தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

 

கேள்வி:-
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கிறார் என்பது சான்றோர்கள் வாக்கு.

அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம். அப்படி இருக்கத் தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

எண்ணத்தை வைத்துத் தான் செயல்படுகிறோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களே ஏற்படுமானால் நற்செயல்களே செய்வார்கள் அல்லவா…? தீய செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடும் அல்லவா…? ஏன் அப்படி நடப்பதில்லை…?

ஈஸ்வரபட்டரின் விளக்கம்:-
இறைவன் படைத்த படைப்பே நாம்… நாம் மட்டுமல்ல சகலமுமே ஐக்கியப்படும். இந்நிலையில் இயற்கையிலேயே பல மாற்றங்கள் உண்டு.
1.நீர் மனிதராய்ப் பிறந்துள்ளீர். நாயுமுள்ளது, பாம்பும் உள்ளது, மாங்கனியும் வளர்கின்றது. நச்சுச் செடியும் வளர்கின்றது.
2.மனித ஆத்மாக்களின் நிலையை மட்டும் கேள்வியாக்கினீர்…?
3.இவ்வுலகில் உதித்த உயிரணுக்கள் யாவுமே ஏன் ஒன்றைப்போல் ஒன்றில்லை. எண்ண நிலையும் மாறு கொள்கிறது.
4.உருவ நிலை மற்ற எல்லா நிலைகளுமே தான் மாறு கொண்டுள்ளது.
5.ஒன்றைப் போல் ஒன்றில்லை ஆண்டவன் படைப்பில் ஏன் இவ் ஏற்றத்தாழ்வு…? என்ற எண்ணம் தானே உம் எண்ணம்…?

சூரியனிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் நம் பூமியின் மேல் படும் நிலையில் ஒவ்வொரு நொடிக்குமே மாறு கொண்ட அணுக்கதிர்கள் தான் நம் பூமியில் வீசுகிறது.

நம் பூமிக்கும் மேல், நம் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள காற்று மண்டலத்திற்கும் மேல் உள்ள பால்வெளி மண்டலத்திற்கும் ஜீவனுண்டு, இயற்கைத் தன்மை உண்டு. பால்வெளி மண்டலத்தில் பல நிலை கொண்ட அமிலங்கள் உண்டு.

எல்லாவற்றுக்கும் பொது மண்டலம் பால்வெளி மண்டலம். சுழலும் நிலையில் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலங்கள் பல நிலை கொண்டதாகப் படர்ந்து சுழன்று அதன் ஜீவ சக்தியில் விளையாடுகின்றது.

நம் பூமி சுழலும் வேகத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலத்தில் பட்டுப் பூமியின் காற்று மண்டலத்திற்கு வருகிறது.

1.இக்காற்று மண்டலம் சுழலும் நிலையில் பூமியின் ஈர்ப்பு சக்திக்குகந்த அமிலத்தன்மை அவ்வொளிக்கதிர்கள் வீசிப் படர்ந்தவுடன்
2.அந்தந்த நிலையில் அந்நிலைக்குகந்த அமிலங்கள் படர்ந்து அதைப் பூமி ஈர்த்து பூமி விடும் சுவாசத்தைக் கொண்டு, அந்நிலையின் உயிர் அணு பிறக்கின்றது.
3.அதன் தன்மையில் ஏற்படும் அமில சக்தி நிலை கொண்டுதான் பூமியின் இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்கள் மற்றக் கனிவளங்கள் எல்லாமுமே.
4.எவ்வமிலத்தை பூமி ஈர்த்ததோ அந்நிலைக்கொப்ப சக்தி நிலை வெளிப்படுகிறது.

பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மா நிலை பெறுவதற்குள் மனித ஆத்மாக்களுக்குப் பல எண்ண நிலைகள் கூடி விடுகின்றன. எவ்வெண்ணத்தை அச்சுவாச நிலையுடன் ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டதோ அந்நிலை கொண்ட அமிலத்தையே ஒவ்வோர் உடலுமே சேமித்துக் கொள்கின்றது.

1.பல ஜென்மங்கள் எடுத்தாலும் உயிரணுவாய் உதித்து உயிர் ஆத்மாவாய் உருப்பெறும் நிலையில்
2.அமில சக்தியைக் கொண்ட தொடர்பின் எண்ணமும் அதன் தொடர்ச்சியின் குண நிலையும் தான் அவ்வாத்மாவுக்கு உண்டே ஒழிய
3.அப்பரம் பொருளான ஆண்டவன் அனுப்புவதல்ல “நல்லவளையும் கெட்டவளையும்…”
இயற்கையின் ஆதி சக்தியின் நிலை பொதுவான சக்தி தான். அவளிலிருந்து உதித்த உயிரணுக்கள் எடுக்கும் வளர்ச்சி நிலை எல்லாம் அதனதன் சக்திதான்.

பரம்பொருள் ஒன்றே அப்பரம்பொருளின் பொருட்கள் தான் நாமெல்லாம். அப்பரம்பொருளின் நிலையுடனே ஐக்கியப்பட்டு ஜெபப்படுத்தும் நிலையினால் நம்மையே அப்பரம்பொருளாக்கிடலாம்.

“அவரவர்கள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை…”

இக்காற்றுடன் பல நிலைகளும் கலந்துள்ளன.
1.நல்லெண்ணத்தின் சுவாசமும் இக்காற்றினால் தான்
2.துவேஷ எண்ணத்தின் மூச்சுக் காற்றும் இக்காற்றினால் தான்.

நம் வாழ்க்கையுடன் மோதுண்டு வாழும் நிலையில் பல செயல்கள் நடக்கின்றன. அந்நிலையில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு பல நிலைகள் நடக்கின்றன.

நம் ஆத்மாவுடன் நாம் மட்டும் வாழவில்லை பல கோடி உயிரணுக்கள் வாழ்கின்றன. ஆனால் நமக்குத் தான் நம் ஆத்மா சொந்தம். நம் உடலில் தான் மற்ற உயிரணுக்களும் இருந்தாலும் அதற்கு நம் உடலும், நம் ஆத்மாவும் சொந்தமல்ல.

அதைப்போல் நாம் எடுக்கும் எண்ணமுடன் இக்காற்றில் உள்ள பல அலைகளும் நம் எண்ணமுடன் மோதுகின்றன. இதனால் நம்மை அறியாமலேயே நம்முள் பல எண்ணங்கள் மோதுண்ட நிலையில் பல செயல்கள் நடக்கின்றன.

1.மனித ஆத்மாவாய் வாழ்வதுவே பெரும் பொக்கிஷம்.
2.நம்மையே நாம் மற்றத் தீய அணுக்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதினால் தான் நல்லவன் கெட்டவன் என்று நிலை வருவது.

ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் நம்மால் ஏற்படுத்திய நிலைதான். மனிதனிலிருந்து நம் அறிவின் நிலையைச் சிதறவிடுவதினால் மிருக ஜென்திற்குச் செல்கின்றோம். நம்மைக் காட்டிலும் நுண்ணிய அறிவு மிருகங்களுக்கு உண்டு.

ஆறறிவு ஐந்தறிவு என்பதல்ல வாழ்க்கையே…!

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்

 

எண்ணற்ற காலம் முதற்கொண்டே இவ்வாவிகளை வசியப்படுத்தி செயல்படுத்திடும் பல நிலைகள், பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.

மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்தி செயல் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில்தான் பேய் ஓட்டுதல், மந்திரித்தல் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.

1.எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ
2.அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறி விடுகின்றன.

உதாரணமாக பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு, பல நினைவுகளுடன் இல்லத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும், இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன், தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில், அதே எண்ண நிலையில் செல்லும் பொழுது அவ்வாசை நிலை கொண்ட நிலையில், மற்ற போக்குவரத்து இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டு, அந்நிலையில் அகால மரணம் எய்தி குருதி (இரத்த) வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்த பிறகு
1.அவ்வாத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
2.அதே நிலை கொண்ட எண்ண நிலை உடையவன் அந்நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப் பட்டவுடன் இவன் உடலில் அவ்வாவி ஏறிக்கொள்கின்றது.

இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில்… அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் “இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது…”

தன் நிலையே, தான் மறந்து உடலில் உள்ள ஆவிக்குத் தன்னை அறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்ட நிலையில்… சோர்வு கொண்ட நிலையுணர்ந்து உள்ளவர்கள் மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.

இந்நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால்…
1.அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றொர் ஆவி ஆத்மாவின் நிலை புரிந்து பேய் ஓட்டுவதாகச் சொல்லி
2.மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
3.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து “பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து” அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.

இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தான் ஏவலிலிருந்து, “இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாக் காரியம்…” இப்பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் என்றென்றைக்கும் அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.

இந்நிலையிலிருந்து தப்புவதற்கு நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.அதன் பாதிப்பால் வரும் சஞ்சலம், சோர்வு, சோர்வில் இருந்து விடுபட
2.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி மகரிஷிகள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
3.அந்தச் சக்தியை அந்த ஆன்மாவுக்கும் அன்பு கலந்த நிலையில் பெறச் செய்ய வேண்டும்.

அப்படித் தான் அதன் செயலைக் கட்டுப்படுத்த முடியும்.

நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது

நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது

 

ஏவல், குட்டிச்சாத்தான், மையிட்டு மந்திரம் செய்து பிறரை வசப்படுத்தி நம் ஆத்மாவை நாம் இந்நிலையிலிருந்து செயல்படா வண்ணம் நம்மைக் காத்திடும் நிலையை அறிந்து வாழ்ந்திடல் வேண்டும்.

அழியாச் சக்தியுள்ள நம் சக்தியை
1.நம்முள் ஊன்றியுள்ள நம் சக்தியை பல எண்ணங்களின் நிலையிலிருந்து காத்திடல் வேண்டும்.
2.சோதனை கொண்ட காலங்களில் சோர்வு நிலை கொண்டு முடங்கிடல் ஆகாது.
3.ஏவல்களின் தன்மை எல்லாம் சோர்ந்தவர்களை அதிவிரைவில் அண்டிக் கொள்ளும்.

இத்துர் ஆவிகள் நடமாட்டத்தைப் பல மிருக ஜெந்துக்கள் எப்படி உணர்கின்றன…?

ஏவலும் சூனியமும் மிருக ஜெந்திற்குச் செயல் கொள்ளாது. அதன் உடலிலேயே உணரும் தன்மை கலந்துள்ளது. இச்சுவாச சக்தி நாய்க்கு அதிகம். புலிக்குத் தன் பார்வையிலேயே கண்டிடும் சக்தி உண்டு.

இவ் ஏவலின் நடமாட்டம் உள்ள இடங்களை எல்லாம்… இவற்றை அறியும் தன்மை கொண்ட மிருகங்கள் உணர்ந்துவிடும்.

முந்தைய காலங்களில் வீடுகளில் நாய், பூனை இவற்றைத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக மட்டும் வளர்க்கவில்லை….
1.துர் ஆவிகளிடமிருந்து அவற்றின் ஏவல் இல்லங்களில் உட்சென்று செயல்படாமல் காக்கவும் இம் மிருகங்களை வளர்த்தனர்.
2.ஏவல்காரனையும் குட்டிச்சாத்தான் செயல் உடையவனையும் கண்டால் இந்நாய், நரி, பூனைகள் குரைத்துச் சப்தமிட்டு உணர்த்திவிடும்.

அக்கால இல்லங்களில் இல்லத்தின் முன் வாயிலுக்கு மேல் “நிலைக் கண்ணாடியைப் பதித்திருப்பார்கள்…” நாம் சாதாரண நிலையில் இருக்கும் நிலையில்… நம் கண்ணிற்குத் துர் ஆவிகளின் நடமாட்டம் தெரிந்திடாது.

நிலைக் கண்ணாடியில் தெரியும் நிலை என்ன…?

நிலைக் கண்ணாடியில் பூசி உள்ள அவ்வமில சக்தி இத் துர் ஆவிகளின் சக்திக்கு எதிர்கொண்டது. நாயின் உடலில் உள்ள அமில சக்திக்கும் நிலைக் கண்ணாடியில் உள்ள அமிலத்திற்கும் தொடர்பு உண்டு.

இத்துர் ஆவியின் நிலையைப் பலர் காண்கின்றனர். பேயின் நடமாட்டத்தைக் கண்டேன் என்பவர் பலர். பேயல்ல… குட்டிச்சாத்தானின் உருவ நிலை அது.

சிலருக்கு மட்டும் புலப்படும் நிலை என்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் அவரவர்களின் அமிலத்தன்மை ஒன்று உண்டு என்று உணர்த்தினேன் அல்லவா…? இவற்றைக் காணும் அமிலத்தன்மை கூடியவர்கள் உடல் இந்நிலையை அறியலாம்.

சிலரின் நிலையில் அவர்களின் உடலில் உள்ள அமிலத் தன்மையே அபூர்வத் தன்மையில் இயற்கையிலேயே கூடிப் பிறந்திருப்பர்.

எண்ணத்தில் ஞானசக்தி நிறைவு கொண்ட அபூர்வப் பிறவி எடுத்தவர் பலர் உள்ளனரே. அவர்களுக்கு இயற்கையின் அமிலமே தன்னுள் கூடி பிறவி எடுத்து பிறந்து வளர்பவர்கள்.

பல பிறவியில் சேமித்த அமிலத்தின் கூட்டு நிலையினால் பல ஞானிகள் மற்ற ஏவலின் சக்தி இல்லாமல் வாழ்கின்றனர்.

1.நம்முள் உள்ள நிலையையே நாம் நல் நிலையில் வளரும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்
2.நமக்காக ஏவாமல் பிறருக்காகச் செய்த மந்திர நிலையும் தாக்கும் நிலையும் நமக்கு உண்டு.
3.இருந்தாலும்… நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”

 

குருவி ஜோதிடம், எலி, அணில் இப்படிப் பல நிலைகளைச் செப்புவது எந்நிலை கொண்டு…? என்பதனை விளக்கிடுவேன்.

இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான்.

அப்பிராணிகளின் உடலில் (மந்திரவாதிகள்) கருவின் மையை ஏற்றி விடுவார்கள். அந்நிலையில் இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு, இப்பிராணிகளை வைத்து ஜோதிடம் செப்பிடும் நிலையில் உள்ளவர்களுக்கு, அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.

இப்பிராணியின் உடலில் உள்ள இக்குட்டிச்சாத்தான் தான்… நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட எந்நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும் இவர்கள் மனநிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.

அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும்.
1.இவ்வுலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது
2.பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன.
3.ஆவியின் தொடர்புபடுத்தி தன் உடலிலேயே பல ஆவிகளை துர் ஆவிகளை ஏற்றுக் கொண்டு அதனை ஏவிச் சூனியம் செய்வார்கள்.

சூனியத்திற்கு அடிமைப்பட்டவன் அச்சூனியத்தினால் தான் அவனுடைய ஆத்மாவும் பிரியும்.

1.பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்து விட்டு
2.இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்
3.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் “வா…” என்றவுடன்
4.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் அக்குட்டிச்சாத்தான் செய்து தரும்.
5.இவர்கள் வைத்த பொருள் தான் அங்கிருந்து வருமே ஒழிய
6.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ, புஷ்பமோ எவையுமே
7.இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.

இந்நிலையில் உள்ள எச்சாமியார்கள் ஆகட்டும் மந்திரவாதிகள் ஆகட்டும் அவர்கள் தன் புகழ் உயர தன் நாமத்தினால் பொருள் ஈட்டி இச்செயலையெல்லாம் செய்வித்து… மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை, “தன் ஆத்மாவையே… தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்…”

சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தம்…?

இருக்கும் ஒரே சொந்தம் நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி, நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?

இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே இச்சூனியக்காரர்களினால் வந்த நிலை தான். நம் பூமியில் நாம் வாழும் இக் கண்டத்தில் நம்மை அறியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.

நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.

1.நம் பூமியில் இவ் இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகள் சப்தரிஷி பெறும் நிலையெய்திட வாழ்ந்த பூமி இது
2.அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.

இக் கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.

மாரியம்மனோ காளியம்மனோ “எனக்கு ஆடு கொடு…!” என்று கேட்கிறதா…?

மாரியம்மனோ காளியம்மனோ “எனக்கு ஆடு கொடு…!” என்று கேட்கிறதா…?

 

இவ்வுலகினில் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல், கருவித்தை இப்படிப் பல நிலைகள் உள்ளன. இவற்றில் இருந்து நம் நிலை மீளும் நிலையை அறிந்திடல் வேண்டும்.

பல காலமாய் சூனியம் செய்தவர்களின் நிலையையும் மற்றத் தீய சக்தியின் செயலைத் தன் பிழைப்பிற்காக ஏவியதின் நிலையையும் வரும் பாடங்களில் உணர்த்திடுவேன்.

மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை ஓடுகளை வைத்து பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம் மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து, மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்து, பூஜித்து இம்மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின் நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு, சில நிலைகளை அறிந்திடத் தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.

இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?

மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களைk கூடியவரை கருச் சிசுக்களைத் தான் (இறந்த சிசுக்களை) இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள் இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.

அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் தான் இக்கருவித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில் தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலைப் புதைத்துச் சென்ற பிறகு அதைத் தோண்டி எடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை ஈடுபடுத்துகின்றனர்.

நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசுக் காலமானால் அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித் தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள்.

அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல் கொள்ளும் ஏவலின் நிலைக்கு ஒத்து வராது. இப் பின்னப்பட்ட இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண் பானையில் அச் சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக் கொள்ளும்.

சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச் சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச் சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயவங்களையும் சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும் சேர்த்துப் பூஜிப்பார்கள்.

இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மை போல் மசிய வைத்து பூஜித்து இப் பில்லி, சூனியம், ஏவல், மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச் சிசுவின் நிலையை ஏவுவார்கள்.

இக்கருப்பு நிறம் கொண்ட இம் மையையே தன் நெற்றியில் இட்டுக் கொண்டும் தாயத்துகள் செய்து இம்மையை அதனில் வைத்து தன் உடலிலும் அணிந்து கொள்வார்கள்.

இவர்களின் பொருள் ஆசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டி சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவில் இருந்து மட்டும் ஏன் தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக் குட்டிச்சாத்தான்கள் ஆவி உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.

1.மாரியம்மாள், காளியம்மாள் என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப் போலவும்
2.மாரியாத்தா ஆடு கேட்கிறாள், கோழி, முட்டை கேட்கின்றாள் என்றெல்லாம் சொல்லி
3.இக்குட்டி சாத்தான்களின் ஆசைக்கு உகந்த உணவுகளைப் படைத்து இவர்களின் செயலை முடித்துக் கொள்கின்றனர்.

இவர்களிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும்… விடுபடவும் வேண்டும்… நாம் சிக்கி விடக் கூடாது.

வரப் போகும் மாற்றத்திலிருந்து மீளுவதற்கும் வழி உண்டு

வரப் போகும் மாற்றத்திலிருந்து மீளுவதற்கும் வழி உண்டு

 

சக்தியின் சக்தி பெற்று இப்பூமியில் மனித ஆத்மா அறிவு நிலை பெற்று… ஆக்கத்தின் செழிப்பினால் அகிலத்தையும் ஆளும் செழிப்பை இப்பூமியில் பிறப்பெடுத்து வாழ்ந்து வழி பெற்ற சக்தி மட்டுமல்ல… இன்றுள்ள எண்ண வளர்ச்சியின் மனித ஆத்மாவாய் வாழும் பக்குவம் பெற்று… உயிரணுவிற்குத் தொடர்நிலை கொண்ட அமில சக்தி கூடப் “பல கோடி ஆண்டுகள் ஆயிற்று…”

பெரும் பாக்கிய சக்தி மனிதனாய் வாழும் சக்தியே…!

இயற்கையின் செழிப்பில் அன்பு கொண்ட இதயமாய் வாழ்ந்திட்ட நிலையையே அறிவில் மிஞ்சிய நிலை என்ற கணிப்பில் ஒவ்வோர் இடத்தில் வாழ்பவர்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் ஒருவரைத் தலைவனாக்கி… அரசாளும் நிலைப்படுத்தி, அவ்வட்டத்தின் வழியிலேயே சேர்ந்த இனத்தவரை எல்லாம் தனி ஓர் இனமாய்ப் பிரித்து ஜாதி வெறியூட்டி… ஒருவரின் உயர்வில் ஒருவர் பொறாமை கொண்டு இதன் தொடர்ச்சி நிலையிலேயே இன்றளவும் மனிதனின் எண்ண வளர்ச்சியுடனே இக்கலப்பான சக்தி நிலையை ஊட்டி,
1.இன்றைய மனிதன் ஒவ்வொருவனும் தனக்குள் உள்ள ஆண்டவனை மறந்து
2.தானும் இந்நாட்டின் மன்னன் என்றும் ஒவ்வொருவரின் மனப்பாங்கே இம்மதிப்பின் பேராசை வெறியில் வழி வந்துவிட்டது.

இன்று நம்முடன் வாழ்ந்திடும் மனிதர்களால் ஏற்படவில்லை இன்றைய இந்நிலை.

அன்றாண்ட 2000 ஆண்டுகளுக்கு முதலே ஆட்சி என்னும் வித்திட்டு “அழிவிற்கு மனித எண்ணங்களுக்குப் பாதை வகுத்துத் தந்தவர்கள் அன்றாண்ட அரசர்கள் தான்…”

இன்றைய செயற்கையில் இம்மனித எண்ணங்களின் நிலையே இன்று பிறப்பில் வந்திட்ட நிலை அல்ல. நற் சக்தியின் பயனும் சொல்லில் செயலும் மாறிவிட்டது.

இச் செயற்கையில் நம் பூமியின் பொக்கிஷத்தை உறிஞ்சி எடுத்ததல்லாமல் இப்பூமியிலிருந்து ஏவிவிட்ட விஷத்தன்மை கொண்ட ஊசிகளும் (இராக்கெட் – செயற்கைக் கோள்கள்) இன்றல்ல நேற்றல்ல இவ் ஏவுகணை அனுப்பும் நிலையே இப்பூமியில் பல நூறு ஆண்டுகளாகச் செயல்படுத்தி நம் பூமியின் வட்டத்திற்கு மேல் பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற கிரகங்களுக்கும் அனுப்புவித்த ஏவுகணைகள் எல்லாம் இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தினால் ஒவ்வொரு மண்டலத்திற்கும் இதன் தொடர்பினால் மாற்றம் ஏற்படப் போகின்றது என்பதனை உணர்த்தினேன்.

1.பால்வெளி மண்டலத்தில் ஏவச் செய்த விஷ ஊசிகளும் ஏவுகணைகளின் நிலையில் நிறைந்துள்ள அணுவிசை சக்திகளும்
2.இம்மாற்றத்தினால் அங்கங்கு செயலிழந்து அதனின் சுற்றலுக்குகந்த அருகாமை கொண்ட மண்டலங்களில் மோதி
3.அவற்றின் நிலையிலிருந்தும் பல தீய சக்திகள் ஏற்படப் போகின்றன.

இம்மனித ஆத்மாக்களின் சக்தியினால் இயற்கையின் சக்தியே மாற்றம் கொள்ளும் சீற்றம் கொள்ளும் நிலையெல்லாம் இம்மனித ஆத்மாவினால்தான் நடக்கப் போகின்றன.

1.இம்மனித ஆத்மாவினால் மண்டலமாய் உருக்கொண்டு சுழன்றிடவும் முடியும்
2.சுழற்சியின் சக்தியில் பல கோடி மண்டலங்களை வளர்த்திடவும் முடியும்.

ஆக்கத்தின் அறிவு சத்தியாய் ஒளிரும் ஆத்மாவையே அழிவின் சக்திக்கு அடிகோலும் பேராசைப் பேயின் நிலையில் சிக்குண்டு… தன் சக்தியைத் தானே இழந்து… கலியின் மாற்றத்தில் படப்போகும் இன்னலை உணர்ந்து “இங்கே உணர்த்திடும் இச்சக்தி நிலையை உணர்ந்து… உங்கள் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கிடுங்கள்…”

நம் ஆத்மாவின் சக்தியைச் செயலாக்கினால் எந்நிலை பெறுவோம்…? சந்திரனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி நிறுத்தியுள்ளோம்.

இக்கலியின் மாற்றத்தினால் சந்திரனுக்கு நம் பூமியின் தொடர்பும் ஈர்ப்பு சக்தியும் பழக்கப்பட்டு வந்திட்ட நிலையினால் “இவ்வரப்போகும் சூரிய கிரகண நாளிலிருந்து சந்திரனுக்குச் சில சக்திகள் கூடப்போகின்றன…”

எந்நிலை…? என்ற வினா எழும்பலாம்.

சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையில் நம் பூமிக்குக் கேதுவின் விஷ அணுக்கள் கூடும் தருவாயிலும் நம் பூமி இன்று சுழன்று ஓடும் வட்டத்திலிருந்து கீழ் இறங்கிச் செல்லும் நிலையில்
1.நம் பூமியின் ஈர்ப்பு சக்தி நம் பூமியின் பொக்கிஷ அமில சக்தியின் இயற்கைத் தன்மை
2.சந்திரனின் வட்டத்திற்கு அதிகமாகச் செல்லும் நிலையில்,
3.இவ்வரப்போகும் சிறிய மாற்றத்தின் நாளிலிருந்தே
4.சந்திரனில் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் நீர்நிலைகள் அதிகரிக்கும் தன்மை கூடுகின்றது.

நம் பூமியின் பொக்கிஷ சக்தியே இந் நீர்நிலைகள் தான். சந்திரனும் நம் பூமியின் ஈர்ப்பால், இச்சக்தி நிலை கூடி, அதன் ஈர்ப்பில் அதன் சுவாசத்திற்கும், இதன் ஈர்ப்பின் சக்தியினால் அது ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்து, “ஒவ்வொரு நொடிக்கும் சந்திரனுக்கு வளர்ச்சி சக்தி கூடப்போகின்றது…”

இந்நிலையின் தொடர் வளர்ச்சி நிலை சந்திரனுக்கு உண்டு. மனித ஆத்மாவினால் மாறப் போகும் தன்மை நிலையிலிருந்து மீளுவதற்கும் இயற்கையில் சக்தி உண்டு.

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை

 

இவ்வுலகமே…
1.இக்காற்றுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்தியையும்
2.இப்பூமியின் மேல் மட்டத்தில் இப்பூமி சுழலும் வேகத்தில் அதன் ஈர்ப்பில் சூரியனிலிருந்து வெளிப்படும் அமில சக்தியையும்
3.மற்ற மண்டலங்களின் சக்தியையும் தன் சுவாசமுடன் உணவாய் ஈர்த்து
4.அதன் சக்தியைத் தன் மண்டலத்திற்கு வேண்டிய அமிலத்தைச் சேமித்துத் தான்
5.பூமியின் கழிவான உஷ்ண அலைகள் வெளிப்பட்டுப் பல நிலைகள் ஏற்படுகின்றன.

இம்மனித உடலுக்கு நாம் உண்ணும் உணவு எப்படி அமிலமாய், ஆவி நிலை கொண்டு நம் உடம்பில் உள்ள இரத்த நாளங்களில் அச்சக்தி மோதி இவ் ஆவியான அமில உணவே உதிரமாய் உருப்பெற்று நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களின் செயலுக்கும் அவ் உதிரமே பல அணுக்களாய் அவற்றிலிருந்து எடுக்கும் சக்தியைக் கொண்டுதான் நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் அததற்கு வேண்டிய அமில உணவை உண்டு எலும்பாகவும் மயிர்க்கால்களாகவும் நகங்களாகவும் வளர்ந்து கொண்டே உள்ளன.

எலும்பின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தால் நம் உருவ அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா…? ஆனால் குறிப்பிட்ட கால வயதுக்குப் பிறகு இவ்வளர்ச்சியின் நிலை மாறு கொள்ளுகின்றது.

குழந்தையின் எலும்பின் உறுதித் தன்மைக்கும் வளர வளர முதியோர்களான பிறகு உள்ள எலும்பின் உறுதிக்கும் மாற்றம் உள்ளது.
1.எப்படி யானையின் தந்தம் வயதான பிறகு அதனுடைய உறுதி கூடுகிறதோ
2.அந்நிலை போன்று தான் எலும்பின் வளர்ச்சி நிலையும்.

குறிப்பிட்ட வயது வரம்பிற்குப் பிறகு உடல் வளர்ச்சி மாற்றம் கொள்ளும் நாளிலிருந்து வெளி வளர்ச்சிக்கு மேல் நம் (மனிதனின்) உள் உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டு.

நாம் உண்ணும் உணவிலிருந்து சுரக்கும் “அமில சக்தியின் ஆவி நிலைதான்” நம் உடலிற்கு சக்தி தரும் நிலை.

நம் பழக்க வழக்கப்படி நம் உடலை எந்நிலையின் உணவை உண்டு பழகியுள்ளோமோ அவ்வமில சக்தியின் வளர்ச்சியின் நிலைகொண்ட நிலையைத் தான் நம் உடல் ஏற்கிறது.

பட்டுப்புழு முசுக்கொட்டைத் தளையை மட்டும் உண்டு அதிலிருந்து எடுத்த ஆவியின் அமிலத்தினால் எப்படிப் பட்டை எடுக்கின்றோம்…?
1.அப்பட்டுப்புழுவிற்கே முசுக்கொட்டைத் தளையைத் தவிர வேறு உணவை உண்டால் அதன் நிலையில் இப்பட்டை நாம் எடுத்திட முடிந்திடாது.
2.அதைப்போல் தான் ஒவ்வொன்றின் நிலைக்கும் செயல்நிலை நடக்கின்றது.
3.மனிதனின் நிலையும் அதுவே… மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் அதுவே.

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை.

ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவில் இருந்து மற்றொன்றின் வளர்ச்சி ஏற்படுகின்றது.

இவ் உடல் கோளத்திலேயே பல உயிரணுக்கள் வாழ்கின்றன. அவை அவை உண்டு வெளிப்படுத்தும் அமிலத்தில் இருந்து தான் மற்ற நிலைகள் ஏற்படுகின்றன.

நாம் உண்ணும் உணவு ஆவியாய் அமிலமாய் உதிர சக்தி பெறுகின்றது. அவ்வாவியான பிறகு நாம் உண்ட உணவின் தன்மை அதன் சக்கை மலமாய் வெளிப்படுகின்றது.

இவ்வாவி அமில உதிர சக்திதான் அதில் வளரும் உயிரணுக்களின் நிலையைக் கொண்டு நம் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் வளர்ச்சி பெறுகின்றன.

ஒவ்வொரு முடியும் வளர்வதற்கே அவ் உயிரணுக்களின் நிலையில் இருந்தால்தான் வளர்ந்திடும்.
1.இந்நிலையை வைத்துத் தான் முன் பாடத்தில் நம் ஆத்மாவுடன் நம் உயிர் மட்டுமல்ல
2.பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.

பூமி வலு இழந்ததற்குக் காரணம்

பூமி வலு இழந்ததற்குக் காரணம்

 

நம் பூமி வளர்ந்த தொடர் நிலையின் பாடத்தில் நம் பூமியில் தோன்றிய உயிரணுவின் தாவர வர்க்க நிலையையும் அதிலிருந்து ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தோன்றிய தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன்.

அந்நிலையில் ஓடுகள் கனத்து நத்தை போன்றும் ஆமை போன்றும் தோன்றிய ஜீவ அணுக்களின் வளர்ச்சி நிலை பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனது.

அதன் பிறகு இப்பூமியின் முதல் பிரளய நிலையில் இருந்து ஜீவ உயிரணுக்கள் விட்ட நிலையில் இருந்து தொடர் நிலையாய் அவற்றின் அமில சக்தியிலிருந்து தோன்றிய உயிரணுக்களின் தன்மையையும்… முதல் பிரளய நிலைக்குப் பிறகு தான் நம் பூமிக்கு இன்று பொக்கிஷமாய் உள்ள வட துருவ தென் துருவ நீர்நிலைகள் பெறும் சக்தி கொண்ட நிலையையும் இதன் தொடர் நிலையிலேயே விளக்கிடுவேன்.

இப்பூமி ஒரு மண்டலம். இப்பூமியில் தோன்றி வளர்ந்திடும் உயிரணுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மண்டலம்.

நம் உடலுக்கு நம் பழக்க வழக்கப்படி ஒரே மாதிரியான உணவு நிலைகளை உண்டு வாழ்ந்திடும் பக்குவத்தில்… நாம் உண்ணும் உணவில் மாற்றம் கொண்டால் நம் உடல் என்னும் இம்மண்டலம் ஏற்காமல்… எப்படி வாந்தியாகவோ அல்லது வாயுவாகவோ மற்ற நிலையில் பல இன்னல்களை இம் இண்டலத்தின் மையமான நம் வயிற்றில் வலியும் மற்றத் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

அதிலிருந்து நம் உடல் மண்டலம் சரிப்பட்டுப் பழைய நிலையில் வருவதற்குச் சில நாட்கள் ஆகின்றன… அல்லது அதன் தொடர் நிலையில் ஒவ்வொரு தொந்தரவுகளும் ஏற்பட்டு நம் ஆரோக்கிய நிலையே மாறு கொள்கின்றது.

இந்நிலை போன்றுதான் மண்டலங்களின் ஒவ்வொரு நிலைக்கும் அதன் மாற்ற நிலை வருகின்றது.

பிரளயம் ஏற்படுவதுவும் இச்சுழற்சியின் நம் மண்டலத்துடன் எம் மண்டலத்தின் தாக்குதல் ஏற்படுகின்றதோ அதன் நிலை ஏற்காமல்… அதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்படும்.

1.நம் உடல் மண்டல நிலையில் ஆரோக்கிய நிலை கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் நிலை போலவும்
2.எதைச் சாப்பிட்டாலும் ஜீரணித்து விடும் நிலையும் கொண்ட ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட மண்டல மனிதனாய் உள்ள நிலையில்
3.உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியினால் மற்றத் தீய அணுக்கள் வந்து நம் ஆரோக்கியத்தை தாக்கிடாது.
4.அந்நிலை போல் நம் பூமி மண்டலத்தின் ஆரோக்கிய நிலை இருந்திட்டால் இப்பிரளய நிலையிலும் சக்தி கூடும்.

சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையிலும் நம் பூமியின் நிலை ஆரோக்கியமாய் இருந்திட்டால் அவற்றின் தாக்குதலை நம் பூமி ஏற்காது.

நம் பூமியில்தான் இன்று நம் செயற்கைக்காக பூமியின் பொக்கிஷத்தையே பிரித்தெடுத்து ஆரோக்கியம் குன்றிய பூமியாக நாம் செய்து வைத்துள்ளோமே…!

இந்நிலையில் ஏற்படும் இயற்கைக்கு நாம் தான் பொறுப்பு ஆகின்றோம்.

ஞானிகளின் ஆற்றல்கள் காலத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது…?

ஞானிகளின் ஆற்றல்கள் காலத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது…?

 

காட்டுக்குச் சென்று தவம் இருக்கச் செல்வோரை எல்லாம் வாதாபி என்ற அரக்கனும் அவருடைய சகோதரனும் சேர்ந்து விருந்து கொடுப்பதாகச் சொல்லிக் கொன்று புசித்தவர்கள்.

“விருந்து கொடுப்பது” எங்களுடைய வழக்கம் என்று சொல்வார்கள். அதிலே ஒருவன் ஆடாக மாறி விடுவான். அடுத்தவன் அதை அறுத்துச் சமைத்து இந்த மாமிசத்தைச் சாப்பிட வேண்டும் என்று வந்தவருக்குக் கொடுப்பார்கள்.

சாப்பிட்டு முடிந்த பின் “வாடா வாதாபி” என்றால் வயிற்றைப் பிளந்து வெளி வருவான். இப்படிக் கொன்று… வருவோரை எல்லாம் அவர்கள் சாப்பிட்டுப் பழகியவர்கள்..

அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது இதே முறைப்படி அவர்கள் வரவேற்கிறார்கள். அகஸ்தியனோ, “நான் மாமிசத்தை சாப்பிடுவதில்லை” என்கிறான்.

இல்லை…! எங்கள் முறைப்படி விருந்தில் நீங்கள் அதைஸ் சாப்பிட்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றான்.

நாங்கள் வருபவருக்கு மரியாதை செலுத்துகின்றோம், நீங்கள் சாப்பிடுங்கள்…! என்று கூறி வாதாபி ஆடாகப் போய்விட்டான். அறுத்துச் சமைத்து இவனுக்கு கொடுத்தான்.

அகஸ்தியனும் நன்றாக ருசித்து சாப்பிட்டான்…! அகஸ்தியனுக்குத் தெரியும்… தெரிந்ததனால் சாப்பிட்டான்…!

“வாடா வாதாபி” என்கின்றான் அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிப் போய்விட்டான் என்கின்றான் அகஸ்தியன்.

ஆகா… அப்படி ஆகிவிட்டதா…? பாருடா… உன்னைக் கொன்று நான் விழுங்கப் போகின்றேன் என்றான்.

அப்பொழுது அகஸ்தியன் கண்ணிலே பார்த்தான்… அவனை எரித்து விட்டான்.

ஆனால் அதற்கு முன்னாடி தவ யோகிகள் தவம் செய்தவர்களை எல்லாம் இரையாக்கி ரொம்ப பேரைத் தின்றுவிட்டார்கள்.

அப்பொழுது இதற்காக வேண்டி இராமாயணம் மகாபாரதம் எழுதுபவர்கள் சொல்கின்றார்கள், “அகஸ்தியன் கணபதியைத் தொழுது கொண்டு இருந்தான்…” அதனால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று…!

கணபதி என்றால் எது…?
1.இந்த பிரபஞ்சத்தின் உணர்வுகள் அனைத்தையும் கணங்களுக்கு அதிபதி ஆக்கி
2,அவன் எண்ணத்தைக் கொண்டு ஆட்சி செய்து தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்று
3.அதற்குக் “கணபதி” என்று காரணப் பெயரை வைக்கின்றான்.

ராஜாஜி எழுதிய நூலிலும்… கணபதியை வணங்கிக் கொண்டிருப்பதனால், அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.

கண ஹோமம் செய்தோம் என்றால் உங்களுக்கு எல்லாச் சக்தியும் கிடைக்கும். கண ஹோமம் செய்தால் உங்களுக்கு வல்லமை கிடைக்கும் உங்கள் பாவம் அனைத்தும் நீங்கும். யாரும் ஒன்றும் தீங்கு செய்ய முடியாது என்று “இதற்குக் காரணம் காட்டுவதற்காக” இப்படி எழுதுகிறார்கள். ராஜாஜி படித்தவர் அரசியல்வாதி தான் உலக ஞானத்தைப் பெற்றவர் தான்.

ஆனால் அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பல நூல்களில் வடிவமைத்து உலக ஞானத்தைக் கற்றவர் நேரு.

பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் தான் நேரு. அந்த நிலைகளில் வளர்ந்தாலும் இந்த உலக உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன்.
1.இது எல்லாம் பொய்… இப்படிச் செயல்படுத்த கூடியது அனைத்தும் பொய்யானது
2.இவையெல்லாம் தவறான செயல் என்று சுட்டிக்காட்டினார் நேரு.

ஆனால் ராஜாஜி ரொம்ப சாணக்கியமாகச் சொல்கின்றார். ராமாயணத்திற்கும் மகாபாரத்திற்கும் ஜீவன் ஊட்டி மக்கள் இதைப் பின்பற்றினால் இப்படி இருக்கும் என்று ஜீவன் கொடுத்தவர் ராஜாஜி… ஆனால் வக்கீல்… வல்லமை பெற்றவர்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் இயற்கையின் உண்மையின் நிலைகளைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

அறியாமை என்ற நிலையில் தன் இனம் என்ற நிலைகள் கொண்டு…
1.இனத்தை பிரித்து வாழும் தன்மை தான் வந்ததே தவிர தன் உயிரை மதித்து நடக்கும்…
2.அருள் ஞானிகள் கூட்டிய நிலைகள் இங்கே வருவதில்லை.
3.அதைத்தான் அன்று சொன்னான் நேரு.

கடவுள் எப்படி இருக்கின்றான் என்ற நிலைகள் கொண்டு… என்னை யாரும் வணங்கிட வேண்டாம் இறந்த பின் என் சாம்பலைத் தூவி… விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நிலைகளில் விமானத்தில் கொண்டு போய் இதையெல்லாம் தெளிக்கச் சொன்னார்.

ஏன்…?

1.கங்கையில் கொண்டு போய்க் கரைத்தால் அங்கு பாவம் சேர்ந்து விடும்…
2.அங்கே கரைக்க வேண்டாம்..
3.மாணவர் படிக்கக் கூடிய இடங்களில் நீங்கள் தூவினீர்கள் என்றால் இந்த அருள் ஞானமாவது அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை
4.“கற்றுணர்ந்தவன்… தெரிந்து கொண்டவன்…” இதைச் சொன்னான்.

நேரு தன் சாம்பலைக் கங்கையில் கரைக்கச் சொல்லவில்லை. அங்கே கரைத்தால் பாவம் வந்துவிடும் என்று சொன்னார். சாம்பலை வயல் வெளியில் தூவப்படும் போது உரமாகி அந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு ஞானம் வரட்டும்… வயல் வெளியில் தூவுங்கள் என்று கூறுகின்றார்.

நேரு அரசியல் பண்புகளைக் கற்று உணர்ந்தாலும் நாட்டினை மீட்டு தன் சொத்தை இழந்தவன் தான்.
1.கடவுள் என்ற நிலையில் உண்மையை உணர்ந்தான்
2.ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்பு வரவேண்டும் என்றான்.

பஞ்சசீலக் கொள்கையில் கம்யூனிசத்தை மாற்றி அமைத்தார். ஏனென்றால் அதிலே இராஜ தந்திரமாகச் செய்யப்படும் பொழுது “தப்பான நிலைகளில் வருகின்றார்கள்” என்று உணர்ச்சியின் வேகப்பட்டு கை கால் அங்கங்கள் இழக்கப்பட்டான்… மடிந்தான்.

அவனைப் பற்றி சிந்திப்போர் யாருமில்லை. அவன் பெயரையே எடுக்க வேண்டும் என்கின்றார்கள் இன்று.

பண்டிட் மோதிலால் நேரு அவ்வளவு பெரிய சொத்தை வைத்திருந்தார். அப்பா கூடச் சண்டை போட்டான். நீங்கள் செய்வதெல்லாம் அதர்மம் என்று. யார்..? நேரு. நீ கோடி கோடி சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றாய்… இது எல்லாம் ஆகாது என்றார்.

நாட்டிற்கு செய்யக்கூடிய சேவைக்காகத் சகல சொத்தையும் இழந்தார்.

அன்று விவேகானந்தர் சொன்னது போல்
1.கடவுளை நீ எங்கேயும் பார்க்க வேண்டாம்
2.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக மதி
3.அவன் அமர்ந்திருக்கும் அந்த ஆலயம் என்று நீ எண்ணு… ஆகவே நீ அவனை மதி என்று நேரு சொன்னார்.

அவர் சொல்லை யாரும் மதிக்கவில்லை.

விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?

விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?

 

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்களை குருநாதர் காட்டிய அருள் வழியில் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.

இணையச் செய்தாலும் அடுத்து நினைவு நாள் கொண்டாடுகின்றோம். அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒளி நிலை பெற்ற அந்த நினைவு நாள் தான் இன்று என்றால்…!
1.நாம் கூட்டுத் தியானத்திலிருந்து அவருடைய உயிரான்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.
2.அந்த உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து விட்டது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
4.என்றும் அவர்கள் பேரருளாக இருத்தல் வேண்டும்.
5.எங்கள் குடும்பத்தில் இருளை அகற்றும் அருள் சக்தியாகப் படர்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர் ஒளியின் சரீரமான நாள். இன்றைய தினம் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பங்களில் படர்தல் வேண்டும்.

அந்தந்த குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கொண்ட பின் அந்த உணர்வை எடுத்து
1.நம் குடும்பத்தில் எங்களை அறியாத தீய வினைகள் நீங்கிட வேண்டும்.
2.குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்த்திட வேண்டும்.
3.எங்கள் குலதெய்வங்களாக என்றும் நிலைத்திருந்து இருளினை அகற்றி நஞ்சினை வென்று
4.உணர்வினை பேரருளாக மாற்றிடும் அருள் சக்தியாக அது வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் அவர்கள் நம்முடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் பற்று கொண்ட நாம்… அவரின் உணர்வுகள் நமக்குள் பங்கு உண்டு.

விண் செலுத்தத் தவறினால் அவரின் நோய் இங்கே வளர்கின்றது. அப்படி நமக்குள் வளராது தடுக்க இம்முறைப்படி தான் அந்த நினைவு நாளைக் கொண்டாட வேண்டும். இதை
1.அவர்கள் பேரொளி பெற்ற நாள்
2.என்றும் இருளை அகற்றிய நாள்.
3.சப்தரிஷிகளாக ஆன நந்நாள்.
4.சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்று சேர்த்த அந்த உணர்வின் தன்மை எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
5.குடும்பத்தில் தெளிவான நிலைகளை எங்களுக்கு ஊட்ட வேண்டும்.

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அவர்கள் வீட்டில் வாழ்ந்த உணர்வலைகள் நம் உடலில் அது பதிவாகி இருப்பினும் ஆக நாம் குடியிருக்கும் வீட்டில் பதிவாகி இருப்பினும் மேலே சொன்னபடி நாம் செய்தோம் என்றால் அந்த்த் தீமைகள் மறைகின்றது.
1.அருள் ஒளி என்ற நிலைகள் நமக்குள் பெருக்கப்படுகின்றது.
2.நாம் நினைவு நாள் இப்படித் தான் கொண்டாட வேண்டும்.

மாறாக… அமாவாசையன்று அவர்களுக்கு உணவுகள் கொடுத்து அவர்களை அழைத்தோம் என்றால் ஆவியின் நிலை அடைந்து விடும். பின் இது சில தீமையின் நிலைகளுக்குத் தான் செல்லும். மீண்டும் பிறவிக்கே நாம் அழைக்கின்றோம் என்று பொருள்.

ஆகவே… உடலை விட்டுப் பிரிந்டு சென்றவர்களை நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பேரொளி என்ற உணர்வினை ஆக்கிய பின்
1.அவர் விண் சென்ற அந்த அருள் ஒளி என்ற நிலைகள் நம் வீட்டிலே படர்ந்து
2.அறியாத இருளை அகற்றிடல் வேண்டும் என்ற உணர்வினில் தான் நாம் வாழ்ந்திட வேண்டும்.

என்றுமே ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை அடைந்த அந்த அருள் உணர்வுகள்…
1.குடும்பத்தில் இருளை அகற்றி அனைவருக்கும் தெளிந்த மனம் கொண்டு வாழும் அருள் சக்தியை எங்களில் என்றும் பரப்புதல் வேண்டும்.
2.நம் குடும்பத்தை நீங்கள் காத்திடல் வேண்டும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்தியாக எங்களில் வளர்த்திட வேண்டும்.
4.உங்கள் அருள் என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று
5.அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் இத்தகைய நிலைகள் எண்ணுதல் வேண்டும்.

இதனை எண்ணினால் அவர் உடலில் வாழ்ந்த காலத்தில் நாம் கேட்டறிந்த நோயின் தன்மை வராதபடி மாற்ற முடிகின்றது. ஆகவே நமக்குள் அருள் ஒளியாக மாற்றியமைத்தல் வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நமது மூதாதையர்களை இந்த முறைப்படி பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்… பேரின்பம் பெறச் செய்வோம்.