“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்

spiritual-bodies

“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்

எனக்குக் (ஞானகுரு) கல்வி அறிவு இல்லை என்றாலும் அந்த மகா ஞானியின் உணர்வலைகளை குருநாதர் பதிவு செய்ததை நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நுகர்கின்றேன்.

அவ்வாறு நுகர்ந்தறிந்து என் உயிருக்குள் மோதச் செய்யும் போது அந்த ஞானியின் ஆற்றல்மிக்க உணர்வுகளே ஞானமாக என்னைப் பேசச் செய்வதும் இதை நீங்கள் நுகர்ந்தறியும் போது உங்களுக்குள்ளும் அது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

பதிவான உணர்வின் சக்தியை நாம் அனைவரும் ஒன்றாக எண்ணி ஏங்கி ஈர்க்கும் நிலைகள் வரும் போது காற்றிலே மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் கூடியுள்ள இப்பகுதிக்கு ஈர்க்கும் தன்மை வருகின்றது.

1.அந்த மகா ஞானிகள் பிறவி அற்ற நிலைகள் கொண்டு
2.எந்த மனிதன் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது
3.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள்.
4.இருள் சூழ்ந்த நிலைகளை மாய்த்திடும் சக்தி வாய்ந்தவர்கள்.

நம் வாழ்க்கையில் வரும் வேதனை கலந்த உணர்வு கொண்டு
1.வேனையான எண்ணத்துடன் நாம் கவர நினைத்தால்
2.அந்த ஞானியின் உணர்வலைகள் நஞ்சு கலந்த உணர்வின் அருகில் வராது
3.இதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.
4.ஞானியின் உணர்வைப் பெறும் தகுதியை இழந்துவிடுவோம்.

அந்த மாதிரி ஆகாதபடி ஞானியின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

நல்ல வினைகளாக ஞான வித்துக்களாக உங்களுக்குள் உருவாக்கும் வண்ணம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.

உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் குடும்பத்திலும் சரி தொழிலிலும் சரி பொறுப்பற்ற நிலைகளில் செயல்படுபவர்களை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுதெல்லாம் எரிச்சலும் கோபமும் ஆத்திரமும் வேதனைகளும் வருகின்றது.

அதைப் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்து நம் ஆறாவது அறிவைச் செயலற்றதாக்கும் தன்மையிலிருந்து நாம் நம்மை மீட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.பொறுப்புடன் செயல்படும் நல்ல உணர்வுக்குள்
2.பொறுப்பற்ற உணர்வுகள் கலந்து
3.பொறுப்பான உணர்வைத் தாழச் செய்துவிடுகின்றது.
4.அதிலிருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் ஆவியாக மாற்றியது போல அந்த அருள் ஞானியின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்தும் போது நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்த தீய வினைகள அது செயலிழக்கச் செய்துவிடும்.

ஆகவே வாழ்க்கையில் வேதனை வேதனை என்று வேதனைகளையே எண்ணாதீர்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த வேதனையிலிருந்து விடுபடுவேன் என்று எண்ணி ஏங்கி எடுத்துப் பாருங்கள்.

அந்த அருள் சக்தி உங்களுக்குள் இணைந்த பின் “மன வலிமையும்… ஒரு புது உணர்ச்சியும்…” ஏற்படும். தொடர்ந்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்க எடுக்க
1.வேதனைகள் அகன்று நல்ல சிந்தனைகள் தோன்றும்.
2.மனதில் அமைதியும் உற்சாகமும் ஏற்படும்.

குழந்தைகள் “மாறு கண்ணுடன்” பிறப்பது… பிறந்த பின் வீட்டிலே “சண்டையும் சச்சரவும்” வருவது… தொழிலில் “மந்தம்” ஏற்படுவது… இதற்கெல்லாம் காரணம் என்ன…?

Mother and child care

குழந்தைகள் “மாறு கண்ணுடன்” பிறப்பது… பிறந்த பின் வீட்டிலே “சண்டையும் சச்சரவும்” வருவது… தொழிலில் “மந்தம்” ஏற்படுவது… இதற்கெல்லாம் காரணம் என்ன…? 

ரோட்டிலே இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கடுமையாகப் பேசுகின்றார்கள்.

இந்த மாதிரிச் சாபவிடுவதைக் கர்ப்பமான தாய் மூன்று மாதத்திற்குள்ளே பார்த்து விட்டார்கள் என்றால் பார்த்த உணர்வுகள் கருவிலே ஆழமாகப் பதிந்து விடும்.

மூன்று மாதங்களுக்கு மேலே போனால் உருவமாகிவிடும்.

ஆனால் கருவுற்றது உரு பெறும் நிலைகளாக இந்த மூன்று மாதங்களுக்குள் இது பதிவு செய்து கொள்ளும்.

இந்த மூன்று மாதத்திற்குள் எதையெல்லாம் அந்தத் தாய் கூர்மையாகப் பதிவாக்குகின்றதோ அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடும்.

இன்று புதிதாக ஒரு செடியை எப்படி உருவாக்குகின்றார்கள்?

1.ஒரு செடியின் வித்துக்களை வைத்து முளை வரும் போது
2.மற்ற செடியோட இரண்டறச் சேர்த்து இழுக்க வைத்து
3.ஒரு புதிய செடியாக – இரண்டு செடியின் சத்தும் சேர்ந்ததாக உருவாக்குகின்றார்கள்.

இதே மாதிரி ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் போதும்.

அந்தச் சாப வினைகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு என்ன செய்கின்றது என்று சொன்னால்
1.தாய் கண்ணுற்றுப் பார்க்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நுகருகின்றது.

சாபமிடுபவர்களைப் பார்த்து “இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அந்தத் தாய் தனக்குத் தெரிந்த நியாயத்திற்குப் பேசுகிறது. ஆனால் நல்ல குணங்களுக்கு இது எதிர் மாறானது.

அப்போது அதைப் பார்த்தவுடனே தாய் என்ன செய்கிறது?

இப்படிப் பேசுகிறதே என்று ஏங்குகின்றது. இந்த உணர்வின் தன்மை கேட்கும் பொழுது “ஸ்..ஸ்ஸ்…, அப்பா…! என்று களைப்பு வருகிறது.

ஏனென்றால் கர்ப்பமாக இருக்கப்படும்போது அந்த ஆரம்பக் காலங்களில் உமட்டலாக அந்தச் சோர்வான நிலைகள் இருக்கும். அப்போது இதைத் தாங்காதபடி… “அப்பா…!” என்று எண்ணும்போது
1.இந்தச் சாபமிட்ட உணர்வுகள் நேராகக் குழந்தைக்குள் இணைந்து
2.நல்ல உணர்வைக் கொன்று
3.இந்த வித்தாக அது இணைத்து விடும்.

உனக்கு கண் தெரியாது… உன் கால் முடமாகும்… உன் குடும்பம் நாசமாகப் போகும்…! என்று சொல்லிச் சாபமிடுவார்கள்.

இதைக் கேட்டவுடனே இந்த உணர்வு அதில் விளைந்த வித்து இந்தக் குழந்தையுடன் இணைந்து விடுகின்றது.

குழந்தையுடன் விளைந்த பிற்பாடு என்னவாகின்றது?

குழந்தை பிறக்கப் போகும் போது இவர்கள் தன்னை அறியாமலே  உலகம் கெட்டுப் போய்விட்டது….! அங்கே இப்படிப் போய்விட்டது…! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

சாபமிட்டவர்கள் “உனக்குக் கண் தெரியாது…!” என்று ஒரு நான்கு தரம் பேசியிருந்தால் அந்தத் தாய் அதை நுகர்ந்திருந்தால் கருவில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின்
1.கருவிழிக்கு வரும் நல்ல உணர்வின் தன்மையை இது தடுக்கும்.
2.குழந்தை பிறந்த பின்னாடி பார்த்தோம் என்றால் குழந்தைக்கு “மாறு கண்ணாக…” இருக்கும்.

சாபமிட்டவர்கள் “உன் குடும்பம் தொலைந்து போகும்…!” என்று பேசியிருந்தார்கள் என்றால் கருவில் பதிவாகி அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து “இப்படி ஆகிப் போய்விட்டதே… இப்படி ஆகிப் போய்விட்டதே…” என்று நினைத்தார்கள் என்றால்
1.இந்தச் சோர்வின் தன்மையால் தொழில் கெடும்
2.சோர்வடையும் போது வீட்டில் சண்டை வரும்.
3.சம்பாதித்து வைத்த காசு இது தன்னாலே ஓடும்.
4.சாபத்தை – சும்மா வேடிக்கையாகப் பார்த்த கர்ப்பிணிக்கு இத்தனை நிலை ஆகிறது.

இதுவெல்லாம் நாம் தவறு செய்யவில்லை. ஆனால் சந்தர்ப்பத்தால் இப்படிப் பதிவாகி நமக்குள் விளைந்துவிடுகிறது.

இதை எல்லாம் நாம் எப்படித் துடைப்பது? நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய ஞானிகள் எதைச் சொன்னார்கள்?
1.நமக்குள் கெட்டது எப்படிச் சூழுகின்றது?
2.அறியாமலே தீமை நமக்குள் எப்படி விளைகிறது?
3.தீமைகளை எப்படி விலக்குவது…? என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை அமைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

ஒரு ஊர் இருந்தாலும் ஒரு கிராமம் இருந்தாலும் பத்து வீடு இருந்தாலும் கோவில் கட்டி வைத்திருக்கின்றோம். விநாயகரைப் பார்க்கிறோம். தினசரி எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

தேங்காய் பழம் வைத்து வணங்குகிறோம். பிள்ளையாரைச் சுற்றி வந்தால் பிள்ளை வரம் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்து அந்தக் கோவிலைச் சுற்றுகின்றோம்.

ஆனால் நம் வாழ்க்கையில் எதை வினையாகச் சேர்க்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றோமா…! ஞானிகள் சொன்ன அந்த நிலையைப் பற்றி ஏதாவது நினைக்கின்றோமா?

ஞானிகள் சொன்ன நிலையை நாம் உணர்வால் எண்ணத்தால் எடுத்துத் தீமையை நீக்க வேண்டும். ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீய வினைகள் அகற்றிடும் சக்தியாக… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக “சரஹணபவா.. குகா..”
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக விண்ணிலே இருக்கின்றான்.

மண்ணுலகில் தீமைகளை வென்று விண்ணுலகில் இருக்கும் அந்த அகஸ்தியன் காட்டியது தான் “விநாயகர் தத்துவம்”.

விநாயகரைப் பார்க்கும்போதெல்லாம் விண்ணிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் தீய வினைகள் சாப வினைகள் அனைத்தையும் அகற்ற முடியும். கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த அகஸ்தியனின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் கருவிலேயே ஞானியாவான்.

நம்மை அறியாமல் வரும் தீய வினைகளை அகற்றி நல் வினைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரை எங்கே பார்த்தாலும் வைத்திருக்கின்றார்கள்.

ஒரு நல்ல வித்தின் தன்மையை நாம் மாற்றி விட்டால் கனியின் தன்மை பலன் கொடுக்குமோ? கொடுக்காது.

ஆகவே நம் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும்
1.தீமைகளிலிருந்து மனிதர்கள் அகல வேண்டும் என்பதற்காகத் தான்
2.குருநாதர் சொன்ன அருள் வழிகளை இங்கே உணர்த்துகின்றோம்.

நஞ்சை ஒடுக்கும் அரளிப்பூவைப் பற்றியும் எருமை மாட்டுச் சாணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்

Image

arali

நஞ்சை ஒடுக்கும் அரளிப்பூவைப் பற்றியும் எருமை மாட்டுச் சாணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்

எருமை மாட்டுச் சாணத்தின் குணங்கள்:-

மாடு பல தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது. அதிலுள்ள விஷங்கள் அனைத்தையும் தன் உடலாக மாற்றுகின்றது. அதே சமயத்தில் அதிலுள்ள நல்லதைக் கழிவாகச் சாணமாக மாற்றுகின்றது.

மாடு அந்த விஷத்தைக் கரைத்துத்தான் தன் உடலாக அதை மாற்றுகின்றது. ஆகவே மாடு
1.தனக்குள் ஈர்த்துக் கொள்வது நஞ்சு (அதை வலுவாக்கிக் கொள்கின்றது)
2.தன்னிடமிருந்து வெளியேற்றுவது நல்லது. (அதைக் கழிவாக்குகின்றது)

விஷத்தை குடித்தவர்களுக்கு அந்த மாட்டின் (குறிப்பாக எருமை) சாணத்தை எடுத்துத் தண்ணீரில் கரைத்து லேசாக அதைச் சுட வைத்து அதன் மேல் இரண்டு பாதங்களையும் வைத்தால் உடலிலுள்ள விஷங்களை எல்லாம் ஈர்த்துவிடும்.

ஏனென்றால் மாடு அந்த விஷத்தை எப்படிக் கரைத்ததோ உணவாக உட்கொண்டதோ அது வெளிப்படுத்தும் சாணத்தில் நல்லது அதிகமாக இருப்பதால் நம் உடலில் விஷம் இருந்தால் அதைக் கரைத்துப் புவியின் ஈர்ப்பில் இழுத்து விடுகின்றது.

அரளிப்பூவின் குணங்கள்:-

அரளியை நாம் உட்கொண்டால் நம்மை அது மாய்த்துவிடும். ஆனால் அரளிப் பூவின் மணத்தை நுகர்ந்தால் நம் உடலிலுள்ள சில நஞ்சான நோய்களை அகற்றிவிடும்.

அரளிப் பூவை நாம் ஏன் தெய்வத்திற்குப் போடுகின்றோம்…! வீட்டிலும் சரி… கோவிலிலும் சரி…! தெரிந்தோ தெரியாமலோ நம் வீட்டில் சில விஷத் தன்மைகள் இருந்தால் அந்த மணத்தால் அது அகற்றப்படுகின்றது.

சிலர் கால் வலி மூட்டு வலி இவைகளால் துன்பப்படுவார்கள்.

அவர்கள் இந்த இலையை 4-5 எடுத்து இரவு படுக்கையில் கால்களுக்கு அடியில் வைத்துப் படுத்தால் கால்களில் மூட்டுகளில் சேர்ந்த விஷமான நீரை எல்லாம் எடுத்துவிடும். வலி குறைவதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் இந்த நஞ்சுக்கு அத்தகைய ஆற்றல் உண்டு. ஒரு அணுவிற்குள் இருக்கும் நஞ்சின் அளவுக்குத் தக்கவாறு தான் அதனின் இயக்கத்தின் ஆற்றல் இருக்கும்.

நஞ்சை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். நஞ்சை உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் சந்திக்கும் எத்தகையை நஞ்சான நிலைகளக இருந்தாலும் அதை அடக்கி ஒளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களிலிருந்தும் விடுபட முடியும்

“நான் படுகிற அவஸ்தை எனக்குத் தான் தெரியும்…!” என்கிறார்கள்

Wisdom light

“நான் படுகிற அவஸ்தை எனக்குத் தான் தெரியும்…!” என்கிறார்கள்

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை எல்லோரும் ஆர்வமாகக் கேட்கின்றனர்.

உங்களுக்கு “நோயில்லை… துன்பம் இல்லை…” என்று நான் வாக்காகக் கொடுக்கின்றேன்.

நல்ல வாக்கைக் கொடுத்தாலும் நான் படும் அவஸ்தை “எனக்குத்தான் தெரியும்” என்கிறார்கள்

சரி இனிமேல் நோய் நீங்கிப் போகும் என்று யாம் சொல்கிறோம்.

“இல்லைங்க..,!” என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்கிறார்கள்…!

ஒரு அம்மாவிடம் நான் நல்ல உணர்வை வாக்காகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அந்த அம்மா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு என்ன சொல்கிறது?

நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. வீட்டிற்குச் சென்றால் சுத்தமாக எல்லாம் மாறிப் போகின்றது. என்னென்னவோ நடக்கிறது என்று சொல்கிறது.

வீட்டிற்குப் போனாலும் என்ன அம்மா? எங்கே போனாலும் இதே மாதிரி நல்லதை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.

“அதற்கு இல்லைங்க….!” வீட்டிற்குப் போனாலே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று அதை “இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள்”.

அதே மாதிரி இனி நோய் இல்லை போங்கள் இதைப் பின்பற்றுங்கள் நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள் என்று நல்ல வாக்கைக் கொடுக்கின்றோம்.

ஆனால் இதைக் கேட்பார் யாரும் இல்லை.

1.சாமிக்கு என்ன தெரியும்?
2.நான் படுகிற அவஸ்தை எனக்குத் தானே தெரியும் என்கிறார்கள்.

ஆனால் தன்னைத் “திட்டுபவர்களை” மட்டும் மனதில் எண்ணி “என்னை இப்படிப் பேசினாய் அல்லவா…, இரு நான் பார்க்கிறேன்… உன் குடும்பத்தை நான் தொலைத்துக் காட்டுகிறேன்…” என்று மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

இந்த உணர்வு அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால் இவர்கள் உடலுக்குள் புகுந்து இந்த உடலைத் தொலைத்துக் கட்டும் என்பதை மறந்து போகின்றார்கள்.

சில வீட்டில் பார்க்கலாம். கொஞ்சம் “சுருக்…” என்று சொன்னால் போதும். ஆ… நீ என்னை என்ன சொன்னாய்…! உன்னை விடுவதா…? இருக்கட்டும்… நான் உன்னை என்ன செய்கிறேன் பார்…! என்று சொல்லிவிட்டு வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள்.

நீ அப்படிப் போவாய் இப்படிப் போவாய் இந்த மாதிரியெல்லாம் உனக்கு ஆகும் என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் இப்படிப் பேசுபவர்கள் எல்லோரையும் பாருங்கள். உடலில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி கால் வலி மூட்டு வலி எல்லாம் இருக்கும். “இது பேசியவர்களுக்கு”.

சிலர் பேசாமல் இதைப் பொழுது போக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

1.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள். அந்த அம்மா நல்ல அம்மா.
2.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள். அந்த அம்மா நல்ல அம்மா என்று
3.இப்படியே திரும்பத் திரும்ப எண்ணி
4.அந்தச் சண்டை போடுபவர்களை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கிக் கொள்வார்கள்.

ஒரு பொல்லாதவரை எண்ணுவது. நல்லவரைப் பார்த்து இங்கே “இப்படி ஆகிறதே…” என்று இதை வளர்த்துக் கொள்வது.
1.நல்லவர் மேல் இரக்கமும்
2பொல்லாதவர் மேல் ஆத்திரமும் இந்த இரண்டும் இங்கே வரும்.

இப்படி வந்தவுடனே “அம்மம்மா…ஆ…” வயிறெல்லாம் வலிக்கிறதே… குடலெல்லாம் முட்டுகிறதே… அவர்களுக்கு இந்த நோய் வரும்.

ஆனால் நல்லவர்கள் தான்.

இந்த மாதிரிச் சண்டை நடக்கும் இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் பொழுது என்ன ஆகிறது?

1.எனக்கு எப்படியோ வருகிறது என்னென்னமோ செய்கிறது.
2.நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே
3.தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கிறதே
3.நான் அடிக்கடி வணங்கும் தெய்வமும் இப்படிப் பண்ணுகிறதே
4.இப்படித்தான் எண்ணி இதைத்தான் கூட்டிக் கொள்ள முடிகின்றது.

தெய்வம் எங்கே இருக்கின்றது? எந்த ரூபத்தில் இருக்கின்றது? என்பதை வியாசகர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

நம் உயிரே கடவுள் நம் உடலே கோவில். எண்ணும் எண்ணமே இறைவன். இறையின் செயலே தெய்வமாக அமைகின்றது.

நாம் எண்ணியதை உயிர் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று உடலாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் யார்? நாம் எண்ண வேண்டியது எது? நமக்குள் சேர்க்க வேண்டியது எது? நாம் அடைய வேண்டிய எல்லை எது? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்?

இத்தகைய நிலைகளை எல்லோருக்கும் அறிவிப்பதற்காகத்தான் தன்னை அறிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

இதை அறியாதபடி நாம் வாழ்ந்தால் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அதனின் இயக்கமாக இயங்கி அதன் வழியில் தான் செல்ல வேண்டியதிருக்கும்.

அத்தகைய நிலைகளிலிருந்து விடுபடும் நிலைக்குத்தான் உங்களுக்கு அந்த ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்.

திட்டியவனை எண்ணும் பொழுது மீண்டும் மீண்டும் அவனை எண்ணி இரு நான் பார்க்கிறேன் என்று எண்ணுவது போல்
1.அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை நாம் ஆழமாகப் பதிவு செய்து கொண்டால்
2.அதை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால்
3.அருள் ஞானிகளின் உணர்வு நமக்குள் இயங்கி
4.இந்த வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி மெய்யை உணர்த்தும்.
5.மெய் ஒளி மெய் ஞானம் பெறமுடியும்

இதில் ஒன்றும் சிரமமில்லை.

“வேதனை” என்ற நஞ்சை நீக்கக்கூடிய ஒரே சக்தி துருவ நட்சத்திரம்

Gnanaguru - Venugopalswami

“வேதனை” என்ற நஞ்சை நீக்கக்கூடிய ஒரே சக்தி துருவ நட்சத்திரம்

விஞ்ஞானிகள் மனித உடலுக்குள் இயங்காத பழுதான உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மாற்று உறுப்புகளைப் பொருத்துகின்றார்கள். நம்மைக் காக்கின்றார்கள்.

மாற்று உறுப்புகளைப் பொருத்தினாலும் அவைகள் தொடர்ந்து சீராக இயங்க வேண்டுமென்றால் பல உணவுக் கட்டுப்பாடுகளையும். மற்ற மருந்துகளையும் கொடுப்பார்கள்.

தண்ணீர் இவ்வள்வுதான் குடிக்க வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது. எங்கே சென்றாலும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால் அந்த உறுப்பு கழன்று விடும், இயக்கம் மாறிவிடும். பின் வேதனையைத்தான் அனுபவிக்க வேண்டும்.

“எவ்வளவு நாள்…” இதைப் போன்ற நிலையில் வாழ முடியும்? சந்தோஷம் நீடித்து இருக்கின்றதா…! காசையும் செலவழித்துச் சிறிது நாள் வாழ்வதற்குள் எவ்வளவோ வேதனைகளைச் சந்திக்க நேர்கின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளுக்குள் செலுத்தி உறுப்புகளிலுள்ள தீமைகளை நீக்க முடியும்.

அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைத் துருவ நட்சத்திரத்தின் பேரொளியைப் பெறச் செய்து அதை உற்சாகப்படுத்தி நல்ல உறுப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து
2.சுவாசித்த அந்த உணர்வலைகளை
3.கண்ணின் நினைவு கொண்டு உள் முகமாக உடலுக்குள் செலுத்தி
4.நேரடியாக எந்த உறுப்போ அங்கேயே செலுத்த முடியும்.

அந்த உறுப்பை உருவாகிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைத்தால் உடலை உருவாக்கிய அந்த நல்ல அணுக்கள் அனைத்தும் வலு பெற்று உறுப்பைச் சீராக இயங்கச் செய்யும்.

அந்த ஆற்றலைப் பெற துருவ தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.நம் பூமியின் வட துருவப் பகுதி வழியாக வந்து கொண்டிருக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியான
3.“அருள் ஞானப் பொக்கிஷத்தை” நமக்குள் கவரும் அந்த அதிகாலை நேரமே “துருவ தியானம்”.

துருவ தியானத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் உயிர் நேராக அந்தத் துருவ நட்சத்திரத்திலேயே “உங்களைக் கொண்டு போய் நிறுத்தும்”.

நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி

POLARIS

நோய்களையும் வேதனைகளையும் நம் அருகே வரவிடாமல் தடுக்கச் செய்யும் பயிற்சி 

நாம் மனிதரான பிற்பாடு பிறர் சொல்லும் கவலைகளையும் சங்கடங்களையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் நமக்குள் கவலையையும் சஞ்சலத்தையும் வேதனையையும் உண்டாக்கும் சந்தர்ப்பம் தன்னாலேயே வந்து விடுகின்றது.

ஆகவே கவலை வேதனை போன்ற உணர்வுகளை நீங்கள் கேட்க நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.“நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும்
3.உங்களுடைய தொழில் நன்றாக இருக்கும்”
என்ற இது போன்ற வார்த்தைகளைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும்.

இது போன்ற வார்த்தைகளை அந்தக் கவலையாகச் சொன்னவர்களிடம்… “நீங்கள் கோபமாகச் சொன்னாலும் சரி”.

“இந்த உணர்வின் அழுத்தம்..,” நஞ்சான உணர்வுகள் உங்களிடம் வராது தடுத்துவிடும்.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும், நீங்கள் நலமாக இருப்பீர்கள், உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும் என்று எண்ணி அவர்களைப் பார்த்துக் கோபமான உணர்வுடன் “அழுத்தத்துடன் சொன்னால்” நஞ்சான உணர்வுகள் அவர்களிடமிருந்து விலகும்.

“நம்மிடம் அது வராது…!”

இல்லையென்றால் அவர்களுடைய கவலைகளை சஞ்சலங்களை “உம்… ம்…” என்று நீங்கள் காது கொடுத்துக் கேட்டால் உங்களிடம் சோர்வு வந்துவிடும். சிந்தனைத் திறனும் குறையும்.

ஒரு நண்பர் மேல் பாசமாக இருக்கிறோம். திடீரென்று… அந்த நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம்.

“நேற்று வரை நன்மைகள் செய்தாரே…! இன்று விபத்தில் சிக்கி இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணுவோம்.

“ஆத்ம சுத்தி செய்வதை மறந்துவிடுவோம்…” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணுவதை மறந்துவிடுவோம்.

அடிபட்ட நண்பரை ஆஸ்பத்திரியில் பார்த்து எப்படி இருந்தவர் “இப்படி இருக்கின்றாரே…” என்று எண்ணினால் இதன் உணர்வுகள்தான் வரும். நமக்குள் அது வளரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணி உடனே நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் இருளான உணர்வுகள் நம்மை “இயக்கவிடாதபடி…” தடுத்துவிட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பரின் உடல் முழுவதும் படர்ந்து அவருடைய வேதனைகள் நீங்கி நல் உணர்வைப் பெறக்கூடிய சக்தி பெறவேண்டும்.

அவர் பூரண குணமடைய வேண்டும்…! என்று எண்ண வேண்டும்.

“இது சாதாரணமானதல்ல…” நீங்கள் இதன் உணர்வுகளைச் சொல்வதை.. “நண்பர் தம் காதால் கேட்டால்.. அவர் நுகர நேர்ந்தால்..” நீங்கள் எண்ணிய உணர்வுகள் நண்பரிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

சீக்கிரமே நண்பர் நலம் பெறுவார். இது போன்று நீங்கள் செய்து பாருங்கள்.

ஒருவர் எவ்வளவு கடிமான நோயில் இருந்தாலும் கூட நீங்கள் கூடுதலாகச் சில நிமிடம் அவருக்காகத் தியானம் செய்யும்போது அவர் சீக்கிரமே நோயிலிருந்து விடுபட்டு நலம் பெறுவார்.

“உங்களுக்கு… அந்தச் சக்தி உண்டு…!” என்று யாம் கூறுகின்றோம்.

மற்றவர்களுடைய வேதனைகளை நோய்களை உங்களால் நீக்க முடியும். ஆனால், தவறிப் போய் நோயாளியின் வேதனை உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நண்பருடைய உடல் முழுவதும் படரவேண்டும், நண்பருடைய இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், அவர் வேதனையிலிருந்து விடுபட வேண்டும். அருள் சக்தி அவர் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் நண்பரையும்.., “இது போன்று எண்ணச் சொல்லுங்கள்”. இதை உங்கள் பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால், மற்றவர்கள் சொல்கிற கஷ்டங்களை நாம் கேட்கிறோம். கேட்டவுடன் நாம் சோர்வடைகின்றோம்.

ஆத்ம சுத்தியையும் அருள் உணர்வுகளையும் சொல்லும்போது சோர்வை நீக்குகின்றோம்.

“அந்த அருள் சக்தியைத்தான்” யாம் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

உடல் வலி… நோய்கள்.. இவைகளெல்லாம் நமக்கு ஏன் வருகின்றது…?

health bliss (2)

1.பயம்

நாம் அனைவருமே ஒவ்வொரு வகையில் சிரமத்தில் ஆழ்ந்துள்ளவர்கள். பல இன்னல்கள், சங்கடம், சலிப்பு, வேதனை, இதைப் போன்று எத்தனையோ வேதனைகள்படுகின்றோம்.

பண வசதி இருந்தாலும், பணமற்று இருந்தாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒருவர் செய்யக்கூடிய தவறுகளை, அந்த உணர்வை நாம் சுவாசிக்கும் பொழுது, அந்த ஆற்றல்மிக்க உணர்வுகள் நமக்குள் இயக்கிவிடுகின்றது. இந்த ஆற்றல்மிக்க நிலைகள் இருப்பதனாலே, பயம் என்று நாம் நினைத்தவுடன் ஆற்றல் அதிகமாகின்றது.

வேகமாக வரக்கூடிய பஸ், நம் மீது மோதிவிடுமோ” என்ற உயிரின் துடிப்பின் நிலைகள் நம் உணர்வின் உச்ச நிலைகளில் தூண்டுவதனால் தான், நாம் வேகத் துடிப்புடன் நாம் நம் உடலை இயக்கி, நாம் உடனடியாக நகர்ந்து செல்ல முடிகின்றது.

2. கோபம் – பிறர் செய்யும் தவறைப் பார்க்கும் நிலை

அதைப் போல ஒரு குற்றம் ஏற்படுகின்றதென்றால், அந்தக் காரமான உணர்வுகள் நமக்குள் தூண்டப்படும் பொழுதுதான், அந்தக் குற்றத்தின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, உடனே தவறு செய்வதை நிறுத்தக் கூடிய நிலைகளும் ஏற்படுகின்றது. ஏனென்றால், இது உணர்த்தும் ஆற்றல்.

ஆகையினாலே, நாம் சாந்தமான நிலையில் இருந்தாலும், நல்லதைச் செய்தாலும் “இந்த நல்லதைக் காப்பதற்கு” கோபம், அவசரம், ஆத்திரம் இவையெல்லாம் தேவையுள்ளவை தான்.

ஆனால், நாம் எப்படி ஒரு மிளகாயை ஒரு குழம்பிற்குள் பக்குவப்படுத்துகின்றோமோ, அதைப் போன்று நாம் சந்தர்ப்பத்தால் அதிகமான நிலைகளை நாம் சுவாசித்து விட்டாலும் நம் உடலுக்குள் சென்றபின், அந்தக் காரத்தின் அளவைக் குறைக்கச் செய்வதுதான், நாம் செய்யும் இந்த தியானம்.

அந்தக் காரத்தைக் குறைக்கவில்லை என்றால், நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் கலந்து, அதுவும் கலந்து தீமையான அணுக்கள் விளையும் தன்மை பெற்றுவிடும்.

நாம் இன்று எப்படி மரங்களுக்கு, சத்தான பல உணர்வை ஏற்றியவுடன், அந்தச் சத்தின் தன்மை பெற்றவுடன், கனியினுடைய வர்க்கங்கள் மாறுகின்றது, மரத்தின் வித்தின் தன்மைகளும் மாறுகின்றது.

அதைப் போன்று, நாம் நல்ல குணங்கள் கொண்டு நம் உடலை வளர்த்திருந்தாலும், நல்ல குணங்கள் சீரிய பண்புகள், நம் உடலில் வளர்த்திருந்தாலும், சந்தர்ப்பவசத்தால் நாம் வாழ்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்ட பயம், அவசரம், ஆத்திரம், கோபம், குரோதம், இவை அனைத்துமே நமக்கு அவசியம்.

3. குரோதம்

கோபம் என்பது ஒரு தவறின் உணர்வை நமக்குள் சுட்டிக் காட்டுகின்றது. அந்தக் கோபத்தை அதிகமான நிலைகள வளர்த்துக் கொண்டால், இங்கு குரோதமாக அதையே திரும்ப, திரும்ப, இந்தக் கோப உணர்ச்சிகளைத் தூண்டி நாம் எந்த உணர்வின் தன்மை வளர்ந்ததோ, அந்தக் குற்றத்தையேதான் நாம் பேசிக் கொண்டிருப்போம்.

குரோதம் என்பது, நமக்குள் வளர்ந்த பருவமான நிலைகள். தன் முதிர்ந்த நிலைகள் பெறுவதனால், குரோதம். நாம் திரும்பத் திரும்ப எண்ணுகின்றோம். இதைப் போன்ற நிலைகள்தான் நமக்குள் வளர்ந்து வருகின்றது.

4. வெறுப்பு

மரம் செடி கொடிகளுக்குச் சத்தான நிலைகளை நாம் விஞ்ஞான அறிவு கொண்டு நாம் சேர்த்தவுடன், அதனுடைய நிலைகள் சேர்த்துக் கொண்டு, அந்த மரத்தின் தன்மை வருகின்றது.

நமக்குள் நல்ல குணங்கள் எவ்வளவு இருந்தாலும், சந்தர்ப்பவசத்தாலே நாம் ஒரு சமயம் அதீதக் கோபப்பட்டுவிட்டால், அல்லது ஒருவர் மேலே வெறுப்புப் பட்டுவிட்டால்,

வெறுப்பின் உணர்வுகளை அவர் மேலே பதித்தபின், அவரைப் பார்த்தவுடன் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும். நமக்குக் கோபம் வரும். அவர் எவ்வளவுதான் நல்லது செய்திருந்தாலும் அந்த நல்லதைப் பற்றி நாம் சிந்திக்கக் கூட முடியாது.

ஆக, நல்லது செய்தாலும், குற்றத்துடன் அவர் செய்வது நல்லதல்ல என்றும், அந்தக் குற்றத்தைச் சுட்டிக் காட்டக்கூடிய நிலை சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. அதையேதான் ஏற்படுத்தும்.

இதையேதான், நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை நம் புலனறிவிலே நாம் ஒரு முறை ஒன்றைப் பார்த்து பயந்துவிட்ட்டாலோ, அதைக் கண்டவுடன் நமக்குப் பயம் வரும்.

ஏனென்றால், நாம் எந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ, அந்த உணர்வின் தன்மை அதில் பட்டவுடன், அந்த நினைவலைகள் தூண்டப்பட்டு, அந்த உணர்ச்சிகளை நாம் சுவாசிக்கப்பட்டு, அதன் நிலைகளில் நாம் செயல்படுகின்றோம்.

இது இயற்கையின் நியதிகள். இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திலும், நமக்குள் பல நிலைகள் ஓடிக் கொண்டே, மாறிக் கொண்டே இருக்கின்றது. நாம் இவற்றையெல்லாம் அறிந்துகொள்வது மிகவும் நல்லது.

5. வேதனை

வேதனை என்பது அதிக விஷம். நாம் எவ்வளவோ பந்த பாசத்துடன் இருந்தாலும், குழந்தை படிப்பிலே கொஞ்சம் குறை ஏற்பட்டால், அதிகம் வேதனைப்படுகின்றோம். நாம் வியாபாரத்தில் மந்தம் ஏற்பட்டால், வேதனைப்படுகின்றோம்.

ஒருவரின் நிலைகளில் நாம் நல்லது செய்திருந்தாலும், அவர்கள் சிறிது குறைகள் செய்துவிட்டால், எனக்கு இப்படிச் செய்கிறார்களே என்று வேதனப்படுகின்றோம். இந்த வேதனை என்பது அனைத்துமே விஷம். விஷம் கலந்தது.

இதைப் போன்று நாம் ஒவ்வொரு நிமிடமும், நம்மையறியாமேலே நல்லதை எண்ணிவிட்டு, அதனால் சில குறைகள் ஏற்பட்டால் அந்தக் குறையின் உணர்வுகள் தென்பட்டவுடன், அவர்களை எண்ணி நம் காரியங்கள் தடைப்பட்டால், நாம் வேதனைப்பட்டு, வேதனையான உணர்வுகளை நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்குள், இந்த விஷமான சத்தை ஏற்றிவிடுகின்றோம்.

நீங்கள் நல்லதை எண்ணினாலும், அந்த வேதனையுடன்தான் பேச முடியும். ஏதாவது ஒரு கோவிலுக்குப் போனாலும், நல்லதைச் சொன்னாலும், நல்லதைப் பெறவேண்டும் என்றாலும், ஒரு பொருளை வாங்கப் போகவேண்டும் என்றாலும் கூட, அந்த வேதனை கலந்த பலவீனமான குரலில்தான் பேச முடியும். காரணம், இந்த நல்ல குணங்களைத் தூண்டினாலும், அதற்குள் விஷம் கலந்திருக்கும்.

6. மனித நிலைகளை நாம் எப்படிப் பெற்றோம்?

பாலுக்குள் விஷத்தைக் கலந்து, நாம் குடித்தால் சோர்வடையச் செய்கின்றது. அதைப் போலத்தான், உயிர் முதலில் புழுவாகத் தோன்றி, பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வரும் வரையிலும், ஒவ்வொன்றிலும் உடல்கள் தன் விஷமாக மாற்றிக் கொண்டிருந்தாலும், ஒவ்வொன்றிலும் தன்னைத் தற்காத்துக் கொள்ள, தனக்குள் எடுத்துக் கொண்ட விஷத்தின் நிலைகள் நற்குணங்களாக, “தன்னைப் பாதுகாக்கும் உணர்வின் சத்துக்களாக” அதிகமாகக் கூட்டி, மனித நிலைகளுக்கு வந்திருக்கின்றோம்.

மனிதனாக உருவாவதற்கு, நமக்குள் விஷத்தைக் கழிவாக்கி, நல்லதை உடலாக்கும் தன்மை பெற்று, இன்று மனிதனாக நாம் வந்துள்ளோம்.

மிருகங்கள் அனைத்துமே, விஷத்தைத் தன் உடலாக மாற்றி, தான் உட்கொள்ளும் உணர்வின் சத்துகள் அனைத்திலும் கலந்துள்ள விஷத்தை, தன் உடலாக மாற்றிக்கொள்ளும். அதற்குள் மலத்தை நல்லதாக மாற்றிவிடும்.

ஆனால், அதே சமயம் அதனுடைய எண்ணத்திலேயே, அந்த விஷத்தின் தன்மையை தனக்குள் தாங்கக்கூடிய சக்தி இருந்தாலும், தனக்கு ஒரு விபத்து ஏற்படும் பொழுது, அதற்கு வேதனைப்படக்கூடிய, துன்பப்படக்கூடிய நிலைகளில் இம்சைகள் கொடுத்தாலும் அது இம்சையைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், அதே சமயம்,

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்ச்சியின் வேதத்தை, மிருகங்கள் அதிகமாகக் கூட்டுகின்றது.

நமக்கு பயம் வந்து, அது அதிகமான துடிப்புகளை ஏற்படுத்தியவுடன், தனக்குள் தப்பிக்கும் உணர்வுகளைச் சிலர் எண்ணுவார்கள். இல்லையென்றால், “இறந்துவிடுவோமோ” என்ற எண்ணத்தைத்தான், இந்த மனித நிலைகளிலே அதிகமாகக் கூட்டும். தன்னைப் பலவீனப்படுத்திக் கொள்ளும்.

ஆனால், உயிரினங்களோ, தனக்குள் எவ்வளவு வேதனை வந்தாலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்ச்சியின் வேகத்தை உந்தி, அதற்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் அலைகள் தான், பல கோடிச் சரீரங்களை உருமாற்றி, இன்று நம்மை, மனிதனாகப் பிறக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.

7. உடல்வலி, நோய்கள், இவைகளெல்லாம் மனிதனுக்கு ஏன் வருகின்றது?

ஆக, நாம் இவ்வளவு நல்ல அணுக்களை உடலுக்குள் சேர்த்து, மனிதனாக உருப்பெறச் செய்தபின், ஒவ்வொரு நிமிடமும், வாழ்க்கையிலே பல சந்தர்ப்பங்களில் நாம் இம்சைகள் பட்டு, அதன்வழியில் எடுத்துக் கொண்ட விஷத்தை, நல்ல குணங்களுக்குள் படரச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

இதனால்தான், நம் உடலுக்குள் கை, கால் குடைச்சல், வேதனை, தலைவலி, மேல்வலி, இதைப் போன்ற நிலைகள் நமக்குள் அடிக்கடி வருகின்றது. அதைப் போன்று, உடலில் நோவும், நரம்புகளிலே நோவும், தசைகளிலே நோயும் வருகின்றது.

இவையெல்லாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அணுக்களின் தன்மை கொண்டு, விஷங்களாக விளைந்தாலும், தசைகளில் அந்த அணுக்கள் கலந்தவுடன் தசை நோவு வரும்.

அது அமில சக்தியாக மாறி, நரம்புகளில் அது சேர்க்கப்பட்டால், அது உடம்பு வலிகள் ஏற்படும். அதனுடைய நிலைகள் எலும்புடன் ஒட்டிய உணர்வின் அலைகள் அதீதமான நிலைகள் சேர்ந்துவிட்டால், எலும்புக்குள் இந்த வேதனை தோன்றிவிடும்.

எலும்புக்குள்ளும் இந்த வேதனைகள் கலந்து, சதா மேல்வலிக்கும். இவையெல்லாம் எலும்புக்குள் தோன்றும் நிலையை இன்று டாக்டர்களால் கண்டு கொள்ள இயலாது.

எலும்புக்குள் கலந்த காந்த அலைகள், அது வீசிக் கொண்டே இருக்கும் பொழுது, அது தசைகளிலே படும் பொழுது, வேதனைகள் தெரியும்.

ஆனால், தசைகளிலே இருக்கக் கூடிய வேதனையை நிவர்த்திப்பதற்குத்தான் டாக்டர்களால் முடியும்.

எலும்புக்குள் இருக்கக் கூடிய நிலைகளை விஞ்ஞானம் இதுவரையில் கண்டுகொள்ளவில்லை. எலும்பினுள் அந்த அலைவரிசைகள் பாய்வது அவர்களுக்குத் தெரியாது. இது மெய்ஞானிகளுக்குத் தான் தெரியும்.

8. உங்களை நீங்களே காத்துக்கொள்ள, யாம் கொடுக்கும் வலிமையான ஆயுதம்

ஆகவே, அத்தகையை கடுமையான நிலைகளிலிருந்தெல்லாம் விடுபடுவதற்குத்தான், வலிமையான ஆயுதமாக, யாரும் செய்யாததை, “ஆத்ம சுத்தி” என்ற அந்த ஆயுதத்தை, யாம் உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

அதைக் கொண்டு, வரும் விஷமான நிலைகளை அடக்கி, உங்களுக்குள் புனிதம் பெறமுடியும். பேரொளியாக மாற்ற முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

9. ஆத்ம சுத்தி

“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும்.

பின், தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

அடுத்து, இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், ஞானகுரு,  சற்குரு,  சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.

பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி,  நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.

இவ்வாறு, வலுக்கூட்டிய  இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவி செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால்,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
1.உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து
2.“உயிர் வழி நுகர வேண்டும்”.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா,  ஜீவ அணுக்கள்,  என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று  எண்ணி,

நம் உடலுக்குள், அலை அலையாகப் படரச் செய்யவேண்டும். இதுவே ஆத்ம சுத்தி.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு “ஆழமாக” பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெறமுடியும்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் படரவிடும் பொழுது, நம் உடலுக்குள் எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளிச் சுடராக மாற்றிடும் திறன் பெற்றது.

நலம் பெறுக, வளம் பெறுக, மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுக.

வேதனை தீரவில்லையே என்று எண்ணக் கூடாது…! வேதனைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்துத் தியானிக்க வேண்டும்

%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d

வேதனை தீரவில்லையே என்று எண்ணக் கூடாது…! வேதனைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்துத் தியானிக்க வேண்டும்

 

பல காலம் எண்ணி பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது. ஏனென்றால்
1.நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது.
2,அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுதுதான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது… வேதனையாகின்றது… நோயாகின்றது.

வலித்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.

இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும். ஆனால் சிலர் என்ன சொல்வார்கள்…?
1.இப்படித்தான் நான் எண்ணினேன்.
2.,இன்னும் வலி குறையவில்லை… வலி நிற்கவில்லையே…! என்பார்கள்.
3.வலி நிற்கவில்லையே…! என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்…?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது ஒரு இடத்தில் (நிறுத்திய பின்)
1.“FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால்
2.அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… வலி நீங்க வேண்டும்… என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்”.

அதற்குள் நான் “ஐய்யய்யோ… அம்மம்மா… இன்னும் நிற்கவில்லையே…!” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்…?
1.அந்த மகரிஷிகளை எண்ணி “வலி நிற்கவில்லையே…
2.வலி நிற்கவில்லையே…” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இப்படித்தான் அதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகி சுழன்று வரப்படும் பொழுது தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது.

அப்பொழுது நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது. அதனால் அது சோர்வடைகின்றது. அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்யவேண்டும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். “எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்..?” என்ற நிலைக்கு வாருங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி
2.உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால்
3.வலியோ… வேதனையோ… நோயோ… எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.

தீமைகளை அகற்றிடும் வல்லமை நிச்சயம் நீங்கள் பெற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!