போகர் சாகாக்கலையாக இருக்கிறாரா…? வேகா நிலையாக இருக்கிறாரா…?

Bhogar Risi

போகர் சாகாக்கலையாக இருக்கிறாரா…? வேகா நிலையாக இருக்கிறாரா…?

 

போகர் இப்பொழுது உடலுடன் இல்லை. ஆனால் முதலில் அந்த உடலைக் காயகல்பமாக்கி உடலைக் கெட்டு போகாமல் தயார் செய்தார்.

பல சித்தர்கள் முனிவர்கள் சொல்கிறோமே இவர்கள் எல்லாம் அரசர்கள். தன் உடலிலே சேர்த்துக் கொண்ட மந்திர ஒலியால் சாகாக்கலையாக மாற்றுகின்றார்கள்.
1.அதையே நாடி சாஸ்திரமாக எழுதி வைக்கின்றார்கள்.
2.மற்றவர்கள் அந்த மந்திரத்தைச் சொன்னவுடனே அந்த ஆன்மா உடலுக்குள் போய்விடும்.

கோவிலுக்குச் சென்று அந்தத் தெய்வத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று சிலையைப் பார்த்துப் பதிவு செய்கிறோம். பதிவு செய்கிறோம் என்றால் மந்திரத்தைச் சொல்லித்தான் பதிவாக்குகின்றோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் “அது இன்ன மந்திரம்…!” என்று ஒன்று வைத்திருப்பார்கள். இதெல்லாம் அக்காலத்தில் அரசர்கள் செய்தது. அதற்கென்று ஐந்தாம்படையாக வைத்திருப்பார்கள். மந்திரங்களைத் தயார் செய்வதற்காக என்று ஒரு குல குருவையும் வைத்திருப்பார்கள்.

அப்படி உருவாக்கப்பட்ட அந்த மூல மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது உடலுக்குள் விளைந்த பின் அவர்களிடம் போய் அடிமையாக ஆகிறோம். அவன் நம்மை ஆட்டிப் படைப்பான்.

பிறருக்குச் சிக்காதபடி பல உணர்வின் தன்மையை அவன் எடுத்துக் கொள்கிறான். அவன் இவனைக் காட்டிலும் சிறியவன். தன் உணர்வின் வலிமை கொண்டு புகுந்த உடலை ஆட்டி படைத்து அவன் இச்சையை நிறைவேற்றுவான். இது சாகாக்கலை. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா.

இப்படித் தான் இன்னொரு கூட்டிற்குள் புகுந்து சக்தி பெற வேண்டும் என்றாலும்
1.புகுந்த உடலில் உள்ள இச்சைகளைக் கலந்து பல சரீரங்களையும் தாண்ட வேண்டியது வரும்.
2.ஆனால் புகுந்த உடலில் உள்ள இச்சைகளுடன் கலந்து விட்டால் விண் செல்ல முடியாது.

அதனால் தான் போகர் தன் உடல் கெட்டுப் போகாதபடி அதைக் காயகல்பமாக்கி உணர்வின் தன்மை – தான் எங்கே சென்றாலும் மாற்றி அமைத்து அந்தக் கூட்டிற்குள் வந்து விடும் நிலையாகச் செயல்படுத்திக் கொண்டிருந்தார்.

27 நட்சத்திரங்களின் இயக்கத்தால் விளைந்த வைரக்கற்கள் எடுக்கின்றான். நவகோள்களின் சத்துகளை அதைத் தனித்து இருக்கும் உணர்வை நுகர்கின்றான். அது தான் நவ பாஷாணம் என்பது. (ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வொரு விஷத்தன்மை உண்டு)

இருபத்தேழு நட்சத்திரங்களை நிலையை இணைத்து சூரியனில் இருந்து வரக்கூடிய அந்தப் பாதரசத்தை தனித்துப் பிரித்து அதையும் தனக்குள் எடுக்கின்றான். இருபத்தேழு நட்சத்திரத்தின் சக்தியும் நவகோளின் சக்தியும் பாதரசத்தையும் ஒன்றாகச் சேர்க்கின்றான்.

புழுவிலிருந்து மனிதன் வரை வளர்ந்து வந்த நிலையில் எதை எதை உணவாக எடுத்தானோ அந்தத் தாவர இனங்களின் சத்தை எல்லாம் சாரணையாக ஏற்றி மனிதனைப் போல் ஒரு சிலையாக உருவாக்குகின்றான் போகன்.

அந்தச் சிலை மேல் தண்ணீர் சொட்டு சொட்டாக விழும்படிச் செய்தான். தண்ணீரை விட்டபின் அதிலிருந்து (பூமியின் வெப்பத்தினால்) ஆவி கிளம்பும்.
1.போகனால் உருவாக்கப்பட்ட அந்த முருகனின் சிலையை நாம் உற்றுப் பார்த்தால் அந்த மணத்தை நாம் நுகர முடியும்.
2.முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் அந்த மணத்தை நுகர்ந்தால்
3.நம்மை அறியாது வந்த தீமைகளையும் பகைமைகளையும் அது அழிக்கின்றது.
4.இது தான் பழனி கோயிலின் தத்துவம்.

ஆனால் இப்போது என்ன செய்தார்கள்…? சந்தனத்தை அந்த்ச் சிலை மீது போட்டால் சிலை வேர்க்கும். வேர்த்த பின் அதைக் கலந்து எடுத்து மருந்தாக விற்றுக் காசு சம்பாரிப்பதற்கு ஆரம்பித்து விட்டார்கள்.

அதிலே காணாததற்குச் சிலையையே சுரண்டிக் கொடுக்க ஆரம்பித்தார்கள் அங்கே இருக்கும் வைத்தியர்கள்…! சிலையின் காலை இவர்கள் சுரண்டும் போது அந்த முருகனுக்குச் சக்தி இருந்தால் கேட்டு இருக்க வேண்டுமல்லவா…?

சிலையை சுரண்டி சுரண்டிச் சாப்பிட்டால் அப்பொழுது அந்த முருகன் யார்…? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆக அந்த ஆறாவது அறிவு கொண்டு உருவாக்கும் நிலைகள் தான் பிரம்மா. இவன் எதைச் செய்கின்றானோ அதைத்தான் உருவாக்கும் அந்த உயிர்.

அந்தச் (சுரண்டப்பட்ட) சிலையை மாற்ற வேண்டும் என்று கேட்டார்கள். ஏதாவது அதைத் தொட்டீர்கள் என்றால் தொட்டவன் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிப் போகும்…! என்று சொன்னேன்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் நிலைகளை மனிதன் பெறக்கூடிய தகுதியாக அந்தச் சிலையைப் போகன் அன்றைக்கு வைத்தான். அந்த அலைகளை எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சொன்னவன்.

சிலையைச் சுரண்டுகிறேன் என்று தனித்த நிலைகள் கொண்டு வியாபார ரீதியில் செய்தான் என்றால் ஒருவனும் உருப்பட மாட்டான். ஏமாற்றுபவனும் உருப்படி ஆக மாட்டான். மற்ற கோயில்களில இருக்கும் சிலை வேறு. இங்கே இதைச் செய்தான் என்றால் தவறு செய்தவன் நொறுங்கி போவான். மீண்டும் புழுவாகப் பூச்சியாகப் பாம்பாகத் தேளாகத் தான் பிறக்க வேண்டும்.

ஆகவே இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் அறிந்துணர்ந்த அந்த போகன் (5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த) உடலை விட்டு இன்னொரு கூட்டிற்குள் போகாதபடி தன் கூட்டைப் பதப்படுத்தினான்.

காயகல்ப சித்தி என்று இவர்கள் எல்லாம் சொல்வார்கள். வைத்தியரீதியில் எடுத்தோம் என்றால் ஆயக்கலைகள் என்று சாகாக்கலை என்பார்கள். ஆனால் சாகாக்கலை என்றால் என்ன என்றே தெரியாது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இந்த உடலில் இருந்து சாகாக்கலையாக உருவாக்குகின்றது. இந்த உடலில் எதைச் செய்கிறோமோ அதை எடுத்து இன்னொரு உடலுக்குள்ளும் சென்று அதையே இயக்கும்.
1.ஒருவன் தற்கொலை செய்தான் என்றால் இது சாகாக்கலை.
2.நோயால் இருக்கும் போது இறந்தான் என்றால் இது சாகாக்கலை.
3.ஏனென்றால் இது எல்லாம் அடுத்த உடலுக்குள் சென்றாலும் அதையே இயக்கும்.
4.மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும்.

ஆனால் விண்ணின் ஆற்றல் பெற்று ஒளியின் சரீரமாக ஆனவர்கள் மகரிஷிகள். அது வேகாக்கலை… வேகா நிலை…! வேகா நிலை பெற்று விட்டால் அது இன்னொரு உடலுக்குள் புகாது. பிறவா நிலை என்பது அது தான்.

நட்சத்திரங்களின் இயக்கத்தை இப்படி அறிந்து கொண்ட போகன் இன்னொரு கூட்டிற்குள் எப்படிப் போவான்…? அவன் சாகாக்கலையில் இல்லை. ஆகையினால் அவன் ஒளியின் சரீரம் ஆகின்றான். ஒளியின் சரீரம் ஆனாலும் உந்தித் தள்ளி விண்ணுக்கு அனுப்பும் வழி இல்லை.

சொல்வது அர்த்தம் ஆகின்றதா…?

உயிராத்மாவில் அந்த முகப்பு வரவேண்டும். இருந்தாலும் இந்த அலைகள் வருகின்றது. இன்னொரு கூட்டிற்குள் போகவில்லை.

அப்போது தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் (ஞானகுரு) உணர்த்துகின்றார்.
1.அவன் பெரிய திருடன்…!
2.வானத்தையே திருடியிருக்கிறான்…!
3.விண் செல்லும் நிலையைத் (பாதை) திருடத் தெரியவில்லை.
4.ஆக நீயும் ஒரு திருடன்டா…! என்கிறார்.

வானுலக உணர்வின் தன்மையை நீ எடுத்து போகனுக்கு அதை எண்ணி
1.அந்த உணர்வின் பாதையை உனது நினைவு கொண்டு அந்த ஆன்மாவுடன் தொடர்பு கொள்.
2.விண்ணுலக உணர்வின் தன்மை கொண்டு அந்த முகப்பைக் கூட்டு..
3.பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளி நிலை பெற வேண்டும் என்று
4.அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு…! அவருடைய ஆசியுடன் அவரை விண் செலுத்து…! என்றார் குருநாதர்.

அங்கே அவரை விண் செலுத்தியது போல் இப்படித் தான் இராமலிங்க அடிகளையும் விவேகானந்தரையும் காந்தி அடிகளையும் அன்றைக்கு இதே மாதிரி விண் செலுத்தும்படி சொன்னார். ஒன்று இரண்டு அல்ல.

1.விண்ணுலக உணர்வின் தன்மையை உயிராத்மாவின் முகப்பிலே எப்படிச் சேர்க்க வேண்டும்…?
2.அந்த ஆன்மாக்களை எப்படி விண் செலுத்த வேண்டும்…? என்று எம்மைப் பழக்கப்படுத்தினார்.
3.குருநாதர் தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்… என்பதற்காக இந்த வேலையைச் செய்தார்.

இது சாதாரணமானதல்ல…!

நம் குருநாதரும் எத்தனையோ உடல்கள் தாவியவர்தான். ஆனாலும்
1.அதற்குத் தகுந்த உடல்கள் பெறவில்லை.
2.அதற்கு தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை. அவரவர் இச்சைக்குத் தான் கொண்டு செல்கின்றார்கள்.
3.அதற்குகந்த உடலாகக் கடைசியில் இந்த உடலிலிருந்து தான் உண்மைகளை வெளிப்படுத்தினார் (ஈஸ்வரபட்டர்)
4.அந்தக் குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள்.

இதை எல்லாம் எத்ற்காகச் சொல்கிறோம் என்றால் இந்த உடலுக்குப் பின் மனிதன் விண் செல்ல வேண்டியதன் உண்மைகளை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் பிறவி இல்லா நிலையை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் குருநாதர் காட்டிய முறைப்படி இதைச் சொல்கிறோம்.

குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம் எடுத்து வளர்க்கச் சொல்வதன் “உண்மையான நோக்கம் என்ன…?”

end of solar system

குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம் எடுத்து வளர்க்கச் சொல்வதன் “உண்மையான நோக்கம் என்ன…?”

 

பிரபஞ்சத்திலுள்ள கோள்கள் எல்லாம் ஒரே நேர் கோட்டில் வரப்படும் போது தான் சில பூமியினுடைய ஈர்ப்புத் தன்மை குறைகிறது. (இது ஏற்கனவே இந்த மாதிரி ஆகி விட்டது).
1.அதனால் நம் பூமி ஒரு நிமிடம் வித்தியாசத்தில் வரும்.
2.அதனால் வித்தியாசத்திற்குப் பூமி சூரியனை விட்டு நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகும்.
3.இதே மாதிரி மற்ற கோள்களும் நகர்ந்து நகர்ந்து வித்தியாசமாகப் போகும்.

கீழே இருக்கும் கோள்கள் தடுத்து நிறுத்தி விட்டது என்றால் இந்த (சூரியனின்) ஈர்ப்பு இல்லை என்றால் நகர்ந்து மேலே போகும். அதற்கு மேல் இருக்கும் கோள்கள் அப்படியே நகன்று நகன்று மேலே போகும். (மேலே என்றால் ஈர்ப்பை விட்டு வெளியே என்று அர்த்தம்)

நகர்ந்து மேலே போகும் கோள்கள் எல்லாம் என்ன செய்யும்…? இது நட்சத்திரங்களாக மாறும் சக்தி கிடைக்கிறது. இதே மாதிரி ஈர்ப்புத் தன்மை இல்லை என்கிற போது இந்த 27 நட்சத்திரங்களும் நகர்ந்து செல்லும்.

ஆக அப்படி நகர்ந்து செல்லப்போகும் போது மற்ற உணர்வுகள் எடுத்து நம் பிரபஞ்சம் முதலில் எப்படி உருவானதோ அது போல் இந்த 27 நட்சத்திரங்களும் அது அது தன் வளர்ச்சிக்குண்டான நிலையில் கோள்களை உருவாக்கும்.

கார்த்திகை நட்சத்திரம் ஒரு சூரிய குடும்பமாக வளர ஆரம்பித்து விட்டது. இதே மாதிரி மற்ற நட்சத்திரங்களும் தனித் தனிப் பிரபஞ்சமாகிவிட்டால் இந்தச் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்படும்.

அதனால் தான் நம் சூரியனில் அநேகமாக இந்தக் கருப்பு நிலைகள் (SUNSPOT) அதிகமாக வருகிறது. ஒளியாக மாற்றுவதற்குண்டான நிலைகள் மாறிப் போகும்…. மாறிக் கொண்டிருக்கிறது…!
1.அப்படி மாறியது என்றால் இன்னும் கொஞ்ச காலத்தில் சூரியன் மங்கிப் போய்விடும்.
2.அதனுடன் சேர்ந்த (நம்) பூமி எங்கே போகும்…? என்று சொல்ல முடியாது.

மற்றொரு சூரியக் குடும்பம் அழிந்து அதிலிருந்து கரைந்து வந்த ஒரு கோள் வியாழன் கோளில் ஏற்கனவே சுமார் 25 வருடத்திற்கு முன்னாடி விழுந்ததது அல்லவா…! பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். (விழுவதற்கு முன்னாடி குருநாதர் காட்டிய வழியில் இந்த மாதிரி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னேன்… பழைய அன்பர்களுக்குத் தெரியும்)

நம் பூமியில் விழுந்திருந்தால் நாமும் அம்போ தான். ஏனென்றால் அந்தக் கல் நம் பூமியைப் போல ஒரு இரண்டு மடங்கு. ஆனால் வியாழன் கோளில் பனிப்பாறைகள் அதிகமாக இருப்பதால் அதற்குள் போய் அமிழ்ந்து விட்டது.

வியாழன் கோள் முழுவதுமே பனிப்பாறைகளாக உள்ளது. இப்போது நாம் வாழும் பூமியும் சூரியனின் ஈர்ப்பை விட்டுக் கொஞ்சம் நகன்று விட்டதென்றால் முழுவதும் பனியாக உறைந்து விடும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் சூரியனாக வளர்ச்சி ஆகிவிட்டது என்றால் அந்தச் சூரியனுக்கு சாப்பாடு கிடைக்காது பிற மண்டலத்திலிருந்து சக்திகளை நட்சத்திரங்கள் எடுத்து கொடுக்கவில்லை என்றால் சூரியன் மங்கலாகிவிடும்.

கார்த்திகை நட்சத்திரம் ஏற்கனவே விலகிப் போய்விட்டது. அதைப் போல ஒரு ஐந்தாறு (ரேவதி அசுவினி) நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரபஞ்சமாக வளர்ந்து கொண்டுள்ளது. மற்ற நட்சத்திரங்களும் அதைப் போன்ற நிலைகள் கூடியசீக்கிரம் ஆகும்.

1.நாம் குழந்தையைப் பெற்று அது வளர்ச்சி அடைந்தவுடனே அது ஒரு குடும்பமாகப் பிரிந்து போகிற
2.அதே மாதிரித் தான் சூரிய குடும்பத்திலேயும் நட்சத்திரங்கள் சூரியனாகும் பருவம் வந்த பின்
3.தனக்கென்ற ஒரு குடும்பமாகப் பிரிந்து போய்விடும்.
4.பிரிந்த பிற்பாடு நாளுக்கு நாள் இந்தச் சூரியன் செயல் இழக்கும் தன்மை ஆகும்.
5.அதனுடன் சேர்ந்த பூமி கரைந்து ஓடும்.

அப்பொழுது பூமிக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் என்ன செய்யும்….? மற்ற உயிரினங்களுக்கு இது குருவாகும். நம் வியாழன் கோளில் இதைப் போன்ற மற்ற நிலைகள் சிக்கப்பட்டு அதன் மூலமாக இந்தப் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது.

வியாழன் கோளில் இன்னும் உயிர் அணுக்களினுடைய நிலைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. அதிலிருந்து தோன்றியது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்து நம் பிரபஞ்சத்தில் பரவப்பட்டு வருகிறது.

அத்தகைய கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதனால் வியாழன் கோள் தான் உயிரணுக்களின் தோற்றத்திற்கு மூல காரணமாகின்றது. அதில் இருந்து வரும் கரு இல்லை என்றால் உயிர் அணுக்ககளின் தோற்றமே இல்லை.
1.அதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.
2.சும்மா சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

நாம் வாழும் இந்தச் சூரியனும் செயலிழக்கும் தன்மைக்கு இப்பொழுது வந்துவிட்டது. இன்று நாம் மனிதராக இருந்தாலும் இந்தச் சூரியக் குடும்பம் அழிந்து விட்டது என்றால் அணுக்களாகப் போவோம். மீண்டும் பிரபஞ்சத்தில மிதப்போம். ஏதாவது கோளுக்கு இழுத்துக் கொண்டு போகும்.

அந்த கோள்களில் அதற்குண்டான சத்து இல்லை என்றால் புழுவாகவோ பூச்சிகளாவோ கிருமிகளாவோ தான் வளர முடியும். வேறு வழி இல்லை. நம்மை விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டு இருக்கும்.

நம் பூமியில் தாவர இனங்கள் இருக்கிறது. அதனால் மனிதனாக இருகின்றோம். தாவர இனங்கள் அழிந்து போய்விட்டது என்றால் உயிரினங்கள் வாழ முடியாது.
1.அப்படி நாம் வெளியிலே போய்விட்டால் அப்புறம் எந்தக் கோளுக்குள் நாம் போவோம்…?
2.என்ன ஆவோம்…? என்று சொல்ல முடியாது.

இதிலிருந்து தப்புவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இத்தனை வேலையும் செய்து கொண்டிருக்கின்றோம்.

விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் எடுத்து உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் சேர்த்துக் கொண்ட ஒளியான உணர்வுக்கொப்ப
2.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.
3.வேகா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.
4.உயிருடன் சேர்த்து ஒளியாக்கப்படும் போது அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் நாம் போகலாம்.

சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமானது…

Patriots souls

சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமானது…

நாமெல்லாம் மகிழ்ந்திட வேண்டும் என்றும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னைத்தானே அர்ப்பணித்த தியாகிகள் நம் நாட்டில் நிறையப் பேர் உண்டு.

தன் குடும்பத்தையும் எண்ணாது தன் சகோதரர்கள் குடும்பத்தைக் காத்துக் கொள்வார்கள்… அவர்கள் இருக்க நமக்கு ஏன் பயம்…? என்ற நினைவு கொண்டு தான் அவர்கள் செயல்பட்டார்கள்.

1.நம் நாட்டு மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.தன் உடலையே அர்ப்பணித்து அதனின் நிலைகள் கொண்டு உயிர் நீத்துச் சென்ற
3.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் இங்கே காற்றிலே தான் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இன்றைய நிலையில் சுதந்திர வேட்கையான உணர்வுகள் நம் நாட்டிலே அற்றுப் போயிருப்பதால் நமது நாடு… நமது மக்கள்… நமது சகோதரர்கள்…! என்று எண்ணிச் செயல்பட்ட அந்த உயிரான்மாக்கள்
1.மறு பிறவி எடுக்க முடியாத நிலைகளிலும்
2.இன்னொரு உடலுக்குள் புகுந்து
3.அவர்கள் கண்டுணர்ந்த நல் உணர்வுகளை வழி நடத்திடும் நிலையும் இல்லாதே போய் விட்டது.

அதே போன்று ஒருவருக்கொருவர் பிரித்தாளும் நிலைகளில் இருந்து மக்களைக் காத்திட வேண்டும் என்ற எண்ணங்களை ஓங்கி வளர்த்துக் கொண்ட மகாத்மா காந்திஜியின் எண்ணத்தையும் எடுக்க நாம் யாரும் துணியவில்லை.

“நாம் எல்லாம் ஓர் இனம்…! நம் நாட்டைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் உயிர் நீத்த பகத்சிங் போன்ற ஏனைய எத்தனையோ பேர் இருந்தாலும் அவர்களைப் போல எண்ணங்கள் கொண்டுள்ளோரும் இன்று யாரும் இல்லை.

அவர்களை ஒத்த எண்ணங்கள் இருந்திருந்தால் அந்த உயிர் நீத்தோரின் ஆன்மாக்கள் அவர்களை ஒத்த எண்ணத்தைக் கொண்ட உடலுக்குள் புகுந்து
1.அவர்கள் செய்த வீரிய உணர்வின் நிலைகளில்
2.நம் நாட்டைக் காத்திடும் உணர்வின் எண்ணங்கள் இன்று ஓங்கி வளர்ந்து இருக்கும்.
3.காலத்தால் அத்தகைய நிலைகள் வழித் தொடராதபடி ஆகிவிட்டது.

நாமெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று நாட்டுப் பற்றுடன் உயிர் நீத்த அந்த உயிரான்மாக்கள் இன்றும் பூமியில் பிறவியற்ற நிலைகள் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இருப்பினும் இன்று விஞ்ஞான உலகில் அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலை வளர்த்துக் கொண்ட நிலையில் கதிரியக்கச் சக்திகளைப் பாய்ச்சப்படும் போது அந்தக் கதிரியக்கங்கள் நம்மைக் காத்திட்ட அந்த உயிராத்மாக்களின் உணர்வின் தன்மையை அழித்து விடுகின்றது.

ஆனால் அந்த உயிராத்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் புகுந்திருந்தால் மக்களைக் காத்திடும் வலு கொண்டு நல் வழி காட்டி இருக்கும். நம்மைச் சகோதர உணர்வுடன் வாழச் செய்து கொண்டிருக்கும்.

அப்படி இல்லாதபடி விஞ்ஞான அறிவால் அணுவைப் பிளந்து கதிரியக்கச் சக்தி கொண்டு
1.அதை வெடித்தவுடனே ஒரு நொடிக்குள் உடலை அழிப்பது போன்று
2.உயிராத்மாவுடன் சேர்த்துக் கொண்ட சிந்தித்துச் செயல்படும் நல்ல மனித உணர்வுகளையும் அழித்து விடுகின்றது.

அதனால் நம்மைக் காத்தருளிய அந்த உயிரான்மாக்கள் குறுகிய உணர்வு கொண்டு புழுவாகவும் பூச்சியாகவும் அடுத்துப் பிறக்கும் நிலை ஏற்படுகின்றது.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு அவ்வாறு உயிர் நீத்த உயர்ந்த எண்ணம் கொண்ட அந்த உயிராத்மாக்கள் விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே அணு விசையால் தாக்கப்பட்டு விஷம் தோய்ந்து விட்டது.

ஏனென்றால் மெய் ஞானிகள் காட்டிய நெறிகளை நாம் கடைபிடிக்காததனால் இந்திய மண்ணில் தோன்றிய அத்தகைய உயர்ந்த ஆன்மாக்கள் புழுவாகவும் பூச்சியாகவும் பிறக்கும் நிலை உருவாகி விட்டது.

விஞ்ஞான அறிவால் தீமைகள் வந்தாலும் அதிலிருந்து நம்மை மீட்டிடும் உணர்வாக மெய் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி உலக மக்கள் அனைவரும் மொழியால் மதத்தால் பிரித்தாளாதபடி “நாம் அனைவரும் சகோதரர்கள் என்றும்… ஆண்டவனின் பிள்ளைகள் என்றும்…!” ஒன்றி வாழ்தல் வேண்டும்.

நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில்
1.மதமல்ல நமக்குச் சொந்தம்
2.இனமல்ல நமக்குச் சொந்தம்
3.மொழியல்ல நமக்குச் சொந்தம்
4.அனைத்து மக்களின் “நட்பு கொண்ட உணர்வே நமக்குச் சொந்தம்…! என்ற நிலைகள் கொண்டு
5.நாம் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும்.

உலகில் உள்ள ஏனைய மக்கள் உடல்களிலும் தீமைகளை உருவாக்கும் உணர்வுகள் விளையாது தீமைகளை அகற்றிடும் மெய் ஞானிகளின் உணர்வுகள் உட்புகுந்து மனிதன் என்ற நிலையில் சிந்தித்துச் செயல்படும் அந்த உணர்வின் ஆற்றல்கள் வளர்ந்திட வேண்டும் என்ற நினைவினை ஒவ்வொருவரும் நமக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் தீமைகள் அணுகாதபடி நம்மைக் காத்திட்ட நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட
1.அந்தத் தியாகிகளின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அனைத்து உயிரான்மாக்களையும்
2.நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்
3.அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

தீமையான உணர்வுகள் நம் யாரையும் அடிமைப்படுத்தாதபடி நல்ல உணர்வுகள் என்றுமே சீராக இயங்குபடியான சுதந்திரத்தை நாம் அனைவரும் பெறுவோம்.

இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…?

Ultimate destination

இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…?

நமக்கு இரண்டு கை இருக்கிறது, இரண்டு கால் இருக்கிறது. மற்ற உயிரினங்கள் என்ன செய்கிறது…?

உதாரணமாகத் தூக்கணாங் குருவியைப் பாருங்கள். அதைப் பார்த்தீர்கள் என்றால் பயங்கரமாகப் பின்னி அது தன் வீட்டைக் கட்டுகிறது. அதே போல இன்னொரு குருவி இருக்கிறது. காலையில் இராகமாகப் பாட்டுப் பாடுகிறது. மிக மிகச் சிறியதாகத் தான் இருக்கும்.

முதலில் எனக்கு (ஞானகுரு) இது என்ன என்று தெரியவில்லை. குருநாதர் காட்டிய வழியில் சில அனுபவங்கள் பெறுவதற்காக நான் கொல்லூரில் இருக்கும் போது அதிகாலையில் பார்த்தால் இராகங்கள் போடுகிறது.

அதைக் கவனிடா…! என்றார் குருநாதர். அப்போது அதைக் கவனித்து பார்க்கும் போது அந்தக் குருவியின் உடல் மிகச் சிறியது. இங்கே இருக்கக்கூடிய சிட்டுக்குருவி வேறு. அதைக் காட்டிலும் உடல் சிறியது.

காலையில் 4.30 மணிக்கு அவை பாட்டு பாடுவதைப் பார்க்க வேண்டும். இந்தப் பக்கம் இது ஒன்று பாடுகிறது, இன்னொன்று அந்தப் பக்கம் பாடுகிறது. அடுத்தடுத்து ஒன்று ஒன்றாகப் பாடுகிறது.

அந்தக் குருவிகளின் பாஷையில் நீ ஒன்றை விடுடா…! என்றார் குருநாதர். ஒன்றொன்றாகத் தொடர்ந்து ஒவ்வொரு பாஷையாக கற்றுக் கொள்ள வைத்தார்.

அப்போது அவர் சொன்ன மாதிரி அதன் பாஷையில் பேசியவுடனே அந்தப் பறவைகள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது…! என்ன செய்கிறது…! என்று பார்த்தேன்.

அது கூடு கட்டுவதை நீ இன்னும் பார்க்கவே இல்லை. அதைப் போய்ப் பார்… என்று சொன்னார். நீ அந்தக் குருவிகளின் பாஷையில் பேசி “நைஸ்…!” (NICE) பண்ணி விட்டு அது எங்கே கூடு கட்டுகிறதோ அந்த மரத்தடியில் இரு என்றார்.

அது எப்படி எவ்வளவு அழகாகப் பின்னுகிறது என்று பார். இலைக்கு இலைக்கு வைத்து ரொம்ப அபூர்வமாகத் தங்க் கூட்டைப் பின்னுவதைப் பார்..! என்று குருநாதர் இப்படியெல்லாம் என்னைப் பார்க்கச் சொன்னார்.

இப்படிப் பல பல நிலைகளை நேரடியாகக் காட்டினார். காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் நாட்டுக்குள்ளும் சென்று அனுபவம் பெறச் செய்தார் குருநாதர்.

அப்படி அனுபவபூர்வமாகப் பெற்ற நிலைகளை உங்களிடம் அந்த அருள் ஞானிகளைப் பற்றி லேசாகச் சொன்ன உடனே “என்னத்த இவர் சொல்கிறார்,..?” என்று நினைக்கின்றீர்கள்.

தேங்காய் பழம் இரண்டை வாங்கிக் கொண்டு போய் கோவிலில் வைத்து உடைத்து ரெண்டு காசைக் கொடுத்து அர்ச்சனை பண்ணிவிட்டுப் போனால் “எல்லாமே சரியாகப் போகிறது…!” என்று சொல்லிவிட்டுப் போகிறவர்கள் இருக்கிறார்கள்.

விஞ்ஞான நிலைகளால் நடக்கும் எத்தனையோ கொடுமைகளைப் பார்க்கிறோம். அதை மாற்றுவதற்கு என்ன வழி…? என்று அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை யாம் சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதில்லை.

நம் குழந்தையாக இருக்கலாம். அதே சமயம் அது அறியாத நிலைகளில் அதற்குள் அசுர உணர்வுகள் இருந்தாலும் நாம் குழந்தைக்குச் செய்ய வேண்டியது என்ன…?

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் எடுத்து வலிமை பெறச் செய்து அவனிடம் உள்ள தீய குணங்கள் போக வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

காரணம் நாம் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இதில் நாம் சொந்தமும் பந்தமும் பாசமும் அதிகமான நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால்
1.பாசத்தால் நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சுவாசத்தின் தன்மை
2.எத்தகைய நினைவுகள் கொண்டு நாம் விரக்தியான உணர்வைச் சுவாசிக்கின்றோமோ
3.சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக்கியே விடுகின்றது. (நம் உடலாகச் சிருஷ்டித்து விடுகின்றது)
4.அந்த உணர்வின் இயக்கத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.
5.ஆயிரம் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்தாலும் சரி…
6.பெரும் யாகத்தைச் செய்து பல ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போட்டு
7.அவர்களை எல்லாம் மகிழ்ச்சி அடையச் செய்தால் நமக்குப் பெரிய புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்துச் செய்தாலும் சரி…
8.சுவாசத்தின் மூலமாக நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை உயிர் எனக்குள் சிருஷ்டித்தே விடுகின்றான்.
9.அவனிடமிருந்து நான் தப்ப முடியாது.

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ உயிரிலே பட்டவுடன் அதை இயக்கி உணர்ச்சிகளாக உடல் முழுவதற்கும் பரவச் செய்கின்றது. அந்த உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்படுகின்றது.
1.உடலான சிவத்திற்குள் அது ஐக்கியமாகின்றது.
2.சக்தியின் ஸ்வரூபமாக உடலுக்குள் அது வித்தாக விளைய ஆரம்பித்து விடுகிறது.
3.விளைந்த வித்தின் தன்மையை உயிராத்மாவாகத் (உயிரிலே முலாமாக) தனக்குள் சேர்த்துக் கொள்கிறான்.
4.இந்த கூட்டை விட்டுச் சென்ற உடனே “வா என் பின்னாலே…!” என்கிறான்.

துன்பங்கள் படும் பொழுது அல்லது மற்றவரைத் துன்பப்படுத்தும் பொழுது எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோமோ இந்த உணர்வுகள் அனைத்தும் உடலில் விளைந்து உயிருடன் ஐக்கியமான பின் அடுத்த பிறவியில் அங்கங்கள் குறைந்த உடலுக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றான் (உயிர்).

அதாவது மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து எந்த அளவிற்கு மகிழ்ந்தோமோ அந்த வேதனையின் தன்மை நமக்கு மகிழ்ச்சியாகி அடுத்து வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.

இரண்டு பேர் நமக்குப் பிடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நல்ல நிலையில் நாம் இருந்தாலும் சரி அவர்களைப் பார்த்தவுடனே
1.திட்டுவதே உங்களுக்குக் குறியாக வந்து விடும்.
2.அந்த வேகமான நிலைகள் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும்
3.அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டாலே நமக்குள் எரிச்சலை ஊட்டிக் கொண்டே இருக்கும்
4.ஆனால் அந்த எரிச்சல் வருவது நமக்குத் தெரியாது
5.ஆக அந்த எரிச்சல் இருந்தால் தான் நமக்கு மகிழ்ச்சி
6.அதே சமயம் அந்த எரிச்சல் நம் உடலில் இருந்து கொண்டே இருக்கும
7.நமக்கு வேண்டாதவர்கள் துன்பப்பட்டால் அந்த இடத்தில் தான் நமக்கு மகிழ்ச்சி வரும்.

எந்தத் துன்பத்தின் நிலைகளைக் கண்டு அந்த உணர்வை ரசித்துச் சுவாசிக்கும் பொழுது நமக்குள் மகிழ்ச்சியாகின்றதோ அதன் விளைவாக மற்றதை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் விஷ ஜெந்துக்களாகப் பாம்பாக நம்மைப் பிறக்கச் செய்துவிடும் நம் உயிர்.

இதை நன்றாகக் கவனமாகக் கவனிக்க வேண்டும் ஏனென்றால் செத்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைப்பீர்கள். இந்த உணர்வினுடைய செயல்கள் இப்படித்தான் ஆகும்.

ஆனால் இந்தத் துன்பத்திற்கெல்லாம் ஆளாக்கித் தான் குருநாதர் எனக்கு அந்தப் படிப்பினையே கொடுத்தார். யாம் நேரடியாகவே உங்களுக்குள் சொல்லாகக் கொடுத்து அந்த மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறோம்.
1.நாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்.
2.இந்தச் சரீரத்தில் நாம் எவ்வளவு காலம் இருக்கின்றோம்…?
3.வாழும் காலத்தில் எதை நாம் வளர்க்க வேண்டும்…?
4.உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…! பிறவியில்லா நிலை அடைந்த அந்த மகரிஷிகள் வாழும் இடமே நம் எல்லையாகக் கருத்தில் கொண்டு நாம் வாழ வேண்டும்.

இறந்த தாய் தந்தையர்களோ நம் முன்னோர்களோ கனவில் வந்தால் நாம் என்ன நினைக்கின்றோம்…?

Dosam

இறந்த தாய் தந்தையர்களோ நம் முன்னோர்களோ “கனவில் வந்தால்…! நாம் என்ன நினைக்கின்றோம்…?

அம்மா அப்பா அல்லது மூதாதையர்கள் இறந்தார்கள் என்றால் அவர்கள் நினைவாக இன்று என்ன செய்கிறார்கள்…?

கறியைச் சாப்பிட்டவர்கள் என்பதால் கறியை வைத்தேன். வெண்டைக்காயைச் சாப்பிட்டார்கள் என்றால் வெண்டைக்காயை வைத்தேன். சுண்டைக்காய் சாப்பிட்டார்கள் நான் சுண்டைக்காயை வைத்தேன்.

நீங்கள் உடுத்திய துணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்கின்றேன். “நீ எங்கேயும் போகாதே…!” என்று சொல்லிச் சொந்த பந்தம் என்று எல்லாரையும் கூப்பிட்டு கும்பிட்டுக் கொள்கின்றோம். இப்படித்தான் நினைவு நாளில் செயல்படுத்துகின்றோம்.

இப்படிக் கும்பிட்ட பின் அப்பாவோ அம்மாவோ யாராவது கனவில் வந்து விட்டால் என்ன சொல்கிறார்கள்…?

தினம் தினம் கனவில் வருகின்றார்கள். அதனால் நான் சீக்கிரம் போய்விடுவேன். எங்கள் அப்பா (அல்லது அம்மா) இருக்கிற இடத்திற்கு கூப்பிடுகின்றார்கள்…! என்று இப்படி ஒரு சாஸ்திரம் உருவாகிவிட்டது.

கடைசியில் என்ன செய்வோம்…? கனவில் வராமல் இருப்பதற்காக வேண்டி எங்கெங்கெயோ ஓடி அலைந்து காசைக் கொடுத்துச் செலவழித்து
1.இப்படி வருகின்றார்… அப்படி வருகின்றார்… என்று இரவெல்லாம் புலம்பி
2.ஐய்யய்யோ…! நான் போய்விடுவேனே போய்விடுவேனே…! என்று சொல்லிக் கொண்டு
3.பல துன்பங்கள் வருவதால் அவர்கள் கனவில் வரக்கூடாது…
4.வந்தால் நம்மைக் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களே…! என்ற இந்தப் பயம்.
5.ஆனால் பிடித்தமானது எல்லாவற்றையும் வைத்து “அவர்களைக் கூப்பிடுவது நாம் தான்…!”

அதற்காக வேண்டிப் பிண்டத்தை வைத்துக் கொடுத்தால் அவர்கள் போய்விடுவார்கள் என்று ஒரு சாங்கியத்தைச் செய்வார்கள்.

இறந்தவர்கள் சுடுகாட்டிலே எரிக்கும் பொழுதோ அல்லது புதைக்கும் பொழுதோ இடது கையால் வைத்துச் செய்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும். இல்லை என்றால் திரும்பி வந்து விடும்…! அதனால் அந்த நினைப்பை விட்டுவிடாதே…! என்று இப்படி எல்லாம் சாங்கியத்தைச் சொல்லி நம்மைச் சிந்திக்கவிடாமல் செய்து வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் நம்மைப் பெற்று வளர்த்து நமக்காக வேண்டிப் பாடுபட்டவர்களின் உயிராத்மாக்களை உயர்ந்த நிலை பெறச் செய்து ஒளியின் சரீரமாமாக்கி அவர்களை விண்ணிற்குச் செலுத்தும்படி ஞானிகள் காட்டியிருந்தாலும் அந்த முறைப்படி யாருமே செய்யவில்லை.

இறந்தவர்களை அழைத்துச் சாப்பாடு போடவேண்டும் என்பார்கள். ஆனால் எந்தச் சாப்பாட்டைப் போட வேண்டும்…?
1.கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமான ஞானிகளின் உணர்வுகளை
2.அந்த அருள் ஞான உணர்வை உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.இப்படிச் செய்தால் “ரிமோட் கண்ட்ரோல்…! (REMOTE CONTROL)

இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு சிறு பொம்மையைக் கூட ரிமோட் (REMOTE) மூலம் இயக்கிக் காட்டுகின்றார்கள்.
1.ஒரு பட்டனைத் தட்டியவுடனே என்ன செய்கிறது…?
2.பொம்மைக்குள் இருக்கக்கூடிய மேக்னட்
3.நாம் எண்ணியவுடனே “இங்கே போ…! என்று சொன்னால் அவ்வாறு இயங்குகின்றது.
4.”நில்…!” என்று சொன்னால் அது நிற்கின்றது.
5.உணர்வின் ஒலி அலைகளுக்குத் தக்க பொம்மையைச் செய்து ஆட வைக்கின்றான் விஞ்ஞானி.

அன்றைய மெய் ஞானிகளோ முன்னோர்களை விண் செலுத்தி அவர்களைப் ஒளிச் சரீரம் பெற்ச் செய்து அவர்கள் மூலம் விண்ணின் ஆற்றலை ரிமோட் சக்தியாகப் பெறுவதற்கு நமக்கு வழிகாட்டினான்.

விண்ணின் ஆற்றலை வளர்த்து அந்த மெய்ஞானி உணர்வைக் கொண்டு
1.இதை உன்னுடைய கண்ட்ரோலிற்கு (CONTROL) கொண்டு வந்து
2.”பிறவா நிலைக்குக் கொண்டுபோ…! என்று தெளிவாக்கியுள்ளான்.

குழந்தை இல்லாதவர்கள் நரகலோகம் போவார்கள் என்று ஒரு சாஸ்திரத்தை எழுதி வைத்தான். இறந்தபின் உயிராத்மாவை உந்தி மேலே விண் செலுத்தவதற்குக் குழந்தை வேண்டும்.
1.அருள் உணர்வுகளை வினையாகச் சேர்த்து
2.விண்ணுக்குச் செலுத்த அன்று அப்படிச் சொன்னான் ஞானி
3.அதை மறந்துவிட்டோம்.

ஆனால் இப்போது குழந்தை இருக்கின்றவர்களுக்கு பெரிய நரகலோகமே இருக்கின்றது. ஏனென்றால்
1.குழந்தை என்ன செய்கிறானோ…? எங்கே போனானோ…?
2.நம் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறானே…?
3.நான் சம்பாதித்த காசைப் பார்ப்பானா…? பார்க்க மாட்டானா…?
4.இப்படி இருக்கின்றானே…? அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…?
5.இப்படி அவனை நினைத்து நினைத்துக் கை கால் குடைகின்றது என்று வேதனையைப் பட்டுப் பட்டு அவஸ்தைப்படுகின்றோம்
6.அவனையும் நரகலோகமாக ஆக்கி விடுகின்றோம்.
7.கடைசியில் நாமும் அங்கேதான் போய் விடுகின்றோம்.

இதிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத்தான் அன்று அந்த மகா ஞானிகள் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்து நீ எந்த வினையைச் சேர்க்க வேண்டும்…? என்று கேள்விக் குறி போட்டுக் காட்டியுள்ளார்கள்.

அவர்கள் காட்டிய தத்துவப்படி நல்ல வினைகளை நமக்குள் நாம் சேர்க்கின்றோமா…? நம் முன்னோர்களைப் பிறவி இல்லா நிலை பெறச் செய்தோமா…? நம் குழந்தைகளை அந்த அருள் வழியில் வழி நடத்துகின்றோமா…? என்று சிந்தித்துப் பாருங்கள்.

காசைக் கொடுத்து விலைக்கு வாங்குவதில் தான் நாட்டம் செலுத்துகின்றோமே தவிர யாரோ செய்து கொடுப்பார்கள் என்று தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோமே தவிர ஞானிகள் சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் இல்லை…!

முற்றுப் புள்ளி வைத்து…! விண் செல்வதே மனிதனின் கடைசி எல்லை

Lord Agasthiyar

“முற்றுப் புள்ளி வைத்து…!” விண் செல்வதே மனிதனின் கடைசி எல்லை

இயற்கையில் இந்த மண்ணிலே விளைந்த தாவர இனச் சத்துக்களைப் பிழிந்து அதை உட்கொண்டே பழகியவர்கள் தான் நாம். நாம் அந்த விண்ணுலக ஆற்றலை நேரடியாக எடுத்து நமக்குள் அதை ஜீரணித்துச் சத்தாக மாற்றும் பழக்கம் வர வேண்டும்.

1.மெய் ஞானியின் அருள் உணர்வை எண்ணத்தாலே நாம் சுவாசித்து
2.அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் சேர்த்து அதைக் கொண்டு
3.விநாயகர் சதுர்த்தி என்று முற்றுப் புள்ளி வைத்துவிட்டு
4.நாம் விண் செல்வதே மனிதனின் கடைசி நிலை

மெய் ஒளியின் தன்மையை அந்தப் புதுமையான வித்துக்களை நமக்குள் சேர்த்து விண்ணுலகம் சென்று அடைவதே விநாயகர் சதுர்த்தி.
1.இந்த மனித வாழ்க்கையில் பெற்ற இந்த நிலையை மாற்றி
2.விண்ணுலகின் ஆற்றலைப் பெறும் தகுதிக்கே இந்த உபதேசம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி யாம் (ஞானகுரு) உபதேசமாகக் கொடுக்கும் உணர்வின் வித்துக்கள் அனைத்தும் உங்கள் புலனறிவுக்குள் ஈர்க்கப்படும் பொழுது உங்கள் உமிழ் நீரெல்லாம் சுவையாகச் சுரந்திருக்கும்.
1.அந்த உமிழ் நீரே நீங்கள் விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதியாக
2.அமுதாக உங்கள் உடலுக்குள் இணைகின்றது.

நீங்கள் தினசரி அதிகாலையில் எடுக்கும் துருவ தியானத்தால் அந்த வித்தின் தன்மை வளர்ச்சி அடைந்து மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாகின்றது.

அதன் மூலம் உங்கள் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி குலதெய்வங்களான மூதாதையர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்த இது உதவும்.

மூதாதையர்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின் விண்ணின் ஆற்றலை நீங்கள் எளிதில் பெற்று
1.வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய துன்பமாக இருந்தாலும்
2.அதை நீக்க உங்களுக்கு ஆற்றல் கிடைக்கும்.

விண்ணுலகம் செல்லும் மெய் வழி…!

 

Ursa major - Sabdharishi mandalam

விண்ணுலகம் செல்லும் மெய் வழி…!

சப்தரிஷிகள் அனைத்தும் தான் மனிதனாக இருந்து தன் உயிராத்மாவை “ஒளியாக மாற்றி”
1.விண்ணிலிருந்து வரக்கூடிய அனைத்துச் சக்திகளையும்
2.உணவாக எடுத்துத் தன் உடலாக மாற்றிக் கொண்டு
3.சப்தரிஷி மண்டலங்களக என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வின் அலைகள் அனைத்தும் இன்று விண்ணிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன். நாராயணனின் அபிமான புத்திரன் என்பார்கள்.

விண்ணுலகை அறிந்து ஆற்றல்மிக்க சக்தியாக வளர்ந்த அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய உணர்வான அந்த அணு தான் “நாரதன்…!” என்பது.
1.நாரதனோ கலகப்பிரியன்.
2.கலகமோ நன்மையில் தான் முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் தொடர்ந்து நாம் எத்தனையோ ஆசைகள் கொண்டு நாம் உழன்று கொண்டிருந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேராற்றலை நுகர்ந்தால் நம்முடைய ஆசை அலைகளை மாற்றி நம் உணர்வை ஒளியாக மாற்றிவிடும்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது அந்த ஒளியான அணு நமக்குள் சிக்கி விட்டால் இந்த மனித உடலுக்குள் நம்மை அறியாது சேர்த்த கோபமோ வெறுப்போ சஞ்சலமோ சங்கடமோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கும் திறன் அதற்குண்டு.
1.நமக்குள் இருக்கும் மனித உணர்வுகளை மாற்றிவிடுகின்றது.
2.அப்பொழுது தான் கலகப் பிரியனாகின்றது.

சப்தரிஷிகள் மெய் ஒளியை விண்ணிலே எப்படிக் கண்டுணர்ந்தார்களோ அந்த ஞானமாக நமக்குள் தோற்றுவித்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய நிலையில் விண் செல்லும் நிலையைப் பெறச் செய்கின்றது.

என் தாய் தந்தையர் உடலை விட்டுச் சென்ற பின் அவர்கள் உயிராத்மாக்களை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று நான் (ஞானகுரு) விண் செலுத்தினேன்.

என் தாய் தந்தையரின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சூட்சம சரீரம் பெற்ற பின் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நான் ஏங்கிச் சுவாசிக்கும் பொழுது எனக்குள் (ஞானகுரு) அந்த மெய் உணர்வும் தென்படுகின்றது.

அந்த விண்ணின் ஆற்றலை நான் சுவாசித்து இப்பொழுது உபதேசிக்கும் பொழுது உங்கள் செவிப்புலன்களிலே நீங்கள் கேட்கும் பொழுது அந்த ஆற்றல் மிக்க உணர்வுகள் உங்களுக்குள்ளும் பதிவாகின்றது.

உதாரணமாக உங்களை ஒருவர் கடுமையான நிலைகளில் ஏசுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். செவிகளில் அதை நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கின்றது…?

அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் தூண்டப்பட்டு அதை நினைத்த மாத்திரத்திலே உங்களுக்கு ஆத்திரமும் வெறி கொண்டு தாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டி அதன் வழிகளிலே உங்கள் சரீரத்தை இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
1.அந்த மெய் உணர்வுகள் தூண்டப் பெற்று
2.என் தாய் தந்தையரின் உயிராத்மாக்களை விண் செலுத்தினேன்.
3.அங்கிருந்து பல ஆற்றல்களைப் பெறும் தகுதியும் பெற்றேன்.

அந்தத் தகுதியை நீங்களும் பெறவேண்டும் என்ற இந்த ஆசையில்தான் உங்களிடம் இதைச் சொல்கின்றேன்.

ஒரு வயலைப் பண்படுத்துவது போன்று உங்கள் மனைதைப் பண்படுத்தி ஈர்ப்பின் உணர்வுகள் கொண்டு ஆற்றல்மிக்க இந்த வாக்கினை உங்களுக்குள் நல்ல வித்தாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெருக்கப்படும் பொழுது உங்கள் மூதாதையர்களின் உடல விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தவும் அதன் மூலம் நீங்கள் விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியும் பெறுகின்றீர்கள்.

ஏனென்றால் உங்களுடன் உறவாடிய இந்த உணர்வின் சக்தி கொண்ட
1.குலங்களின் தெய்வங்களான அந்த உயிராத்மாக்களை விண் செலுத்திவிட்டால்
2.விண்ணின் ஆற்றலை நீங்கள் சுலபமாகப் பெற முடியும்.
3.நாம் உடலை விட்டுச் சென்றாலும் விண் செல்வது மிகவும் சுலபமாகின்றது.

வாழ்க்கையின் கடைசி எல்லைக்கு வந்து விட்டோம்…

positive-energy-blog

வாழ்க்கையின் கடைசி எல்லைக்கு வந்து விட்டோம்… 

கிட்னி மாற்று (KIDNEY) ஆபரேஷன் செய்தால் இன்னொரு மனித உடலில் இருக்கக்கூடிய அந்த உறுப்புகளை எடுத்து பழுதான உடலில் இணைக்கின்றார்கள்.

அப்படிப் பொருத்தினாலும் கூட இவர்கள் இரத்தம் வேறு. அவர்கள் இரத்தம் வேறு. இந்த உறுப்பில் இருக்கின்ற அணுக்கள் வேறு. அவர்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் வேறு.

இதை இரண்டையும் இணைக்கச் செய்வதற்கு இதை சமப்படுத்துவதற்காக வேண்டி ஒரு மருந்தைக் கொடுப்பார்கள். கிட்னி ஆபரேஷன் செய்யும் போது இந்த மருந்தைக் கொடுத்தவுடனே இரண்டும் ஒத்துக் கொள்கின்றது.

அப்பொழுது புதிதாக ஒட்ட வைத்த அந்த கிட்னி அது கொஞ்சம் கொஞ்சமாக ஜீவனாகி வேலை செய்யும். ஆனாலும் அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

1.யாராவது காய்ச்சல் உள்ளவர்களைப் பார்த்து விட்டாலும்
2.சாப்பிடும் தட்டைக் கொதிக்கின்ற தண்ணீரில் கழுவாமல் சாப்பிட்டாலும்
3.அந்த எதிர்ப்பு சக்தி இல்லாததால் மறுபடியும் கிட்னி கழன்று கொள்ளும்.
4.அந்த மனக்கட்டுப்பாடு இல்லை என்றால்
5.காசு செலவழித்து ஆபரேஷன் செய்தும் பயன் இல்லாமல் போய்விடும்.

ஏனென்றால் இந்த உடலில் சிறிது நாள் வாழ்வதற்கு இத்தனை முயற்சி எடுக்கின்றோம். இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கின்றோம்.

உடல் சரியில்லை என்றால் உடனே டாக்டரிடம் போகின்றோம். மருந்தைச் சாப்பிடுகின்றோம். ஓரளவிற்குக் குணமானதும் வந்து விடுகின்றோம்.
1.மறுபடியும் நோய் வருகிறது.
2.மறுபடியும் டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடுகின்றோம்.
3.இப்படி நோய் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
4.நாம் மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கின்றோம்.
5.கடைசியில் எல்லா மருந்தும் ஒட்டு மொத்தமாகப் போட்டு ஒரே அமுக்கு அமுக்கிவிடுகின்றது.
6.அமுக்கியவுடனே உடலெல்லாம் நலிந்து “உன் விதி அவ்வளவு தான்…!” என்று உயிர் வெளியில் போகின்றது.

இந்த உடலில் நாம் சேர்த்து கொண்ட உணர்வுக்கொப்ப இன்னொரு உடலில் கொண்டு பொருத்தி விடுகிறது. உடலில் சேர்ந்த விஷத்திற்கு தகுந்த மாதிரி அடுத்த உடலை மாற்றி விடுகிறது. இது உயிரின் வேலை.

உதாரணமாக கொடூரமாகத் தாக்கும் புலியை மான் அதிகமாகப் பார்த்த பின் பயத்தினால் புலியின் உணர்வு பூராம் மானின் உடலுக்குள் போகின்றது.

அதைத் தான் கண்ணன் வெண்ணெயைத் திருடுகின்றான் என்று சொல்வது.
1.புலியின் வலுவான உணர்வு மானின் உயிரிலே மோதி
2.உன்னை அது கொல்லப் போகின்றது என்று சொல்கின்றது.
3.அதன் வழி தப்பித்துப் போகின்றது.

இருந்தாலும் மான் புலியை உற்றுப் பார்த்துப் பயந்த உணர்வுகள் அனைத்தும் மானின் இரத்தத்தில் கலக்கின்றது. புலியின் வலுவான உணர்வுகள் மானின் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் சேர்ந்து விடுகின்றது.

அப்போது மானுக்குப் புலியின் நினைவே அதிகமாக இருக்கின்றது. மான் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு எங்கே போகிறது…?

1.செத்தவுடனே மானின் ஈர்ப்பிற்குத் தான் போக வேண்டும்.
2.ஆனால் புலியின் நினைவு அதிகரித்ததால் புலி உடலின் ஈர்ப்புக்குப் போய்ப் புலியாகப் பிறக்கிறது.
3.மான் புலியிடம் சிக்கியவுடனே எத்தனை வேதனைப்படுகிறது..?
4.எலி பூனையிடம் சிக்கியவுடனே அது எத்தனை வேதனையாகிறது…?

இப்படித்தான் நாம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோம். பல கோடித் தீமைகளை நீக்கி எல்லாவற்றிலும் எத்தனையோ கொடுமைப்பட்டுத்தான் மனிதனாக வந்திருக்கிறோம்.

ஒரு எலி பூனைக்கு இரையாகின்றது. அந்த வேதனையுடன் என்னைக் கொல்கிறானே என்று எண்ணுகின்றது. பூனை உடலுக்குள் போகின்றது.

இத்தனை வேதனைகளையும் பட்டுத்தான் பூனை உடலுக்குள் எலி போகின்றது. ஆனால் அந்த எலி பூனைக் குட்டியாகப் பிறக்கும் போது அந்தப் பூனை எத்தனை வேதனைப்படுகின்றது..?

அதே போன்று தான் மான் வேதனையுடன் தான் புலி உடலுக்குள் போகின்றது. புலிக் குட்டியாக அது பிறக்கும் போது அந்தப் புலிக்கு வரும் வேதனை எத்தனை வேதனை…?

இவைகள் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று ஆகி இந்த வேதனை உணர்வுடனே தான் வளர்ந்து வருகிறது. இதே மாதிரி நாம் எத்தனையோ உடல்கள் பெற்றிருக்கின்றோம்.

பாம்பு நம்மைக் கடிக்கும் என்று அதை அடித்து நரக வேதனைப்படுத்துகின்றோம். பாம்பின் உயிர் நமக்குள் வந்து விடுகிறது. பாம்பின் உயிர் நம் உணர்வை எடுத்து மனிதக் கருவாகின்றது. “மனிதனாகவே பிறக்கின்றது….!”

மனிதனாகப் பிறக்கும் நிலையில்
1.குழந்தை பிறக்கும் முன்னாடி அந்தத் தாய் படும் அவஸ்தை எத்தனை எத்தனை..?
2.பிறந்த பிற்பாடு எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…?
3.ஆனாலும் பாசத்தால் குழந்தையை ஆதரித்து நல்ல முறையில் வளர்க்கின்றோம்.

எலியைக் கொன்று சாப்பிட்டது பூனை. அந்த எலியின் உயிர் போகும் போது பூனையின் உடலுக்குள் சென்று பூனையாகப் பிறந்தவுடனே தன் குட்டியைக் காக்கும் தன்மை வருகின்றது.

இப்படித் தான் இயற்கையின் தன்மையில் ஒவ்வொன்றும் விளைகின்றது என்பதனை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார்.

இத்தனையும் குருநாதர் அனுபவத்தில் தான் கொடுத்தார். பாட நிலைகளில் அல்ல. நான் அனுபவித்தேன். தெரிந்து கொண்டேன்.

இத்தனையும் அனுபவித்துத் தெரிந்து கொண்ட பிற்பாடு…
1.நீங்கள் தீமைகளில் போய்ச் சிக்காதீர்கள் என்று
2.உங்களுக்கு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றேன்.

ஞானிகளின் அருளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் யார் கேட்கின்றார்கள்…? அதைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

இவ்வளவு பேருண்மைகளைக் கொடுக்கின்றோம். ஆனால் அவர்களை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் எங்கே போகின்றோம் என்ற வகையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நீங்கள் எங்கே சென்றாலும் நோயை நீக்கி எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் எந்தக் கோயிலுக்குப் போய் ஆண்டவனைத் தரிசிக்கப் போனாலும்
1.யாம் சொல்லும் முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பாருங்கள்.
2.உங்களை உங்கள் எண்ணம் தான் காக்கும். நிச்சயம்…!

சொர்க்க வாசல் எது…? வைகுண்டம் என்பது எது…? மோட்சம் என்பது எது….?

Vaikundam

சொர்க்க வாசல் எது…? வைகுண்டம் என்பது எது…? மோட்சம் என்பது எது….?

வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் வடக்கு வாசலைத் திறந்த பின் சாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு வீட்டுக்குக் கொண்டு வந்து சாமிக்கு நல்ல சமையலைப் படைத்து பொங்கி வைத்து விட்டோம் என்றால் நமக்கு ஆண்டவன் சொர்க்கத்துக்கு வழிகாட்டுவான் என்று தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

இவை எல்லாம் நரக லோகத்திற்கு அழைத்துச் செல்லும் நிலைகள், ஏனென்றால் இந்த உடலின் பற்று தான் வருகின்றது.

“உத்தராயணம்…” என்ற நிலையில் வடக்குத் திசையில் துருவத்திலிருந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நமக்குள் பெற்று
1.நாம் பார்ப்போர் அனைவரது குடும்பங்களும் நலம் பெற வேண்டும்.
2.இந்தப் புவி முழுவதும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
3.உலக மக்கள் அனைவரும் அந்தத் தெய்வீக நிலைகள் பெற வேண்டும் என்ற ஆசையில்
4.உயிருடன் ஒன்றி இதனின் உணர்வின் தன்மை வந்தால் இதுவே நம் உயிராத்மாவிற்குச் “சொர்க்கவாசலாக…” அமைகின்றது.
5.உடலை விட்டுச் சென்ற பின் அங்கே வைகுண்டம் அழைத்துச் செல்கின்றது.
6.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்
7.ஏகாந்த நிலைகள் பெறுகின்றோம்.

வாழ்க்கையில் வரும் தீமைகள் மீது பற்றற்ற நிலையாக்கி நம் உயிரைப் பற்றுடன் பற்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால் அது தான் “வைகுண்ட ஏகாதசி…!”

வைகுண்டம் என்பது சப்தரிஷி மண்டலம். பக்தி மார்க்கத்திலும் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை.

இந்த உடலின் இச்சையின் நிலைக்கும் அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து காசைக் கொடுத்து விலைக்கு வாங்குகின்ற நிலைக்குத் தான் செல்கின்றோமே தவிர
1.அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பின்பற்றவில்லை.
2.அதன் வழி நாம் செல்லவில்லை… செல்லவும் மனமில்லை…!
3.இன்று இதைச் சொன்னாலும் கேட்பதற்கு இல்லை…
4.அன்றைக்குச் செய்தவர்கள் எல்லாம் தவறா….?
5.இவர் மட்டும் என்னமோ புதிதாக வந்து சொல்கிறாரடா….! என்று தான் நினைப்பார்கள்.

ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் குடும்பத்தைச் சார்ந்தோர் எப்படி நினைக்க வேண்டும்…?

ஏகாந்த நிலைகளில் அவர் வாழ்ந்தார் வளர்ந்தார் எத்தனையோ இன்னல்கள் அனுபவித்தார்…!
1.உடலை விட்டுச் சென்ற அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.என்றென்றும் பேரின்பப் பெரு வாழ்வாகப் பேரானந்த நிலை அடைதல் வேண்டும் என்று
4.உந்தி அங்கே விண்ணிலே செலுத்த வேண்டும் என்றுதான் நம் ஞானிகள் காட்டினார்கள்.

ஆனால் இன்று என்ன செய்கிறோம்..? இறந்த உடலைக் கொண்டு எரித்து விட்டு சாம்பலைக் கொண்டு ஆற்றிலே கரைத்து விட்டால் பாவம் போய்விடும்.

அடுத்து இந்தச் சாம்பலைக் கொண்டு போய் கங்கையில் கரைப்பதற்குப் போவார்கள். கங்கையில் கரைத்ததும் கடலில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டால் அவர் பாவம் போய்விடும் என்ற இந்தப் பதிவு தான் மனதில் இருக்கிறது.

தலைமகன் விநாயகர் கோவிலில் தீபத்தை ஏற்றிவிட்டால் அவர்கள் மோட்சம் போய் விடுவார்கள். இப்படித்தான் செய்கின்றோம்.

கங்கையில் கரைக்கச் சொன்னதன் நோக்கம் என்ன…?

“ஒளி கங்கை…!” அதாவது அங்கே விண்ணிலே சப்தரிஷி மண்டல ஒளிக்கடலில் அந்த உயிரான்மாவைக் கலக்கச் செய்து
1.மீண்டும் இருளான இன்னொரு உடலைப் பெறும் உணர்வினைக் கரைக்க வேண்டுமே தவிர
2.உடலை எரித்து அந்தச் சாம்பலை இங்கே கரைப்பது அல்ல.

ஞானிகள் சொன்ன பேருண்மைகளைச் சொன்னாலும் ஏளனமாகவே பார்க்கின்றார்கள். இதைப்போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

ஆகவே யார் உடலை விட்டுச் சென்றாலும்
1.குடும்பத்தில் உள்ளோர் பாசத்தால் அழுது புலம்பி
2.உங்கள் உடலுக்குள் அந்த ஆன்மாவை இழுத்து விடாதீர்கள். (இது முக்கியம்)
3.அவர்கள் ஆன்மாவை மெய் ஒளியுடன் கலக்கச் செய்ய வேண்டும்.

மூதாதையர்களான குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்தில் கலக்கச் செய்து இந்த வாழ்க்கையில் பட்ட துன்பத்தின் உணர்வுகளை அங்கே கரைக்கச் செய்து அருள் மகரிஷியின் உணர்வை நுகரச் செய்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலையில் மரணமில்லாப் பெருவாழ்வு என்ற நிலையை அடையச் செய்வதே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி.

“விண் செல்ல வேண்டும்…!” என்ற நினைவு ஒன்றை மட்டும் குறியாக வைத்துக் கொள்ள வேண்டும்

polaris-northern-star-big-dipper

“விண் செல்ல வேண்டும்…!” என்ற நினைவு ஒன்றை மட்டும் குறியாக வைத்துக் கொள்ள வேண்டும்

உதாரணமாக இரண்டு பேர் நம்மைக் கடுமையாகத் திட்டுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நமக்கு எரிச்சல் வருகின்றது… வேதனையும் வருகின்றது…!

அப்போது அந்த எரிச்சலும் வேதனையும் வரும் போது அவனை நினைக்கும் போதெல்லாம் “என்னை இப்படிக் கேவலாமாகப் பேசினான்… பேசினான்.. பேசினான்…! என்று நாம் அதிகமாகப் பேசுகின்றோம்.

எரிச்சலையும் வேதனையையும் அதிகமாகச் சுவாசிக்கும் போது நம் ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் இரத்தமாகக் கலக்கப்படும் போது கை கால் குடைச்சல் தலை வலி மேல் வலி இடுப்பு வலி அஜீரணக் கோளாறு இதைப் போல நிலைகளெல்லாம் உரு பெற்று விடுகின்றது.

ஆகவே இதைப் போன்று வேதனைப்படும் சந்தர்ப்பம் வந்தால் அடுத்த கணம் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் இரத்தத்தில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் நினைவைச் செலுத்திச் சிறிது நேரம் தியானிக்க வேண்டும்.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் வெள்ளி பித்தளை ஆவியாகப் போவது போன்று எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ அப்போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்துத் தீமைகளைப் பிரிக்க வேண்டும்.

நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. பத்திரிக்கைகளைப் பார்க்கின்றோம். பயங்கர ஆயுதங்கள் கொண்டு ஒரு குடும்பத்தைத் தாக்கிவிட்டு வீட்டிலுள்ள பொருளை எடுத்துச் சென்றான் என்று படிக்கின்றோம்.

அந்த நினைவுகள் நம்மை இயக்கி இரவிலே அந்த நினைவுகள் வந்து “சறுக்…!” என்று சத்தம் கேட்டாலே நம்மை அலறச் செய்கின்றது…! பதட்டமாகின்றோம். ஏனென்றால்
1.நமக்குள் எதைப் பதிவு செய்கின்றமோ
2.அந்தப் பய உணர்வுகளும் “இப்படி ஆகிவிட்டதே…” என்ற வேதனை உணர்வுகளும்
3.உமிழ் நீராகச் சேர்த்து நம் உடலுக்குள் வித்தாகின்றது.

பதிவானதை நீக்க வேண்டும் என்றால் மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் எடுத்து அதைச் சுவாசித்து அந்த உமிழ் நீரை நம் உடலுக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.

தங்கத்திற்குள் திரவகத்தை விட்டதும் அழுக்குகள் ஆவியாக ஆனது போன்று எவ்வளவு கொடிய வேதனையோ எரிச்சலான நிலைகள் இருந்தாலும் அதை அகற்றிட முடியும். மனதைச் சமப்படுத்த முடியும்

கெட்டதைச் சந்திக்கின்றோம் என்றால் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அப்போதைக்கப்போது சேரும் அழுக்கை துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படிக் கற்று கொண்டால் தான் நாம் மனிதன் என்ற நிலைகளில் முழுமை அடைந்து எங்கே ஒளியாகச் செல்ல வேண்டுமோ அந்தப் பாதையிலே செல்ல முடியும்.

மீன் தனக்குள் இருக்கும் காந்தம் குறையும் பொழுதெல்லாம் வெளியில் வந்து தனக்குத் தேவையான காந்தத்தை எடுத்துக் கொண்டு தான் அடைய வேண்டிய நிலைகளுக்குச் செல்கின்றது.

அதைப் போன்று தான் விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்த பின் விண் செல்ல வேண்டும் என்பதே ஞானியர்கள் அறிந்துணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மையின் நிலைகள்.

ஆகவே
1.”விண் செல்ல வேண்டும்…!” என்ற நினைவு ஒன்றைக் குறியாக வைத்து
2.அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் நடந்து
3.”அழியா ஒளிச் சரீரம் பெறும் நல்ல சந்தர்ப்த்தை…” இந்த வாழ்க்கையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.