சுவாச நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது – 2

Treaure of breathing

சுவாச நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது – 2

 

அகம் புறம் ஞானம் இந்த நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்குக் கொண்டுவர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணி…
2.புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்றுள்ளார்கள்.
3.ஞானத்தையே மறந்து விட்டார்கள்…!

ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாச் சக்திகளையும் அளித்துள்ளான் அந்தச் சக்தி தேவன்.
1.அந்த நிலையை எப்படி ஈர்த்து வாழ்வது…? என்ற நிலையை
2.நாம் தான் வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

நம் ஞானக் கண்ணினால்… நாம் இருந்த நிலை கொண்டே உலகனைத்திலும் உள்ள நிலைகளை அறிந்து செயல்பட முடியும். நம் ஞானக் கண்ணினால்
1.நாம் நம்மை மறந்து
2.தியான நிலையில் அமர்ந்து காண்பதல்ல… அந்த ஞானக் கண்ணின் நிலை…!

நாம் சகல நிலை கொண்டும் வாழும் வாழ்க்கை முறையில் வாழும் பொழுது கோப நிலையில்… சாந்த நிலையில்… துவேஷ நிலையில்… பிறரைப் போற்றும் நிலையில்… சோர்வு நிலையில்… மகிழ்வு நிலையில்…! இப்படிப் பல நிலை கொண்ட வாழ்க்கை நிலையில்
1.ஒவ்வொரு நிலை கொண்டும் நாம் இருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலை நம் உயிரணுவிற்கு எந்த நிலையை ஏற்றுத் தருகிறதோ
3.அந்த நிலையிலிருந்து தான் அகம் புறம் ஞானம் செயல்படுகின்றது.

நடை முறையில் சஞ்சலங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையுடனே கலந்து தான் வரும். வந்ததை எண்ணியோ… வருவதை எண்ணிக் கொண்டோ.. இருந்து என்ன பயன்…?

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு அச்சக்தியிலிருந்து கிடைத்த அந்த ஞானக் கண்ணின் நிலையைப் பெற்று நம் ஆத்மாவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1.நம் ஆத்மாவை நம் உடலும் நம் எண்ணமும் காத்துக் கொண்டிருக்கவில்லை.
2.நாம் எடுக்கும் சுவாச நிலையினால் தான் சகலமும் நமக்கு நடக்கிறது.
3.சுவாசம் என்பதனை ஒரு பெரும் பொக்கிஷமாக யாரும் எண்ணுவதில்லை.

நம் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுமே அச்சுவாச நிலையை ஈர்த்து வெளியிடும் தன்மையுள்ளது. இந்த நிலையின் உண்மையெல்லாம் அன்றைய ஞானிகள் தன் ஞான நிலையில் அறிந்து வெளியிட்டுள்ளார்கள்.

அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளையே நம்முடைய சுவாசமாக்கிடல் வேண்டும்…!

செய்த தவறுக்காக ரிஷி சாபம் கொடுத்தார்…! பின் அதற்குரிய சாப விமோசனமும் அவர் கொடுத்தார்…! என்று காவியங்கள் உணர்த்துகின்றது – அந்த ரிஷி யார்…?

Soul powers

செய்த தவறுக்காக ரிஷி சாபம் கொடுத்தார்…! பின் அதற்குரிய சாப விமோசனமும் அவர் கொடுத்தார்…! என்று காவியங்கள் உணர்த்துகின்றது – அந்த ரிஷி யார்…?

 

ரிஷி என்ன செய்தார்…? .செய்த பாவத்திற்காக வேண்டி நீ பாம்பாகப் போ…! என்றும்… பேயாகப் போ…!” என்றும் சாபமிடுவதாக விளக்க உரையைக் கொடுக்கிறார்கள்.

ஐயனே…! நான் அறியாது செய்த பிழைக்கு என்ன செய்வது….?

நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய். அப்பொழுது அவன் கை படும். நீ மீண்டும் மனிதன் ஆவாய். அதனின் அர்த்தம் என்ன…?

ஒரு நல்லவன் தான் நடந்து போகிற பாதையில் பாம்பைப் பார்க்கிறான். அது தன்னைக் கடித்துவிடும்…! என்று அடிக்கின்றான். “மனிதன் அடித்து விடுவான்…!” என்று அது இவனைப் பார்க்கிறது.

1.பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் இவன் பாம்பு உடலுக்குள் வருவான்.
2.பாம்பை இவன் அடித்தான் என்றால் பாம்பின் உயிர் அவன் உடலுக்குள் போகும்.
3,மனித உடலுக்குள் வரும் பாம்பின் உயிர் மனித உணர்வுகளைக் கவர்ந்து மனிதனாகப் பிறக்கின்றது.

அதே சமயத்தில் நீ பேயாகப் போ…! என்றால் என்ன அர்த்தம்.

என்னை இப்படிச் செய்தானே… அப்படிச் செய்தானே பாவி…! அவன் எல்லாம் பாவி உருப்படுவானா…! என்று நினைப்பார்கள். இந்த உணர்வு வரப்போகும் போது அவன் உடலுக்குள் போகின்றது. அதே உணர்வை வைத்து அங்கே ஆட்டிப் படைக்கிறது.

அப்பொழுது ஐயனே…! இதிலிருந்து தப்பும் வழி எனக்கு ஒன்றுமில்லயா,,,?

நல்லவனுடைய நிழல் உன் மீது படும். நீ உள்ளிருந்து மனிதனாக ஆவாய் என்று ரிஷி சொல்வதாகக் காட்டுவார்கள்.

ஏனென்றால் நமக்கு இப்படிக் குட்டி கதைகளையும் போட்டு விளக்கியும் காட்டுகிறார்கள். இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் என்றைக்குப் போய் எதை நாம் புரிந்து கொள்ள போகிறோம்.

காவியத் தொகுப்புகளை ஞானிகள் கொடுத்ததில் தப்பில்லை. ஆனால் அதை எல்லாம் எடுத்து அவரவர்கள் சுயநலத்திற்கு எப்படி எப்படியோ திசை திருப்பி விட்டு விட்டார்கள்.
1.அப்போது அந்த ரிஷி யார்….? நம் உயிர் தான்.
2.நாம் எண்ணியதை எல்லாம் சிருஷ்டிப்பது அவனே தான்.

நமக்கு ஆகாதவர்களைப் பற்றி என்ன நினைக்கிறோம்…! அவன் அப்படித் தான் பட வேண்டும். வேதனைப்பட்டால் தான் அவனுக்கு அறிவு வரும்..! என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவன் படும் வேதனைகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் விஷத் தன்மைகள் வருகிறது.

ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வுகளை நமக்குள் துடைக்கத் தவறினால் அதே உணர்வை உயிர் நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

ஆகையினால் எத்தனையோ கோடி நிலைகளைக் கடந்து பல உடல்கள் மாறி
1.இன்றைக்கு மனிதனாகி விஷத்தை நீக்கும் ஆற்றல் பெற்ற நிலைகளில் இதைச் செய்யத் தவறினால்
2.அதன் படி நான் வளர்த்தேன் என்ற நிலையில்
3.நமக்குச் சாபமிடுகின்றது உயிர் என்று அதை அங்கே தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.
4.ரிஷி என்பது உயிர். அது தான் இங்கே நீ பாம்பாகப் போ…! என்று சாபமிடுகின்றது.

ஆகாதவனைப் பார்த்தால் அப்படித் தான் கஷ்டப்பட வேண்டும் என்று ரசிக்கின்றான். இப்போது இந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டால் இறந்த பிற்பாடு என்ன செய்கிறோம்…?

பாம்பு என்ன செய்கிறது…? தன்னுடைய விஷத்தால் மற்ற உயிரினங்களைக் கொத்தி அதை ரசித்து உணவாக உட்கொள்கின்றது. ஆக பாம்பாகப் போ…!

ஒருவனைப் பழி தீர்க்கும் உணர்வுடன் உடலை விட்டுப் பிரிந்தால் பேயாகப் போ…! அவனை அடித்துக் கொல்ல வேண்டும் என்று எண்ணத்துடன் செல்லும் பொழுது பேயாக (ஆவி) அந்த உடலுக்குள் போய் ஆட்டிப் படைக்கின்றது. அதிலிருந்து மீளும் வழி இல்லை.

மந்திரத்தாலோ தந்திரத்தாலோ யந்திரத்தாலோ அந்தப் பேயை ஓட்டி விடுவேன் என்றால் அது ஒன்றும் முடியாது. ஆனால் இன்னொரு ஆவியின் வலிமையைக் கொண்டு இதை அடக்க முடியும். அப்புறம் கொஞ்ச நாள் போனது என்றால்
1.முதல் ஆவியை அடக்குவதற்காகப் புதிதாக ஏற்றிய அந்த ஆவியும்
2.நானும் வந்துட்டேன்டா அண்ணன்…! என்று சொல்லி விட்டு அதுவும் நமக்குள் ஆட்டிப் படைக்கத் தொடங்கும்.
3.மீண்டும் மீண்டும் தாயத்தை இங்கே கட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒரு முன்னேற்றமும் இருக்காது.
4.ஆயிரம் தாயத்தைக் கட்டி இருப்பார்கள்….! ஆனால் கை கால் குடைச்சல் இருக்கும்.

குருநாதர் காட்டிய வழியில் இப்பொழுது நீங்கள் தியானம் இருக்கின்றீர்கள். யாருடைய உடலிலாவது ஆவி இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் நான் பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள அந்த ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த நிழல் பட்டால் அந்த உணர்வுகள் ஆகும்…?

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்து இரத்ததத்தில் தான் நாம் கலக்கச் செய்கின்றோம். அந்த ஆன்மாக்களும் (ஆவி) இரத்தத்தில் தான் இருக்கிறது.

மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்து இரத்தத்திற்குள் கலக்கும் பொழுது அதைப் பலவீனப்படுத்துகின்றோம். அந்த அருள் ஞானிகளின் உணர்வை வளர்க்கிறோம்.
1.அந்த ஆன்மாவும் அந்தச் சக்தியைச் சேர்ந்து இழுக்கத் தொடங்கினால்
2.நமக்குள் தீமையின் நிலைகள் மாற்றும். சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா…!

அப்போது நல்லவன் நிழல் படும் பொழுது மனிதனாக பிறக்கும் தகுதி பெறுகிறது. இதுகளெல்லாம் நமக்குக் காவியங்கள் மூலம் தெளிவாக வாழ வழி வகுத்துக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஞானிகள் சொன்ன அந்த நிலைகளைத்தான் யாம் (ஞானகுரு) உணர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
1.அருள் உணர்வின் தன்மைகளை எப்படிப் பெருக்க வேண்டும்..?.
2.வாழ்க்கையில் வரும் இடையூறுகளிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும்…? என்று தெளிவாக்குகின்றோம்.

“அதர்வண…!” என்பதன் பொருள் என்ன…?

Murugan Veerabhadra

“அதர்வண…!” என்பதன் பொருள் என்ன…?

 

நமக்கு வேண்டியவர் ஒருவர் நோயினால் கடுமையாகத் துன்பப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பார்க்கும் பொழுது நமக்குள்ளும் வேதனையாகி நம்மிடம் இருக்கும் மகிழ்ச்சியை (நல்ல குணத்தை) அப்பொழுது இழக்கின்றோம் இது “அதர்வண…!”

(அதர்வண என்றால் மாற்றம் அடைதல் என்று பொருள்)

ஆனாலும் அந்த நேரத்தில் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று நமக்குள் இணைத்து அந்த வேதனையான உணர்வு நமக்குள் செயல்படாதபடி தடுக்கும் பொழுது அதுவும் “அதர்வண…!”

அதாவது அருள் ஒளியான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அவருக்குள்ளும் அதைப் பாய்ச்சி அந்த நல் வழியைச் செயல்படுத்தும் நிலையில்
1.மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நல்லதாக்கும் பொழுது அது அதர்வண.
2.நல்லதுக்குள் வேதனை கலக்கப்படும் பொழுது அதுவும் அதர்வண தான்
3.ஆக இரண்டுமே அதர்வண தான்.

ஆனாலும் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு உணர்வையும் அருள் ஒளியின் உணர்வாக நல்லதாகவே நமக்குள் மாற்றுதல் வேண்டும்.

யார் யாரிடம் எல்லாம் பழகினோமோ அவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

காலையில் எழுந்ததுமே ஒவ்வொருவரும் இந்த மாதிரி எண்ணி எடுக்க வேண்டும்.
1.ஏனென்றால் பழகியவர்கள் உணர்வு எல்லாம் நம் உடலுக்குள் இருக்கிறது.
2.அவர்களின் உணர்வுகள் அது வளராது இந்த அருள் சாப்பாட்டைக் கொடுத்து அதை மறைக்க வேண்டும்.
3.இப்படி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லை என்றால் என்ன செய்யும்…?

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று பார்த்தவுடனே பிறருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அந்த வேதனைப்படும் அணுக்களை நுகரச் செய்து நாமும் வேதனைப்பட ஆரம்பிப்போம்.

அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் வந்து என்ன செய்யும்…? விஷத்தை நுகரும் தன்மையாக அது வரும் பொழுது நல்ல அணுக்களைக் குறைத்து விடுகின்றது. விஷத்திற்கு அந்த அளவு வலு இருக்கின்றது.

அந்த மாதிரி ஆகாதபடி அடுத்த நிமிடமே நம் நல்ல அணுக்களைப் பாதுகாக்க வேண்டும்.
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதைச் சொல்லியே தீர வேண்டும்.

தீமைகளைப் பார்த்தாலும் தீமையான சொல்லைக் கேட்டாலும் இந்த உணர்வு உடலுக்குள் போகும் பொழுது “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த உபதேச வாயிலாக நீங்கள் இதைத் தெரிந்து கொண்ட பின் மற்ற தீமையான உணர்வுகளைக் கேட்க நேர்ந்தாலோ அல்லது பார்க்க நேர்ந்தாலோ
1.அவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற இந்த எண்ணத்தைத்தான் எண்ண வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களுக்குள் நன்மை பெறும் சக்தி பெறவேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
3.நாம் இப்படிச் சொல்லப்படும் பொழுது இது அதர்வண.
4.அவர்கள் சொன்ன உணர்வை அந்த அருள் மகரிஷிகளின் சொல்லால் அடக்கி விடுகின்றோம்.

இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நரசிம்ம அவதாரத்தில் சொன்னது போல் வாசல்படியிலேயே அதாவது நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் புகாதபடி இங்கேயே நீக்கி விடுகின்றோம். உள்ளுக்குள் போகாது.

நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி அந்த வலிமையின் துணை கொண்டு எதையுமே நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

எண்ணம்… சொல்… செயல்… எப்படி இருக்க வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Word of wisdom

எண்ணம்… சொல்… செயல்… எப்படி இருக்க வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

1.எண்ணும் எண்ணம்
2.சொல்லும் சொல்
3.செய்யும் செயல் எல்லாம் ஒன்றாக…
4.ஒன்றுடன் ஒன்று சுற்றும் நிலையில் இருக்க வேண்டும்.
5.ஏனென்றால் சொல்லும் சொல்லைக் காப்பவனே “பெரும் நாணயஸ்தன்…!”

மனித நிலையில் சொல்லும் சொல்லைக் காப்பாற்றி விட்டால்…! அவன் நிலை என்றுமே உயர்ந்து நிற்கும்.

நீ வேறல்ல உன் எண்ணம் வேறல்ல உன் சொல் வேறல்ல உன் செயல் வேறல்ல எல்லாம் கலந்துதான் மனிதன் என்பவன். வெறும் ஆத்மாவும் உடலும் மட்டுமல்ல மனிதன், உயிரும் உடலும் மட்டும் தான் மனிதனல்ல. எண்ணமும் சொல்லும் செயலும் தான் மனிதன்,

உடலும் அழிகின்றது ஆத்மாவும் பிரிகின்றது. எண்ணிய எண்ணமும் சொல்லிய சொல்லும் செய்த செயலும் நிலைக்கின்றது. ஆகவே
1.எண்ணும் எண்ணத்தை நல் எண்ணமாக எண்ண வேண்டும்.
2.நல்ல சொல்லும் நல்ல செயலும் தானாக வரும்.

எண்ணம் என்பது எங்கிருந்து வருகின்றது…? உன் உடலில் எந்த உறுப்பப்பா எண்ணம்…? எண்ணும் எண்ணம் எல்லாம் உன் நிலையைச் சுற்றித்தான் உள்ளது. சுற்றி வரும் காற்றிலே நல்ல பூவின் மணமும் கொடிய நஞ்சுத் தன்மையும் உண்டு. நீ எடுக்கும் தன்மையிலே தான் அது உன்னுள்ளே வந்து சேரும்.

எண்ணங்களைக் காவியத்தில் வடித்திடலாம். காலங்கள் மாறினாலும் காவியங்கள் அழிவதில்லை. பெரும் ஞானிகளின் நிலையும் அது தான்.

பெரும் பட்சிகள் வானிலே பறந்தாலும் அதன் எண்ணமெல்லாம் ஒன்றிலேயே நிலைத்திருக்கும். நிலைத்த எண்ணத்திலேயே தன் உணவை எடுத்துச் சென்றுவிடும். பறவையின் பார்வையின் தன்மையில் தான் சொல் உள்ளது.

நான் முதலில் சொல்லிய கருத்தின்படி எண்ணத்தையும் செயலையும் காட்டியது. பறவையின் நிலை எல்லாம் இதுவே தான்.

எண்ணம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் பொருள் இது தான். எண்ணம் சொல் செயல் என்பது புரிந்ததா…?

1.உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்.
2.சொல்லும் சொல்லாக நான் வந்திடுவேன்
3.செய்யும் செயல் தானாகவே வந்துவிடும்.
4.எண்ணத்தை உயர்த்திவிட்டால் சொல்லும் உயர்ந்துவிடும்… செயலும் ஓங்கிவிடும்.

எண்ணம் என்பது தியானத்திற்கு மட்டுமல்ல. நீ எடுக்கும் எந்த எண்ணத்திற்கும் எந்த நிலைக்கும் இதுவே தான்.

நாளெல்லாம் நல்ல நாள் தான்
நாளெல்லாம் நடத்திடலாம்
நாளைக் கடத்திட வேண்டாம்
நாளை நாளை என்று…!

பிறரைக் காக்க வேண்டும் என்ற நிலையில்… அவர்கள் கஷ்டங்களையும் துன்பங்களையும் நாம் எடுத்துக் கொண்டால் “நம்மை யார் காப்பது…?”

Fool proof protection

பிறரைக் காக்க வேண்டும் என்ற நிலையில்… அவர்கள் கஷ்டங்களையும் துன்பங்களையும் நாம் எடுத்துக் கொண்டால் “நம்மை யார் காப்பது…?”

 

எப்பொழுதெல்லாம் தீமையின் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று அவனிடம் வேண்டி அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று பல முறை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வின் வலுவை உடலுக்குள் இப்படிக் கூட்டினால்
2.இந்த உணர்வின் “மணம்” வரப்படும் பொழுது தீமைகளை உந்தித் தள்ளிவிடும்.
3.தீமைகளை நுகரும் சக்தி இழக்கப்படுகின்றது. உள் புகாமல் தடுக்கப்படுகின்றது.

இதைத் தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான்…! என்று ஞானிகள் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

1.நமக்கு வாசல் படி எது..?
2.மூக்கின் வழியாகச் சுவாசிக்கும் இந்தச் சுவாசத்தின் வழியாகத் தானே உள் செல்கிறது.
3.மூக்கின் வழியாகச் செல்லும் தீமைகளைப் புருவ மத்தியில் அமர்ந்து தடுக்க (வகுந்திட) வேண்டும்.

எல்லாவற்றையும் இரட்சிப்பது யார்…? அவனே தான்…! யார்…? நம் உயிர் தான்…!
1.யாரையும் வேண்டாம் என்று சொல்வதில்லை.
2.வருவோரை அரவணைப்பதும் அவன் வேலை தான்.
3.நம் உடல் வரவழைக்கின்றது.
4.வரம் கொடுத்துவிடுகின்றது நம் உயிர்.
5.ஆனால் நாம் நுகர்ந்த பின் பிரம்மமாகின்றது சிருஷ்டியாகின்றது.
6.உருவான உணர்வுகள் உடலாகின்றது. அப்பொழுது இங்கே அரவணைக்கின்றது.

இதைச் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…? அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதை நமக்குள் உருவாக்க வேண்டும். நாம் எண்ணியதைத்தான் உயிர் உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் உருவாக்கி நாம் பார்க்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…! என்று எண்ண வேண்டும். துன்பமோ துயரமோ கஷ்டமோ நஷ்டமோ கொண்டு மற்றவர்கள் வந்தாலும் நாம் அவர்களிடம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறுவீர்கள்…
2.நிச்சயம் நன்றாக இருப்பீர்கள்…! என்று சொன்னால்
3.இந்த உணர்வுகள் அவர்கள் தீமைகளைத் தள்ளுகின்றது.
4.நமக்குள் அந்தத் தீமைகள் வராது.

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இப்படிச் சரியான முறையில் எண்ணிப் பாருங்கள். நோயோ கஷ்டமோ துன்பங்களோ “எல்லாமே நீங்கிப் போகும்…!” என்று நீங்கள் சொல்லுங்கள்.

இப்படி உங்கள் எண்ணம் தான் மற்றவர்களின் தீமைகளை நீக்க வேண்டும். அவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது (இது மிகவும் முக்கியம்)

ஆனால் அவர்கள் சொல்லைக் கேட்டு நீங்கள் பலவீனப்படுத்திச் சொன்னால் “என்ன காலமோ…? இந்த மாதிரி வந்துவிட்டது…! என்ற நிலையில் என்று அந்த விஷமான உணர்வுகள் இயக்கிவிடும்.

சாமிக்கு (குருநாதருக்கு) என்ன தெரியும்…? நான் சொல்கிறேன் போகிறது பார்…! என்பார்கள். அப்புறம் ஆணி வேரையே பிடுங்கிவிட்டு விடுகிறார்கள்.
1.பாசத்துடன் பிறருடைய கஷ்டங்களைக் கூர்ந்து கேட்டு
2.இந்த மாதிரிச் சொல்லும் பொழுது இதைக் கடந்து வரப்படும் பொழுது நாளடைவில் அதே கஷ்டம் இங்கேயும் அதிகமாகும்.

அந்த மாதிரி எல்லாம் ஆகாதபடி தடுக்க வேண்டுமா இல்லையா…?

ஏனென்றால் மனிதனுடைய வாழ்க்கையில் பிறருடைய கஷ்டமான உணர்வுகளைப் பண்புடன் அன்புடன் பரிவுடன் கேட்டுணரப்படும் பொழுது அவைகள் எல்லாம் நமக்குள் பிரம்மமாகின்றது. உடலுடன் உடலாக ஆக்கிவிடுகின்றது.

அப்படி ஆகவிடாமல் தடுக்க ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து இணைத்து அந்த வலுவைக் குறைக்க வேண்டும்.

“நீங்கள் ஒவ்வொருவரும் அந்த அருள் மகரிஷியாக வேண்டும்…!” என்பது தான் என்னுடைய ஆசை. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னிடம் (ஞானகுரு) அதைத்தான் சொன்னார். அவர் காட்டிய அதே உணர்வைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம். உபயோகப்படுத்துங்கள்…!

ஆசை இல்லை என்றால் எதுவுமே இல்லை…!

Love and wish for Eswara

ஆசை இல்லை என்றால் எதுவுமே இல்லை…! 

1.பற்றற்று இருக்க வேண்டும்…
2.ஆசையில்லாவிட்டால் தான் உலக ஞானம் பெற முடியும் என்பது எல்லாம் இவர்களாகச் சொன்ன கதை.

பெரும் ஆசையினால் வந்தது தான் இந்த உலகமே. ஆசையில்லா விட்டால் இவ்வுலகமே இல்லை… ஜீவனும் இல்லை… பந்த பாசமும் இல்லை… பாற்கடலுமில்லை… பாழடைந்த நிலை தான் எங்கும் இருக்கும்…!

மனிதனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் ஆசையிலே தான் உலகமே உள்ளது. இந்த உலகம் மட்டுமல்ல… எல்லா உலகமும் ஈசனின் ஆசையில் தான் உள்ளது. ஈசனின் அருளைப் பெற்றிடவே பெரும் ஆசைதான் வேண்டும்.

1.பற்றற்றவன் என்பவனுக்கும் ஆசை இல்லாமல் இல்லை.
2.ஆசையில்லாதவன்…! என்று எவனும் இல்லை.
3.சித்தனுக்கும் ஞானிக்கும் மகரிஷிக்கும் ஆசையுண்டு.

ஈசனுக்கு ஆசையுள்ளதால் தான் ஞானி சித்தன் மனிதன் உயிரினங்கள் எல்லா ஜீவராசிகளுக்குமே ஈசனின் அருளை அளித்திடுகின்றான்.

எண்ணத்தை இன்பமாக்குங்கள் என்று சொல்லும் பொழுது அந்த எண்ணம் ஆசையில் தான் வருகிறது.
1.ஆசைக்கு நான் (ஈஸ்வரபட்டர்) எதிரியல்ல.
2.ஆசையுடன் தான் நானும் உள்ளேன்.
3.ஆசையுடனே இருந்திடுங்கள்..!

ஆசை என்பது வேறு… ஆனால் பேராசை என்பது வேறு…! பேராசை என்னும் பேயை ஒட்டிவிடுங்கள்.

“சுவாச நிலை… சுவாச நிலை…!” என்பதெல்லாம் நம் மனதைச் சாந்த நிலையில் வைத்துக் கொண்டு
1.நம் மனதில் வந்து மோதும் கோபம் தாபம் குரோதம்
2.எது வந்தாலும் அந்த நிலையை அடக்கிக் கொண்டு
3.பெரும் சாந்த நிலைக்கு வருவது தான் சுவாச நிலை.

அச்சுவாச நிலை வருவதற்கே அந்த ஆசை இருந்தால் தான் சுவாச நிலையே வரும். ஆசை தான் மனிதனே. சோர்வல்ல மனிதன்.

ஆசையை அடக்கிவிடு… ஆசையை அடக்கிவிடு…! என்று சொல்வதெல்லாம் சொல்பவனுக்கே அந்த நிலை இருப்பதில்லை.

1.ஆசையை விட்டுவிட்டால் இந்த ஆன்மாவுக்கு என்ன வேலை இந்த உடலில்…?
2.ஆசையை அடக்குபவனின் ஆன்மா தானாகப் பிரிந்துவிடும் தன் நிலைக்கே.

இவ்வுலகில் நாம் பிறந்த பலனை (மெய்ப் பொருளை அடைய) ஆசையுடனே பெற வேண்டும். நாம் பெற்ற குழந்தையை ஆசை இருந்தால் தான் வளர்க்க முடியும். உண்ணும் உணவையும் ஆசைய்டன் தான் உண்ண முடியும்.

ஆசையுடன் இருங்கள் என்பதும்… அன்புடன் இருங்கள் என்பதும்… ஒன்றே தான். ஆசை இல்லை என்றால் இந்த உலகில் அலையுமில்லை கடலுமில்லை.

செடிக்கும் மரத்திற்கும் ஆசையுள்ளது. மண் பேசும் கல் பேசும் என்பதும் இந்த ஆசையினால் தான். ஆசையில்லாதவன் பிறந்ததுமில்லை. ஆசையில்லாதவன் பிறக்கப் போவதுமில்லை.

ஆசையைப் பற்றிச் சொல்லும் பொருள் எல்லாம் என்ன என்றால்
1.தன் நிலை அறிந்து
2.உன் ஆசையை எண்ண வேண்டும் என்பது தான் அதனின் பொருளே.

ஆசையுடன் அருள் செய்வாய்… “குருதேவா ஈஸ்வரா…!”
ஆசையான இவ்வுலகில் ஆசையுடன் இருந்திடவே
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை…
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை…!

ஆசை ஆசை என்பதெல்லாம் உன் அருளைப் பெற்றிடவே – உன்
ஆசையை என் ஆசையில் பதித்திடப்பா…!
ஆசை மனதை எனக்கருளி
ஆசை அமுதை எனக்கூட்டு…!

ஆசையுடன் நான் தியானம் செய்ய ஆசியும் அருளும் வேண்டுமப்பா
ஆசியும் அருளும் வேண்டுமப்பா… ஆசியும் அருளும் வேண்டுமப்பா…!

நம்மைக் காக்கும் தெய்வம்

auspicious-time

நம்மைக் காக்கும் தெய்வம் 

 

தினசரி வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் பார்க்க நேர்கின்றது. அவர்களுடன் பழகவும் நேர்கின்றது. இருந்தாலும் அவர்களுடன் பழகும் பொழுது சிலரின் செயலைப் பார்த்தவுடன் நமக்கு வெறுப்பு வந்து விடுகின்றது.

அப்படி வந்தால் நம்முடைய காரியங்கள் தடைப்படுகின்றது. கோபமும் எரிச்சலும் ஆத்திரமும் வேதனையும் வருகின்றது. இதை எப்படி மாற்றுவது…?

நம்முடைய குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் பார்க்கும் அனைவரையும் மதித்துப் பழக வேண்டும். ஆகாதவர்களைப் பார்க்கும் போது நாம் என்ன செய்கிறோம்…?
1.போகிறான் பார்… அன்றைக்கு என்னென்ன செய்தான்…?
2.இப்பொழுது என்ன செய்கிறான் பார்…! ஒழுங்காக இருக்கின்றானா பார்…! என்ற வகையில்
3.அவர்களைப் பார்த்தாலே நமக்குப் பிடிக்காமல் இருக்கும்.
4.அவர்களை நாம் மதிப்பற்ற நிலைகள் பார்க்கிறோம்.
5.மதிப்பற்ற உணர்வுகள் நமக்குள் வரும் போது நம் நல்ல குணங்களை நாமே மதிக்காத நிலை வருகிறது.

அந்த உணர்வின் தன்மை நமக்குள் நம் இரத்த நாளங்களில் இருக்கும் போது நல்ல அணுக்களுக்குச் சேரும் இரத்த நாளங்களில் கலந்து இதற்கும் அதற்கும் வித்தியாசமான கலர்கள் மாறும். நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை வராது.

1.நாம் எப்போதுமே யார் எந்த நிலையில் தவறு செய்தாலும் – அவர்களுக்கும்
2.அந்த ஈசன் வீற்றிருக்கும் இடத்திலே நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும்… நல்ல நிலையில் வர வேண்டும் என்று
3.மனதிற்குள் இந்த உணர்வை எடுத்துச் சேர்த்து கொண்டே வர வேண்டும்.
4.இப்படி எடுக்கும் அருள் உணர்வுகள் நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்வது மிகவும் நல்லது…! உதாரணமாக நாம் வீட்டு உபயோகத்திற்காக வைத்திருக்கும் தண்ணீர் அது உப்புத் தண்ணீராக இருந்தால் அங்கே சில வித்தியாசமான நிலைகள் இருக்கும். உப்பு படிந்து (SCALE) அழுக்காக இருப்பதைக் காணலாம்.

ஆனால் நல்ல தண்ணீரை உபயோகித்தால் அந்த இடங்களில் இந்த அழுக்கின் தன்மை அதிகமாக இருக்காது. எல்லாமே ஓரளவிற்குச் சுத்தமாக இருக்கும். இதே போலத்தான்
1.நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் நல்ல உணர்வின் தன்மையாக வரப்படும் போது
2.அது இரத்த நாளங்களில் கலந்து இருதயப் பகுதிக்கு வரும் சமயம் உறையும் தன்மை வராது.
3.அதனால் தெளிவாக மூச்சு விடும் தன்மை வருகிறது.

ஏனென்றால் நல்ல உணர்வை எடுக்கும் நிலையில் தனக்குள் வடிகட்டிய உணர்வின் தன்மையாக வருகின்றது. அப்பொழுது துடிப்பின் நிலை சீராகும் போது FILTER ஆகி அங்கே ஏற்படும் வெப்பத்தின் நிலைகளால் வரும் தீமைகளைப் பிரிக்கும் தன்மை வருகிறது.

ஆனால் எதிர்மறையான உணர்வின் மோதல்களால் துடிப்பின் நிலைகள் கூடி அந்த வெப்பத்தின் தன்மை அதிகரிக்கும் போது இரத்தம் போகும் பாதைகளில் உறையும் தன்மை அதிகரிக்கும்.

பாத்திரத்தில் தண்ணீரை விட்டு மற்ற பொருள்களைப் போட்டு நெருப்பை வைத்துத் தொடர்ந்து சூடாக்கும் போது பொருள்கள் உறைந்து போகிறது.

அதே போல சுவாசிக்கும் தீமையான உணர்வுகள் இரத்தத்தின் வழி வரும் தன்மையில் வெப்பமாகி இதயத்தில் பிரிக்கும் போது எல்லாம் உறையும் தன்மை வருகிறது.

1.இதெல்லாம் நாம் எடுத்துக் கொண்ட உணர்விற்கொப்ப
2.உணர்ச்சியின் வேக துடிப்பு ஆங்காங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் ஏற்படக்கூடிய
3.அந்த அணுக்களின் தன்மை தனக்குள் பெருக்கும் நிலை.

அணுக்களால் நுகரும் இந்த உணர்வின் ஆவித் தன்மை கவரப்படும் போது அது உணவாக அந்த அணுக்களுக்குள் உள் சென்று வெளி வரும் போது தசைகளாக மாறுகின்றது.

இவையெல்லாம் அதனதன் உணர்வுகொப்பப் பிரித்து நம் உடல் உறுப்புகள் இப்படிப் பல கோடி அணுக்களால் உருவாக்கப்பட்டது. அதன் உணர்வின் மலம் தான் நம்முடைய உடல்.

மனித உருவாகப் பெற்றாலும் அதிலே நல்ல அணுக்கள் உற்பத்தியானால் நல்ல மலங்கள் உருவாகும். நல்ல உடலாக மாறும். நல்ல உணர்ச்சிகள் உருவாகும். ஆகவே இவையெல்லாம் உருவாக்குவது நம் உயிரே.

உணர்வின் இயக்கத்தால் அதன் நிலைகளை மாற்றி அதற்குத்தக்க நம் உறுப்புக்களாக மாற்றுகின்றது.
1.கோபமான உணர்வை நுகர்ந்தால் கோபத்தின் உணர்ச்சிகளை ஊட்டும்.
2.வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் வேதனை என்ற உணர்ச்சியை ஊட்டும்.
3.அதன் உணர்ச்சிகொப்ப நம் எண்ணம் செயல் வரும்.
4.உறுப்புகளில் அந்த உணர்வின் தன்மையை இது மாற்றும்.

ஆகவே தான் நம்மை ஆளும் ஆண்டவனுக்கு நாம் நல்ல உணர்வுகளை நுகர்ந்து ஆராதனை செய்ய வேண்டும்.
1.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
3.உயிரான ஈசனுக்கு நாம் ஆராதனை செய்ய வேண்டும்.

அதே சமயத்தில் நாம் எண்ணும் நல்ல குணங்களை எல்லாம் நம்மைக் காக்கும் தெய்வமாக மதிக்க வேண்டும்.
1.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின் உணர்வை நம் உடலிலே சேர்க்கும் போது
2.நல்ல குணங்களை உருவாக்கும் அணுத் தன்மையாக வருகிறது.
3.அதுவே தெய்வமாக நம்மை காக்கிறது.

அதன் வழி கடைப்பிடித்து அந்த நல்ல சொற்களை மற்றவர்களுக்குச் சொல்லும் போது அவர்களும் நமக்கு உதவி செய்யும் அதே நல்ல உணர்வுகள் கொண்டு நம்மை அணுகி வருவார்கள்.

ஆனால் வெறுப்புணர்வு கொண்டு நாம் சொல்லும் போது நம் உடலிலுள்ள நல்ல அணுக்களும் வெறுப்பின் தன்மை அடைகிறது.

அதே வெறுப்பான சொல்களை நாம் சொல்லும் போது நண்பர்கள் கேட்டால் அவர்களுக்குள்ளும் வெறுப்பின் தன்மை உருவாகி நம் வாழ்க்கையே எதிர் நிலையான உணர்வுகளை நமக்குள் உருவாக்குகிறது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வுகள் எல்லாம் ஒரு சொல்லாக இருக்கலாம். அந்த ஒரு சொல்லுக்குள் இத்தனையும் அடங்கியுள்ளது.

வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகள் இவை…!

குறைந்தது இவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா..? அதனுடைய கால அளவு எவ்வளவு…?

eswara third eye

குறைந்தது இவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா..? அதனுடைய கால அளவு எவ்வளவு…?

 

கேள்வி:
ஆத்ம சுத்தி அதிக நேரம் (சுமார் 20 நிமிடங்கள்) செய்தால் அது தியானத்திற்குச் சமமாகுமா…?

பதில்:-
தியானம் என்பது எது…?

கெட்டது நமக்குள் சேரவிடாது “வைராக்கியமான நிலைகள்” பெறவேண்டும், இதுதான் தியானம். நமக்குள் தீயது சேராது தடுக்கும் “அந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு” நாம் தியானமிருக்க வேண்டும்.

பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதை நினைத்துக் கொண்டிரு என்பார்கள். தியானம் என்பது, “நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை” வளர்த்துக் கொள்வது. அதாவது உயர்ந்த ஞானிகளின் சக்தி கொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.

ஆத்ம சுத்தி என்பது எது…?
உட்கார்ந்து உட்கார்ந்து மணிக்கணக்காகச் செய்து கொண்டு இருப்பது தியானம் ஆகாது. ஏன்…?

நீங்கள் தியானத்தை முடித்துவிட்டு வேறு வேலைக்குப் போகின்றீர்கள். அடுத்தாற்போல தீடீரென ஒரு ஆக்ஸிடென்டோ அல்லது ஒரு மாடோ உங்களை விரட்டிக் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்…!

“ஆ…” என்று பயந்தால் அது உள்ளே வந்துவிடும். பயத்தையும் அதிர்ச்சியையும் உடலுக்குள் உருவாக்கி விடும்.

1.இந்த உணர்வு அதிகமானால் அடுத்தாற்போல
2.நீங்கள் தியானத்தில் உட்கார முடியாது.
3.எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியை கேட்டாலும் இது தான் முன்னாடி நிற்கும்.
4.அப்பொழுது நீங்கள் எப்படித் தியானம் எடுக்க முடியும்…!

எதுவாக இருந்தாலும் எத்தகைய நிலை வந்தாலும் அப்போதைக்கு அப்போது துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திலே உட்காரவிடும். இல்லை என்றால் நிச்சயம் தியானத்திற்கு வர முடியாது. மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை என்பார்கள்.

நீங்கள் வருடக் கணக்காகத் தியானத்தை எவ்வளவு வளர்த்தாலும்..,
1.நான் இவ்வளவு காலம் செய்தேன்…!
2.அப்படித் தியானம் செய்து கொண்டு வந்தேன்… அப்பொழுதெல்லாம் நன்றாக இருந்தது
3.இப்பொழுது என்னால் “முடியவே இல்லை…!” என்பார்கள்.

ஏனென்றால் எதிர்பாராத விதமாக அதிர்ச்சியோ பயமோ கோபமோ குரோதமோ மற்றதோ எடுத்தால் அது வலுவானது. நுகர்ந்தது நம் ஆன்மாவில் கலந்து அது வலிமை பெறுகின்றது. அதனால் உங்களால் முடியாமல் போய் விடுகின்றது.

நான் செய்தேனே… போய்விட்டதே…! செய்தனே… போய்விட்டதே…! என்று வேதனைப்பட்டு விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது. (இது மிகவும் முக்கியமானது)

ஒவ்வொரு நொடியிலும் நாம் கையில் அழுக்குப்படுவதைத் துடைப்பது போலத்தான்
1.நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ
2.அப்பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) கொடுத்த அருளை வைத்து
3.”ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்
4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இணைத்து விடுங்கள்
5.உள்ளே புகாது தடுத்து விடுங்கள்
6.அந்தப் பேரோளியைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்
7.அப்புறம் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்
8.இது வளர வளர இந்த ஆன்மாவிலிருக்கும் தீமைகளைத் (எந்தத் தீமையை நீங்கள் நுகர்ந்திருந்தாலும்) தள்ளிக்கொண்டே போகும்
9.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்கு வெளியில் போய் விட்டது என்றால் சூரியன் எடுத்துக் கொண்டு போய் விடும்
10.ஆன்மா பரிசுத்தமாகும்…!

இப்படி எண்ணி எடுத்தால் இது தான் ஆத்ம சுத்தி. இதை ஒரு ஐந்து நொடிக்குள்ளும் (மின்னல் வேகத்திலும்) எடுக்கலாம். அல்லது ஒரு நிமிடத்திற்குள்ளும் (நிதானமாகவும்) எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது உடனுக்குடன் தீமையை நீக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமே ஆத்ம சுத்தி. இருபது நிமிடம் ஆத்ம சுத்தி செய்தால் அது தியானத்திற்குச் சமமா என்று பார்ப்பதை விட
1.நாம் எண்ணிய நல்ல காரியம் நடந்தது
2.நம்மை துன்பப்படுத்தும் தீமைகளை அகற்ற முடிந்தது
3.அல்லது மகரிஷிகளின் ஆற்றலை அதிக அளவில் வளர்க்க முடிந்தது என்று தான் எண்ண முடியும்.

தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:-
“தியானம் செய்ய வேண்டும்…!” என்பதற்காக ஒரு சடங்கு போல நாம் தியானம் செய்யக் கூடாது. நம் ஆன்மா தூய்மை அடைந்து உயிரான்மா ஒளியாக வேண்டும். அதற்காகத் தான் தியானமிருக்கச் சொல்கிறோம்.

தியானமோ ஆத்ம சுத்தியோ எதுவாக இருந்தாலும் “இது முடியவில்லை… அது முடியவில்லை… உட்கார முடியவில்லை…! என்று எண்ணிக் கொண்டே இருந்தால் இதுதான் வளரும்.

எப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெறும் பொழுது, உங்களைச் சும்மா இருக்க விடாது.

அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும். இந்த உணர்வு வரும்பொழுது, பிறருடைய தீமைகளை அகற்றும் வலிமையினைப் பெறுகின்றோம். தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

1.தியானம் செய்தாலும்
2.ஆத்ம சுத்தி செய்தாலும்
3.உங்கள் வாழ்க்கையையே தியானமாக ஆக்கினாலும்
4.அல்லது உலக மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று தவமிருந்தாலும்
5.எவ்வளவும் நேரம் இதை எல்லாம் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை
6.இரண்டு இமைகளுக்கு மத்தியில் உள்ள புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈஸ்வரனை எண்ணி அவனுடன் ஒன்றி…
7.ஆழமாக… அழுத்தமாக…
8.வேண்டி விரும்பி…
9.கட்டாயப்படுத்திச் சொல்லிக் கேட்டுப் பெற வேண்டும்
10.வைராக்கியமாக அவனிடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்
11.அதைப் பெறும் வரை (உயிரான ஈசனை) விடக் கூடாது.

இது தான் மிக மிக முக்கியம்…!

மற்றவர்களின் நோய்களை நீக்கும் தியானப் பயிற்சி

health bliss (2)

மற்றவர்களின் நோய்களை நீக்கும் தியானப் பயிற்சி

 

கேள்வி:-
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தியானிக்கும் பொழுது எவ்வளவு நேரம் வேண்ட வேண்டும்…? அருகில் இருக்கவேண்டுமா…? அல்லது அறைக்கு வெளியே இருந்தாலும் பரவாயில்லையா…?

பதில்:-
உடல் நலம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்திலுள்ளவரோ நம் நெருங்கிய உறவினரோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். வெளி ஊரிலோ அல்லது மருத்துவமனையிலோ படுத்திருக்கிறார். நம்மால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் குடும்பத்தினர் நம்மிடம் சொல்கிறார்கள் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

செய்தியைக் கேள்விப்பட்டவுடன் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பிற்பாடு தான் நோயாளியின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

“உடல் நலமாக வேண்டும்…!” என்று முதலிலேயே தியானிக்கக் கூடாது. அருள் சக்தியை எடுத்துத் தியானித்து விட்டுத்தான் செய்ய வேண்டும். (ஏனென்றால் பாசத்தால் எண்ணினால் அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வந்துவிடும்)

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள அது எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று
4.அதே எண்ணத்தில் தியானம் செய்ய வேண்டும்.

(முடிந்தால் எல்லோருமாகச் சேர்ந்து கூட்டுத் தியானம் இருந்து)
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும்,
2.அவர் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்
3.அவர் உடல் நலம் பெற வேண்டும்
4.மகிழ்ச்சியான நிலைகள் பெற வேண்டும் என்று
5.தியானம் முடிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை எடுக்க வேண்டும்.

அவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்து அவர் குடும்பத்தாரையும் கலக்கச் செய்து அந்த உணர்வை எடுக்கச் செய்ய வேண்டும். கூடுமான வரை அந்த நோயிலிருந்து விடுபட முடியும்.

குறிப்பு:-
நோயுற்றவர் நடக்கும் நிலையில் இருந்தாலோ அல்லது நம் சொல்லைக் கேட்பவராக இருந்தால் அவரைச் சிறிது நேரம் (ஐந்து அல்லது பத்து நிமிடம்) எழுந்து நிற்கச் சொல்லி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று ஏங்கி இருக்கும்படி சொல்லுங்கள்.

மற்றவர்கள் தியானத்தில் இருந்து மகரிஷிகளின் அருள் அவர் உடலில் படர வேண்டும். அவர் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும், அவர் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்போது அவரின் உடலில் ஒரு விதமான கரண்ட் பாய்வது போல் இருக்கும். அப்போது அவர் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
1.அவரால் முடியாததை நீங்கள் எல்லோரும் சேர்ந்து சொல்லி
2அவரின் நோய்களை இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்
3..இதில் பல அற்புதங்களைப் பார்க்கலாம்.

மகரிஷிகளின் அருளை அப்படி இணைக்கப் போகும் போது மற்றவர்களும் ஏங்கிப் பெற்றார்கள் என்றால் நாம் பாய்ச்சும் உணர்வுகள் அங்கே அவர்களின் நோயை நீக்க உதவும்.

ஆனால் சில நோய்களுக்கு உடனடியாக மருந்து கொடுக்க வேண்டியதிருக்கின்றது. மருத்துவர்களிடம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் மருந்து உங்களுக்கு வேலை செய்து நன்றாக ஆகும் என்று சொல்லலாம். விரைவில் நல்லதாக்கவும் உதவும்.

எவ்வளவு நேரம் தியானிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல.

சாமிகள் நேரடியாகச் சொல்லித் தியானிக்கும் நோய் நீக்கும் தியானம்

சர்க்கஸில் விளையாடுபவர்களுக்கும் உடலை வைத்துச் சில பயிற்சிகளைச் செய்பவர்களுக்கும் (GYMNASTICS) எலும்புகள் எப்படி… ஏன்… வளைந்து கொடுக்கின்றது…?

GYMNASTICS

சர்க்கஸில் விளையாடுபவர்களுக்கும் உடலை வைத்துச் சில பயிற்சிகளைச் செய்பவர்களுக்கும் (GYMNASTICS) எலும்புகள் எப்படி… ஏன்… வளைந்து கொடுக்கின்றது…?

 

சாதாரணமாக சர்க்கஸில் (GYMNASTICS) விளையாடுகிறார்கள் என்றால் சரியாக அந்த அளவுகோல் பிடித்து பத்து பன்னிரண்டு என்று சுழலச் செய்கிறார்கள். தூக்கிப் போடுவார்கள். அவர்கள் சுவாசித்த அந்த உணர்வின் வேகத் துடிப்பிற்கொப்ப அதைச் செய்கின்றார்கள்.

நாமும் மனிதர்கள் தான் அவர்களும் மனிதர்கள் தான். பல பல உணர்வுகளையும் அவர்கள் இயக்குகிறார்கள். பல அற்புதங்களைச் செய்கிறார்கள்.

அவர்களின் உடல் வலுவான நிலைகளில் இருந்தாலும்
1.சிறுகச் சிறுக இந்த உணர்வின் எண்ணங்களைப் பாய்ச்சி
2.இதைச் செய்ய வேண்டும்…! என்ற மன உறுதி கொண்டு
3.வில்லைப் போல உடலை வளைக்கிறார்கள்.

ஆனால் ஒரேயடியாக வளைத்தால் ஒடிந்து போகும். “வளைய வேண்டும்…” என்ற அந்த உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வின் அலைகளை அவர்களின் வலுக் கொண்டு செலுத்தப்படும் போது
1.எலும்பில் உள்ள நிலைகளும்
2.இவர்கள் எண்ணிக் கொண்ட உணர்வுகளும்
3.அதற்குத் தக்கவாறு ரப்பர் மாதிரி ஆகி விடுகிறது.

ஏனென்றால் நுகரும் உணர்வுகள் அந்த எழும்பிலுள்ள அணுக்களுக்கு “நாம் வளைய வேண்டும்…!” என்ற உணர்வு சேர்க்கப்படும் போது
1.அந்த அணுக்கள் புது மலத்தை உண்டாக்கும்.
2.அந்த வலுவான உணர்வுகள் சேர்க்கப்படும் போது வளையும் தன்மை வருகிறது.

இடுப்பு வலிமையாக இருக்கிறது. தாய் கர்ப்பமாக இருக்கும் போது வாயுவின் உணர்வின் உணர்ச்சிகள் மோதப்படும் போது அந்த எலும்பு பாகம் விரிந்து கொடுத்த பின்னாடிதான் குழந்தை வெளியே வருகிறது.

ஒரு இரும்புக் கம்பியையோ கண்ணாடி வளையலையோ வளைக்க வேண்டுமென்றால் நெருப்பு ஜுவாலையில் காட்டினால் வளைகிறது.

இதே மாதிரித் தான் எலும்பு பாகங்கள் விரிவடைந்து குழந்தை பெரிய குழந்தையாக இருந்தாலும் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு அது இடம் கொடுக்கிறது.
1.குழந்தை வெளி வந்த மறு கணம் அந்த எலும்புகள் சுருங்கி விடும்.
2.இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

எலி பார்த்தால் ரொம்ப சிறியது தான். அதனுடைய குட்டி வெளிப்படும்போது பார்த்தால் தெரியும்.

ஆகவே இதைப்போல ஒவ்வொன்றுக்கும் அந்த உணர்ச்சிக்கொப்ப எலும்புகளில் அந்த உணர்வின் அழுத்தம் வரப்படும் போது மோதலில் விரிவடைந்து குழந்தை எளிதாக வெளி வரும் தன்மை உண்டாகின்றது.

ஆனால் கருவில் உருவான சில குழந்தைகள் வெளி வராத நிலை ஏற்படுகின்றது. “குழந்தை திரும்பி விட்டது…!” என்பார்கள். அதனால் அந்த உணர்ச்சி பலவீனம் ஆகும் போது வாயுவின் உந்தல்கள் வரப்படும் போது அந்தக் குழந்தையின் பாகம் சரியாகச் சீர்படுவதில்லை. இயற்கையான முறையில் பிரசவமாவதில்லை.

ஏனென்றால் குழந்தையின் காலோ மற்றதோ முதலில் வெளி வந்தால் அதற்கு மூச்சுத் திணறலாகும். அதைச் சீர் செய்ய விஞ்ஞான அறிவு கொண்டு டாக்டர்கள் சில முயற்சிகளை எடுத்தாலும் கூட ஒன்றும் முடியவில்லை என்றால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கின்றார்கள்.

அதைப் போன்று தான் எலும்பின் பாகங்களில் அதிகமான மோதல்கள் ஏற்படும் போது சர்க்கஸில் விளையாடக் கூடியவர்களுக்கு அதற்குண்டான அமிலங்கள் சுரக்கப்பட்டு அந்த அணுக்களின் தன்மை பெருக்கப்பட்டு எலும்புகள் ரப்பர் மாதிரி வேலை செய்யும்.

ஆனால் நாம் வளைக்க முடியுமா…? அவர்கள் எடுக்கும் உணர்வை நாம் கூட்டினால் நமக்கும் அந்த நிலைகள் வரும். ஒரு நான்கு நாட்களுக்குச் செய்து பாருங்கள்.
1.அந்த உணர்வின் பாகங்கள் நரம்புகள் நீண்டு வருவதும்
2.அந்த ஆசிட் பவர் கூடுவதும்
3.அந்த அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதும்
4.அதனுடைய மலங்கள் விரிவாவதும் இதெல்லாம் வரும்.
5.ஏனென்றால் இயற்கையின் நியதிகள் இவைகளெல்லாம்.

ஆகவே உடல் உறுப்புகளை இந்த உயிர் எப்படி இயக்குகிறது…? நுகர்ந்த உணர்வுக்கொப்ப எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவாகக் கூறினார்.

டாக்டர்களுக்குப் படிப்பவர்கள் அவர்களுக்குக் கற்பிக்கும் போது அந்தக் கற்பனைக்கு உண்டான நிலைகளை அதைப் படித்துப் பாடம் செய்து இன்ன இன்னது தான் செய்கிறது…! என்று சொல்வார்கள்.

1.படித்த பாடத்தின் நிலைகள் அவர்களுக்குள் இருந்தாலும்
2.சுவாசித்ததன் உணர்வுகளால் தான் எலும்புகள் விரிவடைந்தது என்றும்
3.நுகரும் உணர்வுகள் மாறினால் அந்த இயக்கங்கள் மாறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

இயற்கையில் உருவான நிலையிலிருந்து விளைந்தது என்ற நிலையில் அதிலுள்ள அமிலங்களை பிரித்து பார்த்து அந்த அமிலங்களை மாற்றுவதற்கு மாற்று உபாயமான செயல்களை (இயற்கையில் விளைந்த உணர்வுகளை) செயற்கையில் செய்கிறார்கள்.

ஆடு மாடுகளிலிருந்தும் மூளை போன்ற பாகங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அதற்குள் இரசாயனங்களைச் சேர்த்து மற்றவர்களுக்கு மருந்தாக நேரடியாகவும் கொடுக்கிறார்கள்… மாத்திரையாகவும் கொடுக்கிறார்கள்.

இரத்தத்தில் கலக்கச் செய்து வலு கொண்ட நிலைகளாக மனித உடலில் உள்ள அணுக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவத்தை ஊட்டுகின்றார்கள். விஞ்ஞான அறிவு கொண்டு இப்படி எத்தனையோ நிலைகளை மாற்றலாம்.

பால் குறைவாக இருக்கக் கூடிய மாட்டிற்குப் பாலை அதிகமாகச் சுரக்கச் செய்ய மரபு அணுக்களை மாற்றி அமைக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் குளோனிங் (CLONING) மூலம் உருவாக்கி கன்றுவாக இருக்கும் பொழுதே சில சக்திகளைக் கூட்டிப் பால் அதிகமாகச் சுரக்கும் தன்மையைக் கொண்டு வருகிறார்கள்.

ஆணையும் பெண்ணாக மாற்றுகின்றான். பெண்ணையும் ஆணாக மாற்றுகின்றான். விஞ்ஞான அறிவு கொண்டு புலிகளையும் மிருகங்களையும் கொடூரமான நிலைகளையும் பாம்புகளையும் கொடூரமாகக் கொன்று குவிக்கும் ஓநாய் இனங்களையும் அவைகளுக்குள் மற்ற மற்ற உணர்வுகளைச் சேர்த்து அதன் அறிவின் ஞானத்தை இயக்கும் சிறு மூளைகளுக்கே எட்டும் படிச் செய்கின்றான்.

அப்போது அந்தக் கொடிய மிருகங்கள் இவன் சொல்லும் உணர்வுகளை எடுத்து மனிதனுக்கொத்த நிலையில் இவன் சொல்வதைக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான்.

அந்த மிருகங்களைப் பிடிப்பதற்கு என்ன செய்கின்றான்…? எவன் மிருகத்தைப் பிடிக்கின்றானோ அவன் உடலை நக்கச் செய்கின்றான். அவ்வாறு நக்கி அந்த மணங்களை எடுத்துக் கொண்ட பின் இவன் உடலின் உணர்வுகள அந்த மிருகத்திற்குள் சேர்க்கப்பட்டு அடுத்து அது சாந்தமான நிலைகளில் வருகின்றது.

இப்படிச் சிறுகச் சிறுகச் சிறுகச் சேர்த்து விஞ்ஞான அறிவு கொண்டு அதை மாற்றி இவன் சொன்னபடி எல்லாம் கேட்க வைக்கின்றான். இவன் மணத்தை நுகர்ந்தவுடன் அது விட்டு விடும் நிலை வருகிறது.

சிறு பாம்பாக இருந்தாலும் சில வகையான உணவுகளைத் தன் வாயிலே போட்டு தன் உணர்வைக் கலந்து அதை மற்ற உயிரினங்களை தின்னச் செய்கின்றான்.

இவன் எண்ணத்திற்குண்டான நிலைகளைப் பரப்பி அதற்குத் தக்க ஆசிட்டைக் கலந்து கொடுத்து விடுகிறான். அதைச் சாப்பிட்டுப் பழகியதும் அந்த உயிரினங்கள் “இவன் வா…!” என்று கூப்பிட்டால் அப்படியே வரும்.

1.உணர்வின் இயக்கங்களையும்
2.அந்த உணர்வுக்கொப்ப நம் உயிர் எப்படி இயக்குகிறது…? மாற்றியமைக்கின்றது…? என்பதையும்
3.நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்
4.விஞ்ஞான அறிவுடன் இணைத்து இதைச் சொல்கின்றோம்.