சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்…!

சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்…!

 

நாம் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம்…! எத்தனையோ வேதனைகள்; எத்தனையோ வெறுப்புகள்; எத்தனையோ சங்கடங்கள்; இதைப் போன்ற உணர்வுகளை அறியாமலே நமக்குள் நாம் பதியச் செய்து விடுகின்றோம்.

இது இரத்தத்தில் கலந்து அணுக்களாக விளைகிறது. விளைந்த அணுக்கள் அதனதன் உணர்வுகளைக் காற்றிலிருந்து பிரித்து உணவாக எடுத்து உடலிலே வளரத் தொடங்குகின்றது.

சூரியன் கவர்ந்து வைத்திருக்கக்கூடிய செடி கொடிகளின் சத்துக்கள் பூமியின் காற்று மண்டலத்தில் படரப்படும் போது அதே இனமான அந்த உணர்வைக் கவரக்கூடிய செடி கொடிகளின் வித்துகள் அதனதன் சத்தைக் கவர்ந்து கொள்வது போன்று
1.எந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுத்து வினையாக (அணுக்களாக) உருவானதோ
2.அதனதன் உணர்வை எடுத்து நம்மை அதன் வழிக்கு இயக்கி விடுகின்றது.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்பாகும் உணர்வலைகளை நாம் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதே அலைவரிசையில் டிவியை இயக்கினால் அதைக் கவர்ந்து காட்சியாகவும் இசையாகவும் காட்டுகின்றது.

அதைப் போன்று தான்
1.திட்டியவனை எண்ணிய உடனே நமக்குள் அந்த வேகமும் துடிப்பும் கொண்டு கோபம் வருகின்றது
2.வீட்டிலே குழந்தைகளாக இருந்தாலும் கோபமாகப் பேசி விடுகின்றோம்.
3.அந்தக் கோபத்தினால் நம் வியாபாரத்தையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.

ஆக… பதிவான உணர்வுகள் நம்மை மீண்டும் இவ்வாறு இயக்குகின்றது… நம்மை அறியாமலே பல தீங்குகளைச் செய்யச் செய்கின்றது.

“சந்தர்ப்பம் தான் இது எல்லாம்…!”

எதன் வலு அதிகமாகின்றதோ நாம் சோர்வடையப்படும் பொழுது நம் சிந்தனைகள் மாறுகின்றது. விஷம் என்ற நிலை வரும் போது நல்லதுக்காக ஏங்கும் பொழுது நமக்கு இன்னும் கோபம் வருகிறது.

அந்தக் கோபத்தால் சிந்தனை இழந்து… தன்னையோ அல்லது மற்றதையோ அழித்திடும் உணர்வே வருகின்றது. ஏனென்றால் அதிக வேதனையாகும் பொழுது முழுமையாக நினைவிழந்து விடுகின்றோம்

நாம் தவறு செய்தோமா…? எல்லாமே சந்தர்ப்பம் தான்… சந்தர்ப்பத்தால் தான் இன்று இயக்கப்பட்டு வருகின்றோம்…!.

ஆனால் நல்ல சந்தர்ப்பத்தை மனிதனால் (நம்மால்) ஏற்படுத்த முடியும்… எப்படி…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக இருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நமக்குள் நாம் உருவாக்க முடியும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க முடியும்

சூரியனின் இயக்கங்கள் அது எதை எதைக் கவர்கின்றதோ சந்தர்ப்பத்தால் மோதும் பொழுது மரம் செடி கொடிகள் (இனங்கள்) மாறுகின்றது.

காட்டிலே ஒரு முயல் நரியைச் சந்திக்க நேர்ந்தால் அதனின் சந்தர்ப்பம் அது அதற்கு இரையாகிறது. ஆனாலும் முயல் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நரியின் வலுவான உணர்வை எடுக்கின்றது.

இருந்தாலும் நரி முயலை அடித்துக் கொல்கிறது உடலை விட்டுப் பிரிந்த பின் முயலின் ஆன்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியின் உருவமாக மாறுகின்றது.

முயலாக இருப்பது அடுத்து நரியாக மாறுவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…!”

இன்று நாம் ஒரு தீமையைச் சந்திக்க நேரும்போது அதை நுகர்ந்துவிடுகிறோம். நமக்குள் தீய வினையாக அது உருவாகிவிடுகின்றது… ஆக தீய வினைகளாக உருவாவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…”

சந்தர்ப்பத்தால் நாம் பல நல்லதுகளைச் செய்தாலும் தீமையின் வலுவைச் சுவாசிக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்லவைகள் மறைகின்றது… உடலில் நோய்கள் வருகின்றது.
1.இப்படி மாறக்கூடிய “இந்தச் சந்தர்ப்பத்தை” நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…?
2.நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

காலையில் நம் உடல் அழுக்கைப் போக்கித் துணியில் உள்ள அழுக்கைப் போக்கினாலும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வுகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி… நம் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க வேண்டும்..

பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து மனிதனாக உருவாக்கியது ஆதிமூலம் என்ற நம் உயிர்தான்…! இந்தப் பிள்ளை யார் நீ சிந்தித்துப் பார் என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்வதற்குத் தான் ஆற்றங்கரையோரம் எல்லாம் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

காரணம்… இயற்கையின் பேருண்மைகளை அறிந்தவன் அன்றைய அகஸ்தியன். அகண்ட அண்டத்தையும் அவன் அறிந்தான்… நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்.. நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டான்…
1.தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுத்தான்.
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தான்
3.இரு உயிரும் ஒன்றாக ஆனது… இரு உணர்வும் ஒன்றாக ஆனது
4.துருவத்தை எல்லையாக வைத்து அதில் வரக்கூடிய நஞ்சினைக் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

இப்படி ஆதியிலே தோன்றிய (நம்மைப் போன்ற மனிதனான) அந்த அகஸ்தியன் விண் சென்றபின் அதே (தன்) மனித இனத்திற்கு அவன் பெற்ற வழியைப் பெறுவதற்காக… விநாயகர் தத்துவம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டி
1.இந்த வாழ்க்கையில் நாம் எதைப் பெற வேண்டும்… எந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்…? என்று
2.விநாயகரைப் பார்க்கும் போதெல்லாம் அதை எண்ணி எடுக்கும்படி செய்தான்.

சந்தர்ப்பத்தால் தான் அகஸ்தியன் உயர்ந்த சக்திகளை எடுத்தான்.. ஒளி உடலைப் பெற்றான். அதைப் போன்று தான்
1.இப்பொழுது உங்களுடைய சந்தர்ப்பம் உயர்ந்த கருத்துக்களைக் கேட்கின்றீர்கள்.
2.இந்த உபதேசத்தைப் படிப்பது “இதுவும் சந்தர்ப்பம்தான்…!”

இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திப்பது… குடும்பமாக இருந்தாலும் சரி வியாபாரமாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி மத இனங்களாக இருந்தாலும் சரி அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் சரி… அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நம்மை அறியாமலே எத்தனையோ வழிகளில் பகைமை வந்து சேர்கின்றது.

ஆனால் நம்முடைய இந்தச் சந்தர்ப்பம்…
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை நுகர்ந்து நம்மை அறியாமல் இயக்கக்கூடிய இருளை அகற்றுவது தான்
2.இது சிறுகச் சிறுக நமக்குள் முழுமையாகப்படும் பொழுது மகரிஷிகள் உணர்வினை நமக்குள் உருவாக்கும் சந்தர்ப்பமாக மாறுகிறது.
3.இப்படி உருவாக்கி விட்டால் தீமையை நீக்கும் சக்தியை நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் நாம் பெறப்படும் பொழுது… எந்த நேரத்தில் எத்தகைய தீமை வந்தாலும் வலிமை கொண்டு அதை மாற்றி பிறவி இல்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம்.

நாம் உருவாக்கும் நல்ல சந்தர்ப்பங்கள்… அகஸ்தியன் எங்கே சென்றானோ… நிச்சயம் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

ஆனால் எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லை கொடுத்தான்… அவன் உருப்படுவானா…! என்ற பகைமையான உணர்வை எடுத்தால் அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல வேண்டி வரும்.

எந்தப் பக்தியால் தெய்வத்தை வணங்கினோமோ உடலை விட்டுச் சென்ற பின் மந்திரங்களைச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு அடிமையாகி விடுகின்றோம்.

காலத்தால் ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இப்படித் தான் மாறிவிட்டது. ஆகையினால்
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வைப் பதிவாக்குவதும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிர் வழி சுவாசித்து… எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று… கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வந்து அதன் வழி ஈர்த்து உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதை கலக்கச் செய்யப்படும் பொழுது எல்லா அணுக்களிலும் இந்த வலுப்பெறுகின்றது.

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்த எத்தனையோ விதமான தீமையான உணர்வுகளை உடலுக்குள் விளையாதபடி தடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் நிலைநிறுத்தி
2.வரும் தீமைகளை அனாதையாக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் ஞானம் நாம் பெற வேண்டும்

மகரிஷிகளின் அருள் ஞானம் நாம் பெற வேண்டும்

 

தியானத்தில் சக்தி பெற்றாலும் அடிக்கடி மகரிஷிகளை நினைவுபடுத்தி அருள் ஞான சக்திகளை நாம் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஞானம் பெருகினால்
1.வாழ்க்கையில் ஓரளவுக்கு நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தீமையான உணர்வு நமக்குள் வளராதபடி தடுக்கவும்…
2.மீண்டும் இன்னொரு பிறவிக்கு வராதபடி தடைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்திற்கே நேரடியாக உயிர் நம்மை அழைத்துச் சென்றுவிடும்… இதை பார்க்கலாம்.

ஏன் இதைச் சொல்கிறோம் என்றால் இறந்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று எண்ணுவார்கள்…? ஆனால் வாழ்ந்த காலத்தில் யார் மீது அதிகப் பற்று கொண்டார்களோ இறந்த பின் அவர் உடலுக்குள் இந்த ஆன்மா சென்றுவிடும்.

அங்கே சென்று அவர்களை ஆட்டிப் படைத்து தன் உடலில் பெற்ற அவஸ்தைகளை எல்லாம் அங்கே புகுந்த உடலில் வளர்த்து அதைப் பெருக்கிக் கொண்டே வரும்.

வேதனை என்ற விஷத்தை அதிகமாகச் சேர்த்ததால் அந்த உடல் மடிந்து வெளியே வந்த பின் அடுத்து பாம்பாகத்தான் உயிர் உருவாக்கும்.

அதே போல் தொழிலிலோ குடும்பத்திலோ கோபமாகப் பேசி வெறித்தனமாகச் செயல்பட்டிருந்தால் உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இதே உணர்ச்சிகளைத் தூண்டி அதை அங்கே முழுமையாக்கி வெளி வந்த பின் புலி உடலுக்குள் சென்று புலியாகத் தான் அடுத்து பிறக்க நேரும்..

ஆகவே இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் கெட்டது என்று பார்த்தாலும்… அறிய நேர்ந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமது ஆறாவது அறிவுக்கு உண்டு.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஒவ்வொரு நொடிப்பொழுதும்
2.நல்லதாக மாற்றி அமைத்துக் கொண்டே வரவேண்டும்.

குடும்பங்களில் பார்த்தால் பெண் குழந்தைகளை வளர்த்திருப்பவர்கள் என் பிள்ளைக்குக் கல்யாணமாகவில்லை… கல்யாணமாகவில்லை… என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
1.“அந்த மாதிரி வார்த்தையே நமக்கு வரக்கூடாது…!”
2.பெண்ணைப் பார்க்க வந்தார்கள்… சென்று விட்டார்கள்… ஒன்றும் சொல்லவில்லை… அடுத்து என்ன ஆகுமோ…?
3.வந்து எல்லாம் பார்க்கிறார்கள்… ஆனால் போய் விடுகிறார்கள் என்ற இந்த எண்ணமே வரக்கூடாது.

என் பிள்ளைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… பிள்ளை உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். திருமணம் ஆகி எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.

அவர்களை நலம் பெறச் செய்யக்கூடிய சக்தி பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்படி எண்ணினாலே போதுமானது.
1.இந்த உணர்வுகள் பிள்ளையின் உடலிலே பதியும்.
2.குழந்தையை எண்ணி நாம் இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்.

மாறாக… பெண்ணைப் பார்க்க வருபவர்கள் வருகின்றார்கள் போகின்றார்கள்… ஒன்றும் முடியவில்லை…! என்று வேதனைப்பட்டு… அடிக்கடி குழந்தையை எண்ணி இதே வேதனையை அங்கே பாய்ச்சினால் என்ன ஆகும்…?

ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…! அதாவது “திருமணம் ஆகவில்லையே…” என்ற உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து… இதே உணர்வுகளைக் குழந்தைக்குப் பாய்ச்சும் பொழுது சலிப்படைந்த உணர்வுகள் தான் அங்கேயும் வளரத் தொடங்குகிறது.

1.அடுத்து நம் பெண்ணைப் பார்க்க யார் வந்தாலும்
2.இந்தச் சலிப்புக்குத் தக்கவாறு அவர்கள் குடும்பத்திலும் இதே உணர்வாக
3.பெண் கிடைக்கவில்லை… கல்யாணம் ஆகவில்லையே… என்ற சலித்த உணர்வுடன் வரக்கூடியவர்கள் இங்கே வந்து இணைந்து
4.இந்த இரு மனமும் ஒரு மனமாகித் திருமணம் ஆன பின் வருத்தமே மேலோங்கி
5.”கணவன் மனைவி குடும்பத்தில்” சந்தோஷத்தை இழக்கத்தான் நேரும்
6.இரண்டு பேரும் வெறுக்கும் உணர்வைத் தான் வளர்க்க முடியுமே தவிர ஒன்று சேர்ந்து வாழும் தன்மை இருக்காது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே எந்த நிலையாக இருந்தாலும் நம் பிள்ளைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; திருமணம் ஆகிச் செல்லும் பொழுது அங்கே மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்; செழித்த உணர்வுடன் வாழ வேண்டும்; வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்; அந்த சக்தி என் பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் இப்படி எண்ணித்தான் நாம் திருமணம் நடத்த வேண்டும்.

நாம் எண்ணி எடுக்கும் இந்த உணர்வு… மூச்சலைகளாக வெளிப்படுத்துவது… சொல்லக்கூடிய வாக்குகள்… இவை அனைத்து நம் பிள்ளை உடலில் பதிந்து வளர்ந்து… திருமணமாகிச் செல்லும் போது “அங்கே ஒன்று சேர்ந்து வாழும் உணர்வாக… மகிழ்ந்து வாழும் சக்தியாக அமையும்…”

இதே போன்று… திருமணமாகக் கூடிய தம்பதிகளும் தங்கள் தாய் தந்தையரை எண்ணி
1.எங்களுடைய தாய் தந்தையின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.திருமணம் ஆகிச் செல்லும் இந்தக் குடும்பம் மகிழ்ந்து வாழ வேண்டும் நலமாக இருக்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்
4.என் பார்வை அந்தக் குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
5.அந்த சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் சஞ்சலமோ சலிப்போ சோர்வோ உடலிலே விளையாது…!

இதே மாதிரி… குழந்தைகள் பிறந்த பின் கல்வியிலே சிறிது குறைபாடுகள் இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்து அந்த உணர்வைக் குழந்தைக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

குழந்தை கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும்; அவனுக்கு நல்ல ஞாபக சக்தி கிடைக்க வேண்டும்… நன்றாகப் படிக்க வேண்டும்… என்று இதைத் திரும்பத் திரும்ப எண்ணிச் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை சரியாகப் படிக்கவில்லையே என்று
1.அவனுடைய சிந்தனையற்ற உணர்வை நாம் எண்ணாதபடி குழந்தை சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.அவனிடம் – நீ நன்றாகப் படிப்பாய்… நீ சிந்தித்துச் செயல்படுவாய்… ஞாபக சக்தி உனக்குக் கிடைக்கும் என்று
3.இப்படித் தான் குழந்தையிடம் சொல்லிப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் கல்வியில் தேர்ச்சி இல்லை என்கிற போது “எப்போது பார்த்தாலும் நீ தோற்றுக் கொண்டே போகின்றாய்… இப்படியே சென்றால் எல்லாவற்றிலும் நீ தோற்றுத்தான் போவாய்…!” என்று இதைச் சொல்லிச் சொல்லி நாம் பேசிக் கொண்டிருந்தால்
1.இந்த உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்து நம்முடைய எண்ணங்களைப் பலவீனப்படுத்தி
2.நாம் எண்ணியபடி குழந்தையையும் செயலற்றதாகத் தான் அது மாற்றும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம் குடும்பமே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்யும் அந்தப் பக்குவ நிலைக்கு வளர வேண்டும்.

நம்மால் அது முடியும்

பக்கத்தில் இருந்து புத்தி சொன்னால் அது ஏறாது… ஆத்மார்த்தமாக அருள் உணர்வைப் பாய்ச்சினால் தான் அது ஏறும்

பக்கத்தில் இருந்து புத்தி சொன்னால் அது ஏறாது… ஆத்மார்த்தமாக அருள் உணர்வைப் பாய்ச்சினால் தான் அது ஏறும்

 

குடும்பங்களில் சிக்கல் வரும்…? எப்படி…? சில நேரங்களில் சிலர் பிடிவாதமாக இருப்பார்கள். அது அதிகமானால் நாம் அதை நுகர்ந்தால் நமக்குள்ளும் வந்துவிடும்
1.அதனால் பகைமை தான் வரும்
2.வெறுப்பு தான் வளரும்…!

அதை மாற்றுவதற்கு என்ன வழி…?

வெறுப்பு உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும்.

பிடிவாதமாக இருப்பவருக்கெல்லாம் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஆற்றல்கள் பெற வேண்டும் என்று
1.நம் மனதில் வலிமை பெற வேண்டும்
2.இப்படி வலிமை பெற்றால் “அவர்கள் உணர்வு நம்மை இயக்காது..” (இது முக்கியமானது)

அதாவது நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை…! அவர்கள் உணர்வு அதைக் கேட்க விடாது தடுக்கின்றது என்றால் “அந்த உணர்வு” நமக்குள் வந்து நம்மை இயக்காது தடைப்படுத்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால்… அவருடைய உணர்வுகள் “எல்லை கடந்து செல்லப்படும் பொழுது…” சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்.

அவர்கள் திருந்த வேண்டும்… அவர்கள் தெளிந்து வாழ வேண்டும்…! என்ற உணர்வை நாம் வளர்த்துக் கொண்டு அந்த உணர்வின் வலுவை நாம் ஏற்றுக் கொண்டால்
1.நாம் சொன்னதை அவர் கேட்காத நிலை சென்றாலும் கூட அங்கே அவர்களை சிந்திக்கும்படி செய்யும்
2.அப்பொழுது நாம் எடுத்த உணர்வு அவரை திருத்தி வாழ வழி வகுக்கும்.

இல்லை என்றால் பெரிய நியாயஸ்தர் மாதிரி அவர்களுக்கு அடிக்கடி நாம் புத்திமதி சொன்னால் விஷத்திலே பாலைப் போட்டது போன்று தான் ஆகும். அந்த விஷம் என்ற நிலையில் என்னதான் நாம் சொன்னாலும். நல்ல உணர்வுகளை எடுக்காது
1.எதிர் உணர்வு…
2.அவர் உடலுக்குள்ளும் “எதிர் நிலை” வரப்படும் பொழுது அதை உணர்வார்கள்.

இல்லையென்றால் அந்த விஷத்தின் தன்மை குடும்பமே பரவும் எல்லோருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் இதைப் பேசப் பேச விஷத்தன்மைகள் எல்லோருக்குள்ளும் பரவி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையும் அந்த விஷம் மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலைகள் வரும் போதெல்லாம் நாம் ஆத்ம சுத்தி செய்து அவர்கள் வெறுப்பான செயல்களைச் செய்தாலும் கூட அவர்கள் திருந்தி வாழ வேண்டும் தெரிந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

இப்படி…
1.தூரத்தில் இருந்து செலுத்தப்படும் பொழுது தான் அது வரும்
2.சமாதானப்படுத்திப் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டு சொன்னால் அந்த விஷம் தான் வேலை செய்யும்
3.நாம் சொல்லும் இந்த சமாதானம் அவர்களுக்குள் ஏறாது.

அந்த உணர்வுகள் தன்னாலே அந்த உணர்வின் இயக்கத்தை மாற்றவில்லை என்றால் கோடி பேர் வந்தாலும் திருத்த முடியாது.
1.அவர்கள் தெரிந்திட வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
2.ஆனால் பகைமையாக மாற்ற கூடாது.

ஒவ்வொரு குடும்பத்திலும் இது நடந்து கொண்டேதான் இருக்கின்றது..!

தியானம் செய்ய வேண்டும் என்று பெண்கள் வெளியில் சென்றால் ஆண்கள் நீங்கள் ஏன் தியானம் செய்கிறீர்கள் என்பார்கள். அதே சமயத்தில் ஆண்கள் தியானத்திற்குச் சென்றால் பெண்கள் அதைச் செய்யக்கூடாது என்பார்கள்.

இதைப் போன்று அவரவர்கள் உணர்வுக்கொப்ப மனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் நல்ல நிலைகள் செல்லாது தடை வந்து கொண்டே தான் இருக்கும்.

இது போன்ற காலங்களில் எல்லாம் “மன உறுதி கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று
1.எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுப்பி தீமைகள் புகாது தடுத்து
2.எந்தத் தீமையையும் ஈர்க்காதபடி நாம் தடைப்படுத்த வேண்டும்

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்…!

“நாம் நினைத்தது நடக்க வேண்டும்…” என்ற ஆசையில் தான் விரதம் இருக்கின்றோம்…!

“நாம் நினைத்தது நடக்க வேண்டும்…” என்ற ஆசையில் தான் விரதம் இருக்கின்றோம்…!

 

48 நாள் விரதம் இருக்கின்றேன்… என்று வைத்துக் கொள்வோம். வயிறு சுண்டச் சுண்டப் பசியோடு இருக்கும் நேரத்தில் யாராவது கூடக் கொஞ்சம் பேசினால் “இந்த நேரத்தில் வந்து கழுத்தறுக்கின்றான் பார்…” என்று சங்கடம் வரும்.

வீட்டு வேலைக்கு என்று வந்தவர்கள் யாராவது… சிறிது பேசினாலும் அவர்கள் பேசப் பேச எரிச்சல் கூடிக் கொண்டே வரும். அப்போது எதை விரதம் இருக்கின்றோம்…?
1.கெட்டதை நினைக்கக் கூடாது என்பதற்குத் தான் ஞானிகள் விரதத்தைக் காட்டினார்கள்,
2.ஆனால் அப்படிச் செய்கின்றோமா…? இல்லை…!

என் சொல் சுவை மிக்கதாக இருக்க வேண்டும். என் பேச்செல்லாம் இனிமையாக வர வேண்டும்… எல்லோருக்கும் உதவி செய்யும் பண்புகளாக வர வேண்டும் இன்றைய தினம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

பிள்ளைகளோ மற்றவர்கள் கோபித்தாலும் எனக்குள் நல்ல பண்புகள் வர வேண்டும்… தெளிவான சொல்களை நான் சொல்ல வேண்டும்… என்று கேட்டதை நீக்கிவிட்டு நல்லது வரவேண்டும் என்று இப்படித்தான் விரதம் இருக்கச் சொன்னார்கள்.

அறுசுவையாகப் படைத்துவிட்டு இங்கே உணவை உட்கொள்ளாதபடி பட்டினியாக இருந்து நாம் என்ன செய்கின்றோம்…?

செய்து வைத்த பதார்த்தத்தைப் பையன் தொட்டு விட்டால் “நாசமாகப் போகிறவனே… சாமிக்கு வைத்த்தை ஏண்டா தொட்டாய்…?” என்று நாசமாகப் போகும் உணர்வு தான் அந்த நேரத்தில் வருகின்றது.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க நடக்க அன்று பூராமே ஒரே சோர்வாகத் தான் இருக்கும். விரதம் முடிந்ததும் சாப்பிடவும் முடியாது… நெஞ்சைக் கரிக்கும்.

உடல் சோர்வடையும் பொழுது நினைவுகள் எல்லாம் எப்படி வரும்…? சமைத்து முடித்து விட்டுச் சும்மா உட்காரலாம் என்று உட்கார்ந்தால் போதும்…!
1.அந்தப் பாவிப் பயல் அப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்கின்றான்
2.நாளை என்ன செய்வானோ…? என்ன ஆகின்றானோ…? என்று இது எல்லாவற்றையும் கவர்ந்து இழுத்துக் கொண்டு வரும்.

அப்பொழுது நம்முடைய விரதம் என்னாகின்றது…! எதை நாம் விரதமாக இருக்கின்றோம்…?
1.நல்லதைக் கெடுப்பதற்குத் தான் அன்று விரதம் இருக்கின்றோம்.
2.நல்லதை வளர்ப்பதற்கு நாம் விரதம் இருக்கின்றோமா…?

ஞானிகள் சொன்னதை நாம் தலைகீழாக மாற்றி வைத்திருக்கின்றோம். நல்லதை நாம் எண்ணி விரதம் இருக்கவில்லை…!

“சஷ்டி விரதம்” என்று சொல்கின்றார்கள். சஷ்டி என்றால் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா – ஏழாவது அறிவு…! நமது ஆறாவது அறிவு நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

அது போல் அந்த ஏழு நாட்களிலும் கெட்டதையே நினைக்காதபடி எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் ஒன்று பட்டு வாழ வேண்டும் நல்லது நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை நாம் சமைத்தோம் என்றால் இது சஷ்டி விரதம்.

வியாபாரத்தில் என்னிடம் பொருள் வாங்கிச் செல்பவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்… அவர்களும் தொழில் வளம் பெற வேண்டும்… என் குழந்தைகள் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும்… ஞானத்தில் வளர்ச்சி பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… என்று
1.எங்கே பேசினாலும்… யாரிடம் எதைச் சொன்னாலும் இந்த உயர்ந்த மூச்சை எடுத்து அங்கே பரப்பி.
2.அதை நாம் கவர்ந்தால் அது நமக்குச் சொந்தமாகின்றது.

ஆனால் விரதம் அன்று பச்சைத் தண்ணீர் கூட அருந்துவதில்லை என்று மிளகைப் போட்டுத் தண்ணீரைக் குடித்துச் சோர்வடைந்திருப்பார்கள். உடலுக்குள் எந்த ஆக்கிரமிப்பு கொண்டு அது வேதனை ஊட்டியதோ அந்த உணர்வு அறியாமலே “விசுக்…விசுக்…” என்று இழுக்கும்.

மாம்பழத்தை ருசியாகச் சாப்பிட்டுப் பழகியிருப்போம். சந்தர்ப்பம் நாம் ஒரு இடத்திற்குச் செல்கின்றோம். மாம்பழத்தைப் பார்க்கின்றோம்… வாங்க முடியவில்லை என்றாலும் அதை எண்ணினாலே உமிழ் நீர் ஊறுகின்றது. நினைத்த உடனேயே உமிழ் நீர் ஊறும்.

அதே சமயத்தில் நமக்கு வேண்டிய ஒரு பொருளைத் தேடி ரோட்டிலே நடந்து செல்கிறோம். எங்கும் கிடைக்கவில்லை என்றால் எரிச்சல் ஆகின்றது. அந்த நினைவுகள் நமக்குள் உமிழ் நீர் ஊறாதபடி வறட்சியாகும்… நாக்கிலே…!
1.இது எல்லாம் நாம் சுவாசிப்பதிலே இருக்கின்றது
2.நாம் எதை நினைக்கின்றோமோ உடனே அது இழுத்துச் சுவாசத்திற்கு வரும்
3.சுற்றிப் போட்டவுடன் ஆட்டோமேட்டிக்காக… கம்ப்யூட்டர் இயக்குவது போன்று வேலை செய்யும்.

இன்று சூப்பர் கம்ப்யூட்டர் என்று வைத்திருக்கின்றார்கள்… அதை வைத்து இயந்திரத்தை இயக்குகின்றனர். அதிலே சிறிதளவு குறை ஏற்பட்டால் அது உடனே சரி செய்கின்றது அல்லது நிறுத்தி விடுகின்றது. மிகப் பெரிய இயந்திரத்தையும் அதை வைத்து இயக்குகின்றார்கள்.

விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனைப் போன்று இயங்கக்கூடிய இயந்திர மனிதனையும் உருவாக்கி விட்டார்கள்.

சிலிகன் என்ற நிலைகளில் பேசக்கூடிய பேச்சை நாடாக்களில் பதிவு செய்து அங்கே இயக்கப்படும் பொழுது அந்த இயந்திர மனிதன் அதை சீராக செயல்படுத்துகின்றது.

1.இனென்ன வேலை செய்ய வேண்டும்
2.இதை இப்படி நிறுத்த வேண்டும்
3.இதை இப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்
4.இந்த வேலைகளை இப்படிச் செய் என்றால்
5.அந்தந்த ஒலிக்குத் தகுந்த மாதிரி அழுத்தமாகி ஒலி அதிர்வுகளைக் கொடுத்து இயக்குகின்றார்கள்
6.அந்த பொம்மை (ROBO) செய்து வருகிறது.
7.பதிவின் மூலம் இடப்படும் ஆணைகளுக்கொப்ப அந்த உணர்வலைகள் கொண்டு மெக்கானிக்கலாக இயங்குகிறது.

அது போன்றுதான் மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் இயங்குகிறோம் என்றால் இயற்கையில் விளைவித்த நிலைகள் காற்றிலே எத்தனையோ அலைகள் உண்டு. நினைத்தால் போதும்… இயக்குகிறது… இயங்குகிறது.

ஏனென்றால் கோடிக்கணக்கான குணங்களை இழுத்து ஒவ்வொரு சரீரத்திலும் உணவுடன் எடுத்து வளர்ந்து அது எல்லாம் உணர்வின் இயக்கச் சக்தியாக இருக்கின்றோம்…!

இருந்தாலும் கெட்டதையே திரும்பத் திரும்ப நினைத்தோம் என்றால் கெட்டதைத் தான் செய்து தீர்வோம். ஏனென்றால் நமக்குள் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

கம்ப்யூட்டரில் நாடாக்களில் பதிவு செய்தது இயக்குவது போன்று இயக்கி விடுகின்றது. அதாவது கம்ப்யூட்டர் ஆணையிட்டு இயக்குவது போன்று தான்
1.எதை நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோமோ அந்த வேலையைத்தான் செய்வோம்.
2.தவிர நாம் பார்த்து அதை எல்லாம் கட்டுப்படுத்தி விடுவேன்… நான் நிறுத்தி விடுவேன் என்று செயல்பட்டால் அது நடக்காது.

இயந்திர மனிதனைக் கண்டுபிடித்தவன் ஆணையிடும் உணர்வுகளில் சிறிது மாற்றமானால் போதும். அது அவனையே அடித்துக் கொன்றுவிடும். விஞ்ஞானிக்கும் இது தெரியும். மூச்சலைகள் தவறினால் அது இயக்கமாகி அவனை அடித்துக் கொன்று விடுகின்றது.

அது போன்று தான்… நாமும் நல்ல மனதோடு இருக்கின்றோம் பிடிக்காத சம்பவமோ பிடிக்காதவர்கள் வந்தாலோ அல்லது எதிர்பார்க்காதபடி ஏதாவது நடந்தால் உடனே என்ன செய்கிறோம்…?

1.மனைவி நாம் சொன்னபடி கேட்டிருக்காது..
2.என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பாகி அந்தக் கோபத்திலே… செல்லமாக வளர்த்த பிள்ளையாக இருந்தாலும் அடித்து நொறுக்கி விடுவோம்
2.ஒரு நல்ல உயர்ந்த பொருளாக வாங்கி வைத்திருந்தாலும் கூட கோபத்திலே நொறுக்கி விடுகின்றோம்.

இயந்திர மனிதனின் (ROBO) ஆணைகள் சிறிது மாறி விட்டால் அது எப்படின் அடித்து நொறுக்குகிறதோ… அந்த இயந்திர மனிதன் இயங்குவது போன்று நாமும் இயந்திரமாகத்தான் இருக்கின்றோம். மனிதனுடைய நிலைகள் (நல்ல சிந்தனைகள்) இருப்பதில்லை.

விஞ்ஞானி இதையெல்லாம் இன்று காட்டுகின்றான்… நிரூபிக்கின்றான். ஆனால் அன்றைக்கு மெய் ஞானி இதைத் தெளிவாக உணர்த்திச் சென்றான்.

வாழ்க்கையில் இருளான நிலைகள் வந்தால் அதை மாற்றிக் கொள்வதற்கு கோயிலைக் கட்டி வைத்தான்…!
1.நீ எடுத்துக் கொண்ட குணம் உனக்குள் இந்த வேலையைச் செய்கிறது.
2.ஆகவே நீ உயர்ந்த குணங்களை எடுத்துக் கொள்… இந்தத் தெய்வ குணங்களை வளர்த்துக் கொள்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்
4.அது உன்னை நல்வழியில் நடத்தும்… தீமைகளை அகற்றும்…! என்று தெளிவாகக் காட்டினான்..

ஆனால் நாம் ஆலயத்திற்கு சென்று அவ்வாறு எண்ணுகின்றோமா…?

குறைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் தான் அங்கே சொல்லி வேதனைகளை மட்டும் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஞானிகள் உருவாக்கிய ஆலயங்கள் எல்லாமே நம்மைப் புனிதப்படுத்தக்கூடிய இடங்கள். அதை நாம் புரிந்து நடக்க வேண்டும்.

குருநாதர் எனக்கு எப்படி இந்த உண்மைகளை உணர்த்தி… என்னைத் தெளிவுபடுத்தி எனக்கு இந்த உயர்ந்த உணர்வுகளை ஊட்டினாரோ… அதே வழியில் தான் உங்களையும் தெளிவுபடுத்தி உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்கின்றோம் (ஞானகுரு).

“நம்முடைய எண்ணம்” எப்படி எல்லாம் அடுத்தவரை இயக்கும்…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

“நம்முடைய எண்ணம்” எப்படி எல்லாம் அடுத்தவரை இயக்கும்…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

 

அம்மா தன் பையனைக் கூப்பிட்டு கடைக்குச் சென்று எண்ணெய் சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா என்று சொல்லுகின்றது அம்மா சொன்னதை தட்டாதபடி குடு..குடு… என்று கடைக்கு ஓடி வருகின்றான்.

அடுப்பில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கின்றது… அது தீரப் போகிறது… அதனால் உடனடியாக எண்ணெய் வாங்கி வா…! என்று தன் பையனிடம் அந்த அம்மா சொல்கின்றது.

அதே வேக உணர்வுடன் இவன் கடைக்கு வந்த பின் புஷ்..புஷ் புஷ்…புஷ் என்று அம்மா சொன்ன வேகத்தில் வந்து “எண்ணெய் கொடுங்கள்… எண்ணெய் கொடுங்கள்…” என்று கடைக்காரரை அவசரப்படுத்துகின்றான்.

கடைக்காரர்… “ஏண்டா முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்படுகின்றாய் இருடா…!” என்று சொல்கின்றார். காரணம் இவன் வேக உணர்வு கொண்டு ஒலியை எழுப்பப்படும் பொழுது அவனுக்கு இவருடைய உணர்வைச் செவி சாய்க்க முடியவில்லை.

ஆனால் இவனும் அம்மா திட்டுமே… அம்மா திட்டுமே…! என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான்… சந்தர்ப்பம்…! ஆனால் பையன் தவறு செய்யவில்லை… தன் அம்மா சொன்ன வேலையைத்தான் அவன் செய்கின்றான்.

அம்மா திட்டுமே… அம்மா திட்டுமே…! என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படும் போது ஏண்டா அவசரப்படுகிறாய்…? என்று கடைக்காரன் இதையே சொல்கின்றான்… எண்ணெய் கொடுக்க மாட்டேன் என்கிறான்.

உங்கள் அனுபவத்தில் நீங்களும் கடைக்குச் சென்று இது போன்று அவசரமாகக் கேட்டு பாருங்கள். அவர்கள் இருங்க… கொஞ்சம் இருங்க…! என்று தான் சொல்வார்கள்.

நீங்கள் பஸ்ஸிலேயே அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஏறி “டிக்கெட் கொடுங்கள்… டிக்கெட் கொடுங்கள்…” என்று கேட்டால் அவன் உடனடியாகக் கொடுக்க மாட்டான்.

1.ஏனென்றால் நாம் அல்ல..
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் வேகங்கள் அதை அவர்கள் செவிகளில் கேட்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு அதைக் கொடுக்கக்கூடிய மனதை மாற்றி விடுகின்றது.
3.அவனிடம் குறை இல்லை… “நம்முடைய எண்ணம் தான்” அவனை அவ்வாறு செயல்படுத்தச் செய்கிறது…! என்பதை யாருமே நினைப்பதில்லை.

அது போல் தான் “எண்ணெய் கொடுங்கள் அவசரம்…” என்று பதட்டத்தில் கேட்கின்றான். கடையில் நிதானமாகச் செயல்படுத்துபவன் இவன் கேட்ட வேகத்தில் எண்ணெயை ஊற்றிக் கொடுக்க முடியுமா…? முடியாது…!

அம்மாவோ சீக்கிரம் வாடா…! என்று சொல்லி அனுப்பியது. கடைசியில் எப்படியோ வாங்கிக் கொண்டு இந்த இடத்தைக் கடந்த பின் “நேரம் ஆகிவிட்டதே… கடைக்காரன் தாமதப்படுத்தி விட்டானே…!” என்ற இந்த வெறுப்பிலேயே பையன் போகின்றான்.

கவனம் அங்கே இருப்பதால் நடக்கும் போது ரோட்டிலே கீழே தட்டி எண்ணெய் வாங்கிய பாட்டிலைக் கீழே போட்டு விடுகின்றான். ஐய்யய்யோ…! எண்ணெய் சிந்தி விட்டதே… எல்லாம் போய்விட்டதே…! என்று அந்த வருத்தத்தில் அப்படியே அவன் சென்று விடுகின்றான்.

உடைந்த பாட்டிலை அவனால் அப்புறப்படுத்த முடியவில்லை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடுகின்றான்.

வீட்டிற்குச் சென்றவுடன் தாய் என்ன சொல்கின்றது…? தொலைந்து போகின்றவனே…! எனக்கு அப்பொழுதே தெரியும்… தொலைந்து போகின்றவனே…! என்று இரண்டு திட்டு திட்டுகின்றது.

தாய் சொன்ன கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற அந்த அவசர எண்ணத்துடன் தான் செய்தான். ஆஅனால் அங்கே இரண்டு திட்டு கிடைக்கிறது.

1.பெரும் பகுதி தாய் எல்லாம் இப்படித்தான் பேசுகின்றது…!
2.முதலிலே பாசமாக என் கண்ணே… மணியே…! என்பார்கள்.
3.ஏதாவது தொலைந்து விட்டால் பொருள் வீணாகி விட்டால் அல்லது உடைந்து விட்டால் “தொலைந்து போடா…!” என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.

தன் பிள்ளைக்கு வாக்கை இப்படித்தான் கொடுக்கின்றோம்…!

சரி போனால் போகிறது… தன் பையன் அடுத்து நல்லது செய்ய வேண்டும்… நல்லது செய்வானா என்று பார்ப்போம்…! என்று எண்ணுவதில்லை.

ஏனென்றால் எண்ணெய் வாங்கி வர நேரம் ஆக ஆக என்ன செய்யும்…?

எப்பொழுது பார்த்தாலும் இவன் இப்படித்தான் செய்கின்றான்.. எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் செய்கின்றான்… என்று
1.பையன் மேல் உள்ள தாயின் இந்த எண்ணம் கிராஸ் ஆகி அவனை இயக்குகின்றது.
2.இங்கே பையனும் அவசரத்தில்… பதட்டம் பயத்துடன் எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் பையனை இயக்கத் தொடங்குகிறது.

விஞ்ஞான அறிவுப்படி 50 டன் 100 டன் எடை உள்ள ஒரு இராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புகின்றனர். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தொலை தூரத்திற்கு அனுப்புவதாக இருந்தாலும் இராக்கெட்டின் முகப்பிலே பதிவு செய்து அதை வைத்து இயக்குகின்றான்.

எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய கோள்களுக்கு அதை அனுப்புகின்றான்.
1.தொடர்பு கொள்வதற்கு ஏதும் கம்பியா (WIRE) வைத்திருக்கின்றான்…? இல்லை.
2.இவன் கம்ப்யூட்டர் மூலம் வெளிப்படுத்தக்கூடிய அந்த அலைகளைத் தான் அதற்குள் திணித்து இயக்கச் செய்கின்றான்.

அதே மாதிரித் தான் தாய் உடலில் வளர்ந்த உணர்வுகள்
1.எந்த வேட்கையின் உணர்வைப் பதிவு செய்ததோ
2.தன் பையனை எண்ணும் பொழுது அது எதைப் பதிவு செய்ததோ
3.அந்தப் பையன் பின்னாடி அது கவர் பண்ணிக் கொண்டே இருக்கும்.

லேட் ஆக ஆரம்பித்தபின் படபடா… படபடா…. என்று அடிக்கும்.
1.ஆக இந்த உணர்வு பாய்ந்துதான் அவனைத் தவறாகச் செய்யும்படி செய்கின்றது
2.தப்பு எப்படி உருவாகிறது…? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த உணர்வுகள் பாய்ந்தவுடன் எண்ணை வாங்கிய பாட்டிலை இடைவெளியில் ரோட்டிலே தவற விட்டு விடுகின்றான். காரணம் அந்த உணர்வுகள் அவனை இருளச் செய்து சிந்தனை இழக்கும்படி செய்கின்றது.

பாட்டில் உடைந்து விடுகின்றது எண்ணெயும் போய்விடுகிறது காசும் போய்விடுகின்றது வீட்டிற்கு வந்தாள் தாய் திட்டுகின்றது “தொலைந்து போகிறவன்,..” என்று…!

அவனைக் காப்பாற்றுவதற்குத் தான் இத்தனை வேலையும் தாய் செய்கின்றது. ஆனால் தொலைந்து போ…! என்று சொன்னால் காக்க முடியுமா…? இது தான் அங்கே பதிவாகின்றது.

அப்பொழுது தாயைப் பார்க்கும் பொழுதெல்லாம் பையனுக்குள் பயம் வரும். பயமும் அதற்குப்பின் வரக்கூடிய பதட்டமும் சேரும் பொழுது அவன் உடலில் நோய்.
1.படபடா…! என்று இயக்கி அது உற்பத்தியாகி அந்த உணர்வு இயக்கச் சக்கியாக மாறி
2.அவனுக்குள் அந்தச் சந்தர்ப்பம் தவறான செயல்களைச் செயல்படுத்தும்படி ஆக்கி விடுகிறது

காரணம்… இன்று நாம் உணவாக உட்கொள்ளக் கூடிய அனைத்திலும் விஞ்ஞான அறிவினால் பூச்சிக் கொல்லி மருந்துகளும் உரங்களும் கலந்துள்ளது. அந்த உணவைத்தான் உட்கொள்கிறோம்.

சாப்பிடும் சாப்பாட்டிற்குள் கெமிக்கல் கலந்த நிலை இருப்பதால் அந்த விஷத்தினுடைய துடிப்பு அதிகம். எந்த எண்ணத்தின் தன்மை எடுக்கின்றோமோ இந்த உணர்ச்சியைத் தூண்டி அதிலே தான் இயக்கம் இருக்கும்… மற்றதைச் சிந்திக்க விடாது…!

விஞ்ஞான அறிவிலே செயல்படுத்தப்பட்ட இத்தகைய நிலையால் நாம் அனைவரும் சீராகச் சிந்திக்க முடியாத நிலைகளில் தான் இன்று சென்று கொண்டிருக்கின்றோம்.
1.மனிதன் சிந்தனை இழக்கச் செய்யும்
2.அத்தகைய உணர்வின் பொறிகளே அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானக்கனி

ஞானக்கனி

 

நாரதர் சிவனிடம் வருகின்றார்… கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். உலகை யார் முதலில் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கனி.

முருகனின் வாகனம் மயில் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஏறி உட்கார்ந்தால் ஒரு நொடியில் உலகை சுற்றிச் வரலாம் என்று அவருடைய உணர்வு வேகம் செல்கின்றது.

ஆனால் விநாயகன் இருந்த இடத்திலிருந்தே… அதாவது
1.புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில்
2.பல உணர்வின் சத்துக்களை எடுத்துச் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக
3.மனித உடல் பெற்ற இந்த உடல் அது இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

இருந்தாலும்… இந்த உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள் அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது (முருகன்).

விநாயகன் இருந்த இடத்திலிருந்து உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து வினையின் ரூபமாகச் சேர்க்கப்பட்டது.

உடல் பெற்ற நிலையில் தாய் தந்தையருடைய நிலைகள் என்பது பேரண்டமும் பேருலகமும்… என்று (அதனின் சக்தியைத்) தனக்குள் எடுத்துக் கொண்டது. இருந்த இடத்திலிருந்து தன் உணர்வின் சக்தியை எடுத்துக் கருவாக எடுத்துச் சிசுவாக விளைய வைத்தது.

ஆகவே
1.ஒரு மரம்…! அது பல அலைகளின் தொடர் கொண்டு
2.தனக்குள் எடுத்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு இந்த சத்துக்குள் விளைந்தது கனி (மாங்கனி)
3.அது போல் அன்னை தந்தையருக்குள் விளைந்ததே இந்த உணர்வின் வித்து… (மனித உடல்)
4.இந்த வித்தின் தன்மையே “உயிரான அந்தச் சத்து…!”

இந்த உடலிள் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலையான நிலைகள் கொண்டு… இந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாக
1.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல உயிரின் (ஒளியின்) தன்மை தனக்குள் எடுப்பது.

மாங்கனி அது வித்தாகி மரமாகி மீண்டும் தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்ப்பது போன்று
1.தன் இனத்தின் சத்தின் தன்மையை
2.ஒளியின் சுடராக வளரும் பக்குவ நிலைகள் பெறுகின்றது.
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா)

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத் தான் (நாரதன் கொடுப்பதாக) கனியைக் காட்டி
1.தாய் தந்தையருடைய பாசத்தால் தான் நாம் வளர்கின்றோம்
2.பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது… அந்த ஞானி காட்டிய உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
3.அவன் வழியில் நீ செல்…!

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றான்…! துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அணு தான் நாரதன். ஆகவே அந்த உணர்வின் தன்மை தான் வான்மீகிக்குள் ஈர்க்கப்பட்டது என்பதை “நாரதன் வான்மீகிக்கு ஓதினான் என்றார்கள்…”

ஏனென்றால் அது “விளைந்து முதிர்ந்த கனி…!” கனியிலிருந்து வரும் மணம் சுவையானது… இனிமை கொண்டது. நாரதனிடம் இருப்பது சுருதி ஏழு… சரஸ்வதியிடம் இருப்பது சுருதி ஏழு..! என்று இவ்வளவையும் படத்தைப் போட்டுப் பல உணர்வின் தன்மை அறிவதற்குக் காட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

தாய் தந்தை இறந்த பின் பாசத்தினால் இங்கு (பிள்ளைகளின் ஈர்ப்புக்குள்) வந்தாலும்
1.மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து
2.எண்ணத்தாலே தாய் எப்படி நம்மைக் (தன் பிள்ளைகளை) கருவாகக் கூட்டியதோ
3.அதே போல பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான்… அதற்குள் இருந்து தான் நீ ஜெனித்தாய்…! என்ற
4.இந்தப் பேருண்மையைக் காட்டி அது தான் உன்னை முதல் தெய்வமாக உருவாக்கியது
5.அதனுடன் நேசித்து நீ வளர வேண்டும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் மரத்துடன் ஒன்றிய காய் “அது கனியாகும்…!”

காயாக (மரத்திலிருந்து) விழுந்து விட்டால் சுவை இருக்காது… இயக்கம் புளிப்பாகும். அதை எல்லாம் அன்று அந்த அகத்தின் இயக்கத்தின் தன்மையைத் தெளிவுற உணர்த்தப்பட்டது.

தாய் எப்பொழுதுமே தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாழ்கிறது. அதே வழியில் நாமும் நம் தாய் தந்தை உயர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி… அந்தப் பாசத்துடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் செயல்படுத்தி… அந்தச் சக்தியை வளர்த்திட வேண்டும்.

1.இப்படி இதன் வழியிலே வளர்ந்தவர்கள் தான் விண் சென்றார்கள்… கனியாக ஆனார்கள்…! என்று கனியைக் கொடுத்து (நாரதன் கொடுக்கும் கனி)
2.மக்களுக்கு விளக்கம் சொல்வதற்கு இப்படிக் கதையாகக் காட்டிப் பேருண்மையை உணர்த்திச் சென்றார்கள்.

1008 உணர்வுகள் கொண்ட மூன்று இலட்சம் பேரைச் (மனிதர்களை) சந்திக்கும்படி செய்தார் குருநாதர்

1008 உணர்வுகள் கொண்ட மூன்று இலட்சம் பேரைச் (மனிதர்களை) சந்திக்கும்படி செய்தார் குருநாதர்

 

இது எல்லாம் இமயமலையில் வைத்து குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மை நிலைகள்.

ஒருவர் பெரும் செல்வந்தராக இருக்கின்றார். ஆனால் கடைசியிலே வாத நோய் வந்து துடித்துக் கொண்டிருக்கிறார்… பேச முடியவில்லை. அவர் உடலில் இயற்கைக் கழிவு வெளியே வருகின்றது. அதை அவரால் சொல்ல முடியவில்லை. ஓ… என்று சத்தம் போடுகின்றார்.

ஆனால் கிரகம்…! இப்படிச் செய்கின்றாரே…! என்று அவரை கவனிப்பவர்கள் ஏசிப் பேசுகின்றார்கள். இதை எல்லாம் அப்படியே கண்ணில் காண்பிக்கின்றார் குருநாதர்.

“பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!”

1.சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலும்… எல்லாம் மறைந்து போய் அவர் எந்த ஏக்கத்தில் இருக்கிறார்…?
2.ஆனால் இவர் விரும்பிய நிலைகளை அங்கே செயல்படுத்த முடியவில்லை…! என்று குருநாதர் காண்பிக்கின்றார்.

இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையிலும் நல்லதாக நடந்தால் “சாமி செய்து கொடுத்தார்…!” என்று சந்தோசப்படுவீர்கள். கஷ்டம் வந்து விட்டாலோ
1.கஷ்டத்தை எண்ணிய பின் “சாமி என்னத்தைச் செய்தார்…? என்று எண்ணம் வந்துவிடும்.
2.ஆக… பத்து தடவை உங்களுக்கு நல்லதாக நடந்து இருந்தாலும் கூட
3.மற்ற எண்ணங்கள் உங்களிடம் புகுந்து விட்டால் இது ஓங்கி வளர்ந்து அந்த நல்லதை மறந்து
4.“சாமி என்ன செய்தார்…?” என்று உணர்வுகளை மாற்றி உண்மையைப் பெற முடியாது தடைப்படுத்தி விடுகின்றது.

இதிலிருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் மனிதனுக்குள் விளைந்த 1008 உணர்வின் இயக்கங்களை உணர்த்தினார் குருநாதர். ஒரு மனிதப் பிறப்பில் இருக்கப்படும் பொழுது அவனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடக்கிறது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

குடும்பத்தில் சம்பாதித்த சொத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றது… கூட்டுக் குடும்பமாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பபேதத்தால் ஒருவருக்கொருவர் பகைமை ஆகின்றது… சாபமிடுகின்றார்கள்.

சாபமிட்ட உணர்வுகள் உடலுக்குள் விளையப்படும் பொழுது இறந்த பின் சாபமிட்ட ஆன்மா யார் மேல் சாபம் இட்டதோ அந்த உடலுக்குள் சென்று
1.தீய விளைவுகளை அந்தக் குடும்பத்தில் எவ்வாறு பரப்புகின்றது…?
2.அந்தக் குடும்பங்கள் எப்படி அல்லல்படுகின்றது…?
3.செல்வங்கள் இருந்தாலும் எல்லாமே எப்படிச் சிதறிப் போகின்றது…?
4.இப்படி 1008 விதமான (மனிதனுடைய) எண்ணங்கள் உருவாகும் நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்

இப்படித் தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார் குருநாதர் அதிலே 1008 குணங்களாக இருந்தாலும்
1.மனிதப் பிறப்பின் தன்மை ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பங்கள் எவ்வாறு உருவாகின்றது…?
2.செல்வங்கள் சம்பாதித்தாலும் அதில் என்ன பாடுபட்டார்கள்…?
3.சம்பாதிக்கும் போது அதில் எத்தனை வேதனைப்படுகின்றார்கள்…?
4.சம்பாதித்த பின் தான் எண்ணியபடி குடும்பத்தார் நடக்கவில்லை என்றால் வேதனைகள் எவ்வாறு உருவாகின்றது…?
5.வேதனை வளர்ந்து நோயாக ஆனபின் எப்படி மரணமடையும் நிலை வருகிறது…?
6.இவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கின்றோமே… இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்…? என்ற எண்ணத்திலே உயிர் பிரியும் போது
7.யார் மீது நினைவுகள் அதிகமாகின்றதோ இந்த உயிரான்மா அங்கே அவருக்குள் சென்றுவிடுகிறது.
8.ஆன்மா அந்த உடலுக்குள் சென்ற பின் சம்பாதித்து வைத்த காசையே அது நிலைத்து இருக்காதபடி அந்தக் குடும்பங்கள் எப்படி இன்னல் படுகின்றது…?
9.பணமோ சேர்த்து வைத்த சொத்துகளோ இவர்களுக்கு உதவி செய்கிறதா…?

இல்லை.

அதே சமயத்தில் எத்தனையோ வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டினாலும் அவருடைய சந்ததிகள் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவருடைய சாப அலைகள் பின் தொடர்ந்து அவர்களை எவ்வாறு மடியச் செய்கின்றது…? என்று இதை எல்லாம் குருநாதர் காணும்படி செய்கின்றார்.

அதே சமயத்தில் ஒரு சிலர் போக்கிரித்தனங்கள் செய்து அந்த வலுவைக் கொண்டு செல்வங்களைச் சம்பாதிக்கின்றனர். அப்படிச் சம்பாதித்தாலும் போக்கிரித்தனமாகச் சேமித்த சொத்தை எல்லாம் அவருடைய சந்ததிகள் அழித்து விடுகின்றார்கள்.

போக்கிரியாகச் செயல்பட்டுச் சமுதாயத்தில் பிறரை வேதனைப்படுத்திய உணர்வுகள் நோயாக விளைந்து அந்த உடலில் தன் எண்ணத்தால் கவர்ந்த அந்த உணர்வுகள் அவன் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

1.இவன் செய்த நிலையால் குடும்பத்தார் வேதனை அனுபவிப்பதும்
2.மற்றவரை ஏசிச் பேசி வேதனைப்படுத்திய உணர்வுகள் உடலில் விளைந்து
3.அவனுடைய மறு பிறவி எங்கே எப்படிச் செல்கின்றது…?
4.மீண்டும் வேதனைகளை அனுபவிக்கும் சரீரமாக அடுத்து அது எப்படி உருவாக்குகின்றது…?

உடனடியாக எந்த உடலுக்குள்ளும் செல்வதில்லை…! இருந்தாலும் பிறரை எப்படி எல்லாம் வேதனைப்படுத்தியதோ அதிலே விளைந்தது உயிருடன் ஒன்றி அது எவ்வாறு இயங்குகின்றது…? என்று காணும்படிச் செய்தார் குருநாதர்.

இதைத்தான்
1.அன்றைய பெரியவர்கள் உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…!
2.என்று தெளிவாக நமக்கு உணர்த்தி உள்ளார்கள்.

இன்று ஒருவரை நாம் வேதனைப்படச் செய்தாலும் அதை ரசித்துக் கொண்டிருந்தால் அதை உயிர் அணுக்களாக உருவாக்கி உடலில் விளைய வைத்த உணர்வுகள் உயிருடன் இணைந்து அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்கும்படிச் செய்யும்.

மறு உடல் பெறும் வரை அதை அனுபவித்துக் கொண்டிருப்பதும் வேதனைக்குண்டான சரீரம் கிடைத்தபின் நஞ்சு கொண்ட சரீரமாக உயிர் உருவாக்கி விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று “நீ சென்று பார்…!” குருநாதர் எனக்கு இட்ட ஆணைப்படி உலகம் முழுவதும் நகர் பகுதிகளிலும் சிறு ஊர்களிலும் மற்ற கிராமத்துப் பகுதிகளிலும் எல்லா இடங்களுக்கும் யாம் (ஞானகுரு) சென்று வந்தது தான்.

ஒரு இடத்தில் மூலையிலே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதனாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் என்னென்ன நடக்கின்றதோ அதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்… பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அந்தந்தக் குடும்பத்தில் இதற்கு முன்னாடி இறந்தவருடைய உணர்வுகள்
2.அந்த வீடுகளில் எப்படிப் படர்ந்திருக்கின்றது…? என்று குருநாதர் காட்டுவார்.

அதை எல்லாம் அறிந்து இப்படி 1008 பேரின் உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின் என்னை இமயமலைக்குச் செல்லும்படி சொன்னார். அங்கிருந்து கொண்டே உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் எந்த நிலை அடைகின்றது…? என்பதையும் அறியும்படி செய்தார்.

இமயமலையில் அமர்ந்து
1.விண்ணின் ஆற்றலை எவ்வளவு சுலப நிலையில் பெற வேண்டும்…?
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி தியானிக்கும் போது உயர்ந்த சக்திகளை அப்பொழுது நான் பெற முடிந்தது… நுகர முடிந்தது.

“சந்தேக உணர்வுடன் பதிவாக்கினால்…” மெய் ஞானிகள் கண்டதை அறிய முடியாது… உணரவும் முடியாது

“சந்தேக உணர்வுடன் பதிவாக்கினால்…” மெய் ஞானிகள் கண்டதை அறிய முடியாது… உணரவும் முடியாது

 

ஒரு மந்திரவாதி அவன் இறந்து விட்டால் அவனுடைய மந்திரத்தை இன்னொருவன் கேட்டுணர்ந்து அதன் துணை கொண்டு செயல்பட்டால்
1.அந்த மந்திரவாதி உடலில் விளைந்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்த பின்
2.அதே ஆவியின் தன்மை இங்கே வந்து பல பல நிலைகளைச் செயல்படுத்தும் “அவனை அறியாமலே…!”
(இது எல்லாம் படித்துத் தெரிந்து கற்று வருவதல்ல – மனிதனுக்குள் விளைந்தது)

மந்திரவாதி எந்தெந்தச் சக்திகளைச் செய்தானோ இந்த உணர்வின் தன்மை அவனுடன் பற்று கொண்டு அவன் செயலாக்கும் தன்மையை இங்கே உருவாக்கும்.

ஆனால் அதனால் விளைந்த உணர்வின் வினைகள் அங்கே விளையும் பின் இவனின் (உடலுடன் உள்ளவன்) காலத்தில் இவனின் இச்சைகள் கூடி நஞ்சின் தன்மை கொண்டு அது மறையும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்Rறைய மெய் ஞானியான அகஸ்தியனுக்கு எப்படிப் பேராற்றல் கிடைத்தது…? அவன் எவ்வாறு வளர்ச்சி பெற்றான்…? என்ற உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குத் தான்.

அன்று அவன் பெற்றாலும்
1.இன்றைய நிலைகளில் நடைமுறை சாத்தியத்திற்கு… நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
2.விண்ணுலக ஆற்றலை அன்று அகஸ்தியன் ஐந்து வயதில் அந்தப் பிஞ்சு உள்ளத்திலே எப்படிக் கற்றுணர்ந்தான்…? என்ற நிலைகளை
3.உங்களுக்குள் நினைவு கொள்ள இது உதவும்…!

குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகளை நீங்களும் தெளிந்திடும் உணர்வாகத் தெரிந்திட வேண்டும்.
1அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற உண்மையின் சக்தியை
2.இன்றைய நடைமுறைக்கு நீங்கள் உணர இது உதவும்… அது உணர்ந்தால் தான் வரும்.

ஏனென்றால்…
1.சாமி சொல்கிறார் நிஜமாக இருக்குமோ…! அல்லது பொய்யாக இருக்குமோ…? என்று எண்ணினால் அங்கே வீழ்ந்து விட்டது
2.சந்தேக உணர்வு கொண்டால் மெய் உணர்வின் தன்மை பெறும் தகுதியை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

ஒரு இயந்திரத்தைக் கட்டுப்படுத்த கம்ப்யூட்டரில் ஆணையிட்டு வைக்கின்றனர். வெப்பத்தின் நிலைகள் வரும் போது அந்த அலைகளைக் கொண்டு அளந்தறிந்து (SENSOR)
1.இத்தனை டிகிரியில் அது இயங்க வேண்டும் என்று வைத்து விட்டால்
2.அதே டிகிரி வெப்பம் வந்தபின் அந்தக் கம்ப்யூட்டர் சமநிலைப்படுத்தி இயந்திரத்தை இயக்கச் செய்கின்றது.

இதை போன்று தான் அருள் ஞானியின் உணர்வை நீங்கள் எண்ணி வரப்படும் பொழுது
1.உங்கள் டிகிரியை சந்தேக உணர்வு கொண்டு வந்து விட்டால் கீழே இழுத்து விடும்.
2.நான் கொடுக்கும் பதிவின் தன்மையை மாற்றிவிடும்.
3.மாறாது இருப்பதற்கே இடைமறித்து இடைமறித்து உங்களுக்குள் ஒவ்வொரு ஞானத்தின் நிலைகளையும் உபதேசிக்கின்றோம்.

ஒவ்வொரு உணர்வின் இயக்கங்களும் அது எவ்வாறு இயங்குகின்றது…? என்பதைத் தெளிந்து கொண்டால் இந்த மனித வாழ்க்கையில் விஞ்ஞான உலகில் உடலை விட்டு நாம் அகன்றாலும் மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளிச் சரீரத்தைப் பெற முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இப்பொழுது இழந்து விட்டால் மீண்டும் தேய்பிறையாக விஞ்ஞான அறிவினால் நஞ்சுக்குள் சிக்கப்பட்டு வேதனை கொண்ட சரீரங்களுக்கே நம்மை உயிர் கொண்டு சென்றுவிடும்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனுக்குள் விளைந்த சக்தி வாய்ந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் படர்ந்து கொண்டுள்ளது. அதை நாமும் பெற முடியும்.

ஆரம்பத்திலே குருநாதர் என்னைப் பழனியிலே மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறுவதற்கு விண்ணை நோக்கி ஏங்கும்படி செய்து இந்த உயர்ந்த உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

குருநாதர் அவர் கண்டறிந்த உணர்வுகளை எனக்குள் தூண்டச் செய்து அதை நான் நுகர்ந்தறியும் பொழுது அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை இன்று நாம் டிவிக்களில் பார்ப்பது போன்று உருவமாகக் காண முடிந்தது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு சேட்டிலைட்டை (செயற்கைக் கோள்) பூமிக்கு வெளியியே அனுப்பி ஒளி/ஒலியலைகளைப் பதிவு செய்து
1.பூமிக்குள் நடக்கும் பூகம்பமும்
2.பூமிக்கு அடியில் இருக்கும் நீர் நிலைகளையும்
3.பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணை வளங்களையும்
4.பூமிக்கு அடியில் இருக்கும் உலோகத் தன்மைகளையும் எப்படி அறிகின்றார்களோ
5.அதைப் போன்று தான் என்னுடைய எண்ணத்தை ஊடுருவச் செய்து
6.“நினைவை அண்டத்திலே பாய்ச்சிப்பார்…! என்ற குருவின் வாக்குப்படி அவரின் துணை கொண்டு
7.அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வுகளை நுகரும்படி செய்தார்.

அகஸ்தியன் கண்டதை நீயும் காண முடியும். அவனுடைய அறிவின் தன்மையை நீ உனக்குள் பெற்று அதை முழுமையாக அறிய முடியும் என்று எனக்குள் ஆழமாகப் பதிவாகும்படி உபதேசித்தார் குருநாதர்.

அதே வழியில் இப்பொழுது உங்களுக்கும் அகஸ்தியனின் ஆற்றல்களைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

“ஒன்று இரண்டு பேர் தான்…!” பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தொக்கி வருகின்றார்கள்

“ஒன்று இரண்டு பேர் தான்…!” பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தொக்கி வருகின்றார்கள்

 

இன்றைய சூழ்நிலையில்…
1.எந்தச் சாமியாரும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…
2.எந்தச் சாமியும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…!

நான் தான் கடவுள்…! என்று ஒருவன் பறைசாற்றுகின்றான் என்றால் அவன் ஆசை எதைத் தெரிந்து கொண்டானோ அந்த உணர்வின் ஆசை எல்லோருக்கும் வருகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று… செத்தைகளையும் குப்பைகளையும் எடுத்துக் கொண்டு வந்து போடச் சொன்னார். ஈயக் கட்டியை வாங்கி வரச் சொன்னார். எல்லாவற்றையும் வைத்து எரிக்கச் சொல்லி தங்கமாக உருவாக்கினார்.

இப்படி முதலில் அவர் செய்து காட்டினார்… பின் அவருக்குத் தெரியாமல் நானும் (ஞானகுரு) செய்து பார்த்தேன்… தங்கம் வந்துவிட்டது.

அதை எனக்குத் தெரிந்தவரிடம் கொடுத்து விற்கப்படும் பொழுது ஆஹா…! என்று சொல்லி
1.நீ எவ்வளவு வேண்டும் என்றாலும் செய்து கொண்டு வா… விற்றுத் தருகிறேன் என்கிறார்
2.இதிலே இன்னும் கொஞ்சம் செம்பைச் சேர்த்தால் “ஜம்…” என்று இருக்கும் என்கிறார்.
3.உங்களுக்கு எந்தக் கோவில் வேண்டும் என்றாலும் கட்டித் தருகின்றோம்
4.நீ தவறு செய்ய வேண்டாம்… நான் தவறு செய்து கொள்கின்றேன்
5.உனக்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்கிறோம்… தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள்…! என்றார்.

இப்படி நிறையப் பேர் என்னிடம் வந்தார்கள்.

ஒரு வாத்தியார் அவர் செய்யும் வேலையை விட்டுவிட்டு என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தார். ஒரு சிறு வேலை…! ஒரே நிமிடம் தான்…! தங்கம் எப்படிச் செய்வது…? என்று சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் வரும் தெரியுமா…!

அத்தனையும் உங்களுக்கு நான் செய்து தருகின்றேன். என்னை ஒரு வேலைக்காரனாக மட்டும் வைத்துக் கொண்டால் போதும். தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள் என்று என்னைத் துரத்திக் கொண்டே வந்தார்.

ஆனால் ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யாரும் வருவதில்லை.
1.நான் தங்கம் செய்து கொடுக்கின்றேன் என்று சொன்னால் எனக்குப் பின்னாடி கூட்டம் இங்கே நிறைய கூடிவிடும்
2.ஆனால் மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யார் வருகின்றார்கள்…?
3.ஒன்று இரண்டு பேர் தான்…! பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று வருபவர்கள் தான் தொக்கி வருகின்றார்கள்

இல்லையென்றால் அதுவும் வரமாட்டார்கள்…!

1.நாளைக்கு எதுவும் நடந்து விட்டுப் போகின்றது
2.இன்றைக்குச் சம்பாதித்தால் அது போதும்… சுகமாக இருக்கலாம்…! என்று தான் நினைக்கின்றார்கள்

ஆனால் கோடிக்கணக்கில் சம்பாரித்து எண்ணிலடங்காத சொத்து வைத்திருப்பவருடைய கதி எப்படி இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

என்னை இவன் மோசம் செய்தான் அவன் அப்படிச் செய்தான் என்று இவன் எண்ணினால் இறந்த பின் அந்த உடலுக்குள் பேயாகத்தான் போக முடியும்…!. “இன்று கோடீஸ்வரனாக இருந்தாலும்… அடுத்து பேயாகத் தான் ஆக முடியும்…!”

எத்தனையோ பேரை இன்று நாம் பார்க்கின்றோம் அல்லவா…!

ஏனென்றால் நமது ஞானிகள் காட்டியது உண்மையின் இயக்கம்
1.உயிரோடு ஒன்றி ஒளியாக மாறுதல் வேண்டும்
2.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ அந்த வேகா நிலையை நாம் அடைதல் வேண்டும்.

ஒரு மனிதன் தீயிலே குதித்து இறந்து விட்டால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் கருகுவதில்லை. எரிந்த உணர்வு கொண்டு உயிராத்மா வெளியிலே செல்கின்றது.

ஆனால் நண்பனாக இருப்பவன் இதைக் கேள்விப்பட்டு “அட… நேற்று வரை நன்றாக இருந்தானே… இப்பொழுது தீயை வைத்து இறந்து விட்டானே ஆ…!” என்று சொன்னால் போதும்.

1.இல்லைப்பா…! உனக்குள் நான் வந்து விட்டேன் என்று அந்த ஆன்மா இங்கே வந்து விடும்.
2.சிறிது நேரத்தில் பார்த்தால் ஐய்யய்யோ… எரிகின்றதே… எரிகின்றதே…! என்று சொல்ல ஆரம்பிப்பான்.

காரணம் என்ன…? என்று கேட்டால் ஒன்றுமே தெரியாது.

நான் சும்மாதான் இருந்தேன் திடீரென்று என் உடலில் எரிகின்றது எங்கேயோ தீயிலே குதிக்கின்ற மாதிரி இருக்கின்றது யாரோ என்னமோ செய்து விட்டார்கள் என்று ஜோசியக்காரிடம் செல்வான்.

அவன் இங்கே அங்கே என்று சுற்றச் சொல்லி அந்தச் சாமிக்கு இதைச் செய்ய வேண்டும்… இதற்கு இதைச் செய்ய வேண்டும் என்று காசுகளை அவன் வாங்கிக் கொண்டே இருப்பான் காசைச் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.கடைசியில் “என்னால் தாங்க முடியவில்லை…” என்று இவனும் தீயிலே குதித்துச் சாவான்
2.இறந்த பிற்பாடி எத்தனை நிலை ஆகிறது என்று பார்க்கலாம்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பிரபஞ்சம் இயங்குவது போல் தான் ஒரு உடலுக்குள்ளும் இயக்கங்களாகிறது

ஒரு பிரபஞ்சம் இயங்குவது போல் தான் ஒரு உடலுக்குள்ளும் இயக்கங்களாகிறது

 

நம் பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் அவை வெளிப்படுத்தும் உணர்வலைகள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னல்களாக ஆகின்றது.

உதாரணமாக கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம், பால்வெளி மண்டலங்களாக அது மாற்றி வரப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதினால் மின்னலாக மாறுகின்றது.

“வியாழன் கோள்” அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கவரும் திறன் பெற்றிருப்பதால் அது எல்லாவற்றையும் சமைத்து தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அந்த மின் கதிர்கள் வந்தால் அந்த இரண்டையும் இணைத்து ஒரு அணுவாக மாற்றி விடுகின்றது.

“வெள்ளிக் கோள்” அந்த மின்னலில் இருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகளை எடுத்துக் கொள்கின்றது

“செவ்வாய்க் கோள்” மோதலினால் ஏற்படும் நாதத்தின் அந்த ஒலியான உணர்வுகளைப் பிரித்து எடுத்துக் கொள்கின்றது.

“இராகு” மோதலிதனால் வெளி வரும் புகைகளை எடுத்துக் கொள்கின்றது.

“கேது” விஷமான உணர்வலைகளைக் கவர்ந்து கொள்கின்றது.

இதில் பிரிந்த வரும் ஆவித் தன்மைகளை “சனிக் கோள்” எடுத்து நீராக மாற்றிக் கொள்கிறது

“புதன் கோள்” அனைத்தையும் கவர்ந்து உலோகமாக மாற்றிக் கொள்கின்றது.

எல்லாவற்றையும் கலந்து “சூரியன்” ஏகமாக எடுக்கும் பொழுது அது பாதரசமாக மாற்றிக் கொள்கிறது.

இது தான் நம் பிரபஞ்சத்தின் இயக்கம்…!

இதே போன்றுதான் நமது உயிர் அது சூரியனாக இருக்கின்றது எதிர்நிலையான மனிதனுடைய உணர்வுகளை நுகரப்படும் போது அது நமக்குள் மோதலாகிறது (நட்சத்திரத்தின் சக்தி மோதி மின்னலாவது போல்)..

உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம்… வேதனையை நுகர்கின்றோம்.
1.நம் ஆன்மா இங்கே “நட்சத்திரமாக” இருக்கின்றது
2.ஏனென்றால் மற்றவருடைய உணர்வுகளை அங்கே சேமித்து வைத்திருக்கின்றது
3.பால் வெளி மண்டலமாக அது அமைக்கின்றது.

அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை ஆன்மாவிலிருந்து நாம் நுகர்ந்து உயிரிலே பட்ட பின் இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து இரத்தத்தின் வழி உடலுக்குள் சுழல்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள கேது விஷமான சத்தைக் கவர்வது போன்று
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.கல்லீரல் மண்ணீரல் இவையெல்லாம் இரத்தத்தில் இருந்து வருவதை அதன் உணர்வுகளுக்கொப்ப உணவு எடுத்து அந்த உறுப்புகள் உருவாகின்றது
3.நுரையீரலும் அதே மாதிரித் தான்.

சிறுநீரகங்கள் அந்த இரத்தத்தை வடிகட்டிய பின் அதிலிருந்து இதயத்திற்கு வருகிறது. இரத்தம் அதற்குள் சென்ற பின் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தத்தை அது பம்ப் செய்கிறது.

இரத்தங்களை நேரடியாக நம் சிறுமூளை பாகங்கள் வரைக்கும் அது கொண்டு செல்கின்றது
1.இந்த மூளையில் சந்திக்கும் இடங்களில் வாயுவாக மாறுகின்றது
2.வாயு நீராக மாறுகின்றது… அமிலமாக மாறுகின்றது…!

அதாவது நாம் எடுத்துக் (சுவாசிப்பது) கொண்ட உணர்வுகள் ஒரு வாயு என்ற நிலையில் இயக்கப்படுகின்றது எதன் உணர்வு இயக்கப்படுகின்றதோ அதிலிருந்து வரக்கூடிய ஆவியாக மாறுகின்றது. ஒரு பொருளை நாம் வேக வைத்த பின் எப்படி ஆவியாக மாறுகிறதோ அது போல்…!

ஆவியாக மாறியதை மேலே நீரை வைத்து குளிர்ச்சி அடையச் செய்தால் அது நீராக வடிகிறது. இதைப் போன்று தான்
1.சுவாசித்த உணர்வின் தன்மை தனக்குள் சேர்த்துக் கொண்ட பின் மேலே போட்டு அது அமிலமாக வடிகின்றது
2.நம் உடலுக்குள் இருக்கும் எல்லாவற்றுக்கும் இது இணையச் செய்கின்றது.

சுவாசித்தது உயிரிலே பட்ட பின் உடலுக்குள் செல்லும் நிலையில் இரத்தத்திலே கலந்து… இந்த இரத்தம் உடல் முழுவதும் சுழன்று வரப்படும் பொழுது எதெனதன் உணர்வோ அது அது எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது

பிரபஞ்சம் எப்படியோ அப்படித்தான் இந்த உடலான பிரபஞ்சமும்…!