ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்.. ஓமுக்குள் ஓம் என்றால் பொருள் என்ன…?

ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்.. ஓமுக்குள் ஓம் என்றால் பொருள் என்ன…?

 

உதாரணமாக மிளகாயை அரைத்து சப் என்று இருக்கும் மாவிற்குள் இணைத்து விட்டோம் என்றால் மாவின் சுவை காரமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.ஒரு புலி மானின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்த சாந்த உணர்வுகள் இதற்குள் அடங்கி விடுகின்றது.
2.ஆனால் சாந்த குணம் கொண்ட மானோ புலியின் உணர்வை நுகரப்படும் பொழுது
3.மானின் சாந்த உணர்வுகள் அந்தப் புலியின் கடுமையான கார குணத்திற்குள் ஒடுங்கி விடுகின்றது அதன் வழியே அது அடக்கம் ஆகின்றது.

அது தான் மூஷிக வாகனா…!

மானோ புல்லைப் பார்த்து அதன் மணத்தை நுகர்ந்து… அதனின் உணர்வு கொண்டு அதே மணம் இதற்கு வாகனமாக அமைந்து புல் இருக்கும் இடத்திற்கு இந்த உடலை நகர்த்திச் செல்கின்றது.

புலியோ கடினமான உணர்வு கொண்ட நிலையில் மானை நுகர்ந்த பின் மானின் சாந்த உணர்வு இதற்குள் ஒடுங்கினாலும்… மான் புலியை நுகரப்படும் பொழுது இதனுடைய கடுமை மானின் சாந்த உணர்வுக்குள் சேர்த்துக் கொண்ட பின் கணங்களுக்கு அதிபதியாகி அதை அடக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.

ஏனென்றால்
1.சாந்த உணர்வின் தன்மை அணுவாக “ஓ…” என்று இயக்கினாலும்
2.ஓமுக்குள் ஓம் – புலியின் உணர்வுகள் அது கடுமையாக்கப்படும் பொழுது சாந்த உணர்வுக்குள் நின்று
3.அதன் அணுவின் தன்மையை இது இயக்கி இதை அடக்கும் போர் முறை கொண்டு
4.இந்த அணுத் தன்மை அதற்குள் துடிப்பின் வேகத்தை அதிகமாகக் கூட்டுகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தவர்களை டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்தால் “துடிப்பு நிலையும்… கொதிப்பின் நிலையும்” அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.

காரணம்… சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரைக் கோபிக்கும் உணர்வு கொண்டு அவர்கள் செயல்படும் நிலையோ அல்லது நாம் செயல்படும் எண்ணத்தை சீராக அமைக்கவில்லை என்றால் எதிர்மறையாக தாக்கப்பட்டு விடுகிறது (ஒரு பொருளுடன் ஒரு பொருள் தாக்கப்படுவது போல்)

1.சாந்த உணர்வு கொண்டு மிருதுவான பொருள் மற்றொன்றுடன் மோதினால் அதனில் வேகத்தடிப்பு வருவதில்லை.
2.ஆனால் கடினமான பொருள் மற்றதுடன் தாக்கப்படும் பொழுது துடிப்பாகி வெப்பம் உருவாகின்றது

அதைப் போல் மனிதருக்குள் கடினமான உணர்வு மோதினால் அதனால் உணர்ச்சியின் வேகமும் (துடிப்பு வெப்பம்)… வலியும் வேதனையும் அதிகரிக்கிறது.
1.வேக உணர்வு கொண்டு தாக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்குள் ஊடுருவி
2.அணுவின் தன்மை அடைந்து இதை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
3.அதாவது அந்த அணுவிற்குள் ஓமுக்குள் ஓமாக மாறி இதனை அது அடக்கிடும்… அதற்குள் இது அடங்கி இதனின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.

“சாந்த குணமும் சாந்த எண்ணங்களும் அதை வளர்க்கும் தன்மை இழந்து” இந்தக் கோபமான (காரத்தின்) உணர்வை வளர்க்கப்படும் பொழுது… அதற்குள் நாம் பார்க்கும் மற்ற நல்ல குணத்தை எல்லாம் அடக்கிவிடும்.

1.ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்…! என்ற நிலைகளில்
2.இந்தக் கார உணர்வுகள் அதற்குள் ஒடுக்கி விடுகின்றது
3.நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

நல்ல மனத்தை உருவாக்காத நிலையினைக் கொண்டு வரப்படும் பொழுது மனிதனுக்கு “இரத்தக் கொதிப்பாக” வருகிறது.

எத்தகைய சூழ்நிலையிலும் நாம் வேதனையை வளர்த்து விடக் கூடாது

எத்தகைய சூழ்நிலையிலும் நாம் வேதனையை வளர்த்து விடக் கூடாது

 

இன்று பெரும்பகுதியானவர்கள் குடும்பத்திலே சிறு சிறு சிக்கல்கள் ஏற்பட்டு அதனால் இனம் புரியாத வேதனைகள் பட்டு அடிக்கடி வேதனைகளையே படுவார்கள் என்றால் “என்ன நடக்கிறது…?”

கர்ப்பமான பெண் அந்த வீட்டிலே இருந்தால் அதனின் கருவிலே விளையும் அந்த சிசுவிற்குள் மேலே சொன்ன வேதனை என்ற நஞ்சுகள் விளைந்து விடுகிறது.

பாவிகள்…! ஏனக்கு இப்படி எல்லாம் தொல்லைகள் செய்தார்களே என்று மற்றவர்களை அந்தத் தாய் எண்ணினால் தாய்க்குக் கை கால் குடைச்சல் எரிச்சல் வாத நோய் இரத்த கொதிப்பு எல்லாம் வருகிறது.

1.ஆனால் கருவிலே விளையக்கூடிய குழந்தைக்கு வேதனை விளைந்து
2.அது பிறந்த பின் எடுத்துக் கொண்டால் அதனுடைய பருவம் வரப்படும் போது
3.ஒரு விஷ வித்து எவ்வாறு வளர்ந்து முழுமை அடைகின்றதோ இதைப்போல
4.அந்தச் சிறு குழந்தைக்குக் கூட “இரத்தக் கேன்சர்” என்று வருகின்றது.

தன் வாழ்க்கைச் சூழ்நிலையில் அந்த வேதனையான நிலைகளை எடுத்து வேதனையையே பார்த்து அது தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானாலும் தாயின் கருவிலே விளையும் குழந்தைக்கோ இரத்தக் கேன்சராக மாறுகின்றது சில காலங்களில் அணுக்களின் செல்களில் இந்த உணர்வின் தன்மை அதிகமானால் கேன்சர் ஆகிவிடுகிறது.

இன்று பெரும்பகுதியான நிலைகள் எடுத்துக் கொண்டால் கேன்சர் நோய் அதிகமாக வருகின்றது
1.எங்கே திரும்பினாலும் எத்திசையில் திரும்பினாலும் நாம் காணும் பக்கம் எல்லாம் வேதனை வேதனை என்றே நேருகின்றது.
2.ஆனால் மனிதன் கரு இல்லாத பொழுது அது உடலில் நோயாக மாறுகின்றது.

வேதனைகளை அதிகமாக எடுக்கப்படும் பொழுது… அந்த விஷத்தின் தன்மை…
1.இயல்பாக இருக்கும் நரம்புகளில் இயக்கப்படுமே என்றால் விஷத்தன்மைகள் பாய்ந்து
2.நரம்புகளில் இருக்கும் ஆசிட் என்ற பவரை உறிஞ்சி விடும் நிலை வருகின்றது.

இன்று நாம் மனிதனாக இருக்கப்படும் பொழுது உடலிலே திடீரென்று “இரத்தத்தைக் காணோம்” என்று சொல்வார்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கும் ;பொழுது…!

காரணம்…
1.சில எதிர்மறையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்திலே எடுத்துக் கொண்டால்
2.பாலிலே உப்பு பட்டால் எவ்வாறு பிருத்து விடுகின்றதோ இதைப் போன்று
3.இரத்தத்திற்குள் சில உணர்வின் தன்மை மாறுபட்டால் கெட்டியாக இருக்கும் இரத்தம் நீராக மாறிவிடும்… சிறுநீராகப் பிரிந்துவிடும்.

மனித வாழ்க்கையில் தன்னை அறியாது எத்தனையோ நிலைகள் மாறி “சாகாக்கலையாக” இப்படி எல்லாம் வந்து கொண்டிருக்கின்றது

ஆனால் வேகாநிலை பெற்றவன் அகஸ்தியன். தாயின் கருவிலே ஆற்றல்மிக்க சக்திகளைப் பூர்வ புண்ணியமாகப் பெற்று அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையால்
1.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை வென்றிடும் அந்த நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்று
2.எதனையுமே ஒளியாக மாற்றிக் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வருகின்றான்… அவனுருடைய சந்தர்ப்பம்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் மேலே சொன்ன கொடுமையான நோய்களிலிருந்து தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

பிறருடைய வேதனையான எண்ணங்களைப் பதிவு செய்து கொண்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் கவரப்பட்டு எப்படி உடலில் நோயாக மாறுகின்றதோ இதைப் போல
1.தீமைகள் அகற்றி விண்ணுலகம் சென்ற அகஸ்தியனின் உணர்வை
2.நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆகவே… அகஸ்தியனுடைய பேராற்றலை நமக்குள் வளர்த்துக் கொள்வோம். நோய் நெகெகும் சக்தி பெற்று உடல் நலத்துடன் வாழ்வோம் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

“மகரிஷிகள் உணர்வு கொண்டு தான்” எதையுமே நல்லதாக மாற்றி அமைக்க முடியும்

“மகரிஷிகள் உணர்வு கொண்டு தான்” எதையுமே நல்லதாக மாற்றி அமைக்க முடியும்

 

இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை உணர்வுகள் உடலுக்குள் மிகவும் அதிகமானால் இடுப்பு வலிக்கின்றது மேல் வலிக்கின்றது கால் வலிக்கின்றது என்று வந்து விடுகிறது. வேதனையைத் தவிர வேறு நல்லதைச் சுவாசிக்கின்றோமா…?

நம் உடலில் உள்ள மற்ற அணுக்களிலும் வேதனையைச் சேர்த்து விடுகின்றோம். நல்ல உறுப்புகளாக உருவாகி… நஞ்சினை மலமாக மாற்றும் திறன் பெற்று இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு உடல் உறுப்புகளைப் பாழாக்குகின்றோம்.

1.தீமையை மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.வேதனை என்ற உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் இணைந்து சிறுகச் சிறுக அவைகளை மாற்றத் தொடங்குகிறது.

இரத்தம் கல்லீரலுக்கு வந்தால் அதை வடிகட்டும் திறனும் நுரையீரல் மற்றதை வடிகட்டும் திறனும் எல்லாமே சுத்திகரித்து வரப்படும் பொழுது அது சரியாக இயங்கவில்லை என்றால் விஷம் என்ற உணர்வு சென்று அதற்குள் இணைந்து விடுகின்றது.
1.விஷம் ஆகிவிட்டால் நுரையீரல் சரியாக வேலை செய்யாது
2.கல்லீரலுக்குச் சென்றால் வீக்கமாகி விடுகின்றது வடிகட்டும் தன்மை இல்லை.
3.மண்ணீரலுக்குச் சென்றால் இதே மாதிரி ஆகிவிடுகின்றது
4.இதை எல்லாம் கடந்து வரப்படும் பொழுது நுரையீரல் இரத்தத்தை இழுக்கும் திறன் இழந்து “வெறும் காற்று” தான் வருகிறது.

கல்லீரல் தான் இரத்தத்தை வடிகட்டிக் கொடுப்பது அதனுடைய திறன் இழந்துவிட்டால் நுரையீரல் இழுக்கும் பொழுது வெறும் கேஸ் (GAS) தான் செல்லும். அப்போது…
1.நெஞ்சு எப்படியோ எரிகின்றது மூச்சுத் திணறல் ஆகின்றது
2.கல்லீரல் வீங்கி விட்டால் அடுத்து நடந்தால் போதும் மூச்சுத் திணறல் ஆகும்
3.காரணம் அதற்குண்டான இரத்தம் இல்லை.
4.பெட்ரோல் இல்லை என்றால் ஒரு இன்ஜின் லோடை (LOAD) இழுத்து ஓடுமா…?

நுரையீரல் இழுத்து இரத்தத்தை உடல் முழுவதும் சப்ளை செய்து வடிகட்டி சுத்திகரித்து இருதயத்திற்குச் சென்று எல்லாவற்றுக்கும் ஆசிடாக மாற்றி எது எது உணர்வோ அவைகளுக்கு இயக்கச் சக்திக்குக் கொடுக்கும். அது தான் நம் உறுப்புகளின் இயக்கம்.

மருத்துவர்களும் இன்று எத்தனையோ கண்டுபிடிக்கின்றார்கள் சொல்கின்றார்கள்… ஆனால் அவர்களும் ஓரளவுக்கு மேல் தெரிவதில்லை
1.கடவுளைத்தான் நான் வணங்குகிறேன்… அவன் பேரைச் சொல்லி தான் நான் மருத்துவம் செய்கிறேன்
2.விதி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்பார்கள்
3.பழக்கப்பட்ட முறையைத்தான் சொல்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய உணர்வை நாம் பின்பற்றவில்லை.

மருத்துவர்களும் முயற்சி எடுக்கின்றார்கள். இருந்தாலும் விஞ்ஞான அறிவு கொண்டு என்னதான் உடலுக்குள் எலும்பை மாற்றினாலும் உறுப்புகளை மாற்றினாலும் எத்தனை காலம் நாம் நன்றாக வாழ முடிகின்றது…?

முதலிலே நன்றாக இருந்தது இப்பொழுது வலுவான பொருள்களைத் தூக்குவதற்குக் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. அப்போது அங்கே வேதனை வருகின்றது.

இருதயத்தை மாற்றி வைத்திருப்பார்கள் மருத்துவர் சூதானமாக இருக்க வேண்டும் என்பார் ஏதாவது பார்த்தால் சாப்பிட முடிவதில்லை அதற்கு ஒரு மருந்து.

மற்ற மனிதர்களுடைய கிட்னியை எடுத்து மாற்றம் செய்தவர்கள் அது சீராக இயங்குவதற்கு ஒரு மருந்தை கொடுத்துச் சமப்படுத்துவார்கள். மாற்றுவார்கள் ஒரு நாளைக்கு மருந்து கொடுக்கவில்லை என்றால் மரணம் ஆகிவிடும்.

சம்பாதித்த காசை வைத்துச் சிறிது நாட்கள் கூட வாழலாம். பின் சாப்பிட்ட மருந்தின் விஷங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து…
நான் எப்படி எல்லாம் இருந்தேன் கடைசியில் என்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று
2.விஷத்தின் உணர்வு கொண்டு உயிர் வெளியே சென்றால் விஷத்தைச் சேமித்த உணர்வு கொண்டு பாம்பினத்திற்குள் அடுத்து செல்கின்றது.

கோபம் குரோதம் என்ற நிலையில் அடுத்தவரை வேதனைப்படுத்தி அதை ரசித்து வாழ்ந்தால் அடுத்துப் புலியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல வேண்டி வரும். மற்றொன்றைக் கொன்று சாப்பிடும் நிலை தான் வரும்.

இவையெல்லாம் இயற்கையின் சில நியதிகள்…!

இது போன்ற கொடுமைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான்
1.உங்களுக்குத் தொடர்ந்து ஞானிகள் உணர்வை உபதேச வாயிலாகக் கொடுத்து
2.விஷத்தன்மையான உணர்வுகள் உடலுக்குள் சேராத வண்ணம் மாற்றி அமைக்கும் பயிற்சியாக
3.தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் உனர்வுகளைப் பெறும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.

கொடிய நஞ்சினையும் கொடிய நோயையும் ஒடுங்கச் செய்யும் துருவனின் அருள் ஆற்றல்கள் – ஒரு பயிற்சி

கொடிய நஞ்சினையும் கொடிய நோயையும் ஒடுங்கச் செய்யும் துருவனின் அருள் ஆற்றல்கள் – ஒரு பயிற்சி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று
1.சர்வ நோய்களும் நீக்கிடும் அருள் ஒளி எங்களுக்குள் பெருகி இருளை அகற்றி
2.எங்கள் பேச்சு மூச்சும் சர்வ நோய்களை நீக்கிடும் அருள் சக்தி பெற்று
3.அனைவரையும் ஆனந்தப்படச் செய்யும் அருள் ஒளி எங்களுக்குள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

வேதனையான உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்தால் கண்களில் படும் போது கண் ஒளி மங்கும். உற்றுப் பார்த்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து வரப்படும் போது கிட்னி அந்த விஷத்தின் தன்மையால் பாதிக்கப்படுகின்றது.

விஷம் கலந்த அந்த இரத்தம் இருதய வாயில் செல்லும் பொழுது அங்கே அடைப்புகள் போன்ற துன்பங்களை ஏற்படுத்தும். அந்த விஷம் கலந்த இரத்தம் நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் படரப்படும் போது இந்த விஷத்தின் தன்மையால் அதனை இயக்கும் நல்ல உணர்வுகள் நல்ல அணுக்கள் மடிகின்றது. பின் அதிலே கடும் நோயாக உருவாகும்.

இதைப் போன்ற ஏற்படும் தீமைகளிலிருந்து மீள…
1.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடலில் எங்கே நோவு காணுகின்றதோ
2.“அந்தப் பகுதிக்கு”
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று உணர்ச்சிகளை
4.”அங்கே” உந்தச் செய்யுங்கள்… அருள் உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.
5.நஞ்சு கொண்ட அந்த உணர்வின் தன்மையை ஒடுங்கச் செய்யுங்கள்.

அருள் மகரிஷிகளின் உணர்வை உங்கள் உடலில் பரவச் செய்து… தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யுங்கள்.

துருவன் காட்டிற்குள் செல்லும் பொழுது “அவனைக் கண்டு” மற்ற கொடூர உணர்வுகளும் மிருகங்களும் விஷம் கொண்ட விஷ ஜெந்துக்களும்
1.அதனுடைய விஷத்தை முறித்து எப்படிப் பதும்பி இருந்ததோ இதைப்போல
2.அந்தத் துருவனின் உணர்வுகளை துருவ மகரிஷியான உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.”அகஸ்தியன்… துருவன்… துருவ நட்சத்திரம்…” என்ற இந்த மூன்றையும் உங்கள் உணர்வுக்குள் கலக்கச் செய்து
4.உங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்யுங்கள்.

அப்போது…
1.ஒடுங்கும் தன்மை கொண்டு “உங்களிடம் அடங்கி”
2.உங்களில் மன மகிழ்ச்சியை ஓங்கச் செய்யும்
3.அருள் ஒளியின் உணர்வின் தன்மை பெறச் செய்யும்… அருளானந்தம் பெறச் செய்யும்.

ஆகவே… அருள் ஞானத்தை வளர்த்திடும் அந்த அருள் ஞானத்தைப் பெற அகஸ்தியனுடைய உணர்வுகளையும் துருவனின் உணர்வுகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தில்
1.எங்கே வலி என்ற உணர்ச்சிகளை உந்துகின்றதோ
2.”அவ்விடத்தில்” அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.

அந்த வலியைத் தணியச் செய்யுங்கள் இருளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

சந்தர்ப்பத்தால் உங்களை அறியாது எண்ணத்தால் நுகர்ந்த உணர்வுகள்… நஞ்சின் உணர்வு கொண்டு… உடலுக்குள் தேங்கியிருக்கும் இடத்தில் வேதனையக் கொடுக்கும்.

அதே எண்ணத்தால்… உங்கள் உடலில் எங்கே நோவு வருகின்றதோ அந்த இடத்திலே அகஸ்தியன் துருவன் துருவ நட்சத்திரம் என்ற இந்த மூன்று உணர்வுகளையும் உங்கள் நினவாற்றல் கொண்டு பாய்ச்சுங்கள்.

அதனுடைய வீரியத்தைத் தணித்துப் பழகுங்கள்…! அருள் ஒளியைப் பெருக்குங்கள். இப்போது உங்கள் உடலில் அருள் ஒளி படர்ந்து
1.உடலில் எத்தகைய பிணி இருக்கின்றதோ அது ஒடுங்கும்…
2.ஒடுங்கும் உணர்ச்சிகளை நீங்கள் உணரலாம்… அதை ஒடுக்கச் செய்யுங்கள்

அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்து அதை ஒடுங்கச் செய்யுங்கள். உங்களால் முடியும்…!

நோய் நீக்கும் தாவர இனங்கள் காடுகளில் எப்படி உருவாகிறது…?

நோய் நீக்கும் தாவர இனங்கள் காடுகளில் எப்படி உருவாகிறது…?

 

காட்டிற்குள் “அட்டை” என்று சொல்வார்கள். மனிதன் இறந்திருந்தால் மனித உடலில் இருந்து அந்த அணுக்கள் பெற்றிருந்தால் மனிதன் சும்மா நடந்து சென்றாலே போதும்.

அந்த மணத்தின் தன்மை கொண்டு வில்லைப் போல பாய்ந்து மனித உடலில் அந்த அட்டைகள் ஒட்டிக் கொள்ளும். ஆனால் ஒட்டுவது நமக்குத் தெரிவதில்லை.

இரத்தத்தை உறிஞ்சும். அது எவ்வளவு உறிய முடியுமோ அதற்குப் பின் கீழே விழுந்து விடும்… நமக்குத் தெரியாது.
1.மனிதன் மடிந்த பின் இறந்த உடலிலிருந்து அந்த அணுக்களின் தன்மை அடைந்த பின்
2.மனிதனுக்குள்ளேயே இந்த இரத்தத்தைக் குடித்துச் செயல்படும் தன்மை வருகின்றது.

அட்டைகள் மடிந்த பின் இதே உணர்வின் தன்மை மற்ற தாவர இனங்களுக்குள் கலக்கப்பட்டு புதிதாக உருபெற்றால் அதை உணவாக உட்கொண்டால் ஒரு இரத்தத்திற்குள் சென்றால் இரத்தத்தை உருமாற்றும் நிலையாக அடைகின்றது “அந்தத் தாவர இனங்களுக்கு…”

காட்டிற்குள் குருநாதர் எம்மை அழைத்துச் செல்லப்படும் பொழுது
1.அங்கே உருவாகும் அணுக்களும் அது மடிந்த பின் மற்ற தாவர இனங்களுக்குச் செல்வதும்
2.அவைகள் மனிதனுக்கு நல்ல நிலைகளை உருவாக்கும் நிலையும் காட்டுகின்றார்.

அதாவது மனிதன் மடிந்த பின் அந்த மனித உடலிலிருந்த அணுக்கள் வெளிப்பட்டு… தாவர இனத்தை அது உணவாக உட்கொண்டு அது மடிந்து அதன் உணர்வுகளில் வரப்படும் பொழுது அந்தத் தாவரங்கள் மனித உடலுக்குள் ஆனபின்
1.அப்படின் உருவான அந்த தாவர இனத்தை உணவாக உட்கொண்டால்
2.மனிதனுக்குள் இருக்கும் சர்க்கரை நோயை முறிக்கும் தன்மை வருகின்றது
3.இரத்தக் கொதிப்பையும் முறிக்கும் தன்மை வருகின்றது.

ஒவ்வொரு நிலைகளிலும் மனிதனுக்குள் விளைந்து உணவாக உட்கொண்டு அணுவின் தன்மை அடைந்த பின் மீண்டும் அது படர்ந்த பின் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு “அது மடிந்தால்”
1.அதனின் உரங்கள் மற்ற தாவர இனங்களில் சேர்க்கப்பட்டு
2.அது உயர்ந்த மருத்துவ குணம் கொண்ட (மருந்து) தாவர இனங்களாக விளைகின்றது.

காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது இத்தனை வித்தியாசங்களையும்… இயற்கையின் நிலைகள் மனிதனான பின் உணர்வு மற்றதுடன் சேர்ந்து “அது எந்தெந்த நிலைகள் அடைகிறது…?” என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு சமயம் என்னை ஒரு பக்கம் உட்காரும்படி சொன்னார். அவர் வேறு ஒரு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். உட்கார்ந்த பின் அந்தத் தரையில் இனம் புரியாத “ஒரு ஈர்ப்பு” வருகின்றது.

காரணம்…
1.மண்ணிற்குள் மறைந்த அந்தத் தாவர இன வித்துகள்
2.மனிதனின் உடல் பட்ட பின் அந்த உணர்வை நுகர்ந்து அது செடியாக வளரத் தொடங்குகிறது.
3.அரிப்பின் தன்மை வரப்படும் பொழுது ஈர்ப்புடன் ஏங்கி வருகின்றது.

இப்படிப் பல நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

தொட்டால் வாடி என்றும் தொட்டால் சிணுங்கி என்றும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது சில செடிகளைத் தொட்டால் அதிலிருந்து கண்ணீர் (நீர்) வடியும். சில செடிகளைத் தொட்டவுடன் அப்படியே சுருங்கி… வாடிவிடும். மனிதனின் உணர்வின் நிலை பெற்று உருவான செடிகள் தான் அவைகள்.

மனிதன் இறந்த பின் அவன் உடலில் இருந்து எந்தெந்த குணங்கள் பெற்றுச் சென்றானோ… அதாவது சோர்வடைந்து இருப்பான் பல விஷத்தன்மை கொண்டு…!
1.இது போன்ற உணர்வுகள் செடிகளில் சேர்க்கப்பட்ட பின்
2.மனிதனுக்குண்டான ஜீவனைப் போல அது வாடுகின்றது… சிணுங்குகிறது.

சிலருக்கு மூட்டு வாதங்கள் இருக்கும். இரத்தத்தில் உப்புத் தன்மைகள் அடைந்து உறையும் தன்மையாக வரும்… சீழாகவும் மாற்றும். அதனால் அத்தகைய நோய் உருவாகும்.

மிளகையும் தொட்டால் வாடி என்ற செடியையும் பதப்படுத்தி அரைத்து மூட்டு வாதம் உள்ள இட்த்தில் சேர்த்தால்
1.அந்தக் கார உணர்ச்சிகள் ஊடுருவிச் செல்லும் பொழுது
2.மூட்டு வாதத்திற்கு உண்டான அணுக்களை வாடச் செய்யும் வாத்த்தை அகற்றிவிடும்.

இயற்கையின் நிலைகளில் மனிதனுக்குகந்த சில நிலைகள் எப்படி வருகின்றது…? என்று காட்டிற்குள் அழைத்துச் சென்று குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள் தான் மேலே சொன்ன தாவர இனங்கள் அனைத்தும்.

அன்றைய பச்சிலை வைத்திய முறைகள்

அன்றைய பச்சிலை வைத்திய முறைகள்

 

குருநாதர் காடு மேடல்லாம் அழைத்துச் சென்று மலைப்பகுதிகளில் எப்படி எல்லாம் தாவர இனங்கள் உருவாகின்றது என்பதனை எனக்குக் (ஞானகுரு) காட்டுகின்றார்.

சரியான உணவு எல்லாம் கிடையாது… அவருடன் சென்று கொண்டே இருக்க வேண்டும்… அவர் காண்பிக்கும் நிலை எல்லாம் அறிந்து கொண்டு அதனுடைய செயலாக்கங்களை பார்த்துக் கொண்டே வர வேண்டும். மலைப்பாங்குகளில் ஆரம்ப காலத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பிக்கின்றார்.

ஏனென்றால் அங்கே மற்ற மிருகங்களோ மற்ற உயிரினங்களும் மடிந்தால் யாரும் புதைப்பதும் இல்லை… அப்படி அப்படியே தான் கிடக்கின்றது.
1.அந்த இறந்த உடலின் சத்துக்கள் தாவர இனங்களுடன் கலக்கப்பட்டு சில தாவரங்களுக்கு அது வீரிய சக்தியாகின்றது.
2.அந்த தாவர இனங்களுடன் சில உணவுர்கள் கலந்த பின் அது ஒரு புது வித்தாக மாறுகின்றது.

மறதிப் பூடு என்று ஒரு செடி உண்டு. அந்தச் செடியை வீட்டில் வளர்த்தால் அதில் மிதித்து விட்டால் உங்களுக்கு நினைவே இருக்காது.

மலைப் பகுதிகளில் வாழும் புலையர்கள் இதைத் தோண்டி எடுத்து சில மந்திர வேலைகளுக்குப் பயன்படுத்துவார்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வும் மனிதன் மடிந்து இருந்தால் அத்தகைய செடிகளில் இந்த உணர்வின் நிலைகளும் வரும்.

1.அந்தக் காலங்களில் மலைப்பகுதிகளில் எப்படி எல்லாம் தாவர இனங்கள் உருமாறியது…?
2.மனிதனோ உயிரினங்களோ மடிந்த பின் தசைகள் மண்ணுடன் கலக்கப்படும்போது அதனுடைய இன சேர்க்கை தாவர இனங்களிலே எப்படி வருகின்றது…?
3.அதற்கு வீரியத்தன்மை எப்படி வந்தது…? என்று காட்டினார் குரு.

அதை எடுத்து மருந்தாகப் பயன்படுத்தினால் மனித உடலில் வந்த தீமைகளைப் போக்கக்கூடிய சக்தியும் அத்தகைய தாவரங்களுக்கு உண்டு.

அதாவது மனிதன் மடியப்பட்டு…
1.அந்த மடிந்த நிலையில் கொண்டு அதன் உணர்வு தாவர இனத்தில் சேர்க்கப்பட்டிருந்தால்
2.அந்த்த் தாவர இனங்களில் இருந்து மணங்கள் வெளிப்பட்டு
3.இன்னொரு பக்கம் புலியோ அல்லது விஷத்தன்மை கொண்ட செடிகள் பதிந்திருந்து
4.அதிலிருந்து உறிஞ்சப்பட்ட உணர்வுகள் கலந்து வெளிப்படும் காற்றினைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
5.இந்த இரண்டும் மோதலாகி ஒரு வித்தாகி பூமிக்குள் பதிந்து விளைந்தால்
6.அந்தச் செடியில் இருந்து வரக்கூடிய மணத்தை மனிதன் நுகர்ந்தால் அல்லது உடலின் மேல் பாகத்தில் பூசினால்
7.உடலில் கேன்சர் நோய் இருந்தாலும் அந்த விஷத்தை இந்தச் செடி கரைத்து விடுகின்றது.

அன்று மனிதனுக்கு வந்த புற்று நோயை நீக்க இதைப் பயன்படுத்தினார்கள்.

இன்று மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்கின்றார்கள் அல்லவா/ சில தாவர இனங்களின் அந்த பச்சிலையை மேலே பூசி விட்டால் அறுவை சிகிச்சை செய்தாலும் அந்த உணர்ச்சிகள் இவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை.

1.அன்று கண்ணுக்கு முன்னாடியே இப்படி அறுவை சிகிச்சை செய்வார்கள்… அறுத்த பாகங்களை இணைப்பதற்காக ஒரு பச்சிலை உண்டு.
2.இரண்டையும் சேர்த்து இணைத்து விட்டால் தசைகள் ஒட்டிக் கொள்ளும்.
3.உடலுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை எடுத்த பின் அந்தப் பச்சிலைகளை இணைத்தால் இரண்டு தசைகளும் ஒட்டிக் கொள்கின்றது.

அக்காலங்களில் மலைப் பகுதியில் உள்ள புலையர்கள் என்று சொல்பவர்கள் இதைப் பயன்படுத்தி வந்தார்கள்… இன்றும் உண்டு.
1.அன்று இருந்த நிலைகள் காலத்தால் அந்தச் சக்தி இல்லை.
2.இருந்தாலும் அந்தத் தாவர இனங்கள் பூராம் மடிந்து விட்டது.

இதை வைத்துச் சில உணர்வுகளைச் சொல்லால் சொல்லப்பட்டு அந்த உணர்வை ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் அந்த உணர்வைத் தனக்குள் கவர்ந்து சில நிலைகளைப் புதிதாக அன்று உருவாக்கினார்கள்.
1.சிலவற்றை மறைத்தே சொல்ல வேண்டி இருக்கின்றது…
2.சும்மா தொட்டுத் தான் காட்டுகின்றேன்.

காரணம் இதைத் தெரிந்து கொண்ட பின் பலர் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு நாம் போக வேண்டியது இல்லை. குருநாதர் அழைத்துச் சென்று எமக்குக் காட்டியதை உங்களுக்குள் இப்போது பதிவு செய்கின்றேன்.

இப்படித்தான் மலைப்பகுதிகளில் பல பல தாவரங்கள் உருமாறியது. அத்தையை தாவர இனங்கள் இன்று இல்லை. விழுதுடன் பறித்து அதனின் இன விருத்தியே மடியச் செய்து விட்டார்கள்.

அன்று ராஜ வைத்தியம் செய்வதற்காக்க் காட்டு விலங்குகளில் சில எடுத்துக் கொண்டு அதனுடன் இணை சேர்த்து சில தாவரங்களை அன்று உருவாக்கினார்கள் அரசர்கள்.

அந்தத் தாவரங்களை வைத்து அரசர்களுக்கு ராஜ வைத்தியம் செய்வதும் அறுவை சிகிச்சை செய்ததும் இன்று விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் அன்று தாவரங்களின் உணர்வை அறிந்து அப்படிச் செயல்படுத்தினார்கள். சில பகுதிகளில் இது உண்டு

அவர்கள் எடுத்துக் கொண்ட ஒலி பாஷை ஒன்றுடன் ஒன்று மோதிய உணர்வுகளும்… ஒரு செடிக்குள் ஓதி அந்த உணர்வுகளை மோதி மோதி அந்த சொல்களை ரெக்கார்ட் செய்வார்கள். அதாவது…
1.காட்டுவாசிகள் செடியை வளர்ப்பதற்காக தனக்குள் அதைக் கொண்டு வருவதற்காக
2.செடிக்குள் மனிதனின் சொல்களைச் சொல்லிச் சொல்லிப் பதிவு செய்வார்கள்.

அது பதிவாகி வளர்ந்த பின் பல பல மருந்து வேலைகளுக்கு ஆகின்றது அக்காலங்களில் இன்னொரு பச்சிலையும் வாய்க்குள் வைத்து அதை மென்று அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒலியை எழுப்பி இன்னொரு செடிக்குள் பதியச் செய்வான்.

இன்று விஞ்ஞான அறிவியல் எப்படிப் புதுப் புது தாவரங்களை உருவாக்குகின்றார்களோ அக்காலங்களில் இப்படிச் செயல்படுத்தினார்கள்.

ஏனென்றால் குருநாதர் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டியதை உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…!

நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…!

 

உண்ணும் உணவில் வருவதல்ல உடலின் ஆரோக்கிய நிலை. எல்லாமே மனநிலையில் இருந்து வருவது தான்.
1.கழிவுப் பொருளை வைத்து வேலை செய்பவனுக்கு… அவன் உடம்பு “ஆரோக்கியமாக இருந்திடப் பார்த்திருப்பாய்…”
2.ஆனால் பரிபக்குவமான உணவை உண்பவனுக்கோ ஆயிரம் வியாதிகள் அவனுக்குள்ளே கலந்திருக்குமப்பா.

நல்லதை மறந்துவிட்டுப் பல நினைவுகள் அவனுள்ளே சுற்றிக் கொண்டிருப்பதனால் நெஞ்செல்லாம் வேதனை வளர விட்டு இருப்பவன் சுவாச நிலையில் எல்லாமே அண்டிக் கொள்கின்றது.

கழிவு பொருளைக் கையில் எடுப்பவன்
1.அவனைச் சுற்றி இருக்கும் அழுக்கைப் பற்றி எண்ணாதபடி தான் வேலை செய்ததற்குண்டான கூலி பெறுவதையே எண்ணி
2.அந்த நிலையிலேயே உணவை உட்கொள்கின்றான்… தீமையான அந்தப் பொருளைப் பற்றி அவன் எண்ணுவதில்லை.
3.அவனுடைய சம்பாத்தியத்தில் அவன் நினைவு மாறாமல் இருப்பதால் அந்தத் தீது அவனைப் பாதிப்பதில்லை.
4.அவனுடைய எண்ணம் தான் அவனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

மனிதன் எண்ணி எடுக்கும் எண்ணங்களுக்குண்டான பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டாய் அல்லவா..! எண்ணத்தை உயர்த்தி விட்டால் நல் வாழ்க்கை வாழ்ந்திடலாம்.

ஆகவே அவனவன் சுவாச நிலையில் உள்ளது தான் வாழ்க்கை நிலையும் எண்ணமும் எல்லாம்.

சுவாச நிலைக்கும் எண்ணத்திற்கும் பாடங்கள் பல நாள் பகர்ந்து விட்டேன் இனியும் உன் நிலையை ஒரு நிலைப்படுத்திடப் பார்த்திடப்பா.

தியான நிலை… சுவாச நிலை மன நிலைகளைப் பொறுத்தே உள்ளது எந்த நிலை வந்தாலும் மன நிலையை சந்தோஷமாகவே வைத்துக் கொள்.
1.அது எப்படி வரும் அந்நிலை…? என்று கேட்பாய்.
2.கலக்கம் வரும் பொழுது நானாகவா அதைச் செய்து கொண்டேன்…! அதற்கு என்ன செய்வது…? என்று கேட்டிடுவாய்.

கதையில் படித்திருப்பாய் ஊரெல்லாம் பற்றி எரிந்தாலும் பிடில் வாசித்தான் ஒரு மன்னன் என்று.

எரியும் ஊர் எரிந்து விட்டது அதனுடன் அழுது அவன் என்ன செய்திடுவான்…?
1.மனநிலை ஒரு நிலையில் இருந்திட்டால் ஊர் எரிவதும் தெரியாது.
2.உலகளவு துவேஷம் வந்தாலும் தாங்கிடுமப்பா அந்த மனநிலை.

வரும் துவேஷத்தை எண்ணிக் கொண்டிருந்தால் எதிர் துவேஷம்தான் எழும்பி நிற்கும். துவேஷிப்பவனை துவேஷத்தன்மையில் துவேஷிப்பது அல்ல அந்நிலை என்று முதலிலேயே பகர்ந்துள்ளேன்.

நாரதரின் கதையையும் புகட்டி உள்ளேன்..! உன் மனநிலையை மாற்றிடாமல் துவேஷிக்கும் தன்மையை ஏற்றிடாமல் தியான நிலையில் ஒரு நிலைப்படுத்திடப்பா உன் மன நிலையை.
1.அந்நிலையில் உதித்திடும் பல உதயங்கள் உனக்குள்ளே.
2.நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…! புரிகிறதா…!

பெரும் குடிகாரனின் எண்ணமெல்லாம் குடியிலும்… அதை அடைவதற்கான வழியிலும் வந்து கொண்டே இருக்கும். அவ்வெண்ணத்தின் வழியிலே அவனுக்குள் இருக்கும் ஈசனின் சக்தியையே அவனுள்ளேயே அவ்வெண்ணத்திலேயே கொண்டு செல்கின்றான்… அவன் நினைப்பதும் நடக்கின்றது.

அதே வழியில் தான் பெரும் திருடனும் நடக்கின்றான். திருடனின் எண்ணமெல்லாம் எந்நிலையில் பொருளைக் களவாடலாம்…? என்றே எண்ணுகின்றான். அவனுள் இருக்கும் ஈசனும் அவன் வழிக்கே வருகின்றான். ஒவ்வொருவரின் தொழிலிலும் இதே முறைதான்.

1.எல்லோரிடத்திலும் உயிரிலும் கலந்திருக்கின்றான். அவ்வீசன்.
2.அவனவன் எண்ணத்திற்கு அவனவன் வழி செல்கின்றான்…
3.நல்லவனுக்கும் வழி செல்கின்றான் தீயவனுக்கும் வழி செல்கின்றான்.

ஈசன் என்பவர் யார் என்கிறாய்…?

ஈசன் என்பவன் கல்லும் மண்ணும் அல்ல. காலமுடன் கலந்துள்ளான்… காற்றிலும் ஒளியிலும் கலந்துள்ளான். எண்ணும் எண்ணத்தில் கலந்திடுவான் அவ்வீசன்.

1.ஜெப நிலையை எண்ணுபவனுக்கும் ஜெபத்துடன் கலந்திடுவான்.
2.உலகமெல்லாம் சுற்றியுள்ளான்… எடுக்கும் பிறப்பை முடிக்கும் வரை எல்லா எண்ணத்திலும் எல்லா உயிரிலும் கலந்திருப்பான் ஈசன்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதன் பொருள் இதுவே…!

ஜெப நிலையில் பாடம் புரிந்து கொண்டு எடுத்த பயனை நல்வழியில் முடித்துக் கொண்டு பிறகு ஏழு ஜென்மங்களின் பாடம் பற்றி முதலிலேயே சொல்லி உள்ளேன்.

அந்நிலையைப் புரிந்து கொண்டு வாழ்க்கை முறையைப் பயனுள்ளதாக்கி நல்லெண்ணம் எண்ணிக் கொண்டு சுவாச நிலையை மாற்றிடாமல் வடிகட்டி வருபவன் தான் பெருநிலை அடைகின்றான்.
1.இவ்வுலக வாழ்க்கையின் கலியின் கடைசிக் காலம் இது.
2.மனித ஜீவனின் கடைசிக் காலமப்பா இது.
3.இப்பயனைப் புரிந்து கொண்டு நடந்திட வேண்டுமப்பா.

இருந்தென்ன பயன்…? இருக்கும் வரை சம்பாதிக்கலாம்…! நம் இஷ்டத்திற்கு வாழாத வாழ்க்கை நமக்கு எதற்கு…? என்ற வாதங்கள் தான் பலர் மனதில் உள்ளது.

பல ஆண்டுகளாகச் சம்பாதித்து பல நிலையில் இருப்பவர்களுக்கும் ஒரு குண்டைப் போட்டு விட்டால் உலகமே அழிந்திடும் தன்மையில் உள்ளதப்பா.

இருக்கும் வரை சந்தோஷமாக இருங்கள்…
1.நல் சுவாசத்தை எடுங்கள்… நல் உணர்வுடன் இருங்கள்…
2.அணுவென்ன…? அணுகுண்டென்ன…? உலக நிலை மாறினாலும்
3.உன் நிலையை ஒரு நிலைப்படுத்தினால் வந்துவிடலாம் “போகரின் நிலைக்கே…”

பாடங்கள் பகிர்ந்திட்டால் பல கோடி பகர்ந்திடலாம். உலகத்தன்மையில் இருளடையும் தன்மை தான் இனி சில காலத்திற்குள் நடந்திடுமப்பா. ஒளி என்பதும் இல்லை பெரும் காற்றும் இல்லை ஒளியும் காற்றும் இல்லாவிட்டால் நீரும் இல்லை. உலக ஜீவராசிகளும் இல்லை. இந்நிலை வருவதற்கே கலியுகம் என்ற கடைசிக் காலத்தை குறிக்கிறார்கள்.

ஒரு நிலைப்படுத்திடப்பா உன் நிலையை…! புரிகிறதா…?

நோய் நீக்கும் மருந்து

நோய் நீக்கும் மருந்து

 

நோய்வாய்ப்பட்டவர்கள் அவரவர்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இடுப்பு வலியோ கண் வலியோ பிடரி வலியோ வயிற்று வலியோ இருதய வலியோ சிறுநீரகக் கோளாறோ… இதைப் போன்ற எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் அது எல்லாம் அகல வேண்டும்… வலி குறைய வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்..
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு இப்பொழுது உங்கள் உடல் முழுவதும் படரும்
2.எல்லா உறுப்புகளிலும் அந்த சக்திகள் படரும்
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் உற்சாகமடையும்…
4.அதற்குள் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்க மகரிஷிகள் உணர்வுகள் “மருந்தாக” அமையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்பொழுது…
1.உங்கள் உடலில் ஒரு மின்சாரம் பாய்வது போன்று இந்த உணர்வுகள் ஊடுருவிப் பாய்ந்து…
2.நோய்களை நீக்கும் ஒரு இயக்கச் சக்தியாக வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய சகல நோய்களும் நீங்க வேண்டும் என்று… அவரவர்கள் உடலில் உள்ள நோயை நீங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

“பொதுவான விதிப்படி” எங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அந்தச் சக்திகளைப் பெறுங்கள்.

கை கால் குடைச்சலோ பிடரி வலியோ மூட்டு வாதமோ அந்த வலிகள் நீங்க வேண்டும் என்று ஏங்கி ஒரு ஐந்து நிமிடம் தியானியுங்கள்.

ருவ நட்சத்திரத்தினுடைய உணர்வுகள் உங்கள் உடலில் பரவுவதை உணரலாம் இருதய வலி இருந்தால் அது நீங்குவதையும் ஆஸ்த்மா தொந்தரவு இருந்தால் நுரையீரலில் இருந்து அந்தச் சளிகள் அகல்வதையும் காணலாம்… மூட்டு வலி நீங்குவதையும் உணர முடியும்.

இராமாயணத்தில் காட்டியபடி ஜனக சக்கரவர்த்தி நற்குணங்களை பேணிக் காக்க நீ என்ன செய்ய வேண்டும்…? என்று அங்கே சுயம்வரத்தை (பந்தயத்தை) வைக்கின்றார்.

மற்றவர்கள் அந்த ஆயுதத்தை வைத்து அவரவர் திறமையைக் காட்டுகின்றார்கள்.
1.இராமனோ தீமை செய்யும் (எண்ணங்களை) அந்த ஆயுதத்தை ஒடித்து விடுகிறான்.
2.அதாவது பகைமை இல்லாது தன்னுடன் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்று இராமன் எண்ணுகின்றான்.

வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் அதை எண்ணும் பொழுது பிறரை வேதனைப்படுத்தும் நிலையே வருகின்றது.

அதற்குப் பதிலாக…
1.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தீமை செய்யும் எண்ணங்களை ஒடித்து விட்டு…
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானிகள் உணர்வைப் பாய்ச்சப்படும் போது நாமும் மகிழ்ந்து வாழ முடியும்.

அத்தகைய மகிழ்ச்சி தரும் அந்த உணர்வைத் தான் கல்யாணராமா…! என்று சொல்வது

1.ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் கல்யாணராமன் ஆகின்றோம்…”

பகைமையை உருவாக்கும்… அதனால் உடலில் உருவாகும் நோய்கள் அனைத்தும் அகற்றப்படும்…. நமது நினைவின் ஆற்றல் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.

வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வைப் பற்றற்றதாக மாற்றி… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பற்றுடன் பற்றி… பேரின்பப் பெரு வாழ்வாக அருள் மகரிஷிகளுடன் நாம் இணைந்து வாழ்வோம்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ வேண்டும் என்று நாம் தவமிருப்போம்.

ஒரு அணு என்று இருந்தால் உணர்ச்சியைத் தான் ஊட்டும்… பல அணுக்களாக விளைந்தால் உடலையே அது இயக்கிவிடும்

ஒரு அணு என்று இருந்தால் உணர்ச்சியைத் தான் ஊட்டும்… பல அணுக்களாக விளைந்தால் உடலையே அது இயக்கிவிடும்

 

ஒரு கோபப்படுவோருடைய உணர்வைக் கண்ணுற்று நோக்கி நம் உடலிலேயே பதிவாக்கி மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால் அது நம் உடலுக்குள் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

நமக்குள் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் “அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது. நுகர்ந்த உணர்வு நம் இரத்தநாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக ஒரு நெல்லை வைத்து அதை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல்களை இணைத்துச் சமைத்தால்தான் அது சாதம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்று
1.நாம் நுகர்ந்த அந்தக் கோபமான உணர்வு பல அணுக்களின் தன்மை அடையபபடும் பொழுது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

ஒரு அணுவின் தன்மை என்று இருந்தால் அது மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது இரத்தக் கொதிப்பு என்று வராது..
1.அது உணர்ச்சியை ஊட்டும் உணர்வு என்றுதான் அதற்குப் பெயர் வரும்.
2.மற்றவைகளுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் கம்மியாகவே இருக்கும்.

ஒரு வேதனைப்படுவரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு அதிகரித்தால் அதற்குத் தக்க நோயாக வரும்.

இதை எல்லாம் உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை” என்று காட்டுகின்றார்கள்.

நாம் எந்தெந்தக் குணங்களை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் உள் சென்று அதனின் குணமாக உருவாகின்றது என்பதைத் தான் நந்தீஸ்வரன் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

எக்குணத்தின் தன்மை உணர்வின் தன்மை உருவாக்குகின்றதோ தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.

ஒரு அணுவின் தன்மை பெற்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் இரத்தநாளங்களில் கலந்து இந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொள்ளும்… உடலிலே அணுக்களாக விளையும்.

ஒரு நெல்லை நிலத்தில் ஊன்றினால் எப்படிப் பல நெல்களாக விளைந்து வருகின்றதோ இதைப்போல
1.நமக்குள் பதிவான ஒரு உணர்வின் (வித்தின்) தன்மை அது எதுவோ
2.அதற்குத் தக்கவாறு அந்தப் பல எண்ணங்களுடைய உணர்வுகளாக வருகின்றது
3.அந்த வித்தின் தன்மை விளைகின்றது

இப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சிவன் ஆலயத்தில் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை

யார்..?

சுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். நாம் பார்த்த உணர்வுகள்… நாம் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அதனின் கணக்கு அதிகமாகும் போது அது நந்தீஸ்வரன்.

உடல் சிவம்… சுவாசிப்பது நஸ்தீஸ்வரன்… உடலுக்குள் தொடர்ந்து இது செயல்படும் போது நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை.

காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மைப் பாதிக்காது தடைப்படுத்த வேண்டும்

காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மைப் பாதிக்காது தடைப்படுத்த வேண்டும்

 

விவசாயங்களில்… பூச்சிகளைக் கொல்ல என்று விஞ்ஞான அறிவால் உபயோகப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவர இனங்களில் கலந்து விடுகின்றது… அதே சமயத்தில் இந்தக் காற்றிலும் கலந்து விடுகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் நெல்… கத்திரிக்காயிலிருந்து மற்ற எல்லாக் காய்களிலும் பூச்சி மருந்து அடிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று நாம் உணவாக உட்கொள்ளும் திராட்சைப்பழம் மாம்பழங்களிலும் இந்த விஷத்தன்மைகள் படர்ந்துள்ளது.

அதை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உயிர் உடலில் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
1.அந்த ஜீவ அணு எந்த விஷத்தினைத் தனக்குள் வளர்த்துக் கொண்டதோ அது நம்முள் நின்று
2.இந்த விஷங்கள் (பூச்சி மருந்து) எங்கிருந்தாலும் அது தன் உணவுக்காகச் சுவாசித்து இழுக்கும்.
3.தன்னை வளர்த்துக் கொள்ள அவ்வாறு சுவாசிக்கும் பொழுது தன் இனக் குஞ்சுகளை நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கும்.

நம் உடலில் தசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஆனால் அது இருந்த இடத்திலிருந்து விஷத்தைப் பரப்பி அதை உணவாக உட்கொண்டுவிடும். அப்போது நம் உடலுக்குள் வலி… வேதனை தெரியும். இது கேன்சர் என்ற நோயாக வரும் காரணம் இந்த விஷத்தின் தன்மையால் வருவது தான்.

ஒரு மனிதன் மிகவும் வேதனைப்பட்டுச் சாபமிட்டாலும் அதை வேடிக்கையாகப் பார்த்து உற்றுக் கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் அந்தச் சாபத்தின் வித்து வேதனையாகப் பதிவாகி விடுகின்றது.

“இப்படித்தான் அவன் ஆக வேண்டும்…” என்று சாபமிடும் பொழுது அந்த உணர்வுகள் ஜீவ அணுவாக மாறி அவன் எதை எல்லாம் பேசினானோ இந்த உணர்வை எடுத்து… நமக்குள் உருப்பெற்ற ஜீவ அணு அவன் சாபமிட்ட அந்த வாக்கை நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை… வேடிக்கைதான் பார்த்தோம்… சாபமிட்ட உணர்வுகள் இவ்வாறு வந்து விடுகின்றது.

எனக்கு மோசம் செய்தானே பாவி… அவன் கண்கள் குருடாகிவிடும்…! என்று சொன்னால் போதும்.
1.மற்றதை எடுத்து உணர்த்தும் “ஜங்ஷன்” கரு விழிக்குள் ஒரு இணைப்பு இருக்கின்றது
2.அதிலே பட்டுவிட்டால் சிறுகச் சிறுக அது படம் தெளிவாகத் தெரியாதபடி கண்களைக் குருடாக்கிக் கொண்டே இருக்கும்.

கண் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் இன்று நிறைய இருக்கின்றார்கள். காரணம் இந்த வேதனை உணர்வு கண்ணிலே திரை மறைவாகும்… பார்வை குறைந்து கொண்டே வரும்.

இப்படி இல்லாதவர்கள் யாரும் இல்லை.

பண்டைய காலங்களில் எல்லாம் 90 100 வயது வரையிலும் வாழ்ந்து இருக்கின்றார்கள். அவர்களுக்குக் கண்கள் சீராகத் தெரிந்துள்ளது. இன்றும் கண்ணாடி போடாமல் அவர்களால் வாழ முடிகிறது.
1.ஆக… நஞ்சினை எதிர்க்கும் சக்தி பெற்றவர்கள் அவர்கள்.
2/அந்த நஞ்சினை வென்றிடும் சக்தி இருப்பதால் அது ஒன்றும் பாதிக்காத நிலையாகி விடுகின்றது.

இன்று வாழும் நாம் தவறு செய்யவில்லை. இருந்தாலும் தாவர இனங்களில் தூவப்பட்ட நஞ்சுகள் செடியுடன் கலந்து விஷமான உணர்வாக உட்கொண்ட பின் அது நமக்குள் கலந்து விடுகின்றது.

விஷத்தைக் குடித்தால் எப்படி நம்மை மயக்கமடையச் செய்கின்றதோ அதைப் போன்று நம் தெளிந்த மனதை இழக்கச் செய்து விடுகின்றது. உணவு வழியாக வரும் இந்த நஞ்சின் தன்மை உடலில் ஜீவ அணுவாக மாறிய பின் அந்த விஷத்தையே உட்கொள்கின்றது.

முதலில் தாவர இனங்களில் பூச்சிகள் விழுந்து அது முட்டை இடுகின்றது. பூச்சிகள் விழாமல் இருக்கப் பூச்சிக்கொல்லி மருந்தை அதன் மீது தெளித்த பின் பூச்சிகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அது இட்ட முட்டைக்குள் மேல் தோடு அந்த மருந்தைக் கவருகின்றது.
2.விஷங்கள் அதற்குள் ஊடுருவுகிறது
3.மருந்திலிருந்து வரும் ஆவியின் தன்மையை அதற்குள் (கருவுக்குள்) இணைத்து
4.அதைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் நிலையாக வருகின்றது… முட்டைக்குள் இருக்கும் பூச்சியை உருவாக்கும் உயிரினங்களுக்கு…!

நாம் தூவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இப்படி எல்லா வகைகளிலும் கலந்து உணவுடன் உட்கொள்ளும் பொழுது விஷம் கொண்ட அணுவாக மாறி விடுகின்றது.

உடலுக்குள் ஜீவ அணுவாக மாறி அது அதனுடைய மலத்தை வெளிவிடும் பொழுது கை கால் எல்லாம் கடு..கடு… என்று இருக்கிறது… கண் வலிக்கின்றது தலை வலிக்கின்றது நெஞ்சு வலிக்கின்றது பிடரி வலிக்கின்றது என்று நாம் சொல்லத் தொடங்கி விடுவோம்.

தவறு செய்யாமலேயே…
1.நம் உணவு வழியாக இப்படிப்பட்ட தீமைகள் கலந்து மனிதனுடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து
2.அடிக்கடி வேதனையைச் சுவாசித்து உடலுக்குள் வேதனையை அனுபவிக்கும் நிலையாக வருகின்றது.

இன்றைய காலகட்டத்தில் இந்த நஞ்சு விளைந்து அது உடலுக்குள் அதிகமாகி விட்டால் சிறுகச் சிறுகக் கேன்சராக முளைக்கத் தொடங்கி விடுகிறது.

நம் உடலில் இருக்கும் ஜீவ அணுக்கள் அதிகமான விஷத்தை நுகர்ந்து விட்டால் அந்த விஷத்தையே வளர்த்திடும் நிலையாக வந்து அருகில் இருக்கக்கூடிய தசைகளில் இருக்கும் நல்ல அணுக்களையும் மடியச் செய்து விடுகின்றது.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு அதை மாற்றி அமைக்கும் சக்தியாக வர வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை
2.ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
3.அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுதல் வேண்டும்.