தியானம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை தரம் “புருவ மத்தியில்…” நினைக்கின்றீர்கள்…?

Third eye soul - bliss

தியானம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை தரம் “புருவ மத்தியில்…” நினைக்கின்றீர்கள்…?

 

உதாரணமாக சிலர் சங்கடமாகப் பேசுகிறார்கள்… அல்லது அவசியமில்லாததைப் பேசுகிறார்கள்… இதை எல்லாம் சந்தர்ப்பத்தால் பார்க்க நேருகின்றது,

அப்பொழுது உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…? ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் சாக்கடை நீர் போகின்றது. கல்லைக் கொண்டு எவனோ எறிகின்றான். சாக்கடையில் விழுந்து நம் மீது அது பட்டு விடுகிறது.

அல்லது ஒரு பன்றி சாக்கடைக்குள் இருந்து எழுந்து போகிறது. வாலை வீசிக் கொண்டு போகிறது. நம் மீது அந்த அழுக்கு பட்டுவிடுகிறது…?

நல்ல சட்டை போட்டுச் சுத்தமாகப் போனேனே… இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்லி விட்டு
1.அடுத்து என்ன செய்கின்றோம்…?
2.அதைத் துடைக்கத்தானே முயற்சிக்கின்றோம்…!

ஐய்யய்யோ.. இப்படிப் பட்டு விட்டதே…! ஐய்யய்யோ…! இப்படிப் பட்டு விட்டதே…!” சொல்லிக் கொண்டே மட்டும் இருக்கின்றோமா…? இல்லை. புறத்தில் அழுக்குப் பட்டால் உடனே அதைத் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா…!

அதே போல அகத்திற்குள் வரும் அழுக்குகளைத் துடைக்க வேண்டும் என்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் கண் கொண்டு பார்த்த தீமையான உணர்வு நம் ஆன்மாவிற்குள் (நம் நெஞ்சுப் பகுதிக்கு முன்பாக) வருகின்றது. ஆன்மாவிலிருந்து மூக்க் வழி சுவாசிக்கும் பொழுது உயிரிலே படுகின்றது. உயிரிலே பட்டதும் உணர்ச்சிகளாகி இந்த உணர்வுகள் தான் அறியச் செய்கிறது. உடல் முழுவதும் பரப்பச் செய்கிறது.

அப்பொழுதது உங்கள் நினைவை எங்கே கொண்டு வரச் சொல்கிறேன்…?
1.யாம் உபதேசித்து உங்களிடம் பதிவாக்கிய உணர்வுகள் இங்கே இருக்கின்றது
2.ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவை உயிரிடம் ஒனறிப் புருவ மத்தியில் நினைக்க வேண்டும்
3.கண்ணின் நினைவை உயிருடன் சேர்த்தால் “அகக்கண்…!”
4.அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த இடத்தில் அடைக்கப்படும் பொழுது
5.தீமைகள் எதுவுமே புகாதபடி தடுக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று மேலே சொன்ன மாதிரி இடைமறித்து இப்படி உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் யாரும் தவறு செய்வதில்லை. ஆனால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் நம்மைக் குற்றவாளியாக ஆக்குகின்றது. இது நிச்சயம்…!

உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதைத் துடைத்துவிட்டு
1.யாரை நாம் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று இதைக் கலந்து
3.இந்த அருள் உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்
4.நமக்குள் வருவது இப்படி மாற்றம் அடைந்து விடுகிறது.
5.இதை நாம் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வருகின்றோம் நமக்கு முன் உள்ள ஆன்மாவில்…! (இது முக்கியம்)

ஏனென்றால் அவன் நினைவு வந்ததும் எடுத்துக் கொடுப்பது ஆன்மாவாக இருந்தாலும் நாம் இப்படி மாற்றி பழகியவுடன்
1.அவன் நினைவை நமக்கு\ள் இழுக்காதபடி
2.துருவ நட்சத்திரத்தின் நினைவு வந்து நமக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

இது அரும் பெரும் சக்தி… நாம் அதை எடுத்து…எடுத்து…எடுத்து…! இதைக் கூட்டிப் பழக வேண்டும். நாம் எல்லோருமே இதைப் பழக வேண்டியது மிகவும் அவசியம். (பெரும்பகுதியானவர்கள் புருவ மத்தியை நினைப்பதில்லை – அதை மாற்ற வேண்டும்)

புருவ மத்தி தியானம் – பயிற்சி

துருவ தியானத்தின்… துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்

LTM - Polaris

துருவ தியானத்தின்… துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் அனைவரும் பெறக்கூடிய சக்திக்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன். பதிவாக்கினாலும் அதை மீண்டும் பெறுவதற்கு நினைவுபடுத்துகிறேன், ஏனென்றால் பல நிலைகள் உங்களை மூடி மறைக்கின்றது.

இப்பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் படிக்கும் பொழுது உடனே அது வீரியம் பெறும். இங்கே நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அடுத்தாற்போல் ஒரு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வீர்கள்…!

1.பார்…! சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…?
2.இங்கே இப்படிச் சண்டை போடுகிறார்கள்..! என்று நான் சொல்வதை உடனே விட்டுவிடுவீர்கள்…!
3.சண்டையிடுபவர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்வீர்கள்.
4.அப்பொழுது அந்தத் தீய அணுக்களுக்குச் சாப்பாடு நிறையக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் அதற்கு ஏற்கனவே வீரியம் அதிகம். ஆகவே அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாக இருக்கும் பொழுது அதை மாற்றும் சக்தியை எடுத்து… அதை வலுவாக எண்ணி… சண்டையிடுபவர்களின் உணர்வுகளை அடக்கச் செய்ய வேண்டும்.

அப்படி என்றால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும் (துருவ தியானம்). அதை வைத்துத் தான் தீமைகளை அடக்க வேண்டும்.

சண்டை செய்கிறார்கள் என்றால் நாம் கண்ணில் பார்க்கின்றோம். அந்த மனிதர்களைப் பதிவாக்கிவிடுகின்றோம். தவ்று செய்கிறார்கள் என்று பார்க்கிறோம்… அந்த உணர்வை நுகர்கின்றோம்… அதே அணுவாக நம் உடலில் மாற்றிவிடுகின்றது.

இங்கே உபதேசத்தைக் கேட்கின்றீர்கள்.
1.ஆனால் நான் ஒருவன் தானே இங்கே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் நீங்கள் பார்த்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லவா..!
3.அதைப் பார்த்ததும் அது தான் உங்களுகுள் பெருகுகின்றது. (நான் சொல்வது சிறுத்துவிடுகின்றது.

கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுகின்றோம். அங்கே மற்றொருவரும் வந்து கும்பிடுகின்றார்.

நாம் கும்பிடும் பொழுது அவரைப் பார்த்தவுடன் அவர் பல தவறுகள் செய்பவர் என்று தெரிகிறது. அர்ச்சனை செய்து… அந்தப் பரிவட்டம் கட்டி… அபிஷேகம்… ஆராதனை…! என்று பல நிலைகள் அவருக்கு நடக்கின்றது.

1.எத்தனையோ கொலை செய்கின்றான்
2.அவனுக்குச் சாமி எல்லாம் கொடுக்கின்றது… உதவி செய்கின்றது பார்..!
3.கோவிலையே அந்த நேரத்தில் வெறுக்கின்றீர்கள்… இல்லையா…?

ஆக கோவிலுக்குப் போன இடத்தில் ஒரு தவறு செய்பவன் அபிஷேக ஆராதனை செய்து அவனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தவுடன் உங்களுடைய எண்ணம் எப்படி வருகிறது…?

மற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்தவுடன் “என்றைக்குத் தான் இது நல்லதாகப் போகிறதோ…? தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றீர்கள். அப்பொழுது அந்த எண்ணத்திற்குத்தான் சக்தி கொடுக்கின்றீர்கள்.

அந்த நேரத்தில் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்ற முடிகின்றதா…? என்றால் இல்லை..! அந்த உணர்வுகளே வருவதில்லை.

அதை எல்லாம் மாற்றுவதற்காக வேண்டித்தான் இந்தக் காலைத் துருவ தியானத்தை முக்கியமாக உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

1.ஈஸ்வரா…! புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று எண்ணி
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கோபம் வெறுப்பு வேதனை போன்றவைகளை உடனே துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும், இங்கே வருவோர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் காணும் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தச் சோர்வு வராது. மன பலம் கிடைக்கும். தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும்.

விளக்க உரையுடன் “தியானமும் பயிற்சியும்”

super-computer

விளக்க உரையுடன் “தியானமும் பயிற்சியும்”

உதாரணமாக வேதனைப்படும் ஒருவரைப் பார்த்தால் அந்த உணர்வு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அந்த விஷத்தின் வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

பின் நம் உடலில் உள்ள உணர்வுகள் எந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் வெளி வந்ததோ அதை அனைத்தையும் நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

அப்படி மோதச் செய்யும் பொழுது அந்த வேதனையான உணர்ச்சியின் இயக்கமாக எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளில் நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது. எப்படி…?

சிறு குடல் பெரும் குடல்:-
1.அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் உமிழ்நீராக மாறும் பொழுது
2.சிறுகுடல் பெரும் குடலில் உள்ள அணுக்களை மயக்கமடையச் செய்கின்றது
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் நஞ்சாகக் கலந்து அங்கே நஞ்சான அமிலங்களாக மாறிவிடுகின்றது.
4.அப்பொழுது நமக்குக் குடல் உபாதைகள் எல்லாம் வந்துவிடுகின்றது.

கணையங்கள்:-
இதைக் கடந்து இந்த அமிலங்கள் அடுத்த உறுப்புக்குள் சென்றால் நம் கணையங்களை உருவாக்கிய அணுக்களில் அங்கேயும் சிறு வேதனை வரும்.

கல்லீரல் மண்ணீரல்:-
கணையங்களைச் சீர்படுத்தும் நிலை இல்லை என்கிற பொழுது அந்த அமிலங்கள் நம் கல்லீரலிலும் மண்ணீரலிலும் கலக்கின்றது. அப்பொழுது அங்கிருக்கும் அணுக்களும் இந்த விஷத்தால் சரியாக இயங்காதபடி வரும். கல்லீரலிலும் மண்ணீரலிலும் வேதனைகள் வரும்.

நுரையீரல்:-
நுரையீரலில் இது கலந்தால் அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் அனைத்தும் இதைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் சளி உருவாகின்றது.

நெஞ்சுச் சளி போன்ற நிலைகளும் ஆஸ்த்மா போன்ற நோய்களும் வேதனை அதிகமானால் டி.பி. போன்ற நோய்களும் உருவாகிவிடுகின்றது.

கிட்னி – சிறுநீரகங்கள்:-
1.அந்த வேதனை என்ற அமிலம் கலந்த உணர்வுகள் கிட்னிக்கு வந்தால்
2.அது இரத்தத்திலிருக்கும் நீரைப் பிரிக்கும் சக்தி இழந்து
3.இரத்தத்துடன் நீர் கலந்து சென்று உடல் முழுவதும் புஸ்… என்று உப்பிப் போகும்.
4.நாம் உடல் உப்பி இருக்கிறோம் என்று நினைப்போம்.
5.ஆனால் நமக்குள் சென்ற பின் இரத்தத்தில் கலந்து ஓர் நீர் சத்துள்ள இரத்தமாக மாற்றிவிடும்.
6.அதனால் பல உபாதைகளும் வருகின்றது. சோக நீர் போன்று ஆகி சோக நோய் உடலில் உருவாகிவிடுகின்றது.
7.சர்க்கரை உப்பு போன்றவற்றைச் சரியாகப் பிரிக்க முடியாதபடி அந்த குறைபாடுகளும் ஆகின்றது.

இருதயம்:-
அடுத்து அந்த உணர்வுகள் நம் இருதயத்தில் கலக்கப்படும் பொழுது இருதயம் பலவீனமாகி விடுகின்றது. நம் எண்ணம் சொல் செயலைச் சீராக இயக்காதபடி ஆகிவிடுகின்றது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த நிகழ்ச்சிகள் நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை எல்லாம் பாழாக்குகின்றது.

கண்களின் கருமணிகள்:-
அதே சமயத்தில் நம் கண்ணில் கவர்ந்த விஷத் தன்மை கருமணிகளில் தோய்ந்து விடுகின்றது.

வேதனப்படுவோரைப் பார்த்துவிட்டு
1.ஒரு நல்ல கணக்கை எழுத வேண்டும் என்றாலும்
2.ஒரு நல்ல தொழிலைச் செய்ய வேண்டும் என்றாலும்
3.அந்த கருமணிக்குள் வேதனை என்ற விஷம் கலந்த பின்
4.அந்த நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது… சிந்தனையும் குறைகின்றது.

நரம்பு மண்டலம்:-
கண்களின் வழி அந்த வேதனை என்ற விஷம் நரம்பு மண்டலங்களில் அதிகரிக்கும் பொழுது விஷத் தன்மை தோய்ந்து கை கால் குடைச்சல் என்ற நிலை வருகின்றது.

எலும்பு மண்டலம்:-
அதே உணர்வுகள் எலும்பு மண்டலங்களில் இது படரப்படும் பொழுது அந்த எழும்புகளுக்குள்ளும் இனம் தெரியாது வேதனைகள் வருகின்றது. எலும்புகள் தேய்மானம் போன்ற நிலை ஏற்படக் காரணம் ஆகின்றது.

தசை மண்டலம் தோல் மண்டலம்:-
அதே சமயத்தில் நம் தசை மண்டலங்களிலும் விஷத் தன்மை ஆகி தசை வலிகள் வருகின்றது. தோல் மண்டலங்களில் வரும் பொழுது இனம் புரியாத அரிப்புகளும் தோல் வியாதிகள் போன்ற நிலையும் வந்துவிடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் கூர்ந்து கவனித்த உணர்வுகள்
1.நம் நெஞ்சு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகிவிட்டால்
2.எந்தக் கண்ணால் வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அவர்களைப் பார்க்கும் பொழுது நினைவும்
3.அந்த நினைவானால் காற்றிலிருந்து சுவாசித்து நம் இரத்தங்களில் மாசுபடும் உணர்வே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்குத்தான் இந்தத் தியானம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தத் தியானத்தின் மூலம் உருவாக்குகின்றோம்.

1.நாம் கண் வழி எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.கண்ணிலிருந்து நரம்பு மண்டலம் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பால்
3.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய முடியும்.
4.மாசுபடும் இரத்தங்களை மாற்றிப் பரிசுத்தமாக்கி ஒவ்வொரு உறுப்பையும் சீராக இயக்க முடியும்.
5.நோய் வராதபடியும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் நிச்சயம் பெற முடியும்.

இந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…?

Strength-Courage

இந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…?

 

நம் வாழ்க்கையில் “நமக்கு இப்படியெல்லாம் ஒருவன் துரோகம் செய்தான்… அவனை விடுவதா…?” என்று இறுக்கப் பிடித்துக் கொண்டால் இந்த உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்வோம்.
1.அந்த உடலுக்குள் சென்று நோயைத்தான் உருவாக்குவோம்.
2.பின் அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலை நம் உயிர் உருவாக்கிவிடும்.

அதே போல் நம் பையன் மேல் அதிகப் பற்றும் பாசமாக இருந்தால் அவன் வழியில் அவன் உடலுக்குள் சென்றுவிடும். ஏனென்றால் தன்னுடைய குழந்தைகளின் மீது மிகுந்த ஆசையாக இருக்கும் பொழுது சந்தர்பப்பத்தால் ஏற்பட்ட இன்னல்களால் “தன்னால் முடியவில்லை” என்ற நிலையில்… தாங்காதபடி தற்கொலை செய்து கொண்டால் அந்த நிலை ஆகிவிடும்.

எந்தக் குழந்தை மீது பாசமாக இருக்கின்றதோ அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று தற்கொலை செய்யும் பொழுது “எத்தனை வேதனை இருந்ததோ” அதை எல்லாம் அந்தக் குழந்தை உடலிலும் உருவாக்கும்.
1.குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று உருவான அந்த நல்ல உணர்வுகள்
2.கடைசியில் குழந்தையைக் காக்க முடியாது போய்விடுகின்றது.
3.(இதை எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்)

ஏனென்றால் இன்று தீவிரவாதம் என்ற நிலையில் உலகம் முழுமைக்குமே விஷத் தன்மை பரவியிருக்கும் நேரத்தில் வெறித் தன்மையாகப் பிறரைத் தாக்கிக் கொல்லும் உணர்ச்சிகளே அதிகமாகின்றது.

அந்தக் கொல்லும் உணர்ச்சிகள் உடலிலே சேர்க்கப்படும் பொழுது மனித நிலையையே இழக்க நேர்கின்றது. மிருகங்கள் மற்றதை அசுரத்தனமாகத் தாக்கிக் கொல்வது போல் இந்த அசுர உணர்வுகளை உடலில் சேர்த்தவுடனே அசுர உணர்வின் அணுக்கள் நமக்குள் அதிகரித்துவிடுகின்றது.
1.மனிதனுடைய சிந்தனை இழக்கப்பட்டு
2.மனிதனும் மிருகச் செயல்களைச் செயல்படும் தன்மைக்கே இன்று மாறிவிட்டான்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட உணர்வுகள் அனைத்தும் அதே சமயத்தில் மதம் இனம் மொழி என்ற நிலைகளால் தீவிரவாதம் என்று ஏற்பட்ட விளைவுகளாலும் உடலுக்குப் பின் நாம் மிருகங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.
1.இன்று நாம் மனிதனாக இருந்தாலும் மனிதனின் உணர்வுகள் இழக்கப்பட்டு
2.மிருகத்தின் உணர்வுகளாக மனிதன் இப்பொழுது இயக்கும் காலமாக மாறிவிட்டது.

இதைப் போன்ற நிலைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கிலிருந்து ஆறு மணி வரையிலும் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை முறைப்படி துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து வாழ்க்கையில் அவ்வப்பொழுது வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தால் அது நமக்குள் உட்புகாது தடுத்துப் பழகுவதே துருவ தியானத்தின் நோக்கம்.

ஆகையினால் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் கஷ்டங்களைக் கேட்டறிந்தால் அறிந்தபின் உடனே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் செலுத்திவிட்டு
2.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
3.எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்கி ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்தித் தியானித்தால்
4.நம் உடலில் உள்ள அணுக்கள் மற்றவர் சொல்லும் கஷ்டமான உணர்வுகளை நம் உடலில் சேராது அது நீக்கிவிடும்… சுத்தப்படுத்திவிடும்…!

அதற்குப் பின் யார் கஷ்டம் என்று சொன்னார்களோ அவர் உடலிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாய்ந்து அவர் உடலில் உள்ள கஷ்டங்கள் நீங்கி அவர் உடல் நலம் பெறவேண்டும் அவர் குடும்பம் நலமாக வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும்.

1.இதை நாம் வைராக்கியமாகச் செயல்படுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகின்றது.
3.அதே சமயத்தில் நமக்கும் நல்லதாகின்றது.
4.நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்து விடுகின்றது.
5.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நிலை பெறுகின்றோம்.

தியானத்தின் ஏணிப்படிகள்

Concentration - Meditate

தியானத்தின் ஏணிப்படிகள்

 

தியானமிருக்கும் பொழுது நாம் துருவ மகரிஷியை எண்ணுகின்றோம். துருவ நட்சத்திரத்தை எண்ணுகின்றோம். அதன் வழி கொண்டு சப்தரிஷி மண்டலங்களுடன் நம் நினைவை இணைக்கின்றோம்.

ஆறாவது அறிவு கொண்டு துருவ மகரிஷி வெளிபடுத்திய உணர்வு கொண்டு தனக்குள் பெற்று ஏழாவதாக ஒளியின் சரீரம் பெற்று மண்டலமாக இயங்கிக் கொண்டுள்ளதுதான் சப்தரிஷி மண்டலம்.

இந்தத் தொடர் வரிசையில் நம் நினைவினை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து விடுகின்றோம்.
1.இதைப் பற்றுடன் பற்றி ஏணிப் படிகளில் மேலே போகிற மாதிரி 1, 2, 3 என்று அதோடு இணைத்து விடுகிறோம்.
2.இது மிக முக்கியம். வரிசைப் படுத்தி இதைக் கொண்டு போக வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் சேர்க்க வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் பிறவிக் கடனை நீக்கிச் சென்றவர்கள். அவர்களை எண்ணத்தால் கவர வேண்டுமென்றால் நமக்கு அந்தச் சக்தி தேவை.

அந்த சக்தியைப் பெறுவதற்குத்தான்…
1.மகரிஷிகளின் உணர்வினை அடிக்கடி உங்களுக்குள் பாய்ச்சப்பட்டு
2.ஆயிரக்கணக்கானோர் உணர்வுகளில் அது சேர்க்கப்பட்டு
3.அவர்கள் உணர்வின் வலுவைப் பெற்ச் செய்கிறோம்.

தியானத்தில் அமர்ந்துள்ள அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற “ஒருங்கிணைந்த வலுவைக் கொண்டு வருகின்றோம்…!”

குருநாதர் காட்டிய வழியில் அந்த வலுவைக் கூட்டி எண்ணி அதை ஆழமாகப் பதிவு செய்யப்படும்பொழுது எல்லோருடைய எண்ணமும் சமமாகக் கிடைக்கின்றது.
1.அப்பொழுது அந்த ஒருங்கிணைந்த உணர்வுகள் காற்றிலுள்ள மகா ஞானிகளுடைய உணர்வோடு ஒன்றிவிடுகின்றது.
2.அதற்குச் சமமாகி விடுகின்றது.

ஒரு நூலைக் கட்டி ஒரு சாமானைத் தூக்கும்போது அது அறுந்து விடுகின்றது. பல நூல்களை இணைத்துக் கயிறாகத் தறித்துக் கடினமான சாமானையும் எளிதாகத் தூக்குகின்றோம்.

அதைப் போலத்தான் நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அவர் எதை எதை எல்லாம் உணர்த்தினாரோ அதை மனதில் வைத்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை கூட்டுத் தியானத்தின் மூலம் உங்களைப் பெறச் செய்கின்றோம்.

நன்மை பயக்கும் சக்தியை உங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றோம்…?

power of meditation

நன்மை பயக்கும் சக்தியை உங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றோம்…?

 

ஒருவன் தீமையை செய்கிறான் என்றால் அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில் தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார், நமது குருநாதர்.

1.தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும்,
2.மனிதன் அவைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன்.

அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்து விட்டால் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்.

மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கித் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி, அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றி தம்முள் நல்லுணர்வினை வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.

அவர்களைப் போன்று நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது
1.ஒருவன், நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும்
2.அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.
3.மகரிஷிகளின் அருளுணர்வுகளை நமது உடலில் கலக்கப்படும் பொழுது
4.நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும் அவைகளை
5.நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச் சக்தியாக மாறுகின்றது.
1.எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ
2.அந்த விஷம் ஊடுருவி,
3.நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச் செலுத்தும் பொழுது மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை எடுத்துச் சென்று உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி வேதனையை உருவாக்கும் அணுக்களை, வளர விடாமல் தடுக்கச் செய்கின்றது “மருந்துடன் கலந்துள்ள விஷம்…!”

இதைப் போன்று
1.நாம் எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ
2.அப்பொழுது மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தி நாம் பெற வேண்டும் எனும் உணர்வினை இணைத்து
3.நமது உடலுக்குள் செலுத்தி விட்டால்
4.அருள் ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு,
5.நமக்குள் வலு கொண்ட நிலையாக மாறுகின்றது.

தியானம் செய்ய விரும்புவர்கள் “முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது…!”

telepathy meditation

தியானம் செய்ய விரும்புவர்கள் “முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது…!”

 

தியானத்தில் உட்கார்ந்ததும்,
1.இது முடியவில்லை…!
2.அது முடியவில்லை…!
3.உட்கார முடியவில்லை…! என்று எண்ணிக் கொண்டே உட்கார்ந்தால் இதுதான் வளரும்.

எப்படியும் ம்கரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெறும் பொழுது உங்களைச் சும்மா இருக்க விடாது.

அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும். இந்த உணர்வு வரும் பொழுது பிறருடைய தீமைகளை அகற்றும் வலிமையினைப் பெறுகின்றோம். தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

மனிதர்களான நாம் இந்தச் சரீரத்திற்குப் பின், இனி ஒரு பிறவியில்லை என்ற நிலையில் முழுமை பெறவேண்டும்.

முழுமை பெறும் நிலையாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில்
1.“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்”
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வுகளை மட்டும்,
3.நீங்கள் கூட்டி வளர்த்துக் கொண்டால் போதும்,

அகண்ட அண்டத்தையும், இந்தப் பிண்டத்தையும் இவைகளின் இயக்கத்தின் உண்மைகளையும் அறியும் தன்மை வரும். தீமைகளை அகற்றும் சக்தியும் வரும்.

நமது உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ, அதன் உணர்வை வளர்த்து அதன் உணர்ச்சியின் தன்மை கொண்டுதான் இந்த உடலை இயக்குகின்றது.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் நுகரப்படும்போது தீமையின் நிலைகளில் அந்த அணுக்கள் நமது உடலில் வளர்ந்து விட்டால் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அது தன் இனத்தைப் பெருக்குகின்றது.

தீமைகளை வென்ற அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி விட்டால் அதன் தன்மை கொண்டு தீமைகள் வராது காக்கும் நிலையினை நம்முள் உருவாக்குகின்றது.

தியானம் செய்தால் நல்லதாகும்…! என்று சொன்னாலும் காசைச் செலவழித்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள்

Power of dhiyaanam

தியானம் செய்தால் நல்லதாகும்…! என்று சொன்னாலும் காசைச் செலவழித்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள்

நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அனுபவத்தின் தன்மையை ஏராளமான பேரைச் சொல்லலாம்.

இந்த மாதிரி அனுபவத்தை எனக்குக் கொடுத்து, ஒவ்வொரு நிலைகளிலும் உங்களை நீங்கள் நம்புங்கள்…! என்று பலருக்குச் சொல்லி வந்தாலும் கூட என்ன செய்கின்றார்கள்…?

அடுத்தாற்போல் தொல்லை வந்தால்…
1.யாம் சொன்ன பிரகாரம் ஆத்ம சுத்தி செய்வதை விட்டுவிட்டு
2.(இவர்கள் எண்ணி எடுப்பதை விட்டுவிட்டு),
3.ஏதாவது சாமியாரைத் தேடியோ அல்லது ஜோதிடக்காரரிடமோ தான் சென்று விடுகின்றார்கள்.

சாமி (ஞானகுரு) அன்று சொன்னார் நன்றாகியது. இன்று அவர் சொல்வதை எண்ணி, அந்த அருள் உணர்வுகளை எடுத்து நாம் மாற்றி அமைப்போம் என்ற அந்த மனது வருவதில்லை.

மனிதருடைய மனோ நிலை இன்று எப்படி இருக்கிறது..?

தியானத்தை சிரமப்பட்டு எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்குப் பதில் சாமியாரிடமோ, ஜோதிடக்காரரிடமோ சொல்லி காசைக் கொடுத்துவிட்டு மாற்றலாம் என்றுதான் இவர்களின் மன நிலைகள் வருகின்றது.

1.நம் எண்ணத்தால் வரும் தீமைகள் நமக்குள் விளைவதை, நம் எண்ணத்தால் எப்படி மாற்றுவது? என்பதை,
2.அந்த மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை,
3.ஆத்ம சுத்தி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உங்களிடம் கொடுத்தால்,
4.பயன்படுத்தத் தெரியாத நிலைகளில் சோம்பேறித்தனமாக இருப்பதால்தான் இந்த நிலை வருகின்றது.

உங்களை நீங்கள் நம்புங்கள் என்றுதான் சொல்கின்றேன். சாமியாரை நம்புகின்றீர்கள், ஜோதிடத்தை நம்புகின்றீர்கள்.

ஏன் இதையெல்லம் நீங்களே செய்யக்கூடாது?

யாம் சொல்லும் முறைப்படி இந்த அருள் உணர்வுகளை தியானத்தையும், ஆத்ம சுத்தியையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்றால்,
1.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
2.உங்களுக்கு நல்லதாகும் என்பதற்குத்தான் இதையெல்லாம் சொல்கின்றோம்.

துருவ தியானத்தின் முக்கியத்துவம் என்ன…?

dhuruva-meditation

துருவ தியானத்தின் முக்கியத்துவம் என்ன…? 

(1) அகஸ்தியன் இளம்பிஞ்சு வயதில் வானுலக ஆற்றலை நுகருகின்றான்

அகஸ்தியன் தன் தாய் கருவில் இருக்கும் பொழுதே அவன் சந்தர்ப்பம் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றல்களைப் பெற்றான். அவன் பிறந்த பின் வானை நோக்கிப் பார்க்கும் பொழுது வானில் உருவாகும் நஞ்சினைப் பார்க்கின்றான். அந்த நஞ்சினைப் பார்க்கும் திறன் அவனுக்குள் வருகின்றது.

சூரியனிலிருந்து வரும் அந்த அல்ட்ராவயலெட் என்ற நஞ்சினை அதனுடைய இயக்கத்தின் தொடரில் அவன் காணுகின்றான்.

சூரியன் பிரிக்கும் அந்த உணர்வையும் இந்த நஞ்சுகள் பரவி வரப்படும் போதும் நட்சத்திரத்திலிருந்து பிற மண்டலங்களிலிருந்து வரும் நஞ்சினை சூரியனின் காந்த சக்தி அணுக்களாக பரவச் செய்து அது பிரபஞ்சத்தில் பரவுவதையும் பார்க்கின்றான்.

தன் இளம் வயதில் அவன் அறியாதபடி இதையெல்லாம் அகஸ்தியன் காணுகின்றான். ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை, நுகர்ந்தறிகின்றான். அறிவின் தன்மை உணர்கின்றான்.

அவனுடைய வளர்ச்சியில் வரவர இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் தொடரை உணர்கின்றான். அவன் ஐந்தாவது வயது வரப்படும் போது அவன் தாய் தந்தையர்கள் மடிந்து விடுகின்றார்கள்.

அவர்கள் தாய் தந்தையர்கள் நஞ்சினை தன் உடலில் அதிகமாக சேர்த்துக் கொண்டதனால் நஞ்சினை அதிகமாகச் சுவாசித்ததால் அவர்கள் உடலிலே வளர்த்த நல்ல அணுக்கள் மடியத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால், நஞ்சின் தன்மை அதிகமான நல்ல அணுக்களுக்குள் இணைக்கப்படும் போது அந்த உடல் அது மடிந்து விடுகின்றது.

ஆனால் கருவில் வளர்ந்த அகஸ்தியனுக்குள் நஞ்சின் நிலைகள் இணைந்து, நஞ்சினை உணவாக எடுத்து அந்த நஞ்சினை தனக்குள் ஜீரணித்து அடக்கிடும் சக்தியாக அது விளைகின்றது.

1.பிறந்தபின் அகஸ்தியன் என்றும் அணுவின் ஆற்றலை அறியக்கூடிய சக்தியும்,
2.விண் உலகத்தை உணர்வின் அறிவாக தனக்குள் அறிந்திடும் உணர்வுகளும் பெறுகின்றான்.
3.அவ்வாறு தன் அறிவின் துணை கொண்டு வான்வீதியில் வானுலக இயக்கத்தைக் காணுகின்றான்.

(2) ஐந்தாவது வயதில் துருவத்தின் ஆற்றலை அறிகின்றான்

தனது ஐந்தாவது வயதில் வானயியல் தத்துவத்தை அவன் அறிந்து கொள்ளும் சக்தி பெற்று, விண்ணிலிருந்து வரும் சக்திகளை பூமி தன் துருவப் பகுதியின் வழியாகக் கவருவதை உணர்கின்றான்.

ஆனால் தாய் கருவில் இருக்கும் பொழுது பெற்ற நஞ்சை அடக்கும் இந்த உணர்வுகள் அகஸ்தியனுக்குள் விளைந்திருப்பதால் துருவப் பகுதியில் வரும் அந்த நஞ்சு கலந்த அணுக்கள் வருவதை இவன் கண்ணால் பார்க்கின்றான்.

பார்த்து இந்த உணர்வின் அலையை அவன் நுகர்ந்தாலும், நஞ்சினை அடக்கிடும் உணர்வுகள் இவனுக்குள் விளைகின்றது. அகஸ்தியன் தன் ஐந்து வயதில் துருவத்தின் ஆற்றலை அறிந்ததால் அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயரையும் வைக்கின்றார்கள்.

துருவத்தை நுகர்ந்தறிந்து வானயியல் தத்துவத்தை சொல்லால் வெளிப்படுத்துகின்றான். அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வின் எண்ணங்களை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து நமது பூமியில் அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது.

அலைகளாக மாற்றிய அந்த சக்திகள் இன்றும் உண்டு.
1.அதனைப் பெறும் தகுதியாக
2.நமது குருநாதர் அவர் பெற்ற சக்தியை எமக்குள் அது பதிவு செய்து
3.அதை உணரும்படியும் அதை நுகரும்படியும் அதை எமக்குள் வளர்க்கும்படியும் செய்தார்.

அவ்வாறு அவர் காட்டிய உணர்வின் அந்த அருள்ஞான வித்தை எமக்குள் பதிவாக்கப்படும் போது குரு காட்டிய அருள்நெறி கொண்டு அதன் உணர்வை யாம் நுகர முடிந்தது

அன்று துருவனால் வெளிப்பட்டதும் துருவனின் தாய் தந்தையர்கள் தனக்குள் பெற்ற அந்த உணர்வின் அலைகளும் இந்த பூமியில் படர்ந்து பரவி உள்ளதை குருகாட்டிய அந்த உணர்வின் வித்தால் அதை நுகர்ந்தறிந்து இப்போது உங்களுக்குள்ளும் யாம் உபதேசிக்கின்றோம்.

யாம் உபதேசிக்கும் அந்த உணர்வின் ஆற்றல்கள் வெளி வருவதை சூரியனின் காந்தசக்தி கவர்வதும் அதை நீங்கள் நுகரும்போது அதன் அறிவாக அந்த அணுவின் தன்மை உங்கள் உடலில் உருவாகின்றது.

(3) நஞ்சினை வென்ற துருவனின் உணர்வை, உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்களுக்குள் உருவாக்கச் செய்கின்றோம்

அப்படி உங்களுக்குள் உருவாகும் அந்த அணு எதிலிருந்து உருவானதோ, (துருவன் நஞ்சினை வென்ற) அந்த உணர்வை உணவாக உட்கொள்ளும் அணுவின் தன்மை அடைகின்றது. அந்த நிலை அடையச் செய்வதற்குத்தான் துருவ நேரத்தில் இந்த உபதேசம்.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து, இந்த மண்ணுலகில் வந்த நஞ்சினை வென்று, நம் பூமியின் துருவப் பகுதியில் நிலை கொண்டு இன்றும் விண்ணுலக ஆற்றலை தனக்குள் மாற்றிக் கணவனும் மனைவியும் இணைந்து துருவ மகரிஷியாகி நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சரீரத்தைப் பெற்றார்கள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திற9னை தனக்குள் உருவாக்கினார்கள். அதாவது, ஆறாவது நிலைகள் கொண்டு ஏழாவது நிலைகள் அடைந்ததை சப்தரிஷி என்றும், ரிஷித்தன்மை அடைந்ததை துருவ மகரிஷி என்றும் துருவத்தை நுகர்ந்து அறிந்ததனால் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

கணவன் மனைவி இருவரும் இன்று நம் பூமிக்கு வரும் அனைத்தையும் மாற்றி, அதை ஒளியின் சுடராக அவர்கள் உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.
1.தன் இனப் பெருக்கத்தை ஒளிச்சுடராக மாற்றிய அந்த உணர்வலைகள்
2.இன்று நமது பூமியில் பேரருள் பேரொளியாகப் பரவிக் கொண்டுள்ளது.
3.அவ்வாறு துருவப் பகுதியிலிருந்து வரும் அத்தகைய ஆற்றலைப் பருகுவதற்குத்தான் இந்தத் துருவ தியான உபதேசம்.

அவர்கள் எப்படி நஞ்சினை வென்று இந்த உடலிலேயே ஒளியாக மாற்றும் உணர்வுகள் பெற்றார்களோ அதை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்த வாழ்க்கையில் நம்மையறியாது எத்தனையோ விஷத் தன்மைகளை நாம் நுகர நேர்ந்து விஷ அணுக்கள் நமக்குள் உருவாகி இந்த மனிதனின் உடலை கரையச் செய்யும் அல்லது மாற்றி அமைக்கும் நிலைகளிலிருந்து நாம் தப்ப முடியும்.

வராகன் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்று எப்படி மனிதனாக உருவாக்கியதோ இதைப்போல மனிதனானபின் தீமையை வென்றிடும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு, நாம் அந்த தீமையை வென்றிட்ட அந்த துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற்றுவிட்டால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் போது அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடையலாம்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதை சந்தர்ப்பத்தால் நுகர்ந்தவர்கள் அனவரும் ஏழாவது நிலை அடைந்து, இன்று சப்தரிஷி மண்டலமாக சுழன்று கொண்டு உள்ளார்கள்.

அதனின்று வெளிப்படும் உணர்வினை, இன்று சூரியன் காந்த சக்தி கவர்ந்து துருவப்பகுதியின் வழியாக நம் பூமிக்குள் பரவிக் கொண்டிருக்கின்றது, பரவச் செய்து கொண்டிருக்கின்றது.

(4) செவிவழி உணர்ச்சியை ஊட்டி, கண் வழி கவரச் செய்கின்றோம்

அதைப் பருகும் நிலையாகத்தான் நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர் எந்தத் தருணத்தில் எமக்குள் உபதேசித்து அந்த உணர்வைக் கவரும்படி செய்தாரோ அதைப்போல் இந்தத் தருணம் துருவ தியான நேரத்தில் உங்களுக்குள் அதைப் பதியச் செய்கின்றோம்.

1.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் உணர்வை
2.சூரியன் காந்தசக்தி கவர்ந்த அலைகளாக மாற்றித் துருவத்தின் வழியாக நம் பூமிக்கு வரும் இந்த நேரத்தில்
3.அந்த அருள்ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற உங்களுக்குள் இப்பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றோம்.
4.அதாவது செவி வழி இந்த உணர்வின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டி
5.நினைவின் ஆற்றல் கொண்டு கண்களின் வழி அதை ஈர்க்கச் செய்வதற்குத்தான்
6.இந்தத் துருவ நேரத்தில் உபதேசிக்கின்றோம்.

(5) துருவத்தின் வழியாக துருவ மகரிஷியின் உணர்வை அனைரும் நுகர்வதற்கே துருவ தியானம்

1.அந்தத் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரத்துடன்
2.உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள்

ஆகவே அந்த உணர்வுகளைத் தூண்டச் செய்கிறோம். அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை உங்கள் கண்களில் நினைவாக்கப்படும்போது கண்களின் கருவிழி அந்த நினைவின் ஆற்றலை (அந்த துருவத்தின் ஆற்றலை) உங்கள் உடலுக்குள் ஊனுக்குள் பதிவாக்குகின்றது. உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன்கள் அதைக் கவரச் செய்கின்றது.

சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, நம் பூமிக்கு துருவத்தின் வழியாக வரும்
1.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை நீங்கள் நுகர்வதற்கும்
2.நுகர்ந்து அதை உங்களை சுவாசிக்கச் செய்வதற்கும்
3.உயிரின் துணை கொண்டு அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக உங்களுக்குள் உருவாக்கச் செய்வதற்காகவும்தான்
4.இந்தத் துருவ தியானத்தை அமைத்துள்ளோம்.

இந்த துருவத் தியானத்தை நமது குருநாதர் எவ்வாறு இத்தருணத்தில் எமக்குள் உருவாக்கச் செய்தாரோ அதே போன்று உங்களுக்குள்ளும் உருவாக்கச் செய்வதற்குத்தான் இந்தத் துருவ தியானத்தை வைத்தது.

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அதை வைத்துத்தான் உயிர் நம்மை இயக்குகிறது… ஆள்கிறது…!

divine breathing

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அதை வைத்துத்தான் உயிர் நம்மை இயக்குகிறது… ஆள்கிறது…!

 

அதாவது
1.எதை எல்லாம் நாம் எண்ணுகின்றோமோ
2,எதை எல்லாம் நாம் பார்கின்றோமோ
3.எதை எல்லாம் நாம் கேட்கின்றோமோ
4.எதை எல்லாம் நாம் நுகர்கின்றோமோ
5.அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றிக் கருவாக உருவாக்கி
6.”ம்…” என்று நம் உடலாக இணைத்து விடுகின்றது.
7.அதற்குப் பெயர் தான் ஓ…ம் நமச்சிவாய….! என்பது.

இப்படி ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய…! என்று நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தகைய குணங்களை எல்லாம் நுகர்கின்றோமோ அது அனைத்தையும் நம் உடலாக மாற்றுகின்றது.

அதே சமயம் நாம் எண்ணிய குணங்கள்… அந்த உணர்வுகள் எதுவோ “அதே குணங்கள் தான்” நம்மை ஆளுகின்றது.

1.கோபம் என்ற உணர்வை நுகர்ந்தால்… கோபத்தின் நிலை கொண்டு நம்மை ஆளுகின்றது.
2.வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்.. அந்த வேதனை என்ற உணர்வை வைத்து நம் உயிர் நம்மை ஆளுகின்றது.
3.வெறுப்பு என்ற உணர்வை நாம் நுகர்ந்தால்… வெறுப்பு என்ற உணர்ச்சிகளை ஊட்டி வெறுக்கும் உணர்வுடன் நம்மை ஆளுகின்றது.

ஆகவே நமது வாழ்கையில் எதை நுகர்கின்றோமோ அவை அனைத்தையும் நமது உயிர் நாம் எண்ணிய உணர்வு கொண்டு தான் நம்மை ஆளுகின்றதே தவிர தனித்து “எவரும் நமக்குள் ஒன்றும் செய்வதற்கு இல்லை…!”

ஒருவன் என்னைத் திட்டினான்… என்னைத் திட்டினான்…! என்ற உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தத் திட்டிய உணர்வுகள்…
1.நாம் எப்படிக் கெட்டு போக வேண்டும் என்று அவன் எண்ணினானோ
2.அந்த உணர்வு தான் நம்மை ஆண்டு நமக்குள் அந்த உணர்வின் தன்மை தான்ன் வரும்.

1.ஆனால் திட்டிய உணர்வு நமக்குள் புகாது தடுத்தால்
2.அருள் ஒளியை நாம் நமக்குள் நுகர்ந்து எடுத்தால்
3.அந்த இருளை அகற்றும் அருள் ஞானம் நம்மை ஆளத் தொடங்கும்…!

ஆகவே “நமது எண்ணமே நம்மை ஆளுகின்றது…!” என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து தீமையான உணர்வுகளை நுகராது… நம்மை அது இயக்காது.. தீமைகள் நம்மை ஆளாதபடி தடுக்க வேண்டும்.

பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன் என்ற நிலையில் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகரப் பழகுதல் வேண்டும். தீமை செய்யும் அணுக்கள் நமக்குள் உருவாகதபடி தடுத்தே ஆக வேண்டும்.