigal upadesam .

ஞானிகளைப் பற்றிய உபதேசங்களைக் கேட்பதால் கிடைக்கும் பலன்கள்

 

நமக்குள் எத்தனையோ பகைமை உணர்வுகள் உண்டு. பகைமை கொண்டோரைப் கண்ட பின் அந்த உணர்ச்சிகளின் எழுச்சிகள் தெரிகின்றது.

1.அந்த எழுச்சியின் தன்மை வராது தடுக்க
2.அக்கணமே அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று எண்ணினால் அதைத் தடைப்படுத்தும்.
3.அதை அடக்கிடும் அந்த உணர்வின் தன்மையைப் உங்களிலே பரவச் செய்யுங்கள்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்குத் தீமைகள் கிடைக்காதபடி அருள் உணர்வின் தன்மைகளைப் பரப்படும் பொழுது இதைச் சிறுகச் சிறுக நுகர்ந்தால் இதன் வலிமையோ “அருள் ஞான வழியாக” மாறுகின்றது.

நமக்குள் இருக்கும் பகைமையும் நண்பனாக மாற்றும் நிலை வருகின்றது. இதைத்தான் இராமாயணக் காவியத்தில்
1.இராமன் காட்டிற்குள் சென்றாலும் பகைமையற்ற உணர்வு கொண்டு எல்லோரையும் நட்பாக்கினான் என்று காட்டுகின்றார்கள்.
2.அதாவது பன்னிரெண்டு வருடம் என்பது ஒரு மண்டலம் என்ற காவியத் தொகுப்புகளும் உண்டு.

ஆகவே இதை நாம் செயலாக்கும் இந்த நிலை கொண்டு மனிதனின் வாழ்க்கையில் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

அதே சமயத்தில் இந்த உபதேசத்தைக் கேட்கும் பொழுதும்… நீங்கள் இதைப் படிக்கும் பொழுதும்…
1.உங்களுக்குள் அற்புதமான மணங்கள் வந்து கொண்டே இருக்கும்.
2.உங்கள் உடலில் உள்ள இரத்தநாளங்களில் அந்த அருள் சக்தியான நிலைகள் வரும்.
3.உங்களுக்குள் ஒரு குளிர்ச்சி ஏற்படும் உணர்வின் தன்மையையும் ஊட்டிக் கொண்டே இருக்கும்.
4.உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு வீரியமான சக்தியும் கிடைக்கும்.

இந்நேரம் வரை உபதேசித்தது அருள் ஞானத்தின் உணர்வை நீங்கள் பெறவேண்டும் என்பதற்கே….!

1.இதை நீங்கள் நுகர நுகர மகிழ்ச்சியை ஊட்டும்
2.அருள் ஞானத்தின் உணர்வுகளை நினைவுபடுத்தும்
3.அருள் வழியில் உங்களை வாழ வைக்கும்.

இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் ஆழப் பதிந்த பின் நீங்கள் எங்கே சென்றாலும் மேலே சொன்ன அத்தனையும் நுகர முடியும். அருள் ஆற்றலைப் பெற முடியும்.

ஆகவே இந்த உலகைக் காத்திட அந்த அருள் ஞானம் வேண்டும் என்று உணருங்கள். உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வுடன் தியானியுங்கள்.

அந்த அருள் ஞானம் உங்களுக்குள் விளையும். அரும் பெரும் சக்தியாக உங்கள் உடலைச் சுற்றி நறுமணங்கள் பரவும். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர நல்ல அணுக்களின் தன்மை விளையும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் மகரிஷிகளின் சக்தியும்… துருவ நட்சத்திரத்தின் சக்தியும் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி இருங்கள்.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவரின் அனுபவங்கள் எப்படி இருக்கும்…?

 

யாம் உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கிச் சீராகத் தியானிப்பவர்களுக்குத் தீமையை நுகரும் உணர்வை மாற்றி அதிலிருந்து விடுபடும் உணர்ச்சிகள் வரும். உங்கள் அனுபவத்தில் நிச்சயம் அது வரும். அந்த உயர்ந்த ஆயுதம் உங்களுக்குப் பயனுள்ளதாகக் கிடைக்கும்.

மகிழ்ச்சியாக இருந்தாலும் அதற்கடுத்து சங்கடமும் வெறுப்பும் எதனால் வருகிறது 

மன பலம் பெறுங்கள்

ஆறாவது அறிவு கொண்டு வேதனையிலிருந்து விடுபடுங்கள்

x-rays-divine-rays

“ஞானதிருஷ்டி…” எப்படிப் பெறுவது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உயிரணு வளர்ச்சியில் பல நிலைகள் பல கோடி ஆண்டுகளுக்குப் பல மாற்ற நிலைகள் உருமாறி உருமாறி… வலுத் தன்மை கூடிக் கூடி… வளர் கொண்ட நிலை கொண்ட பிறகுதான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலு கூடப் பெறுகின்றது.

இப்படிப் பல முலாம் தன்மை கொண்டு உருவாகி உருவாகி உயர் கொண்ட வார்ப்பலையில்
நீர்…
நிலம்…
தாவர… தொடர் வளர்ச்சி நிலை
ஜீவ பிம்ப நிலை…
இப்படிப் பல முலாமில் வளரும் வளர்ச்சி நிலையில்
“ஒளி காணும் நிலை” தாவர வளர்ச்சி நிலைக்கும் இல்லை.

ஆரம்ப இனப் புழு வளர்ச்சிகளுக்கும் சுவாச நிலை மட்டும் கூடுகின்றது. ஒளி நிலை வருவதில்லை.

சுவாசத்தை எடுத்து மணம் தரும் வளர்ப்பு நிலை தாவர இன நிலையிலும் தாவர நிலைக்கு அடுத்த நிலையான தாவரத்திலிருந்து சத்தெடுத்து வளரும் ஜீவ உயிரணு புழு நிலைக்கு சுவாச நிலை எடுக்கும் வளர்ப்பு நிலை கூடுகின்றது.

அடுத்த வளர்ப்பின் வார்ப்பு நிலை வளர்ச்சியில் தான்
1.சரீர பிம்பத்தில் எலும்புகளின் வளர்ச்சி நிலையின் வலு கூடிய தன்மையிலிருந்து
2.ஒளி காணும் விழி அமைப்பு நிலை தான் சரீர ஜீவன்களின் வார்ப்பு நிலையாக வழி கொண்டுள்ளது.

இதற்கு அடுத்த நிலை யாது…?

விழி நிலையின் ஒளி காணும் வழி நிலைக்கே… பிம்பக் கூட்டின் “எலும்புகளின் ஊன் நிலை உயர்வின் நிலைக்கொப்ப…” விழியின் ஒளி நிலை அமைகின்றது.

சுவாசத்தால் உண்ணும் உணவின் சத்தெடுத்து ஆவியானது அமிலமாகி உதிரமாகின்றது.
1.அந்த உதிர ஓட்டத்தால் எலும்புகளின் சத்து நிலை
2.எலும்பின் உள் நிலையின் ஊன் நிலை உறுதியின் வலுவால்
3.எலும்புகளின் வளர்ச்சி முற்ற முற்ற
4.ஒளி நிலையின் பிரகாச கூர் நிலை… “ஊடுருவும்” வளர்ச்சி நிலை உருவாகின்றது.

சரீர பிம்ப வாழ்க்கையில் முன்னோக்கி ஒளி காணும் விழி நிலையின் அடுத்த நிலையான ஞான திருஷ்டி கொண்டு விழியை மூடிக் கொண்டே
1.முன்புறம் காணப்படும் எதிர் நிலையின் ஒளி ஈர்ப்பு மட்டுமின்றி
2.விழியை மூடிய தன்மையிலும் விழித்திருக்கும் தன்மையிலும்
3.பின்புறக் காட்சிகளையும் நம் கண்ணுக்கெட்டாத் தொலைவில்
4.இந்தப் பூமி மட்டுமல்லாமல் எந்தப் பூமியானாலும் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் வழி நிலையில்
5.அங்குள்ள எந்த நிலைகளையும் காணவல்ல உயர்வு நிலை பெறலாம்.

அந்த ஞானதிருஷ்டி என்ற நிலையை இச்சரீர பிம்ப இயக்கத்திலிருந்து தான் செயல்படுத்த முடியும். அதாவது ஜீவ சக்தியுடன் கூடிய இயக்க ஓட்டத்தில் மேல் நோக்கிச் செலுத்தி எடுக்கும் சூரிய அலையின் காந்த மின் அலைத் தொடர்புகளை ஆற்றலாக எடுத்து எலும்புகளை வலிப்படுத்த வேண்டும்.

இவ்வெலும்புகளின் வலுத் தன்மையில் எலும்பின் ஊன் வளர்ச்சி பெருகப் பெருக விழி நிலை கொண்டு எதிர் நிலையில் தெரியும் ஒளி நிலை பெற்ற மனித நிலை
1.அதற்கடுத்த நிலையான எங்குள்ளவற்றையும்
2.உள்ள நிலையிலிருந்தே ஞானதிருஷ்டி என்ற
3.ஊடுருவி ஒளி காணும் ஒளி ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற முடியும்.

இன்றைய விஞ்ஞான வைத்தியத்தால் உடல் உறுப்பின் உள் நிலை காணும் ஊடுருவல் புகைப்படப் பதிவு நிலை (எக்ஸ்ரே) செயல்படுவதைக் காட்டிலும் உயர்ந்த காந்த மின் அலைத் தொடர்பின் வார்ப்பக வளர்ச்சியை இச்சரீர இயக்கத்தில் பெற்ற ஆத்ம நிலையின் வலுத் தன்மையால் பெற்றிட முடியும்.

1.ஊடுருவிக் காணும் அந்த உயர் தன்மை கொண்ட விழித் தன்மையின் செயலை வைத்து
2.பூமியின் உள் நிலையில் உள்ள தன்மைகளையும் காணும் நிலை
3.இச்சரீர பிம்ப ஆத்மாவிலிருந்து ஒவ்வொரு மனிதனும் பெறலாம்.

ஆத்மீக வழித் தொடரினால் ஆத்ம வளர்ச்சியினால் அடையும் தன்மை யாது…? என்ற வினாவிற்கு இந்தப் போதனையிலிருந்து விடை காணலாம் பலரும்.

இச்சரீர பிம்ப ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ளும் ஆற்றலினால்
1.ஊடுருவிக் காணும் விழி ஞான ஒளித் தன்மையால்
2.விஞ்ஞானத்தில் வளர்ச்சி முற்றிய செயற்கைக் கோளினால் அறியும் வழியைக் காட்டிலும்
3.உயிராத்மாவின் ஊடுருவிக் காணும் ஒளி ஞான ஒளி அலையினால்
4.எத்தொடரையும் உயிராத்மா தொடர்பைக் கொண்டு
5.ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும் நிலைத் தொடர்பிலிருந்து நிலைப்படுத்தும் வழி முறையையும்
6.உருவாகும் ஊடுருவச் சேர்க்கையில் “நிகரில்லா நிலைதனைப் பெறலாம்…!”

Argument

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உடலான காட்டிற்குள் செலுத்தி அதைத் தபோவனமாக மாற்றுங்கள்…!

தன் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி முதல் மனிதனாக ஒளியாக ஆனான்.

அவனைப் பின்பற்றியோர் அனைவரும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள். அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் சக்த்யினை நீங்களும் பெறவேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.

ஏனென்றால் அக்காலத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அந்தச் சக்திகளை எப்படிப் பெற்றார்கள்..? என்று குரு எனக்கு உபதேசித்தார்.

சாதாரணமாக இல்லை…! நேரடிப் பார்வையில் அவர்களின் உணர்வின் இயக்கங்கள் எப்படி என்றும் உணர்வுகள் ஒளியாக மாறுவதையும் அதனுடைய வளர்ச்சிகளையும் காணும்படிச் செய்தார்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவான நிலையில் எத்தகையை தீமை வந்தாலும்
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் ஒன்றி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கவருங்கள்.
3.கவர்ந்ததை உங்கள் இரத்தநாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்.
4.பகைமை ஊட்டும் உணர்ச்சிகள் அனைத்தும் அது ஒடுங்கும்.

இராமன் காட்டுக்குள் செல்லப்படும் பொழுது குகனை நட்பாக்கினான் என்று காவியத்திலே உண்டு. அதனுடைய விளக்கம் என்ன…?

நம் உடலுக்குள் பலவிதமான உணர்வுகள் உண்டு. நம் உடலே பெரும் காடு தான்.

காடுகளில் விளைந்ததை உணவாக உட்கொண்ட உயிரினங்கள் ஒன்றை ஒன்று கொன்று தின்று… ஒன்றின் உணர்வுகள் ஒன்றி…. ஒன்றின் நிலைகள் மாறி மாறிப் பல உடல்கள் பெற்று இன்று மனிதனாக உருவாக்கிய காடு தான் இது…!

இதற்குள் விஷப் பாம்புகளும் உண்டு தேளும் உண்டு மற்ற எத்தனையோ இனங்கள் உண்டு. ஆனால் இதிலே எதனை வளர்க்கின்றோமோ அதனின் நிலைகள் இங்கே ஓங்கி வளர்ந்து விடுகின்றது.

1.இப்படி இந்த உடல் என்ற காட்டுக்குள் ஏற்படும் பகைமைகளிலிருந்து
2.எடுத்துக் கொண்ட உனர்வுகள் விஷத் தன்மை கொண்டால்
3.நம் உறுப்புகளைச் சீரழிக்கின்றது… நம்மை மாற்றுகின்றது… மற்றதையும் அழிக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
1.உடலுக்குள் இருக்கும் (காட்டுக்குள்) இரத்தங்களில் கலக்கச் செய்யும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஓட்டங்கள் செல்லும் பொழுது
3.”விஷத் தன்மை கொண்ட உணர்வுகள்” இதை நுகர்ந்த பின் அது அனைத்துமே ஒடுங்குகின்றது.

ஆகவே மாறுபட்ட உணர்ச்சியைத் தூண்டும் நேரங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கி அதைப் பெறுங்கள். உங்கள் இரத்தங்களிலே கலக்கச் செய்யுங்கள்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அந்த உணர்வின் துணை கொண்டு
2.நீங்கள் ஈர்க்கும் பக்குவத்திற்கு வாருங்கள்.

ஏனென்றால் அவர் எனக்கு உபதேசித்தார் அந்த அருளின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தை உற்று நோக்கும்படி செய்தார்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தேன். எனக்குள் இணைத்தேன்…. வளர்த்துக் கொண்டேன்…!

அதன் உணர்வின் துணை கொண்டு தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன். பதிவு செய்தை நீங்கள் நினைவு கொள்ளுங்கள். தீமைகளை வென்றிட்ட அருள் ஞானிகளின்ன் உணர்வை அடிக்கடி உங்கள் இரத்தங்களிலே கலக்கச் செய்யுங்கள்.

இந்த வாழ்க்கையே இது தான் தியானம் என்பது.

சகஜ வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ. பகைமை கொண்ட உனர்வுகளை நுகர்கின்றோம். பகைமை என்று அறிகின்றோம்…! ஆனால்
1.அதை எல்லாம் நம் உயிரோ அந்த உணர்வை எல்லாம்
2.உடலுக்குள் அணுவாக மாற்றி விடுகின்றது ஓம் நமச்சிவாய என்று…!

இரத்தத்தில் கலக்கும் அதனின் வீரியத்தைக் குறைக்க துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று “துரித நிலைகளில் கொண்டு” செலுத்தப் பழகுங்கள். தீமைகளின் வீரியத்தைக் குறைக்கும்.

1.தீமையைச் செயலாக்கும் அந்த உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி
2.இந்த வீரியம் அதை அடக்கி உயிருடன் கலந்து
3.வீரியமாக இருக்கும் நஞ்சை வளர்க்கும் அந்த அணுக்களைத் தடைப்படுத்துகின்றது.

இரத்தநாளங்களில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளை இப்படித் தடைப்படுத்தினால்
1.உங்கள் உடலில் உள்ள அனைத்து நிலைகளையும் நண்பனாக்கும் நிலையும்
2.பகைமையற்ற உடலாகவும்.. பகைமை உணர்வுகள் தோன்றாது பாதுகாக்கவும் இது உதவும்.

போஸ்ட் கம்பியில் ஈஸ்வரபட்டர் தட்டுவதன் ரகசியம்

ரோட்டிலே செல்லும்போது பைத்தியக்காரர் மாதிரி டெலிஃபோன் போஸ்ட் கம்பியில் தட்டுவார் குருநாதர்.

போஸ்ட் கம்பியில் தட்டும்போது “என் சாமி தட்டுகிறீர்கள்..?” என்று கேட்டேன்.

நீ தான்டா… கேட்கிறாய்.. வேறு எவன் கேட்கிறான்…? என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள். “நீ… ஏன்…?! என்று கேட்பதால் உனக்கு விளக்கம் சொல்கிறேன்… என்பார் குருநாதர்.

நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.

ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து அவர்களுக்கு ஞானத்தை கொடு. நல் வழியைக் கொடு என்று சொன்னேன், அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன்.

ஒவ்வொரு உயிரும் அவன் கடவுள் அவனுக்கு இதைச் செய்து… ஏன்டா…! இந்த உடலில் வீற்றிருக்கும் “நீ…” அந்தக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்ற உணர்வை ”ஏன் நீ கொடுக்கவில்லை…?” என்று அவனிடம் முறையிடுகிறேன்.

அவனிடம் (ஒவ்வொரு உயிரிடமும்) முறையிடுகின்றேன். அதே சமயத்தில் என்னை இயக்கிக் கொண்டிக்கின்ற இவனிடமும் (என் உயிரிடமும்) முறையிடுகின்றேன்.

அப்படி என்றால் என்ன அர்த்தம் ஆகின்றது?

நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது. நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான்.

அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார். இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

தீமைகளைச் சுட்டுப் பொசுக்க ஆத்ம சுத்தி என்ற துப்பாக்கியைக் கொடுக்கின்றோம்

நீங்கள் நாரதரைப் பற்றிய காவியங்களில் படித்திருப்பீர்கள். ரொம்பவும் நாசூக்காகச் சொல்லித் தான் அந்த நாரதன் உண்மையை வரவழைப்பான்.

அதனால் தான் “நாரதன் கலகப் பிரியன்… கலகமோ நன்மையில் முடியும்..!” என்று சொல்வது.

தீமைகளை அகற்றும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது அந்தத் துருவ நட்சத்திரம்.

ஆகவே..
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவர் நுகர்ந்தாலும்
2.தனக்குள் அறியாது சேர்ந்த உணர்வினைப் பிரித்துத் தவறு என்ற நிலைகளை உணர்த்தும்.

இந்த உணர்வின் தன்மையைக் கூட்டப்படும் பொழுது… நம்மைப் பார்த்து அந்த உணர்வுகளை நீதிபதி எண்ணும் பொழுது அவரை அறியாமலே அந்த நல்ல தீர்ப்பினைக் கூறிவிடுவார்.

செல்வத்திற்கு அடிமையானவர்கள்… பணத்தின் மீது குறிக்கோளாக வைத்து பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் தீர்ப்பினையே கூறுவார்கள். அவர்களிடம் நியாயமான… உண்மையான தீர்ப்பு வராது…!

இன்று சத்தியமும் தர்மங்களும் “செல்வத்தில் தான்” இருக்கின்றது.
ஆனால் நாம் அந்த அருள் செல்வத்தை வைத்து… அருள் ஞானத்தை வைத்து… நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களும் தவறில்லாத நிலைகளில் நடந்து கொள்வதற்கு…
1.தவறு செய்வோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அவர்களும் உண்மையை உணர வேண்டும்… நல் வழியில் நடக்கும் செயலாக்கத்திற்கு வரவேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்ச வேண்டும்.

இப்படி ஒரு பழக்கம் வரப்படும் பொழுது மற்றவர்கள் நம்மை எண்ணும் பொழுது
1.அவர்களை அறியாது இயக்கும் உணர்வினைப் பிளந்து
2.உண்மையின் உணர்வை உணர்த்தும் சக்தியாக மாறும்

இந்தச் சக்தி உங்கள் அனைவருக்குமே உண்டு…!

என் குடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் உன்னை எப்படி இயக்குகிறது..! என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குருநாதர்

அக்காலங்களில் நடந்ததைக் காட்டினார் குருநாதர் 1

குருநாதர் மூலம் காட்டிற்குள் பெற்ற அனுபவங்கள் 

electronic human

இன்று மக்கள் துரித கதியில் இயங்குவதற்கும் வன்முறை உலகம் முழுவதும் பரவுவதற்கும் காரணம் என்ன…?

 

யார் நமக்குத் தீங்கு செய்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வு பெறவேண்டும் என்று அதை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அந்தத் தீங்கின் உணர்வை எடுக்காதீர்கள்.

ஏனென்றால் இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகளைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அது உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

பதிவு செய்த உணர்வின் வலிமை கொண்டு அந்த மகரிஷிகளை நீங்கள் எண்ணும் பொழுது
1.எத்தகைய தீமைகளோ பகைமைகளோ இருப்பினும்
2.இரக்கமற்றுக் கொன்று குவிக்கும் உணர்வுடன் மற்றவர்கள் வந்தாலும்
3.ஒருவனைத் தாக்கிக் கொன்றிட வேண்டும்…! என்ற உணர்வுகள் வருவதை
4.அந்த அசுர குணங்களிலிருந்து நாம் அவசியம் தப்புதல் வேண்டும்.

அதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவின் நினைவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஒன்றச் செய்யுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தநாளங்களில் கலக்கட்டும்.
3.உங்கள் உடலில் உள்ள பகைமை உணர்வுகள் அனைத்தும் அதனுடைய வலிமை ஒடுங்கட்டும்.

ஆகவே அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் செலுத்துங்கள். அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஞானிகள் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் பெறவேண்டும்.

உங்கள் பார்வையில் இந்த நாட்டில் உள்ள பகைமைகள் அனைத்தும் நீங்க வேண்டும். மனிதன் என்ற தன் நிலையை அடைந்து சகோதர உணர்வுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

1.நீங்கள் வெளி விடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள
2.விஞ்ஞானத்தால் வந்த அசுர உணர்வுகளை எல்லாம் அழிக்கட்டும்…!
3.அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளரட்டும்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அணுகுண்டுகளைத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்து மற்றதை அழிக்கச் செய்கின்றான். அதே போல் அதை வைத்து மற்ற இயந்திரங்களையும் துரிதமாக இயக்கச் செய்கின்றான்.

அதாவது குறைந்த எடை கொண்ட கதிரியக்கச் சக்திகளை வைத்து அதிகச் செலவில்லாதபடி இயக்கத்தின் வேகத்தை அதிகமாகக் கூட்டி மற்ற சாதனங்களை இயக்கச் செய்கின்றான்.

அப்படி இயக்கினாலும்…
1.இந்த கதிரியக்கங்கள் கசிவாக்கப்படும் பொழுது இயக்க ஓட்டத்தை மிகவும் துரிதமாக்குகின்றது
2.மனிதனின் ஆசைக்குள் அந்தக் கதிர்வீச்சுகளை நுகரப்படும் பொழுது
3.நம்முடைய எண்ணங்கள் துரித நிலைகளில் இயக்கப்படுகின்றது
4.சிறிது தடைப்பட்டால் வெடிக்கும் நிலையே வருகின்றது.

நம் எண்ணங்கள் எதை உற்று நோக்குகின்றோமோ… சீராக வரவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் சிதறுண்டு போகும் மனங்களாகத்தான் மாற்றுகின்றது.

ஒன்றின் வீரியத் தன்மைகள் கொண்டு நுகரப்படும் பொழுது…
1.மற்றொன்று நாம் எதிர்பார்க்கும் உணர்வுகள் அது துரித நிலையில் நடக்கவில்லை என்றால்
2.உணர்வின் மோதலால் அது சிதறுண்டு நம் சிந்தனைகள் இழக்கப்படுகின்றது
3.நம்மைத் தவறு செயபவனாக மாற்றுகின்றது…
4.இந்த விஞ்ஞான அறிவால் வந்த நிலைகள் தான் இது…!

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டுமா இல்லையா..?

 

ஆனால்… இதை எல்லாம் நான் படித்துப் பேசவில்லை. அந்த உணர்வின் இயக்கத்தைக் குருநாதர் எனக்கு நேரடியாக உணர்த்தியதை உங்களுக்கும் அப்படியே சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உலகம் மிகவும் சுருங்கிக் கொண்டு வருகின்றது. இத்தகையை சூழ்நிலையில் அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திலேயே நாம் ஒன்றி வாழ வேண்டும்.

நாம் நுகர்ந்த உணர்வின் இயக்கமே எல்லாவற்றுக்கும் காரணம்

 

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அந்த உணர்ச்சியின் எண்ணங்களாக நமக்குள் வரவைத்து அந்த எண்ணத்தின் வழிதான் நாம் இயங்குகின்றோம், வாழுகின்றோம்.

 

ஒருவன் கோபப்படுகின்றான் என்பதை கண் தெரியப்படுத்துகின்றது. ஆனால், உயிரில் பட்டவுடன் அந்த உணர்வுகள் அந்தக் கார உணர்ச்சிகள் நரம்பெல்லாம் “டைட்” ஆகிவிடுகின்றது.

 

நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள். கோபப்படுவர்களைப் பார்த்தவுடன் உங்கள் நரம்புகளெல்லாம் “டைட்” ஆகின்றது. நீங்கள் “டைட்” செய்கின்றீர்களா? அல்லது நீங்கள் நுகர்ந்த உணர்வு அந்த மாதிரி மாற்றுகிறதா?

 

அப்பொழுது நம் வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகளே உணர்ச்சிகளைத் தூண்டி இரத்த நாளங்களில் கலந்துவிடுகின்றது. அதிக நேரம் கோப உணர்வை எடுத்துவிட்டோம் என்றால் அந்த எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடுகிறது.

 

அந்தக் கார உணர்வு வரும்போது அதைத்தான் நமக்குள் அதிகமாக எடுக்க நேருகிறது. யாரைப் பார்த்தாலும் நமக்குத் திடீரென்று கோபம் வரும். எதைச் சொன்னாலும் இந்த உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவோம்.

 

சில பேரைப் பாருங்கள்… எதை எடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். சொல்வதற்கு முன்னாடி முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக் கொண்டு அதைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

 

 

அந்த உணர்ச்சிகள் இதைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். அப்பொழுது எது இயக்குகின்றது? நாம் நுகரும் உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது. இதையெல்லாம் நாம் நமது வாழ்க்கையில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

blue flame soul

ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை எடுத்து ஜோதி நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் சுவாச நிலை இல்லாததனால் அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.

அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.

பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது.

ஆகவே…
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப் படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற – சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.

இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”

மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.

சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.

இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!

 

இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!

டி.பி. கேன்சர் இருதய அடைப்பு போன்ற கடுமையான நோய்களைப் போக்கும் மருத்துவம் 

Heartல் படபடப்பு ஏன் வருகின்றது…?

சர்க்கரை நோய் வருவதற்க்கும் இரத்தக் கொதிப்பு வருவதற்கும் காரணம் என்ன..?

gnana bhoomi m- earth

வெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று அன்றைய ஞானிகள் சொன்னதை நாமும் ஓதிக் கொண்டே உள்ளோம்.

நம் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்… அண்டத்தின் ஆற்றல்களை எடுத்துப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றி இன்றும் ஒளியாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எந்நாட்டவரும் பின்பற்றி அந்த அகஸ்தியன் வழிகளிலே எல்லோரும் வளர முடியும்.

1.என் நாடு… உன் நாடு…! என்று நிலை இல்லாதபடி
2.எந்நாட்டவரும் அவன் வழியிலே சென்றால்
3.அருள் ஒளியின் சுடராக அகஸ்தியனைப் போன்று முழுமை அடையலாம்.

இந்த உடலை விட்டு அகன்ற பின்… என்றும் ஏகாந்த நிலையில்… ஏகாந்த வாழ்க்கை வாழும் உணர்வைக் காட்டிய அந்த அகஸ்தியன் அருள் வழியில் நாம் திகழ்தல் வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் யார்… எதை… எப்படி… எந்த வகையில்… குறைகளைக் கண்டாலும்
2.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அந்தக் குறையை வளர்த்திடவே கூடாது.
3.அருள் ஒளி பெருக வேண்டும்…! என்ற உணர்வைத் தான் செலுத்திட வேண்டும்.

குறைகள் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.. தெளிந்திடும் மனம் வேண்டும்… தெரிந்து.. தெளிந்து… தெளிவாக வாழும் அந்தத் திறன் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் உருவாக்கிவிட்டால் “பகைமை உணர்வுகள் மாறும்…!”

இதை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது…
1.ஒரு காலம்… அவர்களுக்குள் இருக்கும் தவறை உணர்வார்கள்…!
2.நம்மைப் பற்றி எண்ணும் பொழுது அவர்களுக்குள் சிந்திக்கும் செயலும்… மாற்றியமைக்கும் திறனும் நிச்சயம் வரும்.

ஆகவே மனிதர்கள் நாம் இந்த அருள் ஒளியின் தன்மையைப் பெற்று மற்றவர்களுக்கும் பாய்ச்சிட வேண்டும்.

ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அதைப் போல் ஒளியான உணர்வுகளை அவர்களுக்குள் நாம் பாய்ச்சும் பொழுது
1.பல தீமையான உணர்வுகளுக்குள் அவர்கள் அடைபட்டிருந்தாலும்
2.நம்மைத் திட்டி அவர்கள் ஏளனப்படுத்தியிருந்தாலும்
3.நாம் பதிக்கும் அருள் உணர்வுகள் ஒரு சமயம் இயக்கப்பட்டு
4.நாம் சொன்ன உணர்வின் நினைவுகள் அவருக்குள் கிளர்ந்தெழுந்து
5.அவருக்குள் இந்த ஒளியின் தன்மை பெறும் தகுதி பெறும்.
6.அவரை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் நிலையும் ஏற்படும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

சிறு வயதில் செய்யும் தவறின் விளைவுகள் பின்னாடி எப்படி வருகிறது…? 

 

என்னுடைய சிறு வயதில் நான் (ஞானகுரு) அறியாமல் ஒரு குருவியை உயிருடன் எரித்தேன். பின்னாளில் அதனுடைய தீய வினை எப்படி வருகிறது…? அந்தக் குருவி எரியும் பொழுது என்னென்ன எரிச்சல் பட்டிருக்குமோ அதே எரிச்சல் எனக்குள்ளும் வந்து என்னையும் அழிக்கும் உணர்ச்சிகளை எப்படித் தூண்டுகிறது..? என்று நேரடி அனுபவம் கொடுத்தார் குருநாதர்.

dream circle

உறக்க நிலையில் கனவுகள் எப்படிக் காட்சியாகத் தெரிய வருகிறது…? என்பது பற்றி ஈவரபட்டர் சொன்னது

 

விஞ்ஞானி ஓர் இடத்திலிருந்து வண்ண ஒளிக்காட்சிகளைப் படமாக அமிலமுடன் பதியச் செய்கின்றான். ஜீவனற்ற பொருள் நிலையை அந்தந்த வண்ண நிலையுடன் இவன் பூசிய முலாமின் பிடிப்பலையில் எடுக்கும் அந்தக் காட்சிகளைக் காற்றலையுடன் கலக்கட்ட்ஃஸ்வ்வ்ச் செய்து பரப்புகின்றான்.

பரப்பிய அலைகளின் அதே தொடர்பலையைப் பல நூறு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அதற்கென்ற சாதனங்களை உருவாக்கி அதை கவரச் செய்கின்றான்.

இப்படி ஒரு நொடிக்குள் அந்த வண்ணக் காட்சிகளைப் பார்க்கும் நிலைக்கு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ளது.
1.ஒளி பாய்ச்சி ஒளி ஈர்க்கும்…
2.பார்வையால் படம் பிடிக்கும்…
3.ஒளி நிலை காணும்… விழி நிலையில் காணுகின்றோம்.

இதே போலத் தான் கனவுகளும் ஏற்படுகின்றன. காற்றலையின் அமில ஈர்ப்பு இந்த உடலின் மீது மோதுண்டு… சுவாசத்தின் ஈர்ப்புடன் இவ்வுடலின் அமிலத்தின் மோதலான பின்… ஆத்மாவின் தொடர்புடன் உடல் உறங்கினாலும் இவாத்மாவுடன் அமிலங்கள் மோதுண்டு அந்த மோதலினால் காட்சிகள் தெரிகின்றன.

உறக்கத்தில் விழி மூடிய நிலையில் எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்தாத அலை நிலையை உடல் சமைக்கும் அமில உராய்வின் காட்சி நிலைகள் கொண்டு… ஆத்மத் தொடர்புடன் செயல்படும் நிலைகளில் தான்… சம்பந்தம் இன்றிப் பல கனவுகள் வருகின்றது.

எண்ணம் கொண்டு செயல்படாத் தன்மையில் சுவாச அலையில் மோதும் அமிலத்தில் இவ்வுடல் எவ் அமிலச் சேர்க்கை எடுக்குமோ அதற்குகந்த ஈர்ப்பு அலைகள் சுவாச வட்டத்தில் மோதுண்ட பின் ஆத்மாவின் விழிப்பு நிலையில் அத்தகைய கனவுகளை எல்லாம் காணுகின்றோம்.

காட்சிகளைக் கண்ட நிலைகளில் சிலர் ஆவி பிடித்தது… அருளாடுகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்…! தனக்கே தெரியாத படி பல மொழிகளீல் பேசுவோரும் உண்டு.

ஆவி நிலை உணர்வு என்பது… இன்று மருத்துவத்தில் மன நோய் என்று உணர்த்தும் ஒரு சாராரின் விஞ்ஞான நிலையும்… தெய்வத் தொடர்பு கொண்டு பக்தி மார்க்கத்தாரால் அருளாடும் நிலையில் முருகன் வந்தான்… காளி வந்தாள்… என்று உணர்த்தும் நிலைக்கும் உள்ளது.

பேய் பிசாசு என்று பேயைக் கண்டேன்… இரத்தக் காட்டேரி வருகிறது என்று பயந்த நிலையும் மக்களிடையே உள்ளது.

அதே போல் அன்பு பாசப் பிணைப்புடன்… குடும்பத்தில் பற்றுடன் பல காலம் வாழ்ந்த முன்னோர்கள்… அவர்கள் ஆத்மா பிரிந்தவுடன்
1.குடும்பத்துடன் உறவாடும் நிலையில்
2.இறந்த பின்னும் அவர்கள் வருவது போன்றும் பேசுவது போன்றும்
3.சில நேரங்களில் குடும்பங்களுக்கு வழிகாட்டும் நிலை ஏற்படுத்திச் செல்வதும் நடக்கின்றது.

இது எல்லாம் எத்தொடர்பலையில் மனித ஆத்மாவின் எண்ணம் செயல் கொள்கின்றதோ… ஏற்கனவே பூமியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த ஆத்மாக்களின் அலை எண்ணத்தில் ஒன்றுபட்டவுடன் அவைகள் இயக்கத் தொடங்கும்.

அதாவது உடலுடன் உள்ள மனிதனின் எண்ணம் எதிலே அதிக எண்ணத்தைச் செலுத்திச் செயல்படுகின்றதோ அவ்வலை ஈர்ப்பின் நிலைக்கொப்ப உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஜீவ சக்தி கொண்ட அமில உணர்வுகள்
1.ஜீவ சக்தி கொண்டவர்களுடன் அவ்வலை மோதி
2.ஹிஸ்டீரியா என்றுணர்த்தும் மன நோய்க்கும்
3.பல மொழிகளில் பேசி அருளாடும் தெய்வ நிலைக்கும்
4.பேயாடும் நிலைக்கும்
5.முன்னோர்களைக் காணும் பாசப் பிணைப்பினால் வழி நடத்திச் செல்லும் நிலைக்கும் இயக்கத் தொடங்கும்.

ஆனால் மகரிஷிகளின் அலைச் சக்தியுடன் தொடர்புடன் நம் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டால் எத்தன்மை கொண்ட வேட்கை அலையிலும் பிறரின் ஈர்ப்பின் சொல் செயல் எண்ணங்களிலும் நம் ஆத்மா சிக்காமல் சமநிலை கொண்ட நற்குண சாந்த ஞான வீரத்தால் இவ்வாத்மாவின் வலுக் கூடிய தன்மையைப் பெறலாம்.

 

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.

அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி

காற்றிலே பரவிப் படர்ந்துள்ள அகஸ்தியன் மூச்சலைகளை நுகர… “குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி”

அகஸ்தியன் நேரடியாகப் பார்த்துணர்ந்த நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நீங்களும் காணுங்கள்

eternal light destinations

ஞானத்தை வளர்க்க உதவும் “உணர்வு” (உணர்ச்சிகள்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.ஜீவ சக்தி கொண்ட காந்த ஈர்ப்பு அணு வளர்க்கும்…
2.வளர்ச்சியின் வித்தான சரீரச் செயலின் ஜீவனுக்கு…
3.ஜீவாதார முக்கிய நிலையான “உணர்வு…” இல்லை என்றால் ஞானச் செயல் செயல்படாது.

உணர்வின் சமைப்பினால்தான் எச்செயலுக்கும் எண்ணத்தைச் செலுத்திட முடியும். எண்ணத்துடன் மோதும் அலையின் ஈர்ப்பிற்கு காந்த மின் தொடர் அலைகள் மோதுண்டு… அதன் பதிவு கொண்டு தான்… “ஆத்மா” ஜீவ சக்தியிலிருந்து தனக்கு வேண்டிய வலுவைப் பெறுகின்றது.

ரிஷிகளின் வளர்ப்பலையுடன் வளரும் சக்தியில்… “உயர்ந்த ஆதி சக்தியின் படைப்பு சக்தியைப் பெற்ற…” அவர்கள் படைப்பின் தொடரை நாம் முதலில் பெற்றுப் பழக வேண்டும்.

அடுத்து நாம் பெற்ற அந்தத் தொடர் அலையை நம்முடைய வளர்ப்பைக் கொண்டு வளரும் ஆத்மாக்களுக்கு நல் வழி காட்டிடல் வேண்டும். அவ்வலையின் தொடரை நாம் எடுத்து அந்தத் (நம்) தொடர்பின் அலையை ரிஷித் தொடர்பிற்குத் தந்திட வேண்டும்.

அதன் மூலம்… அந்த ரிஷி வளர்ப்பின் ஆதி சக்தியின் அனைத்து சக்திகளீலிருந்து வளரும் சக்தியை அவர்கள் பெற்றுச் சுழலும் சுழற்சி ஓட்ட அலையில்
1.உயர்ந்த ஒளி வட்டமுடன் கலந்து அந்த ஞான சக்தியைக் கொண்டு
2.தன்னுள் உள்ள இறை சக்தியை… இறை ஆத்மாவாக… ஆத்மலிங்க ஜோதியாக… அடையும் வழியை நாம் பெற வேண்டும்.

அதை அடைய வேண்டும் என்றால் இந்த வாழ்க்கையில் மோதும் எண்ண உணர்வை நாம் எடுக்கும் சமைப்பு பிறரின் ஈர்ப்பில் சிக்காமல் இருத்தல் வேண்டும். ஏனென்றால்
1.பிறர் செய்யும் தவறில் நாம் தண்டனை பெறுவது போன்று நம் உணர்வுகளை மாற்றிடாமல்
2.அவர்கள் செய்த நிலைக்கு நாம் தண்டனை பெற்றுச் செல்லும் நிலையிலிருந்து மீள வேண்டியது மிகவும் அவசியம்.

அத்தகையை நிலை பெற்று… நம் அலைச் சக்தியின் உயர்வலைகளைப் பிறர் மேல் செலுத்தி… மேல் நோக்கிய ஈர்ப்பில் ரிஷிகளின் சக்தியை நாம் வளர்த்தால்… நம் ஒளி ஈர்ப்பிலிருந்தும் சொல் ஆலையிலிருந்தும் வெளிப்படும் உயர்ந்த உணர்வலைகள் அங்கே பதிந்து… அவர்களும் வளர்வார்கள். பிறரின் சங்கட சோர்வும் எத்தன்மை கொண்ட மற்ற வழித் தொடரும் நம்மைப் பாதிக்காது.

எப்படித் திரவகத்தில் போடப்படும் பித்தளை செம்பு போன்ற மற்ற உலோகங்கள் எல்லாமே கரைந்தாலும் தங்கத்தின் நிலை கரைக்கப்படுவதில்லையோ அதைப் போன்று

1.இவ் ஆத்மாவின் வலுவைக் கொண்டு
2.ஞானத்தால் பயம் என்ற அச்ச உணர்வை நீக்கி
3.சாந்தத்தை ஞானம் கொண்டு வீரத்தால் செலுத்தும் எண்ணத்தின் சரீர உணர்வலையின் ஈர்ப்பு வழித் தொடரில்
4.காந்த மின் அலையின் தொடர்பலையை ரிஷிகளின் சத்தலையுடன் செலுத்தி
5.அவர்கள் வளர்க்கும் ஒளி நிலைத் தொடருடன் நாமும் ஐக்கியமாகலாம்.

மனிதனின் உயர்ந்த பண்புகள் எது…?

தீமைகளையும் துன்பங்களையும் போக்கும் உயர்ந்த சக்தியைப் பெறுவதும் அதை மற்றவர்களையும் பெறச் செய்வதும் தான் உயர்ந்த பண்பாகும்

சாமியையும் குருவையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை…!

 

இந்த மனித வாழ்க்கையில் எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமாவதில்லை.

1.அந்த அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால்

2.இருளை வென்று உணர்வை ஒளியாக்கும் தன்மை பெற முடியும்.

3.அதைத் தான் இந்த மனித வாழ்க்கையில் சொந்தமாக்க வேண்டும்.

 

ஏனென்றால் எந்த நிலைகளீல் வாழ்ந்தாலும் இந்த உடலும் சொந்தமாவதில்லை உடலால் சம்பாரித்த செல்வமும் நின்றதில்லை.

 

கோடிக் கோடி செல்வம் பெற்றிருந்தாலும்… பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்துச் சுகமாக வாழ்வேன்…! என்றாலும் அப்படிப்பட்ட அரசன் எவனும் இன்று இருந்ததில்லை. அவன் பேய் மனமாகத் தான் சென்றான்…. அவன் உணர்வுகளும் பேய் மனமாக மாறியது…!

 

அவனைப் போன்ற ஆசையைப் பின்பற்றியவர்கள் அனைவரும் அவன் வழியிலே சென்று மத வெறி கொண்டு மனிதனை மனிதனே அடித்துக் கொன்று… அதைக் கண்டு மகிழும் நிலையே இன்று உருவாகி விட்டது.

 

அரசன் அவன் எதிரிகளைக் கொன்று குவித்தான். பல வகையிலும் மதம் என்ற பேரால் பேதங்களை அவன் உருவாக்கினான்.

 

அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த உணர்வாக மதத்திற்குள் இனம் என்ற நிலைகள் பல இனங்களாக வளர்ந்து விட்டது. அவன் அவன் “தன் இனமே பெரிது…!” என்று மற்ற இனத்தைப் பழித்துப் பேசினான். அதனால் பழி தீர்க்கும் உணர்வுகளே வளர்ந்தது.

 

மனிதனுக்கு மனிதன் உருக்குலையச் செய்யும் நிலைகளும்… சிந்தித்து வாழும் நிலைகளும் செயல் இழந்து… சிந்தனையற்ற செயலாகவே நாம் இன்று வாழ்ந்து கொண்டுள்ளோம்.

 

சிந்தனையற்ற செயலை நாம் நுகரும் பொழுது

1.நஞ்சு கொண்ட உணர்வுகள் நமக்குள் வளர்ந்து

2.நஞ்சை உணவாக உட்கொள்ளும் நிலை வளர்ந்து

3.நஞ்சின் செயலாக்கங்களாகச் செயல்படும் நிலையும்

4.நஞ்சு கொண்ட உணர்வையே வளர்த்திடும் நிலையே வளர்கின்றது.

 

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட வேண்டும்…! என்று எமது குரு எனக்குள் பதிவு செய்திருந்தாலும் அவரை நமது குரு என்ற நிலைகளில் எண்ணி ஒவ்வொருவரும் நாம் வாழ்தல் வேண்டும்.

 

1.முன்பு எமது குருவாக இருந்தார்…

2.இந்த உணர்வின் தன்மை நீங்கள் நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் வழி சென்றால்

3.நமது குரு என்ற நிலையில் ஒன்று சேர்ந்து வாழும் நிலை வரும்.

4.சாமியையும் குருவையும் பிரித்து எண்ண வேண்டியதில்லை (இது முக்கியம்)

5.அருள் ஒளியின் தன்மை கொண்டு “நமது குரு…” என்ற நிலைகளில்

6.நாம் எல்லாம் ஒன்று…! என்ற நிலையில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

 

குரு அருள் துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும்… அருள் ஞானம் பெறுதல் வேண்டும்…! என்ற உணர்வை நாம் தியானித்து வளர்த்தல் வேண்டும்.

 

பகைமை என்ற உணர்வுகள் வந்தாலும் அது நமக்குள் வளராது தடுத்து அருள் ஒளியை நமக்குள் பெற்று

1.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும் என்ற உணர்வை ஓங்கச் செய்து

2.அருள் ஞானத்தை வளர்த்திடும் புவியாக நாம் மாற்ற வேண்டும்.

 

அருள் ஞானிகள் பிறந்த இந்தப் பூமியில்… அருள் ஒளியின் சுடர்களை எண்ணி…

1.இந்தியா என்ற எல்லையை எண்ணும் பொழுதெல்லாம்

2.ஒவ்வொரு மனிதனின் மனமும் மாறி

3.அருள் ஒளிச் சுடராக மாறும் நிலைக்கு வளர வேண்டும்.

 

நாம் எல்லாம் உலகுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வளர வேண்டும்…!

நாம் மிகத் திறமைசாலியாக இருந்தாலும் அறியாமல் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு பயிற்சி வேண்டும்

உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோமா…?

அறியாைல் வரும் துன்பங்கமையும் தீமைகமையும் பிரிக்கக்கூடிய பயிற்சி

soul-protection-method and relief

கேட்க விரும்புவோருக்கு இந்த ஞான வழியினை எடுத்துச் சொல்லி வழி காட்டுங்கள்… விரும்பாதவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை…!

 

விஞ்ஞான உலகிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்குண்டான நிலைகள் இதைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இதை உபதேசிக்கின்றோம்.

யாம் உபதேசிக்கும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் விளையச் செய்தால்
1.சில அற்புதங்களை உங்களால் செயல்படுத்த முடியும்
2.அதனால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி வரும்.

நீங்கள் சொல்லி… ஒருவருக்கு நன்றாகி விட்டால் உடனே சந்தோஷம் வந்து
1.உங்களுக்குள் நல்லதை உருவாக்கும் அந்த அணுக்கள் விளையும்.
2.அந்த நிலைக்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்.

நீங்கள் தயாரானால் தான் நீங்கள் விடும் அந்த உயர்ந்த மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்திலே படரும். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த உயர்ந்த நிலைகளை வெளிப்படுத்தும் பொழுது இந்தக் காற்றலைகளிலே அபரிதமாகப் பரவும்.

அந்த உணர்வுகள்… நல்லதை எண்ணி ஏங்கி எடுப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

ஒருவருக்கு இந்த அருள் ஞானத்தைச் சொல்லி முறைப்படி எடுங்கள் என்று சொல்லும் பொழுது உங்களுக்குள் சமைத்திருந்தால் தான் அங்கே கிடைக்கும். ஏனென்றால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் “மிகக் கடினமானது…!”

அந்த ஞானிகளின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் சமைத்து “மற்றவர்கள் பெறவேண்டும்” என்று அதைப் பதித்து இந்த உணர்வை நம்முடன் தொடர்பு கொண்டவர்களின் நிலையில் இதன் வழி எடுக்க வைக்க வேண்டும். இப்படி ஒரு பழக்கங்கள் வர வேண்டும்.

இப்படி நாம் பழகி விட்டால் நாளை வரும் நஞ்சிலிருந்து எல்லோரும் மீளலாம். சகோதர உணர்வை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

1.குறைகளைக் கூறும் நிலையை அடியோடு விட்டுப் பழக வேண்டும். அதை நீக்கிடல் வேண்டும்
2.குறைகளை யாரும் வேண்டும் என்று செய்வதில்லை.
3.சந்தர்ப்பத்தால் அவர்களுக்குள் நுகர்ந்த உணர்வுகள் தான் அவர்களைத் திசை திருப்புகின்றது.

அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும்… அருளாற்றல் அவர்கள் பெறவேண்டும்…. மெய்ப் பொருள் காணும் நிலைகள் வளர வேண்டும் என்று நாம் உடனுக்குடன் அதைப் பக்குவப்படுத்தி அருள் உணர்வைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில்… இப்படிச் சொல்வது நமக்கு நல்லது… நம்மை அறியாது இயக்கும் நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்…! என்ற உணர்வினை உயர்ந்த உணர்வுடன் எண்ணிச் சொல்லுங்கள்.

1.இதை எல்லாம் கேட்போருக்குச் சொல்லுங்கள்.
2.கேட்காதவருக்குச் சொல்ல வேண்டாம்…!
3.இவன் என்னமோ “பெரிய மனிதன்” மாதிரி நமக்குப் புத்தி சொல்ல வந்து விட்டான்…! என்று இதிலேயும் ஒரு உணர்வு வந்துவிடும்.

அந்த உயர்ந்த உணர்வுகளை மனதில் எண்ணி நாம் வளர்த்துக் கொண்டால் அவர்கள் பகைமை உணர்வு… அவர்கள் செய்யும் குறைகளையோ சொல்லவிடாது நமக்குள் தடுக்கும்.

 

இல்லை என்றால் அந்தக் குறையின் உணர்வு பதிவாகிவிடும். ஒரு நான்கு தடவை சொன்னால் குறையை வளர்த்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அந்த அணுக்கள் சேரச் சேர நம்மையும் குறை கொண்டவராக வளர்க்கும்.

அந்தக் குறை உணர்வுகள் நமக்குள் அதிகமாகிவிட்டால் கண்டிப்பாக நோயின் தன்மை வளரத் தொடங்கும். இதைப் போன்ற விபத்துகளிலிருந்து எல்லாம் நாம் தப்புதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் குறுகிய காலமே வாழ்கின்றோம்
2.இதற்குள் நிறைவான வாழ்க்கையாக… அகண்ட அண்டத்தில் என்றுமே ஏகாந்த நிலைகள் கொண்டு வளர்தல் வேண்டும்.

இதற்காக வேண்டித்தான்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஆலயத்தில் நற்பண்புகளை வளர்க்கச் செய்து எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற உயர்ந்த பண்புகளை ஞானிகள் நம்மை வளர்க்கச் செய்தனர்.

மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை… சந்தர்ப்பத்தால் அந்த நல்ல குணங்கள் மடிவதிலிருந்து மீள நாம் உயர்ந்த சக்திகளை அந்த ஆலயங்களில் எண்ணி எடுக்கும்படி வழிப்படுத்தினார்கள்.

ஆனால் இன்று ஆலயத்திற்குச் செல்பவர்கள்
1.தனக்குத் தான் கேட்கின்றார்கள்…!
2.மற்றவர்களை எண்ணும்போது எனக்குத் தொல்லை செய்தான் என்று வேதனையைத் தான் எடுக்கின்றார்கள்
3.ஆலயத்தில் ஞானிகள் காட்டிய நற்பண்புகளை உணரவில்லை.

இந்த ஆலயம் வருவோர் எல்லாம் நலம் பெறவேண்டும் என்று ஞானிகள் வகுத்துக் கொடுத்த நல்ல நிலைகளை மாற்றிவிட்டோம். அன்றைய அரசர்கள் காட்டிய நிலையைத் தான் இன்று கடைப்பிடித்துக் கொண்டுள்ளோம்.

அரசனுக்காகப் போராடிய உணர்வுகளும் அந்த மந்திரங்களைச் சொல்லி அந்த உணர்வின் தன்மை நாம் வளர்க்கப்படும் பொழுது இறந்த பின் அந்த மந்திரத்தால் அவர்கள் நம்மைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

இப்படி… முந்தி அந்த அரசர்கள் கைவல்யம் ஆனோம். இன்று அதன் வழி வந்த மந்திரவாதிகள் கையிலே சிக்குகின்றோம். அவன் ஆட்டிப்படைக்கும் பொம்மையாகத்தான் மாறுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் ஒவ்வொருவரும் மீள்தல் வேண்டும்.

தீமைகளைச் சுட்டுப் பொசுக்க ஆத்ம சுத்தி என்ற துப்பாக்கியைக் கொடுக்கின்றோம்

 

கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு… ‘’புலி வருது… புலி வருது’’ என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…?

 

துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம் சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம். ‘’ஐய்யய்யோ…!  புலி வருது… புலி வருது…!’’  என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

 

இதைப் போலத்தான் “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும், ‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்’’.

 

உதவி செய்தாலும் அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள், உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி ‘’ஆத்மசுத்தி’’ என்ற இந்த ஆயுதத்தை எடுத்து ‘’ஈஸ்வரா’’ என்று புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரை வேண்டி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, உடல் முழுவதும் படர்ந்து, இரத்தங்களில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன், கண் திறந்து ஒரு நிமிடமும், கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

அப்படி எடுத்துக் கொண்டபின் கண்ணைத் திறந்து துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது,

 

நாம் நகை வாங்கியபின் அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும், செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல அடுத்த நிமிடமே கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது.

      

நமக்குள் தீயது சேராது தடுக்கும் இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும்.

 

‘’தியானம்’’ என்பது எது…? 

 

நமக்குள் கெட்டதைச் சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெறவேண்டும். இதுதான் தியானம் என்பது.

 

பக்தியில் என்ன செய்கின்றோம்…?

 

நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள், ஆனால் தியானம் என்பது, நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.

 

பக்தி என்பது நல்லதை நினைப்பது.

 

தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு, நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.  இந்த சக்தி இல்லையென்றால் செயல்படுத்த முடியாது.

 

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்து, வாக்கின் நிலையாக ஆத்ம சுத்தியை கடும் ஆயுதமாக யாம் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

 

நீங்கள்  எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளில் துன்பம் என்று பார்க்கின்றீர்களோ… நுகர்கின்றீர்களோ… கேட்கின்றீர்களோ… அவைகளையெல்லாம் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான்… இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகள்.

kayyakalpa siddhu

தொட்டவுடன் பொன்னாகும்…! என்ற அன்றைய காவியக் கருத்தில் சொல்லப்பட்ட உண்மை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கதைகளிலும் காவியங்களிலும் “தொட்டவுடன் பொன்னாகும்…!” சில வழி முறைகளை முந்தைய காலங்களில் உணர்த்தியதன் உண்மை நிலை என்ன…?

ஒரு பொருளைத் தொட்டால் அந்தப் பொருள் எதுவாகிலும் பொன்மயமாக மின்னுவதாகச் சொல் வாக்கிய வழி முறையிலும் காவியக் கதைகளிலும் உண்டு.

ஒரே மரத்தில் பறித்த எலுமிச்சங்கனியைப் பத்து பேர்களிடம் கொடுத்து வைத்திருக்கச் சொல்லி விட்டுப் பிறகு பார்த்தோம் என்றால் அவரவர்கள் பெற்ற அமிலச் சேர்க்கையின் உருவக உஷ்ண அலையின் வெப்ப நிலைக்கொப்ப அந்த கனியின் தன்மை மாறுபடும்.

இதைப் போன்றே…
1.உயர் காந்த சக்தியின் எண்ண வலுக் கொண்டு
2.ஞானத்தின் வழி சக்தியால் உயர்ந்தோரின் தெய்வத் தொடர்புடன் சங்கமித்த வழித் தொடரில்
3.எவ்வலையையும் இச்சரீர இயக்கம் எடுத்துச் சமைத்து ஆத்மாவை வளர்க்கும் ஆத்ம ஜோதி நிலை கொண்டவர்களினால்
4.ஒரு பொருளை எவ்வமிலத்தினால் எவ் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தாலும்
5.சில அலைச் சக்திகளைக் கொண்டு அதனை உருமாற்றவும்
6.சில நிலைகளைச் சுட்டிக் காட்டும் தன்மையை உருவாக்கும் நிலையையும் உருவகப்படுத்தலாம்.

இந்நிலையில் ரிஷித் தன்மை கொண்ட ரிஷிகள் பலர் காயகல்ப சித்து என்ற சில சக்தி நிலைகள் பல செய்து காட்டினர்.

போகர் சித்து நிலை பெற்று ரிஷித் தன்மை வலுக்கூடிய நாளில் அவர் எடுத்த அலைகளின் சக்தியினால் இந்தப் பூமிக்குப் பல மூலிகைகளை மருத்துவச் செயலுக்காகப் பூமியில் பதிய வைத்து வளரும் தன்மையை உருவாக்கினார்.

இந்தப் பூமியில் சித்து நிலை பெற்று வளர்ந்த பல மகரிஷிகள்…
1.இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் சக்தியை
2.தான் பிறப்பெடுத்து வளர்ந்த பூமி அலையின் பதிவில்
3.ஜீவாத்மாககளின் வளர்ப்புக் காப்பக நிலைக்காக
4.பல ஆற்றல் மிக்க சக்திகளைப் பூமியில் பதித்து வளர வழி காட்டுகின்றனர்.

 

ஆனால் தன் இனத்தின் உண்மை குண நிலையைப் புரியாமல்… உண்மை உயர்வின் வழியில் செல்லாமல்… பூமிப் பிடிப்பில் புதையுண்டு மீண்டும் மீண்டும் பிறவிக்குள்ளேயே சுழன்று வாழ்கின்றனரப்பா…!

மீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்

குரு நமக்குக் கொடுக்கும் அருள் வாக்கைப் பேணிக் காக்கின்றோமா…? 

மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே நல்லதாகும்

sheep dung

டி.பி. கேன்சர் இருதய அடைப்பு போன்ற கடுமையான நோய்களைப் போக்கும் மருத்துவம்

வெள்ளாடு நஞ்சினை அடக்கும் சக்தி பெற்றது. விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொண்டுக நல்ல நிலையை அது வெளிப்படுத்துகின்றது.

அந்த வெள்ளாட்டுப் புழுக்கையை எடுத்து நன்றாகக் காய வைத்து… லேசான நிலைகளில் சூடாக்கி… அந்த ஆவி வருகின்ற மாதிரி… கொதிகலனாக ஆகாதபடி அதிலிருந்து ஒரு வெப்பம் வரும் பொழுது அதை நுகர்ந்து பாருங்கள்.

அதைச் சுவாசித்து உடலுக்குள் செல்லப்படும் பொழுது நீங்கள் மருந்து சாப்பிடுவது போன்று உடலில் அறியாது சேர்ந்த விஷத்தை இது ஒடுக்கும் வல்லமை பெறுகின்றது.

1.அந்த ஆவி இரத்தநாளங்களில் செல்லப்படும் பொழுது
2.டி.பி. ஆனாலும் கேன்சர் ஆனாலும் மற்ற கடும் நோயாக இருந்தாலும் அது எல்லாம் குணமாகும்
3.இருதய வாயிலில் அடைப்பாக இருந்தாலும் கூடக் கொஞ்ச நேரம் சுவாசித்துப் பழகுங்கள்… குணமாகும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தை எடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களிலே கலந்து எனக்குள் இருக்கும் தீமைகள் அகல வேண்டும் என்று தியானியுங்கள்.
1.எனக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.உங்களுக்கு எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று எண்ணி அதைச் சுவாசியுங்கள்.

இன்று ஆஸ்த்மா நோயுள்ளவர்கள் அதிகம் உண்டு. இது எல்லாம் பரம்பரையாக வருவது. சர்க்கரை நோயும் கூட இப்பொழுது பரம்பரையாக வருகின்றது.

பிறந்த குழந்தைக்கே சர்க்கரைச் சத்து இருக்கிறது என்று சொல்கிறார்கள். மூன்று வயது நான்கு வயதிலேயே இன்சுலின் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் தாய் வழியில் வருகின்றது.

காசு இருக்கின்ற வரையிலும் போடுகின்றோம். காசில்லாதவர்கள் விட்டு விடுகின்றோம். போன பிற்பாடு ஐயோ.. இந்த மாதிரி இருந்தானே…! போய் விட்டானே,,,! என்று சொல்கிறோம். அந்த உணர்வை உடலில் எடுத்து இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்கின்றோம்.

ஆக குறைக்க வழியில்லை…!

நான் கோவிலுக்குச் சென்றேன்… அதைச் செய்தேன்… விரதம் இருந்தேன்…! என்று இந்தப் பாவத்தைப் போக்க சிலதுகளைச் செய்து “காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கும்” இந்த நிலைகளில் தான் இன்று இருக்கின்றது.

இது எல்லாம் நம் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. வளர்ச்சி பெற்ற அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்து பழக வேண்டும்.

உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் மற்ற வலு கொண்ட உணர்வை நுகர்ந்து நுகர்ந்து அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள இந்த உணர்வு வளர்ச்சி கொண்ட பின் அதன் உடலிலே புகுந்து அதன் தன்மைக்கு மாறுபட்டு வருகின்றது.

இதைப் போல்…
1.மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்ற
2.மெய் ஞானிகள் பாதையில் நாம் எடுத்து அவர்கள் உணர்வினை வளர்த்துக் கொண்டோம் என்றால்
3.அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றிவிட்டு
4.பத்தாவது நிலை என்ற முழுமை அடைகின்றோம்.

அதைத்தான் “வைகுண்ட ஏகாதசி” என்று சொல்வது. ஏகாந்த நிலைகள் பெறும் தகுதியும் நமக்கு வருகின்றது.

மனிதனாக ஆன பின் ஏகாந்தம்… அகண்ட அண்டத்தில் எத்தகைய நஞ்சு வந்தாலும் ஒளியாக மாற்றிடும் திறன் நாம் பெறுகின்றோம்.

என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது.. உங்கள் சக்தியும் அவசியம் வேண்டும்…!

 

அந்த ஞானிகள் சொன்ன அந்த உண்மையின் சக்தியை உங்களுக்குள் இந்நேரம் வரையிலும் யாம் உபதேசித்தது. இந்தக் கூட்டுத் தியானத்தில், எல்லோருடைய அருள் வாக்கும், யாம் மட்டுமல்ல, உங்கள் அனைவருடைய அருள் வாக்கும் சேர்க்கப்படும் பொழுதுதான் அந்த வலு கூடுகின்றது என்று நமது குருநாதர் சொன்னார்.

 

உன்னிடம் எவ்வளவு பெரிய சக்தி கொடுத்தாலும், ஒரு விதையைக் கொண்டு போய்ப்போட்டு அந்த விதை பல விதைகளாக விளைந்தால் தான், சாப்பாட்டிற்கு உதவும். இல்லையென்றால், “ஒரு விதை ஒன்றுக்குமே உதவாதுடா…!” என்று நமது குருநாதர் எம்மிடம் சொன்னார்.

 

ஒரு நெல்லை வைத்துக் கொண்டு பசியைப் போக்கிவிடுவேன் என்று சொன்னால் முடியுமோ…? முடியாது. ஒரு நெல்லை வைத்துச் சாப்பிட முடியாது. அந்த நெல்லை விளைய வைத்து அது பல நெல்லாக ஆன பின் தான் சாப்பிட முடியும்.

 

அதே மாதிரிதான் உங்ககளிடம் உள்ள துன்பத்தையெல்லாம் போக்க வைக்கிறோம்.

நன்றாக இருக்கின்றேன்.

நன்றாக இருக்கின்றேன்,

நன்றாக இருக்கின்றேன். என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

அவ்வாறான சொல் வரவேண்டும்.

 

உங்கள் பேச்சையும், மூச்சையும் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றவர்களுக்கெல்லாம் நல்லது விளைய வேண்டும். அப்படித்தான் நல்லதை விளைய வைக்க முடியும். இதைத்தான் எமது குருநாதர் சொன்னார்.

 

அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உனக்குள் வளர்த்து, நல்ல வித்தினை அவர்களுக்குள் பதியச் செய்து அந்த வித்தினை நீ எப்படி வளர்க்க வேண்டும்…? என்று சொன்னார்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

பிறர் உணர்வு நம்மை அறியாமலே இயக்குவது போல் ஞானிகளின் உணர்வை அறியாமலே எப்படிப் பெறுவது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.ஒருவர் நீர் அருந்தும் பொழுது நாம் பார்த்தால் நமக்கும் தாக நிலை ஏற்படுகின்றது.

2.ஒருவர் கொட்டாவி விட்டால் அதே நிலை நமக்கும் ஏற்படுகின்றது,

 

ஜீவ சக்தியில் சரீர பிம்ப வாழ்க்கை நிலையில்.. உணர்வுடன் கூடிய எண்ணத்தில் செயல்படும் வழிமுறை ஆற்றல்… மனிதச் சக்திக்கே ஒருவருடன் ஒருவர் கூடி வாழும் வாழ்க்கையில்… இவ்வீர்ப்பின் தொடர்பில் “ஒருவரை ஒத்து” ஒருவரை இப்படித்தான் சாடுகின்றது.

 

இதே போல் தான் ஆத்ம இயக்கத்தின் தொடர்பிலும் உண்டு. தாம்பத்ய எண்ண வாழ்க்கையில் ஆண் பெண் ஒத்த இல்லற உணர்வால் ஒருவரின் அலைத் தொடர்பைப் பிறிதொருவர் அதிவிரைவில் எடுக்கும் வல்லமை கூடிய இல்லற எண்ண ஒற்றுமைகள் நடைபெறுகின்றன.

 

1.உயர் அலையின் தொடர்பலையால்

2.காந்த மின் அலையின் வீரிய உயர் குண வழித் தொடரில்

3.ஜெபம் கொண்ட சக்திமிக்க வாழ்க்கை நிலை ஏற்படும் பொழுது

4.இரண்டு எண்ணங்களின் ஒருமித்த கூட்டு ஐக்கிய குண நிலை அமையும் பொழுது

5.அத்தொடரினால் பெறப்படும் உயிராத்மாவின் வலுவில் கூட்டு ஐக்கியம் கொண்டு

6.சிவசக்தி… என்ற “ரிஷிபத்தினி” நிலையைப் பெற முடியும்.

 

அந்நிலையின் வழித் தொடரில் தனித்த அலைத் தொடர்பைக் காட்டிலும் வளர்க்கும் தன்மைக்கு வளர்ச்சி பெறும் ஜீவ சக்தியைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் நிலை பெற முடியும்.

 

மனித ஆத்மாவின் அலைச் சக்தி எண்ணத்தின் ஆவி நிலையின் பதிவு நிலை… பூமி இழுத்து வெளிப்படுத்தும் அலையுடன் ஒன்றிய வாழ்க்கை நிலையில்… இவ்வுணர்வின் எண்ணத்தின் சரீர அலைத் தொடர்பு இந்த உடல் செல்லும் இடங்களில் எல்லாம் “பூமியின் ஈர்ப்பில் பதிந்து கொண்டே உள்ளது…!”

 

அதைப் போன்றே…. ஒத்த நிலையிலோ மாற்று நிலையிலோ உள்ளவர்களுடன் கூடிய எண்ண உறவாட்டத்தில்… பிறரின் அலை உணர்வை… நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கத்தான் செய்கின்றோம்.

 

எப்படி தாகம் எடுப்பதும் கொட்டாவி விடுவதும் பிறரின் தொடர்பு கொண்டு உள்ளது போன்றே

1.பிறர் வளர்த்த அலைத் தொடர்பை

2.ஒளி பாய்ச்சி உணர்வும் எண்ணமும் ஈர்க்கும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல்

3.பிறரின் சோகத்தையும் சஞ்சலம் சந்தோஷம் எதுவாகிலும் எடுக்கும் நிலையில் தான்

4.இன்றைய வாழ்க்கை நடைமுறையில் நாம் உள்ளோம்.

 

அதை மாற்றி எண்ணத்தால் எடுக்கும் ஞான உணர்வின் வழி முறையில் உயர்ந்த ரிஷித் தொடர்புடன் செயல்படும் வாழ்க்கை வழிமுறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

அப்படி அமைத்துக் கொண்டோமானால்

1.இவ்வாத்ம அலையை ஒளிரும் சக்தியில் வலுக் கொண்டு இயங்க

2.நாம் வளர்த்த உயர் தொடர்பின் வலுத் தன்மையுடன்

3.மாற்று நிலை கொண்ட பிறருடன் கலந்துறவாடும் எண்ண நிலை ஏற்பட்டாலும்

4.தணலில் போடும் பொருளைப் போன்று அவை நம்மைச் சாடாமல் பஸ்பமாக்கும் தன்மைக்கு

5.நம் ஆத்ம அலையின் வலு நிலை கூடிவிடும்.

பேரண்டமும் பேருலகமும் அன்னை தந்தையிடம் தான் 

அம்மா……! என்று எண்ணிப் பாருங்கள்…! தாய்க்குண்டான சக்தியைப் பார்க்கலாம்…!

சாமிகள் தன் தாயின் கருவில் பெற்ற குரு அருளை உருக்கமாக வெளிப்படுத்திய நிலை 

Power of Eswarapattar

என்ன வாழ்க்கை இது…? என்று நரகலோகத்திலே தான் பெரும்பகுதிப் பேர் வாழ்கின்றனர்…

 

காட்டிற்குள் சென்று எத்தனையோ சிரமங்கள் பட்டேன்… துன்பங்களும் பட்டேன்…! அங்கே குருநாதர் இயற்கையின் உண்மைகளை எல்லாம் அறியும்படிச் செய்தார்.

அதை அறிந்து… அந்த உணர்வைப் பதிவு செய்து… அந்த உணர்வை வளர்த்துக் கொண்டேன். அப்படிப் பெற்ற ஞானிகளின் உணர்வுகளைத்தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இதை எல்லாம் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதன் வழியில் இப்பொழுது முன்னுக்கு வந்தாலும் “பற்றுள்ளவர்கள்” என்ன செய்கின்றார்கள்…?

இரவு நேரத்திலே சாமி…! எனக்குத் தலை வலிக்கிறேதே… உடல் வலிக்கிறதே… நெஞ்சு வலிக்கிறதே… என்னைக் காப்பாற்ற மாட்டாயா…? என்று தான் நினைக்கின்றார்கள்.

இப்படிச் சாமியைத்தான் (ஞானகுரு) நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெறவேண்டும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களிலே கலக்க வேண்டும்
3.தீமைகளை வென்றிடும் அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.இப்படி எண்ணும்படிப் பல முறை நான் சொன்னாலும் அப்படி எண்ணவே மாட்டேன் என்கிறார்கள்.

நான் தான் பதிவு செய்தேன் என்று சாமியைத்தான் நினைக்கின்றார்கள். இப்படி ஒரு ஆயிரம் பேர் சேர்ந்து நினைத்தால் அந்த உணர்வு தாக்கினால் எப்படி இருக்கும்…? அந்த ஆயிரம் உணர்வுகள் என்னைத் தாக்கும் பொழுது
1.அது அத்தனையும் நான் சமாளிக்க வேண்டும்
2.என்னையும் காக்க வேண்டும்.. உங்களுக்கும் அந்த அருள் சக்தி கொடுக்க வேண்டும்.
3.குருநாதர் எனக்குக் கடுமையான வேலையைத்தான் கொடுத்தார்.

ஆக… என்னைப் பாதுகாக்க குருநாதர் அருளைக் கொடுத்தார்… அதை வளர்த்து என்னைக் காத்துக் கொள்கின்றேன்.

அதே மாதிரி உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு என்றைக்குமே உறுதுணையாக வரும். அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெறமுடியும்.
1.குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்\
2.அதைக் கிடைக்கும்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
3.சாமி ஒன்றும் கொடுக்கவில்லை என்று எண்ண வேண்டியதில்லை.

ஏனென்றால் இந்த வாழ்க்கை என்ன…? என்று அறிந்து கொண்ட பின் நாம் இனி எப்படி வாழ வேண்டும்…? என்று உணர்ந்து.. இந்த உடலுக்குப் பின் “பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்..” என்று அதைத் தான் பெற முயற்சிக்க வேண்டும்.

இன்னொரு பிறவி என்று மீண்டும் இங்கே வந்தாலோ நரகலோகம் தான் செல்கிறோம். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று இருப்பது அந்த நிலை தான்…!

1.மனித உடல் பெற்றாலே “சொர்க்கலோகம்” என்று சொல்வார்கள்.
2.ஆனால் அது பண்டைய காலமாகப் போய்விட்டது (இன்று நரகலோகமாகத்தான் உள்ளது)

நம் உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனையை உருவாக்கும் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலேயும் இன்றூ நமக்குள் போர் முறைகளே வருகின்றது.

நல்ல குணங்களுக்கும் தீமையான குணங்களுக்கும் மற்றவர்கள் செய்யும் உணர்வை நமக்குள் நுகர்ந்த பின் பெரிய போரே நடக்கின்றது.
1.இந்தப் போரினால் மனக்கலக்கங்கள் வருகின்றது.
2.உடல் நோய்கள் வருகின்றது. சிந்திக்கும் திறன் இழக்கின்றது,

அதன் வழியில் நம் உடலுக்குள் இருக்கும் நாம் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி நமக்குள் உணர்வு இயங்கி நம்மை அந்த வழிக்கே அழைத்துச் செல்லும்.

கடைசியில்… “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் இந்த உடலையே அழித்திடும் நிலைக்கும் திருப்பி விடுகின்றது.

இது எல்லாம் நாம் செய்யவில்லை, நாம் நுகரும் உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் எது உணர்வோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குகின்றது… நம் உயிரே தான்…!

ஆனால் அருள் ஒளி பெறவேண்டும் என்றும்… இருளை அகற்ற வேண்டும் என்றும்… அருள் ஞானத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதித்த பின்
1.இதை மீண்டும் மீண்டும் நினைவுக் கொண்டு வந்து
2.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
3.இந்த உணர்வின் தன்மை வாழ்க்கையில் வரும் போரினை அடக்கும்.
4.எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலைகளுக்குக் கொண்டு வர முடியும்.

இந்த உணர்வு வலிமை பெற்றுவிட்டால் நாம் எந்த அருள் உணர்வை வலுப் பெற்றோமோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் நம்மைச் “சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்…!”

நம் நல்ல குணங்களுக்குத் தங்கத்தைத்தான் முலாம் பூச வேண்டும் பித்தளையை அல்ல…!

 

உதாரணமாக… நம்முடைய நண்பர் ஒருவர் நம்மிடம் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது, நமது உடல் சுருங்குகின்றது. நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.

 

அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது, அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று, அது உமிழ்நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து, நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து, நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கலந்துவிடுகின்றது.

 

அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும்கூட அவருடைய துன்பமான உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து, இரத்தத்துடன் கலந்துவிடுகின்றது.

 

அப்படி இரத்தத்தில் கலந்து செல்லும்போது, அதை நமது நுரையீரல், சுவாசப்பை எடுக்கப்படும் பொழுது, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உறுப்புகளில் முதலில் ஏற்படும்.

 

அப்பொழுது, அதைப்போல அந்த இரத்தத்தைச் சுத்தப்படுத்தப் போகும்போது, கிட்னி சரியாகச் சுத்தப்படுத்தாது. அவ்வாறு சுத்தப்படுத்தாமல், அனுப்பும்போது, நம் உடல் முழுவதற்கும் இரத்தங்கள் செல்லும் பொழுது, நமது உடலுக்குள் அது வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.

 

அந்த வேதனையான உணர்வுகள் செல்லும்போது, நாம் எந்த நல்ல குணங்களைக் கொண்டு எடுத்தோமோ, அந்த நல்ல குணத்துடன், இது இரண்டறக் கலந்துவிடுகின்றது.

 

உதாரணமாக, ஒரு தொட்டியில் நீரை ஊற்றி, ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு, அந்த நீருக்குள் போட்டுவிடுவார்கள். அதே சமயம், ஒரு செம்புக் கட்டியுடன், எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து, அந்த நீருக்குள் போட்டுவிடுவார்கள்.

 

செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டி தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும்பொழுது தங்கத்திலிருக்கக்கூடிய தங்க சக்திகள் கரைந்து, அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக், அந்தத் தங்கத்தைக் கவர்ந்து இந்த செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும். ஆக உள்ளே இருக்கக்கூடிய செம்பு, கறுப்பதை விடுத்து, இந்தத் “தங்கத்தின் முலாமாக ஆகி” அது தெளிவாகின்றது.

 

ஆனால் அதே சமயம் தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்துச் செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்துச் செம்பை ஒரு நீருக்குள் போட்டால் என்ன செய்யும்? செம்பின் சக்தி தங்கத்திற்குள் முலாம் பூசும்போது அடிக்கடி செம்பு கருக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.

 

உங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டு நீங்கள் ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும்போது நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ அந்த நல்ல குணத்தில், இது முலாம் பூசிவிடும்.

 

ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும், அவர்படும் துன்பத்தின்மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி “உனக்கு எப்படி வந்தது” என்று கேட்கப்படும்போது அந்த நல்ல உணர்வுகளுடன் அவரிடம் இருந்த நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.

 

நமக்குள் நல்ல உணர்வான நல்ல குணங்கள், நோயற்ற நிலையும், தெளிவான நிலைகளும், உடலில் தெம்பாக இருந்தது. ஏனென்றால், தங்கம் எப்படி பளப்பளப்பாக இருந்ததோ, அதைப் போல நமது தெளிவான எண்ணங்களினுடைய நிலைகளில், அவருடைய குணங்கள் கலக்கப்படும் பொழுது, நம்மை அறியாமலேயே, இப்படிச் சோர்வின் தன்மை அடைந்துவிடுகின்றோம்.

 

இது நாளாக நாளாக, நமக்குள் நோயாக வந்து சேர்ந்துவிடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது. ஆக, நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம். அதைத் துடைக்க வேண்டுமல்லவா..?

 

அதைத் துடைப்பதற்குத்தான், இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். துன்பத்தைக் கேட்டறிந்தபின் உடனே “ஈஸ்வரா…” என்று நம் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து, நம் உடலுக்குள் செலுத்தி, நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி தியானித்து, அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

துன்பப்பட்டவர்கள், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று துன்பத்திலிருந்து விடுபடும் அருள் சக்தி அவர்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் தியானித்து அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

Atma awakening

ஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சகல ஜீவ சக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித் தன்மையின் விழி நிலை (கண் பார்வை) ஜீவராசிகளுக்குத்தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றைய தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டது தான். இருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாக மாறி மாறி வரும் நிலை வளர்ப்பு… அழிவு… வளர்ப்பு… என்றே வந்தது.

அதன் வளர்ச்சி நிலையில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு உயிரணுவாகத் தோன்றியது. உயிரணுவாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றூம் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து… அழிந்து… சக்தி கொண்டு… பல நிலைகளுக்குப் பிறகு ஜீவனுள்ள சரீரம் பெறுகிறது.

சரீரம் பெற்ற நிலையில் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்ற ஜீவராசிகளின் வளர்ச்சியில் விழிநிலையில் ஒளி காணும்… உருவக எதிர் நிலையை… அறியும் ஆற்றல் வருகின்றது. அதாவது
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு
2.விழியின் பாப்பாவில் படம் பிடித்து
3.அதனதன் உணர்வு கொண்ட எண்ணத்தில் அறிந்து செயல்படும் வாழ்க்கை நிலை நடக்கின்றது.

ஆனால் சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவ சக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம் தான் உண்டு. இந்தக் காற்றலையில் தான் சுழலும்.

ஜீவன் பிரிந்த ஆத்மாக்கள் காற்றலையில் மிதந்து கொண்டே இந்தப் பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அந்த ஆத்மாக்களுக்கு இல்லை. சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் அவை சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்…
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
2.அவ்வலையின் உணர்வு இவர்களின் மேல் மோதி
3.அந்தத் தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவ காந்த அலைத் தொடர்பு கிட்டியவுடன்
4.அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர் கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு “பார்க்கும் நிலையானது” எப்படி..?

ஒரு புகைப்படக் கருவியைக் கொண்டு (CAMERA) அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்பத் தாள்களை (FILM) அக்கருவியுடன் பொருத்தி அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்தால் எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று தான் ஆவி ஆத்மாக்களின் செயல்கள் உண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலை தான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகைத் தானே காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக்கண்ணாடியிலோ நீரிலோ தான் பார்க்கும் நிலை உண்டு.

ஆதம தியான சக்தியைக் கொண்டு… ஞான திருஷ்டியால்… விழியை மூடிக் கொண்டு… ஞானத்தால் பெறும் தியான சக்தியில்… ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்…
1.இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித் தொடர் கொண்டு
2.ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலைக் காட்சிகளை
3.எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித் தன்மை… இவ்வாத்ம அலையைப் பெற்றுவிட்டால்
4.ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

அத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் இச்சரீரக் கூட்டின் சமைப்பில் காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக் கூடுகள் பெற்றிருக்க வேண்டும்.

அப்படிப் பெற்ற தன்மை கொண்டு தான்…
1.ஆத்மாவின் விழி நிலையின் ஜோதி நிலை கொண்டு
2.நம் வளர்ப்பின் தொடருக்கு வழி காட்டிய ரிஷிச் சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
3.மகரிஷிகளின் அருள் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே…!

ஆகவே பிறவா வரம் கொண்ட ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தீர்கள் என்றால் உயர்வு கொண்ட அந்த “ஒளி நிலையின்…” உண்மை புரியும்.

என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடமால ஒளியாக ஆகும் அந்த ஆசை வேண்டும் ஈஸ்வரா 

நம் உயிர் ஒரு டாக்டர் 

தீமை செய்யும் உணர்வு சிவ தனுசு, தீமையை வென்றது விஷ்ணு தனுசு 

self realization - divinity

மந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நீரை உண்டு பூமியின் சத்தெடுத்துத் தாவரம் வளர்ந்து அந்தத் தாவரங்களில் புழு பூச்சிகள் உண்டாகின்றது. அத் தாவரத்தில் பூக்கள் பூத்து பூக்களின் சுவையை அத்தாவரத்தில் வளர்ந்த வண்டுகளே அதற்குகந்த சுவை சத்தான தேனை புஷ்பங்களிலிருந்து பெற்று தேன் என்ற சுவை கொண்ட திரவகம் கிடைக்கின்றது.

இதைப் போன்று இதை ஒத்த ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்ட நீரைக் கொண்டு அதனதன் வளர்ப்புப் பலன் பெறுகின்றது.

இப்படி இக்காற்று அமிலத்தில் பூமி சுழற்சி காற்று மண்டலத்தில் இந்தப் பூமி சமைத்த அமிலக்கூறுகளின் வளர்ப்பு நிலைக்கொப்ப பூமியின் சத்து நிலை ஒன்றின் தொடர்பு கொண்டு ஒன்றொன்றும் அதன் தொடர்ச்சியில் மாற்றுத் தன்மைகள் பெறுகிறது.

மாற்றங்கள் பெற்றாலும்…
1.இந்தப் பூமியின் அமிலக்கூறே இப்பூமியின் ஈர்ப்புக்குகந்த பூமியுடன் தொடர்பு கொண்ட மற்றக் கோள்களின் சத்தெடுத்து
2.அச்சத்துத் தன்மையை பூமி சமைத்து ஆவியாக்கி அமிலமாக்கி நீராக்கி
3.பூமி வளரும் வளர்ப்பிற்கு தன் சமைப்பின் சத்தைக் கொண்டு பூமி வளர்ந்து
4.பலதையும் கொண்டு அவை அவை வாழ்கிறது.

அதைப் போல் இச்சரீரக் கோளத்தில் எண்ணத்தின் ஞானம் கொண்டு சுவாசத்தால் பெறும் சத்துத் தன்மையைக் கொண்டு
1.தனக்கு வேண்டிய உயர்ந்த சத்துக் குணத்தை எத்தன்மையில் பெற முடியும்…? என்று
2.ஞான சக்தியைக் கொண்டு உணரும் ஆற்றல் தொடர்பினால் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
3.உடலை விட்டுப் பிரிந்த முன்னோர் தொடர்பும் ஞானிகள் சித்தர்கள் சப்தரிஷிகள் வளர்ந்த வளரும் சூரியக் குடும்பங்களின் தொடர்பையும் பெறலாம்.

இந்தப் பால்வெளி அண்டசராசரங்கள் எதுவாகிலும்… எண்ணத்தால் அவற்றுடன் நம் உணர்வின் தொடர்பைச் செலுத்தி.. ஞானத்தின் செயல் அலைக்குச் சுவாசத்தால் இந்த உடலின் அணுத் தன்மையை நாம் எண்ணும் நிலைக்கொப்பச் சத்தாக்கிக் கொள்ளலாம்.

அச்சத்தின் பலனால் ஆத்ம வளர்ப்பை நாம் வளர்க்க சுவாசத்தின் மோதலினால்

1.கவன நரம்பின் காந்த ஈர்ப்புச் சக்தியைக் கொண்டு
2.அவை மோதி வளரும் வளர்ச்சியால்..
3.இந்த எலும்புக்கூடு கூறு அனைத்திற்குமே வலுவாக்கிட முடியும்.

அதிலே… முதலில் இச்சிரசு பாகம் காந்த மின் சக்தியின் வளர்ச்சியைக் கொண்டு மேல் நோக்கி நேராக எடுக்கும் சுவாசத்தால் நாம் பதிய வைக்கும் அலைத் தொடர்பு அனைத்துமே சுவாசத்தின் உணர்வால் சரீர எலும்புகளின் வளர்ச்சி அடையும்.

அந்தச் சத்தின் பலனாக ஆத்ம உயிர் வலு சரீர இயக்கத்தால் எண்ணத்தின் தொடர்புடனே ஆரம்பத்தில் எடுத்த சுவாச அலையின் வளர்ப்புத் தன்மையில் வலுக் கொண்ட அடுத்த வளர்ச்சியாக ஆத்மாவின் இயக்கத்தைத் தனித்து இயங்கவல்ல இயக்கத் தொடர்பிற்குச் செயலாக்க முடியும்.

தனித்து இயங்கும் நிலை பெற்று ஒவ்வொன்றையும் சித்தின் தன்மை கொண்டு ரிஷித் தொடர்பில் வளர்ச்சியாகி… ரிஷித் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையில் வாழும் தொடர்பிலேயே அதைப் பெறுதல் வேண்டும்.

ஆனால் காட்டிலிருந்தும்… ஜடா முடி தரித்தும்… சாமியார்கள் என்ற காஷாயம் பூண்டு… ஜெப மந்திரம் ஓதி பகவானின் அடிமையாக அடி பணிந்து அடைவதல்ல ரிஷித் தன்மை…!

ஞானத்தின் தொடர்பலையால் சுவாசத்தால் பெறும் உயர் காந்த சக்தியின் தொடர்பை
1.இச்சரீரம் எடுத்துச் சமைக்கும் காலங்களில் அடையக்கூடிய இன்பமும் உடல் ஆரோக்கியத் தன்மையும்
2.இனிமை கலந்த உயர் அலையின் சுழற்சியாக
3.தாம்பத்ய வாழ்க்கை இனிய அன்பு நற்குணத் தொடர்பால் பெறவல்ல இனிய சக்தியைக் கொண்டே
4.உலக சிருஷ்டியை சிருஷ்டிக்கும் ஆற்றல் மனித எண்ண உணர்வு செயலுக்குத்தான் உண்டு.

எண்ணியவுடனே உயர்ந்த சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்கின்றோம்

இந்த உபதேசத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் “சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கின்றார்…!” என்ற எண்ணங்கள் இல்லாதபடி “சாமி சொன்ன சக்தியை நாங்கள் பெறவேண்டும்” என்ற எண்ணத்தை எண்ணினாலே அந்த நிமிடத்தில் அச்சக்தி ஊடுருவி உங்களுக்குள் தீமையை நீக்கி நன்மையைப் பெறக்கூடிய தகுதி, உங்கள் எண்ணத்திற்குள் பெறச் செய்வதற்கே அந்த மகரிஷிகளின் உயர்ந்த சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

 

இனி எண்ணத்தால் சக்தி பெறுவது உங்களிடம்தான் உள்ளது. ஒவ்வொரு நாளும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை யாம் உங்களுக்குள் உரமேற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

 

அப்படி உரமேற்றப்பட்டு அதன் வழிகளிலே மெய்ஞானியைக் காணும் சக்தியையும் மெய் ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டுமென்றும் அதைத் திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பதும் உங்களுக்குள் பதிவின் நிலைகளை ஏற்படுத்துவதற்ககுத்தான்.

 

இந்தப் பதிவுகளின் மூலம், நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியை, நீங்கள் எளிதில் பெற முடியும். அதைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய தீமைகளிலிருந்தும் விடுபடமுடியும். எமது அருளாசிகள்.

divine pathway

மீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்…!

 

மெய் உணர்வுகளை குருநாதர் எனக்குக் கொடுத்தார். அதன் உணர்வின் தன்மையை எனக்குள் வளர்த்தேன். அந்த அருள்வழிப்படி அவர் உபதேசித்த உணர்வின் வழிப்படியே தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

1.ஏனென்றால் முந்திச் சொன்னது எல்லாம் வேறு..!
2.இதனுடைய உண்மையான பற்றுக்கு வரும் பொழுது அது வரும்.

தூண்டிலிலே ஒரு மீனுக்கு இரை போடுகின்றோம் என்றால் அதை உட்கொள்ளும் நிலையில் பிடித்து எடுத்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரித்தான் உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆசையின் உணர்வுகளுக்கு அந்த இரைகளைப் போடும் பொழுது “தொழில் நடக்க வேண்டும்… இலாபம் வேண்டும்…! என்று வருகின்றீர்கள்.

அப்படி வரும் பொழுது அதன் வழிகளிலே எடுத்து அந்த அருள் ஞானத்தின் வித்தை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

பதியச் செய்த வழியில் அந்த அருள் உணர்வை நீங்கள் பின்பற்றினால்… இந்த ஆசையின் நிலைகள் எதுவோ
1.நீங்கள் தேடாமலே செல்வம் தேடி வரும்
2.தேடாமலே மகிழ்ச்சியும் தேடி வரும்.
3.மகிழ்ச்சி உருவாக்கப்படும் பொழுது செல்வத்தைத் தாரளமாகச் செலவழிக்க வேண்டி வரும்.

ஆனால் இப்பொழுது செல்வம் இருந்தாலும் என்ன நடக்கிறது…?

இதைப் பாதுகாக்கும் ஞானம் இருக்காது. சிக்கனம் செய்வோம்… சாப்பிடாமல் பண்ணுவோம். பணம் இருக்கிறது என்றால் ஒருவரை வெறுத்துப் பேசுவோம் இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் அடுத்தவரிடம் சண்டைக்குப் போவோம்… அதன் வழியில் பணத்தைச் செலவழிப்போம்,

அதே சமயத்தில் பண்புடன் இருப்போம். பரிவுடன் இருப்போம் வேதனையுடன் இருக்கின்றார் என்று ஒருவருக்கு உதவி செய்வோம். அந்த வேதனையைத் துடைக்கத் தெரிவதில்லை. ஆக வேதனைப்பட்டோர் உணர்வு உள்ளுக்குள் வந்தவுடன் நோய் வந்துவிடுகின்றது.

காசைக் கொண்டு அதற்குச் செலவழித்தாலும் செல்வம் குறையத் தொடங்கும். நோயைப் போக்க செல்வம் போனாலும் கூட உடலை வாங்க முடியாது…!

1.காசை வைத்து ஆன்மாவை விலைக்கு வாங்க முடியாது…!
2.அருள் ஞானியின் உணர்வை அந்த அழியாச் செல்வமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
3.அந்த மெய் ஞானிகளின் உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.
4.நம் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் அரை மணி நேரம் தியானித்தால் எனக்குச் சக்தி கிடைக்கும் என்பது உட்கார்ந்திருந்தால் உணவுக்கு என்ன செய்வது…?

உட்கார்ந்து… தியானம் மட்டும் செய்து கொண்டிருந்தால் சோற்றுக்கு அப்புறம் என்ன செய்வது…? சோறு யாரும் கொடுக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் நாம் ஏங்க வேண்டியிருக்கும்.

ஆகவே நமக்குள் அந்த மன வலு கொண்டு தொழிலையும் இந்த உடலையும் காக்க வேண்டும் என்றால் அதற்குப் பொருளும் வேண்டும். அதற்குத்தான் ஞாபகார்த்தமாகப் பிரசாதம் கொடுக்கும் பொழுது நான் (ஞானகுரு) காசையும் சேர்த்துக் கொடுக்கின்றேன்.

அதை வாங்கிய பின் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி வரும்.
1.நீங்கள் அதையாவது எடுத்து அந்த அருள் ஞானத்தை வளர்த்துக் கொண்டால்
2.செல்வம் தன்னாலே வரும்…! என்று சொல்கிறோம்.

நான் தொழில் செய்கிறேன்…! ஆனால் எங்கெங்க…? என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது.. வாங்கியவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள் அதனால்.. பணம் வாங்கியவருக்குப் பணத்தைக் கொடுக்க முடியவில்லை…! என்ற இந்த இராகத்தைத்தான் பாடுகின்றோம்.

இதை எல்லாம் அந்த ஞானிகளின் உணர்வின் தன்மை கொண்டு மாற்ற வேண்டும். வாழ்க்கையில் எது வரினும்… அந்த அருள் ஒளியைக் கூட்டிக் வளர்த்தால்… காலத்தால் நமக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும். அந்த அருள் செல்வம் நமக்குள் வளரும்.

அருள்: செல்வம் நமக்குள் வளர வளர… எவர் பகைமையாக இருப்பினும் இந்த உணர்வுகள் சேரச் சேர…
1.அந்த உண்மைகளை அங்கே உணர்த்தும்… தன்னுடைய தவறை உணர்வார்கள்.
2.ஆனால் அதே சமயத்தில் உணரவில்லை என்றாலும் இந்த உணர்வின் தன்மை அவர்களை வலுவிழக்கச் செய்யும்.
3.அவர் செய்யும் தவறுகளில் மற்ற இடங்களில் சிக்க வைக்கும்.

ஆனால் நம்மைப் பாதிககாது. ஆக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலைகள் வருகின்றது. நம் நல்லதைக் காக்கும் நிலையும் உருப்பெறுகின்றது.

இதை எல்லாம் நாம் வழிப்படுத்துதல் வேண்டும்…!

துருவ தியானத்தின் முக்கியத்துவம் – 1

துருவ தியானத்தின் முக்கியத்துவம் – 2

சக்தி வேண்டும் என்று கேட்டவர்களுக்கு யாம் கொடுத்த பின் அவர்கள் ஆன நிலை 

lord-eswaran-god

இன்பங்கள் தான் நமக்குச் சொந்தம் என்றால் துன்பங்கள் எல்லாம் ஆண்டவனின் சோதனையா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்தில் உள்ள இந்தப் பூமியின் எண்ண உணர்வு
1.செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்
2.விஞ்ஞானத்தை நம்பி வாழும் உரு நிலை பெறாமலும் இருந்திருந்தால்
4.வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித் தொடரினால்
5.நம் அனைவரது ஞானமும் உயரும் நிலை பெற்றிருந்திருக்கும்.

அப்படிப் பெற்றிருந்தது என்றால்.. இந்தப் பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே “மிகவும் உன்னத சக்தியாக…” இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களை வளர்த்து… மிக உயர்ந்த குணச் சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட… இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையாகப் பெற்றிருக்கும்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு மனிதனை மனிதனே அழித்திடும் தன்மைக்கு வந்து விட்டான்,

அழித்து என்பதன் பொருள்…
1.இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்களுக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வரவிடாமல்
3.பல காலமாகச் சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
4.இந்த மனிதனே அந்த மனிதக் கருவை அழித்து (கருத்தடை)
5.அதனை ஞானம் வளரவிடாமல் இழி நிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.

மேலும்… தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில்…
1.இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும்
2.துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் தான்
3.எண்ணத்தில் கொண்டு வாழுகின்றர்கள் இன்றைய மனிதர்கள்.

இப்படிப்பட்ட வாழும் ஓட்ட நிலையினால்… எண்ணத்தில் ஏக்கமுடனும்… பேராசை எதிர் நிலையிலும் தான்… மக்களை வழி நடத்திச் செல்லும் “மத வழி போதனைகளும்… அரசியல் சுழற்சிகளும்…” சுழன்று கொண்டுள்ளன.

ஆனால் தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு உலகையே சிருஷ்டிக்க வல்ல “ஆதி முதலாம்… விநாயக சக்தி கொண்ட…” சொல் செயல் ஞானம் கொண்டவர்கள் தான் மனித ஆத்மாக்கள்.

பூமியில் இந்தச் சரீர வாழ்க்கையிலிருந்தே தன் ஆத்ம ஞானத்தை வளர்க்கும் தகுதி கொண்டவர்கள் தான்…!

எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் சேர்க்கையில் கருவாகி சரீரம் பெற்று வாழ்க்கை வழித் தொடருக்கு வந்தோமோ அதே தொடரில் ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும்
1.தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
2.உடல் இயக்க உறவு நிலையில் கரு தோன்றி வளர்வதைப் போல்
3.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையிலிருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு
4.ஞான வட்டமாக அவ்வலைத் தொடரை எந்த மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ
5.அந்த மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்…
6.ஜீவ சக்தியை வளர்க்கவல்ல வழி முறை ஆத்ம சக்தியை…
7.”ஆத்மச் சேர்க்கையைக் கொண்டு” செயல்படுத்த முடியும்…!

இதைத் தான் அன்றைய இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வான்மீகி மகரிஷியால் சூட்சமத்தால் லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தப்பட்டது.

அதே போல் காந்தர்வன் என்றும்… கன்னி என்றும்… கன்னி நீரில் வாழும் பொழுது மேகக் கூட்டத்தில் இருந்து விந்துகள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞானத் தெய்வக் குழந்தை பிறந்தது என்றும் அன்றைய சித்தர்களால் காட்டப்பட்டது.

கார்த்திகைப் பெண்கள் தான் முருகனை வளர்த்தனர் என்ற கதையில் சொல்லப்பட்ட உண்மைதனை…
1ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சமத்தை உணர்ந்தீர்கள் என்றால்
2.சிவ சக்தி கருத்தரிக்கவில்லை… சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
3.மறைக்கப்பட்ட பல உண்மைகளை எல்லாம் அறியலாம்… உணரலாம்.

என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்தி தான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ணம் தான் உலாவிக் கொண்டுள்ளதேயன்றி இன்று நடப்பவையும் அத்தன்மை தான் என்று அறிய வேண்டும்.

ஏனென்றால் ஜீவக் கரு எத்தனை கோடி ஆண்டுகள் எந்த மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும்… இங்கே உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்று தான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால் தான்
2.ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும் ரிஷித் தன்மையும் கொண்ட
3.ரிஷிபத்தினி… ரிஷித் தன்மையைக் கொண்டு தான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவ வித்து விருட்சகம்…!

ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை

 

“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும். பின் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

 

அடுத்து இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், நமது ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.

 

பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள, அருள் ஞானிகளின் அருள் உணர்வை, எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.

 

இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து, ஈர்த்து,  உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி சுவாசிக்கவேண்டும்.

 

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என எண்ணி,  நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும். இதுவே “ஆத்மசுத்தி”.

 

நம்மை அறியாமலே நம்மைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதமாக ”மிஷின் கண்” (Machine Gun) போன்று உங்களுக்கு ‘’ஆத்மசுத்தி’’ என்ற ஆயுதத்தை கையில் கொடுக்கிறோம்.

 

“ஓம் ஈஸ்வரா” என்று, அந்த உணர்வின் ஆற்றலான ஆயுதத்தை எடுத்து, மகரிஷிகளின் அருள் சக்திகளை, உங்கள் உடலுக்குள் செலுத்தி (ஆத்ம சுத்தி செய்து), உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த உணர்வின் தன்மைகளை, அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே, அடக்கச் செய்யுங்கள்.  அப்போதுதான் அடங்கும்.

 

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெற முடியும்.

 

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும், உணவாகக் கொடுக்கும் பொழுது, எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

 

இந்த ஆத்ம சுத்தியை, நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பொழுது, வாழ்க்கையில் வரும் அனைத்துத் தீமைகளையும், நாம் அகற்ற முடியும். பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற உணர்வுகளால், நம்முடைய சொல், செயல் புனிதம் பெறும்.

good-is-blissful

நம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி

 

பிறருடைய வேதனையான உணர்வை நாம் சுவாசித்தால் உடலுக்குள் வளராதபடி அதைப் பிரித்திடல் வேண்டும். பிரிக்கக்கூடிய சக்தி அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உண்டு.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உணர்வினைச் செலுத்த வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும். இப்படி நுகர்வது அனைத்துமே முதலில் நம் இரத்த நாளங்களுக்குள் தான் சேர்கின்றது.

தீமையான உணர்வின் வளர்ச்சி கொண்ட நிலையில் உறுப்புகள் செயலிழந்திருந்தாலும் இதைக் கண்ட பின் அந்த உணர்வுக்குள் கிளர்ந்து எழுகின்றது.

அறியாத நிலைகளில் நமக்குள் அப்படிப் பதிவான தீமைகள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
1.அப்பொழுது காற்றிலிருக்கும் தீமைகளை அதிகமாக நுகர நேருகின்றது.
2.அந்த உணர்ச்சிகளை நாம் எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ உடலும் மாறுபடுகின்றது… சொல்லும் செயலும் மாறுபடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால் அந்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால் மண்ணிலே ஒரு நல்ல பொருள் விழுந்தால் உடனே நீரை விட்டு அதைக் கழுவிக் கொள்கின்றோம். இதைப் போல் பிறருடைய தீமையின் உணர்வுகள் நம் உடலில் இரத்தங்களில் கலந்தால் அதன் வீரியத்தைத் தணிக்க “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இங்கே உபதேசிக்கும் பொழுது
1.உங்கள் கண்கள் என்னை (ஞானகுரு) உற்றுப் பார்க்கின்றது.
2.உபதேசிக்கும் சொல்லின் உணர்வுகள் அந்தச் செவியிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவலைகளைப் பதிவாக்குகின்றது.
4.உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிடும் அலைகளை ஆன்மாவாக மாற்றுகின்றது.
5.மாற்றிய உணர்வுகள் உயிரிலே படுகின்றது… இந்த உணர்ச்சிகளை உடலிலே பரவச் செய்கின்றது…. இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இந்த உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… இரத்த நாளங்களில் கலக்கக் கலக்க…
1.உங்கள் உடலில் தீமையை விளைவிக்கும் உணர்வுகளுக்கு
2.இந்த இரத்தநாளங்களின் வழியாக உயர்ந்த உணர்வுகள் போகும் பொழுது அதனுடைய தணிவுகள் ஏற்படுகின்றது.

நல்ல குணங்கள் இருக்கப்படும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அது இரத்தத்தில் சுழலப்படும் பொழுது நல்ல அணுக்களுடைய நிலைகள் அதை நுகர மறுக்கின்றது.

அப்பொழுது இயக்கச் சக்தி குறைகின்றது…. உடல் சோர்வடைகின்றது. இப்படிச் சோர்வடையப்படும் பொழுது நல்லதை நினைக்கும் திறன் இழக்கப்படுகின்றது,

இப்படிச் சோர்வடையும் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் உணர்வின் தன்மை நாளடைவில் அதிலே பழகி விட்டால் எது எடுத்தாலும் அந்தச் சோர்வு தான் வரும்.

மட்டன் சாப்பிடாதவர்கள் இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் பிறகு “கொஞ்சம் மட்டும் சாப்பிடலாம்…” என்ற உணர்வு தோன்றும். ஒரு காயை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வார்கள். பின் அதைச் சுவையாக்கி விட்டால் சரி… இப்பொழுது சாப்பிடலாம்…! என்பார்கள்.

இதைப் போன்று இந்த உணர்வுகள்…
1.எதனின் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உனர்வின் தன்மை
2.அங்கே அந்த உணர்ச்சிகளைத் தூண்டத்தான் செய்யும்.

ஆனால் இதைப் போன்ற நிலைகளை அதை அடக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் பலவித கோணங்களில் உங்களுக்கு இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.

தீமைகள் எப்படிச் சாடுகின்றது..? தீமைகளை அகற்றும் வழி என்ன…? என்பதைத் தான் கலவையாக்கி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை உங்களுக்குள் இணைத்து இணைத்துப் பதிவாக்குகின்றோம்.

 

1.தீமைகளை அகற்றிய உணர்வைக் கலந்தே உங்களுக்குள் கொடுத்திருப்பதனால்
2.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது
3.உங்களுக்குள் எத்தகைய பகைமையும் தீமையும் துன்பமும் வளராது தடுக்க இது உதவும்.

நம்மைப் புகழ்ந்து பேசுவோரிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… ஏன்.…?

உடலுக்கு வேண்டிய சுகத்திற்காகத்தான் கடவுளை வணங்கும் நிலையே இன்று உள்ளது – தீமையை நீக்கும் சக்தியை எடுப்பார் இல்லை

விஞ்ஞானியாக இருந்தாலும் மக்களுக்கு வழி காட்டும் குருக்களாக இருந்தாலும் உடலுக்குப் பின் எங்கே செல்கிறார்கள்…?

margandeyan agastyan

என்றும் பதினாறு அடைந்த அந்த மாரக்கண்டேயன் யார்…? என்றும் பதினாறு என்றால் அர்த்தம் என்ன…?

 

அகஸ்தியன் தன் மனித வாழ்க்கையில் பல தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவனைப் பின்பற்றியோர் உணர்வுகள் பத்தாவது நிலையாக ஒளியாக ஆன பின் உடலை விட்டுச் சென்று அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்த இயற்கையின் வாழ்க்கையில் இந்தச் சூரியக் குடும்பமே ஒன்பதாவது நிலை தான்.

ஆனால்…
1.கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து
2.உணர்வின் தன்மையை ஒளியாக விளைய வைக்கும் பருவத்தை அடைந்து விட்டால்
3.நுகர்ந்த உணர்வுகள் அந்த ஒளியாக மாற்றும் திறன் வந்துவிடும்.

அந்தத் திறன் வந்துவிட்டால் அண்டத்தில் எங்கு வேண்டுமானால் செல்லும் ஆற்றலும் அந்த உணர்வின் சத்தை ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் பெறுகின்றது.

அகண்ட அண்டம் எல்லையே இல்லாதிருக்கின்றது… இருந்தாலும் அதிலிருந்து வரும் உணர்வை நுகரும் சக்தி பெற்றால் என்றும் பதினாறு…!

அதாவது…
1.அகண்ட அண்டம் பெரிது
2.அதிலே நம் வளர்ச்சியின் தன்மையோ சிறிது தான்
3.இருந்தாலும் ஒளியாக மாற்றிக் கொண்டே வரும் இதனுடைய வளர்ச்சி வரும் பொழுது
4.என்றும் பதினாறு… என்று அதை இளமைப் பருவமாகக் காட்டுகின்றனர்…!

அப்படிப்பட்ட வளர்ச்சி வளர… வளர… அகண்ட அண்டத்துடன் ஒப்பிட்டால் இது சிறிதே…! இது இளமையானதே…! பருவமானதே… என்று இதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான்
1.என்றும் பதினாறு என்ற நிலையை
2.அன்று மார்க்கண்டேயன் பெற்றான் என்று காட்டினார்கள் ஞானிகள்.

அந்த மார்க்கண்டேயன் என்பது யார்…?

துருவ நட்சத்திரம்…!

அது “என்றும் பதினாறு” என்ற நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றது. அதன் வழியில் சென்றவர்கள் தான் இன்றும் அதன் நிலை சப்தரிஷி மண்டலமாகப் பெறுகின்றனர்.

ஏற்கனவே ஆதியிலே… முதன் முதலில் பிரபஞ்சம் உருவான விதத்தைச் சொல்லியிருக்கின்றேன். ஒரு அணுவின் தன்மை பல நிலைகள் அடைந்து கோளாகி… நட்சத்திரமாகிச் சூரியனாகி ஓர் பிரபஞ்சமாகின்றது.

அதே போன்ற வளர்ச்சியில் நம் உயிர் உருவாகி மற்ற நிலைகள் பல எத்தனையோ உணர்வுகள் கொண்டு இன்று மனிதனாக உருவாக்கியுள்ளது. சூரியனை ஒத்த நிலை போன்றது தான் மனிதனின் உயிரும்.

சூரியன் தனக்குள் மோதும் தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்று
1.எந்த விஷத்தால் அது உணர்வின் ஒளியாக உருவானதோ
2.அதே விஷத்தை நீக்கி விட்டுத் தன்னிச்சையாக ஒளியாக மாறும் தன்மை வருகின்றது.
3.அதன் உணர்வு எதனுடன் கலக்கின்றதோ அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக வருகின்றது.

மனிதனாக ஆன நிலையில் கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வின் ஒளி அணுக்களை உருவாக்கும் தன்மை பெற்று விட்டால் “என்றுமே அது அழியாத் தன்மை கொண்டது.. உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது….!”

“தனித்த மனிதன்” இதை எடுத்துச் சென்றாலும் அந்த ஒளியின் தன்மை பெறுவது கடினம். ஆண் பால் என்றாலும் பெண் பால் என்றாலும் வளர்ச்சி இருக்காது.

ஆனாலும் அந்தத் தொடர் கொண்ட ஆன்மாக்களில் (கணவன் அல்லது மனைவி) ஒன்று பிரிந்து விட்டாலும் அவருடைய உணர்வுகள் நமக்குள் உண்டு.

இதற்கு முன்னாடி செய்யத் தவறி இருந்தாலும் அந்த ஆன்மாக்களைக் இப்பொழுது அதிகாலை துருவ தியான நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவேற்றிக் கொண்ட பின்
1.நம்முடன் வாழ்ந்த நினைவலைகள் கொண்டு அந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று அங்கே உந்திச் செலுத்துதல் வேண்டும்.

இப்படி நாம் தொடர்ந்து காலையில் செய்து வரப்படும் பொழுது இன்னொரு உடலிலிருந்து அந்த ஆன்மா (நம்மைச் சார்ந்தோர்) வெளி வந்தாலும் அவருடைய உணர்வு நமக்குள் உண்டு. அதனைக் கவர்ந்து அங்கே செலுத்தி விடலாம். உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடலாம்.

1.அவர்கள் விண் சென்ற அந்த உணர்வை எண்ணி ஏங்கும் பொழுது
2.அடுத்து இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்
3.அவருடன் இணைந்து வாழும் தன்மை வருகின்றது.

இத்தகைய உணர்வுகள் தனக்குள் பருகப்பட்டு அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்தால் வான்வீதியில் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

1.ஒரு ஆன்மா முன் சென்றாலும்… பின் வரும் நிலைகள்
2.அதே தொடர் கொண்ட நிலைகளில் செயல்படுத்துவோம் என்றால் பிறவியில்லா நிலைகள் அடைகின்றது.

இது மனிதன் ஒருவனால் தான்… முடியுமே தவிர மற்ற மிருகங்களால் முடியாத நிலை ஏற்படுகின்றது.

சிறு துளி பெரு வெள்ளமாகக் கிடைக்கும்  மெய் ஞானம்

 

நாம் ஒரு தேரை இழுத்து, “எல்லை சேர வேண்டும் என்று” ஒன்று சேர்ந்து அந்த எண்ணத்தைச் செலுத்தி அந்தத் தேரை இழுத்து எல்லை சேர்க்கின்றோம்.

 

அதைப் போன்று மனிதனான நாம் அனைவரும் நமது குருநாதர் கொடுத்த ஆற்றல்மிக்க சக்தியின் எண்ண அலைகளை மெய் ஞானிகள் பெற்ற அந்த உணர்வின் சக்திகளை யாம் உங்களுக்குள் உபதேசித்து இந்த உணர்வைத் தூண்டச் செய்து உங்கள் உயிருடன் ஒன்றச் செய்து இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்து அந்த உணர்வு கொண்டுதான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று எல்லோருடைய எண்ணங்களையும் யாம் குவிக்கப்படும்போது அதை நமக்கு முன் சுழலச் செய்கின்றோம்.

 

இதைப் பெறவேண்டும் என்று ஏங்கி எண்ணும் அனைவருக்கும், அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள், அப்படி சுழன்று வருவதை, உங்களுக்குள் பெறச் செய்வதற்குத்தான் இதை யாம் உபதேசிக்கின்றோம்.

ancient sages

மனிதன் தான்… சப்தரிஷியாக உலகையே படைக்கும் சக்தியாக உருவாக முடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள்… அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப… ஒன்றுடன் ஒன்று உராய்ந்து… தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாக உருவாகின்றது.

அப்படி உருவான மண்டலங்கள்… கோள்கள்… நட்சத்திரங்கள்… சூரியன்கள்… அதனதன் ஈர்ப்புச் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே… வழி கொள்ளும் வளர் முறைக்கு வருகின்றது.

இந்தப் பூமியில் மணல் உண்டு.. நீர் உண்டு… சுண்ணாம்பும் உண்டு… இப்படி மரம் மண் இவை யாவையும் இருந்தாலும்… அவை எல்லாற்றையும் நாம் எடுத்து நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக வீடுகளாகக் கட்டிப் பாதுகாப்பு இடமாகத் தேடி அமைத்து வாழ்கின்றோம்.

1.எப்படி வீட்டை அமைக்கப் பல பொருள்களை எடுத்துப் பக்குவப்படுத்திக் கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்று
2.பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில்
3.தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து
4.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு… எண்ணத்தின் ஞானம் கொண்டு…
5.உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்பு நிலை உருவகங்கள் தான்
6.ஆதி சக்தியின் வழி வந்த மகரிஷிகளின் வழி மண்டல அமைப்பின்
7.ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வருகின்றது.

அது அது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப… வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற…
1.மனித ஞான உயர்வினால் மட்டும் தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உருப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்…
3.உண்மையின் உன்னத சக்தியினை உணர்த்தினால்… உருவாக்கினால்…
4.ஒவ்வொருவரும் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!

இந்தப் பூமிக்கு “மனிதக் கரு வர” ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித் தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இந்தப் பூமியின் சிவ சக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?

இந்தப் பூமியில் மட்டுமல்ல…
1.நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள்
2.நம் சூரியக் குடும்பமல்லா மண்டலங்களில் ஜீவிக்கின்றார்கள்.

ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்… மற்ற எல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.

 

அவர்களின் கூட்டுச் செயல் தான் ஆதி சக்தியின் இயக்கமே…!

விஞ்ஞான அறிவின் அபரிதமான வளர்ச்சியை மெச்சிப் பயன்படுத்தினாலும் அதனுடைய தீய விளைவுகளை மறந்து விட்டோம்

மனிதனை மனிதன் உணவாக உட்கொள்ளும் விஞ்ஞான உலகமாக மாறிவிட்டது 

மூன்றாவது உலக யுத்தம் வந்தால் நம் பூமி மட்டுமல்ல பிரபஞ்சமே அழிந்துவிடும் 

mamaharisi eswarapattar

ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஆனந்தத்தைச் சொந்தமாக்கும் பயிற்சி…!

உதாரணமாக நம் வாழ்க்கையில் காரம் கொண்ட உணர்வுகளை அதாவது கோபமான உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க அந்தக் காரத்தின் தன்மை தான் அதிகரிக்கும். சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் அதிகமாகி அதனால் வேதனையே மிஞ்சும்.

அப்படிக் காரமாக ஆகும் சமயத்தில் காரத்தைக் குறைக்கும் சக்தியை நாம் இணைக்க இணைக்கத் தான் அந்தக் காரம் தணியும். காரத்தைத் தணிக்கும் சக்தி எது…?

1.காரத்தையும் வேதனையும் விஷத்தையும் தணித்த
2,அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் ஒவ்வொரு நொடியிலேயும் நுகர வேண்டும்.
3.அதை நுகரும் சக்தி நமக்குள் வேண்டும்.
4.அதற்குத்தான் அடிக்கடி அடிக்கடி உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால்…
1.குருநாதர் “அவருக்குள் வளர்த்ததை” எனக்குள் பதிவு செய்தார்.
2.அதை நான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

சாமி ஒன்றும் கொடுக்கவில்லையே…! என்று தான் நீங்கள் நினைக்கின்றீர்கள்.

1.அவர் சொன்னார்… பதிவு செய்தேன்..
2.அவர் வழிகளிலே சென்றேன்… அதைப் பெற்றேன்.
3.பெற்ற அந்த அருள் உணர்வினை ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து
4.அதை உங்களிடம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செருகுகின்றேன்.

இதை நீங்கள் சீராகப் பின்பற்றி… தீமையை அகற்றிவிட்டுச் சந்தோஷம் அடைந்தேன் என்று சொன்னால் அந்த உணர்வு எனக்குள் வந்து என்னையும் சந்தோஷப்படச் செய்யும்.

நான் (ஞானகுரு) கஷ்டப்பட்டேன்… எடுத்தேன்… எனக்குள் வளர்த்தேன்… எல்லாவற்றையும் அறியச் செய்தார் குருநாதர்…!

அதே போல் உங்களை அறியாது துன்பங்கள் வருகின்றது. அந்த நேரத்தில்…
1.நான் கண்ட உண்மைகளை வாய் மொழியாக உணர்வைப் பதிவு செய்கின்றேன்
2.பதிந்த நிலைகளை நீங்களும் உடனுக்குடன் எண்ணித் தீமைகளை நீங்கள் அகற்றிப் பழகினால்
3.அதை நினைத்தவுடனே எனக்குச் சந்தோஷமாக இருக்கும்.
4.சரி… தீமையை நீக்கிடும் சக்தியாக வளர்ந்திருக்கின்றார்கள் என்று..!

ஆக… நீங்கள் அந்தத் தீமையை அகற்றும் வல்லமையைப் பெற்றால்… “அதற்குரிய உணர்வின் வித்து” அங்கே இருக்கின்றது.
1.அதே உணர்வை நீங்கள் கேட்டுணர்ந்தது… பின் விளைந்து…
2.அது வெளி வரப்படும் பொழுது எனக்கு அது சொந்தமாகின்றது.

இதே போல தான் நீங்களும் உங்களுக்குள் பதிவு செய்த இந்த அருள் ஞானத்தின் சக்திகளை எடுத்து அந்த வளர்ச்சி அடைந்த நிலைகளில்
1.உங்கள் நண்பரிடத்தில் “நன்றாகி விடும்…!” என்ற
2.உங்கள் வாக்கினைச் சொன்னால் அங்கேயும் பதிவாகின்றது.,

அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு அவர்கள் வாழ்க்கையிலே அதைக் கடைப்பிடித்த பின்… “நீங்கள் சொன்னீர்கள்… எனக்கு நன்றாக ஆனது…!” என்று அவர் சொன்னால் அது உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்தச் சந்தோஷம் உங்களுக்குச் சொந்தமாகின்றது…!

ஈஸ்வரபட்டர் காட்டிய மெய் வழி இது தான்…!

தியானம்

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா. 27 நட்சத்திரங்களின் சக்தியும் நவக்கோள்களின் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. தியானத்தில் வீற்றிருக்கும் அனைத்து உயிராத்மாக்களும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

annamalai girivalam

தியானத்தில் கண்ட உண்மைகள் பற்றிய அன்பர்களின் பதிவுகள்…!

ஈஸ்வரபட்டர்:-
“ஆத்மாவின் இயக்கம் தான்… சரீரச் செயல் வழித் தொடர்…!” என்பதனை நான் போதனை நிலையில் உணர்த்தியதற்கு ஒப்ப ஆத்ம வளர்ச்சியால் தியானத்தில் கண்ட உண்மைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.

அன்பரின் அனுபவம்:-
கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்ததும் உபதேசம் செய்யும் ஞானகுருவை நினைத்தேன். ஞானகுரு கையை உயர்த்தி என்னை ஆசீர்வதித்தார். ஞானகுருவின் உள்ளங்கையிலிருந்து குருதேவரின் முகம் மட்டும் என்னை நோக்கி வருவதாக உணர்ந்தேன்.

வந்த முகம் பிற்கு முழு உருவமாகவும் கையில் ஒரு தடியுடனும் அவரைச் சுற்றி ஆட்டுக் கூட்டம் இருப்பது போலவும் தெரிகின்றது. பிறகு வெண்மையான முகிலைப் போன்று படர்ந்த ஒளியாகத் தெரிந்தது.

இன்னொரு அன்பரின் அனுபவம்:-
உடல் முழுவதையும் சுற்றி ஓர் ஒலி சுழல்வதைப் போலவும்… செவியில் “உய்…” என்ற ஒலி நாதம் கேட்டது.

உடல் முழுவதுமே அந்த ஒலியுடன் ஒளியும் சேர்த்து இயக்கக்கூடிய :இழுப்பு நிலை போன்று… உடலே ஜிவ்…வ்வ்.. என்று மேல் நோக்கி உச்சந்தலையிலிருந்து இழுப்பதைப் போன்று “ஆனந்தமான நிலை” ஏற்பட்டது.

உடலோ மற்ற உணர்வுகளோ எதுவுமே தெரியாத நிலையில் நான் இருப்பது தெரிகின்றது. ஆனால் உடலின் எண்ண ஓட்டங்கள் இயங்குவது தெரிகின்றது. உடல் கனமோ உடலுக்குகந்த மற்ற உறுப்புகலீன் நிலையோ மறந்து “எண்ணம் மட்டும்” ஓடுவது தெரிந்தது.

1.பிறகு ஒரு மிளகைப் போன்ற அளவில்
2.மிகவும் பிரகாசமான நீல நிற ஒளி
3.நெற்றியின் புருவத்திற்கு இடையில் (ஆத்ம ஜோதி) தெரிந்தது.

பின் மஞ்சள் நிறமான பெரிய சூரியனைப் போன்று ஒளி தெரிகின்றது. அந்த ஒளி சுழன்று ஓடுகின்றது. அப்படிச் சுழலும் பொழுது அதிலிருந்து வானவில்லில் காணும் ஒளியைக் காட்டிலும் மிக மிகப் பிரகாசமாகச் சில ஒளிகளும் அந்த ஒளிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து அதிலிருந்து பல ஒளிகளும் தெரிந்தது.

வான மண்டலம் மஞ்சள் நிறமான பிரகாசமான ஒளி நிலைக்கு அது சுழன்று ஓடும் ஓட்டத்துடன் செல்வதைப் போன்றும் சில இடங்களில் உஷ்ணமாகவும் குளிராகவும் நெருப்பும் மற்றும் விவரிக்க முடியாத பஞ்சைப் போன்று தெரிந்தது…!

மேலும்… அதை எப்படிச் சொல்வது என்றே புரியாத நிலையில்
1.வெண்மை முகிலுமல்லாமல் கனத்த தன்மையும் இல்லாமல் சொல்லால் உணர்த்த முடியாத சிலவும்
2.இதே தொடரில் அவ் ஒளி வட்டத்துடனே செல்லப்படும் பொழுது
3.மனித உருவத்தைப் போன்றும் ஆனால் உருவமல்லா ஒளியைப் போன்றும்
4.பிரகாசத் தன்மையுடன் வரிசையாக உள்ளனர்….
5.ஒருவர் முதுகில் மட்டும் ஏதோ ஒரு மிருகம் உள்ளதைப் போன்று தெரிகின்றது.

அவர்களை எல்லாம் பார்த்தவுடன் “ஆசீர்வாதம்…” வாங்கும் எண்ணம் வந்தது. உங்கள் உயர்வைப் போன்று… நானும் உயர வேண்டும்…! என்று வணங்கச் செல்லும் பொழுது அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள்.

ஜீவ சரீர பிம்ப வாழ்க்கையில்…
1.உங்களை ஒத்தவர்கள் பெறும் ஞானத்தைக் கொண்டு தான் எங்கள் வளர்ச்சி நிலையே உள்ளது
2.உங்களைக் கொண்டு தான் எங்கள் உயர்வே
3.நீ அவரிடம் ஆசி பெறு…! என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
4.அவ்விடம் ஒன்றுமே இல்லா பால்வெளி வான மண்டலத்தைப் போல் கண்ணுக்கு எட்டியவரை எதுவுமே இல்லாமல் தெரிகிறது.

பிறகு முகிலைப் போன்று படர்ந்த திட்டுத் திட்டாகத் தெரிகின்றது. வார்த்தையிலும் இது வரைக்கும் கண்ணிலும் கண்டிராத ஒளிகள் மிக மிகப் பிரகாசமாகப் பல வண்ணத்தில் நாட்டியமாடுவதைப் போன்று மிகவும் துரிதமாகச் சுழன்று “ஓர் உயர்ந்த முப்பது நாற்பது அடி உயரத்திற்குப் பெண்ணின் உருவம் போன்று… ஒளியிலேயே… ஆனதைப் போன்று…” தெரிகின்றது.

ஊன்றிப் பார்க்கும் பொழுது ஆணின் உருவமாகவும் பெண்ணின் உருவமாகவும் மாறி மாறித் தெரிந்தது. பின் சாதாரணப் பெண்ணை ஒத்த உருவமாக ஒளி வண்ணங்களாகத் தெரிந்தது.

ஆசீர்வாதம் வாங்கும் நோக்கத்தில் காலில் விழுந்து வணங்கியவுடன்
1.என் செயலை வளர்ப்பாயா..? என்ற குரல் கேட்டது…!
2.அங்கே ஞானகுருவும் ஈஸ்வரபட்டரும் நிற்பதும் தெரிகின்றது.

கணவன் மனைவி பாச உணர்வின் இயக்கங்களும் விளைவுகளும்

மாமியார் மருமகள் ஒற்றுமை

பெண்களுக்குண்டான சக்திகள்

last thought

இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் நம்முடைய கடைசி நினைவு எதன் மீது இருக்க வேண்டும்…?

 

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு காந்த சக்தி கொண்ட கண்ணாடியை (TELESCOPE) உருவாக்குகின்றார்கள். அது வான்வீதியில் பல இலட்சம் மைல்களுக்கு அப்பால் இருப்பதையும் இழுத்துக் கவரும் சக்தி கொண்டதாக இருக்கின்றது.

அதை வைத்துக் கோள்களைப் படமாக்கி… கம்ப்யூட்டர் என்ற சாதனத்தில் இணைக்கின்றார்கள்… நாடாக்களில் பதிவு செய்கின்றனர்… மேலும் அதை ஆயிரம் மடங்கு பெருக்கி எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.

படமாக்கிய அந்தக் கோளின் உணர்வின் இயக்கம் எதுவோ அதனுடைய அடர்த்தி எது வருகின்றது…? என்று அளந்தறிந்து கொள்கின்றார்கள்.

அதன் நிலையை இங்கே பதிவாக்கி உந்து விசையால் இராக்கெட்டை விண்ணிலே வீசுகின்றார்கள்.
1.அதன் முகப்பிலே… அந்தக் கோளின் நிலையை எலெக்ட்ரானிக்காக மாற்றி
2.இராக்கெட் போகும் பாதையில் எதனுடைய உணர்வுகள் இங்கே இருந்ததோ
3.அதன் பாதை கொண்டு அதன் அளவிலே எடுத்துச் சென்று அந்தக் கோளுக்கே அழைத்துச் செல்கின்றது.

ஏனென்றால் அதே கோளினுடைய உணர்வுகள் பட்ட பின் அது அழைத்துக் கொண்டு அங்கே செல்கிறது.

அப்பொழுது அங்கிருக்கும் உணர்வுகளை இதிலே கவர்ந்து… எதன் அழுத்தத்தின் தன்மைகள் அங்கே மாறுபடுகின்றது…? என்பதைப் பலவிதமாக இதே எலெக்ட்ரானிக்கை வைத்து அங்கே பதிவாக்கிக் கொள்கின்றனர்.

1.பதிவாக்கிய அலைகளை அங்கிருந்து ஒலி பரப்பு செய்யப்படும் பொழுது
2.இதன் தொடர்புடைய அதே இங்கே பூமியிலிருந்து பதிவாக்கி
3.அதன் அளவுகோலை அளந்து… அந்தப் பாதையை அளந்து… அந்தக் கோளின் தன்மையை அளந்து..
4.எந்தெந்தக் காலங்களில் அது எப்படி எல்லாம் செல்கிறது…? என்று விஞ்ஞானிகள் தரையிலிருந்து காண்கின்றார்கள்.

இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவாக்கப்படும் பொழுது
2.நம் நினைவு கடைசியில் அதிலே வந்தால் போதும்….!
3.வந்த பின் அந்தத் துருவ நடத்திரத்தின் நினைவுடன் நாம் அங்கே செல்கின்றோம்.

உயிர் நம்மை அங்கே இந்த உணர்வுடன் அழைத்துச் சென்று அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்த பின்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.

ஏனென்றால் வலுக் கொண்ட உணர்வு கொண்டு இப்படிக் கரைத்துக் கொண்ட பின் காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியனின் காந்த சக்தி அந்த அலைகளை எடுத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது.

இப்படித்தான் கரைக்கும்படி நம்முடைய சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இங்கே கங்கையிலோ அல்லது ஓடுகின்ற ஆற்றிலோ மற்றதிலோ கரைத்தால் என்ன செய்யப் போகின்றோம்..?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

உதாரணமாக இந்த வாழ்க்கையில் ஒருவருடன் அதிகமாகப் பழகுகின்றோம் என்றால் அந்த மனிதனின் உணர்வைப் பதிவாக்கி உடலுக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றோம்.

சந்தர்ப்பவசத்தால் அவர் நோய்வாய்ப்பட்டால் பாசத்துடன் அவரை எண்ணிப் பார்க்கப்படும் பொழுது அந்த நோயின் உணர்வுகள் இங்கேயும் பதிவாகின்றது.

1.அதே சமயத்தில் இந்த உடலை விட்டு அவர் பிரிந்து சென்றால்
2.அவர் உணர்வை யார் அதிகமாக உடலுக்குள் வளர்த்திருக்கின்றனரோ
2.அந்த உடலுக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.

பின் அந்த உடலுக்குள் சென்று அதே நோயின் உணர்வை அங்கேயும் உருவாக்கி விடுகின்றது. உடலுக்குள் இப்படிப் போகும் ஆன்மாவை
1.வெறும் மந்திரத்தைச் சொல்லியோ மாயத்தைச் சொல்லியோ
2.பாவத்தைப் போக்கி விட்டு மோட்சத்திற்கு அனுப்புவது என்றால்…. எங்கே…?

இவருடைய உணர்வுகள் விளைந்தது எதுவோ இன்னொரு உடலுக்குள் சமமாக அது ஒத்துக் கொண்டால் தன்னை அறியாமலே இந்த உணர்வின் துணை கொண்டு அந்த நோய்கள் அங்கேயும் வருகின்றது. புகுந்த உடலையும் வீழ்த்துகின்றது.

இப்படி.. புகுந்த உடலிலும் அந்த விஷத்தின் தன்மை வளர்ச்சி அடையச் செய்து அதை வீழ்த்திவிட்டு வெளியே வந்து விடுகின்றது. அடுத்து மனிதனல்லாத உடலைத் தான் பெற முடியும்.

அதே போல் வீழ்த்தப்பட்ட அந்த உடலோ அவர் மீது யார் பற்று கொண்டாரோ அந்த உடலுக்குள் அது சென்று விடுகின்றது.
1.இப்படி… மனிதர்கள் நாம் மீண்டும் மீண்டும் தேய்பிறை என்ற நிலைகளில் தான் வருகின்றோமே தவிர
2.வளர்பிறை என்ற நிலைக்குச் செல்லவே இல்லை.

ஆகவே மனிதனுக்குப் பின் நம்முடைய நிலை எது…? என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையில் அதிகாலையில் குளித்தாலும் சரி குளிக்கா விட்டாலும் சரி…! ஏனென்றால் குளிப்பது மேலே தான்…! ஆனால்
1.நம் ஆன்மாவில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்து
2.அருள் ஞானத்தைப் பெற்றுத் தீமைகளை அகற்ற…
3.நம் மனதைச் சுத்தப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவாக்குகின்றோம். தீமையிலிருந்து மீண்டிடும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே வருகின்றோம்.

அப்பொழுது உங்கள் நினைவாற்றல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்ய இது உதவும்.

இந்தக் குறுகிய மனித வாழ்க்கையில் 120 வருடம் வரை கூட சிலர் வாழ்கின்றார்கள். இருந்தாலும் அந்த 120 வருடம் வாழ்வதற்கு முன் எதைச் சேமித்துக் கொள்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கிவிடும் உயிர்.

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்றால்
1.அங்கே அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று
2.என்றுமே தீமைகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.

உயிருடன் ஒன்றி குருவுடன் ஒன்றச் செய்யும் பாடல்

 

பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகள் மனித உடலுக்குள் எப்படி இயங்குகின்றது என்பதைத்தான் எல்லா மகரிஷிகளும் காட்டினார்கள்.

 

“ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா” என்று சொல்லும்போது

சூரியன் விஷத்தால் தாக்கப்பட்டு

அந்த விஷத்தின் தாக்குதல் தாங்காது சுழற்சியின் வேகம் அதிகமாகி,

அதனால் ஏற்படும் வெப்பத்தின் தணல்கள் இங்கே வளர்ந்து,

விஷத்தை அது வெளிப்படுத்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கும் நிலைகள் பெற்றது.

 

நம்மைத் தேள் கொட்டினால் துடி துடித்து வேகத்தின் இயக்கம் நமக்குள் அதிகமாகின்றது, இதைப் போன்றே

இந்த உயிரணுவிற்குள் விஷத்தின் துடிப்பு அதிகமாகத் தூண்டும் நிலைகள் வரும்போதுதான்,

உயிரணுவாகத் தோன்றி அந்த இயக்கத்தின் ஆற்றல் கொண்டு,

விஷத்தின் தாக்குதல் தாங்காத நிலைகள் கொண்ட

உயிரின் துடிப்பலைகள் ஏற்படும் நிலைகளால் தான் மற்றதை உருவாக்கும் நிலைகள் பெறுகின்றது.

 

ஆகவேதான் “ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா” என்று சொல்லுகின்றோம்.

 

உயிர் இவ்வாறு உயிராக இயங்குவதற்கு,

ஆதிசக்தியான விஷத்தின் உணர்வின் இயக்கச் சக்தியாக அது மாறி,

அது உயிரின் இயக்கமாக மாறுவதைத்தான் “ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா” என்று எண்ணுகிறோம்.

 

அந்த இயக்கத்தின் தொடர்பாக, இந்த உயிரின் துடிப்பு அதிகமாகும்போது, சூரியனுக்கு எப்படி வெப்பங்கள் ஏற்படுகின்றதோ அதைப்போல நம் உயிரின் நிலை கொண்டு இந்த துடிப்பின் இயக்கத்தால் இயங்கும் நிலை கொண்டு, நம் உடலில் காந்தங்கள் பரவுகின்றன.

 

சூரியன் தனக்குள் வெப்ப காந்தங்களை உருவாக்கி, ஓர் பிரபஞ்சத்திற்குள் அனைத்துக் கோள்களையும் தனக்குள் அணைத்து, அதனின்று பெரும் சக்தியாக தனக்குள் ஒளியாக மாற்றி, தன் ஒளியின் சுடராக, அந்த காந்தத்தை உற்பத்தி செய்து, மற்றவைகளையும் இயக்கச் செய்கின்றது.

 

நமது உயிரும், இதைப்போன்ற நிலைகள் கொண்டு இயக்கப்பட்டு, உணர்வின் அலைகளை காந்த அலைகளாகப் பரப்பி, இந்த உடலுடன் உடலாக இயக்கச் செய்து, இந்த உணர்வின் எண்ண அலைகளாக இயக்குகின்றது. அவ்வாறு, இந்த நிலைகளில் நமக்குள் இருந்து, ஈசனாக இயக்கிக் கொண்டிருப்பது நமது உயிர் என்ற இந்த நிலையை, தெளிவுறத் தெரிந்து கொள்வதற்கு,

“ஈசனான” நமது குருநாதர் அந்த இயக்கச் சக்தியை உணர்ந்த நிலையை உணர்த்தி,

அவர் உணர்த்திய நிலைகள் கொண்டுதான் எமக்குள் இயங்கும் உயிரை ஈசனாக மதித்து

குருநாதர் காட்டிய வழியில், யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

 

நமது குருநாதர் எவ்வழியில் எமக்கு வழி காட்டினாரோ, அவ்வழியை நீங்களும் பின் தொடரும் பொழுது, அந்த மெய்ஞானிகள் சென்ற வழிகளில், நாம் எல்லோரும் அங்கே செல்வதற்கு ஏதுவாகும்.

 

அன்றைய ஞானிகள் காட்டிய ஒவ்வொரு உணர்வின் சக்தியும், அவர்கள் தன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்மிக்க சக்திகள் நமக்கு முன் ஒலி அலைகளாகப் படர்ந்து கொண்டுதான் உள்ளது.

 

யாம் இப்பொழுது பேசும் போது, இந்த உணர்வின் ஒலி அலைகளை சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து, ஆற்றல் மிக்க எண்ண அலைகளாக, அது படர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

இன்று ரேடியோக்களிலோ மற்ற டி.வி.க்களிலோ ஒலிபரப்புச் செய்யும் இந்த உணர்வின் சக்தியை

இயந்திரத்தில் அதே அலைவரிசையில் வைத்து,

பட நிலைகளையும் ஒலி அலைகளையும் நாம் பார்க்கின்றோம், கேட்கின்றோம்.

 

இதைப் போன்றுதான் நாம் பேசும் சாதாரண பேச்சாக இருந்தாலும், சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. ஞானிகள் மகரிஷிகள் அவர்கள் உடல்களில் எடுத்துக் கொண்ட இச்சக்திகள் அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்படுத்திய நிலைகளும், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு, இன்றும் அது சுழன்று கொண்டிருகின்றது.

 

அந்த ஞானிகளின் ஆற்றல் மிக்க அச்சக்தியைப் பெறுவதற்குத்தான், இந்த தியானம் என்ற நிலைகளில், நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு, இங்கே உணர்த்துகின்றோம்.

 

நமது உயிரின் ஆற்றலை, நமக்குள் இயக்கக்கூடிய சக்தியை, நாம் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மேக்னட்டில் “காந்தத்தை” அதிகமாகக் கூட்டச் செய்யும்போது,

அந்த “சுழற்சியின்” வேகத்தைக் கொண்டு கரண்ட் உற்பத்தியாகின்றது.

 

அதைப் போல, நம் உயிரின் இயக்க ஓட்டத்தின் நிலைகள் கொண்டு, நமக்குள் காந்தப் புலனை அதிகமாகக் கூட்டி, அதன் வழி கொண்டு, நமக்குள் ஆற்றலின் சக்தியைப் பெருக்கச் செய்வதுதான் அந்த நிலை. ஆக, நாம் அதை நினைவில் கொண்டுதான் இயக்கப்பட வேண்டும்.

 

குற்றம் செய்தோரை எண்ணும்போது, இந்த உணர்வுகள் நமக்குள் இயக்கியவுடன், அந்தக் கோப உணர்ச்சிகள் எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது?

 

இதைப் போன்றுதான்,

நம் உயிரின் நினைவலைகளை அந்த மெய் ஒளி பெற வேண்டுமென்று ஆற்றலின் நினைவை நாம் கூட்டும்போதுதான்,

அந்த இயக்கச் சக்தியின் ஓட்டத்தை அதிகமாகக் கூட்டி

நாம் எண்ணிய சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

 

அந்தத் தகுதியைப் பெறச் செய்வதற்குத்தான் மகா ஞானிகள் ஒவ்வொருவரும், அந்த இயற்கையின் உண்மையின் இயக்கச் சக்தியை எவ்வளவு தெளிவாக உணர்த்தி உள்ளார்களோ, அதையும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

 

“நீங்கள் உணர்கிறீர்களோ இல்லையோ” ஒன்றுமறியாத வாயில்லாத நாடாக்கள் (கேசட்) இப்பொழுது எப்படி பதிவாக்குகின்றதோ, இதைப் போல உங்களுக்குள் இருக்கக்கூடிய மேக்னட், நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது, உங்களுக்குள் ஈர்த்து, தனக்குள் பதிவு செய்கின்றது

 

புகைப் படங்கள் எடுக்கப்படும்போது,

“கேமரா” எப்படி அதனுடைய நிலைகளைப் பதிவாக்குகின்றதோ,

மைக்கின் முன் பேசுவதை, “மைக்” ஈர்த்து பதிவாக்குகின்றதோ,

அதைப் போல உங்கள் எண்ணங்கள் செம்மையாக “சாமி சொல்வதைப் பெற வேண்டும்” என்ற ஏக்க உணர்வுடன் உங்கள் கண்ணின் நினைவலைகளில் ஏங்கி இருந்தாலே போதுமானது. 

old siddhas

ஆத்மாவின் இயக்கத்தையும் வளர்ச்சியையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆத்மாவின் இயக்கம் தான் இச்சரீரக் கூடு…!

1.ஆத்மாவின் பதிவு நிலை கொண்டு
2.ஆத்மாவின் உந்துதலுக்குகந்த எண்ண மோதலினால் சரீர இயக்கம் உட்பட்டு
3.சரீரத்தின் செயலைக் கொண்டு ஆத்மா சத்தெடுத்து
4.ஆத்மா எண்ணத்தை உருவாக்கி…
5.சரீரத்தின் செயலால் தன் சத்தெடுக்கும் சுழற்சியில் சுழன்று வாழுகிறது…! என்று
6.முந்தைய பாடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

அப்படிப்பட்ட எண்ணத்தின் உணர்வுக்கொப்ப… காற்றலையில் கலந்துள்ள சத்துத் தன்மையை உரமாகப் பெறும் சுழற்சி ஓட்டத்திலிருந்து… உண்மைச் சக்தியான உயிராத்மாவை… இக்கர்ம உடலை… உடலில் கர்ம எண்ணங்களிலேயே செலுத்தக்கூடிய வழி முறையை… எண்ணத்தின் பால்… மேல் நோக்கிய சுவாசமாக… இது வரை வழிப்படுத்திய வழி காட்டிய தன்மை கொண்டு…
1.நம் எண்ணத்தின் செயலைக் கொண்டு
2.நம் ஆத்மா ஞானப்பால் கொள்ளும் சுவையாக வளர்ப்படுத்துங்கள்.

புஷ்பங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அப்புஷ்பத்திலேயே அணுவாக வளர்ந்து புழுவாகிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் எந்த அமில முலாமின் அணுப் பெற்று ஜீவன் கொண்டு சத்தெடுத்து வளர்ந்ததோ அச்சத்தின் வண்ணக் கோர்வையை வண்ணத்துப் பூச்சியின் அழகு நிலை பெறுகின்றது. அதே போல் பூவில் பிறந்த வண்டு தேன் சுவையைப் பெறுகின்றது.

இவைகளைப் போன்று தான்
1.எச்சத்து நிலையில் எத்தன்மை வளர்ச்சி கொள்கின்றதோ அதன் வளர்ச்சி நிலைக்கொப்ப
2.எதில் எதில் எல்லாம் இவ்வெண்ண நிலை மோதி சத்தெடுக்கின்றோமோ
3.அதன் முலாம் வார்ப்பைத்தான் ஆத்மா பெறுகிறது என்பதை உணர்ந்து
4.ஆத்ம பலத்தின் உணர்வைக் கொண்டு அடைய முடியாப் பெரு நிலையை
5.இவ்வெண்ணத்தைச் செலுத்தும் உயர் ஞானத்தால் பெறலாம்.

இது நாள் வரை தெரிந்தோ தெரியாமலோ ஜெப வழியில் பல கோடி ஆத்மாக்கள் தனக்குத் தெரிந்த பாதை வழியில்… உயர்வைக் காண ஜெபம் கொண்டு செல்கின்றனர்.

அவர்களுக்கும்…
1.இந்தத் தியான மார்க்கத்தின் மூலம் இந்த ஞானத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தன்மைக்கும்
3.நாம் பெறும் போதனை ஞான வளர்ச்சியைக் கொண்டு
4.நம் ஈர்ப்பலையின் வட்டத்தில் ஆத்ம ஐக்கிய இயக்கத் தொடர்பு கொண்டு செயல் கொள்ள வேண்டும்.

பழனியில் ஒரு சர்க்கஸில் யானையின் உடல் வலு, அதை அடக்கிய மனிதனின் எண்ண வலு 

வாழ்க்கையின் எல்லை – உங்களை உங்கள் எண்ணம் தான் காக்கும் 

Electronic Card மூலம் பரிவர்த்தனை செய்வது போல் நம் உணர்வுகளின் இயக்க நிலைகள்

human family

மனிதனுடைய பலன் அவன் பெற்ற “மக்கள் செலவங்கள் தானா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இயற்கையில் வளரும் தாவர இன வளர்ச்சியில் அதன் பலனின் தரவல்ல வித்துக்களும் மற்றைய கனிகளும் அதன் சுவை மணம் அழகு எல்லாமே அதற்கு உண்டு.

அது அல்லாமல் நாம் பயிர் செய்யும் தானியங்களில் அவை பலன் தரவல்ல காலங்களில் உதாரணமாக நெல் மணியில் அதன் சத்து நிலை தரவல்ல காலங்களில் பூத்து பின் நெல் மணிகள் அழகு பெற்று வளர்ந்து குலுங்குகின்றது.

அந்தந்தக் காலங்களில் இவைகளின் மணத்தைக் கொண்டு உணவைத் தேடி வரும் பட்சிகளின் ரோமத்தின் மிருதுத் தன்மையும் அவற்றின் வண்ண அழகுகளும் எத்தனையோ உள்ளது.

1.அது அது எடுத்து வளரத்தக்க அமில வார்ப்பின் வளர்ப்பின் வளர் நிலையில்
2.அதன் பலன் தரும் வளர்ச்சி அழகை இயற்கை என்ற நியதியுடன் கண்ணுற்றுப் பார்க்கும்
3.செயற்கையுடன் ஒன்றி வாழும் நாம் அது வளரும் உண்மையை அறியாமல்
4.ஆனந்த ரசிப்பில் இயற்கையாக எண்ணித்தான் அதனைக் காண்கின்றோம்.

ஆனால் ஒவ்வொரு வளர்ப்பிலுமே “அதன் பலன் ஒன்று…” வளரும் தன்மையில்தான் சகல சக்திகளும் வளர்கின்றன.

கடல் வழியில் பல கோடி வளர்ப்புகள் கடல் நீரில் சத்தெடுக்கின்றன. நீரின் நிலைகளில் ஆற்றுப்படுகைகளில் நீர் நிலை உருளும் தனமையிலேயே பல வளர்ச்சி நிலைகள் நிறைந்துள்ளன.

1.எல்லாவற்றிலும் மோதுண்டு மோதுண்டு பல வளர்ச்சியில் முலாம் கொண்ட உயிரணு
2.மோதுண்ட வளர்ச்சி நிலைக்கொப்ப ஆத்ம நிலை கொண்டு
3.சக்தி நிலை பெறவல்ல எண்ணச் செயல் பூண்டு
4.ஜீவ ஆத்மாவாகக் கரு தோன்றி கரு வளரும் அமில முலாமாக
5.எண்ணத்தின் ஞானத்தால் ஞானப்பாலின் சத்தெடுத்து
6.ஆத்ம முலாம் மனித வித்தின் ஜீவிதத்தில் வளர்ச்சியுறும் காலத் தன்மையில்
7.ஆத்மாவின் ஒளி நிலை பெறும் வளர் நிலை தான் மனித வித்தின் ஜீவ வளர்ச்சியின் அடுத்த நிலை.

மாமரம் மாங்கனிகளைத் தன்னுடைய சத்தாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் மனிதன் தன்னுடைய பிறப்பின் வளர்ச்சி என்பது… “தான் பெறும் மக்கள் செல்வம்தான்…” என்ற எண்ணத்திலேயே உள்ளான்.

ஆக…
1.தன் பெயர் சொல்லும் வாரிசு நிலையைத்தான் உயர்வு கண்டு வாழ்கின்றனரேயன்றி
2.தான் பெறவேண்டிய முதிர்வு நிலையைப் பற்றி எண்ணவில்லை.

அன்றைய போகமகரிஷிக்கும் கொங்கண தேவருக்கும் கோலமாமகரிஷிக்கும் கிடைத்த வாரிசு நிலை அவர்களின் நிலையுணர்ந்த ஞானவான்களுக்குத் தெரியும்.

1.பிறவியுடன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் செல்வம் மட்டும் தான் செல்வம். என்று எண்ணாமல்
2.”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை….!

இன்றைய கால நிலையில் இத்தகைய ஆத்ம ஞானத்தால் பெறும் தியான வழி முறையையோ தன்னுள் உள்ள தெய்வச் செயலையோ அறிய விரும்புவோர் அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்.

https://youtu.be/wQZHF3wZvh8

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்வதன் பொருள் என்ன…?

 

“ஓ…ம் ஈஸ்வரா… என்று சொல்லும் பொழுது, இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்து குணங்களுக்கும் இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்து தசைகளுக்கும் இந்த உடலில் உள்ள எண்ணங்கள் அனைத்திற்கும் குருவாக இருப்பது நமது “உயிர்”.

 

ஆகையினாலேதான் “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லும் பொழுது உயிரை எண்ணி ஏங்க வேண்டும். அதே சமயம் நமது குருநாதர் பெயரும் “ஈஸ்வரா…” என்பதுதான்.

 

அவர் ஜீவன் உள்ள சக்தியாக குருவாக நின்று விண்வெளியின் ஆற்றல்மிக்க சக்தியை வளர்த்து உயிர் எப்படி ஒளியாக நின்று இயங்குகின்றதோ இதைப்போல அவர் மனித உடலிலிருந்து உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி என்றும் நிலையான ஒளி சரீரமாக, சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றாக ஒன்றி இன்றும் நிலைத்திருக்கின்றார்.

 

அவர் உடலிலே உணர்வை ஒளியாக மாற்றிய நன்நாள் தான் “வைகுண்ட ஏகாதசி” என்பது. “ஏகாதசி” என்பது என்றும் ஒளிமயமான நாள், துயரமற்ற நாள் என்பார்கள்.

 

நமது குருநாதர் பெயரும் “ஈஸ்வரா…” என்று வருவதனால் “அவருடைய நினைவையும்” உயிருடன் ஒன்றி நினைத்து, நாம் எண்ணி ஏங்க வேண்டும்.

 

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா” என்று எண்ணும் போதெல்லாம் வெறும் வார்த்தைகளாகச் சொல்வது பயனற்றது.

 

நாம் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும்போது, நம் உயிரைப் “பரிபூரணமாக” நினைவில் வைத்து நமக்குள் ஈசனாக இருந்து இயங்குவதும், நம் உடலுக்குள் அனைத்து உணர்வுகளுக்கும் குருவாக இயக்கிடும் நிலை பெற்றது என்ற நினைவு கொண்டுதான் நாம் எண்ணி ஏங்க வேண்டும்.

suicide

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாவிற்குள் இருக்கும் நிலைகள் என்ன…?

 

ஒருவர் இறந்து விட்டால் சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் உடலை சுட்டுக் கருக்கிவிட்டு பின் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் மோட்சம் அடைந்தார்…! என்று சொல்வார்கள்.

1.அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் எந்தெந்தக் குணங்களை அவர் எடுத்துக் கொண்டாரோ
2.இந்த உணர்வுகள் அனைத்தும் அந்த உடலுடன் உண்டு.
3.ஆனால் இந்த உடலைக் கருக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து
4,அது அனைத்தையும் மீண்டும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விடுகின்றது.

அதாவது இந்த உடலின் தசைகள் கரைந்தாலும் இந்த உணர்வின் தன்மையை மாற்றி விடுகின்றது சூரியன். நம் பரமாத்மாவில் (காற்றிலே) இங்கே கலக்கின்றது.

இந்த உடலை விட்டு ஆன்மா போன பின்…. சுட்ட பின்…
1.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள்
2.இந்த உடலை உருவாக்கிய அணுக்களின் இயக்கம் தான் இதற்குள் இழுத்துச் சேர்க்கும் தன்மைகள்.
3.வெப்பத்தின் தன்மை கொண்டு இங்கே பிரிக்கப்படும் பொழுது
4.அதிலே சேர்த்துக் கொண்ட உணர்வின் உறைவிடமாக இருக்கின்றது. அந்த அணுக்களில் (உணர்வின் ஒலிகளாக)

இப்பொழுது நாம் சொல்லால் சொல்கின்றோம். இந்த உணர்வுகள் எல்லாம் அதிலே இருக்கும். அதே போல் அவர் மந்திர ஒலிகளைப் பதிவாக்கியிருந்தால் அதுவும் இருக்கும்.

இப்படி… இறந்த உடலைக் கருக்கிச் சாம்பலாக்கினாலும் இந்த உடலை உருவாக்கிய உணர்வின் நிலைகள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலன் அறிவு கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

பின் அது கவர்ந்த நிலைகள் அனைத்தும் அவர் சொன்ன அதே மந்திர ஒலிகளைச் சொல்லப்படும் பொழுது இழுத்துக் கொண்டு வரும்.

எப்படி…?

ஏனென்றால் அவருடைய உணர்வின் தன்மை அங்கே சென்றது. அவர் அணிந்திருந்த ஆடையும் அவர் நடந்து சென்ற பாத மண்ணும் அவர் தலை முடியும் இந்த மூன்றையும் எடுத்தால்… அவருடைய உடலின் மணமும் பாத நிலைகளும் அதிலே இருக்கும்.

அவர் (இறந்தவர்) எந்தத் தெய்வத்தின் நிலைகள் கொண்டு பக்தி கொண்டு மந்திரங்களை ஓதித் தனக்குள் வளர்த்துக் கொண்டாரோ இறந்த பின் மாந்திரீகம் செய்பவர்கள் அந்த உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து அதை எடுத்துப் பில்லி சூனியம் ஏவல் போன்ற சில தவறான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சாங்கியம் செய்து கரைத்து விட்டுக் கண ஹோமம் செய்து மோட்சத்திற்கு அனுப்பியதாகச் சொல்வார்கள் ஒரு சாரர்.

அதே சாங்கியங்களைச் செய்து கரைத்த பின் விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கை ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்பார்கள் இன்னோரு சாரார்…!

1.இப்படி எல்லாம் சாங்கியங்களைச் செய்து வெளி வந்தாலும்
2.அந்த உணர்வுகள் எல்லாமே காற்றிலே தான் படர்ந்திருக்கும்.
3.அதை மாற்றும் வல்லமை இல்லை…!

அதை மாற்றி அமைக்க வேண்டும் என்றால்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க வேண்டும் என்றால்… உயிருடன் ஒன்றிய உணர்வுகள் ஒளியாக மாறவேண்டும் என்றால்… என்ன செய்ய வேண்டும்…?

 

அதிகாலை துருவ தியானத்தில் எவர் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொள்கின்றாரோ…
1.அதன் மூலம் அவர்கள் சார்புடையோரை உந்தித் தள்ளி விண் செலுத்த முடியும்
3.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

குருநாதரை உற்றுப் பார்த்துக் கவர்ந்த ஆற்றல்

கண்கள் தோன்றிய விதம், இருளில் மற்ற உயிரினங்கள் எப்படிப் பார்க்கிறது 

குருநாதரை உற்றுப் பார்த்து நுகர்ந்த உணர்வு – கண் கருவிழிக்குண்டான ஆற்றல் 

immortal sea

இறந்தவர்கள் அஸ்தியைக் கரைப்பதன் உண்மையான பொருள் என்ன..?

 

தினசரி காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தினால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோமோ அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு எளிதில் அனுப்ப முடியும்.

1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.இந்த உணர்வுகள் பட்டு உடல் பெறும் உணர்வைக் கரைத்துவிடும்.
3.ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அனைவருமே உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அடுத்துக் காலை சூரிய உதயம் வருகின்றது. இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை… அந்த விஷத்தை… அது கவர்ந்து செல்கின்றது. ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை வேக வைத்தால் அந்த விஷத் தன்மைகள் பிரிந்து செல்கிறது. பிரிந்தாலும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக அதை மாற்றி வைத்துக் கொள்கின்றது.

இயற்கையில் விளைந்த உணர்வானாலும்… நாம் வேக வைத்து விஷத்தை நீக்கினாலும்…
1.இது எதன் கலவையுடன் கலந்து இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்திய பின் – நாம் கருணைக் கிழங்கை உணவாக உட்கொண்டாலும்
3.அந்த உணர்வின் தன்மை சூரியன் காந்த சக்தி எடுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்களாக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து அதை நமக்குள் வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் அதை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனதன் உணர்வின் தன்மை கொண்டு உடலில் அணுக்களாக உருவாகின்றது.

ஆனால் அதே சமயத்தில்
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலை கொண்டு அந்த அணுக்கள் மாற்றம் அடைகின்றது.
3.இதை நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும் (முக்கியமானது).

இதைப் போல் நாம் எடுக்கும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் சூரியனின் காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது.

ஆனால் நாம் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலையில் சூரிய உதயம் வரப்படும் பொழுது ஓசோன் திரை என்று விஷத்தின் தன்மை அடர்த்தியாகித் தன்னுடன் அந்த விஷத்தை (உடல் பெறும் உணர்வை) இணைத்துக் கொள்கின்றது.

சூரியனிலிருந்தும் மற்ற பிரபஞ்சங்களிலிருந்தும் வரக்கூடியதை நம் பூமி கவரும் நிலையில்
1.அது பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியாக ஆன பின் தான்
2.விஷத் தன்மைகள் உட்புகாது தடுக்கும் நிலை வருகின்றது.
3.அது தான் ஒசோன் திரை என்பது.

சூரியனிலிருந்து வரக்கூடியது “அல்ட்ரா வயலட்” – விஷத்தின் தன்மை கொண்டது. அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக் கதிர்கள் வெகு தூரத்தில் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது. நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத்தின் தன்மைகளைப் பிரிகின்றது.

பிரித்தாலும்… இந்த மோதலில் வெப்ப மின் அணு போன்று ஆகும் பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மை அடைகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் போது
1.நம் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக ஆன பின் (ஓசோன் திரை)
2.நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற அனைத்தும் வாழும் தகுதி பெறுகின்றது
3.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும் நமக்குள் அடக்கச் சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்று தான் நாம் விண் செலுத்தும் ஆன்மாக்கள் பிரபஞ்சத்தை விட்டு வெளியிலே சென்ற பின் உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் ஓசோன் திரையுடன் அதனின் அடர்த்தியில் கலந்து விடுகின்றது.

இப்படி இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் மீண்டும் அடுத்த உடலைத் தான் இந்த உயிர் இங்கே உருவாக்கும்.

அதாவது…
1.இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உணர்வின் தன்மை கொண்ட உடலாக உருவாக்கும்.

பௌர்ணமி தியானத்தின் முக்கியத்துவம்

 

பௌர்ணமி தியானத்தின் மூலம் கூட்டுத் தியானம் இருந்து நம் முன்னோர்களை எளிதில் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யலாம். அவர்களை மீண்டும் ஒரு உடலுக்குள் செல்லாதபடி ஒளியின் சரீரம் பெறச் செய்யலாம். 

RISHI PATHNI

“சிவ சக்தி” என்ற படைக்கும் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நீர் சக்தி இல்லை என்றால்… நெருப்பு எரிய சக்தி இல்லை. நெருப்பாக ஆவி கொண்டு (உஷ்ண அலை) நீர் நிலை பெறாவிட்டால்… நீருக்கும் வளர்ச்சி இல்லை.

தனித்த சக்தி.. தனி அணு… தனித்த ஒன்றுக்கு… எப்படிச் செயல் இல்லையோ அதைப் போன்று ஆத்ம சக்தியின் சித்து வளர்ப்பிற்கு ஆண் பெண் இயக்கத் தொடர்பு ஆத்மக் கூட்டு நிலை செயல் கொள்ளும் வளர்ப்பு நிலை அவசியம் வேண்டும்.

ரிஷிபத்தினி… ரிஷி சக்தி… என்ற கூட்டு ஐக்கிய ஆத்ம தொடர் சித்து பெறும் தம்பதியின் வழித் தொடரினால் தான்
1.உணர்வின் எண்ணத்தால் செயல் கொள்ளும் படைப்புத் தொடர் ஆத்ம அணு வளர்ப்பின் தொடர் அலையை
2.இன்று நம் பூமியில் உள்ள மனித சக்தியைப் போன்ற தொடர் அலையை வழிப்படுத்தும் வளர் நிலைக்கு
3.பிறிதொரு மண்டலத்தில் இதைப் போன்று வளர வேண்டிய நிலை ஏற்பட வேண்டிய தொடருக்கே
4.இத்தொடர் நிலை கொண்ட சக்தி நிலை ரிஷித் தன்மை செயல்பட வேண்டும்.

படர்ந்து கொண்டேயுள்ள ஆவி அமிலம் திடம் கொண்டு அண்டசராசர அனைத்துக் கோடி சுழற்சியிலும் மாறிக் கொண்டே வழித் தொடர் கொள்ளும் ஒவ்வொன்றின் நிலை அனைத்திற்குமே வளர்நிலை தொடர் வளர்ச்சிக்கு “ரிஷித் தன்மை கொண்ட அலைத் தொடர் வளர்ப்பு தேவை…!”

அந்த வளர்ப்பைக் கொண்டு எச்சக்தி நிலையையும் உயர்வுபடுத்திச் செயலாக்கும் வளர் சக்தியின் சக்தியே ஆண் பெண் என்ற எண்ண சக்தியில் மனித வளர்ப்பு வார்ப்பில் உருவாக்கும் தொடர் அலையில் தான்

நாம் வாழும் இந்தப் பூமியே “சிவ சக்தி” என்ற இரண்டு ஆத்மாக்களின் தொடர்பில் உருவாகிப் பல கோடி ஆண்டுகளாகத் தன் உருவின் உருக்களை வளர்த்துக் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட உருவின் உருவைக் கொள்ளும்
1.உயர் ஆத்ம தொடர்பு – ஆண் பெண் ரிஷித் தன்மையின்
2.வழித் தொடர் ஆத்மாக்களை வளர் கொள்ளும் செயல் தன்மை
3.அரிதிலும் அரிதாகத்தான் இன்று வரை செயல்பட்டுள்ளது.

இதைப் படிப்போர் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் தொடர்பு ஆத்ம தியான சித்தைப் பெற்று… வாழ்க்கையுடன் ஒன்றிய கூட்டு ஐக்கிய தியான வளர்ச்சியால்…. இந்தப் பூமியின் சக்தியைப் போன்று.. நம் சூரியக் குடும்பத்தின் சுழல் கொண்டு மிதந்து ஓடும் மண்டல சுழற்சி ஒவ்வொன்றிலுமே… அதன் சக்தி நிலைக்கொப்ப “அதன் வளர் சக்தியின் வளர்ப்பிற்கு வழி செய்யலாம்…!”

நம் பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தில் வளர்ந்த மஏஏஅ மண்டலங்கள் விஷத் தன்மை கொண்டதாகத்தான் இன்றைய நிலையில் உள்ளது.

இதே சுழற்சி நீடித்து நம் பூமியும் இன்றுள்ள விஷத் தன்மையில் (செயற்கை என்ற காந்த மின் சக்தியைப் பிரித்தெடுத்ததன் விஷத்தால்) சுழன்றது என்றால்
1.இக்கலி மாற்றத்தில் வரப் போகும் கல்கியில்
2.தன் ஞானம் மிஞ்சாது விஞ்ஞானம் எஞ்சி நிற்கும்.

 

ஆகவே ஒவ்வொரு ஆத்மாவுமே தன்னுள் உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…?

வியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…?

குழந்தைப் பாக்கியம் இல்லாதவருக்குக் குழந்தை கிடைத்தது எப்படி…?

fragrant flowers and fruits

உடலுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது போல் ஆத்மாவுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஜீவன் கொண்ட ஒவ்வொரு செயலுமே தன் ஜீவித உணவை எடுத்து எப்படி வளர்கின்றதோ அதைப் போன்றே இவ் ஆத்ம வலுத் தன்மைக்கு வலுக்கூடிய பிறகு… அதுவே ஒளிரும் தன்மையில் தனித்து இயங்கக்கூடிய வழித் தொடருக்கு “உணவு நிலை தேவை…!”

அதைப் பெறும் வழி முறை எப்படி…?

கல் மண் தாவரங்கள் உலோகங்கள் திரவகங்கள் ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஜீவ சக்தியுடன் வாழும் காலத்தில் அது அதற்குகந்த உணவு நிலையை உட்கொண்டு ஜீவத் துடிப்புடன் வாழ்கின்றது.

கல்லும் மண்ணும் உலோகமும் திரவகமும் தாவர இன வர்க்கங்கள் எல்லாமே வளரும் பிடிப்பிலிருந்து எடுத்தவுடன் அதனுடைய வளர்ச்சி நிலை நின்று விடுகின்றது.

இப்படி அதனை உருமாற்றிச் செயல்படுத்தும் ஜீவனற்ற மாற்று நிலைக்கு உட்படுத்தியவுடன் அதன் வளர்ப்பு நின்று ஜட பிம்பப் பொருளாக கரையும் ஆவி நிலைக்கு உட்படும் வழித் தொடருக்குச் சென்று விடுகின்றது.
1.இதே போல் தான் ஜீவராசிகளின் உயிர்ச் சக்தியும் உயிர் ஆத்மா பிரிந்தவுடன்
2.திடப் பொருளாகி உணவு உட்கொள்ளும் நிலை மாறி ஆத்மா பிரிந்து செல்கிறது.

ஜீவ சக்தி கொண்ட ஒவ்வொன்றுமே தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு உணவை உட்கொண்டு வாழ்வதைப் போன்று அழியாத நிலை என்னும் பிறவி இல்லா நிலை பெறும் சக்திக்கும் அதன் வளர்ச்சி வளர் கொள்ள உட்கொள்ளும் (உணவு) வழித் தொடர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வளர் தன்மைக்கு ஆண் பெண் அமிலச் சேர்க்கை ஜீவத் துடிப்பு எப்படி அவசியமோ அதைப் போன்றே
1.ஆத்மாவைச் சரீரத்திலிருந்து பிரித்துச் செயல்படுத்தும் வழி முறைக்கு
2.உடலுக்கு வேண்டிய உணவை உட்கொள்வது போன்றே ‘
3.ஆத்மாவிற்கான உணவைச் செயல்படுத்தும் வழி முறை செயல். தான் “அஷ்டமா சித்து” கொண்ட வளர் நிலை.

பலவற்றில் இருந்து விளைந்து உயர்வின் முற்றிய தன்மையான மனித சக்தியின் எண்ண உணர்வு சொல் செயல் ஆற்றல் கொண்ட ஆத்ம சரீர சக்தியில் இருந்து தான் மனித சக்திக்கு அடுத்த வளர்ப்பு சக்தியான தன் ஆத்மாவைப் பிரித்துச் செயல்படுத்தும் வழி முறை வளர்ச்சி நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்குரிய ஆரம்பத் தொடர் உணவு நிலையாக… ஆத்மா பெறும் நிலை எண்ணத்தைச் செலுத்திக் காற்றலையின் தொடர்பிலிருந்து தன் சுவாச ஈர்ப்பிற்கு நறுமண அலைத் தொடர்பையும் கனிகளின் சுவை அலையையும் பெற்று அச்சுவைகளை உணவாக எடுக்கும் வழித் தொடரை ஆத்மா பெறுகின்றது.

1.காந்த மின் அலையின் வார்ப்பு சக்தியை ஜெபத்தால் எடுக்கும் ஞான சக்தியில்
2.தன் ஆத்மாவைத் தானே காணக்கூடிய வழி முறை பெற்றவுடன்
3.சரீர இயக்கத்திலிருந்தே உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி உணவு எடுக்கும் வழி முறை பெற்று
4.அவ்வழி முறைத் தொடர்பில் இருந்து ஆத்மா தனித்து இயங்க
5.ஆத்மாவுக்கந்த ஆத்ம அலைத் தொடரில் தொடர்பு கொண்டு
6.ஆத்மாவிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பலையின் ஈர்ப்பலையின் ஈர்ப்பிலிருந்தே தன் ஆத்மாவிற்கு உணவெடுத்துக் கொள்கின்றது.

வலுக் கொண்ட நிலையில் தனித்து இயங்கும் ஆத்மாவின் செயல் ஒன்றை அறிய… அணுவுக்குள் அணுவாக… இச்சரீர பிம்ப இயக்கத் தொடர்புடன்…
1.சரீரத்தில் இருந்து எண்ணத்தை வெளிப்படுத்திய ஆத்மா செயல் கொள்ளும் வழித் தொடரில் மோதும் பொழுது…
2./இச்சரீர சுவாச ஈர்ப்பிற்கு அவ் அணு அலை வளர்ச்சி கொண்ட
3.சேமித காந்த நுண் அலை சுவாசத்தின் உணர்வில் சமைத்து
4.எலும்புகளின் உராய்வு கொண்டு – ஆத்மாவின் செயலுடன் ஒன்றுகின்றது… “உணவாக…!”

இத்தகைய நிலை பெற்றால் ரிஷிகளின் தொடர்பலையுடன் ஒன்றிட முடியும். அவர்கள் பெற்ற வளர்ச்சியையும் பெற முடியும்.

இராவேந்திரர்… பாலயோகீஸ்வரர்… ஞானம் பெற்ற நிலை

 

இராகவேந்திர சுவாமிகள் பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது அந்த ஞானிகளின் அருளைப் பெற வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைத்தார். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் தன்னை அணுகி உள்ளவரை (மனைவியை) மறந்துவிட்டார்.

 

இராகவேந்திரரின் ஆன்மா பல காலம் திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.

 

அவருடைய உடலில் இராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான் இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெற முடிந்தது. 

 

ஒன்றுமறியாத பாலயோகியினுடைய உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.

digital world

விஞ்ஞான அறிவின் அபரிதமான வளர்ச்சியை மெச்சிப் பயன்படுத்தினாலும் அதனுடைய தீய விளைவுகளை மறந்து விட்டோம்

 

விஞ்ஞான அறிவால் நாம் இன்றைக்குப் பல ஆடம்பர நிலைகளை விரும்புகின்றோம்.

அதன் வழியிலே நாம் செயல்பட்டாலும் விஞ்ஞான அறிவால் இன்றைக்கு டி.வி. மூலம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை வீட்டில் உள்ளோர்கள் இந்த உலகம் முழுவதற்கும் நடக்கும் அசம்பாவிதங்களைப் படமாக்கிக் காட்டுகின்றனர்.

அதை எல்லாம் உற்றுப் பார்க்கும் நிலை வரப்படும் பொழுது கர்ப்பமான தாய் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் பார்க்க நேர்ந்தால் அதை நுகர நேர்ந்தால் அந்தக் குழந்தைக்குள்ளும் அந்தத் தீமைகள் உருவாகின்றது.

1.அங்கே சிதையும் உணர்வுகள் இங்கே வருகின்றது.
2.அந்தச் சிதைந்திடும் உணர்வுகள் கருவிலே இருக்கும் குழந்தையிடமும் வளர்கின்றது.
3.இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே வருகின்றது.

ஆனால் அந்த அசம்பாவிதங்களை ஒவ்வொரு நாளும் ஒளி பரப்புகின்றனர். எங்கே சிதைந்த உடல்களிலிருந்து வெளிப்பட்டதோ கருவிலிருக்கும் குழந்தை அதையும் நுகர நேர்கின்றது.

இன்று உதாரணமாக அமெரிக்காவில் நடக்கும் சம்பவத்தை அங்கே பதிவு செய்தைதை “அடுத்த கணமே…!” இங்கே நம் வீட்டிலிருந்தே காண முடிகின்றது… அறிய முடிகின்றது.

இது காற்றின் அழுத்தத்தால் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தின் மூலம் அறிய முடிகின்றது. அதே சமயத்தில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற முறையை வைத்து இப்படி மாற்றுகின்றனர்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற தொடர்பு வைத்துக் கொண்டது. இதே அழுத்தத்தை இங்கிருக்கும் சாதனத்தில் கொண்டு வரும்போது அந்த அழுத்த உணர்வுகள் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்காக அந்தப் பதிவுகளை மனிதனுடைய உருவத்தையே இங்கே நமக்கு முன் உருவாக்குகின்றது.

இப்படித்தான் அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சிகள் இங்கே ஒரு நொடிக்குள் கிடைக்கும்படி விஞ்ஞான அறிவில் செய்கின்றார்கள். ஆனால்…
1மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறு செய்தாலும்
2.மனிதனுக்கு எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கின்றது என்பதை மறந்துவிட்டோம்.

ஏனென்றால்…
1.எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது
2.இந்த மனித உடலின் இச்சை தான் வருகின்றது.
3.ஆனால் பிறவியில்லா நிலையை அடையப் பெரும் தடையாகின்றது.

அன்று அகஸ்தியன் கண்ட உணர்வின் துணை கொண்டு அவன் பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் உணர்வின் வழிப்படி சென்று அந்தப் பிறவி இல்லா நிலையை அடைய முடியும்.

ஆகவே தான் இந்தக் காலை துருவ தியானங்களை நாம் தெளிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருகின்றோம்.

கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் சேர்த்து
1.தன் கணவன் பெறவேண்டும் என்று மனைவியும்’
2.தன் மனைவி பெறவேண்டும் என்று கணவனும் ஒருவருக்கொருவர் எண்ணி
3.இரு உயிரும் அந்த உணர்வின் தன்மை ஒன்றிணைத்தே பழக வேண்டும்.

கணவனும் மனைவியும் இவ்வாறு இரு உயிரும் ஒன்றி ஒளியாக மாற்றினால் அடுத்து இன்னொரு பிறவி இல்லை…!

“ஒருவருக்கு விபத்து…” என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் பாசம் கொண்டவரை அது எப்படி இயக்குகிறது…?

வேதனை உணர்வின் இயக்கங்களும் விடுபடும் வழிகளும் 

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற்று நல்லதாக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்

discrimination

உயர்வின் உயர்வுக்கு “உயர்ந்த எண்ணத்தை எடுக்க வேண்டிய முறை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் எண்ணத்தின் உயர்வினால் பெற்ற ஆத்ம பலம் கொண்டு நாம் செலுத்துவது எல்லாமே… நாம் எடுத்த ஜெப உணர்வின் நற்குண எண்ண அலை வெளிப்படும் பொழுது…
1.எவ்வளவு கொடிய எண்ணம் கொண்ட குரோதம் கொண்டவனாக ஒருவன் நம்மைச் சந்தித்து எதிர்பட்டாலும்
2.அந்தக் கொடிய எண்ணத்தைக் கொண்டவனின் குரோத நிலை
3.நாம் வெளிப்படுத்தும் சாந்தத் தன்மையினால் அண்ட முடியாது.

பதட்டம் சோர்வு சங்கடம் சலிப்பு போன்ற உணர்வு நிலைக்கே இடம் தரா ஆத்மாவாக நம் ஆத்மா வலுப் பெற்ற தன்மையாக இருந்தால் எதிர் நிலை கொண்ட எந்த உணர்வு எண்ணமும் நம்மைப் பாதிக்காது.

குரோதத்தாலும் வஞ்சனையினாலும் பதட்டம் கொண்ட சோம்பல் கொண்ட எச்சுழற்சி வட்ட ஈர்ப்பில் உள்ளவராக இருப்பினும் அவைகளும் நம்மைப் பாதிக்காது.

நாம் பெற்ற அந்த நற்குண வலுத் தன்மையினால்
1.எந்த ஆத்மாவின் மேல் எண்ணத்தின் பார்வையின் ஒளியை
2.எதை எண்ணிச் செலுத்துகின்றோமோ அந்நிலை அங்கே நடக்கும்.

ஆனால் அதே சமயத்தில் கொடிய குரோத எண்ணம் கொண்டவனாக இருந்தாலும்… தெய்வ சக்தியின் உயர்வு ஆத்ம சித்துவை நாம் பெற்றிருந்தாலும்… நாம் செலுத்தும் சக்தி அங்கு நடக்கும்…! என்ற உண்மை தெரிந்தாலும்…
1.தீய சக்தியை… அந்தத் தீயதை அழிக்க வேண்டும்…! என்று நம்மை உயர்த்தி எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால்
2.அவன் பெற்ற தீய அலைத் தொடர்பின் ஈர்ப்பில் நாமும் மீண்டும் சிக்கி
3.அவன் பால் செலுத்தும் எண்ணத்திலேயே மனிதனுக்கு மனிதன் விடும் சுவாசத்தின் மோதலினால்
3.காந்த நுண் அலையின் தொடர்பு ஈர்ப்பு அணு வளர்ப்பின் செயலுக்கு நம் உடலும் உட்படுகின்றது.

ஆகவே எண்ணத்தை உயர்த்தி நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ சக்தி கொண்டதாக எண்ணத்தில் கொண்ட ஆத்மத் தொடர்பினால் தான் நம் ஆத்மா வலுக் கொள்ள முடியும்.

அதாவது நாம் செலுத்தும் எதிர் அலையின் உணர்வலை தான் நாமும் திரும்பப் பெற முடியும்.

எந்நிலை எக்குண வழித் தொடரில் இருந்தாலும் அவ் ஈர்ப்புப் பிடியில் நாம் சிக்காமல் எண்ணத்தின் உயர்வைக் கொண்டு உயர்ந்த ஒலி அலைகளையே பிறர்பால் செலுத்தி எண்ணத்தில் ஒவ்வொரு ஆத்மாவையும் நாம் உயர்த்தி நமக்கு வேண்டிய நல் சத்தை நாம் பெறலாம்.

1.தீயது… நல்லது…! என்ற பாகுபாட்டுடன் நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தாமல்
2.நம் உயர்வின் உயர்விற்கு உயர்ந்த எண்ணத்தால் சக்தி பெறலாம்.

கூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம்

 

ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவர்ந்து அதைத் தியானத்திற்காக கூடியுள்ள அனைவரும் பெறவேண்டும்… அனைவரும் நலம் பெறவேண்டும்…! என்று எண்ணும் பொழுது அனைவரது சக்தியும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்றது.. இது தான் மகரிஷிகள் காட்டிய அருள் வழி…!

powers-and-wisdom

உடலுக்கு வேண்டிய சுகத்திற்காகத்தான் கடவுளை வணங்கும் நிலையே இன்று உள்ளது – தீமையை நீக்கும் சக்தியை எடுப்பார் இல்லை…!

 

இன்று விஞ்ஞான அறிவால் தாவர இனங்களில் அதிக அளவில் விஷத் தன்மை பரவியுள்ளது. அதிலே விளைந்த தானியங்களை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலிலும் நஞ்சு கலந்த அணுக்கள் உருவாகத் தொடங்குகின்றது.

அதே போல் காய்கறிகளிலேயும் பல பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றனர். அத்தகைய காய்களை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் அந்த நஞ்சும் சிறுகச் சிறுகச் சேர்கின்றது.

1.அதே சமயத்தில் பூச்சிகளைக் கொல்வதற்காகத் தெளிந்த மருந்துகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது
2.எந்தப் பூச்சிக் கொல்லி மருந்தின் உணர்வைக் கவர்ந்தோமோ அது நம் உடலில் சேர்ந்த பின்
3.காற்றிலிருந்து எடுத்து அந்த விஷமான அணுக்களாக விளையத் தொடங்குகின்றது.
4.அதனால் உடலில் கை கால் குடைச்சல் என்ற நோய்கள் வருகின்றது.
5.அந்தந்தக் காலகட்டங்களில் “இனம் புரியாத…” புதிய புதிய நோய்களும் சாடுகின்றது.

இத்தகைய விஷத் தன்மை அதிகரித்த நிலையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகைமையாக்கி வெளிப்படுத்திய உணர்வுகளும் இருக்கின்றது.

அத்தகைய பகைமை ஊட்டும் உணர்வுகள் நமக்குள் பதிவான பின் அதே உணர்வுகளை நாம் நுகர நேர்கின்றது. அதுவும் உடலில் விளையத் தொடங்குகிறது.

இது எல்லாம் சேரும் பொழுத் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலற்றதாக மாற்றிக் கொண்டு வருகின்றது.

நாம் நல்ல மனிதர்களாக இருப்பினும்
1.நம்மை அறியாமலே வேதனைப்படுபவர்களாகவோ
2.அல்லது கோபப்படுபவர்களாகவோ மாறி விடுகின்றோம்.
3.சிந்திக்கும் தன்மையும் இழந்துவிடுகின்றோம்.

வாழ்க்கையே என்ன…? என்று அறியாத நிலையில் வெறுப்படைந்து இந்த உடலையே வெறுக்கும் தன்மைக்கு வந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வுகள் வரப்படும் பொழுது எதனை அதிகமாக இந்த வாழ்க்கையில் சேர்க்கின்றோமோ அதனின் பெருக்கமாகும் பொழுது நல்ல அணுக்களின் வளர்ச்சி குறைந்து விடுகின்றது. உடல்கள் நலிகின்றது.

உடல் நலிய நலிய தன்னையே வெறுக்கும் தன்மைக்கு வந்துவிடுகின்றோம். இனி எப்படியாவது…
1.இந்த உடலை விட்டுச் சென்றால் போதுமே..! என்று
2.இறக்க வேண்டும் என்ற நிலை தான் முடிவாகின்றது.

கடைசியில் இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின் உடலில் விளைந்தது எந்த உணர்வோ அந்த உணர்வுக்குத் தக்க விஷம் கொண்ட உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று அங்கே கருவாகி மீண்டும் வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் உயிரினங்களுக்குள் சென்று விடுகின்றோம்.

பல கோடிச் சரீரங்கள் கடந்து இன்று மனிதனாக வந்த நிலையில் விஞ்ஞான அறிவால் இப்ப்டிப்பட்ட பேரழிவுகள் இங்கே இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

1.பக்தி மார்க்கங்களில் கடவுளை வணங்குவதெல்லாம் உடலுக்கு வேண்டிய சுகத்திற்காகத்தான்…!
2.ஆனால் உடலில் வரும் தீமைகளை மாற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்றால்
3.அதை யாரும் எடுப்பதில்லை… உபதேசித்தாலும் ஏற்றுக் கொண்டு செய்வதில்லை..!

 

ஆகவே… இந்த உடலில் உள்ள தீமைகளை நீக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர வேண்டும். நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் குறைகளை நீக்கும். அதே சமயத்தில் அந்த ஞானியின் உணர்வுகள் நமக்குள் வளரும்.

 

இந்த நம்பிக்கை யாருக்கும் வருவதில்லை..!

இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் வேண்டாம்..! என்று சொன்னவர்கள் தான் “இராமகிருஷ்ணரும்… விவேகானந்தரும்…” 

ஞானிகளைப் புகழ்வதனாலேயோ பணிந்து வணங்குவதனாலேயோ பலன் இல்லை

ஞானிகளைச் சந்திப்போர் பெரும்பகுதி பிழைப்புக்காகத் தான் கேட்கிறார்கள் – அவர்கள் பெற்ற ஞானத்தைக் கேட்பதில்லை

Eswarapattar spiritual language

குருநாதர் எனக்குச் செய்து கொடுத்த அற்புதங்களை நீங்களும் பெற வேண்டும்

 

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கே நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் காணும்படிச் செய்கிறார்.

(1).காட்டு விலங்குகள் எப்படி வாழ்க்கை வாழ்கின்றது..? ஒவ்வொன்றும் மற்ற மிருகத்திடமிருந்து தப்பிக்க எத்தனை முயற்சிகளைச் செய்கிறது..?

(2).அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அகஸ்தியன் காட்டிலே எப்படி வாழ்ந்தான்..? அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளும் இங்கே இருக்கின்றது.

(3).அதே போல் அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்த மனிதர்களும் உண்டு. அவர்கள் விட்ட மூச்சலைகளும் இங்கே இருக்கின்றது.

1.இதை எல்லாம் நீ பருகுவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று
2.அந்த உணர்ச்சிகளைத் தூண்டித் தூண்டித் தூண்டித் தூண்டி அதை எடுக்கச் சொல்கிறார் குருநாதர்.
3.அவர் சொன்ன முறைப்படி நுகரும் பொழுது மகிழ்ச்சி வருகிறது.

இங்கே நான் உபதேசிக்கும் பொழுது இந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் உடலில் “நிச்சயமாக” நல்ல மாற்றங்கள் வருவதைப் பார்க்கலாம்.

1.குருநாதர் எனக்குச் செய்த அற்புதங்களை எல்லாம்
2.அந்த உணர்வுகள் சொல்லாக வெளி வருவதை நீங்கள் கேட்கும் பொழுது நுகரும் சக்தி கிடைக்கின்றது.
3.இந்த உண்மையின் உணர்வின் தன்மையை அறிய முடிகின்றது.

இப்படி அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் வாழ்க்கையில் பகைமையான உணர்வுகளை நுகர்ந்தாலும் அதை மாற்றி மகிழ்ந்து வாழ முடியும்.

ஈஸ்வரா..! என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் தீமைகளையோ துன்பங்களையோ பகைமைகளையோ குறைத்து அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் கூட்ட இது உதவும்.

அதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

குரு பூஜை தியானம்

 

குரு விண் சென்ற நாளை குரு பூஜையாக வைத்துள்ளோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியும் உங்கள் உயிரிலே அபிஷேகமாக அமைந்து உங்களுக்குள் இருக்கும் இருள்கள் நீங்கி அழியாத நிலைகள் நீங்கள் பெறவேண்டும் என்பதற்கே இந்தத் தியானத்தை அமைத்துள்ளோம். 

ultimate divine power of human

“எச்சக்தியும் தனித்துச் செயல்பட முடியாது,,,!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இச்சரீர அணுத் தன்மை ஒவ்வொன்றுமே மலம் தான்.
2.இச்சரீர சதை அணு மலத்தின் வளர் அணு வளர்ப்பு வார்ப்பு எலும்புகளின் வலுத் தன்மைதான்.
3.ஒளி பெறும் ஆத்ம சக்தியை எண்ணத்தில் எடுக்கும் உயர்ந்த குணத் தன்மையால்
4.சரீரம் வளர்க்கும் ஒவ்வொரு அணுவையுமே
5.ஏற்கனவே எக்குணத்தின் வழித் தொடரில் பழக்கப்பட்டு வழி பெற்றிருந்தாலும்
6.எண்ணத்தால் எடுக்கும் ஞானத்தின் நற்குணத் தொடர்பைக் கொண்டு உடலில் அணு வளர்ந்து
7.அதனின் சமைப்பினால் எலும்புகள் வளர்ந்து
8.காந்த மின் அலை உணர்வுத் தன்மையினால் எலும்புத் தன்மை உறுதி கொள்ளும் வார்ப்பு நிலைக்கொப்ப ஆத்ம வலு கூடுகின்றது.

இச்சரீர பிம்ப அணுக்களின் வளர்ப்பு நிலைக்கொப்பத்தான் இவ் எலும்பின் வளர்ப்பு அமைகின்றது. காந்த மின் சக்தியின் ஈர்ப்பினால் எலும்புகள் உறுதியாகி ஆத்ம வலு கூடுகின்றது.

அப்படிப்பட்ட வலுத் தன்மை பெற்று ஒளி பெறும் உயர்ந்த சக்தியாக்கி விட்டால்… காந்த மின் சக்தியின் வார்ப்பான எலும்பின் வலுத் தொடரைக் கொண்டு
1.ஒளி கொண்ட ஆத்ம சக்தியை எதனிலும் ஊடுருவவிட்டு
2.உயர் தன்மையின் வார்ப்பாக ஆத்ம சக்தியை ஒளி பெறச் செய்யலாம்.

உயர் குண சக்தியால் தன்னைத்தான் நம்பி தன்னுள் வளரும் பல கோடி கோடி உயிரணுக்களையும்
1.உயர் நிலை அணுக்களாக வளர விட்டு
2.அவ்வுயர்வின் வலுவை எலும்புத் தன்மையில் வலுவாக்கி
3.ஆத்ம சக்தியை உயர்த்திக் கொண்டோமோனால்
4.தன் ஆத்மாவைத் தானே பார்க்கவும் பேசவும்
5.ஆத்மாவைக் கொண்டு எச்சக்தியும் பெறவும் உயர்வு ஞான சக்தியால் வழிப்படுத்தவும் முடியும்.

ஆத்ம வலு தான் மனிதனுக்கு அடுத்த தெய்வ சக்தி நிலை…!

ஆத்ம வலுக் கொண்ட தன்மையினால் இவ்வாத்மாவின் ஒளித் தன்மையைக் கொண்டு முன்கூட்டி அறியும் ஞானத்தையும்… உலகச் சுழற்சி தொடர்பு முறையினால்..
1.உலகத் தன்மையில் எங்கெங்கு மாற்று நிலைகள் ஏற்படும் நிலையை அறியவும்
2.ஏற்படக்கூடிய மாற்றத்தின் அபாயத்தை ஆத்ம வலுக் கொண்டு அறியும் தன்மையில் மாற்றியமைக்கவும் முடியும்.

பிற ஈர்ப்பலையில் சிக்கா ஒளி வட்ட ஞானத்தால் ஆத்ம வலுவின் சித்துத் தன்மையில் அறியும் அஷ்டமாசித்து நிலை அனைத்தும் ஆத்ம வலுவில் பெற்றாலும்
1.எவ்வாத்ம வலுவை எவ்வழித் தொடரில் பெறுகின்றோமோ
2.அவ்வலுவுக்குத் தகுந்த உணவு நிலையைப் படைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

உடலுக்கு உணவை உண்ணுகின்றோம். உணர்வுக்குத் தக்க உறக்கம் கொள்கின்றோம். அதைப் போன்றே ஆத்ம வளர்ப்பிற்கு வளர் தொடர் சக்தி நிலைக்கு உணவாக
1.மனித ஆத்ம பிம்பத்தால் பெற்ற ஆத்மாவின் வலுவிற்கு உணவு
2.எவ்வழித் தொடரில் உயர்வு கொண்ட ஆத்ம நிலை பெற்றோமோ
3.அத்தொடர்பு கொண்ட சரீர பிம்ப ஆத்மாக்களின் பால் இருந்து வெளிப்படும்
4.எண்ண உணர்வின் சப்த அலையின் தொடர்பு நிலை சுழற்சி நிலை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தனித்து ஆத்ம சக்தி பெற முடியாது…! ஆணுக்குப் பெண் சக்தியும் பெண்ணிற்கு ஆணின் சக்தியும் கூட்டுச் சக்தியின் போதனைத் தொடர் அலை சக்தியும் அவசியம்.

 

எண்ணத்தின் உணர்வைக் கொண்டு… அன்பு பாசம் வீரம் சாந்தம் கொண்ட உயர் குணத்தின் வழித் தொடர் வாழ்க்கையில் கலந்துறவாடும்… ஆத்மாக்களின் நம் பால் செலுத்தப்படும் அலை உணர்வின் ஈர்ப்பினால்… நம் ஆத்மாவிற்கு நாம் செலுத்தும் உணவு… நாம் எத்தொடரில் ஞானம் பெற்றோமோ அத்தொடர்பின் உணவாக நமக்குக் கிட்டும்.

செய்யும் தொழிலைத் தெய்வமாக எப்படி மதித்து நடப்பது…?

நமக்கு வர வேண்டிய பாக்கி பணம் வரவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி

Gnaguru and Eswarapattar

எவ்வளவோ சிரமப்பட்டு அவஸ்தைப்பட்டு வளர்த்துக் கொண்ட ஞானப் பொக்கிஷத்தை நேரடியாகக் கொடுத்தாலும்… பயன்படுத்துவார் இல்லை – ஞானகுரு

 

மனித வாழ்க்கையில் தவறு செய்யாமலே சாப அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்பதைக் குருநாதர் சொன்ன நிலைகளில் ஒவ்வொன்றையும் பரீட்சித்துப் பார்த்ததைத் தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு உடலிலிருந்து வரக்கூடிய தீய வினைகள்… சாப வினைகள்… எப்படி வருகின்றது…? ஒரு தலை முறைக்கு இரண்டு தலை முறைக்கு அது எப்படிப் பாதிக்கின்றது..? என்று நேரடியாகக் காட்டுகின்றார்.

1.ஆனால் அவர்களுக்கு நீ இந்தப் பாதிப்பைப் போக்குகின்றாய் என்று வைத்துக் கொள்வோம்.
2.அதனால் அவர்களுக்கு அங்கே மகிழ்ச்சியாகும்.
3.அந்த உணர்வுகள் நல்லதாக ஆன பின் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.
4.இருந்தாலும் நீ சொல்லும் ஞான வழியினை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.
5.மீண்டும் அவர்கள் செல்லும் வழியிலேயே சென்று “தவறு செய்யத் தொடங்குவார்கள்…”
6.அந்தத் தவறின் தன்மை வந்தது… அன்றைக்கு நல்லதாக ஆனது.
7.ஆனால் மீண்டும் இன்றைக்கு ஆகவில்லையே…! என்று ஏங்கிக் கொண்டு
8.நீ சொல்லும் ஞானிகள் உணர்வை அவர்கள் எடுக்கவே மாட்டார்கள்…! என்று
9.ஈஸ்வரபட்டர் எமக்கு இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

உடனடியாக ஒரு தரம் நல்லதாக ஆனால்… அதைப் பக்குவப்படுத்தி அந்த மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் அடுத்து வரும் தீமைகளை மாற்றியமைத்துக் கொள்ள உதவும்.

அதைப் போல் குரு அருளால் நலமாக வேண்டும் என்று ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆனாலும் பதிவு செய்யும் பொழுதே என்ன செய்கின்றார்கள்…?

எங்கெங்க…? என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! பணம் வாங்கிச் சென்றவன் தர மாட்டேன் என்கிறான்…! என்று என்னிடமே திருப்பிச் சொல்கிறார்கள்.

ஒரு நோயாளிக்கே நல்ல வாக்கினைக் கொடுத்தாலும் அவர்கள் சார்புடையோர்… (அதாவது அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தவர்கள்)
1.“இவருடைய கஷ்டத்தை ஒன்றும் சொல்ல முடியாது…!” என்று இப்படி ஞாபகப்படுத்துகின்றார்கள்.
2.யாம் சொல்லும் ஞான உணர்வுகளை அவர்களைக் கேட்க விடாதபடி இடைமறித்து
3.இப்படிச் சொல்லகூடிய உணர்வுகள் தான் வருகின்றது.

அருள் வாக்கினைப் பதிவு செய்து… நினைவுக்குக் கொண்டு வந்து அவர்களை மீட்க வைக்கலாம்…! என்று நான் (ஞானகுரு) எண்ணினாலும் முடியவில்லை.

ஆனால் இதை எல்லாம் அறிந்து கொள்ள எத்தனை சிரமப்பட்டேன்…? எத்தனை அவஸ்தைப்பட்டிருப்பேன்…! காட்டுக்குள் அழைத்துச் சென்று தான் குருநாதர் இதை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார். நேரத்தில் சாப்பிடுவதற்கு சோறு (உணவு) இல்லை.

காட்டுக்குள் சென்றால் குருநாதர் என்ன செய்வார்…?

கத்திரிக்காய்… மிளகாய்… மாங்காய்… என்று மோரில் ஊற வைத்ததை அவர் எடுத்துக் கொடுப்பார். அதிலே அவர் எத்தனையோ பக்குவம் செய்து வைத்திருப்பார். உப்பு காரம் என்று தனியாக எதுவும் எடுத்துக் கொண்டு போவதில்லை.

இதிலேயே தான் எல்லாம் இருக்கும்.

ஒரு சிறிய டப்பா தான். அதிலே சிறிதளவு அரிசியை எடுத்துப் போட்டு நீரைக் கொஞ்சம் விட்டு அதனுடன் மோரிலே ஊற வைத்த ஒரு மிளகாய் அல்லது கத்திரிக்காயைப் போட்டு வேக வைக்கச் சொல்வார்.

பின் அது எல்லாம் வெந்த பின் குருநாதர் ஒரு அளவாகத் தண்ணீரை ஊற்றுவார். கஞ்சி மாதிரிப் பக்குவம் வரும். ஆளுக்குக் கொஞ்சம் குடித்துக் கொள்வோம்.

இது எப்படிடா… இருக்கின்றது…? என்பார் குருநாதர்.

நன்றாக இருக்கிறது சாமி…! என்பேன்.

ஒரு லிட்டர் அரிசியை வைத்து நானும் குருநாதரும் காட்டிற்குள் “இரண்டு மாதம் சாப்பிட்டுக் காலம் தள்ளியிருக்கின்றோம்…!” என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வேறு ஒன்றையும் அங்கே சாப்பிட விடமாட்டார். சாம்பாரும் அது தான்… காயும் அது தான்…! எல்லாம் அந்தக் கஞ்சியைக் குடித்துக் கொள்ள வேண்டியது தான்,

குடும்பம்… தொழில்… உணவு… எல்லாவற்றையும் விட்டுத்தான் யாம் இத்தனையும் தெரிந்து கொண்டு வந்தோம். அப்படிப் பெற்ற ஞான வித்தை உங்களுக்குள் பதிய வைக்க எத்தனையோ வழிகளைச் செய்கிறோம்.

ஆனால் அதை எத்தனை பேரால் எடுத்து வளர்க்க முடிகிறது…? தனக்குள் வந்து தீமைகளையும் சாப அலைகளையும் போக்க முடிகிறது…?

1.சாமி செய்வார்…
2.குருநாதர் செய்து தருவார்.. என்ற எண்ணத்திலேயே தான் இருக்கின்றார்களே தவிர
3.யாம் பதிய வைக்கும் ஞான வித்தை வளர்ப்பார் இல்லை…!

கோவிலில் தேர் இழுக்கச் சொன்னது ஏன்…?

 

எல்லோரும் ஒருங்கிணைந்து அந்தத் தெய்வ சக்தியைப் பெறுவதற்காகத்தான் கோவிலில் தேரை இழுக்கும்படிச் செய்தார்கள் ஞானிகள். பத்தாவது நிலையான கல்கியை அடைவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

spiritual stiffness

முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறமுடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அகம் புறம் சூட்சமம் இவற்றின் உண்மைத் தத்துவத்தை உணராமல் புற நிலையைக் காணும் வாழ்க்கையின் சுழற்சி ஓட்டம் தான் இன்று உள்ளது. சூட்சமத்தால் வெளிப்படுத்தப்பட்ட பல தத்துவங்கள் மறைக்கப்பட்ட நிலையில் தான் இன்றளவும் உள்ளது.

மனித ஞானம் பக்குவம் பெற்று… வாழ்க்கை என்ற கூட்டமைப்பு நெறி முறை நிகழ்ந்த காலத்திலிருந்தே… மனித ஞானத்தின் வாழ்க்கையின் வழி முறைச் செயலுக்கு “பல பக்குவ ஆரோக்கிய நிலைகளைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்…!”

சமைத்து உண்ணும் உணவைப் பச்சை வாழை இலையில் சூடாகப் படைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தியது சித்தர்கள் தான்…!

உணவின் உஷ்ணம் வாழையிலையின் மீது பட்டு அதிலிருந்து வெளிப்படும் ஆவிச் சத்துடன் உணவை உண்ணும் பொழுது
1.உணவின் சுவையும்…
2.அவ்வாவியிலிருந்து வெளிப்படும் இரசசத்தான அமில குணம் உடலுக்குள் சேர்ந்து
3.உணவின் செரிப்பிற்கும் உடல் ஆரோக்கியத் தன்மைக்கும் வழிகாட்டியாக உள்ளதன் நிலையை உணர்ந்து
4.அந்தப் பக்குவ முறையைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்.

இதைப் போன்று வாழ்க்கை நெறிக்குப் பல உண்மைகளை உணர்த்திச் சென்றார்கள். அதைப் போன்ற சூட்சமத்தால் மறைக்கப்பட்ட பல நிலைகள் இன்றும் உள்ளன வாழ்க்கையில்…!

ஆதி சக்தியின் பரம்பொருளின் சக்தி நிலையைச் சிறிய இவ் இரண்டு கண்களைக் கொண்டு பரந்த கண்ணுக்கெட்டிய பலவற்றையும் பார்க்கும் சக்தி கொண்ட மனிதப் படைப்பு தான் நாம்…!

விஞ்ஞானத்தில்… இன்று ஓர் இடத்திலிருந்து ஒளி பரப்பபடும் உருவத் தொடர் காட்சிகளை இக்காற்றில் கலக்க விட்டுப் பல மைல்களுக்கு அப்பால் அதே உருவத்தின் செயலை அமிலச் சேர்க்கையின் உலோக அலைத் தொடரில் காணும்படி செய்கிறார்கள்.

அதாவது மின் அலையின் மோதலினால் எங்கோ தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிதனை… காற்றலையில் கலந்து வரும் அந்த அலைத் தொடரை உருவமாக்கி இருந்த இடத்திலேயே பார்க்கச் செய்கின்றனர்.

இதைப் போன்ற ஞானத்தைக் கொண்டு
1.ஆத்ம தியானத் தொடரால் இவ் எண்ணத்தின் உந்தலை எதில் செலுத்துகின்றோமோ
2.அத்தொடரில் உள்ள நிலைகள் அனைத்தும்
3.புருவத்தின் மத்தியில் உள்ள எலும்பு கவன நரம்புகளில் எண்ணிய சுவாச மோதல் ஏற்பட்டவுடன்
4.எதை எண்ணித் தியான நிலை எண்ணம் செல்கின்றதோ
5.அங்கு நடக்கும் நிலையைத் தொலைக்காட்சியில் காண்பதைப் போன்று
6.பக்குவம் பெற்ற ஆத்ம ஞானத்தால் காணவும் ஒலி/ஒளி கேட்கவும் முடியும்.

ஆத்ம ஞானத்தால் முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறமுடியும்…!

சென்ற காலம் நடந்தவை யாவையுமே இக்காற்றலையில் தான் கலந்துள்ளன. உணர்வின் எண்ணத்தைப் பின்னோக்கிய அலைத் தொடரில் செலுத்தப்படும் நிலைக்கொப்ப உயிரணு தோன்றிய காலம் தொட்டே மனித ஞான சக்தியால் எதனையும் காண முடியும்.

நிகழ் நிலையையும் எண்ணத்தைச் செலுத்தும் உணர்வின் மோதலினால் “ஞானதிருஷ்டி” என்று சித்தர்கள் உணர்த்திய நிலையால் நிகழும் காலத்தையும் அறியலாம்.

எதிர் கால நிலையை நாளை நடப்பதை இன்றெப்படி அறிய முடியும்…! என்ற வினா தான் இன்றைய செயலில் உள்ளது.

பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல்… காலதேவனின் கருணை…! என்ற எண்ணம் பக்தி மார்க்கத்தில் உணர்த்துகின்றார்கள்.

அதையே விஞ்ஞானின் அமிலச் சேர்க்கையின் நிலையை இயந்திரச் சாதனங்களின் துணையைக் கொண்டு கால நிலைகளின் மாற்றத்தையும் மண்டலச் சேர்க்கைக் காலங்களில் புள்ளி விவரங்களையும் வைத்து உணர்த்தத்தான் செய்கின்றனர்.

ஒரு இயந்திரத்தால் உணரக்கூடிய எதிர்கால நிலைகளை
1.ஆத்ம ஞான வலுக்கூட்டிக் கொண்ட ஞான சக்தியினால்
2.எதிர் காலத்தில் நடக்கும் நிலைகளை இன்றே உணரக்கூடிய உண்மை பெறும் நிலைய அடையலாம்.

“முக்காலமும் உணரும் பொற்காலமாக..” இவ்வாத்ம காலத்தைப் பக்குவப்படுத்துங்கள் “பொற்கோவிலாக..” ஆத்மாவின் வளர்ப்பில் எவ் ஈர்ப்பின் உணர்வும் மோதாமல் “புடம் போட்ட பொன்னாகப் பக்குவப்படுத்துங்கள்…”

ஈயம் பித்தளை செம்பு தங்கம் இவற்றில் திரவகத்தை விடும் பொழுது மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கம் எப்படித் தனித்து நிற்கின்றதோ அதைப் போன்ற புடம் போட்ட தங்கமாக இவ்வாத்ம வலுவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எக்காலமும் அறியவல்ல ஆற்றலும்… முக்காலமும் உணரும் சக்தி நிலையும்.. இவ்வாத்ம ஞானத்தால் பெறவல்ல சக்தியை.. இந்த உபதேசத்தின் சக்தியால் பெறும் ஜெப தியானத்தால்…
1.என் ஈர்ப்பின் வட்டத்தில் வழி வந்த
2.ஆத்ம தியானம் கொண்ட தம்பதிகள் ஆண் பெண் இருவரும் இணைந்து
3.என் சக்தி நிலையில் உணர்த்தப் பெற்ற உபதேசத்தின் உயர்வை இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் வளர்த்து
4.தன் ஆத்ம தொடர்பு கொண்ட பல ஆத்மாக்களுக்கும் இந்த ஆத்ம தியானத்தின் உண்மைச் சத்தியத்தை உனர்த்தி
5.ஆதி பரம்பொருளின் சக்தியின் படைப்ப்பின் உயர்வுப் படைப்பை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
6.”சக்தியின் சக்திக்கே.. ஆண் பெண் இனம் வளரச் சக்தி தாருங்கள்…!”

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா விண் சென்ற நிலை – நடந்த நிகழ்ச்சி

பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள் ஞானிகள் 

தற்கொலை செய்த ஆன்மாக்களை விண் செலுத்தும் முறை

divine-light-chakras

அங்கக் குறைபாடு… மூளை வளர்ச்சி குறைவு… கொண்ட குழந்தைகள் இன்று அதிகமாகப் பிறக்கின்றது… அதன் காரணம் என்ன…?

ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றால் உன் குடும்பம் நாசமாகப் போகும்…! என்று சொல்வார்கள். நீ முடமாகப் போவாய்… உன் கண்கள் குருடாகும்… உனக்கு இப்படி எல்லாம் கெடுதல் ஆகும்…! என்று சாபமிடுவார்கள்.

அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால்…
1.கர்ப்பமுற்ற தாய் இதைக் கேட்டுக் கொண்டிருந்தால்
2.கருவிலிருக்கும் அந்தச் சிசுவிற்கு உணர்வுகள் பட்டபின் அது பதிவாகின்றது.
3.கருவில் இருக்கும் சிசுவின் தன்மை குருடாகிவிடுகின்றது.
4.கால் முடமாகின்றது. விபரீத உருவம் கொண்ட குழந்தையாகப் பிறக்கின்றது,

இது எல்லாம் மூதாதையரின் உணர்வுகள்…!
1.மனிதன் என்ற வாழ்க்கையில் வரும் பொழுது
2.அந்த உடல் ரீதியில் இரத்த நாளங்களில் கவர்ந்து
3.அது தொடர்ந்து இதே மாதிரிச் சில குடும்பங்களில் பார்த்தால் இந்த மாதிரி இருக்கும்.

குழந்தைக்குப் பன்னிரெண்டு வயதாகி விட்டால் அதற்கப்புறம் வளர்ச்சி இருக்காது. நரம்புகள் எல்லாம் குன்றும்… அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் குறுகி நடக்க முடியாமல் போய் உயிரே போய்விடும்…! இப்படி நரக வேதனைப்படுகின்றனர்.

ஆனால் அந்தக் குழந்தைகள் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் இட்ட சாபங்கள் இந்த நிலையைச் செய்கின்றது.

ஒரு சமயம் இங்கே தபோவனத்திற்குச் சிலர் வந்தார்கள். எங்களுக்கு மூன்று குழந்தைகள். இந்த மூன்று குழந்தைகளுக்குமே பன்னிரெண்டு வயது ஆகி விட்டாலே கை கால் எல்லாம் குறுகிக் கொண்டே போகிறது என்றார்கள்.

உங்கள் வீட்டில் யாராவது இதற்கு முன்னாடி சாபம் இட்டார்களா..? என்று அவர்களிடம் நான் (ஞானகுரு) விபரம் கேட்டேன். இல்லவே இல்லை…! என்றார்கள்.

பின் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு நன்றாகத் தெரிந்து கொண்டு வாருங்கள்..! என்று சொன்னேன்.

அவர்கள் குடும்பத்தில் முன்னாடி வாழ்ந்தவர்கள் அண்ணன் தம்பிக்குள் வெறுப்பான பின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு குழியைத் தோண்டி இம்சித்து அதைப் புதைத்திருக்கின்றார்கள்.

உயிருடன் அப்படிச் செய்ததால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுகி வேதனைப்பட்டு இறந்தது. அடப் பாவிகளா…! எனக்கு வந்த கதி உன் குடும்பத்திற்கும் உன் குழந்தைகளுக்கும் சாடும்…! என்று சொன்னது.

அதன் வழி அந்த வம்சத்தில் வந்த (பெண்) தாய் வகையில் சம்பந்தப்பட்டுப் போன குடும்பம் எல்லாமே பாதிப்பானது.

பிறகு நான் விபரத்தைச் சொன்னேன். இந்த மாதிரித்தான் உங்கள் வம்ச வழியில் இருக்கும் என்றேன். அது எப்படிச் சாபமிட்டுப் போனதோ இந்த உனர்வுகள் தொடர்ந்து சார்புடைய தாய் வழியில் வருகின்றது.

யார் இங்கே குற்றம் செய்தது. பிறக்கும் குழந்தைகள் தவறு செய்யவில்லையே.

மனிதனாக ஆன பின் தாய் கருவில் இருக்கும் பொழுது இதைப் போன்ற சாடல்கள் இருந்தால் அந்தக் குழந்தையின் தாய் தந்தையர்களும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.

இன்று பார்த்தால் வேறு வேறு குடும்பத்தில் தான் பெரும்பகுதி சம்பந்தம் செய்கின்றார்கள். இருந்தாலும் தாய் வழியில் வந்தால் தந்தை வழியில் வந்தாலும் இந்த நிலை ஆகின்றது.

இப்படிப்பட்ட விபரீதக் குழந்தைகள் வரப்படும் பொழுது அதனுடைய சார்புடைய மற்ற மக்களும் இதனை நுகர்கின்றார்கள். ஏனென்றால் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் சூரியனின் காந்தப் புலன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது,

அதன் வழி வரப்படும் பொழுது அனைவருக்குமே இத்தகைய பாதிப்பு ஆகின்றது. இப்படியும் பல நிலைகள் மனித வாழ்க்கையில் வருகின்றது.

இதைத் தடுக்க நாம் என்ன சக்தி வைத்திருக்கின்றோம்..!

சாமி கும்பிட வேண்டிய முறை

 

விநாயகரைக் கும்பிடாமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் இல்லை…! என்று ஞானிகள் சொல்லியிருந்தாலும் அதன் உண்மைக் கருத்தை அறிந்திருக்கின்றோமா…?

 

விநாயகருக்கு அருகம்புல்லை ஏன் போட்டார்கள்..? கொழுக்கட்டையை ஏன் வைத்துள்ளார்கள்…? களிமண்ணால் விநாயகர் பொம்மையைச் செய்து கடலில் ஏன் கரைக்கச் சொன்னார்கள்..?

 

அரசையும் வேமபையும் ஏன் விநாயகருக்கு வைத்துள்ளார்கள்…? ஆற்றங்கரைக்கு முன்னாடி எல்லாம் ஏன் விநாயகரை வைத்துள்ளார்கள்…?

 

இது எல்லாம் எனக்குத் (ஞானகுரு) தெரியாது. ஆனால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தார். அகஸ்தியன் கொடுத்த விநாயகர் தத்துவத்தை அப்படியே உணர்த்திக் காட்டினார். சாமி கும்பிட வேண்டிய முறையையும் உபதேசித்தார்.

 

அவர் சொன்னதைத்தான் உங்களுக்குச் சொல்கின்றேன்.

power of couple

ஆண் பெண் இருபாலரும் ஆத்ம ஐக்கிய நிலையில் செயல்பட்டால் தான் “ரிஷித் தன்மை பெற முடியும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தப் பூமியில் சகல ஜீவ ஜெந்துக்களும் ஆண் பெண் இனத் தொடரில் இனப் பெருக்கம் வளர்கின்றது.

அதனை ஒத்த தன்மையின் வளர் சக்தியில்தான்
1.ஆண் எடுக்கும் உயர் தொடர்பலை தியானத்தால் கூடக்கூடிய அமிலத்தின் தன்மைக்கு
2.ஜீவன் பெற பெண் இனச் சுவாசத் தொடர் எண்ணப் பரிமாற்றம் தேவை.

ஏனென்றால் தான் பெற்ற சக்திக்கே ஜீவ சக்தி இருந்தால் தான் ஆத்ம பலத்தின் வலுத் தன்மையே பெற முடியும்.

ஆத்ம பலம் என்பது உடல் பலத்தைக் கொண்டு பயில்வான்கள் எடுக்கும் பளு தூக்கிகளைப் போல் பெறத்தக்கதல்ல.

எண்ணத்தால் எடுக்கும் சுவாச அலையின் ஜெபத் தன்மைக்குக் கூடப் பெறும் அமிலச் சேர்க்கைக்கு ஜீவத் துடிப்பலைகள் பெறவல்ல அணு வளர்ச்சித் தன்மைக்குப் பெண்மைத் தொடர் சுவாச அலை இருந்தால் தான் ஆண் எடுக்கும் ஜெபத்தின் உயர் அமிலத்தின் வார்ப்புத் தன்மையை அணு வளர்ப்பின் சமைப்புத் தன்மை ஆவி நிலையால் ஆத்ம வலுவின் மூலம் பலம் கொள்ள முடியும்.

1.பெண் இனமே இல்லாமல் பல கோடி ஆண்டுகள் கடும் தவமிருந்து
2.பெண்ணின் சுவாச அலையே படாமல் இந்தப் பூமியில் ஜெபம் பெற்றாலும்
3.எந்தப் பூமியிலிருந்து ஜெப நிலைப் பெற்றார்களோ
4.அதே ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சி வட்டத்தில் சிக்குண்டு
5.தனித்த நிலை கொண்டு தவத்திலிருந்து செயல்பட முடியுமேயன்றி
6.வளர்சக்தியான தொடர் சக்தியான ரிஷிச் சக்தியின் சுழற்சி வட்டத்தில் சுழலும் தன்மை பெற முடியாது.

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு சுழல் பெறும் வழித் தொடரில்… ஒவ்வொன்றும் உருவாகுகிறதே அன்றி தனித்த ஒன்று என்பது இயங்காத் தன்மை தான்.

தெய்வ சக்தி கொண்ட ரிஷித் தன்மை பெற வேண்டும் என்றால்
1.ஆத்ம தொடர்பு கொண்ட ஆண் பெண் இனத் தொடர்பு
2.ஆத்ம அலையின் கூட்டு ஐக்கியமான தொடரில் தான் பெற முடியும்.

இத்தொடரில் சில சித்தர்கள் தன் வாழ்க்கைப் பந்தத்தில் பெற முடியாத ஜீவத் தொடர் கிட்டாததனால்… தன் சித்து நிலையில் ஆத்ம வலுவைக் கொண்டு ரிஷித் தன்மை பெற வேண்டிய சக்திக்காக… மிருக அலைத் தொடர்புடனும் ஆத்ம ஜீவ பிம்ப உடல் எண்ணத்தை மிருகங்களின் உணர்வலையுடன் தன் ஆத்மாவைப் பிறிதொரு சரீரத்தின் மேல் செயல்படுத்தியும் அச்சக்தியைப் பெற்றனர்.

அதே போல் பல சித்தர்கள் தாய் இன குணமுடன் தான் பெறும் சக்திக்குப் பல ஆத்மாக்களின் பால் தன் எண்ண உணர்வின் உயர்விற்காக உபதேச நிலையில் பல சக்திகளைப் பெற்றனர்.

ஆகவே… ஆணின் உயர்வுத் தன்மைக்குப் பெண் இன ஜீவ அலைத் தொடர் எப்படி அவசியமோ… அதைப் போன்றே பெண்மையின் சக்திக்கு ஆணினத்தின் அமிலத் தன்மையும் அவசியம் தேவை.

அது இல்லாவிட்டால்…
1.ஜீவ சக்தியின் வழி சக்தியைப் பெருக்க
2.சக்தியின் செயல் தன்மை உயர் ஞானம் பெறவல்ல வழித் தொடருக்குச் செல்லாமல்
3.பெண் இனத்தின் துரித அமிலக்கூறு ஜீவ சக்தியின் வம்சப் பெருக்கத்தில் சோர்வு நிலை ஆகி
4.புழு பூச்சி கரையான் இப்படி பூமியின் கீழ் பிடிப்பில் ஊரும் ஜெந்துக்களின் வளர்ப்பாக
5.உயிரினங்களின் இனப் பெருக்கம் அதிகமாகச் சுழலும் தன்மை ஏற்படும்.

பெண்கள் விடும் சுவாச அலையில்… ஒவ்வொரு மூச்சலையின் தொடரிலும் பல கோடி ஜீவ அணுக்கள் பெருகிக் கொண்டே உள்ளன.

புழுவாகவும் பூச்சியாகவும் தன் சுவாச அலை ஈர்ப்பை வளர்க்கும் தாயினம்… நற்குணத்தின் பால் ஆண் இன குணங்களுடன் தன் எண்ணத்தின் செயலை ஞானத்தால் செலுத்தும் உயர் குணத்தைக் கொண்டு… இந்தப் பூமியின் பிடிப்பலைக்கே ஞான உணர்வைப் பெறவல்ல நற்குண வளர்ப்பாக்கலாம்.

உயர் மின் தொடர்பில்… பூமியின் உயர்வுக்கே பெண் எடுக்கும் சுவாசத்தால் உயர்வு நிலைப்படுத்த முடியும்.

1.பெண்களின் சொல் ஈர்ப்பில்…
2.ஆண் இன உணர்வின் மோதல் எடுக்கப்படும் நிலை கொண்டு தான்
3.ஆண் இன அமில ஜீவ ஆவி வார்ப்பு ஆத்மாவிற்குக் கூடுகின்றது.

ஆனால் பெண் இனம் ஆணின் சொல் ஈர்ப்பிலிருந்து சக்தி பெறுவதில்லை. பெண்ணின் சொல்லும் எண்ணமும் ஆணின் பால் செலுத்தும் உணர்வுக்கொப்ப
1.உணர்வின் ஈர்ப்பிலேயே காந்தமுடன் இரும்பு சேர்வதைப் போன்று
2.தானாகவே சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது பெண் இனம்.

இதை ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை நிலையுடன் ஒத்த வழியிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

ஜெபத்தால் எடுக்கும் ஞானத் தொடர்பின் சூட்சமத்தை..
1.ஒன்றுடன் ஒன்று கலந்த உணர்வுத் தொடர்புடன் உள்ள
2.வழித் தொடரை அறிந்து நீங்கள் செயல் கொள்ளுங்கள்…!

உடல் பெறும் உணர்வைக் கரைத்து நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறவேண்டும்

நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்

உடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்

chitra festival

உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோமா…?

 

கையில் காசு இருந்தால் அடுத்தவர்களுக்குத் தாரளமாகக் கொடுத்து உதவி செய்கின்றோம்.
1.ஆனாலும் அவர்கள் சொல்லும் வேதனைகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.
2.இதைத் துடைக்கத் தெரியவில்லை… துடைக்க முற்படுவதும் இல்லை.

நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…! என்ற நிலை தான் கடைசியில் வருகின்றது.

ஆலயங்களுக்குச் செல்லப்படும் பொழுது இல்லாதவருக்குத் தர்மம் இட்டால் அதைக் கண்டு தெய்வம் நம்மை மெச்சும்…! என்று எல்லாம் மதங்களுமே கூறுகின்றது.

ஆனால் அந்தத் தர்மத்தைச் செய்யும் பொழுது என்ன செய்கின்றோம்..?
1.அவன் பாவத்தின் எல்லையிலே இருக்கின்றான்..
2.பல தொல்லைகளுக்கு ஆளாகிய பின் அவனுக்கு இந்த உதவி கிடைத்தது… ஆ…ஹா…! என்று ஆசையில் நம்மைப் பார்க்கின்றான்.

அப்படி வெளிப்படும் அவனுடைய உணர்வுகளை நாம் பார்த்த பின் அவன் ஏங்கிப் பெறும் அந்த உணர்வை நாமும் பெறுகின்றோம்.

நாம் நல்லது தான் செய்தோம். ஆனாலும் அவனுடைய நிலைகள் இங்கேயும் வந்து விடுகின்றது. வந்த பின் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்ற இந்த நிலைகளைத் தான் நாமும் சொல்வோம்.

ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன் யார்…? நம் உயிர் தான்.

பெரும் ஈகையுடனும் பண்புடனும் அந்த உணர்வுகளை எடுத்தோம். அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் வந்து விடுகின்றது.

ஒரு பலகாரத்தைச் சுடுகின்றோம். அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி இவை எல்லாம் விழுகுமா இல்லையா…?

1.நான் நன்றாகத் தானே பலகாரம் சுட்டேன்…!
2.சாப்பிடும் பொழுது நறு..மொறு நறு..மொறு…! என்று இருக்கின்றது என்று சொன்னால்
3.”மூடி வைக்கவில்லை…” என்றால் இந்த நிலை வரத் தானே செய்யும்…!

இதைப் போன்று தான் நமக்குள் பாதுகாப்பான நிலைகள் இல்லை என்றால் நம் ஆன்மா அசுத்தமாகி விடுகின்றது. அப்பொழுது மற்ற தீமை செய்யும் உணர்வுகள் உள் சென்று நமக்குள் கடும் விளைவுகளை உண்டாக்கும்.

ஆகவே நம் ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றால் “நாம் என்ன செய்யவேண்டும்…?” என்று சற்று சிந்திக்க வேண்டும்.

தாய் கருவிலே உருவான ஒரு குழந்தைக்குக் கருவிலேயே நோயாக ஆனால் அவன் பிறந்த பின் அதைப் பார்க்கும் சுற்றுப் புறச் சூழலில் உள்ளோரும் அந்தக் குழந்தையை உற்று நோக்கும் பொழுது இவனில் விளைந்த நோயை அவர்களும் கொஞ்ச கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

நுகர்ந்தவர்கள் உடலில் எல்லாம் அந்த நோய் சிறிது சிறிதாக வரும்.

நீங்கள் பார்க்கலாம்…!
1.சர்க்கரைச் சத்து தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
2.வாத நோய் தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
3.இரத்தக் கொதிப்பு தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…! என்று
4.இன்று சர்வ சாதரணமாகச் சொல்வார்கள்.

இது எல்லாம் இந்த உணர்வின் பேச்சின் தொடரைக் கேட்கும் பொழுது அது கருவுற்றிருக்கும் குழந்தைகளுக்கு இந்த உணர்வுகள் சேர்ந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபத்தின் நிலையும்… அதிகமாகச் செல்வங்கள் சம்பாரிக்கும் பொழுதும்… குடும்பத்தில் பற்றுகள் குறையப்படும் பொழுதும்… என்னை மோசம் செய்தான் பாவி…! என்ற நிலைகள் வரும் பொழுதும்… இந்த உணர்வுகளை அவர்களும் நுகர்கின்றனர். அவர் சொல்வதை மற்றவரும் நுகர்கின்றனர்.

நுகர்ந்த பின் அங்கேயும் இதே மாதிரி நோய்கள் வரத் தொடங்குகிறது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

நல்ல குணத்தைக் காக்கச் செய்யும் காப்பு

 

ஒரு நகையை அழகாகச் செய்ய வேண்டும் என்றால் செம்பும் வெள்ளியை வைத்துத் தான் ஒட்ட வைக்க வேண்டும். ஆனால் திரும்பத் திரும்பச் செம்பையும் வெள்ளியையும் சேர்த்துக் கொண்டே வந்தால் தங்கத்தின் தரம் குறைந்து விடும்.

 

இதைப் போன்று தான் நாம் அனைவருமே கஷ்டப்படுபவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்கின்றோம். ஆனால் கேட்டுணர்ந்த கஷ்டங்கள் எல்லாம் நமக்குள் தீய வினைகளாக விளைந்து விடுகின்றது.

 

அதை நாம் யாராவது சுத்தப்படுகின்றோமா…?

 

இல்லை.

 

நல்லதைச் செய்தோம் என்று தான் நினைக்கின்றோம்.

 

கஷ்டப்பட்டவரின்  வேதனை உணர்வுகள் நமக்குள் அதிகமாக ஆன பின் எல்லோருக்கும் நான் உதவி செய்தேன் ஆனால் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…! என்று தான் சொல்வோம்.

 

அதை எல்லாம் மாற்றுவதற்குத்தான் ஞானிகள் உணர்வை ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்… அந்தத் தூய்மைப்படுத்தும் உணர்வுகளைப் பெறச் செய்…! என்று குருநாதர் உபதேசித்தருளினார். 

YOGA

விந்தையான யோகாசனங்களைச் செய்யும் மனிதனால் “ஞானச் சித்தைச் செயல்படுத்த முடியாதா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சரீரத்தைக் கொண்டு யோகாசனம் சில வித்தை விளையாட்டுக்கள் எல்லாம் செயல் புரிகிறார்கள். அவர்களின் அங்கக்கூறின் அமிலத் தன்மையே அவ் ஈர்ப்பின் எண்ண உணர்வின் வலுவான அணு வளர்ப்பினால்
1.சரீரத்தைப் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்
2.சுவாசத்தை அடக்கிய முறையிலேயே சில விந்தை புரிபவர்களும் உண்டு.

அதைப் போன்றே சரீர இயக்கத்தால் சரீரத்தைப் பல விந்தைச் செயலாக யோகாசனம் (GYMNASTICS) போன்ற வழி முறையில் செயல்படும் முறையும் இதன் தன்மைக்கு உகந்தது தான்.

நாட்டியம்… சங்கீதம்.. உடல் பயிற்சி… சில விளையாட்டு வழி முறைகள் இவற்றில் ஒவ்வொன்றிலுமே
1.எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி
2.எத்துறையின் வழிப்படி இச்சரீர இயக்கம் அதிகப்படியாகச் செயல் கொள்கின்றதோ
3.அதற்குகந்த அணு வளர்ப்பை இச்சரீரம் பெற்று
4.எடுக்கும் எண்ணத்தினாலேயே அவ்வமிலத்தைக் காந்த மின் அணு வளர்ப்பாக சரீரம் வளர்ச்சி கொள்கின்றது.

அதாவது… எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி… துரிதம் கொண்ட ஆர்வ உணர்வின் உந்தலுக்குகந்த வார்ப்பாகச் சரீரம் வழி வகுத்துக் கொள்கின்றது.

இத்தொடர் சரீர இயக்கத்தில் மட்டும் அல்லாமல்… தொழில் முறையிலும்… மற்ற கலைகள் ஒவ்வொன்றிலுமே… ஒரு மனிதன் தன் வாழ் நாளில்…
1.எண்ணத்தின் உணர்வு சுவாசத்தை எச்செயலுடன் ஒன்றிய சுழலில் வாழ்கின்றானோ
2.அவ்வலையின் வளர்ப்பைச் சரீர அணுக்களே வளர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.அதே நிலை கொண்ட அமிலக்கூறின் ஆவி நிலை அமிலத் தொடர்பும்
4.இவ்வளர்ப்பின் தொடர்புடன் வளரும் அலைத் தொடர்பாக இவ் ஈர்ப்புடன் தொடர்ந்து வளர்கின்றது.

“இனம் இனத்துடன் சேரும்…” என்ற உண்மையின் தத்துவ உணர்வு இதன் அடிப்படையில் சொல்லப்பட்டது தான்.

ஆகவே இச்சரீர உணர்வின் எண்ணத்தைச் “செலுத்தும் வழி முறையைக் கொண்டு” வாழ்க்கையின் நடைமுறைச் செயலையே..
1.மனித சக்தியின் செயலை உயர்வின் வழியமைக்கச் செயல்படுத்தும் முறை அறிந்து
2.எண்ணத்தின் உணர்வை உயர்வு கொண்ட மகரிஷிகளின் தொடர்புடன் தன் ஞானத்தை வளர்த்து
3.சகல சித்தும் அறியும் ரிஷித் தன்மையின் வழி பெறலாம்.

சரீர உணர்வுடன் இந்த ரிஷித் தன்மை பெற ஆண் பெண் கூட்டு உணர்வு எண்ண வழி முறையின் வளர்ச்சியினால் தான் முடியும். சகல சித்துவும் பெறும் தன்மை அடைய வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஆண் பெண் எண்ணக் கூட்டு நிலை தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு நிலையில் சக்தி பெற்றார்கள்.

ஞானச் சித்தின் வளர்ப்பு நிலைக்குச் சிவ சக்தி என்ற ஆண் பெண் அமிலக் கூட்டின் உணர்வுத் தொடர்பு அவசியம்.

தனித்த சக்தியினால் நான் செயல்படுவேன்…! என்பது வளர்ப்புத் தன்மையக் காட்டிலும் மலட்டுத் தன்மையான முனிவர்களின் நிலையை ஒத்துத்தான் தனித்து இயங்க முடியும்.

ஏனென்றால் ஆண் பெண் அமில சக்தி தான் நம் பூமியின் சக்தியே…!

அச்சக்தியின் தொடர்பு போன்றே பூமியில் உள்ள சகல நிலைகளும் இன்றளவும் வளர்ந்துள்ளதைப் போன்று ஞானத்தின் தொடருக்கும் இவ்வழி முறையைப் பெற்றிடுங்கள்.

அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானிகளைத் தென்னாட்டிலே உருவாக்குங்கள் 

கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு கதிரியக்கத்தைப் பாய்ச்சுவதால் வரும் தீமைகள்

டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் கருவுற்ற தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் செயல்கள்

agastyan and ursa major

ஞானிகளைச் சந்திப்போர் பெரும்பகுதி பிழைப்புக்காகத் தான் கேட்கிறார்கள் – அவர்கள் பெற்ற ஞானத்தைக் கேட்பதில்லை

கருவிலிருக்கப்படும் பொழுது ஒரு தாய் பாசத்தால் அன்பால் பண்பால் பரிவால் ஒரு குழந்தை கடும் நோயால் அவதிப்படுவதௌ உற்றுப் பார்க்கின்றது. அடப் பாவமே…! இந்தச் சிறிய வயதில் இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணுகின்றது.

ஏனென்றால் கருவுற்றிருக்கும் காலத்தில் தாய்க்குக் குழந்தைப் பாசம் அதிகமாக வரும். கர்ப்பமாகி விட்டாலே அந்த தாயின் சுவாசமே வேறு விதமாக இருக்கும். அந்தப் பாசம் என்ற உணர்வுகள் தோன்றும்.

நோயுற்ற அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்த பின் கண்களால் பார்த்த பின் தாய் உடலில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிகின்றது.

ஆனால் அது கருவிலே விளையப்படும் பொழுது சிறுகச் சிறுகச் சேர்ந்து பிறந்த பின் குழந்தைக்கும் இது நோயாக மாறுகின்றது. நோயாக மாறிய பின் தாய்க்கும் அந்த வினையாகின்றது. குழந்தையைப் பார்க்கச் செல்வோருக்கும் இதிலே விளைந்தது (நோய்) அங்கே வருகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அதைப் போல் தான் பண்டைய காலத்தில் அகஸ்தியன் அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது தாய் நுகர்ந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல்கள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின்
1.அவனுடைய அபூர்வ செயலை அவனுடன் வாழ்ந்த சகாக்களும் உற்றுப் பார்க்கின்றனர்… நுகர்கின்ரனர்.
2.அப்பொழுது அகஸ்தியன் உடலில் விளைந்த பேராற்றல்கள் அவர்களுக்குள்ளும் விளைகின்றது.
3.இப்படி அக்கால மக்கள் அகஸ்தியனுடன் வாழ்ந்து அவன் வழியில் சென்றவர்கள் தான்
4.சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள்.

அதன் பின் சென்றது அரசர்களாக ஆன பிற்பாடு ஒன்று இரண்டு போனது அபூர்வமாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் குருநாதர் இதை எல்லாம் காட்டிய பின் காந்திஜி இராமகிருஷ்ண பரமகம்சர் இராமலிங்க அடிகள் போன்றோரை விண் செலுத்தினோம்.

இருந்தாலும் அந்த ஞானிகள் மீது பற்று கொண்டோர் எல்லாம் அவர்களிடத்தில் ஏதோ கிடைக்க வேண்டும் என்று தான் சென்றார்கள். அவர்கள் கண்ட உண்மையின் உணர்வைப் பெறவேண்டும்… அந்த ஞானத்தைப் பெறவேண்டும்…! என்று யாரும் கேட்கவில்லை.

1.மகானிடம் சென்றால் இந்த வாழ்க்கைக்கு உதவும்
2.மகானைப் போய்ப் பார்த்தால் நம் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான்
3.இன்று வரையிலும் சந்திக்கச் செல்கிறார்கள்.

ஆனால் பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும்…! என்று சென்றாலும் “ஞானம் இல்லை…” என்றால் வந்த பணத்தைச் சீராக்க முடியுமா என்றால் முடியாது…!

பணமே வந்தாலும் ஞானம் இல்லை என்கிற பொழுது என்ன நடக்கிறது..?

1.ஆசை அதிகமாகின்றது
2.அதிலே ஏதாவது பிசகானால் இப்படி ஆகிவிட்டதே…! என்று மறுபடியும்
3.இதைப் பெறவேண்டும் அதைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டப்பட்டு… அந்த ஆசை நம்மை “விடுவதில்லை…!”

இதை மட்டும் பெற்றால் பரவாயில்லை என்போம். பின் இது நன்றாக வந்தது… இதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம்…! என்று சொல்லி அதிலே நஷ்டமானால் வேதனை தான் மிச்சமாகின்றது.

வேதனை வந்த பின்
1.முதலில் வந்த செல்வமும் போய் விடுகிறது…
2.அதற்குபின் தொழிலைச் சீராக்கி வளர்வதும் போய்விடுகிறது..

இரண்டுக்கும் சேர்த்து வேதனை என்ற அணுக்களை வளர்த்து வளர்த்து… உடலிலே நோயை உருவாக்கத்தான் நாம் தயாராகின்றோம்.

நோயாக ஆன பின்… நான் இப்படி எல்லாம் செய்தேனே.. இப்படி எல்லாம் வந்தேனே…! எல்லாம் போய்விட்டதே..! என்று புலம்புவார்கள்…!

மனிதனுடைய இன்றைய வாழ்க்கை இப்படித்தான் இருகின்றது.

நானா … அல்லது நாமா…?

நான்… நான்… என்று எண்ணுவதற்குப் பதில் நாம்… நாங்கள்…! என்று எண்ணி நல் சக்திகளைச் சேர்த்துப் பாருங்கள். உங்கள் உள்ளத்திலே மகிழ்ச்சி தன்னாலே வரும். ஞானிகள் ஆலயத்தை அமைத்ததே அந்த மகிழ்ச்சியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதற்குத் தான்…!

spiritual path ways

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் யாவுமே “ஞானத்தைப் பெறச் செய்வதற்குத் தான்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆத்ம வலுப் பெறுவது என்பது ஆண்டவன் அருளால் ஒரு நொடிப் பொழுதில் கிட்டிவிடுவது என்பதல்ல.

இச்சரீரக்கூறின் உணர்வின் எண்ணத்தையே உயர் ஞான வழி முறைக்குச் செயல்படும் ஒவ்வொரு செயலுக்குமே செயலின் வழி முறையில் செலுத்தப்படும் எண்ணத்தில் உடல் ஏற்கும் உணர்வு நிலைக்கொப்பத்தான் செயல்படுத்த முடியும்.

உணர்வு நிலை என்பது…
1.சகல நிலைகளிலும் இவ்வெண்ணம் மோதும் பொழுது
2.சமமான சாந்த நிலையுடன் கூடிய எண்ணத்தின் பால்
3.அந்த உணர்வின் செயகையை உடல் நிலை ஏற்று வழிப்படுத்தும் நிலைக்கொப்ப
4.சகல சக்திகளிலும் சமமான சாந்த சக்தியைச் செயல்படுத்தும் வழி முறையினால் தான்
4.ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள முடிகிறது.

ஆத்ம பலம் பெற்ற… ஞானத் தன்மையினால் எண்ணத்தின் உணர்வைச் சாந்தப்படுத்தும் வழிச் செயலை “அவ்வாத்மாவே…” பிறகு செயல்படுத்தி வழி நடத்தும்.

சிறு சிறு துளிகள் சேர்ந்து தான் பெரு வெள்ளமாகின்றது. அதைப் போன்று ஒவ்வொரு செயலிலும் எண்ணத்தின் வழி முறையைச் செயல்படுத்தும் தனமை கொண்டு தான் ஆத்ம பலம் கூடி வலுவாகின்றது.

1.ஆத்ம பலம் பெற்று விட்டாலும்
2.வாழ்க்கையில் நடக்கும் எதிர் நிலை உந்தல்கள் பல மோதத்தான் செய்யும்.

பெரும் வெள்ளத்தில் எதிர்படும் குப்பைகள் எப்படி அடித்துச் செல்லப்படுகின்றனவோ அதைப் போன்றே ஆத்ம பலம் பெற்ற வாழ்க்கையில் எதிர்ப்படும்
1.உணர்ச்சிகளை உந்தக்கூடிய சில நிலைகள் ஏற்பட்டாலும்
2.வெள்ளத்தில் அடித்துச் செல்லும் குப்பைகளைப் போன்று
3.அது நம் ஆத்மாவுடன் கலக்காது.

பல காலமாக உழைத்துச் சம்பாதித்து வீடு கட்டும் பொழுது… வீட்டின் அஸ்திவாரத்தைப் பலம் கொண்டு கட்டியவுடன்… அதற்கு அழகு செய்வது கடினமல்ல…!

அப்படிக் கட்டப்பட்ட வீட்டில் ஆங்காங்கு ஏற்படும் துப்புரவு நிலைகள் சில செய்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

அதைப் போன்றே ஞானத்தால் சித்து கொண்ட ஆத்ம பலம் பெற்று இச்சரீரமுடன் வாழும் காலத்தில்
1.கட்டப்பட்ட வீட்டின் குப்பைகள் அண்டுவதைப் போன்றும்
2.காரைகள் உதிர்வதைப் போன்றும் சில நிலைகள் ஏற்படத்தான் செய்யும்.

அதைத் துப்புரவுபடுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

உடலுடன் கொண்ட வாழ்க்கையில் எதிர்ப்படும் யாவையுமே
1.நம் ஞானத்தை வளர்க்கவல்ல வழி முறையாக
2.ஆத்மாவின் செயலைக் கொண்டு வழி பெறும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

செவ்வாய் தோஷம் இருக்கின்றதா – இல்லையா…? 

மதத்திற்குத் தக்கவாறு தான் நல்ல நேரம் நிர்ணயிக்கப்படுகின்றது 

ஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்தவர் எத்தனை பேர் ஒன்றி வாழ்கின்றார்கள்

Om - ohm

ஓ…ம்… என்று தனியாகச் சொல்லலாமா…? பெண்கள் ஓ..ம் சொல்லலாமா…?

கேள்வி:
ஓ…ம் என்று தனியாகச் சொல்லலாமா…? அல்லது ஓ..ம் ஈஸ்வரா… என்று தான் சொல்ல வேண்டுமா…? பெண்கள் ஓ…ம் சொல்லலாமா…?

விளக்கம்;-
நாம் ஒவ்வொருவருமே புதிதாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் எழுப்பக்கூடிய ஒலி “ஓ…” அல்லது “ஓ..ஹோ….!” அல்லது “ஓ… அப்படியா..!” இது தான்.

அந்த மொழிக்காரராக இருந்தாலும் இந்த “ஓ..” கண்டிப்பாக வரும்.

அதே போல் அடுத்தவர்கள் சொல்லக்கூடியதை நாம் ஆமோதித்துக் கொண்டே வந்தால் என்று அவர்கள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல “ம்..” “ம்..” என்ற ஒலியை எழுப்பத்தான் செய்வோம்.

இந்த “ம்…” சொல்லவில்லை என்றால் நம்மிடம் பேசுபவருக்குச் சிரமமாகி நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்… நீ என்ன “ம்..” என்று கூடச் சொல்ல மாட்டேன் என்கிறாய்…? என்று கண்டிப்பாகக் கேட்பார்கள். அந்த உணர்ச்சி அப்படிக் கேட்க வைக்கும்.

ஏனென்றால் நமது சாஸ்திர விதிகளின்படி, “ஓ…ம்” என்பது பிரணவம், நமது உயிர் நமக்குள் ஜீவனாக இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குப் பெயர் “ஓ…”.

1.“ஓ…” என்றால் ஜீவன் என்று பெயர்.
2.உயிர் நமக்குள் ஜீவனாக இயங்குகின்றது என்று பொருள்.
3.இந்த உயிர் எதையெல்லாம் கவருகின்றதோ அவையனைத்தும் “ம்…” என்று நமது உடலாக அமைந்துவிடுகின்றது.

(ஆனால் மற்றவர்கள் சொல்வதை நம்மால் ஏற்க முடியவில்லை என்றால் “ம்…” என்று சொல்வதற்குப் பதில் உ..ம்.. அது எப்படி…? என்போம் அல்லது ஊஹும்ம்ம்… கிடையாது…! என்போம்)

எப்படிப் பார்த்தாலும் இந்த ஓ.. என்றும் ம்… என்றும் ஒலி வந்து கொண்டே தான் இருக்கும் அதனால் தான் எல்லாக் கோவில்களிலும் எல்லாத் தெய்வத்திற்கு முன்னாடியும் ஓ..ம் போட்டுக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஓ…ம் சக்தி…! என்று கூட நாம் புரிந்து கொள்ள பச்சையாகவே காட்டுகின்றார்கள். ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!

ஓம் சக்தி என்றால் பராசக்தி.. மார்யம்மன்.. காளியம்மன் என்று நினைவு எங்கேங்கேயோ போகின்றது. ஆக மொத்தம் ஓ…ம் என்றால்
1.அது மிகப் பெரிய இயக்கச் சக்தி..
2.பேராற்றல் மிக்க ஜீவனூட்டும் சக்தி
3.நம் உயிரின் மூல சக்தி (மின்சாரம்)

ஓ..ம் என்று சொன்னாலே அது நம் உயிரின் இயக்கச் சக்தியைக் கூட்டும்.

கோபம் வந்தால் என்ன சொல்கிறோம்…? ஒரு கடினமான சாமானைத் தூக்க வேண்டும் என்றால் என்ன சொல்கிறோம்..? ஒரு முக்கியமான சிந்தனையாக இருந்தால் என்ன சொல்கிறோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இந்த நேரங்களில் எல்லாம் நம்முடைய தொண்டையிலிருந்து இந்த “ஓங்கார ஒலி” கண்டிப்பாக வரும். அதனால் தான் இதை “மந்திரம்” என்று சொன்னார்கள்.

ஆனால் மந்திரம் என்றாலே நாம் எதை எதையோ தான் நினைக்கின்றோம்.
1.அதற்குள் மறைந்துள்ள சக்தியையும்.. சூட்சமத்தையும் காட்டத்தான் அதை மந்திரம் (ஒலி) என்றார்கள் ஞானிகள்.
2.ஆக மொத்தம் ஒலியை எழுப்புகின்றோம். மூலத்தை விட்டுவிட்டோம்.

ரோஜாவில் இருக்கும் முக்கியமானதே அதனுடைய மணம் தான் அந்த மணத்தை நுகரும் பொழுது தான் “ஆஹா..” என்று சொல்கிறோம். மணம் வரவில்லை என்றால் ஆஹா என்ற சொல் வருமா…?

அது போல் தான் ஓ…ம் என்று சொன்னால்
1.நம் உயிரை…
2.நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனை
3.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனை எண்ண வேண்டும்
4.அவனுடன் நாம் கலந்துறவாட வேண்டும்
5.அவனுடன் ஐக்கியமாக வேண்டும்
6.அவன் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையில் பரிபூரணமாக நினைக்க வேண்டும்
7.அப்படிப்பட்ட ஒரு தெய்வீக உறவு நமக்கும் நம் உயிருக்கும் வருவதற்குத்தான் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று சொல்லச் சொன்னார்கள் ஞானிகள்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தீட்டாக இருந்தாலும் பாபம் செய்தவனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் ஓ..ம் ஈஸ்வரா என்று உயிரை நினைக்கத்தான் வேண்டும். அப்பொழுது தான் அந்தத் தெய்வீக சக்தியைப் பெற முடியும்.

ஆகவே… நாம் எண்ணியது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் தன்மை நமது உடலானாலும் அந்த குணத்திற்கு குருவாக இருப்பது உயிர். நாம் எண்ணியதை இயக்கி அந்த உணர்வின் சக்தியை உடலாக மாற்றும் நிலைதான் ஈஸ்வரன் என்பது.

என்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைக்கு “ஈஸ்வரா…” இந்த உடலிலுள்ள குணங்கள் அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது “குருதேவா…”

ஆகவே, நாம் ஒம் ஈஸ்வரா குருதேவா என்று நமது உயிரைச் சொல்கின்றோம்.

குரு காட்டிய வழி எது…?

 

ஒரு நெல்லால் பசியைப் போக்க முடியாது. பல நெல்கள் குவிந்தால் தான் எல்லோருக்கும் அது பசியைப் போக்கும். தனி ஒரு மனிதனால் “நான் இதைச் செய்வேன்…!” என்றால் அது வெறும் அகந்தை தான். நாம் அனைவரும் சேர்ந்து தான் அந்த மெய் ஒளியை வளர்க்க முடியும். சப்தம் போட்டு அல்லது திட்டம் போட்டுச் செய்யவில்லை. உங்களுக்குள்  விளைந்த அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் தான் இங்கே இயக்குகிறது. 

Destiny of humans

எதை அதிகமாக நேசிக்கின்றோமோ அதுவே நமக்குள் அதிபதியாகி அந்தக் கணக்கின் பிரகாரம் “நம் வாழ்க்கையின் எல்லை” அமைகிறது

 

இன்று நம்முடைய சகஜ வாழ்க்கையில் பல பல உணர்வுகளை நுகர்கின்றோம்.
1.அதனதன் உணர்வுக்கொப்ப நமக்குள் அணுவாக விளைகின்றது.
2.அது உணவுக்காகத் தேடுகின்றது.
3.அந்த உணர்ச்சிகள் உந்தும் பொழுது அதன் வழி நம் செயலாக்கங்கள் மாறுகின்றது.

நாம் “எதை அதிகமாக நேசித்து…” அந்த உணர்வுகளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோமோ அதை வளர்ப்பதற்கே நம் எண்ணங்கள் செல்கிறது.

உதாரணமாக ஒரு கொலைகாரன் அடுத்தவரைக் கொன்றிடும் செயலுக்கே வருகின்றான். அந்த உணர்வு கொண்டு அவன் மகிழ்ச்சி அடைகின்றான். கொலையுண்ட உணர்வுகள் தான் இவனுக்குள் அதிகமாக வந்து சேர்கின்றது.

ஆனால் இந்த உணர்வுகள் அவனுக்குள் அதிகமான பின் இவனுடைய உடலில் என்ன நடக்கின்றது…?

மூஷிகவாகனா…! (சுவாசித்ததே வாகனமாக வருகிறது) என்ற நிலையில் அவன் வாழ்க்கை நடக்கின்றது. அதாவது கொலை செய்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகும் பொழுது
1.இந்த உணர்வுகள் உடலுக்குள் அதிபதியாகி அதனால் அவன் வீழ்ச்சி அடைகின்றான்.
2.எதை இவன் கொன்று குவித்தானோ இதைப் போல் அவன் வாழ்க்கை செல்கின்றது.

நந்தீஸ்வரன்…! தான் சுவாசித்த உணர்வுகள் முதலிலே…
1.சுவாசித்த உணர்வின் இயக்கமாக வருகின்றது.
2.பின் இதனின் உணர்வு எது எதிகமாகக் கணக்குகள் சேருகின்றதோ
3.அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த சரீரம் எப்படி ஏற்படுகின்றது…? என்று
4.இதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உருவத்தை அமைத்து
5.அருவ உணர்வுகளை நுகரச் செய்து அந்த உணர்வின் இயக்கமாக வாழ்ந்து
6.உண்மையை உணர்ந்து… பகைமை உணர்வுகளை அகற்றி…
7.உன் வாழ்க்கையில் எப்படி நீ வாழ வேண்டும்…? என்ற இந்தத் தத்துவத்தைத் தெளிவாகக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் ஆதியிலே முழுமையாகக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்…! அவனே விநாயக தத்துவத்தையும் கொடுத்தவன்.

மனிதனாக ஆன பின் அகஸ்தியன் தனக்குள் அதை எல்லாம் கண்டு கொண்ட பின் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் அவன் வாழ்க்கையில் சேர்த்துச் சேர்த்துச சேர்த்து அதன் வலிமை கொண்டு இந்தப் பூமியிலும் சரி விண்ணை நோக்கி இவன் உற்றுப் பார்த்து உலக அறிவை எல்லாம் அவன் தெரிந்து கொண்டான்

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டாலும் இன்று அவன் உடலுடன் இருக்கின்றானா…?

இல்லை..!

ஆனால் அந்த உணர்வின் தன்மைகளைத் தன் உயிருடன் ஒன்றி ஒளியின் தனமையாக மாற்றிக் கொண்டான். ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான். இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.

அகண்ட அண்டத்தின் நிலைகளிலிருந்து நம் பிரபஞ்சம் சூரியக் குடும்பம் கவர்ந்தது. இதற்குள் விளைந்தது. இதை அனைத்தையும் வென்றிடும் சக்தி பெற்றவன் அகஸ்தியன்..

விஷத்தின் ஆற்றலை வீழ்த்தி.. உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற…
1.அந்த அகஸ்தியனில் விளைந்த உணர்வுகள் இங்கே உண்டு.
2.அதை நுகர்ந்து நமக்குள் பெருக்கிக் கொண்டால் அவன் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று
3.அவனைப் போன்று அழியாத நிலையை நாமும் பெறலாம்.

கொடுமையான தீங்கை ஒருவன் செய்தால் பதிலுக்கு என்ன செய்கின்றோம்..?

அகோரியின் சாபத்திலிருந்து ஒரு குடும்பத்தை மீட்ட நிகழ்ச்சி

யூதர்களால் உருவாக்கப்பட்ட மந்திர ஒலிகளின் உண்மை நிலைகள்

human skeletal power

உடலில் உள்ள எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய அருள் சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியின் இயக்கத்தில் எப்படி இருள் அதிகமாகவும் ஒளி குறைவாகவும் உள்ளதுவோ அதைப் போன்றுதான் மனிதனின் எண்ணச் செயலும் உள்ளது.

1.கடும் இருட்டிலும் சிறிது வெளிச்சம் ஊடுருவி ஒளி பாய்ச்ச முடியும்.
2.ஆனால் சிறிது வெளிச்சத்தையே மறைக்கக் கடும் இருட்டு தேவையாக உள்ளது.

நம் எண்ணத்தின் இருளை ஒளியாக்கும் ஆத்ம வலுவை நாம் பெற்றோமானால்
1.உடலின் எண்ண நிலைக்கொப்பச் செயல்படும் குணத்தையே
2.ஆத்மாவின் செயலாக உடலைச் செயல்படும் வகையில் செயலாக்கி
4.இருளில் இருந்து ஒளி பெறும் ஞான ஒளியாக
5.நம் ஆத்ம ஒளி பிரகாசிக்கும் சக்தியைப் பெறும்.

எண்ணத்தில் உள்ள இருள்கள் எவை…?

சலிப்பு… சோர்வு… பிறரிடம் உள்ள குறை காணல்.. புகழுக்காக ஏங்கும் ஏக்க நிலை… மரண பயம்…! போன்ற இருள் தன்மைகள் எல்லாவற்றையும் எண்ணத்தால் எடுக்கும் ஞான சக்தி கொண்டு நாம் மாய்க்க வேண்டும்.

குரோதம் வஞ்சனை என்ற தீய குணங்கள் வேறு. எண்ணத்தால் மறைத்துவிடும் இருள் குணங்கள் வேறு.

ஆத்ம ஞானத்தால் நாம் வளர்ந்து வரும் காலங்களில் சலிப்பின் சோர்வை அண்ட விடக் கூடாது.

சலிப்பின் ஏக்கத்தால் “உயர்வு கொள்வோம்” என்ற
1.உயர் ஞான வழிக்கு அந்த ஏக்க நிலையைச் செலுத்தி
2.அந்த ஏக்கத்திலேயே ஆத்ம வளர்ப்பை வளர்க்கவும் முடியும்.

ஆனால்… பிறர்பால் பொருளைப் பார்த்து ஏக்கப்படும் ஏக்கத்தால் மனித வாழ்க்கை அழிவிற்கும் செல்வதுண்டு.

குணங்களை வழிப்படுத்தும் ஞானத்தால் பெறவல்ல ஆத்ம பலத்தால் தான் இருள் என்ற நிலை நீங்கும். மேலும் ஒளியான ஆத்ம வலுவைப் பெற்ற ஆத்ம ஞானத்தால்… எண்ணிய எண்ண நிலைக்கொப்ப கடும் பசியையும்… உடல் சோர்வையும்… கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அதே போல் உடலின் எந்தப் பாகத்தில் எந்த வகையான உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும்… இவ்வுடலின் செயலுக்கும்…
1.இவ்வாத்ம ஞானத்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் தொடர்பு கொண்டு
2.அவர்கள் ஈர்ப்பலை வரிசையில் எண்ணத்தைச் செலுத்தி சுவாசம் எடுக்கும் பொழுது
3.எதை எண்ணிச் சுவாசம் எடுக்கின்றோமோ… அவ்வலை அமில உணர்வு இந்த உடலில் சாடி ஏற்படும் எண்ண நிலைக்கொப்ப…
4.”ஆத்ம பலத்தைக் கொண்டு” இவ்வுடலின் செயலையும் சீராக்கிடும் வழியை வகுத்துக் கொள்ளலாம்.

இந்த உடல் ஒரு அடுப்பு தான். இந்த உடலில் சமைக்கும் அமில உணர்வின் ஆவி நிலையை ஆத்மா பெற்று அதன் வழியில் ஆத்மா வாழ்வது என்பது “சாதாரண வாழ்க்கை நிலை…!”

ஆனால் வாழ்க்கையின் ஞான ஈர்ப்பு நற்குணத் தியானச் செயலால்… எண்ணத்தின் சுவாசத்தில் ஆத்ம பலம் பெற்ற ஒரு ஞானியினால்…
1.உடல் சமைப்பிலிருந்து ஆத்மா பலம் பெறும் நிலை மாறி
2.ஆத்மாவின் செயலுக்குகந்த சமைப்பாக இந்த உடலை இயக்க முடியும்.

பசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தையே ஆத்ம வலுக்கூடிய ஞானியினால் ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும்.

அத்தகைய தன்மைக்கு… இச்சரீரக்கூறின் எலும்புகளை மின் காந்த வலுக் கொண்ட உறுப்புக்களாக உறுதி கொண்டிடும் செயலால்
1.சரீர உணர்வின் சாதாரண நிலையையே
2.எண்ணத்தின் இயக்க நிலைக்கொப்ப மாற்றியமைக்கும்
3.ஆத்ம வலுவைக் கொண்டு செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

போகர் உருவாக்கிய முருகனின் சிலையின் மகத்துவம்

 

வெறும் வயிற்றுப் பாட்டிற்காக முருகன் சிலையை போகர் வைக்கவில்லை. தான் பெற்ற ஆற்றல்களை ஒரு துன்பப்பட்டவரின் உள்ளத்திலே பாய்ச்சி அங்கிருந்து அவர்கள் துன்பங்களை நீக்கிய பின்… மகிழ்ந்திடும் மூச்சலைகள் அவரிடமிருந்து வெளி வருவதைச் சுவாசித்துத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டான். அன்று எழுத்து வடிவே இல்லை. பின் வந்தோர் இந்த உண்மைகளை எல்லாம் மாற்றி விட்டனர். 

our solar family

அகஸ்தியன் நேரடியாகப் பார்த்துணர்ந்த நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நீங்களும் காணுங்கள்…!

இன்று கரண்டாக (மின்சாரம்) உற்பத்தி ஆவது எல்லாமே நட்சத்திரங்களின் எதிர் மோதல் தான்…!

நம் பூமிக்குள் எடுத்துக் கொண்டால் ஒன்றுடன் ஒன்று எதிர் மோதலாகப்படும் பொழுது வட துருவமும் தென் துருவமும் இயற்கையில் காந்தங்கள் இரு விதமாக இருக்கும்.

1.தென் துருவம் வட துருவத்தைக் கண்டால் இந்தக் காந்தம் பாய்ச்சப்பட்டு அது விலகி நகர்ந்து ஓடும்.
2.வட துருவமோ ஒன்றைத் தனக்குள் இழுக்கும் (கவரும் சக்தி) சக்தியயைக் கொண்டு வருகின்றது.

தென் துருவத்தில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இது வித்தியாசமான நிலைகளில் வரும்.
1.ஒன்று இழுத்து உள்ளுக்குள் தள்ளுகின்றது.
2.அந்த உணர்வின் காந்தப் புலனறிவுகள் ஊசியை வைத்தால் நகர்ந்து போய்விடும்… இழுக்காது.
3.ஆனால் வட துருவமோ தனக்குள் அதை இழுத்துத் தன்னுடன் ஒட்டிக் கொள்கிறது.
4.இப்படி இந்தக் காந்தப் புலனறிவுகளைப் பற்றி குருநாதர் எனக்கு (ஞானகுரு) எடுத்துக் காட்டுகின்றார்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் எப்படி இயங்குகிறது…? மனிதன் பல கோடிச் சரீரங்களில் தப்பித்துக் கொண்ட உணர்வுகள்… மனிதனாக உருவாக்கிய பின் தான் அதை எல்லாவற்றையுமே அறிய முடிகின்றது என்று இதைத் தெளிவாக்கினார் குருநாதர்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்கின்றது. பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது.

அதாவது ஒரு நூலாம்படைப் பூச்சி தான் உமிழ்த்தும் மலத்தால் கூடாகக் கட்டிக் கொள்கின்றது. அதைப் போல் தான் நட்சத்திரங்கள்
1.சுழற்சியின் தன்மையில் இது வெளிவிடும் அமிலங்கள் உருவாகி வரும் பொழுது ஒரு கோட்டைப் போல போடுகின்றது.
2.தனக்குள் மற்றது பட்ட பின் அது சிறுகச் சிறுகத் துகள்களாக மாறுகின்றது – பால்வெளி மண்டலமாக உருப் பெறுகின்றது.

அந்த 27 நட்சத்திரங்களும் பலவித நிலைகள் கொண்டு அதனதன் நுகர்ந்த உணர்வுகள் வருகின்றது. முதலில் இருக்கக்கூடிய நட்சத்திரம் நுகர்ந்த பின் அதிலிருந்து வரக்கூடிய கழிவை… அடுத்து இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் எடுக்கின்றது.

அதன் உணர்வு இதற்குள் பட்டபின் இதனுடைய மாற்றங்கள் வேறுவிதமாக இருக்கின்றது. இந்தத் துகள்களை எடுத்துக் கொண்ட பின்
1.இன்னொன்றுடன் இது கலந்திருந்தால் அதன் இணையாகச் சேர்கின்றது.
2.இது கலக்காத நிலை இருந்தால் ஒத்துக் கொள்ளாத நிலையாகி எதிர் நிலை கொண்டு ஓடுகின்றது.

இப்படி இந்த 27 நட்சத்திரங்களின் செயலாக்கங்கள் தான் நம் பிரபஞ்சத்தில் அது ஈர்க்கும்… அல்லது எதிர் நிலை…! (சத்ரு மித்ரு) மற்ற நிலைகள் எல்லாம் இதற்குள் அடங்குகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களும் நம் பூமியின் தென் துருவப் பகுதிக்கும் வருகின்றது. வட துருவப் பகுதிக்கும் வருகின்றது. ஒரு குளோப் மாதிரி சுற்றி வருகிறது.

அதனின் சுழற்சியில் வரப்படும் பொழுது அதாவது 27 நட்சத்திரங்களும் இந்தக் கோளைப் போல் அது சுழன்று வரப்படும் பொழுது
1.அதனுடைய உமிழ்த்தல் வரப்படும் பொழுது இங்கே இழுத்த பின் அதன் நிலை.
2.இதைக் கலந்து இங்கே எடுத்த பின் அதனின் மாற்ற நிலை.
3.இப்படிப்பட்ட எதிர்மறைகள் நம் பூமிக்குள் எப்படி உருவாகின்றது…?
4.கோள்களில் விளைய வைத்தது தென் துருவப் பகுதியில் கலந்த பின் இதன் உணர்வு கொண்டு இதற்கு எப்படி எதிரியாகின்றது…?
5.அந்த நிலையில் பூமி எப்படி நகர்ந்து (தொடர்ந்து) ஓடுகின்றது…? என்று
6.இவ்வளவு பெரிய அதிசயத்தைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் (ஞானகுரு) கிடைத்தது.

குருநாதர் எனக்குள் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு அதனை உற்றுப் பார்க்கும்படி செய்தார். ஆனால் அப்படி உற்றுப் பார்ப்பதற்கு எங்கிருந்து சக்தி கிடைக்கின்றது…?

இது அகஸ்தியன் தன் உடலில் இளம் பருவத்தில் பிறந்த பின் அவன் உற்று நோக்கிய உணர்வுகள் கொண்டு தான் காண முடிந்தது.

சூரியன் மையமாக இருக்கின்றது. சுழற்சி வட்டம் வரும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகின்றது. குறையும் தன்மை வரப்படும் பொழுது சுழற்சியின் மாற்றங்களைப் பார்த்தால்
1.நம் பூமி எப்படி மையத்தில் வெப்பமாகின்றதோ இதே போல்
2.மையத்தின் நிலை கொண்ட உணர்வுக்கொப்ப அதனுடைய சுழற்சியின் நிலைகள் மாறுபடுகின்றது
3.இதற்குள் தான் இந்தச் சூரியன் (ஒரு குடும்பமாக உள்ளது).

இதற்கு வெளியிலே போனோம் என்றால் ஒரு குளோப் போல் பல சூரிய மண்டலங்கள் (குடும்பங்கள்) உண்டு. இப்படிப் பல நிலைகள் ஒன்றுடன் ஒன்று ஒத்து வரப்படும் பொழுது இதனுடைய சுழற்சி மாறுபட்டு வரப்படும் பொழுது
1.நம் பிரபஞ்சத்திற்குள் மாற்றம்
2.அதனால் ஏற்படும் நிலைகளால் நம் சூரியனுக்குள் மாற்றம்… மற்ற கோள்களில் மாற்றம்
3.கோள்களில் மாற்றமாகும் பொழுது நம் பூமியிலும் மாற்றம்.

இது எப்படி எல்லாம் மாறுகின்றது…? என்பதை ஈஸ்வரபட்டர் அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த நிலைகளை என்னைக் கவரும்படி செய்து அதை உணர்த்திக் காட்டினார்.

 

இன்று இருப்பது நாளை இல்லை…! இயற்கையின் நியதி…!

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்..?

சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?

முருகன் காட்சி கொடுப்பானா… எந்த வழியில் கொடுப்பான்…?

spiritual-food-agastya

காற்றிலே பரவிப் படர்ந்துள்ள அகஸ்தியன் மூச்சலைகளை நுகர… “குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி”

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனுடைய தாய் சூரியனை உற்றுப் பார்த்து எதைக் கவர்ந்ததோ
1.ஒவ்வொரு நாளும் காலையில் சூரியன் நம்மைக் காக்க வருகின்றான்…! என்ற எண்ணத்துடன்
2.தாய் எண்ணிய அந்த உணர்வுகளை எல்லாம்
3.அகஸ்தியனும் (குழந்தைப் பருவத்தில்) ஒன்றுமறியாத வயதாக இருந்தாலும் சூரியனை உற்று பார்க்கின்றது.

சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை இந்தக் குழந்தை பார்க்கின்றது. ஆனால் பார்த்த உணர்வின் அணுக்கள் அந்த அறிவின் தன்மையாக உடலுக்குள் விளைகின்றது.

1.அந்த மூச்சலைகளைச் சூரியன் எடுத்து வைத்துக் கொள்கின்றது.
2.அதை எப்படி எடுக்கின்றது…? எப்படி விளைகின்றது..?
3.இந்த மனிதக் கருவுக்குள் வந்த பின்… ஒன்றும் அறியாத நிலைகள் இருந்தாலும் அந்த உணர்வின் அலைகள் எப்படி வருகின்றது..?
4.மீண்டும் அதைச் சூரியன் எப்படி எடுத்து வைத்துக் கொள்கிறது என்று இதையெல்லாம் குருநாதர் தெளிவாக்குகின்றார்.
5.(தாய் நுகர்ந்தது.. அகஸ்தியன் நுகர்ந்தது எல்லாமே…!)

இதை அன்று அகஸ்தியனுடன் வாழ்ந்த மக்களும்.. அவன் செய்கைகளைப் பார்க்கப்படும் பொழுது உற்றுப் பார்க்கின்றனர். அவனை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் நுகர்ந்த உணர்வுகள் அக்கால மக்களுக்கும் தெரிய வருகின்றது.

இவன் வளர்ச்சி பெற்று உண்மையின் தன்மை விளைந்த பின் அவன் அருகிலே வரப்படும் பொழுது

ஏனென்றால் அந்த உணர்வின் ஞானம் அகஸ்தியனுக்கு எப்படி வந்தது…?

தாய் தன் உடலிலே நஞ்சினை வென்றிடும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் அரைத்துப் பூசியது. விஷத்தின் தன்மைகள் எல்லாம் மடிந்து… தாயின் கருவில் இருக்கும் அகஸ்தியனுக்குள் அது விளைந்தது.

அதன் வழிப்படி அகஸ்தியன் பிறந்த பின் அவனைச் சூழ்ந்துள்ளோர் பார்க்கப்படும் பொழுது இவனில் விளைந்த உணர்வுகளை அவர்களும் நுகர்கின்றனர்.
1.அதன் அறிவாக அவர்களும் விளைகின்றனர்
2.இவனைப் போல் அந்த உணர்வுகளை நுகர்ந்து தாவர இனங்களின் ஆற்றல்கள் எப்படி..? என்று அறியும் உணர்ச்சிகல்
3.அந்தக் காட்டில் வாழும் அகஸ்தியனின் சகாக்களுக்கும் தோற்றுவிக்கின்றது.

இப்படி அகஸ்தியனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு “இன்றும் அலைகளாக… நமக்கும் முன் பரவியுள்ளது…!”

இதை எல்லாம்… ஈஸ்வரபட்டர்
1.எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்கி
2.எனக்குள் அதைப் பதிவாக்கி
3.அகஸ்தியன் உணர்வுகளை எல்லாம் நுகரும்படி செய்கின்றார்.

அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது காற்றிலிருக்கும் அந்த உணர்வின் தன்மைகளை நானும் அறிய முடிகின்றது.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அதை எல்லாம் பெற்றவர். அதன் உணர்வின் தன்மை தொடர்வரிசையில் வரப்படும் பொழுது
1.அவர் சொல்கிறார் நான் (ஞானகுரு) கேட்கின்றேன்.
2.அடுத்த நிலைக்குப் போகும் பொழுது இதை விட்டுவிடுகின்றேன்.
3.அவர் முதலில் ஒவ்வொன்றாகக் காட்டும் பொழுது “ஆஹா…!” என்று தெரிகின்றது.

அடுத்த நிலைக்குப் போகும் பொழுது அதை விட்டுவிட்டு வேறு நிலைக்குப் போய்விடுகின்றேன். கொஞ்ச நேரம் கழித்து.. “திடீரென்று” குருநாதர் முதலில் சொன்னதைச் சொல்லி அது எப்படி..? என்று கேட்கின்றார்.

எனக்கு அது தெரியவில்லை…! சொல்ல முடியவில்லை..!

உங்களிடம் அகஸ்தியனைப் பற்றி இப்பொழுது சொல்லிக் கொண்டே வருகின்றேன். நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டே வந்தாலும் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பீர்கள்.

அடுத்தாற்போல் இதை ஞாபகப்படுத்தி மீண்டும் கேட்டால் என்ன சொல்வீர்கள்…?

சாமி (ஞானகுரு) சொன்னதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்…! என்று சொல்வீர்கள். ஆனால் என்ன சொன்னார்..? என்று கேட்டால் உங்களுக்குச் சொல்லத் தெரியாது..!

இதைப் போன்று தான் குருநாதர் என்னைத் தெளிவாக்குவதற்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். இயற்கையின் உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது அதன் உணர்வின் நினைவாக நீ எப்படி இயங்குகின்றாய்…?

முன்னாடி தெரிந்து கொண்டது உயர்ந்தது… பின்னாடி தெரிந்து கொண்டது.. அதன் அழகையும் மற்றதையும் காட்டி… அதனை இரசிக்கச் செய்யும் பொழுது இதன் மேல் தான் ஞாபகம் செல்கிறது.
1.ஆழப் பதிந்த உணர்வுகளை மறந்து விடுகின்றாய்.
2.ஆனால் நீ உற்றுப் பார்த்தது உனக்குள் பதிவு உண்டு
3.அதை எண்ணி வரவில்லை என்றால் மீண்டும் திரும்ப எண்ணினால்
4.அந்த உணர்வுகள் உனக்கு எப்படி அதை அறியக்கூடிய பருவம் வருகின்றது…? என்று அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார்.

ஏனென்றால் உனக்குள் பதிந்த அந்த நிலைகள் இந்தக் காற்றிலே உண்டு என்பதைத் தெளிவாக அங்கே காட்டுக்குள் வைத்து எடுத்துக் கூறுகின்றார் குருநாதர்.

காற்றிலே மறைந்துள்ள அகஸ்தியன் உணர்வுகளை எடுத்து இந்த உலகைக் காக்கும் சக்தியாக நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்பதற்குத்தான் அந்த நுண்ணிய நிலைகளை எடுத்துக் கூறுகின்றேன்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

பிறரிடம் நல்ல வாக்குகளை எப்படிக் கொடுக்க வேண்டும்…?

பிறரிடம் உள்ள நல்ல உணர்வுகளையும் குணங்களையும் தட்டி எழுப்பி அவர்கள் துன்பங்களை நீக்கும் உபாயத்தை அவர்களுக்குக் காட்டி அதை வெறும் சொல்லாகச் சொன்னாலும் நன்மை பயக்கும் நிலைக்குச் செயல்படுத்த வேண்டும் என்றார் குருநாதர். அதன் மூலம் அங்கிருந்து மகிழ்ச்சியான உணர்வின் சக்தியை நம் உயிரான்மாவிற்கு ஊட்டமாகப் பெறலாம் என்றார் ஈஸ்வரபட்டர். 

DIGITAL WORLD

இன்றைய விஞ்ஞான உலகில் நல்லதோ… கெட்டதோ… எல்லாமே “துரித வேகமாக” இயக்கப்படுவதன் காரணம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சூரிய அலை ஈர்ப்பிலிருந்து (SOLAR) இன்றைய விஞ்ஞானத்திற்காகச் செயற்கை மின் காந்த அலையை மிகத் துரித இயக்கமாக இந்த நூற்றாண்டில் மனித விஞ்ஞானம் பிரித்தெடுத்துக் கொண்டே உள்ளது.

செயற்கை ஒளி காண… சூரிய சக்தியின் அலையை இந்தப் பூமிக்குத் துரிதப்படுத்தியதன் “செயற்கை இயக்க வேகம்…” உயிரினங்களின் ஈர்ப்பு வார்ப்பிலும் இக்காற்றலையின் தொடர்பினால் பெறவல்ல துரித இயக்கத்தினாலும்
1.இக்கலி மனிதர்களின் ஞான ஈர்ப்பும்
2.இயக்கத் துரிதமும் மிக வேகமாக முன்னேறியுள்ளது.

முன்னேறியுள்ளது…! என்பது இயற்கையின் அலை ஈர்ப்பானது உயிரினங்களின் சுவாச ஈர்ப்பிற்குத் துரிதம் கொள்ளும்… காந்த அணுக்களின் மின் ஈர்ப்பு நிலை… உயிரின வளர்ப்பு யாவற்றுக்குமே துரிதப்பட்டுள்ளது இயற்கை.

“செயற்கையின் செயலுக்காக” சூரிய அலையின் மின் காந்த அலைகளைப் பிரித்தெடுக்கும் இயக்கத்தால்… பூமியின் தன்மைக்கே அந்தக் குணம் கூடிவிட்டது.

அத்தகைய வேகத்தின் செயலினால்தான்… இந்நூற்றாண்டில் மனித விஞ்ஞானச் செயல்கள் அனைத்தும்… துரித வேக ஓட்டம் கொண்டு… மிகவும் வளர்ச்சியுற்று ஓடிக் கொண்டுள்ளது இன்று.

இத் துரித ஓட்டத்தையே சீர்படுத்தி வழிப்படுத்தும் ஞான ஈர்ப்பின் இயற்கைச் சக்திக்கு ஆத்ம தொடர்புடன் செயல்படுத்தினோமானால் ஆயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ச்சியுற்ற நிலையைக் காட்டிலும் உயர் வளர்ச்சிக்குக் கொண்டு போகலாம்.

அதாவது இன்றைய (இக்கலியின்) மின் அலைச் செயலுக்கு உட்படுத்தப்பட்ட மின் சக்தியின் துரிதம் போன்றே
1.எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தால்… ஞானத்தின் ஈர்ப்பு நிலையினால்…
2.இவ்வாத்ம வார்ப்பை ஒளி நிலையாக்கி…
3.உயர் ரிஷிகளின் தொடர்பில்… சித்து நிலை கொண்ட ரிஷித் தன்மைக்கு உட்படுத்த முடியும்.

அதே சமயத்தில் தீய சக்தியின் செயல்களும் இன்று பல நிலைகளில் துரிதம் கொண்டு மாந்திரீகத்தாரால் அவர்கள் அறியாத நிலையிலேயே அவர்களுக்குள் சில துரித ஆவேச அலை உணர்வு கொண்ட ஆவி ஆத்மாக்கள் அவர்கள் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுகின்றன.

அவ்வாத்மாவின் உந்தலின் சுவைக்கு உகந்த ஆகாரத்தை இவர்கள் தந்து… மந்திரவாதியின் (சூனியக்காரர்களின்) செயலுக்காக அவ்வாவிகள் எச்செயலையும் செய்விக்கும் தன்மையில் பல விபரீத செயல்களும் நடை பெற்றுக் கொண்டுள்ளன.

அதிலெல்லாம் சிக்காது… உண்மையின் இயற்கை ஆத்ம வலுவை
1.நாம் நற்குணங்களின் வார்ப்பாக இயக்கவல்ல இயக்கத்தால்
2.இவ்வாத்ம வலுவைக் கொண்டு துரிதமாக ரிஷித் தன்மை பெற முடியும்.

மற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்

சூட்சமத்தில் உள்ளதை எல்லோராலும் அறிய முடியாது அதற்குத்தான் துவைதம்

ஏழு ஜென்மங்கள் பற்றிய விளக்கம்

light bodies of sages

உடல் பெறும் உணர்வைக் கரைத்து நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறவேண்டும்

எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்றுத் தான் இன்று நாம் மனிதனாக வந்திருக்கின்றோம். ஒரு பாம்பு தீண்டி விட்டால் மனிதனின் நினைவாற்றல் அனைத்தையும் மறையச் செய்து விடுகின்றது. உடலை விட்டுச் சென்றல் அந்த பாம்பின் ஈர்ப்புக்குத் தான் செல்ல வேண்டி வரும்.

ஆக… பல பிறவிகள் கழித்து மனிதனாக வந்த நாம்
1.விஷத்தை ஒடுக்கிய அந்தத் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரத்தின் உண்ர்வுகளை நுகர்ந்தோம் என்றால்..
2.அந்தப் பாம்பின் நினைவு மறந்து நஞ்சினை வென்றிடும் நினைவு வரும்.

பாம்பின் ஈர்ப்புக்குள் செல்லாது… நம் உணர்வின் நினைவலைகள்
1.கண்கள் எந்தத் துருவ நட்சத்திரத்தைக் கடைசியில் நினைவு கொண்டதோ
2.கண்ணன் (கண்கள்) அர்ச்சுனனுக்குச் சாரதியாக சென்றான் என்பது போல்
3.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு அங்கே அழைத்துச் செல்லும்.

மனிதனாக ஆன பின் பிறவியில்லா நிலைகள் அடைந்தது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.

நம் நினைவுகள் அந்தத் துருவ நட்சத்திரத்தை வலு கொண்ட எண்ணத்துடன் நாம் எண்ணும் பொழுது
1.இந்த உடலில் நஞ்சுகள் இங்கே பாய்ந்தாலும்
2.நஞ்சின் உணர்வுகள் இதற்குள் கலந்தாலும்
3.நாம் பாதுகாப்பான இடங்களை அதை (துருவ நட்சத்திரத்தை) எண்ணும் பொழுது
4.ஒளியான உணர்வின் தன்மை பெற்று
5.உடலை விட்டு வந்தாலும் இது அர்ச்சுனனாகி (கூர்மை)
6.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

இங்கே நஞ்சினை ஒடுக்கச் செய்கின்றது. ஆனால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் பொழுது சப்தரிஷி மண்டலம் அருகிலே செல்கின்றோம்.

நஞ்சை வென்ற உணர்வுகள் அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைகின்றது. நாம் இந்த மனித உடலில் எடுத்திக் கொண்ட உணர்வின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகின்றது.

அது தான் பிறவி இல்லா நிலை…!

எந்தச் சந்தர்ப்பத்திலேயும் இந்த உடலை விட்டு உயிரான்மா சென்றாலும்
1.எது நம்மைத் தாக்கியதோ அதன் உணர்வு வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.அதன் வலுவை நாம் இழக்கச் செய்து அருள் ஒளியின் உணர்வைப் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

அந்தத் தகுதியை நாம் காலை துருவ தியானத்தின் மூலம் வலுப் பெறச் செய்ய வேண்டும்.

எப்படி எந்த நிலைகள் இந்த ஒளியின் சரீரம் ஒளியின் நிலைகள் நாம் எடுத்தாலும் இந்த ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க இந்த உடலின் உணர்வை உருவாக்கிய இந்த உடலும் “அந்த ஒளி பட்டு… இது கரையத்தான் செய்யும்…!”

1.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்.
2.நான் இந்த உடலிலேயே இருப்பேன்..! என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை.

அவன் எதனின் உணர்வைக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான். அந்த மகரிஷிகள் அடைந்த எல்லையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும்.

பத்து இலட்ச ரூபாய் பணத்தை வைத்துத் தர்மம் செய்வது பற்றி விளக்கம் கொடுத்தார் குருநாதர்  

காட்டிற்குள் பராசக்தி மாதிரி ஒரு தேவதை தெரிந்தது. வைரம் வைடூரியம் தங்கம் எல்லாம் முன்னாடி இருந்தது. எடுத்துப் பார்க்கச் சொன்னார் ஈஸ்வரபட்டர். நீ பார்ப்பது கனவு இல்லை நிஜம் தான்டா…! என்று கிள்ளிக் கிள்ளிக் காட்டுகின்றார். அதை எல்லாம் வாங்கினால் என்ன செய்யப் போகிறாய்..? என்றார் குருநாதர். தர்மம் செய்வேன் சாமி…! என்றேன். விட்டார்… ஓங்கி ஒரு அடி…! அதற்கப்புறம் தான் தர்மம் செய்வது பற்றி விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். தர்மம் எப்படித் தலை காக்கும்…? என்று நேரடியாகக் காட்டினார்.

family meditation

அக்கால வழக்கங்களையே வலியுறுத்தாமல் இன்றைய விஞ்ஞான காலச் சுழற்சியிலிருந்தே ஆத்ம வலுவைக் கூட்ட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் எடுக்கும் சுவாசத்தால் ஆத்ம அலையின் தொடர்பு கொண்டுதான் சரீர இயக்கச் செயலினால் ஆத்மாவின் வலுவும் கூடிக் கொண்டே உள்ளது.

இயற்கையின் மாற்றக் குணங்களும்… உருவாகும் ஒவ்வொரு சக்தியுமே…
1.நொடிக்கு நொடி மாற்ற உராய்வு வளர்ப்பு தன்மையில் தான் மாற்றமும் வளர்ப்பும்
2.சுழற்சி ஓட்டத்தில் எல்லா வகை குண வளர்ப்பு முறையிலும் வளர்ந்து கொண்டுள்ளது.

காட்சி:-
அடர்ந்த காட்டுப் பகுதியில் மேடான மலைப் பகுதி தெரிகிறது. அதிலே மலையும் பாறைகளும் தெரிகிறது. மலையும் பாறையும் சேர்ந்து இருந்தாலும் ஓரிடத்தில் “மிகப் பெரிய பாறை ஒன்று” நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

பிறிதொரு இடத்தில் அழகான குளமும் அக்குளத்தின் நீர் பாசி படிந்த கிளிப் பச்சையும் நிறம் போலவும் அப்பச்சையின் நிறம் மாறி மாறி கரும் பச்சையைப் போலவும் அதைச் சுற்றிச் சுற்றி மேலும் சில செடி கொடிகள் வளர்வதைப் போன்றும் தெரிகிறது.

பிறிதொரு இடத்தில் ஏற்றம் இறைக்கும் கிணறு இருக்கின்றது அதிலே நீர் உயர்ந்து குறைந்து இருப்பதைப் போன்றும் ஆனால் நீரின் நிறம் தெளிவு கொண்ட நீராகவும் காட்சியில் தெரிகின்றது.

இதன் விளக்கம் என்ன…?

பூமியின் பிடிப்புள்ள பாறைக்கும் அதற்கு மேல் பிடிப்பற்ற… அதாவது
1.பூமியின் வளர்ப்பு நிலையிலிருந்து மாறி
2.ஒரு பாறையின் மேல் ஒரு பாறை நிற்கின்றது என்றால்
3.அப்படி நிற்கும் நிலை எப்படி ஏற்படுகின்றது…?

பூமியின் வளர்ப்புப் பிடியுடன் வளரும் பாறைகள்

இப்பூமியில் ஏற்படும் பிரளய காலங்களில்
1.சில மண்டல ஓட்டங்களின் சேர்க்கைக் காலங்களிலும்
2.பூமி ஈர்க்கும் அமில மாற்றத்திலும்
3.பூமி ஈர்த்து வெளிக் கக்கும் உஷ்ண அலையின் அமில வளர்ப்பில் அந்தந்த இடங்களில் வளரும்
4.கனி வளங்களுக்கும் கல் மண் இவற்றின் வளர்ப்பு நிலைகளுக்கும்
5.அதற்குக் கிடைக்கப் பெறும் ஊட்டச் சத்து மாறுபட்டவுடன்
6.பழக்கப்பட்டு எடுத்த வளர்ப்பு நிலை குன்றிய நிலையில் அக்கல்களில் சில வெடிப்பு நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே வளர்ந்த நிலையில் அதனுடைய சக்தி கிடைக்காமல் தடைப்பட்ட பின் அதன் தன்மை அதே நிலையிலேயே வெடிப்புப் பெற்று கீழிருந்து வளரும் பாறையின் மேல்… இப்பாறைகள் கரடு முரடாக… மலைகளில் ஒன்றுக்கு மேல் தனித் தனிப் பாறைகளாக உருண்டு நிற்கின்றன.

ஆனால் பூமியின் பிடிப்புடன் வளரும் பாறை மாறு கொண்ட வளர்ப்புடனே வளர்ந்து கொண்டுள்ளது.

நீரின் நிலை பாசி படர்ந்து வண்ணங்கள் மாறி தெரிந்ததன் நிலையும் இதைப் போன்றே ஒவ்வொரு நொடிக்கும் மாறும் உஷ்ண வெக்கையின் ஆவி நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகள் வருவதால் தான்.

இத்தகைய இயற்கையின் உண்மைகளை எல்லாம் எப்படி இதைப் போன்று அறிகின்றோமோ அதைப் போன்று தான் வளரும் மனித ஆத்ம வளர்ப்பிலும் மாற்றங்கள் உண்டு.

இப்பூமியின் பிடியுடன் வாழும் தன்மையில்… மாறி மாறி வளர்ந்து கொண்டுள்ள இயற்கையின் சுழற்சியில்… ஒன்றை ஒத்த தன்மையில் ஒன்றில்லாத உலகச் சுழற்சி நிலையில்
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனின் வளர்ப்பு ஞானமும்
2.பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்தர்கள் பெற்ற ஞான சக்திக்கும்
3.இன்றைய வளர்ந்த கலியின் ஆத்ம ஞான சக்திக்கும் மிக மிக மாறுபாடுகள் உண்டு.

இன்றைய விஞ்ஞான காலத்திலும்
1.நம் செயலும் இயற்கையுடன் ஒன்றிச் சென்றுதான் ஞான சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பைச் செலுத்தி
2.ஆசார அனுஷ்டானங்களை வலியுறுத்தி வகைப்படுத்தித்தான் எண்ணத்தைச் செலுத்தி வழி பெறவேண்டும் என்று உணராமல்
3.இக்கலியின் காலத்தில் மனித ஈர்ப்புத் துரித அறிவாற்றலின் சக்தியை
4.இக்கால நிலையின் சுழற்சியுடன் கலந்துள்ள தன்மையிலிருந்தே
5.அவரவர்களுக்கு அமைந்த வாழ்க்கையின் வளர்ப்பில் ஒவ்வொரு செயலிலுமே உயர்வின் ஞானத்தைச் செலுத்தி
6.ஆத்மாவின் வலுவுக்கு வலுக் கூட்டும் வழி முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.

நமக்கு நியாயம் வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

துன்பங்களைக் கேட்டு வேதனைப்பட்டாலும் சரி.. துன்பங்கள் செய்வோரை எண்ணி வெறுப்படைந்தாலும் சரி… அது நோயாகத்தான் மாறும்

என் மனதில் ஒரே போராட்டமாக இருக்கின்றது என்று சொல்லக் காரணம் என்ன…? 

Ramanathaswamy

ஆலயங்களில் இன்று நடக்கும் சில செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய பக்தி மார்க்கத்தில் மதில் சுவர் எழுப்பி… ஆலயக் கோபுரம் கட்டித் தெய்வத்தின் உருவச் சிலையைப் பஞ்சலோகங்களைக் கொண்டு பிரதிஷ்டை செய்து… அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவித்து… மேளங்கள் முழங்க வேதனகள் ஓதி… தீபாராதனை காட்டி… தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.

மேலும் அதற்கென்ற அறங்காவலர்களையும் பொறுப்பேர்க்கும் பொருட் காவலர்களையும் நியமித்துத் “தெய்வ சங்கல்பம் பெறும்” பக்தி மார்க்கத்தால் கிடைக்கப் பெறும்… நடைமுறைச் செயல் வழியை வழிப்படுத்துகின்றனர்.

ஆனாலும்…
1.தன் ஜீவாதாரத்திற்கே பொருளீட்ட முடியாத…
2.செயல் நிலை கொள்ளா மனிதக் கூட்டங்கள்… போற்றலில் புகழ் கொண்டு
3.பொருளைப் போட்டு தெய்வ பக்தியை வளர்க்கும்
4.தேவக் கூட்டங்களை எதிர்க்கும் எண்ணம் கொண்டு குரோத… பொறாமை… ஆவேச உணர்வுடன்
5.தான் வளர்க்க வேண்டிய உயர் குணத்தையே மறந்து
6.பொருள் கொண்ட பக்தி உணர்வின் கூட்டத்தைக் கூடச் செய்து
7.பொருளற்ற ஏக்க உணர்வு கொண்ட மனிதக் கூட்டங்களின் சலிப்பின் சோர்வினால் – பொறாமை உணர்வு ஏற்பட்டு
8.தான் அடைய முடியாத நிலையால் – ஏமாற்றும் குணங்களை வளர்த்து
9.ஆலயங்களில் நடைபெறும் பஜனைக் கூட்டத்தின் வலுவைக் காட்டிலும்
10.ஏமாற்றும் உணர்வு கொண்ட… “திருடும் நிலைக் கூட்டங்கள் தான்…” இன்று வளர்ந்துள்ளது

ஆலயத்திற்குச் செல்லும் அத்தகைய இரு சாராரும் பயந்த உணர்வு கொண்டே செல்கின்றனர்.

ஏன்…? எதற்காக…!

ஆலயத்திற்குச் செல்வோருக்கு… எங்கே தான் அணிந்து செல்லும் நகைகளோ பொருளோ “பறிபோய்விடுமோ…!” என்ற பய உணர்வின் அச்சம் ஒரு பக்கம்.

மறுபக்கம்… பக்தியுடன் வருபவர்களிடம் ஒன்றுக்கு இரண்டாக ஏமாற்றிப் பூஜை சாமான்களின் விலையை ஏற்றி விற்கின்றனர். அப்படி விற்பவரின் உணர்வோ… “தான் ஏமாற்றிப் பிழைக்கும் செயலுக்காக” இந்தத் தெய்வம் தண்டித்துவிடுமோ…? என்ற பய உணர்வு கொண்ட தன்மையும் உள்ளதப்பா.

அது எல்லாம் போக.. அந்தத் தெய்வச் சிலையை “களவாடும் உணர்விலும்” தான் இன்றைய ஆலய நிலைகள் யாவும் உள்ளதப்பா…!

இதிலிருந்து… உண்மை தெய்வ சக்தியின் அலையைப் பெறும் நிலை மனித உணர்வின் பால் செலுத்த முடியாத செயலாகத் தான் வளர்ந்து விட்டதப்பா…!

1.இன்றைய மனிதக் கூட்டங்களின் இத்தகைய செயலிலிருந்து
2.ஞான அலையை ஈர்க்கும் வழியற்ற ஈர்ப்புப் பிடியினால்
3.வலுக் கொண்ட மகரிஷிகளின் செயலையே இக்கலியில் கலக்க விடாதபடி
4.மனிதனின் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது.

பொறாமை உணர்வுகளும் பேராசை உணர்வும் தான் வலுவாகி உள்ளதே அன்றி முருகனின் குண நிலையை ஒத்த சாந்த சக்தி நிலை வளர முடியாத “கலியாக” இன்றைய நிலை உள்ளது.

எண்ணத்தின் வீரியத்தைப் பிறர் மேல் நாம் செலுத்தும் அலை தெய்வத் தொடர்பு கொண்டு
1.சாந்த வழித் தொடரின் ஞானத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்தாலும்
2.தெய்வத்தின் தெய்வமாகவே நம் ஞான சக்தி உயர்ந்து இருந்தாலும்
3.பிறர் மேல் நாம் செலுத்தும் அலைத் தொடர் குறை காணும் எண்ணத்தைச் செலுத்தாமல்
4.நிறைவு கொண்ட நல் அலைகளை நலம் பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டு செலுத்தி

5.கீழிருந்து மேலாகத்தான் – ஒவ்வொரு ஆத்மாவையும் தெய்வ உருவாக எண்ணி
6.நல் வழியில் சென்று அந்த அலையின் சக்தியை எடுத்து வளர வேண்டுமே அன்றி
7.வேறு ஓருவரின் குறையிலோ நிறைவிலோ ஆத்மாவிற்கு வலுப் பெறும் தன்மையோ வளரும் தன்மையோ யாரும் பெற முடியாது.

பிறர் பால் செலுத்தும் எண்ணத்தில் அவ்வீர்ப்புப் பிடியில் நம் உணர்வைச் செலுத்திவிட்டோமேயானால் “அவர்கள் பிடியில் சிக்குண்ட ஆத்மாவாகத்தான்” நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் ஆத்மாவும் வழி பெறும்.

ஞான வழியில் பயணிப்போர் இதை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது…!

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதே…! என்று ஈஸ்வரபட்டர் அடிக்கடி சொல்வார்

 

ஈஸ்வரபட்டர் எனக்கு (ஞானகுரு) மரத்தை வேருடன் சாய்க்கும் சக்தியும் பெரிய பெரிய கல்களையும் தூக்கி வீசும் சக்தியையும் கொடுத்தார். அதைக் கொடுத்த பின் எனக்கு ஒரே குஷியாக இருந்தது. யாராவது தீங்கு செய்தால் உடனே இதை வைத்து அடக்கிவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. குருநாதர் என்னை ஆனைமலைக் காட்டிற்குப் போகச் சொன்னார். அங்கே ஒரு இடத்தில் உள்ள அடையாளத்தை எடுத்து வரச் சொன்னார். அங்கே யானைகள் கூட்டம் கூட்டமாக இருந்தது. கொடுத்த சக்தியை வைத்து அவைகளிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்ற அனுபவமும் பின் திரும்பும் வழியில் புலியிடம் இருந்து தப்பிக்கும் ஞானமும் கொடுத்தார்.

Astathik paalaka

ஆறு அறிவு கொண்ட மனிதன் தன் வளர்ச்சியில் பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்…! என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறது

 

நம் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிய பின் அப்புறம் எட்டாவது நிலை… அதாவது நமக்குள் எடுத்துக் கொண்ட சக்தி “அஷ்டதிக்கு பாலகர்கள்..”

ஏழாவது அறிவைக் கொண்டு கெட்டதை நீக்கி மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது எட்டாவது நிலையை அடைகின்றது.

எந்தத் திசையிலிருந்தும் எத்தகைய நிலை இருந்தாலும் தன்னை அறியாதபடி வரும் தீமைகளை அகற்றும் தன்மை தான்..
1.அந்த அஷ்டதிக்கு பாலகர்கள் என்று சொல்லும் பொழுது
2.கோவிலிலே தெய்வத்தைக் காட்டும் பொழுது அந்தப் பாலகர்கள் தான்…
3.எட்டுத் திக்கிலிருந்தும் தெய்வத்தைக் காக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள்.

நமக்குள் இந்த எட்டாவது அறிவான நிலைகள் எட்டுத் திக்கிலிருந்து வரக்கூடிய கெட்டதுகளை நீக்கித் தன் உணர்வின் சத்தைக் காத்துக் கொள்கின்றது.

எப்படித் தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றிய பின் அதிலே கலந்துள்ள செம்பும் பித்தளையும் அது நீக்கி விடுகின்றதோ இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளிகளை எடுத்துச் சேர்க்கப்படும் பொழுது
1.நம் உணர்வின் மணம் தீயதை நாடாது
2.தனக்குள் அந்த ஒளியின் சரீரமாகக் காத்தருளும் சக்தி பெறுகின்றது.

அடுத்து ஒன்பதாவது நிலை உயிருடன் ஒன்றி “நவமி” நம் எண்ணத்தின் நிலைகள் இந்த உணர்வுகள் அனைத்தும் சொல்லின் தன்மையாக வரும் பொழுது ஒன்பதாவது நிலை அடைகின்றது.

இராமன் நவமியிலே பிறந்தான்… கண்ணன் அஷ்டமியிலே பிறந்தான்… என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அஷ்டமி என்பது கோள்கள் அது இருள் சூழ்ந்த நிலைகள்.

அதாவது இருளான இந்த உடல் கொண்டு
1.எண்ணத்தால் கண்களின் தன்மை வளர்ந்தது.
2.எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளும் நிலை.
3.பின் உயிரின் நிலைகள் கொண்டு இந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாக மாறுகின்றது.

உதாரணமாக விண்வெளியின் நிலைகள் மையமாக இருந்தாலும் அதிலிருந்து தோன்றிய நட்சத்திரங்கள் பேரண்டத்திலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை மாய்த்துவிட்டு தனக்குகந்த நிலைகளை உணவாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்திற்குள் ஈர்க்கப்பட்டு வருகின்றது.

அந்த உணர்வின் சக்தியைக் கோள்கள் நுகர்ந்து கொள்கிறது. கோள்கள் கவர்ந்ததைச் சூரியன் கவர்ந்து அந்த உணர்வின் சக்தியை இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

எட்டுக் கோளின் தன்மை கொண்டு தான் சூரியன் ஒளியாக மாறுகின்றது. அதைப் போல் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் நம் உடல் கோளாக மாறுகின்றது.

ஆக… ஒவ்வொரு உணர்வின் இயக்கமாகத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை நம் உடலாக வளர்த்துத் தன் நிலை அடைகின்றது என்பதைக் காட்டிய பின் எண்ணத்தின் நிலைகள் ஒன்பதாவது நிலை அடைய வேண்டும்.

உயிருடன் ஒன்றிய நிலைகள் ஒன்பதாவதாக ஆகப்படும் பொழுது உடலை விட்டுச் சென்ற பின் எந்த ஆன்மாவும் நம்மை இழுக்காது.

1.எட்டு… தீயதின் நிலைகளை நீக்கி
2.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய ஒன்பதாவது… நிலையை அடையப்படும் பொழுது
3.உடலை விட்டுச் சென்ற பின் பத்தாவது… கல்கி அவதாரம் என்பது.

இந்த உடலிலிருந்து எட்டுத் திக்கில் இருந்து வருவதையும் காத்தது போல் இந்த உயிராத்மா உடலை விட்டு வெளியே போன பின் “கல்கி…!” இன்னோரு உடல் நம்மை இழுத்திடாதவண்ணம் தடுக்கும் நிலை தான் பத்து – தசாவதாரம்.

 

பத்தாவது அவதாரமாக உயிர் ஒளியாகச் செல்வதை அவ்வாறு காட்டினார்கள். நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

சிறு வயதிலிருந்தே பின் தொடர்ந்து என்னைக் காத்துக் கொண்டே வந்தார்

நர மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் அகோரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

குருநாதரிடம் பெற்ற அனுபவங்கள் – நடந்த நிகழ்ச்சிகள் 

shiva-parvati

நாம் அடையப் போகும் “பேரானந்தப் பெரு நிலை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தால் அணுக் கதிர்களின் (கதிரியக்கம்) செயலைக் கொண்டு மிக மிக நுண்ணிய வைத்திய முறைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

மேலும் அதை வைத்துத் தொழில் நுட்ப முறைக்கும்… வானக் கோளங்களின் தொடர்பு நிலைகளை அறியவும் இந்தப் பூமியின் உள் நிலையை அறியவும் முற்படுகின்றார்கள்.

இருந்தாலும் ஒவ்வொரு நாடுமே…
1.ஒன்றுக்கொன்று தெரியாத நிலையில்
2.பூமத்திய ரேகையின் மையப் பகுதியில் அணுச் சேர்க்கையின் நுண் அணு வீச்சுக் கதிர்களைக் கொண்டு
3.பூமியின் உள் பாகத்தில் கிடைக்கப் பெறும்
4.சில ஆக்கச் சக்தியின் அலைத் தொடர்பு வளர்ப்புக்களைத் தன் பாகத்திற்குத் திருப்பி
5.தன் நாட்டை வளப்படுத்துவதற்காகவும்
6.அதே சமயத்தில் தனக்கு மேல் விஞ்ஞானத்தில் வளர்ந்த சில நாடுகளை வளரவிடாத தன்மைக்காகவும்
7.பூமியின் உள் பாகங்களிலேயே விஞ்ஞானத்தால் இவ்வொளிக் கதிர்வீச்சினைப் பாய்ச்சி
7.அதாவது நீர் வாயு லேசர் இயக்க அலைகளைப் பாய்ச்சிப் பல பாகங்களில் பூகம்ப நிலை ஏற்படும் வண்ணம்
8.பல வேலைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர்
9.(வளர்ச்சி அடைந்த நாடுகள் செய்கின்றன இன்று வரையிலும்)

விஞ்ஞானத்தின் செயலைக் கொண்டு… உயிர் காக்கும் நிலைக்காக மருத்துவ ஞானங்கள் பல செயல்படுத்தியிருந்தாலும்… செயலின் வேகத்தில்… உண்மை உயர்வு வாழ்க்கை எது..? என்று மனிதன் இன்று அறியவில்லை.

தன்னுடைய இனம் புரியாத இன்பத்திற்காக உயர் குண உயிரை உணரும் பக்குவ நிலை இன்றித்தான் இன்றைய மனித வாழ்வு உள்ளது.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்ம உணர்விற்கு இன்பம் உண்டா…?

1.ஜீவ சக்தியின் சரீர வாழ்க்கையில் பெறும் இன்பம் தான் இன்பம் என்ற எண்ணம் மனிதனுக்கு உண்டே தவிர
2.ஆத்ம ஞானத்தில் உணரும் உயர் இன்ப நிலையின் உண்மை நிலை புரியவில்லை…!

சரீர நிலையில் உணரும் இன்பத்தைக் காட்டிலும்… “பேரானந்த பெரு நிலை…” என்று நம் முன்னோர்கள் உணர்த்திய உயர் நிலையின் உண்மை நிலையை வளர்ந்த ஆத்ம ஞானத்தின் சித்து நிலையிலே உணரலாம்.

உணவின் சுவையும்… மணத்தின் மகிழ்வும்… இசையின் இனிமையும்… இயற்கையின் எழிலையும்… பிள்ளைக் கனியமுதின் சொல் அமுதையும்…
1.இந்த உடல் வாழ்க்கையில் உணரும் பக்குவத்தைக் காட்டிலும்
2.ஆத்ம சித்து சக்தியின் தொடர்பினால் ஆத்மா பெறும்
3.இன்பத்தின் பெரு நிலையை உணரும் சக்தி நிலை பெற்றால்
4..சரீர வாழ்க்கையில் பெற்ற இன்பத்தைக் காட்டிலும்
5.பல கோடி இன்ப நிலைகள் சித்து ஞானத்தில் பெற முடியும்.

வாழ்க்கை நிலையில் கலந்து உறவாடும் எண்ணப் பரிமாற்ற நிலை எபப்டி உள்ளதோ… அதைப் போன்றே.. ஆத்ம தொடர் ஞான சித்துவின் வலுக் கொண்ட வளர்ச்சி பெற்ற தொடர்பு நிலையும் பலவாக உண்டு.

கூடிய வாழ்க்கையும்… கலந்துறவாடும் எண்ண நிலையும்… வாழ்க்கைத் தொடர்பில் எப்படி உண்டோ அதைப் போன்றே
1.ஞானச் சித்தின் ஞானிகளும் ஆத்ம சொந்தம் கொண்டு
2.இன்பம் கொண்ட இரு நிலை இன்பத்தையும் பெறுகின்றனர்.

 

ஜாதி… மதம்… உற்றார்… உறவினர்… என்ற பிடிப்பு வேலியற்ற “உயர் ஞான சொந்த பந்தங்கள்” ஆத்ம தொடர் கொண்டு அடையும் நிலையில்…
1.இரு நிலை இன்பத்தின் பெரு நிலை பெறும்
2.வளர்ப்பு நிலை இப்படி உண்டு.

ஆத்ம சுத்தி செய்யும் முறை – ஞானகுருவின் செயல் முறை பயிற்சி

ஈஸ்வரா…! என்று உயிரின் இயக்க ஓட்டத்தைக் கூட்டி மகரிஷிகளின் அருள் சக்தியை வானிலிருந்து கவர்ந்து உடலுக்குள் பரவச் செய்ய வேண்டும்.  (ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்பவர்கள் இதை அவசியம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்)

Remote spiritual power

என் குடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் உன்னை எப்படி இயக்குகிறது..! என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குருநாதர்

குருநாதர் காட்டிய வழியில் ஒவ்வொரு நாளும் நான் கால் நடையாகச் செல்லும் பொழுது மக்கள் கஷ்டப்படுவதையும் குடும்பத்தில் கஷ்டப்படுவதையும் பார்க்கின்றேன்.

ஒரு சமயம் இமயமலைக்குப் போகும்படி சொன்னார் குருநாதர். வெறும் கோவணத் துணியுடன் தான் அங்கே போகச் சொன்னார்.

அங்கே குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக குருநாதர் சொன்ன உணர்வுகளை மட்டும் நான் எடுக்க வேண்டும். அப்பொழுது உடல் உஷ்ணமாகும். எனக்கு அந்தக் குளிர் தெரியாது.

இப்படி இருக்கும் பொழுது என்னுடைய கடைசிப் பையன் சிறியவன் மீது பாசமாக இருந்ததால்… அவன் நினைவு எனக்கு அங்கே வருகின்றது.

அவனைப் பற்றிய நினைவு சென்றவுடனே இங்கே குளிர் தாக்கி உடல் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்க ஆரம்பித்துவிட்டது.

1.பையன் மேல் ஆசை வைத்துப் பார்த்தேன்.
2.அவனைக் காக்க வேண்டும் என்று ஏதாவது உபாயம் செய்ய வேண்டும் என்பதற்காக எண்ணிப் பார்த்தேன்.

ஏனென்றால் என் பையன் வீட்டிற்கு வெளியே தெருவில் ஒரு ஓரமாக இரத்த இரத்தமாக வெளியே போய்க் கொண்டிருக்கின்றான். நானா..நானா.. (நைனா) என்று என்னை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றான்.

“அந்தக் குரல்” எனக்கு இங்கே இமயமலையில் கேட்கின்றது. அப்பொழுது குருநாதர் சொன்னதை என்னால் எடுக்க முடியவில்லை.

உடல் கிர்…! என்று இதயம் இரைய ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது தான் குருநாதர் உணர்த்துகின்றார்.

1.நீ உன் பாசத்தை அங்கே செலுத்துகின்றாய்
2.நீ இங்கே இப்பொழுது மடிந்து விட்டால் உன்னை யார் காப்பாற்றுவது..?
3.காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீ செல்லப்படும் பொழுது
4.உன் ஆன்மா பையன் உடலுக்குள் தான் புகும்.
5.அவனுக்குள் போய் நீ வேதனையைத்தான் உருவாக்க முடியுமே தவிர நல்லதைச் செய்ய முடியாது.

இப்பொழுது நீ எப்படிச் சிரமப்படுகின்றாயோ… இதே உணர்வின் தன்மை அவனுக்குள் இயக்கப்பட்டு… அவனும் சாமியாராக ரோடு ரோடாகச் சுற்ற வேண்டும் என்கிறார் குருநாதர்.

ஆகவே நீ என்ன செய்ய வேண்டும் என்பதை அங்கே தெளிவாக்குகின்றார். பின் குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்ட பின் என் குழந்தையின் உடல் நலமாக ஆனது.

அங்கே என்னுடைய வீட்டில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விறகுக் கடையில் வியாபாரம் சரியாக இல்லை. சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மோசமான சூழ்நிலையாக இருக்கின்றது.

இதை எல்லாம் பார்த்துப் பதட்டம் அடையப் போகும் பொழுது தான் எனக்கு மேலே சொன்ன அந்த நிலை எல்லாமே வந்தது.

பிறகு குருநாதர் சொன்ன காலக்கெடு முடிந்ததும் இமயமலையிலிருந்து இருந்து ஜோஸ்மெட் என்ற் இடத்திற்கு வந்தேன். போஸ்ட் ஆபீஸ் மூலமாக என்னுடைய புகைப்படத்தையும் ஒரு பத்து ரூபாயும் கவருக்குள் போட்டு அனுப்பினேன். எனக்கு மணியார்டர் செய்யத் தெரியவில்லை.

ரூபாய் வெளியே தெரியாமல்தான் காகிதத்திற்குள் வைத்து அனுப்பினேன். பணம் அனுப்பியிருக்கின்றேன் என்று கடிதமும் எழுதி இருந்தேன்.

இது அங்கே பதினைந்து நாள் கழித்து இவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்தப் பதினைந்து நாளுக்குள் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல…!

என் மனைவி தன் தாலியையும் அடமானம் வைத்துப் பிள்ளைகளைக்குச் சாப்பாடு போட்டிருக்கின்றது. ஒரு பத்து ரூபாய் வந்ததும் கடவுளைப் பார்த்த மாதிரி ஆர்வம் வருகின்றது.

ஆனால் கவரில் போட்ட அந்தப் பத்து ரூபாயை இடைவேளியிலே யாரோ எடுத்து விட்டார்கள்.

கடிதம் இருக்கிறது… என் படம் இருக்கிறது.. ஆனால் ரூபாயைக் காணோம்…! பிரிக்கும் பொழுது “கீழே விழுந்து விட்டதோ…!” என்று அங்கே தேடு…தேடு… என்று தேடுகின்றார்கள். இதையும் நான் அங்கிருந்து பார்க்கின்றேன்.

இது எல்லாம் அனுபவரீதியில் குருநாதர் எனக்குக் காட்டியது. ஒவ்வொரு குடும்பத்திலும் எதன் எதன் நிலைகள் எப்படி எல்லாம் சிரமப்படுகின்றார்கள் என்பதை அப்படியே படம் பிடித்தது போல் காட்டுகின்றார்.

ஆக…
1.பிறருக்கும் எமக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு தெளிவாக்குகின்றார்
2.இப்படித்தான் நான் உண்மைகளைத் தெரிந்து கொண்டேன்
3.வரும் இன்னல்களிலிருந்து தப்பும் உபாயங்களையும் சக்திகளையும் அனுபவபூர்வமாக அறிந்தேன்.

உங்களுக்கும் அந்த அரும் பெரும் சக்திகளைக் கிடைக்கச் செய்வதற்காகத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

நீங்களும் இதைப் போல் அந்த அருள் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அவர் செய்வாரா…? இவர் செய்வாரா..? என்று யாரையோ எண்ணுவதற்கு மாறாக
2.உங்களுக்குள் வரும் இன்னல்களை உங்கள் எண்ணத்தாலேயே நீக்கிக் கொள்வதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

ஆகவே யாம் அனுபவத்தால் பெற்ற இந்த உண்மையின் உணர்வுகளையும் அந்த அருள் மகரிஷிகளின் அருளையும் நீங்கள் பெற்று இந்த உபதேசத்தின் வாயிலாக கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அணுக் கருவாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.உங்கள் பார்வையால் பிறருடைய துன்பங்கள் மாய வேண்டும்
2.உங்களுக்குள் துன்பங்கள் சேராவண்ணம் தடைப்படுத்தும் அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான்
3.குருநாதர் மூலம் பெற்ற அனுபவங்களை எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

நோய் வரக்கூடிய காரணங்கள் என்ன…?

கேன்சர் நோயை ஏன் நீக்க முடியவில்லை…?

மருந்து சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் பழுதடைவது ஏன்…?

happy and pleasure

இன்பம் எது…? துன்பம் எது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இச்சரீர பிம்ப உடலில் உணர்வின் எண்ணத்தில் காணும் இன்ப நிலை ஒன்றைத்தான் மனிதன் பெரு நிலையாக எண்ணத்தின் ஏக்கத்துடன் வாழ்கின்றான்.

1.உணவின் சுவை…
2.நுகரும் மணத்தின் நிலை…
3.உறக்கத்தின் இன்ப நிலை…
4.உடல் இச்சையின் காதல் களிப்பு நிலை.. இவற்றின் இன்பத்தையும்
5.ஒளி கொண்டு காணும் இயற்கை அழகு… கலை இன்ப நிலை…
6.நகைச்சுவை நிலை… பிள்ளைக் கனியமுதின் வளர்ப்பு நிலை…
7.அன்பு பாசம் பரிவு பரவசச் செயல் நிலை…
8.இவற்றின் தொடரில் எல்லாம் மனித உணர்வின் எண்ணம் இன்பம் கண்டு
9.இவற்றின் தொடரில் கிடைக்கப் பெறும் அமைதிக்காக
10.பொருள் சேர்க்கையின் வரவு நிலையிலும் இன்பம் உள்ளது என்ற தொடர் வாழ்க்கையில் “இன்பம்” அடைகிறான் மனிதன்

ஆனால் அதே சமயத்தில்…
1.உடல் உபாதையில் ஏற்படும் எதிர்ப்பு நிலையில் அவதிக்கும்
2.குடும்ப வாழ்க்கையில் உண்டாகும் மற்றவரின் எதிர்நிலையின் சோர்வுக்கும்
3.இன்ப நிலை என்று உணரும் தன்மையில் எதிர்ப்படும் மோதல் நிலை எதுவாகிலும்
4.”துன்ப வாழ்க்கை” என்ற சோர்வில் எண்ணத்தைச் சோர்வுப்பட்டு
5.முந்தைய நிலையைச் சுட்டிக் காட்டி இன்ப நிலைக்காக எதிர்படும் எவையுமே துன்பம் என்ற அச்ச உணர்வினால்
6.வாழ்க்கையில் ஏற்படும் எதிர்நிலை சோர்வைக் கொண்டு
7.எண்ணத்தின் உணர்வில் (முதலில்) ஏற்றிக் கொண்ட இன்பத்தைத்தான்
8.“மனித வாழ்க்கையின் இன்பமே அடங்கி உள்ளது…!” என்று மனித ஓட்டக் காலங்கள் ஓடுகின்றன இன்று.

ஆத்ம நிலையின் தொடர்பையும் அதில் உள்ள உன்னத நிலையையும் ஞானிகள் உணர்த்தினால்
1.வாழ்ந்த வாழ்க்கையில் சலிப்புற்ற நிலையில்… கடைசியாகத்தான்…
2.வாழ்க்கையிலிருந்து அடையக் கூடிய தெய்வீக பக்தி மார்க்கத்திற்காக
3.ஆத்ம ஞான போதனையைச் செலுத்த வேண்டும் என்ற உணர்வுடன் உள்ளார்கள் இன்றைய மனிதர்கள்.

ஏனென்றால் மனித சக்தியினால் இன்று முன்னேறிய தொழில்நுட்ப வைத்திய முன்னேற்ற செயலின் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டிலும் வளரும்
1.இவ்வாத்ம ஞானத்தைக் கொண்டு
2.ஆத்ம ஞானத்தின் ஆற்றலைக் கொண்டு
4.பல உன்னத உணர்வு ஞானத்தையே உருவாக்கலாம்.

மந்திரங்கள் சொல்வதைப் பற்றி ஈஸ்வரபட்டர் தெளிவாகச் சொன்னது

 

மந்திரத்தைச் சொல்லிச் சொல்லி நம்மைக் காக்கலாம் என்று செய்து வந்தாலும் இறந்த பின் எங்கே செல்கிறோம்…? என்பதை ஈஸ்வரபட்டர் எனக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார். மந்திரம் சொல்லிப் பிழைப்பு நடத்தும் ஏவல் செய்பவர்களிடம்  சென்று சிக்குவதையும் காட்டினார். கோவில்களில் நாமாவளி 108, 1008 என்று சொல்வதன் உண்மைகளையும் குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

gnanaguru-venu gopal saamigal

அகோரியின் சாபத்திலிருந்து ஒரு குடும்பத்தை மீட்ட நிகழ்ச்சி

 

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் எத்தனை எத்தனை சிரமப்படுகின்றான் என்பதை அனுபவபூர்வமாக அறியச் செய்வதற்காக என்னை (ஞானகுரு) ஊர் ஊராகச் சுற்றச் சொல்லியிருந்தார் ஈஸ்வரபட்டர்.

ரோட்டில் நடந்து செல்லப்படும் பொழுது வீட்டில் சில பேர் மிகவும் அவஸ்தைப்பட்டுச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தந்த வீட்டில் நடப்பதைப் பற்றித் தெரிந்து கொள்வேன். அங்கே அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருப்பேன்.

ஒரு குடும்பத்தில் பார்த்தால்… ஒருவருக்கொருவர் நல்லவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஒருவர் வந்து பல தீமைகளைச் செய்து அவர்களுக்கு எத்தனையோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இருந்தாலும் ஒவ்வொரு நேரத்திலேயும் ஆண்டவனை வணங்கி… கடவுளை வணங்கி… ஆண்டவனுக்கு அபிஷேகங்கள் செய்து வந்தாலும் அவர்களுக்கு நன்மை பயக்கவில்லை…! ஆகவே அந்தத் தெய்வத்தையே நொந்து எத்தனையோ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தக் குடும்பமே சிறுகச் சிறுக நசிந்து கொண்டிருக்கின்றது. பம்பாயில் பார்த்த நிகழ்ச்சிகள் இது.

ரோட்டிலே செல்லப்படும் பொழுது இத்தகைய நிலைகளை உற்றுப் பார்த்து… அங்கே நடக்கும் செயல்களைப் பின் தொடர்ந்தே… அவர்களுடைய நிலைகளை வட்டமிட்டேன்.

அவர்கள் குடும்பத்தில் என்ன நடக்கின்றது…? எப்படிச் செயல்படுகின்றது..? என்ற நிலையை இரவிலே அவர்கள் குடும்ப வாழ்க்கையைத் தெரிந்து கொள்வேன்.

அதாவது ஒரு “சாமியாராக” இருந்தவன் பல நிலைகள் கொண்டு இவர்கள் வீட்டுக்கு யாசகம் கேட்டுக் கொண்டு வருகின்றான். ஆனால் இந்தக் குடும்பமோ “உண்மையில் கஷ்டப்படுகின்றார்கள்…” என்றால் அவர்களுக்குத் தர்மம் செய்யக் கூடியவர்கள்.

ஆனால் இந்தச் சாமியாரோ… பல பில்லி சூனியங்களைக் கற்றுக் கொண்டவன்.
இந்தக் குடும்பத்தார் பலருக்கு ஈகையுடன் தர்மம் செய்து உதவி செய்தாலும்
1.இந்தச் சாமியார் தவறு செய்கிறான்…! என்ற நிலையில்
2.அவனை அப்புறப்படுத்த… ஒரு கடும் சொல்லைச் சொல்கிறார்கள்.

அப்படி ஆன பின் அவன் என்ன செய்கின்றான்…? அவர்களுக்கு என்னென்ன தடைகள் ஏற்படுத்த வேண்டுமோ அதை எல்லாம் ஏற்படுத்தினான்.
1.பார்… உன்னை நடுத் தெருவில் நிறுத்துகின்றேன்…! என்ற
2.இந்த வாக்கினை (சாபம்) அங்கே பதிவாக்குகின்றான்.

அதனால் நன்றாக இருந்த குடும்பத்தின் தொழில்கள் சிதையத் தொடங்கியது… குழந்தைகள் உடல் நலிந்தது… அவர்கள் பல அவஸ்தைகள் பட ஆரம்பித்தனர்.

குருநாதர் இதைக் காட்டுகின்றார்.

அந்தக் குடும்பத்தார் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் அகந்தை கொண்ட அந்தச் சாமியார்.. பிறரிடத்திலிருந்து பணம் பறிக்கும் எண்ணம் கொண்டவன்… “சாது” என்ற நிலைகள் கொண்டு இத்தகைய நிலைகளைச் செய்கின்றான்.

காரணம் அவன் ஒரு “அகோரி…!” அமாவாசை அன்று பல பிணங்களைத் தின்று அதன் வழி கொண்டு வாக்குகளை இடும் பொழுது இந்த மாதிரி ஆகின்றது.

தான் பணம் கேட்டதைக் கொடுக்கவில்லையே… தன்னை மதிக்கவில்லையே என்று… இவன் எண்ணுகின்றான்.

அவர்களோ “இவனுக்கே ஏன் காசு கொடுக்க வேண்டும்…! ஏழைகளுக்குத் தானே காசு கொடுத்து உதவ வேண்டும்…” என்ற அந்த நிலையில் இருந்தார்கள்,

அதனால் அந்த அகோரி கொடூர நிலைகள் கொண்டு அப்படிச் சாபமிட்டான். நோய் நொடி என்று ஆகி தொழில்கள் எல்லாமே சிதைந்து விட்டது.

அவர்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதை நான் பார்க்கின்றேன். அனால் அவர்கள் தவறு செய்யவில்லை.
1.தெய்வத்தை வணங்கி வந்தவர்கள் தான்
2.ஆராதனைகளையும் அபிஷேகங்களையும் செய்பவர்கள் தான்.
3.பண்பு கொண்டு மற்றவர்களுக்குத் தர்மத்தைச் செய்தவர்கள் தான்.
4.அந்தத் தர்மங்கள் செய்திருந்தாலும் இவர்கள் வணங்கிய தெய்வம் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.

அந்த அகோரியினுடைய வாக்கின் வன்மை தீமைகளைச் செய்விக்கும் நிலை. பாலில் பாதாமைப் போட்டிருந்தாலும் அதிலே விஷம் பட்டால் எப்படியோ இதைப் போன்ற் அந்த விஷத் தன்மையான வாக்கின் உணர்வுகள் அந்தக் குடும்பத்தை இயக்கியது.

தொழில்கள் அனைத்தும் செயலற்ற நிலையாகி குடும்பத்தில் உள்ளோர் நோயாகப்படும் பொழுது அந்தக் குடும்பமே நசிந்து… தெருவில் அலைந்து…
1.“மாளிகையில் இருந்தவர்கள் குடிசையில் போய் வாழுகின்றார்கள்…”
2.அந்தக் குடிசையிலும் அவர்களுக்கு எதிர்ப்புகள் வருகின்றது.

பின் அவர்களைச் சந்தித்து குருநாதர் காட்டிய அருள் வழியைக் காட்டிக் கடைப்பிடிக்கச் செய்து அந்தத் தீமையின் செயலிலிருந்து அவர்களை விடுவித்தேன்.

 

அந்த அகோரி விட்ட சாப நிலைகளிலிருந்து விடுபட
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் எண்ணுங்கள்
2.அந்த உணர்வை குடும்பத்திலுள்ளோர் எல்லோரும் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.மீண்டும் நல் வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்னேன்.

அதன்படி செய்தார்கள் நன்றாக ஆனது… இது நடந்த நிகழ்ச்சி…!

அகஸ்தியன் அன்று நுகர்ந்த மகா பச்சிலைகளின் மணங்களைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

அகஸ்தியன் தன் இளம் வயதில் பெற்ற விண்ணின் ஆற்றல்கள் – வெள்ளிக் கோள் – வியாழன் கோள் – ஒளியான உணர்வு 

அகஸ்தியன், துருவ நட்கத்திரம், சப்தரிஷி மண்டலம்

Mystic meditation experiences

ஞானிகளைப் புகழ்வதனாலேயோ பணிந்து வணங்குவதனாலேயோ பலன் இல்லை…!

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அனுபவரீதியிலே தான் எல்லாவற்றையும் அறியும்படி செய்தார்.
1.என் (ஞானகுரு) குடும்பத்தையே இன்னலுக்கும் ஆளாக்கினார்.
2.இந்த உணர்வு – தன்னை ஒட்டி வரப்படும் பொழுது தான் அனுபவ ரீதியில் யாம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு நொடியிலேயும் இந்த உணர்வுகள் உலகில் எப்படி இயங்குகின்றது…? உலக மக்கள் தன்னை அறியாது எப்படி இன்னல்கள் படுகின்றனர்..? எப்படி அவதிப்படுகின்றனர்…? என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான்
1.இருபது வருடம் என்னைக் கால் நடையாகவே இந்தியா முழுவதும் நடக்கச் சொன்னார்…
2.மூன்று இலட்சம் பேரைச் சந்த்திக்கச் செய்து அந்தக் குடும்பங்களில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டி
3.பல அனுபவங்களைப் பெறச் செய்தார் குருநாதர்.

அறிந்த உண்மையின் தன்மையில் பார்க்கும் போது சந்தர்ப்ப பேதத்தால் எத்தனையோ பேர் அவதிப்படுகின்றனர். அதிலிருந்து மீண்டிடும் நிலையாக மெய் ஞானிகள் காட்டும் அருள் வழியில் நீங்கள் நடந்தால்
1.உங்கள் எண்ணமே உங்கள் துன்பத்தைப் போக்கும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் காட்டிய மெய் வழியைக் கடைப்பிடித்து… அதை நீங்கள் அனுபவித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்… அதைப் பற்றுடன் பற்றி உங்களை அறியாது வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்…! என்று தான் சொல்கின்றேன்.

இதை ஏற்றுக் கொள்வார் இல்லை…!

சாமியைப் (ஞானகுரு) புகழ் பாட முடிகின்றது பாத நமஸ்காரம் செய்யத்தான் விரும்புகின்றார்கள். இது வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.

1.அருள் ஒளியைப் பெறுங்கள்…
2.உங்களுக்குள் தீமைகள் வருவதை அடக்கிப் பழகுங்கள்…
3.உங்களால் முடியும்…! என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.

அஷ்டதிக்கிலிருந்து வரும் தீமைகளை நீக்கும் சக்தி பெற்றால் “தசாவதாரம்”

 

கோவிலில் வைத்திருக்கும் “பாலகர்கள்…” தெய்வத்தைக் காக்கின்றது என்று காட்டப்பட்டது போல் மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொண்டால் எந்தத் திக்கிலிருந்து தீமைகள் வந்தாலும் அது நமக்குள் இயங்காது தடைப்படுத்தி விடும். மேலும் நம் ஆன்மா உடலை விட்டுச் சென்றால் யாருடைய ஈர்ப்பிற்குள்ளும் செல்லாது விண் செல்லும் தகுதியும் பெறும்…. அது தான் கல்கி…! 

self trust and confidance

மனிதனால் மட்டும் தான் “தெய்வ சக்தியை உருவாக்க முடியும்” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இச்சரீர உடலில் உணரும் எண்ண வேட்கைகள் யாவையும்… சாதாரண வாழ்க்கை நிலையில் உள்ள மனிதனுக்குப் பூமியின் ஈர்ப்புப் பிடியுடனே சிக்கி உள்ளது.

பூமியின் அலைத் தொடர்பை இவன் எடுத்து…
1.உணர்வின் பிடியை எண்ணத்தின் வேட்கைக்கொப்ப சம நிலை கொள்ளாத் தன்மையாலும்
2.சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வின் வேக உந்தலினாலும்
3.ஒவ்வொரு மனித உடலிலும் ஜீவனற்ற ஆத்மா உயிர்கள் குடியேறி உள்ளது.

அவ்வாறு “குடியேறிய ஆத்மாக்கள்” மனிதனின் எண்ண உணர்வையே தன் இச்சையில் செயல்படும் “ஞான அணு” வளர்ப்பை வளர்க்க விடாமல்… “அந்த ஆத்மாக்கள் வளர்க்கும்” உணர்வின் எண்ண நிலைக்கொப்ப வளரும் தன்மையே உருவாகின்றது.

அந்த மாறு கொண்ட தன்மையால் குடியேறிய ஆத்மாவின் அணு வளர்ப்பினால் சரீர பிம்பத்தில் ஏற்படும் தொல்லைகளில் ஆங்காங்கு ஏற்படும் உடலின் கட்டிகளினாலும் சில புண்களினாலும் கரப்பான் சொறி போன்ற சரும வியாதியினாலும் உதிரமே சீழாகி அச்சீழ் வளர்க்கும் அணுவை மேன் மேலும் வளர்க்கும் நிலையினால் கடுமையான நோய்களும் உருவாகின்றது.

ஆக மொத்தம்… உணர்வின் எண்ணத்தின் செயலுக்கொப்ப…
1.உட்கொள்ளும் உணவிலும் போதைவஸ்தின் ஈர்ப்பிலும் காம இச்சை வெறியிலும் இச்சரீர பிம்பத்தையே “அழுகும் மூட்டையாக்கி”
2.ஆத்மாவின் செயலையே இவ்வீர்ப்பின் ஆத்மாவாக்கி
3.பல காலமாக பல கோடி உயிர் தொடர் பிம்பத் தொடர்பில் எல்லாம் முலாம் பெற்ற ஆத்மாவை
4.உயர்த்த தெய்வ சக்தியாக செயல் கொள்ளும் எண்ணத்தால் எதனையும் செயல் புரியும் மனித சக்தி பெற்ற பிறகு
5.உடல் உணர்வின் உந்தலின் வேட்கைக்காக மனித ஆத்மாக்களின் இன்றைய செயல்
6.தன்னைத் தானே இழக்கும் நிலையாகச் (மனித வித்துக்கள்) சென்று கொண்டிருக்கின்றது.

அதை மாற்றிட தெய்வ சக்தி பெற்ற தேவர்களின் (மகரிஷிகளின்) தொடர்பைக் கொண்டு மேல் நோக்கிய வளர்ச்சியினால் நம் வளர்ப்பலையின் தொடர்பை எவ்வீர்ப்பு அலையிலும் சிக்காமல் சகல சக்திகளையும் உணர்ந்திடலாம்.

இயற்கைச் சக்தியின் செயலாகச் செயலாற்றும் சப்தரிஷிகளின் ஞானத் தொடர்பலையுடன் உணர்வின் எண்ணமுடன் அந்த ஞான ஈர்ப்புத் தொடர்பலையை பெற்றோமானால்
1.இஜ்ஜட சரீர அணு மூட்டையின் பிடிப்பிலிருந்து
2.உயர் கொண்ட ஞான ஈர்ப்பிற்குச் செல்லலாம்.

மனிதனைக் காட்டிலும் உருவத்திலும்.. பலத்திலும்… அறிவிலும்… சுவாச ஈர்ப்பு நிலையிலும்… சக்தி கொண்ட “யானைக்கே…” மனிதனை ஒத்த செயல் அங்கங்களோ சொல்லாற்றும் திறமையோ அற்றதினால் எல்லா நிலைகளும் உணர்வும் தன்மை இருந்தும் ஞானத்தை வளர்க்கும் வளர் நிலைக்குச் செல்ல முடியவில்லை. இதைப் போன்ற நிலை மிருகங்களில் பலவற்றுக்கும் உண்டு.

எறும்போ கொசுவோ மூட்டைப் பூச்சியோ உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் அவை மனிதனைத் தாக்கும் பொழுது அதன் கடி நிலைக்குப் பயந்து பல முன் ஏற்பாடுகளைச் செய்து பல நிலைகளைச் செய்கின்றான் மனிதன்.
1.ஒவ்வொரு நொடிக்குமே இச்சரீர ஜட பிம்பத்தின் ஈர்ப்பு எண்ண வேட்கைக்குத் தான் மனிதன் வாழுகின்றான்.
2.அதிலிருந்து மீண்டு ஆத்ம ஞானத்தின் உணர்வை மனித ஞானம் பெற முடியும்.
3.மனிதன் மட்டும் தான் அந்தத் “தெய்வ சக்தியை” உருவாக்க முடியும்.

அன்று போகன் தன் உடலால் பெற்ற சக்தியை இந்த உலகம் முழுமைக்கும் பரப்பும் நிலை கொண்டு தன் ஆத்மாவில் பெற்ற உயர் அலையின் தொடரை இந்த உலகம் முழுமைக்கும் அந்தந்த இடங்களில் ஜீவன் கொண்ட சக்தி அலைத் தொடர்புகளை பூமியில் பதிய வைத்துள்ளான்.

அவ்வலையின் ஞானத்தால் பல கோவில்களை அமைத்து மனிதனின் எண்ணத்தில் தெய்வ ஞான சக்தியை வளரச் செய்தான்.

போகரும் கோலமாமகரிஷியும் கொங்கணவரும் அகஸ்தியரும் ஐயப்பனும் ஆதிசங்கரர் போன்று பல எண்ணற்ற ரிஷிகளும் இன்றளவும் சரீரத்தின் தொடர்பு கொண்டு அன்று பதிய வைத்த அலைத் தொடர்பின் வழித் தொடர்பினால் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள்.

இக்கலியின் கடைசியில் எண்ணத்தின் உணர்வைக் கொண்டு நாம் எடுக்கும் தியானத்தால் அந்த உயர்ந்தோரின் உயர்வுடன் அவர்களின் செயல் நிலைக்கொத்த தன்மைக்கு நாமும் வளரலாம்.

மேல் நோக்கிய சுவாச அலையினால் எண்ணத்தின் உணர்வை ஞானத்தின் பால் செலுத்தி இச்சரீர ஜடப் பொருளை கொண்டு ஆத்மாவின் வலுவைக் கூட்டிக் கொண்டோமானால்
1.இப்பூமியிலே மனிதனாக பிறந்து சகல சித்தியும் அடைந்து
2.சப்தரிஷியாக வாழும் பலரின் நிலை போன்று நாமும் வாழ்வாங்கு வாழ முடியும்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் முக்கியத்துவம்

தீமைகள் வராது தடுக்கும் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தான் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்… தீமை செய்பவர்களைத் தாக்குவதற்கு அல்ல…!

தீமையான உணர்வுகளை வேக வைக்க வேண்டும்

சரவணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா… ஆறிலிருந்து ஏழாவது அறிவு

ஆறாவது அறிவின் பெயர்தான் சரவணபவா… குகா, அதாவது எதையுமே சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக உடலான இந்தக் குகைக்குள் நின்று இயங்குகின்றது.

 

கந்தா…! சிறுகச் சிறுக வருவதை அறிந்து தனக்குள் அணைத்து நம்மிடம் எத்தனையோ குணங்கள் கொண்டு. எத்தனையோ வகையான உணர்வுகளை நமக்குள் எடுத்தாலும் கடம்பா…! இதையெல்லாம் உருவாக்கத் தெரிந்து கொண்டவன் உருவாக்கி கார்த்திகேயா…! எனக்குள் அறியும் அறிவாக ஒளியாகத் தெரிந்து செயல்படும் தன்மை.

 

அதாவது…

சரவணபவா – சரணமடையச் செய்யும் சக்தி

குகா – இந்த உடலான குகைக்குள் நின்று

கந்தா – வருவதை அறிந்து

கடம்பா – உருவாக்கத் தெரிந்தவன்

கார்த்திகேயா – அறியும் அறிவு ஒளியான வெளிச்சம்

 

எத்தகைய தீய நிலைகள் வந்தாலும் இந்த உடலில் விஷத்தை மலமாக மாற்றி உடலை நல்லதாக மாற்றி அறிந்து செயல்படும் ஆற்றல்மிக்க சக்தியான இந்த ஆறாவது அறிவின் தன்மை நமக்குள் உண்டு.

இந்த ஆறாவது அறிவைத் தான் சரவணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா… முருகு… முருகா…! – மாற்றி அமைக்கும் சக்தி என்கிறோம். சூரியனைப் போன்று பிரகாசிக்கும் பொழுது ஒளியின் சரீரமாக ஏழாவது நிலையை அடைகின்றோம்.

sages-siddhas

ரிஷித் தன்மை கொண்டவர்களின் செயல்கள் எப்படிப்பட்டது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தன் பெருமைக்காகவோ… புகழுக்காகவோ… சித்து நிலை வளர்ப்புப் பெற்ற ரிஷித் தன்மையின் ஆக்கத் தன்மை செயல்படவில்லை.

மனித இனத்தின்… வளர்ப்பின் ஞான வித்தின் வழித் தொடரை அந்த வித்து அழியாமல் செயல்படும் செயலுக்காகத் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

1.மனிதக் கரு உயர் ஞானம் பெற வல்லமை பெற்ற
2.அத்தகைய செயல் கொள்ளும் கோளங்களில் எல்லாம்
3.அவ்வித்தின் நிலை வளர்ந்திட சப்தரிஷிகளின் செயல் முறை செயல்படும் தன்மை தான்
4.ரிஷித் தன்மை பெற்ற வளர் குணத்தின் வளர்ப்பு நிலை.

நம் பூமியைக் காட்டிலும் ஞானத்தில் உயர்ந்து மனித குண வீரிய உயர் சக்தி கொண்ட ஞான வளர்ச்சி பெற்ற மக்கள் நம் சூரியக் குடும்பமல்லாதபடி பேரண்டத்தில் மற்ற இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் உண்டு.

ஆனால் விஞ்ஞானத்தைக் கொண்டு செயற்கையின் ஞானம் பெற்ற இனத் தன்மை நம் பூமியில் உள்ள மனிதனுக்குத்தான் உண்டு.

மற்ற கோளங்களில் உள்ள மனித இனங்கள் எல்லாம் ஞானத்தால் உயர்ந்து… “பறக்கும் தன்மை கொண்ட” சரீர உடல் வளர்ந்த பக்குவ வளர்ப்பாகச் செயல் கொள்கின்றனர்.

நம் பூமியில் தன் ஞானத்தை இயந்திரங்களில் செலுத்திப் பழக்கும் நிலையை இன்று கொண்டுள்ளான் மனிதன்.

இந்தப் பூமியில் ஆதியிலே உயிரணுத் தோன்றி வளர்ச்சி கொள்ளும் வளர்ப்புத் தன்மையில் மோதுண்டு… மோதுண்டு வளர்ச்சி பெறும் வளர்ச்சி நிலையில் கனி வளங்களும் தாவர இனங்களும் வளர்ச்சி கொண்டு… வளர்ச்சி கொண்டு வளர்ச்சியின் முற்றிய தன்மை கொண்ட பிறகு தான் “மனித இனங்களே” உருவானது.

தன் உணர்வின் எண்ணத்தால் செயல்படும் அங்க அவயங்களும் சொல்லாற்றும் திறமையின் வளர்ச்சியும் பெற்று வளர்ந்து வந்தாலும்
1.அநத் தொடரின் வளர் தன்மை
2.அடுத்த உயர்ந்த நிலைக்கு மனித இன வர்க்கம் செல்லாதபடி தடையாகி விட்டது.

இப்பூமியில் கிருஷ்ணாவதாரக் காலம் தொட்டே (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) பேராசைப் பிடி உல்லாச வாழ்க்கை எண்ண உரு வளர்ப்பு வளர்ச்சி பெற்றதனால் மனித வளர்ப்பின் சரீர செயல் எண்ண வளர்ப்பும் தடைப்பட்டு தன் ஞானத்தில் செயல்படும் நிலை மாறி விட்டது.

கல்வி என்பதும் அடிமை கொண்ட குண போதனை ஆகி விட்டது. குரு சிஷ்யன் என்ற குரு குலத் தொடர்பு நிலையில்
1.மனிதனின் எண்ணத்தில் தன் உயர்வின் பெருமையில்
2.பிறரின் நிலையை அடக்கி ஆளும் வழித் தொடரில்
3.ஞானிகளால் கொடுக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்ட போதனையாகி
4.இந்தப் பூமியில் வளர்ச்சி கொண்ட அந்த ஞான வித்தின் வித்தகத் தன்மையே
5.சூழ்ச்சி கொண்ட சூட்சம நிலையில் மறைக்கப்பட்டு விட்டது.

ஆனால் அதே சமயத்தில்…
1.சூட்சமத்தால் வெளியிடப்பட்ட சில சுவடிகளின்படி
2.உண்மையைக் காவியக் கதை கற்பனை ரூபமாக காட்டிய தொடர் கொண்டு
3.விஞ்ஞான ஆராய்ச்சியின் செயல் திறமையினால்
4.மனித உருவக வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சூரிய அலையுடன் சில அலைத் தொடர்களைப் பாய்ச்சி தன் விஞ்ஞானச் செயலுக்காக சில சக்தி அலைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டேயுள்ளார்கள்.

அதனால் மனித ஞானத்தை வளர்க்கவல்ல காந்த மின் அலையின் ஒளி அலையில்… “வெண்மை அணு சக்தியின் வளர் சக்தியே” தடைப்பட்டு… ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

இதிலிருந்தெல்லாம் எண்ணத்தின் வீரிய குணம் கொண்டு இந்தப் பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு ஒவ்வொருவரும் விண்ணுலக மகரிஷிகளின் அலைத் தொடர்பைப் பெறவேண்டும்.

இன்று பலவாக உள்ள எண்ண குண ஈர்ப்பின் சரீர உணர்வை… நல் அணு வளர்ப்பின் குணத் தன்மை கொண்டு… மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணத்தின் ஞானத்தால் “நேராக எடுக்கும்” பக்குவத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பெற்றால்…
1.தன் ஆத்ம பலம் பெற்ற தன்மையில் எவ்வீர்ப்புப் பிடியிலும் இந்த ஆத்மா சிக்காமல்
2.இந்தப் பூமியின் மாற்றத் தன்மை எதுவாக இருந்தாலும்
3.வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து
4.மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்.

அதற்குத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

om-eswara-gurudev-judge

ஒரு வட்டிக் கடைக்காரருக்கு… அவர் மற்றவருக்குச் செய்த தீங்குகளுக்குக் கிடைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி


வட்டிக் கடைக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பலருக்கும் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தார்.

என் (ஞானகுரு) மகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் பொழுது எனக்கே அவர் தீங்கு செய்தார்.

திருமணத்திற்குப் பணம் தேவை…! என்ற நிலையில் அவரிடம் கேட்கும் பொழுது உங்கள் வீட்டை வைத்துக் கொடுங்கள்… திருமணச் செலவுக்குப் பணம் தருகின்றேன்…! என்றார்.

திருமண நாள் அருகிலே வந்த பின்… உங்கள் வீடு ஆறாயிரம் கூடப் பெறாது நீங்கள் பத்தாயிரம் கேட்கிறீர்களே…! என்று என்னிடம் மாற்றிப் பேசுகிறார் அந்த வட்டிக் கடைக்காரர்.

அதற்கு நான் சொன்னேன். அப்பா…! உன்னுடைய சொத்தாக இருந்தால் அதற்கு எப்படி விலை தருவாயோ அதைப் போல் நினைத்துப் பார்…! என்றேன்.

நினைத்துப் பார்ப்பது என்ன…? முதலில் “பத்தாயிரம் தருகிறேன்” என்று சொன்னேன். இப்பொழுது மற்றவர்களிடம் கேட்கும் பொழுது குறைந்து போய்விட்டது. நான் என்ன செய்வது…? என்று கல்யாணத்திற்கு மூன்று நாள் முன்னாடி இப்படிப் பேசுகிறார்.

நானோ குருநாதர் காட்டிய வழியில் ஊரை எல்லாம் சுற்றிக் கொண்டிருக்கின்றேன். என் மனைவியோ… “கடைசி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே…” என்று பதறுகின்றது.

கல்யாணத்திற்காக முன் பணம் கொடுத்து வேலைச் செய்பவர்கள் எல்லாம் வந்து நிற்கின்றார்கள். கடைசியில் திருமண நாள் அன்று தாலி எப்படிக் கட்டுவது…? என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த நேரத்தில் சுற்றுப் பயணத்தில் கோயம்புத்தூரில் இருக்கின்றேன். கல்யாண நேரத்திற்கு வந்து நீங்கள் ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள்.

நான் வந்தேன். ஆனால் கல்யாணம் நடக்கப் போகும் பொழுது என்ன நடந்தது…?

ஒரு அம்மாளுக்கு அருள் வந்துவிட்டது. மாரியம்மன் என்று சொல்லி அருளாடிக் கொண்டு “தாலி கட்டக் கூடாது… இந்தப் பெண் ஆகாது…” என்று சொல்கிறது.

பையன் வீட்டுக்காரர்கள் எல்லாம் அதை ஏற்றுக் கொண்டு ஐயோ.. “அம்மா” இந்த மாதிரிச் சொல்லிவிட்டதே..! கல்யாணம் செய்தால் குடும்பத்தில் கஷ்டம் வந்துவிடுமே…! என்று சொல்கிறார்கள்.

அருளாடிச் சொன்ன அந்த அமமாவுக்கு வயது தொண்ணூறு… பக்கத்துக் கிராமம்.

நான் வந்த நேரத்தில் தான் இது நடக்கிறது. அப்பொழுது நான் குருநாதரை நினைத்து
1.இந்த மாதிரிச் சொல்கிறார்களே…
2.இதற்கு என்ன விடை…? என்று கேட்டேன்.

குருநாதர் உணர்வுகள் இயக்கப்பட்ட பின் திடீர்… என்று அந்த முகூர்த்த நேரத்தில் வேப்ப மரத்தில் ஏறுகின்றது. அங்கிருந்து குதித்துக் கீழே வந்து… என்னைப் பார்த்து “வாடா மகனே…!” என்றது.

நான் தான்டா தாலியை எடுத்துக் கொடுப்பேன். தாலியைக் கொடுத்துக் கட்டுடா…! என்று சொல்லியது… கல்யாணம் முடிந்தது.

சடக் என்று இப்படி முடிந்ததும் சமையல் எல்லாமே மிச்சம். யாரும் சாப்பிடவில்லை…! ஏனென்றால் வந்ததும் தாலியைக் கட்டியதால் பொருள் எல்லாம் மிச்சமாகி விட்டது.

இங்கே பகுதி தான் செலவு… மாப்பிள்ளை வீட்டிலும் பகுதிதான் செலவு…! இரண்டு பேருக்குமே அன்றைக்குச் செலவு இல்லாமல் போய்விட்டது. நடந்த நிகழ்ச்சி.

என் பெண்ணும் வீட்டுக்காரரும் மைசூரில் இருக்கின்றார்கள். தியானத்தைச் செய்து கொண்டு நன்றாக இருக்கின்றார்கள். தபோவனத்திற்கு அவர்கள் ஒரு இலட்சம் வரை பணம் கொடுத்து உதவியும் இருக்கின்றார்கள்.

பிறகு அந்தச் செட்டியாருடைய நிலைகள் என்ன ஆனது…? ஒரு சமயம் அவர் காலையில் காபி சாப்பிடுவதற்காக வீட்டை விட்டு வெளியிலே சென்றிருக்கின்றார்.

அந்த நேரம் சரியாகத் திருடர்கள் வந்து அவர் வீட்டில் வைத்திருந்த நகைகள் காசு எல்லாவற்றையும் பூட்டைக் கூட உடைக்காமல் அதற்கென்று சாவியும் தயார் செய்து அலுங்காமல் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

எடுத்துச் சென்ற பொருளின் மதிப்பு குறைந்தது ஒரு கோடி ரூபாய் பக்கம் இருக்கும். என் மனைவி போட்டிருந்த ஒரு கம்மலும் அதிலே இருக்கின்றது. ஏற்கனவே அங்கே அடகு வைத்திருந்தது தான்.

சந்தேகக் கேசில் பிடிபட்ட அந்தத் திருடன் கோர்ட்டில் என்ன சொல்கிறான்…? உன் நகை தான் என்று நிரூபித்து எடுத்துக் கொள்…! என்கிறான். அதைத் திருப்ப முடியவில்லை. கொள்ளை அடித்தவன் ரசீது இருந்தால் கொண்டு வா…! என்று கேட்கின்றான். இது நடந்த நிகழ்ச்சி.

இப்படி நடந்து கொண்டிருக்கும் பொழுது நான் சேலத்தில் இருக்கின்றேன்.

அந்த வட்டிக்காரருடைய எண்ணங்கள் குறுகிய நோக்கில் இருந்ததால் பணம் எல்லாம் இப்படிப் போய்விட்டது. அப்பொழுது அந்த நேரத்தில் அதிகமாகச் சொத்து வைத்திருப்போர் சம்பந்தமாக மத்திய அரசாங்கம் (இந்திரா காந்தி அரசு) ஒரு சட்டம் போட்டிருந்தது.

போலீஸ் இவரைப் பிடித்துக் கொண்டு போய் உன்னுடைய நகைகளையும் பணத்தையும்… நீயே எங்கேயோ ஒளித்து வைத்திருக்கின்றாய்..! என்று சொல்லி அடி…அடி… என்று அடிக்கின்றார்கள்.

ஐயா… நான் அப்படிச் செய்யவில்லை… எவனோ எடுத்துக் கொண்டு போய்விட்டான்…! என்று சொல்கிறார்.

நீ சொல்வதை யார் நம்புவது…? என்று மீண்டும் அடிக்கின்றார்கள். பின் அவர்கள் இனங்கள் எல்லம ஒன்றாகச் சேர்ந்து அவரை (அந்த வட்டிக் கடைக்காரரை) ஒரு வழியாக விடுவித்துக் கொண்டு வந்தார்கள்.

அந்த மட்டுடன் நேராக சேலத்தில் இருக்கும் என்னைப் பார்க்க வந்தார். ஐயா…!! என்று நடு ரோட்டில் சொத்… என்று என் காலில் விழுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்…! என்றார்.

நான் எந்த நகையையும் திருடவில்லை.
1.உங்கள் குடும்பத்திற்கு அன்றைக்கு என்ன செய்தேனோ தெரியவில்லை…!
2.என்னை அப்படியே அலேக்காக அள்ளிக் கொண்டு போனார்கள். உதைக்கவும் செய்தார்கள்.
3.நான் சத்தியமாக ஒன்றுமே செய்யவில்லை… என்னை அடிக்கின்றார்கள்
4.எப்படியாவது அந்தத் திருடு போன பொருள் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று
5.என்னைக் குறுக்காட்டி இப்படிச் சொல்கிறார் அந்த வட்டிக் கடைக்காரர்.

என்னைத் தேடி அலைந்து கடைசியில் கண்டுபிடித்து சேலத்திற்கு வந்திருக்கின்றார்.

இனிமேல் பட்டு யாருக்கும் இந்த மாதிரித் தீங்கு செய்யாதே…! என்றேன். (ஆரம்பத்திலேயே சில புத்திமதிகளைச் சொல்லுயிருந்தேன்.. அதை அவர் கேட்கவில்லை).

இனிமேல் யாருக்கும் நான் தீங்கே செய்ய மாட்டேன். நான் உணர்ந்து விட்டேன். போலீஸ் அடியை நான் பார்த்துவிட்டேன். ஆனால் நான் உண்மையிலேயே திருடவில்லை என்றார்.

நீ திருடவில்லை என்று சொல்கிறாய். ஆனால்
1.எத்தனையோ பேருக்கு வட்டி என்ற பெயரில் கொடுமை செய்தாய் அல்லவா
2.அந்தச் சாபம் எல்லாம் உன்னைச் சாடும் அல்லவா.. நீ இனிமேல் இந்தத் தவறைச் செய்யாதே என்றேன்.

இந்த வட்டிக் கடையே எனக்கு வேண்டாம்  நான் தவறு செய்ய மாட்டேன் என்று சொன்னார். இது நடந்த நிகழ்ச்சி..!

ஈஸ்வரபட்டருடன் ஏற்பட்ட முதல் அனுபவம்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உங்கள் உயிருடன் ஒன்றி உங்கள் கண்களின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.குருநாதர் காட்டிய அந்த உணர்வின் நிலையை
3.உங்களுக்குள் குருவாக வேண்டும் என்று ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நினைவினை உடலுக்குள் செலுத்தி அதை இரத்தநாளங்களில் கருவுறச் செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் தியானியுங்கள்.

இப்பொழுது…
1.அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியும்
2.நம் குருநாதர் பெற்ற அந்தச் சக்தியும் கலந்து நீங்கள் நுகரும் பொழுது
3.அருள் சக்தியாக… புதுப் புது தாவர இனங்களின் மணங்களை
4.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக நீங்கள் பெறுவீர்கள்.
5.உங்கள் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் இப்பொழுது உருப்பெறும்.
6.நஞ்சினை வென்றிடும் அபூர்வ மணங்கள் வரும்… அதை நீங்கள் நுகர்வீர்கள்
7.அதை உங்கள் உடலுக்குள் அணுக்கருவாக மாற்றுவீர்கள்.
8.உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவுவதை உங்களால் உணர முடியும். மணத்தை நுகர்ந்தறிய முடியும்…!

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம் – உணர்வின் நினைவாற்றல்

யாம் (ஞானகுரு) உபதேசம் எப்படிச் செய்கின்றோம்…?

என்னைப் பற்றி (ஞானகுரு) யாரும் தவறாகச் சொன்னால் அதை எடுப்பதில்லை

headache

நாம் மிகத் திறமைசாலியாக இருந்தாலும் அறியாமல் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு பயிற்சி வேண்டும்

 

நாம் அனைவரும் நுகரும் சக்தி கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் கடுமையான பகைமையாகி விட்டால் அதனால் வெறுப்படையும் நிலையே வருகின்றது.

அந்த வெறுப்புடன் “நாசமாகப் போடா…!” என்று சொல்லப்படும் பொழுது என்ன நடக்கின்றது…?

இது அவன் செவிகளில் படும் பொழுது
1.இந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குப் பாதகத்தை உண்டாக்கி
2.வாகனங்களில் செல்லும் பொழுது எதிர்பாராது விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது.

ஆகவே… இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
1.பிறருடைய வேக உணர்வுகள் வந்து தாக்கி விட்டால்
2.நம்முடைய சிந்தனையைச் சீர்குலையச் செய்து விபத்துக்களுக்கே அழைத்துச் செல்கின்றது.

அல்லது அதே போல் சில விபரீதச் செயல்களையும் நம்மை அறியாமலே செயல்படுத்தத் தொடங்கி விடுகின்றது.

அந்தச் சாப அலைகள் பாய்ந்து விபரீதச் செயல்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாதபடி நம்மையே குற்றவாளியாக ஆக்கும் நிலையையும் உருவாக்கி விடுன்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் விடுபட காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து
2.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் செருகேற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி வலுவாக்கிக் கொண்ட பின் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய தீமைகள் எதுவாக இருந்தாலும் அதைப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தத் தீமையான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாது
2.நாம் நுகர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி அதை அடக்கிவிடும்

நம்மை யார் யார் எல்லாம் கேலி செய்தார்களோ… அவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி அவர்கள் பெறவேண்டும்
2.அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுப்ட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாறவேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலிலேயே அவர்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்த பின் நம்மைப் பார்த்து எண்ணும் பொழுதும் சரி அல்லது சார்புடையோருக்கும் சரி
1.நம் பேரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஊடுருவிச் சென்று
2.யார் தீங்கு செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் ஞானத்தை ஊட்டும்.

அதாவது… நாரதன் கலகப்பிரியனாகி.. அங்கே உண்மையை வெளிப்படுத்தி அதை உணர்த்தும் சக்திகளாக வருகின்றது.

காவியங்களில் இதைத் தெளிவாக்கியுள்ளார்கள் நம் ஞானிகள்.
ஆகவே நாரதன் (துருவ நட்சத்திரத்தின் ஒளி) என்ற இந்த உணர்வை வழிப்படுத்தினால்… நம்மை அறியாது புகுந்து…
1.நமக்குள் தீங்கு விளைவிக்கும் செயல்களிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி…
2.நம் எண்ணமே நமக்குள் தீமைகளை உருவாக்கும் நிலையிலிருந்து முழுமையாக விடுபடச் செய்யும்.

மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வை இப்படி நாம் தொடரப்படும் பொழுது அதைப் பற்றுடன் பற்றுகின்றோம்…. வாழ்க்கையில் வரும் தீமைகளையும் துன்பங்களையும் குறைகளையும் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

மகிழ்ந்து வாழும் சக்தியையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நாம் பெறுகின்றோம்.

குருநாதர் விண் சென்ற நாள் வைகுண்ட ஏகாதசி

 

நீங்கள் ஒவ்வொருவருமே ஈஸ்வரபட்டரின் அருள் சக்தி பெற வேண்டும். அவர் விண் சென்ற ஆற்றலைப் பெறவேண்டும். அவர் அருள் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியையும் பெற்று “சப்தரிஷி” என்ற நிலையை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் இதை உபதேசிக்கின்றேன்.

divine-guru-masters

நாம் பெறவேண்டிய “அஷ்டமாசித்து நிலை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இக்கர்ம வாழ்க்கையின் முறையிலிருந்து… ஆத்ம ஞானத்தின் சூட்சம நிலையான “நிர்வாண நிலை அடையக்கூடிய வலு ஈர்ப்பிற்கு… இஜ்ஜீவ சரீரப் பாத்திரம்…” இருந்தால் தான் ஆத்ம வளம் பெற முடியும்.

எவ்வுலோகத்தால் செய்த பாண்டமானாலும் அதனை அடுப்பில் வைத்து நீரில்லாமல் எரிக்கும் பொழுது உஷ்ணத்தின் நிலை கூடக் கூட அடுப்பில் ஏற்றிய அப்பாண்டமும் உருக்குலைந்த நிலை ஏற்பட்டு மாற்று நிலை கொள்கிறது.

ஆனால் அதையே சமையல் செய்யும் பக்குவத்தில்
1.”நீர் சக்தியைக் கொண்டு” அதில் சமைக்கப்படும் நிலைக்கு
2.எத்தனை காலங்கள் ஆனாலும் அதன் தேய்மானமோ துவார நிலையோ ஏற்படாத காலங்கள் வரை
3.அடுப்பில் ஏற்றிச் சமைக்க இப்பாண்டம் உபயோகப்படுகின்றது.

அதைப் போன்று தான்… இச்சரீர சமைப்பிற்கு ஜீவ சக்தியின் தொடர்பு கொண்டு இவ்வாத்ம பாத்திரம் செயல்படும் வழி முறையில்… எண்ணத்தில் எடுத்து உணர்வில் சமைக்கும் ஜீவ சக்தியின் வலுக்கொண்டு இவ்வாத்மா வளர்கின்றது.

இக்கர்ம வாழ்க்கைக்கு உட்பட்ட தேவையின் விகித நிலை ஒவ்வொன்றிலும் இருந்துதான் வாழ்க்கைச் செயலே ஓட வேண்டியுள்ளது.

அவ்வீர்ப்பின் பிடியில் பேராசை கொண்டு “கர்மம்” என்ற சிந்தையில் செயல் பிடியின் உணர்வாகி… எண்ணத்தின் சுவாசமே அந்தக் கர்ம சிந்தனையில் சிக்கி விட்டால்
1.தன்னுள் உள்ள தன் வளர்ப்பின் வளர்ப்பான
2.”ஆத்மாவின் வளர்ப்பு தான் இச்சரீர கர்ம வாழ்க்கை..!” என்பதனை மறந்து
3.இது தான் (இப்பொழுது வாழும் கர்மா) வாழ்க்கை…! என்ற பிடி உணர்வுடன்
4.பூமி ஈர்ப்புடன் ஈர்ப்பாக்கிச் சுழலும் வட்டத்திலேயே ரங்கராட்டினம் போல் சுழல வேண்டியிருக்கும்.

இதிலிருந்து மீள
1.மேல் நோக்கிய சுவாசத்தால்…
2.எண்ணத்தின் ஞானத்தை இச்சரீரப் பிடிப்பிலிருந்து
3.உயரும் ஞான ஈர்ப்பிற்குச் செல்வதாக நம் செயல் வழி இருக்க வேண்டும்.

காந்தம் தன் ஈர்ப்பிற்கு இரும்பை இழுப்பதைப் போன்று… இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பின் வளர்ப்பை தன் ஈர்ப்புப் பிடிக்கு சுழல் ஓட்டத்தின் சுழற்சியுடன் பிடித்துக் கொண்டுள்ள “அத்தகைய ஈர்ப்புப் பிடியில் தான்” இன்று நாம் வாழுகின்றோம்.

ஆக… இன்றைய சூழலில் (கலியில்) இந்தப் பூமி… மனித இன ஞானத்தின் வளர்ப்பலையை வளர்த்த செயல் அலைத் தொடர் குன்றியுள்ளது.

இந்தக் கலியில் நாம் மேல் நோக்கிய சுவாசத்தால்… ஞானத் தொடர்புடைய மகரிஷிகளின் எண்ண ஜெப தியானத்தால்… இப்பிடியின் உணர்விலிருந்து… எவ்வலையிலும் மனித ஞானம் வளரும் வளர்ப்பில்… நாம் பெற்ற வலுவின் வலுவால் வளர்ச்சி கொள்ள வேண்டும்.

ஆகவே… இக்கர்ம வாழ்க்கைச் சிந்தையில் சிக்குண்டு…
1.பக்தி என்று பகவானை எண்ணியே ஏங்காமல்
2.ஞானத்தின் உயர்வால் தன்னுள் உள்ள ஆத்மாண்டவனை உயர்த்தும் உயர்வான எண்ணத்தை
3.ஞான வளர்ப்பு ஈர்ப்பலையினால் வலுக் கூட்டிடல் வேண்டும்.

ஆகாய விமானத்தை மேல் நோக்கிய உந்தலினால் அதற்குகந்த காற்றழுத்த இயந்திரச் செயலைக் கொண்டு மனித விஞ்ஞானம் பறக்க விடுகின்றதல்லவா…!

அதைப் போன்று உணர்வின் எண்ணத்தால்… தன் ஞானத்தால் இச்சரீர பிம்பத்தை மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பினால் எந்நிலைக்கும் இச்சரீரத்தைப் பறக்க விடவும் முடியும்… பிரித்து மீண்டும் கூட்டுச் சேர்க்கையாக்கவும் முடியும்.

அத்தகைய தன்மைக்கு இவ்வுடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையும் ஒளியான உயிராத்மாவாக்கி
1.இவ் ஒரு சரீரத்தில் இருந்தே
2.பல கோடிச் சரீர செயல் அலைக்கே
3.உயர் ஆத்ம வலு கொண்டவர்களினால் செயலாக்குவது என்பது தான்
4.அஷ்டமா சித்து என்பதின் மூன்றாம் சித்து.

முருகா என்றதும் முருகன் ஓடி வந்து செய்வானா…? என்பது வேறு கதை. போகநாதனின் வலுத் தன்மையினால்… எண்ணத்தால் எண்ணும் பல கோடி ஆத்மாக்களுக்கும் அவன் அருள் ஞான ஆசி கிட்டுகிறது என்றால் அவனின் அலைத் தொடரின் அருளும் ஆசியும் தான்.

1.ஆயிரம் கண்ணுடையாள் அகிலத்தைக் காத்தருள்வாள் அமராவதி… அபிராமவல்லி…! என்றெல்லாம் உணர்த்தும்
2.சித்தின் தொடர் அப்படிப்பட்டது தான்.

அதாவது பல கோடி ஆத்மாக்களும் ஒரே சமயத்தில் அத்தேவியின் பால் செலுத்தும் பக்தியின் ஜீவ சக்தி கொண்ட சித்தினால் அழியாத் தன்மை கொண்ட சரீர ஆத்மாவினால் ஆயிரம் கண்ணல்ல… அகிலத்தையே கண்ணாகக் கொண்டு வளரும் சக்தியைப் பெற்றவர்கள் தான் அவர்கள்.

நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சுவாச அலையின் வளர்ப்பினால் இந்தக் கர்ம வாழ்க்கையின் சிக்கலில் இருந்து மீண்டு உயர் ஞான ஈர்ப்புடன் சித்துத் தன்மையில் வழித்தொடரை நாம் பெற வேண்டும்.

1.போற்றி வணங்கும் தெய்வ சக்தியின் அருளை வேண்டி
2.பக்தியுடன் பணிவெய்திப் பணிந்திடமால்
3.அத்தெய்வத்தின் சக்தியையே மேல் நோக்கிய ஞான தொடர்பின் ஈர்ப்பினால்
4.அத்தெய்வத்தின் தொடர்புடனே நாமும் தெய்வ சக்தி பெறும் தன்மையைத் தொடரலாம்.

 

இது எல்லோராலும் சாத்தியமானதே..!

உங்கள் தாயின் உணர்வு உங்களைக் காக்கும் – யாம் (ஞானகுரு) CHALLENGE செய்கிறோம் 

தாய் தந்தையை முதல் தெய்வம் என்று உணர்த்தியவன் ஆதியில் அகஸ்தியன் 

ஞானம் பெறுவதற்கும் கெட்டவனாக மாறுவதற்கும் தாய் கருவில் நாம் பெற்ற நிலையே காரணம்  

morning meditation

நமக்கு நியாயம் வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

கோர்ட்டுகளில் பணம் கொடுத்துச் சிலர் கேஸ்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள். அந்த மாதிரி நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

காலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் எண்ணங்களைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதை வலுவாக நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்ட பின்…
1.எனது சார்புடைய கட்டுகளை வக்கீலோ அல்லது நீதிபதியோ எடுக்கும் பொழுது
2.அவர்களுக்குள் சிந்திக்கும் திறன் வந்து…
3.உண்மையின் உணர்வை உணர்ந்து…
4.அதன் வழியில் தீர்ப்புக் கூறும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்த நீதிபதி முன்னாடி வாதங்கள் நடக்கின்றதோ அவர்ளுக்கு இந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள். அதிகாலையில் இவ்வாறு செயல்படுத்த வேண்டும்.

1.இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து… அவருக்குள் உண்மையின் உணர்வை உணர்த்தும்.
2.அதன் பின் அவரை அறியாமலே பேசுவார்கள்
3.பணம் வாங்கியிருந்தாலும் கூட அவர்கள் அறியாமலே நல்ல தீர்ப்பைக் கூறும் நிலை வரும்.

வக்கீல்கள் எல்லாம் கொக்கி போட்டே பேசுவார்கள். எதிர் வக்கீல் அப்படி வாதாடிக் கொண்டிருந்தாலும் நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவருக்குள் பாய்ந்த பின் – நாரதன் கலகப் பிரியன் ஆகின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் ஊடுருவிய பின்
2.அவர் தன்னை மறந்து உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார்.

நீங்கள் நாரதரைப் பற்றிய காவியங்களில் படித்திருப்பீர்கள். ரொம்பவும் நாசூக்காகச் சொல்லித் தான் அந்த நாரதன் உண்மையை வரவழைப்பான்.

அதனால் தான் “நாரதன் கலகப் பிரியன்… கலகமோ நன்மையில் முடியும்..!” என்று சொல்வது.

தீமைகளை அகற்றும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது அந்தத் துருவ நட்சத்திரம்.

ஆகவே..
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவர் நுகர்ந்தாலும்
2.தனக்குள் அறியாது சேர்ந்த உணர்வினைப் பிரித்துத் தவறு என்ற நிலைகளை உணர்த்தும்.

இந்த உணர்வின் தன்மையைக் கூட்டப்படும் பொழுது… நம்மைப் பார்த்து அந்த உணர்வுகளை நீதிபதி எண்ணும் பொழுது அவரை அறியாமலே அந்த நல்ல தீர்ப்பினைக் கூறிவிடுவார்.

செல்வத்திற்கு அடிமையானவர்கள்… பணத்தின் மீது குறிக்கோளாக வைத்து பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் தீர்ப்பினையே கூறுவார்கள். அவர்களிடம் நியாயமான… உண்மையான தீர்ப்பு வராது…!

இன்று சத்தியமும் தர்மங்களும் “செல்வத்தில் தான்” இருக்கின்றது.
ஆனால் நாம் அந்த அருள் செல்வத்தை வைத்து… அருள் ஞானத்தை வைத்து… நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களும் தவறில்லாத நிலைகளில் நடந்து கொள்வதற்கு…
1.தவறு செய்வோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அவர்களும் உண்மையை உணர வேண்டும்… நல் வழியில் நடக்கும் செயலாக்கத்திற்கு வரவேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்ச வேண்டும்.

இப்படி ஒரு பழக்கம் வரப்படும் பொழுது மற்றவர்கள் நம்மை எண்ணும் பொழுது
1.அவர்களை அறியாது இயக்கும் உணர்வினைப் பிளந்து
2.உண்மையின் உணர்வை உணர்த்தும் சக்தியாக மாறும்

இந்தச் சக்தி உங்கள் அனைவருக்குமே உண்டு…!

“கரையான்” பற்றிய சூட்சமத்தைக் காட்டினார் குருநாதர்

 

இந்த இயற்கையின் உண்மையினுடைய நிலைகளை அந்த சக்தியினுடைய நிலைகளை இந்த உணர்வின் தன்மையை நீ உணர்த்த வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றேன் என்றார் குருநாதர்.

 

நான் அடிக்கிறேன் என்று எண்ண வேண்டாம். ஏசுகின்றேன் என்று எண்ண வேண்டாம். 

 

ஒவ்வொரு ஏச்சுக்கும் உன் உணர்வு எப்படி மாறுகின்றது? உனக்குள் நான் சொல்வதை நான் செய்வேன் என்று நீ எண்ணினாலும், நான் பேசும் உணர்வுகள் தாக்கப்பட்டுஎப்படா விட்டு ஓடலாம்…?” என்ற எண்ணம் உனக்குள் எப்படித் தோன்றுகின்றது? அந்த உணர்ச்சிகள் எல்லாம், உன் உடலுக்குள் என்ன வேலை செய்கின்றது? என்ற நிலையையும் காட்டினார்

Saraswati matha

“வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் கலைமகள்… ஞானமகள்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பன்னிரெண்டு வகை குண அமிலங்கள் கொண்ட… உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்ப இயக்கத்தில்… ஆத்மீக போதனையின் வழித் தொடரில்… ஞானத்தின் பால் செயல்படும் உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டிய பக்குவ முறை யாது…?

பல குணங்களின் உணர்வின் உந்தல் கொண்ட வாழ்க்கையில் மனிதனின் எண்ண உணர்வு தான் வளர வேண்டிய ஆத்ம வளர்ப்பின் வலு நிலையைக் கூட்ட என்ன செய்ய வேண்டும்…?

இச்சரீர பிம்ப இயக்க எண்ணத்தை சமநிலை கொண்ட நற்குணத் தொடர்பினால்
1.சாந்த குண அமிலமான “வெண்மையின் அமிலத்தின்” சேர்க்கை விகிதம் கூடிடல் வேண்டும்.
2.அதன் தொடர்பு கொண்ட காந்த மின் அலை ஈர்ப்பு செயலினால்
3.இச்சரீர பிம்பமே ஆத்ம வார்ப்பிற்கு வளர் நிலை தரத்தக்க “இயந்திர நிலையாக” உயரும்.

அதாவது சூரியனின் சக்தியைக் கொண்டு… காந்த மின் அலையின் தொடர்பினால்… ஜீவ சக்தியான நீர் சக்தியின் தொடர்புடன்… உலோக ஈர்ப்பில் மின் அலையைச் செலுத்தி.. அதன் செயலின் வீரிய குணத்தை (SOLAR POWER) எடுக்கின்றார்கள் அல்லவா..!

அதைப் போன்ற இயக்கச் செயலாக…
1.சரீர பிம்பத்தின் நீர் சக்தியைக் கொண்டு
2.இச்சம குண உணர்வினால் பெற்ற உறுப்புகளின் வளர்ப்பினால் உருவாகும் காந்த மின் அலைத் தொடர்பினால்
3.இச்சரீர உணர்வு எண்ணத்தை சகலத்திலும் கலக்கச் செய்து
4.எவ்வீர்ப்புப் பிடியிலும் இவ்வெண்ணத்தின் உணர்வு மோதாமல்
5.எண்ணத்தின் செயல் கொண்டே ஆத்ம அலையை எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலக்கச் செய்து
6.நிர்வாண சக்தியாக நிலை பெறச் செய்யலாம் இந்த ஆத்ம சக்தியை.

“வெண்மை அமிலத்தின்” தொடர்பு கொண்டு தான் மின் அலையே உருவாகின்றது. வண்ணத்தின் கூட்டு நிலைக்கொப்பத்தான் வளர்ப்பு நிலை ஒவ்வொன்றுமே உருவாகிறது.

வானவில்லின் வண்ணத்தைக் காட்டி இராமாயணக் காலத்தில் வான்மீகியார் எழுதிய காவியத்தின் உட் கருத்தை மாற்றப்படாமல் வைத்திருந்தால்
1.வண்ணங்களின் தொடர்பு கொண்டு
2.உயிர் வளர்ப்பின் அணுத் தொடர் வளர்ச்சியின்
3.அணுவுக்குள் அணு வளரும் உயர் சக்திகளை இன்று நாம் அறிந்திருக்கலாம்.

வெண்மையின் அமிலமான சக்திகளால் தான் நம் உடல் உறுப்பின் எலும்புக்கூறுகள் உருவாகி அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி வார்ப்பாக ஆத்மாவின் வலு வலுக் கொள்கின்றது.

சூரியனின் அலைத் தொடர்பிலிருந்து பூமியின் சுழற்சிக்கு பூமிக்கு வடிகட்டி பூமியின் ஈர்ப்பிற்கு வரும் அமிலச் சத்தின் உயிர்ணு வளர்ப்பு அமிலமே “இந்த வெண்மையின் சக்தி தான்…!”

சாந்த குணமான வெண்மையின் சக்தி அலைகளை உணர்த்தத்தான் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் கலைமகள்… ஞானமகள்…! என்றனர்.

ஆகவே…
1.ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வெண்மை உடுத்தும் தாய் குண சரஸ்வதி என்றும்
2.”ஞானத்தின் தொடர்பு கலைமகள்” என்ற சூட்சம வட்டத்திற்குள்
3.அச்சக்தியின் தொடர்பை நமக்குத் தெளிவாக உணர்த்தினர் நம் சித்தர்கள்.

வண்ணத்தின் சேர்க்கைக்கொப்பத்தான் உருவக செயல் உருவாகின்றது. அதன் தொடர்பு கொண்ட உணர்வின் செயல் தான் மாற்றங்களின் நிலையும்.

இன்றைய இக்கோளத்தின் உயர் வார்ப்பான உயர் வண்ணமான வெண்மையின் தன்மைக்கே கருமையின் பழுப்பு நிலை கூடிக் கொண்டே வருகின்றது.

 

இன்றைய கலி காலத்தில்…
1.மனிதனின் ஞானம் நிர்வாண உணர்வாக… வார்ப்பின் வார்ப்பாக
2.ஆத்ம வளர்ப்பை வளர்க்கும் ஞானம் பெற்று
3.நிர்மலமான ஜோதி நிலையுடன் கலந்திட வேண்டும்.

 

எண்ணியவுடன் நடக்குமா…? எண்ணி அதை அதிகமாக வளர்த்தால் உயிர் உருவாக்கும் 

உயிருடன் ஒன்றி இருளை அகற்றுங்கள் – விஷ்ணு தனுசு 

நான், தான் – தான், நான் உயிருடன் ஒன்றும் உணர்வு 

Fool proof protection

துன்பங்களைக் கேட்டு வேதனைப்பட்டாலும் சரி.. துன்பங்கள் செய்வோரை எண்ணி வெறுப்படைந்தாலும் சரி… அது நோயாகத்தான் மாறும்

இன்றைய மனித வாழ்க்கையில் சிலர்… பகைமை கொண்ட நிலையில் அடுத்தவர்களுக்குப் பல இடைஞ்சல்கள் செய்தே தன்னை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றார்கள்.

பிறர் துன்பப்படுவதைக் கண்டு ரசித்து மகிழும் தன்மையே அவருக்குள் வருகின்றது. (உலகம் முழுவதும் இந்த நிலை தான்)

ஆனால் அவர் அப்படித் துன்பப்படுத்தும் பொழுது
1.அவர் என்னைத் துன்பப்படுத்துகின்றாரே…! என்ற நிலைகளில் அந்த உணர்வை நாம் நுகரப்படும் பொழுது
2.துன்பப்படும் அணுக்கள் நமக்குள் விளைகின்றது
3.அது கடும் நோயாகவும் நம் உடலிலே விளைகின்றது.

துன்பப்படும் நிலையையும் அதனால் வேதனையாகி நோயானதையும் சொல்லாக வெளிப்படுத்தும் பொழுது நம் சொல்லுக்குள்ளும் அது கலந்து வருகின்றது.

அத்தகைய நிலையை நம் நண்பர்கள் கேட்டறிந்தாலும் அவர்களும் அதனால் வெறுக்கும் தன்மையே வருகின்றது. (இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படியே சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று..!)

இப்படிப் பாதிப்படைந்த நிலையில் ஒரு சிலர் அவர் படும் கஷ்டங்களைச் சொல்வார்கள். நீங்கள் அதைக் கேட்டவுடனே… அல்லது அவர்களைக் கண்டவுனே…
1.இவன் வந்துவிட்டானா…?
2.என்ன சொல்லப் போகிறானோ…! என்று பதட்டமாகி
3.மனது பட…பட.. என்று அடிக்கும். இதைப் பார்க்கலாம்.

இருந்தாலும் அந்தக் கஷ்டங்களை எல்லாம் “உ…ம்..” கொடுத்துக் கேட்டால் அவர்களுடைய துன்பங்களைக் கேட்ட பின் அடுத்து ஒரு தொழிலையே செய்யச் சென்றாலும் அன்றைய தொழில் கெடும்.

கஷ்டத்தைக் கேட்ட பின் ஒரு சமையலுக்கே சென்றாலும் சுவை இருக்காது. ஏனென்றால் அந்த வெறுப்பை அதிகமாகக் கூட்டி விட்டால் அடுப்பில் வைத்த பொருள்கள் ஒரு பக்கம் சரியாக வேகாது. இன்னொரு பக்கம் குழைந்து போகும்.

அதாவது நெருப்பைச் சீராக வைக்காது அதைச் சுவையாக்கச் செய்யும் சக்தியும் இழந்து விடும். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆக… உங்களிடம் யாராவது கஷ்டத்தைச் சொன்னால் அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்….!
1.அவர்கள் சொல்லும் உணர்வுகள்…
2.அது எந்தெந்த உணர்வோ இதைப் போல் நமக்குள்ளும் தோன்றும்.

அடுத்தாற்போல் ஒரு காரியத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட அவரைக் கண்ட பின் இனம் புரியாதபடி வெறுப்பாகும்.

1.அவர் போன பிற்பாடு அவரைப் பற்றிக் குறையாகப் பேசுவோம்.
2.அவர் உணர்வுகள் நமக்குள் கருவாக உருவான பின்
3.அவர் குறைகளைப் பற்றியும் குற்றங்களைப் பற்றியும் பேசும் பொழுது
4.அவர் குறை கூறும் உணர்வு நமக்குள்ளும் வளர்கின்றது.

இந்தக் குறை உணர்வை வளர்க்கப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் மற்ற நல்ல அணுக்களும் எதிர் நிலை ஆகும். அதனால் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் நம் மனதும் உடலும் கெடும்.

இதைப் போன்ற நிலைகள் வளராது தடுப்பதற்குத்தான் மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் விதமாக ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுத்துள்ளோம்.

அதை உடனுக்குடன் செய்தால் தீமை செய்யும் அந்த அணுக்கள் உருவாகாதபடி தடுக்கலாம். நோய் வராது தடுக்கவும் முடியும். சிந்திக்கும் சக்தியும் கிடைக்கும்.

நம்மிடம் குறை சொல்பவர்களுக்கு உண்டான சரியான உபாயத்தையும் நாம் வழி காட்ட முடியும். இதை ஒரு பழக்கமாக்கிக் கொண்டால் அதுவே நமக்குப் பாதுகாப்புக் கவசமாகி விடும்.

light meditators

வாழ்க்கை என்ற ஓட்டத்தில் செல்வதா…? அல்லது ஞான வழியில் நாம் செல்ல வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மணம்… ஒலி… இவற்றுடன் கூடிய அமிலச் சேர்க்கையின் உருவக உணர்வு… வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மோதலின் உணர்வு நிலைக்கொப்ப எல்லாம்.. நாம் எடுக்கும் சுவாசத்தின் மூலம் உடலில் அணுக்கள் வளர்கிறது.

இத்தொடரின் வாழ்க்கை நிலையில் எவை எவை நம்மிடம் (எண்ணங்கள் உணர்வுகள்) மோதுகின்றனவோ… அவற்றின் உணர்வை அதிகமாக ஈர்க்கவல்ல தன்மையில்…
1.நாம் நுகரும் ஈர்ப்பு நிலைக்கொப்ப அணு வளர்ப்பு கூடுவதினால்
2.அதை அப்படியே விட்டுவிடலாமா…?

அதாவது… சுழற்சி ஓட்ட வாழ்க்கையில் சுழன்று ஓடும் நாம்… ஓடும் நிலைக்கொப்ப எல்லாம் நம் வாழ்க்கை ஓட்டத்தை ஓட விடாமல்… இவ்வெண்ணத்தின் உணர்வை அந்தந்தக் கால நிலைக்கொப்ப ஏற்படும் மோதலை எல்லாம் தன் ஈர்ப்புப் பிடியில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

சூடான பொருளை நாம் உண்ணும் பொழுது நம் உடலில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு அதனை ஆறவைத்துத் தான் உட்கொள்கின்றோம். அதைப் போன்று…
1.எண்ணத்தில் மோதும் செயல் எதனையும்
2.மிகத் துரித வேகத்தில் பிறரிடம் இருந்து எதிர்ப்படும் சொல் அலையானாலும்
3.குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் இன்னலின் துன்பச் சம்பவமானாலும்
4.மகிழ்ச்சியின் ஆராவாரச் செயலானாலும்
5.உட்கொள்ளும் உணவை எப்படி உடல் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் மட்டும் நாம் உண்ணுவது போல்
6.இவ்வெண்ணத்தின் செயலைக் கொண்டு அந்தந்தக் காலங்களில் ஏற்படும் மாற்றத்தை
7.ஞானம் கொண்ட சிந்தனை வழியிலும் அமைதி கொண்டு ஏற்படும் தொடருக்கு உட்பட்ட உணர்வை எடுத்துப் பழகுங்கள்.

மனித உணர்விற்கு… உடலின் மேல் காரத்தையோ.. புளிப்பையோ… பிய்ப்பெடுக்கும் சில காய்கறிகளின் சாறுகளையோ… வைத்தவுடன் உடலின் உணர்வு அதைத் தெரிந்து கொள்கின்றது.

அதைப் போன்ற தொடர் அலை அமிலத்தின் சேர்க்கை குணம் யாவையும் இக்காற்றலையில் கலந்துள்ள நிலையில்… இவ்வெண்ணத்தில் எடுக்கும் சலிப்பு சாந்தம் கோபம் எதுவாகிலும்… அத்தொடர்பு கொண்ட அணு வளர்ப்பின் வார்ப்பால் உடல் வளர… உடலில் வலுவான ஆத்மாவிற்கு அம்முலாமின் வலுக் கூட… இப்பிடிப்பிலிருந்து மீள முடியா நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்தி விடுகின்றோம்.

இச்சரீர வாழ்க்கையின் எண்ணத்தில் சம நிலை உணர்வினால்… ஞானத்தின் ஒளி அலையை நாம் எடுக்கும் சுவாச வலுக் கொண்டு… நம் ஆத்மா வலுக் கொள்ளும் வளர்ச்சி அலையை… சமமான குணத்தினால் எடுக்கும் முறையில் இவ்வாத்மா வலுப் பெற்று விட்டால்… இவ்வாத்மாவைக் கொண்டு உருவாக்கும் சக்தி அலை தான் சகல அலைகளுமே…!

தெய்வீக சக்தி… பிறவா வரம்… முக்தி நிலை… மோனப் பெரு நிலை.. நிர்வாண நிலை.. இதைப் போன்ற
1.தான் தான் உணர்ந்த நிலைகளில்…
2.ஒவ்வொருவரும் உணர்த்திய தொடர் நிலையின் செயல் நிலை என்பது
3.ஞானத்தால் பெறும் சமமான நிலை கொண்ட சாந்த குண உயர் ஞானச் சித்தை அறியும் நிலை தான்.

சீதாராமா – விளக்கம்

கடவுளின் அவதாரத்தில் மூன்றாவது அவதாரம் இராமன்.

 

உயிரணு பெறும் சரீரத்தின் தோற்றமான விதத்தையும் “எண்ணங்களின் தோற்றத்தையும்” அதனின் இயக்கங்களை நமக்கு உணர்த்துவதற்காக அன்று ஞானிகள் இராமன் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து இதிகாசம் மற்றும் புராணங்களை உருவாக்கினார்கள்.

 

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் விஷம் காந்தம் புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது ஒரு செடியிலிருந்து வெளிப்படக்கூடிய சுவையான சத்தினைக் கவரப்படும்பொழுது அது “சீதாலக்ஷ்மியாக” மாறுகின்றது.

 

சீதா என்றால் சுவை. அதே உணர்வை ஒரு உயிரணு நுகர்ந்தால் அந்த உணர்வின் சத்து உடலாக மாறுகின்றது.

 

“சீதா” என்ற இந்தச் சுவை உயிருடன் ஒன்றி அதன் உணர்வின் உடலாக சிவமாக மாறுகின்றது. சிவத்துக்குள் சக்தியாக இயங்குகின்றது.

 

இதைத்தான், “திரேதாயுகத்தில்” நாராயணன் சீதாராமனாக அவதரித்தார் என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டது. அதில் “திரேதா.., என்பது சரீரம்.., உயிரணு உடல் பெறும் நிலை”. இதற்குள் “சீதாராமன்” தான் எடுத்துக் கொண்ட சுவை எதுவோ.., “அந்த எண்ணமாக” இயக்குகின்றது.

 

 

நாம் செய்யும் தவறை மறைத்தால் ஏற்படும் தீமையான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் யாரை நினைக்க வேண்டும்…?

தியானத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை… ஒன்றும் கிடைக்கவில்லை…! என்று சொல்வதன் காரணம் என்ன..?

business and shopping

செய்யும் தொழிலைத் தெய்வமாக எப்படி மதித்து நடப்பது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் வியாபாரம் சீராக வேண்டும் என்றால் காலை துருவ தியானம் முடிந்த பின்
1.உங்கள் வியாபாரப் பொருள்கள் மீது எண்ணத்தைச் செலுத்துங்கள்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி இந்தப் பொருள்கள் முழுவதும் படர வேண்டும்
3.இந்தப் பொருள்களைப் பயன்படுத்துவோர் குடும்பங்கள் நலம் பெறவேண்டும்
4.அவர்கள் உடல்கள் நலம் பெறவேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் செலுத்துங்கள்.
5.இந்த நினைவாற்றல் நீங்கள் கையில் எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் பதிவாகும்.
6.அதை வாங்கிச் செல்வோருக்கும் அந்தப் பொருள் உயர்ந்ததைக் காட்டும்.
7.உணவுப் பொருளாக இருந்தால் சுவையாக இருக்கும்… அவர்கள் உடலும் மனமும் நலமாகும்.

அதன் வழி கொண்டே மீண்டும் நம்மிடம் வியாபாரம் செய்து பொருள்களை வாங்கும் நிலை வரும். அதே சமயத்தில் நமக்கு வியாபாரமும் பெருகும். அவர்கள் உடலும் நலமாகின்றது.

உதாரணமாக நீங்கள் ஒரு ஜவுளித் தொழில் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதை அடுத்தவர்களுக்குக் கொடுக்கப்படும் பொழுது “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி” இந்த ஆடைகள் முழுவதும் படர வேண்டும்… இதைப் பயன்படுத்துவோர் உடல் நலம் பெறவேண்டும்… அவர்கள் தொழில் வளம் பெறவேண்டும்…! என்று எண்ணி விட்டு மொத்த வியாபாரத்திற்குச் சரக்கை அனுப்பிப் பாருங்கள்.

அதை எதற்குள் ஒளித்து வைத்திருந்தாலும்… துணிகளைப் பிரட்டிப் பார்க்கும் பொழுது… “நீங்கள் ஜெபித்த அந்தத் துணியை” நிச்சயம் அவர்கள் வாங்குவார்கள்.

அங்கே வியாபாரம் அதிகமாகும். அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். நமது வியாபாரத்தைப் பற்றியும் கேட்பார்கள்.

இப்படிப் பல பரீட்சார்ந்தமான நிலைகளில் நாம் இதன் வழி செல்வோர் வியாபாரத்திற்குச் செல்லும் பொழுது வியாபாரம் பெருகி வருவதையும் பார்க்கலாம்.

இது எல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொண்டது.

ஆகவே இந்தக் காலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சீராக வளர்த்துக் கொண்டே வரவேண்டும்.

ஆனால் இந்த வாழ்க்கையில் “எனக்கு இப்படிச் செய்தான்… அப்படிச் செய்தான்… பாக்கிப் பணம் வரவில்லை… என் உடலுக்கு ஒன்றுமே முடியவில்லை…” என்ற இதைப் போன்ற உணர்வுகள் பற்றாகி விட்டால்
1.வேதனை என்ற நோயாகி – இந்தப் பற்றின் தன்மை கொண்டு
2.மீண்டும் நாம் இழி நிலைச் சரீரங்களைத் தான் பெறும் தன்மை வருகின்றது.

இதைப் பற்றிடாது நாம் பாதுகாக்க… நாம் காலை துருவ தியானத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெறவேண்டும் என்று இதைப் போல் நாம் தொடர்ந்து செய்வோம் என்றால்
1.அருள் மகரிஷிகளின் பற்று நமக்குள் வளர்கின்றது.
2.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் பற்றற்றதாக மாற்றுகின்றது.

அதே சமயத்தில் இதைச் செய்வதனால் நமக்குள் அந்த அரும் பெரும் சக்தியை வளர்க்க முடிகின்றது.

செய்யும் தொழில் தெய்வமாகின்றது..!

 

சாக்கடை அருகே அமரச் செய்து அண்டத்தையே காட்டினார் குருநாதர்

ஒரு சமயம் குருநாதர் என்னை டீ வாங்கி வரச் சொல்லி சாக்கடையில் இருக்கும் மண்ணை எடுத்து, இந்த டீக்குள் போடச் சொல்லி, “நீ குடி…!என்றார். அதைச் சொன்னவுடனே எனக்கு எப்படி இருக்கும்…?

 

சாமிவாந்தி வருவது போல இருக்கின்றது…என்றேன்.

 

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாயே…? “இப்பொழுது நீ இதைக்  குடி…என்றார்.

 

நான் அசிங்கமாக இருக்கின்றது சாமிஎன்றேன்.

 

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாயேசெய். இல்லையென்றால் போ…! என்றார். அதைச் சொன்னவுடன் கொஞ்சம் கொஞ்சமாக மறுத்துக் கொண்டு இருந்தவுடன் அப்புறம் ஓங்கி இரண்டு, மூன்று அடியும் கொடுத்தார்.

 

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று நீ சொல்லிவிட்டு இப்பொழுது மீறுகின்றாய்… என்றார்.

 

அதைப் பார்த்தாலே இங்கே எனக்கு உமட்டல் வருகின்றது. சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்டிருக்கின்றார்கள். அதை டீக்குள்ளே போட்டுக் குடிக்கச் சொல்கின்றார் குருநாதர். நான் என்ன செய்வது…? என்ன சாமி…? இப்படி சொல்கின்றீர்களே…! என்றேன்.

 

என்ன சொன்னாலும் நான் சொன்னதைச் செய்கிறேன் என்று சொன்னாய், செய்…! என்றார். அப்படிச் சொல்லிவிட்டுச் சாக்கடைக் கழிவுகளை எடுத்துப் போட்டார். எனக்கு உமட்டலாகவே இருந்தது. பிறகு நான் குடிக்கின்றேன், நீ குடிக்கின்றாயா…? என்றார்.

 

சரி நான் குடிக்கின்றேன் என்று சொன்ன பிறகு அவர் குடித்தார். அப்பொழுது, அந்தச் சாக்கடையிலிருந்து எடுத்துப் போட்டு குடிக்கும்போது, அதனுடைய மணமோ நாற்றமில்லை. அதற்குள் பேரானந்த நிலைகளை, எங்கெங்கேயோ பெரு உலகத்தினுடைய நிலைகளைக் காட்டினார்

human birth

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் மீண்டும் ஜெனனத்திற்கு வந்து குழந்தையாக எப்படிப் பிறக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“ஒலி கொண்டு உராயும்…” அமிலச் சேர்க்கையின் வார்ப்பின் வார்ப்பாகத்தான் பல தொடர்பலையில் வலுக் கொண்ட உயிராத்மாவானது… சுவாச ஈர்ப்பில் நம் உடலுக்குள் எண்ண நிலைக்கொப்ப குண நல ஈர்ப்புப் பிடியில்… சில சில காலங்களில் வந்து சேர்கிறது.

அதாவது மனித எண்ணத்தின் பன்னிரெண்டு வகை குண அமில நிலைக்கொப்ப எந்தக் குண நிலை கொண்டுள்ளோமோ அக்குண ஈர்ப்புத் தொடர் கொண்ட ஆத்ம உயிரானது… நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் உணர்வின் குண நிலைக்கொப்ப “நம் சுவாசமுடன்” நுரையீரலில் உட்புகுந்து விடுகிறது.

எந்த ஆத்மா நம் குண ஈர்ப்பிற்கு நம் சுவாசமுடன் வந்ததோ அவ்வுயிராத்மாவின் துடிப்பு நிலை நம் சுவாசமுடன் நுரையீரலில் உட்புகுந்து அதன் துடிப்பான அணுக்களை வளர்த்து இரத்த நாளங்களில் உட்புகுந்து விடுகிறது.
1.ஆத்மாக்கள் பெரும்பகுதி குடியிருக்கும் இடம் இரத்தநாளங்கள் தான்.
2.அதிலே சுழன்று கொண்டே இருக்கும்.

அப்படிச் சுழலும் நிலையில் அதற்குகந்த வேட்கை குண அணுக்களை நம் உடலில் வளர்க்கத் தொடங்குகிறது.

நாம் சில சந்தர்ப்ப காலங்களில்
1.தன் நிலை மறந்த உணர்வுடன் கூடிய ஈர்ப்பு எண்ணத்தில் செல்லும் பொழுது
2.நம் உடலுக்குள் குடி வந்த ஆத்மாவானது
3.அது வளர்க்கும் அணுக்களின் அதன் எண்ணச் செயலில் வேகத்தால்
4.அதன் ஈர்ப்புப் பிடிக்கு நம்மை உட்படுத்தி… அதன் வசத்திற்கு நாம் செல்லும் காலங்களும் உண்டு.
5.அவையே நம் வளர்ப்பின் கருவாக உருப்பெற்று குழந்தைகளாக ஜெனனம் பெறுவதும் உண்டு.

நற்குண சுவாச ஈர்ப்பில் முந்தைய காலத் தொடர்பு கொண்ட வலுப் பெற்ற உயிராத்மாக்களும் தொடர்பு கொண்டு ஈர்ப்புப் பிடியில் ஜெனனத்திற்கு வருகின்றன.

இரத்தநாளங்களில் உள்ள இவ்வுயிராத்மாக்கள் தான் ஆண் பெண் உறவு நிலையில்
1.காந்த ஈர்ப்பு நுண் அலையை வளர்க்க வல்ல வண்ணங்களில்
2.வெண்மை அமிலக்கூறின் வார்ப்புச் செயலான ஆணின் அணு வளர்ப்பின் சேர்க்கை வித்துடன்
3.காந்த மின் அலையை ஈர்க்க வல்ல வீரிய உணர்வு கொண்ட உஷ்ண அலையின் சேர்க்கைக் காலங்களில்
4.நம் உடலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
5.பெண்ணின் வீரிய குண உஷ்ண அணுக்களின் உயிரணு வளர்க்கும் காலங்களில்
6.ஆணின் அமிலச் சேர்க்கையில் கரு ஈர்ப்பிற்கு வந்து கருத்தரிக்கின்றது.

கருத்தரித்த காலத்தில் தாய் எடுக்கும் சுவாசத்தால் இக்கருவானது அதன் உயிர் ஆத்மா திடம் (உடல்) கொள்கிறது, திடம் கொண்ட நிலையில் அவ்வாத்மா வளர்க்கும் அவ்வமிலத்தின் உஷ்ண அலையில் உயிரணுக்கள் வளரத் தொடங்குகிறது.

கருவுற்ற நிலையில் அந்த ஆத்மா உராய்ந்து உராய்ந்து வலுப் பெற்று உருவாகி வளரும் அந்த அணுக்களின் மலம் வெளிப்பட்டு அதுவே மீண்டும் அணுவாகி வளரும் கரு வளர்ப்பு வார்ப்பு சரீர நிலையாக உருவாகின்றது.

தாயின் கர்ப்பத்திலேயே கர்ப்பப் பையில் தான் அவ்வாத்மாவும் வளர்கின்றது. ஆத்மாவின் ஈர்ப்பு உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் அக்கரு வளர்ந்து அக்கருவின் எலும்புப் பாகங்கள் உறுதி கொள்கிறது.

எலும்பின் ஈர்ப்பு வளர்ச்சி வளர்ந்த பின்பு தான் அந்த உயிராத்மாவானது ஜெனனப் பிறப்பிற்கு வருகின்றது.

வலுக் கொண்ட காந்த ஈர்ப்பு வார்ப்பு வார்ப்பாக சரீரம் உருவான பிறகு…
1.அச்சரீரத்தை இயக்கி வளர்ந்த ஆத்மா வலுக் கொண்ட பிறகு
2.தாயின் சரீரத்திற்கும் சேயின் சரீரத்திற்கும் தொடர்பு கொண்ட
3.தொப்புள் கொடியின் தொடர் ஓட்ட நிலை சேய் வளர்ச்சி கொண்ட நிலையில்
4.தாயின்றித் தனித்துச் சக்தி பெறும் ஆற்றல் கொண்ட நேரத்திலேயே
5.அதன் துடிப்பு வேகம் அதிகப்பட்டு…
6.தாய்க்கும் சேய்க்கும் தொடர்பான தொப்புள் கொடியைப் பிரித்துக் கொண்டு
7.தன் இச்சைக்கு வளரும் சிசுவாகப் பிறக்கின்றது.

தாயின் கருவில் சிசுவாக வளரும் காலத்தில் துடிப்பு நிலையின் இயக்கம் ஒன்று தான் அச்சிசுவிற்கு உண்டே தவிர… சிறுநீர் கழிப்பதோ.. மலம் கழிப்பதோ… சுவாசம் எடுப்பதோ… உணவு எடுப்பதோ… இச்செயல்கள் எவையும் இல்லை.

ஆனால் தாயெடுக்கும் சுவாசத்தால்… தாய் எடுக்கும் உணர்வுகளின் எண்ணத்தின் அலைத் தொடர்பு யாவையுமே… ஒலி ஈர்ப்பின் தொடர்பை அச்சிசு பெறுகின்றது.

கரு வளர்ப்பில் அக்கருவின் ஆத்மா தாய்க்கும் சேய்க் கருவிற்கும் தொடர்பு கொண்ட “உதிரத் தொடர்பில்”
1.உதிர அணுக்களின் வளர்ப்பணு உராய்வு திட வளர்ப்பினால் தான்
2.அணு முட்டையாகத்தான் கரு உருவகம் பெறுகின்றது
3.உண்டு கழித்து உருவாகுவது இல்லை… “உருவாகும் உயிரணுக் கரு…!”

உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் உயிராத்மா தாயின் உதிரத் தொடர்பைக் கொண்டு தன் வளர்ப்பிற்குச் சத்தெடுத்து உருவாகின்றது.. வளர்கின்றது… பிறக்கின்றது.

பிறந்த பிறகுதான் தன் இச்சையில் சுவாசம் எடுத்து உணவெடுத்து செவி ஈர்ப்பும் ஒளிப் பார்வையும் ஒளி வீச்சும் செயல்பட ஆரம்பிக்கின்றன.

மனித உரு கரு உருவாகும் தருணத்தில் உருவங்களும் நிறங்களும் அங்க அவயங்களின் வார்ப்புகளும் தாயின் உதிர உஷ்ண ஓட்டத்தால் இவ்வாத்ம உயிர்…
1.ஏற்கனவே எந்தெந்த முலாமில் எல்லாம் வார்ப்பாகி வார்ப்பாகி வலுக் கொண்டு வழித் தொடர் பெற்று
2.எதை வளர்க்கக்கூடிய வித்தாக அவ்வுயிராத்மாவின் முலாம் இருந்ததோ
3.அதன் தொடர்பு கொண்ட உருவக அங்க இலட்சணங்கள் தான்
4.கருவகக் காலத்தில் பெற்று வந்த வார்ப்பு உருவாகப் பிறப்பெடுத்து வளர முடியும்.

சாமி சொன்ன நிலையை எடுத்தால் நல்ல நிலைகளை அடையலாம் 

ஆரம்பத்தில் யாம் சக்தி கொடுத்தவர்கள் என்ன செய்தார்கள்…?

உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் சேவை எப்படிச் செய்ய வேண்டும்…?

Gnana peace and silence

மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே நல்லதாகும்…!

கோர்ட்டுகளில் கேஸ்கள் நடக்கும். பல பிரிவினைகள் நடக்கும். ஏமாற்றும் சக்தி கொண்டு… “மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்…” ஏராளம் அங்கே உண்டு.

இப்படி ஏராளமாக இருப்பினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்யும் செயல்களை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தறியப்படும் பொழுது நமக்குள் விஷத்தின் தன்மையே கூடுகின்றது.

எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள்…
1.மீண்டும் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பை உருவாக்கும் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.
2.இதைப் போன்ற வெறுப்பு நமக்குள் வளரப்படும் பொழுது அதையே நினைத்துக் கொண்டு
3.அதைப் பற்றி யாரிடம் சொன்னாலும் ஒரு வெறுப்பான சொல்களையே சொல்வோம்.

ஆனால் அந்த வெறுப்பான சொல்களைச் சொல்லும் பொழுது வெறுக்கும் உணர்ச்சியைத் தூண்டி கேட்போர் உணர்வுக்குள்ளும் இது பதிவாகி அவர்களும் நமக்கு எதிரியாகத்தான் வருவார்கள்.

யாரை எண்ணி வெறுத்தோமோ… அவர்களுக்கும் இந்த உணர்வுகள் போகும். அங்கேயும் இது உருவாகும்… நமக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மையே உருவாகும்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த வேண்டுமல்லவா…! அப்படித் தடைப்படுத்த வேண்டும் என்றால் நாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

“ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த வெறுப்பு வளராதபடி தடைப்படுத்த வேண்டும்.

பொதுவாக நாம் யாரை யாரை எல்லாம் நாம் பார்க்கின்றோமோ “அவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற பொது விதிப்படி…” நமக்குள் அவரைப் பற்றிப் பதிவான உணர்வுகளைத் தடைப்படுத்திவிட வேண்டும்.

பின் யார் நமக்கு தீங்கினைச் செய்தாரோ.. அவரை எண்ணி
1.என் பார்வை அவரை நலலவராக்க வேண்டும்
2.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணம் உதயமாக வேண்டும்
3.அவர்கள் தவறுகளை அவர்கள் உணரும் சக்தி பெறவேண்டும்
4.தவறான நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று
5.இத்தகைய உணர்வுகளை எடுத்து அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது நமக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் வரும் பொழுதெல்லாம் அவர்களும் இதை நுகர்வார்கள். தனக்குள் உணர்வின் ஒலி அலைகளை மாற்றுவார்கள்.

உதாரணமாக… இராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின் இதற்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும்
1.இராக்கெட் பழுதானால் இங்கே தரையிலிருந்து லேசர் இயக்கமாக இயக்கி
2.அந்த இயந்திரத்தைப் பூமியிலிருந்தே சீர் செய்கிறார்கள்.

இதே போல ஒரு பழுதடைந்த மனதைச் சீர் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அவர்களுக்குப் பாய்ச்சி நம்மைக் காக்க முடியும்.

தொழில் நிமித்தங்களோ அல்லது குடும்ப நிலைகளிலோ அல்லது பற்று கொண்ட சொந்தத்தில் தொழில் நடத்தும் பொழுதோ சில வித்தியாசமான உணர்வுகள் வந்த பின் ஒருவருக்கொருவர் பகைமையகின்றது.

பகைமையானபின்… அது நம்முடைய பொருள் தான் என்று தெரிந்தாலும் அந்தப் பகைமை உணர்வுகள் தான் அவர்களைச் செயல்படுத்தும்
1.பொருள் அவர்களுடையது…! என்று கொடுக்காத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
2அதாவது நம்முடைய பொருளை எடுத்துக் கொண்டு அது என்னுடையது தான்…! என்று சொல்வார்கள்.

இத்தகைய தன்மை தான் இன்று உலகில் பெரும்பகுதி நடக்கின்றது.

இதைப் போன்ற தீமைகள் நடக்கும் நிலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடல் அழுக்கைப் போக்க குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கச் சோப்பைப் போட்டுத் துவைக்கின்றோம்.

இதைப் போல் நம் ஆன்மாவில் பட்ட அழுக்கினைப் போக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.நாம் எந்த வெறுப்பினை அடைந்தோமோ அவர்களை எண்ணி
2.அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று எண்ணினால்
3.அந்த உணர்வின் தன்மை நமக்குள் இருந்து அவர்கள் மீது வெறுப்பில்லாத நிலைகளை உருவாக்கும்.

அறிந்துணர்ந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்… பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் அவருக்குள் வரக்கூடாது… என்று இந்த உணர்வை நாம் எண்ணினோம் என்றால் அவர்கள் நம்மைப் பகைமையாக எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகளை அவர்கள் நுகரப்பட்டு
1.பகைமையை மறக்கச் செய்து
2.அங்கே சிந்திக்கும் திறனை உருவாக்கச் செய்யலாம்.

ஏனென்றால் அவ்வளவு பெரிய உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம். அதை நீங்கள் “பொறுமையுடன்…” கையாள வேண்டும்.

கண்கள் முதலில் எப்படித் தோன்றியது என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்

 

இன்று விஞ்ஞானிகளில் தான் கண்டதை படமாகக் காட்டுகின்றனரோ அதே போல் இயற்கையில் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது என்பதை அப்படியே காட்டினார். கண்கள் தோன்றிய பின் வலு கொண்ட மற்ற உறுப்புகளும் பரிணாம வளர்ச்சியும் எப்படி வந்தது..? என்பதையும் காட்டினார். நான் படித்துப் பாடமாகச் சொல்லவில்லை. கண்டு உணர்ந்ததைச் சொல்கிறேன் (ஞானகுரு).

souls-cleaning

காலையில் கண் விழித்ததும் ஏன் துருவ தியானம் செய்ய வேண்டும்…?
கேள்வி;-
நம்முடைய உயிர் ஒளியான பிறகு உயிர் பிரிந்து துருவ நட்சத்திரத்துடன் இணைந்து விடும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் தினமும் துருவ தியானத்தைக் கடைப்பிடித்தால் உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து விடுமா…? துருவ தியானத்தை தினமும் நான் செய்யலாமா…?

பதில்:-
பழம் கனிந்தால் மரத்தில் தங்காது. நெல் பயிரில் மணிகள் உருவாகி விளைந்து விட்டால் “நெல் செடியை அறுத்து…” நெல்லை மட்டும் பாதுகாப்பாக எடுத்துத் தான் ஆக வேண்டும்.

இது எல்லாம் இயற்கையின் நியதி.

அது போல் மனித ஆன்மா ஒளியானால் விண்ணுக்குத் தான் போகும். இங்கேயே இருக்க முடியாது. இதற்காக நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

இந்த உபதேசம் கொடுக்கப்பட்டது இந்த இயற்கையின் உண்மையை உணர்த்துவதற்காகத்தான்.

மனித வாழ்க்கையில் நாம் வாழக்கூடிய குறுகிய காலமான சுமார் 60, 70 ஆண்டு காலத்திற்குள் அந்த மெய் ஒளியைப் பெற்று அதன் மகசூலாக நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமானது.

தாய் குழந்தையைப் பெற்றடுக்கும் காலம் சராசரியாக 9-10 மாதங்கள் என்று சொல்கிறோம் அல்லவா. அது போல் தான் இதுவும்…!

அதாவது குறைப் பிரசவம் ஆனால் குழந்தை வளர்ச்சி இருக்காது அல்லது இறந்துவிடும்.

குழந்தை எப்படி 10 மாதங்களில் வளர்ச்சியாகி முழுமை அடைந்து வெளி வருகின்றதோ அது போல் நாமும் நமக்குள் அருள் ஒளியை முழுமையாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பது தான் அந்த உபதேசத்தின் மூலக் கருத்து.

நீங்கள் பயப்படுவது போல் ஒரே நாளில் சக்தியை எடுத்து… அப்படியே உடலை விட்டுப் பிரிந்து… விண்ணுக்குச் செல்வது அல்ல. அப்படி யாருமே அடைய முடியாது.

 

1.சிறுகச் சிறுகத்தான் வளர முடியும்.
2.சிறுகச் சிறுக வளர வேண்டும் என்றாலும்
3.செடிக்குத் தண்ணீர் உற்ற வேண்டும் அல்லவா (செடிக்குத் தண்ணீர் ஊற்றவில்லை என்றால் வாடிவிடும்)

அது போல் ஆகாதபடி அனு தினமும் நாம் அந்த அருள் சக்தியைப் பெற்று ஞானப் பயிரை வளர்த்துக் கொள்ளும் பழக்கத்திற்காகத் தான் குருநாதர் “துருவ தியானம் செய்ய வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

தியானத்தின் மூலம் பெறும் வலுவால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும்

வாழ்க்கையே தியானமாக்கினால் மகரிஷிகள் அடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவருமே நீங்கள் அகஸ்தியராக ஆக வேண்டும்

Sabdharishis

இங்கே போதனை கொடுப்பது சாதாரணமாகவும்… விளையாட்டுக்காகவும் அல்ல…!! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியின் முக்கியத் தாதுப் பொருள் இரும்பு. இதன் நிலையில் ஒத்த ஜீவ ஜெந்துக்களும் தாவர இன வளர்ப்புகளும் இதன் தொடர் வளர்ச்சியுடையதாகத்தான் வளர்ந்து வந்துள்ளன இன்றளவும்.

எப்படி உலோகங்களிலேயே ஒவ்வொரு உலோகத்திற்கும் அதன் கன அளவுக்குக் கொள்ளளவு நிறையில் வித்தியாசம் உள்ளதோ… அதாவாது ஒரு எடை போடும் தராசில்
1.இரும்பின் கனம் ஒரு கிலோவுக்குள்ள எடையின் கொள்ளளவைக் காட்டிலும்
2.பிற உலோகங்கள் அதிகமாக நிறை தெரிகின்றது அல்லவா…! (உருவ நிலை)

இதன் நிலைக்கொப்ப “நம் பூமியின் நிறை” கனம் பொருந்திய ஜீவ ஈர்ப்பில் நீர் சக்தி வளர்ந்துள்ள இரும்புத் தாதுப் பொருளின் கூடுதல் நிறை கொண்டது அத்தகைய வளர்ப்பில் தான் பூமியில் உள்ள வளர்ப்பு யாவும் உள்ளன.

இன் வரும் காலத்தில் இம்மண்டலச் சேர்க்கைக் காலத்தில் பூமியைப் பாதிக்கவல்ல சில நிலைகள் ஏற்படப் போகிறது.

அத்தொடரிலிருந்து நாம் தப்ப இந்தப் பூமி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய தன்மைக்கு நம் சுவாசத்தில் மேல் நோக்கிய தொடர்புடையதாக சூரிய அலை வட்டத்தில் நுண்ணிய காந்த அலையை நாம் எடுக்கப் பக்குவப்பட வேண்டும்.

அந்த விண்ணின் ஆற்றலை நம் உடல் உறுப்பான எலும்புகளில் சேர்த்து அவ்வலைத் தொடரான குண ஈர்ப்பு வார்ப்பு அணுக்களை இவ்வெலும்புக்குள் ஒளியான அணுக்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒளியான அணுக்களை வளர்க்க வளர்க்க…
1.இச்சரீரக் கூட்டையே பூமியின் பாதிப்பு நிலை ஏற்பட்டாலும்
2.விண்ணின் ஆற்றலை நாம் எடுக்கும் சுவாச அலையின் சுவாச அலை வளர்ப்பினால்
3.இவ்வுடல் வாழ்க்கை இந்தப் பூமியில் வாழ்ந்தாலும்
4.நம் எண்ணத்தில் எடுத்த சுவாசத்தால் தன் ஆத்ம வலு கூடி
5.சூரியக் குடும்பத்திற்குச் சொந்தப்பட்டதாகச் செயல்படத்தக்க பக்குவ ஆத்மாவாகின்றது.

இங்கே பாடத்தில் உணர்த்துவதும்… போதனை தருவதும்… சாதாரண நிலையிலும் விளையாட்டுப் போன்ற உணர்விலும் இருக்கலாம்.

ஆனால் நடக்கப் போகும் காலத்தில்…
1.இனி நிகழ்பவை எல்லாமே ஞானத்தைச் செயலாக்கும் மனிதனின் சித்தமெல்லாம் கலங்கி
2.சிதறும் அழிவு நிலையில் தான் ஓடிக் கொண்டுள்ளது.

மனிதன் தன்னைத் தான் உணர்ந்து.. ஆத்ம வலுவை உயர் ஞான ரிஷிகளின் அலையுடன் தொடர்பு படுத்தினால் அன்றி… இந்தப் பூமிப் பிடிப்பு சாதாரண வாழ்க்கை நிலையில்.. “தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்…!”

1.ஆத்மாவின் உண்மை அறிந்து
2.ஆத்மாவைக் காணவும்
3.ஆத்மாவுடன் நாம் பேசவும்
4.ஆத்மாவைக் கொண்டே அகிலத்தையும் அறியும் ஆற்றலையும் நாம் பெறும் பக்குவத்திற்கு
5.இச்சரீர எண்ணத்தின் சுவாசத்தை இதுநாள் வரை சொன்ன முறைக்கொப்ப தியானத்தால் வலுக்கூட்டுங்கள்.

சநதிர மண்டலத்தின் ஒளி பிரகாசமாக ஒளிராமல் இருப்பதற்கு அதன் ஈர்ப்பில் பூமியை ஒத்த கனம் பொருந்திய இரும்புத் தாதுப் பொருள் குறைவாக உள்ளது தான் காரணம்.

சந்திர மண்டலத்தைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே மண்ணும் நீரும் கலந்த கனத்த காற்றாக அங்கு வீசிக் கொண்டிருப்பதனால் அதன் ஒளி வீச்சு குறைவாக உள்ளது.

அதைப் போன்று ஒவ்வொரு மண்டலத்திற்குமே தனித் தனி மாறு கொண்ட ஈர்ப்பு நிலை உள்ளது. சூரியக் குடும்ப மண்டலங்களிலேயே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட வளர்ப்பிலேயே “பல மாற்றங்கள் உண்டு…”

அதைப் போன்று மனிதனின் எண்ண குணத்திலும் மற்றெல்லா வளர்ப்புத் தன்மையிலும் மாற்றங்கள் உண்டு…!

ஒலி கொண்டு ஒளியான உயிரணு அமிலக்கூட்டு நிலைக்கொப்ப வளரப்பெற்ற வளர்ப்பில்… ஞான வளர்ச்சி கொண்ட மனிதக் கரு வார்ப்பு மனிதன்

1.ஒருவரைப் போன்று ஒருவருக்கு ஞான வழிச் சித்து அமையும் என்று எண்ணாமல்
2.மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பு வலுவினால்
3.தன் ஆத்ம வலுவை தன் அமிலக் கூட்டின் நிலைக்கொப்ப உயர்வாக்கிக் காணுங்கள்.

உங்களால் வரப் போகும் மாற்றத்திலிருந்து விடுபட முடியும்…!

உன் உயிரை நீ ஏன் நேசிக்க வேண்டும்…? என்று கேட்டார் ஈஸ்வரபட்டர்

 

ஓ…ம்என்பது பிரணவம் என்று, நமது சாஸ்திர விதிகள் கூறுகின்றன. நமது உயிர்ஓ…என்ற நிலைகளில் நமக்குள் பிரணவமாகி ஜீவனாக இயங்குகின்றது.

 

ம்…என்கிற போது, நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் உடலாக அமைகின்றது. அதனால்ஓ…ம் ஈஸ்வரா…!நமக்குள் இயக்க சக்தியாக நம் உயிர் இருக்கின்றது, என்ற நிலையை குருநாதர் தெளிவாக உணர்த்தினார்.

 

ஆகவே நாம்ஓம் ஈஸ்வரா…என்று வெறும் வாயில் சொல்வதற்குப் பதில் நாம் எண்ண வேண்டியது நம் உயிரை…! நமக்குள் ஜீவனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும், இச்சக்தியை (“உயிரை”) நீ எப்படி நேசிக்க வேண்டும்? என்று நமது குருநாதர் முதல் நிலையிலே எனக்கு உணர்த்தினார்.

 

நமக்குள் இருந்து இயக்கும் உயிர், நம்மை எப்படி இயக்குகின்றது என்ற நிலையைத் தெரிவதற்கு, நாம் மனிதனானபின் இந்த உயிரின் நிலைகளை, நாம் அறிந்து கொள்ளக்கூடிய நிலைகள் ஏற்படுகின்றது.

 

ஓ…ம் ஈஸ்வராகுருதேவா…என்று எண்ணும்போது நம் உயிரை, நினைவில் கொண்டு தான் இந்த சொல்லை நாம் சொல்ல வேண்டும். நம் உயிரை நேசிக்கும் நிலையாக அவர் சொன்ன முறைப்படித்தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்

 

தள்ளுபடி (OFFER – DISCOUNT) என்ற பெயரில் எதிலே ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்…! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

செல்வத்தைச் சேர்த்துப் புகழைச் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய மனிதனுக்கு உள்ளது

ஞானிகளை அணுகுவோர் உடலுக்கும் செல்வத்திற்கும் தான் கேட்கின்றார்களே தவிர “ஞானத்தைக் கேட்க முற்படவே இல்லை

siddhar and siddhis

காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்பைப் போல் உயர் ஞான வசத்தின் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.ஆத்மாவாகித்தான் சரீர பிம்பத்தையே பெறுகின்றோம்
2.சரீர பிம்பத்தின் சமைப்பைக் கொண்டுதான் ஆத்மாவின் வலுவைக் கூட்ட முடிகின்றது.

சரீர எண்ண இயக்கத்தின் பிடிப்பு வாழ்க்கை அலையிலேயே நம் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தால் அதே அமிலச் சத்தின் குண வலுவை ஆத்மா பெற்றுப் பெற்று… அதன் தொடரிலேயே தான் செல்லும்.

அத்தகைய சரீர இயக்க ஈர்ப்பலையின் பிடியிலிருந்து…
1.எண்ணத்தின் உணர்வை உயர் ஞான ஜெப முறையினால்
2.மேல் நோக்கிய சுவாசம் கொண்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களின் வலுவை
3.உடலில் உள்ள எலும்புகளில் அந்த வலுத்தன்மையைக் கூட்டிக் கொண்டால்
4.அந்த வலுவின் அமிலத்தால் ஆத்ம வலுவும் உன்னத வலுத் தன்மை பெற்று விடும்.

இப்படி… சரீர இயக்க எண்ண உணர்வையே இவ்வுயர் ஞான ஈர்ப்பலை வலு ஆத்மா பெற்றால் ஆத்மாவானது தனித்து எங்கும் சென்று செயலாற்றக்கூடிய வலு பெறும்.

1.இவ்வுடலின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஈர்ப்புத் தொடர் அலையால் எங்கும் ஆத்மாவைச் செலுத்தி
2.பால்வெளி மண்டல எந்நிலையிலும் ஆத்மாவைச் செலுத்தி
3.உடல் ஈர்ப்பின் தொடரிலேயே எதனையும் அறிய முடியும்.

ஆகவே இச்சரீர எலும்புக்கூட்டினை வலுவாக்கி அதன் காந்த மின் அலையின் ஈர்ப்பை வலுக் கொண்டதாகச் செயல்படுத்தி இவ்வாத்மாவை இவ்ஈர்ப்புப் பிடியிலிருந்தே தனித்து அனுப்பி… உடல் தொடர்புடனே உணரும் பக்குவம் அடைய வேண்டும்.

உடலைச் சுற்றித் தான் இவ்வாத்மா உள்ளது…!
1.ஆத்மாவின் அலை மோதலில் உடல் உருவாகிச் செயல் கொண்ட நிலையை
2.உடலின் இயக்கம் கொண்டே இவ்வாத்ம வலுவால் நாம் பெறும் உயர் ஞானச் சித்து செயலினால்
3.”சகல சித்துத் தன்மையுமே” நாம் பெற முடியும்.

ஒரு காந்தமானது எப்படி இரும்பைத் தன் வசத்திற்கு இழுத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று உயர் ஞான வசத்தில் (ஈர்ப்பில்) எண்ணத்தின் ஈர்ப்புச் செயல் இருக்குமேயானால் “மனிதனின் உயர் குணத்தை மனிதனே அறிய முடியும்…!”

ஆனால் பல காலமாகச் சேமித்த ஆத்ம வலுவினை… இன்றைய செயற்கை முறை வாழ்க்கைக்காக… உன்னத நிலை பெறும் ஞான வழித் தொடர் அறியும் “உயர் தியான முறையை…” வாழ்க்கையின் செயலுடன் ஒன்றச் செய்து விட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்…?

1.மாறு கொள்ளப் போகும் மண்டல ஈர்ப்புச் சுழற்சி ஓட்ட கதியில்
2.மண்டலச் சேர்க்கையின் காலங்கள் (கல்கியுகம்) உருவாகும் தருணத்தில்
3.ஞானத்தின் ஈர்ப்பை எடுக்கவல்ல காற்றலையின் தொடர் நிலையே
4.மண்டல ஓட்டச் சேர்க்கைக் காலத்தால் பாதிப்பு ஏற்பட்டு
5.மனிதனின் எண்ண உணர்வே சித்தம் கொண்ட பிரமை கொண்ட நிலையில்
6.மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு).

இதிலிருந்தெல்லாம் தப்பி… தன் ஞான சக்தியை உயர்த்தி… தன் ஆத்ம வலுவையே… தான் உணரும் பக்குவத்தின் உண்மைச் செயலாகச் செயல்படுங்கள்.

ஞானம் பெற ஆயுசு பத்தாது என்று குருவிடம் சொன்னேன்

நீங்கள் சொல்லும் உயர் ஞானத்தை எல்லாம் பார்ப்பதற்கு எனக்குத் திறன் இல்லை. எனக்கு இந்த ஆயுள் பத்தாது என்று குருவிடம் சொன்னேன்.

 

ஆயுள் பத்தாது என்ற நிலைக்கு நீ சொல்ல வேண்டியதில்லை, நான் அல்லவா சொல்ல வேண்டும் என்று திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டு வந்தார்.

 

ஒருவர் திட்டினால் மட்டும் நீ கூர்ந்து கவனித்து, “இருடா, நான் பார்க்கின்றேன் என்று சண்டைக்குப் போகத் தெரிகின்றது. அவனை நீ நினைக்கும்போதெல்லாம், எப்படி உன் உடல் பதறுகின்றது?

 

அதே மாதிரி நான் சொல்வதை நீ கேட்டுக்கொண்டே வா. நீ அதைப் பெற வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வா. அந்த சக்தி உனக்குள் ஆழமாகப் பதியும்.

 

அதை நீ திருப்பி எண்ணும்போது, உனக்குள் எப்படி சக்தி கிடைக்கிறது என்பதை மட்டும் நீ தட்டாது கேட்டுக் கொண்டே வா என்று உபதேசித்தார் ஈஸ்வரபட்டர். 

early morning prayer

தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி

ஒரு தொழிலை நாம் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே வியாபாரத்தைக் கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து வரும் நிலையில் வேதனை என்று வந்துவிட்டால்
1.பின் தொழிற்சாலைக்குள் நுழையும் பொழுதே நம்முடைய பார்வை
2.அதே வேதனை கொண்ட உணர்வுடன் தொழில் செய்வோரைப் பார்க்க நேரும்.

இந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் நமக்கென்று உற்பத்தியாகும் அந்தப் பொருள்களில் நம்முடைய சோர்வைப் போன்றே உணர்வுகள் இயக்கப்பட்டு தரமற்ற பொருளை உருவாக்கும் நிலை வரும்.

நம்முடைய பார்வையே… இதைப் போன்ற நஷ்டத்தை.. ஒரு இழப்பை ஏற்படுத்தும் தன்மை வருகின்றது. இது இயற்கையின் நியதிகளில் இவ்வாறு வழிப்படுகின்றது.

இது எப்படி நிகழ்கின்றது…?

உதாரணமாக ஒரு பலகாரக் கடையில் கொடுக்கல் வாங்கலில் ஒருவருடன் கொஞ்சம் முறைப்பாகிவிட்டால் அதே உணர்வுடன் பதார்த்தம் செய்யும் வேலைக்காரரிடம் ஒரு வேலையைச் சொனனால் போதும்.

இந்த வெறுப்படைந்த உணர்வுகள் அங்கே அவருக்குள் சேர்ந்து
1.பலகாரம் செய்யும் வேலையை வழக்கமாகச் செய்வதைக் காட்டிலும்
2.ஒரு பிடி உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்
3.அல்லது காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்
4.அதனால் அந்தப் பலகாரம் சுவை கெட்டுவிடும்.

முதலாளியினுடைய உணர்வுகள்… எந்த அளவுக்கு அந்த வெறுப்புடன் இருந்தாரோ… “சரி பணம் எப்படியோ போய்விட்டது…! இனி நாம் கடை வேலையைப் பார்ப்போம்…” என்ற உணர்வுடன் உள்ளுக்குள் செல்வார்.

அங்கே பலகாரத்தைத் தயாரிக்கும் இடத்தில் வேலை செய்வோரிடம் பேசும் பொழுது அன்றைய தினம் பொருள்களில் சுவை கெட்டுப் போய்விடும்… இதைப் பார்க்கலாம்.

ஒரு நான்கு நாளைக்கு இப்படிப்பட்ட பார்வை பட்டால் உற்பத்தியாகும் பொருள்களில் நிச்சயம் சுவை கெட்டுவிடும்.

ஏனென்றால்… நம்மை (முதலாளியை) எதிர்பார்த்துச் செயல்படக்கூடியவர்கள் அவரின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து செயல்படக் கூடியவர்களுக்குள் இந்த வெறுக்கும் உணர்ச்சிகள் பதிவாகி விடுகின்றது.

அப்பொழுது நம்முடைய வெறுப்பான உணர்வே அவர்களை இயக்கத் தொடங்கிவிடுகின்றது. அதனால் நமக்கு நஷ்டமாகின்றது.

 

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் தப்புவதற்கு இந்தக் காலை துருவ தியானத்தில்
1.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி தொழில் வளாகம் முழுவதும் படர வேண்டும்
2.இங்கே தொழில் செய்வோர் அனைவருக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.இங்கே தயாரிக்கும் உணவை உட்கொள்வோர் அனைவரும்
4.அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் செயல்ப்டுத்த வேண்டும்.

அங்கே தொழிலாளிகள் தொழில் செய்கிறார்கள் என்றால் அவருக்கு இப்படி ஒரு பழக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் உயிரை எண்ணச் செய்து…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.இங்கே செய்யப்படும் உணவு வகைகள் அது சீராக அமைய வேண்டும்…
3.இந்த உணவை உட்கொள்வோர் அனைவரும் உடல் நலம் பெறவேண்டும் என்று
4.நாம் எண்ணச் செய்தல் வேண்டும்.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் அந்தச் சுவையும் கிடைக்கின்றது. அவர்களும் எல்லோரும் நலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் அதை எண்ணும் பொழுது உங்களிடம் வேலை செய்பவர்களுக்கும் உயர்ந்த சக்தி கிடைக்கின்றது.

1.இப்படி ஒருவருக்கொருவர் நாம் எண்ணும் உணர்வுகளை
2.இப்படி அருள் வழியில் செயல்படுத்தும் பொழுது அனைவருக்கும் உயர்ந்த நிலை உருவாகின்றது.
3.அதற்காகத்தான் காலை துருவ தியான நேரத்தில் தன் தொழிலை எண்ணி அந்த உணர்வுகளைப் பாய்ச்சச் சொல்வது.

அதே சமயத்தில் தன் குடும்பத்தில் குழந்தைகளுக்கும் சொல்லி அவர்கள் கல்வியையும் நல்லதாக்க வேண்டும்.

முதலில் தாய் தந்தையரை எண்ணச் சொல்லி என் அம்மா அப்பாவின் அருள் வேண்டும் என்று ஆசி வாங்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பின்… தனக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியரை எண்ணி…
1.அவர் சொல்லிக் கொடுப்பது அனைத்தும் என் மனதில் நிலைக்க வேண்டும்
2.அது எல்லாம் மீண்டும் என் நினைவுக்கு வர வேண்டும்
3.எனக்குள் அந்த ஞானம் வளர வேண்டும் என்று
4.அதி காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி குழந்தைகளைத் தியானிக்கப் பழகிக் கொடுக்க வேண்டும்.

ஆசிரியல் தனக்குள் அந்த உயர்ந்த நிலைகளை எப்படிக் கற்றுக் கொண்டாரோ அவருக்குள் விளைந்து… சிந்தித்து வெளிப்பட்ட அந்த நல்ல உணர்வுகள் உண்டு. அதைக் குழந்தைகள் எண்ணி எடுத்தால் இவர்களுக்கும் சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கின்றது.

இது தான் விநாயகர் தத்துவத்தில் உள்ள முழுமை.

ஆகவே… அதிகாலை அந்த நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து… நமக்கு எதை எல்லாம் நன்மை பெறவேண்டுமோ அதை எல்லாம் நல்லாதக்க இப்படி எண்ண வேண்டும்.

வண்டல் மண், சாணம், சாம்பல், உப்பு விஷத்தை முறிக்கும் பண்டைய கால உரங்கள் 

விஞ்ஞான வளர்ச்சி, காணாமல் போகும் செயற்கை கொள், தீவிரவாதம் 

விஞ்ஞானிகள் பெரும்பகுதி தற்கொலை செய்கிறார்கள் – வெளி வருவதில்லை…!

divine-bliss-light

“ஒருவருக்கு விபத்து…” என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் பாசம் கொண்டவரை அது எப்படி இயக்குகிறது…? நடந்த நிகழ்ச்சி

ஒரு சமயம் எனது (ஞானகுரு) மருமகளுக்கு ஒரு விபத்து வந்தது. அவர்களுடைய சகோதரி அமெரிக்காவில் உள்ளது.

இங்கே விபத்தான செய்தியை அமெரிக்காவில் இருக்கும் சகோதரி கேட்ட உடனே என்ன ஆனது…?

அடுப்பில் எண்ணெயை வைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தன் செயலை இழந்து… அந்த வேலையில் தனக்குத் தெரியாதபடி ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடமோ தாமதமான பின்… கொதிக்கும் எண்ணையைத் தூக்கும் பொழுது அறியாதபடி தன் உடலிலே ஊற்றிக் கொண்டது… !

சகோதரிக்கு ஒரு விபத்து ஆனது…! என்ற உணர்வுகள் தெரிந்த பின் இப்படி ஆனது. ஏனென்றால் இருவருமே ஒன்றாகப் பாசமாகப் பழகியவர்கள்… நடந்த நிகழ்ச்சி இது.

எண்ணெய் மேலே கவிழ்ந்த பின் அங்கே நெருப்பும் பிடித்து விட்டது. ஏனென்றால் அமெரிக்காவில் வீட்டிற்குள் உறைபனியின் குளிர் தாக்காமல் இருப்பதற்காக மரங்களை உள்ளே வைத்துத்தான் வீடு கட்டியிருப்பார்கள்.

அதாவது வெளியிலிருக்கும் குளிர் சுவற்றின் வழியாக வீட்டுக்குள் வராதபடி மரப்பலகைகளை வைத்திருப்பார்கள். அது எல்லாமே தீப் பிடித்து எரிய ஆரம்பிக்கின்றது.

1.ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒன்றாக இணையப்படும் பொழுது
2.விபத்துகள் எப்படி உருவாகிறது…? என்று பல முறை யாம் சொல்லியுள்ளோம்.

இது நடந்ததும்… “தீ பிடித்துவிட்டது..” என்று அங்கே அமெரிக்காவிலிருந்து ஃபோன் இங்கே வருகிறது.

1.சகோதரிக்கு ஒரு விபத்தாகி விட்டது…! என்று அந்தப் பாச உணர்வுகள் நினைவாக்கப்படும் பொழுது
2.அந்தப் பதட்டமான உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
3.அங்கே “தான்” பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் கவனத்தை இழக்கச் செய்து… தன்னையே மறக்கச் செய்கிறது.
4.உடனடியாக அந்த உணர்வுகள் (எங்கே இருந்தாலும்) இப்படி இயக்குகிறது.

பாசத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் பிறருடைய நிலைகளை இயக்கப்படும் பொழுது தன்னை அறியாமலே இதைப் போன்ற நிகழ்ச்சிகளைச் செயல்படுத்திவிடுகிறது.

மனிதனின் வாழ்க்கையில் அறியாமல் இயக்கும் இதைப் போன்ற தீமைகளிலிருந்தெல்லாம் மீள வேண்டும்… என்பதற்காகத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்ட பின் அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கி
1.உங்கள் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
2.அதனின்று வரக்கூடிய உணர்வுகளை உங்கள் கண்கள் இழுத்து உடலுக்குள் பாய்ச்சச் செய்கின்றது.

அப்பொழுது ஏற்கனவே உங்களுக்குள் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சுவாசித்து உங்கள் உடலுக்குள் பரவச் செய்கிறது. அப்படிப் பரவச் செய்யும் பொழுது… அந்த அணுக்களின் தன்மை…
1.எம்முடைய உபதேசத்தின் மூலம் நீங்கள் கேட்டுணர்ந்த உணர்வுகள் எல்லாம்
2.உங்கள் உடலில் கருவுக்குள் முட்டையாகின்றது.

துருவ நட்சத்திரத்தைப் பற்றிச் சிறுகச் சிறுகத் தியானிக்கும் பொழுதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்தக் கருக்கள் எல்லாம் அணுவாகப் பிறக்கின்றது.

அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தியை எடுத்து எங்கள் உடலில் உள்ள இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானித்துச் சுவாசித்து உடலுக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி நீங்கள் உணவைக் கொடுத்து அதை வளர்க்க வேண்டும். தினமும் செய்து வரும் பொழுது இது சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

முதலில் சொன்ன நிகழ்ச்சி போன்று நம் உடலுக்குள் ஏற்கனவே சந்தர்ப்பத்தால் எத்தனையோ தீமைகள் பதிவாகி இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து வலுவாக்கிய நிலைகள் கொண்டு அந்தத் தீமைகள் நமக்குள் வளர்ச்சி ஆகாதபடி தடைப்படுத்த வேண்டும்,

அதற்குத்தான் இதைச் சொல்வது.

ஈஸ்வரபட்டருடன் ஏற்பட்ட முதல் அனுபவம்

எமது மாமனார் இறந்துவிட்டார். சாமியம்மாவோ (என் மனைவி) இன்றோ நாளையோ என்ற நிலையில் இருந்தார். இவ்வளவு மோசமான நிலையில் அந்தக் கூட்டத்தில் குருநாதர் எம்மைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

 

அங்கிருந்த எமது உறவினர்களும் எம்மைப் பார்த்து அசிங்கமாகப் பேசும் நிலை ஆகிவிட்டது. தெருவில் குடியிருந்தவர்களும் எம்மை ஒரு பைத்தியக்காரன் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

 

இப்படிப் பல வகையிலும் குருநாதர் எம்மை ஒரு குற்றவாளி ஆக்கிக் கொண்டு வந்தார். எமது மாமனாருக்கான இரண்டாம் நாள் சடங்கு முடிந்து உறவினர்கள் எல்லோரும் அவரவர் ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.

குருநாதர் எம்மிடம் “நீ என்னுடன் வரவேண்டும்” என்று கட்டாயப்படுத்தினார். அவருடன் சென்றேன்.

 

சாமியம்மாவிற்கு ஏற்பட்டுள்ள நோயையும் அதற்கு டாக்டர்கள் கூறிய மருந்துகளையும் நோயின் தன்மைகளையும் குருநாதர் எப்படியே எம்மிடம் கூறினார்.

 

“உனது மனைவி பிழைக்க மாட்டார், அவரை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று டாக்டர்கள் கூறியதைக் கூறி “உனது மனைவியைக் காப்பாற்ற ஆண்டவனே வந்துவிட்டான்” என்று சொல்லி சில விஷயங்களைக் கூறினார் குருநாதர்.

temple and body

உடலை ஆலயமாக மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஞானத்தின் சுழற்சி வட்டச் செயலில் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட சித்து நிலை பெற்றோரின்… .செயல் சித்தைப் பெற்றவர்கள் (பின் வந்தோர்) எப்படியப்பா செயல்பட்டார்கள்…?

1.உண்மை வழி ஆத்ம வலுவை வளர்க்கும் செயல் சித்தை உணராமல்
2.சுயநல ஈர்ப்புப் பிடியில் விருப்பு வெறுப்பு ஏற்பட்ட காலங்களில்
3.ஜெப முறை பக்தி மார்க்கம் சிலை வைத்துப் பூஜித்ததின் செயல் வழி இவற்றின் பிடியிலே சென்று
4.உருவக நாமகரண வேதாந்த பாராயணத்தால் (பல மொழிகளில்) புரிய முடியாத தன்மையில்
5.இறை சக்தியின் உண்மை ஆத்ம வலுவை ஒவ்வொரு ஆத்மாவும் உணர முடியாமல் சென்று
6.இச்சரீரப் பிடிப்பின் அலைத் தொடரில் தான் இன்று வரையும் வாழ்க்கை பந்தம் உள்ளது.
பெற முடியாத பொக்கிஷமான ஞான வளர்ப்பின் சரீரத்தை… (மனித உடலை) அதன் உண்மை நிலையை அறியவில்லை… அறிய முற்படவும் இல்லை…!

1.சரீரம் என்பது நாம் தங்கி எடுக்கும் புனிதமான கோவில் தான்…!
2.அவ்வாத்மாண்டவனை வளர்க்கும் இல்லமாக எண்ணாமல்
3.சரீரத்தைத்தான் “நான்…!” என்ற சுகபோகச் சுவையில்
4.உண்டு கழிக்கும் நிலையில் நாம் வைத்துள்ளோம்.

ஆக… உண்மையான பேரானந்தத்தை வளர்க்கும் ஆலயத்தை செயற்கை இயந்திர கதியைப் போன்ற… “உண்டு கழிக்கும் இயந்திரமாகத் தான்” நாம் வைத்துள்ளோம்.

இவ்வுலக ஈர்ப்பில் உள்ள நன்மை தீமை என்ற வட்டத்தில்… தீமையில் நன்மையைக் காண்பதைப் போன்று உணர்வில் மோதும் செயலில் ஏற்படும் எண்ணக் கோவையில் நாம் எடுக்கும் உணர்வானது… நல்வழிப்படுத்தும் செயல்வழி சேமிப்பாக இச்சரீர ஈர்ப்பு சமைத்து… இவ்வாத்ம வலுவின் வலுக்கூடிய தன்மையை செயல் சித்திற்கு ஆரம்பக் காலங்களில் செயல்படுத்தலாம்.

உயிரை விட்டு ஆத்மா பிரிந்து செல்லுமா…? உயிரற்ற ஜட பிம்பமாக இச்சரீரத்தை வைத்து உயிராத்மா பிரிந்து செல்லாது. இவ்வுயிர்ச் சரீரக் கூட்டின் இயக்கமுடன் வலுக்கூடிய ஆத்ம அலையைக் காண முடியுமா…? முடியும்.

எப்படி நிலைக்கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்த்தால் எதிர்பிம்பம் தெரிகின்றதோ… அதைப் போன்றே இவ்வாத்ம பிம்பத்தைப் பார்க்கவும்… இவ்வாத்ம அலையைச் செலுத்தி எச்செயலிலும் ஊடுருவி ஒவ்வொரு நிலையையும் அறிய முடியும் என்பதை ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.

இச்சரீர பிம்ப செயலில் நற்குண அலைத் தொடரினால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வளர் தன்மையின் செயல் சித்தின் செயல் முறையினால் தான் ஞானத்தின் தொடரைப் பெற முடியும்.

 

1.விருப்பு வெறுப்பற்ற உண்மை வலுவின் அலைத் தொடரின் வளர்ச்சி கொண்டு
2.வேறு எந்த ஒரு ஈர்ப்பின் பிடியில் சிக்காமல் உயர் வழியில் சென்று
3.“என்றுமே அழியாத் தொடர் வழி வளர்ப்பை வளர்க்க முடியும்…!”
4.இந்தச் செயல்வழியின் உண்மைச் சித்தறியும் வழி பெற்ற ஆத்மாக்கள்தான்
5.உயர் வழித் தொடர் கொண்ட “ரிஷித் தன்மை” பெற முடியும்.

பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி நல்ல உணர்வை ஊட்ட வேண்டும்

குடும்பத்தை அருள் வழியில் நடத்துங்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும் முறைகள்

soul propulsion

விஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி

நெசவுத் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு கணவன் மனைவி அவர்களுக்கு நான்கு குழந்தைகள். ஒரு சமயம் ஆஸ்த்மா நோயால் கணவர் மிகவும் அவதிப்பட்டார்.

ஓரளவுக்குச் செல்வத்தைச் சம்பாரித்து எளிய குடும்பமாக இருப்பினும் தன் மனைவி மீது இருந்த அந்தப் பற்றின் தன்மையும் குழந்தை மீது இருந்த பற்றின் தன்மையும் கொண்டு தான் அவர் வாழ்ந்தார்.

ஆனால் தன் நோயினால் அதைத் தாங்காத நிலைகள் கொண்டு விஷத்தை உணவாக உட்கொண்டு விட்டார். அவரின் ஆன்மா பிரிந்து விட்டது.

பிரியும் பொழுது தன் மனைவியின் நினைவாகவே ஆன்மா சென்றதால் மனைவியின் உடலுக்குள் சென்றுவிட்டது.

ஆன்மா மனைவி உடலுக்குள் சென்ற பின் அவர் விஷத்தைக் குடித்த பின் அவர் உட எப்படித் துடி துடித்ததோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடி துடிப்பு வந்துவிட்டது.

1.அந்த ஆன்மா மனைவியின் இரத்தநாளங்களில் சுழன்று வரப்படும் பொழுது
2.சிறுமூளை பாகம் சென்ற பின் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அ
3.தே உணர்வு அதே சொல் அதே செயலாக வருகின்றது.

இப்படித்தான் அந்த உடலை இயக்கிக் கொண்டிருந்தது.

என்னிடம் (ஞானகுரு) அவரை அழைத்து வந்தார்கள். தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.

இதற்கு முன்னாடி ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிறிது நேரம் அந்த உணர்வின் இயக்கம் இருக்கும். பின் சரியாகப் போகும் ஆனால் இப்பொழுது இந்த இரண்டு நாட்களாக மிகவும் மோசமாகிவிட்டது என்றனர்.

ஆவிகளை ஓட்டுபவர்களிடம் எல்லாம் சென்று நாங்கள் பார்த்தோம். செல்வங்களை எல்லாம் செலவழித்தோம். வறுமைக் கோட்டில் மிகவும் வாடிக் கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் என்னிடம் சொல்கிறார்கள்.

அப்பொழுது அந்த அம்மாவுக்கு நினைவு இல்லை. குழ்ந்தைகளும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

குடும்பத்தைச் சார்ந்தோருக்கு விவரத்தைச் சொல்லி இந்த முறைப்படி தியானமிருங்கள் என்று சொன்னேன்.
1.அந்த உடலில் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும்.
2.அந்த உடலில் உள்ள ஆன்மா அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும்.
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்லச் சொன்னேன்.

அதன் வழியிலே அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் செய்தார்கள். என்னிடம் வந்திருக்கும் பொழுது ஒரு அரை மணி நேரம் இதைச் சொல்லிச் செய்தார்கள்.

அந்த அம்மாவிற்குச் சிறிது தெளிவாகியது. பின் எழுந்த பின் இதே போன்று அவர்களிடமும் விவரத்தைச் சொன்ன பின் அவர்களும் இதே போல் நினைவைச் செலுத்தினார்கள்.

பின் பரிசுத்தமாகியது…!

பின் அந்த அம்மாவுக்கு நல்ல நிலைகள் வந்து அவர்கள் குடும்பத்தைப் பேணிக் காக்கும் நிலையும் வந்தது.

கடைசியில் இறந்த பின்…
1.அந்த ஆன்மாக்கள் இரண்டுமே ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது. ஒளி பெறும் சரீரம் பெற்றது.

இது இருபத்தைந்து வருடம் முன்னாடி நடந்த நிகழ்ச்சி. (ஞானகுரு உபதேசம் செய்தது 1997).

ஆரம்ப நிலைகளில் நான் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றி வரும் பொழுது இத்தகைய நிலைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்தி வந்தது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் இப்படி எளிதில் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப முடியும்.

காசு கொடுத்துத் தான் சாமி கும்பிடுகின்றோம்…

 

சாமி போட்டிருக்கும் நகையைப் பார்த்தால் வீட்டில் நகை இல்லையே என்று அழுகை வருகிறது. குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் அங்கே சொல்லி முறையிட்டு காசைக் கொடுத்து அர்ச்சனையோ அபிஷேகமோ செய்தால் அந்தத் தெய்வம் செய்யும் என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம். விநாயகரைக் கும்பிடாமல் போனால் ஆலயத்திற்குள் சென்றால் பலன் இல்லை என்றால் குறைந்த பட்சம் அதையாவது ஞானிகள் சொன்ன வழியில் அறிந்திருக்கின்றோமா என்றால் இல்லை. 

samadhi stage

எண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஜீவராசிகளின் எண்ண ஈர்ப்பின் சமைப்பு நிலையில் ஏற்படும் ஆவியான உஷ்ண அலைகள் வளர்வதினால் தான் இவ்வெண்ணத்தின் ஓட்ட அடக்க நிலையின் உறக்க நிலையால் சரீர பிம்பம் சாந்தம் கொண்டு மீண்டும் விழிப்பிற்கு வந்து செயல் கொள்கிறது.

இவ்வெண்ணச் ஓட்டச் செயல் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உறக்க விகிதம் மாறுபட்டு இருந்தாலும் உறங்கா நிலையின்றி ஜீவராசிகளால் இருக்க முடியாது. வலு நிலை கூடிய ஆத்மாவிற்கு உறக்க நிலையும் வேண்டியுள்ளது.

1.”ஐம்புலனை அடக்கி…!” நாம் பெறும் தியானம் என்பது
2.ஞானத்தின் வளர் கூட்டை வளர்க்கும் தன்மையற்று உறக்க நிலையும்
3.சமாதி நிலை பூண்டு புலன் அடங்கிய தன்மையில்
4.இச்சரீர பிம்பத்தின் எண்ணத்தின் உணர்வின் செலுத்தும் ஞானத்தின் வலுவை
5.இவ்வாத்மா வலுவாக்கிக் கொள்ள முடியாது.

 

உறக்க நிலையினால் சரீர சமைப்புச் செயல் அங்கங்கள் ஓய்வு பெறும் நிலை தான் ஏற்படுகிறது.

ஒலி ஈர்த்து… ஒளி கண்டு… உணர்வின் எண்ணம் எடுக்கும்… சுவாச அலையின்
1.ஒளி
2.ஒலி
3.உணர்வு
4.எண்ணம்
5.சுவாசம் என்ற
6.இந்திரிய ஐந்துமுகச் செயல் வடிவில் தான் சரீர பிம்ப இயக்கமும்
7.இயக்கத்தால் வலுக் கொள்ளும் ஆத்ம வலுவும் வலுவாகிறது.
8.எண்ணத்தின் சுவாசத் தொடர் இருந்தால் தான் இவ்வாத்மாவின் வலுவை வளர்க்க முடியும்.

எண்ணத்தின் உணர்வை
1.இனிமை கொண்ட இனிய செயலில் இனியன வளர்க்க
2.இனிது வாழும் வாழ்க்கையில்
3.இல்லறச் சுவையில் இனிய சொல்லை உரமாக இட்டு
4.இனிய மணமாக இவ்வாத்மா வலுப் பெறும் வளர்ப்பிற்காக
5.எண்ணத்தின் உணர்வைப் பிற ஈர்ப்பின் மோதலை ஏற்கக்கூடிய ஈர்ப்புப்பிடியில் சிக்க விடக்கூடாது.

 

இனிய குண வழித் தொடர் வார்ப்பாத்மாவாக இவ்வாத்மாவை… இனிமை கொள்ளும் ஞானத்தால்… உயர் ஞானத் தொடர்பு கொண்ட ஆத்மத் தொடரில் அறியும் உண்மைகளை…
1.சஞ்சல சபல பேராசை என்ற ஈர்ப்புப் பிடிக்குச் செயல்படுத்தாமல்
2.உண்மையான இறை நிலையை வளர்க்க
3.இனிய குண வார்ப்பாத்மாவின் தொடர் செயல் கொள்ளுங்கள்.

போகர் தண்டாயுதபாணி சிலையை உருவாக்கியதன் “மகத்துவம்…”

https://omeswaragurudeva.blogspot.com/2020/01/blog-post_23.html

அதிகம் கோபப்படுபவர்களின் செயலும் முடிவும் 

ஒரு இலட்சம் லாட்டரியில் கிடைத்தால் உணர்வின் இயக்கம் எப்படி இருக்கும்…?

கோப உணர்வு நம் உடலுக்குள் எப்படிப் பரவுகின்றது…?

agastya-lopamudra and polaris

பிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”

 

ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தன் தாய் தந்தையரின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்தாலும் அவன் இளம் குழந்தையாக ஐந்து வயது இருக்கப்படும் பொழுதே தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து விடுகின்றனர்.

அவர்கள் ஆன்மாக்கள் பிரியும் பொழுது தன் குழந்தையின் பால் நினைவைச் செலுத்தி அதே ஏக்கத்திலேயே பிரிந்ததால் அகஸ்தியன் உடலில் புகுந்து விட்டனர்.

அகஸ்தியன் உடலுக்குள் வந்த நிலையில்
1.அகஸ்தியன் தாய் தந்தையர் எந்தெந்த வழியில் அவர்கள் தங்கள் செயல்களைச் செயல்படுத்தினார்களோ
2.அதை எல்லாம் அகஸ்தியன் உடலிலிருந்து அந்த உணர்வைப் பெறும்படி செய்து அந்த உடலை இயக்கினார்கள்.

அகஸ்தியன் அவன் வளர்ந்த நிலையில் பதினாறாவது வயதில் திருமணமான பின் இருவரும் கணவனும் மனைவியுமாக நம் பூமியின் துருவத்தின் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்து வளர்த்துக் கொண்டார்கள்.

துருவத்தின் ஆற்றலைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு வளர்ச்சி அடைந்த பின்
1.அவர்கள் இருவரது ஆன்மாக்களும் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
2.அவருடைய தாய் தந்தை ஆன்மாக்களும் கலந்தே விண் செல்கிறது.
3.இப்படி நான்கு பேருடைய உணர்வுகள் கலந்து உருவானது தான் “துருவ நட்சத்திரம்…”

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி நுகர்ந்தறிந்த ஆன்மாக்கள் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது ஒளியாகப் பெற்றவர்கள் துருவ நட்சத்திரதின் ஈர்ப்பு வட்டதிற்குச் சென்று என்றுமே ஒளியின் சரீரமாக “சப்தரிஷி மண்டலங்களாக” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

1.இப்படி அந்த அகஸ்தியன் காலத்தில் அவனுடன் இணைந்த நிலையில் விண் சென்றவர்கள் ஏராளம்…!
2.அது தான் முப்பத்து முக்கோடி தேவர்கள் – சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.

உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் குடும்பங்களில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பற்றுடன் வாழும் நிலையில் மனைவி மேல் பற்று கொண்ட நிலையில் கணவன் உடலை விட்டுப் பிரிந்தால் மனைவியின் உடலில் சேர்ந்து இந்த உணர்வுகள் ஒன்றி வாழும்.

அதே போல் கணவன் மீது பற்று கொண்ட நிலையில் மனைவி உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா கணவன் உடலுக்குள் சேர்ந்து ஒன்றி வாழும்.

இப்படிப் பற்று கொண்டு வாழும் நிலையில் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானம் செய்து ஒன்று சேர்ந்தால் அடுத்து…
1.கணவன்/மனவியின் ஆன்மா பிரியப்படும் பொழுது
2.கணவனுடன்/மனைவியுடன் இணைந்தே சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.
3.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைக்கப்பட்டு
4.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
5.விண்வெளியிலிருந்து வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
6.என்றும் பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைய முடிகின்றது.

கணவன் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மா மனைவியின் உடலுக்குள் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனின் உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரங்களைப் பெற்றுவிடுகின்றது.

ஆனால் இன்றைய வழக்கப்படி செய்யும் சாங்கிய சாஸ்திரங்களால் இந்த நிலையை அடைய முடிவதில்லை. பற்று கொண்ட நிலையில் மீண்டும் பிறவிக்கே வருகின்றது.

ஆகவே இதைக் கேட்டுணர்ந்தோர் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானத்தில் இருக்கும் பொழுதும் சரி… அதிகாலை துருவ தியானத்திலும் சரி…
1.கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழும்
2.இதைப் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வது மிகவும் நலம்…!

நல்லவரைக் கெட்டவராகவும் கெட்டவரை நல்லவராகவும் காட்டும் விசித்திரம்

 

நல்லதை நம்மால் ஏற்றுக் கொள்ளாத பண்புகள் சில நேரம் நம்மை இயக்குகிறது. இதன் காரணம் என்ன…? என்று சிந்திக்கின்றோமா…? நம்மை நாம் பக்குவப்படுத்துகின்றோமா…? நல்லவரைக் கெட்டவராகவும் கெட்டவரை நல்லவராகவும் விடாத நிலைகளில் நம் மனம் தான் அப்படிச் செயல்படுகின்றது…!

drones and rockets

செயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அன்றைய ஞானிகள் காட்டிய “ஞானச் சித்தின் செயல் வளர்ப்பு…” வளர்ந்துவிட்ட மனித ஆத்மாவின் சரீர வளர்ச்சியின்

 

பெருக்கத்தால் இன்றளவும் வளரவில்லை. உயர் ஞானத்தின் செழிப்பைக் காண முடியவிலை.

இன்று பக்தி மார்க்கம்… மத வழி போதனை… விஞ்ஞானச் செயல் எல்லாமே செயற்கை உருவாகத் தான்… செயற்கை உல்லாசப் பிடிப்பு வாழ்க்கையுடன் ஒன்றியதாகத் தான் உள்ளது.

இவாத்மாவின் உண்மை நிலை அறியாத தன்மையில்… உலக நிலையே மாசு கொண்ட நிலையில்… எண்ணத்தின் ஈர்ப்பு வட்டமே பேராசைப் பிடியில் சிக்குண்ட நிலையில் உள்ளது.

இப்பூமியில் உள்ள சத்து நிலையையே செயற்கையின் செயலுக்காக வளர்ப்பின் தன்மை குணங்களை இம்மனித விஞ்ஞானம்… தொடர்ந்து பிரித்துக் கொண்டே உள்ளது.

சூரிய இயக்கத்தின் நுண்ணிய கதிரியக்க வலுவைப் பிரித்து அதை வைத்து பல பல வேலைகளைச் செய்கிறார்கள். இப்பூமியில் சில பாகங்களில்
1.இவ்வரசியல் நாட்டுப் பற்றின் விஞ்ஞான வேவு செயலுக்காக
2.ஒருவரை ஒருவர் அழிக்க அந்தச் சூரிய அலைக் கதிரின் சக்தியைக் கொண்டே
3.செயற்கை நிலையில் நில அதிர்வுகளையும் எரிமலை வெடிப்புகளையும்
4.இன்றைய விஞ்ஞானச் செயல் செய்விக்கின்றதப்பா…!

பிற கோளங்களுக்கு ஏவப்படும் ஏவுகணையில் வீரியமான கதிரியக்கச் சக்திகளைச் சேமிக்கப்பட்டு அனுப்புவதால் அதன் இயக்கத்தின் அலை வீச்சின் தொடராகத் தான் பூமியில் இன்றைய மனிதனின் விஞ்ஞானச் செயல் செல்கின்றது.

இத்தகைய தொடரினால் மனித உணர்வின் எண்ணங்கள் அனைத்தும் சிதறுண்ட குண வட்டங்களாக இன்றைய பூமி ஆத்மாக்களின் தன்மை உள்ளது.

இதன் இயக்க வட்டத்திலிருந்து தன் ஞானத்தால் ஆத்ம வலுவைப் பெருக்கிக் கொண்டால் இவ்வாத்ம வலுவானது எவ்வீர்ப்புப் பிடியிலும் சிக்காமல் இருக்கலாம்.

ஞான ஈர்ப்புத் தொடர்பில் பெற்ற ஆத்ம பலத்தைக் கொண்டு இப்பூமியின் நிலையே மற்றெந்த செயல் பிடிப்போ எவற்றிலுமே இவ்வாத்மா சிக்காமல் உயர் சக்தி கொண்ட ரிஷி அலையுடன் தொடர்பு கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல்…
1.இந்தச் சூரியக் குடும்பமல்லா மற்ற சூரியக் குடும்ப அலைத் தொடரிலும்
2.நம்மைக் காட்டிலும் ஞான வலுக் கொண்ட ஆத்மாக்களின் மனித வாழ்க்கை முறையையும் காண முடியும்.

மேலும் ஆதிசக்தியின் சக்தி வார்ப்பின் தொடர் அனைத்தின் கூட்டுச் சேர்க்கை வார்ப்பையும்… மாற்றத் தன்மையையும் வளர்த்துக் கொள்ளும் சக்தி வலு அனைத்தையும் காண முடியும்.

பிறவா வரம் என்பது… ஞான வார்ப்பின்… சித்து நிலை வளர்ப்பின் வளர்ப்பை வளர வைக்கும் அந்த வலு சக்தி தான் “பிறவா நிலை…!

 

ஆகவே
1.மனிதனின் உண்மையை மனிதனே அறியாமல்
2.தன்னைத் தானே செயற்கைக்கு அடகு வைத்து
3.மீளமுடியா வட்டிச் சுமையாக மூழ்கி விடும் தன் நிலை இழக்கின்ற இன்றைய கலி காலத்திலிருந்து
4.இந்த உடலின் உண்மைத் தத்துவ உயர்வை உணரும் ஆத்மாவாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆகுங்கள்.

கண்ணணான கண்களின் இயக்கங்களையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் பற்றி வியாசக பகவான் உணர்த்தியது

நம் நினைவாற்றல் கொண்டு கண் வழியாக அருளைப் பாய்ச்சி மற்றவர்களின் தீமைகளைத் தடுக்கும் பயிற்சி

உங்கள் கண்ணின் கருவிழிக்கு யாம் கொடுக்கும் உயர்ந்த ஆண்டென்னா பவர் 

siddhis - asdama

நாம் அடைய வேண்டிய அஷ்டமாசித்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் சத்தெடுத்து இவ்வுடல் பிம்ப ஆத்மாவிற்குச் சித்தாக்கி ஒளி பெறும் வளர்நிலையாகி வளரின்பம் நாம் பெற முடியும். இருந்தாலும்…
1.இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் சத்தானது
2.ஞான வளர்ப்பு கொண்ட நிலை பெற்றால் தான்
3.சித்து நிலையைப் பெற முடியும்.

மனித எண்ண ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்த அன்றைய அரசர்கள் காலத்தில் சித்து நிலை பெற்றவர்களின் செயல்கள் எப்படி இருந்தது..?

தான் பெற்ற சித்தைக் கொண்டு அரசைக் காக்கவும்… தன் குடும்பச் சுழற்சியின் ஈர்ப்புப் பிடியிலும்… தன் சித்து நிலையின் சக்தியைச் சிலர் செயல்படுத்தினர். தான் பெற்ற சித்தை இயற்கையை வளர்க்கும் நன்மைக்குப் பயன்படுத்தவில்லை.

இயற்கை என்பது என்ன…?

அதாவது… இப்பூமியின் வளர் நிலைத் தொடர் அணு வளர்ச்சியின் செயலில் எல்லாம் அணுவுக்குள் அணுவாக… உயர் அலைத் தொடரில் சூரிய அலையின் அலைத் தொடர்புடன்.. தன் ஆத்ம அலையைச் செயல்படுத்தவில்லை.

மாறாக… தன் ஜீவ சரீர இயக்கத்திலேயே சித்துக்களைச் செயல்படுத்தினர்.
1.உடலைக் காக்கும் சித்துக்களையும்
2.அதற்குண்டான ஞானங்களையும் தான் செயல்படுத்தினர்.

இன்றளவும் அந்த ஆத்ம உணர்வு ஞானச் சுழற்சியில் தான் அத்தகைய சித்து நிலை கொண்டோரின் நிலையுள்ளது. உயர் ஞானச் சித்தை எட்டிப் பார்க்கும் நிலை இல்லை.

ஏனென்றால்…
1.காரிய சித்துடனே தன் ஞானச் சித்தை இவ்வீர்ப்புப் பிடியில் சுழல விடாமல்
2.அணுவுக்குள் அணுவாக இவ்வுலக வளர்ப்பு வளர்ச்சி அணுவுடனும்
3.இவ்வுலகையே வளர்க்கும் சூரியக் குடும்பமான நாற்பத்தி எட்டு மண்டலத் தொடர்பிலும்
4.இந்நாற்பத்தி எட்டின் வளர்ப்பான வளரும் பன்னிரெண்டு கோள்களிலும்
5.ஒவ்வொன்றின் தொடர் வளர்ப்பிலும் தன் காரிய சித்து ஆத்ம செயலைச் செயல்படுத்தி
6.இதைப் போன்று சுழலுகின்ற ஏனைய எண்ணிலடங்காச் சூரியக் குடும்பங்களில் செலுத்தப்பட்டு
7.அங்கிருக்கும் பல கோளங்களின் உண்மையையும் இந்த ஞானத்தால் பெற்று
8.காரிய சித்தை மேல் நோக்கிய ஈர்ப்பு வட்டத்தில் (இது முக்கியம்) இவ்வுயிராத்மாவை வளர விட வேண்டும்.

சித்தான நிலையில் தான் பெற்ற வளர்ப்பு நிலையை எவ் ஈர்ப்புப் பிடியிலும் நிலைக்கச் செய்யும் செயலாக இக்காரியச் சித்தை நிலை நிறுத்தக் கூடாது.

அதைப் பெறுவதற்காக வேண்டி.. குடும்பத்தை விட்டுவிட்டோ… காட்டிற்குச் சென்றோ… துறவு பூண்டோ… செல்லாமல் இந்தப் பூமியின் வாழ்க்கைப் பிடியின் சத்தெடுக்கும் வழியிலேயே தான் அந்த ஆத்ம சித்தைப் பெறவேண்டும்.

தினசரி வாழ்க்கையில் ஏற்படும் தொடர் நிலைகள் ஒவ்வொன்றிலும்
1.தீயவை… நல்லவை… என்ற தன் ஈர்ப்பின் எண்ணத்தை
2.துவேஷத்திற்கோ புகழுக்கோ செலுத்தாமல்
3.முள்ளை (வேலி முள்) நாம் பாதுகாப்பிற்கு வேலியாக உபயோகித்துச் செயல்படுத்துவதைப் போன்று இருத்தல் வேண்டும்.

அதாவது…
1.தீயவை என்ற நிலையிலிருந்து… அதிலிருந்தே…
2.நாம் அறிந்த முறை கொண்டு… மீண்டும் அதில் போய்ச் சிக்காமல்
3.அதன் செயலின் உண்மையை உணர்ந்து
4.நமக்குப் பாதுகாப்பு வேலியாக – அதை நன்மைப்படுத்தும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

இனிமை உண்மை நிலையிலேயே இவ்வெண்ணத்தின் செயலைச் சுழலவிடாமல்… “செயல்படும் ஒவ்வொரு செயலையுமே… இனிமை ஆனதாக…” இவ்வாத்ம அலை பெறகூடிய தன்மைக்குத் தன் ஞானம் செல்ல வேண்டும்

1,இனிமைக்காக ஏங்கும் ஏக்கத்தின் வார்ப்பாக இவ்வுடலின் அமில உராய்வு இல்லாமல்
2.இனிமையை வளர்க்கும் அமிலமாக
3.இவ்வெண்ணத்தின் உணர்வைச் சுவை கொண்ட சத்தாக இப்பூமி ஈர்ப்பு வாழ்க்கையிலிருந்து சத்தெடுத்து
4.ஞானச் சித்தை வளர்க்க வேண்டும்.

தெய்வத்திற்குச் சக்தி ஏற்றுகிறார்கள் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன…?

 

நேற்று வரை ஒரு கோவில் பழமையாக இருந்தாலும் அங்கே யாகங்களையும் மற்ற அபிஷேகங்களையும் செய்து கூட்டங்களைக் கூட்டி மந்திரங்களை ஜெபிக்கின்றார்கள். பின் இந்தத் தெய்வத்திற்கு இன்னென்ன செய்தால் அது உனக்கு அதை எல்லாம் செய்யும் என்று இப்படிப்பட்ட ஆசையைத் தான் ஊட்டுகின்றார்கள். தெய்வத்திற்கு எதையாவது செய்து வரம் வாங்கும் நிலையில் தான் இருக்கின்றோம். கடைசியில் இந்தத் தெய்வத்திற்காக எல்லாம் செய்தேன்… ஆனால் தெய்வம் என்னைக் கைவிட்டு விட்டது… என்னைச் சோதிக்கின்றது…! என்று சொல்கிறோம். உண்மையின் நிலைகளை அறிய முடியவில்லை. 

agsstyar and saptarishi manddalam

அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி

 

நம் உயிர் குருவாக நின்று… நாம் எண்ணியதை எல்லாம் ஈசனாக இருந்து… அந்த உணர்வுகளை எல்லாம் நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது.

அதே சமயத்தில் அத்தகைய கருவின் தன்மை பெறச் செய்வதற்கு உயிரே குருவாக இருக்கின்றது.

அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இப்பொழுது ஏங்கித் தியானிப்போம். நமது குரு ஈஸ்வரபட்டரின் அருள் சக்தி பெற்று வழியில் இதை நாம் எண்ணி நுகர வேண்டும்.

அப்படி நுகரப்படும் பொழுது…
1.குரு வழியில் அகஸ்தியன் அருளை எளிதில் பெறலாம்.
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான
3.அந்த உணர்வின் வழி நடந்து சென்ற ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சென்ற
4.சப்தரிஷி மண்டலமாக அடையும் நிலையை நீங்கள் பெறலாம்.

அகஸ்தியனைப் பற்றி உபதேசிக்கும் பொழுதும்… பேசும் பொழுதும்…
1.அவன் பெற்ற சக்திகள் உங்கள் அருகிலேயே வந்தது போல் இருக்கும்.
2.அவன் நுகர்ந்த அந்த மகா பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும்.
3.அந்த மணங்கள் உங்கள் உடலுக்குள் புதுமையான நிலைகளில் ஊர்ந்து செல்லும்.

உங்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் வல்லமை பெற்ற சக்தியாக… நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வாக… நீங்கள் நுகரும் தன்மை பெறுகின்றீர்கள். அந்த அணுவின் தன்மையை உடலுக்குள் கருவாக உருப்பெறச் செய்யும் சக்தியும் பெறுகின்றீர்கள்.

கருவுறும் அந்த உணர்வின் கருவிற்கு ஞானிகளின் உணர்வைச் செருகேற்றி… ஞானிகளைப் பற்றி யாம் உபதேசித்த பல கலவைகளையும் சேர்க்கும் பொழுது அதுவும் அணுக்கருக்களாக உங்கள் இரத்தநாளங்களில் கலந்து பரவும்.

இப்படிப்பட்ட அரும் பெரும் சக்திகளை உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து இயக்கிடும் சக்தியாக வருகின்றது.

அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. நினைக்கும் பொழுதெல்லாம் அந்தச் சக்திகளை நீங்கள் பெறலாம்.

அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்பொழுது யாம் (ஞானகுரு) பதிவு செய்த எண்ணத்தால் உருவாக்கப்பட்டது அனைத்தும் உங்களுக்குள் நின்று அது வலுவாக இயக்கும்.

1.அந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது
2.அகஸ்தியனைப் பற்றிய எண்ணங்கள் கண்ணிற்கே நினைவு வருகின்றது.

அதாவது… யாம் சொல்லும் சொல்லின் நிலைகளை உங்கள் கண் பதிவாக்கி அந்த உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது கண்ணால் தான் பதிவாகின்றது.

1.அது தான் ஹரி…! – அறியக் கூடிய அறிவு
2.சூரியனால் இயக்கப்படுகின்றோம் – ஹரி கிருஷ்ணா
3.கிருஷ்.. என்றால் பதிவாக்கக்கூடிய நிலை.

அப்படிப் பதிவான பின் அந்த உணர்வுகள் எண்ணமாகும் பொழுது “ஹரிராமா” அந்த எண்ணத்தை எண்ணி மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வந்தால் “ஹரிகிருஷ்ணா”

1.கண்ணின் நினைவு கொண்டு எண்ணத்தால் உள்ளுக்குள் பதிவாகி
2.மீண்டும் எண்ணத்தில் வரப்படும் பொழுது அந்தப் பதிவின் நிலையே நுகர்ந்து
3.உடலுக்குள் அணுவின் கருவாக மாற்றும் திறன் வருகின்றது.

அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா எனறு ஏங்குங்கள்

உபதேசிக்கும் உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கும் எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கபப்டும் பொழுது கண் வழி அதை நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் அணுவாக மாறி இரத்தநாளங்களிலே கருத்தன்மை அடையும் கருக்களாக அது உருவாக்கப்படுகின்றது.

அந்த அகஸ்தியமாமகரிஷ்யின் அருள் சக்திகளை ஏங்கிப் பெறும் நோக்கத்துடன் தியானிக்க வேண்டும்.
1.தியானம் என்பது வெறும் சொல்லாகச் சொல்லி அப்படியே விட்டிடாது
2.அவருடைய அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.

அந்த அருள் மகரிஷி நஞ்சினை வென்றிடும் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் அணுவின் தன்மையாக விளைந்து
1.அவனின்று வெளிப்பட்ட மூச்சலைகள்…
2.உங்கள் உடலுக்குள் ஊடுருவும் பொழுது
3.உயர்ந்த சக்திகளின் உணர்ச்சிகளை ஊட்டி
4.அதை நுகர்ந்தறியும் அறிவின் ஆற்றலாகப் பெறுவீர்கள்.

அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதையே திரும்பத் திரும்ப ஏங்கி உங்கள் உடலுக்குள் இரத்தநாளங்களில் கருவாக உருவாக்குங்கள்.

உங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.
1.அவன் உணர்வுகள் உங்களுக்குள் படும் பொழுது – அந்த உணர்வின் அலைகள் உங்கள் வாழ்க்கையில்
2.நுகரும் சக்தியும்
3.அறியும் சக்தியும்
4.வளர்க்கும் சக்தியும்
5.வளர்ந்திடும் சக்தியும் கிடைக்கும்.

அந்த அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி உங்கள் அருகிலே சுழன்று… நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்திற்குள் சென்று.. உங்கள் உடலுக்குள் செல்லும் நிலையை இப்பொழுது இந்தச் சந்தர்ப்பம் உருவாக்குகிறது.

அகஸ்தியன் நுகர்ந்த அந்த மணத்தின் தன்மையைக் கவர்ந்து அந்த உணர்வின் ஆக்கச் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அகஸ்தியன் நுகர்ந்த மணத்தை இப்பொழுது நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் கணவனும் மனைவியும் வானுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கி துருவ மகரிஷியாகி அவர்கள் உருவாக்கிய சக்தி இங்கே பரவி இருக்கிறது.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.. அது எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் உள்ள அணுக்களில் மோதும் பொழுது
1.புருவ மத்தியில் அந்த ஒளிக்கதிர்கள் தெரியும்
2.உங்கள் உடலுக்குள் அந்த உணர்வின் ஒளி அலைகள் பாயும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் நினைவனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அதனுடன் தொடர் கொண்டு… அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி அதை இழுத்துக் கவர்ந்து கவர்ந்து சுவாசியுங்கள்… உடலுக்குள் செலுத்துங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

 

1.இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்
2.அந்த உணர்வின் அலைகள் உங்களை அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே சேர்க்கும்.

தன்னையறியாமல் பகைமையாக்கும் சில உணர்வின் இயக்கங்கள்

குறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது

மற்றவர்கள் நம்மைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் “தவறுகள் கூடும்… நல்லவைகள் மறைந்துவிடும்..!”

saptarishi sidhdhis

கூடு விட்டுக் கூடு பாயும் சித்து நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கூடு விட்டுக் கூடு பாயும் நிலை என்பது…
1.தன் நிலை வளராத
2.ஆத்ம பலமின்றி
3.ஆரம்ப ஆவி நிலைத் தொடர்பு நிலையில் பெற்ற
4.பக்தி வாய்ந்த… மந்திர… தந்திர.. செயல் கொண்ட
5.உடலின் ஆத்மாவைக் காட்டிலும் பிறிதொரு சக்தி வாய்ந்த வலுவான இயக்கத்தின் செயலாகும்.

சக்தி வாய்ந்த… என்பது அதற்கு மேல் வலுக் கொண்ட ஆத்ம அலையின் தொடரின் ஈர்ப்புப் பிடி… ஞானச் சித்து பெற்ற… இயக்க வழிச் சித்தில்தான்… இக்கூடு விட்டுக் கூடு பாயும் செயல் செயல்படுவது.

அதாவது தன் சரீர இயக்கத்தைச் செயல்படாத வண்ணம் அந்தச் சரீரத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டுத் தன் ஆத்ம உயிரைப் பிறிதொரு சரீரத்தின் பாலோ.. மற்ற ஜீவ ஜெந்துக்களின் பாலோ செலுத்தி… அதற்குள் நின்று இயக்குவது.

அப்படி இயக்கப்படும் தன்மையில் சிறிது இசகு பிசகான நிலை கொண்டு மாறுபடும் தன்மை ஏற்பட்டாலும் மீண்டும் சரீர இயக்கத்திற்கு வந்து செயல்பட முடியாத நிலை ஆகிவிடும்.

அது மட்டுமல்ல…!

1.இப்படிப் பிரிந்த ஆத்ம உயிர் வேறு ஒரு பிடிப்பலையில் சிக்கிச் செயல்படுத்தப்பட்ட ஈர்ப்புப் பிடியின் செயலினால்
2.மீண்டும் சரீர நிலையும் பிறப்பும் அற்று ஆத்ம வளர்ச்சியே இல்லா நிலையாக
3.தான் வளர முடியாத வேறு ஒரு ஈனமான விஷம் கொண்ட ஈர்ப்பு நிலைக்குச் சென்று விடுகின்றது.

ஆனால் சப்தரிஷிகளின் வளர் சித்து நிலை எல்லாம் எப்படிப்பட்டது…?

தன்னைத் தான் உணர்ந்து… இச்சரீர பிம்பச் சேர்க்கை அமிலக் கூட்டின் வலுவிலிருந்து ஆத்ம வலுவைக் கூட்டி… இவ்வாத்மாவைச் சரீர பிம்பத்திற்கு மேல் சக்திவாய்ந்த செயலாகச் செயல் கொள்ளும் தன்மைக்கு இவ்வாத்ம வலுவை வலுவாக்கிக கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

1.தன் ஆத்மாவைத் தானே இயக்கக்கூடிய இயக்கச் செயலின் செயல் சித்தாக
2.ஜீவ பிம்ப சரீர இயக்கத்தின் தொடர்புடனே இவ்வாத்மாவைத் தனித்து நிறுத்தி
3.தன் ஆத்ம அலையை எவ் அலைக்கும் செலுத்தும் திறன் பெற்றவர்கள்.

எவ்வலைக்கும் என்பது என்ன…?

1.சரீர பிம்ப தொடர் கொண்டவர் அலைக்கும் சக்தி வாய்ந்த சித்தர்களின் அலைக்கும் செயல்படுத்தவும்
2.இவ்வாத்மாவின் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு எந்நிலையையும் அணுவுக்குள் அணுவாக இவ்வாத்ம அலையை அனுப்பி
3.அணு வளர்ச்சியின் உண்மையையும் உருவாகும் சக்தி அனைத்தையுமே உணரக்கூடிய அலைத் தொடர்பு யாவைக்குமே
4.இச்சரீர பிம்ப நினைவு மாறாமலும்…
5.இஜ்ஜீவத் துடிப்போ மற்றெந்தத் தன்மையும் மாற்றம் கொள்ளாத் தன்மையில்
6.இவ்வாத்மாவைத் தனித்து எச்செயலுக்கும் செலுத்திச் செயல் சித்தைச் செயல்படுத்துப்வர்களே சப்தரிஷிகள்.

அந்த நிலையை நீங்கள் பெற என் ஆசிகள்…!

கடவுளுக்காகக் கோர்ட்டுக்கு சென்று இன்றும் சண்டை போடுபவர்கள்…!

 

இன்று கோர்ட்டில் கேஸ் போட்டுக் கடவுளுக்காக வாதாடிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மைன பக்தி எது..? என்று உணரும் நிலை இல்லை. விநா­யகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் இல்லை என்று தெரிகின்றது இருந்தாலும் ஞானிகள் உணர்த்திய மூலத்தை அறிய முடியவில்லை. 

Effects of praise

நம்மைப் புகழ்ந்து பேசுவோரிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… ஏன்.…?

இந்த வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மற்றவர் (யாரோ) நமக்குச் செய்வார்கள் என்ற ஏக்கத்தில் செல்லப்படும் பொழுது தான் “அவர்கள் மகா சக்தி பெற்றவர்கள்” என்ற நிலைகள் கொண்டு அவர் வலையில் சிக்கி… நம் புத்தியை இழந்து… அவர்களிடம் நாம் அடிமையாகின்றோம்.

பாதிப்படைந்த பின்… “தப்ப வேண்டும் தப்ப வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வருகின்றோம்.

உதாரணமாக இந்தத் தொழிலைச் செய்தால் அதிலே நீ அதிகமான லாபம் பெறலாம் என்ற உணர்ச்சிகளை ஒருவர் தூண்டிவிட்டால் போதும். அவர்களைப் பற்றிய புகழாரம் அனைத்தும் பாடத் தொடங்குவார்கள்… அவர் உதவி செய்வார்… உதவி செய்வார்… என்று…!

அவர் உதவி செய்வார் என்ற எண்ணத்தில் ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு நூறு ரூபாய் வேண்டும் என்பார்கள். அதாவது புகழ்ந்து பேசிய பின் இப்படிக் கேட்பார்கள்.

கொடுத்து விடுவீர்கள்…!

சிறிது நாள் கழித்து கொடுத்ததைக் கேட்கலாம்… என்று சென்றாலும் “நீங்கள் தக்க நேரத்தில் உதவி செய்தீர்கள்…! இன்னும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை…” என்பார்.

இப்படிப் புகழ்ந்து பேசுபவருடைய நிலைகளுக்கு நாம் அடிமையாகி விட்டால் இப்படிப் பேசிப் பேசியே நம்மிடமிருந்து காசை வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் கஷ்டமாக இருக்கும் பொழுது நாம் கேட்டால் நம்மைப் புகழ்ந்து பேசியவர் “ஐயோ…!” இப்பொழுது என்னிடம் காசில்லையே…! என்பார்.
1.ஆனால் நாம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்க மாட்டார்.
2.நம்மிடம் பணம் கேட்பதையும் நிறுத்த மாட்டார்
3.நாம் பணம் இல்லை… என்று சொன்னாலோ உடனே பகைமையை ஊட்டிவிடுவார்.
4.காசைத் திருப்பிக் கேட்கிறார் என்றும் அடுத்தவரிடம் நம்மைப் பற்றிச் சொல்லிச் சீண்டிவிடுவார்.
5.இவருடைய செயல்கள் இப்படி…! என்று கற்பனையாக உருவாக்கி கற்பனையான சொல்களைச் சொல்லி இடையூறுகளை ஊட்டுவார்.

கடைசியில் கொடுத்ததை எல்லாம் கேட்டால் என்னிடம் எப்பொழுது பணம் கொடுத்தீர்கள்…! என்பார். இப்படியெல்லாம் புகழாரம் பாடுவோர் கையில் நாம் சிக்கிவிட்டால் இந்த மனித வாழ்க்கையில் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

ஆகவே…
1.நாம் ஒருவருக்கு உபகாரம் செய்வது என்றால் திருப்பிப் பெறும் நிலைகள் இருக்கக் கூடாது
2.திருப்பிப் பெறாத நிலைகள் செயல்படுத்த வேண்டும்
3.ஒன்று இரண்டு ஏதோ அவர்களுக்கு.. எப்படியோ நன்றாக இருக்கட்டும்…! என்ற நிலைகளில்
4.புகழ் பாடுவோர் கையில் கொடுத்து விட்டால் போதும்…!
5.கொடுத்ததைத் திரும்பக் கேட்கும் நிலையற்ற நிலையில் இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு தரம் உதவி செய்தாலும் மீண்டும் அவர்கள் கேட்பார்கள். உதவி செய்யவில்லை என்றால் பழியைச் சுமத்துவார்கள். அதனால்…
1.நம்மை அறியாமலே நண்பர்களுக்குள் பகைமை உருவாகின்றது.
2.இன்றைய உலகம் இப்படித்தான் இருக்கின்றது…!

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வினைச் சுவாசித்து உடலுக்குள் கருவின் தன்மையை உருவாக்கி அந்தக் கருவை நமக்குள் அணுவாக வளர்த்திட வேண்டும்.

அதன் வளர்ச்சி கொண்டு இந்த அருள் உணர்வின் வலிமை பெற்று

 

1.என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும்
2.சிந்திக்கும் தன்மை அவருக்கு வர வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்கு நல்ல உணர்வு தோன்ற வேண்டும் என்ற
4.இப்படிப்பட்ட உணர்வினைக் கருவாக்கி உணர்வின் தன்மை பெற்றுவிட்டால்
5.உற்று நோக்கி நம்மை ஏமாற்றுவோரும் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
6.அந்த ஏமாற்றும் தன்மையே அவர் உடலிலிருந்து மறைந்து விடுகின்றது.

ஆகவே இன்றைய உலகில்… பிறிதொரு பகைமையோ ஏமாற்றும் உணர்வுகளோ வராதபடி நாம் மாற்றியமைத்தல் வேண்டும்.

அதே சமயத்தில் நாம் நுகரும்… அல்லது நுகர்ந்த அருள் சக்திகள் நமக்குள் வளர்ந்து அரும் பெரும் சக்தியாக மலர்கின்றது.

 

இதையே நமக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் மெய் ஒளி பெறுகின்றோம்.

புரையேறும் உணர்வால் எத்தகைய பாதிப்பு வரும்..?

நம்முடைய கேஸ் நீதிமன்றத்திலே ஜெயமாக வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

இந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…?

solar power

சித்து வழியில் முதல் சித்து எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அல்லி மலர் சூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பி விடுகின்றது. இன்னும் சில மலர்கள்… சூரிய ஒளியின் அலை பாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து “அதன் ஒளி திக்கிலேயே…” அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடிவிடுகின்றது.

இவை எல்லாமே “இயற்கை…” என்கிறான் மனிதன்…!

1.எல்லாச் சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவுவது சூரிய சக்தி தான்…! என்ற உண்மையைத் தெரிந்தும்
2.சூரியனின் சக்தியைச் செயற்கைக்குப் பாழ்படுத்தும் இன்றைய மனிதன்
3.அடுப்பான இந்தப் பூமியில் – பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்திகளைப் போட்டு
4.இவன் சமைக்கும் கலவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி
5.”இச்சரீர ஜீவனின் உள்ளதை” மனிதன் அறியவில்லை.

இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன்…
1.தன் எண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு…
2.எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாகத் தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
3.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு தொடர்புபடுத்தி
4.அதன் மூலம் செயலாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஆத்ம ஞானத்திற்குண்டு…! என்பதை உணர வேண்டும்.

இவ்வுடலின் செயலுக்கொப்ப… இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி… இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை… இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்திற்கு வர வேண்டும்.

இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
1.இவ்வாத்மாவைச் சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
2.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்ல இயக்க நிலையை
3.இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.

இச்சரீரக்கூடு ஜீவத் துடிப்புடன் (உயிர் உடலில்) இருந்தால் தான் இவ்வியக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு “ஆத்ம பலத்தை நாம் பெருக்க முடியும்…”

அதன் மூலம்… ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப் பிடிப்புக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகளானாலும் சரி… இவ்வீர்ப்பு வட்டத்தில் சிக்காமல் இருக்க முடியும்.

அதாவது ஒரு எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பமாகி விடுவதைப் போல்
1.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட
2.இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்துக் காண முடியும்
3.வலுப் பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும்
4.தன்னைத் தான் உணர்ந்து… தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல் தான் “சித்து வழியில் முதல் சித்து…!”

ஆகவே ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.

வாழ்க்கைப் பந்தத்தில் சுவைக்கும்… மற்ற பொருள் நிலை எவற்றுக்கும் இவ்வெண்ணமானது பேராசைக்கோ… ஏக்கத்திற்கோ… சஞ்சல சலிப்பு நிலைக்கோ… செல்லும் வழி முறை சிறிது இருந்தாலும்
1.இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க
2. இச்சரீர பிம்பத்தின் உணர்வில் செயல் நிலை தடைப்படும்.

எவ் ஈர்ப்பலையின் பிடிப்பிலும் இவ்வெண்ணச் செயலின் உணர்வு ஞானத்தின் வளர்ச்சியானது செயல் கொள்ளும் பக்குவம் கொண்டு தான் இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்
1.நாம் ஜெபித்த… தியானித்த… சித்தர்களின் வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு கிடைத்து
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் “பதம் பார்த்து” நம்மை வழி நடத்துவார்கள்.

ஆத்ம வலுவை மட்டும் இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்துதான்… இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும். “வெறும் சரீர பிம்ப இயக்கத்தால் பெற முடியாது…!”

முதல் சித்தான ஆத்ம பலம் பெற… இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு… ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்…!

விஷ்ணு வரம் கொடுக்கின்றான். பிரம்மா உருவாக்குகின்றான்.. சிவன் அரவணைக்கின்றான்…!

 

இந்த முத்தொழில் நடக்கவில்லை என்றால் எங்கேயும்… எதுவும்… உருவாக முடியாது…! என்று சாஸ்திரங்கள் உணர்த்துகின்றது, ஆனாலும் அதில் மறைந்துள்ள மூலக்கருத்து என்ன…? என்பதை நாம் அறிந்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எளிதில் நீக்க முடியும். 

happy wishes

தியானத்தின் மூலம் பெறும் வலுவால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும்

 

நாம் மக்கள் மத்தியில் வளரப்படும் பொழுது அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களைக் கேட்கும் சந்தர்ப்பம் இருந்தாலும் அதை நீங்கள் கேட்காமல் இருக்க முடியாது.

என் வீட்டில் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்று ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். “அதெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள்…! நீங்கள் போங்கள்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?

என்ன… பெரிய இவர்…? இந்த மாதிரிப் பேசுகிறார்…! என்று சொல்லிப் பகைமையை உருவாக்கி எதிரியின் தன்மையைத் தான் உருவாக்க முடியும்.

அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் வெறுப்பான உணர்வை நமக்குள் வளர்த்து நாம் கற்றுணர்ந்த நல்ல உணர்வுகளும் வளராது தடைப்படுத்தப்படும்.

ஆகவே ஒருவர் சொல்வதை நீங்கள் அணுகிக் கேளுங்கள். கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி “ஈஸ்வரா…!” என்று நினைவினை உயிருடன் ஒன்றுங்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெறவேண்டும்…! என்று ஏங்கிப் பெறுங்கள்.. அந்த அருள் உணர்வைச் சுவாசியுங்கள்.

அந்தத் தீமையான உணர்வை நுகர்ந்தாலும்
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இந்தக் கருவுக்குள் இணைந்து அடுத்த நிமிடம் வட்டமிடும்.
2,அப்படி வட்டங்கள் இடும் பொழுது இந்த அணுக்களின் தன்மைகள் இது கருவாக உருவான பின் உடலுக்குள் அதிகமாகின்றது.
3.இந்த வீரிய சக்தி உருவான பின் அதை அடக்கி அருள் ஒளி பெறும் அணுவின் தன்மையாக இது உருபெறுகின்றது.

அந்தக் கருவின் தன்மை அடைந்த பின் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் செலுத்தி உடலுக்குள் சுழல விடப்படும் பொழுது இந்த வீரிய சக்தியால் அடைப்பட்டு இதையே (அருள் உணர்வுகளையே) அது நுகர நேரும்.

அப்பொழுது அந்தத் தீமையான உணர்வுகளை நுகராது தடைப்படுத்திவிடும்.
1.வேதனை என்ற உணர்வு வராது
2.நமக்குள் அந்த உயர்ந்த ஞானியின் உணர்வுகளை அறிவுடன் தெளிவாக நடந்திடும் அணுக்கருவாக அது மாற்றிவிடும்.

பின் அணுவின் தன்மை அடைந்த பின் அதன் உணர்வை நுகர்ந்து தனக்குள் வேதனையை அகற்றும் உணர்வின் எண்ணங்கள் தான் வரும்.

இப்படி வலுவாக்கிக் கொண்டு… இந்த நோய் உங்களை விட்டுப் போய்விடும்…! என்ற வாக்கினை யாருக்காவது சொன்னால் அது அங்கே கருவாகி அந்த நோயை நீக்கிடும் அணுவாக மாறுகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறவேண்டும் என்று நாம் தியானித்துவிட்டு… இந்த உணர்வை அடைத்துவிட்டு… நோயுள்ளவரிடம்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்
2.உன் நோயின் தன்மை நீங்கும்
3.அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கு
4.அந்த உணர்வின் தன்மை உனக்குள் பெற்றுக் கொள். – நோயிலிருந்து விடுபடுவாய்… என்ற உணர்வைச் சொல்லி
5.அவர் உணர்வின் நினைவை அந்த மகரிஷிகளின் பால் செலுத்தச் செய்யுங்கள்.

நீங்கள் ஊட்டிய உணர்வுகள் அங்கே கருவாகி அந்த உணர்வுகள் அவருக்குள் விளைந்தால் அதன் உணர்வைப் பெறும் தகுதியாக அதன் கருவாக உருவாக்கப்படும்.

அதன் நினைவாற்றல் அணுவாக மாறி அந்த உணர்வை நுகர்ந்தோர் உடலில் அது நல்வபழிப்படுத்தும் நிலையும்… துயரத்தையும் வலியையும் குறைக்கும் நிலையும்… அருள் ஒளியின் உணர்வைத் தன் உடலுக்குள் பரப்பும் சக்தியும் பெறுகின்றது.

இப்படி உங்கள் வாக்கும் அந்த நோயை நீக்கச் செய்யும்…!

அந்த அகஸ்தியமாமகரிஷி காட்டிய அருள் நெறிகளை நீங்கள் நுகர்ந்து அவரின் ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகி அதன் உணர்வின் தன்மை கொண்டு அவர் நினைவாக.. நோயுற்றோரை நீங்கள் நலம் பெறுவீர்கள்…! என்றும் அதற்கப்புறம் நீங்கள் உதவி செய்யும் நிலைகளில் நீங்கள் நலம் பெறுவீர்கள்… அருள் பெறுவீர்கள்… அருள் ஒளி பெறுவீர்கள்…! என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.

இந்த உணர்வுகள் அவருக்கும் கருவாகும். அவர்கள் நினைவு கொண்டால் அதை அடைகாக்கும் நிலை கொண்டு அதை வளர்த்துத் தனக்குள் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையை அவர்கள் பெறுகின்றார்கள்.

1.ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும்.
2.அருள் ஒளிச் சுடராக துருவ மகரிஷியாக வேண்டும்.

துருவ மகரிஷி என்ற நிலையை உருவாக்கி விட்டால் ஒருவருக்கு நீங்கள் சொல்லி அவர் மகிழ்ச்சி பெற்றால் அவர்களை மீண்டும் எண்ணும் பொழுது… “மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் உங்களுக்குள் விளைகின்றது…”

இதைப் போன்று ஒவ்வொருவரையும் மகிழச் செய்யும் உணர்வுகள் வரும் பொழுது..
1.ஒவ்வொருவர் உடலில் உருவாகும் அந்த உணர்வின் தன்மை அங்கே விளைந்து
2.அந்த உணர்வின் தன்மை மணங்களாக வரும் பொழுது அதை நுகர்ந்தால்
3.உங்களுக்குள் அருள் சக்தியாக “ஒளிச் சுடராக” மாற்றும் தன்மை வருகின்றது.

உங்கள் அனுபவத்தில் இதைப் பார்க்கலாம்…!

கடவுளை அறிய வேண்டும் என்ற வீரிய எண்ணம் விவேகானந்தருக்கு எப்படி வந்தது…?

இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்படுத்திய ஆச்சரியப்படும் செயல்களை குருநாதர் காட்டினார் 

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் கடவுளைப் பற்றி விவேகானந்தர் கேட்டது என்ன…?

flying powers

உடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்

 

உதாரணமாக ஒரு புழு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் மணத்தால் உருவாகும் மலத்தை நூலாம்படை போல் தனக்குள் சுற்றுகின்றது.

அந்தப் பட்டுப் புழு… இவ்வாறு தனக்குள் சுழற்றிக் கொண்ட பின்
1.தன்னை அறியாமலே ஒரு பாதுகாப்புக் கூடாகக் கட்டிக் கொள்கின்றது.
2.பாதை இல்லாத நிலைகள் அடைபட்டுக் கொண்ட பின்
3.”வெளியிலே செல்ல வேண்டும்…” என்ற உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

வெளியே செல்ல வேண்டும்…! என்ற உணர்வுகள் ஊட்டப்படும் பொழுது தன் உடலிலிருந்து வெளிப்பட்ட மலத்தால் கட்டப்பட்ட கூட்டின் நிலைகளிலிருந்து தன் உணர்வின் தன்மையை வளர்த்து
1.இந்த நினைவின் ஆற்றல் “வெளியிலே பறக்க வேண்டும்…” என்ற உணர்வுகள் முதிர்ந்து
2.அது இறக்கைகளாக வளர்கின்றது.

பின் தன் மலத்தால் கட்டப்பட்ட அந்தக் கூட்டைக் கத்திரித்து வெளியே வரப்படும் பொழுது பூச்சியாக வருகின்றது.

பின் அந்தப் பூச்சி முட்டையிடும் பொழுது அதன் கருவாகத் தன் இனங்களாகப் பெருக்குகின்றது. இதைப் போல் அது கூடு கட்டி மீண்டும் பறக்கும் பூச்சியாக மாறுகின்றது.

இதைப் போல் தான் அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு நமக்குள் இந்தக் கூட்டைக் கட்டி இந்த உணர்வின் தன்மை அருள் வட்டமாக நமக்குள் சேர்க்கப்படுகின்றது.

1.எந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ
2.இந்தக் கூட்டை விட்டு வெளியிலே செல்லும் பொழுது
3.அந்த அருள் ஞானியின் அருள் வட்டத்திற்குள் சென்று
4.நாம் என்றும் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

ஒரு பட்டாம்பூச்சி அது இடக்கூடிய முட்டையிலிருந்து புழுவின் தன்மை விளைவித்தாலும் வளர்ச்சியில் இதே பூச்சி பறந்து சென்று ஒரு பூவின் மீது அதன் தேனின் சுவைக்காகச் சென்றால் அந்தச் சுவையின் தன்மையில் அதிலே முட்டைகளை இடுகின்றது.

முட்டைகள் அந்தத் தேனுக்குள் சிக்கப்பட்டு அந்த அமுதத்தை அதற்குள் செருகப்பட்டு இந்த உணர்வின் தன்மை அதன் கருவை அது வளர்த்து அதனுடைய நிலைகள் பட்டாம்பூச்சியாகப் பிறக்கின்றது.
1.பட்டாம்பூச்சியாக வரப்படும் பொழுது
2.அந்தப் பூவியின் நிறம் எதுவோ அதைப் போல் பட்டாம்பூச்சியின் இறக்கைகள் வளருகின்றது.

இது எல்லாம்…
1.அதனதன் நுகர்ந்து கொண்ட உணர்வு கொண்டு
2.அது இடும் முட்டைகள் அது “கருவிலே சேர்க்கும்” நிலைகள் கொண்டு
3.பல பல நிறங்களில் இவ்வாறு வருகின்றது.

நாம் ஒரு வேதனையான உணர்வை நுகரப்படும் பொழுது அது அணுக்கருவாக நம் உடலிலே உருவானாலும் அடுத்த கணம் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்ற உணர்வை நுகரப்படும் பொழுது அந்தக் கருக்களின் வட்டத்தில் இது சேர்ந்து விடுகின்றது.

பின் அந்த வேதனைப்படும் உணர்வை நுகராது இந்த அருள் உணர்வுகளையே அது நுகர்ந்து இந்த உணர்வின் தன்மை கொண்டு அருள் ஒளியை நுகரும் அணுவாக இது உருப்பெற்று விடுகிறது.

நாம் நுகர்ந்த மகரிஷிகளின் உணர்வின் அணுக்களாக வெளிவரப்படும் பொழுது
1.அந்த உணர்ச்சிகளை நமக்குள் எழுப்பி
2.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

இது எல்லாம்…
1.நம் எண்ணத்தால் உருவாக்கும்… உணர்வால்… இயக்கும் உணர்வுகள்
2.ஒவ்வொருவரும் மறக்காது இதன் வழி செயல்படுத்த வேண்டும்.

பிரகலாதன் கதை

 

கருவில் பெற்றுப் பிறக்காதபடி உணர்வின் மோதலில் பிறந்தவன் என்றும் பிறக்காமல் பிறப்பது அதாவது பெறாமலே பெறுவது என்று நரசிம்ம அவதாரத்தில் காட்டுகின்றார்கள். அவன் ஹரி ஓம் நமோ நாராயணா என்று அவன் உணர்த்துகின்றான்.

Vinayagar -question mark

என்னை நீ காண்… உன்னை நீ காண்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இது நாள் வரை நீங்கள் தியானத்தில் அறிந்த மார்க்கம் “ஞானத்தால் அறியும் மார்க்கம்…” நீங்கள் எடுத்துக் கொண்ட பக்தி முறை ஜெபவழி தியான வழி முறையில் ஞானம் கொண்ட ஞான வழித் தொடரினால்
1.உம் எண்ண அலைத் தொடரில்
2.எம் அலைத் தொடரின் தொடர்புடன்
3.ஞானத்தில் அறிந்த உண்மைகள் யாவையும்
4.செயல் முறையில் சித்துடன் காணப்படும் உண்மையையும்
5.செயல்படும் வழித் தொடர் நிலையையும் பாட முறைக்கு அறியுங்கள்.

காட்சி:-
ஒரு புட்டியில் தேன் உள்ளதைப் போன்றும் அத்தேனை உள்ளங்கையில் சிறிது விட்டுச் சுவைப்பதைப் போன்றும் தெரிகின்றது. இதன் விளக்கம் என்ன…?

விளக்கம்:-
பல தேனீக்கள் தன் உழைப்பால் சேமித்ததைச் சேமித்து வைத்த நிலை தான் புட்டியிலுள்ள தேன். அதைப் போன்று… சுவையான ஞானத் தேனின் சேகரிப்பு தான்… சக்தி பூண்ட ஞானிகளின் செயல் சேகரிப்பு…!

1.அவர்களின் ஞான அலைத் தொடரின் எண்ணமுடன்…
2.அவர்களின் அலைசக்தியான ஞான முறையை
3.இந்தத் தொடர் உபதேசத்தில் நீங்கள் அறிந்துள்ள தன்மையில்…
4.சேகரிக்கப்பட்ட இந்த ஞான அலையின் உண்மைதனை
5.புட்டியிலுள்ள தேனைச் சிறுகச் சிறுகக் கையில் ஊற்றிச் சுவைத்துப் பருகும் இனிமையான செயல் தன்மையில்
6.உங்களின் ஞானத்தால் அறிந்த நிலையின் செயல் வழிச் சித்து நிலை இருக்க வேண்டும்.

புட்டியிலுள்ள தேனை அப்படியே பருகினால் அதன் சுவையே தித்திப்பு திகட்டக்கூடிய எதிர்க்கும் தன்மை ஏற்படும். இதை உணர்ந்து ஞானத்தால் அறிந்து உண்மைதனைச் சித்து வழியில் அறிந்திட

 

முதல் நிலை தான் “என்னை நீ காண்…!”

1.உன்னுள் உள்ள இறைவன் யார்…? என்பதை நீ முதலில் அறிந்து கொள்
2.நான் என்பது யார்…?

இச்சரீர பிம்பக் கூட்டில் ஒளி அலைகள் மோதலில் காணப்படும் நிழல் பிம்பம் ஒன்று.
1.நீரிலோ நிலைக் கண்ணாடியிலோ காணப்படுவது எதிர்பிம்பம்.
2.செயலாக உண்ணுவது கழிப்பது உறங்குவது செயல் பிம்பம்.
3.இதனை இயக்க்கூடிய ஆத்ம பிம்பம் தான் இப்பிம்பத்தையும் இப்பிம்ப எண்ணத்தையும் வழி நடத்திச் செல்வது…!

இதில் நான் என்பது யார்…?

ஆத்மாவாகித்தான் இச்சரீர பிம்ப எண்ணம் செயல் கொள்கின்றது. இச்சரீர பிம்ப செயலைத்தான் “நான்…” என்று உணர்ந்து நாம் எதனையுமே செயல்படுத்துகின்றோம்.

இச்சரீர பிம்பத்தில் ஓடும் எண்ணங்கள் யாவும் இச்சரீர சுழற்சியின் மோதலின் உணர்வுடனே செல்கிறது. செவி ஈர்த்து… கண் பார்க்கும் ஒளி வட்டத்தின் உணர்வுடனே… இவ்வெண்ணத்தைப் பாய்ச்சி “வாழ்க்கை” என்ற சூழலில் சுழலும் வட்டத்தின் செயலுக்காகவே வாழ்கிறோம்.

1.இச்சரீர பிம்பத்தின் நினைவுக்கும் – பிம்பத்தை அழகுபடுத்த ஆடை அணிகலன்களையும்
2.இப்பிம்பத்தின் வார்ப்பைப் பாதுகாக்க அதற்குகந்த சொகுசு முறையிலும் – பிம்பத்தின் சுவை ருசிக்காகவும்
3.இப்பிம்பத்தின் செயலை ஒத்த எண்ண ஓட்டமும் – பந்த பாசச் சுற்றுபுறச் சூழல் இவற்றின் செயல் வழிக்கொத்த உணர்வையும்
4.அதைப் போன்ற சரீர பிம்பச் செயல்களில் தான் இவ்வெண்ண ஓட்டங்கள் செயல்படுகின்றது.

அதிலிருந்து வடுபட்டு இச்சரீரத்தில் உள்ள உண்மை ஜீவ சக்தியான “ஆதிசக்தியின் உண்மைச் சக்தியை” ஆத்மா பெறவல்ல தன்மைக்கு நம் ஞானங்கள் செயல்பட வேண்டும்.

“ஆதி சக்தியான… நீர் சக்தியின் சக்தித் தொடர்பு தான்… சர்வ சக்தியையும் வளர்க்கவல்ல சக்தி…!”
1.ஆத்ம உயிருக்கு… இவ்வாத்மாண்டவன் வளரவல்ல தொடருக்கு
2.ஜீவத் துடிப்பு இயக்கத்தில் இருந்தால் தான்
3.அதன் வலுத் தன்மை கூட முடியும்.

காட்சி:-
கீழே ஒரு அடுப்பை எரிப்பதைப் போன்றும் பானை ஒன்றை அந்த அடுப்பில் ஏற்றி அந்தப் பானைக்குள் எதுவோ வெந்து கொண்டிருப்பது போன்றும் வேகப்படும் பொருளின் ஆவி வெளிப்படுவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:-
இந்தப் பூமி அடுப்பைப் போன்றது. இச்சரீரம் பாத்திரம் போன்றது. அதில் வேகப்படும் பொருள் எவ்வெண்ணத்தை எல்லாம் கொண்டு இச்சரீரத்தில் நாம் போடுகின்றோமோ… அதன் சுவை தான் சொல்லாகவும் செயலாகவும் வெளிப்படும்.

பாத்திரத்தில் போட்டு வேகப்படுவதைப் போன்று இவ்வெண்ணத்தால் போடப்படும் நிலையின் சுவைதான் “இச்சரீரத்தை இயக்கும் உயிராத்மா பெறுகின்றது…”

பாத்திரத்தில் வேகப்படும் பொருளின் சுவை… மணம்… எப்படி ஆவியான தன்மையில் வெளிப்படுகின்றதோ அதைப் போன்று தான் இப்பால்வெளி மண்டலத்தின் சூரியனின் வளர்ப்புப் பிடியின் மோதலினால் இந்தப் பிம்ப இயக்கம் உள்ளது.

 

1.நீங்கள் பெற்ற ஞானத்தின் செயல் தொடர்பில்..
2.ஆத்மாவின் உண்மை இயக்கத்தை…
3.“உன்னை நீ காண்…!” என்ற பொருளின் உண்மையை செயல் அறிந்திடுங்கள்…!

நாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…?

கடையில் வியாபாரம் ஆகும் பொழுது பக்கத்துக் கடை வியாபாரத்தை எப்படிப் பார்க்கின்றோம்..? 

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நமக்கு நோய் எப்படி வருகின்றது…?

transitional meditations

வாழ்க்கையே தியானமாக்கினால் மகரிஷிகள் அடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்

நம் சகஜ வாழ்க்கையில் எப்பொழுது தீமையும் கொடுமையும் நாம் நுகர நேர்கின்றதோ… அறிய நேருகின்றதோ… “அறிந்துணர்ந்தாலும்…” நமக்குள் அது வளராது தடுத்துப் பழக வேண்டும்.

தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும். அதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் பகைமை என்ற உணர்வுகள் வளராது நல்லதாக்க முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அடிக்கடி நாம் கூர்மையாக எண்ணி ஏங்கிப் பெறும் பொழுது அது கூர்மை அவதாரமாகி… ஒளியான உணர்வின் அணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக முடியும்.

1.எதன் வலிமையைப் பெற்றோமோ…
2.இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.

அங்கே அதனின் உணர்வின் தன்மை கொண்டு இருளை வென்று உணர்வின் ஒளியாக மாற்றி என்றும் ஒளியின் சரீரமாகப் பெறுகின்றது.

நாம் எண்ணத்தால் உருவாக்கிய உணர்வுகள்… எண்ணம் சீதாராமா. எந்தச் சுவை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக நமக்குள் தூண்டுகின்றது.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகள் நமக்குள் சேரும் பொழுது சீதா…! உணர்ச்சிகள் சீதாராமனாகத் தோன்றுகின்றது.
1.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நம்மை இயக்கி
2.அந்த உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும் பொழுது இராமலிங்கம்.

சீவலிங்கமாகக் கோள்கள் உருவாகின்றது. ஆனால் அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக ஜீவ ஆன்மாவாக நாம் விளைகின்றோம். ஜீவ ஆன்மாக்களாக எதை விளைவிக்கின்றோமோ சிவமாக (உடலாக) மாறுகின்றோம்.

உயிரின் தன்மை நமக்குள் இயக்கவில்லை என்றால் இந்த உடல் சவமாகின்றது. எந்த உணர்வை எடுத்தோமோ அதற்குத் தகுந்த அடுத்த ரூபத்தை உயிர் மாற்றுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

மனிதனாக ஆன பின் கார்த்திகேயா… இதை அறிந்திடும் பக்குவம் பெற்றவர்கள் நாம்… இந்த உடலினின்றே இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அணுவாக மாற்றுதல் வேண்டும்.

ஆகவே தான்…
1.அந்த ஞானிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்குகின்றோம்.
2.அந்த உணர்வின் சத்தாக உங்களை நுகரச் செய்கின்றோம்.
3.அந்த அணுவின் கருவாக உங்களுக்குள் உருவாகச் செய்து
4.உங்கள் இரத்தநாளங்களில் பெருக்கும்படி செய்கின்றோம்.

இதையே நீங்கள் அடைகாத்தது போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று காலை துருவ தியானத்தில் ஏங்கினால் அந்த உணர்வின் அணுக்கருக்களுக்கு ஜீவன் ஊட்டுகின்றீர்கள். ஒளியான அணுக்களின் பெருக்கமாகின்றது.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர வேண்டும் என்று எண்ணினோமோ அந்த அணுக்கள் தனக்கு வேண்டிய உணவைப் பற்றி ஏங்கும் பொழுது
1.அதே அருள் உணர்வுகளை நுகரச் செய்து
2.ஞானத்தின் உணர்ச்சியாக நம்மை இயக்குவதும்
3.ஞானிகள் சென்ற வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள எல்லாம் அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிட்டால் இதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலிலே ஏற்கனவே இருந்த இருள் சூழ்ந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்துவிடுகின்றது.
1.அது மடியும் தன்மை வரும் பொழுது ஒளியின் அணுவாக மாறுகின்றது
2.மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்றால்
3.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் ஒளியின் சரீரமாக மாறுகின்றோம்.

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

காலையில் எழுந்தவுடன் எண்ண வேண்டிய நல்ல எண்ணங்கள்

 

கண்களை விழித்ததும் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… நாங்கள் பார்த்த அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் இணைந்து வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும். மற்றவரகள் உணர்வுகள் தீய வினைகளாக உடலுக்குள் இருப்பினும் இவ்வாறு பிரார்த்தனை செய்தால் அவைகள் அனைத்தும் அடங்குகின்றது. நம் மனம் தூய்மையாகின்றது. அன்றைய நாள் முழுவதுமே புத்துணர்வாக இருக்கின்றது.

sages-lights

“சப்தரிஷி” என்பவன் எப்படி உருவானான்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆத்ம சக்தியின் உண்மையை உணர்ந்து ஞானத்தைப் பெருக்கும் உயர் ஞானச் செயலை அறிய ஏக்கம் கொண்டவர்கள்… இச்சரீர பிம்ப ஆத்ம எண்ண அலையை மகரிஷிகளின் பால் செலுத்தினால் சகலத்தையும் அறியும் ஆற்றல் பெற முடியும்.

அந்த அலைத் தொடரைப் பற்றிடல் வேண்டும். மகரிஷிகளின் அலைத் தொடர் என்பது என்ன…?

1.சகலத்தையும் அறியவல்ல.. சகலத்திலும் கலந்துள்ள… உயர் சக்தி கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பலையின் தொடர்பாக
2.இச்சரீர எண்ணமானது செலுத்தப்படும் தொடர் கொண்டு
3.இச்சரீர உணர்வு அமிலக்கூட்டின் வளர்ச்சி நிலைக்கு உகந்த அலைத் தொடர்பின் சக்தி தியானத்தால்
4.இச்சரீர பிம்ப உணர்வுகளோ.. இயக்கங்களோ… தன் நிலை மறந்த மயக்க நிலையோ அன்றி…
5.இந்த ஞான ஆத்ம பலத்தின் எண்ண ஞானத்தால் – உயர் தொடர்புடைய அலைச் சக்தியின் தொடரினால்
6.இந்தப் பிரபஞ்ச உண்மைகளையும் இதன் தொடர்பு கொண்ட பால்வெளி மண்டல வளர்ப்புத் தொடர் யாவையுமே
7.தன் நிலை மறக்கா உணர்வுடனே ஒவ்வொருவரும் காண முடியும்.

“சித்து நிலை” பெறுவது என்பதுவும் இதன் தொடர் அலை வழித் தொடரினால் தான்.

ஆகவே அத்தகைய ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்றால் இச்சரீர பிம்ப வளர்ப்பிற்கு நல் உர சக்தியைப் போட வேண்டும்.

நல் உர சக்தி என்பது… எது…?

1.தனித்த ஆத்மாவாக எண்ணத்தாலும் செயலாலும் பிற ஆத்மாவின் தொடரில் இருந்தெல்லாம் விலகி
2.தன் குணத்தின் நற்குணம் எது…? என்று அறிந்து
3.அதன் சுழற்சியில் பக்தி கொண்ட ஜெப ஞான தியானத்தால் மட்டும்
4.உயர் சக்தியை இவ்வாத்மாவுக்கு உரமாகச் செலுத்த முடியாது,

நறுமணமான நிலையிலிருந்தோ… அமைதியான சுற்றுச் சூழல் தனித்த வாழ்க்கை முறையிலோ… அதிலும் இவ்வாத்ம ஞானம் வலுக் கூடாது.

அதே சமயம்… பல மனிதர்களுடன் மத்தியில் வாழக்கூடிய தொடர் வாழ்க்கையில்… (இப்பொழுது வாழும் நிலை) அவர்களின் அலை ஈர்ப்பின் பிடிப்பில்… அவர்கள் செய்யும் குரோத வஞ்சனை உல்லாச கேளிக்கைகளுக்குள்… நம் உணர்வால் எடுக்கக்கூடிய எண்ன மோதலின் பிடியில் சிக்கி விட்டாலும்… இவ்வாத்மாவிற்கு நாம் போடக்கூடிய உரம் தடைப்படுகின்றது.

மனித ஆத்மாவிற்கு வலு உரம்… பின் எங்கிருந்து எப்படி எடுக்க முடியும்..?

ஒரு உயர்ந்த குண உலோகமான தங்கம் அது வளரக்கூடிய பகுதியில் மண்ணுடன் மண்ணாக ஒவ்வொரு இடத்திலும் அதன் வளர் தனமை வளர்ச்சி நிலை கூடிக் கூடி உயர்ந்த வார்ப்புப் படிவமாகின்றது.

அதாவது…
1.மண்ணின் சத்துப் படிவத்துடன் அடுக்கடுக்கான படிவமாக வளர்ந்து வலுக் கொண்ட உலோக வார்ப்பாக அத்தங்கம் வளர்வதைப் போன்றும்
2.நெருப்புடன் நாம் எப்பொருளைப் போட்டாலும் போடப்படும் பொருள் யாவையுமே அந்த நெருப்புடன் பஸ்பமாகும் நிலை போன்றும்
3.இந்த உலகச் சுழற்சி பந்த வாழ்க்கையில் இச்சரீர பிம்பம் சிக்குண்ட பிடியிலிருந்து தங்கத்தின் படிவமான வளர்ப்பைப் போன்று
4.இம்மண்ணான பிரபஞ்சத் தொடரின் உயர் உரமாக இச்சரீர பிம்ப ஆத்மாவிற்கு நாம் அளிக்கக்கூடிய உரமானது
5.தங்கத்தின் படிவமான வளர்ப்பை ஒத்த வளர்ப்பைப் போல் நாம் எடுக்கக்கூடிய சத்துத் தன்மை
6.திரவகத்தில் செலுத்தப்படும் செம்பு பித்தளை இரும்பு போன்று கரைந்தாலும் இத்தங்கம் கரையாத நிலை பெறுவதைப் போலவும்
7.நாம் அளித்த உரத்தின் தன்மை கொண்டு இந்த ஆத்ம சக்தி எவ்வீர்ப்புப் பிடியிலும் போய்ச் சிக்காமலும்
8.வந்து மோதும் பிரபஞ்சத் தொடர்பு வேண்டப்படாத தீய எண்ணங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு இவ்வாத்மா வலு தங்கத்தைப் போன்றும்
9.இப்பிரபஞ்ச திரவகக்திலிருந்து கரையப்படா தங்கமாக ஜொலிக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டு வர வேண்டும்.

இப்பொழுது வாழும் இந்தச் சுழற்சி வாழ்க்கையில் நம்முடன் தொடர்பு கொண்ட ஆத்மாக்களின் எண்ண உணர்வின் ஈர்ப்பு அலைத் தொடர்பை இச்சரீர பிம்ப எண்ணத்தில் நாம் எடுத்துத் தான் நம் ஆத்மாவிற்கு உரம் போட்டு உரமாக்க முடியும்.

ஆத்மத் தொடர்பின்றி ஆத்ம வலுவை நாம் பெருக்க முடியாது என்ற உண்மையைத் தெளிவாக உணர்ந்திடல் மிகவும் அவசியம்.

ஆனால் எந்த எண்ணத்தைப் பிற எண்ணத்தின் பால் நாம் செலுத்துகின்றோமோ அதே எண்ணத்தின் பிரதிபிம்ப அலை உணர்வின் எதிர் நிலைதான் நம் எண்ணத்திற்குள்ளும் வந்து அந்த அலை பாயும்.

பெண்மைக்கு ஆண்மைத் தொடர் அமில குணவார்ப்பு சக்தி இல்லாவிட்டாலும்… ஆணிற்குப் பெண்ணின் ஜீவ ஈர்ப்பு வளர்ப்பு இல்லாவிட்டாலும்… இவ்வாத்ம வலுவைத் தனித்த உணர்வு எண்ணத்தைச் செலுத்தி வளர்த்துக் கொள்ள முடியாது.

இவ்வாத்மாவிற்கு உரமே…
1.பிற ஆத்மாக்களில் செலுத்தும் எண்ண உணர்வின் தொடர்பலையிலிருந்து
2.இந்த ஞானத்தின் வலு செயல் கொள்ளத் தகக முறையால்
3.அமில உணர்வு வளர்ப்பு அணு வளர்ச்சியின் வலுக் கொண்ட உராய்வால் தான்
4.இவ்வாத்ம வலுவின் வளர் தன்மை உயரும்.

 

அத்தகைய உயர்வினால்… இச்சரீர ஜீவத் துடிப்பலையின் தொடர்பு கொண்ட வளர்ச்சியிலிருந்துதான்… “சகலத்தையும் அறியும் வளர்க்கும் சப்தரிஷியே… உருவானானப்பா…!”

 

இறந்தபின் யாருக்கும் ஒன்றும் தெரியாது என்பார்கள், தெரிந்து கொள்ளுங்கள் 

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களின் நிலைகள்

நம் உயிர் பக்கம் வரும் பிற உயிரான்மாக்களின் இயக்கங்கள்

i9nner atma power

னக்குள் உள்ள இறை சக்தியை உணர வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து தான் ஆத்ம உயிர் வலுப் பெறவேண்டும்.
2.ஆத்ம உயிர் வலுப் பெற ஜீவ சக்தி வேண்டும்.

“நீரின் சக்தியைக் கொண்டு” ஆவியாகும் காற்றும்… நெருப்பும்… கொண்ட தொடர் வளர்ச்சி இப்பூமியைச் சுழல வைப்பதைப் போல் எச்சக்தி வளரவும்… “இஜ்ஜீவ சக்தி தேவை…”

இஜ்ஜீவ சக்தி ஆவியாகிச் சமைக்கப்படும் சத்து நிலை தான் சரீரக் கூறின் எலும்புகளின் வளர்ச்சியைக் கொண்டு பிம்பத்தின் வார்ப்பு ஆரோக்கிய நிலை பெறுகின்றது. அதன் வலுச் சக்தியைச் சரீரத்தைச் சுற்றியுள்ள ஆத்ம வலுவேற்றிக் கொள்கின்றது.

இந்தச் சரீரக் கூடு சமைக்கும் சத்தெடுத்து வளரும் ஆத்மாவிற்கு இந்த உலகப் பந்தத்தில் சுழலில் விஷமாகக் கலந்துள்ள இன்றைய எண்ண குரோத நிலையிலிருந்து நம் ஆத்மா வலுப் பெறும் மார்ர்க்கம் என்ன…?

எப்படி விஷமான நாக சர்ப்பத்தின் உடலில் மாணிக்கக்கல் வளர்கிறதோ… அதைப் போன்று
1.இவ்விஷ உலகப் பிடியிலிருந்து உயர் ஞான அலைத் தொடருக்கு நாம் சென்று
2.அந்த அலைச் சக்தியையே நம் உணர்வின் எண்ணச் சுவாசம் வளர்க்கும் நிலை கொண்டு
3.அவ்வளர்ப்பின் சக்தி வலுவை இவ்வுயிர் ஆத்மா பெறப் பெற
4.ஆத்மா வலுப் பெற்ற ஞான வளர்ச்சி நிலைக்குப் பிறகு
5.தன் வலுவைத் தானே வளர்க்கக்கூடிய :ஆத்ம சித்து” நிலையின் செயல் முறையும் அடையலாம்.

எண்ணத்தின் வீரியத்தில் ஜெப முறையின் பக்தி மார்க்க ஆவேச அலைத் தொடரில் அதே அலைத் தொடர் கொண்ட ஆத்ம குடியிருப்புக்கு இந்தச் சரீரத்தில் குடியிருக்க இடம் தந்து அவ்வலை ஞானத்தை இச்சரீரத்தின் உதவி கொண்டு அவற்றின் ஞானத்தால் பெயரும் புகழும் அடைந்தாலும் இந்த உலகச் சுழற்சிக்குள் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

1.எக்கவி பாடினாலும்…
2.எவ்விஞ்ஞானத்தை அறிந்தாலும்…
3.தன்னைத் தான் உணர்ந்து
4.தனக்குள் உள்ள இறை சக்தியைத் தான் வளர்த்து
5.ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயர் ஞான ஈர்ப்பலையின் தொடர் அமிலத்தை வளர்க்கவல்ல
6.சுவாச ஈர்ப்பு மின் காந்த வளர்ச்சி ஓட்ட வளர்ப்பினால் மட்டும் தான் உயிர் ஆத்மா வலுக்கூடும்
7.எவ் ஈர்ப்பலைக்கும் சென்று இந்த உடலை விட்டு எந்த நிமிடத்திலும் உடலிலிருந்து இயக்கவும்
8.உடல் அற்ற நிலையிலும் வலுக் கொண்ட ஆத்மா எவற்றிலும் சிக்காவண்ணம்
9.செயல்படுத்தும் சித்து நிலையும்… இதன் வளர்ச்சித் தொடர் யாவையுமே பெற முடியும்.

ஆனால் சில அலைத் தொடர்பின் பக்தி முறை ஜெப வழியில்… கூடு விட்டுக் கூடு பாயும்… உடலை அடக்கி ஆத்மாவைப் பிற உடலுக்குச் செலுத்தி செயல்படுத்திய பல மாந்திரீகத் தொடர்பு கொண்டவர்கள்… அதன் தொடர்பால் வேறு ஒரு ஈர்ப்பலையில் சிக்குண்டு… “தான் பெற்ற சித்துகளின் சக்தியையே அழித்துக் கொண்டனர்…”

உயர் ஞானத் தொடர்பின் அலைத் தொடரில்…
1.“தன்னைத் தான் நம்பி… தனக்குள் உள்ள இறை சக்திக்குப் பூஜிப்பு நடத்தி வளர்த்தால் அன்றி
2.வளர் சக்தி பெறுவது… மற்றெந்த நிலையிலும் கடினம்.

“தன் ஆத்ம உயிரைக் கொண்டு…” ஆத்மாவின் சக்தி தான் இந்த உடல். இந்த உடலை இயக்குவதே இவ்வாத்மா தான் என்பதை முதலில் உணர வேண்டும்.

1.தன் உயிராத்மா வளர… வலுப் பெற…
2.ஜீவ சக்தி தரவல்ல இச்சரீர கோளத்தின் உண்மை உணர்ந்து
3.உயிர்த் துடிப்பின் செயலுக்கு வலுத் தந்த
4.தாய்மைச் சக்தியின் தொடர்பைப் பூஜித்தே
5.ஒவ்வொரு ஆத்மாவும் இதன் உண்மையின் வழித் தொடரைப் பெறுங்கள்.

முதல் தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய கடமை

 

என் கடவுளுக்கும் குருவுக்கும் தெய்வத்திற்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். என்னால் பட்ட துன்ப நிலைகள் மாறவேண்டும். அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும்… மகிழ்ச்சி பெறவேண்டும் என்று அதிகாலை தியானிக்க வேண்டும். 

ANGUSAM

நோய்வாய்ப்பட்டவரை நோயிலிருந்து விடுபடச் செய்யும் பயிற்சி

 

ஒருவர் கடுமையான வியாதியுடன் இருந்தால்… கடைசியில் அந்த ஆன்மா வெளி வந்த பின் அவர் மீது பற்று கொண்ட உணர்வு நமக்குள் அதிகமாக இருந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

பின் அந்த உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பெருகத் தொடங்கிவிடுகின்றது. நம் நல்ல குணங்களை எல்லாம் மறையச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்..?

உடலுடன் இருக்கும் பொழுதே அவருக்குள் இருக்கும் தீமையான குணங்களை மறையச் செய்ய
1.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் ஓங்கி வளரச் செய்து
2.நம் உடலுக்குள் அது வராது முதலில் தடுத்துக் கொள்ள வேண்டும்.
3.பின் அருள் ஒளியின் உணர்வைச் சொல்லாக வெளிப்படுத்தி
4.செவி வழி பாய்ச்சி அவர்களை உற்று நோக்கும்படி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகரச் செய்தல் வேண்டும்.

நுகர்ந்த உணர்வுகள் அங்கே நோயை நீக்கும் அணுவின் தன்மை வளர்ச்சி அடையத் தொடங்கும். அந்த நினைவை அவர்கள் கூட்டக் கூட்ட அவர்கள் நோயிலிருந்து விடுபடுகின்றனர். இதை நாம் செய்தல் வேண்டும்.

தியானம் இருப்போர்கள் இப்படி நாம் வழி நடத்தி… மற்றோருக்கு இந்த உண்மையின் நிலைகளை உணரச் செய்தல் வேண்டும்.

உதாரணமாக ஒருவன் ரோட்டில் அனாதையாகக் கிடக்கின்றான் அவன் துடிப்பதை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் உதவி செய்யவில்லை.

யார் பெற்ற பிள்ளையோ..! இப்படிக் கிடைக்கின்றானே…! என்று இரக்க உணர்வு கொண்டு நுகர்கின்றோம். அவன் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் அதே உணர்ச்சிகள் தூண்டுகின்றது. ஆனால் அறியச் செய்கின்றது.

ரோட்டில் கிடப்பவனுக்கு நாம் எப்படி உதவி செய்வது…? என்று சிலர் கூச்சப்பட்டுச் சென்றுவிடுவார்கள்.

ஒரு சிலர் அவரை எடுத்து எப்படியும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலில் ஜீவ அணுக்களாக மாறும் கருக்களாக உருவாகின்றது.

மீண்டும் அந்த நினைவை அடிக்கடி எண்ணப்படும் பொழுது அது அணுவாக மாறி அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்து அவன் எப்படிச் சிரமப்பட்டானோ அந்தச் சிரமத்தை உருவாக்கும் அணுக்கள் வந்து விடுகின்றது.

அப்படிப்பட்ட அணுக்கள் பெருகி விட்டால்…
1.அதற்கு உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அதை நுகர்ந்தால்
2.அவனைப் போன்ற நமக்குள் சிரமப்படும் உணர்வுகளும்
3.அவன் செய்த அந்த உணர்வின் தன்மையை நமக்குள்ளும் வளர்க்கத் தொடங்கிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் உற்றுப் பார்த்தாலும் உடனடியாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தி கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… என்ற அந்த உயர்ந்த சக்தியினைக் கொண்டு அவன் கண்டுண்ந்த வேதனை உணர்வு நமக்குள் வராதபடி அதை அடக்கும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

அந்த அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரும் பொழுது
1.இது தான் விநாயக தத்துவத்தில் கூறியபடி அங்குசபாசவா..
2.அதாவது… அங்குசத்தைக் கொண்டு அடக்கத் தெரிகின்றது.
3.ஆறாவது ஆறிவால் நோய்… என்று தெரிகின்றது
3.அந்த மகரிஷிகள்… “நோயை வென்றவர்கள்” என்றும் தெரிகின்றது.
4.நோயை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
5.ஆறாவது அறிவைக் கொண்டு முருகு…! நமக்குள் உருவாகும் சக்தி பெறுகின்றது.

அப்படி உருவாகும் சக்தி பெறும் பொழுது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன். அருள் ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கி வளர்க்கப்படும் பொழுது நஞ்சை அடக்கிடும் உணர்வுகளாக விளைகின்றது.

நமது ஆறாவது அறிவால் தீமைகளை ஒடுக்கும் வல்லமை பெறுகின்றோம் என்பதைத் தெளிவாக்க சாஸ்திரங்கள் எத்தனையோ கூறியுள்ளது.

ஏனென்றால்… ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.
1.எதை எப்படி நுகர வேண்டும்..?
2.எதை அடக்க வேண்டும்…?
3.எதன் வழி நினைவுபடுத்த வேண்டும்…? என்று..!

மீண்டும் மீண்டும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நினைவாக்கப்படும் பொழுது உங்களுக்குள் அந்தக் கருவின் தன்மை வலுப் பெறுகின்றது. அப்பொழுது அந்த அணுவின் தன்மையாக உடலுக்குள் வலுப் பெற இது உதவும்.

அணுவின் தன்மை வலுப் பெற்றால் அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து உணவாக எடுத்து வளரப்படும் பொழுது
1.நாம் மெய் உணர்வுகளை நுகரும் அறிவும்
2.அது வழிக் கொண்டு நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை வளர்க்கும் நிலை வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தின் பயனை ஒவ்வொருவரும் இப்படிச் செயல்படுத்த வேண்டும்.

நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்

மின்னலைப் பேரொளியாக மாற்றிக் கொள்ளும் பக்குவம்

1500 ஆண்டு மனிதனை வாழ வைக்க முடியுமா…?

sparkling souls power

குப்பையிலிருந்து சத்தெடுக்கும் வித்தைப் போல் உலக வாழ்க்கையிலிருந்து நல் மணிகளை ஆத்மாவுக்கு உரமாக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கை வண்டியில் பல மூட்டைகளைப் போட்டு வண்டியை இழுத்துச் செல்வதைப் போல் ஒரு காட்சி தெரிகின்றது.

அந்த மூட்டையில் உள்ள பொருள் எது..? என்று அறியாமல் அந்த மூட்டையைப் பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் உதயமாகின்றது.
1.அரிசியாக இருக்கும்… பருப்பாக இருக்கும்…! என்று சில எண்ணங்களும்
2.சிலருக்கு அதே தொடர்புத் தொழிலில் ஊறிய நிலை பெற்றவர்கள்
3.அந்த மூட்டையின் கோணத்தைக் கொண்டே பருப்பு மூட்டை சர்க்கரை மூட்டை அரிசி மூட்டை என்று யூகிப்பவர்களும் உண்டு.

ஆனால் அந்த மூட்டையைக் கட்டியவனுக்கும் இழுத்துச் செல்பவனுக்கும் “அதில் என்ன உள்ளது…?” என்று தெரியும்.

இதைப் போன்றே இந்த உடல் மூட்டையில் எந்த எண்ணத்தைப் போட்டு வளர்த்திருந்தாலும்… அந்த மனிதனின் புற உருவத்தைக் கொண்டு… செய்யும் தொழில் உற்ற பந்தங்களின் தொடர் பொருளாதார நிலை இதனைக் கொண்டு… ஒரு மனிதனின் நிலையை யூகிக்கும் தன்மை தான் புற உலக எண்ணங்களில் பருப்பாக இருக்குமோ… அரிசியாக இருக்குமோ… என்ற நிலைப்படி….!

கலந்துறவாடித் தொடர்பு கொண்டவர்கள் தொடர்பு நிலையால் மூட்டையின் வடிவ நிலையைக் கொண்டு அதனதன் பொருள் தான்… என்று எப்படி உணர்த்துகின்றோமோ இதைப் போன்று தான் கலந்து வாழ்பவர்கள் “ஒரு மனிதனின் குணத்தை இந்தக் குணமுடையவன் தான்…” என்று உணர்கின்றார்கள்.

1.ஆனால் இந்த உடல் என்ற மூட்டையில்..
2.எதை எண்ணத்தால் ஒரு மனிதன் போடுகின்றானோ
3.அதன் நிலை போடுபவனுக்கு எப்பொருள் என்று தெரிகின்றதோ அதைப் போன்றே
4.ஒரு மனிதனின் எண்ண குணம் அவ\னுக்குத் தான் தெரியும்.

அவன் எண்ணத்தால் போட்டதன் பொருள் நிலை அறிந்து… அவனை இயக்கிச் செல்லக்கூடிய அவன் எண்ணத் தொடர்பு கொண்ட உயர் சக்திகளுக்கும்… அவ்வண்டியோட்டியின் நிலையை ஒத்த நிலையில் அறிய வாய்ப்பு உண்டு.

இந்தச் சரீர பிம்ப மூட்டையே பல எண்ணத்தில் சுழல்கின்ற உருவ மூட்டை தான்…!

இச்சரீர பிம்பத்தில் ஓடக்கூடிய எண்ண ஒலியின் உணர்வலைகள் இப்பொழுது வாழும் வாழ்க்கையும்… முந்தைய காலச் சேமிப்புத் தொடர்பையும்… சுழன்று ஓடும் இந்த எண்ண ஓட்டத்தின் செயலில் வாழ்ந்தது… உண்டது… கழித்தது… ஆகிய
1.எல்லா நிலைப்பட்ட குப்பையின் மத்தியில் தான்
2.உயர் ஞானத்தை வளர்க்கவல்ல உயிர் ஆத்மா உள்ளது.
3.இந்த உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்டிக் கொள்ள…
4.இந்தக் குப்பையான சரீர எண்ணத்தில் உள்ள சத்து நிலையை உரமாக இவ்வாத்மா எடுத்து
5.உயர் ஞான வித்தாக பிறிதொரு ஈர்ப்புச் சுழற்சியில் சிக்காவண்ணம் உயர் ஞானம் பெறல் வேண்டும்.

குப்பையின் மத்தியில் வளரும் மணியான வித்து தன் வளர்ப்பில் அக்குப்பையின் சத்தை எடுத்து பல வித்துக்களைத் தரவல்ல சக்தியைப் போன்று நாம் பிரிக்கும் சக்தி பெற வேண்டும்.

இச்சரீர பிம்ப மூட்டையில் சேமித்துள்ள குப்பையான பல வாழ்க்கைத் தொடர்புகளையும் இவ்வுலகப் பந்தச் செயல் எண்ண உருவத்தில் எல்லாம் இந்த எண்ண ஓட்டத்தை எப்படியும் செலுத்தி வாழலாம் என்று இருக்கக் கூடாது.

ஏனென்றால் வாழ்க்கையில் எந்தெந்த நிகழ்ச்சி ஓட்டத்தில் எல்லாம் நம் எண்ணங்கள் மோதுகின்றதோ அதன் வழித் தொடர் பெற்ற [இன் அதன் அலை ஈர்ப்பு வார்ப்பாகத்தான் இச்சரீர பிம்பம் வளர்க்கும் ஆத்ம நிலையும் செல்லும்.

அவ்வாறு ஆகாதபடி… நமக்குத் தொடர்பு கொண்ட இச்சரீர எண்ண மோதலின் வாழ்க்கை தொடர்பு நிலையிலுள்ள செயலில்
1.குப்பையான உணர்வை எடுத்து இந்தச் சரீரத்தை மேலும் குப்பையாக்காமல்
2.நம்மைச் சுற்றியுள்ள நாம் செல்லும் செயல் வழியிலும் இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் முறையே
3.குப்பையில் உள்ள சத்தை எப்படி அவ்வித்து தனக்கு உரமாக எடுத்து வளர்கின்றதோ
4.அதைப் போன்ற எண்ணமுடன் நம் ஞானம் செல்லுமானால்
5.நம் உயிராத்மாவின் வலு வலுவாகும் சக்தி நிலையை நாம் பெற முடியும்.

மின்சாரத்தை எடுத்து அதன் சக்தியைப் பல சாதனையாக ஒளி பெறவும் நாம் இயக்கக்கூடிய இயந்திர ஓட்டங்களுக்கும் அதன் உபயோகத்தைக் கொண்டு குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சாதனைக்குகந்த செயலாக உபயோகப்படுத்திக் கொள்கின்றோம்.

சக்தி கொண்ட அந்த மின்சாரம் ஒரு நொடிப்பொழுது இந்த மனித ஜீவனுடன் மோதினால் மனிதனையே அழிக்கக்கூடியது. அப்படிப்பட்ட வலுக் கொண்ட மின்சாரத்தைத் தனக்குச் சாதகப் பக்குவத்தைக் கையாண்டு பல செயல்களை அதன் உதவி நிலையில் பெறுகிறோம்,.

அதைப் போல் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் ஓடக்கூடிய மின் அலையின் வீரிய சக்தியே விஷமான உணர்வுடன் சுழல்வதால்… இவ்வெண்ணத்தின் ஈர்ப்பை ஒரு நொடி அவ்வலையில் செலுத்தினாலும்… மின்சாரத்தின் தாக்குதலைப் போன்று அழிவு நிலைக்குத் தான் செல்ல முடியும்.

1.அதனையே நாம் அந்த மின்சாரத்தின் செயலை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வழி முறை போன்று
2.நம் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்… நம்மால் முடியும்…!

அதிகாலையில் கவர வேண்டிய துருவ நட்சத்திரத்தின் சக்தி

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினவை உயிருடன் ஒன்றி சுவாசித்தால் தீமைகள் நம் உடலுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது. அந்தச் சக்தியை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது உடலில் உள்ள அணுக்களும் அதை ஈர்க்க மறுக்கின்றது. அது வலுவான பின் நம் ஆன்மா இங்கே சுத்தமாகின்றது

Ganesamoorthy

ஒரு தெய்வத்தை வணங்குவோர்… அடுத்த தெய்வத்தை வணங்க நான் மாட்டேன் என்று சொல்வதில் என்ன உண்மை உள்ளது…?

 

அரசர்கள் காட்டிய நெறி கொண்டு மதங்களாகவும் இனங்களாகவும் பிரிக்கப்பட்டு ஒரே மதத்திற்குள் பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு போர் முறை கொண்டு தான் இன்று வாழ்கின்றோம்.

ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு தான் வருகின்றது.

ஒரு தெய்வத்தை வணங்குவோர்…
1.நான் மற்ற தெய்வத்தை வணங்க மாட்டேன் என்று
2.காலையில் பள்ளி எழும் பொழுதிலேயே
3.உன்னை அல்லாது நான் யாரையும் வணங்க மாட்டேன்…! என்று அங்கேயே விஷத்தை ஊட்டுகிறார்கள்.

முருகன் கோவிலுக்குச் சென்றால் உன்னை அல்லாது நான் யாரையும் வாயைத் திறந்து பாட மாட்டேன் என்று முருகனை வணங்குவோர் சொல்வார்கள்.

அதே மாதிரி சிவனைப் பாடுவோரும் அதன் நிலை. காளியைப் பாடுவோரும் இதே மாதிரி. பெருமாளைப் பாடுவோரும் இதே மாதிரி. உன்னைப் பற்றிப் பேசிய வாயில் நான் வேறு எந்தத் தெய்வத்தையும் பேச மாட்டேன்.

இப்படி இங்கேயே ஒவ்வொரு குணத்தின் சிறப்பை ஓங்கி வளர்த்து
1.அடுத்த குணத்தைப் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு
2.வெறுக்கும் உணர்வுகளை வளர்க்கும் பண்புகளைத்தான் ஆலயங்களிலும் தோற்றுவிக்கின்றார்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் நமது குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அருள் ஞானத்தின் உணர்வுகளைத் தொடர்ந்து பதிவாக்குகின்றோம். பதிவான பின் அது கருவின் தன்மை அடையும் தன்மையை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

உருவாக்கிய உணர்வு கொண்டு நீங்கள் அதை மீண்டும் நினைவாக்கினால் அதுவே குருவாக நின்று அருள் ஒளிச் சுடராக உருவாக்கும் அருள் ஞானமமாக உங்கள் எண்ணங்களில் தோற்றுவிக்கும்.

அருள் உணர்வின் தன்மை சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலில் ஞானத்தை வளர்க்கும் அருள் ஞானக் கருக்களாகி அணுக்களின் தன்மையாக உருவாகு.

அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது இந்த மனித வாழ்க்கையில் மகிழச் செய்யும் தன்மை வரும். அந்த மகிழும் தன்மையை வளர்க்க வேண்டும் என்றால் இந்த உண்மைகளை.. ஆலயங்களின் பண்புகளை பிறருக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்புகளையும்…
1.அங்கே வைத்திருக்கக்க்கூடிய தெய்வங்கள் யார்…?
2.அந்தத் தெய்வம் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலைகளையும்
3.ஆலயம் என்பது நம் உடல் என்றும்
4.அதிலே உள்ள நம் நல்ல குணங்கள் காக்கப்பட வேண்டும் என்றும்
5.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறையப்படும் பொழுது சிவம் என்றும்
6.நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் வினை என்றும்
7.நாம் தெளிவாக எடுத்துச் சொல்லி மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்

இதன் வழியில் மகரிஷிளின் அருள் ஒளியின் சுடரை உங்களிலே வளர்த்துக் கொண்டால் இந்த உணர்வுகள் விளைந்து சொல்லாக உங்களிடமிருந்து வரும் பொழுது கேட்போர் உணர்வுகளில் ஊழ்வினை என்ற வித்தாக மாறும்.

அதை அவர்களும் நினைவுபடுத்தினால் அவர்கள் குடும்பத்தில் வரும் சிக்கல்களையும் அவர்கள் உடலில் வரும் நோய்களையும் மாற்றும் வல்லமை நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் அகஸ்தியன் அவன் வாழ்வில் கண்டுணர்ந்த அருள் வழியில் தியானிக்க வேண்டும்.

அகஸ்தியனாகி துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான பின் அதன் வழியில் சென்றவர்கள் அனைவருமே ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக பிறவியில்லா நிலைகள் அடைந்துள்ளனர்.

1.அவர்கள் வழியில் நாம் சென்றோம் என்றால்
2.அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் ஊட்டினோம் என்றால்
3.அதன் வழியில் நம்மையும் இந்த மனித நிலையிலிருந்து விடுபட்டு
4.அருள் ஞானியின் அருள் வட்டத்தில் இணைத்துவிடும்.

நம் உயிர் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தும் நமக்குள் கடவுளாக நின்று இயங்கி… உள் உணர்வையும் ஊட்டி… உயிருடன் ஒன்றச் செய்து… அதுவே அருள் ஒளியின் சரீரமாக உருவாக்கும்.

 

1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை எதை எடுத்தோமோ அதுவே மின் அணுவாக மாற்றும்.
2.என்றும் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் தன்மை பெறுகின்றது.
3.இது எளிதான நிலைகள்…!

அகஸ்தியன் கண்ட பேருண்மைப்படி அதனை ஒவ்வொரு நாளும் நாம் நுகர்தல் வேண்டும். அப்படி நுகரும் பருவம் பெறுவதற்குத் தான் அதிகாலையில் துருவ தியானத்தில் அரும் பெரும் சக்தியைக் கூட்டச் சொல்கிறோம்.

கர்ப்பமான தாய் சண்டையிட்டவர்களை உற்றுப் பார்த்தால் குழந்தையினால் குடும்பம் எப்படிச் சிதறுகிறது 

கர்ப்பமான புலி மானையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி இரண்டுங்கெட்டானாக எப்படி உருவாக்குகிறது 

நம் உணர்வுகள் நம் குழந்தைகளை எப்படி இயக்குகிறது என்று நாம் அறிந்திருக்கின்றோமா 

CRICKET

செல்வத்தைச் சேர்த்துப் புகழைச் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய மனிதனுக்கு உள்ளது

பித்த சுரப்பிகள் ஒரு சிலருக்கு அதிகமாக உமிழ்த்தப்படும் பொழுது மாமிசங்களை அதிகமாக உட்கொள்வார்கள். அதை உணர்வாக்கப்படும் பொழுது அவர்களுடைய தசைகள் வலுக் கொண்டதாக மாறுகின்றது.

அதே சமயத்தில் அதனுடைய வளர்ச்சியில் பித்த சுரப்பிகளின் சுரப்பும் அதிகமாகின்றது. அதனால் விஷத் தன்மை கொண்ட அரக்கத்தனமும் வருகின்றது… சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.

புலியோ யானையோ மற்ற மிருகங்கள் முரட்டுத்தனமாகத் தாக்குவது போன்று அசுர குணம் கொண்ட வளர்ச்சி அடைகின்றது. இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

விஞ்ஞான அறிவு வளர்ந்த இந்தக் காலத்திலேயும் தன் நாட்டிற்குப் புகழ் தேட அசுர உணர்வு கொண்ட மனிதனை உருவாக்குகின்றார்கள். அவன் புகழ் பெறுகின்றான்… கோடிக்கணக்கில் பணம் பெறுகின்றான்…! ஆகையினால் அந்த ஆசையில் அங்கே செல்கின்றார்கள்.

1.தன் நாட்டிற்குப் புகழ் பெறவேண்டும் என்று அசுரத்தனமான செயல்களைச் செய்து சிந்திக்கும் செயல் இழந்து
2.கிரிக்கெட் போன்ற விளையாட்டுத் தன்மைகளும் கொண்டு வருகின்றார்கள்.

அசுரத்தனமான நிலைகளில் தாக்கப்பட்டு அதிலே பொருளை ஈட்டிப் புகழ் பெறும் நிலைகளை உருவாக்குகின்றார்கள்.
1.அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை உற்றுப் பார்த்த பின்
2.அந்த ஆசையை நமக்குள் ஏற்று நம் வாழ்க்கையையும் கெடுத்துவிடுகின்றோம்.

இந்த விளையாட்டை விளையாண்டால் அதன் உணர்வுகள் முன்னணியில் வந்தால் எனக்குச் செல்வம் வரும்… செருக்கு வரும்…! என்று தான் வருகின்றோம்.
1.இதைப் போன்று தன் வாழ்க்கையில் புகழ் தேடி பொருள் தேடும் நிலைகளே
2.இன்றைய விஞ்ஞான அறிவால் உருவாகின்றது.

நம் நாட்டில் மட்டுமல்ல… இந்த உலகம் முழுவதும் நடக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இந்த உலகம் குறுகிக் கொண்டு வருகின்றது. இந்த மனித வாழ்க்கையே நமக்குச் சதமானது அல்ல. சதமாக்கப்பட வேண்டியது எது என்றால் இந்த உடலிலிருந்தே நாம் உயர்ந்த சக்திகளைப் பெறவேண்டும்.

உயர்ந்த சக்திகளை நாம் பெறவேண்டும் என்றால்… “அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்…!” என்ற எண்ணத்தை உயர்த்த வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
4.எங்கள் இரத்தநாளங்கள் முழுவதும் அந்தச் சக்திகள் பெருக வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே சமயத்தில் நம் அருகிலே இருப்போருக்கும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்றும் அவர்களும் உயர வேண்டும் என்று எண்ணினால்
1.நமக்குள்ளும் உயரும் சக்தி வருகின்றது.
2.எதிரியல்லாத நிலைகள் நமக்குள் வளர்க்கப்படுகின்றது,

இப்படி நாம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பாதுகாக்கும் நிலைகள் வருகின்றது. நமக்குள் விளையும் உயர்ந்த உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாற்ற உதவுகின்றது.

விநாயகருக்கு வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் வைத்ததன் நோக்கம்

 

வாழ்க்கையில் நமக்கு முன்னாடி வருவது கசந்த நிலை. அதைக் காட்டவே வேப்ப மரம். பாழடைந்த கட்டடமாக இருந்தாலும் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை எடுத்து ஒரு அரச மரம் வளர்கிறது. அதைப் போல தீமைகளை வென்று நஞ்சினை வென்று அழியாத நிலைகளில் அரசைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றோம் என்றால் வாழ்க்கையில் வந்த கசந்த நிலைகளை மாற்றியமைக்கலாம் என்பதையே ஞானிகள் அவ்வாறு காட்டினார்கள். 

self trust and confidance

தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதை மறந்து வாழும் மனிதர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.தன்னைத்தான் நம்பாமல்…
2.தனக்கு மேல் வலுவான பூஜிப்பு முறையால்…
3.பல அலைத் தொடர்புகளின் சக்தி அலையை நம்பி…
4.அதன் தொடர்புடன் தான் இன்றளவும் “பக்தி பூஜிப்பு வழி முறை…“ இருக்கின்றது.

நமக்கு மேல் சக்தி கொண்ட தெய்வங்களை அடிபணிந்து… அருள் வேண்டி… அவ்வலையின் வசத்தில் நாம் வளரும் பக்குவத்திலேயே இன்றளவும் காலம் சென்று விட்டது.

தன் வலுவைத் தான் கூட்டி தன்னையே தான் நம்பி தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதையே மறந்து வாழ்கின்றனர்.

மற்றொன்றிடம் யாசித்து… பக்தி உணர்வு கொண்டு வேண்டிப் பெறும் குண வழிச் செயலாகத் தான் இன்றளவும் செயல்கள் உள்ளது.. ஞானத்தை எட்டிப் பார்க்கும் தன்மை இல்லை…!

ஒவ்வொரு ஜீவ சக்தியிலுமே தன் வலுவை வளர்க்கக்கூடிய வலுத் தன்மை உண்டு.
1.உடல் வேறு… ஆத்மா வேறு…!
2.ஆத்மா பிரிந்து விட்டால் உடல் செயல் இழந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்த மனிதன்
3.தன் ஆத்ம இயக்கத்தின் உண்மையை உணரவில்லை.

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கும் ஆத்ம உயிர் உண்டு. சரீர பிம்ப உடலை இயக்குவதும் அவ்வாத்ம பிம்பம் தான். உடலைச் சுற்றி இவ்வாத்மாவின் இயக்கம் செயலாற்றும் தன்மைக்கு… “ஜீவத் துடிப்பு கொண்ட” இயக்க இயந்திரம் தான் இவ்வுடல் கோளம்.

எண்ணம் எப்படி உதயமாகின்றது…?

மூளையின் பதிவு நிலையிலோ… மற்ற சரீர பிம்ப உடல் உறுப்பின் நெஞ்சிலிருந்தோ… எண்ணம் உதயம் பெறவில்லை…!

இவ்வாத்மாவின் உந்தலின் எண்ணம் கொண்டுதான்… இவ்வுடல் இயந்திரத் துடிப்புக் கோளத்தின் ஆத்ம உயிரின் மோதலினால்.. இச்சுவாசம் எடுத்த உயிர்த் துடிப்பின் மோதல் இருந்தால்தான் சுவாசம் எடுக்க முடியும்.

1.ஆத்மாவின் செயலாக இந்த உயிர்த் துடிப்பு ஏற்பட்டு
2.உயிர்த் துடிப்பின் உந்தலுக்கு இச்சுவாசத்தின் மூலமாக
3.ஆத்மாவின் எண்ண செயல் கவன நரம்பில் மோதி
4.சிறு மூளையின் இயக்கத்தால் செவி ஒலி ஈர்த்து எண்ணச் செயல் நடக்கின்றது.
5.ஆத்மாவின் உந்தலுக்குகந்த எண்ணச் செயலை
6.உடல் கோளத்தைக் கொண்டு செயலாக்கிக் கொள்கின்றனர்.

காற்றலையில் கலந்துள்ள ஒலி அலையை வானொலிப் பெட்டி மின் தொடர்பு ஏற்படுத்தியவுடன் எவ்வலைத் தொடரில் அம்முள்ளை வைக்கின்றோமோ அவ்வலையின் ஒலி கேட்பதைப் போல்
1.இவ்வாத்மா அலையின் உந்தல் இவ்வுயிர் சிரசில் பட்டு
2.உயிர்த் துடிப்பைக் கொண்டு… சுவாசத்தின் எண்ணச் செயல் நடக்கின்றது.

இவ்வெண்ணத்தின் செயலை மாற்றியமைக்கும் நிலை… வளர்க்கும் நிலை… குறைக்கும் நிலை… எதுவாக இருந்தாலும்
1.இஜ்ஜீவத் துடிப்பு கொண்ட சரீர இயக்க அணு வளர்ப்பின் வளர்ப்பில் இருந்து தான்
2.இவ்வாத்மாவின் வலுவையே வலுவாக்கக்கூடிய வழித் தொடர் பெற முடியும்.

ஆத்மாவின் செயலான எண்ணத்தை உயர் அலையின்பால் செலுத்தி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

உயர் அலை என்பது இந்தப் பூமியின் பிடிப்பலையில் இந்தப் பூமியின் சுழற்சியுடன் சுழலும் அலைத் தொடர்பின் வட்ட ஈர்ப்பில் வாழும் நிலையிலிருந்து மகரிஷிகளின் அலைத் தொடர்பு ஞானத்தை மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கப் பழகுதல் வேண்டும்.

எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் முறை வழியால் அந்த உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் எடுக்க எடுக்க இந்த உடலில் இருந்தே சரீர அணுக்களின் ஈர்ப்பு வளர்ப்பலையால் ஆத்மாவின் வலுவைக் கூட்டி இவ்வாத்மாவை எந்த நிலைக்கும் செலுத்திச் செயலாக்ககூடிய வலுவை இந்த மனிதச் சரீரம் பெற முடியும்.

தன்னைத் தான் நம்பி…! தனக்குள் உள்ள இறை சக்தியின் உயர் அலையைப் பிற அலைகள் தங்க இடம் தராமல் நல்லதாக மாற்றிட முடியும்.

ஏற்கனவே நம் உடலில் குடிவந்துள்ள எந்த வகையான குண வலு கொண்ட ஆத்மா இருந்தாலும்… நம் ஆன்மா வலு கூடக் கூட… நம் வசப்பிடி வலுவாக… அதனையும் செயலாக்கும் வலுவாக்கி… நம் ஆத்ம சக்தியை நாம் வளர்த்து… “ஒவ்வொருவருமே இறைவனாகலாம்…!”

எங்கோ இல்லை இறைவன்…! இங்குள்ள இறைவனை நாம் தூசிக்காமல் ஒவ்வொருவருமே நாம் இறைவனாகலாம்.

மனிதனும் தெய்வமாகலாம் என்பது… போற்றலில் பிறர் போற்றி வணங்கும் தெய்வமல்ல…!
1.மனிதன்தான் தெய்வ சக்தியைப் படைக்கவல்லவன்.
2.தெய்வ குண வழி முறை செயல்பாடு உருவக குண செயலையே உருவாக்க வல்ல சக்தி… “மனித சக்தி தான்…”

 

ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலை பெறலாம்.

ஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…?

ஜாதகம் மனிதனுக்கு இல்லை – பூ வைத்துப் பார்த்தல்… நியூமராலஜி…!

திருமணத்திற்கு மணப் பொருத்தம் தேவை – ஜாதகம் இல்லை 

uplifting hands

மற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்

பதார்த்தங்கள் அனைத்தையும் நாம் சுவையாகச் செய்து வைத்து கடைசியில் ஒரு விஷம் கொண்ட பொருளை அதிலே இணைத்து விட்டால் உட்கொள்வோரை நிச்சயம் மடியச் செய்துவிடும்.

அது போல் உலகில் தோன்றிய மகான்கள் எல்லோருமே உயர்ந்த தத்துவங்களைக் கூறியிருந்தாலும்
1.அங்கே அந்த மகான் காட்டிய உணர்வுக்கு மேல் இன்னொன்றாக
2.தீமை செய்வோர்களை அழித்திடும் கடுமையான உணர்வைத்தான் கடைசியில் சேர்க்கின்றோம்.

இது எல்லாம் காலத்தால் அரசர்களால் உருவாக்கப்பட்டது…!

ஏனென்றால் மகான்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த நிலைகள் அனைத்தும் அரசு காலங்களில் அந்தப் பேருண்மைகள் மறைந்து விட்டது… இன்று நமக்கு அதைக் கிடைக்கவிடாதபடியே செய்து விட்டார்கள்.

அந்த மகான் காட்டிய வழிகள் வரப்படும் பொழுது அன்றைய அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்…?

1.தீமை என்ற நிலை வந்தால் அதை உடனே அழித்துவிட வேண்டும் வேட்கைகள் தூண்டுகின்றது.
2.தனக்கு அல்லது தன் மதத்திற்கு விரோதமானவர்கள் எல்லாம் “நம் கடவுளுக்கு விரோதமானவர்கள்…!”

ஞானிகள் காட்டிய வழி தவறி… கடைசி நிமிடத்தில் நீ எதிரிகளை (கடவுளுக்கு விரோதமானவர்களை) வீழ்த்திட வேண்டும்… தவறு செய்பவர்களை அழித்திட வேண்டும்… என்ற உணர்வு கொண்டு இந்தத் தாக்குதல் வரப்படும் பொழுது அந்தத் தாக்கிடும் உணர்வே கடைசியில் விளைகின்றது.

“கடவுளுக்கு விரோதமானவர்கள்…” என்று சொல்லிக் கொண்டு அந்தக் கடவுளின் தன்மையில் தான் பல மதங்களை உருவாக்கி விட்டார்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களும் இப்படித்தான்…!

இந்து மதமானாலும் சரி முஸ்லிம் மதமானாலும் சரி புத்த மதமானாலும் சரி கிறிஸ்தவ மதமானாலும் சரி இதைப் போல “தனது கடவுளுக்கு எதிரியானவர்கள்…” என்று எதிரிகளை உருவாக்கி
1.நல்லவைகளைப் பேசினாலும்
2.மற்ற மதங்களைச் சாடும் பொழுது எதிரி என்ற நிலையும்
3.பிசாசு என்ற நிலைகளில் உருவாக்கி விடுகின்றனர்.

இப்படி உலக நிலைகளில்… மற்றவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று சாரார் சொல்லப்படும் பொழுது மற்ற மதங்களும் இதைப் போல “அவர்களும் பிசாசை வணங்குபவர்கள்…” என்று சொல்வதும்
1.உயர்ந்த குணங்களை எல்லாம்
2.அந்த ஆவேச உணர்வு கொண்டு தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

அன்று நபிகள் சொன்னது:-
1.மனிதனை மனிதன் நீ மதித்து நட
2.மனிதனை உயர்த்த வேண்டும் என்று நீ எண்ணினால் நீ உயர்வாகின்றாய்.
3.மனிதன் பேரன்பைப் பெற்று அனைவரின் தன்மையும் உயர வேண்டும்

ஒரு மனிதன் பசியால் வாடப்படும் பொழுது… அந்தப் பசியைத் தீர்க்கும் எண்ணங்கள் உனக்குள் வந்தால்… அந்தப் பசி தீர்க்கும் உணர்வே உனக்குள் விளையும்… பசி தீர்க்கும் உபாயம் உனக்குள் கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் உண்மையின் சொரூபம் கொண்டு
1.பொய் பேசாதே
2.பொய்யான செயல்களைச் செய்து பிறரை ஏமாற்றாதே
3.தவறான உணர்வுகளை உனக்குள் சேர்க்காதே
4.தவறின் உணர்ச்சிகளை உனக்குள் இயக்கி விடாதே என்று நபிகள் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் வெளிப்படுத்திய பேருண்மையை யாரும் அதைத் தெளிவாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் வந்த அரசர்கள் அவர்கள் நியாத்தை முன் வைத்து அதன் வழிகளில் தான் இவர்கள் ஆட்சி புரிந்தனர்

நபிகள் காட்டிய அந்தக் கடவுளைக் காணும் நெறியை இவர்கள் முன் வைத்துக் கொள்வார்கள். அதே சமயத்தில் இவர்கள் இயற்றும் சட்டத்தைக் கொண்டு இதற்கு மாறாக நடந்தால்
1.அவர்களை ஆண்டவனின் எதிரி என்று மக்கள் மத்தியில் பலியிடுவார்கள்.
2.ஆண்டவனுக்கு விரோதமாக இருந்ததனால்… நீ தவறு செய்ததனால்.. நீ பொய் பேசியதனால்…
3.உன் கைகள் துண்டிக்கப்படும்.. உன் அங்கங்கள் அவமதிக்கப்படும்… உன் சிரசு துண்டிக்கப்படும்…! என்று
4.இப்படி அரசு சட்டங்களை நீதியாக்கி அதை “ஆண்டவன் கட்டளை…” என்று செய்தார்கள்.

அதே உணர்வுகள் தான் இன்றும் உள்ளது.

ஆனால் அந்த அருள் ஞானிகள் தீமைகளைப் பற்றிக் கூறியது என்ன…?

தவறான உணர்வுகள் உனககுள் இருந்தால் அந்த உணர்வின் தன்மை அரக்க உணர்வுகளாக உனக்குள் விளைந்துவிடும். அதனால் உன் அங்கங்கள் சீர்கெடுகின்றன… உன் குணங்கள் மாறுபடுகின்றது… நீ எண்ணிய உணர்வுகள் உனக்குள் மாறுபடச் செய்கின்றது..!

1.உனக்குள் இருக்கும் அந்தத் தவறின் நிலைகளை எல்லாம் அகற்றிவிடு… அருள் ஒளியைக் கூட்டி விடு…
2.ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ வேண்டும் என்று நீ எண்ணு.
3.அவன் பசியைத் தீர்க்கும் உணர்வை ஏங்கு
4.அந்த உணர்வு உனக்குள் இருந்து பேரன்பாக வளர்கின்றது என்று தான் மகான்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஞானிகள் கூறியதை யாரும் பின்பற்றவில்லை…! இன்றைய உலக நிலை இது தான்.

ஓமுக்குள் ஓ..ம்…. ஓமுக்குள் ஓ..ம் என்றால் என்ன…?

 

சாந்தமாக நாம் இருந்தாலும் ஒரு கோபப்படுவோரின் உணர்வை நுகர்ந்தால் ஓ…. என்று அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை ஊட்டிக் நம்மையும் கோபப்படச் செய்கின்றது.. சாந்தமான இசைகளை மாற்றி நம்மையும் காரமான இசைகளாக சொல்களாகச் சொல்லச் செய்கிறது. இனிமையான இசைகளை வாசிகின்றார்கள் என்றால் எல்லோரும் அதனுடன் இணைந்து இசைத்தால் இனிமையாகின்றது. இணையவில்லை என்றால் அபஸ்வரமாகி இனிமையைக் கெடுத்துவிடுகின்றது… உடனே சலிப்படைகின்றோம்.. நம் முகமும் மாறுகின்றது.. செயல்களும் மாறுகின்றது..! 

Lord Agasthesswaran

பக்தியை வளர்த்து ஞானத்தை மறந்த காலம் எப்பொழுது வந்தது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதிசங்கரர் காலங்களிலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இப்பூமியில் பல மகான்கள் வளர்ந்தார்கள். தன் ஞானத்தால் தெய்வசக்தி பெற்று சப்தரிஷியின் தன்மைக்குத் தன் வலுவையும் வலுவாக்கிக் கொண்ட மகான்களை வளர்த்த பூமி தான் “நம் தாய் பூமி…”

1.அதன் தன்மையின் தொடர் வளர்ப்பு நிலையற்று
2.அந்த ஞானச் செயலே விஞ்ஞானச் செயலாக
3.ஞானத்தின் தொடர் அலையின் செயல் “செயற்கை ரூபத்தில்…”
4.ஏட்டுப் படிப்பு வழி முறையிலும் இவ்வொலி அலை மின் சாதனத் தொடர்பலையிலும் சென்றுவிட்டது.

இதுவல்லாமல் தன் ஞானத்தால் வளர்ந்த சக்தியைச் செயல்படுத்த வந்தவர்கள் எல்லாம் தன் வலுத் தன்மையின் வலுவை எடுக்கவல்ல ஆத்ம வளர்ச்சி ஞானம் குன்றிய தன்மையில்
1. கல்லில் சிலை செய்து ரூப வழிபாட்டு முறைப்படுத்திக் கொண்டு
2.தன் பக்தியைக் காட்ட “வணங்கும் தொடரை” ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதுவுமல்லாமல் இந்தப் பூமியின் வளர்ப்பில் சுழற்சி ஓட்ட கதியில் மண்டல ஈர்ப்பு சந்திப்பு நிலைகளிலெல்லாம் இப்பூமியின் வளர்ப்புத் தன்மையினால் பல மாற்ற “பிரளய காலங்கள்” ஏற்பட்டது.

ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இப்பூமியின் ஈர்ப்பு வளர்ப்பு செயல் ஓட்டமானது வளர்ப்பின் நிலைக்குகந்த மாற்றச் செயலினால் அந்தந்த மாற்றத்திற்குப் பிறகு வளரக்கூடிய அணு வளர்தன்மையும் மாறியே வந்தது.

1.குண ஈர்ப்பின் அமிலமே பிரளய மாற்றத்திற்கு முன் இருந்த நிலை வேறு…
2.மாறிய பிறகு வளரும் நிலை வேறாக
3.இப்பூமியில் படியும் அமில வலு மாறிவிடுகின்றது.

தங்கத்திலோ மற்ற உலோகத்திலோ செய்யப்படும் பொருள்களை மாறி மாறி அதை அழித்து நாம் மற்றொன்றாக உருவாக்கும் பொழுது அதனுடைய தரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதல்லவா.

அதைப் போன்ற நிலை தான் இத்தொடரில் வந்துள்ள ஞான வளர்ப்பு நிலை வளர்ச்சி தொடர் அலையே இப்பூமி வெளிக்கக்கும் அமில வளர்ப்பின் நிலைக்கொப்பத்தான் ஞானமும் வளர்கின்றது இன்றளவும்.

இந்த ஞானத்தின் செயல் முறை வழித் தன்மையே ஆதிசங்கரரின் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அவரின் காலம் வரைக்கும் ஞான சக்தி வளர்ச்சியின் பாதையில் இருந்தது.

அவருக்குப் பிந்தைய காலத்தில்…
1.அரசர்களின் போற்றலின் பேராசை உணர்வு நிலை அதிகப்பட்டு விட்டதாலும்
2.மனித இன (மக்கள் தொகை) வளர்ச்சிப் பெருக்க நிலையினாலும்
3.மனிதனின் எண்ண ஈர்ப்பே இப்பேராசை உணர்வில் சிக்கி
4.அரசர்கள் ஆண்ட கால உணர்வில் அவர்களின் ஆதிக்க ஈர்ப்புப் பிடிப்பில் சிக்கிய தொடர்பலை வளர்ப்பாக
5.ஒன்றின் தொடர் கொண்ட தொடர் வட்டச் சுழற்சியில் சுழன்று வருகின்றது இன்றளவும்.

அரசர்களின் காலத்தில் தான் இப்பக்தி வழி முறை அதிகமாக வளர்ந்தது.

அதுவுமல்லாமல் இவ்வரசர்களினால் சில அலைத் தொடர்களைச் சில சக்தி வாய்ந்த பக்தி கொண்ட தெய்வ குண சித்து நிலை கொண்ட அலைத் தொடர்புடைய தெய்வ ஆவி அலைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.

தன் ஆதிக்க அரசு வாழ பிற அரசர்களின் போர்த் தொடர்புகளுக்கு இவ்வாவி அலை தெய்வ குணச் சக்திகளை இவர்களின் பூஜாபலனால் உருவேற்றிக் கொண்டார்கள்,

விக்கிரமாதித்தன் காலத்திலும் அசோக சக்கரவர்த்தி காலத்திலும் அதைப் போன்றே வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திலும் பல அரசர்களும் இப்பூஜை வழிபாட்டுச் சித்து முறை பெற்று ஆவிகளின் தெய்வ குண தேவதைகளின் தாய் சக்தியை வணங்கி வந்தார்கள்.
1.அவர்கள் நாட்டை அரசாண்ட காலத்தில்
2.அரசர்களின் வலுவுக்கு வலுவாக இச்சக்திகள் தான் ஆண்டன.

புராண இதிகாச நூல்களில் சித்தர்கள் பால் தொடர் கொண்ட காவியங்களில் எல்லாம் ஆண் பெண் குண சக்தியின் தொடர்பில் உணர்த்தித்தான் உண்மை நிலைகளை எல்லாம் காட்டினார்கள்.

சிவ சக்தி… விநாயகன்… முருகன்… விஷ்ணு… என்றும் நாரதர் என்றும் ஆணின் தொடர்பு முறையை வலியுறுத்திய தெய்வ குணங்களாக இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இராமரின் குண சக்தியையே பல ரூப அலை ஞான செயல் குண இராமனாக உணர்த்தினார்கள்.

சீதாராமன்… பலராமன்… பரசுராமன்… இப்படிக் கால மாற்றத்தின் குண நிலை வளர்ப்பு அமில எண்ணத்திற்குகந்த செயல் உருவ வளர்ப்பிற்கு அந்தந்தக் காலங்களின் வீரியத் தன்மைக்குகந்த நாமகரணங்களைச் சூட்டி ஆண் குண அமிலத் தன்மைக்குகந்த தெய்வச் செயலைத்தான் “சப்தரிஷிகளின் சித்தர்களின் காலங்கள்” உணர்த்தின.

“அரசர்கள் காலத்தில்” வணங்கிய தெய்வங்கள் யாவையுமே பெண் சக்தியான காளி மாதா… என்றும் அதன் தொடர்புடைய ரூபத்தில் பராசக்தி… என்றும் ஜக்கம்மா… என்ற தாய் சக்தியும் உஜ்ஜயினி காளி சக்தியும்… சௌண்டம்மனின்.. தொடர்பும் இத்தொடரால் வந்தவை தாம்.

1.மனித சக்தியின் தெய்வ சக்தி பெற்ற
2.சித்து நிலை கொண்ட தாய் குணத்தின் பூஜிப்பின் அலைத் தொடர் வசச் செயலினால் தான்
3.அரசர்கள் பலர் அத்தொடர்பினால் தன் வலுவுக்கு வலு கூட்டிக் கொண்டு அரசர்களின் காலம் நடந்தது.

அந்தத் தொடர்பின் வழி முறையில் தான் “இக்கலியே நடக்கின்றது…!”

கொடுமையான தீங்கை ஒருவன் செய்தால் பதிலுக்கு என்ன செய்கின்றோம்..?

இரக்கத்துடன் உள்ளவர்களுக்குள் புகும் சாப அலைகள்

செல்வம் இருந்தாலும் சாபங்களால் குடும்பங்கள் அழியும் நிலை உருவாகின்றது 

soul and body

பேய்.. பிசாசு… இரத்தக் காட்டேரிகள் உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பெரியோர்களின் வாக்குப்படி மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற சொல் கூற்று உள்ளது… அதன் தொடர் யாவை…?
1.பேயைப் பார்க்க முடியுமா…?
2.பிசாசு உண்டா…?
3.இரத்தக் காட்டேரிகள் வாழ்கின்றனவா..? என்பது யாவையும் உண்மைதான்.

தற்கொலை செய்து கொண்ட ஆவேச அலை உணர்வுடன் ஜீவன் பிரிந்த ஆவி உலக உயிர் ஆத்மாக்கள் சில இல்லங்களிலும் அவை வாழ்ந்த பழக்கப்பட்ட இடங்களிலும் அதன் எண்ண ஆசையைச் செயல்படுத்த வேண்டியவர்களின் தொடர் வட்டமுடன் இந்தக் காற்றலையின் சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கும்.

அத்தகைய ஆவி உலக ஆத்ம உயிரின் அமிலக்கூறானது உள்ள இடங்களுக்கு சரீர ஜீவ பிம்ப உடல் கொண்ட எண்ண உணர்வுடைய மனிதன் பயம் கலந்த அச்ச நிலையுடன் பல உணர்வுகளில் செல்லும் பொழுது
1.ஆவி உலக ஆத்மாவின் அலைத் தொடரும்
2.சரீர பிம்ப உடலின் அலைத் தொடரும்
3.இவ் ஈர்ப்பலையில் மோதும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில்
4.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு நிலை பெற்ற எண்ண உணர்வுடன் அவ்வெண்ணம் மோதியவுடன்
5.இக்காந்த ஈர்ப்புக் குண மின் அலைத் தொடர்பு கொண்ட இச் சரீர கோள நிலையுடன் மோதியவுடனே
6.எந்தப் பயமுடன் இந்த ஆத்மா சென்றதோ
7.அந்தத் தொடர் அலைக்குகந்த எண்ண குண ஆவி ஆத்மாவின் அமிலக் கூற்றை
8.நிழல் படம் போல் இவ்வொலி நாத் சக்தி கொண்ட சரீர சுவாச மோதல் அதன் அலை மேல் பாய்ந்தவுடன்
9.அது பேசிய நாதத்தையும் (வாழ்ந்த காலத்தில்) அதன் நிழல் உருவை மனிதனால் பார்க்க முடியும். (இன்று காணும் ஒளிக்காட்சி ஒலி அலையைப் போல்)

இதைப் போன்ற தொடர் அலையில் இருந்தெல்லாம் மனித உணர்வுப் பிடி சிக்காவண்ணம் தன் ஆத்ம வலுவை… ஞான ஈர்ப்பு வழித் தொடர்பு கொண்ட “மகரிஷிகளின் தொடர் அலையுடன்…” வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய வலுக் கொண்ட ஜீவத் துடிப்பு ஆத்ம நிலை பெற்றுவிட்டால் நம் எண்ணமே நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.

எண்ணத் தொடர் அலையின் செயல் இல்லா நிலை (மனிதனுக்குள்) ஒரு நொடிப் பொழுதும் இல்லை.

நித்திரை உணர்வுகளிலும்… இச்சரீரச் செயல் நடைபெறும் வழித் தொடரில்… சுவாசமுடன் கூடிய உணர்வு எண்ண அலை ஈர்ப்பில் தொடர் கொண்ட நிலையுடன் தான் எண்ணச் சுழற்சி கொண்ட இயந்திரக் கோளமாக இந்த உடல் உள்ளது.

பிரபஞ்சத்தில் மற்ற கோளங்கள் எல்லாம் எப்படி நிற்காமல் ஓடிக் கொண்டே உள்ளனவோ அதைப் போன்றே
1.ஓடிக் கொண்டே உள்ள இவ்வெண்ண உணர்வு வளர்ப்பு நிலை
2.ஜீவ சக்தி கொண்ட மனித உடலுக்குத்தான் உண்டு.

ஆவி உலக ஆத்மாக்களின் எண்ண ஓட்டத்தின் வலு எப்படி உள்ளது…?

இன்று நாம் எப்படி சில ஒலிப் பதிவுகளை நாடாக்களில் பதிய வைத்து ஒலி பரப்புகின்றோமோ… அதைப் போன்று அவை சரீரக் கூறுடன் வாழ்ந்த காலத்தில்… தன் ஆத்மாவில் பதிய வைத்த அலைத் தொடர் நாதச் சேர்க்கையுடன் தான்… அதே தொடர்பு சுழற்சியுடன் அதே சுற்றலில் சுற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிலையில்… வளர் நிலை கொண்ட எண்ண சரீர உணர்வு இயந்திர மின் அலைத் தொடர்பு அவ்வலைத் தொடர்புடன் பொருந்தும் பொழுது தான் இவ் இயந்திரக் கோளப் பெட்டியின் (மனித உடல்) செயலைக் கொண்டு அதன் நிலை பெறுகின்றது.

இவ்வாவிகளின் சுழற்சி வலுக் கூடி அதன் தொடர்பு விட்ட செயலாகச் செயல் கொண்டுள்ள வழித் தொடர் ஜீவ ஆத்மாக்கள் தான் “இன்று பிறப்பில் வரும் ஆத்மாக்களின் தொடர் அலையே உள்ளது…!”

1.தன் ஞானத்தை வளர்த்து சித்து நிலை கொண்ட ஆத்மாக்களின் நற்சக்தியின் தொடர் அலையை அறியாவண்ணம்
2.பல வலுக் கொண்ட வெறி கொண்ட பக்தி இயக்க ஆத்மாக்களின் தொடர்பு தான் இன்று வலுவாகியுள்ளது.

தெய்வத்திற்குப் பலி கொடுப்பது நல்லதா…?

 

உயர்ந்த குனங்களை நுகர்ந்தறிந்து அதை உன் உடலாக்கு என்ப்து தான் ஆலயத்தின் பண்பு. நாம் அந்தத் தத்துவப்படி செல்கிறோமோ…? இல்லை. விநாயகருக்கு எலியை வாகனமாகக் காட்டி நாம் சுவாசிப்பது (மூச்சு – மூஷிகவாகனா) தான் நம்மை வழி நடத்துகிறது என்று காட்டினார்கள் ஞானிகள். ஆனால் விநாயகரை நீ தூக்கிச் சுமந்தாய் அதனால் உனக்கு இரண்டு இலையைப் போடுகிறேன் என்று இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம். அதே போல் காளிக்கு வாகனம் புலி என்றால் அதற்குப் பலி கொடுத்தால் நமக்கு அந்தக் காளி செய்யும் என்றால் எதைச் செய்யும்…? 

healing rays

தீமைகள் வராது தடுக்கும் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தான் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்… தீமை செய்பவர்களைத் தாக்குவதற்கு அல்ல…!

கொடூரத் தெய்வங்களை வணங்கித் தன் பாவத்தைப் போக்கவும் தன் எதிரிகளை வீழ்த்தவும் ஆடு கோழிகளைப் பலியிட்டு அந்தத் தெய்வங்களை வழிபட்டு அதே சிந்தனையிலிருந்து விட்டால் அந்த உணர்வின் அலைகள் வெளிப்படுவதை நுகர்ந்த பின் எப்படிக் கொடூரத் தன்மை பெற்றதோ இந்த உணர்வின் தன்மை வழிபட்டோர் உடல்களுக்குள் சென்றுவிடும்.

அந்த உணர்வுகளைப் பெற்ற பின் அவர் இறந்துவிட்டால் பயத்தால் இத்தகைய ஆவியின் தன்மைகள் ஒரு உடலுக்குள் புகுந்து விட்டால் அவர்களுக்குக் காட்சி தரும்.

எப்படி…?
1.அந்தக் கொடூரப் பற்கள் கொண்ட அந்தத் தேவி வந்துவிட்டாள்…!
2.இந்த அச்சத்தால் வரும் பொழுது நரம்புகள் இயங்காது. பேசவும் வராது.
3.என்ன…? என்ற நிலைகள் வரப்படும் பொழுது..
4.கொடூரப் பற்கள் கொண்டு என்னைத் தாக்க வருகின்றது…! என்று அவர் ஒரு வார்த்தை சொன்னாலும்
5.அடுத்த கணம் இந்த உணர்வின் தன்மை வாய் அடைத்துவிடும்.

தெய்வத்திற்குப் பலி கொடுத்துப் பல உணர்வுகளை வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இப்படித்தான் வரும்.

இதைப் போன்று எந்த மதத்திலும் சரி…! அவர்கள் வழிப்படுத்திய நிலைகள் கொண்டு அது ஏங்கிப் பெறும் உணர்வுகள் இவ்வழியில் அங்கே சென்றுவிட்டால் இதே நிலை வரும்.

இதைச் சைத்தான் என்பார்கள் பல நிலைகளில். நாம் பேய் என்போம். இப்படிப் பல உணர்வுகள் நமக்குள் திரண்டு அதன் வலுவாக நமக்குள் இயக்குகின்றது.

1.நாம் எண்ணியது எந்த உணர்வோ அதன் உணர்வு கடவுளாக நின்று
2.அந்தச் சக்தியாக நம் உடலில் இயக்கி
3.நாம் மடிந்த பின் இந்த நிலைகளை உருவாக்குகின்றது.

நாம் பார்க்கும் ரூபங்களில் எந்தத் தெய்வமும் அப்படி இல்லை…!

நாம் உணர்வதற்காகத்தான் அவரவர்களின் மதத்தின் அடிப்படையில் இன்னென்னது என்ற நிலைகளை உருவாக்குகின்றார்கள்.

மெக்காவில் எடுத்துக் கொண்டாலும் கடைசியில் மெக்காவிற்குச் சென்ற பின் சைத்தானை ஓட்ட வேண்டும் என்று கற்களை எடுத்து வீசுவார்கள்.

தாக்கும் உணர்வு கொண்டு வரும் பொழுது போர் முறை கொண்டு இதிலே போட்டி கொண்டு தாக்குவார்கள்.
1.அந்தச் சைத்தானை விரட்டும் நிலைகள் கொண்டு கற்களைக் கொண்டு எறியப்படும் பொழுது
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரப்படும் பொழுது அதிலே சிலர் மடிவார்கள்.

வருடா வருடம் மெக்காவிற்குச் செல்லப்படும் பொழுது அந்த ஞானிகள் காட்டிய உணர்வை மறந்து விட்டு
1.வெறியின் ஆசை கொண்டு நான் தீமைகளை வெல்லப் போகிறேன் என்று
2.இத்தகைய தீமையின் வெறி கொண்ட உணர்வுகளை இவர்கள் சுவாசிக்கும் பொழுது
3.அறியாமலே வெறி கொண்ட உணர்வுகள் வந்து அது இயக்கும் தன்மை வருகின்றது.

பாவத்தைப் போக்கவும்.. அருள் ஞானத்தைப் பெறவும்… அங்கே சென்றாலும் கடைசியில்…
1.வெறி கொண்டு தாக்கும் பிசாசுகளை ஒட்டும் உணர்வு கொண்டு
2.அந்தக் கற்களை எடுத்து வீசப்படும் பொழுது
3.இந்த உணர்வின் “வேகத் துடிப்பு…” வருகின்றது.

நம் நாட்டிற்குள் எடுத்துக் கொண்டாலும் இது போல சில நிலைகள் உண்டு. ஒருவனின் நிலைகளில்…
1.இவன் ஆண்டவனுக்கு விரோதமானவன்.. இவனைத் தாக்கிவிடவேண்டும்… அழித்துவிட வேண்டும்.
2.இல்லை என்றால் ஆண்டவனைப் பறைசாற்றுபவனை இவன் அழித்துவிடுவான்… என்ற
3.வெறி கொண்ட உணர்வுகளிலும் சில நிலைகள் உருவாகின்றது.

ஆகவே இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அது உள் நின்று அதன் வழியே செயல்படுத்துகின்றது.

அருள் ஞானியான அந்த நபிகளோ…
1.“தீமைகள் தனக்குள் வராதபடி…”
2.தன் எண்ணத்தின் தன்மை கொண்டு
3.தன் அருகிலே வராதபடி தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

தன் பாவங்களைப் போக்கி அந்த அருள் ஒளிகளைத் தமக்குள் கூட்டி அந்த உணர்வு கொண்டு “இந்த உலகமே உய்ய வேண்டும்…” என்று விரும்பினார். அந்த அருள் ஞானி ஊட்டியபடி மெக்காவிற்குச் சென்றால் அது நலமாக இருக்கும்.

ஆனாலும் பின் வந்தோர்கள் அவருக்குப் பின் அதை உருவங்களாக வடிவமைத்துப் பிசாசு என்ற எண்ணங்களை ஓங்கி கற்களால் அதை நீ எறிய வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

மெக்காவிற்குச் சென்று திரும்பும் பொழுது இதே உணர்வுகள் தான் கடைசியில் தாங்கி வருகின்றார்கள்.

நாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…?

மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு 

சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

POWER MAN MEDITATION

வலுக்கொண்ட ஆத்மாக்களைப் பற்றியும் வலு குறைந்த ஆன்மாக்களைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உயிரணுவாகத் தோன்றிய பின் அவ்வுயிரணுவின் வளர்ப்பு முலாம் ஒவ்வொரு செயலிலும் வளர்ப்பு செயல் மோதுண்டு மோதுண்டு… அவ்வுயிரணுவின் மோதலின் வளர்ப்பு வலுக் கொண்டு… ஆத்ம நிலை பெறும் நிலையை முந்தைய பாடத்தில் உணர்த்தினேன்.

உயிரின் ஆத்ம நிலைக்கு எப்படி அதன் உராய்வுத் தன்மையால் வலுக் கூடுகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தென்னை மரத்தின் பலனாக அதன் உச்சியிலே பல காய்கள் வருகின்றது.
1.அந்தக் காய்களில் இளநீர் வளர்ந்து
2.அந்த நீரானது அதன் உஷ்ண அலையில் அம்மட்டையில் உள் பாகத்தில் உராய்ந்து
3.வேடு கட்டி… வேடு கட்டி… நீரின் நிலை சுண்டி… பருப்பு வளர்ந்து… பின் முற்றி…
4.அதன் பலனான எண்ணை வித்தை வளர்க்கின்றது

தென்னை மரத்தின் வேர் நிலையிலிருந்து அது சத்து எடுப்பதில்லை.

மேல் நோக்கிய சுவாசம் கொண்டு தாவர இனத்தின் ஈர்ப்பு நிலையில் மோதலில் ஒளி பட்டு அது ஈர்த்துக் கீழிருந்து மேல் வளரும் வளர்ப்பின் பலனின் தன்மையில் பல வித்துக்களைத் தென்னை மரம் வளர்த்துக் கொள்கிறது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு வளர்ப்பின் வித்தின் தொடர் வளர்ப்பும். அதாவது ஒரு அணு வளர்ச்சியின் முலாம் ஒன்றில் மோதி வலுக்கொண்ட தன்மை பெறுவது போன்றே
1.இந்த மனித ஆத்ம உயிரின் வளர்ப்பு நிலையின் வலுவை
2.இவ்வாத்மா சேமித்துக் கொள்கின்றது.

சேமித்த வலுவின் தன்மை எத்தகையது…?

1.நீரில் மிதக்கும் மரங்களைப் போன்ற வலுக் கொண்ட நிலையை
2.இந்த ஆத்ம உயிர் பெற்றதென்றால்
3.எவ்வீர்ப்பின் பிடிக்கும் சிக்காமல்
4.இச்சரீர பிம்பமே காந்த மின அலை ஒளி சக்தி பூண்ட உயர்வு நிலை கொண்ட ஆத்மாவாகலாம்.

அன்றைய சித்தர்களும் சப்தரிஷிகளும் தன் சரீர பிம்பத்தையே இந்நிலைக்குகந்த வளர் நிலைக்கு உட்படுத்தித்தான் தன் வளர்ப்பின் வளர் நிலையைப் பெற்றார்கள்.

நல் வழியின் ஒளி நிலை கொண்ட உயர் ஆத்ம வழித் தொடர் பெறாத நிலையில் பல எண்ண நிலையுடன் வாழக்கூடிய தன்மையில் பிரிந்து சென்ற ஆன்மக்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றலையில் படர்ந்தே உள்ளது.

அத்தகைய பல எண்ணங்கள் கொண்ட ஆத்மாக்கள் அதற்குகந்த அதன் செயலைச் செய்விக்க அதற்குச் சொல்லாற்றலும் செயல் திறமையும் இல்லாத தன்மையில் அதன் எண்ண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உடலுடன் வாழும் மனித உடலில் சாடுகிறது.

1.அப்படிச் சாடும் பொழுது தான் சிலருக்கு வாதத் தன்மையும் இதன் தொடர்பு கொண்ட சில வியாதிகளும்
2.அந்த அலைகள் உடல் மேல் பாய்ந்தவுடன் அதன் தன்மையை உடல் ஏற்காத பட்சத்தில்
3.எந்த இடத்தில் எவ்வலை சாடியதோ அவ்விடத்தில் வளரும் அணு வளர்ச்சி குன்றி
4.பாய்ந்த பிற ஆன்மாவின் குணத் தன்மைக்குகந்த அணுவை வளர்ப்பதனால்
5.அந்த வளர்ப்பின் வலுவை உடலுக்குகந்த ஆத்மா ஏற்காத பொழுது
6.உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானது அவ்விடங்களுக்குத் தன் அலையை அனுப்ப முடியாதததனால்
7.அந்த இடங்களில் உள்ள உறுப்புகள் செயலிழந்த நிலை ஆகின்றது

இளம்பிள்ளை வாதங்களில் செயலற்ற தன்மையிருந்தாலும் அங்கங்களின் நரம்பு மண்டலத்தில் உதிர ஓட்டங்களும்… துடிப்பு நிலையும் உள்ளது.

உதிர ஓட்டம் இல்லாவிட்டால் உடல் அழுகிய தன்மையல்லவா பெற்றிருக்கும். உடல் முழுமைக்கும் தொடர்பு கொண்டல்லவா அச்செயல் இருக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் பாய்ந்த மாறு கொண்ட அணு வளர்ப்பின் நிலையினால் இவ்வாதத் தன்மை கொண்ட வியாதியின் வளர்ப்புகள் வளர்ந்துள்ளன.

சமமான வாழ்க்கையற்றவர்களின் வாழ்க்கையில் எல்லாம்… அவரவர்களின் குண நிலைக்குகந்த சுவாசத்தால்… அதற்குகந்த பலனான தொடர் அலை செயலைத்தான்… இந்தக் காற்று மண்டல ஈர்ப்பிலிருந்தும் பெற முடியும்.

அதாவது காற்றில் கலந்துள்ள ஆத்மாக்களுக்கு நாம் தரும் இடத்திற்குகந்த வலுவாகத்தான் நம் சரீர பிம்பத்தின் ஆரோக்கிய நிலையே வளர்கின்றது.

1.எதனையும் செயலாக்கக்கூடிய எண்ண சக்தியின் வலுவைக் கொண்ட மனித ஆத்மாக்கள்
2.ஆவி உலக ஆத்மப் பிடியில் தான் இன்றைய காலத்தில் சிக்கியுள்ளது (இது தான் உண்மை)
3.அதிலிருந்து மீளும் நிலையில்லாத செயலாகத் தான் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்த ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத்தான் ஆத்ம சுத்தி பயிற்சியே கொடுக்கின்றோம்.. இந்தப் பாட நிலைகள் அனைத்துமே அதற்குத்தான்…!

இரத்தக் கொதிப்பு

தெரிந்தோ தெரியாமலோ பிறர் செய்யும் தீமைகளை நாம் திரும்பத் திரும்ப எண்ணி அடிக்கடி கோபப்பட்டோம் என்றால் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது. ஆக… பிறர் செய்யும் தவறுக்கு நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமா…?

LORD MURUGAN VISION

முருகன் காட்சி கொடுப்பானா…? எந்த வழியில் கொடுப்பான்…?

 

முருகன் சிலையை அழகாக வடித்து அலங்காரமாகச் சித்தரித்துக் காட்டுகின்றார்கள். முருகனை வழிபட்டு வந்தால் “அவன் நமக்கு வேண்டிய வரங்களைத் தருவான்… நம்மைக் காப்பான்…!” என்ற ஆசையையும் ஊட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் முருகன் அருளைப் பெற வேண்டும்…! என்றால் என் மனைவி மக்களுடன் நான் சாராது அவர்களை ஒதுக்கிவிட்டுக் கடும் ஜெபங்கள் இருந்து அந்த ஜெபத்தின் வழி கொண்டு செயல்பட வேண்டும் என்று முயற்சிக்கின்றார்கள்.

அங்கே சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த முருகனின் படத்தை உற்று நோக்கி அதற்கு மலர்களும் ஆடைகளும் உணவுகளும் பதார்த்தங்களும் இடப்பட்டு மந்திரங்களைச் சொல்லி அவன் அருள் பெறவேண்டும் என்று செயல்படுத்துகின்றனர்.

முருகனைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது இந்த உணர்வுகள்…
1.அந்தப் படத்திலிருந்து வரக்கூடிய அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வருகிறது.
2.அந்தப் படத்தை எனக்குள் ரூபமாகக் காட்டுவதும் என் கண்களே.
3.படத்தில் என்னென்ன கலர்கள் இருக்கின்றதோ அதை நுகர்ந்து “படம் இருக்கின்றது…” என்ற ரூபத்தைக் காட்டுவது என் கண்கள்.
4.சூரியன் கவர்ந்து வைத்துள்ள அந்த ரூபத்தின அலைகளை என் உடலுக்குள் பரவச் செய்து ரூபமாக எனக்குள் காட்டுகின்றது.

அந்த உணர்வுகளை எனக்குள் அலைகளாக மாற்றப்படும் பொழுது அதையே பல காலம் ஜெபித்தால் உடலிலே வலுவாகின்றது.

“இன்னென்னெ மந்திரங்களைச் சொன்னால் அந்த முருகனையே கைவல்யப்படுத்தலாம்…!” என்று சிறு சிறு புத்தகங்களைக் காட்டி அதிலே விளக்க உரைகளைக் கொடுத்திருப்பார்கள்.

கைவல்யம் செய்வதற்குண்டான பொருள்களை இட்டு நூற்றியெட்டு ஆயிரெத்தெட்டு இலட்சத்தியெட்டு என்ற நிலைகளில் இந்த மந்திரங்களை “நீ ஜெபித்தாய் என்றால்… முருகன் வசப்பட்டு உன்னிடம் அருகில் வருவான்…!” என்று புத்தகத்தில் காட்டப்பட்டிருக்கும்.

அதில் சொன்னபடி அந்த எண்ணம் கொண்டு நான் செய்யும் பொழுது
1.முருகன் படத்தை உற்றுப் பார்த்து அதில் என்னென்ன பொருள்களைப் போட்டேனோ… மந்திரம் சொன்னேனோ…
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு கவர்ந்தது அனைத்தும் எனக்குள் அலைகளாகப் பெருகிவிடுகிறது
3.என் கடைசிக் காலத்தில் நான் இறந்துவிட்டால் இந்த உடல் அழிந்த பின்
4.இந்த உடலுக்குள் எடுத்துக் கொண்ட ரூபங்கள் அந்த முருகனைப் போல் உணர்வுகள் எனக்குள் நிற்கும்.

இதே மந்திரத்தை மற்றவர் ஜெபிப்பார்கள் என்றால் படர்ந்திருக்கும் அலைகள் கொண்டு அவன் ஈர்ப்புக்குள் குவிந்து முருகனாகவே தெரியும்.

டி.வி. நிலையத்திலிருந்து எந்தெந்த அலைகளைப் பரப்பி வைத்திருக்கின்றனரோ அதே அலை வரிசையில் வரப்படும் பொழுது ஒலி பரப்பாகும் படங்கள் அலைகளாக மாறி வருவதை டி.வி மூலம் ரூபங்களாகப் பார்க்கின்றோம். இதைப் போல்
1.நான் ஜெபித்த உணர்வுகளை நீங்களும் ஜெபிக்கத் தொடங்கினால்
2.அதே உணர்வலைகளாகப் படரப்பட்டுக் குவிக்கப்படும் பொழுது
3.நான் முருகனாகவே (காட்சியாக) வருவேன்.

ஒரு கேமரா மூலம் எடுக்கப்பட்ட பட அலைகளின் தொகுப்பை மீண்டும் அதற்குண்டான சாதனைத்தை (PLAYER) வைத்து இயக்கப்படும் பொழுது அதிலே பதிவான உருவங்களின் அசைவுகளும் செயல்களும் நிஜமாக நடப்பது போல் தெரிகின்றது. ஆனால் நிறுத்தி விட்டால் பொம்மையாகத் தெரிகின்றது.

இதைப் போல்…
1.நம் உணர்வின் ஓட்டங்களில் நுகரப்படும் பொழுது அந்த உணர்வுகள்
2.அந்த முருகனே நடந்து வருவதாகவும் செயலாக்கங்களைச் செயல்படுத்துபவனாகவும்
3.அந்த உணர்வின் ஒலிகள் எனக்குள் பட்ட பின் எனக்குள் நேரடியாக வந்து உணர்த்துகின்றான் என்ற நிலைகளும்
4.கவிகள் பாடுகின்றான்..! என்ற நிலையும் எனக்குள் தெரியும்.

ஆனால் என் அருகிலே மற்றவர்கள் இருந்தாலும் இதைப் போல் நான் கவர்ந்து கொண்டது அருகில் இருப்போருக்கு இது தெரியாது.

1.என்னிடம் முருகன் பேசுகின்றான் என்றாலும்
2.எங்கே பேசுகின்றான்…? என்று உற்றுப் பார்த்தாலும் தெரியாது.
3.ஜெபித்த மந்திரத்தின் உணர்வு கொண்டு ஆழமாகப் பதிவாக்கி விட்டால்
4.அதே உணர்வைக் கவர்ந்து அதே எண்ணம் தான் வளரத் தொடங்கும்.

எந்த ஆசைகளை வைத்து மனைவி மக்களைத் துறந்து விட்டு முருகனை அடையப் போகின்றேன் என்ற உணர்வை வளர்த்துக் கொள்கின்றனரோ இதே மந்திரத்தை ஜெபித்த பின் அவன் பெண்டு பிள்ளைகளைத் துறந்து விடுகின்றான்… சொத்து சுகத்தையும் துறந்து விடுகின்றான்…!
1.சாட்சாத் முருகனே என்னிடம் வந்துவிட்டான்… அவனே கொடுப்பான் என்று
2.துறவறம் பூண்டு அவன் ஊர் ஊராகச் சுற்றி அலையத் தொடங்குகின்றான்.

இருந்தாலும் “பிச்சாந்தேஹி…!” (உணவு) என்ற நிலைகள் கொண்டு இந்த உடலை வளர்க்க இன்னொருவரிடம் யாசகம் கேட்டுத் தான் ஆகவேண்டும்.

முருகனைப் பற்றி எண்ணி வளர்ந்த உணர்வின் தன்மை… வலிமை மிக்கதாக இருக்கும் பொழுது அடுத்தவருக்கு அருள் வாக்காகச் சொல்லப்படும் போது அவருடைய துயரங்களோ அல்லது சில ஆவியின் நிலைகள் இருந்தால் அது எல்லாம் அகன்று விடும்… நல்லதாக மாறும்.

இப்படி மற்றவர்களுக்கு நல்லதாகும் பொழுது “இவனைக் கடவுளின் தூதுவன்…!” என்று நாம் புகழ் பாட ஆரம்பித்துவிடுகின்றோம்.

எந்த மந்திரத்தால் அவன் மந்திரத்தை ஜெபித்து அந்த உணர்வின் தன்மையைக் கொண்டானோ அதே உடலில் வளர்ந்த அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது மற்றவர்களும் இவனை அணுகி வருவார்கள்.

1.எங்கள் குறைகளை எல்லாம் நீக்க வேண்டும்
2.நீங்கள் தான் கடவுள்…
3.முருகன் அருளைப் பெற்றவர் நீங்கள் தான்…! என்ற உணர்வின் ஒலிகளை
4.அவன் செவிகளில் ஓதப்படும் பொழுது அவன் உயிரிலே பட்ட பின் அது உடலுக்குள் அணுவாக மாற்றிவிடுகின்றது.

இவ்வாறு சில காலம் அவரின் சக்திகள் செயல்படும்.

அந்தச் சில காலத்திற்குள் அவன் கேட்டுணர்ந்த பிறர் கஷ்டங்களை எல்லாம் இவன் உடலுக்குள் உருவாக்கும். உடலிலே தீய அணுக்கள் வளரும்.

முருகன் அவனுக்குச் சக்தி கொடுத்தான்…! என்று எண்ணுவார்கள். ஆனாலும் அதை வைத்துப் பிறருடைய தீமைகளை நுகரப்படும் பொழுது கடைசியில் இவனுக்குள் நோய்கள் வரும்.

 

நோய் வந்ததும் இவர் சொல்வார்..
1.எனக்குள் முருகன் வந்தான்…
2.அருளைக் கொடுத்தான்…
3.எத்தனையோ காட்சிகளையும் கொடுத்தான்…
4.ஏனோ என்னைச் சோதிக்க… என் உடலுக்குள் நோய்கள் வருகின்றது…!
5.முருகன் என் மீது இப்பொழுது இரக்கப்படவில்லை…! என்று இவன் துடிப்பான்.

ஏனென்றால் முருகன் இவ்வாறு வரவில்லை…! சாதாரண மனித உணர்வுக்குள் சுழன்றிடும் உணர்வின் அலைகள் தான் இது. கடைசி முடிவு இப்படித் தான் இருக்கும்.

சிவ தனுசு விஷ்ணு தனுசு முழுமையான விளக்கம்

வாலியை இராமன் கொல்லவில்லை கல்லைப் போட்டு மூடிவிட்டான்…!

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்குக் கணபதி ஹோமம் செய்யலாமா…?

value of human soul

பிம்ப உடலைப் பற்றியும்… ஆத்மாவின் இயக்கத்தைப் பற்றியும்… ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதன் எடுக்கும் குண நிலையில்…. அவன் எண்ண உணர்வில் சமைக்கப்பட்ட ஆவியின் வலு தான்
1.ஆத்மாவின் உராய்வுக் கவசமாக உராய்ந்து உராய்ந்து
2.அதன் வலுத் தன்மையைக் காந்த ஈர்ப்பு வளர்ப்பாக
3.இந்தப் பிம்ப உடலின் அச்சான எலும்புகளின் வளர்ப்பின் உராய்வு வலுக்கூடி ஆத்மாவின் வலுவும் வளருகின்றது.

இந்தப் பிம்ப உடலின் நிலை கொண்டு பல செயல்களைச் செயல்படுத்த முடியும். பல கோடி ரூபத்தில் வளர்ப்பின் வளர்ப்பாக… பல கோடி மண்டலங்களை வளர்க்கக்கூடிய… “வளர் நிலைக்குகந்த வலுவான வித்துத்தான் இந்தப் பிம்ப உடல்….!”

சப்தரிஷிகளின் செயலை வளர்க்கவும் இவ்வொளி நாதச் செயல் கொண்ட… “ஜீவத் துடிப்பு உள்ள எண்ணத்தின் சரீரத்தினால் தான்” முடிகின்றது.
1.பல கோடிச் சக்திகளை உருவாக்கும் சப்தரிஷிகளே…
2.இப்பிம்ப உடலின் தொடர்பு கொண்டு தன் வலுவை வளர்க்கின்றார்கள்.

அதனின் உண்மைப் பொருள் தான் நாம் இன்றளவு காணும் இயேசு கிறிஸ்து ஐயப்பன் முகமது நபி ஆதிசங்கரர் போன்ற தெய்வீக வளர் நிலையின் உண்மைத் தன்மை கொண்டவர்கள்.

ஆகவே…
1.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு ஆத்மாவினால் தான்
2.இச்சரீரம் சமைக்கும் உணர்வின் வலுவைக் கொண்டு
3.பல வலுவான வளர்ப்பின் வளர்ப்பாக இச்சரீரக் கூட்டின் தொடருடன் வளர்க்கலாம் என்ற
4.இச்சரீர பிம்பத்தின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

ஜீவன் பிரிந்த ஆத்ம உயிருக்குத் துடிப்பு நிலையும் நாத ஒலி வெளிப்படுத்தும் ஜீவத் தொடர்பும் இல்லாததனால் அதன் எண்ணத்தின் ஈர்ப்பைத் தன் எண்ண அலைக்குகந்த ஆத்ம உடலில் ஈர்க்கப்பட்டு தன் ஆத்மாவின் உயிரையே தன் குண நிலைக்கொத்த உணர்வு நிலை கொண்ட ஜீவ சரீர ஈர்ப்பிற்கு (தாய் உடலில்) வந்து பிறப்பெடுக்கும் ஆத்மாவும் உண்டு.
ஆனால் இப்படி
1.இயல்பாகப் பிறப்பிற்கு வரும் ஆத்மாவிற்கு மேல்
2.வலுவான எண்ண வேட்கை கொண்ட ஆத்ம உயிர் பிற உடலுடன் உள்ள ஆத்மாவின் மேல் படரும் பொழுது
3.அதனின் வலுவுக்கு மேல் வலுவான ஆத்மாக இது செயல்பட்டு
4.அதனால் சிலருக்குப் புத்தி பேதலித்த நிலையும்
5.சிலருக்குக் கொடூர எண்ணங்களின் வெறி நிலை கொண்ட குண நிலையும் அமைகின்றது.

இந்தக் குண நலத்தின் எண்ண மாற்ற உணர்வினால் சில அலைத் தொடர்புகளின் ஆத்ம உணர்வின் ஈர்ப்பினால் மனிதன் தன் நிலையையே மறக்கின்றான்.

பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்தது…! என்றெல்லாம் இதைத்தான் சொல்வது…!

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஞானிகள் ஏன் சொன்னார்கள்…?

உடல் சிவம்… உயிர் ஈஸ்வரன்… நாம் சுவாசிப்பது நந்தீஸ்வரன்…! நாம் வலிமையானவர்களாக இருந்தாலும் சந்தர்ப்பத்தில் நம் வீட்டிற்குள் ஒரு பாம்பு வந்துவிட்டால் திடுக்… என்று பயந்து விடுகின்றோம். பின் பாம்பின் நினைவே அதிகரிக்கின்றது. ஒரு கயிறைப் பார்த்தாலும் அது பாம்பாகத் தான் தெரிகின்றது. அதனால் தான் நாம் சுவாசிப்பதை நந்தீஸ்வரன் என்று பெயரை வைத்து  நாம் நுகர்ந்தது நம்மை எப்படி இயக்குகிறது எப்படி நம்மை மாற்றுகின்றது என்பதைக் கணக்குப்பிள்ளையாகக் காட்டினார்கள் ஞானிகள்.

BLESSINGS OF GNANIS

ஞானிகளை அணுகுவோர் உடலுக்கும் செல்வத்திற்கும் தான் கேட்கின்றார்களே தவிர “ஞானத்தைக் கேட்க முற்படவே இல்லை…!”

 

இராமனைக் கண்ணிலே கண்டார்… ஆஞ்சநேயரைக் கண்டார்… அதன் உணர்வின் நிலைகளை ஆட்டிப் படைத்தார்… கண்ணனைப் போன்று அவன் செயலாக்கங்களைச் செய்தார்… “அத்தகைய அருள் சக்தி பெற்றவர் தான் இராமகிருஷ்ணர்…!” என்று அவரின் புகழ் பாடி அதன் வழி கொண்டு பின் வந்தோர் இதை மக்களின் மத்தியில் பறைசாற்றி இந்த உணர்வின் தன்மையை இவருக்குள் சாகாக்கலையாக வளர்த்துக் கொண்டார்கள்.

1.அதன் வழியில் தான் பெரும் பகுதியானோர் வருகின்றனரே தவிர
2.அந்த ஞானி காட்டிய உண்மைகளைக் கூட இன்று வளர்க்க முடியவில்லை.

இந்த நூற்றாண்டில் இராமகிருஷ்ணர் கீதையைப் பற்றிச் சொல்லி வெளிப்படுத்தியதை எல்லாம் அதன் சார்புடையோர் கீதை நூல்களைப் படித்து “அவரவர்கள் விளக்க உரைகளைக் காட்டி…” அதன் வழி தான் மக்களுக்கு உபதேசித்துள்ளார்கள்.

பேரண்டத்தின் உண்மையின் உணர்வுகளை இராமகிருஷ்ணர் அறிந்தாலும் அந்த உணர்வின் துணை கொண்டு விவேகானந்தரும் அறிந்தாலும் அவர்கள் வழிப்படுத்திய நெறி… செயல்படச் சொன்ன முறை..
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்துப் பழகு
2.நீ எண்ணும் எண்ணத்தை உனககுள் அது உள் நின்று இயக்குவதை
3.அந்த உன் எண்ணமே கடவுளாகின்றது என்று தெளிவாக்கியுள்ளார்கள்.

இதை எல்லாம் நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவும் இல்லை.. அதன் வழி நாம் செல்லவும் இல்லை.


காலத்தால் நாம் ஆசையில் சிக்கப்பட்டு இன்று
1.இதன் வழிகளிலே சென்றால் நம் வியாபாரத்தைப் பெருக்கலாம் ஆண்டவன் அருளைப் பெறலாம் என்று சிலர் செல்கின்றனர்.
2.இன்னொரு சாரார் நாம் இந்த வழிகளில் சென்றால் சாது என்ற நிலைகளை அடையலாம்
3.ஆசை என்ற நிலைகளில் விடுபடலாம் என்றும் தனக்குள் விடுபடும் உணர்வுகளை வளர்த்து
4.கடைசியின் விரக்தியின் தன்மையை வளர்த்து அடங்கிடும் நிலை வருகின்றது.

செல்வம் இருந்தாலும் அடங்கி வாழலாம்…. செல்வம் இல்லை என்றால் உணவுக்காகத் தன் உணர்வின் தன்மையை மற்றவருக்குப் பறைசாற்றி அதன் வழியில் பொருளை ஈட்டி இந்த உடலை வளர்க்கலாம்.

இப்படித்தான் வாழ முடிகிறது…!

மடாதிபதிகள் தான் எடுத்துக் கொண்ட கொள்கையிலே
1.அவர்கள் உருவாக்கிய மடாலயங்கள் கொண்டு செல்வங்களை ஈட்டுவதும்
2.அதன் துணை கொண்டு பெரும் செல்வத்தை அடைய
3.அதிலே முன்னணியிலே இருப்பவரைக் குற்றவாளியாக்குவதும்
4.பின் அந்தச் செல்வத்தைக் கைப்பற்றிச் சுகபோகங்களை அனுபவிக்கும் நிலைகள் தான் மடாலயங்களில் வருகின்றது.

இப்படி… அன்றைய ஞானிகள் வெளிப்படுத்திய அருள் ஞானங்களை எல்லாம் பக்தி கொண்ட சிலர் அதற்குள் புகுந்து… பக்தியும் பற்றும் கொண்டு நடந்தால்… “தெய்வம் உனக்குச் செய்யும்..” என்ற இந்த நம்பிக்கையைத் தான் பெரும்பகுதி மடங்களிலிருந்து வெளிவரும் நிலைகள் ஊட்டுகின்றார்கள்.

இது தான் இன்றைய நிலை…!

சில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுகிறது… ஏன்…?

வாழ்க்கையில்… கஷ்டம் என்று நினைத்தால் எல்லாமே கஷ்டம் தான்

சாப அலைகள் எங்கள் குடும்பத்தில் இயக்கிய நிலைகள் – ஞானகுரு 

eternal light destinations - vivekanandar

இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் வேண்டாம்..! என்று சொன்னவர்கள் தான் “இராமகிருஷ்ணரும்… விவேகானந்தரும்…”

ஒரு மந்திரவாதியிடம் சீடனாக இருந்தவன் “ஒரு பெரிய மகான் இங்கே வருகின்றார்…” என்ற நிலையில் கேள்விப்பட்டு விவேகானந்தரைக் காலில் விழுந்து பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்கள் அருள் வேண்டும்…! என்று அவரிடம் கேட்கின்றான்.

“நீ ஏங்கி வந்த நல்வழி நடக்கட்டும்… என்றும் அதன் வழி நீ உயர்வாய்…!” என்றும் விவேகானந்தர் அவனை ஆசீர்வதிக்கின்றார்.

இந்த ஆசியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட பின் தன்னுடைய மந்திரவாதியான குருவிடம் சொல்கிறான். நான் அந்த மகானிடம் சென்றேன்… அவர் எனக்கு நல்வாழ்த்து கூறினார்..! என்கிறான்.

அப்படியா..! அவர் நாளை மடியப் போகின்றார். இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றார்…! அதன் வழியில் அவர் சொன்னதை நீ செய்தாய் என்றால் நீயும் இரத்த இரத்தமாக வாந்தி எடுத்து மடியப் போகின்றாயா…? என்று சிஷ்யனிடம் கேட்கின்றான்.

அதைக் கேட்டதும் இவனும் நடுங்குகின்றான்.

அந்த மந்திரவாதி சொன்னபடி விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்யும் பொழுது பேச முடியாதபடி இரத்த வாந்தி எடுக்கின்றார். முச்சுத் திணறல் ஆகிப் பேச முடியாது தடுக்கின்றது.

அப்பொழுது தன் குருவை நினைக்கின்றார். ஒவ்வொரு நிமிடமும் தடைப்படும் உணர்வை உணர்கின்றார்.
1.மற்ற மந்திரவாதிகள் என்ன செய்கின்றனர்..?
2.நல்ல செயல் செய்வதை ஏன் தடைப்படுத்துகின்றனர்…? என்று சிந்திகின்றார்.

இருந்தாலும் தான் சாந்த உணர்வு கொண்டாலும் கொடூர உணர்வின் செயலுலிருந்து “தான் மீளவில்லையே…” என்று உணர்கின்றார். அப்படி உணரப்படும் பொழுதுதான் தன்னுடைய சிந்தனை மேலிட
1.இனி வாழ்க்கை என்ன…? என்ற நிலையில்
2.தன் உணர்வின் தன்மை வெளியாக்கி உயிரான்மாவை வெளியேற்றிக் கொள்கின்றார்.

எத்தனை காலம் நாம் போரிடுவது..? நன்மையின் தன்மைகளைச் செய்தாலும் விஷத்தின் தன்மை தனக்குள் கலக்கப்படும் பொழுது குரு காட்டிய வழியிலிருந்து நாம் பின் தங்கிவிடுவோமோ…!

இந்த உடல் நமக்கு எதற்கு..? என்ற உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு கொதிகலனாக மாற்றித் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்றார் விவேகானந்தர்.

ஒரு சமயம் இராமகிருஷ்ண பரமகம்சரும்.. அவருடைய சீடர்களும்.. ஞானத்தை அறிய வேண்டும் என்ற ஆவல் கொண்ட மற்ற பக்தர்களும்.. மாலை நேரத்தில் நடந்து வருகின்றார்கள்.

அதே சமயத்தில் இராமகிருஷ்ணரின் செயலாக்கங்களை அறிவதற்காக மந்திரத்தால் ஜெபித்துப் பொருளை வரவழைத்தும் சில ஆவி நிலைகளை இயக்கும் மந்திரவாதி ஒருவனும் இந்தக் கூட்டத்துடன் கூட வருகின்றான்.

அப்பொழுது இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது.

அப்படி இடறிக் காயம் அடைந்த பின் “ஐயோ… இருட்டாகிவிட்டதே…, விளக்கு எடுத்து வர மறந்து விட்டோமே…” என்ற ஏக்க உணர்வுடன் கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார்.

அப்பொழுது அங்கே அந்த இடத்தில் இராமகிருஷ்ணரால் வெளிச்சத்தைக் கொடுக்க முடியவில்லை…! என்ற இறுமாப்பு கொண்டு இவர்களுடன் வந்த அந்த மந்திரவாதி “ஜெய் பவானி…!” என்று தொடையைத் தட்டினார். “சலோ…!” என்று சொன்னவுடன் “ஒரு வெளிச்சம்” முன்னால் சென்றது.

மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார்.

அப்பொழுது அதைப் பார்த்ததும் இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்து விடுகின்றார்.

மந்திரவாதி… தனக்குள் சகலமும் கற்றுள்ளேன் என்ற உணர்வுடன்… பிறிதொரு ஆவியின் வலிமை கொண்டு செயலாக்கும் வலிமை எனக்கு உண்டு…! என்ற எண்ணத்தில் இதைச் செய்து காட்டுகின்றான்.

நான் “இந்த வெளிச்சத்தை” விரும்பவில்லை என்கிறார் இராமகிருஷ்ணர். ஏனென்றால்
1.என் உடலில் அக வெளிச்சமான… அறிவின் தெளிவு வரவில்லை
2.இருளை அகற்றிச் செயல்படும் “முன் சிந்தனை…” என்ற இந்த உணர்வு இல்லாது போய்விட்டது
3.இங்கே வந்தோருக்கும் வரவில்லை.

ஆகவே சிந்தித்துச் செயல்பட்டால் இத்தகைய குறையிலிருந்து விடுபடலாம் அல்லவா…! அந்த அறிவின் ஒளி எனக்குள் வளர வேண்டும் இந்த ஒளி தான் எனக்குப் பெறவேண்டும்…!

சலோ… சல்…ஜாவ்…! என்று நீ சொல்லும் உணர்வுகள்… நீ ஏவல் செய்து குட்டிச் சாத்தான் மூலம் எனக்கு வழி கொடுப்பதை… இன்னொரு ஆவியைக் கொண்டு அடக்கி இதன் உணர்வு கொண்டு மாயாஜாலம் செய்தாலும்… இந்த ஒளி கறிக்கு உதவாது… இந்த உடலுக்கும் உதவாது.

அறிவின் ஒளியாகத் தெரிந்து நடந்தால்.. இந்த உணர்வுகளையே ஒளியின் சரீரமாக மாற்ற முடியும்… “அது தான் எனக்குத் தேவை…!” என்று அங்கே தெளிவாக உபதேசிக்கின்றார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்ததைக் கண்டு பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே…! என்று அந்த மந்திரவாதி ஏவல் செய்தார்.

எந்த வாயினால் கூறினாரோ அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து… பேச முடியாதபடி.. உணவு உட்கொள்ள முடியாதபடி… பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.

ஆனால் மற்றவர்கள் எல்லோரும் இராமகிருஷ்ணருகுக் கேன்சர் நோய் என்ற நிலையில் முடிவுக்கு வருகின்றார்கள். அதற்கு மருந்து கொடுக்கவும் துணிகின்றார்கள்.

ஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரமும் தெரியும். உடலில் உள்ள உணர்வுகளும் தெரிகின்றது. இது வந்த நிலை வேறு…!

இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டபின் மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல் உடலைக் காக்க மற்ற எதையும் முயற்சிக்காது

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல…
2.இந்த உடலைச் சொந்தம் கொண்டாட வேண்டாம்…
3.அருள் ஒளியைச் சொந்தம் கொண்டாட வேண்டும்.
4.எனக்குள் நடந்த இந்த நிகழ்ச்சி இந்த உடலுடன் போகட்டும்…
5.எனக்குள் எடுத்துக் கொண்ட அறிவு என்னுடன் என்றுமே வளரட்டும்…
6.இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் எனக்கு வேண்டாம்….
7.அருள் ஒளி பெற்ற அருள் ஒளியின் உடல் எனக்குத் தேவை…
8.ஒளியின் சரீரம் தான் எனக்கு தேவை…! என்று
9.அவரை வைத்தியம் பார்க்க வந்தோருக்கெல்லாம் உபதேசித்துள்ளார்.

இதை எல்லாம் குருநாதர் எனக்கு (ஞானகுரு) நேரடியாகக் காட்டிய உண்மைகள். அன்று நடந்த சம்பாஷணைகளை அப்படியே காதில் கேட்கும்படிச் செய்தார்.

ஆனால் இராமகிருஷ்ணர் உபதேசித்த இந்தப் பேருண்மைகள் எதுவும் வெளியிடப்பட்ட நூல்களில் வரவில்லை என்பதையும் குருநாதர் உணர்த்தினார்.

அகஸ்தியன் ஸ்டேசன் (அலைத் தொடர்பு)

அகஸ்தியன் ஸ்டேசனை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம். இதன் மூலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்ட இயற்கையின் இரகசியங்களை நீங்களும் அறியலாம். அவனுடைய நினைவுகள் உங்களுக்குள் வரும்.

Divine light Bliss

உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி
2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா எடுத்து
3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர் செயல்படுத்துகிறது.

சரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி.. ஆத்மாவின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.

ஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது
1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து
2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற முறையில்…
3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா நிலையில்…
4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்
5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்
6.இந்நாதத்தின் துடிப்பு இயக்கத்தால்
7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்
8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை மட்டுமல்லாமல்
9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத் துடிப்பு உள்ளதுவோ
10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும் அலை உணர்வைத் தான்
11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும் சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப் பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல் மோதுகிறது.

மோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின் நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர் கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.

அங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில் போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது…” அந்த ஆவியின் சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.

அப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.

தான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும் பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.

அதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப் பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்
1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்… வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை எடுத்து எடுத்து
2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்
3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.

இச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும் ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு கொண்டு விடுகின்றது.

1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும் பொழுது
2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம் காணுகின்றது.

இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

விக்கிரமாதித்தன் தன் மனைவியை வைத்துப் பெற்ற சக்தியின் கடைசி நிலைகள் 

தியான அன்பர் உயிரை மதிக்கும் பண்புகளை வளர்த்துக் கொண்ட விதம்

தியான அன்பர் தன்னுடைய கோபத்தைக் குறைத்த அனுபவம் 

AGHORI

நர மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் அகோரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 

வட இந்தியாவில் ஏராளமான அகோரிகளைப் பார்க்கலாம். சுடுகாட்டில் வேகும் பிணத்தை அவர்கள் கைப்பற்றி அதை உணவாக உட்கொள்வார்கள்.

அதாவது அவர்கள் அபப்டி உட்கொள்வதன் மூலம் அந்த ஆண்டவனுக்கு இந்தத் தசையை அனுப்பி அவனுக்கு அர்ப்பணிப்பதாகச் சொல்வார்கள்.

பிணங்களை இவன் உணவாக உட்கொண்டு அதை ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பதால் ஆண்டவன் இரக்கப்பட்டுத் தனக்குள் செயல்படுகின்றான் என்று இப்படிச் செய்கிறார்கள்.

இத்தகைய தீய செயலே உருவான பின் அகோர உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்த பின் யாரிடமாவது வந்து நின்றால் பணம் கேட்டால் கொடுக்க வேண்டும்.

அதாவது அகோரிகள் வீடு வந்து கேட்டால் பணத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுக்கவில்லை என்றால் சுட்டெரிக்கும் பார்வையைக் காட்டுவான்.

அவன் இப்படிப் பார்க்கிறானே… நம் குடும்பம் கெட்டுவிடுமோ… நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ…! என்று பயந்து அந்த அகோரி விரும்பிய பொருளைக் கொடுத்துவிடுவார்கள்.

ஆண்டவனை நான் நேசிக்கின்றேன்… ஆண்டவன் அருளை எல்லோருக்கும் பெறச் செய்ய அவனை நான் தியானிக்கின்றேன். அதற்காக வேண்டி நீங்கள் எனக்குப் பொருளைக் கொடுக்க வேண்டும் என்பார்கள் அந்த அகோரிகள்…!

ஆகவே அவர்கள் பணம் கேட்டால் கொடுத்தே தீர வேண்டும். பெரும் பெரும் செல்வந்தர்களும் அவன் முன்னாடி வந்தாலே பணத்தைக் கொடுத்து விடுவார்கள். கோடிக்கணக்கில் பணத்தைக் வாங்கிச் சென்று விடுவான்.

ஆனால் அவர்கள் பிணத்தைத் தின்பவர்கள் தான்…!

இதைப் போன்ற அகோரத் தன்மையான செயல்களை ஆரம்பத்தில் நான் (ஞானகுரு) வெளியிலே சொல்லும் பொழுது (நாற்பது வருடம் முன்) யாரும் நம்பவில்லை. உலகில் இப்படி நடக்கிறது.. மறைமுகமாக நடந்து கொண்டிருகின்றது என்று தான் சொன்னேன்.

பின் பத்திரிக்கையில் வெளி வந்த பின் தான் ஓகோ…! இப்படியும் இருக்கின்றதா…? என்று அதற்குப் பின்னாடி நம்புகிறார்கள்.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய வழிகளில் பல பல உண்மைகளை அப்பொழுது வெளிப்படுத்திக் காட்டினோம். அதையே குருநாதர் என்னைப் பரிசோதிக்கும் விதமாக கங்கையில் மையத்தில் உள்ள மணல் திட்டுக்குப் போகச் சொன்னார்.

அங்கே சில காலங்களில் அந்த அகோரிகள் வருவார்கள். “நீ தவத்திற்காகப் போனால்.. உன்னை அறிந்து கொன்று புசிக்க வருவார்கள்…!” என்று இப்படிச் சொல்லி அங்கே போகச் சொன்னார் குருநாதர்.

குருநாதர் சொன்ன முறைப்படி அங்கே தியானமிருக்கப்படும் பொழுது பல அகோரிகள் வருகின்றனர். உடல்களில் கம்பிகளால் வளையம் இடப்பட்டு பாடல்களைப் பாடிக் கொண்டு வருகின்றனர்.

“ஓ.. ஓ… ஓ.. ஹோ… ஹோ…! என்ற சுருதிகளை வைத்துப் பாடுகின்றனர். கைகளில் கத்தியையும் வைத்துக் கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுகின்றார்கள்.

அந்த நேரத்தில் குருநாதர் கொடுத்த அலைகளின் துணை கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். இவர்கள் அந்த ஒலிகளை எழுப்ப… எழுப்ப… “ஓங்காரக் காளி…!” என்ற நிலையில் அவர்களுக்கு முன் ரூபமாகக் காட்சி தெரிந்தது.

அதைப் பார்த்த பின் மாதாஜி…! மாப் கரோஜி..! என்று அந்தத் தாளச் சப்தங்களைப் போட்டு அப்படியே பின்வாங்கினார்கள்.

அவன் (அகோரி) காளியைப் பார்த்திருக்க மாட்டான்… என்றார் குருநாதர். அந்த உணர்வுகளைக் கண்ட பின் நடுக்கமாகி என்னை விட்டு ஓடிவிட்டார்கள்.

குருநாதர் அவர் ரூபமாகச் (காளி) சில இதுகளைக் காட்டி என்னை விடுவித்தார். நடந்த நிகழ்ச்சி இது..!

முதலில் நான் இங்கே மணல் திட்டிற்குப் போவதற்கு முன் நாதுராம் என்ற அங்கே இருக்கும் காவாலாளி.. நீங்கள் அங்கே சென்றால் உங்களைக் கொன்று தின்று விடுவார்கள்…! என்று ஏற்கனவே சொல்லியிருந்தான்.

இல்லை… இதைப் பரிசோதிக்கத்தான் என் குரு அனுப்பினார்…! என்று அவனிடம் சொல்லி விட்டுச் சென்றேன். குரு வழியில் செல்லப்படும் பொழுது தான் அகோரிகளைப் பற்றிய உண்மைகளையும் அறியக்கூடிய தன்மை வந்தது.

காயத்ரி மந்திரம்

 

சூரிய சக்தியைச் சேர்ப்பது காயத்ரி என்று சொல்கிறோம். ஆனால் அதற்குப் பின்னாடி உள்ள உண்மை நிலைகளை அறிந்துள்ளோமா…? 

Artificial intelligence

“உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது. நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.

அது மட்டுமல்லாமல்
1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை
3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ
4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து
5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

அதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து.. சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.

பூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே
1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு குண நாத அலைகள்
2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி
3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.

தன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்
1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்
2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.

இதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…!

இன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்… அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்… இக்காற்று மண்டலத்தில் பலவிதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள். இன்று… இது இல்லாத இடமே இல்லை…! என்று கூடச் சொல்லலாம்.

ஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.

1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்
2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்
3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்
4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று,..!

 

தன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…!

விமான விபத்திலிருந்து காத்த அனுபவம் நடந்த நிகழ்ச்சி 

உடல் பற்றினால் வரும் விளைவுகளை இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு 

எல்லாவற்றிலிருந்தும் தப்பும் சக்தி மனிதனுக்குண்டு 

ramakrishna and vivekanada

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் கடவுளைப் பற்றி விவேகானந்தர் கேட்டது என்ன…?

 

விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்தாலும் அவர் மற்றவர்களின் குணங்களையும் செயல்களையும் அது எப்படியெல்லாம் அவர்களை இயக்குகிறது…? என்று அறியத் தொடங்கினார்.

1.ஒரு மனிதன் கொலை செய்துவிட்டு அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்பதற்காக வேண்டி
2.பணத்தைக் கொடுத்து வாதிடச் சொல்வதும்
3.தவறைச் செய்துவிட்டு பணத்தைக் கொண்டு அந்தத் தவறை மறைப்பதற்காக இவர்களை அணுகி வருவதையும்
4.வழக்கறிஞராக மாறிய பின் விவேகானந்தர் நேரடியாகக் காணுகின்றார்.

ஆனால் அவருடைய தாய்… “தெய்வமோ… கடவுளோ… எப்படி இருக்கின்றது…?” அந்த உண்மையின் உணர்வைக் கொண்டு உணர்த்திய உணர்வுகள் இவருக்குள் இயக்கப்பட்டு… தன் தொழிலில் வரக்கூடிய சமுதாயத்தையும் உணர்கின்றார்.

கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் மற்றவர்களுக்குத் தோன்றப்பட்டு… கொலையையும் செய்துவிட்டு.. கொலையிலிருந்து மீள்வதற்காக
1.பணத்தைக் கொடுத்து அவன் எப்படி மாற்றுகின்றான்..? என்ற நிலைகளையும்
2.அவன் எண்ணியதை அவன் உயிர் எப்படி இயக்குகின்றது..? என்ற நிலைகளையும் விவேகானந்தர் உணர்கின்றார்.

“ஒருவனைக் கொலை செய்ய வேண்டும்…!” என்று எண்ணும் போது அதே உயிர் அந்த உணர்வை ஊட்டிக் கொலை செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டி… ஆளை வைத்துக் கொல்லும் நிலை வருகின்றது.

அதே சமயம் “ஒருவன் வாழ வேண்டும்…!” என்று பல உயர்வினைக் காட்டி அதற்கென்ற உகந்த நிலைகளைச் செய்கின்றான் என்று சொல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து வாழ வைக்க வேண்டும்…! என்ற எண்ணங்களை ஊட்டி வாழச் செய்கின்றது.

ஆகவே இப்படி எண்ணியதை எல்லாம் உருவாக்குவது யார்…? “உயிரே கடவுள்…” என்ற நிலையை உணர்கின்றார் விவேகானந்தர்.

1.எண்ணியதை உருவாக்கும் உயிர் ஒவ்வொரு உடலிலும் இருக்கும் பொழுது
2.அங்கே ஆட்சி புரியும் சக்தியே பெரும் சக்தி என்றும்
3.அவர்கள் எதை நுகர்கின்றனரோ அதையே இயக்குகிறது.

உதாரணமாக ஒருவர் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை எண்ணினால்… அந்த உயிரே அங்கே அந்த நிலைகளைச் செய்கின்றது என்பதையும் உணர்கின்றார் விவேகானந்தர்.

இருந்தாலும் இதை எல்லாம் எப்பொழுது உணரத் தொடங்கினார்…? “நீ கடவுளை எங்கே பார்க்க வேண்டும்..?” என்ற இந்த உணர்வு விவேகானந்தருக்கு எப்பொழுது வருகின்றது…?

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் வருகின்றார்…!

1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.நீ கடவுளைக் காட்டுகின்றாய்…! என்று சொல்கின்றார்கள்.
3.கடவுளை நீ பார்க்கின்றாயா…?
4.நானும் அந்தக் கடவுளை எனக்குள் பார்க்க வேண்டும் என்று
5.இப்படிப்பட்ட வினாக்களை இராமகிருஷ்ணரிடம் எழுப்புகின்றார் விவேகானந்தர்.

அப்பொழுது பரமகம்சர் விவேகானந்தரிடம் கூறுகின்றார்…!

கடவுளைக் காண முடியாது…!

1.நீ எண்ணும் உணர்வுகள்… உன் உள் நின்று… அதுவே கடவுளாக நின்று உணர்த்துகின்றது…
2.அதன் வழியே நீ செயல்படுகின்றாய்..! என்று இராமகிருஷ்ணர் தெளிவாக அவருக்கு உணர்த்துகின்றார்.

உடலை ஆட்டிப்படைக்கும் சக்தி எங்கிருந்து வருகிறது…?

 

நாம் நினைக்கின்றோம்…! கடவுள்… எங்கே இருக்கின்றான்..? நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்…? அவனுக்கு என்ன தெரியப் போகிறதா என்று…! ஆனால் நமக்குள் இருந்து ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே…! நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவதும் அதை ஆண்டு கொண்டிருப்பதும் நாம் எண்ணிபடி இந்த உடலை இயக்குவதும் நாம் எதை வளர்க்கின்றோமோ அதன் வழி நீ அனுபவி…! என்று தான் நம்மைச் செலுத்துவான்.

shiva third eye mystery

திரைப்படம் போல் நம் மனதிற்குள் எப்படி ஒலி ஒளி வருகிறது…? அதன் இயக்க நிலை என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நாம் சுவாசத்தால் எடுக்கும் மணத்தைக் கொண்டு தான் இவ்வுயிராத்மா அவ்வலையைச் சேமிக்கின்றது என்று முதல் பாடத்திலிருந்தே சொல்லி வருகின்றேன்.

1.அமிலத்தின் மோதலின் நாத ஈர்ப்பு உயிரணுத் தன்மை
2.எந்தெந்த அமிலமுடன் எவ்வலைச் சேர்க்கை சேர்ந்து அதன் நாதமாகப் பிறக்கின்றதோ
3.அந்த நாதத்திற்குகந்த சேமித அணுத் தன்மை தான்
4.எக்கூட்டுச் சேர்க்கை சேர்ந்ததோ அதன் வளர்ப்பு அணுவாகப் பிறக்கின்றது.

இவ்வுடல் பிம்பத்தின் எண்ண உணர்வில் எடுக்கும் சுவாச நாதத்தின் மோதலின் அணுத் தன்மையால் தான் இஜ்ஜீவ பிம்ப உடல் வளர்ந்து அதன் மூலம் இந்த ஆத்மா வலுக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் உணர்வு அணுக்களின் வளர் தன்மையில்
1.நாதத்தின் இனிமையான இசையின் (சங்கீதம்) தன்மையால் மகிழ்ச்சியானாலும்
2.அதிர்வு… வெடி… இடி.. இவற்றைப் போன்று பயங்கர ஒலி ஏற்பட்டால்
3.ஈர்ப்பின் நிலை செவிக்கு ஏற்கும் மோதலைக் கொண்டு
4.இச்சுவாச அலை உணர்வில் அச்சப்படக்கூடிய அணுக்களைத் தன் ஈர்ப்பில் வளர்க்கின்றது.

இந்த மனித ஆத்ம நாத… ஒலி… ஈர்ப்பு… செவி செயல் தன்மை… மற்றெல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் ஒலி ஈர்ப்பு விகித வீரியத் தன்மை கொண்டது.

மற்ற ஜீவராசிகள் “ஒளி பாய்ச்சி… சுவாச மண நுகர்வுத் தன்மை கொண்டு தான்” அதன் ஈர்ப்பு நாதத் தன்மை உள்ளது.

பார்வையின் ஒளி பட்டு… சுவாச மணத்தின் நுகர் தன்மை மனிதனைக் காட்டிலும் மிருக நிலைக்கு (சிலவற்றுக்கு) கூடி இருந்தாலும்… மனிதனை ஒத்த செவி ஈர்ப்பு நாத வளர் சக்தி மற்ற மிருகங்களுக்குக் குறைவு.

1.உணர்வால் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப
2.சுவாச மோதல் வளர்க்கும் அணு வளர்ச்சி அலை சக்தியால் தான்
3.இந்த உடலைச் சுற்றியுள்ள ஆத்மா வலுப் பெறுகின்றது.

ஆத்மாவின் நிலைக்கொப்ப உணர்வுகளைத் தான் இந்த உடல் வெளிப்படுத்துகின்றது.
1.ஆத்மாவின் உணர்வையும்
2.உணர்வின் ஆத்மாவையும்
3.இவ்வெண்ணத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு ஒளி பாய்ச்சி… ஒலி கேட்டு…
4.இந்த மனித ஆத்மா மாற்றி அமைக்க முடியும்.

ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பின் நிலைக்கொப்ப இவ்வண்ணக்கலவை (படம்) அமில வளர்ப்பு மோதலின் பிம்ப நிலையை எப்படிக் காண்கின்றோமோ அதைப் போன்றே
1.இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்க்கும் எண்ணத்தின் ஓட்ட நிலையை
2.இந்தப் பிம்பமல்லா ஆவி அணுச் சேர்க்கையின் நிலை முறையை
3.பிம்பத் தன்மை மாறிய அமிலக்கூட்டின் ஆத்ம வடிவுகளை
4.அமில உருவாக பிம்பமில்லாத் தன்மையில் நிழல் பட உருவத்தில் காண முடியும்.

இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்த்து இவ்வெண்ண ஓட்ட நிலைக்கொப்ப எதனையுமே அறியும் ஆற்றல் சப்தரிஷிகளுக்கு உண்டு.

எத்தகைய ஜீவ பிம்ப மாற்றம் கொண்ட ஆவி அமிலச் சேர்க்கை ஆத்ம உயிர்களையும்… அருகிலுள்ள இடங்களையும்… அல்லது எண்ணத்தில் செலுத்தும் எந்த இடமாக இருந்தாலும் இவ்வெண்ணத்தைச் செலுத்திச் செயல்முறைப்படுத்தும் நிலையில் காண முடியும். ஞானத்தின் வழித் தொடரில் இது சாத்தியமே…!

இதைப் போன்றே அச்ச அதிர்வு நிலையினாலும் ஒலி ஒளி படங்களைக் காண முடியும்…! சில ஆத்மாக்களின் அலைத் தொடர்புடன் இது வரும்.

அதாவது ஒளி ஒலி ஈர்ப்புத் தன்மையில்… அச்ச உணர்வுடன் உடலை விட்டுச் சென்ற ஆவி உலக உயிரின் தொடர்பில்… சில கோவில் விழாக்களில் எழுப்பப்படும் சில மண ஒலி ஈர்ப்புத் தன்மையில் அதே உணர்வு கொண்ட அலை உணர்வு மோதல் எற்பட்டவுடன்… என்ன நடக்கின்றது…?

உடல் இல்லாத ஆத்மாவின் மோதலும் உடலுடன் உள்ள ஜீவ பிம்ப ஆத்மாவின் மோதலும் ஒன்றுபட்டவுடன் அதன் தன்மையில்
1.அது சேமித்து வாழ்ந்த நிலைக்குகந்த தன்மை உணர்வு செயல் எல்லாவற்றையும் இங்கே இயக்கப்பட்டு
2.உடலுடன் உள்ளவர் தன்னையறியாமல் ஆடி அதன் நிலை எல்லாம் பேசத் தொடங்கும்.
3.பல மொழிகளிலும் பேசும்
4.அதன் சுவைக்குகந்த உணவை எல்லாம் கேட்டு அதை உட்கொள்ளும்
5.தெய்வமே வந்து தனக்கு உணர்த்தியதைப் போல் பேசும்.
6.(சாமியாடி அருளாடி மருளாடி வாக்கு சொல்வது எல்லாம் இது தான்)

கடைசியில் இவ் ஈர்ப்பலையின் நிலைக்கொப்ப ஆத்ம எண்ணம் சென்று விட்டால் “தன் நிலை மறந்து/…” எவ்வலைத் தொடர் ஆத்மாக்களின் எண்ணத்தையெல்லாம் எடுத்ததோ அவ்வாத்மாவின் நிலைப்படி தான் இந்த ஜீவ ஆத்மா (உடலுடன் உள்ளவர்) வாழ முடியும்.

ஆகவே இந்நாதத்தால் எடுக்கப்படும் உருவங்கள் தான் அனைத்துமே…!

 இந்நாதச் சேர்க்கை எண்ணத்தை உணர்ந்து மெய் ஒலி பெற்று மெய் ஒளியாக உருவாகுங்கள்.

ஆஸ்த்மா நோய் எப்படி வருகிறது…?

உடல் உறுப்புகள் எப்படிப் பாழாகின்றது…?

பரம்பைரை நோயை மாற்றி ஒளியான பரம்பரையாக எப்படி உருவாக்குவது…?

power of ramakrishnar

இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்படுத்திய ஆச்சரியப்படும் செயல்களை குருநாதர் காட்டினார்

இராமகிருஷ்ன பரமகம்சர் காளி கோவிலில் பூஜை செய்து வரும் வேளையில் அங்கே இரவிலே நடக்கும் சம்பவங்களை அறிய நேர்ந்த பின் தனக்குள் உண்மையையும் சத்தியத்தையும் எண்ணி ஏங்குகின்றார்.

ஏற்கனவே இந்த உண்மைகளை எல்லாம் உணர வேண்டும் என்று நல்லதுக்காக ஏக்கம் கொண்டு மடிந்தவனின் ஆன்மா அதே ஏக்கம் கொண்ட இவரின் உடலில் புகுகின்றது. அதன் பின் அவரை அறியாமலே சில செயல்களைச் செய்கின்றார்.

இராமாயணத்தைக் எடுத்துக் கொண்டால் குரங்கு எப்படித் தாவுகின்றதோ இதைப் போல் தன் எண்ணத்தின் தன்மை கொண்டு எப்படி இயக்குகிறது என்ற நிலைகளை உணர்த்திக் காட்டுவார்.

அதாவது குரங்கின் ரூபம் இட்டு
1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு எக்குணத்தைக் கொள்கின்றோமோ
2.அதன் வழி தான் அது நமக்குள் இயக்குகிறது என்பதைக் குரங்கைப் போன்று ஆட்டிக் காட்டுவார்.

மரத்தில் ஏற்றிப் பார்ப்பார்… ஆக…
1.நம் உணர்வின் தன்மை எதைப் பறிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
2.அதன் உணர்வின் தன் எண்ணத்தால் வரும் போது அதை அவ்வாறு ஏற்றிக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

இதைப் போல் இறந்த சரீரங்களைப் புதைத்திருந்தால் அங்கே அமர்வார். அதனின் எண்ணங்கள் எவ்வாறு…? என்ற நிலையை உணர்வார்.

இப்படித் தன்னை அறியாமலேயே தனக்குள் இயக்கும் இன்னொரு ஆன்மாவின் தன்மை கொண்டு… அங்கே… ஏங்கி எடுக்கும் பொழுது… தான் கண்ட உண்மை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.

அவரை அறியாமலே “பல ஆச்சரியப்படும் செயல்களை…” இயக்கிக் காட்டினார்.

அதைக் கேள்விப்பட்ட பெரும் பெரும் மந்திரவாதிகளும் பிறரைக் கைவல்யப்படுத்தக்கூடிய சாமர்த்தியசாலிகளும் இங்கே தேடி வருகின்றனர்.
1.ஒரு பித்தன் போல் இருக்கின்றான்… இவனுக்கு எப்படி இந்தச் சக்திகள் வந்தது…?
2.உண்மைகளை உரைக்கின்றான்…. அவை அனைத்தும் நடக்கின்றது.
3.இவன் செயலாக்கங்கள் எல்லாம் தெளிவாகின்றது என்ற நிலைகளில் அவரை நாடி வருகின்றார்கள்.

இமய மலைச்சாரலில் ஒரு பெண்… அது மகா மந்திர சக்திவாய்ந்தது. மனிதனையே தன் மந்திர சக்தியால் மாய்க்க வல்லமை பெற்றது. மனிதனுக்குள் தன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அவன் உடலில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தச் செய்து அதை அறியக்கூடிய வல்லமை பெற்றது.

அந்தத் தாயும் ராமகிருஷ்ண பரமகம்சரை அணுகி அவரின் உண்மையை உணர்வதற்காக வருகின்றது. ஆனால் அவரால் இவரின் உண்மைகளை அறிய முடியவில்லை.

1.அவரின் அறியும் சக்தியை இவருக்குள் (ராமகிருஷ்ணர்) பெற்ற சக்தி அதைத் தடுக்கும் சக்தியாக வரப்படும் பொழுது
2.அறியும் வன்மை கொண்டு அந்தத் தாயிடம் மாறுகின்றது.
3.பின்.. “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்றும்
4.உண்மையின் நிலைகள் கொண்டு “இப்படித்தான் வாழ வேண்டும்…” என்றும் புத்தி கூறுவது போல உணர்வுகள் வந்த பின்
5.எந்த மந்திரத்தால் அறிய வேண்டும் என்று வந்த அந்த மந்திர சக்தி கொண்ட தாயும் மனம் மாறுகின்றார்.

இப்படி பல தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகள் கொண்டவர்களும்… அன்று இராமகிருஷ்ண பரமகம்சரைச் சந்தித்த பின்
1.அவரின் செயலைப் பார்க்கும் பொழுது… அவருக்குள் விளைந்த உணர்வை நுகர்ந்த பின்
2.மாற்றம் அடைந்தே அவர்கள் சென்றார்கள்.

இது எல்லாம் ஈஸ்வரபட்டர் எம்மைக் (ஞானகுரு) கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று நேரடியாக காட்டிய நிலைகள்.

நாம் கோப குணத்தை அதிகமாக எண்ணினால்… அதையே அடிக்கடி பட்டால்.. அதுவே குரு வழியில் கணங்களுக்கு அதிபதியாகி நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கி ஆட்சி புரியத் தொடங்கிவிடும். ஒவ்வொரு குணங்களும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது…!

Rishi-Panchami

இன்று யாகம் நடத்துவதற்கும் அன்று யாகம் நடத்தியதற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள யாக பூஜை முறை மேற்கொண்டார்கள்.

இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாக குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.

1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.

வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.

1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மையைகளை அறிய முடியாத விகிதத்தில் தான் இன்று நாம் உள்ளோம்.

இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.

நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும் சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள் என்றும் அறிந்திருப்பீர்கள்.

1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
2.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.

இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும் இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.

அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.

இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்து
3.இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது.
4.அப்பொழுத் பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.

ஏனென்றால் பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.

இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.

இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.

 

1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் வித்தியாசம் – இளம் நீல நிறத் துருவ நட்சத்திரம் 

கணவன் மனைவி சேர்ந்து மின்னலை நுகரலாம், துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் சப்தரிஷி மண்டலம் 

வேதனையை ஒடுக்கச் செய்யும் துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக்கற்றைகள் 

Earth sound OM

“ஓ…ம்…” என்ற நாதத்தின் சூட்சம சக்தியின் ரகசியத்தை உணர்ந்த அன்றைய ஞானிகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!

பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு… இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத் தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.

அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத் தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு தானப்பா…
3.இப்புவி நாத வளர்ப்பு யாவையுமே…!

விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச் செல்கிறது.

அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச் செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி வளர்கின்றது.

புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா இவ்வளர் நிலை யாவையும்..?

இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத் தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.

இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித் தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த நிலையில் வளர்கின்றது.

மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை என்ற செயலற்ற நிலையில் உள்ள இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.

காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?

இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர்நிலைக்குகந்த மிகக் குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித் தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச் சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத் தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.

1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.

சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லாநிலை என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும் “இந்நாத விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”

வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல் தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!

1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை
3.வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்.

எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான் இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்ம சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.

இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.
3.இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!

அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.

அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக ஒளிர்ந்தனரப்பா…!

விண் செல்லச் செய்யும் ஈஸ்வரபட்டரின் அருள் சக்தி

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வை நமக்குள் குருவாக ஏற்றுக் கொண்டால் அதுவே நம்மை விண்ணுக்கு அழைத்துச் செல்லச் செய்யும் அரும் பெரும் சக்தியாக உருவாகும்.

GURU'S Route to sapdharihi mandalam

நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும் சக்தி எது…?

 

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்றால் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் நுகரும் அனைத்தையும் ஓ… என்று ஜீவ அணுவாக இயக்கி ம்… என்று தன் உடலாக இணைத்து விடுகின்றது.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உணர்வின் அணுக்களுக்கும் நம் உயிரே குருவாக இயக்குகின்றது.

அதே சமயம் நம் குரு… “ஈஸ்வரபட்டர்…”
1.வானுலக ஆற்றலையும்
2.நம் பூமியின் ஆற்றலையும்
3.மனித உடலில் உயிரியல் ஆற்றலையும்
4.மனிதனாக உருப்பெற்ற பின் மனிதன் செய்ய வேண்டிய கடமைகளையும்
5.மனிதனான பின் இனி பிறப்பே இல்லாது “இந்த உடலே ஒளியாகும் முறையை..” அவர் கண்டுணர்ந்தார்.

அந்த உணர்வின் வழிப்படி அவர் கூறும் உணர்வினை நாம் நுகர்ந்தறிந்தோம் என்றால் அதன் வழிக் கொண்டு நாமும் அருள் வழி கொண்ட பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

அதை அடையச் செய்யும் அந்த ஆற்றல் வழிக்கு நமது உயிர் குருவாக இருப்பினும் நம் குருநாதர் ஈஸ்வரா (ஈஸ்வரபட்டர்) என்று அவர் இத்தகைய சக்தியை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய அந்த அருள் ஞான வித்தை நமக்குள் அதைப் பதித்து அதன் உணர்வை நாம் நுகர்ந்து செயல்படுவோம் என்றால் அதன் வழி
1.அதுவே நமக்குள் குருவாக இருந்து
2.இந்த மனித வாழ்க்கையில் இருளை அகற்றி
3.மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகள் நமக்குள் குரு வழியாக இந்த வாழ்க்கையில் நமக்குள் உருவாக்கி
4.அடுத்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யும் அதன் குருவே நமது குரு..!

நம் உயிர் குருவானாலும் இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றி அருள் ஒளி பெறச் செய்யும் அவர் (ஈஸ்வரபட்டர்) அருள் வழியில் நாம் எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால் அதுவே நமக்குள் குருவாக இருந்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்கிறது.

மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

வேகா நிலை – உயிரில் நஞ்சு அணுகாமல் காத்தவர்கள் மகரிஷிகள் 

நண்பர் மேல் பதிவாகும் நல்ல உணர்வும் குறை உணர்வும் குற்ற உணர்வும் மும்முனையாக இயங்கும் நிலை 

நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு திரைகளைக் கிழித்தெறிய வேண்டும் 

https://youtu.be/PD-UebsI-Xc

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்…?

 

மாரியம்மன் கோவிலில் அக்னி குணடம் இறங்குவது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்திவிட்டால் அந்தத் தீமை என்ற நிலை வராது கருக்கி விடும்… அதன் வலுவை இழக்கச் செய்யும்…! தீமை செய்யும் சக்திகள் நமக்குள் ஜீவன் பெறாது தடுக்கப்படுகின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கும்.

 

divine music breathing

தெய்வீக இசையின் மூலம் நாம் பெறக்கூடிய ஆத்ம சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எங்குமே… எதிலுமே… “எல்லாமே” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் நற்சக்தியும் தீய சக்தியும் எதுவாக இருந்தாலும்.. இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.

இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.

நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.

ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!

அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.

இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!

இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”

1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”

இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.

இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ…ம் என்ற நாதத்தை உள் நாதமான ஓமுக்குள்.. ஓமாக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.

ஓமுக்குள் ஓமாக இருந்து அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால் எச்சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.

எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.

அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.

தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.

“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும் – “இவ்வெண்ண நாதத்தால்…!”

ரிஷிகளின் சக்தியைப் பெறக்கூடிய ஆரம்பப் படியே தெய்வீக இசைகள் மூலம் நாம் சுவாசிக்கும் உயர் ஞான நாதத்தின் சுவாசங்களாகும்.

 

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்…?

 

மாரியம்மன் கோவிலில் அக்னி குணடம் இறங்குவது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்திவிட்டால் அந்தத் தீமை என்ற நிலை வராது கருக்கி விடும்… அதன் வலுவை இழக்கச் செய்யும்…! தீமை செய்யும்.

cheating character

தள்ளுபடி (OFFER – DISCOUNT) என்ற பெயரில் எதிலே ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்…! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

 

1.உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்றும்
2.தெய்வீகப் பண்பையும் கடவுளை அடைய வேண்டும் என்றும்
3.அவனிடமே இணைந்து வாழ வேண்டும் என்று தான்
4.எல்லா மதங்களும் சட்டங்களை இயற்றிச் செயல்படுகின்றது.

அதன் வழி கடைப்பிடித்துக் கொண்டு வந்தாலும் “கடவுள்…” எங்கே… எப்படி இருக்கின்றான்…? என்று யாருக்கும் தெரியாது.

மதங்கள் காட்டிய உணர்வை வளர்க்கப்படும் பொழுது அதே போல் அந்த மதத்தின் சார்புடையவர்களாகப்படும் பொழுது மற்ற மதத்தினைக் கொன்று குவிக்கும் நிலைதான் இன்று வருகின்றது.

ஒரு மதத்தின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அதை வழி நடத்திச் செல்வோர் நிலைகளில் மக்கள் இருவரோ நான்கோ ஆகி விட்டால் அதைப் பங்கிடப்படும் பொழுது அதற்குள் “தன் இனம்…” என்ற நிலைகள் இனப் போர்களே துவங்குகிறது.

அந்த அரச சாம்ராஜ்யம் அழிந்த பின் அடுத்து அது ஒரு இனமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டுத் தனது சாம்ராஜ்யத்தைத் தொடர்கின்றது.

மற்றவர்களைக் கொன்று குவித்துத் தனக்குக் கீழ் கொண்டு வந்து
1.“தான் ஆட்சி புரியும்…!” அந்த ஆசையின் தொடர் கொண்டே செயல்படுகின்றனர்.
2.ஞானிகள் கொடுத்த உணர்வுகளை எல்லாம் மறையச் செய்துவிட்டனர்.

இராமாயணம் மகாபாரதத்தைப் போன்ற காவியங்களில் ஞானிகளால் காட்டப்பட்ட உணர்வுகள்
1.ஒன்று ஒன்றுடன் இணைத்தால் ஒன்றின் செயலாக்கங்கள் எப்படி உருவாகின்றது…?
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே எப்படிக் கலக்கின்றது…. உடலில் அணுவாக எப்படி மாறுகின்றது…?
3.தாவர இனங்களின் வித்துக்களில் மற்ற வித்துக்களின் உணர்வைக் கலக்கப்படும் பொழுது தாவரங்கள் எப்படி உருமாறுகின்றது…?
4.அதிலே சுவைகளை மாற்றுகின்றது…? வித்துக்களை எப்படி மாற்றுகின்றது என்று உணர்த்தியுள்ளார்கள்.

அதை எல்லாம் அரசக் காலங்களில் மனித உடலில் உருவாக்கிய இந்த மந்திர ஒலி கொண்டு தான் அறிந்து இந்த உணர்வின் தன்மை கொண்டு மாற்றியமைக்கும் தன்மையாக வந்து விட்டது.

இப்படி வளர்ச்சி அடைந்து வந்த இந்த உலகம் தான் ஆசையின் உணர்வாக வளர்த்த உணர்வுகள் இங்கே அதிகமாக வளர்ந்து அரசனுக்குக் கீழ் வந்த மக்களும்… “தானும் வளர வேண்டும்…” என்ற ஏக்கம் கொண்டு வந்து விட்டனர்.

1.தான் வாழ தன் அருகிலே உள்ளவர்களை வீழ்த்தினால் தான் சரிப்படும் என்றும்
2.ஒருவர் வியாபாரம் செய்தால் ஆரம்பித்தால் அந்த வியாபாரத்தைக் கெடுத்துவிட வேண்டும் என்றும்
3.அவனை வீழ்த்தினால் தான் என் வியாபாரம் பெருகும் என்றும்
4.வியாபார முறையிலே போர் முறை வந்தது.

அதிலே நெருக்கடி வளர வளர இன்று எடுத்துக் கொண்டால் தள்ளுபடி (DISCOUNT) என்ற பெயரில் கணக்கு வழக்கு இல்லாமல் கொடுத்து மக்களை ஏமாற்றிடும் நிலை வந்து விட்டது.

தள்ளுபடி என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து தன் வியாபாரத்தைப் பெருக்குவதும் மற்ற வியாபாரத்தை வீழ்த்துவதும் உண்மைகளை உணரவிடாதபடி “வியாபாரமே இன்று தலைகீழாக மாறிவிட்டது…!”

ஆசையின் உணர்வின் தன்மை வளர்ந்து கொண்ட பின் அந்த ஆசைகளாலேயே தான் நாம் இன்று வாழ்கின்றோம்.. வளர்கின்றோம்.
1.அங்கே போனோம்.. போனதற்கு 50% தள்ளுபடி கிடைத்தது
2.தள்ளுபடியில் வாங்கிய சேலை கிழிந்தால் பரவாயில்லை… போனால் போகிறது போ..
3.அதற்கு இனாமாக இன்னொரு சேலை கொடுத்தார்கள் அல்லவா..! என்று
4.இப்படித்தான் பெண்கள் அங்கே மடிகின்றார்கள்.

ஆக மொத்தம் நாம் ஏமாற்றப்பட்டோம் ஏமாற்றப்படுகின்றோம் என்ற நிலை வருவதே இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் பொழுது உண்மையின் நிலைகள் அந்தச் சரக்கின் தன்மையும் தெரிகின்றது.
1.சரக்கின் தன்மையைத் தெரிந்தே… அவன் குறைவாகக் கொடுக்கின்றான்…! என்றால்
2.எதன் அடிப்படையில் அப்படி நல்ல சரக்கைக் கொடுக்க முடியும்..! என்று இல்லாதபடி
3.நாம் ஏமாற்றமே அடைகின்றோம்…! இன்றைய மனிதனின் வாழ்க்கையில்..!

 

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்…!

பலவிதமான நோய்களைப் போக்கும் நொச்சி இலையின் குணங்கள்

டி.பி. கேன்சர் நோயை நீக்கும் வழி

செவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து உடல் நோய்களைப் போக்கும் வழி

flourescent body

பழையன கழிதலும்… “புதியன வளர்தலும்…!” என்ற இயற்கையின் நியதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அணு தோன்றி எத்தகைய வித்தான உயிரின் தாவரமாக வளர்ந்தாலும் அந்த வித்து துளிர் கொண்ட இலை விட்டு அதன் மூலம் ஈர்த்து வளரும் தன்மைக்கு வருகின்றது.

1.அந்த இலை பசுமையாக இருக்கும் அதன் காலத்திற்கு உகந்த அமிலச் சேர்க்கையின் வளர்ப்பு
2.அவ்விலை ஈரப்பசை கொண்ட வளர்ப்பின் முற்றிய நிலையில் தன் சக்தியை
3.தண்டுப் பாகத்தில் வளர்ப்பு வலு எடுத்த பிறகு
4.அந்த முற்றிய இலை உதிர்ந்து விடுகிறது “சருகாக…!”

வித்திட்ட அந்த விதையின் வளர்ப்பு தன் வளர்ச்சியிலே விழுதுகளாகி
1.அவ்விழுதின் வலுவைத் தன் வளர்ப்பின் வலுவாக்கி
2.வித்தின் வளர்ப்பின் வளர்ப்புகளை வளர்க்கின்றது.

ஆக சிறு வித்து பல வித்தாக வளர்ப்பெடுத்து மாறு கொண்ட வளர்ப்பை உருவாக்குகிறது.

இப்படி ஒவ்வொரு அணு வளர்ச்சியின் வளர்ப்பிலும் தொடர் வளர்ச்சி வளர்வதைப் போல் இந்தப் புவி மட்டுமல்லாது… ஒவ்வொரு மண்டலமுமே… தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே உள்ளது…!

சூரியக் குடும்பத்தின் வளர்ப்பைப் போன்றே ஒவ்வொரு மண்டல வளர்ப்பின் வளர்ப்பு வளர்ந்து கொண்டே தான் உள்ளது. அதாவது
1.மனித இனப் பெருக்க சுழற்சியைப் போன்றே
2.ஒவ்வொரு செயலும் தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே தான் உள்ளது.

சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பின் நிலைக்கொப்பச் சுழலவிடும் வளர்ப்பிலேயே
1.வளரும் தன்மை ஒன்றொன்றின் தொடர்ச்சி கூடக் கூட
2.வளர்ச்சியின் தன்மை வலு அதிகமாகின்றது.

தங்கத்தின் வளர்ப்பானது அவை வளரும் இடங்களில் ஆரம்ப இடத்தைக் காட்டிலும் அடுக்கடுக்காக அந்தத் தங்க வளர்ப்பு மண்ணானது சிறிது சிறிதாக வலுப் பெற்று அதன் தொடர்ச்சியில் கிடைக்கப்பெறும் இந்த உலோகச் சேர்க்கை வடிவமைப்பு மிகவும் உயர்ந்ததாகக் கிடைக்கின்றது.

அதைப் போன்றே இந்த உயிராத்மாவிற்கு சேமிக்கப்படும் சேர்க்கையின் தன்மை…
1.இந்த உடல் பிம்ப ஜீவனுக்கு அளிக்கப்படும் உணவிலிருந்தும்
2.சுவாசத்தால் எடுக்கும் எண்ணத்திலிருந்தும்… உணர்வின் தன்மை கொண்டும்
3.வளர்ச்சி பெறும் அணுக்களின் காந்த ஈர்ப்பு நிலைக்கொப்ப இந்த ஆத்மா அது வளர்கின்றது.

எண்ணத்தால் எடுக்கும் ஞான வளர்ச்சியின் வாழ்க்கை நெறி முறைச் செயல் உணர்வுகளில்… “எண்ண ஈர்ப்பை” நாம் செலுத்தும் உணர்வின் வலு அணுக்களைத்தான் இந்தப் பிம்பக் கூடு வளர்த்து “அந்த வளர்ப்பின் வலுவைத்தான்…” இந்த ஆத்மா பெறுகின்றது.

1.செடியின் ஆரம்ப வித்துத் தன்மை வளர வளர அதனின் பலன் பலவாக முற்றித் தருவதைப் போல
2.எண்ண ஈர்ப்பால் நாம் எடுக்கும் வலுத் தன்மையை இந்த ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.

இந்த ஆத்ம உயிரின் வலுத் தன்மையானது உணர்வின் ஈர்ப்புச் செயல் நிலைக்கொப்ப எல்லாம் வலு ஏறுகின்றது. நாம் சொல்லக்கூடிய ஜெப முறையாலும் தியான முறையாலும் மட்டும் வலு ஏறுவது என்பதல்ல.

இவ்வாத்ம உயிரின் வலு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பின் செயல் வலுவை எதன் வழியில் செலுத்தி வீரிய குணம் பெற்றிருந்தாலும் அதன் குண நிலைக்கொப்பவே வளரும்.

ஆக… தீய வழிகளில் செல்லும் ஆவேச அலை ஈர்ப்பில் உள்ளவர்களின் உயிராத்மாவின் வலுத் தன்மையும்… இதன் ஈர்ப்புப் பிடியில் வலுவாகிச் செயல் கொள்கின்றது.

அதே போல இந்த உணர்வின் ஈர்ப்பு வீரத்தின் செயலைச் சாந்த குண ஞான வழிக்குச் செலுத்தினாலும்… அசுர குண வஞ்சனையில் இவ்வீரத்தைச் செலுத்தினாலும்… இவ்வலை ஈர்ப்பு காந்த சக்தியின் வலுத் தன்மையை இவ்வுயிராத்மா எப்படி வலுவாக்கிக் கொள்கின்றதோ அதைப் போன்ற அசுர குண ஈர்ப்பு நிலைக்கும் வலு கூடுகின்றது.

இதை உணர்ந்து..
1.இந்த மனித உடலில் நாம் வாழும் காலத்தில்
2.நம் ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து விளையச் செய்து
3.அந்த முற்றலாக நாம் ஒளி சரீரத்தைப் பலனாக எடுக்க வேண்டும்.

ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து நம் உடலிலே அதை விளையச் செய்து இந்த மனித உடலைக் கழித்து “ஒளி உடலைப் பலனாக்க வேண்டும்…!”

படிப்படியாக நமக்குள் சக்தியைக் கூட்டும் முக்கியமான பயிற்சி

 

துருவ மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது ஒரு வெல்டிங்கைத் தட்டினால் எப்படி அந்தப் பளீர்…ர்ர் பளீர்…ர்ர்…! என்று அந்த ஒளிக் கற்றைகள் வருமோ அதாவது மின்னலைப் போன்று ஒளி தெரிவதைப் போன்று உங்கள் புருவ மத்தியில் இளம் நீலமாக நீலக் கலரில் அந்த ஒளிகள் உங்களுக்குள் கிளம்பியிருக்கும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து எண்ணும் பொழுது உங்கள் புருவ மத்தியில் குறு குறு என்று உணர்ச்சிகளை ஊட்டி இளம் நீலமாகத் தெரிந்திருக்கும்.

veera murasu vivekanadar

கடவுளை அறிய வேண்டும் என்ற வீரிய எண்ணம் விவேகானந்தருக்கு எப்படி வந்தது..?

 

விவேகானந்தரின் தாய் கருவிலே அவர் சிசுவாக வளரப்படும் காலத்தில் உலகம் முழுமைக்குமே அரசர்களால் அன்று அராஜகங்கள் ஏற்படும் நிலை இருந்து வந்தது.

அதை எல்லாம் கண்ணுற்றுப் பார்க்கும் விவேகானந்தரின் தாய்
1.கடவுள் இருக்கின்றானா.. இல்லையா..? என்றும்
2.அமைதி கொண்டு வாழ்வோரையும் இரக்கமற்றுக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில்
3.கடவுள் என்று கூறும் அப்படி வணங்கும் “அந்தக் கடவுள்” எங்கே இருக்கின்றான்…?
4.அந்தத் தெய்வ சக்திகள் எல்லாம் எங்கே போய்விட்டது..? என்ற வினாக்களை எழுப்பி
5.உண்மையின் நிலைகள் கொண்டு அங்கே பரிதவிக்கும் உணர்வுகளிலிருந்து
6.”மக்கள் எல்லாம் மீள வேண்டும்…!” என்று அந்தத் தாய் எண்ணுகின்றது.

பல காவியப் படைப்புகளையும் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அன்று விவேகானந்தருடைய தாய் அதை எல்லாம் உற்றுப் படிக்கின்றது.

அன்று அரசர்களால் நாட்டிலே பேரழிவு வரும் பொழுது.. பல மத இனங்கள் போர் செய்யும் நிலையில் இரக்கமற்றுக் கொன்று போர் செய்து கொண்டிருக்கும் பொழுது.. நாம் வணங்கும் தெய்வங்கள் எங்கே போய்விட்டது…? என்ற உணர்வின் ஒலியைக் கூட்டி “அதன் உண்மையின் உணர்வுகலைப் பெறவேண்டும்…” என்று ஏங்கிக் கொண்டிருந்தது அந்தத் தாய்.

தாய் இவ்வாறு எண்ணிய உணர்வுகள் எல்லாம் கருவிலே இருக்கக்கூடிய அன்று வளர்ந்த விவேகானந்தருக்குப் பாய்கின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனுக்கு எப்படிப் பல விஷத் தன்மைகளை வென்றிடும் உணர்வுகள் தாய் கருவிலே கிடைத்ததோ… அதை வைத்து அண்டத்தையும் அளந்தறியும் உணர்வின் தன்மையை அகஸ்தியன் பெற்றானோ…! இதைப் போல தாய் கருவிலே ஒரு சந்தர்ப்பம் விவேகானந்தருக்குக் கிடைக்கின்றது.

அரசர்களால் ஏற்படும் அராஜகங்களும் மக்கள் ஒவ்வொருக்குள்ளும் மொழி பேதம் இன பேதம் மத பேதங்கள் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொன்று கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அதிலிருந்து கடவுள் எப்படி இயங்குகின்றார்..?
2.அனைவரும் கடவுளைத்தான் நேசிக்கின்றார்கள்… கடவுளை நேசிக்கும் பொழுது இந்தத் தவறுகள் ஏன் ஏற்படுகின்றது..?
3.ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் நிலைகள் அவர்கள் வணங்கும் கடவுள் ஏன் இதை அனுமதிக்கின்றான்…?
4.ஒருவனைக் கொல்ல அவன் வணங்கும் அந்தக் கடவுள் அனுமதிக்கின்றானா..? என்று
5.இந்த வினாக்களை எல்லாம் (விவேகானந்தர்) கருவிலே வளரப்படும் பொழுது அந்தத் தாய் எண்ணி ஏங்குகிறது.

அது எங்கிய உணர்வுகள் தாய் கருவிலிருக்கும் சிசுவான விவேகானந்தருக்கும் அது படுகின்றது. இவ்வாறு கருவிலே பெற்ற வீரிய உணர்வுகள் கொண்டு அவர் பிறந்த பின் “தாய் எண்ணிய அதே உணர்வைப் பெற்று…” கடவுளின் தன்மையை அவர் அறிய விரும்புகின்றார்.

கல்வியில் இந்த அறிவின் தன்மை கொண்டு வாதிக்கும் வக்கீலாக அவர் தேர்வு பெறுகின்றார். கல்வியில் தேர்வு பெற்றாலும் கடவுள் என்ற நிலைகள் தேர்ந்தெடுக்கக் கடவுளை அறியத் தன் ஞானத்தைச் செலுத்துகின்றார்.

1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.அவன் எங்கே இருக்கின்றான்..?
3.எவ்வாறு இயக்குகின்றான்…? என்ற நிலையை வினாக்கள் போட்டு
4.அதற்கு விடைகள் கிடைக்காத் தவித்துக் கொண்டிருந்தார்.

இராமகிருஷ்ணரைச் சந்தித்த பின் தான் அவருக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது.

கடவுளைக் காண முடியாது… கடவுளை உணரத் தான் முடியும்..! என்ற உண்மைகளை அங்கே உணர்கின்றார். எல்லா உயிரையும் கடவுளாக மதிக்கும் பண்புகளும் அவருக்குள் வளரத் தொடங்கியது.

 

அனைவரும் கடவுளைத்தான் நேசிக்கின்றார்கள்… கடவுளை நேசிக்கும் பொழுது தவறுகள் ஏன் ஏற்படுகின்றது..? ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் நிலைகள் அவர்கள் வணங்கும் கடவுள் ஏன் இதை அனுமதிக்கின்றான்…? ஒருவனைக் கொல்ல அவன் வணங்கும் அந்தக் கடவுள் அனுமதிக்கின்றானா..? என்று இந்த வினாக்களை எல்லாம் (விவேகானந்தர்) கருவிலே வளரப்படும் பொழுது அந்தத் தாய் எண்ணி ஏங்குகிறது.

 

நம் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” என்ன செய்ய வேண்டும்…?

மழை பெய்யச் செய்யும் ஆற்றல்கள் 

சப்தரிஷி மண்டலத்தில் இருக்கும் ஒளியான உயிராத்மாக்கள் 

spiritual guru intelligence

சிறு வயதிலிருந்தே பின் தொடர்ந்து என்னைக் காத்துக் கொண்டே வந்தார் “ஈஸ்வரபட்டர்”

 

என்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு சமயம் நான் (ஞானகுரு) குளத்தில் நீச்சலடிக்கும் பொழுது திடீரென்று புரையோடி விட்டது.

புரையோடிய பின் தண்ணீர் உள்ளுக்குள் போனவுடனே என்னால் சுவாசிக்க முடியாத நிலை ஆனது. எனக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும் தண்ணீரைக் குடித்த பின் நீரிலே மூழ்கும் தன்மையே அப்பொழுது வருகின்றது.

என்னுடைய கை கால்களை அசைக்க முடியவில்லை. புரையேறிய பின் அந்த உணர்வே இயக்குகிறது… கை கால்களை இயக்க முடியவில்லை.

இந்தச் சம்பவத்தைக் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) பின்னாடி நான் அவருடன் பழகும் பொழுது எனக்கு உணர்த்துகின்றார்.
1.உன்னை இளமையிலிருந்தே நான் பின் தொடர்ந்து வந்தேன்.
2.உனக்குப் புரையோடும் பொழுது உன்னைக் காத்தேன்…! என்று சொல்கிறார்.

என்னுடைய இளமைப் பருவத்தில் குரு என்னைக் காத்தார் என்று சொல்கிறார். ஆனால் ஈஸ்வரபட்டர் யார்..? என்றே எனக்கு அப்பொழுது தெரியாது. எப்பொழுது… எப்படிக் காத்தார்…? என்று எனக்குத் தெரியாது.

ஆனால் உன்னை நான் தான் காத்தேன்…! என்று அவர் சொல்கிறார். ஏனென்றால் எப்பொழுதோ நடந்த அந்த நிகழ்ச்சியைச் சொல்கிறார் குரு.

சிறு வயதில் குளத்திற்குச் சென்றால் கொஞ்ச தூரம் நீச்சலடித்துப் போவது தான் எனக்கு வழக்கம். ஆனால் உள்ளே சென்ற பின் திடீரென்று புரை ஆகி ஹ்ஹா…! என்று சுவாசிக்கப்படும் பொழுது கை கால்களை அசைக்க முடியவில்லை.

எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் புரையோடி விட்டால் தண்ணீருக்குள் மூழ்க நேரும். இதைக் குருநாதர் உணர்த்துகின்றார்.

உனக்குப் புரையோடும் பொழுது உன்னுடைய நினைவுகள் எங்கெங்கெல்லாம் சென்றது…?
1.உன் தாயை எண்ணினாய்.. மூழ்கப் போகின்றேன்… என்று உணர்ந்தாய்..
2.ஆனால் உன் தாய் உன்னைக் காக்கப்பட வேண்டும் என்று உன்னிடம் பதிவு செய்த உணர்வுகள்…
3.“அம்ம்மா…!” என்று உன்னால் கத்த முடியவில்லை. வாயைத் திறந்தால் நீர் உள்ளே சென்றுவிடும்.
4.ஆனால் நீ எண்ணிய அம்மா…! என்ற நினைவலைகள் அங்கே செல்லப்படும் பொழுது
5.தாயின் உணர்வுகள் அந்தச் சந்தர்ப்பத்தில் உன்னைத் தொடர்ந்து வந்த உணர்வுகள்
6.நான் உன்னை எப்படியும் கைவல்யப்படுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்த நிலைகள் கொண்டு உன்னை இது வரையிலும் காத்தேன்…!
7.சரியான பருவம் வரும் பொழுது உன்னைக் கைவல்யபடுத்தினேன்.
8.உன்னை என் வசம் இழுத்துக் கொண்டேன்
9.அதன் உணர்வே உனக்குள் ஞானத்தின் சக்திகளாக விளைகின்றது…! என்று பின்னாடி என்னிடம் குருநாதர் கூறுகின்றார்.

இப்படி என் (ஞானகுரு) வாழ்க்கையில் ஈஸ்வரபட்டர் பின் தொடர்ந்தே வந்தார் என்ற நிலையைத் தெளிவாகச் சொல்கின்றார். இது என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி.

அகஸ்தியன் அருளைப் பெற எப்படி முயற்சிக்க வேண்டும்

 

அகஸ்தியன் வாழ்ந்த அக்காலங்களுக்கு உங்கள் நினைவைச் செலுத்தி அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்தப் பச்சிலையின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அந்தப் பச்சிலையின் மணங்கள் இப்பொழுது வரும். சிலர் கிடைக்கவில்லை என்றால் “எனக்குக் கிடைக்கவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்கள் கிடைக்கும். அதை நீங்கள் எப்படியும் பெறவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும். உங்களுடைய சொல்லும் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் நோய்கள் பறக்க வேண்டும். அருள் ஞானம் அங்கே உதயமாக வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் தீமைகள் பரவி வரும் நேரத்தில் தீமைகளை அகற்றும் சக்தியும் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியும் நீங்கள் பெறவேண்டும் என்ற நோக்குடன் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

sound and light power of sages

“நாதத்தின் முக்கியத்துவம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்புவியின் நாதம் ஓ…ம்… என்ற நாதம் அமிலமானது… சுவை கொண்டு பால்வெளி மண்டலத்தில் மிதந்துள்ள அமிலத்தின் சுவை சேர்க்கையின் கனம் கொண்டு தன் ஈர்ப்பின் சுழற்சி சக்தியிலேயே அந்தச் சுவையின் ஒளி பிறக்கின்றது.

அமிலச் சுவையின் ஒளி ஈர்ப்பாகி ஒளியாகின்றது. உயிர் அணு பிறக்க சுவையின் ஒளி கொண்ட ஒளியான அணு பிறக்கின்றது.

இந்த வழித் தொடரின் நிலைக்கொப்பச் சுவை.. குணம் வளர்ச்சியின் ஒலி கொண்டு ஒளியாகி… வழி பெறும் ஒவ்வொரு தன்மையிலுமே… இயற்கை வளர்ச்சி ஒவ்வொன்றின் ஈர்ப்பிற்கும் அந்தத் துடிப்பின் நாதம் பிறக்கின்றது.

சுவையில் எப்படி ஒன்றை ஒத்து ஒன்று இல்லையோ அதைப் போன்றே இவ்வொலியும் ஒன்றுக்கொன்று மாறிய நாதமாகத்தான் பிறக்கின்றது.

செயற்கையின் சேர்க்கைப் பொருள் கொண்டு வாகனங்களில் அதனதன் உலோகச் சேர்க்கையின் நிலைக்கொப்ப மாட்டு வண்டிக்கும் புகை வண்டிக்கும் மிதி வண்டிக்கும் விமானத்திற்கும் நாத ஒலி மாறுபடுகின்றது.
இது ஒவ்வொன்றையும் பிரித்துக் காட்டுவதன் பொருள்…
1.செயற்கைச் சேர்க்கைப் பொருளைப் போன்றே
2.இயற்கைச் சேர்க்கையின் ஒலி நாதமும் மாறுபடுகின்றது.

ஞான வளர்ச்சிக்கு ஆத்ம ஜெபத்தால் உயர் ஞான தியானமாக ஒவ்வொரு சக்தி அலையின் ஒலி அலையையும் இந்த ஆத்ம உயிருக்கு எடுக்க வேண்டியுள்ளது.

அணுவுக்குள் அணுவாக பல சுவை முலாமைச் சித்தர்கள் தன் உயிராத்மாவிற்குச் சேமிக்கின்றனர் என்று ஏற்கனவே சொன்னேன்.

அதே போல் எண்ணத்தால் எடுக்கும் ஒலியின் நாதத்தை தியானத்தில்
1.சப்தரிஷிகளின் அவரவர்களுக்கு உகந்த சூட்டப்பட்ட நாமகரணத்தின் நாதத்தை
2.அகஸ்தியர் போகர் வியாசகர் வான்மீகி கொங்கணவர் கோலமாமகரிஷி இவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் ஜெபத்தால் அவர்களின் நாத ஒலியை நம் ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.

மேலும் நம் சூரிய குடும்ப வளர்ச்சி கொண்ட உயர் சக்திகளின் மண்டல ஈர்ப்பின் ஒலியையும் எண்ணத்தின் ஈர்ப்பு கொண்டு எடுக்கும் சுவாசத்தால் அந்தந்த மண்டலங்களின் அதற்குகந்த ஒலிகளையும் நம் ஆத்ம உயிர் சேமித்துக் கொள்கின்றது.

நாம் எடுக்கும் ஜெபத்தால் இவ்வுயிராத்மாவின் சக்தி கூடினால் தான் எந்த மண்டலத்திற்கும் செல்லலாம் என்று ஏற்கனவே சொன்னேன்.

ஆக எண்ணத்தால் எடுக்கும் ஒலி சேமிப்பின் தொடர் வளர்ச்சி விகிதத்திற்கொப்பத்தான் இந்தப் புவி ஈர்ப்பி பிடியிலிருந்து எந்த மண்டலத்திற்கும் செல்லத்தக்க சக்தி இவ்வொளி ஈர்ப்பினால் (தியானத்தில்) கிட்டுகின்றது.

மெய் ஞான ஈர்ப்பின் பக்தி பூண்ட பெரியோர்களின் ஆத்ம உயிரின் சேமித ஒளி சக்தியினால் தான் சிலரின் சொல்லாற்றல் சக்தியே… உயர்ந்த சொல்லாக வெளிப்பட்டு அந்தச் சொல்லின் செயல் நடப்பது பலிதம் கொள்வது எல்லாமே…!

சுவையின் தன்மைக்கே இவ்வொலிச் சேர்க்கை கொண்டு தான் வலுக்கூடுகின்றது.
1.எந்தெந்த எண்ணத்தில் எல்லாம் சுவாசம் எடுக்கின்றோமோ
2.அச்சுவாசத்தால் பிறக்கும் ஒலி.. ஒளியைக் கொண்டுதான்
3.இவ்வாத்ம உயிரின் நிலை உயருகின்றது.

இதன் நிலைக்கொப்பத்தான்… ஜெப முறை கொண்டு தியானத்தில் எண்ணத்தை எவ்வலை ஈர்ப்பு செயலில் செலுத்துகின்றார்களோ… அதன் ஒலி ஈர்ப்பைச் சித்து நிலை பெற்ற தன்மை கொண்டு… உடலுடன் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு மண்டலத்தின் ஒலி ஈர்ப்பையும்… தன் எண்ணத்தால் செலுத்தும் தியானத்தால்… ஆத்ம உயிரின் வளர்ச்சிக்கு ஒலி முலாமை ஏற்றார்கள் அன்றைய சித்தர்கள்.

 

இப்பொழுது உணர்த்தப்படும் முறைகள் எல்லாமே… ஒவ்வொரு மனிதனும் இந்தப் புவி வாழ்க்கைதான் வாழ்க்கை என்ற “இச்செயற்கைப் பிடியிலிருந்து மீண்டிடக் காட்டப்படும் முறைகள் ஆகும்…!”

நம்மால் நன்மை பெற்றவர்கள் நமக்கு எதிர்ப்பதமானால் என்ன செய்யவேண்டும் 

நான் ஒன்றும் உங்களை மாற்ற முடியாது – நீங்கள் தான் எடுத்து மாற்ற வேண்டும் 

தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…!” 

soul powers

நம் எண்ணத்தால் எந்த மண்டலத்திற்கும் செல்ல முடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

விக்கிரமாதித்தனின் கதையில் வரும் நிலை யாவையுமே கதையல்ல… உண்மைத் தன்மை உடையது…! விக்கிரமாதித்தன் பூஜித்த உஜ்ஜயினி காளியானவள்… பெண்ணாகப் பிறப்பெடுத்து ஞானத்தால் வளர்த்த சப்த காளியப்பா அவள்.

அவளின் வழித் தொடரைப் பிடித்தவன் தான் விக்கிரமாதித்த மகாராஜா. அக்கதையில் உள்ள யாவையுமே ஒரு சில மாறியிருந்தாலும் உண்மை நடப்புகள் தானப்பா அவை யாவுமே…!

அரசாண்டவனின் ஞானம்… சித்து நிலை பெற வழி வந்ததின் தன்மை பக்தி பூண்டு… பூஜித்துப் பூஜிப்பின் பலனால் அக்காளியின் ஞான அலைத் தொடர்பைப் பெற்று… அக்காளியின் செயலாகவே சித்து நிலை பல பெறும் தன்மைக்கே விக்கிரமாதித்தன் ஆளானான்.

காடாறு மாதம்… நாடாறு மாதம்… என்ற நிலையில் காடுகளில் வாழ்ந்த காலத் தன்மையில் தன் ஆத்ம உயிருக்கு வேண்டிய வலுத் தன்மையை… ஞானத்தின் வழியான சித்து மார்க்கம் பெறுவதற்காகவும் பல செயல்களை அறியவும் அணுவுக்குள் அணுவாக அணுவின் தன்மை முலாமை எல்லாம் தன் உயிராத்ம வலுவுக்கு ஏற்றிக் கொண்டான்.

இந்தப் பூமியின் கனி வள விகிதமானது ஏழு குணத் தன்மை கொண்டது. அதன் வளர்ச்சி கனி வளங்களின் தன்மை ஒவ்வொன்றில் பலவாக வளர்ந்துள்ளது.

வண்ணமும் ஏழு… சுவை குணங்களும் ஏழு… என்று சொல்கிறோம். இந்த ஏழின் தன்மை எதன் குண நிலை அடிப்படையில் கலவை பூண்டது…?

ஆவியாகிக் கனம் கொண்டு ஜீவனாகிச் சுழலும் இயற்கைத் தன்மையில் இவ் ஈர்ப்பின் இயற்கை நிலைச் செயலுக்கொப்ப
1.பால்வெளியின் கூட்டுக் கலவை அமிலத்தின் “குறிப்பிட்ட செயல் சேர்க்கையின் தன்மையில்”
2.சக்தி பெற்ற சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றார்கள் அல்லவா…!
3.அவர்களின் ஈர்ப்பு வளர்ப்பு நிலை தான் (படைப்பு) இந்தப் பூமியின் தன்மை குணம்.

சுவையும்… வண்ணமும்.. மணமும் ஏழாக… ஈர்ப்புக் கூட்டுக் கலவைச் சேர்க்கை ஜீவன் கொண்ட சிவ சக்தி என்ற ஆண் பெண்ணின் செயல் கொண்டு உருவானது தான் இந்தப் பூமி.

பூமியின் குணத்தைச் சிருஷ்டித்து வழி நடத்தும் ரிஷிக் குணத்தில் ஒவ்வொருவர் பெற்ற தனித் தன்மையின் சக்தியை ஒன்றாக்கி வளர்த்த தன்மை தான் இந்தப் பூமியின் தன்மை.

1.இப்படி எத்தன்மை பூண்டு இந்தப் பூமி உருவானதோ…
2.அதன் கலவைக் கூட்டில் எல்லாம் தன் ஆத்ம உயிரைச் செலுத்தி
3.தன் வலுவை இந்தப் புவி ஈர்ப்பின் வலுவிலேயே தன் வலுவைக் கூட்டி
4.எந்த வலுத் தொடர்பைத் தந்து ஏழு குணச் சேர்க்கையில் இந்தப் பூமி உருவானதோ – அந்த ஏழில் முலாம் பெற்ற சித்தன்
5.இவ்வேழுக்கு மேல் சக்தி கொண்ட வலுச் சக்தியான பிற மண்டலங்களின் சக்தியுடன்
6.எந்தச் சக்தியையும் உருவாக்க வல்ல பத்தாவது நிலையான ரிஷித் தன்மை கொள்கின்றான்.

கங்கைத் தீர்த்தம் புனிதமானது… என்றும் இதை ஒட்டிய ஒவ்வொரு தீர்த்தத்திலும் தான் குளித்தெழுந்தால் புண்ணியம் என்றும்… புண்ணியத் தீர்த்தங்களை நாடி மனிதன் சென்று அங்கே குளித்து இந்த உடல் பிம்பத்திற்குப் புனிதம் என்று நீராடி வருகின்றான். இது பக்தி மார்க்க முறை.

ஆனால் இந்த எண்ணத்தை
1.இந்தப் பூமியின் சக்தி அலையான அமிலத் தீர்த்தத்தில்
2.தன் ஆத்ம உயிரையே குளிக்கச் செய்தானப்பா அன்றைய சித்தன்.

பக்தி மார்க்கமும் ஜெப முறையும் வழி காட்டிகள் தான். வழியின் வலு அறிந்து தியானத்தால் ஞானம் பெற வேண்டும்.

ஆகவே இந்தப் புவியில் பிறந்த பல கோடி எண்ண ஆத்ம உயிர்களின் ஈர்ப்புப் பிடி அலைச் சுழற்சியில் இருந்து…
1.இந்தப் புவி ஈர்ப்பின் உணர்வில் சிக்காத வண்ணம்
2.தன் ஆத்ம உயிரின் ஈர்ப்பிற்குத் தன் உணர்வின் எண்ணமானது
3.நாம் எடுக்கும் தியானத்தால் உயர் ஞானம் கொண்டு மாமகரிஷிகளின் அலை ஈர்ப்பின் செயலாக ஒன்றிட வேண்டும்.

இந்த மனித பிம்ப ஆத்ம உயிரின் நுண்ணிய காந்த ஈர்ப்பின் அலை சக்தி வளர்ப்பினால் இந்தப் புவி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் வலுத் தொடர்பு கொண்ட பின்
1.தன் எண்ணத்தைக் கொண்டு
2.எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்.

அகஸ்தியன் நுகர்ந்த அபூர்வ மூலிகை மணங்கள்

 

அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது உங்கள் உணர்வுகளில் “பச்சிலை மணங்களும்… அபூர்வ மூலிகைகளின் வாசனைகளும் கிடைத்திருக்கும். அந்தப் பச்சிலைகளின் மணங்கள் உங்கள் உடலுக்குள் சென்ற பின் உங்கள் உடலில் ஏற்கனவே இருந்த கை கால் குடைச்சல் அல்லது மேல் வலி அசதி மனச் சோர்வு இருந்தால் அது எல்லாம் குறையும். உங்கள் உடலில் மற்ற ஏதேனும் குறையான உணர்வுகள் இருந்தால் அது இப்பொழுது குறையும். 

kali and shiva

சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?

 

மீன்களை ரசித்துச் சாப்பிடுவார்கள். சில மீன்களை வாங்கிச் சமையல் செய்யும் பொழுது பெண்கள் அதை அப்படியே உயிருடன் உராய்வார்கள்… போட்டுச் சுரண்டி அதை நரக வேதனைப்படுத்தி பின் வேக வைத்துச் சாப்பிடுவார்கள்.

1.எவ்வளவு தூரம் மீனை உராய்ந்து அதை இம்சை செய்தோமோ
2.உற்றுப் பார்த்துச் சுவாசித்ததை நம் உயிர் சும்மா விடுவதில்லை…!
3.அதன் உணர்வின் கருவாக நம் இரத்தத்தில் முட்டையாகி அது நாளடைவில் அணுவின் தன்மை அடைந்தால்
4.உராயும் பொழுது அதற்கு (மீனுக்கு) எப்படி எரிச்சலானதோ அந்த எரிச்சல் பெண்களுக்கு நிச்சயம் வரும்.

மீன் குழம்பை வைத்தவர்களுக்கு எல்லாம் பெரும்பகுதி மீனை உயிருடன் உராய்ந்திருந்தால் உடலில் எரிச்சல்… கை காலிலும் எரிச்சல் வரும்.

எம்மா… எரியுதே…எரியுதே…! என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் சென்றாலும் அதற்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்துச் சரி செய்ய முயன்றாலும் மீனை உயிருடன் போட்டுச் சுரண்டி உராய்ந்தவர்களுக்கு வரும் எரிச்சலை எந்த மருத்துவத்தாலும் நிறுத்த முடியாது.

நான் இந்த டாக்டரிடம் சென்றேன்… கேட்கவில்லை.. அடுத்த டாக்டரிடம் போனேன்…! அதுவும் கேட்கவில்லை.. என்று தான் சொல்வீர்கள்.

ஆக நம்மை அறியாமலே எரிச்சல் ஊட்டும் நிலைகள் கொண்டு நாம் ரசித்ததை இந்த உடலில் நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.

அத்தகைய உணர்வின் அணுக்கள் உடலிலே பிறந்து விட்டால் இதன் வழி உடலை விட்டு நாம் வெளியிலே சென்ற பின் அதற்குத் தகுந்த உடலைத் தேடி நம் உயிர் அழைத்துச் சென்று அதன் படியே அங்கே வளரும். அந்த உருவாகத் தான் உயிர் நம்மை உருவாக்கும்.

நாம் நினைக்கின்றோம்… கடவுள்… எங்கே இருக்கின்றான்..? நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்…? அவனுக்கு என்ன தெரியப் போகிறதா என்று…!

ஆனால் நமக்குள் இருந்து ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவதும் அதை ஆண்டு கொண்டிருப்பதும்
1.நாம் எண்ணிபடி இந்த உடலை இயக்குவதும்
2.நாம் எதை வளர்க்கின்றோமோ அதன் வழி நீ அனுபவி…! என்று தான் நம்மைச் செலுத்துவான்.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு பெற்று வளர்ந்த நாம் இதைப் போன்ற கொடிய தீமைகளை எல்லாம் அப்புறப்படுத்தி அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்ப்பித்தால் அதையும் நம் உயிரே உருவாக்குகின்றான்.

நாம் எண்ணியது எதுவோ அந்த அருள் ஒளிகளை உருவாக்கி நமக்குள் சொர்க்கலோகத்தையே அமைக்கின்றான். இந்த உடலிலேயே சொர்க்கலோகத்தை உருவாக்குகின்றான்.

இந்த உடலை உருவாக்கிய பின்…
1.பழைய உடலைப் பிளந்து விட்டு
2.என்றும் பதினாறு என்ற நிலையை ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றான்.

இதை யார் உருவாக்குவது…? நம் உயிர் தான்,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள் வரும். அது எல்லாமே நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைவதனால் வருவது தான்…!.

1.தெரிந்து செயல்படும் உணர்வுகளும் நமக்குள் அணுக்கருவாக மாறுகின்றது.
2.நம்மை அறியாமல் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததும் அணுக்கருவாக மாற்றுகின்றது நம் உடலில்.
3.இப்படி நுகர்ந்தது (சுவாசித்தது) அனைத்தையும் உருவாக்கும் திறன் பெற்றது தான் நம் உயிர்.

ஆகையினால் “விஷ்ணு…” வரம் கொடுக்கின்றான் என்று இதைக் காட்டுகின்றார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால் அணுவாகின்றது.

அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அது தன் உணவை எடுக்கின்றது. பின் தன் இனத்தைப் பெருக்குகின்றது. இது தான் “பிரம்மா…” உருவாக்குகின்றான்.

அதே சமயத்தில் உடலான “சிவன்..” அரவணைத்துக் கொள்கின்றான். உடலுக்குள் எது எல்லாம் வருகின்றதோ அந்த உணர்வுகள் அனைத்தையும் அது அரவணைத்துக் கொள்கின்றது.

1.எக்குணத்தின் செயலாக நாம் எடுத்தோமோ அந்த அணுவின் சக்தியாக நமக்குள் இயக்குகின்றது.
2.ஆகவே இந்த சக்தியின் தொடர் கொண்டு தான் சிவனின் இயக்கமே இருக்கின்றது.

உடலில் வலி ஏற்பட்டால் அம்மம்மா… அப்பப்பா..! என்று நாம் துடிக்கின்றோம் அல்லவா…! அப்பொழுது சக்தி சிவனை ஆட்டிப் படைக்கின்றது என்று சிவ நடனத்தைக் காட்டுகின்றனர்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதன் வழி உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது
1.சக்தியின் கீழ் தான் சிவன் அடிமையாகி இருக்கின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.
2.சிவனைச் சக்தி தன் திரிசூலத்தால் தாக்குகின்றாள் என்றெல்லாம் உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள்.

நாம் ஒருவரைத் தாக்கும் உணர்வு (எண்ணம்) கொண்டு நுகர்ந்தால்.. நம் உயிரின் தன்மை அதை உருவாக்கும் அந்தச் சக்தியாக உருவாகி நம் உடலான சிவமாக அது மாறியே விடும்.

 

பின் அதனின் கடுமையான வேகங்கள் கூடப்படும் பொழுது.. இந்த உடலைச் செயலற்றதாக மாற்றி… அதன் கீழ் தாக்கும்..! என்ற நிலையையும் “படமாக்கிச் சித்தரித்து…” அதன் காவியத் தொகுப்பையும் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

கேன்சர் நோய் வரக் காரணம் என்ன…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி இரு மனம் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உயிரான ஈசனை எண்ணித் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் தொடர்பும்
2.நம் குருநாதர் பெற்ற உணர்வுகளும்
3.அற்புத நிலையில் உங்கள் உடலுக்குள் பாயும். அருள் உணர்வை உடலுக்குள் பெருக்கச் செய்யும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழிப்படி அகஸ்தியன் உணர்வும் அவன் வளர்ந்த நிலையும் அவன் முழுமையடைந்த உணர்வுகளையும் பெறும் பொழுது நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒன்றாக இணைகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளினால் அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியும் அவர் வளர்ச்சி அடைந்த நிலைகளும் கணவன் மனைவி பெற்ற நிலையும் இருவருமே உணர்வு ஒன்றாகி ஒளிச் சரீரமான அதிலிருந்து வந்த உணர்வுகளை எல்லாம் இப்பொழுது நீங்கள் காட்சியாகக் காண முடியும்.

அதே சமயத்தில் உங்கள் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊடுருவி உங்கள் இரத்த நாளங்களில் பேரொளியாகக் கலந்த அந்த உணர்வையும் நீங்கள் அறிய முடியும்.

அந்த அருள் ஒளியைப் பெற்று இருளை நீக்கவும் பொருளைக் காணவும் என்றுமே பிறவி இல்லா நிலை என்ற அந்த அருள் நிலையை நாம் பெறுவதற்குத் தான் நாம் இதைச் செய்கிறோம்.

ஏனென்றால்
1.இந்த உடலும் சொந்தமில்லை.
2.இந்த உடலால் தேடிய செல்வமும் சொந்தமில்லை.
3.ஆகவே அந்தப் பேரருளை நமக்குள் சொந்தமாக்கிக் கொள்வோம்.

“என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு…”என்ற நிலையாக இந்த உயிர் என்றுமே நமக்குள் ஒளியாக இருக்கும் “அவனுடன் அவனாக நாம் ஒன்றி… ஒளியின் சரீரமாக நிலைத்திருப்போம்… என்று பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

படிக்காதவன் தான் நான் சொல்கிறேன்

உங்களுக்கு யாம் நம்பிக்கையுடன் கொடுக்கும் உன்னதமான சக்தி

மவுன விரதம் – தீமைகளை கேட்காமல், பேசாமல் இருப்பது

eswara's third eye

“உயிர் வழி” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அன்ன பிண்ட உடலாக இஜ்ஜீவ உடலை வளர்த்துள்ள மனித இனச் சக்தியின் ஞானமும் அதன் செயற்கைப் பிடிப்புடனே சமைத்துண்டு இயற்கையின் பிடிப்பின்றி காற்று மழை வெயில் எதுவுமே தன்னைத் தாக்காமல் காத்துக் கொள்ள உறைவிடம் அமைத்து வாழத்தக்க வளர்ச்சி நிலையில் தான் இன்றைய (விஞ்ஞானம்) மனிதச் செயலே இருக்கின்றது.

ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுக்குகந்த பகுத்தறியும் ஞானத்தில் வளர்ந்து வந்ததையே
1.செயற்கையின் செயலின் வழியில் சில நூறு ஆண்டுகளாக வார்ப்புப் படுத்திவிட்டதனால்
2.இயற்கை உணர்வின் தன்மையைத் தன் ஞான உணர்வால் ஈர்க்க முடியவில்லையப்பா “இன்றைய மனிதனுக்கு…!”

சேவலிலிருந்து சில பட்சிகளும் நாய் நரி பூனை அனைத்துமே உலகச் சுழற்சியின் தன்மையைத் தன் சுவாச உணர்வில் அறிந்து கொள்ளும் திறன் கொண்டது தான். ஜாமக் கோழி கூவுகின்றது. அதே போல் அதிகாலையில் துயில் எழுந்து இரை தேடச் செல்கின்றன பறவை இனங்கள்.

சூரிய ஒளி உதயமாவதற்குள்ளேயே ஒளியின் தன்மையை மழை மேகம் மறைத்திருந்தாலும் இந்தப் பட்சிகள் எப்படி விடியலை அறிகின்றன…?

ஏனென்றால்…
1.இந்தப் பூமி சுழலும் சுழற்சித் தன்மையை மனிதனைக் காட்டிலும்
2.தன் உணர்வின் சுவாசத்தாலேயே அறியவல்ல தன்மை
3.சில தாவரங்களுக்கும் பட்சிகளுக்கும் பிராணிகளுக்கும் உண்டு.

ஐந்தறிவு கொண்ட மற்ற இனங்கள் சொல்லாற்றலும் செயலாற்றலும் இன்றி… இயற்கையுடன் ஒயற்கையாக ஒன்றி… இயற்கை உணர்வை அறிந்து கொள்கின்றன.

ஆறறிவு கொண்ட மனிதன் என்றுரைக்கப்படுபவன்.. செயலாற்றும் திறமை கொண்டவன்… சொல்லாற்றல் உடையவன்… விஞ்ஞான் சக்தியைக் கொண்டு மனிதக் கருவையே தாயின்றி வளர்க்கச் செய்பவன்…
1.என்றெல்லாம் சொல்லப்படும் இன்றைய கலி மனிதன்
2.இந்த இயற்கைச் சுழற்சியைச் செயற்கைக் கருவிகள் கொண்டு தான் உணர்கின்றான்.

ஆனால் ஞானத்தால் உயர்ந்த அன்றைய சித்தர்கள் அணுவுக்குள் அணுவாகச் சித்து நிலை பெறத் தன் பிம்ப உடலின் ஆத்ம உயிரைப் பல மிருகங்களின் பல பட்சிகளின் ஆத்மாவுடன் இவ்வாத்மாவைக் கவசம் போல் அதன் ஈர்ப்பில் சென்று அதன் உடல் அமிலக் கூட்டின் முலாமையும் தன் உயிராத்மாவிற்குச் சேமிதம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

இதை உணர்த்தும் விதமாகத் தான் அந்தத் தெய்வீகக் குணத்திற்காகச் சிலை உருவிற்கு நாமகரணமிட்டு பல பல சிலையின் வடிவங்களைக் காட்டினார்கள்.

1.குண சக்தியின் வழியில் தெய்வ ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு
2.அந்த அவதார மூர்த்திகளுக்குப் பாம்பையும் மயிலையும் சேவலையும் பசு பன்றி சிங்கம் புலி இவைகளையும்
3.இன்னும் பல பிராணிகளையும் வாகனமாகக் காட்டினார்கள்.

தன் உடலுக்குள் விளைந்த அமில முலாம் குண வளர்ச்சியின் ஈர்ப்பு விகித எண்ணச் செயலைக் காட்டிலும் இந்தப் புவி ஈர்ப்பின் வளர்ச்சி பெற்ற பல உயர்ந்த அமிலத் தன்மையின் வார்ப்புடன் தன் செயலைச் செய்விக்க
1.தன் ஆத்ம உயிரை அணுவுக்குள் அணுவாகச் சென்று
2.பிற வார்ப்பில் உள்ள அமிலச் சுவை முலாமையும் எடுத்து
3.தன் உயிராத்மாவிற்கு வலுவாக்கிக் கொள்கின்றான் ஞானத்தில் வளர்ந்த சித்தன்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது நாள் வரை உணர்த்தியதெல்லாம் ஜெப முறையும் தியான வளர்ச்சிக்குகந்த ஞான வளர்ச்சி முறையும் தான்.

ஞானத்தால் உயர் ஞானம் கொள்ள இந்த உடல் முழுமைக்கும் உள்ள ஒவ்வொரு அணுவையுமே தன் ஞான வளர்ச்சியின் வழி செயல் வளர்க்க “ஆத்ம உயிரின் துணை கொண்டு தான்…” செயல்படுத்த வேண்டும்.

இவ்வாத்ம உயிரின் உயர் காந்த மின் அலை ஈர்ப்பு வளர்ச்சிக்கு
1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அலைகளை
2.நேரடியாக உயிராத்மாவிற்குப் பாயத்தக்க செயலாக வழியமைத்தால்
3.அதன் மூலம் இந்தப் பிம்ப உடல் அணு வளர்ச்சியின் செயலாத்மாவாக இந்த உயிராத்மா உட்கொள்கின்றது.

மழை வேண்டித் தியானமும் விளக்கமும்

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மக்ரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வானில் பரவி கருமேகங்கள் ஒன்று கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள். 

THOUGHT POWER AND FUNCTION

“இது இவருடைய குணாதிசயம்…” என்று சொல்கிறோம்.. அது அவருக்கு எப்படி அமைகிறது…?

 

ஒரு மனிதன் நமக்குத் தீங்கு செய்கின்றான்.. தீங்கு செய்கின்றான்.. என்ற உணர்வை நுகர்ந்தால் அதை நம் உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி எந்த உணர்வின் சத்தை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் அணுக்கருவாக அது நம் இரத்தநாளங்களில் உருப்பெறுகின்றது.

நாம் உற்று நோக்கிய உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாகின்றது. இப்படி நமக்குள் பதிவான உணர்வுகள் என்ன செய்யும்..?

1.வெறுப்பை ஊட்டிய அந்த மனிதனை அடிக்கடி நாம் எண்ணி அந்த உணர்வை நுகர்வோம் என்றால்
2.நம் உடலுக்குள் அது அணுக்கருக்களாகின்றது.. முட்டையாகின்றது
3.அதை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதை அடைகாத்தது போல் ஆகி அணுவாக உருப்பெறச் செய்கின்றோம் நாம் முதலிலே.

அணுவாக உருவாக்கிவிட்டால் அந்த அணு வெறுப்படையச் செய்யும் உணர்வையே அது நுகர்கின்றது.
1.அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது
2.அந்த உணர்ச்சிகள் நம் இரத்தநாளங்களில் பரவுகின்றது.

இரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லப்படும் பொழுது அங்கே சிறு மூளை பாகமும் செல்கிறது.
1.சிறு மூளைக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்பு வழியில் (கவன ஈர்ப்பு நரம்பு)
2.இந்த உணர்ச்சிகளை உயிர் கவர்ந்து நம் கண் காது மூக்கு செவி உடல் என்ற இந்த உறுப்புகளுக்கு ஆணையிடுகின்றது.

அந்த ஆணைப்படி இவை அனைத்தும் கவர்ந்து நுகரச் செய்கின்றது.

நுகர்ந்த உணர்வை நம் உயிர் உடலுக்குள் பரவச் செய்கின்றது. அப்படிப் பரவச் செய்யும் பொழுது இந்த இரத்தநாளங்களில் வழி உடல் முழுவதும் பரவச் செய்கின்றது.

இதை நாம் உணர்ந்து கொள்வதற்காக ஞானிகள் காவியத் தொகுப்புகளைக் காட்டியுள்ளார்கள்.

அதாவது நாம் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ மகா விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… காக்கின்றான்…! என்று தெளிவாக்குகின்றார்கள்.

சுவாசித்து நம் உடலில் இப்படிச் சுழலப்படும் பொழுது அதன் வழி உணர்வை நுகரப்படும் பொழுது அதன் வழி உருவான அணு
1.யார் வெறுப்படையும் செயலைச் செய்தனரோ
2.அதே வெறுப்பின் தன்மை கொண்டு குருவாக நமக்குள் அடைகின்றது.

இதே போல் ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது ஒருவன் கோபப்படும் பொழுது எந்தெந்த வழிகளில் செயல்பட்டானோ… அதன் வழிப்படி அது குருவாக இயக்கத் தொடங்கிவிடும்.

ஒவ்வொரு குணங்களும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது…!

நமக்குள் எந்தெந்த குணங்கள் கொண்டோமோ அந்தக் குணங்களின் தன்மை கொண்டு குருவாக இயக்கப்படும் பொழுது
1.அதிலே எந்தக் குணத்தை நாம் அதிகமாக நேசிக்கின்றோமோ
2.அந்தக் குணத்தின் செயல்கள் நமக்குள் அதிகமான பின்
3.அது நம்மை ஆட்சி புரியும் சக்தியாக மாறிவிடுகின்றது.

இதனை உணர்த்துவதற்குத்தான் மூஷிகவாகனா என்றார்கள். அதாவது நாம் சுவாசித்த உணர்வுகள் அது வாகனமாக அமைந்து வாழ்க்கை நடத்தச் செய்கிறது.

உதாரணமாக நாம் கோப குணத்தை அதிகமாக எண்ணினால்… அதையே அடிக்கடி பட்டால்.. அதுவே குரு வழியில் கணங்களுக்கு அதிபதியாகி நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கி ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

1.ஆட்சி புரியத் தொடங்கிவிட்டால் அதன் உணர்வு எதுவோ
2.அதன் வழி மற்றதைத் தனக்குள் இயக்கும்படிச் செய்யும்.
3.இயங்கவில்லை என்றால் அதை இது அடித்து மாய்த்துவிடும்.

இதைப் போன்று தான் நம் நாட்டில் மட்டுமல்ல… உலகம் முழுமைக்குமே நல் ஒழுக்கம் கொண்டு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் ஞானிகள் காவியங்கள் மூலமாகத் தான் கண்டுணர்ந்த உணர்வுகளைக் காட்டியுள்ளார்கள்.

 

அந்த ஞானிகள் காட்டிய வழிப்படி ஒவ்வொரு குணங்களும் நமக்குள் குருவாக இருந்து எப்படி இயங்குகிறது…? என்பதைத் தெரிந்து கொள்ளவே இதை உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

 

 

நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய நம் தாயை எப்படி மதிக்கின்றோம்…? 

கோவிலில் தாய் தந்தையருக்காகத் தான் முதலில் வேண்டும்படிச் சொல்கிறார்கள் 

தாய் கருவில் பெற்ற பூர்வ புண்ணியம் தான் என்னை ஞானம் பெறச் செய்தது 

Tap root for Spirituality

அவரவர்களுக்கு… அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்… அது ஏன்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆரம்பப் பாட நிலையிலிருந்து உணர்த்தி வந்த முறையில் உயிரணுத் தோன்றி உயர் நிலை பெறும் வழித் தொடரிலெல்லாம்… எந்த உயிரணு எச்சுவை கொண்டு வளர்ச்சி பெற்றதோ… அதன் தொடர் நிலை கொண்டு ஒவ்வொரு வளர்ச்சி நிலையுடன் மோதுண்டு… அந்த உயிரணுவின் பலம் கூடி ஆதம நிலை கொண்டாலும்… “அதன் ஆரம்ப உணர்வின் சுவை கொண்ட எண்ண வழித் தொடரில் தான் அதனதன் குண நிலை அமைகிறது…” என்று உணர்த்தி வந்தேன்.

காரத்தின் சுவை… இனிப்பின் சுவை… புளிப்பின் சுவை… பல சுவை கொண்ட அதனதன் வளர்ப்பு உயிரணு மாறி வரும் ஈர்ப்பு வட்டத்திலும் தன் உணர்வின் வட்டத் தொடர்ச்சியிலே தான் வளர்ச்சி பெறுவதைப் போல் இவ்வடிமைத்த வளர்ப்புத் தொடரின் உணர்வெண்ண ஜீவ சக்தியிலும் குணத்தைக் கொண்ட வழித் தொடர் முலாமுடைய தன் தன் உணர்வின் எண்ண நிலை எந்தக் குணம் கொண்ட ஆத்மாவானாலும் “தன் வளர்ப்பின் உணர்வெண்ண குணம் தான்…”
1.அவரவர்களுக்கு அவர்கள் எடுக்கும் குணமே நல்லெண்ணமாக இருக்கும்.
2.எந்த ஆத்மாவும் தன் குண எண்ணத்தைத் தீயது என்றும் நியாயமற்றது என்றும் எண்ணுவதில்லை.
3.அவ்வார்ப்பின் ஜீவ உடல் உணர்வு குணம் தான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலுவால்
4..ஆரம்ப ஈர்ப்பு வழி முதல் கொண்டே வலுப் பெறுகின்றதப்பா…!
5..அவர் குணத்தை அவர் நன்மையாகக் கருதிச் செயல்படுகின்றார்.
6.ஒவ்வொரு ஆத்மாவின் தன்மையும் இதுவே தான்…!

ஈர்ப்பலையின் உணர்வு சுவை கொண்ட தாவரமானது எண்ணப் பரிமாற்றம் அற்றது. ஒலி ஈர்ப்பு.. மற்றும் நடமாட்ட நிலை அற்றது.

மிருகங்களின் நிலையில் ஒலி பரிமாற்றச் செயல் இருந்தாலும் மனிதனின் நிலையை ஒத்த எண்ணப் பரிமாற்ற உணர்வு ஞான வளர்ச்சி செயல் முறை தாவரத்திற்கும் பிராணிகள் தன்மைக்கும் இல்லை.

தன் தன் உணர்வின் எண்ண குண நிலைக்கொப்ப பிறப்பிற்கு வந்தாலும் குழந்தைப் பருவம் முதல் கொண்டே தாய் காட்டும் பரிவும் தந்தை காட்டும் அன்பும் உடன் பிறப்புகளின் பாச உணர்வின் ஊட்டமுடன் ஆத்ம எண்ணத்திற்கு முந்தைய கால முன் ஜென்ம உணர்வு எண்ணமானது பிறப்பிற்கு வந்தவுடனே மனிதனுக்கு மறைந்து விடுகிறது.

அதனால் எப்பிறப்பு எடுத்து எத்தாய் தந்தை உணர்த்தி உருவாக்குகின்றார்களோ அதன் கூட்டு எண்ண உறவின் வழித் தொடரினால் பிறப்பெடுத்த நாள் கொண்டு வளர்ச்சிக் காலமெல்லாம் படிக்கும் பருவமும் விளையாடும் காலமும் தொழில் அறியும் முறையிலும் மண வாழ்க்கை உறவிலும் பெற்றெடுக்கும் செல்வங்களின் வளர்ப்பிலும் ஒவ்வொரு மனித ஆத்மாவும் இவ்வெண்ணப் பரிமாற்ற வளர்ச்சியுடன் ஒன்றியே வருகிறது.

இப்படி வருவதனால் தன் வார்ப்பின் குணத்தையே பிற எண்ணத்தின் வார்ப்புக் குணமுடன் பகுத்தறியும் செயலுடைய மனிதன்… தன் குணத்தில் தன் எண்ணத்தால் நன்மை என்று செய்வதையும் பிற எண்ணமுடன் தன் எண்ணம் மோதுண்டு தன் உணர்வின் ஈர்ப்பைச் செலுத்தித்தான் தன் வாழ்க்கையை நடத்திச் செல்கிறான்.

மனித வாழ்க்கையின் நிலை உள்ளதோடு மட்டுமல்லாமல் வழி வழியாக வந்த சமுதாய இனப் பிணைப்புகளும்… அதன் வழித் தொடர் கட்டுப்பாடுகளும்… அரசியல் சட்ட திட்டங்களின் ஒழுங்கு முறை விகிதப்பிடியிலும் தான்… மனிதனின் எண்ணப் பரிமாற்ற உணர்வு ஒன்றியுள்ளது.

இத்தர்ம நியாய சத்திய முறைகளை உயர்ந்த குணமாக்கி உணவு உடை உறவு ஒவ்வொன்றிலுமே ஒழுக்க முறை வழித் தொடர் கொண்டுள்ள சமுதாயத்துடன் ஒன்றிய வாழ்க்கை கொண்ட மனிதன்
1.தன் குண முறையையே நற்குண வழியில் செலுத்தினால் தான்
2.நற்குணம் என்று சமுதாயத்தினால் வழிகாட்டப்பட்ட முறை வழித் தொடரின் வழி வந்த மனிதன்
3.குண முறையில் அவன் குண நிலைக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தினால் சமுதாயமே ஏற்பதில்லை.

இதை ஒத்த நிலையில் தான் அன்றைய காலத்திலேயே ஒவ்வொரு சித்தனும்… தன் உணர்வின் எண்ணத்தை ஞான வழி பூண்டு… சித்து நிலை பெறும் தன்மை கொண்டான்.

சித்து நிலையின் செயல் முறை எது…?

ஞான வழியில் எப்படி எண்ணத்தின் வளர்ச்சியால் ஞான வளர்ச்சி மோதலில்… எண்ணத்தைப் பலவற்றின் வாழ்க்கைச் செயல் ஒன்றி தன் உணர்வின் ஈர்ப்பின் எண்ணத்திற்கு நற்குண வழித் தொடரினால்… ஞான ஈர்ப்பு எண்ண வளர்ச்சியில் செலுத்துகின்றோமோ அதைப் போன்று
1.சித்துத் தன்மையில் அணுவுக்குள் அணுவாக அணு ஈர்ப்புக் கலவைக் கூட்டுடன்
2.தன் உயிர் ஆத்மக் கலவையைப் பிற அணுக்களின் நிலையுடன் ஊடுருவி
3.அவற்றின் சக்தி வீரிய குண முலாமைத் தன் வலுவுக்கும் ஏற்றிக் கொள்கின்றான் சித்தன்.

துருவ நட்சத்திரத்துடன் நம்மை இணைக்கும் நிலை

 

குருநாதர் என்னை நேரடியாகத் துருவ நட்சத்திரத்தைக் காட்டி உற்றுப் பார்க்கும்படி செய்து அதிலிருந்து வரும் ஒளி அலைகளைக் கவரச் செய்தார். வாழ்க்கையில் வந்த வேதனைகளை எல்லாம் நீக்கும் பயிற்சியைக் கொடுத்தார். ஒளி சரீரம் பெறும் பருவத்தையும் ஏற்படுத்தினார். அதே உணர்வைத்தான் உங்களுக்கும் ஊட்டுகின்றோம். 

 

Mystic meditation

நம்மைச் சார்ந்தவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணச் சொல்வதன் இரகசியம் என்ன…?

 

நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கினால்
1.இந்த அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் செல்கின்றது… .தீமைகளை அகற்றுகின்றது
2..நீங்கள் எண்ணிய உணர்வுகளை உங்கள் உயிர் உடலுக்குள் ஒளியான அணுக்களாக மாற்றுகின்றது
3.ஒளியான அணுக்களாக மாற மாற அது தீமைகளை அகற்றுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் நற்குணங்களை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்த்திடும் சக்தியைப் பெறவேண்டும். ஆகையினால் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து தீமைகளை வென்றிட வேண்டும் என்பதற்கே இதைச் செய்யச் சொல்வது.

இதை எல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நமக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும். அந்த உயர்ந்த சக்திகளைக் கூட்ட வேண்டும்.

அருள் உணர்வுகளைக் கூட்டிய நிலையில் சிரமங்கள் பட்டுக் கொண்டுள்ளோருக்கு இதை நாம் எடுத்துச் சொல்தல் வேண்டும்.

ஆனாலும் இதை அடுத்தவர்களுக்கு நீங்கள் சொன்னாலும்…
1.நீங்கள் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நுகர்ந்தே சொல்கின்றீர்கள்
2.அவர்கள் உடலிலிருந்து தீமைகள் அகல வேண்டும் என்ற உண்மை உணர்வுடன் நீங்கள் சொல்லப்படும் பொழுது நீங்களும் வளர்கின்றீர்கள்.
3.அதே சமயத்தில் அவர்களைத் தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றோம்.

ஆகவே மற்றவர்களை நாம் அணுகும் முறைகள் இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால் இது தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தவமாகின்றது.

1.தவத்தை மேற்கொண்டால் நாம் மகரிஷிகளின் செயலாக ஒன்றுகின்றோம்
2.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் இணைகின்றோம்
3.அவர்கள் செயலாக நாமும் ஒன்றுகின்றோம்
4.அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையை எய்துகின்றோம்.

 

 

தவறு செய்தவர் யாரும் ஏற்பதில்லை, தவறின் உணர்வே இயக்குகின்றது 

உடலும் அதற்குள் விளைந்த வித்தின் தன்மையும் அதனின் இயக்கமும் 

நாம் போகும் பாதையை மாற்றும் தீமையின் உணர்வுகள் 

soul and body

உடல் வேறு ஆத்மா வேறு…! ஆத்ம தியானத்தால் தான் மனித ஆத்மா வளச்சிக்குச் செல்ல முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணத்தால் எடுக்கும் ஜெபம் கொண்டு… உணர்வின் எண்ணத்தையே ஞான வளர்ச்சி எண்ணமுடன் செயல் கொள்ளும் உயர் காந்த மின் சக்தியை… நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் வலுப் பெறும் தன்மை கொள்வதினால்… வளர்ச்சி பெறும் தொடர் நிலை யாது…?

இந்த உடல் என்ற பிம்பமானது ஒரு அடுப்பைப் போன்றது.
1.அடுப்பில் எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதனை வேக வைப்பது தான் அடுப்பின் வேலை.
2.சேர்க்கப்படும் பொருளின் சேர்க்கையின் சுவை கொண்டு சுவை கொள்வது ஆத்மாவின் வேலை.

மோதுண்டு மோதுண்டு எந்தச் சுவையிலெல்லாம் தன் வலுவைக் கூட்டி இந்த உயிராத்மா வலுப் பெற்று வலுக் கொண்டதோ அந்த ஒவ்வொரு சேர்க்கையிலும் தன் வளர்ச்சி முலாமின் சக்தியை எடுப்பது உடலாக இருக்கின்றது.

அதே சமயத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலின்… “அணுச் சேர்க்கை சமைத்தனுப்பும் வலுவைத்தான்” இவ்வுயிராத்மா தனக்கு வலுவாக்கிக் கொள்கின்றது,

1.உண்ணும் உணவையும்
2.எண்ணும் எண்ணத்தையும்
3.செய்யும் செயலையும் இந்த உடலானது எடுத்து
4.அவை வளர்க்கும் அணுக்களின் வளர்ச்சியிலிருந்து
5.தன் வலுவை இந்த உயிராத்மா வளர்த்துக் கொள்கின்றது.

இந்த உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களின் தன்மையை நாம் எப்படி உணர்வது…? அதன் செயலை அறிய நம் ஆத்ம பலம் கூடியிருந்தால் தான் உணர முடியும்.

ஏனென்றால் மற்ற (ஒவ்வொரு) உயிராத்மாவின் வலுவைக் காட்டிலும் “ஜீவன் கொண்ட உயிராத்மாவின் சுழற்சி நிலை… ஜீவ சக்தியின் ஈர்ப்புடன் செயல்படுகிறது…”

அந்த வலுக் கொண்டு…
1.இந்த உடலையே காந்த மின் அலை ஈர்க்கக்கூடிய ஆத்மாவின் சுழற்சியாக
2.இந்த உடல் முழுமைக்கும் கவசம் போல் இந்த உடலைச் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்த உடல் பிம்பமானது இயந்திரச் செயலைத்தான் செய்விக்கின்றதேயன்றி இவ் இயந்திரத்தில் எதை எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதிலுள்ள சக்தியைப் பெறுவது இந்தக் கவசம் போல் அமைந்துள்ள உயிராத்மா தான்.

பசி தூக்கம் தாகம் இவற்றின் உந்தலின் எண்ணமும் இந்த ஆத்மாவின் செயலுக்குகந்த சக்தி நிலைக்கு (வளர்ப்பு நிலைக்கு) தேவைக்குகந்த செயலுக்கொப்பத்தான் பிம்ப உடலின் உணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது.

அந்தந்த உணர்வைக் கொண்டு எண்ணத் தோன்றல் உந்தப்பட்டு இவ்வெண்ணத்தால் செயல்படுத்துவது தான் இந்தப் பிம்ப உடலின் உடலுக்குகந்த நிலையை இவ்வுடல் எடுக்கும் முறை.

ஜீவாதாரத் தேவை என்பது இந்த உடலின் உந்தலின் செயல் உயிராத்மாவின் உந்தலுக்குகந்த செயல் தான். அதனால் தான் பல பெரியோர்கள்
1.இந்த உடலை வாடகை வீடு என்றும்
2.இந்த உடல் என்பது வெறும் சக்கைதான்… என்றும்
3.இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்றும்
4.ஆத்ம தியானத்தால் தான் இந்த மனித ஆத்மா வளர முடியும்…! என்று பகர்ந்ததன் பொருளும் இதுவே.

பல மோதலில் வலுக் கொண்ட உயிராத்மா ஜீவாத்மாவின் தன்மைக்கு வந்து வார்ப்பாகி… வார்ப்பில் வலுவைப் பெறும் செயலுக்குத்தான்… ஒவ்வொரு உயிராத்மாவும் “பல பிறப்பிற்கு…” வருகின்றது.

இச்சுழற்சி ஈர்ப்பின் பிடியிலேயே மோதுண்டு மோதுண்டு… வலுப் பெற்ற தன்மை கொண்டு… வலுவான காந்த சக்தி கொண்ட தன்மை கூடிய பிறகுதான்… இந்த உடல் பிம்பம் கொண்ட மனித ஆத்மாவின் எண்ண ஞான வளர்ச்சி செயல் நிலைக்கு இந்த ஆத்மா வலுப் பெறுகின்றது.

1.வலுக் கொண்ட உயிராத்மாவின் கவசம் பூண்ட ஜீவ பிம்ப மனிதன்
2.இந்த ஆத்ம உயிருக்கு மேலும் வலுத் தரக்கூடிய தன்மையை
3.தன் எண்ணத்தால் எடுக்கும் “உயிர் ஞானத்தை” வளர்க்கக்கூடிய தன்மை கொண்டு தான் வளர்க்க முடியும்.

மிருகங்களின் நிலைக்கு எண்ணம் இருந்தாலும்… ஞானம் இருந்தாலும்… பகுத்தறிந்து செயல்படக்கூடிய உயர் ஞானத்தை வளர்க்கும் ஆற்றல் வலு ஈர்ப்புச் செயல் அற்றதனால்… மனிதனை ஒத்த ஆத்ம வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய சக்தி அதற்கில்லை.

ஆனாலும் ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு தனித் தன்மை வாய்ந்த உயர்ந்த குண வார்ப்பு அமில ஜீவ சக்தித் தன்மை உண்டு.

மனிதன் தன்னுடைய சாதாரண வாழ்க்கை முறைக்கு மிருகங்களை உணவாகவும் தன் செயலுக்குகந்த நிலைக்கும் அதனைப் பயன்படுத்துகின்றான்.

ஆனால் உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகள்…
1.தான் உடலுடன் உள்ள பொழுதே தன் உயிராத்மாவின் பலத்திற்கு தன் வலுவைக் கூட்டிக் கொள்ள
2.எந்தப் புவியின் ஈர்ப்பில் தன் உயிராத்மாவானது வலுக் கொண்டு வலுப்பெற்றதோ
3.அந்த வலுவுக்குகந்த வலுத் தன்மை கொள்ள
4.இந்தப் புவியில் வளர்ந்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே
5.அணுவுக்குள் அணுவாக ஊடுருவி அணுவின் தன்மையிலெல்லாம் மோதுண்டு
6.இந்தப் புவி ஈர்ப்பில் அணு அமிலத் தன்மையின் பலவற்றின் நிலையையும்
7.தன் எண்ண ஞானத்தால் தன் உயிராத்மாவிற்கு வலுக் கொண்டனரப்பா…!

கேன்சர் நோய் வரக் காரணம் என்ன…?

 

பிறர் வேதனைப்படுகின்றார்கள் துன்பப்படுகிறார்கள் என்பதை ரசித்தாலோ அல்லது நாம் வேண்டும் என்றே மற்றவரைக் கடுமையாக வேதனைப்படுத்தி அதைக் கண்டு சந்தோஷப்பட்டிருந்தாலோ கண்டிப்பாக கேன்சர் வரும். வேதனை என்பதே கடும் விஷம். ஒவ்வொரு அணு இயங்கவும் அந்த விஷம் தான் காரணம். ஆக அடுத்தவர் வேதனைப்படுவதைப் பார்த்து அதை நுகரும் பொழுது அவர்கள் வெளிப்படுத்தும் வேதனையான (விஷமான) உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து மற்ற நல்ல அணுக்கள் இயங்கக் காரணமான விஷத்தை இது உணவாக எடுத்துப் புற்று போன்று உடலிலே வளரத் தொடங்கும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்கள் துன்பங்களையோ வேதனைகளையோ கண்டு நாம் மகிழ்ச்சி பெறக் கூடாது.

 

Energy boosts

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்…? எத்தனை வேலைகளைச் செய்திருப்பார்…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.

அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அனுபவபூர்வமாகத்தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் என்றால் அது உங்களுக்குள் சென்று தீமையின் உணர்வுகளை அது கருக்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோவில்… காளியம்மன் கோவில்… அங்களேஸ்வரி கோவில்.. துஷ்ட தேவதைகள் ஆலயங்களில் எல்லாம் “அக்னி குண்டம்…” இறங்குவதற்கு வைத்திருப்பார்கள்.

கொடூரமான நிலைகளில் நாம்…
1.பயந்தோ
2.வெறுப்படைந்தோ
3.கோபப்பட்டுக் கொதித்தெழுந்தோ
4.அஞ்சி வேதனைப்பட்டோ நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் அந்தச் சக்தியாக வளரப்படும் பொழுது
5.நம் நல்ல குணங்களை அது கொன்று கொண்டேயிருக்கும்.

அதனால் தான் காளிக்கு முன்னாடி புலியும் அங்களேஸ்வரி கோவிலில் ஒரு குழந்தையை மடியில் வைத்து தன் குழந்தையையே பிளந்து மாலையாகப் போட்டுக் கொண்டிருப்பதாகவும் காட்டியிருப்பார்கள்.

நல்ல குழந்தைகளைக் கருவுறும் இந்தத் தன்மையை அதாவது நல்ல அணுக்களாக உடலுக்குள் விளைவதைப் பிளந்து விடுவதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

சிலர் மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து அங்கலாய்வார்கள்…! அவன் அப்படி வந்திருக்கின்றான்… இவன் இப்படி வந்திருக்கின்றான்.. என்ற இதைப் போன்ற உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது அங்களேஸ்வரி…!

அந்த அங்கலாய்ப்பு தான் வருகின்றதே தவிர…
1.நமக்குள் அந்த உயர்ந்த சக்திகளை
2.அவர்கள் வளர்ந்த முறையில் நாமும் வளர வேண்டும் என்ற இந்த எண்ணமே இங்கே வருவதில்லை.

அப்பொழுது நமக்குள் வளரும் அந்தச் சக்தியை நாமே பிளந்து அதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து நாம் மாலையாகப் போடுவது போன்று ஆகின்றது. மாலை என்றால் நாம் வெளியிலே தான் போடுகின்றோம்.
1.இந்தத் தீமையை உருவாக்கும் உணர்வுகளைத்தான் நம்மால் வளர்க்க முடிகின்றதே தவிர
2.அந்த நல்லதைப் பெற முடியவில்லை.
3.அந்தத் தீமைகளை அகற்ற என்ன வேண்டும்…?

ஒரு தீமையைக் காண நேர்ந்தால்… உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் பார்க்கின்றோம் அது மாறி அந்த வேதனையின் அணுக்கள் நம் உடலில் விளைகின்றது. ஏனென்றால் வேதனைப்படுவோரைக் கேட்டுணர்ந்த பின் தான் உதவி செய்கின்றோம்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அதே அணு நமக்குள் உருவாகின்றது. அந்த வேதனை அணுக்கள் உருவாகி விட்டால் அதே தன் தாயாக அந்த வேதனயை உருவாக்கும் அணுக்களைப் பெருக்குகின்றது.

அதைக் குறைக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் அருகில் அரச மரத்தை வைத்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் நச்சுத் தன்மைகளை ஒடுக்கிய உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக (அரசாக – அரச மரம்) இருக்கும் அதனின்று வரும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

துருவ தியானத்தின் மூலம் உங்களுக்குக் கொடுக்கும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றீர்களோ ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்றும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் கண்களைத் திறந்து ஏங்கி நினைவை மறுபடியும் உங்கள் உயிருடன் ஒன்றுங்கள்.

அந்த அருள் சக்திகள் அனைத்தும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் படர வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

மாரியம்மன் கோவிலில் அக்னி குணடம் இறங்குவது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்திவிட்டால் அந்தத் தீமை என்ற நிலை வராது கருக்கி விடும்… அதன் வலுவை இழக்கச் செய்யும்…!

தீமை செய்யும் சக்திகள் நமக்குள் ஜீவன் பெறாது தடுக்கப்படுகின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கும்.

நம் காரியங்கள் நல்ல முறையில் சித்தியாக வேண்டும் என்று “ஆக்கினை” இட வேண்டும்

உயிருடன் ஒன்றும் நிலை 

உயிரின் வேலை என்ன…?

spiritual seed

தியானத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை… ஒன்றும் கிடைக்கவில்லை…! என்று சொல்வதன் காரணம் என்ன…?

 

துருவ நட்சத்திரத்தின் பெரருள் பேரொளி பெறவேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்திகள் படர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தியானம் செய்கின்றோம்…!

சிலருக்கு அந்த அணுக்கருவின் தன்மை வலுவாக வளர்ந்திருக்கும். ஆகவே அந்த வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது அவர்களால் துருவ நட்சத்திர ஒளி அலைகளைக் காண முடிகின்றது. நுகரும் பொழுது அபூர்வ மணங்களையும் சுவாசிக்க முடிகின்றது.

இருந்தாலும் சிலரால் இதை உணர முடியாத நிலைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்
1.தியானத்தில் நமக்கு ஒன்றும் தெரியவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற எண்ணத்தையே விட்டுவிடுங்கள்.
2.நாம் நிச்சயம் பெறுகின்றோம்… பெற்றுக் கொண்டிருக்கின்றோம்…!

ஒரு தோசையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடியில் தணல் அதிகமாகிவிட்டால் ஒரு பக்கம் தோசை கருகி விடுகின்றது. கருகிய பக்கம் நாம் தோசையைப் பிரட்டினால் சட்டியில் ஒட்டிக் கொள்கிறது.. சீராக நாம் தோசையை எடுக்க முடிவதில்லை.

அதற்கு நாம் என்ன செய்கின்றோம்…? நீரைத் தெளிக்கின்றோம். ஒட்டிய இடங்களில் எண்ணையைப் போட்டுத் தேய்த்து எண்ணைய் பசையைக் கொண்டு வருகின்றோம்.

அப்பொழுது அந்தச் சூட்டின் தன்மையை அங்கே சமப்படும் பொழுது அடுத்து தோசையைச் சுடும் பொழுது கருகாதபடி சட்டியில் ஒட்டாதபடி சீராக வருகின்றது.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் சிலருக்கு எத்தனையோ விதமான கொதித்தெழும் உணர்வுகள் உடலிலே வளர்ந்திருக்கும்.

1.என்னை மோசம் செய்தார்கள்…
2.என்னை எப்படியெல்லாம் சங்கடப்படுத்தினார்கள்…? கேவலப்படுத்தினார்கள்..?
3.இன்றும் எப்படி எப்படி தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்…? என்ற
4.ஆவேச உணர்வுகள் தொடர்ந்து உள்ள அவர்கள் உடல்களில்
5.தியானத்தில் ஒளி அலைகளையோ… மணங்களையோ… அறிவது கொஞ்சம் கடினம்.

ஏனென்றால் தியானம் இருக்கும் பொழுதே அந்தத் தியான நினைவே இருக்காது. டக்… என்று வேறு வேறு பக்கம் நினைவுகள் சென்றுவிடும்.

இரண்டு வார்த்தை மூன்று வார்த்தை சொல்லும் பொழுது இருக்கும் நினைவுகள் அடுத்து… அதற்கப்புறம் தொடர்ந்து… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகரவிடாதபடி அசையாது நிறுத்திவிடும்.

இல்லை என்றால் தியான நினைவு வரப்படும் பொழுது ஏற்கனவே பட்ட சங்கட அலைகளோ வெறுப்பு அலைகளோ ஊடுருவும்.

தியானமிருக்கும் பொழுது
1.அடுத்து அங்கே போக வேண்டும்…
2.இதைப் பார்க்க வேண்டும்… அதைச் செய்ய வேண்டும்… தொழிலைச் சீராக்க வேண்டும்…
3.குடும்பத்தில் பையனோ பிள்ளையோ இப்படி இருக்க வேண்டும் என்ற இந்த அலைகள் வந்தால்
4.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வராது தடுத்துக் கொண்டே இருக்கின்றது என்று பொருள்…!

தியானத்தில் இப்படி ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட அடுத்து நாம் தியானிக்கும் பொழுது மீண்டும் கண்களைத் திறந்து கண்ணின் நினைவு கொண்டு அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த நினைவை மறக்காது எடுத்துப் பழக வேண்டும்.

மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

உங்கள் அனைவருக்குமே அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் தான் யாம் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசிக்கின்றோம்.. தவமிருக்கின்றோம்.

உபதேசிக்கும் இந்த உணர்வுகளை யாரெல்லாம் உற்று நோக்கி உணர்வைக் கூர்மையாக எண்ணுகின்றார்களோ அவர்கள் உடலில் உள்ள ஊன்களில் ஞான வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.

1.“பதிவானதை மீண்டும் மீண்டும் எண்ணினால்…”
2.உங்கள் நினைவாற்றல் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே செல்லும்.
3.அந்த ஒளி அலைகளையும் மணங்களையும் நுகர முடியும்… காண முடியும்.

ஆகவே ஞானிகளைப் பற்றிய பதிவுகள் என்பது மிகவும் முக்கியம்…! “ஞான வித்து நம் உடலிலே ஊனிலே பதிந்திருந்தால் தான்…” அந்தச் சக்திகளைக் கவர முடியும்.

தீமைகளைச் சூட்சமமாகப் பிளக்கும் சக்திகளை எனக்குக் கொடுத்தார் ஈஸ்வரபட்டர்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியின் வழியாக (உயிர்) நுகரும் ஆற்றலைக் கொடுத்து அதன் மூலம் வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை அடக்கி… மாற்றி.. நல்லதாக ஆக்கிடும் பருவத்தை ஏற்படுத்தினார் குருநாதர். அண்டத்தையும் அண்டசராசரத்தியும் காட்டினார் குரு.

 

human-thoughts

ஆத்ம வலுவின் சக்தி எப்படிக் கூடுகின்றது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உயிரானது சிரசின் மேலிருந்தும் ஆத்மாவானது இந்த உடலைச் சுற்றியும் அமைந்துள்ளது. இந்த உடல் பிம்பத்தைக் கவசம் போல் சுற்றியுள்ளது இவ்வாத்மா.

உயிர் பிரியும் பொழுது இந்த உடல் தன்மை ஆரோக்கியம் அற்று செயலிழந்து உடல் மடியும் பொழுது இந்த உடலுடன் கூடிய உயிர் ஆத்மா
1.இந்த உடலிலிருந்து எப்படிப் பிரிகின்றது…?
2.இந்த உடலுடனே சுற்றிக் கொண்டுள்ளதா…?
3.பிம்பத்தை எரித்த பிறகு வெளிப்படுகின்றதா…?
4.புதையுண்ட பிறகு உடல் அழுகி வெளிப்படுகின்றதா…?

சாதாரண அமைதி கொண்ட வாழ்க்கையுள்ள அன்பு நெறியில்
1.வயது முதிர்ந்து உடல் உறுப்புகள் செயலிழந்து ஆத்மா பிரியும் உயிரணுவின் தன்மைக்கும்
2.பல இன்னல்களிலிருந்து வாழ்ந்து முடியும் உயிராத்மாவின் தன்மைக்கும்
3.தற்கொலையின் உயிராத்மா தன்மைக்கும்
4.கொலையுண்டு மடிந்த ஆத்மாவின் தன்மைக்கும்
5.விபத்துக்களில் இறந்த ஆத்மாக்களின் தன்மைக்கும்
6.சில ஈர்ப்பலையில் தன் ஆத்ம பலத்தால் விஞ்ஞானத்தாலோ மருத்துவத்தாலோ கலை உணர்வாலோ வளர்ந்த உயிராத்மாவிற்கும்
7.அவ்வுடல் பிம்ப உயிராத்மாவின் தன்மையில் வலுத் தன்மை ஒவ்வொன்றுக்கும் மாறுபடுகின்றது.

காந்த சக்தியினால் வளர்ச்சி கொண்டத் தான் இந்த உயிராத்மாவின் நிலை.

எப்படி மின்சார சக்தி (POWER) பாயும் பொழுது அதை எந்தெந்த அலை கொண்டு எந்நிலை கொண்ட மின் அலை சாதனைத்தைச் செயல்படுத்தி எவ்விகித ஒளிக்குகந்த காந்த மின் சக்தி கொண்ட விளக்கைப் பொருத்துகின்றோமோ அதற்குகந்த வெளிச்சத்தைத்தான் அவை அவை எடுத்து வெளிப்படுத்துகின்றது.

அதைப் போன்றது தான்… இவ்வாத்ம உயிர்…
1.அவ்வுடலில் உள்ள அணு வளர்ப்பின் வலுக் கொண்ட சேமிப்பு வலுவை
2.அவ்வுயிராத்மா உடலில் உள்ள பொழுதே வலுக்கூட்டிக் கொண்ட நிலைக்கொப்ப
3.இந்த ஆத்மா பிரிந்த பிறகு இந்தக் காற்றலையின் இந்தப் புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டிருந்தாலும்
4.சேமித்த வலுத் தன்மையைக் கொண்டு தன் வலுவை மற்றொரு ஈர்ப்பலைக்குச் சிக்காமல்
5.தன்னைத்தானே பாதுகாத்து தனக்குகந்த வளர்ப்புப் பிடியில் தான் பிறிதொரு வார்ப்பு நிலைக்கு வாழ முடியும்,

உதாரணமாக காற்றடிக்கும் பொழுது காற்றடிக்கும் வேகத்திற்கொப்ப லேசான காகிதங்களும் இலைச் சருகுகளும் கனமற்ற தன்மை கொண்ட பொருள்கள் பறக்கின்றன.

வலுவான காற்றும் வரும் பொழுது அதனைத் தாங்க முடியாமல் இன்னும் சில கனம் கொண்ட பொருள்கள் பறக்கின்றன.

ஆனால் பெரும் சூறாவளி வந்தால் இந்தப் புவியின் ஈர்ப்புடன் வளர்ந்த வளர்ப்புக்கள் அனைத்தையும் அந்தச் சூறாவளி பறக்கச் செய்கின்றது.

அதைப் போல் எந்தெந்த வலுத் தன்மை கொண்டு இந்த உயிராத்ம வலுச் சக்தி கூடுகின்றதோ… அதற்குகந்த வலுத் தன்மையை… இஜ்ஜீவ சக்தி கொண்ட உடல் உறுப்புக்களின் அணுக்களின் வளர்ப்பிலிருந்து… தன் உயிராத்மாவின் வளர்ப்பணுவிலிருந்தே… தன் வலுவை வலுப் பெறச் செய்து கொள்கின்றது இந்த உயிராத்மா.

எண்ணத்தின் நிலைக்கொப்ப நாம் எடுக்கும் சுவாசம் கொண்ட அணுக்களின் வலுவைத்தான் உயிராத்மா சேமித்துக் கொள்ள முடிகின்றது. சேமித்த நிலைக்கொப்பத்தான் ஜீவன் பிரிகின்றது.

1.எந்த முலாமின் வளர்ப்பில் இந்த உயிராத்மா வலுக் கொண்டு வெளிப்பட்டதோ
2.அதன் வலு வித்து வளர்ச்சியில் தான் மீண்டும் சிக்க முடியும்.

 

நம்முடைய உயிராத்மாவில் எந்த முலாம் வலுவாக இருக்க வேண்டும்…? என்பதை முடிவு செய்து கொள்ளுங்களப்பா…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன ஆற்றலைத் தியானத்தின் மூலம் பெறச் செய்யும் ஞான வித்து

எம்மைப் போற்றுவது எம்மைத் தூற்றுவதாக அர்த்தம் 

என்னாலேயே சக்தி எடுக்க முடியவில்லை என்று சொல்லி மற்றவர்களையும் தடுப்பார்கள் 

abstract of human soul

மனித (உடல்) வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இயற்கையுடன் ஒன்றி வளரும் உருமாற்ற வளர்ச்சித் தொடரும்
2.உருவாகும் கால நிலையும்… உருண்டோடும் ஈர்ப்புச் சுழற்சியும்… உருவாகும் தன்மை கொண்டு
3.உருளுகின்ற உயிரணுவின் சேர்க்கை கொண்டு உருவாவது தான்..
4.பிம்ப உடல்களின் அங்க அவயங்களும்… உருவ பிம்ப அச்சும்…!

இந்தப் பிம்ப ஜீவ உடலின் உயிராத்மாவிற்கு எத்தகைய எண்ணங்களை எல்லாம் ஈர்ப்பில் எடுத்து நாம் சேமிக்கின்றோமோ அந்த நிலைக்குத்தக்க உயிராத்மா வித்து தான் பிறிதொரு கூட்டுச் சேர்க்கை வளர்ப்பு ஜீவனுக்கு வழி காட்ட முடியும்.

இவ்வாத்ம ஜீவ உயிரானது காந்த சக்தி கொண்டது…!
1.நாம் எடுக்கும் சுவாசமானது
2.கவன நரம்பில் மோதுண்டுதான் நெற்றிப் பொட்டில் ஈர்க்கப்பட்டு
3.சிறு மூளையின் செயலுக்குச் சென்று இந்தப் பிம்ப உடல் ஜீவிக்கின்றது.
4.ஆகவே “காந்த சக்தி” கொண்டது தான் நம் உயிராத்மா…!

எந்த எண்ண சுவாசத்தை நாம் எடுக்கின்றோமோ… அதன் நிலைக்கொப்ப வலு சக்தி கொண்ட முலாமாக… இந்த உயிர் காந்த ஆத்மாவுக்கு அது வலு ஏறுகின்றது.

நாம் பூசிய முலாமின் ஈர்ப்பு காந்த உயிரணுவின் செயலானது இவ்வுடலில் இருக்கும் காலத்தில் சேமித்த தன்மை கொண்டுதான் பிறிதொரு ஜென்மப் பிறப்பு (அடுத்த) உடலுக்கு இந்த வித்தின் கலவைக் கூட்டுச் சேர்க்கைக்குகந்த பிறப்பெடுக்க முடிகின்றது.

தாவரங்களின் புவி ஈர்ப்புப் பிடியுடன் ஒன்றி வளர்ந்த உயிரணுக்களும்… இந்தப் புவியுடன் ஒன்றிய கனிவள உயிரணுக்களும்… ஒன்றிலிருந்து ஜீவன் பிரிந்து மற்றொரு ஜீவ சக்தி எடுப்பது என்பது இப்புவி ஈர்ப்புடன் ஒன்றிய பிறப்பில் இருந்ததால் குறுகிய காலத்தில் தொடர் பிறப்பின் பிறப்பு வளர்கின்றது.

அதுவே ஆத்ம பிறப்பெடுக்கும் இவ்வுயிராத்மா.. அது சேமிக்கும் முலாமின் அமில வளர்ச்சியின் சக்தி வலு இக்காந்த ஈர்ப்பு சக்தி கூடி விடுகின்றது,

அப்படிக் கூடி விடுவதனால் அவ்வுயிர் ஆத்ம வலுவினால் ஜீவ சக்தி கொண்ட வளர்ப்பாகும் தன்மைக்குத் தன் சேமித கலவைக் கூட்டு அமிலத் தன்மைக்கொப்ப ஈர்ப்பு நிலையின் “உயிர் வித்தின் ஈர்ப்பில் தான்… பிறப்பெடுக்க முடியும்…!”

நெல் விதையைப் பக்குவப்பட்ட நஞ்சை நிலத்தில் போட்டால் தான் அது வளர்கின்றது. அதையே மேடு காடுகளில் போட்டால் அந்த நிலப் பகுதியில் நெல்லுக்குத் தேவையான பக்குவத் தன்மை இல்லாததால் இதன் வளர்ப்பு வளர்வதில்லை.

அதைப் போன்று இந்த உயிராத்ம சக்திக்கு…
1.எந்த ஈர்ப்பு அமிலக்கூட்டு முலாமாக மோதுண்டு
2.வாழும் காலத்தில் அதனின் வளர்ப்பு வளர்ந்ததோ
3.அதன் ஈர்ப்புப் பிம்பத்திற்கே செல்கிறது.

இயற்கைச் சுழற்சித் தன்மையில் சுழன்று வாழும் உயிராத்மாக்கள் “சுழற்சி ஈர்ப்பின் சுழலாகச் சுழலும் சுழற்சியையே…” (இயற்கையின் இயக்கம்) தன் உணர்வால் எடுக்கும் எண்ணம் மனிதனுக்குத் தான் உண்டு.

இப்படிப்பட்ட ஜீவன் கொண்ட பகுத்தறிவும் செயலாற்றும் பிம்ப உடலின் உயிராத்மா காந்த சக்தியினால்தான்
1.உருவாகும் இயற்கை கோளங்களையும்
2.உருவாகும் சக்திக்கே உரு நிலை தரும் சக்தியும்
3.இந்த மனித பிம்பத்திற்குத்தான் உண்டப்பா…!

அப்படிப்பட்ட தகுதி கொண்ட இந்த மனித உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் எண்ண உணர்வால்
1.நாம் எடுக்கும் “சுவாசத்தின் முலாம்” கொண்டுதான்
2.இந்த உயிராத்மாவின் உயர்வை நாம் காண முடியும்.

பரசுராமன் அவதாரம் – பலராமன் அவதாரம்

 

சமப்படுத்தும் உடலாக நல்ல மனித உடலைப் (பரசுராம்) பெற்றாலும் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் பல எண்ணங்கள் பல உணர்வுகள் வருகின்றது (பலராம்). நல்லதும் வருகிறது தீமையும் வருகிறது. 

 

POLARIS BLUE POWER

அகஸ்திய மாமகரிஷி.. துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்… என்று படிப்படியாக நமக்குள் சக்தியைக் கூட்டும் முக்கியமான பயிற்சி

 

(A) அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உங்கள் உயிருடன் ஒன்றி உங்கள் கண்களின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.குருநாதர் காட்டிய அந்த உணர்வின் நிலையை
3.உங்களுக்குள் குருவாக வேண்டும் என்று ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நினைவினை உடலுக்குள் செலுத்தி அதை இரத்தநாளங்களில் கருவுறச் செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் தியானியுங்கள்.

இப்பொழுது…
1.அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியும்
2.நம் குருநாதர் பெற்ற அந்தச் சக்தியும் கலந்து நீங்கள் நுகரும் பொழுது
3.அருள் சக்தியாக… புதுப் புது தாவர இனங்களின் மணங்களை
4.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக நீங்கள் பெறுவீர்கள்.
5.உங்கள் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் இப்பொழுது உருப்பெறும்.
6.நஞ்சினை வென்றிடும் அபூர்வ மணங்கள் வரும்… அதை நீங்கள் நுகர்வீர்கள்
7.அதை உங்கள் உடலுக்குள் அணுக்கருவாக மாற்றுவீர்கள்.
8.உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவுவதை உங்களால் உணர முடியும். மணத்தை நுகர்ந்தறிய முடியும்…!

(B) துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அகஸ்தியரும் அவர் மனைவியும் தியானத்தால் அன்று எடுத்துக் கொண்ட அந்தச் சக்திகள்
2.அவர்கள் உடலிலே “மின் அணுக்களாக… ஒளியின் உணர்வாகப் பெற்ற உணர்வுகளை…” நீங்கள் இப்பொழுது நுகர்வீர்கள்
3.அது உங்கள் உடலுக்குள் செல்லும் பொழுது உங்கள் உடல் அணுக்களையும் “மின் அணுக்களைப் போன்று பெறும்…”

(C) உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அதனின்று வரும் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை உங்கள் உடல் முழுவதும் பெறச் செய்யுங்கள்.

தியானத்தின் மூலம் நீங்கள் பெறும் சக்திகள்
(1) அகஸ்தியர்
அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது உங்கள் உணர்வுகளில்
1.“பச்சிலை மணங்களும்…
2.அபூர்வ மூலிகைகளின் வாசனைகளும் கிடைத்திருக்கும்.

அந்தப் பச்சிலைகளின் மணங்கள் உங்கள் உடலுக்குள் சென்ற பின் உங்கள் உடலில் ஏற்கனவே இருந்த கை கால் குடைச்சல் அல்லது மேல் வலி அசதி மனச் சோர்வு இருந்தால் அது எல்லாம் குறைந்திருக்கும்.

உங்கள் உடலில் மற்ற ஏதேனும் குறையான உணர்வுகள் இருந்தால் அது இப்பொழுது குறைந்திருக்கும்.

(2) துருவ மகரிஷி
துருவ மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது
1.ஒரு வெல்டிங்கைத் தட்டினால் எப்படி அந்தப் பளீர்…ர்ர் பளீர்…ர்ர்…! என்று அந்த ஒளிக் கற்றைகள் வருமோ
2.அதாவது மின்னலைப் போன்று ஒளி தெரிவதைப் போன்று
3.உங்கள் புருவ மத்தியில் இளம் நீலமாக நீலக் கலரில் அந்த ஒளிகள் உங்களுக்குள் கிளம்பியிருக்கும்.

அதே உணர்வுகளை உங்கள் உடலுக்குள் ஈர்க்கும் நிலைகள் கொண்டு உடலுக்குள் சென்ற பின் உடலிலிருந்து வெளிச்சமாகத் தெரியும். வெல்டிங் அடிக்கும் பொழுது வெளிச்சம் எப்படி வருகின்றதோ அதே போல் தெரிந்திருக்கும்.

சிலருக்கு இரவிலே உறங்கும் போது கெட்ட கனவுகள் அடிக்கடி வரும். ஏனென்றால் பகலிலோ அல்லது மற்ற நேரங்களில் உடலில் தீய உணர்வுகள் பதிந்திருந்தால் இரவிலே கெட்ட கனவுகள் வரும்.

கெட்ட கனவுகள் என்பது நாம் பதிவு செய்த உணர்வுகள் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது சோர்வடையும் பொழுது அந்த உணர்வுகளை நாம் சுவாசித்த பின் நம் உயிரிலே அந்த உணர்வுகள் படும் பொழுது எது எது வந்ததோ அந்த உணர்வின் ரூபங்களைக் காட்டும். அப்பொழுது நம்மை அறியாமலே பய உணர்ச்சிகளைக் காட்டும்.

துருவ மகரிஷிகளை எண்ணித் தியானித்து அதன் வலுவைக் கூட்டும் பொழுது கெட்ட கனவுகள் வராது தடுக்கப்படும்.

(3) துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து எண்ணும் பொழுது
1.உங்கள் புருவ மத்தியில் குறு குறு என்று உணர்ச்சிகளை ஊட்டி
2.இளம் நீலமாகத் தெரிந்திருக்கும்.

சிலருக்கு வெளிச்சமாகத் தெரியவில்லை என்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலுக்குள் செல்லும் பொழுது “ஒரு சக்கரம் போல்…” சுழன்று வரும் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கும்.

அதாவது ஒரு ஈரமான துணியிலோ மற்றதுகளிலோ லேசாக மின்சாரம் (EARTH) பாய்ந்தால் எப்படி மினு..மினு… என்று இழுக்குமோ அந்த மாதிரித் தெரிந்திருக்கும்.

இவை எல்லாம் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் ஏற்கனவே பயத்தால்… அவசரத்தால்… ஆத்திரத்தால்… வெறுப்பால்… வேதனையால்… சோர்வால்… சங்கடத்தால்… இதைப் போன்ற அணுக்கள் உருவாகியிருந்தால்
1.நாம் நுகரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பட்ட பின் அந்த அணுக்கள் அஞ்சி நடுங்கும்.
2.அதனால் அந்த உணர்வுகள் ஈரக் கையில் மின்சாரம் ஓடுவதைப் போன்று தெரிந்திருக்கும்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தை எண்ணி நாம் தியானிக்கும் பொழுது
1.புவி ஈர்ப்பின் பிடிப்பற்று மேலே மிதப்பது போல் தெரிந்திருக்கும்.
2.அதாவது இந்தப் பூமியின் பிடிப்பில்லாது (காற்று போல்) பறப்பது போல் தெரிந்திருக்கும்.

 

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்கள் மேலே சொன்ன அனைத்தையும் நிச்சயம் காண முடியும்.. உணர முடியும்… நுகர முடியும்…!

கார்த்திகை நட்சத்திரம் வெளியேறியதால் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் 

உண்மையான பொது நலமும் உதவி செய்ய வேண்டிய முறையும் 

தான் செய்வது தான் சரி…! என்ற எண்ணம் இன்று எல்லோருக்கும் வருவதன் காரணம் என்ன…?

HUMAN TO GOD

“இயற்கையின் விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்புவி ஈர்ப்பு மட்டுமல்லாமல் உருவாகும் அனைத்து அணுத் தன்மையும் அணுத் தோன்றி அணு வளர்க்கும் வளர்ச்சியிலேயே மோதுண்டு மோதுண்டு வளர்ந்து வருகின்றது.

முதலில் அந்த அணு தாவரமாக வளர்ந்தாலும் அல்லது அணுவாக உலோகம் வளர்ந்தாலும் எத்தொடர் வழி அணுக் கொண்டு எதன் எதன் தொடர்பெல்லாம் அந்த ஆரம்ப உயிரணு மோதுண்டு வழி பெறும் தன்மை பெற்றதோ
1.அந்த அவ்வுயிரணுவின் அமில ஆத்மக் கலவையில் அதனின் வளர்ச்சித் தொடர்
2.ஒவ்வொரு சக்திக் கலவை வழி கொண்டு
3.அதன் சேர்க்கை உருவ அமைப்பை (MOULD) வளர்த்துக் கொள்கின்றது.

ஆரம்ப உயிரணுத் தோன்றி இவ்வீர்ப்பில் புல்லாக “புல் செடியாக” வளர்ந்து அப்புல் செடியானது மக்கி மடிந்து விடுகின்றது.

மடிந்தாலும் அது வளர்த்த அவ்வுயிரணு அப்புல் செடியாக வளர்ந்த கலவையின் முலாமுடன் பிறிதொரு வளர்ப்பிற்கு அவ்வுயிரணு வித்து அமிலத் தன்மை வளரும் பொழுது
1.புல்லாகிய முதல் உயிரணு
2.பிறிதொரு வளர்ப்பிற்கு வரும் பொழுது “வலுவான செடித் தன்மை” கொண்ட பிறப்பை எடுக்கின்றது.

இப்பிறப்புத் தன்மை செடி மக்கிய அவ்வுயிரணு அச்செடி வளர்ப்பில் பல அணுக்களை வளர்த்துத் தன் வலுவைக் கூட்டிக் கொண்டு இசெடியின் முலாமான அமிலக் கூட்டுத் தொடர்புடனும் பிறிதொரு வளர்ப்பில் இதற்கு மேல் “வலுவான பூவாகும்” வளர்ப்பாகின்றது.

இத்தொடர் கொண்டு ஒவ்வொரு வளர்ச்சியின் ஈர்ப்பிலும்…
1.எச்சுவை கொண்டு… எவ்வழித் தொடர் வளர்ப்பிலெல்லாம் ஓர் உயிரணு வழித் தொடர் கொண்டு
2.தன் கூட்டுக் கலவையின் வளர்ச்சி மோதலுக்குகந்த முலாமான அமிலத்தைச் சேமிக்கும் வலுக் கொண்டு
3.அவ்வுயிரணு உயிராத்மாவாக புவிஈர்ப்புப் பிடியில் சிக்குண்டு
4.வளரும் தாவர நிலை மாறி ஜீவ சக்தி பெறக்கூடிய நடக்கும்… பறக்கும்… ஊரும்.. நீந்தும்… நிலை பெறுகின்றது.

இந்த வழித் தொடர் எல்லாமே இயற்கையின் நியதிகள்.

ஆக… இந்த மனித உயிராத்மாவின் சக்தி மற்றெல்லா ஜீவ சக்தியினைக் காட்டிலும் உயர்ந்த ஈர்ப்பு சக்தி கொண்டது.
1.ஆத்ம உயிரைச் செயல்படுத்தும் தன்மை கொண்டு தான்
2.இந்தப் பிம்ப உடல் ஆரோக்கியமும் ஞான வளர்ச்சியும் வலுக் கொள்கின்றது.

அப்படி என்றால் உயிராத்மாவை வலுப் பெறும் தன்மைக்கு நம் உணர்வலையின் எண்ணத்தை எப்படிச் செயல்படுத்துவது…?

உடலுடன் கூடிய உயிராத்மாவை…
1.எப்பிம்பத்தில் இவ்வுயிர் ஆத்மக் கலவை செயல்படுகின்றதோ
2.அதே பிம்பத்திலிருந்து தான் இவ்வுயிராத்மாவையும் வலுப் பெறச் செய்ய முடியும்.

குயவன் செய்யும் பானையின் உருவிற்கு அவன் சேர்க்கும் மண்ணும்… அவன் வடிக்க எண்ணிய அச்சின் வடிவாகவும் தான்… பானை அமைகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரணுவும் எப்புவி ஈர்ப்பில் ஜீவன் கொண்டு எதிலேயெல்லாம் மோதுண்டு மோதுண்டு உருவாகி வலுப்பெற்றதோ அதன் தன்மை போன்று
1.நம் உயிராத்மாவானது இந்தப் பிம்ப அச்சுக்கூட்டில் இருக்கும் பொழுது
2.ஆத்ம உயிர் வித்தை உயர்ந்த வித்தாக்க வேண்டும்.

இப்பொழுது நாம் வாழும் இந்தப் பிம்பக் கூட்டிலிருந்து தான் அந்த நிலை பெறவேண்டும் என்பதை உணர்ந்து கிடைத்த “இந்தப் பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்…!”

வியாசகன் கண்ட பிரபஞ்சத்தையே காட்டினார் குருநாதர்

 

சாக்கடை அருகே ஈஸ்வரபட்டர் என்னை (ஞானகுரு) அமரச் செய்து வராக அவதாரத்தின் உண்மைகளைக் காட்டினார். நாற்றதைப் பிளந்து நல்லதை வலுக் கொண்டு எப்படி வராகன் செயல்படுகின்றது என்பதை நான் உணர்வதற்காக வேண்டி அந்த வியாசகன் காலத்திற்கே அழைத்துச் சென்று அவன் கண்ட பிரபஞ்சத்தின் உண்மைகளையும் காட்டினார் குருநாதர்

 

blissful-lights

வேதனையுடன் வாழ்ந்து.. வேதனையைக் கொண்டு செல்வதைக் காட்டிலும் “வேதனையை நீக்கும்” அழியாச் சக்தியைக் கொண்டு செல்ல வேண்டும்

 

விநாயகர் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆதிமூலம் என்ற உயிர் பல கோடி உடல்களில் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… விடுபட வேண்டும்… என்று சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக தீமைகளிலிருந்து விடுபடும் உடலாக மனிதனை உருவாக்கியது “விநாயகா… கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…!” என்று உயிரை வணங்கும்படிச் செய்கின்றனர்.

நம் உடல் நஞ்சை மலமாக மாற்றிய பின் எதையுமே உருவாக்கும் சக்தி பெற்ற மனிதனாக உருவானது. இது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி அகஸ்தியன் கூறிய பேருண்மைகள்.

1.நாம் நுகர்ந்த உணர்வுகள் சிவமாகி
2.அந்த உணர்வின் இயக்கம் வினையாகி
3.வினைக்கு நாயகனாக வாழ்க்கையாகி
4.அதன் உணர்வின் தன்மை உடல்களை மாற்றி
5.இன்று நஞ்சினை மாற்றிடும் திறன் பெற்ற மனிதனை உருவாக்கியது.

சூரியனுக்கெல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள் தான் உருமாற்றங்களும் உணர்வுகள் மாற்றம் எல்லாமே. அதே போல் தான் செடிகள் மாற்றம் கொடிகளின் மாற்றங்களும். (இவைகள் எல்லாம் தானாக எதையும் மாற்றிட முடியாது)

எத்தனையோ கோடிச் செடிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று தாக்கப்படும் பொழுது உணர்வுகள் மாறுகின்றது.. அதனின் சத்துகளும் ரூபங்களும் மாறுகின்றது.

அதே போல் எது வலு கொண்டதோ உயிரினங்கள் ஒன்றுக்கொன்று கொன்று சாப்பிடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் உணர்வுகள் பரிணாம வளர்ச்சி அடைகின்றது,

ஆனால் மனிதனான நாம் முழு முதல் கடவுள்…!

ஏனென்றால் இன்று புதிதாக ஒரு உயிரினத்தையே உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானிகள் வந்துவிட்டார்கள். உயிரணுவின் நிலையையே மாற்றும் தன்மைக்கு வந்துவிட்டார்கள்.

1.ஒவ்வொரு உடல்களிலும் உள்ள அணுக்களை மாற்றுகின்றான்.
2.ஒரு உயிரணு கருவிலே இருந்தாலும் அந்தக் கருவிலேயே இவன் நேரடியாக
2.அந்தக் கருவுக்குண்டான நிலைகளை மாற்றி உருவத்தையே மாற்றுகின்றான்..
3.இப்படி உயிரினங்களையே மாற்றும் தன்மைக்கு வந்துவிட்டான் விஞ்ஞானி.

மனிதனுக்கு நோய் வந்தால் அந்த உடலில் உள்ள எந்தெந்த திசுக்கள் பலவீனம் அடைகின்றதோ அவைகளுக்கு இஞ்செக்சன் மூலம் மருந்தைச் செலுத்தி திசுக்களை செருகேற்றி மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு உறுப்பில் குறைகள் ஏற்பட்டாலும் அதையே மீண்டும் அந்தத் திசுக்களை வலு கொண்டு மாற்றும் தன்மைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
1.திசுக்களை மாற்றி மாற்றி
2.இன்று ஒரு மனிதனை ஆயிரம் ஆண்டுகள் கூட வாழ வைக்க முடியும் என்று
3.அணுக்களின் தன்மையைக் கூட்டிச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் ஆயிரம் ஆண்டு காலம் இப்படி வாழ்ந்து வந்தாலும் அதற்குப் பின் எங்கே செல்வது…?

உயிர் ஒளியானது அதற்கு அழிவில்லை.. வேகா நிலை கொண்டது. ஆனால் உடல்கள் கருகுகின்றது. இது மெய் ஞானிகள் கண்டது. ஆகவே உயிரைப் போல நாம் வேகா நிலையை அடைதல் வேண்டும்.
1.அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது
2.அதைப் பெறுவது தான் “நமது கடமையாக..” இருக்க வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ கோடித் துன்பங்களிலிருந்து மீட்டி நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் இந்த மனித உடலைப் பெற்று ஆறாவது அறிவால் அறிந்து கொள்ளும் சக்தியும் பெற்றிருக்கின்றோம்.

அதை எல்லாம் இப்பொழுது உபதேசித்தாலும்
1.அதைக் கேட்டுக் கொள்ளும் அறிவும்
2.கேட்டுக் கொள்ளும் அறிவிருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளும் அறிவும் உங்களுக்கு உண்டு.

இப்படித் தீமைகளை மாற்றி நல் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் வாழ்க்கையை அமைதியான வாழ்க்கையாகக் கொண்டு வரலாம்.

இந்த லௌகீக வாழ்க்கையில் எப்படி வேதனைப்பட்டாலும் நாம் கடைசியில் கொண்டு போவது என்ன…? வேதனையைத்தான் கொண்டு போக வேண்டும்.

1.வேதனையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றுப் பழகினோம் என்றால்
2.அந்த வேதனையை நீக்கும் சக்தியாகப் பேரொளியாக நமக்குள் வளர்கிறது.
2.அந்த உணர்வை நம்முடன் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது நாம் பிறவி இல்லா நிலையை அடைகின்றோம்.

 

இதைப் பெறுவதற்குண்டான முயற்சிகளை நீங்கள் எடுங்கள்… எமது அருளாசிகள்…!

காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது

விளையாட்டை நேரடியாக ரசித்துப் பார்க்கும் போது வரும் அஞ்ஞானச் செயல்கள் 

அணுகுண்டு கண்டுபிடித்த விஞ்ஞானி கடைசியில் அடையும் வேதனையின் நிலைகள் 

power of Meditation

ஆன்ம ஞானத்தில் உன்னத நிலை பெற விரும்புபவர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உணர்வால் உந்தப்படும் அச்சமுடன் கூடிய எண்ணத்தால் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுக்கும் சுவாச முறை கொண்டு
1,வாழ்க்கை நெறி வழியிலும்
2.குடும்பச் சுழற்சிச் செயலிலும்
3.பந்த பாசச் சுற்றத்தாரின் உணர்வுடன்
4.இந்த உணர்வின் எண்ணத்தையே வெளிப்படுத்தினால்
5.வைத்தியனால் பலரின் உணர்வு எண்ணமுடன் கலந்து
6.அவர்களின் வியாதிக்கு இவர் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி அதனுடன் கூடிய சுவாசத்தை எடுப்பதனால்
7.இந்த வைத்தியனுடைய உணர்வே அவ் ஈர்ப்பின் பிடியில் சிக்குண்டு
8.அவ்வலைத் தொடர் எண்ணம் கொண்ட செயலுடனேயே ஒன்றிவிடும்.

ஆகையினால் வைத்தியர்களின் பெரும்பாலோரின் வாழ்க்கை நிலை அமைதி கொண்ட இன்ப இல்லற குடும்ப வாழ்க்கை அமையாமல் அவர்களின் வாழ்க்கையே அமைதியற்ற நிலையில் தற்கொலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக்கூடிய சுழற்சியுடன் ஊன்றிவிடுகின்றது.

அதே போன்று விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை வளரவிடுபவர்களும் எவ் அலை ஈர்ப்பில் தன் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி தன் ஞானத்தை எவ் விஞ்ஞானச் செயல் கண்டு எவ் ஒரு மாற்றப்படைப்பைத் தன் அறிவின் ஞானம் கொண்டு உருவாக்க முற்படுகின்றார்களோ அதே ஈர்ப்பின் சுழற்சி வட்ட அலைத் தொடருடன் எண்ணத்தை ஒன்றிவிடுகின்றனர்.

தன் அறிவின் ஞானத்தால் அறியும் புதிய விஞ்ஞான அலையில் சிக்குண்டு அதனுடனே ஒன்றி தன் உணர்வின் எண்ணச் சுவாசத்தால் தன் ஆத்ம ஞானமும் அதுவாகவே உட்பட்டு விடுகின்றனர்.

அப்படிப்பட்ட விஞ்ஞானனி தன் குடும்ப வாழ்க்கையையோ உற்றார் சுற்றார் மற்றோரின் எண்ண அலையை மனிதச் சுழற்சி நெறி முறை பழக்க வழக்கங்களையும் அறியும் தன்மை அற்று விடுகின்றனர்.

எந்த ஆராய்ச்சி ஈர்ப்பின் பிடி அலையில் சிக்குண்டனரோ பசி தாகம் மற்றெல்லா உணர்வுகளையும் மறந்து அவற்றின் பிடிக்குத் தன் ஞான அறிவின் ஆத்மாவையே செயலாக்குபவனுக்கு
1.வாழ்க்கையில் ஏற்படும் எவ் எதிர் நிலையான எதிர்ப்பையும் ஏற்க முடியாத் தன்மையில்
2.விஞ்ஞானத்தால் தன் அறிவின் ஞானம் கொண்டு பல புதிய செயற்கைச் செயல்களைச் செய்விக்கும் அந்த விஞ்ஞானி
3.தன் உணர்வின் ஞானத்தில் அமைதி கொண்ட வாழ்க்கையை அமைக்க முடியாமல்
4.தற்கொலைப் பிடிப்பில் தன்னையே மாய்த்துக் கொள்கின்றான்.

ஆகவே உணர்வால் செலுத்தும் எண்ணம்…
1.எவ் ஈர்ப்பலையையும் தன் உடலுடன் எடுத்துக் கொள்ளும் செயலாக ஒன்றாமல்
2.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாக இவ்வெண்ணம் செயல்பட வேண்டும்.

ஒன்றைக் கொண்டு பலவற்றை வளர்க்க வேண்டும் என்றால் அவ் ஒன்றான விதையை புழு பூச்சி அரிக்காமல்… சொத்தைப் பட்டு வெடிப்பு ஏற்படாமல்… விதை நன்றாக இருக்க வேண்டும்.

அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்த விதையைத் தான் பக்குவப்படுத்திய நிலத்திலிட்டுப் பயிராக்கி அதன் மகசூலாகப் பல விதையை எடுக்க முடியும்.

அதைப் போன்று மனித வித்தின் வளர் வித்து ஆத்மாவை எப்படியப்பா வளர்ப்பது..?

நம் ஆத்ம ஜீவனை… இஜ்ஜீவனுடன் கூடிய உடலின் உணர்வால்
1.எண்ணத்தில் எடுக்கும் செயல் கொண்டு
2.நற்சத்தான வித்தாக்கி வித்தைக் கொண்டு
3.பல வித்துக்களை எடுக்க வேண்டும்.

ஆக… பிறந்தோம்… வளர்ந்தோம்… மணந்தோம்.. பிள்ளைகளைப் பெற்றோம்… என்ற வழித் தொடரில் வளர்ப்பதல்ல ஆத்ம வித்தின் சக்தியை…!

கூர்மை அவதாரத்தில் ஆமையை ஏன் போட்டார்கள்…?

 

ஆமை தன் உணவைத் தேடிச் சென்று கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தால் அதை விழுங்க ஒரு நரி வருமே என்றால் அதைக் கூர்மையாகப் பார்த்து தன் சிரசையும் கால்களையும் தன் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கின்றது அந்த ஆமை. இருந்தாலும் நரி அங்கேயே இருந்தால் ஆமையினால் அங்கிருந்து வெளி செல்ல முடியாதபடி ஆகின்றது. நரியின் நினைவாகவே அது இருக்கின்றது. ஆமை இரை தேடும் உணர்வுகள் தடையாகும் பொழுது ஆமையின் உடலில் நோயாகி நரியின் உணர்வுகளே அதிகமாகின்றது. உடலை விட்டுப் பிரியும் ஆமையின் உயிர் அடுத்து நரிக்குள் அழைத்துச் சென்று நரியாக உருப்பெறச் செய்கின்றது. 

 

soul guru - gnanaguru

உயிராத்மாவை ஞானகுருவாக ஆக்குவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒன்று பலவாகும் வித்தை வளர்க்கும் சக்தி எத்தொடர்பின் வளர்ப்பில் வளர்கின்றதப்பா…? தான் பெற்ற சக்தியைப் பலரும் பெறவல்ல வழித் தொடர் வளர்க்கும் முறை எப்படி…?

மனித எண்ணத்தின் பகுத்தறியும் உணர்வு ஞானம் வளரும் ஈர்ப்பலைக்கு ஞானிகளின் வழி வகுத்து குடும்ப வாழ்க்கை முறையில் பல நெறி முறைகளைக் காவியக் கதைகளில் உணர்த்திச் சென்றார்கள்.

அதன் வழித் தொடரில் பக்தியை ஊட்டி மனித ஆத்மாக்களின் எண்ணச் சிதறலை வழி வகுத்து
1.மனிதன் தன்னை மறந்து சில தேவையின் இச்சையில் தன் உணர்வையே இழக்கும் நிலைக்குச் செல்வதை
2.அன்றே காவியங்களில் கதையாக – தெய்வங்களான நிலைக்குக் கதை உருவங்கள் தந்து செயல்படுத்தினார்கள்.

உடல் உறுப்புகள் செயலிழந்தாலும் கை கால்கள் முடம் ஏற்பட்டாலும் மனிதன் பகுத்தறியும் ஆற்றலினால் செயற்கை உபகரணத்தால் தன் தேவையை அமைத்துக் கொள்கின்றான்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையின் மாறுபாட்டுக்கு ஏற்ப வெயில் குளிர் மழை காற்று இவைகளைத் தாங்கக்கூடிய வீடுகளை அமைத்துக் கொள்கின்றான்.

அதை எல்லாம் செய்தாலும்… இந்தப் புவியில் வாழும் மனிதன்
1.தன் வளர்ச்சியால் ஆத்ம பலம் கொண்டு
2.பூமியின் ஈர்ப்பலையில் இருந்து விடுபடும் உணர்வின் செயலுக்கு
3.தன் ஆத்ம ஞானத்தை வளர்த்துக் கொண்டால் தான் மனிதனின் ஆத்ம பலம் கூடும்.

ஞானத்தால் சக்தி கொண்டு
1.தான் பெற்ற சக்தியைப் பிறிதொரு ஆத்மாவும் பெறவல்ல போதனையால்
2.எச்சக்தி கொண்டு நம் ஆத்ம ஞானம் வளர்ந்ததோ
3.அதற்கு வலுவான ஆத்ம வலு அலைச் சக்தியை நம் ஆத்மாவும் பெற்று வலுப் பெறகின்றது.

ஏனென்றால் காந்த மின் ஈர்ப்பு ஜீவ உயிர் இது…!

இந்த உயிர்த் துடிப்பின் ஆத்ம ஈர்ப்பின் வலு கூட்ட இவ்வுணர்வின் எண்ணத்தைப் பக்குவம் கொண்டு ஞானம் வளர்த்து ஞானத்தால் அறியும் உயர் ஞான வழி முறையை
1.ஞானம் வளர்க்கப் பிறிதொரு ஆத்ம சுழற்சி எண்ணத்தில் செலுத்தி
2.அந்த வலு சக்தியை நம் உயிராத்மா பெறவேண்டும் (இது முக்கியம்).

உயிர் தந்தாய்… உடல் தந்தாய்… குருதியினைப் பாலாக்கி வளர்த்திட்டாய்… என்று அன்னையை முதல் தெய்வமாக குருவாக வணங்குகின்றோம். ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்…?

தன் உயிராத்மா தான் முதல் குரு. தாயானவள் நம் ஈர்ப்பிற்கு ஜீவன் பெற வழி தந்து வளர்ச்சி தந்து முதல் குருவானாலும் இந்த ஆத்ம குரு வளர்ப்பினால் தானே அக்குருவை நாம் அடைய முடிகின்றது.

குருவின் உண்மை நிலை என்ன..? போதனையால் பெறுவது குரு அல்ல…!

1.குருவின் போதனையை குரு காட்டியை போதனையாக நம் ஆத்ம குரு ஏற்கும் பொழுது தான்
2.எக்குருவின் போதனையையும் இந்தக் குரு செயலாக்கி வழிப்படுத்தும் முறைக்கு வருகின்றது

நம் ஆத்ம குரு வளர்ந்தால் தான் குரு சிஷ்யத் தன்மை வளர்கின்றதப்பா…! இக்குரு முறை அனைத்து நடை முறைச் செயல்களுக்கும் ஒன்றியது தான்.

இவ்வாத்ம குருவை… ஞானம் வளர்க்கும் நற்குருவின் செயல் குருவாக… இவ்வாத்ம குரு வளர்வது தான் குருத் தன்மை பெறும் நிலை.

 

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் உயிர்க்குருவை உயர் குருவாக
2.இந்தப் புவி ஈர்ப்புப் பிடி சுழற்சியிலிருந்து விடுபட்டு
3.இந்த உயிராத்மாவை ஞான குருவாக்குங்கள்.

உணவு பரிமாறும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது

கோலம் – எல்லாவற்றையும் இணைப்பது போல் குடும்பத்தில் அரவணைக்கும் சக்தி பெறவேண்டும்

வீட்டு வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடச் சொன்னதன் உண்மை நிலைகள்

eswara and guru eswarapattar

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் யாரை நினைக்க வேண்டும்…?

 

நம் உயிர் நமக்குள் “ஓ… ம்…” என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது.

உயிர் ஓ… என்று இயக்கி ம்… என்று நம் உடலாக்கப்படும் பொழுது அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது… குருவாக இருந்து வழி நடத்துகிறது.

இந்த மனித வாழ்க்கையிலிருந்து என்றும் ஒளிச் சுடராக வளர்ந்திடும் அந்த உணர்வினை உயிரில் உருவாக்கிப் பெற்ற நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் அருளை நாம் இப்பொழுது ஏங்கிப் பெறுவோம்.

1.ஈஸ்வரபட்டரை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது நம் உயிர் அதை அணுவின் கருவாக்குகின்றது.
2.அப்படிக் கருவாக்கப்படும் பொழுது
3.நமக்குள் உருவாக்கும் ஈசனாக “நம் குரு வருகின்றது…!”

ஆக அவர் பெயரும் ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பெயரை வைத்தார்கள். அவர் வளர்த்த அருள் சக்தியைத் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

குருவாக உபதேசித்த அந்த உணர்வுகளைப் பதிவாக்கும் பொழுது
1.அது குருவாக இருந்து அரூப உணர்வை நமக்குள் உணர்த்தி
2.அவர் (ஈஸ்வரபட்டர்) பெற்ற வழியில் நம்மையும் அருளானந்தம் பெறும் நிலைகளுக்கு
3.அது குருவாக நம்மை அழைத்துச் செல்லும்.

அகஸ்திய மாமகரிஷியை நம் குருநாதர் கண்டுணர்ந்த அருள் வழியில் நஞ்சினை வென்றிட்ட அந்த உணர்வைப் பெற்ற குரு அருள் நமக்குள் உறுதுணையாக இருக்கும்.

உறுதுணையாக இருக்கும் நம் குருவின் துணையால்…
1.அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தியைக் கவரும் தன்மை பெற்று
2.இருளை வென்று ஒளியை உருவாக்கும் உணர்வின் சக்தியைப் பெறும் தகுதிக்கே
3.இந்தத் தியானத்தை மேற்கொள்கின்றோம்.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எண்ணும் பொழுதெல்லாம்
1.நமது உயிரும் நம் குருவும் இணைந்தே வருகின்றார்கள்.
2.இந்த இணைந்த உணர்வுடனே குரு அருளை நமக்குள் பெறுவோம் என்ற
3.ஏக்க உணர்வுடனே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தியானிப்போம்.

ஆமைக்கு பாறையைப் போன்ற கனமான ஓடு எப்படி உருவாகிறது..?

 

சந்தர்ப்பத்தால் அதிகமான வெப்பம் கொண்ட ஒரு பாறை மீது கண்ணுள்ள புழு விழும் என்றால் அந்த வெப்பம் தாங்காது அது துடிக்கின்றது. குறுகிய் நேரத்தில் அது மடிய நேர்ந்தாலும் அதற்குள் இதிலிருந்து தப்ப வேண்டும் என்ற வீரிய எண்ணம் கொண்டு பாறையின் வெப்பத்தையும் பாறையின் ரூபத்தையும் உற்றுப் பார்த்துக் கவர்கின்றது. அந்த உணர்வின் சத்து உயிரிலே விளைந்து அடுத்த உடலாக ஆமையாகின்றது.

 

SOUL CLEANING WEAPON

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் முக்கியத்துவம்

 

இந்த உடலை வளர்க்கத் தான் எல்லா இதுகளும் முயற்சிக்கின்றது. ஏனென்றால் எது உருவானதோ அதற்கு அந்த உணவு தேவை. அது கொடுக்கவில்லை என்றால் அது சோர்வடையும்.

இப்படித்தான் வழக்கத்தில் இருந்து கொண்டே உள்ளது.

இருப்பினும்…
1.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி நீக்கி வளர்ச்சி அடைந்து வந்த நாம்
2.மீண்டும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இனம் புரியாத நிலைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

நாம் படிப்படியாக வளர்ச்சிக்கு வந்து மனிதனாக வந்தோமோ அதே போல் தேய்பிறையாகும் பொழுது படிப்படியாக எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப
1.நம் ரூபங்களை மாற்றிக் கொண்டேயிருக்கும் நம் உயிர்.
2.அது ஒன்று மட்டும் மாறுவதில்லை.

ஆக இந்த உடலில் உள்ள உணர்வுகள் மாறுகின்றது. இந்த உணர்வுக்கொப்ப அடுத்த சரீரம் அமைகின்றது.

வேதனையை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலாக வேதனையை நீக்கும் எல்லா ஞானமும் இருக்கின்றது. அவ்வப்பொழுது அந்த நொடியிலேயே தீமைகளையும் துயரங்களையும் நீக்கிக் கொண்டால் நமக்கு அந்த நோய் வராது.

அத்தகைய நோய் வந்தாலும் கூட… நாம் அதை மறக்க இந்த முறைப்படி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
4.இப்படி நாம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிக் கொண்டு வர முடியும்.

ஏனென்றால் அந்த வேதனையை மறக்க இதை நாம் எடுத்தால் அது மறைகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

விஷத்தின் தன்மையை நீக்கியது அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. மனிதனில் மிக உயர்ந்த நிலைகள் பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.

ஒரு சமயம் சூரியனே அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் என்றும் அழிவதில்லை. வருவதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

இந்த மனித உடலில் உயிரைப் போலவே இருளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன்.

நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோமோ… அதே போல்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வை நாம் எடுத்தோம் என்றால்
2.அவன் ஒளியாக மாற்றிச் சென்ற பாதையில் வளர்ந்து செல்ல முடியும்.

வெறுப்பையும் கோபத்தையும் சங்கடத்தையும் சலிப்பையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் மீண்டும் தேய்பிறையாகி இதை எல்லாம் நோயாகி தேடி வைத்த செல்வத்தையும் பாதுகாக்க முடியாதபடி செல்கின்றோம்.

1.ஆனால் செல்வமும் கூட இருக்கும்
2.இருந்தாலும் நன்றாகச் சாப்பிடக்கூட முடியவில்லையே என்ற இந்த வேதனை வந்துவிடுகின்றது.
3.ஆக நம் உடலில் முடியாது போய்விடுகின்றது.

இதை எல்லாம் கொஞ்சம் யோசனை செய்து… தியானம் ஏன் செய்ய வேண்டும்…? என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம் அடிக்கடி வரும் சலிப்பையோ சங்கடத்தையோ வெறுப்பையோ வேதனையையோ நமக்குள் நிலைத்திருக்காது அதைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னாடி நமக்குள் மற்ற உணர்வுகள் விளைந்திருந்தாலும் அதனுடைய வலிமையும் அதிகம் தான்.

இருந்தாலும்… இப்பொழுது ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் நேரடியாகவே
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
3.முந்தைய அணுக்களும் நல்ல அணுக்களாக மாற்றமடையும்.

எது எப்படி இருந்தாலும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கடைப்பிடித்து வந்தால் சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கின்றது… மன உறுதி கிடைக்கின்றது… வாழ்க்கையில் எப்படிச் சீர்படுத்தலாம் என்ற சிந்தனையும் கிடைக்கின்றது.

அதனால் இந்த ஆத்ம சுத்தி செய்வோர் அனைவரும் மன அமைதிப்படுத்தி அமைதியான வாழ்க்கை வாழலாம். என்றுமே ஏகாந்த நிலையில் அமைதியான துருவ நட்சத்திரம் இருப்பது போன்று நாமும் அந்த ஏகாந்த நிலை பெற முடியும்.

 

ஏனென்றால் மனிதனின் கடைசி நிலை இது…!

சுவை, நுகரும் உணர்வு, அதற்குத்தக்க சமைக்கும் நிலை 

செடியில் உருவாகும் அணு மனிதனின் உணர்வு பட்டால் ஏற்படும் மாற்றம் 

நடனக் கலையின் முக்கியத்துவம் என்ன…? 

herbal power of agastyar

அகஸ்தியன் அன்று நுகர்ந்த மகா பச்சிலைகளின் மணங்களைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

 

அகஸ்தியன் வாழ்ந்த அக்காலங்களுக்கு உங்கள் நினைவைச் செலுத்தி அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்தப் பச்சிலையின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அந்தப் பச்சிலையின் மணங்கள் இப்பொழுது வரும்.

சிலர் கிடைக்கவில்லை என்றால் “எனக்குக் கிடைக்கவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் சிலருடைய எண்ணங்கள் சில நேரங்களில் உங்களை அறியாதபடி வேறொரு பக்கம் திசை திருப்பும்.

இந்தப் பேருண்மையின் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் பொழுது இடைமறித்தே..
1.தொல்லைப் பட்டவர்கள் தொல்லையின் நிலைகளைச் சிலர் எண்ணும் பொழுது
2.“நமக்குக் கிடைக்குமா…?” என்ற சில உணர்வுகளும் ஊடுருவும்.

அப்படி ஊடுருவும் நிலை வரும் பொழுது நாம் தியானிக்கும் பொழுது அந்த நேரத்தில் கிடைக்காமல் இருக்கலாம். அந்த அகஸ்தியன் பெற்ற மணங்களை அறியவிடாமலும் செய்யலாம்.

அப்படி அறிய முடியவில்லை என்றால் அது கிடைக்கவில்லையே…! என்று சோர்வடைய வேண்டாம். ஆக அதை நாம் உணர முடியவில்லை என்று தான் வருகின்றது.

உபதேச வாயிலாகப் பதிந்த உணர்வுகள் கொண்டு நீங்கள் தியானித்தாலும் அகஸ்தியன் உணர்வை உணரும் தடையை ஏற்படுத்தும் பொழுது அதை உங்களால் நீக்கிட முடியும் என்ற நம்பிக்கையில் நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற முடியும்
2.அவர் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வை விளைய வைத்த அந்த அருள் சக்தியை
3.எங்களுக்குள் வளர்க்க முடியும் என்று வலுவாக எண்ணுங்கள்.

இப்பொழுது கிடைக்கவில்லை என்றாலும் இரவு தூங்கும் பொழுது கூட இந்த உணர்வின் உண்மையை நீங்கள் உணர்ந்திட வேண்டும். அதை வளர்த்திட வேண்டும்.

கிடைக்கவில்லை என்று சோர்வடைய வேண்டாம்.
1.நிச்சயம் உங்கள் அனைவருக்கும் அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்கள் கிடைக்கும்
2.அதை நீங்கள் எப்படியும் பெறவேண்டும்
3.நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும்
4.உங்களுடைய சொல்லும் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் நோய்கள் பறக்க வேண்டும்
5.அருள் ஞானம் அங்கே உதயமாக வேண்டும்
6.இன்றைய விஞ்ஞான உலகில் தீமைகள் பரவி வரும் நேரத்தில்
7.தீமைகளை அகற்றும் சக்தியும் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியும் நீங்கள் பெறவேண்டும் என்ற நோக்குடன் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

தீமைகளைத் தடுக்கும் சக்தி உங்களுக்குள் வளர்ந்து உங்கள் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் இது பதிவாகி அவர்களும் தீமைகளை வென்றிடும் சக்தி பெறவேண்டும் அவர்கள் உடலிலும் அது விளைய வேண்டும் என்பதே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய அருள் வழி.

ஏனென்றால் ஒன்றில் விளைந்து தான் ஒன்றிலிருந்து வருகின்றது.
1.குருவின் சக்தியில் விளைந்தது
2.அதற்கு முன் அகஸ்தியனின் சக்தியில் விளைந்தது.
3.அகஸ்தியன் சக்தியை குருவின் சக்தி விளைய வைத்தது
4.அந்த உணர்வின் சக்தியை எமக்குள் (ஞானகுரு) விளைய வைத்தார்.

விளைந்த வித்தினை உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவாக்கி அதை விளையும் பருவத்தினையும் ஏற்படுத்துகின்றோம்.

அப்படிப் பதிவான வித்தின் துணை கொண்டு அந்த அகஸ்தியரின் அருள் உணர்வுகளை நீங்கள் எவ்வாறு பருக வேண்டும்…? எதனை வளர்க்க வேண்டும்…? எதனை உருவாக்க வேண்டும்…? என்ற உணர்வினையும் உங்களுக்குள் விளக்க உரைகளாகக் கொடுக்கின்றோம்.

அதன் துணை கொண்டு… அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளை எல்லாம் நாங்கள் பெறுவோம் என்ற உறுதியுடன் நீங்கள் செயல்படுத்துங்கள்.

சிறிது தடைப்பட்டாலும்.. அகஸ்தியனின் அருளாற்றல் மிக்க சக்தியை
1.எனக்குள் நுகர்வேன்
2.அதை வளர்ப்பேன்
3.அருள் வழியில் செல்வேன்
4.அருளானந்தத்தைப் பெறுவேன் என்ற உணர்வை ஏங்கிப் பெறுங்கள்.

அந்த அகஸ்தியனின் அருள் சக்திகள் இங்கே நமக்கு முன்னாடி மிதந்து கொண்டுள்ளது. அதை நாம் அனைவருமே பெறமுடியும்.

அகஸ்தியனால் வளர்க்கப்பட்ட சக்திகள் பரவிப் படர்ந்து கிடந்த நிலையைத்தான் வியாசகன் தனக்குள் பெருக்கிக் கொண்டு அந்த உணர்வின் நிலையை மீண்டும் உருவாக்கப்பட்டு உண்மையின் உணர்வை வெளிப்படுத்தினான்.

வியாசகனுக்குப் பின் அந்த அரசர்கள் தங்கள் உடலின் இச்சைக்கே சக்திகளை வளர்த்துக் கொண்டவர்கள். ஆக இந்த உடல் இச்சைக்கு நமக்குத் தேவையில்லை.

உயிரின் உணர்வின் தன்மை கொண்டு என்றும் மரணமில்லாப் பெருவாழ்வு என்றும் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையும் அருளானந்த நிலை என்றும் அடைவதே வைகுண்ட ஏகாதசி – ஏகாந்த நிலை.

“வைகுண்டம்,,,” என்பது எங்கே அது உருவானதோ அதன் உண்ர்வின் தன்மையை நாமும் எடுத்துக் கொண்டால் ஏகாந்த நிலைகள் கொண்டு என்றும் நாம் மகிழ்ந்து மகிழ்ந்து வாழும் உணர்வின் ஒளியின் சரீரமாகப் பெறுகின்றோம்.

அந்த ஏகாந்த நிலை பெறும் தகுதியை உருவாக்கத்தான் இந்த உபதேசமே…!

அந்த அகஸ்தியன் பெற்ற அருளானந்தத்தை நீங்களும் பெற்று அவன் துருவனாகி அந்தத் துருவ நட்சத்திரமாக ஆன நிலையை நிச்சயம் அடைய முடியும்.

அந்த அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளையும் அவன் நுகர்ந்தறிந்த நஞ்சினை வென்றிடும் மகா பச்சிலைகளின் மணங்களையும் தியானிக்கும் பொழுது நீங்கள் அனைவரும் அந்த மணத்தைப் பெறுவீர்கள்.

மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்கள் உங்களுக்குள் விளையும்…!

யாரோ செய்வார்… எவரோ செய்வார்… என்ற எண்ணம் நமக்குத் தேவையில்லை

 

மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டாலே போதுமானது. அகஸ்தியனை எண்ணி அவன் துருவனான நிலையையும் துருவ மகரிஷியாக ஆனதையும் துருவ நட்சத்திரமாக ஆனதையும் வாழ்க்கையில் அடிக்கடி எடுத்துக் கொண்டால் குடும்பமோ தொழிலோ மற்ற எந்த விஷயமாக இருந்தாலும் அதை எல்லாம் சீராக்க முடியும். உயர்ந்த சக்திகளை எடுக்கும் பொழுது நமக்குள் அதனால் மகிழ்ச்சியும் கிடைக்கின்றது. நமக்குச் சொந்தம் அது தான்…!

 

Big and Little Dippers

பலம் பொருந்தியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கூட மரண பயம் ஏன் வருகிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காற்றலையில் புவி ஈர்ப்பின் பிடியில் வாழும் நாம்… நம் உணர்வில் உணர்வில் உந்தப்படும் எண்ணத்தில் உணர்வின் செயலைக் கொண்டு மட்டும் உடல் சேர்க்கை அமிலக்கூட்டு வளரவில்லை.

எறும்பு கொசு தேள் பாம்பு மூட்டை இதைப் போன்ற உயிரினங்கள் சந்தர்ப்பத்தால் நம்மை அவை கடிக்கும் பொழுது அவை சேமித்த விஷ நிலை கொண்ட அமில உணர்வானது அதன் கடி உணர்வை நாம் அறியும் பொழுது அதன் ஈர்ப்பு குண அமிலம் முழுவதையும் நம் உடல் பிம்ப உணர்வலையின் அமிலத்துடன் எடுத்துக் கொள்கின்றோம்.

வாழ்க்கையில் சில ஜீவராசிகளான இந்தப் பூச்சிகள் நம்மைக் கடிக்காமல் இருக்குமா…?

இவற்றின் ஈர்ப்பலையின் உணர்வின் அச்சம் நம் எண்ணமுடன் மோதும் பொழுது
1.அதனுடைய விஷம் நம் உடலில் ஏறிக் கடிக்கும் பொழுதும்… தாக்கும் பொழுதும்… நசுக்கும் பொழுதும்…
2.அதற்கு ஏற்படும் மரண பயம் நம் உடலிலும் ஏறிவிடுகின்றது.

எவ்வமில குண ஜெந்துவின் கடிபட்டதோ அதனுடைய உணர்வையும் நாம் பெற்று அவற்றின் விஷ உணர்வின் தீய அமிலங்களும் நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.

நம் உடல் அமிலத்துடன் அப்படிச் சேரும் பொழுது அதனுடைய வழித் தொடர் கொண்ட எண்ண குணத்தை இந்த உடலைக் கடிக்கும் சில ஜீவ ஜெந்துக்களின் நிலையை நாம் அடைகின்றோம்.

இதிலிருந்து தப்பும் முறை எப்படி..?

1.ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரி யார்…?
2.ஞானத்தை வளர்க்க விடாமல் இருப்பதும் எல்லா நிலைகளுக்கும் தடை ஏற்படுத்தும் எதிரி யார்,,,?
3.இந்த மனிதனுக்கு நற்குண வழிக்குச் செல்ல வழி காட்டும் நண்பன் யார்…?
4.அன்பான எதிர் அலையின் உணர்வை அடையவல்ல சக்தி நண்பன் யார்…?

எதிரியான நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்பக்கூடுதான்… நற்சக்தியின் ஞான அலையைப் பெறவல்ல தன்மையைச் செயல்படுத்தவல்ல நண்பனும் இந்த உடல் பிம்பக் கூடுதான்…!

ஆகவே தீய குணத்தின் எண்ணத்தை மேற்கொள்ளும் பொழுது தீய சக்தியின் நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்ப வீட்டினுள் வாழும் உணர்வின் எண்ணச் செயல் தான்.

நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வதுவும் இந்த உணர்வின் எண்ணச் சக்தி கொண்ட நல் அலையின் சக்தியினால் தான்.

உணர்வில் எடுக்கும் எண்ணத்தின் செயல் எத்தன்மை கொண்டுள்ளதோ அத்தன்மை கொண்ட ஒவ்வொரு மனிதனையும் அந்தந்த நிலைக்கு உட்படுத்துவது இந்த உடல் என்ற பிம்பக்கூடு தான்.

விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் தற்கொலையின் செயலில் ஈடுபடுவதும் அவற்றின் வளர்ப்புத் தன்மையும் எதனால் ஏற்படுகின்றது…?

மருத்துவர்கள் சந்திக்கும் ஆத்மாக்களின் உணர்வில்…
1.பெரும்பகுதி எண்ணத்தின் வியாதியான “மரண பயம்…” கலந்தே வருவதால்
2.அத்தகையவர்களின் எண்ணத் தொடர்புடனே இவர்களின் வாழ் நாள் செல்ல நேர்கின்றது.
3.இப்படி அந்த அச்ச உணர்வின் பிடிக்கு இவர்களின் உணர்வலையும் செல்வதினால்
4.இதே சுழற்சி வட்டத்தால் இவர்கள் உணர்வுடன் இந்த மரண பயம் உந்தப்பட்டுவிடுகிறது.

 

அதனால் இவர்களின் உணர்வின் எண்ணமே இந்த மரண பய ஈர்ப்புப் பிடியில் சிக்குண்ட நிலையில் பலரின் செயல் இதே உணர்வுடன் செயல் கொள்கிறது…. தன்னால் அதைத் தாங்க முடியாது போகின்றது.

கண்களை மூடித் தியானிப்பது நல்லதா… கண்களைத் திறந்து தியானிப்பது நல்லதா…?

கண் பார்வை – திருஷ்டி 

ஓ..,ம் உயிர், ஊழ்வினை, பதிவு ஆன்மா 

health and beauty

“அகத்தின் அழகை முகத்தில் காணலாம்…” என்பதன் பொருள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒலி கொண்டு தான் ஒளி கொண்டு உருவான உணர்வு சக்தியில் இவ்வொலியின் உணர்வில் தான் உழல்கின்றது… உலகச் சுழற்சியும்… ஜீவ சக்தியும்… உயிர் அணுத் துடிப்புகள் யாவுமே…!

இவ் ஒலி ஈர்ப்பின் தாக்குதலுக்குகந்த உணர்வின் சுழற்சி ஈர்ப்புப் பிடியில் பிடிபட்டுள்ள வளர்ச்சி தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே.

1.இனிமையான இசைக்கு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பு செல்லும் பொழுது
2.இனிமையின் நாத ஒலி ஜீவ சக்தி ஒவ்வொன்றின் அலையிலும் மோதுண்டு
3.அதன் தொடர்பு கொண்ட வளர்ப்பு சக்தி ஒவ்வொன்றிலும் கூடுகின்றது.

அதிர்வு… இடி… மின்னல்… காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேக ஒலி… இந்நிலை மோதும் பொழுது இவ்வுடலே அவ்வுடலின் “அச்ச உணர்வுடன்” செல்வது போன்ற உணர்வின் பயம் ஏற்படுகின்றது.

அருவியில் அமைதியாகச் சலசலப்புடன் அந்நீரின் ஒலி மோதலைக் கேட்கும் பொழுது அவ் இனிமையுடன் கூடி நம் உணர்வின் எண்ணமும் மயங்குகிறது.

மாலை நேரப் பட்சிகளின் அமைதியான ஒலி நம் உணர்வின் இனிமை உணர்வைக் கூட்டுகின்றது.

ஒலியின் ஈர்ப்பு எந்நிலை கொண்டு கால நிலையில் உணர்வின் மோதலில் மோதுகின்றதோ அதற்குகந்த வளர்ச்சி மனித உடலின் உணர்விற்கும் ஜீவராசிகள் தாவரங்கள் கனி வளங்கள் ஒவ்வொன்றின் வளர்ச்சிக்குமே இவ் ஒலியுடன் ஒலி கூடும் ஒலித் தன்மை கொண்டு வளர்ப்பு நிலை கூடுகின்றது.

இவ்வொலியின் செயற்கை அதிர்வில் சுற்றுப் புறத் தாவர இன வளர்ச்சிக்கும் நகர்ப்புறத்தைத் தாண்டி வரும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் மாறு கொண்ட வளர்ப்பு விகித நிலை இருக்கும்.

1.இவ் ஒலி உணர்வில் சேமிக்கும் அச்ச உணர்வின் ஈர்ப்பே
2.மனித உணர்வில் ஒவ்வொரு நொடிக்கும் இம்மரண பயம் என்ற பிடி ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் தன்மை
3.இன்றைய நாகரீக செயற்கைப் பிடி வாழ்க்கையில் உள்ளது.

இயற்கைச் சுழற்சியில் இயற்கையிலிருந்து மாறுபட்டு இப்பேராசைப் பிடியில் நாகரீகச் செயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் இந்த மரண பயம் என்ற பிடியுடன் சிக்கித்தான் இன்று வாழும் நிலை உள்ளது ஜீவ சக்தி அனைத்திற்குமே.

உருவத்தில் பெருத்த யானையும் உணர்வில் மரண பயத்தை வளர்த்துக் கொண்டு
1.தன் இரு செவிக்குள்ளும் எவ் எறும்பும் பூச்சிகளும் ஏறா வண்ணம்
2.தன்னைத்தானே செவியை விசிறிக் கொண்டே காத்து வாழுகின்றது.

இந்த எறும்பின் ஊர்தல் அதன் செவி மட்டத்தில் உள்ள ஜவ்வில் பட்டவுடன் ஏற்படும் இரைச்சல் அவ் யானையின் உணர்விற்கு மரண பயத்தின் அச்சத்தை ஏற்படுத்தி அவ் எறும்பின் ஊர்தல் செவிக்குள் பாய்ந்தவுடன் தன்னை அறியாமல் வெறி கொண்டு மிகவும் பதட்டம் ஏற்பட்டு அந்த உணர்வின் பிடியிலேயே சிக்குண்டு மாய்கின்றது, இன்னும் சில யானைகள் அவ்வுணர்வின் மதம் பிடித்துக் கொள்கிறது.

இவ்வுணர்வால் எடுக்கும் அச்சத்தால் விளையும் பயம் தான் இந்த மரண பய உணர்வு.

எண்ணத்தால் இவ்வுணர்வின் பிடியை மாற்றிக் கொண்டு… உயர் ஞான வழி ஈர்ப்பு வளர்ச்சிக்கு எண்ணம் செல்லும் வாழ்க்கை இருந்தால் இப்பிம்ப உடலில் ஏற்படும் அச்ச உணர்வின் நிலை மாறும்.

எச்சக்திக்கும் சக்தி பெற இந்த உடல் பிம்பம் தேவை. ஆனால்
1.இந்த உடல் பிம்ப உணர்வில் ஏற்படும் மாற்றங்களும் நலிவுத் தன்மையும்
2.இந்த உடல் பிம்பத்தைப் பேணி வளர்க்கும் ஈர்ப்பலையும்
3.இந்த உடல் பிம்பத்தின் சுகம் காணும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆவல் உணர்வும்
4.பிம்ப உடலின் அழகின் ஆசையிலும் இவ்வுணர்வின் ஈர்ப்பை எண்ணம் செலுத்தி வாழும் வாழ்க்கையைக் காட்டிலும்
5.உணர்வின் எண்ணம் உயர்ந்த குணத்தின் ஈர்ப்பில் செல்லும் உணர்வால்
6.இந்தப் பிம்ப உணர்வும் ஆரோக்கிய அழகும் தானாக வளரும்.
7.அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பதின் பொருளும் அதுவே.

மரண பயம் என்ற அச்சத்தை விட்டு இந்த உடல் கூட்டின் அழகு ஆரோக்கியம் இவற்றைப் பேணிக் காக்கும் உணர்வு ஈர்ப்பை விட்டு
1.நல்ல ஞான வளர்ச்சி வாழ்க்கையுடன் நாம் வாழ்ந்தால்
2.அமைதி கொண்ட வாழ்க்கையும் ஆரோக்கிய உடல் நிலையும்
3.வாழ்க்கையில் செய்யப்படும் தொழில் நேர்மையும் அதற்குகந்த வருவாயும் இன்பமும் நமக்குக் கிட்டும்.

உணர்வின் சுழற்சி இந்த நிலையில் சுழன்றால் தான்… வளர்ச்சியின் “ஆத்ம சொத்தை” வளர்க்க முடியும்.

சிந்தித்துச் செயல்படும் திறனை வளர்க்க வேண்டிய அவசியம்

 

நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஏற்படுகின்றது. அதனால் நண்பருக்குள் வெறுப்பாகின்றது. ஒரு பொருளை வாங்கும் பொழுது தரமில்லாததை வாங்கிவிடுகின்றோம். அதனால் வேதனைப்படுகின்றோம். ஒரு காரியம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். மாறாக நடந்தால் கோபம் ஆத்திரம் எல்லாம் வருகிறது. இதைப் போன்ற நிலைகளைச் சமப்படுத்தவில்லை என்றால் உடல் நோயோ மன நோயோ ஆகின்றது. அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி தடுக்க வேண்டும் அல்லவா…! ஆக நம்முடைய சிந்தனைத் திறனை வளர்க்கச் செய்வதற்குத்தான் கோவிலில் விளக்கை வைத்துக் காட்டுகின்றார்கள். 

 

court case

நம்முடைய கேஸ் நீதிமன்றத்திலே ஜெயமாக வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

ஒரு காரியத்திற்கே செல்கிறோம் என்றால் நாம் நல்ல ஒழுக்கங்களுடன் நடந்துள்ளோம். ஆனால் அதே சமயத்தில் அபகரிக்கும் நோக்கத்துடன் வருபவர்கள் பல தவறுகளைச் செய்து தங்களை நியாயப்படுத்துகின்றனர்.

செல்வத்தை அபகரிக்கும் நிலையில் அவர்கள் நியாயப்படுத்தும் பொழுது “உண்மைக்குப் புறம்பாக நடக்கின்றாரே…!” என்று நாம் வேதனையை நுகர்ந்து விட்டால்
1.அது நம்முடைய ஞானத்தை குறைத்து…
2.சிந்திக்கும் திறன் அற்ற நிலையில் செயலிழந்து
3.இருள் சூழும் நிலைக்குக் கொண்டு சென்று விடுகின்றது.

நாம் சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் நம் நல்ல குணங்கள் உணர்வுகள் எப்படி இருள் அடைகின்றதோ இதிலிருந்து வரக்கூடிய சொல்லை நாம் பிறரிடம் சொன்னால் அவருடைய உணர்வும் இருளடையும் நிலையே வருகின்றது.

உதாரணமாக நமக்காக வாதாடும்… நமக்காகச் செயல்படும் வக்கீலின் உணர்வுகளையும் இது செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. இது எல்லாம் “நம்மிலிருந்து தோன்றும் நிலைகள்…”

1.நம்மை எண்ணித்தான் நமக்காக வாதாடுபவர்களும்.. செயல்படுபவர்களும் செய்வார்கள்.
2.ஆனால் நம்முடைய வேதனைப்பட்ட உணர்வுகள் அந்த வேதனையின் இயக்கமாக அவர்களையும் இயக்கிவிடும்.

ஏனென்றால் தவறு செய்பவர்களின் வலிமை அதிகமாகிவிட்டால் இப்படி நடக்கிறதே…! என்ற வேதனையை நாம் எடுத்தால் நமக்குள் இருக்கும் வலிமை இழக்கப்பட்டுவிடுகின்றது.

ஒரு பாம்பினம் எப்படி மற்றொன்றின் மீது விஷத்தைப் பாய்ச்சி அதனின் வலுவை இழக்கச் செய்து விழுங்குகின்றதோ இதைப் போல
1,அவர்கள் விஷத்தைப் பாய்ச்சிய உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு
2.நாம் அவர்களுக்கு இரையாகக்கூடாது… இரையாகி விடக்கூடாது.

தீமையின் உணர்வின் இயக்கத்தால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை இரையாக்காது காக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாம் பெறவேண்டும் என்ற வலிமையைக் கூட்ட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்கள் முழுவதும் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று சிறிது நேரமாவது ஏற்றுக் கொள்ளுங்கள்.

பின் கோர்ட்டுகளில் வியாஜ்யமோ மற்றதுகள் நடந்தால் இதே நினைவை எண்ணி “உங்கள் பார்வை” அனைத்தையும் அவர்கள் பால் செலுத்துங்கள்.

நீதிக்காக வாதாடும் அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் விளைய வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள். உங்களுக்காக யார் வாதாடிச் செல்கின்றனரோ அவர்களுக்கு
1.அந்த ஆற்றல்மிக்க சக்தி பெறவேண்டும்
2.அவர்கள் பேச்சும் மூச்சும் ஆக உண்மையின் உணர்வை உணர்த்தும் சக்தி பெறவேண்டும்
3.உண்மைகள் வெளிப்பட வேண்டும்… உண்மையின் நிலைகள் அங்கே நிலைநாட்ட வேண்டும்
4.அவர்களுக்கு அந்த மன பலம் வேண்டும் என்றும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உண்மையின் உணர்வுகளை உணர வேண்டும் என்று எண்ணினால் போதும்.

நம் வக்கீல் அங்கே இருந்தாலும் ஜட்ஜ் அங்கே இருந்தாலும் நம் பக்கம் நியாயம் இருக்கிறது என்றால் நாம் இங்கிருந்தே இந்த உணர்வினைப் பாய்ச்சினால் அங்கே அந்த நல்ல தீர்ப்புகள் வரும்.

பதட்டமும் பயமும் கொண்டு என்ன ஆகுமோ…? என்ற உணர்வை எடுத்தால் “என்ன ஆகுமோ…?” என்ற வலுவை நாம் எதிரிக்கே வலு கொடுக்கின்றோம்.

அத்தகைய வலு உருவாக்கி விட்டால் எதிரி தான் வெல்ல முடியுமே தவிர நாம் வெல்ல முடியாது. ஏனென்றால்
1.வேதனைப்படுத்தும் விஷங்கள் அவர்கள் உடலிலும் கலந்த பின்
2.அந்த விஷத்தை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்வே வரும்.
3.அதன் வழி நமக்குள் நல்ல உணர்வுகளை எதிர்ப்பார்ப்பது கடினம்.

இதைப் போன்று நாம் ஒவ்வொரு காரியங்களிலேயும் நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உடலுக்குள் சிறிது நேரம் செலுத்திக் கொள்ளுங்கள்.

பின் எந்தக் காரியங்களுக்குச் சென்றாலும் அது ஜெயம் பெறவேண்டும்… எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெறவேண்டும்… நாங்கள் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணிவோர் நலம் பெறவேண்டும்… பொருளை உட்கொள்வோர் நலம் பெறவேண்டும்… என்னிடம் தொழில் செய்வோர் நலமும் வளமும் பெறவேண்டும்.. என்ற உணர்வினை நீங்கள் எடுங்கள்.

1.நமக்குள் சீராக்கும் உணர்வுகள் நிச்சயம் வரும்
2.அச்சுறுத்தும் உணர்வுகள் அணுக்களின் தன்மைகள் குறையும்
3.அருள் ஒளி பிறக்கும் உணர்வின் அணுக்கள் நமக்குள் வரும்.

எதனையுமே நாம் சீர்படுத்தும் உணர்வுகளை அந்த மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றி இதைச் செயல்படுத்துவோம் என்றால் “வேகா நிலை” என்ற நிலையை நமக்குள் உருப்பெறச் செய்ய முடியும்.

 

நல் உணர்வின் வித்தை உருவாக்கும் வழி

நல்லவன்.. உயர்ந்தவன்…! என்றாலும் பிறரின் குறை உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் எங்கே செல்வோம்..?

மறைக்கப்பட்ட… மறைந்த உண்மைகளை… வெளிப்படுத்தினாலும் இன்று ஏற்றுக் கொள்வாரில்லை

 

DEATH fear

இறவா வரம் வேண்டுமா…? பிறவா வரம் வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“மரண பயம்…!” என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல. ஜீவ பிம்பம் அனைத்திற்குமே உண்டு. பிறப்பில் நாம் எடுக்கும் சுவாச உணர்வின் அலைத் தொடரில் பிறந்த குழந்தைக்கும்… ஏன்… கருவில் இருக்கும் குழந்தைக்குமே… மரண பயம் என்ற அச்ச உணர்வு உண்டு.

பிறந்த குழந்தைக்கு அந்தக் குழந்தையின் உடலில் கடிக்கும் கொசுவினால் வலி ஏற்பட்டாலும்… உலுக்கும் தன்மை கொண்டு உலுக்கி விழுந்து சில குழந்தைகள் வீர்…! என்று அழவும் செய்யும். அதிர்வு நிலை ஏற்பட்டவுடன் இக்குழந்தைகள் அழுகும்.

கருவிலேயே மரண பயம் என்ற அச்ச உணர்வுடனேதான் கருவே உருவாகின்றது. அதன் வழியில் கரு வளர்ச்சியின் நிலை கூடி வருவதினால் இவ்வுணர்வின் அச்சம் மாறி “மரண பயத்தை எப்படி விட முடியும்…?”

1.மரண பயம் என்ற உணர்வின் பிடியில் வாழ்க்கை உள்ளதனால்தான்
2.மனித வாழ்க்கையில் சோர்வும் இன்னலும் கலகங்களும் கோபத் தன்மையும்
3.பொறாமை உணர்வும் போட்டி நிலைகளும் பேராசை நிலையும் புகழ் நிலையும் ஏற்படுகின்றன.

ஆனால்
1.”பிறவா வரம் வேண்டும் இறைவா…!” என்று இறை சக்தியை இறைஞ்சி
2.இன்னமுதுடன் இனிதிசை கொண்ட இல்லற இன்ப இல்வாழ்க்கை என்ற இனிய வழித் தொடரில்
3.ஈன்றெடுக்கும் இறைச் செல்வ மக்களுடன் இயற்கை வழி இனிய ஒளி இன்பம் பெற
4.பிறவா வரம் பெறும் இறை ஞானம் நிலையுடன்தான்…
5.வாழ்க்கை நிறைவு செ(ய்)ல்வது “பிறவா வரம் பெறும் நிலை…!”

பிறவா வரம் பெறும் உணர்வு கொண்டு சேமிக்கும் உணர்வின் எண்ணத்தில் கூடும் அமிலச் சாற்றில்
1.மரண பயம் என்ற உணர்வுடன் வளரும் பருவக் காலமும் வளர்ந்த வாழ்க்கைக் காலமும்
2.மனிதனின் உணர்வில் இவ் அச்ச உணர்வினால் தான் இப்பேராசை புகழ் போட்டி பொறாமை எல்லாமே வருகிறது.

ஆறிலும் சாவு… நூறிலும் சாவு…! என்ற பயத்தையும் ஊட்டி… பின் பிறவா வரம் என்ற இயற்கை உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் இல்லறம் இன்பம் கொள்ளுமா…! இயற்கை வாழ்க்கையும் நமக்குக் கூடுமா…? நாளை… நாளை…! என்ற உணர்வே மனிதனுக்கு உழன்று கொண்டு உள்ளது.

தாவரங்களைப் போன்றும் பூமிக்கடியில் வளரும் கனி வளங்களைப் போன்றும்…
1.பூமியின் ஈர்ப்புப் பிடியுடன் வளராமல்
2.எங்கும் சென்று எதனையும் செயலாற்றக்கூடிய நிலையில் நடந்தோடும் செயலைக் கொண்ட ஜீவ பிம்ப மனிதனுக்கு
3.இன்றைய நாகரீகச் சுழற்சிப் பிடிப்பு வாழ்க்கையில்
4.தன் ஜீவனுக்குப் பிறகு சேமிக்கும் பேராசை பொருள் செல்வச் செயலினால் தான்
5.இன்றைய ஜீவ சக்திகளின் மரண பய உணர்வு ஒவ்வொரு நொடிக்கும் அதிகப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் தான் உண்ணும்… உடுக்கும்… வசிக்கும்… வாழ்க்கைப் பிடியில் சிக்கி… தேவைக்கு மேல் அடையும் பேராசை குணத்தினால் தன் வாழ்க்கையையே மரண பயத்திற்கு அடகு வைத்து விட்டான் இன்றைய கலி மனிதன்.

அதிலிருந்து இஜ்ஜீவ பிம்ப உடலை மீட்டத் தெரியாத அச்ச உணர்வில் இருக்கும் வரை
1.உண்ணும் உணவையும் உணரும் காம இச்சையின் இன்பத்திலும்
2.செயற்கை வாழ்க்கை முறையிலும் தான் இன்பம் உள்ளது என்று ஏங்கியே வாழ்ந்து
3.இதன் தொடர் நிலையிலேயே நீடிக்க அதற்கு வேண்டிய பொருளை ஈட்டவும்
4.அதிலே தவறு ஏற்படும் பொழுது செய்த தவறை மறைக்கப் பிறிதொரு தவறின் நிலைக்குச் சென்று
5.பொருள் (சொத்து செல்வம்) என்ற சேர்க்கை இருந்தால் தான் எந்த இன்பத்தையும் அடையலாம்
6.எந்தச் செயலையும் செய்யக்கூடிய “வல்லுனரையும்” பணத்தால் சேவகம் (அடிமையாக்க) செய்ய வைக்க முடியும்..! என்ற குணமும்
7.முன்னேறிய இன்றைய அரசியல் ரீதியிலும் பொருள் என்ற பிடியில் புகழ் என்ற இன்பம் காணவும்… சென்று விட்டதால்
8.உயர்ந்த ஞான சக்தி கொண்ட ஞான வித்தகர்களின் ஞான போதனையே இவ்வாயிரம் ஆண்டு காலத்தில் அற்றுப்போய் விட்டது.

ஒவ்வொரு மனிதனும் தன் ஜீவ சக்திக்குத் தகுந்த தேவையின் செயல் கொண்டு வாழாமல்
1.உடல் குன்றி விட்டால்… நாளை என்ன செய்வோம்…?
2.செய்யும் தொழில் நசிந்து விட்டால்… நாளை என்ன செய்வோம்…? என்ற எண்ணத்துடனே வாழும் நிலை உள்ளது.

இன்று வாழும் சுக வாழ்க்கைக்காக வேண்டி “அன்றன்று சேமிக்கும் பொருளே பிரதானம்…!: என்ற எண்ணத்தின் பேராசைப்பிடியில் மரண பயம் என்ற அச்ச உணர்வுடனே உள்ளார்கள்.

ஆகவே…
1.பக்தி என்ற முறையில் ஆண்டவனை வணங்குவதிலிருந்தும்
2.எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பொருளின் சேர்க்கையிலிருந்தும்
3.மரண பயத்தைத் தன்னுள் ஏற்றிக் கொண்ட மனிதனுக்கு
4.எப்படியப்பா மரண பயத்தை விட்டு விட்டு
5.ஞான வளர்ச்சியையோ தெய்வ சக்தியையோ வளர்த்துக் கொள்ள முடியும்…? அல்லது பெற முடியும்…!

விஞ்ஞானத் துறையில் எடுத்துக் கொண்டாலும் அதிலே பல செயல்களை ஆராயும் மனிதர்கள் எல்லாம் தற்கொலை என்ற தன்னை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு ஏன் செல்கிறார்கள்…?

பிறவா வரம் பெறும் இனிய சக்தி கொண்ட ஞானிகள்… தன் உடலைப் பாதுகாக்க இந்த வாழ்க்கையில் உள்ள பொழுதே உடல் என்ற கூட்டின் முதுமை உணர்ந்து.. பிறவா சக்தி கொண்ட நிலையில் உடலைச் சமாதி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு இந்த உணர்வின் மரண பயம் என்ற அச்ச உணர்வு இருப்பதில்லை. ஆனால் நமக்கு…?

முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய திதி – மோட்ச தீபம்

 

காசைக் கொடுத்து முன்னோர்களை விண் செலுத்த முடியாது. அமாவாசைக்குத் திதி கொடுத்தாலும் அது மந்திரக்காரன் கையில் ஆன்மாவை ஒப்படைத்தது போல் தான் ஆகும். பௌர்ணமி அன்று குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களை ஏகோபித்த நிலைகள் கொண்டு உந்தி விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஒளிக் கடலில் இணையச் செய்யவேண்டும். இது தான் ஞானிகள் காட்டிய மோட்ச தீபம். 

 

be positive

வாழ்க்கையில்… கஷ்டம் என்று நினைத்தால் எல்லாமே கஷ்டம் தான்..! கஷ்டத்தை விட்டு விட்டு “நம்மால் முடியும்…!” என்று எண்ண வேண்டும்

 

ஒரு புதிய சாதனத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலையில்
1.அதற்குள் இன்னென்ன அளவில் அதற்குண்டான பொருளைச் சேர்த்தால்
2.அதனின் இயக்கச் சக்தி அது இந்த இடம் வலு தாங்கக்கூடியது என்று உணர்கின்றார் விஞ்ஞானி…
3.அதன்படி சீராக வேலை செய்யும் அந்தச் சாதனத்தை உருவாக்குகின்றார்.

அந்த விஞ்ஞானி அவர் கற்றுணர்ந்த நிலைகளை எல்லாம் தன்னிடம் சீடனாக வருபவரிடம் கற்பிக்கின்றார். அவர் கற்றுணர்ந்த வழியை அவருக்குள் காட்டப்படும் பொழுது சீடரும் கற்றுணர்ந்து வருகின்றார்.

அதன் வழியில் சீடர் வந்தாலும் அவர் எதைப் போதித்தாரோ அதன் வழிகளில் அவர் சீராகச் செயல்படுவார் என்றால் அவர் அதிலே வெற்றி பெறுகின்றார்.

1.ஆனால் கற்றுக் கொடுக்கும் பொழுது “கடினம்…” என்று எண்ணி அந்த்க் கல்வியைக் கற்க நேர்ந்தால்
2.ஒவ்வொரு எண்ணங்களிலும் அந்தக் கடுமை வந்துவிடும்
3.சீடனாக வருபவர் சிந்திக்கும் திறனும் வலு இழக்கப்படும்.

அவர் ஒரு இன்ஜினியராக வந்தாலும் எப்படியோ அவர் பாட நிலைகளை எண்ணி உயர்வுக்கு வந்தாலும்
1.அந்தப் பாட நிலை தான் மீண்டும் அவருக்கு வரும்.
2.ஆனால் மூலக்கூறுகளை அறிய முடியாது.
3.ஏனென்றால் அவரவர்கள் எடுத்த உணர்வு கொண்டு தான் அது இயக்கும்.

அதைப் போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை உங்கள் உணர்வுடன் இணைத்து விட்டால்… அந்த உணர்வை நீங்கள் நுகரும் பொழுது… அந்த அறிவின் ஞானமாக வளருகின்றது.

1.அது ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்குத்தான்
1.ஒவ்வொரு குணங்கள் உருவாவதும்
2.அதனின் சிறப்பின் தன்மையை நினைவு கூறும் பொழுது
3.அதனதன் கருக்கள் உங்களுக்குள் உருவாகின்றது.

அந்த ஞானிகளின் நினைவாற்றலின் தன்மை உங்களுக்குள் வருவதற்கு ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் எலும்புகளுக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்குகின்றோம். இந்தப் பதிவினை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவாக்க வேண்டும்.

அவ்வப்பொழுது உங்கள் வாழ்க்கையில் வரும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை மாற்றியமைக்க
1.இந்தப் பதிவான நிலைகள் நீங்கள் நினைவு கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டே வந்தால்
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நீங்கள் பிறவி இல்லா நிலைகள் அடைய இது உதவும்.

இல்லை என்றால் இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் உணர்வுகள் வளர்ச்சி அடைந்தால் மீண்டும் இதனுடைய உணர்வுகள் நம்மை இன்னொரு பிறவிக்குள் அழைத்துச் சென்றுவிடும்.

 

மனிதனான பின் பிறவி இல்லா நிலைகள் அடைவதே… சப்தரிஷி மண்டலத்துடன் இணைவதே கடைசி நிலை…!

 

சண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்

வேண்டாதவர்கள் என்று பகைமையானால் நம் நல்ல குணங்களைக் காக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

சமப்படுத்தி மகிழ்ச்சி பெறச் செய்யும் வழி

mystic meditation

புறப் பொருளால் சாதனை செய்யும் விஞ்ஞானத்தை விட மனித உடலுக்குள் சேமிக்கும் சக்தி கொண்டு செயற்கரிய செயலைச் செய்ய முடியும் – ஈஸ்வரபட்டர்

பாலில் சேர்க்கப்படும் பொருளைக் கொண்டு அதன் சுவையும் மணமும் நிறமும் எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று தான்
1.இந்த மனிதப் பிம்ப உடலில் சேர்க்கப்படும் உணர்வின் எண்ண சுவாச அமிலத்தால்
2.பிம்பக் கூட்டின் உருவ நிலையும்… குண நிலையும்… சொல் வடிவமும்… அமைகின்றதப்பா…!

நல் உணர்வு சுவாச முறையால்… நாம் எடுக்கும் ஜெப சக்தி காந்த மின் அலைச் சுவாசத்தால்…
1.உடல் பிம்பக் கூட்டில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
2.சக்திவாய்ந்த ஒளியில் வளப்படுத்த முடியும்.

இந்த உடல் பிம்ப ஜீவக் கூட்டிலிருந்து… ஜீவ சக்தியுடன் கூடிய இவ்வலை ஈர்ப்பின் குணத்தின் சக்தி கொண்டு தான்..
1.சகல சக்தியையும் அறியவல்ல ஆற்றலையும் செயல் முறையும்
2.என்றுமே அழியா வண்ணம் பல படைப்பைப் படைக்கவல்ல படைப்பின் சக்தியும்
3.இந்தப் பிம்பக் கூட்டிற்கு உண்டு

இந்தப் பிம்பக் கூட்டில் எடுக்கும் இச்சக்தியினால் எச்சக்தியையும் அடையலாம் என்று உணர்த்துகின்றீரே…! அப்படியானால் நீரிலும் நெருப்பிலும் குதிக்க முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

கடும் உஷ்ண அலையைக் கக்கும் நெருப்புக் குண்டத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலுடன் அமர்ந்திருக்க முடியுமா..? என்றால் முடியுமப்பா…!

1.தான் எடுக்கும் உயர் சக்தி அலையின்… “ஒளியுடன் ஒளியாகும் ஒளி சக்தி பெற்றால்…”
2.தணல் விட்டு எரியும் நெருப்பில் அமர்ந்தாலும்
3.இந்த உடல் பிம்ப ஈர்ப்புச் சக்தியிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி அலையைப் பாய்ச்சினால்
4.அந்த நெருப்புக் கோளம் தான் அணையுமே தவிர இந்தப் பிம்ப உடலைப் பாதிக்காது.

இயற்கையின் சீற்றமுடன் விளையாடுவதற்கல்ல உயர் ஞான சக்தி. ஆனால் உள்ள சக்தியை உணர்த்துவதற்காக இதைச் சொல்கிறோம்.

ஆழ் கடலாக இருந்தாலும்… பூகம்பமோ… சூறாவளியாகவோ.. இருந்தாலும் ஒலியின் சக்தியுடன் ஒளிரும் சக்தி கொண்டு எந்த வகையான இயற்கையின் சீற்றத்திலிருந்தும் பிம்ப உடலையும் தப்ப வைக்க முடியும்.

திராவகத்தில் போடப்படும் மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கத்தின் குணம் எப்படிக் கரைவதில்லையோ அதைப் போன்று
1.இந்த உணர்வால் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால்
2.ஒலி கொண்டு ஒளி பெற்றோமானால்
3.உயர் ஞான சக்தியை வழி கொண்ட எச்சக்தியாகவும் நாம் ஆக முடியும்.

பூமியின் ஜீவ சக்தியைக் கொண்டு வளர்த்த சக்தியின் தாதுப் பொருள்களில் பிரிந்த திரவக சக்தியிலிருந்து (பூமிக்கடியில் இருக்கும் எண்ணை – CRUDE OIL) ஒன்றைக் கொண்டு பலவாகப் பெட்ரோலியப் பொருள்களைப் பல வகையிலும் பிரித்து பல சாதனைகளைப் புரிகின்றோம் அல்லவா…!

அதைப் போன்று..
1.இந்த உணர்வின் சுவாசத்தால் எடுக்கும் இஜ்ஜீவ சக்தியைக் கொண்டு
2.இப்பேரண்டப் பெருநிலையின் வளரத் தக்க முறைதனையும்
3.ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றோன்று உருவாகும் முறைதனையும்
4.அணுவுக்குள் அணுவாக ஊன்றி அணுச் செயல் தொடர்பனைத்தையும்
5.ஒலியையும் ஒளிக் காட்சிகளையும் மணத்தையும் சுவை குணத்தையும் அவை மாறும் செயற்கை வடிவையும்
6.இவ்வெண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால் எடுக்கவும் உணரவும் நமக்குள் வளர்த்திடவும் முடியும்.

இந்நிலையெல்லாம் பெறுவதற்கு மனித உணர்வில் ஊன்று கோலாக நிலைத்துள்ள “மரண பயம்” என்ற இந்த வித்தை முதலில் அகற்ற வேண்டும்.

ரிஷிபத்தினி விளக்கம் – சூரியனில் விழும் கரும்புள்ளியினால் நமக்கு வரும் பாதிப்பு என்ன..?  

 

குடும்பத்தை வெறுத்துத் துறவறம் பூண்டேன் என்று சென்றால் அது முனி தான். அகஸ்தியன் தன் மனைவியுடன் இணைந்து தான் துருவ மகரிஷியாக ஆனான். விஞ்ஞானத்தின் விஷ விளைவுகளால் சூரியன் கக்கும் சில விஷத் தன்மைகள் கரும்புள்ளியாக எப்படி மாறுகிறது என்றும் அதனின் பாதிப்பு நம் உடலிலும் அது எப்படிப் படுகிறது என்று குருநாதர் காட்டினார். நம் எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் அடைவது தான்.

 

Hiding things

நாம் செய்யும் தவறை மறைத்தால் ஏற்படும் தீமையான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்…!

 

இன்று மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அன்புடன் பண்புடன் பழகுகிறோம் எல்லாம் செய்கிறோம். இருந்தாலும்…
1.வெளியிலே தெரியாதபடி நமக்குள் குறைகளை வளர்த்துக் கொண்டால்
2.வெளியிலே நாம் பேசும்போது அல்லது கேட்கும் பொழுது
3.எனக்கும் அவருக்கும் ஒரு குறையும் இல்லை…! என்று நாம் மறைத்துப் பேசினாலும்
4.நம் உயிருக்குள் அதை மறைக்க முடியாது.

அதே சமயத்தில் நாம் ஒரு தவறையே செய்துவிட்டோம் என்றால் அந்தத் தவறின் தன்மை பிறருக்குத் தெரிந்தால்
1.நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்களே…! என்று
2.இதற்காக வேண்டி நாம் பலதுகளைப் பொய்யாகச் சொல்லி மறைப்போம்.

ஆனால் மறைத்தால் என்ன ஆகும்…?

இப்படி மறைத்திடும் உணர்வுகளை நமக்குள் வளர்க்க வளர்க்க நமக்குள் வளரும்… வளர்க்க வேண்டிய உண்மையை… மறைத்திடும் நிலை வருகின்றது.

1.அப்படி மறைத்திடும் நிலை வரப்படும் பொழுது இருள் சூழ்ந்த நிலைகளே நமக்குள் வரும்
2.பின் சூனிய நிலைகளாக அது விளையும்… நம் சிந்திக்கும் திறனையே இழக்கச் செய்யும்
3.கடைசியில் இருள் சூழும் தன்மையையே உருவாக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுகள் இப்படியெல்லாம் அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது… அதன் உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றது…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்..?

ஆனால் இதை அடக்கும் ஆறாவது அறிவைக் கொண்டு மாற்றி அமைத்துச் செயல்படுத்த முடியும். விநாயகர் கையில் என்ன வைத்திருக்கின்றது…? அங்குசம்.

1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அதனின் உணர்ச்சிகளை ஊட்டி
2.தவறான பாதைகளுக்குச் செல்லும் உணர்ச்சிகளை ஊட்டி
3.நம்மை அழைத்துச் செல்லும் அதனின் இயக்க நிலையை மாற்றிட
4.நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கி எடுத்து அதை அடக்க வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா… சேனாதிபதி…! என்று ஞானிகள் காட்டினார்கள். மகரிஷிகளின் அருளை நாம் நுகர்வோம் என்றால் நம்மை அறியாமல் தவறு செய்யும் உணர்வுகளை அது அடக்குகின்றது.

பின் இந்த உணர்வின் தன்மை இப்படி அடக்கிப் பழகிவிட்டால்
1.எப்பொழுது அந்த உணர்வுகள் தவறு செய்ய அல்லது மறைக்கத் தூண்டினாலும்
2.அடுத்த கணம் இந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்தே
3.அந்த உணர்வின் தன்மை உணவாக எடுக்கும் அந்த (ஒளியான) அணுக்கள்.
4.அப்பொழுது நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தடுக்கும் அணுக்களாக இது விளையும்.

அத்தகைய அணுக்கள் விளைந்தால் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நம் மனதைத் தூய்மைப்படுத்தி மன நோயாகவோ உடல் நோயாகவோ மாற்றாதபடி நம்மை மகிழ்ந்து வாழச் செய்யும்.

 

இது எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று வான இயலை அறிந்து கோவிலை உருவாக்கிய மெய்ஞானிகள் 

நாஸ்டர்டாமஸ் சொன்ன கருத்துக்களில் உள்ள உண்மைகள்

திருஞான சம்பந்தரின் உணர்வைப் பெற்றுத்தான் அருணகிரி ஞானியானார் 

Legend of Agastyan

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவருமே நீங்கள் அகஸ்தியராக ஆக வேண்டும்..!

 

இந்த வாழ்க்கைக்காகச் செல்வம் தேவைப்படுகின்றது, ஆனாலும் நாம் சேர்த்து வைக்கும் செல்வம் எதுவுமே நம்முடன் கடைசியில் வருவதில்லை.

பொருளில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை… அருளில்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை…! என்கிற பொழுது அருளை வளர்க்கப்படும் பொழுது அந்த உலகம் அமைகின்றது. பொருள் இருக்கும் பொழுது இந்த உலகத்தில் மகிழ்ச்சியின் தோற்றம் வருகின்றது.

1.பொருள் குறைந்து விட்டாலோ மதிப்பு இழக்கப்படுகின்றது
2.அன்றே நமக்குள் சோகம் குடிகொண்டு விடுகின்றது
3.வேதனை என்ற உணர்வே வளர்கிறது.
4.இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் கடந்து பழக வேண்டும்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் மக்களுக்கு இந்த அருள் ஞானத்தைப் பற்றி எடுத்துச் சொல்தல் வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.நம் குருநாதராக மாற வேண்டும்
2.அகஸ்தியராக மாற வேண்டும்
3.துருவ மகரிஷியாக மாற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக அந்த ஒளிச் சரீரம் பெறும் தகுதி பெற வேண்டும்.

ஆகவே இதன் வழிப்படி உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். ஏனென்றால் இன்றைய உலகம் மிகவும் விஷத் தன்மை கொண்டதாகப் பரவிக் கொண்டிருக்கின்றது… மனிதனை அழிக்கும் நிலையாக வந்து கொண்டிருக்கின்றது.

அந்த விஷம் நம்மை வீழ்த்தி விடாதபடி இனி இந்த உடலே ஒளியின் சரீரமாக… என்றென்றும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் தன்மை வர வேண்டும்.

1.இந்த விஞ்ஞானத்தின் விளைவுகளால் உலகம் தவிக்கப் போகின்றது.
2.மனிதனுடைய சிந்தனைகள் காட்டு விலங்குகளைப் போன்றே சிந்தனைகள் வந்துவிடப் போகின்றது
3.(இதை ஞானகுரு உபதேசித்த வருடம் 1997 – இன்று அந்த நிலை வந்துவிட்டது)

இதிலே எல்லாம் நாம் சிக்கிடாதபடி ஒவ்வொருவரும் அகஸ்தியராகிடல் வேண்டும்… ஒவ்வொருவரும் துருவ மகரிஷியாகிடல் வேண்டும். மக்களுக்கு நல் உணர்வுகளை எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது.

அவர்கள் எப்படியும் வளர வேண்டும் என்ற எண்ணங்களை நாம் எடுக்க வேண்டும். நாம் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்ட பின்
1.வாய் கொண்டு சொல்லக்கூட வேண்டியதில்லை.
2.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானம் பெறவேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்ற எண்ணங்களை எடுத்துப் பாய்ச்சி
4.நமக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நாளடைவில் வளர்க்கப்படும் பொழுது அவர்களும் நம்மை அணுகுவர். அவர்கள் அணுகினால் அவருக்கு இலாபம். அணுகவில்லை என்றால் நாம் “வருத்தப்பட வேண்டியதில்லை…”

1.ஆகவே அவர்கள் எப்பொழுதும் பெறுவார்கள்…! என்ற உணர்வை மட்டும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் போதும்.
2.இந்த நல்ல செய்தியை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டேன்..! என்கிறார்கள் என்ற எண்ணத்தை
3.நமக்குள் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அனைவரும் பெறும் தகுதியைப் பெறும் காலம் வரும்…! என்ற முழுமையான நிலையை… “அந்த நம்பிக்கையுடன்…” நாம் இருத்தல் வேண்டும்.

பொதுவாகப் பெண்கள் நீங்கள் ஒவ்வொரு இடத்திலேயும் அணுகும் பொழுதெல்லாம் நீங்கள் அகஸ்தியராக மாறவேண்டும். குறைகளை வளர்த்திடவே கூடாது. குறைகள் இருந்தால் அதை நீக்கும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும் பண்புகளை வளர்க்க வேண்டும். அவர்கள் எல்லாம் அப்படித்தான்…! என்ற நிலைகளில் உடனே சொல்லிவிடக்கூடாது.
1.குறைகளை நாம் கேட்டாலும்..
2.மனதில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் ஒருவர் நம்மிடம் ரொம்பவும் பழகி விட்டார் என்றால் அவர் சொல்வதை மட்டும் அதிகமாக வைத்துக் கொள்வோம். அப்புறம் அவர் சொல்வதை வைத்து அடுத்தவரைக் கணித்தோம் என்றால் அவரைக் குற்றவாளியாக்குவோம்.

ஆகவே அவர்கள் இருவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படும் உணர்வையே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். “ஒன்றி வாழும் நிலையே வளர வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படிப்பட்ட உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எல்லாம் ஒன்று என்ற நிலைகள் உணர்தல் வேண்டும். யாரும் பிரிந்து வாழவில்லை.

நண்பர் நன்றாக இருக்க வேண்டும்…! என்று நாம் எடுத்துக் கொண்டால் அந்த நல்ல சக்தியும் வளர்கின்றது.

ஆனால் நண்பர் இப்படித் தியான வழியில் இருந்தும் குறையாகி விட்டார்…! என்று அந்தக் குறையின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் அந்தக் குறையின் உணர்வே நமக்குள்ளும் வளர்கின்றது.

1.நண்பர் உயர வேண்டும்…!
2.அதன் வழி குரு அருள் அங்கே அவருக்குக் கிடைக்க வேண்டும்
3.தியானத்தின் மூலம் அவர் எடுத்துக் கொண்ட நல்ல பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதை
4.இப்படித்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோவிலுக்குள் சென்ற பின் சிலர் ஏன் அருளாடுகிறார்கள்…?

 

வாழ்க்கையின் மீது பற்று கொண்டு வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் சில எதிர்பாராத சம்பவங்களால் என்ன ஆகின்றது. கோவிலுக்குச் சென்று அதை வேதனையுடன் அங்கே முறையிட்டு அழுது துன்பங்கள் தாங்காதபடி என்னை உன்னிடமே அழைத்துக் கொள் என்று சிலர் சொல்லுவார்கள். தெய்வத்திடம் இப்படி முறையிட்டு மந்திரங்களையும் மற்றதுகளையும் சொல்லி வாழ்ந்து இறக்கும் ஆன்மாக்கள் அடுத்து இதே போன்று கோவிலுக்குப் பக்தி கொண்டு ஏக்கத்தில் வருபவர்கள் உடலுக்குள் சென்று அருளாடத் தொடங்கும்.

 

Infection in body

உடல் உறுப்புகளுக்குள் ஏற்படும் புண்கள் பற்றியும் தலையில் உருவாகும் செல்கள் (பேன்) பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.அணுவுக்குள் அணு வளர்க்கும் வளர் தன்மை எத்தகையது…?
2.அணு வளர்ப்பின் இயற்கைக் குணம் ஜீவ சக்தியுடன் எப்படி மாற்றம் கொள்கிறது…?

இயற்கை வளர்ப்பில் வளர்ந்த கனிகளில் சாதாரணமாக வாழைப்பழத்தின் பழுத்த நிலைக்குப் பிறகு அக்கனியைப் பூமியின் ஈர்ப்பில் அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகின்றது…?

1.அந்தக் கனியானது அழுகிய தருவாயில்
2.பூமியின் வெக்கை அதன் மேல் பட்டு பூமி மீண்டும் ஈர்த்து
3.அக்கனியின் சுவை அமிலமுடன் இந்த உஷ்ண அலை ஈர்ப்புப்பட்டு வெளி வரும் பொழுது
4.அதன் அழுகிய தன்மையில் பல அணுக்கள் தோன்றுகின்றன.

தோன்றிய உயிரணுக்கள் எவ் அமிலத்தில் எச்சுவை கொண்டு அவ்வணு வளர்ந்ததோ அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி உருவத் தொடர்கள் “புழுக்களாக…” வளர்கின்றன.

இதன் நிலையை உணர்த்துவது எதற்கு…?

மனித பிம்ப உடலுடன் இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வாழும் நாம் இந்தப் பிம்பக் கூட்டின் சுவாச அலையில்
1.எப்படி வாழைக் கனியிலிருந்து அதன் வெக்கையில் பட்ட உயிரணு தோன்றியதோ அதைப் போன்று தான்
2.ஒவ்வொரு ஜீவ சக்தியிலும் உணர்வின் சுவாசம் எடுக்கும் நிலையில் ஏற்படும்
3.வெக்கை உயிரணுக்கள் தான் உடல் பிம்பக் கூட்டிலும் வளர்கின்றது.
4.எடுத்து வெளியிடும் சுவாசத்திலும் அதன் தொடர்பு கொண்ட அணுக்களின் வளர்ச்சி தான் வளர்கின்றது.

ஒவ்வொரு ஜீவ சக்தியின் தொடர்பிலும் அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் அந்தந்த இனக் கலவை உயிரணுக்கள் வளர்வதுடன் பிறிதொரு அமில உயிரணுக்களின் செயல் எப்படிக் கூடுகின்றது..?

மனிதனின் உடலில் வளரும் புழுக்களும் தலையில் வரும் பேன்களும் எப்படி உருவாகின்றன…?

அமைதியுடன் ஆரோக்கியமான சந்தோஷ வாழ்க்கையில் உள்ள மனிதர்களுக்கு அது அதிகம் வருவதில்லை.

ஆனால் சலிப்புப்பட்டு சோர்வுப்பட்டு சங்கடம் போன்ற வறுமையில் வாழும் இன்னல்படும் ஆத்மாக்களின் உணர்வில்
1.அவர்கள் எடுக்கும் இச்சுவாச அலையின் வெக்கையானது
2.ரோமக் கால்களில் வெளிப்படும் அமிலக் கசிவில்
3.உடல் வெக்கையின் உஷ்ண அலையின் விகிதத்தைக் கொண்டு
4.இச்சஞ்சலமான நிலையில் உள்ளவர்களின் அலைகளில் இந்தப் பேன் வளரும்.

உடல் உறுப்புகளில் இவ் உணர்வின் கசிவில் வெளியில் உள்ள தூசிகளோ சில அழுக்குகளோ படும் பொழுது என்ன மாதிரியான பாதிப்பு வருகின்றது…?

1.உடலில் ஏற்படும் வெக்கையினால் வெளிப்படும் வியர்வையின் அமிலத்தின் மேல்
2.காற்றலையில் உள்ள சில உயிரணுக்கள் படும் பொழுது
3.அவற்றின் வளர்ப்பாக அணுவுக்குள் அணு வளர்ந்து
4.அவை பெருகி ஏற்படுவது தான் உடல் உறுப்புகளில் ஏற்படும் சில கட்டிகளும் புண்களும்.

அவற்றின் கசிவு வளர்ப்பு அணுக்களினால் படரும் தொடர் நிலையை அவற்றை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட சில மருந்துகளால் வைத்தியத்தின் மூலம் மாற்றுகின்றார்கள்.

அணுவுக்குள் அணு வளரும் தன்மையில் இன்று விஞ்ஞான ரீதியில் தாவரங்களையும் மிருக இனங்களையும் சில கலப்புகளைச் சேர்த்து மாற்றி அமைக்கின்றார்கள்.

நாய் நரி இவற்றை மாற்றியதைப் போல் மனிதனுக்குச் சேவை செய்யக் கொரில்லாக்கள் போன்ற இன விருத்தியை குரங்கின் இனத்துடன் மனித அமிலத்தைச் சேர்த்து வளர்த்த மனிதர்களே இன்று அவை வளராவண்ணம் தடுத்தும் விட்டனர்.

இதை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு…?

உடல் என்ற பிம்ப உணர்வு அமிலக்கூட்டில்…
1.பல கோடி ஆண்டுகளாக அணுவுக்குள் அணு தோன்றி உரு மாறி மாறி
2.ஒவ்வொன்றின் உருவச் சேமிப்பின் முலாமுடன்
3.இன்று வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழ்ந்து கொண்டுள்ள நாம்
4.எச்சக்தியும் செயலாக்கக்கூடிய எண்ண ஆற்றலின் ஞான வளர்ச்சிக்கு
5.எண்ணத்தால் எடுக்கும் உணர்வலையின் நற்சுவாசத்தால்
6.இந்த உடல் அமிலத்தில் ஏற்கனவே உரு மாறி மாறி ஒவ்வொரு தொடர்பிலும் சேமித்த அமிலக்கூட்டில்
7.நற்சக்தியுடன் கூடி வந்த தீய குண அமிலத்தையும் உயர்ந்த சக்தியாகவும் ஆக்கிட முடியும்.

 

அணு தோன்றி… அணு வளர்ப்பின் வளர் தொடர் வள்ர்ப்பின் அணுக்கள் தான்… தொடர் அணு வளர்ச்சி நிலை…!
1.ஆகவே அணுவுக்குள் அணுவாக மகரிஷிகளின் உணர்வலைகளை ஊன்றி
2.உயர் உணர்வின் ஞானத்தில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கடன் வாங்கியவர் கொடுக்கவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும் 

தொழிலில் முதலாளியின் உணர்வு வேலை செய்பவர்களை எப்படி இயக்குகின்றது 

செல்வம் அதிகம் உள்ள குடும்பத்தில் வரும் தொல்லைகள் 

guru and sabdarishi

கொடுமையான தீங்கை ஒருவன் செய்தால் பதிலுக்கு என்ன செய்கின்றோம்…! எதைச் செய்ய வேண்டும்..? ஏன் செய்ய வேண்டும்…?

 

உதாரணமாக எடுத்துக் கொண்டால்… என்ன…! சாமிக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…! தபோவனத்தில் இருப்பவர் இந்த மாதிரிச் செய்துவிட்டாரே என்று..! சில பேருக்கு இந்த எண்ணம் வரலாம்.

எனக்கு (ஞானகுரு) இந்த உடலைப் பற்றிய நினைப்பே இல்லை.

இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுது நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் ஆன்மா அந்த ஒளியின் நிலை பெறுகின்றது.

1.அவன் தீங்கு செய்துவிட்டான்… (தபோவனத்தில்) என்ற எண்ணங்கள் வரப்படும் பொழுது
2.அதை எடுத்துக் கொண்டால் பழி தீர்க்கும் எண்ணங்களாக வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எனக்குப் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். கை விரலை நீட்டினால் ஒரு மரத்தையே தூக்கி எறியச் செய்யும்.

எண்ணத்தால் எண்ணி.. இவன் மடிந்துவிடுவான்.. அல்லது இப்படித்தான் ஆகிவிடுவான்…! என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி அவனுக்குள் வேலை செய்யும். துரித நிலையிலும் மடிந்து விடுவான் (தீங்கு செய்தவன்).

நாம் ஏன் சொல்வானேன்…? அவனை ஏன் நாம் வீழ்த்துவானேன்…! அவன் எண்ணிய உணர்வுகள் அவனுக்குள் வீழ்த்தும் அறியும் தன்மை வரும்.

இப்படித்தான் நாம் இருக்கின்றோமே தவிர குருநாதர் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். ஆனால் அது பயன்படுத்துவதற்கு அல்ல…!

ஆஹா… எங்கள் சாமி எப்படிப்பட்டவர் பார்…! கெடுதல் செய்தான்… விரலை நீட்டினார்… விழுந்து விட்டான்… என்று நீங்கள் பெருமை பேசலாம்…!

அப்படிச் செய்தால் இது…
1.மற்ற அவன் உடலில் உள்ள நல்ல அணுக்களையும் சேர்த்துக் கொன்றதாகத் தான் அர்த்தம்.
2.அவனுக்குள் இருக்கக்கூடிய தீமையின் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைந்ததாகத் தான் பொருளாகுமே தவிர
3.அவன் தீங்கின் செயல் நமக்குள் வந்து
4.அவன் உணர்வு வலிமையாகி நம்மை இயக்கும் பொழுது
5.அவன் தான் தவயோகியாகின்றான்.

அப்பொழுது நமக்குள் என்ன இருக்கின்றது…?

ஆகவே இந்த அருள் ஞானத்தின் வலிமை கொண்டு தாங்கும் சக்தி வர வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதைத் தான் வலிமையாக்க வேண்டும். அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்றைய செயல் நாளைய சரீரம்…!

1.அருள் ஒளியின் உணர்வு கொண்டு ஒளியின் சரீரமாக
2.இனி அகண்ட அண்டத்தில் என்றும் நாம் வாழ முடியும் என்ற நிலையை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதனாக ஆன நாம் இதைச் செயலாக்கும் தன்மைக்கே வர வேண்டும்.

எந்த மகரிஷியைப் பற்றினோமோ அவரைப் பற்றுடன் பற்றிட வேண்டும்

 

நாம் வைக்க வேண்டிய உண்மையான பற்று..? எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். என் பார்வையில் அனைவரும் நலமாக வேண்டும். என் பார்வை அனைவரையும் புனிதப்படுத்த வேண்டும் என்று எண்ண வேண்டும். மகரிஷிகள் காட்டிய இந்த வழியில் சென்றால் அவர்களுடன் ஐக்கியமாவது நிச்சயம்.

 

first god

“முழு முதல் படைப்பு…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதியிலே… மண்டலங்கள் சுழன்று… வளர்ந்து… ஆவியாகி… குளிர்ந்து… மீண்டும் ஆவியாகி… அந்தந்த மண்டலங்கள் விடும் சுழற்சி ஈர்ப்பு வெக்கை உணர்வில்… தன் வளர்ப்பின் வளர்ப்பிற்குத் தன் சுவை ஈர்ப்பை வளர்த்துக் கொண்டே வந்தது.

அவை அவை எடுத்துச் சமைத்துக் கக்கிய… பல சுவை கொண்ட பல மண்டலங்களின் தொடர்பு கொண்டு… பல அலையின் ஈர்ப்பின்… தொடர் அலைச் சேர்க்கை… சுவை அமில குண ஈர்ப்பு நிலை ஏற்பட்ட பிறகு தான் “சூரிய குடும்பமாகவும் அதிலே பூமியாகவும்” மண்டலங்கள் வளர்ந்தன.

அவை எடுத்த சுவை குண சமைப்பு அமிலத் தொடரினால் பல பல வளர் மாற்றத்தின் கூட்டுக் கலவையில் சமைத்த சத்துத் தன்மையின் சக்தி குணம் இந்தப் பூமியில் படர்ந்து தாவர இன வளர்ச்சியானது.

பின் ஜீவ சக்தி வளரக்கூடிய காற்றமில வளர்ச்சி உற்பத்தி வளர்ப்பு நிலை கொண்ட பிறகுதான்… இந்தக் காற்றான ஆவி குணத்தின் ஜீவ சக்தி வளரக்கூடிய தன்மை வளர்ந்து… பலவில் பலவாக ஆனது.

ஜீவ வளர்ச்சியின் பல பல மாற்ற சுழற்சி ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் மோதுண்டு மோதுண்டு ஒவ்வொரு ஈர்ப்பு மாற்றத்திலும்… ஒவ்வொரு மாற்றத்தின் சக்தியும்… ஒவ்வொரு வளர்ச்சியாக அந்த உயிரணு கூட்டிக் கொண்ட பல சுவை அமில வளர்ப்புடன் வார்ப்பாகி ஜீவ பிம்ப நிலை கொள்கிறது.

இஜ்ஜீவ பிம்பத்தில்…
1.சுவைக்கும் நிலையும்
2.செயலாற்றக் கூடிய அங்க அவயங்களும்
3.ஒளி ஈர்த்துச் செயலாற்றும் திறமையும் பல வார்ப்பில் மாறி மாறி
4.ஒவ்வொரு நிலை கொண்டு மோதுண்ட சுழற்சி வழித் தொடரில் ஒலி ஒளியாகி
5.வழித் தொடர் கொண்டு உயர் சக்தி நிலை பூண்டு மனிதப் பிம்பக் கரு ஞானம் கூடியது.

சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலங்களும் ஒன்றாக இயங்கித் தன் வளர்ப்பின் வளர்ப்பாக பல நட்சத்திரங்களை வளர்த்துச் செயலாகும் சக்தியில் உருவான உரு நிலை தந்த மனித ஞான பிம்பம் வளர்ந்ததப்பா…!

மண்டல ஈர்ப்பின் சுழற்சி கதியில் நேர்ப்பார்வையில் செயல் வழியில்
1.இயற்கைத் தன்மையில் சுழலும் சக்தியையே
2.இந்த மண்டலச் சந்திப்பு நிலைதனைத் திசை திருப்பும் நிலைதனை ஏற்படுத்துகின்றனர் சப்தரிஷிகள்.

இந்தப் பூமியில் உள்ள மனிதனைக் காட்டிலும் “ஞான சக்தியில் வளர்ந்த மனிதக் கரு உரு நிலை” இந்த நாற்பத்தி எட்டுக் மண்டலங்களில் இல்லா நிலை… மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களில் உண்டு.

இந்தப் பேரண்ட பெரு நிலையின் வளர்ப்பு செயல் எவை…? என்று எப்படி அறிய முடியும்…?

உயிரணு தோன்றி… ஈர்ப்பு நிலையில் சிக்குண்ட செயல் வழிக்கு… முடிவில்லா உருமாற்ற நிலை வளர்ப்புச் சுழற்சியின் முடிவே இல்லை.
1.வளர்ப்பின் வளர் நிலையை உயர் வளர்ப்பின் வளர்ப்பாக்கி
2.உன்னத வளர்ப்புகளை வளர்க்க ஆரம்ப உயிரணு தான் வித்தப்பா…!

இந்த மனித பிம்ப உடல் சேமித்த பதம் கொண்ட பக்குவ நிலைதானப்பா வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் நிலை. இதை உணர்ந்து உயர் ஞான அலையின் வழி சென்றோமானால்… “உருவாகும் உருவ சக்திக்கே நாம் உருவம் தரலாம்…!”

 

மனிதப் படைப்பு என்பது முழு முதல் கடவுள்…!

நினைவு நாள் என்றால் என்ன…? – விளக்கம் 

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நினைவு நாள் எப்படிக் கொண்டாட வேண்டும்…? 

 

அமாவாசைக்கு முன்னோர்களுக்குச் சாப்பாடு வைக்கலாமா…?

 

மக்களுக்கு நல்வழி போதியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன் – ஞானகுரு

 

கோவிலுக்குச் சென்று நாம் செய்ய வேண்டிய ஆராதனை என்பது எது…? என்று தெரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் நலமாக வேண்டும் என்று எண்ணுவதே உண்மையன பக்தி. செய்யும் தொழிலே தெய்வம். நாம் தெய்வமாக வேண்டும்.

 

Monster light

னியைப் போல் கொடுப்பாருமில்லை… கெடுப்பாருமில்லை…! என்றால் அது யாருக்கு…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சப்தரிஷி மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றார்கள் புராணத்தில்… ரிஷி மண்டலத்தின் தொடர்பு நிலை என்ன…? வாரம் ஏழு நாட்களும் ஜாதகக்காரனுக்கு பன்னிரெண்டு ராசிகளும் உணர்த்திய முறை எல்லாம் எதுவப்பா…?

சனி மண்டலக் கோளமானது அது ஈர்த்து வெளிக் கக்கும் அலையின் செயலில் திடம் கொண்டு உருவாகின்றன 12 நட்சத்திரக் கோளங்கள். அதன் சுழற்சி ஈர்ப்பில் அந்தக் கோளத்தைச் சுற்றி வருகின்றது.

சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோளங்களும் அவை ஓடும் சுழற்சி கதியில் வருட நிலைக்கொப்ப அந்தந்த மண்டலங்களின் நேர்பார்வை
1.சனியின் ஈர்ப்புப் பிடியில் சுழன்று வரும் பன்னிரெண்டு நட்சத்திர மண்டலங்களுடன் சந்திப்பு கூடும் பொழுது
2.சந்திக்கும் மண்டலத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிக் கரைந்து விடுகின்றன இச்சனி வளர்த்த 12 நட்சத்திரங்களும்.

நம் பூமியின் ஈர்ப்பிற்கு வருடத்தில் இரண்டு முறை சந்திப்பு நேர்ப்பார்வையாக சனியின் பார்வை படுவதினால் வட மேற்கு தென் மேற்குக் காற்றுகள் வருகின்றன.

1.ஆகவே இந்த மழைக் காலங்களை உருவாக்கக்கூடிய வித்தை ஊன்றியவனே இந்தச் சனி தான்.
2.சனியின் நேர்ப்பார்வை சந்திப்பு பூமிக்கு இல்லையேல் கால நிலையில் பெய்யும் மழை இல்லை.

அதே போன்று சனியினால் உருவாகும் 12 நட்சத்திரங்களின் ஈர்ப்பு வட்டமானது இச்சுழற்சியில் ஈர்ப்பு மாறி நேர்கோட்டில் கரையக்கூடிய சந்திப்பு நிலையானது பூமியுடன் சந்திக்கும் நிலை ஏற்பட்டால் பூமியில் இப்பருவக் காலங்களில் ஏற்படும் “இயற்கையின் சீற்றம்” அதிகம் கொள்கிறது.

சனியினால் வளர்த்து பூமியின் ஈர்ப்பில் கரையும் நட்சத்திர மண்டலத்தின் விகிதத் தன்மையின் மாற்றங்கள் மற்ற மண்டலங்களின் சந்திப்புக் கால நிலைக்கொப்ப மாறுபடுகின்றது.

1.இதை வைத்துத் தான் சனியைப் போல் கொடுப்பாருமில்லை…
2.கெடுப்பாருமில்லை என்று உணர்த்தினார்கள்.

வருடத்தில் இரண்டு தடவை சந்திக்கும் சனியின் நேர்ப் பார்வையில் சனி வளர்த்த நட்சத்திர மண்டலத்தின் சந்திக்கும் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்பில் கரையப்படும் அந்த அமில நிலையானது பூமியின் ஈர்ப்பில் வளரும் நிலை கொண்டு தான் பூமியின் இயற்கைக் கால நிலைகள் உள்ளன இன்று.

இந்நிலையில் சப்தரிஷிகளின் நிலை என்ன…?

பல கோடி நட்சத்திர மண்டலங்கள் உண்டு. வளர்ந்து கொண்டேயுள்ள சுழன்று கொண்டே மிதந்து கொண்டேயுள்ள செயலில் தான் நாம் உள்ளோம்.

மிதப்பின் மிதப்பாக… உருளும் தன்மையில் உருவமாக.. ஞானத்தை வளர்க்கும் மனிதக் கரு உரு நிலை வளர.. ரிஷிகளினால் வளர்க்கப்படும் வளர்நிலை எந்நிலை கொண்டதாக உள்ளது இன்று…?

உருவாகும் சக்திக்கே உருவகம் தந்தவர்கள் நம் சப்தரிஷிகள் தானப்பா…!
1.இந்த மனிதக் கரு உரு ஞானத்தை வளர்க்க
2.அவர்கள் ஏற்படுத்திய வழிப்படுத்தும் செயலாகத் தானப்பா இன்று நாம் வாழ்கின்றோம்.
3.அவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனத்தில் அமர்ந்துள்ளவர்கள் தான் நாம்.

சூரியனை ஜீவனாக வைத்து நாற்பத்தி ஏழு மண்டலங்களை அங்கங்களாக வைத்து உருவாக்கிய வாகனத்தில் அமர்ந்துள்ள ஜீவ சக்தியை ஓட்டிச் செல்பவர்கள் சப்தரிஷிகள் தானப்பா…!

ஜீவ சக்தி உருவாகும் நிலை எப்படி…?

மிதந்து கொண்டேயுள்ள பல் சுவை கொண்ட நீரின் ஆவியானது திடம் கொண்டு கனமாகி.. ஈர்ப்பின் சழற்சியில் ஆரம்ப ஈர்ப்பு நிலைக்கொப்ப… மிதந்து கொண்டேயுள்ள நிலையிலிருந்து கனமாகி… “உந்தித் தள்ளும் ஈர்ப்பின் நிலை பெறுகின்றது…”

எச்சுவையை ஆரம்பத்தில் ஈர்த்து ஈர்ப்பிற்குச் சுழன்று தங்க இடம் கொள்ளாது பல சுவைகளை ஈர்த்து கனம் கொண்டு திடமாகி நகர்ந்து ஓடுகின்றது.

“தங்க இடம் கொள்ளாமல்…!” தன் சுழற்சியின் ஈர்ப்பில் சுழன்று வளர்ந்தது தான் சூரியன் சந்திரன் வியாழன் புதன் சனி மற்றெல்லா வளர்ந்த மண்டலங்களும்… மற்ற நாம் காணும் நட்சத்திர மண்டலங்களும்…!

 

இயற்கையின் செயலாக்கங்களையும் சப்தரிஷிகளின் செயலாக்கங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சிறுகச் சிறுக உங்களுக்குள் புகட்டி வருகின்றேன்.

blessed meditation

புரையேறும் உணர்வால் எத்தகைய பாதிப்பு வரும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

நண்பர்களாகப் பழகுகின்றனர். பழகிய நிலைகள் கொண்டு சந்தர்ப்ப பேதத்தால் வெறுப்படைகின்றது. வெறுப்படையும் பொழுது தொழிலில் நஷ்டம்.

இரண்டு பேருமே…
1.எனக்குத் துரோகம் செய்தார் என்று இவரும் எண்ணுகின்றார்
2.துரோகம் செய்தார் என்று அவரும் எண்ணுகின்றார்.

சந்தர்ப்பத்தால் சிறு பிழைகள் வரப்படும் பொழுது பலவீனமான நிலையை உருவாக்கி விடுகிறது. அதை நுகரப்படும் பொழுது அந்தப் பலவீனத்தை ஏற்படுத்தும் அணுக்கள் உடலுக்குள் அந்தக் கருக்களாக உருவாகத் தொடங்கிவிடுகின்றது.

இவ்வாறு அதிகமாகி விட்டால் அது தன் உணர்ச்சியைத் தூண்டும்.

அப்பொழுது சந்தேகம் என்று வந்துவிட்டால் அதை வளர்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் கண்களிலே பாய்ச்சும்.
1.கண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
2.நல்லவராக இருந்தாலும்… சந்தேகப்பட்டுப் பார்த்த பின் என்ன ஆகும்..?

இந்தப் பார்வையைக் கண்ட பின் அவர் தலைகள் ஆடுவதும் உடலை அசைப்பதையும் வித்தியாசமான நிலைகள் வரும்.

நல்லவராகவே இருக்கட்டும் சந்தேகப்பட்டு ஒருவரை எண்ணிப் பாருங்கள்.
1.உங்கள் பார்வை பட்டவுடனே… ஏன் இப்படிப் பார்க்கிறார்…? என்ற நிலையில்…
2.நான் நினைத்தேன் அந்தச் சந்தகேகம் சரியாகப் போய்விட்டது என்ற இந்த உணர்வுகள் அங்கே இயக்கி விடுகின்றது.

இதைப் போல அந்த உணர்வுகள் இயக்கத் தொடங்கினால் அது வளர்ச்சி அடைகின்றது. அந்தச் சந்தேகத்தின் நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் “பகைமை” வளர்கின்றது.

அந்தப் பகைமை வளர்ந்த பின்னாடி வெகு தூரத்தில் ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ்ந்தாலும் இரண்டு பேரிடமும் பழகிய ஒரு நண்பன் வருகின்றான்.

அவன் வந்தவுடனே சொல்கிறான். இந்த மாதிரி உன் நண்பரை அமெரிக்காவில் பார்த்தேன் என்று…!

அவனா…? துரோகி.. உருப்பட மாட்டான் அவன்..! என்ற இந்த உணர்வுடன் சொல்கள் வெளி வருகின்றது. ஏனென்றால் அவனை நினைவுபடுத்தியவுடனே “கண்ணின் நினைவு” அங்கே செல்கிறது.

கண்ணின் நினைவு அங்கே செல்லப்படும் பொழுது ஏற்கனவே உள்ள அந்தப் பகைமை உணர்வுகள் என்ன செய்கிறது…? பதிவாகின்றது.

பதிவான உணர்வுகளுடன் அது மோதியவுடனே
1.அங்கே அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இது ஊடுருவி
2.உறுப்புகளை இயங்கவில்லை என்றால் “புரை” என்ற நிலையில்
3.ஒரு சோற்றுப் பருக்கை நுரையீரல் பக்கம் இந்த மூச்சு இழுக்கும் பொழுது உள்ளுக்குள் போனால் அவ்வளவு தான்…!

ஏனென்றால் புரைகளில் இது மிகவும் விசித்திரமானது…! உணவு உட்கொள்ளும் பொழுது இந்த மாதிரிப் புரைகள் ஏற்பட்டால் அந்த ஆகாரம் நுரையீரலுக்குள் சென்றுவிடும்.

சிறிது தேங்கிவிட்டால் அங்கே நாளடைவில் அழுகும். அந்த அணுக்கள் அங்கே பெருகி டி,பி. போன்ற நோய்களை உருவாக்கும் தன்மை வந்துவிடும். அந்த நுரையீரலையே ஓட்டை போடும் அளவுக்கு ஆகிவிடும்.

ஒரு பழத்தை வெளியிலே அப்படியே வைத்திருந்தால் எப்படி அது அழுகிப் புழுக்களாகிப் பின் வெடித்துவிடுகின்றதோ அதைப் போல உடல் உறுப்புகளைச் சிதைக்கும் தன்மை வந்துவிடும்.

நாம் நினைக்கின்றோம்… சாதாரணமாகத் தான் நினைத்தோம்..! என்று. ஆனால் இயற்கை… இந்த உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

ஒரு காரை ஓட்டிச் சென்றாலும் கூட முதலில் சொன்ன மாதிரி துரோகம் செய்தான் பாவி..! என்று எண்ணினால் புரை ஓடுவது போன்று ஆனால்
1.எதிரிலே வரக்கூடிய வாகனங்களைக் கண் கவர்ந்து சொல்லும் நிலைகளை இது இடைமறித்து
2.அவர் அதைச் சுவாசித்து விட்டால் காரை பிரேக் போடுவதோ ஸ்டீரிங்க் திருப்புவதையோ இழக்கின்றார்
3.விபத்துக்குள்ளாகி விடுகின்றது…!
4.துரோகம் செய்தான் பாவி என்று எண்ணப்படும் பொழுது இவ்வாறு இயக்கிவிடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நம்முடைய பழக்கவழக்கங்களில் நம்முடைய எண்ணங்களே நமக்கு எதிரியாகின்றது. ஆக அவர்கள் எண்ணும் சந்தர்ப்பமும் நாம் செயல்படும் சந்தர்ப்பமும் இந்த வெறுப்பின் உணர்வு வந்துவிட்டால் அங்கே விபத்துக்குள்ளாக்கி விடுகின்றது.

நாம் எங்கே சென்றாலும் இந்த ஆத்ம சுத்தியை மறவாது செய்து கொள்ள வேண்டும். ஆத்ம சுத்தி செய்து..
1.என்னுடைய பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும் என்ற
2.இந்த எண்ணங்கள் கொண்டு நாம் செல்லப்படும் பொழுது
3.அந்தத் தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த முடியும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்துக் கொண்டே வருதல் வேண்டும்.

ஒருவர் நம்மிடம் வந்து இந்த மாதிரி உனக்குத் தீங்கான நிலைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றான் உன்னுடைய நண்பன் என்று சொன்னால் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்..?

ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அவர் அங்கே சொல்லப்படும் பொழுது
1,என்னை நினைக்கும் பொழுதெல்லாம் அவன் நல்லவனாக வேண்டும்
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினக்கும் பொழுதும் அவனுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற
4.இந்த உணர்வின் நினைவை வைத்து கண் கொண்டு நாம் பார்க்கப் போனால்
5.கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கிறான் என்று காவியத்தில் உணர்த்தியது போல்
6.நம் உணர்வின் தன்மை தாங்கிச் செல்லும் தன்மை நாரதன் என்ற உணர்வு கொண்டு அங்கே ஆணையிடப் போகும் பொழுது
7.இந்த உணர்வுகள் அவர்கள் உணர்வுக்குள் ஊடுருவி அங்கே இருக்கும் பிடிவாதமான குணங்களை அகற்றுகின்றது.
8.நமக்கும் நல்லதாகின்றது… அவர்களையும் நல்வழிப்படுத்தும் சந்தர்ப்பமாகின்றது.

ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

 

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் இருப்பதே உண்மையான தியானம்

மரணமில்லாப் பெருவாழ்வை எப்படிப் பெறுவது..?

விஷத்தைப் பேரொளியாக மாற்றும் யுக்திகள்

சொன்னபடி கேட்காத குழ்ந்தைகளுக்கு ஆலயத்தில் தியானிக்க வேண்டிய முறை

 

இன்று பெரும்பகுதி தாய்மார்கள் தன் கர்ப்பகாலத்தில் டி.வி.நிகழ்ச்சிகளையும் படங்களையும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த உணர்வுகள் அனைத்தும் பூர்வ புண்ணியமாகி விடுகின்றது. பிறந்த பின் அவன் மிகுந்த சுட்டிக் குழந்தையாகவே மாறுகின்றான். என்ன சொன்னாலும் அவனைத் திருத்த முடிவதில்லை.

 

creation of humanity

சூரியக் குடும்பத்தின் படைப்பின் “உயர்ந்த வளர்ச்சி” எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.வளர் சக்தியான உயர் ஞானம் மனித பிம்பத்திற்கு எப்படி வந்தது…?
2.சொல்லாற்றல் செயலாற்றல் என்று உரைக்கும் வழித் தொடர் ஞான வளர்ச்சி நிலை உருவானது எந்த நிலை கொண்டு..?
3.நாற்பத்தியேழு கோளங்களில் இல்லாத சக்தி இந்தப் பூமி வளர்த்த மனித ஞானத்திற்கு எப்படி வந்தது..?
4.ஜாதகம் பார்ப்பவரால் சனி மண்டலத்தைத் தருவான்… அழிப்பான்… என்று உணர்த்திய முறை எல்லாம் எப்படியப்பா வந்தது…?

சந்திரனிலும் செவ்வாய் புதன் வியாழன் ராகு கேது சூரியன் இப்படி நாற்பத்தியேழு கோளங்களுக்கும் இல்லாத் தன்மை நம் பூமிக்கு உண்டு.

பார்க்கின்றான்.. கேட்கின்றான்… சுவைக்கின்றான்… நுகருகின்றான்… வாழுகின்றான் பல சக்தியையும் பெற்ற மனித பிம்பம் (மனிதர்கள்).

சுழற்சி கதியின் இயற்கை வளர்ச்சி செயல்தான் சூரியனே தவிர நினைத்த செயலைச் செயலாக்கும் எண்ண ஞான வளர்ச்சி சூரியனுக்கே இல்லை.
1.சூரியனுக்கே இல்லாத ஞான வளர்ச்சியின் செயல் மனிதனுக்கு எப்படி உருப்பெற்றது…?
2.இந்த நிலை கொண்ட மனித சக்தி எப்படி உருவானது…?

மிதந்து சுழன்று ஓடிக்கொண்டேயுள்ள சூரியனின் வளர்ச்சியின் அங்கங்கள் தான் சூரியக் குடும்பத்தின் நாற்பத்தியேழு மண்டலங்களும்… சூரியனைச் சேர்த்தால் நாற்பத்தியெட்டு.

இஜ்ஜீவ பிம்ப உடல் கோளத்தில் இயங்கும் அவயங்களைக் கொண்டு தான் (கை கால் ஐம்புலன்கள் மற்றும் உடலில் உள்ள உள் உறுப்புகள்) மனித பிம்ப ஆத்மாவின் வளர்ச்சி நிலை உள்ளது.

அதைப் போல் சூரியனின் அங்கங்களாக ஒன்றின் ஈர்ப்பின் துணை கொண்டு ஒவ்வொன்றின் வளர்ச்சியுமே அது வளர்க்கும் சக்தி கொண்ட உரத்தைச் சூரியன் பெறுகின்றது.

சூரியன் இயங்கிட… செயல்பட்டிட.. சூரியனின் அங்கங்களாக உள்ள நாற்பத்தியேழு மண்டலத்தின் துணை வேண்டும். அது இல்லையேல் சூரியனுக்குச் செயலில்லை.

மனிதனின் உடல் உறுப்பில் செயல்புரியும் அங்கமாக மனித இருதயத்திற்கு எந்தச் செயல் உள்ளதோ அந்தச் செயலைப் போன்ற நிலையைத் தரவல்ல மண்டலம் தான் சனி மண்டலம்.

சனியின் சக்தியினால் அது எடுத்து வெளிக்கக்கும் அமில ஈர்ப்பின் குளிர் தன்மையான ஆவி சக்தி சூரியனுக்கு இருதயம் போன்று செயல் கொள்கிறது.

மனித அங்கத்தின் செயலைப் போன்று ஒவ்வொரு மண்டலத்தின் செயலும் சூரியனைச் செயல்படுத்துகிறது.

ஆனால் ஜீவ ஆத்மாவான சூரியனின் அங்க அவயங்களான நாற்பத்தியேழு மண்டலங்களில் உருவத்தின் ஞானத்தின் சொல் எண்ண வலுவாற்றல் வளர் குழந்தையை வளர்ப்பது இந்தப் பூமி தான்.

நாற்பத்தியேழு மண்டலங்களின் அவயங்களை சூரிய பிம்ப ஜீவன் வளர்க்கும் வளர்ப்பு நிலை செயல் “இந்தப் பூமியில் வளர்த்த மனித பிம்ப வளர்ச்சியைக் கொண்டுதான் வளர்ந்திட முடியும்…!”

சப்தரிஷிகளின் சக்திச் செயலாக…
1.இந்தப் பூமிக்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
2.வளர்ப்பின் வளர்ப்புக்கான இந்தப் பூமிக்குப் பல அலைத் தொடரின் ஈர்ப்பு சுழற்சியை ஏற்படுத்திய நிலை கொண்டு
3.எந்நிலையையும் உருவாக்கவல்ல தெய்வ சக்தியை உருவாக்கும்
4.மனித பிம்ப ஞானத்தை வளர்க்கச் செயல் கொண்டனர்.

 

ஏனென்றால் உருவாக்கும் உயர் சக்திக்கு எண்ணத்தால் எடுக்கும் ஞானச் சுழற்சி ஜீவன்கள் அவசியம் தேவை
1.இந்தப் பூமியின் சக்திக்கு இவ்வீர்ப்பு அலையின் சுழற்சியைச் சுழலச் செய்து
2.ஜீவ பிம்ப மனித ஞானத்தை வளர்க்க
3.சூரியனை மையப்படுத்தி இந்த நாற்பத்தியேழு மண்டலங்களிலிருந்து வெளிக்கக்கும் அலைத் தொடர்பைத் தான் எடுத்து
4.பல பிரளய மாற்றங்கள் தந்து இந்தப் பூமியில் மனிதக் கரு ஞானத்தை வளர்த்தான் சப்தரிஷி.

Gita upadesam Kannan

கண்ணணான கண்களின் இயக்கங்களையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் பற்றி வியாசக பகவான் உணர்த்தியது

 

மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்தக் குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் எப்படி வழி நடத்திச் செல்கிறான் என்ற நிலைகள் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

1.நமது கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலுக்குள் எப்படி உருவாகிறது…? என்றும்
3.அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிர் ஆணையிடும் பொழுது சிறு மூளைப் பாகம் சென்று
4.அதே சமயத்தில் உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி
5.கண்ணுக்கும் செவிக்கும் உடலுக்கும் நம் மனத்திற்கும் இந்த உணர்வுகள் இயக்கி
6.நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது என்ற நிலையை வியாசகர் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

தீமையான உணர்வுகளை ஒரு தடவை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விடுகின்றோம். மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது நம் உயிருடன் சேர்த்து அந்த உணர்வுகள் அந்தப் போரை… சங்க நாதம் எழுப்புகின்றது நம் கண்கள்.

அதாவது தீமை செய்பவர்களை நினைத்து நாம் சுவாசித்த பின் அது நம் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.
1.உணர்வின் ஒலி அலைகள் பட்ட பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள்
2.நாம் எதை எண்ணினோமோ – நியாய அநியாய உணர்வுகள்
3.அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.

ஒரு வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனம் அடையச் செய்துவிடுகின்றது. நம் செயல்களைச் சீராகச் செய்ய முடியாதபடி ஆக்குகின்றது.

உதாரணமாகத் தன் பையன் மீது வெறுப்பின் தன்மை வந்துவிட்டால் பையனுக்காக வேண்டிச் சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த மற்ற பொருளையும் எடுத்து அடித்து நொறுக்கும் தன்மை தான் வருகின்றது.

நொறுக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று வியாசகர் அதைத் தெளிவாக்குகின்றார்.

வியாசகர் என்றால் கல்வியறிவு இல்லாத மூடனாக இருந்தாலும்
1.வியாபித்திருக்கும் உணர்வுகளைத் தனக்குள் அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்ற பின் அவர் அனைத்தையும் அறிந்தார்.
2.அதனால் வியாசகர் என்ற காரணப் பெயரைச் சுட்டிக் காட்டினார்கள் அக்காலங்களில்.

பகவான்…! என்றால் தன்னுடைய நிலைகளில் எல்லா உணர்வையும் நுகர்ந்தார்… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தார். அதற்கு “பரமாத்மா…” என்று வியாசகர் ஒரு பெயரை வைத்தார்.

பரத்தில் இருக்கக்கூடிய ஆத்மாவைத் தனக்குள் எடுத்துத் தனக்குள் வளர்த்தார் என்பதற்குத்தான் “வியாசக பகவான்…!” என்ற பெயர்களை வைத்தார்கள்.

ஆக…
1.மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் மறைமுகமாக எப்படித் தீங்குகள் விளைகின்றது…?
2.நம்மை அறியாது தீமைகளை எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகளை எப்படித் தூண்டுகின்றது
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிக்கும் அது தூண்டப்பட்டு அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?

நமக்கு ஒருவர் அடிக்கடி தொந்திரவு செய்கிறார் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நமக்குள் வெறுக்கும் உணர்வுகளே தூண்டுகிறது. அந்த வெறுக்கும் உணர்ச்சிகளைத்தான் அது ஊட்டும். நமக்குள் அதனதன் உணவுக்காகப் போராடும். அதனதன் உணர்வுக்கு அங்கே போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் தடைப்படுத்தும் உணர்வுகள் பெற்றவன்… இதை வென்றவன் துருவ மகரிஷி. அவன் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்,

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால் அதை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகிறது.

நாரதனாக நமக்குள் சென்ற பின் “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கின்றோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கின்றது.

அப்பொழுது நாம் யார் மீது வெறுப்படைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி
1.நம் கண்களின் நினைவாற்றலை அங்கே செலுத்தப்படும் பொழுது
2.கண்ணன் (கண்கள்) நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
3.கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை அந்த நாரதர் வேலையைச் செய்யும்.

பகைமையாக்கும் உணர்வுகளுக்குள் இந்த அருள் ஞானியின் உணர்வுகள் சென்ற பின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

அதைத்தான் நாரதன் கண்ணனிடம் செயலாக்கிய பின்
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.கண்களுக்கும்… நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
3.வியாசகர் எவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறார் என்ற நிலைகளை நாம் தெரிந்து கொண்டால் போதும்.

தனுர் வேதம் என்றால் என்ன…?

முன்னோர்களின் சாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் 

குடுகுடுப்புக்காரன் மண்ணையும் முடியையும் பழைய துணியையும் ஏன் கேட்கின்றான்…?

siva sakthi secret

சிவ சக்தி இல்லையேல் வளர் சக்தி இல்லை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்த மனித பிம்ப உடல் ஞான ஆத்மாவுக்குத்தான் சொல்லாற்றலும் செயல் திறமையும் பகுத்தறியும் எண்ண வளர்ச்சியும் கொண்ட நிலை உள்ளதனால்
1.இந்நிலையை வளர்க்கும் முறை
2.ஆத்ம தியானம் பெறும் முறை ஒன்று தான்.

அனைத்து அண்ட கோடிகளையும் வளர்க்கும் அறியும் நிலை கொண்ட சக்தி இந்தப் பிம்ப உடலுக்குத்தான் உண்டு. இருந்தாலும் இந்தப் பிம்ப உடலிலும் தனித்த ஆத்ம தியானத்தால் உயர் ஞானக் கூட்டினைப் பெருக்க முடியாது.

ஆண் பிம்ப உடலுக்கு அமிலப் படைப்பைப் படைக்கத்தான் முடியும். ஆண் விடும் சுவாச அலையினால் மரம் செடி கொடிகள் தாவர இன வர்க்கத்தையும் மலைகள் உலோகப் பொருள்கள் இந்நிலை போன்ற சில பிம்பப் படைப்பாகத்தான் ஆண் வர்க்கச் சுவாச அலையில் உருப்பெறும் உரு நிலையுள்ளது.

இந்த உரு நிலைக்கு ஜீவன் தரக்கூடிய சக்திக் கூட்டு அலைகள் பெண்மையின் சுவாசக் கூட்டிற்கு உண்டு. பெண்ணினத்தின் சுவாச அலையிலிருந்துதான் புழு பூச்சி வண்டினங்கள் யாவையுமே ஜீவன் கொள்கின்றது.
1.நம் பூமியின் பிம்பமே “சிவ” பிம்பம் தான்
2.இந்த சிவ பிம்பனுக்கு ஈர்ப்புக் குணம் தந்தவள் “சக்தி” சுழற்சி தான்,
3.அமிலப் படைப்பு ஆணினம்
4.சக்தி ஈர்ப்பு பெண்ணினம்.

வளர்க்கும் முதல் இன அமில இனம்… ஆதி முதல்வனே… விநாயகனே… என்று உணர்த்திய “சிவ சக்தி” என்ற உரு நிலைக்கு உருவ வளர்ப்பின் வளர் நிலையின் ஆதி நிலையான சிவன் சக்தி என்ற ஆண் பெண் நிலையான அமிலக் கூட்டமைப்பு தான்.

அந்த ஈர்ப்பு சுழற்சியில் வளர்ப்பின் வளர்ப்பிற்கு நீர் நெருப்பு காற்று இவற்றை வளர்க்கும் முதல் நிலையான விநாயக குண நிலைக்கு வளர்ப்பின் வளர் நிலை சுழற்சியில்… வளரும் ஜீவ சக்திக்கு முருகன் என்ற குணப்படைப்பும்… முருகனுக்குத் துணை சக்தியான ஆசை குண தெய்வானையும்… தேவைக்கும் மேல் பேராசை வளர்ப்பு நிலை தான் வள்ளி குணம்.

முருகனுக்குப் பிள்ளையைக் காட்டவில்லை புராணம்…!

பூமியின் இயற்கை உண்மை உற்பத்தி முறையத்தான் சிவ சக்தியாக்கி ஆதிமுதல்வனாக விநாயகனைக் காட்டி சிவ சக்தி என்ற இந்தப் பூமியானது தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு ஆவியாகி பிம்பமாகி நீர் நிலம் காற்றை எப்படி முதலாக வளர்த்ததோ அதனை விநாயகனாக உணர்த்தினார்கள்.

முருகன் என்ற பல குண நிலைகளை ஜீவ பிம்ப உடலாக்கி ஆசை என்ற அன்பைக் காட்ட தெய்வானையை உணர்த்தி இன்று வாழக்கூடிய நிலையான பேராசை வள்ளியை உணர்த்திச் சென்றான் அச்சித்தன்.

பூமி மட்டுமல்ல உருவாகும் ஜீவ சக்தி அனைத்துமே ஒவ்வொன்றுமே
பிம்ப சிவன்…
சக்தி ஈர்ப்பு…
வளர்ப்பு விநாயகன்…
பொருள் முருகன்…
தேவை தெய்வானை…
தேவைக்கு மேல் உணரும் பேராசை வள்ளியம்மை தான்…!

படைப்பின் உண்மை நிலை இது…!

படரும் வழி முறை இந்நிலை படைப்பான
1.அமிலத்தை ஆண் இனச் சுவாசம் படைக்கின்றது
2.ஜீவ சக்தியின் அலையைப் பெண் இனம் வளர்க்கின்றது.
3.படைப்பில்லையேல் ஜீவ பிம்பத்திற்கு உயிர்த் துடிப்பு இல்லை…
4.உயிர்த் துடிப்பிற்கு பிம்ப உடல் இல்லையேல் செயலில்லை.

உருவாகும் உயிர்க் கருவிற்கு அமில பிம்பத்தைத் தருவது ஆண் இனம். சக்தி ஈர்ப்பு ஜீவன் தருவது பெண் இனம். ஆணின் வித்து அமில வித்துத் தான். பெண்ணின் வித்து ஜீவத் துடிப்பு வித்து.

அமிலப் படைப்பைப் பெண்ணினம் ஏற்று ஜீவ சக்திக் கருவை வளர்க்கின்றது “தாயினம்…”

ஜீவ சக்திகளின் உண்மைப் படைப்பு எப்படி உள்ளதோ அதை ஒத்துத்தான் ஆதம தியானம் பெறும் வாழ்க்கை முறைக்கும் பெண்மையின் சக்தியின் ஈர்ப்பை ஆண் இனச் செயலில் பதிக்கும் நிலையில் தான் ஞான வளர்ச்சியும் அமைதியும் வழிக் கூட முடியும்.

1.சக்தித் தொடர்பு… சிவ பிம்பம் இணைந்து… வாழ்க்கையைப் போல் வளர்ந்தால் தான் உயர் சக்தி பெற முடியும்.
2.சிவ சக்தி இல்லையேல் வளர் சக்தி இல்லை…!

பண்டிகை நாளில் கோவிலில் வணங்க வேண்டிய முறை

 

மக்கள் தங்களுக்குள் அறியாமல் வரும் தீமைகளை அகற்றிடத்தான் பன்னிரெண்டு மாதங்களிலும் விழாக்களை வைத்தார்கள். ஆலயங்களுக்குச் சென்று அதிகாலையில் அந்த அருள் உணர்வுகளைப் பெற்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் தீமைகளை அகற்றும் வழி முறையை ஏற்படுத்தினார்கள். நம் ஆத்மாவும் பரமாத்மாவும் சுத்தமாக இவ்வாறு உருவாக்கினார்கள்.

 

Antenna power of sage

நம் நினைவாற்றல் கொண்டு கண் வழியாக அருளைப் பாய்ச்சி மற்றவர்களின் தீமைகளைத் தடுக்கும் பயிற்சி  

 

1.எதிரிகளை எதிரிகள் என்று எண்ணாது
2.அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்தல் வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கொடுக்கும் இந்தச் சக்தியை வலு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க அவர்கள் உணர்வுகள் உங்களை இயக்காது. அதே சமயத்தில்…
1.யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்.
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வர வேண்டும் என்று
3.இந்த உணர்வைப் பதிவாக்கி நம் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது அவர் நமக்குத் தீங்கு செய்கிறார்…! என்ற உணர்வை நமக்குள் வளர்த்து “நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதில்…”
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்திடும் நிலையாகக்
2.கண் வழி கொண்டு தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (நாரதன்) உணர்வைக் கவர்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை அங்கே சென்ற பின் அங்கே அவர் செய்யும் தீங்கினையும் மற்ற உணர்வினையும் அது வெளிப்படுத்துகின்றது. அப்பொழுது நம் மீது வரக்கூடிய இந்த உணர்வினைப் பலவீனைப்படுத்துகின்றது.

இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எண்ணங்கள் கொண்டு அதை இரத்தநாளங்களில் பெருக்கப்படும் பொழுது நம் உடலில் முந்தைய தீய வினைகளையும் அடக்கிட முடியும்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ வேதனையோ கொண்ட உணர்வால் நம் உறுப்புகள் நல்ல உறுப்புகளில் இந்த இரத்தநாளங்களில் கண்டு இந்தக் கருக்களை அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கின்றது.

ஆகவே அந்தத் தீங்கு விளைவிக்கும் உணர்வைத் தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று கருக்களாக உருவாக்கப்படும் பொழுது இரத்தநாளங்களிலே இது பெருகுகின்றது.

உடலுக்குள் இந்த இரத்தம் போகாத இடமே இல்லை.

ஏனென்றால் இதனின் உணர்வுகள் நம்முடைய எண்ணமே எதனின் உணர்வின் தன்மையோ பாதுகாப்பான நிலைகள் அழைத்துச் சென்று அங்கே பகைமை உணர்வைத் தடுக்க உதவுகிறது.

இதைத்தான் இராமனுக்குப் படகோட்டியான குகன் தன் படகின் மூலம் நதியைக் கடக்க உதவி செய்கின்றான்…! என்று காட்டினார் வான்மீகி.

1.ஆக நம் எண்ணங்களின் நிலை கொண்டு
2.இந்த உணர்வுகள் எல்லாவற்றையும் அந்த அருள் உணர்வின் எண்ணமே கருவாகி
3.கருவின் உணர்வாக உருவாகி அதன் செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது..? என்றும் இதைக் காட்டுகின்றனர் ஞானிகள்.

இப்படி நம் உடலுக்குள் பகைமை உணர்வைச் சாராத நிலைகள் கொண்டு பாதுகாக்க வேண்டும் என்றால் இதைப் போன்று அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பித்தல் வேண்டும்.

அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர் தீங்கு செய்தார் என்ற எண்ணங்கள் வருவதற்கு முன்
1.என் மீது தீங்கு எண்ணும் அந்த எண்ணங்கள் அங்கே மறைய வேண்டும்
2.என்னை நினைக்கும் பொழுதெல்லாம் தீங்கு செய்யும் அந்த எண்ணங்கள் மடிந்திட வேண்டும் என்ற உணர்வினை
3.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வினை எண்ணிவிட்டு அந்த எண்ணத்தைப் பாய்ச்ச வேண்டும்.

“கண்ணால் இந்த உணர்வைப் பாய்ச்சி…” இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் நினைவாற்றல் கொண்டு ஊடுருவிச் செலுத்தப்படும் பொழுது
1.இதே உணர்வுகள் அங்கே நாரதனாகச் சென்று
2.மற்றவர்கள் தீங்கு செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்தும் நிலைகள் வருகின்றது.

 

காயத்ரி மந்திரம் சொல்லலாமா…?

சிவன் இராத்திரி அன்று விரதம் எது…?

விநாயகரை வடமேற்காக வைத்து வணங்கும்படி வைத்ததன் நோக்கம் என்ன…?

narad muni sage

நாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…?

 

இந்த வாழ்க்கையில் சொத்து சுகம் என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த உடலின் பற்றே அதிகரிக்கின்றது.

அந்த உடல் பற்றினால் சந்தர்ப்பத்தில் நம் காரியங்கள் தடைப்பட்டால் வேதனைப்படுகின்றோம்.

தொடர்ந்து வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது அதையே…
1.நாம் பிடிவாதமான முறையில் அந்த வேதனை உணர்வுகளை அடைகாத்து
2.வேதனையை உருவாக்கும் அணுக்களை வளர்த்து
3.யாரால் வந்தது…? என்று அந்த எதிரிகளை எண்ணியபடி நம் தொழிலைப் பலவீனப்படுத்தி
4.அதனால் நம் நல்ல எண்ணங்களையும் தடைப்படுத்தி
5.கடைசியில் ஒருவரிடத்தில் உதவிக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட
6.நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள் எல்லாம் சேர்த்து “நமக்கே எதிரியாகின்றது…”

உதவி செய்வோரின் நிலைகளிலிருந்தும் மாறுபடச் செய்கின்றது. இதைப் போல் நாம் செயல்படும் உணர்வுகள் நமக்குள் அந்த் எதிரியை உருவாக்கும் தன்மை தான் வருகின்றது.

அதை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வினை உடலுக்குள் அந்தக் கருவாக உருவாக்க வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் இந்த வாழ்க்கையில்…
1.நாரதன் கலகப் பிரியன் கலகம் நன்மையில் முடியும்.
2.அதாவது நமக்கு இப்படித் தீங்கு செய்துவிட்டானே… என்ற இந்த எண்ணங்கள் வளராது அதைத் தடைப்படுத்தும்
3.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க இது வலு பெறும்.

எனக்கு இப்படிச் செய்கிறானே…! என்ற கோபமான வேதனையான எண்ணத்தை விடுத்துவிடும் அல்லது விடுக்கும்படிச் செய்யும். அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாக வளர்க்கும்படி செய்யும்.

நாம் எடுக்கும் இத்தகைய எண்ணங்கள் நமக்கு எவர் தீங்கு செய்கின்றாரோ அவர்களுக்குள் பாய்ந்து அதை நினைவுக்குக் கொண்டு வரும்.
1.நம்மை எண்ணும் பொழுதெல்லாம் அவர்களைப் பலவீனப்படுத்தும்.
2.தீங்கு செய்யும் நிலைகளை மடக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளைத்தான் நாரதன் கண்ணனிடம் செல்வார்… இந்திரனிடம் போகின்றார்… அசுரனிடமும் போகின்றார்… எல்லோரிடமும் போகின்றார்… என்று இந்திரலோகத்தையே சொல்லிக் காட்டுகின்றார்கள்.

ஒவ்வொருவரிடமும் இந்த உண்மைகளை உணர்த்திச் சொல்லி அந்த உணர்வுகளை எப்படிச் சீர்ப்படுத்துகிறார் என்ற நிலைகளை விளக்கவுரைகளாகக் காட்டுகின்றார்கள்.

ஆக நமக்குள் இருக்கக்கூடிய பிடிவாதமான குணங்களுக்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை ஒவ்வொன்றும் படரச் செய்து அது மட்டுமல்லாதபடி…
1.எதிரி தீங்குகளையும் தவறுகளையும் செய்கிறான் என்றால்
2.இதே உணர்வுகள் கண்கள் கொண்டு பார்க்கப்படும் பொழுது
3.இந்த எண்ணம் அவர்கள் நுகரப்படும் பொழுது ஊடுருவி
4.பிடிவாதமாக இருப்பதையும் தொந்தரவு செய்வதையும் உணர்த்தி
5.அதனால் உங்களுக்கு என்ன விளைவு ஏற்படுகிறது…? என்றும் அவர்களுக்குள் உணர்த்தச் செய்கின்றது.

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் அவன் கண்ணனிடத்திலும் செல்கிறான் மும்மூர்த்திகளிடமும் செல்கிறான் மற்றவர்களிடத்திலும் செல்கின்றான் என்ற நிலையில்
1.அந்த நாரதன் என்ற மகரிஷியின் அருள் உணர்வுகள்
2.நாம் பகைவர்களை எண்ணும் பொழுது கூட
3.கண்ணன் அங்கே அழைத்துச் சென்று அங்கே பதியச் செய்து இந்த உணர்வை ஊட்டுகின்றான்.

அதாவது நாம் எதைக் கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வலைகள் படரச் செய்யப்படும் பொழுது இந்தக் கண்களின் நினைவாற்றல் கொண்டு அவர்கள் நம்மை எண்ணும் பொழுதெல்லாம்
1.அதே கண்கள் அங்கே அழைக்கப்பட்டு இந்த நாரதன் உள்ளே சென்ற பின்
2.அவர்கள் செய்யும் தவறான உணர்வுக்குள் நாரதன் கலகப் பிரியனாகி
3.அந்தக் கலகமோ நன்மையில் முடியும்… அப்பொழுது அந்த உணர்வுகள் சென்ற பின் அது அங்கே அடக்குகின்றது.

அவர்கள் அறியாது செய்யும் இச்சைகளும் வெறுப்பான நிலைகளில் அவர்கள் செய்யப்படும் பொழுதும் அவராலும் சந்தோஷத்தை அனுபவிக்க முடிகின்றதா… அதனால் தொல்லைகள் அனுபவிக்கின்றனர்… வெறுப்பலைகளைச் சுவாசிக்கின்றனர்…! அவர்களுக்கும் இந்த நோய் வருகின்றது என்பதை முழுமையாக உணர்த்திக் காட்டுகின்றான் என்று காவியங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நாரதனை மையமாக வைத்துக் காட்டினாலும் அந்த நாரதன் யார்..? அகஸ்தியமாமகரிஷி அவர் உயர்ந்த சக்தி பெற்று இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதும் அதனைப் பின்பற்றிச் சென்றோர் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் சக்திகளைத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்று காட்டுகின்றார்கள்.

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அந்த அரும்பெரும் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொண்டு கண்ணிலே எண்ணும் பொழுது
1.யார் தவறு செய்தாலும் அவர்கள் திருந்த வேண்டும்
2.அவர்கள் அறியாமை நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வைச் செலுத்திப் பாருங்கள்.
3.இந்த உணர்வை நாம் செலுத்தப்படும் பொழுது அவர்களின் தீமையின் உணர்வுகள் நமக்குள் விடுவதில்லை.

அவர்கள் தீமை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் எண்ணும் பொழுது இது ஊருவும். உதாரணமாக… எப்படித் தீங்கு செய்தான் என்று எண்ணும் பொழுது புரை ஓடுகின்றதோ அதைப் போல் இந்த அலைகளை நாம் எடுத்துக் கொண்டால்
1.அங்கே அவர்கள் தீங்கும் செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது
2.நம் உணர்வுகள் அவர்களைத் திருத்தவும் உதவுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

நீதிமன்றத்தில் நமக்கு நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..?

 

சிலர் நம்முடைய பொருளை அபகரிக்கும் தன்மை கொண்டு தட்டிப் பறிக்கும் உணர்வு கொண்டு செயல்படுவர். அதற்காக நாம் கேஸ் போட்டு வாதாடினாலும் அதிலே நியாயமான முறையில் வெற்றி பெறவேண்டும் என்றால் தவறு செய்தவரின் உணர்வை எண்ணி வேதனைப்படக் கூடாது. அதை எடுத்துக் கொள்ளாமல் அருள் மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும். பின் அங்கே நமக்காக வாதாடுபவர்களுக்கும் அங்கிருக்கும் ஜட்ஜுக்கும் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி அவர்கள் உண்மையை உணர்ந்து தீர்ப்பு கூற வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தினால் நம்முடைய பொருள் நமக்குக் கிடைக்கும். பயமோ பதட்டமோ எடுக்கக்கூடாது. 

 

cosmic breathing

“வள்ளலார் கூறிய அருள் பெரும் ஜோதி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதனுக்கும்… மற்றெல்லா மிருகங்களுக்கும்… பட்சிகள் யாவைக்குமே… இயற்கையின் ஒளி ஈர்ப்பு… தனக்கு முன்னாடி உள்ளதை ஊடுருவிப் பார்க்கும் தன்மையில் தான் அமையப் பெற்றுள்ளது.

ஒரே சுழற்சி கதியில் தான் ஈர்ப்பின் சுழற்சி ஓட்டமே சுழன்று ஓடுகின்றது.
1.முன்னோக்கிச் செல்லும் சுழற்சி கதியில்தான் வாகனங்களையும் மனிதன் அமைக்கின்றான்
2.மேல் நோக்கிய கதியில் தான் தெய்வ சக்தியை எண்ணி வணங்குகின்றான் மனிதன்.

ஆனால் மேல் நோக்கிச் சுவாசம் ஈர்த்து பூமி கக்கும் பூமி எடுத்து வெளிப்படுத்தும் ஈர்ப்பின் சுவாசத்தை
1.ஜீவராசிகள் தன்னுடைய சுவாச ஈர்ப்பிற்கு
2.கீழ் நோக்கிய சுவாசமாகத் தான் எடுத்துப் பூமியின் பிடியில் சிக்கி
3.பூமியின் ஈர்ப்புடன் ஈர்ப்பாகவே இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பெல்லாம் உள்ளன.

ஆரம்பக் கதியில் எந்த உயிரணு எந்த அலைத் தொடர் அமிலக் கூட்டின் உருவகத் தன்மை எடுத்து ஆவியாகிப் பிம்பமாகி ஒவ்வொரு பிம்ப மாற்றத்திலும் வழிப்படுத்திக் கொண்ட உணர்வெண்ணக் கூட்டு அமில ஈர்ப்பின் பிடி…
1.இந்தப் பூமியின் சுவாசப் பிடியின் தொடர்பு ஈர்ப்புப் பிடியிலே சிக்குண்ட தன்மையில்
2.கீழ் நோக்கிய சுவாச ஈர்ப்புடன் வாழும் தன்மையிலேயே உள்ளது.

இதையே பகுத்தறியக்கூடிய ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் தன் ஜீவ பிம்ப உடலின் எண்ண சக்தியை நற்குண வழித் தொடரில் மேல் நோக்கிய சுவாச அலையை ஈர்த்தெடுக்ககூடிய ஜெபம் கொண்ட சக்தி பெற்றால்… அதனால் ஏற்படும் வளர்ச்சி நிலை என்ன…?

ஏனென்றால் இந்தப் பூமியின் ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் நிலையில் “நற்குண ஜெப முறையினால்…” இந்த உடல் முழுமைக்கும் படர்ந்துள்ள அனைத்து அணுக்களுக்கும் மேல் நோக்கிய சுவாச அலை ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மேல் நோக்கிய சுவாசத்தால்…
1.உடலின் அணுக்களுக்கு எல்லாம் ஊடுருவும் உயர் காந்த சக்தியின் செயல் ஏற்பட்ட பிறகு
2.இந்த ஜீவ பிம்ப உடலில் இருந்தே இவ்வெண்ணத்தை ஒளியின் அலையாக
3.தனித்த ஒரு ஜோதி உணர்வாகச் செயல்படுத்த முடியும்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் எதைச் சேர்த்தாலும் அதுவும் எரிந்து பஸ்பமாகத்தான் செய்யும்.. ஒளியாகத்தான் காட்டும். அதைப் போல் இவ்வுணர்வால் எடுக்கும் எண்ண ஜெப முறையின் வழியினால் உயிரான்மாவைப் பேரொளியாக ஆக்கிட முடியும்.

1.சூரியனின் ஒளி.. கண்ணாடியில் பட்டு மறுபக்கம் ஊடுருவுவதைப் போல் இல்லாமல்
2.அதே சூரியனின் ஒளி… பாதரசம் பூசிய கண்ணாடியின் மேல் படும் பொழுது
3.இவ்வொளியை ஈர்த்து இரசக் கண்ணாடி வெளிப்படுத்தும் ஒளியைப் போல்
4.இந்த உடல் பிம்பக்கூட்டிற்கு நற்குண அமில இரசத்தைப் பூசி ஜெபம் கொண்டோமானால்
4.வள்ளலார் உணர்த்திய அருட்பெரும் ஜோதி என்ற நிலையான தனிப் பெரும் கருணை கொண்ட அவர் உணர்த்திய முறையான
5.நம் ஆத்மாவை ஜோதியாக… அருட்பெரும் ஜோதியாக.. ஆக்கிடல் வேண்டும்.

பூமியின் ஈர்ப்புச் சுவாசப் பிடியில் உள்ள நிலையில் ஜீவன் பிரிந்தால் இதே சுழற்சி ஓட்டத்தில் மீண்டும் மீண்டும் சிக்குண்டு சுழலும் தன்மை தான் பெற்றிட முடியும்.

அவ்வாறு பூமியின் பிடியுடன் மேன்மேலும் சிக்கிப் பல அமில குணங்களின் மாற்றத்திலும் இவ்வுடல் பிம்ப உயிரணுக்கள் எவையுமே எவ் வீர்ப்புப் பிடிக்கும் செல்லாமல் மற்ற ஜென்மத் தொடர் வழிக்கும் செல்லாதபடி நம் ஜெப நிலை இருந்திடல் வேண்டும்.

 

ஆகவே நம் உயிர் ஆத்ம ஜோதியை அருட்பெரும் ஜோதியாக… தனிப் பெரும் கருணை கொண்ட எச்செயலையும் உருவாக்கும் தன்மைக்கு… உயிர் ஆத்மாவின் உயர் ஆத்ம ஜோதியை நாம் வளர்க்க முடியும்… வளர்க்க வேண்டும்..!

சூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் 

நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! அரோகரா…! இப்படிப் பாடுவதன் உட்பொருள் என்ன…?

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும் 

spiritual Command

நல் வழியில் இப்படித்தான் நடக்க வேண்டும்… நம் காரியங்கள் நல்ல முறையில் சித்தியாக வேண்டும் என்று “ஆக்கினை” இட வேண்டும்

 

உதாரணமாக நமக்கு ஒருவர் தீங்கு செய்கிறார் என்றால் அதைத் தடைப்படுத்த என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்…! என்று எண்ணினால் போதும்.

நமக்கு யார் தீமை செய்தாலும் சரி… இவ்வாறு தான் எண்ண வேண்டும்.

நாம் வளர்த்துக் கொண்ட அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள்
1.அவர்கள் தீமையை எண்ணும் பொழுதெல்லாம்
2.நமக்குத் தீமை செய்ய எண்ணும் பொழுதெல்லாம்
3.சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக அவர்கள் உடலிலே இது ஊடுருவப்பட்டு
4.அங்கே இருக்கும் தீமையின் உணர்வுகள் – நம் பேரில் இருக்கக்கூடிய அந்த அணுக்களை இது தணியச் செய்யும்.

அதே சமயத்தில் நமக்குள் அந்தத் தீமையின் அணுக்கள் வளராது… நோய் வராது… அவைகளைத் தடைப்படுத்தும் தன்மை வருகின்றது.

நாம் ஒரு காரியத்திற்கே செல்கிறோம்… திரும்பத் திரும்ப செல்கிறோம்… என்றால் அதனால் அடிக்கடி சோர்வு என்ற நிலைகள் வரும். அப்பொழுது அதுவே நமக்கு எதிரியாகிவிடுகின்றது.

அப்படி எதிரியாகாதபடி தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரிடன் வேண்டுதல் வேண்டும்.

அந்தத் துருவ மகரிஷியை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

ஏனென்றால் தீமைகளைக் காட்டிலும் இது வல்லமை பெற்றது.. அதை அடக்கும் சக்தி கொண்டது.

ஆகவே அருள் உணர்வின் தன்மையை இப்படிக் கவரும் பழக்கம் வந்து விட்டால்
1.அந்தத் தீமையான உணர்வுகளையோ மற்ற துன்பங்களையோ எண்ணும் பொழுது
2.நாம் அதை எண்ணி எண்ணி அடைகாக்காதபடி.. அதை வளர்க்காதபடி தடைப்படுத்துகின்றோம்.

இது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பழக்கத்திற்கு வந்தபின் ஒரு காரியத்தை நாம் சரியான முறையில் செய்ய முடியவில்லை என்றாலும் அதை அடுத்து…
1.நாம்… இப்படித்தான் நடக்க வேண்டும்…! என்ற மகரிஷிகளின் அருள் உணர்வைத் தனக்குள் வளர்த்து
2.இந்தக் காரியங்கள்… “இப்படித்தான் சித்தியாக வேண்டும்…!” என்ற அந்த உணர்வினை
3.மகரிஷிகளின் அருள் வட்டத்துடன் இணைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நமக்குள் அந்த அருள் ஞானத்தை வளர்க்கும் சக்தியும் அருள் ஒளியை வளர்க்கும் சக்தியும் பெருகுகின்றது. நம் காரியங்களும் சீராகின்றது. மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றது.

செய்து பாருங்கள்..!

சீவலிங்கம் இராமலிங்கமாக மாற வேண்டும்

 

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக கணவனும் மனைவியும் இணைந்த நிலைகளில் செயல்பட்டு நாம் இராமலிங்கமாக மாற வேண்டும். காலை துருவ தியானத்தின் மூலம் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

 

divine man

உலகெங்கிலும் உள்ள இன்றைய தெய்வ பக்தி நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூண்டின் செடி வித்தான ஆரம்ப வளர்ச்சி நிலையில்… அதன் கிளைத் தொடர் அச்செடி வளர்வதற்குகந்த ஜீவ சக்தி இருக்கும் வரை… அப்பூமியின் சுற்றளவில் ஆரம்பப் பூண்டுக் கிழங்கின் வளர்ச்சிக் காலம் முடிவுற்றாலும்… அதன் தொடர் வளர்ச்சிக் கிளைப் பூண்டுகள் எவ்வித்தின் ஆரம்பத்தில் வளர்ச்சி கொண்டு வளரப் பெற்றதோ… அதன் குண ஜீவ சக்தியும்… தன் வளர்ச்சிக்குகந்த நிலப்பரப்பு உள்ளவரை வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

அதைப் போல் இம்மனிதக் கரு எண்ணத்தில் சக்தி கொண்ட ஆத்மாக்களின் வளர்ச்சியினால் பல ஆயிரம் காலங்களுக்கு முன் அவர்கள் உணர்ந்து வெளிப்படுத்திச் சென்ற உண்மை நிலைகளின் படர் தன்மை வழித் தொடர் அலைத் தன்மையில் இன்றளவும் இந்தப் பூமியில் பல தெய்வங்களை வணங்கக்கூடிய முறையாக வழி பெற்று விட்டது.

1.பல குணங்களை உணர்ந்த சித்தர்களினால்
2.நல் வழிப்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த அலைத் தொடரின் உருவங்களாகப் படைக்கப்பட்டவை
3.எல்லாமே இன்று கால நிலையின் மாற்றத்தினால் மாறி விட்டது.

ஆக மனித எண்ணத்தின் உணர்வலைகள் பல கூறுகளில் மாறு கொண்டு… மாறு கொண்டு… சுழற்சி பெற்ற வழிதனில்
1.உண்மைச் சக்தியின் தெய்வ நிலை
2.வெறி கொண்ட பக்தி முறையாக இன்றுள்ள சுழற்சி நிலையில் உள்ளது.

இந்தியாவில் இந்த நிலை என்றால் மற்ற இடங்களில் ஜாதி வெறியற்ற நிலையின் இனமாற்றம் என்ற வெறி உணர்வின் ஈர்ப்பில் தெய்வ சக்தியின் அன்பு பாச பிணைப்பின் வழித் தொடர் செல்ல முடியா உணர்வு எண்ணங்கள் தான் உலகெங்கிலும் அங்குள்ளன.

ஆனால் மனித எண்ண உணர்வால் எடுக்கும் சக்தியினால் எச்சக்தியும் பெறவல்ல ஆற்றல் மனித பிம்பக் கூட்டிற்கு உண்டு.

விஞ்ஞானத்தின் தொடர்பினால் ஒன்றின் சேர்க்கை கொண்டு அறியக் கூடிய செயல் வன்மையினால் பலவற்றையும் உணரும் மனிதன் இவ்வுடல் பிம்பக் கூட்டைக் கொண்டு எந்நிலையையும் உணரவும் செயலாற்றவும் முடியும்.

ஆவி நிலையின் சுழற்சி ஈர்ப்பில் மனித உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் படர் கொண்ட சுழற்சியில் இந்தப் பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியே மனிதன் எடுக்கும் எண்ணமுடனும் உணர்வுடனும் சுழன்று கொண்டுள்ள நிலையில் இந்த மனிதப் பிம்பக் கூட்டின் எண்ணத்திற்கொப்ப இவ்வாவி ஈர்ப்பின் அலைத் தொடரில் சிக்குண்ட மனிதர்களும் வாழ்கின்றனர்.

காற்றுடன் கலந்துள்ள படர் தொடரில் பல சக்திகளின் சுழற்சியின் மத்தியில் தான் மனிதனும் வாழ்கின்றான்.
1.எண்ணத்தின் சுவாச நிலைக்கொப்ப எல்லாம்
2.எண்ணிய நிலை கொண்ட அலைத் தொடர் வருகின்றது.

பயம்… சந்தோஷம்.. மற்ற எந்த நிலைகள் கொண்ட எவ்வெண்ணத் தொடராக இருந்தாலும் அந்நிலையான சுவாச நிலையின் அலைத் தொடர் பிம்பக் கூட்டின் சுழற்சியுடன் எண்ணத்தில் எண்ணும் நிலைக்கொப்ப எல்லாமே உடலுடன் சேமித்துக் கொண்டே தான் உள்ளது.

1.பக்தி மார்க்கமானாலும் யோக சக்தி மார்க்கமானாலும்
2.விஞ்ஞான அஞ்ஞான எஞ்ஞானமானாலும்
3.எண்ணத்தில் எண்ணும் வழித் தொடர் கூட்டு அமிலச் சேர்க்கையை
4.உடல் என்ற பிம்பங்கள் சேமித்துக் கொண்டேயுள்ளது.

எவ்வெண்ணத்தை உயர்த்தி… அதன் வழித் தொடர் கொண்ட குணத் தன்மையில் இவ்வெண்ண சுவாசம் உள்ளதுவோ… அவ்வழித் தொடர் கொண்ட அலையின் அமில குணத்தின் வீரியத் தன்மை தான் மனிதக் கூட்டின் பிம்பக் கலவையில் நிறைந்திருக்கும்.

 

நாம் எதை நமக்குள் நிறைத்திட வேண்டும் என்பதை உணர்ந்து இந்த மானிடப் பிறவியில் முழுமை அடைந்து ஞானைத்தின் முதிர்வு என்னும் நிலையை எய்திடல் வேண்டும்.

ஆமையைப் போட்டுக் “கூர்மை அவதாரம்” என்று ஞானிகள் காட்டியதன் உட்பொருள் என்ன…?

மனித உடல் பெற்ற காண்டத்தின் இயல்பு

சைவம் அசைவம் விளக்கம்

 

meditation techniques

வேண்டாதவர்கள் என்று பகைமையானால் நம் நல்ல குணங்களைக் காக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

வெளியிலே பார்க்கும் பொழுது யாராவது வேண்டாதவர்கள் வந்தால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் எனக்கு இப்படிச் செய்தார்களே…! என்று எண்ணினால் போதும்.

இந்த நினைவலைகள் இந்தக் கண்ணின் நினைவாற்றல் அவர் உடலிலே நம் உணர்வு பதிவாகி இருப்பதால் அதைப் போய் உடனே எர்த் (EARTH) ஆகும்.

1.எப்படி ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி
2.அதனுடன் தொடர் கொண்டு அதைத் தரையிலிருந்து இயக்குகின்றனரோ
3.அதைப் போல் நமக்கு வேண்டாதவர்கள் உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது உடனே அவர்களை இயக்குகின்றது.
4.அவர்களின் செயலாக்கங்களை இடைமறிக்கின்றது… அவருக்கு இடையூறு வருகின்றது.
5.அந்த அணுக்களின் தன்மை அங்கே வளர்ச்சி பெறுகின்றது… அதன் வழி அங்கே தடைப்படுத்துகின்றது.
6.அதே சமயத்தில் நம்முடைய நல்ல காரியங்களுக்கும் தடையாகின்றது.

பகைமை இல்லாது எதுவுமே நடப்பதில்லை…!
1.ஒரு பகைமை என்று வந்து விட்டால்
2.“உஷார்…” தன்மை கொண்டு
3.நல்லதைக் காக்கும் உணர்வை வளர்த்துவிட வேண்டும்.

மாறாக… பகைமை என்ற உணர்வு வந்தால் எனக்கு இப்படி நடக்கின்றதே…! என்ற எண்ணத்தை வளர்த்து விட்டால் அந்த உணர்வின் அணுக்கருக்கள் நமக்குள் விளைந்து நம் உடலில் நோயாக மாறுகின்றது. நம்முடைய எண்ணங்களும் சீர் கெடுகின்றது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அதிகாலையில் துருவ தியானத்தில் கொடுக்கும் ஆற்றலை நீங்கள் எண்ணி எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

எப்பொழுது நம் மனம் சோர்வடைகின்றதோ அப்பொழுது அந்தச் சோர்வை விடாதபடி தடைப்படுத்த “ஈஸ்வரா…!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணிடல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் பெருக வேண்டும் எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திலும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை நாம் உள் செலுத்த வேண்டும்.
2.அது தான் கண்ணன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான்…! என்று சொல்வது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அது அணுக்களாக விளைகின்றது. நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தான் அணுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது.

இப்படி அணுவாக உருவாக்கினாலும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று வானை நோக்கி எண்ணி அந்த உணர்வை உயிருடன் ஒன்றி மீண்டும் நம் உடலுக்குள் எங்கள் இரத்த நாளங்களில் அந்த அணுக்கருக்கள் உருவாக வேண்டும் என்று செலுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்களும் பெறவேண்டும் என்று
1.வெறும் வாயால்… மந்திரம் சொல்வது போல் சொல்லக் கூடாது
2.உங்கள் நினைவினை வானுக்குக் கொண்டு போய்
3.அங்கிருக்கும் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு… அதைக் கவர்ந்து..
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற நினைவினை உள் பாய்ச்ச வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்ட பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்.

மற்றவர்களுக்கும் (பகைமையானவர்கள்) அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி எடுத்து விட்டால் இந்த நினைவு உடனே அங்கே அவர்களுக்கும் செல்கிறது. அதே சமயத்தில் அந்த உணர்வின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே நமக்குள் வளம் பெறுகின்றது.
2.அப்பொழுது நமக்குள் வரும் அந்த வேண்டாத சக்தி இங்கே தடைப்படுத்துகின்றது.
3.நம் காரியங்கள் நல்லதாகின்றது.

 

இது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

குகைகளில் அடைபட்ட உயிரான்மாக்கள்

 

தவத்திற்காகச் சென்றவர்கள் பல நூறு வருடங்களாக ஓ…ம் நமச்சிவாய என்று சொன்னாலும் அவர்கள் எந்த நிலையில் இருக்கின்றார்கள்…? என்பதை இமயமலைச் சாரலில் வைத்து குருநாதர் காட்டினார்.

 

indian gods

பல தெய்வங்களை வைத்து வழிபட வேண்டியதன் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சுவை தரும் இயற்கைக் கனிகள் தன்மையில் இனிப்பின் சுவையே ஒவ்வொன்றுக்கும் மாறுபாடு உள்ளது.

மிளகாய்க்கும் மிளகிற்கும் வெங்காயத்திற்கும் இஞ்சி போன்றவற்றின் கார குணமானது ஒன்றுக்கொன்று மாறுபட்ட காரம் கொண்டது.

அதே போல் அதை ஒவ்வொன்றையும் உண்ணும் பொழுதும் உடல் நிலைக்கு ஒவ்வொரு நிலையான “உஷ்ண கதியும்” ஏற்படுத்தவல்ல குண நிலையும் அவைகளுக்கு உள்ளது.

புளிப்பு சம்பந்தப்பட்டதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றின் புளிப்புச் சுவையும் அதற்குகந்த உடல் தன்மைக்கு அதனுடைய குணச் செயலும் ஏற்படுகின்றது.

இதைப் போன்றே உணர்வின் எண்ணங்களும்
1.ஒவ்வொரு மனித பிம்பத்தின் உணர்வு எண்ண நிலைக்கொப்பத்தான்
2.அப்பிம்ப உடலில் இருந்து செயல் கொள்ளும் ஆத்ம உணர்வின் சேமித
2.குணச் சக்தியின் அமிலக்கூட்டு உருவாகியுள்ளது.

இந்திய பூமியில் தான் மனித குணங்கள் கொண்ட பல நிலையான விக்கிரகங்களை அமைத்து வணங்குகின்றனர்.

மற்றவர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்…” என்று ஒரே ஆண்டவனை வணங்கும் பொழுது இங்கே பல நிலையான விக்கிரக ஆராதனையும் மாறு கொண்ட பூஜை முறைகளையும் வழிப்படுத்தியதன் உண்மை நிலை என்ன…?

இது எல்லாம் அன்று ஒவ்வொரு சித்தனாலும் தான் எடுத்த சக்திகளை அந்தந்த மனிதக் கூட்டின் அமில ஈர்ப்பின் நிலைக்கொப்ப ஒன்றின் சக்தியினால் பிறிதொன்றின் வழித் தொடர் கூட்டி வழிப்படுத்தித் தந்த முறை வழியில் வந்தது தான்…!
1.குண நிலைகளின் உருவத்தை உருவகக் கல்லாகச் செதுக்கி வைத்து
2.கல்லின் உருவத்தில் குணங்களையும் அதனின் இயக்கங்களையும் உணர்த்தினான்.

விஞ்ஞான முறைப்படி இன்று பாடநிலைகளைப் பல வகையில் கல்வி கற்பவர்களுக்குக் கொடுப்பது போல் அன்றைய சித்தர்கள் சிற்பங்கள் மூலமாக பாமர மக்களுக்கும் புரியும் வண்ணமாக உணர்த்தினார்கள்.

1.குண மாற்றத்தின் சக்திதனை எடுத்து
2.அக்குணத்தின் விக்கிரகத்துடன் எண்ணத்தைச் செலுத்தி வணங்கும் நிலையில்
3.எக்குண தெய்வத்தை ஒருவன் வணங்குகின்றானோ
4.அக்குணத்தின் அடிப்படை சக்தியின் உணர்வை அவ்வாத்மாவும் ஏற்று
5.அவ்வழி சக்தித் தொடர் பெற வேண்டிய நிலைக்கொப்பத்தான்
6.பல உருவ வழிபாட்டினை உணர்த்திச் செயல்படுத்தி வந்தனர்.

ஆக சப்தரிஷிகளினால் இன்றளவும் அவ்வழிபாட்டின் தொடர் சுழற்சி வளர்ந்து கொண்டுள்ள உண்மை தான் “பல உருவ வழிபாட்டு முறை எல்லாம்…!”

உருவ வழிபாட்டின் மாறுபட்ட குண நிலை போன்றே மனித பிம்ப உடல் எண்ணத்திலும்… மாறு கொண்ட நற்குணங்களிலும் பல நிலைகள் உண்டு…. தீய குணங்களிலும் பல நிலைகள் உண்டு…!

இதைப் போன்றே சப்தரிஷிகளினால் செயல்படுத்தும் முறையிலும் அவரவர்கள் ஆரம்ப குணத் தன்மையில் அதிகமாகச் சேமித்த எண்ண உணர்வின் விகித நிலையின் வளர்ச்சித் தொடரிலே தான் இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் வழித் தொடர் கொண்ட ஒளி அலையை உணர்வலையாக்கி பல தன்மைகளை மாற்றி மாற்றிச் செயல் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளினால் இந்தப் பூமியில் விதைத்த மனிதக் கருவின் வளர்ச்சியின் தொடரே இன்றைய இக்கலி மாறி கல்கி சுழற்சியில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மாறப்படும் இந்த மனிதக் கரு உருவங்களும் மாறு கொண்ட தன்மையில் தான் உருவாகும்.

சப்தரிஷிகளின் சக்தி நிலை கூடக் கூட காலப் போக்கில் தீய நிலைகளை எல்லாம் மாற்றி உயர் சக்திகளை அவர்கள் வளர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

 

1.இந்தத் தொடர் முறை மாற்றத்தின் வழிதனையும்
2.பல குண வழித் தொடர் ரிஷிகளின் தொடர் நிலையையும் நாம் எடுக்கும் ஜெபத் தொடரில்
3.ஒவ்வொருவர் எடுத்த தனித்த உயர் சக்தியின் வழித் தொடர் அலையை ஜெப முறையினால் நாமும் எடுக்க முடியும்.

செல்வம் நம்மைத் தேடி வர வேண்டும்…! என்றால் என்ன செய்ய வேண்டும்

வேதனைப்பட்டு அல்லது வேதனைப்படுத்தி உடலை விட்டுப் பிரிபவரகளின் நிலை 

 

பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

 

valor meditation

வீர குணத்துடன் தியானித்து மகரிஷிகளின் வீரிய சக்தியைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஈர்ப்புத் தன்மையின் வளர்ச்சித் தொடரில் ஆணாகவோ பெண்ணாகவோ உருவாகி வளர்ந்து ஒவ்வொரு ஜென்மங்களும் எடுக்கும் கருவில் உருவ பிம்ப உணர்வு எண்ண வாழ்க்கை முறையில்
1.இவ்வெண்ணத்தை எப்படி வழி நடத்துகின்றோமோ – அவ்வழியின் நிலைக்கொப்ப குண நலன்கள்
2.பிம்ப உடலின் கூட்டு அமிலமுடன் ஜீவ சக்தியுடன் கூடிய சுவாசத்தால்
3.உடல் அமில விகித நிலையும் ஒவ்வொரு பிறவியிலும் மாறுடுகின்றது.

ஆனால் மனித எண்ண பிம்ப உடலில் தான் செயலாற்றும் திறமையும் சொல் வடிவ உணர்வலைகளும் உள்ளது.

இந்த உடல் அமிலக்கூட்டையே உணர்வின் எண்ணத்தால் தாக்கப்படும் எந்த ஒரு குண நிலையையும் சமமான நிலைப்படுத்திச் செயல்படக்கூடிய தன்மை இவ்வெண்ணத்தால் வழிப்படுத்தும் முறை கொண்டு செயல்படுத்த முடியும்.

வாழ்க்கையில் நம்மை எதிர்கொள்ளும் மனித பிம்பத்தை விட்டுப் பிரிந்த ஆவி நிலை கொண்டோரின் அலையிலிருந்து இவ்வுடல் பிம்ப எண்ணத்தில் ஈர்க்கப்படும் உணர்வு நிலையை
1.எண்ணத்தால் சமப்படுத்தும் நிலை பெற்றுவிட்டால்
2.இவ்வெண்ண பலத்தினால் எந்தச் செயலையும் செயலாக்க முடியும்.

வீரமான உணர்வுகளையும் அவ்வீரத்தின் உயர் ஆற்றலையும் கொண்டு
1.நம்மை வந்து மோதும் எந்தத் தீய செயலையும்
2.நாம் எடுக்கும் எண்ணத்தின் பார்வை கொண்டே நம்மை அவை வந்து தாக்காமல்
3.நம் உணர்வின் சுவாசம் பட்ட நிலையிலேயே அந்தத் தீய சக்தியைப் பார்வையாலேயே மாற்ற முடியும்.

எண்ணத்தால் எடுக்கும் ஜெபத்தின் வீரிய… வீரச் செயல்… தன்மை இருந்தால் அதே சமயத்தில் நம்முள் உள்ள அமிலக் கலவையின் கூட்டு
1.நற்குண வழித் தொடர் பெற்றிருக்குங்கால்
2.இவ்வீரிய வீர உணர்வாக எந்த நிலையையும் நாம் பெற முடியும்.

அன்பு பாசம் ஞானம் அனைத்தும் நமக்கு வேண்டியது தான்…!

ஆனால் அனைத்துச் சக்திகளையும் சாந்தமுடன் சுழலவிடும் ஜெபத்தினால் இவ்வாழ்க்கை என்ற நிறைவுக் குணத்துடன் மட்டும் தான் சுழல முடியும்.

ஆக… வீரத்தின்… வீர சக்தித் துடிப்பு உணர்வின் செயல் கொள்ளும் செயல் நிலையை… இவ்வுடல் என்ற அமிலக் கூட்டிலேயே வீரியம் கொள்ள வேண்டும்.

1.வீரத்தின் வீரிய செயல் குணத் துடிப்பு உணர்வால் உந்தப்படும் இவ்வெண்ணத்தின் ஈர்ப்பலையை
2.உயர்ந்த ஜெப சக்தியின் தொடர்பு கொண்டு
3.சித்தர்கள் சப்தரிஷிகள் ஆகியோரின் உணர்வுடன் ஒன்றப்படும் செயலினால்
4.இம்மனித பிம்ப உடல் சக்தி தான் தெய்வ சக்தியாகின்றது.

ஆவலும்… ஆவலுக்குகந்த ஆசை விரமும்… உணர்வால் ஜெபமுடன் கூடிய அறிவும்… ஞான வழித் தொடரில் செலுத்தி அவ்வழியினில் நாம் சென்றோமானால்
1.நாம் செல்லும் அந்த வேகம் கொண்டு
2.நம் சுழற்சியுடன் நம்மை வழி நடத்திச் செல்லும் குருவின் நிலைக்கே
3.நம் செயலைக் கொண்டு சுழற்சியின் சக்தி வேகம் அதிகம் கொள்ளும்.

அறியும் அறிவாற்றல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டுமப்பா…!

இவ்வாழ்க்கை இன்பம் துன்பம் என்ற சுழற்சியின் கதியிலேயே எண்ணத்தைச் சமப்படுத்தி உண்டோம்… உறங்கினோம்… வாழ்ந்தோம்…! என்ற குறுகிய சுழற்சியில் இருக்கக் கூடாது.

எந்த நல்ல குணத்தின் சக்தியை நாம் பெற்றிருந்தாலும் அறிவோம்…! “ஹரிநாராயணா…” என்ற உண்மை நாமத்தின் வழித் தொடர் ஜெப நாமத்துடன் நம் செயல் சுழன்று கொண்டேயிருக்க வேண்டும்.

ஹரி ஓ…ம் (அறிவோம்) எதனையும் நாம் அறிந்து கொண்டேயிருப்போம். ஹரி நாராயணா… ஹரே… படைப்பின் படைப்பு நாராயணா…!
1.உன் படைப்பையே நான் அறிய
2.படைக்கப்பட்ட படைப்பையே அறிந்து படைக்க வருகின்றேன் என்ற
3.அறிவோம்…! என்ற வீர உணர்வு சுழற்சியின் செயல் வளர்ச்சியில்
4.ஞானச் செயல் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

காலத்தின் மாற்றமும் உருவத்தின் மாற்றமும் மாறிக் கொண்டே தான் உள்ளது ஒவ்வொரு நொடிக்குமே.

இந்தச் சுழற்சியின் சுழற்சியாகச் சிக்குண்டு கிடைக்க முடியாத பாக்கியமாக மனித உருவத்தை எடுத்துள்ள நாம் இவ்வுருவத்தின் ஜீவத் துடிப்பு சக்தியைக் கொண்டு தான் எந்தச் சக்தியையும் பெற முடியும் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்.

 

இந்த உடல் பிம்ப உணர்வு எண்ணத்தையே “வீரம்…” என்ற உயர் சக்தியின் வீரிய குணமாக… நம் குணத்தை ஜெபம் கொண்டு மகரிஷிகளின்பால் நம் எண்ணத்தைச் செலுத்தி நாம் எடுக்கும் ஜெப நிலை கொண்டு பல உன்னத நிலைகளைப் பெறலாம்.

nandi devar

நாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…?

 

நாம் எதிர்பார்த்த அளவுக்கு தொழில் நடைபெறவில்லை என்றால் அடுத்த நிமிடம் நாம் என்ன எண்ணுகின்றோம்…?

சோர்வடைகின்றோம்… சோர்வை எந்த வழியில் அடைகின்றோம்…?

நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு (நல்ல அணுக்களுக்கு) அதற்குகந்த ஆகாரம் கிடைப்பதில்லை.
1,நாம் எதை எண்ணி அந்த உணர்வின் அணுக்கள் வளர்ந்திருக்கின்றதோ
2.மகிழ்ச்சியான உணர்வுகள் வரவில்லை என்றால் அந்த அணுக்கள் சோர்வடையும்.

அதனுடைய சக்தியை இழக்கும் பொழுது தான் சோர்வான உணர்வை நாம் சுவாசிக்கின்றோம். அப்பொழுது சோர்வடையும் அணுக்கருக்களாக நம் உடலில் உருவாகிவிடுகின்றது.

இப்படி… வியாபாரம் நடைபெறவில்லை…! என்றால் அடுத்தடுத்து சோர்வடைவோம் உணர்வுகள் வந்து ஒரு கோழி தன் இட்ட முட்டையை அடைகாப்பது போல் அந்த அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்குகின்றது.

சோர்வான அணுக்கள் பெருகும் பொழுது இதற்கு முன்னாடி எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தாலும் அல்லது வியாபாரத்திற்குச் சென்றிருந்தாலும் கூட… அடுத்தாற்போல் என்ன செய்வோம்…?

இங்கே பக்கத்திலேயே நல்ல சரக்கு கிடைக்கிறது என்றாலும் கூட இந்தச் சோர்வான உணர்வு வந்தவுடனே
1.சே…! எங்கே பார்த்தாலும்… எப்பொழுது பார்த்தாலும் இதே தான் ஆகிறது…! என்ற இந்த உணர்வு கொண்டு
2.அந்தக் குறித்த நேரத்திற்கு அந்த உணர்வுகள் செயல்படுவதில்லை… வேலை செய்ய விடுவதில்லை.

மேலும் மேலும் இந்த உணர்வுகளை அதிகமாக வளர்க்கப்படும் பொழுது எதன் வழியில்… யாரால்… இது போக முடியாமல் தடைப்படுத்தப்படுகிறதோ… “அவருடைய நினைவு” வருகின்றது.

அந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து
1.நம்முடைய சோர்வும்
2.அவர்கள் உணர்வையும் இந்த இரண்டையும் சேர்த்து ஒரு அணுவாக உருவாகும்.
3.அதாவது “இவரால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது…! என்ற இந்த உணர்வுகளை எண்ணி எண்ணி வளர்த்து விட்டால்
4.அந்த அணுக்கருக்கள் இதன் வரிசைப்படுத்தி “இரண்டாவது அணுக்களாக” இது விளைகின்றது.

அப்படி விளைந்து விட்டால் நமது வாழ்க்கையில் அந்த அணுத் தன்மை பெருகிப் பெருகி நமக்குள் அது நோயாக உருவாகத் தொடங்குகின்றது.

நோயின் தன்மை ஆன பின்… இந்த வாழ்க்கையில் அதிகமாக நாம் அதே எண்ணங்களை எடுத்துவிட்டால் உடலுக்குப் பின் அவருடைய உடலுக்குள் செல்கின்றோம்…!

அதே மாதிரி கடையை வைத்து வியாபாரம் நடத்துகின்றார்கள். அங்கே அடிக்கடி எலிகள் தொல்லை கொடுத்து அங்கிருக்கும் பொருள்களை உணவாக உட்கொள்கிறது.

அதைப் பார்த்ததும்… “எலி தொல்லை தாங்க முடியவில்லை…!” என்று அந்த எலியின் உணர்வுகள் நிறைய வரும்… உடலுக்குள் அந்த அணுக்கள் கருவாகும்.

இவர்கள் என்னதான் எலியைப் பிடித்து நசுக்கிக் கொன்றாலும் கூட அந்த எலியின் உணர்வுகள் இங்கே வந்து கொண்டே தான் இருக்கும்.
1.அந்த எலியின் உணர்வுகள் வளர்ந்து விட்டால்
2.மனித உடலை உருவாக்கிய அணு செல்கள் அது மாறுபடுகின்றது.
3.கடையில் எலிகள் அதிகமான பின் அந்த எண்ணங்களே தோன்றும்.

இதைப் போல் நுகரும் உணர்வுகளால் உடலில் உள்ள உறுப்புகள் சிறுகச் சிறுக குறையத் தொடங்கிவிடும். நினைவு பூராமே அந்த எலியின் பால் வரும்.

அவர்கள் நோய்வாய்ப்பட்ட பின் பாருங்கள்…! இங்கே எலி வருகிறது.. அந்தப் பக்கம் போகிறது.. அதைக் கடிக்கிறது…! என்று அவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

சில பேர் மரணமடையப் போகும் முன் எலியின் பால் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தியிருந்தால் அடுத்து அவர்கள் எங்கே செல்வார்கள்…?

இறந்த பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இந்த உணர்வை முழுமையாக்கிக் கொள்வார்கள். அந்த உடலுக்குள் சென்று இந்த எலியின் நினைவு தனக்குள் வரப்படும் பொழுது அதை முழுமையாக்கிய பின் அங்கிருந்து சென்ற பின்
1.எலியின் உடலுக்குள் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.
2.எலியின் உணர்வை வளர்த்து அதனுடைய கருவாகி இந்த உயிர் எலியாகத்தான் பிறக்கச் செய்கிறது.

நாம் நினைக்கிறோம் மனிதனாக இன்று இருக்கின்றோம் என்று…! ஆனால் மனிதனுக்கு அப்புறம் பிறவி என்ன…? என்கிற வகையிலே தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்குத்தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை..!” என்று ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

 

வேகா நிலை அடைந்தவன் அகஸ்தியன்

 

எத்தகைய விஷத்தின் தன்மை தாக்காது உணர்வை ஒளியாக மாற்றி அழியா நிலை பெற்றவன் முதல் மனிதன் அகஸ்தியன். அவனைப் பின்பற்றி அக்காலத்தில் விண் சென்றோர்கள் ஏராளம் ஏராளம். ஞானப் பாதையில் நாம் கடினம் என்று எண்ணலாகாது. பதிவு செய்தால் அதுவே உங்களுக்குக் குருவாக அவ்வப்பொழுது வழி காட்டும். உடலுக்குள் அணுக்களாகப் பெருக்கிடல் வேண்டும்.

தவறை மறைக்கும் நிலைகளால் உண்மையை அறியும் தன்மையே தடுக்கப்படுகின்றது

 

நாம் செய்த தவறு அடுத்தவருக்குத் தெரியக் கூடாது…! என்று நாம் அதை மறைப்போம். அதனால் உண்மையை அறியும் வாய்ப்புகள் இழக்கப்படும் சந்தர்ப்பமாகின்றது. அப்பொழுது வாழ்க்கையில் இருள் சூழும் நிலையே நமக்குள் வருகின்றது. அதை மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு அடக்கி அத்தகைய இருளை அகற்றிடல் வேண்டும். ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் அவ்வாறு இயக்கிவிடுகின்றது. அதனால் வரும் விளைவுகளை அறிய குருநாதர் அனுபவ வாயிலாக எனக்குப் பல வகையிலும் உணர்த்தினார்.

 

தங்கம் செய்யப் போகிறேன்” என்று ஆசை கொண்டவர்களின் கடைசி நிலைகள்

 

நட்சத்திரங்களின் இயக்கங்களை உள் உணர்வில் உணர்த்தும் விதமாக “அந்த லயன்… இந்த லயன் (LINE)…!” என்பார் குருநாதர் 

நம் புருவ மத்தியிலிருக்கும் உயிரின் முக்கியமான வேலை – நடந்த நிகழ்ச்சி

agastyar foot print

நம் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” என்ன செய்ய வேண்டும்…?

 

காலையில் எழுந்தவுடனே ஒரு நினைவாகவே அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து நீங்கள் வீட்டை விட்டு வெளியிலே செல்லும் பொழுது அல்லது ஒரு தொழிலை ஆரம்பிக்கும் பொழுது
1.அகஸ்திய மாமகரிஷியையும்
2.துருவ மகரிஷியாக ஆன உணர்வையும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்
4.இந்த மூன்று நிலையையும் எண்ணிப் பழக வேண்டும்.

அந்த உணர்வுகள் தனக்குள் பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு தொழிலோ மற்ற காரியங்களோ அல்லது எதைச் செய்கின்றீர்களோ அதைச் செய்ய ஆரம்பியுங்கள்.

நீங்கள் நுகர்ந்த இத்தகைய உணர்வுகளை எல்லாம் உங்கள் உயிர் அணுவாக உருவாக்கும் கருக்களாக உங்கள் இரத்தநாளங்களிலே பெருக்கச் செய்யும்.

அந்தக் கரு வளர்ச்சிகள் பெற்று அகஸ்தியனின் அருளை எளிதில் பெறக்கூடிய தகுதி உருவாகி உடலில் உள்ள இரத்தநாளங்களில் அந்த அணுக்கள் பெருகத் தொடங்கும்.

1.முதலில் கரு என்பது முட்டை
2.பின் அதனின் உணர்வின் தன்மையை நாம் இவ்வாறு ஒவ்வொரு நாளும் எண்ண எண்ண
3.அந்த அணுக்கள் வளர்ச்சி அடைந்து முழுமை ஆகி விடுகின்றது.

ஒரு கோழி தான் இட்ட முட்டையை எப்படி அடைகாக்கின்றதோ அதன் உணர்வின் தன்மை உடலின் வெப்பமாக்குகின்றதோ அதன் பின் அந்த வெப்பத்தின் துடிப்பு கொண்டு அந்தக் கருக்கள் எல்லாம் அதன் இனக் குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக ஆன பின் வெளி வந்து இந்தக் கோழி எந்த உணவை உட்கொண்டதோ அதே உணவை இதுவும் உட்கொள்ளத் தொடங்குகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் தியானத்தின் மூலம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் கருவாக உருவாகின்றது.
1.அதனுடைய நினைவுகளை நீங்கள் கூறக் கூற அந்த முட்டையின் வளர்ச்சி பெறுகின்றது.
2.அந்த எண்ணங்களை அடிக்கடி நீங்கள் எண்ணும் பொழுது அதை அடைகாக்கின்றது.

ஏனென்றால் கோழி தன் குஞ்சின் நினைவு கொண்டு அதை அடை காக்க “எங்கிருந்தாலும்” எப்படி இரை தேடி விட்டு வந்து அடை காக்கின்றதோ அதைப் போல
1.நீங்கள் எத்தொழிலைச் செய்தாலும்
2.எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் விளைய
4.நீங்கள் அடிக்கடி இந்த நினைவுகளை எடுத்துப் பழகுங்கள்.

அதாவது முதலில் நாம் பதிவாக்கி வளர்த்துக் கொண்ட அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் சக்தியை அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி நாம் வளர்க்கும் திறனாக… “அடைகாப்பது போன்று” செயல்பட்டால் அந்த அருள் சக்திகள் உடலில் விளைகின்றது.

முட்டையிலிருந்து வெடித்து வந்த குஞ்சு தான் இரை தேடும் பொழுது… தாய்க் கோழி “கத்தி…” அதற்கு இரையைக் கொடுக்கின்றது;

இதைப் போல நமக்குள் அந்த மகரிஷிகளின் அணுவின் கருவாகி விட்டால் இந்த உணர்ச்சியின் கிளர்ச்சிகள் நம் இரத்தநாளங்களிலே கிளம்பும் போது
1.நமது உயிர் அந்த உணர்வுகளை உணர்ச்சிகளாக அதை வெளிப்படுத்தி
2.காற்றுக்குள் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எல்லாம்
3.கண் வழியும் காது வழியும் உடல் வழியும் நாம் சுவாசிக்கும் அந்த உணர்வின் வழி நமக்குள் கொண்டு வந்து
4.சுவாசிக்கச் செய்து உடலுகுள் பரவச் செய்து மீண்டும் அந்தக் கருக்களை உருவாக்குகின்றது.

நாம் இந்த வழியில் தொடர்ந்து நடந்தால்… அது வளர்ச்சி பெற்ற பின்… நம்முடைய நினைவின் ஆற்றல் “அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்லும்…!”

SIVASAKTHI VINAYAGA

ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எய்துகிறார்களா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தாய் தந்தையரின் அன்பில் உருவாக்கப்பட்டு அறிவின் ஞானமும் நல்லொழுக்க உயர் மகனாக வளர்க்கப்பட்ட தன் மகனுக்கு அவனது வளர்ச்சியின் வம்சம் வளர பெண்மையின் சக்தி கூடி தன் மகனின் வாழ்க்கையின் நிறைவில் தாய் தந்தையர் பூரிப்பு காண்கின்றனர்.

1.பெண்மை எது ஆண்மை எது..?
2.உயர் சக்தியின் தன்மை எது…?
3.படைப்பின் படைப்பில் முன் ஜென்மத் தொடர் அறியும் முறையில் ஆரம்ப வளர்ச்சி முறைதான் வளர்ந்ததா…?
4.பெண்ணாகப் பிறவி எடுத்து முற்பிறவி இப்பிறவி எப்பிறப்பிலும் பெண்ணாகவும்
5.ஆண் ஆணாகவும் தான் பிறவி எடுக்கின்றனரா…?
6.பிறவியின் தொடர் வழிப்படும் முறை என்ன…?

பின்னிப் பின்னி வரும் தொடர் வளர்ச்சி நிலையில் ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகி பிம்பமாகும் வழித் தொடர்தான் இயற்கையின் நியதி.

ஓர் ஆத்மா பிறப்பெடுத்து அப்பிறவி மாறி ஆவியான நிலையில் அந்த ஆவியின் உணர்வு அமில குணத்தின் ஈர்ப்பு எண்ணம் ஆண் உணர்வுடன் ஆணின் ஈர்ப்பில் அந்த உயிர் ஆவி சிக்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஆக அந்த ஆண்மைக்குகந்த அமிலத்துடன் கலக்கப் பெற்று அவ்வீர்ப்பின் வித்தாக ஜீவன் கொள்ளும் ஜீவக் கருவிற்கு ஆண் வித்தின் அமில ஈர்ப்பின் வீரிய குணமுடன் பெண்ணின் ஆவி உயிர் சென்றிருந்தாலும் சரி.. அல்லது ஆணின் ஜீவ பிம்பமுடன் உள்ளவரின் உயிர் சென்றிருந்தாலும் சரி…!

அந்த ஆண் மகனின் அவ்வமில வித்தின் ஜீவ சக்தி அதிகமாக வளர்க்கும் அமில வளர்ச்சி உதிரமுடன் உருவாகும் நிலையிருந்தால்
1.முன் ஜென்ம பெண் ஆவி உயிரே
2.இவ் ஆணின் ஈர்ப்பில் சிக்கி
3.ஆண் உயிர் வித்தாக பெண் அமிலச் சேர்க்கையில் ஜீவன் கொள்கின்றது.

வாழ்ந்த நாளில் மகன் மகள் சகோதரன் சகோதரி இப்படிப் பந்தபாசத்தில் உள்ளவரும் எண்ணத்தில் ஒரு நிலையான உணர்வு நிலையில் ஆண் சுவாசமுடன் ஆணின் உடலில் ஏறும் எவ்வுயிர் அணுவாக இருந்தாலும்
1.ஆண் பெண் என்ற நிலை மாறி இவ்வீர்ப்பிற்கு வந்த நிலையில்
2.ஆணின் உதிர அமில ஜீவ சக்தியின் வளர்ச்சிகொப்ப ஆணாகவும் பெண்ணாகவும்
3.ஜீவிதம் கொண்ட பிறப்பெடுக்க முடிகின்றது.

இந்நிலை கொண்டு தான் பெண்ணின் ஈர்ப்பிற்கு வரும் ஆண் பெண் என்ற எவ்வாவி உயிரணுவாக இருந்தாலும் இப்பெண்ணின் ஈர்ப்பின் வீரியம் கொண்ட உணர்வு எண்ணமுடன் அவ்வுடலின் ஈர்ப்பில் சிக்குண்டுள்ள அவ்வாவி உயிர் அணு என்ன செய்யும்…?

பெண் ஆண் என்ற தன் உணர்வு மாறி எந்தத் தாயின் ஈர்ப்பில் வளர்ச்சிக்கு வந்ததோ அதன் நிலையினால் பெண் ஆண் என்ற முந்தைய ஜென்ம முறை
1.ஒவ்வொரு ஜென்ம நிலையிலும் இவ்வீர்ப்பு ஜெனன உணர்வு நாளில்
2.இவ் ஆண் பெண்ணின் உணர்வு ஜீவித ஈர்ப்பு வளர்ச்சி அதிகம் கொண்டவர்களின் அமில நிலைக்கொப்ப
3.பெண் கருவாகவும் ஆண் கருவாகவும் அவதரிக்கும் நாளில்
4.ஆண் பெண்ணின் ஜீவ உயிரணு ஈர்ப்பின் விகித நிலைக்கொப்பத்தான்
5.அஜ்ஜீவன் ஆணாகவும் பெண்ணாகவும் உருவாகின்றது.

முந்தைய கால உணர்வு எண்ணமானது ஆவி உயிரணுவின் நிலையில் உருவாகும் ஜீவ சக்தி கரு வளர்ச்சி நாளில் தான் ஒவ்வொரு ஜென்மக் கருவும் ஆண் பெண் என்ற உருவ நிலை கொள்கின்றது.

ஆணின் உணர்வு எண்ண அமிலமும் பெண்ணின் உணர்வு எண்ண அமிலமும் மாறு கொள்கின்றது. பெண்ணின் உடலில் உருவாகும் ஜீவ சக்திக்கு உயிரணுக்களின் வளர்ச்சியை வளர்க்கும் ஈர்ப்புக் குண ஜீவ சக்தி அதிகமுண்டு.

எவ்வுடலின்… எவ்வமில ஜீவித உணர்வு உயிரணு வளர்க்கும் தன்மை அதிகமுள்ளதோ… அவ்வீர்ப்பின் நிலைக்கொப்ப பெண் ஆண் என்ற உருவ பிம்ப உணர்வு ஜீவ கரு உருவாகின்றது.

மனிதனின் ஜீவ கரு உயிரணுவின் வளர்ச்சித் தன்மை கொண்ட இனத் தாவரங்கள் சில உண்டு. மனிதனின் ஜீவ சக்திக்கு உகந்த சக்தி குணம் மாங்கனிக்கு உண்டு.

மாங்கனியின் கொட்டையை அம்மரத்தின் கனி எவ்வளவு சுவையாக இருந்தாலும் அம்மரத்தின் கொட்டைய நாம் பயிர் செய்தால் அம்மரம் விட்ட கொட்டையில் வளர்த்த மரத்தின் கனியின் சுவையை உண்டு பார்த்தால் “தாய் மரத்தின் கனிச் சுவை சேய் மரத்தின் கனிச் சுவைக்கு இருக்காது…”

தாய் மரத்தின் கொட்டையை எடுத்து வளர்க்க விட்டு அவ்வளர்த்த வித்துச் செடியுடன் தாய் மரத்தின் கிளையை ஒட்டுச் சேர்த்து ஒட்டு மரமாக வளரும் மாங்கனியின் சுவை தாய் மரத்தின் கனியைக் காட்டிலும் சேய் மரத்தின் தாய் மரத்துடன் ஒட்டுச் சேர்த்து வளர்த்த கனியின் சுவை தாய் மரத்தின் சுவையைக் காட்டிலும் நற்சுவையாக இருக்கும்.

ஒன்றின் துணை கொண்டு ஒன்றாக உருவாகும் உணர்வின் எண்ண ஈர்ப்பு நிலைக்கொப்பத்தான் ஆண் பெண் என்ற நிலை உருவாகி வளர்கின்றதப்பா…!

1.வளர்ப்பின் வளர்ப்பாகி…
2.ஆவியாகி பிம்பமாகி ஆவியாகும் செயல் சுழற்சியின்
3.ஈர்ப்பின் உணர்வு உயர் நிலை வளரும் நிலைக்கொப்பத்தான்
4.வளர்ச்சியின் தொடர் வளர்ச்சி… வளரும் ஈர்ப்புத் தன்மை உருவாகின்றது.

அதிகாலை துருவ தியானத்தின் மூலம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி

வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீமைகள் வரும் சமயங்களில் எல்லாம் அதிகாலை எடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த வலுவைக் கொண்டு தீமைகளை மாற்றியமைக்க வேண்டும். ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி உயிரின் இயக்கத்தையும் நமக்குள் அது உருவாக்கும் நிலைகளையும் அறிந்து இந்த வாழ்க்கையைச் சீராக்கிடல் வேண்டும். சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வின் இயக்கமாக ஆறாவது அறிவை மழுங்கச் செய்துவிடக் கூடாது. 

 

உடலிலே சில நேரம் ஊசி குத்துவது போல் வலி வருகிறது… அது எதனால்… என்று தெரிந்து கொள்ளுங்கள்

எளிதான பயிற்சி மூலம் சிறு மூளையிலிருந்து பெரு விரல் வரை நரம்புகளை உற்சாகப்படுத்தலாம் 

நம் உடல் உறுப்புகள் கெட்டு உடல் எப்படி நலிவடைகிறது…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

dhuruva dhiyanam

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன ஆற்றலைத் தியானத்தின் மூலம் பெறச் செய்யும் ஞான வித்து

அகஸ்தியன் (மகரிஷியாக) ஆவதற்கு முன் அவனுடைய தாய் தந்தையர்கள் நுகர்ந்தறிந்த பச்சிலை மணங்கள் இப்பொழுது வெளிப்படுகிறது. வெளிப்பட்டுள்ள அந்த மணங்களை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க நாம் இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

1.அதை நீங்கள் நுகரும் பொழுது இப்பொழுது அவர்கள் காலத்தில் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்)
2.எப்படி நஞ்சினை வென்ற உணர்வுகளை அகஸ்தியன் கவர்ந்தானோ
3.அதே சக்தியை நாமும் பெற முடியும்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் பல பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் முலாமாகப் பூசினாலும் அந்த உணர்வுகளை அவர்கள் நுகர்ந்து கருவில் இருக்கும் அணுக்களுக்கு இந்தச் சக்திகளைக் கொடுத்தார்கள்.

அதையும் இப்பொழுது உங்களுடைய உணர்வுகளை நினைவாக்கி நினைவு கொண்டு அதைப் பெறத் தியானிக்கப் போகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழி நீங்கள் நுகரப்படும் பொழுது…
1.நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறப் போகின்றீர்கள்.
2.உங்கள் உடலிலே வளர்ந்து வரும் அந்த அணுக்களும் இதை நுகரப் போகின்றது.
3.அதன் வழி அன்று அகஸ்தியன் பெற்ற… அவன் வளர்ந்த… வளர்ச்சி பெற்ற அந்தத் திறனை எல்லாம்
4.நாம் அனைவரும் பெறப் போகின்றோம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற நினைவினை உங்கள் உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அதை நாம் நுகரப்படும் பொழுது அனைவருக்கும் அவர்கள் பெற்ற (அகஸ்தியன், அவன் தாய் தந்தையர்) அருள் சக்தியிலிருந்து வெளிப்பட்டதை நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அந்த மணங்களை இப்பொழுது நீங்களும் உணர முடியும்.

மணத்தை உணர முடியவில்லை என்றால் உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவுவதை (சக்கரம் போல் சுழல்வதை) உணரலாம்.
1.உங்கள் உடலில் தீங்கினை விளைய வைக்கும் அணுக்கள்
2.அது ஒடுங்குவதையும் உங்களால் உணர முடியும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி இங்கே படர்கின்றது… தியானிக்கும் உணர்வுகளில் அதை ஈர்க்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் திருமணமான பின் துருவ மகரிஷியாகப் பருவம் பெற்ற
1.அவர்கள் கணவனும் மனைவியும் துருவத்தை உற்று நோக்கி…
2.இருவரும் ஒன்றாக நுகர்ந்தறிந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் இப்பொழுது பரவி
3.உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அந்தச் சக்தியைப் பெறும்.

அதன் வழி உங்கள் நினைவின் ஆற்றல்… “துருவப் பகுதியில்” செல்லும். அங்கிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் நுகர்வீர்கள்… அந்த உணர்வுகள் உங்கள் உடலிலே பரவும்… உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெறும். உங்கள் இரத்தநாளங்களில் இவை அனைத்தும் கருவாக உருப்பெறும்.

1.உங்கள் புருவ மத்தியில் இளம் நீல நிற அலைகள் வரும்
2.அந்த உணர்வுகள் உயிரினின்று உடலுக்குள் பரவும் உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள்… காணலாம்…!

துருவத்தில் நிலை கொண்டு… துருவ நட்சத்திரமாக வானுலக ஆற்றலைக் கவர்ந்து இன்றும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவாற்றல் அனைத்தும்… துருவ நட்சத்திரத்தை எல்லையாக வைத்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி… அதன் வழி கவர்ந்து… உங்கள் உடல்களில் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள்.

1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியில் பளீர்…ர்ர்…! என்று இளம் நீல அலைகள்
2.உங்கள் உயிர் ஈர்க்கும் நிலையை உணரலாம்… காணலாம்
3.உங்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் பரவுவதையும் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து வரும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்று உணர்வுகள் வரும்.

அரும் பெரும் காட்சியாக வானுலகம் உங்கள் உடல்களிலும் உணர்வுகளிலும் காண முடியும். வளர்ந்து வரும் உணர்வினை உங்களால் அறிய முடியும்.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற “குலதெய்வங்களின் உயிரான்மாக்கள்…” சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளி பெறும் சரீரம் பெறவேண்டும் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றும் அவர்களை உந்திச் செலுத்துங்கள்.

எமக்கு குருநாதர் வழி நடத்திச் சென்ற அதே வழிப்படித்தான் இதை இந்த அதிகாலையில் தியானிக்கும்படிச் செய்தது. அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதியச் செய்து அதை நீங்கள் நுகர்ந்து உடலில் பதியச் செய்யும் நிலையும் உருவாக்கியது.

1.அந்த அகஸ்தியன் பெற்ற விஷத்தை வென்றிடும் ஆற்றலும்
2.விண்ணுலக ஆற்றலைப் பெற்ற நிலைகளும் நீங்கள் இப்பொழுது நுகர்ந்திருந்தால்
3.அந்த மணங்கள் நுகர்ந்தவர்கள் அதை அறியும் பருவம் பெறுகின்றீர்கள்.

அகஸ்தியரை எண்ணித் தியானிக்கும் பொழுது “அவன் பெற்ற மகா பச்சிலைகளின் மணங்களை…” நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து துருவ எல்லையை துருவ மகரிஷிகளை எண்ணும் பொழுது
1.புருவ மத்தியில் இளம் நீல ஒளிக்கதிர்கள் – ஈர்ப்புடன் ஈர்ப்பு வட்டமாக
2.அந்த உணர்ச்சிகள் அந்த ஒளி அலைகள் தெரிந்திருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வரும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நுகரும் பொழுது வானில் மிதப்பதைப் போன்று அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள். உங்கள் உடலில் அந்தச் சக்திகள் படர்ந்திருக்கும்.

இதுகள் எல்லாம் அகஸ்தியன் கருவிலிருந்து அந்த உணர்வுகளைப் பெற்று அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து அலைகளாகப் படரச் செய்துள்ளது.

இதனை நீங்கள் வரிசைப்படுத்தி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினோம்.

அதன் வழி கொண்டு காற்றிலிருக்கும் அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் நுகர்ந்து அறியும் ஆற்றலும் அகஸ்தியன் வளர்ந்து வந்த அந்த அருளாற்றல் உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

அவர்கள் துருவ மகரிஷியாகி அதனின்று வெளிப்பட்ட உணர்வுகளை அவர்கள் சென்ற பாதையில் நீங்களும்
1.இதைக் கணவனும் மனைவியுமாகக் கவர்ந்து உங்களில் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்கும்…
2.அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வெளிப்படுத்தியதை உங்களில் பெறச் செய்வதற்கும்..
3.உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்வதற்கும்
4.உங்கள் இரத்த நாளங்களிலே இரத்தங்களில் கலக்கச் செய்வதற்குமே இதைச் செய்தது.

பூமியின் ஈர்ப்பை விடுத்துச் சென்று துருவ நட்சத்திரமாக எல்லை கொண்டு பூமிக்கு வரும் அனைத்துச் சக்தியும் ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டும் ஒளிச் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றோர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி உயிர் தோன்றி அகஸ்தியன் வழியில் நாம் செல்லும் பொழுது அடுத்து நம்முடைய எல்லை பிறவியில்லா நிலை தான்…!

எல்லையில்லாத அகண்ட அண்டத்தில்… என்றும் நிலையான உணர்வுகள் கொண்டு… அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானித்து… உங்களுக்குள் பதியச் செய்து அதை ஞான வித்தாக ஊன்றியுள்ளோம்.

1.பதிந்த சக்தியின் துணை கொண்டு
2.நீங்கள் தியானிக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நிலைகளிலும் அந்தச் சக்தி கிடைக்கும்.
3.ஆகவே இந்தக் காலை துருவ தியானத்தை ஒரு பத்து நிமிடமாவது அவசியம் இருக்க வேண்டும்.

Adi Shakti devi goddess

படைக்கப்பட்டவனின் படைப்பு வளர்ச்சியின் சக்திக்கும் தாம்பத்ய சக்திக்கும் உள்ள உண்மை நிலை என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சப்தரிஷிகளாலும் சித்தர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்பட்ட உயர் சக்தியின் நிலைகள் எல்லாம் ஊன்றிப் பார்த்தால்
1.ஒவ்வொரு சப்தரிஷியும் தன் சக்தியால் வணங்கப்படும் தெய்வங்கள்
2.பெண்மை உருவங்களாகத் தான் இருக்கும்.

ஆகவே பராசக்தியையும் ஆதி சக்தியையும் பெண்மையின் சக்தியாக வணங்கும் நிலை என்ன…?

ஒவ்வொரு சப்தரிஷியின் உயர்ந்த சக்திக்கும் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அவர்களின் ஆரம்பகால தாம்பத்ய வாழ்க்கையின் உணர்வின் எண்ண மோதலின் ஒன்றுபட்ட உயர் சக்தியின் வழித் தொடர் பெண்மையின் சக்தி கொண்டு தான் ஆண் வலுப் பெற்று ரிஷியாக சப்தரிஷியாக உயர்ந்தான்.

1.ஜீவனற்ற… ஜீவனை வளர்க்கும் சக்தியற்ற நிலை…
2.அமில குண ஆண்மைக்கு வலுத் தந்த சக்தியே
3.இத் தாம்பத்ய எண்ண வலு பெண்மையின் ஜீவ வளர்ச்சி வாழ்க்கையின் கூட்டினால் தான்…!

இக்கலியிலும் ஆதாம் ஏவாள் என்று உணர்த்திய மனித இன வளர்ச்சியின் செயல் முறையும் இதன் உண்மை கொண்டு தான்.

அமிலமான சிவ உருவம் கொண்டு திருவள்ளுவருக்கு வாசுகி அம்மையாரின் உயர் ஞான ஈர்ப்புக் கரு அமில செயல் சக்தி கூடித் தான்
1.அவர் (வாசுகி) வளர்த்த ஞானக் கருவை இவர் உருவில் வெளிப்படுத்தி
2.இன்றளவும் வள்ளுவனையும் வாசுகியையும் போல் என்று
3.பெரியோர்களின் வாழ்த்தாக அமையப் பெற்ற வாழ்த்தின் சொல்லின் உண்மை இதுவே…!

பெண்மையின் கரு வளர்ச்சியினால் உயர் இன வளர்ச்சியின் வித்தை உருவாக்க முடிகின்றது. ஒரு சித்தர் தன் பாடலில் “பூவையரை அன்னையெனப் புகழ்ந்தாய் போற்றி…!” என்றும் உணர்த்தியுள்ளார்.

அதன் உட்பொருள் என்ன…? படைப்பின் படைப்பே
1.பூவையரை அன்னையாகக்கூடிய செயலுக்கு
2.இந்த மனிதக் கரு இன வளர்ச்சியைப் பெருக வைத்து
3.உயர் சக்தியை வளர்க்க செயலாக்க வழி தந்த படைப்பிற்கே
4.பூவையரை அன்னையாகும் வளர்ச்சியைத் தந்ததற்காகப் போற்றி வணங்கினார்.

அதே போல் மகாத்மா காந்திக்கு வலுத் தந்ததே அவரின் மனையாளான கஸ்தூரிபா காந்தியின் பக்தி மார்க்க வழி முறை தான்.

பூவையரின் சுவாச அலையே “கரு வளர்ச்சி” அலை. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் ஈர்ப்பலைக்கு வீரிய சக்தி உண்டு. ஆனால்
1.சிவனான அமிலமுடன் மோதுண்டு வெளிப்படும் சக்தியில் தான்
2.அச்சக்திக்கே சக்தி கிடைக்கின்றது.

மனித இன வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வு நிலைக்கொப்ப ஒன்றுடன் ஒன்று இந்த எண்ணத்தின் செயல் இணையும் பொழுது தான் படைப்பு முழுமையாகின்ரது.

பாவாகவும் ஊடையாகவும் நூற்பு நெய்யப்படும் துணியைப் போல் இரண்டு நிலைக்குள்ள எண்ணங்கள் ஒன்றாக இணைந்து மோதுண்டு இந்தத் தாம்பத்ய எண்ண உணர்வில் அமில பிம்ப சிவ ஊடைக்கு சக்தி ஈர்ப்புப் பாவாய் இந்தத் தாம்பத்ய நிலை அமைந்து
1.பெண்மையின் உயர் வழியைச் செயல் கொள்ளும் ஆண்மையின் நிலையில் தான்
2.இந்தப் பூமியின் உயர் ஞானங்களும் சித்து நிலைகளும் சப்தரிஷியின் நிலையும் உருவானதே…!

எமது குரு இப்பொழுது நமது குருநாதராக இருக்கின்றார் – ஞானகுரு

ஈஸ்வரபட்டர் எனக்குள் ஆழமாகப் பதிய வைத்த ஞான வித்துக்களை வளர்த்து அதிலே விளைந்த வித்தைத்தான் உங்களுக்கு இப்பொழுது உபதேசமாகக் கொடுக்கின்றேன். அதை யாரெல்லாம் கவர்ந்து தங்களுக்குள்ளும் அதைக் கடைப்பிடித்து உடலிலே விளைய வைக்கின்றனரோ அப்பொழுது எமது குரு நமது குருவாகின்றார். நாமெல்லாம் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொது நமது குரு என்ற வழிக்கு அது வரும். தீமைகள் நமக்குள் புகாதபடி உடலுக்குள் உருவாகாதபடி அருள் உணர்வின் தன்மையை நமக்குள் கருவாக்கும். 

 

அகஸ்தியன் வெளிப்படுத்திய உண்மையான சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றோம் 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றவேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்வதால் கிடைக்கும் பேறுகள் 

Azhagam Murugan

மெய் ஞானக் கல்வியில் “அழகன்…” என்ற பட்டத்தைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆரம்பக் கல்விக்குக் குழந்தையை நாம் அனுப்பும் பொழுது சில குழந்தைகள் பள்ளி செல்லவே… பயம் கொண்டு அழுது… பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறது.

பள்ளியில் கல்வி போதனையை அந்தந்தக் காலங்களில் வைக்கும் தேர்வு
1.அக்குழந்தைக்கு அதன் எண்ண வளர்ச்சியின்
2.அறிவின் அடிப்படையில் தான் அதன் ஞானம் வளர்ந்திருக்கும்.
3.அதைக் கொண்டு தேர்வு எழுதும் பொழுது… அதற்குகந்த பயம்… அச்சம்… இருந்து கொண்டு தான் இருக்கும்.

வளர… வளர… அதற்குகந்த அறிவின் செயல் ஞானத்திற்கொப்ப முதிர்ச்சியுற்ற பிறகு ஆரம்பக் கல்வியானது மிக மிகச் சுலபமாகவும் குழந்தையின் கல்வி போலவும் வளர்ந்தவர்களுக்குத் தெரிகிறதல்லவா…!

அதைப் போன்று மனிதனின் குண அமிலத்தை நற்குணங்களின் வழித் தொடர் கொள்ள அன்பு பாசம் வீரம் ஞானம் ஆசை என்ற இந்த ஐந்து குணங்களைச் சாந்தமாக்கி நம் குண அமிலத்தையே நற்குண அமிலமாகச் செயல் கொள்தல் வேண்டும்.

அப்படிச் செயல் கொள்ளும் பொழுது நம் உணர்வின் அலைத் தொடர் உயர் சக்தியின் அமில ஈர்ப்பில் இவ்வெண்ணம் செலுத்தும் முறை கொண்டு
1.முருகனின் அழகுடையவன்
2.குணமுடையவன் இனிமை கொண்டவன்
3.மணமுள்ளவன் ஒளியானவன் ஒலியானவன் என்ற தத்துவ உயர் ஞான முருகனாக
4.நம் உணர்வின் எண்ணம் முருகனாகச் செயல் கொள்ளும் நிலைக்கு வளரும்
5.ஐம்புலன்களான நற்குணங்களை ஆறாம் புலனாக வழிப்படுத்தி முருகனாக உருவாக வேண்டும்.

ஆக… வளர்ந்த கல்வியில் உள்ளவனுக்குப் பள்ளிப் பாடத்தில் முதல் வகுப்புப் பாடம் எப்படி எளிதாக உள்ளதோ… ஒவ்வொரு வகுப்பாகப் பரீட்சையில் தேறிய உயர் கல்வியில் உள்ளவனுக்கு முதல் பாட நூலில் தேர்வு வைத்ததைப் போன்று…
1.வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு இக்கட்டான செயலையும் வரும் இன்னலையும்
2.மாற்றியமைப்பது என்பது இந்த முருக குணம் கொண்டவனுக்கு மிக மிக எளிதாகிவிடும்.

நற்குணங்களின் வழித் தொடர் செயல் ஞான ஈர்ப்பிற்கு… நம் உணர்வைச் செலுத்தும் காலங்களில் ஏற்படும்… வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…!”

இந்தத் தேர்வில் இருந்தெல்லாம் நாம் பெறும் மதிப்பெண் நிலைக்கொப்ப அடுத்த தேர்விற்கு நாம் உகந்தவர்கள் ஆகின்றோம் என்ற உணர்வின் எண்ணத்தில் சென்று கொண்டே நம் செயல் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆனம் வளர்ச்சி இருக்குங்கால் இந்நற்குணங்களின் செயலுடன் ஒன்றிய “முருகனின்… அழகனின் அழகென்ற பட்டத்தை..” நாம் பெற முடியும்… இனிமை என்ற உணர்வின் செயலுடன் நம் எண்ணத்தின் ஈர்ப்பு ஒலியின் ஒளியாகக் கலந்துவிடும்.

இச்சக்தி நிலை கொண்ட உருவம் தானப்பா முருகனேயன்றி தனித்தொரு சக்தி வந்து நற்குணங்களாக அவதரித்து நற்படைப்பைப் படைக்கவில்லை…!

ஆகவே…. இடும்பன் என்ற அரக்க குணத்தை வளரவிட்டு… வாழ்க்கையை இருள் என்ற அழுகையின் ஊடே சோர்வென்ற சக்திதனில் சுழலவிட்டு… உயிர் என்ற ஆத்மலிங்கத்தைச் சதா சர்வ காலமும் நிந்தித்துத் துவேஷித்து… உயர் சக்தியான உயிர் ஆத்மாவை மண்ணுடன் மண்ணாக புழுவாகப் பூச்சியாக சக்திதனில் சுழல விடாமல்…
1.உயர் வழித் தொடர் கொண்டு மனித பிம்பம் பெற்ற நாம்
2.உயர் அலைத் தொடரின் உணர்வின் வழித் தொடர் செல்ல
3.முருகனின் உருவாக நம்மை உருவாக்க வேண்டும்.

உணர்வின் இனிமையையும் உணர்வின் அழகையும் உணர்வின் மணத்தையும் உணர்வின் ஒலியையும் உணர்வின் ஒளியாக உயர் ஞானச் செயலின் ஈர்ப்பில் செயல் செல்ல… இந்த ஐம்புலன் என்ற நற்குணக் கூட்டைச் “சாந்தம்…!” என்ற சக்தி கொண்டு செயலாற்ற வேண்டும்.

eyes meditating

கண்களை மூடித் தியானிப்பது நல்லதா…? கண்களைத் திறந்து தியானிப்பது நல்லதா…?

நான் தியானம் இருக்கும் பொழுது
1.எனக்கு எண்ணமே வரமாட்டேன் என்கிறது…
2.அது வருகிறது… இது வருகிறது…! என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

நாம் கண்களை மூடியவுடனே இது எல்லாம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நம் ஆன்மாவில் இருப்பது தான் நம்மை இப்படித் தடைப்படுத்துகின்றது.

ஒரு வெறுப்பான செயலை ஒருவர் செய்கின்றார்…! அதைப் பார்த்தவுடன் நமக்குள் ஏற்கனவே இருக்கும் வெறுப்புணர்வு கொண்ட அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது. கிடைத்ததும் அது வீரியமடைகின்றது.

நீங்கள் அன்றைக்குத் தியானத்தில் வந்து உட்கார்ந்தீர்கள் என்றால் உங்கள் மனது எங்கெங்கேயோ போகும்…!

நாம் தொழில் செய்யும் இடங்களில் யாராவது நமக்குத் தவறானதுகளைச் சொல்லி இருந்தால் அந்த நினைவு தான் நமக்கு வரும். இந்த ஆன்மாவில் முன்னாடி இருப்பது இப்படி வரும்.

1.அப்பொழுது நீங்கள் தியானத்தில் உட்கார முடியுமா என்றால் விடாது…!
2.நீங்கள் எந்த வழியினால் ஆனாலும் சரி…!
3.இந்த உணர்வுகள் – உடலில் உள்ள அந்த அணுக்கள் அது தன் ஆகாரத்தை எடுத்து அது வளரத் தொடங்குகிறது.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..?

அந்த மாதிரி வந்தது என்றால் கண்களை மூடத் தேவையில்லை. (இது முக்கியம்)
1.உங்கள் கண்ணின் நினைவை நேராக அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
3.அதைச் சுவாசியுங்கள் (இதுவும் முக்கியம்) இந்த உணர்வுகள் நமக்குள் அதைச் சுவாசித்து மறுபடியும் கண்களை மூடுங்கள்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்த உணர்வுகள் உந்தப் பெற்றதோ… தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ… அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டு செயல்படும் சக்தி பெறவேண்டும்…! என்று இதை எண்ணிவிடுங்கள்.

அந்த அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும்.

எப்படிச் செடி கொடிகளுக்கு நாம் உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல் இப்படிக் கொடுத்து நல்ல உணர்வுகளை ஓங்கி வளரச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து அணுக்களாக ஆன நிலையில் அது தன் உணர்ச்சியை உந்தித் தான் அது உணவை எடுத்துக் கொள்கிறது.

ஆனால் மேலே சொன்ன மாதிரி நாம் மாற்றி கண்களைத் திறந்து எடுத்துச் சுவாசித்து இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை உள் செலுத்தினால் அந்த அணுக்களும் மாறிவிடும்.

இல்லை என்றால்…
1.நீங்கள் தியானத்தில் அவர்கள் அப்படிச் செய்தார் இப்படிச் செய்தார் என்று எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த அணுக்கள் அதிகமாகி நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.
3.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம் மன நோய் போன்ற நிலை வரும்.

பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும். நமக்குள் மனிதன் என்ற ஆறாவது நிலைக்கே எட்டாதபடி ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போகும்.

இதை எல்லாம் நாம் கண்டிப்பாக மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.

உடலுக்குப் பின் எந்த ரூபம் அடைகிறோம்…!

ஒருவரைத் தட்டி பறிக்கும் உணர்வு கொண்டு வளர்ந்தால் வாழ்ந்தால் உடலுக்குப் பின் மனித உடல் இல்லை. அதே போல் மதத்தால் இனத்தால் கூட்டமைப்பைக் காக்க மற்றவரை வேதனைப்படுத்தி இம்சித்தால் மீண்டும் மனித உடல் பெற முடியாது. தன் இனம் என்று தர்மத்தையும் நியாயத்தையும் பேசினாலும் மற்றவரின் வேதனை உணர்வுகள் நுகர்ந்ததை நம் உயிர் சும்மா விடுவதில்லை.

 

அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்

சிவன் அகஸ்தியனைத் தெற்கில் போ…! என்று சொல்லிப் பூமியைச் சமப்படுத்தச் சொல்கிறார் 

aim of meditation

நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்…!

உங்கள் வாழ்க்கையில் சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை கோபம் குரோதம் பயம் ஆத்திரம் அவசரம் என்ற உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவைச் செலுத்துங்கள். அதனின்று வெளி வரும் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். கண்களை மூடி ஏங்கி ஒரு நிமிடம் தியானியுங்கள்.

பின் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்முகமாகப் படரச் செய்யுங்கள்.

நாம் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும்…
1.நம் ஆன்மாவில் தான் (நெஞ்சுப் பகுதிக்கு முன்னாடி) முதலில் பெருகும்.
2.ஆனால் அதிலிருந்து உடலுக்குள் போகாது தடைப்படுத்திவிட்டால் முன்னாடியே நிற்கும்.
3.பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடலுக்குள் பெருகப் பெருக
4.நமது ஈர்ப்பு வட்டத்தைக் கடந்து வெளியே செல்லும்… சூரியன் அதைக் கவர்ந்து செல்லும்.
5.நம் ஆன்மா தூய்மையாகும்.

ஏனென்றால் பிறர் படும் கஷ்டங்கள் பிறர் படும் துயரங்கள் இதை எல்லாம் நுகர்ந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற நிலைகளில் வித்தாக நம் எலும்புகளில் பதிவானாலும்
1.அவர்கள் உடலிலிருந்து வந்த உணர்வுகளை நம் ஆன்மாவில் கவரப்பட்ட பின் தான்
2.நாம் நுகர்ந்து அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற நிலையை அறிய முடிகின்றது.
3.அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி நம்மை இயக்கச் செய்கின்றது.

இருந்தாலும் நம் உயிர் உடலுக்குள் “ஜீவ அணுவாக மாற்றும் கருவாக” மாற்றிவிடுகின்றது, இதை ஏற்கனவே சொல்லியுள்ளேன்.

இதைப் போல் தனித்த அந்த வேதனையும் கோபமோ சலிப்போ இதைப் போன்ற நிலைகளைக் கருவாக்குவதற்கு முன் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்.

உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

இதைப் போல் ஏங்கிப் புருவ மத்தியில் எண்ணி எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்கள் முழுவதும் படர வேண்டும் இரத்தங்கள் முழுவதும் கலக்க வேண்டும் என்று இப்படி ஒரு இரண்டு நிமிடம் செய்து வலுவை ஏற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு நோயாளியை சந்திக்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் நலம் பெறவேண்டும் என்று இப்படித் தான் எண்ண வேண்டும்.

நாம் இப்படி எண்ணிப் பழகினோம் என்றால்..
1.அந்த நோயாளியின் உணர்வுகள் நமக்குள் பெருகாது அதைச் சிறுத்து
2.அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எண்ணியதை
3.நம் உயிர் இங்கே உடலுக்குள் கருவாக உருவாக்கி விடுகின்றது.

தியானம் என்பது… இப்படித்தான் வாழ்க்கையிலே நாம் மாற்றியமைக்க வேண்டும். தீமைகள் உருவாகாதபடி அருள் ஒளியின் உணர்வுகளைக் கருவாக்கி நமக்குள் பேரொளியாகப் பெருக்கிடல் வேண்டும்.

அறிவு மார்க்கம் பக்தி மார்க்கம் சித்து மார்க்கம் இப்படி ஒவ்வொரு வழியினரும் ஞானத்தை மனிதனுக்குகந்த மார்க்கமாகத்தான் உணர்த்துகின்றனர்… உணர்கின்றனர்.

 

ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மிருகங்களுக்கு ஞானம் இல்லை…! என்கிறான் மனிதன். அறிவு மட்டும் மிருகத்திற்குண்டு. பகுத்தறியும் நிலை கொண்ட மனிதனுக்கு ஞானம் உண்டு என்று உணர்த்துகின்றான்.

 

1.அறிவு-கூர்மை…

2.அறிதல்-தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம்…

3.அறிவோம்-அறிவின் ஆற்றலைச் செயல்படுத்தச் செல்லும் வழி.

 

எறும்பு அதற்குகந்த அறிவைக் கொண்டு ஞானத்தைச் செயல்படுத்துகின்றது…? தனக்கு வேண்டிய ஆகாரத்தை அறிவைக் கொண்டு அறிகின்றது.

 

தன் செயலைக் கொண்டு அவ்வுணவைச் சேமிக்க மண்ணைப் பறித்து அவ்வுணவை அதில் சேமித்து பிறருக்குத் தெரியாவண்ணம் பாதுகாக்கின்றது.

1.அறிவைக் கொண்டு செயல்படுத்தி

2.தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பாதுகாக்கும் எறும்பிற்கு ஞானமில்லையா…?

 

ஒவ்வொரு சிறு பிராணியும் தனக்குகந்த அறிவின் ஞானத்தைச் செயல் கொண்டுதான் ஜீவிக்கின்றது. மனிதனைக் காட்டிலும் அறிவும் ஞானமும் சில மிருகங்களிடம் உண்டு.

 

ஆனால் அதற்குகந்த அங்கஅவயங்களும் சொல் வெளிப்படுத்தும் ஒலி பாஷையும் இல்லாததனால் உணர்வின் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தக்கூடிய பகுத்தறியும் ஞானம் இல்லை.

 

அறிவின் செயல் ஞானமுண்டு. உயர் ஞானத்தை உணர்வின் தன்மையை மாற்றியமைத்துச் சக்தி கொள்ளக்கூடிய ஞானத்தின் வளர்ச்சி அங்கில்லை.

 

இந்த ஞானத்தைச் செயலாக்கி ஒன்றுடன் ஒன்று சேர்த்து பிறிதொன்றின் கூட்டமைக்க மனிதனின் ஞானத்திற்குச் செயல் திறமை சொல்லாற்றல் இவை உண்டு.

 

இந்த ஞானத்தின் உயர் ஞானம் கொள்ளத்தான் பக்தி மார்க்கம்… சித்து மார்க்கம்… யோக மார்க்கம்…! என்றெல்லாம் இந்த மனித உடலின் உணர்வை எண்ணத்தால் ஒருநிலைப்படுத்தி ஜெபம் என்று வழிப்படுத்துகிறார்கள்.

 

ஒவ்வொருவரும் அறிந்த ஒவ்வொரு மந்திரச் சொற்களைச் சொல்லி உயர் ஞானத்தைப் பெற்று ஆண்டவனிடம் முக்தி பெறும் மார்க்கத்தை இவ்யோக சாதனையால் உணர்வைக் கட்டுப்படுத்தி சுவாசத்தை ஒவ்வொருவரும் தான்… தான்… அறிந்த மார்க்கங்களை உணர்த்துகின்றார்கள்.

 

1.பக்தியினால் ஞானம் கொண்டு

2.சக்தியினால் உணர்வை ஒரு நிலை கொண்டு

3.எண்ணத்தால் உயர் ஞானத்தின் அலையை நாம் செயல்படுத்த

4.நற்குணங்களின் அலைத்தொடரில் இந்த ஞானத்தைச் செலுத்தி அந்த் ஞானச் செயலாக நாம் ஒன்றாகலாம்.

 

இயற்கையின் படைப்பில் உயிரணுத் தோன்றி உருவாய் உருவமாக உருக்கொண்டு இயற்கைச் சுவாச முறையை மாற்றியமைத்துச் சகல சித்து நிலை பெறுவதல்ல…! உயர்ந்த ஞான சக்தியின் வழித் தொடர் பெறுவதற்கு.

 

இந்த ஞானம் கோபத்தில் உள்ளவனுக்கும் துணை செல்கிறது… திருடனுக்கும் துணை செல்கிறது… வஞ்சகனுக்கும் துணை செல்கிறது.. பெரும் காமுகனுக்கும் துணை செல்கின்றது.

 

அவரவர்கள் அறியும் அறிவின் செயலைச் செய்விப்பதே ஞானம் தான்.

1.ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி

2.உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”

 

நற்குணங்களின் படைப்பை ஞானத்தின் சாந்தம் கொண்டு “மனிதனும் தேவனாகலாம்…!” என்று சித்தர்கள் உணர்த்திய முறை இதுவே.

 

உணர்வின் எண்ணத்தை “ஆண்டவனின் நாமத்தை” ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி…!

1.உணர்வின் எண்ணத்தை நற்குணங்களின் அமிலமாக

2.நாம் வளர்க்கும் செயல் முறை ஞானம் தான் மனிதன் தெய்வமாகும் முறை. 

தொழில் மந்தம் வியாபாரம் குறைவு இதெல்லாம் எப்படி ஏற்படுகிறது…?

ஒரு நோய்வாய்ப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் சென்றால் நமக்குள்ளும் சோர்வும் வேதனையும் கலந்து வந்து விடுகிறது. அதைச் சுத்தப்படுத்தாதபடி நாம் வியாபாரத்தில் போய் அமர்ந்தால் வாடிக்கையாளர்களிடம் அதே உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். அங்கே வியாபாரம் மந்தமாகும். அதே போல் நம் வியாபாரத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கச் சென்றால் நல்ல பொருளைத் தேர்ந்தெடுக்காது இந்தச் சங்கடத்திற்குத் தக்கவாறு மட்டமான சரக்கை வாங்கிவிடுவோம். அதை யாரும் வாங்காததனால் நம் தொழிலே கெடும்.  

 

குறைகளைக் கேட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

தீமைகளைச் சமப்படுத்தி நல்லதாக மாற்றும் சக்தி 

[/audio}

powerful dhiyanam

கோபத்தை வீரமாக்கி… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்றுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.வீரமான உணர்வலைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம்.
2.வீரத்தின் உணர்வாற்றல் சக்தி தான் மனிதனின் வாழ்க்கை அமையும் நிலைதனை.

இந்த வீரத்தை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் மனித வாழ்க்கையின் வெற்றிக்கு இவ்வீரம் தான் வித்தப்பா…!

இவ்வுலக நடைமுறை அரசியல் தலைவர்களின் உண்மை நிலையினை ஊன்றிப் பார்த்தால் வீரத்தின் ஞான சாந்தநிலை புலப்படும்.

ஆனால் நம் உணர்வில் கலந்ததுள்ள வீரத்தை நாம் அதன் நிலையிலேயே செலுத்தி விட்டால் வீரத்தின் வீழ்ச்சியை விரைவில் அடைவோம்.
1.வீரத்தை ஞானத்தால் சாந்தமாக்கிச் செயல்படும் பொழுது
2.அந்த வீரத்தின் வீரிய சக்தியை வளர்த்துக் கொண்டேயிருக்கலாம்.

வீர்த்தைக் கோபத்தால் செலுத்தும் பொழுது நம் வீரத்தின் செயல் தெறித்துவிடும்… அதை நாம் உடனே அறியலாம்.

இஞ்ஞானத்தை எப்படி வழிப்படுத்துவது…?

திருடனுக்கும் ஞானம் உண்டு.. குருடனுக்கும் ஞானம் உண்டு… மிருகங்களுக்கும் ஞானம் உண்டு. பக்தி யோகம் எவ்வழிக்குச் செல்பவனுக்கும் ஞானம் உண்டு.

ஞானம் இல்லாவிட்டால் திருடன் எப்படிச் சாதுரியமாகப் பிறரை ஏமாற்றித் திருட முடியும்…?

திருடனும்…
1.தன் ஞானத்தைக் கொண்டு திருட வேண்டிய நிலைக்கு
2.பிறரை ஏமாற்ற அந்தச் சாந்தத்தைக் கற்றுத்தான்… பொறுமையுடன்…
3.தன் திருட்டைப் பிறர் அறியாவண்ணம் திருடிக் கொண்டு வர
4.மிகவும் சாதுரியமாகத் தன் ஞானத்தைச் சாந்தமாக்கித் தன் நிலையைச் சாந்தமாக்கிக் கொள்கின்றான்.

அதையே… ஏன் நாம் நல்வழியின் உணர்வுக்கு… ஞானத்தைச் சாந்தமாக்கி உயர் ஞானம் கொள்ள முடியாது…!

கண் ஒளியற்றவன் தன் ஞானத்தைச் சாந்தமாக்கி உணர்வின் எண்ணம் கொண்டே தன்னைக் காத்துக் கொள்கின்றான் அல்லவா…? தான் வாழ வேண்டும் என்ற ஒரே ஆசை உள்ளவன் உணர்வை இச்சாந்தத்தின் பால் செலுத்தி ஞானம் கொண்டு கண் ஒளி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் ஜீவிக்கின்றான்.

மிருகத்திற்கு ஞானம் உண்டு. அந்த ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? எல்லா நிலைகளையும் மிருகம் உணர்ந்திருந்தாலும் அங்க அவயங்களும் சொல்லாற்றல் திறமையும் மனிதனை ஒத்த நிலை இல்லாததனால் அதன் ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…?

1.ஒலியின் ஈர்ப்பை ஒளி கொண்டு
2.தன்னை வளர்க்கும் எஜமானரின் சொல் ஒலியை இவ்வொளியால் கவனித்து
3.தன் ஞானத்தை உடலுக்குள் பதியச் செய்து கொள்கின்றது.

சில குறிப்பிட்ட ஒலி அலைகளை… தன் மேல் விசுவாசம் கொண்டு பரிவுடன் செலுத்தும் வளர்ப்பவனின் ஒலியை…
1.தன் ஒலியால் ஈர்த்து எடுத்துப் பதிய வைத்துள்ள நிலைக்கொப்ப…
2.வளர்க்கப்பட்டவனின் ஒலி பாய்ச்சிய முறை கொண்டு
3.அதன் ஞானத்தின் செயல் இருக்கும்.

மனிதனின் வளர்ப்பில் உள்ள பிராணிகளுக்கு அந்தந்தப் பிராணிகளின் கூக்குரலின் நிலைக்கொப்ப இவன் ஒலியை அதன் ஒளியுடன் பாய்ச்சும் பொழுது அதன் ஈர்ப்பில் அதனுடைய ஞானம் வெளிப்படுகின்றது.

பக்தியின் நிலை ஞானம் எப்படிச் செயல்படுகின்றது..?

ஆண்டவனை வணங்கினால் அவன் அருள்வான் பல…! என்று தன் உடல் தேவைக்கும் செல்வத்திற்கும் வாழ்க்கையில் உழன்றுள்ள மற்ற நிலைகளுக்கும் ஆண்டவனை நினைத்து வணங்கும் ஞானம் எப்படிச் செயல் கொள்ளும்…?
1.அவரவர்களின் உணர்வுக்குகந்த
2.எதிர்பலனின் நிலையைத்தான் அவனவன் அடைய முடியும்.

bravaveness-of-sages

சண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…! எப்படி…?

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.

அப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…
1.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று
2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால்…
1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.
2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.
3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.

ஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…!”

ஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்…? அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.

ஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.

அந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.

நமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…
1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்
2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.

இங்கே உடலுக்குள் பளீர்…ர்ர்ர்…! என்று மின்னும்.

கை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…! என்று மின்னும்.

ஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாக்காதபடி நாம் எப்பொழுதுமே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளைக் காண நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…
1.இணைந்து வாழும்…
2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு)… இதை மறவாது செயல்படுத்துங்கள்.

அதிகாலையில் ஆலய மணிகளில் ஏன் ஒலியை எழுப்புகிறார்கள்…?

அதிகாலையில் பூமியின் வட துருவத்தின் வழியாக வரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எல்லோரும் பெறுவதற்குத்தான் ஆலய மணிகளை எழுப்பி அந்த உணர்ச்சியைத் தூண்டுகிறார்கள். மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி செய்கிறார்கள்.

 

துன்பமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணம் நம் எண்ணங்கள் எங்கே செல்ல வேண்டும்…?

ஜீவான்மாவைத் தூய்மையாக்கும் வழி 

நோயை நீக்கினாலும் ஊழ்வினை என்ற வித்தை மாற்ற வேண்டும்

PRAISE THE LORD

நாம் போற்ற வேண்டிய உண்மையான சக்தி…!

நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும்…? நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும்…? என்றும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும்,,,? பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளையும் நாம் அறிதல் வேண்டும்.

நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு… எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும்…! என்ற உண்மையின் நிலைகள் வாழ்த்துவது வேறு.
1.ஆனால் உங்களைப் போற்றித் துதித்துவிட்டு
2.அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகச் செயல்படுத்தி (ஏமாற்றி) போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு.

இதைப் போன்ற நிலைகள் அல்லாது “போற்றல்…” என்பது எப்படி இருக்க வேண்டும்…?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது அவர் உணர்வால் “நாம் அதைப் பற்றி…” நமக்குள் நாம் போற்றிக் கொள்ள வேண்டும்.

1.அவர் உயர்ந்தார்…! அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால்
2.“அவருக்குள் வளரும் உணர்வுகள்..” நமக்குள் நின்று நாமும் வளர்வோம்.

ஆனால் சிலர் மற்றவருக்கு எல்லா உதவியும் செய்வார்கள்.

அவரிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..,
1.பார்…! அன்றைக்கு எல்லா உதவியும் செய்து அவனை வளர்த்து விட்டேன்
2.இன்றைக்கு அவன் என்னை மதிக்கின்றனா…? பார்…! என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.
3.செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் கௌரவம் என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.
4.“தன்னை மதிக்கவில்லையே…!” என்ற உணர்வு கொண்டு
5.தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள்.

பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். உங்களுடைய உணர்வுகள் எல்லாம் தெளிந்த மனம் கொண்டு பேரருள் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

2004க்கு மேல் செல்லும் பொழுது கடும் விஷத் தன்மைகள் வளரத் தொடங்குகின்றது. அதிலே சிக்கிடாது அந்தப் பேரருள் என்ற உணர்வை உங்களுக்குள் சேர்த்து இருள் என்ற உணர்வுகளைக் கவர்ந்திடாது மெய் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து இருளை அகற்றிடும் வல்லமை உங்களிலே பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குத் தெளிவாக்குவது.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.அவர் அறிந்த மெய் உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் பெற்ற உண்மையின் துணை கொண்டு இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் திரும்பச் சொல்லி உங்கள் நினைவாற்றலைப் பெருக்கச் செய்கின்றோம்.

PEACE AND WISDOM

நற்குணங்களைப் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உணர்வின் எண்ணத்தை உணர்த்தி வந்தேன். மனித உடலின் அமில குணங்களையும் குணத்தினால் விளையும் உணர்வு உடல் ஆரோக்கியம் இவற்றையும் சில குறிப்பிட்டுள்ளேன்.

அணுவுக்குள் அணுவாக அணுவின் அணுவுக்குள் உள்ள நாம்
1.நம் எண்ண வலிமையை எப்படி வழி நடத்துகின்றோம்…?
2.மனிதனின் நற்குண அமிலமான அன்பு பாசம் பரிவு ஞானம் வீரம் சாந்தம் இவற்றை நாம் எப்படிச் செயல்படுத்துகின்றோம்…?

நம் குழந்தையிடம் அன்பை மட்டும் செலுத்தி அன்பின் செயலால் வளர்க்கப்படும் குழந்தை அவ்வன்பையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும்.
1.அவ்வன்பிலேயேன் வளர்ந்த நிலை கொண்டு
2.தனக்குச் சாதகமான… தனக்கு வேண்டிய உணர்வு தேவையின் நிலையைத்தான்
3.நம்மிடம் எதிர்பார்த்துப் “பிடிவாதத்தில்” நிற்கும்.

இப்படி வெறும் அன்பினாலேயே வளர்க்கப்பட்ட குழந்தை… அது வளர்ந்த பிறகு நம்மிடம் இந்த உணர்வின் குணத்தைத்தான் எதிர்பார்க்கும்.

அன்பினால் மட்டும் எச்சக்தியையும் செயல்படுத்திட முடியுமா…? அவ்வன்பே கடும் விஷம் ஆகி எதிர்த்துத் தாக்கும்.

அன்பைக் கொண்டு செயல்படுத்தி அச்செயலே நமக்கு எதிராகும் தருணத்தில் நம் உணர்வில் கோபம் குடிகொள்ளும். இதனை எப்படிச் செலுத்துவது…?

1.அன்புடன் ஞானத்தைச் செலுத்தி
2.சாந்தமாக நாம் ஊட்டும் அன்பினாலேயே
3.அக்குழந்தையை உயர் ஞானக் குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.

பரிவும் இதே போன்றது தான்…! பரிவை ஒருவருக்குச் செலுத்தப்படும் பொழுது… பரிவுடன் கூடிய ஞானத்தால் சாந்தம் கொண்டு அப்பரிவைச் செலுத்தும் பொழுது பரிவினால் விளையக்கூடிய நற்பயனை நாம் காணலாம்.

ஆசையின் நிலையும் ஆசையினால் உள்ளது தான் இந்த உலகமே..! உண்ண உடுக்க உணர எண்ண வாழ்க்கையின் ஆணிவேரே இவ்வாசை தான்.

ஆசை கொண்டு நாம் புதிதாக ஒரு தொழிலுக்கு வித்தூன்றி வளரச் செய்கின்றோம் என்றால்
1.அவ்வாசையின் வித்திற்கு ஞானம் என்ற முதல் போட்டு
2.சாந்தம் என்ற நீரை ஊற்றினால் தான்
3.அவ்வித்து வேரூன்றி வளர ஏதுவாகும்.

ஞானமில்லா வழியில் சாந்தம் கொள்ளாமல் ஆசை கொண்டு எதைச் செய்தாலும் அது வியாபாரமாக இருந்தாலும் சரி… வாழ்க்கை நடைமுறைச் செயலாக இருந்தாலும் சரி.. ஒரு வீட்டையே கட்டுகிறோம் என்றாலும் சரி… அது நிறைவு தராது.

ஆசைப்பட்டுத்தான் வீட்டைக் கட்ட நாம் முற்படுகின்றோம்.

ஆனாலும் வீட்டைக் கட்டி முடிக்கத் தன்னிடமுள்ளள பொருளாதாரச் சூழ்நிலை… மற்றும் அந்த வீட்டிற்குகந்த பொருள் கிடைக்கும் நிலை… இவற்றை எல்லாம் இந்த ஞானத்தால்
1.தன் ஆசையின் உருவத்தை ஞானம் கொண்டு
2.தன் ஆசையின் செயலை எந்த வடிவில் அமைக்க முடியும்…? என்ற ஞானம் அறிய “சாந்தம்” தேவை.

ஆசையை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் நாம் அமைக்கும் வீடு நம் உணர்வின் ஆசைக்கு உகந்த நிலையில் அமையுமப்பா..!

மாசி மாதம் மகாமகம் பொங்குகிறது என்பார்கள்

மாசி என்றால் தனக்குள் மறைந்த நிலைகள். உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலான சிவத்திற்குள் எத்தனையோ கோடி உணர்வுகள் மறைந்துள்ளது. மகா சிவன் இராத்திரி – நீ விழித்திரு என்று நமக்குள் தீமைகள் உருவாகதவண்ணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் விழித்திருக வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

 

குரு நமக்குக் கொடுக்கும் அருள் வாக்கைப் பேணிக் காக்கின்றோமா…? 

சொல்லித் தரும் ஆசிரியரே எல்லாவற்றையும் நமக்குச் செய்து தருவாரா…?

ஓசோன் திரையை அடைக்க என்ன செய்ய வேண்டும்…?

self control and peace

ஆறு நிலை கொண்ட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் ஞானத்தின் சக்தி கொண்டு… பக்தி என்ற முறைப்படுத்தி உயர் சக்தியை ஞான வழியின் ஜெபமாக்கி… நமக்கு மேல் உயர்ந்த சக்தி கொண்ட சப்தரிஷிகளின் அலையை நாம் எடுக்க எடுக்க… நற்சக்தியின் அமில குணங்கள் நமக்குள் வளர்ச்சியாகிப் பெருகும்.

அப்படிப் பெருகத் தொடங்கினால் உடலுடன் கூடிய உணர்வான
1.சோம்பல்
2,தூக்கம்
3.பசி
4.காம இச்சைகள்
5.உடல் கழிவுகளின் உந்தல்
6.உடலில் ஏற்பட்டுள்ள வியாதியின் வலிகள் என்ற இந்த ஆறு நிலைகளும்
7.உணர்வால் வெளிப்படும் நிலைதனை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

தன் எண்ண பலத்தால் எத்தன்மையான சோர்வு வந்தாலும் எண்ணத்தின் நிலைக்கொப்ப “சோர்வை…” அகற்ற முடிகின்றது.

“தூக்கத்தையும்…” நம் வேலையின் நேரத்திற்கொப்ப உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு மாற்றி அமைக்க முடிகின்றது.

எண்ணத்தால் வேறு ஒரு செயலில் உள்ள பொழுது “பசியையும்…” மாற்ற முடிகிறது.

உடல் “காம இச்சையையும்…” மனிதனால் இச்சைக்குகந்த நிலையில் செல்லாமல் ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்ள முடிகிறது.

அதே போல் “உடல் வியாதியையும்…” எண்ணத்தால் அவ்வலியையே மறக்கக்கூடிய தன்மை மனிதனுக்கு உண்டு.

உணர்வால் உந்தப்படும் உடலின் இச்சைகளையே ஒழுங்குநிலைப்படுத்தி
1.உணர்வின் தன்மையில் செல்லாமல்
2.ஞானத்தால் கால நிலை அனுசரித்து
3.உடல் பிம்ப உணர்வு உந்தலின் அலையையே
4.எண்ணத்தால் ஒழுங்குபடுத்துகின்றான் மனிதன்.

எண்ணத்தைக் கொண்டு எச்செயலையும் செய்விக்கும் மனிதனைப் போல் மிருகங்களின் நிலைக்கு இல்லை.

அதன் உடலில் ஏற்படும் உணர்வின் உந்தலானது ஞானத்தின் எண்ணம் கொண்டு மாற்றியமைக்கக்கூடிய பக்குவமும் செயல் திறனும் மிருகங்களுக்கு இல்லாததனால்தான் மனிதனை ஒத்த உணர்வை மாற்றியமைத்து வாழ்க்கை என்ற சமுதாயப் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால் மனிதன் தன் எண்ணத்திற்குகந்த வளர்ச்சி செயல் ஞானத்தைச் செய்விக்கின்றான். உணர்வை மாற்றி அமைக்கக்கூடிய எண்ணம் செயல் மற்ற இனங்களுக்கு இல்லை.

உணவைத் தேடி உண்டு கழித்து உறங்கி காம இச்சையின் இனப் பெருக்க உணர்வும் உடல் பிணியில் உண்டாகும் அவஸ்தையில் சர்வ சதா அவ்வலியின் தன்மையுடன் ஒன்றியும் உணர்வை மாற்றியமைக்க முடியாத நிலை தான் மற்ற இனங்களுக்குண்டு.

மனிதனின் ஞானம் எவ்வுணர்வையும் கால நிலை சூழ்நிலை இதன் வட்டத்தைக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தித் தன் ஞானத்தால் உணர்வின் எண்ணத்தையே செயல்படுத்தும் திறன் பெற்றது.

point to point north star

சில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுகிறது… ஏன்…?

அதனின் காரணம் என்ன என்றால் நமக்குள் முந்தைய நிலைகளில் சந்தர்ப்பத்தால் கவரப்பட்ட வேதனைகள் உணர்வுகள் வெளிப்பட்டு அந்த நிமிடம் அது உடலில் இருந்து வேதனையைத் தரும்.

அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகள் ஆன பின் கண்ணின் நினைவு உயிருக்கு வருகின்றது.

உதாரணமாக காலில் முள் குத்தினால் உடனே உயிருக்குத் தான் அந்த உணர்வுகள் வரும். கண் என்ன செய்கிறது…? அது முள்ளா அல்லது வேறு எது குத்தியது…? என்று தேடுகிறது.

அப்பொழுது இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது
1.அதைக் கூர்ந்து கவனிக்கும் தன்மை வருகின்றது…
2.அதை நுகர்கின்றது…
3.அதை உற்றுப் பார்த்துக் காலில் ஏறிவிட்டதா…! என்ன…? என்கிற வகையில்
4.அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இதைப் போன்ற நமக்குள் முந்தைய நிலைகள் பெற்ற இந்த உணர்வுகள் அந்த அணுக்கள் அது தன் பசிக்காக உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது…! என்றால் சந்தோஷமாக இருங்கள் என்றால் உங்களால் இருக்க முடியுமோ…? நம் உடலிலே ஏற்கனவே பெற்ற அந்த அணுக்கள் தன் பசிக்கு அதன் உணர்ச்சிகளை உந்தும்.

அந்த வேதனையான உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளும் அந்த வேதனையின் நிலையை நாம் அறிய முடிகின்றது.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிருடன் தொடர் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

ஏனென்றால்…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

பின் கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ…
2.அங்கே உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தித் திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வாருங்கள்.

இப்படிச் செய்ய…
1.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பட…
2.அந்த விஷத் தன்மைகள் அங்கே குறைந்து…
3.நமக்குள் இருக்கும் அந்த வலியைக் குறைக்க உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து உடலில் செலுத்தச் செலுத்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் சிறுகச் சிறுக வீரியத் தன்மை இழந்து உடலில் உள்ள நல்ல அணுக்கள் வலிமை அடையக்கூடிய சக்தி பெறுகின்றது.

அதற்குத்தான் இதைச் செய்யச் சொல்கிறோம்…!

அருள் வாழ்க்கை நீங்கள் வாழ்ந்திட குரு அருள் உறுதுணையாக இருக்கும்

கணவன் மனைவி குழந்தைகள் என்று உங்கள் குடும்பத்தில் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே நீங்கள் ஒன்றி வாழ்ந்திட குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) வைகுண்ட ஏகாதசி அன்று தான் விண் சென்றார். அவருடைய அருளை நீங்கள் எளிதில் பெறலாம். 

 

குருநாதர் சூட்சமத்தில் சென்றபின் எனக்குக் காட்டிய முதல் நிலை 

தாய் தந்தையருக்கு நாம் பெருமை சேர்க்க வேண்டும் 

தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமை

Personal Protection

பரிதாபப்படுவதால் நமக்கும் பிறருக்கும் நன்மை கிடைக்கிறதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எடுக்கக்கூடிய உணர்வின் எண்ணச் சுவாசமானது பிறர் ஈர்ப்பில் பாவம் என்ற பரிதாபச் சுழற்சியில் தன் எண்ணத்தைச் செலுத்தாமல் இருத்தல் வேண்டும்.

1.தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும்
2.கணவன் மனைவி குழந்தைகள் என்று இருந்தாலும்
3.சகோதர பந்தபாசங்கள்… உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும்
4.ஆண்டவனாக இருந்தாலும்…
5.அவர்கள் எடுக்கும் உணர்வின் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படும் இன்னலைக் கண்டு உடல் நலக் குறைவு எதுவாக இருந்தாலும்
6.அவர்கள் மேல் பரிதாப எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் பரிதாப எண்ணத்தில் நாம் சிக்காமல்
7.சுயநலம் கொண்ட தன் நலமுடன் பிறரின் நலம் காண நம் உணர்வின் எண்ணச் செயல் பட்டு
8.அவர்கள் அலை நம் மேல் சாடாமல் நம் அலையின் சக்தியை அவர்கள் மேல் பாய்ச்சி
9.அவர்கள் நல்ல நிலை பெறவேண்டும்…! என்ற உயர்வான சக்தி அலையைத்தான் நம் எண்ணத்தில் எடுக்க வேண்டும்.

பரிதாபப்பட்டுச் செய்யும் தர்மம் பரிதாப அலை உணர்வை நம்மை அறியாமல் நம் எண்ணம் எடுப்பதினால் பரிதாப எண்ணத்திற்குரிய அலை குண அமிலமாக இவ்வுடல் பிம்ப அமிலம் அவர்கள் எடுத்த அலைத் தொடரின் ஈர்ப்பில் சிக்கிவிடுகின்றது.

ஆக நம் உணர்வுடன் அது கூடி நம் எண்ணமே அச்சுழற்சி அலையுடன் சென்று நாளாவட்டத்தில் அவ்வுணர்வின் பரிதாப நிலைக்கு நாமும் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

1.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் செயலின் ஈர்ப்பானது உடனே நம்மைச் சாடும்.
2.இரத்தத் தொடர்பு கொண்டவர்களின் அலைத் தொடர் “இன்னும் வேகமாக…!” நம் உணர்வுடன் ஏறிவிடுகின்றது

வைத்தியர்கள் மற்றவர்களுக்குத் தன் உணர்வின் எண்ணத்தைச் செயல் கொண்டு செய்விக்கும் மருத்துவத்தினால் வியாதியஸ்தர்களின் ஈர்ப்பில் பெரும்பகுதி சிக்க மாட்டார்கள்.

அவர்கள் சொல்லும் அந்த வியாதிக்குத் தக்கவாறு தான் செய்ய வேண்டிய மருத்துவ ஞான அலையை உணர்ந்து அதன் வழியில் செய்யப்படும் மருத்துவத்தால் அவர்களுக்குக் குணமாக வேண்டும் என்ற செயலின் நிலைக்கொப்ப வைத்திய முறையைக் கடைப்பிடிக்க முடிகின்றது.

1.நோயாளிகளின் ஈர்ப்பில் சிக்காமல்
2.அவர்கள் படும் இன்னலின் பரிதாபம் கொள்ளாமல்
3.மருத்துவத்தால் மாற்றியமைக்கலாம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நிலைக்கொப்ப
4.பிறர் ஈர்ப்பும் இத்தகைய மருத்துவரைச் சாடுவதில்லை.

அப்படிப்பட்ட மருத்துவரால் செய்யப்படும் செயல் குணமும் நலம் பெற வழி கொள்கின்றது.

ஆனால் அதுவே தன் குழந்தை தன் தாய் தந்தையர் என்ற சுற்றத்தில் உள்ளவர்களின் நிலைக்காகச் செய்யப்படும் மருத்துவத்தில் பயம் கலந்த உணர்வு கூடி விடுகிறது.

அவ்வாறு கூடுவதனால்… உணர்வின் எண்ணம் பாசம் என்ற பரிதாப அலையை எடுக்கும் பொழுது தன்னுடைய செயலில் தடுமாற்றம் ஏற்படுகின்றது.

ஆகவே…
1“உணர்வின் எண்ண ஒலிக்கு உள்ள உண்மையை உணர்ந்து…!”
2.ஒவ்வொருவரும் பிறர் அலையின் ஈர்ப்பில் சிக்காமல்
3.சுயநலம் என்ற தன் நல வளர்ப்பால் பிறர் நலத்தை வளர்க்கக்கூடிய வளர்ப்பாக்குங்கள்.

உணர்வின் எண்ணம் உயர் ஞான சக்தியின் தொடர்புடன்… நமக்கு மேல் சக்தி கொண்ட நமக்குச் சித்தர்களினால் வழிப்படுத்திச் சென்ற சக்திகளின் தொடரை ஜெபம் கொண்டு “ஒவ்வொரு வழியிலும் உணர்த்தி வரும்… முன்னோர்களின் தொடர் அலையை எடுக்கப் பழகுங்கள்…!”

karu nochi

பலவிதமான நோய்களைப் போக்கும் நொச்சி இலையின் குணங்கள்

“கருநொச்சி” என்று தபோவனத்தில் வைத்திருக்கின்றோம்.

நீங்கள் இங்கே தபோவனம் வரும் பொழுது அதிலே ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீடுகளிலோ அல்லது அங்கே இடம் இல்லை என்றால் பக்கத்து வீட்டிலேயோ ஊன்றி வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஏனென்றால் அந்த நொச்சி மரத்தில்
2.மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பாய்ச்சி வைக்கப்பட்டுள்ளது.

அது முளைத்து வரும் பொழுது ஒரு ஐந்து இலைகளை எடுத்து அதை நீங்கள் காய்ச்சி ஒரு அரை டம்ளர் சாப்பிட்டால் போதும். சாப்பிட்ட பின் இது இரத்தத்தில் கலக்கின்றது.

நாம் நுகர்ந்த… சுவாசித்த உணர்வுகளில்… வைரஸ் என்ற அணுக்கள் இரத்தங்களிலே உருவாகி இருந்தால் அதிலே இது (நொச்சி) பட்ட பின் அது பலவீனம் அடைகின்றது.

1.நம் உடல்களில் சளி என்ற நிலைகள் வந்தாலும் சரவாங்கி நோய் (மூட்டு நோய்) என்று வந்தாலும் அதை எல்லாம் குறைத்து நமக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்.
2.இரவு படுக்கப்போகும் பொழுது அரை டம்ளர் குடியுங்கள். இருதயத்தில் இருக்கக்கூடிய, நுரையீரலில் இருக்கக்கூடிய சளி எல்லாம் கட்டி கட்டியாக வெளியே வந்துவிடும்.
3.காய்ச்சல் வந்தால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அந்த வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும். உஷ்ணம் அதிகம் இருப்பதால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய காய்ச்சலைத் தடுக்கும்.
4.அதே போன்று தும்மலுக்கு… மூக்கில் தொடர்ந்து தண்ணீர் வருபவர்களுக்கு மஞ்சள் நொச்சி இலை வேப்பிலை பச்சையாகப் போட்டு புகையை போடுங்கள்…! அதை நுகருங்கள்…! சரியாகப் போகும்.
5.ஆஸ்த்மாவிற்கு வாத நோய் எல்லாவற்றுக்குமே இந்த நொச்சி இலையைச் சாப்பிட்டாலே சரியாகும்.

அதே சமயத்தில் நோயாளிகளை நீங்கள் பார்த்து விட்டால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்… கண்ணின் நினைவைச் செலுத்தி…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளியின் உடலில் படர வேண்டும் அவர் நோய் நீங்கி உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

1.அவர் உடலில் எதை எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அதை எல்லாம் உங்கள் உயிர் இங்கே உருவாக்குகின்றது
3.அதாவது உடலிலே அணுத் தன்மை ஆகும் கருவாக உருவாக்குகின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தத் தீமையின் நிலையைத் தணிக்கச் செய்து அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டச் செய்து நமக்குள் நல்லதாக்க வேண்டும்.

மின்னல்களை நுகர்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும்

அகஸ்தியனும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்து வசிஷ்டர் அருந்ததியும் போன்று வாழ்ந்த நிலைகள் அன்று இருப்பினும் அவர்கள் ஒன்றி வாழ்ந்த நிலைகள் காலத்தால் மறைந்து விட்டது. அருந்ததி நட்சத்திரத்தைப் பார்…! என்று அது எல்லாம் இன்று வெறும் சாங்கியமாகி விட்டது. ஆனால் அவர்கள பல கோடி மின்னல்களை நுகர்ந்து இரு உயிரும் ஒன்றி ஒளியின் சரீரமானார்கள் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள். அதை நுகர்ந்தவர்கள் ஞானியாகின்றார்கள்.

 

உயிரின் இயக்கம் 

உயிரைக் கடவுளாக மதிக்கும் பண்புகள் 

உருவான வித்துக்குச் சூரியன் உணவு கொடுப்பதும் உடலில் உள்ள வித்துக்கு உயிர் உணவு கொடுப்பதும் 

real homa

ஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…!

விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…? பல விதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றார்கள். பல மரபணுக்களை எடுத்து உயிரினங்களை மாற்றுகின்றார்கள். மனித உடலிலும் எத்தனையோ வகையான உறுப்புகளை மாற்றுகின்றார்கள். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார்கள்.
1.ஆனால் இந்த உயிரின் தன்மையை
2.உணர்வை ஒளியாக மாற்றும் திறன் அவனுக்கு இல்லை…!

உடல்களை மாற்றிக் கொள்ள முடியும் இவனுடைய சிந்தனைகளை எடுத்துக் கொள்வான். இந்த ஆராய்ச்சி இவனுக்குள் வரும். ஆட்டை மாட்டாக ஆக்கினான் என்றால் அந்த உணர்வுகள் வந்தபின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இந்த ஞானத்தின் தொடர் கொண்டு புது விதமான உடலைத் தான் அவன் பெறுவான்.

எதை மாற்ற வேண்டும் என்று எண்ணினானோ இந்த உணர்வுகள் தன் உயிரிலே வளர்க்கப்பட்டு இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு பெரிய தத்துவம் ஆனாலும் இந்த உணர்வின் தன்மை அணுவாக்கப்படும்போது இறந்தபின் எதன் உணர்வை மாற்றி அமைக்கச் செய்தானோ அதே உணர்வு கொண்ட உடல்களில் புகுந்து விடுவான்.

1.ஆட்டின் மேலே ஞாபகம் வைத்தான்…
2.ஆட்டை மாற்றியமைக்க எண்ணினான்…
3.இதே உணர்வு கொண்டு உடலைவிட்டுச் சென்றபின் இந்த விஞ்ஞானி அதோடு மடிந்துவிடுகின்றான்.
4.எந்த உணர்வின் தன்மையைப் பெருக்கினானோ அந்த உணர்வின் தன்மை இங்கு வருகின்றது.

ஆகவே இதையெல்லாம் வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிடும் அந்த உணர்வை எவர் பெறுகின்றனரோ மீண்டும் உடல் பெறாதபடி அதை மாற்றி அமைக்க முடியும்.

இதையெல்லாம் நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றோம். காவியங்களில் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். நாம் அதையெல்லாம் இழந்துவிட்டோமே…!

இப்பொழுது என்ன செய்கின்றோம்…? யாகங்களைச் செய்து பாவங்களைத் தான் ஜாஸ்தியாகச் செய்கின்றோமே தவிர பாவத்தைப் போக்கும் மார்க்கம் இல்லை.

உடலில் நோய் வந்துவிட்டது என்றால் காளி கோவிலிலோ மற்ற கோவில்களிலோ யாகத்தைச் செய்து அந்தப் பாவத்தை எல்லாம் போக்க முற்படுகின்றோம்.

அடுத்ததாக… அதாவது சாகா நிலை கொண்டு வரக்கூடிய நிலையாக அறுபதாவது வயது வந்த பின் “சஷ்டிஅப்த பூர்த்தி…” செய்கிறோம். வயதைக் குறைக்காமல் வாழ வேண்டும் என்ற அந்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி அதைப் பூர்த்தி செய்கிறார்கள்.

1.ஆனால் அதைப் பூர்த்தி செய்ய மந்திரம் சொல்கின்றார்களே
2.மந்திரம் சொல்பவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா…?

சாகாமல் இருப்பதற்காக வேண்டிச் சில கோவில்களில் ஒரு யாகத்தைச் செய்கின்றார்கள். அந்த யாகத்தைச் செய்பவன் உயிரோடு இருக்கின்றானா என்றால் இல்லை…!

இதுகள் எல்லாம் நாம் ஆசையின் நிலைகள் கொண்டு காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆசைகளைத் தான் வளர்த்துக் கொள்ள முடிகிறது. எந்த யாகத்தை வளர்த்தோமோ செத்த பிற்பாடு எந்த மந்திரக்காரன் சொன்னானோ அவனிடம் கைவல்யமாகிப் போய்விடுவோம்.

இது சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் போய் இதே உணர்ச்சிகள் கொண்டு இதே நிலையைத் தான் உருவாக்கும். ஆனால் வேகா நிலை அடைவதில்லை.

உதாரனமாக நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் வேகுவதில்லை… அழிவதில்லை. அது போல்
1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்து விட்டால்
2.எதிலேயும் இது சிக்காது ஒரே ஒளியாக மாறுகின்றது
3.இது தான் வேகாநிலை… எதுவுமே இதை அழிக்க முடியாது.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கிக் கொள்தல் வேண்டும்.

ஜாதகத்தைப் பார்த்தவுடனே ஆயுள் கம்மியாக இருக்கின்றது என்று தெரிந்தவுடனே ஆயுளைக் கூட்டுவதற்காக வேண்டி ஆயுள் ஹோமம் செய்து பல யாகங்களைச் செய்து மந்திரங்களைச் செய்வார்கள்.

அறுபதாம் கல்யாணம் முடிந்தவுடனே சில கோவில்களில் எல்லாம் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்வார்கள். ஆனால் ஆயுள் ஹோமம் செய்து தருபவன் சாகாமல் இருக்கின்றானா என்றால் இல்லை…! அப்பொழுது அவனிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி இருக்கும்…?

நமக்குத் தெரியும்… அவனே சாகப்போகின்றான் என்று…! இருந்தாலும் அவன் ஆயுள் ஹோமம் செய்து நம் ஆயுளைக் கூட்டித் தருவான் என்ற ஆசை. சாங்கியங்களைச் செய்து கொஞ்ச நாளாவது வாழ முடியாதா…?

ஆயுள் ஹோமம் செய்து முடிந்த பிற்பாடு என்ன நடக்கின்றது..? சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே…! என்று இந்த வேதனையை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த வேதனையான உணர்வு அதிகமான பின் துடுக்கு… துடுக்கு… என்று கடைசியில்
1.“இத்தனை சம்பாரித்தேனே… எல்லாம் போய்விட்டதே…!
2.இத்தனை சம்பாரித்தேனே… ஆண்டவன் என்னை ரொம்பவும் சோதிக்கின்றானே…! என்று
3.இந்த வேதனைகளையே உருவாக்கிக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உடல் குறுக… குறுக… வேதனை என்ற உணர்வை வளர்க்க… வளர்க்க… இந்த உடலின் ஆயுள் என்ன ஆகின்றது…? ஆயுள் ஹோமம் செய்து இந்த வேதனையை வளர்த்தது தான் மிச்சம்…!

ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…?

ஆயுள் ஹோமம் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலின் தன்மை நீங்கிய பின் என்றும் ஒளியாக நாம் இருக்க முடியும்…!

சுயநலமின்றிப் பொது நலம் வளராது. தன்னலத்தை வளர்த்துத் தான் பிற நலத்தை வளர்க்க முடியுமே அன்றி பிறர் நலத்தால் தன் நலம் என்றுமே வளராது.

உருவாகும் சக்திக்கே சுயநலம் தான் காரணம். ஜீவ சக்தி கொண்ட துடிப்பனைத்திற்குமே சுயநிலையுடன் கூடிய தன்னலம் கொண்ட சுய நலம் உண்டு.

success story

சுயநலமின்றிப் பொது நலம் வளராது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.தன்னலத்தை வளர்த்துத் தான் பிற நலத்தை வளர்க்க முடியுமே அன்றி
2.பிறர் நலத்தால் தன் நலம் என்றுமே வளராது.

உருவாகும் சக்திக்கே சுயநலம் தான் காரணம்…! ஜீவ சக்தி கொண்ட துடிப்பனைத்திற்குமே சுயநிலையுடன் கூடிய தன்னலம் கொண்ட சுய நலம் உண்டு.

சுயநலமில்லா எச்சக்தியும் வளர முடியாது. உணர்வின் எண்ணத்திற்கே சுயநலம் உண்டு.

சுயநலம் கொண்டு தான் முருகனைப் படைத்த போகனும் செயல் கொள்கின்றான். வெங்கடாசலபதியைப் படைத்த கொங்கணவனும் செயல்படுகின்றான்.

சூரியனாக உருளும் சூரிய தேவனின் சக்தியும் சுயநலம் கொண்டு தன் வளர்ப்பைத் தான் ஈர்த்துப் பிற மண்டலங்களுக்குச் சூரியனின் சக்தி செல்கிறது.

மிதந்து கொண்டேயுள்ள இப்பேரண்டத்தில் உருண்டோடுகின்ற மையப்புள்ளியாக தன் சுயநல வளர்ப்பின் சக்தி கொண்ட பெரிய மண்டலமான சூரிய மண்டலம் தன் வளர்ப்பின் சக்தி வளர சூரியனின் குடும்ப மண்டலமாக உள்ள நாற்பத்தியேழு மண்டலங்களையும் தன் ஈர்ப்பின் வட்டத்தின் சுழற்சியுடன் வளரவிட்டுக் கொள்கிறது.

வளர்ந்த மண்டலங்களின் அமில சுழற்சி கொண்ட அலையைச் சூரியன் தனக்குணவாக எடுத்துத் தன் வளர்ப்பில் தன்னைச் சார்ந்துள்ள பிற மண்டலங்களையும் வளர்க்கச் செய்கிறதேயன்றி சுயநலமின்றிப் பிற நலமாக எதுவும் செயல்படவில்லை.

சூரியனானாலும் சரி… வளர்ந்தோடும் மற்றெல்லா மண்டலங்களும் சரி… சப்தரிஷிகளானாலும் சரி… சப்தரிஷியின் தொடர் கொண்ட சகல ஜீவ உணர்வு உயிரணுக்களும் சரி… எல்லாமே சுயநலத்தின் தொடர் படைப்புத்தான்.

ஆதிசக்தியின் சக்தி என்கிறோம்…!
1.அச்சக்தியே ஆக்கல் காத்தல் மாற்றல் என்ற சுழற்சி சுயநலம் கொண்டு தான் படைக்கின்றான்
2.படைப்பின் பலன் காணுகின்றான்
3.மீண்டும் படைப்பின் படைப்பையே உருவாக்க படைத்ததை மாற்றி மாற்றி அழிக்கின்றான்.
4.உரு மாறி மாறி சக்தி நிலை செயல்பட்டால் தான் சக்தியின் சக்திக்கே சக்தி கூடுகின்றது,

ஒன்றான சக்திக்கு ஜீவன் ஏது…?

ஒன்று ஒன்றுடன் சேர்ந்து இரண்டு ஒன்றாகி… ஒன்றுடன் பிறிதொன்று சேர்ந்து இரண்டாகி.. ஒன்றாகி… இரண்டாகி… ஒன்றாகி…
1.சுயநலம் கொண்டு கருவாகும் சக்தி அலை இருந்தால் தான்
2.படைப்பின் பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

சுயநலம் கொண்ட வாழ்க்கை தான் மனித வாழ்க்கை.

சுயநலம் கொண்டு பிறர் நலம் காணுங்கள். ஆக… தன் வளர்ச்சியைக் கொண்டு தான் பிற வளர்ச்சியை நிச்சயம் வளர்க்க முடியும்…!

நமக்குள் ஈசன் இருக்கின்றான்..! என்று ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைக்கின்றோமா…?

தானாக இருந்து நானாக இயங்குகின்றோம் என்பதை மாற்றி “உயிருடன் ஒன்றிய நானாக… இயங்க வேண்டும்

உயிரை மதிக்கும் பண்புகள் 

தீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பக்குவ நிலை 

onward breathing yoga

உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமி இல்லாவிட்டால் நாம் ஏது…? நம் பூமியையே வளர்க்கும் சூரியனின் சக்தி இல்லாவிட்டால் நம் பூமி தான் ஏது…?

சூரியனுக்குச் சக்தி தருவது சூரியனைச் சுற்றியுள்ள 47 மண்டங்கள் தாம். 47 மண்டலங்களின் துணையுடன் இயங்கும் சூரியன் தன் அலையைக் கொண்டு பிற மண்டலங்களின் அலையை எடுத்துத் தான் வளர்ந்து பிற மண்டலங்களையும் வாழ வைக்கின்றது.

சூரிய அலையை ஈர்க்கும் மண்டலமாக நம் பூமியின் ஜீவன் உள்ளது.
1.சூரிய மண்டலத்திலிருந்து வெளிப்படும் அலையைக் கொண்டு
2.நம் பூமி வெளிப்படுத்தும் அலையின் மோதலில் உருவான ஓ…ம் என்ற ஒலியின் சுழற்சி கொண்டு
3.உருண்டோடும் இவ்வுலக சுழற்சி ஓட்டத்தில் உருவான உயிர் ஜீவன்கள்
4.ஓமுக்குள் ஓமாய் ஓ…ம் என்ற நாதத்துடன் உருண்டோடும் பூமியில்
5.அந்நாதத்தால் உருவான ஜீவ நீரும் காற்றும் ஒளியும் கொண்டு ஜீவத் துடிப்பு பெற்று
5.இந்தப் பூமியின் ஈர்ப்பு ஜீவ உடல் கொண்ட உயிர் பிம்பங்களின் சுவாசத்தில் எடுக்கும் ஒலி தான் “ஓமுக்குள் ஓமாய் உள்ள ஒலி…!”

ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தனித்தொரு நிலையில் எதுவும் இல்லாமல் இரண்டு ஒன்றாகி அவ்வொன்றுடன் பிறிதொன்று சேர்ந்து ஒன்றாகி உருளுகின்ற உயிர் ஜீவ சக்திக்குத் தனித்த சக்தி நிலை எது..?
1.தனித்த ஒன்றான நான் என்ற சக்திக்கு ஜீவனே இல்லை.
2.ஜீவனற்ற சக்தி தான் “நான்” என்ற சக்தி.

இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுடல் பிம்பத்தில் ஏற்படும் எந்த ஒரு பிணியையும் உணர்வால் எடுக்கும் எண்ணத்தின் சக்தியை மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு நீக்கிட முடியும்.

“மேல் நோக்கிய சுவாசமாக…” இவ்வுடல் பிம்ப உணர்வு எண்ணம் கொண்டு உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள பன்னிரெண்டு வகையான குண அமிலத்தையும் ஆறு வகை குண அமிலத்தையும் நற்சக்திப்படுத்தும் நிலை கொண்டு செயல்படுத்திடல் வேண்டும்.

சலிப்பைச் சாந்தமாக்கி…
கோபத்தை வீரமாக்கி…
சங்கடத்தை அன்பாக்கி…
இப்படி உணர்வின் குணத்தால் உந்தப்பட்டு அவற்றினால் உடல் பிம்பத்த்தில் ஏற்கனவே ஏற்றிக் கொண்டுள்ள வியாதியின் தன்மையை மாற்றிட
1.நம் குண நலத்தை ஞான வழி பூண்டு மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.நம் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் உடல் பிம்ப ஆரோக்கியத்திற்கு அதை நம் உடலில் பாய வைத்துக் கொண்டு
3.உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் வழித் தொடர் ஜெபத்தையும் பெற்றிடலாம்.

இப்படி இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டல சுழற்சியுடன் சிக்குண்டு வாழ் நாட்களை சலிப்பு சங்கடம் கோபம் வஞ்சனை குரோதம் காமம் வெறி என்ற உணர்வுகளிலிருந்து மாற்றிடும்
1.நற்குணத்தின் அமிலத்தின் வளர்ப்பின் ஞானத்தின் வளர்ச்சியால்
2.எந்த மண்டலத்திலும் செயல் கொள்ளும் நிலை பெற்ற உயிராத்மாவாக
3.நம் உயிராத்மாவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உடல் பிணியின் வேதனைப்பிடியிலிருந்து உணர்வின் எண்ணத்தைச் சுயநலம் மிக்க தன்னலம் கொண்டு செயல்பட்டால் தன்னலத்தின் வளர்ப்பால் பிற நலத்தை வளர்க்கலாம்.

1.உடல் என்ற பிம்பத்தை வைத்துத்தான் எந்த ஞானத்தையும் வளர்க்க முடியும்.
2.உடல் பிணிக்கு ஏற்ற மருந்து தேவை.
3.உணர்வின் பிடிக்கு உணர்வின் எண்ண நிலைக்கொப்ப சுழலவிடாமல்
4.உணர்வின் எண்ணத்திற்கு ஞானம் தேவை.

போற்ற வேண்டியதும் போற்றலுக்குகந்ததும் எது…?

போற்றிப் பேசி அதன் மறைவில் தன் காரியத்தைச் செயலாக்குவோர் பலர் உண்டு. ஆனால் மற்றவரை நாம் உயர்த்தி அவர் உயர்வைக் கண்டு நம்மைப் போற்றிக் கொண்டால் அது நமக்கு நன்மை தரும். அவர் உயர்வாகும் உணர்வுகள் நமக்குள் வந்து நம்மையும் உயர்த்தும்.

 

sixth sense power

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும்…!

ஒருவன் குறும்புத்தனம் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அதை நுகர்ந்தபின் அந்த குறும்பின் உணர்ச்சியை ஊட்டும் அணுத்தன்மை நம் உடலில் விளைந்து விடுகின்றது. அப்பொழுது அதை புகாது நமக்குள் தடுத்தல் வேண்டும்.

அந்த குறும்புத்தனத்தின் உணர்வை நீக்க வேண்டும் என்றால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து அதனுடன் கலந்து என் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும். ஈஸ்வரா என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணிய பின் எவன் குறும்புத்தனம் செய்தானோ…
1.அவன் அறியாத இருள் நீங்க வேண்டும்
2.அவன் பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்
4.பிறரை மதிக்கும் நன்மதிப்பான அந்த உணர்வுகள் அவனிடம் தோன்றப்பட வேண்டு என்று எண்ணினால்
5.அந்த குறும்புத்தனத்துடன் நமது அந்த அருளொளி என்ற உணர்வைக் கூட்டி ஒரு புது உணர்வாக மாற்றுகின்றோம்.

விவசாயங்களில் என்ன செய்கின்றோம்…? நமக்கு வேண்டிய உணர்வின் அணுக்களைச் சேர்த்து தாவர இனங்களை மாற்றித் நமக்குகந்த புது வித ரகங்களை உருவாக்கிக் கொள்கின்றோம்.

அதே போல மனிதனுக்குகந்த நிலையில் உயிரினங்களில் மற்ற மரபணுக்களைச் சேர்த்துச் சேர்த்து அதனின் உடல்களை உருமாற்றுகின்றோம். ஆகவே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் அந்த ஆறாவது அறிவின் தன்மை.

1.இதையெல்லாம் உருவாக்கும் திறன் இருந்தும் நமக்குள் நல்லதை உருவாக்கத் தவறினால்
2.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த தீமைகள் நம்மை அது வலிமை கொண்டு
3,மீண்டும் தேய்பிறை என்ற நிலையில் மனிதனல்லாத உடலை உருமாற்றிக் கொண்டிருக்கும் – நம் உயிரின் வேலை.

அதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைத் தெளிவாக்கப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நாம் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றோம். சந்தர்ப்பத்தில் காக்கா வலிப்பு வந்து ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான். இரக்கத்துடன் கேட்கிறோம்.

இருந்தாலும் சிலருக்குப் பலவீனமான உணர்வு இருந்தால் அது சிறு மூளை பாகத்தில் தாக்கி விட்டால் அது வெடுக்கு…வெடுக்கு… என்று சுண்டும்.

1.இதற்கு முன்னாடி காக்கா வலிப்பு இல்லை…
2.ஆனால் இப்படிச் சந்தித்த நிலைகள் கொண்டு அதிர்ச்சி ஆன பின்
3.இந்த உணர்வின் தன்மை அணு அங்கே தேங்கி விட்டால் அவர்களுக்கு இந்தக் காக்கா வலிப்பு வரும்.
4.சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுதெல்லாம் இது இல்லை என்று எண்ணுவார்கள்
5.ஆனால் இந்த உணர்வின் அறிவு இப்படி வருகின்றது.

இதைப் போல ஒரு சாந்த குணம் கொண்ட… பரிவான நிலைகள் கொண்ட ஒரு மனிதன்… எதிர்பாராத நிலைகள் சந்திக்கப்படும் பொழுது ஆ…ஆ…! என்ற இந்த உணர்வின் தன்மை பயந்தால் என்ன நடக்கின்றது…?

டரன்சாக்சன் (TRANCACTION) செய்யக்கூடிய உணர்வுகள் ஒலிப்பெருக்கி ஆகும்போது சிறு மூளைப் பாகங்களில் உள்ள நுண்ணிய நரம்புகள் விரிவு அடைந்து விடுகின்றது.
1.அப்போது நமக்குள் மயக்கம் ஆகின்றது
2.உறுப்புகளின் தன்மை கை கால் அங்கங்கள் வராமல் கூட போய் விடுகின்றது – அதிர்ச்சியினால்…!

இதெல்லாம் நாம் அறியாமலே நுகரும் உணர்வுகள். அப்போது நம்மைக் காக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்…? ஆறாவது அறிவைச் சீராக நாம் பயன்படுத்த வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உணர்வின் தன்மை உயிரோடு ஒன்ற வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
1.இங்கே புருவ மத்தியில் நிலை நிறுத்தி
2.உட்புகும் அந்தத் தீமையின் செயலாக்கங்களை நாம் தடைப்படுத்தி பழக வேண்டும்.

யாரைப் பார்த்து அந்த அதிர்ச்சியின் நிலைகள் ஆனதோ அவனுக்குள் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும். அவன் உணர்வுகள் காக்கப்பட வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவன் உடலில் உள்ள பிணிகள் நீங்க வேண்டும் அவன் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்த உணர்வுகளை எடுத்து நமக்குள் படைத்து விட்டால் நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை உருவாக்குகின்றது. அவனுடைய செயல்கள் நமக்குள் வருவதில்லை.

சந்தர்ப்பத்தால் வேதனையை நுகரப்படும்போது அது பிரம்மமாகின்றது… உருவாகி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நம் ஆறாவது அறிவு சேனாதிபதி இதையெல்லாம் பாதுகாக்கும் சக்தி பெற்றது. கார்த்திகேயா…! இதையெல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்றது அந்த ஆறாவது அறிவு.

1.தீமை என்ற உணர்வுகள் வந்தாலே…
2.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் இணைத்து
3.அதைச் சுவைமிக்கதாக நாம் படைத்துப் பழக வேண்டும்.
4.அந்த அணுக்களை மாற்றிப் பழக வேண்டும்…!

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது…!

வாழ்க்கை என்பது என்ன…?

 

கடலில் படகில் செல்கிறோம் ஒரு எல்லையை அடைவதற்கு. அதிலே போகும் பொழுது எத்தனையோ அலைகள் மோதுகிறது. நாம் எல்லையைக் குறியாக வைத்துத்தான் அங்கே போகிறோம். அந்தத் துடுப்பைச் சீராகப் போட்டால் அங்கே செல்லலாம்.

 

இதைப் போல் தான் நம் வாழ்க்கையிலே

பாச அலை

அன்பு அலை

வெறுப்பு அலை

வேதனை அலை

சலிப்பு அலை

சங்கட அலை

கோப அலை

குரோத அலைகளில் எல்லாம் நாம் மூழ்கிக் கொண்டேயிருக்கின்றோம்.

 

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

அந்த அருள் ஒளி என்ற துடுப்பை எடுத்து அந்த அலைகளை எல்லாம் பிளந்து இந்த வாழ்க்கை என்ற பயணத்தைச் சீராகச் செலுத்திடல் வேண்டும். நம்முடைய எல்லை “அந்தத் துருவ நட்சத்திரம் தான்…!”

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வளர வேண்டும் என்றால் அடுத்து நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும். இது வேகா நிலை.

அகஸ்தியன் ஐந்து வயதிற்குள் பெற்ற ஆற்றல்கள்

தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு இயற்கையின் பேருண்மைகளை அறியும் சந்தர்ப்பம் பெற்றவன் தான் அகஸ்தியன். பல கோடித் தாவர இனங்களுக்குள் இருக்கும் சக்திகளைத் தன் ஐந்து வயதிற்குள்ளேயே காணும் சந்தர்ப்பம் பெறுகின்றான். கடவுளின் அவதாரம் என்றே அக்கால மக்கள் அவனைப் போற்றுகின்றார்கள். அணுவினை அறியும் ஆற்றல் பெற்றதால் அகஸ்தியன் என்று காரணப் பெயர் பெற்றான். அவன் பெற்ற ஆற்றல்களைத் தான் சந்தர்ப்பவசத்தால் வியாசகரும் வான்மீகியும் பெற்று அவர்களும் ஞானியாக ஆனார்கள். 

 

நாம் செய்ய வேண்டிய தவம் 

உறுப்புகளுக்கு-வலுவான-சக்தியை-கொடுக்கும்-தியானம்

அரசு நடத்துகின்றவர்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை 

TAMIL SIDDHAS

பொருளை ஈட்டும் நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி வளர்ந்து வரும் மருத்துவ விஞ்ஞானத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் வரக்கூடிய வியாதிகள் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

கை கால் உணர்விழந்து வாதப்பிடிப்பு நோய்கள் எப்படி வருகின்றன…?

1.கோப உணர்வை வளரவிட்டுப் படபடக்கும் உணர்வுடன்
2.சலிப்பு சோம்பல் என்ற சங்கடத்துடன் கோப உணர்வின் அலையை மீண்டும் மீண்டும் எடுத்து அதனை அடக்கி
3.தன் சந்தோஷ உணர்வைக் கூட்டிக் கொள்ள உந்தலை அடக்கி
4.மற்றொரு உணர்வின் ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி
5.கோபத்தினால் வரக்கூடிய விளைவுகளைக் கண்டு அஞ்சி
6.சந்தோஷத்தால் மாற்றியமைக்க முடியும் என்ற தன் எண்ணத்தை மாற்றியமைத்து
7.இன்பம் என்று எதனைச் செயல்படுத்த எண்ணுகின்றானோ
8.இவ்விரண்டு அலைகளும் இவன் உணர்ந்து எண்ணும் எண்ணத்தால் சுவாசமுடன் மோதுண்டு
9.சத்ரு மித்ரு நிலையாகி நரம்புகளின் இயக்கத் தன்மை குறைவாகி உணர்வின் ஈர்ப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டு
10.சிறு மூளை பெருமூளை நரம்புகள் சரிவர இரத்த ஓட்டங்கள் ஓடப் பெறாமல் சில அடைப்புகளாகி
11.அதனால் வரும் வியாதிகள் தானப்பா இந்த வாத நோய்கள் எல்லாம்.

தோல்களில் ஏற்படும் சர்ம வியாதிகள் எப்படி வருகின்றன…? கட்டிகளும் சில புண்களும் எப்படி வருகின்றன…? உடலில் உள்ள பாக்கித் தன்மை எல்லாம் சரி வர இருந்தாலும் சர்மங்களில் ஏற்படும் ஒரு சில வியாதிகள் எப்படி வருகின்றன…?

உடலில் உள்ள சிறு உறுப்பிற்கும் நகம் முதற் கொண்டு ரோமங்கள் வரை ஜீவ சக்தி இருந்தால் தான் சீராக வளர்கின்றது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்குகந்த அமில ஈர்ப்பை அந்தந்த உறுப்புகளே தனக்குகந்த ஆகாரத்தைத்தான் எடுத்து வளர்கின்றது.

நகத்தின் அமிலமும் பற்கள் ரோமம் எலும்பு சதை எல்லாமே அதனதன் குண அமில ஆகாரத்தைத் தன் ஈர்ப்பின் சுவாசத்தால் எடுத்துத் தான் வாழ்கின்றன.

இப்படி வாழும் நிலையில் சர்மங்களில் அந்தந்த இடங்களின் ஈர்ப்பு ஜீவ சக்தி பாதிக்கும் பொழுது அதற்குகந்த துடிப்பு உணர்வை எடுக்காத முறையில் ஏற்படுவது தான் உடலில் ஏற்படும் சில கொப்பளங்களும் நகங்களின் வெடிப்புத் தன்மையும்.

ஈறுகளில் ஏற்படும் விஷ அணுக்களின் தாக்குதலினால் பற்களில் வியாதியும் சில அமில பாதிப்பால் ரோம (தலை முடி) வளர்ச்சி குன்றி உதிர்வதும் ஏற்படுகின்றன.

மனித எண்ண உணர்வு நிலைக்கொப்ப வியாதிகள் வரும் பொழுது இன்றைய விஞ்ஞானத்தால் சில செயற்கை முறை கொண்ட மருத்துவத்தால் பல சாதனைகளைச் செய்கிறார்கள்.

டி,பி வியாதிக்கெல்லாம் அந்த வியாதிக் கிருமியை அழிக்க அதற்கு மேல் சக்தி கொண்ட சில மருந்துகளைச் செலுத்தி இவ்விஷ விரிய சக்தி உடலைப் பாதிக்காமல் இருக்க அதற்கு மாற்று மருந்தையும் அதனுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.

1.உள்ள வியாதியை மற்றொரு சக்தியினால் அதனை மாற்றி…
2.மாற்றக்கூடிய அச்சக்திக்கு அதன் வீரிய குண படர்ப்பு உடலைப் பாதிக்காமல் இருக்க
3.மற்றொரு மருந்தையும் தந்து தான் விஞ்ஞான மருத்துவம் இன்றுள்ளது.

புற்று நோய்க்கெல்லாம் உறுப்புகளில் எந்தெந்தப் பாகத்தில் அதிகமாகத் தாக்கப்பட்டு அதனை ஆரம்ப காலத்தில் கண்டுணரும் முறை கொண்டு அந்தந்த உறுப்புகளை நீக்கி விடுகின்றனர்.

அதாவது உயிர் வாழக்கூடிய நிலை இருந்தால் கருப்பை மார்பகங்கள் குடல்கள் இவற்றின் நிலையில் புற்று நோய் தாக்கப்பட்ட இடங்களை நீக்கிச் செயல் கொள்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

நீக்கிவிட்டு உயிர் வாழ முடியாத பாகமாக இருந்தால் அத்தகைய தாக்குண்ட இடங்களில் உள்ள புற்று வியாதியை கதிரியக்கம் கொண்டு மின் அலையினால் அந்தந்தப் பாகங்களைச் செயலிழக்கச் செய்து செயல் கொள்ள வைக்கின்றார்கள்.

1.மின் அலையின் சாதனத்தால் உடல் மண்டல நரம்புகள் அனைத்தும் செயல் கொள்ளும் முறைகளையும்
2.உடல் உறுப்பின் உள் நிலைகளைக் காணக்கூடிய சாதனைகளையும் (X RAY, SCAN) இன்றைய விஞ்ஞானம் செய்கிறது.

இன்னும் பல விநோதக் கருவிகளை உருவாக்கி அதன் மூலம் உடல் முழுவதையுமே ஆராய்ந்து உயிர் காக்கும் செயல் ரூபம் அனைத்துமே
1.இன்று பொருளை ஈட்டும் வழியில் தான்…
2.விஞ்ஞான மருத்துவத்தில் வளர்ந்து கொண்டுள்ளதே தவிர
3.உணர்வின் எண்ணம் கொண்டு
4.நாம் எடுக்கும் சுவாசத்திற்கு வலுத் தந்து வளர்க்கும்
5.உன்னத சக்தியின் அலையை ஈர்ப்பார் யாரும் இல்லை…!

உடலில் தசைகளில் உருவான நோய்களை அகற்றினாலும் எண்ணத்தின் உணர்வால் உருவான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது.

Narad muni rishi

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்

 

இப்போது ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வைப் பார்க்கின்றோம்.
1.அவன் மீது இரக்கப்படுகின்றோம்… பாசமாக இருக்கின்றோம்.
2.உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அழுகின்றோம்
3.அப்பொழுது அந்த வேதனை நமக்குள் உருவாகிறது.

ஆனால் அந்த நேரத்தில் ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து கொண்டால் நாரதன். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகரப்படும்போது இங்கே நாரதன் கலகப்பிரியன் ஆகின்றான்.

நாரதன் என்ன செய்கின்றான்…?

1.அவன் மேல் நீ பாசம் வைத்து இருக்கின்றாய்
2.அதற்கு மாறாக நீ இந்த நிலையில் நீ நட…
3.அவன் நலமாக வேண்டும்… உடல் நலமாக வேண்டும் என்று நம்மை எண்ணச் சொல்கின்றான்…!

அப்பொழுது அவனுக்கு வேதனைப்படும் அந்த எண்ணம் வருகின்றதா…? ஆக அந்த நல்ல எண்ணம் வருவதற்காக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற வேண்டும் என்று இங்கே சொல்லியிருந்தான்.

ஏனென்றால் பிடிவாதமாக நாம் என்ன சொல்கிறோம்…?
1.இவ்வளவு கஷ்டப்படுகின்றான்… நான் எப்படிப் பேசாமல் இருக்கின்றது…!
2.அது எப்படி அழுகாமல் இருக்கின்றது…
3.நான் வேதனைப்படாமல் எப்படி இருப்பது…? என்கிறோம்.

ஆனால் அந்த நாரதனோ கலகப்பிரியன். கலகமோ நன்மையில் முடியும்.
1.அந்த உணர்வின் தீமையை நீ நுகராதே…
2.அந்த அருள் ஒளி பெற வேண்டும்…
3.அவன் நலம் பெற வேண்டும்… என்ற உணர்வினை நீ சொல்லு என்று அவன் சொல்லப்படும் பொழுது
4.இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்வாக நுகரப்படும்போது அந்த உயர்ந்த எண்ணங்கள் வருகின்றது.

விஷ்ணுவிடத்தில் (உயிர்) அதைச் சொல்லப்படும்போது அதை அவன் என்ன செய்கின்றான்…? உருவாக்குகின்றான். அவன் வரம் கொடுத்து விடுகின்றான்.

வரம் கொடுத்த பின் உடலுக்குள் செல்லும் போது பிரம்மமாகின்றது. பிரம்மமாகும்போது இந்த உடலான சிவனுக்குள் எப்படி ஐக்கியமாகின்றது என்ற நிலையைத் தான் இங்கே தெளிவாக கொடுக்கின்றார்கள்.

ஆனால் இதனுடைய விளக்கத்தை எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லை. நாம் புரிந்து கொள்வதற்கும் வழியில்லை.

இன்றைய வழக்கத்தில் என்ன சொல்கிறோம்…?
1.ஒருத்தருக்கொருத்தர் நீ “நாரதர் வேலை பார்க்கின்றாய்…!” என்று தான் சொல்கின்றோம்.
2.அங்கே போய் மூட்டிவிடுகின்றான்… இங்கே கோள் மூட்டிவிடுகின்றான்… இப்படிச் செய்கின்றான்…! என்று சொல்லுவோம்.

நாரதனை நாம் அசுத்தப்படுத்துகின்றோம். ஏனென்றால் நாரதன் என்பது யார்…? அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள். அதை நாம் எடுத்துக் கொள்ளும்போது இந்தப் பகைமை என்ற உணர்வு வராதபடி தடுக்கின்றது.

ரிஷியின் மகன் நாரதன். நாராயணனின் அபிமான புத்திரன். உயிரான விஷ்ணுவிடம் வருகின்றான்… இதே உணர்ச்சிகள்… உருவாகும் பிரம்மனிடம் வருகின்றான்… இங்கே ஈஸ்வரனுடன் வருகின்றான்.

சித்திரபுத்திரன் – கண் கொண்டு பார்த்த உணர்வின் தன்மையை அங்கே வந்து நாரதன் என்ன செய்கின்றான்…? உருவாக்குகின்ற சித்திர புத்திரனிடம் சென்று நீ இந்தக் கணக்கை மாற்றிவிடு…! என்று சொல்கிறான்.
1.தீமையான உணர்வின் தன்மைகளை இங்கே தடுத்து நிறுத்தும்போது
2.அந்தக் கணக்கு அதாவது தீமையின் நிலை வளர்வது ஒன்று குறைகின்றது.

இதைப்போல உணர்ச்சிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் சென்று உடலுக்குள் இருக்கும் இந்திரலோகத்தைச் சீராக அமைக்கின்றான். ஏனென்றால்…
1.நம் உடலுக்குள் அது புகுந்து
2.ஒவ்வொரு உணர்விலும் இந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்குத்தான்
2.நாரதன் சிவனிடம் போகின்றான்… பிரம்மனிடம் செல்கின்றான்…
3.இந்திரலோகத்திற்குச் செல்கின்றான்… இந்திரனிடம் சொல்கின்றான்…
4.ஒவ்வொருவரிடத்திலும் சென்று இப்படி அந்தத் தீமையான உணர்வுகளை மாற்றியமைக்கும் சக்தி கொண்டு
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் தீமைகளை அகற்றி
6.எப்படித் தீமைகள் புகாது பாதுகாக்கின்றது…? என்ற அந்த நிலையைத் தான் இங்கே இப்படித் தெளிவாக்குகின்றனர்.

சூரியன் (காந்த சக்திகள்) இந்த உலகில் எதை எதைக் கவருகின்றதோ அதன் அறிவாக செடி கொடியோ மிருகங்களோ மற்ற உணர்வுகளோ அதற்கெல்லாம் அதே இனச் சத்தைக் கொடுத்து அவன் நாராயணனாக இயக்குகின்றான்.

ஆனால் தனித்தன்மை கொண்ட உணர்வுகள் நஞ்சினை வென்று உணர்வின் தன்மை உருவாக்கியது
1.ரிஷியின் மகன் நாரதன்… தீமைகளை அகற்றக்கூடிய வல்லமை பெற்றவன்
2.சூரியன் அந்தச் சக்திகளைக் கவர்ந்து கொண்டால் நாராயணனின் அபிமானப் புத்திரனாகிறது
3.அதை நுகர்வோர் அவர்தம் வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி
4.அந்த மனித உடலுக்குள் ஒளி என்ற உணர்வை ஊட்டும் சக்தி பெற்றவன் நாரதன்…! என்பதைத் தான்
5.இப்படியெல்லாம் காவியங்கள் மூலம் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது,

அதை நாம் புரிந்து கொண்டோமா…? என்றால் இல்லை…!

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை நாம் பெறுவோம் என்றால் அது பேரொளியாக நம்மை மாற்றும்.
1.நம் உயிரின் துணை கொண்டு
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்வுகளிலும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
4.நான் துருவ தியானத்தில் காலையில் உட்கார்ந்தேன்…! என்று சொல்லி அந்தப் பெருமிதம் கொள்ளக் கூடாது
5.நம் வாழ்க்கையையே தியானம் ஆக்க வேண்டும்.

நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அதைத் தியானித்து நம் உடலுக்குள் பெருக்குதல் வேண்டும்.

தீமைகள் நமது உடலுக்குள் புகாது தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்…! துருவ நட்சத்திரத்தின் ஒளி நமக்குள் பெருகி அதனின் சேமிப்பாக நம் உயிரான்மா ஒளியாக மாறும்.

ஞானக் குழந்தைகளை உருவாக்கும் வழி

குடும்பத்தில் பல தரித்திரங்கள் இருந்தாலும் கர்ப்பமான அந்தத் தாய் அந்தச் சிரமங்களிலிருந்தெல்லாம் முழுமையாக விடுபட வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் தாய் நுகரும் அத்தகைய அருள் சக்திகள் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகி அவனின் வளர்ச்சியில் பெரிய ஞானியாகவே உருவாவான். குடும்பத்தையும் செழிப்பாக்குவான்.. தாய் தந்தையருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பான்.

 

தியானமிருக்கும் போது பாம்பின் காட்சிகள் ஏன் கிடைக்கிறது…?

உள் நின்று இயக்கும் இயக்கத்தைச் சொல்லி “உங்களை நீங்கள் நம்புங்கள்…” என்று சொன்னாலும் எத்தனை பேர் தன்னை (உயிரை) நம்புகிறார்கள்…?

துருவ நட்சத்திர-தியானத்தின்-முக்கியத்துவம்

இரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் தியானப் பயிற்சி

natural meditation

மருந்து என்பது நோயை நீக்கவா… அல்லது உடலுக்கு அது உணவா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய வியாதியின் தன்மை கொண்ட குணநிலை ஒத்துத்தான் இருக்கும்.
1.குண நிலைக்கு ஒத்த வியாதி தான் மனிதனுக்கு வருகின்றது.
2.மனிதனுக்குத் தான் பலவிதமான புதுப்புது வியாதிகள் வளர்ந்து கொண்டே உள்ளன
3.மற்ற மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் அந்த அளவுக்கு இல்லை
4.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியாதிகள்.

தாவரங்களுக்கு ஒன்றை ஒத்த நிலையில் தான் அதனதன் வியாதி அணுப்பூச்சிகள் அவைகளைத் தாக்குகின்றன. மிருகங்களின் நிலையிலே மனித நிலைக்கு முற்றிலும் மாறு கொண்ட நிலையுள்ளது.

மிருகத்தின் உணர்வின் எண்ணம் ஒலியின் ஈர்ப்பைக் கொண்டு பழக்கப்பட்ட ஒன்றின் செயலில் செல்வதனால் ஏறக்குறைய தாவரங்களின் நிலைக்கொத்த
1.பருவக் காலங்களில் தாக்கக்கூடிய விஷ அணுக்களின் நோய்த் தன்மை
2.ஒன்றுக்கொன்று தொடர் கொண்ட “ஒட்டும் நிலையில்”
3.ஒன்றை ஒத்த வியாதியில் தான் மிருக இனம் தாக்கப்படுகின்றது.

மனிதனுக்கும் சில காலகட்டத்தில் சீதோஷ்ண நிலைக்கொப்பவும் பூமி இழுத்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் வெக்கைக்குகந்த நிலை கொண்டு அந்தந்தக் காலங்களில் வளரக்கூடிய விஷக்கிருமிகளின் நிலையினாலும் காற்றிலும் நீரிலும் தொக்கியுள்ள விஷக் கிருமியினால் சில நோய்கள் வருகின்றன.

ஜுரம் வாந்தி பேதி கண்களைக் தாக்ககூடிய சில நோய்க் கிருமிகளும் கால நிலையில் இயற்கைக்கொப்ப ஒன்றின் தொடர் கொண்டு ஒருவரைப் படர்ந்த நிலையில் ஒன்றைப் போல் பலருக்கும் (தொற்று நோய்) சில வியாதிகள் தாக்கப்படுவதுண்டு.

கால நிலைகள் மாறி… இயற்கையின் மாற்றத்தால்…
1.அவ்வணுக்களின் ஈர்ப்பு குண விஷங்களும் மாறும் தருவாயில்
2.விஷக் காய்ச்சல்கள் தொற்றிப் பலருக்கு ஒரே சமயத்தில் இந்த வியாதி வந்தாலும்
3.இவ்விஷக் கிருமியினால் தாக்கக்கூடிய வியாதிகள் தொடர் கொண்டு வளராமல்
4.சிறிது காலத்தில் அதன் குணம் மாறிவிடுகின்றது.

ஆனால்… “உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு ஏற்படும் வியாதிகள்…!” அவரவர்களின் எண்ண நிலைக்கொப்ப உடலின் அணுவின் அணுவாக ஒன்றி வளர்ந்து இந்த உடல் அழியும் வரை அதன் குணப்பிடிப்பிலேயே தான் மனிதன் சிக்கி அந்த நோயினாலேயே மாளுகின்றான்.

அம்மை வியாதிகள் மலேரியா டைபாய்டு வாந்தி பேதி போன்றும் இன்னும் புதிய புதிய விஷத் தன்மை கொண்ட வியாதிகளும் அந்தந்தக் காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண நிலைக்கொப்பப் படரக்கூடிய விஷத் தன்மையின் பாதிப்பு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தைப் போலவே அந்தப் பாதிப்பின் தன்மை வருகிறது.

இந்தப் பூமியின் ஈர்ப்பில் வெளிப்படும் உஷ்ணத்தின் விஷ அணுக்கள் இந்தப் பூமியில் வாழும் ஜீவ ஜெந்துக்களின் நிலையிலும் அதன் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடன் ஒன்றிய ஜீவன்களுக்கும் சாடுகின்றது.

அவ்வலையின் விஷத்தின் தாக்குதல்… காற்றலையில் கிருமிகளாகப் படர்ந்துள்ள அந்த நிலையில்
1.தன் சுவாசத்தில் ஈர்ப்புடன் எடுப்பவர்க்கெல்லாம்
2.குறிப்பிட்ட காலத்தில் ஒரே தன்மை கொண்ட வியாதி தான் பலரைத் தாக்கும்.

அதன் பின் கால நிலையில் அதன் சக்தியின் வலுக் குன்றி மாற்றமும் கொண்டு விடுகின்றது.

இத்தன்மையான தாக்குதல்…
1.நீருடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட
2.உணர்வின் துடிப்பு கொண்ட எவரையும் தாக்கத்தான் செய்யும்.

தன் சக்தியையே தெய்வ சக்தியாக்கிச் சப்தரிஷியின் நிலையில் ஜீவன் கொண்டு உள்ளவனாக இருந்தாலும்… “கால நிலையின் மாற்றத்தில் ஏற்படும் சில விஷ அணுக் கிருமிகளின் தாக்குதல்…” சுவாசமுடனும்… நீருடனும்… தாக்கத்தான் செய்யும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது…!

பூமியின் நிலையுடன் கூடிய கால மாற்றமாகும் பொழுது இவ்வணுவின் தன்மையும் மாறிவிடும். இவை இயற்கையின் உண்மையுடன் உருண்டுள்ள செயல் தொடர்பான குண நிலைகள் தாம்.

தாவரங்கள்… மிருகம்.. மனிதன்…! என்று இனம் பார்த்துத் தாக்காமல்
1.காற்றுடன் கலந்துள்ள நச்சுத் தன்மையின் செயல் வடிவங்கள் உண்டு
2.இதன் நிலையை மாற்றவோ அழிக்கவோ தப்பவோ முடியாதப்பா..!

ஏனென்றால் அதற்காக வேண்டி இயற்கைக்கு மாறாக நாம் சென்று செயற்கை வழியில் விஷமான மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது மற்ற நல்ல உறுப்புகளின் சீரான இயக்கத்தை அது பாதித்து விடுகிறது.

மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக மருந்தே வாழ்க்கையாகி விடுகிறது… மருந்தையே உணவாக உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றோம்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நல்லது.

om om om

நம் உடல் உறுப்புகள் கெட்டு உடல் எப்படி நலிவடைகிறது…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

மனிதனின் வாழ்க்கையில் நாம் சுவாசிக்கும் சாந்த உணர்வின் இசை வேறு. ஆனால் அதே சமயத்தில் கார உணர்ச்சியின் இசை வேறு.

பாதாம் இருக்கின்றதென்றால் அதைப் பாலிலும் மற்றதிலும் போட்டுச் சுவையாகச் சாப்பிடுகின்றோம். ஆனால் அதிலே விஷம் பட்டால் என்ன செய்கின்றது…?
1.அதனின் உணர்ச்சிகள் மாறி அதனுடைய சுருதி மாறுகின்றது,
2.அதைச் சாப்பிட்டால் நம்மைச் சோர்வடையச் செய்கின்றது… மயங்கச் செய்கிறது.
3.அதே பாதாமிலே தனிக் காரத்தை இணைத்தால் “ஸ்ஸ்… ஆஆ…!” என்று அலறும் உணர்வின் தன்மை வருகின்றது.

இதைப் போல தான் சாந்த உணர்வு கொண்டு நாம் இருந்தாலும் கார உணர்ச்சிகள் இதற்குள் பட்டுவிட்டால் இந்தக் கார உணர்வின் தன்மை நம்மை இயக்குகிறது…!

அதாவது
1.கணங்களுக்கு அதிபதியாகி சாந்த குணத்தை அடக்கி
2.கார உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.
3.அது தான் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று சொல்வது.

இதை உணர்த்துவதற்காக வேண்டித்தான் விநாயகருக்கு ஒரு பக்கம் எலியைக் காட்டினார்கள்..! எலி என்ன செய்கிறது..?

அது தரையிலே வங்கிட்டுக் குடிகொள்கின்றது. இதைப்போல சாந்த உணர்வு கொண்டு இருக்கும் பொழுது கார உணர்வின் தன்மையை இதற்குள் சேர்த்த பின் இது அந்தச் சாந்தத்திற்குள் ஊடுருவி அதற்குள் வங்கிட்டுக் கார உணர்வாகக் குடி கொள்கின்றது.
1.அதுதான் ஓமுக்குள் ஓ…ம்
2.இந்தப் பிரணவத்தையே மாற்றுகின்றது
3.அதனுடைய இயக்கச் சக்தியையே மாற்றுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா..!

உதாரணமாக ஒரு குளவி ஒரு சாந்தமான புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டுகிறது. அதைத் தூக்கிக் கொண்டு வந்து தன் உமிழ் நீரால் மண்ணால் கட்டிய கூட்டுக்குள் வைத்து அடைக்கின்றது.

குளவியின் விஷம் புழுவின் உடல் முழுவதும் பாய்ந்து உடல் சருகாகி விடுகின்றது. ஆனாலும் புழுவின் உயிரும் உடலுக்குள் விளைந்த அணுக்களும் கூட்டுக்குள் அடைப்பட்டு விடுகின்றது.

அதே சமயத்தில் குளவி அந்தக் கூட்டின் மேல் உணர்வின் ஒலி அலைகளை ரீங்காரமிட்டுப் பரப்புகின்றது. விஷத்தால் தாக்கும்போது எந்த உணர்ச்சி இருந்ததோ இந்த ஒலி அலைகள் தாக்கப்படும்போது சூரியன் ஒளிக் கதிர்கள் வரும்போது கூட்டுக்குள் அப்படியே வரும்.

இந்த இரைச்சல் வரும்போது புழுவின் நினைவுகள் அனைத்தும் இந்த குளவியின் பால் வரும்.
1.அப்பொழுது அந்தக் குளவி எந்த உணர்வுகளை எடுத்ததோ
2.அதனின் உணர்வின் தன்மைகளை கூட்டின் வழியாக இந்தப் புழு ஈர்க்கும் சக்தி வருகின்றது
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு புழு உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்துமே அந்தக் குளவியின் ரூபமாக ஆகின்றது.

குளவியின் ரூபம் ஆனபின் குளவிக்கு எப்படி அந்த உமிழ் நீர் ஊறியதோ இதைப்போல அந்த அணுக்கள் அனைத்தும் உமிழ் நீர் கூட தொடங்குகிறது. அந்த உமிழ் நீரைப் பாய்ச்சி குளவியால் அடைக்கப்பட்ட (மண் கூட்டை) கதவைத் திறந்து வெளி வருகின்றது.

வெளி வந்தபின் தாய்க் குளவி எப்படி அது தான் வளர்ந்ததோ தன் இனத்தை வளர்த்ததோ அதே உணர்வு கொண்டு அது இயக்குகின்றது. இதெல்லாம் இயற்கையின் நியதிகள்…!

இதைப் போல தான் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளின் இயக்கங்களும்…!

நாம் நல்ல குணங்கள் கொண்டு பார்க்கும்போது சந்தர்ப்பவசத்தால் கோப உணர்வின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டி
1.நல்ல உணர்வின் அணுக்களை இந்தக் கார உணர்ச்சிகள் மாற்றி
2.”ஓமுக்குள் ஓ…ம்…” என்று உணர்வினை மாற்றி இந்த (உடலின்) ரூபத்தை மாற்றுகின்றது.

நல்ல உணர்வுகளைச் சுவாசித்து நல்ல அணுக்களாக இருக்கும்பொழுது நம் உறுப்புகளை அது சீராக்கியது. ஆனால் அதே சமயத்தில் மாறுபட்ட குணங்களைச் சுவாசிக்கும் பொழுது
1.அதனால் அணுக்களுக்குள் மாற்றங்களாகி
2.அதனால் ஏற்பட்ட உறுப்புகளை மாற்றமடையச் செய்து
3.உறுப்புகள் சுருங்குவதும் அல்லது வீக்கமடைவதும் போன்ற செயலாக்கங்களை உருவாக்கும் தன்மை வருகின்றது.

இதெல்லாம் இயற்கையின் நியதிகள். ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.

இயற்கையில் நுகர்ந்த உணர்வின் தன்மையால் உணர்வின் செயல்கள் எப்படி மாற்றுகின்றது… உடலுக்குள் எப்படி மாற்றங்கள் ஆகிறது…? என்பதனை நாம் தெளிவாக தெரிந்து கொள்வதற்குத்தான் நமது சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றது.

உலக ரீதியிலேயே மற்றவர்கள் அந்த மகான் இப்படிச் செய்தார்… இன்னது செய்தார்..! என்றெல்லாம் கூடச் சொல்லலாம். ஆனால் நமது சாஸ்திரங்கள்…
1.இயற்கை எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் அறிந்து கொள்ள
2.அது ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து
3.மனிதனானபின் இத்தகைய தீமைகளில் இருந்து விடுபட மெய் ஞானிகள் இப்படிச் செயல்படுத்தினர்.

அந்தப் பேருண்மைகளைத் தான் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்

குரு அருளும் அகஸ்தியன் அருளும் இங்கே பரவி உள்ளது. அதை நுகர்ந்து உங்களுக்குள் திரு அருளாக மாற்றுங்கள்.

 

சூரியனின் அழிவு எப்படி ஏற்படுகிறது… அழியக் காரணம் என்ன…?

இன்றைய உலக மக்களின் நிலைகளும் உலக மாற்றங்களும் 

2004க்கு மேல் வரும் விஷத் தன்மைகளிலிருந்து தப்பும் வழி 

polaris agastyar

காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாகி மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது

இனி நாளைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. 2004க்கு மேல் செல்லும் பொழுது இயற்கையே நம்மை அழித்துவிடும்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் தான் வாழ செயற்கைக்கு மாற்றி… கடும் விஷத் தன்மைகளைக் கொண்டு வந்ததால் மனிதனுடைய நல்ல குணங்களையே சீர்குலைக்கும் தன்மையாக இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தான்…!
1.ஆனால் இந்த நாடு ஒன்று தப்பும்…
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று
3.அந்த அகஸ்தியன் பிறந்த நாட்டில் தான் இங்கே மீண்டும் முளைக்கின்றது.

அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனின் உணர்வைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

1.விஜய தசமி… நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்தது
2.தசமி பத்தாவது (ஒளியாக) நிலை அடையக் கூடிய மனித உடல்.
3.உயிர் உடல் பெற்று மனிதனாகும் பொழுது மகாசிவன் இராத்திரி என்று
4.இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்து ஞானிகள் அவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அந்த ஞானிகள் கொடுத்ததை மதிக்கின்றோமா..? அரச வழியைப் பின்பற்றி தவறுகளைச் செய்யத் தான்… இந்த உடலுக்காகத்தான்… இச்சைப்படுகின்றோம்.

சாகாக்கலை என்ற நிலையில்… “அரசன் தான் எப்பொழுதும் வாழ முடியும்…!” என்ற நம்பிக்கையில் இருந்தான். அந்த ஆசையிலே கடும் பூதங்களாகி மற்றதை எத்தனை இம்சை செய்தானோ அத்தகைய அரசன் எவனும் இருந்ததில்லை.

அன்று ஆங்கிலேயர்கள் உலக நாடுகள் பலவற்றை அடக்கி மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தார்கள். இருந்தாலும் இன்று அவர்கள் நாட்டிலே அங்கே எத்தனையோ நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்…!

இதைப் போன்ற சாம்ராஜ்யங்களை ஆண்ட அரசர்கள் எல்லாம் எந்த நிலை ஆனார்கள்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அடக்கி ஆள வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் இருப்பினும் “எதை வைத்து… எதை அடக்க வேண்டும்…?”

தீமை செய்யும் நிலைகளைத் தான் நாம் அடக்க வேண்டும்.
1.அந்த அருள் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால்
2.தீமைகளை அடக்கி ஆட்சி புரியலாம்… அனைத்தையும் ஒளியாக மாற்றலாம்.

மனிதனின் வாழ்க்கையில் எது வலிமையோ அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கும்.

சாந்தமும் ஞானமும் விவேகமும் இன்று இருப்பினும் ஒரு கோபக்காரனைப் பார்த்தால் அந்த வலிமை நமக்குள் பயப்படும்படிச் செய்கிறது.

வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை நம்மை நடுங்கச் செய்கிறது… நம்மைச் சோர்வடையச் செய்கிறது. அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட “கார்த்திகேயா…” என்று எல்லாவற்றையும் மாற்றியமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உபதேசத்தின் வாயிலாக துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பாய்ச்சுகின்றோம்
2.கண்களால் ஏங்கிப் பெறச் செய்து உங்களுக்குள் நுகரச் செய்கின்றோம்
3.இப்படிப் பதிவாகும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் எளிதில் பெற்று உங்களைக் காத்திட முடியும்..
4.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்
5.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று என்றுமே அழியாத வாழ்க்கை வாழ முடியும்.

Meditation medication

சர்க்கரை இரத்தக் கொதிப்பு டி.பி. கேன்சர் போன்ற வியாதிகள் மனிதனுக்கு எப்படி வருகின்றன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எதனையும் மாற்றியமைக்கும் சக்தி மனிதனுக்குண்டு.

சர்க்கரை வியாதி மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது…? சர்க்கரை வியாதியின் குண நலன் என்ன…?

சிறு வயது முதற் கொண்டு ஒரு நிலையான வாழ்க்கை வாழ்ந்துள்ள நிலையில்
1.அதிகமான சந்தோஷங்கள் ஏற்பட்ட காலங்களில் – சந்தோஷ அலையின் சுழற்சி வாழ்க்கையில்
2.அதன் தொடர் அலையில் ஏற்படும் சலிப்பு குணம் உந்தப்படுபவனின்
3.உடல் அமிலத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாசத்தால்
4.சர்க்கரைச் சத்து என்ற அமிலச் சுரப்பி உடலுக்கு வேண்டிய இரத்தச் சக்தியிலிருந்து
5.அதிகமான சத்து நிலைகள் சிறுநீரில் கலந்து விடுகின்றன.

மருத்துவத்தில் சில நிலைகளை (INSULIN) இந்த உடலில் செலுத்தி மருந்துகளை அந்தந்தக் காலங்களுக்கு உணவுடனும் மருந்துடன் கொடுத்துச் சமப்படுத்தலாமே தவிர பூரண குணம் கிடைப்பதில்லை.

வியாதியில் சிக்குண்ட மனித ஆத்மாவானது “ஆத்ம தியானம்” என்ற குண நிலையைச் சமமான நிலைப்படுத்தி நற்குணங்களின் ஈர்ப்பில் தன் எண்ணத்தைச் செலுத்தித் தான் எடுக்கும் ஞானத்தால் மெய் ஞானிகளின் உயர் அலையின் தொடரை உடலிலே சுவாசிக்கும் தியானத்தை மேற் கொண்டால் எந்த வியாதியையும் மாற்றி அமைக்கலாம்.

1.தான் வாழ்ந்த எண்ணச் சுழற்சியில் இருந்து கொண்டே
2.உண்ணும் உணவாலும் மருந்தாலும் மட்டும் எந்த வியாதியையும்
3.எந்த மகான் வந்தாலும்…
4.அகிலத்தையே ஆட்டுவித்த ஆட்டுவிக்கும் ஆதிசக்தியின் தொடர்பிருந்தாலும் நலம் காண முடியாது…!
5.உணர்வின் எண்ணத்தைச் சமப்படுத்தும் செயல் எண்ணம் இருந்தால் தான்
6.மனித ஆத்மாவின் உடல் பிணியும் தீரும்… உயர் ஞானமும் வளருமப்பா…!

ஏனென்றால் உணர்வால் எடுக்கும் எண்ணத்தைக் கொண்ட வியாதிகள் தானப்பா இந்த மனித உடலில் ஏற்படும் எல்லா வியாதிகளும்.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது…?

உணர்வின் எண்ணத்தை கோபத்தின் அலையில் எடுக்கும் சுவாசம் கொண்டு கோபத்தின் தன்மையை அதே ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் எடுத்து அதை வெளிப்படுத்திக் கோப அலையில் வாழ்பவனுக்கு
1.இரத்த நாளங்களின் துடிப்பு நிலை அதிகமாகி
2.உஷ்ணமான கனம் கொண்ட ஈர்ப்பின் சுவாசத்தால்
3.உணர்வின் கொதிப்பே இரத்தக் கொதிப்பாகின்றது.

சஞ்சலம் கொண்ட சலிப்புக் குணத்தின் ஈர்ப்பின் உணர்வின் எண்ணச் சுவாசம் தான் புற்று நோய்க்கும் எலும்புருக்கி நோய்க்கும் வித்தப்பா…!

காமாலையும் உப்புச் சத்தும் எப்படிக் கூடுகின்றன…?

தன் உடலின் உறுப்புக்களின் சுரப்பி நிலைகளுக்கொப்ப அவன் செய்யும் வேலைகளும் அவ்வுடல் நிலையின் சக்திக்கு மேல் உடல் உழைப்பும் உறங்கும் கால நிலையும் மாற்றியமைக்கப்பட்டால் இத்தகைய வியாதிகள் வரும்.

ஏனென்றால் கடினமான உழைப்பால் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வையிலிருந்து உடலிலுள்ள அமில உப்புக்கள் வெளிப்பட்டு விடுகிறது.

அந்த நிலையில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த ஆகாரங்கள் உண்ணும் பொழுது அந்த உடலின் தன்மையில் அவை ஏற்கப்படாமல் நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது.

ஆக… இரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய சில அவயங்களில் இவன் உண்ணும் உணவால் உடலில் ஏற்கனவே இருந்த சத்துக்கள் வெளிப்பட்டவுடன்
1.இந்தக் கனமான கொழுப்பு நிலை கொண்ட ஆகாரங்கள்
2.செயல்படாத நிலையில் தான் இம்மாதிரி வியாதிகள் வருகின்றன.

கோபத்தைத் தன்னுள் அடக்கி அடக்கி… பிறர் மத்தியில் தன்னைச் சாந்தமானவனாகக் காட்டுபவனின் உணர்வின் எண்ணம் கொண்டவனுக்கு… குடல் புண்களும் (அல்சர்) சில மூல வியாதிகளும் வருகிறதப்பா…!

கோபத்தைக் கட்டுப்படுத்துவதாக… அவன் எண்ணம் வெளியில் தெரியாத இவனது குணத்தின் செயலை… உள் அடக்கிக் கொள்வதால் குடல் புண் நோய்கள் எல்லாம் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு வியாதியும் ஏற்படுவது இந்தத் தொடர்ச்சியில் தான்.

அதே சமயத்தில்…
1.இவ்வலைத் தொடர் கொண்ட ஆவிகளின் தொடர்ச்சியும்
2.பலவீனமான உணர்வுடன் நாம் எடுக்கும் சுவாசத்தால் பலவீனம் கொண்ட தொடர்பலையின் ஈர்ப்பும்
3.அந்தக் குணம் கொண்ட ஆவிகளின் தொடரும் நம்முள் எறிக் கொள்கின்றன.

நற்குணங்களின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் இந்தக் குணமுண்டு. நாம் எடுக்கும் எந்தத் தொடருக்கும் இந்தக் குணமுண்டு.

நல்லவையானாலும்… தீயவையானாலும்…
1.இந்தச் சுவாசத்தால் எடுக்கும் உணர்வின் எண்ணச் சுழற்சியில் தான் நாம் வாழ்கின்றோம்.
2.எண்ணத்தின் உணர்வின் குண நிலைக்கொப்ப ஈர்ப்புடனே நாம் சுழல்கிறோம்.

நம் சுவாச நிலையை ஞானிகளுடன் தொடர் கொண்டு உயர்வாக்கி விட்டால் இந்த வாழ்க்கையில் வரும் இடரினை அகற்றிடும் சக்தி பெற்று நோய் வராது தடுத்து அந்தச் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஐக்கியமாகலாம்.

உங்கள் வாக்கால் தீமைகள் போகும்

காட்டுக்குள் ஒரு கீரியும் பாம்பும் சண்டையிடுவதைக் குருநாதர் காட்டி கீரி.. பாம்பின் விஷத்தை எப்படி முறிக்கிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார். அதே சமயத்தில் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் பல கொடிய மிருகங்கள் மற்ற உயிரினங்களிடமிருந்து தப்ப பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதையும் காட்டினார். அகஸ்தியன் உணர்வை நீங்கள் பெற்றால் தீமைகளை அகற்றலாம்… நஞ்சினை வெல்லலாம்…! வென்ற அந்த உணர்வை நீங்கள் சொல்லாக வெளிப்படுத்தும் பொழுது அது மற்றவர்கள் தீமையைப் போக்கும் சக்தியாக மாறும். செய்து பாருங்கள்.

 

இயற்கை உரமும், விஞ்ஞானிகளால் செயற்கையாக உருவாக்கிய விஷ உரமும் 

கம்ப்யூட்டர் மூலம் கணக்கிடும் விஞ்ஞானமும் அன்றைய மெய்ஞானமும் 

மாற்று KIDNEY பொருத்தப்பட்டவர்களின் நிலையும் அதைச் சமப்படுத்தும் விஞ்ஞானி நிலையும் 

golden heart

“தங்கம் செய்யப் போகிறேன்” என்று ஆசை கொண்டவர்களின் கடைசி நிலைகள்…?

சாகாக் கலை என்றும் வேகா நிலை என்றும் இருந்தாலும் சாகாக் கலை தான் பெரிது..! என்பார்கள்.

ஏனென்றால் சாதாரணமாக நாடி சாஸ்திரம் பார்க்கின்றோம் என்றாலும் சரி… வைத்திய ரீதியில் பார்க்க வேண்டுமென்றாலும் சரி…
1.சாகாக்கலை தெரியுமா…?
2.காயக்கல்பம் செய்து இந்த உடலை அழியாமல் நாம் வைத்து கொள்ள வேண்டும் என்பார்கள்.

போகர் பன்னிரெண்டாயிரத்தை வைத்து வாதிப்பதற்கு நிறையப் பேர் வருவார்கள். ஆனால் போகர் பன்னிரெண்டாயிரம் போகர் எழுதியதா…?

போகருக்குப் பின்னாடி வந்தவன் எழுத்து வடிவு வந்த பின் அதன் தத்துவத்தை எடுத்து இந்த உணர்வின் தன்மையை நாடிகளை எழுதி வைத்தான்.

இதிலே போகன் வெளிப்படுத்திய உணர்வுகள் மற்ற உணர்வுகள் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேர்க்கப்படும்பொழுது தங்கம் எப்படி வரும் என்கிற நிலை உண்டு.

மனதை எப்படி தங்கமாக்க வேண்டும் என்று போகர் சொன்னார்.

ஆனால் போகர் பன்னிரெண்டாயிரத்தைப் படித்துக் கொண்டு புறத்திலே தங்கம் செய்வதிலே போய் கொண்டிருப்பார்கள். இருக்கின்ற சொத்தை எல்லாம் விட்டு ஆண்டியாகச் சுற்றிக் கொண்டு இருப்பார்கள் நிறையப் பேர்.

தங்கத்தைச் செய்தால் செல்வந்தராகலாம்…! என்ற ஆசை கொண்டு பேய் மனம் பிடித்து இன்றும் சுற்றுபவர்கள் நிறைய இருக்கின்றார்கள்.

சும்மா அதையும் இதையும் போட்டு பல மூலிகைகளையும் இலைகளைப் போட்டுப் பச்சையாகித் தங்கமாகி விட்டது என்றால் அடுத்தவரிடம் காண்பித்து
1.இந்த மாதிரி நிறையச் செய்தால் லாபம் கிடைக்கும் என்று
2.இவனும் போய்… அடுத்தவர்களையும் இழுத்துக் கொண்டு போய் கடைசியில் பணத்தை இழந்தது தான் மிச்சம்
3.இந்த மாதிரிச் செய்து கொண்டு போவார்கள்.

குருநாதர் ஒரு சமயம் என்னிடம் (ஞானகுரு) ஒரு இரும்புக் கரண்டியும் ஈயமும் எடுத்துக் கொண்டு வாடா…! என்றார். காட்டுக்குள்ளே கூட்டிக் கொண்டு போனார்.

பல குப்பைகளை எடுத்து வரச்சொல்லி எல்லாம் போட்டு வேக வைடா…! என்றார். அவர் சொன்ன இடத்தில் தேடித் தேடித் தேடி எடுக்க வேண்டும். இந்த குப்பையை எடு… அந்த குப்பையை எடு…! என்று எனக்கும் தெரியாமல் அவர் அதைச் செய்தார்.

அவர் என்னென்ன சொன்னாரோ எல்லாவற்றையும் நான் எடுத்துக் கொண்டு வந்தேன். இரும்புக் கரண்டியிலே போட்டு ஈயத்துடன் எரித்தவுடனே இந்த உணர்வுகள் பட்டவுடனே அந்த ஈயம் தங்கமாகிப் போய்விட்டது.

அதை எடுத்துக் கொண்டு போய் தங்க ஆசாரியிடம் கொடுத்து உறைத்துப் பார்ததவுடனே அவர் என்ன சொல்கிறார்…?

1.அடேங்கப்பா…! இந்தத் தங்கத்தில் கொஞ்சம் செம்பைச் சேர்த்தால் உயர்ந்த ரகம் என்று சொல்கிறார்.
2.நீ அந்தச் சாமியாருடன் (ஈஸ்வரபட்டருடன்) வீட்டை விட்டுச் சுற்றிக் கொண்டே இருப்பது இப்பொழுதுதான் தெரிகின்றது
3.எனக்கு நீ வேண்டியதை கொண்டுவாப்பா… நான் எல்லாம் விற்றுத் தருகின்றேன் என்கிறார்.

சரி என்று சொல்லிவிட்டு வந்தவுடன் அந்த ஆசை வருகின்றது. ஆசை யாரை விட்டது…? குருநாதர் செய்தார்… பார்த்தேன்… எனக்கும் ஆசை வருகின்றது.

குருநாதர் என்னென்ன சொன்னாரோ அதை மாதிரி நானாகவே ஈயக் கட்டியை எடுத்துக் கொண்டு வந்து போட்டேன்.. குப்பையைப் போட்டு எரித்தேன்… பார்த்தால் தங்கமாகி விட்டது.

தங்கமாகியவுடனே கொண்டு போய் விற்று விட்டு வந்தேன். வரப்போகும்போது குருநாதர் என்ன செய்தார்…?

இங்கே வாடா…! என்றார். என்னிடம் இருந்த காசை எல்லாம் பிடுங்கினார். இங்கே எத்தனை பிள்ளைகள் இருக்கின்றார்கள்…? அவர்களுக்கெல்லாம் இதைக் கொடு…! என்றார்

எல்லாவற்றையும் வாங்கிவிட்டார். எனக்கு ஒரு ரூபாய் கையில் கொடுத்தார்.

1.இனிமேல் இந்த வேலையைச் செய்யாதே…
2.நீ இதைத் தெரிந்து கொண்டாய் என்ற நிலையில் எதிலேயடா ஆசைப்படுகின்றாய்…?
3.உன் மனதைத் தான் தங்கமாக்கச் சொன்னேன்…!
4.உன் மனதைத் தங்கமாக்க வேண்டுமே தவிர… நீ தங்கத்துக்கு ஆசை பட்டால்
5.உன் மனம் பித்தளையாகப் போகும்… இரும்பாகப் போகும்…! துருப் பிடித்துவிடும்.
6.இனிமேல் இந்த வேலையைச் செய்யாதேடா…! என்றார் குருநாதர்.

ARTIFICIAL MEDICATION

மருத்துவ ரீதியில் உடல் கூறுகளை (அணுக்களை) ஆராயும் விஞ்ஞானத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஜீவ சக்தியுடன் கூடிய இந்த மனித உடலில் பல கோடி உயிரணுக்கள் உண்டு.

உடல் கூற்றை ஆராயும் மருத்துவ விஞ்ஞானிகள் மனிதனுக்கு ஏற்படும் வியாதியை அவன் உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்கள் மற்றும் எத்தனையோ நிலைகளில் உள்ள அணுக்களை ஆராய்ந்து காணுகின்றார்கள்.

அந்தந்த வியாதிக்குகந்த இரத்தத்தில் ஏற்படும் அணுத் தன்மையின் மாற்றத்தையும் எவ்வணுவின் நிலை உயர்ந்துள்ளதோ அவ்வுடலுக்குகந்த அணுத் தன்மையில் மனிதனின் வியாதிக்குகந்த மாற்றத்தையும் கண்டறிகின்றார்கள்.

1.நாம் “உணர்வின் குண அமிலம்” என்று உரைக்கின்றோம்.
2.அதையே விஞ்ஞான மருத்துவத்தில் “வைட்டமின்கள்” என்று உரைக்கின்றார்கள். (வைட்டமின் A B1 B2 B6 B12 C D K E)
3.இதுவல்லாமல் உடலில் உள்ள மாறு கொண்ட “விஷ அணுக்கள்” (VIRUS) உள்ளதையும் உணர்ந்து வெளிப்படுத்துகின்றார்கள்.

இந்நிலையில் சில அமிலங்களை அதில் செலுத்தி அணுக்களின் தன்மையை நுண்ணிய கருவிகளைக் கொண்டு கண்டுணர்ந்து
1.மனித உடலின் அணுக்களின் ஆராய்ச்சியின் விகித நிலைக்கொப்ப
2.மருத்துவ விஞ்ஞானம் மிக மிகத் துரித கதியில் முன்னேறி உள்ளது இன்று.

ஜீவன் பிரியக்கூடிய ஒரு மனிதனை மருத்துவ விஞ்ஞானத்தால் ஜீவிக்க வைக்கின்றான் மருத்துவன்.

ஆனால் மருத்துவ ரீதியிலும் விஞ்ஞான ரீதியிலும் நோய்க் கிருமிகளை ஆராய்ந்து அதற்குத் தகுந்த மாற்றுக் குணங்களை ஏற்றி அந்நோய்கள் பரவா நிலைக்காக
1.தன் செயலின் சக்தியையும்… பணத்தின் வலிமை கொண்டும்…
2.பல சாதனைகளை இயந்திரங்களின் நிலைக்கொப்ப
3.மனித உணர்வின் எண்ணங்களை விஞ்ஞான மருத்துவம் இழுத்துச் செல்கிறது.

ஆனால் இயற்கையின் குண அமில மாற்று நிலையை வழிப்படுத்தி
1.ஆத்ம தியானம் என்ற இயற்கையுடன் ஒன்றி
2.இயற்கைக் கோளமான மனிதக் கோளத்தின் வீரிய உயர் சக்தியின் ஞானத்தை
3.இயற்கை ஈர்ப்பின் குண அமிலத்துடன் ஒன்றச் செய்து
4.மண்டலங்களாக உருப்பெறும் இவ்வுடல் மண்டலங்களைச் செயலாக்கும் திறமைக்கு
5.இவ்வெண்ண ஈர்ப்பு உணர்வைச் செலுத்த முடியாதவர்களாகி விட்டனர்
6.இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள்.

இந்தப் பிம்ப ஜீவ மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் வாழ்கின்றது. சந்தர்ப்பத்தில் அதற்குள் பிணி ஏற்படுகிறது. அது எப்படி வந்தது…? என்று அறியும் நிலை இல்லை.

ஆக அந்த ஈர்ப்பிலேயே தொடர்ந்து செல்லும் நிலையில் அதே வியாதி நிலை சிக்குண்டு
1.அந்த ஆரம்ப வியாதி குணமாகாமல்…
2.அதன் சுழற்சியில் (குணமாகவில்லை என்ற வேதனையால்) உணர்வின் எண்ணத்தைக் கடினமாக்கிச் செலுத்தி
3.மேன்மேலும் அதன் ஈர்ப்பின் சுவாசத்தால் குறைவாக உள்ள இவ்வியாதியின் அணுவே
4.உடல் முழுமைக்கும் ஏற்றச் செய்து விடுகின்றனர்.

ஓர் நோயின் அணு பல அணுவையும் தன் குணத்தின் தொடரின் சுழற்சியினால் உடல் முழுவதற்கும் அந்த (அதன் குணச் செயல்) வியாதி தொற்றிக் கொண்டு விடுகிறது.

நோயாகி விட்டது… நோயாகி விட்டது… என்ற அதே சுழற்சி பயத்தினல்
1.அந்த உடலுக்குகந்த நல்ல அமிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டு
2.ஒன்றின் ஈர்ப்பு வியாதியுடன் ஒன்றி கடைசியில் பிரிவது தான் இஜ்ஜீவன்.

தியான விளக்கம் – குருவின் ஆசீர்வாதம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் படர்ந்து உலக ஞானம் பெற்று விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவிலிருந்து நீங்கள் மீள்வீரகள். அருள் உணர்வுகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் அருள் ஞானிகளாக நீங்கள் அனைவரும் வளர்வீர்கள். 

 

கணவனை இழந்தவர்கள் மாங்கல்யத்தைக் கழட்ட வேண்டுமா…?

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய ஆசீர்வாதம்

Velayudham

மனித குண அமிலத்தையே “முருக குண அமிலமாக” மாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உணர்வின் எண்ணத்தை “வழி அமைத்து… வழி செல்லுங்கள்…” என்று உணர்த்திய பின் நிலை என்ன…?

உணர்வுடன் கூடிய எண்ணத்தின் சுவாசத்தால் மனித எண்ணத்திற்குத் தன் உணர்வின் எண்ண நிலையை அறிந்து செயல்படுத்தக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப குண நிலையில் மாற்றமுண்டு.
1.தன் உணர்வின் எண்ணத்தைத் தன்னிச்சையில் செயல்படுத்தும்
2.தனக்குகந்த உணர்வு எண்ணத்தின் நிலையில் செல்ல மனிதனுக்கு முடியும்.

ஆனால் சில மிருகங்களின் நிலைக்கு உணர்வுடன் கூடிய எண்ணத்தைச் செயல்படுத்தி வழி கொள்ளும் திறமையில்லை.

அதனுடைய “ஒலி ஈர்ப்பு ஒன்றி…” சுவாசத்துடன் மோதுண்டவுடன் ஒன்றின் குண உணர்வுகொப்பத்தான் அதன் எண்ணத்தின் செயலைக் கொண்டு அதன் இன வர்க்கங்களும் ஒரே உணர்வு எண்ண ஓட்டமாக… ஒன்றுடன் சார்ந்தே… அதன் இன மிருகங்களின் நிலையும் ஒத்துச் செல்லும்.

1.பறவைகள் யானைகள் ஆடு மாடுகள் நீரில் வாழும் சில உயிரினங்கள் இவை எல்லாம்
2.ஒன்றின் ஈர்ப்பின் ஒலி அலை மோதுண்டு
3.அதன் உணர்வின் எண்ணத்தைக் கொள்ளும் நிலை கொண்டு
4.ஒன்றெடுத்த அலைத் தொடர்பு கொண்டே
5.அதன் இனக்கூட்ட வர்க்கங்களும் அதன் பின்னேயே செல்லும்.
6.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்… தன் உணவை நாடிச் செல்லும் ஒன்றின் தொடரிலேயே
7.ஒவ்வொன்றின் நிலையும் தொடர்ந்து செல்லும் “கூட்டமாக…!”

மனிதனிலிருந்து மாறு கொண்டு ஒரே நிலையான எண்ண வேட்கைக்குகந்த அமில குண இன ஈர்ப்பின் வளர்ப்புத்தான் மற்ற இனங்கள்.

ஆனால் மனிதன்…
1.ஞான சக்தியால் செயலாக்கும் செயல் திறன் உணர்வின் எண்ணம் கொண்டு
2.மனித குண அமிலத்தையே அசுர குணம் நீக்கி
3.முருகக் குணக் கலவை உணர்வுடன் கூடிய எண்ணத்தை எடுக்க முறைப்படுத்திக் கொண்டால்
4.மனித மகசூலின் வித்தாக நம் நிலை உயருமப்பா…!

இவ்வுணர்வின் எண்ணத்தை உணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன் உடல் பிம்ப ஜீவ சக்தியின் உயிருடனே உணர்வின் எண்ணத்தை ஞானத்தின் ஈர்ப்புக் குணமுடன் ஒன்றிய அலைத் தொடரின் செயல் நிலை இருந்தால்தான் “செயல்படுத்தும் செயலான ஆதிச் செயலுக்கே…” செயல் கூடுகின்றது.

ஆதி சக்தியின் சக்தி தான் அகிலத்தின் சக்தி. அண்டத்தையும் ஆதியையும் படைப்பவளும்… வளர்ப்பவளும்… மாற்றுபவளும்… அவளே…!

அப்படியிருக்க ஆதிமுதல்வன்… முதலாமவனே விநாயகனே… என்று விநாயகரை மூல முதல்வன் என்று “முதல் தெய்வம் விநாயகன்” என்று வணங்குகின்றோம்.

மூல முதல்வன் என்று சித்தர்கள் மூலமாகக் காட்டிய விநாயகனின் நாமத்தின் தெய்வ சக்தியென்ன..?

ஆதி சக்தியின் அமில சக்தியின் உருவாக… மூலவனாக… விநாயகனை
1.மனிதனின் உரு கரு வளரும் அமிலப் படைப்பின் உரு நிலையின் உருவிற்குத்தான் (மனித உடலை)
2.அந்த விநாயகரின் நாமத்தைச் சூட்டினார்கள்.

சித்தர்கள் உணர்த்திய ஒவ்வொரு செயலுக்கும் பொருள் உண்டு. ஆனால் காலப் போக்கில் உணர்ந்து வழிபடும் நிலை மாறிவிட்டது.

இன்றுள்ள கால நிலையில் உருண்டோடிய காலங்களுடன் நம் உணர்வின் எண்ணத்தை உருள விட்டு நம் சக்தியை அச்சுழற்சியிலேயே சுழன்று கொண்டுள்ளோம்.

ஆக… உண்மை எது என்று அறியும் நிலையை மாற்றி அறிந்துணரும் ஆக்கத்தின் வளர்ப்பு குணமுடன் இன்றுள்ள இக்கால நிலையில்
1.சமுதாயச் சுழற்சியில் சிக்குண்டு அதன் ஈர்ப்புடன் நம் சக்தியையும் கலக்க விட்டு
2.மிருக நிலையில் ஒன்றின் உணர்வின் எண்ணம் கொண்டு ஒன்றிச் செல்வதைப் போன்ற உணர்வுடன் நாம் சிக்காமல்
3.நம் உணர்வின் எண்ணத்தை உயர் ஞான அமிலமான
4.நற்குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல் குண உணர்வாக நாம் உயரல் வேண்டும்.

Mantra

தனுர் வேதம் என்றால் என்ன…? அது ஏதோ பெரிய வேதம் என்று நினைக்கின்றோம்…!

வேதியர்களுக்குத் தான் இந்த சக்தி உண்டு அவர்களுக்குத் தான் இது தெரியும் என்பார்கள். காரணம் அவர்கள் எல்லாம் பிரம்மாவின் வம்சத்தில் வந்தவர்களாம்…! அவர்கள் பிரம்மத்தை உருவாக்கக் கூடியவர்கள் என்பார்கள்.

தனுர் வேதம் என்றால் எதையுமே அடக்கி ஆட்சிபுரியக் கூடிய நிலைகள். மனித உடலில் பல உணர்வுகளைப் பாய்ச்சி இயக்குவது. நல்லது கெட்டது எல்லாம் இருக்கின்றது என்று உடலுக்குள் பாய்ச்சுவார்கள்.

ரிக்கியர்கள் என்றால் அந்த உடலின் அமைப்பைத் தெரிந்து கொண்டவர்கள். அந்தக் காலத்தில் எல்லாம் மந்திரங்ளைச் சொல்லி இசைகளை வாசிப்பார்கள். காது கொடுத்துக் கேட்பார்கள்…!

1.இந்த உடலின் தன்மை கொண்டு எது எது வேண்டும்..? என்கின்ற வகையில்
2.அசுர குணங்கள் கொண்ட மிருகங்களைச் சமைத்து இந்த உணவை இங்கு கொடுப்பார்கள்
3.சோமபானம் என்ற நிலைகளில் மதுவைக் கொடுத்து மயக்கச் செய்வார்கள்.
4.மந்திரத்தைச் சொல்வார்கள்… இந்த மந்திரத்தை சொன்னவுடனே இசை வாத்தியங்களை இசைப்பார்கள்
5.ஒவ்வொரு நிலைகளுக்கும் அதைச் சொல்லி புஷ்பங்களையும் மற்றதையும் போடுவார்கள்.
6.அப்பொழுதெல்லாம் இந்த இசையை வாசித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் அதைப் பதியச் செய்வார்கள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட பிறகு மதுவை நிறையக் கொடுப்பார்கள். நீங்கள் யாரும் இந்தத் தப்பைச் செய்து விடாதீர்கள். சில இதுகளை தெரிந்து கொள்வதற்காகச் சொல்ல வேண்டியிருக்கின்றது,
1.மந்திரத்தைக் கற்றுக் கொள்கின்றேன் என்று
2.தப்பான வழிக்கு நீங்கள் சென்று விடாதீர்கள்…!

அந்த மாதிரி இசைகளை வாசித்துத் தர்ப்பைப் புல்லை வைத்து இதை உள்ளே வைத்து எல்லாம் முடிந்து கடைசியில் நினைவு இல்லாமல் போனவுடனே அவனைக் கட்டிச் சில மந்திரங்களைச் சொல்லித் தீயில் போட்டு எரிக்கின்றார்கள்.

முதலிலே அந்த மந்திரத்தைச் சொன்னார்கள் அல்லவா…! அதைத் திருப்பி சொன்னவுடனே இறந்த உடலிலிருந்து ஆவியாகப் போகும்போது அந்த உணர்வை எடுத்து கொள்வார்கள்.

அதற்கென்ற பக்குவ நிலை பெற்று “ஏவல்” என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள். இப்படிச் செய்வதுதான் தனுர் வேதம் என்பது.

ஒரு மனிதனை வீழ்த்த வேண்டும் என்றால் இந்த உணர்வின் சொல்லாகச் சொன்னவுடனே உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடும்.

1.இது எல்லாம் இந்த தனுர் வேதத்தைச் சேர்ந்தது
2.தனுர் வேதம் என்றால் என்னவென்றே தெரியாமல் சில பேர் இருக்கின்றார்கள்
3.அது ஏதோ பெரிய வேதம் போல்…! என்று எண்ணுகின்றார்கள்.

ஆக அதர்வண வேதத்தின்படி ஒரு மனிதனை அடக்கி அவனை வீழ்த்தும் நிலைகள் இது. ஏனென்றால் வேதம் கற்றுக் கொண்டவனுக்கு இது தெரியாது.

இதுவெல்லாம் அதர்வண வேதத்தில் வரும். இப்பொழுது கோவிலில் நடக்கின்றது எல்லாம் அதர்வண வேதம் தான்.

நாம் நினைக்கின்றோம் கோவிலில் யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடுவோம் என்று…! யாகம் செய்பவருக்கு மாலை துண்டு எல்லாம் போட்டு தேங்காய் பழம் எல்லாம் வைத்து புதுத் துணி எல்லாம் கொடுத்து விடுவார்கள்.

மந்திரங்களைச் சொல்வார்… அதைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்டுக் கொண்டே இருப்போம். யாகத்தில் வாசனைப் பொருள் எல்லாம் போடுவார்கள். மந்திரத்தைக் காதில் கேட்டுகொண்டே இருப்போம். இதற்குப் பெயர் “வசியம்” என்று பொருள்.

1.சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள்… என்று நாம் நினைப்போம்.
2.ஆனால் நம்மை வசியப்படுத்துகின்றார்கள்…! என்று நமக்குத் தெரிவதில்லை.

நேற்றுவரை கல்லாக இருந்தது. இந்த உணர்வின் தன்மை பெற்றபிறகு சட்டங்களை வகுத்த பிறகு இந்தத் தெய்வத்திற்கு நீ இந்த மாதிரிச் செய்தாய் என்றால்
1.உனக்கு இன்னென்ன சக்திகள் கிடைக்கும்
2.உன் கஷ்டமெல்லாம் போய்விடும்..
3.உன் பாவம் எல்லாம் போய்விடும்…
4,அபிஷேகங்களைச் செய்… ஆராதனையைச் செய்…! என்பார்கள்.

இப்பொழுது தீயை உண்டாக்கி மனிதனை அதற்குள் போட்டால் அரஸ்ட் செய்துவிடுவார்கள். ஆனால் அன்று அரச காலங்களில் இதையெல்லாம் செய்வார்கள். நீங்கள் பார்க்கலாம்…. மகாலிங்கத்தில் கூட 12 வருடத்திற்கு ஒரு தடவை சிலதுகளைச் செய்கின்றார்கள்.

குழந்தைகளை ஊர்வலமாகத் தூக்கி வந்து அதைப் பலியிட்டு இதைப் போல் சக்தி ஏற்றுவார்கள்… மாடசாமி முனிசாமி என்ற காவல் தெய்வங்களுக்கெல்லாம். இதையெல்லாம் எடுத்துக் கொண்டோம் என்றால் பெயரை மாற்றிக் கொண்டு கண்டுபிடிக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள்.

கோயில்களில் எந்த வாத்தியங்களை வாசிக்கின்றார்களோ அந்தந்த நேரத்தில் எதைச் செய்தார்களோ… எதை வாசித்தானோ… அந்த நிலைகளை இழுத்து
1.அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டினால்
2.நாம் அருளாட ஆரம்பித்துவிடுவோம்.

காளி… மாரி… மாடசாமி… முனிசாமி.. என்று கொடூர தெய்வங்களுக்கு டும்…டும்ம்ம்…ம்ம்ம்…! என்று இசைகளை உண்டாக்கி மாமிசத்தை கொடுத்துப் படைப்பார்கள்.

ஆடை வெட்டும்போது டும்…டும்… என்றால் நம்மை அறியாமல் அருளாட ஆரம்பித்துவிடுவோம்.
1.அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
2.டும்…டும்ம்…டும்ம்ம்..! என்றவுடன் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்து விடுவார்கள்
3.ஏனென்றால் இந்த இசை மனித உடலுக்குள் போனபின் அதே உணர்ச்சிகள் ஆனபின்
4.எதனால் உருவாக்கினானோ இதே உணர்வுகள் இங்கு ஆட்டிப் படைக்கின்றது.

ஏனென்றால் குருநாதர் இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்கச் செய்தார். நாம் இதிலே எல்லாம் சிக்கியிருக்கின்றோம்… நம் நிலையை மறந்து இருக்கின்றோம்…!

கோவிலில் அடுத்ததாக என்ன செய்வார்கள்…?

மேலே கலசத்தை வைக்கும் பொழுது பார்க்க வேண்டும். பறந்து போய் அந்தச் சக்தியைப் பெறப் போகின்றோம் என்று தன்னை அறியாமல் ஆணா பெண்ணா…! என்று கூடப் பார்க்காமல் மோதிக் கொண்டு தான் ஆசிர்வாதம் வாங்கச் செல்வோம்.

1.அதே மாதிரி கலசத்தை எடுத்துக் கொண்டு போகும்போது பார்க்க வேண்டுமே…!
2.அந்த ஆவேசத்தை வசியம் செய்து விடுவார்கள்
3.இதைத்தான் நாம் பெறுவதற்கு போகின்றோம்.

யாகத் தீயைத் தூக்கிக் கொண்டு போகின்றோம் என்று தலையில் இரண்டு பூவைப் போடுவார்கள். நிற்க வைத்துப் பூக்களை யாகத் தீயில் போடுவார்கள். இன்று சாங்கியமாக இப்படிச் செய்கின்றார்கள். இது சாங்கிய சாஸ்திரம்.

அப்புறம் என்ன செய்வார்கள்…?

முன்னால் அந்த பலி பீடம் இருக்கின்றது. வந்து நின்று நூலைக் கட்டிச் சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள். இதை கற்றுக் கொள்வதற்காக மடாதிபதிகள் இருக்கின்றார்கள் நிறையப் பேர்.

வேதங்களைக் கற்றுக் கொண்டு யாகம் எப்படி வளர்க்கின்றது… பாவங்கள் எப்படிச் செய்வது…? என்று இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

அரச காலங்களில் இப்படி எல்லாம் தவறுகள் செய்து யாரோ செய்வார்… எவரோ செய்வார்..! என்று நம்மைச் சூனியமாக்கி வைத்திருக்கின்றார்கள்.

நீ வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை…
1.யாகத்தைச் செய்தால் பாவங்கள் போய்விடும்
2.அர்ச்சனை செய்தால் பாவம் போய்விடும்
3.இதையெல்லாம் நீ செய் என்ற நிலையில்
4.உண்மையின் இயக்கத்தின் நிலையை நாம் எடுக்க முடியாமல் தடைப்படுத்திவிட்டார்கள்.
5..உண்மைகள் மறந்தே போய்விட்டது… மறந்துவிட்டோம் பொய்யைத் தெய்வம் என்று எண்ணிவிட்டோம்.

ஆனால் யாகங்கள் வேள்விகள் எல்லாம் செய்த பிற்பாடு பார்த்தால் கோவிலில் கூட்டம் நிறையப் போகும். அந்தப் பக்தியில் நாம் போவோம்.

தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…! என்று வேதனைப்பட்டுச் சொல்வார்கள். கஷ்டத்தைத் தாங்க முடியவில்லை… என்னை நீ உன்னிடம் கூட்டிக் கொண்டு போ…! என்றெல்லாம் சிலர் சொல்லுவார்கள்.

துன்பம் தாங்கமுடியாமல் இவ்வாறு சொல்வார்கள்.

செத்த பிற்பாடு என்ன இதே பக்தியில் போவார்கள். அந்த உணர்வின் வேகத்தில் இந்த ஆன்மா அங்கே போய்ச் சேர்ந்து பின் ஆட ஆரம்பித்துவிடும். ஆவியின் தன்மை தான் நமக்குள் வரும்.

1.இதைத்தான் நாம் இயக்கிக் கொண்டு இருக்கின்றோமே தவிர
2.மனிதனைத் தெய்வமாக்கும் ஆலயங்களை நாம் மதித்து நடக்க தெரியாத நிலையில் வைத்து விட்டார்கள்…!

அகஸ்தியனை உயர்வாக எண்ணித் தியானித்தால் அவன் மூச்சலைகளைப் பெற முடியும்

அக்கால ஞானிகள் பெரும்பகுதி சொல் வடிவில் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தாது மௌனமாக இருந்து மூச்சலைகளாக வெளிப்படுத்தி உள்ளார்கள். அகஸ்தியர் அவ்வாறு வெளிப்படுத்திய அந்த ஆற்றல்களை எல்லாம் நாம் பெறுதல் வேண்டும்… பெற முடியும். நம் குழந்தைகளை அப்படி உருவாக்க முடியும்.

 

நாம் இயங்கவில்லை நுகரும் உணர்வுதான் நம்மை இயக்குகிறது – மங்களூர் அனுபவம் 

நாம் நுகரும் உணர்வுகளால் வரும் தீமைகள் 

பதிவாகும் உணர்வின் இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் 

human gems

எல்லாமே போகும்போது நாமிருந்து என்ன பயன்…? என்றில்லாமல் மனித ஞான மகசூலாக உருவாக வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொல்கிறது.

ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.

காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.

இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.

வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.

சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.

ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.

இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.

அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.

எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!

விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?

அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.

1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.

இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!

Agastyar

சிவன் அகஸ்தியனைத் தெற்கில் போ…! என்று சொல்லிப் பூமியைச் சமப்படுத்தச் சொல்கிறார் – விளக்கம்

யுதர்கள் ஆதாம் ஏவாள் என்ற நிலைகளைச் சொல்கின்றார்கள். ஆதாம் என்றால் பூமி… ஏவாள் என்றால் இயக்கம்…!

ஆண் பெண் என்று இங்கு பூமியிலே ஆதியில் தோன்றினார்கள். ஆண் பெண் ஆன பின் விஷத் தன்மை இருக்கும் பக்கம் போக வேண்டாம்..! என்று ஆண்டவன் கூறினார்.

ஆனால் அந்த விஷத்தை உறிந்த பின் அதற்குத் தண்டனையாக பாம்புகளாகப் பிறந்தார்கள்… அதுவாகப் பிறந்தார்கள்…! என்று அவன் சொல்கின்றான்.

ஏனென்றால் இதே தத்துவத்தை இங்கே நம் நாட்டிலே அன்றே சொன்னார்கள். சக்தி சிவமாகின்றது என்று…!

ஆதியிலே ஒரு சமயம் அகஸ்தியன் வாழ்ந்து வளர்ந்த காலங்களில் பூமியின் தன்மை முட்டை வடிவில் வருகின்றது… எப்படி…? அதாவது பனிப்பாறைகள் அங்கே உறையப்படும்பொழுது அது பூமி திரும்பும் தன்மை வருகின்றது எடை கூடும்போது…!

அப்பொழுதுதான் தெற்கில் போ…! என்று அகஸ்தியனை போகச் சொன்னதாகக் காவியங்கள் உண்டு.

அந்த உணர்வுக்கொப்ப சூரியனை எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உறைந்த பனிப்பாறைகளைக் கரையும்படி செய்கின்றான்… அகஸ்தியன். ஏனென்றால் அந்த உணர்வின் வலிமையை அவன் பெற்றதனால் அவ்வாறு மாற்றிச் சமநிலைப்படுத்தினான்.

அதற்கு அப்புறம் இப்பொழுது விஞ்ஞானி வந்துவிட்டான்.

ஒரு பக்கத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்தான் என்றால் அதனால் புகை மண்டலங்கள் பெருகினால் மேலே ஈர்க்கக் கூடிய தன்மை எல்லாம் போய்விடும். இப்போது உறைபனி அதிகமானால் டபக்… என்று பூமி திரும்பிவிடும்.

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு முட்டை வடிவில் வந்த பூமியை அது திரும்பாதபடி சமப்படுத்தி வைத்தான்… இன்றளவும் சீராக ஓடிக் கொண்டுள்ளது.

அதை நமக்குப் புரியச் செய்வதற்காக சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என்று குட்டி கதையாகப் போட்டு விளக்குகின்றார்கள்.

சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகின்றது. அதனால் கூட்டங்கள் அங்கே நிறையச் சேர்ந்துவிடும்.
1.அதை நீ சமப்படுத்தத் தெற்கே போ… என்று
2.சிவன் அகஸ்தியனுக்குக் கட்டளையிட்டான்
3.அகஸ்தியன் அவ்வாறு போனான்…!

சிவனும் பார்வதியும் என்றால் பூம சுழலும் போது துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்குவதை எடுத்து அது வழியாக பூமியாகின்றது.
1.அதனால்தான் பார்வதி பஜே
2.இந்த உணர்வின் சக்தி எதுவாகுதோ அதன் வழி இயக்குகின்றது.
3.ஆகவேதான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்
4.சக்திகள் வந்து உறைந்து உடலாகும்போது இரண்டும் இணைந்து பூமியாகின்றது என்பதைக் காட்டுவதற்காக
5.இப்படி ஒரு சாஸ்திரத்தை தெளிவாகக் கூறுகின்றார்.

நீ தெற்கில் போ…! என்று வரும்போது தெற்கில் தான் வெப்பத்தின் தன்மை அதிகம். அப்போது அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் எடுத்து அதைச் சமப்படுத்துவதற்காக திசைத் திருப்புகின்றான்.

அப்போது திசை திருப்பும்போது இதன் உணர்வுகள் மாறி எடையற்ற நிலைகளும் இது சேர்க்கப்படும்போது சமநிலை வருகின்றது.

இப்படி அகஸ்தியன் மாற்றியமைத்தான்…! என்ற நிலைகளைச் சாஸ்திரங்கள் மறைமுகமாக மனிதன் அறிந்து கொள்வதற்குத் தெளிவான நிலைகள் கூறுகின்றது.

அன்று அகஸ்தியன் சமப்படுத்திய உணர்வுகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது. அவனுக்குள் விளைந்த பேராற்றல்களும் இங்கே பரவி உள்ளது.

நான் (ஞானகுரு) மட்டும் இதைக் கண்டுணர்ந்து சொல்கிறேன் என்று இல்லை. இதையெல்லாம் நீங்களும் தெரிய முடியும்… தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்தால் தான் இந்த நாட்டில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத் தன்மையை மாற்ற முடியும். ஏனென்றால் அகஸ்தியனின் தத்துவங்கள் காலத்தால் மறைந்துவிட்டது.

இந்தச் சூரியனும் அழியும் தருணம் வந்துவிட்டது. ஆனால் சூரியன் அழிவதற்கு முன் இந்த உயிரினங்களின் மாற்றங்கள் அதிகரிக்கும்.

நாம் மனித இனமாக இன்று நல்ல நிலையில் இருக்கும்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று சேர வேண்டும்.

ஏனென்றால் இனம் இனத்தை வளர்க்கும்…!

1.குருநாதர் அந்த உயர்ந்த உணர்வை பெற்றார்
2.இந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் பதிவு செய்தார்.
3.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யும் போது
4.அருள் என்ற உணர்வை சேர்க்கப்படும்போது இது பெருங்கூட்டமாக மாறுகின்றது…!

அருளைத் தேடினால் செல்வம் நம்மைத் தேடி வரும்

நாம் எவ்வளவு பெரிய உடலாக இருந்தாலும் வேதனையின் உணர்வுகள் அதிகமாகி விட்டால் அந்தச் சக்தி வேதனையின் உணர்ச்சி கொண்டு நம்மை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லும். உயர்ந்ததை உருவாக்க வேண்டும் என்ற உணர்வினை அந்தப் பெண்பாலின் சக்தியைக் கூட்டினால் அந்த உயர்ந்த உணர்வினை வளர்க்கும் சக்தியைப் பெறுகின்றோம். நல்ல குணங்கள் இருந்தால்… நல்ல பண்புகள் இருந்தால்… செல்வம் இல்லை என்றாலும் அந்த அருள் செல்வத்தை வைத்து நாம் வேண்டும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலை  வருகிறது. செல்வத்தின் அழியாத் தன்மையும் செல்வத்தில் மகிழ்ந்து வாழும் நிலையையும் கூட்டும்.

ஞானிகள் உணர்வைக் கவர்வதற்கும் சாதாரண மனிதன் உணர்வைக் கவர்வதற்கும் உள்ள வித்தியாசம்

CIRCUS செய்பவர்களின் உடல் எலும்புகள் எப்படி வளைந்து கொடுக்கின்றது…?

எதை நுகர்கின்றோமோ அதை வைத்துத்தான் உயிர் நம்மை இயக்குகிறது ஆள்கிறது 

Almighty and human

மனித உடல் பிம்பத்திற்குண்டான உண்மையான ஆற்றல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தன் உணவைத் தான் எடுக்கப் போகன் செய்த செயல் முறைதான் “முருகா” என்ற சிலை.
1.ஒவ்வொரு சக்திக்கும் (அது) எந்தச் சக்தியாக இருந்தாலும்
2.தன் சக்தி வளர உணவு தேவை.

உணவை எடுக்க அவரவர்கள் உணர்த்திய முறை கொண்டு தான் போகனால் சீனாவில் பல மருத்துவங்களையும் வெடி குண்டுகளையும் முகம்மது நபியின் உடலை எடுத்து முஸ்லீம் நாடுகளில் தன் உணர்வைப் பதித்து உணர்வின் எண்ணமுடன் தன் உணவை எடுத்தார்.

இப்படித் தான் வளர தனக்குகந்த வளர்ச்சியில் ஆகாரமாகப் பல நிலைகளை உணர்வின் எண்ணமுடன் பதியச் செய்த முறை கொண்டு தான் அன்றிலிருந்து இன்று வரை பக்தி முறை தொடர் கொண்டுள்ளது.

பக்தியின் உண்மையான உணர்வின் எண்ணத்திற்கு அவர்களின் சக்தியைக் கொண்டு பக்திக்குகந்த பலனை அளித்துத் தனக்கு உணவை எடுக்கின்றார்.

கவிதைகளையும் பல காவியங்களையும் எழுத்தில் பதியச் செய்து பல சித்தர்கள் அதைப் படிப்பவர்களின் எண்ண உணர்வைத் தனக்குகந்த உணவாக எடுக்கின்றனர் “இன்றும்…!”

அன்றெழுதிய இராமாயணம் கீதை பைபிள் குரான் இவை எல்லாம் காலப் போக்கில் உருக்கள் மாறினாலும் அன்றெழுதிய உணர்வின் சக்தித் தொடரில் படிப்பவருக்கும்… எண்ணுபவர்க்கும்… அவ்வுணர்வின் சுழற்சியைக் கொண்டு…
1.இன்றளவும் அதனை எழுதியவருக்கு உணர்வின் எண்ணத்திற்கு
2.அவர்களுக்கு உணவு கிடைத்துக் கொண்டேயுள்ளது.

இந்தப் பூமியில் பல கோடிச் சித்தர்கள் பல உணர்வுகளில் இருந்தாலும் அவரவர்களின் வளர்ச்சிக் குணத்திற்கு உகந்தபடி எல்லாம் தன் எண்ண உணர்வை என்றும் அழியாத் தொடரிலும் சில சொல் ரூப மந்திரங்களிலும் பதியச் செய்துள்ளான் அந்தச் சித்தன்.

ஐயப்பனை எண்ணும் பொழுது ஒரு கோஷம். முருகனை எண்ணும் பொழுது வேறு ஒரு கோஷம். இப்படி இயேசு கிறிஸ்துவுக்கும் முகம்மது நபிக்கும் புத்தருக்கும் கொங்கணவருக்கும் அவர்கள் பதிய வைத்த இக்கோஷத்தால் இன்றளவும் தன் உணர்வுக்குகந்த உணவை எடுத்து தான் வாழ்ந்து… வளர்ந்து… பலவற்றையும் வாழ வைத்திருக்கின்றார்கள் “சக்தி கொண்ட சக்திகளை…!”

உணவில்லாமல் எதுவுமே வளர்வதில்லை…!

பிம்ப உடல் கொண்ட ஜீவத் துடிப்பு உருவங்களுக்குத் திடமான உணவு தேவை. ஆனால்
1.பிம்ப உடல் கொண்ட திட உணவை உட்கொள்ளும் இந்த மனித சக்தியில் இருந்து தான்
2.உணர்வின் எண்ண உணவையும் உட்கொள்ளும் சக்தி நிலை வளர்கின்றது.

தாவரங்கள் நீரையும் சில எருக்களையும் உணவாக உட்கொண்டாலும் உணர்வுடன் கூடிய எண்ண உணவெடுக்கும் முறை மனித ஞானத்திற்குத்தான் உண்டு. மனித ஞான உணர்வின் உயர் சக்தியில் ஊன்றியுள்ள உண்மைதனை உணரல் வேண்டும்.

மனித நிலையிலிருந்து மாறி மிருக நிலையிலும் மற்ற பட்சிகளின் புழு பூச்சிகளின் நிலையிலும் உணர்வின் எண்ண ஞான உணவெடுக்கச் சக்தியில்லை.

1.ஞானத்தின் உணவை எடுத்துச் சித்தன் என்ற செயலாகிச் சப்தரிஷியின் செயலாக்கி
2.ஆதி சக்தியின் சக்திக்கே துணை சக்தி கொள்ளும்
3.வடிவெடுக்கும் உருவங்கள் தானப்பா… இந்த மனித பிம்ப உடல்…!

பல கோடி ஆண்டுகளாகவே நற்சக்தியின் விதைகள் விதைக்கப்பட்டுப் பலனை எடுத்து மீண்டும் மீண்டும் பலன் கொண்டு தான் எடுத்த உயர் ஞானத்தைக் கொண்டு பல ஞானங்களின் உணவு எடுத்துக் கருவாகி உருவாகி தனியோரு மண்டலமாக உருவாகிச் சுழன்று கொண்டேயுள்ள சக்தியில் முதல் எது… கடைசி எது…?

demise of our sun

நம் சூரியன் முதுமை அடைந்து கொண்டிருக்கின்றது…

சூரியன் தன் சக்தியை இழந்தால் அது மீண்டும் கரைந்து விடும். மனிதர்களாக நாம் உருவாகி வாழ்ந்து மடிந்த பின் புதைத்தால் இந்த உணர்வின் தன்மை கரைந்து விடுகிறது. நம் உடல் மற்றொன்றுக்கு இரையாகின்றது.

இதைப் போன்று தான் சூரியக் குடும்பம் இருக்கிறது என்றால் இந்த 27 நட்சத்திரங்களும் சூரியக் குடும்பங்களாக மாறுகின்றது,
1.கார்த்திகை நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது…
2.ரேவதி நட்சத்திரமும் சூரியனாக மாறுகின்றது.
3.இந்த இரண்டு மட்டுமல்ல மற்ற நட்சத்திரங்களும் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
4.முழுமையாக மாறி விட்டால் நம் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது.

அப்பொழுது நம் சூரியன் முதுமை அடைகின்றது, இப்படி ஒரு சரி பகுதி நட்சத்திரங்கள் சூரியக் குடும்பங்களாக மாறிவிட்டால் நம் சூரியனுக்கு இரை இல்லை.

அப்பொழுது இந்தச் சூரியனின் சுழற்சியின் தன்மை அதனின் ஈர்ப்பு வட்டம் குறையும். அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் நம் பூமியோ அந்தச் சுழலான சுழற்சியான பின் அதற்குள் போய்க் கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.

மற்ற இந்த 27 நட்சத்திரங்கள் இருக்கிறதல்லவா…! இதிலே ஒவ்வொன்றும் மாறிப் போகும் இதனுடைய உணர்வுகள்… அதற்கு உடலாகி இதனின் உணர்வின் தன்மை மாறும்.

இப்படித்தான் 2000 (நட்சத்திரங்கள்) சூரியக் குடும்பங்கள் ஓர் குடும்பமாக மாறுகிறது. நம் பிரபஞ்சத்தில் இந்த 27 நட்சத்திரங்களும் 27 சூரியனாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது… பேரண்டமாகின்றது.

இதன் வளர்ச்சி இதே போல் மாறி மாறித் தான் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளர்ந்தது.

1.நான் வெறுமனே சொல்லவில்லை…
2.படிக்காதவன் தான் இதைச் சொல்கிறேன்…
3.படித்திருந்தால் இதை எல்லாம் தப்பாகத் தான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கின்றேன்.

குருநாதர் கொடுத்த உணர்வின் தன்மை வரும் பொழுது நீங்களும் இதைப் பதிவாக்கி
1.இந்த உண்மைகளை நுகர்ந்து அண்டத்தையும் அறியலாம்
2.அதை இந்தப் பிண்டத்திற்குள் வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடையவும் செய்யலாம்.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானிகளை உருவாக்கும் வழி

கர்ப்பமான ஒவ்வொரு தாயும் சரி… அந்தக் குடும்பத்தில் உள்ளோரும் சரி… கருவில் வளரும் அந்தச் சிசு மெய் ஞானியாக வளர வேண்டும் என்று அதிகாலை ஒரு பத்து நிமிடமாவது அகஸ்தியரை எண்ணித் தியானமிருங்கள். அப்படி உருவாகும் குழந்தை விடும் அகஸ்தியனின் மூச்சால் இந்தப் பூமியைக் காக்க முடியும். குருநாதர் என்னை எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தாரோ அதைப் போல உங்களையும் இணைக்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

 

நரம்பியல்களில் இருக்கும் அமிலத்தின் இயக்கங்கள் மாறும் நிலைகள் (Oil brake, wire brake) 

கண்களைப் (கண்ணனை) பரமாத்மா என்று ஏன் சொல்கிறோம் 

power of Eswarapattar

சித்து நிலையை எப்படிப் பெறுவது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

படைப்பின் படைப்பனைத்திற்குமே ஒவ்வொன்றிற்கும் அதன் படைப்புக் குணம்… மணம் உண்டு. கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மணமுண்டு.

மணமில்லா உரு நிலை எதுவுமே பெறுவதில்லை.

நம் பூமிக்கு மட்டுமல்ல… பால்வெளி மண்டலத்திலும்… நட்சத்திர மண்டலங்களிலும்… வளர்ந்த பெரிய மண்டலங்கள் எதுவானாலும்… அதன் ஆரம்ப நிலை அமில ஈர்ப்பு ஜீவத் துடிப்பு மணமுடன் ஒலியாகி ஒளியாகி நீராகும் செயல் தான் கொள்கின்றது.

மணம் கொண்ட வழியிலேயே உணர்வும் பெறுகின்றது. மணத்துடன் கூடிய உணர்வால் தான் உணவையே உட்கொள்ள முடிகின்றது.

இந்நிலையை எதற்காக இங்கே உணர்த்துகின்றேன்…?

1.உன் ஜெப நிலையால் உன் உணர்வின் எண்ணத்தை
2.என் பால் (ஈஸ்வரபட்டர்) செலுத்தி எம் அலையின் தொடரை நீ பெற்றால்
3.உன் உணர்வின் உணவாக எம் அலை பாயும்.

ஒரு பருப்பில் பல பருப்புகள் விளைகின்றன. அதைப் போல்
1.எம் உணர்வை நீ எடுத்து
2.உன் உணர்விற்கு உணவாக ஊட்டம் கொடுத்து உன் வளர்ச்சியை நீ பெற்றால்
3.உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை விலகி
4.அனைத்தையும் காணும் “அபூர்வ சக்தியாக” ஞான சக்தியின் சித்து நிலை பெற முடியும்.

பருப்பு பருப்பாகவே இருந்தால் பல பருப்பைக் காண முடியுமா…? பயிர் செய்து பலன் பெற்று பலனின் பயிர் வளர் தொடர்பில்தான்… பருப்பென்ற பருப்பு குணப் பயிர் வளர்ப்பே வளர்ந்து கொண்டேயிருக்குமேயன்றி பயிர் செய்யாமல் பயிர் வளர் தொடர் எதுவும் காண முடியாது.

1.ஒன்றின் தொடர் ஒன்று வளர்கின்றது
2.ஒன்று என்றென்றும் வளர தன் வளர்ப்பிற்கு உணவு தேவை.
3.அதைப் போன்று நாங்கள் (மகரிஷிகள்) வளர உன்னை வளர்க்கின்றோம்.
4.நீ வளர நீயும் வளர்க்க வேண்டும் பிறரை…!

வளர்ப்பின் தொடர் வளர்ப்பு வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் எந்த ஒரு வளர்ச்சியும் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

பயிர் வளர்ப்பு மட்டுமல்ல….
ஜீவித வளர்ப்பு மட்டுமல்ல…
மண்டலங்களின் வளர்ப்பு மட்டுமல்ல…
ஞானிகளின் வளர்ப்பு மட்டுமல்ல…
அவ்வாதி சக்தியின் படைப்பின் சக்திக்கே… படைப்பின் படைப்பாகி பலவற்றின் படைப்பின் தொடர் படைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

வழித் தொடர் வெள்ளாமை ஒவ்வொன்றிலும் வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் அவ்வளர்ச்சியின் செயல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.முற்றுப் பெற்று… முக்தி பெற்று… முடிவடையும் சக்தி எதுவுமே இல்லை.
2.முழு முதலாக வளர்வது தான் ஆதியின் அந்தச் சக்தி.

உடல் வளர உணவு தேவை. உணர்வின் எண்ணம் வளர ஞானத்தின் உணவு தேவை. உணர்வின் எண்ணத்தை ஞானம் என்ற உணவை உட்கொண்டு இவ்வுடல் என்ற பிம்ப ஜீவ சக்தி கொண்ட வடிவின் அணுவின் உயிரணுக்களுக்கு ஞானத்தை உணவாகக் கொடுத்து
1.ஞானத்தால் வளர்த்த உடல் அணுக்களைச் சித்து நிலை பெற்றிடவே
2.ஞானம் என்ற உணர்வெடுத்துச் “சித்தன்” என்று உருவாகுங்கள்.

இப்பொழுது புரிகிறதா போகன் அமைத்த முருகனின் சிலை எதற்கு என்று…?

தன் நிலை உயர தன் உணர்வு வளர முருகனைப் படைத்தான் போகன். முருகன் சிலையைப் படைத்து முருகா… என்ற நாத உணர்வு ஜீவ சக்தியை உணவாக உட்கொள்கின்றான் இன்றும் போகன்.

1.ஒவ்வொரு சித்தனும் இந்த ஞான பூமியில் தன் ஞானத்தை வளர்த்துக் கொள்ள
2.தன் வளர்ப்பின் வளர்ப்பு வளர வழிப்படுத்திய உண்மைகள் பல உண்டு.

போகரின் வழித் தொடர் முருகன் முருகனின் உருவத்தை காட்டி உணர்வின் எண்ண ஜீவ உணவை உட்கொள்கின்றான் போகன்.

முருகன் ஆலயம் செல்லும் பக்தர்களில் உணர்வால் உண்மை பக்தி பூண்ட ஆயிரம் பக்தர்கள் சென்றால்…
1.ஆயிரத்தில் ஒன்றிரண்டு பக்திமான்களாவது
2.ஞானத்தின் சக்தி பெறச் செல்வதுண்டல்லவா…!

தன் உணவாக நல் மணிகளைத் தான் உண்டு பல மணிகளைத் தருகின்றான் போகன்.

Vedic Eswarapattar

நட்சத்திரங்களின் இயக்கங்களை உள் உணர்வில் உணர்த்தும் விதமாக “அந்த லயன்… இந்த லயன் (LINE)…!” என்பார் குருநாதர்

நம் குருநாதர் அவர் ரிக் வேதத்தைத் தெளிவாகத் தலைகீழாகப் பாடுவார். வேதங்கள் என்றால் என்ன…? என்பதை தெளிவாகச் சொன்னார். அவரும் பிராமணர் தான்.

இதை எனக்குத் (ஞானகுரு) தெரியப்படுத்துவதற்காக ஒரு நாள் குருநாதர் என்ன செய்தார்…?

ரிக் வேதத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு வாத்தியார் நாங்கள் இருக்கும் தெருப் பக்கமாக நடந்து வந்தார்.

வந்தவுடனே… இங்கே வாடா…! என்று கொச்சையான வார்த்தையால் அவரைத் திட்டி அப்படியே குடுமியைப் பிடித்துத் தூக்கினார் குருநாதர்.

அடுத்து… ஏண்டா இப்படித் தப்பு செய்தாய்…? என்று ஓங்கி ஒரு அறை கொடுக்கின்றார்…! அந்த ஆள் முழிக்கின்றார். அவர் முழித்தவுடனே…
1.அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாய் அல்லவா…?
2.அது எப்படி என்று இப்பொழுது திருப்பிச் சொல்லு… என்கிறார் குருநாதர்.

வாத்தியார் பெ…பே…! பெ… பே…! என்கின்றார்.

சொல்லத் தெரியவில்லை என்றதும்… குருநாதரே சொல்கின்றார்
1.அப்படியே சொல்லித் தலைகீழாக கட…கட..வென்று மறுபடியும் மேலே ஏற்றுகிறார்.
2.ஒரு சொல் கூட… அந்த நாதம்… சுருதி மாறாமலே பாடியவுடனே
3.அந்த வாத்தியார் திரு…திரு…திரு… என்று முழிக்கின்றார்.

ஆனால் எனக்கு இது எல்லாம் ஒன்றும் தெரியாது. என்னமோ சொல்கின்றார்… என்னவோ உளர்கின்றார்..! என்று தான் நான் (ஞானகுரு) நினைக்கின்றேன்,

ஏனென்றால் அந்த வேதங்களைப் பற்றிப் பேசுவது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரிகிறது. அடிவாங்கிய பின் இனிமேல் தப்பு செய்யக் கூடாது…! என்று சொன்னவுடன் சரி…! என்று அவர் போய்விட்டார்.

இவன் திருட்டுப் பயல்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தப்புத் தப்பாகச் சொல்கின்றான்…! என்றார் குருநாதர்.

பின்பு அடுத்த நாள் அந்த ஆள் அடி வாங்கியவர் என்னிடம் வந்தார்.
1.சாமி…! இவர் மனிதனே இல்லை… இவர் ஒரு ரிஷி பிண்டம்…
2.எப்படி நீங்கள் இவரைப் பெற்றீர்கள்…?
3.இந்த வேதத்தை யாரும் சொல்லவே முடியாது
4.சொற் பிழை இல்லாமல் அந்தச் சுருதியுடன் சொல்கின்றார்…!

“அவர் என்னை அடித்தார்… … …! நான் செய்த தப்பெல்லாம் ஓடியே போய்விட்டது… … …!” இனிமேல் நான் இந்த மந்திரம் சொல்லும் வேலைக்குப் போகவே மாட்டேன் என்றார்.

அந்த ஆள் உடுப்பி. நான் என் ஊருக்கே செல்கிறேன் என்றார்.

உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம்… அவரைக் (ஈஸ்வரபட்டரை) குருவாக நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்…! என்று கூறிவிட்டு எனக்கு நீங்கள் ஆசிர்வாதம் கொடுங்கள்… நான் ஊருக்குச் சென்று ஏதாவது வேறு தொழில் செய்து கொள்கின்றேன்…! என்றார்.

நான் சமையல் செய்து ஒரு ஓட்டல் கடை வைக்கலாம் என்று விரும்புகிறேன். நான் செய்யும் சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள் சாமி…! என்றார்.

அப்புறம் அவரிடம் ஆசீர்வாதம் செய்து ஒரு ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன். இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால்…
1.குருநாதர் அத்தனை நிலைகளையும்
2.அவர் எந்தெந்த வழியில் தெரிந்து இருக்கின்றார் என்ற நிலையை
3.நான் அறியவில்லை என்றாலும் என்னை அறிய வைக்கின்றார்.

அதே சமயத்தில் குருநாதர் என்ன எல்லாம் செய்வார் தெரியுமா…!

டெலிபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தில் அடிப்பார் இந்த லயன்… அந்த லயன்.. இந்த லயன்.. அந்த லயன்…! (LINE) என்று சொல்லிக் கொண்டே வருகின்றார்.

இவர் என்னத்தைக் “கிரகத்தைச் சொல்கிறார்… பைத்தியம் பிடித்தது போல் எதையோ கூறுகின்றார்…!” என்று நான் எண்ணிக் கொண்டிருப்பேன்.

ஒன்றும் புரியாது.

டேய்…! மிளகாய் ஒரு லட்சம் கோடி…! கோடி..கோடி…கோடி…! என்று சொல்வார். குருநாதர் தெலுங்கு மற்றும் எல்லா பாஷைகளிலும் பேசுவார்.

கோடி இங்கே இருக்கின்றது சாமி…! என்றேன்.

டேய் அந்தக் கோடி இல்லைடா… “ஈ கோடிடா…” என்பார். இப்படி மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி…! அது…இது… என்று என்னனென்னமோ கோடி… கோடி…! என்று சொல்லுவார்.

எனக்கு அர்த்தம் புரியவே இல்லை. இந்த லயன் அந்த லயன் இந்த லயன் அந்த லயன்…! என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அப்புறம் அந்த உணர்வுகள் எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் (ஒளிக் கற்றைகள்) ஒன்றோடு ஒன்று கலந்து
2.அந்த உணர்வுகள் எத்தனை “கோடியாக” மாறுகின்றது…?
3.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
4.எதன் செயலை இது மாற்றுகின்றது…? (அப்படி என்றால் அது “அந்த லயன் – LINE)

மின்னலாக வெளிப்படும்போது இந்த உணர்வுகள் எதனுடன் எது எப்படிச் சேர்கின்றது…? உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை “உள்ளுணர்வில் உணர்த்துகின்றார்…!”
1.அதாவது முதலில் சொல்கின்றார் (புரியாதபடி)
2.பின்பு புரிய வைக்கின்றார்.

இப்பொழுது உங்களிடம் அதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கின்றேன். எனக்குக் குருநாதர் எப்படிச் சொல்லிப் பதிவு செய்தாரோ… அதை உங்களிடமும் பதிவு செய்கின்றேன்.

உங்களுக்குச் சந்தர்ப்பம் வரும் பொழுதெல்லாம் இந்த நினைவுகள் வரும். தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இது உங்களுக்குள் வரும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகத்தில் உலகமே விஷத் தன்மையாக மாறும் இந்த நேரத்தில் அந்த விஷத்தையே வெல்லக்கூடிய சக்தியாக நீங்கள் பெற வேண்டும். உங்கள் மூச்சு பிறரைக் காக்க வேண்டும்.

அத்தகைய சக்திகளைப் பெறுவதற்குத்தான் இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை
2.குருநாதர் உணர்வுதான் பேசுகின்றது
3.அந்த உணர்வு தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றது.

இதை நிலைநிறுத்தி… உங்களுக்குள் அதை பெற வேண்டும் என்று எண்ணினால்
உங்களையும் காக்கின்றீர்கள்
நாட்டையும் காக்கின்றீர்கள்
மக்களையும் காக்கின்றீர்கள்
இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்…!

உங்களுக்குள் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தினை மீண்டும் மீண்டும் நீங்கள் எண்ணினால் உங்களுக்குள் நிச்சயம் அது வரும்… வளரும்…!

கடலில் மிகப் பெரிய சூறாவளிகள் தோன்றி இன்று ஊரை நாசம் செய்வது ஏன்…?

விஞ்ஞானிகள் பல பல கதிரியக்கப் பொறிகளைப் பிரித்தெடுத்து அதை நுண்ணிய அளவிற்குக் கொண்டு வந்து அணு உலைகளையும் நீர் மூழ்கிக் கப்பலையும் அணு ஆயுதங்களையும் அதிக அளவில் உருவாக்கி விட்டார்கள். அதைப் பயன்படுத்துவதாலும் அதை உற்பத்தி செய்யும் நிலையில் ஏற்பட்ட கசிவுகளாலும் அணுக் கதிர் வீச்சுகள் இந்தப் பூமிக்குள்ளும் காற்றிலும் பரவி அதனால் ஏற்படும் எதிர் மோதலால் கடலிலே வெப்பச் சலனங்கள் ஏற்பட்டு நீரைக் கவர்ந்து சூறாவளியாக மாறுகின்றது.

 

ஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் மாறுகிறது

நாம் இயங்குகிறோமா… பிறிதொன்றால் நாம் இயக்கப்படுகின்றோமா…?

பழி தீர்க்கும் உணர்வை வளர்த்துக் கொண்டால் அதனின் “பின் விளைவுகள்…” எப்படி இருக்கும்…?

saptarishis

உபதேசத்தாலோ… நூலில் இருந்து படித்தோ மட்டும் ஞானத்தின் வளர்ச்சி பெற்றிட முடியாது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நல் உபதேசத்தைக் கேட்பதும்… நல்ல நூலைப் படிப்பதும்… நம் உணர்வின் எண்ணமுடன் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

1.இஜ்ஜீவ உணர்வின் சக்தியைக் கொண்டு
2.இவ்வெண்ண நிலையை எதன்பால் திருப்புகின்றோமோ
3.அவ்வலைத் தொடரின் பதிவு ஒலிகள் அதனுடன் கூடிய நல் அலைகளை மீண்டும் பதியச் செய்ய
4.இவ்வெண்ணத்தால் எடுக்கும் தியானத்தால் இவ்வுணர்வு முழுவதுமே
5.நற்சக்தியின் அலையை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.

கோவில் குளங்களுக்குச் செல்லும் பக்திமானுக்கு அவன் கனவிலும் நினைவிலும் இதே நிலைகள் தான் சுழன்று கொண்டிருக்கும்.

பல கோவில்களுக்குப் போவது போலவும் அங்குள்ள ஆண்டவனைத் தரிசிப்பது போல “கனவுகளிலும்…” அதே சமயத்தில் “நினைவான எண்ணத்தில்…” எக்கோயிலுக்குச் செல்லலாம்…? எந்த நூலைப் படிக்கலாம்…? எந்த ஞானியைத் தரிசிக்கலாம்…? என்ற உணர்வு அலைப்பிடிப்பில் தான் பக்திமானுடைய எண்ண உணர்வலை எடுக்கும் சுவாசம் கொண்ட அலை பதிந்திருக்கும்.

திருடனுக்கும் சரி… அவன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு எவ்வலை ஓடுகின்றதோ…! அவ்வலையின் செயலுக்குகந்த எண்ணத்திற்கொப்பத்தான் அவன் நினைவும் கனவும் இருக்கும்.

விவசாயி ஆனாலும் சரி.. விஞ்ஞானி ஆனாலும் சரி… குடித்துத் தன் உணர்வை இழந்தவன் ஆனாலும் சரி…
1.எந்த ஒரு பழக்கப்பட்ட செயலுடன் கூடிய வாழ்க்கையுடன் வாழ்கின்றோமோ அதன் நிலைக்கொப்ப
2.உணர்வின் எண்ணத்திற்கொப்ப சுவாசத்தால் இவ்வுடலில் பதிவாகியுள்ள நிலைக்கொப்ப சுழற்சியில் தான்
3.ஒவ்வொரு மனித ஆத்மாவின் ஜீவ சக்தியின் அலைத் தொடரும் செயலும் வெளிப்படுகின்றன.

இச்சுழற்சியில் “அந்தந்தக் குண அமிலச் செயல் வட்டத்திற்குள்” மட்டும் உணர்வைச் செலுத்தி வாழ்பவனை அவனுள் பதிவாகியுள்ள குண அமிலத்திலிருந்து மீட்டுவது கடினம்…!

அதே சுழற்சியில் இருந்தாலும் ஆத்ம வளர்ச்சியை வளர்க்க முடியாது.

உணர்வுடன் கூடிய எண்ணத்தை நம்முள் “பல கோடி ஆண்டுகளாகப் பதிவாகி உள்ள குண அமிலத்துடன்…”
1.நற்சக்தியின் அமிலத்தை ஞானத்தால் நாம் எடுக்கும் ஜெபத்தைக் கொண்டு
2.நம்மைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூட்சம நிலையில் உள்ள சப்தரிஷிகளுடன் தொடர்பு கொண்டு
3.உணர்வின் எண்ணமுடன் இழுக்கும் சுவாசத்தைக் கொண்டு உடல் முழுவதும் அதைப் பாய்ச்சி
4.ஏற்கனவே நாம் பல காலமாகச் சேமித்து வைத்துள்ள இக்குண அமிலத்துடன்
5.நற்சக்தியின் ஒலி அலை பாயப்பாய
6.மனிதச் சக்திக்குள் எச்சக்தியும் அறியக்கூடிய நிலை பெறலாம்.

நம்மைக் காட்டிலும் உயர்ந்த சக்தியைப் பெறும் வழித் தொடரை நாம் பெற்றோமானால் தான்
1.ஜீவனுடன் கூடிய இம்மனித உடல் பிம்பத்திலிருந்து எச்சக்தியையும்
2.இருந்த இடத்திலிருந்தே உணரவும் காணவும் மாற்றி அமைக்கவும் முடியும்.

ஆனால் நற்சக்தியின் பயனைப் பக்குவம் கொண்ட பத நிலையில் செயல்படுத்தக்கூடிய நிலையும் நாம் பெற வேண்டும்.

புகழ் கண்டு மயங்காதே…
புகழாரம் பாடாதே…
புகழ் தேடிச் செல்லாதே…!

இன்னல் கண்டு கலங்காதே…
இகழ்ச்சி கண்டு பதறாதே…
இகழ்ந்துரைக்க எண்ணாதே…!

நம் ஞானத்தின் வழித் தொடர் வெளிப்பட்டவுடன் நம்மை எதிர் நோக்கியுள்ள நிலைகள் தான் மேலே குறிப்பிட்டவை எல்லாம்.

1.இந்நிலையுடன் கூடிய உணர்வின் பிடியில் சிக்குண்டவர்கள்…
2.தன் வளர்ச்சியின் ஞானத்திலிருந்தே உயர முடியாத சுற்றலில்
3.இன்றளவும் பலர் சுற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம்…!

food point

படைப்பின் இரகசியத்தையும் படைப்பவனின் இயக்கத்தையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பருப்பைப் பயிராக்கினால் பல பருப்பை அந்த ஒரு பருப்பு பலன் தருகிறது. ஒன்று வளர தன் வளர்ப்பின் பலன் தான் ஒவ்வொன்றும். சூரியன் தான் வளரப் மற்றதை வளர்க்கிறது.

1.ஒவ்வொரு இயற்கையின் ஜீவ வளர்ப்பும் தான் வளர
2.தன் வளர்ப்பில் பிற வளர்கிறதே தவிர
2.தன் வளர்ப்பில்லாமல் பிற வளர்ப்பு எச்சக்தியும் வளர்த்திக் காட்ட முடியாது.

தன் உணவைத் தான் எடுத்து தான் வளர்த்து தன் வளர்ப்பில் பிறவற்றையும் வளர்க்கச் செய்கிறது சூரியன். மற்ற மண்டலங்களின் ஈர்ப்பைத் தனக்கு உணவாக எடுத்துத் தான் வளர்ந்து தன் வளர்ச்சியின் பலனை வெளிப்படுத்தி அவ்வளர்ச்சியின் நிலையால் பிறவும் வளர்ந்து ஒன்றின் வளர்ப்பில் படர்கின்ற வளர்ப்பின் செயல் தான் எல்லாமே…!

தான் உட்கொண்டு தன் உணர்வை ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ சக்தி கொண்டு உணர்வால் எடுக்கும் முறை கொண்ட வழி கொண்ட தொடர் நிலைப்படி தான் சகல நிலைகளும் உள்ளன.

1.மிகவும் சக்தி வாய்ந்த அகில சக்தியான ஆதி சக்தியின் படைப்பிற்கே
2.தன் படைப்பின் உணவை உட்கொண்டு உட்கொண்டு
3.தன் படைப்பின் படைப்பில் பலவற்றையும் படைக்கின்றான்.

உயிரணு தோன்றி..
அவ்வுயிரணுவின் உயிர் தோன்றி..
உயிர் செயலின் வழித் தோன்றி…
உயர் ஞான சக்தியாகி…
சகலமும் காணும் சப்தரிஷியானாலும்…
“அந்தச் சப்தரிஷியின் உணர்வுக்கும்…!” தன் வளர்ப்பை வளர்க்க உணவு தேவை.

தான் உண்டு… தான் வாழ… பிறரையும் வாழ வைக்க முடியுமேயன்றி “பிறர் வாழ்ந்தால் தான் வாழ முடியும்…!” என்ற நிலை எதற்குமே இல்லை.

நட்சத்திர மண்டலங்களும்… வளர்ந்து விட்ட சகல மண்டலங்களும்… காற்றினில் கலந்துள்ள பல கோடி அமிலங்களின் ஜீவ சத்துக்களும்… நீரும்… ஒளியும்… அனைத்துமே… தன் உணவை உட்கொண்டு தான் வளர்ந்து கொண்டுள்ளளன.

1.உணர்வின் சுழற்சிக்கு உணவு தேவை
2.உணவில்லாமல் எந்த ஜீவத் துடிப்பும் உயிர் வாழ்வதில்லை.

ஜீவனுடன் கூடிய பிம்ப உடலுடைய மனிதன் “ஜீவ சக்தி கொண்ட நீரையும் திடப்பொருள் உணவையும்” உட்கொண்டு வாழ்கின்றான்.

மிருகங்களும் மனிதனை ஒத்த நிலையில் வாழ்கின்றன. தாவரங்களின் நிலை “ஈர்ப்பின் சுவாசமுடன் உணவை” உட்கொண்டு அவை வாழ்கின்றன.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப தன் உணர்வு அழியாவண்ணம் நுகர்ந்து
1.தான் வாழ்ந்த காலத்தில் உண்டு வாழ்ந்த ஆகாரங்களின் வாசனையின் உணர்வை ஈர்த்து
2.தன் உணர்வுக்குகந்த உணவைக் காற்றிலிருந்து தன் சுற்றத்தாரின் உணர்வுடன் கலந்து
3.தன் உணவை உட்கொண்டுதான் ஆவி நிலையில் உள்ளவர்களும் வாழ்கின்றனர்.

ஆக..
1.ஜீவனற்ற பொருள்களுக்கு எதுவும் தேவையில்லை.
2.ஆனால் ஜீவனற்ற பொருளும் ஆவியாகக் கரைந்து பிறவற்றுக்கு ஆகாரமாகத்தான் செல்கிறது.
3.உணவில்லாமல் எந்த ஜீவ சக்தியும் வாழ்வதில்லை…

உதவி செய்தாலும் அல்லது உதவி பெற்றாலும் மகிழ்ச்சி அடைய முடியவில்லை ஏன்…?

இன்று உதவி செய்பவரும் ஏதோ ஒரு காரணம் கருதித்தான் உதவி செய்கின்றனர். அதே போல் தான் உதவி பெறுபவர் நிலைகளும் ஆகிவிட்டது. ஒரு சிறு சொல் மாறினாலும் உடனே பகைமையாக்கி ஒற்றுமையைக் குலைக்கும் நிலைகள் ஏற்பட்டு விடுகிறது. அக்காலத்தில் ஆண்ட அரசர்களும் சரி இன்றைய வளர்ந்த நிலையில் இருக்கும் அமெரிக்காவாக இருந்தாலும் சரி மற்றவர்களை அடிமைப்படுத்தும் தன்மையே வந்து விட்டது பொது நலம் இல்லாதே போய் விட்டது. காக்கும் நிலை இல்லை.

 

உலக மக்கள் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும்

கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

Socialism

இன்றைய உலகில் “உதவி செய்வதிலும்… உதவி பெறுவதிலும்…” உள்ள உபத்திரவங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

உலக நிலைகளிலேயே இன்று ஒருவரை ஒருவர் அடக்கி ஆளும் தன்மைகள் அதிகரித்துவிட்டது. அந்த உணர்வுகள் எல்லாமே அரசர்களால் உருவாக்கப்பட்டது. மனிதனான பின் அரவணைக்கும் உணர்வையே மறந்து அடக்கி ஆளும் தன்மையே பெறுகின்றது.

1.எப்படியும் ஏதோ ஒரு வகையில் மிரட்டி வாழ்வது
2.இல்லை என்றால் ஒன்றைக் கொடுத்து தனக்குக் கீழ் அடிமையாக்குவது.

அதாவது உங்களுக்கு நான் ஒரு பொருளைக் கொடுத்து அதன் வழியில் அடிமையாக்குவது. உங்கள் நிலைகளிலிருந்து அதை நான் பெற்று என்னுடைய சுகத்திற்கு வருவது.

1.ஆனால் நான் கொடுத்து நீங்கள் பதிலுக்கு உதவவில்லை என்றால்
2.நான் எண்ணியபடி நீங்கள் வரவில்லை என்றால்
3.உடனே உனக்கு நான் இன்னதைச் செய்வேன்…! என்று
4.அந்தத் தீங்கின் நிலையே (மிரட்டும் நிலையாக) வருகின்றது.

ஆக ஒருவருக்கு உதவி செய்யப்படும் பொழுது அவன் தனக்கு இணைந்தவனாக வர வேண்டும். தனக்கு இணைந்து வரவில்லை என்றால் அடுத்து அவனைக் குற்றவாளியாக்கும் நிலையே வருகின்றது.

மனிதர்களாக இன்று வாழ்பவர்கள் அவரவருக்குத் தகுந்த மாதிரி மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். ஆனால் உதவி செய்தபடி அந்த உதவி பெற்றவர்கள் தன் வழிக்கு வரவில்லை என்றால்
1.நான் உதவி செய்தேன்… அவன் எனக்குத் தக்க நேரத்தில் உதவி செய்யவில்லை
2.ஆகவே அவன் தீங்குள்ளவனாக ஆகி விட்டான்..! என்ற
3.இப்படிப்பட்ட பகைமை உணர்வைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

பகைமையை ஒரு பக்கம் வளர்க்கின்றோம். அதே சமயத்தில் அன்பு கொண்டு மற்றவரைத் தனக்குள் அடிமையாக்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

தன் வீரிய உணர்வு கொண்டு ஒருவரை அடக்கி ஆளும் உணர்வு கொண்டு செயல்படுத்துகின்றனர். அடுத்து பொருள்களைக் கொடுத்துத் தனக்குக் கீழ் அவர்களை அடிமையாக்கும் தன்மையே வருகின்றது.

1.உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு ஒன்றி வாழ வேண்டும்
2.இணைந்து வாழ வேண்டும்
3.பேதங்கள் நீங்க வேண்டும்
4.பேரருளைப் பெறவேண்டும் என்ற உண்மை நோக்குடன்
4.உதவிகளைச் செய்தால் அங்கே எதிர்பார்ப்பின் தன்மை இருக்காது.

உதவி செய்தேன்…! என்றால் உங்களிடம் ஒன்றை எதிர்ப்பார்க்கும் தன்மையே தான் இன்று வருகின்றது.

சில இடங்களில் பார்க்கலாம். சில உபகாரங்களைச் செய்வது போல் செய்வார்கள்.
1.ஆனால் அவர் செய்யும் தவறுக்கெல்லாம் இவர்கள் அடிமையாக வேண்டும்
2.அப்படி அடிமையாகவில்லை என்றால் அதற்கு வேண்டிய தொல்லைகளைக் கொடுப்பார்கள்
3.நான் அவனுக்கு இவ்வளவு உபகாரம் செய்தேன்… எனக்கு இவன் இவ்வாறு தீங்கு செய்கின்றான் என்று
4.குற்றவாளியாக்கும் உணர்வுகளைத்தான் பாய்ச்சுகின்றார்கள்.

தனக்கு வேண்டியதை எதிர்பார்த்துச் செயல்படும் தன்மைகள் தான் இங்கே வருகின்றது. ஒன்று… அடக்கி ஆள்வது இரண்டாவது… அரவணைத்துப் பார்ப்பது. வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக்குவது..!

அன்றைய அரசர்கள் காலங்களில் அரசர் பண்பு கொண்ட நிலைகள் வளர்க்கின்றனர். ஒரு அரசன் அடுத்த அரசனுக்கு உதவி செய்கின்றான்.

உதவி செய்யப்படும் பொழுது அந்த அரசனிடம் உன் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடு என்கிறான்… அல்லது இந்த ஊர் எனக்கு உகந்தது அதைக் கொடு…! என்று கேட்கின்றான்.

அவன் கேட்டதை எல்லாம் உதவி பெற்ற அரசன் கொடுக்கவில்லை என்றால் இதுவரை உனக்கு அரவணைத்து உதவி செய்திருக்கிறேன். பதிலுக்கு உன்னால் இந்தச் சிறு உதவி செய்ய முடியவில்லையா…? என்று உடனே போர் முறை தொடுக்கின்றான்.

இதைப் போல் தான் மக்கள் மத்தியிலும் அன்று அரசன் எதைச் செய்தானோ அதே உணர்வுகள் இங்கே படரப்பட்டு இயக்கிக் கொண்டிருக்கிறது.

எதிர்ப்பில்லாது இருக்கும் என்பதற்காக இந்த உதவிகளைச் செய்கின்றனர். அந்த எதிர்ப்பில்லாத நிலைகளில் இந்த உதவிகளைச் செய்தாலும் தான் எதிர்பார்க்கும் நிலைகள் ஏராளம் உண்டு.
1.தான் தவறு செய்து கொண்டு
2.அந்தத் தவறைக் காக்க
3.மற்றவருக்கு உதவி செய்யக்கூடிய பண்புகள் தான் இருக்கின்றது.

தன் தவறை மாற்ற தன் தவறின் நிலைகளை மாற்றியமைக்க மற்றவர்ககளுக்கு உதவி செய்து கடைசியில் அந்தத் தவறு செய்யும் நிலைகளே தான் அதிகரிக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் தான் மக்கள் மத்தியில் இன்று ஒரு அலுவலகத்திலும் சரி… வீட்டிலும் சரி… மற்ற நிலைகளிலும் சரி.. இருக்கின்றது.

இப்படி வரப்படும் பொழுது இது சுயநலத்தைக் கூட்டுகின்றது. பொது நலம் ஆகாது.

அந்தப் பொது நலத்தின் தன்மைகளை அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்துவிட்டால் அந்தக் குற்ற இயல்புகள் இருவரிடத்திலும் வராது.

1.நல்ல பண்பினைக் காக்க
2.பரிவினை ஊட்ட
3.அன்பினைக் கூட்ட அரவணைக்கும் தன்மை வந்தால்
4.அந்த அரவணைக்கும் உணர்வே நாம் செய்த பண்பின் அரவணைப்பு நமக்குள் என்றும் நிலைத்திருக்கும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும்… இருளை அகற்றிடும் நிலை பெறவேண்டும்… அவர்கள் வாழ்வில் தெளிந்த நிலைகள் பெறவேண்டும் என்ற நிலையில் நாம் செயல்பட வேண்டிய நெறிகளைத்தான் நம் குருநாதர் தெளிவாக்கினார்.

hold the truth

அமெரிக்கா மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் செயல்கள்

அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் உதவி செய்வது போல் செய்து மற்ற நாட்டைத் தனக்குக் கீழ் கொண்டு வரும் நிலையே உள்ளது.

உதாரணமாக வேப்ப மரம் என்பது நம் நாட்டின் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. வேம்பை மாரியம்மனுக்குச் சாற்றி ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள். எத்தனையோ இலட்சம் ஆண்டுகளாக வணங்கி வந்த நிலை.

இந்த வேப்பமரத்தின் உண்மை உணர்வுகள் கேன்சரை நீக்கவும் பல தீமையான கொடுமையான உணர்வுகளை மாற்றவும் உதவுகிறது. அதே போல் மஞ்சளும் வேப்ப மரத்தின் சத்தும் இரண்டும் உராயப்படும் பொழுது அதனால் சில சில விஷத் தன்மைகளை நீக்கும் சக்திகள் உண்டு.

உடலில் உள்ள சில தீமையான அணுக்களை மாற்றும் நிலை இதிலே உண்டு என்று அறிந்து கொண்டான் அமெரிக்கா. இரசாயணக் கலவைகளாக மாற்றி அதிலே சில குறைகளை அவன் கண்டு கொண்ட பின் அவன் வலிமை கொண்ட நாடாக இருப்பதால்
1.எங்கள் நாட்டில் வளர்ந்தது தான் அது…!
2.நீங்கள் அதிலே எந்தப் பொருள் செய்தாலும் எங்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று இப்படிக் கொண்டு வருகிறார்கள்.

இதைப் போன்று தான் அன்றைய அரசர்கள் ஒரு நாட்டில் மற்றொரு அவன் கேட்ட பொருளைக் கொடுக்கவில்லை என்றால் உடனே போர் தொடுத்து அவனை அடிமையாக்கித் தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.

ஆக நல்லது செய்வது போல் பண்பு கொண்ட நம் நாட்டையும் பண்பற்றவர்களாக மாற்றுகின்றனர். அதே சமயத்தில் மதத்தின் அடிப்படையில் அமெரிக்கா வளர்க்கப்படும் பொழுது அவன் எந்த மதத்தைத் தழுவினானோ அந்த மதத்தின் உணர்வுகளை இங்கே நம் நாட்டுக்குள்ளும் கூட்டி தன் இனத்தை இங்கே பெருக்குகின்றான்.

1.மதம் என்ற நிலைகள் கொண்டு அவர்கள் கடவுளை முன் நிறுத்தித் தவறுகளைச் செய்கிறார்கள்.
2.அதே சமயத்தில் பரிவு கொண்ட மனம் கொண்டு உதவி செய்வது போல் காட்டி – ஐந்தாம்படைகளாக மாற்றிக் கொண்டு
3.இங்கிருக்கும் நல்லவைகளை எடுத்துச் சென்று இந்த நாட்டின் நிலைகளையே சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அன்றாண்ட அரசர்கள் போல் இன்றும் இதன் நிலைகளில் உலகையே அவனுக்குக் கீழ் அடிமைப்படுத்திக் கொண்டு வரப் பார்க்கின்றான். அவனுக்கு இணங்கிச் செயல்படுத்தவில்லை என்றால் தன் வலுவின் தன்மை கொண்டு அடிமைப்படுத்தும் உணர்வே வளர்ந்துவிட்டது… இன்றும் நடக்கின்றது.

அப்படி அடிமைப்படுத்தும் உணர்வுகள் தொடர்ந்து வரப்படும் பொழுது
1.எத்தனை கோடி தெய்வங்களை வணங்கினாலும் சரி மற்ற எத்தனை நிலைகள் செய்தாலும் சரி
2.அவன் கற்றுணர்ந்த ஆயுதங்களை நம்மிடம் பயன்படுத்தினால் நமது தெய்வமும் சரி
3.நம் நாட்டுப் பற்றும் சரி முழுமையாக அணைந்துவிடுகிறது… நஞ்சின் தன்மையாகி விடுகிறது.
4.சிந்திக்கும் தன்மையே இழந்துவிடுகிறது…!
5.இதைப் போன்ற சூழ்நிலையில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

மீனவனான வியாசனுக்கு அகஸ்தியன் உணர்வுகள் எப்பொழுது கிடைத்தது…?

மீனவனான வியாசன்… கடலிலே புயலில் சிக்கிய நேரத்தில் எந்த மீனை விற்று ஜீவனை வளர்த்து வந்தானோ அதே இன மீனால் காக்கப்படுகின்றான். அந்தப் பாச உணர்வு கொண்டு அக்கால வழக்கப்படி சூரியனை வணங்கப்படும் பொழுது வடகிழக்குத் திசையில் இருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவன் கவரும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தான் வியாபித்திருக்கும் இயற்கையின் உண்மைகளைக் கண்டுணர்ந்தான் அந்த வியாசன்.

 

போகர் உருவாக்கிய நவபாஷாணச் சிலையின் இரகசியம்

ஞானிகள் கொடுத்த பாடலுக்கு இன்றிருப்போர் கொடுக்கும் வியாக்கியானங்கள் 

இராமலிங்க அடிகள் சொன்ன கந்தக் கோட்டம்

Blessing and blessed

“ஞானிகளின் அருகாமை… நமக்கு எப்பொழுது கிடைக்கும்…?” என்பதைப் பற்றி ஈஸ்வரபட்டர் ஒரு அனுபவத்தின் மூலமாகக் காட்டியது

தியானத்தில் அமர்ந்து குருநாதரால் உபதேசிக்கப்படும் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் ஈஸ்வரபட்டரின் உருவமும் அவர் ஆசியும் கிடைத்தது.

ஒரு பக்கம் அவரும் மற்றொரு பக்கமும் நானும் அமர்ந்துள்ள நிலையில் அவருடன் தொடர்பு கொண்டதின் சக்தியினால் அவரிடமிருந்து நான் பெற்ற அருள் மொழிகள்… அவர் உணர்த்திய உண்மைகள் எல்லாம் தியானத்தின் மூலம் அவரிடமும் ஞானகுருவிடமும் தொடர்பு கொண்டிருந்தாலும்
1.அவர் உணர்த்தும் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்
2.அவர் உபதேசித்த செயல் வடிவை என்னால் செயலில் காண முற்பட்டும் முன்னேறும் நிலை பெறவில்லை.

அவரிடம் தொடர்பு கொண்டவுடன்… என் எண்ணத்தில் “சகலத்தையும் அறியக்கூடிய உணர்வு எண்ணத் துடிப்புடன்” ஈஸ்வரபட்டரிடம் ஆசி கேட்டேன்.

உடனே தன் கையால் வாயை மூடிக் கொண்டார்…! எனக்கும் அவருக்கும் மத்தியில் மிகப் பெரிய நீளமான “திரைச் சீலை” ஓடியது.

திரைச் சிலைக்கு அப்பக்கம் மாமகரிஷி ஈஸ்வரபட்டரும் இந்தப் பக்கம் நானும் அமர்ந்துள்ள நிலையில் திரைச் சீலையின் இப்பக்கம் இருந்தே அவர் அமர்ந்திருப்பதுவும் பேசுவதும் கேட்கின்றது.
1.ஆனால் எனக்கும் அவருக்கும் மத்தியில் திரை…!
2.இந்தத் திரைக்குப் பொருள் என்ன…? என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

உடனே என் எண்ணத்தில் நான் இன்னும் பயந்த நிலையில் தான் இருக்கின்றேன்…. அவர் உணர்த்துவதை எடுத்துச் சொல்லும் பக்குவம் ஒன்று தான் உள்ளது.

அவர் அருளும் ஞானத்தின் வழி செயல் அடைய முடியாததற்கு இந்தப் பயம் தான் திரையாக உள்ளதா…? என்று எண்ணியவுடன் தலையை மட்டும் அவர் ஆட்டுவதை உணர்ந்தேன்.

பிறகு தியானத்தில் ஒரு நொடிப் பொழுதில் என் நினைவு இவ்வுலகக் குடும்ப எண்ணங்களுடன் மோதுண்டது.
1.என் உறவினரில் ஒருவர் அறியாது பெருமை கொள்ளும் செயலின் எண்ணம் வந்தது
2.பிறகு பிறரிடம் நெருங்கிய அந்த உறவினரின் குறையை நான் எண்ணிப் பார்க்கும் பொழுது
3.இதை எப்படியும் குருநாதர் நிறைவுபடுத்தித் தந்து விடுவார்… என்ற எண்ண மோதலில்
4.குருவிடம் அப்பொழுது அதை எண்ணித் தியானிக்கவும் செய்தேன்.

இப்படி வரிசையாக எண்ணங்கள் சென்ற பின் இப்பொழுது உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை எதற்கென்று புரிந்ததா…? என்று குருநாதர் கேட்டார்.

உன் குடும்பச் சுழற்சியில் எந்த ஒரு நிலைக்கும்…
1.எண்ணத்தின் ஈர்ப்பை அவர்களிடம் செலுத்தி
2.அவர்களுடனே ஒன்றி
3.அவர்களுக்காக வேண்டுகிறாய்.

பந்தம் பாசம் அன்பு பரிவு அனைத்தும் வேண்டியது தான். “பற்றற்ற நிலை…” என்ற உபதேசத்தை என்னிடம் பெற்றவரும் நீ தான். ஆனால் உன் ஞானத்தால் பற்றற்ற நிலையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மற்ற உறவினர்களைக் காட்டிலும் இரத்தத் தொடர்புடைய சொந்தங்களின் ஈர்ப்பு அதிவிரைவில் நம்மை வந்து சாடும்.

தியானத்தால் நல்வழிப்பட்டு ஞானத்தின் பால் நீ செல்ல வேண்டிய நிலையில்… பந்த பாசங்களின் உணர்வு எண்ணத்தை உன்னுள் அவர்களின் நிலையையெல்லாம் ஏற்றிக் கொண்டே வருகின்றாய்.
1.அவர்களுக்காக அதே சுழற்சி வாழ்க்கையிலேயே இருந்து
2.அவ்வெண்ணத்துடன் உன் எண்ணத்தைக் கலக்கவிடுவதனால்
3.உன் ஞான வளர்ச்சியும் வளர முடியாது.

பந்தபாசங்களை எல்லாம் நீ ஒதுக்கிவிட்டு ஞான வழிக்கு வா…! என்று உணர்த்தவில்லை.

அவர்களிடம் உள்ள குறையையும் நிறையையும் உண் எண்ணத்துடன் நீ ஏற்றிக் கொள்ள வேண்டியதில்லை.
1.அவர்களின் நிலைக்காக அவர்கள் எண்ணச் செயல் மோதும் பொழுதெல்லாம்
2.அவர்களுக்கு நல் உணர்வு தா ஈஸ்வரா…
3.அவர்கள் நிலை உயரட்டும்…! என்ற எண்ணத்துடன் இறைசக்தியின் அலையைச் செலுத்த வேண்டும்.

ஆகவே அவர்கள் உணர்வலையுடன் நீ கலக்காமல் நீ பெற்ற நற்சக்தியின் அலையைக் கொண்டு அவர்கள் உயர உன் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

பிறரின் எண்ணச் சுழற்சியில் “நீ சிக்காமல்…” உன் எண்ணச் சக்தியை இறை சக்தியின் செயலாக அவர்களிடம் செலுத்திவிடு…! என்று உபதேசம் அளித்தார் ஈஸ்வரபட்டர்.

இப்பொழுது தெரிகிறதா உனக்கும் எனக்கும் உள்ள திரை எதற்கென்று…? என்று மறுபடியும் வினா எழுப்பினார் குருநாதர்.

ultimate sage Agastyan

நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! அரோகரா…! இப்படிப் பாடுவதன் உட்பொருள் என்ன…?

மரம் செடி கொடிகள் இருக்கின்றது. அதிலே பல தாவர இனங்களைச் சேர்த்துப் புது புதுச் செடிகளை உருவாக்குகின்றனர்.

பூமியின் துணை கொண்டு அந்த வித்து இழுக்கப்படும் பொழுது
1.அதனின் பங்கின் விகிதாச்சாரம் கொண்டு
2.இந்தக் காற்றில் இருக்கும் தன் உணர்வை எடுத்து மரம் அதன் வழியே அது வளர்கின்றது.
3.செடியும் கனியும் ரூபங்கள் மாறுகின்றது,
4.அதற்கு யார் அறிவைக் கொடுத்தது…?
5.அதற்கு அறிவில்லை என்று யார் சொல்ல முடியும்…!

எதன் உணர்வோ அதன் அறிவாக அது இயக்கும்…! என்ற நிலை அங்கே தெளிவாகிறது.
1.அதன் உணர்வை உயிரினங்கள் (புழுவிலிருந்து மனிதன் வரை) நுகர்ந்தால்
2.ஜீவ அணு என்ற நிலையாக அதன் அறிவாக அந்த உணர்வின் தன்மை இயக்கி
3.அது நகர்ந்து செல்கிறது… நகர்ந்து செல்லச் செய்கிறது.

ஆனால் செடி கொடிகளோ தான் இருந்த இடத்திலிருந்து தன் உணர்வைக் கவர்ந்து அது வளர்கிறது. இது எல்லாமே நம் சாஸ்திரங்களில் உண்டு.

“சைவ சித்தாந்தம்…!” என்று சொல்வார்கள். இதை எல்லாம் வேதங்களாக மாற்றிக் கொண்டார்கள்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி… என்று “அவன்” கண்டுணர்ந்த உண்மையை எந்நாட்டவரும் அதைப் பெறலாம்.

1.ஏனென்றால் இருளை நீக்கி ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ நட்சத்திரம் அந்த அகஸ்தியன் தான்.
2.ஆனால் இந்தத் தென்னாட்டில் தோன்றியவன் தான் அத்தகைய ஒளியின் சரீரம் பெற்றான்.

இந்தப் பூமியில் உள்ள எந்நாட்டவரும் அவன் பெற்ற அருளைப் பெற்று அவர்களுக்குள் அறியாத இருளை நீக்க முடியும் என்ற நிலையைத் தெளிவாக உணர்த்தும் விதமாகத் தான் “தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..” என்று அகஸ்தியனுக்குப் பின் வந்தவர்கள் உணர்த்தினார்கள்.

நம் தென்னாட்டிலே தான் இத்தகைய சாஸ்திரங்கள் எல்லாம் இருக்கும். வட நாட்டிலே பார்த்தால் இது இருக்காது.

இங்கிருந்து புறப்பட்டது தான் மற்ற உலக நிலைகளுக்கு. ஆனால் மற்ற நாடுகளில் இது இல்லை. எதை எதையோ ஒரு தெய்வத்தை வைத்திருப்பார்கள். மற்றதைச் சொல்வார்கள்.

சூரியனைச் சொல்லப் போகும் பொழுது நாராயணன் என்று சொல்வார்கள். ஆனால் அந்த நாராயணன் யார்…? என்று தெரியாது.

1.அரோகரா… அரோகரா…! என்று சொல்வார்கள்..
2.நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! என்று பாடல்கள் எல்லாம் பாடுவார்கள்.
3.நம பார்வதி பஜே நமச்சிவாயா…! என்று சொன்னால்… கேட்டு அதையே நாமும் திருப்பிச் சொல்வோம்.

இதனுடைய உட்பொருளை நாம் அறிந்து சொல்கின்றோமா…? அதாவது
1.அரோகரா… சுழலும் உணர்வின் தன்மை நுகர்ந்ததை
2.நம் பார்வையில் படுவதை நாம் நுகரப்படும் பொழுது
3.அந்த உணர்வின் இயக்கமாக இயக்குகிறது
4.அப்பொழுது நமக்குள் நமச்சிவாய… நம் உடலாக மாற்றுகின்றது.

எதை நுகர்கின்றோமோ ஒரு இயக்கச் சக்தியாக மாறி நம் உடலாக மாற்றுகின்றது என்பதை ஒரு பாடல் வழியாகக் கூட ஞானிகள் நமக்கு இப்படிக் கூறியுள்ளனர்.

ஆனால் எல்லாம் பாடலைப் பாடிய பின் அரோகரா… பார்வதி பஜே நமச்சிவாயா…! என்று சொல்வோம் ஏன் சொல்கிறோம்…? எதற்காகச் சொல்கிறோம்…? என்று தெரியாமலே அல்லவா பாடுகின்றோம்.

ஆயிரத்தெட்டுக் குணங்களைப் பிரிக்கப்பட்டு மனிதன் உடலான நிலைகளில் இருந்து நாம் எப்படி மீள வேண்டும்…? அழியாத நிலைகள் எபப்டிப் பெறவேண்டும் என்ற இயக்கத்தைத் தெளிவாக ஊட்டிய தென்னாடு தான் இது.

அதனால் தான் அந்தத் தென்னாட்டுடைய சிவனே போற்றி…! என்று அவன் (அகஸ்தியன்) கண்டுணர்ந்த உணர்வை நாமும் பெற்று அதே போல் என்றால் எந்நாட்டவரும் பெற்றால்
1.தெளிந்து வாழ்ந்திட முடியும்
2.மனிதன் இனி பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஆக… பிறவியில்லா நிலை அடைந்த அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் இதே உணர்வு நமக்குள்ளும் இயக்கும்… மற்றவர்களையும் அது போல் இயக்கும்..!

உடல் பற்று எப்படி இருக்க வேண்டும்… எப்படி இருக்கக்கூடாது…?

அருள் ஞானம் பெற இந்த உடல் நமக்குத் தேவை தான். ஆனால் சந்தர்ப்பத்தால் உடலுக்குள் வரும் தீமையான உணர்வுகளுக்கு இடம் கொடுத்துவிட்டால் அதன் மீது பற்றாகி விட்டால் இராமாயணத்தில் காட்டப்பட்ட தசரதன் எப்படி அழிந்தானோ அதே போல் நாமும் வேதனைப்பட்டு மடியும் நிலைகளே வருகின்றது. 

நீங்கள் வளர்க்கும் அருள் சக்தியை யாராலும் அழிக்க முடியாது 

தொழில் செய்வோர் தெரிந்து கொள்ள வேண்டியது

EARTH TOMORROW

கலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சூரியனின் ஒளி அலையின் தொடர்பின் பிம்ப நிலை கொண்டு சிவனாகவும் ஈர்ப்பு நிலை கொண்டு சக்தியாகவும் வளர்ப்பின் படைப்பைக் கொண்டு உருவான உலக சக்தியே சூரியனைக் காட்டிலும் சக்தி வாய்ந்த நிலை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய “சக்தி பூமி இது…!”

இக்கலியின் மாற்றத்திற்குப் பிறகு…
1.இப்பூமியில் இன்றுள்ள மனித ஆத்மாக்களின் நிலை மாறி உருவங்கள் மாறு கொண்டு
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் ஈர்ப்பு ஓட்ட சக்தி
3.சூரியனைக் காட்டிலும் துரிதம் கொள்ளக்கூடிய நிலை கொள்ளப் போகின்றது.

உருவத்திலே சூரியனை விடச் சிறியதாக இருக்கும் காலத்திலேயே இதன் ஈர்ப்பு சக்தியினால் இதன் ஓட்ட நிலை துரிதம் கொண்டு… இன்றெப்படி சூரியனைச் சுற்றி சூரிய குடும்பமாக சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலம் உள்ளதுவோ அதைப் போன்று “பூமியின் ஈர்ப்பில்…” சூரியனும் சுழலப் போகின்றது…!

சூரியனை மையம் கொண்டு இன்று சுழலும் நிலையே பூமியை மையம் கொண்டு சுழலக்கூடிய நிலை உருவாகப் போகின்றது.

உயர் படைப்பின் படைப்பில் பலவுண்டு…!

1.அப்படைப்பிலேயே வளர்ச்சி கொள்ளும் நிலை கொண்டு
2.படைப்பின் படைப்பைக் காட்டிலும் உயர் படைப்பாவது தான் சக்தி நிலையே அன்றி
3.படைப்பின் குறுகும் நிலையல்ல உயர் சக்தியின் நிலை.

இப்பூமியில் ஞானத்தின் சக்தி கொண்ட மனிதக்கரு வளர்ந்துய்யும் நிலை கொண்டு… சக்தியின் நிலையினால் மனிதனின் ஞான வலுவால் ஆத்ம பலம் கொள்ளும் நிலை பெற்ற நம்மைப் படைத்த அவ்வாதி சக்தியின் படைப்பின் வலுக் கொண்ட சப்தரிஷிகளின் படைப்புடன் மனித ஆத்மாவின் ஆத்ம ஞான வளர்ச்சியினால் பூமியின் நிலை வளர்ந்தது.

பூமியின் ஈர்ப்புச் சுற்றலின் ஓட்டம் துரிதம் கொண்டு சுழலும் தன்மையில் பூமியின் ஈர்ப்புடன் வாழக்கூடிய சக்தி நிலை மனித உரு நிலைக்கு ஒப்பாமலும்
1.பூமியை மையம் கொண்டு சுழலும் பூமியின் ஈர்ப்புக்கு வரும் பிறிதொரு மண்டலத்தில் (சந்திரன்)
2.மனிதக் கரு உருவம் வளரக்கூடிய நிலைக்கு இன்றெடுக்கும் ஆத்ம சக்தியின் பலத்தால் “மனித இனம் வளரும்…!”

நொடிக்கு நொடி மாறிக் கொண்டே சுழல்கின்ற அனைத்து நிலைகளிலும் இன்றுள்ள மனித ஆத்ம பிம்ப நிலைக்கொப்ப உருவம் தான் இருக்குமா…! என்றால் அதுவுமில்லை.

1.ஒன்றை ஒத்த நிலையில்… ஒன்றிலிருந்து மாறுபடும் உணர்வின் எண்ணமானது
2.ஆவி நிலை கொண்டு மீண்டும் மீண்டும் ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிப் பிம்பமாகும் தருணத்தில்
3.எந்த ஒரு குண அமிலத் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையில் கனி வளங்களின் ஆரம்பக் குண அமில வளர்ப்பில் வளர்ந்த தாவரங்களின் வளர்ச்சி நிலையில் மனிதக் கரு வளர்ச்சியும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் பூமியின் அமிலப் படைப்புக்கந்த இன வளர்ச்சியின் நிலைத் தொடரே பெற்றோம்.

நம் பூமியின் தாதுப் பொருட்களில் அதிகமாக உள்ளது எது…? இரும்பு தான் மற்ற தாதுப் பொருட்களைக் காட்டிலும் இப்பூமியில் அதிகம்.

ஆனால் இப்பூமியின் ஈர்ப்பு சுழன்று வேகம் அதிகம் கொள்ளும் நிலையில்… பூமியின் ஈர்ப்புச் சுழற்சி துரித ஓட்டத்தினால்… பூமி இழுத்து வெளிக்கக்கும் சுவாச அலையினால்… பூமியின் ஈர்ப்பிற்கு மற்ற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய அமில குணத்தின் நிலையைக் கொண்டு…
1.இன்று இரும்பையே அதிகமாகக் கொண்டுள்ள இப்பூமியின் கனி வளத்தன்மையே
2.இரும்பு உள்ள நிலைக்கொப்ப தங்கம் வளரப் போகிறது… இது உண்மை..!
3.சூரியனின் நிலத் தன்மையில் தங்கத்தைக் காட்டிலும் சக்தி கொண்ட தாதுப் பொருள் உண்டு.

இரும்பைக் காட்டிலும் தங்கத்தின் குணம் உயர்ந்ததா…? இரும்பைக் காட்டிலும் தங்கம் எத்தன்மைக்கும் இளகி வரும் குண நிலை கொண்டது. தங்கத்தை நுண்ணிய இழைகளாகவும் உருவாக்க முடியும்.

இரும்பை அதி உஷ்ணப்படுத்தித்தான் அதற்கு உருவங்கள் அமைக்க முடியும். மிகவும் உறுதி கொண்ட திடப்பொருள் இரும்பு. ஆனால் இளகும் தாதுப் பொருள் தங்கம்.

இன்று பூமியின் இரும்பின் குண அமிலம் நிறைந்த தாதுப் பொருள் உள்ள நிலைக்கொப்ப இப்பூமியில் வளரும் ஜீவன்களின் அமில வளர்ச்சியும் அதன் குணத்திற்கொப்ப இருக்கிறது.

இன்று ஓடும் பூமியின் சுழற்சி ஓட்டத்தின் வேகம் கொள்ளும் நிலைக்கொப்ப பூமியின் தாதுப் பொருட்களின் நிலையும் மாறுகொள்ளும்.

இரும்பெல்லாம் தங்கமாகும் நிலை உருவாகப் போகிறது. இப்பூமியில் இனி வரப் போகும் கல்கி காலத்தில் எல்லா நிலைகளும் ஒவ்வொரு நொடிக்கும் மாறிக் கொண்டு தான் உள்ளன.

1.ஆவி பிம்பமாகி..
2.பிம்பம் ஆவியாகிச் சுழலும் நிலைக்கொப்ப “உருண்டு வளரும் நாம்”
3.சுழற்சியுடன் ஒன்றிய எண்ணத்தின் வழித் தொடரில் இருந்தோமானால்
4.சுழற்சியுடன் சுழன்று கொண்டே ஆவியாகிப் பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் அதே சுழற்சியிலிருந்து பிம்பமான
5.பல கோடி கோடி ஆண்டுகளுக்குப் பலவற்றையும் வளர்க்கும் படைப்பாண்டவன் ஆகலாம்… (எதன் வழியில்..?)
6.இவ்வெண்ணத்தை ஞானமாக்கி… “ஞானத்தால் ஜீவ ஆத்ம பலம் உய்யும் வழித் தொடர் கொண்டு…!”

MAHA SHIVRATRI

உண்ணாமல் இருப்பது விரதமா…! தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…?

சிவன் இராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.
1.ஆனால் எது விரதம்…?
2.தீமைகளை நுகராமல் இருப்பது தான் விரதம்.

சாப்பாடு சாப்பிடாமல் விரதம் இருக்கின்றேன் என்று உடலில் உள்ல நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அது எல்லாம் சோர்வடையும்.

சோர்வடைந்த நிலையில் என்ன நடக்கும்…?

ஏதாவது ஒரு சாமானை எடுத்து வரச் சொல்லியிருந்தால்.. அல்லது பிள்ளையிடம் சொல்லிக் கடையில் போய் வாங்கிக் கொண்டு வா..! என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே பையன் வரச் சிறிது காலதாமதமாகிவிட்டால் என்ன ஆகும்…?

டேய்… நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாயேடா…! என்று வேகமாகக் கோபம் வந்துவிடும்.

நீங்கள் விரதம் இருக்கும் பொழுது வெளியில் போய் ஒரு சாமானை வாங்கச் சொல்லி உங்களிடம் வந்து சொன்னால் உடனே… “உனக்கு இந்த நேரம் தான் கிடைத்ததா…? போடா…!” என்று விரட்டுவோம்.

அப்பொழுது எதை விரதமாக இருக்கின்றீர்கள்…!
1.நல்லதை வளர்க்காதபடி நாம் விரதம் இருக்கின்றோம்.
2.ஆக விரதம் என்றாலே நாம் என்ன என்றே தெரியாமல் இருக்கின்றோமே…!

விரதம் என்பது எது..? தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்து தீய அணுக்களாக விளையாதபடி தடுக்க வேண்டும். நல்ல அணுக்களுக்கு நாம் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். எதை…?

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு இந்த உணவைக் கொடுக்க வேண்டும்.

சண்டை போட்ட குடும்பங்கள் இருக்கும். அவர்கள் உணர்வை நாமும் நுகர்ந்திருப்போம். சண்டையிட்டதை நுகர்ந்தது நமக்குள்ளும் இருக்கும். அப்பொழுது அவர்களும் நாமும் பிரிந்து இல்லை.

அதே மாதிரி ரோட்டில் போகும் பொழுது ஒரு பிச்சைக்காரன் அவஸ்தைப் பட்டிருப்பான். பரிவுடன் அதைக் கேட்டறிந்து அவனைக் காப்பாற்றியிருப்போம்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்ந்த பின்னாடி ஓ…ம்… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலில் சேர்த்து விடுகிறது. அப்பொழுது அவனும் நாமும் பிரிந்தில்லை.

அப்பொழுது அந்த உணர்வுகள் அணுவாகி விட்டால் அவன் உணர்வுகள் இங்கே வந்ததும் என்ன செய்யும்…? நம் உடலிலும் அந்த அவஸ்தைப்படும் அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடும்.

ஆனாம் நாம் உதவி தான் செய்தோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் அதை நமக்குத் துடைக்கத் தெரியவில்லையே…!

நல்லது செய்யும் நிலையில் நம்மை அறியாமல் இந்த மாதிரி நமக்குள் வரும் தீமைகளைத் துடைப்பதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள்.

1.நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? என்பதற்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள்
3.உலகிலேயே வேறு எங்கும் இத்தகைய நிலைகள் கிடையாது,
4.இயற்கை எப்படி இயங்குகிறது… எப்படி விளைந்தது…? என்று
5.சூட்சம நிலைகள் (கண்ணுக்குத் தெரியாதது) நம்மை எப்படி இயக்குகிறது என்று
6.உருவம் அமைத்து அருவ நிலைகளை நாம் எப்படி நுகர வேண்டும் என்பதை
7.நினைவுபடுத்தும் ஆலயமாகத் தான் அன்றைய ஞானிகள் அதற்குள் உருவங்களை வைத்தார்கள்…!

ஆனால் அந்த உருவங்களை நாம் இன்று அவமதிக்கின்றோம். தெய்வங்களைப் பார்த்து ஆசைகளைத் தான் பெருக்குகின்றோமே தவிர
1.தன்னை அறியாது வந்த தீமைகளைப் போக்கும் ஆலயம் என்று எண்ணுவதில்லை.
2.தீமைகளைத்தான் சேர்த்துக் கொள்கின்றோமே தவிர தீமைகளை நீக்கும் அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் இல்லை.

சிவன் இராத்திரி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்…?

முதலில் சொன்ன மாதிரி ரோட்டில் எத்தனையோ உணர்வுகளைப் பார்த்திருப்போம்… ஒருவருக்கொருவர் சண்டையிட்டவர்களைப் பார்த்திருப்போம்… அந்த நினைவுகள் வரும்.
1.அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
2.அவர்களை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட வேண்டும்.
3.மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெறவேண்டும்.

இப்படி இந்த நினைவுகளை எல்லாம் அன்றைய நாள் முழுவதும் கூட்டி நல்லதாக நமக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமைகளையே நுகராதபடி… விரதம் இருப்பது என்பது இது தான்…!

தவறு செய்வதை உணர்த்தும் மெய் வழி

அருள் ஞானிகள் தங்களுக்குள் விளைய வைத்த சக்தி வாய்ந்த உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போல் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். நடக்கும் உண்மைகளை அது அவ்வப்பொது உங்களுக்குள் உணர்த்தும். அதே சமயத்தில் மற்றவர்களுக்கும் இந்த அருள் உணர்வுகள் சென்று உண்மையை உணர்த்தும்படி செய்யும். 

 

தன்னைத் தான் தான் உணர்ந்து… 

மலரின் நறுமணமும் மகரிஷிகளின் அருளாசியும்… 

வீணையின் நாதம் நீ… 

Guru protection

குருவின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இவ்வுலகம் தோன்றி உருளும் உணர்வில் ஒவ்வொரு அணுவும் தோன்றி வளரவும் உணர்வின் ஈர்ப்பு அமிலம் கொண்டே உருவாகி உணர்வாகி வந்த நிலையை நம் சித்தர்கள் காட்டிய வழியில் இராமாவதாரத்தில்
1.தந்தையின் குணத்தை உயர்த்தியும்
2.தந்தைக்குப் பின் தான் தாயின் நிலை காட்டப்பட்டுள்ளது.
3.அதே போல் உலகின் தெய்வமான சிவசக்தி என்ற சிவனை முதலிலும்
4.சக்தியின் நிலையைப் பிறகும் தான் உணர்த்தினர்.

ஆனால் நாம் வணங்கும் தெய்வத்தில் தாயை முதலிலும் தந்தையைப் பிறகும் தான் உணர்த்திக் காட்டி வணங்குகிறோம். இதன் உண்மை என்ன…?

எல்லாமே ஆதிசக்தியின் படைப்புத்தான்…!

1.ஆதிசக்தியின் படைப்பில் – “ஆவியான சக்தி நிலை”
2.திடம் பெறும் நிலைக்குச் “சிவன்” என்ற நாமத்தைச் சூட்டி
3.திடப்பட்ட பிம்ப நிலையின் ஈர்ப்புத் துடிப்பிற்குச் “சக்தி” என்ற பெண்ணின் நாமத்தைச் சூட்டினர்.

சிவ பிம்ப ஈர்ப்பு சக்தி நிலையை நம் சித்தர்களினால் ஆவியான அமிலம் திடம் கொள்வதை சிவன் என்ற நாமம் சூட்டி அதன் ஈர்ப்பு நிலைக்குச் சக்தி என்ற பெண்பாலை உணர்த்தினார்கள்.

அவ்வீர்ப்பின் சுழற்சி அலைத் தொடர் வளர்ப்பின் நிலையில் வழி கொண்ட ஜீவ சக்தியின் படைப்பில் “தாய் தந்தை” என்ற உண்மை நிலை உருப்பெறுகின்றது.

1.படைப்பின் படைப்புத் தான் சிவ சக்தியின் படைப்பு.
2.படைக்கப்பட்டவனின் படைப்பு தான் அனைத்து ஜீவாத்மாக்களின் படைப்பெல்லாம்.
3.இந்நிலையில் சக்தி கொண்டு ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று வளர “ஜீவ சக்தி கொண்ட குரு நிலை தேவை…!”

இராமாயண மகாபாரதக் காவியங்களில் எல்லாம் குருவின் நிலையை ஆண்டவனுக்கு முதலில் காட்டிய நிலை என்ன..?

ஞான சக்தி பெற… ஆரம்பத் தொடர் நிலைக்கு நம்மைக் காட்டிலும் சக்தி கொண்ட குரு நிலை தேவை.
1.நீரான சக்தி ஈர்ப்பில் (மனித பிம்ப உடலில்) காந்த மின் அலையின் தொடர் நிலையை
2.நேராக நாம் பெறுவது என்பது கடினமாகின்றது.
3.நம்மை ஒத்த ஜீவ உடல் கொண்ட ஞான சக்தியின் வழி பெற்ற குரு அமைந்தால்
4.நம் எண்ணத்தை அவர்பால் செலுத்த
5.அவர் எடுக்கும் அலையின் நிலையிலிருந்து
6.நம் ஞானத்திற்குகந்த அலையினைத் திருப்பி அனுப்பிட முடியும்.

ஜீவனற்ற சக்தியின் தொடர்பைக் காட்டிலும் ஜீவனுடன் கூடிய குரு நிலை அமைந்து அவர்பால் நாம் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப காந்த மின் அலையின் தொடரை நாம் ஆரம்பக் காலத்தில் எடுப்பதற்கு உதவி நிலை கிட்டுகிறது.

குருவின் உண்மை நிலை 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இந்நிலை தான் இருந்தது. காலப் போக்கில் குருவானவர்களே தன் ஞானத்தின் வழியைப் பிறர்பால் செலுத்தி “அவர்கள் தன்னைக் காட்டிலும் உயர் நிலை கொண்டு விடுவார்கள்…!” என்ற எண்ண ஓட்டத்தினால் எல்லாமே மாறிவிட்டது.

அதுவமல்லாமல் சிலர் எடுத்துச் செயல்படுத்திய வழி நிலையை உணர்ந்தெடுக்கும் ஜீவாத்மாக்களும் செயல்படுத்தவில்லை.

மனித உரு கரு வளர்ந்த காலம் முதல் கொண்டே குரு சிஷ்யன் என்ற வழித்தொடர் இருந்து கொண்டு தான் இருந்தது, இன்றும் உண்டு. ஆனால் பக்தி நிலை கொண்டு பணிந்து வணங்கும் நிலை தான் உண்டே தவிர ஞானத்தின் நிலையின் ஈர்ப்பு வழித் தொடருக்கு குருவின் செயலை எடுப்பாரில்லை.
1.குருவின் தொடர்பால்…
2.தானே கிட்டும் என்ற நிலை தான் இன்றும் உள்ளது.

ஆனால் சக்தி வாய்ந்த சக்தியிலிருந்து தான் பல சக்திகள் உருப்பெறுகின்றன.
1.உருப்பெற்ற நிலையிலிருந்து மாறி மாறி வழித் தொடர் கொண்டு
2.உயர் சக்தியின் படைப்பில் தான் சக்தி வாய்ந்த சக்திக்கு மேல் சக்தி கொள்கின்றது இந்தச் சக்தி.

இது தான் உண்மை…!

galaxy near ursa major

மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் எப்படி உருவாக்க வேண்டிய முறை

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைத் தொடர்ந்து நீங்கள் கேட்டுக் கொண்டே வருகின்றீர்கள். இதிலே மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அன்புடன் பண்புடன் கேட்டறியும் மற்றவர்களின் உணர்வுகள்
1.உங்களுக்குள் அது எப்படி அறியாது தீய வினைகளாக உருவாகின்றது…?
2.நல்ல அணுக்களை உருவாக விடாதபடி எப்படித் தடுக்கிறது…? என்பதை நீங்கள் அறிந்து
3.ஒவ்வொரு நிமிடத்திலும் அதை நல்லதாக மாற்றும் சக்தியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
4.முருகு..! – மாற்றியமைக்கும் சக்தி பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு.

கோபப்படுவோரைப் பார்த்துவிட்டால் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் புறக் கண்களால் பார்க்கப்படும் பொழுது நுகர்ந்தது நம் உயிரிலே பட்டுத்தான் நம் உயிர் அகக்கண்ணாக இருந்து நமக்கு உணர்த்துகின்றது. ஆகவே கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றப்படும் பொழுது இது நெற்றிக் கண்ணாகின்றது.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்…! என்று ஏற்றப்படும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

ஆகவே சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான். புறக்கண்களால் பார்த்த இந்தக் கோபத்தின் உணர்வுகள் இங்கே வரப்படும் பொழுது இதை அடக்குகின்றது.

இப்படி அடக்கிய நிலைகள் வரப்படும் பொழுது யார் கோபப்பட்டார்களோ அவர்களைப் பார்க்கும் பொழுது
1.அவர்களை அறியாது இயக்கும் தீமைகள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெறவேண்டும்
3.ஒன்று சேர்த்து வாழும் அந்தச் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

குழம்பில் பல சரக்குகளைப் போட்டு அதைச் சுவையாக மாற்றுவது போல் அந்தக் கோப உணர்வுகள் நமக்குள் வளராதபடி அருள் உணர்வை எடுத்துக் கலந்தால் அந்த அணுவின் தன்மையாக உருவாகின்றது.
1.அத்தகைய அணுவாகி விட்டால்
2.அந்த அருள் உணர்வு (துருவ நட்சத்திரம்) தான் அதற்கு உணவாகத் தேவை.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் கருவாக்கி அணுவாக உருவாக்குகின்றது நம் உயிர். உயிரின் வேலை அது தான்…!

செடி கொடிகளில் பல உணர்வைச் சேர்த்து ஒரு புதுச் செடியாக உருவாக்கும் பொழுது
1.எதன் பங்கு விகிதாச்சாரம் வருகின்றதோ
2.அதன் வழி அந்தச் செடி வளர்ந்து அதனுடைய கனிகளையும் வித்துகளையும் உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் தீமைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் இப்படிச் செயல்படுத்த வேண்டும்.

 

நம் குலதெய்வங்கள் யார்…?

பெரும்பகுதி குலதெய்வங்கள் அனைவரும் அவர்கள் தீயிலே மாண்டவர்கள் என்று தான் சொல்வார்கள். இது எல்லாம் அரசர்கள் காலத்தில் செயல்படுத்தி மாற்றப்பட்ட நிலைகள்.  

 

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா விண் சென்ற நிலை – நடந்த நிகழ்ச்சி

மனிதனான பின் இன்னொரு உடல் நமக்கு வேண்டாம் 

இறந்தவர்களைப் பாசத்துடன் எண்ணலாமா…?

ramayana epic

ஞானத்தின் உயர்வால் மனிதன் தெய்வமாக முடியும்…! என்று காட்டப்பட்ட இராமாயணக் காவியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பேராசையின் உந்தலில் ஏற்பட்ட எண்ணத்தினால் பேராசைக்குகந்த நிலை பெறச் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு அச்சூழ்ச்சியின் இன்னலில் எற்பட்ட செயல்கள் எல்லாம் “இராமாயணக் காவியத்தில்” வடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இப்பேராசை உணர்வெண்ண ஆசையின் செயல்முறை எப்படி எப்படி எந்தெந்தச் சுற்றலில் இருந்தெல்லாம் சிக்கி… ஒரு மனிதனை… நற்குணம் அடைய வேண்டும் என்ற உணர்வு குணத்தை ஒரு வட்டத்திற்குள் சுழலவிட்டு…
1.மனிதனுக்குகந்த பண்பு பாசம் பக்தி வீரம் அன்பு ஆசை இப்படி ஒவ்வொரு குணத்தையும்
2.தந்தையின் சொல் மந்திர சக்திக்கும்
3.தமையனின் பாசப் பிணைப்பையும்
4.அன்பின் உருவைக் காதலிலும்
5.வீரத்தை வில்லாக்கியும்
6.பண்பைப் பலதிலும் படைத்துப் பிணைக்கப்பட்ட இராமனை அவதாரப் படைப்புக் காவியனாக்கி
7.வழிப்படுத்திக் காட்டிய இராமாவதாரக் காலத்தில் அன்றிருந்த நிலையைக் கொண்டு
8.அக்காலத்திற்குகந்த வாழ்க்கையின் முன்னேற்ற ஞானத்தைக் கொண்டு
9.இராமனாகப் படைக்கப்பட்ட உருவின் நிலையில்
10.ஆண்டவனான வழி நிலை பெறுகின்ற செயலனைத்துமே அன்றே காவியத்தில் வடிக்கப்பட்டன.
11.ஆனால்… ஆண்டவனாகப் பிறந்தவனின் இன்னல் நிலையை உணர்த்தி
12.ஆண்டவனின் சக்தியைக் காட்ட வடிக்கப்பட்ட காவியமல்ல இராமனின் காவியம்.

பேராசையின் எதிர் நிலையில் சிக்குண்ட ஆத்மா… “தன் உணர்வின் எண்ணத்தில் தெய்வ சக்தி பெறவேண்டும் என்ற எண்ண சக்தி இருந்தால்…”
1.வாழ்க்கையில் செயல் எதிர் பிம்பம் எதுவானாலும்
2.தன் ஞானத்தின் உயர்வினால் வரும் இன்னலில் இருந்தெல்லாம் மீண்டு
3.”தெய்வமாகலாம்…!” என்று உணர்த்தப்பட்ட காவியம் தான் இராமனின் காவியம்.

stepway to heaven

துன்பமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணம் நம் எண்ணங்கள் எங்கே செல்ல வேண்டும்…?

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இதை எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு யார் அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் சரி பாதி இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இந்தச் சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இதைப் போல் தான் ஒரு வேதனையோ கோபத்தையோ நாம் காண நேர்ந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று அதனுடன் இணைத்திட வேண்டும்.

அடுத்த நிமிடம் நம் எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.

எண்ணங்கள் அங்கே சென்று அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி வேதனைப்படுவோர் பெறவேண்டும்… அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அவர் குடும்பத்தில் அருள் ஞானம் பெருக வேண்டும்…! என்ற இந்த உணர்வை நாம் எடுத்து விட்டால்
1.அந்த வேதனை என்ற தீமையை நீக்கக்கூடிய சக்தி
2.நமக்குள் அணுவாக உருவாக்குகிறது.,

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மைதான் அதுவாக நம்மை மாற்றுகின்றது நம் உயிர்.

ஆனால் இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

உயிரை ஒளியாக்கும் சந்தர்ப்பம் – 27 நட்சத்திரம்

மரணம் அடைவதற்கு முன்னாடி அரிதாக சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்

பழி தீர்க்கும் உணர்வுடன் தெய்வங்களுக்குப் பலி கொடுப்பவரின் நிலைகள்

ஒருவருக்கொருவர் இன்று பகைமையாகி விட்டால் பழி தீர்க்கும் எண்ணம் கொண்டு ஆலயங்களுக்குச் சென்று வணங்குவார்கள். கருப்பணச்சாமி காளி அங்களேஸ்வரி போன்ற தெய்வங்களுக்குப் பலி கொடுத்துத் தங்கள் வேண்டுதலைச் சொல்வார்கள். ஆனால் பலி கொடுத்து வணங்கிய பின் நம் நல்ல குணங்கள் காக்கப்படுகிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

 

adolescent period

வாலிப வயதில் எடுக்கும் எண்ணத்தின் வீரியம் மனிதனின் அடிப்படை குணத்தை எப்படி மாற்றும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒரு சிட்டிகை உப்பெடுத்து நாக்கில் வைத்தவுடன் அதன் உவர்ப்புத் தெரிகிறது. அதே நாக்கு புளிப்பு துவர்ப்பு காரம் இவற்றின் சுவையையும் அறிகின்றது.

சுவையை உணர்வதைப் போல் மணத்தின் மாற்றத்தையும் முகர்ந்து உணர முடிகின்றது. ஒளியின் மாற்றத்தையும் கேட்டறிய முடிகின்றது.

இவ்வுலக சுழற்சி வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ்வின் அன்றாடச் செயலாக இவ்வுணர்வின் வட்ட ஈர்ப்பில் உழன்று வாழும் நாம் இவற்றை உணர உருவ நிலை கொண்ட ஆரம்பச் செயலுக்கு நம் ஈர்ப்பைச் செலுத்திப் பார்த்தோம் என்றால்
1.ஒவ்வொரு உயிர்த் துடிப்பு நிலை கொண்ட உயிரணுக்கள் தோன்றிய நாள் தொட்டே
2.அவற்றின் வழி அலைத் தொடரினால் உருவாகிய உணர்வின் சேமிப்புக் காலத்தில்
3.பல கோடிக் காலங்களாக ஒவ்வொன்றின் தொடரும் சிறுகச் சிறுக ஒவ்வொரு வளர்ச்சி நிலை மாறி மாறி
4.இவ்வுணரும் பக்குவ நிலை அமிலக்கூட்டு உருவ மனிதனாக உருப்பெறும் காலத்தில்
5.பன்னிரெண்டு குண அமிலத்தைச் சேமித்ததன் மூலம்
6.மனித பிம்பச் சேமிப்பிற்குத் தேவையான வளர்ச்சி நிலை மனிதனாக ஆன பிறகு
7.சேமித்ததன் சக்தி இவ்வேழு பிம்ப உடல்களுக்கு ஜென்மம் எடுக்கக்கூடிய அமிலக் கூட்டு நிறைந்த பிறகுதான்
8.மனித பிம்ப உடலையே பெறுகிறது.

இவ்வாறு உருப் பெற்ற அனைத்தையும் உணரும் (SELF REALIZATION) உணர்வு மனிதனின் உணர்வு கூடிய எண்ண ஞானத்தைச் செலுத்தும் நிலைக்கொப்பத்தான் அமிலக்கூட்டை நிறைத்து (உடலிலே விளைய வைத்து) மனித பிம்ப உடல் கொண்டவனின் அவரவரின் செயல் திறன் அமைகின்றது.

1.பிம்ப உடலின் பிறப்பிலேயே பிறப்பெடுத்து வளர்ந்து
2.வயது நிலையின் நிலைக்கொப்ப உருவ வளர்ச்சியின் மாற்றங்களும்
3.ஞான சக்தியின் உணர்வாற்றலும் செயல்படுகின்றன.

“உருவ வளர்ச்சி நிலை” குறிப்பிட்ட காலத்துடன் நின்று விடுகின்றது. ஆனால் உணர்வின் எண்ண ஈர்ப்பு ஞானத்திற்கு…
1.உடலின் வளர்ச்சிப் பருவம் எய்திய காலத்தில் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்
2.ஒவ்வொரு மனிதனின் குண நிலை செயல்படுகிறது.

பருவ வளர்ச்சிக் காலத்தில் (ADOLESCENT AGE) மனித பிம்பத்தின் ஈர்ப்பின் அமில குணமே
1.மிகவும் வீரிய காந்த மின் அலையின் சக்தியை
2.மின்சாரத்தின் ஈர்ப்புப் பாய்ச்சலைப் போன்று பாயும்
3.அமில வளர்ச்சியின் சேமித குணமான அடிப்படை அமைகின்றது.

“அத்தருணத்தில் வெளிப்படுத்தும் முறை கொண்ட மனிதனாகத்தான்” மனித ஜென்ம காலம் வரை ஒவ்வொருவனின் குண நிலையும் அமைகின்றது.

இவ்வுணர்வலையின் ஈர்ப்பு சக்தி “துரித ஓட்டத்தில்… ஓடும் காலமிது…!”

அதனைச் செலுத்தும் முறை கொண்ட… மனித வாழ்க்கை முறை பெறும் காலத்தை… எச்சக்தியில் செயல்படுத்துகின்றனரோ…!
1.அதன் உணர்வு ஈர்ப்பு அமிலத்தின் சேமிப்பை – அத்தருணத்தில் தான்
2.குணத்தின் அடிப்படை உணர்வு சேமிதம் உள்ளது.

பல துறைகளில் முன்னேறுபவர்களுக்கும் “அக்காலத் தருணம் தான்” ஏற்றதாக அமைகின்றது. அதி உல்லாச காமுக வழித் தொடரில் செல்பவனும் இப்பருவ கால ஈர்ப்பில் எடுக்கும் எண்ணத்தின் வழித் தொடர் மனிதனாகத்தான் ஒவ்வொருவனும் வாழ்கின்றான்.

1.இதனை மாற்றி அமைக்கும் செயலாக
2.எச்சக்தியைக் கொண்டு செயல்படுத்துவது…! என்பதும் கடினம் தான்.

உணர்வின் எண்ணத்தின் வழித் தொடர் அமிலமுடன் வழி கொண்ட நாம் அவரவர்களின் நிலைக்குகந்த செயல் வழியை “நினைத்த மாத்திரத்தில் மாற்றிக் கொள்வது…!” என்பது கடினமாகிறது.

பிறரால்…
1.அவர்களின் நற்சக்தியைச் செயலாக்கித் தீயவர்களை நன்மை ஆக்குவது என்பதும்
2.தீயவன் நல்லவனைத் தீமைப்படுத்துவதற்கும்
3.அந்தந்தக் குண அமிலத்தின் நிலையிலிருந்து மாற்றுவது கடினம்.

உணர்வினால் எடுத்த அமிலத்தின் வளர்ச்சியின் குண மனிதன் அவன் அலைத் தொடரில்தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றான்.

இந்நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்…?

1.மிகவும் சக்தி வாய்ந்த காந்த மின் அலையின் ஈர்ப்பை எடுத்து
2.அவர்களின் எண்ணமும் – நல்லுணர்வின் பால் சக்தி அலையின் ஈர்ப்புடன் “கலக்கப் பெற்றால் தான்…!”
3.எச்சக்தியின் அலையும் அவர்கள் உடலில் பாய்ந்து
4.அவர்களின் குண நிலையின் வழித் தொடரையே மாற்றியமைக்க முடியும்.

முந்தைய இராமாவதார கிருஷ்ணாவதாரக் காலங்களில் காவியங்களில் காட்டப்பட்ட போர்களில்… ஒருவருக்கொருவர் போர் செய்யும் பொழுது…
1.ஒருவர் வில்லிலிருந்து வரும் அம்புடன் எதிர்த்து வரும் அம்பும் மோதுண்ட பொழுது
2.ஒளி நிலை பெற்று ஒன்றுடன் ஒன்று ஊடுருவி எதிர்நிலை கொண்டு
3.அதனதன் நிலைக்கே திரும்பிச் சென்றதாகக் காவியக் கதைகளில் படித்திருப்பீர்கள்.
4.உண்மையைக் கதைப்படுத்தி மறைக்கப்பட்ட தத்துவங்கள் பல உண்டு அவற்றில்…!

வான்மீகி மகரிஷியால் இராமாயணக் காவியத்தில் எழுதப்பட்ட அந்த உண்மையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல கருத்துக்கள் உண்டு. “இன்று வரை அதன் உண்மைப் பொருளை உணர்ந்தாரில்லை…!”

ஞானிகள் கொடுத்த காவியங்களில் உள்ள மூலங்களை அறிந்திட முற்படுங்கள்..! அருள் வழியில் நடந்திட அதிலே தக்க உபாயங்கள் உண்டு.

soul is god

உள் நின்று இயக்கும் இயக்கத்தைச் சொல்லி “உங்களை நீங்கள் நம்புங்கள்…” என்று சொன்னாலும் எத்தனை பேர் தன்னை (உயிரை) நம்புகிறார்கள்…!

சாமி…! என்ற எண்ணத்தில் என்னைத் (ஞானகுரு) தேடி வருவார்கள். இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். அப்புறம் என்ன…?

இந்த மாதிரி ஒருவர் என்னைத் தேடி வந்தார். மருத்துவர் போட்ட ஊசியினால் (INJECTION – SEPTIC) செப்டிக்காகி மூன்று வருடமாக நடக்க முடியாமல் இருந்தவர்.

மற்ற யாரிடமோ கேள்விப்பட்டு இங்கே தபோவனத்திற்கு வந்தார். ஒரு வாரம் இங்கே இருந்து தியானம் மற்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டவுடன் நடக்க முடியாமல் இருந்தவர் நன்றாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தார்.

நடந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா…?

சாமி…! எங்கள் ஊரில் இருக்கும் கூட்டம் எல்லாம் இங்கே வந்து குவியப் போகிறது…! என்றார் என்னிடம்.

எதற்கப்பா…! என்றேன்.

பாருங்கள்… நான் எப்படி நடக்கிறேன்…! எங்கள் ஊரிலே இதைக் காண்பித்துச் சொன்னவுடன் எத்தனை பெரிய கூட்டம் வரும் பாருங்கள்…! என்றார்.

எனக்குத் தொல்லை கொடுப்பதற்கா…? என்று கேட்டேன்.

இல்லை…. சாமி….! எனக்குக் கால் நன்றாக ஆனது. அது போல் எல்லோருக்கும் நன்றாக வேண்டும் என்ற நிலையில் வருவார்கள்…! என்றார்.

சரிதானப்பா..! என்றேன்.

ஊருக்குப் போய்விட்டு நான் வருகிறேன்… என்று சொல்லிப் போனார். ஆனால் அதற்குப் பின்னாடி பத்துப் பதினைந்து நாள் ஆனது. ஆளையே காணோம்…!

அதற்குப் பின்னாடி ஒரு மூன்று வருடத்தில் காய்க்கும் தென்னை மரக் கன்றையும் ஒரு சீதா மரக் கன்றையும் வாங்கிக் கொண்டு இங்கே வந்தார்.

சாமி… நான் நன்றாக நடந்தேன் அல்லவா…! திருப்பதி வெங்கிடாசலபதிக்கு நான் வேண்டியிருந்தேன். “கால் நன்றாகி நான் நடந்தேன்” என்றால் அங்கே வந்து காணிக்கை போடுகிறேன் என்று வேண்டியிருந்தேன். ஒரு ஐம்பதினாயிரம் வரை அந்தப் பணம் இருந்தது.

இங்கிருந்து நிறையப் பேரைக் கூட்டிக் கொண்டு அங்கே போனேன். அவர்களுக்காகச் செலவழித்தேன். மீதி இருந்த இருபத்தி ஐந்தாயிரம் பணத்தை உண்டியலில் காணிக்கையாகப் போட்டேன்.

உங்களுக்கு ஞாபகார்த்தமாக இந்த தென்னை மரத்தையும் சீதா மரத்தையும் கொண்டு வந்துள்ளேன். இது மூன்று வருடத்தில் காப்புக் காய்க்கும்…! என்று சொல்லி என் கையாலே இங்கே ஊன்ற வேண்டும் என்றார்.

(அவர் ஊன்றி வைத்தார்… ஆனால் அடுத்து அது சரியாக வளரக்கூட இல்லை)

கட்டாயமாக அந்த மரக் கன்றுகளை ஊன்ற வேண்டும் என்று வைத்தார். அப்புறம் போனார்… வந்தார்.

சாமி… நடக்க முடியாத காலத்தில் நான் வெங்கிடாசலபதிக்குக் கோரிக்கை வைத்திருந்தேன்.
1.பாருங்கள்… நான் கால் சரியானவுடனே மலை மீது கிடு…கிடு…கிடு.. என்று ஏறிப் போனேன்.
2.எப்படிப் போனேன்…! என்று எனக்கே ஒன்றும் தெரியவில்லை.
3.எல்லோருக்கும் தாராளமாகச் செலவழித்துக் கூட்டிக் கொண்டு போய்விட்டு என் கோரிக்கையை நிறைவேற்றி வந்தேன் என்றார்.

மிகவும் நல்லதப்பா.. வெங்கிடாசலபதி தான் இதைச் செய்தார்… நீ அவனுக்குத் தான் செய்ய வேண்டுமப்பா…! என்றேன்.

அந்த வெங்கிடாசலபதி யார் என்று தெரியுமாப்பா..? என்றேன்.

என்னங்க..! “ஏழுமலையான்…” என்றார் அவர்.

ஏழுமலையான் என்றால் யார் தெரியுமா…! என்று கேட்டேன். ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக “ஒளியாக இங்கே பள்ளி கொண்டான் வெங்கிடாசலபதி…” என்று காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

திருவேங்கிடம்…!
1.நமக்குள் இயக்குபவன் இந்த உயிர் தானப்பா..!
2.உன் உயிர் தான் இந்த நிலைகளை எடுத்து உருவாக்குகிறதப்பா…!
3.இவனை மறந்து விட்டாயே..!
4.நீ அங்கே கொண்டு போய் அல்லவா எல்லாம் செய்திருக்கிறாய்…! எத்தனை கஷ்டப்பட்டாய்…? என்றேன்.

இப்படிச் சொன்ன பிற்பாடு.. ஹும்…! உச்…! என்னமோ நான் கோரிக்கை வைத்திருந்தேன்… அதைச் செய்யவில்லை என்றால் அது என் மனைதை உறுத்திக் கொண்டேயிருக்கும். “அவனால் ஆனது” என்ற நம்பிக்கை இருந்தது… அதனால் அப்படிச் செய்தேன்…! என்றார்.

சரியப்பா.. போறும்…! என்றேன். இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பேர் இப்படி உண்டு…!

இங்கே வந்து சௌகரியமான பின் வெங்கிடாசலபதி காப்பாற்றினார்.. காளி காப்பாற்றினாள்… என்று அங்கே மொட்டை எடுத்துக் காணிக்கை செலுத்தி விட்டு வந்தேன் என்று சொல்கிறார்கள். ஒரு ஆட்டைக் கூட வெட்டிப் பலி கொடுத்தேன்…! என்பார்கள்.

ஆட்டை வெட்டிப் பொங்கல் வைக்கிறேன் என்று நான் நேர்த்திக் கடன் வைத்திருந்தேன். அதனால் அதைச் செய்தேன்…! என்று
1.தன் பாவத்தைப் போக்க இன்னொரு பாவத்தைச் சேர்க்கும் நிலை தான் உள்ளது.
2.இந்த நிலைகளில் தான் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

அடங்கப்பா..! நீ பாவம் செய்யாதே..! என்று இங்கே சொன்னால் பாவத்தை அல்லவா மீண்டும் சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள்.. என்று சொல்கிறோம்.

ஆனால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தபோவனத்தில் நடந்து கொண்டு தான் உள்ளது. ஏனென்றால் இன்னமும் பரம்பரை வழக்கங்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் பிரகாரம் தான் நம்முடைய உணர்வுகள் இயக்குகிறது.

இதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நீங்கள் கோவிலாக மதித்துப் பழக வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அந்த அரும் பெரும் சக்தியான நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்துப் பழக வேண்டும்.

வேதனையோ சலிப்போ சஞ்சலமாகவோ அந்த உணர்வுகள் இந்த உடலான கோவிலுக்குள் போகாதபடி நாம் எப்படிக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்றோமோ அந்த மாதிரி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நம் உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நீங்கள் செய்யக்கூடிய சேவை..!

இன்றைய உலகில் பலருடன் பழகுகிறோம். எத்தனையோ விதமான உணர்வுகளை நீங்கள் பார்க்க நேர்கிறது. அந்தத் தீமையான உணர்வு உங்களுக்குள் வந்தால் அந்தத் தீமை தான் உங்களை இயக்குகிறது.

உதாரணமாக ஒருவன் உங்களைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். “என்னைத் திட்டினான்…திட்டினான்…!” என்று அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் உங்கள் ஆண்டவனுக்குத் தீங்கு செய்கிறீர்கள்…! என்று தான் பொருள்.

1.அதற்குப் பதில் திட்டியனுக்குள் இருக்கும் அறியாத இருள் அகல வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும்
3.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
4.மனப்பூர்வமாக எண்ணினால் நீங்கள் அங்கே தெய்வமாகின்றீர்கள்.
5.உங்கள் எண்ணம் உங்களை உயர்த்துகிறது. உங்கள் மூச்சு அவர்களுக்கும் நல்லதாகின்றது.

இன்றைய பக்தியும் அருளாடும் நிலையும்

ஆலயங்களுக்குச் சென்று தெய்வச் சிலைகளைக் கூர்மையாக உற்றுப் பார்த்து பக்தி நிலைகள் கொண்டு எண்ணி வணங்குகின்றோம். ஆனாலும் இந்த வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் துயரங்கள் என்ற நிலையில் நோயாகி உடலை விட்டுச் சென்ற பின் மீண்டும் அடுத்த பக்தி கொண்டவர்களின் உடலில் ஈர்க்கப்பட்டு அருளாடும் நிலையே வருகிறது. 

 

படிக்கும் மாணவ மாணவிகளுக்குள் அறியாது புகும் ஆன்மாக்களின் இயக்கங்கள் 

சில கைக் குழந்தைகள் அழுது கொண்டே இருப்பது ஏன் 

love is gods

பிறரைப் பார்த்து “பாவம்…!” என்று இரக்கப்படுவது பற்றியும் மற்றவர்களைப் பார்த்துப் பச்சாதாபப்படுவதையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.உணர்வின் எண்ணத்தை எந்த ஒரு செயலின் எண்ணத்திலும்… நம் எண்ண ஈர்ப்பிலும் செல்லாமல்
2.இவ்வுடலின் அமில குணத்தை நற்குணங்களின் அமில வளர்ச்சியுடன் வளரவிட்டாலும்
3.நம் எண்ணத்தின் உணர்வைச் சங்கடமும்… பரிதாபமும்… பச்சாதாபமும்… காட்டும் உணர்வலைக்குச் செலுத்திடலாகாது.

பரிதாபப்பட்டுப் பிறரின் எண்ணமுடனே நம் உணர்வின் எண்ணத்தையும் அவர்களின் உள்ள நிலைக்கு இரங்கி நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் நம் உணர்வும் அதே சுழற்சியில் சென்று விடுகிறது.

அப்பொழுது அவர்களின் உடல் அமிலக் கூட்டின் எண்ண அலையை நம் ஈர்ப்புக்குள்… “அவர்கள் பால் செலுத்தும் எண்ணத்தால்” எடுத்துக் கொள்கிறோம்.

நம் உணர்வுகள் “பாவம்…!” என்ற பரிதாபச் சுழற்சி வட்ட உணர்வு அமிலத்தை ஏற்பதினால்… நம்முள் உள்ள உயர் குண அமில சக்தியினைப் பிறர்பால் செலுத்தும் உணர்வின் எண்ணத்தால்
1.நம் நிலைக்கும்
2.நாம் செல்ல வேண்டிய வழிக்கும் தடை ஏற்படுத்துகிறது.

நற்சக்தியை… ஆண்டவன் என்ற நிலை அடைய… ஆண்டவன் பால் செல்ல எல்லா உயிர் ஆத்மாக்களிடமும் அன்பைச் செலுத்துங்கள்..! என்று இன்றைய கலியில் பல மகான்களாக ஞானத்தின் வழித் தொடரில் வந்த நாம் அறிந்த பலரும் கூறியுள்ளார்கள்.

இருப்பினும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பிம்ப உடலில் பல இன்னல்களைப் பெற்று அதே செயலில் உடல் பிம்ப வலுக் குன்றியதனால் அவர்களின் வாழ்நாட்களில் பல சக்திகளைப் பெற்றிருந்தும் இவ்வுணர்வின் எண்ண செயல்முறை செலுத்தும் வழி முறை அறியாமல் பிறரின் எண்ண உணர்வு நிலையின் சுழற்சியில் சிக்கி விட்டனர்.

இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ரமண மகரிஷியாகப் பலர் போற்ற இருந்தவரின் நிலையும் இன்னும் இவர்களைப் போல் ஞானத்தின் ஈர்ப்பில் வந்தவர்களும்
1.எண்ணத்தின் உணர்வைப் பிறர்பால் “பரிதாபம்” கொண்டு செலுத்தி
2.இவர்கள் செலுத்திய அன்பின் பரிதாப நிலையினாலேயே
3.அவர்களின் உணர்வு எண்ண அலையின் ஈர்ப்பு இவர்கள் உடலிலும் “சாடியது…”
4.அதனால் தான் ஞானத்தின் வழி பெற்றிருந்தும் உடல் பிம்பக் கூட்டைக் காக்க முடியவில்லை.
5.உடல் பிம்பக் கூட்டிற்கு மட்டுமல்ல… நாம் எடுக்கும் உணர்வின் எண்ண உயர் ஞானச் செயலுக்கும் “இவை எல்லாம் தடைக்கற்கள் தான்…!”

இம்மனித பிம்ப உடல் “உணர்வு எண்ண ஈர்ப்பிற்கு” மிகவும் சக்திவாய்ந்த நிலையுண்டு…!

எண்ணமுடன் எடுக்கும் சுவாச அலையில் காந்த மின் ஈர்ப்பு குண உயிரணுக்களாக இவ்வுடல் முழுமைக்கும் ஈர்த்தெடுத்து வெளிக் கக்கும் இவ்வலையின் ஈர்ப்பு நாம் எடுக்கும் எண்ணத்தில் ஈர்ப்புடன் மோதுகிறது.

இங்கு இப்பொழுது உணர்த்தும் முறை கொண்டு
1.பிறர்பால் அன்பு செலுத்திடலாகாதா..?
2.பிறரிடம் இரக்கம் காட்டிடலாகாதா..?
3.பிறருக்கு நம்மால் முடிந்த தான தர்மங்கள் அளித்திடலாகாதா..? என்று கேட்கலாம்…!

பிறர்பால் அன்பைச் செலுத்தாதீர்…!

“பிறருக்கு அன்பான குண நிலை பெறவேண்டும்…” என்ற
2.அன்பலையை அவர்கள் வளர்க்க
3.அவர்களுக்கு “நம் எண்ணத்தால் நல் நிலை பெறட்டும்…” என்று
4.இந்த உணர்வைச் செலுத்துங்கள் “அன்பாக்கி..!”

நம்மைச் சார்ந்தவரும் சரி… நாம் கண்டுணர்பவரும் சரி… அவர்கள் படும் துயரமுடன் நம் உணர்வையும் பரிதாபமாக்கி… நம்மையும் பரிதாபப்படுத்திக் கொண்டு..
1.அவர்கள் அலையுடன் நாம் ஒன்றாமல் – நம் சக்தி அலையைக் கொண்டு
2.அவர்களுக்கு நல் நிலை நடக்கட்டும்..! என்ற ஒளி அலையைப் பாய்ச்சுங்கள்.

அவர்கள் உயரவும்… உடல் நலம் பெறவும்.. நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
1.”நல் நிலை” அவர்கள் பெற நம் உணர்வின் எண்ணம் செல்ல வேண்டுமேயன்றி
2.நம் உணர்வையும் எண்ணத்தையும் அவ்வுணர்வின்பால் செலுத்திடலாகாது.

அதே போல் தர்ம நிலைக்கும்… இரக்கத்தின் உணர்வால் ஒன்றி தர்மம் செய்யாமல் “பல துயரங்களில் அவர்கள் உள்ளார்கள்…” என்ற இரங்கிய தர்மம் தராமல்
1.நாம் தரும் தர்ம ஈகையினால் அவர்கள் பெற்று உயர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி
2.நாம் தரும் தர்மம்… பெறுபவரையும் உயரும் எண்ணத்திற்குச் செல்லும் முறையில்
3.நம் தர்ம முறையும் இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நம் ஞானத்திற்கு…
1.பிறரின் ஈர்ப்பால்
2.அவர்களின் குண ஈர்ப்பின் எண்ணமுடன் நாம் ஒன்றியவுடன்
3.நம் நிலையும் மாறும். (இது முக்கியம்)

நாம் அறிந்த பல ஞானிகளும் அவர்கள் இரங்கிப் “பிறர்பால் செலுத்திய அன்பினாலேயே..” அவர்கள் ஞானமும் குறைந்தது.

யாம் சொல்லும் இத்தகையை பரிபக்குவ உணர்வைக் கொண்ட எண்ண ஜெபத்தில் எடுக்கும் நிலையைக் கொண்டுதான்
1.நம்முள் சேர்ந்துள்ள அமில குணத்தின் வளர்ச்சியினால்
2.சக்திவாய்ந்த ஒளி அலையின் காந்த மின் அலையின் ஈர்ப்பை
3.அந்த மெய் ஞானிகளிடமிருந்து பெற முடியும்.

karaiyan-_-termite

கரையான் மந்திரத்தைப் பற்றி மெய்ஞானக் கரையான் ஈஸ்வரபட்டர் கூறியது

ஒரு சமயம் கரையான் புற்று அருகிலே என்னை அமரச் செய்தார் குருநாதர்.

கரையான் என்னுடைய தசைகளை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நான் போட்டிருந்த வேஷ்டி டிராயர் எல்லாமே மண்ணாகிவிட்டது.
1.கையில் தொட்டால் கரையான் நசுங்கிவிடுகிறது
2.ஆனால் அந்தக் கரையானுக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அதிலே விளைந்த அமிலச் சத்து உன் உடமைகளில் பட்ட பின் அது கரைந்து எவ்வாறு சுக்குநூறாகத் தெறிக்கிறது…! என்று காட்டுகிறார்.

என் உடலை ஒன்றும் செய்யவில்லை என்றாலும் இந்த நகங்கள் கரைகின்றது. கரையானில் எதனில் வலிமை இருக்கின்றது…? என்று சற்று சிந்தித்துப் பார்…! என்றார் குருநாதர்.

அந்தக் கரையான் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது. அந்த கரையானின் உணர்வுகளைப் பல நிலைகள் உனக்குள் சேர்த்து இதை இன்னென்ன வழியில் இன்னென்ன உணர்வுகளுடன் இணைத்து அதை நீ கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.இதனின் உணர்வின் ஒலி அலைகளை (உதாரணமாக) ஒரு பொருளுடன் இங்கே இணைத்து
2.ஒரு ஆயிரம் முறை அதை வெளிப்படுத்தும் பொழுது
3.இந்தப் பொருளுக்குள் இந்த உணர்வுகள் அது செலுத்திவிடுகின்றது.

மீண்டும் வேறொரு பக்கம் சென்று அங்கே அமர்ந்து அதற்குண்டான உபாயத்தைச் சொல்லி இந்த உணர்வுகளை… ஒலிகளை… “நீ ஈர்க்கும் தன்மையில் இந்த ஒலிகளை எழுப்பு…!” என்றார்.

அப்பொழுது அங்கே கரைந்த அவ்வளவு பெரிய பொருள் இங்கே சிறு துவாரத்தின் வழியாக அது எப்படி நுழைந்து வருகிறது…? அது உருபெறுகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

இது தான் “கரையான் மந்திரம்…!” என்பது.

ஆகவே அந்தப் பொருளில் பாய்ச்சிய இந்த உணர்வுகளை அதிலுள்ள காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்ட பின்
1.மீண்டும் இந்த ஒலிகளை எழுப்பப்படும் பொழுது இதனுடைய அளவுகோல் இது கூடிய பின்
2.எத்தகைய உலோகத்தையும் அது கரைத்து ஆவியாக மாற்றுகின்றது.
3.மீண்டும் அதற்கு எதிர்மறையான உணர்வுகளை இணைத்த பின்
4.ஒரு ஊசி புகும் அளவு துவாரம் உள்ள பெட்டிக்குள் அணுக்களாகச் சென்று
5.பொருளாக எப்படி உறைகிறது என்ற நிலையையும் காட்டுகின்றார்.

வேதங்களில் அதர்வண வேதம் என்ற நிலைகளில் இன்று மந்திரம் தந்திரம் என்று இதைச் சொல்வார்கள்.
1.கடவுளையே நான் கைவல்யப்படுத்தியுள்ளேன் என்று பொருள்களை வரவழைத்து
2.மக்களை மதிமயக்கச் செய்து பல மாயாஜாலங்களைக் காட்டி
3.இந்த உடலின் இச்சைக்கே அவர்கள் செய்கின்றார்கள் என்று இங்கே தெளிவாக உணர்த்துகின்றார்.

ஏனென்றால் இந்தக் கரையானின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து கொண்ட பின் அதிலே சில ஒலி அலைகள் – நுண்ணிய அலைகளை வெளிப்படுத்தி அதையும் எனக்குக் காட்டுகின்றார் குருநாதர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு எலெக்ட்ரிக்குடன் நுண்ணிய அலைகளாக ஒலிபரப்புச் செய்யப்படும் பொழுது இந்த ஓசையைக் கண்டு கொசுக்கள் இங்கே வராது அஞ்சி ஓடுகின்றது.
இதைப் போல் தான்…
1.மெய் ஞானக் கரையான் உணர்வைக் கண்டுணர்ந்த நம் குருநாதர்
2.ஈஸ்வரபட்டர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்தக் கரையான் உன் ஆடைகளை எப்படிக் கரைத்ததோ… உன் நகத்தைக் கரைத்ததோ… இதை போல் அதிலே உள்ள உணர்வின் ஒலி அலைகளை நீ கவரப்படும் பொழுது எதனுடன் இணைக்கின்றாயோ அது கரையும்.

ஏனென்றால் பூமியிலே உலோகத் தன்மையிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அது தாவர இனங்களாக வளர்ந்து
1.அதனின் சத்தின் தன்மை மறைந்து
2.அதை உணவாக உட்கொண்டு ஜீவ அணுக்களாக உருவாகும் நிலைகள் எப்படி வந்தது…?
3.இது எல்லாம் எவ்வாறு உருமாறுகிறது… உருபெறுகிறது… உருமாற்றமாகின்றது…! என்று காட்டினார் குருநாதர்.

அது தான்.. ரிக் சாம அதர்வண மறுபடியும் யஜூர் மீண்டும் சாம. அந்த உணர்வின் தன்மைகள் எவ்வாறு மாறிக் கொண்டு வருகிறது என்ற நிலைகளைத் தான் நம்முடைய வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

சாதாரண மக்களும் தன்னை அறிந்திடச் செய்யும் அவ்வளவு பெரிய வேத சாஸ்திரங்களுக்குள் தன் சுயநலன்களுக்காக கடும் தவறுகளை உருவாக்கி அதற்குள் இருக்கும் மூலங்களையே மறைத்து விட்டார்கள்.

இந்த உடலின் இச்சைக்காக உபயோகப்படுத்திய அவனும் மடிந்தான் அவனைப் பின்பற்றிய அனைவரும் இன்றும் மடிந்து கொண்டே உள்ளார்கள். எதனின் ஆசையைத் தனக்குள் வளர்த்தனரோ அதன் வழிகளிலே தான் இன்றும் உள்ளார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கரையான் புற்றில் குருநாதர் கொடுத்த அனுபவம் – கரையான் மந்திரம்

கையில் தொட்டால் நசுங்கும் கரையானுக்கு எவ்வளவு பெரிய ஆற்றல் உள்ளது…? என்று நேரடியாகக் காட்டினார் “மெய் ஞானக் கரையான் மாமகரிஷி ஈஸ்வரபட்டர்…!” 

ஜாதகம் தோஷம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை – வாஸ்து நியுமராலஜி நவரத்தினம்

ஜாதகத்தின் உண்மை நிலைகள் 

direct connection - sages

உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தின் மூலம் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

ஆனால் ஆவி நிலையில்… “பல எண்ண அலையில்” உள்ளவர்களுக்கு என்ன ஆகிறது…?

அவர்களின் எண்ண வீரிய குண நிலைக்கொப்ப அவர்களின் உணர்வுடன் ஒத்த எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று போல் உள்ள நிலையில் “இவ்வுலகில் வாழ்ந்த பொழுது நிறைவேறா ஆசையுடன் சென்ற ஆவிகள்” (அதன் ஆசையை நிறைவேற்ற) இவர்களின் எண்ணத்தின் ஒத்த நிலை ஈர்ப்பு உள்ளதனால் இவர்கள் உடலில் அவைகள் ஏறிச் செயல்படத் தொடங்கிவிடுகிறது.

அப்படிச் செயல்பட்டாலும் அவ்வாவிகள் வளர்ந்த நிலையும் அவ்வாவிகள் வளர்த்துக் கொண்ட சக்தி அலையும் இவர்களின் உணர்வு ஞான சக்தி அலைக்கும் உகந்த செயல் வடிவ வளர்ச்சி ஓட்டத்தில் தான் “அதுவும்” அந்த உடல் உள்ளவரை தான் செயல்புரிய முடியும்.

1.ஆக… எந்த ஒரு செயல் ஞானம் கொண்ட நிலை கொண்டுள்ளனரோ
2.அதே வட்ட உணர்வு வளர்ப்பில் வாழ்ந்து
3.தன் வாழ்க்கையில் அவர்களின் ஆசையின் மேம்பாடு என்று உணரும் ஒவ்வொரு செயலிலும்
4.அதனின் வளர்ச்சி ஓட்டத்தில் உடலுடன் உள்ளவரையிலும் (இறக்கும் வரை) அந்த ஞானம் செயல்பட்டு
5.உடலை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் இதே உணர்வலை சுற்றலைக் கொண்டு
6.எத்துறையில் உயர்ந்து உழன்று உருப்பெற்று வாழ்ந்ததோ அதே சுழற்சி ஓட்டத்தில்
7.மீண்டும் மீண்டும் அந்நிலைக்குகந்த வளர்ச்சி ஈர்ப்பிற்குத்தான் செல்கிறது.

முன்னேறிய விஞ்ஞானம்… விஷய ஞானம்… இசை ஞானம்…! எதுவாக இருந்தாலும் சரி…
1.ஓர் சுழற்சி வட்ட ஞான ஓட்ட வளர்ச்சி சுழற்றலில் தான் சுழன்று கொண்டே இருக்க முடியுமேயன்றி
2.உயர் ஞானச் செயலுக்கு ஒளி ஞானத்திற்குச் செல்ல முடியாது (இது முக்கியம்)

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி நம் எண்ணத்தை அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.

gayatri-wallpaper

காயத்ரி மந்திரம் சொல்லலாமா…?

காயத்ரி என்ற உணர்வு உண்டு. “காயத்ரி ஜெபம்” செய்ய வேண்டும் என்றாலே அதற்குண்டான மந்திரங்களைச் சொல்வார்கள்.

காயத்ரி ஜெபம் என்று மந்திரத்தைச் ஜெபிக்க ஆரம்பித்தார் என்றால் இன்னொரு மனிதனின் உடலில் விளைந்த உணர்வைத் தான் தனக்குள் எடுத்துக் கொள்ள முடியும்.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் வேதங்கள் என்ற நிலைகளில் அந்த அதர்வண வேதத்தைத் தான் கற்றுணர்ந்து வந்துள்ளோம்.
1.அந்த மந்திரத்தின் ஒலிகளையே நமக்குள் பரப்பி
2.இந்த உடலுக்குப் பின் இன்னொருத்தன் கையிலே ஆவியாகவும் பேயாகவும் நாம் அடிமையாகிச் சுற்றிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு வேதனைப்படுவோரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம் தான்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.என்னிலே அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று திரும்ப எண்ணினால் இதுவும் தியானம் தான்.

இதிலே எந்தத் தியானத்தை நீங்கள் எண்ணுகிறீர்கள்…!

வேதங்கள் கூறியது போல் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தோம் என்றால் “சக்தி கிடைக்கிறது…” என்று சொல்லித்தான் அதைச் செய்வார்கள். சூரியனை எண்ணி விட்டால் அது காயத்ரி என்பார்கள்.

ஆனால் அது எந்த காயத்ரி…? என்பது வேண்டுமல்லவா…!

ஒருவரிடமிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்பட்டால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

அதாவது வெப்பம்… காந்தம்… விஷம்… என்ற மூன்று நிலைகளில்
1.அந்த வேதனைப்படுவோரின் உணர்வுகளைக் காந்தம் கவர்ந்து கொண்டால்
2.அது தன்னுடன் இணைந்த நிலையில் பரப்பிரம்மமாகின்றது.
3.அந்த உணர்வின் சத்து ஒரு அணுத் தன்மை அடையும் சக்தி பெறுகின்றது – சீதாலக்ஷ்மியாக மாறுகின்றது.
4.ஆனால் அதே சமயத்தில் சேர்த்துக் கொண்ட மணம் அது ஞானமாக இருக்கின்றது.
5.அந்த வேதனைப்படும் உணர்வு அது தான் காயத்ரி… காயமாகி.. முழுமையாகின்றது.
6.அதை யார் சுவாசித்தாலும் அதே வேதனைப்படுத்தும் உணர்வாகத்தான் அது இயக்கும்.
7.இப்படி அந்தப் பொருள்படும்படி “காயத்ரி” என்றால் புலனறிவு ஐந்து…!
8.அதிலே எந்த உணர்வின் சக்தியை எடுக்கின்றதோ அதன் வழி தான் அது நடக்கும்… அல்லது இயக்கும் என்று
9.வேதங்களின் மூலத்தில் இது மிகவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…! என்றால் இல்லை.

மந்திர ஒலிகளை எழுப்பும் நிலைகளிலிருந்து விடுபட்டு அந்த அருள் ஞானி அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம் செல்ல வேண்டும்.

அகஸ்தியன் ஒளியின் உணர்வாக முழுமை பெற்று இன்றும் அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தப் பேரருள் உணர்வை நமக்குள் விளையச் செய்து இந்த உடலுக்குப் பின் நாம் பிறப்பில்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

மனிதன் இடும் சாப அலைகள் அவன் இறந்த பின் மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது…?

முன்னோர்களின் சாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் 

குடுகுடுப்புக்காரன் மண்ணையும் முடியையும் பழைய துணியையும் ஏன் கேட்கின்றான்…?

நான்கு வேதங்களைப் பற்றிய மெய் விளக்கம்

நான்கு வேதத்தில் உலகமே எப்படி அடங்கியுள்ளது…? பல புத்தகங்களைப் படித்தாலும் விளங்க முடியாத வேதங்களின் மூலத்தை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளுங்கள்.

power of human soul

மனித ஆத்மாவுக்குண்டான “அரிதான சக்திகள்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று விஞ்ஞானத்தில் ஒலிப் பதிவு செய்த நாடாக்களில் காந்த அலையை மின்சாரத்தினால் பாய்ச்சி அதனை ஒலிக்கச் செய்து கேட்கின்றனர்.

அதைப் போன்று இவ்வுடல் என்ற கூட்டு அமிலமுடன் உயிர் அணு தோன்றி ஜீவ உணர்வு எண்ண சக்தி வளர்ந்த நாள் தொட்டே பல கோடிச் சரீரங்களில்.. ஒவ்வொரு உயிர் ஜீவனின் உணர்வு எண்ண சுவாசத்தில் எடுத்த நினைவலைகள் அனைத்துமே நம் உடலில் பதிவாகியுள்ளது.
1.அப்படிப் பதிவான உணர்வெண்ண அலையில்
2.பல ஜென்மங்களில் எடுத்த எண்ண நினைவலைகளும் உண்டு.

அதன் குண நிலைத் தொடரில் தான் இன்றைய பிம்ப உடலின் உணர்வு நினைவு எண்ண ஓட்டங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அப்படிப் பதிவாகியுள்ள உடல் கூறு தான் இது.

ஆகவே…
1.இவ்வுடல் உணர்வு எண்ணமுடனே (அந்த ஓட்டத்திலேயே) நம் எண்ணத்தைச் செலுத்தினோமானால்
2.ஆத்ம சக்தி நல்லுணர்வின் வழித் தொடர் பெற முடியாமல்
3.அணைகட்டாமல் செல்லும் நீரைப் போல் தான் அதன் வேக நிலைக்கொப்ப செல்லும்.

உணர்வின் எண்ணம் கொண்டு நற்சக்தியின் ஞான ஒளி அலையை இவ்வுடலில் ஏற்கனவே பதிவாகியுள்ள பலவான உணர்வுகளில் கலக்கச் செய்திட வேண்டும் (இது முக்கியம்).

1.அத்தகைய எண்ணங்களையும் நினைவுகளையும்
2.நற்சக்தியின் நல் எண்ண குணத்தை வழிப்படுத்தக்கூடிய எண்ணத்தில் நம் வாழ்க்கை நடைமுறை இருந்திட்டால்
3.நாம் எச்சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வின் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
4.அச்சக்தியின் எண்ணமுடன் நம் வாழ்க்கை செயல் இருந்திட்டால்தான்
5.நம் ஆத்மாவும் நல் ஞானச் சக்தியின் வழித் தொடரைப் பெற முடியும்.

உடலில் மட்டுமல்லாமல் உடலை விட்டுப் பிரிந்தவர்களின் (இறந்தவர்களின்) எண்ண நினைவு சப்த அலைகள் “அந்தந்த உயிராத்மாவின் சுழற்சியுடன்” இக்காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டே அழியாமல் தான் உள்ளது.

இதனை உணர முடியுமா…?

இன்று நாம் பேசியதை நாடாக்களில் அமிலத்தைப் பூசி காந்த மின் அலையின் சக்தியினால் பதிவு செய்து பல காலங்களுக்கு அதனைக் கேட்க முடிகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களின் தொடர்பலையையும் நாம் நம் எண்ணத்தால்… அவர்கள் பால் செலுத்தும் உணர்வு ஞானத்தால்… எந்த ஒரு உடலை விட்ட ஆத்மாக்களுடனும் தொடர்பு கொள்ள ஜீவ பிம்ப மனித உடல் கொண்டோரால் முடியும்.

இம்மனித ஞானத்தில் மட்டும் தான் முடியும் என்பதல்ல…!

நம்முடன் வாழ்ந்த ஜீவன் பிரிந்த ஆன்மாக்கள் அவர்கள் அவர்களால் விரும்பி வாழ்ந்த காலத்தில் அவர்களின் உடம்புடன் தரித்திருந்த பொருள்களில் காந்த மின் அலையின் சக்தியை சில அமிலங்களின் கலப்புக் கூட்டைப் பூசி அவர்கள் பேசிய அலையையும் எடுக்க எடுக்கலாம். அவர்களின் இன்றைய எண்ண ஒலியையும் எடுக்கலாம்.

இவ்வுடல் கூட்டிற்கு ஜீவ நீர் சக்தியினால் எச்சக்தியையும் செயலாக்கவல்ல ஆற்றலுண்டு. “சகல லோகங்களையும் காணவல்ல ஆத்மக் கூடு இது” (நம் ஆன்மா).

1.ஆனால் நம் உணர்வின் எண்ணமெல்லாம் “இவ்வாழ்க்கை” என்ற ஏக்கச் சலிப்பு நிலையுடனே இருப்பதாலும்
2.பெரும்பாலும் தன் சக்தி குண அமிலத்தையே கூட்டும் வழியிலிருந்து
3.குறைக்கும் ஈர்ப்பு ஓட்டமான ஓட்ட கதியில் செலுத்தி விடுவதாலும்
4.நம் ஆன்மாவுக்குண்டான சக்தியை அறியாமலேயே வாழ்கின்றோம்.

இவ்வுணர்வின் எண்ணத்தையே நாம் நல்லெண்ண குண அமில நிலையில் வளர்த்துக் கொண்டோமானால் ஒவ்வொரு மனித ஆத்மாவும் எந்த ஒரு பேரின்ப நிலை பெறவேண்டும் என்று அன்றைய ஞானிகளும் சபதரிஷிகளும் உணர்த்தி உள்ளார்களோ அதன் உணர்வெண்ண நினைவுப்படி அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடைய முடியும்.

GNANAGURU DETINATION

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் இருப்பதே “உண்மையான தியானம்…!”

நோயால் வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் உதவி செய்கிறோம். ஆனால் அந்த வேதனை என்பது வலிமை பெற்றது. நம் உடலுக்குள் சென்று விட்டால் அதே நோயை உருவாக்கும் தன்மை வந்துவிடுகிறது.

உடனே நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திவிட்டு நம்முடைய எண்ணம்
1,துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வேதனைப்பட்டவர் பெறவேண்டும்
2.அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று
3.இந்த உணர்வை உந்தித் தள்ள வேண்டும்.

ஒரு இரண்டு பேர் ரோட்டிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை நாம் பார்க்கின்றோம்.

அடப்பாவிகளா..! இப்படிச் சண்டை போடுகிறார்களே…! என்று எண்ணினோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போட ஆரம்பித்துவிடும். நம்மை அறியாமலே அந்த அணுக்கள் போர் முறை செய்யும்.

அப்பொழுது அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஒரு இரண்டு நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி எண்ணி நம் உடலுக்குள் அந்தச் சக்திகள் போன பிற்பாடு நம் ஆன்மாவை விட்டே அந்த உணர்வுகளைத் தள்ளிவிடும். அந்தச் சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போகின்றது. நம் ஆன்மா தூய்மை ஆகிறது,

அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

சண்டை இட்டவர்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெறவேண்டும் என்று சொன்னால்
1.இந்த நல்ல உணர்வை நாம் நுகர்ந்து
2.புதிதாக அந்த நல்ல அணுவை உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.
3.அவர்களின் தீமை உணர்வுகளை உருவாக்குவதில்லை.

இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

இன்று நான் அரை மணி நேரம் தியானம் செய்தேன்… ஒரு மணி நேரம் உட்கார்ந்து தியானம் செய்தேன்… குண்டலினி சக்தியை ஏற்றினேன் என்று “எல்லாம் செய்தேன்…!” என்று சொன்னாலும் இந்த உணர்வுகளை எடுத்த பிற்பாடு
1.அடுத்தாற்போல் வேதனைப்படுவோரைப் பார்த்த பின்னாடி
2.அதை வேகமாக நம் உடல் “இழுக்கும்…” நோய் நிச்சயமாக வரும்…!

இதைப் போன்ற நிலைகளை மாற்ற “அவ்வப்பொழுது…” நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதைத்தான் “வாழ்க்கையே தியானம்…” என்பது.

தியானம் செய்… என்ற பின் “நான் தியானம் செய்கிறேன்..” என்று சொல்கிறார்கள். எல்லாம் தியானம் செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் ஒருவன் என்னைத் திட்டினான் என்று சொன்னால் அந்த அருள் ஒளியைப் பெறுவதற்குப் பதில் “திட்டினான்..திட்டினான்…திட்டினான்…” என்று இந்தத் தியானத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றோம்.

நானும் தியானம் தான் இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் சரியாக மாட்டேன் என்கிறது…! என்று தியானம் இருப்பவர்களிலேயும் சிலர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
1.தன்னை அறியாது இயக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி இருந்தும்
2.அதைப் பயன்படுத்தாத நிலை ஆகிறது.

ஏனென்றல் நாம் ஒவ்வொரு நிமிடமும்…
1,இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற
2.அந்தச் சிந்தனையுடன் நாம் இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது என்ன…?

கடலில் படகில் செல்கிறோம் ஒரு எல்லையை அடைவதற்கு. அதிலே போகும் பொழுது எத்தனையோ அலைகள் மோதுகிறது. நாம் எல்லையைக் குறியாக வைத்துத்தான் அங்கே போகிறோம். அந்தத் துடுப்பைச் சீராகப் போட்டால் அங்கே செல்லலாம்.

இதைப் போல் தான் நம் வாழ்க்கையிலே
பாச அலை
அன்பு அலை
வெறுப்பு அலை
வேதனை அலை
சலிப்பு அலை
சங்கட அலை
கோப அலை
குரோத அலைகளில் எல்லாம் நாம் மூழ்கிக் கொண்டேயிருக்கின்றோம்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

அந்த அருள் ஒளி என்ற துடுப்பை எடுத்து அந்த அலைகளை எல்லாம் பிளந்து இந்த வாழ்க்கை என்ற பயணத்தைச் சீராகச் செலுத்திடல் வேண்டும். நம்முடைய எல்லை “அந்தத் துருவ நட்சத்திரம் தான்…!”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வளர வேண்டும் என்றால் அடுத்து நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும். இது வேகா நிலை.

இல்லை என்றால் சாகாக்கலையாக நாம் மீண்டும் வந்து விடுகின்றோம். நாம் இப்படி இருந்தேன் இப்படிச் செய்தேன் என்று இங்கே எண்ணிக் கொண்டிருந்தால் சாகாக்கலையாக வந்துவிடுகின்றது மறுபடியும் உடலின் தன்மைக்கே வந்துவிடுகின்றோம்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை. இதைப் போல் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் “நாம் என்றும் வேகுவதில்லை…”

இந்தச் சூரியனே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த நிலையை மனிதனாக ஆன பின் நாம் அனைவரும் பெறுதல் வேண்டும்.

அதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.

இருந்தாலும்…
1.இது என்னடா…?
2.சாமி அப்பொழுதும் சொன்னார்.. இப்பொழுதும் சொல்கிறார்…! என்று இதை விட்டுவிட்டீர்கள் என்றால்
3.இந்தக் கணக்கு உங்களுக்குத் தப்பாகப் போகும்.

இந்த உணர்வை நினைவைக் கூட்டி உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்… உங்களுக்குள் அது கருவாகின்றது.

கோழி என்ன செய்கிறது..? அது சும்மா கேறிக் கொண்டே இருக்கும். எந்தச் சேவலோடு சேர்ந்ததோ அதை எண்ணிக் கேறியது என்றால் அதே மாதிரி நிறத்துடன் குஞ்சுகள் வரும்.

இதே மாதிரித்தான் என்னைத் திட்டினான்… இப்படிச் செய்தான்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் அதே உணர்வு நமக்குள் கருவாகின்றது.

ஆனால் அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்ற உணர்வைத் திரும்பத் திரும்ப எடுத்தால் இது கருவாகும். வாழ்க்கையில் வரும் அந்த இருளை அகற்றும்.

அந்தச் சக்தி பெறவேண்டும் என்பது தான் “உண்மயான தியானம்…!”

குரு விண் சென்ற உணர்வும் முன்னோர்களை விண் செலுத்த வேண்டிய கடமையும்

குருநாதர் விண் சென்ற உணர்வுகளை நுகர்ந்து எடுத்து நமக்குள் சேர்த்து நம் முன்னோர்களையும் நாம் விண்ணுலகம் அடையச் செய்ய வேண்டும். 

சாங்கிய சாஸ்திரங்கள்படி காசைக் கொடுத்து யாரையும் மோட்சம் அனுப்ப முடியாது

சொர்க்கவாசலைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…? 

சாங்கிய சாஸ்திரத்திற்கும் மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்திற்கும் உண்டான வித்தியாசம் 

soul protection and lock

உணர்ச்சி வேகத்தை அணைகட்டி நாம் சமப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.உணர்வையும்
2.எண்ணத்தையும்
3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.

இவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.

இவ்வுடல் பிம்ப உணர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே
2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.
3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.

ஏன்… எப்படி…? எதனால்..?

ஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே…! பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.

1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்
2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்
3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)
4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாறவிடாமல் தடைப்படுத்தும்.

இயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.

1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழைநீர்
2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.
3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந்த நிலையிலும்
4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.

உணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…!

ஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.

ஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…?

வாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்
1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்
2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்
3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.
4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…!”

அதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.

ஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்
1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்
2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.

ஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.

first and foremost god

ஐய்யய்யோ… என்று பதறுவதற்குப் பதில் “அம்மா…!” என்று தாயை அழைத்து உங்கள் துன்பங்களிலிருந்து விடுபடுங்கள்

மனிதனாகப் பிறப்பதற்கு முன் நாம் பாம்பாகவோ தேளாகவோ இருந்திருப்போம்…! நம்முடைய அம்மா அதை அவர்கள் பார்த்துத் தங்கள் பாதுகாப்பிற்காக அடித்துக் கொன்றிருப்பார்கள்.
1.நம் உயிர் அவர்கள் உடலுக்குள் சென்றிருக்கும்.
2.போனவுடன் இந்த உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.

தேளாக இருந்தவர்கள் கருவான பிற்பாடு நம் தாய் என்ன செய்கிறது..? மனிதனாக உருவாக்குகிறது…! என்று குருநாதர் எமக்குத் தெளிவாக்குகின்றார்.

ஆகவே நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்..? நம் அம்மா அப்பாவின் உயிர் தான். கடவுளாக இருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்.

அப்பொழுது கடவுள் யார்…?

அம்மா அப்பாவை முதலில் தெய்வமாக வணங்கிப் பழக வேண்டும். யாராவது அப்படி நினைக்கின்றோமோ…? என்றால் இல்லை.

தாயைத் திட்டுபவர்கள் நிறையப் பேர் உண்டு. பெண் பிள்ளையாக இருந்தாலும் கூட ஏதாவது எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் தாயைக் கோபித்துத் திட்டுபவர்கள் உண்டு. ஆண்களிலும் தன் அம்மாவைத் திட்டுபவர்கள் நிறைய உண்டு.

இத்தகைய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். பத்து மாதம் அந்தத் தாய் சிசுவைச் (நம்மை) சுமக்கின்றது. அந்த உண்மையை உணர வேண்டும்.

இப்பொழுது நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு நாளைக்குத் தலையில் கல்லை வைத்துப் பாருங்கள். சுமக்க முடிகின்றதா…?

ஆனால் நம் தாய் நம்மைப் பத்து மாதம் சுமக்கிறது. சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் இந்த உணர்வுகளை எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைப் பட்டு நாம் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. பிறந்த நிலையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன்னாடி ஏதாவது நாம் செய்தோம் என்றால்
1.உதாரணமாக ஒரு நெருப்பையே தொடுகின்றோம் என்றால் அடட.. டேய்.. நெருப்புடா…! என்று பதறி
2.நம்மை உடனே அந்தத் தெய்வமாக இருந்து காக்கின்றது.
3.குருவாக இருந்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பது நம் தாய் தான்…!

இன்று நாம் எத்தனை பேர் தாயை மதிக்கின்றோம்..? பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றோம்… இப்படி இருந்தாலும் தாயை மதிப்பவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

திடீரென்று ஒரு எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் தாயைக் கோபிக்கக்கூடியவர்கள் தான் இருக்கின்றார்கள்.

தாயை நினைத்து வணங்கி..
1.அந்தத் தாய் அருள் வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

இத்தகைய நிலைகளை நாம் வளர்த்துக் கொண்டால் எங்கே போவோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள்.

எத்தனையோ துன்பப்பட்டு என்னை வளர்த்தாய்…! என்ற நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெறவேண்டும்
2.எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்திட வேண்டும்
3.மலரைப் போல் மணமும் அந்த மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும்
4.என்றென்றும் எனக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று தாய் தந்தையை இப்படி வணங்க வேண்டும்.

இந்த மாதிரி எண்ணினீர்கள் என்றால் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆழமாக நமக்குள் பதிகின்றது.

எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
1.அம்மா…! எனக்கு இந்த நோய் நீங்க வேண்டும்
2.அந்த அருள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

தாய் இதே மாதிரி “என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று தான் எண்ணுகிறது.
1.இந்த உணர்வை நீங்கள் நுகர்ந்தீர்கள் என்றால்
2.உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

சந்தர்ப்பத்தில் ஒரு காட்டுக்குள்ளேயே நீங்கள் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புலியோ யானையோ துரத்தி வருகிறது என்றாலும் “அம்மா…!” என்று நீங்கள் சொன்னால் போதும்.

அந்தப் புலியானாலும் யானையானாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டுக்குள் போகச் சொல்லி தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

நான் போய்க் கொண்டேயிருப்பேன். பாதையில் திடீரென்று புலி வந்தது என்றால் ஐய்யய்யோ..! என்று சப்தம் போடுவேன். அப்பொழுது அந்த இடத்தில் உடனடியாக உணர்த்துவார் குருநாதர்.

டேய்… உன் அம்மா எங்கேயடா.. போய்விட்டது…? என்பார். உன் அம்மாவை நினைடா…! என்பார்.

அவர் சொன்னதும் “அம்மா…!” என்று சப்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வருகிற புலி அப்படியே நிற்கிறது. இப்படி… எல்லாவற்றையும் அனுபவத்தில் தான் குருநாதர் கொடுத்தார்.

நீங்களும் உங்கள் தாயை நினைத்து அவர்களின் அருளைப் பெறுங்கள்..
1.மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நீங்கள் பெறுவீர்கள்…!

கோடிக்கரை இராமேஸ்வரம் தனுசுகோடி

இதிகாசங்களில் உள்ள மூலக் கருத்துக்களை நாம் அறிந்திருக்கின்றோமா

இராவணனை-தசப்பிரியன்-என்று-ஏன்-சொல்கிறோம்

AIDS – எயிட்ஸ் நோய் உருவான விதம்

மூட்டைப் பூச்சிகள் மூலமாக நோயை உருவாக்கிய அமெரிக்காவின் நிலை. பல விஞ்ஞானிகள் மடிந்த பின் தான் அதை அவன் உலகுக்கே தெரியப்படுத்தினான். 

vali sugriva

சூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் – விளக்கம்

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம்.
2.நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணினால் தவம்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொன்னால் அது தவம்.

என்னை ஒருவன் வேதனைப்படுத்துகின்றான் வேதனைப்படுத்துகின்றான் என்று எண்ணினால் இதுவும் தவம் தான். அந்த வேதனைப்படுத்துவோரை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அந்தத் தவத்தின் வழி கொண்டு நமக்குள் வேதனைபடுத்தும் தன்மை வரும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் பேரருள் எல்லோரும் பெறவேண்டும் என்று அந்தத் தவத்தை எடுத்துப் பழக வேண்டும்.

தவம் என்றால் என்ன…? தியானம் என்றால் என்ன..? என்றே தெரியாதபடி சிலர் தவமிருக்கிறேன் என்று சொன்னால் எதைத் தவமிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

தியானமிருக்கிறேன் என்ற நிலைகளில் எதைத் தியானம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. யோகா பயிற்சிகளிலும் பல வித்தியாசமான நிலைகளில் கொண்டு செல்கிறார்கள்.

எதனால்… எதை.. எப்பொழுது.. எந்த நிலைகளில் எடுக்க வேண்டும்…? என்ற உணர்வுகளைக் காட்டியிருந்தாலும் ஞானிகள் காட்டிய மரபுகளை மாற்றி இவர்களுக்குகந்த நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனகச் சக்கரவர்த்தி சீதாவுக்குத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அதை எல்லோருக்கும் பறைசாற்றுகின்றார்கள்.

சீதாவைத் திருமணம் செய்ய எல்லோரும் வருகின்றார்கள். அவர்வர்கள் குறி வைத்து ஒன்றைத் தாக்கும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அவரவர்களின் வல்லமையைக் காட்டுகின்றனர்.

அதே சமயத்தில் இராமன் தீமை செய்யும் அந்தத் தனுசையே (வில்லை) ஒடித்து விடுகின்றான். தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்த பின் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்றான்… “கல்யாணராமா…!”

1.அதாவது சந்தோஷமான உணர்வுகளை நமக்குள் அரவணைத்துக் கொண்டால்
2.தீமை செய்யும் எண்ணங்களை நீக்கிவிட்டால் நமக்குள் அனைத்தும் ஒன்று சேர்த்து வாழும்.

என்னை அப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று வேதனைப்பட்டால் உடலிலே நோய் ஆகிவிடுகின்றது.

அப்படி வராதபடி நம் எண்ணங்கள் அனைத்தும் எப்படி ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…? என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்…? என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்…? என்ற நிலையும் கோவிலில் இதை நமக்கு அழகாகச் சொல்கிறார்கள்.

உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகிறது என்ற நிலை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

உதாரணமாக சூரியனின் பிள்ளை தான் சுக்ரீவன். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்து வளர்க்கின்றது அதனதன் அறிவாக இயக்குகின்றது உதவிகள் செய்கின்றான் சுக்ரீவன்.

வாலி என்ன செய்கிறான்..? இந்த நோயாளியின் உணர்வை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்க நிலைகள் வருகிறது. நுகர்ந்தால் நம் நல்லதை வலுவிழக்கச் செய்கிறது. இதுவும் சூரியனின் புத்திரன் தான்.

ஆனால் அதை மாற்ற நாம் உயர்ந்த குணங்களைச் சொல்லப்படும் பொழுது நல்ல நிலைகளில் வாயுவாகச் சென்று இயக்கிக் காட்டுவது ஆஞ்சநேயன். அவனும் சூரியனின் பிள்ளை தான். அவன் மந்திரியாக இருக்கின்றான்.

அருள் உணர்வுகள் உடலுக்குள்ளே சென்றவுடன் இந்த உண்மையை உணர்த்தித் நன்மை தீமை என்ற நிலைகளைச் செயல்படுத்துகிறது என்ற நிலைகளை
1.இப்படி மூன்று பிரிவாகக் காட்டி (வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயன்)
2.இந்தச் சூரியன் எதைச் செய்கிறது…? என்றும்
3.நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்றும் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே அறியாது புகும் அந்தத் தீமையான எண்ணங்களை நீக்கிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் கல்யாணராமா…! நமக்குள் ஒன்று சேர்த்து வாழக்கூடிய நிலைகள் வளர வேண்டும். கோவிலில் இப்படி வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

அதன்படி நாம் தீமையை நீக்குகின்றோம் என்ற நிலையில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்…! என்று வாழக்கூடிய நிலை வருகிறது.

சூரியன் என்ன செய்கிறது…? தனக்குள் வரும் உணர்வை நஞ்சினை நீக்கிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் என்ன செய்கின்றான்…? நஞ்சினை நீக்கி விட்டு உணர்வின் அறிவாகத் தெரிகின்றான். இந்த அறிவின் துணை கொண்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையே மாற்றியமைக்கும் சக்தி தான் மனிதனின் ஆறாவது அறிவு.

அப்படி மாற்றியமைக்கும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் புருவ மத்தியின் வழியாக எடுத்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதை எல்லோரும் பெற்று அவர்களும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தான் உண்மையான தியானமும் தவமும்..!

lord krishna and lord rama

இராமனின் குணத்தையும் கிருஷ்ணனின் ஆற்றலையும் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பல நிலைகளால் பூமியின் நிலையே பூமியின் சுவாச நிலையே மாறு கொள்ளும் இத்தருவாயில் நம் உணர்வின் எண்ணத்தால் ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தில் மடியப் போகும் உயிரினங்களின் வழித் தொடர் செல்லும் மிகவும் ஈன நிலையிலிருந்து மீள முடியும்.
1.இப்படி உயர் செயல் குணமுள்ளது
2.இன்றைய மனித உடல் உள்ளவர்களுக்கு (உடல் இல்லாதவர்கள் என்ன செய்வது…?)

தன் உணர்வின் எண்ணத்தால் தான் எடுக்கும் ஜெபத்தால் தான் மட்டும் சக்தி பெறுவதோடு அல்லாமல் தன் உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி தான் வணங்கும் தன் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களையும் உயர் நிலைப்படுத்திட முடியும்.

எவ்வுடலில் இருந்து உடல் பெற்று வழி வந்துள்ளோமோ அவ்வுடலின் முன்னோர்களையும் தம் ஈர்ப்பு ஜெபத்தால் நாம் வணங்கி நாம் செல்லும் சப்தரிஷி மண்டலக் கூட்டுடன் சுழல விட்டுக் கொள்ள முடியும்.

ஏனென்றால் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்குத் தன் உணர்வினால் மனம் சுவை இவைகளைத்தான் எடுக்க முடியும். ஞானத்தை வளர்த்துக் கொள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களால் முடியாது.

அவர்களின் நிலை சிதறாமலும் மாறுபடாமலும் இருக்க உடலுடன் கூடிய ஜீவ பிம்ப உடல் மனிதனால்தான்
1.தன் எண்ண உணர்வில் அவர்களை நினைத்து வணங்கினால்
2.அவர்களின் உயிராத்மா வேறு ஈர்ப்பலைக்குச் செல்லாமல்
3.நாம் பாய்ச்சும் ஞானிகளின் எண்ண உணர்வு ஈர்ப்புக்குள் அவர்களின் நிலையும் சுழன்று கொண்டிருக்கும்.

ஏனென்றால் இன்று விஞ்ஞானத்தால் பூமியினுள் உள்ள நுண்ணிய காந்த அலையையும் காற்றில் கலந்துள்ள இவ்வலையையும் ஈர்த்தெடுத்து “எலெக்ட்ரானிக் காந்த மின் அலை ஈர்ப்புச் செயல் காண்பதினால்…” மிகச் சக்தி வாய்ந்த உடலை விட்ட உயிராத்மாக்கள் கூட ஈர்ப்புச் சிதறல் நிலை இன்றுள்ளது. உயர் நிலை பெறத் தடையாகி விட்டது.

இன்று விஞ்ஞானத்தில் இவ்வலையைப் பிரித்தெடுத்து பல செயல்களை செயற்கைக்கு உணர்த்துகின்றான்.

ஆனால் அதே காந்த நுண்ணிய மின் அலை ஈர்ப்பை ஈர்த்துத்தான் ஜீவன் கொள்கின்றது ஒவ்வொரு ஜீவனும். மனிதனின் உடல் பிம்பச் செயலே இக்காந்த நுண்ணிய மின் அலை ஓட்டம் தான்.

விஞ்ஞானத்தில் உலோகத்தின் இம்மின் அலை ஈர்ப்பைக் கொண்டு பல மண்டலங்களுக்கும் பல சாதனங்களைச் செலுத்தி உணர்ந்து வருகின்றான்.

1.இஜ்ஜீவ பிம்ப உடலிலேயே…
2.இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் சென்று காண வல்ல
3.அமிலப் படைப்பு ஈர்ப்பு காந்த மின் அலைகள் உண்டு.

இக்காந்த மின் அலையை எவ்வெண்ணத்தில் எவ்வுணர்வைக் கொண்டு பாய்ச்சுகின்றோமோ அதன் நிலையை நாம் அறிய முடியும். இவ்வுடலில் எல்லா உணர்வலையையும் ஈர்க்க வல்ல சக்தியுண்டு.

இதனை உணர்த்தத்தான் ஒவொரு கால கட்டத்திலும் கதை வடிவில் இராமனையும் கிருஷ்ணனையும் படைத்தான் அன்றைய ஞானி.

நற்குணங்களின் உருவமாய் இராமனின் கதையைப் படைத்தான். உலகமே இம்மனித பிம்ப ஈர்ப்பில் காண முடியும் என்பதனை உணர்த்த கிருஷ்ணனைப் படைத்துக் கிருஷ்ணனின் வாயைத் திறந்தால்… அண்ட சராசரங்களையும் கண்டதாகக் கதை உருக்காட்டினான் அன்றைய ஞானி.

இக்காற்றில் தான் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் அனைத்துச் சக்திகளும் உண்டு.
1.உணர்வுடன் உருவமுடன் உள்ள நாம்
2.இவ்வெண்ணச் சுவாசத்தால் இராமனின் குண அமிலத்தை ஈர்த்துக்
3.கிருஷ்ணனின் வாயில் கண்ட அண்ட சராசரங்களையும் காண முடியும்.

மனித பிம்ப உணர்வு எண்ணச் சுவாசத்தால் காந்த மின் நுண்ணிய அலை ஈர்ப்பை எச்செயலில் செலுத்தி நம் உணர்வு எண்ணச் சுவாசம் செல்கிறதோ அதன் செயலை நாம் செயலாக்க முடியும்.

நம்மைக் காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்த நம்மையே படைக்க வழி தந்த சப்தரிஷிகளின் தொடரில் இவ்வெண்ண உணர்வு சுவாச ஈர்ப்பிற்குச் செயலாக்க முடியும்.

1.முதலில் இராமனைப் போன்ற குணமாகுங்கள்
2.பிறகு கிருஷ்ணனின் காந்த நுண்ணிய மின் அலை உருவாகுங்கள்.
3.உருவை உணர்த்தி வழி அமைப்பான்… “நம்மை வழிப்படுத்தி வளர்ந்தவன்…!”

சாப அலைகள் எங்கள் குடும்பத்தில் இயக்கிய நிலைகள் – ஞானகுரு 

வேதனைப்பட்டு அல்லது வேதனைப்படுத்தி உடலை விட்டுப் பிரிபவரகளின் நிலை 

பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

உயிரினங்களின் ரூப மாறறங்களைக் காட்டிலே பார்த்தேன் – குரு காட்டினார்

பூச்சிகள் பல்லியாக எப்படி மாறுகிறது…? எலி எப்படிப் பூனையாக மாறுகிறது..? மான் புலியாக எப்படி மறுகிறது…? புலி எப்படி மலைப் பாம்பாக மாறுகிறது…? இதை எல்லாம் காட்டிலே வைத்துக் காட்டினார் குருநாதர். யானைக் கூட்டத்தில் என்னைச் சிக்க வைத்து பின் அதிலிருந்து தப்பச் செய்தார். புலியிடமிருந்தும் தப்பச் செய்தார். மனிதனிலிருந்து அவன் வாசனை பட்டு கொசு எப்படி உருவாகிறது என்பதையும் காட்டினார் ஈஸ்வரபட்டர்

Ramalingam ramewaran

நம் செயல்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் ஞானமுடன் செல்ல வேண்டிய “குறுகிய காலகட்டம் இது…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்கின்றது. வளர்ப்பின் படர் பலவாகிப் பலவின் பல வளர்ந்தே உருவாகி உருவாகி உருண்டோடும் உரு குண வளர்ப்புச் செயலில் தொடர் கொண்ட நிலையில் வளர்வது தான் அனைத்துமே.

ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து ஒவ்வொன்றாக வளரும் வளர்ச்சி கதியில் உருவாகி உணர்வாகி செயலாகி செயலில் வழி பெறுவது பல.

1.இயற்கையின் உண்மை உணர்வில் உருண்டோடும் சக்திகள் எல்லாமே “அவன் படைப்பென்றாலும்”
2.அவன் படைப்பிலிருந்து நல் ஒளி படைப்புப் பெறுவது தான் “இறை ஞானம்..” என்பது.

பலவாக உள்ள இந்த உலகில் இயற்கைப் படைப்பில் மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித ஞானத்தை உயர்வாகச் செயலாக்கும் சக்தி உருவாகியுள்ளது.

1.இறை ஞானத்தின் சக்தியை உணர்ந்து வழி ஞானம் பெறவல்ல ஆற்றல் மனித குண ஞானத்திற்குத் தான் உண்டு.
2.உயர்த்துபவன்… உயர்ந்தவன்…! என்ற வமிசக் கோட்பாட்டை அறியும் ஞானம் மனிதனுக்குண்டு.

மனிதன் வாழ மற்ற இயற்கையும் துணை கொள்கின்றது. தீயது என்ற நிலை உள்ளதினால் தான் நல்லதைப் பிரித்துக் காண முடிகின்றது. நற்சக்தியின் செயலிலே சகல வளர்ப்பும் இருந்ததென்றால் ஞானத்தின் வளர்ப்பு நிலை பெறுவது எப்படி…?

1.சக்தியின் ஸ்வரூபத்தில் சகலமும் உண்டு.
2.சகலமும் இருந்தால் தான்… சகலத்திலும் இருந்து “உயர் உணர்வு எது…?” என்று செயல் கொள்ள முடியும்.

உயர் நிலை உணர்ந்து… உயர் ஞான இறை சக்தி அடைய… ஞானத்தை உணர்ந்து செயல் கொள்ளக்கூடிய நிலை “மனித உரு வளர்ச்சி கொண்ட வழித் தொடரில் தான் உண்டு…!” என்பதை உணர்ந்து இந்தப் பூமியில் மனித இன வளர்ச்சியை ஊக்குவித்தனர் சப்த ரிஷிகள்.

குருவாக இன்று நாம் சொல்லும் “வியாழனின் ஞான ரிஷி” தான் வியாழனின் மனிதக் கரு உரு நிலையிலிருந்து மனிதனின் அமில குண வளர்ச்சி சக்தியை அம்மண்டலத்தில் மனித இனங்கள் வாழ முடியாத வளர்ப்பு நிலை கொண்ட மண்டலமாக வியாழன் மாறும் தருவாயில் இங்கே பூமியில் மனிதக் கருவை வளரக் காரணமானவர்.

அதாவது அந்தச் சூட்சம ஞானச் செயல்… மனித இனத்தின் சுழற்சி வட்டம் சப்தரிஷியினால் ஈர்த்தெடுக்கப்பட்டு மீண்டும் மனிதக் கரு உருவாகவும்… மண்டலமாக நம் பூமியின் சக்தி அலையை வளர்க்கவும் செய்து… இப்பூமியின் ஈர்ப்பிற்கு மனித இனக் கருவை வளர்க்க விட்டனர் அன்று சப்தரிஷிகள்.

1.இன வளர்ச்சியில் ஞானத்தை உணர்ந்த அவர்கள் செயல்
2.அந்தந்தக் கால நிலைக்கொப்ப அவர்கள் பதித்த வளர்ச்சியிலிருந்தே
3.தன் வளர்ச்சிக்குப் பலம் கூட்ட தன் வளர்ப்பில் பயிராக்கிய பயிரிலிருந்து
4.மீண்டும் பயிராக்க “விதையைத்தான்” இன்று அவர்கள் சேமிக்கின்றார்கள்.

சப்தரிஷி உருவான அமிலக் கூட்டு இன நிலைக்கொப்ப தன் குண உணவையே தான் எடுத்து தான் வளர்ந்து இவ்வின வளர்ச்சி மங்கா நிலைக்காகத்தான் “சப்தரிஷிகளின் செயல்” இன்றுள்ளது.

இறைவனின் படைப்புத்தான் ஒவ்வொன்றும். படைப்பின் படைப்பெல்லாம் அவனே தான். அவனின் படைப்பில் இறை ஞானம் பெறும் மனித ஞானம் கொள்வது தான் படைக்கப்பட்டவன் படைப்பின் பொருள் காணும் நிலை.

நாம் நம் வாழ்க்கையில் சாதாரண நிலையில் உணர்ந்து வாழ்ந்து ஜீவன் பிரிந்து செல்லும் நிலையில் உள்ள நிலையை அந்தந்தக் காலங்களில் சப்தரிஷிகள் பல உடல்களை ஏற்று பல ஞானிகளை உருவாக்கிச் சென்றார்கள்.

ஆனால் இன்று வளர்ந்து பெருகியுள்ள மனிதனின் குண வழித் தொடர் யாவையுமே விஞ்ஞானம் என்ற உடல் பிம்ப சுகம் காணும் செயல் ஞானமாக வளர்ந்து வேரூன்றி கிளை விட்டுப் படர்ந்து விட்டது.

1.இதனை மாற்றியமைத்து
2.உயர் ஞானமான ஆத்ம ஞானத்தை வளர்த்து
3.இறை ஞானம் என்ற மனித அமில குண சக்தி ஈர்ப்பு வளர்ச்சி தரும் சப்தரிஷியின் ஞானமுடன்
4.நம் உணர்வின் செயல் இன்றுள்ள கால கட்டத்தில் செல்ல வேண்டிய குறுகிய காலமிது…!

New planets

சூரியனின் அழிவு எப்படி ஏற்படுகிறது…? அழியக் காரணம் என்ன..?

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்றூ இப்படி ஒரு நான்கு நட்சத்திரங்கள்
1.நம் சூரியன் எபப்டித் தனக்கென்று கோள்களை வளர்த்து நட்சத்திரங்களை வளர்த்து தனித்தன்மை ஆனதோ
2.இதைப் போல் இதிலே வளர்ச்சி அடைந்த இந்த நட்சத்திரங்கள் அனைத்தும்
3.இந்தச் சூரியனைப் போல ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி நகர்ந்து போய்க் கொண்டிருக்கின்றது.

நம் குடும்பத்தில் பெரியவர்கள் வளர்ந்தோம் என்றால் கல்யாணம் ஆகிப் போய்விட்டால் அப்பா அம்மா தாத்தா பாட்டி எல்லாம் காணாமல் போய்விடுகின்றார்கள்.
1.கொள்ளுப் பேரன் ஆன பிற்பாடு தாத்தாவையோ பாட்டியையோ நாம் உயிருடன் பார்க்க முடிகின்றதா…?
2.அப்படியே பார்த்தாலும் கவனிப்பதும் இல்லை.

இதே மாதிரி இந்த நட்சத்திரங்கள் தனக்கென்று அந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி விட்டால் இந்தச் சூரியனைக் கவனிப்பதில்லை. அது தன் வளர்ச்சியிலே பெருக ஆரம்பித்துவிடுகின்றது.

27 நட்சத்திரங்களும் அது சூரியனாக மாறும் பொழுது ஏற்கனவே இருந்த சூரியனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது அழிகிறது.

நம்முடைய உடல் அழிந்த பின் உடலைப் புதைத்தாலும் சரி உடலை உருவாக்கிய அணுக்கள் இந்த உடலையே உணவாக உட்கொண்டு வெளியே வந்துவிடுகின்றது.

1.முதலில் அணுக்களாக இருந்தது
2.அது உயிரணுக்களாக மாறும் தன்மை வருகின்றது
3.பின் அதனதன் உணர்வுகளை இரைகளைத் தேடி அதனின் வளர்ச்சிகள் பெறுகிறது.

மனித வாழ்க்கையில் இறந்த பின் எப்படி உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மற்றதுடன் சேர்த்து அதை உணவாக எடுத்து வளரும் தன்மை வருகின்றதோ இதைப் போல் தான் அந்த நட்சத்திரங்கள் தனியாகப் பிரப்ஞ்சமாக ஆன பின்
1.இந்தச் சூரியன் அழிந்த சக்தி
2.ஒரு புயல் போல் இருக்கும்.

அதிலே ஏதாவது ஒரு கோளோ மற்றது பாறையாக உள்ளது அதற்குள் சிக்கினால் மீண்டும் ஆவியாக மாற்றி அதைத் தனது நிலைகள் பரப்பும். இந்தப் பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனது ஈர்ப்பு வட்டத்தில் அதை வளர்த்து இதே போல் நட்சத்திரங்கள் அது கவர்ந்து அந்தந்தப் பிரபஞ்சத்திற்கு அது உணவாக ஊட்டுகின்றது.

இதை எல்லாம் பார்த்துத் தான் சொல்கிறேன்.

1.குருநாதர் அவர் பார்த்த உண்மைகளை
2.அந்த அகண்ட அண்டத்தை உன்னாலும் நுகர முடியும்..! பார்க்க முடியும்..! என்றார்.
3.அதை எல்லாம் நீங்களும் பார்க்க முடியும்.

எண்ணத்தின் வலு கொண்டு உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இதிலே நீங்கள் வளர்ச்சி அடைய அடைய நம் பிரபஞ்சமும்… நம் பிரபஞ்சத்திற்கு மற்ற பிரபஞ்சத்திலிருந்து உணவு எப்படிக் கிடைக்கிறது…? என்ற நிலை “எல்லாமே” நீங்கள் அறிய முடியும்.

கல்வி அறிவில்லாதவன் நான் (ஞானகுரு) இத்தனையும் பேசுகிறேன் என்றால் படித்தவர்கள் நீங்கள் பதிவு செய்து குறித்து வைத்துக் கொண்டு எளிதில் எடுக்கலாம்.
1.எனக்குக் குறித்து வைக்கக்கூட நேரமில்லை.
2.மனதில் பதிய வைத்ததைத்தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

வாழ்க்கையில் வருவது எனக்கு நினைவில்லை. ஆனால் குருநாதர் கொடுத்த அந்தப் பேரருள் தான் இங்கே பதிவான பின் நினைவு கொண்டு அந்த உணர்வை எல்லாம் நான் அறிய முடிகின்றது.

இந்த உணர்வின் தன்மை வெளிப்படும் பொழுது செவி கொண்டு கேட்ட பின் நீங்கள் நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் கருவாக அது உங்களுக்குள் உருவாகின்றது.

1.நான் சொல்வதைக் கூர்ந்து கவனிக்கும் உணர்வுகள் ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் உருவாகின்றது.
2.நீங்கள் இதை வளர்த்துக் கொண்டால்
3.நான் எதை எல்லாம் பார்த்தேனோ அதை எல்லாம் நீங்கள் காட்சியாகக் காண முடியும்.

தீமைகளை அகற்றும் வல்லமையும் நீங்கள் பெற முடியும்…! அந்த அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கி இனி பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.

தியான அன்பர் உயிரை மதிக்கும் பண்புகளை வளர்த்துக் கொண்ட விதம்

தியான அன்பர் தன்னுடைய கோபத்தைக் குறைத்த அனுபவம் 

விமான விபத்திலிருந்து காத்த அனுபவம் நடந்த நிக்ழச்சி 

பதஞ்சலி என்ற திருமூலரின் சரித்திரமும் வேதங்களின் மாற்றமும்

அரசனாக இருந்த பதஞ்சலி வேதங்களைக் கற்ற நிலையில் என்ன செய்தான்…? பின் கூடு விட்டுக் கூடு பாயும் சமயம் எப்படி அழிக்கப்பட்டான்…? பின் மாடு மேய்ப்பவன் உடலில் புகுந்து திருமூலராக எப்படி ஞானம் பெற்றான்..? யூதர்களைப் பற்றிய உண்மைகள்.. விஞ்ஞான வளர்ச்சி நூதன முறைகளில் எப்படி வளர்ந்தது…? வேதங்களின் உண்மைகள் எப்படித் திரிபு ஆனது..?

 

good or bad

நன்மை… தீமை… சகலமுமே… இறைவனின் படைப்பு தானா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

புல்லைப் படைத்தான்… பூண்டைப் படைத்தான்… செடி கல் மண் நீர் அனைத்தையும் படைத்தான்… சகல ஜீவராசிகளையும் படைத்தான்… மனிதனையும் படைத்தான்…! இறைவன் படைப்புத் தான் எல்லாமே…!

1.மனிதனைப் படைத்த இறைவன்
2.மற்ற எல்லா நிலைகளைக் காட்டிலும் “மனிதனை” உயர் ஞானத்துடன் படைத்துள்ளான்
3.ஆனால் அவற்றை எல்லாம் படைத்த இறைவன் நம்மையும் படைத்து… அவ்விறைவனையும் வணங்கச் செய்கின்றானா..?

இயற்கையின் படைப்பில் படைப்புகள் அனைத்தும் அவன் படைப்பென்றால்
1.அவன் படைப்பில் “தீமைகளை எதற்குப் படைக்கின்றான்…?”
2.நல்லுணர்வையை படைத்து நற்சக்தியின் செயலையே அவன் பெற்றிருக்கலாம் அல்லவா…!

படைப்பில் ஏன் இறைவனுக்கு ஓரவஞ்சனைகள்…? நீங்கள் வணங்கும் ஆண்டவனுக்கு ஏன் படைப்பில் இப்படி மாற்றம்..?

தீயோனையும் நல்லவனாக்கலாம். தீய படைப்புகள் அனைத்துமே படைக்கப்படுவதற்கு முதலிலேயே நல்ல படைப்புகளாகப் படைத்திருக்கலாம் அல்லவா…!

1.கொடூர குணம் படைத்தவனும் நயவஞ்சகனும் இறைவனை வணங்கினால் இருள் நீங்கும்…!
2.இறைவன் ஒருவன் தான் அவர்களை மாற்ற முடியும்…! என்று
3.இறைவன் படைப்பையே… இறைவனிடம் வேண்டச் சொல்கிறான்
4.அப்படி என்றால் இறைவன் படைப்பில் “இனியவன்” என்பவன் யார்…?

ஆக… இறைவன் என்பவன் யார்…? அவன் எங்குள்ளான்…?

மனிதன் பிறப்பெடுத்து வாழும் காலத்திலேயே தன் பிறப்பை உயர்வாக உணர்ந்து தெய்வத்தின் படைப்பிலேயே உயர்ந்து நிற்கும் மனிதனுக்கு
1.எந்த இறைவனால் பலவும் படைக்கப்பட்டன என்று உணர்கின்றானோ
2.அவற்றின் துணை இல்லாவிட்டால் இவனால் வாழ முடியுமா..?

இயற்கையில் கலந்துள்ள தாவர இனங்களிலிருந்துதான் உணவை எடுக்கின்றான். நீரும் காற்றும் நிலமும் இவனை வளர்க்கிறது. இவன் உணர்வில் “தீயது” என்று உணர்த்தப்பட்ட ஒவ்வொன்றிலும் இருந்துதான் “நன்மை எது…?” என்று இவன் (மனிதன்) உணர்ந்து வாழ முடிகிறது.

1.படைக்கப்பட்ட இறைவனுக்கு எது சொந்தம்…?
2.அவன் படைப்பில் உருவான உரு அனைத்துமே “இப்படி இப்படித்தான் வளர வேண்டும்…” என்ற அவன் படைத்தானா…?
3.இறைவன் படைப்பு என்பது யாது…? உருவானது எந்நிலை கொண்டது…?
4.படைப்பில் பலவும் உள்ள பொழுது இறை ஞானம் என்று உயர்ந்து காண்பது எது…?
5.இன்றைய இவ்வுலகின் உண்மை நிலை என்ன…?
6.உலகை உருவாக்கி உருளச் செய்த உணர்வு உண்மை நிலை என்ன…?
7.இயற்கையின் படைப்புத்தான் எல்லாமே…! என்றாலும் படைப்பின் உரு நிலை எப்படிக் கொள்கிறது…?
8.இறை ஞானத்தின் உண்மையை உணர முடியுமா…?
9.உணர்ந்தோர் சொல்லும் நிலை உண்மைதானா…? என்ற எண்ணமும் எழலாம்.

மின்சாரத்தினால் நீங்கள் உபயோகிக்கும் சாதன முறைகளுக்கு எப்படி அந்த மின் விசை எந்தெந்த நிலையில் பாய்ச்சப்பட்டு அதற்குகந்த சக்தி வெளிப்படும் தன்மையில் மின் விசிறியும் மின் இயந்திர இழுவை நிலையும் ஒளி விளக்குகளும் செயல்படுகின்றனவோ அதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வின் எண்ண ஞானத்தை
2.எச்சக்தி அலையின் ஈர்ப்பில் பதிய விடுகின்றானோ
3.அதற்குகந்த சாதனை செயல் ருப வழியில் தான் மனிதன் இன்றுள்ளான்.

இது தான் உண்மை…! இறைவன் தனியாக யாருக்கு என்றும் எதுவும் கொடுக்கவில்லை.

Bluish violet Poari rays

தியானமிருக்கும் போது பாம்பின் காட்சிகள் ஏன் கிடைக்கிறது..?

ஒரு அன்பருக்குத் தியானத்தில் கிடைத்த காட்சி:
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நான் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது பல பாம்புகள் எனக்குள் செல்வது போல் தெரிகின்றது.

பாம்புகள் உள்ளே சென்று அனைத்தும் தன் வாயிலிருந்து நாகரத்தினங்களை உமிழ்கின்றன. ஒளியாகத் தெரிகிறது. இதற்கு ஞானகுருவின் விளக்கம் தேவை.

ஞானகுருவின் விளக்கம்:
அவருக்குக் கிடைத்த காட்சிப் பிரகாரம் தன் உடலுக்குள் பலவிதமான பாம்புகள் செல்கிறது என்றால்… உடலுக்குள் பல விதமான விஷத் தன்மைகள் ஊடுருவுகின்றது. அப்படி ஊடுருவும் பொழுது என்ன நடக்கிறது..?

நாகப் பாம்பின் உடலுக்குள் பல விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத் தன்மைகள் நமக்குள் சென்றாலும் உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலால் அதை எல்லாம் எப்படி ஒளியாக மாற்றுகின்றது என்ற நிலைதான் அவருக்குக் காட்சியாகக் கிடைத்தது.
1.ஏனென்றால் நாம் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும்
2.விஷம் இல்லாத உணர்வின் இயக்கமே கிடையாது.

ஆகவே தான் நமக்குள் பல விஷத் தன்மைகள் (எதிர் நிலையான உணர்வுகள்) சென்றாலும் நமக்குள் அந்தப் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து இது அனைத்தும் ஒருக்கிணைந்து ஒளியின் சக்தியாக மாற்றிடல் வேண்டும்.

ஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது. கட்டுவீரியன் உடலில் விளைந்தது என்றால் அது வேறு விதமாக இருக்கும்.

நாகம் பல உயிரினங்களின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அந்த உடல்களின் விஷத்தைத் தனக்குள் சேமித்து அதன் விஷங்கள் கூடிக் கூடி நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ அதே போல் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்றும் காட்சிகளைத் தான் பாம்பினமாக அவர் காண முடிந்தது.
1.ஏனென்றால் உருவ அமைப்பில் பாம்பு என்றாலும்
2.அதன் உணர்வின் சக்தி விஷம்…! என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.

சாஸ்திரங்களில் ஆமையை வைத்துக் கூர்மை அவதாரத்தைக் காட்டுகின்றனர். பன்றியை வைத்து வராக அவதாரத்தைக் காட்டுகின்றனர்.

ஆகவே நமது வாழ்க்கையில் எந்தெந்த உணர்வுகளை நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோமோ அதனின் உணர்வுகள் வளர்ச்சி அடைந்து அடைந்து அதற்குத் தக்க பரிணாம வளர்ச்சி அடைந்தோம்.

கூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றது பன்றி என்றும்… ஆக தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும்… சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்த நறுமணங்களை நுகர்கின்றது…! என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான்…
1.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
2.அந்தத் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை.

இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத் தன்மையான நிலையையும் நாம் மாற்றியமைத்து உயிருடன் ஒன்றி ஒளியான நிலைகள் பெற வேண்டும்…! என்பது தான் சாஸ்திரங்களின் மூலக் கருத்து.

அந்தக் காட்சியின் தன்மையைத்தான் அவர் பார்க்க நேர்ந்தது.

ஏனென்றால் இதனின் விளக்க உரைகளை இப்பொழுது யாம் (ஞானகுரு) கொடுத்தபின் தியானத்தில் உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தால்
1.மீண்டும் எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின் உண்மையின் உணர்வு எது…? என்று நீங்கள் அறியும் உணர்வைச் செலுத்தினால்
3.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து
4.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் எது..? என்பதை அறிந்திட முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுது அதிலிருக்கும் உண்மைகளை உங்களால் உணர முடியும். அதன் மூலம் ஒரு தெளிவான உணர்வை உங்களுக்குள் எப்படி உருவாக்குகிறது..? என்ற நிலையையும் பார்க்கலாம்.

ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகள் உதாரணமாக ஒரு வெறுப்படைந்ததாகவோ அல்லது ஒரு புலமை பெற்ற மனிதனின் உணர்வாகவோ இருந்தால்
1.அவரின் உணர்வுகள் மடிந்த பின் அந்த உணர்வுகளை நாம் பெற்றால்
2.அந்த மனித உடலில் உருவான கற்பனை உணர்வுகள் இங்கே வரும்.

ஆனால் அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளோ இருளை அகற்றி ஒளியின் தன்மையாக மாற்றிடும் உணர்வுகள் கொண்டது. அது நமக்குள் வரும் பொழுது இருளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

1.சூரியன் எப்படி ஒளிக் கதிராக மாற்றுகின்றதோ…
2.நாகம் எப்படி அந்த நாகரத்தினமாக மாற்றுகின்றதோ…
3.அந்தப் பாம்பு இறந்தாலும் அதிலே விளைந்த ஒளிகள் எப்படிக் கூடுகின்றதோ…
4.இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் என்றும் பிரகாச ஒளியாக நின்று
5.தீமைகள் நமக்குள் புகாது… இருள் சூழாது… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக அது நமக்குள் உருப்பெறும் என்பதை நீங்கள் உணர முடியும்.

எல்லோரும் தெளிவாக உணரக்கூடிய அருளை நீங்கள் காட்சியாக வெளிப்படுத்தினீர்கள்… இது எல்லோருக்கும் நன்மை பயக்கும்…! என்று கருதுகின்றேன். அனைவரும் அந்த அருள் ஞானத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்… எமது அருளாசிகள்..!

செவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து உடல் நோய்களைப் போக்கும் வழி

சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளும் துன்பங்களும் நோயாக உருவாகமல் தடுத்து நிறுத்தும் பயிற்சி

siddha in cave.jpg

“மாந்திரீகத்தில் சிக்கியவர்கள்…” அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதன் நல் உணர்வு கொண்டு வாழ்ந்தாலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் அவரின் பக்குவ முறை மாற்றத்தினால் ஏக்கம் சலிப்பு என்ற தொடர் குண ஆவேச எண்ணம் கொண்ட உணர்வலையில் சென்ற பின் உடலை விட்டு ஆவி பிரிந்தவுடன் அவர்கள் எங்கே செல்கிறார்கள்….?

பல எண்ண ஈர்ப்பில் சுழன்று ஆவி மிருக ஈர்ப்பிற்குச் சென்றும் மனிதனை ஒத்த அங்க அவயங்கள் அற்ற மிருக ஜீவிதத்திற்குச் செல்ல ஏதுவாகிறது.

உணர்வலையின் மாற்ற நிலை கொண்ட ஆத்ம பிம்பமே பல காலச் சேமிப்பு அமில ஈர்ப்பு உரு மாறி மனிதக் கருவிலிருந்து மிருகக் கரு நிலைக்குச் செல்லும் பொழுது
1.மாந்திரீக நிலைக்கு வசமாகிக் கொண்ட ஆவிகளின் உணர்வின் ஈர்ப்பும்
2.மாந்திரீகனின் ஆன்மா பிரிந்த பிறகு அவன் வசப்பட்ட ஆவிகளின் உணர்வு அமில சக்தி எந்நிலை பெறுகின்றது…?

மிருக ஜெந்துவிலேயே பல நிலை கொண்ட குண வளர்ச்சி ஜெந்துக்கள் உண்டு. மாந்திரீக வசப்பட்ட ஆவிகளின் ஈர்ப்பு மாந்திரீகன் வசப்படுத்தி வைத்துள்ள கால நிலை மாறுபட்டவுடன் இவ்வாவிகளுக்கும் சக்தி நிலை குறைந்து மீண்டும் பிறப்பு எடுக்க நாய்… குள்ள நரி… இவற்றின் ஈர்ப்பலை பிம்ப உடல் தான் பெற முடியும்.

நாய்க்கு உணர்வலைகள் அதிகம். மனிதனைக் காட்டிலும் நாய்க்கு மோப்பத்தால் ஈர்க்கும் நிலை துரிதப்படுகின்றது. சுவாச ஈர்ப்பின் நிலைக்கொப்பத்தான் செவி ஈர்ப்பும் கண் ஒளியும் அதற்கு உண்டு.

மாந்திரீகனால் வசப்படுத்திய ஆவிகள் மற்ற சாதாரண ஆவிகளைக் காட்டிலும் அதற்கு அதன் மாந்திரீக பூஜிப்பினால் ஈர்ப்பலை அதிகம் கொண்டுள்ளதினால் “நாயின் பிறப்பிற்குத் தான் செல்ல முடியும்…!”

ஆவிகளின் நிலையை உணர்த்தி வருகின்றேன். இதன் உண்மை நிலை என்ன…? ஆவிகள் உண்டா இல்லையா..? இதை உணர்வது எப்படி…? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகின் பல பாகங்களில் மாந்திரீக முறையில் பல அதிசயங்கள் நடப்பதை “ஆண்டவனின் ரூபம்…” என்று காட்டி ஏமாற்றி லிங்கமும் வேலும் விபூதியும் வருகின்றதல்லவா…!

அதுவுமல்லாமல் சில பொருள்கள் தானாக ஆடுவதும்… சிலர் பல மொழிகளில் பேசுவதும்… இந்த ஆவிகளின் தொடர் தான்.

மாந்திரீகனால் வசப்படுத்தப்பட்ட ஆவிகள் அவன் சொல்படி செயல்படுகின்றன. இந்த ஆவிகளுக்கு விமோசனம் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.

எல்லாமே ஆவி தான். மாந்திரீகனின் வசத்தில் சிக்குண்டு தன் நிலை உணராமல் செயல்பட்ட ஆவிகளுக்கும் உணர்வால் தன் நிலை பெறவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சித்தர்களினால் அமைக்கப்பட்ட சில கோவில்களில் உடலுடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட “பல சித்தர்கள்” உள்ளார்கள்.
1.அவர்கள் உடலில் ஏற்றிக் கொண்ட சக்தி வாய்ந்த நுண்ணிய மின் காந்த ஈர்ப்பு ஒளியினால் இன்றும் சித்தாகி
2.உடலின் உணர்வு கொண்டு கோவில்களில் அவர்களுக்கென்று சமாதி குகை அமைத்திருகின்றனர்.
3.நல் நிலை பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டுள்ள மாந்திரீகர் வசத்திலிருந்த ஆவிகளானாலும் சரி…
4.கொடூர வேட்கையில் ஜீவன் பிரிந்த ஆத்மாவாக இருந்தாலும் சரி…
5.ஜீவ சக்தி கொண்ட சித்தனிடம் தன் உணர்வின் எண்ணத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு – அவர்களின் ஆசி கிடைத்தால்
6.சித்தர்களின் ஜீவ உடல் ஈர்ப்பில் சென்று தன் உணர்வு ஈர்ப்பை மீண்டும் “நல் உணர்வு கொண்ட மனித இன வளர்ச்சியில் வரலாம்…”

Telepathy

ஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் மாறுகிறது… அப்பொழுது அந்த நல்லதைக் காக்கின்றோமா…?

வாழ்க்கையில் நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய தவறான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்பதை நாம் அறிந்திட வேண்டும். (இது முக்கியம்)

அங்கிருந்து வந்தவுடனே… நீ மோசமான ஆள்..! இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்..! என்று ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது என்ன ஆகிறது…?

என்ன..? நம்மைப் பற்றி இப்படி எல்லாம் சொல்கிறான்…!
1.நான் ஒன்றுமே சொல்லவில்லை… ஆனாலும் இந்த மாதிரிச் சொல்கிறானே..! என்ற
2.இந்தக் கோப உணர்வுகள் வந்தவுடனே அவன் உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது.
3.இருடா… இரண்டிலே ஒன்று பார்க்கிறேன் பார்…! என்ற இந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகிறது.

ஆக… அவன் செய்யும் அல்லது சொல்லும் தவறான உணர்வை நாம் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது
1.நமக்குள் (உடலுக்குள்) உள்ளே அது நின்று அணுவாக மாறி
2.அவன் நினைவை நமக்குள் கூட்டி
3.அந்த அணுக்கள் பெருக்கப்பட்டு
4.நம்மை எப்படிக் குற்றவாளி என்று முதலில் அவன் ஆக்கினானோ
5.அவனுடைய உணர்வுகள் நமக்குள் நின்று அதே குற்றவாளியாக ஆகிவிடுகின்றோம்.

அதாவது…
1.அவன் சொன்னபடி அவன் உணர்வை நாம் ஏங்கி எடுக்கும் பொழுது
2.நமக்குள் (தவறாக) அதுவாக மாறிவிடுகின்றது.

இதெல்லாம் எப்படி…? என்றால் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் இன்று கண்கூடாகப் பார்க்கலாம். இன்றைய அரசியலில் எப்படியெல்லாம் வேஷங்கள் போடுகிறார்கள் என்று…!
1..நேற்று வரையிலும் எதிரியாக வைத்துப் பேசுவார்கள்
2.ஆனால் இன்றைக்கு அதையே வித்தியாசமாக மாற்றுவார்கள்.

ஆகவே இதைப் போல உணர்வுகள் கலந்து கலந்து வாழ்க்கையிலே எத்தனையோ விதமான உணர்வுகள் அங்கே படுகின்றது.

எப்படி இருந்தாலும் அவர்கள் கலந்து கொண்ட உணர்வுகள் இந்த உடலின் இச்சைக்குத்தான்…! ஆக
1.இந்த நாட்டையும் காக்க முடியாது
2.வீட்டையும் காக்க முடியாது…
3.தன்னையும் காக்க முடியாது.

அரசியல் பேதம் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வேண்டும் என்றால் இவர்கள் ஆட்டம் ஆடலாம். இந்த உடலுக்குப் பின் என்ன ஆகிறது…! என்று இத்தனை நிலையும் அவருக்குப் புரியாத நிலைகளில் கடைசியில் மடிந்து விடுகின்றனர். பிறரிடத்தில் இடும் சாப அலைகளும் பாவ அலைகளும் அவருக்குள் ஊடுருவி இயக்கிவிடும்.

இன்று மனிதனாக இருப்பினும் பிறரை எளிதில் சிரமப்படச் செய்வோர் வேதனைப்படச் செய்வோர் அனைவரையுமே இந்த உடலுக்குப் பின் அசுர உணர்வு கொண்ட மிருகங்களாக இந்த உயிர் உருவாக்கிவிடும்…! என்ற நிலைகளை யாரும் மறந்திட வேண்டாம்.

ஒவ்வொரு நொடியிலேயும் பிறருக்குத் தீங்கு செய்யும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம் உடலுக்குள் நல்லவைகளைக் கொன்று குவிக்கும் தீய அணுக்களாக உருவாகி
3.மீண்டும் நம்மை நரகலோகத்தைச் சந்திக்கும் நிலைகளுக்கு அனுப்பி விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றிடத் தான் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை “அது எப்படி வளர்ந்தது…? எப்படி இயக்குகிறது…?” என்ற நிலைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் மீண்டு மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றோம் (ஞானகுரு).

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானத்தின் வழித் தொடர் கொண்டு நீங்கள் செயல்பட்டு
3.இருளை வென்று ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.. தீமைகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்றும் தெளிவாக உணர முடியும்.

உணர்ந்த நிலையில் தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி என்ற உணர்வுகளை எடுத்து ஒளியான அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

POWER OF HUMAN HAND

மனித உடலின் முக்கியமான அங்கமான “கையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது

நாசி சுவாசிக்கின்றது… கண் பார்க்கின்றது…!
1.கண் பார்க்கவும் செவி கேட்கவும்… வாயில் உமிழ் நீர் சுரக்கவும்…
2.உடலில் எல்லா நரம்பும்… அணுக்கள் துடிக்கவும் உணர்வுகள் உந்தவும்
3.எண்ண ஓட்ட நிலைகள் சர்வ சதா காலத்திலும் சுழன்றே
4.ஆத்ம பிம்பமுடன் ஜீவ உயிர் வாழுகின்றது.
5.உறக்கத்திலும் உணர்வுள்ளவனுக்கு எண்ணமுண்டு.

இவ்வெண்ணத்தின் ஓட்டம் எப்படி… எப்பாதையில் ஓடுகின்றதோ… அந்தப் பாதையின் உணர்வுடன் மீண்டும் மோதி அவ்வுணர்வின் சுவாசம் எடுத்து எண்ண ஓட்டத்தின் வழிப்படிச் செயலாக்க அங்க அவயங்களில் எச்சக்தியையும் செயல்படுத்திக் காட்டிடக் கையின் நிலை இல்லாவிட்டால் செயல் ரூபம் இந்த உலகில் எதுவுமே இல்லை.

1.செயலை வெளிப்படுத்தும் அவயம் தான் “கை…”
2.கையின் ஈர்ப்பிலே பிம்பத்தின் (உடலின்) சக்தி அனைத்தும் வெளிப்படுகிறது.
3.மற்ற அவயங்களின் சக்தியை வெளிப்படுத்துகின்றது.
4.ஞானத்தை உணர்த்துவதும் இக்கை தான்.

பலவாக உள்ள ஒன்றான பிம்ப உடலை… செயலை… எப்படி இந்தக் கை வளர்க்கின்றதோ அதைப் போன்று தான் பலவாக உள்ள உலக வாழ்க்கையில் பக்தி கொண்டு தெய்வ நம்பிக்கையை வழி காட்டினான் நம் சித்தன்.

ஆத்ம பிம்ப மனிதச் சக்திக்கே செயலாக்கும் அங்கமாகக் கையைக் கொண்டு தான் செயல்முறை வெளிப்படுகிறது.

இந்த உடல் பிம்ப ஜீவன் பிரிந்த பிறகும் மீண்டும் மனிதக் கரு வளர்ச்சியில் வரும் சிசுக்கள் பிறந்து சில மாதங்கள் கருவின் வளர்ப்பிலேயே அவயங்களின் முக்கியமான கையை மூடிக் கொண்டே தான் பிறக்கும்.
1.கையை மூடிக் கொண்டு சுவாசம் எடுக்கும் பொழுது
2.உடலின் சக்திகள் விரயப்படாது.

மனித பிம்ப செயலை உணர்த்த வல்ல இக்கையின் ஈர்ப்பு குண அமிலம் மாறுபடாத ஈர்ப்புடனே தான் சிசு உற்பத்தியாகின்றது.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு கையின் அவயங்கள் செயல்படும் முறை கொண்டு தான் அக்குழந்தை வளரும் முறையை அறியலாம். பிறந்ததும் மற்ற அவயங்களின் உணர்வை அக்குழந்தை கையை ஆட்டித் தான் வெளிப்படுத்துகின்றது. சில நாட்களுக்குப் பின் காலை ஆட்டும்.

பிறந்த குழந்தைகள் சில பிறந்தவுடனே கையை ஆட்டிக் கொண்டிருக்கும். அக்கையை ஆட்டும் குழந்தையின் ஞானமும் அக்கை ஆட்டும் முறை கொண்டு ஞானத்தின் நிலையும் அறியலாம்.

மனிதனின் ஞானத்தைச் செயலாக்கும் கை என்ற உறுப்பு மனிதனுக்கு இல்லா விட்டால் மிருக நிலைக்கும் மனித நிலைக்கும் மாறுபாடில்லை.

மனிதனின் ஞானத்தை வெளிப்படுத்துவது கை. ஞான நல்லறிவு குறைந்த உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு அவ்வாத்மா மற்ற ஈர்ப்பலையில் சென்று மனிதக் கருவிற்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது.

இன்று இந்தக் கலியின் மாற்ற காலத்தில் மனிதனின் ஞானம் குறைவுபட்டு கல்கியுக வளர்ச்சிக்கு ஞானத்தின் குறைவு கொண்ட மனித அமில குண பிம்ப உடல்கள் பெறும் ஆத்மாக்களுக்கு.. மீண்டும் இன்றுள்ள அங்க அவயப் பொலிவு இழந்தே… மிகவும் குறுகிய உடல் அமைப்பும் குரங்கினத்தின் அவயங்களை ஒத்த கை கால்களின் வளர்ச்சி பிம்பம் தான் ஏற்படும்.

மனிதர்களிலேயே இன்று சிலருக்கு அமில ஈர்ப்பு வளர்ச்சி அமையப்படாமல் கை கால்கள் சூப்பிய நிலையில் குறுகிய உடலமைப்பு கொண்டவர்களைப் பார்க்கின்றோம்.

மிகவும் அல்லல்பட்டு துன்புற்று ஜீவிதத்திற்கே கஷ்டப்படும் ஆத்மாக்களின் தாய்மார்கள் சிலருக்கு.. சிலருக்கென்ன…!
1.இந்நிலையில் உள்ள பல தாய்மார்களின் குழந்தைகள்
2.இப்படித்தான் இன்றும் பிறக்கின்றன.
3.இதன் தொடர்ச்சி குண குழந்தைகள் தான் வரப்போகும் ஆண்டுகளில் அதிகமாகப் பிறக்கப் போகின்றன.

ஏனென்றால் எண்ணத்தில் வளர்ச்சி ஞானம் அற்று இம்மனித பிம்ப வாழ்க்கையில் அல்லலுறும் ஆத்மாக்கள் மலிந்து விட்டன. மனிதனான அமிலத்தை அழித்தவனே மனிதன் தான்.

ஞானமற்ற வாழ்க்கையைச் சலிப்புடனும் சங்கடமுடனும் ஏக்கமுடன் ஏங்கி வாழும் வாழ்க்கை முறை மாற வேண்டும்.

ஆண்டவனிடம் ஏங்கிக் கேட்கின்றான் மனிதன். ஏக்கத்தில் வளரும் சலிப்பு சங்கட குண மனிதனுக்கு ஞானத்தால் வெல்லும் நிலையற்றதாகி விடுகிறது.

இத்தகைய உணர்வுச் சுற்றல் குணங்கள் நிறைந்துள்ள இன்றைய இக்கலி மனிதனின் வளர்ச்சி இதே சுழற்சி ஓட்டத்தின் ஈர்ப்பு குண அமிலம் அவனுக்குள் கூடிக் கூடி… இதன் செயலில்தான் அடுத்த கல்கியுக இனக்கருவும் வளருமப்பா…!

வறுமையும் இன்னலும் அற்று மற்ற மேற்கத்திய தேசங்களிலுள்ள மனித ஆத்மாக்களில் பலரோ போதை நிலையின் அடிமையினால் எண்ண ஞானமற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் பிம்ப உடல் ஆத்மா பிரிந்து சென்ற பின் அந்நிலைக்கொப்ப வளர்ச்சி அமில குண கரு தோன்றி வரும்.

1.எண்ணத்தின் ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி அவயமான கை தான்
2.மனித இனத்திற்கே மிகவும் முக்கியமானது… ஆனால்…
3.ஞானத்தின் வளர்ச்சி எடுக்காத பிறப்பற்ற உணர்வலையில் செல்லும் பொழுது
4.தான் பல ஜென்மங்களில் சேமித்த அமில குண சக்தியையே இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு
5.மனிதக் கரு உருவ நிலை மாறு கொண்ட பிம்பத்திற்குச் சென்று
6.அங்க அவயங்களின் சக்தியை வெளிப்படுத்தும் செயலாக்கும் திறமையுடைய – “கை இல்லாமல் பிறப்பு வருகின்றது…!”

அதாவது “பிறப்பு…!” என்பது மற்ற ஜீவராசிகளின் “ஈர்ப்பலையின் பிறப்பு…!”

ஞானகுருவின் ஆசீர்வாதம்

அகஸ்தியனைப் போன்று உலகைக் காக்கும் சக்தியாக நீங்கள் மாற வேண்டும். ஞானக் குழந்தைகளை ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாக்குங்கள். 

தியானம்

தியான வாசகங்களும் அதனுடைய விளக்கங்களும் மற்றும் தியானம் செய்ய வேண்டிய முறையும் 

 

மின்னல்களை எல்லாம் ஆனந்தமான நிலைகளில் கவர்ந்தவன் தான் அகஸ்தியன் 

அகஸ்தியன் வெளிப்படுத்திய உண்மையான சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றோம் 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றவேண்டும்

தீமைகளையும் நோய்களையும் நீக்கும் பயிற்சி தியானம்

ஒரு நோயாளியைச் சந்தித்தால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? அவருடைய வேதனையும் நோயும் நமக்குள் வராதபடி நம்மைக் காத்து அவருக்குள் நல்ல உணர்வுகளைப் பாய்ச்சி அவரையும் நோயிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும். இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்.. சுக்ரீவனின் மந்திரி என்ற நிலையில் தீமைகளை அகற்றி நாம் நல்லதைக் காக்கும் சக்தியாக வளர வேண்டும். 

 

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

எந்தத் தீமையும் நமக்குள் ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…? 

நோயை நீக்கினாலும் ஊழ்வினை என்ற வித்தை மாற்ற வேண்டும்

Kalki Flying state

“பறக்கும் நிலை” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.

செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.

சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்

அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.

வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.

1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.

இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!

பஞ்சாக உள்ள எண்ணங்களை பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…!
1அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.
2.இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.

சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.

பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”

1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.

அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?

இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.

சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.

சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.

மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.

1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.
3.ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.

Bhogar Risi

ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் சாதாரண மனிதன் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் உண்டான வித்தியாசம்

ஒரு மனிதனுக்குள் மனிதன் விளையச் செய்யும் உணர்வுகள் நமக்கு முன் இங்கே இந்தக் காற்று மண்டலத்தில் உண்டு.

ஒரு மனிதனுக்கு மனிதன் அதிகமாகப் பற்று இருக்கும் பொழுது அந்த மனிதன் இறந்து விட்டால் அதே பற்றுடன் வரும் பொழுது
1.புலனடங்கி நாம் தூங்கப்ப்டும் பொழுது அந்த மனிதனின் உருவம் கிடைக்கும்.
2.அவன் செய்த நிலையும் நாம் கனாக்களாகப் பார்க்க முடியும்.

கனவுகளில் பலவிதமான அற்புதங்களும் சில நடக்கின்றது. எப்படி…?

ஒரு மனிதன் ஆசைப்பட்டு இருக்கும் பொழுது அந்த உணர்வுகள் அதிகமாகி விட்டால் எதன் மேல் எப்படி ஆசைப்ட்டானோ இது இணைக்கப்பட்டு இந்த உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருக்கப்பட்டால்
1.நாம் புலனடங்கித் தூங்கப்படும் பொழுது உயிரிலே பட்டு
2.அதனின் உணர்வின் கலவையாக அந்த உணர்ச்சிகள் தூண்டுவதும்
3.எதனுடைய நிலைகளோ – நாம் ஆசைப்பட்ட உணர்வுகளும் ஒன்றாக இருக்கும் பொழுது
4.அந்த அலையின் உணர்வு ஆசைப்பட்ட உணர்வுகள் இங்கே வந்திருக்கப்படும் பொழுது
5.இது இரண்டும் கலந்து பார்க்காத ஆளின் உருவமும்
6.அதன் வழி நமக்குள் அந்த இன்பம் பெறுவதையும் சில கனவுகளில் பார்க்கலாம்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் புலனடங்கித் தூங்கினாலும் “உயிரிலே பட்டுத் தான்” இந்த உணர்வுகள் தனக்குள் வருகின்றது. கனவு என்று சொல்வது இது தான்.

நாம் எதைப் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நிலைகள் கூட்டப்படும் பொழுது
1.உணர்வுகள் எது முந்தி வருகின்றதோ
2.அந்த உருவங்களும் நமக்குள் வருகின்றது.

ஒரு அச்சுறுத்தும் நிலையோ… பயம் காட்டும் நிலைகளையோ… விபரீத விளைவுகளையோ… இதுகள் எல்லாம் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே பதிவான பின்
1.எதன் வழிகளில் அன்றைய வாழ்க்கையில்
2.நாம் எதை முன்னணியில் அதிகமாக வைக்கின்றோமோ அது நம் ஆன்மாவில் கூடப் பெற்றுப்
3.புலனடங்கி இருக்கும் பொழுது நமக்குள் கனவுகளாக வருகின்றது என்பதனை நம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

போகர் பல அற்புதங்கள் செய்தார் என்பார்கள். குருநாதரிடம் சில மருந்துகளை அரைத்து விஷ்ணுவிடம் வரம் வாங்கி முருகனுடைய சிலையைச் செய்தார் என்றெல்லாம் அன்று எழுத்து வடிவே இல்லாத பொழுது கற்பனைக் கதைகளைக் கட்டியிருப்பார்கள் பின் வந்தோர்கள்.

எழுத்து வடிவு வந்த பின் போகர் எழுதிய சக்கரங்கள் என்று போகர் சமாதியை வைத்திருப்பார்கள். இதைப் போன்றெல்லாம் அவர் பேரைச் சொல்லி ஒவ்வொன்றையும் மாற்றி உண்மையின் உணர்வுகளை அறிய முடியாதபடி காலத்தால் மாறிப் போய்விட்டது.

அன்று போகன் ஒரு மனிதன் எப்படி முழுமையானான்…? என்று கண்டுணர்ந்தான் என்பதை நம் குருநாதர் காட்டினார்.

விஷத்தின் தன்மை எப்படி இயக்கப்பட்டது…? அணுக்களால் கோள்களாகி நட்சத்திரமாகிச் சூரியனாகி சூரியனாக ஆன பின் கோள்களை உருவாக்கி நட்சத்திரங்களை உருவாக்கி ஒரு பிரபஞ்சமாகி முழுமை அடைந்த பின் தான் ஒரு உயிரணுவின் துடிப்பு ஆகின்றது. பிரபஞ்சம் முழுமை அடைந்த பின் தான் ஒரு அணுத் தன்மையாகி உயிரணுவின் தோற்றம் அடைகின்றது.

1.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒவ்வொரு தாவர இனங்களிலும் மண்ணிலும் எப்படிக் கலக்கின்றது…?
2.அதே போல உயிரணு தோன்றிய பின் அதிலே எப்படிக் கலக்கப்படுகின்றது…?
3.அந்த உணர்வுகளை இந்த உயிரணு நுகர்ந்த பின் உணர்வுக்கொப்ப மீண்டும் அதை இயக்குகிறது…?
4.அந்த உணர்வுக்கொப்ப உடல்கள் எப்படி மாறுகிறது…? என்பதைத் போகன் கண்டுணர்ந்தார் என்று தெளிவாகக் கூறினார் நம் குருநாதர்.

1.போகன் காலத்தில் போகனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு
2.அதை நுகர்ந்தால் அக்காலத்தில் போகன் எப்படி இருந்தானோ அதை நீங்களும் அறிய முடியும்
3.அவன் கண்ட இயற்கையின் உண்மை உணர்வுகளையும் நீங்கள் உணர முடியும்.

ஆகவே ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நுகரும் ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேசங்களையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர வேண்டிய முறை – சொர்க்கவாசல்

சொர்க்க வாசல் எது என்று தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குப் புருவ மத்தி தான் சொர்க்க வாசல். அதன் வழி தான் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

சொல்லித் தரும் ஆசிரியரே எல்லாவற்றையும் நமக்குச் செய்து தருவாரா…?

ஓசோன் திரையை அடைக்க என்ன செய்ய வேண்டும்…?

சாமிக்குச் சக்தி இருக்கிறதா என்று ரோசப்பட்டு நான் எதையாவது செய்ய முடியுமா…?

creator's creation

படைத்தவனின் படைப்பைப் படைக்கப்பவனின் படைப்பாக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

போகரின் காலத்திற்குப் பிறகு போகரால் வழிப்படுத்திச் சென்ற பண்டிகை தான் தீபாவளிப் பண்டிகை.
1.நம்முள் உள்ள அசுர குணங்களை அழித்து நற்குணங்களின் ஒளியைப் பெறத் தான்
2.தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை உணர்த்தப்பட்டது.

ஆனால் இன்றைய எண்ண ஓட்டத்தில் அசுரனையே வணங்கும் முறைப்படுத்திச் செயல்படும் வழியில் எண்ண ஓட்டங்கள் வளர்ந்து விட்டன.

தீய குணங்களை அகற்ற வேண்டிய அந்த நந்நாளில் சமமான எண்ணத்தைச் சாந்தமுடன் புத்தாடை புனைந்து… மகிழ்ந்து… தீபமேற்றி… உற்றார் சுற்றமுடன் இனிமையுடன் கலந்துறவாட ஏற்படுத்திய தினத்தைச் “சந்தோஷமுடன் எந்த ஆத்மா எந்த வழியில் கொண்டாடுகிறது…?”

1.இன்றைய சமுதாய இனப் பிடிப்பாக “அந்த நாள்”
2.பல இன்னல்களுக்கு மனித ஆத்மாக்கள் செல்லக்கூடிய உணர்வு ஓட்டத்தில் சுழன்று கொண்டுள்ளது.
3.அன்று சித்தர்களினால் ஒவ்வொன்றையும் உணர்த்திச் சென்றதன் பொருள் வேறு
4.இன்றைய மனித ஆத்மாக்கள் செயலாக்கும் பொருள் வேறு…!

ஒவ்வொரு காலத்திலும் சப்தரிஷிகள் சில உடல்களை ஏற்று எதற்காக அவர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்…?

1.படைப்பின் படைப்பையே
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக்க…
3.அவர்களின் செயல் முறை செயலாக்குகின்றதப்பா…!

ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிச் சுழலும் வளர்ச்சியில்
1.சுழற்சி நிலைக்கொப்ப வழி நிலை செல்லாமல்
2.சுழற்சியின் சக்தியைப் படைக்கப்பட்டவனிடம் சமர்ப்பிக்கும் செயலுக்குத் துணை செய்கின்றார்கள் சப்தரிஷிகள்.

நீரில் ஓட்டத்தை நாம் அதன் இச்சையில் (போக்கில்) விடாமல் அந்த நீரைத் தேக்கி வைத்து “அணையைக் கட்டி” அந்த நீரின் சக்தியைப் பல ரூபங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அதைப் போல்… பால்வெளி மண்டலத்தில் படர்ந்து சுழன்று நிறைந்துள்ள அமில குணங்களின் ஈர்ப்பை
1.உருவான உலகமாக்கி
2.உலகினிலே கருவைக் கொண்டு உருவாக்கி
3.உருவின் உருக்களாகப் பல உருக்களை வளரச் செய்து
4.தன் ஞானத்தின் சக்தி அலைக்குச் சக்தி எடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்

நாம் பலன் காணத்தான் பலவற்றையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனும் அவன் எண்ணத்திற்குகந்த நிறைவைக் காண நித்தமும் செயலாற்றுகின்றான்.

இருந்தாலும்… எண்ணியோ எண்ணாமலோ எல்லா ஆத்மாக்களும் தன் உணர்வில் வழி பெறுவது எதனை…?

வாழ்க்கையில் தன் உணர்வுக்குகந்த எண்ணச் செயல் நிறைவுறாதவன் விரக்தி என்ற வீண் சலிப்புடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை என்ற நிலைக்கும் தன் உணர்வைச் செயலாக்குகின்றான்.

வெறுப்பு விரக்தி என்ற நிலை மனிதனுக்கு எப்படி ஏற்படுகின்றது..?

தன் உணர்வின் எண்ணத்திற்கொப்ப எண்ணச் செயல் நிறைவுறாத தருணத்தில் சலிப்பும் சோம்பலும் விரக்தியும் உட்பட்டுத் தன் ஆத்மாவையே மாய்த்துக் கொள்ளும் வழிக்குச் செல்கின்றான்.

உணர்வாலும் உருவாலும் தன் நிலையை எண்ணுபவன்…
1.உருவ எண்ணத்தின் சுழற்சியிலேயே சிக்குண்ட வாழ்க்கை உணர்வை மாற்றி
2.எண்ணத்தால் உணரும் ஞான வழிபாட்டில் தன் உணர்வைச் செலுத்தினால்
3.விரக்தியும் சலிப்பும் அற்று விவேகம் பெறலாம்.

இவ்விவேக உணர்வலையின் ஞானத்தை உணர்ந்து வாழ்க்கையில் எண்ணும் நிறைவைப் பல ஆத்மாக்கள் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதனின் உணர்வலை அனைத்தையுமே அரசர்கள் ஆண்ட காலத்தில் தன் உயர்வை வெளிக்காட்ட
1.“கதைகளையும்… கற்பனைக் காவியங்களையும்..” உண்மை போல் வெளிப்படுத்தியதை…
2.அந்த மாய உணர்வுகளையே உண்மை என்ற வாழ்க்கையின் நெறியில் கலந்து விட்ட
3.அத்தகைய உணர்வலையின் சுழற்சியில் சிக்கி (SOCIAL MEDIA) உழன்று கொண்டுள்ளது.

இந்த நிலை மாறிச் சப்தரிஷிகளின் செயல் வட்டத்திற்குள் சென்றால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே அவர்களின் உணர்வின் உணவு கிடைக்கப் பெறும்.

அதன் வழியில் அவர்களுக்கும் அவர்களின் சக்தி அமிலத்தைக் கூட்டிடல் முடியும். அதன் மூலம்
1.மீண்டும் மனிதக் கரு தோன்றினால் தான்
2.மனிதக் கருவின் பிம்ப உடல் ஞானத்தை வைத்துத்தான் மீண்டும் மனித சமுதாயம் காண முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும். உணவு இல்லாவிட்டால் அவர்களின் உணர்விற்கு உருவில்லை.

சப்தரிஷிகளின் செயல் அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்படுகின்றதென்றால் இந்த அடிப்படையில் தான்…!

இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் இன்றுள்ள எண்ண உருவ சுவாச மக்கள் இதே உணர்வலையில் இந்தப் பிம்பங்களை மாற்றி மீண்டும் மனித அமில ஜீவன் தோன்றினால்… இன்றுள்ள ஞானத்தைக் காட்டினாலும்… உருவ பிம்ப அழகைக் காட்டிலும்.. முற்றும் மாறுபட்ட உருவ அமைப்பு ஞான உருவங்கள் தான் அமையப் பெறும்.

அதுவும் கலி மாறி கல்கி மனித ஜீவன் கொள்ளப் பல பல ஆண்டுகள் ஆகிவிடும்.
1.காற்று மண்டலத்தில் உருளும் அமில உயிர்களுக்கெல்லாம்
2.மீண்டும் ஜீவன் கொள்ளும் காலத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

அதனால் இன்றைய ஞான சக்திகளைச் செயலாக்கக்கூடிய பிம்ப ஜீவன்களான நாம் நம் சப்தரிஷிகளின் உணர்வலையின் சக்தியுடன் ஜெபம் கொண்டால்
1.அவர்களின் செயலின் சக்திக்கு
2.நம் சக்தியும் கூடிச் செயல் கொள்ள முடியும்.

treasure of arul blessings

செல்வம் நம்மைத் தேடி வர வேண்டும்…! என்றால் என்ன செய்ய வேண்டும்…?

விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் வருகின்றது. அந்த அறிவிலிருந்து நீங்கள் மீள வேண்டும். மற்றவர்களையும் மீட்க வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இந்த உடல் இருக்கும் பொழுதே நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும். ஏனென்றால்
1.எத்தனை நிலை இருந்தாலும் கோடிச் செல்வங்கள் நாம் வைத்திருப்பினும்
2.நமக்கு அந்தச் செல்வம் உறுதுணையாக இருப்பதில்லை.

ஏன்..?

“நம் உடல் நலம் சரியில்லை…!” என்றால் செல்வத்தைக் கொண்டு வந்து நமக்கு முன்னாடி வைத்தால் அதன் மீது வெறுப்பு தான் வரும்.

அந்தச் செல்வத்திற்காகவும் சொத்தின் பாகங்களைப் பிரிக்கும் பொழுதும் ஒருவருக்கொருவர் சகோதரர்களுக்குள் சண்டையாகிப் பகைமையாகி அதனால் எடுத்துக் கொண்ட வெறுப்பு உணர்வுகள் நோயின் தன்மையாக அடைந்த பின் அந்தப் பணத்தைப் பார்த்தாலே வெறுப்பு தான் வரும்.
1.இதனால் தான் எனக்குப் பகைமையானது…
2.இதனால் தான் எனக்கு நோயே வந்தது…
3.சனியன்…! அதன் முகத்திலேயே நான் முழிக்கக் கூடாது…! என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் புறப் பொருளைப் பற்றித் தெரியாதபடி அருளைப் பற்றி நாம் தெரிந்து… அதை வளர்த்துக் கொண்டால்… பொருள் மேல் ஆசையே வராது. (அனுபவத்தில் பார்க்கலாம்)

ஆகவே… அருள் ஞானத்தின் மீது ஆசை வரப்படும் பொழுது அருள் சக்தியை வைத்துக் கிடைக்கக்கூடிய பொருளைச் சிதறாதபடி எடுக்கப்படும் பொழுது மன நிம்மதி கிடைக்கும்…!

போதுமான நிலைகளில் நமக்கு வேண்டியது நிச்சயம் வந்து கொண்டே இருக்கும். இதையும் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

உதாரணமாக நான் (ஞானகுரு) யாரிடத்திலும் தபோவனத்திற்காகப் பணத்தைத் தேடிப் போவதில்லை. ஆனால் தபோவனத்தின் வளர்ச்சி அதுபாட்டுக்கு வளர்கிறது.

எப்படி…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்..! என்று
2.குருநாதர் இட்ட கட்டளைப்படி அருள் சேவையைச் செய்து கொண்டேயிருக்கின்றேன்.
3.பணம் எப்படி வருகிறது… எப்படி நடக்கிறது…? என்பது இங்கே என்னுடன் கூட இருப்பவர்களுக்கே தெரியாது.

ஆனால் வெளியில் இருந்து பார்க்கிறவர்கள்.. இந்தச் சாமி என்ன கள்ள நோட்டு அடிக்கிறாரா..? என்று கேட்கிறார்கள்…! அதற்கு என்ன செய்வது..?

காசு வருகிறது… எந்த வழியில் காசு வருகிறது…! என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம். எனக்கே கூடச் சந்தேகம் தான்.

“காசு இல்லை…!” என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அடுத்த நாள் பார்த்தால் எந்த வகையிலாவது பணம் வந்து விழுகிறது.

காரணம்…
1.இந்த இயற்கையின் உணர்வுகள் எதை எண்ணுகின்றோமோ…
2.அதை மக்கள் மத்தியிலே ஒன்று சேர்த்து.. அந்த உணர்வின் தன்மை
3.“நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும்…!” என்ற இந்த உணர்வு ஒன்று சேர்க்கப்படும் பொழுது
4.அது தான் தன்னிச்சையாக எடுத்து அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.
5.நான் (ஞானகுரு) அல்ல…!

எல்லோரது மனமும் அந்த உறுதியாக்கப்படும் பொழுது அந்த ஒளியின் உணர்வை நமக்குள் உறுதியாக்கும் சக்தியாகச் செயல்படுகின்றது.

இங்கே எம்முடன் பத்து இருபது வருடமாகப் பழகியவர்கள் இதை எல்லாம் அறிந்திருக்கலாம். எப்படி வளர்ச்சி அடைகிறது… எப்படி எப்படிச் செயல்படுகிறது..? என்ற நிலையைச் சிலர் உணர்ந்தும் இருக்கலாம்.

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது காசு ஏன் உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் இதற்குத்தான். மற்றவர்கள் யாரும் இப்படிக் காசு கொடுக்க மாட்டார்கள்…!

அருளைப் பெருக்குங்கள்.. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்… அழியாச் செல்வம் உங்களைத் தேடித் தேடி வரும்…!

இராமாயணத்தில் இருக்கும் மூலக் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்

சீதாவைத் திருமணம் செய்யும் பொழுது “இராமன் தான் வில்லைத் தூக்கினான்… மற்றவர்களால் வில்லைக் கூடத் தூக்க முடியவில்லை…!” என்று ஒவ்வொரு கருத்துக்களிலும் உள்ள உள் மூலங்களை மாற்றி உண்மைகளை அறியவிடாது செய்து விட்டார்கள். பல இடைச் செருகல்களை ஏற்படுத்தி விட்டனர். இனியாகிலும் அந்தக் காவியங்களைப் படிக்கும் பொழுது தயவு செய்து ஞானிகள் காட்டிய வழியில் கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். வான்மீகி கொடுத்த மூலக் கருத்துக்களை நீங்கள் உணர்வீர்கள்.

 

தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமை

தாயை நாம் மதிக்கின்றோமா…?

தாய் கருவில் விளையும் பூர்வபுண்ணியம்

drug addictions

“இராணுவம்” என்ற பெயரில் மனித குலத்தின் குணங்களையே மாற்றியமைக்கக் காரணமாக இருந்த அரசியல் தலைவர்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய சமுதாய மக்களின் நிலையில் குணங்கள் அவர்களால் ஏற்பட்டதல்ல. அவர்களை மாற்றியமைக்க
1.விஞ்ஞான ரீதியில் செயல்படுத்திய “இயந்திர மனிதர்கள் தான்”
2.இன்று இராணுவம் என்று செயல்படுத்தப்பட்ட மனிதர்கள்…!

மனிதனையே… அவன் உணர்வின் அலையையே… (புத்தியை) நாட்டின் இன வெறி உணர்வு கொண்ட செயலுக்காகப் பேராசையில் தன் நாடு என்ற உணர்விற்காகத் தன் நாட்டையும் தன் பலத்தையும் கூட்டிக் கொள்ளப் பல தவறான பழக்கங்களை அன்று ஏற்படுத்தினர்.

இராணுவ முறையினால் மனித ஆத்மாவின் உணர்வின் எண்ணத்தை மாற்றப் “போதை வஸ்துக்களை” உண்ணச் செய்தனர்.

அப்போதையின் உணர்ச்சியுடன் மனிதன் உள்ள நிலையில் அவன் எண்ணத்துடன் குரோத வெறி சக்தியான இராணுவப் பயிற்சி முறைகளை ஊட்டி வழிப்படுத்தினர்.

அதே உணர்வலையின் சுற்றலில் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை மாற்றியதில்… அன்றாண்ட அரசியல் வீரர்களில் சிலரால் வழிப்படுத்திய நிலை இன்றளவும் உள்ளன.

“சர்ச்சில்” ஆண்ட காலத்திலும் “ஹிட்லர்” ஆண்ட காலத்திலும் அவர்களின் ஆட்களின் உணர்வுடன் இப்போதை வஸ்துக்களைச் செலுத்தப்பட்டுப் போதை உணர்வுடன் மனிதன் உள்ள பொழுது அவனுக்குப் பல பயிற்சிகளைக் கொடுத்தனர்.

எந்த உணர்வின் பயிற்சி அலையைப் புகட்டினார்களோ… அதே உணர்வின் செயலைச் செய்யத்தக்க மனித ஆத்மாக்களை இப்படி உருவாக்கி விட்டனர் அன்றிருந்த அரசியல் தலைவர்கள்…! இன்றும் இதன் வழித் தொடர் சில நிலைகளில் உழன்று கொண்டு தான் உள்ளது.

மனிதனை மனிதனே உண்ணும் உணர்வலை கொண்ட வெறிக் குணங்களின் செயல்கள் சில பாகத்தில் நடந்து கொண்டு தான் உள்ளது.
1.விஞ்ஞான ரீதியிலும் சில மந்திரவாதிகளின் நிலையிலும்
2.தன் இன வர்க்க உணவையே உண்டால் தனக்கு வீரிய சக்தி கிடைக்கும் என்ற உணர்வில்
3.பல செயல்கள் நடக்கின்றன இந்த உலகின் பல பாகங்களில்.

இயேசு கிறிஸ்து அக்காலத்தில் தோன்றிச் சில ஒளி அலைகளைச் செயலாக்கிச் சென்றார். முகமது நபியின் காலத்திலும் அவர் எடுத்த அலையின் தொடர் அவர் வாழ்ந்த அவரின் எண்ணமுடன் செயல்பட்டவர்களுக்குத் தன் சக்தி அலையைப் பரப்பித்தான் சென்றார்.

1.இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் நபிகளின் காலத்திலும்
2.மனிதர்களின் எண்ணத்தை நல் உணர்வின் வழியில் சுழற்சிப்படுத்தி…
3.ஒளி அலைகளை அவர்கள் பால் செலுத்தி அவர்கள் ஆத்மாவை வளர்க்கச் செய்து
4.ஒன்றைப் பலவாக நல் ஒளியின் அலையைப் பரப்பச் செய்த செயலில்
5.அவ்வுணர்விற்கு உகந்த ஆத்மாக்களைச் செயல்படுத்துவது என்பது கடினமாகிவிட்டது.

அதை எல்லாம் மாற்றி அமைக்கத் தான் ஞானிகளைப் பற்றியும் சித்தர்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே வருகின்றேன்.

நற்குணங்களின் வடிவாக முருகா என்ற ஆறு குணங்களைத் தெய்வமாக்கி அன்பு பண்பு பாசம் பரிவு வீரம் சாந்தம் என்ற நற்குணங்களை முருகனாக வடிவம் படைத்து மலை உச்சியிலும் மலைக்கு நடுவில் இடும்பன் என்ற தீய குணங்களைப் படைத்து இடும்பன் என்ற நிலையையும் உணர்த்தினார் போகர்.

ஒவ்வொரு மனித ஆத்மாவும் அவர்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் உயர்வான நிலை பெற வேண்டியதன் அவசியத்தைக் குறிக்க
1.மலை மேல் முருகனின் சிலையை அறுகுணங்களாக ஆறுமுகனாகப் படைத்து
2.சிலையை வணங்கும் முறையைப் போகர் ஏற்படுத்தினார்.

இடும்பனான குணங்களை அகற்றித் தெய்வ குணத்தை ஒவ்வொரு ஆன்மாவும் பெறவேண்டும் என்பதற்கே முருகன் சிலையை வைத்தார் போகர்.

அந்தச் சிலையை வணங்கும் ஆன்மாக்களுக்கு எல்லாம் நல் ஒளியின் அலையை இன்றும் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றார்.

planets and stars power

உலக மக்கள் அனைவரும் “பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும்…” என்பதற்காக வேண்டி இதைச் சொல்கிறேன்

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒவ்வொன்றும் அது கலவையாகும் பொழுது அது எப்படி எல்லாம் மாறுகின்றது…? அதிலே ஒளிக் கதிர்களாக இருப்பது தங்கமாக எப்படி மாறுகிறது..? என்று இதை எல்லாம் வரிசைப்படுத்திக் காட்டினார் குருநாதர்.

27 நட்சத்திரத்தின் சக்திகளை ஒவ்வொரு கோள்களும் எப்படி எடுக்கிறது…? அதற்குள் எனென்ன மாற்றங்கள் ஆகிறது…? என்று ஒவ்வொன்றாகக் காட்டினார்.

செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் சிவப்பு நிறமான நிலைகளும்… அதிலிருந்து வருவதும்… எப்படி இருக்கின்றது…?

புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகிறது…? 27 நட்சத்திரங்களின் சக்திகள் இதனுடன் கலவையாகப்படும் பொழுது புதன் கோள் எடுத்து எத்தனையோ வகையான உலோகத் தன்மை கொண்டதாக எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது..?

அதே சமயத்தில்
1.வியாழன் கோள் எடுக்கும் பொழுது
2.அந்த நட்சத்திரங்களின் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி
3.ஒரு பொருளுக்குள் ஊடுருவி “இணைக்கும் சக்தியை” எப்படிக் கொடுக்கின்றது…?

இதிலே ஆவித் தன்மையாக ஆன பின் சனிக்கோள் எப்படி அந்த ஆவியான நிலைகளை எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? இதை எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் கொடுக்கின்றார்.

ஒவ்வொரு கோளும் தனக்கென்று உபகோள்களாக வளர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எடுத்து வளர்கிறது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டுக் கோள் பத்துக் கோள் பன்னிரெண்டு கோள் என்று உப கோள்கள் உண்டு.

வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு. அந்த 27 கோள்களும் 27 நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாக மாற்றுகின்றது.

அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான நிலைகளில் வரும்.

வியாழனின் உபகோள்களிலேயே
1.ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்
2.ஒன்று அப்படியே மாற்றிச் சுற்றி வரும்.
3.விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
4.அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையிலிருந்து வருகிறதா…!
5.இது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் உள்ளார்கள்.

அந்த 27 உபகோள்களும் அது சுழன்று கொண்டு தான் இருக்கிறது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து இதற்குள் அதை எல்லாம் சேர்த்து ஒரு கலவையாகி இந்த உணர்வின் தன்மை “ஒரு புதுவிதமான கதிரியக்கமாக…” மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படி அது உறைபனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோள் உறையும் பனியாக மாற்றுகின்றது. இன்றும் அவ்வாறு ஆக்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.எதிர் காலத்தில் இந்த உண்மைகளை நீங்களும் அறிய வேண்டும்.
2.நான் மட்டும் தெரிந்தால் போறாது… எத்தனை காலம் இந்த உடலில் இருக்கப் போகின்றேன்…!

ஆகவே அந்தப் பேருண்மைகளை நீங்கள் எல்லோரும் உணர்ந்து… நீங்களும் தெளிந்து… “இந்த உலகில் வரும் இருளை மாய்க்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்…!”

அதுவே என்னுடைய (ஞானகுரு) தவம்.

இருளை அகற்றி ஒளியாக மாற்றும் நிலை பற்றி விளக்கம் 

அதிகாலையில் நாம் செய்ய வேண்டிய உண்மையான அர்ச்சனை 

உயிரிலே பட்டால் தான் உணர்ச்சிகள் நமக்குத் தெரிய வரும்

இராமேஸ்வரத்தில் 27 கிணறை ஏன் வைத்துக் காட்டியுள்ளார்கள்…? தனுசுகோடி கோடிக்கரை – விளக்கம்

நேரமாகி விட்டது இராமன் மணலைக் குவித்தான் என்றால்… இந்த உடலில் நேரமாகி விட்டது. கோடிக்கரையாக இந்தக் கடைசி மனித உடலில் நாம் வாழும் சிறிது காலத்திற்குள் யாருடைய பகைமையும் வளராதபடி நம் மனதை ஒன்றாக்கி (27நட்சத்திரம்) உயிருடன் ஒன்றிடல் வேண்டும். வியாபாரமோ குடும்பமோ எந்த விஷயமாக இருந்தாலும் அருள் ஒளியின் தன்மையை எடுத்து தனுசுகோடி… உயிருடன் ஒன்றாக்கி ஒளியாக நாம் மாற வேண்டும். அது தான் இராமாயணத்தில் இராமேஸ்வரத்தில் கொடுக்கப்பட்ட தத்துவம்.

 

earth change protection

என்றோ அழிந்திருக்க வேண்டிய இந்தப் பூமியை இன்னும் காத்துக் கொண்டிருக்கும் சித்தர்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அன்று ஆண்ட அரசரகள் தன் நிலை குறையாமல் இருக்க இயேசு பிரானை இம்சித்தது “யூதர்கள்…” என்று பழியை அவர்கள் மேல் போட்டுத் தன் உயர்வை மங்காமல் பாதுகாத்துக் கொள்ள தங்களை மறைத்துக் கொண்டனர்.

அதே சமயத்தில் யூத சமுதாய இன மக்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும்…! என்ற வெறியில் அன்று பலரை அன்றாண்ட அரசர்கள் அந்த உடல்களை அழித்தார்கள்.

அந்த உடல்களில் ஏறிய “ஒளி அலை…!” அழித்த உடலிலிருந்து எங்கப்பா சென்றிருக்கும்…? இன்றும் யூத இனத்திலிருந்து தப்பி வந்த மக்கள் தான் இந்தியாவிலும்… ஆரிய இனங்களாகக் குடியேறி வழித் தொடர் பெற்று இன்று வரை சமுதாயச் சுழற்சியில் உள்ளனர்.

இந்த உலகினில் தொழில் நுட்ப வல்லுனர்களில் உயர் ஞானம் கொண்டவர்களில் பெரும்பான்மையோர் யூத சமுதாய இன மனிதர்கள் தாம்.

இயேசு பிரானை அன்றாண்ட அரசர்கள் அவர் சக்தி வெளிப்படாமல் இருக்க ஒரு தடங்கலை ஏற்படுத்தியிருக்கா விட்டால் இயேசுவின் ஞானத்தினாலேயே இந்த உலக மனித ஆத்மாக்களுக்கு அன்றே பல உயர்ந்த சக்திகளை இன்னும் வளர்ச்சிப்படுத்தி இருப்பார்.

இயேசு பிரான் ஏன் உடலை விட்டுச் சென்ற பிறகு வளர்ச்சி அளித்திருக்கக்கூடாது…? மகானின் சக்தியிலும் தடங்கலா…?

1.ஜீவ உடலில் இருந்து எடுக்கும் சுவாச அலையில்
2.இந்தப் பூமிக்கு வேண்டிய சக்தி அலையை ஈர்க்க
3.எண்ணத்தின் உணர்வால் எடுக்கும் சுவாசத்தில்
4.அந்த ஒளி அலை காந்தத் தன்மை ஈர்ப்பிற்கு வர வேண்டும்.

பொதுவான மண்டலம் தான் பால்வெளி மண்டலம். பல மண்டலங்களுக்கும் பால்வெளி மண்டலம் தான் சக்தி தருகின்றது. ஆனாலும்
1.ஈர்ப்பிற்கு வருவதற்கு
2.இவ்வெண்ணச் சுவாசத்தில் எடுக்கும் அலையின் காந்தத் தன்மை தான் பூமியில் பாய முடியும்.

எண்ணத்தால் வழிப்படுத்தும் செயலினால் தான் பூமிக்கு ஈர்ப்புச் சக்தியே கூடியதேயன்றி “தானாக” எதுவும் நடக்கவில்லை.

மகான்களின் சக்தி ஒளியை ஆத்மாக்களின் எண்ணத்துடன் பாய்ச்சி “அவர்கள் எடுக்கும் சுவாச அலையினால் தான்…!” பிற மண்டலங்களின் ஒளி அலையும் நமக்குக் கிட்டும்.

அன்றைய புராணக் கதைகளில் விளக்கியுள்ள சனி பகவான் கேது செவ்வாய் இப்படி ஒவ்வொரு மண்டலங்களுக்கும் உருவங்களையும் கோவைக் கதைகளையும் எதற்காக உணர்த்திச் சென்றான் நம் சித்தன்…?
1.தெரிந்தோ தெரியாமலோ கதை உருவில் காணும் உருவ ஈர்ப்பில்
2.எண்ணம் செல்லும் பொழுது அவ்வலை சக்தி பூமியில் வந்து பதிகிறது.

இயேசு பிரானின் காலத்தில் தேவலோகத்திலிருந்து தேவ தூதர்கள் நட்சத்திரங்களாக மின்னி வந்தார்கள்…! என்று எதனை உணர்த்தினார்கள்…?

இயேசு பிரான் வந்ததினால் தான் நம் பூமிக்கே பல மண்டலங்களின் ஈர்ப்பலையின் தொடர் ஏற்பட்டது. இயேசு பிரான் சில மலைகளிலிருந்து ஜெபம் செய்தார். அந்த மலைகளுக்கே சில ஒளி அலையை எடுக்கும் முறைப்படுத்திச் சென்றார்.

அவரது ஒளி அலை பாயப்பட்ட பல ஆத்மாக்கள் யூத இன சமுதாயத்தில் சித்து நிலையிலும் சூட்சும செயலிலும் அவர் இருந்த காலத்திலிருந்த மனித ஆத்மாக்களே இன்று வரையிலும் உள்ளனர்.

விஞ்ஞானத்தால் பல சாதனைகளைப்படுத்திப் பல மண்டலங்களுக்குப் பல விஷ வாயு குண்டுகளைச் செலுத்தி அதனை வெடிக்க வைக்கும் முறையெல்லாம் படுத்தி
1.குரோத உணர்வின் நாட்டுப் பற்று வெறியினாலும்
2.ஜாதி மத இன வெறியினாலும் செய்யப்படும் சூழ்ச்சிகளை எல்லாம்
3.இன்றும் மாற்றி அமைத்து வருகின்றனர் இயேசு பிரானின் வழித் தொடரின் ஆசி பெற்ற யூத இன சித்து நிலை கொண்ட சிலர்.

என்றோ அழிந்திருக்க வேண்டிய இப்பூமியை வெறியுணர்வு கொண்ட சமுதாய இன மக்களை அவர்களின் எண்ணத்தில் ஏற்படும் செயல் விளைவுகளையெல்லாம் “மாற்றிக் கொண்டு தான் இந்தச் சித்தர்கள் உள்ளார்கள்…!”

துதிக்கும் மடாலயங்களில் சிலுவையில் அறையப்பட்ட சோர்ந்த முகம் கொண்ட இயேசு பிரானைக் காணுகின்றார்கள். அந்த இயேசு பிரான் செயலாக்கும் முறையை “யாராவது உணர்கின்றார்களா…?”

guru and disciple

குரு நமக்குக் கொடுக்கும் அருள் வாக்கைப் பேணிக் காக்கின்றோமா…?

ஒரு சமயம் குருநாதர் உனக்குத் தங்கம் செய்யத் தெரியுமாடா…? என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்..?

எனக்கென்ன சாமி தெரியும்…! என்று சொன்னேன்.

ஈயக்கட்டியை வாங்கிக் கொண்டு வா… ஒரு இரும்புக் கரண்டியைக் கொண்டு வா… என்றார். வாங்கிக் கொண்டு வந்தேன்.

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அங்கே “சில மரங்களுக்கு முன்னாடி இருக்கும் குப்பைகளை எல்லாம் காண்பித்து…” இதை எல்லாம் எடுத்துக் கொண்டு வா..! என்றார்.

அதை எல்லாம் அள்ளிப் போட்டு நெருப்பை வைத்துக் கொளுத்துடா என்றார். குப்பை எரிந்த பிற்பாடு பார்த்தோம் என்றால் அதிலே இருக்கும் சத்துகள் எல்லாம் ஈயத்தில் இறங்கி அடுத்தாற்போல் பார்த்தால் “தங்கமாக” இருக்கிறது.

குருநாதர் இந்தப் பக்கம்… அந்தப் பக்கம்… என்று பல இடத்திலிருந்து எனக்குத் தெரியாமல் தான் குப்பையை அள்ளச் சொன்னார். நானும் அதை எல்லாம் குறித்து (அடையாளம்) வைத்துக் கொண்டேன்.

எல்லாம் செய்த பிற்பாடு தங்கக் கட்டியாகி விட்டது. குருநாதரிடம் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாத்தியார் ஆசாரியார் எல்லாம் என்னிடம் பழக்கமானவர்கள் இருந்தார்கள்.

குருநாதர் செய்த தங்கக் கட்டியை விற்கச் சென்றேன். அப்பொழுது அந்தத் தங்கக் கட்டியின் தரம் எப்படி இருக்கிறது… பாருங்கள்..! என்றேன்.

நீ பைத்தியக்காரரிடம் (ஈஸ்வரபட்டர்) ஏன் சுற்றுகிறாய்…? என்ற காரணம் இப்பொழுது தான் தெரிகிறது என்றார்கள் அவர்கள். நீ சரியான “காரியப் பைத்தியம் தான்…” என்றார்கள்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தைச் செய்து கொண்டு வா.. நான் வாங்கிக் கொள்கிறேன்…! என்றார் அந்த ஆசாரி.

முதலில் குருநாதர் தங்கம் செய்த மாதிரியே அவருக்குத் தெரியாமல் நானும் செய்து பார்த்தேன். தங்கம் வந்துவிட்டது…! அதைச் செய்த பிற்பாடு ஆசாரியிடம் கொடுத்த பிற்பாடு அவர் என்ன செய்தார்…?

அட அடா… எனக்குக் கொஞ்சம் வழி கொடுத்தால் நான் எத்தனையோ செய்வேன்.. அடுத்து வாத்தியார் என்ன செய்தார்…? அட.. நீ செய்யாமல் போனால் பரவாயில்லையப்பா…! என்று அந்த வாத்தியார் என்னைச் சுற்றி சுற்றி வந்தார். நான் போகும் பக்கம் எல்லாம் வந்தார்.

கொஞ்சம் போல.. ஒரு கோடி மட்டும் காட்டிவிடு…! என்றார். நீ பாவம் செய்ய வேண்டாம் நான் அதைச் செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறேன்.

அடேயப்பா..! அவர் என்னைச் சுற்றியே வந்தார். இப்படித் தங்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ரொம்பப் பேர் என்னைச் சுற்றி வந்தார்கள் சிறிது காட்டிக் கொடுங்கள் என்று…!

தங்கமே எனக்குச் செய்யத் தெரியாது என்றேன்.

இல்லை… நீங்கள் தங்கத்தை விற்று வந்திருக்கின்றீர்கள்… அது எப்படி…? மிகவும் நயமான தங்கம் என்று எல்லோரும் சொல்கிறார்களே…! என்று கேட்டு நான் எங்கே போனாலும் துரத்திக் கொண்டே வருகின்றார்கள்.

காரணம்… குருநாதர் ஒவ்வொரு தாவரத்திலும் என்ன சத்து அடங்கி இருக்கின்றது…? என்று காட்டினார்.
1.ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வும் எப்படி மாறியது…?
2.அந்தத் தாவர இனச் சத்துக்களைச் சூரியன் எப்படி எடுத்து வைத்திருக்கிறது…?
3.அதை எடுத்து அலைகளாக மாற்றும் பொழுது நட்சத்திரங்கள் இரண்டு மோதும் பொழுது இந்த உணர்வுகள் எப்படி அதிலே இணைகிறது…?
4.அது இணந்த பின் அதனுடைய மாற்றங்கள் எப்படி மாறுகிறது…? என்கிற வகையிலே குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லால் சொல்லி நிரூபிக்க வேண்டும் என்றால் உங்கள் மனதில் வைத்திருக்க முடியாது.

ஆனால் செய்து காண்பித்தோம் என்றால் சாமி சொல்லி விட்டார் அல்லவா… நாமும் செய்து பார்ப்போம் என்று
1.இந்த ஆன்மீக நிலையை எடுப்பதற்குப் பதில்
2.இந்த வாழ்க்கைக்குத் தேவை என்று “பணத்தின் மீது” ஆசை வைத்து விடுவீர்கள்.

அந்த மாதிரிப் போனவர்கள் நிறைய உண்டு… இன்றும் இருக்கின்றார்கள்.

“சாயிபாபா” லிங்கத்தை எப்படிக் கக்கி எடுத்துக் கொடுக்கின்றார்…! என்று ஒரு பையனுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவன் செய்தான்… அதற்குப் பின்னாடி அவன் பெரிய கடவுளாக மாறிவிட்டான்.

சிலருக்கு இந்த மாதிரி விவரங்கள் எல்லாம் சொன்னவுடனே தனித் தனிக் கடவுளாக மாறி
1.ஈஸ்வரபட்டர் தனித்து (SPECIAL) அவர்களுக்குக் கொடுத்தார் என்று
2.இந்தக் குருநாதரை மறந்து விட்டார்கள்.

உலகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்று சிலருக்குக் காண்பிக்கப்படும் பொழுது அதிலேயும் “எல்லாம் தெரிந்து விட்டது…!” என்று சில பேர்
1.இன்னும் கொஞம் தானே…
2.அப்புறம் பிடித்தால் போய்விட்டது என்று
3.எம்மை (ஞானகுருவை) மறந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

இப்பொழுதும் அப்படி குருவை மறப்பவர்கள் உண்டு. ஏனென்றால் தனித்து இந்த உடலின் ஆசை தான் வருகிறது.

மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற நிலையோ இயற்கை எப்படி இருக்கிறது….? அதிலே நீங்கள் எப்படி வளர வேண்டும்…? என்ற உண்மையைச் சொன்னாலும் கூட இந்த உடல் இச்சையே வருகிறது.

அந்தப் பேரின்பப் பெருவாழ்வு என்ற அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற ஆசை வருவதில்லை.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாக அந்த உண்மைகலை உணர வேண்டும் என்பதற்கே அனுபவமாகக் கண்டதை வெளிப்படுத்துகின்றேன்.

தொழில் மந்தம் குடும்பத்தில் குழப்பம் வருவதன் காரணம் என்ன…?

நல்லதைக் காக்கும் எண்ணத்தை நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வளர்த்தே ஆக வேண்டும். ஏனென்றால் சந்தர்ப்பத்தால் தான் எல்லாவிதமான தீமைகளும் நமக்குள் வந்து சேர்கிறது. எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளர்ந்தால் நம் வியாபாரம் செழிக்கும்… குடும்பத்தில் எந்தக் குழப்பங்களும் வராது. மகிழ்ச்சியாக வாழும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

 

தியானமிருப்பவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை தரம் புருவ மத்தியில் நினைக்கின்றீர்கள்

முழுமையான தியானப் பயிற்சி

எலும்புக்குள் உள்ள ஊணுக்குத் தியானிக்க வேண்டிய முறை 

புது மனையில் புகும் முன் கூட்டுத் தியானம் வைக்க வேண்டியதன் அவசியம்

Jesus christ

தன்னைத் தாழ்த்தி மற்றவர்களை உயர்த்துவதே “அவதார புருஷர்களின் செயல்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியில் சப்தரிஷிகளின் செயலினால் அந்தந்தக் கால மாற்றத்தில் அவர்களின் சக்தியை உணர்த்தப் பல உடல்களை ஏற்று “இம்மனித ஆத்மாக்களை வழி நடத்திச் சென்றனர்…!” என்று உணர்த்தி வந்தேன்.

இயேசு கிறிஸ்து காலத்தில் நடந்தவை என்ன…?

அவர் வாழ்ந்த காலத்தில் அன்றுள்ள மக்களைத் தன் ஒளி வட்டத்தில் கலக்கச் செய்ய சப்தரிஷியினால் இயேசு கிறிஸ்து அவதரித்தார்.

அவரை அன்றைய மக்கள் ஏற்றுக் கொண்டு அவர் வழி நடக்கத் தவறி…
1.அன்றைய அரசு தன் புகழ் குறையும் என்பதற்காக அந்த மகானைத் துன்புறுத்தியதைத்தான் உலகம் அறியும்.
2.ஆனால் இயேசு கிறிஸ்துவால் செயலாக்கிய நிலைகள் எவை என்பதை உணர முடிந்ததா…?
3.பரிவையும் பண்பையும் பாசத்துடன் அன்பாக்கி ஊட்டிச் சென்றார் இயேசு பிரான்.

அவர் அவதாரத்தில் வந்து அன்பையும் பண்பையும் மட்டும் தானா புகட்டிச் சென்றார்…? ஓர் மகான் தன் நிலையை உணர்த்த “உலகத்தின் ஜீவாத்மாவின் உடலில் ஏறிச் செயல்பட்டார்…” என்றால் அந்த மகானுக்கு எந்த நிலை எல்லாம் ஏற்படும்…? என்று தெரியாமலா போய்விடும்.

இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தினால் அவர் வழி ஏற்று அவர் வழி வந்து அவரின் சக்தி அலையைப் பெற்ற பல ஆத்மாக்களுக்கு அவரால் திராட்சை இரசம் அளிக்கப்பட்டது. இன்றும் கிறிஸ்துவ ஆலயங்களில் திராட்சை இரசம் தரப்படும் முறையுள்ளது.

ஆனால் இயேசுவினால் தரப்பட்ட திராட்சை இரசமுடன் அவரது சக்தியுடன் அவர் பெற்ற நல் ஒளியின் சக்தி அலையைப் போதைப்படுத்தி அந்த இரசத்துடன் கலந்து பலருக்கு அளித்து
1.அவர்களின் உடலிலேயே பல ஒளி அலைகளைப் பாய்ச்சி
2.அவரது செயலுடன் அவர்களின் எண்ணத்தையும் கலக்கச் செய்து
3.அதனால் அவரின் ஒளி வட்டத்தை இந்தப் பூமியில் என்றும் நிலைக்கும்படிச் செயலாக்கிவிட்டுத் தான் அவ் இயேசுபிரான் சென்றார்.

இன்றளவும் அவரின் பெயர் நிலைக்கபடுகிறதென்றால் எதன் அடிப்படையில்…? இயேசுவே…! என்ற ஒலி அலையை எடுக்கும் ஆத்மாக்கள் அலையுடன் அவர் பெற்ற சக்தி அலைகள் இன்றளவும் பரவிக் கொண்டுதான் உள்ளன.

இயேசு கிறிஸ்துவினால் அன்று தரப்பட்ட திராட்சை இரசம் அருந்திய ஆத்மாக்களின் உடல் வழித் தொடர் கொண்ட ஆத்மாக்கள் இன்றும் யூதர்கள் என்ற சமுதாயத்தில் உள்ளனர்.

அவர்கள் உடலின் தன்மையிலேயே பல வீரிய சக்தி நிலை குணங்களுடன் பிறந்து வாழ்கின்றனர். யூதர்களினால் இன்றும் பல நல்ல அலைகளை எடுத்து உலகிற்குப் பயன்படச் செய்ய முடிகின்றது.

1.ஒவ்வொரு உடல் தன்மைக்கும் பல மாற்றங்கள் உண்டு
2.ஒன்றை ஒத்த நிலையில் ஒன்று இல்லை
3.ஒன்று போலவே எல்லாம் இருந்தால்… எந்த வளர்ச்சிக்கும் வழியில்லை.

யூதர்களின் உடலின் சக்தி அமில குணமே உயர்ந்த நிலையில் வளர்ச்சியுற்றுச் செயல்படும் வண்ணம் வைக்கப்பட்டது இயேசு கிறிஸ்துவினால் தான்.

இயேசு கிறிஸ்துவை விஷத்தை அருந்தச் செய்தும் அவர் ஆன்மா பிரியவில்லை. சிலுவையில் வைத்து அறைந்தும் அவர் ஆத்மா பிரியவில்லை.

பல அமில குணங்களின் உணர்வின் எண்ணத்தில் வாழ்ந்திருந்தால் அவர் ஆத்மா பிரிந்து சென்றிருக்கும். ஆத்மா பிரியாத உடலைத்தான் இவர்கள் கல்லறையில் வைத்தார்கள். பூமியிலும் காற்றுள்ளது. பூமியின் உள் நிலையிலும் காற்றுள்ளது.

மகானின் உடலை இம்சித்ததாக இவர்களையே இம்சைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்ற உணர்வினால் தான்
1.அவர்களின் ஆன்மா நிம்மதி பெறப்படும்
2.அவர்களின் ஆசையும் தன் ஆசை தான்..! என்று
3.அவர்களின் இச்சைக்குத் தான் உட்பட்டு இயேசுபிரானும் செயல்பட்டாரேயன்றி
4.”தான் உயர்ந்த மகான்…!” என்று அந்த நிலையில் தன் உயர்வைக் காட்டவில்லை
5.ஒவ்வொரு ஆத்மாவும் உயர வேண்டும் என்று உலகிற்கு வந்த அவதார புருஷர்
6.தன் உயர்வை உணர்த்திச் செல்வாரா…? அவரின் செயல் தான் இன்றளவும் தொடர்ந்திருக்குமா…?
7.என்று அந்த உடலை ஏற்றாரோ அந்த உடல் அக்கல்லறையில் அப்படியே தான் உள்ளது.

அவர் வந்து சென்று வளர்த்துச் சென்ற ஒளி அலையின் வட்டமும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது இன்றளவும்…! 

 

NAVAPASHANAM MURUGAN

போகர் உருவாக்கிய நவபாஷாணச் சிலையின் இரகசியம்

போகர் என்றாலே “தாவர இனச் சத்தை எல்லாம் போகித்தவர்…” என்று பொருள்.

ஆதியிலே அகஸ்தியன் இயற்கையின் சக்திகளை எப்படி மோகித்து அந்த உணர்வின் தன்மையைப் போகித்து அந்த உணர்வின் சக்தியை அணுவாக மாற்றினானோ அதே போல் தான் அகஸ்தியன் பெற்ற அருளை போகரும் பெற்றதனால் “போகர்…!”

எதனையுமே நுகர்ந்து…
1.உணர்வுகளை அறிய வேண்டும்…! என்ற ஆர்வத்தைக் கூட்டிக் கூட்டிக் கூட்டி
2.அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் பெருக்கி
3.மணத்தால் நுகர்ந்திடும் ஆற்றல் பெற்றவர் போகர்.

நவக்கோள்கள் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் பூமியிலே படர்ந்திருக்கும் பொழுது “பாஷாணக் கற்களாக…” அது விளைந்திருக்கும்.

அப்படிப் பாஷாணக் கற்களாக விளைந்ததைத் தனித்துத் தனித்து எடுத்து இந்த நவக்கோளின் உண்மையை அறிந்து நவபாஷாணத்தால் ஒரு சிலையை உருவாக்கினார்.

27 நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதி அது ஒளி வீசும் உணர்வுகளையும் இந்த நவபாஷாணத்திற்குள் அதைப் பதியச் செய்தார்.

அந்த உணர்வின் இயக்கத்தைக் கொண்டு எந்தெந்தக் குணத்தில் எந்தெந்தக் கோள்களின் சத்து எதெனெதன் நிலைகளில் இருக்கிறது என்ற நிலையை அந்த நவபாஷாணத்திற்குள் பாய்ச்சினார்.

புழுவிலிருந்து மனிதனாக வந்த நிலையில் பலவிதமான உணர்வுகளை… பல விதமான உணவுகளை… தான் உட்கொண்டு அதனைதன் உணர்வு கொண்டு எண்ணங்கள் உருவாகி… அதன் வழியில் வளர்ச்சி பெற்ற உண்மையை… அறிந்து கொண்டவன் போகன்.

1.ஒவ்வொரு தாவர இனச்சத்தின் தன்மைகளிலும் மனிதனை உருவாக்கக் காரணமாக இருந்த
2.நஞ்சை வென்றிட்ட… நஞ்சை வென்றிடும்.. அந்த உணர்வின் சத்துக்கள்
3,புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் இருக்கும்
4.அது நாளுக்கு நாள் விஷங்களை மாற்றி… மாற்றி… மாற்றி…
5.விஷத்தை மாற்றிடும் சக்தி பெற்ற பின் தான் மனிதனாக உருவாக்கியது என்பதை உணர்ந்து
6.மனிதனுக்கு மூலமாக இருந்த விஷத்தை வென்றிடும் தாவர இனச் சத்தின் தன்மைகளையும்
7.அந்தச் சிலையில் சாரணையாக ஏற்றினான் (நவக்கோள்கள் + 27 நட்சத்திரங்கள் + தாவர இன சத்துக்கள்).

விஷம் கொண்ட மற்ற விஷ ஜெந்துக்கள் மிருகங்கள் மோப்பத்தால் நுகர்ந்தறிந்து தங்களைக் கொன்று புசித்திடாமல் இருப்பதற்காக வேண்டி அக்காலங்களில் அகஸ்தியனின் தாய் தந்தையர்
1.பல விதமான மூலிகைகளைத் தான் படுத்திருக்கும் பக்கம் பரப்பி வைக்கின்றார்கள்…
2.அரைத்து உடலிலும் பூசிக் கொள்கிறார்கள்.
3.அந்த மூலிகைகளின் மணத்தைக் கண்டு அந்த உயிரினங்கள் விலகிச் சென்றுவிடுகின்றன.

அத்தகைய மணங்களை அகஸ்தியனின் தாய் நுகர்ந்ததனால் அந்தத் தாயின் கருவிலிருந்த அகஸ்தியன் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் ஆற்றலின் சக்திகள் விளைந்தது.

27 நட்சத்திரங்களின் உணர்வுகளும் கடும் நஞ்சு கொண்டது. நட்சத்திரங்களிலிருந்து வரும் கதிரியக்கங்கள் மின்னலாகத் தாக்கும் பொழுது மற்றொன்றை ஊடுருவி வீழ்த்திவிடும். அத்தகைய வீரிய சக்தி கொண்டது தான் நட்சத்திரங்கள்.

தாய் கருவில் இருக்கும் பொழுது… அகஸ்தியனின் சந்தர்ப்பம் அதனை எல்லாம் அடக்கித் தனக்குள் அணுத் தன்மையாக மாற்றிக் கொண்டது… மாறியது….! அந்த அகஸ்தியன் தான் இன்றும் அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக உள்ளான்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியின் துணை கொண்டு அகஸ்தியனுக்குப் பின் இரண்டாவது… இந்த போகன் 5000 ஆண்டுகளுக்கு முன் அறிந்துணர்ந்தான்.

நம் பிரபஞ்சமும் கோள்களும் நட்சத்திரங்களும் எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் கண்ட உணர்வை அவனும் தனக்குள் கண்டுணர்ந்து நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான்.

1.27 நட்சத்திரங்களின் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அந்த மின் கதிர்கள் நவபாஷாணத்திற்குள் ஊடுருவி
2.அதன் வழி கொண்டு இந்த 27 நட்சத்திரங்களையும் ஒருங்கிணைத்து
3.அந்த உணர்வின் தன்மை தனக்குள் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற ஒரு சிலையை “முருகன் சிலையாக…” உருவாக்கினான் போகன்.

அதாவது
1.ஆறாவது அறிவின் நிலைகளை “முருகா…!” என்று அறிவின் சிறப்பாகக் காட்டி
2.நாம் மனிதனாக எப்படி வந்தோம்…?
3.மனிதனாக ஆன பின் இத்தனை அறிவும் நாம் எப்படிச் செய்ய முடிந்தது…? என்பதை அவன் கண்டுணர்ந்து
4.நமக்கெலாம் தெரியப்படுத்தினான்…. அந்தப் போகன்.

ஒவ்வொரு பகுதி மக்களும் அந்த உணர்வுகளை அதை எப்படிப் பெறுகின்றனர் என்ற நிலையை அறிவதற்காக வேண்டி இந்தப் பூமி முழுவதற்கும் ககன மார்க்கமாகச் சென்று அறியும் சக்தி பெற்றான்.

அந்த அறிவின் சக்தி பெற்ற நிலையில் இந்த நவபாஷாணச் சிலையை உருவாக்கி…
1.அதன் வழியில் இன்றைக்கு நாம் எல்லாம் வழிபடும் நிலையாக

2.ஆறாவது அறிவின் பெருமையை சிலை ரூபமாக வெளிப்படுத்தியது போகன் தான்..! 

2004க்கு மேல் வரும் விஷத் தன்மைகளிலிருந்து தப்பும் வழி 

விஞ்ஞான உலகில் இருந்தாலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம் 

உயிரின் துடிப்பே இரு மடங்காகும் சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கின்றது

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்

 

நம் உயிர் “அரங்கநாதன்..,” நாம் நுகரும் உணர்வு அரங்கத்திலிருந்து உணர்வுகளை அது உள்ளிருந்து நாதங்களை எழுப்புகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் வரும் பொழுது “ஆண்டாள்…” பெண்பாலாகக் காட்டுகின்றார்கள். அதுதான் (அந்த உணர்ச்சிகள்) நம்மை ஆளுகின்றது.. ஆண்டாள். அதாவது சாதாரண மக்களுக்கும் புரிய வைப்பதற்காக வேண்டி திருப்பாவை.., திருவெம்பாவை..

1.நல்லவைகளைச் சொல்லு

2.நல்லவைகளையே பேசு,

3.நல்லவைகளை எண்ணி இரு அப்படி என்ற நிலைகளைத்தான் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாள் என்று சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது ஆகவே, நாம் மதியோடு வாழ வேண்டும். மதியின் தன்மை பெற்ற மார்கழியில் தான் ஒளியின் சரீரம் ஆனது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து மதி நிறைந்த நாளாக அமைத்தல் வேண்டும்.

 

athimoolam agastya

சாங்கிய சாஸ்திரத்திற்கும் மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்திற்கும் உண்டான வித்தியாசங்களை அறிந்து கொள்ள வேண்டும்

கணவன் இறந்தால் சாங்கிய சாஸ்திரப்படி மனைவியின் மாங்கல்யத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால்
1.“கணவனை இழந்தவள்…” என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம்.
2.அந்த மாங்கல்யத்தைக் கழட்டி விட்டால் தான் தன் குழந்தைகள் மீது பற்று வருமாம்.

இப்படிச் செய்கின்றனர்.

மாங்கல்யத்தைத் தான் தூக்கி எறிந்து விடுகின்றார்கள். வாழ்க்கையில் என்று திருமணம் ஆனதோ அவருடன் கலந்து உறவாடிய உணர்வுகள் உடலுடன் இருக்கின்றதே அதை என்றைக்குத் தூக்கி எறிவது…?

சொல்லுங்கள் பார்க்கலாம். தூக்கி எறிய முடியுமா…? அவர் சம்பாரித்த சொத்தைத் தூக்கி எறிகின்றீர்களா..?

“கணவர் தன்னுடன் இருக்கின்றார்…!” என்ற நிலைகளை எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் கணவரின் உயிரான்மா இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்வுகளை மனைவி எண்ணி எடுக்க வேண்டும்.

அங்கே சப்தரிஷி மண்டலங்களில் இணைத்த பின் அவரை “ரிஷி” என்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த அருள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று மனைவி அதை எண்ணி வளர்த்தால் அந்த அருள் உணர்வுகள் இங்கே வரும்.

மாறாக… கணவன் மேல் பற்று கொண்டு “என்னை விட்டுப் போய்விட்டாயே…!” என்று எண்ணினால்
1.கணவனின் உயிரான்மா மனைவியின் உடலுக்குள் தான் வருகின்றது.
2.அவர் உடலில் வந்த நோய்கள் தான் இங்கே விளைகின்றது.

மீண்டும் இந்தப் பற்றின் தன்மை கொண்டு “போய்விட்டார்” என்று எண்ணி என் குழந்தைகளை நான் எப்படிக் காப்பேன்…? என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தைத்தான் வளர்க்க முடிகின்றது.
1.கணவனையும் பாதுகாக்க முடியவில்லை.
2.ஆக நம்முடைய உணர்வையும் நாம் காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட விஷத்தின் தன்மை பெற்றால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் விஷத் தன்மை கொண்ட உடலாகத்தான் மாற்றுகின்றோம்…! என்ற நிலையை எல்லோருமே மறந்து விடுகின்றனர்.

ஆனால் நம் ஞானிகள் நமக்கு உணர்த்திய பேருண்மை என்ன…?

மனிதன் பல் கோடிச் சரீரங்களில் விஷத்தை நீக்கி… நீக்கி… நீக்கி… விஷத்தை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக இந்த மனித உடலை உருவாக்கியுள்ளான்..! என்பதைச் சாதாரணமாக “ஒரு கல் சிலையை வைத்து…!” நமக்குத் தெளிவாக்குகின்றனர்.

1.யானைத் தலையை வைத்து மனித உடலைப் போட்டு
2.நாம் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக
3.இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

“ஆதிமூலம்” – நம் பூமிக்குள் ஆதியிலே வந்த இந்த மூலமான உயிர் தன் வாழ்க்கைக்குச் சுவாசித்த உணர்வு மூஷிகவாகனா… அதாவது
1.சுவாசித்த உணர்வு கொண்டு வாழ்க்கை நடத்தி
2.தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசித்துக் கணங்களுக்கு அதிபதியாகி
3.பரிணாம வளர்ச்சியாகி நஞ்சு கொண்ட உணர்வுகளிலிருந்து விடுபட்டு
4.இப்படித் தான் நாம் மனிதனாகப் பெற்றோம் என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

மிருகங்கள் அனைத்துக்கும் உடல் வலிமை உண்டு. ஆனால் மனிதனுக்கு எண்ண வலிமை உண்டு என்று காட்டுவதற்காகத் தான் யானைத் தலையைப் போட்டு மனித உடலைப் போட்டு விநாயகரைக் காட்டினான் ஞானி.

ஆக… ஆதிமூலம் என்ற உயிர் பலகோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

இந்த வினைகளுக்கெல்லாம் நாயகா… விநாயகா என்று மனிதனாகப் பெற்ற பின்
1.இந்த உடலை மதிக்கும்படி செய்கிறான்
2.இந்த உடலை உருவாக்கிய கணங்களுக்கெல்லாம் ஈசா… கணேசா என்று
3.உயிரான ஈசனை வணங்குபடிச் சொல்கிறான்.

இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை எல்லாம் அகற்றி விட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நல் வினைகளாகச் சேர்த்து ஒளியாக மாறி “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீ ஆக வேண்டும்…” என்பது தான் விநாயகர் தத்துவத்தின் மூலம்…
1.ஞானிகள் காட்டிய சாஸ்திரம் இது தான்.
2.அகஸ்தியனால் காட்டப்பட்டது தான் விநாயகர் தத்துவம்.

ஆகவே நேற்றைய செயல் இன்றைய மனித உடல்… இன்றைய உடல் நாளைய ஒளி உடலாக நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து அதன் வழி கொண்டு நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

stable spiritual power

இந்தக் கலியில் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால் மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.

அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும். இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் பல மகான்கள் தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் மீண்டும் மனித ஜனனம் தேவை.

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

இங்கே இந்த உபதேசத்தைப் பார்த்து… படித்து… கேட்கும் அனைவரும் உங்கள் தாய் தந்தையரின் அருளால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவீர்கள்.

 

உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் நீங்கி உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மன மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

 

உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி சப்தரிஷி மண்டலத்தின் அருள் வட்டத்தில் என்றுமே ஒன்றி வாழ்வீர்கள். அழியா ஒளியின் சரீரம் பெறுவீர்கள்.

 

ஓ…ம் ஈஸ்வரா.. குருதேவா…! 

மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர்களின் கடைசி நிலைகள்

 

ஒரு அம்மா செல்வச் செழிப்பாக இருக்கும் பொழுது ஆரம்பத்தில் முருகனின் காட்சி எல்லாம் அதற்குக் கிடைக்கின்றது. பின்னாடி உடல் நலம் இல்லாதபடி ஆன பின் வீட்டில் உள்ளவர்கள் அனாதையாக ரோட்டிலே விட்டுச் செல்கிறார்கள். முருக பக்தி கொண்ட அந்த அம்மாவின் கடைசிக் கால வாழ்க்கையைப் போய் குருநாதர் என்னைப் (ஞானகுரு) பார்க்கச் சொன்னார். அந்த அம்மாவிற்கு நான் சில உதவிகள் செய்ததும் என்னை முருகனாக நினைக்கின்றது அந்த அம்மா..! 

 

மாற்று KIDNEY பொருத்தப்பட்டவர்களின் நிலையும் அதைச் சமப்படுத்தும் விஞ்ஞானி நிலையும் 

https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/01/மாற்று-kidney-பொருத்தப்பட்ட.mp3

மெய்ஞானத்தை அறிந்து கொண்ட நம் நாட்டில் இன்னும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்வது சரியா…?

சோமாலியாவில் வறட்சிக்குக் காரணம் என்ன…?

Gnana peace and silence

ஞானத்தை வளர்க்கும் தியானத்தையும் தியானத்தின் மூலம் ஞானத்தையும் எப்படிப் பெறவேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே…
2.ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
3.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்னத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றிவிட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது…”

சாந்தமான நிலை பெற ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான் நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

BLACK MAGIC ALERT

நமக்கு ஆகாதவர்கள் யார் என்று அறிந்து கொள்ளுங்கள்… அவர்கள் மறைமுகமாகச் செய்யும் வேலைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்

ஒரு உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்தால் சடங்குகள் என்ற நிலையில் சாஸ்திரங்கள் செய்து அந்த உடலைச் சுட்டுச் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் பாவங்கள் போய்விடும்..! என்று செய்கின்றனர்.

அதே சமயத்தில் புதைத்து விட்டால் அதற்காக மாவில் ஒரு பொம்மையைச் செய்து அவர் இந்த நிலையில் இருந்தார் என்று அவர் பேரைச் சொல்லி மந்திரங்களைச் செய்து மாவைக் கரைத்தால் (பிண்டத்தை) அவருடைய பாவங்கள் போய்விடும் என்று சாங்கிய சாஸ்திரங்கள் கூறுகின்றது.

பத்தாவது நாள் அல்லது பதினாறாவது நாள் அந்த வீட்டிலே சொந்த பந்தம் எல்லாம் அனைவரும் வந்து அவர் என்னென்ன பிரியப்பட்டுச் சாப்பிட்டாரோ அந்தப் பலகாரங்களைச் செய்து கொடுத்து விட்டு
1.எங்களுடன் நீ வாழ்ந்தாயே.. நீ இப்படிப் போய்விட்டாயே…
2.எங்களுடன் நீ இல்லாமல் இப்படிப் போய்விட்டாயே… என்று சொல்லி
3.எல்லாரும் அழுது கொண்டிருப்பது தான் வேலை.
4.ஆக அந்தத் துயரத்தை அதிகமாகக் கூட்டி அவரை ஒளிச் சரீரம் பெற முடியாத நிலையாக்கத்தான் முடிகிறது.

பதிமூன்றாவது அல்லது பதினாறாவது நாள் இதெல்லாம் செய்த பிற்பாடு சாதத்தை ஆக்கிக் காக்காய்க்குக் கொண்டு போய்க் கொடுத்தால்
1.அந்தக் காகம் சாப்பிட்டுவிட்டால்…
2.பாவ விமோசனம் ஆகிவிடும் என்று சாங்கியங்களைச் செய்து கொண்டுள்ளோம்.

பின் எண்ணையைத் தேய்த்து தலை முழுகி விட்டுச் சொந்தபந்தங்கள் எல்லாம் புதுத் துணியைக் கொடுத்துக் கட்டச் செய்து எல்லாம் பெருமைப்படும்படி செய்வார்கள்.

அவர் போய்விட்டார்…! ஆனால் உங்களுக்கு நாங்கள் ஆதரவாகப் பாதுகாப்பாக இருக்கிறோம்… துணிமணிகளைப் போடுகிறோம்…! என்று இந்த மரியாதைகளை எல்லாம் செய்வார்கள்.

தலைமகனைக் கூப்பிட்டு மாவிளக்கு செய்து… நெய் தீபம் இட்டு… முக்காடிட்டு… அந்தத் தீபத்தை அணையாமல் கொண்டு போய் விநாயகர் கோவிலில் காட்டி அங்கே அர்ச்சனை அபிஷேகம் செய்தால் “மோட்ச தீபம்…” என்று இப்படி சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டாடுகின்றனர்.

அடுத்து வரும் அமாவாசை அன்றைக்கு என்ன செய்வார்கள்…?

அவர் உடுத்திய துணி… அவர் சாப்பிட்ட உணவு… எல்லாம் போட்டுப் படைத்து அவருக்குச் சாப்பாடு கொடுத்து
1.எங்களுடன் வாழ்ந்தாய்… சொத்தெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தாய்
2.உங்களுக்கு ஆக்கிக் கொடுத்து விட்டு நாங்கள் சாப்பிடுகிறோம் என்று
3.சாப்பாட்டை வைத்துக் கும்பிடுவது தான் இன்றைய வழக்கில் உள்ளது.

அடுத்து சடங்கின் பிரகாரம் மந்திரங்களைச் சொல்லிப் பாவத்தைக் கரைக்க வேண்டும் என்ற நிலையில் செருப்பு குடை காய்கறி அவர் உட்கொண்ட பதார்த்தங்கள் எல்லாம் தானமாகக் கொடுப்பார்கள். சில வசதி படைத்தவர்கள் பசு மாட்டையும் கொடுப்பார்கள்.

1.பசு மாட்டைக் கொடுத்து அதன் வழி கொண்டு பாவத்தைப் போக்கியதால்
2.அந்தப் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு அப்படியே சொர்க்கத்துக்கே கொண்டு போய்விடுமாம்.
3.இப்படி எல்லாம் சொல்லி நம்மைச் சர்வ முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள் (அன்றைய அரசர்கள்)
4.அரசர்கள் கொடுத்த சாங்கிய சாஸ்திரங்களைத் தான் இன்று நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

ஏனென்றால் அந்தச் சாங்கிய சாஸ்திரங்களை அரசர்கள் ஏற்படுத்தினார்கள் அல்லவா..! அதற்கென்று ஒரு கூலி ஆளை வைத்திருப்பான். (அவர்கள் தான் இன்று குடுகுடுப்புக்காரராகவும் மந்திரவாதியாகவும் உள்ளார்கள்)

சாங்கியம் எல்லாம் செய்து தனித்துப் பிரித்து வைத்த பிற்பாடு முச்சந்தியில் இருக்கும் வீட்டு வாசல்படி மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த உடலை எங்கே கொண்டு புதைத்தார்கள்… அல்லது சுட்டார்கள்…? என்று அறிந்து கொள்வார்கள். அங்கே சென்று இறந்த ஆன்மா எந்தச் சாமி மேல் அவர் பக்தியாக இருந்தாரோ… எந்தெந்த வழிகளில் அதை வழிபட்டாரோ… அதை எல்லாம் வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வருவான்.

இன்ன தெய்வத்தின் மேல் பற்று கொண்டார் என்ற நிலை வரும் பொழுது இறந்தவருடைய வீட்டில் அமாவாசை அன்று அப்பாவை (இறந்தவரை) நினைத்துக் கூப்பிடுவார்கள்.
1.அவர்கள் பாத மண்ணை வைத்து இவன் மந்திரத்தைச் சொல்லி இறந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்
2.பின் அந்த ஆன்மாவை வைத்துப் பல பல வேலைகளைச் செய்வான்.
3.குட்டிச் சாத்தானாக மாற்றுவான்… பில்லி சூனியத்திற்குப் பயன்படுத்துவான்..
4.மற்றவர்கள் நோய்களைப் போக்கவும் பயன்படுத்துவான்.

கர்ப்பமான ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதை எடுத்துக் கொள்வார்கள். அதே போல் ஆஸ்பத்திரிகளில் உடைநீர் என்று எடுத்துக் கொள்வான். இது எல்லாம் மந்திரவாதிகள் செய்யக்கூடிய வேலைகள்.

அதை எல்லாம் எடுத்து வைத்து அதற்கென்று மந்திரத்தைச் சொல்லி கரு சிதைந்ததோ உடைநீரோ அந்த ஆன்மாக்களை வைத்து
1.கரு வித்தைகளைச் செய்வதும்
2.ஜோதிடங்கள் பார்ப்பதும்
3.சில குடும்பங்களைக் கெடுப்பதும்
4.தனக்கு ஆகாதவரைக் கெடுப்பதும்
5.குட்டிச் சாத்தானை வைத்துச் செய்யும் வேலைகளை எல்லாம் செய்வார்கள்.

இத்தகைய சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்கள் எல்லாம் பேயாகப் போய்… நோயாகப் போய்… அவர்கள் “சர்வ நாசமாகும் நிலைகளுக்கு…” அங்கே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் அந்த உடலை விட்டுப் போன பிற்பாடு சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் நாம் சாப்பாடு வைத்துக் கூப்பிடுகின்றோம். ஆனால் கடைசியில் அவர்கள் நிலை என்ன ஆகிறது…?

இன்னொரு உடலுக்குள் போய் அவஸ்தைப்பட்டுப் அந்த உடலை விட்டுப் போன பின் தேளாகவோ பாம்பாகவோ பூச்சியாகவோ தான் இந்த ஆன்மா பிறக்கும்.

வீட்டுப் பக்கம் குடுகுடுப்புக்காரன் வருவான். பெரும்பகுதி அவர்கள் வீட்டிலே புது துணி கொடுத்தாலும் வாங்க மாட்டான். “கொஞ்சம் பழைய துணி இருந்தால் கொடுங்கள்…!” என்று அதைத் தான் கேட்பான்.

1.ஏனென்றால் உடலில் இருக்கக்கூடிய மணம் அதிலே இருக்கும்.
2.மந்திரங்களை அவன் ஜெபித்தவுடனே என்னென்ன செய்திருக்கின்றீர்களோ அந்த மணம் பட்டு
3.உங்கள் வீட்டுக்குள் அடுக்குப் பானையில் இருக்கும் சங்கதி எல்லாம் கூடச் சொல்வான்.

நமக்கு ஆகாதவர்கள் யார்..? என்று தெரிந்து கொள்வான். அங்கே போய் ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு “அவர்கள் தான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்…!” என்று நம்மிடம் சொல்வான்.

அடப்பாவிகளா..! என்று நாம் நினைப்போம்.

இதை எல்லாம் வெளியிலே சொல்லக் கூடாது ஏனென்றால் ஆபத்தான விஷயங்கள் இருக்கிறது என்று நம்மிடம் “சத்தியம்” வாங்கிக் கொள்வான்.

ஆகாதவர்களின் தலை முடி… துணி… ஏதாவது எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சிநேகிதமாகப் பேசுவது போல் எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்வான்.

தலை முடி… துணி… அவன் வைத்திருக்கும் அந்தக் கருவையும் வைத்து சில மந்திரங்களைச் சொல்லி எடுத்து வைத்திருக்கும் பாத மணலில் போட்டு வீட்டில் தெளித்து விடுவான்.

1.மணல் பட்டதும் சில வீடுகளில் கை கால் வராமல் போகலாம்
2.பெண்கள் கருவுற்றிருந்தால் கரு சிதைந்து போகும்
3.இந்த மாதிரி எல்லாம் சில குடும்பங்களில் நிறைய நடக்கிறது… (சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்களில்…!)

காசைக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பலாம் என்று செய்யலாம். ஆனால் அப்படிப் போக முடியாது…!

இதை எல்லாம் தெரிந்து அறியாமல் இயக்கும் மந்திர தந்திரங்களிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்..!

சிவ தனுசு என்றால் என்ன…?

குளவி புழுவைக் கொட்டித் தன் இனமாக மாற்றுகிறது. அந்த ரூப மாற்றம் எப்படி நடக்கிறது…? என்பதைக் குருநாதர் காட்டினார். அதே மாதிரித் தான் மற்றவர்கள் தீமை செய்யும் உணர்வுகளை நாம் கூர்மையாக உற்றுப் பார்த்து நமக்குள் நுகர்ந்தால் அதே தீமை நமக்குள்ளும் உருவாகி நம் நல்ல குணத்தையும் மாற்றும். இது சிவ தனுசு. 

 

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய ஆசீர்வாதம்

அகண்ட அண்டத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி

இராகவேந்திர சாமிகள்

Nature is God

மனிதர்களுக்கு மட்டும் தான் ஆண்டவனா…? மற்ற ஜீவன்களுக்குக் கிடையாதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.அமிலத்தின் கூட்டால் சிவ பிம்பம் (உடல்கள்) பெற்று
2.சக்தி ஒளி ஈர்ப்பில் ஜீவன் கொண்ட ஜீவத் துடிப்பு அனைத்துமே
3.ஆண்டவனுக்குப் பொதுவானது தான்.

ஆண்டவனின் சக்தி என்று ஆண்டவனை வேண்டி… இறைஞ்சிப் பணிந்து பல பாடல்களைப் பாடி… ஆண்டவனைப் பெண்ணாகவும் ஆணாகவும் ஒளியாகவும் தாயாகவும் சகோதரர்களாகவும் அவரவர்கள் வழி வந்த மதக் கோட்பாட்டின் முறைப்படியெல்லாம் இறைஞ்சித் துதி பாடுகின்றனர்.

இந்த ஆறறிவு படைத்த மனித ஜெந்துக்களுக்கு மட்டும் தான் ஆண்டவன் சொந்தமா…?

சிறு அணுவும் “அவனன்றி அசையாது…!” என்று உணர்த்துபவனும் மனிதன் தான்.

ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அவ்வணுவையே உயிராகக் கொண்ட ஆடு மாடுகளையும் தன்னை ஒத்த மனித இனத்தையே கூட நரபலி தருபவனும் ஆண்டவனுக்குச் சமர்ப்பித்துத் தன் வேண்டுதலை நிவர்த்திக்கடன் செய்து ஆண்டவனை வணங்குபவனும் இதே மனிதன் தான்…!

ஆடு மாடுகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அந்த ஆண்டவன் சொந்தமில்லையா…?
1.மனிதனுக்கு மட்டும் தான் அந்த ஆண்டவன் சொந்தம் என்றால்
2.மற்ற ஜீவராசிகளும் ஆண்டவன் படைப்பே…! என்று துதிபாடும் அந்த ஆண்டவன் எங்குள்ளான்…?

தவறான வாழ்க்கை நெறியில் உள்ளவனும் வாழ்கின்றான். நல் ஒழுக்கக் கோட்பாட்டில் உள்ளவனும் வாழ்கின்றான்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஆண்டவன் உள்ளான் என்று உணர்த்தும் எல்லா மதத்தினரும் தன் சுவை உணவிற்காகத் தன்னை ஒத்த ஜீவ பிராணிகளை உண்டு தான் வாழ்கின்றார்கள்.

இவனுக்குச் சொந்தமான அந்த ஆண்டவன் வந்து மற்ற ஜீவ பிராணிகளைப் பலியிட்டு உண்ணாதே…! என்று உணர்த்தியிருக்கலாம். அஜ்ஜீவன் பிரியும் நேரத்தில்… அதன் ஓலத்தைக் கேட்டு… ஏன் அந்த ஆண்டவன் வந்து அவற்றைக் காப்பாற்றியிருக்கக் கூடாது..?

ஆண்டவனைச் சொந்தம் பாராட்டி ஆண்டவனைத் துதித்து வணங்குபவனுக்கு அந்த ஆண்டவன் சொந்தம் என்றால் மற்ற பிராணிகளுக்கு ஆண்டவனின் சக்தி சொந்தமில்லையா…? அப்படிப்பட்ட ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…?

1.தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்…
2.நீரிலும் இருப்பான் நெருப்பிலும் இருப்பான்…
3.நினைத்த நினைப்பிலும் இருப்பான்… என்னும் ஆண்டவன்
4.எப்படி மனிதனுக்கு மட்டும் சொந்தமாகின்றான்…?

மதத்தவர் என்ற அடிப்படையில் குறிப்பிடுவதாக எண்ணி யாரையும் சாடுவதாக நினைக்க வேண்டாம்..! உள்ள உண்மையை உணர்த்துகின்றோம்.

எல்லா மதங்களிலுமே கடவுள் அன்பானவன் என்று சொன்னாலும் பிற பிராணிகளை அடித்து உணவாக உட்கொள்ளும் நிலை தான் உள்ளது.

ஆண்டவனின் செயலை இந்த மாமிசம் புசிப்பவர்கள் செய்யும் முறையில் மட்டும் குற்றம் காணவில்லை. மாமிசம் புசிக்காதவரின் செயல் என்ன…?

1.ஆண்டவனைப் பக்தித் துதி பாடி பஜனைகள் பல செய்து
2.ஆண்டவனாகக் கோவிலில் உள்ள கர்ப்பச் சிலைக்கு நீராலும் பாலாலும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் ஆராதனை செய்து
3.சுத்தமாக ஆச்சாரமுடன் கோடி அர்ச்சனைகளையும் பல கோடிப் புஷ்பங்களைச் சாத்தி வணங்கி
4.அந்த ஆண்டவனின் அருள் பரிபூரணமாகப் பெற்றுவிட்ட உவகையுடன் வருபவனுக்கு
5.அவன் வரும் வழியில் அவன் ஜாதிப் பிணைப்பு என்ற இனத்தவரன்றி
6.மற்றவரின் உடலோ சில கழிவுகளோ தன் மேல் பட்டுவிட்டாலும் உடனே பெரும் கோபம் கொண்டு
7.அந்த ஆண்டவனுக்குத் தான் செய்த பூஜை முறையிலேயே அபசாரம் நடந்து விட்டதாக உள்ளம் உலைந்து…
8.நீ வணங்கும் ஆண்டவன் என்பவன் யார்…? அந்த ஆண்டவனுக்கு உள்ள சக்தி யாவை…? என்று வினவினாலும்
9.உடனே கோப அலையைத் தன்னுள் ஏற்றிப் பெரிய தவறு நடந்து விட்டதாகச் செயல்படும் ஒரு சாராரும் உள்ளனர்.

என் (ஈஸ்வரபட்டர்) வினாவில் ஆண்டவன் யார் என்பது யாரென்றே புரியவில்லை.
1.ஆண்டவனின் உண்மை நிலை உணராதவன்
2.எங்கோ காணத் துடிக்கின்றான் அந்த ஆண்டவனை.

மரக்கறியும் அணு தான்.. மற்ற பிராணிகளின் உடலும் அணு தான்…! எல்லாமே அணுவாக உள்ள பொழுது… “அணுவின் அணுவாக” அக்காந்த மின் அலையின் ஜீவ சக்தியில் கலந்துள்ள அனைத்துமே ஆண்டவனின் சக்தி தான்.

1.ஒன்றின் துணையுடன் ஒன்று வாழ
2.ஒன்றை அழித்துத்தான் மற்றொன்று வாழ முடிகின்றது.
3.ஆவியாகி அமிலமாகி ஜீவனாகிப் பிம்பமாகி..
4.பிம்பம் ஆவியாகி அமிலமாகி ஜீவனாகி பிம்பமாகி ஆவியாகி…
5.மீண்டும் மீண்டும் சுழன்று ஓடும் சுழற்சி கதியின் சக்திக் கூட்டிற்கு
6.எல்லாமில் எல்லாமாக நிறைந்துள்ள ஆண்டவனின் சக்தி பிறந்து… வளர்ந்து… மடிந்து… பிறந்து… சுழன்று கொண்டே உள்ளது.

முதல் எது…? கடைசி எது….? உலகச் சக்தியில் முதலும் கடைசியும் உண்டா…?

முடிவில்லா மூலவனே மும்மூர்த்தியானவனே…! என்ற பொருளின் தத்துவம் இப்பொழுது புரிந்ததா…?

soul propulsion

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா விண் சென்ற நிலை – நடந்த நிகழ்ச்சி

ஒரு சமயம் மாயவரம் என்ற ஊரில் டாக்டர் ஒருவர் இருந்தார் அவருடைய தாயாருக்கு 80 வயது இருக்கும். கணவர் உடலுடன் இல்லை.

ஆனால் கணவர் உடலை விட்டுச் சென்றதும் அந்த அம்மா என்ன செய்தது…? “என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார்…!” (யாரும் சொல்லித் தரவில்லை) என்று அந்த எண்ணத்திலேயே இருக்கிறது.

பொட்டையும் தாலியையும் நீக்கும்படி மற்றவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
1.என் வீட்டுக்காரர் என்னுடன் தான் இருக்கிறார்..
2.நீங்கள் ஏன் அதை நீக்கச் சொல்கிறீர்கள்…? என்று ஒரு போடு போட்டது.

இருந்தாலும் வெளியில் போனால் எல்லோரும் இதையே கேட்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்கின்றது.

அப்பொழுது இந்த மாதிரி ஒரு சாமி (ஞானகுரு) வருகிறார்… அவரைப் பார்த்து… என்ன ஏது..? என்ற விவரங்கள் கேட்டால் நல்லது…! என்ற எண்ணத்தில் இருந்தது, எனென்றால் நம்முடைய ஞான உபதேசப் புத்தகங்களை ஏற்கனவே அந்த அம்மா படித்திருக்கின்றது.

அந்தச் சாமியை நான் பார்க்க வேண்டும்…! என்று வீட்டை விட்டு வெளியிலே வரவில்லை. சந்தர்ப்பத்தில் நான் (ஞானகுரு) அந்த வீட்டிற்குப் போனேன்.

விபரத்தை எல்லாம் சொன்னவுடனே… எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ அப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டது. ஆனாலும் சாஸ்திரங்களைப் படிக்கப்படும் பொழுது எனக்கு உள் உணர்வு ஒன்று தோன்றியது என்று அந்த அம்மா என்னிடம் சொல்கிறது.

கணவனுடன் ஒன்று சேர்ந்து வாழ்கிறோம். கணவனும் மனைவியும் இரண்டு பேரும் ஒன்றாகிவிட்டால்
1.மனைவி இறந்ததும் கணவன் இறந்துவிடுகின்றான்..
2.அல்லது கணவன் இறந்ததும் மனைவி இறந்துவிடுகின்றாள்..
3.இப்படி இரண்டு பேரும் ஒன்று சேர்த்துப் போனவுடன் ஒரே உணர்வுடன் போகிறது
4.இது எங்கே போகிறது…? என்ற விளக்கம் எல்லாம் நான் (ஞானகுரு) கொடுத்தேன்.

எனக்கு இந்த மாதிரியான எண்ணம் எப்படி வந்தது…? என்று என்னிடம் கெட்டது. தெரிந்தோ தெரியாமலோ தான் நான் இப்படிச் செய்கிறேன் என்று அந்த அம்மா சொல்கிறது.

1.உங்கள் தாயின் கருவில் நீங்கள் சிசுவாக இருக்கப்படும் பொழுது
2.இதைப் பற்றிய உணர்வுகளை நீங்கள் கேட்டதனால் உங்கள் உடலில் விளைந்திருக்கின்றது (பூர்வ புண்ணியம்)
3.அந்த உணர்வு தான் உங்களை இயக்கியிருக்கிறது…! என்று சொன்னேன்.

“கணவர் என்னுடனே இருக்கிறார்” என்ற நிலைகளில் அவர்களை அறியாதபடி சாங்கியத்திற்கே அந்த அம்மா எதுவும் ஒத்துக் கொள்ளவில்லை… இறந்தவர்களுக்குச் செய்யும் சாங்கியங்களையே செய்யவிடவில்லை.

இருந்தாலும் அந்த அம்மாவின் கணவர் ஆன்மா வேறு எங்கேயும் போகவில்லை. எங்கேயும் போகாதபடி அந்த அம்மா உடலைச் சுற்றிக் கொண்டே தான் இருக்கிறது.

அதை நீ இப்பொழுது பார்க்கலாம் அம்மா…! என்றேன்
1.பார்க்கலாம் என்று சொன்னவுடன் தன் கணவரின் உணர்வுகள் தனக்குள் இருந்து
2.தன்னுடன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ச்சி இருந்ததோ அதை எல்லாம் கண்ணில் பார்க்கின்றது.

அந்த ஆன்மா உடலுக்குள் செல்லவில்லை. ஆசை கொண்டு அந்த ஆன்மா எப்படிச் சுற்றிக் கொண்டிருக்கிறது…? என்ற உண்மையை உணர்கின்றார்.

அந்த அம்மாவின் பையன் அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர். இரண்டு பேருமே இதைப் பார்க்கின்றார்கள்,
1.இந்த உண்மையை இன்று தான் என்னால் உணர முடிந்தது
2.என் தாயின் நிலைகளில் எனக்கு அந்த அருள் கிடைக்க வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்று அவரும் எண்ணுகின்றார்.

இந்த உண்மையின் உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதிகாலையில் எடுத்து நீங்கள் வளர்த்துக் கொண்டு வாருங்கள்.

அந்த வலு கொண்டு உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவை நீங்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள். யாம் சொன்ன முறைபப்டி அவர்கள் இருவரும் செய்த பின் அங்கே ஒளியின் சரீரம் பெறுகின்றார்.

இதற்கு முன்னாடி ஒரு பெரிய சாதுவைப் பார்த்தாராம். சில உபதேசங்களை அவர் கொடுத்தாராம். இராமாயண மகாபாரதக் காவியங்களைப் பற்றி சொல்லி இருக்கின்றார்.
1.இருந்தாலும் சாங்கியம் எதுவும் செய்யாதே..! என்று மட்டும் அவர் சொன்னார்
2.பாக்கி எனக்கு விவரங்களைச் சொல்லவில்லை,

ஆகவே என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தது, தாலி எனக்குள் இருந்தாலும் அவருடன் ஒன்றி “முழு மாங்கல்யக்காரியாக நான் போய்ச் சேர வேண்டும்…!” என்ற எண்ணத்தில் தான் செய்து கொண்டிருந்தேன்.

சில இடங்களில் சில உண்மைகள் அறிந்தோ அறியாமலோ இப்படி இருக்கின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்றரை இலட்சம் பேரைச் சந்தித்ததில்
1.எப்படி எல்லாம் இந்த உலகம் இயக்குகிறது…?
2.மனிதனான பின் இனி நமக்கு என்ன இருக்கின்றது…? என்ற நிலையில்
3.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற இந்த உறுதியை வைத்துக் கொள்ள வேண்டும்.
4.நாம் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைகிறோம்.

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

 

மீண்டும் ஏண்டா போய் உலகிற்குப் போகின்றாய்…? என்பார் குருநாதர்

குருநாதர் காடுகளில் சில கடுமையான அனுபவங்களை எனக்குக் கொடுக்கப்படும் பொழுது என்ன வாழ்க்கை..? என்று தற்கொலை செய்யும் எண்ணங்கள் தோன்றுகிறது. அப்பொழுது உயிரைப் பற்றித் தெரிந்து கொண்டாய்… ஏண்டா போய் உலகிற்குப் போகிறாய்…? என்பார். எறும்புக் கூட்டில் உட்கார வைத்துச் சில முக்கியமான அனுபவங்களையும் கொடுத்தார்.

எதை நுகர்கின்றோமோ அதை வைத்துத்தான் உயிர் நம்மை இயக்குகிறது ஆள்கிறது 

சுவாசித்தது நம்மை இயக்கினாலும் நாம் எதை இயக்க வேண்டும் 

நம் மூச்சுக் காற்று வழியாக உருவாகும் நோய்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

headache

உடலிலே சில நேரம் ஊசி குத்துவது போல் வலி வருகிறது… அது எதனால்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவன் நம்மைத் திட்டினால் அவனின் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது, பதிவான உணர்வை மீண்டும் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அந்தத் திட்டிய உணர்வுகள் வந்து
1.நம் உடலிலே அத்தகைய அணுக்கள் பெருக்கி விட்டால்
2.இதற்கும் நமக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கும் இரண்டுக்கும் போர் முறையே வரும்.
3.பளீர்…ர்ர் பளீர்…! என்று உடலிலே மின்னும்.

ஆனால் நமக்கு அது என்ன என்று தெரிவதில்லை. ஏனென்றால் நமக்குள் அணுக்கள் உருவாக்கப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வுகள் பாய்ச்சப்படும் பொழுது நம் தசைகளில் சில நேரங்களில் பளீர்… பளீர்… (ஊசி குத்துவது போல்) என்று மின்னும்.

இவை எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மையே அங்கே அப்படி வருகின்றது.

ஆகவே நம் உயிரை ஈசன் என்று உணர்ந்து கொண்ட பின் ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நாம் எப்படிக் கோவிலாக மதிக்க வேண்டும்…? இந்த உடலான சிவனை எப்படி மதிக்க வேண்டும்…? என்ற நிலையில் நாம் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனிதனின் நிலையில் உயர்ந்தவன் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்தோம் என்றால் நமக்குள் வரும் தீமையை நீக்கி நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது,
1.தூய்மையான உணர்வுகள் வளர வளர
2.அந்தத் துருவ நட்சத்திர்த்தின் பற்று நமக்குள் அதிகரிக்கின்றது.

அத்தகைய பற்று வளர்ந்தால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் எதனை வளர்த்துக் கொண்டோமோ இந்த உயிர் அங்கே அழைத்துச் சென்று அதிலிருந்து வரக்கூடிய உணர்வை எடுத்து ஆறாவது அறிவாக உள்ள நிலையை ஏழாவது ஒளியாகப் பெறச் செய்கின்றது,

இந்த மனித வாழ்க்கையில் நாம் அன்பு பண்பு பாசம் என்று வளர்த்தாலும் பிறருடைய துயர்களை நாம் கேட்டறிந்து தான் உதவி செய்கிறோம்.

அந்தத் துயரமான உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுத் தன்மையை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

மீண்டும் மீண்டும் அவர்களை நாம் எண்ணும் பொழுது அந்த அணுக்களின் தன்மை பெருகி
1.நம்மையறியாமல் நல்ல அணுக்கள் மடிந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே நம் நல்ல குணத்தையும் காக்க முடியாமல் போய்விடுகின்றது,
3.நம் உயிரான ஈசனையும் மறந்துவிடுகினறோம்
4.அதனால் மனித உடலில் வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்.
5.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளிலிருந்து நமக்கு விடுபடத் தெரியவில்லை.

“விடுபட வேண்டும்” என்றால் என்ன செய்ய வேண்டும்..? என்பதற்குத் தான் இப்பொழுது ஒவ்வொரு நிலைகளிலும் தெரிந்து அந்த அருள் சக்திகளைப் பெறக்கூடிய உணர்வுகளை உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

நுகர்ந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் எப்படி இயங்குகிறது…? உங்களுக்குள் தீமைகள் விளைவது எப்படி…? என்று அறிந்து
1.அந்தத் தீமைகளிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
2.இது இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது,
4.இந்த அணுக்கள் பெருகி விட்டால் உங்கள் உடலுக்குள் தீமை என்ற உணர்வின் அணுக்களை இது வளராது தடுத்துவிடும்.

GLORIOUS HUMAN SOUL

நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.

இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.

காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.

மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.

நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.

காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.

எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.

இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.

1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)

இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.

இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.

ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.

அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?

ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.

ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்… மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே… தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.

தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.

ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளை படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.

கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் சென்றான்

கண்கள் தோன்றிய பின் ஒவ்வொன்றையும் அது எப்படி அறிவிக்கின்றது என்பதையும் அறிவித்த பின் நம்மைப் பாதுகாக்கும் நிலைகளுக்குண்டான வழிகளை எப்படிக் காட்டுகிறது என்பதையும் உணர்த்துவதற்குப் பார்த்தசாரதி. சாரதியாக இருந்து இந்தக் கண்கள் தான் தப்பிக்கும் வழிகளைக் காட்டுகிறது என்பதை வியாசகர் தெளிவாக்கியுள்ளார். 

 

transitional meditation

ஆழ்நிலை தியானத்தின் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பல கோடி ஆண்டுகளாகச் சேமித்துப் பழக்கப்படுத்தி நம் உடலுடன் கூட்டிக் கொண்டுள்ள இம் மூன்று வகை உணர்வலையையும்… பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும்… இந்தப் பல கோடி எண்ணத்தின் சுவாசத்தால் நம் சப்த அலையுடன் பல ஜென்மங்களாக எடுத்துப் பழக்கப்படுத்திய நிலைகளை எல்லாம்.. “தாவரங்களைப் போன்று”
1.இக்காற்றினில் கலந்துள்ள ஒலி அலையான காந்த மின் அலையைத்
2.தனக்கு வேண்டிய உயர்ந்த ஞான சக்தியைக் கூட்டிப் பலன் பெருக்கிக் கொள்ள முடியும்.

தாவரம் தனக்கு வேண்டிய பிரித்த அமிலத்தை எடுத்துப் பலனைத் தரவல்ல காலங்கள் முடிந்தவுடன் குறுகிய கால வளர்ச்சியினால் பட்டுப் போகின்றது.

ஆனால் அதிலிருந்து வெளிப்பட்ட அமில குண கூட்டுப் பெருக்கில் ஜீவன் கொண்ட ஜீவ ஆத்மாக்களான நம் ஜீவித சக்தியில்… இப்பெருக்கத்தின் பெருக்க நிலை வளர்வதற்கு… இந்த எண்ணத்தில் எடுக்கும் ஞானத்தின் ஒளி ஈர்ப்பின்… காந்த மின் அலையின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் ஞான ஒளியாக… இந்த உயிரணு மட்டுமல்லாமல் பல கோடி அணுக்களும் செயல் கொண்டு… இம்மனித ஞானத்தின் வளர்ச்சி நிலை கூடும் சக்தியை என்றுமே வளர்த்திட முடியும்.

இருந்தாலும் அத்தகைய நிலை எய்திட… தியானப் பயிற்சி முறையைப் பலரால் பல காலங்களாக வழிப்படுத்தி வாழ்க்கையில் பலரினால் செயல்படுத்தி வருகின்றனர் என்றாலும் “அதில் அவர்கள் அடைந்த நிலை என்ன…?”

1.நல்ல வாழ்க்கையின் பல ஞான உபதேசங்களும் பெற்றவர்கள் அதே சுழற்சியில் தான் சுழல்கின்றார்கள்
2.“ஆழ்நிலை தியானத்தை…!” அறியத் துடிக்கின்றனர்.
3.இந்த உணர்வையும் எண்ணத்தையும் உறங்கும் நிலைப்படுத்தும் ஞானத்தால்
4.இந்த உடலுக்கோ இந்த உடலை வளர்க்க குடி வந்த பல கோடி உயிரணுக்களுக்கோ வளரும் சக்தி குன்றி
5.இதே சுழற்சியில் தான் சுழன்று கொண்டே இருக்கும்.

மாறாக ஒவ்வொரு அணுவுமே மண்டலமாக உருப்பெறும் நல் ஒளி பெறும் சூரிய ஒளியுடனோ… பல கோடிச் சக்தி ஒளியான சர்வமும் படைக்கவல்ல அவ்வாதி சக்தியின் அருள் ஒளியுடன் கலக்கும் நிலை பெற… ஆழ் நிலைத் தியானத்தால் வளர்ச்சி கொள்ள முடியாது,

உணர்வுடன் கூடிய எண்ணத்தை…
1.இவ்வுணர்வின் உந்தலுக்குகந்த ஒவ்வொரு உடலிலும் உள்ள அமில குணங்களையும்
2.இவ்வெண்ண ஞானத்தால் எடுக்கும் சுவாசம் கொண்டு உயர்வாக்கும் பக்குவ முறையைச் செயல்படுத்தினால் தான்..
3.சக்தியின் சக்தியான சகலத்துடன் செயல்படுத்தும் “ஆதி சக்தியின்” ஒளி சக்தியைப் பெற முடியும்.

ஆதி சக்தியின் ஒளி சக்தியின் சிறு அணுவாக உதித்த நாம் அச்சக்தியின் அருளின் ஒளியைப் பெருக்கிச் சமர்ப்பிப்பது தான் நமக்கு ஆண்டவனின் சக்தி பெற்ற நிலையின் பொருள்…!

புரிந்ததா…!

இது நாள் வரை உணர்த்தி வந்த பாட முறையின் தியானம் கொண்டு

போற்றலுக்குகந்த போற்றலாய்
யான்… போற்றி மகிழவே

நேசத்திற்குகந்த நேர்மையாய்
நினைவால்… வழி நிற்பேனே

பாசத்திற்குகந்த படைப்பிலே…
பலவாகக் கலந்து பெறுவேனே…!

ஆசைக்குகந்த ஆசையாய்
அளவாய்.. மகிழ்ந்து அடைவேனே..!

ஆற்றலுக்குகந்த ஆண்டவனே…
ஆற்றலின் எதிர்பிம்பமானவனே…

தாலாட்டும் தாய் தந்தை தலைமையிலே
தலை வணங்கி… பணிவேனே…!

ஏற்றத்திற்குகந்த எண்ணத்திலே… …
ஏறும் படியில்… ஏறுவேனே…!

வாசத்திற்குகந்த வாசனையாக
உள்ளத்தின் வாசனையை… வளர்ப்பேனே…!

போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளேன்…
போற்றலுக்குகந்த… “தெய்வ நிலை பெறுவேனே…!”

என்ற இந்தப் பாடலில் உள்ளதன் கருத்தின் நிலையே உணர்ந்து ஒவ்வொரு மனிதனின் செயலும் செழிப்பாகிடல் வேண்டும்.

கண்களைப் (கண்ணனை) பரமாத்மா என்று ஏன் சொல்கிறோம் 

கண்களின் துணை கொண்டு தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்  

கண்களால் பதிவாக்கும் ஊனின் இயக்கம் 

human life.jpg

மனமே இனியாகிலும் மயங்காதே… பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!

ஒருவரை நல்லவராக எண்ணுகின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் விளைகிறது. அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் “நல்லவர்…” என்று தான் எண்ணுகின்றோம்.

அதே சமயத்தில் ஒரு சந்தர்ப்பம் பகைமையாகி விட்டால் மோசமானவன்… ஏமாற்றுகின்றான்…! நண்பனாகப் பழகினான்… கெட்டவனாகி விட்டானே…! என்கிற பொழுது அது நமக்குள் விளைகிறது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ அதுவே உருவாகி மீண்டும் பகைமையையே உருவாக்குகிறது. ஏனென்றால் “உயிருடைய வேலை இது தான்…!”

ஏனென்றால் இதை எல்லாம் உணரும்படி குருநாதர் எல்லா இடங்களுக்கும் சுற்றிப் பார்த்துப் பல உண்மைகளை எனக்கு உணர்த்தி..
1.இதிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தெளிய வேண்டும்…?
2.எவ்வாறு வாழ வேண்டும்…? எவ்வழியில் வாழ வேண்டும்…? என்று காட்டினார்.

ஒரு சமயம் பனிப் பாறைகள் இருக்கும் இடமாக பத்ரிநாத்துக்குப் போகச் சொல்கிறார் குருநாதர். வெறும் கோவணத் துணியுடன் தான் அங்கே போகச் சொன்னார்.

1.அவர் சொன்ன ஒரு நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் எடுத்தால் தான்
2.அதைச் சுவாசித்தால் தான் என் உடல் சூடாகும்… அங்கிருக்கும் குளிர் பாதிக்காமல் இருக்கும்…!

நான் சொன்னதை எடுக்காமல் விட்டுவிட்டால் நீ இறந்து விடுவாய் என்பார். அவர் சொன்னபடியே எடுத்து நான் சென்று கொண்டிருக்கும் பொழுது பழனியில் இருக்கும் என் பையனைப் பற்றி நினைவு வந்தது.

அவனை அங்கே ஊரிலே விட்டு விட்டு வந்தேன்… இப்பொழுது அவன் அங்கே என்ன செய்கிறானோ…? என்ற எண்ணினேனோ இல்லையோ குருநாதர் சொன்னதை எடுக்க விட்டு விட்டேன்.

உடனே என்னுடைய இருதயம் என்ன செய்கிறது…? அப்படியே பட… பட… பட… என்று இரைய ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் உயிரே போய்விடும் போல் இருக்கிறது.

ஆனால் அடுத்த நிமிடம் குருநாதர் வருகிறார்…! ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த மாதிரி வரும் பொழுதெல்லாம் எனக்குள் நினைவு படுத்துவார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல் மறைவதைப் பாராய்…!

இப்பொழுது உன் உடல் இரைகிறது. நீ போய்விட்டால் யாரைப் போய் பார்க்கப் போகிறாய்..? காப்பாற்றப் போகிறாய்…! உன்னையே காப்பாற்ற முடியவில்லையே…!

நேற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா..?
என்று கேட்கிறார் குருநாதர்.

இந்த மனித உடலை நீ சதமாக எண்ணுகிறாய். உன்னிடம் சொன்னதன் நிலைகளை
1.நான் அந்த அருள் ஒளி பெற வேண்டும்
2.என் பையன் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை நீ செலுத்தியிருந்தால்
3.இந்த நிலை வராதே…! என்று இதை அந்த இடத்தில் உணர்த்துகின்றார்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் உயர்ந்த எண்ணங்களுடன் நாம் இருப்பினும்… நம்மை அறியாமலே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம்மை எப்படிப் பாதுகாப்பற்றதாக மாற்றுகிறது என்ற நிலையை அங்கே நிதர்சனமாக உணர்த்துகின்றார்..

உங்களை யாம் இப்பொழுது தியானமிருக்கச் சொல்கிறோம். உங்கள் குழந்தை மீது நீங்கள் மிகவும் பிரியமாக இருக்கின்றீர்கள். அது என்ன செய்கிறது…?

நன்றாகப் படிக்கிறேன் என்று நினைத்துப் பரீட்சை எழுதினான். ஆனால் அதிலே தோல்வி அடைந்தால் என்ன நினைக்கின்றீர்கள்…?

இத்தனை பணத்தைச் செலவழித்தேனே… படிக்காமல் போய்விட்டானே…! என்று வேதனைப்படுகின்றீர்கள். இவ்வளவு செலவழித்தேன்… இந்த மாதிரி ஆகிவிட்டதே…! என்று சொல்லி இந்த ஆசையை வைக்கும் பொழுது
1.அந்தக் குழந்தையைப் பாதுகாப்பதற்கு மாறாக
2.இப்படித் தொலைத்து விட்டாயே…! என்ற வேதனையைத் தான் எடுத்து வருத்தப்படுகின்றீர்கள்.

அதற்குப் பதிலாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
2,என் குழந்தைக்குக் கல்வியில் நல்ல ஞானம் வர வேண்டும்…
3.அதற்குண்டான சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்த வேதனை நம்மைப் பாதிக்காது.

அவனுக்குள் இந்த உண்ர்வுகள் பாய்ந்து அவனையும் சிந்திக்கச் செய்யும். எதனால் தோல்வி அடைந்தோம்…? என்று அறிந்து அதை மாற்றிச் சரியான பாதையில் செல்லும்படிச் செய்யும்.

வேதனையையும் துன்பத்தையும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் எண்ணி வாழ்வதை விடுத்து என்றுமே நாம் அருள் வழியில் சென்றிடல் வேண்டும்.

குருநாதர் எனக்குக் காட்டிய இந்த அருள் வழியைத்தான்…!

science and nature

இயற்கையைப் பயன்படுத்தும் மனிதனைப் பற்றியும் இயற்கையை வளப்படுத்தும் சித்தனைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

உணர்வலையின் ஜீவ பிம்ப ஞானத்தால் தான் “நுண்ணிய காந்த ஈர்ப்பலையை…” நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

1.இந்த மனித உடலுக்குள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும் இவ்வுணர்வலையின் செயலையும்
2.இவ்வெண்ண சுவாசத்தால் “ஒரு நிலைப்படுத்தும்” பக்குவ மேம்பாட்டினால்
3.ஞான ஈர்ப்பின் நுண்ணிய காந்த அலையின் வளர்ச்சி ஒளியை
4.இவ்வுடல் முழுமைக்கும் ஈர்க்கவல்ல சக்தி முறையை வழிப்படுத்தும் செயல் உணர்ந்து
4.நம் ஜெப நிலை இருக்கும் பக்குவம் தான் “ஓ…ம் என்ற நாதமுடன் ஈர்த்து வழி பெறுங்கள்…!” என்னும் யான் சொல்லி வரும் நிலை.

இந்த உடலுக்கு உணர்வும்… உணர்வுடன் கூடிய குண அமிலங்களும்… குண அமிலங்களுடன் வழி நடத்தும் எண்ண சுவாசமும்… இருந்தால் தான் ஜீவ சக்தியான நுண்ணிய காந்த அலையின் சக்தியை நாம் எடுக்க முடியும்.

நம் உயிராத்மாவிற்கு சேமிக்கும் சொத்து எது…? என்று பல தடவை வினாக்களை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.

உயிராத்மாவிற்குத் தேவையான சொத்தைச் சேமிக்க வேண்டும் என்றால்… பலவான எண்ணத்தில் உணர்வின் உணர்ச்சி அலையின் வாழும் மனிதனின் ஞானம் எத்தகையதைப் போல் இருந்திடல் வேண்டும்…?

இன்றும் பல காலமாகவும் பல மேதைகள் புதிய புதிய செயல் முறைகளைக் கண்டுபிடித்து விஞ்ஞானச் செயலும் கல்வி ஞானமும் இன்னும் சிலர் கவிதை ஞானமும் பெற்றுத்தான் வாழ்கின்றனர்.

இந்த ஞானம் எத்தகையதைப் போன்றது..?

சித்தனின் ஞானத்திற்கும் இந்த ஞானத்திற்கும் மாறுபாடு என்ன…? சித்தனின் வளர்ச்சியும் ஞானம் தான்…! இவையும் ஞானம் தான்…!

சூரியனின் ஒளி சக்தியினால் இந்தப் பூமியின் வளர்ச்சி பூமி எடுத்து வளர்ந்து பலவாக உள்ளது. வளர்ந்துள்ள இயற்கையில் இருந்து அதிலுள்ள சத்தான நமக்குகந்தது எது..? என்று அறிந்து அதன் பெருக்கத்தை உற்பத்தியாக்கி அதன் சுழற்சி செயலில் இருந்தே மேன்மேலும் புதிய புதிய படைப்புகளை ஒன்றுடன் ஒன்று கலந்து அதன் பலனைப் பெறுவது போன்ற ஞானம் தான் விஞ்ஞானமும்.. இன்றைய கல்வி ஞானமும்… கவி ஞானமும்…! எல்லாமே.

ஆனால் சித்தனின் ஞானம் எப்படிப்பட்டது…?

இயற்கையில் பலவான நிலையில் இப்பலவற்றையும் கண்டு இவற்றிற்கு மேல் இவற்றையே வாழ வைக்கும் நிலை எவை..? என்பதனை உணர்ந்து இந்நிலையின் வளர்ச்சியின் “மூலம் அறிந்திட…” இந்த மூலத்துடன் சென்றடையும் நிலையில் கலந்தால் தான் இன்றைய படைப்பைப் போன்று பலவான புதிய படைப்புகளை இயற்கையில் படைக்கவல்ல ஆற்றலுக்கு வழி பெறச் செல்லுகின்றான் சித்தன்.

1.இயற்கையில் விஞ்ஞானம் காணுகின்றான் மனிதன்.
2.அந்த இயற்கையையே வளரச் செய்கின்றான் சித்தன்…!

காற்றிலும் நீரிலும் ஒளியிலும் உள்ள அமிலங்களைக் கொண்டு விஞ்ஞானச் சாதனையான அணு குண்டையும் விஷ வாயுக் குண்டையும் பலவாகப் படைக்கும் இன்றைய மனிதன்
1.நீரையும் காற்றையும் ஒளியையும் படைக்க முடியுமா…?
2.இயற்கையில் விளைந்த நாணல் புல்லைக் காற்றும் நீரும் ஒளியும் இல்லாமல் விஞ்ஞானத்தால் படைக்க முடியுமா…?

ஆனால் காற்றையும் நீரையும் ஒளியையும் படைத்தவனும் மனிதனே.. சித்தனாகவும் ஆனான்.. சப்தரிஷியாகவும் ஆனான்… சகலத்தையும் படைக்கும் ஆற்றலின் ஒளி காந்த சக்தியாகவும் ஆனான்…!

அத்தகைய ஞானத்தின் படைப்பு தானப்பா நீயும் நானும்…!

அந்த ஞானத்தையே பெறவல்ல சக்திக்கு ஜீவத் துடிப்புக் கொண்ட எண்ண சுவாசம் இருந்தால் தான் “எந்த ஞானமும் பெற முடியும்…!”

நம் உயிருக்கு நாம் மரியாதை செலுத்துகின்றோமா…?

குருநாதர் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று பல பல உயிரினங்களைக் காண்பித்து அவைகள் தன்னைத் தற்காத்துக் கொள்ள என்னென்ன செய்கிறது…? என்பதை இன்று விஞ்ஞானக் கருவிகளை வைத்துச் சில நுண்ணிய நிலைகளை அறிவது போல் நேரடியாகக் காட்டினார்.

 

Power and wisdom

காசியில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது நடந்த நிகழ்ச்சி

என்னைக் (ஞானகுரு) காசிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சொன்னார் குருநாதர். பார்த்தால் மோட்சம் கொடுக்கும் இடம் என்று சொல்வார்கள். ஆனால் நரகத்தைச் சிருஷ்டிக்கும் இடம் என்று சொல்லலாம்.

கங்கையில் காலையில் பார்த்தோம் என்றால் தலை ஒன்று கால் ஒன்று இதெல்லாம் பாதையில் இழுத்துக் கிடக்கும்.

நாற்பத்து எட்டு நாள் அங்கே இருக்க வேண்டும் என்றும் அங்கு நடப்பதை எல்லாம் நீ பார்க்க வேண்டும் என்றும் குருநாதர் சொல்லி விட்டார்.

அங்கே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் என்ன என்கிற பொழுது காசிக்கு வருபவர்கள் “இறந்தவர்களை மோட்சத்திற்கு அனுப்ப வேண்டும்..!” என்று பிண்டங்களை வைத்துச் சாங்கியம் செய்கிறார்கள்.

அங்கே பூராம் பண்டாக்கள் இருக்கிறார்கள்… எல்லாம் தாதாக்கள் தான். உதவி செய்பவர்கள் ஈசனுக்கு நைவைத்தியம் செய்யக் கூடியவர்கள்

ஈசன் பிறந்த இடம் என்கிற வகையில் எல்லோருக்கும் மோட்சத்தைக் கொடுக்கின்றான்…! என்று சொல்லி எல்லாம் நடக்கிறது.

காசி விஸ்வநாதன் கோவிலுக்கு முன்னாடி கீழே சுரங்கம் மாதிரிப் போகிறது (UNDER GROUND). நான் போன நேரத்தில் உள்ளே பார்த்தால் பிரேதம் மிதந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றது. தண்ணீர் அதிலே அடித்து மேலே பொங்கிக் கொண்டு வருகிறது.

பார்த்தால் இன்னொரு மடத்திலிருந்து பிரேதத்தைத் தண்ணீரில் தள்ளி விட்டிருக்கின்றார்கள். இங்கே வந்து பாதையில் அடைத்துக் கிடக்கின்றது. அப்புறம் அதை எடுக்கின்றார்கள்.

இதே மாதிரி மடங்களில் இருந்தாலும் அங்கே தள்ளிய பின் கங்கைக்கு வந்து விடுகின்றது. இப்படி எல்லாம் தவறுகள் செய்யக்கூடிய சொர்க்க பூமியாக இருக்கின்றது.

இரவிலே என்ன செய்கிறார்கள்…? என்றால் சிவன் உடுக்கையை வைத்து ஆடினான் என்று சொல்லி ஊ…ம் ஊ….ம் ஊ…ம்..! என்று சிவ பூஜை செய்கிறார்கள்,

உடுக்கையை அடித்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சுகின்றார்கள். அவர்கள் என்னென்ன செய்தார்கள்..? என்ற வகையில் அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

கடைசியில் என்ன செய்கிறார்கள்…?

தண்ணீரை எடுத்து வந்து சிவலிங்கத்தில் ஊற்றிய பின் பதார்த்தங்களைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். அது எல்லாம் பின்னாடி மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது,

அதே மாதிரி சிவனுக்கு ஆராதனைக்காகப் போடப்படும் பூக்களும் மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது. இப்படி எல்லாம் அங்கே தவறுகள் நடக்கின்றது.

சிவன் எப்படி இருக்கின்றான் என்று தெரியாது. சொர்க்கத்திற்குப் பதில் நரகமே நடக்கின்றது. பல விபரீத நிலைகள் நடக்கிறது.

நான் (ஞானகுரு) முதலிலே இரயிலில் இங்கிருந்து செல்லப்படும் பொழுது காசியில் காலடி எடுத்து வைத்தவுடனே தமிழிலேயே பேசுகிறான் சாப்பிட வாருங்கள்…! வெறும் எட்டணா தான்…! என்கிறான்.

பரவாயில்லையே… இந்த ஊரில் எட்டணாவிற்குச் சாப்பாடு போடுகிறானே…! என்று நினைத்தேன். ஊரெல்லாம் சுற்றிக் காட்ட என்று என் கூட இரயிலில் ஒருவர் வந்திருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து அங்கே போனோம்.

சாப்பிட ஆரம்பித்தோம். டால் (பருப்பு) என்று எல்லாம் வைத்தான். பில்லைக் கொடுத்தான். சாப்பாடு எட்டணா…! காய் பருப்பு எல்லாம் வைத்தது என்று சொல்லி முப்பது நாற்பது ரூபாய் என்று பில் போட்டான்,

கடைசியில் பில் முந்நூறு ரூபாய். “எட்டணா சாப்பாடு” என்று சொல்லி இப்படிப் போட்டான். எனக்கு முந்நூறு கூட வந்த ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் பில். நான் முழித்துப் பார்த்தேன்.

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் இதே மாதிரி ஒருவன் பில் அதிகம்…! என்று கேட்கிறான். அவனை அடிக்கிறான்.

நீ சாப்பிடுவதற்கு முன்னாடி அல்லவா கேட்க வேண்டும்… சாப்பிட்டு விட்டுக் கேட்கிறாயே…! என்று சொல்லி அந்த ஓட்டல்காரன் அவனை அடிக்கிறான்.

இதைப் பார்த்ததும் நாம் ஏதாவது கேட்டால் நம்மையும் உதைத்து விடுவான் போல… என்ற எண்ணம் வருகிறது. பேசாமல் உட்ககார்ந்திருந்தேன்.

மற்றவர்கள் எல்லாம் பயப்படுகின்றார்கள்.. கேட்ட காசை அப்படி அப்பபடியே கொடுக்கின்றார்கள்.

நான் வந்தேன்… இந்தக் காசை வைத்துக் கொள்..! என்றேன். உன் சாப்பாட்டைப் பார்… எடுத்துச் சாப்பிட்டுப் பார் என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

எல்லாச் சாப்பாட்டையும் சாப்பிட்டுப் பார்…! என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

“கசப்பாக இருப்பதற்கு” நான் எவ்வளவு ரூபாய் கொடுப்பது…! என்று கேட்டேன். அது போக அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் “எல்லாம் கசக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் கசக்கிறது… கசக்கிறது… என்று சொன்னவுடனே இந்தக் காசை வைத்துக் கொள் நான் போகிறேன்…! என்று சொல்லிக் கிளம்பினேன்.

பாபுஜி மாப் கரோஜி…! பாபுஜி மாப் கரோஜி…! (மன்னிப்பு) என்று தன் காதுகளைப் பிடித்துச் சொல்லிக் கொண்டே என் பின்னாடியே வருகின்றான்.

விஸ்வநாதனிடம் போய்ச் சொல்…! நான் அவனைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன் அவன் தான் உனக்கு ஏதோ செய்திருக்கின்றான் ஆகையால் அவனைப் போய்க் கேட்டுக் கொள்..! என்றேன்.

நான் போகும் பொழுதே அவன் (அந்த ஓட்டல்காரன்) பின்னாடியே வந்தான். அங்கே இருப்பவன் என்ன சொல்கிறான்…?

உஸ்ஸ்க்…! உன் கழுத்தை அறுத்துப் போடுவான்… அவன் பின்னாடி போகாதே… என்கிறான்.

கங்கை எங்கே இருக்கிறது…? என்று கேட்டேன். சொன்னான்…! அங்கே போய்க் குளித்தேன். குளித்த பின்னாடி விஸ்வநாதன் எங்கே இருக்கிறான்…? என்றேன்.

இந்தப் பக்கம் இருக்கிறது என்று சந்துக்குள் கூட்டிக் கொண்டு போனான். பாபுஜி மாப் கரோஜி…! என்று சொல்லிக் கொண்டே வந்தான். கசப்பாக இருப்பதை எல்லாம் மாற்றிக் கொடுங்கள்…! என்று கேட்டுக் கொண்டே வருகின்றான்.

நீ வா… விஸ்வநாதனிடம் போய்க் கேட்கலாம்…! என்றேன். அங்கே போனதும் நீ “பேடா” வாங்கிக் கொண்டு வா..! என்றேன்.

பேடாவை விஸ்வநாதனுக்குக் கொடு… நீ சாப்பிட்டுப் பார்… எப்பொழுது இனிப்பு வருகிறதோ அப்பொழுது நீ போகலாம்…! என்றேன்.

அங்கே ஓட்டலில் ஏமாற்றிக் காசு எவ்வளவு வாங்கினானோ அதுவரையிலும் பேடாவை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டே இருந்தான்.

போட்டால் அந்தச் சாமியார் வாங்க மாட்டேன் என்கிறான். இது எதற்குடா வம்பு..? என்று தூக்கித் தூக்கி எறிகிறான். அங்கே இருக்கும் பண்டாக்கள் இப்படிச் செய்கிறார்கள்.

திருப்பித் திருப்பி திருப்பி வைத்துக் கடைசியில் நன்றாக ஆனது. சரி விஸ்வநாதன் மன்னிப்புக் கொடுத்தான். நீ இனிமேல் யாரிடமும் ஏமாற்றிக் காசு வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டுப் போ….! என்றேன்.

யாரையாவது நீ உதைத்துத் தப்பான வழிகளில் காசு சம்பாரித்தாய் என்றால் உன் வியாபாரமே போய்விடும்..! என்றேன்.

இனிமேல் இந்த மாதிரிச் செய்ய மாட்டேன்…! என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். இது காசியில் நடந்த சமாச்சாரம்.

பிறருடைய தீமை செய்யும் உணர்வால் நம் உடல் பாழாகும் நிலை

அடுத்தவர்கள் நம்மைத் திட்டும் பொழுதும்.. தவறாக நம்மைப் பேசும் பொழுதும்… நம் நல்ல குணங்களும் உணர்வுகளும் மாறுபடுகின்றன. அது மட்டுமல்ல நம் உடல் உறுப்புகளும் கெடுகின்றன. அதைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

 

Acts of souls

பழி தீர்க்கும் உணர்வை வளர்த்துக் கொண்டால் அதனின் “பின் விளைவுகள்…” எப்படி இருக்கும்…? நடந்த நிகழ்ச்சி

நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் ஒரு ஊரில் ஒருவருக்கொருவர் பகைமையில் என்ன செய்கிறார்கள்…? ஒருவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகிறார்கள்.

அங்கே புதைத்த பின் இதிலே எதிரிகளிடம் இருக்கும் பொழுது ஒரு கூலி ஆளிடம் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருப்பது பழக்கம்.

இறந்தவரின் ஆவி கூலி ஆளிடம் பழக்கமாக இருந்ததால் அவன் உடலுக்குள் போய்விட்டது. அவன் உடலுக்குள் போனவுடனே என்ன செய்கிறது…?

ஐய்யய்யோ…! என்னை வெட்டிப் போட்டார்களே… வாழை மரத்தடியில் புதைத்து விட்டார்களே…! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

பைத்தியம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டேயிருப்பார் என்று ஊர்க்காரர்களே சொல்கிறார்கள். நான் சித்தான புதிதில் அந்த ஆள் இங்கே வருகிறார்.

1.என்னை வெட்டிப் போட்டார்கள்..
2.வாழை மரத்தில் புதைத்து விட்டார்கள்…
3.என் துணி எல்லாம் இங்கே இன்ன இடத்தில் இருக்கிறது
4.அவர்கள் வெட்டிய அரிவாள் எல்லாம் இன்ன இடத்தில் இருக்கிறது
5.என்னைப் புதைத்தவர்கள் இன்னார் என்று அவர்கள் பேரை எல்லாம் சொல்கிறது.
6.இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று விபரம் சொல்கிறது.

அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாடி தான் நான் இருக்கின்றேன். அங்கிருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அவருடை மனைவியின் தங்கை கேரளாவில் இருக்கிறது. அங்கே அந்தப் பெண்ணுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் சேலை கட்டினால் அது கிழிந்து போகும். வெளியிலே வர முடியாது. இரவு நேரத்தில் பார்த்தால் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்திருக்கும்.

அதை எல்லாம் பார்த்த பின் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அங்கே கூட்டிச் சென்றிருந்தார். ஏனென்றால் அந்தப் பெண்ணை வெளியிலே கூட்டி வர முடியவில்லை “நீங்கள் வர வேண்டும்…!” என்று என்னை அங்கே கூட்டிச் சென்றார்.

அந்தப் பெண் அவஸ்தைப்படுகிறது… என்ன செய்வது…? என்று தெரியவில்லை என்று சொன்னார்.

நான் போய்ப் பார்த்தேன். மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்துள்ளார்கள் என்று சொன்னேன். அதற்குச் சுருட்டும் மதுவும் வைத்திருப்பார்கள்.

அதை எல்லாம் ரூமில் நீங்கள் வைத்து சில பதார்த்தங்களையும் வைக்கும்படி சொன்னேன். வைத்தவுடனே அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்றைக்கு இரவு எதுவும் நடக்கவில்லை.

சேலை எல்லாம் அப்படியே இருக்கிறது. முகத்தில் காயம் இல்லை. சுயநினைவு வந்தவுடன் இங்கே கூட்டி வந்தார்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் எடுத்துக் கொண்டு வா..
2.அது உனக்குப் பாதுகாப்பாக வரும் என்று சொன்னேன்.
3.சொன்ன மாதிரிச் செய்ததும் அதிலிருந்து அந்தப் பெண்ணுக்கு நன்றாகி விட்டது.
4.செய்வினையின் செயல் அதற்கப்புறம் இல்லை.

அதிலிருந்து அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தார் என்றால் என்னிடம் சிறிது நேரம் அமர்ந்து இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படிப்பட்ட நேரத்தில் தான் முதலில் சொன்ன ஆள் வந்து உருள்கிறான்.. என்னை வெட்டிப் போட்டார்கள்… என்று சொல்லி…!

இது என்ன…? என்று இதைக் கவனித்த சப் இன்ஸ்பெக்டர் போய் இது நிஜமா… பொய்யா..? என்று பார்க்கத் தொடங்கினார். அது இத்தனாவது வாழை மரம் என்று சொல்லி போய்த் தோண்டினால் அங்கே அந்தப் பிரேதம் இருக்கிறது.

அந்தத் துணிகள் எல்லம் யார் யார் வீட்டில் இருக்கிறது..? வெட்டிய ஆயுதங்கள் எங்கே இருக்கிறது…? என்று எல்லாமே சொல்கிறது. அதை எல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வந்துவிட்டார்கள்,

எடுத்ததும் மற்றவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். கடைசியில் அவர்கள் என்னையே கொலை செய்ய வந்து விட்டார்கள். இந்த ஆள் தான் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்று என்னைத் தேடி வருகின்றார்கள்.

தேடி வரும் பொழுது போலீஸ் அவர்களைப் பிடித்துக் கொண்டு போனார்கள். கடைசியில் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைத்தது.

இருந்தாலும் முதலில் அந்தச் சந்தர்ப்பம் அதைச் சொல்லப்படும் பொழுது “எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொண்டு வருகிறது…? என்ற வகையிலே குருநாதர் காட்டுகிறார்.

அவர் சில உணர்வுகளை எனக்கு உணர்த்தி…
1.கொலை செய்ய வருபவர்களின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
2.ஆபத்திலிருந்து உன்னைக் காப்பதற்கு நீ இந்த மாதிரிச் செய் என்றார்.

அவர் சொன்னபடி அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கிறது என்பதை
1.இறந்த ஒரு ஆன்மா எப்படி எங்கே செல்கிறது…?
2.இன்னொரு உடலுக்குள் சென்றால் என்ன செய்கிறது…?

இதை எல்லாம் அறிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைப் பார்த்தது. இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சமப்படுத்தி மகிழ்ச்சி பெறச் செய்யும் வழி

கண்களைத் தூய்மையாக்கி ஊழ்வினை வித்துகளை நல்லதாக மாற்ற வேண்டும்

விதி என்றால் என்ன…?

புது மனையில் புகையைப் போட்டு யாகம் வளர்க்க வேண்டுமா…?

inner feeling

“உள் உணர்வின் மேம்பாட்டை” வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து…!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே… எண்ணத்தை விழிப்படையைச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்…?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்…!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே…
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து…
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்…” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கி தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.

curse

மனிதன் இடும் சாப அலைகள் அவன் இறந்த பின் மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது…?

குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு சமயம் ஒரு வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

குருநாதர் சொன்னபடி அங்கே அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவர் “எனக்கு இப்படிச் செய்கிறார்களே… இந்தப் பாவிகள்…!” என்று சொல்லிச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நோய் தாங்காதபடி அவர் சொல்கிறார். ஏனென்றால்
1.அவர் நினைக்கிறபடி அந்த வீட்டில் உள்ளவர்கள்
2.அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை…! என்று சாபமிட்டுக் கொண்டே இருக்கின்றார்.

ஆனால் அந்தக் குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம் தான்…! இவருடைய சாப அலைகள் இந்தக் குடும்பத்தில் சேர்ந்து பின் விளைவுகளுக்கு வந்து அவர் இறந்த பிற்பாடு… அந்தக் குடும்பமே அப்படியே மொத்தமாக நொறுங்கிப் போனது…!

அவர் உடலுடன் இருக்கும் வரை ஓரளவுக்கு ஒருவிதமாக இருந்தனர். ஆனால்
1.அவர் இறந்த பிற்பாடு என்ன ஆகிறது என்கிற வகையில்
2.அந்த உண்மைகளை எல்லாம் காண்பதற்காகத்தான் குருநாதர் அங்கே பார்க்கச் சொன்னார்.

பல அனுபவங்கள் பெறுவதற்காக வேண்டி குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அப்பொழுது எனக்குச் சரியான சாப்பாடு இல்லை.

வெறும் பேரீட்சம்பழம் தான் எனக்குச் சாப்பாடு. ஒரு நான்கு பழத்தைச் சாப்பிட வேண்டியது. தண்ணீரை வயிறு நிறையக் குடிக்க வேண்டியது.
1.குருநாதர் சொன்னபடி சில சுவாசங்களை எடுத்துக் கொள்வது.
2.வயிறு கம்…! என்று இருக்கும்… வேறு எண்ணமே வராது.
3.நான்கு பழத்தை உறித்துப் போட்டுத் தண்ணீரைக் குடித்தோம் என்றால் பொறுமிக் கொண்டு நன்றாக இருக்கும்… ஒன்றும் செய்யாது.

எனக்கு வேறு ஒரு உணவும் கிடையாது.

இதெல்லாம் குருநாதர் யாம் ஒவ்வொன்றையும் அனுபவரீதியாக அறிந்து கொள்வதற்காகப் பல இடங்களுக்கு என்னைச் சென்றுவரச் செய்தார்.

குருநாதர் இப்படிப் போகச் சொன்ன பக்கம் ஒரு இடத்திற்குப் போனால் அங்கே (ஏற்கனவே) யாரோ ஒருவரை அடித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

அவரின் இரத்தங்கள் அங்கே மண்ணில் பதிவாகி இருக்கின்றது. அதே மண்ணில் அவருடைய உணர்வுகளும் பதிந்திருக்கின்றது.

ஆனால் குறித்த நேரம்…
1.அதாவது அவர் எந்த நேரம் கொல்லப்பட்டாரோ…
2.அந்தக் கொல்லும் பொழுது எந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ..
3.அதே நேரத்தில் என்னைப் போகச் சொன்னார்,

யாம் போன சமயம் “அடப் பாவிகளா…! என்னைக் கொல்கின்றீர்களேயடா… என்னைக் கொல்கின்றீர்களேயடா…!” என்று சப்தம் போடுகிறது.

அங்கே போனவுடன் இறக்கும் பொழுது சொன்ன அதே உணர்வு வருகிறது.
1.அந்த ஒலி அலைகள் மண்ணில் பட்டவுடன் இந்த உணர்வுகள் எப்படி உராய்கின்றது…?
2.இது எந்தெந்த நிலையைச் செய்கின்றது…?
3.உடலில் விளைந்த உணர்வுகள் இறந்த பின் அங்கே எப்படிப் பதிவாகிறது..? என்று அதை எல்லாம் பார்க்கும்படிச் செய்தார் குருநாதர்.

அனைத்தையும் அனுபவரீதியாக அறிந்து கொள்ளும்படிச் செய்தார் குருநாதர்.

ஒரு மனிதரின் ஆவி இன்னொரு உடலிற்குள் எப்படிச் செல்கிறது…? சென்றபின்… புகுந்து கொண்ட உடலில் எப்படிப்பட்ட அணுக்கள் உருவாகின்றது…? இது போன்ற உணர்வுகள் என்னவாகும்…? என்பதையெல்லாம் குருநாதர் பல இடங்களுக்கு எம்மைச் சென்றுவரச் செய்து… பல இன்னல்களைச் சந்திக்கச் செய்து… அதிலிருந்து தெரிந்து கொள்ளும்படி செய்தார்.

அவ்வாறு பெற்ற அனுபவங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன்.

உயிரின் இயக்கம்

 

உயிரின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்

 

இராமலிங்க அடிகள் சொன்ன கந்தக் கோட்டம்

கசாப்புக் கடைக்காரனிடம் போய்க் கற்றுக் கொள் – வாசுகி கொங்கணவரிடம் சொன்னது 

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகள் 

THOUGHT POWER OF MAN

தன் உடலில் எழும் உணர்வை மாற்றியமைக்கும் “மனிதனின் எண்ண வலிமை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:-
வண்டியில் சக்கரம் சுழன்று… வண்டி ஓட அது உதவியாக வருகின்றது. ஆகவே வண்டி ஓட அந்தச் சக்கரம் தேவை தான். ஓடும் பொழுது அவ்வாச்சாணி முறிந்து சக்கரம் சுழன்று ஒரு பக்கம் உருண்டோடி விடுகின்றது… வண்டியின் குடை சாய்ந்து விடுகின்றது.

வண்டி ஓட அச்சாணி எப்படி முக்கியமோ அதைப் போன்று இந்த வாழ்க்கை என்ற வண்டி ஓடவும்… உடல் என்ற வண்டி ஓடவும்… அச்சாணி தேவை.

விளக்கம்:-
1.வாழ்க்கை வண்டிக்குப் “பொருளான அச்சாணி” வேண்டும்.
2.இந்த உடல் என்ற வண்டிக்கு இவ்வெண்ண “சுவாச அச்சாணி” வேண்டும்.
3.எண்ணத்தின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் செயலைக் கொண்டு தான் இப்பிம்ப உடலின் ஆரோக்கியத் தன்மையே உள்ளது.

“எண்ணத்தால் தான் அனைத்தும் நடக்கின்றது…” என்று உணர்த்துகின்றேன். ஆனால் இந்த உடலின் உணர்வு நிலை எதன் தன்மை கொண்டது…? என்று கேட்பீர்கள்.

உடலின் உணர்வினால் உணவையும் பசியையும் தாகத்தையும் உறக்கத்தையும் உடல் இச்சையையும் நாம் எண்ணத்தில் எடுப்பதற்கு முதலிலேயே “உணர்வின் உந்தலினால்…” நம் எண்ணத்தால் கொண்ட சுவாசத்தில் உணர்கின்றோம்.

இந்த உணர்வின் நிலை எப்படி ஏற்பட்டது…? எண்ணத்தால் இந்த உணர்வின் அலையை மாற்றி அமைக்க முடியும்.

ஆரம்பக் காலத்தில் இரண்டு வகை குண அமிலச் சேர்க்கையின் ஈர்ப்பில் ஜீவ சக்தி தோன்றியவுடன் அவ்வமில குணம் திடப்பட்டு வளர்ச்சியின் ஜீவ சக்தி உயிர் சக்தி ஏற்படுகிறது.

ஏற்பட்டவுடன் அதன் வளர்ச்சிக்குகந்த ஈர்ப்பின் உணர்வுக்கு மேன்மேலும் தன் உணவைச் சேமித்து… அதன் வட்ட வளர்ச்சி கூடக் கூட உணர்வின் தன்மையும்… உணர்வுக்குகந்த ஈர்ப்பு ஆகாரத்தையும்… சேமித்த இந்த உணர்விலிருந்து தான்… “உருவின் நிலையும் பெறுகின்றது ஜீவ ஆத்மாக்கள்…”

ஆரம்பக் காலத்தின் அமில குணச் சேர்க்கை என்று உணர்த்தியது இந்த உடல் பிம்பத்தைப் பெறத் தக்க அமில குணச் சேர்க்கைக் காலத்தைத்தான் குறிப்பிட்டேன்.

இப்படி இதன் வளர்ச்சி நிலை கூடிக் கூடிப் பல காலமாகச் சேமித்த இந்த உணர்வலையின் வழி சக்தியினால்தான் “எண்ண சக்தியே வலுப் பெற்று” ஜீவ ஆத்மாக்கள் வளர்ந்துள்ளன.

பல பல கோடி ஆண்டுகள் இந்த உணர்வின் அடிப்படை குண அமில ஈர்ப்பை வளர்த்துக் கொண்டு எண்ணியதைச் செயலாக்கும் மனித உரு பிம்ப ஜீவன்களுக்குத் தன் உணர்வின் அலையின் சக்தியும் இந்த எண்ண வளர்ச்சி ஏற்பட்ட ஜீவ உடல் கொண்ட பிறகு…
1.இயற்கையில் உடலில் தன் உணர்வை வெளிப்படுத்தும் செயல் அமிலங்களின் நிலை உள்ளன.
2.எண்ண வளர்ச்சி நிலை கொண்ட மனிதனால் மட்டும்
3.தன் எண்ணத்தால் உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு தன்மையையும் மாற்றி அமைக்க முடியும்.
4.இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் நிலைக்குகந்த செயலினால்
5.இவ்வுணர்வலையையும் மாற்றி அமைக்க முடியும்.
6.இவ்வுடலுக்கு உணவும் தூக்கமும் இச்சையும் தேவையில்லையா…?
7.இதனை மாற்றியமைப்பதனால் உடல் பிம்ப நிலை எப்படி நிலைத்திருக்கும்..?

உடலுக்குத் தேவையான உணவும் உறக்கமும் வேண்டியது தான்.

ஆனால் இவ்வெண்ணத்தின் செயலினால் அதன் பால் அந்த உணர்வின் தன்மைக்குகந்த வழித் தொடரிலேயே நம் எண்ணத்தைச் செலுத்தி அதன் செயலுக்கே நாம் சென்றுவிட்டோம் என்றால் அதே உணர்வின் எண்ண ஈர்ப்பின் லயிப்பில் தான் நம் ஜீவித காலம் அனைத்தும் சென்றுவிடும்.

பலதரப்பட்ட குணமும் பலதரப்பட்ட சுவையும் விரும்பக்கூடிய ஆத்மாக்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை சுவையும் உறங்கும் தன்மையும் இருந்திடும்.

அவனது குண நிலையும் சுவை நிலையும் அவனால் இந்த வாழ்க்கையில் மட்டும் எடுத்ததல்ல. ஆரம்ப அமில குண வளர்ச்சி காலத்திலேயே அவன் ஈர்த்து உணர்ந்த எண்ணத்தின் தொடர்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று வரை உள்ளது. உணர்ச்சியிலும் அவனது உடலின் இச்சையின் நிலையும் இவ்வாரம்பக் காலத்தின் வளர்ச்சியில் வந்தது தான்.

பசியும் தூக்கமும் ஆரம்பக் காலத்தில் குழந்தைப் பிராயத்திலிருந்தே அறிந்து உணர முடிகின்றது. ஆனால் வளர்ந்த பிறகு தான் உடல் இச்சையின் உணர்வு ஏற்படுகின்றது.

தாவரங்கள் அதன் வளர்ச்சியின் அமில குண சேர்க்கையின் சக்தி படிவத்தினால் அதன் பலனை வளர்ந்த பிறகு பூவாகி காயாகிக் கனியாகித் தருகின்றன.

அதைப் போன்று மனித வளர்ச்சியிலும் இவ்வளர்ச்சி முற்றலின் அமிலச் சேர்க்கையின் உணர்வின் நிலை குறிப்பிட்ட வயது வரம்பு சேர்க்கைக்குப் பிறகு வெளிப்படுகின்றது.

இந்த உணர்வின் வழித் தொடரினால் ஏற்படும் இந்நிலைகளை எண்ணத்தின் நிலைக்கொப்ப எப்படி ஒவ்வொரு மனிதனும் வழிப்படுத்தி வாழுகின்றான்…?

1.இந்த உடலின் தேவையான பசிக்கும் தூக்கத்திற்கும் இச்சைக்கும்
2.இவ்வெண்ணப் பழக்கத்தைச் செலுத்திய முறைப்படி அதன் தேவைகளை எல்லாம்
3.இவ்வெண்ணத்தின் பிடியில் அளவுடன் ஒரு நிலைப்படுத்த முடியும்.

தன் எண்ணத்தைக் கொண்டு இவ்வுணர்வின் இச்சைகளை எல்லாம் ஒரு நிலையில்… இவ்வுடலின் பிம்பத்திற்குத் தேவையான அளவுடன் செயல்படுத்தி வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கை… அழகுடனும்… அமைதியுடனும்… மனிதன் மனிதனாக இருக்கவல்ல தன்மையுடனும் இருக்கும்.

 

God of Gods

“ஆண்டவனின் ஆண்டவனாகும் நிலை…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

திடப்பொருளைக் கரையச் செய்வதும் இந்தக் காற்று தான். ஆவி அமிலத்தைத் திடமாக்குவதும் இந்தக் காற்று தான். இந்தக் காற்றின் மோதலில் வரும் “ஒளியும்… நீரும் தான்…” நம் பூமியின் ஜீவன்.

காற்றடைத்த பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டு விட்டால் அதன் செயலில்லை. அதே போல்
1.இக்காற்றின் அமில ஈர்ப்பு பிம்ப ஜீவனில் ஆவி பிரிந்து விட்டால்
2.இந்த உடல் என்ற பிம்பத்திற்கும் ஜீவனில்லை.
3.இக்காற்று குண அமிலத்தில் தான் இந்த உலக சக்தியே நிறைந்துள்ளது.

காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள பால்வெளி மண்டலத்தில் அமில குணங்கள் நிறைந்திருந்தாலும்… நம் பூமியின் காற்று மண்டல ஜீவ அமில குண நிலை அங்கு இல்லை.

நம் பூமியின் சுழற்சி ஓட்டத்தினால் பூமியே தான் சுழற்சி ஓட்டத்தின் வேகத்தினால் காற்றையும்… ஒளியையும்… நீரையும் வளர்த்து… தனக்கு உணவாக எடுத்து மீண்டும் கழித்து… மீண்டும் மீண்டும் இதே வளர்ச்சி கதியில் ஒரு நிலை சுழற்சி ஓட்ட நிலையினால் கோடி கோடி ஆண்டுகளாக வாழ்கிறது.

பூமியின் மாற்றக் காலம் ஏற்படுவது எப்பொழுது…?

பூமி ஈர்த்து வெளிப்படுத்திய அமில ஒளி ஜீவ சக்தியினால் வளர்க்கப்பட்ட “மனிதனாலே தான்” பூமியின் நிலை மாறப் போகின்றது.

பூமியின் எண்ணச் சுவாச வளர்ச்சி நிலையின் பெருக்கத்தினால் பூமியின் நிலையே இப்படி உள்ள பொழுது அப்பூமியிலேயே பிறந்து வளர்ந்து வாழும் மனிதனின் நிலையில் இவ்வெண்ண நிலை உயர்வதுவும் தாழ்வதுவும் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்…!

பூமியின் ஈர்ப்பில் பலவாக உள்ள சக்தி நிலையில் பலதரப்பட்ட பல கோடி அமிலங்கள் நிறைந்திருந்தாலும் நம் பூமியின் படைப்பிலுள்ள அமில குணங்களின் ஆவிக்காற்று நம் சுவாசத்திற்கு அப்படியே வந்து மோதுவதில்லை.

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு…
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது…!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்… அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்…
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே… உருவை மாற்றி… “உருச்சிதைந்து வாழ்கின்றான்…!”

நாடி சாஸ்திரத்தின் உண்மை நிலைகள்

அகஸ்தியர் நாடி விசுவாமித்திரர் நாடி என்றும் மந்திரங்களைச் சொல்லி யாகம் வளர்ப்பதும் போன்ற நிலைகள் பற்றிய தெளிவான விளக்கம்

 

தொழில் செய்வோர் தெரிந்து கொள்ள வேண்டியது

தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதை எப்படி நல்லதாக்குவது…?

தொழில் செய்யும் பொழுது வரும் வேதனைகளைத் தடுக்கும் வழி 

everything is perfect

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக மாறியே ஆக வேண்டும்…!

நாம் அறியாமல் நுகரும் உணர்வுகள் நம்மை எப்படித் தவறு செய்ய வைக்கின்றது என்பதைக் காட்டுவதற்குத் தான் துஷ்ட தெய்வங்களாகச் சிலையை வைத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆகவே அந்தத் தவறை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானித்து விட்டு
1.தவறு செய்யும் உணர்விலிருந்து நாங்கள் மீள வேண்டும் என்று தீமை செய்யும் உணர்வை அடக்கி
2.அடுத்து நாம் செய்வதை எல்லாம் சிந்தித்துச் செயல்படும் தன்மைக்குக் கொண்டு வர வேண்டும்.

இல்லை என்றால் பிறர் சொல்லும் உணர்வு வரும் பொழுது நமக்குள் கோபம் வந்து உணர்ச்சிகளைத் தூண்டித் தாக்கும் உணர்வுகளே வரும்.

அந்தத் தாக்கும் உணர்ச்சிகள் நமக்குள் வந்தது என்றால் என்ன நடக்கின்றது…? நம் நல்ல குணங்களுக்கும் இதற்கும் போர் நடக்கின்றது. ஆக இந்தப் போர் நடக்கும் பொழுது நல்ல குணங்களை அது கொல்லத் தொடங்குகின்றது.

ஒருவனை எப்படிக் கொலை செய்யப் போகின்றோமோ இதே போல் நம் நல்ல குணங்களை அது வீழ்ச்சி அடையச் செய்கின்றது.

ஆகையினால் இந்த உண்மையை நீங்கள் எல்லோரும் அறிந்து கொண்ட நிலையில்
1.ஒவ்வொரு குடும்பமும் ஒரு தெய்வீகக் குடும்பமாக நீங்கள் மாற வேண்டும்.
2.உங்கள் உடலில் தெய்வீகப் பண்புள்ள உணர்வுகளாக மாற்றுதல் வேண்டும்.
3.உங்கள் சொல் பிறருடைய உணர்வுகளை நல் வழியில் நடத்தக்கூடிய அந்த அருளாக மாற்ற வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் எப்படி இதை வழி நடத்த வேண்டும் என்று அந்த உண்மைகளை நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டே வருகிறேன். உங்கள் வழிகளில் நீங்கள் தான் செயல்படுத்த வேண்டும்.

எல்லாவற்றையும் கேட்டபின்… “சாமி நன்றாகப் பேசுகிறார்…!” என்று சொல்லி என்னைப் போற்றி விட்டு
1.இவ்வளவு பெரிய உண்மையைச் சொல்கிறேன்…! எவனும் என் சொல்லைக் கேட்க மாட்டேன் என்கிறான் என்று
2.நீங்கள் இப்படிச் சொல்லி மற்றவர்களைக் கோபித்துக் கொண்டால் என்ன ஆகும்…?
3.இந்த உணர்வை அவர்களால் ஏற்க முடியவில்லை…. நம்மால் நல்லதை வளர்க்க முடியவில்லை…! என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதைப் போன்ற நிலை இல்லாதபடி குருநாதர் சொன்ன அருள் வழிப்படி
1.அவர் கண்ட அகண்ட நிலையைப் போல்
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாறியே ஆக வேண்டும்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்.

சாமி சொன்னபடி தான் நான் எண்ணினேன்… என் தொழில் இப்படி நஷ்டமாகிவிட்டது… என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்…! என்று இல்லாதபடி அந்த அருள் ஒளியை எடுத்தால் சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்கு நிச்சயம் வரும்.

நஷ்டத்தை ஈடுகட்டும் உணர்வு வலு பெறும். அப்பொழுது சிந்தனையுடன் தொழில் செய்ய முடியும். குடும்பத்தில் சங்கடம் வந்தாலும் அதை மாற்றிப் பண்புடன் அன்புடன் வாழும் பக்குவமும் வரும். இந்த உணர்வை வளர்த்திட வேண்டும்…!

ஞானத்தின் தன்மையைப் பதிவாக்கி அதனின் வழியில் செயலாக்கப்படும் பொழுது பண்புள்ள குடும்பமாகவும் தெய்வீகக் குடும்பமாகவும் மாற முடியும். ஆகவே
1.கஷ்டத்தையும் நஷ்டத்தையும் விடுத்துவிடுங்கள்
2.அருளைப் பெறுவோம் பண்பைப் பெறுவோம் பரிவான நிலைகளில் வாழ்வோம் என்ற மன உறுதி கொள்ளுங்கள்.
3.நீங்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு எடுத்துக் காட்டாக வளர வேண்டும்.

ஞானிகள் வழியில் வாழ்க்கையை நடத்துவதற்கும் இந்த உணர்வின் தன்மையைச் செயலாக்குவதற்கும் உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டேன். இனிமேல் இதை எடுத்து நீங்கள் வளர்த்துக் கொள்வதில் தான் இருக்கின்றது. நாளை வரும் விஞ்ஞான நஞ்சிலிருந்து மீளலாம்.

நல்லதைப் பேசினேன்… எல்லாம் தெரிந்து கொண்டேன்… என்ற நிலையில்
1.நாம் தெரிந்து கொண்டோம்… என்ற நிலையை எடுத்தோம் என்றால் ஏமாந்து போவோம்.
2.ஒவ்வொரு நாளும் தெரிந்து கொண்டே தான் இருக்கின்றோமே தவிர
3.”எல்லாம் தெரிந்தது…” என்ற அப்படிப்பட்ட முழுமை எதுவும் இல்லை.
4.சொல்லில் உணர்வின் தன்மை அறிந்து கொண்டாலும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் இயக்கும். அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டும்.

வெயில் அடிக்கும் பொழுது ஒரு நிலை… மழை பெய்யும் பொழுது ஒரு உணர்வு… குளிர் அடிக்கும் பொழுது ஒரு உணர்வு… காற்றடிக்கும் பொழுது ஒரு நிலை..! என்று இப்படி நமக்குள் கால நிலை மாறிக் கொண்டே தான் இருக்கும்.

1.எந்த நேரத்தில் எதைச் செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வை அறிந்து
2.அந்த ஞானத்தின் வழியில் நாம் செயல்பட்டு அருள் வாழ்க்கை வாழ்தல் வேண்டும்
3.அனைவரையும் அந்த வழியில் வாழ வைக்க நாம் தவமிருப்போம்.

அருள் வழியில் செல்வோம். இந்த உடலுக்குப் பின் முழுமையான ஒளியைப் பெறுவோம். எல்லா உணர்வையும் ஒளியின் சரீரமாகப் பெறுவோம்.

பத்தாவது நிலையான கல்கி…! என்ற ஒளி நிலையை நாம் அனைவரும் அடைவோம்…!

act of soul

நாம் இயங்குகிறோமா…? பிறிதொன்றால் நாம் இயக்கப்படுகின்றோமா…? என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்

கோலமாமகரிஷி “ரிஷி நிலையை” எப்படிப் பெற்றார் என்று உணர்வதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் (ஞானகுரு) ஆறு வருடம் தியானமிருந்து வந்தோம். மழைக் காலம் வரும் பொழுதெல்லாம் அங்கே செல்வோம்.

கோள்களின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவர் அதனால் தான் அவரைக் கோலமாமகரிஷி என்பது. அவர் கண்டறிந்த உண்மைகளை அறிவதற்காக குருநாதர் அங்கே என்னை அனுப்பி வைத்தார்.

இரவும் பகலும் அந்தக் கோள்களின் இயக்கங்களை அங்கிருந்து தியானித்தேன்.

இதை எல்லாம் பார்த்து அறிந்து உணர்வதற்காக வேண்டி மங்களூரில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருப்பேன். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள்.

இரண்டு பேரும் இறந்தவுடன் பையனுடைய பாட்டி என்ன செய்கிறது…? நீ பிறந்ததும் அப்பாவையும் அம்மாவையும் தூக்கி விழுங்கி விட்டாய்… நாசமாகப் போகிறவனே…! எங்கேயாவது தொலைந்து போடா…! என்று அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பையனுடைய அக்காவோ… ஏன் பாட்டி…! பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன தெரியும்…? அதற்காக வேண்டி அவனைத் திட்டுகிறாயே,..! என்று சொல்கிறது.

உனக்கு ஒன்றும் தெரியாது. இவன் பிறந்த நேரத்தில் தான் எல்லோரையும் விழுங்கி விட்டான்… இந்தக் கழுதையை எங்கேயாவது குப்பையில் போடு..! என்று பாட்டி பேசிக் கொண்டே உள்ளது.

இதெல்லாம் நடக்கும் பொழுது நான் அவர்கள் வீட்டிலே போய் அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே என்ன… ஏது… அது எப்படி நடக்கின்றது…? என்பதை அறிந்து கொள்வதற்காக குருநாதர் சொன்ன வழியில் அங்கே சென்று கொண்டிருக்கின்றேன்.

அங்கே சென்று அவர்களுடன் பழகிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பையன் பேசுவதும்… அந்தப் பாட்டி பேசுவதும்… இப்படியே போராடிக் கொண்டே இருந்தார்கள்.

அந்தப் பாட்டி இறந்தது. ஆனால் தன் பேத்தி மீது பற்றாக இருந்தது. ஏனென்றால் அந்தப் பாட்டி தான் குடும்பத்தை முழுவதுமாக ஆதரித்து வந்தது.
1.தன் பேத்தி மீது மிகவும் பிரியமாக இருந்ததால்
2.இறந்த பின் பாட்டியின் உயிராத்மா பேத்தியின் உடலுக்குள் வந்து விட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் அக்காவும் பேசத் தொடங்கினார்கள்.

தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில் தம்பியைப் பார்த்து, “தொலைந்து போகிறவனே.. எல்லோரையும் தூக்கி வாரி விட்டாய்… நாசமாகப் போடா…!” என்று சொன்னாள். அதன்படியே தம்பியை விரட்டி விட்டாள்.

இது நடந்த நிகழ்ச்சி…!

1.ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்குள் சென்ற பின் அது எப்படி இயக்குகிறது…?
2.உடலுடன் இருக்கும் பொழுது இந்த உணர்வுகள் மாறியதும்
3.அவர்கள் எப்படி இயங்குகின்றனர்…? என்பதை அனுபவபூர்வமாக என்னால் அங்கே அறிய முடிந்தது.

இந்த மாதிரி குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு இதை எல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பிச்சை எடுப்பது மாதிரி வேஷ்டியும் துண்டும் மட்டும் தான் போட்டுக் கொண்டு போவேன்.
1.அங்கங்கே என்ன நடக்கிறது…
2.அந்த உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…?
3.சாப அலைகள் என்ன செய்கிறது…?
4.நோயின் உணர்வுகள் எப்படி வருகிறது…? இறக்கச் செய்கிறது…? என்று
5.எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்குத்தான் காட்டிற்குள்ளும் நகரத்திற்குள்ளும் குருநாதர் அனுப்பினார்.

பாட்டி இறந்த பின் அந்தப் பெண் குழந்தையிடம் நான் சொன்னேன்…!

ஏம்மா…! பாட்டி தான் உன் தம்பியைத் திட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுது நீ உன் தம்பியைத் திட்டுகிறாயே…! என்றேன்.

அட… நீ… போய்யா….! என்று இப்படி என்னைச் சொல்கிறது.

அந்தப் பாட்டி எப்படிச் சொல்லுமோ அதே மாதிரி என்னிடமும் “அட போய்யா…!” என்கிறது.

கூட வந்த நண்பர் அந்தப் பெண்ணிடம் “சாமியை நீ இப்படிப் பேசலாமா…?” என்று கேட்டார்.

சாமியாவது… பூதமாவது…? என்று இப்படியே “வெடுக்..” என்று பேசுகிறது. அந்த உணர்வுகள் அதே மாதிரி வேலை செய்கிறது.

ஏனென்றால் ஒரு உடலுக்குள் இந்த உணர்வுகள் எதை வளர்த்ததோ அதே உணர்வின் செயலாக எப்படிச் செயலாக்குகிறது என்பதை யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை அந்த வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… இதனுடைய நிலைகளை நீ பார்…! என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே நடந்தது.

 

அருள்பாடல்கள் பாகம் 1 

அருள் பாடல்கள் பாகம் 2 

Spiritual light - Bliss

தூங்காமல் தூங்கும் நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகை காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை. ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்க
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக கொட்டாவி வெளிப்பட்டு
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வு… உறங்கும் நிலையும் இல்லை…? ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கிவிட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக மாறியே ஆக வேண்டும்

சாமி நன்றாகப் பேசுகிறார்…! அதை எல்லாம் கேட்டிருக்கின்றேன்…. நான் பெரிய உண்மைளை எல்லாம் சொல்கிறேன்.. ஆனால் நான் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறான் என்று அடுத்தவரின் கோபத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்குள் நல்லதை ஏற்க முடியவில்லை…! என்று தான் அர்த்தம்.

 

ஆகவே அந்த மாதிரி எல்லாம் ஆகாதபடி குருநாதர் ஆசைப்படி நீங்கள் ஒவ்வொருவரும் ஞானிகளாக மாறியே ஆக வேண்டும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.

 

அருளைப் பெருக்கினால் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் கிடைக்கும். நாளை வரும் நஞ்சின் தன்மையிலிருந்து மீள முடியும்.

 

spiritual eye divine eye

நம் உயிராத்மாவுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய ஜீவ சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது. (முக்கியமானது) மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லா விட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனித உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!

இறந்தவர்களைப் பாசத்துடன் எண்ணலாமா…?

குடும்பப் பாரம்பரியத்தில் நம் சந்ததிகளைக் காக்கும் வழி 

முன்னோர்களை விண் செலுத்துவதை உறுதிப்படுத்தும் முறை

ஆவி பிடித்த ஒரு அம்மாவைக் குணப்படுத்தியது

 

கடுமையான பேய் பிடித்த ஒரு அம்மாவை மந்திரவாதியிடமிருந்து மீட்டச் செய்தார் ஈஸ்வரபட்டர்.

 

பழனி முருகன் பேரைச் சொல்லி மந்திரம் செய்பவருக்குப் பக்கபலமாக இருந்து அரசு அதிகாரிகள் என்னை மிரட்டினார்கள். குரு காட்டிய வழியில் சில உண்மைகளைக் காட்டியதும் பின் அவர்களும் ஒடுங்கினார்கள்.

 

take naraimha avatar

கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

ஒரு சமயம் நான் (ஞானகுரு) இரயிலில் சென்னையிலிருந்து பம்பாய்க்குச் சென்று கொண்டிருக்கின்றேன். குருநாதரும் (ஈஸ்வரபட்டர்) அப்பொழுது என்னுடன் வருகின்றார்,

செல்லப்படும் பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து பம்பாய்க்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் பதறிக் கொண்டிருக்கின்றது. உறவினர்களிடம் ஐயோ…! எனக்கு இப்படி இருக்கிறது… தண்ணீர் கொடு… அது கொடு.. இது கொடு..! என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி… “உணவோ தண்ணீரோ… ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது..” என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… அடப் பாவிகளா… எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது… உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா..?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

கூட வந்த உறவினர்கள் என்ன செய்கிறார்கள்…? டாக்டர் சொன்னதை எண்ணிக் கொண்டு நோயாளியைப் பார்த்து “நீ சும்மா இருக்க மாட்டாயா…?” என்று மிரட்டுகிறார்கள்.

அப்பொழுது இன்னொரு அம்மா அந்த இரயிலில் வந்து கொண்டிருந்தவர் இந்த அம்மாவைப் பார்த்து… பாவம் மிகவும் வயதானவர்கள்… கேட்டால் கொடுத்தால் என்ன..? அவஸ்தையயால் இப்படிச் சாபமிடுகிறார்கள்…! என்று அவர்கள் எண்ணிக் கேட்கிறார்கள்.

இதை நான் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

“உனக்கு என்ன வேண்டும் அம்மா…?” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு உறவினர்கள்… அட எங்களுக்குத் தெரியாதா…? நீ என்னம்மா இதைக் கேட்கிறாய்…?” என்று சொல்கிறார்கள்.

இப்படிச் சொன்னவுடன் அந்த நோயான பெண்மணி “பார்…! உதவி செய்பவர்களைக் கூட இப்படித் திட்டுகிறார்களே…!” என்று எண்ணுகின்றார்.

ஏனென்றால் அந்தச் சந்தர்ப்பம் இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது.

குருநாதர் இதைக் காண்பித்தார். ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை.

மருத்துவர்கள் கூறிய அறிவுரைப்படி “ஒரு அளவுக்கு மேல் உணவோ தண்ணீரோ கொடுத்தால் அந்த உயிருக்கு ஆபத்து வரும்…!” என்று உறவினர்கள் அதைக் கடைபிடிக்கிறார்கள். எதற்காக…? சிறிது நாளைக்காவது அந்த நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று..!

ஆனால் நோயான பெண்மணியோ “நான் இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே… கொஞ்சம் கூட இரக்கம் இல்லையே…!” என்று இந்த அம்மா பேசுகிறது.

இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு.. “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

இதனால் நோயான பெண்மணி “நாம் இவர்களுக்கு எத்தனை உதவிகளைச் செய்திருப்போம்… என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே..!” என்று அவர்களின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!

இரயிலை விட்டு இறங்கியவுடன்.. நோயான பெண்மணியின் வீடு வரை எம்மைச் சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.

யாம் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

அந்த ஆன்மா பிரியும் பொழுது… அவருடைய எண்ணம் எங்கே செல்கிறது…?

இரயிலில் வரும் பொழுது இந்த நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்கள் மேல் வருகிறது. “மகராசி எனக்கு உதவி செய்தாளே…!” என்ற அந்த எண்ணம் வந்தது.

ஆனால் உறவினர்களை நினைத்து “என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு எனக்குத் துரோகம் செய்தார்கள்…” என்று இங்கே சாபமிட்டது.

1.இத்தகைய சாப அலைகளை அங்கே அந்த உறவினர்கள் நுகர்ந்தனர்
2.அவர்கள் உடலில் விளைந்து அவர்கள் தொழில் நசுங்கியது…
3.குடும்பத்தில் பல விதமான குழப்பங்கள் விளைந்தது.

ஏனென்றால் இதையெல்லாம் ஒரு 48 நாள்கள் பார்க்கும்படியாக அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார் குருநாதர். ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணி கூட வந்து பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து இதைப் பார்த்தவுடனே…
1.நோயான பெண்மணியின் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா கடைசி நிமிடத்தில் எப்படி எல்லாம் அவஸ்தைப் பட்டதோ
2.இவருடைய உடலுக்குள் அந்த ஆன்மா வந்து
3.அதே வேதனையின் உணர்ச்சிகளை இவருடைய உடலுக்குள் ஊட்டுகின்றது.

குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்.

1.இரயிலில் போகும் பொழுது இந்தப் பற்று வந்த பின்
2.அது எப்படி ஆகிறது…? இந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் எப்படிச் செல்கின்றது…?
3.இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

ஆனால் இறந்த பின் நோயான பெண்மனியின் வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகின்றது. குழப்பத்தால் அவர்கள் வியாபாரம் மந்தமாகிறது.

தங்களை அறியாமலே குழந்தைகளை சீறிப் பேசுவது… தவறான நிலையில் பேசுவது.. என்ற இந்தச் சங்கடங்கள் எல்லாம் வந்து வீட்டுக்குள் குழப்பம் வருகிறது.

ஏனென்றால் இந்த இயற்கை நம்மை எபப்டி இயக்குகிறது என்ற நிலைகளைச்
1.சந்தர்ப்பம் மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது…?
2.சந்தர்ப்பத்தால் நமக்குள் நோய் எப்படி விளைகின்றது..? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை..! நாம் நுகர்ந்தறிந்து அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசும் பொழுது
1.இந்தச் சாந்த உணர்வுகள் மிக நன்மை செய்யும்
2.ஆனால் வேதனை என்ற உணர்வுகள் வலிமை பெற்றது.
3.அது இந்தச் சாந்தத்தை அடக்கிவிடும்.

அது தான் மூஷிகவாகனா…! விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டுக் காண்பித்து… “நாம் சுவாசித்த உணர்வே.. நம்மை வாகனமாக இருந்து அழைத்துச் செல்லும்…!” என்று காட்டுகிறார்கள் ஞானிகள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும்.

Astral light bodies

பூமி பிளந்து சீதா மண்ணுக்குள் போவதன் காரணம் என்ன…?

லவா குசா தன்னுடைய குழந்தைகள் தான் என்று தெரிந்ததும் இராமன் சீதாவிடம்… “நாம் இனிமேல் சேர்ந்து வாழ்வோம்..!” என்று சொல்கிறான்.

சேர்ந்து வாழ்வது என்பது என்ன…?

எதன் சுவையோ அதனின் உணர்ச்சி தான் இயக்கும். ஆக மீண்டும் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டால் அதன் வழி வாழலாம்.

பல விதமான உணர்வுகள் ஆகி.. “இந்த வாழ்க்கையில் பட்டது போதும்…!” என்று இந்தப் பூமா தேவி என்ன செய்கின்றது…?

நெருப்பில் புகுந்து வந்த பின்… பூமா தேவி சீதாவிடம் “நீ பட்ட அவஸ்தை போதும்… என்னிடமே நீ வந்து ஐக்கியமாகிவிடு…!” என்று அழைப்பதாகக் காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.

மனித உடல் பெற்ற நிலையில் இந்த உணர்வின் தன்மை வந்து வாழ்க்கையில் பல பல நிலைகள் ஆகி
1.எந்தச் சுவையின் (குணங்கள்) தன்மை ஈர்ப்பாக ஆனதோ
2.அதிலே அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் ஆன பின்
3.எத்தனை எதிர்ப்பு நிலைகள் வருகின்றது…?

உழுது பயிரிட்டு அதிலே விளைந்ததை உணவாகச் சுவைமிக்க உணர்வின் தன்மை உட்கொண்டு மனித உடலில் வளர்த்த பின் எந்த மண்ணிலே விளைந்ததோ அந்த மண்ணின் உணர்வைப் பெற்று உடல் மண்ணுக்குள் தான் செல்கிறது.

ஆனால் அந்த உணர்வின் தன்மை ஒளியாகும் உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்ட பின் எங்கே செல்கிறது…?
1.உயிர் என்ற விஷ்ணுவின் தன்மை பெற்று
2.வெளியே வந்து பளீர்…! என்று “மின்னும் சக்தியாகப் பெறுகின்றது…”
3.அவனிடம் போய்ச் சொர்க்கம் அடைகின்றது.

இந்த உடலின் அமைப்பு உருவானதைத் தெளிந்து கொண்ட நிலையில் பூமா தேவி.. சீதா படும் அவஸ்தையைப் பார்த்து நீ என்னுடன் வா…! என்று பூமி பிளந்து தனக்குள் இழுத்துக் கொண்டு போகின்றது.

எவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள் காவியத்தை…! நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

ஒரு உடலில் நோயின் தன்மையை பார்த்து அட பாவமே…! என்று அதனுடைய வலிமை பெறப்படும் பொழுது “சிவ தனுசு…”
1.நாம் அவனைக் காக்க எண்ணுகின்றோம்.
2.மீண்டும் உடலின் இச்சைக்கே செல்கின்றோம்.

சிவ தனுசை எடுத்தால் உடல் பெறும் உணர்வுகளே வளரும். நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியாது…!

எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்றுத் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை இருளை நீக்கி ஒளியின் தன்மையாகப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.

உயிரின் இயக்கம் வெப்பம் “விஷ்ணு” என்ற நிலையில் அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.தீமையை நீக்கிடும் அந்த அருளைப் பெறுவேன்..! என்று
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணி எடுத்துக் கொண்டால் அது “விஷ்ணு தனுசு…”
3.நாம் அங்கே சொர்க்கம் அடைகின்றோம்.

விஷ்ணு இலட்சுமியிடம் கேட்கின்றது. நீ உலகை அறிய விரும்பினாயே..! நீ பார்… எத்தனை தொல்லைகள் வருகிறது என்று…?

நமது எண்ணத்தால் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் இருக்கிறது…? என்பதனைக் காட்டியுள்ளார்கள்.

இதிலிருந்து நாம் விடுபட்டு உயிருடன் ஒன்றி இனி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும்.

1.இந்த உடல் வாழ்க்கையில் வந்த தீய வினைகள் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்…!
2.அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற உணர்வை நாம் எடுத்து வளர்க்கும்படி உணர்த்துகின்றார்கள்.

ஆகவே அந்த உணர்வின் அறிவாக நமக்குள் வளர்த்துக் கொண்டால் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதனைத் தான் இராமாயணத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.

இந்த அர்த்தமே நாம் தெரியாதபடி வேறு விதமாக நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம். மக்களுக்கு இராமாயணத்தைப் பற்றி ஒவ்வொருவரும் நீங்கள் தெளிவாக்கிடல் வேண்டும்.

மரணம் அடைவதற்கு முன்னாடி அரிதாக சில பேர் சொல்லிவிட்டே போகிறார்கள்

உடலை விட்டுச் செல்லும் பொழுது யாருடன் செல்ல வேண்டும…?

மரணமில்லாப் பெரு வாழ்வு…!” வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

குடும்பத்தையே வறுமையில் சிக்க வைத்துத் தான் ஞானத்தைக் கொடுத்தார் குருநாதர்

 

நோயால் வாடிய என் (ஞானகுரு) மனைவியை குருநாதர் காத்தார். ஞானத்தை கொடுக்கும் நிலையாக என்னைக் கூட்டிச் சென்றார் குருநாதர். காடு மேடெல்லாம் அலையச் செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

 

இருந்தாலும் வீட்டிலோ வறுமை பட்டினி…! என் மனைவி தன் தாலியையே அடமானம் வைத்துத்தான் குடும்பத்தைக் காத்தது.

 

ஒவ்வொரு குடும்பத்திலும் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அதிலிருந்து எப்படி மக்களை மீட்க வேண்டும் என்று தான் எனக்கு அனுபவம். ஆக சுயநலத்திற்காகத் தான் நான் சக்தியைப் பெறுகின்றேனா..? என்பது தான் அவருடைய பரீட்சை…!

 

பின் பல சிரமங்களைத் தாண்டித்தான் அந்த ஞானத்தைப் பெற முடிந்தது.. சித்து நிலைகளையும் செயல்படுத்தும்படி செய்தார் குருநாதர்.  

 

light worlds

ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

ஆக… உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

ruby-eyes and snake

நாகம் தன் கண் ஓளியின் நுண்ணிய அலையின் ஈர்ப்பால் மாணிக்கக்கல்லை வளர்ப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி…!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா…!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழிப் பெற்றது…? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அகஸ்தியன் நடந்து சென்ற இடங்களில் உள்ள சக்திகள்

பாபநாசம் இமயமலை வட துருவம் தென் துருவம் எல்லாம் சுழன்று வந்தவர் “அகஸ்தியர்…” அவருடைய ஆற்றல்களைப் பெறும்படி செய்தார் ஈஸ்வரபட்டர்.

 

அகஸ்தியர் தம் உணர்வுகளை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளார். அவரைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள். 

சில கைக் குழந்தைகள் அழுது கொண்டே இருப்பது ஏன் 

மூளை வளர்ச்சி இல்லாமல் குழந்தைகள் பிறப்பது ஏன் 

கர்ப்பமான தாய் தெரிந்து கொள்ள வேண்டியது

Valmiki

கர்ப்பிணியான சீதாவை இராமன் காட்டிற்குள் விடச் சொல்கிறான்… வான்மீகியோ ஞானத்தைப் போதிக்கின்றான் ஏன்…?

இராமன் சீதாவை இராவணனிடமிருந்து மீட்டு அரண்மனைக்குக் கூட்டி வருகின்றான். சிறிது நாள் கழித்து சீதா கரப்பமாகிறது. மக்கள் எல்லாம் கூடி இராவணனிடம் இருந்து சீதா வந்ததால் அந்தக் கரு தான் உருவாகியிருக்கும் என்று சொல்கின்றனர்.

மக்களை ஆட்சி புரிகின்றான்.. இருந்தாலும் இதைக் கேள்விப்பட்டவுடன் மக்கள் எல்லாம் இப்படிப் பேசுகின்றார்களே..! என்று வேதனைப்படுகின்றான் இராமன்.

சுவை (சீதா) என்ற உணர்வுகள் இராமனை ஆட்சி புரிந்தாலும் அதே சமயத்தில் “மக்களின் வலு வரப்படும் பொழுது” உண்மையை அறிய முடியாதபடி… சீதாவைக் காட்டுக்கு அனுப்புகின்றான்.

கர்ப்பமாக இருக்கும் சீதாவைக் காட்டில் அனாதையாக விட்டு விடுகின்றான். அங்கே ஒரு பெண் இதைப் பார்த்து… “கர்ப்பமாக இருக்கிறது… தனியாக இருக்கிறதே…!” என்று அருகில் இருக்கும் வான்மீகியிடம் கொண்டு விடுகிறது.

வான்மீகி தான் இந்தக் காவியத்தைப் படைத்தவன். இயற்கையின் உணர்வுகள் உணர்ச்சிகள் எப்படி வருகிறது…? நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாக எப்படித் தோன்றுகின்றான்…? என்ற மூலக் கூறுகளை எல்லாம் கூறியவன் இந்த வான்மீகி தான்.

அதன் உணர்வின் தன்மை
1.எது சுவையைக் கவர்ந்து கொள்கிறதோ சூரியன்
2.அது உடலுக்குள் சென்ற பின் அதனின் உணர்ச்சியின் இயக்கமாக
3.இந்தச் சுவை எதுவோ உணர்ச்சியின் எண்ணங்களாக இதே சூரியன் ஒரு உடலை இயக்குகின்றான் என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றான் அந்த வான்மீகி.

நன்றாக யோசனை செய்து பாருங்கள். அவ்வளவு மூலங்களும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். இவ்வளவு தெளிவாகக் கூறியிருந்தாலும் இன்று அவரவர்கள் இஷ்டத்திற்கு இராமாயணத்தை அப்படியே பகுந்து பார்க்கின்றார்கள்.

அனாதையாக இருக்கும் சீதா கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்கிறான் வான்மீகி.
1.வெறுக்கும் நிலை இங்கே வந்தால் – அதே உணர்வை இந்தத் தாய் நுகர்ந்தால்
2.இராமனைப் பழி தீர்க்கும் உணர்வாகத் தான் வரும் என்பதை வான்மீகி அறிந்து கொள்கின்றான்.

அன்றைய அரசர்கள் என்ன செய்வார்கள்…?

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது எதிரி நாட்டு அரசன் இந்த மாதிரிச் செய்கின்றான்..! என்று போதிப்பான். குருகுலம் என்ற நிலைகளை வைத்து அடுத்த அரசன் இப்படிச் செய்கிறான்.. நம் நாட்டுக்கு இதைச் செய்கிறான்… நம் மக்களுக்கு இதைச் செய்கிறான்… அவனை இப்படி அடக்க வேண்டும்…! என்று கர்ப்பிணியை உட்கார வைத்தத் தன் அரச சபையின் நிலைகளை எல்லாம் எடுத்து ஓதுவான்.

அந்தத் தாய் இதை எல்லாம் கேட்ட பின் கருவிலிருக்கக்கூடிய தன் குழந்தைக்கு
1.இந்த நாட்டை எப்படி ஆட்சி புரிவது…?
2.எதிரியை எப்படி வீழ்த்துவது..? என்று அந்த இளமைப் பருவம் வரும் பொழுதே
3.வில் வித்தைகளை எடுக்கும் பொழுதே எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வை வளர்ப்பார்கள்.

இதனின் வலிமையின் தன்மை கொண்டு அவன் எதிரியை வீழ்த்தச் செல்வான். “சத்ரிய தர்மம்” என்பது அரசர்கள் பிறரை வீழ்த்தித் தான் வாழத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது தான்.

நம் உடலுக்குள் ஒரு தீமை வந்துவிட்டால் அது அந்த உணர்வின் தன்மையை வீழ்த்தினால் தான் நல்ல குணங்கள் நிலைத்திருக்கும். எப்படியோ மருந்தைக் குடித்துத் தானே நம் நோய்களை எல்லாம் போக்குகின்றோம்.

இந்த உணர்வின் தன்மையை இயக்குவது யார்…? பத்தாவது நிலையை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்தி “நம் உயிர் தான்…!”

ஒரு கசப்பான உணவாக இருந்தாலும் சகித்துக் கொண்டு சாப்பிடுகின்றோம் அல்லவா..! அதே சமயத்தில் உடலில் வேதனை என்ற உணர்வுகள் நோயாக வந்த பின்
1.அடுத்து நம் உடலில் ஊசியைக் கொண்டு குத்தினாலும்
2.கசப்பான மருந்தை மருத்துவர் கொடுத்தாலும்
3.”எப்படியோ சாப்பிட்டு அந்த நோயைப் போக்க வேண்டும்…: என்று நினைக்கின்றோம் அல்லவா…!

இதைத் தான் அங்கே வான்மீகி காட்டுகின்றான்…!

கர்ப்பமாக இருக்கப்படும் பொழுது…
1.மக்களின் உணர்ச்சியால் உந்தப்பட்டு உண்மையின் உணர்வை அறியாதபடி
2.தனக்குள் சீதா என்ற சுவையைப் புண்படும்படிச் செய்து விட்டனர்.
3.ஆனால்… அதிலே வரும் கருவை அதை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காக
4.சீதாவின் மனதை மாற்றி அருள் உணர்வைச் செவி வழி ஊட்டி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கூட்டி
4.கருவிலே வளரும் குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுகின்றான் வான்மீகி.

இந்த ஞானத்தை ஊட்டிய பின் லவா.. குசா.. என்று பிறக்கின்றனர். இராமனின் செயலும்… சீதாவின் செயலும்… இயற்கையின் செயலைப் பற்றியும்…! அவர்கள் இருவரும் பாடல்களாகப் பாட்டுகின்றனர்.

இராமன் இதைக் கேட்கின்றான்.

மக்களின் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு “இந்தத் தப்பைச் செய்தேனே…!” என்று உண்மையை உணர்கின்றான்.

ஆகவே சீதாராமா…!
1.எதன் உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ
2.நம் வாயிலிருந்து சொல்லாக வந்தாலும் அதையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
3.அதே உணர்வின் நினைவு வந்து… உணர்வின் தன்மை உயிரில் உணர்ச்சிகள் பட்டு
4.அந்தச் செயல்கள்தான் படுகின்றது..!

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

vibhoodi siva

சித்தர்களினால் மறைத்து வெளிப்படுத்தப்பட்ட “சிவசக்தி” ரூபத்தின் இரகசியம்

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மனத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடன் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என் பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…! இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!

1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.

கர்ப்பிணியான சீதாவை இராமன் காட்டிற்குள் விடச் சொல்கிறான்… ஏன்…?

 

இராமாயணத்தில் உள்ள மூலங்களை அறியாதபடி பல புத்தகங்களைப் படித்து அதற்குள் உள்ளதை ஒத்துப் பார்த்து வியாக்கியானங்களைச் சொல்கிறார்கள்.

 

ஆனால் ஈஸ்வரபட்டர் எனக்குத் தெளிவாக்கினார். நம்மைப் புண்படுத்தும் நேரத்தில் வெறுப்பாகின்றோம். அதனால் பழி தீர்க்கும் உணர்வே வளரும்.

 

அதைப் போன்ற நிலைகள் உருவாகாதபடி அந்த நேரத்தில் நல்ல உணர்வுகளைக் கருவிற்குள் ஜீவன் பெறச் செய்து தன்னையும் மற்றவரையும் பண்படுத்தும் தன்மைக்கே அங்கே சீதாவை வான்மீகி ஆசிரமத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் கருவில் இருக்கும் சிசுக்களை ஞானக் குழந்தைகளாக உருவாகிட உபதேசித்தான்.

 

சமுதாயம் பண்பட ஞானிகள் இவ்வளவு தெளிவாகக் காவியத்தைப் படைத்துள்ளார்கள்.

 

ஜாதகத்தின் உண்மை நிலைகள் 

வாஸ்து சாஸ்திரம் பிரமிட் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஜாதகம் திருமணமானவர்களை ஒற்றுமையாக… மகிழ்ச்சியாக வாழச் செய்கிறதா…?

gate of heaven

சொர்க்கவாசலைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…?

இந்த வாழ்க்கையில் வாழும் நாம் நம் குழந்தையை எண்ணி.. நான் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்… அவன் எனக்குப் பின்னாடி அதை என்ன செய்யப் போகின்றானோ…? சொத்தை எல்லாம் காப்பாற்றுவானா..? என்ற நிலைகளில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

அவன் உணர்வை நமக்குள் வளர்த்து நாம் மடிந்த பின் அவன் நினைவாகவே வெளி வந்தால் அவன் உடலுக்குள் தான் செல்வோம்.

அங்கே சென்ற பின் உடலுடன் இருக்கும் பொழுது நாம் எப்படிக் கலக்கப்பட்டோமோ இந்த உணர்வு அவனுக்குள் இயக்கப்பட்டு
1.நாம் தேடிச் சம்பாரித்த சொத்தையும் அவன் கலக்கத்துடன் அழித்திடும் நிலை தான் வருமே தவிர
2.அவனைக் காத்திடும் நிலை வருவதில்லை.

ஆகவே கடைசியில் நாம் என்ன ஆகின்றோம்..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தை மேல் இந்த மாதிரிப் பாசமாக இருந்தால் இப்படி ஒரு நிலை வந்துவிடுகின்றது.

ஆக அந்த உணர்வுக்குள் பட்ட பின் இந்த உடலில் எந்தெந்த நோய் வந்ததோ அந்த நோய் அங்கே விளையும். அந்த நோய் விளைந்த பின் அந்த உடலையும் வீழ்த்தி விடுகின்றது.

ஆனால் பத்தாவது நிலை என்றால் என்ன…?
முதலிலே சூரியன்…
இரண்டாவது உயிர் விஷ்ணு..
மூன்றாவது எண்ணங்கள் இராமன்…
நான்காவது கண்கள் கண்ணன்.

துவாராகயுகத்தில் கூர்மையாகப் பார்த்து உடலின் அமைப்பு அவதாரம் ஆகி இப்படிப் பல தீமைகளை நீக்கி நீக்கி அவதாரங்களாக மாற்றி தீமைகளை நீக்கிடும் தன்மை பெற்றவன்.

கண்கள் தோன்றிய பின் கூர்மையாகப் பார்க்கின்றது ஐந்தாவது நிலை இந்தக் கூர்மை அவதாரம்

ஆறாவது நிலை – வராகன் அந்த வலிமை மிக்க நற்சக்தி பெற்றுப் பன்றி என்ன செய்கிறது…?

1.சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளக்கின்றது.
2.அதற்குள் மறைந்த நல்ல உணர்வுகளை நுகர்கின்றது.
3.பின் பன்றியின் உடலில் தொக்கியுள்ள நஞ்சினை நீக்கிவிட்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வுகள் விளைகின்றது.
4.அடுத்து மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது… பரசுராம்…! ஏழாவது நிலை. பல தீமைகளைச் சமப்படுத்தும் நிலை வருகின்றது.

பின் பலராம் (எட்டாவது நிலை) பலருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து நரசிம்மா… (ஒன்பதாவது நிலை). தீமை என்ற நிலை வந்த பின் நம் உடலுக்கு:ள் புகாது தடுத்து நிறுத்தும் நிலை தான் நரசிம்மா.

தீமைகள் நமக்குள் புகாது நாம் தடுக்கவில்லை என்றால் அதனால் நாம் எண்ணும் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் இரண்யனாகின்றது,

ஆக இரண்யனான பின்
1.மற்றதைக் கொல்லும் நிலைகளை நாம் மாற்றி விட்டால் கல்கி.
2.இந்த உயிர் ஒளியானது. அதே ஒளியின் உணர்வின் தன்மை அந்தப் பத்தாவது நிலை ஆகும் பொழுது தான் கல்கி.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பை விடுத்து அது விண்ணுலகம் செல்கிறது… பறந்து செல்கிறது…
4.தன்னை எதுவும் தடுக்காது குதிரை மீது சென்று வாளை வீசித் தப்பித்துச் செல்வதாக உருவ அமைப்பைக் கொடுத்து
5.அந்த அருவத்தின் சக்திகளை நாம் எப்படிப் பெறுவது…? என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

வான்வீதியில் தோன்றிய உயிர் மனிதனாக ஆன பின் இனிப் பிறவியில்லாத நிலைகள் அடைவதே கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி நம் வாழ்க்கையில் அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அங்கே செல்கின்றோம்.

இப்படி நமக்குள்
1.மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் பொழுது சொர்க்கலோகம்…!
2.இதை உருவாக்குவது யார்..? உயிர்.
3.நமக்கு வாசல் எது…? உயிர்.
4.ஆகவே இது சொர்க்கவாசல்.

இந்த உடலிலே உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றினால் அந்த ஒளியின் தன்மை கொண்டு இந்த வாசல் வழி கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற ஏகாதசி… பத்தாவது நிலை எதுவுமே எதிர்ப்பில்லாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இது தான் ஏகாதசி பத்தாவது நிலை என்பது.

core of life

மனித வாழ்க்கையின் பொருள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியின் ஈர்ப்பிற்கு சக்தி தரும் காந்த மின் அலையின் வளர்ச்சிக்கு ஊற்றாக அமையப் பெற்றது தான்
1.உலகின் மூன்று இடங்களில் உள்ள “காந்த மின் கிணறுகள்…!”
2.கடலுக்கடியில் ஒன்று.. பாலைவனத்தில் ஒன்று… மலைப் பகுதியில் ஒன்று…! என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன்
3.இக்காந்த மின் கிணறுகளின் ஈர்ப்பு அதிகப்பட்டுப் பட்டு வளர்ச்சிப்படுமேயானால்
4.நம் பூமிக்கு… பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகப்படும்.
5.அதனால் அதிகப்படியான ஜீவ இன வளர்ச்சிக்குகந்த சத்து அமில நிலையைத் தர வல்ல தாவரங்களின் இயற்கை வளம் பெருகியிருக்கும்.

நம் பூமியைக் காட்டிலும் வியாழனும் சூரியனும் வளர்ந்துள்ளது. அவைகள் நம் பூமியை விட அதிக ஈர்ப்புக் குணமுடையதாக வளர்ந்து மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதன் சக்திக் குணத்தைத் தருகின்றது.

1.அந்த வியாழனைப் போன்று வளர்ந்து பெருக்கும் நிலை நம் பூமிக்கு இப்பொழுது குறைவுபட்டுள்ளது.
2.நம் பூமியும் கன விகிதத்தில் வளர்ந்து தான் வருகிறதேயன்றி
3.தன் ஈர்ப்பின் சக்தியை வளர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது.

காரணம் இன்றைய கலி மனிதன் தன் விஞ்ஞான செயற்கை மின் அலையைக் காண சூரியனின் சக்தி அலையை
1.நம் பூமி ஈர்க்கும்… பூமியின் இயற்கை வளர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதைச் செயற்கை மின்சாரமாகக் கண்டு எடுத்து விட்டான்,

பூமியின் ஈர்ப்புக் காந்த சக்திக்குக் கிடைக்க வேண்டிய ஆகார நிலையை… அது எடுத்து… உண்டு… வளர்ந்து… பலன் காணும் முன்… இன்றைய கலி அறிவு மனிதனால் துரித நிலையில் மின்சாரம் கண்டு பூமியின் வளர்ச்சிக்கும் வருங்கால உயிரினங்களின் வளர்ச்சி நிலைக்கு மாற்றம் தரவல்லவனாகி விட்டான் “இன்றையக் கலி மனிதன் தான்…!”

இக்கலி மனிதனால்… “அவன் அறிவாற்றல்” என்ற மேம்பாட்டில் கண்ட “செயற்கையினால்…!” பல கோடி உயிரணுக்களின் சக்திக் கலவையாகக் கலந்து வாழ்ந்து… தான் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
1.வளர்ந்து கொண்டே சுழன்றோடும் இந்தப் பூமியின் நிலையைத் தன் செயலுக்காக
2.மின் அலையைப் பாழ்படுத்தியதனால் பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான்.

இதனின் நிலையை மாற்றி நம் பூமி வளரத்தான்… இக்கலி மாறி கல்கியாக வருவதற்குத்தான் பல கோடிச் சித்தர்களும் சப்தரிஷிகளும் செயல் கொள்கின்றனர்.

இக்கலி மாறும் தருணத்திற்குள் இந்தப் பூமியின் அமிலக் குணத்துடன் ஒன்றி வாழ்ந்த மனித இனக் குண சக்தி இருந்தால் தான் மீண்டும் மீண்டும் மண்டல சக்திகளும்… எந்த ஒரு புதிய படைப்பு நிலையும் வளர்க்க முடியும்.

எண்ண சக்தியின் வளர்ச்சி நிலை கொண்ட அமில… குண ஜீவன்.. மனிதனிலிருந்து தான் இந்நிலை வளர முடியும் என்ற உண்மையில் தான் சப்தரிஷிகளும் அவர்களின் ஆசி பெற்ற சித்தர்களும் செயல்படுகின்றனரப்பா…!

கூரை அமைக்கத் தூணோ சுவரோ தேவை, அது போல் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் மேம்பாட்டில் தான் மண்டல வளர்ச்சி உண்டு… மற்றெல்லா வளர்ச்சியும் உண்டு.

இதன் நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் இஜ்ஜீவ உடல் பிம்ப நிலையிலிருந்து தன் உயிரணுவான காந்த உயிர் சக்தியை நல்ல நிலையில் எடுக்கும் எண்ணம் கொண்டு இந்த உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் வீரிய சக்தி பெறும் வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

தான் எடுக்கும் ஜெப நிலையால் தன் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒளி பெற்று தானாக ஓர் உயிரணு ஆத்மாவுடன் பல கோடி அணுக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுமானால்
1.அதன் சக்தி ஜெபத்தினால் எடுக்கும் நுண் அலையின் தொடர்பைக் கொண்டு
2.பலவாகப் படர்ந்துள்ள சப்தரிஷிகளின் ஒளி அலையைப் பெற்று
3.அவர்களின் தொடர்பின் மூலம் பல செயல்களை இந்த உயிராத்மாவினால் வளர்க்க முடியும்.

ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் என்பது வாழும் காலங்களில் பிறர் போற்றித் துதித்து… “மடிந்த பிறகு…. புகழாஞ்சலி பெறுவதல்ல…!”

இம்மனிதப் பிம்ப வாழ்க்கையில் எடுக்கும் ஒளி அலையின் நிலையின் வளர்ச்சி தான் எல்லாவித இயற்கைக் குண வளர்ச்சி மண்டலங்களின் சக்தியும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது வாழும் குறுகிய கால வாழ்க்கையில்
1.இந்தச் சந்தர்ப்பத்தைக் குறுகிய நிலைப் புகழுடன் மங்க விடாமல்
2.பேரண்டப் பெரு நிலை என்ற உயர்ந்த அண்டமாகும் சக்தி நிலையைப் பெறும் தகுதிக்குத் தான்
3.யாம் இங்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பாட நிலையின் உண்மை நிலை.

விஷ்ணு தனுசை எடுத்தான் இராமன்… ஜெயித்தான்…!

 

இராமாயணத்தில் உள்ள சில முக்கியமான உண்மைகளை குருநாதர் எனக்கு உணர்த்திக் காட்டினார். அதில் மனிதன் அடைய வேண்டிய மார்க்கங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது என்று சொன்னார்.

 

நாம் இயங்குகிறோமா… நம்மைப் பிறிதொன்று இயக்குகிறதா..? எண்ணங்களும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எப்படி உருவாகிறது…! எப்படி நம்மை இயக்குகிறது..? என்றும் காட்டப்பட்டுள்ளது.

 

தீமைகளை அடக்கிய உணர்வின் தன்மையை பெற்றது விஷ்ணு தனுசு. பரசுராமன் சிவ தனுசை எடுக்கின்றான்.. இராமனோ விஷ்ணு தனுசை எடுக்கின்றான் ஜெயிக்கின்றான்.

 

குடுகுடுப்புக்காரன் மண்ணையும் முடியையும் பழைய துணியையும் ஏன் கேட்கின்றான்…?

வாஸ்து சாஸ்திரம் எவ்வளவு நாள் பலனளிக்கும்…?

செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை 

sivalingeswarans

நமக்குள் ஈசன் இருக்கின்றான்..! என்று ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைக்கின்றோமா…?

நான் நல்லதைச் செய்வேன்… அதைச் செய்வேன்.. இதைச் செய்வேன்…! என்று சொல்லி நாம் நல்லதையே எண்ணுவோம்…! இருந்தாலும்
1.ஒருவர் வேதனைப்படும் பொழுது அந்த ரெக்கத்தில் நாம் பரிபக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
2.நம் சொல்லைச் சொல்லும் பொழுது பிறரை வேதனைப்படும் நிலைக்கு உருவாக்காதபடி அதிலே பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

நோயுடன் ஒருவர் மிகவும் சிரமப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்தப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் வலுக் கூட்டி எடுத்துக் கொண்டு
1.அந்த அருள் ஒளி அவர் பெறவேண்டும்
2.அவர் உடலில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால் இது “பரிபக்குவம்…!”

வடையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் சரியாகச் சூடு ஆகாதபடி மாவைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்..? எண்ணையைப் பூராம் குடித்துவிட்டு வடையின் ருசி கெட்டுப் போகும்.

இதைப் போல் தான் நாம் நல்ல மனம் கொண்டு ஒரு மனிதன் நோயால் வாடுகின்றான் என்று உதவி செய்தாலும் அவரின் வேதனையைப் பக்குவம் தவறி நாம் கேட்டுணர்ந்தால்
1,அந்த உணர்வுகள் நமக்குள் சென்று நம் உடலுக்குள்ளும் நோயைத் தான் உருவாக்கும்.
2.நம் நல்ல மனமும் சுவை கெட்டுப் போகும்.
3.நல்ல குணத்தின் இயக்கமும் கெட்டுவிடும்.

ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும்..?

காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டு உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று இந்த உணர்வைக் கூட்டி அதைச் சுவாசித்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் அவருடைய வேதனையை நாம் முதலில் கேட்டறிந்தோம். இந்த உணர்வுகள் நமக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த வலுவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடலில் படர வேண்டும்… அவர் நோய் நீங்கி உடல் நலம் பெறவேண்டும்…! என்றால் இது பக்குவ நிலை கொண்டு அவருடைய மனதைத் திருத்தவும் நமக்குள் அந்தச் சுவை மிக்க உணர்வை நமக்குள் உருவாக்கவும் உதவும்.

வாழ்க்கையில் அதைச் (நல்லதை எல்லாம்) செய்வேன்…! சொல்லி விட்டுத் திடீரென்று என்ன செய்வார்கள்…? எல்லாம் செய்து கொண்டே இருப்பார்கள். கடைசியில்…
1.நான் எல்லா நன்மையும் அவனுக்குச் செய்தேன்…
2.ஆனால் பதிலுக்கு இப்படிச் செய்கிறான் பார்…! என்று நாம் கோபமாக மாறும் பொழுது
3.இது எல்லாமே போய்விடுகின்றது… இருள் சூழ்ந்துவிடுகிறது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை வராதபடி இந்த வாழ்க்கையிலே நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதாவது “நல்லதைத் தான் செய்வேன்…!” என்ற பாட்டைப் பாடிவிட்டு மற்றவர்களின் குறைகளையும் வேதனைகளையும் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ளும் அந்தப் பரிபக்குவ நிலையை எனக்கு அருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டிக் கேட்க வேண்டும்… அந்த அருளைப் பெற்றுப் பழக வேண்டும்.

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…!

அதாவது…
1.நாம் இந்த வாழ்க்கையில் அதைச் செய்ய வேண்டும்… இதைச் செய்ய வேண்டும்… அப்படிச் செய்ய வேண்டும்… என்றெல்லாம் விரும்புவோம்
2.அந்த ஆசையினால் நாம் என்ன செய்கிறோம்..?
3.நமக்குள் தீமை என்ற உணர்வுகளும் வந்து சேர்ந்து விடுகின்றது.

தீமை என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகின்றோம்…
1.இந்த உடலின் ஆசை தான் நமக்குள் வருகின்றது.
2.நமக்குள் உயிரான ஈசன் இருக்கின்றான்..! என்ற நிலையையே மறந்து விடுகின்றோம்.

வேதனை என்ற உணர்வை எடுக்கும் பொழுது அந்தச் சிவனாக உருவாக்கிய இந்த உடலில் கடும் வேதனையை உருவாக்குகின்றது.

ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற கோவிலில் அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர
1.அந்த ஈசனான நிலைகளை நாம் வணங்க மறுக்கின்றோம்.
2.அவன் அறிவை எடுத்து நாம் தெளிவாகும் நிலையை இழந்து விடுகின்றோம்.

ஆகவே நாம் இந்த உடலின் இச்சைக்கு வாழாதபடி
1.இருளை அகற்றும் அருள் சக்தி பெறவேண்டும் என்றும்
2.எனக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும் என்றும்
3.உயிர் எவ்வாறோ… நீ எப்படி ஒளியாக இருக்கின்றாயோ… என் உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளிமயமாக மாறுதல் வேண்டும் என்றும்
4.உயிருடன் ஒன்றிடும் நிலையாக நம்முடைய வாழ்க்கையை அமைத்து
5.என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டிக் கேட்க வேண்டும்.

Birth and death

உலக சக்தியையே தனக்குச் சொந்தமாக்கினாலும் தன்னை உணரும் நிலையில் மனிதன் இல்லை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:-
உணர்ச்சி மிகுந்த மனிதன் ஒருவன் உணர்ச்சி குறைந்த எருமையில் அமர்ந்து அதனை அடித்துத் துன்புறுத்தி வண்டியில் கட்டிப் பாறாங்கற்களை ஏற்றிச் செல்கின்றான் அவ்வண்டியில்…!

விளக்கம்:-
மனிதன் தன் செயலுக்காகப் பலவற்றையும் மிருகங்களையும் மற்ற செயலுக்குகந்த பொருள்களையும் உலோகங்களையும் தன் ஜீவித வாழ் நாட்களில் சுகம் காணச் செயல்படுத்துகின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை இவனைக் காட்டிலும் இவனுக்கு உபயோகமாக இருக்கின்றது. அதனால் இவன் பலன் காண்கின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை தான் உணர்ச்சி மிகுந்த மனிதனுக்குப் பயன்படுகின்றது. இதைப் போன்று மனிதன் இந்தப் பூமியில் உள்ள பிற இன வஸ்துக்களையும் உயிரினங்களையும் தனக்கு உகந்ததாகப் பயன்படுத்தி வாழ்கின்றான்

1.உலக சக்தியையே மனிதனுக்குச் சொந்தமாக்கி வாழுகின்றான்… இன்றைய மனிதன் தன் அறிவின் விஞ்ஞான வளர்ச்சியினால்…!
2.ஆனால்… தன்னை உணர்ந்து தனக்குள் உள்ள உண்மை சக்தியை உணராமல் வாழ்கின்றனப்பா ஒவ்வொரு மனிதனும் இக் கலியின் கடைசிக் காலத்தில்.

காட்சி:-
ஒரு மனிதன் ஆற்றங்கரையில் அமர்ந்து இரை வைத்துத் தூண்டில் போட்டு பெரிய மீனாகப் பிடித்துச் செல்கின்றான்.

விளக்கம்:-
இன்றைய உலக நிலையும் இதன் அடிப்படை குணத்தில் தான் மனித ஆத்மாக்களின் வளர்ச்சி எண்ண வாழ்க்கை நடந்து வருகிறது.

தன் சாதகம் காண மீணுக்கு உணவு வைத்து அதனைப் பிடித்துத் தான் மனிதன் உண்ணுகின்றான். அதைப் போன்று
1.தன் வசதியான சோம்பல் மிக்க வாழ்க்கையின் சாதனைக்கு
2.சூரியனிலிருந்து பூமி ஈர்க்கும் மின் அலையையும் பூமி ஈர்த்து வளர்ந்த கனி வளங்களையும்
3.அறிவின் மேம்பட்ட கலி மனிதன் உண்டு விடுகின்றான்.

இது நாள் வரை வெளிப்படுத்தாத சில நிலைகளையும் வெளிப்படுத்துகின்றேன்.

எரிமலையையும் பனி மலையையும் பாலைவனங்களையும் ஏன் ஆழ் கடலையும் கூடக் கண்டு ஆராய்ந்து வருகின்றார்கள்.

இருந்தாலும் நம் பூமியில் மூன்று இடங்களில் இது வரை மனிதன் சென்று ஆராயாத இடங்களில் அதிகமாக காந்த ஈர்ப்புக் கிணறுகள் உள்ளனவே. இவர்கள் ஆராய்ச்சியில் ஏன் அதன் நிலைக்குச் செல்லவில்லை…?

1.பூமத்தியின் ரேகையின் மையப் பகுதியில் இக்காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள் நிறைந்துள்ளன.
2.கடல் மட்டத்தில் கீழ் இவ்வீர்ப்பு மிக அதிகப்படியாக உள்ளன.
3.மனிதன் மட்டுமல்ல…! இயற்கைக்கு மாறி எந்த நிலைகளும் அங்கு சென்றால் அதன் ஈர்ப்பில் அப்படியே ஈர்த்துக் கொள்ளும்.

பூமியின் ஈர்ப்புக் காந்த அலைக்குச் சக்தி தருவது பூமத்திய ரேகையின் மையப் பகுதி தான், ஆராயும் நிலைக்குச் செல்வதாக இன்றைய விஞ்ஞானம் உள்ளது.

இவர்கள் செலுத்திச் செயல்படும் எக்கருவியையும் தன் ஈர்ப்புடன் அவை இழுத்துக் கொள்ளும்.
1.படர்ந்து மைல் கணக்கில் இல்லை… அந்தக் காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள்.
2.இந்தப் பூமியில் குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஐந்து ஆறு அடி விஸ்தீரணச் சுற்றளவு கொண்டதாக அது உள்ளது.

இவர்கள் ஆராய்ச்சியில் பிடிபடுவதும் கடினம்…! கடல் மட்டத்தில் ஒன்றும் மலை மேட்டில் ஒன்றும் பாலைவனத்தில் ஒன்றும் உள்ளது.

பூமத்திய ரேகையின் மையப் பகுதியிலும் கர்நாடக மாநிலத்தில் மலைப் பிரதேசத்திலும் சகார பாலைவனப் பிரதேசத்திலும் உள்ளது. அதன் பக்கங்கள் உள்ள இடங்களிலும் அதன் ஈர்ப்பின் செயல்கள் அந்தந்த இடங்களில் படர்ந்துள்ளது.

இதை எல்லாம் உணர்ந்து தன் உயிராத்மாவை வலுவாக்கி ஒளியாக்கி விண் சென்றவர்கள் அனைவரும் என்றுமே அழியாது வாழ்கிறார்கள்.

ஆனால் இந்த உடலுக்காக என்று வாழும் நிலையில் உள்ளவர்கள் உண்மையையும் உணராது தன்னையும் உணராது மீண்டும் மீண்டும் இதிலே சக்கரம் சுழல்வது போல் சுழன்று கொண்டுள்ளார்கள்.

மனிதப் பிறவி எடுத்தது சுழன்று கொண்டே இருப்பதற்கா…?

துன்பம் வந்தால் அதை உடனடியாக நீக்கும் சக்தி கொடுக்கின்றோம்

திரும்பத் திரும்ப உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றோம்.

 

துன்பத்தை மாற்றி இன்பமாக்கும் சக்தியைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கிறோம். ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணினாலே உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கும்படி செய்கிறோம்ஞானகுரு

 

வான்மீகி அன்று எழுதினான் எண்ணங்களைப் பற்றி…! எப்படி…?

கூட்டிப் பெருக்கும் உணர்வுடன் வாழ்க்கையில் நாம் வளர வழி காட்டும் பல்லாங்குழி விளையாட்டு 

மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு 

சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

SIMPLE YOGA EXCERCISE

எளிதான பயிற்சி மூலம் “சிறு மூளையிலிருந்து கால் பெரு விரல் வரை நரம்புகளை உற்சாகப்படுத்தி…” முழுமையான உடல் நலம் பெறலாம்

உதாரணமாக உட்கார்ந்தே வேலை செய்கிறோம் உட்கார்ந்தே இருக்கின்றோம் என்று சொன்னால் உடலை உற்சாகப்படுத்த அதற்கு ஒரு பயிற்சியைச் செய்யுங்கள்.

ஓய்வு கிடைக்கும் பொழுது ஒரு ஐந்து நிமிடமாவது இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் மேல் நோக்கிப் பார்த்து உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.
3.அந்த அருள் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.
4.மேல் நோக்கி ஏங்கும் பொழுது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் நுரையீரலிலும் மற்ற உறுப்புகளிலும் அதிகமாகப் பெருக நேருகிறது.

எனக்குக் கழுத்து பிடித்துவிட்டது…! என்று சிலர் சொல்வார்கள். டாக்டரிடம் போனேன். என் எலும்பு தேய்ந்து விட்டது… என்று சொல்லி விட்டார்…! என்பார்கள்.

இது எல்லாம் நம் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சில நிலைகள்…
1.அதனுடைய வலுத் தன்மை இல்லாததால்
2.இந்த அழுத்தம் (பிடிப்பு) நமக்குள் அதிகமாக வருகின்றது.
3.அதாவது சுண்ணாம்புச் சத்து (CALCIUM) குறைவு… அல்லது நரம்பு மண்டலங்களில் அந்த வீரியத் தன்மை குறைந்திருந்தால்..!

அதற்கு உற்சாகம் ஊட்ட வேண்டும் என்றால் காலை நேராக நீட்டிக் கொள்ளுங்கள். அப்படியே உங்கள் கைகள் இரண்டையும் மேலே உயர்த்துங்கள் காதை ஒட்டி (படத்தில் காட்டியபடி).

அப்படியே மெதுவாக கைகளை முன்னாடிக் கொண்டு போங்கள் (காலை நோக்கி). உடனே செய்ய வேண்டும்… காலைத் தொட வேண்டும் என்று அவசரப்படாதீர்கள்.
1.அந்த மெதுவாகக் கொண்டு போகும் நிலையில்
2.எவ்வளவு தூரம் கொண்டு போய் வளைய முடியுமோ.. வளையுங்கள்.

வளையும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து எங்கள் உடலில் படர வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தி அந்த மூச்சினை இழுங்கள்.

இப்படி மெதுவாக இரு ஐந்து அல்லது ஆறு தடவை செய்யுங்கள். இப்பொழுது…
1.உங்களுக்குள் சிறு மூளையிலிருந்து இந்தப் பெருவிரல் வரையிலும் அந்த நரம்புகளை ஓரளவுக்குச் சீராக இயக்க முடியும்.
2.முதுகை வளைத்து முன்னாடி வளையும் பொழுது…!
3.உடலில் உள்ள பிடிப்பெல்லாம் போய்விடும்.

இதெல்லாம் சுலபமான பயிற்சி.

உங்களுக்கு வாக்குக் கொடுத்ததை நீங்கள் சீராகப் பயன்படுத்தினால் உடலில் உள்ள சலிப்பு சோர்வு நோவு எல்லாம் நீங்கிப் போகும்.

சிலர் அடிக்கடி வேதனைப்பட்டு சலிப்புப்பட்டு கோபப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த உணர்வுகளைப் பார்த்த பின் இதே உணர்ச்சிகள் கண்ணின் கருவிழியான படமாக்கும் உணர்வுகளில் பட்டு
1.அதனின் இயக்கமாக அதை ஒட்டி உள்ள நிலைகளில் பலவீனமடைந்திருக்கும்…
2.கண் எரிச்சல்… கண் மங்கல் எல்லாம் இருக்கும்.
3.அப்படிப் பலவீனம் அடைந்தால் நாம் எதையுமே சீக்கிரம் கிரகித்து இழுக்கும் சக்தி அங்கே குறையும்.

அதற்கும் இதே போல் காலை நீட்டிச் சிறிது நேரம்
1.“தம் அடக்கி… தம் பிடித்து…”
2.இரண்டு கைகளையும் அப்படியே கொண்டு வந்து கால் பெரு விரலைத் தொட்டு
3.கொஞ்ச நேரம் அப்படியே அந்த மூச்சை விட்டு மூச்சை வாங்குங்கள்…!

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள். அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்து சிறு மூளையிலிருந்து எல்லாப் பாகங்களுக்கும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

கை கால் குடைச்சலாக இருந்தால் எழுந்து நின்று கையை மேலே தூக்கிக் கொள்ளுங்கள். குடைச்சல் இருந்தது என்றால் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். ஏனென்றால் சில நேரங்களில் உடல் பாகங்களில் சில வாயுத் தன்மை அடைத்திருந்தால் ஒரு விதமான வலி ஏற்படும்.

மருத்துவரிடம் சென்றால் ஹார்ட் அட்டாக்… இரத்தக் குழாய் அடைத்திருக்கிறது…! என்று கூடச் சொல்லி விடுவார்கள்,

அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி மூச்சை ஒரு ஐந்து தடவை இழுத்து விடுங்கள். அப்படிச் செய்யும் பொழுது இந்த இருதய வாயிலுனுடைய நிலைகள் இழுக்கப்படும்.

இருதய பாகத்தை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வுகள் நுரையீரலில் இருதயத்திலும் ஓரளவுக்குப் பரவும்.

அங்கே அடைப்பாகித் திகைப்பாகி இருதயத்தில் வலி இருந்தால் இதே மாதிரி எண்ணிக் கொஞ்சம் மெதுவாக இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
1.மேலே கையைத் தூக்கிக் கீழே வளைகின்றீர்கள்…! என்று சாதாரணமாக நினைக்கின்றீர்கள்.
2.ஆனால் அந்த இருதய வாயிலில் அந்தப் பாகத்தில் இருக்கக் கூடிய அடைப்புகளை அகற்றி
3.இருதயத்தைத் தெளிவாக்கி உங்கள் உடலைச் சீராக்க இது உதவும்.

power of gods

கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார்… எல்லாமாகவும் உள்ளார்..!
2.நல்ல சக்தி மட்டும் கடவுள் அல்ல. தீயவையும் கடவுளின் படைப்புதான்.
2.கடவுளின் பிம்பம் நன்மையிலும் தீமையிலும் கலந்தே உள்ளது.

நற்குணம் கொண்ட மனிதனும் கடவுளுக்குச் சொந்தம். தீய குணத்தில் உள்ளவனும் கடவுளின் படைப்பு தான்.
1.இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்தால்
2.தெய்வத்தின் சக்தியை மனித ஆன்மாக்கள் உணர்ந்து நடக்க ஏதுவாகும்.

எல்லாப் படைப்பும் தெய்வத்தின் படைப்பே…!

படைக்கப்பட்டவன்…
1.படைப்பின் பொருள் கண்டு மகிழ்ந்து
2.தன் பொருளான தான் படைத்ததன் பலன்தான்
3.தெய்வ சக்தியின் அருள் வளர்ச்சியும்.. நற்குண வளர்ச்சியும்…!
4.சப்தரிஷிகளின் நிலை பெற்றோரின் வளர்ச்சியினால் தன் படைப்பின் பலனைப் பெற்றான் – “படைத்தவன்”

மனிதன் உருவாக்கும் செயல்களில் இருந்து எப்படி தன் எண்ணத்திற்குகந்த நிலை பெற்றவுடன் மகிழ்ச்சி கொள்கின்றானோ அதைப் போன்ற மகிழ்ச்சிதான் தெய்வ சக்தியின் வளரும் நற்குண வளர்ச்சியும்…!

நன்மை தீமை கொண்டு தெய்வப் படைப்பு இல்லை. எல்லாமே தெய்வப் படைப்புத் தான். பல சுவையும் இயற்கையில் கலந்து தான் வளர்கின்றது. கசப்பின் சுவை இல்லாவிட்டால் இனிப்பை அறிய முடியாது.

மனித வாழ்க்கையில் ஏற்படும் சோதனை நாட்களை கசப்பாக எண்ணி… அக்கசப்பின் நிலையில் விரக்தி பூணும் மனிதனின் சுவாச அலையின் தொடரினால்… அதே சுழற்சியில் இருந்து சலிப்பின் உந்தலினால்.. பல மனித ஆத்மாக்கள் தன் நிலை உணராமல்… இக்கசப்பான நிலையிலிருந்து மீள முடியாத சிக்கலில் சிக்கி…
1.அதன் உணர்வு அலையின் உந்தலில் ஏற்படும் ஆவேச எண்ண நிலையிலிருந்து மீளாத மனிதன்தான்…
2.தீய வழிகளுக்கும் தீய செயலில் நிலைக்கும் தன் நிலை உணராமல் சென்று விடுகின்றான்.

தனக்கு ஏற்படும் இன்னலில் இருந்து கசப்பான வாழ்க்கையை இனிய செயலாக்குவது இம்மனிதனின் எண்ணம் தான்…! என்று உணர்ந்து
1.கசப்பைத் துவர்ப்பாக்கி
2.துவர்ப்பை இனிமையாக்கும் வாழ்க்கைச் செயலுக்குக் கொண்டு வரலாம்.

அதே சுழற்சி ஓட்டத்தில் செல்லும் மனிதன்… மீண்டும் சோதனையான கசப்பான நிலை தன் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் அதனை இனிமைப்படுத்திடும் வழித் தொடர் அறியத் தன் எண்ணத்தை அவ்வீர்ப்பின் நிலையுடன் தன் உணர்வு பெறுகின்றான்.

1.இனிமையிலிருந்து வருவதல்ல நல் உணர்வு எதுவுமே…! (இது மிகவும் முக்கியமானது)
2.சுவையான மாங்கனி பிஞ்சில் கசப்பாகவும்.. பிறகு வளர வளர
3.துவர்ப்பு புளிப்புமாகி பிறகு தான் முற்றிப் பழுத்து இனிப்பாகின்றது அல்லவா…!

உள்ளிருக்கும் துவர்ப்பான அக்கொட்டையுடன் ஆரம்ப ஈர்ப்புக் குணத்திலுள்ள அமிலப் படிவம் கொட்டையுடன் உள்ள பொழுதும் அத்துவர்ப்பான கொட்டையின் மேல் சுவையான மாங்கனி வளர்கின்றது அல்லவா…!

1.அதைப் போன்று கசப்பான வாழ் நாட்களை இனிமையாக்கப் பழகிடுங்கள்.
2.கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்.

பல சித்தர்களும் சப்தரிஷிகளும் மற்றும் இன்றைய காலங்களில் உள்ள நீங்கள் அறிந்த வளர்ச்சி கொண்ட எந்த மேதைகளையும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் நடந்த உண்மை நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தோமானால் “இதன் நிலை புரியும்…!”

அரசனாக இருந்தாலும் மாமேதையாக இருந்தாலும் எந்த ஆண்டவனும் அவர்களுக்கு அந்தச் சக்தி தரவில்லை. அவரவர்கள் எடுக்கும் எண்ணச் சுவாசத்தினால் அவர்கள் அடையும் பெரு நிலை எல்லாம் இறைவனின் படைப்பு ஒன்றே…! இயற்கையின் சக்தியும் அதுவே…!

வளர்ந்த செயலில்தான் அதனதன் அடிப்படைக் குணமெல்லாம் உள்ளன. இக்குணத்தின் வழி பெற்றது தான் ஆண்டவன் கண்ட பொருள் மகசூலான சந்திரனும்.. சூரியனும்… நம் பூமியும்… நாமும்… எல்லாமே…!

1.நன்மை தீமை கொண்டு படைக்காத ஆண்டவன்
2.தன் படைப்பின் பலனான நல்லதுவும் தீயதுவும் சுழன்றுள்ள நிலையில்
3.தன் வளர்ச்சிக்குத் துணையாக நல்லவற்றைக் காண்கின்றான்.

இப்படி இருக்க ஆண்டவன் படைப்பை எப்படிப் பிரித்துக் காண்பது…? 

நாம் யாரையும் குற்றவாளியாக எண்ணவே கூடாது…!

 

மற்றவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்க நேர்ந்தால் நம்மைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று கற்பனை செய்து கொண்டே இருப்போம். ரோட்டில் போகிற தண்ணீரை என் மீது ஊற்று என்று சொல்கிற மாதிரி நமக்குக் கோபம் ஜிர்ர்..ர் என்று ஏறும்.

 

நம் உடலில் புண்கள் வருவது போல் சில எதிர் மறையான உணர்வுகளால் மரத்திலும் புடைப்பாக ஏற்படுவதுண்டு. இயற்கை எப்படி இயங்குகிறது என்பதை குருநாதர் தெளிவாக்கினார்.

 

தீமை செய்யும் உணர்வைப் பற்றி அறியவில்லை என்றால் தீமையை நீக்கும் தன்மையை எடுக்கும் தன்மை வராது. தீமையை நீக்க என்ன மருந்து என்று அறிய வேண்டும்.

 

எதிர் மறையாக இயக்கும் உணர்வுகளைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். வட துருவம் தென் துருவம் போல் நல்ல குணங்களும் தீய குணங்களும் ஒன்றை ஒன்று உந்தித் தான் இயக்கும்.

 

இராவணனை-தசப்பிரியன்-என்று-ஏன்-சொல்கிறோம்

இஷ்வாகு-வம்சத்தைச்-சேர்ந்தவன்-தசரதன்

தீங்கு-செய்யாது-அனைவரையும்-அரவணைத்துச்-செல்லும்-சக்தியே-கல்யாணராமா

கிரந்த மொழி

third eye unity

தானாக இருந்து நானாக இயங்குகின்றோம் என்பதை மாற்றி “உயிருடன் ஒன்றிய நானாக… இயங்க வேண்டும்…!”

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில்… எல்லா நினைவையும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா…! என்று நம் உயிரை வேண்டிப் பாடுகின்றோம்.

இந்த உடலில் “உயிர் இல்லை…!” என்றால் நான் இருக்க முடியுமோ…?

அதைத் தான் “நான் இல்லை… நீ இல்லா இவ்வுலகில்…!” இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடலான உலகில் நான் இருக்க முடியாது.

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா..! “எல்லா நினைவு…!” என்றால் அதனுடைய பொருள் என்ன…?

இந்த உயிர் தான் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனயோ கோடிச் சரீரங்களைப் பெற்று
1.எத்தனையோ கொடுமையிலிருந்து நீக்கிட வேண்டும்…
2.வேதனைகளிலிருந்து விடுபட வேண்டும்… தப்ப வேண்டும்…! என்று
3.தீமைகளை அகற்றி… அகற்றி… இன்று தீமைகளை அகற்றிடும் நம்மை மனிதனாக உருவாக்கிய இந்த நிலையில்
4.எதை எல்லாம் நீக்கிட வேண்டும் என்று நாம் எண்ணினோமோ..
5.இந்த மனித வாழ்க்கையில் வரும் “தீமை என்ற நிலைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறவேண்டும்….!”

ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் ஒவ்வொரு உடலிலேயும் ஒவ்வொரு விதமான உணர்வுகளிலிருந்து நான் தப்பித்தேன்…!
1.அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையிலும் வரும் தீமைகளிலிருந்து நான் விடுபட வேண்டும்
2.அந்த அருள் சக்தி நான் பெறவேண்டும்…! என்று
3.உயிரான ஈசனிடம் வேண்டுவது தான் இந்தப் பாடலின் உட்பொருள்.

புழு பூச்சிகளிலிருந்து பல கோடிச் சரீரங்களைக் கடந்து… தீமைகளைக் கடந்து… தீமைகளை நீக்கிடும் மனித உடல் பெற்றோம், இந்த மனித உடலோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது.

உணவில் மறைந்த நஞ்சை உடல் மாற்றுவது போல்…
1.நஞ்சென்ற உணர்வுகள் (தீமைகள்) தெரிந்த பின் நஞ்சை நீக்கிடும் அந்த அருள் சக்தி…
1.என் நினைவில் வர வேண்டும் ஈஸ்வரா
2.எல்லாவற்றையும் உருவாக்கியது நீயே…!
3.நான் எண்ணியதை இயக்குவதும் நீயே…!
4.நான் எண்ணியதை உடலாக்குவதும் நீயே…!
5.எண்ணியதை உடலாக்கிய பின் இந்த உடலை ஆள்பவனும்… ஆண்டவனாக இருப்பதும் நீயே…!

ஆகவே இந்த உணர்வின் சக்தியை… நாம் நமக்குள் எப்படி இயங்குகின்றோம்…? என்பதையும் நான் என்பது யார்..! என்ற சிந்தனைக்குரிய நிலைகளை நாம் எண்ணி எடுத்தால் நமது உயிரின் தன்மை அதை இயக்குகின்றது

1.”நான்…” எண்ணும் செயல்கள் நான் ஆகின்றது.
2.உயிருடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மை அது இயக்கப்படும் பொழுது – உயிருடன் ஒன்றிய “நான்” ஆகின்றது.
3.ஆனால் (மற்ற நேரங்களில்) நாம் எடுக்கும் உணர்வு தானாகின்றது.
4.அந்தத் தான்… நான் (உயிருடன் ஒன்றிய) ஆக வேண்டும்.

உதாரணமாக கோபமாக நாம் எடுத்தால்.. தான் இயங்குகின்றேன்… இயக்குகிறேன்…! என்று தான் வருகின்றது.

இருந்தாலும்… உயிரோ ஒளி என்ற உணர்வை ஊட்டுகின்றது.
1.அந்த ஒளி என்ற நிலைகளை ஊட்டப்படும் பொழுது அதை நுகர்ந்து
2.இருளை நீக்கிய பின்… தான் – நான் (ஒளியாக) ஆகின்றேன்..!
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆகவே இந்த உயிருடன் ஒன்றி அந்த ஒளியின் சரீரமாக ஆகும் அந்தச் சக்தி நாம் பெறுகின்றோம்…! என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

spiritual intelligence

நுணுக்கமான அறிவை எல்லோரும் எப்படிப் பெறுவது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் பலவாக உள்ள நினைவின் ஓட்டத்தை ஒரு நிலைப்படுத்திப் பல நிலை கொண்ட அமில குணத்தையெல்லாம் ஒரு வழிக்கு வர பழக்கப்படுத்தித் “திசை திருப்பும் ஞான வழி பெறுதல் வேண்டும்…!”

அப்படிப் பெற்றால்…
1.தான் எடுக்கும் சுவாச ஈர்ப்பினால் எந்த ஒரு நற்சக்தியின் பால் தன் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
2.அதே நினைவில் சுவாசம் எடுத்து… அதன் வழித் தொடர் நினைவில்…
3.அத்தொடரில் உள்ள உண்மையின் வளர்ச்சியை நிச்சயமாகப் பெற முடியும்.

ஞானத்தின் பால் செலுத்தப்படும் இந்த ஈர்ப்பு குண நலம் அமையப் பெறும் வழித் தொடரில் சென்றால் “எந்த ஒரு நுண்ணிய அலைத் தொடரையும்…” வளர்ச்சி ஞானத்தினால் பெற முடியும்.

அத்தகைய நுண்ணிய அலைத் தொடரிலிருந்து…
1.நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுடனும் இந்த நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டு
2.இப்பிம்ப உடலிலிருந்து உயிர் ஜீவ சக்தியைத் தனித்துப் பிரித்துச் சென்று எல்லாவற்றையும் அறிய முடியும்.

அதாவது…
1.ஒவ்வொரு அமில குணங்களின் சேர்க்கையையும் அதன் வட்டத்திலிருந்து உயிர் பெறும் ஜீவ நிலையையும்
2.ஒன்றுடன் ஒன்று கலவைப் பட்டு வளரும் நிலையையும்
3.இப்பூமியில் உள்ள கனி வளங்களின் நிலை அறியவும்
4.கனி வளத்திலிருந்து கசிந்து உருகி வரும் திரவ நிலைகளை அறியவும்
5.இப்ப்பூமியின் பூமத்திய ரேகையில் உள்ள உண்மை நிலைகளையும் அறிய முடியும்.

விஞ்ஞான சாதனை கொண்டு செயற்கை மின் அலையின் தொடரினால் செயற்கை மின் அலையிலிருந்து விஞ்ஞானத்தில் கண்டறியும் ஆற்றலைக் காட்டிலும்
1.இஜ்ஜீவ மின் அலையின் சக்தியை வளர்த்துக் கொள்ளும் மனிதனால்
2.தன் உயிராத்மாவை எந்த இடத்திற்கும் சென்று..
3.பூமியின் மேல் மட்டத்தில் உள்ள நிலைகளை அறிவது போல்
4.இந்தப் பூமியின் உட்கோளங்களில் வளர்ந்து வரும் நிலைகளையும் அறியலாம்.

அது மட்டுமல்ல…!

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையும் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலத்தையும் இந்த நுண்ணிய அலையின் சக்தியை வளர்த்துக் கொண்ட மனிதனால் காண முடியும்.

இந்த உடல் அப்படியே ஒரு இடத்தில் இருந்தாலும்… விட்டுச் சென்ற உடலில் அனைத்து உயிரணுக்களும் இந்த நுண்ணிய மின் அலையின் சக்தியின் ஈர்ப்புடன் இயங்கிடும்.

உடலில் உள்ள தசைகளும் மற்ற எல்லா உறுப்புகளும் அதே நிலையில்… அதாவது…
1.உண்டு கழிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்
2.சுவாசம் எடுத்துச் சுவாசம் விட்டு இருக்கக்கூடிய நிலையும் இல்லாமல்
3.இந்த உடல் பிம்பம் எந்த வகைப் பின்னமும் படாமல் அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதை எல்லோராலும் பெற முடியும்…!

ஆனால்
1.மந்திரமும்… மாயமும்…
2.தெய்வீகப் பெரும் சக்தி என்றும்…
3.சாதாரண மனிதனால் முடியாத நிலை என்றும்
4.மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை மனிதன் எடுக்க முடியாமல்…
5.எட்டாத நிலைப்படுத்தி மறைக்கப்பட்டு விட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது.

செயற்கையின் மின் அலையை விஞ்ஞானப்படுத்திச் செயலாக்கும் மனிதனால்… தன் அலையின் தொடர்பிலிருந்தே அச்சூரியனின் ஒளி அலையின் ஈர்ப்பினால்… தன் உயிராத்மாவால்… எந்த ஒரு நுண்ணிய அலையின் வளர்ச்சியையும் ஜீவ உடல் கொண்டு மனிதனால் எடுக்க முடியும். இது சாத்தியமே…!

மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் ஜீவ சக்தியுடன் இயங்கும் பொழுது…
1.உயிராத்மாவின் நிலையுடன் நிறைந்துள்ள பல கோடி உயிரணுக்களும்
2.இந்த அலையின் ஈர்ப்பை எடுக்கும் நிலையினால்
3.மனிதனின் சக்தித் திறன் பலவாக உயரும்.

ஆனால் உடலை விட்டுச் சென்ற ஆவி ஆத்மாக்களுக்கு ஜீவ அணுக்களின் ஜீவ சக்தி இல்லாததினால் மனித ஞானத்தில் செயல்படும் திறனில்லாமல் ஆவி உலக வாழ்க்கை இருந்துவிடுகின்றது.

ஜீவ சக்தியில் ஈர்க்கப்படும் ஞானங்களும் இந்த உயர் மின் அலையின் தொடர்பும் ஜீவனற்ற ஆவி ஆத்மாக்களுக்கு முடியாதப்பா…!

சூரியனின் மின் அலையின் சுவாசத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து வாழும் நம் வாழ்க்கை அலையில் நாம் உண்டு… கழித்து.. உறங்கி.. நமக்குக் கிடைத்த பல காலமாக நாம் வளர்த்து வந்த இந்த ஜீவ உடல் வாழ்க்கையில் பெற்ற உன்னத சக்தியை அறியாமல்… விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

மூல நோய் இருதய நோய் சிறுநீரக நோய்கள் வரக் காரணம் என்ன…?

 

உடலில் வெப்பம் அதீதமாகும் நிலை வரும் பொழுது மூல நோய் வருகிறது. அதனின் வளர்ச்சியில் ஆணிமூலம் மூல பௌத்திரம் வருகிறது. அதைத் தணிப்பதற்கு ஜவ்வரிசியை வைத்துச் சாப்பிடலாம்.

 

பித்தம் அதிகமாகி தலை சுற்றல் இரத்தக் கொதிப்பு போன்ற நிலைகள் எல்லாம் எப்படி வருகிறது..? அதை எப்படி மாற்றுவது…?

 

இருதயம் சிலருக்குப் பலவீனமாக இருக்கும். இரத்தம் போகும் பாதைகளிலும் அடைப்பு இருக்கும். சலிப்பு போன்ற குணங்கள் அதிகமாக இருந்தால் உப்புச் சத்து அதிகமாகி இரத்தத்தில் அது உறைந்தால் இரத்தம் போகும் பாதையில் அடைப்பு வரும்.

 

தொழில் நிமித்தம் மற்றவரை ஏமாற்றும் நிலையும் குறை கூறும் நிலைகளும் இருந்தால் அடுத்தவரை அடக்கிடும் உணர்வுகள் வருகிறது. அப்படி அடக்கும் பொழுது நம் உடலிலுள்ள நல்ல குணங்களும் தீமைகளால் அடக்கப்படும் நிலை ஆகின்றது, இரத்தம் கெட்ட இரத்தமாகின்றது.

 

கல்லீரல் வீக்கம் நுரையீரலில் சளித் தொல்லை கிட்னி சரியாக இயங்காத நிலை எல்லாம் வருகின்றது,

 

இதை எல்லாம் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஈஸ்வரபட்டர் எனக்குத் தெளிவாகக் காட்டினார். இதை எல்லாம் நேரடியாகப் பார்த்துத் தான் உங்களுக்குச் சொல்கிறேன். (ஞானகுரு)

 

பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

நம் உடலே சொந்தமில்லை கௌரவம் நிற்குமா…?

மனப்போராட்டத்தினால் வரும் சிக்கல்கள்

மரண பயம் வருவதன் காரணம் என்ன…? வெல்வது எப்படி…?

meditational food

“அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்…”

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.

உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே உயிரை ஈசனாக எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் மனிதனான பின்…
1.இந்த இயற்கையின் உண்மைகளை வானஇயல் புவியியல் உயிரியல் தத்துவப்படி அறிந்தான்.
2.நஞ்சினை வென்றான்.. இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான்…!
3.அவனில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் படர்ந்துள்ளது.
4.அந்த அகஸ்தியன் உணர்வைத் தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

அந்த அகஸ்தியன் நஞ்கினை வென்று இருளை அகற்றி மெய்ப் பொருள் கண்ட அந்த உணர்வுகளை நாம் பெற இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டிக் கண்ணை மூடி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் வேண்டி ஏங்கிக் கேளுங்கள். இப்பொழுது அந்த உணர்வின் சத்தை நீங்கள் நுகர்கின்றீர்கள்.

அப்படி நுகரும் உணர்வுகளை…
1.அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் உணர்வை உங்கள் உயிர்
2.உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.
4.“ஓ…” என்று ஜீவ அணுவாக உருவாகும் கருத் தன்மை அடையச் செய்யும்,

நம் உடலிலே அந்தக் கருக்கள் பெருகி அணுவாக ஆன பின் அந்த அகஸ்தியன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்ச்சியை உந்தும்.

அப்படி உந்தி அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகளையும்… மற்ற நஞ்சுகளையும் நீக்கிடும் ஆற்றலையும்… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியைப் பெறும் தகுதியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி உடல் முழுவதும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருளைப் பரவச் செய்யுங்கள்.
1.அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள் உங்கள் இரத்தங்களிலே கலந்து உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவுகிறது
2.அதை நீங்களும் உணரலாம்… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அது வரும்.

திருமணமான பின் அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்றுத் துருவ மகரிஷியாக ஆனார்கள். அந்தத் துருவ மகரிஷியின் உடலிலிருந்து வெளிப்படுத்திய அந்த அரும்பெரும் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

1.இவை அனைத்தும் புருவ மத்தியிலேயே எண்ணி ஏங்குங்கள்.
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி இப்பொழுது உங்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும்.
3.உடல் முழுவதும் புதுவிதமான உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும்.

துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகியிருப்பதனால் நீங்கள் சுவாசிக்கும் பொழுது…
1.பேரின்பம் பெறும் அருள் மணங்கள் கலக்கப்பட்டு
2.பெரும் மகிழ்ச்சியின் உணர்வின் தன்மையாக உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் வரும்.
3.பற்பலவிதமான நறுமணங்கள் வரும்.
4.நஞ்சினை வென்றிடும் அருள் மணங்கள் கிடைக்கும்.
5.அருளானந்தம் பெறும் அருள் சக்தியும் உங்கள் சுவாசத்தில் கிடைக்கும்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரிடம் வேண்டுங்கள்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்குங்கள்.

இப்பொழுது…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் புருவ மத்தியில் மோதி
2.பேரொளி என்ற நிலைகளக உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.உங்கள் உடலில் உள்ள ஆன்மாவும் இதைப் போல இருளை வென்றிடும் அருள் ஒளியாகப் பெருகும்.

உங்கள் உயிருடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் மோதும் பொழுது.. அருள் ஒளி உங்கள் புருவ மத்தியில் தோன்றும். நீங்கள் இதற்கு முன் சுவாசித்த தீமை என்ற நிலைகளைப் புக விடாது அதை வெளிக் கடத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த பேரருளைப் பெறும் அருள் உலகமாக…
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
2.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளை உங்கள் புருவ மத்தியில் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.

1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் பொழுது
2.மின்னல்கள் எப்படி மின்கற்றைகளாக வருகின்றதோ
3.இதைப் போல் உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி
3.இருளை அகற்றி உங்கள் உடலுக்குள் ஒளியாக உருவாகும்.

உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுத்து இருளை அகற்றிடும் அருள் ஒளி என்ற உணர்வுகளாக உங்கள் ஆன்மாவில் பெருக்கும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கணவன் தன் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதே போல அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி தன் கணவன் உடல் முழுவதும் படர்ந்து கணவனின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் எண்ணி இரு மனமும் ஒன்றி அந்தப் பேரருள் உணர்வினை உருவாக்குங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து தாய் தந்தையர் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவு அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து
2.அந்தச் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.சப்தரிஷி மண்டல அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள்…
1.உங்கள் நினைவுக்கு எத்தனை பேர் வருகின்றனரோ…
2.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
3.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து
4.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ளுங்கள்.

உங்கள் குலதெய்வங்களின் உணர்வுகள் உங்கள் உடலிலே இருப்பதனால்… நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றதனால்… அதனின் வலுவின் துணை கொண்டு உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.

இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தாலும்… இன்னொரு உடலுக்குள் அவர்கள் ஆன்மாக்கள் சென்றிருந்தாலும்… இந்த உணர்வுகளை நாம் பாய்ச்சப் பாய்ச்ச… அந்த உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் ஊடுருவி.. அந்த உடல் மடிந்த பின் உடலை விட்டு வெளியில் வரும் ஆன்மாவை.. தினமும் செய்யும் துருவ தியானத்தின் மூலம் விண் செலுத்தி விடலாம்… அவர்கள் பிறவி இல்லா நிலை அடைவார்கள்…!

நாம் இந்த மாதிரிச் செய்தோம் என்றால் மூதாதைகள் ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் சாப அலைகளோ மற்றதுகள் விடுத்திருந்தாலும்
1.அந்த மரபு அணுக்கள் நம்மை அறியாது நம் உடலுக்குள் இருந்தாலும்
2.அந்த மரபு அணுக்களை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் பெருக்க முடியும்
3.பரம்பரை நோயை அகற்ற முடியும்.

இருளை அகற்றி விட்டுப் பேரருள் என்ற… அருள் ஒளி என்றுமே வளர்ந்து கொண்டே இருக்கும் அந்த உணர்வை அவர்களையும் பெறச் செய்யலாம்.

இவ்வாறு செய்து வந்தால்…
1.உங்கள் குடும்பத்தில் சமீப காலத்தில் உடலை விட்டு யார் பிரிந்திருந்தாலும்…
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.

growth in meditation

ஞான வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து வரும் நிலையை நாம் எப்படி அறிவது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்…?

குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.

அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று… பக்குவம் எய்தி… அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.

நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்…
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ…ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.

புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்…? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.

இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை…
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.

இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.

விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.

எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ… எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ… அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.

“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை…!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.

அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.

அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது… நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.

அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.

இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது…? என்று வினா எழுப்புவான்.

ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.

இரவிலே நல்ல தூக்கம் இல்லாமல் போவதன் காரணம் என்ன…?

 

பகலில் வந்த தீமைகளை நாம் நீக்கத் தவறினால் இரவு தூக்கத்திலும் கெட்ட கனவுகள் வரும். காலையில் எழுந்தவுடனும் அதே நினைவுகள் தொடர்ந்து வந்து நம் வாழ்க்கையின் அன்றாட செயல்களைக் கெடுக்கும்.

 

சிலருக்கு இறந்தவர்களும் கனவில் வந்தார்கள்… பயமுறுத்தக்கூடிய சில உருவங்களும் வந்தது…! என்றும் சொல்வார்கள்.

 

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் படுக்கப் போகும் முன் அவசியம் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது எண்ண வேண்டும்.

 

அந்த எண்ணத்துடனே தூங்கினால் இரவு முழுவதும் வான மண்டலத்தில் மிதப்பது போல் ஆனந்தமாக இருக்கும். காலையில் எழும் பொழுதும் ஒரு மகிழ்ந்த உணர்வு வரும். அன்றாடக் காரியங்கள் சீராக இருக்கும்.

 

விமான விபத்திலிருந்து காத்த அனுபவம் நடந்த நிக்ழச்சி 

உடல் பறறினால் வரும் விளைவுகளை இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு 

எல்லாவற்றிலிருந்தும் தப்பும் சக்தி மனிதனுக்குண்டு 

நம் புருவ மத்தியிலிருக்கும் உயிரின் முக்கியமான வேலை – நடந்த நிகழ்ச்சி

meditation force

எந்தத் தீமையும் நமக்குள் ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

இன்றைய மனிதனின் வாழ்க்கையில் ஆசை என்று வரும் பொழுது “ஒன்றைப் பெறவேண்டும்…!” என்று எத்தனையோ வழிகளில் நாம் எப்படி எப்படியோ செல்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் தப்புவதற்காக குருநாதர் எனக்கு அனுபவரீதியில் தான் எல்லாமே கொடுத்தார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் சுற்றும் பொழுது எனக்கு ஒரு கஷ்டமும் தெரியவில்லை. அப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

ஆனால் இங்கே நாட்டுக்குள்ளும் நகருக்குள்ளும் வந்து நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்று நான் சொல்லும் பொழுது என்ன நடக்கின்றது…?

எல்லோரும் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அப்பொழுது ஏற்றுக் கொள்ளாத நிலைகளில் அவர்கள் அந்தப் பண்பினைப் பெற முடியாத நிலை ஆகும் பொழுது “வருத்தமாகின்றது…!”

தியானத்திற்கு வந்து எல்லாமும் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
1.திடீரென்று அந்த உணர்வை மாற்றிக் கொண்ட பின்னாடி
2.அதைக் கேள்விப்பட்டவுடன் நமக்கு மனக் கஷ்டமாக இருக்கும்.
3.ஏனென்றால் அந்த உணர்வு நாம் எண்ணிய ஆசைகள்…
4.அங்கே அவர்களுக்குள் விளைந்த வேறு விதமான உணர்வு நம்மைத் தாக்கும் பொழுது நமக்கு இந்த நிலை மாறுகின்றது.

அதனால் தான் இதை எல்லாம்
1.சந்தர்ப்பத்திலே எப்படி வரும்…?
2.அதை நீ எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்…? என்று
3.குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார்.
4.அவர்கள் எல்லோரும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நீ எண்ணு.
5.அவர்களை அறியாது இயக்கும் அந்தத் தீமை உனக்குள் ஒட்டக் கூடாது என்பார்.

உதாரணமாக நாம் தோசை சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடுப்பிலே தணல் அதிகமாகி விட்டால் என்ன ஆகின்றது…? ஒரு பக்கம் தோசை கருகிவிடுகின்றது.

கருகியவுடன் நாம் தோசையை எடுக்க வேண்டும் என்றாலும் கைக்கு வராது.
1.மறுபடியும் எண்ணையையும் தண்ணீரையும் போட்டு சமமாக்கிய பின்
2.அடுத்து மாவை ஊற்றினால் சட்டியில் தோசை ஒட்டாமல் சீராக வரும்.
3.இதை நாம் ஒரு முயற்சியாக எடுத்துச் செய்கின்றோம் அல்லவா…!

இதே மாதிரித் தான் பல தீமையின் உணர்வுகள் வந்தாலும் அது நம்மிடம் ஒட்டாமல் இருப்பதற்காக நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமல்லவா…!

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ இதைப் போன்ற நிலைகளை நாம் பார்க்கப்படும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வினை வலுப் பெறச் செய்து கொள்ள வேண்டும்.

நம் பையனோ பிள்ளையோ சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் பெற வேண்டும். கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் அருள் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தாலும் அந்த அருள் சக்தியை எடுத்து நமக்குள் பெருக்கி அவர்களுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும். இப்படிப் பெருகி வந்தால் அந்த நோயோ வேதனையோ நமக்குள் வளராது.

இதை எல்லாம் நாம் பழகிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது…!

begging and praying

மனிதப் பிறவியின் உண்மையான வளர்ச்சி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால் மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால் நாம் எந்த சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு. ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.
3.இதை யாரும் மறுக்க முடியாது…!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”

சத்ரிய தர்மம்

நாம் நுகரும் உணர்வுகளே நம்மை ஆள்கிறது. ஒரு கக்கரவர்த்தி தன் ஆசைக்குகந்ததைத் தான் செயல்படுத்த விரும்புவான். ஒரு நாட்டின் மீது படையெடுக்க வேண்டாம்.. தனக்குக் கீழ் இருப்பவன் சொன்னால் அதை ஏற்க மாட்டான்.

 

எவன் அதைச் சொன்னானோ அவனை அகற்ற வேண்டும் என்று தான் ஆணையிடுவான். ஆக மொத்தம் சத்ரிய தர்மம் என்றால் மற்றதை அடக்கி ஆட்சி புரியும் நிலையே வருகிறது.

 

நம் உயிரும் பத்தாவது நிலையை அடையக்கூடிய தகுதி பெற்றது தான். தசரதச் சக்கரவர்த்தி என்று இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள்.

 

இருந்தாலும் நமக்குள் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் அதனதன் நிலைக்கே நம்மை ஆளத் தொடங்கினால் தீமைகளே விளைந்து விடும். அதை நாம் மாற்றிடல் வேண்டும் அல்லவா…!

 

ஆஸ்த்மா நோய் எப்படி வருகிறது…?

உடல் உறுப்புகள் எப்படிப் பாழாகின்றது…?

பரம்பைரை நோயை மாற்றி ஒளியான பரம்பரையாக எப்படி உருவாக்குவது…?

டி.பி. கேன்சர் நோயை நீக்கும் வழி 

Self Trust

மறைக்கப்பட்ட… மறைந்த உண்மைகளை… வெளிப்படுத்தினாலும் இன்று ஏற்றுக் கொள்வாரில்லை…!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் தோன்றிய அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளை எடுத்தாலும் உயிரணுவாகத் தோன்றிய பின் இந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது. மற்றதைக் கருக்கி விடுகின்றது.

நட்சத்திரங்கள் தன் உணர்வின் அலைகள் வரப்படும் போழுது மின் கதிர்களாக வரும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ இதைப் போல் தான் இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.
1.உயிரணுவாகத் தோன்றி மனிதனாக ஆன பின்
2.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக ஆன பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது,

அதன் உணர்வை நுகர்ந்தவர்கள் அனைவரும் இந்த உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்கின்றார்கள். ஆறாவது அறிவு கொண்டவன் ஏழாவது ஒளி என்ற நிலையை அடைந்தால் சப்தரிஷியாகின்றது,

சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு அந்தச் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்துடன் இயங்குகிறது. இது எல்லாம் மகாபாரதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
1.காலத்தால் இதை எல்லாம் மறைத்து விட்டனர்.
2.இந்த உண்மைகளை எல்லாம் மறந்தே போய்விட்டோம்.

அரசர்கள் தனக்குத் தெரிந்த இரகசியம் மற்றவருக்குத் தெரியக் கூடாது…! என்ற நிலையில் வேதங்களில் மாற்றப்பட்டு விட்டது.

இந்த உண்மையின் இயக்கங்களை மறைக்கப்பட்டு மறைந்த உணர்வுகளை நாம் எடுத்து உண்மைகளை நாம் தேடிக் கொண்டேயிருக்கின்றோம்… இன்னும் கிடைத்தபாடில்லை.

ஆனால் இப்பொழுது நீங்கள் தேடிக் கொள்ள வேண்டாம்..!

1.உங்கள் உடலுக்குள்ளேயே எல்லாச் சக்திகளும் உண்டு…!
2.இதை நீங்கள் எப்படி மாற்ற வேண்டும்…? என்று யாம் சொன்னாலும்
3.இப்பொழுது இதை ஏற்றுக் கொள்வாரில்லை.
4.ஏற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருக்கின்றது.

அந்த அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை அந்த இயக்கச் சக்தியை இந்தத் துருவ தியானத்தில் உங்களுக்குள் உருவாக்கச் செய்து அதன் வழியில் இயங்கிப் பேரொளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்.

உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒளிமயமாக மாறி அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே நாம் இணைந்து வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.

ஆகவே இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்…!

இந்த உணர்வினை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நாம் இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்து உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள்.

இந்த மனித வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ பகைமை உணர்வோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறவேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.

1.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைக் கேட்டறிந்தாலும்
2.அந்த அருள் உணர்வுகள் அதனுடன் கலக்கப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்து
3.நம் உடலில் நுகர்ந்த உணர்வுகளை ஒளியான அணுத் தன்மையாக மாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கு இந்தத் துருவ தியானத்தையே ஏற்படுத்துகின்றோம்.

ஏதோ துருவ தியானம் என்றால் நீங்கள் இலேசாக நினைக்கின்றீர்கள். ஏனென்றால் இந்த உடல் நீடித்த நாள் இல்லை… இருக்கப் போவதில்லை…! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதற்குள் அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழும் தகுதியைப் பெறுங்கள். எமது அருளாசிகள்.

human family tree

“இக்காலத்தில் பிறந்த நிலை… எக்காலத்தில் பெற்ற நிலையோ…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

முந்தைய பாடங்களில் “அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப…” உடலில் அமிலங்கள் வளர்கின்றன என்று உணர்த்தியுள்ளேன்.

இவ்வெண்ண நிலையில்
1.அதிகப்படியான குண நிலை கொண்டு அதே குண எண்ணத்தைக் கொண்ட உடலை விட்டுப் பிரிந்த ஜீவ ஆத்மாக்களும்
2.இன்னும் தன் மகன்… தன் மகள்… என்ற குடும்பப் பாசத்தில் இருந்து பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களும்…
3.முந்தைய காலங்களில் பல ஜென்மங்களாக விட்ட குறையிலிருக்கும் உயிராத்மாக்களும்
4.ஒரு தாயின் கருவில் தான் பிறக்க வேண்டும் என்ற பிறப்புத் தொடரில்
5.ஆண் பெண் (உடலுடன் இருப்பவர்கள்) இரு பாலரின் பருவ மாற்ற உடல் வளர்ச்சி ஏற்படும் காலம் தொட்டே
6.அவர்களின் சுவாச அலையுடன் “இவ்வாவிகளின் ஈர்ப்பு” அவ்வுடலுடன் ஏறிக் கொள்கிறது.

“பருவம் எய்திய பெண்களை” நம் முன்னோர்கள் அதிகமாக வெளியில் செல்லாமல் வைத்திருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்…!

ஏனென்றால்… “தன் மண வாழ்க்கையில் தோல்வி கண்ட ஆவிகள்” தன் எண்ணத்தை ஈடேற்ற அதே வயதுக்குகந்த அப்பருவ நிலை கொண்டோரின் உடலில் ஏறிக் கொள்வதற்குச் “சந்தர்ப்பம்” எதிர் நோக்கிப் பல நிலைகளைச் செய்கிறது.

இதன் சக்தியின் நிலை சூரியன் ஒளி அலை அதிகமாகப் பாயும் நேரத்தைக் கொண்டு உச்சி வெயிலில்… இதன் செயல் நடக்கும்.

அதுவும் அல்லாமல் இந்த ஆவிகள் மற்ற இடங்களில் சுற்றிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் நீர் நிலைகள் உள்ள இடங்களில் தான் அதனின் சுழற்சி அதிகப்பட்டிருக்கும்.

“ஜீவனுக்கு வரவேண்டும்…!” என்ற ஆசையிருப்பதனால் தன் உயிரணுவுடன் கூடிய ஆத்ம நிலை சிதறிவிடாமல் இருக்க… நீரிலிருந்து சூரிய ஒளி பட்டு அதிகமாக அவ்வொளி அலை உள்ள இடங்களில் இருந்தால் இந்த ஆவிகளுக்கு அதனுடைய ஆத்ம அமிலம் சிதறுபடாமல் காத்திருக்க முடியும்.
1.முன்னோர்களை நாம் வணங்க…
2.ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…? என்பதன் பொருள் புரிந்ததா…?

இப்படிப் பலவாக உள்ள ஆத்ம உயிரும் (ஆவிகள்) ஜீவ உடல் கொண்ட ஆத்ம உயிருமான மனிதர்களின் நிலையும் கலந்து வாழ்வதனால் “தன் பிறப்பின் ஆசைக்காக…” பிறப்பெடுக்கப் பல உடல்களில் முன் கூட்டியே இந்த ஆவி ஆத்மாக்கள் ஏறிக் கொள்கின்றன.

ஏறிக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் அந்த உடலிலிருந்து தன் சாதகக நிலைக்காக அந்த மனிதனின் எண்ணத்தையே இந்த ஆவி ஆத்மாக்கள் இயக்கிச் செயல் புரிகின்றன.

இப்படி உள்ள ஆவி ஆத்மாக்கள் தான் பிறப்பில் வரும் நிலையில் சிலருக்கு ஒன்றுக்கு இரண்டாகவும் பலவாகவும் கருவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் மிருகத்தின் சுவாசத்திற்கு மிருக உடலில் பல உயிராத்மாக்கள் ஏறிவிடுவதனால் ஒரே சூலில் பல குட்டிகளை ஈணுகிறது.

அதே சமயத்தில் மிருகங்களிலேயே ஒரு நிலை கொண்ட சாந்த குணமுள்ள சில பிராணிகளுக்கு ஒரு சூலில் ஒரு கன்று ஈணும் நிலை வழி உள்ளது.

இந்தப் பிறப்பில் நடைபெறும் இச்செயல்களும்… “எண்ணத்திலிருந்து தான் வழித் தொடர் பெற்று…!” அதனதன் இன நிலையின் அமில குணம் தொட்டுப் பிறப்பிற்கு வருகின்றது.

ஆனால் இதன் தன்மையில் உடலில் ஏறிய அத்தனை உயிராத்மாக்களுமே கடைசியில் பிறப்பிற்கு வர முடியாமல்
1.அந்த உடலிலிருந்து ஆவி பிரிந்த பிறகு அதற்கும் விடுதலை கிடைத்து
2.மீண்டும் தன் பிறப்புக்குகந்த இடம் எடுத்து வருவதற்குள்
3.”பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன…” இந்த உடலை விட்ட ஆவி ஆத்மாக்களுக்கு…!

இந்த ஆவி ஆத்மாக்களின் வழித் தொடரில் தான் பிறப்பு வருகிறதா என்ற வினா எழும்பலாம். ஒவ்வொன்றின் நிலை மனிதனிலேயே பலவாக வருகின்றது.

ஆகவே… இப்பொழுது உடலுடன் இருக்கும் நாம்
1.இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி
2.இதிலிருந்தே மெய் ஒளி காணும் மெய் ஒளி பெறும் நிலைக்கு நம் எண்ணத்தை உயர்த்தி
3.சித்தர்களுடனும் ஞானிகளுடன் இணைந்து வாழும் உன்னத நிலையைப் பெறுதல் வேண்டும்.

நல்லவரா கெட்டவரா என்று அடுத்தவரை உற்றுப் பார்க்கலாமா…?

 

தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழக நேர்கிறது. நல்லவரா கெட்டவரா என்று பார்க்கும் சந்தர்ப்பமும் உருவாகிறது. இருந்தாலும் அந்த உணர்வை அதிகமாக வளர்க்கத் தொடங்கினால் அவர்களுக்குள் எந்தத் தீமை இயக்குகிறதோ அது நமக்குள்ளும் இயக்கத் தொடங்கும்.

 

ஜோதிடம் பார்ப்பவர்களும் இதை வைத்துத் தான் அடுத்தவர் உணர்வைக் கவர்ந்து நடந்தவைகளை எல்லாம் சொல்வார்கள் ஆனால் நமக்கு அது தேவையில்லை.

 

தீமையை நீக்கும் சக்தி தான் நமக்குத் தேவை. மற்றவர்களிடம் இருக்கும் குற்றங்களை அறிவதற்குப் பதில் அவர்கள் அதிலிருந்து விடுபடும் சக்தியை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் அந்தத் தீமைகள் வரவே வராது.

 

தீமைகளையோ குற்றங்களையோ குறைகளையோ அறிந்து விலகிச் செல்லலாம். அதை வளர்க்கவே கூடாது. நல்லதாக வேண்டும் என்று உடனே அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றவேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்வதால் கிடைக்கும் பேறுகள்

அகஸ்தியன் கண்டுணர்ந்த நட்சத்திரத்தின் ஆற்றல்கள்

அகஸ்தியன் நுகர்ந்த பச்சிலை வாசனைகளும் மலர்களின் மணங்களும் கனிகளின் வாசனைகளையும் நுகரும் பயிற்சி

Kundalini yoga

ஆக்கினை என்றால் என்ன…?

மூலாதாரம் என்றால் நமக்குள் வரும் (நாம் சுவாசிக்கும்) இந்த உணர்வின் தன்மை எலும்பும்… இரத்தங்களும்… நரம்பு மண்டலமும்.. இந்த மூன்றும் சேர்த்து அங்கே அணுத் தன்மை ஜீவன் பெறச் செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து “விந்துடன் கலக்கும்…” ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
1.இது தான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது…!
2.அங்கே உயிரணுக்கள் தோற்றுவிக்கும் நிலைகள் வருகிறது என்றால்
3.இது வைத்தியரீதியில் அகஸ்தியன் கண்டது.

ஆக்கினை என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ இந்த உயிரின் தன்மை அங்கே ஆன பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது. இதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டால் பரவாயில்லை.

ஆக்கினை என்றால் நம் உணர்வின் தன்மை இதிலிருந்து (உயிரிலிருந்து) தான் ஆணையிடுகின்றது. இங்கே மூலாதாரத்தில் மாற்றுகின்றது என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கொண்டு வரும் பொழுது அவர்கள் வித்தியாசமான நிலைகளில் கீழிருந்து என்று மாற்றிக் கொண்டு போகிறார்கள்.

1.மூலாதாரம் என்றால் நம் உயிர் மூலம்.
2.நாம் நுகரும் உணர்வுகளே ஆதாரம்.
3.ஆக எந்த உணர்வின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான்
4.இந்த உணர்வுகள் இயக்குகிறது என்று சாஸ்திரங்களும் வேதங்களும் கூறும் நிலைகள்.

இதிலே கண்ணன் மூலாதாரத்தைப் பற்றிக் கூறுகின்றான் என்று சொல்வார்கள். அவன் கூறிய மூலாதாரம் வேறு..! நுகர்ந்த உணர்வின் தன்மை எதனை.. எப்படி இயக்குகிறது…? என்பதை
1.எண்ணம் கொண்டு இந்தக் கண்கள் உண்டானது
2.கண்கள் கொண்டு எண்ணங்கள் உண்டானது
3.இப்படி ஒன்றுடன் ஒன்று எப்படி இணைந்தது என்று கீதையிலே இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உணர்வுகளை இவர்கள் வேறு விதமாக அவரவர்களுக்குத் தக்கவாறு மாறி “குண்டலினி யோகா… இராஜயோகா…” என்று பேர்களை மாற்றிக் கொண்டு ஆசனத்தை எடுத்துக் கொண்டாலும் இப்படிப் பல நிலைகளைக் கொண்டு வருகின்றனர்.

இதிலே வேதங்களில் மந்திரங்கள் கூறப்பட்டிருக்கும். மறைமுகமான மந்திரங்களை இவர்கள் சொல்லி விட்டால் இன்னொரு உடலில் பெற்ற உணர்வுகள் இவருக்குள் பதிந்து இந்த மந்திரத்தின் உணர்வும் அதே நிலைக்குப் பதிவு செய்தால் அதே உணர்வு கொண்டு அங்கே இயக்கும்.

ஏனென்றால்…
1.மந்திரங்கள் என்பது மனிதன் உணர்வை மீண்டும் தனக்குள் கவர்வது என்று பொருள்.
2.ஒரு மனிதன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அதை அடக்கித் தனக்குள் கவர்ந்து கொள்வது என்பது அதர்வண வேதம்.

கோவில்களிலும் மற்றவைகளிலும் யாகங்கள் செய்வார்கள். அங்கே பல புகை மண்டலங்களை எழுப்பி அவன் சொல்லும் சொல்களை நாம் கூர்ந்து கவனிப்போம். ஆனால் கல்லுக்குச் சக்தி ஏற்றுவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நாம் கேட்டுணர்ந்து… நம் செவிகளில் பட்டு… அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து… நமக்குள் ஒரு அணுத் தன்மையாக ஆகும் நிலையைக் கொண்டு வருகின்றனர்.

ஆகவே அவன் சொல்லும் உணர்வை நாம் அதிகமாகப் பெருக்கப்படும் பொழுது இந்த அணுக்களின் தன்மை வந்துவிடுகின்றது.
1.இப்படித்தான் அதர்வண வேதத்தில் ஒரு மனிதனின் உணர்வை மயக்கி அதாவது வசியம் செய்வார்கள்.
2.அடுத்து அந்த மனிதன் இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் கைவல்யம்.
3.பின் இந்த உணர்வின் தன்மை சொல்லாக வெளியிடப்படும் பொழுது ஏவல்..!

இப்படித்தான் மூலாதாரத்தில் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தொட்டவுடனே இதை ஏவல் பண்ணிவிடுவார்கள். நாம் கூர்ந்து கவனித்து அதன் மேல் நாட்டத்தைச் செலுத்தும் பொழுது செய்து விடுகின்றனர்.

ஆனால் யாம் இப்பொழுது இங்கே சொல்லப்படுவது உங்கள் நினைவு அனைத்துமே இயற்கையாக விளையும் தன்மைகளில் அங்கே சென்றடைகின்றது.
1.அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மை அங்கே (உயிரிலே) ஆக்கினையாக மாறி
2.உடலுக்குள்அது கருத்தன்மை அடைகின்றது.

அந்த ஒளியின் உணர்வாக உயிர் எப்படி ஆனதோ அந்த உணர்வின் தன்மை பெறுவதற்காக வேண்டி இதைச் செய்கிறோம். ஏனென்றால் உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கிறேன்.

அதிலிருந்து வரும் உணர்வுகள் ஒன்றி வரும் இந்த நேரத்தில் அதன் உணர்வுகள் அந்த அகஸ்தியன் எப்படித் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானானோ அதன் உணர்வை உங்களைப் பெறச் செய்வதற்கே உங்கள் நினைவாற்றலை இங்கே பரவப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டியவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவாக மாறுகின்றது.
2.பின் அந்த நுகர்ந்த உணர்வுகள் அணுத் தன்மை அடைகின்றது.

இந்த அணுத் தன்மை உங்கள் உடல்களில் பெருகி விட்டால் உங்கள் ஆன்மாவில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகுகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகிவிட்டால் பகைமை என்ற நிலைகளைத் தடுத்து நிறுத்தும்.

இந்த உடலுக்குப் பின் ஏகாந்த நிலை கொண்டு… அண்டத்திலே என்றுமே ஒளியின் சுடராக.. “அழியாத நிலைகளில் வாழத் தொடங்கும்…!

Spiritual Realities

முற்றும் துறந்தவன் முனிவன் என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற் பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முன்னோர்களை விண் செலுத்தும் தியானப் பயிற்சியும் விளக்கமும்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் சப்தரிஷி மண்டலத்தின் அருள் சக்தியையும் அதிகாலை துருவ தியானத்தில் வலுவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பின் நம் முன்னோர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

 

அவர்கள் பிற மனித உடலில் இருந்தாலும் அங்கிருந்து வெளியே வந்தவுடன் முன்னோர்கள் விபத்தில் இறந்திருந்தாலும் தற்கொலை செய்திருந்தாலும் கூட அவர்களை விண் செலுத்த முடியும். குடும்பத்தில் வரும் பரம்பரை நோயை அறவே அகற்ற முடியும். “முழுமையான விளக்கம்…”

பொருளறிந்து செயல்படும் சிந்தித்துச் செயல்படும் அருள் வழி

தீமைகளை வென்றிடும் சூட்சமங்களை அறிந்து கொண்டால் உணர்வுகளை ஒளியாக்கிட முடியும்

மனிதன் இராமலிங்கமாக மாறும் வழி

Divine blessings

ஞானத்தின் சக்திகளை யாம் உங்களுக்குள் எப்படித் தொட்டுக் காட்டுகிறோம்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஒரு பயந்தவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் என்ன ஆகும்…? அதாவது இந்த இடத்தில் தான் கோரமான விபத்து ஆனது… அதை நான் நேரடியாகப் பார்த்தேன்… பயந்து விட்டேன்…! என்று அவர் சொன்னால் போதும்.

நீங்கள் அந்த இடத்திற்குப் போனால் தன்னாலே அந்தப் பய உணர்வுகள் தூண்டும். அந்த உணர்வு வந்தவுடனே உங்களை அறியமலே கிடு..கிடு…கிடு…! என்று நடுங்கச் செய்யும்.

இந்த உணர்வுகள் இயங்குவதைப் போல் தான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றேன். ஏனென்றால்
1.குருநாதர் எனக்குத் தெரியாமல் தான்
2.எனக்குள் (ஞானகுரு) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அறிமுகப்படுத்தினார்
3.அதைப் போல் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சகதிகளை “நீங்களும் பெறவேண்டும்…” என்ற ஆசையில்
4.தொடர்ந்து இதைக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆக… இனம் இனத்தைத் தான் பெருக்கும். அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளிலே எல்லோரும் பெறவேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகையினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்கு ஊட்டிய அருள் உணர்வுகளை எல்லாம் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் ஒன்றாக இணைய வேண்டும் என்று
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரை ஈசனாக மதித்து
2.உங்களுக்குள்… உங்கள் உணர்வுக்குள் தொட்டுக் காட்டுகின்றோம்.

இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் சொல்வார்கள்…. தன் ஆசையின் நிலை கொண்டு என்ன செய்கிறார்கள்…? இங்கே “தட்டி” அதை எண்ணியவுடன் அவர்கள் உணர்வுகள் எல்லாம் இங்கே வந்துவிடும்.

அந்த ஆசையின் உணர்வுகள் வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள். அந்த மந்திரத்தின் உணர்வுகள் வந்த பின்
1.இங்கே பார் வந்துவிட்டது… என்று
2.ஆக்கினையைத் தொடு…! என்று காட்டுவார்கள்.

அவர் ஆசையின் உணர்வுகள் இந்த உடலிலும் இயக்கும். இதே போல் சில மனிதரின் உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும். தொட்டவுடன் அவர்களுக்குக் “கிர்…ர்ர்ர்…!” என்று வரும்.

இபப்டித் தொட்டுக் காட்டிவிட்டால் அவர்களுக்கு அந்த உணர்வே தான் பழக்கம் வரும். “கிர்…ர்ர்ர்…!” என்று நெற்றி வலிக்க ஆரம்பித்துவிடும். பல நிலைகள் எல்லாம் ஆரம்பித்துவிடும். இது அல்ல..!

சாதாரணமாக ஒரு சிறிய பையனைத் தொட்டு “உனக்குள் இப்பொழுது மின்சாரம் பாய்கிறதா பார்…!” என்றால் அந்த உடலில் இருப்பதெல்லாம் இங்கே வரும்.

இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் நிலையும் ஆகும். அதைப் போன்ற நிலைகளில் எல்லாம் யாரும் சிக்காதீர்கள்…!

ஆனால் நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காண்பிப்பது என்பது எப்படி…?

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் அந்த உணர்வுகளை இணைக்கும் நிலையாக
1.இந்த உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது (படிக்கும் போது)
2.அது எப்படி ஆனது என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் உடல் அணுக்கள் அனைத்துக்கும் இது தொட்டுக் காட்டுவதாகும்.

நான் பேசுவது இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாய்கிறது. அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “உங்கள் எண்ணத்தாலேயே…” நீங்கள் அந்தத் துருவ நடசத்திரத்தின் அருள் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை நீங்கள் எண்ணி வளர்க்க வளர்க்க உங்களுக்குள் பேரொளியாக மாறும். நீங்களே அதை உணர முடியும்,

Inner god

கடவுளைப் பார்க்க முடியுமா…? உணர முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான்
2.அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
3.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

விதியின் இயக்கங்களைப் பற்றி அறிய குருநாதர் கொடுத்த நேரடி அனுபவம்

என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது

பிள்ளையைச் சுமக்கும் தாயைப் போல் ஞானத்தைச் சுமந்து ஞானக் குழந்தைகளை நமக்குள் உருவாக்குவோம்

agastyan and lightning

“மின்னல்களை எல்லாம் ஆனந்தமான நிலைகளில் கவர்ந்து…” உயிரைப் போல ஒளியாக ஆக்கித் துருவ நட்சத்திரமானவன் தான் அகஸ்தியன்..!

நம் உயிர் ஒரு தனி நட்சத்திரம் அல்ல…!

ஜோதிடம் பார்ப்பவர்கள்… உதாரணமாக நீ கார்த்திகை நட்சத்திரக்காரர்…! என்று “ஒரு” நட்சத்திரத்தைச் சொல்வார்கள். அது பிழை.

ரேவதி நட்சத்திரத்துடன் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ஆண் பெண் என்ற நிலைகளில் கலந்தால் தான் உயிரணு தனக்குள் ஒன்றை நுகர்ந்து உருவாக்க முடியும்.

நட்சத்திரங்கள் ஆண் பெண் என்று ஒன்றுடன் ஒன்று மோதித் துகள்களாக மாறும் பொழுது நம் பூமிக்குள் அவைகள் வரும் பொழுது அதிலே
1.ஆண் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் பாறைகள் அங்கே ஜாஸ்தி “வலுப் பெற்றதாக…!” இருக்கும்.
2.பெண் பால் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் அந்தப் பாறை அங்கே வேகமாக வளரும்… அது “தன் இனத்தைப் பெருக்கும்…!”

இதைப் போல் தான் செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்று உண்டு. ஆண் செடிகள் இல்லை என்றால் பெண் செடிகளில் இராசி பலன் இல்லை.

நெற் பயிர்களில் பார்த்தோம் என்றால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக இருந்தால் அங்கே பலன் இருக்காது… நல்ல மகசூல் காண முடியாது.

மரங்களிலும் அதே போல் தான். பனை மரங்களிலும் ஆண் பெண் என்று உண்டு. பப்பாளி மரத்திலும் ஆண் பெண் உண்டு. ஆண் பப்பாளி மரம் இல்லை என்றால் பெண் பப்பாளியில் கருவுறாது… பலன் கிடைக்காது.

ஆகவே இதைப் போல் ஆண் பெண் என்ற நிலையில் தான் எல்லாமே வருகின்றது. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தவன் அகஸ்தியன்.

1.கணவனும் மனைவி இருவரும் தனித்து இருந்தாலும் ஒன்றாக இணைக்கும் பருவம்
2.மனிதனான பின் இதைச் செயல்படுத்த முடியும் என்று உணர்ந்தவன் அகஸ்தியன்.

மற்ற மிருகங்கள் தன்னத் தப்பி வாழத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்துப் பரிணாம வளர்ச்சியில் வருகின்றது,

மனிதனாக ஆனபின் கணவன் மனைவி இரண்டு உயிரின் நட்சத்திரங்களும் வேறு வேறு ஆக இருந்தாலும்… இந்த நட்சத்திரங்கள் சேர்க்கப்படும் பொழுது ஒரு உருப்பெறும் தன்மை வருகின்றது.

ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்திற்கு ரேவதி நட்சத்திரம் என்ற பெண் பால் நட்சத்திரம் இருந்தாலும் இதே மாதிரிப் பெண்களுக்கு ஆண் பால் நட்சத்திரத்தின் உணர்வும்
1.இப்படி நான்கு நிலை வரப்படும் பொழுது தான் பிரம்மம் என்ற நிலையே உருவாகின்றது.
2.இந்த நான்கு நட்சத்திரங்களும் இரண்டு உயிருடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.எதைக் கவர்ந்தனரோ அந்த ஒளியின் கற்றையாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்த நிலைகளில் தான் நட்சத்திரங்களின் விஷத் தன்மைகளை முறிக்கும் தன்மை பெற்ற அகஸ்தியன்
1.மின்னல்களைக் கண்ட பின் ஆனந்தமான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்டான்
2.அந்த உணர்வின் தன்மையை எடுத்து உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் மாற்றிக் கொண்டான்
3.அதாவது உயிரைப் போலவே (நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளாக) மாற்றினான்.

இதை வைத்துத் தான் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) என்னிடம் சொன்னார். ஏய்.. மின்னல் பாய்வதைப் பாருடா…! என்பார். அப்பொழுது எங்கள் இரண்டு பேருக்கும் சண்டை வரும்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்க்கும் பொழுது என் கண்கள் போனால் யார் சாமி கொடுக்கிறது..? நாம் பிள்ளை குட்டிக்காரன்..! என்பேன்.

அவர் என்ன சொல்வார்…? நான் சொல்வதை எல்லாம் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…!

சாமி… நான் கண் இல்லாமல் போனால் என்ன செய்வேன்…? என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும்.

அந்த மின்னலின் இயக்கங்கள் வரப்படும் பொழுது அந்தத் துகள் என்ன ஆகின்றது..?
1.நான் இருக்கிறேன் அல்லவா…
2.நான் உன்னைத் தொடுகிறேன் அல்லவா…! என்பார் குருநாதர்.

அதாவது.. அவர் கையால் என்னைத் தொட்டு எர்த் செய்து (ELECTRICAL WIRE EARTH போல) “இப்பொழுது மின்னலைப் பாருடா…!” என்கிறார் குருநாதர்.

அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் இது எந்த நட்சத்திரத்திலிருந்து வந்தது…? இது எதனுடன் மோதும் பொழுது இந்த மின் கதிர்கள் மாறுகிறது எப்படி என்பதையெல்லாம் காட்டுகின்றார்.

அதற்குப் பின் தான் நான் துணிந்து பார்க்க ஆரம்பித்தேன்…!

குருநாதர் என்னைத் தொட்டுக் காண்பித்தது போல் தான் அந்த உணர்வுகளை எல்லாம் உங்கள் எல்லோரிடமும் உணர்வால் தொட்டுக் காண்பிக்கின்றேன்.

இந்த உணர்வுகள் தொடும் பொழுது உங்கள் உடலுக்குள் என்ன செய்கிறது…? ஊடுருவுகிறது…! ஒளியாக மாற்றும் பருவம் பெறுகின்றீர்கள்,
1.நீங்களும் அந்த உணர்வினைக் கவர்ந்து ஒவ்வொரு அணுக்களையும்
2.இந்த உயிரைப் போல ஆகும் அந்தத் திறன் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கிறேன்.

 

eswarapattaya-namaha

ஞானத்தில் வளர்ச்சி பெற்ற மனித உயிரான்மாக்களின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:-
தூளியில் குழந்தையைப் போட்டுத் தாலாட்டித் தாய் தூங்க வைக்கின்றாள். அந்தக் குழந்தை இன்பமாகத் தாயின் தாலாட்டுடன் மகிழ்ந்து உறங்குகிறது நிம்மதியாக…!

தாய் தன் குழந்தையை அன்பாகத் தாலாட்டி உறங்க வைத்தாலும் அந்தத் தூளி உறுதியாக இருக்கிறதா…? அதில் கட்டியுள்ள துணி கெட்டியாக இருக்கின்றதா,,,? குழந்தையின் மேல் பூச்சி புழுக்கள் விழாமல் உள்ளதா…? என்றெல்லாம் பல தற்காப்புகளைப் பார்த்துத்தான்… அந்தக் குழந்தையைத் தாலாட்டும் இன்ப நிலையில் மகிழ்ந்து… குழந்தையின் நிம்மதியான உறக்கத்திற்கு உகந்த பாதுகாப்பைச் செய்கிறாள் அந்தத் தாய்.

இதிலிருந்து எதனைப் புரிந்து கொண்டீர்கள்..?

இன்று அந்தக் குழந்தைக்குத் தாயாகத் தன் சுயநலத்தை மட்டும் எண்ணாது அந்தக் குழந்தையைப் பேணிக் காத்து அதிலே தன் நிறைவைக் காணும் தாய்
1.அதே குழந்தையை வளர்த்து…
2.அது ஒரு குழந்தையை ஈன்று பேணி வளர்க்கும் முறைக்கு
3.அத்தாயே அக்குழந்தையை வழி நடத்திச் செல்கிறாள்.

இதன் தொடர் வழிக் காலங்கள் உருண்டு கொண்டே வருவதைப் போன்று
1.நம் சப்தரிஷிகளால்… அவர்கள் பெற்றெடுத்த உயர் ஞானக் குழந்தைகளை
2.அவர்களின் வழித் தொடர் ஞானங்கள் வழி நடந்தே செயல் கொள்ள
3.அவர்கள் செயல் உலகெங்கும் வழிபட்டுக் கொண்டுள்ளது.

இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இன்றுள்ள ஜென்ம நிலை இந்தக் கலியில் கடைசியாக முடிவுற்று இதன் நிலை முற்றுப் பெறாமல் இருக்கத்தான் நம் சப்தரிஷிகளின் செயல் ஞானத் தொடர் இன்று உள்ளது.

தன் ஆத்மக் குழந்தைகளை இந்தப் பூமியின் ஈர்ப்பு அமிலத்துடன் சூட்சமம் கொள்ள அவர்கள் வழிப்படுத்தினால் தான் கலியில் ஞானம் பெருகும்.

1.கலியின் வட்டத்தில்… ஞான ஜெந்துக்கள் ஜீவன் கொண்டு
2.அஜ்ஜீவ சக்தியிலிருந்து எடுக்கும் ஜெகத்தின் ஜோதி சக்தியிலிருந்து தான்
3.எந்தச் சக்தியும்… எந்தச் சக்தி என்பது… எந்த ஒரு வளர்ச்சி பெறும் அமில குணங்களின் மண்டல சக்திகளே வளர முடியும்.

இன்றுள்ள இந்தக் கலியில் வாழும் மக்களின் நலனை உயர்வாக்கி ஞானத்தின் பால் அவர்களின் எண்ண ஒளியைச் செயலாக்குவது உலக வளர்ச்சி மட்டுமல்லாமல்
1.எம்மண்டலங்களையும் வளர வைக்கும் சக்திக்கு
2.மனித ஞான வழியில் வந்த செயல் ஞானம் வேண்டுமப்பா…!

இது நாள் வரை தந்து வந்த பாடத்தின் பொருள் புரிந்ததா…?

இன்றுள்ள நம் பூமியில் உள்ள மனித ஆத்மாக்களுக்கு எந்த நிமிடத்தில் எந்த ஆத்மா பிரிகிறது…! என்பது தெரியாத ஓர் சூழ்நிலை உலகெங்கும் உருவாகி… உலக மாற்றத்திற்கு நாள் நெருங்க நெருங்க மனித ஆத்மாக்களின் எண்ணங்களும் சிதறிவிட்டன…!

சிதறியுள்ள ஆத்மாக்களின் ஜெபத்தின் ஈர்ப்பால் நாமும் பொறுக்கி எடுக்கின்றோம். ஆகவே மண்டல உரு வளர்ச்சிக்கு உரு தாருங்கள்…!

இராமலிங்க அடிகள் சொன்ன தத்துவம்

அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என்ற நிலையில் பிறரை இம்சிக்காத நிலை நான் பெறவேண்டும். தீமையை நான் பார்க்கக் கூடாது தீமைகள் எனக்குள் வரக்கூடாது என்பதே அவருடைய பிரார்த்தனை.

 

வேகா நிலை பெற்றுப் போகாப்புனல் அதாவது மீண்டும் இன்னொரு உடலுக்குள் சென்று பிறக்கக்கூடாது என்றார்.

 

அன்று ஓட்டல் கிடையாது. ஆகவே தர்மசாலையை அமைத்து மக்களுக்கு உணவைக் கொடுத்து ஞானத்தைப் போதிக்கும் நிலையை ஏற்படுத்தினார். அதற்காகத்தான் அன்னமிட்டாரே தவிர அன்னதானம் செய்தால் புண்ணியம் என்று சொல்லவில்லை.

 

மக்களுக்கு மெய் ஞானத்தைக் கொடுப்பதே உண்மையான தர்மம் என்றார்.

 

தாயின் சக்தியைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…? 

 

தாயின் அருளால் தான் நாம் எந்த நல்லதயுமே பெற முடியும் 

 anger of nature

“சூறாவளி.. சுழிக்காற்று…” இவைகள் எல்லாம் எதிர்பாராமல் வருவதன் காரணம் என்ன…?

இருபத்தியேழு நட்சத்திரங்களும் அதனதன் துகள்களை (கதிரியக்கங்களை) வெளிப்படுத்துகின்றது. பூமிக்கு வெளிப்புறத்தில் பிரபஞ்சத்தில் பரவினால் அதனதன் உணர்வுகளுக்கொப்பக் கோள்கள் எடுத்துக் கொள்கிறது.

இதைக் கடந்து வரும் துகள்கள் நம் பூமியின் துருவப் பகுதியின் எல்லைக்குள் வந்தால்
1.அதாவது நம் பூமிக்குள் மோதிவிட்டால் அது மின்னலாக மாறுகின்றது.
2.கடும் விஷத் தன்மைகள் பரவுகின்றது.. மின் கதிர்களாக மாறுகின்றது.

இப்படிப் பல மின்னல்கள் கடலிலே தாக்கினால் மணலாக மாறுகின்றது. அதை யுரேனியமாக மாற்றுகின்றான் விஞ்ஞானி. மின்னல் மரத்தில் தாக்கினால் மரங்கள் கருகிவிடுகிறது.

அதே சமயத்தில் மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவி அதீத வேகத்தின் தன்மை கொண்டால் இதைப் போல் எதிர்நிலையான நட்சத்திரங்கள் பூமிக்குள் ஒன்றுக்கொன்று எதிர்மறை ஆகிக் கொதிகலனாக மாறிப் பாறைகளை எல்லாம் உருக்குகின்றது.

உள்ளுக்குள் ஒன்றாகக் குழம்பாக மாற்றுகின்றது. ஆவியாக மாற்றுகின்றது. பூமிக்குள் கடும் உலோகத் தன்மையாக மாற்றுகின்றது. பல நிலைகள் மாறுகின்றது.

அந்த 27 நட்சத்திரங்களின் துகள்களும் நம் பூமிக்குள் வரும் சமயம் மற்ற நட்சத்திரத்தின் துகள் அதாவது ஒன்று அதிகமாக நம் பூமிக்குள் கவரப்பட்டு இதே மாதிரி மின்னலாக மாறித் தூசிகளாகப் படர்ந்தால் இதனுடைய அழுத்தம் அதிகமாகிறது.

அதாவது இந்தப் பக்கம் மின்னலாகிறது என்றால் இந்தப் புவியில் அதிர்வுகள் ஆகி இதற்கு எதிர்நிலையான தூசிகள் படர்ந்திருக்கின்ற பக்கம் மோதப்பட்டுப் பளீர்…ர்ர்…! என்று மின்னல் வருவதைப் பார்க்கலாம்.
1.மின்னல் இலேசாக இருந்தால் அதற்குத்தக்க காற்று வேகமாக வரும்.
2.ஆனால் அதிகமான மோதலானால் இந்தக் காற்றழுத்தம் அதிகமாகிச் சூறாவளியாக மாறி
3.மரத்தையும் வீட்டையும் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு ஓடிப் போகும்.

மின்னல்கள் கடலிலே தாக்கினால் மணலாக மாறியதை மனிதன் செயற்கையில் யுரேனியமாகப் பிரித்து அணு உலைகளுக்கும் மற்றதுக்கும் பயன்படுத்துகின்றான்.

அதிலிருந்த கசிவுகள் இங்கே துகள்களாக மாற்றப்படும் பொழுது இதே போல் 27 நட்சத்திரங்களின் ஓட்டங்கள் அங்கே வந்தால் மோதி சுழிக்காற்றாகவும் சூறாவளியாகவும் வரத் தொடங்கும்.

எங்கெங்கே இந்த அணுக் கதிரியக்கங்களின் கசிந்த கசிவுகள் இருக்கின்றதோ அதனுடன் மோதப்படும் பொழுது பெரிய பெரிய கட்டிடங்களைக் கூடத் தூக்கி அபேஷ் செய்து கொண்டு போகிறது. கார் பஸ் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போகிறது.

ஒரு சமயம் என்னை (ஞானகுரு) டெல்லிப் பக்கமாகப் போகச் சொன்னார் குருநாதர். ரோட்டிலே நடந்து வந்து கொண்டிருக்கின்றேன். ரோடு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ஒரு காம்பவுண்டுச் சுவர்.

வந்து கொண்டிருந்த ஒரு கார் என்ன செய்தது என்றால்.. அந்தக் கட்டிடத்தில் நான்காவது மாடி மேல் கிர்..ர்ர்ர்…! என்று சுற்றிக் கொண்டு போய் நிற்கிறது.

ஒரு பஸ் என்ன ஆனது…? நான் நகர்ந்து கொண்டேன். அந்தப் பஸ் என்னைத் தாண்டிக் கொண்டுபோய் காம்பவுண்டுச் சுவருக்கு அந்தப் பக்கம் போட்டுவிட்டது. அங்கே விழுந்து விட்டது.
1.நான் இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.
2.அந்தச் சுழிக் காற்று என் பக்கம் வரவில்லை. ஆனால் எனக்குப் பயமும் வரவில்லை.
3.ஏனென்றால் குருநாதர் அங்கே போய் இதை எல்லாம் பார்க்கச் சொல்லிச் சொன்னதால் பார்க்கிறேன்.
4.எப்படி.. எதனால்… இந்த மாதிரிச் சூழ்நிலைகள் எல்லாம் உருவாகிறது…? என்று காட்டுகிறார்.

ஒரு ஆட்டைப் (ஆடு) பார்த்தோம் என்றால் அதைப் பம்பரம் போல் சுற்ற வைக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.

ஆகவே எதிர் நிலையாகும் பொழுது இயற்கையில் இந்த மாதிரி சீற்றங்கள் ஆகிறது.

27 நட்சத்திரங்கள் தான் இந்தப் பிரபஞ்சத்திற்கே மூலம். 27 நட்சத்திரங்களும் சூரியனாக மாறிவிட்டால் இந்தச் சூரியனுக்கு வேலை இல்லை. 27 நட்சத்திரங்களும் தனித் தனி பிரபஞ்சமாக இப்பொழுது மாறிக் கொண்டுள்ளது.

1.ஆக… நம்முடைய பிரபஞ்சம் முழுமையாக அழியும் தருணம் வந்துவிட்டது.
2.அதற்குள் ஏ.. மனிதா…! நீ அதற்குள் என்ன செய்ய வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் நீ என்னவாக ஆக வேண்டும்..? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார் குருநாதர்.

ஒவ்வொன்றையும் நேரடி அனுபவமாகக் காட்டித் தான் குருநாதர் எனக்குச் சொன்னார். பார்க்கலாம்… அமெரிக்காவில்… சீனாவில்… சூறாவளி என்று…! பத்திரிக்கைகளிலும் டி.வி.யிலும்.

எங்கெங்கெல்லாம் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி செய்கின்றார்களோ அந்த அணுக் கசிவுகளால் சூறாவளி… சுழிக்காற்று எல்லாம் உருவாகும்.

இயற்கையை மனிதன் கைப்பற்றினாலும் அதனின் வீரியங்கள் மீண்டும் இப்படிதான் வரும்…!

இந்தப் பிரபஞ்சத்திலும் இதே போல் இராக்கெட்டுகளையும் செயற்கைக் கோள்களையும் அனுப்பியதால் நம் பிரபஞ்சத்திலும் சூறாவளி உண்டு.

இந்த எதிர்நிலைகள் சூரியனின் ஈர்ப்புக்குள் செல்லும் பொழுது அந்தப் பாதையிலும் சூறாவளிகள் உருவாகிறது. அதனால் பல மாற்றங்களும் திசைகளும் மாறுகிறது.

ஆக மொத்தம் நாம் மனிதனாக வாழும் காலம் மிகவும் குறுகியதே…!

1.இந்தக் காலத்திற்குள் கார்த்திகேயா என்று தெரிந்து கொண்ட அறிவை வைத்து
2.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துப் பதிவாக்கி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆத்ம சுத்தி மூலம் அவ்வப் பொழுது நமக்குள் வலிமையாக்கி
4.நம் ஆன்மாவிலும் உயிரிலும் பரப்பி விட்டால்
5.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும்… “நாம் பிறவி இல்லா நிலை அடைவது திண்ணம்…!”

 

thoughts concentrating

தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சி அதைத் தட்டத் தட்டத் தான் அதனின் தரம் உயர்கிறது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இங்கு வந்து எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.

பள்ளியில் பயிலும் மாணவனுக்கு… அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு… அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்… அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.

அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்…! அந்த உபாத்தியாயர்.

அதைப் போல் ஆண்டவனின்… ஆண்டவன் என்பது…
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.

அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்…” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.

கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்… அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா…!

அதைப் போன்று… இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்…!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு…!

1.தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான் அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ…
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை…!”

Prtecting force Polaris north star

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

உதாரணமாக நம்மிடம் ஒருவர் சண்டையிடுகிறார்… திட்டுகிறார்..! என்றால் அதற்குப் பின் நாம் தியானத்தில் அமர்ந்தால் “அந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்…!” அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அதைச் சுவாசியுங்கள்.

இந்த உணர்வுகளைச் சுவாசித்துக் கண்களை மூடுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்தத் தீமையான உணர்வுகள் உந்தப்பட்டு நாம் தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டுணரும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிடுங்கள்.

அப்பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும். அதாவது எப்படிச் செடிகளுக்கு உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு இவ்வாறு சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாற்றவில்லை என்றால்..
1.அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து..
2.அந்த அணுக்கள் – சண்டையிட்ட அவர் திட்டிய அந்த உணர்ச்சியை உந்தித் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறது.

மேலும் நீங்கள் தியானத்தில் அமர்ந்தாலே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்… இப்படிச் செய்தார்கள்…! என்ற எண்ணங்கள் அதிகமாகி குறையாகப் பேசிய அணுக்கள் அதிகமாகி நம் நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.

1.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம்… மன நோய்… போன்ற நிலைகள் எல்லாம் வரும்.
2.பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
3.ஆக நமக்குள் மனிதன் என்ற ஆறாவது அறிவின் நிலைக்கே எட்டாதபடி நாம் ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போவோம்.

இதை எல்லாம் நாம் மாற்றியமைத்துப் பழக வேண்டும். நம் வாழ்க்கையே இப்படித் தியானமாக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முதலில் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பழகிய பின் அடுத்து மணிக்கணக்கில் உட்கார்ந்து தியானத்தில் நான் சக்தி பெறுவேன் என்றால் அடுத்த கணம் நாம் வாழ்க்கையில் செல்லும் பொழுது முதலில் சொன்ன மாதிரி வரும்.

ஏனென்றால் இன்றைய மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியான செய்திகளையோ பிறர்படும் கஷ்டங்களையோ இப்படி எத்தனையோ நாம் கேட்கிறோம். காணாததற்கு பத்திரிக்கையும் டி.வி.யும் பார்க்கின்றோம்.

அதைப் பார்க்கும் பொழுது அரசியலில் பற்று இருந்தால் இப்படிச் செய்கிறார்கள்..! என்று வெறுப்படைவோம்.

இதை எல்லாம் பேசிக் கலந்து உரையாடினாலும் அடுத்த கணம் இந்த உணர்வுகள் மாறாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நாம் எதைக் கேட்டோமோ அதெல்லாம் நலம் பெறவேண்டும்…
2.நாடு நலம் பெறவேண்டும்…
3.அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…
4.தெளிந்த மனம் பெறவேண்டும்…! என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிறருடைய உணர்வுகள் இப்படி வந்தாலும் நமக்குள் அது வளராது மாற்றியமைத்து இப்படி நல்ல அணுக்களை நாம் பெருக்கலாம்.

அந்த அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணங்கள் வரும் பொழுது இது சிறுத்து விடுகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகி விடுகிறது…! அப்பொழுது அது நமக்குள் அடங்கி வந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் வந்துவிடும். ஒரு விபத்து நடந்து விட்டது…! என்று ஓடி வந்து ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆ…! என்று கேட்டுக் கொண்டே இருப்போம்.

1.இந்த உணர்வுகள் நமக்குள் பட்ட பின்
2.அவர் எந்த வகையில் விபத்தில் சிக்கினார்…! என்று சொன்னாரோ அதே உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டு
3.நாம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தால் ஓரத்தில் போகவிடாமல்
4.நம்மை அறியாமலே நடு ரோட்டுக்கு அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலே இவ்வாறு அழைத்துச் செல்லும். ஆகவே இந்த மாதிரி “விபத்து மற்ற அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட்டால்…” அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தை எண்ணி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்,

அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் அது பெறவேண்டும் என்ற எண்ணங்களை நாம் நமக்குள் அதை உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அதை எல்லாம் நாம் நல்ல குணங்களுடன் பார்க்கும் பொழுது… பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் ஆகி… எப்படி வாழ்வது…? என்ற நம் நிலையாகிப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு அதன் ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் நாம் பற்றற்றதாக மாற்றுகின்றோம். இது ஒரு பழக்கத்திற்கு வந்து… அந்த அணுக்கள் நமக்குள் பெருகி விட்டது என்றால் நம்மை அறியாமலே அந்த நல்ல சொல்கள் வந்துவிடும்.

ஒரு பாடலைப் பாடுகிறோம் என்றால் அது பதிவாகி விட்டது என்றால் அந்தப் பாடல் சீராக வரிசையாக வரும்.

ஆனால் பாடல் முழுவதுமாகப் பாடுகின்றார்கள் என்றாலும் இடைமறித்து ஒரு வரியை மட்டும் தனித்துச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவுக்கு வராது. மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டே வர வேண்டும்.
1.அந்த வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது நமக்குள் அதனின் தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கி விட்டால் நமக்கு அந்த நினைவு வராது.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அதன் அடுத்தடுத்து அடுக்குகளில் வருகின்றது.

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்… தீமைகள் புகாதபடி விழித்திருந்து பழக வேண்டும்…! என்று சொல்வது.

சிவன் இராத்திரி அன்று விழித்திரு…! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்தே இது தான்.

குரு அருள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பிரசாதத்தைக் கொடுக்கின்றேன். அருள் மணங்கள் கமழும். 

எல்லோரும் அந்த அருள் ஞானப் பிரசாதத்தைப் பெறவேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள். 

கோவிலில் போனால் நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் நாம் முறைப்படுத்திடல் வேண்டும். 

எல்லோருக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மற்றவரைத் தள்ளிவிட்டு நாம் மட்டும் அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். 

எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள். அதையே தியானியுங்கள்… தவமாக இருங்கள். 

அப்பொழுது நீங்கள் இருந்த இடத்திலிருந்தே எல்லா ஆற்றலையும் பெறும் தகுதி பெறுவீர்கள். 

hearing excercise

செவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து.. சக்தி வாய்ந்த ஆற்றல்களை நுகர்ந்து… “உடல் நோய்களைப் போக்கும் வழி”

தீமைகள் இருந்தால் நமக்குள் அந்தத் தீமைகள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். ஆகவே பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ துயரங்களையோ பார்த்தோம் என்றால் நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…?

படத்தில் காட்டியபடி உங்கள் காதிலே இப்படிக் கையை வைத்துக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
3.இந்த உணர்வு அனைத்தையும் உங்கள் வாயிலே சொல்லிக் கொண்டேயிருங்கள்.
4.அதாவது இங்கே பாய்ச்சி… உங்கள் செவிக்குள் கொடுத்து உடலுக்குள் உணர்வலைகளைப் பரப்புங்கள்.

நீங்கள் இப்பொழுது உங்கள் காதில் வைத்து இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். அந்த உணர்வலைகள் வரும்.

உங்கள் உடலில் எந்த இடத்தில் வலி இருக்கின்றதோ அங்கே எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

உங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால்… இதே மாதிரி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் எங்கள் இருதயம் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும்…! என்ற இந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதே போல் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒவ்வொரு நிமிடமும்
1.“ஓ…ம் ஓ…ம் ஓ…ம்” என்று இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது (முதலில் சொன்ன மாதிரி)
2.இந்த உணர்வலைகள் நமக்குள் அந்த ஒலி அலைகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்க்கலாம்.

இப்பொழுது இருக்கும் இந்த விஞ்ஞான உலகில் பெரும் தொல்லைகளும் துயரங்களும் வந்து கொண்டிருக்கும் பொழுது
1.உங்கள் உணர்வுக்குள்… உங்கள் பேச்சே… செவிகளைக் கொண்டு இந்த உணர்வுகளை உந்தச் செய்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வின் அணுக்களின் வீரிய சக்தியைப் பெருக்க இது உதவும்.

உடலிலே எந்த வலி வந்தாலும் சரி… உங்கள் உயிரைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி உடலில் வலி இருக்கும் பக்கம் உங்கள் கண்ணின் நினைவை இங்கிருந்து செலுத்தி… அதை “உங்கள் உடலில் அந்த வலி நீங்க வேண்டும்…!” என்று சொல்லுங்கள். வலி குறையும்.

எங்கள் உடலில் உள்ள வாத நீர் பித்த நீர் விஷ நீர் இறங்க வேண்டும் தரையில் இறங்க வேண்டும் எங்கள் உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள். உடலில் உள்ள பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளும் நரம்புத் தளர்ச்சி போன்ற நிலைகளும் குறையும்.

ஏனென்றால்…
1.வெகு தூரம் உங்கள் நினைவுகளை அங்கே துருவ நட்சத்திரத்தில் செலுத்த
2.அந்த உணர்வுகளை நுகர… உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த…
3.அது துரித நிலைகள் கொண்டு இந்தத் தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றியமைக்க முடியும்.

அருள் வாக்குப்படி உங்களுக்குள் இதை இப்படிச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதைச் செய்தால் உங்கள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்து நல்லதாகும்.

ஏனென்றால் இது எல்லாம் வாக்குப் பிரசித்தம் தான்…!

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின் இதைச் செய்தால் அதன் வழி உங்களுக்குள் இந்தத் தீமைகளை அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.

எல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் இதை எடுத்துப் பழகுங்கள்.

world of sages

சப்தரிஷிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

இந்தப் பூயின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்… ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்… “சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…” கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவன்ற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…! அதன் நிலை எப்படி…?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா…? மற்ற மண்டலங்கள் இல்லயா…? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா…? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று…
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண

2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.

இந்த உலக மக்கள் யாரும் தவறு செய்யவில்லை. அறியாத நிலைகளில்… சந்தர்ப்பத்தால் அவர்கள் உயர்ந்த பண்புகள் இழக்கப்பட்டு ஒளி நிலை பெறாதபடி ஆக்கி விடுகிறது.

விஞ்ஞான நிலைகளும் இன்று இழி நிலைக்கே மனிதனை அழைத்துச் செல்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் ஈஸ்வரபட்டர்.

அதைச் செயல்படுத்தும் முன் உன் தாய் தந்தையரின் ஆசியை நீ பெற்று வா என்றார் குரு. அவர்கள் அருளால் தான் நீ அந்த மெய் ஞானத்தின் சக்தியைப் பெற முடியும் என்றார்.

soul and body

இந்த உலகில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்…
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…?

பிம்பப் பொருளை அடைந்தால் நாம் பெறவேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்… மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து.. இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும். “நல்ல நிலை அடையும் வழி இல்லை…!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வ கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன…? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…
1.எப்பொருளை அடைய வேண்டும்…? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.

eye and optic nerve cleaning

சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளும் துன்பங்களும் உடலில் நோயாக உருவாகமல் தடுத்து நிறுத்தும் பயிற்சி

ரோட்டிலே போகிறோம். நம் சந்தர்ப்பம் ஒரு தீமையான உணர்வை உற்றுப் பார்க்க நேர்கிறது…! என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன செய்ய வேண்டும்..?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் என்று உள்ளுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அப்படிப் பாய்ச்சிய இரத்தம் நம் உடல் முழுவதும் படர்கின்றது. எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று முன்னாடியே அந்த வலுவைப் பாய்ச்சி விடுகிறோம்.

அதாவது அந்த முகப்பில் இருக்கக்கூடிய காந்தப் புலன் எப்படி அந்தத் தீமை செய்பவரை உற்றுப் பார்த்து எண்ணினோமோ அவரால் வந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கிறது.

இதன் துணை கொண்டு…
1.அநதத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணப்படும் பொழுது
2.அந்த இரத்தத்தின் வழி எல்லா அணுக்களும் உள்ளுக்குள் அந்த அருள் உணர்வுகள் சாப்பாடாகக் கிடைக்கிறது.

அதாவது… இந்தக் காற்றிலிருந்து செடி கொடிகள் அதனதன் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறதோ இதே மாதிரி நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அந்த இரத்தமாக மாறுவதிலிருந்து… இரத்தத்திலிருந்து தான் சாப்பாடு எடுத்துக் கொள்கிறது.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதே மாதிரி எடுத்து உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி முன்னக்கூடியே (முதலில்) செலுத்திவிட வேண்டும்.

முதலில் சிறிதளவு தான் நாம் பார்த்த அந்தத் தீமை போயிருக்கும்.

ஆனால் யாம் இப்பொழுது சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்த பின் அந்த் இரத்தம் இந்த மாதிரி எல்லா இடங்களுக்கும் போனவுடனே என்ன ஆகிறது…?
1.அந்தச் சிறிதளவு போன தீமையை இங்கேயே தடுத்து விடுகிறோம்…!
2.சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அதே சமயத்தில் நம் கண்ணில் இருக்கக்கூடிய கருவிழியில் இருக்கக்கூடிய அந்த கண்மணி… அந்த கண்ணின் மணியிலிருந்து தான் நாம் பார்க்கும் படங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறோம்.

அதிலே அந்தக் கண் மணிகளிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும். ஏனென்றால்…
1.அந்தக் கருமணி வழிக்கூடித் தான்…
2.கண்ணுடன் சேர்ந்த நரம்பு மண்டலம் வழியாக
3.உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் நாம் பார்த்த… கேட்ட.. நுகர்ந்த… உணர்வுகளைப் பரவச் செய்கிறது.

அந்தக் கண்ணை இணைத்த நரம்பு மண்டலம் வழி உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று செல்கிறது.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படர்கிறது. நல்ல உணர்வுகள் வலிமையாகின்றது. தீமைகள் சிறுத்துவிடுகிறது.

இந்த முறைப்படி எல்லோரும் இதை எடுத்து உடனுக்குடன் தூய்மைப்படுத்தலாம்… இதில் ஒன்றும் சிரமமில்லை…!

திட்டியவனைத் திரும்ப எண்ணுகிறோம்… அடுத்த கணம் அந்தது நமக்குள் வராமல் இப்படித் தடுத்துக் கொள்கிறோம். இதை நீங்கள் செய்து பழக வேண்டும்.

எங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று நினைவைக் கொண்டு வர வேண்டும்.

1.ஆக… ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வினையாகிறது.
2.அந்தத் தீய வினைகள் நமக்குள் சேராதபடி இப்படித் தடுக்க வேண்டும்.
3.தீமைகளைத் தடுத்து அதை நிறுத்திப் பழக வேண்டும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி…!

யாரையும் குறை காண வேண்டாம். அருள் உணர்வைப் பெருக்கினாலே போதும். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பது தேவை இல்லை.

அன்று வியாசர் வெளிப்படுத்திய கருத்துக்களை மந்திர ஒலிகளாக வேதங்களாக மாற்றி விட்டனர்.

ஆதிசங்கரர் கொடுத்த அத்வைதத் தத்துவத்தை ஏற்காத துவைதவாதிகள் அவருக்கு ஏவல் செய்தனர். ஆனால் அதிலிருந்து விடுபட்டார். இதே போல் தான் அப்பருக்கும் ஏவல் செய்தார்கள்.

agastya-rishi-pindam

அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்களையும்… மலர்களின் மணங்களையும்… கனிவர்க்கங்களின் வாசனகளையும்… நுகரும் தியானப் பயிற்சி

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பண்புள்ள மனிதன் அதைப் பார்க்கும் நிலையில் அந்த வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இவனுடைய உணர்வுகளும் இருன்டுவிடுகிறது. 1.அவனைக் காக்க எண்ணுகின்றான் 2.ஆனால் அதே உணர்வு இங்கே இருண்டு விடுகின்றது. 3.அந்த உண்மையை அறிய முடியாத நிலைகளில் இவன் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஊடுருவி விடுகின்றது.

ஆனால் பலருக்கும் இதைப் போல உதவி செய்யும் நிலையில் பிறருடைய துயரங்களை எண்ணி ஏங்கும் பொழுது அவர்கள் படும் துயரமெல்லாம் இங்கே வந்து இவன் சிந்திக்கும் தன்மையும் குறையத் தொடங்குகிறது.

ஏற்கனவே நல்லது செய்திருந்தாலும் அதைச் செய்ய முடியாத நிலைகளில் “எல்லோருக்கும் நல்லது செய்தேன்… என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று சொல்லிக் கொண்டு அவன் நல்லதையே செய்வதையே மறக்கின்றான்.

எதைச் செய்து என்ன புண்ணியம்..? அப்படியே நாசமாகப் போகட்டும்..! அவன் கடைசி உணர்வாக இதை எடுத்துக் கொள்கின்றான்.

ஆகவே இதைப் போன்ற உணர்வு வரப்படும் பொழுது எந்த நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்களோ பிறருடைய வேதனைப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் மடிந்து விடுகின்றது.

பின் அவனைப் போல் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமக்குள் நோயாகும் நிலையும் தவறு செய்பவனாகவும் மாற்றிக் கொண்டே இருக்கும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமல்லவா..!

இதை எல்லாம் மாற்றி அமைத்தவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வை எடுத்து நம் உடலிலே அடிக்கடி பெருக்குதல் வேண்டும்.

கடும நோயாக இருந்தாலும் இப்பொழுது பதிவு செய்த இந்த உணர்வின் வலு கொண்டு இந்தக் காற்றிலுள்ள நல்ல மணத்தை நுகரலாம்.

செடி கொடிகள் எந்த உணர்வின் சத்தைப் பெற்றதோ அந்த உணர்வின் துணை கொண்டு அந்தத் தாய்ச் செடியின் மணத்தைக் காற்றில் கலந்திருப்பதனால் அதிலே விளைந்த வித்து புவியின் துணை கொண்டு அது கவர்ந்து அதே உணர்வுகள் அதே மணம் அதே குணமாக வளர்க்கின்றது.

இதைப் போல… 1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உடலிலே பல பச்சிலை மூலிகைகளை எடுத்து 2.அவன் உடலிலே விளைய வைத்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் படர்ந்துள்ளது 3.அதை எல்லோரும் பெற முடியும்… அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு உங்கள் நினைவைக் கூட்டினால் அகஸ்தியன் பல நோய்களைப் போக்கிய உணர்வை இந்தக் காற்றிலிருந்து நீங்களும் பெற முடியும். 1.அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தால் 2.அதிசயக்கத் தக்க நிலைகளில் உடல் உறுப்புகளை மாற்றமடையச் செய்யும்… 3.அறியாது வந்த நோய்களையும் மாற்றியமைக்கலாம். 4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் ஒளியின் சரீரமும் பெறலாம்.

அதே சமயத்தில் உடலில் சில உபாதைகள் இருக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ண முடியாது போய்விடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் வரும் பொழுது தீய அணுக்களைத் தான் நமக்குள் வளர்க்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட இப்பொழுது அந்த அகஸ்தியனின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… பயிற்சியும் கொடுக்கின்றோம்.

இங்கே சொல்லும் நிலைகளில் நீங்கள் பெற்றதை 1.ஞானகுரு நமக்குச் சொன்ன வழியில் நாம் இதைப் பெற்றோம்… 2.தீமைகளையும் நோய்களையும் நீக்கிடும் அந்த வலிமை பெற்றோம்… 3.அருளைப் பெற்றோம் இருளை நீக்க முடியும்… 4.பிறவியில்லா நிலையை அடைய முடியும்…! என்று உங்கள் ஊக்கமான உணர்வுகளை 5.உங்கள் நண்பர்களிடத்திலேயோ சொந்தபந்தங்களிடத்திலோ அவர்களுக்குள்ளும் பதிவு செய்யுங்கள். 6.அந்த நினைவு அவர்களுக்கும் வரட்டும்… அவர்களும் அந்த உயர்ந்த நிலைகளை பெறட்டும்.

இதை எல்லாம் நீங்கள் பழக வேண்டும். ஏனென்றால் இன்று உலகம் முழுவதுமே விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த விஷத் தன்மைக்குள் மறைந்து தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இருக்கின்றது. அதைப் பிரித்து எடுப்பதற்குத்தான் உங்களுக்கு இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

எத்தனை விதமான உணர்வுகள் இருந்தாலும் ரோஜாப்பூ தன் நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றது. எத்தனை விதமாக இருந்தாலும் கருகப்பிள்ளைச் செடி தான் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப அது காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கருகப்பிள்ளைச் செடியாக மாறுகிறது.

இப்படி ஒவ்வொரு தாவர இனங்களும் அது அது தன் தன் சத்தைப் பெறுவது போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் அருள் உணர்வைப் பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மையைத் தடுக்கும் தன்மை உங்களுக்குள் வரும்.

நீங்கள் இதைப் பழகிக் கொண்டால் உங்கள் ஆன்மாவில் இதைப் பெருக்கப்படும் பொழுது “ரிமோட்…!” உள்ளுக்குள் புகாதபடி செய்யும்.

ஈஸ்வரா…! என்று எண்ணினால் இதன் வழி உள்ளுக்குள் போகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வலுக் கொண்டதாக நிற்கும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். நமக்குள் நல்ல உணர்வை நாம் பெருக்க முடியும்.

கொஞ்ச நாள் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் பெறலாம். இந்த உடல் வாழ்க்கைக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடையலாம்.

இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உங்களுக்கு உபதேசித்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உங்களுக்கு அனுபவரீதியில் கொண்டு வந்தது.

இதை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண்களை விழித்தவுடனே (குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) உங்கள் ஆன்மாவில் உள்ள நாற்றத்தை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே சேர்த்தால் உங்கள் ஆன்மா தூய்மையாகின்றது. நல்ல நறுமணங்களும் மகிழ்ச்சியும் வரும்.

இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்தப் “பச்சிலை மூலிகைகள்” அவனில் விளைந்து அந்த அருள் சக்தி படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அகஸ்தியன் பெற்ற விஷத்தை நீக்கிய அந்தப் “பச்சிலைகளின் மணங்கள்” நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சிறிது நேரம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிருடன் ஒன்றி ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் பெற்ற அவன் அறிந்துணர்ந்த அந்தப் “பச்சிலை மணங்கள்” நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது… 1.அந்தப் பச்சிலையின் மணங்கள் வரும்… 2.உங்களால் நுகர முடியும்… நுகர முடிகிறது என்றால் 3.உங்கள் வாயிலே உமிழ் நீராக மாறும் பொழுது உணர முடியும்…!

அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் நமக்கு முன் படர்ந்துள்ளது. அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்துள்ளோம். அதனின் நினைவு கொண்டு இதனைப் பிரித்து எடுங்கள்.

ரேடியோ டி.வி அலைகள் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ… அதைப் பிரித்து எடுக்கிறது. அதைப் போல் அகஸ்தியனின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ளது.

அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள். அவன் நுகர்ந்த பச்சிலையின் மணங்களை நுகர்ந்து எப்படி இருளை அகற்றினானோ அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்கு மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

1.அகஸ்தியன் கண்டுணர்ந்த பல பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள்… அந்த அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் 2.அகஸ்தியன் தனக்குள் இருளை அகற்றிடும் உணர்வை விளைய வைத்து… அவனின்று வெளிப்பட்ட அந்த உணர்வுகளையும் 3,நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். 4.இப்பொழுது அந்தப் பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும். நுகர்ந்த அந்த மணங்கள் உங்களுக்குள் உமிழ் நீராக மாறும்… வாயிலே அந்தச் சுவைகளை உணரலாம்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு). எல்லோரும் பெற வேண்டும் என்று உங்களுக்குள் அந்த ஆசையைத் தூண்டுகின்றேன்.

நம் பூமியிலே எத்தனையோ வகையான மலர்கள் உண்டு. மனிதர்களின் பிணியைப் போக்கக்கூடிய மலர்களும்… மகிழ்ந்து வாழச் செய்யும் மலர்களும் உண்டு.

அதிலிருந்து வளர்ந்த உணர்வினை நறுமணங்களை சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. ஆகவே அந்த மலர்களின் மணங்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் ஈசனிடம் ஏங்கிக் கண்களை மூடித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு… 1.மல்லிகை மணமோ 2.மனோரஞ்சித மணமோ 3.ரோஜாவின் மணமோ 4.தாமரையின் மணமோ கிடைக்கும்.

மலரைப் போல் மணம் பெறவேண்டும்… அந்த மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கித் தியானியுங்கள். இப்பொழுது… 1.மருக்கொழுந்தின் வாசனையும் சந்தனத்தின் நறுமணமும் கிடைக்கும். 2.அதே சமயத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகவும் 3.அந்தந்த மலரின் சத்தும் சுவையாகக் கிடைக்கும்.

இதை எல்லாம் இந்தக் காற்றிலிருப்பதை நாம் ஈர்க்கும் தன்மை அது கிடைக்கின்றது. இதை எல்லாம் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் 1.அவ்வப்பொழுது நறுமணங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்தால் 2.அந்த நேரத்தில் எல்லாம் உடனே கிடைக்கும்.

சிலருக்குச் சங்கடமும் சலிப்பும் இருந்தால் அவர்களுக்கு இதைத் தடைப்படுத்தும். அதை எல்லாம் மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெறவேண்டும் அந்த மலர்களின் மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதனின் உணர்வை அடிக்கடி பெருக்கிப் பழக வேண்டும். 1.காற்றில் இருப்பதை நாம் நுகர்ந்து 2.நம் உடலிலுள்ள இரத்த நாளங்களிலே கலந்து பழக வேண்டும்.

கனி வகைகளில் வெளிப்பட்ட மணங்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. கனியின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்குள் 1,மாம்பழங்களின் மணமும் 2.கொய்யாவின் மணமும் 3.பலாப்பழத்தின் மணமும் வந்து கொண்டே இருக்கும்.

இந்தக் காற்றிலே பலவிதமான கனிகளின் மணங்கள் படர்ந்துள்ளது. அந்தக் கனிகளின் மணங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். இதன் மூலம் கனிகளின் மணங்களையும் நாம் நுகர முடியும்.

ஏனென்றால் இந்தக் கனி வர்க்கங்களையும் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்தவர்கள் தான் பல நிலைகளில். அதனால் வந்த அணுக்களும் நமக்குள் உண்டு.

அதனின் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது இப்பொழுது மனிதனாக ஆன பின் அந்த உணர்வை நுகர்ந்தறிய முடியும். இந்தப் பிறபஞ்சத்தின் உண்மையையும் உணர முடியும்.. அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அறிய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் காட்டினார். அதன் வழிகளிலேயே தான் உங்களுக்கும் பெறச் செய்கின்றோம்.

North and south pole changes

நம் பூமியின் துருவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும். 1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான் 2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…? 1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல் 2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனல் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது. 1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும் 2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்துவிட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…? 2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…! 3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே..!

ஒரு சமயம் ரிக் வேதம் கற்றுக் கொடுக்கும் வாத்தியார் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவர் குடுமியைப் பிடித்துத் தூக்கி அடிக்கத் தொடங்கினார் ஈஸ்வரபட்டர். 

ஏண்டா தப்புத் தப்பாக வேதத்தைச் சொல்கிறாய் என்று அவரை வாயில் வராத வார்த்தையைச் சொல்லித் திட்டினார். 

பின் ரிக் வேதத்தைச் சுருதி மாறாமல் மேலிருந்து கீழேயும் திருப்பிக் கீழிருந்து மேலேயும் அப்படியே பாடிக் காட்டினார் ஈஸ்வரபட்டர். மேலும் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது என்பதை ஆதியிலிருந்து விளக்கிக் கூறினார். 

அந்த வாத்தியார் அடியை வாங்கிக் கொண்டு பின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றார். மறு நாள் என்னிடம் (ஞானகுரு) வந்து “இவர் ஒரு ரிஷிப் பிண்டம்… குருநாதராக நீங்கள் பெற்றது உங்கள் பாக்கியம்..” என்றார்.

அதிகாலை துருவ தியானத்தில் கவர வேண்டிய அபூர்வ கக்திகள் - VIDEO

துன்பமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணம் நம் எண்ணங்கள் எங்கே செல்ல வேண்டும்…?

stepway to heaven

துன்பமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணம் நம் எண்ணங்கள் எங்கே செல்ல வேண்டும்…?

 

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இதை எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு யார் அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் சரி பாதி இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இந்தச் சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இதைப் போல் தான் ஒரு வேதனையோ கோபத்தையோ நாம் காண நேர்ந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று அதனுடன் இணைத்திட வேண்டும்.

அடுத்த நிமிடம் நம் எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.

எண்ணங்கள் அங்கே சென்று அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி வேதனைப்படுவோர் பெறவேண்டும்… அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அவர் குடும்பத்தில் அருள் ஞானம் பெருக வேண்டும்…! என்ற இந்த உணர்வை நாம் எடுத்து விட்டால்
1.அந்த வேதனை என்ற தீமையை நீக்கக்கூடிய சக்தி
2.நமக்குள் அணுவாக உருவாக்குகிறது.,

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மைதான் அதுவாக நம்மை மாற்றுகின்றது நம் உயிர்.

ஆனால் இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

ஞானத்தின் உயர்வால் மனிதன் தெய்வமாக முடியும்…! என்று காட்டப்பட்ட இராமாயணக் காவியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ramayana epic

ஞானத்தின் உயர்வால் மனிதன் தெய்வமாக முடியும்…! என்று காட்டப்பட்ட இராமாயணக் காவியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பேராசையின் உந்தலில் ஏற்பட்ட எண்ணத்தினால் பேராசைக்குகந்த நிலை பெறச் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு அச்சூழ்ச்சியின் இன்னலில் எற்பட்ட செயல்கள் எல்லாம் “இராமாயணக் காவியத்தில்” வடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இப்பேராசை உணர்வெண்ண ஆசையின் செயல்முறை எப்படி எப்படி எந்தெந்தச் சுற்றலில் இருந்தெல்லாம் சிக்கி… ஒரு மனிதனை… நற்குணம் அடைய வேண்டும் என்ற உணர்வு குணத்தை ஒரு வட்டத்திற்குள் சுழலவிட்டு…
1.மனிதனுக்குகந்த பண்பு பாசம் பக்தி வீரம் அன்பு ஆசை இப்படி ஒவ்வொரு குணத்தையும்
2.தந்தையின் சொல் மந்திர சக்திக்கும்
3.தமையனின் பாசப் பிணைப்பையும்
4.அன்பின் உருவைக் காதலிலும்
5.வீரத்தை வில்லாக்கியும்
6.பண்பைப் பலதிலும் படைத்துப் பிணைக்கப்பட்ட இராமனை அவதாரப் படைப்புக் காவியனாக்கி
7.வழிப்படுத்திக் காட்டிய இராமாவதாரக் காலத்தில் அன்றிருந்த நிலையைக் கொண்டு
8.அக்காலத்திற்குகந்த வாழ்க்கையின் முன்னேற்ற ஞானத்தைக் கொண்டு
9.இராமனாகப் படைக்கப்பட்ட உருவின் நிலையில்
10.ஆண்டவனான வழி நிலை பெறுகின்ற செயலனைத்துமே அன்றே காவியத்தில் வடிக்கப்பட்டன.
11.ஆனால்… ஆண்டவனாகப் பிறந்தவனின் இன்னல் நிலையை உணர்த்தி
12.ஆண்டவனின் சக்தியைக் காட்ட வடிக்கப்பட்ட காவியமல்ல இராமனின் காவியம்.

பேராசையின் எதிர் நிலையில் சிக்குண்ட ஆத்மா… “தன் உணர்வின் எண்ணத்தில் தெய்வ சக்தி பெறவேண்டும் என்ற எண்ண சக்தி இருந்தால்…”
1.வாழ்க்கையில் செயல் எதிர் பிம்பம் எதுவானாலும்
2.தன் ஞானத்தின் உயர்வினால் வரும் இன்னலில் இருந்தெல்லாம் மீண்டு
3.”தெய்வமாகலாம்…!” என்று உணர்த்தப்பட்ட காவியம் தான் இராமனின் காவியம்.

உள் நின்று இயக்கும் இயக்கத்தைச் சொல்லி “உங்களை நீங்கள் நம்புங்கள்…” என்று சொன்னாலும் எத்தனை பேர் தன்னை (உயிரை) நம்புகிறார்கள்…!

soul is god

உள் நின்று இயக்கும் இயக்கத்தைச் சொல்லி “உங்களை நீங்கள் நம்புங்கள்…” என்று சொன்னாலும் எத்தனை பேர் தன்னை (உயிரை) நம்புகிறார்கள்…!

சாமி…! என்ற எண்ணத்தில் என்னைத் (ஞானகுரு) தேடி வருவார்கள். இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். அப்புறம் என்ன…?

இந்த மாதிரி ஒருவர் என்னைத் தேடி வந்தார். மருத்துவர் போட்ட ஊசியினால் (INJECTION – SEPTIC) செப்டிக்காகி மூன்று வருடமாக நடக்க முடியாமல் இருந்தவர்.

மற்ற யாரிடமோ கேள்விப்பட்டு இங்கே தபோவனத்திற்கு வந்தார். ஒரு வாரம் இங்கே இருந்து தியானம் மற்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டவுடன் நடக்க முடியாமல் இருந்தவர் நன்றாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தார்.

நடந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா…?

சாமி…! எங்கள் ஊரில் இருக்கும் கூட்டம் எல்லாம் இங்கே வந்து குவியப் போகிறது…! என்றார் என்னிடம்.

எதற்கப்பா…! என்றேன்.

பாருங்கள்… நான் எப்படி நடக்கிறேன்…! எங்கள் ஊரிலே இதைக் காண்பித்துச் சொன்னவுடன் எத்தனை பெரிய கூட்டம் வரும் பாருங்கள்…! என்றார்.

எனக்குத் தொல்லை கொடுப்பதற்கா…? என்று கேட்டேன்.

இல்லை…. சாமி….! எனக்குக் கால் நன்றாக ஆனது. அது போல் எல்லோருக்கும் நன்றாக வேண்டும் என்ற நிலையில் வருவார்கள்…! என்றார்.

சரிதானப்பா..! என்றேன்.

ஊருக்குப் போய்விட்டு நான் வருகிறேன்… என்று சொல்லிப் போனார். ஆனால் அதற்குப் பின்னாடி பத்துப் பதினைந்து நாள் ஆனது. ஆளையே காணோம்…!

அதற்குப் பின்னாடி ஒரு மூன்று வருடத்தில் காய்க்கும் தென்னை மரக் கன்றையும் ஒரு சீதா மரக் கன்றையும் வாங்கிக் கொண்டு இங்கே வந்தார்.

சாமி… நான் நன்றாக நடந்தேன் அல்லவா…! திருப்பதி வெங்கிடாசலபதிக்கு நான் வேண்டியிருந்தேன். “கால் நன்றாகி நான் நடந்தேன்” என்றால் அங்கே வந்து காணிக்கை போடுகிறேன் என்று வேண்டியிருந்தேன். ஒரு ஐம்பதினாயிரம் வரை அந்தப் பணம் இருந்தது.

இங்கிருந்து நிறையப் பேரைக் கூட்டிக் கொண்டு அங்கே போனேன். அவர்களுக்காகச் செலவழித்தேன். மீதி இருந்த இருபத்தி ஐந்தாயிரம் பணத்தை உண்டியலில் காணிக்கையாகப் போட்டேன்.

உங்களுக்கு ஞாபகார்த்தமாக இந்த தென்னை மரத்தையும் சீதா மரத்தையும் கொண்டு வந்துள்ளேன். இது மூன்று வருடத்தில் காப்புக் காய்க்கும்…! என்று சொல்லி என் கையாலே இங்கே ஊன்ற வேண்டும் என்றார்.

(அவர் ஊன்றி வைத்தார்… ஆனால் அடுத்து அது சரியாக வளரக்கூட இல்லை)

கட்டாயமாக அந்த மரக் கன்றுகளை ஊன்ற வேண்டும் என்று வைத்தார். அப்புறம் போனார்… வந்தார்.

சாமி… நடக்க முடியாத காலத்தில் நான் வெங்கிடாசலபதிக்குக் கோரிக்கை வைத்திருந்தேன்.
1.பாருங்கள்… நான் கால் சரியானவுடனே மலை மீது கிடு…கிடு…கிடு.. என்று ஏறிப் போனேன்.
2.எப்படிப் போனேன்…! என்று எனக்கே ஒன்றும் தெரியவில்லை.
3.எல்லோருக்கும் தாராளமாகச் செலவழித்துக் கூட்டிக் கொண்டு போய்விட்டு என் கோரிக்கையை நிறைவேற்றி வந்தேன் என்றார்.

மிகவும் நல்லதப்பா.. வெங்கிடாசலபதி தான் இதைச் செய்தார்… நீ அவனுக்குத் தான் செய்ய வேண்டுமப்பா…! என்றேன்.

அந்த வெங்கிடாசலபதி யார் என்று தெரியுமாப்பா..? என்றேன்.

என்னங்க..! “ஏழுமலையான்…” என்றார் அவர்.

ஏழுமலையான் என்றால் யார் தெரியுமா…! என்று கேட்டேன். ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக “ஒளியாக இங்கே பள்ளி கொண்டான் வெங்கிடாசலபதி…” என்று காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

திருவேங்கிடம்…!
1.நமக்குள் இயக்குபவன் இந்த உயிர் தானப்பா..!
2.உன் உயிர் தான் இந்த நிலைகளை எடுத்து உருவாக்குகிறதப்பா…!
3.இவனை மறந்து விட்டாயே..!
4.நீ அங்கே கொண்டு போய் அல்லவா எல்லாம் செய்திருக்கிறாய்…! எத்தனை கஷ்டப்பட்டாய்…? என்றேன்.

இப்படிச் சொன்ன பிற்பாடு.. ஹும்…! உச்…! என்னமோ நான் கோரிக்கை வைத்திருந்தேன்… அதைச் செய்யவில்லை என்றால் அது என் மனைதை உறுத்திக் கொண்டேயிருக்கும். “அவனால் ஆனது” என்ற நம்பிக்கை இருந்தது… அதனால் அப்படிச் செய்தேன்…! என்றார்.

சரியப்பா.. போறும்…! என்றேன். இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பேர் இப்படி உண்டு…!

இங்கே வந்து சௌகரியமான பின் வெங்கிடாசலபதி காப்பாற்றினார்.. காளி காப்பாற்றினாள்… என்று அங்கே மொட்டை எடுத்துக் காணிக்கை செலுத்தி விட்டு வந்தேன் என்று சொல்கிறார்கள். ஒரு ஆட்டைக் கூட வெட்டிப் பலி கொடுத்தேன்…! என்பார்கள்.

ஆட்டை வெட்டிப் பொங்கல் வைக்கிறேன் என்று நான் நேர்த்திக் கடன் வைத்திருந்தேன். அதனால் அதைச் செய்தேன்…! என்று
1.தன் பாவத்தைப் போக்க இன்னொரு பாவத்தைச் சேர்க்கும் நிலை தான் உள்ளது.
2.இந்த நிலைகளில் தான் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

அடங்கப்பா..! நீ பாவம் செய்யாதே..! என்று இங்கே சொன்னால் பாவத்தை அல்லவா மீண்டும் சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள்.. என்று சொல்கிறோம்.

ஆனால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தபோவனத்தில் நடந்து கொண்டு தான் உள்ளது. ஏனென்றால் இன்னமும் பரம்பரை வழக்கங்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் பிரகாரம் தான் நம்முடைய உணர்வுகள் இயக்குகிறது.

இதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நீங்கள் கோவிலாக மதித்துப் பழக வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அந்த அரும் பெரும் சக்தியான நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்துப் பழக வேண்டும்.

வேதனையோ சலிப்போ சஞ்சலமாகவோ அந்த உணர்வுகள் இந்த உடலான கோவிலுக்குள் போகாதபடி நாம் எப்படிக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்றோமோ அந்த மாதிரி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நம் உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நீங்கள் செய்யக்கூடிய சேவை..!

இன்றைய உலகில் பலருடன் பழகுகிறோம். எத்தனையோ விதமான உணர்வுகளை நீங்கள் பார்க்க நேர்கிறது. அந்தத் தீமையான உணர்வு உங்களுக்குள் வந்தால் அந்தத் தீமை தான் உங்களை இயக்குகிறது.

உதாரணமாக ஒருவன் உங்களைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். “என்னைத் திட்டினான்…திட்டினான்…!” என்று அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் உங்கள் ஆண்டவனுக்குத் தீங்கு செய்கிறீர்கள்…! என்று தான் பொருள்.

1.அதற்குப் பதில் திட்டியனுக்குள் இருக்கும் அறியாத இருள் அகல வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும்
3.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
4.மனப்பூர்வமாக எண்ணினால் நீங்கள் அங்கே தெய்வமாகின்றீர்கள்.
5.உங்கள் எண்ணம் உங்களை உயர்த்துகிறது. உங்கள் மூச்சு அவர்களுக்கும் நல்லதாகின்றது.