தாய் சக்தி

தாய் சக்தி

 

தாய் தந்தை குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட… தீதெண்ணச் செயலுக்குச் சென்றிடாவண்ணம் ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திட பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே ஜெபத்தில் வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.

அன்பென்னும் வசமாக… பரிவு என்ற இரக்க குணம் காட்டி… பாசம் கொண்ட செயல் மூலம்…!
1.உயிரை நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய் சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில் செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்…!”

தாய் சக்தி என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது என்பது அன்பு கொண்டு தான்.

அன்பு பரிவு பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால் ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.

அந்த அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம் கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.

ஆணின் தன்மையில் பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப் புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம் கொண்டாலே செயல் வேறாகுமப்பா..!

அதாவது
1.POSITIVE NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண் என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம் சூனியமாகிவிடும்…!

பெண்மை குணங்களை அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்…?

தன்னுள் திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால்
1.போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை…”
2.மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.

அத்தகைய செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான் வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் “தாய் சக்தியையும் இழந்து…” அவசரம் ஆத்திரம் என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான்.

இந்த உண்மையை உணர்ந்து கொள்வது மிகவும் நலம்.

ஆகவே உயர் ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.

ஆனால் உயர் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே தீருவேன்…! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த குணம் கொண்டே சம நிலை பெற வேண்டும்.
3.அன்றைய சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.

பெண்மையின் குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப் பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும் அதுவும் ஒரு வகை தான்.

ஆகவே சிவ சக்தி என்ற குணங்களால் தான்… நல்லெண்ணம் கொண்ட… நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.

ஆணவம் அகங்காரம் என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால் மௌனம் கொண்டு
1.ஞானம் வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.ஞானத்தின் முதிர்வு நிலையை எய்திடலாம்.

உடல் வலு… உயிரான்ம வலு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

உடல் வலு… உயிரான்ம வலு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

 

மனிதன் “செயற்கையாக” வலுக்கொண்ட உணர்வுகளைச் சுவாசிப்பதற்காகத் தன் உடல் தசைகளை இயக்குகின்றான். எப்படியும் உடலில் வலுவைச் சேர்க்க வேண்டும் என்று அந்த உணர்வின் தன்மை கொண்டு “கை கால் அங்கங்களை மூட்டையைக் கட்டி அடிப்பதும்… கை கால்களை ஓங்கி அசைப்பதும்…” இந்த உணர்வின் தன்மை சிறுகச் சிறுக எடுக்கப்படும் பொழுது… தசைகளில் வலுவின் தன்மை வருகின்றது.

வலுவான நிலையினை உருவாக்கும் நிலையாகப் பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுரக்கின்றது. இப்படிச் சுரக்கப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கிறது…?

1.சாதாரண மனிதன் கால் கிலோ கறியைச் சாப்பிடுவதே சிரமம்.
2.ஆனால் இவன் பத்துக் கோழியைச் சிறுகச் சிறுக ஒவ்வொன்றாக கூட்டி தன் உணவாக உட்கொண்டு தன் உடலிலே (தசைகளில்) வலு சேர்ப்பான்.

மிருகத்தின் விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை இவனுக்குள் சேர்க்கச் சேர்க்க பித்த சுரப்பிகளும் அதிகமாகச் சுரக்கப்பட்டு… மிருகங்களுக்கு எப்படி வலு இருக்கின்றதோ அதைப் போல் அவன் உடலில் தசைகளில் வலு உருவாகி… “சாதாரண மனிதனைக் காட்டிலும் மிருக பலம் கொண்டிருப்பான்…”

சாதாரணமாக… இரண்டு இன்ச் (2”) கனமுள்ள ஒரு கம்பியை வலுவான கருவி கொண்டு தான் வளைக்க முடியும். ஆனால் இவனோ தன் கையிலேயே ஒரு முறுக்கைச் சுழட்டுவது போன்று சுற்றி வளைத்து விடுவான்.

யானைக்கு எந்த வலு உண்டோ… அது போல பல மிருகங்களின் உணவை உட்கொள்ளும் பொழுது அவனின் உழைப்பும் இந்த உணர்வின் தன்மை நினைவும்… இவனுக்குள் வலு சேர்க்கும் உணர்வாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்தவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் வலுக்கொண்டவன் ஆகிவிடுன்றான். ஆனால் அனேகமாக அவனுக்கு நோயே அதிகமாக வருவதில்லை…!

கடுமையான விஷம் இருக்கும் பொழுது மிருகங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகி முதிர்வடையப்படும் பொழுது மிருகங்கள் அதனுடைய வளர்ச்சியின் தன்மை வாழும் காலம் குறுகியதாக இருக்கின்றது…. அதற்குள் மடிந்து விடுகின்றது

அதே போன்று ஒரு மனிதன் இப்படி விஷத்தன்மையைத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டாலும்…
1.விஷத்தின் தன்மை உடலில் அதிகரிக்கப்படும் பொழுது
2.இருதய வாயில்களிலோ சிறு மூளை பாகங்களிலோ உடனடியாகத் தெறித்து இரத்தக் கசிவாகி
3.நோய்வாய்ப் படாதபடி அவன் மடிந்து விடுவான்.

ஆக… அசுர உணர்வு கொண்டு மனித உடலை விட்டுச் சென்றால் எந்தக் கோழிகளை அதிகமாக உட்கொண்டானோ இறந்த பின் உயிரான்மா கோழியின் ஈர்ப்புக்குள் தான் செல்லும்.

பெரும்பகுதி பயில்வானாக இருப்பவர்கள் அனைவருமே கோழியைத்தான் அதிகமாக உட்கொள்வார்கள். மற்ற பறவை இனங்களையும் உட்கொள்வார்கள் பறவை இனங்கள் அனைத்தும் விஷத்தன்மைகளை அதிகமாக உட்கொண்டாலும் அதை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பெற்றது.

ஆகவே அந்த உடல் உறுப்புகளை இவன் உணவாக உட்கொள்ளும் பொழுது அது எப்படி விஷத்தினை அதனின் உணர்வு கொண்டு தனக்குள் வலுவானதோ இதைப் போன்று இவனுக்குள் உணவாக உட்கொள்ளும் ரசங்கள் பித்த சுரப்பிகளின் வளர்ச்சி அதிகமாகின்றது.

அதன் வழி கொண்டு அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷத்தன்மையாக வருகின்றது. யானைக்கு எப்படி வலுவோ புலிக்கு எப்படி வலுவோ மற்ற மிருகங்களுக்கு எப்படி வலு வருகிறதோ இதைப்போல இவனுக்குள் வலு வருகின்றது.

1.ஆனால் இவன் மிருக குணம் கொண்டு தான் இருப்பான்
2.அவனிடம் யாராவது சாந்தமாகப் பேச முடியுமா என்றால் இல்லை.
3.அசுர உணர்வு கொண்டு பேசுவதும்… அவனை எதிர்த்துக் குறையாகப் பேசும் நிலை வந்தால்… அவனைத் தாக்கும் நிலையில் தான் வருவான்.

ஆகவே… அவனை மதித்து நடக்க வேண்டும். குத்துச்சண்டை வீரர்களிடம் நாம் அணுகினால் அசுர உணர்வைத் தான் அவன் காட்டுவான் மனித உடலிலேயே மிருகமாக மாற்றிக் கொள்கின்றனர்.

மற்றவர்கள் தன்னைப் போற்ற வேண்டும் என்று எண்ணுகின்றான். கோழி மற்ற பறவைகள்… விஷத்தை முறிக்கும் உணர்வுகள் அவன் உடலில் விளைந்ததால்… விஷத்தன்மையை ஒடுக்கும் தன்மை வருகிறது. வலுக் கொண்டவனாக இருக்கின்றான்.

ஆனாலும் விஷத்தை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது “அடுத்த பிறவி எது…?” என்றால் கோழியாகத்தான் பிறப்பான்.
1.இன்று ரசித்து அதை உணவாக உட்கொள்கின்றான்.
2.எதை ரசித்து உட்கொண்டானோ உடலில் விளைய வைத்த அந்த உணர்வுகள் உயிருடன் சேர்த்து ஆன்மாவாக மாறும்.
3.எந்த மணத்தின் தன்மை ஆன்மாவிலே பெருகியதோ உடலை விட்டுச் சென்ற பின் அங்கே கோழிக்குள் தான் செல்வான்.

உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…

உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…

 

உலகோதய வாழ்க்கையின் சூழலில் சிக்கிக் கரை காணாது மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டுவிட… எட்டிவிட நினைக்கின்றது. ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை அறிய முடியாது “எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி…”
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும் என்று கரை சேரலாம் என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக் கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் “தன் முயற்சி கொண்டு” கரை காண்பதும் உண்டு.

அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில் திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும் தானே கண்ட வழியாக ஓர் படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு எண்ண கதி ஓட்ட வாழ்வில் செல்லும்
1.பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்… உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்.. தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் போதினியைத் (குரு) தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8.குருவின் அருட் பார்வையில் நனைகின்றான். நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.

உலகோதய வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்துவிட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக் கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.

இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள் “அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத் துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலகோதய ஆசைக்கெல்லாம்… குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் அன்றோ..!

அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.

தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.

அந்தப் பக்குவத்தை முயற்சி செய்து பெறுவதற்காகத் தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”

தன்னிடம் குருகுல வாசம் செய்ய வரும் சீடர்களுக்கும் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை.

“தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கும் மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.

அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்

“காரணம் உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!

குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம். நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”

உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.

மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலகோதய ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.

அடுத்துப் படிக்கும் மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழிதனின் ஏகிவிடுவர்.

இதில் எல்லாம் தெளிந்து
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலகோதய ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
4.அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள்.

அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!

தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.

1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.

அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.

சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது. வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”

உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்துத்
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.

ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலகோதய ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்.
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆங்காரத்தை ஓங்காரமாக்கினால் “உலகோதயம் நம் காலடியில்…!”

ஆங்காரத்தை ஓங்காரமாக்கினால் “உலகோதயம் நம் காலடியில்…!”

 

மனிதனான நமக்குள் பல பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த உடல் வாழ்க்கையில் மோதும் உலகோதய உணர்வுகளிலிருந்து உயர் ஞான வழியின் வழியை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெற வேண்டும்.

1.நான் என்ற ஆணவம் ஒரு மலம்
2.காமம் என்ற சபல குண மோகம் ஒரு மலம்
3.உலகோதய ஆசை என்னும் மாயை மூன்றாவது மலம்.

இந்த மூன்றையும் அறிந்து அந்த மும்மலத்தையும் நீக்க வேண்டும் என்றால் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற கருத்தின் பொருளைக் காண வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வுடன் தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெற்று சத்தியம் என்பதன் உண்மைப் பொருள் விளங்கி நம் எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர்கோடாகப் பரிணமித்தல் வேண்டும். சத்தியம் என்ற அந்த மெய் ஞானமே உண்மை ஞானமாக அறிந்து செயல்பட வேண்டும்.

சத்திய வழி சிவம் பெறுதல் என்பது என்ன..? சிவத்தை எங்கிருந்து பெறுவாய்…?
1.உன்னிடத்தில் உள்ளதடா சிவம்… என்று
2.சித்தன் காட்டிய வழியில் உன்னை உணர்ந்து பாரப்பா…!

காமம் என்பதே உயிர்களுக்கு அன்பு. காமம் சமமான பக்குவத்தில் இருந்தால் அதுவே சிவமாகும். அந்த அன்பு தானப்பா “சிவம்…!”

மனதில் அன்பு கொண்டு விட்டால் உயிரான்மாவின் சக்தியின் வலுவிற்குச் சுலபமான வழி கிட்டிவிடும். அதுவே சுந்தரம்…! சுந்தரத்தைப் பெறுவது என்றால் “அழகு” என்று பொருள் கொள்வாய்.
1.அந்த அழகு என்பது எதுவப்பா..?
2.நீ நினைக்கும் உடல் அழகு அல்ல…!

அழகு என்பது ஆன்ம வலுவின் ஒளி காந்த சக்தி கொண்டு “சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதித் தத்துவம் ஆகும்..!” அதைப் பெற வேண்டும் என்றால் மும்மலம் நீக்கப்பட வேண்டும்.

அதை நீக்கிய பிறகு மெய் வழி கண்டு மெய் வழி அறிந்து மெய் ஞானம் மலர்ந்து
1.விரிந்து மணம் வீசும் ஒரு மலர் போல
2.ஆன்ம சக்தியின் சத்தியம்.. சிவம்… சுந்தரம்… என்ற எண்ணத்தில்
3.கடைப்பிடிக்கும் அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தி அதை மேன்மைப்படுத்தினால்
4.அன்பு என்ற சிவத்தைப் பெறுகின்றாய்.

அன்பாம் சிவ ஈர்ப்பின் வலுச் செயலினால்… சுந்தரமாம் ஆன்ம அழகின் ஜோதியாக… ஜோதியின் சக்தியே பிரகாசமாக… பிரகாசத்தின் ஒளி நிகழ்வாக… “மூலத்தின் மூலமாகச் செயல் கொண்டிடலாம்…!”

சிற்றின்ப போகத்தையே பேரின்பப் போகமாக்கிய போகநாதர் சத்தியம் சிவம் சுந்தரத்தைப் பெற்றது… மும்மலத்தை மாற்றியமைத்து நற்குண வழிச் செயல் ஆக்கத்தின் ஆக்கம் பெற்றதால் தான்…!

முருகனுக்கு மயிலையும் சேவலையும் காட்டி நாகம் வேல் என்ற தொடரையும் காட்டுகின்றார்கள். அதன் சூட்சமம் அறிந்தோமா…? போகப்பெருமான் வளர்த்துக் கொண்ட அனுபவ ஞானத்தை நாமும் அறிந்து கொண்டால் நம்முடைய வளர்ச்சி நல் வழி ஆகுமப்பா..!

விநாயகர் ஞானக்கனியைப் பெற்றார். இடும்ப குண வசத்தால் முருகனுக்குக் அது கிடைக்கவில்லை என்ற கதையின் தத்துவத்தில் உள்ள உண்மையையும் தெளிந்து கொள்ள வேண்டும்.

வினையின் நாயகன் அந்த விநாயகனே நாம் தானப்பா…! நாம் எப்படி ஞானக்கனி பெறுவது..?

உயிரின் மூலமாகிய “சிவ சக்தி…!” என்று சொரூபப்படுத்திக் காட்டிய
1.சுழற்சியின் வேகமான சிவத்திற்குள்… சக்தி உருக்கொள்ளும் தன் உயிர் சக்தியை
2.தன்னைத் தான் உணர்ந்து தன்னுள் அந்தச் சிவ சக்தியைக் கண்டு
3.வலுக் கொண்ட செயலின் ஆக்கமாகத் தன்னைத் தான் அறிவதே ஞானக்கனி பெறுவது என்பது.

(சூட்சமப்படுத்திக் காட்டிய நிலையில்) தன்னுள்ளே சிவ சக்தியைக் கண்டு அதைச் சுற்றும் வழித் தொடரில் அதை வலம் வந்து அந்த வினையின் நாயகனாக நாம் பெறுவதே “ஞானக்கனி…!”)

அகஸ்திய மாமகரிஷியின் தொடர்பு கொண்டு… போகப் பெருமானின் குரு காளஞ்சி நாதர் (காலிங்கநாதர்) சொன்ன முறைப்படி
1.இருந்த இடத்திலேயே (வெளியிலே தேடிக் கொண்டிருக்காமல்) ஞானக்கனி பெறுதல் என்பதில் அந்த ஞானம் கனிந்து விட்டால்
2.அதனின் சுவையைப் பெற்று விட்டால்
2.அந்தச் சுவையின் “மூலம் அறிய…” வழி பிறக்கும்.

இப்படித் தத்துவங்களையெல்லாம் காட்டிச் சூட்சமங்களை எல்லாம் உள் புகுத்தி “மும்மல நீக்கத்திற்கு வழி காட்டி” வாழையடி வாழை என வரும் ஞானச் செல்வங்கள் தன் சக்தியை வளர்த்துக் கொள்வது என்பது மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் வழியாகும்.

கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.

கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி. கோபத் தன்மை இருந்தால் மும்மலங்களும் தீய வினைகளுக்கு அடிகோலும்.

ஆணவம்.. மோகம்… உலக மயக்கம் என்னும் மாயை…! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது…! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.

முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்… மோக குணத்தை வென்றிட்டார்… உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்… என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப்பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்…!”

மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்…! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.

ஆகவே ஆணவ மலத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி…!”

அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.”மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது…?” என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.

மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது…? என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாக சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்…!” என்ற பொருளை உணரலாம்.

இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்ட சில நிகழ்வுகள்

இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்ட சில நிகழ்வுகள்

 

பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் கதிரியக்கச் சக்திகளை ஒலிப்பேழைகளிலே விஞ்ஞானிகள் கவர்கின்றார்கள். அதே அலைவரிசையில் அனுப்பி 27 நட்சத்திரங்களின் நிலைகளை
1.இராணுவ ரகசியமாகவும் அந்த நாட்டினுடைய ரகசியமாகவும் வைத்துக் கொண்டுள்ளார்கள் விஞ்ஞான அறிவால்.
2.இதையெல்லாம் பத்திரிக்கை வாயிலாக நீங்கள் காண்பது மிகவும் கடினம்.

ஏற்கனவே இத்தகைய கதிரியக்கச் சக்திகளை நட்சத்திரத்திலிருந்து கவர்ந்து கொண்டுள்ளார்கள் என்று பல முறை சொல்லியும்… அதை ஏற்றுக் கொள்வார்கள் இல்லை.

ரஷ்யாவில் மனிதனின் உணர்வுக்குள் இயந்திரத்தினைப் பதிவு செய்து அந்த உணர்வின் ஓட்டத்தால் மனிதனின் கண்ணின் நிலைகள் கொண்டு விண்ணிலே பறந்து செல்லும் ராக்கெட்டினை அன்று வீழ்த்தினார்கள்.

ஆரம்பத்தில் அமெரிக்கா ராக்கெட்டுகளை விண்ணிலே ஏவும் போது அது மேலே சென்று கீழே இறங்கி வரும் நிலைகளில்
1.உடலில் பதிந்து கொண்ட உணர்வின் துணைகொண்டு மனித உணர்வால் பாய்ச்சப்பட்டு
2.அந்த ராக்கெட்டைச் செயலிழக்கச் செய்தார்கள்…. இவ்வாறு தான் வீழ்ச்சி அடைந்தது

முதலிலே வெற்றிகரமாக ஏவினார்கள்… அதைக் கொண்டாடவும் செய்தார்கள் அதற்கு அடுத்து இரண்டாவது ஏவப்படும் பொழுது அதை வீழ்ச்சி அடையச் செய்தார்கள் அதற்கடுத்து செலுத்தப்பட்டதும் வீழ்ந்தது… வெற்றி பெற முடியவில்லை.

முதலில் வெற்றி பெற்ற இயந்திரம் பழுதடைந்த பின் தான் சிந்திக்கத் அமெரிக்கா தொடங்கினான். அந்த நுண்ணிய அலைகளை… கதிரியக்க சக்தியால் கண்டறிந்த பின் ரஷ்யாவில் அணு உலைகள் வைத்திருக்கும் இடங்களை லேசர் கதிரியக்கங்களைப் பாய்ச்சி… அந்த அணு உலைகளை இவர்கள் தகர்த்தார்கள்.

அது வெடித்தபின் அதிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கங்கள் பூமிக்குள் பரவி… அதிக நிலநடுக்கங்கள் உருவாகி அந்த நகரமே குலுங்கி கட்டிடங்களும் சிதைவுண்டது… அந்த நாடே மிகவும் அல்லல்பட்டது.

இதைப் போன்று ஒன்றல்ல… இரண்டாவது அணு உலை அங்கே சிதறப்பட்ட பின்பு தான் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஏனென்றால்…
1.“நட்சத்திரப் போர்…” உருவாகி அணு உலைகள் வெடிக்குமேயானால்
2.அந்த கதிரியக்கத் துகள்களால் மொத்த நாடே அழிந்துவிடும் என்ற நிலையில்
3.இவர்களுக்குள் கம்யூனிசமா சோசியலிசமா போர் முறைகள் ஓய்ந்து சமாதான முறைகளுக்கு வந்தார்கள்.

இப்படிப்பட்ட யுத்தங்கள் தன் நாட்டைக் காக்க மதத்தின் அடிப்படையில் இயக்கப்பட்டது.

அதே சமயத்தில் முகமதியர்களும் போர் செய்து உலகம் முழுவதும் மதப்போராகி ஒவ்வொரு நாட்டையும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மக்களை தன் இனத்தில் சேர்த்துக் கொண்டால் கடவுள் உனக்கு எல்லாம் தருவார் என்று உலகம் முழுவதும் பரப்பி இந்த நிலையை உருவாக்கினார்கள்.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் “எங்கள் கடவுள் உங்களுக்கு இன்னது செய்வார்…” என்று அவர்களும் இப்படிப் பறைசாற்றினார்கள். யூத மதத்தைச் சேர்ந்தவர்களும் மந்திரத்தின் நிலைகள் கொண்டு “கடவுள் உங்களுக்கு இதைச் செய்வார்…” என்று அவர்களும் செயல்படுத்தினார்கள்.

யூத மதத்திலிருந்து வந்ததுதான் முகமது மதமும் கிறிஸ்தவ மதமும் இப்படிப் பிரிக்கப்பட்டு உலகம் முழுவதும் மதப் போராக மாறி இந்தியாவுக்குள்ளும் பரவியது.

முகமதியர்கள் முதலில் இங்கே ஆட்சி செய்ய வந்தார்கள் அது உருவானாலும் அதற்கடுத்து வந்த கிறிஸ்தவ மதம் ரோமானிய மதம் என்று உலகம் முழுவதும் அப்படிப் பரவும் நிலை வந்தது. இஸ்ரேல் நாடும் ரோமானியர்களுக்கு அடிமைப்பட்டுத் தான் இருந்தது.

அரசர்களால் உலகம் முழுவதும் இப்படி ஏற்பட்ட நிலைகள் தான்… மதத்திற்குள் புகுந்த கடவுளும்… எல்லாமே.

அரசர்கள் மதத்தை உருவாக்கி கடவுள் என்று பெயரில் சட்ட நீதிகளையும் ஒழுக்க நெறிகளையும்
1.அந்த நாட்டு அரசனுக்கு ஏற்றவாறு இதைப் பதிவு செய்து அவர்கள் உடல்களிலே பதிவான பின்
2.யார் யாரெல்லாம் இதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கினார்களோ
3.ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் பதிவாகி விடுகின்றது.

அதாவது… “ஓ” என்று பிரணவமாக்கி அவர்கள் கூறிய உணர்வின் சத்தை “ம்” என்று உடலாக்கி… இந்த உடலிலிருந்து மீண்டும் நினைவைக் கூட்டும் போது அது இயக்கி… அந்த மதத்தின் அடிப்படையில் அவனைக் காத்திடும் உணர்வு வருகிறது.

அதையே கடவுளாக மதித்துக் கொண்ட பின்…
1.மற்றவர்கள் சொல்வதை எதிர்நிலை கொண்டு மற்ற மதங்களைச் சாடுவதும் தாக்குவதும் அழிப்பதும் தான்
2.அன்றைய அரசர்களால் உருவாக்கப்பட்டது… உலகம் முழுவதும் பரவி வந்தது.

இன்றைய படித்த விஞ்ஞானிகளாக இருந்தாலும் சாஸ்திரங்கள் தெரிந்த சாஸ்திரவாதிகளாக இருந்தாலும் அனைவருக்கும் இது தெரியும் ஆனால் இதனுடைய உண்மைகளை வெளிப்படுத்த முடியவில்லை.

விஞ்ஞான அறிவில் கற்று வளர்ச்சி அடைந்து இருந்தாலும்… மதத்தைச் சார்ந்த நிலையில்
1.தன் மதமே பெரிது என்றும் எங்களுடைய சாஸ்திரங்களே பெரிது என்றும்
2.மதத்தின் அடிப்படையில் தான் இன்று உலகம் முழுவதும் பரவி… அதுவே ஓங்கி வளர்ந்து கொண்டுள்ளது.

உண்மைகளைத் தேடிச் சென்றாலும்… பெற முடியாத நிலையாகப் போய்க் கொண்டுள்ளது

உண்மைகளைத் தேடிச் சென்றாலும்… பெற முடியாத நிலையாகப் போய்க் கொண்டுள்ளது

 

1.அரசியல் ரீதியிலும் சரி… பாட நிலைகளில் தத்துவங்களைப் போதித்துக் கொண்டிருப்போரும் சரி…
2.ஞானிகள் காட்டிய அறநெறிகளைக் கடைப்பிடித்து அதன் வழியில் இன்று செயல்படுகிறார்களா…! என்றால் இல்லை.

யாரையும் தவறாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். “நான் அல்ல இதைச் சொல்வது…!” குருநாதர் காட்டிய அருள் வழியில் தான் இதை உணர்த்துகின்றேன்.

காரணம்… இன்றைய உலக மக்கள் நல்லதை ஏங்கித் தவிக்கும் போது அந்த நல்ல உணர்வின் செயல்கள் எவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

மதங்களில் தவறில்லை…! மதத்தின் தன்மை வகுத்து நல்ல ஒழுக்கங்களை ஞானிகள் கொடுத்திருந்தாலும் பிற்காலங்களில் தவறின் நிலைகளுக்கு வருகின்றது.

அகஸ்தியன் வழியில் வியாசகர் அண்டத்தின் தன்மையைக் கண்டறிந்து அதை உணர்த்தினாலும் அவருக்குப் பின் வந்தவர்கள்…
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து முழுமையின் தன்மையை அறிய முடியாது
2.காலத்தால்… அரசு… அரசியல் என்ற நிலையில் இது மறைந்து விட்டது.
3.தன் நாட்டைக் காக்க தன் மதத்தைக் காக்கப் போர் முறைகள் உருவாக்கப்பட்டதால் உண்மைகள் மறைந்து விட்டது.

அன்று “மந்திரவாதிகளால்” மக்களை அடிமைப்படுத்தும் நிலைகள் இருந்தது. மனிதன் மடிந்த பின் அவன் உணர்வைக் கவர்ந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல் பில்லி சூனியம் என்று அன்றைய காலங்களில் அரசர்கள் செய்தார்கள்.

இஸ்ரேல் நாட்டில் அன்று போர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் குறி வைத்து அம்பை எய்து “ஜோதிடம் பார்த்துத் தான்” அதனைச் செயல்படுத்துவார்கள். அம்பு எய்த நிலைகள் கொண்டு அரசனின் வலுவின் நிலை அறிந்து தான் செயல்படுவார்கள்.

நமது நாட்டிலும் அரசனாக இருந்த கட்டபொம்மனும் மந்திர ஒலியால் “ஜக்கம்மா” என்ற நிலையில் குலதெய்வமாக வளர்க்கப்பட்டு… அதனை ஈர்க்கப்பட்ட கருவின் தன்மை கொண்டு எதிரிகளைக் கண்டுணர்ந்து… எதிரிகளிடமிருந்து தப்பிக் கொள்ளும் உணர்வின் தன்மை கொண்டு செயல்பட்டான்.

மற்ற நாடுகளிலும் இதே போன்று மந்திர ஒலிகளால் தனக்குள் கவரப்பட்டு தன்னையும் தன் நாட்டையும் காத்திடும் நிலையாக மனிதர்களுக்குள் மதங்களை உருவாக்கினார்கள்.

1.மதத்தால் சொன்ன நிலைகளை ஏற்படுத்திய பின் அதையே மந்திரம் ஆக்கி
2.அந்த மந்திரத்தின் நிலைகள் கொண்டு மனிதன் இறந்து விட்டால் அதைக் கவர்ந்து சக்தி வாய்ந்ததாக மாற்றி
3.தன் நாட்டினுடைய நிலைகளுக்கு மதங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எந்த மதமாக இருந்தாலும் ஞானிகள் காட்டிய நிலைகள் மனிதர்களுக்குள் படர்ந்த பின்… பதிந்த நிலைகள் எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை மந்திர ஒலிகளாக மாற்றித் தான் செயல்படுத்தி வந்தார்கள்.

அந்த மகான்கள் காட்டிய நிலைகளை யாரும் இப்போது கடைப்பிடிக்கவில்லை. எந்த மதத்தின் நிலைகள் கொண்டு பிரிவுகள் பிரிந்ததோ அந்த ஞானிகள் சொன்ன உண்மை நிலைகள் மறைக்கப்பட்டது.

நான் பெரிது… அவர்கள் செய்வது தவறு… இவர்கள் சொல்வது பொய்… என்று மதத்திற்குள் இனங்களாகப் பிரிக்கப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு
1.உலகெங்கிலும் மகான்கள் கொடுத்த நிலைகள் மக்களுக்குக் கிடைக்க முடியாதபடி
2.இன்று உண்மைகளைத் தேடிச் சென்றாலும் பெற முடியாது நிலைகளாக மடிந்து கொண்டுள்ளது “விஞ்ஞான அறிவு கொண்டு…”

எதிலுமே… பதிவின் நினைவே நமக்குள் (மீண்டும்) வருகின்றது

எதிலுமே… பதிவின் நினைவே நமக்குள் (மீண்டும்) வருகின்றது

 

உபதேசம் கொடுத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு). மீண்டும் அதை ஞாபகப்படுத்தும் நிலையாகத் திரும்பச் சொல்லும் பொழுது
1.”சாமி சொன்னதையே திரும்பச் சொல்கிறார்…” என்ற நினைவு வந்துவிடும்.
2.அப்புறம் பார்க்கலாம் என்று “இதைக் கேட்பதை மறந்து விடுவார்கள்…”

ஒரு செடி கசப்பின் தன்மை கொண்டு உருவான பின் மீண்டும் அந்தக் கசப்பினை நுகர்ந்தால் தான் அந்தச் செடியின் தன்மை வளர முடியும். ரோஜாப் பூ தன்னுடைய நறுமணத்தை மறந்து விட்டோம் என்று மீண்டும் மீண்டும் அதை நுகர்ந்தறிந்தால் தான் ரோஜாப்பூ நறுமணம் அங்கே வரும்.

1.ஒரு மாடோ ஆடோ எந்த உணர்வைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொண்டதோ
2.அதை மீண்டும் நினைவு கொண்டு உட்கொண்டால் தன் இனமாக… உடலாகி… நோயற்றதாக வாழும்.

ஆனால் அந்தத் தாவர இனைத்தைப் புசித்த மாடு மாற்றுத் தாவரத்தை அது சாப்பிடுமே என்றால் இந்த உணர்வுக்கு எதிர்நிலையாகி மாட்டிற்கு நோய் வந்துவிடும்.

ஆகவே நுகர்ந்து பார்த்துத் “தன் இனம் அல்ல” என்றால் அதை உட்கொள்ளாது விலகிச் செல்கின்றது. இதைப் போன்று தான்
1.நாமும் தீமை என்ற நிலைகளைக் கேட்டறிந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி அதிலிருந்து விடுபட வேண்டும்
2.அவ்வாறு விடுபட வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் புகுத்துதல் வேண்டும்
3அவ்வாறு புகுத்தி விட்டால் அது தீமை அடக்கிடும் சக்தியாக நமக்குள் மாறும்.

இதை நாம் எளிதில் கண்டுணர்வதற்குத் தான் அந்த மகரிஷிகள் தெளிவான நிலைகளில் மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை எவ்வாறு எளிதில் அகற்ற முடியும் என்று தெளிந்த மனம் கொண்டு வாழ்வதற்குச் சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது…
1.சூட்சமத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை நாம் அறிய முடியவில்லை
2.அதை அறிவதற்காக வேண்டி உருவமாக்கி… அதைக் கதைகளாக்கிக் காவியமாகப் படைத்துள்ளார்கள் மெய் ஞானிகள்.

எண்ணத்தால் நமக்குள் அதைப் பதிவு செய்து… அந்த எண்ணத்தின் துணை கொண்டு ஞானிகள் காட்டிய உண்மை வழிப்படி காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அருள் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அடிக்கடி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1.எதுவுமே பதிவு செய்யாதபடி நினைவுக்கு வராது
2.பதிவு இல்லை என்றால் நினைவு ஏது…?

ஒருவர் என்னைத் திட்டினார் என்று பதிவு செய்து கொண்டால் தான் அது மீண்டும் நினைவுக்கு வரும். திட்டியது பதிவாகவில்லை என்றால் அந்த நினைவு வராது.

உதாரணமாக… இரயிலில் பயணம் செய்யும் பொழுது ஒருவர் நம்முடன் நல்லவராகப் பேசிக் கொண்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படிப் பயணம் செய்யும்பொழுது அவர் உள் உணர்வுகளில் எதிர்பாராதபடி திடீரென்று பயத்தினால் துடிக்கின்றார்… பார்க்கின்றோம்… பதிவாக்குகின்றோம்.

“ஐயோ நல்ல மனிதன்…! இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தாரே… இப்பொழுது திடீரென்று அவர் துடித்து விட்டாரே…!” என்று அடுத்தாற்போல் போல் நாம் இதைத்தான் சொல்வோம்.

1.ஆகவே அவரைப் பற்றிய அந்தப் பதிவு இல்லை என்றால் நினைவு மீண்டும் வராது
2.அதே போல் பள்ளியில் பாடங்களைப் படிக்கும் போது அதிலே பதிவு இல்லை என்றால் படித்தது மீண்டும் நினைவிற்கு வராது.

ஆகவே எதிலுமே பதிவின் நினைவே நமக்குள் வருகின்றது. அதற்காக வேண்டித் தான் அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவு செய்து அதை நீங்கள் நினைவு கொள்ளும்படிச் செய்கின்றேன்.

அவ்வாறு நினைவு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால்
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்
2.உயிரோடு ஒன்றலாம்… அழியா ஒளிச் சரீரம் பெறலாம்
3.மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்லலாம்.

சூரியக் குடும்பத்தின் ஜாதகம்

சூரியக் குடும்பத்தின் ஜாதகம்

 

ஜீவன் பெற்று கோளின் தன்மை ஆனாலும் சந்திரன் பூமியின் அணைப்பிலே தான் ஓடுகின்றது. பூமியின் அணைப்பிலே ஓடினாலும் சூரியனின் ஒளி பூமியில் பட்டு அதனுடைய நிழல் படும்பொழுது சந்திரனை முழு நிலவாக ஆக்குவதில்லை.

சூரியனின் ஒளியை பூமி தனக்குள் ஒரு பகுதி அதிகமாக எடுத்துக் கொள்கிறது. அத்தகைய பூமியின் நிழல் சந்திரனில் படும் பொழுது இருள் சூழ்ந்த நிலையாக அங்கே வளர்கின்றது.

இருப்பினும் இந்த சூரியனின் நிலைகள் கொண்டு மற்ற கோள்களின் சக்தியை அது உணவாக எடுக்கும் பொழுது புதனோ மற்ற கோள்கள் வரப்படும் பொழுது சூரியன் நேர் பார்வையாக வரும் நேரத்தில் பூமிக்கு நேரே அந்தக் கோள்கள் மறைத்துக் கொண்டால்
1.பூமிக்கு வரும் செவ்வாய்க் கோளின் உணர்வின்… அதாவது நாதங்களை எழுப்பும் உணர்வுகள் இதற்குக் கிடைப்பதில்லை.
2.ஒரு நிமிடம் மாறி விட்டால்… மனிதனாக விளைந்த நாத சுருதிகள் மாறும் பொழுது
3.இந்த மனிதனுக்குப் புத்தி பேதம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள்…
4.நாதங்கள் சுருங்கி விடுவதும்… பின் பல நோய்களும் வந்து விடும்.

மெய் ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக உணர்த்திய நிலைகள்.

ஒரு சூரியக் குடும்பத்தில் ஒதுங்கிய கழிவுகளை “வால் நட்சத்திரம்” என்று சொல்வார்கள்.

மற்ற நட்சத்திரங்களுடன் சேர்ந்து மற்ற கோள்களுடைய நிலைகள் பூமிக்குள் வராதபடி இந்த உணர்வின் அலைகள் உந்தப்பட்டு பிரபஞ்சமே அல்லாதபடி “ஒரு தனி இடத்திலே” அது ஒதுங்கி நிற்கும்.

ஒரு கட்டிடத்திலே சுழிக் காற்று அடித்தால் தூசிகள் எப்படி ஒரு பக்கம் ஒதுங்குகின்றதோ அது போன்று
1.மற்ற கோள்கள் உமிழ்த்தும் (கழிக்கும்) நிலைகள் அது எதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாதபடி
2.ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் இடைப்பட்ட இடத்திலே சுழன்று கொண்டிருக்கும்.

மற்ற ஈர்ப்பு எதுவும் இல்லாதபடி “கடும் நஞ்சின் தன்மையாக” அடைந்திருக்கும் நேரத்தில்… அது போகும் பாதையில் ஏதாவது சூரியக் குடும்பம் எதிர்பட்டால் என்ன ஆகும்…?

பிற மண்டலத்தில் இருந்து குவிக்கப்பட்ட தூசிகளைப் போன்றே அதற்குள்… சூரியன் ஈர்ப்பு காந்தத்தால் இதனின்று கலந்த அந்த நிலைகளும் வால் நட்சத்திரத்தில் உண்டு.

சூரியன் அதைக் கலந்து இழுக்கப்படும் பொழுது சூரியனுக்குள் சென்றால் அந்த நஞ்சினை மாற்றி அமைத்து விடுகின்றது

ஆனால் நட்சத்திரத்திங்களுக்கும் சிக்காது அதிலிருந்து விலகி இடைப்பட்ட நேரங்களில் கோள்கள் இருக்கும் பக்கமாகச் சென்று அதற்குள் விழுந்தால் அங்கே “எரிமலையும்… வெடிப்பும்” ஏற்படும்.

அதே சமயத்தில் கோள்கள் தடுக்காதபடி நம் பூமி போகும் பாதைக்குள் நுழைந்து… பூமியின் ஈர்ப்புக்குள் வந்தால் அது எந்தப் பிரதேசமோ அங்கே அரசாட்சி செய்யும் அரசனுக்கு “ஆகாது…” போய்விடும்.

அதாவது
1.நஞ்சின் தன்மையாக அங்கே கலக்கப்பட்டு
2.அந்த நாடுகளுக்குள் மக்களிடையே கலவரங்களும் சோர்வடையும் நிலைகளும்
3.அரசர்களுக்குள் சிந்திக்கும் திறன் இழக்கப்பட்டு அதனால் நாட்டுக்கு நாடு போர் முறைகளும் மூளும்.

பூமிக்குள் வரும் போது நடு மையத்தில் கொதிகலனாக ஏற்பட்டு சிறுகச் சிறுக விளைந்து சில பகுதிகளில் பூகம்பங்கள் கிளம்பும். அதே சமயத்தில் ஹைட்ரஜன் என்று நீருக்குள் இந்தச் சக்திகள் கலந்து மோதப்படும் பொழுது சுழல் காற்றாக உருவாகிப் புயலாக மாறிவிடும்.

இதுகள் எல்லாம் “விஞ்ஞானிகளுக்கு அப்பாற்பட்ட நிலைகளை” நான் (ஞானகுரு) சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலும் அதனின் அணுக்களின் செயலும் எவ்வாறு உருவானது…? என்பதை என்னால் அறிய முடிந்தது.

அதனின்று வடிக்கப் பெற்று உருப்பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற மனித உடலில்… இன்று ஜாதகம் என்ற பெயரால் மதம் இனம் குலம் என்ற பெயரால் நாம் வடித்துக் கொண்ட நிலைகள்
1.இந்த உடலில் இருந்து ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை இழந்து
2.மனித உருவையே அழித்து விடும் எண்ண உணர்ச்சிகள் வளர்ந்து விட்டது.

மதம் இனம் மொழி என்ற பேத நிலைகளாகி… நஞ்சின் தன்மை சுவாசிக்கப்பட்டு… பச்சிளம் குழந்தைகள் தவறே செய்யாத நிலை இருந்தாலும்… வெறி கொண்டு கொன்றிடும் நிலை வளர்ந்து கொண்டுள்ளது.

மனிதனுடைய உடலுக்குள் நஞ்சு கலந்து கலந்து அழித்திடும் உணர்வுகள் ஊடுருவிச் சென்று இந்தப் பூமியே முதுமை அடைந்து “மனிதனை மனிதனே கொன்று புசிக்கும் நிலை வந்து விட்டது…”

1.மனிதனைக் கொன்று அவன் வைத்திருக்கும் செல்வத்தைத் திருடுகின்றனர்
2.ஒரு மனிதன் கையில் சிக்கினால்… தன் பசியைப் போக்க அவனையே ரோஸ்ட் செய்து சாப்பிடும் நிலையும் இன்று வந்துவிட்டது

உலகம் அழியப் போகிறது என்றால்… விஷ உலகம் அழிகின்றது… ஞானிகள் தோன்றுவார்கள்

உலகம் அழியப் போகிறது என்றால்… விஷ உலகம் அழிகின்றது… ஞானிகள் தோன்றுவார்கள்

 

இயற்கையின் உண்மையின் நிலைகளை எல்லாம் குருநாதர் என்னை (ஞானகுரு) அறியும்படியும் செய்தார். பல கஷ்டங்களைக் கொடுத்து வேதனைப்படவும் செய்தார். பல சிரமப்பட்டுக் கஷ்டப்பட்டு அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.வேதனைப்பட்டதைச் சொல்லிக் கொண்டு வந்தால் என்ன ஆகும்…? வேதனை தான் வளரும்.
2.ஆனால் நல்லதாகும் என்று சொன்னால் நல்லதாகும்.

இதே மாதிரித் தான் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும் என்று உயர்ந்ததாக எண்ண வேண்டும்.

ஆனால் பையன் படிக்கப் போனானே… என்ன ஆச்சோ…? போனானா வந்தானா… என்ன ஆனது என்று தெரியவில்லையே…! என்று எண்ணி அவன் சரியாகப் படிக்கவில்லையே… படிக்கவில்லையே…! என்று இந்த உணர்வை எடுத்தோம் என்றால் “அங்கே அவனால் சரியாகப் படிக்க முடியாது…”

பையன் சுட்டித்தனம் பண்ணுகின்றான்… அவன் செய்யும் குறும்புத்தனம் தாங்க முடியவில்லை…! என்று இப்படியே எண்ணினால்
1.அவனுக்குள் குறும்புத்தனம் செய்யும் உணர்வைத் தான் வளர்க்க முடியும்.
2.அவனைக் காணும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வளரும்.

அதற்குப் பதிலாக… அவனுக்கு அருள் கிடைக்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். “நாளடைவில் அவன் ஞானமாக வருவான்…”

ஏனென்றால் குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும் இன்றைக்கு இருக்கின்றோம்… நாளை எங்கே செல்கின்றோம்…? என்று யாருக்குத் தெரியும்…! என்ற நிலை தான் இருக்கின்றது.

சேர்த்து வைத்த சொத்துக்களோ சம்பாதித்து வைத்த பணமோ நம்முடன் வருகின்றதா…? இல்லையே.
1.ஆக நமக்கு அழியாச் சொத்து அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தான்…
2.அதை வளர்த்தால் அங்கே போகின்றோம்.

என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… என் பிள்ளைக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்களே…! என்று
1.இது போன்று உணர்வுகளை யாரை எண்ணி அதிகமாக வளர்த்தோமோ
2.இந்தச் சொத்தை தேடி வைத்த நிலைகள் கொண்டு அவன் உடலுக்குள் தான் செல்ல முடியும்.

அவர்களையும் தரித்திரமாக்கி உணர்வின் தன்மை மாற்றிவிட்டு ஆடாகவோ மாடாகவோ பிறக்கத்தான் நேரும். இல்லையென்றால் அடுத்த உடலுக்குள் பேயாகச் சென்று அந்தக் குடும்பத்தையும் அழித்துவிட்டு நாயாகவோ பாம்பாகவோ தேளாகவோ பிறக்க வேண்டி வரும்… மீள முடியாது.

ஏனென்றால் இதைத்தான் குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று பல நிலைகளைக் காட்டி அந்த உண்மைகளை உணரும்படி செய்தார்.

இன்றைய விஞ்ஞான உலகில் கடுமையான விஷத்தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. எந்தக் காரணத்தை கொண்டும் அந்த விஷம் நம்மை அழித்து விடக்கூடாது. உலகம் அழியப் போகிறது என்கிறார்கள்… விஷ உலகம் தான் அழிகின்றது

எம்மைச் சந்தித்த ஏராளமான குழந்தைகளுக்கு அருள் ஆசி கொடுத்துள்ளேன்… கருவுற்ற தாய்மார்களுக்கு ஆசி கொடுத்துள்ளேன்.

அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அவர்கள் ஆர்வத்தில் வரும் பொழுது இதைக் கொடுத்துள்ளேன். அந்த மாதிரிக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வருவார்கள்.

1.அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு எப்படி உலகை அறிந்தானோ உலகைக் காக்கும் சக்தியாக வளர்ந்தானோ
2.அவன் உணர்வை எடுத்து இங்கே கர்ப்பமான பெண்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அந்த அறிவின் ஞானம் வளர்கின்றது
3.விஞ்ஞான உலகில் இருந்து மீட்கக் கூடிய சக்தியாக அவர்கள் வளர்வார்கள்
4.விஷத் தன்மைகள் அழிந்துவிடும்.. அரும் பெரும் ஞானிகள் தோன்றுவார்கள்.

காரணம் தென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். அதே தெற்கிலிருந்து தான் இந்த உலகை மீட்டிடும் சக்திகளும் வரப்போகின்றது.

விஞ்ஞானத்தால் பல பேரழிவுகள் வந்தாலும்… அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே பரப்பப்பட்டுப் பேரழிவிலிருந்து தப்பும் மனிதர்களாக உருவாக்கும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

இனிமேல் இதை எல்லாம் காணலாம்

இன்றைய உலகம் எங்கோ போவதாகத் தெரிந்தாலும்… நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள்.

நோயுற்றவர்களைக் காண நேர்ந்தால் அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.அது தான் நாம் சொந்தமாக்க வேண்டியது
2.என்னை இப்படிப் பேசினானே… அவனைச் சும்மா விடுவதா…? என்று இதைச் சொந்தமாக்க வேண்டாம்.

அதைச் சொந்தமாக்கினால் மீண்டும் பிறவிக்குத் தான் அந்த உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்.

ஆகவே அருளை நாம் சொந்தமாக்குவோம். இருளை அகற்றுவோம்… மெய்ப்பொருளைக் காண்போம்… மெய் வழி வாழ்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்.

கோவிலிலே காசைக் கொடுத்துச் செய்வது போல் அல்ல “யாம் சொல்லும் இந்த ஞானத்தின் வழி”

கோவிலிலே காசைக் கொடுத்துச் செய்வது போல் அல்ல “யாம் சொல்லும் இந்த ஞானத்தின் வழி”

 

எப்படியும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்
1.உங்கள் நினைவுக்கு அது அடிக்கடி வர வேண்டும்
2.உங்கள் நினைவால் உங்களைக் காக்கும் அந்த அரும்பெரும் சக்தி நீங்கள் பெற வேண்டும்… அந்த எண்ணம் வளர வேண்டும் என்று
3.குருநாதர் சொன்ன முறைப்படி நீங்கள் பெற வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

ஆதே போல் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்களும் ஆசைப்பட்டால் எனக்குள்ளும் அந்த தீமையிலிருந்து விடுபடும் ஆசை பிரம்மம் ஆகிறது.

நான் எண்ணுவது போல் நீங்களும் எண்ணினால் வசிஷ்டர் பிரம்மகுரு. அதாவது ஒரு நோயாளியைப் பார்த்தால் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வைக் கவர்ந்து உடலில் எடுத்துக்கொண்டால் தீமை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பிரம்மம் ஆகிறது.

அந்தத் தீமையை நீக்கும் சக்தி உங்களில் வளர்ந்து சொல்லாக வெளி வரும் பொழுது… மற்றவர்களுக்கும் அது தீமை நீக்கும் சக்தியாக வருகின்றது. ஆகவே சாஸ்திரங்கள் நமக்கு காட்டிய அந்த அருள்வழிப்படி தெளிவாக வாழ்வோம்… அந்த அறிவின் தன்மை கொண்டு வாழ்வோம்.

1.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டியது
2.ஆனால் இந்த உடலின் இச்சைக்காகத் தான் பெரும் பகுதி இதைச் செயல்படுத்துகின்றோமே தவிர உயிர் இச்சை யாருக்கும் வரவில்லை.

உயிரை யார்…? என்று அறிந்து கொள்ளும் மனிதனாக ஆன பிற்பாடு உயிரை மதித்துப் பழகுவதே நல்லது. அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்ற நிலையில் அவனை மதிக்க வேண்டும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் இது போன்ற குணங்களை உள்ளே விடாதபடி தடுத்தல் வேண்டும்.
ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடிக்கடி வரும் தீமைகளை துடைத்துப் பழக வேண்டும்… துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் சொல்கிறோம்.

தீமைகள் புகாது தடுத்தால் உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது. உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள். எளிதில் நீங்கள் இதைச் செயல்படுத்த முடியும்.

காசு கொடுத்து அல்ல… நடந்து சென்று (பாத யாத்திரை) அல்ல…! அப்படி யாரும் விலைக்கு வாங்க முடியாது. விலை கொடுத்து இந்த ஞானத்தை வாங்க முடியுமா…?

1.என் பிள்ளை இப்படிச் செய்கின்றான் என்று தெய்வத்திடம் முறையிட்டு…
2.அதற்காக வேண்டிக் கோவிலிலே காசைக் கொடுத்து அர்ச்சனை செய்தால்
3.அந்தத் தெய்வம் வரம் தரும் என்று சொல்லிப் போகின்ற மாதிரி அல்ல யாம் சொல்லும் நிலை.

நாம் எண்ணியதையெல்லாம் நமது உயிர் ஓ என்று இயக்கி உருவாக்கிக் கொண்டே உள்ளது. நான் எண்ணியதையெல்லாம் ஓ…ம் நமச்சிவாய…! என்று உடலாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆகவே… அந்த உயிரான ஈசனை வேண்டி அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்… அருளைப் பெறுவோம்… இருளை அகற்றுவோம்… பிறவியில்லா நிலை அடைவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்… என்றும் ஏகாந்த வாழ்க்கை என்று பெற தியானிப்போம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்துவோம். காரணம்… நமக்காக அவர்கள் எத்தனையோ துயர் பட்டார்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் அவர்களை இணையச் செய்து… அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக நம் முன்னோர்கள் வாழத் தொடங்குகின்றனர்.

1.அதை எண்ணும் போதெல்லாம் நாமும் அந்த உயர்ந்த சக்தி பெற முடியும்
2.அதைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துள்ளோம்.

தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான உணர்வு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால் இருளை அகற்றலாம்… உலகையும் காக்கலாம்… நம்மையும் காக்கலாம்… குடும்பத்தில் வரும் சர்வ தோஷங்களை நீக்க முடியும்.

அந்தச் சக்தி பெறவே உங்களுக்குள் இந்த நிலையை உபதேசித்தது. மன உறுதி கொள்ளுங்கள் அருளைப் பெருக்குங்கள் இருளை அகற்றுங்கள் பேரானந்தம் பெற்று ஏகாந்த வாழ்க்கை வாழ உயிரான ஈசனை வேண்டி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்போம்.

தெளிந்த மனம் கொண்டு வாழ இந்த வாழ்க்கையை அர்ப்பணிப்போம்…!