இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

 

ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த வேதனையான உணர்வு தனக்குள் புகாது தடுத்தல் வேண்டும். தடுப்பதற்கு என்ன செய்வது…?

1.தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்.
2.அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
3.ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
4.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டுத் தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… தீமை வராதபடி தடுக்கும் சக்தி பெறுகின்றது.

மற்றவர்கள் துயரப்படுவதை நாம் பாசத்தால் பார்க்கப்படும் பொழுது கண்ணின் கரு விழி அவர்களைக் கவர்ந்து படமாக்குகின்றது. பதிவான பின் கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அந்த உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை உயிரிலே மோதச் செய்கிறது. அப்போது நாம் வேதனையை அறிகின்றோம்.

அதனால் தான் கண்களை… அதாவது “கண்ணனைத் திருடன்…” என்று சொல்வது. எதை எடுத்தாலும் அவன் திருடிக் கொள்வான்.

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்று வரும் பொழுது கண்ணிலே பதிவாக்கிய பின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வடிக்கப்பட்டு உயிருடன் மோதப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சென்று விடுகின்றது.

அவர் வேதனைப்படுகிறார் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆறாவது அறிவு கார்த்திகேயா…! தனக்குள் அது தீமையை விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டபின்
1.தீமையை நீக்கும் சக்தியை… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் ஆறாவது அறிவால் எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அப்போது உள்ளே செல்லாதபடி அதைத் தடைப்படுத்துகின்றது.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்யப்படும் பொழுது
1.கண்களிலும் காந்தம் உண்டு… உயிரிலும் காந்தம் உண்டு…! கவரும் சக்தி கொண்டதுதான்.
2.கண்ணின் நினைவை உயிரிலே மாற்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உயிருடன் உராயப்படும்போது இந்த உணர்வுகள் உள்முகமாகச் செல்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உள்ளே சென்று அது அழுத்தமாகி
5.வெளியிலிருந்து வரக்கூடிய தீமை உள்ளே போகாதபடி அந்தத் தீமையைத் தள்ளி விடுகின்றது.

உடலில் உள்ள அணுக்களைத் தனித்தன்மை கொண்டு “இங்கே அடைத்து வைத்த பின்…” தீமையை ஈர்க்கும் சக்தி குறைகின்றது. பின் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

இப்படித் தள்ளிவிட்டால் நம் ஆன்மாவிலிருந்து “அதனுடைய வேகமான இயக்கத்தைத் தடைப்படுத்துகின்றது…!”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த வலிமையை நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

வலிமையான பின்… யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்… அங்கே உடல் நோய் நீங்க வேண்டும் என்று இப்படி நாம் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

தீமை என்று அறிந்து கொண்ட பின் இப்படி மாற்றி… தனக்குள் அதை உருவாக்கி உயர்ந்த உணர்வின் சொல்லாக நாம் வெளிப்படுத்த வேண்டும்.

1.அதைத்தான் ராமனின் பக்தன் ஆஞ்சநேயன் என்று சொல்வது.
2.இந்த உணர்வுகள் வாயுவாகச் சென்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது.

“நம் இரத்த நாளங்களில்…” அருள் உணர்வைப் பெருக்க வேண்டியதன் அவசியம்

“நம் இரத்த நாளங்களில்…” அருள் உணர்வைப் பெருக்க வேண்டியதன் அவசியம்

 

உதாரணமாக நாம் ஒரு முறை “திடுக்…” என்று பயந்து விட்டால் அதனின் உணர்வின் கரு நம்முள் உருவாகிவிடும். மீண்டும் நினைவு கொண்டால் அது உணர்வின் அணுவாக நமது இரத்த நாளங்களில் விளைந்து நமது உடல் முழுவதும் சுழலத் தொடங்கும்.

அப்படிச் சுழலப்படும் பொழுது
1.உடலில் அந்த அணுக்கள் இணைந்து குஞ்சாகப் பெருகி விட்டால்
2.நம்மையறியாமலேயே “திடுக்…திடுக்…” என அஞ்சும் உணர்வு வரும்.

இதை நீங்கள் அறிய முடியும்.

இவைகளெல்லாம் யாம் உங்களுக்கு நினைவு படுத்துவதற்குக் காரணம் உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிந்து கொள்வதற்குத் தான்.

நமது வாழ்க்கையில் இத்தகைய அஞ்சும் உணர்வோ வெறுக்கும் உணர்வோ தொழில் நஷ்டமோ இவைகளை எண்ணி நுகரும் பொழுது நாம் நுகர்ந்தது அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களில் “கருவாக…” உருவாகிவிடுகின்றது.

உதாரணமாக… தொழிலில் “நஷ்டமாகி விட்டது… நஷ்டமாகி விட்டது…” என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது அடைகாத்தது போன்று ஆகிவிடுகின்றது.

அது உடலில் குஞ்சாக விளைந்து விட்டபின் அவர்களிடம் போய்
1.நீங்கள் நல்லதை எதைச் சொன்னாலும், “எனக்கு நஷ்டம் நஷ்டம்…” என்று தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
2.“நஷ்டத்திலிருந்து மீள வேண்டும்…” என்ற எண்ணங்களே இவர்களுக்கு வராது
3.ஏனென்றால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் அப்படிப் பேச வைக்கின்றது.

கடல் வாழ் மீன்கள் எங்காவது ஒரு துளி இரத்தத்தினுடைய மணத்தை நுகர்ந்து விட்டால் போதும், விரைந்து அந்த இடத்திற்கு வந்துவிடும்.

தொலைவில் இருக்கக்கூடிய மீன்களை அருகே வரச் செய்து அவைகளைப் பிடிக்க விரும்பினால் தூண்டிலில் இரையை வைத்துச் சிறிது ஒலி எழுப்பினால் அந்த மீன்கள் தூண்டில் இருக்கும் பக்கம் வந்துவிடும்.

இதைப் போன்று நமது உடலிலுள்ள உணர்வின் அணுக்கள் உணர்ச்சிகளை எதன் வழி தூண்டுகிறதென்றால் நமது இரத்த நாளங்களின் வழி தான்.

இராமயாணக் காவியத்தில் “இராமன் குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான்…” என்று உரைத்திருப்பார்கள். அதில் குகன் ஆற்றில் படகை ஓட்டி, வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.

1.நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும்
2.நம் எண்ணங்களால் உருவாக்கிய, உணர்வுகள் எதுவோ அவைகள்
3.நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை உணர்த்துவதற்குக் குகனைக் காட்டுகின்றார்கள்.

நமது இரத்த நாளங்களில் நட்புள்ள உணர்வுகளாகச் சேர்த்து விட்டால் “நமக்குள் வெறுப்பை உண்டாக்கும்.. நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம்…” என்பதை உணர்த்துவதற்கு இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.

இப்பொழுது நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வைக் கலந்து விட்டால்… அது நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி… அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது.

1.தீய உணர்வின் அணுக்கள் நல்லுணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும்.
2.ஏனென்றால் அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது நல்ல அணுக்கள் மடியும்.

இதனை உணர்த்துவதற்குத்தான் முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கி அதில் இராமன் குகனை நட்பாக்கினான் என்று காட்டுகிறார்கள்.

அதாவது நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில்
1.அருள் மகரிஷிகளின் உணர்வைக் கருவாக்கி அணுக்களாக விளையச் செய்தால்
2.அது உடலில் பதிந்திருக்கும் பகைமை உணர்வுகளை நீக்கி
3.மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும்.
3.என்றும் அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

விநாயகர் சதுர்த்தி அன்று அருள் மகரிஷிகள் உணர்வுகளை நாம் அனைவருமே நமக்குள் எடுத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆனால்
1.ஏற்கனவே எண்ணத்தால் நுகர்ந்த பிற தீமையான உணர்வுகள் அணுக்களாக இருக்கின்றது.
2.அதைத் தடைப்படுத்தி விட்டால் ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அது பாட்டுக்கே விலகிப் போய்க் கொண்டே இருக்கும்.

இந்தப் பூமியின் சுழற்சியின் தன்மையில் கடலின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கடல் பக்கத்திலே இருந்து பாருங்கள்.
1.அருகில் சென்றோம் என்றால் நம்மை உள்ளே இழுக்கும்.
2.அலைகள் மாறி மாறி வரும் பொழுது மோதி… மறுபடியும் உள்ளே தனக்குள் இழுக்கும்.

இதைப் போன்று இந்த உணர்வின் தன்மை எந்தெந்த மனிதர் பால் எண்ணி எடுத்து வைத்திருக்கின்றோமோ அது வளர்ந்த பின் “அந்த உணர்வுகள்”
1.எதிலும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கும் பக்கம் செல்லாது.
2.அங்கே சென்றால் செவுட்டில் அடித்த மாதிரி அடித்து விலக்கித் தள்ளிவிடும்.

மரம் செடி கொடி அவைகள் வெளிப்படுத்தும் உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாகத் தோன்றி வளர்ந்து வந்தது. ஆனால் தீமையான உணர்வுகள் கலந்து மனிதனுக்குள் விளைந்தது.

ஆகையினால் மனிதனால் உருவாக்கிய தீமையான அலைகள் தாவரங்கள் அருகே அங்கே போகாது போக முடியாது.

விண்ணிலே சூரிய குடும்பத்தில் உருவான கோள்கள் சூரியனின் பிடிப்பில் இல்லை என்றால் திசை மாறிச் சென்று எங்கே போய் மடிகின்றது என்று சொல்ல முடியாது. பெரிய சுழல் இருக்கும்… அதிலே கரைந்து விடும்.

இதைப் போன்று தான் சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் பெரிய கடல்… அது பூமியில் முதலிலே உருவானது. அதிலே கரைந்து தனக்குள் கரைத்து மீண்டும் வெளிப்படுத்தும்.

இதே போல தான் “மனிதர்கள் ஈர்க்காத உணர்வுகள்…” கடலின் ஈர்ப்புக்குள் சென்று மூழ்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத் தான் சதுர்த்தி என்று உருவாக்கப்பட்டு… தீமை செய்யும் உணர்வுகளை இப்படித்தான் கரைக்க வேண்டும் என்று சிலையைப் புறத்தில் காட்டி
1.மக்களுக்குள் விளைந்த தீமையான வினைகளைp பிறர் பால் பற்று கொண்டு எண்ணி எடுத்த உணர்வுகளைத் தனக்குள் பதிவாக்காதபடி
2.அவர்களை நலமாக்க வேண்டும் என்ற உணர்வினை எடுத்துப் பகைமை உணர்வுகள் இங்கே நிற்காது அப்புறப்படுத்த வேண்டும்.

இங்கே யாரும் எடுக்கவில்லை… நாமும் எடுக்கவில்லை… அவர்களும் எடுக்கவில்லை என்றால் நாம் வாழும் இடத்திலே அது நிற்காது.

விநாயகர் சதுர்த்தி அன்று உலக மக்கள் அனைவருமே
1.இது போன்று அருள் உணர்வுகளை ஏகோபித்த நிலையில் எடுத்துப் பகைமை உணர்வுகளை இழுக்கவில்லை என்றால்
2.இது எல்லாம் ஒதுங்கி கடலுக்குள் சென்று அமிழ்ந்துவிடும்.

அதாவது ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்ளவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு இங்கே இடமில்லை. அப்பொழுது அந்த உணர்வுகள் அது பாட்டுக்கே நகர்ந்து சென்று கடலுக்குள் சென்று மூழ்கிவிடும்.

1.விநாயகர் சதுர்த்தி என்றால் தீமைகளை நிறுத்து…!
2.உனக்குள் தீமையின் வளர்ச்சியைத் தடைபடுத்து…
3.அதைக் கரைத்து விடு…! சாஸ்திரப்படி இது உண்மை.

இரவிலே படுக்கைக்குச் செல்லும் பொழுது “ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

இரவிலே படுக்கைக்குச் செல்லும் பொழுது “ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

 

குழந்தைகளை நாம் வளர்க்கின்றோம், நாம் சொன்னபடி அவர்கள் கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது…?
1.நம் பையன் தான்… ஆனால் வெறுப்பின் உணர்வைப் பதிவு செய்து விட்டால்
2.இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருப்பான்…! என்று இந்த உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்.

ஒரு தரம் பதிவாக்கி விட்டால் பல காலம் நான் நாம் அவன் மீது பேரன்பு வைத்திருந்தாலும் ஒரு தடவை எடுத்த இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விடுகின்றது.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெறுப்பின் எண்ணங்களே வரும். அது வளர்ச்சியாகும். அவனை நல்லதாக மாற்றும் நிலைகளே நமக்குள் மாறி விடுகின்றது. அவன் மீது நாம் வைத்திருக்கும் பற்றைத் தான் மாற்றுகிறது.
1.அவன் மீது பற்று கொண்டு…
2.தீமையிலிருந்து அவனை நல்வழிப்படுத்தும் உணர்வு நமக்குள் வராது.
3.காரணம்… உணர்வின் இயக்கங்களில் தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…!

ஆகவே… இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுதெல்லாம் இது போன்ற உணர்வுகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஆத்ம சுத்தி செய்தாலும் கூட
1.தூங்கச் செல்லும் பொழுது குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது நம் நினைவைத் துருவ மகரிஷியுடன் ஒன்றச் செய்து
2.அடுத்து சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து… சப்தரிஷிகளுடன் நாம் இணையச் செய்ய வேண்டும்.

ஒருவர் மட்டும் நாம் குறி வைத்து எண்ணுவதல்ல. பலரும் சேர்ந்துதான் அது ஒன்றாக ஆனது. இது தான் அடிப்படைக்குறி என்றால் ஒன்றை மட்டும் எடுத்து ஒன்றாக எதுவும் இணைந்ததில்லை.

துருவத்தை முதலில் நுகர்ந்து விண்ணிலே ஒளியாகச் சென்றது துருவ மகரிஷி. அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

ஆனால் அவர்கள் அனைத்தும் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள் மகரிஷிகள். மனிதனாக இருக்கும் பொழுது சிருஷ்டித்துக் கொண்டது.
1.இந்த உணர்வை நாம் பருக வேண்டும்.
2.இதையெல்லாம் வலுப்படுத்தி அவர்கள் ஆன நிலையை எடுத்துத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.
(சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டல உணர்வை முதலில் எடுத்துத் தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திர உணர்வை வலுவாக்க வேண்டும்)

அதைப் பெறச் செய்வதற்குத் தான் பௌர்ணமியன்று கூட்டுத் தியானங்களில் எல்லோரும் சேர்ந்து “சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலுவாக்கச் சொல்வது…”

அந்த வலுவை நமக்குள் கூட்டி இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் ஆன்மாவைச் சிறிது நேரமாவது தூய்மைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக… சமைப்பதற்காக வேண்டி பாத்திரத்தை நாம் உபயோகப்படுத்துகின்றோம்… பின் தூய்மைப்படுத்துகின்றோம் ஆனால் அதிலே ஒன்றிய நிலைகள் சில இடங்களிலே அழுக்கு அதிகமாகப் படிந்துவிடும்.

அதை நாம் நீக்க முயற்சித்தால் தேய்க்கத் தேய்க்க பாத்திரமே ஓட்டையாகி விடுகிறது. ஒரு பக்கம் மேடாகி ஒரு பக்கம் தேய்மானமாகி மேடு பள்ளம் ஆகி சமமில்லாத நிலையாகி விடுகிறது.

இதைப் போன்று தான் அவ்வப்போது (அன்றன்று) தூங்கச் செல்லும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்துத் தூய்மைப்படுத்துகின்றோம்.

அதில் சில தொக்குகள் இருந்தாலும்
1.இரவிலே மீண்டும் முழிப்பு வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
2.மறுபடியும் அந்த எண்ணத்தைக் கூட்டித் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் ஆன்மாவிலே அந்த அணுக்களுக்குக் கிடைக்கக் கூடியதைத் தடைப்படுத்தும் போது தன்னாலே மாறிவிடும்.

ஆகவே இரவிலே எப்படி இருந்தாலும் “படுக்கைக்குச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாகி விடக்கூடாது…”

எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாகி விடக்கூடாது…”

 

எந்த மரத்திலிருந்து வித்தாக உருவானதோ அந்த வித்தைப் பூமிக்குள் பதியச் செய்யும் போது அதன் அறிவின் தன்மையாக அதே மரமாக அதை வளர்க்கச் சூரியன் உதவுகிறது.

இதைப் போல் தான் நமது உயிர்
1.உடலுக்குள் எது அணுவின் தன்மையாக உருவானதோ
2.அதற்கு இந்தக் காற்றிலிருந்து அதே இனமான சத்தைக் கவரும்படி செய்து உணவாகக் கொடுத்து வளர்க்கின்றது.

எந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் கூட்டப்படும் பொழுது “அந்த உணர்வின் அலையாக நமக்குள் மாறுகின்றது…”

1.யார் வேதனைப்படும்படியான சொல்லை நம்மிடம் சொல்கின்றார்களோ நம் ஆன்மாவாக அது மாறும் பொழுது
2.மறைந்திருந்து இந்த மகரிஷியின் உணர்வு அதைத் தாக்குகின்றது.

வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை… மறைந்திருந்தே தாக்குகின்றார்.

ஒருவன் வேதனைப்படும் சொல்களைச் சொல்லப்படும் போது அவனை நேரடியாக நீங்கள் பார்த்தால் என்ன ஆகும்…?
1.வேதனை என்பது வலிமையானது
2.நல்ல குணங்களை எல்லாம் வலு இழக்கச் செய்துவிட்டு அந்த உணர்வின் இயக்கத்திற்கே நம்மைக் கொண்டு செல்லும்.

பாவிப் பயல் இப்படிச் சொல்கிறான் பார்…! நான் ஒன்றுமே சொல்லவில்லை… இவன் இப்படிச் செய்கின்றானே…! என்று என்ன தான் சொன்னாலும் “அது எப்படி நீங்கள் ஒன்றுமே சொல்லாமல் அவர் உங்களைச் சொல்வார்…?” என்று அடுத்தவர்கள் கேட்பார்கள்.

சும்மா இருக்கும் போது யாராவது சொல்வார்களா…? என்று இதே சொல் வரும். இராமன் அம்பை எய்தானென்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான்.

நாம் எதனைக் கலந்து சொல்லாகச் சொல்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே கலந்து அதன் வினாவாக மீண்டும் எழும்பும்.

எவ்வளவு தான் “நான் தவறே செய்யவில்லை…” என்று சொன்னாலும் தவறு செய்யாமல் யாராவது உங்களைச் சொல்வார்களா…? என்பார்கள். எதனை உருவாக்கி எந்தச் சொல் அம்பாகப் பாய்கின்றதோ அந்த சொல்லின் நிலைகள் இப்படித்தான் வரும்.

ஒரு கம்ப்யூட்டரில் எதை ஆணையிட்டு அதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்கும்படிச் செய்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை பதிவாக்கப்படும் பொழுது
1.மீண்டும் அது எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் வலுக் கொண்டு “மற்றதைத் தனக்குள் பிரித்துக் காட்டும்…”
2.அதைப் போன்று தான் உயிர் நாம் சுவாசித்த உணர்வின் சொல்லை எலக்ட்ரானிக்காக மாற்றி விட்டது என்றால்
3.அதே இடம் வரும் பொழுது அது மாற்றும்.

அதாவது… ஒரு மனிதனின் எண்ண வலு நமக்குள் அதிகமாகி விட்டால் அது வாலியாக மாறி விடுகின்றது. நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழக்கப்படுகிறது.

இதைத்தான் வாலியை எவரொருவர் நேரடியாகப் பார்க்கின்றார்களோ அந்த வலுவிலே சரி பகுதி அவனுக்குச் சென்று விடும் என்று “இவ்வளவு காரண காரியத்தோடு…” சாஸ்திரங்களை நமக்குக் காட்டி உள்ளார்கள் ஞானிகள்.

ஒருவன் வேதனைப்படும்படி சொல்லைச் சொன்னால் நம் நல்ல குணங்கள் வலு இழந்து விடுகின்றது அல்லவா…!

அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த உணர்வினைத் தனக்குள் ஏற்றி அந்த வேதனை நம்மைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று உங்கள் கையிலே அதை ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாக ஆகிவிடக்கூடாது…”

உயிரால் வளர்க்கப்பட்ட மனிதன் நீ. எனவே அவனிடமே வேண்டி அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த மெய்ஞானியின் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
2.அதுவாகவே ஆகின்றோம்… நாம் ஞானியாகின்றோம்.

எதிரி எங்கே இருக்கின்றான்…?

எதிரி எங்கே இருக்கின்றான்…?

 

ஒவ்வொரு மனிதனும் தான் தவறே செய்யவில்லை என்றாலும் திடீரென்று மற்றவர்கள் எதையாவது சொல்லிவிட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது… அவரவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு…!

அப்படிப் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… என்னை இப்படிச் சொன்னானே…!” என்ற உணர்வுகள்
1.நமக்குள் அது எதிரியை வளர்த்துக் கொண்டே வருகின்றது.
2.நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை.
3.நல்ல குணங்கள் வலு இழக்க நாமே காரணமாகின்றோம்.

ஆகவே அந்த நல்லதைக் காப்பதற்குத்தான் தத்துவ ஞானிகள் சாதாரண நிலையிலும் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தார்கள். இது அகஸ்தியனால் காட்டப்பட்டது.

1.அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் பெறுவதற்காக இம்முறையை வகுத்தான்.
2.அவன் துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
3.எத்தகைய தீமையைக் கண்டுணர்ந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவர் திட்டி விடுகின்றார் என்றால்… இதே உயிர் தான் இழுத்து இந்த உணர்வினை உணர்ச்சிகளாக இயக்கி… செயலுக்குக் கொண்டு வருகின்றது. இதே உயிர் தான் அதை அணுவாகவும் மாற்றி விடுகின்றது.

அவன் எவ்வளவு வேதனைப் படும்படிச் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது. இது தான் விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… விஷ்ணுவுக்கு பிறந்த பிரம்மா அதை உருவாக்குகின்றார். அதாவது வேதனை என்ற விஷத்தின் தன்மை உருவாகி விடுகின்றது. அது தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… எந்த வேதனையை உருவாக்கும்படிச் சொன்னானோ அதனால் உருவான உணர்வுகள் பிரம்மனாக தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றதனால் “அந்த ஞானத்தின் வழிகளில் செயல்படும்…!”

இயற்கையின் உண்மை நிலைகளை நாம் கண்டு கொள்ள இவ்வளவு கருத்துடன் இதைக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஒரு விஷச் செடி காற்றிலிருந்து தன் இனமான விஷத்தையே நுகர்ந்து விஷச் செடியாக வளர்கின்றது.

அதைப் போல் உடலில் உருவான அந்த வேதனைப்படச் செய்யும் அணு…
1.எந்த மனிதன் வேதனைப்படச் செய்தானோ அவனின்று வரும் இந்த உணர்வை நமக்குள் அதைக் கிளர்ந்து சுவாசித்து
2.அதனுடைய மலத்தை நம் உடலிலே இடும்பொழுது தான் நல்ல அணுக்களுக்கும் அது வேதனை தாங்காது
3.அதனுடைய செயலைக் குறைக்கச் செய்து உடலிலே நோயாக வருகிறது.

என்னை வேதனைப்படச் செய்கின்றான்… அவனை விடுவேனா…? என்று கோபத்துடன் பதிலுக்குச் செய்தாலும் விஷத்தன்மையான அணுக்கள் மீண்டும் அவர்களை எண்ண எண்ண நோயாகவே விளைகின்றது.

அப்பொழுது எதிரி எங்கே இருக்கின்றான்…?
1.நமக்குள் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோம்…
2.நம்மை மறந்து விட்டோம் என்ற நிலை தான் வருகின்றது.

குருநாதர் எனக்கு இதை அனுபவபூர்வமாகக் கொடுத்ததனால் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் அதன் வழி தியானித்தல் வேண்டும்.
1.எத்தகைய வேதனைப்படும் நிலைகள் வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

அதன் பின் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வராது நாம் இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.

நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி

நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி

 

நாம் கெட வேண்டும் என்று யார் எண்ணினார்களோ அவர்களை நாம் எதிரியாகக் கருதும் பொழுது “எதிரியைத்தான்…” உடலுக்குள் வளர்க்கின்றோம்.

இதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் காட்டிய விநாயகர் தத்துவத்தின்படி
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நல்ல குணங்களுக்கு ஊக்கச் சக்தியைக் கொடுப்பதும்
2அவர்கள் தீமையான உணர்வுகளைச் சொல்லும்போது மகரிஷிகள் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும் என்றும் சொல்வது.

காரணம் கண்களிலே பார்த்தது நமது ஆன்மாவாகின்றது. சுவாசித்த பின் உயிரிலே படுகின்றது… அந்த உணர்வு இயக்கப்படும் பொழுது ஜீவணுவாக மாறுகின்றது.

முதல் அணு உருவாகி விட்டாலும் அடுத்த நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

ஏனென்றால்
1.கண் இப்படி முன்னாடி வருவதை எடுத்து அதன் வழி நேரடியாகப் பேசுகின்றது.
2.ஆனால் கண்களால் மகரிஷிகள் உணர்வை எண்ணி அதை எடுத்து இடைமறித்து உயிரிலே (புருவ மத்தியிலே) இணைக்க வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். காரணம் என்ன என்றால் மறந்து விட்டுத் தீமைகளை எப்படி மாற்றுவது…? என்று தெரியவில்லை என்று திரும்பக் கேட்பாரும் உண்டு.

அதனால்தான் ஞாபகப்படுத்துவது…!

வாழ்க்கையில் வரும் தீமைகளை இடைமறித்து அருள் ஞானிகள் உணர்வை உள்ளே செலுத்தப்படும் பொழுது தீமைகளை அகற்ற முடிகின்றது.

தங்க நகைகளைச் செய்கின்றோம்… செம்பு வெள்ளியை அதனுடன் இணைத்துத்தான் செய்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றிச் சுத்தப்படுத்துகின்றோம்.

1.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிய “அந்த வலுப்பெற்ற உணர்வுகள் மகரிஷிகளுடையது…”
2.அதை நாம் நுகர்வதற்குத் தான்… பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் “தியானம்…”

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இது தியானம். மகரிஷிகள் அருள் சக்திகளை உடலுக்குள் செலுத்தச் செலுத்த உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது உரம் ஆகின்றது.

1.பிறர் செய்த தீமைகள் நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்பு அந்த மகரிஷியின் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.தீமையான அணுவாக அது வளர்வதற்கு முன் “அந்த அணுவையே…” நமக்குச் சாதகமான நிலைகளாக மாற்றிவிடும்.
3.தீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்யும் பொழுது “ஒவ்வொன்றிலும் நமக்கு வலுப்பெறுகின்றது…”

இரண்டு தரம் கெட்டதைக் கேட்டோம் அல்லது சொன்னோம் என்றால் நல்லது செய்வதை அது தடைப்படுத்துகின்றது. ஆனால் அதே சமயத்தில் அது போல் ஆன பின் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை இணைத்து விட்டால்
1.அந்த அணு நம் வழிக்கே இணைந்து வருகின்றது.
2.அப்பொழுது நம்மைக் காக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது.

அதற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் நமக்குள் எதை வினையாக்க வேண்டும்…? வினைக்கு நாயகனாக எதை இயக்க வேண்டும்…? என்று கேள்விக்குறி போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

உதாரணமாக… வேதனைப்படும் நிலையாகி விட்டால் அது வேதனையை அதிபதியாக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது. அந்த அணுவின் செயலாக்கங்களையே கொண்டு வருகின்றது.

அதே சமயம் இதை அடக்கிய மகரிஷிகள் உணர்வை அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அந்த அணுவிற்குள் ஞானியின் உணர்வுகள் அதிபதியாகத் தொடங்கி விடுகின்றது.
2.பின் ஒளியான அணுக்களாகவே உருப்பெறத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் நாம் அந்த மெய்ஞானியின் உணர்வை வினையாக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
1.நாம் யாரையுமே எதிரியாக ஆக்குவதில்லை.
2.நமக்குள் எதிர்மறையான அணுக்களும் உருவாகாது
3.ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் உருவாகின்றது… மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்

ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்

 

உங்கள் எல்லோருக்கும் சக்தி கொடுத்திருக்கின்றேன். ஓரளவுக்கு அதை எல்லாம் செய்து வந்தாலும்… வீட்டிலேயோ நண்பர்கள் மத்தியிலோ தொழில் செய்யும் இடத்திலோ சிறிதளவு சோர்வு வந்தால் இதை விட்டு விடுகின்றீர்கள்.

அப்புறம் என்ன செய்கின்றீர்கள்…?

1.சோர்வான அணுக்களாக விளைந்த பின் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு ஆன்மாவிலே அதிகமான பின்
2.மகரிஷிகள் அருள் சக்திகளை எடுப்பதை இது தடைப்படுத்துகின்றது.

அதனால்தான் அடிக்கடி ஆத்ம சக்தி செய்ய வேண்டும் என்று சொல்லித் துரிதமாக உங்களுக்கு அதற்குப் பயிற்சி கொடுப்பது.

1.வாழ்க்கையில் எது வந்தாலும் அல்லது எதைக் கேட்டாலும்
2.ஒரு நிமிடம் ஆத்ம சுத்தி செய்வதற்குண்டான நேரத்தை ஒதுக்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

கையிலே மண்ணை எடுத்து வேலை செய்கின்றோம். ஆனால் அடுத்து உணவு உட்கொள்ளச் செல்கிறோம் என்றால் கை கழுவாமல் செல்வோமா…?

அல்லது கையிலே அழுக்குப் பட்டு விட்டது. ஒரு நோட்டில் எழுத வேண்டி இருக்கின்றது என்றால் கையைக் கழுவாமல் நோட்டில் எழுதுவோமா…? தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தினாலும் கையைத் துணியில் துடைத்து விட்டுத் தானே எழுதுகின்றோம். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஆகிறதல்லவா…!

அந்த மாதிரி… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியைப் பெற்ற பின் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய நிலைகளைப் பார்த்தாலும் கூட… கேட்டு நுகர்ந்தாலும் கூட
1.அதற்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து
2.அந்தத் தீமையின் உணர்வுகளை அடக்கும் உணர்வோடு நமக்குள் கலக்க வேண்டும். கலந்தால் தான் அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்… எப்படித்தான் இருந்தாலும் வாழ்க்கையில் பிறிதொரு தீமையை நீங்கள் பார்க்காமல் இருக்க முடியுமா.

நானே இருக்கின்றேன்… எல்லோருக்கும் நல்லதைச் செய்கிறேன். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் எனக்கு உடல் முடியவில்லை என்றால் “சாமிக்கு என்ன ஆனது…?” என்று தான் மிகவும் ஆர்வமாகக் கேட்பீர்கள்.

எனக்குள் விளைந்தது பல நிலைகள் அந்த வேதனை. என் மீது உள்ள பாசத்தில் எடுக்கப்படும் பொழுது வேதனையைத்தான் நுகர்வீர்கள். வேதனை நீங்க வேண்டும் என்ற எண்ணம் வராது.

சாமி சொன்ன வாக்கு உங்களுக்கு நல்லதாகின்றது ஆனால் சாமிக்குள் பல நிலைகள் சந்தர்ப்பத்திலே அது முந்தைய நிலைகள் விளைந்து வந்தாலும் இந்த உடலின் கடைசி முடிவு அது தான்.
1.அந்தக் கடைசி முடிவு வரப்படும் பொழுது பாசத்தால் வேதனையை நுகர்ந்து விடக்கூடாது.
2.நுகர்ந்தால் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து…
3.சாமிக்கும் அந்த மகரிஷியின் அருள் உணர்வு வளர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார். நாம் எப்படி அவருக்குச் சொல்வது…? என்று எண்ணக்கூடாது.

தபோவனத்தில் இப்பொழுது தைலம் காய்ச்சிக் கொடுக்கின்றோம். ஆரம்பத்தில் எல்லாம் நான் என்ன செய்வேன்…?

உடலில் குறைபாடுகளைச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தால்… அந்தத் தைல பாட்டிலை அவருக்குக் கொடுப்பேன். அதற்குள் குருநாதர் இருப்பார்.

பாட்டிலில் யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்பேன். குருநாதர் இருக்கின்றார் என்பார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்…? காளி வந்திருக்கின்றார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்கள்…? முருகன் வந்திருக்கின்றார்.

1.போ…! உன்னிடம் இருக்கும் கெட்டது எல்லாம் காளி மாய்த்து விடும்
2.குரு அருளால் எல்லாம் நல்லதாகிவிடும் என்று சொல்லிக் கொடுப்பேன்.
3.முந்தி அனைவருக்கும் இப்படித்தான் கொடுத்தேன். வாங்கிச் செல்வார்கள் எல்லாம் நன்றாகிவிடும்.

வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கோ இரத்தக் கட்டுகளுக்கோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் இதைக் கொடுத்து யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்று காண்பிப்பேன். பாட்டிலில் எல்லாமே தெரியும்.

இப்பொழுதும் அப்படிக் காண்பிக்க முடியும். ஆனால் அந்த ஆசையைத் தூண்டி விட்டால் எல்லாம் போய்விடும். உங்கள் எண்ணம் எல்லாம் “உடல் பற்றுக்கு வந்துவிடும்…”

ஆகையினால் இப்பொழுது அதை எல்லாம் சுத்தமாக நிறுத்தி விட்டேன்.

1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
3.இந்த உணர்வை மட்டும் எடுத்து நீங்கள் ஆத்ம சக்தி செய்து கொண்டே வந்தால் போதுமானது. எல்லாம் நன்றாகும்.

நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

 

நாம் நன்றாகத்தான் இருக்கின்றோம். இரு நண்பர்களுக்குள் ஆகவில்லை. ஆனால் அவரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

என்னங்க…! நீங்கள் இவ்வளவு உதவி செய்கின்றீர்கள்… உங்களைப் பற்றி அவன் கேவலமாகப் பேசுகின்றான்…! என்பார்கள்.

நாம் “அப்படியா” என்போம்.

அவர்களுக்கு அந்த நண்பன் ஆகவில்லை.
1.நாம் செய்யும் உதவி அவனுக்குக் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக நம்மிடம் இப்படிச் சொல்கிறார்கள்.
2.ஆனால் சொன்னவுடன் நாம் மோப்பம் பிடிக்கின்றோம்.

கருப்பண்ணசாமிக்கு முன் என்ன இருக்கின்றது…? நாய் இருக்கின்றது… கையிலே அரிவாள் இருக்கின்றது.

நம்மைத் தவறாகச் சொல்கிறான் என்று அவர் சொன்ன தீமையான உணர்வுகளை நாம் கேட்டபின் “உடனே நம் மனம் இருண்டு விடுகின்றது…”

நாய் என்ன செய்கின்றது…? யார் அதை வளர்த்தார்களோ அதற்கு விசுவாசமாக இருக்கின்றது.
1.எதன் உணர்வை மோப்பம் பிடித்ததோ உடலுக்குள் சேர்த்துக் கொண்டதோ
2.அதன் உணர்வின் தன்மைக்கு விசுவாசமாக இருக்கின்றது.

இவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவன் சொன்னான். ஆனால் நாமோ “இருக்கட்டும் பார்க்கின்றேன்…” என்ற இந்த உணர்வை… நல்லதை நீக்கிவிட்டு அந்தப் பகைமையான உணர்வுகளை உருவாக்கி விடுகின்றது.

பரசுராம் என்று வரும் பொழுது தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்ற நிலையினை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இருந்தாலும்… மனித வாழ்க்கையில் அவன் சுகத்திற்காக இவ்வாறு தீமைகளைச் செய்யப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலேயே நமக்குள்ளும் தீமைகளை உருவாக்கி விடுகின்றது.

அந்த நேரங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவரும் பெறட்டும்… தெளிந்த மனம் பெறட்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர் பெறட்டும் என்று எண்ணி விட்டோம் என்றால்
3.அவர் சொன்ன உணர்வு நமக்குள் குரோதமாக ஆக்காது.

இப்படி மாற்றவில்லை என்றால்… அவர் சொன்னதைப் பதிவாக்கிய பின் அவரைப் பார்த்தாலே மோப்பம் பிடிப்போம். பிறகு எதையாவது பேசினோம் என்றாலும்… இந்த மாதிரிச் சொன்னீர்கள் அல்லவா… என்று அந்தப் பதிவு நினைவாகி “மீண்டும் பகைமையை உண்டாக்கிவிடும்…”

இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாது சந்தர்ப்பத்திலே ஊருவாகுவதைக் காட்டுவதற்குத் தான்
1.கருப்பணசாமியை வைத்து அந்த உணர்வின் இயக்கங்களை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
2.இருண்ட நிலையாக நமக்குள் உருவாகிவிடுகிறது என்பதை இப்படிக் காட்டுகின்றார்கள்… நல்லதைக் காக்க முடியாது போய் விடுகின்றது.

மேலும் கருப்பண்ணசாமிக்கு ஆட்டைப் பலி கொடுப்பதும் மற்றதையும் செய்தால் அவன் நம்மைக் காப்பான் என்று… ஞானிகள் கொடுத்த உண்மையின் உணர்வுகள் எல்லாம் “தலை கீழாக மாறிய நிலையில் தான் இன்று உள்ளது…”

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை

 

ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கிக் கொண்டு வருகின்றோம்… திடீரென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றது. உடனே நமக்கு அதிர்ச்சி வருகின்றது… வேதனை வருகின்றது.

சந்தர்ப்பத்திலே இந்த வேதனை அதிகமாக நுகரப்படும் பொழுது இந்த உணர்வு நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.அந்த அதிர்ச்சியான உணர்வுகள் நம் இருதயத் துடிப்பிலே பட்டு விட்டால் அங்கே படபடப்பு அதிகமாகி
2.நம் சுவாசத்தை கட்டுப்படுத்தும் பயத்தின் தன்மையாக வரும்… பதட்டம் வந்து விடுகின்றது.

பதட்டாமன உணர்வுகள் சிறிது காலம் அது இருந்தால் உமிழ் நீராகி ஆகாரத்துடன் கலந்து அதே உணர்வு வளரப்படும் பொழுது நடுக்கவாதம் வரும்.

இது எல்லாம் நம்மை அறியாமல் வரக்கூடிய நிலைகள். இதைப் போன்ற நிலையில் இருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

கை தவறிப் பொருள் கீழே விழுந்து விட்டாலும் அந்த ஆசையினால் “பொருள் போய்விட்டதே…” என்ற அந்த வேதனை உணர்வைத் தடுப்பதற்கு ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

1.சுவாசத்திற்கு மேலே செல்லாதபடி (உயிரிலே படாதபடி) தடுத்து நிறுத்தும் நிலையாக
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மன உறுதி கொண்டு அந்தச் சக்தியை எடுத்து
4.சரி… “நாளை சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…”

இப்படி நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமையை நாம் பெறுதல் வேண்டும்.

நம் பிள்ளை மீது பிரியமாக இருப்போம். பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் வேதனைப்படுவோம். அவன் வேதனைப்படுகிறான் என்றால் நமது சிந்தனையும் குறைந்து விடுகின்றது வேதனையுடன் சொல்லப்படும் பொழுது அவனும் சிந்தனை இழந்து விடுகின்றான்.

எல்லாம் ஆனபின் நமக்குக் கோபம் வருகின்றது. இப்படி நமக்குள் ஒன்றின் பின் ஒன்று தொடராக… “நாம் சுவாசிக்கும் உணர்வுகள்” நம் உடலில் தீய விளைவுகளை உருவாக்கும் தன்மையாக வந்து விடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கிய நாம்… சந்தர்ப்பத்தால் இதைப் போல் வாழ வேண்டும் என்று எண்ணிச் செயல்படும் பொழுது “மேலே சொன்னது போன்ற தீமைகள்” வந்து விடுகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டி விட்டு அந்தச் சக்தி நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தி உள்ளுக்குள்ளே வலிமை ஆக்கினால்… தீமை செய்யும் சக்திகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளலாம்.

வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது வாலி. உடலுக்குள் அந்த வேதனையான அணுக்கள் நல்ல அணுக்களுடன் சேர்ந்து விட்டால் இரண்யன்.

அந்த இரண்யனை மடி மீது வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளக்கின்றான். சூரியன் எப்படித் தன் மீது மோதும் நஞ்சினைப் பாதரசத்தால் பிளக்கின்றதோ அதைப் போல்
1.கார்த்திகேயா என்று மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.ஒளியாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவோம் என்றால் தீமைகளைப் பிளக்க முடியும்.

நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலுவாகும் போது தீமைகள் அனாதையாகி விடுகின்றது… ஈர்க்கும் சக்தி குறையும் பொழுது சூரியன் அந்த தீமைகளைக் கவர்ந்து சென்று மாற்றி அமைத்து விடுகின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது…!

ஆகவே நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி நாம் எதையுமே நல்லதாக மாற்றிட முடியும்.