பிறவியில்லா நிலை அடைவதற்கு ஓசான் திரையின் முக்கியத்துவம் என்ன…?

பிறவியில்லா நிலை அடைவதற்கு ஓசான் திரையின் முக்கியத்துவம் என்ன…?

 

அதிகாலை துருவ தியானத்தில் நாம் சக்தி ஏற்றிக் கொண்ட பின்… நாம் எதைத் தியானித்தோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு நம் குடும்பத்தைச் சேர்ந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை எளிதில் விண் செலுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் உயிரான்மாக்களை இணையச் செய்தபின் இந்த உணர்வுகள் பட்டு அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. “ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்…”

இதைக் கரைத்து வெளி வருவது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது. அது வரப்படும் பொழுது
1.இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை
2.அந்த விஷத்தை அது கவர்ந்து சென்று விடுகின்றது… ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை நாம் வேக வைக்கின்றோம். விஷத்தின் தன்மை பிரிந்து சென்ற பின் இதே சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

ஆனால் இது இயற்கையில் விளைந்த உணர்வாக இருந்தாலும் “வேக வைத்து நாம் நீக்கினாலும்…”
1.எதன் கலவையுடன் இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்தி நாம் அதை உணவாக உட்கொண்டால்
3.அந்த உணர்வின் தன்மை இழுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்கள் ஆக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து நமக்குள் அதை வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அணுக்களாக்கப்படும் போது அதை நமக்குள் உருவாக்கி
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலைகொண்டு அந்த அணுக்கள் மாற்றமடைகின்றது.

இதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும் சூரியனுடைய காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது. ஆனால் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலை சூரிய உதயத்தில் அது வரப்படும் பொழுது ஓசோன் திரை அதைக் கவர்ந்து கொள்கிறது.

காரணம் ஓசோன் திரை என்பதே “விஷத்தின் அடர்த்தியாகி… தன்னுடன் விஷத்தை இணைத்துக் கொள்வது தான்…!”

சூரியனிலிருந்து மற்ற பிரபஞ்சத்திலிருந்து வரக்கூடியது எல்லாம் பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியான பின் தான் விஷத்தன்மை உட்புகாது தடுக்கப்படுகின்றது… அதுதான் ஓசோன் திரை.

சூரியனிலிருந்து வரக்கூடியது அல்ட்ரா வைலட்… அதுவும் விஷத்தின் தன்மை கொண்டது தான். அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக்கதிர்கள் வெகு தூரத்தில் இருப்பதையும் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது.

நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத் தன்மைகள் பிரிகின்றது. ஆனாலும் இந்த மோதலில் (வெப்ப) மின் அணு போன்று ஆகும்பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மையை அடைகின்றது.

இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் நிலைகளில் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக (ஓசான்) ஆனபின் நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற உயிரினங்கள் வாழும் தகுதி பெறுகின்றது.
1.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும்
2.தனக்குள் அடக்க சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்றுதான் இதனின் உணர்வுகள்… இந்த பிரபஞ்சத்தை விட்டு உயிரான்மா வெளி சென்றபின்
1.உடல் பெறும் உணர்வுகள் அந்த ஓசான் திரையுடன்… அதனுடைய அடர்த்தியில் கலந்து விடுகின்றது.
2.இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் (விஷம் வடிகட்டப்படவில்லை என்றால்)
3.மீண்டும் இந்த உயிரின் தன்மை அதனின் உணர்வு தொடர் கொண்ட உடலைத்தான் உருவாக்கும்.

அதாவது… இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உடலாகத் தான் மீண்டும் உருவாக்கும். பிறவா நிலை பெறுவதில்லை.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும்போது பிறவியில்லா நிலை அடையும் தகுதி இழக்கப்படுகின்றது

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும்போது பிறவியில்லா நிலை அடையும் தகுதி இழக்கப்படுகின்றது

 

பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்றபின் விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் இந்த பூமியில் இன்று பரவிக் கொண்டுள்ளது.

1.பக்தி மார்க்கங்களிலும் கடவுளை வணங்குவது எல்லாம் இந்த உடலுக்கு வேண்டிய சுகத்திற்குத் தான்.
2.இந்த உடலில் வரும் தீமைகளை மாற்ற அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்றால் அதை யாரும் எடுப்பதில்லை.
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் பொழுது இந்த வாழ்க்கையில் வரும் குறைகளை நீக்கும்…
4.அதே சமயத்தில் அந்த ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளரும் என்ற நம்பிக்கை யாருக்கும் வருவதே இல்லை.

விஞ்ஞான அறிவால் இன்று பல ஆடம்பரப் பொருட்களை விரும்புகின்றோம். அதன் வழி கொண்டு செயல்பட்டாலும் டி.வி. மற்ற தொலைத் தொடர்பு உபகரணங்களை நாம் உபயோகப்படுத்தும் பொழுது உலகம் முழுவதும் நடக்கும் அசம்பாவிதங்களைப் படமாக்கி அதை உடனுக்குடன் காட்டுகின்றனர்.

ஒரு கர்ப்பமுற்ற தாய் இதையெல்லாம் உற்றுப் பார்க்கும் நிலை வந்தால் குறிப்பாக… “ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் இதை நுகர்ந்தால்…” அந்த குழந்தையின் உடலிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

அங்கே சிதைந்த உணர்வுகள் டி.வி. மற்ற சாதனங்கள் மூலமாக இங்கே வருகின்றது. சிதைந்திடும் உணர்வுகள் இந்தக் குழந்தையிடமும் விளைகின்றது கருவிலேயே…!

இதைப் போன்று நம்மை அறியாத நிலையில் எத்தனையோ வருகின்றது.

இவ்வாறு ஒளி ஒலி அலைகளை அடிக்கடி இப்படி ஒளிபரப்பு செய்கின்றனர். எங்கே சிதைந்த உடலிலிருந்து அந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ அந்த உணர்வலைகளை நுகரும் தன்மை வருகின்றது.

இன்று எங்கேயோ நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும் வீட்டில் இருந்தபடியே உடனடியாக இங்கே அந்தச் செய்திகளைப் பார்க்கவும் படிக்கவும் பல பிரதிகள் (COPY) எடுக்கவும் முடிகின்றது… மற்றவருக்கு அனுப்பவும் முடிகிறது.

காரணம்… காற்றின் அழுத்தத்தால் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைகளை வைத்து மாற்றிக் கொண்டு வருகிறார்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற தொடர்வரிசை கொண்டு இதே அழுத்தங்களை எண்ணப்படும் பொழுது அந்த அழுத்த உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்காக மனிதனுடைய படத்தையே அங்கு காட்டுகின்றது.

உலகெங்கிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒரு நொடிப் பொழுதில் இங்கே கிடைக்கும்படி செய்கின்றார். ஆக மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறு நாம் செய்தாலும் அது மனிதனுக்கு “எவ்வளவு பெரிய தீங்கு விளைவிக்கின்றது…?” என்ற நிலைகளை நாம் மறந்துவிட்டோம்.

1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வரும் பொழுது மனித உடலின் இச்சைதான் வருகின்றது
2.மனிதனின் கடைசி எல்லை – பிறவியில்லா நிலையை அடைய முடியாதபடி இழக்கப்படுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு அவன் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் வழிப்படி நாம் அதைப் பெற முடியும்.

அதிகாலை துருவ தியானத்தில் இதைத் தெளிவாக அதை எடுத்துக் கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து
1.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டுமென்று என்ற நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
2.அதே போல் மனைவியும் தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தி
3.இரு உயிரும் உணர்வின் தன்மை ஒன்றிணைக்க அவசியம் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் மூலம் அருள் உணர்வைப் பெற்றுத் தங்களைச் சார்புடையோர் நிலைகள் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்துதல் வேண்டும்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும். அவர்கள் முன் சென்றால் நாமும் பின் செல்ல முடியும்

இறந்த உயிரான்மாக்களை எண்ணி இழுக்கக்கூடாது… உந்தித் தள்ள வேண்டும்…!

இறந்த உயிரான்மாக்களை எண்ணி இழுக்கக்கூடாது… உந்தித் தள்ள வேண்டும்…!

 

உதாரணமாக உடலை விட்டுப் பிரிந்தவர்கள் (இறந்த உயிரான்மாக்கள்) இன்னொரு உடலுக்குள் போவதற்கு முன்
1.அந்த 48 நாள்களுக்குள் உணவைப் படைத்து (படையல்) அவர்களை நாம் அழைத்தோம் என்றால்
2.மந்திர தந்திரக்காரர்கள் அதைக் கவரும் வாய்ப்புகள் வருகிறது.

காரணம்… முதல் அமாவாசை அன்று மந்திரவாதிகள் வருவார்கள். இது எல்லாம் அரசர் காலத்தில் செய்யப்பட்ட முறைகள். வழி வழி இன்றும் வருகிறது.

குடுகுடுப்புக்காரனை எடுத்துக் கொண்டால் பார்க்கலாம்… இரவிலே மண்ணை எடுத்து ஜெபிப்பார்கள். உடலில் பட்ட உணர்வுகள் மண்ணிலே பதிந்திருக்கும்.

வாசல்படி மண்ணை எடுத்துக் கொண்டு போய் உணர்வின் தன்மை அறிந்து கொள்வார்கள். காலையில் வந்தவுடனே உங்கள் குடும்பத்தில் இன்னது நடந்தது… இன்னது நடக்கும்…! என்றும் சொல்வார்கள்.

ஆனால்
1.பழைய துணியைத் தான் கேட்பார்கள். தலை முடியையும் கேட்பார்கள்.
2.இது சம்பந்தப்பட்ட ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்துவார்கள்.
3.வியாபார நிலைகளுக்குப் பயன்படுத்துவார்கள்.
4.மந்திர தந்திரங்கள் செய்வோர் இதன் வழியில் தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆகவே… நாம் அந்த ஆன்மாக்களை மோட்சத்திற்கு அனுப்புவதில்லை.

அமாவாசை அன்று (இருளான நாளில்) இங்கே நாம் அழைப்போம். மண்ணையும் துணியையும் முடியினையும் எடுத்துக் கொண்டவர்கள் மந்திர ஒலி கொண்டு ஜெபிப்பார்கள்.

1.நாம் பாசத்தால் கூப்பிடும் போது அந்த உணர்வின் தன்மை வைத்து
2.ஆன்மாவை இழுத்து அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்.

“பௌர்ணமி நாளன்று…” குடும்பத்தைச் சேர்ந்தோர் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் குடும்பத்தில் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளுங்கள்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அந்த ஆன்மாக்களை அங்கே கலக்கச் செய்யுங்கள். இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லா நிலையை அடையச் செய்யுங்கள்.

சப்தரிஷி மண்டலத்தின் உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆன்மாக்களை (சூட்சம சரீரத்தை) அங்கே ஏவிவிடலாம்.

சப்தரிஷி மண்டலத்தின் அருகில் சென்ற பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகிறது. நாம் எடுத்துப் பாய்ச்சிய அறிவின் நிலைகள் உயிருடன் ஒன்றுகின்றது.

இப்படி…
1.நம் முன்னோர்கள் முதலில் சப்தரிஷி மண்டலத்திற்குச் சென்றால்
2.அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கும் போது துரித நிலைகள் கொண்டு நம் எண்ணங்கள் அங்கே செல்கிறது.
3.அதனின் உணர்வின் துணை கொண்டு தீமைகளை அகற்றும் சக்திகளை எளிதில் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வாக… நாம் அதுவாக ஆகவேண்டும்

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வாக… நாம் அதுவாக ஆகவேண்டும்

 

எம்மைச் (ஞானகுரு) சந்திக்க வருபவர்கள் “சாமி… ஏதோ வரம் கொடுக்கின்றார்…” என்று அத்தகைய பழக்கத்தில் தான் வருகின்றார்கள். என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டதே… எனக்குக் கஷ்டம் வந்து விட்டதே…! என்று வேதனையுடன் அழுகைக் குரலுடன் கஷ்டத்தைத் தான் சொல்கின்றார்கள்

1.யாம் சொல்வதை நிதானமாகக் கேட்டு…
2.கொடுக்கும் உபதேசத்தை ஏற்றுக் கொண்டு அதைப் பதிவாக்கும் நிலையில் இல்லை.

அந்த அளவிற்குச் சில பேர் வருகின்றார்கள்.

யாம் திரும்பச் சொன்னாலும் கூட இல்லைங்கே… என் கஷ்டம் அப்படியே இருக்கின்றது… அதனால் தான் சொல்கிறேன்…! என்று சொல்கின்றார்கள்.

கஷ்டத்துடன் வரப்படும் பொழுது… அதை நீக்கும் உபாயங்களை யாம் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பண்புகள் அங்கே வராது போய்விடுகின்றது.

இது போன்ற துன்ப நிலையிலிருந்து நீங்கள் விடுபடுதல் வேண்டும் என்பதற்காகத்தான் காலை துருவ தியானத்தைக் கொடுத்துள்ளோம். அதன் மூலம் அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பெற்று யாம் பதிவு செய்ததை நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குள் வரும்.

அதே சமயத்தில் துருவ மகரிஷி வாழ்ந்த காலத்தில் அவனின் உணர்வுகள் இங்கே படர்ந்துள்ளது.
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து
2.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.இந்த இரண்டையும் எண்ணி இந்த உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதற்குப் பின் எந்த நல்ல காரியமோ அது நடைபெற வேண்டும் என்று எண்ணுங்கள். அந்த உணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டு அந்தக் காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லுங்கள்… அது செயல்படும்…!

காரணம் இயற்கையின் பல பேருண்மைகளையும் கால்நடையாக அலைந்து திரிந்து… மனித உடலின் செயலாக்கங்களை எல்லாம் உணர்ந்து அந்த மகரிஷிகள் சக்தி நீங்கள் பெற முடியும் என்று உங்களை நம்பச் செய்கின்றோம். ஆனால் நீங்கள் உங்களை நம்ப மறுக்கிறீர்கள்… இன்னும் நம்பாது தான் இருக்கின்றீர்கள்.

அதே சமயத்தில்… அது வரும் சொத்து வரும் செல்வம் வரும் இப்படிச் செய்தால் உனக்கு எல்லாம் கிடைக்கும் என்று பணத்தை மட்டும் அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு அவன் சொல்லைக் கேட்டு அதன் வழி தான் நடக்க முற்படுகின்றனர்.

அதை எல்லாம் விடுத்துவிட்டு
1.இங்கே கொடுக்கும் அருள் ஞானிகளின் உணர்வை வலுவாக எடுத்துப் பாருங்கள்
2.கடும் தீமைகளையும் உங்களால் அகற்ற முடியும்
3.அருள் ஒளியை உங்களுக்குள் வளர்க்க முடியும் அறியாது வரும் இருளையும் போக்க முடியும்
4.உங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையிலும் இருள்கள் போகும் அதைப் போக்க முடியும்
5.நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாற வேண்டும்… துருவனாக மாற வேண்டும்…
6.துருவ நட்சத்திரமாக அந்த ஒளியின் சுடராக அந்த உணர்வின் ஒளி அலைகள் பாய வேண்டும்.

என்றும் பிறவியில்லா நிலை அடைந்த அந்த சப்தரிஷிகளின் உணர்வை வளர்த்து
1.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வாக… நாம் அதுவாக ஆகவேண்டும் என்ற நிலையில்
2.அந்த எல்லையை அடைவதற்கு ஒவ்வொருவரும் இதைச் செயல்படுத்துங்கள்.

உயிருடன் ஒன்றி என்றும் ஒளி என்ற உணர்வுகளை உருவாக்கும் நிலை தான் கல்கி

உயிருடன் ஒன்றி என்றும் ஒளி என்ற உணர்வுகளை உருவாக்கும் நிலை தான் கல்கி

 

இந்த உடலில் சிறிது காலமே நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த உடலும் சொந்தமில்லை. இதிலே தேடிய செல்வமும் சொந்தமில்லை. காரணம்…
1.செல்வத்தைத் தேடிய பின் உடலில் முதுமை அடையப்படும் போது கவலையும் வேதனையும் தான் வருகிறது.
2.தன் பையன் என்ன செய்யப் போகின்றான்..?
3.இவ்வளவு பொருளையும் விட்டுவிட்டுச் செல்கிறேன்… என்ன ஆகப் போகிறதோ…? என்ற
4.இந்த உணர்வின் பற்று தான் வருகிறது… அந்த நினைவுடனே இந்த உயிர் உடலை விட்டுச் செல்கிறது.

பின் யார் மேல் எந்தப் பற்று வருகிறதோ மீண்டும் பிறவிக்கே வருகிறது. இவரின் உடல் கூட வருகிறதா என்றால் இல்லை.
1.இவர் தேடிய ஆசையின் உணர்வே கூடச் செல்கிறது.
2.அந்த உணர்வு கொண்டு தான் அடுத்த உடலாக மாற்றுகிறது
3.மீண்டும் அதிலே வேதனையைத் தான் தேடுகிறது.

ஆகவே நாம் இப்போது ஆசையின் நிமித்தம் கலியில் சிக்கி மீண்டும் உடல் நிலையே பெறுகின்றோம்.

இதிலிருந்து விடுபடும் நிலையாக இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

நாம் பல கோடி உடல்களில் சேர்த்துக் கொண்ட “கார்த்திகேயா…” எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு… தீமை என்ற நிலைகள் புகாதபடி தணித்துக் கொள்ளும் சக்தி தான் ஆறாவது அறிவு.

1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் “வள்ளி…” அந்த வலிமையான சக்தியின் துணை கொண்டு
2.வலிமை பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிரிலே படும் போது
3.அது தெய்வ ஆணையாகத் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளாக உடலுக்குள் வருகிறது.

ஆக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் நம் உயிரிலே அது கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம் வாழ்க்கையை அமைக்கின்றது.

நாம் பெற்ற இச்சைகள் நம் உடலில் கிரியையாகி அந்த ஞானத்தின் வழியாக நம் வாழ்க்கை அமைந்து உயிருடன் ஒன்றிய ஒளியாகப் பிறவி இல்லா நிலை அடைவதே கல்கி… கடைசி நிலை.

உடல் என்ற ஆசை வராதபடி என்றுமே இந்த உயிர் எல்லா உலகையும் காட்டுவதற்கு எல்லா உணர்வையும் ஊட்டியது. ஆகையினால் அந்த உயிரைப் போன்று உணர்வின் ஒளியாக நாம் மாறுதல் வேண்டும்.

1.நாம் உயிருடன் என்றுமே ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும்
2.உடலான நிலைகள் மாறி அந்த ஒளியான நிலைகள் பெற வேண்டும் என்பது தான் நம் குரு காட்டிய அருள் வழி.

அதனால் அதை நாம் உருவாக்குவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

இதைப் படிப்போர் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தி பெற்று… கலியை அகற்றிக் கல்கியாக மாறி… ஆனந்த நிலை பெற்று… என்றும் ஏகாந்த நிலை பெற எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

கலி எது..! கல்கி எது…?

கலி எது..! கல்கி எது…?

 

வீட்டிற்குள் பாம்பு வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐயோ பாம்பு வந்து விட்டதே…! கடித்து விடுமே… கடித்து விடுமே… சொல்லிக் கொண்டு இந்த உணர்வு அதிகமானால் பாம்பின் நினைவே வருகிறது.

“கலி” என்ற இந்த உணர்வுகள் அதிகமானபின் அதன் உணர்வை எடுத்து மனிதனாக இருக்கும் நாம் அந்த உடலுக்குள் சென்று விடுகிறோம். பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று அடுத்துப் பாம்பாகத் தான் பிறக்க நேரும்.

ஒரு மாட்டினை வளர்க்கின்றோம். மனிதனுடைய உணர்வைக் கூர்மையாகப் பார்க்கின்றது. அது தனக்குள் இதை எடுத்துக் கொண்டால் கலி தான்.

மனிதனுடைய உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டபின் நம்மை ஏங்கியே அந்த மாடு இறக்கப்படும் பொழுது யார் மேல் பிரியமாக இருந்ததோ இறந்த பின்… வளர்த்த அந்த உடலுக்குள் செல்ல நேர்கிறது.

எனேன்றால் வளர்த்த ஆர்வத்தில் “நான் செல்லமாக வளர்த்தேனே… நான் சொன்னபடி எல்லாம் கேட்டதே…!” என்ற மனிதனின் உணர்வு வரும் போது அதனின் அறிவாக மாறுகின்றது. மாடு இறந்த பின் நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. அது மாட்டிற்குப் பரிணாம வளர்ச்சி.

நாயோ கோழியோ ஆட்டையோ வீட்டில் நாம் செல்லப் பிராணிகளாக வளர்த்தாலும் மனிதனின் உணர்வு அதற்குள் வளரப்படும் பொழுது இறந்தால் மனிதனுக்குள் வருகின்றது. இதுவும் கலி தான். ஆனாலும் அவைகள் எல்லாம் பரிணாம வளர்ச்சி அடைகிறது.

உதாரணமாக… மனிதனாக இருக்கும் நாம் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம் என்றால் அந்த உணர்வை இரக்கத்துடன் நுகர்ந்தால் நமக்குள் அதே நோய் வரத் தொடங்குகிறது. நாம் தேய் பிறையாகின்றோம். இதுவும் கலியாகத் தான் ஆகிறது.

ஆனால் அந்த நேரத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று துவாரகா யுகத்தில் சேர்க்கப்படும் பொழுது
2.நாம் எந்த நல்ல குணத்தால் நோயாளியை உற்றுப் பார்தோமோ அவரின் வேதனை நமக்குள் சேராதபடி
3.அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
5.எந்தக் குணத்தின் மணத்தை உருவாக்கி அந்த எண்ணங்கள் வந்ததோ
6.அதில் அந்த அருள் ஞானத்தின் உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது இது “கல்கி” ஆக மாறுகிறது.
7.இருளை நீக்கும் அணுவின் தன்மையாக ஒளியாகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஏனென்றால் திரேதாயுகம் (உடல்) என்று இருந்தாலும் துவாரகா யுகத்தில் “வேதனை” நமக்குள் வலுவானால் கலியாக மாற்றி நல்ல உடலின் ரூபத்தையே மாற்றி விடுகின்றது.

1.ஆனால் அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமென்றால் கல்கி ஆகின்றது
2.உயிர் கல்கி… நாம் நுகரும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் உயிரைப் போன்றே ஒளியாக மாற்றிக் கொண்டு வருதல் வேண்டும்.

மனிதன் கனியாக ஆன… துருவ நட்சத்திரமான அந்தக் கல்கியை நாம் பெற வேண்டும் என்று தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு வருவது (ஞானகுரு).

சிறு சிறு திரைகள் நமக்குள் ஒவ்வொன்றிலும் உண்டு. நல்லதை மறைக்கும் அந்தத் திரைகளை நீக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் கனியாக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு நாளும் இந்த உணர்வின் தன்மையை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.
2.நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வையும் ஒளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொன்றிலும் நாம் இணைத்தால் தான் கல்கி. அதைச் சேர்க்கவில்லை என்றால் கலி தான்.

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

 

நாம் யாரும் தவறு செய்யவில்லை. பிறருக்கு நாம் பல நன்மைகளைச் செய்து இருக்கின்றோம். ஆனால் நாம் நன்மை செய்த நிலைகள்…
1.அந்த உதவி செய்த நன்றிக்காக நண்பன் உடலை விட்டுப் பிரியும் போது
2.நம் மேல் பற்று கொண்டு அந்த ஆன்மா பிரிந்து விட்டால்
3.அந்த ஆன்மா நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் வந்துவிடும்.

நண்பனை நாம் உடலுடன் எப்படிப் பார்த்து உதவி செய்தோமோ அதே போல் நமக்குள் வந்தாலும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் என் உடலில் உள்ள அந்த ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.இந்த நண்பன் நம்முடன் ஒன்றி வந்தாலும்
2.அந்த நண்பனிடத்தில் விளைந்த தீய வினைகள் நம்மிடத்தில் விளையாது நம்மையும் காக்கலாம்
3.அந்த நண்பனின் உயிர் ஆன்மாவையும் பிறவியில்லா நிலை அடையச் செய்யலாம்.

அதாவது உங்களின் நிலையிலிருந்தே அந்த ஆன்மாவை உயர்ந்த நிலை பெறச் செய்ய முடியும்

ஒவ்வொரு நாளும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

அந்த இன்னொரு உடலில் தான் வாழும் போது குடும்பத்தில் சங்கடத்தினாலோ வெறுப்பாலோ வேதனையாலோ உருவான உணர்வுகள் அங்கே எப்படி நோயாக விளைந்ததோ… அந்த உடலை வீழ்த்தியதோ… அதே சமயத்தில் “உதவி செய்தான் நண்பன்…!” என்ற எண்ணத்துடன் பற்று கொண்ட நிலையில் அந்த ஆன்மா நம்முள் வந்தாலும் அதைப் போன்ற தீமைகளை அகற்ற சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ண வேண்டும்.

அவ்வாறு பல முறை செய்யச் செய்ய நம் உடலில் இருக்கக்கூடிய நண்பருடைய உயிரான்மா நமக்குத் தீமை விளைவிக்காது அதற்கும் அந்த நன்மைகளைப் பெறச் செய்கின்றது,

ஆகவே பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தாலும் அந்தக் கஷ்டத்தை உருவாக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளையாது தடுக்க…
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பத்திரிக்கை வாயிலாகப் படித்துணர்ந்த நிலையில்
4.அது நமக்குள் தீமை விளைவிக்கும் வித்தாக விளைந்திடாது தடுக்கவும் நம்மைக் காத்திடவும் முடியும்.

ஆகவே மேல் அழுக்கைப் போக்க நீரை ஊற்றி எப்படிக் குளிக்கின்றோமோ… தங்கத்தில் செம்பும் வெள்ளியும் சேர்ந்து விட்டால் திரவகத்தை ஊற்றி எப்படிச் சுத்தப்படுத்துகின்றோமோ… கைகளில் அழுக்குப்பட்டால் சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்துவது போன்று
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நம் உடலுக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீவினைகளை அகற்றி
2.நன்றியின் உணர்வாக எண்ணி… நம்முள் வந்த ஆன்மாக்களுக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைச் செலுத்தி
3.நமக்குள் தீமையாக விளைவிக்காத அதைத் தடுத்து
4.சப்தரிஷி மண்டலத்துடன் அவர்களை இணையும் நிலையைச் செய்வதே நல்லது.

கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

 

பற்று கொண்ட நிலையில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் மனைவியுடைய ஆன்மா பிரியப்படும்பொழுது கணவருடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது… கணவனுடைய ஆன்மா பிரியப்படும் போது மனைவியுடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.
1.உடல் பெறும் உணர்வுகள் இரண்டும் கரைக்கப்பட்டு
2.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
3.விண்வெளியில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
4.பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

அதாவது கணவன் உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா மனைவியின் பால் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனுடைய உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரம் பெற்று விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது துருவ தியானத்தில் இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

உதாரணமாக நெசவு தொழிலில் இருந்த ஒரு குடும்பம் அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவரோ ஆஸ்த்மா நோயினால் மிகவும் அவதிப்பட்டார். எளிய குடும்பமாக இருப்பினும் மனைவி மேல் மிகுந்த பற்றின் தன்மையும் குழந்தை மீதும் பற்றும் வருகின்றது.

இருந்தாலும் அந்த நோயினால் உடலில் வேதனை தாங்காது விஷத்தை உணவாக உட்கொண்டு உடலை விட்டு அந்த ஆன்மா பிரிகின்றது. பிரியும் பொழுது தன் மனைவி நினைவாகவே அந்த ஆன்மா சென்றது… மனைவி உடலுக்குள் சென்று விட்டது.

விஷத்தைச் சாப்பிட்ட பின் அவர் எப்படித் துடிதுடித்தாரோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடிதுடிக்கும் நிலை வந்துவிட்டது.

இரத்த நாளங்களில் அந்த ஆன்மா சுழன்று வரப்படும்போது சிறு மூளை பாகம் சென்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி
அதே உணர்வு
அதே சொல்
அதே செயல் என்று
அந்த உடலை இயக்கி அவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருந்தது

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. சிறிது நேரம் சுயநினைவு இருக்கும் சில நேரம் இருக்காது. ஆனால் இரண்டு நாட்களாக சுத்தமாகவே நினைவு இழந்து விட்டது என்று என்னிடம் (ஞானகுரு) கொண்டு வந்தார்கள்… தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.

ஆவிகளை ஓட்டுபவர்களிடம் நாங்கள் சென்றோம் பணத்தைச் செலவு செய்தோம்… ஒன்றும் ஆகவில்லை. வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வந்து சொல்கின்றார்கள்.

ஆனால் அந்த அம்மாவிற்குச் சுயநினைவுன் இல்லை. அந்தக் குழந்தைகளும் வாடிக் கொண்டிருக்கிறது.

குடும்பத்தைச் சார்ந்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து தியானம் இருங்கள்… என்று சொன்னேன்
1.அந்த அம்மா உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா உயர்ந்த சக்தி பெற வேண்டும்
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மைகள் நீங்க வேண்டும் என்று தியானிக்கும் படி சொன்னேன்.

அதன் வழி அந்தக் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஒரு அரை மணி நேரம் தியானித்தார்கள். அந்த அம்மா சிறிது தெளிவானது.

எழுந்தபின் அந்த அம்மாவையும் இதே போல் சொல்லச் செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்தும்படி சொன்னேன். உடலில் இருந்த அந்த ஆன்மா பரிசுத்தம் அடைந்தது.

பின் நல்ல நிலைகள் ஏற்பட்டுத் தன் குடும்பத்தைப் பேணிக் காக்கும் அளவிலே வந்தது. வாழ்க்கையின் நிறைவில் அந்த அம்மாவும் இறந்தபின்
1.அந்த இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது ஒளிச்சரீரம் பெற்றது

ஆரம்ப நிலையில் யாம் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது 25 வருடங்களுக்கு முன்பு இத்தகைய நிலைகளைச் செயல்படுத்தி வந்தது.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எளிதில் விண்ணுக்கு (சப்தரிஷி மண்டலம்) அனுப்ப முடியும்.

குடும்பமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

 

காலை துருவ தியானத்தின் உடலில் இருக்கக்கூடிய அணுக்கருக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஜீவன் ஊட்டிப் பழக வேண்டும்.

அது அணுவின் தன்மையாக அடைந்தபின் நாம் எதை நுகர வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதை எண்ணி ஏங்கப் படும்போது
1.அது ஞானத்தின் உணர்ச்சிகளாக நம்மை இயக்குவதும் அருள் வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது
2.நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்க தொடங்கி விடுகிறது.

தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விட்டால் இந்த உடலில் ஏற்கனவே உடலின் இச்சை கொண்டு மற்ற அணுக்கள் வளர்ந்திருந்தாலும் அருள் ஒளியின் சுடராக வரப்படும் பொழுது இருள் சூழ்ந்த அந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்து விடுகின்றது.

அது மடியும் தன்மை வரும் போது
1.ஒளியின் அணுவாக மாறுகின்றது… ஒளியாக மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்ற பின்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக ஆகின்றோம்.

உதாரணமாக ஒரு பட்டுப் புழு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் மணத்தால் உருவாகும் அந்த மலத்தை நூலாம்படை போன்று தனக்குள் சுற்றுகின்றது.

தனக்குள் சுழற்றிக் கொண்ட பின் தன்னை அறியாமலேயே ஒரு பாதுகாப்புக் கூடாக அமைத்து விடுகின்றது. அதிலே பாதை இல்லாத நிலைகள் அடைபட்டுக் கொண்டபின் “வெளியே செல்ல வேண்டும்… வெளியே செல்ல வேண்டும்…” என்று உணர்வுகள் உந்துகிறது.

1.தன் உடலில் மலத்தால் கட்டப்பட்ட இந்தக் கூட்டிற்குள் இருந்தே உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து
2.நினைவின் ஆற்றல் வெளியே பறக்க வேண்டும் என்ற உணர்வுகள் முதிர்ந்து “இறக்கைகள்” வளர்கின்றது.

அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த கூட்டைக் கத்திரித்து விட்டு வெளியே வரப்படும் பொழுது அது பூச்சியாக (புழு – பூச்சியாக) வெளி வருகின்றது.

அதனின் நிலைகள் முட்டை இடும் பொழுது இதை உணவாக உட்கொண்ட அதனின் கருவாக தன் இனமாகப் பெருக்குகின்றது. கூடு கட்டி மீண்டும் பறக்கும் பூச்சியாக மாறுகிறது.

இதைப் போலத்தான்
1.அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு நமக்குள் கூட்டைக் கட்டி
2.இந்த உணர்வின் தன்மை அருள் வட்டமாக நம் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.எந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அணுக்கள் விளைந்த பின்
4.கூட்டைவிட்டு (உடலை) வெளியே செல்லும் பொழுது அருள் மகரிஷிகளின் வட்டத்தில் சென்று
5.நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இப்படித்தான் ஒவ்வொரு உடலிலும் முழுமை அடைந்து நாம் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

தியானத்தில் வளர்ச்சி மிக மிக முக்கியமானது

தியானத்தில் வளர்ச்சி மிக மிக முக்கியமானது

 

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானம் செய்வதற்கு முன் இருந்த அனுபவமும் தியான வழிக்கு வந்த பின் பெற்ற சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

அதனை நீங்கள் கூர்ந்து கவனித்து
1.அந்த உணர்வின் இயக்கம் நாம் இயங்குகின்றோமா…?
2.நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா…?
3.அவ்வாறு இயக்கிய உணர்வுகளுக்குத் தக்க நாம் செல்கின்றோமா…? என்று
4.நன்றாக நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றுகிறது. ஆகவே தீமை என்ற உணர்வின் தன்மையை மாற்றியமைக்கக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்பதை உணர்ந்து… மாற்றி அமைப்பதற்குண்டான சக்தியை நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமையிலிருந்து தப்புவதற்கு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை குருநாதர் எனக்குள் பெறச் செய்தாரோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீய வினைகள் இருந்தாலும் குறையும்.
2.புதிதாக தீயவினைகள் நமக்குள் வளராதபடி தடுக்க முடியும்.

இந்த இரண்டும் இல்லை என்று சொன்னால் நான் தியானம் செய்தேன்.. அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்…! என்று சொன்னால் அர்த்தமற்றது.

செடிக்கு அது சரியான பருவத்தில் நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால்தான் அது முளைத்து வளரும்.
1.செடியை வைத்து விட்டேன்… நீரையும் ஊற்றி விட்டேன்…
2.அது வளர்ந்து விளைந்துவிடும்… என்று சொன்னால் அது எப்படி விளையும்…?

எத்தனையோ கோடி உடல்களில் சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு தான் மனித ரூபத்தைக் கொடுத்தது நம் உயிர்.

பல விஷத் தன்மைகளை அடக்கினான்… உணர்வின் தன்மை மாற்றி அமைத்தான்… அகஸ்தியன் ஒளியின் உடல் பெற்றான்… துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும். அந்தத் தகுதியை நாம் பெற வேண்டும்.

அகஸ்தியன் ஒளியாக ஆனது போல
1.நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
2.முந்திய வினைகள் இருந்தால் அதைத் தணித்து… புதிதாக வினைகள் சேராதபடி தடுத்து
3.நம் உணர்வினை வலுவாக்கி ஒளியாக்க முடியும்.

அத்தகைய வலு பெறச் செய்வதற்குத் தான் இங்கே உபதேசம் கொடுப்பது.

சாமியிடம் உபதேசங்களைக் கேட்டதும்… அதன்படி உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டதும்…
1.உங்களை எது இயக்கியது…?
2.வெறுப்பு வந்து குடும்பத்தில் பகைமை எப்படி வந்தது…?
3.தொழில் எதனால் நஷ்டம் அடைந்தது…? என்பதை நீங்கள் உணர்ந்து
4.தியானத்தின் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற தீமையை நீக்கக்கூடிய அந்த உணர்வுகளை
5.நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

அதற்குத் தான் உங்கள் அனுபவங்களைச் சொல்லச் சொல்வது.