“மனிதன் விண் செல்வதற்காகவே…” விநாயகரை வைத்துக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்

VINAYAGAR - RIVER SIDE.jpg

“மனிதன் விண் செல்வதற்காகவே…” விநாயகரை வைத்துக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்

விஞ்ஞானி வான்வீதியில் எந்தக் கோள் எங்கே செல்கின்றது என்பதைப் பதிவாக்குகின்றான். கம்ப்யூட்டர் மூலம் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றான்.

பெருக்கிய பின் அந்த உணர்வின் அதிர்வுகளை எடுத்துக் கொண்ட பின் எந்தக் கோளின் உணர்ச்சியோ அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றான்.

அதை நாடாக்களில் பதிவு செய்து ஒரு ராக்கெட்டின் முகப்பில் வைத்து உந்து விசையால் உந்தச் செய்து விண்ணுக்குச் செலுத்துகின்றான்.
1.வேறு பாதையில் செல்லாதபடி
2.எந்தக் கோளின் உணர்வலைகளைப் பதிவாக்கி வைத்துள்ளனரோ அந்த அலைகள் வான்வீதியில் வரும் பொழுது
3.அதன் திசைப் பக்கம் அழைத்துச் செல்கிறது.

அந்த உணர்வின் அழுத்தமான பின் ராக்கெட் அதைத் தொடர்ந்து செல்கின்றது. அந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் அனைத்தையும் தரை மார்க்கத்தில் இங்கிருந்து அதை எடுக்கின்றனர்… பார்க்கின்றனர்.

இதைப் போல தான் அன்றைய மெய் ஞானிகள் மனிதனின் வாழ்க்கையில் நாம் எதைப் பெறவேண்டும்…? பிறவி இல்லா நிலைகள் அடைந்து எப்படி விண் செல்ல வேண்டும்..? என்ற நிலையைத் தெளிவாக்கினான்.

இதை உணர்த்துவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தையே காட்டினார்கள். ஒரு உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களை எடுத்து அதிலே வளர்ச்சி அடைந்து மனிதனாக எப்படி உருவாக்கியது என்றும் அதிலே உணர்த்தினார்கள்.

மேற்கே பார்த்து வைத்து நாம் கிழக்கே பார்க்கும்படி வைத்து நீர் நிலை இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தார்கள்.

நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் சென்று கணங்களுக்கு அதிபதியாகிப் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வளர்ந்து வந்தோம்.

மனிதனான பின் நாம் உணவுகளை எப்படிச் சுவைமிக்கதாகப் படைத்து உட்கொள்கிறோம் என்ற உணர்வுகளைக் காட்டி இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விகுறி வைத்துச் சிந்திக்கும்படி செய்கிறார்கள்.

காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் நாம் குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம். துணி அழுக்கைப் போக்குகின்றோம். கரை ஏறி வந்த பின் இந்த விநாயகரை உற்று பார்க்கும்படி நீர் நிலை இருக்கும் இடத்தில் விநாயகரை வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

ஆதி மூலம் என்ற இந்த உயிர் பல பல உணர்வின் தன்மை தனக்குள் விளைந்து உயிர் ஈசனாக நின்று மனிதனை எப்படி உருவாக்கியது என்று தன்னை அறிவதற்காக கணங்களுக்கெல்லாம் ஈசா.. “கணேசா…!” என்று நம் உயிரை வணங்கும்படி செய்தார்கள்.

வான இயல் புவியியல் உயிரியல் அடிப்படையில் பேருண்மைகளை எல்லாம் உணர்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் ஒன்றென இணைந்து விண்ணுலக ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை நினைவாக்கி அதைப் பதிவாக்கி நினைவினை விண்ணை நோக்கி ஏங்கும்படி செய்கின்றார்கள்.

1.இங்கே டி.வி ரேடியோவை அது எந்த ஸ்டேசனோ… எந்த அலைவரிசையோ அதை வைத்து எப்படிக் கவர்கின்றோமோ
2.அதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பதிவாக்கி
3.நம் எண்ணத்தால் அதைக் கவரும்படி செய்தார்கள் ஞானிகள்.

அந்த அகஸ்தியன் தனக்குள் வரும் நஞ்சினை எல்லாம் அவன் வென்றான். நாமும் அந்த நஞ்சினை வெல்லும் சக்தியைப் பெறுவதற்காக விநாய்கரை வைத்தான்.

காலையில் எழுந்த உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வுகளையும் தீமைகளையும் துன்பங்களையும் பார்த்து… கேட்டு நுகர்ந்திருப்போம்.

நுகர்ந்தது அனைத்தும் நம் உறுப்புகளில் அந்த அணுக்களில் இருக்கும். இரத்தத்தில் இருந்து தான் அந்த உணர்வின் தன்மையை பகிர்ந்து கொள்கின்றது. அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் வராதபடி நல்லதாக்க வேண்டும்.

இராமாயணத்தில் காட்டியிருப்பார்கள். இராமன் காட்டுக்குள் செல்லும் போது குகனை நண்பன் ஆக்கிக் கொண்டான் என்று.

அதைப் போல அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் சேர்த்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து உடல் முழுவதும் சுழலச் செய்தால் பகைமை உணர்வுகள் ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.

இராமாயணத்தின் நிலைகளை நீங்கள் தெரிந்து கொண்டால் மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்ற உண்மையை உணர முடியும்.

இந்த உடலுக்குப் பின் இனி நாம் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலையை அதிலே நிலை நிறுத்திக் காட்டினான் அந்த மெய் ஞானி.

“கண்ணுக்குத் தெரியாது…!” சூட்சமத்தில் நடப்பதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்குத்தான் கோவில்களில் சிற்பங்களையும் சிலைகளையும் வடித்தனர் ஞானிகள்

1000 Pillar

“கண்ணுக்குத் தெரியாது…!” சூட்சமத்தில் நடப்பதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்குத்தான் கோவில்களில் சிற்பங்களையும் சிலைகளையும் வடித்தனர் ஞானிகள்

 

நம் உயிரை ஈசனாக மதிக்கும்படி வணங்கும்படி ஞானிகள் காட்டுகின்றார்கள். உயிரிலே ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் ஈர்க்கும் காந்தத்தை லெட்சுமி என்றும் காட்டுகின்றார்கள்.

நாம் எத்தகைய குணத்தை நுகர்கின்றோமோ (சுவாசிக்கின்றோமோ) அந்தக் குணம் நம் உயிரிலே மோதும் போது அந்தக் குணத்தின் சப்தங்கள் வெளிப்படுகின்றது. அதன் உணர்ச்சிகள் உடல் முழுவதும் சுழன்று நம் உடலையே இயக்குகிறது.

இவ்வாறு அருவ நிலைகளில் நடப்பதைத்தான் உருவம் அமைத்து “சங்கு சக்கரதாரி விஷ்ணு” என்றும் நாம் சுவாசித்தது எத்தகைய குணமோ அந்த உணர்ச்சிகள்
1.நம் உடலை எவ்வாறு இயக்குகின்றது…?
2.சுவாசித்தது எப்படி உடலாகின்றது…? என்பதனை
3.சாதாரண பாமரனுக்கும் புரியும்படியாகக் காட்டினார்கள் ஞானிகள்.

கண்ணுக்குத் தெரியாமல் சூட்சமமாக நடப்பது அத்வைதம் என்று இருந்தாலும் அதை உருவமாக்கி
1.அதாவது சூட்சம நிலையில் நடப்பதைத் துவைதமாக்கி (கண்ணுக்குத் தெரியும்படியாக உருவமாக்கி)
2.அதற்குக் காரணப் பெயர்களை வைத்து
3.உயிரின் இயக்கத்தை நாம் எல்லோரும் அறிந்து கொள்வதற்காக இவ்வாறு ஞானிகள் வெளிப்படுத்திக் காட்டினார்கள்.
4.ஏனென்றால் எல்லோரும் அத்வைதத்தின் உணர்வுகளை அறிய முடியாது.
5.ஆகவே உருவம் அமைத்து நினைவுபடுத்தி அதற்குண்டான காவியம் படைத்து
6.அந்தக் காவியத்தின் வழியில் அதனின் கருத்தினை நுகரச் செய்து
7.நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளை நம் உடல் முழுதும் சேர்க்கச் செய்து
8.நல்ல குணங்களை நம் இரத்தத்தில் கலக்கச் செய்வதுதான் துவைதத்தின் அமைப்பு.
9.நாம் காணும் தெய்வச் சிலைகள் எல்லாமே இந்த நிலை தான்.

சிலையை உற்றுப் பார்த்த பின் நாம் எந்தக் குணத்தின் தன்மையை நுகர்கின்றோமோ நுகர்ந்து உயிரிலே படும்போது விசிஷ்டாத்வைதம் என்று காரணப் பெயர் வைக்கின்றனர்.

அதாவது சிலையைப் பார்க்கும்போது காவியப் படைப்பின் வழி இது துவைதம். அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது கருத்தினை எண்ணி ஏங்கும்போது
1.ஞானிகளால் உணர்த்தப்பட்ட அந்தத் தெய்வ குணம் நம் உயிரிலே பட்டபின்
2.அந்த உணர்ச்சிகளாக வெளிப்படுகின்றது… நாமும் அறிய முடிகின்றது… இந்த உடலையும் நல் வழியில் இயக்குகின்றது…!

அதனால்தான் விசிஷ்டாத்வைதம்…!

நம் உடலுக்குள் ஒவ்வொரு உணர்வும் அது எப்படி இயக்குகின்றது… இயங்குகின்றது…? என்பதை அறிந்திட சாதாரண மக்களும் கல்வி கற்கவில்லை என்றாலும் கருத்தினைக் கவர்ந்து உணர்வின் செயலை நாம் அறிந்து அதன்வழி செயல்படும்படி செய்தனர் ஞானியர்கள்.

அதன் வழியில் தான் ஆலயங்களை எல்லாம் அமைத்தார்கள் ஞானிகள். அந்த ஞானிகள் உணர்த்திய வழியில் நாம் ஆலயத்தில் காட்டப்பட்ட தெய்வ குணத்தைச் சுவாசித்து நம் உடலுக்குள் வளர்த்தால்தான் “எந்தப் பலனையும் பெற முடியும்…!”

“சித்திரைக் கனி” என்று பெயரை வைத்துப் புது வருடப் பிறப்பை அழைப்பதன் காரணம் என்ன…?

CHITRAI Fruit

“சித்திரைக் கனி” என்று பெயரை வைத்துப் புது வருடப் பிறப்பை அழைப்பதன் காரணம் என்ன…?

1.அதாவது கனி என்றால் அதற்குள் ஒரு வித்தும்
2.அந்த வித்தைக் கனி மறைத்திருக்கிறது என்ற நிலையும்
3,வித்தானாலும் அந்த வித்தையும் ஒரு திரை மறைத்திருக்கின்றது என்ற நிலையும் உணர்த்துவதற்குத்தான்
4.அதைச் சித்திரை என்றார்கள் ஞானிகள்.
5.அந்தத் திரையை நீக்கினால் வித்தின் தன்மை கனியாகி மீண்டும் ஒரு வித்தாகின்றது.

இந்த வித்தில் மூடியிருக்கும் இந்த நிலையை (சித்திரையை – சிறு திரையை) நீக்கினால் அதன் சத்தின் தன்மையை நாம் அறியலாம்.

மண்ணிலே ஊன்றும் பொழுது வித்தினுடைய மேல் மூடி அதற்குத் தக்க நிலையில் அது வெளிப்படும் போது தன் உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அச்செடியாக விளைந்து அதன் இனத்தின் வித்தாக விளைகின்றது.

எத்தனையோ வகையான குணங்கள் கொண்டிருந்தாலும் இவ்வாறே ஒவ்வொரு வித்திற்கும் திரை உண்டு.

இதனை நாம் அறிந்து கொள்வதற்காக சித்திரை மாதத்தினுடைய நிலைகளைப் புது வருடம் பிறக்கிறது (புதிய வித்தாகிறது) என்று காட்டினார்கள்.

இந்தப் புது வருடத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைக் குறிக்கும் நாளாக
1.இந்த வாழ்க்கையில் நம்மை மூடி மறைத்திருக்கும் தீமையான திரைகளை நீக்கி
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்து
3,பேரருள் பெற்று பேரொளியை நமக்குள் பெறச் செய்வதற்குத் தான்
4.”சித்திரைக் கனி…!” என்று அழைக்கின்றனர் நமது ஞானிகள்.

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்

temple

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்

 

அக்காலங்களில் எல்லாம் அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம் சிவ புராணம் விநாயக புராணம் போன்றவைகளைக் கற்றுணர்ந்தவர்கள்.

அன்று ஒரு மனிதன் எப்படி ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலைகள் கொண்டு செயல்படுத்தி வந்தார்கள்.

மார்கழி மாதம் வந்து விட்டதென்றால் அது குளிர் காலமாக இருந்தாலும் அந்தக் காலங்களில் தெய்வீகப் பண்புகளை அந்த மாதம் முழுவதும் எண்ணும் வண்ணம் கதைகளாகச் சொல்வார்கள்.

மற்றவர்கள் அதை அமர்ந்து கேட்டுணர்ந்து
1.தங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும்
2.தன்னுடைய எண்ணங்களைச் சரிபடுத்திக் கொள்ளவும்
3.இந்த மார்கழி மாதத்தைப் பயன்படுத்தினார்கள்.

தை மாதத்தை எடுத்துக் கொண்டால் அந்த அறுவடை காலத்திற்கு ஒப்ப அந்த நாம் விளைய வைத்த மணிகள் வெளி வருவதைக் கண்டு அதை எண்ணி மகிழ்ந்து அதைப் போல நமக்குள் உயர்ந்த எண்ணங்களை எவ்வாறு எடுக்க வேண்டும் என்ற அந்த மகிழ்ச்சியைப் பெருக்கினார்கள்.

இதே போல் ஒவ்வொரு மாதத்திலேயும் அதற்குத் தகுந்த காவியங்களைச் சொல்லி அமர்ந்து கேட்கும்படி செய்து ஓரளவுக்குச் சீராக மக்களுடைய மனதைப் பண்படுத்தும் நிலையாகச் செயல்படுத்தினார்கள்.

அக்காலங்களில் ஒவ்வொரு கிராமங்களும் தோறும் சரி இந்தக் காவியங்களை கதைகளாகச் சொல்லி ஒவ்வொரு மாதத்தையும் தேர்ந்தெடுத்து அந்த ஒவ்வொரு மாதத்திலும் அருள் ஞான உணர்வுகளை முழுமையாக அந்த மக்களுக்குப் பெறும் நிலைகளாகச் செய்தார்கள்.

இன்று அது எல்லாம் அறவே இல்லை.

ஒரு கல்யாணம் நடந்தது என்றால் டி.வி. பெட்டியை வாங்கி விட்டு தையா…தக்கா…! என்று ஆட்டம் போடுவதும்… சண்டை போடும் நிலைகளையும் வேடிக்கையாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதே போல் மக்கள் வாழும் ஊர்களில் இருக்கும் தெய்வங்களை வணங்க வேண்டும் என்ற நிலையில் திருவிழா காலங்கள் வநநால் நான்கு மூலைக்குப் டி.வி.யைப் போட்டு எந்தெந்த அதர்மங்கள் இருக்கிறதோ அதை எல்லாம் பார்த்து ரசித்து வெறுப்புணர்வுகளைத் தோற்றுவிக்கும் நிலையாக எல்லாமே மாறி விட்டது.

1.ஒவ்வொரு மாதங்களிலேயும் தெய்வீகப் பண்புகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று
2.தெளிவாக எடுத்துக் காட்டிய காலங்கள் அனைத்தும்
3.இன்று நம் இந்தியா முழுவதற்கும் மறைந்து விட்டது.

அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் மறைந்து கொண்டே போய் மனிதனுக்குள் உயர்ந்த ஞானத்தைப் பெறும் தகுதிகள் இழந்து விட்டு இன்று நாம் “எங்கேயோ தேடிக் கொண்டிருக்கின்றோம்…!”

ஆக யாரோ செய்வார்..! என்ற நிலைகளில் ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் தூண்டிக் கொண்டு
1.ஆலயங்களுக்கு ஒரு சுற்றுலா (PICNIC) செல்வது போல
2.வெறி உணர்வைத் தூண்டிக் கொண்டு தான் ஆலயங்களுக்கு செல்கின்றோம்.

ஆலயங்களில் காட்டிய நெறிகளின் அடிப்படையில் நமக்குள் அந்தTH தெய்வம் எந்த நல்லதைச் செய்கின்றதோ
1.அந்தத் தெய்வ நிலைகள் நாங்கள் பெற வேண்டும்…
2.எங்களுக்குள் சகோதர உணர்வுகள வளர வேண்டும் என்ற
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வை அங்கே வழிபடுவதில்லை.

ஆலயத்திற்குச் சென்றாலும் நான் என்னுடைய புகழைத் தேடினாலும் என் அருகிலே இருப்போரை நான் நிந்திக்கும் நிலையும் தொல்லை கொடுக்கும் நிலைகளாகத் தான் நாம் செய்து கொண்டு வருகிறோம்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாவற்றையும் விடுத்துப் பழக வேண்டும். நம் அருகிலே உள்ளவரை நாம் சாந்தப்படுத்தி நமக்குள் உயர்ந்த நிலைகளாக மாற்றும் நிலையாக வர வேண்டும். அந்த நிலைகள் ஏற்படுத்துவதற்குத் தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்தனர்.

கார்த்திகை மாதத்தை எடுத்துக் கொண்டால் கந்த புராணம் என்ற நிலையில்
1.ஆறாவது அறிவு கொண்டு உணர்வின் எண்ண ஒலிகள் எப்படி உருவானதென்ற நிலையும்
2.அந்த முருகன் எப்படிப் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்பதையும்
3.மற்ற தீயதை வளராது (பிரம்மாவைச் சிறைப் பிடித்து) நல்லது விளைய வைக்கும் நிலையை முருகன் எப்படிச் செய்தான்..? என்று காட்டினார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு நாம் ஒவ்வொன்றையும் இந்த எண்ணங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் கார்த்திகை மாதங்களில் முருகனைப் பற்றித் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள்.

சிவனைப் பற்றிச் சொல்லும் பொழுது ஜோதியை (திரு அண்ணாமலை) ஏற்றும் நிலைகளைக் காட்டினார்கள்.

நம் உடல் சிவம்.
1,உடலான சிவத்திற்குள் நம்முடைய எண்ணங்கள் ஒவ்வொன்றையும்
2.பளிச்சிடும் எண்ணங்களாக எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று தான்
3.பண்டைய கால காவியங்கள் அனைத்தும் உண்டு.

ஆனால் அதைப் பூராமே திசை திருப்பி அந்த உண்மையினுடைய நிலை அறியாது நமது உடலில் இயக்கும் தன்மையை உணர்த்துவதற்காகக் காட்டப்பட்ட “உண்மைத் தத்துவங்கள்…” காலத்தால் மறைந்து விட்டது.

மறைந்த அந்த உண்மைகளைத் தான் சிறுகச் சிறுக உங்களுக்குள் உணர்த்தி அந்த மெய் ஞானிகள் சென்ற அருள் வழியில் பேரின்பப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வேண்டி யாம் (ஞானகுரு) விரும்புகின்றோம்.

அனைத்தையும் அரவணைத்து மகிழ்ந்திடும் நிலையாக ஒளியாக மாற்றும் சூட்சமம் பற்றி இராமாயணம் காட்டும் உண்மைகள்

vanmiki-ramayana

அனைத்தையும் அரவணைத்து மகிழ்ந்திடும் நிலையாக ஒளியாக மாற்றும் சூட்சமம் பற்றி இராமாயணம் காட்டும் உண்மைகள்

 

1.தீமையான உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் அது வாலியாகி விடுகின்றது.
2.நல்ல குணத்தின் தன்மை எண்ணும் போது ஆஞ்சநேயனாகி விடுகின்றது.

நல்ல குணத்தை எண்ணி எடுக்கும் போது சீதாவிற்கும் இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் மத்தியிலே இந்த உணர்வின் தன்மை அணுவான பின் இராமன் இட்ட கட்டளைப்படி ஆஞ்சநேயர் வாழ்கிறார்.

நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் எல்லாம் சீதாலட்சுமி ஆகின்றது. அந்தச் சீதாவைப் பாதுகாப்பது யார்…? இந்த உணர்வுகள்… உணர்ச்சிகள்…! அப்போது உடலிலே என்ன செய்கிறது…?

இராமன் ஊடுருவிச் சொல்கின்றான் என்ற நிலைகளில் தீமைகளை அகற்றும் உணர்வாக வருகிறது. (இராமன் என்றால் எண்ணங்கள், சீதா என்றால் சுவை – மணம், மகிழ்ச்சி).

இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் நிறைவேற்றுகின்றான். ஆஞ்சநேயன் என்றால் வாயு (காற்று) அதாவது அந்த எண்ணத்தின் உணர்வலைகள்

சீதாவைச் சிறை பிடித்துக் கொள்கிறான் இராவணன்…! ஏன்…?

1.நல்ல குணத்தின் தன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்
2.அசுர குணங்கள் கொண்ட நிலையில் அதன் மீது இச்சைப்படுகின்றான்.
3.ஆக இராவணனின் சகோதரி இராமன் மேல் இச்சைப்படுகின்றாள்.

(அதாவது நாம் நல்ல எண்ணங்கள் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் வேதனையான கோபமான உணர்வை நுகர்ந்த பின் அடுத்து நல்ல எண்ணங்கள் வருகின்றதா..? இல்லை…! நம்முடைய மகிழ்ச்சி காணாது சிறைப்படுகின்றது, தீமையான குணம் நல்ல குணத்தை அடக்கப் பார்க்கின்றது)

அப்போது இவன் என்ன செய்கிறான்…! இவளை அவமதித்து விடுகின்றான். என்னை அவமதித்து விட்டான் என்ற கோபத்தில் சூர்ப்பணகை இராமனின் மனைவி அழகாக இருக்கிறது என்று இராவணனிடம் சொல்கிறாள்…!

ஆஹா… என் சகோதரியை இப்படியா சொன்னான் இராமன் என்று இவன் அகம் கொள்ளுகின்றான். அகம் கொண்ட பின் என்ன செய்கின்றான்..?

அவள் அழகை வர்ணிக்கும் போது அந்த உணர்வை நுகர்ந்து தனக்குள் அதை அடைய வேண்டும் என்ற உணர்வு இங்கே தோன்றுகிறது. பொறாமையில் வரக்கூடிய நிலை இது.

சகோதரி வார்த்தையைக் கேட்டான். அதனால் அகம் கொண்டு செயல்படும் போது கடைசியில் அவனுக்கு அழிவே வந்து விடுகிறது.

இராவணன் கூடப் பிறந்த சகோதரன் கும்பகர்ணனோ அவன் தூங்கிக் கொண்டே இருக்கிறான்… நல்லவன் அவன்…! (நம் உடலில் தீமையான உணர்வுகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகிறது அல்லவா..!)

இராவணனின் மகன் இந்திரஜித் என்ன செய்தான்…?

தன் தந்தையினுடைய நிலையில் மகனான அவன் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது… உருவாக மாட்டேன் என்கிறது…! அதாவது
1.இராவணன் அவன் ஆசையின் இச்சைக்குச் செயல்படும் போது
2.தீமைகளை அகற்றும் வல்லமை உருவாவதில்லை. (தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி)

அதே சமயத்தில் தசரதச் சக்கரவர்த்தி தினம் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொள்கிறான். கங்கணமே கழட்டவில்லை. தசரதன் என்றால் பத்தாவது நிலை அடையக் கூடிய பருவம் பெற்ற நம் உயிர் தான்.

ஒருவர் வேதனைப்படுகின்றார்…!
1.அவரை உற்று நோக்கிய பின் அந்த வேதனைப்படும் சக்தியாக
2.என்னுடன் இணைந்து செயல்படுகிறது… அப்போது அது மனைவியாகின்றது.
3.மனைவியாகப்படும் போது அதிலே உருப் பெறும் கரு அந்த வேதனைகளை உருவாக்கும் தன்மைக்கே வருகிறது.
(இராமயாணக் காவியத்தை இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். அதை யாராவது நாம் மதிக்கிறோமா…? இராமன் நல்லவனா என்றும் சீதா தூய்மையானவளா என்றும் பட்டிமன்றம் வைத்து ஆயிரம் கற்பனைகளைப் பண்ணி இராமயாணத்தையே கொலை செய்து விடுவார்கள். மனிதனின் சிந்திக்கும் தன்மையே இழக்கப்படுகிறது)

இராமன் நல்லவன் என்ற நிலையில் தசரதன் தன் மகன் மேல் பிரியப்படுகின்றான். ஒரு நல்லவன் இந்தச் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும். எதிர் காலம் நன்றாக இருக்கும் என்பதற்காக வேண்டி இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதர் எண்ணுகின்றார்.

ஆனால் கைகேயி கேட்ட வரப்படி நல்லவனுக்கு ஆட்சி இல்லை என்று ஆனபின் தனக்குள் அந்த உணர்ச்சிக்குள் அடிமையாகும் போது இந்த உடலை விட்டுப் பிரிகின்றார்.

யார்…? இந்த உயிர் வெளியிலே போய்விடுகிறது. பரதனோ தன்னுடைய சகோதரன் இராமன் நல்லவன் என்று உணர்கின்றான்.
1.அவன் பாதத்தை வைத்துத் தான் நான் ஆட்சி புரிவேன்
2.நல்ல குணங்களை வைத்து ஆட்சி புரிவேன் என்று செயல்படுத்துகின்றான்.

இராமன் காட்டிற்குள் செல்லப்படும் போது முதலில் குகனைத்தான் சந்திக்கின்றான். குகன் ஒரு படகோட்டி. அந்தக் குகனைச் சந்தித்த பின் அவன் இராமனை வரவேற்கின்றான். நல்ல உணர்வுகள் வருகிறது.

குகன் என்பது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய இரத்தம். அதற்குள் நம் எண்ணங்கள் அனைத்தும் படகாகச் செல்கின்றது. உயர்ந்த ஞானங்களை நாம் எடுக்கும் போது உடல் முழுவதும் அது படர்கின்றது. தீமைகள் உருவாகும் உணர்வுகளுக்கு அது இடம் கொடுக்காது அருள் ஞானத்தை அன்புக் கட்டளையாக இடுகின்றது. இது அடிபணிகின்றது.

இரத்தத்தில் அருள் ஞானத்தைப் பரப்பப்படும் போது இது ஊடுருவி உடல் அனைத்திற்குமே போகின்றது. பகைமை உணர்வை அடக்குகின்றது. நட்பு கொண்டு இணைகின்றது. அது தான் கல்யாணராமா.
1.அருள் ஒளியின் உணர்வுகளைத் தனக்குள் பெருக வேண்டும் என்று எண்ணும் போது
2.மற்ற தீமைகளை ஒடுக்கி நல்ல அணுக்கள் அனைத்திற்கும் உற்சாகம் ஊட்டுகிறது.
3.இப்படி ஒன்றுக்கொன்று போர் செய்யாத நிலைகள் வரும் போது நம்முடைய உணர்வுகள் அனைத்தும் ஒளியாகின்றது.

அப்படிப்பட்ட நிலையில் ஒளியின் கதிராக இருப்பது தான் துருவ நட்சத்திரம். வருவது அனைத்தையும் அரவணைத்துத் தன்னுடன் இயங்கச் செய்யும் தன்மைகளாக ஒளியின் உணர்வாக மகிழ்ந்திடும் உணர்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக
1,துருவ நட்சத்திரத்தின் சக்தியின் பேரருள் பேரொளியை எடுத்து
2.உடலிலுள்ள இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
3.உடல் முழுவதும் படரச் செய்ய வேண்டும் என்று தியானிக்கச் சொல்கிறோம்.

ஸ்தல வரலாறுகளின் (புராணங்களின்) உண்மை நிலைகள்

agastya-temple-siddhantha

ஸ்தல வரலாறுகளின் (புராணங்களின்) உண்மை நிலைகள்

 

அன்றைக்கு அரசர்கள் செய்த முறைப்படி மீனாட்சி என்று மீன் கொடியை வைத்து ஆட்சி செய்து மீனாட்சி என்று காட்டுகின்றார்கள். தனது வலிமை கொண்டு மற்ற ஆட்சிகளை அடக்க முடியும் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

மீன் என்ன செய்கிறது…? ஒன்றை ஒன்று விழுங்குகிறது. அது விழுங்கும் சக்தி பெற்றது. மற்ற அரசனை வீழ்த்தும் நிலை அது. அதற்காக மீனாட்சி என்று அன்றைய அரசர்கள் காரணப் பெயரை வைத்தனர்.

அன்று ஆண்ட அரசன் அதற்கு வேண்டிய சாஸ்திரத்தை எடுத்து மக்களுக்குக் காட்டி அதை எடுத்து கடவுளாக வளர்த்தார்கள். அரசர்கள் சொன்ன நிலைகள் தான் இது.

அதே போல் ஆண்டாள் என்று இங்கே வைத்திருக்கின்றார்கள். நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் தான் நம்மை ஆளுகின்றது. அன்றைய அரசன் காரணப் பெயரை வைத்து அந்த உணர்விற்கெல்லாம் ஸ்தல புராணங்களை வடிக்கின்றான்.

அதை யாரும் சிந்தித்துப் பார்க்கிறோமா என்றால் இல்லை. அரசர் வகுத்த வழியில் தான் நாம் இன்றும் செல்கின்றோம். அரசன் ஆடம்பர நிலைகள் கொண்டு சுகபோகத்திலேயே வாழ்நதான்.

அவன் காட்டிய சாஸ்திரங்களை சாதாரண மக்கள் கடைப்பிடிக்கத் தவறினால் மரண தண்டனை கொடுக்கின்றான்… கழுவேற்றச் செய்கின்றான்…!

ஒரு அரசன் அடுத்த அரசனுடன் உறவு கொண்டால் ஐந்தாம் படை என்று அவனைத் தீர்த்துக் கட்டுகின்றான். அவனுக்குக் கீழ் செல்பரையும் அழித்து விடுகிறான்.

நம் தெய்வத்தைக் காட்டிக் கொடுக்கும் நிலைகளுக்குச் செல்கின்றான் என்றும் அதனால் தெய்வத்தின் சாட்சியாக அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றுகின்றான். இது அரசன் செய்த தெய்வ குணம்.

ஒவ்வொரு அரசனையும் புகழ் பாடிய கவிஞர்கள் தான் பல உண்டு. எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும்
1.ஸ்தல புராணங்களைப் பாடும் போது
2.இந்த ஸ்தலம் தான் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று அப்படித்தான் பாடியிருப்பார்கள்.

இந்த பாடலில் கூறியபடி உயர்ந்த ஸ்தலம் என்ற எண்ணத்தில் அரசனின் ஆசையின் நிலைகளைத் தான் இன்றைக்கு நாம் வளர்க்க முடிகிறது.
1.அரசர் வழியில் தான் நாம் செல்கின்றோமே தவிர
2.மெய் ஞானிகள் சொல்ல வழியினை நாம் கடைபிடிக்கும் முறையே அற்றுப் போய் விட்டது.

மகரிஷிகள் சொன்ன உணர்வை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே மனித குலத்தைப் புனிதப்படுத்தும் நிலைகள் கொண்டது. மக்கள் அனைவரையும் ஒன்றி வாழச் செய்யும் ஞானக் கருவூலங்கள் தான் நம்முடைய ஆலயங்கள்.

1.உயிரே கடவுள்
2.நாம் எண்ணும் எண்ணமே உள் நின்று இயக்கும் கடவுளாகின்றது.
3.நாம் எண்ணும் உணர்வுகளே உடலாகச் சிவமாகின்றது.
4.நாம் எண்ணிய உணர்வே வித்தாக ஊழ்வினையாக விநாயகர் என்று பதிவாகிறது.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்படுதல் வேண்டும், விநாயகருக்கு அங்குசத்தைக் கையில் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக மனிதனாக உருவான பின் அந்தக் கடும் அங்குசத்தை வைத்துத் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்ற இந்த நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நம்முடைய தத்துவங்கள் சாதாரணமானதல்ல. அதை உணர்த்தும் ஆலயங்களும் சாதாரணமானதல்ல.

1.“சாமியிடம் சக்தி இருக்கின்றது…!” என்ற இந்த நம்பிக்கையைத் தான் ஊட்டியுள்ளார்கள்.
2.எண்ணத்தால் அதை நமக்குள் எடுத்தால் “நம் உயிர்…” அந்தச் சக்திகளைக் கொடுக்கின்றது என்ற நிலையை நாம் மறந்து விட்டோம்.

கோவிலுக்குச் சென்றால் நமக்குள் அந்த உயர்ந்த தெய்வீகக் குணத்தை எடுத்து நம்மைச் சார்ந்தோருக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். அது தான் உண்மையான பக்தி.

பீஷ்மர் கடைசியில் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதன் காரணம் என்ன..?

Bheesmar

பீஷ்மர் கடைசியில் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதன் காரணம் என்ன..? 

இராமன் வாலியை எப்படிக் கொல்கிறான்…? இராமன் வாலியை மறைந்து இருந்து தான் தாக்குகின்றான்.

ஒருவரைப் பார்த்த பின் அவர் வேகமான நிலைகளில் நம்மைத் தாக்கி விடுவார் என்ற உணர்வை நாம் எடுக்கின்றோம். அவனை உற்றுப் பார்த்தால் என்ன செய்கின்றது…?

அவர் கோபமான உணர்வுகளை நம்மிடம் சொல்லப்படும் போது அதை நாம் நுகர்ந்தவுடனே அந்த உணர்வு நம்மை வீழ்த்துகிறது.

அவன் எண்ணத்தை நுகர்ந்து பதிலுக்கு நாமும் கோபமாகச் சொல்வதை விடுத்து விட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியில் வலுவாக எண்ணிச் சுவாசித்து விட்டு – அந்த மறைந்த நிலைகளில்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனை அறியாது இயக்கும் இருள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் திருப்பினால்
4.அவன் உணர்வை நாம் அடக்குகின்றோம்.

வாலி என்ற நிலைகளில் போர் முறைகள் செய்யும் போது அதனின் வலுவின் செயலாக்கங்களுக்கு நம்முடைய வலிமையை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று தான் வான்மீகி தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் கண்கள் கொண்டு அவர் கோபமாகப் பேசுவதை உற்று நோக்கிக் கூர்ந்து பதிவாக்கி விட்டால் அவன் உணர்வே நம்மை இயக்கும். அதை இயக்கவிடாது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தடுக்க வேண்டும்.

இருந்தாலும் இதைப் போன்ற உணர்வின் தன்மை நம்மை இயக்கும் நிலைகளைக் காட்டுவதற்குத்தான் மகாபாரதத்தில் அதே சமயத்திலே பீஷ்மரைக் காட்டியிருப்பார் வியாசகர்.

கடைசியில் பீஷ்மர் அம்புப் படுக்கையின் மீது தான் படுத்து இருப்பார்.
1.தான் செய்த பாவம் எல்லாம் தன் உடலில் எப்படி இருக்கிறது என்று உணர்த்தி
2.அதைத் தாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்ற நிலையில்
3.மக்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பார் வியாசகர்.

கொலையோ மற்ற இம்சைகளையோ செய்தாலும் இந்த உணர்வு நமக்குள் இருக்கத்தான் செய்கிறது. அதனின் செயலாக்கங்கள் எப்படி வரும்…? என்பதையும் அதை மாற்றும் வல்லமை எப்படிப் பெறவேண்டும் என்பதையும் குருநாதர் அன்றைக்கு எமக்குக் (ஞானகுரு) காட்டுகிறார்.

சரித்திரத்தைக் காட்டி நம் கண்களின் வேலை என்ன..? நம் எண்ணங்கள் எப்படி இயங்குகிறது…? நம் உயிர் எப்படி இயங்குகிறது…? என்று ஒவ்வொன்றையும் அனுபவபூர்வமாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

 

முருகன் போரில் சூரனை வென்றாலும் அவனைப் பாம்பாகச் சபித்துக் காலடியில் வைக்கின்றான் ஏன்…?

Soorapadman

முருகன் போரில் சூரனை வென்றாலும் அவனைப் பாம்பாகச் சபித்துக் காலடியில் வைக்கின்றான் ஏன்…?

 

உதாரணமாக மூன்று விதமான ஆடுகளில் உள்ள கருவை விஞ்ஞானிகள் எடுத்து ஒன்றாகச் சேர்த்துக் கருவுறச் செய்து புது விதமான ஆடாக உருவாக்குகின்றார்கள்.

அதே போல் மனித உடலில் உள்ள கருக்களை எடுக்கிறான். குரங்கிலுள்ள செல்களைக் கொஞ்சம் எடுக்கிறான். இப்படி ஒவ்வொரு செல்களையும் எடுத்து மனிதனுக்குண்டான அறிவின் தன்மை வளர்வதற்காகக் வேண்டி அத்தகைய கருக்களை இணைத்து ஒரு நாயை உருவாக்குகின்றான் (மனிதனுக்கு ஒத்த நிலைகளில).

மனித உணர்வு கொண்ட செல்களை எடுத்துக் கொரில்லாக்களுக்குள் அதனுடைய கருவிலே சேர்த்து மனிதனை ஒத்த ஞானத்தை வளர்க்கக்கூடிய நிலையில் இவன் சொன்ன வேலைகளை எல்லாம் செய்கிற மாதிரி உருவாக்குகிறார்கள்.

இது எல்லாம் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற நிலையில்
1.மனிதனுடைய ஆறாவது அறிவு உருவாக்கக்கூடிய சக்தியாக
2.நம் எண்ணத்துக்குள் உண்டு என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆனால் நம் ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி அருள் ஒளியை நமக்குள் உருவாக்கப்படும் போது “ஒளியின் சரீரமாக… அழியாத நிலைகளாக… நாம் உருவாக்க முடியும்…!”

இதைக் காட்டுவதற்குத் தான் முருகனுக்கு மயிலைப் போட்டு அந்த மயிலின் காலடியில். பாம்பையும் போட்டு வைத்துள்ளார்கள். அதற்கு ஒரு குட்டிக் கதையும் எழுதி வைத்திருக்கின்றார்கள்.

அதாவது முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது. போர் நடந்தவுடனே அசுரன் வீழ்ச்சி அடைந்து விட்டான். வீழ்ச்சி அடைந்ததும் என்ன செய்கின்றான்…?

ஐயனே…! இனி நான் உன் காலடியிலே இருப்பேன். எனக்கு அந்த வரத்தைக் கொடு…! என்று அந்த அசுரன் முருகனிடம் கேட்கிறான். உடனே அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்து “என்னுடனே இரு…!” என்று முருகன் சொல்கிறான்.

சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா…! அதிலேயும் அர்த்தம் உண்டு.

ஏனென்றால் ஒரு அணு இயங்க வேண்டும் என்றால் அதற்குள் இருக்கும் விஷம் தான் காரணம். அந்த விஷம் இல்லை என்றால் அணுக்கள் இயங்காது.

ஆகவே சபிக்கப்படும் போது “எனக்குள் அடங்கி நட…!” என்பதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள் ஞானிகள்.
1.அணுவிற்குள் விஷம் இருந்தாலும் அது அதிகரித்து விட்டால் அந்த உணர்வு “அசுர சக்தியாக” மாறுகிறது.
2.ஆனால் அந்த விஷத்தின் தன்மை ஒடுங்கி விட்டால் நமக்கு “நன்மை தரும் சக்தியாக” இருக்கும்.

விஷத்தை நாம் வேக வைத்து அடக்குவது போன்று அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து அறியாது வரும் நஞ்சான உணர்வுகளை அடக்குதல் வேண்டும்.
1.நஞ்சை அடக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் சுவாசிக்க வேண்டும்.
2.நஞ்சை அடக்கிய மெய் ஞானி தான் இதைச் சொன்னான்.

அந்தக் காவியத்திற்குள் இவ்வளவு பொருள் இருக்கிறது…!

கண்ணன் துகிலை உறிகின்றான்…! ஏன்…?

krishna leela

கண்ணன் துகிலை உறிகின்றான்…! ஏன்…?

 

கண்ணன் துகிலை உறிந்தான். யார்…? கிருஷ்ணன். குளத்தில் குளித்து கொண்டிருக்கின்ற பெண்கள் சேலையை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான்..! என்று சொல்வார்கள்.

ஞானிகள் காட்டிய வழியில் கண்ணனுடைய செயல்கள் என்ன…? என்றால் ஒருவர் நம்மிடம் ஒரு விபரத்தைச் சொல்கிறார் என்றால் அப்பொழுது
1.நம் கண்கள் அவரை உற்றுப் பார்க்கின்றது.
2.அவர் வெளிப்படுத்தும் உணர்வைப் பதிவாக்குகின்றது.

கண்ணோடு சேர்ந்த காந்தப்புலனோ அவர் எண்ணத்தின் அலைகள் வரப்போகும் போது அதை கவர்ந்து நம் உணர்வுடன் மோதும் போது
1.அவர் திருட்டுத்தனம் செய்கின்றார் என்று காட்டுகிறது
2.திருட்டுத்தனம் செய்கிறார் என்றால் கண்ணன் வெண்ணெயைத் திருடுகின்றான்.
3.அதாவது அவர் வெளிப்படுத்தும் உணர்வுக்குள் இருக்கும் வலுவை…
3.அவர் உணர்வின் தன்மை எடுக்கின்றது கண்ணனான நம் கண்கள்

இதைத்தான் கண்ணன் துகிலை உறிந்தான் என்று காட்டுகின்றார்கள்.

நாம் பார்த்துக் கவரும் அந்த உணர்வின் தன்மை கொண்டு மறைந்த நிலைகள்
1.உள்ளுக்கே மறைத்து அவர் (மற்றவர்கள்) செயல்படுவதை
2.உள் நின்று அந்த உணர்வைப் பிரித்துத் தனக்குள் அறிகின்றது இந்தக் கண்கள் என்று காட்டுவதற்கு
3.அதை உருவமாகக் காட்டி அந்தத் துகிலை உறிகிறான் என்று காட்டுகின்றார்கள்.

கண்ணன் வெண்ணெயைத் திருடினான் என்றால் ஒவ்வொரு உணர்வின் தன்மையிலும் தீமையை நீக்கி உள் இருக்கும் உணர்வை இது அறிகின்றது.

உதாரணமாக ஜோசியக்காரரிடம் போகப்போம் போது நீங்கள் நல்லது கெட்டது என்று எண்ணிக் கேட்கும் பொழுது உங்கள் கண்களைத் தான் ஜோதிடம் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள். ஆனால்
1.நீங்கள் தலையை மட்டும் குனிந்திருங்கள்.
2.உங்களிடமிருக்கும் உண்மையை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

அவர்கள் அதே எண்ணத்தில் (பழக்கம்) இருக்கின்றதால் நம்மிடம் இருந்து வெளிப்படும் உணர்வின் தன்மை அவர்களுக்குள் மோதும்போது (கண்ணன் துகிலை உறிந்தான் என்ற நிலையில்) நமக்குள் நடந்து கொண்டிருப்பதை அறியத் தொடங்குவார்கள்.

அவர்கள் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்ததுமே நம்மை அறியாமலே தலையை ஆட்டுவோம்.
1.அதைப் பிடித்துக் கொள்வான்
2.அந்தக் கணக்கைப் போட்டுக் கொள்வான்
3.ஒவ்வொன்றும் அது இன்ன இன்னதுதான் என்பான்.

அதற்குத் தகுந்த மாதிரி நாம் என்ன சொல்வோம்..? ஆமாம்… ஆமாம்… ஆமாம்… ஆமாம்…! என்று ஜோதிடக்காரன் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வோம்.

அப்போது அந்த உணர்வுகள் அவன் சொல்வதெல்லாம் நமக்குள் போய்விடும். “அவன் சொன்னது எல்லாமே உண்மை என்போம்…!” ஜாதகம் ஜோதிடம் பார்க்கின்றவர்கள் இதை வைத்துத்தான் சொல்வார்கள்.

இந்த ஜோதிடமும் ஜாதகமும் மனிதனுக்கு இல்லை…!

பன்னிரெண்டு மாதங்களிலும் அருள் சக்தியைப் பெறச் செய்யும் நம் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள்

Festival day

பன்னிரெண்டு மாதங்களிலும் அருள் சக்தியைப் பெறச் செய்யும் நம் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள்

மனிதனுக்கு மத்தியில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குவதற்காக பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நிலைகளைக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இந்தப் பன்னிரண்டு மாதங்களுக்கும் முப்பது நாளைக்கு ஒரு தரம்
3.தீமைகளைக் கழித்துச் சுத்தப்படுத்தும் முறைகளைக் காட்டுகின்றார்கள்.

பொங்கல்… சிவன் இராத்திரி… சித்திரைக்கனி… ஆடிப் பெருக்கு.. விநாயகர் சதுர்த்தி.. விஜய தசமி… தீபாவளி.., கார்த்திகை தீபம்… வைகுண்ட ஏகாதசி… என்று ஒவ்வொரு மாதத்திலும் விழாவை வைத்து ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொள்ளும் முறைகளைக் கொடுக்கின்றார்கள்.

விஜயதசமி – நம் உயிர் விண்ணிலிருந்து இங்கே பூமிக்குள் வந்த பின் பத்தாவது நிலை அடையக்கூடிய முறையைக் கொடுக்கின்றார்கள்.

கார்த்திகை ஜோதி. என்றால் ஆறாவது அறிவு கார்த்திகேயா. விளக்கை நம் வீட்டு வாசற்படியில் வைத்து வீட்டுக்குள் வருகின்ற இருளை நீக்குகின்றோம். ஆகவே கார்த்திகை தீபம் ஏற்றி இருளை நீக்குவது போல் எல்லாக் குடும்பமும் ஒளியாக வேண்டும் என்று எண்ணும்படி செய்கிறார்கள்.

உதாரணமாக நாம் நுகரும் உணர்வுகள் தீமையின் உணர்வுகளானால் வினையாகி உடலுக்குள் ஒரு வித்தாகின்றது. தீமையான அந்த வித்தை உடலுக்குள் வளர விடாது தடுக்க வேண்டும் அல்லவா…! அதற்காக விநாயகர் சதுர்த்தி என்று கொடுக்கின்றார்கள்.

நல்ல குணங்கள் கொண்டு நல்ல உணர்வுகளை உடலில் விளைய வைத்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது வினைக்கு நாயகனாகி விடுகின்றது.

நம் உடலில் உள்ள நல்லதைக் காப்பதற்காக வேண்டி தீமையான உணர்வுகளைக் களையை நீக்குவது போல் நீக்க வேண்டும். அந்த அருள் ஞானிகள் பெற்ற அருள் உணர்வின் தன்மை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் போது நல்ல வித்திற்கு உரம் கிடைக்கின்றது. அப்பொழுது தீமைகளைக் கரைத்து விடுகின்றோம்.

நாம் நீக்கிய தீமையான உணர்வுகளைக் காலையில் சூரியன் எடுத்து சூனிய மண்டலத்திற்குக் கொண்டு போகிறது. அப்புறம் கடல் அலைகளிலிலே கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து அங்கே கரைத்துவிடும். உள்ளே இழுத்துக் கொள்கின்றது.

அதாவது பூமியில் முக்கால்வாசி நீர் இருக்கின்றது. பாக்கி கால் வாசி நிலப் பகுதியில் தான் நாம் இருக்கிறோம். தீமைகளை அங்கே நீரிலே கரைத்த பின் இங்கே நிலப் பகுதியில் வராது அது நிறுத்தி விடும். நாம் வாழும் இந்த உலகமும் தூய்மை ஆகின்றது.

தீபாவளி அன்றைக்கும் இதேதான். தீபாவளி என்றால் கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்.

இப்போது நீங்கள் என்ன செய்கின்றீர்கள். கண்கள் கொண்டு வேதனைப்படுவோரைப் பார்க்கின்றீர்கள். அடடா… இவனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று பாசத்தால் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த வேதனையான உணர்வின் தன்மை வந்தவுடனே நமக்குள் அது நோயாக மாறுகிறது. அசுர குணங்கள் விளைகின்றது. அசுர அணுக்கள் விளைகின்றது. நல்ல குணங்களைக் கொல்கின்றது. நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே இப்படி வருகிறது.

கண்ணன் நரகாசுரனைக் கொன்றான் என்ற நிலையில்
1.நம் கண்களின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று பல முறை
3.கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்த வேண்டும்.

கணவனும் மனைவியும் இரண்டு பேரும் இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும். அவர்கள் மலரைப் போல மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். மகரிஷியின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்

நம் வாடிக்கையாளர்கள் அவர்கள் கஷ்டத்தை நம்மிடம் சொல்லி இருப்பார்கள். “உ..ம்” கொடுத்து அதைக் கேட்டிருப்போம். நமக்குள் அது பதிவாகிவிடும்.

அதை மாற்ற நாங்கள் தொழில் செய்யும் இடங்களெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும். எல்லாக் குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் நாம் எண்ணிப் பழக வேண்டும்.

ஆக மற்றவர்களுடைய துயரங்களை நாம் எண்ணுவதே இல்லை. அதிகாலையில் நான்கு மணிக்கு இப்படித் தியானித்தால் காலையில் ஆறு மணிக்கு சூரியனின் ஒளிக் கதிர்கள் வருகிறது.
1.நாம் இழுக்காத அந்தத் தீய வினைகளை எல்லாம்
2.அது இழுத்து மேலே சூனிய மண்டலத்திற்கே கொண்டு போய் விடுகிறது.

சிலர் தியானம் இருக்கிறோம் என்ற நிலையில் சூனிய மண்டலத்திற்கே போய் விடுகிறார்கள். எங்கே…? சிவன் இருண்ட உலகத்தில் இருக்கின்றான். அங்கே போய்ப் பார்க்க வேண்டும் என்ற நிலையில் சிவன் ராத்திரி என்று அறியாதபடி சொல்கிறார்கள்.

ஒருவருகொருவர் பகைமையான உணர்வு வந்தாலும் தீபாவளி அன்று நல்ல பதார்த்தங்களைக் கொண்டு போய்க் கொடுத்து அவர்கள் வீட்டில் உள்ள எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். மலரைப் போல் மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழ வேண்டும் என்று ஒற்றுமை ஏற்படுத்தும் நாளே தீப ஒளித் திருநாள்.

சிவன் ராத்திரி அன்றைக்கு “விழித்திரு…!” என்கிறார்கள். மகா சிவன் ராத்திரி அன்று சிவன் கோயிலில் போய் விடிய விடிய விழித்து இருக்கிறோம்.

தாயக்கட்டையையும் மற்றதையும் போட்டு விளையாடுகிறோம். விழித்திருக்க வேண்டு என்று சொல்லிக் கொண்டு “நான் ஜெயித்தேன்… நீ இல்லை நான் தான் ஜெயித்தேன்…!” என்று இதில் தான் நாட்டத்தைச் செலுத்துகின்றோமே தவிர “எதற்காக விழித்திருக்க வேண்டும்…?” என்பதை அறியவில்லை.

விழித்து இருக்கிறது என்றால் சும்மா விழித்திருப்பதல்ல…! அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர என்று எண்ண வேண்டும்.

யார் யாரிடம் எல்லாம் நான் பழகினேனோ அந்தக் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் தொழில் வளம் பெருக வேண்டும். பார்ப்போர் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று சொல்லி “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று இதை எண்ண வேண்டும்.

அதாவது தீமைகளையும் அந்தப் பகைமை ஊட்டக்கூடிய எண்ணங்களும் நமக்குள் வராதபடி விழித்திருக்க வேண்டும்.

பகைமை வந்தால் எனக்கு இப்படிச் செய்தான்… அவன் உருப்படுவானா…? அவன் குடும்பம் கெட்டு போகவேண்டும்…! என்று சொல்கிறோம்,

அந்த உணர்வு நமக்குள் புகாதபடி தீமையை விளைவிக்கும் அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்காதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

நாம் பார்க்கும் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்தப் பகைமை உணர்வுகளை அகற்றுவதற்காக நாம் விடிய விடிய விழித்துக் கொண்டு இருப்பது.

ஏனென்றால் மனிதனுக்குள் சந்தர்ப்பத்தால் விளைய வைத்த வெறுப்பின் உணர்வுகள் அவர்கள் எண்ணும் போது இந்த சூரியனின் காந்த சக்தி எடுத்துக் காற்றிலே அலைகளாகப் பரப்ப் வைத்து விடுகிறது.

அப்போது நமக்குள் அணுவாகி விட்டால் சும்மா இருந்தாலும் போதும். அந்த உணர்ச்சிகள் தூண்டி சிறு மூளைக்கு அனுப்பும். உயிர் என்ன செய்யும்…? அது எடுத்து நமக்குள் உணர்த்தும். தீமை செய்யும் உணர்வுகளை நுகரச் செய்யும். உயிரில் பட்டவுடனே அந்த எண்ணம் வரும்.

1.“அவனைச் சும்மா விடுவதா…?” என்ற எண்ணம் வந்தால் அந்த அணு அதனுடைய உணர்வை இழுத்துவிடும்.
2.இது இழுத்தவுடனே நம் உடல் உறுப்புகளைக் கெடுக்கும்.
3.நாம் நினைக்கிறோம்… அவனை விடுவதா என்று…!
4.ஆனால் அந்த உணர்வு இரு நான் பார்க்கிறேன்…! என்று நம் நல்ல குணங்களை இங்கே கொல்லும். இதை மாற்ற வேண்டும்
5.அதற்காகத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சொல்கிறார்கள்

அதாவது தீமைகள் நமக்குள் புகாதவண்ணம் நம் உடலுக்குள் விளையாத வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும்.