மகரிஷிகள் விரும்பும் செயலும்… ஈஸ்வரபட்டர் விரும்பும் செயலும்…!

Sage Agastiyar

மகரிஷிகள் விரும்பும் செயலும்… ஈஸ்வரபட்டர் விரும்பும் செயலும்…!

 

ஈஸ்வரபட்டர் குளவியைக் காட்டுகின்றார். குளவி புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து, தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு புழுவைத் தாக்கித் தன் இனமாக மாற்ற விரும்புகின்றது. காட்டிற்குள் இதையெல்லாம் காட்டுகின்றார்.
1.அதாவது மகரிஷிகள் ஒளியாதவற்கும்
2.தன் இனமாக (மகரிஷிகளாக) மாற்ற விரும்பும் நிலையையும், அங்கே காட்டுகின்றார்.

உயிரினங்களில் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில்
1.இனச் சேர்க்கை வேறு.
2.இனத்தை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் வேறு.

குளவி தனக்குள் எண்ணிய உணர்வின் தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூடாகக் கட்டி அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது தன் உணர்வின் இயக்கங்களை அதன் மேல் தாக்குகின்றது.

இதற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை தாங்காது புழுவுக்கு அந்தக் குளவியின் நினைவே வருகின்றது. புழுவின் உணர்வுகளுக்கு அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அதிலே பதிந்து விடுகின்றது.

1.அப்பொழுது திடீரென்று ஓங்கி எம்மை (ஞானகுரு) அடிக்கிறார் குருநாதர்.
2.அடித்தவுடன் குளவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது
3.”குருநாதர் மேல் திருப்பம் வருகின்றது…!”

அந்தக் குளவியைப் பற்றிக் காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, குளவி அதனுடைய விஷத்தால் புழுவின் மேல் தாக்கப்படும் பொழுது, புழுவின் நினைவலைகள்
1.குளவியால் தாக்கப்பட்ட உணர்வு கொண்டு எவ்வாறு இணைக்கின்றது…?
2.அந்த உணர்வுகள் அதற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு எவ்வாறு இயக்குகின்றது…?
3.எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது…? என்பதை உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் எம்மை ஓங்கி அடிக்கின்றார். அடித்தவுடன்… அவரைத் திடீரென்று பார்க்கின்றேன்.

திடீரென்று திரும்பியவுடன்… அவர் உணர்த்திய உணர்வின் அலையை…
1.அந்த மெய்ஞான உணர்வை எடுத்து எம் எண்ணத்தில் கவரச் செய்கின்றார்.
2.இழுக்கச் செய்கின்றார்.
3.இப்படி அவர் உணர்த்தும் மெய் உணர்வை யாம் கவர்ந்து எமக்குள் இழுத்தவுடன்… சிரிக்கின்றார் குருநாதர்.

குளவிக்கும் மனித வாழ்க்கைக்கும் எடுத்துச் சொல்லப்படும் பொழுது சாதாரண மனிதன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒருவனைத் தாக்கபடும் பொழுது இந்த உணர்வுகள் அவன் மேல் பாய்ச்சப்பட்டு அதே நிலைகளில், எதிர் பதிலாக ”அவனை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.

இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைக் காட்டுகின்றார்.

குருநாதர் எம்மை அடித்தவுடன் திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள் அவர் எண்ணத்தால் வெளியிடுவதை உடனே உற்றுப் பார்த்தவுடன் அந்த உணர்வுகள் வருகின்றது.

அப்பொழுது அவர் விளைய வைத்த உணர்வுகள் அவரை எண்ணியபின்
1.அவர் எம்மை அடித்த அடியை மறந்து
2.குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின் அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டுக் குளைவியையே எண்ணுகின்றதோ
3.அதே மாதிரி குருநாதருடைய எண்ணத்தை வைத்து குருநாதருடைய நிலைகளை எண்ணுகின்றேன்,

அப்படி எண்ணப்படும் பொழுது…
1.அவர் அந்த “மூல உணர்வுகளின் நிலைகள்” அவருக்குள் இணைத்ததை எமக்குள் இணைக்கின்றார்.
2.இப்படித்தான் குருநாதர் மெய் உணர்வின் தன்மையை எம்மைப் பெறச் செய்தார்.

இதைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ உங்கள் நல்ல உணர்வுகள் மாறுகின்றதோ
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் திருப்பமாகி நினைவச் செலுத்தும் பொழுது
2.அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியைச் சுவாசிக்கும் பொழுது
3.பிறருடைய தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வருவதில்லை.

அதே சமயத்தில் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக நஞ்சினை வென்று உணர்வினை ஒளீயாக மாற்றி என்றும் பதினாறு என்று கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டு, தன் இன மக்களை வளர்க்கச் செய்து கொண்டிருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை, நாம் நமக்குள் கூட்டும் சந்தர்ப்பம் உருவாகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில், நாம் இணைந்து வாழும் நிலை உருவாகின்றது.
1.இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைந்து
2.அழியா ஒளி சரீரம் நாம் அனைவரும் பெறுகின்றோம்.

தேடிச் சென்றால்… நம்மை நாடி வரும்… கோடிக் கோடி…

Eswara

தேடிச் சென்றால்… நம்மை நாடி வரும்… கோடிக் கோடி…

 

“நீ (ஞானகுரு) வேதனையை அறிகின்றாய்…!: அதே போல நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் அடியின் தன்மை உனக்கு எப்படி வருகின்றது..?

உதாரணமாக ஒரு பாசத்தால் அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. நீங்கள் தமாஷாக அடித்துப் பாருங்கள், கோபம் வருகிறதா…? என்று பார்க்கலாம்,

அதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும்போது
1.ஒரு சொல்லை மட்டும் இலேசாகக் குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள்
2.இந்த உணர்வுகள் மாறும்.

ஈஸ்வரபட்டர் எனக்குக் காட்டும் நிலைகள் கொண்டு, அவர் என்னை அடிக்கப்படும்பொழுது, அந்த உணர்வின் தன்மை, “எது…?”

“அடித்தவுடன் சிரிப்பார்… சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்…!”

உனக்குள் எத்தனை கோடி உணர்வுகள் சேர்த்து நான் அடிக்கும்.. அதாவது அடிக்கும் உணர்வுக்குள் இருப்பதை,
1.என் (ஈஸ்வரபட்டர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும்
2.அந்த நினைவால் கலந்த உணர்வும் உன்னுடன் எப்படி அது சேர்ந்து
3.அண்டத்தை எப்படி அறிகின்றாய் என்று நீ பார்…! என்று குரு காட்டுகின்றார்.
4.நீ அண்டத்தை அறிந்துவிடு…!

மனிதனின் உணர்வுக்குள் நீ அருள் ஞானத்தைப் சொல்லைப் பாய்ச்சிவிடு, அங்கே கிளரும் உணர்வின் தன்மை நுகர்ந்தறி, நுகர்ந்தறிந்தால் அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும், ஆனால் அவனை மாற்ற முடியாது”.

1.ஒரு செடியின் நிலைகள் காரத்தின் தன்மை கொண்டதோ கசப்பின் தன்மை கொண்டதோ அதன் நிலை மாறாது.
2.அதைப்போல அவரின் உணர்வின் தன்மை மாறாது,
3.மாறாத நிலைகள் கொண்டு நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும்
4.ஆனால் இதை எவ்வாறு மாற்றுவது…? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.

இப்படித்தான் இதைப்போன்று கேள்விகள் கேட்டுப் பின் விளக்கங்கள் கொடுத்து “விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது…? என்றும் இது கோடி உணர்வுகள் சேர்த்து உணர்வின் நிலைகள் என்று அவர் சொல்வார்,

1.“கோடி…கோடி” “கோடி….கோடி” “கோடி…கோடி”, என்ற நிலையில்
2.தேடித் தேடி… தேடித் தேடி…! இதை நான் பெற்றேன்
3.கோடி…கோடி என்ற நிலைகளில் தேடித் தேடித் தேடிச் சென்று பெற்றேன்
4.உன்னை நாடி…நாடி…நாடி வருகின்றது…!
5.ஆனால் நீ தேடித் தேடி அதைப் பெறவேண்டும்…! என்று இப்படிச் சொல்வார்.

அவருடைய சொல்லுக்குள் பார்த்தோமென்றால் இப்படி என்னை அடித்தவுடன்… “உன்னை தேடித் தேடி வருகின்றது… நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்…!” என்று இப்படிச் சொல்வார்.

ஏனென்றால் இதெல்லாம் குருநாதருடைய சொல்லுக்குள் சூட்சமம். இது அனைத்தும் சூட்சமம் தான்.

இந்தப் பொருள் காணும் தன்மை இந்த கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது…? என்ற நிலையைத்தான் இந்த கோடியின் நிலைகளை
1.நீங்கள் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாக,
2.குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன்.
3.அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும்
4.அவர் (ஈஸ்வரபட்டர்) பிறவா நிலைகள் பெற்ற நிலையில்
5.நாமும் பிறவா நிலைகள் அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.

சுகமாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Siva meditating.jpg

சுகமாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்… மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ… பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன…!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை… பூகம்பம் வரும் நிலை… பெரும் மழை வரக்கூடிய நிலை…! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இந்த மனிதன் உண்டு… உடுத்தி… உறங்குவது தான் வாழ்க்கை…! என்ற சுகத்தை எண்ணுகின்றான்.

இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு…?
1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்…!

மனிதனின் “விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Good and bad bate

மனிதனின் “விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது
மனிதனின் விதி முறை…!”

வினையின் எண்ண\த்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள ஒரு உடலை எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா.
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்.
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா…?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில் ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான் என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.

“குரு பலம்…” பெறுவது எப்படி…?

Eswara

“குரு பலம்…” பெறுவது எப்படி…?

நான் தியானமிருந்து விட்டேன். ஆகையினால் குருநாதரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று எண்ணக் கூடாது.
1.என் நினைவு புருவ மத்தியிலிருக்கும் உயிரின் பால் சென்றது.
2.உயிரான ஈசனிடம் வேண்டினேன்.
3.குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை உயிரின் துணையால் நான் சுவாசிக்க நேர்ந்தது.
4.அந்தச் சக்திகளை என் உடலுக்குள் பாய்ச்சி என் தீமைகளை நீக்கினேன் என்று இப்படி வர வேண்டும்.

அதே போல் மற்றவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சினேன். அவர்கள் தீமை அகன்றது.. நோய் நீங்கியது…! என்பது சிறப்பாகும். இப்படிப்பட்ட தொடர்பு… வரிசையாக… சரியான முறையில் இருந்தால் தான் நம் காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.

மகரிஷிகள் உணர்வை குருநாதர் மூலமாகப் பெற்று நம் உயிர் வழியாகக் கவர்ந்தால் குரு உபதேசித்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று இயங்கும்.

குருவே பார்த்துக் கொள்வார் என்று பொதுவாகச் சொல்லி விட்டால் அவர் என்ன சொல்கிறார்…?
1.நான் எல்லோருக்கும் தான் கொடுக்கின்றேன்.
2.அவர்கள் உயிர் வழியாகக் கவர்ந்து எடுக்க வேண்டும் அல்லவா.
3.அவர்கள் எடுக்கவில்லை என்றால் நான் எப்படிப் பார்க்க முடியும்…?

ஆகவே குருநாதர் சக்திகளைக் கொடுத்தாலும் நாம் நுகர்ந்து அதை எடுக்க வேண்டும். இந்த எண்ணம் நமக்கு வலுவாக இருக்க வேண்டும்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறார்.
2.என்னை நீங்கள் நம்புங்கள் நான் காப்பாற்றித் தருவேன்…! என்று சொல்லவில்லை.

அவர் செய்வார்…! என்றால் நம் உயிருக்குள் நாம் இணைப்புக் கொடுத்தால் தான் அவரும் நமக்குள் அபிஷேகம் செய்ய முடியும்.

நம்முடைய எண்ணம் குருநாதர் கொடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்வதில் அழுத்தமாக இருக்க வேண்டும்.
1.அது தான் குரு பலம் என்பது.
2.அந்தப் “பிடிப்பு..” இருக்க வேண்டும்.
3.அந்தப் பிடிப்புக்குப் பேர் தான் பற்று…!
4.அதில் நமக்குப் பற்றுதல் வேண்டும்.

குருநாதர் பார்த்துக் கொள்வார் என்றால் அவர் வேலையை அவர் சரியாகச் செய்கிறார். அவர் கொடுக்கும் சத்தை நாம் சரியாக எடுக்க வேண்டுமா இல்லையா…?

இது மிகவும் முக்கியம்…!

வேதத்தை மேலிருந்து கீழ்.. கீழிருந்து மேல்… என்று சுருதி மாறாமல் பாடக்கூடிய சித்தர்…!

Image

eswaraya-gurudevar

வேதத்தை மேலிருந்து கீழ்.. கீழிருந்து மேல்… என்று சுருதி மாறாமல் பாடக்கூடிய சித்தர்…!

ஒரு முறை குருநாதர் ரிக் வேதத்தைத் தெளிவாகப் பாடிக் காண்பித்தார். பின் அதை அப்படியே திருப்பித் தலை கீழாகப் பாடிக் காண்பித்தார்.

வேதங்கள் என்றால் என்ன என்று தெளிவாக விளக்கிக் கூறினார்.

நானும் (ஞானகுரு) குருநாதர் எங்கள் வீட்டுக்கு எதிரில் தெருவில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரிக் வேதத்தைப் பாடமாக சொல்லித்தரும் ஆசிரியர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.

சாலையில் சென்று கொண்டிருந்த ஆசிரியரை “இங்கே வாடா…!” என்று தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார் குருநாதர்.

எமக்கு முன்னாலேயே ஆசிரியருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தார் குருநாதர். “ஏன்டா அங்கே தவறு செய்தாய்…?” என்று கேட்டார்.

ரிக் வேத ஆசிரியர் முழித்தார்…!

“அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாயே…, அது எப்படி என்று எனக்குச் சொல்…” என்று கேட்டார் குருநாதர்.

பிறகு குருநாதரே அந்த மந்திரங்களைத் தலை கீழாகச் சுருதி மாறாதபடி பாடிக் காண்பித்தார்.

ரிக் வேத ஆசிரியரோ… “திரு…திரு…”வென்று முழித்தார்.

எமக்கு இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்… பாடிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பேசுவது அவர்களுக்கு மட்டுமே புரிகின்றது.

“இனி இது மாதிரித் தவறு செய்யாதே…!” என்று ரிக் வேத ஆசிரியரை அடித்து “போ…” என்று கூறி விட்டார். ரிக் வேத ஆசிரியர் அங்கிருந்து போனால் போதும் என்று வேகமாகப் போய்விட்டார்.

பிறகு குருநாதர் எம்மிடம்… இவன் திருடன்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தவறாகச் சொல்கிறான்…! என்று சொன்னார்.

மறு நாள் குருநாதரிடம் அடி வாங்கின ரிக் வேத ஆசிரியர் எம்மைத் தேடி வந்தார். குருநாதரைப் பற்றி எம்மிடம் சொல்லத் தொடங்கினார்.

1.இவர் மனிதரே இல்லை… ஒரு “ரிஷி பிண்டம்…!”
2.இந்த வேதத்தை யாரும் இப்படிச் சொல்லவே முடியாது
3.ஆனால் சொல் பிழையில்லாதபடி சரியான சுருதியுடன் சொல்கிறார்.

அவர் என்னை அடித்த அடியில் நான் செய்த தவறுகள் எல்லாம் ஓடியே போய்விட்டது. இனி பாடம் சொல்லித் தரும் வேலைக்கே செல்ல மாட்டேன்.

என்னுடைய ஊர் உடுப்பி. நான் என் ஊருக்குச் சென்று அங்கு வேறு ஏதாவது வேலை பார்த்துப் பிழைத்துக் கொள்கிறேன்.
1.உங்களுடைய அதிர்ஷ்டம்… நீங்கள் அவரை குருவாக பெற்றிருக்கிறீர்கள்.
2.நீங்கள் எனக்கு “ஆசீர்வாதம் செய்யுங்கள்…!” என்று கேட்டார்.

எனக்குச் சமையல் தொழில் தெரியும். என்னுடைய சமையல் ருசியாக அமைய வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுங்கள் என்று கேட்டார்.

யாம் ஒரு ரூபாயைக் கையில் கொடுத்து, ஆசீர்வாதம் கொடுத்து போய் வரச்சொன்னோம். இது நடந்த நிகழ்ச்சி.

1.உலகில் எத்தனை நிலைகள் இருக்கின்றதோ – அத்தனையையும்
2.எந்தெந்த வழியில் எமக்கு உணர்த்த வேண்டுமோ அத்தனை வழிகளிலும் எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

அதே சமயத்தில் மின் கம்பத்தை அடிப்பார். தொலைபேசிக் கம்பத்தை அடிப்பார். மின் கம்பத்தை அடித்துக் கொண்டே

1.இந்த லைன் (LINE) அந்த லைன் என்பார்.
2.டேய்…! மிளகாய் ஒரு லட்சம்… காரம் கோடி…கோடி… என்பார்.

எமக்கு ஒன்றுமே புரியாது. பைத்தியம் பிடித்தது போன்று பேசிக் கொண்டே வருவார். குருநாதர் எல்லா பாஷையிலும் பேசுவார். “கோடி கோடி” என்பார்.

சாமி கோடி இங்கே இருக்கிறது என்போம்.

அந்தக் கோடி இல்லைடா…! என்பார். “ஈகோடி…!” மிளகாய் கோடி… காரம் கோடி…” என்பார். இன்னும் என்னென்னவோ கோடி என்பார். அர்த்தம் ஒன்றுமே புரியாது.

பிறகு சொல்வார்…! ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து கலந்து “கோடி கோடி” உணர்வுகளாக மாறுகின்றது என்பதை விளக்குவார்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மின்னலாகப் பாயும் பொழுது அதனின் உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…? எப்படி மாறுகின்றது…? என்பதைச் சொல்லாகவும் உள்ளுணர்வாக உணர்த்தவும் செய்தார்.
1.முதலில் சொல்லிவிடுவார் (நான் புரியவில்லையே…! என்று எண்ணுவேன்)
2.பின்னர் அதை அப்படியே அனுபவபூர்வமாகப் புரிய வைப்பார்.

குருநாதர் எமக்குக் கொடுத்த அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் அப்படியே பதிய வைக்கின்றோம்.
1.சந்தர்ப்பம் வரும் போது இதன் நினைவு உங்களிடம் வரும்.
2.அப்பொழுது இதன் உணர்வுகள் உங்களிடத்தில் தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இயங்கும்
3.குருநாதரை எண்ணித் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் யாம் பதிவு செய்த நிலைகள் அத்தனையும் உங்கள் நினைவுக்கு வரும்.

 

பைத்தியம் போன்று பல கலர்களில் துணிகளைக் கட்டிக் கொண்டு புரியாத பாஷையில் பேசிய குருநாதர்…!

Eaganthanilais

பைத்தியம் போன்று பல கலர்களில் துணிகளைக் கட்டிக் கொண்டு புரியாத பாஷையில் பேசிய குருநாதர்…! 

எமது குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும் உடலுக்கு அந்த உணர்வைக் கொடுக்காது தன் உடலுக்குள் மெய் ஒளியின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டவர்.

எத்தகைய நல்ல துணியைக் கொடுத்தாலும் அதைக் கிழித்துவிட்டு பைத்தியக்காரனைப் போன்று காலிலே கட்டிப் போட்டுக் கொள்வார். புதுத் துணிகளை எல்லாம் கிழித்துக் கட்டுக் கட்டாகக் கட்டிக் கொள்வார்.

என்ன சாமி… இந்த மாதிரிச் செய்கிறீர்கள்…! என்று கேட்டேன்.

கடும் விஷம் ஏறுகிறதப்பா…! அதைத் தடைபடுத்த இந்தப் புதுத் துணியைக் கிழித்து நான் கட்டிக் கொள்கின்றேன். கட்டாமல் போனால் ஏறி விடுகிறது விஷம்…! என்று இப்படி எல்லாம் உணர்த்தினார்.

அவர் ஒவ்வொரு விஷத்தின் தன்மையான எண்ணங்களுக்கும் ஒவ்வொரு கலரான துணிகளைக் காட்டினார். அதைப் போல அந்த விஷத் தன்மைகளை முறியடிக்கக் கூடிய ஒவ்வொரு தாவர இனச் சத்தின் திறனின் சக்தியையும் என்னை அறியச் செய்தார்.

தாவர இனச் சத்துக்கள் விஷத் தன்மைகளை எப்படி முறியடிக்கிறதென்ற நிலையும் அந்த ஆற்றலைத் தாவர இனங்கள் தனக்குள் எப்படி எல்லாம் கவர்ந்து கொள்கின்றதென்ற நிலையும் அவர் காட்டினார். ஆனால்
1.இதை எல்லாம் நேரடியாகக் காட்டவில்லை
2.பைத்தியம் போன்று அவர் செய்வதைத்தான் என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது.
3.அவர் உடலை விட்டுப் பிரிந்த பிற்பாடு தான் என்னால் அறிய முடிந்தது.

காலிலே கட்டைப் போட்டு இருக்கும் போது அதை அவரிடம் கேட்டு அறிய முடியாத நிலை இருந்தாலும் அவர் உடலை விட்டுச் சென்ற பின் அவரை நினைவில் கொண்டு ஏன் இதைக் கிழித்துக் கட்டினார்…? என்ற நிலையை மலைக் காடுகள் பக்கம் செல்லப்படும் போது என்னால் (ஞானகுரு) உணர முடிந்தது.

அவர் உடலிலே கட்டிய அந்தக் கிழிந்த ஆடையும் கிழித்துக் கிழித்துக் கட்டிய பல கலரான துணிகளும் அவருடைய நினைவலைகளைச் சுவாசிக்கும் போது அந்த உண்மையின் நிலையை நுகர முடிந்தது.

ஏனென்றால் அவர் எந்தெந்த கலர் துணிகளைக் கட்டியிருந்தாரோ அங்கே மலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது அங்கே அதே துணிகள் சில சில பச்சிலை மூலிகைச் செடிகளிலும் மரங்களிலும் கட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் அவருடைய உருவம் அங்கே தெரிகின்றது. அவர் உடலுடன் இருக்கும் பொழுது எனக்குப் புரியாத பாஷையில் அன்று சொன்னதெல்லாம் என் நினைவுக்கு வந்து அதைப் புரியும் நிலையாக வந்தது.

அப்பொழுது தீயவினையில் இருந்து விடுபடும் நிலையாக மெய் ஞானி அகஸ்தியனைப் பற்றிக் குருநாதர் எனக்குள் உணர்த்திய உண்மைகளை உணர முடிந்தது

1.அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் தாய் தந்தையரைப் பிரிந்த ஏக்கத்தில் காட்டிற்குள் அவன் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அன்னை தந்தையினுடைய உணர்வுகள் அவனுக்குள் எப்படிச் சென்றது…?
2.தன் தாய் தந்தையரின் உணர்வுகளின் துணை கொண்டு தீய வினைகளில் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் பய உணர்வுகளிடமிருந்தும் எப்படி அவன் மீண்டான்…?
3.அவ்வாறு அவனின் வளர்ச்சியில் விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து எவ்வாறு உணர்வின் தன்மையை ஒளியாக எடுத்தான்…?
4.அவன் அமர்ந்த இடங்களில் இந்த உணர்வின் அலைகள் எப்படிப் படர்ந்துள்ளது…?
5.அங்கே செல்லப்படும் போது அதை நுகரும் போது நுகர்வோர் உள்ளங்களில் அது எப்படிச் செயல்படுகிறது…? என்ற
6.இத்தனை நிலைகளையும் உணர்த்துவதற்காகத் தான் குருநாதர் அவர் காலிலே பல கட்டுகளைக் கட்டி இருந்தார்.

குருநாதர் இட்ட கட்டளைப்படி சுமார் பன்னிரண்டு வருடம் காடு மேடெல்லாம் நான் அலைந்தேன். தனித்த நிலையில் செல்லப்படும் பொழுது நான் இன்ன நிலையைத் தான் செய்வது என்று அறியாது திகைத்துக் கொண்டு உணவிற்காகவும் தவித்துக் கொண்டு இருந்தேன்.

சரியான உணவே இல்லாமல் காட்டிற்குள் சுற்றிக் கொண்டு இருப்பேன். எதை எதையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். இருந்தாலும் உணவு சாப்பிட்டுப் பழகியவனுக்கு அந்த நினைவுகள் வரும் போதெல்லாம் துயரங்களையே ஏற்படுத்தும்.

இதைப் போன்ற நிலைகள் வரும் போது குருவை எண்ணுவேன். அவரை எண்ணும் போது அவர் உணர்வின் தன்மைகளை நான் நுகர நேருகின்றது.
1.நுகரும் போது அந்த மெய் ஞானியான அகஸ்தியன் சென்ற பாதையும்
2.அவன் எடுத்துக் கொண்ட விஷத்தை முறிக்கும் உணர்வுகளையும்
3.அவனால் வெளியிட்ட இந்த உணர்வுகள் காற்றிலே படர்ந்திருப்பதையும்
4.அந்த அலைகள் பூமிக்குள் (அந்தந்த இடங்களில்) இறுகித் தனக்குள் வளர்ந்திருப்பதும்
5.அந்த அலைகள் பதிந்திருக்கும் இடங்களில் நான் நின்றபின் அகஸ்தியனின் உணர்வலைகள் எப்படி வருகின்றதென்ற நிலையையும்
6.குருவை எண்ணும் போதெல்லாம் உணர முடிந்தது… அறிய முடிந்தது.. காண முடிந்தது….!

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேசித்த அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் சென்ற பாதையையும் அவன் உணர்வின் ஆற்றலையும் உங்களுக்கு இப்பொழுது சொல்கிறேன் என்றால் அது குரு காட்டிய நிலைகள் தான்.

குருநாதர் உடலை விட்டுச் சென்ற பின்
1.அவர் உணர்த்திய நிலைகளை நுகர்ந்தறிந்து
2.நான் அறியக்கூடிய நிலையில் அதைப் பெற்று
3,என்னை அறியாமல் வந்த தீய வினைகளை அடக்கி
4.மெய் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் ஓங்கி வளர்த்துக் கொண்ட
5.அந்த உணர்வின் எண்ண அலைகளே இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது. நானல்ல…!

குருநாதரை நினைக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மைகளைப் போதிக்கும் தன்மை வருகின்றது. இதைப் படித்துணரும் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாகின்றது.

இது உங்களுக்குள் வளர்ந்து அந்த மெய் ஞானியான அகஸ்தியன் பெற்ற பேராற்றல்களை நீங்கள் அனைவரும் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். அவனுடன் ஐக்கியமாகும் நிலையும் உருவாகின்றது…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்…?

Divine Master Guru

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்…? 

மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாம் பெறவேண்டும் என்று இந்த உயிருடன் உராயச் செய்யும் பொழுதுதான் நமக்குள் பேராற்றல்கள் கூடுகின்றது.

1.இந்த வாழ்க்கையில் நாம் ஒவொருவரும் நம் உயிரைக் கடவுளாக மதிப்போம்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை ஆலயம் என்று மதிப்போம்.
3.அனைத்தையும் அறிந்திடும் அறிவாக இருக்கும் நம் உயிரை ஆண்டவனாக மதிப்போம்.
4.ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்ற முடியும் என்ற வலு கொண்டு தியானிப்போம்.
5.நம்மை உருவாக்கிய தாய் தந்தையரைக் கடவுளாக மதித்து நம்மைக் காத்தருளிய தெய்வமாக மதிப்போம்
6.நல் வழி போதித்த நம் அன்னை தந்தையரை குருவாக மதித்து அவர்கள் அருளால் நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம்.
7.நம்மை வளரச் செய்த முன்னோர்களையும் குலதெய்வங்களையும் விண்ணிலே செலுத்தி அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.
8.அவர்களின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும் என்றும் மனிதன் என்ற முழுமை அடைய முடியும் என்ற நிலைகளில் நாம் பிரார்த்திப்போம். தியானிப்போம் தவமிருப்போம்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் அவர் அனுபவபூர்வமாக அறிவித்த இந்த உணர்வின் தன்மையை நாம் எல்லோரும் பெறமுடியும்.

குருநாதர் கண்டதை நாம் எல்லோரும் காண முடியும். வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்.

கார்த்திகேயா என்று தெளிந்திடும் ஆறாவது அறிவு கொண்ட நாம் ஞானிகள் காட்டிய அந்த அருள் வழியில் தெளிந்திட வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று
2.தீமையிலிருந்து விடுபட்டு “தீமையிலிருந்து விடுபட்டேன்…” என்று எப்பொழுது சொல்கிறீர்களோ
3.அப்பொழுது அந்த இடத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இருக்கின்றார் என்று அர்த்தம்.

உறுதியாக அதை உணரலாம்.

 

இனி வரும் காலத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இணைப்பில் இருப்பதே நமக்குப் பாதுகாப்பு…!

Maharishikaludan Paesungal

இனி வரும் காலத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இணைப்பில் இருப்பதே நமக்குப் பாதுகாப்பு…! 

1.திரும்பத் திரும்ப இதைப் பதிவு செய்தாலும்
2.ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
3.ஒரேயடியாக எல்லாச் சக்திகளையும் பெற முடியாது.
4.அப்படிக் கொடுக்கவும் முடியாது.

ஒன்றை எடுத்து ஒன்றின் சக்தி வளர்ந்த பின் அதனின் துணை கொண்டு விண்ணின் நிலைகளை ஒவ்வொன்றையும் வளர்க்கும் நிலைக்கு நீங்கள் வர முடியும்.

நான் (ஞானகுரு) பல பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அதை எனக்குள் ஜீரணிக்கும் நிலைகள் குரு பலம் கொண்டு தான் அதைப் பெற்றேன்,

ஆகையினால் எந்தக் கரண்டுடன் (இயக்கச் சக்தி) நீங்கள் தொடர்பு கொள்கின்றீர்களோ அதனின் நிலைகளைத்தான் நீங்கள் பெற முடியும்.

ஒரு TRANSFORMER இருக்கும் பொழுது வேறு லைனில் இணைப்பைக் கொடுத்தால் அந்தப் பக்கம் மாற்றிக் கொண்டு போய்விடும்.

மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் தன்மையை வளர்க்கும் நிலையாக அதற்குத் தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய வேண்டும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
2.அந்தக் கரண்டின் தொடர் வரிசையில் செல்லும் பொழுது தான் அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.