விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் சுவாசிப்பது மூஷிகவாகனா. ஒருவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அதைச் சுவாசித்தால் உயிரிலே பட்டு அந்த உணர்வின் வேகமாகத் துடிக்கும் பொழுது காளி.

காளி கோவிலிலே புலியைத்தான் வாகனமாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.மனிதன் தவறு செய்கிறான் என்றால் அதனைப் பார்க்கும் பொழுது நமக்குக் கோபம் வருகிறது.
2.அந்த கோபத்தைச் சுவாசித்தால் உயிரிலே பட்ட பின் காளியாக அது மாறுகின்றது.
3.உடலான சிவனோ ருத்ர தாண்டவமாக… “இருடா நான் பார்க்கின்றேன்” என்று இது போன்ற ஆட்டங்கள் ஆடுகின்றது.

அந்தக் கோபத்தின் உணர்வுகளால் அழிக்கும் செயலாக வந்தபின் அவன் பதிலுக்கு எதிர்த்து விட்டால் மீண்டும் அதே வேகங்கள் வருகின்றது.

அந்த வேகத்தால் அவனை அடித்து உதைக்கும் உணர்வைச் சுவாசித்தால் அத்தகைய அணுக்களின் தன்மை இந்த உடலிலே பெருகிச் சிறுகச் சிறுக விளைந்து இரத்தக் கொதிப்பாக மாறி விடுகின்றது.

1.அதன் அடிப்படையில் அடிக்கடி கோபங்கள் வந்தே தீரும்.
2.அவ்வாறு கோபமாகப் பேசப் பேச… கோபத்தை ஊட்டும் உணர்வின் அணுக்கள் உடலிலே விளைந்து நல்ல அணுக்களைக் கொல்லும்.

உதாரணமாக ஒரு விஷச் செடியின் மணத்தை மனிதன் நுகர்ந்து விட்டால் அது விஷமான அணுக்களாக உடலிலே விளைந்து விடுகின்றது. அத்தகைய விஷ அணுக்கள் நல்ல அணுக்களைக் கொன்று புசிப்பது போல…
1.கோபமான உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து விட்டால் அந்த உணர்ச்சிகள் மேலோங்கி
2.நம் உடலில் உள்ள நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் முறையாகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தோரைப் பாருங்கள். மேல் வலிக்கின்றது கை வலிக்கின்றது தலை வலிக்கின்றது தலை சுற்றுகிறது என்று எல்லாமே வரும்.

இது எல்லாம் மூஷிகவாகனா…! சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் நின்று அது வாகனமாக அமைந்து இத்தகைய உணர்வுகளை விளையச் செய்து விடுகின்றது.

அதற்குத்தான் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

புலி தனக்கு வேண்டிய இரை கிடைத்து விட்டது என்றால் சாந்தமாக அதைச் சாப்பிடும் நிலை இல்லை. ஆவேச உணர்வு கொண்டு தான் அந்த உணவை உட்கொள்ளும்.

இதைப் போன்று தான் கோபப்படும் ஒரு செயலை நுகர்ந்தோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது கொன்று விழுங்கும் நிலை வருகின்றது.
1.நல்ல உணர்வுகளுக்குச் செல்லும் உணவைத் தடைப்படுத்துகின்றது.
2.அப்படித் தடைப்படுத்தும் பொழுது கை கால்கள் சுருங்கி விடுகின்றது… அதனின் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதே போன்று தான் வேதனை வேதனை என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருப்போம் என்றால் இந்த வேதனை உணர்வுகள் உடல் முழுவதும் பரவிவிடும்.

ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் உடல் எப்படித் துவண்டு விழுகின்றதோ அதைப் போன்று இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது… உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைந்து கை கால்கள் செயலற்றதாக மாறுகின்றது.

வேதனையை அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது நமது சிறுநீரகங்களிலும் விஷத்தன்மை அதிகமாகி அதுவும் சீராக இயங்குவதில்லை. அது சீராக இயங்கவில்லை என்றால் சர்க்கரைச் சத்தையும் உப்புச் சத்தையும் சரியாக அது பிரித்துச் சமப்படுத்தாது.
1.உணவாக உட்கொள்ளும் அந்தச் சத்துகள் அனைத்தும் அப்படியே இரத்தத்தில் கலந்து அதனதன் வலு அதிகரிக்கப்படும் பொழுது
2.தீமையை விளைவிக்கும் அணுக்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது.
3.உறுப்புகள் செயலற்றதாக மாற்றிவிட்டால் கடும் நோயாக மாறி விடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள். அதிலே எதை நமது உடலாக ஆக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

விநாயகருக்கு அருகே அரச மரத்தை வைத்திருப்பார்கள். ஏன்…?

ஒரு குருவி அரசம் பழத்தை உணவாக உட்கொண்டு அது தன் மலத்தைக் கழிக்கும்போது அதனுடன் கலந்து வந்த அரசமர வித்து பாழடைந்த கட்டிடத்தில் விழுந்தால் போதும்.
1.காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை நுகர்ந்து அது செடியாக வளர்ந்து
2.விழுதுகளைப் பரப்பி நீர்களை உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது… செழித்து வளர்கின்றது.
3.வளர்ந்த பின் அந்தக் கட்டிடத்தையே கூட வீழ்த்துகின்றது.

இதைப் போன்று தான் அந்த அரச மரத்தின் நிலைகளுக்கொப்ப… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்…
1.தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் பூமியின் துருவப் பகுதியில் நின்று துருவத்தின் வழி
2.பூமிக்குள் வரும் சக்தியைத் தனக்குள் எடுத்துத் தன் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான்.
3.அதிலிருந்து வெளிப்படுத்தும் விழுதுகள் நம் பூமியிலே பரவிக் கொண்டே உள்ளது.

எந்த மனிதனின் நிலைகள் தொடர்பு கொண்டோமோ மனித உடலில் விளைந்த உணர்வுகள்… அவர்களை (மகரிஷிகளை) நாம் எண்ணி ஏங்கும் பொழுது நமக்குள் அது விளைந்து… நாமும் அவனின் அரவணைப்பில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஏனென்றால் அதன் வழியினைப் பின்பற்றிச் சென்றவர்கள் தான் இன்றும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

அதுவே மனிதனின் கடைசி எல்லை…!

பார்த்தது வேடிக்கை என்றாலும்… நம்மை அறியாமலே அது நோய்க்குக் காரணமாகின்றது

பார்த்தது வேடிக்கை என்றாலும்… நம்மை அறியாமலே அது நோய்க்குக் காரணமாகின்றது

 

நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. கோப உணர்வு கொண்டு ஒருவன் மற்றவனைத் தாக்குகிறான் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்க்க நேர்ந்தால் அவன் உடலிலே விளைந்த தாக்கும் உணர்வுகள் அந்தக் கார உணர்ச்சிகள் வெளிப்படுவதை அவன் உடலிலிருந்து வெளி வந்த அந்த உணர்வலைகளைக் கண் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

1.உற்றுப் பார்த்த இந்த உணர்வின் சத்தைக் கண்கள் ஊழ்வினையாக நமக்குள் பதிவு செய்கின்றது.
2.பதிந்த உணர்வுகளை நாம் ஈர்க்கப்படும் பொழுது உடலுக்கு முன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உயிருக்குள் படும் பொழுது எரிச்சலும் வேதனையும் வருகிறது.

நல்ல குணம் கொண்டு பார்ப்பதனால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு “சப்” என்று இருக்கும் பொருளுக்குள் காரத்தை இணைத்து விட்டால் “காரத்தின் சுவையே” முன்னாடி வரும்.

இதை போலத் தான் தவறு செய்வோரை உற்றுப் பார்த்து வேகமாக “இப்படிச் செய்கிறானே…” என்று அந்தக் கொடூர உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது இந்த உணர்வை நம் கண் கவர்ந்து உடலுக்குள் பதிவு செய்ததை உடலுக்குள் விளையும் தன்மையாக மாற்றி விடுகின்றது.

நாம் எண்ணிய உணர்வுகள் அது ஆன்மாவாக வருகின்றது… சுவாசித்த பின் உயிரிலே ஒன்றுகின்றது. நல்ல குணங்களுடன் அது கலக்கப்படும் பொழுது அவன் செய்த தவறின் உணர்வாக உடலுக்குள் வேகமாக இயங்குகின்றது.

1.கோபமான அந்த உணர்வலைகள் நம் சாப்பிட்ட உணவுடன் கலந்து இரத்தமாக மாறுகின்றது.
2.இப்படி அந்த வேகமான நிலைகள் இரத்தமாக மாறி வரும் பொழுது இருதய வால்வுகளில் எரிச்சலும் வேதனையும் வருகின்றது.
3.எரிச்சலான உணர்வுகள் உடலுக்குள் வடிகட்டப்படும் பொழுது உடலெல்லாம் எரிச்சலும்
4.நம் சொல்லிலே எரிச்சலும்… எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் எரிச்சலும் நமக்குள் உருவாகத் தொடங்குகிறது.

நம்மைப் பார்ப்போர் ஆன்மாவில் இது பட்ட பின் நம்மை அறியாமலே அவர்களும் எரிந்து விழுவார்கள்… நம்மை வெறுப்பார்கள். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சண்டையிடுவதை வேடிக்கை பார்த்தோம். அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது “இரத்தக் கொதிப்பை உருவாக்கும் செல்கள்” அதிகமாக விளைந்து விடுகின்றது. நாம் மகிழ்ந்து உணர்ந்த உணர்வுகள் இனிப்பு… இதிலே கலக்காது பிரிந்து சென்று விடுகின்றது.

இனிமை கொண்ட நண்பர்களிடத்திலே பழகினால் அடிக்கடி அங்கே கோபப்படும் பொழுது “இவன் கோபக்காரன்…” என்று அவர் நம்மிடமிருந்து விலகுவது போல
1.சுவை மிக்க உணர்வை உருவாக்கி அந்தச் சுவையை அறிவிக்கும் உணர்வுகள் இரத்தத்தில் கலந்திருப்பினும்
2.காரத்தின் நிலைகள் எல்லை கடந்து சென்ற பின் இந்தச் சுவையான நிலைகள் பிரிந்து விடுகின்றது.
3.அதனால் ஜீரணிக்கும் சக்தி இழக்கப்பட்டுச் சர்க்கரைச் சத்தாக விளைந்து விடுகின்றது. இவ்வாறு
4.சர்க்கரைச் சத்து வரும் பொழுது இரத்தத்தில் அது அதிகரிக்க நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சோர்வடையச் செய்கின்றது.

அதே சமயம் இறுகிய உணர்வு கொண்ட இந்தக் காரத்தின் உணர்ச்சிகள் சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது கண்கள் சிவப்பதும்… இரத்தக் கொதிப்பு ஆவதும் இது இரண்டுமே எதிர்மறையாகும் பொழுது “மயக்கங்கள்” வருகின்றது.

மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்படுகின்றது… மனிதன் கீழே விழுந்து விடுகின்றான்.

சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் இரண்டும் வந்தாலும் சர்க்கரைச் சத்திற்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்பிற்கு ஒத்துக் கொள்ளாது. இரத்தக் கொதிப்பிற்கு மருந்து கொடுத்தால் சர்க்கரைச் சத்திற்கு ஒத்துக் கொள்ளாது.

நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற நிலைகளில் இயங்கும் பொழுது
1.சுவாசப் பையிலே சளிகள் உருவாகத் தொடங்கும்… மூச்சு இறைக்கவும் தொடங்குகிறது.
2.உடலுக்குள் வரும் உமிழ் நீர்களை இலகுவாக்கி அதனின் தன்மை குறைக்கும் நிலைகளில் ஜீரணிக்கும் சக்தியையும் இழக்கச் செய்கின்றது.

கோபத்தை அதிகரிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் அதிகமாக அந்தப் பித்தத்தைச் சுரக்கின்றது. எவ்வளவு கடினமான பொருளைச் சாப்பிட்டாலும் பித்த சுரப்பி இயங்கி சாப்பிட்ட ஆகாரத்தை ஜீரணிக்கின்றது.

ஆனால் கார உணர்வுகள் அதிகமாகும் பொழுது பித்த சுரப்பியின் இயக்கம் அதிகரித்து வேகமாகப் பீய்ச்சப்படும் பொழுது பசியும் அதிகரிக்கும். பசியினால் அதிகமாகச் சாப்பிடச் சாப்பிட பித்த சுரபி அதிகமாகச் சுரக்கச் சுரக்க விஷத்தின் தன்மை அதிகரித்து உடலில் உறுப்பின் இயக்கங்கள் குறைய நேர்கின்றது.

சீராக இயக்க வேண்டும் என்ற நிலை வரும் பொழுது சர்க்கரையின் தன்மை அதிகமாக இருப்பதால் அதற்கொத்த செயலைச் செயல்படத் தொடங்குகிறது. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கும் பொழுது இதனுடைய செயல் அதிகரிக்கிறது. உறுப்புகள் சோர்வடைகிறது.

அதே சமயத்தில் சிந்திக்கும் போது அதிகக் கோபமும் சுவையான பொருள்களை உட்கொள்ள முடியாத நிலையும் வரும்.

1.சர்க்கரைச் சத்து அதிகரிக்கப்படும் பொழுது செவ்வணுக்கள் வளராதபடி
2.நுகர்ந்த உணர்வுகள் மலங்களாகக் கழிக்கப்படும் பொழுது இரத்தத்தை நீராக மாற்றும் நிலை ஆகிவிடுகிறது.
3.இதனால் மற்ற உடலின் எஞ்சிய பாகங்கள் செயலற்றதாகிக் கிருமிகள் உருவாகித் தசைகள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்படுகின்றது.
4.விஷங்கள் அதிகரிக்கப்படும் பொழுது வேதனை அதிகரிக்கின்றது… உறுப்புகள் பலவீனம் அடைகின்றது.

இதற்கு மத்தியில் காரத்தின் நிலையும் உச்சகட்டம் அடையப்படும் பொழுது காரத்துடன் விஷத்தின் தன்மையும் கலந்து விட்டால் சிறு மூளையின் பாகம் தாக்கப்படும் பொழுது நரம்புகளைச் சுண்ட வைத்து விடும்..

ஒரு மிளகாயை வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்… வாயிலே உமிழ் நீர் காணாது போய் விடுகின்றது. இது போன்று நஞ்சின் தன்மை சிறு மூளையில் தாக்கப்படும் பொழுது “நரம்பியல்களை” அது முடக்கி விடுகின்றது.

உதாரணமாக கார்களில் பிரேக் இடுவதற்காக பிரேக் ஆயில் கொண்டு அழுத்தி அதன் மூலமாக இயந்திரத்தை இயக்கி அதை நிறுத்துவார்கள். இது போன்று தான்
1.நம் நரம்புகளுக்குள் உருவாகும் ஆசிட்டின் தன்மையின் இயக்கங்கள்
2.நாம் எண்ணப்படும் பொழுது அதிலிருக்கக்கூடிய காந்தப்புலனின் தன்மைகள் ஊடுருவி
3.கை கால்களை மடக்குவதும் அங்கங்களை இயக்குவதும் செயலாக்குவதும் இதன் வழி தான்.

தீமையான உணர்வுகளால் (கார உணர்ச்சிகளால்) சிறு மூளை தாக்கப்பட்ட பின் இரத்தக் கொதிப்பின் அழுத்தம் அதிகரிக்க அங்கே இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணிய அலைகள் செயலற்றதாகி விடுகிறது.
1.அதற்குள் அனுப்பும் ஆசிட் அதனுடைய செயலை இழந்துவிட்டால் கை கால் அங்கங்கள் சுருங்கி விடும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
2.சந்தர்ப்பத்தால் சண்டையிட்டதை வேடிக்கையாக பார்த்து நுகர்ந்தோம் அதனுடைய வளர்ச்சி தான் இந்த நிலைக்கு வந்து விடுகின்றது,

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

காரணம் அந்த மகரிஷிகள் எத்தகைய நஞ்சினையும் தன் உணர்வின் வலுவால் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு அதை அடக்கி ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

அப்படி விண் சென்ற மகரிஷிகள் எத்தனையோ பேர் உண்டு…!
1.அவர்கள் பெற்ற சக்திகளை நாம் பெற்றோம் என்றால்
2.நமக்குள் வரும் இத்தகைய தீமைகளை மாற்றி அமைக்க முடியும்… நோய் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

கால் வலியும் அதனின் பின் விளைவுகளும்

கால் வலியும் அதனின் பின் விளைவுகளும்

 

வேதனையான உணர்வை அதிகமாக எடுத்தால் அந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.புவியின் ஈர்ப்பில் நடந்து செல்லப்படும் பொழுது
2.நமது கால் பாதங்களிலும் முழங்கால் கீழ் உள்ள பாகங்களிலும் வேதனை உணர்வுகள் அதிகமாகப் பரவுகின்றது.

இதன் உணர்வுகள் கீழ்பாகங்களில் உறையும் தன்மை ஏற்பட்டால்
1.நாளடைவில் நாம் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுதோ படுத்திருக்கும் பொழுதோ
2.இதனின் உணர்வுகள் நமது இரத்தத்திலே கலந்து “மிகக் கடினமாக உறையும் தன்மை கொண்ட நிலையாகி விடுகின்றது…”

இப்படிப்பட்ட துகள்கள் இரத்தத்தில் கலந்து கொண்டால் ஆங்காங்கு இரத்த நாளங்களில் நுண்ணிய பாதை இருக்கும் பாகங்களில் இது உறைந்து நின்றால் அந்தந்த பாகங்களில் உள்ள உறுப்புகளை சீராக இயங்க விடாதபடி தடுக்கும்.

அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்கு உணவு போய்ச் சேராது தடைப்படுத்துவதனால் அந்த உறுப்புகளை உருவாக்கும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது. இதனால் அந்த உறுப்பின் தசைகள் குறைவடைகிறது.

இது போன்ற பிணிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ மருந்துகளைக் கொடுத்து பக்குவங்களைச் செய்து இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குகின்றார்கள். விஷம் கலந்த உணவின் உணர்ச்சிகளை இரத்தத்தில் கலக்கச் செய்கின்றனர்.
1.இதன் உணர்வுகள் ஊடுருவி அந்த விஷத் துகள்களை உடைத்தாலும்
2.இயற்கையில் செயல்படுத்தப்பட்ட விஷத்தின் இயக்கங்கள் உடல் முழுவதும் ஊடுருவிச் செல்கின்றது.
3.இரத்தத்தில் உள்ள உணர்வுகளைக் கவர்கின்றது.

ஆக விஷ உணர்வுகள் கொண்டு விஷத் துகள்களைக் கரைத்து விடலாம்.
1.”கரைத்த உணர்வுகள்” இரத்தத்தில் கலக்கின்றது.
2.கலந்த உணர்வோ நமது இருதய பாகங்களுக்குச் செல்லப்படும் பொழுது “அங்கே வலி ஏற்படுகின்றது…”

இங்கே வடிகட்ட முடியாத நிலைகளில் அவை நமது சிறு மூளை பாகம் செல்லும் பொழுது கண்களிலும் இதைப் போன்று உணர்ச்சிகள் தடைப்பட்டு கண்களில் ஈர்க்கும் தன்மை குறைந்து அங்கே அழுத்தம் அதிகமாக உருவாகும் பொழுது நமது கருவிழியில் திரைப்படமாகக் காட்டும் அந்தக் கல்லுக்கு அருகில் இருக்கக்கூடிய உணர்வுகளை இது மறைத்து விடுவதனால் “கண்களிலும் பார்வைக் குறைவு ஏற்படுகின்றது…”

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மையை அதிகமாக நுகர்ந்ததனால்… புவியின் ஈர்ப்பில் நாம் இருப்பதனால் உடலுக்கு வேளை இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் பொழுது “வேதனையினால் உருவான விஷத்துகள்கள்” கீழ் நோக்கி வந்து நமது காலின் கீழ் பாகங்களில் உறைகின்றது.

இதைப் போன்ற நிலைகள் நம் இரத்தங்களில் கலந்து இருதயத்திற்கும் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட நுண்ணிய பாகங்களுக்கும் சென்றால் அங்கே அழுத்தம் அதிகரித்து அதனுடைய பாகங்களும் அடைப்படுகின்றது.

சிந்தித்துச் செயல்படக்கூடிய மனிதராக இருப்பின் இந்த உணர்ச்சிகள் தேங்கி வரும் பொழுது நுண்ணிய அலைகளைச் சீக்கிரம் கிரகித்து அறியும் தன்மையும் இழக்கப்படுகின்றது.

நமது உடலில் பிற உறுப்புகளை இயக்கும் நுண்ணிய பாகங்களுக்கு ஆணையிடும் சிறுமூளை பாகத்தில் சிறு மூளை பாகத்தில் தடை ஏற்படும் போது நமது இயக்க உறுப்புகள் மிகவும் பலவீனமடைந்து விடுகின்றன.
1.அதனால் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்களுக்குச் சீராக உணவு கிடைக்காது அந்த உறுப்பும் பலம் இழந்து விடுகின்றது.
2.இதனால் உடல் நலியத் தொடங்குகின்றது.
3.விஷத்தின் ஆக்கிரமிப்பு அதிகமானால் நமது சிறுநீரகம் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை நிறுத்தி விடுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா…!

உதாரணமாக நாம் ஒரு புலியைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புலியை நுகர்ந்து பார்த்த பின் அதனின் வலிமையைக் கண்டபின் அச்ச உணர்வுகள் நமக்குள் தோன்றுகின்றது.

ஏனென்றால் புலி மிகவும் கொடூரமானது. அதன் உருவத்தைப் பார்த்தால் புலியிடமிருந்து வரும் உணர்வுகளை நுகர்ந்தால் ஓம் நமச்சிவாய. அதாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது இரத்தத்தில் கலந்து மனிதனாக உருவாக்கிய உணர்வுகளுக்குள் இது பதிவாகி நமது உடலில் நடுக்கத்தின் உணர்வு வரப்படும் பொழுது நமது உறுப்புகளின் இயக்கங்கள் மாறுபடுகின்றது.

1.இந்த நடுக்க உணர்வுகளால் கல்லீரல் வடிகட்டும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அது சமயம் நுரையீரலும் சீராக இயக்குவதில்லை.
3.இயக்க நிலைகள் பதட்டம் அடைவதால் இரத்தத்தில் உள்ள கழிவைப் பிரிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

இப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சீராக இயக்க முடியாத நிலை வருகின்றது.

அதே சமயம் பித்த சுரப்பியில் இத்தகைய விஷத்தன்மை அதிகமாகும் பொழுது பித்த சுரபியின் வளர்ச்சியும் அதிகமாகிறது. பித்தத்தின் தன்மை அதிகரித்தால் அதனுடைய இயக்கமும் அதிகமாகின்றது.
1.அந்த பித்தம் உடல் முழுவதும் பரவி மற்ற அணுக்களையும் நடுங்கச் செய்து பலவீனமடையச் செய்கின்றது.
2.நம்மிடத்தில் சிந்திககும் ஆற்றலைக் குறைக்கின்றது… தலை சுற்றலும் வருகின்றது.
3.ஏனென்றால் பயத்தால் நுகர்ந்த உணர்வுகள் கொண்டு அதற்குத் தக்க அணுக்களை நமக்குள் சேமித்து அதனின் உணர்வை வளர்க்கின்றது.

இப்படி பித்தத்தை நமக்குள் அதிகப்படுத்திப் பழகிவிட்டால் அதிகமான பித்தத்தைச் சுரக்கும் அடுத்த உடலை உருவாக்கி அதன் உணர்வுகளையும் ஜீரணிக்கும் சக்தி கொண்டதாக மாற்றுகின்றது.

இது போன்ற நிலைகளை எப்படி மாற்றுவது…?

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். எப்பொழுது தீமை என்று வருகின்றதோ துன்பம் வருகின்றதோ அடுத்த கணமே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய் அணுக்கள் துருவ நட்சத்திரத்தினுடைய பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
5.இப்படி ஒரு இரண்டு நிமிடம் அந்த உயர்ந்த சக்தியை எல்லா அணுக்களிலும் பெறச் செய்தோம் என்றால்
6.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த நஞ்சான உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெற விடாதபடி தடைப்படுத்துகின்றது.

தீமையிலிருந்து நாம் விடுபடுகின்றோம். இதை நாம் அவசியம் செய்து பழக வேண்டும்.

“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்

“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்

 

எப்பொழுது துன்பம் வருகின்றதோ அப்பொழுது ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு நீங்கள் எல்லோருமே வர வேண்டும்.

அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள் கண்களைத் திறந்தே ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி என் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று உடல் முழுவதற்கும் செலுத்தி உள் நினைவாகக் கொண்டு வாருங்கள். ஒரு ஐந்து முறை எண்ணுங்கள்.
1.இப்பொழுது அவரவர்கள் உடலுக்குத் தக்கவாறு அந்த உமிழ் நீர்கள் கூடி வரும்.
2.இது தான் உங்களுக்கு உயர்ந்த சத்தாக உடலுக்குள் சேருகின்றது.

இப்பொழுது கண்களைத் திறங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. கண்களைத் திறந்து ஏங்கியிருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

கண்களைத் திறந்து ஏங்கிய பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஒரு ஐந்து முறை இவ்வாறு எண்ண வேண்டும்.

அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்

1.உதாரணமாக வயிற்று வலியாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
2.அந்த வலிக்கும் இடத்தில் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து
3.அந்த வயிற்று வலி நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்
4.கண்ணின் நினைவை அந்த இடத்தில் செலுத்தப்படும் பொழுது வயிற்று வலி நீங்கும்.
5.குடல் புண்ணாக இருந்தாலும் அந்தப் புண் ஆற வேண்டும் என்றால் அதுவும் ஆறும்.

கேன்சராக இருந்தால் ஒரு 15 அல்லது 20 நிமிடம் இதைப் போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு எங்கே வலி தோன்றுகின்றதோ
1.வலி ஏற்படக்கூடிய இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள வேதனை அகல வேண்டும்.
2.நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று கண்களை மூடி நினைவைச் செலுத்தி அந்த இடத்திலே எண்ண வேண்டும்.

மீண்டும் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த நோய் நீங்க வேண்டும் என்று வலிக்கும் இடத்திலே எண்ணி விட்டு மறுபடியும் கண்களை மூடி எங்கே வலி ஏற்படுகின்றதோ அங்கே
1.வெளியில் இருந்து அந்தச் சக்திகளை இழுத்து அந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.”அபூர்வமான சக்தி வாய்ந்த மருந்தாக” அந்த நோய் இருக்கும் இடங்களிலே பாய்ந்து அந்த நோய்கள் குணமாகும்.

நாம் எடுத்துக் கொண்ட மூச்சினால் தான் நமக்குள் இந்த நோய்கள் வருகின்றது. ஞானிகளுடைய மூச்சலைகளை உடலில் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தக் குறித்த இடங்களில் அதைச் செலுத்தப்படும் போது
2.அது எவ்வளவு கொடிய நிலைகள் இருந்தாலும் அது மாறி அது நலம் பெறும். ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் வரை இவ்வாறு எண்ணலாம்

ஆஸ்த்மா நோய் இருக்கிறது என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ண வேண்டும்.

ஆஸ்த்மா நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி மறுபடியும் சுவாசத்தை உள்ளே செலுத்தி ஐந்து தடவை சொல்லி கண்களைத் திறந்து மூடி
1.இப்படித் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப பத்து நிமிடம் வரை இந்த மாதிரி சுவாசம் எடுத்தால்
2.காற்றிலிருக்கக்கூடிய நல்ல சக்திகள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு நல்ல மருந்தாக நம் உடலில் கலந்து
3.அந்த நோயை நீக்கக்கூடிய சக்தியாக வரும்.

ஏனென்றால் நமக்கு வரக்கூடிய நோய்களும் இதே போன்றுதான் அந்தந்த சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொண்ட சுவாசங்கள் அந்தந்த குணங்கள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு… ஆகாரத்துடன் கலந்து… அது நஞ்சாக மாறி… அது தான் நோயாக மாறுகின்றது.

ஆகவே அந்த நோய்களைப் போக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
1.வாக்கின் தன்மையாக இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.மகரிஷிகளின் அருள் ஞான வித்தினை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து ஊன்றுகின்றேன்.

வயல்களை எப்படிப் பண்படுத்தி நல்ல வித்துக்களைப் போட்டு நீரை ஊற்றிய பின் தன்னிச்சையாக காற்றிலிருந்து அந்த வித்தின் சத்தை எடுத்து வளர்ந்து அதனுடைய மகசூலை நாம் அறுவடை செய்து எவ்வாறு சுவை மிக்கதாக்கிச் சாப்பிடுகின்றோமோ இதைப் போன்று தான்
1.ஞானிகளின் அருள் வித்தை ஊன்ற உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த பண்பான நிலை ஆனபின் அருள் வித்தைப் பதிவு செய்து
2.உங்களை அறியாது வரும் துன்பங்களை நீக்கி அந்த மகரிஷிகளின் அருள் வித்தால் உங்கள் நோய்களும் நீங்கி
3.உங்கள் எண்ணங்களையும் அதன்வழி நலம் பெறும் சக்தியாகப் பிரதிபலிக்கச் செய்து
4.நல்ல உணர்வின் மூச்சுலைகளாக… எண்ண அலைகளாக நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கும் இது நல்லதாகின்றது.

“நல்லதைப் பெற வேண்டும்” என்ற உங்கள் மூச்சும் பேச்சும் உங்கள் உடலுக்குள் எப்படி நன்மை தருகின்றதோ இதைப் போன்று “உங்களைச் சார்ந்தவர்களுக்கும்” அவர்கள் எண்ணும் பொழுது அவர்களுக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.

நாம் இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்தப்புலனறிவுகள் கவரப்படும் பொழுது
1.இந்தக் காற்று மண்டலத்தில் அது பரவி
2.இந்த நாட்டு மக்களுக்கும் நல்லதை எண்ணுவோர் அனைவருக்கும் அந்த நல்ல உணர்வுகள் கிடைக்கப் பெற்று அவர்களும் நன்மை பெறுகின்றார்கள்.

மனிதனாக இருக்கக்கூடிய அனைவருமே நல்லது எண்ணுகின்றோம். ஆனால் வேதனை கலந்த உணர்வுகளைப் பரப்பப்படும் போது நல்லதைச் சிந்திக்கும் நிலையற்று இருக்கின்றது.

ஆகையினால் அதை எல்லாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி… மற்ற மந்திர ஒலிகள் எதுவும் கலக்காதபடி இயற்கையினுடைய தன்மைகளில் ஞானிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அருள் வித்தினை உங்களுக்குள் பதிவு செய்து
1.துன்பம் நேரும் பொழுதெல்லாம் வயல்களில் களை எடுப்பது போல
2.எப்பொழுது கஷ்டம் என்று வருகின்றதோ அந்தக் கஷ்டத்தை உள்ளுக்குள்ளே நுழைய விடாதபடி வேதனை வந்தாலும் அதை விடாதபடி
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனைகள் அகல வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து நோய்கள் நீங்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
6.அது எப்பேர்ப்பட்ட கடுமையான நோயாக இருந்தாலும் உங்கள் உணர்வால் போக்க முடியும்.

ஏனென்றால் இதைக் கேட்போர் உள்ளங்களில் வாக்காகப் பதிவு செய்கின்றேன். இதை மீண்டும் நினைவுபடுத்தும் போது காற்றிலிருந்து அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

உங்களை மீட்டிக் கொள்ள நீங்கள் தான் எண்ணி எடுக்க வேண்டும். சாமியார் செய்து கொடுப்பார் சாமி செய்து கொடுப்பார் ஜோசியம் செய்யும் தெய்வம் செய்து கொடுக்கும் என்று எண்ணுவதற்கு மாறாக “நீங்கள் எடுக்கும் அந்த உயர்ந்த எண்ணமே தெய்வமாகின்றது…”

1.நீங்கள் எண்ணும் எண்ணம் விதையாகி அந்த உணர்வின் செயலாக அதுவே உங்களுக்குள் நின்று தெய்வமாகி
2.எந்த உயர்ந்த எண்ணங்கள் எடுக்கின்றீர்களோ… அந்தத் தெய்வமாக இந்த சக்தி உள் நின்று உங்களுக்குள் செயல்படும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதற்குப் பதில் சாமி சொன்ன வழியில் அந்த உயர்ந்த சக்தியினை… அந்த ஆற்றலை நாம் பெற்றோமேயானால் நமக்குள் வரக்கூடிய துன்பத்தை நீக்க முடியும். நம் மூச்சும் பேச்சும் நம்மைச் சார்ந்தவருக்கும் அவர்களை நலம் பெறச் செய்ய உதவும் என்ற “இந்த எண்ண அலைகளிலேயே நீங்கள் செயல்படுங்கள்…”

அப்பொழுதுதான் இந்த நாட்டின் நிலையில் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே தன்னிலை அடைய முடியும். உயிரோடு ஒன்றிய உணர்வுகள் ஒளி பெற்று மனிதனான நிலையில் இன்னொரு உடல் பெறாதபடி இதையே ஒளிச் சரீரமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதை எல்லோருமே பெற முடியும்.

இப்படித் தான் இருக்க வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இல்லை. நீங்கள் நினைத்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

1.துன்பம் வரும் சமயத்தில் அது எப்படி நோயாகின்றதோ
2.துன்பம் வரும் போதெல்லாம் நோயாகும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி
3.அந்தத் துன்பத்தையும் நோயையும் உங்களால் நீக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!
1.ஆக “நமக்குள் நல்ல சக்திகள் இருக்கின்றது” என்பதைத் தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்
2.உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மிக மிகச் சக்தி வாய்ந்த அருள் வாக்காக இதை உங்களுக்குக் கொடுக்கின்றேன். எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நம் குணங்களைச் சமப்படுத்தத் தெரியாததால் வரும் தீமைகள்

நம் குணங்களைச் சமப்படுத்தத் தெரியாததால் வரும் தீமைகள்

 

இந்த மனித வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் அவசரம் வெறுப்பு வேதனை தன்னை அறியாமல் இப்படிப் பல நிலைகள் நமக்குள் வந்து சேர்ந்தது
1.நாம் பலவீனமாகும் பொழுது இந்த நினைவலைகள் தான் நமக்குள் வருகின்றது.
2.அந்த நினைவலைகளைத் துரித நிலையில் கொண்டு நாம் சுவாசிக்க நேர்கின்றது.

இவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அடிக்கடி நினைவு வரும் பொழுது நாம் உணர்வுக்குள் எடுத்து உடலில் சோர்வடையச் செய்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் உமிழ் நீராகச் சேர்ந்து நாம் சாப்பிட்ட சத்தான ஆகாரத்துடன் கலந்து அந்த சத்தினைச் செயலாக்க விடாதபடி அதையும் நஞ்சாக்கி விடுகிறது.

நஞ்சாக மாறி அதற்குள் விளைந்த இந்த உணர்வின் சத்துகள் நமக்குள் (சலிப்பு சஞ்சலம் வேதனை கோபம் குரோதம் என்று) கலந்து கொண்டால் நம் உடலுக்குள் கை கால் குடைச்சல் மூட்டு வலி வாத நோய்கள் போன்று உருவாகின்றது.

இதை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் பொழுது இந்த உணர்வின் வேகத் துடிப்புகள் இரத்தத்திற்குள் கலந்து… அதீதமான நிலைகள் இரத்தத்தின் துடிப்பு வேகமாகும் பொழுது “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பினால் எரிச்சலாகி…
1.அதனால் வேதனையின் உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது
2.நாம் மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வை அதாவது சர்க்கரை அந்த இனிப்பான சத்துகள்
3.மற்றதுடன் இணைந்து செயல்படாது அந்தச் சர்க்கரைச் சத்து தனியாகப் பிரிந்து விடுகின்றது.
4.அந்தச் சுவையான சத்து இதனுடன் இணையாதபடி விலக்கி விடுகின்றது.

உதாரணமாக இனிப்பை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகிய நாம் கடைக்குச் செல்லும் பொழுது இனிப்பை நாம் வாங்கிப் புசிக்கின்றோம். அதை ரசித்துச் சாப்பிடுகின்றேன்.

அதே போல ஒருவன் காரத்தை அதிகமாகப் புசித்துப் பழகியவன் அந்தக் கடையிலே வந்து காரத்தை வாங்கி அதை ரசித்துச் சாப்பிடுகிறான்.

அவனைப் பார்த்த உடனே என் வாய் எரிவது போல் எரிச்சல் ஆகின்றது. அந்தக் காரத்தைச் சாப்பிடுபவனுக்கோ நாம் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்க்கப்படும் பொழுது “இப்படிச் சாப்பிடுகின்றானே” என்று உமட்டல் வருகின்றது.

காரணம் இதற்கும் அதற்கும் எதிர் நிலை.

இதைப்போல நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இந்த உணர்ச்சிகள் நமக்குள் இரண்டறக் கலந்து
1.அது இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது எரிச்சலின் தன்மை பிரிந்து
2.அதே சமயம் சர்க்கரை இனிப்பான நிலைகள் இதனுடன் கலந்து இயங்காத நிலைகள் ஆகின்றது.

பால் பிருத்து விட்டால் எப்படி அதன் சத்தின் தன்மைகள் கெட்டுப் போய் விடுகின்றதோ அப்பொழுது அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் காண முடிவதில்லை.
அந்த வெண்ணையின் சத்து அது செயலிழக்கப்பட்டு விடுகின்றது.
2.நீரிலே இந்தச் சத்தின் தன்மை பிரிந்து விடுகிறது.
3.பிருத்த பாலிலிருந்து நாம் வெண்ணெய் எடுக்க முடியாது.

பாலைப் பக்குவமாகக் காய்ச்சினால் தான் அதனுடன் இரண்டறக் கலந்திருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுக்க முடிகின்றது.

இதைப் போன்று தான் உயர்ந்த சத்தின் தன்மையை எடுக்கும் நிலையில் ஆத்திரமும் வேதனையும் கலந்து அதிகமாக எடுக்கப்படும் பொழுது
1.இரத்தத்திற்குள் இரு முனையான இரு நிலையான நிலைகளாகச் செயல்படும் பொழுது
2.நல்ல உணர்வினைச் சேர்க்காவண்ணம் தடுத்துத் தனித்துப் பிரித்து விடுகின்றது.
3.காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலந்தால் தான் அது சுவை மிக்கதாக மாறுகின்றது.

ஒரு குழம்புக்குள் காரம் புளிப்பு மற்ற பொருள்களைச் சமமாகப் போடப்படும் பொழுது அது ருசியாக அமைகின்றது.

அதில் எத்தன்மை அதிகமாகக் கூடுகின்றதோ அதற்குள் நாம் இனிப்பையோ அல்லது எதைப் போட்டாலும் அந்த இனிப்பு இயங்கா வண்ணம் அதை ஒதுக்கி விடுகின்றது.

ஆனால் அதே சமயம் காரம் எவ்வளவு இருந்தாலும் இனிப்பை அதிலே எவ்வளவு சேர்த்தாலும் இதனுடன் இணைக்கச் செய்து காரத்தின் தன்மையைத் தான் காட்டுகின்றது.

ஆக… வேதனையான எண்ணங்கள் நமக்குள் உருவாகி விட்டால் அந்த விஷம் அதை நினைக்கும் பொழுதே மயக்கமும் மற்ற சோர்வான நிலைகளும் வந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.காரத்துடன் இந்த வேதனையான விஷங்கள் கலக்கப்படும் பொழுது
2.இனிப்பான சத்தைப் பிரிக்கப்படும் போது நம் உடலில் அது ஊடுருவி
3.இயக்க நிலை வரும் பொழுது இரு நிலைப் போராகி
4.எண்ணங்களை எண்ணும் பொழுது மயக்க நிலை வருகின்றது.

நாம் எண்ணி ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று நடக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் உடலை அழைத்துச் செல்லும் நிலைகள் இழந்து “மயக்க நிலை” வருகின்றது. அதே போல நம் உடலின் உறுப்புகளுக்குள் அதை இயக்கும் சக்திகளும் குறைகின்றது.

இயக்கச் சக்தி குறையப்படும் பொழுது விஷத்தின் உணர்வலைகள் அதிகமாகச் சேரும் பொழுது சுவைமிக்க நிலைகள் வரும் பொழுது
1.நாம் பேசிய உணர்வலைகள் சூரியனுடைய காந்தப்புலனுக்குள் பட்டு
2.வேதனை கொண்ட உணர்வுகள் விஷத்தின் தன்மையாக நம் ஆன்மாவிலே சேர்க்கப்பட்டு
3.நம் உடலில் இருக்கும் இனிப்பின் சத்து வெளிப்படும் பொழுது மற்ற கிருமிகள் தாக்கப்பட்டு
4.நம் உடலில் இருந்து வரக்கூடிய வாசனை அது கிருமிகளாக உருவாகின்றது.

கிருமியின் சத்து நமக்குள் உருவாகி நம் உடலில் எங்கே அது ஒட்டுகின்றதோ உடலிலே சிறு புண்ணாகி விடுகின்றது. புண்ணாகி விட்டால் அதனுடைய மலம் கழிக்கப்படும் பொழுது தசைகளைப் பூராம் அழிக்கும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

சர்க்கரைச் சத்து வந்தவர்களுக்கு “சிறிதளவு புண்ணானாலும் அதை ஆற்ற முடிவதில்லை…”

நாம் வேகமாக எண்ணங்களை எண்ணி… வேதனையான உணர்ச்சிகள் உந்தப்பட்டு
1.ஒரு பக்கம் நரம்பு அல்லது நம் சுவாசப்பையில் உள்ள குழாய்களோ அதீதமான நிலைகள் வேகத்தால் துடிக்க ஆரம்பித்தால் “பலூனைப் போல் உப்பி”
2.அந்த உணர்வின் தன்மை மூளை பாகம் இயக்கப்படும் பொழுது அந்த மூளையின் நரம்புகள் வீக்கமாகி
3.இரத்தக் கசிவாகி மனிதனை மாய்த்து விடுகிறது…. இருதய அடைப்பு என்றும் சொல்வார்கள் மூளைக் கசிவு என்றும் சொல்வார்கள்
4.ஆக நாம் தவறு செய்யாமலேயே நமக்குள் நல்ல உணர்வின் சத்தை இழக்கச் செய்து விடுகின்றது.

காரணம் சாதாரண மனிதர்களை எண்ணும் பொழுது இந்த நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதை யார் துடைப்பது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்

 

எந்த மனிதன் கோபிக்கின்றானோ வெறுப்படைகின்றானோ தற்கொலை செய்து கொள்கின்றானோ குரோதமான நிலைகளில் ஒருவனைத் தாக்குகின்றானோ இவையெல்லாம் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு இந்தக் காற்றிலே அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த மனிதனை நாம் பார்க்கப்படும் பொழுது
1.அந்த மனித உடலிலிருந்து வெளிப்பட்டதை
2.நமது கண் அந்த மனிதனை நெஞ்சு எலும்பில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

அவன் உடலிலிருந்து என்னென்ன நிலைகள் வெளிப்பட்டதோ அவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அல்லது வெறித்தனமாகப் பேசுகிறான் என்றால்
1.அதன் உணர்வுகள் நம் உடலில் பதிவாக்கி
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்த வெறித்தனமான சொல்லும் நமக்குள் அந்த செயலும் வருகின்றது.

அல்லது அவன் வெறித்தனமாகச் செயல்படுத்தும் போது அந்த உணர்வு நமக்கு அது பயமாக இருந்தால் அந்த நேரத்தில் வெறித்தன்மையான உணர்வுகள் நம் உடலில் பயத்தையே ஊட்டும். சிந்திக்கும் ஆற்றலையும் செயலற்றதாக மாற்றிவிடும்.

இப்படி
1.நாம் சந்தர்ப்பத்தால் சந்தித்த உணர்வுகள் எல்லாம்
2.நெஞ்சின் எலும்புக்குள் “எண்ணிலடங்காத வித்துக்களாக” ஊழ் வினையாக அது பதிவாகியுள்ளது.

இவை அனைத்தும் அதனதன் உணர்வுகளைக் கவர்ந்து அதற்கொப்ப நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அத்தகைய அணுக்கள் நம் உடலில் உருவாகத் தொடங்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.

இந்த இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளில் இவையெல்லாம் கலந்து விடுகின்றது ஆனால் உடலில் நல்லவைகளாக இருந்து வளர்ந்த இந்த உணர்வுகளில் நிலைகளில் நாம் படிப்படியாக வேதனைப்பட்டோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் நுகர நுகர நமது உடலில் அத்தகைய அணுக்கள் விளைந்து விடுகின்றது.

மீண்டும் அவர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நமக்கு வெறுப்பு பயம் கோபம் குரோதம் அது எந்தெந்த குணங்களோ… எண்ணும் போதெல்லாம் அந்த உணர்ச்சிகள் முன்னணியில் வந்துவிடுகிறது.

அப்பொழுது அதனால் நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்கும் வெறுப்பான குணங்களுக்கும் இது ஒன்றுக்கொன்று இந்த உணர்வலைகள் பாயப்படும் பொழுது
1.உடலுக்குள் பல விதமான வலிகள் பல கலக்கங்கள் நம்மை அறியாமலேயே ஏன் எதற்குச் சங்கடப்படுகின்றோம்…? என்று தெரியாது.
2.அத்தகைய உணர்வுகள் நம் உடலுக்குள் போர் செய்யத் தொடங்கி விடுகின்றது.

நம் கண்ணால் பார்த்தவுடன் அல்லது நினைத்தவுடன் அந்த அதிர்ச்சி வருகின்றது. அதே சமயத்தில் உடலுக்குள்ளும் அந்த அதிர்ச்சியின் உணர்வு தோன்றுகின்றது அன்றைய நிலைகளில். அப்போது நல்லதை எண்ணுவதோ அல்லது அதைச் செயல்படுத்துவதோ முடியாது.

அந்த வெறித்தனமான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி சிறு குடலுக்கு வரும் பொழுது வெறித்தனமான உணர்ச்சிகள் சிறு குடலை உருவாக்கிய அணுக்களை… (நாம் எப்படிப் பயந்தோமோ) அதனின் இயக்கத்தைத் தணியச் செய்து நாம் சாப்பிட்ட ஆகாரத்தை அஜீரணம் ஆக்கி விடுகிறது அல்லது விஷத்தன்மையான இரத்தமாக மாற்றி விடுகின்றது.

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் பெருங்குடலில் சேர்ந்தாலும் அதே வெறித்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது பயத்தின் உணர்வுகள் வந்து ஆகாரத்தை ரசமாக மாற்றும்போது அதிலேயும் இந்த விஷத்தன்மை கலந்துவிடுகிறது.
1.அவை நம் கணையங்களிலே சேர்க்கப்பட்டு அமிலங்களாக மாற்றும் போது
2.அந்த அமிலங்கள் கல்லீரல் மண்ணீரலிலே படும் பொழுது இதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.அந்தக் கல்லீரல் மண்ணீரலில் நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாக அதையும் சரியாக இயக்க விடாதபடி
4.இரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகப் பரவும் தன்மை வருகின்றது.

இப்படி இந்த விஷத்தின் தன்மை பரவி நுரையீரலுக்குள் சென்றபின் அதையும் சீராக இயக்காத படி அந்த நுரையீரலில் கலந்த பின் விஷத்தின் தன்மை நுகந்து சிந்திக்கும் தன்மையை இழந்து நம்மை அறியாமலே ஏன் எதற்கு என்று வெறி உணர்ச்சிகள் வருவதும் அல்லது சோர்வடைவதும் பயமடைவதும் வரும்.

அனால் நாம் தவறு செய்யவில்லை. இதே போல நமது உடலில் அடிக்கடி நிகழும் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.

வேதனைப்படுவது என்பது மனிதனைக் கொல்லும் நஞ்சு

வேதனைப்படுவது என்பது மனிதனைக் கொல்லும் நஞ்சு

 

ஒரு விஷம் தாக்கப்பட்டால் எப்படி உடல் எல்லாம் செயலற்றுப் போகின்றதோ “இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மையினால்”
1.உடலில் உள்ள மற்ற நுண்ணிய பாகங்களில் அது பட்டபின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலையாகி விடுகின்றது.
2.தசைகளில் மிஞ்சியுள்ள இரத்தத்தில் அதனுடைய உணர்ச்சிகள் கோபத்தை உண்டாக்குவதும் அங்கங்களைச் செயலற்றதாகவும் மாற்றி விடுகின்றது.
3.உடல்களிலே உணர்ச்சியற்ற நிலையும் உணர்வுகள் இழந்த நிலையில் நரம்புகளில் உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று பிரஷர் வந்தவருடைய நிலைகள் கை கால் அங்கங்கள் குறுகி விடுகின்றது.
4.சிறு மூளையில் இது தாக்கப்பட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்பொழுது கைகால் அங்கங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.
5.பித்த சுரப்பியில் நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் பித்தம் அதிகமானால் தலை சுற்றி கீழே எப்படி விழுகின்றோமோ இதைப் போல் ஒவ்வொன்றும் செயலற்றதாக மாறி அங்கங்கள் சோர்ந்து வீழ்ச்சி அடைந்து விடுகின்றது.
6.சுவாச உறுப்புகள் பலவீனம் ஆகிவிட்டால் சரியாகச் சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகி விடுகிறது.

இதைப் போன்று சிறுகச் சிறுக நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தால் நம்முடைய சுவாச நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக இயக்கவில்லை என்றால் ஆஸ்மா போன்ற நோய்களும் மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.

நாம் கூர்ந்து சிந்திக்கும் கண்களுக்கு… பார்வைக்குச் செல்லும் பொழுது வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது கண் கொண்டு ஒரு பொருளை நாம் காணுவது என்பது அந்த பொருளைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைந்து விடுகின்றது… மறைத்து விடுகின்றது.

பொருளைச் சிறிது நேரம் காணுவோம் என்றால் அல்லது அந்தப் போருளைச் செயல்படுத்த முடியாத நிலைகள் சோர்வடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் கண்ணில் இருக்கும் கருவிழியால் அது கவர்ந்தாலும் அதிலே எடுத்த அமில சக்தியின் தன்மை உடல் முழுவதும் ஊடுருவி அடையச் செய்யும் இந்த நாளங்கள் அது மங்கிச் செயலற்றதாகி விடுகின்றது.

இவ்வாறு நாம் அடிக்கடி செயல்படுவோமே என்றால் கருவிழிகளில் படும் பட உணர்வுகளை அது தெளிவாக எடுத்துக்காட்டாத நிலைகள் மங்கும் நிலை அடையப் படும்பொழுது பொருள் காணும் நிலைகளில் கவர்ந்த கருவிழியும் அதுவும் பலவீனமடைகின்றது.

கண்களில் உள்ள அந்த நுண்ணிய படத் திரைகளைக் காட்டும் அந்தத் திரை வழியும் பலவீனம் அடைந்து விடுகின்றது. நாம் பிறரைப் பார்த்தாலும் தெளிவாகத். தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உருவாகின்றது.

இரண்டு பேர் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்து அதன் மூலம் வேதனப்பட்டதால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே இது சிறுகச் சிறுக விளைந்து
1.இதனின் பலனாக நமக்குள் கோபமும் வேதனையும் வரும் பொழுது
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலையும்
3.பிறிதொன்றைப் பார்க்கப்படும் பொழுது நமக்குள் பதிய வைத்த இந்த உணர்வுகள்
4.குடும்பத்தில் உற்று நோக்கும்பொழுது நம்மை அறியாது கோபமும் வேதனையும் பட நேரும்.

இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறும் பொழுது நமக்குள் இனம் புரியாது மனக்கலக்கங்களும் கோபமும் வெறி கொண்ட உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.

பலவிதமான உணர்வுகளை நமக்குள் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் கொண்டு உடலில் “பல பிணிகளை” ஏற்படுத்தும் நிலைகள் உருவாகி விடுகின்றது

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான எதிர் நிலையாகும் பொழுது கிட்னிக்கோ கண்ணிற்கோ கல்லீரலோ நுரையீரலிலோ இதைப்போன்ற நிலைகள் மாசுபடும் பொழுது இந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது

1.அதீதமான வேதனைகளை நாம் படுவோமே என்றால் கேன்சர் என்ற வித்தாக முளைக்கத் தொடங்கி விடுகின்றது
2.விஷச் செடியின் தன்மை முளைத்து விட்டால் ஆரம்பமாக இருக்கும் பொழுது தெரியாது… .கேன்சர் நோயும் அப்படித்தான்.
3.அதனின் முதிர்ந்த பருவம் வித்தின் தன்மை முளைத்து முடிவில் தான் தெரிய வரும்.

உதாரணமாக கஞ்சாச் செடி அது முதிர்ந்து கடைசியில் பிசின் ஒழுகும் போது தான் அதனுடைய மணங்கள் தெரிய வரும்.. அதுவரையிலும் அது கஞ்சாச் செடி என்று தெரிந்து கொள்ளவே முடியாது அதனுடைய மணம் அப்பொழுது தான் வீசும்.

1.இதைப் போன்ற துரித நிலையில் மனிதன் வேதனைப்பட்ட இந்த உணர்வுகள் அது சிறுகச் சிறுக விளைந்து
2.கஞ்சா செடியைப் போல\ இந்த உடலின் மணத்தை வேதனையாக உருவாக்கி வரும் பொழுது தான் கேன்சர் என்றே அறிய முடியும்
3.அதுவரையிலும் வயிற்று வலி மற்ற வழி என்ற நிலையில் அல்லது மேல் வலி கை வலி என்ற நிலைகளும்
4.அதை நாம் எத்தகைய மருந்து சாப்பிட்டாலும் அது கேட்காது.

சிறுகச் சிறுக வேதனையைக் குறைத்து வந்தாலும் “அது முழுமையான வித்தை அடையப்படும் பொழுது” நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஆகிய விடுகின்றது.

நவீன விஞ்ஞான அறிவு கொண்டு கருவிகளை வைத்துக் கண்டுணர்ந்தாலும் அதனைத் தடுத்திடவும் முடியாத நிலை ஆகிவிடுகிறது.
1.ஒரு வேதனை என்ற வித்து நமக்குள் தொடர்ந்து விட்டால் அதனுடைய கிளைகள் அதிகமாக உடல் முழுவதும் பரவி
2.நாம் எண்ணிய எண்ணத்துடன் மூளை பாகம் வரையிலும் அதனுடைய தொடர்பலைகள் உண்டு.
3.மூளையிலிருந்து எண்ணத்தால் உருப்பெறும் உணர்வுகள் ஒரு பக்கம் அறுவை சிகிச்சை செய்து அதை எடுத்தாலும்
4.அதனின் விழுதின் தொடர் கொண்டு மீண்டும் அவருடைய தொடர் வரிசையாகத் தான் வரும்.

இன்று இல்லை என்றாலும் பத்து வருடம் கழித்து வேதனை என்ற நிலைகள் உருவாகி அந்த கேன்சர் என்ற நிலை வந்தால் அந்த கேன்சரை எடுத்து விட்டு மீண்டும் அதை மீண்டும் அதை விட்டோம் என்றால் வாழ் நாளுக்குள் மீண்டும் அது தழைத்து ஓங்கச் செயல்படுத்திவிடும். முழுமையாக அறுத்திடும் நிலை இல்லை.

காரணம்
1.நஞ்சினுடைய அதிவீரியத்தன்மையின் செயலாக்கங்கள் தான் இவைகள் எல்லாம்.
2.எக்காரணத்தைக் கொண்டும் வேதனைகளை நம் வாழ்க்கையில் வளர்த்து விடக் கூடாது.

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

 

இப்பொழுது நம் உடலில் வேதனை என்ற உணர்வுகள் அடர்த்தியானால் கேன்சருக்குண்டான அணுவாக உருவாகின்றது. அப்பொழுது விஷத்தைத் தான் அது உணவாக உட்கொள்கின்றது.

அந்த அணுக்கள் உருவானவுடன் விழுதுகளைப் பரப்புகின்றது. எந்தப் பாகத்தில் போகின்றதோ அந்தப் பாகத்தில் எல்லாம் பரப்புகின்றது. அந்த விஷத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.
1.விஷம் இருந்தால் தான் அது இயக்கும்.
2.அப்பொழுது என்ன செய்கின்றது…? நம் உடலில் கேன்சர் வருகின்றது.
3.ஆக வேதனை ஒரு பக்கம் அதிகமாகக் குமியும். நல்ல அணுக்களைச் செயலற்றதாக்கும்.

இப்பொழுது நமக்குள் சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று அதிகமானால் நம் நுரையீரல்களில் அது அதிகமாகச் சேர்கின்றது. அப்பொழுது அது சளி கட்டும் தன்மை வரும்.

இந்த வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் கிட்னி ஃபெயிலியர் ஆகி இரத்த நாளங்களில் இருக்கக்கூடியது நீர்ச்சத்தாக மாறி நெஞ்சுகளில் அதிகமாக ஆகும்.
1.கிட்னி சரியாக இயங்குவதில்லை… நீர்ச்சத்தாக மாறும்.
2.துரித நிலைகள் கொண்டு மனிதனை அழித்துவிடும்.

அடிக்கடி வேதனை என்ற உணர்வு அதிகமானால் பித்த சுரப்பியின் உணர்வுகள் அதிகமாகின்றது. இந்தப் பித்த சுரப்பிகள் அதிகமாகி விஷத்தின் தன்மை கூட்ட நம் இரத்தத்துடன் அது கலக்கப்படும் பொழுது தலை சுற்றும் கிறு… கிறு… என்று வரும்.

ஆகவே இந்த வேதனை என்ற உணர்வுகளை நாம் பார்த்தால் நினைப்பு வேதனை. ஆனால் இங்கே பித்தங்கள் அதிகமாகும். நாம் தவறு செய்யவில்லை. அந்த விஷத்தின் தன்மை பெருகுகின்றது.

அதே மாதிரி இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது நம் உடலில் மேலே தடிப்பாகின்ற மாதிரி கல்லீரலில் அதே மாதிரித் தடிப்பானால் நம் உடலில் இனம் புரியாத வலி ஏற்படும்.

அப்பொழுது அந்தக் கல்லீரல் வீக்கம் ஆகத் தொடங்கி விடும். கல்லீரல் வீக்கமானால் மண்ணீரலிலும் இதைப் போன்று பல வீக்கங்கள் தொடரும். அதைப் பார்த்தோம் என்றால் ஈரல் பக்கம் முழுவதும் பெரிதாகிவிடும். அது நீண்டு வளரத் தொடங்கிவிடும்.
1.ஆக அந்த மாதிரி அணுக்களை உருவாக்கினால் ஈரலைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
2.டாக்டரிடம் சென்றால் ஈரலை குறைத்தால்தான் நல்லது என்று சொல்வார்கள்.
3.ஆனால் அதைக் குறைத்து யாரும் பிழைத்த மாதிரிக் கண்டதில்லை.

ஆகவே இதைப் போல உறுப்புகளை மாற்றி உறுப்புகளை வளர்த்தாலும் சிறிது காலமே இருக்க முடியும்.

தேடிய செல்வம் எல்லாம் கொஞ்ச நாள் வாழ்க்கைக்கு பல லட்சங்கள் இருப்பதைப் போட்டு தப்பித்து வந்து விடுகிறார்கள். அடுத்தாற்படி வாழ்க்கைக்கு இல்லை என்றால் மறுபடியும் அந்த வேதனையைத்தான் உருவாக்கும்.

ஓரளவுக்கு அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் நிம்மதியாக இருக்கும். உதவிக்கு ஆள் இருக்க வேண்டும். காசு போய்விட்டால் கடன்காரனாகி விடுவோம். இருக்கிற வீட்டை விற்றுவிட்டுச் சிறிய வீட்டிற்குச் செல்வார்கள்.
1.ரொம்பச் செல்வந்தர்களாக இருந்தாலும் கடைசியில்
2.இதை எல்லாம் எதற்கு…? போ…! என்று போகின்ற நேரம் தான் வரும்.
3.ஆகவே இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்.

என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வுகள் நாம் பெறுவதற்கு நாம் இப்பொழுது சொல்லும் இந்த ஆயுட்கால மெம்ராகப்படும் பொழுது உங்களுக்கு கொடுத்த இந்தச் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

என் பிள்ளை இப்படி வரவில்லையே அது வரவில்லையே என்று கூறிக் கொண்டு அதாவது இந்த உணர்வின் தன்மைக்கு நீங்கள் செலவழித்தால் இதிலிருந்து நாம் என்றைக்கும் மீள முடியாது.

அப்பொழுது
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வை நீங்கள் பெருக்கி
2.என் பிள்ளைக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும் அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
3.கல்வியிலோ அல்லது வேறு எந்த நிலைகளிலோ தவறானாலும்
4.அவன் செய்யும் அந்தத் தவறான உணர்வு நமக்குள் வளராது காத்துக் கொள்ள வேண்டும்.

அவன் செய்யும் தவறின் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனை ஆகி இந்த உணர்வுகள் வந்த பிற்பாடு நமக்கு நோயாகின்றது. நோயாகி வெளியே வந்த பிற்பாடு யார் உடலுக்குள் செல்வோம்…?

யாரைப் பற்றி எண்ணி இந்த விஷங்கள் உருவானதோ அவர் உடலுக்குள் தான் செல்வோம். அவனும் பாழானான் நாமும் பாழானோம். இது தான் நடக்கும்.

ஆகவே தெரிந்தும் தவறு செய்யக் கூடாது.
1.நீங்கள் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகி
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வளர்ந்து தீமைகளை அகற்ற வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்த்தே வாழ்தல் வேண்டும். கணவன் வெளியில் சென்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும். அவர் செய்யக்கூடிய காரியங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

கணவன் வெளியில் போகும் பொழுது மனைவிக்கு அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும். ஒன்றுபட்ட உணர்வோடு நாங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
1.பண்பு கொண்ட உணர்வுகளை மனதால் நினைத்து அருள் உணர்வைச் சேர்த்து
2.அந்த ரசத்தை… பெண்பாலின் உணர்வைக் கணவன் எடுத்துக் கொண்டால் வெறுப்பு என்ற நிலைகள் மாறும். இருவருக்குமே இது பாதுகாப்பாக இருக்கும்.

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்

 

கோபத்தின் உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது நமது நல்ல அணுக்களுக்குள் அது ஊடுருவி நல்ல உணர்ச்சிகளை மாற்றி “ஓமுக்குள் ஓ…ம்…!” பிரணவத்தின் தத்துவத்தை அது மாற்றி விடுகின்றது.

இப்படி மாற்றிக் கொண்ட உணர்வுகளால்…
1.உடலுக்குள் இருக்கும் மற்ற உணர்வுகள் அனைத்தும் இதை நுகர நேர்ந்தால் இரத்தக் கொதிப்பாக ஊடுருவுகின்றது.
2.அதன் மூலம் நல்ல அணுக்கள் இட்ட மலங்கள் மடிய நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட நிலையும்
3.கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வுகளும் நம் இரத்தங்களிலே கலந்து
4.இதன் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே ட்ரான்சாக்சன்…! அதாவது உடலுக்குள் பரவச் செய்யும் உணர்வுகள் தான் அது.

எப்படி ஒரு ட்ரான்சிஸ்டர் மோதியபின் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை இணைத்து மைக்கிற்கு அனுப்பி அதன் வழி சப்தங்களை எப்படி நாம் கேட்கின்றோமோ இதைப் போல தான் உணர்வின் ஒலிக்கற்றைகளை நமக்குள் பரப்பப்படும் பொழுது
1.கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாதபடி ஓங்கிச் சப்தமிடுவதும்
2.சத்தமான பேச்சுகளைப் பேசுவதும் கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் செயல்களை நாம் செயல்பட ஆரம்பிக்கின்றோம்.

அப்போது அதைக் கேட்போர் இதைக் கண்டபின் வெறுக்கும் தன்மை வருகின்றது. வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க கோபத்தின் தன்மை எல்லை கடந்தே செல்லும்.

யார் மீது வெறுப்பு அதிகமாகின்றதோ அவர்களை நினைத்து நினைத்து கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து சென்று நமது உடலில் கடுமையான நோயாக உருவாகி விடுகின்றது.

பின் சிந்திக்கும் நிலைகள் இழந்து… அழுத்தம் அதிகமாகி விட்டால் அதனால் இரத்த அழுத்தங்கள் அதிகமாகும் பொழுது கண்ணுக்குச் செல்லும் இரத்தத்தின் வழி இந்த உணர்வின் தன்மை இயக்கம் கண்ணுக்குள் இரத்தம் அதிகரித்து விட்டால் “கண்கள் சிவந்து விடும்…”

சிவந்து விட்டால் கொடூர உணர்வாகத்தான் தெரிய வரும். சில பேரைப் பார்த்தோம் என்றால் அந்த கோபத்தின் கனலைக் கண்களிலே கண்டு விடலாம்.

சிவப்பு நிறமாக அதன் உணர்வுகள் இயக்கும். எதைக் கண்டாலும் எதைப் பார்த்தாலும் படித்தாலும் வெறுக்கும் தன்மையாகி… அழிக்கும் உணர்வாகவே வந்துவிடும்.

1.கோபம் வந்துவிட்டால் தன் பிள்ளையானாலும் அடிக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்துவிட்டால் கண்ணிலே கண்டாலே தட்டியெறியச் செய்யும்… நல்ல பொருள்களை உடைக்கவும் செய்வோம்.

சிந்தனைகள் குறைந்து புலி மற்றதை இரக்கமற்றுக் கொன்று புசிப்பது போன்று நல்ல உணர்வுகள் தென்பட்டாலே… மகிழ்ச்சியாக யாராவது சிரித்தாலோ… அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுப்பு என்ற உணர்வுகளே தோற்றுவிக்கும்.

அதுதான் நம்மை இயக்கும். இது எல்லாம் காரணம் யார்…?
1.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
2.அந்த உணர்ச்சிக்கொப்ப அதை இயக்குவது நம் உயிர்.

ஆகவே இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு
1.அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கும் சந்தர்ப்பங்களையும்
2.அதை வளர்த்திடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி உயிர் அதை இயக்கும்படி செய்து
3.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியின் தன்மையாக ஞானிகள் மகரிஷிகளைப் போன்று உருவாக்கி
4.நாம் தெளிந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுதல் வேண்டும்.

கோபம் வரும் பொழுது அதைத் தனக்குள் வளர்த்து விடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து அருள் வழியில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டாலே உங்கள் தீமைகள் அகலும்

உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டாலே உங்கள் தீமைகள் அகலும்

 

ஞானிகள் காட்டிய வழியில் உயிரை மதித்து… இந்த உண்மையை உணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமாக இருக்கும் இந்த அருள் மகரிஷிகளின் உணர்வு நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.கண் கொண்டு கூர்மையாகப் பார்த்து உணர்வின் தன்மை தனக்குள் பதிவாக்கி
2.மீண்டும் கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி உயிருடன் ஒன்றி கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே ஏற்றி
3.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
4.என் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
5.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
6.அந்த அருள் ஒளி என் உடலில் வளர வேண்டும் என்று எண்ணும் படி செய்தான்.

உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றும் மார்க்கத்தை இவ்வாறு காட்டினான் அருள் ஞானி.

வாழ்க்கையில் எத்தனையோ கோடி வேதனை சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி அதனுடன் தொடர்பு கொண்டு தன் உடலுக்குள் பெற வேண்டும் என்று “ஒவ்வொரு அணுவிலும் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாற்றும்படி செய்தான்…”

1.வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மை இங்கே அடைபட்டு விட்டால் இழுக்கும் சக்தி குறைகின்றது
2.வேதனை உருவாக்கி உயிரிலே பட்டு இந்த எண்ணங்கள் தோற்றமாவதை மாற்றுகின்றது.

அதுதான் கடைசி நிலை நரசிம்ம அவதாரம்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளிச் சரீரம் பெற்ற அவனின் உணர்வை உயிருடன் ஒன்றி நாம் நுகர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும். ஏனென்றால் அதன் வழி கவர்ந்து தான் மற்ற அணுக்களுக்கு உணவே செல்கின்றது.

மகரிஷிகளின் உணர்வை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் கண் கொண்டு தான் உற்றுப் பார்த்தோம் மற்றவரை. இந்த உணர்வின் பதிவின் தன்மை கொண்டு தான் ஊழ்வினை என்ற பதிவாக்கி இந்த உணர்வின் துணை கொண்டு தான் கவர்ந்து வருகின்றது.

1.அப்போது நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் கலந்து அதன் வழி வளர்ந்த அந்த அணுக்களின் தன்மை வட்டமிடுதல் வேண்டும்
2.அருள் மகரிஷிகளின் உணர்வு அங்கே செல்லப்படும் பொழுது ஈர்க்கும் வன்மை குறையப்படும் பொழுது
3.காற்றிலிருந்து ஆன்மாவாக மாற்றுவதை அதைத் தடைப்படுத்துகின்றது.
4.அந்த அருள் ஒளி தீமைகளை அகற்றுகின்றது.

கடவுளின் அவதாரம் நரசிம்ம அவதாரம் என்று மடி மீது இரணியனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து இரணியனை பிளந்தான் என்று சூட்சுமத்தில் நடப்பதைக் காவியமாகப் படைத்து இயற்கையின் உண்மை நிலையை அறிவதற்காக விநாயகர் தத்துவத்தைத் தெளிவாகக் காட்டப்பட்டது.

வாழ்க்கையில் சேர்த்த தீமைகள் ஆன்மாவில் வரப்படும் பொழுது அருள் ஒளியை உள் செலுத்தி விட்டால் ஈர்க்கும் வன்மை அந்த அணுக்கள் அடைபடுகின்றது… ஈர்க்கும் வன்மை இழக்கின்றது… அது நீக்கப்படுகின்றது… நமது எண்ணங்கள் மாறுகின்றது.

நுகர்ந்தால் தான் உணர்வின் இயக்கமாக உடல் இயக்குகின்றது. உணர்வின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது. அதன் வழி உணவை எடுத்து அது வளர்கின்றது.

இப்பொழுது கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம்
1.இத்தருணம் உங்களுக்குள் அரும்பெரும் சக்தி படர்கின்றது.
2.உங்கள் உடலில் இருதயங்களிலோ மற்ற உறுப்புகளிலோ கால் மூட்டுகளிலோ எந்த நோய் இருப்பினும்
3.அருள் உணர்வை நுகர்ந்த பின் அந்த நோயெல்லாம் தணியும் குறையும்.

இந்த உபதேசத்தை நுகரப்படும் பொழுது தீமைகளை விளைவிக்கும் அணுக்களில் கவசமிடும் போது அது ஈர்க்கும் சக்தி குறைந்தால் அதனுடைய வலுவை இழக்கும். இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் “நோயின் வலிமை குறையும்..”