“இரக்கப்பட்டு ஊருக்கெல்லாம் உதவி செய்தாலும்…” நலிவடைந்து விட்டால் நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்

“இரக்கப்பட்டு ஊருக்கெல்லாம் உதவி செய்தாலும்…” நலிவடைந்து விட்டால் நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்

 

குருநாதர் சொன்னது:-
வாழ்க்கையில் நல்லதை எண்ணி ஏங்கினாலும் பிறர் செய்யும் தவறுகளை கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.அதற்காக இரக்கப்பட்டோ அதற்காகப் பரிவு கொண்டோ அதை நீ ஏங்கிச் சுவாசித்து
2.உன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்தாலும் அவர்களைக் காத்திட நீ பொருளைக் கொடுத்து உதவி செய்தாலும்
3.உனக்குள் வந்த அவரின் விஷத்தின் தன்மையைத் துடைக்கவில்லை என்றால் பின் விளைவு எப்படி இருக்கும்…?
4.முதலில் புகழ் கிடைக்கும்… பேர் கிடைக்கும்… இரக்கமானவர்… நல்லவர் என்று போற்றுவார்கள்.
5.ஆனால் கடைசியில் நீ நலிந்து போகும் பொழுது “யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்…”
6.நல்லதைச் செய்தேனே…! என்று வேதனையான குரலைத் தான் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டி வருமே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.

இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் மனித உடலை வெறுக்கும் நிலை வந்து மீண்டும் மனித இனத்தின் கூட்டிற்குள் சென்றாலும் அந்த உடலையும் அழித்துவிட்டு வேதனையின் விஷத்தை அதிகமாகக் கூட்டி உடலை விட்டுச் சென்ற பின் பரிணாம வளர்ச்சியில் விஷத்தைத் தாங்கிடும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சென்று அங்கே தான் அடுத்த உடல் பெற முடியும்.

இதை எல்லாம் குருநாதர் இயற்கையின் செயல்கள் என்று காட்டினார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின்பு தான் (மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து) உங்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.

ஆக… நன்மை செய்த நிலைகளில் அந்த நல்லவர்களைக் காத்திட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு கூட்டு தியானத்திலும் இணைந்து கொண்டு அங்கே கலந்து கொண்ட அனைவருக்கும் “மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்” என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் குடும்பத்திலே மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும். அவர் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்க வேண்டும். அவர்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெற வேண்டும். என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தினால்
1.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வலுவாகின்றது.
2.இந்தச் சொல்லின் வாக்கும் உங்களுக்குள் விளைகின்றது.
3.உங்கள் வாக்கின் மூச்சு அவரை நலம் பெறச் செய்கின்றது.
4.இதை இந்த வாழ்க்கையில் பொறுமையாக இருந்து செயல்படுத்துதல் வேண்டும்.

வயலிலே காய்கறிகளின் விதைகளைப் போடுகின்றோம். அப்படிப் போட்டவுடனே அதைச் சமைக்க முடியாது. அதைப் பக்குவமாக விளைய வைத்து ஒருவர் பறிப்பர். அதை இன்னோருவர் எடுத்துக் கொண்டு போய் கடையில் வியாபாரம் செய்வார்.

நாம் கடைக்குச் சென்று அதை வாங்க வேண்டும். அதற்குப் பின் அதைச் சமைத்துப் பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக்கி அப்புறம் தான் நாம் உணவாக உட்கொள்ள முடியும்.

இதைப் போன்று தான் பக்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுவது போன்று தான் நாம் எண்ணியதைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியானத்தின் நிலைகள்.

மெய் ஞானிகள் அருள் சக்திகளை நாம் பெற்று அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை வளர்த்துக் கொள்வதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

1.நீங்கள் எண்ணியவுடன் அந்த மெய் ஞானிகளின் ஆற்றலைக் கிடைக்கச் செய்கின்றோம்.
2.எண்ணி எடுத்த பின் உங்கள் உடலுக்குள் வரும் துன்ப நிலைகளை நீக்கி நல்வினைகளை நீங்கள் கூட்டிக் கொள்ள முடியும்.

மாங்காய் புளிப்பாக இருப்பது கனியாகும் பொழுது அது சுவை ஆகின்றது. அதிலிருந்து அந்த மாவித்தாக வருகின்றது. அந்த வித்தினை நாம் நிலத்திலே ஊன்றினோம் என்றால் மரமாக அது மீண்டும் முளைக்கின்றது.

நம் உயிர் ஆரம்ப நிலைகளில் வித்தாக உருவாகி மற்ற செடி கொடிகளாக உருவாகி மரமாகி பூவாகி பிஞ்சாகி காயாகிக் கனியாகின்றது. பல உயிரினங்களாக நாம் இருக்கும் பொழுது அது மரமாகி… மனிதனாகும் பொழுது பூவாகி பிஞ்சாகி… அந்தப் பிஞ்சின் தன்மையிலிருந்து காயான நிலையில் இருக்கின்றோம்.

1.இந்தக் காயின் தன்மையில் இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றும் பொழுது
2.உயிருடன் ஒன்றிய கனியாக முழுமை பெறுகின்றது… கனிந்து விட்டது…!
3.உயிர் எப்படியோ அதைப் போன்று உணர்வுகள் ஒளியாகும் பொழுது நிலையான சரீரம் பெறுகின்றோம்.

அந்த நிலையான ஒளிச் சரீரம் பெற்ற மெய் ஒளியை உங்களுக்குள் சேர்ப்பிக்கச் செய்வதற்குத் தான் “திரும்பவும் ஒரு ரவுண்டு உங்களுக்குள் வந்து” நினைவின் செல்களில் பதியச் செய்கின்றேன்.

அதை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டு எண்ணும் பொழுது காற்றில் பதிந்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வை நீங்கள் எளிதில் பெற முடிகின்றது. “அருள் ஞானிகளாக நீங்களும் வளர முடிகிறது…”

Live a good life without “standing aloof…”

Live a good life without “standing aloof…”

 

We know that Jesus, Valmeeki, Thiruvalluvar, Thirugnanasambhandar and Avvaiyar who have taught us in a simple way, have lived before us have given the truths.

They have written several books for our guidance and by their meditation they have risen to a high state and without taking any other body, they remain in the mental world entering into other bodies at times and guiding the people of this world.

We should know how the sages and rishis who had lived before us on this world have given us their grace…
1.we should also get their grace, take good breath have good thoughts and get the benefit from those great souls.
2.It is by getting the grace of those great souls that are in the mental world
3.that we can make our souls go to the mental world after it leaves our body.

We should remain steady in our state learning several truths by ourselves without being influenced by the breath and thought waves of others around us. We should get the grace of such great men and live, which is good living.

We have our mother to feed us with milk, a master to teach us lessons; a wife to lead a family life; children to rear and be happy; like this we are connected with each other.

We should not stand aloof but get the grace of the great souls and it will be a treasure for our soul.
1.That which guides us is the grace of those great souls.
2.Realize this and live a good life without “standing aloof…”

குருநாதர் காட்டிய வழியிலே உங்களுக்குத் “தொட்டுக் காண்பிக்கின்றேன்”

குருநாதர் காட்டிய வழியிலே உங்களுக்குத் “தொட்டுக் காண்பிக்கின்றேன்”

 

இந்த வாழ்க்கையில் நம் நல்ல குணங்களை இழக்காத வண்ணம் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து நமக்குள் வரும் துன்பத்தை நீக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை அருள் ஞான வித்துக்களாக உங்களுக்குள் ஊன்றி வளர்க்கும்படி செய்கிறோம். ஏனென்றால் திரும்பத் திரும்பப் பல தடவை சொல்கிறேன்.

1.ஒரு தடவை சொன்னாலும்… அப்படியே சொல்லிக் கொண்டே சென்றால் அடுத்து உங்களுக்கு அந்த நினைவு வராது.
2.அதை மீண்டும் சொல்லும் பொழுது தான் ஞானிகள் உணர்வலைகள் உங்களுக்குள் பதிவாக ஏதுவாகும்.
3.பதிந்த பின் நீங்கள் மீண்டும் எண்ணும் பொழுது நினைவுக்கு வர இது உதவியாக இருக்கும்.
4.ஆனால்… சாமி இப்பொழுது தான் சொன்னார்… திரும்பவும் அதையே சொல்கிறார் என்று எண்ணி விட்டால்
5.“ஏற்கும் பக்குவம் குறைவாகி விடுகின்றது…” (இது முக்கியம்)

உதாரணமாக நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகிறோம் என்றால் வானம் தோண்டிச் சுண்ணாம்பையும் கல்லையும் வைத்துக் கட்டிக் கொண்டே போகின்றோம். அது ஈரமாக இருக்கின்றது.

சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும் என்று செங்கலை மேலே ஏற்றி ஒரே நாளில் கட்டிட்த்தைக் கட்டினால் என்ன ஆகும்…? மொத்தமாக அமுக்கிக் கீழே விழுந்து விடும்.

கட்டிடத்தை ஆறச் செய்து நிறுத்தி அந்த ஈரம் உணரும் வரையிலும் பொறுத்திருக்க வேண்டும். கட்டியது இந்தப் பக்கம் சாய்ந்து இருக்கின்றதா…? அந்தப் பக்கம் சாய்ந்திருக்கின்றதா…? சரியாகக் கட்டியிருக்கின்றோமா…? என்பதைச் சிந்தித்துப் பார்த்து… ஈரம் காய்ந்த பின் அதன் மேல் கட்டிடத்தைக் கட்டுவது சாலச்சிறந்ததாக இருக்கும்.

அதைப் போன்று தான் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் நிலையாக என்னிடம் நீங்கள் வரும் பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கிடும் உணர்வின் ஆற்றலைப் பதிவு செய்கின்றேன்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுதல்” என்று சொல்வது.

சில பேர் வருவார்கள். நான் அங்கே சென்றேன்… அவர் முதுகில் தட்டிக் காண்பித்தார்…! நெற்றியில் தொட்டுக் காண்பித்தார்…! நெற்றியில் பார் அங்கே தெரியும்… பின் உச்சிக்கு கொண்டு போ அது தெரியும்…! என்றெல்லாம் சொன்னதாகச் சொல்வார்கள்.

திட்டியவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது. பதிந்ததை மீண்டும் எண்ணும் பொழுது உங்களுக்குக் கோபம் வருகிறது.

அதைப் போல் மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெறும் போது துன்பத்தைப் போக்கும் உணர்வுகளாக அது உங்களுக்குள் வருகின்றது. தொட்டுக் காட்டுதல் என்பது…
1.உங்கள் உணர்வுக்குள் ஆழமாக… உங்கள் உள்ளத்திற்குள் தொட்டு
2.”உள்ளத்தைத் தொடும் நிலையாக உணர்வுகளை ஒன்றச் செய்து” பதியச் செய்கின்றோம்.
3.இது குருநாதர் காட்டிய வழியிலே தொட்டுக் காட்டும் முறைகள்.

மீண்டும் இதை நீங்கள் எண்ணும் போது காற்றில் படர்ந்திருக்கக்கூடிய ஞானிகள் அருள் சக்திகளைச் சுவாசித்து… உங்களுக்குள் வரும் படபடப்பு பயம் வேதனை இது போன்ற நிலைகளைக் குறைத்திட இது உதவும்.

சாமி ஆசீர்வாதம் கொடுத்தார் என்று வெறுமனே நினைப்பதில் பயனில்லை… குருநாதர் எனக்கு எப்படி ஆசீர்வாதம் கொடுத்தார்…?
1.மெய் வழியைப் பெறும் உணர்வின் தன்மையைத் தொட்டுணரச் செய்து
2.அந்த உணர்வின் செயலை ஒவ்வொன்றும் ஆழமாக எனக்குள் பதியச் செய்து
3.அந்த எண்ணத்தை நான் நுகர்ந்தறிந்து என் உடலுக்குள் சேர்க்கச் செய்து
4.அதை எண்ணும்போதெல்லாம் அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரவச் செய்து பேச்சால் மூச்சால் அது வெளிப்படுவதை
5.அந்த உணர்வுகள் எனக்குள் விளையப்படும் பொழுது “அது எனக்குப் பாதுகாப்பாக வருகிறது…”
6.அந்த உணர்வின் சத்து என் உடலில் மணமாக வரும்.

இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கின்றேன். துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை நீங்கள் பார்க்கின்றீர்கள்.

“உங்கள் துன்பம் விலகிவிடும்…” என்று வாக்காக நான் சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் உங்கள் செவிகளிலே பட்டு ஒன்றிய பின் என்னை நீங்கள் அந்த உணர்வுடன் கூர்மையாகப் பார்க்கப்படும் பொழுது
1.எந்த மெய் ஒளியின் தன்மையை நான் பேசிக் கொண்டிருந்தேனோ
2.என் உடலிலிருந்து வெளிப்படும் அந்த மணத்தை நீங்கள் நுகர்ந்து
3.உங்களுக்குள் ஆறுதலை ஊட்டும் நிலையாக யாம் சொல்லும் வாக்குகள் பதிவாகி
4.அந்த உணர்வு வளர்ச்சியாகித் துன்பத்தைப் உணர்வுகளாக உங்களுக்குள் வரும்.
5.மறுபடி மறுபடி அதை எண்ணும் போது சிந்தித்து செயல்படும் அந்த எண்ணங்கள் உங்களில் தோன்றும்.

இதைத்தான் “தொட்டுக் காண்பிப்பது” என்று சொல்வது.

Several Rishis and Sages have lived in our land

Several Rishis and Sages have lived in our land

Good and bad things are not chosen by us. They come from the powers of God “who is within us…”
1.The soul which is in our body even after it leaves our body will act in the same state
2.and way as it was acting while it was in our body.

How did we get the great Jesus? We should know how such great souls that are in the mental world, without taking a rebirth, enter into some other body which is suitable to them to do good work in this world.

There are many religious leaders in Saiva and Vaishnava sect also like this. They enter into the body of some person whose soul has left that body. We should also try to live like them.

You may ask why that soul should not enter again the body that it has left previously. The soul can act only in that state in which it started its life in that body.

The soul which has left a body with fear and unable to bear the pain will not enter that body again.
1.It is in such a state that some great souls from the mental world with a desire to do some help to persons in this world
2.come enter the body and execute their wishes using this body as a tool.

Jesus was born as an ordinary shepherd boy who while he was rearing the sheep was bitten by a cobra and died. The body at the time was in a good state.

A great Sage entered into that body and taught the people of the world what he wanted to do being in that body. He still comes to the land in which he lived.

The people there now are not in a state in which they can think and accept the teachings. By meditation they can know about those states.

Our land is one in which several Rishis and Sages have lived in the olden days. That is why the people here have at least the faith and fear about God.

If the souls which they are in human bodies learn to absorb the power of Sakthi in them, then they need not take several bodies and suffer in the spirit world.

People should realize this and feed their soul with the power of Sakthi and raise it to a high state.

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

 

மனித உடலில் இருந்து தீமையான உணர்வுகளை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள் மெய் ஞானிகள். அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இந்த உணர்வின் அலைகளை நமக்கு முன் பரவச் செய்து கொண்டு தான் இருக்கின்றது.

உதாரணமாக நெருப்பின் அருகில் நாம் சென்றால் நெருப்பின் தணல் அருகில் வராதபடி நம்மை ஒதுக்கிவிடும். அதைப் போல
1.நெருப்பை ஒத்த மனிதர்கள்…
2.நெருப்பை ஒத்த அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டவர்கள் மெய் ஞானிகள்.

ஏனென்றால் இன்னொரு உடலின் ஈர்ப்பிற்குள் செல்லாதபடி உயிரின் ஈர்ப்புடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் அவர்கள் நிலையாக இருந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.

பிறவியற்ற நிலைகள் அடையும் அந்த ஆற்றல்களை நுகர்ந்திருந்தார்கள்.
1.அதை நாம் பருக வேண்டும் என்றால் “நமக்கு அந்தச் சக்தி வேண்டும்…”
2.அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

கடந்த காலங்களில் அன்று ஆண்ட அரசர்கள் என்ன செய்தார்கள்…? மாற்று அரசர்கள் இந்த அரசைக் கைப்பற்ற… அந்த அரசனுடைய குழந்தைகளை அது அரசனாகும் நிலைகளுக்கு வரும் பொழுது… சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொன்றிடும் நிலை வந்துவிடும் என்று தெரிந்த பின்பு…
1.அந்தக் குழந்தை… தாயின் கருவிலே கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே
2.விஷத்தை சிறுக சிறுக சிறுகச் சிறுக தலைமுடியில் தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாய்க்குக் கொடுத்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றுவார்கள்…”
3.பிறந்த பின்னும் பாலூட்டும் பொழுதும் சிறுகச் சிறுக விஷத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையைச் செய்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றி விடுவார்கள்…”
4.அப்படி ஏற்றி விட்டால் மற்றவர்கள் வேறு எந்த விஷத்தைக் கொடுத்தாலும் இவர்களை மாய்த்து விட முடியாது.

அதே சமயத்தில் இந்த விஷத்தை உணவாகக் கொண்டபின் இந்த உணர்வுகள் அனைத்தும் குழந்தையின் உடலிலே வீரியம் கொண்டதாக மாறி விடுகின்றது. அதனால் தான் கடந்த கால அரசர்களுக்கு வலு மிகவும் அதிகம்.

1.அந்த விஷத்தின் தன்மை கொண்டு இவர்கள் வளர்ச்சி பெற்றது போன்று
2.ஞானிகளும் மகரிஷிகளும் தனக்குள் வளர்த்துக் கொண்ட சக்தியை குருநாதர் வளர்த்துக் கொண்டார்.

குருநாதர் எனக்கு இதை நேரடியாகக் கொடுக்காதபடி அதைப் புரிந்து கொள்வதற்காக பைத்தியம் போன்று அவர் இருக்கப்படும் பொழுது அவருடைய காலிலே வேஷ்டிகளைக் கிழித்துக் கட்டுவார்… வேறு நிறம் கொண்ட சில துணிகளையும் கட்டிக் கொள்வார்.

ஆனால் ஏன் இவ்வாறு செய்கிறார்…? என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவர் பைத்தியம் போன்று தான் நடித்துக் கொண்டிருந்தார்.

எதை எடுத்தாலும் ஒரு நிமிடம் என்னிடம் நன்றாகப் பேசுவார்… ஒரு நிமிடம் பைத்தியக்காரர் போன்று பேசுவார். அப்போது என்னுடைய எண்ணமும் அப்படித்தான் இருந்தது.

ஆனால் காலிலே கட்டிக் கொண்டு ஒவ்வொரு செடிக்கும் சென்று ஒவ்வொரு விதமான நிறம் கொண்ட துணிகளை அங்கேயும் கட்டுவார்.
1.அப்பொழுது பரிபாஷையிலே அங்கே ஒன்று சொல்வார்.
2.ஆனால் அந்த பரிபாஷையில் சொல்வது எனக்கு விளங்காது…!

துணியைச் செடியில் கட்டி விடுவார். அதை என்னிடம் காட்டி இவைகளுக்கு யார் சோறு போடுவது…? என்று கேட்பார். யார் சோறு போடுவது…? என்று எனக்குத் தெரியாது… அது சோறு சாப்பிடாது சாமி…! என்று நான் சொல்வேன்.

சோறு சாப்பிடாமல் அது எப்படி வளரும்…? என்று என்னென்னமோ பேசுவார். எனக்கு அப்பொழுது ஒன்றும் புரியாது இப்படி அவர் சொல்லிக் கொண்டே வந்தபின்… மீண்டும் என்னிடம் தெரியுமா…? என்று கேட்பார்.

தெரியவில்லை…! என்று நான் சொன்னவுடன் இரண்டு உதை கொடுப்பார்.
1.அடி வாங்கும் பொழுது அவருடைய நினைவு வரும்.
2.இப்படித்தான் அவருடைய எண்ணத்தை எனக்குள் செருகச் செய்தார்.

அவர் உடலை விட்டுச் சென்றார். அவர் காட்டிய உணர்வின்படி அகஸ்தியர் வாழ்ந்த இடங்கள்… முதலில் தலைக்காவிரிக்குச் சென்றேன். அங்கே அகஸ்தியருடைய உணர்வுகள் இருக்கின்றது.

பாகமண்டலம் என்று உண்டு. அங்கே மலை உச்சியிலே தண்ணீரை எவ்வளவு எடுத்தாலும் குறையாது. உயரமான மலை… அதற்குக் கீழ் தான் மற்ற எல்லாம் தணிந்து இருக்கின்றது.

ஆனால் மலை உச்சியிலே அந்த நீர் இருக்கக்கூடிய பள்ளம் இருக்கின்றது. அதிலே தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் குறைவதில்லை.

எங்கிருந்து நீர் அங்கே வருகின்றது…? என்பதை முதன் முதலில் அறிவதற்காக என்னை அங்கே செல்லும்படி செய்தார் குருநாதர்.

அங்கே தியானத்தில் இருக்கப்படும் பொழுது உயரமான அந்த இடத்தில் மேலே மேகங்கள் செல்கின்றது. மேகங்கள் செல்லும் பொழுது
1.மலையில் இருக்கக்கூடிய காந்தம் நீர் பசை உள்ள அந்த மேகங்களைக் கவரும் சக்தி பெறுகின்றது.
2.இதே போன்று சில மரங்களுக்கும் அந்த மேகங்களை இழுத்துக் கவரும் சக்தி வருகின்றது.
3.மேகங்கள் மரத்தால் இழுக்கப்படும் பொழுது நீரை அது உணவாக எடுத்துக் கொண்டாலும் மரத்தில் இருந்து மீண்டும் நீர் வடிந்து நீராக ஓடுகின்றது.

அதனுடைய தன்மைகள் வேறு.

மலையில் அகஸ்தியன் உட்கார்ந்து அவர் ஜெபித்த உணர்வின் சக்தி காற்றாகப் படர்ந்து செல்லும் அந்த மேகத்தை இழுத்து
1.அதை நுகரச் செய்யும் அந்தச் சக்தி அகஸ்தியன் உட்கார்ந்த இடத்திலே அந்தப் பாறைகளில் பட்டிருக்கின்றது.
2.ஆகையினால் மேகங்கள் மேலே செல்லும் பொழுது கவர்ந்து நீராக வடிந்து செல்கின்றது.

நாம் இங்கே வீட்டில் சமையல் செய்கிறோம் நீர் ஆவியாகப் போகின்றது. அதன் மீது ஒரு தட்டை வைத்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றினால் அந்த ஆவி நீராகக் கொட்டுகின்றது.

எந்தச் சத்தின் தன்மையை ஆவியாக மாற்றினோமோ… தட்டை வைத்துக் குறுக்காட்டப்படும் பொழுது நீரை ஊற்றிய பின் ஆவியாகச் செல்வதை நீராக வடியச் செய்கின்றது.

அந்த இடத்திலே மேகமே இல்லை என்றாலும் அந்த ஞானியின் அருள் சக்திகள்… மணங்கள் பட்டவுடன் குவித்து மேகங்களாக மாறுகின்றது. மேகங்களாக மாறிய பின் தன் உணர்வின் சக்தியை இழுத்து இதற்குள் உறைந்த பின் நீராக மாறுகின்றது.

குருநாதர் பித்தரைப் போன்று இருந்தாலும் அந்த இடங்களுக்கு நான் சென்ற பின்
1.குருநாதருடைய உருவம் தெரிகின்றது… அவர் காலில் கட்டிய துணிகள் தெரிகின்றது…
2.அங்கிருக்கக்கூடிய மரங்களிலும் இவர் கட்டிய துணிகள் தெரிகின்றது.
3.அப்பொழுது குருவின் நினைவு வருகின்றது.
4.முதலில் உடலுடன் அவர் இருக்கும் போது சொன்ன பரிபாஷையின் நிலைகள் அந்த இடத்திலே எனக்குப் புரியும் நிலை வருகிறது.
5.இந்த நீராக வடியக்கூடிய ஆற்றல் எப்படி…? என்று அங்கே அப்பொழுது நான் அறிய முடிந்தது.

உயிருடன் இருக்கும் பொழுது எனக்கு இதை உணர்த்தவில்லை.

இருந்தாலும் அடி கொடுத்தார். அந்த உணர்வின் நினைவலைகள் வரப்படும் பொழுது “அந்த எண்ணத்தில் வரும் பொழுது புரிகின்றது…” அன்று வாழ்ந்த அகஸ்தியன் ஆரம்ப காலங்களில் விண்ணினுடைய ஆற்றல் எப்படி நுகர்ந்து எப்படி அவன் பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார்.

அகஸ்தியன் எங்கெல்லாம் சென்றானோ அந்த மலை இருக்கக்கூடிய பகுதிகளில் இது போன்ற நீர்கள் உற்பத்தி ஆகின்றது. மைசூரிலும் இதே போன்று நீர் நிலைகள் உண்டு… நாழிக் கிணறு என்று சொல்வார்கள்.

மற்ற இடங்களில் நீர் இருப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் மட்டும் நீர் இருக்கின்றது. எடுக்க எடுக்க அங்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் எடுத்த அளவுக்கு நீர் வந்து மீண்டும் நிரம்பிவிடும். அது உச்சிமலை… பாறை தான்… வேறு ஒன்றும் இல்லை…!

அன்று அகஸ்தியன் அவன் சென்ற இடங்களில் எல்லாம்… நான் எடுத்துக் கொண்ட ஜெப நிலைகளில்
1.ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அலைகள் எப்படி விண்ணிலிருந்து வருகின்றது…? என்ற நிலையை நேர் பார்வை கொண்டு
2.அந்த அட்சரேகையின் சுழற்சி வட்டத்திற்குள் அது வெளிப்படுத்தும் நிலையும்… அதற்கு மத்தியிலே கோள்கள் எவ்வாறு செல்கிறது…? என்றும்
3.நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தினை அது முறியடித்து பிரபஞ்சத்திற்குள் தணிந்த அலைகளாக வரும் பொழுது
4.மத்தியிலே செல்லும் பொழுது ஒவ்வொரு கோளும் இந்த சக்தியை தனக்குள் நுகர்ந்து எப்படிச் செயல்படுகின்றது…?
5.செயல்பட்ட பின் ஓன்றுடன் ஒன்று கலந்து இந்த உணர்வின் சக்தி எப்படி மாறுகின்றது…?
6.அது வெளிப்படுத்தும் சக்தியை அதற்கடுத்துக் கீழ் வட்டங்களில் இருக்கும் மற்ற கோள்கள் இதிலிருந்து வருவதை அது எப்படிக் கவர்கின்றது…?

அதைப் போல சூரியனுக்குள் வரப்படும் பொழுது ஒன்று இங்கேயும்… ஒன்று அங்கேயும்… ஒன்று இங்கேயும் என்று இதே மாதிரி நட்சத்திரத்தின் நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறி இருக்கும் நிலைகள் கொண்டு அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை அவர் உணர்ந்தார்.

அவர் அமர்ந்த இடத்தில் குருநாதர் காட்டிய நிலையில் நானும் அங்கே அமரப்படும்போது விண்வெளியின் ஆற்றலும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கமும் எல்லாமே அறிய முடிந்தது.

ஆதியிலே இதையெல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அவன் நுகர்ந்த உணர்வின் தன்மையை அங்கே அமர்ந்து நானும் கண்டேன். அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வரப்படும் பொழுது குரு பலத்தால் அறிய முடிந்தது.

அன்றைய அரசர்கள் விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகச் சேர்த்து அதற்குப்பின் மற்ற விஷங்களை எடுத்துக் கொண்டாலும் அது பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்பட்டார்களோ… அதைப் போன்று தான்
1.மிக மிகச் சக்தி வாய்ந்த ஞானிகளை அவருடைய சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது.
2.காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண்ணுலகம் சென்றவர்கள்.
3.அவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் விஷம் மற்றொன்றை எப்படி வீழ்த்துகின்றதோ அதைப் போன்று
4.மகா ஞானிகள் தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள்.

அவர்களுடைய உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்றால் இந்தச் சாதாரண மனித வாழ்க்கையில் இருக்கும் பொழுது
1.நம்முடைய நினைவலைகளைச் சுத்தமாகவே மாற்றிவிடும்.
2.நம்மைச் செயலற்றதாக ஆக்குமே தவிர அதிலிருந்து பருகும் நிலையும் அற்றுப் போய்விடும்.
3.ஆகையினால் மனித வாழ்க்கையில் நாம் சிறுகச் சிறுக அதை எடுத்து வளர்க்க வேண்டும்.

எப்படி அரசர்களுக்கு விஷத்தைச் சிறுக சிறுகக் கொடுத்து அதைத் தனக்குள் சேர்க்கும் படி செய்து பெரும் கொண்ட விஷங்களைக் குடித்தாலும் தன்னைப் பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போலத் தான் குரு காட்டிய நிலையில் அதைச் செயல்படுத்த முடியும்.

முதலிலே அவர் எனக்கு இதை உணர்த்தும் பொழுது “வேறொரு நிலைகளாகத் தான்” உணர்த்தினார். பின் சிறுகச் சிறுக எண்ணத்தின் ஏக்கத்தை அதை நிலைப்படுத்தச் செய்து அகஸ்தியன் சென்ற மலைப் பகுதிகளுக்குச் சுற்றச் செய்தார்.

அங்கே சுற்றும் போது பல கஷ்டங்களும் இன்னல்களும் என்னைத் தாக்கும் நிலை வரும் பொழுது அங்கே அமைதி கொண்டு அமர்ந்து அந்த ஞானிகள் உணர்வை நான் எடுக்கப்படும் பொழுது தான் விஷத்தின் தன்மை முறிக்கும் அகஸ்தியன் உணர்வை நான் நுகர்ந்து “துன்பத்தைத் துடைக்கும் உணர்வுகளாக வேதனைகள் அகற்றப்பட்டு… மெய் ஒளியைக் காணும் ஆற்றலாக எனக்குள் பெருகி வந்தது…”

அப்படி எனக்குள் பெருகிய நிலைகளைத் தான்
1.நீங்கள் துன்பம் என்று வரும் பொழுதெல்லாம் உங்களுக்குள் உபதேசமாகச் சிறுகச் சிறுகச் சொல்லி வருகின்றேன்
2.அதைப் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு ஏக்கத்தில் இருக்கின்றீர்களோ அதன் வழி தான் உங்களைச் சுவாசிக்கச் செய்வது.
3.சுவாசித்த உணர்வுகள் சிறுகச் சிறுக உங்கள் உடலில் வளரத் தொடர்கின்றது.

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

அவ்வளவு பெரிய பவரை (சக்தியை) உங்களுக்குக் கொடுக்கின்றேன்

அவ்வளவு பெரிய பவரை (சக்தியை) உங்களுக்குக் கொடுக்கின்றேன்

 

உங்களுக்கு எல்லா நிலைகளும் பெறுவதற்காகச் சுலபமாகச் சக்திகளைக் கொடுக்கின்றோம். அதை ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் எடுத்து நல்ல முறையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1.எந்த நேரம் சங்கடங்கள் வந்தாலும் சரி… உடனே ஆத்ம சுத்தி செய்யுங்கள்… உங்களிடம் அழுக்குகள் சேராது.
2.அவ்வளவு பெரிய பவரை (சக்தியை) உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
3.ஏனென்றால் நான் இதை எல்லாம் அனுபவித்து வந்தது.

நொடிக்கு நொடி… நொடிக்கு நொடி… என்னை இம்சை பண்ணித் தான் குருநாதர் சக்திகளைக் கொடுத்தார். உங்களுக்கு எப்போதெல்லாம் இம்சை வருகின்றதோ அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றோம்.

ஆனால்… “எங்கெங்கே நேரம் இருக்கிறது…?” என்று சிலர் இதைச் செயல்படுத்துவதில்லை. யாம் எந்த அளவுக்குச் செய்கின்றோமோ அந்த அளவுக்குச் சாமிக்கே விஷம் கொடுக்க வந்து விடுகின்றார்கள்.

இரவு பூராமே சாமியை வணங்கிக் கொண்டிருந்தேன்…! “எனக்கு இப்படி இருக்கின்றதே…” என்று என்னை நினைத்து அழுது வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

சினேகிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் எண்ணினால்… நண்பர்களாக எண்ணும் பொழுது விக்கல் பாய்கின்றது. துரோகம் செய்தான் பாவி என்றால் புரையேறுகின்றது. பாசத்துடன் இருக்கிறோம் என்றால் மனது படக்கு படக்கு என்று இனம் புரியாதபடி பயத்தைத் தூண்டுகின்றது.

தாய் தன் பிள்ளைகளைப் பாசத்தால் எண்ணி… அது வெளியில் சென்று வரக் காலதாமதம் ஆகிவிட்டால் “என்ன ஆனதோ… ஏதானதோ…!” என்று சும்மா நினைத்துக் கொண்டிருந்தால் போதும்.

பிள்ளை நல்லவனாகத் தான் இருப்பான். இருந்தாலும் இந்தத் தாயினுடைய உணர்வு பாய்ந்து அவனைத் தவறான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும். இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான் என்றால் அவனை அறியாதபடி கையை அதற்குள் கொடுத்து விடுவான்… விபத்தாகி விடும். இதெல்லாம் பாச உணர்வின் செயல்கள்.

இதே போன்று தான் சாமி மீது பக்தியாக இருந்து “இரவெல்லாம் தலை வலிக்கிறது உடல் வலிக்கிறது என்று மேல் வலிக்கிறது” என்று வேதனையுடன் புலம்பிக் கொண்டுள்ளார்கள்.

1.ஆத்ம சுத்தி செய்யுங்கள் என்று யாம் சொல்லி இருந்தாலும் அந்த நேரத்தில் அதைச் செய்வதில்லை…
2.என்னைத் தான் நினைக்கின்றார்கள்… அப்போது இவர்களுடைய உணர்வு என்னைப் பாதிக்கின்றது.

ஏனென்றால் பாசத்தால் எல்லோருடைய உயிரையும் நான் கடவுளாக மதித்து நினைக்கப்படும் பொழுது… அவர்கள் இப்படி நினைக்கின்றார்கள்.

ஒரு வீட்டிலே நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் குறைகள் இருந்தது என்றால் தாய் தந்தையரால் அதைச் சமாளிக்க முடிவதில்லை.

ஆனால் ஒரு 2000 பேர் சேர்ந்து கஷ்டம் நஷ்டம் என்று என்னை எண்ணினால் எப்படி இருக்கும்…? நான் உங்கள் மேல் பாசமாக இருக்கின்றேன். பாசத்திலே குறையாக எண்ணி என்னிடம் அந்த நினைவைச் செலுத்துகின்றார்கள். அது என்னைத்தான் பாதிக்கின்றது.

இதைச் சமாளிப்பதற்கு உயிரைக் கடவுளாக மதித்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் உங்கள் துன்பங்கள் அகல வேண்டும் என்று சதா தியானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

இதை யாரும் நினைக்க மாட்டேன் என்கிறார்கள்…!

ஒரு சமயம்… அதிகாலை மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தைக்கு இளம்பிள்ளை வாதம் என்று எம்மைச் சந்திக்க வந்தார்கள். பக்கத்து கிராமம் தான்.

பெண் குழந்தைக்கு ரெண்டு காலுமே சுவாதீனம் இல்லை. அது படுகின்ற அவஸ்தை பார்த்தால் எவ்வளவோ இருக்கின்றது. இப்படி இருக்கிறதே…! என்று அழுது கொண்டு வருகின்றார்கள். இரண்டு வருடம் ஆகிவிட்டது ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்கள்.

ஆசிர்வாதம் கொடுத்து அந்த நரம்பின் இயக்கங்களைச் சீர் செய்த பின் அது நன்றாக ஆனது. ஆனால் அதற்கு பின் என்ன ஆனது…?

நன்றாகிச் சென்று அதற்குப்பின் எம்மை என்ன… ஏது…? என்று ஒரு முறை எட்டிக் கூட வந்து சந்திக்கவில்லை.
1.தூக்கிக் கொண்டு வந்தோம்… வைத்தியம் பார்த்தோம்…
2.சரியாகி விட்டது…! என்று அதோடு சென்று விட்டார்கள்.

யாம் உங்களுக்குப் போதிப்பது என்ன…?

ஒவ்வொரு நாளும் தீமைகள் வரும் பொழுதெல்லாம் “அந்த மகரிஷிகளின் மூச்சலைகளை எடுத்து”
1.உங்களுக்குள் அந்தத் தீமை வராதபடி காத்துக் கொள்ளுங்கள்
2.உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ள முடியும் என்று தான் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஆனால்… சாமியாரையும் மற்றவர்களையும் தான் தேடிப் போக வேண்டும் என்று விரும்புகின்றார்களே தவிர
1.தனக்குள் அந்த உயர்ந்த உணர்வை எடுத்துத் தீமைகள் வராது
2.தன் எண்ணத்தினால் மாற்றிக் கொள்ள முடியும் என்று யாம் சொல்வதைக் கவனிப்பதில்லை.

அதைத் திரும்பக் கேட்டோம் என்றால் “எங்கெங்கே…? இதற்கெல்லாம் நேரமில்லை…! என்று இப்படித்தான் சொல்கின்றார்கள். “காசைச் செல்வழித்துத் தான் உடலைச் சரி செய்ய வேண்டும்” என்று விரும்புகின்றார்கள்.

மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். தன்னுடைய எண்ணத்தால் எடுத்து எத்தகைய தீமையும் மாற்றி அமைக்க முடியும் என்று பல முறை யாம் சொன்னாலும் அதை எடுத்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்களுக்குள் அந்த முழுமையான சக்தி இருக்கிறது என்பதை நம்பிப் பழகுங்கள்.

“Thinking past and dreaming future” is not desirable in the path of Gnana

“Thinking past and dreaming future” is not desirable in the path of Gnana

Little drops of water can make a mighty ocean. We have to till the land, sow the seeds, reap the harvest, cook the food grains and then only eat.

Similarly in meditation also we have to proceed step by step treading the path. Meditation is not a thing which can be had when we are happy and unwillingly when we are not inclined towards it.

1.In every state of our life and every action we have to train our thoughts
2.and make the atoms in our body one by one to come to our state
3.forget our material body and realize the soul that is in our body
4.and “learn to operate it” so that we can absorb great powers.

In this state we will be able to absorb the rays of the Polaris (north star). By absorbing the rays directly we will be getting the grace of sakthi to our soul and raise its state to that of a Gnani or Rishi.

1.To think of the past and dream of the future is not desirable
2.for the state of Gnani and Rishi.

There is no past, present and future or day and night to obtain the state of meditation. This is all that can be said in the beginning stage.

These lessons will not help to absorb the power from Sakthi. These show you only the path to be tread by you.
1.Each person has to cover the entire path himself
2.and no one else can do it for another.

So forget the past, understand what is meditation, learn to absorb the power from Maharishis and meditate.

Spiritual awakening

Spiritual awakening

It is possible only for human beings to know about this world and other planets also by their thoughts. Man in his material body can only do this.

This power is in every person irrespective of age or sex. It can be used only by those who develop that power by their breath.

With the same electric power we can make a night light to just glow like a glow worm or make a 100 watts bulb to give light like day light.
1.Similar is the power in man.
2.But the people of today are not in a position to awaken the power sleeping within them without any activity.

They go to schools and colleges, read several books to increase their book knowledge. There are very few persons who read in order to develop their thought power and know things by themselves.

The state in which the present educational institutions work, and that of the teacher and the taught are to get highly paid jobs, earn large sums as salary and live in a comfortable way.

From the state of our soul we can make our body with the help of thought, to fly and know about so many truths.

We are born, we grow, we read and we live like animals in this world without even thinking of the powers that lie dormant in us.

What happens during the life time of the material body in this world… “cannot be remembered by the soul” when it goes to the astral world.
1.It can remember only its actions and thoughts
2.during its previous births or incarnations.

The soul will be wandering in the same state and with the same intelligence that it had when it was with the material body.
1.There is no chance for the soul to improve its intelligence
2.while it is in the astral world.

It goes on wandering in the astral world searching for a suitable place which is akin to its state and thoughts while it was in this world, to take its next birth so that it can fulfill its desire.

1.All the souls that have taken a rebirth in this world should realize their real state
2.and live without wasting their thought powers on the states of other people
3.but absorbing the power from Sakthi.

எந்தச் செலவும் செய்யாமல் உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

எந்தச் செலவும் செய்யாமல் உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

 

பணத்தை வைத்து வாழ்க்கையில் எதை வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம். ஆனால்
1.ஆன்மீகத்தின் மூலம் மனதைப் பெரிதாக வைத்துக் கொண்டால் உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
2.இது மனதார எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய… கிடைக்கச் செய்யக்கூடிய பெரும் சக்தி.

பணத்தாலே செய்யக் கூடியது எதை வேண்டுமென்றாலும் உடனே சுலபமாகப் பெறலாம்.

ஒருவருடைய அன்பைப் பெறலாம். அவருக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்தால் உடனே நல்லவர் என்று சொல்லிவிடுவார். ஆனால் அடுத்து கொடுக்கவில்லை என்றால் திட்டுவார்கள்.

காசைக் கொடுக்கக் கொடுக்க… நல்லவர் என்று போற்றிக் கொண்டே வருவார்கள். காசை மற்றவர்களுக்காகச் செலவழிக்கப்படும் பொழுது நான் தவறு செய்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.

காசு கொடுத்து உங்களுக்காகச் செலவழித்துக் கொண்டேயிருக்கின்றேன் இருந்தாலும் தவறைச் செய்கின்றேன். அப்பொழுது நான் செய்வதை எல்லாம் சரி என்று தான் நீங்கள் சொல்ல முடியும்.

என்னங்க… இப்படித் தவறு செய்கிறீர்கள்…? என்று மீறிக் கேட்டால் என்னிடமே வாங்கிச் சாப்பிட்டு விட்டு எனக்கே துரோகம் செய்கிறான் பார்…! என்ற நிலை வந்துவிடும். வந்துவிடும் வம்பு…!
1.எந்த வகையில் தருமம் செய்தாலும் இப்படித்தான் வரும்.
2.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.

காரணம்… பணம் என்பது உடலுக்குத் தான் வரும்

ஆனால் மெய் ஞானிகளுடைய அருள் உணர்வுகளைக் கூட்டினாலோ வாழ்க்கையில் வரக்கூடிய இருளை மாய்க்க உதவும். இதற்கு நீங்கள் எந்தப் பணமும் செலவழிக்க வேண்டியதில்லை.

உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த ஞானிகள் அருள் பெற வேண்டும் என்னுடைய மூச்சும் பேச்சும் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று யாம் சொல்லும் ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு வந்தால்
1.வியாபாரம் நல்லதாகும்… குடும்பத்திற்குள் சண்டையை நிறுத்தி ஒற்றுமையாக இருக்கச் செய்யும்
2.கேட்போருக்கும் நல்லதாகும் அறியாத வரக்கூடிய பகைமைகளைத் தடுத்து நிறுத்தும்
3.இதை வைத்து எத்தனையோ உயர்ந்த நிலைகளைக் கொண்டு வர முடியும்.
4.உங்களுடைய எண்ணங்கள் அண்டவெளி வரை செல்லும்.

ஆனால் இவ்வளவு சுலபமாக இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் செய்வதற்கு நேரமில்லை…! இதை யார் செய்வார்கள்…? என்று அலட்சியப்படுத்தி விடுகின்றார்கள்.

காசைக் கொடுத்து விட்டு நட்சத்திரத்திற்கு அர்ச்சனை ஆராதனை செய்வதிலே தான் குறியாக இருக்கின்றார்கள். செய்தால் தெய்வம் ஓடி வந்து செய்யும்…! என்ற இந்த நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்.

பணத்தைச் செலவழித்து யாகத்தை வேள்விகளையும் செய்வதற்குப் பதிலாக எந்தச் செலவும் இல்லாமலே…
1.உங்கள் தாய் தந்தையரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்து அதை உங்கள் உயிரான நெருப்பில் இணைத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்களை வைத்து “உங்களிடம் இருக்கும் சக்திகளை” நீங்களே உணர முடியும்.

ஏனென்றால் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா எண்ணுவது தான் என்னுடைய தியானமே. ஒவ்வொரு மகரிஷியும் ஞானியும் மனிதனைத் தான் தேடி வருகின்றார்கள்.

ஆகவே உங்களுக்குள் உங்களையே நீங்கள் தியானம் செய்யுங்கள் அந்த அருள் உணர்வுகள் சேரச் சேர… உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சகல உணர்வுகளும் விலகி விடும்.

குரு பலன்

குரு பலன்

 

அகஸ்தியனுக்கு முன் எவரும் விண் செல்லவில்லை. அகஸ்தியன் தான் துருவத்தை அறிகின்றான்.
1.அந்த உணர்வின் தொடர் கொண்டு முதல் மனிதனாக துருவ நட்சத்திரமாக உயிராத்மா ஒளியின் நிலை பெறுகின்றது.
2.பல லட்சம் வருடங்கள் ஆகிவிட்டது… இதையெல்லாம் நுகர முடியாது.
3.நமது குருநாதர் அவரின் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு தான் அதை நமக்கு உணர்த்துகின்றார்.

விண் செல்லும் அந்த ஆற்றல்களை அவர் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பருகிய
1.அந்தச் சக்தியின் திறன்… அவர் சொல்லும் உணர்வுகளை ஏங்கி எனக்குள் பதிவு செய்து கொண்டதனால்
2.அவரைப் பின்பற்றி அவரின் உணர்வை நினைவு கொள்ளும் பொழுது விண்வெளியின் ஆற்றலை நானும் நுகர முடிகின்றது.

ஆனால் குருநாதர் காட்டிய வழியில் அந்த விண்வெளியின் ஆற்றலை நாம் நுகர்ந்து அறிந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அதைச் சேர்த்துக் கொண்டிருந்தாலும் சாதாரண மக்கள் மத்தியில் பழகும் போது விருப்பு வெறுப்பு உணர்வுகளை நுகர நேர்கின்றது. அது போன்ற ஆயிரக்கணக்கானோர் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அது விஷத்தன்மை கொண்டது.

யார் வந்தாலும் என்னிடம் கஷ்டம் துன்பம் என்று சொல்கின்றார்கள் அல்லவா. எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… என் குடும்பத்தில் துன்பமாக இருக்கின்றது…! என்று சொல்கின்றார்கள்.

அதைக் காதிலே கேட்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் உந்தப்பட்டுத்தான் அதை அறிவாக நான் அறிந்து கொள்ள முடிகிறது.

அப்படி வந்தாலும் குரு காட்டிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எனக்குள் கலந்து நான் சுவாசித்து…
1.ஒவ்வொரு நாளும் அதைச் சமப்படுத்த… சமப்படுத்த… சிறுகச் சிறுக எனக்குள் அது சேர்கின்றது.
2.அந்தச் சமப்படுத்தும் உணர்வின் தன்மையை மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கும் பொழுது
3.இந்த உணர்வின் எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

உபதேசிப்பதைக் கேட்கப்படும் போது அதை நீங்கள்
1.எந்த அளவிற்குக் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்துகின்றீர்களோ
2.எந்த அளவுக்குக் கூர்மையாகக் கவனிக்கின்றீர்களோ
3.எந்த அளவிற்குக் கூர்ந்து பதிவு செய்து கொள்கின்றீர்களோ… அந்த அளவுக்கு ஆழமாக உங்களுக்குள் இது பதிவாகின்றது.

அப்படிப் பதிவாக்கிய பின்… அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மெய் ஞானிகள் வழிகளிலே நாம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைக் கூட்டினால் இந்தச் சக்தி உயர்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் விண்ணை நோக்கி ஏங்கி… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று விண்ணிலிருந்து அதை ஈர்த்து… உங்கள் உடலுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நினைவலைகளைச் செலுத்தும் போது உங்களுக்குள் சிறுகச் சிறுக இது சேர்கின்றது.

பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம் என்றால் பாடங்களைச் சொல்லாக… அதாவது “அவர்கள் சொன்னதை வெறும் பாடமாகப் படிக்கும் நிலைகள் வேறு…”

அதே சமயத்தில்
1.நேரடியாக… இன்னன்னது செய்கின்றது என்று அனுபவ நிலைகள் கொண்டு “அந்தப் பாடத்துடன் சேர்த்து உணரச் செய்யும் நிலைகள் வேறு…”
2.அனுபவத்துடன் காட்டும் நிலை வரும் பொழுது பொருள் கண்டுணர்ந்து விரயமற்ற நிலைகளில் செயல்படுத்த முடியும்.

ஆனால்… புதிதாக நான் ஒன்றை கண்டுணரப் போகின்றேன் என்ற நிலை வரும் பொழுது அது “குரு அற்ற நிலை…!” வெறும் பாட நிலைகளைக் கண்டுணர்ந்த பின் அதைச் செயலாக்கும் நிலைகளில் “எந்த உணர்வின் தன்மையும் தெரிந்து கொள்ளும் பொழுது பல விரயங்கள் ஆகும்…”

ஏனென்றால் அதைத் தெளிந்துணர வேண்டிய நிலை தான் வருகின்றது.

அது போல்… வாழ்க்கையில் தடைகள் வரும் போது பிறருடைய சோர்வான எண்ணங்கள் அதில் கலக்கப்படும் பொழுது “மெய் ஒளியைக் காணும் திறன் அற்று விடுகின்றது…”

ஆனால் குரு பலன் என்பது…
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி “எண்ணத்திலே எண்ணி நான் அவரை நினைவுக்குக் கொண்டு வந்து”
2.மெய் ஒளியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகளைக் கூட்டப்படும் பொழுது
3.அவர் வழியினைக் கண்டு… அவர் உபதேசித்த உணர்வின் அலைகளைப் பின் தொடர்ந்து… அதை நான் நுகர நேர்கின்றது.
4.அவர் எதைப் பருகினாரோ “அவர் உணர்வுடன் ஒன்றி” அவர் பருகியதை நானும் பருக முடிகின்றது.
5.அதை நான் பருகப்படும் பொழுது… அந்த உணர்வின் எண்ண அலைகள் “எனக்குள் குவிகின்றது…”

அதே உணர்வின் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. இப்பொழுது நீங்கள் கேட்டுணரும் பொழுது எந்த அளவுக்குக் கூர்மையாக எண்ணுகின்றீர்களோ உங்களுக்குள் பதிவாகின்றது.

பதிவை மீண்டும் நினைவாக்கி யாம் சொல்லிக் கொடுத்த ஆத்ம சுத்தியை நீங்கள் அடிக்கடி செய்தாலே போதும்.
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்
2.அருள் ஞானம் பெற முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும்.
3.பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.