உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று காட்டியது “சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்…”

உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று காட்டியது “சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்…”

 

“கண்ணன் கீதா உபதேசம் செய்தான்…” என்றால் நாம் ரோட்டில் செல்லும் பொழுது இங்கே பள்ளம்… இங்கே மேடு… இது தீமையானது… இது கெட்டது…! என்று கண்கள் தான் நமக்கு வழி காட்டுகின்றது.

இதனால் தான் கீதையிலே கண்ணன் அர்ஜுனனுக்கு வழி காட்டிச் செல்கின்றான் என்று சொன்னது. கண் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றான்…?

இங்கே மாடு வருகிறது… இங்கே மனிதன் வருகின்றான்… அவன் தகாத செயலைச் செய்கின்றான்.

நாம் காரை ஓட்டிச் செல்லும் பொழுது எத்தனையோ சந்தர்ப்பங்களைப் பார்க்கின்றோம். ஒருவன் குறுக்கே வருகின்றான்… அவன் மேல் மோதிவிடுவோம் என்று இந்தக் கண் தான் நமக்கு உபதேசிக்கின்றது. ஆகையினால் வண்டியை நீ இப்படி ஓட்டு…! அந்த உணர்வின் இயக்கமாக அங்கங்களை இயக்குகிறது.

நம்முடைய கண் பார்க்கின்றது அந்த உணர்வை இழுக்கின்றது சுவாசிக்கச் செய்கின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் இயங்குகிறது. நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது இயங்கினாலும் இந்த உணர்வுகள் இங்கே வடிகட்டப்படுகின்றது.

இதைப் போல அவன் கொடுக்கும் உபதேசத்தின் தன்மையை
1.தன்னைக் காக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.
2.ஆனால் ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கும்போது அவனைத் தாக்கும் நிலைகளுக்கே என்னை அழைத்துச் செல்கின்றது.
3.அந்த நேரத்தில் அழிக்கும் நிலையாக நல்லதைச் சிந்திக்க முடியாதபடி அந்த வேதனையால் என் நல்ல குணங்களையும் அது அழித்து விடுகின்றது.

ஆகையினால் கீதையில் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். விநாயகர் தத்துவத்தில் நீ அதைச் சுவாசிக்கின்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவாகின்றாய்.

இது தான் ருத்ரதாண்டவம்…!

தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இங்கே எப்படி அங்கங்கள் துடிக்கின்றதோ இதைப் போல
1.நீ எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அங்கங்கள் எப்படிப் பாசமாக அணைக்கின்றதோ…
2.நீ எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படி…? என்ற நிலையும்…
3.நடனத்தைப் பற்றி… அபிநயம் – தான் எடுத்துக் கொண்ட இனிமையின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
4.நரம்பியல்கள் – நாதத்தின் தன்மை கொண்டு எப்படி இயங்குகின்றது…? என்பது தான்.

அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலையும்… ஒரு தாவர இனத்திற்குள் தான் எடுத்துக் கொண்ட மணமும்… அந்த உணர்வின் தன்மை மோதும் பொழுது இலையின் ரூபங்களும்… நாதத்தைப் பற்றி… நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் காட்டி இருக்கின்றார் என்றால் “ஒலி ஒளி என்பதற்குள் உட்பொருள் எவ்வளவோ அடங்கியுள்ளது…”

ஒலியைப் பற்றிப் பல வியாக்கியானங்கள் செய்யலாம் இந்த உணர்வுகள் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்ற மெய் ஒளியைக் காட்டியது “சிதம்பரம் என்ற இந்த ஸ்தலத்தில் தான்…”

1.விண்ணிலே தோன்றிய உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது
2.அங்கே ஓங்காரமாகிப் பல நிலைகளாகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்கினாலும்
3.தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்டவுடன் இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்
4.அதைச் சுவாசிக்கும் உயிரணுக்களுடைய இயக்கமும் அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
5.இந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருவமும் உருமாற்றமும் அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்
6.அந்த உணர்வின் ஒலி கொண்டு ஒளியாக நீ எவ்வாறு ஆக வேண்டும்…? என்று
7.திருமூலர் பாடிய இந்த ஸ்தலத்தின் உண்மைப் பொருளை நாம் இன்றும் காண முடியாத நிலையில் இருக்கின்றோம்.

நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply