“ஒவ்வொரு ஸ்டேஜாகத் தான்” உங்களை வளர்ச்சி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்

“ஒவ்வொரு ஸ்டேஜாகத் தான்” உங்களை வளர்ச்சி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்

 

1.நட்சத்திரங்கள் பிற மண்டலத்தில் இருந்து வருவதை தனது உணர்வின் தன்மையாக எடுத்து
2.மற்றதோடு கலக்கப்படும் பொழுது “மின்னணுவாக” மாறுகின்றது.
3.அதாவது ஒரு கல்லுடன் கல் தட்டினால் “நெருப்பு” (பொறி) வருவது போன்று.

அதிலே முதல் நிலைகள் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் மற்றதுடன் கலக்கப்படும் பொழுது “மின் காந்த ஒளிகளை” உருவாக்குகின்றது. அத்தையை அணுக்களாக மாறும் பொழுது தான் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதனின் துகள்கள் பரவிக் கொண்டே வருகின்றது.

இதற்கு அடுத்து இருக்கக்கூடிய மற்ற நட்சத்திரங்கள் அதனின் வட்டப்பாதை மாறினாலும் உமிழ்த்திய உணர்வுகள் இங்கே பரவி இருப்பதும் அதுவும் மற்ற மண்டலங்களிலிருந்து கவர்வதை இதுவும் கவர்ந்து இதே கலவையாக்குகின்றது.

இப்படி அடுக்கடுக்காக 27 நட்சத்திரங்களின் கலவைகள் ஒவ்வொன்றும் கார்த்திகை நட்சத்திரத்தைப் போன்ற விஷத்தின் தன்மைகள் “கூடுவதும் உண்டு… குறைவதும் உண்டு…!”

இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது/. வானியலில் கடும் விஷத் தன்மைகள் பிரபஞ்சத்தில் இவ்வாறு பரவி வரும் போது
1.ஒவ்வொரு கோளும் துருவப் பகுதியின் வழியாகக் கவர்கின்றது.
2.அலைகளாக தன் உடல் (மண்டலம்) முழுவதும் அது பரவச் செய்வதும் சுழற்சியால் வெப்பம் ஏற்படுவதும்
3.இவை இரண்டும் கலந்தாலும் வெப்பத்தின் தன்மை சுழற்சி ஆகும் போது நடு மையம் அடைந்து விடுகின்றது.

ஆக… வெப்பத்தின் தணல் அதிகமாகி கொதிகலன்கள் கூடி நடு மையம் செல்லப்படும் பொழுது அந்தந்த மண்டலத்தில் “ஈர்க்கப்பட்ட உயிரணுக்கள்” அதனுடன் குவிக்கப்பட்டு உறையப்படும் போது பாறைகளுக்கு இடையில் சிக்கி பாறைகளுக்குள் அணுக்களாக மாறுகின்றது.

1.நமது பூமியிலும் ஆதியில் இவ்வாறு ஏற்பட்ட இந்த அணுவின் தன்மைகள்
2.பாறைக்குள் தேரைகளாகவும் வண்டுகளாகவும் விஷத்தன்மை கொண்ட சில உயிரினங்களாகவும் உண்டு.

இதே போன்று எல்லாக் கோள்களிலும் அது அது ஈர்த்து எடுத்துக் கொண்ட உயிரணுக்கள் அதிலே சிக்குண்டு வளர்ச்சியற்ற நிலையில் வளர்ந்து கொண்டு தான் உள்ளது.

1.நட்சத்திரங்களில் இவை இல்லை… ஆனால் சூரியனில் உண்டு
2.விஷ அணுக்களை உருவாக்கி இருந்தாலும் அதனுடைய கதிரியக்கப் பொறிகள் பெரும் மாற்றங்களை உருவாக்கும் தன்மைகளும் உண்டு.

ஏனென்றால் இதை எல்லாம் யாம் சொல்லிக் கொண்டு வந்தாலும் சிலவைகளைத் தொட்டுத்தான் காட்டலாம். ஏன் முழுமையாகச் சொல்லவில்லை…? என்று நீங்கள் எண்ணலாம்.

பொதுவாக கல்வியில் பாட நிலைகள் கொடுக்கும் பொழுது அது விஞ்ஞானியாக வரப்படும் பொழுது தான் அந்த முழுமை வரும்.
1.முதலில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பார்த்து இணை சேர்த்து உணர்வினைப் பதிவு செய்து
2.பின் ஒவ்வொரு பாட நிலையும் ஒவ்வொரு ஸ்டேஜுக்குக் கூட்டமைப்புகள் வரப்படும் பொழுது தான்
3.கல்வி அறிவையே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் அணுக்களை உங்களுக்குள் யாம் துணுக்குத் துணுக்காகப் பதிவு செய்யப்படும் பொழுது
1.அந்த ஞானிகள் உணர்வுடன் ஒன்றி வளரலாம்…
2.இந்தப் புவியில் வரும் விஷத்தன்மைகளை மாற்றிடும் சக்திகளை நீங்கள் பெறலாம்
3.நீங்கள் அதைப் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.

குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதே போன்றுதான் உங்களுக்குள்ளும் கொடுக்கின்றேன் நீங்கள் இங்கே சமமாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள் நான் காட்டிலும் மேட்டிலும் அவதிப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன் பெற்றேன்.

அதை வளர்க்கும் முறைக்கு…
1.பல எத்தனையோ இன்னல்களை உருவாக்கப்பட்டு
2.அந்த இன்னல்களில் இருந்து அது எவ்வாறு மீள வேண்டும்…? என்ற நிலையில்
3.இன்னலான உணர்வுகள் என் உடலுக்குள் ஊடுருவி… அதனால்
4.உடலில் உருப்பெற்ற அணுக்கள் எவ்வாறு எல்லாம் மாற்றமடைகின்றது என்பதை தன்னில் தானே உணரும்படி செய்தார் குருநாதர்,

உங்களுக்கு யாம் அதையெல்லாம் செய்யவில்லை. உயர்ந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் இப்போது பாய்ச்சப்படுகின்றது.

தாவர இனங்களுக்கு உரம் கொடுத்து அதைச் செழித்து வளரச் செய்வது போன்று உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களிலும்… ஒவ்வொரு ஜீவ அணுக்களிலும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வை உரமாக்குகின்றோம். அதை நுகரும் ஆற்றலையும் பெறச் செய்கின்றோம்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நீங்கள் செல்லப்படும் பொழுது “பேரண்டத்தின் பேருண்மைகளை நீங்கள் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றீர்கள்…”

இப்பொழுது இல்லை என்றாலும்…
1.இதனுடைய வரிசையில்… “யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ… அவர்கள்”
2.இந்த அண்டத்தின் நிலைகள் உங்கள் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது…? என்பதை நிச்சயம் உணர முடியும்.

ஒலி – ஒளி

ஒலி – ஒளி

 

“ஒளியைப் பற்றி சொல்கின்றேன்” என்று சொன்னேன்.
1.இவ்வுலகின் தன்மையிலேயே கலந்து இருப்பதும் ஒலி தான்
2.நீ பேசுவதும் ஒலி தான்
3.உன்னுள் இருந்து வரும் மூச்சும் ஒலி தான்
4.சிறு அசைவும் ஒலி தான்
5.பெரும் மின்னலும் ஒலி தான்
6.மழைத்துளியிலும் ஒலி உள்ளது.
7.மலர் மொக்கு விரியும் பொழுதும் ஒலி உள்ளது.

உலகம் ஒலியுடனே உருளுகின்றது ஒளியுடன் மட்டும் உலகம் இல்லை… ஒலியுடனும் கலந்து இருக்கின்றது. சிறு எறும்பின் வார்த்தையிலும் ஒலி உள்ளது… நம் உலகச் சுழற்சியிலும் ஒலி உள்ளது.

ஒலி அழிவதில்லை… காலமுடன் கலக்கின்றது.
1.உடல்கள் அழிகிறது… ஆனால் நாம் விட்ட மூச்சும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கின்றது.
2.ஆத்மாவானது மறு உடல் பெறுகின்றது… ஆனால் “ஒலி” அவன் எடுக்கும் எந்த ஜென்மத்திலும் அழிவது இல்லை… மாறுவதும் இல்லை.

அழிவதும் இல்லை மாறுவதுமில்லை என்றேன் அல்லவா. அப்போது இந்த ஒலியெல்லாம் என்னவாயிற்று…? என்று நினைக்கின்றீர்கள். இவ்வுலகம் தன்னைத்தானே சுற்றுகிறது என்கின்றீர்கள்…! அது சுற்றுவதற்குச் சக்தி எதிலிருந்து வந்தது தெரியுமா…?

இந்த ஒலியின் தன்மை எல்லாம் ஒன்று சேர்ந்து… காற்றுடனே கலந்து உலகைச் சுற்றிவிடும் நீ விட்ட நல் மூச்சும்.

நல் மூச்சு…! என்பதன் பொருள்… நல்லவர் உள்ள நாட்டில் எல்லாம் மழை பெய்கிறது என்று சொல்லும் பழக்கத்தில் இல்லையா…!

நல்லுணர்வு உள்ள வீட்டில் இலட்சுமி களை உள்ளது என்கிறோம். தன் உணர்வை மறந்து விட்ட நிலையில் உள்ள வீட்டில் எல்லாம் நாதியற்ற நிலைதானப்பா. அந்த வீட்டைப் பார்த்தவுடன் மூதேவி குடி இருக்கின்றாள் என்பதும் இது தான்.

இலட்சுமியும் பிறக்கவில்லை… மூதேவியும் பிறக்கவில்லை… ஒலியில் தான் எல்லாம் உள்ளதப்பா…!

ஒளியைப் பற்றி நினைத்து வந்தால் ஒலியின் பாடம் என்பது தான் முதல் பாடம். எல்லாம் முதல் பாடம் என்கின்றீர்கள் இரண்டாம் பாடம் இல்லையா…?
1.எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டுமப்பா
2.முதலாவதாகவே இருக்கட்டும்… முடிவு நிலை வேண்டாம்
3.எல்லாத் தன்மையுமே முதல்… முதல் தன்மை தான்.

குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நிலையும் முதல் தான் குழந்தைக்கு. என்றும் முதலாகவே இருந்திடும் நிலையிலேயே பாடங்கள். முதல் பாடம்… முதல் பாடம்…! என்பதன் பொருள் இதுவே தான்.

மூல முதல்வர் என்று சொல்கின்றோம் அது போல மூல இரண்டாமவர் என்று சொல்கின்றோமா…? “எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டும்…”

ஒலியின் தன்மையை உணர்ந்திடுவாய். ஒலிக்கும் இசையில் உணர்ந்திடுவாய். ஒளியை அமைப்பது இந்த ஒலி தான். ஒளிமயமான எதிர்காலம் என்று சொல்கின்றோம். ஒளிமயமான எதிர்காலம் ஒலியில் இருந்து தான் வருகின்றது.

ஒலிக்கும் ஒலியெல்லாம் எதிலிருந்து என்கின்றாய்…? ஒளியின் தன்மை தானே புரிந்திடும். இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா.

நீ ஜெபிக்கும் ஜெபமும் என்னிடம் தான்… நீ துவேஷித்த சொல்லும் என்னிடம் தான். உன் ஜெபம் மட்டும் தான் என்னிடம் அடையும்… துவேஷம் எங்கு செல்கிறது என்று நினைக்கின்றாய்…?

ஜெபம் துவேஷம் காற்றில் தான் கலக்கின்றது புரிந்ததா…? ஒளியின் தன்மை சொன்னேன்… ஒளியின் தன்மை புரிந்ததா…? ஒலியில் தான் ஒளியின் தன்மை இருக்கின்றது.

இதைப் புரிந்து கொண்டால் ஒலியின் தன்மை புரியும். ஒளி எங்கிருந்து வருகின்றது…? ஒலியிலிருந்து தான் ஒளி உள்ளது.

1.சுவாச நிலை என்பதும் இது தான்
2.சுவாச நிலை ஒன்றுபட்டால் ஜெப நிலை கூடிவிடும்
3.ஜெப நிலை கூடிவிட்டால் ஒளியின் தன்மை தெரியும் என்கிறோம்.

சுவாச நிலை என்னும் பொழுதே ஒலியாக ஆகிறது. அந்த ஒலி தான் ஒளியப்பா. விளக்கில் தான் ஒளியுள்ளது. விடியும் விடிவில் தான் ஒளி உள்ளது. சந்திரனும் சூரியனும் தான் ஒளி தருகின்றது.

நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஒலி எல்லாம் ஒளி என்கிறார்கள். அந்த ஒலி ஒளி அல்ல. ஒலிதானப்பா ஒளியே. நம்முடைய சுவாசத்தில் உள்ள ஒலி நல் ஒலியாக உள்ள நேரத்தில் தான் நல்ல பூவும் பூக்கும் நல்ல கனியும் கனியும்.

என் தாயார்… என் தாயாரின் தாயார் சமைத்த ருசி… இப்பொழுது இல்லை என்கிறாய்.
1.காலநிலை மாற மாற மன நிலையும் மாறிவிட்டது.
2.மனிதனும் மூச்சுக் காற்றும் மாறிவிட்டது.
3.அந்நிலையில் இருந்து வரும் தன்மையில் இருந்து தான் விளையும் பயிரின் ருசி எல்லாம்.

தர்மம் நியாயம் எங்கு உள்ளது…? அன்றுள்ள நிலையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

பிறகு எப்படி இருக்கும் நிலை எல்லாம்…? “சுவாச நிலையை மாற்றிக்கொள்” என்பதும் இது தானே. சுவாச நிலையைப் பற்றிச் சாமி விடிய விடியச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டீரா…? இப்பொழுது புரிகின்றதா ஒலியின் தன்மையும் ஒளியின் தன்மையும்.

உன்னுள்ளே ஒளி பிறந்திட “ஒலியை முதலில் கற்றிடு…” குழந்தைக்கும் புரியும்படி இந்தப் பாட நிலை உள்ளது.

ஒளியின் தன்மைக்குப் புதுப் பாடம் வேண்டுமா…? ஒளியைப் பற்றி இன்னும் கேட்டால் நான் ஒலியைப் பற்றி தான் மீண்டும் சொல்வேன்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல… பெரும் மேகங்கள் வந்தால் மறைந்துவிடும். மேகத்தின் தன்மையே மின்னல் வந்தால் மறைத்திடும்.

அது போல
1.நல் உணர்வை எடுத்து நல் மூச்சு விட்டிடுவாய்.
2.நல் மூச்சு விட்டால் ஆயிரம் நஞ்சின் தன்மை இருந்தாலும் “ஒருவரின் நல் மூச்சு அதை மாற்றிவிடும்…”

வைரத்தின் தன்மை வார்த்தையில் வேண்டுமென்றேன் அல்லவா வைரத்தின் தன்மை எல்லாம் அதன் ஜொலிப்பில் தான் உள்ளது அதற்குள்ள மதிப்பை பார்த்தாயா…?

அது போலத் தான் எல்லாமே. நல்லுணவை நான் சமைத்தேன். உனக்குள்ளே ஊட்டி விட்டேன் இந்த நிலையை மாற்றி விடாமல் ஊக்கமுடன் இருந்திடுவாயா…? புது பானையில் விறகு வைத்துச் சமையல் செய்யும் காட்சி…!

1.நான் (ஈஸ்வரபட்டர்) இங்கும் உள்ளேன்… அங்கும் உள்ளேன்…
2.எங்கும் உள்ளேன்… எல்லாமில் எல்லாமாக உள்ளேன்.

தூக்கம்

தூக்கம்

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகைக் காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை.

ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக “கொட்டாவி வெளிப்பட்டு”
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வும்… உறங்கும் நிலையும் இல்லை…?

ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கி விட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை… சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை…!

சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை… சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை…!

 

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மனத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடன் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என் பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…! இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!

1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.

“நன்மை… தீமை… எல்லாமே…” தெய்வப் படைப்பு தான்…! பிரித்துக் காண முடியாது

“நன்மை… தீமை… எல்லாமே…” தெய்வப் படைப்பு தான்…! பிரித்துக் காண முடியாது

 

1.கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார்… எல்லாமாகவும் உள்ளார்..!
2.நல்ல சக்தி மட்டும் கடவுள் அல்ல… தீயவையும் கடவுளின் படைப்புதான்.
2.கடவுளின் பிம்பம் நன்மையிலும் தீமையிலும் கலந்தே உள்ளது.

நற்குணம் கொண்ட மனிதனும் கடவுளுக்குச் சொந்தம். தீய குணத்தில் உள்ளவனும் கடவுளின் படைப்பு தான்.
1.இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்தால்
2.தெய்வத்தின் சக்தியை மனித ஆன்மாக்கள் உணர்ந்து நடக்க ஏதுவாகும்.

எல்லாப் படைப்பும் தெய்வத்தின் படைப்பே…!

படைக்கப்பட்டவன்…
1.படைப்பின் பொருள் கண்டு மகிழ்ந்து
2.தன் பொருளான தான் படைத்ததன் பலன் தான்
3.தெய்வ சக்தியின் அருள் வளர்ச்சியும்.. நற்குண வளர்ச்சியும்…!
4.சப்தரிஷிகளின் நிலை பெற்றோரின் வளர்ச்சியினால் தன் படைப்பின் பலனைப் பெற்றான் – “படைத்தவன்”

மனிதன் உருவாக்கும் செயல்களில் இருந்து எப்படித் தன் எண்ணத்திற்குகந்த நிலை பெற்றவுடன் மகிழ்ச்சி கொள்கின்றானோ அதைப் போன்ற மகிழ்ச்சிதான் தெய்வ சக்தியின் வளரும் நற்குண வளர்ச்சியும்…!

நன்மை தீமை கொண்டு தெய்வப் படைப்பு இல்லை. எல்லாமே தெய்வப் படைப்புத் தான். பல சுவையும் இயற்கையில் கலந்து தான் வளர்கின்றது. கசப்பின் சுவை இல்லாவிட்டால் இனிப்பை அறிய முடியாது.

மனித வாழ்க்கையில் ஏற்படும் சோதனை நாட்களை கசப்பாக எண்ணி… அக்கசப்பின் நிலையில் விரக்தி பூணும் மனிதனின் சுவாச அலையின் தொடரினால்… அதே சுழற்சியில் இருந்து சலிப்பின் உந்தலினால்.. பல மனித ஆத்மாக்கள் தன் நிலை உணராமல்… இக்கசப்பான நிலையிலிருந்து மீள முடியாத சிக்கலில் சிக்கி…
1.அதன் உணர்வு அலையின் உந்தலில் ஏற்படும் ஆவேச எண்ண நிலையிலிருந்து மீளாத மனிதன்தான்…
2.தீய வழிகளுக்கும் தீய செயலில் நிலைக்கும் தன் நிலை உணராமல் சென்று விடுகின்றான்.

தனக்கு ஏற்படும் இன்னலில் இருந்து கசப்பான வாழ்க்கையை இனிய செயலாக்குவது இம்மனிதனின் எண்ணம் தான்…! என்று உணர்ந்து
1.கசப்பைத் துவர்ப்பாக்கி
2.துவர்ப்பை இனிமையாக்கும் வாழ்க்கைச் செயலுக்குக் கொண்டு வரலாம்.

அதே சுழற்சி ஓட்டத்தில் செல்லும் மனிதன்… மீண்டும் சோதனையான கசப்பான நிலை தன் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் அதனை இனிமைப்படுத்திடும் வழித் தொடர் அறியத் தன் எண்ணத்தை அவ்வீர்ப்பின் நிலையுடன் தன் உணர்வு பெறுகின்றான்.

1.இனிமையிலிருந்து வருவதல்ல நல் உணர்வு எதுவுமே…! (இது மிகவும் முக்கியமானது)
2.சுவையான மாங்கனி பிஞ்சில் கசப்பாகவும்.. பிறகு வளர வளர
3.துவர்ப்பு புளிப்புமாகி பிறகு தான் முற்றிப் பழுத்து இனிப்பாகின்றது அல்லவா…!

உள்ளிருக்கும் துவர்ப்பான அக்கொட்டையுடன் ஆரம்ப ஈர்ப்புக் குணத்திலுள்ள அமிலப் படிவம் கொட்டையுடன் உள்ள பொழுதும் அத்துவர்ப்பான கொட்டையின் மேல் சுவையான மாங்கனி வளர்கின்றது அல்லவா…!

1.அதைப் போன்று கசப்பான வாழ் நாட்களை இனிமையாக்கப் பழகிடுங்கள்.
2.கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்.

பல சித்தர்களும் சப்தரிஷிகளும் மற்றும் இன்றைய காலங்களில் உள்ள நீங்கள் அறிந்த வளர்ச்சி கொண்ட எந்த மேதைகளையும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் நடந்த உண்மை நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தோமானால் “இதன் நிலை புரியும்…!”

அரசனாக இருந்தாலும் மாமேதையாக இருந்தாலும் எந்த ஆண்டவனும் அவர்களுக்கு அந்தச் சக்தி தரவில்லை. அவரவர்கள் எடுக்கும் எண்ணச் சுவாசத்தினால் அவர்கள் அடையும் பெரு நிலை எல்லாம் இறைவனின் படைப்பு ஒன்றே…! இயற்கையின் சக்தியும் அதுவே…!

வளர்ந்த செயலில்தான் அதனதன் அடிப்படைக் குணமெல்லாம் உள்ளன. இக்குணத்தின் வழி பெற்றது தான் ஆண்டவன் கண்ட பொருள் மகசூலான சந்திரனும்.. சூரியனும்… நம் பூமியும்… நாமும்… எல்லாமே…!

1.நன்மை தீமை கொண்டு படைக்காத ஆண்டவன்
2.தன் படைப்பின் பலனான நல்லதுவும் தீயதுவும் சுழன்றுள்ள நிலையில்
3.தன் வளர்ச்சிக்குத் துணையாக நல்லவற்றைக் காண்கின்றான்.

இப்படி இருக்க ஆண்டவன் படைப்பை எப்படிப் பிரித்துக் காண்பது…?

“மரண பயத்தை விட்டால் தான்” உயிராத்மாவின் சக்தி நிலை கூட முடியும்

“மரண பயத்தை விட்டால் தான்” உயிராத்மாவின் சக்தி நிலை கூட முடியும்

 

முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற் பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்,

விஞ்ஞானத்தின் அறியாமையினால் மனித இனம் உருவாவதே குறைந்து கொண்டு வருகிறது

விஞ்ஞானத்தின் அறியாமையினால் மனித இனம் உருவாவதே குறைந்து கொண்டு வருகிறது

 

இன்று உணவுக்காக என்று சொல்லிக் கொண்டு கோழி முட்டைகளை நிறைய உருவாக்குகின்றார்கள். அதாவது…
1.ஆண் இணைப்பு இல்லாதபடி கருவுறச் செய்கிறார்கள்…
2.கோழி முட்டை இடுகின்றது… ஆனால் அதிலே குஞ்சுகள் பொரிப்பதில்லை.

ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலை வரும்

செடி கொடிகளில் எடுத்துக் கொண்டாலும் ஆண் இனம் இல்லாதபடி உரம் கொடுத்து செடிகளை விஞ்ஞானிகள் வளர்க்கின்றார்கள்.

ஆண் இணைப்பு இல்லாது இருந்தாலும் அது ஒரு சீராக வளரும். ஆனால்
1.அதை உணவாக உட்கொள்ளும் நிலையில் மனிதரோ அல்லது மற்ற எந்த உயிரினமாக இருந்தாலும்
2.அதனின் அணுக்கருக்கள் இணைத்துத் தன் இனத்தைப் பெருக்கும் நிலைகள் உருவாகாது.

ஆக விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் உருவாக்கும் அது போன்ற உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்று உலகெங்கிலும் சரி… பெரும்பாலானோருக்குத் தன் இனக் குழந்தைகளை உருவாக்கும் சக்திகள் அந்த ஆற்றல்கள் குறைந்து விடுகின்றது.

1.இப்படி விஞ்ஞான அறிவால் கற்றுணர்ந்த உணர்வுகள்… நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம்மை அறியாதபடி எத்தனையோ வகைகளில் நமக்குள் தீமைகளாக வந்து சேருகின்றது.

குழந்தை இல்லை என்றால்… எனக்குக் குழந்தை இல்லையே… குழந்தை இல்லையே…! என்ற வேதனை உணர்வுகளைச் சுவாசித்து அவர்கள் அதை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

“இல்லையே…” என்று வேதனை உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது உடல்களிலே விஷம் கொண்ட அணுக்கள் வளர்ந்து விடுகிறது. இந்த விஷம் கொண்ட அணுக்கள் கூடும் பொழுது இன விருத்தியும் இல்லாது போய் விடுகின்றது.

ஏக்கத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை மரணம் அடையும் அளவுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. எனக்குக் குழந்தை இல்லை…! அதனால் நான்கு பேர் என்னை அவமானமாகப் பேசுகின்றார்கள்… என்ன வாழ்க்கை…? என்று வெறுத்துத் தற்கொலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

தன்னை ஏளனமாகப் பேசுகிறார்கள் என்ற அந்த எண்ணத்தில் மரண பயம் ஏற்படும் போது நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலில் விளைந்து விடுகிறது.

1.எத்தனையோ கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில்
2.இத்தகைய விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் தாக்கப்பட்டு மரண பயத்திற்கு அழைத்துச் சென்று
3.மனித உடலை அழித்திடும் உணர்வுகள் இங்கே விளைகின்றது.

இதைப் போன்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும்.

அந்த அருள் ஞானிகள் உணர்வை எடுத்து அருள் ஞானத்தை வளர்க்கும் நிலையும் எத்தகைய நஞ்சினையும் மாற்றிடும் உணர்வுகளையும் உங்களுக்குள் வளர்த்திடல் வேண்டும்.

தீமைகளை அகற்றிடும் மெய் ஞானிகள் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து “விதியை அந்த மதி கொண்டு வெல்ல வேண்டும்.

குழந்தை இல்லையே என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இது விதி ஆகிறது. இதை மாற்றி அமைக்க
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறுவேன்
2.என் உடலுக்குள் அந்த வலு கொண்ட அணுக்கள் வளரும்…
3.குழந்தையை உருவாக்கும் அணுக்கள் உருவாகும் என்று உங்கள் எண்ணத்தினால் நீங்கள் இதை எண்ணிப் பாருங்கள்.

இப்பொழுது உபதேசிக்கும் இந்த உணர்வுகள் வாயிலாக அதை நுகர்ந்தறியும் போது உங்கள் உடலில் அருள் ஞான உணர்வாகப் பெற்று… தன் இனத்தின் தன்மை கருவாக உருவாக்கும் அந்த ஆற்றல் பெறுகின்றீர்கள்

மகரிஷிகளை அருள் சக்தி பெறுவேன்… என் உடல் முழுவதும் அது படரும்… என்னை அறியாத இருள் நீங்கும். மகரிஷிகளின் அருள் உணர்வால் புத்திர பாக்கியம் பெறும் சக்தி கிடைக்கும்.

கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை
1.தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.தன் மனைவிக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று இருவருமே இதை எண்ணி ஏங்கினால்
3.நிச்சயம் அந்த அணுக்கருக்கள் உடலில் கூடும்
4.குழந்தையும் உருவாகும் உங்கள் அனுபவத்தில் இதைப் பார்க்கலாம்.

தெய்வ குண அமிலத்தைப் பெற வேண்டும்

தெய்வ குண அமிலத்தைப் பெற வேண்டும்

 

ஒரு நாள் தோன்றி மறு நாள் மடிகின்றது காளான். அதே போல் ஒவ்வொரு தாவர வர்க்கத்திற்கும் அது அது ஜீவிக்கும் கால நிலைகள் உண்டு. ஆலமரம் பல நூறு ஆண்டுகள் உள்ளது. வைரம் பாய்ந்த ஆயிரம் காலத்து மரங்களும் பல உள்ளன.

ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம் உருவான ஆரம்பக் கால நிலையே காளானின் வழித் தொடர்ச்சி தான். இயற்கையின் தாவர இன முன்னோடி “காளான் தான்…!”

அவ்உயிரணு அவ்வமில வண்ணமுடன் இடியும் மின்னலும் தோன்றும் காலத்தில் ஒன்றுடன் ஒன்று இன வர்க்கங்கள் மோதும் நிலையில் அதற்கு மேல் இந்த மழை நீர் படும் பொழுது வெடிக்கும் தன்மை உருவாகிறது.

அப்படி வெடிக்கும் தருணத்தில்
1.இரண்டு வகை அமில குணத்தின் வெடிப்பில் தோன்றும் அமிலமானது இந்தப் பூமியில் மோதுண்டவுடன்
2.அதன் மேல் படும் ஒளி அலையின் ஈர்ப்பினால் உயிரணு தோன்றி தாவரம் வளர்ந்து
3.ஒவ்வொரு நிலை கொண்ட தாவர இன வர்க்கங்கள் மாறி மாறித் தோன்றுகிறது.

முதலில் காளான் தோன்றி அதன் ஆயுள் முடிந்தவுடன் அந்தக் காளானது அழுகிய நிலையில் பூமியில் படர பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் வெக்கை அதன் மேல் பட்டு அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தைக் கொண்டு மீண்டும் பூமியில் படர்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் உயிரணுவின் இன வளர்ச்சி சிறிது மாற்றம் கொண்டு மீண்டும் அதிலிருந்து சில வளர்ச்சி நிலைகள் மாறுகிறது.

மாற்றம் ஏற்பட்டு இப்படியே பல இயற்கை வளங்கள் தோன்றி ஒன்றுடன் ஒன்று அமிலத் தன்மைகள் மாறி மாறி உருவாகிப் பல வழிகள்… பலவித உயிரணுக்களும் கனி வளங்களும் வளர்ந்து கொண்டே மாறி மாறி வாழ்ந்து கொண்டே சுழன்று ஓடிக் கொண்டே உள்ளன.

ஓடும் ஓட்டத்தில் வெளிப்படும் அமில குணத்தில் பல உயிரணுக்கள் அந்த மோதலில் வெளிப்படுகின்றன. “ஒன்றில்லாமல் ஒன்றில்லை…” என்பதன் பொருளும் இதுவே..!

1.எந்த அணுவும் உதிக்க வேண்டும் என்றால் “இந்த மோதல் தான்…” காரணம். (இது முக்கியம்)
2.அமில குணங்கள் மோதுண்டு அதன் மேல் படும் மழை நீரின் ஜீவனால் வெடிப்பு நிலைப்பட்டு உருவாகின்றது உயிரணு.
3.அதன் தொடர்ச்சி நிலை சேர்க்கை தான் ஜீவனின் சேர்க்கையினால் இந்த ஜீவ அணு தோன்றுகிறது.

ஆண் பெண் சேர்க்கையினால் இந்த இரண்டு குண நிலை கொண்ட அமிலத்துடன் ஜீவன் கொண்ட மற்றோர் எண்ண அமிலமான உயிராத்மா தனக்குகந்த அமில குணம் கொண்ட தாயின் தந்தையின் பிறப்பில் கருவுக்கு வருகின்றது.

பல வகையான அமில குணங்களின் சேர்க்கை கொண்டது… இவ்வுலகின் ஈர்ப்பு அமில குணம் ஒன்று தான். இவ் ஈர்ப்பு நிலைக்கொப்ப பல நிலைகளை நம் பூமி வளர்த்துக் கொள்கிறது. பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் ஈர்ப்பில் பல குண நிலைகள் மாறு கொள்கின்றன.

பல வகையான அமில குணம் கொண்ட இந்தக் காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம் என்றாலும்… “நம் எண்ண நிலைக்கொப்ப சுவாச அமிலம் தான்…” நம் சுவாச ஈர்ப்புக்கு வரும்.

1.வெங்காயச் செடி அதன் கார அமிலச் சுவாசத்தை ஈர்க்கின்றது.
2.மிளகாய்ச் செடி நெடி கலந்த கார அமிலத்தை ஈர்க்கின்றது.
3.கருணை சேனை இவற்றின் குண அமிலம் அரிக்கும் தன்மை உடைய அமில குணத்தை ஈர்த்து அவை வளர்கின்றன.

ஒவ்வொன்றிற்கும் அதனதன் நிலைக்கொப்ப ஒரே தன்மையுடைய அமிலத்தைத்தான் ஈர்த்துப் பழக்கப்பட்டு வளரும் தன்மையுடையது தாவர வர்க்கங்கள்.

ஆனால் பலவற்றையும் புசிக்கும் மனித ஆத்மா தான் உண்ணும் உணவின் உணர்வைத் தவிர “எண்ணும் எண்ணத்தின் அமில குணத்தையும்” அறியவல்ல ஆற்றல் கொண்டவன்.

உடம்பின் மேல் மிளகாயின் காரம் பட்டவுடன் “எரிகிறது..!” என்று அறிகின்றோம். வெங்காயத்தின் காரத்தினால் “கண்ணில் நீர் வடிகிறது…!” சேனை கருணை போன்ற கிழங்குகளில் அமில நீர் பட்டவுடன் அவ்விடம் “பிய்ப்பு எடுக்கின்றது…”

இந்நிலையான அமில குணத்தை நம் உடலும் உணர்வும் ஈர்க்கா விட்டால் அதன் தன்மையின் பாதிப்பை நாம் அறிவோமா…?

மிளகாயின் குணம் நெடி கலந்த குணம்… வெங்காயத்தின் குணம் அதற்குகந்த கார குணத்தினால் அதன் தன்மையை உணரப்படுகின்றோம்.

எல்லாமே இந்தக் காற்றின் ஈர்ப்பில் தன் ஈர்ப்புக்கொப்ப வளர்கிறது. இந்நிலைகளைப் போன்று தான் நம் மனித ஆத்மாவின் எண்ண நிலைக்கொப்ப “அமில குணங்களைச் சேமிக்கிறது…” என்பதை அறியவில்லை.

நம் எண்ண நிலைக்குகந்த ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்தைக் கொண்ட நிலையுடனே எந்த எண்ணத்தில் எல்லாம் நாம் இருந்து கொண்டுள்ளோமோ… அதன் நிலைக்கொப்ப அமில குணங்கள் நம்முள் சேமிதம் கொண்டே வாழ்கின்றோம் நாம் எடுக்கும் சுவாசத்தினால்…!

“குண அமிலம்” என்பதன் நிலை புரிந்ததா…?

இந்தக் குண அமிலத்தின் நிலையை உணர்த்துவதன் உண்மை நிலை என்ன..?

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் பால்வெளி மண்டலங்களுக்கும் அதனதன் தன்மைக்குகந்த குண அமிலம் உண்டு. அதன் வளர்ச்சி வட்டத்திலே தான் இயற்கையின் அமில குணங்கள் செயல் கொண்டு வாழ்கின்றன.
1.இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட குண அமிலத்தைப் பெறவல்ல ஆற்றல்
2.அதாவது தனக்குகந்ததைப் பெறும் சக்தி மனித ஆன்மாவுக்கு உண்டு.

இயற்கை வளங்கள் ஒரு வகையான அமில குணத்தை ஈர்க்க வல்லது. ஆனால் மனித ஆத்மாவோ… எண்ண நிலைக்குகந்த அமில குணத்தை எல்லாம் ஈர்த்து ஈர்த்து வாழ்கின்றான்.

எண்ண நிலை கொண்ட மனிதனால் தனக்குகந்த அமில குணத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்றால்
1.இந்தக் குணங்களிலேயே சிறந்த குணமான
2.“ஆண்டவன்…” என்னும் நிலை கொண்ட குணத்தைப் பெற முடியும்.

நம் எண்ணங்களும்… நாம் நுகரும் உணர்வுகளும்… அதனின் செயலாக்கங்களும்

நம் எண்ணங்களும்… நாம் நுகரும் உணர்வுகளும்… அதனின் செயலாக்கங்களும்

 

இன்று நாம் தவறே செய்ய வேண்டாம். ரோட்டிலே செல்கின்றோம்… வாகனம் ஒன்று வேகமாக வருகின்றது…! என்று பார்க்கின்றோம். யார் மீதாவது மோதி விட்டால் அவர்கள் அவதிப்படுவார்களே என்ற எண்ணங்கள் நமக்குள் தோன்றுகின்றது.

அத்தகைய எண்ணங்கள் தோன்றும் பொழுது அந்த வாகனத்தின் வேக உணர்வைக் காணும் பொழுது மனது “பட…பட…” என்று துடிக்கின்றது. பயத்தினால் துடிக்கப்படும் பொழுது அச்சமான உணர்வலைகள் பெருகி விடுகின்றது.
1.பய உணர்வு பெருகினால் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.
2.வேதனையாகி… இனி என்ன ஆகும்…? என்று மன பயம் தூண்டப்படுகின்றது.

வேதனை என்பதே நஞ்சு. வேதனை கலக்கப்படும் பொழுது எதையாவது ஒரு பொருளை பார்க்கிறோம் என்றால்… அந்தப் பொருள் கீழே விழுந்து விடுமா…? என்ற பயம் வருகின்றது.

அந்த பயத்துடன் எண்ணிவிட்டால்
1.பார்த்த உடனே அந்தப் பொருள் கண்டிப்பாகக் கீழே விழுந்து விடும்.
2.அதே சமயத்தில் மன உறுதி கொண்டு அதை மாற்றிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் உடனே அது வரும்.

ஆனால் நாம் கீழே விழுந்து விடும் என்று எண்ணுவோம். அதை (எண்ணத்தை) எடுத்து மாற்றி வைக்க மனம் வராது.

ஆக… இந்த உணர்வுகள் இத்தகைய நிலையில் கொண்டு அதுவே எண்ணத்தில் இருக்கப்படும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்களும் எதிர்வரும் உணர்வு மோதப்படும் பொழுது
2.காற்றலை போல வந்து அந்தப் பொருள் ஆடுவதைப் பார்க்கலாம்.

மனிதனின் உணர்வின் உணர்ச்சிகள் “கொஞ்சம் போல இருப்பதை” இதில் உள்ள காந்தப்புலன் எழுத்து டப்… என்று கீழே விழுகச் செய்துவிடும்.

இதே போல ஒரு மனிதனுக்கு உடலில் அரிப்பாகிவிட்டால் அதை உற்றுப் பார்த்தால் உங்கள் கை அடுத்து உடலில் எங்கேயாவது ஒரு இடத்திற்குப் போய் அதைத் தேய்க்க ஆரம்பிப்போம்.

அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும். ஏனென்றால்
1.அந்த இயற்கையின் உணர்வுகள் நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ நுகர்கின்றது
2.நுகரும் பொழுது அந்த உணர்வு நம்மை அறியாமலேயே செயல்களைச் செயல்படுத்தி விடுகிறது.

ஒருவர் தலை சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருங்கள். நம்மை அறியாமலே இந்தக் கை நம் தலையைச் சொறியும்படி செய்யும்.

காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நுகரப்படும்போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில செயல்கள்.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் பிறர் படும் வேதனையை நுகர்ந்தோம் என்றால் நம் நல்ல குணங்களை… அந்த வேதனை என்ற விஷம் நம்மைத் தெளிவாக்காதபடி இருளாக்கி விடுகின்றது.

அப்போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது… நல்ல பார்வைகளோ நல்ல சொல்களோ இழக்கப்படுகிறது. நல்லதைச் சொல்லத் தவறி விடுகின்றோம்.
1.ஒரு நல்லதையே எண்ணி அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்றால் முடியாது…
2.நம்மால் நல்லது சொல்ல முடியாது போய் விடுகின்றது.
3.நல்ல உணர்வின் நினைவு இல்லாது போய் விடுகின்றது…
4.நல்ல காரியத்தைச் செயல்படுத்த முடியாது போய் விடுகிறது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் வேதனைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும் நம் உடலில் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்தே ஆக வேண்டும். இவ்வாறு செய்தால் தான்
1.நம்மை அறியாமல் இயக்கச் செய்யும் பிற உணர்வின் இயக்கங்களிலிருந்து நாம் விடுபட முடியும்.
2.நாம் அருள் வழியில் என்றுமே வாழ முடியும்.

வழி மாறிச் சென்ற “மெய் ஞான விழிப்பை” மீண்டும் வழிப்படுத்துகின்றோம்

வழி மாறிச் சென்ற “மெய் ஞான விழிப்பை” மீண்டும் வழிப்படுத்துகின்றோம்

 

இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.

அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.

அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.

அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும்… சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவுபட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்டிடல் முடியும்.

ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோகமார்க்கங்களும் பக்திமார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.

பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.

அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி… கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு “இந்நிலை பெற… மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெற வேண்டும்…?” என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.

இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர… போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?

1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.