துருவ நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எளிதில் பெறுவீர்கள்

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எளிதில் பெறுவீர்கள்

 

எப்பொழுது துன்பம் என்று காணுகின்றோமோ ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் உடலுக்குள் சேர்த்து இருளை நீக்கி வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் அது வலுவாகி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று அடைகின்றோம்.
1.இதைத்தான் குருநாதர் எமக்குக் காட்டினார்… அதைத்தான் உங்களுக்கும் சொல்கின்றேன்.
2.உங்களால் உங்களால் முடியும். எப்படிச் சாத்தியமாக முடியும்…? என்று எண்ணாதீர்கள்.
3.அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் பேரின்பப் பெரு வாழ்வாக நீங்கள் பெற முடியும்.

தீமை என்று உணர்வைக் கேட்டறிந்தாலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை உடனுக்குடன் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

யார் வெறுப்படைந்தனரோ அவருக்கும்… அதாவது அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் பரிசுத்தமாக்கும் உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால் போதுமானது. “அவர் வேண்டாதவர்” என்ற எண்ணங்கள் வராது அடுத்து.

காரணம் அந்த உயிர் அவரை ஆளுகின்றது. ஈசன் ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தினால் நமது ஆலயம்… நம் உடலும் தூய்மையாகின்றது.

இப்படி நாம் எண்ணும் உணர்வு எதுவோ அதுவே அரங்கநாதன் இந்த உணர்வின் சக்தியாக நம்மை அருள் வழியில் இயக்கும்.
1.அதையே நமது உயிர் ஆளும் ஆண்டவனாக.
2.ஆகவே… அனைவரும் ஆண்டவனின் பிள்ளைகள் தான்.
3.அவன் ஆண்டு கொண்டிருக்கும் உடல்தான் ஆலயம்.

இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! உயிரால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் இது.

பல கோடிச் சரீரங்களில் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம். இன்று மனிதனான பின் இயற்கையில் விளைந்ததை வேக வைத்துச் சுவை மிக்க உணர்வுகளைப் படைத்துச் சாப்பிடும் மனித உடலைப் பெற்றுள்ளோம்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறத் தொடர்ந்து உங்களுக்கு உபதேசம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன். இவை எல்லாம் அருள் ஞானிகள் கண்ட பேருண்மைகள்.

1.ஞான வித்தை ஊன்றியுள்ளோம்… தியானத்தின் மூலம் அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களுக்குள் உரமாக்கிக் கொள்ளுங்கள்.
3.உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் அந்த சக்தியைப் பெறச் செய்யுங்கள்.
4.மெய் வழியில் செல்லும் அருள் பாதையை அது வகுத்துக் கொடுக்கும்.

மெய் வழி வாழ்வோம்… அருள் வழி வாழ்வோம்…!

நாரதன் கலகப்பிரியன்… கலகமோ நன்மையில் தான் முடியும்

நாரதன் கலகப்பிரியன்… கலகமோ நன்மையில் தான் முடியும்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி… ரிஷி என்று சிருஷ்டித்துக் கொண்ட உணர்வாக… துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வைத்தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அதைத் தான் ரிஷியின் மகன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வார்கள்.

1.அதை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து…
2.யார் தீங்கு செய்கின்றார்களோ அவர் உடலில் அது படர வேண்டும் அவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நமக்குள் எடுத்தால்
5.பையன் மீது பிடிவாதமாக இருக்கும் உணர்வுகளை மாற்றி அவன் மீது இருக்கும் வெறுப்பினை மாற்றி அமைக்கின்றது.

நாரதன் கலகப் பிரியன்… ஆனால் கலகமோ நன்மையில் முடியும்.

நாம் பிடிவாதமாக இருக்கின்றோம். மற்றவரிடத்தில் எல்லாம் என்ன சொல்வோம்…? என் பையன் சேட்டை செய்து கொண்டேயிருக்கிறான் என்போம்.

அவன் நல்லது தானே செய்கிறான் என்பார்கள்.

நீங்கள் ஒரு பக்கத்திலே…! அவன் செய்யும் குறும்புத்தனம் இன்னது தான் என்று சொல்ல முடியாது. எப்போது பார்த்தாலும் வம்பு இழுத்துக் கொண்டே வருவான் என்று நாம் பிடிவாதமாக இருப்போம்.

அப்போது அந்த அருள் உணர்வை எடுத்துக் கொண்டால் நாரதனாகி கலகப் பிரியனாக இருந்து செயல்படும்.
1.என் பையன் நல்ல நிலையில் வர வேண்டும் எல்லோரும் போற்றும் நிலையாக அவன் வரவேண்டும்…
2.நல்ல உணர்வுகளைச் சிந்திக்கும் திறன் வேண்டும் என்று அதிகாலையில் அந்தச் சக்தியை எடுத்து
3.பையனுடைய தீமை செய்யும் உணர்வுகளை அடக்கும்படி செயல்படுத்தும்.

அடக்கி அவன் நல்ல நிலையில் வர வேண்டும் எண்ணினால் அவன் மீது அந்த வெறுப்பு வராது. இப்படிப் பாய்ச்சப்படும் போது நம்முடைய பிடிவாத குணத்தை நீக்கி விடுகின்றது. நமக்கு நன்மை ஏற்படுகிறது.

நாம் எடுத்துக் கொண்ட அந்த அருள் ஒளியின் உணர்வு குருக்ஷேத்திரப் போராகி இரண்டுக்கும் போர் வரப்படும் போது தீமை என்ற உணர்வினை அடக்கும் தன்மை வருகிறது… பையனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

உதாரணமாக நண்பன் நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கலாகிறது… துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது.

அதே போல் “பாசத்தால்” தாய் பையனை எண்ணி…
1.அவன் சுட்டித்தனம் செய்கின்றான் என்று எண்ணினால்
2.அவனைச் சிந்தனை செய்ய விடாதபடி மீண்டும் குற்றவாளியாகத் தான் ஆக்க முடியும்…
3.அவனை நல்லவனாக மாற்ற முடியாது.

ஆகவே அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தீமையை மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவன் எல்லோரும் போற்றும் தன்மைக்கு வர வேண்டும் என அடிக்கடி சொல்ல வேண்டும்.

இந்த உணர்வு உங்கள் உடலிலே படரும் போது உங்களுடைய பார்வை அவன் திருந்த வேண்டும் என்று செயல்படுகின்றது அதற்குத் தகுந்த சொல்லும் வருகின்றது. அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அவனை மாற்றும் நிலைகளாக வரும்.

இப்படித்தான் அவனை மாற்ற வேண்டும்.

இந்தப் பக்குவ நிலை பெறுவதற்குத் தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி எடுக்கும்படி சொல்லி அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று யாம் உபதேசிப்பது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இடமறித்து அதன் சக்திகளைப் பெறுதல் வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இடமறித்து அதன் சக்திகளைப் பெறுதல் வேண்டும்

 

நமது நாட்டில் முதன் முதலில் தோன்றிய மனிதன் அகஸ்தியன் அண்டத்தின் உணர்வினைப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) இயக்கத்தின் உணர்வை அறிந்துணர்ந்தவன்.
1.அகஸ்தியன் கண்டறிந்த உணர்வின் வழிப்படி
2.பின் வந்த ஞானிகளும் மகரிஷிகளும் அதைத் தொடர்ந்து வழி நடத்தி வந்தனர்.

ஆனால் கால வெள்ளத்தால் அரசர்கள் மதம் இனம் மொழி என்ற நிலைகளில் அவரவர்களுக்கொப்ப மதங்களை வகுத்து… அதற்குச் சட்டங்களை இயற்றி அதன் வழியில் பல விதமான மதங்களையும் இனங்களையும் உருவாக்கி விட்டார்கள்.

அதன் வழி தான் இப்பொழுது நாமும் அரசர்கள் காட்டிய வழியில் வழி நடத்தி வருகின்றோம். ஞானிகளும் மகரிஷிகளும் கூறிய இந்த உணர்வுள் கால வெள்ளத்தால் மறைந்தே போய் விட்டது.

அரசர்களின் ஆசையின் நிமித்தம் போர் முறைகள் ஏற்படப்பட்டு மதங்களை உருவாக்கி மதத்திற்கு மதம் என்ற போர்முறையை வைத்து மதத்திற்குள் இனம் என்று இனத்தின் நிலைகள் கொண்டு போர்முறையாகி “மகரிஷிகள் காட்டிய அருள் வழிகள் முழுமையாக மறைந்து விட்டது என்றே சொல்லலாம்…”

ஆனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாமும் ஒரு மதம் தான்…!
1.பிறவா நிலை என்ற (மதம்)… இந்த உலகப் பற்றை விட்டு
2.இந்த உடலின் பற்றை விட்டு… உயிரின் பற்றுடன் சென்றவர்கள் ஞானிகள்
3.மனிதர்களான நாம் உடல் பற்று… உயிரின் இயக்கம்…! எண்ணத்தை உயிரில் உணர்வாக இழுக்கப்பட்டு “உடலின் சேர்க்கை…”

ஆனால் “உயிர் ஒளியால் உணரப்பட்ட…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றப்படும் பொழுது
1.அதாவது “உயிருடன் ஒன்றிய சேர்க்கை… ஒளி…!”
2.அவ்வாறு ஓளியாக ஆனவர்கள் மகரிஷிகள்

அப்படி மகரிஷிகளான நிலைகளில் நமது குருநாதர் காட்டிய நெறியைப் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் விண்ணுலக ஆற்றல் மண்ணுலகில் வந்து… மனிதனான பின் அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கண்டான்.
1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்
2.நான் (ஞானகுரு) உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.

அணுவின் ஆற்றலைத் தனக்குள் உணர்ந்து அணுவின் வளர்ச்சியின் தன்மையும் உணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதை வலு சேர்க்கின்றார் அகஸ்தியர்.

நமது பூமி விண்ணிலிருந்து வருவதைத் தனக்குள் ஈர்க்கும் போது அதை இடைமறித்து அந்த உணர்வை நுகர்ந்து அதனின் வலுவை பெறுகின்றான் அகஸ்தியன்.
1.அதனால்தான் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைக் கொஞ்சம் உங்களை இடைமறிக்கும்படி சொல்லி
2.அதனின் ஆற்றலை உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.

அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்

அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்

 

அகஸ்தியன் தன் தாய் கருவிலேயே விஷத்தை வெல்லும் சக்தி பெற்றான். பிறந்தபின் அவனை மற்ற மிருகங்கள் பாம்புகளோ நுகர்ந்தால்
1.அதனுடைய விஷத்தன்மைகள் இவனுக்கு முன் ஒடுங்கி விடுகின்றது.
2.விஷத்தன்மைகள் அங்கே ஒடுங்கும் பொழுது இவனுக்குள் சிந்திக்கும் ஆற்றல் பெருகுகின்றது.

விஷத்தை ஒடுக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் அந்தச் சக்தி இருப்பதனால் மின்னல் வெளிப்படும் பொழுது அதில் விஷத்தன்மை அதிகம் உண்டு
1.அதனையும் நுகர்ந்து அவனுக்குள் அடக்கும் சக்தி வருகின்றது.
2.மின்னலின் ஒளிக் கற்றைகள் எவ்வளவு வீரியமாக இருக்கின்றதோ அதை நுகர்ந்தறிந்து
3.வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி ஒளியாக மாற்றிடும் உணர்வின் அணுக்களாக அவனில் பெருகுகின்றது.
4.மின்னல் தாக்கும் பொழுது அந்த ஒளிக் கற்றைகள் எவ்வளவு தூரம் விரிவடைகின்றதோ
5.அதைப்போல் அவன் எண்ணங்கள் வெகு தூரம் ஊடுருவி இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வாக அறியும் தன்மை பெறுகின்றான்,
6.வான் வீதியின் ஆற்றலையும் மின்னல்களையும் தனக்குள் ஒளிக்கற்றைகளாக மாற்றிக் கொண்டான்
7.அவன் உடலில் உயிரைப் போன்று உணர்வுகள் ஒளியானது.

திருமணமான பின் கணவன் மனைவியாக இணைந்து உயிரும் ஒன்றி துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

அவர்கள் பெற்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் நம் வாழ்க்கையில் வரும் இருளை வென்று… பேரருளை இயக்கச் சக்தியாக மாற்றி ஒளி என்ற உணர்வுடன் வாழ்ந்து… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை நாமும் பெற முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர
2.நமது உடலில் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் உயிரை ஒத்த ஒளியாக மாற்றி
3.அந்த உணர்வின் துணை கொண்டு உடலை விட்டுச் சென்றால் நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட்டு
4.நஞ்சை வென்ற உணர்வாக வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் உணவாக எடுத்து
5.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

நம் உடலில் சிருஷ்டித்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இதே உடலை ஒளியாக மாற்றுகின்றது இதற்குப் பின் இன்னொரு உடல் இல்லை.

ஒளியின் சிகரமாகும் போது இருளை மாற்றிப் பேரின்ப நிலை என்று பேரானந்த நிலையாக… ஏகாந்த நிலையாக ஏகாதசி… பத்தாவது நிலையான கல்கி என்ற நிலை அடைய முடியும்.

அந்த மார்க்கத்தைத் தான் நமது ஞானிகள் காட்டினார்கள்.

1.இந்த உண்மையினை நமது குரு அறிந்தார் அதனின் வழியை எனக்கு வழி மொழிந்தார்.
2.அதன் வழி வாழ்க்கையில் நான் பின்பற்றி நடந்தேன்…. காடு மேடெல்லாம் அலைந்தேன்.

மிருகங்கள் எப்படி வாழ்கின்றது தாவரங்கள் எப்படி உருவாகின்றது இதனை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களின் உடல்கள் எப்படி மாறுகின்றது என்று குருநாதர் எம்மை அறியச் செய்தார்.

அதைத் தான் உங்களுக்கு இப்போது உபதேசிக்கின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து… மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… இருளை அகற்றி நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.

1.இந்த உடலில் வாழும் காலத்திலேயே அதிகமாக இதைப் பெருக்கி
2.உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டால் என்றும் நிலையான ஒளிச் சரீரம் சரித்திரம் பெற முடியும்.

மனிதனுடைய கடைசி எல்லை இதுதான்.

அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்

அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்

 

மாரியம்மன் கோவிலில் அக்கினி குண்டம் இறங்கும்படி வைத்திருப்பார்கள்.
1.ஒருவருக்கொருவர் வேதனைப்படுவோரை நாம் பார்த்தால்
2.அந்த வேதனை மா(றி)ரி நமக்குள் தாயாக வந்து நோயாக அது வராதபடி நாம் தடுத்தல் வேண்டும்.

அவர்களைப் பார்த்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் (நோயாளிகளைப் பார்த்தால்).

சுத்தப்படுத்தவில்லை என்றால் அவருடைய வேதனை உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து நல்ல அணுக்களுடன் இணைந்து விடுகின்றது

தேள் கொட்டுகின்ற மாதிரி… அல்லது குளவி கொட்டி புழு உருமாறுகிற மாதிரி… விஷத்தின் தன்மை வரும்போது அவர்கள் உடல் நலிகின்றது… அதனால் தான் நோயுடன் இருக்கின்றார்கள்.
1.ஆனால் அதே விஷம் நம் உடலில் பட்டபின் நல்ல அணுக்கள் சுருங்கி விடுகின்றது
2.நம் உடலில் அதற்குப் பின் அழகு இருக்குமா…? நாமும் அந்த வேதனையைச் தான் சொல்வோம்.

அதற்காக வேண்டி ஒவ்வொரு ஊருக்கு மத்தியிலும் மாரியம்மன் ஆலயத்தை வைத்திருப்பார்கள்.

வேதனை வந்துவிட்டால் உடனே ஈஸ்வரா என்று உயிரை வேண்டி அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்

இப்படி நுகர்ந்த உணர்வு என்ன செய்கின்றது…?

இராமாயணத்தில் அது தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான் என்று காட்டுவார்கள். ஏனென்றால் அந்த வேதனையான உணர்வுகள் என்பது அது வாலி.

இராமன் வாலியை நேர்முகமாகப் பார்த்தானா…? இல்லை…! அந்த வாலி வெளியே வர முடியாதபடி மேலே இருக்கும் பாறையைத் தள்ளிக் குகையை மூடி விட்டான்.
1.பாறையாக இருப்பது யார்…?
2.துருவ நட்சத்திரம்…!

எப்போது வேதனைப்படும் உணர்வுகளை நுகர்கின்றோமோ உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இழுத்துக் கொண்டு வந்து விட்டோம் என்றால் அவர்கள் பட்ட வேதனை உள்ளுக்குள் செல்லாதபடி இங்கே நிறுத்தப்படுகின்றது.

நிறுத்திய பின் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணிவிட்டு அடுத்தாற்போல் அந்த அருள் சக்தி அந்த நோயாளி பெற வேண்டும் அவர் உடல் நோய் நீங்க வேண்டும் அவர் உடல் நலமாக வேண்டும் என்று நாம் நுகர்ந்த வேதனையை நிறுத்திவிட்டு அருள் உணர்வுகளை உருவாக்குதல் வேண்டும்.

அவர் உடல் நலமாக வேண்டும் என்று நினைத்து எண்ணினால் நாம் நுகர்வது எதுவோ ஓ…ம் நமச்சிவாய…! அது பிரணவமாகி நம் உடலாக மாற்றுகின்றது.

ஏனென்றால் அந்த அந்த நோய் நமக்குள் வரக்கூடாது.

இதை நிறுத்திவிட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி அந்த நோயாளி பெற வேண்டும் என்று எண்ணினால் நோயை நீக்கிவிடும்.

1.தீமைகளை வேக வைக்கக்கூடிய (அக்கினி) துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதில் நாம் இறங்கினோம் என்றால்
2.அதனின் பால் நாம் நினைவைக் கொண்டு சென்றால் அந்தத் தீமை நமக்குள் வராது என்று
3.அக்கினி குண்டத்தை மாரியம்மன் கோவிலில் அமைத்துள்ளார்கள்.
4.அக்கினியில் இறங்குவதல்ல… துருவ நட்சத்திரத்தின் உணர்வுக்குள் நாம் இறங்க வேண்டும்.

“துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் கொண்டு” தீமைகளை மாற்றியமைத்து விடலாம்

“துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் கொண்டு” தீமைகளை மாற்றியமைத்து விடலாம்

 

நம்முடைய மனித வாழ்க்கையில் பிறர்படும் கோப குணத்தினால் வரும் கார உணர்ச்சிகளையும்… வேதனை உணர்ச்சிகளையும் சுவாசிக்கப்படும் பொழுது எதிர் நிலையாகி…
1.நம்முடைய மன நிலைகள் அதனால் மாறுகின்றது.
2.அப்போது உடலிலும்… நாம் உணவாக உட்கொண்டதை ஜீரணிக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.
3.நம் உடலில் எது அதிகமோ அதற்கும் இதற்கும் இந்தப் போராட்டங்கள் வருகின்றது.

இதைப் போன்று இயற்கை நியதிகள் வருவதனால் இதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் வேதனைப்படும் சொல்களையோ வேதனைப்படும் உணர்ச்சிகளையோ சுவாசிக்க நேரும் போதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்… அந்த உணர்வுகள் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

என் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கண்ணின் நினைவு எவரை உற்றுப் பார்த்து அது பதிவானதோ அந்த உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று இணைத்து விட்டு அடுத்து
1.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மையானால்
2.அவன் செய்த வேதனை உணர்வை அடக்கி அந்த வேதனையைத் தனக்குள் வளர்க்காதபடி
3.பகைமை நமக்குள் வளர்க்காதபடி அந்த வீரிய உணர்வு தடுக்கப்பட்டு நல்ல உணர்வுகளாக நமக்குள் மாற்றிவிடலாம்.

ஆக இது எல்லாம் ஞானிகள் காட்டியது. சிறிது காலம் சிரமமாக இருக்கும்.. பழகிக் கொண்டால் எளிதில் கிடைக்கும்.

உதாரணமாக… ஒரு தையல் மிஷினில் தைப்பவர் போன்று நாமும் இலேசாகத் தைத்து விடலாம் என்று எண்ணினால்… உடனே முடியுமா…?

அவர் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார் இந்த உணர்வின் இயக்கம் சீராக இருக்கும். நாம் கூர்மையாகப் பார்த்து செயல் செய்தாலும் அது எங்கே கோணல் மணலாக நெளிந்து போகும்.

ஆகவே தியானத்தைச் சிறிது காலம் சீராகப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் எதிர் நிலை வந்தால் டக்… என்று அதை மாற்றிவிடும்.

இன்று கம்ப்யூட்டர் மூலமாகப் பல நிலைகளை இயக்குகின்றார்கள். அதிலே தவறு வந்துவிட்டால்
1.அது ஏன் வந்தது…? என்று உடனே அதை சரி செய்வதற்காக “மாற்று அழுத்தங்களை” அங்கே கொடுத்து வைத்திருக்கின்றார்கள்.
2.இந்த மாற்று அழுத்தம் வந்தவுடன் அந்தத் தவறை மாற்றி விட்டு மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
3.அதாவது… அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அழித்துவிட்டு அந்தத் தவறை மாற்றி நல்லதைப் பதிவு செய்கின்றார்கள்,

நாம் பேப்பரிலே எழுதும் போது தவறானால் அதை அழிக்கின்றோம். ஆனால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் எனும் முறைப்படி கம்ப்யூட்டர் இயங்குகின்றது ஒரு பொருளின் ரூபம் வரும்பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு சீராக வரவில்லை என்றால் உடனே அழுத்தத்தை மாற்றி… வேண்டிய உணர்வுக்கொப்பச் சீராகக் கொண்டு வருகின்றார்கள்.

கெமிக்கல் கலந்த உணர்வுகளில் அந்த உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ மாற்றுகின்றது. விளக்குகள் எப்படிச் சிறிதாகவும் பெரிதாகவும் எரிகின்றதோ அதைப் போல் அந்த எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒளியின் நிலைகளை உருவாக்குகின்றார். அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது விஞ்ஞானி இப்படிச் செய்கின்றான்.

இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்த்த வேதனை உணர்வுகள் நல்ல உணர்வுகளுடன் அது கலந்து எலக்ட்ரானிக்காக மாற்றி இதை அழித்து அதன் உணர்வைக் கொண்டு வருகிறது.
1.ஆனால் நம்முடைய நினைவைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அந்த அழுத்தத்தைக் கொண்டு வந்தால்
2.அவன் செய்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வு கொண்டு நம்மைத் தெளிவாக்கும்.

நம் உயிரும் எலக்ட்ரிக் தான்… நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

அன்று அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை அண்டத்திலே பாய்ச்சினன் தன் உடலின் உணர்வுகளை அறிந்தான். அந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அதன் உனர்வின் ஆக்கங்கள் கோள்களின் நிலையும் அகண்ட அண்டத்தையும் அறிந்தான் அகஸ்தியன்.

அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் விளைந்தது நமக்கு முன் அந்தச் சக்திகள் காற்றிலே பரவி உள்ளது.
1.நமது குருநாதர் அதைக் கண்டார்… தனக்குள் பெற்றார்.
2.அதை எனக்குள் பதிவாக்கினார் இதை நினைவு கொள் என்றார் அதன் வழி நீ கடைப்பிடி என்று சொன்னார்
3.அதன் வழி அறிந்து தான் உங்களிடம் இப்பொழுது பேசுகின்றேன்.
4.கல்வியால் கற்றுணரவில்லை எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை
5.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன் நினைவு கொண்டேன் அறிய முடிகின்றது அதைத்தான் இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன்.

இந்த உணர்வினை நீங்கள் பதிவாக்கி விட்டால் நினைவு கொண்டால் அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம்… உங்களுக்குள் வரும் இருளை மாற்றி அமைக்கும் சக்தி பெறுவீர்கள்.

இவ்வாறு எதை நீங்கள் மாற்றி அமைக்கின்றீர்களோ
1.அந்த உயர்ந்த சக்தி உள் நின்று கடவுளாக
2.தீமைகளை நீக்கிடும் உணர்ச்சிகளை அது ஊட்டுகின்றது.

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?

 

அகஸ்தியன் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல் உறுப்புகள் மாறியது… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றான்… துருவ நட்சத்திரமாக உள்ளான்.

மின்னல்கள் வருகிறது என்றால்
1.வெள்ளிக்கோள் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ அதைப் போல்
2.மின் கதிர்களானால் அந்த ஒளியின் தன்மையை அகஸ்தியன் கவரும் போது
3.அவன்ன் உடலில் உள்ள அணுக்களை உயிரைப் போல பரிமணம் ஆகின்றது.
4.அணுக்கள் பரிமாணமாகப்படும் பொழுது விஷத்தின் தன்மை உமிழ்த்தி விஷத்தையே ஒளியாக மாற்றம் திறன் வருகின்றது.

பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மை எடுத்துக் கொள்கின்றது. அந்த விஷம் சேமிப்பாகும் போது நாளடைவில் வைரமாக மாறுகின்றது… நாகரத்தினமாக மாறுகின்றது.

ஆக… விஷத்தின் ஆற்றலானாலும் அந்த வைரத்தைத் தட்டிச் சாப்பிட்டால் ஆளை உடனே கொன்றுவிடும். ஆனால் வெளிச்சம் தருகின்றது.

இதைப்போல தான் விஷத்தை ஒடுக்கும் உணர்வு பெற்ற ஒளியின் தன்மை ஆன பின்
1.துருவ நட்சத்திரம் எத்தகைய விஷத்தின் தன்மை வந்தாலும் தனக்குள் அதை ஒளியாக மாற்றுகின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தில் “ஒரு துளி அளவு நாம் நுகரும் தன்மை வந்தால்” விஷத்தினைக் கொல்கிறது.
3.அந்த விஷத்தின் தன்மையைக் கொல்லும் நிலை வரும் போது தீமையை அடக்கித் தனக்குள் ஒளியின் உணர்வாக மாற்றுகின்றது.

இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகாலை நீங்கள் கவர்ந்தால் உங்களுக்குள் வரும் விஷத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்… அதை ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கும்.

விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் பாம்பினம் அந்த விஷம் அதிகரித்து உறையப்படும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப்போல தான் அகஸ்தியன் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆனது. அந்த நிலையை நாமும் பெறச் செய்தல் வேண்டும்.

உங்களுக்கு யாம் இதை உபதேசித்தது வீண் அல்ல…!

எனக்குத் துரோகம் செய்தான்… அவன் உருப்படுவானா பாவி…! என்று அமெரிக்காவில் இருந்து நினைத்தாலும்… இங்கே கார் ஓட்டிக் கொண்டிருந்தால் சிந்தனை இழந்து… விபத்து ஆகின்றது.

உணவு உட்கொண்டு கொண்டிருந்தால் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது. ஒரு பருக்கை சுவாசிக்கும் சுவாசப் பையிற்குள் சென்றால் மரணமே ஏற்பட்டு விடும்.

இதைப்போல நாமும் துரோகம் செய்தான் என்று எண்ணினால் நமக்கும் நல்லது செய்யவிடாதபடி தடையாகிறது. அங்கேயும் இடைஞ்சலாகிறது. ஒருவருக்கொருவர் இப்படி இரண்டு பேருமே பாழாகும் நிலை வருகின்றது.

அதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
1.நான் பதிவு செய்ததை நீங்கள் எண்ணி ஏங்கி .எடுத்தால்
2.உங்களுக்குள் அந்தச் சக்தி… இயக்கச் சக்தியாக மாறி
3.உங்களையும் ஒளியின் சிலராக மாற்றும்.

நம்மைப் பலவீனப்படுத்தும் உணர்வுகளைத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அடக்க வேண்டும்”

நம்மைப் பலவீனப்படுத்தும் உணர்வுகளைத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அடக்க வேண்டும்”

 

நாம் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அகண்ட அண்டம் அனைத்தையும் அறிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்ற மனித உடல் பெற்ற பின்… “இந்த உடலின் பற்று கொண்டு நாம் சந்தர்ப்பத்தில் என்ன செய்கின்றோம்…?”

ஒருவர் தன்னை மதிக்கவில்லை என்று வந்து விட்டால் அவர் வீட்டுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்…? என்ற எண்ணம் வருகிறது.

நாம் வீட்டுக்குச் செல்வோம்… அவர் வேறு ஒரு கவனத்தில் இருப்பார். காரியத்தை முடித்துவிட்டு அவர் திரும்பிப் பார்க்கும் பொழுது சங்கடமாக இருந்திருக்கும்.

சங்கடத்தில் திரும்பிப் பார்த்த பொழுது அங்கே வந்த நம்மை “வாருங்கள்” என்று கூப்பிடாமல் விட்டுவிட்டால் போதும்.

நான் வீடு தேடி வந்திருக்கின்றேன்… என்னை அவன் கொஞ்சமாக மதித்தானா…? என்ற வெறுப்பு உணர்வுகளைஸ் சுவாசிக்க நேர்கின்றது. தன்னை மதிக்கவில்லை என்று எண்ணும் பொழுது அந்த வேதனை வந்து விடுகின்றது.

எந்த மனிதன்… சந்தர்ப்பத்தால் இதை அறிய முடியவில்லை வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையோ
1.அவன் மீது இருக்கக்கூடிய நல்ல குணத்தையும் நல்ல பண்புகளையும் அறிய முடியாதபடி
2.நமக்குள்ளே நாம் அதை மறைத்து விடுகின்றது.
3.நண்பனாகப் பழகிய அந்த நண்பனின் நிலையும் அவருடன் அன்புடன் பழகிய உணர்வுகளும்
4.நம்மை அறியாமலே சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது… நல்ல மனமும் குறைந்து கொண்டே வருகின்றது

இப்படி நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் கடந்து தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்ற உணர்வை எடுத்து எடுத்து… அகண்ட அண்டத்தையும் அறிந்து கொண்டு செயல்படும் திறன் பெற்ற இந்த மனித உடலிற்குள் இருக்கும் “ஆறாவது அறிவை” அதனின் ஆற்றலை நாளுக்கு நாள் தேய்பிறையாக மாற்றி மனித உடலை இழக்கும் சந்தர்ப்பத்தைத் தான் அதிகமாக நமக்குள் சேர்க்கின்றோம்.

ஆகவே எத்தகைய சிரமங்கள் வந்தாலும்
1.அதைப் போன்ற சந்தர்ப்பங்களிலிருந்து விடுபட
2.மன உறுதி கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வினை உடலுக்குள் அதிகமாகச் சேர்த்தால்
4.நம்மைப் பல வகைகளிலும் பலவீனப்படுத்தும் அந்த உணர்வுகளை… அந்த விஷத்தை
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அடக்கி விடுகின்றது.

இதை நாம் செய்து பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்

 

காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாக வளர்க்க நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடைப்படுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்துன் சக்தியை முன்னணியில் வைத்தால்…
1.தீமையான அணுக்களை நம் உடலுக்கு ஓர் அடிக்கு உள்ளே வராதபடி தடுத்துவிடலாம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் தியானித்து வலுப்பெற வலுப்பெற
3.நமது ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அந்தத் தீமைகள் கடந்து பரமாத்மாவிலே கலந்து விடுகின்றது.

நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள நல்ல அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க அது வலுப்பெற்று தீமைகளை மாற்றிவிடும்.

இவ்வாறு மாற்றி அமைத்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் வலுப் பெறுகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றோம்.

ஆனால் பிறிதொரு உணர்வுக்குள் சிக்கிவிட்டால் அந்த உடலுக்குள் சென்று நோயை உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தத்தான் செய்யும். அந்த உடலை விட்டு வந்தபின் பரமாத்மாவிலே கலந்து எந்த விஷத்தன்மையுடன் வந்ததோ அதனுடைய ஈர்ப்புக்கு அழைத்துச் சென்று மனிதனல்லாத உருவை உருவாக்கி விடும் நமது உயிர்.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும். ஆகவே
1.அடிக்கடி துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை சேர்த்துக் கொண்டே வந்தால்
2.பற்று கொண்ட மற்றவர்களின் தீமையான உணர்வுகளும் நமக்குள் நோயாக மாறாது.

அந்த ஆன்மாக்களை விண் செலுத்தி விட்டால் அந்தத் தீமை நமக்குள் இயங்காது மாறி விடுகின்றது. உடல் ஈர்ப்புக்குள் வராதபடி நம் ஆன்மாவிலிருந்து தள்ளிப் பழகுதல் வேண்டும்.

அதற்குத் தான் ஆத்ம சுத்தி அந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம். எப்பொழுது மனக்கலக்கமோ சோர்வோ சலிப்போ சஞ்சலமோ வேதனையோ நம்மை அறியாமலே வரும் அந்த மாதிரி நேரங்களில் அதை நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

1.தீய அணுக்கள் கண் வழி அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது.
2.இழுத்து ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கும்படி செய்து… அப்போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.இரத்த நாளங்களில் கலந்து நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைத்து அதன் படி தீமைகளை உருவாக்கி விடுகின்றது.

இது போன்று எப்பொழுதெல்லாம் தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். துருவ நட்சத்திரத்தின் பால் நினைவச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் வலுப்படுத்துங்கள்.

இந்த உணர்வுகள் வலுப்பெற்ற பின் சோர்வடையச் செய்யும் சஞ்சலப்படச் செய்யும் கவலைப்படச் செய்யும் வெறுப்படையச் செய்யும் அணுக்களுக்கு ஆகாரம் செல்லாதபடி இந்தத் துருவ நட்சத்திரத்தின் அவைகளைத் தள்ளி விடுகின்றது.

1.நாம் ஆன்மாவை விட்டுத் தீமைகள் கடக்கப்பட்டு பரமாத்மாவிலே கலந்து விடுகின்றது.
2.அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும் போது நல்ல அணுக்களுக்கு இது உணவாகச் சென்று
3.உடலுக்குள் நல்ல அணுக்களாக வளரத் தொடங்குகிறது.

மனிதனாக இருப்பவர் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

தீமை செய்யும் அணுவாகிவிட்டால் அது உந்தி தன் உணவை எடுக்கின்றது… அறியாதபடி நோய்களும் வந்து விடுகிறது… நம் மனநிலையும் வித்தியாசமாகி விடுகின்றது.

அன்பு கொண்டு மற்றவரிடம் பழகினாலும் அந்த அன்பு மறைந்து விடுகிறது… பகைமையை ஊட்டுகின்றது. பகைமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகும் பொழுது உடலுக்குள்ளேயே பகைமை உணர்ச்சிகள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது.

இதைப்போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒவ்வொரு நாளும் வாழ்க்கையையே தியானம் ஆக்குங்கள்.

சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு போன்ற செயலற்ற நிலைகள் வரப்படும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் வலுப்படுத்தினால் தீமைகளைத் தள்ளி விடுகின்றது… ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது… மன வலிமை பெறச் செய்கின்றது.

வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தீமையிலிருந்து விடுபடும் சக்தியும் பெறுகின்றோம். அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றுகின்றோம். ஆகவே
1.இந்த வாழ்க்கையில் பிறவி இல்லா நிலை அடைய முயற்சி எடுங்கள்.
2.இந்த உடலுக்குப் பின் நாம் இன்னொரு உடல் பெறக் கூடாது.

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது

 

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம்… ஆனால் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நாட்டில் மாட்டு வண்டியிலே சாமான்களை ஏற்றிச் செல்கின்றார்கள் சந்தர்ப்பத்தில் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டால் மாடுகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அங்கே அருகில் இருக்கக்கூடிய மக்கள் ஓடிச்சென்று
2.உணவுக்காக அந்த மாட்டினுடைய தசைகளை இரக்கமற்று அறுத்து எடுத்துச் செல்கின்றார்கள்
3.அதிலே அடிபட்ட மனிதனின் தசைகளையும் கூட அறுத்து எடுத்துச் சாப்பிடச் செல்கின்றார்கள்.

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் இப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது,.

இத்தகைய நேரத்தில் இராமாயணத்தில் கூறியது போல நாம் சிறிது காலமே வாழ்க்கை வாழ்கின்றோம்.

1.இதற்குள் நாம் மனதை ஒன்றாக்கி உடலுக்குள் ஒன்றென இயக்கி
2.இந்த உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி
3.உயிருடன் ஒன்றும் உணர்வை ஒன்றாக சேர்த்து
4.அந்த உண்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தும் போது நமக்குள்ளும் வளர்கின்றது… தீமைகளை அகற்றும் சக்தி இந்தப் பூமியிலும் பரவுகின்றது… நம் உடலுக்குள்ளும் அது பெருகுகின்றது.

கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படித் தீமைகளைப் பிளந்ததோ அதே போன்று மனிதர்களாக இருக்கக்கூடிய நாம்
1.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இந்தப் பூமியில் கலந்திருப்பதை அந்த உணர்வைப் பெருக்கி
2.தீமையை நீக்கும் அந்தச் சக்தியை நாம் சுவாசித்து
3.நமக்குள் தீமை புகாது தடுத்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.

விஷ உலகமாக மாறிவரும் வேளையில் இன்று இருக்கக்கூடிய மனிதர்கள் இனிமேல் எப்படி எல்லாம் செயல்படுத்துவார்கள்…? என்று சொல்ல முடியாது.

இந்த உலகையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார்கள் எதிர்பாராதபடி ஒருவருக்கொருவர் ஏவினால்
1.அந்தக் குண்டுகள் வெடித்தால் இந்தப் பூமியில் பரவத்தான் போகின்றது
2.விஷக் கதிரியக்கங்கள் அதிகமாகப்படும் பொழுது சூரியனின் ஒளிக்கதிர்களைத் தடுக்கத்தான் போகின்றது.

அப்படித் தடுத்து நிறுத்தி விட்டால் சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவவில்லை என்றால் துருவத்தில் எப்படிப் பனிப்பாறைகள் உறைகின்றதோ அதைப் போன்று
1.நாம் இருக்கும் இடங்களில் பனிப் பாறைகள் உறைந்து
2.உயிரினங்களே அனைத்தும் மறைந்து போகும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

அப்போது பூமி சூரியனைக் கடந்து விலகிச் சென்றுவிடும். இயக்கச் சக்தி கடந்தால் இந்தப் பிரபஞ்சமே சுக்குநூறாகிவிடும்… பின் பிரபஞ்சம் இல்லை

ஆனால் இங்கே உயிரணுவாகத் தோன்றி
1.வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழும் நிலை பெற்றவர்கள்
2.எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் அழிவில்லாதபடி அவர்கள் வாழுகின்றார்கள்.

அதை நீங்கள் பெற விரும்பினால் அது எளிதில் பெறக்கூடிய சக்தி தான் கடினமில்லை கடும் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டே வந்தால் போதுமானது.
2.அதன்படி வாழ்க்கையே நீங்கள் தியானம் ஆக்கிக் கொள்ளுங்கள்.