பீஷ்மர் கடைசியில் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதன் காரணம் என்ன..?

Bheesmar

பீஷ்மர் கடைசியில் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதன் காரணம் என்ன..? 

இராமன் வாலியை எப்படிக் கொல்கிறான்…? இராமன் வாலியை மறைந்து இருந்து தான் தாக்குகின்றான்.

ஒருவரைப் பார்த்த பின் அவர் வேகமான நிலைகளில் நம்மைத் தாக்கி விடுவார் என்ற உணர்வை நாம் எடுக்கின்றோம். அவனை உற்றுப் பார்த்தால் என்ன செய்கின்றது…?

அவர் கோபமான உணர்வுகளை நம்மிடம் சொல்லப்படும் போது அதை நாம் நுகர்ந்தவுடனே அந்த உணர்வு நம்மை வீழ்த்துகிறது.

அவன் எண்ணத்தை நுகர்ந்து பதிலுக்கு நாமும் கோபமாகச் சொல்வதை விடுத்து விட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியில் வலுவாக எண்ணிச் சுவாசித்து விட்டு – அந்த மறைந்த நிலைகளில்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனை அறியாது இயக்கும் இருள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் திருப்பினால்
4.அவன் உணர்வை நாம் அடக்குகின்றோம்.

வாலி என்ற நிலைகளில் போர் முறைகள் செய்யும் போது அதனின் வலுவின் செயலாக்கங்களுக்கு நம்முடைய வலிமையை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று தான் வான்மீகி தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் கண்கள் கொண்டு அவர் கோபமாகப் பேசுவதை உற்று நோக்கிக் கூர்ந்து பதிவாக்கி விட்டால் அவன் உணர்வே நம்மை இயக்கும். அதை இயக்கவிடாது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தடுக்க வேண்டும்.

இருந்தாலும் இதைப் போன்ற உணர்வின் தன்மை நம்மை இயக்கும் நிலைகளைக் காட்டுவதற்குத்தான் மகாபாரதத்தில் அதே சமயத்திலே பீஷ்மரைக் காட்டியிருப்பார் வியாசகர்.

கடைசியில் பீஷ்மர் அம்புப் படுக்கையின் மீது தான் படுத்து இருப்பார்.
1.தான் செய்த பாவம் எல்லாம் தன் உடலில் எப்படி இருக்கிறது என்று உணர்த்தி
2.அதைத் தாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்ற நிலையில்
3.மக்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பார் வியாசகர்.

கொலையோ மற்ற இம்சைகளையோ செய்தாலும் இந்த உணர்வு நமக்குள் இருக்கத்தான் செய்கிறது. அதனின் செயலாக்கங்கள் எப்படி வரும்…? என்பதையும் அதை மாற்றும் வல்லமை எப்படிப் பெறவேண்டும் என்பதையும் குருநாதர் அன்றைக்கு எமக்குக் (ஞானகுரு) காட்டுகிறார்.

சரித்திரத்தைக் காட்டி நம் கண்களின் வேலை என்ன..? நம் எண்ணங்கள் எப்படி இயங்குகிறது…? நம் உயிர் எப்படி இயங்குகிறது…? என்று ஒவ்வொன்றையும் அனுபவபூர்வமாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

 

Leave a Reply