எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!

எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!

 

ஒரு சொல்லாக வெளி வர வேண்டும் என்றால் “எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்ந்துதான்…” அந்தச் சொல் வரும்… தனித்து வராது… அதனுடைய சுருதிகள் அப்படி…!

ஒரு சிலர் மிகவும் எளிமையாகப் பேசுவார்கள். அவர்களிடம் சாந்த குணம் இருக்கும்
1.சாந்த குணம் இருக்கிறது என்றால் மனதிலே உணர்வுகள் ஜாஸ்தி இருக்கும்.
2.எண்ணத்தால் பாய்ச்சவர்கள்… இது அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வு.

உதாரணமாக… சில பொருள்களை வெளியிலே பார்த்தால் ஒன்றும் தெரிவதில்லை… செய்வதில்லை. ஆனால் அதைச் சாப்பிட்டு விட்டோம் என்றால் குடலுக்குள் சென்று அரிப்பைக் கொடுத்துவிடும்… எதிர்மறையாகும்.

இதே மாதிரித் தான் ஒருவர் மிகவும் சாந்தமாக இருப்பார் அவர் சாந்தமாக இருக்கின்றார் (சாதாரண வாழ்க்கையில்) என்று நாம் நினைப்போம்
1.ஆனால் எண்ணங்கள் பல விதமாக அங்கே ஓடும்.
2.அவர்கள் நினைவுகள் வெளிப்படும் அவர்களுக்குள் மற்றது சேராது.
3.மற்ற கெடுதலை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவருடைய நினைவுகள் அதை அடக்கும்.

இயற்கையிலே சிலருக்கு இப்படி விளைகின்றது.

ஆனால் அந்த மகரிஷிகளோ…
1.”கோடி கோடி…” என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள்.
2.அந்த உணர்வை நாம் எடுத்து நமக்குள் புகுத்த வேண்டும்.
3.அப்படிப் புகுத்தினோம் என்றால் தீமைகள் நீங்கும்.

புகுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும். இந்த அலைகள் இங்கே படரும்… நினைவுகள் அங்கே விண்ணுக்குச் செல்லும். ஆகவே “எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!”

வாழ்க்கையில் இப்படிச் செய்கின்றார்களே என்று எண்ணி விட்டால் இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.

விண்ணின் பற்றைக் கொண்டு நாம் அந்த எண்ணத்தால் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி செய்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை எடுத்து வலுப்படுத்த வேண்டும்.

மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் வேறு வேலை செய்து கொண்டிருந்தாலும்
1.நினைவை மேலே கொண்டு செல்ல வேண்டும்… கண்ணின் நினைவைச் சிந்தனையை மேல் நோக்கிச் செலுத்திப் பாருங்கள்.
2.அடுத்தவரிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும்… செவிகளில் படும்
3.நினைவோ விண்ணிலே இருக்கும்… இரண்டும் கலவையாகும்… அவருடைய உணர்வு நம்மை இயக்காது…!

சரி.. என்று எதிர் பதிலைத்தான் சொல்லச் சொல்லும்.

நேராக அவர்களைக் கண்ணுற்றுப் பார்க்காதீர்கள். கோபமாகப் பேசுபவர்களைக் கண்ணுற்றுப் பார்க்கக் கூடாது.

சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்து வலுவாக்கிக் கொண்டால் உங்களை அது இயக்காதபடி தடுக்க முடியும்.
1.உங்கள் சொல் அங்கே பாய்ந்து அங்கே அவருடைய இயக்கத்தை மாற்றும்.
2.இந்தப் பதிவுகள் நமக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது.

சூரியனின் செயலாக்கம்

சூரியனின் செயலாக்கம்

 

பிரபஞ்சம் என்பது நமது சூரியக் குடும்பம். நூலாம்படைப் பூச்சி போன்று தான் நட்சத்திரங்கள் அமிலச் சக்தி கொண்டது. அதனின் சுழற்சியில் வெளி வருவது நூலாம்படை போன்று விரிவடையும்.
1.பிரபஞ்சம் சுழன்று வரும் பொழுது நட்சத்திரங்கள் அகண்ட அண்டத்தில் இருந்து வரக்கூடிய துகள்களைச் சேமித்து வைக்கின்றது…
2.தன்னுடைய பால்வெளி மண்டலங்களாக மாறுகின்றது.

கார்த்திகை நட்சத்திரம் முன்னாடி இருக்கின்றது… மீதி நட்சத்திரங்கள் அனைத்தும் அதற்கடுத்து வரிசையில் இருக்கும். எத்தனையோ தூரத்திலே ஒவ்வொன்றும் கீழே இருக்கும்.

சூரியனின் சுழற்சி வேகத்தில் வரும் பொழுது அது மிகவும் பின் தங்கி வரும். இரண்டாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வரும். மூன்றாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வரும்.

சூரியனை ஒட்டி இருக்கப்படும் பொழுது கோள்களும் இதே போன்றுதான் ஒவ்வொன்றும் தன் தன் வித்தியாச நிலைகள் சுழன்று கொண்டிருக்கும்.

பிற மண்டலத்திலிருந்து வரக்கூடிய துகள்கள் நட்சத்திரங்களின் பால்வெளி மண்டலங்களில் ஒட்டிக் கொள்கின்றது. சுழற்சி ஆகும் பொழுது அது எல்லாம் தூசியாகின்றது.
1.அதற்கடுத்து இன்னொரு நட்சத்திரம் அதை இழுக்கும்.
2.இடைமறித்து வரும் பொழுது இதற்கும் அதற்கும் இரண்டு கலவைகள்.
3.இப்படி இந்த 27 நட்சத்திரக் கலவைகள் தூசிகளாக வருவதைத் தான் இடைமறித்து
4.முதலில் வருவதை கேது விஷத்தன்மையை எடுத்துக் கொள்கின்றது.
5.ராகு கருகிய புகைகளை எடுக்கின்றது… கலவையாகி மாற்றங்களை அனுப்புகிறது.

இப்படி ஒவ்வொரு கோளும் இழுத்துத் தன் கலவையாக மாற்றி அமைத்து உள்ளே அனுப்புகின்றது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை உணர்வுகள் கலவை ஆகி… எந்த அணுக்களிலும் எதையும் உருவாக்கக்கூடிய தன்மை பெறுகின்றது.

இந்தக் கலவைகள் வரப்படும் பொழுது மற்ற கோள்களுடன் கலக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் மாற்றங்கள் ஏற்படும்.
1.அப்படி மாற்றங்கள் ஏற்பட்டுச் சூரியனுக்கு வரும் பொழுது
2.விஷத்தை எல்லாம் பிரித்துத் தூக்கி எறிந்து விடுகின்றது… ஒளியாகப் பாதரசமாக மாற்றுகின்றது.

நட்சத்திரங்கள் அனைத்தும் முதலில் அமிலமாக இருந்தது தான். இந்த உணர்வு மாற்றங்கள் ஆகி மாற்றம் ஆகிப் பாதரசமாக மாற்றும் நிலை வருகின்றது…
1.ஆக “முழுமையான விந்து… இந்த உலகை உருவாக்குவதற்கு அதுவே மூலமாகிறது…”
2.அதில் எடை கூடிய நிலை வரப்படும் பொழுது தள்ளுகின்றது… பால்வெளி மண்டலத்தில் இது எடை கூடியது…. பாதரசமாகிறது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு அணுவின் தன்மை ஒவ்வொன்றுக்குத் தகுந்த மாதிரி இருக்கும்.

உமிழ்த்தி வெளியே வரப்படும் பொழுது… பிற மண்டலங்களிலிருந்து இழுக்கக்கூடியதை எதிர் நிலையில் மோதப்படும் பொழுது சூரியனுக்கு வெளிப்புறத்திலே ஏற்படும் வெப்பம் தான் “நாம் காணக்கூடிய வெயில்…”
1.ஆனால் சூரியன் குளிர்ச்சியான பூமி.
2.சூரியனுக்குப் பல ஆயிரம் மைல்களுக்கு அந்தப் பக்கம் தான் இந்த மோதல்கள் நடக்கின்றது.
3.வெப்பமாகிக் கெட்டது அனைத்தையும் தூக்கி எறிந்து விடுகின்றது.

பெட்ரோமாக்ஸ் விளக்கில் பார்த்தோமென்றால் உள்ளே ஒரு துணி தான் இருக்கும். பெட்ரோல் அதிலே ரோலிங் ஆக ஆக நெருப்பாகி வெளிச்சமாகத் தெரிகின்றது. பெட்ரோல் அதிலே வரவில்லை என்றால் உடனே அது கருகிவிடும்.

இதே போல் தான் சுழற்சியின் தன்மையில் அடித்து வீசப்படும் பொழுது மற்றதுகளை எடுத்து விஷத்தைப் பிரிக்கிறது. அந்த மோதல் ஏற்படும் போது ஒரு ஈர்ப்பின் தன்மை வருகின்றது… “அது தான் காந்தம்…!”

இழுத்துக் கொண்டபின் விஷத்தின் தன்மை அதிலே கலந்து விடுகின்றது. கலந்து வெளியே வரப்படும் பொழுது “எலக்ட்ரிக்…” அது இயக்கச் சக்தியாக இயக்க அணுவாக மாறுகின்றது.

இது மெய் ஞானப் பாடம். குருநாதர் இதை எடுத்துக் காட்டி
1.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது எப்படி திடப்பொருளாகின்றது…?
2.இன்னொரு பொருளைச் சேர்த்த பின் இது ஆவியாக எப்படிப் போகின்றது…?
3.ஆவி வெளியே போன பின் பொருள்கள் எப்படி இணைகின்றது…? என்று காட்டுகின்றார்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் இரத்தத்தில் வலுவாக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் இரத்தத்தில் வலுவாக்க வேண்டும்

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியிலும் தியானம் என்பது பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால் “அதை நாம் திரும்ப எண்ணுவது தியானம் தான்…”

ஆனால் அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று அதை ஏங்கித் திரும்பத் திரும்ப எண்ணினால் இதுவும் தியானம் தான்.

பிறர் கஷ்டப்படும் உணர்வை நமக்குள் வராமல் தடுக்கலாம்.

வேதனைப்படுவோரைக் கேட்டு உணர்ந்தபின் நமக்குள் வராது தடுக்க வேண்டுமென்றால் இதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை இதே போல முறைப்படுத்தி நம் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று செலுத்தி விட்டால் “உண்மையான தியானம் இது தான்…”
1.வாழ்க்கையையே தியானமாக்குதல் வேண்டும்
2.தீமையைப் புகாது தடுத்தல் வேண்டும்
3.தீமையை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்
4.நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அதைப் பெறும்படி நாம் செய்ய முடியும்.

காரணம் ஒருவர் கோபப்படுகிறார் என்ற உணர்வை நாம் அடிக்கடி நுகர்ந்தால் நமது உடலிலே இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது.

இரத்தக் கொதிப்பு ஆவதற்குக் காரணமே சந்தர்ப்பத்திலே நாம் நுகர்ந்த உணர்வுகள்… அந்தக் காரமான உணர்வுகளை உணவாக உட்கொள்ளும் அணுவாக உருவாகி விடுகின்றது.

ஒரு அணு உருவாகி விட்டால் அது மீண்டும் தன் உடலிலே பல அணுக்களை உருவாக்கி நமக்குள் இரத்தக் கொதிப்பின் தன்மையைக் கொண்டு வந்து விடுகின்றது.

இப்படி ஆகாதபடி ஒருவர் கோபப்பட்ட உணர்வை நாம் நுகர்ந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்றும் எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தத்திற்குள் காரமான உணர்ச்சியை இயக்கும் அணுவாக உருவாவதற்கு முன்
1.நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முந்திச் செலுத்தி விட்டால்
2.நம் இரத்தத்தில் உள்ள அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்கிறது
3.அந்தக் காரமான உணர்வுகள் வந்தாலும் அதைத் தணித்து விடுகின்றது.

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அதை நாம் குழம்பிலே கலக்கப்படும் பொழுது அது எல்லாவற்றுடன் கலந்து சுவையாக மாற்றுகின்றது.

இதைப் போல நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிந்து கொண்டாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி இத்தனையும் விஷத்தை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய அதனின்று வரும் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமது இரத்தங்களில் கலக்கச் செய்யும் பொழுது அது வீரியமடைகின்றது… தீமைகள் வராது தடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இந்தத் தியானத்தின் அருளை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் பெற முடியும். உங்கள் வாழ்க்கையில் இதையே தியானமாக்கிக் கொள்ளுங்கள்.

1.உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகளை நுகர்ந்து அறிய நேர்ந்தாலும்
2.அந்தக் கொடிய உணர்வுகள் உங்களிலே வளராது தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று
3.உங்கள் உடலில் உள்ள அணுக்களை அந்த வலுவான அணுக்களாக மாற்றி அமைக்க முடியும்.

மனிதன் ஒருவனால்தான் இதைச் செய்ய முடியும்…!

நாம் கட்டாயப்படுத்திப் பெற வேண்டிய சக்தி

நாம் கட்டாயப்படுத்திப் பெற வேண்டிய சக்தி

நமது சகஜ வாழ்க்கையில் ஒருவன் தீய செயலைச் செய்கின்றதைப் பார்க்கும் பொழுது அதனின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் பதிவாக்கி விட்டால் பின் “அவன் தீய செயல்களைச் செய்கின்றான் செய்கின்றான்…” என்று அடிக்கடி எண்ணும்போது அதனின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அவன் எந்தத் தீய செயலைச் செய்தானோ அதையே நாமும் செய்யக் கூடிய தன்மை வந்து விடுகின்றது.

அப்போது தியானத்தில் உட்கார்ந்தால்
1.இது முடியலே… அது முடியலே… உட்கார முடியலே…! என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதான் வளரும்.
2.எப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள்.
3.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப் பெறும் பொழுது உங்களைச் சும்மா இருக்க விடாது.
4.அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும்.
5.இந்த உணர்வு வரும்போது பிறர் தீமைகளை அகற்றும் வலிமை பெறுகின்றோம்… தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

மனிதர்களான நாம் இந்தச் சரீரத்திற்குப்பின் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையில் முழுமை பெற வேண்டும்.

நமது குருநாதர் காண்பித்த அருள் வழியில் “துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும்” என்ற உணர்வை மட்டும் நீங்கள் கூட்டி வளர்த்துக் கொண்டால் போதும்,
1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்தையும் இவைகளின் இயக்கத்தின் உண்மைகளையும் அறியும் தன்மை வரும்.
2.தீமைகளை அகற்றும் சக்தியும் வரும்.

நமது உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ அதன் உணர்வை வளர்த்து அதன் உணர்ச்சியின் தன்மை கொண்டுதான் இந்த உடலை இயக்குகின்றது.

சந்தர்ப்பத்தால் தீமையின் உணர்வுகளை நாம் நுகரப்படும்போது தீமையான அணுக்கள் நமது உடலில் வளர்ந்து விட்டால் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அது தன் இனத்தைப் பெருக்குகின்றது.

ஆனால் தீமைகளை வென்ற அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி விட்டால் அதன் தன்மை கொண்டு தீமைகள் வராது காக்கும் நிலையினை நம்முள் உருவாக்குகின்றது.

இன்று ஒரு விஞ்ஞானி ஒரு உயிரினத்தின் செல்களை எடுத்து மற்றவைகளுடன் இணைக்கும் நிலையாகக் கட்டாயப்படுத்தித்தான் திணிக்கின்றான்.

1.இதன்படி இந்த உயிருடன் இணைத்துக் கொண்டபின் இதனின் ரூபமே மாறுகின்றது.
2.இப்படி ஆட்டை மாடாக்குகின்றான்… மாட்டை ஆடாக்குகின்றான்… எத்தனையோ வகைகளில் செயல்படுத்துகிறான்.
3.இப்படி ஒவ்வொன்றிலும் “கட்டாயப்படுத்தியே திணிக்கின்றான்…”

நாம் பள்ளிக்குச் செல்கின்றோம்… டாக்டருக்குப் படிக்கின்றோம். அங்கே எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்திக் காண்பிக்கின்றனர்.

ஆனால்… தானே கட்டாயப்படுத்திப் படிக்க வேண்டும்… பார்க்க வேண்டும் என்ற உந்துதல் கொண்டு எவர் செயல்படுகின்றனரோ அவரே உயர்ந்த டாக்டர்களாக ஆகின்றார்கள்.

ஆனால் படிக்கும் பொழுது “இது என்னடா… சங்கடமாக இருக்கிறது…?” என்ற உணர்வை எடுத்துக் கொண்டவர்கள் நிச்சயம் சங்கட டாக்டராகத் தான் வருவார்.

டாக்டரான பின் முதல் இரண்டு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தபின் மூன்றாவது நோயாளியைப் பார்க்கும் பொழுது இவரை அறியாமலேயே சலிப்பு வந்துவிடும். இந்த உணர்வு கலந்தபின இவர் பார்க்கும் வைத்தியமெல்லாம் சீராக இருக்காது.
1.எனவே நாம் கட்டாயப்படுத்தித்தான்
2.அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் தியானித்தல் வேண்டும்.

ஒரு விஞ்ஞானியோ இன்ஜினியரோ ஆராய்ச்சி என்ற தத்துவத்தில் வரப்படும்போது “இதைப் பெற வேண்டும்” என்று கட்டாயப்படுத்தி ஆராய்ச்சி செய்து உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வருகின்றனர்.

இப்படி வலுகொண்ட உணர்வு கொண்டு ஆராய்ச்சிகளைச் செய்யும் பொழுது தான் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெறுகின்றது. இதன் வழி கொண்டு அகண்ட அண்டத்தையும் ஆய்ந்தறியும் நிலைகள் வருகின்றது.

ஒரு விஞ்ஞானி ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான் என்றால் அவருடைய மாணவன் அதைவிட ஒன்றைப் பெற வேண்டும் என்று தன் உணர்வை வலுபெறச் செய்யும் பொழுது அவன் குரு கண்டறிந்ததை விட அதிகமான ஒன்றைக் கண்டறியும் நிலை வருகின்றது.

இப்படி வளர்ந்ததுதான் விஞ்ஞானம்.

இதைப் போன்று நமது குரு காண்பித்த அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நாம் நமக்குள் பெறும் பொழுது
2.அகண்ட அண்டத்தின் பேருண்மையின் தன்மைகளை அறியும் ஆற்றல் பெறுகின்றோம்.

நமது உணர்வின் தன்மையே நமக்குள் ஒளியாக மாற்றும் பொழுது மிகவும் உயர்ந்த நிலைகளை நாம் பெறுகின்றோம்.

நமது உயிருக்கு என்றும் அழிவில்லை. உணர்வுகள் மட்டுமே மாறிக் கொண்டே உள்ளது. ஆகவே நாம் இன்று மனிதனாக இருக்கிறோம். இந்த மனித உடலில் விஷமான உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால் உயிர் அடுத்த சரீரத்தை விஷப் பாம்பாக மாற்றிவிடுகின்றது.

அருள் ஒளி என்ற உணர்வினை நம் இந்திரலோகத்திற்குள் உருவாக்கி நம்முள் ஏகாந்த நிலை கொண்டு சொர்க்கலோகத்தை உருவாக்கலாம்.

இதை நாம் நம்முள் கட்டாயப்படுத்திச் செயலாக்க முடியும். மனிதரால் இது சாத்தியமாகக் கூடியதே…!
1.சிறிது காலம் இந்த உணர்வின் தன்மையை நம்முள் வளர்த்தால் இந்த உணர்வுகள் நமக்குள் சொர்க்கபூமியாக மாற்றும்.
2.நம் உயிரைச் சொர்க்க வாசலாக அமைக்கலாம்.
3.உயிருடன் ஒன்றி உயிரின் வழி கொண்டு நமக்குள் சொர்க்கலோகம் என்ற நிலையை உருவாக்கி
4.என்றும் ஏகாந்த நிலை என்ற நிலையை அடையலாம்.

நரக வேதனைப்பட்டு… அது என்னை எப்படித் துன்புறுத்துகிறது…? என்று கண்டுணர்ந்து தான் இதைச் சொல்கிறேன்

நரக வேதனைப்பட்டு… அது என்னை எப்படித் துன்புறுத்துகிறது…? என்று கண்டுணர்ந்து தான் இதைச் சொல்கிறேன்

 

உதாரணமாக வேதனைப்படுவர் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் மீண்டும் அவனைப் பற்றியே நம்மை எண்ண வைக்கின்றது. அந்த வேதனையான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது. பின் வேதனைப்படும் உடலாகவே உயிர் மாற்றி விடுகின்றது.

வேதனைப்பட்டவன் எத்தன்மை கொண்டு அவ்வாறு ஆனானோ அவன் வேதனையாக இருப்பினும்
1.அவனின் எண்ணம் நமது வாழ்க்கையில் தொடர்ந்து வரப்படும் பொழுது… தன் குடும்பத்தினை எண்ணி
2.என் பிள்ளை இப்படி இருக்கின்றான்… அவனுக்கு அப்படி நோயாகி விட்டது…!
3.நோயினால் பொருள் போய்விடுமே…! என்ற இத்தகைய எண்ணங்கள் வருகின்றது.

அதாவது வேதனைப்பட்டவரின் உணர்வுகள் இங்கே கலந்து புது வித்தாக உடலில் உருவாகின்றது.

நோயால் இறந்தாலும்… அந்த நோயைப் பற்றி விசாரித்துக் கேட்டறிந்த மனிதன் இவருடைய உணர்வுக்குத் தக்க விஷத்தின் உணர்வுகள் மாறி இவரும் அந்த ரூபத்திற்குப் போவார்.

இதை எல்லாம் “நேரடியாக…” எம்மைக் காணும்படிச் செய்தார் குருநாதர். ஒவ்வொரு இடங்களுக்கும் எம்மைப் போகச் சொல்லி “20 வருடம் பார்த்துவிட்டுத் தான்…” உங்களிடம் சொல்கின்றேன்.

வேதனை இங்கே மாறும் போது அதற்குப் பெயர். அதர்வண வேதத்தின் மூலங்களை புரிந்து கொள்.
1.வேதத்தை எப்படித் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள் என்பதை நீ உற்றுப் பார்…!
2.அந்தத் தவறின் நிலைகளுக்கு நீ சென்று விடாதே…! என்றார் குருநாதர்.
3.காரணம்… இன்று உடலில் இச்சைக்குத் தான் அதர்வண வேதத்தைக் கொண்டு சென்று விட்டார்கள்.
4.ஆனால் அருள் ஒளியாக யஜூர்…! பேரின்ப நிலைகளுக்கு அதைக் கொண்டு செல்லவில்லை.

இறந்த பின்… யாருக்கு என்ன தெரியப் போகிறது…? என்று விட்டு விடுகின்றார்கள்.

அதர்வண யஜூர் மீண்டும் சாம அவருடைய வேதனையை எண்ணும் பொழுது உடலில் நோயாகின்றது… மனித உருவத்தையே மாற்றி விடுகின்றது.

தினமும் தியானமிருக்கின்றோம். இருந்தாலும் பிறிதொரு வேதனை உணர்வை நுகர நேர்கிறது. தான் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால் வேதனையான உணர்வுகளைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம். அதர்வண… நம் நல்ல குணத்தை அப்போது அது அடக்குகிறது.

நல்லவர்களுக்கு நல்ல காரியத்தைத் தான் செய்தோம். மேலே சொன்ன அதர்வண என்று ஆகும் பொழுது
1.மீண்டும் நாம் நல்லதைச் சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.
2.முதலிலே நாம் சொன்னதைக் கேட்டிருப்பார்கள்.
3.அன்று என்னிடம் எல்லாம் இருந்தது…! கேட்டார்கள்…! இன்று என்னைத் தூற்றுகின்றார்கள் என்போம்.
4.நம்மைக் கண்டாலே வெறுப்பு வருகின்றது… என்ற இந்த நினைவாற்றல் தான் இங்கே கடைசியில் வருகின்றது.

இத்தகைய நிலை உருவாகி விட்டால் மாற்ற வேண்டும் அல்லவா…!

காலை துருவ தியானத்தில் அரும்பெரும் சக்தியைக் கொடுத்து உங்களைப் பெறும்படி செய்கின்றேன். எண்ணும் பொழுது கிடைக்கும்படியும் செய்கின்றேன்.
1.இதை விடுத்து விட்டு உடலின் இச்சைக்கு நீங்கள் இணைத்து விட்டால்
2.அதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குமே தவிர வேறு நல்லது கிடைக்காது.

குருநாதர் எனக்குப் பல சிரமங்களை உண்டாக்கி அது எப்படி உருவாகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும் மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அரும் பெரும் சக்தியைக் கொடுத்தார்.

நீங்கள் என்னைப் போன்று காட்டிற்குள் சென்று என்று தெரிந்து கொள்வது…? அப்படி முடியாது.
1.நரக வேதனைப்பட்டுத் தான்…
2.ஒவ்வொரு வேதனையும் எப்படி என்னைத் துன்புறுத்துகிறது என்பதைப் பார்த்துவிட்டுத் உங்களிடம் வந்து சொல்கிறேன்.

தான் எண்ணிய காரியம் தோல்வி அடைந்தால் சோர்வு வருகின்றது. அப்பொழுது சிந்திக்கும் வலிமை இழக்கப்படுகிறது.. மாற்றமாகிறது. எண்ணியபடி நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது.

வேதனை என்ற மூன்றும் சேர்த்துக் கருவாகி இந்த உயிர் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது.
1.மீண்டும் நான் நினைத்தேன்… தியானித்தேன் வரவில்லையே…! என்று எண்ணுவதும்
2.சாமி சொன்னார்… “எனக்குக் கிடைக்கவில்லையே கிடைக்கவில்லையே…” என்ற உணர்வைச் சேர்த்துத் தான் அதை வளர்க்க முடியும்.
3.அப்போது வலுக்கொண்ட நிலையில் சாமியை எண்ணுவீர்கள்… ஆனால் சாமி சொன்னதை விட்டு விடுவீர்கள்.

உதாரணமாக வயலில் விதைத்திருக்கின்றோம்… பயிர் வளர்ந்திருக்கின்றது. அதிலே களைகளை எடுங்கள் சொன்ன பின் களையை எடுப்பதற்கு மாறாக செடி முளைத்திருப்பதைத் தட்டி விட்டால் என்ன ஆகும்…?

நல்ல வித்தினைத் தான் கொடுத்துள்ளார்கள். நல்ல பயிரைப் பிடுங்கி விட்டால் என்ன ஆகும்…? இதுவும் போய்விட்டது.

அது போல்
1.யாம் கொடுத்த அருள் ஞான வித்தை வளர்க்கும் போது
2.சந்தர்ப்பத்தில் வரும் களையை நீக்குவதற்குப் பதில் ஞான வித்தையே வீழ்த்தி விடுகின்றோம்.

நல்ல குணத்தை உயர்ந்த நிலைக்குச் செல்லப்படும் போது இந்த உணர்வுகள் அதர்வண. இதை அடக்கி இதனுடன் இணைந்து யஜூர் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

அதன் பின் மீண்டும் உங்கள் நினைவு எதிலே வரும்…? அந்தக் காரியத்தை எண்ணும் போதெல்லாம் தன்னைச் சோர்வடையச் செய்யும். வேதனை என்ற நிலைகள் உருவாக்கிக் கொண்டே வரும்.

புழுவில் இருந்து எப்படி மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்தோம்…? தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உடல்களிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து இந்த உணர்வின் தன்மை உடல் மாற்றத்திற்கு அதன் வலிமையைச் சேர்த்து அதர்வண யஜுர் அதன் நிலையை எடுத்துப் பரிணாம வளர்ச்சியாகி அதன் தொடர் கொண்டு தான் மனிதனாக வந்தோம்.

இத்தனையும் கடந்து வந்த மனிதன் மீண்டும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட இச்சையின் உணர்வு கொண்டு… எண்ணியது நிறைவேறவில்லை என்றால் சோர்வும் வேதனையும் உருவாகிறது. அத்தகைய அணுவின் தன்மை வளரப்படும் பொழுது நல்ல குணங்களை அது அடக்கி விடும்… அதர்வண.

அடக்கி அதனின் செயலாக்கங்களாக அதிலே உருவாகும் கருவின் தன்மையாக அணுவின் தன்மையாக உயிர் உருவாக்கி விட்டால் யஜுர் மீண்டும் சாம… வேதனைப்படும் நிலைக்கே அது கொண்டு செல்லும்.

1.இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் உடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்.
2.அரும் பெரும் சக்தியை உங்களிடம் கொடுத்திருக்கின்றேன். அதை ஒரு நிமிடம் எண்ணி எடுப்பதற்கு என்ன…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஜீவான்மா பெற வேண்டும் என்று இணைத்துக் கொண்டே வாருங்கள்.

வேதனை என்ற உணர்வை அடக்கி அதர்வண…!
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்த அணுக்களைச் சேர்க்கப்படும் பொழுது அடுத்து என்ன செய்யும்…?
2.அந்தத் துருவ நட்சத்திரத்தையே அது எண்ணும்படிச் செய்யும்… அப்பொழுது யஜூர் ஆக மாறுகின்றது.

அந்த ஒளியான வித்தினைத் தான் நமக்குள் வளர்க்க வேண்டும்.

யாரையும்… எதையும்… எப்பொழுதும் துன்புறுத்தக் கூடாது… நாம் கல்யாணராமனாக வேண்டும்

யாரையும்… எதையும்… எப்பொழுதும் துன்புறுத்தக் கூடாது… நாம் கல்யாணராமனாக வேண்டும்

 

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம். வேதனைப்படுபவர்களையும் சங்கடப்படுபவர்களையும் கோபப்படுபவர்களையும் ஏமாற்றுபவர்களையும் பார்க்கின்றோம்.

இத்தனை உணர்வுகளையும் சுவாசித்து உயிரிலே பட்டபின் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று சதாசிவம் ஆகிக்கொண்டே இருக்கிறது.. அதாவது உயிர் நம் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…?

1.காலையிலிருந்து இரவு வரை சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்தத் தீமையான உணர்வுகளை மறந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைச் சேர்த்துச் சிவமாக்கி
3.எல்லோருக்கும் நல்ல நிலைகள் கிடைக்க வேண்டும் என்ற உணர்வை நம் உடலாக்க வேண்டும்.
4.அப்படி ஒன்று சேர்த்தால் ஒன்று சேர்த்து வாழும் அதுதான் கல்யாணராமா…!
5.நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஏன்றைக்குமே சந்தோசமாக இருக்கும்.

ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். கலந்து கொண்டோர் அனைவரும் அவரவர்கள் திறமையைக் காட்டுகின்றார்கள். திறமையைக் காட்டிச் சீதாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று விரும்புகின்றார்கள்.

ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?

தீமை செய்யும் அந்தக் காண்டீபத்தையே ஒடித்து விடுகின்றான்.
1.காண்டீபம் என்பது உடலில் விளைந்த தீமையான உணர்வுகள் தான்.
2.அதை ஒடிப்பது என்பது சாமானியமானது அல்ல… இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அந்தத் தீமை செய்யும் காண்டீபத்தை இராமன் ஒடிக்கின்றான். அப்பொழுது சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான். அரவணைக்கப்படும் பொழுது கல்யாணராமன் ஆகின்றான்.
1.உங்கள் மீதுள்ள வெறுப்பான குணத்தை நான் நீக்கி விட்டால் இரண்டு பேருடைய எண்ணங்களும் ஒன்றாகின்றது…
2.அப்பொழுது மகிழ்ச்சி வருகின்றது கல்யாணராமா…!

என் உடலில் இருக்கும் தீமைகளை நீக்கிவிட்டு உங்கள் மீது இருக்கும் வெறுப்பை நீக்கி பின் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லும் பொழுது அந்த உணர்வுகள் உடலில் ஒன்று சேர்ந்து வாழ்கின்றது.

இந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் கோவிலை அமைத்துள்ளார்கள் ஞானிகள்.
1.எண்ணங்களை எப்படி நுகர வேண்டும்…?
2.அந்த எண்ணங்கள் அனைத்தையும் எவ்வாறு ஒன்று சேர்க்க வேண்டும்…?
3.பகைமை வளராதபடி எவ்வாறு தடுக்க வேண்டும் என்று உருவம் அமைத்து அருவ நிலைகளை நமக்குக் காட்டியுள்ளார்கள்.

கோவிலுக்குச் சென்று நாம் இப்படி நினைக்கின்றோமா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தான் பெற்ற சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று “அவ்வப்போது எண்ண வேண்டியது மிக மிக அவசியம்…”

தான் பெற்ற சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று “அவ்வப்போது எண்ண வேண்டியது மிக மிக அவசியம்…”

 

சிவ சக்தியாகக் கணவன் மனைவியாக எம்மைச் (ஞானகுரு) சந்திக்க வருகின்றீர்கள்… உபதேசத்தையும் கேட்கின்றீர்கள்… தியானமும் இருக்கின்றீர்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால்… தனித்த நிலைகள் வருவோர் சிலர் எம்முடைய நுண்ணிய உபதேசங்களைக் கேட்கப்படும் பொழுது
1.மனைவி தன் அருகில் இல்லை என்றாலும்
2.இந்த உபதேசக் கருத்துக்கள் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணினீர்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

ஆனால் யாம் உங்களிடம் இதை முதலில் சொல்லாமல் விட்டதன் நோக்கம் என்ன…?

மெய் ஞானிகளைப் பற்றிய உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இந்தச் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் தன் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தன் மனைவி பெற வேண்டும்… தன் தாய் தந்தையர் அது பெற வேண்டும்… அவர்கள் அருள் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…? யாரும் நினைத்திருக்க மாட்டீர்கள்…!

மற்ற நேரங்களில் எல்லாம் எண்ணுகின்றோம். இருந்தாலும் சாமி இங்கே வந்திருக்கின்றார் அவருடைய உபதேசத்தை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்திலே சாமியை எண்ணும் பொழுது அதை மறந்து விடுகின்றீர்கள்.
1.சாமி மேலே ஞாபகம் இருக்கின்றது.
2.ஆனால் தன் மனைவி தாய் தந்தையர் பற்றி எண்ணம் இல்லாது போய் விடுகின்றது.

சாதாரணமாகத் தியானிக்கும் போது எல்லோரையும் எண்ணுவீர்கள். ஆனால் “சாமி இங்கே உபதேசிக்கின்றார்…” என்று அதை மட்டும் தான் எண்ணுகின்றீர்கள்.
1.ஆனால் இந்த மாதிரி நேரங்களில் இதை மாற்றிப் பழக வேண்டும்.
2.நீங்கள் தனியாகக் கேட்டாலும் உபதேசத்தைக் கேட்டுத் தியானிக்கும் பொழுது
3.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவசியம் என்ன வேண்டும்.
4.அந்த அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்…
5.அந்த அருள் ஞானத்தை எனக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக எண்ண வேண்டும்.

இதே போல மனைவி மட்டும் எமது உபதேசத்தைக் கேட்டுத் தியானித்தால் அவர்களும் இதே போன்று கணவனுக்கு எண்ண வேண்டும். அவர்களும் இதைப் போன்ற பழக்கத்திற்கு வந்தால் “எங்கிருந்தாலும் இந்த சக்தி உங்களுக்கு உறுதுணையாக அமையும்…”

சாமி என்ற நிலை வரும் போது சாமியை மட்டும் தானே நினைவு கொண்டு எண்ணுகின்றீர்கள்… அதை உங்களுக்குள் பதிவு செய்கிறீர்கள்.

இப்பொழுது சொல்லி உங்கள் நினைவாற்றலைத் தூண்டி அதைப் பதிவு செய்கின்றோம்.
1.ஆகவே எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று இச்சைப்பட்டு அவசியம் அதை இணைத்துப் பழக வேண்டும்.
2.இச்சா சக்தி கிரியா சக்தி என்ற நிலைகளுக்கு வளர்ச்சிக்குக் கொண்டு வர வேண்டும்.

மனைவி பெற வேண்டும் என்றும் கணவன் பெற வேண்டும் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் “உயர்ந்த உணர்வுகள் கிடைக்கும் போதெல்லாம் இச்சைப்பட்டு வர வேண்டும்…”

ஆக இணைந்த நிலைகளிலேயே கிரியை ஆக்கிச் செயல்பட்டு கொண்டு வர வேண்டும். இந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும் என்பதற்குத் தான் இதை இப்பொழுது ஞாபகப்படுத்தி உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி

“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி

 

ஒரு பயிற்சி:-
ஆறாவது அறிவின் உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட “முருகனின் காட்சியைக் காண வேண்டும்…” என்று வானை நோக்கி உற்றுப் பார்த்து உங்கள் நினைவினைச் செலுத்துங்கள். சிறிது நேரம் மேல் நோக்கிப் பாருங்கள்

அந்த அலைகள் குவிந்து உங்களுக்கு முருகனாகக் காட்சி தெரியும்..

பூமியில் வாழ்ந்த மனிதர்களுக்குள்
1.எந்தெந்த முருகன் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாகப் பரவப்பட்டதோ
2.அதை மீண்டும் நாம் குவிக்கப்படும் பொழுது இந்த உருவத்தை நாம் காண முடியும்.

அதாவது… டிவிக்களில் எப்படிப் படக்காட்சிகளைக் காணுகின்றோமோ… அதே போல்… மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது அலைகள் குவிந்து முருகனாகக் காட்டும்.

எதற்காக இதைச் சொல்கிறோம்…?

அன்று வாழ்ந்த அகஸ்தியரும் வியாசகரும் வானுலக ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து உடலில் அதைப் பெருக்கப்பட்டு அந்த உண்மையின் உணர்வுகள் அருள் ஞான ஒளியாகப் படர்ந்திருப்பதை
1அதை எண்ணி நுகரப்படும் பொழுது வியாசகர் கண்டதை நாம் காண முடியும்.
2.விஷத் தன்மையால் நம் பூமி சுழல்வதும்
3.துருவப் பகுதி வழி விண்ணுலக ஆற்றலைக் கவர்வதும் அதனால் தனக்குள் மாற்றம் அடைவதையும்
4.தாவர இனங்களாக உருப்பெற்றதையும் அதை எடுத்து உயிரினங்கள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதையும் நீங்கள் காண முடியும்.
5.மேரு என்ற மலையை மத்தாக வைக்கப்பட்டு என்று சொல்லும் பொழுது
6.மேலே சொன்ன பூமியின் இயக்கத்தைக் காட்சியாகத் தியானம் செய்யும் பொழுது பார்த்திருக்கலாம்.

இவையெல்லாம் அன்று வியாசகரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள்.

காரணம்… அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகளை வியாசகர் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களை உணர்ந்ததை
1.அக்கால மொழி கொண்டு அதனை வெளிப்படுத்திய உணர்வுகள்
2.அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.

ஆகவே நாம் காண வேண்டியது எது…?

அகஸ்தியன் துருவ மகரிஷியாகி உணர்வினை ஒளிச் சரீரமாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருப்பதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.

துருவ மகரிஷியாகும் பொழுது அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பாய்ச்சி இருவரும் அதைப் பரிமாறிக் கொண்ட நிலையை அவர்கள் உடலில் விளைந்த அலைகள் இங்கே பாய்ந்து கொண்டிருப்பதை நாம் காண்போம்.

மீண்டும் வானை நோக்கி உற்றுப் பாருங்கள்..!

அகஸ்தியன் துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில்
1.கணவனும் மனைவியும் துருவத்தின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
2.ஒருவருக்கொருவர் என்று ஏங்கிய உணர்வுகள் அது பரவி வரும் பொழுது
3.அந்தக் காலத்தில் வாழ்ந்த “அவர்கள் இருவரின் உடல் அமைப்பு…” அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக இருவருக்குள்ளும் இணைந்து இந்த உணர்வின் தன்மை ஒளிச் சரீரமாகி எந்த எல்லையில் நிலை கொண்டார்களோ
1.அங்கே சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்ற உணர்வை நீங்கள் காணலாம்.
2.அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி ஒளி சரீரமாக இணைந்து துருவப் பகுதிக்குச் சென்றதை நீங்கள் காணலாம்
3.துருவ நட்சத்திரமாக ஒளியாக இருப்பதையும் காணலாம்.

இப்பொழுது இதைக் கண்டவர்களும் சரி… மற்றவர்களுக்குள் பதிவானதும் சரி… அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற நினைவுடன் இரவிலே நீங்கள் படுத்து உறங்கினால்
1.அந்த உணர்வுகள் கிளர்ந்து உயிருடன் ஒன்றி உங்களுக்குள் பெருகி
2.அதனின் ஆற்றலை உங்கள் புலனறிவிலே காண முடியும்.

ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி என்ற நிலையில் அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு அதைக் கவர்ந்து வீட்டிலேயே அதைக் காணும்படிச் செய்கின்றார்கள்.

அதைப் போலத் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலிலிருந்து வெளி வந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வினை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவினை எடுக்கும்படிச் சொல்லி
2.அதனின் அருள் ஞான வித்தாக இதைக் கேட்போர் உணர்வுகளில் ஊழ் வினையாகப் பதிவு செய்து
3.வினைக்கு நாயகனாக வளர்ந்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.காற்றில் படர்ந்திருப்பதை அதன் வளர்ச்சியாகக் கவர்ந்து அந்த உணர்வினை கண் புலனறிவிலே காண முடியும்.

இருந்தாலும்… சில உண்மைகள் படக்காட்சிகளாக உங்களுக்குத் தெரிய ஆரம்பித்தால்
1.திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது
2.அந்த உருவங்கள் தெரிந்தால் அதைக் கண்டு அஞ்சி ஓடுபவர்களும் பலர் உண்டு… பயந்து விடுவார்கள்.

ஆகையினால்… அந்த உணர்வின் தன்மை “அப்படிக் காட்சியாகக் கிடைக்கக் கூடாது…” என்பதற்கும் ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வை “ஒளியின் உணர்வாக…” உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைச் செயல்படுத்துவது.

சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எண்ணவே வேண்டியதில்லை. “நாம் காண வேண்டியது அந்த ஒளியான உணர்வுகள் தான்…”

அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் திறன் பெறுவது தான் நம்முடைய கடைசிக் கடமை. இதை எல்லாம் நீங்கள் அனைவரும் பெறுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

முந்தி எல்லோருக்கும் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தேன் சில உண்மைகளை அறியும்படியும் செய்தேன் புவியின் ஈர்ப்புக்குள்.
1.ஆனால் அதனுடைய பலன் மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது.
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.

அவ்வாறு ஆகாதபடி உங்களுக்குள் மெய் ஒளியைப் பெறும் ஆற்றலாகத் தான் அதை இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலம் கடும் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது… அதை மனிதன் நுகர்ந்து சிந்தனையற்றவனாக ஆக்கும் நிலைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்… அதிலிருந்து நம்மை மீட்டி நம் சிந்தனையை விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது நம் அருகிலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் வரும் போது மனிதன் தீமைகளிலிருந்து விடுபட
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் தன்னைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
2.இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய இது உதவும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுத்தது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

 

குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எமக்குள் பெறச் செய்ததைப் போன்று உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை யாம் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால்
1.உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்கும்.
2.புதிதாகத் தீய வினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின் அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால்தான் வளரும். நான் வித்தை ஊன்றி விட்டேன் என்று சும்மா இருந்தால் வளருமா…?

அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்து விட்டோம் என்றால் அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும்.

எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.

அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி ஒளியின் உடலாகத் தாம் பெற்றார்.
1.அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் பெறக்கூடிய தகுதி பெற்றால்
2.அகஸ்தியரைப் போன்று நாமும் நமது உடலில் உள்ள அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றியமைக்க முடியும்.

நம்மிடம் உள்ள முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதுத் தீய வினைகள் நமக்குள் சேராமல் தடுத்து நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.

பிறிதொரு உணர்வை நாம் நுகர்ந்து கொண்டபின் நமது உணர்வுகள் என்ன செய்கின்றது…? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின் நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது வெறுப்போ அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது…?

இதெல்லாம் நமது உடலில் உள்ள “உணர்வுக்கொப்பத்தான் வரும்” என்பதனை நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர வேண்டும். தெரிந்து தெளிந்து வாழ்ந்திடும் வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம்.
1.நமக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.நம்மை வெறுப்படையச் செய்வது எது…?
3.வெறுப்பான பின் குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது…?
4.அந்த வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை நாம் அனுபவப்பூர்வமாகக் கொண்டு வர வேண்டும்.

இத்தனையும் யாம் கஷ்டப்பட்டுத்தான் தெரிந்து கொண்டோம்.
1.கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குத்தான் உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லிப் பதிய வைக்கின்றோம்.
2.தீமைகளை நீக்கும் சக்தியை நீங்கள் பெறுவதற்காகத் தான் யாம் உபாயங்களைக் கூறுகின்றோம்.
3.யாம் அப்படிச் செய்து விடுவோம்… இப்படிச் செய்து விடுவோம்…! என்று சொல்லவில்லை.

உதாரணமாக… பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால் கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால் விபத்தைப் பார்த்ததின் உணர்வு அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

அடுத்த முறை அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே…? என்று தேடிப் பிடித்துப் போய்ப் பார்ப்பார்.
1.ஆக பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும்
2.அடுத்த முறை அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால் இல்லை.
3.ஏனெனில் ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு உணவு தேவை.
4.நாம் சும்மா இருந்தாலும் அது நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

நாம் எத்தகைய நிலைகளை வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி… பரிவுடன் பார்த்தாலும் சரி… அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

உதாரணமாக… குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவது ஒன்றைக் கண்டால் அடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. இருந்தாலும்…
1.பின்னாடி அதனின் நினைவு வரும் பொழுது அந்தக் குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும்.
2.திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது.

ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும் மன வலிமை கொண்டு “என்ன…? ஏது…!” என்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.

குழந்தைப் பருவத்தில் அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால் அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

அதே சமயத்தில் குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால் அது அதனிடத்தில் ஆழப் பதிந்து விடுகின்றது. மீண்டும் அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.

வேதனை போன்ற மற்ற உணர்வுகளைப் பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது
1.பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள் நம்மிடத்தில் பதிவதில்லை.
2.வேதனையான குணத்தின் உணர்வே நமக்குள் நினைவில் வரும்.

குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில் தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வே அதிகமாக வரும்.
1.அதுவே முன்னனியில் நிற்கும்
2.குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும்… தீயதையும் பதிவு செய்து கொள்ளும்.
3.வளரும் பருவம் கொண்ட சரீரங்களில் இந்த நிலை.

மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் பதிவு செய்து கொண்டு அடுத்தடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால் அந்தச் சக்தி நமக்குள் வரும்.

நமக்கு நோய் என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு “மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான்…” அந்த நோயே நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.

1.ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களையும் தத்துவங்களையும் கேட்க நேரும் பொழுது
2.நமது கவலைகள் வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும்.
3.அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.

ஏனென்றால்… வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர்களிடத்தில் நல்ல உணர்வுகள் எதுவும் பதியாது.

இந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால் இந்த உடலில் இருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

ஆகவே நமது வாழ்க்கையில்
1.நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டுத் தியானங்களை வலுப்படுத்தி
2.அதன் மூலம் ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியான சக்திகளை நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் சத்தாகச் சேர்ப்போம்.

நாம் அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று தொழில் வளம் பெற்று உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

“ஓம் ஈஸ்வரா…” என்ற நெருப்பைக் கூட்டி… “மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு”

“ஓம் ஈஸ்வரா…” என்ற நெருப்பைக் கூட்டி… “மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு”

 

வேதனயான உணர்வை நாம் நுகர்ந்தால் அது நமது இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது. நம்மை மனிதனாக உருவாக்கிய உடலின் அணுக்களில் விஷத்தின் தன்மை கலந்தபின் உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.
1.அணுக்கள் விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது உடலில் வலி வருகின்றது.
2.வலி வந்தால் உடல் நலிகின்றது… எண்ணம் குறைகின்றது.

நம் ஊர்களில் திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மன் கோவில் இருக்கும். ஏன்…?

மனித வாழ்க்கையில் அடிக்கடி சலிப்பு வருகிறது சங்கடம் வருகிறது. ஒருவர் தவறு செய்கின்றார் என்றால்
1.அந்தத் தவறான நிலைகளை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அந்த உணர்வு தனக்குள் மாறித் (மாரி) தன்னை அறியாமல் ஆட்டிப் படைக்கின்றது.

நிவர்த்திப்பதற்கு என்ன செய்ய வேண்டும்…?

மாரியம்மன் கோவிலில் நெருப்புச்சட்டி வைத்திருப்பார்கள். நெருப்பு என்ன செய்யும்…? சுட்டுப் பொசுக்கும்.

அதாவது நாம் நுகர்ந்த தீமைகள் அனைத்தையும் அதில் போட்டுச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று காட்டுகிறார்கள்.
1.நாம் எடுத்துக் கொண்டது விஷம்… நமக்குள் வந்தால் பதறச் செய்கிறது.
2.மாரியம்மனின் கோவிலில் அக்கினிச் சட்டியைக் கண்டு தீயதைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.

அந்த மாரியைத் தடுப்பதற்கு என்ன செய்கிறோம்…? நெருப்பு…!
1.யாராவது அதைக் காட்டியிருக்கிறார்களா…? யாராவது சொல்லி இருக்கிறார்களா…? இல்லை.
2.அந்த நெருப்பு யார்…? அந்த மகரிஷிகள்.
3.மனித வாழ்க்கையில் வந்த இடைஞ்சல்களை எல்லாம் நீக்கிப் பழகியவர்கள்.

‘’ஓம் ஈஸ்வரா…’ என்ற’ இந்த நெருப்பைக் கூட்டி ‘’மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு…’ மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.

அவ்வாறு ஏங்கிவிட்டு நமக்குத் தீங்கு செய்தவர்கள் நாளை அறியாமையிலிருந்து விடுபடவேண்டும். நல்லதைச் செய்யும் எண்ணம் அவர்களுக்குள் வரவேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் சுவாசிக்க வேண்டும்.

அதற்குத் தான் மாரியம்மன் கோவிலில் மத்தியில் அக்கினிச் சட்டி வைத்திருப்பார்கள். கோவில்களெல்லாம் தப்பல்ல…! நாம் வழிபடும் முறைதான் தப்பாக இருக்கும்.

ஆகவே நாம் தியானிக்க வேண்டும்… எதை…?

இந்தத் தெய்வம் நல்லது செய்திருக்கிறது.
1.இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.நாங்கள் செய்வதனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்,
3.எங்கள் பேச்செல்லாம் பிறருக்கு நல்லதாக இருக்கவேண்டும்.
4.இந்தத் தெய்வ குணத்தின் சக்தி எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
5.இதை உணர்த்திய மெய் ஞானிகளின் அருள் ஒளி வளர வேண்டும்.
6.அந்த அருள் ஒளியால் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று தியானித்துப் பாருங்கள்.

இது தான் உண்மையான அர்ச்சனை…! இதைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.
1.“அத்வைதம்…!” சூட்சுமமாக இருப்பதை உனக்குள் எடுத்து உன் சுவாசமாக்கு.
2.அந்த உயர்ந்த சக்தியை உனக்குள் கூட்டு என்று அன்றைக்கு ஆதிங்கரர் சொன்னார்.

அவர் காட்டிய அருள் வழியில் காற்றில் மறைந்துள்ள அருள் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அனைவரும் மகிழ்ந்து வாழ்வோம். பிறவியில்லா நிலையெனும் அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறுவோம்.