சரீரத்தில் வரும் நோயின் மூலத்தை வேருடன் களைய வேண்டும் என்றால் தியானிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

inner peace meditation

சரீரத்தில் வரும் நோயின் மூலத்தை வேருடன் களைய வேண்டும் என்றால் தியானிக்க வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கோப குணத்தின் உந்துதலால் நாம் ஈர்த்துக் கொண்டிருக்கும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்த்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இருபாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி…! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்… அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி… இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது…எது எப்பொழுது செயல்படுகிறது…? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி… மோகம்.. தாகம்…” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்… சுவாசமும்… செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்…!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்… மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்… ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி…
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்…!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே…
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்…!

பூமியில் வாழும் உயிரினங்களின் “உயிர்த் துடிப்பே” இரு மடங்காகும் சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கின்றது…!

Sun mass ejection

பூமியில் வாழும் உயிரினங்களின் “உயிர்த் துடிப்பே” இரு மடங்காகும் சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கின்றது…!

பூமிக்க்குள்ளும் வெளியிலும் அணுகுண்டை வெடித்ததால் வெளிப்பட்ட கதிர்வீச்சுகள் வான்வீதியிலே சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களில் இணைக்கப்பட்டு சூரியனுக்குள்ளும் சென்று விட்டது.

அணுகுண்டை வெடித்த பின் கதிரியக்கங்கள் பரவி எல்லாவற்றையும் புகை மண்டலங்களாக மாற்றி அதன் இனத்தைப் பிரித்து விடுகின்றது. அந்தக் கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து வைத்துள்ளது.

1.எல்லாக் கோள்களிலும் கலந்த அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது
2.சூரியனிலே இது மோதலானால் எலெக்ட்ரிக் உற்பத்தி செய்வதை இரு மடங்காக உருவாக்கிவிடும்.
(3.மின்சாரம் வரும் இரண்டு வயர்களை ஒன்றாக இணைத்தால் மின் ஆற்றல் அதிகமாகி எல்லாவற்றையும் கருக்குவது போன்ற நிலை சூரியனிலே உண்டாகும்)

ஆக இரு மடங்காக அந்த எலெக்ட்ரிக்கின் தன்மை உருவாக்கப்படும் பொழுது அதனின் விளைவுகள் எப்படி இருக்கும்…?

சாதாரண நிலைகளில் கம்ப்யூட்டரோ மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களோ இயக்கப்படும் பொழுது அதில் உள்ள எலெக்ட்ரிக் ஒரு சம நிலையில் இருக்கின்றது.

நம் உயிரின் துடிப்பும் மின் இயக்கம் கொண்டது. மின் ஆற்றல் கொண்டு தான் இயக்கி உடலை உருவாக்குகின்றது. அந்த உணர்வுக்கொப்பதான் உணர்ச்சியின் வேகத் துடிப்பும் மற்ற நம் உடலை இயக்குவதும் எல்லாமே…!

ஆனால் அங்கே சூரியனுக்குள் மோதல் ஏற்பட்டு இரு மடங்கு காந்தப் புலன் அதிகமாக்கப்படும் பொழுது
1.நம் உயிரின் துடிப்பும் அதிகமாகும்
2.உணர்வின் துடிப்பும் அதிமாகும்.
3.மற்ற உயிரினங்களின் உயிரின் துடிப்பும் அதிகமாக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகளும் மாறுகின்றது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட இந்த நிலை “ஹைட்ரஜன்” அதிகமாக விரிவாக்கப்படும் பொழுது அதனுடைய உணர்வின் தன்மையை அது இழக்கச் செய்கின்றது.

ஆகவே இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் மாறப் போகின்றது…!

கம்ப்யூட்டரின் துணை கொண்டு தான் இராகெட்டுகளும் செயற்கைக் கோள்களும் மற்றவைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய அந்தக் கம்ப்யூட்டர்களும் செயல் இழக்கப் போகின்றது,

அதே போல் விஷத் தன்மையை இயக்கும் இயந்திரங்களையும் இரசாயணங்களையும் அந்தக் கம்ப்யூட்டரின் துணை கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.

மின் உற்பத்தி இரு மடங்காக ஆக்கப்படும் பொழுது கம்ப்யூட்டர்கள் தாறுமாறாக இயங்கி பாதுகாப்பு இழந்து அது அது வெடிக்கப் போகின்றது. காற்று மண்டலம் முழுவதுமே நச்சுத் தன்மையாகின்றது.
1.நம் சொத்தெல்லாம் நிலைக்குமா…?
2.ஆக மொத்தம் இந்த உடலே இருக்கப் போவதில்லை.

விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழும் மனிதனின் ரூபத்தை அழித்திடும் இந்தக் காலத்தில் தொழில்… அது… இது…! என்று இருந்தாலும் நமக்குள் எதைச் சேர்க்க வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தொழில் வளம் பெற வேண்டும் என்றாலும் அந்த அருள் ஞானம் தேவை. அந்த அருள் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்தால் நஞ்சின் தன்மையை நீக்கிவிடும்.

கடவுளின் அவதாரத்தில் எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கி விட்டு நல்ல உணர்வின் தன்மையை அது எடுத்ததோ அதைப் போல்
1.இந்தக் காற்று மண்டலமே நஞ்சாக மாறினாலும்
2.நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளையும்
3.அடிக்கடி எண்ணி எடுத்து உங்கள் உடலில் பெருக்கிக் கொண்டே வந்தால்
4.விஷத் தன்மைகள் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்கள் உங்களுக்குள் வரும்.

ஆகவே அனைவருமே ஏகோபித்த நிலைகளில் “துரித நிலைகள் கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துப் பெருக்கிக் கொள்ளுங்கள். அப்படிப் பெருக்கினால் உங்களை காத்துக் கொள்ளலாம்.

பாதுகாத்தாலும் எந்த அருள் ஒளியை நமக்குள் வலுவாக்கிக் கொண்டோமோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவியில்லா நிலைகள் அடையலாம்.

சுவாச நிலையையும் சரீர சுத்தியையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Pranayama - eswarapattar

சுவாச நிலையையும் சரீர சுத்தியையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெறவேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

அகண்ட அண்டத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி

universe-cosmos

அகண்ட அண்டத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் கழிவாகப் பிரித்து விட்டு நல்லதை…
1.நறுமணம் கொண்ட உணர்வாகவும்
2.நறுமணத்தை அறியும் அறிவாகவும்
3.நறுமணத்தை நுகரும் தன்மையாகவும்
4.நறுமணத்தின் உணர்வு கொண்டு நற்செயலைச் செயல்படுத்தும் உணர்வாகவும் உடல் மாற்றுகின்றது.
5.உடலின் மணங்கள் இவ்வாறு இயக்குகின்றது

ஆனால் மற்ற உயினங்கள் விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு தன் உடலில் வலிமை பெறுகின்றது நல்ல உணர்வின் தன்மைகளை நஞ்சாக (கழிவாக) மாற்றுகின்றது.

உடல் வலிமை கொண்டு சிந்திக்கும் செயல் இழந்து ஒன்றோடு ஒன்று போர் முறை கொண்டு அது மற்றொன்றைத் தாக்கி மற்றவைகளின் உணவைப் பரிமாறிக் கொள்கின்றது.
1.இது மிருக உணர்வுகளின் இயக்கங்கள்.
2.ஆக நஞ்சின் வலிமை கொண்டு வரும் பொழுது சிந்திக்கும் தன்மை அவைகளுக்கு இல்லை.

ஆனால் மனிதனோ சிந்தித்துச் செயல்படும் தன்மை பெற்றவன். அந்த நஞ்சினை அடக்கும் உணர்வு கொள்ளும் பொழுது
1.அண்டத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் உணர்வின் தன்மையையும் எட்டிப் பிடித்து
2.அகண்ட அண்டத்தில் அந்த அருள் ஒளியின் சுடராக அறியும் வல்லமை பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு…”

அகண்ட அண்டத்தின் உணர்வுகளை நம் பிரபஞ்சம் கவர்ந்து சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகிறது. அதைப் போல
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரம் பெறும் அறிவின் தன்மையைத்தான் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.கார்த்தி என்றால் வெளிச்சம்.

அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மையும் அண்டத்தில் உருவான நம் பிண்டத்திற்கு (உடலுக்கு) உண்டு. அகண்ட அண்டத்தின் ஆற்றலை நமக்குள் பெறும் தகுதியும் உண்டு.

ஆகவே எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதை வென்றிடும் உணர்வு பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து என்றுமே நமக்குள் பேரின்பம் என்ற நிலையை உருவாக்கிடல் வேண்டும்.

அத்தகைய அருள் ஞானத்தை கணவன் மனைவி இருவருமே பெற்றுப் பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் இரு மனமும் ஒன்றாகி இரண்டறக் கலந்து உணர்வின் ஒளியாக மாற்ற வேண்டும்.

கணவனும் மனைவியும் அருள் ஞான சக்தி பெற்று நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறவேண்டும். உலக ஞானம் பெற்று இந்த உலகைக் காத்திட வேண்டும்.

உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம் உடலுக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. ஆகவே அந்த உலக உணர்வை பகைமையற்ற நிலையாக்கிப் நம்மிடம் பகைமை வளராது தடுக்க வேண்டும்.

ஒளியின் சுடரான அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்தால்
1.உலக ஞானம் பெறலாம். பகைமைகளை அகற்றிடலாம்.
2.அருள் ஒளியின் சுடராகப் பேரருள் வாழ்க்கை வாழ்ந்து
3.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று
4.நம் பேச்சும் மூச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாக வளரும்.
5.இந்த உடலுக்குப் பின் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத வாழ்க்கை வாழலாம்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த நட்சத்திரங்களின் ஆற்றல்கள்

agastya-lobamuthra

அகஸ்தியன் கண்டுணர்ந்த நட்சத்திரங்களின் ஆற்றல்கள்

இரண்டு நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் சக்திகள் (துகள்கள்) சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதினால் “மின்னலாக” மாறுகின்றது.

அந்த மின்னல் புவியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது ஒரு மரத்தில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம். எந்த நட்சத்திரமோ அதனைச் சேர்ந்த இனமாக அந்த மரம் இருந்தால் விழுந்தால் இந்த மரத்தை அப்படியே பொசுக்கிவிடும். ஆனால் பக்கத்தில் இருக்கும் மரத்தை (வேறு இனம்) ஒன்றும் செய்யாது.

ஏனென்றால் தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவுகின்றது. அது பூமிக்குள் சென்ற பின் வெப்பங்கள் அதிகமாகி அது கொதிகலனாகிறது.

நாளடைவில் சேமித்துச் சேமித்து உஷ்ணம் அதிகமான பின் நிலநடுக்கமாகி ஆவித் தன்மை (GAS) உண்டாகி அந்த வாயுக்கள் அனைத்தும் அப்படியே வெடிக்கின்றது.

வெடித்த பகுதி அப்படியே கீழே இறங்குகிறது. அந்தப் பகுதியில் மட்டும் தான் நிலநடுக்கம் வருகின்றது. உள்ளே சென்ற பின் அடங்கி விடுகின்றது.

ஆனால் நட்சத்திரத்தின் மின்னணுக்களின் நிலைகள் அதாவது மின்னல் கடலில் படும் பொழுது என்ன ஆகின்றது…?
1.அது உப்பு நீர்…!
2.மின்னல் பூமிக்குள் ஊடுருவாதபடி கடலில் பட்டபின் மணலாக மாறுகின்றது
3.நட்சத்திரங்களின் உணர்வின் சக்தி பட்ட பின் அது யுரேனியமாக மாறுகின்றது.

எந்தெந்தப் பகுதி எந்தெந்த நட்சத்திரங்களின் சக்திகள் படர்கின்றதோ அதனின் வலுவிற்குத் தகுந்த மாதிரி யுரேனியங்கள் எத்தனையோ விதமான நிலைகள் உருவாகின்றது. விஞ்ஞானத்தில் அதற்குப் பல பெயர்களை வைத்து அழைக்கின்றார்கள்.

அப்படி மாறியதை விஞ்ஞானி பிரித்து எடுத்து என்ன செய்கின்றான்…? அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.
1.கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனின் துணை கொண்டு
2.அதனின் அழுத்தத்தைக் கொண்டு வெடிக்காதபடி பாதுகாக்கின்றான்.

ஹைட்ரஜன் என்று இருந்தாலும் அதனின் அடர்த்தியின் தன்மைகள் ஒளிக் கதிர்களைச் சேர்த்து மீண்டும் அந்த ஹைட்ரஜனை வெடிக்கச் செய்வார்கள்.

ஏனென்றால் சனிக்கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் ஒவ்வொரு அணுக்களிலும் (எல்லாவற்றிலும்) கலந்திருக்கும். அதே சனிக் கோளிலிருந்து தான் வடிக்கப்பட்டுக் கடலாக (நீராக) மாறுகின்றது.

இந்த உணர்வின் தன்மை கொண்டு ஹைட்ரஜன் வரப்படும் பொழுது இதனின் நிலைகள் வான்வீதியில் வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கிறது.

இங்கே வரும் மற்ற தாவர இனச் சக்திகளுக்குச் செல்வதும் அதற்குள் இருக்கும் கதிரியக்கப் பொறிகளும் வெகு தொலைவில் பரவப்பட்டு அந்த ஜீவ சக்தியையே எடுக்கச் செய்வது அந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதை எல்லாம் கண்டு கொண்டுள்ளார்கள்.
1.நான் (ஞானகுரு) மூன்றாம் வகுப்பு முழுமையாகப் படிக்காதவன் இதைச் சொல்கிறேன்.
2.இதை நீங்களும் பார்க்க முடியும்… தன்னம்பிக்கை வேண்டும்.

இந்த இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலமாக மனிதன் (விஞ்ஞானி) தனக்குள் கண்டுணர்ந்து பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கண்டு அதனின் இயக்கப் பொறிகளைப் படமாக வரைகின்றான் – அந்த உருவத்தையே.

1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பாயப்படும் பொழுது
2.உணர்வுகள் எப்படி இயங்குகிறது..? என்ற நிலையைத் தெளிவாகக் காணுகின்றான் விஞ்ஞானி.

அதைப் போல் தான் அன்று மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்கத்தின் தன்மையை அணுவின் ஆற்றலைப் பிளந்து அதனின் தூண்டுதலைப் பார்த்தான்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது…? என்ற நிலையை அவனால் கண்டுணர்ந்தது தான் வான இயல் புவியியல் உயிரியல் எல்லாமே…!

1.அவனுக்குப் பின் வான்மீகி கண்டான்.. பின் வியாசகன் கண்டான்.
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகளை அந்த உண்மையின் உண்ர்வை எடுத்து அவர்கள் வளர்த்துக் கொண்டனர்.
3.இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துத் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வுகளைத் தான்
4.இப்பொழுது உங்களுக்குள் சிறுகச் சிறுக ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…! என்று உரைத்த இராமலிங்க வள்ளலைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Vallalar ramalinga siddha

நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…! என்று உரைத்த இராமலிங்க வள்ளலைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்… என்றும் ஜோதி தரிசனம்… என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில் “அறிவை அறிவால் அறிவர்…!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய் அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது…?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்… திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா… கொள்…! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்…!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்…
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை…!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்… இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்…!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்…” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா…?

போற்றி…போற்றி…! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.ஆக “பூசத்தில் ஜோதி கண்டேன்… பிறவிப்பயன் பெற்று விட்டேன்…!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா…? பெற்றதின் பயனை…! ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலகோதயத்தில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா…?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்…! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே… உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்… சந்திரன்… ஜோதி விளக்கு… அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்…!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் – தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி… “அறிவின் ஒளியப்பா…!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.
3.அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும்
4.ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

தீதெண்ண குணங்கள் உயிரான்ம சக்தியை எப்படிப் பிரிக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

third eye unity

தீதெண்ண குணங்கள் உயிரான்ம சக்தியை எப்படிப் பிரிக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்ம சக்தியைக் கேடாக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்ற விதம் அறிந்துணர வேண்டிய ஒன்று.

தீமைகள் தாக்கும் நிலையில் உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாச் செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவைத் அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.அதாவது சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்ம சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.
2.பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கெட்டதை நல்லதாக எப்படி மாற்றிக் கொள்வது…?

Polariss

கெட்டதை நல்லதாக எப்படி மாற்றிக் கொள்வது…?

மிளகாய் காரமாக இருக்கின்றது. ஆனால் குழம்பு வைக்கிறோம் என்றால் அந்தக் காரத்தைச் சேர்த்தவுடன் ருசியாக இருக்கிறது. உப்பு கைப்பாக இருக்கிறது. அதைக் குழம்பில் அளவோடு சேர்க்கப்படும் போது ருசியாக இருக்கிறது.

ஒரு விஷமோ மனிதனைக் கொன்று விடுகிறது, ஆனால் எந்த வைத்தியமாக இருந்தாலும் சரி
1.நல்ல மருந்துடன் அந்த அளவு கோல்படி விஷத்தைச் சேர்த்த பின்
2.அது அந்த மருந்துக்கே வீரிய சக்தியாகின்றது.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தால் மனிதனைக் கொல்கின்றது. ஆனால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விட்டால் விஷம் தணிந்து அந்தப் பாலுக்கே அது வீரிய சக்தி கொடுக்கின்றது.

இதே போல் தான் நல்ல மருந்துக்குள் விஷத்தைக் கலந்தால் வேகமாக ஊடுருவிச் செல்லும். அந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் அந்த மருந்தும் வலுவாகிறது.

மருந்தை நாம் உட்கொண்டால் நம் உடலில் விஷத்தன்மை கொண்ட அணுக்களுக்கு இது எதிர்மறையாகி மறைவிடமாகும்போது அதற்கு உணவு போகாதபடி தடுக்கின்றது.

கெட்ட அணுக்களுக்குச் சிறிது காலம் உணவு கிடைக்கவில்லை என்றால் அது ஆகாரம் இல்லாமல் மடிகின்றது. இதைப் போன்ற நிலையில் மனிதன் தனக்குள் உண்மையின் உணர்வை அறிந்து செயல்டும் ஆற்றல் பெற்றவன்.

சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் விஷத்தின் தன்மைகளை மாற்ற அருள் ஞானியின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது விஷத்தை அடக்கி தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

நாகப்பாம்பு போன்ற பாம்பினங்கள் தன் உடலிலே இருக்கக்கூடிய விஷத்தை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சுகின்றது. அதையே உணவாக எடுக்கின்றது. இருந்தாலும் தன் உடலில் விஷத்தின் தன்மையைச் சேமிப்பாக்குகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு உடலிலும் விஷத் தன்மை உண்டு.
1.பாம்பு அதனைத் தனக்குள் ஜீரணித்து
2.அந்த உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் போது “நாகரத்தினமாக…!” மாறுகின்றது.

அத்தகைய பாம்பினங்கள் சுமார் நூறு வருடம் வாழ்ந்தால் அதன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெறுகிறது. ஒளித் தன்மை அடைகின்றது. ஆனாலும் அதற்கு வளர்ச்சி இல்லை.

ஆனால் மனிதனாகத் தோன்றிய நிலையில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மைகள் மோதலாகும்போது
2.ஜீவணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது துருவ நட்சத்திரம்
3.நம் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி நுகரப்படும் போது
4.அதனைக் கவர்ந்து ஒளியாக மாற்றுகின்றார் துருவமகரிஷி துருவ நட்சதிரத்திரமாக…!

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பலராம்… பலருடைய எண்ணங்கள் இருந்தாலும் கோபப்படுவதோ வேதனைப்படுவதோ சலிப்பு அடைவதோ இது எல்லாம் வாலி. அதை எல்லாம் எடுத்துக் கொண்டால் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

1.இருளாக இருக்கும் நிலையில் அங்கே என்ன சாமான் இருக்கின்றது அறியாதபடி தத்தளிக்கின்றோம்
2.ஆனால் வெளிச்சத்தை கண்டபின் இன்ன பொருள் அங்கே இருக்கின்றது என்று அறிகின்றோம்
3.ஆக நமக்குள் மகிழ்ச்சி பெறச் செய்வதும் ஒரு பொருளை அறியச் செய்வதும் ஒளி (வெளிச்சம்).

அந்தத் துருவ மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து “ஈஸ்வரா…” என்று அவனிடம் வேண்டி… அது எங்கள் உடல் முழுதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்தும் போது இதன் உணர்வின் வலிமை பெறுகிறது. ஒளியாக மாற்றுகின்றது.

அப்பொழுது மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற உணர்வை உணர்ந்தாலும் நமக்குள் அந்த நினைவு வருவதில்லை.

இதைத்தான் கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது “நரசிம்ம அவதாரம்…” என்று காட்டப்படுகின்றது.
1.இந்த மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நமக்குள் புகாது எவர் தடுக்கின்றனரோ
2.அவரே உயிருடன் ஒன்றி கல்கியின் தன்மை பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

உயிரான்மாவைக் காக்க “சக்கர வியூகம்” அமைப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

main chakkaram

உயிரான்மாவைக் காக்க “சக்கர வியூகம்” அமைப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்திட தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்…! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழிமுறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன்னிஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரமத்திற்கு… அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி…
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உணர்தல்…
சுவைத்தல்…
நுகர்தல்…
செவிமடுத்துக் கேட்டல்…
விழியின் செயல் திறன்…
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்)

உடல் பற்றினால் வரும் விளைவுகளை இமயமலையில் வைத்துக் காட்டினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி

Magic stone - destination

உடல் பற்றினால் வரும் விளைவுகளை இமயமலையில் வைத்துக் காட்டினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி

 

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இமயமலையில் வைத்து எனக்கு (ஞானகுரு) அனுபவங்களைக் கொடுத்தார். பனிப்பாறைகளுக்கு மத்தியில் நடந்து செல்லும் பொழுது நான் வந்த பாதையில் உள்ள பாறைகள் திடீரென்று இடிந்து விழுந்தது.

இடிந்ததும் நான் எப்படித் திரும்பப் போவது…? என்ற பயம் வந்து விட்டது. என் மனைவி குழந்தைகளின் மீது எண்ணம் வந்து விட்டது.

அப்பொழுது குருநாதர் சொல்கிறார். இன்று நீ பத்ரிநாத் கேதார்நாத் எல்லாம் போய்விட்டு வந்தாய். பல நிலைகளை அங்கே நீ தெரிந்து கொண்டாய்.

ஆனால் அந்தத் தெரிந்த உணர்வு கொண்டு வந்தாலும் இங்கே இந்தப் பாறையை கடந்து செல்லப்படும் பொழுது பனிப் பாறைகள் நொறுங்கி விழுந்துவிட்டது.

1.நொறுங்கிய பின் நீ எப்படித் திரும்பப் போவது என்று பயப்படுகின்றாய்.
2.அதனால் உனக்குள் ஒரு புயலே வந்துவிட்டது.
3.தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.
4.உன் மனைவியையும் உன் மக்களையும் நீ எண்ணத் தொடங்கி விட்டாய்.
5.பாசத்தால் அப்படி எண்ணும் போது இந்தக் குளிரிலிருந்து உன்னால் தப்ப முடியவில்லை.
6.(ஏனென்றால் குருநாதர் அந்தக் குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக நட்சத்திர உணர்வுகளை என்ன எண்ணச் சொல்லியிருந்தார். அதனால் குளிர் பாதிக்கவில்லை – பாச உணர்வால் மனைவி மக்களை எண்ணியதும் குரு சொன்னதை நான் எண்ண முடியவில்லை)
7.நீயே தப்ப முடியவில்லை என்றால் நீ போய் யாரைக் காப்பாற்றப் போகிறாய் என்று கேட்டார்…!

ஆகவே “மனமே இனியாகிலும் மயங்காதே…
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…
நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ
நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? என்ற பாடலைப் பாடினார்.

நீ இந்த உடல் ஆசையை வைக்காதே. எது நடக்க வேண்டுமோ… அது நடக்கும். ஆனால் தீமைகள் நடக்காது தடுப்பதற்கு… உனக்கு நான் கொடுத்த சக்தி… “அந்தத் துருவ நட்சத்திரத்தை பற்றிச் சொல்லி உள்ளேன்…”

ஒரு சந்தர்ப்பம் நீ விமானத்தில் செல்லப்படும் போது அந்த விமானம் கவிழும் தருணத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அப்பொழுது ஒரு நொடிக்குள் அங்கே நீ செலுத்தினாய்.
1.நீ விமானத்தில் உள்ளோரையும் காத்தாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்.
2.இது உனக்குள் இருக்கக்கூடிய எண்ண வலு…!

அதே சமயத்தில் எல்லோருமே ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்வோர் தான். அதிலிருந்து யாரும் தப்புவது இல்லை.

1.நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி…
2.பெரிய மகான் என்று மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டு இருந்தாலும் சரி…
3.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்… ஏனென்றால் எதனுடைய அழுத்தம் அதிகமாகிறதோ அப்பொழுது உயிர் இந்த உடலை விட்டுப் பிரியத் தான் செய்யும்.

இந்த உடல் இச்சையை நீ பட்டு “என் மனைவி… என் குழந்தை…!” என்று நீ எண்ணினால் இந்த உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய். இப்பொழுது உன் உயிரான்மா பிரிந்தால்
1.உன் குழந்தையின் ஈர்ப்புக்குள் போவாய்… அல்லது உன் மனைவியின் ஈர்ப்புக்குள் தான் போக முடியும்.
2.அங்கே சென்ற பின் அந்த குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க விடுவாயா..?

நீ இங்கு இறந்து விடுகின்றாய் என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையோடு இருக்கப்படும் போது இதே உணர்வுகள் அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக ஆக்கி அவர்களையும் நோயாக்கி விடுகின்றாய்.

உன்னை நம்பிய அனைவருக்கும் இதே வேதனைகள் உருவாக்கபட்டு அவர்களையும் துரித நிலையில் மடியும் தன்மையை உருவாக்குகின்றாய். ஆகவே…
1.அந்த வேதனையைத் தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும்.
2.நீ அவர்களைக் காக்க முடியாது.
3.பாசத்தால் நீ எண்ணிய உணர்வுகள் கொண்டு அந்த உணர்வுடன் மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய்
4.அவர்களையும் அழித்து விடுகின்றாய்…!

உடலுக்குப் பின் எந்த வேதனையையும் துயரத்தையும் நீ பட்டாயோ உன் உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும்.
1.இன்று நீ மனிதனாய் இருக்கின்றாய்.
2.அடுத்து நீ எங்கே போகின்றாய் தெரியுமா..? என்று கேட்கின்றார் குருநாதர்.

உன் உடலில் எந்த வேதனைகளை அதிகமாக எடுத்தாயோ அந்த விஷம் (வேதனை என்றாலே விஷம்) என்ற நிலையைத் தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் உன்னை உன் உயிர் அழைத்துச் செல்லும்.

பாம்பாகவோ மற்ற விஷமான ஜெந்துக்களாகவோ உன்னை அதற்குத் அங்கே உருவாக்கி விடும் என்று இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்சியாகவே தருகின்றார் குருநாதர்.

ஆனால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகரித்து விட்டால்
2.இந்த மனித உடல் என்ற இச்சையில் இருந்து விடுபட்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலிலே ஒளியான அணுக்ககளாக விளைந்து
4.உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது.
5.உடலை விட்டு எந்த நேரம் உயிர் பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் அழைத்துச் சென்று
6.உன்னைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும்… நீ அழியா ஒளியின் சரீரம் பெறலாம்…! என்று தெளிவாக எனக்கு உணர்த்தினார்.