
தீப விளக்கை ஏற்றிவிடு… உன்னுள்ளே நான் வந்து பேசுகின்றேன்
ஒலியெல்லாம் ஒளியாக்கி ஒளியையே உனதாக்கு…!
1.நான் தந்த மனத்துடன் உன் மனத்தைக் கலக்க விடு.
2.பூமித்தாய் பூரிப்பாள்… பூவுலகமும் பூத்து விடும்
3.வான மண்டலம் செல்வாய் வானுலகம் கண்டிடுவாய்
4.வானுலகம் செல்லும் நிலை தான் சூட்சும நிலை என்பதெல்லாம்.
இன்றைய கருத்துக்கள் எல்லாம் புரிந்ததா…? இந்நிலையில் இருந்து நீ மாறுபடாதே.
அங்கொருவர் அவஸ்தைப்படும் நிலையைத் தான் தினம் தினம் பத்திரிக்கையில் படிக்கின்றாய். அவன் (அன்றைய முதல்வர்) நிலையைச் சொல்கின்றேன். ஆசை என்ற நிலையைப் பார்த்தாயா. பெரும் ஆணவம் பிடித்து ஆடினான்… ஆணவ நிலையை அனுபவிக்கின்றான்… அனுபவித்த பின் அவன் நிலை என்னப்பா…?
இவ்வுலகின் ஆசை எல்லாம் இன்னும் அவன் உடலில் இருப்பதால் எப்படிப் போகும் அவன் உயிர்…? எமன் என்பது யாருமில்லை… அவனே தான் அவனுக்கு எமன்.
எமனையே எமன் வெல்கிறான்… இப்பொழுது. பாவக் கடலில் கலந்திடுவான்… பாவியாகி நின்றிடுவான்… பெரும் பாவம் செய்த பலனை எல்லாம் பதம் பதமாகப் பார்த்திடுவான்.
இப்போது அவன் விடும் மூச்செல்லாம் அவன் விட்ட மூச்சும் தான் அணுகுண்டாக வெடிக்கின்றது. இந்தியாவில் எங்கு இருக்கிறது அணுகுண்டு…? என்று நினைக்கின்றாய்.
அவ்வணு தான் அணுகுண்டு… அவனே தான் அணுகுண்டு… பெரும் அணுகுண்டு எல்லாமே அவன் போல் உள்ள அணுகுண்டுகளால் வந்த அணுகுண்டு தான்.
உலகை அழிப்பதற்கே பிறந்திட்டான்… அணுவை எல்லாம் அணுகுண்டாக்கி விட்டான்.
1.அணுவைப் (ஆவனை) பிழைக்கச் செய்ய ஜெபிக்கின்றார்களாம்
2.கோவில்களில் எல்லாம். அவன் ஜெப நிலையைப் பார்த்தாயா அவனுக்காக இவர்கள் எல்லாம் ஜெபிக்கின்றார்களாம்.
3.அவன் விட்டு அணுகுண்டுகள் எல்லாம் இவர்கள் உடலில் ஏறிவிடும்.
4.ஜெபிக்கட்டும்… ஜெபிக்கட்டும்… கலியுகம் மாற வேண்டாமா…? அதற்காகத்தான் இந்த ஜெபம் எல்லாம்.
நல் மணத்தை எடுத்து நல் மூச்சை நீ விட்டு ஜெபித்திடப்பா அழகாக. உன் நிலையில் சாந்தம் வேண்டும் என்பதன் பொருள் எல்லாம் இதுவே தான்.
ஆவி உலகத்தன்மைகளைப் பற்றி அடுத்தது சொல்கின்றேன். ஒரு நிலையில் நீ இருக்க உன் கண்ணை அடைத்திட்டேன். சொன்னவுடன் திறந்திடுவாய்… சொன்னதெல்லாம் மறந்திடுவாய்… அதற்காகத்தான் இந்நிலையைத் தந்திட்டேன்.
பசியின் நிலையும் ஒன்றுதான் பெரும் பணத்தின் நிலையும் ஒன்று தான் பசி வந்ததும் சாப்பிட்டுவிட்டுப் போதும் என்றான பிறகும் அந்தப் பசி வந்து விட்டால் மீண்டும் புசித்திடுவான் உணவையே.
பணத்தின் நிலையும் இதுவே தான். பணம் பணம் என்கிறது இவ்வுலகம் பசியும் பணமும் ஒன்றேதான் இன்ப வாழ்வைத் தந்து விட்டேன் என்று சொன்னால் இன்பமெல்லாம் என்னவென்று எண்ணுகின்றாய்…?
1.பணம்தான் இன்பம் அல்ல.
2.இன்று இருக்கும் உன் தியான நிலை தான் இன்பமப்பா.
பசியின் தன்மை அடக்கி விட்டால் பாடலின் தன்மையும் புரிந்துவிடும் (உன் நிலையை மாற்றிக் கொண்டாய்… இதை ஏற்கும் நிலை உனக்கு இல்லை). பெரும் பசியைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு நாள் போதாது. இன்னொரு நாள் சொல்கின்றேன்.
1.எங்கு சென்றாலும் உன் நிலையை மறந்திடாதே
2.தியான நிலைக்கு வந்து விட்டாய் தினம் தினம் தியானம் செய்.
3.உன் மொழியிலேயே நானும் வந்து பேசுகின்றேன்
தீப விளக்கை ஏற்றி விடு…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.