ஊழ் வினை என்ற மூல வித்தை மாற்ற வேண்டியதன் அவசியம்

ஊழ் வினை என்ற மூல வித்தை மாற்ற வேண்டியதன் அவசியம்

 

சந்தர்ப்பத்தால் எந்தத் தீய உணர்வுகள் நம் உடலில் உள்ள எலும்புகளில் வித்தாகப் பதிவானதோ
1.அந்த வித்தைச் சுற்றிலும்
2.அடுத்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யப்படும் போது
3.அதைச் சுற்றி செல்கள் உருவாகும்.

இதனுடைய வலிமை அதிகமானால் அந்த வேதனை என்ற நிலைகள் தணிந்துவிடும். நாம் எப்படி ஆத்ம சுத்தி செய்து மற்ற உணர்வுகளை மாற்றுகின்றோமோ அதைப் போன்று தான்
1.உங்கள் உடலுக்குள் எலும்பில் உள்ள ஊனுக்குள் விளைந்த தீமையான உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
2.ஞானிகள் கண்ட உண்மைகள் இது…!

அவர்கள் காட்டிய வழியில் நாம் ஊனுக்குள் மாற்றி அமைத்தால் அந்தத் தீமையை நுகரும் உணர்வுகள் அழிக்கப்படுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர தீமையை நீக்கும் அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி… ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது நல்ல அணுக்களாக மாறி… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலும்… உடலுக்குள் இருக்கும் உறுப்புகளைத் தெளிவாக்கும் நிலையும் ஏற்படுகின்றது.

நம் வாழ்நாளில் இதற்கு முன்னாடி நாம் அறியாது சேர்த்த நோய்களை மருந்துகளைக் கொடுத்து நீக்கினாலும் மீண்டும் ஊனுக்குள் பதிவான வித்து (முந்தைய பதிவுகள்) முளைத்துக் கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் கடுமையான நோய்கள் வந்திருந்தால் அதைக் கட்டுப்படுத்த அதற்கு வேண்டிய பத்தியங்களையும் டாக்டர்கள் (கட்டுப்பாடுகள்) சொல்வார்கள்.

இந்த பத்தியங்களை நாம் கடைப்பிடிக்க முற்படும் போது என்ன நடக்கிறது…?

உதாரணமாக… சர்க்கரைச் சத்து வந்து விட்டால் அது (இனிப்பு) இல்லாதபடி உணவையோ மற்றவைகளையோ உட்கொள்ளும் பொழுது அந்தக் கசப்பு வருகிறது… அதனால் வேதனை வருகிறது.
அடிக்கடி வேதனைகளைச் சேர்க்கப்படும் பொழுது
1.கட்டுப்பாடாக இருந்து சர்க்கரைச் சத்தை மறைத்து விடலாம்
2.ஆனால் இரத்தத்தில் கசப்பின் உணர்வு புது விதமாக மாறும்.

இருந்தாலும் ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று ஆசைகள் தூண்டும். ஒரு ஜிலேபியைப் பார்த்தால் “என்னால் சாப்பிட முடியவில்லையே…!” என்று வேதனை வருகின்றது. மற்றொருவர் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்த்தால் நம்மால் சாப்பிட முடியவில்லையே என்ற வேதனை வருகிறது.

உடலில் உள்ள சர்க்கரைச் சத்தை நீக்கிவிடலாம். ஆனால் “ருசியாகச் சாப்பிட முடியவில்லையே..” என்ற வேதனையான உணர்வின் தன்மை உமிழ் நீராக மாறி விஷத்தின் தன்மையாக நம் உடலுக்குள் கலக்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் நம்முடைய வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய செயல் நாளைய சரீரம்…!

ஆக… பகைமை கொண்ட உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ சந்திக்க நேரும் பொழுது நாம் அவைகளை மாற்றத் தவறினால்
1.எத்தனையோ சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக வந்திருந்தாலும்
2.நான் நுகர்ந்த தீமைகள் இரத்தத்தில் இந்திரலோகமாகி
3.அணுவின் தன்மையாக பிரம்மலோகமாக மாறும் பொழுது
4.நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தின்று விடுகின்றது
5.நல்ல அணுக்களுக்குச் செல்லும் ஆகாரத்தைத் தடைப்படுத்தி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய இரத்தத்தில் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

விஞ்ஞான முறைப்படி இரத்தத்தைப் பரிசீலித்துப் பார்த்தால் சோகையாக இருக்கின்றது (ஹீமோகுளோபின் குறைவு)… சர்க்கரை சத்து இருக்கின்றது… உப்புச் சத்து இருக்கின்றது என்றெல்லாம் கண்டறிந்து சொல்வார்கள்.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்த்த்தில் கலந்த பின் அந்தக் கலவையில் இப்படிப் பிரித்துவிடுகின்றது.

உதாரணமாக… உப்புச்சத்து அதிகமாகி அந்த இரத்தம் நுரையீரலுக்குள் சென்றால்
1.வேர்வையாகி… உப்பு கசிவது போன்று போகும் பக்கமெல்லாம் கசிவாகிறது
2அதனால் உடலில் நீர் அதிகமாகி உடலெல்லாம் “உப்ப ஆரம்பிக்கின்றது…”
3.நல்ல அணுக்களும் உப்புச் சத்தினால் கெட்டுப் போகின்றது
4.கிட்னியும் பலவீனம் அடைந்து விடுகின்றது.

இது எல்லாம் யார் தவறு செய்தது…?

சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்தத்தில் கலந்த பின் நல்ல அணுக்கள் இவ்வாறு மடியத் தொடங்கி விடுகின்றது. இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதற்குத் தக்க டாக்டர்கள் மருந்துகளைக் கொடுத்தாலும் ஊனுக்குள் இருக்கும் மூல வித்தை அவர்களால் மாற்ற முடிவதில்லை.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் ஊனுக்குள் பாய்ச்சி ஒளியான வித்துகளாக மாற்றுவோம்.

எனக்கு (ஞானகுரு) எப்படி அந்த அருளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினாரோ… அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தாரோ… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்.

உயர்ந்த சக்திகளைப் பெற உங்களுக்கு “அந்த நினைவு தான் வேண்டும்…”

தீமை என்று தெரிந்து கொண்டாலே…
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிரிலே வலுவாக்கினால்
4.எத்தகைய வேதனையும் உள் புகாது தடுத்து விடுகின்றது.

மகரிஷிகள் பிறந்த நாட்டில் “நம்முடைய செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?”

மகரிஷிகள் பிறந்த நாட்டில் “நம்முடைய செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?”

 

உலகில் அரசர்கள் தன் சுகபோகங்களுக்காக வேண்டி நாடு பிடிக்கும் ஆசை கொண்டு மற்ற மக்களை இரக்கமற்றுக் கொல்வது தான் அரசர்களின் குணங்கள்.

அரச வம்சங்களை எடுத்துக் கொண்டாலே அவன் போக்கிரியாகத் தான் இருக்கின்றான் அப்படிப் போக்கிரியாக இருப்பவன் முதலில் ஒரு ஊரை அடிமைப்படுத்துகின்றான்… பின் இரண்டு ஊரை அடிமைப்படுத்துகின்றான்… பின் மூன்று ஊர்களை அடிமைப்படுத்துகின்றான்.
1.அப்படியே ஒரு அரசனாகின்றான்… இதைத்தான் அரச வம்சம் என்று சொல்வது
2.கொள்ளையடிப்பதும் மற்றவர்களைக் கொலை செய்வதும் அதன் வழி வாழ்வதும் தான் அரசருடைய நீதிகள்.

சோழ நாட்டை ஆண்ட அரசர்களைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோம். இங்கிருந்து ஜாவா வரை போர் முரசு கொட்டிச் சென்றார்கள்… வெற்றி பெற்றார்கள்…! என்றெல்லாம் சொல்வோம்.

ஆக… நம் நாட்டின் வீரியத்தைப் பற்றிப் பேசலாம். இருந்தாலும் இதைப் போன்று ஒவ்வொரு நாடும்… மற்ற நாடுகளை நாங்கள் இத்தனை பேரை அடிமைப்படுத்தினோம்…! என்று அத்தகைய வீரியம் தான் எல்லோருக்கும் வருகிறது.

நம் நாட்டில் ஒரு கோவிலிலே தெய்வத்தை வணங்குகிறார்கள் என்றால் அதில் முன்னணியில் வரக்கூடியவர் எனக்குத்தான் முதல் மரியாதை தர வேண்டும் என்று விரும்புகின்றான்.

மற்றவர்களோ அது என்ன…? அவன் மட்டும் அங்கே ஆட்சி புரிவது…? என்று தெய்வத்தை வழிபடும் இடங்களிலும் அவர்களுக்குள் எதிர்ப்பாகி ஒரு கோஷ்டி… ரெண்டு கோஷ்டி… மூன்று கோஷ்டி… என்று பிரிவாகி விடுகிறது.

ஆலயத்திற்குச் சென்று நாம் எந்த நல்ல குணங்களைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ… கோஷ்டிகள் பிரிவினைகள் ஆனபின்
1.என்னை மதிக்கவில்லை அதனால் தெய்வம் இந்தப் பக்கம் வரக்கூடாது
2.இவன் பூஜை செய்யக்கூடாது என்று தான் மக்கள் மத்தியிலும் எண்ணங்கள் இருக்கின்றது.

அதே போல் குடும்பத்திலே எடுத்துக் கொண்டாலும் முந்தைய காலங்களில் ஒற்றுமையாக வேலை செய்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும் நான் தான் பெரியவன்…! நான் தான் இதை எல்லாம் சம்பாதித்துக் கொண்டு வந்தேன்…! என்று சொல்லிக் கொண்டு வந்தால் கடைசியில் எனக்கு இதிலே இரு மடங்கு சொத்து (அந்தப் பங்கு) வேண்டும் என்ற நிலை வருகிறது.

செல்வத்தைச் சேர்த்து வைத்த குடும்பங்களில் எல்லாம் இதைப் பார்க்கலாம். ஒன்றுபட்டு வாழ்ந்து வந்த குணங்கள் இப்படி எல்லாம் பிற்பகுதியில் மாறுகின்றது.

1.நான் தான் சொத்தைத் தேடி வைத்தேன்… அவனுக்கு என்ன கொடுப்பது…?
2.நான் தான் இதற்கெல்லாம் காரணம் என்று
3.இந்த நாடும் அப்படி… வீடும் அப்படி…! என்ற நிலை தான் வருகின்றது.

சகோதரர்களுக்குள் ஓருவன் முதல்வன் ஆனால் எனக்குத் தான் உரிமை உண்டு… நான் தான் இதைச் செய்வேன்…! என்று வருகின்றான். பெரியவன் என்று பார்க்கச் சொன்னாலும் “நான் சொன்னதைக் கேட்கவில்லை…” என்று மறுத்தால் அங்கே போர் முறையாகிப் பகைமை ஆகி விடுகின்றது.

விவசாயம் செய்யும் இடங்களிலும் மாநிலத்திற்கு மாநிலம் மொழித் தகராறு வருகின்றது. வலிமை இருந்தால்… அந்த வலிமை பெற்றவன் செயலே அங்கே ஆளத் தொடங்குகிறது.

ஏனென்றால் அவன் மிக வலிமை பெற்றவன் ஆகின்றான் நான் சொல்வதைத் தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்ற “அதிகார தோரணை…” வந்து விடுகின்றது.

காட்டு விலங்குகளாக வாழ்ந்து வந்த மனிதர்கள் கூட்டமைப்பாக வாழ்ந்து வந்தாலும்… அந்தக் கூட்டமைப்புக்குத் தலைவனாக வரக்கூடியவன் “தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும்…” என்று அந்த அதிகாரம் முன்னணியில் வந்து விடுகின்றது.

1.நல்லவர்களும் அதைச் செயல்படுத்தி வந்தார்கள்
2.ஒற்றுமையாக இருக்க வேண்டும்… இப்படிச் செய்ய வேண்டும்…! என்று அந்த நல்லவர்கள் சொன்னார்கள்.
3.அதன் வழி பின்பற்றி வாழ்ந்தார்கள்.

அப்படி வாழ்ந்து வந்த மனிதர்களும் தனக்கென்று அறியத் தெரிந்த பின் இதைப் போன்று “தான் வாழலாம்…” என்ற நிலைக்கு வருகின்றனர் அதன் வழி அந்த யோசனைப்படி ஒன்றுபட்டு வருகின்றனர்.

அந்த யோசனைப்படி நடந்து நல்லதைச் செயல்படுத்திக் கொண்டு வந்தவன்… வளர்த்துக் கொண்டு வந்தவன்
1.அவன் காலம் முடிந்தால்… அதற்குப் பின் இதை யார் தலைமை தாங்குவது…? என்ற போர் முறை வந்து விடுகின்றது
2.அதில் ஒருவன் நான் தான் பெரியவன் என்று வந்தால் இன்னொருவன் நான் தான் பெரியவன் என்று வருகின்றான்
3.அப்போது அந்த வலிமைக்குத் தக்கவாறு பிரிந்து சென்று விடுகின்றார்கள்.
4.பிரிந்து சென்றவர்கள் அந்தப் போர் முறையிலிருந்து மாறுவதே இல்லை.
5.இதிலே எனது.. உனது…! என்ற நிலைக்கு இப்படி எல்லாவற்றிலும் போர் முறைகளே வருகின்றது.

ஆனால்
1.ஞானிகள் பிறந்த நாடு… மகரிஷிகள் பிறந்த நாடு நம் இந்திய நாடு
2.உயிரணு தோன்றி மனிதனாகி ஒளி உடலாகப் பெற்ற நாடு நமது தமிழ்நாடு.

இதனை நாம் முதலிலே அறிந்து அதற்குத் தக்க… நமது குரு காட்டிய வழியில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர… கூட்டத்தைக் காட்டும் நிலைக்கு வரக்கூடாது.

யாம் சொல்வது… ஏதோ விளையாட்டிற்காக அல்ல…!

யாம் சொல்வது… ஏதோ விளையாட்டிற்காக அல்ல…!

 

நம் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்களின் துணை கொண்டு தான் நம் சூரியன் வாழ்கிறது. பிற மண்டலங்களில் இருந்து 27 விதமான உணர்வுகளைக் கவர்ந்து 27 நட்சத்திரங்களும் தனக்குள் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதிலிருந்து வரக்கூடிய துகள்களைத் தான் நமது சூரியன் கவர்ந்து அது வாழுகின்றது. 27 நட்சத்திரங்களின் துணை இல்லை என்றால் சூரியனும் நாளடைவில் மங்க நேரும்.

நம்முடைய குடும்பத்தில் ஒரு பத்து பேர் இருக்கின்றார்கள் என்றால் மூத்தவர்கள் முதுமை அடைகின்றனர். குழந்தைகளுக்குத் திருமணமாகிறது. ஆனால் திருமணமான பின்
1.அவர்கள் தனித் தனிக் குடும்பங்களாகப் பிரிந்து சென்று விடுகிறார்கள்.
2.அப்போது… அவர்கள் குடும்பத்தைக் கவனிப்பதற்குத் தான் நேரம் இருக்கும்
3.இங்கே இந்தக் குடும்பத்தில் உள்ளவரைக் கவனிப்பதற்கு நேரம் இருக்காது.
4.அப்படியே இருந்தாலும் நம் மீது பற்று வராது.
5.அவர்கள் குடும்பத்தாரைக் காக்கத் தான் நினைவு வரும்.

அதைப் போன்று தான் 27 நட்சத்திரங்களும் நம் சூரியனைப் போலவே தனித் தனிச் சூரியக் குடும்பங்களாக மாறிக் கொண்டிருக்கின்றது. சரி பகுதிக்கு மேல் பிரிந்து சென்று விட்டது.

ஆகையினால்…
1.மற்ற பிரபஞ்சங்களிலிருந்து அது இழுத்துக் கொடுக்கும் உணர்வுகள் இங்கே இந்தச் சூரிய குடும்பத்திற்கு குறைவானதால்
2.மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட கதிரியக்கச் சக்திகளை ஜீரணிக்கக் கூடிய சக்தியை நம் சூரியன் இழந்து
3.சூரியனுக்குள் இந்தக் கதிரியக்கப் பொறிகள் அதிகமாகி சூரியனே கொதிகலனாக மாறி
4.பல மடங்கு விஷக்கதிரியக்கங்களைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது.
5.(தினசரி பத்திரிக்கை படிப்பவர்களுக்கு இப்போது இது தெரியும் – “SOLAR STORMS” என்று சொல்வார்கள். இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை இது ஏற்பட்டுக் கொண்டுள்ளது)

அதன் விளைவாக… பிரபஞ்சத்தில் வாழும் கோள்கள் அனைத்திலும் இதே போன்று கதிரியக்கங்கள் அதிகமாகச் சேர்ந்து கொண்டுள்ளது.

நம் பூமியில் எப்படிப் பூகம்பங்கள் ஏற்படுகின்றதோ அதே போல் எல்லாக் கோள்களிலும் இதே போன்று கொதிகலனாக எரிமலைகளாகிப் பூகம்பங்கள் ஏற்பட்டு நடு மையம் கரைந்து போகும் நிலை வருகின்றது…! (நாளடைவில் இதையும் பத்திரிக்கைகளில் படிக்கலாம்)

இப்படி… சூரியன் செயலிழந்தால் அது கரைந்து மீண்டும் அமில சக்தி அடையப்படும் பொழுது… இதைத் தொடர்ந்து இதற்கு உணவு கொடுத்த நட்சத்திரங்கள் 27ம் அதைக் கவர்ந்து அது சூரியனாக மாறி விடுகின்றது.

சூரியன் செயலிழக்கும் பொழுது கோள்கள் அனைத்தும் அந்தச் சுழற்சியில் இழுத்துக் கரைத்து ஆவியாக மாறிவிடும்.

இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் வாழ்ந்த மனிதனும் மற்ற உயிரணுக்களும் இந்த உடலை விட்டுச் சிதைந்து சென்றால் பிரபஞ்சத்தில் மீண்டும் அணுத்தன்மையாக படரும்

ஆனால் இந்த மனித உடலில் வாழும் போது எத்தனை வேதனைப்பட்டு அவஸ்தைப்பட்டதோ அதை எல்லாம் உயிருடன் சேர்த்து “அந்த உயிரான்மா…”
1.உடலை விட்டு உயிர் செல்லும் போது எந்த வேதனையை அனுபவித்ததோ
2.எந்த வேதனையும் உணர்வுடன் செல்கின்றதோ அதற்குத் தக்க அடுத்த நிலை பெறும்
3.இருந்தாலும் தாவர இனங்களோ மற்ற நிலை இல்லாத போது அடுத்த உடலைப் பெறும் தகுதி இழந்து
4.மற்ற பிரபஞ்சத்தில் இயக்கப்படும் பொழுது “கடும் நரக வேதனைப்படும்…”

இதைப் போன்ற நிலையில் தான் உலகம் மாறிக் கொண்டிருக்கின்றது.

மிருகங்களைப் போன்று மனிதனுக்கு மனிதன் தீவிரவாதங்கள் என்று பெருகப்பட்டு யாரையோ காக்க… எதற்காகவோ என்று இல்லாதபடி… எல்லோரையும் அழிக்கும் நிலையாக வந்து கொண்டிருக்கின்றது.

1.பெரும் பெரும் கூட்டத்தையே அழித்து விடுகின்றார்கள்… அழிக்க முற்பட்டவனும் மடிந்து விடுகின்றான்
2.தன்னை மறந்து செயல்படும் நிலையில் தான் இன்றைய உலகம் இருக்கின்றது.

சூரியன் அழிந்தால் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் திசை மாறினால் மனித உடல்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பல விபரீதங்கள் ஏற்படத் தான் செய்யும்.

இதிலிருந்து மீள வேண்டும் என்று விரும்பினால் நம் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும்.
ஏனென்றால்
1.எது எப்படி மாறினாலும் அது அனைத்தையும் துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
2.அதை நுகர்ந்து நமக்குள் வலிமை சேர்த்துக் கொண்டால் நமக்குள் அறியாது புகுந்த இருளை நீக்கலாம்… அமைதி கொண்டு வாழவும் முடியும்…
3.உடலை விட்டுப் பிரிந்தால் நாம் வலு சேர்த்த துருவ நட்சத்திரத்தின் சக்தியின் துணையால் அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்ல முடியும்.

இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை… உணர்வின் “ஒளியே போதுமானது”

இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை… உணர்வின் “ஒளியே போதுமானது”

 

உயிரியல் தத்துவத்தில் நமது உயிர் நுகர்ந்த உணர்வை அணுக்களாக மாற்றுகிறது. அணுவின் மலம் நம் உடலாகி உணர்வின் அறிவாக நம்மை இயக்கச் செய்கின்றது.

உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து எத்தனையோ உடல்களைக் கடந்து மனிதனாக வந்த நாம் இன்று விஷத்தன்மை கொண்ட உலகில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
1.இந்தப் பிரபஞ்சமே இந்தச் சூரியனே விஷத்தன்மையால்… விஞ்ஞானத்தின் கதிரியக்கத் தன்மையால்
2.சீக்கிரம் அழியப் போகின்றது… திசை மாறப் போகின்றது.
3.வாழும் இந்தக் குறுகிய காலத்தில்… சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்…
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களுக்குள் நல்ல சிந்தனைகள் வரும்
5.கஷ்டங்களை எண்ணாதீர்கள்… உடலில் வேதனையோ நோயோ இருந்தால் அதை மறந்து விடுங்கள்
6.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்று இந்த ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

வீட்டிலே பூஜை அறையிலையோ அல்லது இருக்கும் மற்ற இடங்களிலோ இது போன்று செயல்படுத்திப் பாருங்கள்.

உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வதற்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களைக் கேட்டும் படித்தும் வாருங்கள். அடிக்கடி அதை ஞாபகப்படுத்திக் கொண்டே வாருங்கள். அருள் சக்திகள் உங்களுக்குள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். தீமைகளை அகற்ற முடியும்.

கஷ்டம் என்ற வார்த்தையைத் தூக்கி எறிந்து விடுங்கள்…!

1.“யார்…” எந்த நிலையில் இருந்தாலும் கூட இந்த உடலுடன் இருப்பவர் யாரும் இல்லை
2.உடலுக்காக வேண்டி வேதனைப் பட வேண்டிய அவசியமும் இல்லை.
3.இந்த உடலிலிருந்து வேதனையை நீக்கிவிட்டு வேதனை நீக்கிடும் அருள் சக்தியைப் பெற்றால் தான்
4.உலகில் வரக்கக்கூடிய விஷத்தன்மைகளை நீக்க முடியும்.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களை உணவாக உட்கொண்டு அதிலுள்ள விஷத்தையும் சேர்த்து எப்படி நாகரத்தினமாக மாற்றுகின்றதோ அதே போன்று தான் அகஸ்தியன் அகண்ட அண்டத்தில் வரும் இருளை வென்று… உணர்வை ஒளியாக மாற்றி… ஒளிச் சரீரமாக ஆனான்.

அந்த அகஸ்தியனின் உணர்வுகளை எடுத்து நம் உடலில் வளர்ப்போம்.
1.இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை
2.உணர்வின் ஒளியே போதுமானது
3.உயிருடன் ஒன்றி… அவனுடன் அவனாக வாழ்வதே கடைசி நிலை.

அகண்ட அண்டத்தில் எத்தகைய பிரளயங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழிவதில்லை.

சூரியன் ஒரு காலம் அழியலாம்… அப்படி அழியும் காலம் வந்துவிட்டது. அழிந்து… இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது பூமியில் வாழும் மனிதனின் நிலையும் செயலற்றாக மாறிவிடும்.

“அதற்கு முன் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றடைய வேண்டும்…!”

ஆறாவது அறிவை வைத்து நாம் உருவாக்க வேண்டியது எதை…?

ஆறாவது அறிவை வைத்து நாம் உருவாக்க வேண்டியது எதை…?

 

மனிதனின் ஆறாவது அறிவைப் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று சொல்வார்கள். காரணம் நாம் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள். ஆறாவது அறிவு கொண்டு இன்று…
1.எத்தனையோ உயிரினங்களை உருவாக்கியுள்ளோம்
2.மிருக இனங்களை மாற்றியுள்ளோம்…
3.எத்தனையோ தாவர இனங்களை மாற்றி உள்ளோம்…
4.எத்தனையோ இயந்திரங்களையும் உருவாக்கி உள்ளோம்.

ஆனாலும் இந்த மனித வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் உதாரணமாகக் கோப உணர்வுகளை அதிகமாக நுகர நேர்ந்தால்… அந்தக் கார உணர்ச்சிகள் நம் உடலிலே இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

அந்தச் சந்தர்ப்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்தத் தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

அதைத்தான் ஓ…ம் என்ற பிரணவத்தை முருகன் சிவனுக்கே ஓதினான்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அதாவது…
1.கோபப்படுவோர் உணர்வுகளை நுகர்ந்தால் அது ஓங்கார உணர்வாக இயக்கினாலும்
2.அந்த ஓங்காரத்தை அடக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
3.நம் புருவ மத்தியில் எண்ணினால் கோப உணர்வுகளை இது தடைப்படுத்திவிடுகிறது.

அடுத்து அந்த உணர்வை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
1.எங்கே நம் கண்ணின் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்கியதோ
2.மீண்டும் அதைப் பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அதே இடத்தில் பதிவாகின்றது
3.அந்தக் கோபம் என்ற ஓங்காரத்தைத் தடைப்படுத்தி விடுகின்றது.

நம்முடைய வாழ்க்கையில் இதற்கு முன்னாடி எத்தனையோ தீமைகள் உடலிலே சேர்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் வரக்கூடிய வேதனை வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் பாய்ச்சாதபடி… தனக்குள் உருவாகாதபடி… அதை எல்லாம் தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவாற்றலைப் பெருக்குவதற்கு தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

தியானம் என்றால் என்ன…?

திட்டியவனை நாம் மீண்டும் மீண்டும் எண்ணுகின்றோம்… அதுவும் தியானம் தான். என்னைத் திட்டினால் அவனைச் சும்மா விடுவதா… அவனை விடக்கூடாது…? என்று எண்ணினால் அந்தக் கோப உணர்வுகளை நமக்குள் அது எப்படி மீண்டும் மீண்டும் தூண்டுகின்றதோ அதுவும் தியானம் தான். இவை எல்லாம் நமக்குத் தீமை செய்யக்கூடியது.

ஆனால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணத்தால் எண்ணி
2.நமக்குள் மீண்டும் மீண்டும் எடுத்து வளர்த்துக் கொண்டால் இந்தத் தியானம் நமக்குள் பல நன்மைகளைச் செய்கின்றது.

குருநாதர் அனைத்தையும் அறிந்தார்… அவருக்குள் விளைய வைத்தார்… எனக்குள் பதிவு செய்தார். குரு காட்டிய அருள் வழியில் நான் எனக்குள் விளைய வைத்தேன் உங்களுக்குள் அந்த நல்ல ஞான வித்தைப் பதிவாக்குகின்றேன்.

இந்தப் பதிவை நினைவாக்கினால் உங்கள் ஞானத்தால் தீமைகளைப் போக்க முடியும். உங்களைக் காத்துக் கொள்ள முடியும் யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று எண்ண வேண்டாம்.

ஆகவே ஆறாவது அறிவால் உங்களுக்குள் ஒளியான உணர்வுகளை உருவாக்க முடியும்.

மனிதன் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் தெளிந்து வாழலாம்.

ருத்ர தாண்டவம்…

ருத்ர தாண்டவம்…

 

உதாரணமாக கோப குணத்தை நாம் நுகர்ந்து விட்டால் உடலுக்குள் என்ன நடக்கிறது…?

ஒரு மிளகாயை வாயிலே போட்ட பின் நாம் எப்படி அலறுகின்றோமோ இதைப் போல் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் அதே உணர்ச்சிகளைத் தூண்டும்.

அதைத் தாங்காத நிலைகள் கொண்டு அந்தக் கார உணர்வுகள் அதிகமானால் இந்த அணுக்கள் அந்தக் காரத்தையே ஏற்று காரமான மலத்தை அது வெளிப்படுத்தும் தன்மை வருகிறது.

இப்படி நமது வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து வந்தாலும்
1.கோபத்தின் உணர்வு கொண்டு கோப (கார) உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது
2.நரம்பு மண்டலங்களில் அதனுடைய இயக்கம் நாளுக்கு நாள் சேர்ந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
3.அப்பொழுது நம்முடைய உடல் அங்கங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இந்த உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விட்டால் அந்த உணர்ச்சிகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி… இந்த உணர்வின் இயக்கம் நரம்பு மண்டலங்களில் மாற்றப்படும் பொழுது “கை கால் அங்கங்களைச் சுருக்கி விடுகின்றது…”

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் அந்தக் கோப குணம் உடலை எப்படிப் பாதிக்கின்றது என்பதைக் காட்டுவதற்காகக் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.

புலி எப்படி இரக்கமற்று மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுகின்றதோ அதே போல
1.பிறிதொருவர் மீது வெறுப்புகள் வரப்படும் பொழுது
2.அந்தக் கார உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது
3.சிந்தனை அற்றவனாக ஆக்கி வெறித் தன்மை கொண்டு இயக்கப்பட்டுவிடுகிறது.

நண்பனாகப் பழகினாலும் கூட தான் எண்ணிய வழி அவன் சரியான நிலைகளில் வரவில்லை என்றால் ஆத்திரங்கள் அங்கேயும் வருகின்றது.

ஆத்திரம் அதிகரிக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. யாரைப் பார்த்து இந்த உணர்வைச் சேர்க்கின்றோமோ “தாக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை உண்டாக்கிடுகின்றது.

ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கின்றது…?

தாக்குபவனின் உணர்வுகளும் தாக்கப்பட்டவனின் உணர்வுகளும் அங்கே அவர்களுக்கு முன்னாடி இருக்கின்றது. அந்தக் கார உணர்ச்சிகள் உயிரிலே மோதினால் அது நம் உடலில் காளியாக மாறுகின்றது.

உயிரிலே மோதப்படும் போது அதே வேக உணர்வுகள் மோதியவுடனே உடலை இயக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் “சிவன் – ருத்ர தாண்டவம் ஆடுகிறான்…” என்று காட்டினார்கள்.
1.ஆக… நாம் ஆடுகின்றோமா…!
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை ஆட்டுவிக்கின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தாக்கப்படுபவன் நண்பனாக இருக்கும் பட்சத்தில்… அவன் மீது அன்பைச் செலுத்தி அவன் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவன் படும் வேதனை நம்மை இயக்குகின்றது. ஆஅனால் வேதனை என்பதே விஷம்.

நண்பனைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு எதிராளி தாக்குகின்றான். நண்பனின் வேதனையை நுகர்ந்து விஷத்தின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் நமக்குள் என்ன நடக்கிறது…?

காற்று மண்டலத்தில் சில செடி கொடிகள் விஷத்தின் தன்மை கொண்டதாக இருக்கும். அந்தச் செடி கொடிகள் உமிழ்த்தும் மணங்கள் காற்றில் கலந்து வருவதை நாம் சுவாசித்தால் நமக்கு மயக்கம் வருகின்றது.

அதைப் போல் நண்பனின் வேதனையை நாம் சுவாசித்தவுடன் உடல் முழுவதும் பரவி சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.

சிந்தனை இழந்த பின் யார் மீது பற்று இருக்கின்றதோ அவனைத் தாக்குவோர் மீது எதிர் நிலையாகி “அவரைத் தாக்க வேண்டும்…” என்ற வேக உணர்வு வருகின்றது.

வேதனை வரும் பொழுது “முதலில்” சிந்தனையை இழக்கச் செய்கின்றது… சோர்வடையச் செய்கின்றது. ஆனால் கார (கோப) உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது விஷமும் கார உணர்வுகளும் வேக நிலையில் கலந்து ஏதிராளியைத் தாக்கும் உணர்ச்சிகளே நமக்குள் கூடுகின்றது.

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் நண்பருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தான் வாழ்க்கையில் நடக்கின்றது.

நமக்கு வேண்டியவரை ஒருவர் தாக்கி விட்டால் நமக்கு எப்படி இருக்கும்…? வேதனைப்படும்போது அலறுகின்றோம். ஏன் எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை..! ஆனால் தாக்கிவிட்டான் என்று அடுத்தவன் மீது கோபப்படுகின்றோம்.

இப்படி… நமது வாழ்க்கையில்
1.நாம் தவறு செய்வதும்…
2.நாம் தவறு செய்யாமல் இருப்பதும்…
3.நம்மைத் தவறு செய்ய வைப்பதும்… “பிறருடைய நிலைகளை வைத்துத் தான்…”

இந்த உணர்வுகள் அணுக்களாக மாறி விட்டால் உணர்ச்சிகளைத் தூண்டிக் கண் வழி கவர்ந்து உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்திலே கலந்து விடுகின்றது… தீமைகளாக விளைகின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா…!

கெட்ட கனவுகள் வரக் காரணம் என்ன…?

கெட்ட கனவுகள் வரக் காரணம் என்ன…?

 

அன்றாட வாழ்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் சண்டை போடுபவர்களை… வெறுப்படைபவர்களை… கோபப்படுபவர்களை… குரோதப்படுபவர்களை… எல்லோரையும் நாம் பார்க்க நேர்கிறது. அந்த உணர்வுகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.

அவர்களுக்கும் நமக்கும் நேரடியான சம்பந்தமே இல்லை. இருந்தாலும் பதிவு ஆகிவிட்டால் இரவு தூக்கத்தில் கனவுகளாகப் பார்க்கலாம்.

பகலில் நல்ல இடத்திலே… எப்படிச் சண்டை போட்டார்கள்…? என்று
1.“தூங்குவதற்கு முன்…” இந்த உணர்வலைகள் வரும்.
2.அடுத்து தூக்கத்தில் பார்த்தால் நாம் யாருடனோ சண்டை போடுகின்ற மாதிரி கனவுகள் வரும்… முழிப்பாகி விடும்… எழுந்து விடுவோம்…!
3.யார்… என்ன…? என்ற நிலையில் தெரியாது… உருவமும் தெரியாது
4.நம் எண்ணமும் இந்த உணர்வுகளும் சேர்த்துச் சரியான உருவம் தெரியாதபடி நமக்கு அதிர்ச்சியாகிவிடும்
5.யாரோ நம்மைத் தாக்க வருகிறார்கள்…! என்று கனவிலே வரும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து இதே உணர்வுகள் “மற்ற அணுக்களுக்கு எதிர்மறையாக வரும் போது…” இந்தப் பதட்டமும் பயமான உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுத் திடீரென்று இரவிலே எழுந்து விடுவோம்.

இது எல்லாம் எது செய்கின்றது…? பகலில் நுகர்ந்த உணர்வுகளை நமது உயிர் இயக்கிக் காட்டுகிறது.

அந்த உணர்ச்சியின் தன்மை அந்தந்த அணுக்களுக்கொப்ப அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்தச் செயல்களை உணர்ச்சிகள் வழி தான் செயலுக்கு வருகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

காரணம் பகலில் எல்லாவற்றையும் நாம் பதிவு செய்து விடுகின்றோம். இரவு தூக்கத்திலே அந்த மாதிரி நம்மை இயக்குகிறது.

நம்மை ஒருவன் திட்டிவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்கடுத்து மற்ற வேலைகளைச் செய்கிறோம். வேலையில் சோர்வடையும் பொழுது… தன்னை அறியாமலே அந்தத் திட்டியவனின் நினைவு வரும்.

என்னை இப்படி எல்லாம் பேசினான்… செய்தான்… என்று எண்ணினால் அந்த நேரத்திலே செய்யக்கூடிய வேலை கெட்டு விடுகின்றது… வேலையைச் சரியாகச் செய்து முடிக்க முடியாது.

அப்போது வீட்டில் ஏதாவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களிடம் சண்டைக்குச் செல்வோம்… நண்பர்களிடத்திலும் பகைத்துக் கொள்வோம்.

அதாவது மிகவும் பழகிய நண்பர்களாக இருந்தாலும் கூட வீட்டிலோ வெளியிலோ வெறுப்பாக இருந்தால் தமாஷாக ஏதாவது சொன்னால் போதும். இரண்டு பேருக்கும் நிஜமாகவே சண்டை கடுமையாகிவிடும்.

சந்தோஷமாக இருக்கும் போது ஒன்றும் இருக்காது. ஆனால் சங்கடமாக இருக்கும் பொழுது… வெறுப்பாக இருக்கும் பொழுது… என்னைக் கிண்டல் செய்கின்றாயா…? என்று இந்த நல்லவன் மீது… உதவி செய்தவர்கள் மீது… சண்டை வந்துவிடும்… பார்க்கலாம்… எதிரியாகவே மாற்றிவிடும்.

ஆகையினால் தமாஷாக… விளையாட்டாக… எப்போதும் நாம் செயல்படுத்தக் கூடாது. அன்புடன் அரவணைத்து ஒரு அர்த்தத்துடன் நாம் சொல்லி
1.நீங்கள் இப்படிச் செய்ததால் தான் தீமையின் விளைவுகள் இப்படி உங்களுக்கு வந்தது
2.அதற்குப் பதிலாக இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால்
3.அந்த நேரத்தில் நல்ல நிலைகளைக் கொண்டு தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.

ஆகவே இந்தத் தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் கேலியாகப் பேசுவதோ கிண்டலாகப் பேசுவதோ அல்லது அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்காகச் செயல்படுத்துவதோ அந்த வழிக்கே நாம் போகக் கூடாது. கடும் எதிரியாக மாறிவிடும்… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும்.

வேதனையாக இருக்கிறார் என்ற சிந்தனை இல்லாதபடி அவர்களை நாம் கேலி செய்வோம்… கிண்டல் செய்வோம்…
1.உடனே அவர்கள் நம் மீது சீறிப்பாய்வார்கள்… கடும் சண்டையாகும்…
2.நம்மை அறியாமலே… நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் நமக்கு எதிரியாக மாறி வரும்.
3.பின் வேதனையாகி உடலில் கடும் நோயாக மாறி நம்மைத் தீமையின் எல்லைகளுக்குக் கொண்டு சென்றுவிடும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து… அவைகளை நாம் மாற்றிப் பழகுதல் அவசியம். அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்கிறோம்.

எந்த நேரத்திலும் இந்த ஆயுதத்தை எடுத்துச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பகைமை இல்லாது வேதனை வராது மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது… அனுபவம் இல்லை என்றால் அருள் ஞானத்தைப் பெற முடியாது

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது… அனுபவம் இல்லை என்றால் அருள் ஞானத்தைப் பெற முடியாது

 

இன்ஜினியரிங் படித்து எல்லாவற்றிலும் மள மள என்று தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கி வந்திருப்பார்கள். ஆனால் தொழிலுக்குச் சென்று வேலை பார்க்கும் இடத்தில் என்ன செய்கின்றார்கள்…?
1.படித்ததைத்தான் சொல்லிச் செயல்படுத்த முடிகிறதே தவிர
2.இடைவெளியில் தவறுகள் வந்தால் என்ன செய்வது…? என்று தெரியாது.

ஆனால் இங்கே ஃபிட்டராக வேலை செய்பவருக்கு இன்னது ஆனது. அதனால் தான் அந்த இயந்திரம் தேய்மானம் ஆனது என்று அனுபவத்தில் சொல்லி விடுவார்கள்.

அவர் அந்த இன்ஜினியரிடம் சென்று சார்…! இந்த மாதிரி இருக்கின்றது இப்படிச் செய்தால் சரியாகிவிடும்…! என்பார்.

ஆனால் அவரோ “நான் படித்துக் கொண்டு வந்து விட்டேன் எனக்கு எல்லாம் தெரியும்… நீ எனக்குச் சொல்வதா…!” என்று சொன்னால் என்ன ஆகும். அந்த அனுபவ அறிவைப் பெற முடியாது.

படித்ததைத் தான் சொல்ல முடியுமே தவிர அங்கே இயந்திரத்தில் உள்ள தேய்மானத்தைச் சரி செய்து கொண்டு வர முடியாது.

ஏனென்றால் கீழே வேலை செய்பவர்கள் தன் அனுபவத்தின் நிலைகள் கொண்டு சொல்கின்றார்கள். இப்படி வாழ்க்கையில் நாம் சிந்தித்துச் செயல்படுத்தினோம் என்றால் தான் சரியாக இருக்கும்.

இன்ஜினியரிங்கில்… படித்ததை வைத்துத் திருப்பிக் கொண்டு வந்தால் சரியாக வராது. அவசியம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதே போன்று தான்
1.யாம் (ஞானகுரு) சொன்னதை எல்லாம் பாடமாக வைத்துக்கொண்டு அதையே எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
2.ஆனால் சந்தர்ப்பத்தில் வரக்கூடிய தீமைகளை நான் சொல்லிக் கொடுத்த முறைகள் கொண்டு
3.அதை மாற்றி அமைத்த அனுபவம் மிகவும் முக்கியமாகத் தேவை.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று அதை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும். “அந்த அனுபவத்தின் நிலைகள் கொண்டு” செயல்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் அனுபவம் இல்லாதபடி அந்த இன்ஜினியருடைய செயல்கள் சீராக வராது. இதே போல் டாக்டராக வருபவர்களும் எல்லாம் படித்து விட்டுத் தான் வருகின்றார்கள்.

ஆனாலும் மருந்து கொடுக்கப்படும் பொழுது அனுபவம் அவசியமாகிறது. காரணம்… ஒரே நோயாகத் தெரிந்தாலும் கூட அந்த உடலில் இன்னொரு நோய் இருப்பது அது தெரியாதபடி செயல்படுத்தினால் என்ன ஆகும்…?

ஆஸ்த்மா நோய் இருக்கும். ஆனால் இரத்த கொதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று அதை அடக்கினால் ஆஸ்த்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது.

இந்த மருந்தைக் கொடுத்தால் அவருக்கு நோய் அதிகமாகிவிடும்…!

ஆனால் இதற்கு மருந்து கொடுத்தோம்… இப்படி ஆனது…! அதற்கு மருந்து கொடுத்தோம்… அப்படி ஆனது…! என்று அனுபவத்தில் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு ஆஸ்த்மா நோயைப் பற்றிச் சிந்தித்து இரண்டையும் சமப்படுத்தக்கூடிய மருந்தாகக் கொடுத்தால் அவருடைய நோயைக் குணப்படுத்த முடியும்.

1.ஆக இன்ன நோய்க்கு இன்ன மருந்து தான் கொடுக்க வேண்டும் என்று டாக்டருக்குப் படித்திருந்தாலும்
2.இந்த அனுபவம் இல்லை என்றால் பலன் இல்லை.

இரத்தக் கொதிப்பை அடக்கக் குளிர்ச்சியானதைக் கொடுத்தால் ஆஸ்த்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது. கர்… புர்… என்று மூச்சு இரைச்சலாகும். அப்போது எந்த நோயை நீக்க முடியும்…?

ஆனால் அனுபவரீதியில் கண்டவர்கள் என்ன செய்கிறார்கள்..?

இரத்தக் கொதிப்பினை இத்தனை நொடிகளில் நிறுத்தினோம் என்றால் இதனுடைய வலு குறையும். அந்த நொடிக்குள் அதைச் சரி செய்துவிட்டு அடுத்து அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றிக் கொடுத்தால் அது ரெண்டு நோயையுமே அது கட்டுப்படுத்தும்.

இப்படிச் சமப்படுத்திக் கொடுக்காதபடி ஆஸ்மா நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்பிற்குண்டான மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது.

இந்த மாதிரி ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுத்த வேண்டும். இது எல்லாம் அனுபவ ரீதியிலே அறிந்து செயல்படுத்த வேண்டிய முறைகள்.

இதே போன்றுதான்
1.உங்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கின்றோம்
2.என்னுடைய அனுபவத்தை உங்களிடம் சொல்கின்றேன்.

அனுபவங்களைச் சொல்லி எந்த நிமிடத்தில் அந்தக் குறைகள் வந்தாலும் உடனுக்குடன் அதைச் சீர்படுத்த ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்…! (ஏற்கனவே பல முறை பதிவு செய்துள்ளேன். அதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்)

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள்…! உங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்

அனுபவத்திலே ஒவ்வொன்றாகத் தெரிந்து கொண்டு அதிலே வளர்ச்சி பெற்று வருபவர்கள் தான் தொழிற்சாலையில் வேலை செய்யக்கூடிய ஃபிட்டர்கள்.

படித்து வந்தததைக் காட்டிலும் இவர்கள் தன் அனுபவத்தால் சொல்கிறார்கள். ஆனால் இன்ஜினியர் இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார். அவர் சொன்னபடி இயந்திரத்தை ஓட்டும் போது தேய்மானமாகிறது.

ஆனாலும் அந்த ஃபிட்டருக்கு அனுபவம் இருக்கிறது. இயந்திரம் இப்படிச் சாய்வாக இருக்கின்றது. அதை நேராக்கினால் சரியாகிவிடும் என்று அவர் சொல்கிறார்.

ஆனால் இன்ஜினியரோ நான் படித்து வந்திருக்கின்றேன் நீ சொல்வதைச் செய்தால் எப்படிச் சரியாகும்…? என்றால் அது எப்படி இருக்கும்…!

சில பேருக்கு இந்த உபதேசங்களை கொடுக்கப்படும் பொழுது “நான் எல்லாத் தியானமும் படித்திருக்கின்றேன்… எனக்கு எல்லாம் தெரியும்… குண்டலினி யோகா செய்திருக்கின்றேன்… இந்த யோகம் செய்து இருக்கிறேன்…!” என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனால் அந்த நுணுக்கம் எதிலிருந்து வருகின்றது என்றால் அது தெரியாது…! சொன்ன பாடத்தை அவர்களால் ஒப்படைக்க முடியவில்லை.

படித்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். ஆனால் படிக்காதவர்கள் யாம் சொன்ன தியானத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லும் பொழுது
1.நான் எத்தனையோ படித்திருக்கிறேன் என்னிடமே வந்து நீ சொல்லுகின்றாயா…? என்றால்
2.இவர் கண்டுபிடித்த உணர்வை அறிய முடியாது போய்விடுகிறது.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!

இது எல்லாம் இயற்கையின் நியதிகள். ஆக அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சி கொண்டு செய்தோம் என்றால் நமக்குச் சரியான பக்குவம் வரும்.

அந்த அனுபவம் இல்லை என்றால் எதையுமே சீராக்க முடியாது.

குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அதிலே பெற்ற அனுபவங்களை வைத்துத் தான் உங்களுக்கு உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

பரலோகம்…! அது ஒரு உலகமாகத் தான் இயக்கிக் கொண்டுள்ளது

பரலோகம்…! அது ஒரு உலகமாகத் தான் இயக்கிக் கொண்டுள்ளது

 

ஒருவன் தவறு செய்கின்றான் என்று நாம் பார்க்கின்றோம் அந்த உணர்வு நமக்குள் பதிவாகிறது. அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது உணர்வாக நாம் (சுவாசத்தின் வழி) நுகர்கின்றோம். உணர்வின் தன்மை நம்மை இயக்குகின்றது.

ஆக… மனிதனில் விளைந்த உணர்வுகள் தீயவையாக இருந்தாலும் நல்லவையாக இருந்தாலும் அது அனைத்தும் நம் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவி உள்ளது.
1.அதைத்தான் பரலோகம் என்பது.
2.இது ஒரு “உலகமாக” இயக்கிக் கொண்டுள்ளது.

பூமியில் உருவான தாவர இனங்கள் தனது சத்துக்களை வெளிப்படுத்தும் போது சூரியன் அதை எடுத்து இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக வளர்க்கின்றது. பரலோகத்தில் உருவாகும் நிலையாக அது மாறுகின்றது.

அதிலே விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது தன் தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அது உருப்பெறுகின்றது. இந்தப் பரலோகத்தில் தான் அந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

பரலோகத்தில் எந்தச் செடியின் சத்தை இது நுகர்ந்து கொண்டதோ நமது உயிர் அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அந்த உணர்வுக்கொப்ப ஈசனாக இருந்து ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.

இப்படி மாற்றுவதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத் தான்
1.பரலோகத்தில் இருந்து நாம் சுவாசிக்கும் பொழுது இமயம்
2.இரு இமைகளுக்கு மையமாக இருக்கும் நம் புருவ மத்தியில் இயக்கி
3.அந்த இமயத்திலிருந்து நாம் நுகர்வது அனைத்தையும் சிவலோகமாக மாற்றுகின்றது.

ஆனால்…
1.நாம் நுகர்வது சூட்சமமாக இருக்கின்றது (கண்ணுக்குத் தெரியவில்லை)
2.இருந்தாலும் உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

அடுத்து இந்திரலோகமாக மாற்றி இந்த உணர்வின் தன்மை உடலாக்கப்படும் பொழுது “உணர்வுக்கொப்ப செயலும்… செயலுக்கொப்ப உடலும்… உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பும்…” என்ற நிலையில் அமைக்கின்றது.

பரலோகத்தில் இருந்து நாம் எடுக்கும் உணர்வுகள் சிவலோகமாக “உடலாக” மாறுகிறது. அதைத்தான் “என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்…” என்று உயிரிடம் சொல்வது.

ஆகையினால்
1.நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் எதுவோ அதுவே உடலாக… சிவமாக மாறுகின்றது
2.இந்த உடலான சிவத்தை இயக்குகின்றது… உணர்வின் தன்மை கருவாக்குகின்றது
3.கருவின் தன்மை உருவாகும் போது பிரம்மம் ஆகின்றது
4.அதாவது எதனின் உணர்வு கருவாகின்றதோ மீண்டும் அது அணுவாக மாறும் பொழுது பிரம்மமாகிறது.
5.பிரம்மத்தின் நிலைகள் அடைந்த பின் அந்த அணுவின் மலம் உடலாக்கப்படும் பொழுது சிவமாக மாறுகின்றது.

சிவத்தின் தத்துவத்தை நமது ஞானிகள் இப்படித் தெளிவாக கூறியுள்ளனர். எங்கோ இருந்து யாரும் இயக்கவில்லை…
1.நமக்குள் நின்று உயிர் தான் இயக்குகின்றான்
2.நாம் ஏங்கிப் பெறுவதை உணர்த்துகின்றான்
3.உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றான்
4.உணர்வின் செயலாக அந்த உணர்வுகளே உடலாகின்றது
5.உடலின் உணர்வுகள் அதற்குத் தக்க தான் இயங்குகின்றது.

இது எல்லாம் இந்தப் பரலோகத்தில் பரவி இருப்பதை நாம் நினைவு கொண்டு வந்து எடுக்கும் போது நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

பயிர் இனங்கள் சீராக விளையாதபடி மக்கள் மடியும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டனர்

பயிர் இனங்கள் சீராக விளையாதபடி மக்கள் மடியும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டனர்

 

விஞ்ஞான அறிவால் வந்த பேரழிவால் இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்படும் சக்திகளை இழக்கும் தருணங்கள் வந்துவிட்டது.

அதே சமயத்தில் தாவர இனங்கள் அதனுடைய கருவுறும் தன்மையும் இழந்து விடுகின்றது இழந்துவிடும் செயல்களை விஞ்ஞான அறிவால் உலகெங்கிலும் பரப்புகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பகுதியான இடங்களில்…
1.ஒரு தடவை பயிர் விளைந்ததோடு சரி… ஒரு வித்து வந்ததோடு சரி
2.அதில் விளைந்து வரும் வித்தினை மீண்டும் ஊன்றினால் அது மீண்டும் முளைக்காது… அது மலடாகிவிடும்.

நாம் குழந்தைகள் (குழந்தைப் பாக்கியம்) இல்லை என்று சொல்கின்றோம் அல்லவா. அந்த இனம் அழிந்து விடுவது போன்று தாவர இனங்களில் மலட்டுத்தன்மையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

சாதாரண தாவர இனங்களில் விளையும் அந்த சத்தினைக் கவர்ந்து கொண்டு விஷத்தன்மை கொண்ட தாவர இனங்களையும் உருவாக்குகின்றனர்.

முந்தைய ஆரம்பக் காலங்களில் மனிதனுக்கு மனிதன் ஒருவருக்கு ஒருவர் போரிட்டுத் தன்னை வளர்த்துக் கொள்ளச் செய்தனர்.

பின் மந்திர தந்திரங்களை மனித உடலில் விளைய வைத்து மந்திரத்தைப் பதிவு செய்து அந்த ஆன்மா வெளிவந்த பின் அதைக் கைவல்யப்படுத்தி ஆவிகளின் தொடர் கொண்டு ஒருவரை முடக்குவது என்ற நிலைகளில் போர்கள் நடந்தது.

ஆவிகளின் தொடர் கொண்டு செயல்படும் பொழுது பல உண்மைகளும் அறிய முடிகின்றது. மண்ணுக்குள்ளும் மற்ற நிலைகளிலும் ஊடுருவி அதில் உள்ள உண்மைகளை அறிந்து பூமிக்குள் இருக்கும் தாவர இனங்களையும் நீர் நிலைகளையும் உலோகங்களையும் கண்டுணரும் சக்தி கிடைத்தது.

பின் ஆவியின் நிலையில் கொண்டு மனிதனுக்கு மனிதன் எவ்வாறு இருக்கின்றார்கள்..? என்ற நிலையினைக் கொண்டு வருகின்றனர்.

அதே ஆவியின் தன்மை கொண்டு உலகத்தை அடக்கிடும் நிலையாக ஒவ்வொரு அரசும் செயல்பட்டது.
1.அரசை ஆட்சி செய்ய ஆண்டவனை வணங்குவதும்
2.ஆண்டவனுக்கு விரோதிகள் என்று மற்றவர்களைக் கொல்வதும் என்று ஆவியின் தொடர் கொண்டே செயல்பட்டனர்.

இஸ்ரேல் நாட்டில் இருந்து இத்தகைய நிலைகள் பரவி உலகெங்கிலும் பரவியது. இந்தியாவிலும் இது போன்ற நிலைகள் செயல்பட்டது

இதற்குப் பின் தான் உலோகங்களைக் கண்டறிந்து உலோகத்தில் ஆயுதங்களைத் தயார் செய்து அதை கொண்டு செயல்படுத்தினார்கள்.

அந்த ஆயுதங்களை வைத்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொல்வதும் என்ற நிலையில் செயல்படுத்தினர். அதற்குப்பின் வெடிபொருளைக் கண்டுபிடித்து வெடிக்கச் செய்து நாட்டையும் ஊரையும் தகர்க்கும் நிலை வந்தது.

இப்பொழுது…
1.அதைக் காட்டிலும் வீரியத்தன்மையாக அணுக்கதிர்கள் கொண்டு (அணு ஆயுதங்கள்)
2.கதிரியக்கத்தின் தன்மை கொண்டு நாட்டையே சீரழிக்கும் நிலையாக வந்தது.

லேசர் இயக்கம் என்று… மின்னலின் ஆற்றல் எவ்வாறு ஊடுருவி மற்றதைப் பிளக்கின்றதோ அதைப் போன்று
1.அணுக்கதிரியக்கங்கள் துணை கொண்டு லேசரை வைத்து பூமிக்குள் ஊடுருவச் செய்வதும்
2.மின்னல் தாக்கிய பின் கட்டடங்கள் எப்படி தகர்க்கின்றதோ அதைப் போல் பூமியைப் பிளந்து பூமிக்குள் இருப்பதைக் கண்டறிகின்றனர்.

வானில் வெகு தொலைவிலிருந்து கொண்டே தரையில் பூமிக்குள் என்ன எல்லாம் இருக்கிறது…? என்று கண்டறிகின்றனர் விஞ்ஞான அறிவு கொண்டு.

ஆனால் இவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் ஒரு நாட்டில் அங்கே விளையும் தானியங்களையும் தாவர இனங்களையும் விளையாதபடி செய்து விட்டால்
1.அந்த நாடு தனக்கு அடிமை ஆகிவிடும்.
2.மிருகங்களைப் போன்று நாம் ஆட்சி புரியலாம் என்ற நிலையில்
3.விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாடுகள் முன்னேறிச் சென்று விட்டது.

நாட்டுக்கு நாடு தன்னாட்டைக் காக்க மற்ற நாட்டை அழித்திடும் குரோத உணர்வுகள் அதிகரித்துத் தன் இனம் என்றோ… மனிதன் என்றோ அறியாதபடி… கொன்று குவிக்கும் உணர்வுகளே அதிகரித்து… மனிதனுக்குள் வெறித் தன்மையான உணர்வுகள் ஊட்டப்பட்டு…
1.அவனில் விளைந்த அத்தகைய உணர்வுகள் பூமியில் அதிகமாகப் பரவி விட்டது.
2.வெறித்தன்மையாகவும் சிந்தனை இழந்து செயல்படும் தன்மைகளும் தான் உருவாகிவிட்டது
3.மனிதனுக்கு உணவு இல்லாத செய்யும் சில நிலைகளையும் உருவாக்கி விட்டனர்.

ஆப்பிரிக்காவில் காடு வளங்கள் அதிகமாக இருப்பினும் சில பயிரினங்களில் அதனுடைய இனம் பெருகாதபடி செய்துவிட்டனர். அதற்குப்பின் அவர்கள் உணவுக்காக அலையும் நிலை வந்துவிட்டது.

மண்ணுக்குக் கீழ் புல் பூண்டுகளில் இருக்கும் கிழங்கை எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் நிலைகள் அதிகரித்து விட்டது அதுவும் கிடைக்காத பொழுது மடிந்து கொண்டும் உள்ளனர்.

பயிர் இனங்கள் சீராக விளையாதபடி மக்கள் மடிந்து கொண்டுள்ளனர் மழை நீர் பெய்தாலும் விஷத்தன்மைகளை அங்கே பாய்ச்சி விடுகின்றனர்.

மேகங்களில் விஷத்தன்மைகளைத் தூவப்படும் போது அந்த நாட்டில் மழையே இல்லாது போய் விடுகின்றது. இந்த விஷத் தன்மைகள் மேகமுடன் கலந்து உலகெங்கிலும் பரவி விட்டது. மனித இனத்தையே சீர்குலைக்கும் தன்மைகள் வந்து விட்டது.

1.நாகரீகம் என்ற பெயரில் அநாகரீக நிலைகள் தான் உலகெங்கிலும் வளர்ச்சி ஆகிக் கொண்டு வருகின்றது
2.மனிதனுக்கு மனிதன் கொன்று குவித்து ரசிக்கும் தன்மைதான் வளர்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா…?