தியானத்தின் மூலம் பெற வேண்டிய உறுதியான எண்ணம்

தியானத்தின் மூலம் பெற வேண்டிய உறுதியான எண்ணம்

 

கேள்வி:-
சில நாள்களில் காலை துருவ தியானம் செய்ய முடியாதபடி உடல் கனமாகவும் சோர்வாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன…?

ஞானகுரு:-
உதாரணமாக… வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் இருந்தால் நம் செயலில் வேதனை அதிகமாக இருக்கும். நாம் எடுக்கும் இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மை உண்மையை உணரச் செய்யும்… உணர்வின் ஆர்வத்தைக் கூட்டும்… அதை எடுத்துக் கொள்ளும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.விஷத்தால் இயங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் சோர்வடையப்படும் பொழுது
2.நம்மைப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க விடுவதில்லை… அது சோர்வடைந்து விடுகிறது.
3.அந்த விஷத்தின் ஊக்கமே நமக்குள் வலிமை கொடுக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் தியானத்தை எடுத்து உடல் உறுப்புகளில் செலுத்தப்படும் போது… “ஏற்கனவே இருந்த விஷங்கள் தணியப்படும் பொழுது…” நம்மால் முடியாது போய்விடுகின்றது.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று செலுத்திப் பழகுதல் வேண்டும்.

பின் சிறிது நேரத்தில் அது தெளிவாவதைப் பார்க்கலாம்.

1.இந்த மாதிரி வரும்… காரணம் எல்லோருக்குள்ளும் இந்த வேதனையான உணர்வுகள் உண்டு.
2.நாம் இந்தச் சக்தி எடுத்தவுடன் அது சோர்வடையும்
2.என்னடா நாம் தியானம் செய்து இந்த மாதிரி ஆகிவிட்டதே… என்று கூட நினைப்போம்..

விஷத்தின் இயக்கத்திற்கு ஆக்கபூர்வமான நிலைகளைக் கொடுக்கவில்லையென்றால் அதனுடைய நிலை இந்த மாதிரி வந்துவிடும்.
அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில்…
1.படுக்கையில் இருந்தபடியே சிறிது நேரம் கண்ணின் நினைவை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது அதிலிருந்து விடுபடுவதை உணரலாம்.

கேள்வி:-
தியானம் செய்து கொண்டிருக்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் காட்சியாகத் தெரிந்தது. அதனுடைய துடிப்பும் தெரிந்தது. ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பயமும் நடுக்கமும் வந்து விட்டது. ஏன்…?

அந்த மாதிரி பயம் வராதபடி எனக்கு மன பலம் வேண்டும்.

ஞானகுரு:-
பணம் வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். திடீரென்று “ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்து விட்டது…!” என்று கேள்விப்பட்டால் உங்கள் மனது எப்படி இருக்கும்…?

பயத்தைக் காட்டிலும் படபட… படபட… என்று நெஞ்சிலே துடிப்பு அதிகமாக இருக்கும். பணம் வந்துவிட்டது என்று கேட்டதுமே அதனால் மூச்சு நின்று போனவர்களும் உண்டு. இல்லையா…!

இதைப் போன்று தான் உயர்ந்த சக்திகள் நமக்குள் வரப்படும் போது..
1.ஆக அதைப் பெறுகின்றோம் என்ற நிலையில்
2.அந்த அருளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற ஆனந்தத்தைச் சேர்த்தால் அது வலுவாகும்.

ஆனால் பயத்தைக் கொடுத்தோம் என்றால் பய அலைகள் தான் வரும். வேகமாக இயக்கப்படும் போது இதனுடன் கொஞ்சம் விஷத்தைக் கலந்து விட்டால் எப்படி இருக்கும்…? பலவீனம் தான் ஆகும்.

ஆகவே… நாம் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம் இந்த ஆசையில்
1.நல்ல நிலைகளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்துடன் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்
3.அந்த உணர்வு நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இது எல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய சரியான நெறி முறைகள்.

குருத்தெலும்புக்குள் (MONITOR) நாம் பாய்ச்ச வேண்டிய அருள் சக்தி

குருத்தெலும்புக்குள் (MONITOR) நாம் பாய்ச்ச வேண்டிய அருள் சக்தி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புகளில் படர்ந்து அதற்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

செல்ஃபோன்களில் நாம் அழுத்திய பின் எங்கிருந்து ஃபோன் செய்கின்றனரோ… அவருடைய பதிவை நாம் பார்க்கின்றோம். அதே போல
1.ஒரு வேதனைப்படுவர் உணர்வைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த வேதனைப்படுவதை மீண்டும் எண்ணினால்
3.காற்றிலிருந்து அந்த வேதனைப்படும் உணர்ச்சிகளை நாமும் நுகர நேருகின்றது

அதே சமயத்தில் வேதனைப்படுவரைப் பார்த்தபின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அடுத்த கணமே… அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.வேதனையைத் தணித்த அந்த உணர்வின் சக்தி அதன் அருகிலே படும்பொழுது
2.வேதனையான உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் வலு இழக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை இப்படி அங்கே பெருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து ஊனை உருவாக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இந்த உணர்வைப் பதிவாக்குங்கள்.

நம் நெஞ்சுக்கு மத்தியில் இருக்கும் குருத்தெலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கப் படும்பொழுது
1.அங்கே ஒரு விதமான உணர்ச்சிகள் வந்து
2.இந்தக் காற்றிலே படர்ந்துள்ள அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமது உடல் அருகிலே ஈர்த்துக் கவரும்படி செய்யும்.

அபப்டி ஈர்க்கும் பொழுது… நாம் எந்த அளவிற்கு எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க அந்தத் துடிப்பின் தன்மை குருத்தெலும்பிலே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் விலா எலும்புகளில் படர்ந்து அங்கே ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மறுபடியும் ஏங்கித் தியானியுங்கள்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…!
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எந்த அளவிற்கு நெஞ்சின் விலா எலும்புகளில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ
2.அந்தக் கணக்கு கூடக் கூடக் கூட நம் உடலில் வந்த இருளை நீக்கவும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் தகுதியும் நாம் பெறுகின்றோம்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் தன்மை அதிகரித்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் சென்று விடுகின்றோம்.

ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால் இந்தக் கணக்கு கூடினால் விஷத் தன்மை கொண்ட உடல் எதுவோ அதன் ஈர்ப்புக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.

ஆகவே நமது பற்றெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும். அதிலிருந்து வரும் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் எண்ணுவோம் என்றால்
1.இந்த உணர்வின் வளர்ச்சிகள் நம் உடலில் உள்ள குறைபாடுகளை குறைத்து நோய்களைக் குறைத்து
2.சிந்திக்கும் ஆற்றலை வலிமை பெறச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருகச் செய்து
4.என்றும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைய இது உதவும்.

“எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும்…” என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்

“எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும்…” என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்

 

1.தன் உடலில் எது இயக்குகின்றது…? என்று தனக்குத் தானே சிந்தித்து
2.தீமைகள் நம்மை இயக்கவிடாது தடுத்து அருள் உணர்வைப் பெருக்கி
3.இருளை அகற்றி வாழ்க்கையில் செவ்வென வாழ்ந்து
4.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறும் தகுதி பெறும் சந்தர்ப்பம்தான்
5.இங்கே தியானத்தில் யாம் கொடுக்கக்கூடிய பயிற்சி.

ஆனால் சிலருடைய ஆசைகள் எப்படி இருக்கிறதெனறால் உடலைப் பார்ப்பதற்குத் தான் தியானம் செய்கின்றார்களே தவிர… உடலுக்குப்பின் நாம் எப்படி நிலையாக இருக்க வேண்டும்…? என்று எண்ணவில்லை.

அழியாத நிலைகள் கொண்டு உயிர் என்றுமே நிலையாக இருக்கின்றது. அதை நாம் தியானித்து அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இல்லை.

1.தியானம் இருந்தேன் நல்லதானது…
2.காப்பாற்றினார் கடவுள் ஆகிவிட்டது…! என்ற இந்த உணர்வுக்கு நாம் சென்றால்
3.மீண்டும் புவியின் ஈர்ப்புக்குள் தான் வருகின்றோம்.

அப்படி இல்லாதபடி எல்லோரும் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த நிலையை நாம் கொண்டு வர வேண்டும்.

வாழ்க்கையின் நிமித்தம் எத்தனையோ நினைக்கின்றோம்… எண்ணியபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் உடனே வருத்தம் வருகின்றது… அப்பொழுது வேதனை வருகின்றது.

அப்போது எந்தப் பற்று வருகிறது…? வேதனை என்ற பற்று தான் அதிகமாக வருகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்குண்டான நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.

எப்பொழுதுமே… எதிலுமே… உடல் பற்று இல்லாதபடி… உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதே போன்று எல்லோருக்கும் அந்த அருள் பெற வேண்டுமென்ற அந்தப் பற்றினை நாம் வளர்க்க வேண்டும்.

அதைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் இருள் என்ற நிலையைப் பற்றற்றதாக மாற்றி விட வேண்டும். “இது தான் தியானம்…”

1.தியானம் இருந்தேன் கல்யாணம் நடந்தது…
2.தியானம் செய்தேன் சொத்து வந்தது… அது வந்தது… இது வந்தது… என்று வெறுமனே சொல்லிக் கொள்ளலாம்.
3.ஆனால் இதற்கு ஆசையைக் கூட்டக் கூடாது.

நலமாக வேண்டும் என்று ஆசைப்படலாம்… அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற அந்த இச்சை வரவேண்டும். இச்சாசக்தி… கிரியாசக்தி…!

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற இச்சைப் படும்பொழுது உயிரிலே பட்டுக் கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம்மை வழிநடத்தும்.

உடலுக்கு என்று நாம் இச்சைப்பட்டு அதைக் கிரியை ஆக்கினால் இந்த வாழ்க்கையின் நிலைக்குத்தான் வரும்.
1.சிறு குறையானால் தடைப்பட்டால் ஞானத்தை இழக்க வேண்டி வரும்.
2.இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருளைப் பெறுக்க வழி காட்டுகின்றோம்.

வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கி “எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்…”

அன்று ஒரு நாள் முழுவதும்… அந்த மாதம் முழுவதற்கும் அதில் வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்… அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டுமென்ற ஏகாந்த நிலை வரப்படும் பொழுது நமக்குள் ஏகாதசி ஆகிறது.

உடலை விட்டுப் பிரியும் சமயம் யாரிடமும் பகைமை இல்லாது சென்றால் பிறவியில்லாத நிலை அடைகிறோம்… பத்தாவது நிலை அடைகின்றோம்…. ஏகாதசி விரதம் என்ற முழுமைக்கு வருகின்றது.

ஆகவே 12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் அந்த ராசிகள் மாறப்படும் பொழுது அதை எப்படி மாற்றவேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

1.வைகுண்ட ஏகாதசி…! – எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து
2.ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுளை இழுக்காதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.

வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெலலாம் மனித உடலுக்குள் வராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அப்படி ஆனாதையாக்கினால் காலையில் ஆறு மணிக்கெல்லாம் அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து மேலே சென்று கொண்டு விடுகிறது.

சூரியன் கவர்ந்து சென்று விட்டால் நம் ஆன்மா தூய்மை அடைகிறது… ஜீவாத்மா தூய்மை அடைகிறது… உயிராத்மா ஒளியாகிறது.. இந்தப் பரமாத்மாவும் (காற்று மண்டலம்) புனிதமாகிறது.

இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை வளர்த்து எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை கொண்டு இதையே நாம் கடைபிடித்தால்
1.ஒளி என்ற உடலும்
2.ஒளியான அறிவும்
3.இருளை நீக்கும் ஞானமும்
4.மெய்ப்பொருள் காணும் சக்தியும் நமக்குக் கிடைக்கும்.

தியானப் பயிற்சி

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று கண்களை மூடிப் புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியனியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சி.

வேதனை… வேதனை… என்று எண்ணும்போது அதை நுகர்ந்தறிந்தால் உடல் உறுப்புகளில் உள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.

எந்த உறுப்பில் விஷத்தன்மை (வேதனை) அதிகமாகின்றதோ அங்கே விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.
1.அதை மாற்றி அமைப்பதற்கு விஷத்தின் தன்மையை முறித்த
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுதல் வேண்டும்.

ஒளி உடல் பெற்ற துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது,
1.அதை நாம் கவர்ந்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து
2.எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்தப்படும் பொழுது
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று வலிமை பெறுகின்றது.

தினமும் இதைச் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் வெறுப்புகளையும் மாற்றிவிடுகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இருதயத்தில் செலுத்தப்படும் போது
2.இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் வீரியமடைகிறது
3.மன உறுதி கொண்டு சிந்தித்து செயல்படும் சக்தியும் நமக்குள் வருகின்றது.

வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் கொண்டு வாழ இது உதவும். அதிகாலையில் இதைப் போன்று தியானத்தின் மூலம் சக்தி ஏற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக தொழில் நஷ்டம் என்று வைத்துக் கொள்வோம். அதனால் மனம் சோர்வாக இருக்கும்போது அந்த வேதனை இரண்டும் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை கூட்டிவிடுகிறது.

சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது… தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகிறது. கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஐந்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானித்தால் சிந்திக்கும் வலிமை பெற்று
1.அடுத்து நம் காரியங்களை எப்படிச் செய்யலாம் என்று உறுதியான எண்ணம் தோன்றும்.
2.நாம் பிறரிடத்தில் உதவியோ மற்றதோ கேட்கப்படும் பொழுது அவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
3.குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் கொண்டு பரிவு கொண்டு வாழ இது உதவும்.

விஷத்தை வென்றிடும் நுண்ணிய உணர்வுகள் தான் இன்று நமக்குத் தேவை

விஷத்தை வென்றிடும் நுண்ணிய உணர்வுகள் தான் இன்று நமக்குத் தேவை

 

இந்த உலகில் நடக்கும் சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் “ஆ… இப்படி ஆகிவிட்டதா…?” என்று எண்ணாதீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் அந்தத் தீமையின் உணர்வுகள் இங்கே வருவதில்லை.

சிவன் ராத்திரி அன்று “நீ விழித்திரு…” என்றால்
1.வாழ்க்கையில் எப்பொழுது பிறருடைய துயரங்களைக் கேட்டறிகின்றோமோ
2.அந்த நேரத்தில் எல்லாம் விழித்திருக்க வேண்டும்.

எப்படி…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை வலுப்படுத்தி உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் பார்க்கும் அனைத்துக் குடும்பங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் உணர்வுகள் அவர்கள் குடும்பத்தில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணினால்… “அவருடைய தீமைகள் நமக்குள் புகுவது இல்லை…”

1.இந்தச் சொல்லின் தன்மையை அங்கே சொல்லி
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருப்பீர்கள்…! என்று சொல்லப்படும் பொழுது
3.இந்த உதவியை அவருக்குச் செய்கின்றோம்… அவருக்குள் தீமைகள் புகாது தடுக்கின்றோம்
4.அவர்களும் அவ்வாறு எண்ணினால் அவர்களுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது
5.நமக்குள்ளும் தீமைகள் வருவதில்லை… நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

சிவன்ராத்திரி… விழித்திரு…! அன்றைய தினம் முழுவதும் இவ்வாறு நாம் தூய்மைப்படுத்தும் உணர்வாக இருந்தோமென்றால் நம் ஆன்மாவில் உள்ள கெட்ட உணர்வுகள் அப்புறப்படுத்தப்படுகின்றது.

எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏகோபித்துச் சொல்லும் பொழுது… தீமை செய்யும் உணர்வுகளுக்குப் பூமியில் ஈர்ப்புத் தன்மை இல்லை என்றால்… சூரியன் அவைகளை இழுத்துச் சென்று அதன் உணர்வின் தன்மையைக் கருக்கி… மற்ற பிரபஞ்சத்தில் பரவச் செய்து அந்த விஷத்தின் தன்மையை மாற்றி விடுகின்றது.

அதாவது (பொதுவாக)…
1.தான் கவரும் விஷத்தைச் சூரியன் பாதரசத்தால் மோதி வெப்பத்தையும் காந்தத்தையும் உருவாக்குகிறது
2.விஷத்தைப் பலவீனப்படுத்தி அதை அகற்றி விடுகின்றது.
3.நல் உணர்வாக பரவச் செய்து விஷத்தினைக் குறைக்கச் செய்கின்றது.
4.இப்படி மற்றதுடன் கலந்து இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

உதாரணமாக… ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தவர்களுக்கு எல்லாம் மயக்கம் வருகின்றது.

ஆனால்
1.ஆயிரம் குடம் பால் அந்த விஷத்தின் தன்மையில் பட்டால்
2.இந்தப் பாலைக் குடித்தோருக்கெல்லாம் “வீரியத்தன்மை…” கிடைக்கின்றது.

இதைப் போன்றுதான் கடல் அலைகள் போலப் பரவப்படும் பொழுது விஷத்தின் தன்மை அங்கே சேர்க்கப்படும்போது அது பிரபஞ்சத்தில் மற்றதன் நிலைகளை “தீமைகளை நீக்கும்… நல்ல உணர்ச்சிகளை உருவாக்கும் சக்தியாக…” அங்கே மாற்றுகின்றது.

ஆகவே எதனின் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதனின் உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.
1.அருள் ஞானிகளின் உணர்வை ஆயிரம் குடம் பாலைப் போன்று ஊற்றினால்
2.விஷத்தை வென்றிடும் ஆற்றலைப் பெற்று நாமும் மகரிஷிகளைப் போன்று ஆக முடியும்.

எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!

எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!

 

மனிதனுடைய வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும் இன்று நாம் அறிந்து கொள்கின்றோம்… பலராமன்…! அதே சமயத்தில் தீமையின் நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நாக்கு இருப்பதனால் நரசிம்மா…!

1.எதனையும் உட்புகாதபடி வாசல்படி (சுவாசம் உட்புகும் இடம்) மீது அமர்ந்து…
2.தீமைகள் வராதபடி ஒவ்வொன்றையும் தீமையை இங்கேயே பிளந்து விடுகின்றான்…
3.உள்ளுக்குள் சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.

ஆகவே அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் ஒவ்வொரு நிமிடமும் நாம் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆனால் தீமை செய்வான் என்று முதலிலேயே பதிவு செய்து கொண்டால்
1.அந்த தீமையை அடக்க மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்.
3.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை
4.நமக்குள் நாம் ஆழமாகப் பதித்து விட்டால்…
5.அவர்கள் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் பதிவாகாது… அதை ஈர்க்கும் தன்மையும் வராது.

காரணம்… ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் வலுப் பெறச் செய்யும் பொழுது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது பிறருடடைய தீமையின் உணர்வுகளை இது அடக்கும்.

இதைத்தான் “நீ விழித்திரு…” என்று சொல்வது.

1.எந்த நேரத்திலும்… எதனின் நிலைகள் கொண்டாலும்… நாம் ஒவ்வொரு நிமிடமும்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கே வேண்ட வேண்டும்.
4.இந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று பரப்ப வேண்டும்.

“அப்பொழுது அவன் (உயிரான ஈசன்) பார்த்துக் கொள்வான்…!”

அதை விடுத்துவிட்டு…
1.எனக்கு இது தேவை… அது தேவை…! என்றும்
2.இன்னாருக்கு நல்லதைச் செய்தேன். அவன் எனக்குத் தீமைதான் செய்கிறான் என்று எண்ணினால்
3.நம்மை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.

ஆகையினால் நாம் எந்த நல்லதைச் செய்கின்றோமோ அந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைதல் வேண்டும். அப்படி நல்லது விளைய வேண்டும் என்றால் “அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…!” என்ற இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டால் நமக்குள் தீமை விளையாது.

நம்மைப் பார்க்கும் பொழுதே அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே ஒடுங்கும். இது தான் நரசிம்மா…!

வாசல்படி மீது. நமக்குள் நுகரும் சக்தி இங்கே வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமை விளைவிக்கும் எண்ணங்கள் வராது
2.தீமையை விளைவிக்கும் அருள் வித்து இங்கே உருவாகாது
3.அந்த வினையாக வராது… வினைக்கு நாயகனாக இயக்காது…!

அது தான் கோதண்டத்தை முறித்தபின் “சீதா…” என்ற மகிழ்ச்சியைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா…!

தீமைகளை அடக்கிடும் அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.அந்த அரவணைக்கும் சக்தியை நுகர்ந்து… அருள் ஞானிகளுடன் சேர்ந்து…
2.என்றுமே மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து… மெய் ஞானிகளுடன் ஒன்றி
3.பிறவியில்லாப் பெரு நிலையை நாம் அடைய முடியும்.

சந்தர்ப்பவசத்தால் தீமைகளை நுகர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தை இணைத்துத் அந்தத் தீமைகள் விளையாது தடுக்க முடியும்

சந்தர்ப்பவசத்தால் தீமைகளை நுகர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தை இணைத்துத் அந்தத் தீமைகள் விளையாது தடுக்க முடியும்

 

ஓ..ம் ஈஸ்வரா.. குருதேவா.. என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

காலையிலிருந்து இரவு வரையிலும் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை என்று
1.எத்தனையோ வகையான உணர்வுகளை நுகர்ந்தறிந்தாலும்
2.இவை அனைத்தும் நம் இரத்தத்தில் கரு முட்டைகளாக மாறிவிடுகின்றது.

பின் நாளடைவில் அந்தக் கரு முட்டைகள்
1.அதனதன் குணத்திற்குத்தக்க அணுக்களாக உருவாகி
2.எந்த உறுப்புகளில் இந்த முட்டைகள் தேங்கி விடுகின்றதோ
3.அந்த உறுப்புகளில் இந்த வேதனையாகி அங்கே நோயாகி
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று விழுங்கும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஆனால் இதைப் போன்ற நிலைகளைத் தடைபடுத்த நம்மால் முடியும்.

ஒரு மல்லிகைச் செடியின் மேல் தட்டான் பூச்சி முட்டையிட்டாலோ அதைப் போல பல வண்ணங்கள் கொண்ட மலரில் தட்டான் பூச்சி முட்டையிட்டாலோ அந்தந்த வண்ணம் கொண்ட பூச்சிகளாக பட்டாம் பூச்சியாக மாறுகின்றது.

இதைப் போலத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை
1.இரத்தநாளங்களில் உருவாகும் பல குணங்கள் கொண்ட அணுக்கருவிற்குள் சேர்த்தால்
2.அந்தக் கரு முட்டைகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறும் வலிமை பெறுகின்றது.
3.அப்பொழுது இரத்தத்தில் உருவாகும் கரு முட்டையிலேயே தீமையை நீக்கும் சக்தி பெறுகின்றது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஊசி (INJECTION) மூலம் நோய்களை நீக்குகின்றனர். உடல் ஊனமானதையும் மாற்றியமைக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

1.தாயின் கருவில் உருவான சிசு உடலில் சில குறைபாடுகள் இருந்தாலும்
2.அந்த உணர்வின் தன்மையை மாற்றி
3.உயர்ந்த ஞானக் குழந்தையாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானம் ஊட்டுகின்றது.

இதைப் போல மெய் ஞானிகள் கூறிய உணர்வின்படி கண்ணின் உணர்வினைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்தங்களில் செலுத்த முடியும்.

இரத்தத்தில் வளர்ந்து வரும் கரு முட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அதாவது…
1.அந்தத் தீயவினைகள் உருவாக்கும் கரு முட்டைகளில்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணையச் செய்து
3.அதிலுள்ள தீயதை நீக்கி நல்ல உணர்வு பெறச் செய்யும்
4.அந்த முட்டைகளாக மாற்றி அமையுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரோளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

ஒரு நண்பரிடம் பழகுகின்றோம். அவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு நமக்குள் அதிகமானால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

அவர் பட்ட துயரமும் நம் இரத்தத்தில் விளைந்து நமக்குள் கலந்துவிடும். அந்தக் கருக்களை உருவாக்கி நம் உடலுக்குள்ளே தீய அணுக்களாகி நம் உடலை வீழ்த்தி விட்டு வெளிச்சென்ற பின் அந்த தீய அணுவின் உணர்வு கொண்டு வேறொரு உடலாக மனிதனல்லாத உடலாகத்தான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு…
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறும்படி செய்தால்
3.அதன் வளர்ச்சியில் நம் உடலிலுள்ள நோய்களை நீக்கவும்
4.உறுப்புகளை நல்வழியில் வழி நடத்தவும் உதவும்.

நமக்குள் அரும் பெரும் சக்திகளைச் சேர்க்கும் வழி இது தான்…!

உடலிலும் மனதிலும் வலியோ வேதனையோ வந்தால் எப்படி மாற்றுவது…?

உடலிலும் மனதிலும் வலியோ வேதனையோ வந்தால் எப்படி மாற்றுவது…?

 

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் பெற அந்தப் பயிற்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நம் எண்ணத்தில் தெரிந்து கொண்ட உணர்வுகளுக்கு எல்லாம்… நம் உடல் உறுப்புகளில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் கண்ணின் நினைவைச் செலுத்தி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
2.கல்லீரல் மண்ணீரல் சிறுகுடல் பெருங்குடல் தசை மண்டலம் தோல் மண்டலம் இதயம் நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு
3.அருள் சக்திகளை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்

இது போன்ற ஒரு பழக்கத்திற்கு முதலில் வந்து விட்டால் அடுத்து இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகளை எளிதில் தூய்மைப்படுத்திவிடலாம்.

ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும்
1.இரத்தத்தின் வழி சென்று மற்ற உறுப்புகளில் அந்தக் கரு முட்டை அடைகிறது.
2.அங்கே தேங்கி விஷத்தன்மை கொண்ட அணுக்களாக அங்கே உருவாகத் தொடங்கும்.

அத்தகைய அணுக்கள் உருவானால் அந்த உறுப்புகளில் வேதனையோ அல்லது வலியின் தன்மையோ அல்லது மடிந்து போகும் தன்மையோ வரும்.

காரணம் விஷத் தன்மை கொண்ட அணுக்கள் உருவானால் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அது பலவீனம் அடைந்து அங்கே வலியும் வேதனையும் வரும்.

வேதனை என்றாலே நஞ்சு. வேதனை என்ற உணர்வை வளர்த்து விட்டால் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் விஷமான நிலைகளாகப் பாய்ச்சப்பட்டு அதில் எத்தகைய உணர்வோ அதற்குத் தக்க இந்த உடலை விட்டு உயிர் செல்லப்படும் பொழுது மாற்று உடலை உருவாக்கும்… மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

நாம் நினைக்கின்றோம்…
1.எப்படியோ காசைப் போட்டு இப்படிப் போட்டுத் தப்பித்துக் கொள்ளலாம்… உறுப்புகளை மாற்றித் தப்பித்துக் கொள்ளலாம் என்று…!
2.ஆக… சிறிது நாள் வாழலாம்… பின் நாம் எங்கே செல்கிறோம்…? என்று சொல்ல முடியாது

ஆகவே அருள் ஞானிகள் உணர்வை நாம் பெற்று இனி வரக்கூடிய காலங்களில் அசுர குணங்களை அகற்றிடும் சக்தியாக நாம் வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெற்று அந்த அகஸ்தியனின் உணர்வைப் பெற்று அந்த உணர்வுகள் உலகமெங்கும் பரவ வேண்டும் உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணித் தியானிக்க வேண்டும்.

1.எந்த அளவிற்கு உலக மக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ
2.அந்த அளவிற்கு நமக்குள் அது வளர்ச்சி அடையும்.

மனதைச் சமப்படுத்துங்கள்…!

மனதைச் சமப்படுத்துங்கள்…!

 

ஒரு சமயம் ஒருவர் தவறு செய்தார் என்றால் அந்தத் தவறின் நிலையை நாம் சுட்டிக்காட்ட நேர்கின்றது. ஆனால்
1.சுட்டிக்காட்டும் நிலை தவறினால் வெறுப்பின் உணர்வையே ஊட்டுகின்றது.
2.வெறுப்பின் நிலை வளர்த்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம்
1.எதனை…
2.எவ்வாறு…
3.எதன் வழியில் உருவாக்குதல் வேண்டும்…? என்ற நிலைகளை அறிந்துணர வேண்டும்.

அதை நாம் பக்குவப்படுத்தும் நிலைகளுக்குச் சமப்படுத்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்… “பக்குவப்படுத்தும் பண்பு” வருகின்றது.

பக்குவப்படுத்தும் பண்பு வர வேண்டும் என்றால் “அருள் ஞானத்தின் உணர்வை” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் விளைவிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளைய வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளையும் நஞ்சான உணர்வுகளையும் கார உணர்ச்சிகளையும் “அடக்கும் தன்மை” வருகின்றது.

தீமைகளை அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை” வருகின்றது.

சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல்கள் அனைத்தும் “சீராக அமைய” இது உதவும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை நமக்குள் அணுக்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அருள் ஒளியினை வளர்த்துப் “பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

நாம் உலகில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் அனைவரும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் குடும்பத்தில் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
4.தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும்.
5.மகரிஷிகள் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்.
6.அருள் ஞானம் அவர்களுக்குள் பெருக வேண்டும்.
7.இருளை நீக்கிடும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.
8.நஞ்சினை வென்றிடும் அருள் ஞானம் அவர்கள் பெற வேண்டும்.
9.அருள் வாழ்க்கை வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் சந்தித்தோர் பார்த்தோர்… நாம் தொழிலின் நிமித்தம் சந்தித்தோர்… தொழிலின் நிமித்தம் இணைந்து வாழ்ந்தோர்… “இவர்கள் அனைவரையும்” நாம் இவ்வாறு நாம் எண்ணினோம் என்றால்
1.நமக்குள் பகைமை என்ற உணர்வை மாற்றி
2.அருள் ஞானத்தின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது.

கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

 

காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எப்பொழுது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று குறைந்தபட்சம் பத்து நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையாவது எடுக்க வேண்டும்.
1.கண் விழித்து இருந்தாலும் சரி… கண்களை மூடி இருந்தாலும் சரி…
2.கண்ணின் நினைவலைகள் புருவ மத்தியில் வரவேண்டும் (முக்கியம்)
3.உயிர் வழி தான் நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டும்.

காரணம்… நாம் வெளியிலே பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவாக இருக்கின்றது… நல்ல எண்ணங்களை எண்ண விடாது. ஏனென்றால் நாம் எத்தனை பேருடைய தீமைகளைப் பார்த்தோமோ அதற்கெல்லாம் வலு அதிகம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் மற்ற பொருள்களைப் போட்டாலும்… சிறிதளவு விஷத்தைப் போட்டு விட்டால் பாதாமிற்கும் சக்தி இல்லை… பாலுக்கும் சக்தி இல்லை.

அதே போல் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டுவிட்டால் அதனுடைய சுவைகளை அறிய முடியாது. காரத்தின் சுவை தான் முன்னணியில் இருக்கும். உப்பின் தன்மை இணைத்து விட்டால் அந்த உப்பின் தன்மை முன்னணியில் வந்து விடும்.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பிறரிடம் கோபப்பட்டது ஆத்திரப்பட்டது வேதனைப்பட்டது சலிப்புப்பட்டது எல்லாமே நம் ஆன்மாவில் வந்துவிடுகிறது.

அதையெல்லாம் மாற்றி அமைக்க அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும். அந்தச் சக்திகள் கூடிய பின் உடலிலிருந்து வரக்கூடிய மணம் நம் கேட்டறிந்த தீமைகளை ஆன்மாவிலிருந்து அப்புறப்படுத்தும் நிலையாக வரும்.

1.காரணம் மகரிஷிகள் அருள் சக்தியை உடலுக்குள் கூட்டும் போது
2.ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளின் பிடிப்பு அற்றுப் போய்விடும்… ஆன்மாவிலே நிற்காது.
3.அப்போது கஷ்டமான எண்ணங்கள் நமக்குள் வராது

இதை நாம் பழகிக் கொண்டால் மிகவும் நல்லது.

வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப்படும் போதோ அல்லது விபத்தைப் பற்றி அறிய நேரும் பொழுதோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்போரை அவர்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுதோ அது எல்லாம் பதிவாகி விடுகிறது.

அது எல்லாம் ஒரு வித்தாக மாறிவிடுகிறது. மீண்டும் அதை நுகரப்படும் பொழுது அணுவாக மாறுகின்றது. உடலிலே உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக அதே (விபத்து வேதனை) உணர்வலைகளைத் தனக்குள் கவர்ந்து தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

அது வளரத் தொடங்கி விட்டால் நம் ஆன்மாவாக மாறுகின்றது
1.எத்தகைய உணர்வாக இருந்தாலும் அது நம் உயிரிலே படும் போது தான் நம்மை இயக்கும்.
2.நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்… அல்லது நோயாக மாறுவதும் இது போன்று தான்.

இதைப் போன்ற நிலைகளை நாம் தூய்மைப்படுத்த அதிகாலையில் விழித்தவுடனே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்று இல்லை
2.எழுந்து உட்கார வசதியாக உள்ளவர்கள் அப்படிச் செய்யலாம்.
3.படுக்கையில் விழிப்பு வந்த பின்… நேராகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
5.புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் உள்முகமாக உடல் முழுமைக்கும் செலுத்துங்கள்.
6.உள்முகமாகச் செலுத்தச் செலுத்த ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அதை நீக்கிக் கொண்டே இருக்கும்.

தினசரி நீரை ஊற்றி உடல் அழுக்கை எப்படிப் போக்குகின்றோமோ அதைப் போல நம் ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்தியை நம் உடலுக்குள் அவ்வப்போது செலுத்த வேண்டும்.

அது வலுப் பெற்றால் தான்… உடலுக்குள் வலுவானால் தான்… தீமைகளை நீக்க முடியும். எப்படியும் உங்களுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).