இனி வரும் காலத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இணைப்பில் இருப்பதே நமக்குப் பாதுகாப்பு…!

Maharishikaludan Paesungal

இனி வரும் காலத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இணைப்பில் இருப்பதே நமக்குப் பாதுகாப்பு…! 

1.திரும்பத் திரும்ப இதைப் பதிவு செய்தாலும்
2.ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
3.ஒரேயடியாக எல்லாச் சக்திகளையும் பெற முடியாது.
4.அப்படிக் கொடுக்கவும் முடியாது.

ஒன்றை எடுத்து ஒன்றின் சக்தி வளர்ந்த பின் அதனின் துணை கொண்டு விண்ணின் நிலைகளை ஒவ்வொன்றையும் வளர்க்கும் நிலைக்கு நீங்கள் வர முடியும்.

நான் (ஞானகுரு) பல பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அதை எனக்குள் ஜீரணிக்கும் நிலைகள் குரு பலம் கொண்டு தான் அதைப் பெற்றேன்,

ஆகையினால் எந்தக் கரண்டுடன் (இயக்கச் சக்தி) நீங்கள் தொடர்பு கொள்கின்றீர்களோ அதனின் நிலைகளைத்தான் நீங்கள் பெற முடியும்.

ஒரு TRANSFORMER இருக்கும் பொழுது வேறு லைனில் இணைப்பைக் கொடுத்தால் அந்தப் பக்கம் மாற்றிக் கொண்டு போய்விடும்.

மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் தன்மையை வளர்க்கும் நிலையாக அதற்குத் தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய வேண்டும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
2.அந்தக் கரண்டின் தொடர் வரிசையில் செல்லும் பொழுது தான் அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

 

 


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply