ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்

ஒலி நாடாக்கள் மூலம் யாம் (ஞானகுரு) உபதேசித்து வெளிப்படுத்திய கருத்துக்களின்படி நீங்கள் தியானியுங்கள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகள் உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதால் “அவர்கள் பெற வேண்டும்” என்று நாம் எண்ணும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கும் அது கிடைக்கின்றது. நமக்குள் அகந்தை என்ற உணர்வு செயல்படாது ஒடுங்குகின்றது.

அன்று துருவன் (அகஸ்தியன்) காட்டிற்குள் செல்லப்படும் பொழுது துஷ்ட மிருகங்கள் மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை கொண்டு வந்தாலும்…
1.அவன் உடலில் இருந்து வெளிப்படும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் அதை ஒடுங்கச் செய்வது போன்று
2.விஷமான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்து… மற்றொன்றைக் கொன்று புசிக்கும் கடும் நோயாக உருவாக்கும் அந்த உணர்வுகளை
3.நாம் அந்த துருவ மகரிஷிகளின் அருள் ஒளியின் உணர்வைச் சேர்த்து அந்த உணர்வுகளை ஒடுங்கச் செய்ய வேண்டும்.
4.ஆக அதை நுகர்கின்றோம்…! இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைகின்றது.
5.அந்த அணுக்களின் பெருக்கங்களைக் கொண்டு வரும்போது கணங்களுக்கு அதிபதி ஆகிப் பிறவியில்லாப் பெரு நிலை அடைய செய்யும்

“பிரம்மாவைச் சிறை பிடித்தான்…” என்ற நிலையில் அந்த அருள் ஒளியைத் தான் நாம் பெறச் செய்ய வேண்டும்.

ஒருவனை அடிமையாக்க வேண்டும் என்று அகம் கொண்டு… துர்மார்க்க வழியில் அடித்து அவனைக் கைவல்யப்படுத்தி இன்னொருவர் மீது பாய்ச்சி அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் தான் இன்றைய உலகில் வந்து கொண்டிருக்கின்றது.

கடந்த கால நிலைகளில் மந்திர ஒலிகள் கொண்டிருந்தாலும்… உலோக உணர்வுகளை அறியச் செய்தாலும் அதனின் வளர்ச்சியில் அணுக் கதிரியக்கங்களையும் கண்டு கொண்ட பின் “இன்று மீண்டும்” ஆவியின் நிலைகளே தொடர்பு கொள்கின்றது.

அரச உணர்வு பெற்று விஞ்ஞான அறிவு கொண்டாலும் பேயாசை கொண்டு ராட்சச உணர்வு கொண்டு… மனிதன் தான் பெற வேண்டும் என்ற கௌரவ உணர்வு கொண்டு “நான்” என்ற நிலை உருவாக்கப்பட்டு அழித்திடும் உணர்வாகப் பெருகி… மனிதனே அசுரனாக மாறிடும் நிலையாக ஒருவரை ஒருவர் கொன்று புசித்து… அதை ரசித்திடும் நிலைகள் தான் இன்றைய உலகில் பெருகிக் கொண்டுள்ளது.

இது போன்ற உணர்வுகள் நமக்குள் சேர்ந்தாலும் “நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை அடக்கிடல் வேண்டும்…”

நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வைப் பெருக்கி… நம் மூச்சும் பேச்சும் உலக மக்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் அதில் அமிழ்ந்திருக்கும் அத்தகைய நிலையில் இருந்து அவர்களை விடுபடச் செய்யும் அருள் சக்தியைப் பெற நாம் தியானிப்போம்.

அனைவருடைய நிலைகளிலும் இருள் நீங்கி… மெய்ப் பொருள் என்ற தேவாதி தேவர்கள் என்ற மனித உரு பெற்ற நிலையினை… அருள் ஒளியின் உணர்வாக மாற்றிடும் நிலைபெறச் செய்வோம்… அருள் ஒளிச் சுடராகப் பெருக்குவோம்.

1.யாம் (ஞானகுரு) உபதேசித்த ஒலி நாடாக்களை ஆங்காங்கே வெளிப்படுத்தி
2.அதன் வழி நீங்கள் தியானியுங்கள்… உங்களுக்குள் இதை மனப்பாடமும் செய்து கொள்ளுங்கள்.
3..உபதேச ஒலி நாடாக்களைப் போட்டு அடிக்கடி அதைக் கேட்டுப் பதிவாக்குங்கள்… அனைவரையும் கேட்கச் செய்யுங்கள்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகளை உந்தச் செய்து நினைவை விண்ணிலே செலுத்தி
5.அருள் ஒளியின் உணர்வை உருவாக்கும் உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யுங்கள்.

அறியாது ஆட்டிப் படைக்கும் அசுர உணர்வுகளிலிருந்து உலக மக்களை மீளச் செய்யுங்கள்… அருள் ஞான சக்தியை ஊட்டச் செய்யுங்கள்.

தேவாதி தேவர் என்ற சர்வ வல்லமை பெற்ற அவர்கள் உடலில் நன்மையை ஊட்டும் அருள் ஒளியின் உணர்வை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கச் செய்யுங்கள்.

ஆகவே குறுகிய காலமே இந்த உடலில் வாழும் நாம் அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்திடல் வேண்டும்.
1.மற்றவரிடத்திலிருந்து வரும் தீமைகளை நுகர்ந்தாலும் அதை நாம் அருள் ஒளியாக மாற்றிடும் உணர்வாகப் பெற முடியும்
2.அருள் வழி வாழ்வோம் அனைவரும் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

 

கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே…
2.ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
3.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்ணத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றிவிட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது…”

“சாந்தமான நிலை பெற” ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான்… நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

தியானத்தில் நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலை”

தியானத்தில் நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலை”

 

எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.

இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.

காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.

மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.

நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.

காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.

எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.

இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.

1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)

இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.

இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.

ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.

அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?

ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.

ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்…
1.மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே…
2.தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.

தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.

ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளை படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.

உதயம்

உதயம்

 

உயிரின் உண்மை நிலை எங்கிருக்கின்றது…? உயிரின் துடிப்பு துடிப்பதற்குச் சுவாச நிலை வேண்டுமப்பா. உயிர் எப்படிச் சுவாச நிலையில் உள்ளதோ அந்தத் தன்மைதான் இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களும்.
1.”நட்ட கல் பேசுமோ.. நாதன் உள் இருக்கையில்…!” என்று படித்திருந்தாலும்
2.அக்கல்லுக்கும் மண்ணிற்கும் உயிர்த் துடிப்பு உள்ளது.

எப்படி மனிதன் சுவாசத்தில் உயிர்த் துடிப்பு உள்ளதோ அதுபோல்தான் மண்ணிற்கும் கல்லிற்கும் மடுவிற்கும் மலைக்கும் பூமியில் இருந்து எடுத்திடும் திரவத் தன்மையில் உள்ள நீர் மற்ற திரவங்களுக்கும் உலோகங்களுக்கும் எல்லா இயற்கைத் தன்மையுள்ள மரம் செடி ஜீவராசிகள் எல்லாவற்றுக்குமே உயிர்த் துடிப்பு உள்ளதப்பா.

அடுப்பு எரிந்து ஆவி செல்லும் பொழுது அந்நிலையிலும் உயிர்த் துடிப்பு உள்ளதப்பா. உயிர்த் துடிப்பு என்பது ஜீவ அணுக்கள்தான்.
1.அவ்வணுக்களின் தன்மையிலே சூரியனின் ஒளியை ஈர்த்து
2.இயற்கைத் தன்மையினால் வந்த எல்லாமே
3.மனிதன் எப்படிச் சுவாச நிலையை இழுத்து விடுகின்றானோ
4.அந்நிலையில்தான் எல்லாமே சுவாச நிலையில் உள்ளதப்பா.

உலோகங்களின் தன்மையெல்லாம் எந்நிலையில் வந்ததப்பா…?

மண்ணில் இருந்து காந்தத்தையும் செம்பு வெள்ளி என்ற பதம் பிரித்தும் நிலக்கரியையும் எப்படி எடுக்கின்றான்..? நிலக்கரிக்கு இவன் சொல்லும் காரணங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலத்துடன் படிந்த (மடிந்த) மரங்கள்தான் நிலக்கரி ஆகிவிட்டது என்று.

அந்த நிலை இல்லையப்பா…!

அந்நிலையில் உள்ள மண்ணின் உயிரணுவின் ஈர்ப்புத் தன்மையினால் அச்சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மண்ணில் தாக்கும் பொழுது அந்நிலையில் உள்ள உயிரணுக்களை அம்மண் ஈர்க்கின்றது.

பல கோடி ஆண்டுகளாக ஈர்த்ததன் விளைவால் நிலக்கரிப் படிவங்கள் அந்நிலையில் உள்ளதப்பா. அப்படிவங்கள் தன்மையில் இயற்கை அப்படியே இருந்து விட்டால் அந்நிலையில் அப்படியே இருந்தால்
1.அந்நிலையில் வளரும் மண் வளங்கள் தாவரங்களின் நிலையில் பெரும் பூரிப்பை அடைந்திருக்கலாம்.
2.அங்கே வளரும் பயிர்கள் பெரும் அமிழ்தமாக இருந்திருக்கும்.

இயற்கையின் தன்மையை உணர்ந்திடாமல் இச்செயற்கை ஆவலின் உந்தலில் மனிதன் வைத்த வினையப்பா… “சுரங்கம் வெட்டுவதெல்லாம்…!”

உன் அறிவிற்கே விடுகின்றேன். இப்பொழுது நிலக்கரி எடுக்கும் இடத்தில் எல்லாம் தாவரங்கள் நிலை அன்று எப்படி இருந்தது…? என்று எண்ணிப்பார்…! நெய்வேலியில் விளைந்த பழங்கள் பலா முந்திரி ருசியின் தன்மை அன்று எப்படி இருந்தது…! இன்று எப்படி உள்ளது…?

சோலைவனத்தை அழிக்கின்றான். பூமியில் உள்ள உலோகத்தை எல்லாம் தோண்டி எடுக்கின்றான்.
1.அவ்வுலோகத்தின் தன்மையிலே மின்சாரம் எடுத்து பூமியைச் சோலையாக்குகின்றானாம்.
2.சுற்றுகின்றான் பார்த்தாயா…… உலகம் போலவே மனிதனும்…!

உலோகத் தன்மையெல்லாம் அந்தந்த இடத்திற்குத் தகுந்த மண் சுவையில் படிவதுதான். தங்கச் சுரங்கம் என்கிறான்.
1.அந்தத் தங்கச் சுரங்கம் உள்ள பூமியில் வளரும் பயிர் அதனுடைய ருசியில்தான் இருந்திடும்.
2.இப்பூமியின் தன்மையிலே இம்மனிதனுக்கு அறிவில் வராத பொக்கிஷங்கள் பல உள்ளன.
3.அப்படிவங்கள் உள்ள நிலையில் தான் அந்நிலையில் வளரும் பயிர்களும் அதனுடைய ருசியும்…! சொல்வது அர்த்தமாகின்றதா…?

மனிதன் சொல்கின்றான் அந்தந்த ஊரில் உள்ள தட்ப வெப்ப நிலை என்று…! அது அல்ல…! இந்த மெய் ஞானப் பாடத்தின் தொடரைச் சிறிதளவு புகட்டிவிட்டால்
1.உன் உதய எண்ணம் அதில் எப்படிச் செல்கின்றது…?
2.அந்நிலையையே ஈர்த்துக் கொள்…! “உதயம்…” கிடைத்து விட்டால் உண்மை நிலை எல்லாம் புரிந்துவிடும்.

ஆகவே தியானம் எடுப்பதெல்லாம் உன்னுள் இருக்கும் அணு உன்னுள் சுற்றிக் கொண்டே இருக்கும் பொழுது உன் நிலையில் கவன ஈர்ப்பு மண்டலத்தின் (புருவ மத்தியில்) தன்மையில் பாய்கிறது.
1.உன் சுவாச நிலையை அங்கே ஒரு நிலைப்படுத்திடும் போது
2.அந்நிலையில் நீ எண்ணும் எண்ணத்திற்கு உதயம் கிடைத்துவிடுகின்றது.
3.உன் வழியில் உண்மை நிலைகள் உணரும் தன்மை உன் உயிரணுவிற்கு
4.அவ்வொளியின் கதிர்கள் ஒளிக்கற்றைகள் அதீதமாகப் பாய்கின்றது.

தியான நிலையின் முறை புரிந்ததா…?

ஒருநிலைப்படுத்தி உன்னுள் இருக்கும் எண்ணத்தில் ஒன்றல்ல இரண்டல்ல உன் பிறப்பிலிருந்து இன்று வரை உன் ஞாபகத்தில் எப்படி வருகின்றது…?

சிறு குழந்தையில் வளர்ந்த நிலையும் படிப்படியாக உனக்குள் வளர்ந்த நிலைகளும் உனக்கு எப்படிப் புரிகின்றதோ… மூளையில் சுற்றி வைத்திருக்கின்றாயோ… அந்நிலைகளை எல்லாம் ஒரு சிறிதளவு சொல்லு பார்க்கலாம்…!

அந்த எண்ணம் உன் எண்ணத்தில் இருப்பதைப் புரிந்து தான் மிக முக்கியமான பாடத்தில் வந்து நிறுத்தி இருக்கின்றேன் “உன் உதயத்திற்கு…”

சுவாச நிலைகள் நாம் இடும் எந்த எண்ண அலைகள்… நாம் வெளிவிடும் சுவாசத்தைக் கொண்டு தான் சிறு குழந்தையில் நீ செய்த ஒரு வேலை உன் ஞாபகத்துக்கு இப்பொழுது வருகிறது.

அவ்வேலை செய்யும் போது நீ விடும் சுவாசம் உன்னைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமான ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அன்று நடந்த நேரம் தேதி இருந்த ஆட்கள் எல்லாம் நினைவுகளும் எப்படி இப்பொழுது நினைவிற்கு வருகிறது…?
1.அன்று நீ விட்ட சுவாச நிலையில் உள்ள அழுத்தத்தில் தங்கி விடுகிறது அந்நிலையெல்லாம்
2.உன்னுள் இருக்கும் அணுவின் சுழற்சியும் நீ விடும் சுவாசத்தில் உன்னுள்ளே நான் சுற்றிக் கொண்டே இருக்கிறது… உன் எண்ண அலைகள்.

நீ நினைக்கிறாய் உன்னைச் சுற்றி இருப்பது இப்பொழுது இருக்கும் பிறவி கொண்டு தான் என்று. இல்லையப்பா… உன் முதல் பிறவியில் நீ வெளியிட்ட எண்ண மூச்சலைகள் எல்லாமே உன்னைச் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

இப்பிறவி மட்டும்தான் இப்பிறவி அணுக்களுடன் கலந்திருப்பதால் இப்பிறவியில் விட்ட சுவாசங்கள் அவ்வணுக்களில் கலந்துள்ளன. உன் நினைவோட்டத்தில் இப்பிறவியில் நடந்ததைத் தெரிந்து கொள்கிறாய்.

1.இந்த ஜெப அலையின் தன்மையில் உன்னைச் சுற்றி உள்ள அணுக்களில்
2.உன் முன் ஜென்மங்களையும் தெரிந்திடலாம்…! பாட நிலை புரிந்ததா…?

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்

 

உலகத்தன்மையிலே ஈர்ப்பு நிலை இருந்து விட்டால் ஈசன் அருள் வந்ததப்பா. ஈர்ப்பு நிலையில் தான் இவ்வுலக நிலையே உள்ளதப்பா. மூச்சின் பாடத்தைப் பகர்ந்துள்ளேன்.

1.எந்நிலைக்கும் ஈர்ப்பு நிலை வேண்டுமப்பா…!
2.மனித மனத்திற்கு ஈர்ப்பு நிலை இருந்தால் தான் அவ்வீசனையும் வணங்கிடுவான்

ஈர்ப்பு நிலை ஈர்ப்பு நிலை என்பதெல்லாம் காற்றை இந்த பூமி தன்னுள் ஈர்ப்பதனால் தான் இப்பூமியே சுற்றுகிறது என்றேன். ஈர்ப்பு நிலையின் பாடங்கள் பல உள்ளன.

1.ஈர்க்கும் தன்மையை எடுத்துக் கொள்…!
2.எந்நிலைக்கும்… ஒருவர் சொல்வதையும் “நம் மனதில் ஈர்ப்பு நிலை இருந்தால் தான்” எடுத்துக் கொள்ள முடியும்.
3.அவ்வீர்ப்பு நிலையில் தான் ஈசன் அருளையும் பெற்றிட முடியும்.

அவ்வீர்ப்பு நிலையினால் தான் ஒரு தாயின் வயிற்றில் அக்கருவும் தரிக்கிறது மலரின் மணத்தை ஈர்க்கின்றது அவ்வண்டு என்ற வழிமுறை தெரிந்து இருக்கும்.

அதைப் போல் தான் தாயின் வயிற்றில் வந்து உதிக்கும் கருவின் நிலையும். மணங்களின் பாடம் பகர்ந்திட்டேன். ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு மணம் உள்ளது. பூவிற்கு மணங்கள் உள்ளது போல் மனித உடல்களுக்கும் அந்த மணங்கள் உள்ளன.

ஜென்மப் பலனைப் பகர்ந்திட்டேன் மணத்தையும் முதல் பாடத்தில் பகிர்ந்துள்ளேன் அக்கரு எப்படி வந்து உதிக்கிறது…? என்று.

இவ்வுலகத்தில் பல தேசங்கள் உள்ளன. எத் தேசத்தில் பிறந்தவனும் முதல் ஜென்மத்தில் விட்ட குறையினால் மறுஜென்மம் எடுக்கின்றான் என்பதைப் பகர்ந்து உள்ளேன்.

அண்டகோடியில் உள்ளவன் தன் ஆவி ரூபத்தில் தன் எண்ணத்தின் செயலை “எப்பிறவி எடுத்தால் முடித்திடலாம்…?” என்று எண்ணுகின்றான்.

அதனுடைய ஈர்ப்புத் தன்மையினால் தாயின் எண்ணத்தின் மணத்தை அறிந்து அத்தாயின் வயிற்றில் உதிக்கின்றான்.

பிறவி எடுப்பதற்கு முன் அவ்வாவிகளின் நிலை எல்லாம் ஈர்ப்புத் தன்மை தான். “ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்…” ஒருவர் எடுக்கும் மூச்சிலிருந்து அவர்களுடைய மணத்தையும் மனத்தையும் ஈர்க்கின்றது அவ்வாவிகள்.

அதிலிருந்து தான் அவ்வாவிகள் பிறக்கின்றன கருவில்… இப்பாட நிலை புரிந்ததா…?
1.மனித மனத்திற்கு வேண்டுமப்பா ஈர்ப்புத் தன்மை.
2.இவ்வுலகம் ஈர்ப்பதினால் தான் உன் நிலை நடக்கின்றது… நிற்கின்றது.

இவ்வுலக மண்டலத்திற்கு “பல மைல்களுக்கு அப்பால்… ஈர்ப்பு நிலை இல்லையப்பா…”

உலக மண்டலத்தில் உள்ளவர்கள் எல்லோருமே கலியில் வந்துள்ளார்கள் என்ற பாடத்தைப் பகர்ந்துள்ளேன். இவ்வுலகத்தில் உள்ளவர்கள் பிற மண்டலத்தில் பிறக்கின்றார்களா…? என்று சாமியிடம் கேட்டாய் எங்கும் பிறக்கின்றார்கள்… ஆனால் அந்த வழிகள் வேறு.

மனித ஜீவராசிகள் இவ்வுலகத்தில் உள்ளது போல் வேறு எந்த உலகத்திலும் இல்லையப்பா. வேறு உலகத்தில் ஜீவராசிகள் நிலை எல்லாம் உருளும் தன்மையில் தான் ஊரும் தன்மையில் தான் உள்ளதப்பா.

இவ்வுலகில் உள்ள ஈர்ப்பு தன்மை பிற மண்டலத்தில் இல்லையப்பா…! பிற மண்டலத்தின் தன்மை எல்லாம் மாறுபடுகின்றது.

இன்று விஞ்ஞானத்தில் பிற மண்டலத்திற்குச் சென்று உயிர் வாழப் போகின்றானாம்… நடந்து பார்க்கின்றானாம்… பயிர் செய்து பிழைப்பானாம்…! கால நிலையைக் கடத்துகின்றார்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளே.

ஜெப நிலையில் இருந்தவனுக்குத் தெரிந்துவிடும் பிற மண்டலத்தின் நிலை. இவ்வுலகம் ஈர்ப்புத் தன்மையில் நடப்பது போல் அந்நிலையில் அவன் நடந்துவிடுவானா…?

செயற்கையுடன் சென்று நடந்தேன் என்று செப்புகின்றானாம். எப்படி அப்பா நடந்திருப்பான்…? “உருண்டல்லவா சென்றிருப்பான்…!” இவ்வுலக நிலை எவ்வுலகிலும் இல்லையப்பா.

இவ்வுலகில் பிறந்த பயனைப் பெற்றிடுங்கள் என்பதெல்லாம் இதுவே தான்.

1.ஈர்ப்புத் தன்மைக்கும் மனநிலைக்கும் ஒத்திருந்தால் எல்லா நிலையும் ஈசனே பார்த்துக் கொள்வானப்பா
2.நம் நிலை வேறு நினைத்தாலும் அவ்வீர்ப்பு நிலையைத் தான் ஈசன் முடித்திடுவான்.

இதைப் போல்தான் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும்
1.அவ்வீசனின் நிலையில் ஈர்ப்பு இருந்தால் நடந்திடுமப்பா… ஈர்ப்பு நிலைப்பாடத்தை இதற்காகத்தான் பகர்ந்திட்டேன்.
2.மனதில் உள்ள எந்நிலையையும் அவ் ஈசனின் ஈர்ப்புக்கு விட்டு விட்டால் அவ்வீசன் பார்த்துக் கொள்வான் எல்லாமே… புரிந்ததா…?

ஈர்ப்பு நிலை வைத்திடம்மா… உன் நிலைக்கு மிகத் துரிதமாக எல்லா நிலையும் கிட்டிவிடும்… ஜெப நிலையும் தான்…!

ஒவ்வொரு மனதிற்கும் ஈர்ப்புத் தன்மை எப்படி அறிவு வளர்ச்சி என்று சொல்கின்றோமோ அதைப்போல ஈர்ப்புத் தன்மையும் மாறுபடுகின்றதம்மா.

ஒரே முறையில் பலர் சமைத்தாலும் சமையல் ருசியும் மணமும் மாறுபடுகின்றது கை வாக்கு என்கின்றார்கள்… அது “மனவாக்குத் தான்…”

அது ஒரு நாள் செய்த முறையிலேயே மறுநாள் சமைத்தால் அந்தச் சுவை இருப்பதில்லை. இது எல்லாம் மன வாக்குத் தான் அது. மனதின் ஈர்ப்பு நிலை எப்படி உள்ளதோ இதைப் பொறுத்துதான் எல்லாமே.

உன் மனதின் ஈர்ப்பை இன்று ஈசனிடம் செலுத்தி விடு நோயைப் பற்றி எண்ணிவிடாதே கலசம் வைத்ததின் பயனை நீ பெறுவாய்.

காட்சி:- நிறைய சித்தர்கள் ரிஷிகள் சுற்றி நின்று ஆசீர்வாதம் செய்தல்.
1.ஒரு சித்தர் அல்ல… பல சித்தர்கள் இங்கே வந்துள்ளோம்
2.சித்தாதி சித்தர்களின் ஆசிகளை அருளியுள்ளோம். பல கொழுந்துகளை ஆசீர்வாதம் செய்துள்ளோம்
3.வாரி இறைப்பேன் ஞானச் செல்வங்களை உனக்கு…!

“விழிப்புடன்” கூடிய தியானமே மிகவும் சிறந்தது

“விழிப்புடன்” கூடிய தியானமே மிகவும் சிறந்தது

 

பல கோடி ஆண்டுகளாகச் சேமித்துப் பழக்கப்படுத்தி நம் உடலுடன் கூட்டிக் கொண்டுள்ள இம் மூன்று வகை உணர்வலையையும்… பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும்… இந்தப் பல கோடி எண்ணத்தின் சுவாசத்தால் நம் சப்த அலையுடன் பல ஜென்மங்களாக எடுத்துப் பழக்கப்படுத்திய நிலைகளை எல்லாம்.. “தாவரங்களைப் போன்று”
1.இக்காற்றினில் கலந்துள்ள ஒலி அலையான காந்த மின் அலையைத்
2.தனக்கு வேண்டிய உயர்ந்த ஞான சக்தியைக் கூட்டிப் பலன் பெருக்கிக் கொள்ள முடியும்.

தாவரம் தனக்கு வேண்டிய பிரித்த அமிலத்தை எடுத்துப் பலனைத் தரவல்ல காலங்கள் முடிந்தவுடன் குறுகிய கால வளர்ச்சியினால் பட்டுப் போகின்றது.

ஆனால் அதிலிருந்து வெளிப்பட்ட அமில குண கூட்டுப் பெருக்கில் ஜீவன் கொண்ட ஜீவ ஆத்மாக்களான நம் ஜீவித சக்தியில்… இப்பெருக்கத்தின் பெருக்க நிலை வளர்வதற்கு… இந்த எண்ணத்தில் எடுக்கும் ஞானத்தின் ஒளி ஈர்ப்பின்… காந்த மின் அலையின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் ஞான ஒளியாக… இந்த உயிரணு மட்டுமல்லாமல் பல கோடி அணுக்களும் செயல் கொண்டு… இம்மனித ஞானத்தின் வளர்ச்சி நிலை கூடும் சக்தியை என்றுமே வளர்த்திட முடியும்.

இருந்தாலும் அத்தகைய நிலை எய்திட… தியானப் பயிற்சி முறையைப் பலரால் பல காலங்களாக வழிப்படுத்தி வாழ்க்கையில் பலரினால் செயல்படுத்தி வருகின்றனர் என்றாலும் “அதில் அவர்கள் அடைந்த நிலை என்ன…?”

1.நல்ல வாழ்க்கையின் பல ஞான உபதேசங்களும் பெற்றவர்கள் அதே சுழற்சியில் தான் சுழல்கின்றார்கள்
2.“ஆழ்நிலை தியானத்தை…!” அறியத் துடிக்கின்றனர்.
3.இந்த உணர்வையும் எண்ணத்தையும் உறங்கும் நிலைப்படுத்தும் ஞானத்தால்
4.இந்த உடலுக்கோ இந்த உடலை வளர்க்க குடி வந்த பல கோடி உயிரணுக்களுக்கோ வளரும் சக்தி குன்றி
5.இதே சுழற்சியில் தான் சுழன்று கொண்டே இருக்கும்.

மாறாக ஒவ்வொரு அணுவுமே மண்டலமாக உருப்பெறும் நல் ஒளி பெறும் சூரிய ஒளியுடனோ… பல கோடிச் சக்தி ஒளியான சர்வமும் படைக்கவல்ல அவ்வாதி சக்தியின் அருள் ஒளியுடன் கலக்கும் நிலை பெற… ஆழ் நிலைத் தியானத்தால் வளர்ச்சி கொள்ள முடியாது,

உணர்வுடன் கூடிய எண்ணத்தை…
1.இவ்வுணர்வின் உந்தலுக்குகந்த ஒவ்வொரு உடலிலும் உள்ள அமில குணங்களையும்
2.இவ்வெண்ண ஞானத்தால் எடுக்கும் சுவாசம் கொண்டு உயர்வாக்கும் பக்குவ முறையைச் செயல்படுத்தினால் தான்..
3.சக்தியின் சக்தியான சகலத்துடன் செயல்படுத்தும் “ஆதி சக்தியின்” ஒளி சக்தியைப் பெற முடியும்.

ஆதி சக்தியின் ஒளி சக்தியின் சிறு அணுவாக உதித்த நாம் அச்சக்தியின் அருளின் ஒளியைப் பெருக்கிச் சமர்ப்பிப்பது தான் நமக்கு ஆண்டவனின் சக்தி பெற்ற நிலையின் பொருள்…!

புரிந்ததா…!

இது நாள் வரை உணர்த்தி வந்த பாட முறையின் தியானம் கொண்டு
போற்றலுக்குகந்த போற்றலாய்
யான்… போற்றி மகிழவே

நேசத்திற்குகந்த நேர்மையாய்
நினைவால்… வழி நிற்பேனே

பாசத்திற்குகந்த படைப்பிலே…
பலவாகக் கலந்து பெறுவேனே…!

ஆசைக்குகந்த ஆசையாய்
அளவாய்.. மகிழ்ந்து அடைவேனே..!

ஆற்றலுக்குகந்த ஆண்டவனே…
ஆற்றலின் எதிர்பிம்பமானவனே…

தாலாட்டும் தாய் தந்தை தலைமையிலே
தலை வணங்கி… பணிவேனே…!

ஏற்றத்திற்குகந்த எண்ணத்திலே… …
ஏறும் படியில்… ஏறுவேனே…!
வாசத்திற்குகந்த வாசனையாக
உள்ளத்தின் வாசனையை… வளர்ப்பேனே…!

போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளேன்…
போற்றலுக்குகந்த… “தெய்வ நிலை பெறுவேனே…!”
என்ற இந்தப் பாடலில் உள்ளதன் கருத்தின் நிலையே உணர்ந்து ஒவ்வொரு மனிதனின் செயலும் செழிப்பாகிடல் வேண்டும்.

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!

 

பாடலை உச்சரிக்கும் தன்மையில் உன் சுவாச நிலை புரிகின்றதா…? பகர்ந்திட்டேன் பகர்ந்திட்டேன் பல நாட்களாக…!

சுவாச நிலை என்பது “ஓம் ஈஸ்வராய நம… ஓம் ஈஸ்வராய நம… என்று உன் மூச்சை வெளி விடுவது அல்ல…”

மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் பொழுது
1.உன் கலக்கத்தை எல்லாம் அடக்கி விட்டு அந்நிலையை மறந்து விட்டு
2.ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா… என்று
3.உன் மூச்சை உள்ள இழுக்கவும் வெளிவிடவும் பழகவும்.

சோர்வுடன் விட்ட மூச்செல்லாம் சோர்வுடனே தான்…! பகர்ந்துள்ளேன் பகர்ந்துள்ளேன் பல நாட்கள் ஜெப நிலையில் இருந்திடுங்கள் என்று.

எண்ணம் செயல் இன்பம் துன்பம் சோர்வு அனைத்தும் கலந்தது தான் மனிதன்.
1.மனிதனின் வாழ்க்கையில் இவை அனைத்தும் இல்லாவிட்டால்
2.சுவையும் இல்லை வளமுள்ள வாழ்க்கையுமில்லை.

சோர்வும் வருவதால் தான் மனக்கவலை தன்னை விட்டு அகல்வதில்லை மனதில் உள்ள சோர்வை அகற்றிடாமல் சோர்வின் நிலையிலேயே இருந்திட்டால்…
1.உன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகில் உள்ள சோர்வின் அணுக்களை எல்லாம்
2.உடலில் அணுவாக மாற்றிடச் செய்யும்.

நல்நிலையில் உள்ள பொழுது நல்ல நிலையில் உள்ளவனுக்கு சந்தோஷம் இன்பமும் “ஈஸ்வரனே” (உயிர்) தருவான். சோர்விற்கும் கலக்கத்திற்கும் எவர் ஒருவர் அடிமையாகின்றாரோ அவர் நிலையெல்லாம் துன்பத்துடனே…!

சோர்வும் கலக்கமும் வந்திட்ட பொழுது அந்நிலையையே எண்ணிடாமல்
1.அவன் (ஈசன்) எனக்குள் உள்ளான் என்ற எண்ணம் மனதினுள்ளே வந்து
2.சோர்வின் நிலையை வளர்த்திடாமல் அவனிடம் அதை விட்டு விடும் தன்மை வேண்டும்.

எண்ணும் சோர்வமும் கலக்கமும் மனிதன் நிலையினையே மாற்றிவிடும்… உடல் நிலையையும் மாற்றிவிடும்… மன நிலையையும் மாற்றிவிடும். மன நிலை மாறிவிட்டால் உன்னை அண்டிக் கொள்ளும்… அந்த அணுவெல்லாம்.

அணுவின் தன்மையிலே நல்ல அணுவும் உள்ளதுவே தீயணுவும் உள்ளதுவே. சோர்வின் தன்மையிலே தீய அணுவை அணுகிடுவாய்… தீயணுவின் வேலையெல்லாம் உடல் நிலையையே மாற்றிவிடும். கோபம் சலிப்பு வருவதெல்லாம் இந்நிலையில் தான்.

1.எந்நிலை வந்தாலும் ஈஸ்வரன் (உயிரிடம் – என்னிடம்) என்பவனிடம் விட்டுவிடுங்கள்.
2.அவன் பார்த்துக் கொள்வான்.

நம்மை ஒருவர் துவேஷிக்கும் பொழுதும் நம்மைப் பார்த்து ஒருவர் பொறாமையாக எண்ணும் எண்ணமும்…
1.சோர்வின் நிலையில் உள்ளவனுக்கு உடனே வந்து தாக்கும்
2.காரணம் எல்லா நிலையிலும் எண்ண நிலைதான் மிகவும் துரிதமானது.
3.அவர்கள் எண்ணும் எண்ணம் செல்லும் வேகத்தில் உன் உடலை வந்து தாக்கிவிடும்.
4.உனக்குள் சோர்வும் கலக்கமும் இருக்கும் பொழுது உன் எதிரியின் எண்ணம் உடனே வந்து உன்னைத் தாக்கும்.

இந்நிலையில் வருவது தான் உடல் நிலையில் வரும் மாற்றங்களும் வியாதிகளும் எல்லாமே.

அதற்குத் தான் பிறரின் கண் படும்… சுற்றிப்போடு…! என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பாய்.

அந்நிலை வருவதெல்லாம் உன் சோர்வினால் தான்.
1.சோர்வுடையவனுக்கு எல்லாத் தீய குணங்களும்
2.எண்ணும் எண்ணத்தை விடத் துரிதமாக வந்தடையும்.

பெரும் காற்றும் மழையும் மின்சாரமும் செயற்கை மின்சாரங்கள் எல்லாமே செல்லும் வேகத்தை விட “எண்ணத்தின் வேகம்” உலகிலேயே உயர்ந்த வேகம்…!

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!
1.இருக்கும் நிலையில் இருந்து நீ செய்யும் தியானத்தில் உன் எண்ணம் எம் மண்டலத்தைச் சுற்றியும் பாயும்.
2.மனிதனின் சக்தி உலக சக்திக்கெல்லாம் அப்பாற்பட்ட பெரிய சக்தி
3.அச்சக்தியின் தன்மையை யாரப்பா உணர்ந்துள்ளார்கள்…?
4.எண்ணத்தின் தன்மையை எண்ணிப்பார்…! உன் உணர்வை எண்ணிப்பார்.
5.நாட்டமெல்லாம் அவன் அருள்வான் நலிங்கிடாதே… எந்நிலை வந்தாலும் மாற்றிடும் தன்மை வேண்டும்.

சோர்வு சோகம், கோபம் குரோதம் நலிவு வருவதெல்லாம் மனிதனுக்குச் சரிபாதி உள்ளது அதை எல்லாம் வென்று… அந்நிலைக்கு நம் மனதை இடம் கொடாது
1.நம் நிலையை ஒருநிலைப்படுத்தி
2.மின்னல் வந்தாலும்… பூகம்பம் வந்தாலும்… நம் நிலையை மாற்றிடாமல் இருந்திடுவதே இத்தியானத்தின் முறை.

தியானத்தில் அமர்ந்து தான் இந்நிலை வர வேண்டும் என்பதல்ல…!

உன் உடலில் உள்ள கோடான கோடி அணுக்களையும் உன்னைச் சுற்றி உள்ள பல கோடி அணுக்களையும் ஒருநிலைப்படுத்தத்தான் “இந்தத் தியான முறை எல்லாம்…!”

மனிதனின் நிலையில் ஒரு பாதி இது என்று சொன்னேன். மறு பாதி என்ன என்றால் ஆசை பேராசை பற்று உல்லாசம் நிறைந்துள்ளது.
1.ஆசையை வளர்த்து விடுகின்றான்
2.பாசத்தைப் பகிர்ந்து விடுகின்றான்.
3.உள்ள நிலையை மறந்து விட்டுப் பெரும் உல்லாசத்தை நாடி விடுகின்றான்.

அத்தகைய நிலையில் மனம் எடுக்கும் சுவாசத்தில் நன்மை தீமை ஒன்றுமே தெரிவதில்லை.

தன் நிலையில் உள்ள ஆசையை வளர்த்திட மென்மேலும் ஆசைப்பட்டு அந்த ஆசை அணுவுக்கே அடிமையாகின்றான். பாசம் என்பதும் இப்படியே…! பெரும் பாசத்திற்கு அடிமையாகி விடுகின்றான்.

உல்லாசத்திற்கு அடிமையாகின்றான் இந்நிலையில் உள்ளவனுக்கு எந்நிநிலையும் அவன் கண்ணிற்குத் தெரியாது.

1.இந்த நிலைகளை எல்லாம் அகற்றிவிட்டு
2.தன் நிலையில் எது வந்தாலும் அடக்கி ஒருநிலைப்படுத்துபவனுக்கே
3.”தியான நிலை” என்பது கூடி வரும்.

தர்மம் நியாயம் என்பதெல்லாம் உன் அளவில் கஷ்டப்பட்டு உன்னை நீ வருத்தி உன் வழியில் பொருள் திரட்டிப் பிறருக்கு அளிப்பது தான் தானம் அல்ல.

எந்த நிலையிலும் நம் நிலையில் ஒருவரின் பொருளுக்கோ ஒருவரின் துவேஷத்திற்கோ ஆளாகாமல் ஒருவரை ஏமாற்றியோ பிறரின் சொத்தை அபகரிக்கக் குறுக்கு வழியில் சென்றிட்டோ… தன்னிலையை மறந்து பிறருக்கு உபதேசம் செய்வதோ… இதுவல்ல தர்மம்.

தர்மம் நியாயம் என்கிறோம்… தர்மம் என்பது தன் வழியில் உள்ள நியாயத்தை என்றும் கடைப்பிடித்து மற்றவரின் கஷ்டத்தைப் பார்த்து உன் உள்ளத்தால் வார்த்தையால் அன்பைப் பொழியும் பொழுது நீ தரும் பொருளினாலோ நீ இடும் பிச்சையினாலோ வருவதல்ல தர்மம்.

ஒருவரின் கஷ்டத்தைப் பார்த்த பின்
1.உள்ள நிலையில் உன்னால் முடிந்த அளவு அவருக்கு அன்பையும் உன் ஆறுதலையும் பகிர்ந்து
2.அக்கஷ்டப்படும் மனிதருக்கு “உன் அருளை” எப்படிப் பாய்ச்சுகின்றாயோ
3.அதிலே உள்ளதப்பா தர்மமும் நியாயமும்.

அவன் நிலையைப் பார்த்து பழித்துப் பேசிடவோ துவேஷித்திடவோ வேண்டாம். பொருளினால் மற்ற உதவிகள் அளிப்பதனால் மட்டும் வருவதில்லை தர்மமும் நியாயமும்…! (இது முக்கியம்)

உன் ஜென்ம நிலையை உணர்ந்து கொண்டால் எல்லாமே விளங்கிவிடும்… உன் வழிக்கு எல்லாமே.

1.தியான வழியில் அமர்ந்தால் உன் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம்
2.நான் பாடத்தில் சொன்ன எல்லா அணுக்கள் எல்லாமே “உன்னை வந்து தாக்கப் பார்க்கும்.

உன் எண்ணத்தின் வழியிலேயே அந்நிலையில் நீ செய்யும் தியானம் எல்லாம் அவன் (ஈஸ்வரன்) நிலையில் ஐக்கியப்படுத்து
1.உன் மனதைப் பெரும் நிதானப்படுத்திச் சாந்தமுடன்
2.எந்நிலையும் உன்னைத் தாக்கிடாமல் எந்த அணுவும் உன்னை அடைந்திடாமல்
3.உன் மனதை ஒருநிலைப்படுத்தி நீ விட்டிடும் மூச்சிலே தான் தியானமே கை கூடும்.

அந்நிலையில்… தியான நிலை கைகூடும் அந்த நிலையில்
1.அவன் பாதத்தை வணங்கிடப்பா.
2.அவர் பாதம் என்பதெல்லாம் உன் சக்திக்குள்ளே தான் உள்ளதப்பா.
3.அந்நிலையில் உள்ளவனுக்கு எண்ணும் எண்ணமெல்லாம் அவனருள்வான் உன் வழிக்கே.

உங்களுக்கு எண்ணத்தின் வேகத்தைச் சொன்னேன் அந்நிலையில் தியான நிலையில் உள்ளவனின் எண்ணத்தின் வேகம் உலகை மட்டுமல்ல உலகைச் சுற்றியுள்ள பல கோடி… பல கோடி… கோடி மண்டலங்களையும் அறிந்திடலாம்.

எந்நிலையில் உள்ள நிலையும் உன் தியான நிலையில் எண்ணத்திலேயே கண்டிடலாம்… பல கோடி கண்டிடலாம். தியான நிலையைப் பகிர்ந்திட்டவன் எல்லாம்… இந்நிலையை யாரும் பகிர்ந்திடவில்லை.

“தியானம் தியானம்” என்கிறார்கள். எந்த நிலைக்குத் தியானம் என்கிறார்கள்…?

தியான நிலையில் இருந்து உலக நிலையையும் வேறு பல நிலைகளையும் அறிந்து விட்டு என்ன பயன்…? என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் சுழல்கின்றது.

1.தியான நிலைக்கு வருவதெல்லாம் அவன் அவன் செய்த பூர்வ புண்ணியப் பலனே.
2.பழிப்பவர்கள் பழிக்கட்டும்… வருபவர்கள் வந்திடட்டும் தியான நிலைக்கே.
3.முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் கல்கியின் நிலையை.
4.அந்நிலைக்கு வருபவனுக்குத் தான் இந்தத் தியான நிலையும் கைகூடுமப்பா…!

தியான நிலையைப் புரிந்திட்டாயா உன் பாட்டின் தன்மையை மாற்றிக் கொள்வாயா…!

திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திருமகன்(ள்) பணிகின்றேன்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திரு குருவின் அருள் பெறவே
திருமானின் அருள் பெறவே
திருவருள் தந்திடுங்கள் தாயே தந்தையே.

உண்மைச் சக்தியான காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்லவன் “நிச்சயம் ஒளி நிலை பெறுவான்”

உண்மைச் சக்தியான காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்லவன் “நிச்சயம் ஒளி நிலை பெறுவான்”

 

உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து…!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே… எண்ணத்தை விழிப்படையைச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்…?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்…!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே…
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து…
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்…” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கி தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.

தீப விளக்கை ஏற்றிவிடு… உன்னுள்ளே நான் வந்து பேசுகின்றேன்

தீப விளக்கை ஏற்றிவிடு… உன்னுள்ளே நான் வந்து பேசுகின்றேன்

 

ஒலியெல்லாம் ஒளியாக்கி ஒளியையே உனதாக்கு…!
1.நான் தந்த மனத்துடன் உன் மனத்தைக் கலக்க விடு.
2.பூமித்தாய் பூரிப்பாள்… பூவுலகமும் பூத்து விடும்
3.வான மண்டலம் செல்வாய் வானுலகம் கண்டிடுவாய்
4.வானுலகம் செல்லும் நிலை தான் சூட்சும நிலை என்பதெல்லாம்.

இன்றைய கருத்துக்கள் எல்லாம் புரிந்ததா…? இந்நிலையில் இருந்து நீ மாறுபடாதே.

அங்கொருவர் அவஸ்தைப்படும் நிலையைத் தான் தினம் தினம் பத்திரிக்கையில் படிக்கின்றாய். அவன் (அன்றைய முதல்வர்) நிலையைச் சொல்கின்றேன். ஆசை என்ற நிலையைப் பார்த்தாயா. பெரும் ஆணவம் பிடித்து ஆடினான்… ஆணவ நிலையை அனுபவிக்கின்றான்… அனுபவித்த பின் அவன் நிலை என்னப்பா…?

இவ்வுலகின் ஆசை எல்லாம் இன்னும் அவன் உடலில் இருப்பதால் எப்படிப் போகும் அவன் உயிர்…? எமன் என்பது யாருமில்லை… அவனே தான் அவனுக்கு எமன்.

எமனையே எமன் வெல்கிறான்… இப்பொழுது. பாவக் கடலில் கலந்திடுவான்… பாவியாகி நின்றிடுவான்… பெரும் பாவம் செய்த பலனை எல்லாம் பதம் பதமாகப் பார்த்திடுவான்.

இப்போது அவன் விடும் மூச்செல்லாம் அவன் விட்ட மூச்சும் தான் அணுகுண்டாக வெடிக்கின்றது. இந்தியாவில் எங்கு இருக்கிறது அணுகுண்டு…? என்று நினைக்கின்றாய்.

அவ்வணு தான் அணுகுண்டு… அவனே தான் அணுகுண்டு… பெரும் அணுகுண்டு எல்லாமே அவன் போல் உள்ள அணுகுண்டுகளால் வந்த அணுகுண்டு தான்.

உலகை அழிப்பதற்கே பிறந்திட்டான்… அணுவை எல்லாம் அணுகுண்டாக்கி விட்டான்.

1.அணுவைப் (ஆவனை) பிழைக்கச் செய்ய ஜெபிக்கின்றார்களாம்
2.கோவில்களில் எல்லாம். அவன் ஜெப நிலையைப் பார்த்தாயா அவனுக்காக இவர்கள் எல்லாம் ஜெபிக்கின்றார்களாம்.
3.அவன் விட்டு அணுகுண்டுகள் எல்லாம் இவர்கள் உடலில் ஏறிவிடும்.
4.ஜெபிக்கட்டும்… ஜெபிக்கட்டும்… கலியுகம் மாற வேண்டாமா…? அதற்காகத்தான் இந்த ஜெபம் எல்லாம்.

நல் மணத்தை எடுத்து நல் மூச்சை நீ விட்டு ஜெபித்திடப்பா அழகாக. உன் நிலையில் சாந்தம் வேண்டும் என்பதன் பொருள் எல்லாம் இதுவே தான்.

ஆவி உலகத்தன்மைகளைப் பற்றி அடுத்தது சொல்கின்றேன். ஒரு நிலையில் நீ இருக்க உன் கண்ணை அடைத்திட்டேன். சொன்னவுடன் திறந்திடுவாய்… சொன்னதெல்லாம் மறந்திடுவாய்… அதற்காகத்தான் இந்நிலையைத் தந்திட்டேன்.

பசியின் நிலையும் ஒன்றுதான் பெரும் பணத்தின் நிலையும் ஒன்று தான் பசி வந்ததும் சாப்பிட்டுவிட்டுப் போதும் என்றான பிறகும் அந்தப் பசி வந்து விட்டால் மீண்டும் புசித்திடுவான் உணவையே.

பணத்தின் நிலையும் இதுவே தான். பணம் பணம் என்கிறது இவ்வுலகம் பசியும் பணமும் ஒன்றேதான் இன்ப வாழ்வைத் தந்து விட்டேன் என்று சொன்னால் இன்பமெல்லாம் என்னவென்று எண்ணுகின்றாய்…?
1.பணம்தான் இன்பம் அல்ல.
2.இன்று இருக்கும் உன் தியான நிலை தான் இன்பமப்பா.

பசியின் தன்மை அடக்கி விட்டால் பாடலின் தன்மையும் புரிந்துவிடும் (உன் நிலையை மாற்றிக் கொண்டாய்… இதை ஏற்கும் நிலை உனக்கு இல்லை). பெரும் பசியைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு நாள் போதாது. இன்னொரு நாள் சொல்கின்றேன்.

1.எங்கு சென்றாலும் உன் நிலையை மறந்திடாதே
2.தியான நிலைக்கு வந்து விட்டாய் தினம் தினம் தியானம் செய்.
3.உன் மொழியிலேயே நானும் வந்து பேசுகின்றேன்

தீப விளக்கை ஏற்றி விடு…!

நாம் பழக வேண்டிய நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடர்

நாம் பழக வேண்டிய நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடர்

 

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு…
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது…!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்… அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்…
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே… உருவை மாற்றி… “உருச்சிதைந்து வாழ்கின்றான்….!”