வேதத்தின் ஒலிகளை ஆளும் “வேதாள மாமகரிஷி”

வேதத்தின் ஒலிகளை ஆளும் “வேதாள மாமகரிஷி”

 

அன்று பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பெற்ற பெருநகரில் செல்வத்தின் அதிபதியாக வாழ்ந்து வந்தவர் திருச்சாடனார்.

வாழ்க்கைத் துணை நலம் நன்கு அமையப் பெற்றும் பன்னெடும் காலமாக மக்கள் செல்வம் அமைந்திடாமல் கணவனும் மனைவியும் குழந்தைப் பாக்கியப் பேறு வேண்டி அன்னதானங்கள் இட்டு… அது மிகப்பெரிய சாமாராதனையாக (இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை) அனுதினமும் நடைபெற்று வந்தது.

ஒரு பெண் மகவை ஈன்ற பின் துணைவியார் இயற்கை நிலை எய்துகின்றார். அந்தக் குழந்தையைப் பேணும் பொறுப்பை திருச்சாடனார் ஒரு தவமாய்ச் செய்து வந்தார்.

குழந்தையின் மங்கைப் பருவத்தில் உபேந்திரன் என்கின்ற தவநெறிச் செல்வனுக்கு மணமுடித்து திருச்சாடனார் முழுமையாகத் தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்.

பூமியில் சில விசேஷ அலைத்தன்மைகள் பாயப்பெறும் காலகட்டம்… இரு சம்பவங்கள் அப்பொழுது நடந்தேறியது.

செல்வச் சீமான் திருச்சாடனார் உள்ளத்தால் துறவறத்தை மேற்கொண்டார். காட்டு வழிப் பயணம் செல்கின்ற காலத்தில் செல்வ நிலையைக் குறிக்கோளாக வைத்த ஊரின் எல்லையில் வாழ்ந்து வந்த மந்திரவாதி ஒருவன் திருச்சாடனாரை அழித்திடும் நோக்கம் கொண்டு வேதை (தாக்குபவன்) என்பவனை ஏவி விடுகின்றான்.

வேதையும் ஓர் அம்பை ஏவியது.

1.பகலை இரவாக்கிட்ட கடும் மழைக்காலம் ஞானத்தின் சூட்சுமத்தில் “மகரிஷிகளால் ஆட்கொள்ளப்படுகின்ற செயலும் உண்டு…”
2.“நில் என்றால் உடனே நிற்கும்…” ஞானக்காவலுடன் சூட்சும மகரிஷிகள் உடன் இருக்க
3.அச்செயல் தடுக்க… முதலில் எய்த அம்பு திருச்சாடனாரின் மார்பைத் துளைத்தது.
4.பின் மீண்டும் தொடுத்த அம்பு பாயும் முன் திருச்சாடனார் வாயிலிருந்து “நில்…” என்றே ஒலித்த ஒலியின் தொனியினால்
5.வினை… சுவரில் எறியப்பட்ட பந்து போல் எய்த இடமே திரும்பச் சென்றது.

“நில்” என்ற வெளிப்பட்ட தொனியின் அதிர்ச்சியினால் வேதை என்பவன் மயங்கி உயிர் துறந்தான்.

“சூரிய மண்டல தேவன் அங்கே சூட்சமமாக திருச்சாடனார் சரீர நிலையில் செயல் கொண்டு” முன்னிலும் பிரகாசமான தேஜசுடன் சரீர துன்பங்கள் நீக்கம் பெற்று…
1.“வேதம்” என்ற மறைபொருளை ஒலியின் தன்மைகளை ஆளுகின்ற செயலினால்
2.”வேதாள மாமகரிஷியாக” அவர் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

வேதாள மகரிஷி உரைப்பான்…! மனமாகிய கிணற்றில் குறுக்கே சுவரெடுத்தால் நீர் இறைத்திடும் செயல் தடைப்படுகிறது. ஆனால் மனக்கிணறோ பழுதுராத் தன்மையில் நலம் பெற விழைகின்றது.

ஜெப நீர் (தியானத்தில் எடுக்கும் சக்தி) பெற்றுத் உயிராத்ம சக்தியைக் காத்திட முனைவோர்… மனக்கிணற்றின் ஜெப நீர் பெற்றிட குறுக்கே எழுந்திட்ட தடைகள் அது சூட்சமமாக இருந்தால் “அதைத் தகர்த்து விடவேண்டும்…” என்ற மன எண்ணத்தின் உயர்வைக் கூட்டிடல் வேண்டும்.

பின் ஜெபநீர் அருந்திடத் தடை ஏது…? இந்நிலையின் பொருள்கள் விளக்கி
1.எது தீமை தந்திட விளைந்ததோ அதையே நன்மையாக்கிடும் நல் நிலைகள் காட்டி
2.அஷ்டமாசித்துக்கள் பெற வைத்துக் காத்திட்ட வேதாள மகரிஷியின் செயல்கள் பல உண்டு.

புறக்கண்ணால் நோக்கிடும் செயல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பிற்கே தவிர்க்கப்பட்டாலும்… கொண்ட சேமிப்பைக் குறைவாக்குவது
1.உலகோதய வாழ்க்கையில் வந்திடும் மோதல் காலங்களில்
2.உற்று உறுத்துக் கேட்டல்… அதிசயித்து எச்செயலையும் விழிப்பார்வை கொண்டு பார்த்தல்…
3.இந்த இரண்டு வகையான காரியங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.

திருச்சாடனார் சூட்சும அவதார நிலையின் நோக்கமே… மனித சரீரத்தின் உயிர்களுக்கு ஊறு விளைவித்திடும் கபாலிகர்கள் வசம் இருந்து அவைகளைக் காத்திடத் தான்.

அதற்காக… தனது உருவை விகார வடிவம் அமைத்து… வேதாளம் என்ற பெயரும் படைத்திட்டுப் புனித பூமியை மாசு படுத்திடும் அவர்களை விரட்டிட வேதாள வடிவம் தாங்கித் தன்னை அச்சுறுத்தும் தோற்றமாகக் காட்டினார்.

சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை

சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை

 

ஆதி சக்தியின் செயல்:-
1.ஒன்றுடன் ஒன்று மோதிடும் எதிர் மோதல் குணங்கள் தன் குணத்தின் சுவைக்கொப்ப
2.ஆகர்ஷன சக்தியால் வான்வெளியில் பூதி என்று அழைக்கப்படும் பெருவெளியில் கலந்து
3.எதிர் மோதல் தன்மைகளில் “எந்தக் குணம் அமிலம் வீரிய நிலை பெறுகின்றதோ”
4.அவைகளில் கலந்திடும் அணுக்களின் குணங்களுக்கு ஒப்ப வீரிய நிலை பெற்றிடும் அந்த அமிலத்தன்மைகள்
5.தனக்கொத்த நிலைகளை எல்லாம் “உயர் மின் நுண்காந்த சக்தியாக வளர்க்க”
6.எதிர் மோதல் குணத்தன்மையாக “எரிபொருள் சக்தி அக்கினி என்ற வெப்ப சக்தியாக” செயல் உருவாக உருக்கோலம் கொண்டு
7.தன் சக்தியின் பரிமாணத்தை வளர்ச்சி நிலை கொள்ளும் செயலாக மென்மேலும் ஈர்த்துக் கொண்டு
8.சுழற்சியின் வேகத்தால் “ஓங்கார நாதத்தைக் கூட்டி” பால் வெளியில் சுழன்று ஓடிக்கொண்டே அமைவு பெறும் தன்மையாக
9.தனது செயலின் வீரியம் வலுக்கொண்ட சக்தியாக கன பரிமாணம் கொண்ட திடமாய் உருவாகும் முன் தன்னுள்ளே பூதியை உருவாக்கி
10.எப்படி அக்கினியால் எரிக்கப்பட்ட பொருள்கள் காற்றில் கலந்து செயல்படும் தன்மையைப் பெறுகின்றதோ அவைகள் போன்றே
11.தூசு படலங்களும்… படர்வு நிலையில் மறைபொருளாகும் அத்தன்மைகள் ஜீவன் கொண்டிட்டு
12.”தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும்” நிலை பெறுகின்ற செயல் ஒன்று
13.ஜீவ அணுக்களாகப் பின் வளர்ச்சியில் எண்ணிறந்த கோளங்களாக நட்சத்திரங்களாக சூரியன்களாக வளர்ச்சி நிலை பெற்று
14.ஈர்த்துக் கொண்டிடும் ஈர்ப்பு நிலைக்கொப்ப விசேஷ தனித்துவ சக்தியாக வளர்க்க
15.உறை பொருள் சிவமாக… இயங்கும் இயக்கச் செயல் ஈர்ப்பு சக்தியாக இணைந்து கொண்டிடும் “சிவ சக்தியாக”
16.ஆதி சக்தியின் செயல் உருவாய்… ஓடிக்கொண்டே உள்ளது.

நம் பூமியின் சுழற்சியின் வேகத்தில் பௌர்ணமி காலங்களிலும் அம்மாவாசை காலங்களிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிட்ட கோள்களின் ஈர்ப்பின் தொடர்பினால் நீர் சக்தியின் மாறுதல்களை… இந்நிலையிலும் உயர் நாதத்தை ஈர்த்துக் கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் “மறைபொருளை விளக்குவார்கள்…”

சப்த மாதர்கள் என்று வணங்குகின்றாய். ஒருவர் குரல் போல் மற்றவருக்கு இருப்பதில்லை. கோடான கோடி சப்தஸ்வர நாதங்கள் “கண்டத்தில் (தொண்டையில்) எழும் ஆகாயக் கூறு” காட்டும் நிலை தான் என்ன…?

சப்த நாதங்களில் செயல்படும் சப்தரிஷிகள்
1.ஆதி சக்தியின் அம்சமாக வழி நடத்தும் அரிய உண்மைகளை
2.தியானத்தைக் கூட்டுவதன் மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.

சப்தரிஷி மண்டலங்கள் இயக்கிடும் நவக் கோள்கள்… வான் இயல் மையக் கோள் என்ற பால் வெளியின் உண்மை நிலைகளை அறிந்து வளர வேண்டுமப்பா.

பஞ்சபூதங்களான… ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் பரவெளியில் ஜீவ மின் நுண்காந்த சக்தியாக அனைத்திலும் பரவிப் படர்ந்துள்ளதை “பராசக்தி… என்றும் பரமார்த்த சக்தி…” என்றும் பெயரிட்டு மகரிஷிகளால் அழைக்கப்படுகின்றது.

பால்வெளியில் உதித்திடும் உயிரணுக்கள் கோடான கோடி நிறம் மணம் குணம் என்ற முத்தொடர் சூட்சுமத்தின்
1.நீரமில சக்தியுடன் கலந்து உதிக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொண்ட சுழற்சியாய்
2.எண்ணம் கொண்ட உயிரணுக்கள் எண்ணம் கொண்ட ஆத்மாவாக ஜீவன் பெற்றே பிறப்பிற்கு வருகின்றது.

மனிதன் கூறுகின்றான் வயதான காலத்தில் அவன் ஞானம் பெற வேண்டும் என்று. எப்படிப்பா இருக்கின்றது இது…? காலம் கடந்து ஞானம் வருவது எங்கே…?

நாம் கூற முற்படுவதில் தேகம் கொண்டே…
1.”தேகம் கடந்த ஞானம் பெற்றிடல் வேண்டும்”
2.பெற்று உயர்ந்து வளர்ந்திடல் வேண்டும்… என்று உணர்த்தியும் வந்துள்ளோம்.

எமது சித்தின் நிலையை வெளிப்படையாக உரைத்து விட்டால் மாத்திரம் நீ சக்தியைப் பெற்றிட முடிந்திடுமா…?
1.தன் நிலையைத் தான் வளர்க்க
2.அந்நிலையில் நன்நிலையாக வளர்த்துக் காட்டிட வேண்டுமப்பா.

உலோதய வாழ்க்கை நடைமுறையில் ஞானத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு… உண்மை நிலையை உரைக்க வந்ததாகப் பாஷாண்டகமிடும் செயலை… உண்மை நிலையை “நான்” என்றிட்ட அகங்கார ஆணவ மாயை என்றிட்ட அனைத்துக் காரியார்த்த செயல்களை “யார் தான் வென்றிடுவார்கள்…?”

1.சகலத்திலும் சகலமாக ஈஸ்வரரின் அருள் நிறைந்திருக்க…
2.தனித்துவ காரண காரியங்களுக்குச் செயல் கொண்டு – சகலத்திலும் ஈஸ்வரரின் அருள் என்ற பேரின்ப சாயுஜ்ய (உயிருடன் ஒன்றும் நிலை) லயத்தைக் கொள்பவனுக்கு
3.எந்த நிலையிலும் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டுவிடாது… “சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை உண்டு…”

உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம் “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்”

உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம் “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்”

 

கரிய நிழல் மாயை கால் சதங்கைதான் அசைக்க
அறியப்பெறும் எண்ணம் அசைத்த ஒலியின் கண் நின்றசைய
மாமுதல்வன் ஆர் அறிய வந்திட்ட உயிரணுவே
ஆவெனும் மாயப்பசு இயல் குணத்தின் சுவை மாற்றும்
வாரணன் கோடி வாதிட்ட வன்மை நிலை போலும்

இது ஒரு சிருஷ்டி… உலக நடைமுறையின் இயக்கம், வந்த வினை கண்ட உயிரின் பரிணாம வளர்ச்சியின் “தாத்பரியம்…”

திசை யானைகள் இழுக்கும் சிவமாக (பூமி) நீ அமைந்தாய். சுவை குணம் விளக்க… மாயை தன் நிலையில் எண்ணத்திற்கொப்ப செயலுறுத்தும் நிலையை விளங்கிக் கொள்.

1.வினையால்… பசுக்களாகிய உயிரணுக்கள் (உடலில் உருவான அணுக்கள்) தன் நிலையில் தான் ஏக…
2.அந்த வினையின் தொடர் வலுப்பெற
3.எண்ணம் கதியாகி… கதியுறும் எண்ணம் வினையாகி
4.வினையின் தொடர் நீண்டு விதி செயலுற
5.கொண்டிட்ட எண்ணங்களே சகலத்திலும் வழி நடத்திடும் இயக்கமப்பா.

மறுவினைப் பயன் காட்டும் ஜெபமாம் ஆகுதி (நெருப்பு – வெப்பம்) கொண்ட எண்ணத்தின் உயர்வைக் கூட்டி (தியானத்தில் எடுக்கும் சக்தி)… மனிதன் தெய்வநிலை பெற்றிட சகலத்தையும் தம்முள் உணர்த்தும்… சகலமும் காந்தமாகச் செயல்படும் நிலை அறிவாய்.

தீவினையாகிய உயிரணுக்கள் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டால் தாக்குறும் நிலையே “மாயப்பசு” (தீமை செய்யும் அணுக்கள்). அந்நிலையை மாற்ற வேண்டும் என்றால்
1.ஈஸ்வர தியானமே ஆகுதியாக… நல்ல நிலை உணர்த்தும் யாகமாக
2.தன்னைத்தான் உயர்த்தி… நற்சுவாசத்தால் நல்ல அணுக்களைக் கூட்டி,
3.உயிரான்மாவின் பரிமாணத்தைக் காத்துக் கொண்டு எது நல்நிலையோ அந்நிலைக்கு உயர்த்துவது
4.சகலத்திற்கும் சகலமாய்க் கலந்துள்ள “ஈஸ்வரர் அருள் (வேகா நிலை பெற்ற மகரிஷிகளின் சக்தி) என்ற பேரருள் சூட்சுமம்…”

“கல்ஆல்” என்பதே உலகோதய நிலையைக் குறிக்கின்றதப்பா. அதன் கீழ் வாழும் நாம்
1.அந்த உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம்
2.தியானத்தின் வழியாக சதா சர்வ காலமும் நின்று நிலை பெற்றிருக்கும் அது “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்…”
3.அதுவே ஊன்றி உயர வேண்டிய நல் நிலைகள்.

மனிதன் என்ற ஜீவிதத்தின் தொடக்கமே பரமார்த்த நிலை (மனிதப் பிறவி தான் முழுமுதல் கடவுள்). அன்றி வேறு எந்தப் பிறவியாலும் மெய்யை அறியப்படுகின்ற செயல் கூறுகள்… எந்த விதத்திலும் சாத்தியமில்லை…! என்பதே மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை.

கரும்பின் சாறு சிதறி விடாமல் காக்கின்ற “கரும்பின் கணுக்கள் போல்…” நாம் கூட்டிக் கொள்ளும் ஆத்ம பலத்தின் நிறைவுகளைக் காக்கின்றவர்கள் யார்…?
1.அன்பு சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் மாமகரிஷிகள் சப்தரிஷிகள் சூட்சுமமாகச் செயல்பட்டு
2.ஆதி சக்தியின் சூட்சும மூலத்தின் மூலமாக… நம் மீது அருள் ஒளிபாய்ச்சி
3.நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் அவர்கள் தான்.

மனிதன் பெற வேண்டிய பேறு என்னப்பா…? திசை யானைகளாகக் காட்டிய கல் யானைகள் கரும்பு அருந்தியதாகத் திருவிளையாடல் புராணம் விளக்கம் கேட்கின்றாய்.

கல் யானை… “கரும்பு அருந்தியது” என்பதன் மெய்ப்பொருள் என்னப்பா..? “பேரருள் செல்வம்” தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பேரானந்த நிலையைச் சித்தரிக்கும் ஆனந்த நிலையப்பா அது.

கரும்பின் இயல்பான குணத்தன்மைகள் தன் சுவையை… சுவையின் குணத்தை ஈர்த்திட்டே வளர்ச்சியின் வளர்ப்பாகப் பலன் என்று உருவாவதைப் போல்… ஞானத்தின் பங்கு அந்த நிலை பெற… காத்திடும் மகரிஷிகள் செயல் கொண்டிட… சூட்சுமமாய் ஜோதியில் கலந்திடவே அந்த நிலைகள் கூறப்பட்டன.

சிவலிங்கம் என்பது இந்த உலகம் தான். பால்வெளி சூட்சுமத்தில் செயல்படும் நிலைகள் பேரண்ட இருளாக அனைத்திலும் காந்தத்தின் புலமாய் எங்கும் பரவிப் படர்ந்ததைப் “பராசக்தி” என்று கூறிய உண்மை நிலை என்ன…/

சகலமும் ஆவி தான்…! ஆவியின் அமில நிலைகள் தான். எரிகின்ற நெருப்பு அதனுள் இருந்து வெளிப்படுத்தும் புகைத்தன்மை போன்ற மெல்லிய படலங்கள் கண பரிமாணம் கொண்டு… தன் குண நிலைகளுக்கொப்ப “திடக்கோளம்” கொள்கின்ற சூட்சுமத்தின் உண்மைகளை உணர்ந்து பார்.

மறைபொருள் எப்படி உறை பொருள் ஆகிறது…?

1.அனைத்திலும் ஆவியான அமில குணத்தன்மைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி
2.தத்தமக்குரிய குணங்கள், அதனுடன் இணையும் அமில குணங்களுடன் இணைந்து கொண்டிட்டு
3.ஒவ்வொன்றின் குணத்தன்மைகளுக்கொப்ப மேகங்களாக மாறி
4.அந்த அமில மேகங்கள் மூலத்தின் மூலங்களின் தன்மைகளைத் திரவநிலை கொண்டிடும் அமில நிலைகளாகவும்
5.உருவாக்கும் செயல் தன்மைகள் பிறிதொன்றில் மோதி தன் நிலை மாற்றி மற்றொன்றாக உருவாக்கிடும் செயலில் செயல்பட்டு
6.அதன் செயல்பாட்டில் தன் குண நிலைகளை மாற்றிக் கொண்டு செயலுக்குச் செயல்படும் குணங்கள் கொண்டும்
7.அவைகள் உயிரணுக்கள் செயலுக்கு நிறம் மணம் குணம் என்றே கோடான கோடியாகப் பல்கி பெருகி
8.உதிக்கின்ற உயிரணுக்கள் பூதியின் தூசுப்படலம் என்கின்ற தன்மையாக நெருங்கிச் சேர்ந்து
9.ஒவ்வொன்றின் ஈர்ப்பில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகும் நிலையே உறை பொருள் தன்மை (ஆவியாக இருப்பது நீராகி பொருளாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகி பிரபஞ்சமாகும் நிலை).

கோடான கோடி நிறங்கள் மணங்கள் குணங்கள் என்றே பால்வெளியில் படர்ந்து… காந்தத்தின் புலமாக… உறை பொருளில் உருவாகும் நீரமில சக்தியில் ஒன்றுடன் ஒன்று கலந்து… செயலுறும் தன்மைகள் எத்தனை எத்தனையோ நடைபெற்றுக் கொண்டிருக்கும் “இயற்கையின் சக்தியே பேரானந்தப் பெருநிலை…”

கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக மாறினாலும் நாம் அதை அறிந்திருக்கின்றோமா…?

கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக மாறினாலும் நாம் அதை அறிந்திருக்கின்றோமா…?

 

ஜீவன் பெற்று உடல் கொண்டு வாழும் மனிதன்
1.இயற்கையின் கதி குணங்களுக்கொப்ப எண்ணுகின்ற எண்ணத்தின் காந்தப்புல ஈர்ப்பு நிலைகளில்
2.சுவாசம் எனும் காற்று கொண்டு… பிடர்தல் (உந்துதல்) குண எந்த எண்ணமோ
3.அந்த எண்ணத்தின் வலு வீரிய காந்த ஈர்ப்பில் பிடர்தல் குணத்தன்மைகள் போல்
4.காற்றில் உலாவி ஓடிடும் படர்தல் குண கோடானு கோடி விசேஷத் தன்மைகளில்… “ஒத்த நிலையை ஈர்த்துக் கொண்டு”
5.சுவாசக் காற்றாக ஈர்க்கப்பட்ட ஒத்த குணங்களின் வலு வீரியத்தில்… “எக்குணம் பிடர்தல் கொண்டு வலுவாக்கப்பட்டதோ”
6.அந்த வலுவின் வலுவிற்கே வலு கூட்டிக் கொண்டிடும் ஜீவனாக… “அதே குணங்கள் மென்மேலும் ஈர்க்கப்பட்டு”
7.இரத்தத்தில் கருவுற்று அணுக்களாக உருப்பெற்று… அது தசைகளில் சேர்க்கப்பட்டு
8.எண்ணுகின்ற எண்ணம் தெய்வீக குணங்களற்ற… மாற்று நிலை (மீண்டும் பிறவிக்கு வரும்) கொள்ளப்படும் குணங்களாக இருந்திட்டால்
9.அந்தக் குணங்களுக்கொப்ப சேர்க்கப்படும் அமிலங்கள்… தியானம் கொண்டு நல்ல அணுக்களாக மாற்றம் செய்யப்படவில்லை என்றால்
10.உறைதல் குணம் கொண்டிட்டே (உடல் உறுப்புகளில் மாற்றமாகி) சரீரத்தையே நலிவுறச் செய்திடும் கதியாகி
11.பின் வினையாகி… பின் செயலுறும் வினைப் பயனாகி…
12.பின் விதியாக்கிடும் நிலைபெறும் செயல் கூறுகள் கொள்ளுகின்ற
13.கொள்ளப்படுகின்ற (விதிப்படி எடுக்கப்படும்) எண்ணத்தையே செயல் நடத்திடும் உயிர் கடவுளை இயக்கிடும் உணர்வலைகள்
14.உயிராத்மாவாகப் பதிவு பெற்றிடும் ஆத்ம சூட்சுமத்தில்
15.நாம் கூறிடும் இந்த எளிய தியானத்தின் வழியாகப் பெறப்பட வேண்டியது “ஆத்ம பலம் ஒன்றே…”

இயற்கையின் கதியால் சுவாச நாடிகளில் ஓடிடும் காற்று… பரிசுத்தமாக அமையப் பெற்றிட உன் முயற்சி இருந்திட்டால் மாற்று நிலை அமிலக் கூறுகளின் அணுக்கள் உடலுக்குள் உறையும் நிலை தடுக்கப்படும்.

மேல் நோக்கிய சுவாச நிலைகள் மாறு கொண்டிட்டால்… “கனம் கொண்ட” சுவாச அலைகள் (கோபம் பயம் துன்பம் பொறாமை குரோதம்) சரீர நாடிகளில் ஓடிடும் பொழுது அதனால் தடை ஏற்பட்டு… சரீரத்தின் வெப்ப கதியும்… நீர் அமில சக்தியில் கலந்திட்ட மாற்றமில குணத் தன்மையையும் சுவாச நாடிகளில் “நற்சுவாசத் தடங்கல்கள்” ஏற்பட்டுவிடும்.

அத்தகைய காலத்தில்…
1.வெப்பமும்… நீர் சக்தியுடன் கலந்திட்ட அமில குணங்களும் சுவாச நாடிகளில் நற்சுவாசத் தொடர்பின்றி
2.நற்சுவாசக் காற்றின் தொடர்பும் வெப்ப சக்தியில் கலந்துறும் சூரிய சக்தியும் நீர் அமில சக்தியுடன் கலந்து… தீவினைப் பயனுறும் செயலாக மாறி
3.விசேஷ செயல் உறாமல் (நல்லது ஏற்படாது) காற்றின் சூட்சுமம் தடைப்பட்டே… ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கொண்டிட்ட தன்மையாக
4.காற்றின் மூலத்தைத் தாக்கிடும் செயலாக… தசைகளில் வேதனையாகி சுவாச சமைப்பால் அங்கு (உடலில் ஆங்காங்கு ஏற்படும் வலி) அறிந்து கொள்கின்றோம்.

உறையும் நிலை இங்கு அதிமுக்கியம். நற் சுவாச குணங்கள் எடுக்கப்படும் போது அதனால் காக்கப் பெறுவது சரீரம் மாத்திரம் அன்று… ஆத்மாவும் தான் காக்கப்படுகிறது.

வேதனையைச் சரீர உணர்வுகள் காட்டுகின்றன… அதுவே ஆத்மாவின் பதிவாகச் சேரும் நிலையை உணர்ந்தாயா…?

சரீரம் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டிடும் செயல் கூறுகள் இந்த மனிதனுக்கு மாத்திரம் தான் உண்டு என்று எண்ணிடலாகாது. இயற்கையில் ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் இத்தகைய நிலை உண்டு.

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் வந்து நீ கண்டிருப்பாய். ஆகாய நீர் உரிக்க அறிந்தவனப்பா நீ. புலர் காலைப் பொழுதில் புல் பூண்டு செடி கொடிகளின் மீது பனித்திவலைகள் முத்து முத்துக்களாக உரு கொண்ட நிலையைப் பார்த்திருக்கின்றாய். அது எவ்வாறு உருப்பெறுகின்றது…?

பருவ காலமான பனிக்காலத்தில் பெய்கின்ற பனி அப்படி உருப்பெறுகின்றது என்று நீ நினைக்கின்றாய். ஞான விழிப்பு தந்தாயிற்றே… சொல் பார்க்கலாம்…!

அறிந்ததைத் தெளிவதே ஞானியருக்கு அழகு.

நண்பகலில் சூரியனின் வெப்ப அலைகளைச் சமைத்திடும் பூமி… தன் சமைப்பில் வெளிப்படுத்திடும் வெப்பத்தின் அலைகள்… உணர்வலைகள் கொண்டு வெப்ப கதியாகப் படரும் செயல் பகல் பொழுதிலும்… அதே வெப்ப அலைகளைப் பெற்றிடும் சகல தாவரங்களும் ஜடப் பொருள்களும் ஏன் மனிதனும் கூட உணர்ந்து கொண்டிடும் அச்செயல் சூரிய அஸ்தமன செயலுக்குப்பின் இரவிலே வெப்பத்தின் நிலை என்ன…?

பூமி சமைத்து வெளித்தள்ளும் சுவாசக்கதியாக
1.அதி வெப்ப நிலைகள் பூமியின் சுவாச உணர்வலைகளால் சமைப்பின் பின் வெளிப்படும் நிலையே
2.மேல் நோக்கித் தள்ளப்படும் வெப்பக் காற்று சென்று…
3.பின் அந்த இடத்தை நோக்கி குவியப் பெறும் பருவ காலத்தின் நீர் அமிலக் காற்று… கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.

தாவரத்தை எடுத்துக் கொள். வெப்பத்தைப் பெற்றிருக்கும் பகல் பொழுதில் பூமியின் சுவாச அதி வெப்பம் தணிவுறும் இரவின் போது… தான் பெற்றுக் கொண்டிட்ட வெப்ப அமில நிலைகளை வெளிப்படுத்திடும் பொழுதே… காற்றில் படர்வு நிலை பெறும் குளிர்வு நிலை நீர் அமில சக்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்திடும் பொழுதே… ஈர்த்திடும் கிரியைகள் மிக மிக நுண் நீர் அமிலக் கூறுகள், ஈர்ப்பில் படர்வு பெற்றே… இரவுக் காலம் முழுவதும் நடைபெறும் அந்தச் செயலால் உருப் பெற்றிடும் திவலையாக… துளிகளாகக் காண முடிகின்றது (VAPORISATION AND CONDENSATION).

இதையே உன் சரீர செயலில் கண்டு கொள்.

ஜடப்பொருளான எத்தனையோ பொருள்கள் மேஜை சுவர்கள் எங்கிலும் நடைபெற்றிடும் செயலில் ஜீவன் கொண்ட தன்மைகளில் அந்த செயல் ஜடப் பொருள்களில் அறியவொண்ணாதது.

உறைபடு செயல்கள்… மறைபடு பொருள்கள்…! அதாவது…
1.கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக உறைந்தாலும்
2.உடலுக்குள் ஆகப்படும் போது அது மறை பொருள் தான்.
3.அதை அறிய வேண்டியது மிகவும் அவசியம் அல்லவா…!

தேரின் அச்சாணி போல் வழி நடத்த நான் இருக்கின்றேன்

தேரின் அச்சாணி போல் வழி நடத்த நான் இருக்கின்றேன்

 

கடலில் சதா சர்வ காலமும் கரைதனில் அலை வீசி மீண்டும் அதன் செயல் நடைபெறுதல் போலவே… சூட்சும நுண் அலைகள் நீல வண்ணம் காட்டிடும் அன்பாகக் கருணை என்னும் நிலையில்… நீ அன்பு என்னும் அலைக்கரத்தை நீட்டியே மெய் வழி அறிவாய்…!

யாம் சொல்லும் தியானத்தின் மூலம் எடுக்கும் நுண் மின் காந்த அலைகளால் இருளான இந்த உடலுக்குள் “ஒளி பெற்றிடும் உயிரணுக்கள் தோன்றிடும்…”
1.அப்படி ஒளி மண்டலமாகும் ஆக்கத்தில் திகழும் மூலக்கனல் பெறும் கந்தன்
2.தாய் மூச்சு நாடியின் (குறுதெலும்பு பாகம்) துணையுடன் மேல் எழுந்தே ஆறு ஆதார நிலைகளில்
3.நன்மை என்னும் உறுதி மலை மேல் ஏறி… ஆகாயக் கூறு என்றே அழைக்கப் பெற்றிடும் சிரசின் உச்சியில்
4.ஒளி பொருந்திய வேல் போல் தோற்றம் தந்திடும் அமைப்பினில் கிளர்ந்து எழுகின்ற பொழுது…
5.தாய் மூச்சு நாடியின்… சக்தி ஒளி மண்டல சுவாச அலைகளை
6.கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கரைதனையில் வந்து மோதுவதைப் போல்
7.சிரசினில் மோதிடும் இடைவிடா காந்தப்புலன் மெய் ஒலி/ஒளி காட்டித் தடைப்படாத ஆனந்தத்தை உமக்கு அளித்திட… இனி தடை ஏது…?

ஆகவே… எத்தகைய சங்கட அலைகளையும் எண்ணியே ஈர்த்துக் கொண்டிடுதல் “இனி உன் நிலைக்குத் தகாதப்பா…”

சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு இயற்கையில் பூத்திடும் புஷ்பங்கள் அனைத்துமா விரிந்து மனம் வீசுகின்றது…? பக்குவப்பட்ட மலர்களையே கதிரவனின் கதிர் ஒளி அரவணைத்துப் பூக்கச் செய்கின்ற அன்பினை உணர்ந்து கொண்டாயா…?

1.ஓர் முறை வழி நடந்த என் பயணத்தில் என் தலைச்சுமையை இறக்கி வைத்து… இளைப்பாற்றி…
2.மேல் உத்தரியத்தினால் காற்றினை வீசி அரவணைத்த உனது உள்ளம் தான் இன்னும் உன்னை நாடியே வந்தடையச் செய்கின்றது.
3.சிவத்தின் தன்மை சிவாயத்துள் உன் மனநிலையை அறிந்து கொண்டிடவே தொடங்கிய பயணம் தொடர்கின்றது.

சகடம் போல் சுற்றுகின்ற வாழ்க்கைதான்… எண்ணத் தேர் மனமாம் மனதில்… அசைந்து அசைந்து ஏறுகின்ற செயலிலும் சகடம் சுழல்கின்றது.

தேரின் மையம் எது தெரியுமா…?

“தனித்துவ சக்தி” செயலுறுகின்ற மூகமோ (மௌனம்) அன்றி நிதானமோ…
1.சுழலுகின்ற சகடத்தையும் அந்தச் சுழற்சியின் ஓட்டத்தில் சுழலச் செய்யும் நிலை பெற்ற தேரின் அமைப்பை
2.அந்நிலையில் நிலைக்கச் செய்து… சாஸ்வதக் காட்சியாக வெளித் தோன்றாது.

சிறு பாகமான “அச்சாணி” விசை சேர்த்துக் கொள்கின்ற மையமாம் தனி சக்தி விசையாக்கும்.
1.வாழ்வினுக்கும் வழித் துணை என்றாலும்
2.செலுத்துபவனாய் நாமிருக்க… பஞ்சபூதங்கள் அமைவு பெறும் அனைத்தும் ஆகாயம் என்ற பால் வெளி.

“வேதாள மாமகரிஷி” அன்று உரைத்த “இந்த உரையில்” மறைபொருள் இரகசியங்கள் பல உண்டு.

சதிபதி

சதிபதி

 

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்றால் வாழ்க்கை நடைமுறையில் புறச்செயல்படும் காரியங்கள் குறிக்கின்ற கலைகள் என்றே எண்ணமிடுகின்றாய்.

வீரம் விவேகம் நளினம் முதற்கொண்டு நாம் காரியங்கள் நிகழ்த்தும் கலைகளும் உண்டு. மகரிஷிகள் உணர்த்திச் செயலுற வந்த மெய்ஞ்ஞானச் சுடராக்கும் கலைகள் அறுபத்தி நான்கினையே இங்கே உரைத்திட வந்தோம்.

எண்ணத்தின் தெளிவு…
1.இக்கணம் நீ என்ன “எண்ண நினைவில் இருக்கின்றாய்…?” என்று வினவினால்
2.“நான் இதை நினைத்தேன்…” என்று கூறுமளவிற்கு மனத்தின் தூய்மை வலுப்பெற்றிருத்தல் வேண்டும்.
3.அந்நிலை வலு கொண்டு விட்டால் கலைகள் தொடக்கம் அச்சரம் ஐம்பதில் தொடங்கும்.

ஓங்காரப் பொருள் காட்டும்
1.“பிரணவம்” என்றே அழைக்கப் பெறும் ஓம்…!
2.அதனுள் மூன்று நிலைகளாக கலைகள் (1)ஈர்த்து (2)சமைத்து (3)அமைதல் என்கின்ற விதமாக கலைகள் ஐம்பது.
3.அதாவது உயிரிலே ஈர்க்கபட்டு சமைத்து – ஓ; உடலாக அமைவது – ம்

ஈர்ப்பின் அகரம் பத்தாக… ஈர்த்த பின் செயல் வரும் உகரமாக பதினான்கு செயல் கொண்டு… அமைவு பெறும் மகரம் இருபத்தி ஆறாக ஓம் என்ற பிரணவ கலைகள் ஐம்பது நாற்பூத செயல்பாடலாய் விந்து கலைகள் நான்கு… நாதக்கலைகள் பத்தாக ஆக “அந்த அறுபத்தி நான்கு கலைகளையே சரீரத்தில் கண்டனர் மகரிஷிகள்…!”

இதற்கும் மேல் ஒளியாகும் நிலை ஒன்று சிரசின் உச்சியில் ஈஸ்வர ஜோதி…! ஒளி நிலை பெற மகரிஷியில் காட்டிட்ட அனிமாது சித்துகளை (அஷ்டமாசித்து) அடைந்து விட்டாலும்
1.அடக்கத்தின் திரு உருவாக ஒளி மண்டலத்தில் உறையும் மனமாக காரியமாற்றி… காரணத்துடன் வாழ்வான்
2.அதனின் நிலைக்கு வேறு எந்த நிலையும் நாம் எண்ணிடல் ஆகாது.

இச்சரீர வாழ்க்கையிலும் சிவசக்தி (சதி+பதி) சமேதராகச் சக்தி நிலை பெற்றிடவே உணர்ந்து கொண்டிட வேண்டிய பயன் தரும் நிலை காணுவோம். தாகம் எடுக்கின்றது தாகத்தை தணிக்க நீர் அருந்த வேண்டும் என்று மனம் நாடுகின்றது.

இது “சதியானவள்…” (வேகா நிலை) கொள்கின்ற செயலுறும் எண்ணத்தின் நிலையே கோபுரம் போல் உயர்ந்து விளங்குகின்றது. அதுவும் மலையின் மீது அமைந்த கோபுரம்.

“பதியானவன்…” மோகத்தின் வழிப்பாதை பயணமுற்று… அந்த வழிப் பாதையின் தொடரில் பன்மாடங்கள் இளைப்பாரி… நீக்கமுறாத் துயில் வசம் ஆட்படுகின்றான் (பல பிறவி எடுத்த நிலை).

அறிவின் சுடர்தல் தொடங்கி மெய்ஞான விழிப்பு ஏற்படுத்தும் கருத்தினுள் ஒன்றியவுடன் பதியானவன் விழித்துக் கொள்கின்றான்.

விழிப்பு நிலை பெற்றவுடன் வழித்தடங்கல் நிலையினை எண்ணியே செல்லும்
1.வேகத்திற்கு மேல் வேகமாக எண்ணத்தைச் செலுத்தி
2.கோபுரம் வாழ்கின்ற தன் பாகமாம் “சதியின் துணை நாடி…”
3.சதிபதி சிவசக்தி கூடும் நிலைகாட்டி…
4.இரு புறத்தூய்மையும் அகத்தின் வசம் எழ…
5.ஒளிநிலைப் பிரவாக மெய்ஞானச் சுடராக நிலை பெற்றிருக்கும் சூட்சுமம் செயல் கொள்கிறது.

மோகத்தின் நிலை மாற்றும் “இரகசியக் குறிப்புகளை” இங்கே காட்டி விட்டோம். சித்துக்களைப் பற்றியும் கூறி விட்டோம். கலைகளின் வகை இரு நிலைப்படும் நிலையைக் காட்டி “ஆய்வை” உனக்குள்ளே தூண்டி இருக்கின்றோம்.

செயலில் “வேகம்” வேண்டும்.. வேகத்தின் பிரதானம் “நிதானமும்” வேண்டும். எண்ணத்தில் ஆட்டுகின்ற கருத்தே சொல்லியவன் சுருதி கணபதியாக வரல் வேண்டும்.

சகல நிலைகளையும் உணர்த்தி ஏற்றுக் கொண்டிடும் பக்குவத்திற்காகப் பண்படுத்தி விதைத்திருக்கின்றோம்.

இங்கே காட்டப்படும் நெறிகளைக் கடைப்பிடிப்போன் மெய் ஞானியாகின்றான்

இங்கே காட்டப்படும் நெறிகளைக் கடைப்பிடிப்போன் மெய் ஞானியாகின்றான்

 

இங்கே யாம் உபதேசமாக உரைத்திட வந்திட்ட… ஒளி நிலை பெறச் செய்யும் ஒளி மண்டல தியானம்… “உணர்வுடன் கூடியதாகும்…”
1.ஈர்ப்பின் நிலை உணர்வுடன் பெறுதலால் புறக்கண் பார்வையை அகக்கண்ணால் அகழ்ந்து நோக்கின்
2.ஊர்த்துவ (மேலான) சக்தியாக மேல் எழும் கந்தன் தோன்றிடுவான் என்கின்ற சூட்சுமம்
3.ஒவ்வொரு மனித ஆத்மாக்களும் பெற்று உயர்ந்திட வேண்டும்.

அத்தகைய நன்நெறி நன்நோக்கத்தால் உங்களைப் போதினியாக (உலகுக்கு வழிகாட்டிகளாக) உருவாக்கிடவே இதை உரைக்கின்றோம்.

போதனைப் படுத்திடும் உயர் வழி நெறியைக் கற்றே… கற்றதைத் தன் வழி நின்று… கொண்ட கொள்கையை தகமைசால் (தெய்வீகப் பண்பு) நன்றே…! என அறிந்து… பின்பற்ற விரும்புவோர் இதை முயலட்டும்.

போதனை பெற்றிடும் இந்தச் சூட்சும வழியினைக் கடைப்பிடிக்கும் எளிமையும்… உணர்ந்து கொண்டால் அருமையும்… அத்தகைய இனிமை உணர்வு கூட்ட… உன்னுள்ளே கந்தன் (முருகன்) தோன்றுவது எப்படி…?

1.தியானத்தின் மகரிஷிகளின் ஒளியான நுண் மின்காந்த அலைகளை ஈர்க்கின்றாய்
2.ஈர்க்கின்ற செயல் உனது புருவ மத்தியில் கார்த்திகை (வெளிச்சம்) விளங்கிடும் சுடருள் பாய்ச்சி
3.ஈர்க்கப்படுகின்ற நிலை எங்கெல்லாம் செல்கின்றது தெரியுமா…?

சரீரத்தில் ஓடிடும் சகல சுவாச நாடிகளையும் அறிந்து கொண்டவனப்பா நீ. நீ ஈர்த்துக் கொண்டிட்ட ஒளி நுண் மின்காந்த அலைகள் சுவாச கதியின் சமைப்பின் சமைப்பாக சிரசைக் கடந்து கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதார அக்கினியில் அது செலுத்தப்படுகின்றது.

கந்தன் சிவன் நெற்றிக்கண்ணில் தோன்றினார் என்று புராணம் உரைக்கின்றது…!

மூலாதாரத்தில் பாய்ந்த நெற்றிக்கண்ணின் ஒளி சக்தி…
1.ஆங்கே கனல் விளைந்த ஒளியாக சுழுமுனை நாடியில் எழும்பொழுது (உயிர் வழி சுவாசம்)
2.புருவ மத்தியில் ஆறு ஆதார நிலைகள் அதே நிலை கொண்ட ஜோதி ஸ்வரூபமாக எழுந்து
3.மீண்டும் ஆகாயக்கூறு எனும் சிரசின் உச்சியில் சிவசக்தி நாடிகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட சிரசைக் கடந்து
4.எழுந்து நிற்கின்ற அந்த வடிவே கந்தன்,

பேரின்ப நிலை கிடைக்கப்பெறுகின்றது என அனு தினமும் பகர்கின்றாய். அந்தப் பேரின்ப லயத்தை நாடிட்ட மனம் வேறொன்றையும் நாடிடாது.

இத்தகைய பேரின்ப நிலை உனக்கு உரைத்த போதனையை நீயே வளர்ப்பாக்கி நீயே வளர்த்து… கண்டு கொண்டிட்டது தான்…!
1.இங்கே பயிலும் மெய்ஞானச் சுடர் ஆக்கும் தியானத்தின் வழி நின்றிடும் உன் மன உறுதியின் செயலை
2.அனைவரும் பெற்றிட வேண்டும் என்றே எண்ணத்தால் ஆசிர்வதித்து மென்மேலும் வளர்ச்சிப்படுத்திட்டு
3.வளர்நிலையின் ஜொலிப்பை எமக்குக் காட்டு.

வேதிக்கும் நிலையே (மெய்யை அறியும் குணம்) இடைவிடாத உன் மன உறுதி…! வாதிக்கும் நிலையே நம் உணர்வில் உந்துதலால் செயல் கொள்ளும் புறக்காரியங்கள்.

மெய்ஞானச் சுடராக்கும் வழிப் பயணத்தைக் காட்டிவிட்டோம். அறிவின் ஒளி இயல்பாக மஞ்சள் வண்ணம் எனில் தெய்வ வடிவைப் பெற்றிடும் குணம்… அன்பின் வழி வண்ணம் நீலம்…!
1.சாற்றும் வழி போற்றுவான் (மெய்யை உணர்ந்தவன்)
2.கடைப்பிடிப்பவன் மெய்ஞானி ஆகின்றான்

காட்சி:-
மிகப்பெரிய வட்டம் தோன்றுதல் ஒளி நுண் மின் அலைகள் காந்தத்தின் புலனாக அசைதல் சிரசின் உச்சியில் குவிதல்
நெற்றிக்கண் திறந்திடும் சூட்சுமம் மெய்ஞான விழிப்பு
நெற்றிக்கண் திறந்த பின்பு ஜீவன் சிவனாகத் தான் விளங்க
நெற்றிக்கண் ஒலி மூல ஆதாரத்தைத் தான் நோக்க…
கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதாரக் கனல் கிளம்பி முதுகுத்தண்டு வழி ஓடி
சுழுமுனை நாடியுள் அக்கினிப் பிரவாகம் பெருக்கெடுத்து சிரசின் உச்சியில் எழுந்து நிற்றல்…!

சந்திர கலைகள் செயல்படுங்கால்… ஆறு ஆதாரங்களும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட… “கந்தன் என்ற ஞானவேல் தோன்றுவான்…!”

“ஈஸ்வர ஜோதி” சிரசில் எப்போது தோன்றும்…?

“ஈஸ்வர ஜோதி” சிரசில் எப்போது தோன்றும்…?

 

பால்வெளி சூட்சுமம் சதா அசைவு பெறும் ஒளி மண்டல சூட்சும அணுக்கள் நிறத்தின் தன்மைக்கொப்ப மணமும்… மணத்தின் வீரிய அடர்வு செயல்பாட்டில் குணமும்… குணத்தின் அமைப்பு எண்ணத்தின் கருவாகும்… கருவின் ஒரு ஆத்ம ஒலி ஒளி விந்து கலைகள் இணைந்து செயல் கொண்டிடும்… ஜீவ பிம்ப சரீர நிலை பெற்றிடும்… ஜீவாத்மாவாகப் பயிர் கொண்ட நிலைகள் வளர்ப்பு ஜீவத் துடிப்பலைகள் வரும்,

அலை வீசாக் கடல் எனும் பால்வெளி சூட்சுமத்தில் உயிர் கொள்ளும் உயிராத்மா…
1.மனிதன் என்ற பிறப்பு எடுத்து மாயத்திரை போர்த்திக் கொண்ட செயலை விலக்கி
2.இச்சரீரம் கொண்ட வினையின் நாயகன் உயிர் சக்தி
3.ஆத்ம நிலை உருவாக்கிடும் செயல் கொள்ளும் அமைவு எப்படி உருவாகின்றது…?

“உன் முயற்சி தான் ஏற்பு… திரை விலக்கிடும் முயற்சியே தியானம்…!” (நல்லதைப் பெற வேண்டும் என்ற முயற்சியுடன்… உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… அதை வைத்து இருளை விலக்கிட வேண்டும். அதுவே தியானம்)

வேதாள மகரிஷி வலியுறுத்தி உரைத்திட்ட ஒலி நாதங்கள் இன்றும் ஒலி அலைகளாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தின் ஆழம் கொண்ட “இந்த உபதேசங்களைப் படிப்பதே மாபெரும் பாக்கியமப்பா…!”

பார்க்காமல் வருகின்றவன் சிந்தனா சக்தியின் துரிதமற்ற நிலையில் ஓர் குளத்தில் வந்து விழுந்து விடுகின்றான். வேரோ அன்றி விழுதோ பிடித்துக்
1.கரையேறுகின்ற முயற்சியையும் நீக்கிவிட்டு
2.குளத்தின் நீர் வற்றிய பிறகு வெளியேறிச் செல்லலாம்…! என்பது என்ன பேதைமை…?

சிந்தனையற்று அந்தக் குளத்தினுள் இறங்கியவன் சிந்திக்கின்றான்… நீர் வற்ற வேண்டும் என்று…! (நீர் வற்றுமா…? மனிதனின் இன்றைய சிந்தனை அப்படித்தான் உள்ளது)

அப்படி இருந்தால்
1.மாமகரிஷிகள் மனிதர்களுக்கு உவட்டாமல் (திகட்டாத சுவையாக) ஊட்ட வந்த
2.ஒளி காந்த நிலைபெறும் ஒளி மார்க்க சிந்தனை செயல்படுவது எங்கே…?

உன் முயற்சி தான் ஏற்பு.

1.உலகோதய நிலை வாழ்க்கை என்பது தான் “குளம்”
2.ஜீவன் கரையேற முயற்சிக்கும் முயற்சி “அறிவின் தூண்டுதலால் ஈஸ்வர அனுபூதி”
3.கரையேறாத நிலையில் உள் உடைந்து கிடத்தல் – “தொடர் பிறப்பின் சூட்சுமத்தில் சுழன்று கொண்டே இருக்கின்ற” மனிதனின் சிந்தனையின் செயல்பாடு
4.வேரும் விழுதுகளும் “வழிகாட்டிடும் மார்க்கங்கள்”
5.அன்றி சுயத்தின் முயற்சியாக நின்று வெளி போதல் சுயசக்தியின் வளர்ப்பாக்கும் “ஒளிகாந்த ஒளி மண்டல சிந்தனாலயம்…”

கரையேறும் நிலையாகத் தன் முயற்சி கொண்டிடும் நிலைக்கே
1.அக்ஷி என்ற நிலைகாட்டி அகக்கண்ணால் உள்நோக்கின்
2.பிடரிக்கண் என்று உரைத்திட்ட பார்வையின் தன்மை “மூலாதார அக்கினியை உற்று நோக்கும்…”
3.அகக்கண்ணின் சிந்தனா சக்தி அங்கு செலுத்தப்பட்டால்
4.சரீர செயல்பாட்டில் உணர்ந்து அறியத்தக்க ஒளி அலைகள் பாய்ந்து
5.ஒளி கலந்த புலமாக்கும் ஈஸ்வர ஜோதி சிரசில் தோன்றுவதே
6.சிவம் என்றிட்ட ஈஸ்வரனும்… சிவாய என்றிட்ட சக்தியின் நிலையும்
7.ஒன்று கலந்த பேரின்பப் புணர்ச்சி… எண்ணத்தால் ஆட்டி உதயத்தில் காட்டும்…!
8.(பிறவி என்ற இன்னலிலிருந்து விடுபட்டு… என்றுமே ஏகாந்தமாக… பேரானந்த நிலை கொண்டு வாழச் செய்யும்).

கூர்படு சிந்தை கொள்

கூர்படு சிந்தை கொள்

 

அன்பு அறிவாக நிலைகொள் என்றால் என்ன…?

“அன்பின் வடிவாக நிலை பெற்றிருப்பாய்…! என்று ஆசி வழங்கிடும் முதியோர் சொல்…” அறிவு மனம் குணம் மூன்றும் எண்ணத்தின் செயல் வழி என்றாலும் தான் எடுத்துக் கொள்ளும் குணங்கள் நிலைக்கொப்பத்தான் வாசனையால் ஆளப்படும்.

வான்மீகி கூறிய நீல வண்ணராமன்… தெய்வீக வடிவு…! என்பதெல்லாம் அறிந்த சொல்… ஆனால் அது மறைக்கப்பட்ட பொருள்.

அன்பு என்ற சொல்லின் கொள்ளப்படும் நிலை குணம் அக்குணங்களின் வாசனையாகிய மணம் அது வெளிக்காட்டும் ஒளியாக (நிறம்).

அன்பின் நிறம் என்ன தெரியுமா…?

அன்பின் அறிவு நீக்கமற நிலை கொள்ளும் செயலுறும் இயக்க சூட்சுமம். அன்பு தான் வான்மீகி மாமகரிஷி காட்டிய “நீல வண்ணம்…”
1.வீரம் விளைவித்த சாந்தமாக கண்ணின் ஒளி நீல வண்ணம் காட்டி
2.ஆத்ம சுடர் பிரகாசித்து… காண்பவரையும் உயர் ஞான வழி வரும் செயலாக ஆக்கும்.

சூரிய கிரகண கால நிகழ்வில்… கதிரவன் ஒளி கிரகணங்கள் பூமியில் பாய்ந்திடாத குறுகிய அந்தக் கால நேரத்தில் நீரில் நிறைந்திடும் நுண்ணிய விஷ அணுக்கள்… சூட்சும செயல் மென்மேலும் பல்கிப் பெருகி… நீர் சம்பந்தமான கடுமையான நோயாக… இந்த உலகம் எதிர் கொள்ளத்தான் போகின்றது.

கடுமையான விஷ மணத்தின் செயலில் உயிரையே உண்டுவிடும் நடைமுறை சாத்தியமும் உண்டு, அதற்காக அஞ்சிட வேண்டாம்…!

சூரியப் பிரகாசத்தினை எண்ணி ஈர்த்திடும் பக்குவ நிலை பெற்றிருக்கும் சரீரத்தில் எலும்பையே ஊடுருவி ஒளி அருளால் உள் செலுத்திப் பாதுகாப்புக் கவசமாக…
1.சகலமான ஒளி மண்டலவாசிகள் எனும் மகரிஷிகள் வழி வழியாக வந்திடும் ஞானச் செல்வங்கள்…
2.இந்த உலகத்தையே இரட்சித்துக் காத்திடும் செயலுக்கு “மாமருந்தாய்” அளித்துள்ளனரப்பா.

“சிவ சக்தியான ஒலி ஒளி” நீக்கமறச் செயல் கொண்டிடும் திறத்தில்… ஒலி கொண்ட சக்தி ஒளியுறும் சிவமாகக் கலந்திடும் கலப்பு… சிவ சக்தியின் இணையான நிலை விளக்க முறை செயல்படுத்திடும் நடைமுறையில் ஒலி கொண்ட சக்தி ஒளியாம் நிலை சிவத்துள் ஐக்கியமாகச் செயல்படும் தொழிலில்… “அறிவு சிவமாக அதனுள் இட்ட ஒளி சக்தியாகப் பரிணமிக்கிறது…”

மெய்ஞானச் சுடர்தல் வேதாள மாமகரிஷி அருளிச் செய்த சுடர் விளக்கமாக…
1.நீரை இறைப்பது ஏற்றம்
2.நீண்ட நெடு வயல்கள் என்பதே உலகம்
3.வயலில் விளைகின்ற பயிர்கள் அவைகளே ஞானம்… ஞானப்பயிர்.

கிணற்றில் நீர் நிறைந்திருக்கின்றது… அதுவே மனத்தின் பாங்கு அருள்.
1.ஜீவன் தந்திடும் ஒளிக் கதிர்கள் “நீர் ஒன்று இல்லாவிடில்…”
2.ஜீவன் என்றாலும் செயல் கொள்ளா நிலையில் உருவாக்கிடும் சக்தியின் பாங்கில்
3.அநித்தியமான சூடு மறைபொருளாக விளங்கி… பிரம்மம் (சிருஷ்டி) என்ற நிலை காட்டாது.

நீர் இறைத்து நெடுவயல் நீர் பாய்ச்சிச் செயல்படுத்திட ஓர் உபகரணம் தேவை. அதுவே “தியானம்” என்ற பெயர் பெறும் ஏற்றம்.

முயற்சி செயல் கொள்ளும் பொழுது ஏற்றத்தில் நீர் இறைக்கின்றாய். அந்தச் செயலின்றி நெற் பயிர் எப்படி விளையும்…?

தென்னை ஊன்றினாய் என்றால் தென்னை தான் விளைவாகும். அது போல் ஞானப் பயிர் வளர்த்திடும் கருவின் வலுவிற்கு வீரிய நல்வித்துக்களை ஊன்றிட வேண்டும்.

அந்தச் செயலுக்கே மாற்று அலை நிலைகள் திசை மாறிச் செலுத்திடத் துடிதுடிக்கும் எண்ணத்தின் பாங்குகள் வந்தாலும்…
1.ஞானியற்கு மேலாம் உயர்வெண்ண செயலில் செயல் கொண்டு
2.திட நிலை சங்கல்பம் பெற வைத்திட்டது எது…?

சிந்தை என்ற சொல் பெரும் பொருள் அறிவுறுத்தும் நிலையன்று… “கூர்படு சிந்தை கொள்” என்றே உரைத்திட்டோம்.

உறை பொருள்… மறைபொருள்… உட்பொருள்.

உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை இருக்கும் “அணைந்திடாத அக்கினிக் குண்டம்”

உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை இருக்கும் “அணைந்திடாத அக்கினிக் குண்டம்”

 

அதீத செயல்பாடுகள் சக்தியின் வளர்ப்பாகக் கண்டுகொண்ட மகரிஷிகள் சரீரத்தினுள் அந்தச் செயல்பாட்டை அறிந்து கொண்டு… (தெய்வ குணங்களை) ஒவ்வொரு நிலையாகச் செயல்பாடுகள் கலைகளாய்… அவைகள் செயலுறும் நாதவிந்துவாக தெய்வீக உருவங்களாகப் பெயர் நாமப்படுத்தி… விநாயகர் சிவன் சக்தி கந்தன் என்று சூட்சுமப்படுத்தி அருளினார்கள்.

நாத விந்துகள் கலைகள் செயல் கொண்டிடும் நிலைகளும் நாவின் அடிப்பாகம் பிரணவம் (உமிழ் நீர் சுரக்கும் இடம்) என்று செப்பிய சூட்சும நிலைகளின் அகழ்வுகள்… நாவின்படி தொடங்கி தொண்டைப் பகுதியினுள் செயல்படும் ஆகாய இருள் மாயை.

1.உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை என்றுமே அணைந்திடாத அக்கினிக் குண்டம் உண்டு (சுவாசம் உள் சென்று வெளி வரும் போது சூடாக இருக்கிறதல்லவா)
2.ஈஸ்வர ஜோதி எனும் சிவத்தை அறிந்து கொண்டிடும் ஜீவன்களுக்கு அந்த நிலை தமக்குள் உணர்த்தும்
3.உயிராத்ம சக்தியின் வலுவாக்கும் செயலுக்கு தெய்வீக வடிவ நீல வண்ணம் காட்டி
4.உயிர் ஆத்மா (உயிரும் அதனுடன் ஒன்றும் ஒளியான உணர்வுகளும்) ஐக்கிய நிலையே “சீதை அக்கினி குண்டத்தில் இறங்கினாள்…” என்று
5.சூட்சும சொல்லால் பொருள் காட்டி உரைத்தாரப்பா வான்மீகி மாமகரிஷி.

தட்டாது ஒதுக்கும் நிலையே நமக்கு வேண்டியது.

வேதாள மாமகரிஷி உலகியல் தன்மையில் “தேகி” எங்ஙனம் செயல் கொள்வார்…? என்றே நயம்பட உரைத்த உரை… கட்புலன்களால் (கண் பார்வை) பௌதீக மாயப் பொருள்கள் அனைத்தையும் ஒளி கொண்டு நோக்கி அறிதலும்… அறிந்ததை அறிந்ததாகப் பொருளின் குறிப்பைத் தெளிவாக உணர்தல் என்றே அறிந்த பின் தெளிந்து உணர்ந்து கொள்கின்றோம்.

அறிந்து கொண்ட செயலை நடைமுறைப்படுத்திடும் வழி வகைக்கே செயல் கொண்டாலும்
1.கட்டுப்படாத தன்மைகளையும் அதே உணர்வின் எண்ணம் உணர்த்தியும் தெளிதல் போல்
2.அந்த நிலையிலும்… ஈர்த்துக் கொண்டிட்ட வாசனைக்கொப்ப அறிந்திடாத் தன்மைகளும் செயல்கொள்ளும் விதத்தை
3.மேலாம் அறிவு உரைத்த நன்மைதனை நாளும் பொருள் விளக்கம் பெறுவது எப்படி…?

கடும் மழைக்காலத்தில் புள்ளினங்கள் (பறவைகள்) மழை நீரால் நனைந்து “குளிர் தன்மையாக விதிர்விதிர்ப்ப” அந்தப் பறவை இனங்கள் சிலிர்த்துச் சிறகினை வீசி அத்தன்மை படாது ஒதுக்கும்.

அதைப் போல்
1.எந்த நிலையாகினும் அந்நிலையின் அலைகள் நம்மைச் சாடிடாத வண்ணம்
2.புள்ளினங்கள் தன் மீது படாது ஒதுக்குவதைப் போல் ஞானச் செல்வங்கள் பிரகாசித்திடும் விழிப்பார்வையின்
3.சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம் மறைபொருளாகக் குளிர்ந்து எழுந்த குளிர்கனல் மேல் நிலை காட்டும்.

அவ்வாறு ஈர்த்துக் கொண்டிடும் உயிர் சக்தி… ஆத்ம நிலைக்கே ஊட்டும்.