பாசம் கொண்டவர்களின் உணர்வு நம்மை எப்படி இயக்குகிறது…!

Telepathy

பாசம் கொண்டவர்களின் உணர்வு நம்மை எப்படி இயக்குகிறது…! 

நண்பர்களாக உள்ள நாம் “எனக்கு நன்மை செய்தான்” என்று எண்ணும் பொழுது நண்பன் அப்பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் அவனுக்கு விக்கலாகின்றது.

ஆனால் நண்பர்களுக்குள் பழகி ஒருவருக்கொருவர் மன வருத்தமாகி வேற்றுமையாகிக் கோபத்துடன் ஏசிப் பேசி கடுமையான சொற்களால் அந்த இருவரின் உணர்வுகளும் பட்டுவிட்டால் என்ன ஆகிறது..?

ஒரு சமயம் அதை நினைவுபடுத்தி
1.நமக்குத் துரோகம் செய்தான் பாவி… அவன் எல்லாம் உருப்படுவானா…?” என்று சொல்லும் பொழுது
2.அங்கே அமெரிக்காவில் இருந்தாலும் அவனுக்குப் புரை ஓடுகின்றது.

அப்படி வெறுப்படையும் பொழுது நமக்கும் அந்தத் தீமை என்ற உணர்வாகின்றது. நண்பனுக்கும் அந்த நிலை ஆகின்றது. உதாரணமாக அந்தச் சமயத்தில் ஒரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார் என்றால்
1.வெறுப்படையும் நிலைகள் கொண்டு பேசினால் சிந்தனை சிதறும்.
2.தன்னை அறியாமல் விபத்துக்களும் உண்டாக்கும்.
3.நீரிலே குளித்துக் கொண்டிருந்தால் பாவி இப்படித் தொந்திரவு செய்தான் என்று எண்ணினால் புரையோடி நீருக்குள் மூழ்கிவிடுவான்.
4.எவ்வளவு திறமை வாய்ந்த நீச்சல்காரராக இருந்தாலும் இப்படி உருவாக்கிவிடுகின்றது.

நம் தாய் தன் பிள்ளையைப் பேரன்புடன் வளர்த்திருக்கின்றது. என் மகன் ரொம்ப தூரம் போயிருக்கின்றான். எப்படி இருக்கின்றானோ… எதுவாக இருக்கின்றானோ…? என்று இந்தத் தாய் தன் மகன் மீது சோர்வடைந்த உணர்வுடன் எண்ணினால்
1.அங்கே ஒரு இயந்திரத்தில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும்
2.அந்தத் தொழிலில் சிந்தனை குறைந்து விபத்துக்குள்ளாகும்.
3.இது அன்பினால் வரக்கூடிய தொல்லைகள்.

இதே மாதிரிக் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது என் பையன் இப்பொழுது என்ன செய்கிறானோ…? என்ற இந்த வேதனையுடன் எண்ணினால் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகும். இது பாசத்தால் உருவாகிவிடுகின்றது.

ஆகவே பேரன்பு கொண்டு வளர்க்கும் இந்தத் தாய்மார்கள் தன் பிள்ளைகளைப் பற்றி எண்ணும் பொழுது
1.அவன் உயர்வான நிலைகள் பெறவேண்டும்.
2.அவன் தெளிந்த மனம் பெறவேண்டும்
3.சிந்திக்கும் ஆற்றல் பெற்றுத் தெளிவான நிலையில் வாழ வேண்டும்
4.அவன் மகிழ்ந்த உணர்வுடன் வாழ வேண்டும் என்று எண்ணினால்
5.உங்கள் எண்ணம் அந்தக் குழந்தைகளுக்கு நல்லவைகளை ஊட்டும்.

ஏனென்றால் இவை எல்லாம் “நம்மை அறியாமலே” இயக்கக்கூடிய நிலைகள்.

பொதுவாக தாய் எப்பொழுதுமே தன் பிள்ளைகள் நலம் பெறவேண்டும் நலம் பெறவேண்டும் என்று எண்ணுகிறது. பிள்ளைகள் தாய்க்குத் தொல்லைகள் கொடுத்தாலும் என் பையன் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் அந்தத் தாய் எண்ணுகின்றது.

கருவிலே பத்து மாதமும் தாய் தூக்கிச் சுமந்து பத்து மாதம் கழித்து
1.குழந்தை பிறக்கும் பொழுதும் வேதனைப்படுகின்றது.
2.குழந்தையை வளர்க்கும் பொழுதும் வேதனைப்படுகின்றது.

இப்படிப் பலவிதமான இன்னல்கள் பட்டாலும் தன் மக்களை அன்புடன் அரவணைத்து அவர்கள் பண்புடன் வளர வேண்டும் என்று பேரன்பைத்தான் தாய் ஊட்டுகின்றது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் தாய் ஊட்டிய அந்த நல்ல உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவுகளாக உண்டு. அதை எண்ணி எடுத்தால் அது நம்மைக் காக்கும்.

1.ஆகவே மனிதர்கள் நாம் அனைவரும் நம் தாயைக் கடவுளாக மதிக்க வேண்டும்.
2.அவர்களைத் தெய்வமாக மதித்தல் வேண்டும். குருவாக மதித்தல் வேண்டும்.

எந்தக் காரியங்களுக்குச் சென்றாலும் அன்னை தந்தையரை எண்ணி
1.அவர்கள் அருளால் என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
2.என் சொல் நல்லதாக இருக்க வேண்டும்.
3.என் செயல் அனைத்தும் போற்றும் தன்மைக்கு வளர வேண்டும்
4.என் தாயின் அருள் உணர்வு என்றும் என்னுடன் இருக்க வேண்டும் என்று இபப்டி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

அதே சமயத்தில் தாய் உடலில் சேர்ந்த எங்களுக்காகப் பட்ட வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்கி என் தாய் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

“மனதை ஒருநிலைப்படுத்தவே தியானம்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Importnce od meditation

“மனதை ஒருநிலைப்படுத்தவே தியானம்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்ளுதல்) என்றிட்ட ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்… அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தத்தம் செயலுக்கு சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்…” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்… உணர்தல்… தெளிதல்… என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால் எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்…?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்…!”

வாஸ்து சாஸ்திரம் பலனளிக்குமா…?

vastu sastram

வாஸ்து சாஸ்திரம் பலனளிக்குமா…?

 

வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தால் நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியது இல்லை. விநாயகர் தத்துவத்தில் சொல்லப்பட்டது போல
1.நாம் எதை வினையாக்க வேண்டும்…?
2.நாம் எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…? என்பதை
3.அந்த அருள் ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் வரும் தீமைகளிலிருந்து மீளலாம்.

இன்று வாஸ்து சாஸ்திரம் என்று சில சாஸ்திரங்கள் எல்லாம் வந்திருக்கின்றது. வாஸ்து என்றால் என்ன செய்கிறார்கள்…? வீட்டில் ஏதாவது கஷ்டங்கள் வந்துவிட்டது என்றால் வீட்டில் உள்ள சில நிலைகளை (வாசலையோ சுவரையோ) மாற்ற வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் முதலில் அதே வீட்டில் நன்றாகத் தான் வாழ்ந்திருக்கின்றார்கள். இப்பொழுது தான் கஷ்டம் வந்திருக்கிறது.

வீட்டில் இருக்கும் பழைய வாசல்படியை எடுத்து விட்டு அதை வேறு பக்கம் வைத்தால் அந்த வாஸ்து சாஸ்திரப்படி உனக்கு நல்லதாகும்…! என்று இப்படிக் கொண்டு போகின்றார்கள்.

“வாஸ்து சாஸ்திரம் என்பது உண்மை…!” என்ற நினைவில் அதை ஆழமாகப் பதிவாக்கிய பின் வீட்டு வாசலை மாற்றி விட்டால் நமக்கு நல்ல காலம் வரும்..! என்ற இந்த உணர்வைப் பதிவு செய்கிறார்கள்.

அதன்படி வாசலை மாற்றி வைக்கின்றோம்.

அப்படி வளர்ந்து வரப்படும் போது சந்தர்ப்பத்தில் தன் பையன் வெளியிலே ஏதாவது சேட்டை செய்கிறான் அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நமக்கோ மற்றவர்களுக்கோ ஏதாவது தொல்லை கொடுக்கிறான் என்று வைத்து கொள்வோம்

அதை உற்றுப் பார்த்து… கேட்டு அந்த உணர்வின் தன்மைகளை எடுத்துக் கொண்ட பின்
1.நமக்குத் தொந்தரவு கொடுக்கிறான்…
2.இன்னொருத்தருக்கும் தொல்லை கொடுக்கிறான்…
3.பாவி இப்படிச் செய்கின்றானே.. இப்படி இருக்கின்றானே..! என்ற உணர்வை எடுத்துக் கொள்வோம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
1.நம் உடலிலும் பட்டு… “நம் வீட்டிலும்” பதிவாகி விடுகின்றது.
2.இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அதே நினைவாகி அதைக் மீண்டும் மீண்டும் கூட்டிக் கொள்கிறோம்.
3.ஒருத்தருக்கு ஒருத்தர் அந்தப் பகைமை உணர்வுகள் வளரத் தொடங்குகிறது.

வாஸ்து சாஸ்திரப்படி வாசலை மாற்றினாலும் கொஞ்ச நாள் நன்றாக இருக்கும். அப்புறம் நாம் எடுக்கும் உணர்வுகள் மாறும் போது அந்தச் சாஸ்திரம் செல்லுமா…?

வாஸ்து சாஸ்திரத்திப்படி வீட்டையோ வாசலையோ சுவரையோ மாற்றி வைக்கின்றார்கள் அல்லவா…! அந்தக் குடும்பங்கள் எல்லாம் பின்னாடி என்ன ஆகிறது என்று பாருங்கள். பணத்தைச் செலவழித்தது தான் மிச்சம்…!

ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டு அதைப் பதிவாக்கி அதன் வழி இயக்குவது.

ஆனால் வேதங்கள் கூறியது ரிக்… சாம… அதர்வண… யஜூர்.. மீண்டும் சாம. உடல் ரிக். அதிலிருந்து வரக்கூடிய உணர்வு சாம.

ஆகவே அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கஷ்டம் என்ற நிலை போய்…
2.இவர் ஏதோ உயர்ந்ததைச் சொல்கிறார்… என்ற நிலையில்
3.அந்தக் கஷ்டமான உணர்வின் தன்மையை அடக்குகின்றது அதர்வண
4.அப்பொழுது அந்த உணர்வின் எண்ணம் கொண்டு கொஞ்சம் துயரத்தை மறக்கின்றார். அவர் சொல்லும் உணர்வு யஜூர் (யஜூர் என்றால் வித்து) ஆகிறது.
5.பின் மீண்டும் சாம…! அதாவது வாஸ்து சாஸ்திரப்படி சரி செய்து விட்டோம்…! என்று அவரை எண்ணும் போதெல்லாம் சிறிது நாளைக்கு நல்லது வருகிறது.

ஆனால் முதலில் சொன்ன மாதிரி பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை கொடுக்கின்றான்… பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… என்ற உணர்வுகளை எடுத்து வேதனைப்பட்டால் அந்த வேதனை என்ன செய்கிறது…?

மீண்டும் இந்த நல்லதை அடக்குகிறது அதர்வண.. பின் மீண்டும் யஜூர்…! கஷ்டப்படும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது. மீண்டும் தீமைதான் நடக்கும்.

ஆகவே அத்தகைய தீமைகள் நடக்காது நிலைகள் வரவேண்டும் என்றால்
1.அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் கோவிலுக்குச் சென்று
2.அங்கே உணர்த்தப்பட்டுள்ள அந்தத் தெய்வ குணத்தையும் அதை அருளிய மகரிஷிகளின் அருள் உணர்வுகளையும் எடுத்து
3.எந்தப் பகைமை உணர்வுகளும் நமக்குள் உட்புகாது தடுத்துக் கொண்டால் அதற்குப் பெயர் கல்யாண ராமா…!
4.தீமைகள் நம்மை இயக்காது மகிழ்ச்சி (சீதா) என்ற உணர்வை அரவணைக்கும் தன்மையாக நமக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் எடுத்தால் வேகா நிலை. இந்த உலகில் துருவ நட்சத்திரத்தை எதுவுமே வேக வைக்க முடியாது.

நீங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெற்று வேகா நிலை பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

செய்வினை… தோஷம்… என்பதெல்லாம் உண்மை தான்…!

spiritual lemon

செய்வினை… தோஷம்… என்பதெல்லாம் உண்மை தான்…!

 

பிரதோஷம் என்பது
1.பிறருடைய உணர்வுகள் வராதபடி
2.பிறருடைய சங்கடங்கள் வராதபடி
3.பிறருடைய ஆவிகள் வராதபடி
4.பிறருடைய பற்று வராதபடி இருப்பது தான் பிரதோஷம்.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் ஏதாவது சாங்கியங்களைச் செய்தால் பிரதோஷம் நீங்கிவிடும் என்று செய்வார்கள். இதனால் பலன் ஏதும் இல்லை.

1.பிறருடைய உணர்வுகள் நமக்குச் சாராதபடி இருக்க வேண்டும் என்று சொன்னால்
2.அவர்களுடைய உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பிரதோஷம் ஆக்குகின்றோம்.

பிரதோஷம் அன்றைக்குப் பழங்கள் எல்லாம் வைத்துச் சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து தோஷம் வராமல் தடுக்க வேண்டும் என்றால் இது முடியாது.

ஆக மொத்தம் பிறருடைய உணர்வுகளை நமக்குள் இயக்கவிடாது “பிறருடைய அந்தத் தோஷத்தைத் தடுக்க வேண்டும்…!” என்ற எண்ணமே வருவதில்லை. பிரதோஷம் என்றால் அன்றைக்கு மந்திரங்களைச் சொல்லி இன்னொரு தோஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால்
1.எந்த மந்திரத்தைச் சொல்லிப் பதிவு செய்து உள்ளீர்களோ
2.பிரதோஷம் அன்றைக்கு எவ்வளவு மந்திரத்தைக் காதில் கேட்டீர்களோ
3.இந்த உணர்வின் தன்மை இங்கே வந்தபின் கடைசியில் இறந்தபின்
4.அதே மந்திரத்தைச் சொன்னால் நம் ஆன்மாவை இன்னொருவர் கைவல்யம் செய்து கொள்வதற்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு நோயைப் போக்குவதற்காக என்று சொல்லி அந்த மந்திரத்தைப் பதிவு செய்து கொண்டு போனால் அதே உணர்வை எடுக்கும் போது
1.இறந்த பின் இந்த ஆன்மாவைக் கைவல்யம் செய்து கொண்டு
2.இன்னொரு உடலுக்குள் நோய் தீருவதற்காக
3.இந்த ஆவியை ஏவல் செய்வார்கள்… அதற்குத் தான் பயன்படும்.

மனிதன் உடலுக்குள் விளைவைதை இத்தனை மந்திர ஜாலம் செய்து பல வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி ஒரு மனிதனுக்குள் விளைந்தது தான் எத்தனையோ உணர்வுகள். அதைத்தான் கரையான் மந்திரம் என்பது.

கரையான் என்ன செய்கிறது…? கட்டைக்குள் கரையான் சென்ற பின் அதிலே அதன் மலம் பட்டபின் கட்டையே மண்ணாகப் போய்விடும். அந்த மாதிரி கட்டையைச் சீக்கிரம் நம்மால் கரைக்க முடியுமா..! என்றால் முடியாது.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் போது வேதங்களில் (அதர்வண) மூலத்தின் மூல நிலைகள் உண்டு.
1.இந்த உணர்வின் தன்மை இரண்டும் உராயப்படும் போது
2.இறந்தபின் அதைப் பிரித்து இன்னொரு மனிதனுக்குள் பாய்ச்சிச் செலுத்தியபின்
3.அந்த உடலுக்குள் இருக்க வேண்டும் என்றால் இந்த உணர்வைக் கரைத்துவிடும்.
4.பின் ஆவியுடன் (காற்றுடன்) கலக்கும்.

மீண்டும் அதற்குண்டான எதிர்மறையான நிலை ஆனபின் பொருளாக வந்துவிடும். ஒரு டப்பாவுக்குள் சிறு துவாரம் (ஊசி அளவு) வைத்தால் அதன் வழியாக அதற்குள் வந்துவிடும். மீண்டும் மாற்றினால் அது ஆவியின் நிலையாக மாறும்.

இது எல்லாம் மனிதனுக்குள் உருவான நிலைகள்…!

இதே போல பல உயிரினங்களும் உண்டு. மந்திரங்களை எடுத்து அந்த உயிரினங்களைக் கேட்க வைத்துப் பின் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தபின் அதை வைத்துப பல தீமைகளை செய்பவரும் உண்டு.

“ஒடியர்கள்…!” என்று இருக்கின்றார்கள். இந்த அசுர உணர்வு கொண்டு பறந்து போகும் காக்காயை அவர்களின் ஒடிய மொழியில் சொன்னால் அதனின் இறக்கை பிய்ந்து துண்டாக விழும்.
1.அந்த ஒலி அதிர்வுகள் (ஒடியன் மந்திரம் என்பது) அங்கே அவ்வாறு மாற்றும்
2.எப்படி ஒரு மின்னல் தாக்குகின்றதோ அதைப் போல உணர்வின் இயக்கங்கள் கொண்டு செய்வார்கள்… இது எல்லாம் உண்டு…!
3.செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை தான்..!
4.ஒருவருக்கொருவர் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் செய்வினை தோஷங்கள் செய்திருப்பார்கள்.

அதிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலமாக “எடுத்து…எடுத்து….எடுத்து….” இந்தத் தோஷங்கள் உங்களுக்கு வராதபடி காக்க முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் வலுவை உங்கள் ஆன்மாவில் பெருக்கி விட்டால்
2.எந்தத் தோஷங்களும் உங்களைத் தாக்காது
3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் தீமையை நீக்கும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள். நீங்கள் தீமையை நீக்கிப் பழகி விட்டால் அடுத்து என்ன செய்யலாம்…?

யாராவது சங்கடத்தில் வருகின்றார்கள் என்றால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நல்லதாகிப் போகும்.
2.“உங்கள் குடும்பம் நல்லாகும்…!” என்று நீங்கள் இதைச் சொன்னால்
3.உங்கள் சொல் அவர்களையும் நல்லதாக்கும்.

இரவு தூக்கத்தையே தியானமாக எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

SLEEPING MEDITATION

இரவு தூக்கத்தையே தியானமாக எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு… “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே…” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது இல்லை)

அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால் மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது. அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்… உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது… பல நன்மைகளும் ஏற்படுமப்பா…!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்…
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் கெட்டது ஜீவன் பெறாது… அதனின் வினைச் செயலை மாற்றி… நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்…!”

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

மனித உடலில் உள்ள நாடிகளின் துடிப்பு எதனால் மாறுபடுகிறது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

nadi chakkar cleaning

மனித உடலில் உள்ள நாடிகளின் துடிப்பு எதனால் மாறுபடுகிறது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ணக் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

தாயின் சக்தி பற்றி நமக்குத் தெரியாத நுண்ணிய ஆற்றல்கள்

Power of Mother.jpg

தாயின் சக்தி பற்றி நமக்குத் தெரியாத நுண்ணிய ஆற்றல்கள் 

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யப்படும் போது பம்பாயில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தாயின் முக்கியத்துவத்தைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அவர் தாயாவது… கத்தரிக்காயாவது…? என் தாய் எனக்குத் துரோகம் செய்கிறது.. அது செய்கிறது… இது செய்கிறது…! என்று சொன்னார். இன்ஜினியரிங் படித்திருக்கின்றார். ஆனால் நான் சொல்வதை எதிர்த்து அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

தன் மனைவியின் சொல்லை ஓங்கி வளர்த்துக் கொண்டார். அவருடைய அம்மா தன் மனைவிக்கு மிகவும் தொல்லை கொடுத்தது என்று சொன்னார். ஆகையினால் நான் சொல்வதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

பெரிய வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அன்றைக்கே (சுமார் 40-45) ஆண்டுகளுக்கு முன்) முப்பது ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவருடைய மனைவியும் குழந்தைளும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவரிடம் சொல்லி விட்டு நான் கல்கத்தா பக்கம் சென்றுவிட்டேன். அவருடைய சந்தர்ப்பம் ஒரு நாள் காட்டுக்குள் போய்க் கொண்டிருந்தார். தன் மனைவியையும் பிள்ளைகளையும் கூட அழைத்துச் சென்றிருந்தார்.

கேமரா வைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதிலேயே கவனமாக இருந்து முன்னாடி பார்த்துக் கொண்டிருந்ததில் பின்னாடி யானை வந்ததைக் கவனிக்கவில்லை.

யானை அவரை “லபக்…” என்று தூக்கி விட்டது. தூக்கிய உடனே அதைப் பார்த்த அவருடைய குழந்தையும் அவர் மனைவியும் “அம்மா…….!” என்று சப்தம் போட்டார்கள்.

தன் மனைவியும் குழந்தையும் அம்மா என்று சப்தமிட்டதைக் கேட்டு இவரும் “அம்மா…” என்று சப்தம் போட்டிருக்கின்றார். அந்தச் சப்தங்களைக் கேட்டதும் யானை அவரை அப்படியே வைத்திருக்கிறது.

கொஞ்ச நேரம் வைத்திருந்துவிட்டு அப்படியே அவரைக் கீழே இறக்கிவிட்டுச் சென்று விட்டது. அவரை அடிக்கவில்லை. “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…!” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்,

இந்தச் சக்தியின் உண்மையின் நிலையை அவர் உணர்ந்த பிற்பாடு அவர் என்னைத் தேடி வந்தார். காசியில் நான் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் என்னைத் தேடி வந்து சொன்னார்.

என் தாய்க்கு உண்டான சக்தியை யானையிடமிருந்து தப்பிய அன்றைக்குத் தான் உணர்ந்தேன்… என்று சொன்னார்.
1.இதை எல்லாம் ஏன் சொல்கிறேன்…? என்றால்
2.இந்த மனித வாழ்க்கையில் “தாயை மறந்தால் மனிதன் இல்லை…!”

ஒரு நாய் நம்மைக் கடிக்க வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அம்மா……! என்று சப்தம் போடுங்கள். அப்படியே அந்த நாய் நிற்கும். உங்களைக் கடிக்காது.

ஆனால் அடி…! என்று சொன்னாலும் கடிக்கும்… முருகா…! என்றாலும் கடிக்கும். அப்பொழுது தாய்க்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் தாயை நாம் எத்தனை பேர் மதிக்கிறோம்…? தாயை மதிப்பது இல்லை.
1.அதே சமயத்தில் நம் பிள்ளையும் தாயையும் மதிப்பதில்லை தந்தையையும் மதிப்பதில்லை.
2.இப்படித்தான் நம் பிள்ளைகளையும் வளர்த்துள்ளோம்…!

நாம் சிறிய குழந்தையாக இருக்கும் பொழுது பல சேட்டை செய்கின்றோம். குறும்புத்தனம் எல்லாமே செய்கின்றோம். தாய் என்ன செய்கிறது..?

நம்மைத் வெளியிலே தூக்கி போட்டுவிடுகிறதா… இல்லையே…!” எதையோ சொல்லி அரவணைத்துப் பிள்ளை எத்தனை சேட்டை செய்தாலும் “இந்தாடா கண்ணு… அதைச் சாப்பிடுடா இதைச் சாப்பிடுடா… ஏன்டா இப்படி இருக்கிறாய்…? என்று தான் கெஞ்சிக் கேட்கும்.

ஆனால் வளர்ந்த பின் தாய் ஒரு சொல்லைச் சொன்னது என்றால் “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகிறாய்…!” என்று தாயைப் பேசுகிறவர்கள் தான் நாம் இருக்கிறோம். தாயை மறுக்கும் நிலையே வருகிறது.

ஒரு பித்துப் பிடித்த தாயாக இருந்தாலும் சரி… உன் குழந்தையை அடித்துவிட்டார்கள்..! என்று யாராவது சொல்லட்டும். பிள்ளை மேல் கவனம் இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்றால் உடனே பதறி அழும்.

ஆனால் அதே பித்துப் பிடித்த தாயை இன்னொருவர் அடித்தார் என்றால் “கிரகம்…! அதற்கு அப்படித்தான் வேண்டும்…” என்று பிள்ளையின் உணர்வுகள் அந்த வழிக்குத்தான் செல்கின்றது. தாயை இணைக்கும் நிலை இல்லை.

1.தாயை இணைக்கும் நிலை வந்து
2.அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில் தாயை எந்த அளவிற்குப் போற்றிது துதிக்கின்றோமோ
3.அந்த உணர்வின் தன்மை என்றுமே நமக்கு உறுதுணையாக இருக்கும்

தாயின் உணர்வே நம் உடல். நாம் அம்மா…. என்று எண்ணி ஏங்கினால் நம்மை அந்தத் தாயின் உணர்வுகள் பாதுகாக்கும். ஒரு காரியம் நடக்கவில்லை என்றால்
1.“அம்மா…!” என்று சொல்லி அம்மாவின் அருளைப் பெறுங்கள்
2.மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்
3.உடனடியாக அது நடக்கும்… இதைச் செயல்படுத்திப் பழகுங்கள்

விநாயகரைக் காட்டும் பொழுது ஞானிகள் அதைத்தான் காட்டுகின்றார்கள். தன் தாய் தந்தையை நினைவுபடுத்தி அங்கே வணங்கும்படிச் செய்கின்றார்கள்…?
1.நீ இதை உனக்குள் வினையாக்க வேண்டும்
2.அருள் ஒளியை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…! என்று தெளிவாக்குகின்றார்கள்.

சைவம் அசைவம் பற்றிய தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

blissful meditation

சைவம் அசைவம் பற்றிய தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

 

1.தாவர இனம் சைவம்.
2.நாம் உணவாக உண்பது அணுவாக ஆவது அசைவம்.
3.செடி இருந்த இடத்தில் இருந்து தன் சக்தியை எடுத்துக் கவர்வது சைவம்.
4.ஆனால் அந்த செடியின் சத்தை நுகர்ந்து அந்தச் செடி இருக்கும் பக்கம் தன்மை நகர்ந்து சென்று அதை உணவாக எடுத்து செல்லும். உயிரினங்கள் அசைவம்
5.இருந்த இடத்தில் உணவாக உட்கொண்டால் சைவம்.
6.நகர்ந்து சென்று அதை உணவாக உட்கொண்டால் அசைவம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால் நம் உணவுக்காக மற்ற அசைவத்தைச் சாப்பிடுகிறோம். ஆட்டைச் சாப்பிடுகிறோம். ஆடு விஷத்தின் தன்மை கொண்டு உடலாக ஆனது.

அதை நாம் சாப்பிட்டு உடலில் சேர்ந்தால் என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள்…! அந்த அணுக்கள் எல்லாம் நம் உடலாக உருவாகிறது. அப்போது ஆட்டுக் கறியையே தான் மீண்டும் கேட்கத் தோன்றும்.

அந்த ஆட்டு கறி மேல் ஞாபகம் அதிகமான பின் அதனின் விஷத் தன்மை நமக்குள் கூடி மனித உணர்வுகள் இங்கே குறைய ஆரம்பிக்கின்றது.
1.குறைந்த பின் சாகப் போகும் போது ஆட்டுக் கறி மீது தான் ஞாபகம் வரும்.
2.ஆக எதை விரும்பிச் சாப்பிட்டோமோ அந்த ஞாபகம் வரும்.

உயிர் பிரியச் சிரமப்படுகிறது என்றால் பெரியவர்கள் என்ன சொல்வார்கள்…? கறியை நிறையச் சாப்பிட்டிருக்கின்றார். இரண்டை வேக வைத்துக் கொடுங்கள். சீக்கிரமே உயிர் போகும்…! என்று சொல்வார்கள்.

அந்த நினைவுடன் உயிர் வெளியில் போனால் அப்புறம் நேராக ஆட்டின் உடலுக்குள் தான் போகும். அந்த உடலுக்குள் போய் நம்மை ஆடாகப் பிறக்கச் செய்யும்.

இன்றைக்கு மனிதனாக இருந்து ஆட்டை ருசித்துச் சாப்பிட்டால் நாளைக்கு ஆடாகி மே…மே…! என்று கத்த வேண்டியது தான்.

ஆனால் உங்களை நான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் உயிர் உங்களை இப்படித் தான் மாற்றும். ஒன்றை விழுங்கி வருவது தான் அசைவம்.

1.ஆக மொத்தம் நமக்குள் சைவமாக இருக்கக்கூடியதை
2.நாம் உணவாக அணுவாக உருவாக்குதல் வேண்டும்.
3.சைவத்துக்கு போய்விடுவோமா… செடி கொடிக்குப் போவோம் என்று நினைக்காதீர்கள். அப்படிப் போக முடியாது.

சில சாமியார்கள் என்ன சொல்வார்கள். நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன். நான் செடிகளில் விளைந்ததையும் காய் கனிகளையும் பச்சையாகத்தான் சாப்பிடுகிறேன்.

இந்த நிலைகளில் நான் பரிசுத்தமாக இருக்கின்றேன்…! என்று பச்சையாகச் சாப்பிட்டால் என்ன செய்யும்…? அந்தச் செடி கொடியில் இருக்கின்ற மணமே (வாசனை) இவர்கள் உடலிலும் ஆன்மாவிலும் உயிரிலும் சேரும்.

அதில் உள்ள உணர்வின் தன்மை பெற்ற பின் இந்த உயிர் வெளியிலே சென்ற பின் அந்தச் செடி கொடிகளுக்குத் தான் செல்லும்.
1.நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால்
2.செடி கொடிகளுக்குள் சென்று புழுவாகவோ பூச்சியாகவோ தான் பிறக்க வேண்டும்.

மாமிசத்தை வேக வைத்து எடுத்தாலும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகும் போது அசைவத்தை உணவாக உட்கொள்ளும். மீண்டும் மிருக இனங்களுக்குள் தான் செல்வோம்.

ஆகையால் இத்தகைய நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும். மனிதனான பின் வேக வைத்து மாற்றி அருள் ஒளியை நீங்கள் கூட்டிக் கொண்டால் வேகா நிலை பெறலாம்.

அருள் ஒளியின் உணர்வாகச் சுடராக நமக்குள் மாற்றப்படும் போது நாம் வேகா நிலை பெறுகின்றோம்.
1.அதாவது போகாப்புனல்
2.இன்னொரு சரீரத்திற்குள் போவதில்லை…!

நாம் ஏன் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Pranayamam - soul cleaning

நாம் ஏன் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம். நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா ஆத்ம சுத்தி என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

கேன்சர் நோயை நீக்கும் இயற்கை வழி

turmeric and neem medicine

கேன்சர் நோயை நீக்கும் இயற்கை வழி

நாம் நல்ல நிலையில் இருக்கின்றோம். நல்ல உணவைத்தான் உட்கொள்கின்றோம். ஆனாலும் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வை உற்றுப் பார்த்து அடிக்கடி அவன் உணர்வை எடுத்தால் அது விஷமான அணுக்களை நம் உடலுக்குள் உருவாக்கும் நிலை வந்து விடுகின்றது.

நமக்குள் இருக்கும் எலும்புகள் மேக்னட் (காந்த சக்தி கொண்டது). அதே சமயத்தில் எலும்புக்குள் இருப்பது ஊண். வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது
1.நம் கண்ணில் உள்ள கரு விழி
2.எலும்புக்குள் உள்ள ஊணில் முதலில் அதைப் பதிவாக்கி விடுகின்றது.

ஆக அந்த வேதனப்படும் உணர்வை நம் ஆன்மாவாக (நம்முடைய ஈர்ப்பு வட்டம்) மாற்றுகின்றது. அதிலிருந்து நாம் இழுத்துச் சுவாசித்த உடனே இந்த உணர்வை எலும்பில் ஒட்ட வைக்கின்றது.

வேதனை உணர்வு எங்கே எப்படி அணுவாக ஆனதோ நமக்குள் உருவாக்கி மனித உடலில் எலும்பை உருவாக்கியது அல்லவா… அதை அது சாப்பிடத் தொடங்கும். அதாவது அந்த அசைவத்தை அது சாப்பிடும்.

ஏனென்றால் அது வளரும் தன்மை வளர்ச்சி பெற்றது. எலும்பை உருவாக்கிய அணுக்கள் அது மடிகிறது. அப்பொழுது எலும்புகள் எல்லாம் வளர்ச்சி குன்றத் தொடங்கும். அதை டி.பி. என்று சொல்கிறோம்.

அதை மாற்ற மருத்துவத்தில் என்ன செய்கிறார்கள்…?
1.விஞ்ஞான அறிவு கொண்டு கிருமிப் போர் என்ற நிலையில் மருந்தை இஞ்செக்சன் (INJECTION) செய்கிறார்கள்.
2.எதிர்மறையான அணுக்களை உடலுக்குள் உருவாக்குகின்றார்கள்.
3.அந்த உருவை உருவாக்கப்படும் பொழுது அது டி.பி. அணுக்களை உணவாக உட்கொண்டாலும்
4.அதிகமாகச் சாப்பாடு கொடுத்து நல்ல அணுக்களை உருவாக்கி
5.டி.பி. அணுக்களைக் கொன்று டி,பி. நோயையும் இன்று சுலபத்தில் குணப்படுத்துகின்றார்கள்.

ஆனால் கேன்சர் நோய் வந்தது என்றால் அதை மாற்றுவது அவ்வளவு சுலபமானது அல்ல…! வேதனை… வேதனை… என்ற உணர்வு ஆன பின் நம் உடலில் விஷத் தன்மையான அணுக்களின் பெருக்கமாகின்றது.

இந்த விஷமான அணுக்களானால் மரத்தில் விழுதுகள் பாய்ச்சுவது போல் கேன்சரை உருவாக்கும் அந்த அணு உடல் முழுவதும் அதனின் விழுதுகளைப் பாய்ச்சும்.
1.மற்ற நல்ல அணுக்களை இயக்கும் விஷத் தன்மைகளை எல்லாம் அது எடுத்துக் கொண்டு ஒரு பக்கம் குவியும்.
2.கேன்சர் அணுக்களைக் கொல்வதற்கு மருந்து கொடுத்தாலும் கூட நல்ல அணுக்களும் மடிந்திடும்.
3.ஆகவே கேன்சருக்கு மருந்து கொடுத்து அதைக் கொல்வது என்பது முடியாது.

அதனால் தான் விஞ்ஞான அறிவில் என்ன செய்கிறார்கள்…? கேன்சர் உருவான அந்தப் பாகத்தில் எலெக்ட்ரிக் (மின்சாரத்தை) வைத்துக் கருக்குகின்றார்கள்.

கருக்கினாலும் கூட அது நொந்து போனால் அழுகிய உணர்வு கொண்ட அணுக்கள் டி.பி. போன்று உருவாகும். மீண்டும் நல்ல அணுக்களை உணவாக உட்கொள்ளும் நிலைகள் வரும். அந்தப் பாகம் அவஸ்தைப்பட்டது தான் மிச்சம்.

ஆக கேன்சர் நோயை நீக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.

ஆனால் அதை தியானத்தால் நாம் போக்க முடியும். எப்படி…?
1.மஞ்சள் விஷத் தன்மையை அடக்கக்கூடியது.
2.வேப்பிலையையும் மஞ்சளையும் இரண்டையும் சமமாக வைத்து அரைத்துத் தண்ணீர் போல் கரைத்துக் கொடுக்க வேண்டும்.

கேன்சர் என்று தெரிந்து விட்டாலே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது எண்ணி வலுவாகத் தியானிக்க வேண்டும்.

தியானித்த பின் மனைவியும் இதே உணர்வை எடுத்து
1.“என் கணவனுக்கு உடல் நலம் சரியாக வேண்டும்” என்று எண்ணத்தில்
2.அந்த மருந்தைக் (மஞ்சள் வேப்பிலை) கொடுத்தால் இந்தக் கேன்சர் நோயை நீக்க முடியும்.

உங்களுக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது. இந்த முறைப்படி தியானம் எடுத்துக் கொண்டவர்கள் உங்கள் எண்ணத்தினால் கேன்சர் நோயைப் போக்க முடியும்