நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு “நாம் செய்ய வேண்டியது…”

நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு “நாம் செய்ய வேண்டியது…”

 

நமது குருநாதர் காட்டிய வழியில் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் தீமை உங்களுக்குள் புகாதபடி செயல்படுத்திக் கொள்ளுங்கள்.

நமக்கு ஒருவர் தீமைகளை அதிகமாகச் செய்து கொண்டே இருக்கின்றார்… நம் மனம் தாங்கவில்லை…! என்றால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை…!

1.சும்மா கேட்டுக் கொண்டே இருங்கள்…
2.அவர்கள் எதையெல்லாம் கெட வேண்டும் என்று எப்படி எல்லாம் சொல்லுகின்றனரோ
3.அதைத் திருப்பி – நீங்களே அனுபவித்து அதன் வழியில் தெரிந்து கொள்ளுங்கள்…! என்று அவரிடம் சொன்னால் போதும்
4.அவர் சொன்ன கெடுதல் நமக்குள் வராது

ஆனால் அந்தத் தீங்கு செய்வோர் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் இரத்ததில் இந்திரீகமாக மாறிவிடும்.

பின் அது அணுவாக மாறும் பொழுது அதே தீங்கான உணர்ச்சிகளை உணவாக எடுத்து வளரத் தொடங்கும். அப்பொழுது அதே பேச்சு அதே சொல் அதே நிலை நமக்குள்ளும் வந்து அந்தத் தீங்கின் அணுக்கள் விளைந்து நம் உடலையும் பாழ்படுத்திவிடும்.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே… யார் எத்தகைய தீமைகளைப் பேசினாலும்
1.நீ பேசுவது… நீ சொன்னது… நீ கேட்டது… எதையெல்லாம் கெட வேண்டும் என்று நீ எண்ணினாயோ…
2.அதையெல்லாம் உனக்குள்ளே நீயே அனுபவித்துத் தெரிந்து கொள்…
3.அதுவே உனக்குச் சிறந்ததாக இருக்கும்…! என்ற சொல்லிவிடுங்கள்.

அதற்கு அடுத்து
1.அறியாமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்
2.பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் படைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் பேசிய உணர்வுகளை நாம் எடுக்காது… அவர் அறியாமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வும் நல் ஒழுக்கத்தின் தன்மை அங்கே வர வேண்டும் என்றும் பண்பின் உயர்வு அங்கே வளர வேண்டும்… பண்பின் நிலைகள் கொண்டு அவர்கள் வளர வேண்டும் என்ற உணர்வுகளையும் நாம் எண்ணத்தால் எண்ணிவிட்டால்
1.இந்த நினைவின் ஆற்றல் நமக்குள் பண்பு கொண்ட உணர்வின் அணுக்களை வளர்க்கவும்
2.நம் சொல்லும் செயலும் நமக்கு நன்மை பயக்கும் நிலைகளாக வரும்.

ஏனென்றால்.. குரு காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) பல காலம் மலை காடு மேடெல்லாம் அலைந்து துயரப்பட்டுத் தான் இத்தகைய உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அறிந்து கொண்டோம்.

அறிந்து கொண்ட நிலையில் நாம் நுகர்ந்ததை உயிர் இரத்தத்தில் இந்திரீகமாக மாற்றுகின்றது. நம் உடல் இந்திரலோகமாக மாறுகின்றது அதிலே அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் அது பிரம்மனாக உருவாகி அது தன் இனத்தின் தன்மை பெருக்குகின்றது… உடலாக… சிவமாக உருவாகின்றது.

விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… இந்திரனோ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றான்… பிரம்மனோ அதன் வழிப்படி உருவாக்குகின்றான்.
1.நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இது தான் ஜெபம் என்றும்
2.பல காலம் பிரம்மனை நோக்கித் தவம் இருந்தான்…! என்று இதைத் தான் (காவியங்களில்) சொல்வார்கள்
3.அதாவது இந்த வாழ்க்கையில் நாம் எதனை எண்ணி ஏங்குகின்றோமோ அதுவே பிரம்மமாக மாறுகின்றது… அதன் வலுவே ஒன்றாகக் கூடுகின்றது.

ஒரு குழம்பு வைக்கிறோம் என்றால் அதிலே காரத்தைப் போட வேண்டும் என்றாலும்… அதிகமாகப் போட்டுவிட்டால் சுவை கெட்டு விடுகின்றது.. இரசித்துச் சாப்பிடும் தன்மை இழந்து விடுகின்றது. அதே போல் உப்பை அதிகரித்து விட்டாலும் சுவைத்துச் சாப்பிட முடியாத நிலை வருகின்றது.

இது போன்றுதான் தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை அது தடைப்படுத்துகின்றது.

அதை மாற்றி அமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து சமப்படுத்துதல் வேண்டும். அருள் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கி சிறுமையும் தீமையும் விளைவிக்கும் அணுத் தன்மைகளைக் குறைத்திடல் வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்தவர்கள் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நம் குரு காட்டிய வழிகள் கொண்டு அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். யாம் பதிவாக்கியதை நினைவு கொண்டு உங்களுக்குள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.பகைமையான உணர்வுகள் வந்தால் அல்லது தீமை செய்வோர் உணர்வுகளை நுகர்ந்தால்
2.அது நமக்குள் புகாது அவர்களும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று
3.நல் வழி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்.

நாடி சாஸ்திரம்

நாடி சாஸ்திரம்

 

அக்கால ஞானிகள் எல்லாவற்றிற்கும் “காரணப் பெயர்களை வைத்து” நம் வாழ்க்கையில் வரும் தீமை என்ற உணர்வுகளை அறிந்து அதிலிருந்து விடுபட்டு நாம் எவ்வாறு தெளிந்து வாழ வேண்டும் என்பதற்காக சாஸ்திரங்களையும் காவியங்களையும் படைத்துக் கொடுத்தார்கள்..

வியாசகர் பாரதம் என்று சொல்வார்கள்.
1.அதிலே வியாசகர் அவ்வப்போது வருவார்…
2.அதே போன்று அகஸ்தியரும் அவ்வப்போது வருவார்… போவார்…!

வாதாபி என்ற ஒரு அரக்கனையும் அவனுடைய சகோதரனையும் காட்டியிருப்பார்கள். மற்றவர்களைக் கொன்று உணவாக உட்கொள்கிறார்கள் என்றும் காட்டியிருப்பார்கள்.

ஆனால் அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லியிருப்பார்கள்.

வாதாபி ஆடாக மாறுவதும் அதை அடுத்தவன் அறுத்துச் சமைத்து அங்கு வருபவருக்கு உணவாகக் கொடுப்பதும் அவர்களுடைய வழக்கம். சாப்பிட்டு முடிந்த பின் வாடா வாதாபி…! என்று கூப்பிட்டால் வயிற்றைப் பிளந்து அவன் வெளியிலே வருவான்.

இப்படிக் கொன்று விட்டு அவனை இருவரும் சேர்ந்து சாப்பிடுவது அவர்களுடைய வழக்கம். சுருக்கமாக வேட்டையாடும் நிலையாக மீனைப் பிடிக்கத் தூண்டிலில் இரை வைத்துப் போடுவது போன்று அவர்கள் செயல்படும் நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.

அகஸ்தியன் அங்கே செல்லப்படும் பொழுது அதே போன்று வாதாபி ஆடாக மாறுவதும் சமைத்து இவன் உணவாக உட்கொண்ட பின் “வாடா வாதாபி…!” என்று இவன் கூப்பிடுகின்றான்.

அவன் வரமாட்டான்… அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டான்…! என்று அப்போது அகஸ்தியன் சொல்கின்றான். வாதாபியைக் கொன்று விட்டான்…! என்று சொன்னதும் இவனுக்குக் கோபம் வருகிறது.

அகஸ்தியனைக் கொல்வதற்கு முயற்சிக்கின்றான். அகஸ்தியனோ அவனை உற்றுப் பார்க்கின்றான்… எரித்து விடுகின்றான்.
1.அகஸ்தியனுடைய சக்தியை அங்கே காட்டுகின்றார்கள்.
2.ஆனால் அவன் கண்டுணர்ந்த வானவியல் புவிஇயல் உயிரியல் தத்துவங்கள் எங்கும் வரவில்லை.
3.ஏதோ வருவார் போவார்… எங்கேயோ காட்டிலே வருவார் போவார்… என்று காட்டிவிட்டார்கள்.

அதே போன்றுதான் வேத வியாசர் என்று பெயரை வைத்திருப்பார்கள். ஆனால் வேதங்களைக் கற்றுணர்ந்தவன் அவன் அல்ல. கண்டுணர்ந்த உணர்வுகளை வேதங்களாக மாற்றிக் கொண்டது பின் வந்தோர்.

அவனை நீசன் என்று வைத்து அவனை ஒதுக்கப்பட்டு அவனின்று வந்த உண்மை உணர்வுகளை மாற்றிவிட்டனர்.

வியாசகர் கண்டதை பிருகு எடுத்தான். அவன் அரசாட்சி நிலையில் வந்தவன். நட்சத்திரங்களின் இயக்கங்கள் எப்படி…? என்று உணர்ந்தான். நட்சத்திரங்களின் சக்திகளைத் தனக்குள் எடுத்து மக்களின் மீது பாய்ச்சி இந்த உலகையே ஆள விரும்பியவன்.

இதே போன்றுதான் அத்திரியும்…! ஒரு அத்தி மரத்தில் இடை இடையிலே கனிகள் எப்படி முளைக்கின்றதோ அதைப் போல் அவன் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் மக்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டு போர் முறை செய்தவன்.

போர் முறைக்குச் சென்று தன் உணர்வுகளை நிறைவேற்றத் தவத்தை அங்கங்கே மேற்கொண்டு அரச சாம்ராஜ்யமாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்தான்…! இந்த உடலுக்குத் தான்… விண் செல்லும் முறையே இல்லை.

1.இது போன்ற ஏழு ரிஷிகளைக் காட்டியிருப்பார்கள்
2.ஏழு குணங்களின் உணர்வைத் தனித்துத் தனித்துப் பிரித்து
3.வியாசகன் சொன்னதை எழுத்து வடிவில் கொண்டு வந்து
4.மகாபாரதப் போர் என்று காட்டி அதை அரசனுக்கு உகந்த நிலையாக
5.தன்னுடைய போர் முறைகளுக்காக பல நிலைகளைக் கையாண்டு கொண்டார்கள்.

அதன் வழி தான் இன்றும் நாம் நடந்து கொண்டு வருகின்றோம்…!

உலக ரீதியிலே “சத்திரியன்…” என்று அரசனைக் காட்டி எவனுக்கும் அவன் அடிமை ஆவதில்லை என்றும் மற்றவர்களை அடிமையாக்கி அவன் வாழ்வான் என்றும் அரசன் செய்வதில் தவறில்லை என்று உருவாக்கி இருப்பார்கள்.

அதே போல் “குரு…” என்று உருவாக்கி அந்தக் குருவிற்குத் தவறு செய்யாத நிலையில் அடிபணிதல் வேண்டும் என்றும் சட்டம் இயற்றி இருப்பார்கள்.

“வணிகன்…” அவன் எத்தனை பொய்கள் வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளலாம் அவன் வியாபாரத்தைக் காக்கப் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் உண்மையைச் சொன்னால் வியாபாரம் ஆகாது.

சத்திரிய தர்மத்திலும் வணிகர் தர்மத்திலும் இப்படியெல்லாம் உருவாக்கி உள்ளார்கள். ஆனால் வர்ணாசிரம தர்மத்தில் நாமெல்லாம் (மக்கள்) கீழ் மட்டத்தில் தான் வருகின்றோம்.
1.மக்களை அடிமைப்படுத்தினான் அரசன்
2.அவன் சொன்ன நிலைகளில் அடிமைகளாகத்தான் இன்றும் வாழ்கின்றோம்.

அடிமை என்ற நிலைகள் கொண்டு அரசன் பல உயிர்களைப் பலியிட்ட பின்… பலியிட்ட உணர்வின் தன்மை (ஆவிகளை) கைவல்யப்படுத்தி அவன் சுகபோகமாக வாழும் நிலை தான் அன்று வந்தது.

அதன் வழி எழுதுகின்றான் அந்த அரசன் ஆட்சி புரிந்த நிலையை விஸ்வாமித்திரர் நாடி… அகஸ்தியர் நாடி… போகர் நாடி… அந்த நாடி இந்த நாடி…! என்று அப்படி எழுதி உருவாக்கிய மந்திர ஒலிகளை மனிதனுக்குள் பாய்ச்சி அவன் இறந்த பின் அதைக் கவர்ந்து அவன் சுழற்சி வட்டத்தில் வந்தது தான் (ஆவியின் தன்மை கொண்டு) நாடி சாஸ்திரங்கள்…!

அதிலே அந்தந்தக் காலத்திற்கு ஒப்ப எழுத்துக்கள் மாறும். அதே சமயத்தில் “யட்சிணி…” என்று மாற்றப்பட்டு என்றோ எழுதிய நாடியை இன்றும் அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

1.போன ஜென்மத்தில் நீ இப்படி இருந்தாய்… இங்கெங்கெல்லாம் வந்தாய்
2.இதனுடைய நிலைகள் இப்படி ஆனாய்… இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்
3.இன்னார் மகனுக்கு இந்த திசையில் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லும்.

இப்படி யட்சிணி என்று இந்த உணர்வின் அலைகளைக் கவர்ந்து சொல்லும் பொழுது
1.“தான் என்னமோ மோட்சத்திற்குப் போகின்றோம்…”
2.வாழ்க்கையில் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நாடிகளைத் தேடிச் செல்வார்கள்.
3.காசைக் கொடுத்துவிட்டுத் தேடி அலைவார்கள்

ஞானிகள் சொன்னது அனைத்தையும் இப்படித் தான் தலைகீழாக மாற்றி… காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியன் “எரிமலையாக இன்று உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது”

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியன் “எரிமலையாக இன்று உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது”

 

கடும் விஷத்தன்மை பரவிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் உலகம் முழுவதுமே நஞ்சு பரவும் நிலை இருக்கின்றது.

அணுகுண்டுகளும் மற்றும் அதைப் போன்ற எத்தனையோ கெமிக்கல் கலந்த குண்டுகளையும் வெடித்துப் பரிசீலித்துப் பார்த்த
1.அந்த விஷமான கதிரியக்கங்கள் அனைத்தும் நம் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து விட்டது.
2.சூரியனும் அதைக் கவர்ந்து தனக்குள் கடும் எரிமலைகளாகக் காந்தப் புயல்களாகக் கக்கிக் கொண்டே உள்ளது
3.அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான உணர்வுகள் நம் பூமிக்குள் அடிக்கடி அடிக்கடி பாய்ந்து கொண்டிருக்கின்றது.

தினமும் பத்திரிகை படிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

மின்னல்கள் பாயும் பொழுது அது கடலிலே அடங்கி யுரேனியமாக மாறுவதும் 27 நட்சத்திரங்களுடைய உணர்வு பல கலவைகள் கொண்டு வித்தியாசமான வெடி பொருள்களுக்கு உகந்த மணல்களாகவும் வருகின்றது.

இது எல்லாம் பூமியில் தாக்கப்படும் பொழுது அது நடு மையம் அடைந்து கொதிககலனாக மாறி நிலநடுக்கங்கள் போன்று ஆகி கீழே இருப்பது மேலே வருவதும் மேலே இருக்கும் நிலம் கீழே இறங்குவதும் பூமிக்குள் பல பல மாற்றங்கள் அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதையும் பத்திரிகையில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியனின் நிலைகள் மாறி மனிதனால் உருவாக்கப்பட்ட விஷத்தன்மைகள் அங்கே பெருகி விட்டது. “எரிமலைகளாக அது உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது…!”

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு யாம் (ஞானகுரு) சொன்னது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. அந்த எரிமலைகள் இங்கே பரவி
1.ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது எலக்ட்ரிக் என்ற நிலைகள் அதிகரிக்கும்… அது இரு மடங்காகப் பரவும்.
2.அப்படி உருவான உணர்வுகளை மனிதன் எடுத்துக் (மின்சாரம் தயாரிக்க) காந்த புலன்களில் மோதப்படும் பொழுது
3.இது எலக்ட்ரிக் பவரை அதிகரிக்கும்… மோதலில் வெப்பத்தின் தன்மையும் கூட்டும்.

இப்பொழுது நீங்கள் பார்க்கலாம். சூரியனுக்குள் எரிமலையாகப்படும் பொழுது பூமிக்குள் எந்தெந்தப் பகுதியிலே பரவுகின்றதோ அங்கே வெயிலின் கொடுமைகள் அதிகமாகிறது (CLIMATE CHANGE).

எலக்ட்ரிக் என்ற நிலை மனிதனுக்குள் வரப்படும் போது
1.உயிரின் துடிப்புகள் அதிகரித்து வேகம் அதிகமாகும்
2.உடலுக்குள் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் அணுக்களின் தன்மையும் துடிப்பு அதிகமான பின்
3.இந்த உணர்வின் இயக்கம் மனிதனின் சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளைத் தெறிக்கச் செய்யும்
4.அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு மனிதனைச் செயலிழக்க வைத்துவிடும்.

உதாரணமாக ஒரு மோட்டார் அதனுடைய பளு (LOAD) அதிகமாக எடுக்கிறது என்றால் மின் இணைப்பில் உள்ள ஃப்யூஸ் வயரில் மின் அழுத்தம் அதிகமாகி அது கருகி விடுகின்றது… இருண்டு விடுகின்றது… மோட்டார் நின்று விடுகின்றது.

அது போன்று தான் மனிதனுக்குள் பாய்ச்சப்பட்டு சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் தெறித்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கடும் நஞ்சுகளையும் வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் அதிகமாக நமக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.நம் உணர்வுகள் ஷாக் அடிக்காது ஃப்யூஸ் ஆகிவிடாது நம் சிந்தனைகள் செயலற்றதாக ஆகாதபடி தடுக்க
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒருவருக்கொருவர் பாய்ச்சி… இரு உயிரும் ஒன்றாகி… உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றுங்கள்.

இதன் வழி சீராகச் செயல்பட்டால் உங்கள் வாழ்க்கையில் அருள் மகரிஷிகள் உணர்வின் துணை கொண்டு சிந்தனைகள் சிதையாது… உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நிச்சயம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் உயிரான்மாவில் விஷம் அதிகரித்து விஷப் பூச்சிகளாக ஒன்றை ஒன்று கொன்று விழுங்கும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும்.
1.அடுத்து மனிதனாக உருவாகும் காலம் எப்பொழுது…? என்று சொல்ல முடியாது.
2.இன்று நல்ல நினைவு இருக்கும் போதே குருநாதர் காட்டிய வழியில் நாம் அருள் உணர்வுகளைப் பெருக்கிடல் வேண்டும்.

பல வருட காலமாக யாம் சொன்ன உண்மைகளை “இனிமேல் தெரிந்து கொள்வீர்கள்…”

பல வருட காலமாக யாம் சொன்ன உண்மைகளை “இனிமேல் தெரிந்து கொள்வீர்கள்…”

 

விஞ்ஞான முன்னேற்றத்தின் அணு விசைகளால் வெளிப்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுக்குள் சென்று விட்டது. அதன் விளைவாக எத்தனையோ கடும் புயல்கள் அங்கே அடிக்கடி உருவாகி விஷமான அலைகளைக் கக்கிக் கொண்டுள்ளது. பூமிக்குள்ளும் அது பரவி வருகிறது.

அதனின் விளைவுகள்… உதாரணமாக மின்சாரம் செல்லும் இரண்டு வயர்கள் இரண்டும் சேர்ந்து விட்டால் எப்படி ஒரு எர்த் ஆகி… இரு மடங்கு மின் அழுத்தம் கூடி அனைத்தையும் கருக்கிவிடுகிறதோ இதைப் போல
1.உலகெங்கிலும் உயிரணுக்களிலும் மற்ற அணுக்களிலும் இது படரப்படும் போது
2.வயர்கள் கருகி பல்புகள் ஃப்யூஸ் ஆவது போன்று மனிதனின் சிந்தனைகள் சிதறும் தன்மை
3.இனி எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம்.

அதற்கு முன் நீங்கள் எதைச் சேமிக்க வேண்டும்…? என்று முடிவு செய்து கொள்ளுங்கள்…!

அருள் ஞானிகள் உணர்வைச் சேமித்துக் கொண்டால் அது உங்களைக் காக்கும். கடுமையான நஞ்சுகளையும் வென்றவன் அகஸ்தியன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை நீங்கள் நுகர்ந்து இத்தகைய கொடுமையிலிருந்து மீள நீங்கள் முற்படுங்கள்.

இல்லையென்றால் இந்த விஷத்தின் தன்மை… அன்று அணுகுண்டினால் (கதிரியக்கங்கள்) ஜப்பானில் அழிந்தது போன்று… மனிதர்கள் முழுமையாக வளராதபடி இன்றும் எப்படி இயக்கிக் கொண்டுள்ளதோ…
1.அதிலே தாக்கப்பட்டு இறந்தவர்கள் விஷப் பூச்சிகளாக உருவாகி
2.பல கோடிச் சரீரங்களைக் கடந்து தான்… அந்த விஷங்களை வடிகட்டிய பின்பு தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.

இனி வரக்கூடிய உலக யுத்தமும் அது போன்றது தான். ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டும் என்ற நிலையில் அந்த அணு விசைகள் வெளிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதே போன்று மின்சாரத்தை அதிகமாகத் தயாரிப்பதற்காக வேண்டி பல அணு உலைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதனுடைய கசிவுகளும் பரவப்பட்டு சூரியனுடைய காந்த சக்தி அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆகவே விஷத்தன்மை கொண்ட அணுக்கதிரியக்கங்கள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து மனிதனுக்குள் அதிகரித்து அதிகரித்து மனிதனல்லாது உருப்பெறும் சக்திகளாக வளரப் போகின்றது.
1.இதிலிருந்து மீள வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
1.இருவருமே நினைவை விண்ணிலே செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துக் கொண்டால் இரு உயிரும் ஒன்றாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கருவாக உருவாக்கி உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக அதைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

தன் உடலையே சொந்தமாக்க முடியாத நிலைகள் வரும் போது இப்போது சம்பாரிக்கும் எந்தச் செல்வமும் நம்முடன் வரப்போவதில்லை.
1.ஆனால் அந்த அழியாச் செல்வமான அருள் ஒளியைச் சேர்த்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தின் மூலம் எதிர்பாராதபடி விபரீதமான நிலைகள் ஏற்பட்டாலும்
3,நாம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகின்றது.

அன்று தான் தெரியும் இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னதை ஏன் செய்யவில்லை என்று…! – செய்யத் தவறியவர்களுக்கு…!

மனிதனின் கடைசி நாள்களில் செல்வத்தால் நிம்மதி கிடைப்பதில்லை… இருந்தாலும் ஆசை அவனை விடுகிறதா…?

மனிதனின் கடைசி நாள்களில் செல்வத்தால் நிம்மதி கிடைப்பதில்லை… இருந்தாலும் ஆசை அவனை விடுகிறதா…?

 

கோடிச் செல்வம் சம்பாதித்து வைத்திருப்போருக்கும்
1.இன்று அவர்களுக்கு நிம்மதி இருக்கின்றதா…? என்றால் இல்லை..!
2.தேடி வைத்த செல்வத்தைச் சீராக அனுபவிக்கின்றார்களா…? என்றால் அதுவும் இல்லை.

செல்வத்தைக் கண்டு அதனால் வெறுப்பும் வேதனையும் அதிகமாக வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர இந்த உடலில் அமைதி பெரும் உணர்வைப் பெறும் சக்தியினை இழந்து விடுகின்றார்கள்.

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிற பொழுது நாம் தேடும் செல்வம் நமக்கு எப்படிச் சொந்தமாகும்…?

ஏனென்றால் கோடிக்கணக்கில் செல்வத்தைத் தேடி வைத்திருப்பினும்
1.நமக்குப் பின் குழந்தைகள் அதைச் சீராகப் பயன்படுத்த முடியாதபடி
2.வேறு யார் யாருக்கோ சென்று விடுகின்றது.

சேலத்தில் இது நடந்த நிகழ்ச்சி…! கணவன் மனைவி ஒரு குடும்பத்தில் அவர்களுக்கு வயது 80 க்கு மேல் இருக்கும்… செல்வங்கள் இருக்கின்றது… அவர்களுக்குக் குழந்தை இல்லை கடைசி நேரம்… ஆனால் மன நிம்மதி இல்லை.

கையில் 10 லட்சம் பணம் இருக்கின்றது. யாரிடமாவது கொடுத்தால் அதைக் கொண்டு சென்று விடுவார்களோ…? அல்லது ஏமாற்றிவிடுவார்களோ…? என்று இதே சந்தேக நிலையில் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னைப் பற்றி விசாரித்து இதற்குண்டான வழி வேண்டும் என்று எம்மிடம் கேட்டார்கள்.

அதே சமயத்தில் ஒரு சொந்த வீடும் அவர்களுக்கு இருந்தது. 25 லட்ச ரூபாய் பெருமானம் உள்ளது. முக்கியமான ரோட்டிலே அந்த வீடு இருக்கின்றது.

அதை விற்கச் செல்லும் பொழுது ஒருவர் அந்த வீட்டை வாங்க மூன்று லட்சம் ரூபாய் முன் பணம் கொடுக்கிறார். ஆனால் மொத்தத்தையும் கொடுத்து வீட்டை உடனே வாங்கவில்லை… நாளாகிவிட்டது…!

இதையும் என்னிடம் சொல்லிக் கேட்டார்கள்… ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள். பின் வீட்டை விற்று அந்தப் பணம் எப்படியோ அது வந்து சேர்ந்தது.

குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள். ஒரு சிறு ஆசிரமத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏழைக் குழந்தைகளை அதில் வளர்ப்பதற்குக் கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். பண வசதி இல்லாத குழந்தைகளுக்குக் கல்வியும் ஞானமும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்… என்று சொன்னேன்.

சரி… சரி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு டிரஸ்ட் போன்று அமைத்து ஆசிரமத்தை ஏற்பாடு செய்து அதற்கென்று ஒரு ஆசிரியரை வைத்துக் குழந்தைகளைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்களும் அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருங்கள் என்று சொன்னேன்.

சரிங்க சாமி… சரிங்க சாமி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மொத்தம் 35 லட்சம் ரூபாய் கையிலே வந்த பின் அவர்களாகவே ஆலோசனை செய்து நான் சொன்னபடி செய்வதற்குப் பதிலாக ஒரு “கல்யாண மண்டபத்தைக் கட்டலாம்…” என்ற முடிவுக்கு வந்தார்கள்.

தன் பெயரைப் போட்டு மண்டபத்தைத் தொடங்கலாம் அதில் நிறையத் திருமணங்கள் நடக்கும் என்று அப்படிச் செய்து விட்டார்கள்.

அதற்குண்டான முயற்சிகளை மற்றவர்களிடம் சொல்லி எடுக்கும் போது உங்கள் பேரை வைத்து டிரஸ்ட் என்று அமைத்தால் சரியாக இருக்காது என்று சொல்லி விட்டார்கள்.

பணத்தைக் கையில் வாங்கும் வரை இவர்களைச் சமாதானப்படுத்தி வைத்துவிட்டு அவர்கள் கைக்குப் பணம் வந்தபின்
1.நீங்கள் இங்கே வேலை செய்து சாப்பிட்டு கொள்ள வேண்டியது தான்.
2.பொதுவாகத்தானே இதைச் செய்திருக்கின்றீர்கள்
3.நாங்கள் டிரஸ்ட் அமைத்து எத்தனையோ பேரைச் சேர்த்து இருக்கின்றோம்
4.பணத்தை வசூல் செய்திருக்கின்றோம் என்று சொல்லி இவர்களை “அம்போ…” என்று ஆக்கிவிட்டார்கள்.

நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். உன் மனைவி பேரில் ஒரு லட்சம் ரூபாயாவது பத்திரப்படுத்தி வை…! என்று சொல்லி இருந்தேன்… ஒரு பாதுகாப்புக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன்.

அது எல்லாம் வேண்டியதில்லை… சாப்பாடு போடுவார்கள்… நாங்கள் பிழைத்துக் கொள்வோம்…! என்று நான் சொன்னதைக் கேட்காமல் செய்தார்கள்.

கடைசியில் மண்டபம் முடிந்தபின் சோற்றுக்கு வழியில்லாமல் போய்விட்டது இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின் “இப்படி ஆகிவிட்டதே…!” என்று மனது விரக்தி ஆகி இறந்து விட்டார்கள்.

சம்பாதித்த பணம் யாருக்குச் சென்றது…? இத்தனையும் இறுக்கிப் பிடித்து வேதனையைத் தான் வளர்க்க முடிந்தது. கோடிக்கணக்கில் இவ்வாறு செல்வத்தைச் சேர்த்தாலும் இந்த நிலை தான் ஆகின்றது.

உடலே நம்முடன் வருவதில்லை… செல்வம் நம்முடன் வருமா…? ஆனாலும் பணத்தின் மீது நமக்கு ஆசை விட்டபாடில்லை…!

இப்படி… செல்வத்தைத் தேடும் எண்ணத்திலேயே தான் நாம் மனித வாழ்க்கையை வாழ்கின்றோமே தவிர வேறும் ஒன்றும் இல்லை. இருந்தாலும்
1.செல்வத்தைக் காக்கும் நிலைக்கு நமக்கு ஞானம் தேவை
2.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது.

செல்வத்தை வைத்து ஞானத்தைப் பெற வேண்டும் என்றால்
1.செல்வம் இருக்கும் பொழுது செருக்கின் தன்மை தான் வரும்.
2.ஞானத்தின் நிலைகள் வருவது கொஞ்சம் சிரமம் தான்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆட்டிப் படைக்கும் சில உணர்வுகளில் இருந்து நம்மை நாம் காக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நுகர்ந்து அவைகளைத் தணித்துப் பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்தால் தான் எத்தகைய நிலையையும் சீராக்க முடியும். நம்மைக் காக்கும் சக்தி அது தான்…!

கடுமையான நஞ்சுகளையும் முறிக்கும் சக்தி

கடுமையான நஞ்சுகளையும் முறிக்கும் சக்தி

 

கருடன் என்ற பறவையை எடுத்துக் கொண்டால் அதனுடைய கூட்டிலே நாம் ஒரு இரும்புச் சங்கிலியை “விலங்கு போடுவது போல்” முடிந்து வைத்து விட்டால் அது என்ன செய்யும்…?

கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளை மீட்டுவதற்காக அலைந்து திரிந்து
1.சில செடிகளின் விழுதுகளை அல்லது அந்தக் காம்புகளை எடுத்து அந்தச் சங்கிலி மீது வைத்து அதைத் தெறிக்கச் செய்துவிடும்.
2.இது கருடன் கண்ட உபாயம்… இரும்பு உலோகங்களைக் கத்திரிக்கும் திறன் பெற்றது.

ஆனால் கருடனுக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…?

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனிதனாக ஆன பின் மீண்டும் மடிந்து மடிந்த நிலைகளிலிருந்து “அவன் பட்சிகளாக உருவானால்…” இவனுக்குள் உருவாகிய இந்த உணர்வின் அணுக்கள் அது உணவாக உட்கொள்ளும் பொழுது “அந்த உணர்வின் ஞானங்கள்…” அங்கே கிடைக்கின்றது.

மனிதனாகிப் திருப்பிப் பட்சியாக வந்த பின்…! மனிதனுக்குண்டான சிந்தனைகள் எல்லாம் அந்தப் பட்சிக்கு உண்டு.

எப்படி…?

காடுகளில் மனிதன் ஒரு விஷத்தால் தாக்கப்பட்டுத் தேய்பிறையாகி அவன் மடிந்து கிடந்தால் அந்த உடலிலிருந்து வந்த விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் இது கலந்துவிடும்.

விஷம் தீண்டி மடிந்த இவன் உடலில் இருந்து வெளிவரக்கூடிய உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து கவர்ந்து வைத்துக் கொள்கிறது.

அதே சமயத்தில்
1.மற்ற சாந்தமான தாவர இனங்களின் சத்து சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பரவி வருவது இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும்
2.இன்னொரு விஷமான செடியின் மீது அது மோதும் சந்தர்ப்பத்தில் சுழற்சி ஆகுவதும்
3.சுழற்சியான பின் தனக்குள் கவர்ந்து கொண்டு புது விதமான தாவர இனச் சத்தாக செடியாக விளைகின்றது.

ஏனென்றால்… பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் ஒரு விஷம் தீண்டி மனிதன் மடிந்தால் இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம் மற்ற தாவர இனச் சத்துக்களுடன் கலக்கப்பட்டு… இரண்டறக் கலந்து ஒரு வித்தாக உருவாகி நிலத்தில் பட்டு விட்டால்… கடும் விஷத்தையே முறிக்கும் சக்தி பெறுகின்றது.

இதைத் தான்… அந்த விஷத்தை முறிக்கக் கூடிய சக்தியைக் கருடன் கண்டுள்ளது. அதாவது.. உலோகங்களில் இந்த்த் தாவர இனத்தின் சத்து பட்டபின் அது பலவீனமாகி… அந்த உலோகம் தெறிப்பதையும் அது கண்டுள்ளது.

ஏனென்றால் மனிதனாக ஆன பின் இவனுக்குள் விளைய வைத்த சத்துக்கள் தாவர இனத்துடன் கலக்கப்பட்டு இது பட்சியானாலும் கூட…
1.அதற்குள் இருக்கக்கூடிய உணர்வு (ஞானம்) சிக்கலில் இருந்து தீர்க்கும் நிலையாக வருகின்றது
2.இது பட்சி இனமாகத்தான் இருக்கின்றது… ஆனால் இதற்கு எப்படி இந்த அறிவு வந்தது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

இதே போல் தான் கீரிப்பிள்ளை மீது பாம்பின் விஷம் தீண்டப்பட்ட பின் அது ஓடிச் சென்று அதை முறிக்கும் அந்தத் தாவர இனத்தில் பிரள்கிறது. அந்த மணங்களை நுகர்கிறது. நுகர்ந்து அந்த விஷத்தை நீக்கிய பின் அந்தப் பாம்பினை மீண்டும் அது தாக்குகிறது.

இது போன்று தான்
1.”ஒரு உயிரணு” தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் அணுக்கள்
2.மாறி மாறிப் பல விதமான ஒரு சக்திகள் பெற்று வளர்ச்சிக்கு வருகின்றது.

இப்படி எல்லாவற்றையும் கடந்து மனிதனாக உருப்பெற்ற பின் இத்தகைய தாவர இனங்களுடைய சக்திகளைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் கண்டறிய நேர்கிறது.

அந்த வழியில் தான் அகஸ்தியன் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கிடும் சக்திகளைப் பெற்றான்… ஒளியாக மாற்றிக் கொண்டான்.

மந்திர ஒலிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

மந்திர ஒலிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

 

அன்றைய அரசர்கள்… ஞானிகள் கொடுத்த வேதங்களைத் திரிபு செய்து விட்டார்கள். எப்படி…?

மழைக்காகக் குடை பிடிப்பது போன்று… “கடவுளுக்கு உரியவன்…” என்றும் உருவாக்கக் கூடியவன் “அவன் பிரம்மன்” என்றும் காரணப் பெயரைச் சூட்டி விட்டனர்.
1.அவன் மந்திரங்களை ஓதி ஒரு மனித உடலில் உருவாக்கத் தெரிந்து கொண்டவன்
2.அப்படி உருவாக்கிய பின் அவனே பிரம்மம் ஆகின்றான்
3.அவன் சொல்லை… அந்த மந்திரத்தை யாரொருவர் கேட்கின்றனரோ அதை அங்கே உருவாக்குகின்றான்.

அது உருவாக்கிய பின் அதே மந்திர ஒலி கொண்டு பல பல வேலைகளைச் செய்கிறான்.

நாம் எப்படி வெயிலுக்கும் மழைக்கும் ஒரு குடையைப் பிடித்து அந்த நேரத்தில் அதைத் தடுக்கின்றோமோ
1.இந்த வாழ்க்கையில் மந்திரத்தின் துணை கொண்டு
2.மற்ற மனித உடலிலிருந்து கட்டாயப்படுத்தி அந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அதை இன்னொரு உடலில் பாய்ச்சி
3.அவன் உடலில் இருக்கக்கூடிய தீமைகளைச் “சிறிது காலம் அடக்க முடியும்…”
4.மீண்டும் மழை வந்தால்… குடையைப் பிடிப்பது போன்று தீமைகளை நீக்க அதே மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

மந்திர ஒலிகள் கொண்டு அரசனால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான் அது. வாமன அவதாரம்… பிரம்மம் சிருஷ்டிக்க வல்லவன்…! என்று காரணப் பேரைச் சூட்டினார்கள் அரசர்கள்.

வேதங்கள் ஓதப்படும் பொழுது அதன் உணர்வின் ஒலிகளை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அவர்கள் சொன்னது…” நமக்குள் உருப்பெற்று விடுகின்றது.

அது நமக்குள் பதிவான பின் இறந்து விட்டால் அதே மந்திரத்தைச் சொன்னால் கட்டாயப்படுத்தித் தனக்குள் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். அவனுக்குத் தேவைப்படும் பொழுது… அரசன் தன் எதிரிகளை அழிக்க ஏவல் செய்கின்றான்.

பகைமை உணர்வு கொண்ட நிலையில் “குண்டர்களைத் தயார் செய்கின்றார்கள்…” இந்த நாடு உனக்குச் சொந்தம்…! என்றும் இந்த உணர்வின் ஒலிகள் உனக்குச் சொந்தம்…! என்று அமரச் செய்து மந்திர ஒலிகளைப் பாய்ச்சுகின்றான்.

இந்த நாட்டை நீ காவல் காக்கக்கூடியவன்… கருத்துக்களை நீ மேற்கொள்ளக் கூடியவன்… உன்னால் முடியும்…! என்ற உணர்வுகளை அவனுக்குள் ஓதி… “விஷத்தைக் கலந்து கொடுத்து…” அவன் வளர்ந்து வரும் போது தன் நாட்டின் பண்புகள் இது தான்…! என்று ஊட்டுகின்றார்கள்.

1.அவன் மரணம் அடையப்படும் பொழுது
2.இவனுக்குள் ஒலித்த மந்திரத்தைக் கொண்டு மீண்டும் அந்த மந்திரத்தால் ஜெபிக்கப்படும் பொழுது…
3.அவன் உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை எடுத்து எதிரிகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகளை ஏவல் செய்து
4.எப்படி இந்த உடலில் விஷத்தன்மை பாய்ந்ததோ இதைப் போன்று
5.உணர்வின் அலைகளை மற்ற மனிதர்கள் மேல் இந்த ஒலிகளை பாய்ச்சி அவர்களைச் செயலிழக்கச் செய்கின்றனர்.

இந்த வழிப்படி தான் ஆலயங்களில் யாகங்களைச் செய்வதும் மந்திரங்களைப் பதியச் செய்து அந்தப் பதிவின் தன்மையை எடுத்த பின் “தெய்வம் செய்யும்…” என்ற நம்பிக்கையை நமக்குள் ஊட்டும் பொழுது இது வசியம்…!

அவர்கள் சொன்னபடி நமக்குள் பிரம்மமாக உருவாகிறது. அப்படி உருவாக்கிய உணர்வுகள் எதுவோ அதன் செயலாகவே நம் எண்ணங்கள் உருவாகும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ… அதை நமது உயிர் அந்த உணர்வின் அணுவாக உருவாக்கப்படும் பொழுது… அந்த அணு மீண்டும் தன் இனத்தை உருவாக்கும்.

எதைப் பெருக்கியதோ அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அதனின் செயலாக பிரம்மமாக உருவாக்குகின்றது.
1.தெய்வத்தின் பெயரால்தான் இதை எல்லாம் செயல்படுத்துகின்றார்கள் நமக்குள் பதிவாகின்றது
2.யாகம் நடக்கும் இடத்தில் உட்காரப்படும் போது நமக்குள் அது பதிந்து விட்டால் அது நமக்குள் உருவாகி விடுகிறது.

அதே எண்ணத்தில் ஏங்கும் பொழுது “தெய்வம் செய்யும்…!” என்று அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படும் பொழுது…
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.நாம் எதை நீக்க வேண்டும்…? என்ற நிலைகளை மறந்து
3.அந்தச் சிலைக்கு நாம் இதை உணவாகக் கொடுத்தால் நமக்கு நன்மை செய்யும் என்ற எண்ணத்தைத் தான் கருத்தில் கொண்டு வந்திருக்கின்றோம்.

சாங்கிய சாஸ்திரங்களாக அரசன் வகுத்த நிலைகளில் குலதெய்வம் என்று அந்த வழிப்படித் தான் நாம் இயங்கிக் கொண்டுள்ளோம்.

ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லவில்லை…!

மனிதனின் நல்ல சிந்தனைகள் “சிறுகச் சிறுக அழிந்ததன் சரித்திரம்…!”

மனிதனின் நல்ல சிந்தனைகள் “சிறுகச் சிறுக அழிந்ததன் சரித்திரம்…!”

 

கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் கடவுள் ஒருவனே…! தேவன் ஒருவனே…! என்பதெல்லாம் மதங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள்.

ஒவ்வொருவரும் தனக்குகந்த உணர்வுகளை அது உருவாக்கி மந்திரங்களை உருவாக்கி… அதனை மனிதனுக்குள் பதிவாக்கி… இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் கடவுள் அதற்காக அடிபணிந்து நமக்கு எல்லாம் செய்து தருவான்…! என்று சட்டங்களை இயற்றப்பட்டு… அதற்கென்று வேதங்களை உருவாக்கப்பட்டு… மந்திரங்களை ஒலிக்கச் செய்து கேட்டுணரும்படி செய்து… மனிதனை உருமாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

மதங்களால் இயற்றப்பட்ட சட்டத்தை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அது தான் கடவுளாக இயக்குகின்றது நம்முள் நின்று…!”

ஒருவன் ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்து… தீமை எனக்குச் செய்தான் என்று உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை ஜீவ அணுவாக மாற்றி அது பிரம்மமாக்கி நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது தீமை செய்யும் கடவுளாக அது உருவாகின்றது.
1.தீமை செய்யும் எண்ணங்கள் அதிகமாகச் சேர்த்து விட்டால்
2.அந்த அணுவின் தன்மை தீமையை உருவாக்கும் கடவுளாக உருவாகின்றது.
3.ஆனால் நன்மை செய்யும் உணர்வுகளை உருவாக்கி விட்டால் நல்ல உணர்வை நுகரும் ஆற்றல் பெறுகின்றோம் நமக்குள் கடவுளாக…!

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞானம் இன்று இதைத் தெளிவாக நிரூபிக்கின்றது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக்கை வைத்து அதை இயக்கச் செய்கின்றார்கள்.
1.அதிலே பொருத்தப்பட்டுள்ள நாடாக்களில்
2.காந்தப் புலனறிவை ஈர்த்து ஒலி அலைகளைப் பரப்புவதைக் கவர்ந்து
3.மீண்டும் எதிர் நிலைகளில் உருவாக்கும் ஆற்றலை அதிலே மூலமாகப் பூசி உள்ளார்கள்.

அதில் நாம் தட்டெழுத்தால் (KEY BOARD) எப்படி அடிக்கின்றோமோ… அடித்துக் காந்தப் புலனால் ஒலி அலைகளை எழுப்பப்படும் பொழுது
1.எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
2.ஒலி அலைகளைப் படமாக்குகின்றது… அதற்குத்தக்க உருவத்தையும் காட்டுகின்றது
3.ஒரு மனிதனையே உருவாக்கிக் காட்டுகின்றது.

அதைப் போன்று தான் நம் உயிர் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வுக்கொப்ப உடலில் உறுப்புகளை இயக்குகின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் இயக்கினாலும் அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன்… “தட்டெழுத்தால் அடிக்கும் அந்த உணர்வு கொண்டு…” காந்தப்புலனால் ஈர்க்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்ட நிலைகள்

அதைச் செயல்படுத்தும் பொழுது “இவன் உணர்வும் அதிலே கலந்து…” அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக அந்தக் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.

இதைப் போன்று அது உருவாக்கும் நிலைகள் வரப்படும் பொழுது…
1.அந்தக் கம்ப்யூட்டரை இயக்கப்படுபவனுக்கு குடும்பத்தில் எதிர்மறையான உணர்வுகள் வந்து விட்டால்
2.அது… இவன் தட்டெழுத்தால் அடிக்கும் உணர்வுக்குள் கலந்து “வைரஸ்” என்ற நிலையாக… இது பிழைகள் கொண்டதாக மாற்றி விடுகின்றது.

(இதே நாடாவை மற்றவர்கள் பார்த்து இந்த உணர்வை எடுக்கப்படும் பொழுது தட்டெழுத்துக்களில் இந்த உணர்வின் மாற்றங்கள் அங்கேயும் வைரஸாக வரும்).

பிழைகளை இவன் அழித்து மீண்டும் செயல்படுவான் என்றால்
1.அங்கே திரையில் காட்டும் உணர்வுகளை இவன் நுகர்ந்து உணர்வுக்குத்தக்க மாற்றப்படும் பொழுது
2.இவனுக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து… தன் சிந்தனை இழந்து பிரமை பிடித்தவன் போன்று ஆகிவிடுவான்.

இந்த கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் யார் அதிகமாக அதை இயக்குகின்றார்களோ… அவர்கள் வேறு சிந்தனையே இல்லாது… இதன் உணர்வுளிலேயே இருப்பார்கள்.

எந்திரத்தின் துணை கொண்டு இந்த உணர்வின் தன்மை இயக்குவது போன்று “மனித உணர்வுக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு…” மனிதனுக்குள் இயக்கும் இந்த உணர்வுகளுடன் கலந்தே எலக்ட்ரானிக்கின் தன்மை அடைகின்றது.

இவை எல்லாம் விஞ்ஞான அறிவால் உருவானாலும் இயற்கையின் உணர்வுகள் மனிதனான பின் இதனுடன் கலந்தே அது இயக்குகின்றது.

விஞ்ஞான அறிவால் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற்றிருந்தாலும்
1.எலக்ட்ரானிக் என்ற நிலையில் வருவதை மனிதன் தனக்குள் நுகரப்படும் பொழுது
3.இயற்கையின் நிலைகளை அது மாற்றி விடுகிறது.

ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயங்கி நுகருவதை எலக்ட்ரானிக்காக… உடலையே இயக்குகின்றது. (ஏற்கனவே சொன்னோம்)

விஞ்ஞான அறிவின் தன்மைகள் கொண்டு இயந்திரத்தின் துணையால் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இந்த உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது
1.மெய் (தன் நிலை – இயல்பு) உணர்வுகள் மறைகின்றது…
2.மெய் உணர்வுகளை வளர்க்கும் தன்மை அது இழக்கப்படுகின்றது.

இது மட்டுமல்ல…! வானுலக ஆற்றலை… நஞ்சு கலந்த உணர்வுகளை அளவுகோலிட்டு அதைக் கம்ப்யூட்டரில் இயக்கிப் பார்க்கின்றான்
1.நஞ்சின் தன்மை பூமிக்குள் வருகின்றது… மனிதனைக் காக்கும் உணர்வுகள் அதிலே இல்லை.
2.மனிதனை அழித்திடும் உணர்வுகள்… கண்டுபிடிப்புகள் இங்கே அதிகமாகின்றது
3.இதை இயக்குவனுக்குள் அந்த அழித்திடும் உணர்வுகள் வளர்ந்து எல்லா இடங்களுக்கும் (காற்று மண்டலம்) பரவுகின்றது.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் காற்று மண்டலம் முழுவதும் பரவி
1.மனித இனத்தையே பூண்டோடு அழித்திடும் நிலைகளுக்கு மாற்றிக் கொண்டு வருகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

ஆக கடவுள் யார்…? நமது உயிர் தான்…!

செய்வினை என்பது உண்டா…? அது உண்மையா…!

செய்வினை என்பது உண்டா…? அது உண்மையா…!

 

கரையான் ஒரு மரக்கட்டை மீது செல்லப்படும் பொழுது
1.அதனுடைய மலங்கள் அதிலே பட்ட பின் அந்தக் கட்டை ஆவியாக மாறுகின்றது
2.ஆவியாக மாறும் பொழுது அது எந்த மண்ணில் இருந்த சத்தை எடுத்து மரமாக ஆனதோ அந்த மண்ணாகவே மாறுகின்றது.

கரையான்களாக உருவாகியதைக் கோழியோ குருவியோ அதை உணவாக உட்கொண்டிருக்கும். அதனுடைய அணுவும் இதற்குள் இருக்கும்.

அந்த அணுவின் வளர்ச்சிகள் இதற்குள் வளர்க்கப்பட்டு… கரையான் நுகர்ந்த உணர்வு போன்று “சிலதுகளைக் கரைத்து” அந்த உணர்வின் தன்மை தனது இனங்களாக மாற்றும் சக்தி “புழுவில் இருந்து மனிதனாக வளரும் வரையிலும் வளர்ந்து வந்துள்ளது…”

இது தான் கரையான் மந்திரம் என்று சொல்வது.

அதற்கென்று சில உணர்வுகள்… மந்திரத்தை ஜெபித்து இந்த உணர்வினைப் பெருக்கி விட்டால் அது ஒரு மனித உடலில் இருக்கும். மந்திரங்களை ஜெபிக்கப்படும் பொழுது அந்தக் கரையானைப் போன்று ஒன்றைக் கரைக்கும் சக்தி மனிதனுக்குக் கிடைக்கின்றது.

கரையான் மந்திரத்தைச் சொல்லி… ஒரு கட்டை மீதோ அல்லது ஒரு பாத்திரத்தின் மேலோ இதை தடவி வைத்து இந்த உணர்வின் ஒலிகளை அதிலுள்ள காந்தப் புலனில் ஓதிவிடுவார்கள்.

ஒரு டப்பியில் அது மூடிவிட்டு மந்திரத்தைச் சொல்வார்கள். பின் இன்ன பொருள் இங்கே வர வேண்டும் என்ற நிலையில் உணர்வைப் பாய்ச்சுவார்கள்.

ஊசி முனை அளவு துவாரம் இருந்தால் போதும் அந்த டப்பியிலே…! அந்த உணர்வின் தன்மை ஆவியாக எடுத்துக் கொண்ட பின் இங்கே குவிந்து அதே உருவின் தன்மையை உருவாக்கும்.

1.இப்படித்தான் பல மந்திரங்கள் செய்து பல பொருள்களை வரவழைப்பதும்
2.மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வினைப் பிரித்துக் கரையான் மந்திரம் என்றும்
3.ஒரு பொருளுக்குள் சேர்த்த பின்… ஒலியை எழுப்பி அதை மறையச் செய்வதும்… இன்னொரு இடத்தில் கொண்டு வருவதும்…!

பல கோடிச் சரீரங்கள் எடுத்து மனிதனாக ஆன பின் மனித உடலில் உருவாக்கிய நிலைகள் மிக மிக சக்தி வாய்ந்தது.
1.மற்றவருக்குள் பாய்ச்சி மனிதனுடைய எலும்புக்குள்ளேயே ஊடுருவி அங்கே தாயத்துகளை வைப்பதும்
2.மனிதனுடைய சிரசிற்குள் தாயத்துகளை ஊடுருவச் செய்வதும்…
3.ஒரு செடியிலே விளைந்த வெள்ளரிக்காயைக் கூட மனித உடலுக்குள் ஊடுருவச் செய்துவிடுவார்கள்.

நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யப்படும் பொழுது ஒரு இடத்திலே ஒரு மனிதன் வயிற்று வலி என்று வந்தான்.

அது எப்படி வந்தது…? என்று குருநாதர் காட்டிய வழியில் எக்ஸ்-ரே பார்ப்பது போன்று அவரை கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் வயிற்றிலே “ஒரு பிஞ்சு வெள்ளரிக்காய்” இருப்பது தெரிகிறது.

வயிற்று வலியால் அவதிப்படுகின்றார். மருந்தால் அந்த வலியைப் போக்க முடியாது.

ஏவல் செய்யப்பட்ட அந்த வெள்ளரிக்காயை நீக்குவதற்காக குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ எண்ணி ஏங்கு
2.இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது உனக்குள் செய்வினை செய்த வெள்ளரிக்காய் வெளி வந்து விடும் என்று சொன்னேன்.

அதே மாதிரி அவர் செய்தார் அந்தப் பிஞ்சு வெளி வந்துவிட்டது. பின் அவருடைய வயிற்று வலியும் நீங்கியது.

ஆனால் சிலர் செய்வினை என்பது உண்டா…? உண்மையா…! என்று கேட்பார்கள்.

ஆனால் கரையான் மந்திரத்தைச் சொல்லி ஒரு பொருளை இங்கே வைத்துவிட்டு… “இன்னார் உடல்களிலே அது புக வேண்டும்…” என்றால் அது உடலுக்குள் ஊடுருவிவிடும். ரண வேதனைகளை அங்கே கொடுத்துக் கொண்டிருக்கும்.

இதுகள் எல்லாம் மனிதனில் உருவாக்கப்பட்ட தீமையின் நிலைகள் தான். அதர்வண வேதம் என்ற நிலையில் மீண்டும் மீண்டும் தீமைகள் செய்யும் மந்திர ஒலிகளை எழுப்பப்படும் பொழுது… மனிதன் தனக்குள் கேட்டால்… எந்த மந்திரத்தால் ஏவல் விடப்பட்டதோ… அவன் இறந்த பின் அதே மந்திரத்தால் அவன் ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி… அவன் இறந்த பின் மீண்டும் இன்னொருத்தருக்குக் கெடுதல் செய்ய முடியும்.

1.வேதங்கள் கூறியதைத் தலை கீழாக மாற்றப்பட்டு
2.அதை மனிதன் எதிரிகளுக்குப் பாய்ச்சுவதும்
3.சுகபோகங்களுக்கு மற்றவர்களை அடிமையாக்கச் செய்வதும்…
4.அரசர்கள் செய்து கொண்டது என்பது இது தான்.

அன்றைய ஆயுதங்களும் இது தான்.

ஆனால் மக்கள் மத்தியிலும் இது பரவி விட்டது. அரசர்கள் அனைவரும் மடிந்து விட்டார்கள். மடிந்தாலும் பூதகணைகளாக மாறி அந்த ஆசை அலைகள் இங்கே பரவப்பட்டு இன்று சுழன்று கொண்டிருக்கின்றது… இயக்கிக் கொண்டுள்ளது.

நாம் எதுவும் செய்ய முடியாது… “அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும்…!” என்ற வித்தை ஊன்றியவர்களே அன்றைய அரசர்கள் தான்

நாம் எதுவும் செய்ய முடியாது… “அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும்…!” என்ற வித்தை ஊன்றியவர்களே அன்றைய அரசர்கள் தான்

 

“ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் தீமைகள் அகலும்…” என்ற உணர்வுடன் தான் செல்கிறோம். யாகங்கள் வேள்விகள் நடத்தும் பொழுது அதற்கு முன் அமர்கின்றோம்… உற்றுப் பார்க்கின்றோம்… நமக்குள் பதிவாகிறது.

ஆனால் இதற்குப் பெயர் “வசியம்…”

ஏனென்றால் நாம் ஏக்க உணர்வுடன் ஆலயத்திற்கு வரப்படும் பொழுது
1.அங்கே ஓதப்படும் மந்திரங்கள் நம் செவிகளில் ஈர்க்கப்பட்ட பின்
2.உயிருக்குள் மோதும் போது “ஓ…” ஓ…ம் நமச்சிவாய…! என்று அந்த உணர்வுகளை “உயிர்” நமதாக அமைத்து விடும்
3.அங்கே வாசிக்கப்படும் இசைகளை… அந்த ஒலி அலைகளை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் பாய்ச்சி விடுகிறது.
4.யாகத் தீயில் போடப்படும் பொருள்களின் வாசனைகளையும் நாம் நுகர நேர்கின்றது
5.இந்த உணர்வுகளும் ஓ…ம் நமச்சிவாய என்று பதிவாகி விடுகின்றது.

இப்படிப் பதிவாகக் காரணம் என்ன…?

இந்தத் தெய்வம் உனக்கு எல்லாவற்றையும் செய்து கொடுக்கும்…! என்று முதலிலே காவியங்களாகத் தீட்டி வைத்து விடுவார்கள் அந்தக் காவியத்தின்படி நமக்குள் ஆசைகள் உருவாகிறது. அதன்படியே அங்கே சொல்லும் மந்திரங்களை நமக்குள் பதிவாக்கி விடுகின்றோம்.

இப்படிப் பதிவாகிய பின்
1.ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அந்த மந்திர ஒலிகளைச் சேர்த்துக் கொண்டே இருப்போம்.
2.(பெரும் பகுதியானோர் மந்திரம் சொல்பவர்களாகத் தான் இருப்பார்கள்).

ஆலயங்களுக்குச் சென்று சாங்கியங்கள் செய்து இன்னென்ன அர்ச்சனை செய்தால் அந்தத் தெய்வம் உன்னைக் காக்கும்.
1.நீ செய்யும் அர்ச்சனை நேராக ஆண்டவனுக்குச் சென்று
2.அவன் மெச்சி உனக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வான் என்ற உணர்வுகளைத் தான் ஆலயத்தில் தோற்றுவிக்கின்றார்கள்.
3.ஆசைகளை ஊட்டும் ஆலயமாகத் தான் மாற்றி வைத்து விட்டார்கள்.

நேற்று வரையிலும் அந்த ஆலயத்தில் கூட்டம் இல்லை. ஆனால் யாகங்களையும் வேள்விகளையும் அங்கே செயல்படுத்திய பின் “வசியப்படுத்தப்பட்டு…” அந்த ஆலயங்களுக்கு நாம் அதிகமாகச் செல்கின்றோம்.

கடைசியில் “சரணாகதி தத்துவம்” என்று காட்டியிருப்பார்கள்.
1.ஆண்டவனிடத்தில் உன்னுடைய கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிவிடு.
2.சொல்லி விட்டால்… அபிஷேகம் செய்யும் உயர்ந்த பதார்த்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு
3.உனக்கு வேண்டியதை அவன் செய்வான்…! என்று இப்படித்தான் அரசர்கள் வழியில் நாம் வணங்கிக் கொண்டுள்ளோம்.

வேதங்கள் கூறியவற்றில் அதர்வண வேதம் என்று மனிதனுடைய நிலைகளை அரசர்கள் மாற்றி… மதம் என்ற நிலைகள் உருவாக்கப்பட்டு அதனின் மறைவிலே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேதத்தின் தத்துவங்களை குலதெய்வம் என்ற நிலையை அன்றைய அரசர்கள் தன் மக்களுக்குள் பாய்ச்சி… அடிமைகளாக ஆக்கி விடுகின்றார்கள்.

அன்றைய அரச காலங்களின் வழி வழி தான் இன்றும் நாம் வேதங்களைச் சொல்வதும்… அதர்வண வேதங்களைக் கையாள்வதும் அபிஷேகங்களைச் செய்வதும்…
1.ஆண்டவனிடத்தில் வரம் வாங்குவது என்ற நிலைகளில்
2.இன்றும் நாம் வழிபட்டு வந்து கொண்டிருக்கின்றோம்.