ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி பெற வேண்டும்

ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி பெற வேண்டும்

 

மிருகங்கள் தன் ஆகாரத்தைத் தேடிச் செல்லும் பொழுது ஆகாரம் இருக்கும் இடத்தைத் “தன் சுவாச நிலையால் உணர்ந்து” அந்த இடத்தை அணுகி ஆகாரத்தை எடுத்துக் கொள்கின்றது.

அதே நிலையில் அது செல்லும் பொழுது “தன் எதிரி உள்ளது” என்பதையும் தன் சுவாச நிலையில் உணர்ந்துதான் தப்பிச் செல்கின்றது. அதே போல… தன் கூட்டமும் எதிரிகளிடமிருந்து விலகிச் சென்று விடுகின்றது.

இந்நிலை மனிதர்களுக்கு இல்லை.

இதைப் போலவே தன்னுடைய ஆகாரத்தைத் தேடிப் போகும் பொழுது தன்னுடைய சுவாச அலைகளைக் கொண்டு தன் ஆகாரம் இருக்கும் இடம் ஈர்த்து அந்த இடத்தை நோக்கிச் செல்கின்றது.

அதே சமயம் அது தான் ஆகாரத்தை எடுக்கச் செல்லும் பொழுது
1.தன் எதிரி வருகிறான் என்று உணரும் பொழுது
2.தான் நாடிச் சென்ற ஆகாரத்தையும் எடுக்காமல் அது திரும்பிச் செல்கின்றது.

பட்சியின் தன்மையில் அதன் ஒளியை கொண்டே அது தன் ஆகாரத்தை எடுக்கும் சக்தி நிலை பெற்றது. அந்த ஒளி ஆகாரத்தின் மேல் பாய்ச்சும் பொழுது
1.அந்த இடத்தில் உள்ள சப்த அலைகளைக் கொண்டு உணரும் தன்மை பெற்று
2.அங்கு எதிரி வரும் தன்மையை அப்பார்வையின் ஒளியினாலேயே அவ்வெதிரியின் சுவாச நிலை அறிந்து
3.ஆகாரத்தை எடுக்காமல் பறந்து செல்கின்றது.

மற்ற ஜெந்துக்களுக்கு மிருகங்கள் பட்சிகள் (ஊரும் ஜந்துக்கள் அல்ல) முன்கூட்டியே மழை இடி பூகம்பம் போன்ற பல ஆபத்தான நிலைகளின் சப்த அலைகளைப் பூமியின் ஈர்ப்பு நிலை கொண்டு அதன் சுவாச நிலைக்கு ஈர்க்கும் தன்மை பெற்று “முன்கூட்டியே” இந்நிலையை அறியும் நிலை அதற்கு உள்ளது.

1.மனிதனுக்கு உள்ள அறிவு சக்தியை விட மிருகங்களுக்கு இயற்கையிலேயே “ஒரே நிலை கொண்ட ஈர்க்கும் சக்தி உள்ளது…”
2.அந்நிலையை மனிதன் பெற வேண்டும் என்றால் தியானத்தால் தான் பெற முடியும்.

இயற்கையிலேயே ஒவ்வொரு மிருகத்திற்கும் இப்படிப்பட்ட சக்தி இருந்தாலும் அதைச் செயல்படுத்த அதற்கான அங்கங்கள் கருவிகள் அதனிடத்தில் இல்லை. எழுதி வைத்தோ செயல்படுத்தவோ முடியாத உடலமைப்பைக் கொண்டது.

மனிதன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தன் எண்ண அலைகள் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு மூன்று மாத காலம் பேசாமல் இருந்துவிட்டு பிறகு பேச முயற்சிக்கும் பொழுது சில சமயம் பேச முடியாத நிலையில் சைகை மூலமாகச் சொல்லும் பொழுது அதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

தனக்கு எவ்வளவோ எண்ண அலைகள் வந்தாலும் கூட தன்னால் சொல்ல முடியாத நிலையில் மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

மிருகங்களுக்கோ பட்சிகளுக்கோ எண்ண உணர்வுகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமலும் செயல்படுத்த முடியாமலும் போய்விடுவதினால் அதற்கு நம்மை ஒத்த அறிவு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

நம்மைக் காட்டிலும் மேலான அறிவு நிலை பெற்ற பல மிருக ஜந்துக்களும் பட்சிகளும் உள்ளன. அது உண்ணும் உணவிலே தனக்குத் தேவைக்கு மேல் ஒரு அணுவையும் அதிகமாக எடுத்துக் கொள்ளாது.

மனிதனுக்கு அறிவு மிருகத்தை விட அதிகம் என்று சொல்கின்றோம்.
1.ஆனால் உண்மையில் மிருகத்தின் அளவு மனிதனுக்கு அறிவு உண்டா…? என்பதுதான் சந்தேகம்.
2.மனிதனை விட மிருகத்துக்கே அறிவு அதிகம் என்று கூடச் சொல்லலாம் “இன்று மனிதன் இருக்கும் நிலையை வைத்து…”

அன்றைய சித்தர்கள் எந்த நிலை கொண்டெல்லாம் பல உண்மை நிலைகளை அறிந்தார்களோ அந்நிலை கொண்டெல்லாம் சில மிருகங்கள் நாய் நரி பறவைகள் இன்னும் பல மிருகங்கள் பல ஆவி நிலைகளை அறிந்திடும் நிலையில் உள்ளன.

ஒரு வீட்டில் ஏதாவது உடலை விட்டு ஆவி பிரியும் நாள் வருவதற்கு முதலிலேயே… மிருக நிலைக்கு அதன் சுவாச நிலை கொண்டு அதை அறியும் நிலை உள்ளது.

அந்நிலையில் தான் நாயும் நரியும் பூனைகளும் உள்ளன.
1.ஆவி பிரியும் நிலையில் பூனைகள் அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்திடலாம்.
2.ஆவி பிரியும் நிலையில் பூனைகள் அங்கு இருக்காது. அதன் சுவாச நிலைக்கே அது தெரிந்திடும்.

ஆவி நிலை மட்டுமல்ல பெரும் வெள்ளம் வருகிறது என்றாலும் பூனை நாய் நரி இப்படிக் கூரிய அறிவுடைய மிருக ஜந்துகளுக்கு சுவாச நிலையில் எல்லா நிலையுமே அறியும் தன்மை உள்ளது.

இம்மாதிரி மிருகத்தின் நிலைக்குத் தான் கடந்த கால சரீரங்களின் இன்ப துன்ப நிலைகளும் தன்னைச் சுற்றியுள்ள ஆவி நிலைகளும் மனிதனின் எண்ணமும் சுவாச நிலையும் ஒவ்வொன்றும் அறியும் தன்மை மிருகங்களுக்கும் சில பட்சிகள் நிலைக்கும் உள்ளன.

இந்நிலையில் இருந்து எல்லாம் மாறுபட்டு வாழும் நிலை கொண்டவன் தான் மனிதன். இருந்தாலும்
1.மனிதனுக்கு அச்சக்தி நிலை கொண்டு கிடைத்த பாக்கியத்தைச் சிதறவிட்டு
2.மனிதனுக்கு ஆறு அறிவு என்ற அளவை வைத்துப் பிறரிடம் ஜோசியம் கேட்டு
3.அந்த ஜோசியத்தின் நிலை கொண்டே தன் எண்ணத்தை மாற்றிப் பல நூல்களைப் படித்து
4.பல எண்ணத்தைத் தன்னுள் சிதறவிட்டுத் தனக்குள்ள சக்தி நிலையையே மாற்றிக் கொண்டு
5.தன்னைத்தானே நரகமாக்கி வாழுகின்றான் ஆறறிவு படைத்த இன்றைய மனிதன்.

ஆத்ம சுத்தி செய்வதன் முக்கியத்துவம்

ஆத்ம சுத்தி செய்வதன் முக்கியத்துவம்

 

இராமனைக் கூப்பிட்டு… “நீ காட்டுக்குச் செல்…” உன்னுடைய சகோதரனுக்குப் பட்டம் சூட்ட வேண்டி உன் தந்தை விரும்புகின்றார். உன்னை எப்படிக் காட்டிற்குப் போகச் சொல்வது…? என்று தயங்கிக் கொண்டிருக்கின்றார் நீ காட்டுக்குச் செல்…! என்று கைகேயி சொல்கின்றது.

தந்தை சொல் தட்டாத நிலையில் இராமனும் காட்டுக்குச் செல்கின்றார். காரணம்…
1.தசரதச் சக்கரவர்த்தி அன்று எத்தனை பேரைப் போரில் கொன்றாரோ
2.திட்டமிட்டு அடுத்த நாட்டைத் தான் அபகரிக்க வேண்டும் என்று எத்தனை பேரைக் கொன்றானோ
3.தான் எடுத்துக் கொண்ட எண்ணம் (அந்தச் சக்திகள்) “கைகேயி” பதிவாகி அங்கே இரக்கமற்றுக் கொன்றது.

அப்படிக் கொன்ற உணர்வுகள் இந்த உடலில் விளைந்த பின் என்ன செய்கின்றது…? நல்லது செய்ய முடியவில்லை… நல்லவனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று நினைத்தால் அது முடியவில்லை.

இங்கே இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்தான் நல்லதைச் செய்ய விடாதபடி உடலின் இச்சை கொண்டு தடுக்கின்றான்.

இங்கே இந்த உணர்வுகள் இயக்கப்படும் பொழுது இவன் உடலுக்குள் அந்த இயக்கம் எப்படி இயங்குகின்றது…?
1.எதை வளர்த்துக் கொண்டோமோ நல்லது இவனால் செய்யவே முடியவில்லை
2.கைகேயிக்குக் கொடுத்த வாக்கின் பிரகாரம் செயல்பட வேண்டி வருகின்றது.

அப்பொழுது தசரதன் வேதனைப்படுகின்றான்.

பிறரை வேதனைப்படுத்திப் போரில் மற்றவரைக் கொன்றான். ஆனால் தனக்குள் வரும்பொழுது நல்லவனுக்குப் பட்டம் சூட்ட முடியவில்லை என்று வேதனைப்படுகின்றான்… வேதனை தாங்காதபடி ஜீவன் பிரிகின்றது.

கண்ணுக்கு முன்னாடி நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகின்றான். ஆனால்
1.உடலுக்குள் இருக்கும் போர் முறை நல்லதைப் பேச விடாதபடி
2.இந்த உணர்வின் தன்மை அவனை இப்படிச் செயல்படுத்த வைத்து விடுகிறது என்பதைக் காட்டுகின்றார்கள்
3.வேதனை உணர்வுகள் இவனை ஒடுக்கி விடுகின்றது.

தாயார் வீட்டுக்கு அனுப்பிய பரதனை மீண்டும் வரச் சொல்லிச் சொல்கின்றார்கள்.

பரதன் வந்து பார்க்கும் பொழுது சாம்ராஜ்யமே சூனியமாகத் தெரிகின்றது தந்தையையும் இராமனையும் காணவில்லை. தந்தையைப் பற்றியும் இராமனைப் பற்றியும் எல்லோரிடம் கேட்கின்றான்… ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை எல்லோரும் சோகமாக இருக்கின்றார்கள்.

கடைசியில் தன் தாயாரிடமே கேட்கின்றான். போர்க்களத்தில் ஜெயிப்பதற்கு நான் தான் காரணமாக இருந்தேன். அதற்கு இரண்டு வரம் கொடுத்தார். அந்த வரத்தைத் தான் நான் கேட்டேன்.

வரப்படி இராமனைக் காட்டிற்குச் செல்லும்படி சொல்லி விட்டார் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று சொன்னேன்… அதற்குள் மனம் தாங்காது இறந்து விட்டார். என்னுடைய குறை இல்லை என்று சொல்கின்றது

பரதன் அப்போது சொல்கிறான்… உன் தாயார் வீட்டிலும் இதே தான் நடந்தது. அதே வழிகளில் தான் இன்று இங்கே வந்திருக்கின்றது.

எந்தக் கோபத்தின் வழியோ அதன் வழி தான் இங்கே நடக்கும் என்ற நிலையை அங்கே காட்டித் தெளிவாக்குகின்றார்கள்
1.அன்றே உன்னைக் கொன்று இருந்தால்
2.எங்களுடைய சாம்ராஜ்யத்திற்கு இந்த நிலை வந்திருக்காது…! என்று பரதன் சொல்கிறான்

அதாவது…
1.எப்பொழுது பிறரை துன்பப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வருகின்றதோ அதை உடனே… அப்போதே அழித்து விட்டால்
2.நம் உடலில் நோய்களோ மற்ற தீய வினைகளோ தீமைகளோ வராது என்பதைத்தான் அங்கே காட்டுகின்றார்கள்.

பாசத்தால் இருக்கின்றோம்…! நாம் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனை. இந்த உணர்வின் தன்மை உணர்ச்சியான பின் வேதனைப்படும் செயலே வருகின்றது.

இவை எல்லாம் நாம் எடுக்கும் எண்ணங்கள் கொண்டு நடக்க்கூடிய செயல்கள் தான். அதிலிருந்து தப்ப வேண்டும் அல்லவா…!

பத்தாவது நிலை அடையக் கூடிய (தசரதச் சக்கரவர்த்தி) நாம் எந்த வகையில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றோம்.
1.வேதனை என்ற உணர்வும் வரும் போது அந்த விஷம் கலந்து விட்டால்
2.மனிதனல்லாத நிலைக்குத்தான் செல்ல வேண்டி வரும் என்று இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

அதற்குத்தான் அடிக்கடி உங்களை ஆத்ம சுத்தி செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றோம். தீமை என்று பார்த்தாலே
1.அடுத்த கணம் அது தனக்குள் வளராதபடி
2.மகரிஷியின் உணர்வு கொண்டு ஆரம்பத்திலேயே அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நல்ல குணங்களை அப்பொழுது தான் நம்மால் காக்க முடியும்.

தேவர்களுடன் தேவர்களாக நாம் ஐக்கியப்பட வேண்டும்

தேவர்களுடன் தேவர்களாக நாம் ஐக்கியப்பட வேண்டும்

 

இன்றைய உலகம் பெரும் விஷத்தன்மை வாய்ந்த உலகமாக மாறிக் கொண்டு வருகின்றது… நல்ல பாம்பின் விஷம் கொடும் விஷம் என்கிறார்கள்,

அந்த நல்ல பாம்பிற்கு… அந்த நாக தேவனுக்கு அவ்விஷம் எங்கிருந்தப்பா வந்தது…?
1.இக்காற்றினில் கலந்திருக்கும் கடுமையான விஷ நிலையை…
2.தன் சுவாச நிலைக்குk கடும் விஷத்தை ஈர்த்துத் தன் ஆகாரமாக ஏற்று… அவ்விஷத்தையே உண்டு…
3.பல நூறு ஆண்டு கணக்குகள் தான் சுவாசித்த விஷ அணுக்களைத் தன்னுள்ளையே பல ஆண்டுகள் அடக்கி
4.விஷத்தையே மேலும் மேலும் ஈர்த்து அவ்விஷத்தைக் கொண்டு பெரும் மாணிக்கமாக
5.அதைத் தன் ஜீவன் முடியும் காலத்தில் கக்கி வெளிப்படுத்துகின்றது.

நல்ல பாம்பு… விஷத்தைத் தன் தொண்டைக்குழி இடத்தில் சிறுகச் சிறுகப் பல ஆண்டுகள் சேமிக்கிறது. அச்சூரியனின் சக்தி அந்த நல்ல பாம்பின் மேல் படும்பொழுது அதன் பார்வையைக் கொண்டு தன் நிலைக்கு நேராக ஈர்த்து…
1.தான் எடுக்கும் சுவாச நிலை… மேல் நோக்கி…
2.அச்சூரியனின் சக்தியிலிருந்து தன்னுள் ஈர்ப்பதாக இருக்கின்றது.

இந்நிலை கொண்டு அப்பாம்பு இக்காற்றில் கலந்துள்ள விஷமான காற்றைத் தன் சுவாசத்திற்கு ஈர்த்துக் கொடிய விஷத்தைக் கொண்டே தான் சேமித்து வைத்திடும் விஷத்தையே மாணிக்கக் கல்லாகப் பெறும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது அந்த நல்ல பாம்பு.

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன.
1.தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி
2.அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி… எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

“மகரிஷிகள் உணர்வு கொண்டு தான்” எதையுமே நல்லதாக மாற்றி அமைக்க முடியும்

“மகரிஷிகள் உணர்வு கொண்டு தான்” எதையுமே நல்லதாக மாற்றி அமைக்க முடியும்

 

இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை உணர்வுகள் உடலுக்குள் மிகவும் அதிகமானால் இடுப்பு வலிக்கின்றது மேல் வலிக்கின்றது கால் வலிக்கின்றது என்று வந்து விடுகிறது. வேதனையைத் தவிர வேறு நல்லதைச் சுவாசிக்கின்றோமா…?

நம் உடலில் உள்ள மற்ற அணுக்களிலும் வேதனையைச் சேர்த்து விடுகின்றோம். நல்ல உறுப்புகளாக உருவாகி… நஞ்சினை மலமாக மாற்றும் திறன் பெற்று இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு உடல் உறுப்புகளைப் பாழாக்குகின்றோம்.

1.தீமையை மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.வேதனை என்ற உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் இணைந்து சிறுகச் சிறுக அவைகளை மாற்றத் தொடங்குகிறது.

இரத்தம் கல்லீரலுக்கு வந்தால் அதை வடிகட்டும் திறனும் நுரையீரல் மற்றதை வடிகட்டும் திறனும் எல்லாமே சுத்திகரித்து வரப்படும் பொழுது அது சரியாக இயங்கவில்லை என்றால் விஷம் என்ற உணர்வு சென்று அதற்குள் இணைந்து விடுகின்றது.
1.விஷம் ஆகிவிட்டால் நுரையீரல் சரியாக வேலை செய்யாது
2.கல்லீரலுக்குச் சென்றால் வீக்கமாகி விடுகின்றது வடிகட்டும் தன்மை இல்லை.
3.மண்ணீரலுக்குச் சென்றால் இதே மாதிரி ஆகிவிடுகின்றது
4.இதை எல்லாம் கடந்து வரப்படும் பொழுது நுரையீரல் இரத்தத்தை இழுக்கும் திறன் இழந்து “வெறும் காற்று” தான் வருகிறது.

கல்லீரல் தான் இரத்தத்தை வடிகட்டிக் கொடுப்பது அதனுடைய திறன் இழந்துவிட்டால் நுரையீரல் இழுக்கும் பொழுது வெறும் கேஸ் (GAS) தான் செல்லும். அப்போது…
1.நெஞ்சு எப்படியோ எரிகின்றது மூச்சுத் திணறல் ஆகின்றது
2.கல்லீரல் வீங்கி விட்டால் அடுத்து நடந்தால் போதும் மூச்சுத் திணறல் ஆகும்
3.காரணம் அதற்குண்டான இரத்தம் இல்லை.
4.பெட்ரோல் இல்லை என்றால் ஒரு இன்ஜின் லோடை (LOAD) இழுத்து ஓடுமா…?

நுரையீரல் இழுத்து இரத்தத்தை உடல் முழுவதும் சப்ளை செய்து வடிகட்டி சுத்திகரித்து இருதயத்திற்குச் சென்று எல்லாவற்றுக்கும் ஆசிடாக மாற்றி எது எது உணர்வோ அவைகளுக்கு இயக்கச் சக்திக்குக் கொடுக்கும். அது தான் நம் உறுப்புகளின் இயக்கம்.

மருத்துவர்களும் இன்று எத்தனையோ கண்டுபிடிக்கின்றார்கள் சொல்கின்றார்கள்… ஆனால் அவர்களும் ஓரளவுக்கு மேல் தெரிவதில்லை
1.கடவுளைத்தான் நான் வணங்குகிறேன்… அவன் பேரைச் சொல்லி தான் நான் மருத்துவம் செய்கிறேன்
2.விதி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்பார்கள்
3.பழக்கப்பட்ட முறையைத்தான் சொல்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய உணர்வை நாம் பின்பற்றவில்லை.

மருத்துவர்களும் முயற்சி எடுக்கின்றார்கள். இருந்தாலும் விஞ்ஞான அறிவு கொண்டு என்னதான் உடலுக்குள் எலும்பை மாற்றினாலும் உறுப்புகளை மாற்றினாலும் எத்தனை காலம் நாம் நன்றாக வாழ முடிகின்றது…?

முதலிலே நன்றாக இருந்தது இப்பொழுது வலுவான பொருள்களைத் தூக்குவதற்குக் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. அப்போது அங்கே வேதனை வருகின்றது.

இருதயத்தை மாற்றி வைத்திருப்பார்கள் மருத்துவர் சூதானமாக இருக்க வேண்டும் என்பார் ஏதாவது பார்த்தால் சாப்பிட முடிவதில்லை அதற்கு ஒரு மருந்து.

மற்ற மனிதர்களுடைய கிட்னியை எடுத்து மாற்றம் செய்தவர்கள் அது சீராக இயங்குவதற்கு ஒரு மருந்தை கொடுத்துச் சமப்படுத்துவார்கள். மாற்றுவார்கள் ஒரு நாளைக்கு மருந்து கொடுக்கவில்லை என்றால் மரணம் ஆகிவிடும்.

சம்பாதித்த காசை வைத்துச் சிறிது நாட்கள் கூட வாழலாம். பின் சாப்பிட்ட மருந்தின் விஷங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து…
நான் எப்படி எல்லாம் இருந்தேன் கடைசியில் என்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று
2.விஷத்தின் உணர்வு கொண்டு உயிர் வெளியே சென்றால் விஷத்தைச் சேமித்த உணர்வு கொண்டு பாம்பினத்திற்குள் அடுத்து செல்கின்றது.

கோபம் குரோதம் என்ற நிலையில் அடுத்தவரை வேதனைப்படுத்தி அதை ரசித்து வாழ்ந்தால் அடுத்துப் புலியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல வேண்டி வரும். மற்றொன்றைக் கொன்று சாப்பிடும் நிலை தான் வரும்.

இவையெல்லாம் இயற்கையின் சில நியதிகள்…!

இது போன்ற கொடுமைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான்
1.உங்களுக்குத் தொடர்ந்து ஞானிகள் உணர்வை உபதேச வாயிலாகக் கொடுத்து
2.விஷத்தன்மையான உணர்வுகள் உடலுக்குள் சேராத வண்ணம் மாற்றி அமைக்கும் பயிற்சியாக
3.தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் உனர்வுகளைப் பெறும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.

உயிரணுக்கள் சரீரமாக உருவாக்க “உஷ்ண அலைகள்” அவசியம் தேவை

உயிரணுக்கள் சரீரமாக உருவாக்க “உஷ்ண அலைகள்” அவசியம் தேவை

 

சூரியனிலிருந்து வெளிவரும் ஈஸ்வர சக்தியின் கதிர்ப் பிழம்பினை பூமித்தாய் தன் ஈர்ப்பு சக்தியினால் ஈர்த்துப் பூமியின் உயிரணுக்களாகக் காற்றுடன் கலந்து விடுகிறது.

அந்த உயிரணுக்கள் என்ன செய்கிறது…?

பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள்… ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றவாறு
1.மண்ணின் நிலை… மரம்… செடி… கொடி… நீர் நிலைகள் கழிவுப் பொருட்கள் நிலைக்கு ஏற்றவாறு உஷ்ணக் காற்றலைகளை…
2.நஞ்சான அலைகளையோ அல்லது நறுமணம் கொண்ட அலைகளையோ அந்த உயிரணுக்கள் சுவாசிக்கின்றனவோ
3.அதனையே சுவாசித்துச் சுற்றி வருகின்றன.

எந்த அலைகளை முதலில் இவ் உயிரணு சுவாசிக்கின்றதோ அந்த நச்சு அல்லது நறுமணம் கொண்ட அலைகளையே தொடர்ந்து சுவாசித்து பூமித்தாயைச் சுற்றி வந்து கொண்டே இருக்கும் அவ்வுயிரணு.

உதாரணமாக…
1.முதல் நாள் மாலை வரை பூச்சி புழுக்கள் இல்லாத கடலைச் செடியில்
2.மறுநாள் காலையில் பல கோடிக்கணக்கான புழுக்கள் செடியின் இலைகளை உண்டு அழித்திருப்பதைக் காண்கின்றோம்.

அந்தப் புழுக்கள் எப்படி ஜீவன் பெற்றன…?

மேற்கூறிய காற்றுடன் சுற்றிக் கொண்டே இருக்கும் அந்த உயிரணுக்கள் கடலைச் செடியின் மீது படர்கின்றன.
1.கால நிலைக்கு ஏற்ப பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் செடியின் மீது தாக்கும் பொழுது
2.அச்செடியின் இலையில் உள்ள சத்து கலந்த உஷ்ண அலைகள் வெளிப்படும் பொழுது…
3.இவ்வுயிரணுக்கள் அதைச் சுவாசிக்கும் பொழுது புழுக்களாகச் சரீரம் பெறுகின்றன.

புழுக்களாகச் சரீரம் பெற்ற பின் எந்த மணம்… சத்து… கொண்ட இலையின் உஷ்ண அலைகளைக் கொண்டு சுவாசித்துச் சரீரம் பெற்றதோ… அந்த இலைகளையே அது உணவாக உட்கொள்ளத் தொடங்குகிறது.

இதைப் போலவே எந்தெந்தச் செடி கொடி மரம் முதலியவைகளின் இலைகளில் உள்ள உஷ்ண அலைகளைச் சுவாசித்து… சரீரம் பெறும் உயிரணுக்கள் யாவும் உடல் பெற்ற பின்… அந்தந்தத் தாவர இலைகளையே உணவாக உட்கொள்கின்றன.

பூமித்தாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் மேற்கூறிய உயிரணுக்கள் அசுத்த நீர் அல்லது கழிவுப் பொருளின் மேல் படர்ந்து இருக்கும் பொழுது… பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் அந்த அசுத்தத்தில் படரும் பொழுது
1.அந்த அசுத்த சத்துள்ள ஆவி வெளிப்படும் பொழுது
2.அதை உட்கொண்டு கொசு பூச்சி புழுக்கள் போன்ற சரீரம் பெறுகின்றன.

எந்தச் சுவாச நிலையில் சரீரம் பெற்றதோ அந்தச் சுவாச நிலையிலேயே ஜீவிக்கின்றது… உணவையும் உட்கொள்கின்றது.

எப்படி ஒரு கோழி தான் இடும் முட்டையை அடைகாத்து 21 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றதோ… அந்த நிலையை இன்றைய விஞ்ஞானத்தில் அதே 21 நாட்களில் கொடுக்கக்கூடிய உஷ்ண சக்தியைக் கருவில் கொடுத்து குஞ்சுகளாக வளர்ச்சி பெற்றுச் சரீரம் பெறச் செய்கின்றனரோ… அதே நிலையில் தான்
1.பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகளைச் சுவாசித்து
2.மேற்கூறிய உயிரணுக்கள் குறுகிய காலத்தில் சரீரம் பெறுகின்றன.

ஒவ்வொரு உயிரினமும் அது அது எடுத்திடும் சுவாச நிலை கொண்டே… அதனுடைய சரீர நிலை பெறுகின்றது. இது போன்று தான்
1.நாம் ஈர்க்கும் சுவாச நிலைக் காற்றுடன் கலந்துள்ள பல கோடி உயிரணுக்கள்
2.நமது சுவாசத்துடன் சென்று நமது உடலில் நிலை கொள்ளுகின்றன.

வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம்

வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம்

 

பள்ளியில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பாசம் கொண்டு சினேகித சினேகிதிகளாகப் பழகி இருப்பார்கள்.

இருந்தாலும்… கல்வியில் சீர்பட வில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை தனக்குள் பெற்ற பின் அவர்கள் ஒருவருக்கொருவர் பழகிய உணர்வு கொண்டு
1.காசைச் செலவழிக்கின்றேன் மற்றவர்களைப் போன்று படிக்காதபடி நீ மக்காக இருக்கின்றாயே என்ற நிலை வருவதும்
2.சிந்திக்கும் திறன் இல்லை என்றால் மற்றவர்கள் இணைத்துப் பார்த்து தன்னையே தான் வெறுக்கும் நிலையும் வருகின்றது.

காரணம் குடும்பத்தில் ஒரு சில நேரங்களில் பணத்திற்காக அவஸ்தைப்படுவார்கள். அந்த மாணவி அல்லது மாணவன் இந்த உணர்வைத் தன் மனதில் எடுத்துக் கொண்டால்
1.அந்த வேதனை உணர்வு கலந்த பின்
2.பள்ளியில் சென்று பாடத்தைப் படித்தாலும்
3.அங்கே சொல்லிக் கொடுப்பதைப் பதிவாக்கிச் சிந்தித்து “மீண்டும் நினைவாக்குவது என்பது” கடினமாகி விடுகின்றது.

அதே சமயத்தில் பள்ளியிலே பிறர் குறும்புத்தனம் செய்வோரையோ தவறு செய்வதையோ உற்றுப் பார்த்தால் அந்த வலிமையான உணர்வுகள் இங்கே அணுவாகி விடுகிறது.

அந்த அணு தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதையே நுகரப்படும் பொழுது இந்த உணர்வின் வலிமை பெற்ற பின் பாட நிலைகளில் சரியானபடி படித்தாலும்… குறும்புத்தனம் செய்யும் உணர்வு கலந்து அது திரை மறைவாக்கிவிடும். இதுதான் சித்திரை (சிறு திரை) என்பது.

சந்தர்ப்பத்தினால் ஒரு தீமையான உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின்
1.நல்ல ஒழுக்கத்தின் தன்மையை அந்த உணர்வுகள் மறைத்து விடுகின்றது
2.படிப்பைப் பற்றிய நினைவாற்றல்கள் வருவதில்லை.

ஏனென்றால் பாலிலே ஜீனியை போட்டு காஃபியைப் போடும் பொழுது ருசியாக இருக்கின்றது. ஆனால் சிறிது காரத்தை இணைத்து விட்டால் சுவை வருகின்றதோ…? இல்லை.

இதைப் போன்று தான் குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருக்கொருவர் குறும்புத்தனமான செயல்களைச் செய்யும் பொழுது அந்த உணர்வுகள் கலந்து விட்டால் நினைவுகள் அதிலே வலிமையாகச் சென்று விடுகின்றது.

பின் அவர் படிக்கும் பாடங்களை உற்றுப் பார்த்தால் அவருடைய நினைவாற்றல் இங்கே வருவதில்லை ஆகவே அறியாது இவ்வாறு பார்த்துணர்ந்த கேட்டுணர்ந்த தீமைகள் இவன் அறிவின் தன்மையை சித்திரையாக “சிறு திரையாக” மறைத்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு யாம் சொல்லிக் கொடுக்கும் தியானத்தின் மூலம்
1.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு இருளைப் போக்கிப் பொருளைக் காண முடியும்
2.இந்தத் தியானம் அதற்கு உதவும்.

ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ நாம் பார்த்தால் அடுத்த கணமே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி நம் நல்ல குணத்தை மறைத்திருக்கும் அந்தச் சிறு திரைகளை நீக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இதைப் போல் நீக்கி வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் அறிவுகள் அனைத்தும் மெய் ஒளியைப் பெறும் தன்மையாக நமக்குள் வளர்ச்சி பெறும்… பூரண நிலவாக மாறுகின்றது.

என்றும் ஒளியின் சரீரமாக பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழும் தன்மை பெறுகின்றது. மனித வாழ்க்கையில் நாம் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ உடல்களில்
1.தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வைப் பெற்றோம்
2.உயிரின் துணை கொண்டு தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்
3.இதிலிருந்து நாம் அடுத்து எந்த நிலையை பெற வேண்டும் என்பதைத்தான் நமது சாஸ்திரங்கள் காட்டுகின்றது

அதனைக் காட்டுவதற்குத் தான் ஆலயங்களில் சொர்க்க வாசலைக் காட்டுகின்றார்கள். உடலை விட்டுப் பிரிந்த பின் பிறவியில்லா நிலை அடைவது தான் கடைசி எல்லை

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள் “வைகுண்ட ஏகாதசி…!” அன்றைய தினம் சொர்க்கவாசலைத் திறப்பதாகக் காட்டுவார்கள்… அதிகாலையில் திறப்பார்கள்.

வழக்கமாக நேர் வாசலில் சென்றால் அன்றைய தினம் வடக்கு வாசலைத்தான் திறப்பார்கள்.
1.காரணம் நாம் வடக்கில் தான் சொர்க்கமடைகின்றோம் என்பதனை அவ்வாறு காட்டுகின்றார்கள்
2.வடக்கில் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் சுழன்று கொண்டுள்ளது
3.அந்த ஈர்ப்பு வட்டத்தில் இணைய வேண்டும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

குருவை நினைத்து நாம் தியானிக்கும் போது “குருவிற்கு அது தெரிந்து” நமக்கு ஆசி வழங்குகின்றார்

குருவை நினைத்து நாம் தியானிக்கும் போது “குருவிற்கு அது தெரிந்து” நமக்கு ஆசி வழங்குகின்றார்

 

பல நாள் தவம் இருந்து தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம்
5.அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகள் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது – நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது
1.உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..!
2.அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.
3.ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும்.
4.உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது… நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.
5.அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது.
6.அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.
7.அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகளை அடிக்கடி அந்தச் சுவாச நிலையில் நம் உயிரணுவிற்கு உயிருக்குக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.
3.எண்ணத்திலும் செயலிலும் உண்மை நிலையைக் கடைப்பிடியுங்கள்
4.காலத்துடன் கலந்திடுங்கள் கூட்டு நிலையில் கூடித் தியானியுங்கள்.
5.தன் வழிக்கு தெரிந்த உண்மைகளை உன்னத உண்மைகளைப் பிறருக்கு நல்வழி புகட்டித் தியான நிலைக்கு அழைத்திடுங்கள்.
6.நாம் ஜெபிப்பதின் பொருளை உணர்ந்து அச்சக்தியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

அவ்வீஸ்வர சக்தியின் அருளை மாலையில் குறிப்பிடப்பட்ட காலநிலையில் அமர்ந்து தியானம் இருங்கள் என்பதைப் பலர் பல நிலையில் எடுத்துக் கொண்டு இதில் எல்லாம் ஏதோ சித்து வேலைகள் உள்ளன என்ற சில பல எண்ணங்களை எண்ணிக் கொள்கிறார்கள்.

வாழ்க்கை நிலையில் அன்றைய நம் செயல்களை எல்லாம் முடித்துவிட்டு நாம் அமர்வதற்கு அதுதான் உகந்த நேரம். நம் சுவாச நிலைக்கு ஏற்ற நேரமும் அதுதான்.

நாம் ஜெபிக்கும் பொழுது நாம் எண்ணிடும் சித்தர்களின் நிலையில் இருந்து… சித்தர்களின் நிலை மட்டுமல்ல… தியான நிலையில் உள்ள எல்லோருக்குமே நாம் ஒருவரை ஒருவர் எண்ணித் தியானிக்கும் பொழுது அவர்கள் நமக்காக ஜெபித்திட முடியுமப்பா.

ஜெப நிலை ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது நமக்கு குரு வேண்டுமல்லவா. குருவின் நிலையை நாம் எங்கிருந்து தியானம் இருந்தாலும் அவரின் நிலையிலிருந்து நாம் ஆசி பெறத் தான் இந்த நிலை.

எப்படி நாம் நம் வீட்டில் இருக்கும் பொழுது விக்கல் எடுத்திட்டால் யாரோ நம்மை எண்ணுகிறார்கள் என்று எண்ணுகின்றோம். எண்ணுபவர்கள் நினைத்திட்டால் இருவரும் ஒரே நிலையில் எண்ணும் பொழுது அந்த விக்கல் நின்று விடுகின்றது என்கிறோம்.

அதே போல் தான் தியான நிலையிலும் நாம் நினைத்து தியானிக்கும் பொழுது
1.நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்நிலை உடனே அவர்களுக்குத் தெரிந்து
2.அவர்களின் ஆசியை நாம் பெறுகின்றோம்.

ஆகவே இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் தியான நிலையில் இருந்திடுங்கள். ஓம் ஈஸ்வரா என்ற ஒரே நிலையில் சுவாச நிலையை எடுத்து நீங்கள் தியானிக்கும் பொழுது உங்கள் ஜெபத்திற்கு உயர்ந்த சக்திகள் கிடைக்கும்

1.தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும்
2.உங்கள் தியானத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இலட்சக் கணக்கான ஞானிகளை நாம் உருவாக்குவோம்

இலட்சக் கணக்கான ஞானிகளை நாம் உருவாக்குவோம்

 

வீட்டிலே கர்ப்பம் என்று தெரிந்தாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் “விரதம்” போன்று இருக்க வேண்டும். சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ வராதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

1.கருவில் வளரும் குழந்தை அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற வேண்டும்
2.அவன் துருவனான அந்தப் பேரருளைப் பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரமான பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
4.உலக இருளை அகற்றிடும் அருள் ஞானியாக வளர வேண்டும்
5.அவன் பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
6.அவன் சொல்லும் செயலும் மற்றவரைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும்
7.அந்த அருள் ஒளி பெறும் அருள் ஞானி உருவாக வேண்டும் என்று பத்து மாதமும் மற்றதெல்லாம் விட்டு விட்டு இதை எண்ணிப் பழகுங்கள்.

காலையில் ஐந்தரையிலிருந்து ஆறரைக்குள் இந்த மாதிரி எண்ணுங்கள் எல்லோரும் ஒரு விரதமாக இருந்து நாம் கோபிக்கக் கூடாது வெறுப்படையக் கூடாது சலிப்படையக் கூடாது சங்கடப்படக் கூடாது என்ற இந்த உணர்வை எடுத்து… மற்ற தீமையான உணர்வு வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

என் குழந்தை அருள் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணினால் பிறப்பிலிருந்தே அவனுடைய பார்வையால் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய சர்வ தோஷங்களும் போய்விடும்… உலகையும் காப்பான்.

1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைத் திருப்பிச் சமப்படுத்தினான்… அதனால்தான் நாமும் இன்று சுகமாக வாழ முடிகின்றது.
2.அதைப் போன்று இப்பொழுது நாம் பல லட்சம் அகஸ்தியர்களைத் தோன்ற வைக்க வேண்டும்.

அவனைப் போன்று ஞானக் குழந்தைகளை உருவாக்கினால் தான் விஞ்ஞான அறிவால் வரும் கடும் விஷத்தன்மைகளை மாற்றும் தன்மை வரும்.

தங்கத்தில் திரவகத்தை விட்டால் செம்பும் பித்தளையும் எப்படி ஆவியாகப் பிரிகின்றதோ இதைப் போல நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நஞ்சினைப் பிரிக்க வேண்டும்.

ஏனென்றால் அது நஞ்சினை வென்றது அந்த உணர்வுகளைக் குழந்தைகள் உடலிலே பெருகச் செய்து “ஆயிரக்கணக்கான குழந்தைகளை” நாம் இப்படி உருவாக்குதல் வேண்டும்.

அத்தகைய ஆற்றல்மிக்க உணர்வுகள் இந்தப் பூமியிலே படர்ந்தால் தான்
1.விஞ்ஞானத்தினால் வந்த விஷத்தன்மைகளையும்
2.மனிதனுக்குள் ஆசை நிமித்தம் உடலை விட்டுச் சென்று தீய விளைவுகளாகப் பேயாக ஆட்டிப்படைக்கும் நிலைகளையும்
3.சிந்தனையற்ற நிலையில் இயக்கும் தீய நிலைகளையும் மாற்றி அமைக்கும் சக்தி பெற முடியும்.

இதை நீங்கள் அலட்சியப்படுத்தாதபடி செய்து பாருங்கள்.

உங்கள் குடும்பத்தில் அறியாது வந்து சேரும்
1.சாப அலைகள் தீய அலைகள் பூர்வ ஜென்ம அலைகள்
2.கஷ்டம் நஷ்டம் நோய் துன்பம் துயரம் பரம்பரை நோய்கள் எல்லாம் அடியோடு அற்றுப் போய்விடும்.
3.உங்கள் குழந்தை குடும்பத்தைக் காக்க்க் கூடிய சக்தியாக அவன் வருவான்.

“எங்கெங்கோ அலைவதற்குப் பதில்” கர்ப்பிணிக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் அந்தக் கருவிலே விளையத் தொடங்கும்.

குழந்தை வளர வளர குடும்பத்தில் பல அதிசயங்களும் நடக்கும்… விவசாயம் செழிக்கும். உங்கள் குடும்பத்தில் செல்வச் செழிப்புடன் நீங்கள் வாழ முடியும் ஞானத்தை எல்லோருக்கும் போதிப்பவனாக அவன் வருவான் அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள்ஞானியாக அவன் வளர்ந்து வருவான்

குருநாதர் இட்ட கட்டளைப்படி இத்தகைய நிலைகளை நாம் இன்று செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

செயலாற்றலிலும் எண்ணத்திலும் சொல்லிலும் உயர்ந்தவனாக வரவேண்டுமப்பா…!

செயலாற்றலிலும் எண்ணத்திலும் சொல்லிலும் உயர்ந்தவனாக வரவேண்டுமப்பா…!

 

நல்லோரின் சக்தி நிலைக்கு… நல்ல எண்ணத்திற்கு… நல்ல மனம் உடையோருக்கு…
1.“அவர்கள் சுவாச நிலையிலேயே ஆண்டவனின் அருளைப் பெறுகிறார்கள்…”
2.அவர்கள் பார்க்கும் பார்வையில் அவர்கள் சொல்லிடும் சொல்லில் அவர்கள் எண்ணத்தில் எல்லாமே அஜ்ஜெப அருள் கலந்துள்ளதினால்
3.அவர்கள் நிலைக்கு எத்தீய சொல்லும் வந்து அண்டுவதில்லை.

அச்சக்தியின் அருள் பெற்றதினால்… பிறரின் நிலைக்கு எண்ண… ஒரு நற்காரியத்திற்கு இவர்கள் ஆசிர்வாதத்தின் மூலமாகத்தான் நடந்திடும் அப்பா.

ஆண்டவன் என்பது யார்…? என்றே இம் மனிதர்களுக்கு இன்னும் புரியவில்லை.
1.தான் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் இடமாகத்தான் ஆண்டவனை எண்ணுகிறார்கள்.
2.கஷ்ட நிலைக்கு ஆண்டவனை எண்ணுகிறார்கள்.

நம்முடைய குணங்களில் லட்சுமியைப் பார்த்தவுடன் செல்வத்துக்கு உடையவள் சரஸ்வதியைப் பற்றிச் சொல்லும் பொழுது கல்விக்கு உரியவள் பராசக்தியை எண்ணும் பொழுது வீரத்திற்கு உரியவள் என்ற நற்குணங்களை வைத்து இப்படிப் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டன.

ஆலயங்களுக்கு மக்கள் செல்வதெல்லாம் தன் மனச் சாந்திக்காக. தன் கஷ்டங்களை நீக்கிடவும்… தான் உயர்ந்து வாழ வேண்டும்… உயர்ந்த என்னும் பொழுது “செல்வத்தில் உயர்ந்தவனாக வாழ வேண்டும்” என்ற எண்ணம் தான் இன்றைய மக்களிடம் உள்ளது.

1.செயலாற்றலில் உயர்ந்தவனாக
2.எண்ணத்தால் உயர்ந்தவனாக
3.சொல்லில் உயர்ந்தவனாக
4.தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவனாக ஆலயத்திற்குச் செல்பவன் அரிதிலும் அரிதப்பா.

தன் குறைகளைத் தீர்ப்பதற்கு ஆண்டவன் அக்குறைகளை ஆண்டவன் தீர்த்தால் ஆண்டவனுக்குப் பல காணிக்கைகளை அளிக்கின்றார்கள். வேண்டுதல் என்ற பெயரில் “பல தேங்காய்களை உடைத்து” அங்குள்ள அர்ச்சகருக்கு இவர்களின் செல்வ நிலையைக் காட்டிட… ஆண்டவனை வணங்குகிறார்கள்

இன்றைய மக்களுக்கு நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட புரியாத நிலையில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.

ஆதியில் மனித ஆரம்ப காலத்திலிருந்தே… உதயத்திலிருந்து வந்த பல சித்தர்கள் சொன்ன பல உண்மை நிலைகளை எல்லாம் அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டு விட்டார்கள்.

பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகின் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிடப்பட்டதை… அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படி வெளியிட்டதை… காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் “தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்…”

ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து ஒன்றே தான். நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்பதைத் தான்.

அதை வைத்தே தான் பல பல வழிகளில் பல கதைகளைக்கட்டி உண்மை ரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்துக் கதையையே கடவுளாகக் காட்டி மக்களுக்குக் கடவுள் என்றாலே கதையில் வடித்த உருவம் தான் என்ற எண்ணம் வரும்படி செய்து விட்டார்கள்.

எல்லா மக்களுமே தான் உயர வேண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில்தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.

நல்வழியில் நடத்திச் சென்றிடத் தான் அன்றைய சித்தர்கள் அரும்பாடு பட்டுத் தவம் இருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இராமாவதாரத்தில் வந்த வால்மீகி முனிவரினால் எழுதப்பட்ட இராமாயணம் என்ற காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் அதில் உள்ள குணா அம்சங்களை
1.ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
2.அக்கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
3.இது தான் உண்மை இது எல்லாம் தவறு என்று சுட்டிக் காட்டும் நிலையத்தான் அன்றே சிலர் திருத்தி விட்டார்கள்.

அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது

இராமாயணத்தின் மகத்துவத்தை மட்டும் இன்றைய உலகில் உள்ள மக்கள் எல்லோரும் அதிலுள்ள உண்மை நிலையைப் புரிந்து கொண்டால்…
1.இன்று நாட்டில் நடந்திடும் குழப்ப நிலைகளும்
2.மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா.

எல்லோரும் எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்துக்கு உகந்தபடி சிதறடித்து விட்டார்கள் பல நல்ல நிலைகளை எல்லாம்.

ஆனால் எல்லோரும் சொல்வது இப்பொழுது உலகெங்குமே ஒரே நிலையில் கூடி வருகின்றது. இந்நிலையே கூடி வந்து
1.ஒருவனே தேவன் ஒன்றே குலம் அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான் நாம் எல்லோருமே…
2.எந்த மதத்திற்கு யாரும் அடிமை இல்லை…! என்ற சொல்லெல்லாம் இப்பொழுது எந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.
3.ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் இந்நிலை எல்லாம் உகந்ததாக உள்ளது இப்பொழுது…!

கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?

கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?

 

1.தெய்வீகப் பண்புகளை வளர்க்கக் கூடியது தான் நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே…!
2.அந்த எண்ணத்துடன் நாம் அங்கே செல்கிறோமா…? என்றால் இல்லை.

ஆனால் கல்லைக் கும்பிடுகின்றார்கள் பிசாசைக் கும்பிடுகின்றார்கள் என்று ஒருவன் சொல்கின்றான்.

தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னால் உடனே அங்கே சென்று விடுகின்றார்கள். ஆவியை ஏவி விட்டு அதன் வழி செயல்படுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

குழந்தைகள் அங்கே படிப்புக்காகச் சென்றாலும் கூட “நீ பொட்டு வைக்காதே… கோலம் போடாதே…” என்று சொல்கின்றார்கள்.

1.அனைவருடைய மனதையும் ஒன்று சேர்த்து என் குடும்பம் ஒன்றாக வாழ வேண்டும் என்று காலையில் பெண்கள் நெற்றியில் திலகத்தை வைத்து
2.ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் வர வேண்டும் என்று புள்ளிகளை இட்டு அதை இணைத்து
3.குடும்பத்தில் அனைவரையும் இணைத்திடும் நிலையாகத் தான் கோலமிடச் சொன்னார்கள் நம்முடைய ஞானிகள்.

நீ கோலமிடாதே என்று அவ்வாறு சொல்பவர்கள் பின்னாடி செல்லக்கூடிய கூட்டங்களும் இருக்கின்றது. நம் சாஸ்திரங்களைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மனிதன் எப்படிப் பண்பட வேண்டும் என்று ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை மதம் என்ற நிலையில் பிரிக்கின்றார்கள். உயிர் கடவுள் என்று சொன்ன நிலைகளையும் மாற்றி அமைக்கின்றார்கள்.

இன்னொன்று என்ன செய்கிறார்கள் தெரியுமா…!

இந்தப் பள்ளியில் பிள்ளைகள் நன்றாக படிக்கிறது என்று தான் சேர்த்து விடுகின்றார்கள். அங்கே பிக்னிக் போக என்று பஸ்ஸில் அழைத்துச் செல்கின்றார்கள். போய்க் கொண்டிருக்கும் பஸ் திடீரென்று ரிப்பேர் ஆகி நின்று விடுகின்றது.

டிரைவரை “சும்மா” அது இது என்று பார்க்கச் சொல்லி விடுகின்றார்கள்… ஒன்றும் வேலை செய்யவில்லை.

உடனே… எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் “அவரவர் இஷ்ட தெய்வங்களை எண்ணி வணங்கிக் கும்பிடுங்கள்” என்று சொல்கின்றார்கள். பஸ் சரியாகி ஓட வேண்டும் என்று எண்ணுங்கள்…! என்று சொல்கின்றார்கள்

அடுத்து பஸ்ஸை ஓட்டிப் பார்க்கின்றார்கள்… பஸ் ஓடவில்லை.!

இப்பொழுது இயேசு கிறிஸ்துவை எண்ணிப் பார்க்கலாம் ஏல்லோரும் அவரைத் தியானியுங்கள் என்று சொல்கின்றார்கள். அதற்குப்பின் பஸ்ஸை ஓட்டிப் பார்த்தால் பஸ் ஓடுகின்றது.
1.ஆஹா…! கர்த்தர் வந்து இந்த பஸ்ஸை இயக்குகின்றார் ஓடாத பஸ்ஸை ஓடச் செய்கின்றார் என்று இ
2.வ்வாறெல்லாம் மனிதனுடைய எண்ணங்களைத் திசை திருப்பிக் கலாச்சாரங்களையே மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
3.இது போன்ற சம்பவங்களும் இந்த உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது… இது போன்ற நிலையிலிருந்து நாம் எப்பொழுது தப்புவது…?

நம்முடைய ஆலய பண்புகள் எவ்வளவு தெளிவானது…?

1.யாருக்குமே அங்கே வேற்றுமை இல்லை
2.ஆலயம் வருவோர் அனைவரும் தெய்வீக நிலை பெற வேண்டும்
3.மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு வாழச் செய்ய வேண்டும் என்பதற்கே ஆலயம்.

ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதித்துத் தான் நடக்கின்றோம். ஏனென்றால் தன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அங்கே சொல்வது… பணம் கிடைக்கவில்லை என்றால் அந்த தெய்வத்தையே பழிப்பது. இந்த நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

கோவிலைக் கோவிலாக நாம் மதிக்கின்றோமா…?

நம் உடலே ஒரு கோவில்… அருள் ஞானிகள் உணர்வை இங்கே வளர்க்க வேண்டும். தெய்வ குணத்தை வளர்க்க வேண்டும்.

இதைக் கேட்டறிந்தவர்கள் ஒவ்வொருவரும் இனியாவது
1.அங்கே சென்று அருளைப் பெருக்குவதற்கு
2.தெய்வீகப் பண்புகளைத் தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு
3.மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டு வாழச் செய்வதற்கு அந்த ஆலயத்தில் வேண்டுங்கள்.

நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் ஆலயத்தைக் கட்டினார்கள்.

1.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
2.எங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் ஈஸ்வரா
3.அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா
4.நாங்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் ஈஸ்வரா
5.அந்த அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நாம் வணங்கினால்
6.மற்றவர்களும் அவ்வாறு அங்கே கும்பிடுகின்றார்கள்.

இங்கே தனித்து இருக்கும் போது அதை எடுக்க முடியவில்லை…! ஆனால்
1.கூட்டாக ஆலயத்திற்குச் சென்று அந்த்த் தெய்வ குணத்தை எண்ணி எடுக்கும்படி செய்கின்றார்கள்
2.இதை நாம் யாராவது செய்கின்றோமா…?

மனிதனுடைய ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலையாக ஒளியாகத் தெளிந்து… தெரிந்து… தெளிவான வாழ்க்கை வாழ்வதற்கு… ஆலயத்தை அமைத்தார்கள் ஞானிகள்.

அதை நாம் புரிந்து நடக்க வேண்டும்.