நம்மை நாம் அறிதல் வேண்டும்…!

நம்மை நாம் அறிதல் வேண்டும்…!

 

ஒரு உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து தாவர இனச்சத்தில் வீழ்ந்த பின் கண்ணில்லாத புழுவாகத் தான் ஆரம்ப நிலையில் தோன்றுகிறது. பின் உணவுக்காக நகர்ந்து செல்லும் பொழுது அதற்கு உணவு கிடைக்கவில்லை என்றால்
1.வேதனையான உணர்வுகளை நுகர்கின்றது
2.அந்த வேதனை உணர்வுகளே வலுவாகின்றது.

அப்போது துவாரகா யுகத்தில் உடலுக்குள் வேதனை என்ற உணர்ச்சிகள் தோன்றிய பின் “பார்க்க வேண்டும்…” என்ற புது உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.
1.இரண்டு கல்லை எடுத்துத் தட்டினால் எப்படி ஒளிகள் வருகின்றதோ
2.அதே போல இந்த உணர்வுக்குள் ஆன பின் இதுவும் கரண்ட்…
3.எலெக்ட்ரிக் எலக்ட்ரான்… இந்த இரண்டும் எதிர்நிலையாக மோதப்படும் பொழுது
4.உடலுக்குள் உணர்ச்சி என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

இப்படித் தோன்றும் உணர்வுகள் தான்
1.உயிரிலே மோதும் போது கண்களாக – அதே உணர்வுகள்
2.வெளிப்படும் வெளிச்சத்தை உள்ளுக்குள் சேர்த்து இரத்தத்தில் கலந்து
3.கண்கள் உருவாகும் தன்மைகளைக் கொண்டு வருகின்றது.

ஆக… கண்களால் புறத்திலே பார்க்கின்றோம்… கவர்ந்து உயிரால் நுகரப்படும் பொழுது… உயிரால் உணர்வுகளை அறிகின்றோம். இங்கே பார்க்கின்றோம்… அந்த உணர்வை அறிகின்றோம்.

ஆரம்பத்தில் கண்ணில்லாத பொழுது புழு அது தன் உணர்வால் தான் அறியத் தொடங்குகிறது. அதே உணர்வுகள் மோதப்படும் போது அறிய வேண்டும் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது “இரண்டும் கலந்து…” இந்த உணர்வுக்குள் கருத்தன்மை அடைந்து… உடலை விட்டு உயிரான்மா சென்றாலும் அதிலே உணர்வின் அணுக்கள் சேர்த்துக் கொண்டது கண்களாக உருவாகின்றது.

அதைத் தான் கண்ணன் துவாரகா யுகத்தில் பிறந்தான்…! என்று சாஸ்திரம் கூறுகிறது.
1.வாசுதேவன் – சுவாசித்த நிலைக்கும்
2.தேவகி – தான் பார்க்க வேண்டும் என்று உணர்வுகளுக்கும்
3.அந்த ரெண்டும் கலந்து அந்தத் தேவைக்கொப்பக் கண்கள் உருவாகின்றது.

இது நான்காவது பிரம்மம்…! ஒன்று எதன் வலிமை நமக்குள் வருகின்றதோ அந்த வலிமைக்குத்தக்க இதை மாற்றி அதன் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டி உடல்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.

உதாரணமாக ஒரு இரத்தக் கொதிப்பு வந்தவரை அடிக்கடி கண்களில் உற்றுப் பார்த்துப் பேசிப் பழகிக் கொண்டிருந்தால் உடலில் எல்லா நிலைகளும் மாறி… அடுத்தாற்போல் உங்கள் உடலிலும் இரத்தக் கொதிப்பு வரத் தொடங்குகிறது.

ஆனால் “நான் எல்லாருக்கும் நன்மை தானே செய்தேன்…” என்று நாம் சொல்லலாம். ஆனால் நுகர்ந்தது இரத்தத்தில் கலந்த பின் இரத்தக் கொதிப்பாக மாறிவிடுகிறது.
1.ஏனென்றால் நம் கண்கள் பிரம்மத்தைச் சார்ந்தது… ஆக உருவாக்கும் தன்மை பெற்றது.
2.எதை உற்றுப் பார்த்து அதைக் கவர்கின்றதோ அதனின் வலிமை இந்த உடலுக்குள் ஆன பின்
3.அதனின் தன்மை நமக்குள் அணுவாக உருவாக்கும் தன்மை பெற்றது.

சாஸ்திர விதிகள் இதையெல்லாம் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.
1.கடவுள் என்றால் என்ன…?
2.அவன் தனித்து ஒருவனாக இருக்கின்றானா…? இல்லை.

கண்கள் உருப் பெற்றபின் கண்ணின் நினைவைக் கொண்டு ஒன்றின் வலிமையின் உணர்வை நுகர்ந்த பின் உள் நின்று அது கடவுளாக உருவாக்குகின்றது. உள் நின்று அதன் உணர்வுகள் எதுவோ அதன் வழியே அது செயல்படுகின்றது.
1.நம் உயிர் மட்டும் கடவுள் அல்ல…
2.எதை நுகர்கின்றோமோ உள் நின்று அதன் உணர்வை அதுவே அதனதன் நிலைகள் வளர்க்கின்றது.

நமக்குள் எத்தனையோ கோடி கடவுள்கள் உண்டு… ஒருவன் அல்ல கடவுள்… ஒருவனே கடவுள் என்று சொல்வது “பிழை…”

ஆனால் அதே சமயத்தில் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் “அவன் இன்றி அணுவும் அசையாது…” உயிர் உடலில் இல்லை என்றால் உடலில் உள்ள இந்த அணுக்கள் அசையுமோ…? அசைய முடியாது.

உயிரான ஈசன் இந்த உடலில் இல்லை என்றால் உடலான சிவம் சவமாகி விடுகிறது. சவமான பின்
1.இந்த உடலுக்குள் ஏற்கனவே எந்தெந்த வகையில் குணங்களை உருவாக்கிய அணுக்கள் இருக்கின்றதோ
2.அவை அனைத்தும் இந்த உடலையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது… புழுக்களாக மாறுகின்றது

முதலிலே ஜீவ அணுவாக இருக்கின்றது. உயிர் போய்விட்டால் அது எல்லாம் உயிரணுக்களாக மாறுகின்றது. எதன் சுவையோ அதன் உணர்ச்சி கொண்டு அதை உணவாக உட்கொள்ளும் அதன் தன்மை அடைகிறது என்பதைச் சாஸ்திரங்கள் கூறுகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்… காரணம் “நம்மை நாம் அறிதல் வேண்டும்…”

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

 

மான் சாந்தமானது புலியோ கொடூரமானது. புலி மானைத் தாக்க விரும்புகின்றது தன் உணவுக்காக வேண்டி…!

மானைக் கொன்று புசிக்க வேண்டும் என்ற உணர்வுகள் புலியிடமிருந்து வெளிவரப்படும் பொழுது சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய “வெப்பகாந்தம்…” அதைக் கவர்ந்து கொள்கிறது.

புலியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின்
1.மான் புலியைப் பார்த்த பின்… வெப்பகாந்தம் கவர்ந்த உணர்வை மான் நுகர்ந்தபின் அதற்கு அந்த வலிமை வருகின்றது.
2.அது தான் கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருக்ஷேத்திரப் போர் என்று சொல்வது.
3.மான் புலியைப் பார்த்து அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது உயிரிலே மோதப்பட்டு
4.அபாயக் குரல்களை… இந்த உணர்ச்சிகளை எழுப்புகின்றது…
5.கண்ணன் சங்கநாதம் ஊதுகின்றான்… குருக்ஷேத்திரப் போர் அங்கே நடக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் புலியின் உணர்வுகளை அது எடுத்துக் கொண்டு வரும் பொழுது… “அர்ஜுனன் – வலிமைக்க சக்தி…!”

எதைக் கவர்ந்து கொண்டதோ அந்தச் சத்தை இதில் உள்ள விஷம் “அந்த உணர்ச்சியின் வேகத்தை ஊட்டும் – நகுலன்…!”

மான் நுகர்ந்து கொண்ட பின் உயிரிலே குருக்ஷேத்திரப் போராகிறது… ஆனால் அதே சமயத்தில்… எதையுமே குறிவைத்துத் தாக்கும் வல்லமை பெற்றவன் அர்ஜுனன் என்ற நிலையில் “புலியின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி… இரத்தத்தின் வழி சென்று அந்த வலிமையை உடல் முழுவதும் பரவச் செய்கின்றது – அர்ஜுனன்…”

இந்த உடலுக்குள் இந்த உணர்வின் தன்மை ஊடுருவி… குறி வைத்துத் தாக்கப்படும் போது… நகுலன்.
1.அதனுடைய இயக்க உணர்வின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.இந்த வலிமையை ஒன்று சேர்த்து விடுகின்றது… அதாவது அதற்குள் விரிவடையச் செய்கின்றது.

அதனுடன் சேர்த்துக் கொண்ட பின்… இரண்டறக் கலந்து விட்டால் (மானின் உணர்வும் புலியின் உணர்வும்) – “சகாதேவன்…” என்றும் அதனுடன் சேர்த்து வலிமையாகி விட்டால் – “பீமன்…” என்றும் காட்டப்படுகிறது.

மானின் உடலுக்குள் புலியின் உணர்வுகள் வலிமை பெற்றால் அப்போது பீமன் என்ற நிலை வருகிறது. பீமன் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கித் தனது நிலைக்கே அடிமையாக்கி விடுகின்றான் என்று காவியத் தொகுப்புகள் காட்டுகிறது.

புலி தன் பசிக்காக அந்த மானை அடித்து உட்கொண்ட பின் மானின் உயிரான்மா வெளி வருகிறது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்…!

எப்படி…?

கண்கள் தான் உற்று நோக்குகிறது…
1.புலியோ மானின் உடலை இரையாக்குகின்றது
2.புலி மானின் உடலை இரையாக்குவதற்கு முன் “புலியின் உணர்வின் உணர்ச்சிகளை…”
3.மானின் கண்கள் தனக்குள் புலியின் உணர்வுகளை இரையாக்கி விடுகின்றது.

இரையின் உணர்வு செயலாகும் போது… எதன் வலிமை பெற்றதோ அதன் நிலை கொண்டு உருவாகிடும் தன்மை பெறுகின்றது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாக செல்கின்றான்.

அந்த வலிமைக்குத்தக்க சாரதியாகச் சென்று எந்தப் புலியைக் கூர்மையாக உற்றுப் பார்த்ததோ அந்தக் கூர்மைக்குத்தக்க வலிமை கூடி
1.அங்கே இதிலே சேர்ந்த காந்தப்புலன் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்
2.செல்ஃபோன்களில் நாம் பதிவாக்கி விட்டால்… அதை இயக்கப்படும் பொழுது அது எப்படித் திரும்ப இயங்குகின்றதோ
3.ஒரு செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது எப்படி விளைகின்றதோ
4.அதைப் போன்று எந்தப் புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் சென்றதோ
5.மானின் உயிரான்மா வெளிவந்த பின் புலியின் ஈர்ப்புக்குள் சூட்சமமாக வந்து விடுகின்றது.

புலியோ உடலுடன் இருக்கின்றது… அதைக் (மானின் ஆன்மாவை) கவர்ந்து விடுகின்றது. அதனுடைய கண்கள் இந்த மானை எப்படிப் பார்த்ததோ அதன் உணர்வு கொண்டு அதைக் கவர்ந்து விடுகின்றது.

புலியின் ஈர்ப்புக்குள் சென்று… புலியின் வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் உபதேசிக்கின்றார்.

பரிணாம வளர்ச்சிக்குக் கண் தான் பெரும்பகுதி வழிகாட்டுகிறது. ஆகவே… நமது வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தில்
1.நாம் நுகரும் தன்னைக் காட்டிலும் வலிமையான உணர்வுகள்
2.நம்மை எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மாற்றியது என்று தான் தெளிவாகக் கூறப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

இப்படி மானின் ஆன்மா புலியின் உடலுக்குள் சென்ற பின் அதனுடைய குட்டியாக உருவாகிவிடுகிறது. “குட்டியாக ஈன்ற பின் – தர்மன்…!”

மானின் உடல் முதலில் புலிக்கு இரையாக்கப்பட்டது. இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் குட்டியான பின் தன் நிலை (புலி) ஆன பின் தர்மன்… “எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சமாதானப்படுத்துவான்…”

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில்
1.ஒவ்வொரு உணர்வுகளும் உணர்ச்சிகளும் எதன் எதன் வழியில்…
2.எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தான் சாஸ்திர விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நான் செய்வது எப்படித் தவறாகும்… என்று கேட்பது நாம் தானா…! அல்லது சுவாசித்ததா…?

நான் செய்வது எப்படித் தவறாகும்… என்று கேட்பது நாம் தானா…! அல்லது சுவாசித்ததா…?

 

மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது – நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.

நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.

ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.

உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்… அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்… அகங்காரம் கொள்ளுகின்றது.

அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்…? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்… தான் நுகர்ந்த உணர்வுகள்… தான்… தனது… என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா…?

ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்… “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்…” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.

இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை… துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்…” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.

இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்… அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.

நஞ்சை ஒளியாக மாற்றிடும் மார்க்கத்தைத் தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றோம் – ஞானகுரு

நஞ்சை ஒளியாக மாற்றிடும் மார்க்கத்தைத் தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றோம் – ஞானகுரு

 

1.சூரியன் நஞ்சினைப் பிரிக்கின்றது
2.ஆனால் துருவ நட்சத்திரமோ நஞ்சினை ஒளியாக மாற்றுகின்றது.

சூரியன் தனது நிலைகளில் நஞ்சினைப் பிரித்து மற்றதுடன் மோதும் பொழுது தான் ஒளிக் கதிராக மின்னுகின்றது. நஞ்சின் தாக்குதலால் வெப்பத்தின் தணல் கூடி ஒளியின் தன்மையாக மாறுகின்றது.

ஆனால் மனிதனாகி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன பின் நஞ்சின் தன்மை தனக்குள் அருகில் வரும் பொழுது அதை ஒளியின் சிகரமாக மாற்றுகின்றான்.
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை அடக்கி ஒளியாக இணைத்து
2.ஒளியின் சிகரமாக மாற்றும் தன்மை நாமும் பெற வேண்டும்.

மனிதனாக ஆனவன் தான் இதை உருவாக்க முடியும். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்றும் முழு முதற் கடவுள் என்றும் காட்டுகின்றார்கள்.

ஆக… இந்த மனித உடல் பெற்ற பின் அருள் ஒளியினை உருவாக்கும் முழுமையான கடவுளாக நாம் ஆகின்றோம். அதன் வழியில்
1.மகா சாந்தம் என்ற நிலைகளில்
2.மகா என்று சர்வத்தையும் சாந்தப்படுத்தும் உணவுகளை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்.

நமக்குள் ஒன்றிணைந்து வாழும் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டால் எந்த நஞ்சினையும் வென்றிடும் சக்தியாக… உள் நின்று நஞ்சினை ஒளியின் சிகரமாகக் கூட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்ததைத் தான் விநாயகர் தத்துவத்தில் “முழு முதல் கடவுள்…” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் வாழ்வோம். நமக்குள் புகும் இருளை புகாது அதைத் தடுத்து நம்மைப் பாதுகாப்போம். அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம்… தவமிருப்போம்.

உடலையும் சொத்தையும் தான் பார்க்க விரும்புகிறோம்… உயிர் பிரிந்த பின் எதைப் பார்க்கப் போகின்றோம்…!

உடலையும் சொத்தையும் தான் பார்க்க விரும்புகிறோம்… உயிர் பிரிந்த பின் எதைப் பார்க்கப் போகின்றோம்…!

 

உயர்தரக் கல்வியை உருவாக்கி இந்த உணர்வின் தன்மைகளைத் தனக்குள் பதிவாக்கி அதன் மூலம் இன்று விஞ்ஞானத்தைப் பெருக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

ஒரு இன்ஜினியரோ அந்த விஞ்ஞான அறிவுப்படி இயந்திரங்களின் உறுப்புகளைப் புதிது புதிதாகச் செயல்படுத்தத் தொடங்குகிறான்.

ஒரு இயந்திரத்தில் அதனுடைய இயக்கப் பொறிகள் எங்கெங்கே அழுத்தங்கள் அதிகமாக இருக்கின்றதோ அதற்குத்தக்கவாறு ஒரு வலுகொண்ட சக்தியினை உலோகங்களின் மூலம் கொடுக்கின்றனர்.

அதே போன்று ஒவ்வொரு பொருளுக்கும் அந்த இயந்திரங்களை இயக்குவதற்கு இன்ஜினியர்கள் முதலில் ஒருவர் கண்டுணர்ந்து உருவாக்கி இருந்தாலும்
1.அடுத்து அதிலே சந்தர்ப்பத்தால் எப்படிப் பழுதடைந்தது…?
2.அந்தப் பழுதை எப்படி மாற்றுவது…? என்ற நிலைகளைக் கண்டுணர்கின்றனர்
3.துரித நிலைகள் கொண்டு பழுதடைவதை நீண்ட நாள் பழுதடையாமல் பாதுகாக்கும் யுக்திகளை எண்ணுகின்றார்கள்
4.நீண்ட நாள் பழுதடையாதபடி இயந்திரப் பாகங்களின் உலோகங்களை மாற்றி
5.அதனை எந்தெந்த நிலைகள் செயல்படுத்த முடியும் என்று உருவாக்குகின்றார்கள்

அதாவது சரி செய்ய வேண்டும் என்ற நிலையில் தன் உணர்வின் எண்ணங்களைக் கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி அந்தப் பாகங்களைச் செய்கின்றார்கள்.

பண்டைய காலங்களில் மனிதனுக்குப் பற்கள் இல்லை என்றால் அதை வைத்துத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான காலத்தில்
1.பழுதடைந்த பற்களை நீக்கிவிட்டு
2.அதற்கென்று புதிதாக உருவாக்கப்பட்ட பற்களை வைத்து மாற்றி
3.கடினப் பொருள்களை மென்று உணவாக உட்கொள்ளும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அதே போல் உடல் உறுப்புகளில் பின்னமாகிவிட்டால் கூடுமான வரையிலும் செயற்கை முறையில் அதே உறுப்புகளைச் செயலாக்கும் தன்மையும் வந்துவிட்டது.

இப்படி… மனிதனுக்குள் பழகிய நிலைகள் கொண்டு மனித உடலைத்தான் இவர்களால் பார்க்க முடிகின்றது.

ஆனால் ஞானிகளோ விஷத்தை வென்றிடும் உணர்வை தனக்குள் வளர்த்து விஷத்தை வென்றிடும் அருள் உணர்வுகளை தனக்குள் பெருக்கி இந்த பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை வந்தால் அதை அடக்கி தனக்குள் ஒளியின் தன்மையாக மாற்றிடும் சக்தி பெற்றனர்.

அதிலே ஆதியிலே தோன்றிய அகஸ்தியன்
1.மீண்டும் அவன் தான் பிறவிக்கு வராதபடி அத்தகைய உணர்வினைத் தனக்குள் வளர்த்து
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆகும் தன்மை பெற்றான்.

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து வாழ்ந்தனர்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவருமே விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று ஒளியான அணுக்களை உருவாக்கி உடலை விட்டுச் சென்ற பின் துருவத்தின் எல்லையில் இருந்து கொண்டு பூமி கவரும் உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டு உள்ளார்

அவர்கள் பெற்ற சக்திகளைத் தியானித்து அதை நுகர்ந்த அக்கால மக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

உயிரணு தோன்றி மனிதனாகி கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனதும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் வேகாநிலை அடைகின்றனர்.

1.இந்தப் பிரபஞ்சமே மடிந்தாலும் சூரியனே அழிந்தாலும் அவைகள் அழியாது
2.எத்தகைய விஷத்தன்மையும் அவர்களைப் பாதிக்காது அதனை ஒளியாக மாற்றிக் கொண்டு
3.அகண்ட அண்டத்தில் ஏகாந்த நிலையில் வாழ்கின்றனர்.

அவர்களைப் போன்று நாமும் நுகர்வதை எல்லாம் ஒளியாக மாற்றி மகிழ்ச்சி பெறும் உணர்வாக மாற்றிடும் அந்த சக்தி பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது ஒளியாக மாற வேண்டும்.

பல ஞானிகளும் மகரிஷிகளும் முனிவர்களும் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று கடும் தவம் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்.

அவர்களிடம் இருந்து வெளிப்படும் அந்த ஒளியான உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் பரவச் செய்து கொண்டேயுள்ளது.
1.அதனை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால் அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடையலாம்
2.அதை உருவாக்கும் நிலைக்குத் தான் என்னுடைய உபதேசமே (ஞானகுரு).

இந்த உடலின் பற்றை அறுத்துவிடு… என்றார் குருநாதர்

இந்த உடலின் பற்றை அறுத்துவிடு… என்றார் குருநாதர்

 

குருநாதர் பல நிலைகளைச் செய்தாலும் கூட என் குடும்பம் வாழ வேண்டும் என்று ஆசை எனக்குள் (ஞானகுரு) இருந்தது.

இந்த ஆசை எவ்வாறு உருவாகின்றது…? அதனால் விளையும் தன்மைகள் என்ன…? என்பதை உணர்த்துவதற்காக குருநாதர் இமயமலைக்கு என்னை அனுப்பினார்.

பனிப்பாறைகள் மீது நடக்கச் சொன்னார். இப்பொழுது உடலிலே ஆடைகளை அணிந்திருக்கின்றோம். ஆனால் அன்று அதுவும் இல்லாதபடி வெறும் கோவணத்துடன் தான் அங்கே போகச் சொன்னார்.
1.நான் சொல்லும் உணர்வின் தன்மையை ஏங்கிச் சுவாசி
2.பனியின் குளிர் ஒன்றும் செய்யாது
3.உன் நினைவாற்றல் அருள் ஒளி பெறும் உணர்வுடன் ஒன்றும் போது வாழ்க்கையில் மன பலம் பெறுவாய்
4.ஆகவே உன் நினைவு நான் சொன்னதன் பால் இருக்கப்படும் பொழுது பனிப்பாறைகள் உன்னை ஒன்றும் செய்யாது என்றார்

அதன் படி பனிப்பாறைகளைக் கடந்து நான் செல்கின்றேன். சென்ற பின் திடு…திடு… என்று நான் வந்த பாதையில் இருந்த பனிப் பாறைகள் அனைத்தும் நொறுங்கிக் கீழே விழுகின்றது.

நான் வந்த பாதை இடிந்து போய் விட்டதே… இனி எப்படித் திரும்பப் போகின்றோம்…? குழந்தைகளையும் குடும்பத்தையும் நான் எப்படிப் பார்க்கப் போகின்றேன்…? என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

அப்போது இந்த உடல் பற்று வரப்படும் பொழுது “என் இருதயமே இறைகின்றது…” சிறிது நேரத்தில் உயிரே போய்விடும் போல இருக்கின்றது.

காரணம்… குருநாதர் கொடுத்த கவசம்… அவர் கொடுத்த உணர்வின் தன்மையை நுகர மறந்துவிட்டேன்.

இனி எவ்வாறு வாழ்வது…? என் குழந்தைகள் என்ன ஆவார்கள்…? என்று குடும்பத்தின் பற்று வரப்படும் பொழுது இந்த உடல் பற்று தன்னாலே வருகின்றது.

அப்பொழுதுதான் குருநாதர் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்…!

“மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே… தயங்காதே…!

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!
மனமே இனியாகிலும் மயங்காதே… மயங்காதே…!

நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ…?
நிலையில்லா இவ்வுலகம் சதமாமோ… சதமாமோ…?

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே… தயங்காதே…!” என்று
குருநாதர் இந்தப் பாடலை பாடிக் காட்சிகளைக் கொடுக்கின்றார்.

நீ இப்பொழுது இருக்கும் இந்த நிலையில் எல்லாம் போய் உன் உயிர் வெளியேறி விட்டால்
1.“பொன்னடி பொருளையும் சுகத்தையும்” காண முடியுமா…? நீ எதை எண்ணுகின்றாய்…?
2.நான் எதைச் சொன்னேன்…? எதை எண்ணி ஏங்குகின்றாய்…?
3.எதைப் பெறச் செய்கின்றாய்…? எதை நீ பெறுதல் வேண்டும்…?

ஆகவே…
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு… அந்த உணர்வின் தன்மையை அங்கே குடும்பத்தில் பாய்ச்சு…
2.அவர்கள் நலம் பெற வேண்டும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்து…
3.அந்த அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சு அவர்கள் நலமும் வளமும் பெறுவார்கள்.

பாசத்தால் “இப்படி ஆகிவிட்டதே…” என்று அவருடைய நிலைகளை எண்ணும் பொழுது இங்கே உன் உயிர் போய் விட்டால் அந்தப் பொன்னடி பொருளை எவ்வாறு நீ காணப் போகின்றாய்…?

நான் உனக்குப் போதித்த உணர்வுகளை நீ ஏன் மறந்தாய்…?

1.அருள் ஒளி பெறு… இருளை அகற்றிவிடு
2.இந்த உடலின் பற்றை அறுத்துவிடு
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை அனைவரும் பெறச் செய்யும் அந்த அருள் பற்றை உண்டாக்கு
4.அருள் வாழ்க்கை வாழ்ந்திடு… இருளை அகற்றிடும் சக்தி பெற்றிடு…
5.இருளை அகற்றிடும் வாழ்க்கை வாழ்ந்துவிடு
6.அருள் ஒளியின் பற்றாக வாழ்ந்திடு
7.அருள் ஞானிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றிவிடு
8.வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிவிடு
9.பிறவியில்லா நிலைபெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்துவிடு என்று இந்த உபதேசத்தை அங்கே கொடுக்கின்றார்.

ஆகவே… இந்த வாழ்க்கையை இன்னல்கள் வந்தாலும் நாம் பற்ற வேண்டியது எது…” அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிட வேண்டும்.

குரு வழியில் அருள் உணர்வுகளைப் பெறுவோம்… இருளை அகற்றிடும் அருள் வழியைப் பெறுவோம்… அருள் வழி வாழ்வோம்.
1.அனைத்துக் குடும்பங்களும் நலம் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் வாழ வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்…!

சொர்க்கலோகத்தை உருவாக்குங்கள்

சொர்க்கலோகத்தை உருவாக்குங்கள்

 

உதாரணமாக… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக உடலிலே உருவாகி விட்டால் நாம் எந்த லோகத்தை உருவாக்குகிறோம்…?

இந்திரலோகத்தில் (உடலில் உள்ள இரத்தங்களில்) வேதனை உணர்வுகள் கருவாகி அணுக்களாக வெடித்து அணுவின் மலம் அது சிவமாகிறது (உடல்).
1.ஆக “வேதனையான உணர்வின் செயலாக” இயக்கப்படும் பொழுது சிவலோகத்தில் எமனாக மாறுகின்றது.
2.பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று மனிதனாக வந்த நம் உடலுக்குள் எமலோகமாக மாறுகின்றது.
3.வேதனையால் இந்த உடலின் தன்மை நலிகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் “எந்தக் குணத்தின் வரிசையில் எடுத்தோமோ…” அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை நரக வேதனைப்படச் செய்து இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி சாகாக்கலையாக (அந்த வேதனை உணர்வு கொண்டு) அழைத்துச் செல்கின்றான்…! நம் உயிர்.

எங்கே…?

விஷத்தால் மற்ற உயிரின்ங்களைத் தாக்கி உணவாக உட்கொள்ளும் பாம்பினமாகவோ விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவாக எடுக்கும் தேளினமாகவோ மாற்றிவிடுகிறது.

அடிக்கடி வேதனை என்றோ… வேதனைப்படுபவர்களைப் பார்த்து இரக்கம் ஈகை என்றோ ஏங்கினால் அவர்களின் வேதனை உணர்வு நமக்குள் வளர்ந்து எமலோகமாக மாறுகின்றது.
1.நம் உடலில் உள்ள இந்திரலோகம் (இரத்தநாளங்கள் – இந்திரீகம்) எமலோகமாக மாறி
2.சொர்க்கலோகம் செல்லும் உணர்வைத் தடைப்படுத்திவிடுகிறது.

வேதனையினால் உடல் குறுகி உயிரான்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் எந்த வேதனையை அதிகமாக எண்ணினோமோ அத்தகைய வேதனைப்படும் உடலுக்குள் சென்று விடுகின்றது

அதாவது…
1.விஷத்தை உணவாகப் பாய்ச்சும் அதை உணவாக எடுத்துக் கொள்ளும்
2.அந்த விஷத்தன்மை நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் பட்டபின் இது வெளிவந்த பின்
3.பாம்பினங்களுக்கோ தேளினங்களுக்கோ… வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் இந்த உடல்களுக்குள் உணர்வுக்கொப்ப அழைத்துச் சென்று
4.அந்தப் பாசக்கயிறு…! – தொடர்ந்து எந்த வேதனையை எடுத்தோமோ அதன் தொடர் வரிசையில் நாம் சென்று
5.அந்த உடலுக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று நீ எதை எண்ணினாயோ அதுவாகின்றாய் என்ற தீர்ப்பைக் கொடுத்து
6.கண்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும் – பயத்தின் உணர்வு கொண்டு
7.இப்படிச் செய்தான்… செய்தான்.. செய்தான்… என்ற எண்ணத்திலே எண்ணும் பொழுது
8.தனக்குள் எமலோகமாக மாற்றி நரக லோகத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது.

ஆக மொத்தம் வேதனையை வளர்த்துக் கொள்ளப்படும் பொழுது கண்ணன் சாரதியாகச் செல்கின்றான். எப்படி…?

1.எதனை எண்ணி ஏக்கத்தின் நிலைகள் கொண்டோமோ…
2.எந்த விஷத்தின் தன்மை தனக்குள் வலுக்கொண்டதோ….
3.எந்தக் கண் காட்டி நம்மை காத்துக் கொள்ளும் உணர்வை கொடுத்ததோ
4.அதை மறந்து… காத்திடும் நிலைகளை மாற்றி… ஆறாவது அறிவின் தன்மையை இழக்கப்படும் பொழுது
5.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று வேதனைப்படச் செய்யும் உடலுக்குள் சென்று விடுகிறோம்.

பயந்து நாம் ஒடுங்கினாலும்… பின் நாம் எதை எண்ண வேண்டும்…? இதை மாற்றி அமைத்தல் வேண்டும். அச்சுறுத்தும் உணர்வில் இருந்து நாம் மீள வேண்டும். காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்விலிருந்து மீளுகின்றோம்.

எதை வைத்து…?

1.மகரிஷிகளின் அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் கண்டுணர்ந்த அருள் ஞானியின் உணர்வுகள் நான் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பரலோகத்தில் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் பதிவாகியுள்ளது. அதைக் கவர்ந்து நம் உயிர் வழி சொர்க்கவாசலாக அமைத்துச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.

நாம் உயிருடன் ஒன்ற வேண்டும்… உடலுடன் அல்ல… என்று தான் இராமாயணம் காட்டுகிறது

நாம் உயிருடன் ஒன்ற வேண்டும்.. உடலுடன் அல்ல…! என்று தான் இராமாயணம் காட்டுகிறது

 

கர்ப்பமாக இருக்கும் சீதாவை இராமன் காட்டிலே விட்டு விட்டுச் சென்று விடுகின்றான். அங்கே கர்ப்பிணியாகத் தவித்துக் கொண்டிருக்கும் சீதாவின் நிலையை உற்றுப் பார்த்து அருகிலே வான்மீகி இருக்கும் ஆசிரமத்திற்குச் அழைத்துச் செல்கின்றனர்.

வான்மீகி சீதாவின் உண்மை நிலையை உணர்ந்து கொள்கின்றார்.

சீதா என்ற மகிழ்ச்சி என்ற உணர்வின் தன்மை…
1.இராமனின் செயலும் – அந்த எண்ணத்திற்குத் தக்க இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்றும்
2.அரசாங்க நிலைகள் எப்படி ஆகின்றது…? என்றும்
3.மக்கள் எப்படி வாழுகின்றனர்…? என்றும் இந்தக் காவியத்தின் உண்மை நிலைகளைச் சொல்கின்றார்.

வான்மீகி சீதாவிற்கு ஓதிய வான இயலின் உணர்வுகள்… சீதா நுகர்ந்த அந்த மெய் உணர்வுகள்… இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.

பத்து மாதம் ஆகிப் பிறந்த பின் வளர்ச்சியாகி லவ குசா என்ற நிலையில் இராம காவியத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

தன் தாயின் செயலை…
1.சீதா மாசு பட்டதல்ல… மாசற்ற நிலை கொண்டது
2.எதனிலும் கலக்கவில்லை… உண்மையின் உணர்வுகளையே பெற்றது என்ற நிலையில்
3.இராமனின் நிலைகள் எதனெதன் உணர்ச்சியின் தன்மையோ அதனதன் உணர்வுகள் தான் செயல்படுகிறது என்று பாடலாகப் பாடுகின்றார்கள்.

இது எல்லாம் மனிதர்கள் புரிந்து கொள்வதற்குத் தான்.

ஆனால் வெறும் கதையாகத் தான் படித்துத் தெரிந்து கொள்கின்றோமே தவிர உண்மையின் உணர்வை நாம் அறிந்து கொள்ளும் நிலையே அற்றுப் போய்விட்டது.

காரணம்… “நமது உணர்வுக்கொப்ப” உற்றுப் பார்க்கப்படும் போது அதே உணர்வு வருகின்றது. அந்த உணர்வைத் தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோமே தவிர
1.ஞானத்தின் உணர்வைப் பெறும் தகுதி இல்லாது
2.காவியத் தொகுப்புகளை அவரவர்கள் இஷ்டத்திற்குச் செயல்படுத்தி விட்டார்கள்.

ஆனால் குருநாதர் இதை எல்லாம் எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

வான்மீகி உணர்த்திய அந்த வழிப்படி லவ குசா இராமனைப் பற்றிப் பாடுகின்றனர். பாடலைக் கேட்கும் பொழுது இராமன் தன் மனைவி சீதா மாசு பட்டவள் அல்ல என்ற உண்மையை உணர்கின்றான்.

சீதா எவ்வளவு தொல்லை பட்டிருக்கும் என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ச்சி என்ற நிலைகளில் இனி அரவணைத்து
1.தான் செய்த குற்றத்தை மறந்து என்னுடன் இணைந்து மீண்டும் வாழலாம் என்ற நிலைக்கு இராமன் வருகின்றார்
2.ஆனால் மாசுபடும் உணர்வுடன் கலந்தால் அந்த உணர்வின் தன்மை எப்படி இருக்கும்…? என்ற நிலையைத் தான் இங்கே காட்டப்படுகின்றது.

விஷ்ணுவின் பக்தன் ஆஞ்சநேயர் என்றாலும் அதே உணர்வின் தன்மை தான் எண்ணிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன் என்று கூறப்படுகின்றது.

எதை எல்லாம் நுகர்ந்தோமோ உயிரான விஷ்ணுவிடம் வரும் போது அது வரம் கொடுக்கும் நிலையாக அமைந்து விடுகின்றது. இந்த உணர்வின் தன்மை உடலில் சேர்க்கப்படும் பொழுது சீதா – மகிழ்ச்சியின் தன்மையை பிரம்மம் ஆகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி அந்த ஞானத்தின் தன்மை கொண்டு வருகின்றது.

இருந்தாலும் இந்தச் சீதா…
1.தன் உணர்வின் தன்மை என்றும் ஒளியின் மயமாக வேண்டும் என்றும்… அருளொளியாக வளர வேண்டும்
2.கணவன் மனம் தெளிந்திட வேண்டும் தெளிவான நிலைகள் வளர வேண்டும் என்ற
3.தெளியச் செய்யும் உணர்வின் தன்மையைத் தான் எண்ணத்தால் எண்ணி எடுக்கப்படும் பொழுது
4.எந்தச் சுவையின் தன்மையோ… விஷ்ணுவிடம் இணையும் நிலை தன்மை வரப்படும் பொழுது
5.நுகர்ந்த உணர்வின் தன்மை (சீதா) ஒளியாகி அதைத் தன்னுடன் அரவணைக்கும் தன்மை வருகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் தன் கணவன் (விஷ்ணு) என்ற நிலையில் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு “நிலையான நிலைகள்” பெற்றதனால்
1.கடைசியில் இராமன் அரண்மனைக்குக் கூப்பிடும் பொழுது
2.இந்தப் பூமியில் விளைந்த உணர்வின் சத்து பூமியைப் பிளந்து
3.உடலில் பெற்ற சத்துக்கள் எல்லாம் பூமியுடனே ஐக்கியமாகின்றது.

ஆனாலும்… பூமியிலே வந்த மணத்தின் உணர்வுகள்… உணர்ச்சிகள்… வந்ததெல்லாம் சீதா எடுத்துக் கொண்டதனால் உணர்வின் தன்மை ஒளியாகி… உணர்வின் தன்மை அது இயக்கமானது போல
1.”சீதா – சீதாராமா என்ற சுவையின் உணர்வின் ஒளியாக விஷ்ணுவுடன் ஐக்கியமாகின்றது…
2.சொர்க்கம் அடைந்தது என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

இதனின் விரிவாக்கம் சொல்ல வேண்டும் என்றால் குறைந்த்து இரண்டு மாதம் ஆகும். உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லி இந்த உண்மைகளை நீங்கள் உணரும்படி செய்கின்றோம்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் உண்மையின் இயக்கங்களை நீங்கள் அனுபவங்களாகத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே இராமாயணத்தில் அவ்வளவு பெரிய உண்மைகள் உண்டு.

காட்டிற்குள் அழைத்துச் சென்று… சீதா என்ற சுவையைப் பற்றிய உண்மை நிலைகளை “மனிதனான பின் இதையெல்லாம் தெரிந்து கொள்கிறோம்…” என்று குருநாதர் எனக்கு உணர்த்துகின்றார்

நீ பேசவில்லை… “பச்சிலை தான் பேசுகிறது…” என்றார் குருநாதர்

நீ பேசவில்லை… “பச்சிலை தான் பேசுகிறது…” என்றார் குருநாதர்

 

குருநாதர் என்னைக் காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று பல கஷ்டங்களைச் செயற்கையாக ஏற்படுத்தித் தான் உண்மைகளை உணரும்படி செய்தார்.

ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் அமர்ந்து இந்த உபதேசங்களைக் கேட்கின்றீர்கள்.
1.எந்த அளவிற்கு இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்குகின்றீர்களோ
2.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து வாழ்வதற்கு இது உதவும்.

ஒரு பச்சிலையைக் காட்டி… “இந்தப் பச்சிலை பேசுமாடா…!” என்பார் குருநாதர்.

அது எப்படி சாமி பேசும்…? என்பேன். அவர் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றார். பச்சிலை எப்படி சாமி பேசும்…! என்று நான் கேட்கின்றேன்.

“பச்சிலை தான் பேசுகிறது…” என்பார்.

நான் பேசாது என்பேன். இரண்டு பேருக்கும் “சண்டை” வரும்.

காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின்…
1.பச்சிலை தான் பேசும் என்பதை நீ தெரிந்து கொள்ளும் வரை
2.“உன்னை விடமாட்டேன்” என்பார் குருநாதர்.

அப்போது நான் என்ன செய்ய முடியும்…! அவர் ஒவ்வொரு பச்சிலையாகக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்வார். பல பச்சிலைகளை முகர்ந்த பின் கடைசியிலே என்ன செய்தார்…?

எனக்குத் தெரியாமலே ஒரு விஷமான செடியைக் கையில் கொடுத்து அதை என்னை நுகரும்படி செய்தார்.

மயக்கம் வருகின்றது… அம்மா… அப்பா…! என்று சொல்கின்றேன்.

இப்பொழுது யாருடா பேசுகிறது…? என்று கேட்கின்றார்.

என் உடலில் “நோய் பேசுகிறது…” என்று சொன்னேன்.

நோய் எப்படிடா வந்தது…? இந்த பச்சிலை தானே காரணம் என்று சொல்கிறார் குருநாதர்.

சில பச்சிலைகளை நுகரும் பொழுது எனக்கு உற்சாகம் வந்தது… ஜம்… என்று இருக்கின்றது.

காட்டிற்குள் அங்கே சாப்பாடு ஒன்றும் கிடையாது. ஒரு லிட்டர் அரிசி; ஒரு டப்பா; மோரில் ஊறப் போட்ட கத்திரிக்காய்; மோரில் ஊறப் போட்ட மிளகாய்… (உப்பு கலந்தது) இதை வைத்துத் தான் இரண்டு மாதம் நாங்கள் இரண்டு பேரும் காட்டிலே காலம் தள்ளினோம்.

இரண்டு கட்டையை வைத்துத் தீயை மூட்டி மேலே பாத்திரத்தை வைத்து நீரை அதிகமாக ஊற்றி அரிசியைப் போட்டுக் கஞ்சி மாதிரிக் காய்ச்ச வேண்டும். அதிலே மிளகாயையும் கத்திரிக்காயையும் ஒரு துண்டு போட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும். இது தான் அங்கே சாப்பாடு.

ஆனால் குருநாதர் பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கும்படி சொன்னார். நுகர்ந்து உடலுக்குள் மாற்றங்களாகும் போதுதான் எனக்குத் தெரிய வருகின்றது.

பச்சிலை பேசுமாடா என்று கேட்டுக் கேட்டுச் சில விஷமான பச்சிலைகளை நுகரும்படி செய்ததும் எனக்கு மயக்கம் வந்து விட்டது. எம்மா… எப்பா…! எம்மா… எப்பா…! என்று கத்தத் தொடங்கினேன்.

என்னடா செய்கிறது…? என்று குருநாதர் கேட்டார்.

சாமி… எதையும் சாப்பிட முடியவில்லை.. தலை வலி வருகின்றது எப்படியோ மயக்கமாக இருக்கிறது…! என்று சொன்னேன்.

இதை எல்லாம் பேசுவது யாருடா…? என்று கேட்டார்.

“நான் தான் பேசுகிறேன்…” என்று சொன்னேன்.

உன்னை பேச வைப்பது எது…? அது யாருடா…! நீ நுகர்ந்த பச்சிலை தான் இவ்வாறு பேச வைக்கின்றது என்றார்.

பச்சிலைகளுக்கு மணம் உண்டு.
1.தன் மணத்தால் மற்றொரு செடியின் மணத்தை அருகில் விடாது தள்ளி விடுகின்றது
2.இப்பொழுது நீ நுகர்ந்த பச்சிலையின் உணர்வுகள் உன் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்த பின்
3.இந்த வேலையை எல்லாம் செய்கின்றது… நல்லதை வர விடாதபடி தடுக்கின்றது…!

நீ எம்மா… எப்பா… என்று அலறுகிறாய் என்றால் அப்பொழுது எது பேசுகின்றது…?

உயிரணு எப்படி ஆனதோ இதைப் போன்று அந்தப் பச்சிலை உருவாகி குறித்த காலம் வந்து உனக்குள் இவ்வாறு செய்கின்றது. “பச்சிலை தான் பேசுகிறது…” என்பதை இவ்வாறு உணர்த்துகின்றார்.

உயிர் தோன்றிய பின் வளர்ச்சியில் மனித உடல் பெற்ற பின் உணர்ச்சிக்கொப்ப எண்ணமும் அதற்குத்தக்க செயலும் வந்தது. ஆனால் விஷமான செடிகளின் மணத்தை நுகர்ந்த ஐந்தாறு நாட்களுக்குள் உனக்கு இப்படி ஆகிவிட்டது. எம்மா… எப்பா… என்று வேதனைப்படுகின்றாய்…!

உங்களிடம் இப்பொழுது நான் சொல்கின்றேன் ஆனால் நான் காட்டிற்குள் சிரமப்பட்டு… இன்னல்பட்டு… வேதனைப்பட்டுத் தான் அதையெல்லாம் அறிந்து கொண்டேன்.

விஷமான செடிகளின் மணங்களை நுகரும்படி செய்து கை கால் குடைச்சல்களை ஏற்படுத்தித் தான் குருநாதர் தெரிய வைத்தார்.

ஒரு மாதம் இரண்டு மாதம் இவ்வாறு சுற்றிய பின் ஒவ்வொரு குணங்களுக்கும் நீ நுகர்ந்தது என்ன செய்கின்றது…/
1.இந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.அந்த அணுக்களுக்குள் என்ன இயக்கங்கள் ஏற்படுகின்றது…?
3.அதை மீண்டும் சரி செய்வது எப்படி…?

அதைத் தெரிய வைப்பதற்காக வேண்டி வேறு சில பச்சிலைகளை நுகரும்படி செய்தார். அதை நுகர்ந்த பின்பு “அப்பாடா…!” என்று சொல்கிறேன். உடல் நன்றாக ஆகின்றது.

உன் உடல் இப்பொழுது எவ்வாறு நன்றாக ஆனது…? என்று அதை எல்லாம் அனுபவபூர்வமாகத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.

நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிய வைப்பதற்குத் தான் இதை எல்லாம் செய்தார்.

செல்வத்தின் மேல் வரும் “பற்று” நம்மை நரக வேதனைக்குள் தான் அமிழ்த்தும்

செல்வத்தின் மேல் வரும் “பற்று” நம்மை நரக வேதனைக்குள் தான் அமிழ்த்தும்

 

மனிதர்கள் நாம் வாழ்வது சிறிது காலம் தான். நாம் தேடிய செல்வங்களும் “என்றும்” நம்முடன் இருந்ததில்லை.

செல்வம் தேடி வைத்திருக்கும் குடும்பங்களை எல்லாம் பார்த்தால்… கோடிக் கணக்கில் பணம் இருக்கும்…! ஆனால் குடும்பத்தில் எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று பார்த்தால் தெரியும்… நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

செல்வம் இருக்கும்… வேதனையிலிருந்து மீள முடியாத நிலை தான் அங்கே இருக்கும். துயரத்தின் உணர்வுகள் எல்லை கடந்து இருக்கும்.
1.செல்வம் எது இருப்பினும் அதுவே எதிரியாக மாறுகின்றது.
2.செல்வத்தின் நிலை சிந்தனைகளைக் குறைக்கச் செய்கின்றது… செயல்களை மாற்றுகின்றது…
3.செல்வம் இருந்தாலும் தன்னை மதிக்கவில்லை என்றால் வேதனை தான் வரும்.

வேதனை என்றாலே விஷம். ஆகவே சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. உடலில் உள்ள அணுக்களில் விஷத்தன்மை பரவி நோயாக மாறுகின்றது.

செல்வத்தைப் பார்க்க வேண்டியதுதான்… ஆனால் “ஆசையோ விடாது…” அதையே ஒவ்வொரு நிமிடமும் நினைத்து நரக வேதனையைத் தான் அது உருவாக்குமே தவிர நல்லது செய்யாது.

ஆகவே செல்வம் இருந்தாலும் அருள் செல்வம் (ஞான சக்தி) என்ற நிலை இருந்தால் தான் செல்வத்தைப் பாதுகாக்கும் தன்மையாக வரும். நம் உடலில் அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்க முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

நம் உயிர் ஈசன்… நம் உடல் சிவம்…! ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தெந்த உயர்ந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் நல் வினைகளாக உடலுக்குள் உருவாக்கி அந்த வினைக்கு நாயகனாக அது நம்மை இயக்குகிறது… அதுவே நம்மை வழி நடத்தும். ஆகவே நல்வினைகளையே நமக்குள் சேர்த்தல் வேண்டும்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் வயல்களில் களைகளை எப்படி நீக்கிக் கொண்டே இருக்கின்றோமோ அதைப்போல
1.உடலில் வரும் தீமை என்ற நிலைகளை
2.அவ்வப்போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவைகளை நீக்குதல் வேண்டும்.

தீமைகளை நீக்கும் அருள் சக்திகளைப் பெறுவதே அழியாச் செல்வம்.