ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?

ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?

 

நாம் எல்லாம் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்திருக்கிறோம் என்றால்… குருநாதர் என்னை ஆயுட்கால மெம்பராகச் சேர்ப்பதற்கு முன்னாடி இதையெல்லாம் வரிசைப்படுத்தி எனக்குள் உபதேசித்தருளினார். அதாவது
1.நாம் எப்படி வாழ்கின்றோம்…?
2.நம் வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பம் நம்மை எப்படி எல்லாம் பல இன்னல்களைக் கொடுக்கிறது…?
3.இதிலிருந்து எல்லாம் நாம் எப்படித் தப்ப வேண்டும்…? என்பதை உணர்த்தினார்.

அதன் வழிப்படி துருவ நட்சத்திரம் என்பது அகஸ்தியன் துருவனாகி அவர்கள் திருமணமான பின் அவர்கள் இரு மனமும் ஒன்றாகித் துருவத்தின் நிலையை எண்ணி ஏங்கி அந்த ஆற்றலைப் பெற்று… அவர்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி அவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று…
1.எந்தத் துருவத்தின் எல்லையை அது குறியாக வைத்து
2.அதனின்று வரும் உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கின்றனரோ
3.இந்த மனித உடலுக்குப் பின் கடைசி நிலை அது பிறவியில்லா நிலை.
4.தங்கள் உடலில் உள்ள நஞ்சுகளைக் கரைத்து விட்டு
5.எத்தகைய நஞ்சினையும் கரைத்து ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் ஆனார்கள்.

அதிலே தான் நாம் அங்கத்தினராகச் சேர்ந்திருக்கிறோம். இனி பிறவியில்லா நிலை என்ற நிலை அடைவதற்குத் தான் ஆயுட்கால மெம்பராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றதோ அதே போல் நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை நீக்கி இந்த வாழ்க்கையிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று நமது உடலில் தீமைகள் புகாது பாதுகாத்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த அந்த அருளை நமக்குள் பெருக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது நாம் தியானிக்கும் முறைகள்.
3.குரு வழி வகுத்த இந்த முறைப்படி நாம் நடந்தோம் என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.

ஆகவே நாம் இதை முழுமையாகக் கடைப்பிடித்தல் வேண்டும். ஆக ஆயுள் கால மெம்பராக எதிலே சேர்த்திருக்கின்றோம்…?

இப்பொழுது இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் நாம் இந்தத் தியானத்தில் கொடுத்த சக்தியின் துணை கொண்டு தீமைகளை வராதபடி அதை மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தனக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் நாம் அதை கடைப்பிடித்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்

 

ஆசையின் வாலிப பருவத்தின் உணர்வில் ஆணைக் கண்ட பின் அந்த உணர்வின் தோற்றமானால் அந்த உணர்வுக்கு நாம் அடிமையாகி விட்டால் அதன் உணவின் வளர்ச்சியாகி நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு நாம் இழுக்கு தேடும் நிலையே வருகின்றது.

தாய் வேதனைப்படுகிறது என்பதனை உணர்வதில்லை. நம் இச்சைகள் இப்படி வளரப்படும் போது இப்பொழுது உலக மாற்றங்கள் ஏற்படும் போது இதனுடைய விளைவுகள் எத்தனையோ ஆகிறது.

1.தாய் தந்தையை மறுத்து வெளியே சென்று தனித்து வாழும் உணர்வுகள் அனைத்தும்
2.துயர்படும் நிலைகள் தான் வாழ நேருகின்றது.
3.அது தவிர தாயையும் தந்தையையும் துயரத்தில் ஆழ்த்துகின்றோம்.

தேடிய செல்வங்கள் இருப்பினும் அதைக் கொண்டு தன்னைக் காத்திடும் நிலை இல்லாதபடி வேதனை என்ற உணர்வுகளை உருவாக்கித் தன் தந்தைக்குள் விஷத்தன்மை ஊட்டப்பட்டு
1.பாம்பாய் இருந்தேன்… என்னை அடித்து உன்னிடம் வளர்த்து மனிதனாக்கினாய்
2.நீ பாம்பாகப் போ என்று வேதனை உணர்வைத் தன் தாய் தந்தைக்கு ஊட்டி
3.அந்தப் பாம்பினத்தில் சேர்க்கும் தன்மை தான் இன்றைய குழந்தைகளுக்கு உள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுதல் வேண்டும்.

மனிதனான பின் உணர்வின் தன்மை எல்லாவற்றையும் கடந்து உணர்வின் ஒளியானது நட்சத்திரம். தீமையை நீக்கும் ஆறாம் அறிவின் தன்மை கொண்டு அவன் தெளிந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரம் ஆனான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வை
1.ஆறாவது அறிவின் வலிமையின் துணை கொண்டு காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்வோமென்றால்
2.நுகர்ந்த உணர்வுகள் வலிமைமிக்கதாக மாறி அந்த உணர்வுகள் தெய்வ ஆணையாகி
4.தீமைகளை வெளியேற்றும் உணர்வின் வலிமையாகி நமக்குள் தீமை புகாது உணர்வின் வலிமை பெறச் செய்யும்.

இவ்வாறு வலிமை பெற்ற உணர்வுகள் எதன் வலிமையைப் பெற்றோமோ நாம் இந்த உடலை விட்டுக் கடந்த பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை இணைத்து… ஆறாவது அறிவை ஏழாவது நிலையான இனி பிறவி இல்லா நிலை நிலையும்… உடல் மாற்றம் இல்லாது இந்த உடலிலேயே ஒளியின் உணர்வாக நாம் மாறிடும் நிலை வருகின்றது.

எப்பொழுது துயரம் என்ற நிலைகளைச் சந்தர்ப்பத்தால் நுகர்கின்றோமோ அதை உடனே மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் வலிமையை
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

கலகப்பிரியன் நாரதன்

கலகப்பிரியன் நாரதன்

 

ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். அதில் ஒருவர் நல்ல மனுஷன்…! இவன் இப்படிப் பேசுகின்றானே…! என்று நினைக்கின்றோம்.

திட்டப் போகும்போது நம்முடைய மனது கேட்கிறதோ…? ஏம்பா இந்த மாதிரி எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றாய் என்கிறோம்.

உனக்கென்ன ஐயா…? என்று கேட்டால் இல்லாத வம்பெல்லாம் வரும். திருப்பி அதைத் திருத்த முடிகின்றதா என்றால் முடியவில்லை.

உங்களால் சொல்ல முடியுமா…?

1.அதே உணர்வு நமக்கு வந்தால் விட்டுவிடுவோமா. நான் சொல்கின்றேன் கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.இரு நான் பார்க்கிறேன் என்று வம்பு தான் பேசுவோம்.

தெரியுது… ஆனால் சொன்னாலும் வம்பு தான். அப்பொழுது அந்தக் கலகம் வருகிறது.

ஆனால்
1.அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோம் என்றால் உயிருக்கு வருகின்றது
2.அந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரம் இதையெல்லாம் கரைத்தது. உள்ளுக்கே சென்று பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கும்படி செய்கிறது.

வாயிலே சொன்னால் அந்த சமயத்தில் கேட்காது. நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணிச் செலுத்துதல் வேண்டும்.

1.அப்பொழுது முன்னாடி பாதுகாப்பு வருகின்றது.
2.அதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
3.அதைச் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சேர்த்து விட்டால் நாம் எடுத்த உணர்வுகள் உமிழ் நீராகி சிறுகுடல் பெருங்குடலுக்குச் செல்லுகின்றது. இரத்தமாக மாறுகின்றது.

உடல் முழுவதற்கும் ஒரு நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.

வேதனைப்படுபவரைப் பார்க்கின்றீர்கள். அந்த உமிழ் நீர் வருகின்றது இந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கம் சென்று வேதனைப்படுத்துகின்றது.

ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் கலகப் பிரியன். இந்த பிடிவாத குணங்களை விடுத்து விட்டு இருவரும் சமாதானமாகச் செல்லுங்கள் என்று விளக்கத்தைச் சொல்ல முடியும்.

நம் உடலிலும் அதைச் சமாதானப்படுத்த வேண்டும்

இந்த மனிதன் சும்மா இருந்தாலும் இவன் இப்படிப் பேசுகின்றான் பார்…!
1.அதை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
2.ஆனால் அவர்கள் செய்த தவறை நாமும் செய்கின்றோம்..
நாம் தவறு செய்யவில்லை ஆனால் இந்த உணர்வு வருகின்றது.

அது தான் நாரதன் கலகப் பிரியன் கலகமோ நன்மையில் முடியும். நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ “அதை எல்லாம் மாற்றி விடுகின்றது…”

தீமையைக் காணும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்

தீமையைக் காணும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்

 

இன்றைய நாளில் உங்களுக்கு ஏன் இதை ஞாபகப்படுத்துகிறேன் என்றால் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் “இன்று சந்திரன் மிகவும் பிரகாசமாக இருக்கின்றது…”

1,சந்திரனுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்கும் பருவம் பெறுகின்றது.
2.வெள்ளிக் கோளின் உணர்வுகளும் மற்ற கோளின் தடையில்லாது வருகின்றது.
3.இத்தருணத்தில் இங்கே துருவ தியானத்தில் எடுக்கும் உணர்வுகள் இருளை அகற்றும் நிலையும்
4.அருள் வழி வாழும் உணர்வுகளும் தெளிந்து வாழும் உணர்வுகளும் நமக்குள் கூட்டுகின்றது.

அதனைப் பருகுவதற்குத் தான் உபதேசிப்பது.

அதே சமயத்தில் இயற்கையில் நாம் விளைந்தாலும் செயற்கையில் தீமையின் உணர்வுகளை எவ்வாறு நுகரச் செய்கின்றது…? செயற்கையினால் நம் உடலுக்குள் பகைமை உணர்வுகள் எவ்வாறு வருகின்றது…? பகைமை எப்படி உருவாகின்றது…? இது போன்ற நிலைகள் மனிதனின் வாழ்க்கையில் வருவதிலிருந்து தடுப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

காரணம் 2000க்கு மேல் கடும் விஷத்தன்மைகள் பரவும் நிலையில் அதை நுகரும் தன்மை வருகின்றது. அதை நுகரும் தன்மை வந்தாலோ விஷத்தன்மைகள் கூடி மிகவும் மிருக நிலையிலான உணர்வுகளுக்கு நாம் சென்று விடுவோம்.

அதிலிருந்து நம்மைக் காக்கத் தீமை உணர்வுகள் வராதபடி தடுக்க இன்றிலிருந்து நாம் தயாராக வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொரு குடும்பத்திலும் தனக்குள் பருகி
2.உலக மக்கள் சேமமாக இருக்க வேண்டும் என்றும் உலகில் நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்றும் நல் பயன் பெற வேண்டும் என்றும்
3.உலக இருளை அகற்றிடும் அருள் சக்தி பரவ வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் தெளிவான நிலைகள் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மை நாம் நுகர வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியினை நமக்குள் பெருக்கி இருள் சூழும் நிலைகளைத் தடுத்து மெய்ப்பொருள் காணும் உணர்வை வளர்த்து நம் மூச்சும் பேச்சும் அத்தகைய நிலையாக இந்த உலகில் பரவச் செய்தல் வேண்டும்.

எத்தகைய கடுமையான தீமையானாலும் நோயானாலும் துருவ தியானத்தின் மூலம் பெற்ற ஆற்றலைப் பெருக்கி… அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.எப்பொழுதெல்லாம் தீமையைக் காணும் சந்தர்ப்பம் வருகின்றதோ
2.அந்தச் சந்தர்ப்பத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி தீமைகளை அகற்றி
3.அந்த இருளை அகற்றி ஒளி என்ற உணர்வை ஆட்சி புரியும் தன்மையாக
4.தெளிந்த மனம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

ஆகவே அத்தகைய சீர்படும் உணர்வினை நாம் ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

துருவ நட்சத்திரம் உருவாக்கும் “ஒளியான அண்டம்”

துருவ நட்சத்திரம் உருவாக்கும் “ஒளியான அண்டம்”

 

1.பிரபஞ்சத்தில் உயிரணு தோன்றி பூமியில் மனிதனாக உருவான பின் துருவ நட்சத்திரம் ஆன நிலை என்பது…
2.அது அகண்ட அண்டத்தின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து
3.ஒளிச் சரீரமான ஒளியான அண்டத்தை உருவாக்கும்,

இப்படி…
1.ஒளி அண்டங்கள் ஒன்றுடன் ஒன்று நமது சூரியக் குடும்பத்தில் இருப்பது போல பல பல சூரியக் குடும்பங்களில்
2.எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்களில் உயிரணு தோன்றி உணர்வின் ஒளியாக மாறி… அகண்ட அண்டத்தில் சுழன்று கொண்டு தான் உள்ளது.

உயிரணு தோன்றி இந்த உயிர் நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்ச்சிகள் கொண்டு நாம் இயங்கினாலும்… அதனதன் வழி கொண்டு சந்தர்ப்பத்தில் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் வேதனையை உருவாக்கும் அணுக்கள் உருவாகி உடலிலே நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேர்கின்றது.

இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நரக வேதனைகளை அனுபவித்து… அதிலிருந்து “தப்பிக்க வேண்டும் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வுகளை வளர்த்து வளர்த்துத் தான் இன்று நம்மை மனிதனாக வளர்த்துள்ளது உயிர்.

1.மனிதனான பின் இத்தகைய வேதனைகளிலிருந்து தப்ப வேண்டும் என்று
2.அவ்வாறு தப்பிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் இந்த உடலிலே அது வளர்க்கப்பட்டு
3.உடலை விட்டுச் சென்ற பின் வேதனையற்ற உணர்வும்
4.வேதனை உருவாக்கும் அந்த நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று
5.அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லும் நிலையும்…
6.எங்கிருந்து எது உருவானாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியும் பெறுகின்றது.

அதை இந்த மனித சரீரத்திலே பெறத் தவறினால் மீண்டும் நாம் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை கொண்டு விஷ அணுக்கள் உருவாகி… உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தன்மை கொண்ட உடலாக உருவாக்கிவிடும் நமது உயிர்.

மீண்டும் நரக வேதனையில் தான் சுழல நேரும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கினால் உடலில் வரக்கூடிய நோய்களையோ அல்லது வாழ்க்கையில் தொழிலில் வரக்கூடிய சிக்கலையோ அதை நிவர்த்திக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.தியானத்தின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறப்படும் போது
2.நாம் இந்த வன்மை (வலிமை) பெறுகின்றோம்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தும் பொழுது நமது நினைவாற்றல் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றது.
1.அதன் உணர்வை நாம் எளிதில் பெறும் தன்மையும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றிடும் திறனும் பெறுகின்றது.
3.அதே சமயம் இந்த உடலை விட்டு நாம் சென்றால் எளிதில் அந்த சப்தரிஷி மண்டலத்தை அடையும் நிலையும் வருகின்றது.

உடல் நலிந்தாலும்… நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்

உடல் நலிந்தாலும்… நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்

 

மனிதனான பின் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

அந்தச் சக்திகளை எடுத்து நாம் முன்னோர்களை விண் செலுத்திப் பழகுதல் வேண்டும். சப்தரிஷி மண்டலங்களுடன் அவர்களை இணைக்கப்படும் போது அங்கிருந்து உயர்ந்த சக்திகளை நாம் பெறலாம்.

1.சப்தரிஷி மண்டல உணர்வுகளைக் கவர்ந்தோம் என்றால் அந்த வலிமையை நாம் பெறுகின்றோம்
2.இதை வளர்க்க வளர்க்க இருளை அகற்றும் நிலையும் வலிமையான உணர்ச்சிகள் நமக்குள் தோன்றும்
3.தீமை அகற்றும் வல்லமையும் நமக்குள் பெறுகின்றது.
4.இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் “தாங்கும் வலிமை கொண்டு” நல்லதை வளர்க்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம்.

அருள் ஒளி என்ற உணர்வுகள் பெருகுகின்றது எந்த நிமிடம் உடலை விட்டுச் சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து சப்தரிஷி மண்டலத்தில் பிறவியில்லா நிலை அடையலாம்.

சூரியன் ஒரு காலம் அழியலாம். மனிதனுடைய உணர்வுகள் ஒளியான பின் அது அழிவதில்லை. ஏனென்றால் நஞ்சை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.

அத்தகைய திறன் பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் போது நமது உடலில் கலந்துள்ள நஞ்சை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.
1.நஞ்சை ஒளியாக மாற்றப்படும் பொழுது
2.நம் உடலில் இப்பொழுது அந்த உணர்வுகள் அதிகமானால்
3.இந்த உடல் நலியத்தான் செய்யும்.

வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது நஞ்சின் தன்மை மாறுகின்றது. ஆனால்
1.அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டப்படும் பொழுது
2.ஐய்யய்யோ… நான் தியானம் இருக்கின்றேனே என் உடல் நலிந்து போய்விட்டதே என்று எண்ண வேண்டியது இல்லை.

ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை கொண்ட உடலின் தன்மையை மாற்றி அருள் ஒளியைக் கூட்டி இந்த உணர்வு வளர்ந்தால்
2.இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளியின் சரீரம் ஆகிறது.

வேதனையை எடுத்தால் உடல் நலிந்து வேதனையையே மீண்டும் ஊட்டி மீண்டும் பிறவிக்கு வருகின்றோம் ஆகவே எத்தகைய வேதனைகள் வந்தாலும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினைச் சேர்த்தால் நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைப் பெற்றோமோ அங்கே செல்கின்றோம்
2.நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்.

எப்போது இருந்தாலும் நாம் இந்த உடலை விட்டுப் பிரியத்தான் வேண்டும். உடலில் வளர்த்த உணர்வு எதுவோ அந்த நிலைக்குண்டான ஈர்ப்புக்குத் தான் அழைத்துச் செல்லும். உயிருடைய வேலை அது தான்.

ஆகவே நமது வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மை பெற முடியும்

பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மை பெற முடியும்

 

அகஸ்தியன் தன் வாழ்நாளில் தாய் கருவிலே வளரும் பொழுதே நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பெற்று… பிறந்து வளரும் பொழுது அதே ஆற்றலை வளர்த்து அவன் வாழ்நாளில் அனைத்து அறிவினையும் அறிந்திடும் உணர்வு பெற்றவன்.

1.அகஸ்தியன் அவனது வாழ்க்கையில் சர்வ ஞானமும் பெற்று
2.அதன் வழி கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் துருவனாகி துருவ மகரிஷியான அந்த உணர்வுகள் அனைத்தும் எதை உற்று நோக்கியதோ
3.அந்த உணர்வின் துணை கொண்டு அங்கே நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்த்தும் வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் உணர்வுகளை நுகர்ந்தவர்கள் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

நாம் நமது வாழ்க்கையில் இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த உணர்வுகள் நம் உடலில் கலந்து இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உடலுக்குள் செலுத்தி அந்த நஞ்சான உணர்வை மாற்றி
2.அனைத்தையும் அறிந்திடும் அறிவென்ற உணர்வினை நமக்குள் வளர்த்து
3.இந்த வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வந்தாலும் அதனைச் சமப்படுத்தி
4.நமது உடலில் ஒளி உணர்வைக் கூட்டும் சக்தி பெறச் செய்யும் நிலையே நாம் எடுக்கும் தியானம்.

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் சக்திகள்… ஒரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறையாக மோதும் பொழுது தான் மின்னல்கள் வருகின்றது.

இந்த மின்னல் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த மின் அலைகள் வெகு தூரம் பரவுகின்றது.
1.அப்படி வரக்கூடிய உணர்வுகளை அகஸ்தியன் நுகர்ந்தறிந்து தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஒளிமயமாக ஆக்கிக் கொண்டான்.
2.அதன் வழி தான் விண்ணுலகை உற்று நோக்கி உணர்வை ஒளியாக மாற்றி
3.துருவத்தின் வழி வரும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது.

அந்த உணர்வை நமக்குள் பெற்றால் இந்த 27 நட்சத்திரங்களும் எதிர்நிலை கொண்டு அது மின்னலாக மாறும்பொழுது ஒளிக் கற்றைகள் பரவுவதை…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் இருப்பதனால்
2.அதை எளிதில் நம் உடலுக்குள் கலந்து எல்லா அணுக்களுக்கும் அதைக் கொடுக்க முடிகின்றது.

உதாரணமாக… வேதனைப்பட்ட ஒரு மனிதனின் உணர்வை நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தால் அவன் நினைவு வரும் பொழுதெல்லாம் அதே வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இதைப் போன்று 27 நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்திற்குப் பல உணர்வுகளை இயக்கக்கூடிய சக்தி பெற்றது. 27 நட்சத்திரங்களின் இணை சேர்த்த உணர்வு கொண்டுதான் ஒவ்வொரு உயிரும் அந்த உணர்வினை அணுக்களுக்குள் சேர்த்தது தான் அணுத் துகள்களும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு நமது வாழ்நாளில் அதைத் தியானித்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த வலுவை நமக்குள் பெற்ற பின்
1.உடலை விட்டுச் சென்றால் அங்கே அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் நமது உயிரான்மா நிலைகொள்ளும்.
2.உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விட்டு என்றும் நிலையான சரீரமாக முழுமை பெறும்.

இந்தச் சூரிய குடும்பமே… சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் அனைத்தும் என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு வேகா நிலை அடைந்தது.

1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றி அகண்ட பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உணர்வின் சக்தி வருகின்றது
2.சூரியன் அழிந்து விட்டால் அதனின் பிடிப்பை அறுத்து ஏகாந்த நிலை கொண்டு
3.எதனையும் இருந்த இடத்திலிருந்து கவர்வதும் பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மையும் பெற முடியும்.

இப்படிப்பட்ட சூரியக் குடும்பங்கள் பேரண்டத்தில் எண்ணிலடங்காது உண்டு.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்

 

பிறருடன் பற்று கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஆனால் அவருடைய சந்தர்ப்பம் நோயாகி விட்டால் அதை நாம் நுகர்ந்து நமக்குள் ஜீவன் கொடுக்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அருள் வழியைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் யாருடன் அவ்வாறு பழகினோமோ வாழ்க்கையில் அவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் சும்மா இருக்க முடியுமா…? மாமனாரோ மாமியாரோ உடல் சரியில்லை என்றால் சும்மா இருக்க முடியுமா…?
1.அந்த உணர்வை நுகர்ந்தே அறிய வேண்டியதிருக்கும்.
2.உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் துடைப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

துயரமான நிலைகளைக் கேட்க நேர்ந்தால்
1.அந்தக் கணத்திலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.அப்போதே அந்த உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று தீமை புகாதபடி செயல்படுத்த வேண்டும்.

இதைத்தான் வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் மடி மீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று சொல்வது.

ஆகவே ஞானிகள் கூறியபடி நினைவை விண்ணிலே செலுத்தி மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவன் மனிதனில் தீமைகளை எல்லாம் வென்ற அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைத் தான் பின் வந்தோர் கவர்ந்து
2.நாமெல்லாம் இந்த நிலைகளை அறியும்படி செய்கின்றார்கள் சப்தரிஷிகள்
3.சப்தரிஷி மண்டலங்களாக அவர்கள் வாழ்கின்றார்கள்.

அதையெல்லாம் உணர்த்தும் நிலை தான் விநாயகர் தத்துவம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மனதில் பதிவாக்கி நினைவை உயிருடன் ஒன்றிப் புருவ மத்தியிலே வைத்து நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிரான ஈசன் அவன் உருவாக்குகின்றான். கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி ஏங்கித் தியானத்தில் வேண்டும்.

வட மேற்காகத்தான் விநாயகரை வைத்திருப்பார்கள் வடகிழக்காக நாம் அங்கே பார்க்கின்றோம்.
1.வட கிழக்காக நாம் நினைவைச் செலுத்தினால்…
2.துருவ நட்சத்திரத்தின் எல்லை அந்தத் திசையில் இருப்பதால்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியினை அந்த பாதையில் பூமி கவர்ந்து வரும் நிலையில் நாம் நுகர்ந்து
4.நமக்குள் இந்த உணர்வினை பதிந்து உடல் உள்ள தீமைகளை அகற்றும் அந்த நிலையை நமக்குள் உருவாக்குகின்றார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பதிவாக்கி… உடலுக்குள் செலுத்தும் படி செய்கின்றார்கள்.

கண்ணிலே உற்று நோக்கி துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது
1.அதே உணர்வின் தன்மையைப் புருவ மத்தியில் எண்ணி கண்ணின் நினைவை மீண்டும் உடலுக்குள் செலுத்தி
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அதைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஊட்டுதல் வேண்டும்.

கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று இதைத் தெளிவாக்குகின்றார்கள்.

இதையெல்லாம் ஒரு பழக்கமாக நாம் வைத்து அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்கும்படி
2.நாம் ஒரு பயிற்சியாக செயல்படுத்திக் கொள்தல் வேண்டும்.

துருவ நட்சத்திர முகப்பு எல்லையில் நாம் இருக்கின்றோம்…!

துருவ நட்சத்திர முகப்பு எல்லையில் நாம் இருக்கின்றோம்…!

 

விநாயகர் பக்கம் அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் வைத்துள்ளார்கள். அரச மரம் என்பது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரம் ஆனது… “அது அரசு…”

இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் அனைத்தையும் ஒளிச்சுடராக மாற்றி எத்தகைய இருளையும் வெல்லும் வல்லமை பெற்றது.
1.அதனை எந்த விஷமும் தாக்காது
2.அப்படித் தாக்கினால் அந்த விஷம் அதற்குள் ஒளியாக மாறும்.

விஷத்தின் தாக்குதலால் தான் சூரியனும் ஒளியாகின்றது விஷத்தின் தாக்குதலால் தான் உயிரும் துடிப்பாகின்றது… வெப்பமாகின்றது… உணர்வின் அறிவாக இயக்குகின்றது.

விஷம் இல்லை என்றால் இயக்கம் எதிலும் இல்லை. விஷம் இல்லை என்றால் ஒரு பொருளின் தன்மை உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டாது.

வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால்… விஷம் அதிகரித்தால் மனிதனை நினைவிழக்கச் செய்கின்றது. ஆக… உணர்வின் தன்மை எதைப் பகுந்து எடுக்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாக நமது உயிர் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்கினர் ஞானிகள்.

நீர் நிலை இருக்கும் பக்கம் வட மேற்காக விநாயகரை வைத்து வட கிழக்காக வணங்கும்படி செய்கின்றார்கள் காலையில் நான்கிலிருந்து ஆறுக்குள் உடல் அழுக்கைப் போக்கிவிட்டு
1.ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அந்தச் சக்தியைப் பெறும்படி செய்கின்றார்கள்.
2.துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அதிகாலை உதயமாகும் சூரியன் கவர்கிறது.
3.காரணம் அதனுடைய கதிரியக்கங்கள் அதிலே படுகின்றது
4.அப்போது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக இந்தப் பிரபஞ்சத்திற்குள் சுழலச் செய்கின்றது.
5.நாம் துருவத்தின் அதாவது துருவ நட்சத்திரத்தின் முகப்பு எல்லையில் இருப்பதால்
5.நமது பூமி கவரும் பொழுது துருவத்தின் வழியாக முதலில் நம்மிடம் கவர்ந்து வருகின்றது.
6.மனிதனாகத் தோன்றி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த உணர்வுகள் பூமிக்குள் படர்ந்துள்ளது… பிரபஞ்சத்திலும் பரவி உள்ளது.

அதனை நுகரும் பருவம்… மனிதன் தன் எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்து அந்த உணர்வைப் பெறும் தகுதி ஏற்படுத்தும் நிலையாக… தீவினைகளை அகற்றும் அந்த வினையை நமக்குள் வினைக்கு நாயகனாக “கணங்களுக்கு அதிபதியாக்கும் முறையை” நமக்குத் தெளிவாக்கினார்கள்.

அதனை நாம் பின்பற்றினால் அருள் ஒளி பெறலாம் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றலாம்
1.அகஸ்தியன் கண்ட பாதையில் பேரருள் பேரொளி என்ற நிலையில் இங்கே வாழலாம்… பேரொளியாக மாற்றும் தன்மையும் பெறுகின்றோம்.
2.அதனைப் பெறச் செய்வதற்குத் தான் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதை நுகரும்படி நமக்கு வழிப்படுத்தினார்கள் அன்றைய ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேராற்றல்

துருவ நட்சத்திரத்தின் பேராற்றல்

 

நாம் யாரும் தவறு செய்யவில்லை…! அன்பு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டு தான் வாழ்கின்றோம். பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து விடுகின்றோம்
1.நம் உயிரிலே தான் படுகின்றது
2.அதன் உணர்வுகள் நமக்குள் கருவாகின்றது இந்திரலோகமாக மாறுகின்றது
3.கருவாகிப் பின் உருவாகி விடுகின்றது.

பிறிதொரு மனித உடலில் விளைந்த தீமையின் உணர்வுகள் அந்த விஷத்தன்மை நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும் ஊடுருவி அதை கருவாக்கி அணுக்கள் மாற்றமாகும் தன்மைக்கே வருகின்றது.

இதை நல்ல முறையில் மாற்றிக் கொள்வதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

இது போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் துருவன்… அவன் துருவ மகரிஷியாக ஆனான்… துருவ நட்சத்திரமாக ஆனான். அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் இன்றும் என்றும் வந்து கொண்டே உள்ளது.

உயிர் தோன்றி மனித உணர்வின் தன்மை பெருக்கிய பின் இன்றும் அகஸ்தியன் ஒளியின் சரீரமாக இருக்கின்றான்.
1.அதைக் கவர்ந்து தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் இந்த இருளை அகற்றி
2.உடலுக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றது.

இன்று விஞ்ஞானி பல உணர்வுகளைச் சேர்த்து பல ஆயிரம் ஆண்டு காலம் வாழலாம் என்று சொல்கின்றான்.
1.ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியோ என்றும் ஏகாந்தமாக பல கோடி ஆண்டுகள் வாழும் நிலை
2.இந்தச் சூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.அகண்ட அண்டத்திலிருந்து வரும் தூசுகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம் மனிதனான நாம்.

எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கியவன் அகஸ்தியன். அவன் எந்தத் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு ஒவ்வொரு பொருளின் தன்மையையும் மாற்றி செயல்படுகின்றான்.

எப்படி…?

இன்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது உணர்வின் அதிர்வுகளை வைத்து எதன் அதிர்வோ அதை மாற்றி அமைக்கும் பல நிலைகள் கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.

ஒரு பாஷையில் எழுதினால்
1.அதில் எலக்ட்ரான் என்ற மோதலுக்கொப்ப உணர்வின் அறிவாக எழுத்தின் ரூபத்தைக் கொடுத்து
2.ஒரே நிலையில் ஒரே அழுத்தத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் போன்ற உலகில் உள்ள நூறு பாஷைகளை மொழிபெயர்ப்பு செய்கின்றான்…
3.உருவத்தின் அமைப்பையும் கொடுக்கின்றான் அதிர்வின் நிலைகள் கொண்டு.

இதெல்லாம் நாம் இன்று பார்க்கின்றோம் அல்லவா…!

எதன் உணர்வின் விஷத்தன்மை கலக்கின்றானோ இந்த உணர்வுக்கொப்ப இணைத்தால் “இது இன்ன ரூபமாகும்…” என்று ஒரு நொடியில் செய்து விடுகின்றான்.

நாம் படித்து அர்த்தம் கண்டு பல நிலைகள் எழுத்து வடிவிற்குக் கொண்டு வருவதற்கு முன் “ஒரு நொடிக்குள் நூறு உணர்வை மாற்றிக்கொண்டு வருகின்றான் விஞ்ஞானி…”

அதைப் போன்று
1.ஒரு நொடிக்குள் அருள் உணர்வின் தன்மை பெற்று
2.தனக்குள் வருவதை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
3.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றார்கள்.

மனிதனானவன் தன் இனத்தின் தன்மை கொண்டு வாழப் படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று அங்கே செல்ல முடியு,

நம் தாய் தந்தை முன்னோர்கள்… குல வழியில் வந்தவர்கள்… அவர்கள் இதற்கு முன் விண் செல்லத் தவறினார்கள்.
1.இப்போது நாம் அதைப் பெற்ற பின் அவர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்
2.அவர்கள் இன்னொரு உடலில் இருந்தாலும் கூட அதிலிருந்து வெளிவந்த பின்
3.நாம் எடுத்துப் பாய்ச்சிய உணர்வு கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் பெருக்கிப் பெருக்கி உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களை எளிதில் வின் செலுத்த முடியும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழச் செய்ய முடியும்… பிறவி இல்லாத நிலை அடையச் செய்ய முடியும்.