திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 

பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.

எப்போது…?

ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.

மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

ஆக… திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் – நடராஜா…!

நடராஜா என்று திருமூலர் தான் பெயர் வைக்கின்றார். நடராஜா என்றால் எது…? நமக்குத் தெரியாது.
1.இங்கே உருவம் கிடையாது நடராஜாவை வைத்திருக்கின்றார்கள்.
2.நம் பூமி நிற்காமல் அது ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.
3.அதாவது அதற்குள் தோன்றிய நடனங்கள் பல.

பூமி நிற்காமல் ஓடுகின்றது அதற்குள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் தன்மையும்… அது மோதும் நிலைகள் கொண்டு ஒவ்வொரு அணுக்களின் செயல்கள் எப்படி இருக்கின்றது…?

ஒலி ஒளி…! என்ற நிலைக்கு இந்தப் பூமியின் தன்மை மாறிய பின் பல ஆயிரம் உடல்களாக எடுத்து ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்குகிறது.
1.புலிக்குக் கோபம்
2.மானுக்குச் சாந்தம்
3.எருமை மாட்டிற்கு அசுர குணங்கள் என்று
4.தனக்குள் வளர்த்துக் கொண்ட அது அனைத்தையும் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு
4.1008 நடனங்களைக் காட்டுகின்றார் – சிவ நடனம்.

நடராஜா இந்த பூமி ஓங்கார நர்த்தனம்…! அது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் ஓங்காரக் காளி… தீய சக்திகள் அனைத்தையும் அழிப்பதை… அசுரனைக் காலிலே போட்டு மிதிப்பதாகக் காட்டுகின்றார்கள்.

உருவத்தைக் காட்டும் போது… பூமி சுழலும் பொழுது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி தனக்குள் வருவதை அது நசுக்கி தீயதை மிதிகும் நிலைகளுக்குக் காட்டப்பட்டுள்ளது. அசுரனைக் காலிலே மிதிப்பதாகக் காட்டுகிறார்கள்.

அதைப் போல மனிதனுக்குக் கோபம் வரும் பொழுது சுவாசித்த உடனே உயிரிலே பட்டு எரிச்சலாகின்றது. அதே சமயம் அந்த உணர்வின் சக்தி நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்திலும் பட்டு எரிச்சலான உடனே
1.உடலான சிவம் ஓங்கார நடனமாகி…
2.இரு… நான் உன்னை அழித்து விடுகின்றேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.

சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் இந்த உணர்வின் சக்தியான நிலைகள் “ஒலி ஒளி…”

அதாவது… தாவர இனங்களுடைய மணம் – அதனுடைய குணம்…! அதனுடைய உணர்வு – இயக்கம்.

மிளகாயை வாயிலே போட்டால் காரமான அந்த உணர்ச்சி “ஆ…” என்று அலறச் செய்கின்றது. கசப்பை வாயிலே போட்டால் உமட்டலாகி… “ஓய்…” என்று சப்தம் வருகின்றது.

இதைப் போன்று தான் பூமி நடராஜா என்று நிற்காமல் சுழல்வதனால்
1.அதிலே ஜீவன் கொண்ட நாம் எப்படி இயங்குகிறோம் என்பதே இந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.
2.சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.

தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.

தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்

அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

1.நடராஜா என்கிற பொழுது நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை இங்கே இயக்குகின்றது.
2.விநாயகர் தத்துவத்தில் மூஷிகவாகனா… நீ எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றாயோ அது இந்த உடலை அந்த நிலைகளுக்கு ஆளாக்குகின்றது.
3.கீதையினுடைய தத்துவமோ நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!

உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று காட்டியது “சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்…”

உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று காட்டியது “சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்…”

 

“கண்ணன் கீதா உபதேசம் செய்தான்…” என்றால் நாம் ரோட்டில் செல்லும் பொழுது இங்கே பள்ளம்… இங்கே மேடு… இது தீமையானது… இது கெட்டது…! என்று கண்கள் தான் நமக்கு வழி காட்டுகின்றது.

இதனால் தான் கீதையிலே கண்ணன் அர்ஜுனனுக்கு வழி காட்டிச் செல்கின்றான் என்று சொன்னது. கண் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றான்…?

இங்கே மாடு வருகிறது… இங்கே மனிதன் வருகின்றான்… அவன் தகாத செயலைச் செய்கின்றான்.

நாம் காரை ஓட்டிச் செல்லும் பொழுது எத்தனையோ சந்தர்ப்பங்களைப் பார்க்கின்றோம். ஒருவன் குறுக்கே வருகின்றான்… அவன் மேல் மோதிவிடுவோம் என்று இந்தக் கண் தான் நமக்கு உபதேசிக்கின்றது. ஆகையினால் வண்டியை நீ இப்படி ஓட்டு…! அந்த உணர்வின் இயக்கமாக அங்கங்களை இயக்குகிறது.

நம்முடைய கண் பார்க்கின்றது அந்த உணர்வை இழுக்கின்றது சுவாசிக்கச் செய்கின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் இயங்குகிறது. நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது இயங்கினாலும் இந்த உணர்வுகள் இங்கே வடிகட்டப்படுகின்றது.

இதைப் போல அவன் கொடுக்கும் உபதேசத்தின் தன்மையை
1.தன்னைக் காக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.
2.ஆனால் ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கும்போது அவனைத் தாக்கும் நிலைகளுக்கே என்னை அழைத்துச் செல்கின்றது.
3.அந்த நேரத்தில் அழிக்கும் நிலையாக நல்லதைச் சிந்திக்க முடியாதபடி அந்த வேதனையால் என் நல்ல குணங்களையும் அது அழித்து விடுகின்றது.

ஆகையினால் கீதையில் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். விநாயகர் தத்துவத்தில் நீ அதைச் சுவாசிக்கின்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவாகின்றாய்.

இது தான் ருத்ரதாண்டவம்…!

தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இங்கே எப்படி அங்கங்கள் துடிக்கின்றதோ இதைப் போல
1.நீ எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அங்கங்கள் எப்படிப் பாசமாக அணைக்கின்றதோ…
2.நீ எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படி…? என்ற நிலையும்…
3.நடனத்தைப் பற்றி… அபிநயம் – தான் எடுத்துக் கொண்ட இனிமையின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
4.நரம்பியல்கள் – நாதத்தின் தன்மை கொண்டு எப்படி இயங்குகின்றது…? என்பது தான்.

அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலையும்… ஒரு தாவர இனத்திற்குள் தான் எடுத்துக் கொண்ட மணமும்… அந்த உணர்வின் தன்மை மோதும் பொழுது இலையின் ரூபங்களும்… நாதத்தைப் பற்றி… நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் காட்டி இருக்கின்றார் என்றால் “ஒலி ஒளி என்பதற்குள் உட்பொருள் எவ்வளவோ அடங்கியுள்ளது…”

ஒலியைப் பற்றிப் பல வியாக்கியானங்கள் செய்யலாம் இந்த உணர்வுகள் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்ற மெய் ஒளியைக் காட்டியது “சிதம்பரம் என்ற இந்த ஸ்தலத்தில் தான்…”

1.விண்ணிலே தோன்றிய உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது
2.அங்கே ஓங்காரமாகிப் பல நிலைகளாகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்கினாலும்
3.தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்டவுடன் இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்
4.அதைச் சுவாசிக்கும் உயிரணுக்களுடைய இயக்கமும் அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
5.இந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருவமும் உருமாற்றமும் அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்
6.அந்த உணர்வின் ஒலி கொண்டு ஒளியாக நீ எவ்வாறு ஆக வேண்டும்…? என்று
7.திருமூலர் பாடிய இந்த ஸ்தலத்தின் உண்மைப் பொருளை நாம் இன்றும் காண முடியாத நிலையில் இருக்கின்றோம்.

நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

மனிதனைப் போன்று உருவாக்கப்பட்ட சிலையின் மகத்துவம்

மனிதனைப் போன்று உருவாக்கப்பட்ட சிலையின் மகத்துவம்

 

போகன் எதைக் கருத்தில் கொண்டு முருகன் சிலையைச் செய்தானோ மக்கள் யாரும் அதை நினைவில் கூடக் கொண்டு வரவில்லை.

பிரபஞ்சம் எவ்வாறு சூரியனால் உருப்பெறுகின்றது…? அது ஒவ்வொன்றிலும் கருவாகி எப்படி உருவாகின்றது…? நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் தன் ஒளிக் கதிர்களை வீசி அது எவ்வாறு நட்சத்திரத்தின் தன்மை பெறுகின்றது…?

அது அது சுழலும் பாதையில் ஒவ்வொரு கோளும் அதற்குண்டான பாஷாணங்களை விஷத்தன்மைகளைத் தனக்குள் எப்படிச் சேமிக்கின்றது…? என்ற உண்மையை உணர்ந்தவன் போகன்.

அது உமிழ்த்தி வருவதைச் சூரியன் கவர்ந்து பிரிக்கின்றது… பாதரசமாக மாற்றுகின்றது. அதிலிருந்து தூவும் உணர்வுகள் தான் விந்து என்றும் அது எதைக் கவர்கின்றதோ அதன் வழி கொண்டு மற்றது உருவாகிறது என்று தெரிந்து… மற்ற எத்தனையோ நிலைகள் ஆகி மனிதனாக இது உருவாக்கி இருக்கிறது என்ற நிலையைக் காட்டித்தான் முருகன் சிலையை வடிக்கின்றான்.

1.பாதரசத்தையும் நவக் கோள்களில் விளைந்த பாஷாணத்தையும்
2.நட்சத்திரங்களின் வைரக் கல்களையும் அது விளையும் பருவம் கொண்டு வெடிக்காது பிஞ்சின் தன்மை அடைந்த வைரங்களை இதனுடன் இணைத்து
3.தாவர இனத்தின் தன்மையும் பாதரசத்தையும் அவன் இடும் புடத்தால் இரண்டறக் கலந்து முருகன் சிலையை உருவாக்கினான்.

மனிதன் எந்தெந்த உணர்வை உட்கொண்டானோ தீமைகளை அகற்றினானோ அதை… அந்தத் தாவர இனங்களைச் சாரணையாக சிலைக்குள் கொடுத்தான். மனிதனைப் போன்று தண்டாயுதபாணி என்று உருவாக்கி வைத்தான்.

அக்காலங்களில் அந்தச் சிலை மீது பாத்திரத்தை வைத்து நீரை ஊற்றி வைத்திருப்பார்கள்.
1.சிலை மீது அந்த நீர் பட்டவுடன் அதிலே ஒரு விதமான வெப்பங்கள் வரும்
2.வியர்வை வரும்… அதிலிருந்து ஆவிகள் வரும்…!

ஒரு மனிதன் கோபமாகப் பார்க்கும் பொழுது அவன் உடலில் இருந்து வெளிப்படும் மணங்களை நுகரும் போது நமக்கு நோயாக மாறுகின்றது.

அதே போன்று… மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளை எடுத்திருந்தாலும் “அதை அகற்றிடும் சக்தியைப் பெற…”
1.இங்கே முருகன் சிலையைப் பார்த்து “அதிலிருந்து வரும் மணங்களைச் சுவாசிக்க..”
2.விண்ணை நோக்கி (மலை மீது ஏறி) ஏகும்படிச் செய்கின்றான். ஏனென்றால் மலை மீது முருகன் ஆலயம் இருக்கின்றது.

போகன் காட்டிய அந்த நெறிகளையும் அவன் வகுத்துக் கொண்ட நிலைகளை எண்ணத்தில் எண்ணி “அந்த மகா மகரிஷி காட்டிய அருள் வழியில் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தைத் தனக்குள் எடுத்து நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி ஏகும் பொழுது கதிரவனின் காந்த ஒளியலைகள் அங்கே பரவுவதும்… அந்த நினைவுடன் விண்ணை நோக்கி எண்ணி எடுக்கும் பொழுது அது வருவதும்… இந்த நினைவாற்றல் அந்த ஆற்றலைப் பருகுகின்றது.

1.அப்போது தன் உடலில் வந்த தீமைகளை மறக்கின்றான்.
2.விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளை உந்தும்படிச் செய்கின்றான்.
3.ஆறாவது அறிவின் உண்மையை உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்திகளை ஈஸ்வரா என்று ஏங்கி நுகரும்படிச் செய்கின்றான்.

சோர்வையோ அதனால் உடலில் வந்த வலிமைக் குறைவையோ அதை மாற்றி… அந்த மெய் ஞானிகளுடைய உணர்வுகளைச் செருகேற்றி அதை நுகரும்படிச் செய்து… படி மீது ஏறி மேலே செல்லும்படிச் செய்கின்றான். மேலே ஏறி அங்கே கிரிவலம் வரும் பொழுது மகரிஷிகளை எண்ணத்தால் நாம் எண்ணி அதை நுகரும்படிச் செய்தான்.
அங்கே ஒரு தூப ஸ்தூபியும் உண்டு. அதிலே அக்கினியைப் போட்டு வைத்திருப்பார்கள்.

ஒளியின் சுடராக அங்கே வைத்து அந்த ஞானியின் ஒளிச் சுடரைப் பெறுவதற்காக விண்ணை நோக்கி ஏகி… அந்த உணர்வினை ஏங்கிப் பருகும்படி செய்து…
1.எந்த ஞானி காட்டினானோ இந்த உணர்வினைத் தனக்குள் செருகேற்றி
2.நினைவாற்றலை விண்ணிலே சேர்த்து அந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று காந்தப் புலனறிவைக் கூட்டும்படிச் செய்தான்.

அதே ஏக்க உணர்வுடன் நாம் உள்ளே செல்லும் பொழுது அந்தச் சிலை மீது நீர் படுவதை உற்றுப் பார்த்தால்
1.எந்த நல்லதை எண்ணி ஏங்கி வந்தோமோ அந்த உணர்வுடன் அதை நுகரப்படும் பொழுது
2.நம் உடலுக்குள் அந்த மணம் சென்று நம்மை அறியாத வந்த தீமைகளை அது பொசுக்குகின்றது.

ஆனால் அதை நாம் நுகர (சுவாசிக்க) வேண்டும்…!

அவன் சொன்ன முறைப்படி நுகர்ந்து நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்ற இந்த ஏக்க உணர்வுடன் பார்த்து நாம் சுவாசித்தால் உடலில் வந்த கடுமையான பிணிகளும் நீங்குகின்றது.

போகன் அதைத் தனக்குள் நேசித்தான். இந்த உணர்வின் சக்தியைப் பருகினான். தன்னில் தன்னைத் தான் அறிந்தான். விண்ணின் நிலையை உணர்ந்தான்… விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகினான்.

இந்தப் பிரபஞ்சத்தில் இயக்கிய உணர்வின் தன்மை கொண்டு மனிதன் உருவான நிலையை உணர்ந்தான். மனிதனுக்குள் அறியாத வந்த தீமைகளை எப்படி நீக்குவது…? என்று என்ற உபாயத்தை உணர்ந்தான். அதைச் சிலையாக வடித்து வைத்தான்.
1.அந்த அருள் ஞானம் பெறும் நிலையும் நமக்குள் மறைத்திருக்கும் நஞ்சினை கொல்லும் உணர்வினைச் சுவாசித்து
2.தீய அணுக்களைக் கொல்லும் மார்க்கங்களைக் கொடுத்தான்.

நாம் எப்படி வாழவேண்டும்…? தன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி அகற்ற வேண்டும் என்று நம் உடலைக் கோவிலாக மதித்தான் போகன். உயிரைக் கடவுளாக மதித்தான். அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று எண்ணினான். அதற்குள் மனிதனாக உருவாகிய குணங்களை அரும்பெரும் சக்திகள் என்று எண்ணினான்.

அந்த மனிதன் மகிழ்ந்தான் என்றால் அந்த மகிழ்ச்சியைத் தான் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நான் கண்டறிந்த நிலையை உருவாக்கினான்.
1.இதைக் கண்டு எத்தனை பேர் மகிழ்கின்றார்களோ அந்த மகிழ்ச்சியின் தன்மையை ஏங்கி
2.மனிதனுக்குள் உருவான உணர்வின் சத்தை அன்று உணர்வாகப் பெறுகின்றான் போகன்.

அதைப் பெறுவதற்கு… தாவர இனச் சத்தை இந்த உடலிலேயே மாற்றிக் காயகல்பாகப் பெறும் பாக்கியம் வரையிலும் இன்னொரு உடலுக்குள் புகாது இந்த உடலிலிருந்தே செயல்பட்டான்.

அவன் காட்டிய உணர்வின் சத்தை மற்ற மக்கள் எடுக்கும் உணர்வின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கி… அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் ஒளியாக்கி… அந்த நினைவின் ஆற்றல் கொண்டு உடலை விட்டு “விண் செல்லும் மார்க்கத்தைக் கண்டு கொண்டான்…”

இது தான் போகன் செய்த நிலைகள்.

சிதம்பரத்தைச் சாதாரணமாக நினைக்கின்றோம்…!

சிதம்பரத்தைச் சாதாரணமாக நினைக்கின்றோம்…!

 

தில்லைய,ம்பதி என்ற நிலையில்… சிதம்பரத்தில் ஆலயம் அமைத்திருக்கும் இடத்தைப் பற்றிய “உண்மையை (சரித்திரத்தை)” நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை உணர்த்தியவர் யார்…? திருமூலர்.

1.”மூலத்தின் உண்மைகளை…” ஒவ்வொரு அணுவின் இயக்கத்தின் உண்மைகளை அறிந்தவன் என்பதற்குத்தான் திருமூலர் என்று பெயர் வந்தது.
2.அண்டத்தின் இயக்கம் பிண்டத்தில் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்று அவர் கூறியுள்ளார்.

அது இந்த ஸ்தலத்திலே… தில்லையம்பதியிலே காட்டப்பட்டது.

பதஞ்சலியாக அரசாட்சி பரிந்து கொண்டிருக்கும் பொழுது யாகங்களையும் கேள்விகளையும் பல மந்திர நிலைகளையும் செய்து வரும் போது “கூடுவிட்டு கூடுபாயும்…” உணர்வுகளைக் கற்றுக் கொண்டவன் அவன்.

பதஞ்சலி அரசனானக ஆட்சி செய்து வந்தாலும் அந்த உடலை மற்ற அரசர்கள் இறக்கும்படி செய்தால்… அதிலிருந்து தப்பி இன்னொரு உடலுக்குள் தாவிச் செல்லும் வித்தையை கற்றுக் கொண்டவன் அவன்.

“தன்னுடைய சுகத்தை எதிலேயுமே மறையாது…” பல உடல்களில் தாவி மகிழ்ந்து வாழ முடியும்…! என்று பதஞ்சலி அதைச் செயலாக்கி அதன் வழி அவன் அரசாட்சி செய்து வந்தான்.

1.அவனுடைய மனைவி இன்னொரு அரசனுடைய மகள்தான்… அவளுக்கு அஞ்ச வேண்டும்
2.நாட்டைக் காக்கும் சேனாதிபதிகள் பலர் இருந்தாலும் அவன் உதவியை நாட வேண்டும்.
3.அரசன் இட்ட சட்டத்தை மக்களுக்குப் புகுத்தினாலும் போர் முறை வரும் பொழுது
4.சேனாதிபதி எதிராகத் திரும்பி விட்டால் அவனுக்கு அஞ்சி அவளிடம் நயந்தே செயல்பட வேண்டும்.
5.தான் சட்டத்திற்கு மாறாக நடந்தால் மக்கள் கொதித்து எழுவார்கள்… ஆக மக்களைக் காக்கும் எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படிப் பல நிலைகளிலிருந்து தன்னைக் காத்திடும் நிலைக்காகக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்தினான்.

அதிலே இரு வகை உண்டு.

உருவாக்கிக் கொண்ட மந்திர ஒலிகளை ஒருவர் சொல்வார் என்றால்… உடலுக்குள் அவன் சொன்ன நிலையில் எடுக்கப்படும் பொழுது இந்த ஆன்மா அந்த உடலுக்குள் சென்று அந்த உடலைச் செயல்படுத்தும்… இது ஒரு முறை.

அதே சமயம் யாருடைய தயவும் இல்லாதபடி நஞ்சு கொண்ட பாம்பின் உடலுக்குள் புகுந்து… நகர்ந்து சென்று வேறு ஒரு உடலின் மீது இந்த விஷத்தைப் பாய்ச்சி அந்த உடலைச் சுருங்கச் செய்து… அதன் வழி கொண்டு அந்த உடலை ஆட்சி புரியும் நிலை… இது ஒரு முறை.

இப்படித்தான் பதஞ்சலி செய்து கொண்டான்.

எதிரிகள் வரும் பொழுது எதிரிகளிடமிருந்து மீள்வதற்காகப் பதஞ்சலி தன் சேனாதிபதியிடம் விவரத்தைச் சொல்கின்றான்.

போர்ப்பயிற்சியாக நான் செல்கிறேன்… என்னுடைய சரீரத்தை ஒளித்து வைத்துவிடு. இந்த உடலை விட்டு நான் பாம்பின் உடலுக்குள் ஏவி வெளியில் செல்கின்றேன்.

இந்த உடலை நீ பாதுகாத்து வைத்திருப்பாய் என்றால் நான் மீண்டும் இந்த உடலுக்குள் வர உதவும். இன்னென்ன பக்குவத்தில் நீ வைத்துக் கொள்…! என்று சேனாதிபதியிடம் பதஞ்சலி சொல்கின்றான்.

சரி… என்று சொன்னவுடன்… பதஞ்சலி அந்த உடலை விட்டு வெளிவந்து பாம்பின் உடலுக்குள் செல்கிறான். ஆனால் அவ்வாறு சென்ற பின் சேனாதிபதி அரசனின் உடலைப் பொசுக்கி விடுகின்றான்.

இப்படி… பதஞ்சலி மீண்டும் தன் உடலுக்குள் வர முடியாத நிலை ஆன பின்பு தான் நாடு முழுவதும் அவன் சுழன்று வந்து “தில்லையம்பதியில்… சிதம்பரத்தில் வந்து சேர்கின்றான்…!

இங்கிருக்கக்கூடிய ஆலயத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அந்த ஆலயத்திற்குள் அங்கே பாம்பின் உடல் கொண்டு வருவதும் போவதுமாக இருந்தான்.

இப்பகுதியில் அக்காலத்தில் நந்தவனம் என்றும் உண்டு. பதஞ்சலி அவைகளைச் சுற்றி வருவதும் காடு மேடுகளில் அலைவதும் மற்றவர் கண்களுக்குச் சிக்காது அலைந்து கொண்டிருந்தது.

எப்படியும் மனித ரூபம் பெற வேண்டும் என்று அதற்குண்டான சந்தர்ப்பத்தை எடுத்து… ஒரு மாடு மேய்ப்பவனைத் தீண்டி இந்த விஷத்தின் துணை கொண்டு அந்த உடலுக்குள் புகுகின்றது.

அப்பொழுது மாடு மேய்ப்பவனுடைய உணர்வுகள் பலவீனம் அடைகின்றது இவனுடைய உணர்வு அந்த உடலை ஆட்சி புரியத் தொடங்குகிறது.

ஆட்சி புரிந்தாலும் இதன் நிலையில் கொண்டு மாடு மேய்ப்பவனுடைய வீட்டுக்குச் சென்ற பின்… அவனுடைய மனைவி இவனுக்கு வேண்டிய உபகாரங்களையும்… சுடு தண்ணீர் வைத்துப் பணிவிடைகளையும் செய்கின்றது.

அதைப் பார்க்கும் பொழுது தான் அவன் திகைக்கின்றான்…!

அரசு வாழ்க்கையில் தான் அரசனாக இருக்கும் பொழுது அரசிக்கு அஞ்சியும் சேனாதிபதிக்கு அஞ்சியும் தான் இட்ட சட்டத்திற்கு மக்களுக்காக வேண்டி அஞ்சியும் எதிரியான அரசனிடமிருந்து தப்ப அஞ்சி வாழ வேண்டிய சூழ்நிலைகளே வந்தது.

1.ஞானிகள் காட்டிய விண்ணுலக ஆற்றலை தன் சுயநலங்களுக்காக மாற்றிய உணர்வுகள் எவ்வாறு ஆனது…? என்று
2.இங்கே மாடு மேய்ப்பவனின் உடலிலிருக்கும் போது… அவன் மனைவி பணிவிடை செய்யும் பொழுது இவனுக்கு அந்தச் சிந்தனைகள் வருகிறது.

அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை தில்லை நடராஜா…! தில்லை என்பது நமது பூமி. அது நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றது.

இந்தப் பூமியின் செயலாக்கங்களில் அந்தச் சுழற்சியின் வேகத்தினால் இங்கே மற்ற உயிரினங்களும் தாவர இனங்களும் எவ்வாறு விளைந்தது…? என்று கற்றுணர்ந்தது தான் தில்லை நடராஜா.

தில்லையம்பலத்தாண்டவா…!
1.இந்த உடலான தில்லையை ஆண்டு கொண்டிருப்பவன் உயிர் என்றும்
2.தில்லை அம்பலம் என்ற இந்த உடலின் தன்மையை உணர்வின் குணங்களால் இயக்கும் நிலைகளும்
3.குணங்களுக்கொப்ப உடலின் இயக்கம் நடனம்… என்று இந்த நடனக் கலையைக் காட்டியவன் திருமூலர்
4.உணர்வுக்கொப்ப உடலின் இசையும் இசைக்கொப்ப உடலின் இயக்கம் என்றும் தெளிவாகத் தெரிந்து மக்களுக்கு வெளிப்படுத்தினார் திருமூலர்.

அவன் சொன்ன தத்துவம்… நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது என்பது.

ஆதியிலே… பேரண்டத்தில் விஷத்தின் தாக்குதல் விஷமற்றதைத் தாக்கப்படும்போது வெப்பமாகின்றது. வெப்பம் தாங்காது அணுக்களாகச் சிதறுண்டு ஓடுகின்றது. அந்த ஓடும் நிலைகள் ஈர்க்கும் நிலையில் தான் காந்தம் வருகின்றது.

இது தான் திருமூலம் ஆதியிலே உருப் பெற்ற உணர்வின் தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றான்.

இந்த இடம்… தில்லையைப் பற்றிச் சாதாரணமாக நினைக்கின்றோம்…! ஆனால் எவ்வளவு பெரிய சரித்திரத்தைப் படைத்த இடம்…! என்று உணர்ந்தால் சிதம்பரத்தில் இந்த ஆலயத்தில் வணங்கும் முறைகளை நாம் பார்க்கலாம்.
1.தன்னை உணர்தல் என்றும்
2.தான் எடுக்கும் (சுவாசிக்கும்) உணர்வின் இயக்கம் என்றும்
3.வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? என்றும் காட்டிய நிலைகள் தான்
4.தில்லை நடராஜா என்றும் தில்லை அம்பலத்தாண்டவா என்றும் காட்டினார்.

பேரண்டத்தில் இத்தகைய நிலைகள் வரும் பொழுது ஆதி சக்தி என்பது விஷம்… அதனால் தாக்குண்டு வெப்பமாக உருவாகும் பொழுது ஆதி பராசக்தி… வெப்பத்தின் தணலால் தான் நகர்ந்து செல்லும் பொழுது ஈர்க்கும் காந்தமாக விளையும் நிலை ஆதிலட்சுமி…!

திருமூலர் காட்டிய இந்த நிலைகளை…
1.காரணப் பெயரும் காரணத்துடன் இயற்றப்பட்டதையும் நாம் உணர்ந்தால்
2.அந்த மகா ஞானி அமர்ந்த இந்த இடத்திலிருந்து அவருடைய ஆற்றல்களைப் பெற முடியும்.

தன் வாழ்க்கையில் அரசனாக இருக்கும் பொழுது ஆசையுடன் வாழ்ந்த நிலைகளை உணரப்படும் போது… எவ்வாறு அது இழக்கப்பட்டது…? என்றும் நாம் அந்த மெய்யை எதனால் இழந்தோம்…? அதை மீண்டும் எப்படிப் பெற வேண்டும்…? என்று தன்னில் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வைத் தான் அவன் அங்கே வெளிப்படுத்துகின்றான்..

மெய்ப்பொருளைக் கண்டறிந்த அந்தத் திருமூல மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் எடுத்தால் “வாழ்க்கையில் வரும் தீமைகளை…” நீக்க முடியும்.

அதே சமயத்தில்…
1.அந்த மகரிஷியின் உணர்வுகளை அனைவரும் பெற வேண்டும்… பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
2.இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
3.சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது இந்த முறைப்படி தியானியுங்கள்.
4.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தவம் இருங்கள்.

ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.

வெறுமனே ஆண்டவனை அடையப் போகின்றேன் அவன் அருளைப் பெறப் போகின்றேன் என்று அவனையே எண்ணுவதற்குப் பெயர் தவமல்ல…!

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருப்பது உயிர். ஆண்டவனாக இயக்கிக் கொண்டிருப்பதும் எண்ணியதை ஈசனாக உருவாக்கிக் கொண்டிருப்பதும் உணர்வின் சக்தியை அணுவாக உடலாகச் சிவமாக மாற்றிக் கொண்டிருப்பதும் சிவத்திற்குள் சக்தியாக இயக்கிக் கொண்டிருப்பதும் “உயிரே…”

இந்த உடலை ஆள்பவன் யார்…? ஆண்டவன் (உயிர்).
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ந்திடும் உணர்வை நாம் ஊட்டி
2.மகிழச் செய்யும் பொழுது அந்த ஆண்டவன் அருளை நாம் பெற முடியும்.
3.அதன் வழியில் அனைவரும் மகிழ வேண்டும் என்று நாம் எண்ணினால் அது தவம்.
4.அந்த மகிழ்ச்சி நமக்குள் போற்றும் நிலையாக வந்தால் அந்தத் தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம்.

ஆலயத்தில் இந்த முறைப்படி நீங்கள் செயல்படுத்துங்கள். ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்துவோம். காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவோம்.

நமக்குள் உள்ள அறியாது புகுந்த நஞ்சின் தன்மையை வளராது தடுப்போம்… உலக மக்களைக் காப்போம்…!

1.அடுத்து வரும் சந்ததியினரின் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அருள் ஞானிகள் உணர்வைப் போதிப்போம்.
2.அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்… பிறந்த பின் உலகைக் காக்கும் ஞானிகளாக வளர்ப்போம்.

இதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். அதே போல நாம் பார்ப்பவருக்கெல்லாம் அதைப் பெற வேண்டும் என்று ஏற்றுக் கொண்டு இதைச் செயலாக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கின்றேன்.

“நம் குருநாதர் காட்டிய கலாச்சாரத்தை” நாம் உருவாக்க வேண்டும்

“நம் குருநாதர் காட்டிய கலாச்சாரத்தை” நாம் உருவாக்க வேண்டும்

 

இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் எத்தனையோ பேரைப் பார்க்க நேருகின்றது… சந்திக்க நேர்கிறது. “அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று நாம் தவம் இருக்க வேண்டும்.

“என்னைப் பார்ப்போருக்கெல்லாம்… நான் பார்ப்போருக்கெல்லாம்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

என் பையன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில்
1.கஷ்டத்தை நினைத்துச் சொன்னீர்கள் என்றால் முதலில் இந்தக் கஷ்டம் வரும்.
2.இது கலந்த உடனே மீண்டும் அந்த நினைவைத் தான் தூண்டும்.

ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார் என்றால்…
1.அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.விஷத்துடன் கலந்து மீண்டும் அவன் செய்தது தான் நினைவுக்கு வரும்.

ஆகவே அதை நாம் மறக்க…
1.மகரிஷிகள் அருள் சக்திகளை முதலிலே எண்ணி எடுத்து
2.நாம் பார்ப்போருக்கெல்லாம் என்னைப் பார்ப்போருக்கெல்லாம்
3.நான் நினைப்பவர்களுக்கெல்லாம் என்னை நினைப்பவர்களுக்கெல்லாம்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

எனக்கு எந்தெந்த சக்திகளைக் குருநாதர் எப்படிக் கொடுத்தாரோ அந்த முறைப்படித் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

முன்பெல்லாம் சிறுகச் சிறுகச் சொல்லி நினைவாற்றலை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது
1.அது அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒருமித்த நிலைகளாக நினைவாற்றல் கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் குரு அருளால் மகரிஷியின் அருள் ஒளியைப் பெற்று இருளைப் போக்கி
3.மெய்ப்பொருள் காணும் நிலைகளாக அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆலயத்திற்குச் சென்றாலும் அல்லது மற்ற குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் அங்கே நாம் களைத்துப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போய் அமர்ந்த உடனே அந்தக் களைப்பால் “உஸ்ஸ்ஸ்… அப்பா…!” என்ற பெருமூச்சாகச் சோர்வின் தன்மையை வெளிவிடுகின்றோம்.

அப்பொழுது அந்த நேரத்தில் அந்த இடத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து
2.இந்த இடம் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்.
3.இந்தக் குடும்பங்கள் முழுவதும் மகிழ்ச்சி படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

எந்த நோயாளியைப் பார்க்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுதும் மற்ற அலுவல்களுக்குச் செல்லும் பொழுதும் தொழில் செய்யும் பொழுதும் இரவு படுக்கப் போகும் முன்பும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அங்கே மகிழ்ந்த நிலை உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள். எந்தத் தொழில் செய்தாலும் இதைப் போல் நினைவில் கொள்ளுங்கள்.

1.உணவு உட்கொள்ளும் பொழுதும் அந்த உணவுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி படர்ந்து
2.அந்த உணவு எனக்குள் “உடல் நலம் பெறும் சக்தியாகப் பெருக வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கேட்க நேர்ந்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.நம்மை யார் துன்புறுத்தினாலும் அவர்களுடைய உணர்வு நமக்குள் பதிவாகாதபடி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு
3.என்னைப் பார்ப்பவருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்
4.என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்
5.எல்லோரும் போற்றும் நிலையாக அவர் வளர வேண்டும் என்று எண்ணத்தைப் பரப்புங்கள்.

உடலில் உபாதைகள் எது இருந்தாலும் அந்த உபாதைகளை எல்லாம் மறந்து விடுங்கள்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.புருவ மத்தியில் எண்ணி உணர்வுகளை உடலுக்குள் கொண்டு போங்கள்.
2.உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

நம் இன்னொன்றையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து குடும்பத்தில் கர்ப்பமற்றிருக்கும் காலங்களில் தத்துவங்களைப் போதித்தும்
1.விண்ணுலக ஆற்றலை… அந்த அகஸ்தியன் கண்டறிந்த உணர்வைச் சிலரும்
2.வியாசகர் காட்டிய தன்மையைச் சிலரும் “கருவிலே வளரும் குழந்தையிடத்தில் உருவாக்கினார்கள்…”

பண்டைய காலத்தில் இவ்வாறு வளர்ந்தவர்கள் அனைவரும் “தவயோகிகளாகவும் பெரும் ரிஷிகளாகவும் உருவாக்கப்பட்டு…” அந்தக் குழந்தைகள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அதை வளர்த்த தாய் தந்தையர் பிறவா நிலை அடையவும் அதுவே காரணமாக அமைந்தது.

தன்னால் முடியவில்லை என்றாலும் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட சக்தியை அன்று உருவாக்கினார்கள்.

1.இதைப் போன்ற கலாச்சாரத்தை நாமும் நம் குடும்பத்தில் கொண்டு வந்து
2.அருள் ஞானிகளை உருவாக்கி அவர்கள் துணையால் நாமும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
3.இனி வரக்கூடிய எதிர்கால சந்ததியினரும் அந்த வழியிலேயே வளரும்படி நாம் செய்தல் வேண்டும்.

ஆகவே
1.நம் குரு காட்டிய வழிகளில் அவர் ஆற்றலை நமக்குள் பெற்று
2.எல்லோருக்கும் மகிழ்ந்திடும் நிலைகள் பெற நாம் தியானிப்போம்
3.எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தவமிருப்போம்.

அரச உணர்வு நம்மை இயக்கக் கூடாது… ஞானிகள் உணர்வே நம்மை இயக்க வேண்டும்

அரச உணர்வு நம்மை இயக்கக் கூடாது… ஞானிகள் உணர்வே நம்மை இயக்க வேண்டும்

 

அரசர்களைத் தழுவிய நிலைகள் தான் காவியப் படைப்புகள் வந்தது. அதன் வழியில் தான் உலக மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்திருக்கின்றோம்.
1.மகரிஷிகள் ஞானிகள் கொடுத்த தத்துவங்களை
2.அரசன் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டான்.

இன்று உலகிலே எந்த அரச சபைக்குச் சென்றாலும் அரசனைப் புகழ் பாடும் புலவர்களுக்குத் தான் மதிப்பு. அரசன் செயலைச் சிறிது குறை கூறினாலும் அவன் சிரசு இல்லை.

தர்மத்தையும் நியாயத்தையும் அந்த அரசனைத் தழுவிய நிலைகள் கொண்டுதான் புலமைகள் பாடிப் பொருள்களைத் தேடினார்கள். புலமை அவனுக்கு உதவியதே தவிர அரசனைக் காக்க உதவியதே தவிர மக்களுக்கு அது உதவவில்லை.

இந்த அடிப்படையிலே தான் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்ற நிலையில் காவியங்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை.

சோழ மன்னனை எடுத்துக் கொண்டால் “நீதிப்படி அவன் நடந்தான்…” என்று காட்டுவார்கள். தன் மகனே என்றாலும் தன் சொல்லுக்குக் கட்டுப்படவில்லை என்றால் “தன் புகழுக்காக”
1.அவன் தவறு செய்தானா…? இல்லையா…? என்று சிந்திப்பதற்கு இல்லாதபடி
2.தன் மகனையே தேரை ஓட்டிக் கொன்றான் என்று நீதிகள் சொல்லப்படுகின்றது.

அரசனுடைய மகன் தேரை ஓட்டிச் செல்கின்றான். ஒரு கன்று தவறிப் போய் ஊடே வந்து விடுகின்றது… அடிபட்டு இறந்தது. மனிதனாக இருக்கின்றாய்… மற்ற உயிரினத்தை நீ கொன்றாய் என்று நீதி சொல்லப்படும் பொழுது அவனைக் கொன்று விடுகின்றான்.

ஆனால் பாதையில் புழுவோ பூச்சியோ மற்றவைகளோ வந்தால் அதன் மீது தேர் போகாதா…?

அரசன் என்ற நிலையில் இருந்தாலும் தன் மகனையே அதே போன்று தேரை ஓட்டச் செய்து அவனைக் கொன்று நீதியை நிலை நாட்டினான் என்று பெருமை பேசுகிறார்கள்.

இதே நீதி கொண்டவர்கள் மாற்று அரசனிடம் என்ன செய்கிறார்கள்…?

இவர்கள் செல்லும் பொழுது அவருடைய மகளையோ அவன் விரும்பிய இடத்தையோ கேட்டு அனுப்புகின்றான். இவனை மதித்து அதைத் தருகிறேன் என்று சொன்னால் அவனை மெச்சி மகிழ்கின்றான்.

இல்லையென்றால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு
1.இரு நான் உன்னை அழிக்கிறேன்… என்ற நீதிகள் தான் அங்கே பேசுகின்றது. ஆக… அரசினுடைய நீதி எது…?
2.நான் யாரிடம் எதைக் கேட்டாலும் மதிக்க வேண்டும்… மதிக்கவில்லை என்றால் போரிட்டு உன்னை அடக்கி மதிக்கும்படிச் செய்வேன்.

இது தான் அன்றைய அரசு நீதி…!

இந்தப் போர் முறைகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அமெரிக்கா என்ன செய்கின்றது…?

அவன் அணு குண்டுகளைச் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் அவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் உன்னை அழித்து விடுவேன் என்று அவன் மிரட்டுவான்.

இன்று ஜனநாயகம் என்று இருந்தாலும் அதிலே தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளும் அதே அரசு நீதியைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். எந்த அரசு இதைக் கடைப்பிடித்ததோ அதன் வழியாகத் தான் ஆட்சி செய்கின்றார்கள்.
1.ஆக அரசர்களுடைய நீதி அவனைக் காக்கத் தான் வருகின்றதே தவிர
2.மக்களைக் காக்க என்று அல்ல.

அவனுடைய செயல் மாறிவிட்டால் தன் மக்களை.. தன்னை விசுவாசிப்பவர்களை ஏவல் செய்து பலிகடாக்களாக ஆக்குகின்றார்கள்… தன் கௌரவத்தைக் காக்க.

மேலை நாடுகளில் எடுத்துக் கொண்டாலும் ஒருவனுக்கு எத்தனையோ மனைவி என்று வைத்துக் கொள்கின்றார்கள். அதில் எந்த மனைவியின் பக்கம் தன் சார்பு உள்ளதோ அந்த மைந்தன் சொல்வது தான் நியாயம் என்று சொல்வார்கள்.

அதில் பிடிக்காத மனைவியின் மகன் என்று ஆகிவிட்டால் அவனைக் குற்றவாளியாக்கி அரச நீதியில் பொதுமக்கள் மத்தியில் அவன் சிரசை வாங்குகின்றார்கள் முஸ்லீம் நாடுகளில்.

இது என்னுடைய நீதி…!
1.எனது மகனாக இருந்தாலும் தன் மதத்திற்கும் கடவுளுக்கும் அவன் துரோகம் செய்தான்.
2.எனது பிள்ளையாக இருந்தாலும் இந்தத் தவறை எவரும் செய்யக்கூடாது என்று மக்களுக்கு உணர்த்தவே
3.மக்களுக்கு மத்தியில் நீதியை இப்படி நிலைநாட்டுகிறோம் என்பார்கள்.
4.கடவுளின் ஆணைப்படித் தான் இதைச் செய்கிறேன் என்று அரசு நீதி இதைச் செய்கின்றது.

அரசனுக்குக் கீழ் குடிமக்கள் கட்டுப்பட வேண்டும். மாற்று அரசர்களும் இவனை மதிக்க வேண்டும். மதிக்கவில்லை என்றால் அவனை அடக்க வேண்டும்… என்ற அதே நீதி தான் இன்று “மக்கள் மத்தியிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது…”

ஓரளவுக்கு வலுகொண்டவனாக இருக்கின்றேன். நான் கேட்ட உடனே நீ உதவி செய்ய வேண்டும். உதவி செய்யவில்லை என்றால் என்ன தொல்லை கொடுக்க வேண்டுமோ அதை நான் கொடுப்பேன்.

வழி வழியாக இவ்வாறு தான்… மனிதன் தன் உடல் இச்சைக்குத் தான் அரசர் வழிகளில் வந்து கொண்டிருக்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய வழி செல்லவில்லை.

ஏனென்றால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் பார்த்தோம் என்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே அவ்வாறு இயக்குகிறது.

அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள்…
1.எதிர்பாராதது சந்தர்ப்பத்தால் ஒரு தவறினை நாம் நுகர்ந்து விட்டால்
2.அதனால் உடலில் உருப்பெறும் தீமையான அணுக்களின் தன்மையை தனக்குள் எதிரியாக்காதபடி
3.அந்தத் தவறு எனக்குள் இயக்காதபடி தவறை அழித்த ஞானியின் உணர்வைத் தனக்குள் புகுத்தி
4.தவறின் செயலாக்கங்களை நீக்குதல் வேண்டும் என்பதுதான் விநாயகர் தத்துவம்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவன் மகரிஷி. ஆறாவது நிலையை ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றவன் சப்தரிஷி.

அந்த நிலையைத் தான் நாம் அனைவரும் அடைய வேண்டும்…!

நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற வேதனைப்படக் கூடாது

நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற வேதனைப்படக் கூடாது

 

1.எக்காரணத்தைக் கொண்டும்… இந்த வாழ்க்கையில் எத்தகைய அச்சுறுத்தும் உணர்வுகள் வந்தாலும்…
2.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதை வளர்க்கப்படும் பொழுது
3.நம்மை அச்சுறுத்தும் அந்த உணர்வுகள் ஒடுங்கும்.
4.மகரிஷிகள் உணர்வுகள் அதை அச்சுறுத்தும்…!

ஆகவே… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வாழும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும்… தெருவில் இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும்…! என்ற தவத்தை மேற்கொள்ளுங்கள்.

நண்பர்களாக இருக்கின்றோம். சந்தர்ப்பத்தால் அந்தக் குடும்பத்தில் இன்னல்கள் படுகின்றார்கள் என்று தெரிந்து கொண்டால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானியுங்கள்.

அந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் அந்தக் குடும்பத்தில் உள்ளோர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… குடும்பம் நலமாக இருக்க வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்று இந்தத் தவத்தை எடுங்கள்.

இது உண்மையான தவம் ஆகிறது.

1.இதைச் செயல்படுத்தினீர்கள் என்றால் நமது குரு அருளை உங்களுக்குள் காணலாம்
2.பேரண்டத்தின் நிலைகளையும் உங்களுக்குள் காண முடியும்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

யார் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டாலும் கூட உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். உடலுக்குள் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நினையுங்கள். அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற தவத்தை எடுங்கள்.

இதைப் பெருக்குங்கள். இதையெல்லாம் நீங்கள் செய்து பழக வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானமிருங்கள். அனைவரது குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று தவம் இருங்கள்.
1.எல்லோரும் அப்படிச் சொல்லி… அதைப் பெற வேண்டும் பெற வேண்டும் என்று
2.எல்லோருடைய தவமும் ஒன்று சேரும் பொழுது நல்ல பலனைக் கொடுக்கும்.

இதனை வரிசைப்படுத்தி நாம் கொண்டு வருதல் வேண்டும்.

நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற நிலைகளை எடுக்கக் கூடாது. தொழில் செய்யும் இடங்களிலும் இதைச் செய்து பழகிக் கொள்ளுங்கள். இந்தத் தவத்தை மேற்கொள்ளும் பொழுது அங்கே தவறுகள் மறையும்.

ஏனென்றால் இந்தத் தவறை வளர்த்துக் கொண்டால் நமக்குள்ளும் தவறுகள் விளையும். அந்த உணர்வே மீண்டும் இயக்கச் சக்தியாக வரும்.

தவறு செய்கின்றான்… தவறு செய்கின்றான்..! என்று தவறு செய்தவனைச் சொல்லிக் கொண்டிருந்தால் இது எங்கெல்லாம் சொல்கின்றோமோ இந்த உணர்வு அங்கே விளைந்து எல்லோரையும் இந்தத் தவறையே செய்ய வைத்துவிடும்.

பின்… “எங்கே பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றது…” என்று மீண்டும் அதைத்தான் வளர்க்க ஆரம்பித்து விடுவோம்.

1.குருநாதர் எந்த வகையிலெல்லாம் எனக்குக் கொடுத்தாரோ
2.அதையெல்லாம் துணுக்குத் துணுக்காக உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
3.அதன் வழியில் ஒவ்வொரு நிமிடமும் தியானித்துப் பழகுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நம் குடும்பத்தில் எல்லோரும் பெற வேண்டும் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற இந்தப் பழக்கத்திற்கு நாம் அனைவருமே வந்துவிட வேண்டும்.

குரு வழியில் இப்படிச் செயல்படுத்தினால் இந்த உலகையும் காக்கின்றோம்… நம்மையும் காக்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்தக் கஷ்டமான அலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருக்கின்றது.

அதை மாற்றக் கூட்டுத் தியானங்களிலிருந்து எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று அந்த ஞானிகள் உணர்வு இங்கே வரப்படும் பொழுது தீமைகள் ஒடுங்குகின்றது.

நம்முடைய எண்ணங்கள் அதிகமாக இதைப் பிரதிபலிக்கும் பொழுது காற்றில் கலந்துள்ள நச்சுத்தன்மையை ஈர்க்கும் நிலை இழக்கப்பட்டு அந்த உணர்வுகள் அகன்று சென்று விடுகிறது.

நாம் வசிக்கும் தெருவிலே இது போன்ற அலைகளைப் பாய்ச்சப்படும் பொழுது அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குக் கிடைக்கின்றது.

1.குரு அருளை நமக்குள் வளர்த்து… நாம் எல்லாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த உலகைக் காக்கும் சக்தியாக வர வேண்டும்.
2.எல்லா இடங்களிலும் இதைப் பரப்பி பழகுதல் வேண்டும்.
3.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் இதைச் செயல் வடிவுக்கு கொண்டு வந்தால் போதும்.

“சிரமம்…” என்ற அந்தச் சொல்லே நமக்கு வேண்டியதில்லை. உடனுக்குடன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். இந்தக் குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தவமிருந்தால் “அந்தத் தவம்…” நமக்குள் வளர்கின்றது.

அதே சமயத்தில் குடும்பம் நன்றாக வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் போது “அந்தக் குடும்பங்களின் கஷ்டங்கள் நம்மைச் சாடாது…”

1.இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நாம் பார்க்க விரும்பிய சப்தரிஷி மண்டலமும்
2.எப்படியெல்லாம் அந்த ஞானிகள் உணர்வை ஒளியாக மாற்றி உருபெற்றார்களோ அதையும் நீங்கள் பார்க்கலாம்.
3.நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்… நீங்களும் பார்க்கலாம்.

சில பேருக்கு இப்பொழுதும் தெரிகின்றது. தெரிந்தாலும் நிஜமா… பொய்யா..? என்று சந்தேகம் உள்ளுக்குள் மாற்றிக் கொண்டே இருக்கும். நாம் பார்ப்பது நிஜமா…? என் எண்ணம் தான் இவ்வாறு இயக்குகின்றதா…? என்ற இந்த வினாக்கள் இருக்கும்.

உதாரணமாக… அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்கப்படும் பொழுது இரவிலே தூங்கும் பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ… அதே போன்று மெய்ஞானிகள் உணர்வை நாம் எடுக்கப்படும் பொழுது அந்த அச்சுறுத்தும் உணர்வை அடக்கி அந்த ஞானி உணர்வுகளை நாம் காண முடியும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகள் தெரிவது போல் தான்
2.மெய் ஞானிகளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

யாரும் தவறு செய்யவில்லை. தெரிந்து யாரும் ஞானியாக ஆகவில்லை நான் ஞானியாக வேண்டும் என்று “தெரிந்து… அப்படி ஆகவில்லை…”

1.மற்றவர்கள் நலம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது தான் ஞானி ஆகின்றார்கள்.
2.பிறர் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணும் போது தான் ஞானியாக முடிகின்றது.

ஞானிகளைப் போன்று நாமும் வாழ்க்கையில் அதைக் கடைபிடித்துச் செயல்படும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.

அந்த உயர்வான நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று உங்கள் எண்ணத்தை உயர்த்தி… எல்லோரையும் அந்த உயர்ந்த நிலையை நீங்கள் பெறச் செய்ய முடியும்
1.உங்கள் பார்வையால் உலகில் உள்ள நஞ்சின் தன்மையை மாற்ற முடியும்.
2.இங்கே 50 பேர் தான் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ண வேண்டாம்… இது ஐம்பது இலட்சமாகவும் ஐம்பது கோடியாகவும் மாறலாம்.

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர்

 

காசி கங்கைக் கரையின் எதிர்த் திசையில் இருக்கும் கரைக்கு குருநாதர் என்னைப் போகச் சொன்னார். அங்கிருக்கக்கூடிய அரண்மனைக்கு அருகில் தான் ஆதிசங்கரருக்கும் துவைதவாதிகளுக்கும் அத்வைதத்திற்கும் வாக்குவாதம் நடந்தது.

ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து வயிற்று வலியை வரவழைத்தார்கள். யாக வேள்விகளை எல்லாம் செய்தால்தான் இந்த வயிற்று வலி போகும்… நீ அதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

ஆதிசங்கரர் அதற்கு விளக்கம் கொடுத்து
1.மெய் ஞானிகள் காட்டிய உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் உயிரான நெருப்பிலே இட்டு இந்த உணர்வினைப் பரப்பி
2.நீ ஏவல் செய்ததை என்னால் சுட முடியும் என்று அதை எடுத்துச் சேர்த்துத் தன் வயிற்று வலியை நீக்குகின்றார்.

ஏவல் செய்ததை நீக்கிய பின்பு தான் இவரை இப்படியே விட்டு விட்டால் மீண்டும் நமக்குத் தொல்லைகள் வரும் என்று எண்ணி… ஆதிசங்கரரை ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விடுகிறோம் என்று படகிலே அழைத்துச் செல்லும் பொழுது கங்கையிலே கவிழ்த்து அவரை நீர் சமாதி வைத்து விடுகின்றார்கள்.

அதிலிருந்து ஆதிசங்கரருடைய (சரித்திரம்) உண்மை நிலைகள் தெரியாது. போனார்… வந்தார்… என்று இருக்கும். சங்கரர் உடலை விட்டு எப்படிப் பிரிந்தார்…? என்று இருக்காது.

இந்த உண்மையைச் சொல்லி அவர் எடுத்துக் கொண்ட ஆற்றலை எனக்கு உணர்த்துகிறார் குருநாதர்.

சாங்கிய சாஸ்திரத்திலே மூழ்கிய நிலைகள் கொண்டு துவைதத்தின் படி உருவத்தைக் காட்டிச் சாங்கியம் செய்து கடவுளிடம் வரம் கேட்பதும் அத்வைதப்படி உண்மையின் உணர்வின் சக்தியை நினைவில் கொண்டு கவர்ந்து தனக்குள் அந்த உணர்வின் தன்மை உறையச் செய்வதும் உணர்வின் நினைவாற்றல் நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்ற அந்த வாக்குவாதத்தன்மை அங்கே நடந்ததைக் குருநாதர் உணர்த்துகின்றார்.

அத்வைதம் துவைதம் என்று சொல்கிற பொழுது
1.சூட்சம நிலைகளில் நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை உடலாக்குகின்றது.
2.அந்த உணர்வின் அணுவாக இயக்கப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.தனக்குள் இந்த உணர்வின் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு இந்த உணர்வின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்று…!

ஆனால் ஆதிசங்கரருக்கு ஏன் கடைசியில் அந்தக் கதி…? என்று வரும் பொழுது
1.அவருக்கு உடல் பற்று இல்லை… விண்ணின் பற்றைத் தன் குருவான கோலமாமகரிஷியின் உணர்வுகளைப் பெற்றவர்.
2.அவரோ கோள்களின் தன்மைகளை அறிந்தவர்.
3.அதை உணர்ந்த நிலையில் தனக்குள் விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணியவர்.
4.இந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கியவர்.
5.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையை உணர்ந்தவர்.
6.விண்வெளியின் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வைப் பற்றுடன் பற்றியவர் என்று
7.அந்த இடத்திலே வைத்து குருநாதர் எனக்கு இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றார்கள்.

கோலமாமகரிஷி… தான் வாழ்ந்த காலத்தில் அவர் பெற முடியாத இந்தச் சக்தியை ஆதிசங்கரர் உடலுக்குள் புகுந்து அத்வைதத்தின் தத்துவத்தைப் பரப்பியவர். அதன் வழி தனக்குள் விண்ண்ணின் ஆற்றலைப் பெருக்கியவர். அதன் துணை கொண்டு ஆதிசங்கரருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்தவர்.

ஆதிசங்கரர் என்ன செய்தார்…? கோலமாமகரிஷி என்ன செய்தார்…? என்று நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். இந்த உண்மைகளை எல்லாம் அங்கே குரு உணர்த்துகின்றார்.

அவர் உடலைப் பற்றவில்லை. அந்த அருள் ஞான உணர்வை எடுத்து ஏவலால் உண்டான வயிற்று வலியை நீக்குகின்றார். பின் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் செல்கிறார்.
1.அவர்கள் இருவருமே சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆதிசங்கரருடைய அருள் உணர்வுகளை நாமும் பெற முடியும்.
3.அவர் கண்ட மெய் ஒளியையும் நாம் பெற முடியும்.

தாய் வழியில் தான் அவருக்கு அந்தச் சக்தி கிடைத்தது. கங்கைக் கரையில் வைத்து குருநாதர் இதை எல்லாம் எனக்கு உணர்த்துகின்றார்.

எமது உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்

எமது உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்

 

உங்களுடைய துன்பங்கள் நீங்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கின்றேன்.

என்னை உங்களுடைய கண் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது…
1.சாமி சொன்ன நிலைகளை நாம் சரியாகக் கேட்க வேண்டும்
2.அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கேட்டுக் கொண்டிருந்தால் தான் “இது கூர்மையாகின்றது…”
3.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது.

ஏனென்றால்…
1.துன்பத்தை நீக்கும் உணர்வுகளைப் பெற்றவர்கள் மகா ஞானிகள்.
2.துன்பங்களின் இயக்கத்தின் தன்மையை அறிந்துணர்ந்தவர்கள் அந்த மகா ஞானிகள்.

அந்தத் துன்பத்தின் விஷத்தின் தன்மை நீக்கி தன் உணர்வினை ஒளியாக மாற்றி… இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருக்கின்றார்கள்.

அவருடைய வாழ்க்கையில் வந்த இன்னல்களை எப்படி நீக்கினார்கள்…? அவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் எப்படி வந்து சேர்ந்தது…? என்பதை அறிந்தார்கள்.

அவ்வாறு அறிந்த உண்மையைத்தான் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அந்த உண்மையின் சக்தியைத் தான் யாம் இப்பொழுது உங்களுக்குச் சொல்வது.

நன்மையின் தன்மை கொண்டு நாம் காரியங்களை எண்ணிச் செய்தாலும் நாம் தவறு செய்யாமலேயே பிறருடைய துன்ப உணர்வுகள் நமக்குள் எப்படி வந்து சேருகிறது…? என்ற நிலையை “அந்த ஞானிகள் சொன்ன வழிப்படி” உங்களுக்குள் சொல்லும் பொழுது இது பதிவாகின்றது.

பாலுக்குள் காரம் பட்டபின் அந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகளை நாம் உணர முடிகின்றது. ஆனால் அந்தச் சுவையை உணர முடியாத நிலை ஆகிவிட்டால் “அதை நாம் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது…”

ஒரு விஷத்தின் தன்மையைக் குடிக்கப்படும் பொழுது அதனால் சிந்திக்கும் செயல் இழந்து விடுகின்றோம்… அறிய முடிவதில்லை. செயலற்ற நிலை ஆகிவிடுகின்றோம். அது போல்…
1.நாம் தவறு செய்யாமலேயே “குறைகள் எனக்குள் வருகின்றதா…?” என்ற மனம்
2.அது எண்ணமாக உங்களுக்குள் தூண்டச் செய்யும் நிலையே சந்தர்ப்பங்களில் மறைந்து விடுகிறது.

ஆனால் அந்த மகா ஞானிகள் அதிலிருந்தெல்லாம் விடுபட்டுப் பழகியவர்கள்.
1.சக்திவாய்ந்த ஆற்றலைத் தனக்குள் கூட்டி தீமையைக் குறைத்து அந்த உணர்வின் ஆற்றலால்
2.உயிர் எப்படி ஒவ்வொரு குணத்தையும் அது உணரச் செய்து… அறியச் செய்து அந்த இயக்கத்தை இயக்கச் செய்வது போல
3.கெட்டதை நீக்கி நல் உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றச் செய்து
4.ஒளியாக மாறும் உணர்வினைத் தனக்குள் வளர்த்து அழியா ஒளிச் சரீரம் பெற்றவர்கள்.

அவர்கள் வெளிப்படுத்திய சொல்களை… அவர்களை எண்ணும் பொழுது அந்த மணம் எனக்குள் உணர்வின் செயலாக சொல்லாக அது இயங்குகின்றது. அந்த மணத்தின் தன்மை உடலுக்குள் கிரியை ஆகி என்னை இயக்குகின்றது.

சிவகாமி…! அந்த ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று “கவர்ந்த சக்தி” உடலுக்குள் சென்று சிவம்… தான் கவர்ந்து கொண்ட சக்தி எனக்குள் கிரியையாகி “அதனின் சொல்லாக (உபதேசமாக) வருகின்றது…”

1.இதையெல்லாம் நீங்கள் கூர்மையாகக் கவனிக்கும் பொழுது இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பதிவாகும்.
2.பதிவானதை மீண்டும் எண்ணத்தால் எப்படி எடுக்க வேண்டும்…? என்று நினைவூட்டும் சக்தியாகவும் இது செயல்படும்.
3.அதற்குத்தான்… வேறு நினைவுகள் இல்லாதபடி உங்களைக் கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கும்படி சொல்வது

மனிதனின் கடைசிக் கடமை

மனிதனின் கடைசிக் கடமை

 

யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி நினைவை விண்ணிலே செலுத்தி கடவுளின் அவதாரம் என்று கூறிய அகஸ்தியன்…
1.அவன் எவ்வாறு மெய் ஞானம் பெற்றான்…? என்ற நிலையும்
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட அவனில் விளைந்த உணர்வுகளை வியாசகர் தனக்குள் பெற்றதையும் நாம் பார்ப்போம்.

அவனில் (வியாசகர்) விளைந்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அவன் கண்டுணர்ந்த உணர்வை அறிய நாம் தியானிப்போம்.

வியாசகர் சந்தர்ப்பத்தால் தன்னை மீன் காத்ததை எண்ணி ஏங்குகிறான். காரணம்… எதைக் கொன்று அவன் புசித்தானோ “அதுவே தன்னைக் காத்தது” என்ற நிலையில் நினைவினை விண்ணிலே செலுத்துகின்றான். விண்ணின் ஆற்றலைப் பெறுகின்றான்… அகஸ்தியன் உணர்வைப் பெறுகின்றான்.

அந்த உணர்வின் அறிவை தனக்குள் எவ்வாறு கண்டான்…? என்ற அந்த வியாசகர் பெற்ற மெய் ஞானத்தை நாமும் பெறுவோம்.

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து பாற்கடலைக் கடைந்தான் என்ற பேருண்மையை அவனுள் கண்டறிந்ததை… அவன் தெளிவாக்கிய உணர்வினை உருவமாக்கி… அருவத்தின் தன்மை தனக்குள் பெறும் சக்தியாகப் பின் வந்த ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

அதை அறிவதற்கு
1.வியாசகர் கண்டறிந்த அந்த உணர்வின் சத்தை நாம் ஏங்கிப் பெறுவோம்.
2.அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பின் வந்தோருக்கு வழி காட்டிய உணர்வையும் உயிரின் இயக்கத்தையும் நாம் காண
3.நம் வலிமையைக் கூட்டி… கூர்மையாக அவன் காட்டிய உணர்வுடன் எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
4.அதன் உணர்வின் அறிவாக நாமும் அறிந்திட நம் நினைவைச் செலுத்துவோம்.

பல அணுக்களின் சேர்க்கையாக மேரு என்ற மலை போல் அது உருப்பெற்று விஷத்தன்மையால் தாக்குண்டு இயக்கும் அந்த வரிசைத் தொடர் அணுக்களின் தாக்குதலால் பூமி எவ்வாறு சுழல்கிறது…? துருவப்பகுதி வழியாக எவ்வாறு நுகர்கின்றது…? பூமி தனக்குள் ஒவ்வொன்றையும் தாவர இனங்களை எப்படி உருமாற்றுகிறது…? என்ற உணர்வின் நிலையை
1.வியாசகர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நாமும் காண்போம்.
2.வியாசகர் தனக்குள் உணர்ந்த உணர்வின் தன்மை விளைய வைத்த அந்த உணர்வினை நாம் நுகர்வோம்.
3.அதன் அறிவாக அவன் கண்டறிந்த உணர்வினை நாமும் அறிவோம்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்வதும் துருவப் பகுதி வழியாக நுகர்வதும் பூமிக்குள் பல உணர்வுகள் தனக்குள் மற்றதுடன் இணைத்து தாவர இனங்களாக உருவாக்குவதையும் அந்த மகா ஞானி கண்டுணர்ந்து… அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளை நாமும் காண்போம்.

பூமி துருவப் பகுதி வழியாக நுகர்வதை… அந்தத் துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்கியதைத் பூமி தனக்குள் இணைக்கப்படும் பொழுது “பார்வதிக்கும் சிவனுக்கும் திருமணம்…” என்று உணர்த்திக் காட்டினான் அன்று வியாசகன்.

பிரபஞ்சத்தில் மிதக்கும் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து உணர்வின் இயக்கமாக… ஆலகால விஷத்தைச் சிவன் தன் கழுத்திலே நிறுத்திக் கொண்டான் என்ற நிலையில் துருவப் பகுதியில் விஷத்தின் தன்மை அடக்கி அதைச் சிறுகச் சிறுகப் படரச் செய்கின்றான்.

ஏனோ சிவன் இந்த உலகைக் காக்க விஷத்தைத் தனக்குள் அடக்கிக் கொண்டான் என்று காவியத் தொகுப்பில் இதனை முன் மொழிந்திருப்பார்கள்.

விண்ணிலிருந்து வரும் சக்திகளை நுகரப்படும் பொழுது…
1.நமது பூமி நீள வடிவமாக அது வளர்ந்து கொண்டே செல்வதைக் காணலாம்.
2.துருவப் பகுதியிலே உறை பனியாக உறைந்து அடுக்கு வரிசையாக வரும்.

அதை உங்களுக்குள் இப்போது பதிவு செய்யும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து உங்கள் உணர்வுகள் அனைத்தும்
2.நமது பூமியை மேலிருந்தே பார்க்கும் நிலையாக இந்த உணர்வுகள் தோன்றும்.
3.நமது உணர்வுகள் மிதக்கும் தன்மை அடையும்… அங்கிருந்து பூமியைப் பார்க்கும் சந்தர்ப்பம் உருப் பெறுகின்றது.

உறைந்த பனிகள் கடலாக மாறி… வெப்பத்தினால் ஆவியாக மாறி மேகங்களாகக் கூடுவதும் இதிலே தாவர இனங்கள் உருப்பெறுவதும் தாவர இனங்கள் உருமாறுவதும் அதில் உயிரினங்கள் உணவாக உட்கொண்டு அது அது சேர்த்த நிலைகள் கொண்டு தன்னை வளர்த்திடும் நிலையாக… இதையெல்லாம் கண்டறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நாம் நுகர்வோமென்றால் அவன் கண்ட பேருண்மையை நமக்குள்ளும் நாம் காணலாம்.

வியாசக பகவான் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.தியானத்தில் அமர்ந்துள்ள அனைத்து உயிராத்மாக்களும் வியாசக பகவானின் உணர்வுகள் பெற்று
2.வியாசகரின் அருள் ஞானமாகத் தனக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றிப் பேருண்மையின் உணர்வை உணர்ந்து
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளைப் பின் வந்த அரசர்கள் யாக வேள்விகளை நடத்திச் சிலைகளை உருவாக்கி உணர்வின் தன்மை பதிவாக்கி பதிவின் அலைகள் மனிதனுக்குள் உருப்பெறச் செய்தார்கள்.

அந்த மனிதன் உடலை விட்டு அகன்ற பின் அதே உணர்வின் அலைகள் இங்கே படர்ந்திருப்பதும்… அதே தெய்வத்தினைப் பக்தி கொண்டு செல்வோர்கள் எண்ணி ஏங்கும் பொழுது… அந்தச் சிலையின் உணர்வைத் தனக்குள் வளர்க்கப்பட்டு… சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைகளும் அலங்காரங்களும் படங்களாக உருவாக்கப்பட்டு அதனின் உணர்வலைகளாக வெளிப்படும் பொழுது… “அதனை மீண்டும் குவித்து” டிவிக்களில் நாம் உருவங்களாகக் காணுவது போன்று காணலாம்.

அதாவது… மனிதனுக்குள் பக்தி என்ற உணர்வை வளர்த்து எந்தச் சிலையை உருவாக்கினோமோ அதனை மனிதனின் உடலில் எந்தப் பக்தி கொண்டு எடுத்தார்களோ அது எல்லாமே “அலைகளாக இன்றும் உள்ளது…”

உதாரணமாக “முருக பக்தி கொண்டு” உடலை விட்டு வந்த அந்த உணர்வலைகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை
1.இப்போது நீங்கள் வானை நோக்கி எண்ணி…
2.ஆறாவது அறிவின் உணர்வாக வளர்த்துக் கொண்ட அந்த முருகனைக் காண வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.
3.அந்த அலைகள் குவிந்து முருகனாகக் காட்சி தெரியும்… மேல் நோக்கிப் பாருங்கள்.

“காட்சி…” என்றால் மனிதனுக்குள் எந்தெந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு இந்தப் பூமிக்குள் அலைகளாகப் பரப்பப்பட்டதோ “அதைக் குவிக்கப்படும் பொழுது”
1.அந்தந்த உருவங்களை மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது
2.டிவிக்களில் காணுவது போன்று குவிந்து உருவமாகக் காட்டும்.

வியாசகரும் அகஸ்தியரும் வானுலக ஆற்றலைத் தனக்குள் வளர்த்து இந்த உண்மையின் தன்மை உணர்த்தி அவர் உடலில் பெருக்கப்பட்டு அருள் ஞான ஒளியாகக் கண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் எடுக்கப்படும் பொழுது… வியாசகர் கண்ட உணர்வுகள் “பூமி விஷத்தின் தன்மையால் சுழல்வதும்… துருவப் பகுதி வழி கவர்வதும்… உணர்வுகள் தனக்குள் மாற்றம் அடைவதும் தாவர இனங்களாக உருப்பெற்றதும்… அதை மற்ற உயிரினங்கள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும்…” காண முடிந்திருக்கும்.

இந்த்த் தியானம் இருக்கும் பொழுது மேரு என்ற மலையை மத்தாக வைத்து என்று சொல்லும் பொழுது இந்தப் பூமியினுடைய இயக்கத்தைச் சிலர் காட்சியாகப் பார்த்திருக்கலாம்.

இது எல்லாம் வியாசகர் அன்று கண்டறிந்த உணர்வுகள்…!

அகஸ்தியன் கண்டறிந்த அலைகளை அவன் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களைக் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வை… அக்கால மொழி கொண்டு வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.

ஆகவே நாம் காண வேண்டியது எது…?

அகஸ்தியன் துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்… ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.

இவ்வாறு எண்ணி ஏங்கப்படும் பொழுது
1.துருவ மகரிஷியாகும்போது கணவனும் மனைவியும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பாய்ச்சி இருவரும் பரிமாறிக் கொண்டதை
2.அவர் உடலிலிருந்து அந்த அலைகள் வந்து படர்ந்து இருப்பதை நாம் காண்போம்.

வானை நோக்கி உற்றுப் பாருங்கள்…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளைப் பரப்பும் பொழுது
1.அந்தக் காலத்தில் வாழ்ந்த அவர்கள் உடலின் அமைப்பு
2.அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக அவர்களுக்குள் இணைந்து ஒளியின் சரீரம் பெற்று எங்கே நிலை கொண்டார்களோ அந்த எல்லைக்குச் சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்றதையும் நீங்கள் காணலாம்.

துருவ மகரிஷியும் அவருடன் இணைந்த அருந்ததி அக்காலத்தில் வாழ்ந்த நிலைகளும்
1.அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரமாகத் துருவப் பகுதி வழியாகச் சென்றதைக் காணலாம்.
2.துருவ நட்சத்திரத்தினுடைய ஒளியையும் காண முடியும்.

இந்த உணர்வினைப் பதிவாக்கிக் கொண்ட பின்…
1.துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இரவிலே படுத்தால்
2.அந்த உணர்வுகள் கலந்து உயிருடன் ஒன்றிப் பெருகி… அந்த உணர்வின் ஆற்றலைப் புலனறிவிலே காண முடியும்.

ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு கவர்ந்து நம்மை எப்படிக் காணச் செய்கின்றார்களோ… இதைப் போலத்தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலில் இருந்து வெளி வந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாற்றி வைத்துள்ளது… நாமும் அதைக் காண முடியும்.

1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வை எமக்குள் பதிவாக்கி உணர்வின் நினைவை எடுக்கச் சொல்லி
2.அருள் ஞான வித்தாகக் கேட்போருக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து வினைக்கு நாயகனாக ஆக்கி
3.நினைவு கொள்ளும் பொழுது படர்ந்திருக்கும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து கண் புலனறிவில் நிச்சயம் காண முடியும்.

இருந்தாலும்… சில உண்மைகள் படக் காட்சிகளாகத் தெரிய ஆரம்பித்தால் திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது உருவத்தைக் கண்டால் அஞ்சி ஓடுவோர் பலர் உண்டு.

பயத்தின் நிலை அடைந்து விடுவார்கள். ஆகையினால் அத்தகைய உணர்வின் தன்மை காட்சியாகக் கிடைக்கக் கூடாது என்பதற்கும்
1.ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வினை உங்களுக்குள் வளர்ப்பதற்கும் தான் இதைச் செய்வது.
2.சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று யாரும் எண்ண வேண்டாம்.
3.நாம் காண வேண்டியது… பெற வேண்டியது… உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிடும் திறனைப் பெறுவது தான்

மனிதனின் கடைசிக் கடமை அது தான்…!