தீமைகள் புகாது தூய்மைப்படுத்தும் நிலையாக ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும்

தீமைகள் புகாது தூய்மைப்படுத்தும் நிலையாக ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும்

 

எந்த ஸ்டேஷனை நாம் திருப்பி வைக்கின்றோமோ அதன் அலை வரிசையில் டி.வி.யில் படக் காட்சிகளை காணுகின்றோம்.

அதைப் போன்று தான் மனிதர்களுடன் நாம் பழகப்படும் பொழுது…
1.பணம் கொடுத்தவரும் கொடுக்காதவர்களையும் பதிவு செய்து இருக்கின்றோம்
2.துன்பப்படுத்துவோரையும் துன்பப்படுத்தாதவரையும் பதிவு செய்தாலும் நமக்குத் துன்பம் செய்தவருடைய உணர்வுகள் வலு கொண்டது.
3.நம்மை அறியாமலே துன்பத்தின் உணர்வுகள் தூண்டப்படும் பொழுது அதை நுகந்ர்த பின்
4.துன்பம் செய்தவருடைய காட்சிகள் அடிக்கடி நமக்கு நினைவுக்கு வருகிறது.
5.துன்பம் நமக்குள் வளர்ச்சியாகிச் சிந்திக்கும் நிலைகளும் இழக்கப்படுகிறது.

இதைப் போன்ற தீமைகள் வராது தடுக்க இந்த காற்றில் இருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்தோம் என்றால் நம் சிந்தனைகளை அது தெளிவாக்கும்.

காரணம்… துன்பத்தை நீக்கும் ஆற்றல் கொண்ட அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் அதை உபதேசிக்கின்றோம்.

உபதேசத்தின் உணர்வினைப் பதிவாக்கி… பதிவாக்கியதை மீண்டும் நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்கள் எண்ணத்தால் அந்தத் தீமைகளை அகற்ற முடியும்.

தீமைகளை அகற்றிடும் மார்க்கம் தான் விநாயகர் தத்துவம்…!

அதன் வழி நாம் செயல்பட்டோம் என்றால் இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தை அகற்றிவிட்டு… மகரிஷிகள் உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து அதையே கணங்களுக்கு அதிபதியாக்கும் பொழுது உடலை விட்டுச் சென்ற பின் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் சென்று பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

அருள் ஞானிகள் காட்டியபடி… ஆலயங்கள் அனைத்தும் நம்மைப் பரிசுத்தப்படுத்தும் இடம் என்று எண்ணினால் அதன் வழிப்படி தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு அது நம்மை அழைத்துச் செல்லும்.

ஞானிகள் உணர்வினை நுகர்ந்தறியப்படும் பொழுது…
1.உயிரான அக்கினியில் இந்த உணர்வுகள் பட்டு
2.உடலுக்குள் பரவி தீமைகளை அகற்றிடும் சக்தியாக வருகின்றது.

இது தான் உண்மையான யாகம்…!

நீங்கள் அனைவரும் உங்கள் எண்ணத்தால் இடும் மூச்சலைகள் ஆலயங்கள் முழுவதும் படர்கிறது. இதையே நினைவு கொண்டு நீங்கள் செயல்படும் பொழுது இந்தப் பூமியில் உள்ள தீமைகளும் அகலுகின்றது.

ஆகவே…
1.எல்லாருடைய உயிர்களிலும் மகரிஷிகளின் உணர்வுகளைப் பரவச் செய்வோம்
2.எல்லோருடைய உடல்களிலும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்திகளை உருவாக்குவோம்.

ஆலயம் வருவோர் அனைவரும் அந்த அருள் உணர்வைப் பெற்று அவர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த சாப வினைகளோ பாவ வினைகளையோ நீக்க நாம் இதை அருள் சேவையாகச் செயல்படுத்துவோம்.

ஆகவே சாஸ்திரப்படி… ஆலயங்களுக்குச் செல்வோர் மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி
1.தெய்வ குணத்தைப் பெற வேண்டும்.
2.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்தத் தெய்வ நிலை பெற வேண்டும்…
3.அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று எவர் சொல்கின்றனரோ
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதி பெற்று… வரும் தீமைகளை அகற்றி…
5.பேரின்பப் பெரு வாழ்வு வாழும் மகரிஷிகளுடன் ஒன்றி… பிறவி இல்லா நிலைகள் அடைய முடியும்.

சுயநலம் எதுவாக இருக்க வேண்டும்…?

சுயநலம் எதுவாக இருக்க வேண்டும்…?

 

எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனித உடல் “இராமேஸ்வரம்…” ஆனாலும்…
1.மனிதனாக உருவான பின் தீமைகளை நீக்கிய உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் அதை நுகர்ந்து
2.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால் ஒளி உடல் பெற முடியும்.

அதாவது… எண்ணத்தால் தான் இந்த உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கப்பட்டது. அதே எண்ணத்தால் இருளை நீக்கி ஒளி என்ற உடலைப் பெற்றது தான் “துருவ நட்சத்திரம்…”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுதினமும் காலையில் எடுத்து நம் உடலில் உள்ள இரத்தநாளங்களில் பெருக்கிப் பழகுதல் வேண்டும்… அந்தக் கணக்கைக் கூட்டுதல் வேண்டும்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை என்பது போல் நாம எதை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அதை நமது உயிர் உருவாக்கி விடுகின்றது… உருவாக்கிய பின் உடலாக மாற்றுகின்றது.

மனிதனாக உருப்பெற்ற பின்… இந்த உடலில் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் போன்ற குணங்கள் அதிகரித்து விட்டால் அந்தக் கணக்கின் பிரகாரம்… இந்த உடலுக்குப் பின் வேதனைப்படுத்தியே மற்றொன்றை உணவாக உட்கொள்ளும் அடுத்த உடலை இந்த உயிர் அமைத்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான்
1.இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள்…
2.அங்கே துருவ நட்சத்திரத்தினை நாம் நேரடியாக பார்க்கும்படி வைத்தார்கள் ஞானிகள்.

விநாயகர் ஆலயம் இருக்கும் இடங்களிலே அங்கே மரங்களை வைத்து விட்டால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்க முடிவதில்லை… அல்லது கட்டிடங்கள் இருந்தாலும் அதைப் பார்க்க முடிவதில்லை.
1.ஆக… தனித்து அந்தக் கடல் பாகம் இருக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தை நாம் தெளிவாகப் பார்க்க முடியும்.

“நேரடியாகப் பார்த்து…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக் கூடிய ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் நமக்குள் சேர்க்க முடியும்

ஒவ்வொருவரும் தன் உடலுக்குள் “துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்க வேண்டும்…” என்பதற்குத் தான் அந்த இடத்தை ஞானிகள் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆக… மனிதனாக உருவாக்கிய உயிரை நினைவு கொண்டு… உயிரை ஈசனாக மதித்து… ஒளியின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனையும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

1.நீங்கள் எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற எண்ணங்களை
2.நான் (ஞானகுரு) எண்ணும் பொழுது எனக்கு அந்தப் பலன் கிடைக்கிறது.
3.இது என்னுடைய சுயநலம்…!

ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார்…! என்றால் அதை நீக்க வேண்டும் என்றோ அல்லது அதற்கு இன்னொரு இடைஞ்சலைச் செய்தோம் என்றால் இதுவும் சுயநலம் தான்.

1.ஆனாலும் அந்த இடைஞ்சலை நீக்கும் சக்தியை எடுத்துச் செயல்படும் நிலை வரும் பொழுது
2.எனக்குள் பல தீமைகளை நீக்கும் சக்தியாக அது வருகிறது.

தீமைகளை நீக்கும் உயர்ந்த சக்திகளை நான் பெறுவது போன்று ஒவ்வொருவரும் நீங்கள் எளிதில் பெற முடியும். பெற்று உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

விஷத்தை ஒதுக்கி விட்டால்… அது நம்மை ஒன்றும் செய்யாது – விளக்கம்

விஷத்தை ஒதுக்கி விட்டால்… அது நம்மை ஒன்றும் செய்யாது – விளக்கம்

 

சில பேர் என்னிடம் (ஞனகுரு) எதையாவது எதிர்பார்த்து வருவார்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் “என்ன சாமி இவர்…?” என்பார்கள்.

இவர்கள் எண்ணத்தைத் தான் நான் நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் யாம் சொல்வதை அவர்கள் வழிப்படுத்தி நடப்பதில்லை. அவர்கள் ஆசைக்கு நான் இணங்கி வர வேண்டும். இப்படி வரக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
1.யாம் சொல்லும் முறைப்படி குருநாதர் காட்டிய நெறிகளை எடுப்பதற்கு இல்லாதபடி
2.தவறின் நிலைகளிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்

சாமியிடம் சென்றேன்… ஏதோ சொன்னார்… பின் நடக்கும் என்றார்…! என்று
1.யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்ய வேண்டியதை விட்டு விட்டு
2.அவர்கள் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இப்படித்தான் இந்தச் சமுதாயம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இங்கே எம்மிடம் வந்து கஷ்டத்தைத் தான் சொல்கிறார்கள். “கஷ்டத்திலிருந்து நான் மீள வேண்டும்…” என்று யாரும் கேட்பதில்லை.

குடும்பத்தில் உள்ள குறைகளையும்… “தொழிலில் கடன் வாங்கியவன் தன்னை ஏமாற்றுகின்றான்…!” என்றும் இதைத் தான் சொல்கிறார்கள்.

1.வாங்கிச் சென்றவர்களுக்கெல்லாம் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எண்ணம் வர வேண்டும்
2.அதற்கு வேண்டிய வருமானம் அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ணும்படி
3.பல முறை சொல்லியிருக்கின்றேன்… அதை யாரும் கேட்பதில்லை.

நீங்கள் சண்டை போட்டாலும் பணம் வரப் போகின்றதா…? இல்லை…! கோர்ட்… கேஸ் என்று அலைந்து… மேற்கொண்டு பணத்தைச் செலவழித்து வேதனையாகி நோயாக ஆனது தான் மிச்சம்.

பாவிகள் இப்படிச் செய்துவிட்டனர்…! அதனால் எனக்கு நோய் வந்து விட்டது… என்று தான் சொல்ல வேண்டி வரும்.

யாம் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றினால் அங்கே நிச்சயம் மாறும்… அமைதி கிடைக்கும்… சாந்தம் கிடைக்கும்.

அவன் உடனடியாகக் காசைக் கொடுக்கவில்லை என்றாலும் கூட நம் எண்ணம் நம் செல்வத்தை வளரச் செய்யும். மன வேதனையாகி நோயாகாமல் தடுத்துக் கொள்ள முடியும். குடும்பத்தையும் சீராகக் காக்க முடியும்.

இப்படி…
1.விஷத்தை ஒதுக்கி விட்டால் அது நம்மை ஒன்றும் செய்யாது
2.ஆனால் நான் நன்றாகத் தானே சமைத்து வைத்தேன்… என் பொருளில் விஷம் விழுந்து விட்டதே…! என்று
3.அத்தனை பொருளையும் வெளியிலே தூக்கி எறிவதா…? என்று விஷம் பட்டதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…?
4.அந்த விஷம் நம்மைக் கொல்லத்தான் செய்யும்.

ஆக… எல்லோருக்கும் நான் நல்லதைச் செய்தேன். எனக்கு இந்த நிலையைச் செய்கின்றார்களே…! என்ற வேதனை (வேதனை என்பது விஷம்) உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அதைத்தான் செய்யும்

இருபது வருடம் அனுபவத்திலே இதையெல்லாம் தெரிந்து தான் உங்களுக்குச் சொல்கின்றேன். காடு மேடு எல்லாம் அலைந்து… குடும்பத்தில் உள்ள மனைவி பிள்ளைகள் அனைவரையும் விட்டுவிட்டு… குருநாதர் காட்டிய வழியில் உலக உண்மைகளை எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் இங்கு வந்து இதைச் செயல்படுத்த முடிந்தது.

அது வரையிலும்
1.என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனாதையாக இருந்து
2.செல்வத்தை இழந்து நரக வேதனைப்பட்டுத் தான் வாழ்ந்தார்கள்

ஆனால் இதை எல்லாம் அனுபவபூர்வமாக கொடுத்தாலும் குருநாதர் விளக்கத்தையும் கொடுக்கின்றார்.

உன் குடும்பம் நீ இல்லாத போது எத்தனை அவஸ்தைப்பட்டதோ… அதைப் போன்று
1.ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ தொல்லைகள் ஏற்பட்டு விடுகிறது
2.அதனால் அவர்கள் அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தை (உடலை) அசுத்தப்படுத்துகின்றார்கள்
3.அவர் அறியாமலே அதைப் புண்படுத்துகின்றனர்… அதை நீ அவர்களுக்கு உணர்த்து
4.உயிரான ஈசனை மதிக்கும்படி செய்… அவனால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை மதிக்கும்படி செய்…
5.உடலைச் சிவமாக மதிக்கச் செய்.
6.அவர்களுக்கு இதை நீ ஓதும் போது… உனக்கு அதிலே அந்தப் பங்கு கிடைக்கும்.

அவர்கள் தன் உடலை மதிக்கவில்லை என்று இருந்தாலும்…
1.மதிக்கக்கூடிய பண்புகள் அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால்
2.நீ எண்ணிய உணர்வு (இந்த உயர்ந்த எண்ணம்) உனக்குள் வளர்கின்றது.

ஒரு தீயவன் என்னைத் தவறாகப் பேசுகின்றான் என்றால் “இப்படிப் பேசுகின்றானே…” என்று மீண்டும் மீண்டும் எண்ணினால் அந்த உணர்வு எனக்குள் வளர்ந்து தீமையாகவே வருகின்றது.

அப்போது அந்த நேரத்தில்
1.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.அவனுடைய வேக உணர்வு… அந்தத் தீமையான உணர்வு நமக்குள் வருவதில்லை.

இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று மனதில் நிறுத்தி… பிறரின் உணர்வை நமக்குள் வளர்க்காதபடி… அந்த உயர்ந்த சக்தியை நாம் வளர்க்கப் பழகுதல் வேண்டும்.

நம்மை நாம் அறிதல் வேண்டும்…!

நம்மை நாம் அறிதல் வேண்டும்…!

 

ஒரு உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து தாவர இனச்சத்தில் வீழ்ந்த பின் கண்ணில்லாத புழுவாகத் தான் ஆரம்ப நிலையில் தோன்றுகிறது. பின் உணவுக்காக நகர்ந்து செல்லும் பொழுது அதற்கு உணவு கிடைக்கவில்லை என்றால்
1.வேதனையான உணர்வுகளை நுகர்கின்றது
2.அந்த வேதனை உணர்வுகளே வலுவாகின்றது.

அப்போது துவாரகா யுகத்தில் உடலுக்குள் வேதனை என்ற உணர்ச்சிகள் தோன்றிய பின் “பார்க்க வேண்டும்…” என்ற புது உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.
1.இரண்டு கல்லை எடுத்துத் தட்டினால் எப்படி ஒளிகள் வருகின்றதோ
2.அதே போல இந்த உணர்வுக்குள் ஆன பின் இதுவும் கரண்ட்…
3.எலெக்ட்ரிக் எலக்ட்ரான்… இந்த இரண்டும் எதிர்நிலையாக மோதப்படும் பொழுது
4.உடலுக்குள் உணர்ச்சி என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

இப்படித் தோன்றும் உணர்வுகள் தான்
1.உயிரிலே மோதும் போது கண்களாக – அதே உணர்வுகள்
2.வெளிப்படும் வெளிச்சத்தை உள்ளுக்குள் சேர்த்து இரத்தத்தில் கலந்து
3.கண்கள் உருவாகும் தன்மைகளைக் கொண்டு வருகின்றது.

ஆக… கண்களால் புறத்திலே பார்க்கின்றோம்… கவர்ந்து உயிரால் நுகரப்படும் பொழுது… உயிரால் உணர்வுகளை அறிகின்றோம். இங்கே பார்க்கின்றோம்… அந்த உணர்வை அறிகின்றோம்.

ஆரம்பத்தில் கண்ணில்லாத பொழுது புழு அது தன் உணர்வால் தான் அறியத் தொடங்குகிறது. அதே உணர்வுகள் மோதப்படும் போது அறிய வேண்டும் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது “இரண்டும் கலந்து…” இந்த உணர்வுக்குள் கருத்தன்மை அடைந்து… உடலை விட்டு உயிரான்மா சென்றாலும் அதிலே உணர்வின் அணுக்கள் சேர்த்துக் கொண்டது கண்களாக உருவாகின்றது.

அதைத் தான் கண்ணன் துவாரகா யுகத்தில் பிறந்தான்…! என்று சாஸ்திரம் கூறுகிறது.
1.வாசுதேவன் – சுவாசித்த நிலைக்கும்
2.தேவகி – தான் பார்க்க வேண்டும் என்று உணர்வுகளுக்கும்
3.அந்த ரெண்டும் கலந்து அந்தத் தேவைக்கொப்பக் கண்கள் உருவாகின்றது.

இது நான்காவது பிரம்மம்…! ஒன்று எதன் வலிமை நமக்குள் வருகின்றதோ அந்த வலிமைக்குத்தக்க இதை மாற்றி அதன் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டி உடல்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.

உதாரணமாக ஒரு இரத்தக் கொதிப்பு வந்தவரை அடிக்கடி கண்களில் உற்றுப் பார்த்துப் பேசிப் பழகிக் கொண்டிருந்தால் உடலில் எல்லா நிலைகளும் மாறி… அடுத்தாற்போல் உங்கள் உடலிலும் இரத்தக் கொதிப்பு வரத் தொடங்குகிறது.

ஆனால் “நான் எல்லாருக்கும் நன்மை தானே செய்தேன்…” என்று நாம் சொல்லலாம். ஆனால் நுகர்ந்தது இரத்தத்தில் கலந்த பின் இரத்தக் கொதிப்பாக மாறிவிடுகிறது.
1.ஏனென்றால் நம் கண்கள் பிரம்மத்தைச் சார்ந்தது… ஆக உருவாக்கும் தன்மை பெற்றது.
2.எதை உற்றுப் பார்த்து அதைக் கவர்கின்றதோ அதனின் வலிமை இந்த உடலுக்குள் ஆன பின்
3.அதனின் தன்மை நமக்குள் அணுவாக உருவாக்கும் தன்மை பெற்றது.

சாஸ்திர விதிகள் இதையெல்லாம் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.
1.கடவுள் என்றால் என்ன…?
2.அவன் தனித்து ஒருவனாக இருக்கின்றானா…? இல்லை.

கண்கள் உருப் பெற்றபின் கண்ணின் நினைவைக் கொண்டு ஒன்றின் வலிமையின் உணர்வை நுகர்ந்த பின் உள் நின்று அது கடவுளாக உருவாக்குகின்றது. உள் நின்று அதன் உணர்வுகள் எதுவோ அதன் வழியே அது செயல்படுகின்றது.
1.நம் உயிர் மட்டும் கடவுள் அல்ல…
2.எதை நுகர்கின்றோமோ உள் நின்று அதன் உணர்வை அதுவே அதனதன் நிலைகள் வளர்க்கின்றது.

நமக்குள் எத்தனையோ கோடி கடவுள்கள் உண்டு… ஒருவன் அல்ல கடவுள்… ஒருவனே கடவுள் என்று சொல்வது “பிழை…”

ஆனால் அதே சமயத்தில் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் “அவன் இன்றி அணுவும் அசையாது…” உயிர் உடலில் இல்லை என்றால் உடலில் உள்ள இந்த அணுக்கள் அசையுமோ…? அசைய முடியாது.

உயிரான ஈசன் இந்த உடலில் இல்லை என்றால் உடலான சிவம் சவமாகி விடுகிறது. சவமான பின்
1.இந்த உடலுக்குள் ஏற்கனவே எந்தெந்த வகையில் குணங்களை உருவாக்கிய அணுக்கள் இருக்கின்றதோ
2.அவை அனைத்தும் இந்த உடலையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது… புழுக்களாக மாறுகின்றது

முதலிலே ஜீவ அணுவாக இருக்கின்றது. உயிர் போய்விட்டால் அது எல்லாம் உயிரணுக்களாக மாறுகின்றது. எதன் சுவையோ அதன் உணர்ச்சி கொண்டு அதை உணவாக உட்கொள்ளும் அதன் தன்மை அடைகிறது என்பதைச் சாஸ்திரங்கள் கூறுகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்… காரணம் “நம்மை நாம் அறிதல் வேண்டும்…”

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

ஐம்புலன்களின் இயக்கம் (பஞ்ச பாண்டவர்கள் – ஐவர்மலை)

 

மான் சாந்தமானது புலியோ கொடூரமானது. புலி மானைத் தாக்க விரும்புகின்றது தன் உணவுக்காக வேண்டி…!

மானைக் கொன்று புசிக்க வேண்டும் என்ற உணர்வுகள் புலியிடமிருந்து வெளிவரப்படும் பொழுது சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய “வெப்பகாந்தம்…” அதைக் கவர்ந்து கொள்கிறது.

புலியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின்
1.மான் புலியைப் பார்த்த பின்… வெப்பகாந்தம் கவர்ந்த உணர்வை மான் நுகர்ந்தபின் அதற்கு அந்த வலிமை வருகின்றது.
2.அது தான் கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருக்ஷேத்திரப் போர் என்று சொல்வது.
3.மான் புலியைப் பார்த்து அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது உயிரிலே மோதப்பட்டு
4.அபாயக் குரல்களை… இந்த உணர்ச்சிகளை எழுப்புகின்றது…
5.கண்ணன் சங்கநாதம் ஊதுகின்றான்… குருக்ஷேத்திரப் போர் அங்கே நடக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் புலியின் உணர்வுகளை அது எடுத்துக் கொண்டு வரும் பொழுது… “அர்ஜுனன் – வலிமைக்க சக்தி…!”

எதைக் கவர்ந்து கொண்டதோ அந்தச் சத்தை இதில் உள்ள விஷம் “அந்த உணர்ச்சியின் வேகத்தை ஊட்டும் – நகுலன்…!”

மான் நுகர்ந்து கொண்ட பின் உயிரிலே குருக்ஷேத்திரப் போராகிறது… ஆனால் அதே சமயத்தில்… எதையுமே குறிவைத்துத் தாக்கும் வல்லமை பெற்றவன் அர்ஜுனன் என்ற நிலையில் “புலியின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி… இரத்தத்தின் வழி சென்று அந்த வலிமையை உடல் முழுவதும் பரவச் செய்கின்றது – அர்ஜுனன்…”

இந்த உடலுக்குள் இந்த உணர்வின் தன்மை ஊடுருவி… குறி வைத்துத் தாக்கப்படும் போது… நகுலன்.
1.அதனுடைய இயக்க உணர்வின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.இந்த வலிமையை ஒன்று சேர்த்து விடுகின்றது… அதாவது அதற்குள் விரிவடையச் செய்கின்றது.

அதனுடன் சேர்த்துக் கொண்ட பின்… இரண்டறக் கலந்து விட்டால் (மானின் உணர்வும் புலியின் உணர்வும்) – “சகாதேவன்…” என்றும் அதனுடன் சேர்த்து வலிமையாகி விட்டால் – “பீமன்…” என்றும் காட்டப்படுகிறது.

மானின் உடலுக்குள் புலியின் உணர்வுகள் வலிமை பெற்றால் அப்போது பீமன் என்ற நிலை வருகிறது. பீமன் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கித் தனது நிலைக்கே அடிமையாக்கி விடுகின்றான் என்று காவியத் தொகுப்புகள் காட்டுகிறது.

புலி தன் பசிக்காக அந்த மானை அடித்து உட்கொண்ட பின் மானின் உயிரான்மா வெளி வருகிறது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்…!

எப்படி…?

கண்கள் தான் உற்று நோக்குகிறது…
1.புலியோ மானின் உடலை இரையாக்குகின்றது
2.புலி மானின் உடலை இரையாக்குவதற்கு முன் “புலியின் உணர்வின் உணர்ச்சிகளை…”
3.மானின் கண்கள் தனக்குள் புலியின் உணர்வுகளை இரையாக்கி விடுகின்றது.

இரையின் உணர்வு செயலாகும் போது… எதன் வலிமை பெற்றதோ அதன் நிலை கொண்டு உருவாகிடும் தன்மை பெறுகின்றது. மானின் உயிரான்மா வெளி வரப்படும் பொழுது கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாக செல்கின்றான்.

அந்த வலிமைக்குத்தக்க சாரதியாகச் சென்று எந்தப் புலியைக் கூர்மையாக உற்றுப் பார்த்ததோ அந்தக் கூர்மைக்குத்தக்க வலிமை கூடி
1.அங்கே இதிலே சேர்ந்த காந்தப்புலன் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில்
2.செல்ஃபோன்களில் நாம் பதிவாக்கி விட்டால்… அதை இயக்கப்படும் பொழுது அது எப்படித் திரும்ப இயங்குகின்றதோ
3.ஒரு செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது எப்படி விளைகின்றதோ
4.அதைப் போன்று எந்தப் புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் சென்றதோ
5.மானின் உயிரான்மா வெளிவந்த பின் புலியின் ஈர்ப்புக்குள் சூட்சமமாக வந்து விடுகின்றது.

புலியோ உடலுடன் இருக்கின்றது… அதைக் (மானின் ஆன்மாவை) கவர்ந்து விடுகின்றது. அதனுடைய கண்கள் இந்த மானை எப்படிப் பார்த்ததோ அதன் உணர்வு கொண்டு அதைக் கவர்ந்து விடுகின்றது.

புலியின் ஈர்ப்புக்குள் சென்று… புலியின் வியூகத்தைத் தகர்த்து அதனுள் சென்று நீ அதுவாகு…! என்று கண்ணன் உபதேசிக்கின்றார்.

பரிணாம வளர்ச்சிக்குக் கண் தான் பெரும்பகுதி வழிகாட்டுகிறது. ஆகவே… நமது வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தில்
1.நாம் நுகரும் தன்னைக் காட்டிலும் வலிமையான உணர்வுகள்
2.நம்மை எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மாற்றியது என்று தான் தெளிவாகக் கூறப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

இப்படி மானின் ஆன்மா புலியின் உடலுக்குள் சென்ற பின் அதனுடைய குட்டியாக உருவாகிவிடுகிறது. “குட்டியாக ஈன்ற பின் – தர்மன்…!”

மானின் உடல் முதலில் புலிக்கு இரையாக்கப்பட்டது. இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் குட்டியான பின் தன் நிலை (புலி) ஆன பின் தர்மன்… “எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சமாதானப்படுத்துவான்…”

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில்
1.ஒவ்வொரு உணர்வுகளும் உணர்ச்சிகளும் எதன் எதன் வழியில்…
2.எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தான் சாஸ்திர விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நான் செய்வது எப்படித் தவறாகும்… என்று கேட்பது நாம் தானா…! அல்லது சுவாசித்ததா…?

நான் செய்வது எப்படித் தவறாகும்… என்று கேட்பது நாம் தானா…! அல்லது சுவாசித்ததா…?

 

மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது – நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.

நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.

ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.

உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்… அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்… அகங்காரம் கொள்ளுகின்றது.

அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்…? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்… தான் நுகர்ந்த உணர்வுகள்… தான்… தனது… என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா…?

ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்… “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்…” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.

இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை… துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்…” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.

இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்… அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.

நஞ்சை ஒளியாக மாற்றிடும் மார்க்கத்தைத் தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றோம் – ஞானகுரு

நஞ்சை ஒளியாக மாற்றிடும் மார்க்கத்தைத் தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றோம் – ஞானகுரு

 

1.சூரியன் நஞ்சினைப் பிரிக்கின்றது
2.ஆனால் துருவ நட்சத்திரமோ நஞ்சினை ஒளியாக மாற்றுகின்றது.

சூரியன் தனது நிலைகளில் நஞ்சினைப் பிரித்து மற்றதுடன் மோதும் பொழுது தான் ஒளிக் கதிராக மின்னுகின்றது. நஞ்சின் தாக்குதலால் வெப்பத்தின் தணல் கூடி ஒளியின் தன்மையாக மாறுகின்றது.

ஆனால் மனிதனாகி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன பின் நஞ்சின் தன்மை தனக்குள் அருகில் வரும் பொழுது அதை ஒளியின் சிகரமாக மாற்றுகின்றான்.
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை அடக்கி ஒளியாக இணைத்து
2.ஒளியின் சிகரமாக மாற்றும் தன்மை நாமும் பெற வேண்டும்.

மனிதனாக ஆனவன் தான் இதை உருவாக்க முடியும். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்றும் முழு முதற் கடவுள் என்றும் காட்டுகின்றார்கள்.

ஆக… இந்த மனித உடல் பெற்ற பின் அருள் ஒளியினை உருவாக்கும் முழுமையான கடவுளாக நாம் ஆகின்றோம். அதன் வழியில்
1.மகா சாந்தம் என்ற நிலைகளில்
2.மகா என்று சர்வத்தையும் சாந்தப்படுத்தும் உணவுகளை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்.

நமக்குள் ஒன்றிணைந்து வாழும் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டால் எந்த நஞ்சினையும் வென்றிடும் சக்தியாக… உள் நின்று நஞ்சினை ஒளியின் சிகரமாகக் கூட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்ததைத் தான் விநாயகர் தத்துவத்தில் “முழு முதல் கடவுள்…” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் வாழ்வோம். நமக்குள் புகும் இருளை புகாது அதைத் தடுத்து நம்மைப் பாதுகாப்போம். அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம்… தவமிருப்போம்.

உடலையும் சொத்தையும் தான் பார்க்க விரும்புகிறோம்… உயிர் பிரிந்த பின் எதைப் பார்க்கப் போகின்றோம்…!

உடலையும் சொத்தையும் தான் பார்க்க விரும்புகிறோம்… உயிர் பிரிந்த பின் எதைப் பார்க்கப் போகின்றோம்…!

 

உயர்தரக் கல்வியை உருவாக்கி இந்த உணர்வின் தன்மைகளைத் தனக்குள் பதிவாக்கி அதன் மூலம் இன்று விஞ்ஞானத்தைப் பெருக்கிக் கொண்டே வருகின்றார்கள்.

ஒரு இன்ஜினியரோ அந்த விஞ்ஞான அறிவுப்படி இயந்திரங்களின் உறுப்புகளைப் புதிது புதிதாகச் செயல்படுத்தத் தொடங்குகிறான்.

ஒரு இயந்திரத்தில் அதனுடைய இயக்கப் பொறிகள் எங்கெங்கே அழுத்தங்கள் அதிகமாக இருக்கின்றதோ அதற்குத்தக்கவாறு ஒரு வலுகொண்ட சக்தியினை உலோகங்களின் மூலம் கொடுக்கின்றனர்.

அதே போன்று ஒவ்வொரு பொருளுக்கும் அந்த இயந்திரங்களை இயக்குவதற்கு இன்ஜினியர்கள் முதலில் ஒருவர் கண்டுணர்ந்து உருவாக்கி இருந்தாலும்
1.அடுத்து அதிலே சந்தர்ப்பத்தால் எப்படிப் பழுதடைந்தது…?
2.அந்தப் பழுதை எப்படி மாற்றுவது…? என்ற நிலைகளைக் கண்டுணர்கின்றனர்
3.துரித நிலைகள் கொண்டு பழுதடைவதை நீண்ட நாள் பழுதடையாமல் பாதுகாக்கும் யுக்திகளை எண்ணுகின்றார்கள்
4.நீண்ட நாள் பழுதடையாதபடி இயந்திரப் பாகங்களின் உலோகங்களை மாற்றி
5.அதனை எந்தெந்த நிலைகள் செயல்படுத்த முடியும் என்று உருவாக்குகின்றார்கள்

அதாவது சரி செய்ய வேண்டும் என்ற நிலையில் தன் உணர்வின் எண்ணங்களைக் கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி அந்தப் பாகங்களைச் செய்கின்றார்கள்.

பண்டைய காலங்களில் மனிதனுக்குப் பற்கள் இல்லை என்றால் அதை வைத்துத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான காலத்தில்
1.பழுதடைந்த பற்களை நீக்கிவிட்டு
2.அதற்கென்று புதிதாக உருவாக்கப்பட்ட பற்களை வைத்து மாற்றி
3.கடினப் பொருள்களை மென்று உணவாக உட்கொள்ளும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அதே போல் உடல் உறுப்புகளில் பின்னமாகிவிட்டால் கூடுமான வரையிலும் செயற்கை முறையில் அதே உறுப்புகளைச் செயலாக்கும் தன்மையும் வந்துவிட்டது.

இப்படி… மனிதனுக்குள் பழகிய நிலைகள் கொண்டு மனித உடலைத்தான் இவர்களால் பார்க்க முடிகின்றது.

ஆனால் ஞானிகளோ விஷத்தை வென்றிடும் உணர்வை தனக்குள் வளர்த்து விஷத்தை வென்றிடும் அருள் உணர்வுகளை தனக்குள் பெருக்கி இந்த பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை வந்தால் அதை அடக்கி தனக்குள் ஒளியின் தன்மையாக மாற்றிடும் சக்தி பெற்றனர்.

அதிலே ஆதியிலே தோன்றிய அகஸ்தியன்
1.மீண்டும் அவன் தான் பிறவிக்கு வராதபடி அத்தகைய உணர்வினைத் தனக்குள் வளர்த்து
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆகும் தன்மை பெற்றான்.

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து வாழ்ந்தனர்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவருமே விண்ணுலக ஆற்றலை எடுத்து நஞ்சினை வென்று ஒளியான அணுக்களை உருவாக்கி உடலை விட்டுச் சென்ற பின் துருவத்தின் எல்லையில் இருந்து கொண்டு பூமி கவரும் உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டு உள்ளார்

அவர்கள் பெற்ற சக்திகளைத் தியானித்து அதை நுகர்ந்த அக்கால மக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

உயிரணு தோன்றி மனிதனாகி கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனதும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் வேகாநிலை அடைகின்றனர்.

1.இந்தப் பிரபஞ்சமே மடிந்தாலும் சூரியனே அழிந்தாலும் அவைகள் அழியாது
2.எத்தகைய விஷத்தன்மையும் அவர்களைப் பாதிக்காது அதனை ஒளியாக மாற்றிக் கொண்டு
3.அகண்ட அண்டத்தில் ஏகாந்த நிலையில் வாழ்கின்றனர்.

அவர்களைப் போன்று நாமும் நுகர்வதை எல்லாம் ஒளியாக மாற்றி மகிழ்ச்சி பெறும் உணர்வாக மாற்றிடும் அந்த சக்தி பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது ஒளியாக மாற வேண்டும்.

பல ஞானிகளும் மகரிஷிகளும் முனிவர்களும் இந்த மனித உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று கடும் தவம் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்.

அவர்களிடம் இருந்து வெளிப்படும் அந்த ஒளியான உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் பரவச் செய்து கொண்டேயுள்ளது.
1.அதனை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால் அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடையலாம்
2.அதை உருவாக்கும் நிலைக்குத் தான் என்னுடைய உபதேசமே (ஞானகுரு).

இந்த உடலின் பற்றை அறுத்துவிடு… என்றார் குருநாதர்

இந்த உடலின் பற்றை அறுத்துவிடு… என்றார் குருநாதர்

 

குருநாதர் பல நிலைகளைச் செய்தாலும் கூட என் குடும்பம் வாழ வேண்டும் என்று ஆசை எனக்குள் (ஞானகுரு) இருந்தது.

இந்த ஆசை எவ்வாறு உருவாகின்றது…? அதனால் விளையும் தன்மைகள் என்ன…? என்பதை உணர்த்துவதற்காக குருநாதர் இமயமலைக்கு என்னை அனுப்பினார்.

பனிப்பாறைகள் மீது நடக்கச் சொன்னார். இப்பொழுது உடலிலே ஆடைகளை அணிந்திருக்கின்றோம். ஆனால் அன்று அதுவும் இல்லாதபடி வெறும் கோவணத்துடன் தான் அங்கே போகச் சொன்னார்.
1.நான் சொல்லும் உணர்வின் தன்மையை ஏங்கிச் சுவாசி
2.பனியின் குளிர் ஒன்றும் செய்யாது
3.உன் நினைவாற்றல் அருள் ஒளி பெறும் உணர்வுடன் ஒன்றும் போது வாழ்க்கையில் மன பலம் பெறுவாய்
4.ஆகவே உன் நினைவு நான் சொன்னதன் பால் இருக்கப்படும் பொழுது பனிப்பாறைகள் உன்னை ஒன்றும் செய்யாது என்றார்

அதன் படி பனிப்பாறைகளைக் கடந்து நான் செல்கின்றேன். சென்ற பின் திடு…திடு… என்று நான் வந்த பாதையில் இருந்த பனிப் பாறைகள் அனைத்தும் நொறுங்கிக் கீழே விழுகின்றது.

நான் வந்த பாதை இடிந்து போய் விட்டதே… இனி எப்படித் திரும்பப் போகின்றோம்…? குழந்தைகளையும் குடும்பத்தையும் நான் எப்படிப் பார்க்கப் போகின்றேன்…? என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

அப்போது இந்த உடல் பற்று வரப்படும் பொழுது “என் இருதயமே இறைகின்றது…” சிறிது நேரத்தில் உயிரே போய்விடும் போல இருக்கின்றது.

காரணம்… குருநாதர் கொடுத்த கவசம்… அவர் கொடுத்த உணர்வின் தன்மையை நுகர மறந்துவிட்டேன்.

இனி எவ்வாறு வாழ்வது…? என் குழந்தைகள் என்ன ஆவார்கள்…? என்று குடும்பத்தின் பற்று வரப்படும் பொழுது இந்த உடல் பற்று தன்னாலே வருகின்றது.

அப்பொழுதுதான் குருநாதர் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்…!

“மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே… தயங்காதே…!

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!
மனமே இனியாகிலும் மயங்காதே… மயங்காதே…!

நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ…?
நிலையில்லா இவ்வுலகம் சதமாமோ… சதமாமோ…?

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே… தயங்காதே…!” என்று
குருநாதர் இந்தப் பாடலை பாடிக் காட்சிகளைக் கொடுக்கின்றார்.

நீ இப்பொழுது இருக்கும் இந்த நிலையில் எல்லாம் போய் உன் உயிர் வெளியேறி விட்டால்
1.“பொன்னடி பொருளையும் சுகத்தையும்” காண முடியுமா…? நீ எதை எண்ணுகின்றாய்…?
2.நான் எதைச் சொன்னேன்…? எதை எண்ணி ஏங்குகின்றாய்…?
3.எதைப் பெறச் செய்கின்றாய்…? எதை நீ பெறுதல் வேண்டும்…?

ஆகவே…
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு… அந்த உணர்வின் தன்மையை அங்கே குடும்பத்தில் பாய்ச்சு…
2.அவர்கள் நலம் பெற வேண்டும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்து…
3.அந்த அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சு அவர்கள் நலமும் வளமும் பெறுவார்கள்.

பாசத்தால் “இப்படி ஆகிவிட்டதே…” என்று அவருடைய நிலைகளை எண்ணும் பொழுது இங்கே உன் உயிர் போய் விட்டால் அந்தப் பொன்னடி பொருளை எவ்வாறு நீ காணப் போகின்றாய்…?

நான் உனக்குப் போதித்த உணர்வுகளை நீ ஏன் மறந்தாய்…?

1.அருள் ஒளி பெறு… இருளை அகற்றிவிடு
2.இந்த உடலின் பற்றை அறுத்துவிடு
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை அனைவரும் பெறச் செய்யும் அந்த அருள் பற்றை உண்டாக்கு
4.அருள் வாழ்க்கை வாழ்ந்திடு… இருளை அகற்றிடும் சக்தி பெற்றிடு…
5.இருளை அகற்றிடும் வாழ்க்கை வாழ்ந்துவிடு
6.அருள் ஒளியின் பற்றாக வாழ்ந்திடு
7.அருள் ஞானிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றிவிடு
8.வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிவிடு
9.பிறவியில்லா நிலைபெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்துவிடு என்று இந்த உபதேசத்தை அங்கே கொடுக்கின்றார்.

ஆகவே… இந்த வாழ்க்கையை இன்னல்கள் வந்தாலும் நாம் பற்ற வேண்டியது எது…” அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிட வேண்டும்.

குரு வழியில் அருள் உணர்வுகளைப் பெறுவோம்… இருளை அகற்றிடும் அருள் வழியைப் பெறுவோம்… அருள் வழி வாழ்வோம்.
1.அனைத்துக் குடும்பங்களும் நலம் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் வாழ வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்…!

சொர்க்கலோகத்தை உருவாக்குங்கள்

சொர்க்கலோகத்தை உருவாக்குங்கள்

 

உதாரணமாக… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக உடலிலே உருவாகி விட்டால் நாம் எந்த லோகத்தை உருவாக்குகிறோம்…?

இந்திரலோகத்தில் (உடலில் உள்ள இரத்தங்களில்) வேதனை உணர்வுகள் கருவாகி அணுக்களாக வெடித்து அணுவின் மலம் அது சிவமாகிறது (உடல்).
1.ஆக “வேதனையான உணர்வின் செயலாக” இயக்கப்படும் பொழுது சிவலோகத்தில் எமனாக மாறுகின்றது.
2.பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று மனிதனாக வந்த நம் உடலுக்குள் எமலோகமாக மாறுகின்றது.
3.வேதனையால் இந்த உடலின் தன்மை நலிகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் “எந்தக் குணத்தின் வரிசையில் எடுத்தோமோ…” அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை நரக வேதனைப்படச் செய்து இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி சாகாக்கலையாக (அந்த வேதனை உணர்வு கொண்டு) அழைத்துச் செல்கின்றான்…! நம் உயிர்.

எங்கே…?

விஷத்தால் மற்ற உயிரின்ங்களைத் தாக்கி உணவாக உட்கொள்ளும் பாம்பினமாகவோ விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவாக எடுக்கும் தேளினமாகவோ மாற்றிவிடுகிறது.

அடிக்கடி வேதனை என்றோ… வேதனைப்படுபவர்களைப் பார்த்து இரக்கம் ஈகை என்றோ ஏங்கினால் அவர்களின் வேதனை உணர்வு நமக்குள் வளர்ந்து எமலோகமாக மாறுகின்றது.
1.நம் உடலில் உள்ள இந்திரலோகம் (இரத்தநாளங்கள் – இந்திரீகம்) எமலோகமாக மாறி
2.சொர்க்கலோகம் செல்லும் உணர்வைத் தடைப்படுத்திவிடுகிறது.

வேதனையினால் உடல் குறுகி உயிரான்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் எந்த வேதனையை அதிகமாக எண்ணினோமோ அத்தகைய வேதனைப்படும் உடலுக்குள் சென்று விடுகின்றது

அதாவது…
1.விஷத்தை உணவாகப் பாய்ச்சும் அதை உணவாக எடுத்துக் கொள்ளும்
2.அந்த விஷத்தன்மை நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் பட்டபின் இது வெளிவந்த பின்
3.பாம்பினங்களுக்கோ தேளினங்களுக்கோ… வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் இந்த உடல்களுக்குள் உணர்வுக்கொப்ப அழைத்துச் சென்று
4.அந்தப் பாசக்கயிறு…! – தொடர்ந்து எந்த வேதனையை எடுத்தோமோ அதன் தொடர் வரிசையில் நாம் சென்று
5.அந்த உடலுக்குள் இந்த உயிர் அழைத்துச் சென்று நீ எதை எண்ணினாயோ அதுவாகின்றாய் என்ற தீர்ப்பைக் கொடுத்து
6.கண்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும் – பயத்தின் உணர்வு கொண்டு
7.இப்படிச் செய்தான்… செய்தான்.. செய்தான்… என்ற எண்ணத்திலே எண்ணும் பொழுது
8.தனக்குள் எமலோகமாக மாற்றி நரக லோகத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது.

ஆக மொத்தம் வேதனையை வளர்த்துக் கொள்ளப்படும் பொழுது கண்ணன் சாரதியாகச் செல்கின்றான். எப்படி…?

1.எதனை எண்ணி ஏக்கத்தின் நிலைகள் கொண்டோமோ…
2.எந்த விஷத்தின் தன்மை தனக்குள் வலுக்கொண்டதோ….
3.எந்தக் கண் காட்டி நம்மை காத்துக் கொள்ளும் உணர்வை கொடுத்ததோ
4.அதை மறந்து… காத்திடும் நிலைகளை மாற்றி… ஆறாவது அறிவின் தன்மையை இழக்கப்படும் பொழுது
5.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று வேதனைப்படச் செய்யும் உடலுக்குள் சென்று விடுகிறோம்.

பயந்து நாம் ஒடுங்கினாலும்… பின் நாம் எதை எண்ண வேண்டும்…? இதை மாற்றி அமைத்தல் வேண்டும். அச்சுறுத்தும் உணர்வில் இருந்து நாம் மீள வேண்டும். காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்விலிருந்து மீளுகின்றோம்.

எதை வைத்து…?

1.மகரிஷிகளின் அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் கண்டுணர்ந்த அருள் ஞானியின் உணர்வுகள் நான் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பரலோகத்தில் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் பதிவாகியுள்ளது. அதைக் கவர்ந்து நம் உயிர் வழி சொர்க்கவாசலாக அமைத்துச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.