துருவ நட்சத்திரம் உருவாக்கும் “ஒளியான அண்டம்”

துருவ நட்சத்திரம் உருவாக்கும் “ஒளியான அண்டம்”

 

1.பிரபஞ்சத்தில் உயிரணு தோன்றி பூமியில் மனிதனாக உருவான பின் துருவ நட்சத்திரம் ஆன நிலை என்பது…
2.அது அகண்ட அண்டத்தின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து
3.ஒளிச் சரீரமான ஒளியான அண்டத்தை உருவாக்கும்,

இப்படி…
1.ஒளி அண்டங்கள் ஒன்றுடன் ஒன்று நமது சூரியக் குடும்பத்தில் இருப்பது போல பல பல சூரியக் குடும்பங்களில்
2.எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்களில் உயிரணு தோன்றி உணர்வின் ஒளியாக மாறி… அகண்ட அண்டத்தில் சுழன்று கொண்டு தான் உள்ளது.

உயிரணு தோன்றி இந்த உயிர் நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்ச்சிகள் கொண்டு நாம் இயங்கினாலும்… அதனதன் வழி கொண்டு சந்தர்ப்பத்தில் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் வேதனையை உருவாக்கும் அணுக்கள் உருவாகி உடலிலே நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேர்கின்றது.

இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நரக வேதனைகளை அனுபவித்து… அதிலிருந்து “தப்பிக்க வேண்டும் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வுகளை வளர்த்து வளர்த்துத் தான் இன்று நம்மை மனிதனாக வளர்த்துள்ளது உயிர்.

1.மனிதனான பின் இத்தகைய வேதனைகளிலிருந்து தப்ப வேண்டும் என்று
2.அவ்வாறு தப்பிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் இந்த உடலிலே அது வளர்க்கப்பட்டு
3.உடலை விட்டுச் சென்ற பின் வேதனையற்ற உணர்வும்
4.வேதனை உருவாக்கும் அந்த நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று
5.அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லும் நிலையும்…
6.எங்கிருந்து எது உருவானாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியும் பெறுகின்றது.

அதை இந்த மனித சரீரத்திலே பெறத் தவறினால் மீண்டும் நாம் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை கொண்டு விஷ அணுக்கள் உருவாகி… உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தன்மை கொண்ட உடலாக உருவாக்கிவிடும் நமது உயிர்.

மீண்டும் நரக வேதனையில் தான் சுழல நேரும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கினால் உடலில் வரக்கூடிய நோய்களையோ அல்லது வாழ்க்கையில் தொழிலில் வரக்கூடிய சிக்கலையோ அதை நிவர்த்திக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.தியானத்தின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறப்படும் போது
2.நாம் இந்த வன்மை (வலிமை) பெறுகின்றோம்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தும் பொழுது நமது நினைவாற்றல் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றது.
1.அதன் உணர்வை நாம் எளிதில் பெறும் தன்மையும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றிடும் திறனும் பெறுகின்றது.
3.அதே சமயம் இந்த உடலை விட்டு நாம் சென்றால் எளிதில் அந்த சப்தரிஷி மண்டலத்தை அடையும் நிலையும் வருகின்றது.

உடல் நலிந்தாலும்… நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்

உடல் நலிந்தாலும்… நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்

 

மனிதனான பின் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

அந்தச் சக்திகளை எடுத்து நாம் முன்னோர்களை விண் செலுத்திப் பழகுதல் வேண்டும். சப்தரிஷி மண்டலங்களுடன் அவர்களை இணைக்கப்படும் போது அங்கிருந்து உயர்ந்த சக்திகளை நாம் பெறலாம்.

1.சப்தரிஷி மண்டல உணர்வுகளைக் கவர்ந்தோம் என்றால் அந்த வலிமையை நாம் பெறுகின்றோம்
2.இதை வளர்க்க வளர்க்க இருளை அகற்றும் நிலையும் வலிமையான உணர்ச்சிகள் நமக்குள் தோன்றும்
3.தீமை அகற்றும் வல்லமையும் நமக்குள் பெறுகின்றது.
4.இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை வந்தாலும் “தாங்கும் வலிமை கொண்டு” நல்லதை வளர்க்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம்.

அருள் ஒளி என்ற உணர்வுகள் பெருகுகின்றது எந்த நிமிடம் உடலை விட்டுச் சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து சப்தரிஷி மண்டலத்தில் பிறவியில்லா நிலை அடையலாம்.

சூரியன் ஒரு காலம் அழியலாம். மனிதனுடைய உணர்வுகள் ஒளியான பின் அது அழிவதில்லை. ஏனென்றால் நஞ்சை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.

அத்தகைய திறன் பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் போது நமது உடலில் கலந்துள்ள நஞ்சை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.
1.நஞ்சை ஒளியாக மாற்றப்படும் பொழுது
2.நம் உடலில் இப்பொழுது அந்த உணர்வுகள் அதிகமானால்
3.இந்த உடல் நலியத்தான் செய்யும்.

வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது நஞ்சின் தன்மை மாறுகின்றது. ஆனால்
1.அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டப்படும் பொழுது
2.ஐய்யய்யோ… நான் தியானம் இருக்கின்றேனே என் உடல் நலிந்து போய்விட்டதே என்று எண்ண வேண்டியது இல்லை.

ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை கொண்ட உடலின் தன்மையை மாற்றி அருள் ஒளியைக் கூட்டி இந்த உணர்வு வளர்ந்தால்
2.இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளியின் சரீரம் ஆகிறது.

வேதனையை எடுத்தால் உடல் நலிந்து வேதனையையே மீண்டும் ஊட்டி மீண்டும் பிறவிக்கு வருகின்றோம் ஆகவே எத்தகைய வேதனைகள் வந்தாலும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினைச் சேர்த்தால் நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைப் பெற்றோமோ அங்கே செல்கின்றோம்
2.நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்.

எப்போது இருந்தாலும் நாம் இந்த உடலை விட்டுப் பிரியத்தான் வேண்டும். உடலில் வளர்த்த உணர்வு எதுவோ அந்த நிலைக்குண்டான ஈர்ப்புக்குத் தான் அழைத்துச் செல்லும். உயிருடைய வேலை அது தான்.

ஆகவே நமது வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மை பெற முடியும்

பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மை பெற முடியும்

 

அகஸ்தியன் தன் வாழ்நாளில் தாய் கருவிலே வளரும் பொழுதே நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பெற்று… பிறந்து வளரும் பொழுது அதே ஆற்றலை வளர்த்து அவன் வாழ்நாளில் அனைத்து அறிவினையும் அறிந்திடும் உணர்வு பெற்றவன்.

1.அகஸ்தியன் அவனது வாழ்க்கையில் சர்வ ஞானமும் பெற்று
2.அதன் வழி கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் துருவனாகி துருவ மகரிஷியான அந்த உணர்வுகள் அனைத்தும் எதை உற்று நோக்கியதோ
3.அந்த உணர்வின் துணை கொண்டு அங்கே நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்த்தும் வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் உணர்வுகளை நுகர்ந்தவர்கள் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

நாம் நமது வாழ்க்கையில் இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த உணர்வுகள் நம் உடலில் கலந்து இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உடலுக்குள் செலுத்தி அந்த நஞ்சான உணர்வை மாற்றி
2.அனைத்தையும் அறிந்திடும் அறிவென்ற உணர்வினை நமக்குள் வளர்த்து
3.இந்த வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வந்தாலும் அதனைச் சமப்படுத்தி
4.நமது உடலில் ஒளி உணர்வைக் கூட்டும் சக்தி பெறச் செய்யும் நிலையே நாம் எடுக்கும் தியானம்.

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் சக்திகள்… ஒரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறையாக மோதும் பொழுது தான் மின்னல்கள் வருகின்றது.

இந்த மின்னல் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த மின் அலைகள் வெகு தூரம் பரவுகின்றது.
1.அப்படி வரக்கூடிய உணர்வுகளை அகஸ்தியன் நுகர்ந்தறிந்து தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஒளிமயமாக ஆக்கிக் கொண்டான்.
2.அதன் வழி தான் விண்ணுலகை உற்று நோக்கி உணர்வை ஒளியாக மாற்றி
3.துருவத்தின் வழி வரும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது.

அந்த உணர்வை நமக்குள் பெற்றால் இந்த 27 நட்சத்திரங்களும் எதிர்நிலை கொண்டு அது மின்னலாக மாறும்பொழுது ஒளிக் கற்றைகள் பரவுவதை…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் இருப்பதனால்
2.அதை எளிதில் நம் உடலுக்குள் கலந்து எல்லா அணுக்களுக்கும் அதைக் கொடுக்க முடிகின்றது.

உதாரணமாக… வேதனைப்பட்ட ஒரு மனிதனின் உணர்வை நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தால் அவன் நினைவு வரும் பொழுதெல்லாம் அதே வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இதைப் போன்று 27 நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்திற்குப் பல உணர்வுகளை இயக்கக்கூடிய சக்தி பெற்றது. 27 நட்சத்திரங்களின் இணை சேர்த்த உணர்வு கொண்டுதான் ஒவ்வொரு உயிரும் அந்த உணர்வினை அணுக்களுக்குள் சேர்த்தது தான் அணுத் துகள்களும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு நமது வாழ்நாளில் அதைத் தியானித்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த வலுவை நமக்குள் பெற்ற பின்
1.உடலை விட்டுச் சென்றால் அங்கே அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் நமது உயிரான்மா நிலைகொள்ளும்.
2.உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விட்டு என்றும் நிலையான சரீரமாக முழுமை பெறும்.

இந்தச் சூரிய குடும்பமே… சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் அனைத்தும் என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு வேகா நிலை அடைந்தது.

1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றி அகண்ட பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உணர்வின் சக்தி வருகின்றது
2.சூரியன் அழிந்து விட்டால் அதனின் பிடிப்பை அறுத்து ஏகாந்த நிலை கொண்டு
3.எதனையும் இருந்த இடத்திலிருந்து கவர்வதும் பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மையும் பெற முடியும்.

இப்படிப்பட்ட சூரியக் குடும்பங்கள் பேரண்டத்தில் எண்ணிலடங்காது உண்டு.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்

 

பிறருடன் பற்று கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஆனால் அவருடைய சந்தர்ப்பம் நோயாகி விட்டால் அதை நாம் நுகர்ந்து நமக்குள் ஜீவன் கொடுக்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அருள் வழியைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் யாருடன் அவ்வாறு பழகினோமோ வாழ்க்கையில் அவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் சும்மா இருக்க முடியுமா…? மாமனாரோ மாமியாரோ உடல் சரியில்லை என்றால் சும்மா இருக்க முடியுமா…?
1.அந்த உணர்வை நுகர்ந்தே அறிய வேண்டியதிருக்கும்.
2.உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் துடைப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

துயரமான நிலைகளைக் கேட்க நேர்ந்தால்
1.அந்தக் கணத்திலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.அப்போதே அந்த உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று தீமை புகாதபடி செயல்படுத்த வேண்டும்.

இதைத்தான் வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் மடி மீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று சொல்வது.

ஆகவே ஞானிகள் கூறியபடி நினைவை விண்ணிலே செலுத்தி மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவன் மனிதனில் தீமைகளை எல்லாம் வென்ற அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைத் தான் பின் வந்தோர் கவர்ந்து
2.நாமெல்லாம் இந்த நிலைகளை அறியும்படி செய்கின்றார்கள் சப்தரிஷிகள்
3.சப்தரிஷி மண்டலங்களாக அவர்கள் வாழ்கின்றார்கள்.

அதையெல்லாம் உணர்த்தும் நிலை தான் விநாயகர் தத்துவம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மனதில் பதிவாக்கி நினைவை உயிருடன் ஒன்றிப் புருவ மத்தியிலே வைத்து நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிரான ஈசன் அவன் உருவாக்குகின்றான். கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி ஏங்கித் தியானத்தில் வேண்டும்.

வட மேற்காகத்தான் விநாயகரை வைத்திருப்பார்கள் வடகிழக்காக நாம் அங்கே பார்க்கின்றோம்.
1.வட கிழக்காக நாம் நினைவைச் செலுத்தினால்…
2.துருவ நட்சத்திரத்தின் எல்லை அந்தத் திசையில் இருப்பதால்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியினை அந்த பாதையில் பூமி கவர்ந்து வரும் நிலையில் நாம் நுகர்ந்து
4.நமக்குள் இந்த உணர்வினை பதிந்து உடல் உள்ள தீமைகளை அகற்றும் அந்த நிலையை நமக்குள் உருவாக்குகின்றார்கள் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பதிவாக்கி… உடலுக்குள் செலுத்தும் படி செய்கின்றார்கள்.

கண்ணிலே உற்று நோக்கி துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது
1.அதே உணர்வின் தன்மையைப் புருவ மத்தியில் எண்ணி கண்ணின் நினைவை மீண்டும் உடலுக்குள் செலுத்தி
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அதைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஊட்டுதல் வேண்டும்.

கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று இதைத் தெளிவாக்குகின்றார்கள்.

இதையெல்லாம் ஒரு பழக்கமாக நாம் வைத்து அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்கும்படி
2.நாம் ஒரு பயிற்சியாக செயல்படுத்திக் கொள்தல் வேண்டும்.

துருவ நட்சத்திர முகப்பு எல்லையில் நாம் இருக்கின்றோம்…!

துருவ நட்சத்திர முகப்பு எல்லையில் நாம் இருக்கின்றோம்…!

 

விநாயகர் பக்கம் அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் வைத்துள்ளார்கள். அரச மரம் என்பது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரம் ஆனது… “அது அரசு…”

இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் அனைத்தையும் ஒளிச்சுடராக மாற்றி எத்தகைய இருளையும் வெல்லும் வல்லமை பெற்றது.
1.அதனை எந்த விஷமும் தாக்காது
2.அப்படித் தாக்கினால் அந்த விஷம் அதற்குள் ஒளியாக மாறும்.

விஷத்தின் தாக்குதலால் தான் சூரியனும் ஒளியாகின்றது விஷத்தின் தாக்குதலால் தான் உயிரும் துடிப்பாகின்றது… வெப்பமாகின்றது… உணர்வின் அறிவாக இயக்குகின்றது.

விஷம் இல்லை என்றால் இயக்கம் எதிலும் இல்லை. விஷம் இல்லை என்றால் ஒரு பொருளின் தன்மை உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டாது.

வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால்… விஷம் அதிகரித்தால் மனிதனை நினைவிழக்கச் செய்கின்றது. ஆக… உணர்வின் தன்மை எதைப் பகுந்து எடுக்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாக நமது உயிர் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்கினர் ஞானிகள்.

நீர் நிலை இருக்கும் பக்கம் வட மேற்காக விநாயகரை வைத்து வட கிழக்காக வணங்கும்படி செய்கின்றார்கள் காலையில் நான்கிலிருந்து ஆறுக்குள் உடல் அழுக்கைப் போக்கிவிட்டு
1.ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அந்தச் சக்தியைப் பெறும்படி செய்கின்றார்கள்.
2.துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அதிகாலை உதயமாகும் சூரியன் கவர்கிறது.
3.காரணம் அதனுடைய கதிரியக்கங்கள் அதிலே படுகின்றது
4.அப்போது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக இந்தப் பிரபஞ்சத்திற்குள் சுழலச் செய்கின்றது.
5.நாம் துருவத்தின் அதாவது துருவ நட்சத்திரத்தின் முகப்பு எல்லையில் இருப்பதால்
5.நமது பூமி கவரும் பொழுது துருவத்தின் வழியாக முதலில் நம்மிடம் கவர்ந்து வருகின்றது.
6.மனிதனாகத் தோன்றி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த உணர்வுகள் பூமிக்குள் படர்ந்துள்ளது… பிரபஞ்சத்திலும் பரவி உள்ளது.

அதனை நுகரும் பருவம்… மனிதன் தன் எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்து அந்த உணர்வைப் பெறும் தகுதி ஏற்படுத்தும் நிலையாக… தீவினைகளை அகற்றும் அந்த வினையை நமக்குள் வினைக்கு நாயகனாக “கணங்களுக்கு அதிபதியாக்கும் முறையை” நமக்குத் தெளிவாக்கினார்கள்.

அதனை நாம் பின்பற்றினால் அருள் ஒளி பெறலாம் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றலாம்
1.அகஸ்தியன் கண்ட பாதையில் பேரருள் பேரொளி என்ற நிலையில் இங்கே வாழலாம்… பேரொளியாக மாற்றும் தன்மையும் பெறுகின்றோம்.
2.அதனைப் பெறச் செய்வதற்குத் தான் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதை நுகரும்படி நமக்கு வழிப்படுத்தினார்கள் அன்றைய ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேராற்றல்

துருவ நட்சத்திரத்தின் பேராற்றல்

 

நாம் யாரும் தவறு செய்யவில்லை…! அன்பு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டு தான் வாழ்கின்றோம். பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து விடுகின்றோம்
1.நம் உயிரிலே தான் படுகின்றது
2.அதன் உணர்வுகள் நமக்குள் கருவாகின்றது இந்திரலோகமாக மாறுகின்றது
3.கருவாகிப் பின் உருவாகி விடுகின்றது.

பிறிதொரு மனித உடலில் விளைந்த தீமையின் உணர்வுகள் அந்த விஷத்தன்மை நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும் ஊடுருவி அதை கருவாக்கி அணுக்கள் மாற்றமாகும் தன்மைக்கே வருகின்றது.

இதை நல்ல முறையில் மாற்றிக் கொள்வதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

இது போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் துருவன்… அவன் துருவ மகரிஷியாக ஆனான்… துருவ நட்சத்திரமாக ஆனான். அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் இன்றும் என்றும் வந்து கொண்டே உள்ளது.

உயிர் தோன்றி மனித உணர்வின் தன்மை பெருக்கிய பின் இன்றும் அகஸ்தியன் ஒளியின் சரீரமாக இருக்கின்றான்.
1.அதைக் கவர்ந்து தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் இந்த இருளை அகற்றி
2.உடலுக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றது.

இன்று விஞ்ஞானி பல உணர்வுகளைச் சேர்த்து பல ஆயிரம் ஆண்டு காலம் வாழலாம் என்று சொல்கின்றான்.
1.ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியோ என்றும் ஏகாந்தமாக பல கோடி ஆண்டுகள் வாழும் நிலை
2.இந்தச் சூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.அகண்ட அண்டத்திலிருந்து வரும் தூசுகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம் மனிதனான நாம்.

எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கியவன் அகஸ்தியன். அவன் எந்தத் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு ஒவ்வொரு பொருளின் தன்மையையும் மாற்றி செயல்படுகின்றான்.

எப்படி…?

இன்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது உணர்வின் அதிர்வுகளை வைத்து எதன் அதிர்வோ அதை மாற்றி அமைக்கும் பல நிலைகள் கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.

ஒரு பாஷையில் எழுதினால்
1.அதில் எலக்ட்ரான் என்ற மோதலுக்கொப்ப உணர்வின் அறிவாக எழுத்தின் ரூபத்தைக் கொடுத்து
2.ஒரே நிலையில் ஒரே அழுத்தத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் போன்ற உலகில் உள்ள நூறு பாஷைகளை மொழிபெயர்ப்பு செய்கின்றான்…
3.உருவத்தின் அமைப்பையும் கொடுக்கின்றான் அதிர்வின் நிலைகள் கொண்டு.

இதெல்லாம் நாம் இன்று பார்க்கின்றோம் அல்லவா…!

எதன் உணர்வின் விஷத்தன்மை கலக்கின்றானோ இந்த உணர்வுக்கொப்ப இணைத்தால் “இது இன்ன ரூபமாகும்…” என்று ஒரு நொடியில் செய்து விடுகின்றான்.

நாம் படித்து அர்த்தம் கண்டு பல நிலைகள் எழுத்து வடிவிற்குக் கொண்டு வருவதற்கு முன் “ஒரு நொடிக்குள் நூறு உணர்வை மாற்றிக்கொண்டு வருகின்றான் விஞ்ஞானி…”

அதைப் போன்று
1.ஒரு நொடிக்குள் அருள் உணர்வின் தன்மை பெற்று
2.தனக்குள் வருவதை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
3.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றார்கள்.

மனிதனானவன் தன் இனத்தின் தன்மை கொண்டு வாழப் படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று அங்கே செல்ல முடியு,

நம் தாய் தந்தை முன்னோர்கள்… குல வழியில் வந்தவர்கள்… அவர்கள் இதற்கு முன் விண் செல்லத் தவறினார்கள்.
1.இப்போது நாம் அதைப் பெற்ற பின் அவர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்
2.அவர்கள் இன்னொரு உடலில் இருந்தாலும் கூட அதிலிருந்து வெளிவந்த பின்
3.நாம் எடுத்துப் பாய்ச்சிய உணர்வு கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் பெருக்கிப் பெருக்கி உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களை எளிதில் வின் செலுத்த முடியும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழச் செய்ய முடியும்… பிறவி இல்லாத நிலை அடையச் செய்ய முடியும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எளிதில் பெறுவீர்கள்

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எளிதில் பெறுவீர்கள்

 

எப்பொழுது துன்பம் என்று காணுகின்றோமோ ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் உடலுக்குள் சேர்த்து இருளை நீக்கி வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் அது வலுவாகி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று அடைகின்றோம்.
1.இதைத்தான் குருநாதர் எமக்குக் காட்டினார்… அதைத்தான் உங்களுக்கும் சொல்கின்றேன்.
2.உங்களால் உங்களால் முடியும். எப்படிச் சாத்தியமாக முடியும்…? என்று எண்ணாதீர்கள்.
3.அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் பேரின்பப் பெரு வாழ்வாக நீங்கள் பெற முடியும்.

தீமை என்று உணர்வைக் கேட்டறிந்தாலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை உடனுக்குடன் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

யார் வெறுப்படைந்தனரோ அவருக்கும்… அதாவது அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் பரிசுத்தமாக்கும் உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால் போதுமானது. “அவர் வேண்டாதவர்” என்ற எண்ணங்கள் வராது அடுத்து.

காரணம் அந்த உயிர் அவரை ஆளுகின்றது. ஈசன் ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தினால் நமது ஆலயம்… நம் உடலும் தூய்மையாகின்றது.

இப்படி நாம் எண்ணும் உணர்வு எதுவோ அதுவே அரங்கநாதன் இந்த உணர்வின் சக்தியாக நம்மை அருள் வழியில் இயக்கும்.
1.அதையே நமது உயிர் ஆளும் ஆண்டவனாக.
2.ஆகவே… அனைவரும் ஆண்டவனின் பிள்ளைகள் தான்.
3.அவன் ஆண்டு கொண்டிருக்கும் உடல்தான் ஆலயம்.

இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! உயிரால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் இது.

பல கோடிச் சரீரங்களில் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம். இன்று மனிதனான பின் இயற்கையில் விளைந்ததை வேக வைத்துச் சுவை மிக்க உணர்வுகளைப் படைத்துச் சாப்பிடும் மனித உடலைப் பெற்றுள்ளோம்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறத் தொடர்ந்து உங்களுக்கு உபதேசம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன். இவை எல்லாம் அருள் ஞானிகள் கண்ட பேருண்மைகள்.

1.ஞான வித்தை ஊன்றியுள்ளோம்… தியானத்தின் மூலம் அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களுக்குள் உரமாக்கிக் கொள்ளுங்கள்.
3.உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் அந்த சக்தியைப் பெறச் செய்யுங்கள்.
4.மெய் வழியில் செல்லும் அருள் பாதையை அது வகுத்துக் கொடுக்கும்.

மெய் வழி வாழ்வோம்… அருள் வழி வாழ்வோம்…!

நாரதன் கலகப்பிரியன்… கலகமோ நன்மையில் தான் முடியும்

நாரதன் கலகப்பிரியன்… கலகமோ நன்மையில் தான் முடியும்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி… ரிஷி என்று சிருஷ்டித்துக் கொண்ட உணர்வாக… துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வைத்தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அதைத் தான் ரிஷியின் மகன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வார்கள்.

1.அதை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து…
2.யார் தீங்கு செய்கின்றார்களோ அவர் உடலில் அது படர வேண்டும் அவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நமக்குள் எடுத்தால்
5.பையன் மீது பிடிவாதமாக இருக்கும் உணர்வுகளை மாற்றி அவன் மீது இருக்கும் வெறுப்பினை மாற்றி அமைக்கின்றது.

நாரதன் கலகப் பிரியன்… ஆனால் கலகமோ நன்மையில் முடியும்.

நாம் பிடிவாதமாக இருக்கின்றோம். மற்றவரிடத்தில் எல்லாம் என்ன சொல்வோம்…? என் பையன் சேட்டை செய்து கொண்டேயிருக்கிறான் என்போம்.

அவன் நல்லது தானே செய்கிறான் என்பார்கள்.

நீங்கள் ஒரு பக்கத்திலே…! அவன் செய்யும் குறும்புத்தனம் இன்னது தான் என்று சொல்ல முடியாது. எப்போது பார்த்தாலும் வம்பு இழுத்துக் கொண்டே வருவான் என்று நாம் பிடிவாதமாக இருப்போம்.

அப்போது அந்த அருள் உணர்வை எடுத்துக் கொண்டால் நாரதனாகி கலகப் பிரியனாக இருந்து செயல்படும்.
1.என் பையன் நல்ல நிலையில் வர வேண்டும் எல்லோரும் போற்றும் நிலையாக அவன் வரவேண்டும்…
2.நல்ல உணர்வுகளைச் சிந்திக்கும் திறன் வேண்டும் என்று அதிகாலையில் அந்தச் சக்தியை எடுத்து
3.பையனுடைய தீமை செய்யும் உணர்வுகளை அடக்கும்படி செயல்படுத்தும்.

அடக்கி அவன் நல்ல நிலையில் வர வேண்டும் எண்ணினால் அவன் மீது அந்த வெறுப்பு வராது. இப்படிப் பாய்ச்சப்படும் போது நம்முடைய பிடிவாத குணத்தை நீக்கி விடுகின்றது. நமக்கு நன்மை ஏற்படுகிறது.

நாம் எடுத்துக் கொண்ட அந்த அருள் ஒளியின் உணர்வு குருக்ஷேத்திரப் போராகி இரண்டுக்கும் போர் வரப்படும் போது தீமை என்ற உணர்வினை அடக்கும் தன்மை வருகிறது… பையனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

உதாரணமாக நண்பன் நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கலாகிறது… துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது.

அதே போல் “பாசத்தால்” தாய் பையனை எண்ணி…
1.அவன் சுட்டித்தனம் செய்கின்றான் என்று எண்ணினால்
2.அவனைச் சிந்தனை செய்ய விடாதபடி மீண்டும் குற்றவாளியாகத் தான் ஆக்க முடியும்…
3.அவனை நல்லவனாக மாற்ற முடியாது.

ஆகவே அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தீமையை மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவன் எல்லோரும் போற்றும் தன்மைக்கு வர வேண்டும் என அடிக்கடி சொல்ல வேண்டும்.

இந்த உணர்வு உங்கள் உடலிலே படரும் போது உங்களுடைய பார்வை அவன் திருந்த வேண்டும் என்று செயல்படுகின்றது அதற்குத் தகுந்த சொல்லும் வருகின்றது. அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அவனை மாற்றும் நிலைகளாக வரும்.

இப்படித்தான் அவனை மாற்ற வேண்டும்.

இந்தப் பக்குவ நிலை பெறுவதற்குத் தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி எடுக்கும்படி சொல்லி அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று யாம் உபதேசிப்பது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இடமறித்து அதன் சக்திகளைப் பெறுதல் வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இடமறித்து அதன் சக்திகளைப் பெறுதல் வேண்டும்

 

நமது நாட்டில் முதன் முதலில் தோன்றிய மனிதன் அகஸ்தியன் அண்டத்தின் உணர்வினைப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) இயக்கத்தின் உணர்வை அறிந்துணர்ந்தவன்.
1.அகஸ்தியன் கண்டறிந்த உணர்வின் வழிப்படி
2.பின் வந்த ஞானிகளும் மகரிஷிகளும் அதைத் தொடர்ந்து வழி நடத்தி வந்தனர்.

ஆனால் கால வெள்ளத்தால் அரசர்கள் மதம் இனம் மொழி என்ற நிலைகளில் அவரவர்களுக்கொப்ப மதங்களை வகுத்து… அதற்குச் சட்டங்களை இயற்றி அதன் வழியில் பல விதமான மதங்களையும் இனங்களையும் உருவாக்கி விட்டார்கள்.

அதன் வழி தான் இப்பொழுது நாமும் அரசர்கள் காட்டிய வழியில் வழி நடத்தி வருகின்றோம். ஞானிகளும் மகரிஷிகளும் கூறிய இந்த உணர்வுள் கால வெள்ளத்தால் மறைந்தே போய் விட்டது.

அரசர்களின் ஆசையின் நிமித்தம் போர் முறைகள் ஏற்படப்பட்டு மதங்களை உருவாக்கி மதத்திற்கு மதம் என்ற போர்முறையை வைத்து மதத்திற்குள் இனம் என்று இனத்தின் நிலைகள் கொண்டு போர்முறையாகி “மகரிஷிகள் காட்டிய அருள் வழிகள் முழுமையாக மறைந்து விட்டது என்றே சொல்லலாம்…”

ஆனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாமும் ஒரு மதம் தான்…!
1.பிறவா நிலை என்ற (மதம்)… இந்த உலகப் பற்றை விட்டு
2.இந்த உடலின் பற்றை விட்டு… உயிரின் பற்றுடன் சென்றவர்கள் ஞானிகள்
3.மனிதர்களான நாம் உடல் பற்று… உயிரின் இயக்கம்…! எண்ணத்தை உயிரில் உணர்வாக இழுக்கப்பட்டு “உடலின் சேர்க்கை…”

ஆனால் “உயிர் ஒளியால் உணரப்பட்ட…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றப்படும் பொழுது
1.அதாவது “உயிருடன் ஒன்றிய சேர்க்கை… ஒளி…!”
2.அவ்வாறு ஓளியாக ஆனவர்கள் மகரிஷிகள்

அப்படி மகரிஷிகளான நிலைகளில் நமது குருநாதர் காட்டிய நெறியைப் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் விண்ணுலக ஆற்றல் மண்ணுலகில் வந்து… மனிதனான பின் அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கண்டான்.
1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்
2.நான் (ஞானகுரு) உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.

அணுவின் ஆற்றலைத் தனக்குள் உணர்ந்து அணுவின் வளர்ச்சியின் தன்மையும் உணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதை வலு சேர்க்கின்றார் அகஸ்தியர்.

நமது பூமி விண்ணிலிருந்து வருவதைத் தனக்குள் ஈர்க்கும் போது அதை இடைமறித்து அந்த உணர்வை நுகர்ந்து அதனின் வலுவை பெறுகின்றான் அகஸ்தியன்.
1.அதனால்தான் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைக் கொஞ்சம் உங்களை இடைமறிக்கும்படி சொல்லி
2.அதனின் ஆற்றலை உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.

அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்

அகஸ்தியன் மின்னலை நுகர்ந்தான்… துருவ நட்சத்திரமாக ஆனான்

 

அகஸ்தியன் தன் தாய் கருவிலேயே விஷத்தை வெல்லும் சக்தி பெற்றான். பிறந்தபின் அவனை மற்ற மிருகங்கள் பாம்புகளோ நுகர்ந்தால்
1.அதனுடைய விஷத்தன்மைகள் இவனுக்கு முன் ஒடுங்கி விடுகின்றது.
2.விஷத்தன்மைகள் அங்கே ஒடுங்கும் பொழுது இவனுக்குள் சிந்திக்கும் ஆற்றல் பெருகுகின்றது.

விஷத்தை ஒடுக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் அந்தச் சக்தி இருப்பதனால் மின்னல் வெளிப்படும் பொழுது அதில் விஷத்தன்மை அதிகம் உண்டு
1.அதனையும் நுகர்ந்து அவனுக்குள் அடக்கும் சக்தி வருகின்றது.
2.மின்னலின் ஒளிக் கற்றைகள் எவ்வளவு வீரியமாக இருக்கின்றதோ அதை நுகர்ந்தறிந்து
3.வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி ஒளியாக மாற்றிடும் உணர்வின் அணுக்களாக அவனில் பெருகுகின்றது.
4.மின்னல் தாக்கும் பொழுது அந்த ஒளிக் கற்றைகள் எவ்வளவு தூரம் விரிவடைகின்றதோ
5.அதைப்போல் அவன் எண்ணங்கள் வெகு தூரம் ஊடுருவி இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வாக அறியும் தன்மை பெறுகின்றான்,
6.வான் வீதியின் ஆற்றலையும் மின்னல்களையும் தனக்குள் ஒளிக்கற்றைகளாக மாற்றிக் கொண்டான்
7.அவன் உடலில் உயிரைப் போன்று உணர்வுகள் ஒளியானது.

திருமணமான பின் கணவன் மனைவியாக இணைந்து உயிரும் ஒன்றி துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

அவர்கள் பெற்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் நம் வாழ்க்கையில் வரும் இருளை வென்று… பேரருளை இயக்கச் சக்தியாக மாற்றி ஒளி என்ற உணர்வுடன் வாழ்ந்து… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை நாமும் பெற முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர
2.நமது உடலில் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் உயிரை ஒத்த ஒளியாக மாற்றி
3.அந்த உணர்வின் துணை கொண்டு உடலை விட்டுச் சென்றால் நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட்டு
4.நஞ்சை வென்ற உணர்வாக வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் உணவாக எடுத்து
5.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

நம் உடலில் சிருஷ்டித்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இதே உடலை ஒளியாக மாற்றுகின்றது இதற்குப் பின் இன்னொரு உடல் இல்லை.

ஒளியின் சிகரமாகும் போது இருளை மாற்றிப் பேரின்ப நிலை என்று பேரானந்த நிலையாக… ஏகாந்த நிலையாக ஏகாதசி… பத்தாவது நிலையான கல்கி என்ற நிலை அடைய முடியும்.

அந்த மார்க்கத்தைத் தான் நமது ஞானிகள் காட்டினார்கள்.

1.இந்த உண்மையினை நமது குரு அறிந்தார் அதனின் வழியை எனக்கு வழி மொழிந்தார்.
2.அதன் வழி வாழ்க்கையில் நான் பின்பற்றி நடந்தேன்…. காடு மேடெல்லாம் அலைந்தேன்.

மிருகங்கள் எப்படி வாழ்கின்றது தாவரங்கள் எப்படி உருவாகின்றது இதனை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களின் உடல்கள் எப்படி மாறுகின்றது என்று குருநாதர் எம்மை அறியச் செய்தார்.

அதைத் தான் உங்களுக்கு இப்போது உபதேசிக்கின்றேன். இதை நீங்கள் பதிவு செய்து… மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… இருளை அகற்றி நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.

1.இந்த உடலில் வாழும் காலத்திலேயே அதிகமாக இதைப் பெருக்கி
2.உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டால் என்றும் நிலையான ஒளிச் சரீரம் சரித்திரம் பெற முடியும்.

மனிதனுடைய கடைசி எல்லை இதுதான்.