குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்

குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்

 

ஆலயத்திற்குச் சென்று விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வினையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலயம் வருபவர் எல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும். என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
1.நாட்டை ஆட்சி புரிபவர்கள் அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் இந்த உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாட்டை வழி நடத்த வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நாட்டை உருவாக்க இது பயன்படும்… மதங்கள் அல்லாதபடி உருவாக்க இது பயன்படும்.

இந்த அரசாங்கத்தில் நிர்வாகம் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும் ஒருங்கிணைந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள். அப்போது இங்கே பகைமைகள் வராது. இதைப் போன்று செய்தால்
1.எனக்குச் செய்யவில்லை
2.உனக்குச் செய்யவில்லை என்ற அந்த உணர்வுகள் வராது.
3.அனைவருக்கும் தொழில் வாய்ப்பு உருவாகும் செவ்வனச் செய்யும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஆலயங்களிலே வணங்குங்கள்..

அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.நாட்டில் அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.அரசாங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.இந்த நாட்டைக் காத்திடும் சக்தியாக அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்த ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்கள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அரசாட்சி செய்வதை நமது அரசு என்று எண்ணி அங்கே நிர்வாகம் செய்பவர்கள் அனைவரும் தெய்வ குணம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் சக்தியாக அந்த மன பலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும். பேதங்கள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆலயங்களில் எண்ணுங்கள். நம் அனைவரையும் ஒருங்கிணைக்க இது உதவும்.

சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… என்னைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்தச் சந்தனத்தின் நறுமணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.நாட்டைக் காத்திடும் அனைவருக்கும் (அரசியல்வாதி… அதிகாரிகள்… படை வீர்ர்கள்) இந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும்
2.அங்கே அது வளர வேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள்.
3.ஏனென்றால் நாம் அங்கே சென்றாலும் இந்த நிலைதான்… யார் சென்றாலும் இந்த நிலை தான்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கும் பொழுது எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் வருகின்றது. இதையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. அப்பொழுது குடும்ப ஒற்றுமை வர வேண்டும் என்று நாம் எண்ணுவது போல
1.நமது நாட்டைக் காத்திடும் நிர்வாகிகள் அனைவருக்கும் அந்த ஒருங்கிணைக்கும் சக்தி பெற வேண்டும் என்று
2.நாம் அனைவரும் எண்ணும் பொழுது அந்த ஆலய நிர்வாகிகளும் அந்த ஆலயத்திற்கு வருகின்றார்கள்
3.அவர்களும் இதே போன்று எண்ணும் பொழுது மனிதன் என்ற தன்னிலை அடையும் சக்தி வருகின்றது

அதற்குத்தான் தத்துவ ஞானிகள் ஆலயத்தை வைத்தார்கள்…!

பாலைப் போன்ற தூய்மையான மனம் நாங்கள் பெற வேண்டும் என்னைப் பார்ப்போர் எல்லாம் அந்தப் பாலைப் போன்ற தூய்மையான மனம் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவார் எல்லாம் இந்த நிலை பெற வேண்டும்.
1.அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்.
2.அவர்கள் மன பலம் பெற வேண்டும் மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நம்முடைய எண்ணம் அவர்களுக்கு வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வாழவும் இது உதவும்.

ஆகவே மகரிஷியில் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்று இந்த உடலுக்குள் நல்லவைகளும் கெட்டவைகளும் குணங்கள் கலந்து தான் இருக்கின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை நாம் வளர்த்துக் கொள்ள இது உதவும்.

இதே உணர்வின் நிலைகள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒருங்கிணைந்த நிலைகள் நாம் எண்ணும் பொழுது
1.நமது அரசே உலகிற்கு எடுத்துக்காட்டும் அரசாக வளர்ந்து வரும்
2.அதன் கீழ் வாழ்ந்து வரும் மக்களாகிய நாமும் உயர்ந்த நிலை பெற முடியும்.

ஏனென்றால் மன பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் உலகில் மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி… எந்த ஆலயத்திற்கு நாம் சென்றாலும் இந்த முறைப்படி ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்… ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அரசும் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி ஒருங்கிணைந்தால் கட்சி பேதமும் வராது இன பேதங்கள் வராது மத பேதங்கள் வராது.
1.நாம் அனைவரும் இந்த ஆட்சி சீராக வளர வேண்டும் என்று எண்ணி அப்படி நடந்தால் நமக்குத் தொல்லை இல்லை.
2.அதற்குப் பதிலாக என்னுடைய வழியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் அதற்கடுத்துத் தொல்லைகள் தான் வருகின்றது.

ஆகவே இத்தகைய எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஆலயங்களில் அரசை ஒத்தே நாம் பிரார்த்திக்க வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருங்கிணைந்து சேர்ந்து ஓட்டு போட்டு தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் நல்ல நிலையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால்
1.அவர்களுக்குள் நம்மை காக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.பின் நாம் எண்ணும் எண்ணங்கள் பகைமை இல்லாத உணர்வாக வளர்கின்றது.

இதை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்து அடுத்தடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நமது நாட்டு மக்கள் அனைவரும் மன பேதமின்றி இன பேதம் இன்றி ஒருங்கிணைந்து வாழ வேண்டும். ஆட்சி புரியும் நிர்வாகிகள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தலையாயக் கடமையாக எண்ணுதல் வேண்டும்.

நம் உடலுக்குள் நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் எப்படிக் கலந்திருக்கின்றதோ இதைப் போன்று
1.நமது நாட்டுக்குள் இருக்கும் எல்லாம் ஒருங்கிணைந்தால் தான்
2.நாடு நலம் பெறும்… மக்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும்.

இதைப் போன்ற தீமைகள் விளைவித்து மக்களை தவறான வழியில் செயல்படச் செய்யும் உணர்வுகளை மாற்ற ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம்… இந்த நாட்டில் பிறந்த மக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் அறியாது செய்யும் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும்… மக்கள் பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்… அந்த மகரிஷிகள் அருள் வட்டத்திலே மனிதனாகப் பிறந்த முழுமையின் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதமின்றி மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்” இந்த உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதங்களால் போர் எப்படி நடக்கின்றதோ அதைப் போல் கட்சி பேதத்தால் உண்மை நிலைகள் அறியாது பேத உணர்வுகளே வளர்க்கப்பட்டு சீராகச் செயல்படும் தன்மைகள் இந்த உலகெங்கிலும் இப்போது மறைந்து கொண்டே வருகின்றது.
1.அதை போன்ற நிலைகள் நம் நாட்டிலே விளையாது கட்சி என்ற பெயரை அகற்றிவிட்டு
2.நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சி நிலைகள் சீராக வரவேண்டும் என்று ஒருக்கிணைந்து எண்ணினால்
3.எல்லோரும் நல்லவரே…! எல்லோரும் நல்லாட்சியைப் பெற முடியும்.

ஆனால் அரசாங்கத்தைக் குறையாக எண்ணி அதை வளர்த்து விட்டால் அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறை கூறிக் கொண்டே தான் இருப்போம். குறைய நிவர்த்திக்கும் எண்ணம் நமக்குள் வராது. குறையைச் சொல்லிவிட்டு நாமும் குறையைத் தான் செய்து கொண்டிருப்போம்.

ஆகையினால் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்ன நிலைகளில்… நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து… நமது நாடு சீராக வளர்ந்திடும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் ஒருங்கிணைந்து நினைப்போம்.

பக்தி கொண்ட நிலையில் இருந்து மாந்திரீகம் தாந்திரீகம் என்று சில பேர் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

கடவுளின் பெயரால் மக்களின் மதியை மாற்றிக் கொண்டிருக்கும் அறியாத நிலையில் தீமையை விளைவிக்கும் சாதுக்கள் என்ற பெயர்களால்ம் பல தவறுகள் செய்து கொண்டிருக்கும்
1.அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவ்வாறு செயல்படும் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று
3.நாம் ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் எண்ண வேண்டும்.

மாயாஜாலத்தாலும் மாந்திரீகத்தாலும் மக்களை மதி மயங்கச் செய்யும் எவராக இருப்பினும் “அவருடைய தீய எண்ணங்கள் மறைந்து…” மக்களைக் காத்திடும் உணர்வுகளும்… ஞானிகள் காட்டிய வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நல்ல எண்ணங்களும் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய நிலைகளைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு…
1.நான் கடவுளைக் கண்டேன்… கடவுளின் அவதார புருஷன் என்று சொல்லிக் கொண்டு
2.அவர் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இதைத் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர்ந்தால்தான் இது எல்லாம் சாத்தியமாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடல் பாடிக் கொண்டிருக்கும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் உலகம் அனைத்திற்கும் மெய் ஞானத்தை உணர்த்திச் சென்றான்… ஞானத்தைப் போதித்தான்.

தென்னாட்டிலே வாழும் நாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் ஆற்றலை மதபேதமற்ற நிலையிலும் இனபேதமற்ற நிலையிலும் மொழி பேதமற்ற நிலைகளிலும் இந்த உலக மக்கள் வாழ வேண்டும் என்று
1.தமிழ்நாட்டில் பிறந்த நாம் ஒருங்கிணைந்த நிலை கொண்டு
2.கட்சி பேதமின்றி நாம் செயல்பட வேண்டும்.

ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பார்… ஒருவர் கடவுள் இல்லை என்பார்…! ஒருவருக்கொருவர் போர் செய்து பிழைகள் செய்து கொண்டு குறைகளை உருவாக்க முடிகின்றதே தவிர அதை நீக்கும் நிலை இல்லை.

அது போன்ற நிலைகளை மறந்து விட்டு ஆட்சி பீடங்கள் சீராக இயங்க வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்து இந்த உணர்வின் வலுவை நாம் கூட்டினோம் என்றால் “நமது ஆட்சி நலமாக இருக்கும்… உலகுக்கு எடுத்துக்காட்டாகவும் வரும்.

1.அவர்கள் உயர்ந்த ஆட்சி புரிய வேண்டும் என்று நாமும் ஒத்துழைக்க வேண்டும்
2.குறைகளை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் குறைகள் தான் வளர்ந்து கொண்டிருக்கும்… அதைத்தான் வளர்க்க முடியுமே தவிர நீக்க முடியாது.

நீங்களே அந்த ஆட்சி பீடத்தில் உட்கார்ந்து பார்த்தால் ஒரு நண்பன் எனக்கு இதைச் செய்து கொடு…! என்று கேட்பான் இன்னொருவன் அவனுக்குச் செய்கின்றான்… எனக்கு செய்ய மாட்டேன் என்கிறான் என்பான்.

ஒருவருக்குச் செய்யும் பொழுது மற்றவர் குறை சொல்லத்தான் வருவார்கள்.

இது போன்ற நிலைகள் இல்லாதபடி அரசியல் பேதம் இல்லாதபடி எத்தகைய பேதம் இல்லாதபடி நாம் அனைவரும் ஒன்று சேர்த்துச் செயல்பட வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னது போன்று இந்த உலக மக்களுக்கு எடுத்துக்காட்டாக வளரச் செய்யும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாம் அனைவரும் பெற்று இந்த ஒருங்கிணைந்த ஆட்சியாக பேதமற்ற நிலைகளில் சிருஷ்டித்து உலக அரங்கிலே அருள் ஞானத்தைப் பரவச் செய்வோம்.
1.உலகைக் காத்திடும் சக்தியாகக் கொண்டு வருவோம் என்று
2.இதைப் பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்வோம்.

யார் எந்தக் குறையைக் கூறினாலும் குறைகள் இல்லாத நிலையாக உருவாக வேண்டும்… குற்றமற்ற நிலையாக தமிழ்நாடு உருவாக வேண்டும்.

தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே ஓங்கி வளர வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள். எத்தகைய பேதமும் இல்லாத பேதமற்ற வாழ்க்கையாக நாம் வாழ்ந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வுகள் இங்கே வளர வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்வோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலகில் வாழும் மக்கள் அனைவரும் முழு முதல் கடவுள் என்று ஞானிகள் உணர்த்திய அருள் வழிப்படி உலகைச் சிருஷ்டிக்கும் மனித உடல் பெற்ற நாம் “பல நன்மைகளை நாம் அனைவருக்கும் உருவாக்குவோம்…”

உடலை விட்டுப் பிரிந்தால் என்றும் பிறவியில்லா நிலை அடைவோம் பகைமையை வளர்த்து புவியின் ஈர்ப்புக்குள் சிக்கிடும் நிலையாக இல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்று உறுதிப்படுத்துவோம்.

இதை நாம் அனைவரும் பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாக வருவோம்

எவர் எத்தொழில் செய்தாலும் அந்தக் குறைகளைப் பதிவு செய்யாது அவர் அறியாது குறை உணர்வுகள் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.

குருநாதர் பித்தரைப் போன்று இருந்துதான் இந்தப் பேருண்மைகளை எல்லாம் அறிந்து உணர்த்திச் சென்றார். சந்தர்ப்ப பேதங்களால் மக்கள் அனைவரும் மன வேதனைப்பட்டு கொடிய நோய்களுக்கும் கொடிய செயல்களுக்கும் ஆளான நிலையில் இருந்து விடுபட வேண்டும். ஆகையினால்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதித்து
2.ஈசன் கட்டிய உடலான ஆலயத்திற்குள் அருள் ஞான சக்திகளை நீ புகுத்தி விடு என்றார்.
3.அங்கே அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக அருள் உணர்வு கிடைக்க வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய் என்றார் குருநாதர்.

அதைத்தான் யாம் (ஞானகுரு) செய்கின்றோம்.

இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் இதை வளர்த்து நமது நாடு என்ற நிலைகளிலும் “உலகம் காக்கப்பட வேண்டும்” என்ற நிலைகளில்
1.அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் பேதமற்ற நிலைகளாக வாழ்வோம்
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ்வோம்.
3.மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வோம்
4.நாட்டுக்குள் ஒற்றுமையை வளர்ப்போம்
5.தீமையற்ற நாடாக நம் தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
6.இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலையாக எல்லா நாட்டிற்கும் நாம் அருள் சேவை செய்யும் அந்தப் பண்பினை ஊட்டுவோம்
7.நாம் அனைவரும் சகோதரர் என்ற நிலையைக் கூட்டுவோம்.

ஆகவே இந்த உலகம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற்றால் நாமும் நலம் பெறுவோம் உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்தத் தத்துவம் எந்தத் தென்னாட்டில் இருந்து உலகம் முழுவதும் பரவியதோ மீண்டும் இங்கிருந்து
1,மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை ஒன்று சேர்த்திடும் நிலையாக
2.மக்களைக் காத்திடும் நிலையாக குரு அருள் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்து
3.உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து
4.இந்த உலகைக் காப்பீர் உங்களைக் காப்பீர் உங்கள் ஊரைக் காப்பீர் உலக மக்களைக் காப்பீர்கள்.

நிறைந்த மனதுடன் நாம் வாழ்வோம் எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம் அவர்கள் நிறைவடைவதைக் கண்டு நாம மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கண்டு நாமும் பேரானந்த பேரு நிலை இந்த வாழ்க்கையிலே அடைவோம் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகள் இந்த உடலிலேயே வளர்ப்போம் என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

நாட்டு அரசுக்கு நல்ல உணர்வை நாம் எடுத்துக் காட்டினோம் என்றால் அதுவே நம் அரசாகின்றது நாமே அரசாகின்றோம் அரசே நாம் ஆகின்றோம்.

இந்த உயர்ந்த நிலையில் கொண்டு “நாம் எல்லோரும் வாழ வேண்டும்” என்ற நினைவைச் செலுத்தினால்
1.அந்த அரசும் நலமாக இருக்கும் அந்த அரசால் நாமும் நலமாகின்றோம்.
2.நாம் தான் அரசு அரசுதான் நாம் என்ற நிலையில் கட்சி பேதமின்றி இந்த நாட்டிற்குள் உயர்ந்த ஞானத்தை வளர்ப்போம்.

பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக்காட்டாக வரவேண்டும் உலக பேதமற்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்று தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வுகளை உலகிலே பரப்புவோம்.

அந்த மெய் ஞானியின் உணர்வுகளை ஒருங்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் நலம் பெற வேண்டும் என்று நமது உணர்வுகளை பரப்புவோம். சகோதர உணர்வுடன் நாம் வாழ்வோம்… பகைமையற்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டி இதை நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).

இன்றைய கலியுகத்தை “நாம் தான் கல்கியாக்க வேண்டும்…” ஆண்டவன் வந்து ஆக்குவதல்ல…!

இன்றைய கலியுகத்தை “நாம் தான் கல்கியாக்க வேண்டும்…” ஆண்டவன் வந்து ஆக்குவதல்ல…!

 

இயேசுபிரான் மக்களுக்கு உணர்த்திய மகத்துவமான உண்மைகளை எண்ணிப் பார்ப்பதற்கே இன்று யாரும் இல்லை.
1.அன்பே கடவுள்
2.அன்பே ஒற்றுமை
3.அன்பே எல்லாம் என்ற நிலையில்
4.எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று பேரானந்த நிலையை ஏற்படுத்தி
5.அன்று வாழ்ந்த எல்லா மக்களுக்குமே அன்பையே தெய்வமாக எண்ணி வணங்கிட நல் உபதேசங்களை உபதேசித்து
6.அன்று வாழ்ந்த மக்களின் மனதை எல்லாம் அன்புடனே நடத்திச் சென்றார் இயேசுபிரான்.

அந்நிலையை மாற்றியவர்கள் அவரின் உடலை அழித்துவிட்டு அவர்கள் தம் புகழுக்காக இயேசுபிரான் என்ற போர்வையைத் தான் எடுத்துப் போர்த்திக் கொண்டு பலர் பல நிலையில் அவ் ஏசுபிரான் பெயரிலேயே வாழுகின்றார்கள்.

அகிம்சா மூர்த்தியான இயேசுபிரானின் போதனை மொழியையே இம்சைப்படுத்தி விட்டார்கள். ஆண்டவனின் அருளையே தன் தன் நிலைக்கு ஏற்ப சாதகமாக்கிக் கொண்டு வாழ்பவர்கள் தான் இயேசுபிரான் காலத்திலிருந்து இன்று வரை உள்ளார்கள்.

இந்நிலை போல் தான் சில நாடுகளில் முகமது நபியின் நிலையும் அவர் எடுத்துச் சொன்ன உண்மை நிலையையும் மாற்றி அவரவர்கள் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டு விட்டனர்.

முகமது நபி வாழ்ந்த காலத்தில் அவர் அருளிய அருள் செல்வம் மக்கள் மனதில் பதியும் தருவாயில்… பலர் பல நிலை கொண்டு அவரின் மேல் பல துவேஷச் சொற்களையும் கற்களையும் வீசி… அவரையே துவேஷப்படுத்தி துவேஷித்து
1.அவர் நற்போதனைகளை உடலுடன் இருந்த பொழுது ஏற்று நடந்திடாமல்
2.இன்று அவர் நாமத்தை வைத்துப் பலர் ஓதுகின்றார்கள்.

பல உன்னத மனிதர்களின் பல மகான்களின் நிலைகள் எல்லாம் அவர்கள் போதித்த காலத்தில் மனிதர்கள் ஏற்று நடக்கவில்லை. அன்றும் இன்றும் மனிதர்களின் நிலை எல்லாம் ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதுவும்… நல் உபதேசத்தை ஏற்கும் மனநிலையையும் மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றனர்.

பல நாளேடுகளிலும் உணர்ச்சியைத் தூண்டும் வகைகளில் ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் கதைகளையும் இப்படிப் பல நிலைகள் கொண்டு மக்களின் மனதையே பெரும் உந்தலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கின்றார்கள்.

அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆளுபவர்களும் உள்ளார்கள்.

காலத்தினால் பல கோடி நன்மைகள் நமக்கு காத்திருப்பதையே மறந்து நாம் பயத்துடன் தான் வாழ்கின்றோம்.

இப்பூமியிலே தோன்றி வாழ்ந்து…
1.உடலுடனும் உயிருடனும் இன்றும் சூட்சம நிலை கொண்டு வாழ்ந்திடும்
2.பல மகரிஷிகளின் ஆசியுடன் நாம் வாழ்கின்றோம் என்ற பேருண்மையே
3.ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலையெல்லாம் மறந்து
4.ஒவ்வொரு மனிதரும் தாம் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழ்ந்திடுங்கள்.

இனி வாழும் காலங்கள் கல்கியுடன் வாழ்ந்திடலாம் கல்கி என்ற பேரானந்தக் காலத்தில் கலந்து வாழ்ந்திடலாம்.

செய்த பாவத்தை மறந்து விட்டு… நடந்தவைகளை நடந்தவையாக விட்டுவிட்டு… நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன் நம் உயிரான்மாவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து…
1.நமக்காக மட்டும் வாழாமல்
2.நம்முடன் தோன்றிய எல்லா உயிராத்மாக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.

அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள். எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலரும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள்.

கலியை ஆண்டவன் வந்து கல்கி ஆக்குவது இல்லை இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன் எல்லோருமே… ஆண்டவர்கள் என்பது யார் என்று புரிந்ததா…?
1.இக்கலியில் உள்ள உயிராத்மாக்கள் நாம் எல்லோருமே தான்
2.கலியைக் கல்கி ஆக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.

ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை மனிதர்கள் மனநிலையை வைத்துத்தான் காலநிலையும் மாறுகின்றது. ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்த மனிதரின் மனநிலையை வைத்துத்தான் மாறுபடுகிறது.

இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இம் மனநிலை மாறுவதற்காகத் தான்.
1.நம் மகரிஷிகள் நிலை கொண்டே நடத்திடும் பெரும் நாடகம்.
2.நாடகத்தின் தொடரினை இனி கண்டு வாழ்ந்திடலாம்
3.இந்நிலையில் இருந்து மக்களின் மனநிலையில் பெரும் மாறுதல் வந்திடுமப்பா.

அந்நிலை நடப்பதற்காகத்தான்… சூட்சும நிலையில் உள்ளவர்கள் “மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி” மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.

இன்றைய செயற்கையின் கோளத்தை அந்நிலையின் உண்மைகளை நாமும் பார்த்திடலாம்.

ஒவ்வொரு நேரத்திலும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறைகள்

ஒவ்வொரு நேரத்திலும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறைகள்

 

படுக்கைக்கு முன்பாக;-
1.இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருளாற்றலை வலுவேற்றிச் செருகேற்றிக் கொள்ளுங்கள்.

அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் மன பலம் பெறவும் உடல் நலம் பெறவும் தொழில் வளம் பெருகவும் இதன் வழி உங்களை அறியாது சேர்ந்த தீமைகளீலிருந்து விடுபடவும் மன மகிழ்ச்சி பெறவும் இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.இரவு படுக்கைக்குச் செல்லும் போதெல்லாம் கண்களை மூடி நூறு முறை இவ்வாறு சொல்லுங்கள்.
2.வெறுமனே வாயால் புற நிலையில் சொல்லக் கூடாது
3.அகநிலைகளுக்கு உங்கள் உடலுக்குள் நினைவினைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடல் முழுவதும் நினைவினைச் செலுத்துங்கள். உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப வரிசைப்படுத்தி
2.உங்கள் நினைவினை “அலை அலையாக” உடலுக்குள் செலுத்துங்கள்.

குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ;-
உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வீடு முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது உணர்வுகளிலும் கலந்து எங்களை அறியாத சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மன பலத்துடன் மன வளத்துடன் தொழில் வளத்துடன் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று 10 முறை இவ்வாறு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதைப் ;போல் ஒரு பத்து முறை “குடும்பத்திற்குள் ஒற்றுமை வளர வேண்டும்” என்று எண்ணி ஏங்குங்கள்.

பகைமைகள் அகல:-
சகோதர சகோதரிக்குள் கலக்கம் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சகோதர சகோதரிகள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் மன பலம் மன வளம் பெற வேண்டும்.

குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழும் அந்த மன பலம் பெற வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த கலக்கங்கள் நீங்கி குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்ந்திடும் அச்சக்தி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.
1.உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பகைமை இருப்பினும்
2.அதை நீங்கள் உங்கள் நினைவில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

சகோதர சகோதரிகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு என்னைப் பார்க்கும் போதெல்லாம் அன்பும் பரிவும் பாசமும் அவர்களுக்குள் ஏற்பட வேண்டும் எங்கள் பார்வையில் அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் பாசப்பிணைப்புடன் நாங்கள் ஒன்றி வாழ்ந்திட வேண்டும் என்று இந்த நிலையை நீங்கள் நினைவில் கொண்டு வாருங்கள்.

நம் குழந்தைகளுக்கு;-
குடும்பத்தில் குழந்தைகள் கல்வியில் குறைபாடோ அல்லது உடல் நலக் குறைவோ இருப்பினும் அதை நினைவில் கொள்ளாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குழந்தைகள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்
1.அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தியும் நல்ல ஞான சக்தியும் பெற வேண்டும்
2.கல்வியில் சிறந்தவர்களாக வளர வேண்டும்
3.உலகம் போற்றும் உத்தமர்களாக எங்கள் குழந்தைகள் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும்
4.உலகைக் காத்திடும் சக்தி எங்கள் குழந்தைகள் பெற வேண்டும்
5.உலகை அறிந்து வாழும் திறன் எங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்று இவ்வாறு நினைவினைச் செலுத்துங்கள்
6.நீ கல்வியிலே சிறந்த ஞானம் பெறுவாய் உயர்ந்த நிலை பெறுவாய் என்று நல்லதைச் சொல்லி நாம் செயல்படுத்த வேண்டும்.

பேரன்பு கொண்ட நிலைகளில் அந்த குழந்தைகளுக்கு இப்படித்தான் நாம் அருள் வழியைக் காட்ட வேண்டும்

தொழில் செய்யும் இடங்களில்;-
அடுத்து நீங்கள் தொழில் செய்யும் இடங்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
1.அங்கு ஏதாவது சிக்கலோ அல்லது மந்தமோ கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடைகளோ இருந்தால்
2.அந்தத் தடைகளைக் கருத்தில் வைக்காதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படர்ந்து எங்களிடம் தொழில் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அவர்கள் மன பலம் பெற்று அவர்கள் தொழில் சீராக வளர்ச்சி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒரு பத்து முறை தொழில் செய்யும் இடங்களை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து உங்கள் வாடிக்கையாளர்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பத்து முறை நினைவைச் செலுத்துங்கள்.

அவர்கள் குடும்பங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதைப் போன்று நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடைகள் இருந்தால்… எவரால் அந்தத் தடை வந்ததோ ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் தொழில் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் தொழில் சீராகி அவர்களுக்குச் செல்வம் வர வேண்டும்
3.எங்களுக்குக் கொடுக்க வேண்டிய வேண்டிய பணத்தைச் சீராகக் கொடுக்கும் திறன் அவர்களுக்கு வர வேண்டும் என்று
4.இந்த முறைப்படி எண்ணி நினைவினைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செய்யச் செய்ய அவர்களுக்கும் அந்த நிலைகள் உயர்வு ஏற்படும் உங்கள் பணமும் தடை இல்லாது வந்து சேரும். உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்.

ஆண்டவன் என்பவன் யார்…?

ஆண்டவன் என்பவன் யார்…?

 

1.நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத
2.இப்புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலும் கலந்துள்ள சக்தியை
3.யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் நிலைப்படுத்திச் சொல்லிடும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?
4.ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து “அவரவர்கள் வழிக்கு வணங்குகிறார்கள்…”

இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

இங்கு ஆண்டவனை வணங்கும் முறையே பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து… பொருள் உள்ளவர்கள் மட்டும்தான் ஆண்டவனின் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி…
1.ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை
2.சாஸ்திரங்களின் பெயரால் புரியாத நிலைப்படுத்தி வணங்குகிறார்கள்.

ஏசுபிரானை வணங்கும் நாட்டிலே இயேசு பிறந்தார். பிறக்கும் பொழுதே வானமண்டலத்தில் பல கோடி நட்சத்திரங்கள் தோன்றின. அவ் ஆண்டவனே தான் வந்து அவதரித்தார் என்ற நிலையில் ஆண்டவனே வந்து பிறந்ததாகப் போதிக்கின்றார்கள்.

உலகில் உள்ள எல்லா உயிரணுக்களும் ஆண்டவன் தான். அவ் ஆண்டவனின் சக்தியில் இருந்து பிறந்தவர்தான் அவ் இயேசு பிரானும். நம்மைப் போல் ஒருவராகத் தான் வந்து பிறந்து வளர்ந்தார்.

ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம்.
1.எல்லோருமே ஆண்டவன் தான்…!
2.எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

இயேசுபிரான் எப்படி ஆண்டவன் அருள் பெற்றார்…? என்ற உண்மையினை நாம் எண்ணிப் போற்றி வணங்கிடல் வேண்டும்.

சாதாரண ஆட்டிடையனாகத் தான் அவரும் வளரும் காலத்தில் வளர்ந்தார். குழந்தை நிலையிலேயே அவரது நிலை எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பைப் பூண்டு அகிம்சையைக் கொண்டு அன்புடனே பழகி வந்தார்.

அன்பையே தெய்வமாக எண்ணி வாழ்ந்தார். அந்த நிலையில் எப்படி அவர் அன்பு காட்டி வாழ்ந்தாரோ அந்த நிலை கொண்டு அச்சக்தியின் நிலையினால் அவரின் நிலையில் அவருக்கு முன் தோன்றிய “ஒரு மாபெரும் முனிவர்” அவரின் நிலையில் தோன்றி… அவரின் நிலையில் தோன்றி என்பது ரிஷிகள் முனிவர்களின் நிலையைத்தான் முதலிலேயே பாடத்தில் சொல்லி உள்ளேன்.

அந்நிலை கொண்டு இவர் சிறு வயது முதற்கொண்டே அன்பு கொண்டு வாழ்ந்த நிலையில்…
1.அம் முனிவரின் சக்தி இவர் உடலில் செயல்பட வந்து இவர் உடலில் சேர்ந்து இவர் உடலிலேயே இருந்து கொண்டு
2.இவ்வுலக மக்களுக்கு இயேசுவின் வாயிலாக பல உன்னதக் கருத்துக்களை மக்களுக்குப் போதித்தும்
3.பல வைத்திய முறைகளை அளித்தும் மக்களுக்கு பல நன்மைகளை எல்லாம் செய்தும் காட்டினார்.

இயேசு பிரானின் ஒரே எண்ணம் அவ்அன்பே தெய்வம் என்ற எண்ணம் தான். மக்களுக்கு நல்வழி புகட்டி… செய்த பாவங்களை மறந்து நல்ல நிலைக்கு வருவதற்காகப் பாவங்களை மறந்து விட்டு “இனி வாழும் நாட்களில் நன்மையுடன் வாழ வேண்டும்” என்பதற்காகப் பல நல்ல உபதேசங்களை எடுத்துரைத்தார்.

இப்படி அவர் நல்வழி நடத்திச் செல்லும் பொழுது மக்களின் நிலை எல்லாம் அவர் நிலையை உணர்ந்து அவரையே ஆண்டவனாக வணங்கி அவர் நிலைக்கு வரும் நிலை வந்தது.

அப்பொழுது அன்று அங்கு ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களின் நிலையில் தன் நிலைக்குப் பணியாமல் “ஆண்டவன் ரூபத்தில் மக்கள் அங்கு செல்வதைப் பார்த்து” அவ் இயேசு பிரானுக்குப் பல இன்னல்களையும் பல கஷ்டங்களையும் தந்து… பல கொடுமைகளை எல்லாம்படுத்தி அவரை அழிக்கின்றேன் என்று அவர் உடலை அழித்தார்கள்.

இவர்கள் மூன்று நாட்கள் கல்லறையில் உடலை வைத்துப் பார்த்ததின் நிலை என்ன…?

இயேசுபிரான் தான் அம் மாபெரும் முனிவரின் அருளைப் பெற்று அழியாச் செல்வமுடன் அனைத்து உலகத்திலும் என்றும் வாழும் சூட்சும நிலையில் வாழும் பாக்கியம் பெற்றவர் ஆயிற்றே.

அவர் உடலை இவர்கள் அழித்தால் மூன்று நாட்கள் என்ன 3000 ஆண்டுகள் என்ன…? இம்மூவுலகத்திலுமே கலந்துள்ள உத்தம நிலை பெற்றவரை அவர் உடலை அழித்தால் அவரையே அழித்த நிலையாக எண்ணி… அன்று ஆண்ட ஆட்சியாளர்கள் பல நிலைகளைச் செய்தார்கள்.

அவர் உடலை அழித்த பிறகு தன் நிலைக்குச் சாதகமாக அவரின் நிலையை வைத்தே பிறகு பல ஆண்டுகள் ஆண்டார்கள்.

செய்த பாவங்களுக்கெல்லாம் அவர்கள் சாமியார்கள் என்ற நிலையில் வைத்திருப்பவர்களிடம் பொருள் தந்து… நம் பாவங்களை எல்லாம் அவர்களிடம் சொல்லிவிட்டால் அவர்கள் ஆண்டவனிடம் நமக்குப் பாவ விமோசனம் வாங்கி பாவத்தை நாம் கழித்திட நமக்கு நல்லாசி வாங்கித் தருகிறார்களாம்.

தினசரி நாம் செய்யும் பாவங்களைக் கழித்திட நமக்கு ஒரு தூதுவனாம். எப்படி இருக்கிறது ஆண்டவனின் நிலை…?
1.”ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவன் உள்ளான்” என்ற உண்மை நிலையைப் போதிக்கவோ
2.அவ் இயேசுபிரானின் உண்மை அறிந்து செயல்படவோ இன்றைய மனிதர்களுக்குக் காலமும் நேரமும் இல்லை.

செயற்கையுடன் கலந்துவிட்ட செயற்கையான மனிதர்கள் இயற்கையின் சக்தியை எண்ணுவதற்கே நேரமில்லை. இவர்கள் எண்ணி வாழ்வதற்குள் இவர்களுக்குக் காலமும் இல்லை. காலத்தையே விரயம் பண்ணாமல் செயற்கையுடன் செயல்படுகின்றார்களாம்.

இவ் இயற்கையின் சக்தியை ஒவ்வொருவரும் புரிந்து அன்றைய உலகில் எப்படிப் பல சித்தர்கள் ஞானிகள் ஆண்டவன் நிலை பெற்றுச் சூட்சும உலகத்தில் செயல்படுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவருமே ஆண்டவனின் நிலை கொண்டு வாழலாம் என்ற நிலையில் வாழ்ந்திட வேண்டுமப்பா.
1.எல்லாமே ஆண்டவனின் சக்தி தான்
2.அந்த ஆண்டவனின் சக்தியைத்தான் நாம் இன்று சிதறவிட்டு வாழுகின்றோம்.

எத்தகைய சூழ்நிலையிலும் நாம் வேதனையை வளர்த்து விடக் கூடாது

எத்தகைய சூழ்நிலையிலும் நாம் வேதனையை வளர்த்து விடக் கூடாது

 

இன்று பெரும்பகுதியானவர்கள் குடும்பத்திலே சிறு சிறு சிக்கல்கள் ஏற்பட்டு அதனால் இனம் புரியாத வேதனைகள் பட்டு அடிக்கடி வேதனைகளையே படுவார்கள் என்றால் “என்ன நடக்கிறது…?”

கர்ப்பமான பெண் அந்த வீட்டிலே இருந்தால் அதனின் கருவிலே விளையும் அந்த சிசுவிற்குள் மேலே சொன்ன வேதனை என்ற நஞ்சுகள் விளைந்து விடுகிறது.

பாவிகள்…! ஏனக்கு இப்படி எல்லாம் தொல்லைகள் செய்தார்களே என்று மற்றவர்களை அந்தத் தாய் எண்ணினால் தாய்க்குக் கை கால் குடைச்சல் எரிச்சல் வாத நோய் இரத்த கொதிப்பு எல்லாம் வருகிறது.

1.ஆனால் கருவிலே விளையக்கூடிய குழந்தைக்கு வேதனை விளைந்து
2.அது பிறந்த பின் எடுத்துக் கொண்டால் அதனுடைய பருவம் வரப்படும் போது
3.ஒரு விஷ வித்து எவ்வாறு வளர்ந்து முழுமை அடைகின்றதோ இதைப்போல
4.அந்தச் சிறு குழந்தைக்குக் கூட “இரத்தக் கேன்சர்” என்று வருகின்றது.

தன் வாழ்க்கைச் சூழ்நிலையில் அந்த வேதனையான நிலைகளை எடுத்து வேதனையையே பார்த்து அது தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானாலும் தாயின் கருவிலே விளையும் குழந்தைக்கோ இரத்தக் கேன்சராக மாறுகின்றது சில காலங்களில் அணுக்களின் செல்களில் இந்த உணர்வின் தன்மை அதிகமானால் கேன்சர் ஆகிவிடுகிறது.

இன்று பெரும்பகுதியான நிலைகள் எடுத்துக் கொண்டால் கேன்சர் நோய் அதிகமாக வருகின்றது
1.எங்கே திரும்பினாலும் எத்திசையில் திரும்பினாலும் நாம் காணும் பக்கம் எல்லாம் வேதனை வேதனை என்றே நேருகின்றது.
2.ஆனால் மனிதன் கரு இல்லாத பொழுது அது உடலில் நோயாக மாறுகின்றது.

வேதனைகளை அதிகமாக எடுக்கப்படும் பொழுது… அந்த விஷத்தின் தன்மை…
1.இயல்பாக இருக்கும் நரம்புகளில் இயக்கப்படுமே என்றால் விஷத்தன்மைகள் பாய்ந்து
2.நரம்புகளில் இருக்கும் ஆசிட் என்ற பவரை உறிஞ்சி விடும் நிலை வருகின்றது.

இன்று நாம் மனிதனாக இருக்கப்படும் பொழுது உடலிலே திடீரென்று “இரத்தத்தைக் காணோம்” என்று சொல்வார்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கும் ;பொழுது…!

காரணம்…
1.சில எதிர்மறையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்திலே எடுத்துக் கொண்டால்
2.பாலிலே உப்பு பட்டால் எவ்வாறு பிருத்து விடுகின்றதோ இதைப் போன்று
3.இரத்தத்திற்குள் சில உணர்வின் தன்மை மாறுபட்டால் கெட்டியாக இருக்கும் இரத்தம் நீராக மாறிவிடும்… சிறுநீராகப் பிரிந்துவிடும்.

மனித வாழ்க்கையில் தன்னை அறியாது எத்தனையோ நிலைகள் மாறி “சாகாக்கலையாக” இப்படி எல்லாம் வந்து கொண்டிருக்கின்றது

ஆனால் வேகாநிலை பெற்றவன் அகஸ்தியன். தாயின் கருவிலே ஆற்றல்மிக்க சக்திகளைப் பூர்வ புண்ணியமாகப் பெற்று அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையால்
1.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை வென்றிடும் அந்த நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்று
2.எதனையுமே ஒளியாக மாற்றிக் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வருகின்றான்… அவனுருடைய சந்தர்ப்பம்.

அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் மேலே சொன்ன கொடுமையான நோய்களிலிருந்து தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

பிறருடைய வேதனையான எண்ணங்களைப் பதிவு செய்து கொண்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் கவரப்பட்டு எப்படி உடலில் நோயாக மாறுகின்றதோ இதைப் போல
1.தீமைகள் அகற்றி விண்ணுலகம் சென்ற அகஸ்தியனின் உணர்வை
2.நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆகவே… அகஸ்தியனுடைய பேராற்றலை நமக்குள் வளர்த்துக் கொள்வோம். நோய் நெகெகும் சக்தி பெற்று உடல் நலத்துடன் வாழ்வோம் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் வழி

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் வழி

 

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது… ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி
1.”நம் எண்ணத்தை”
2.அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.

இன்பமும் துன்பமும் கலந்தே வரும்…! வந்ததை எண்ணியோ… வருவதை எண்ணிக் கொண்டோ இருந்து என்ன பயன்…?

இன்பமும் துன்பமும் கலந்தே வரும்…! வந்ததை எண்ணியோ… வருவதை எண்ணிக் கொண்டோ இருந்து என்ன பயன்…?

 

ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லா சக்திகளையும் அளித்துள்ளான் சக்தி தேவன்
1.அந்நிலையை எப்படி ஈர்த்து வாழ்வது…? என்ற நிலையை
2.நாம் தான் வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

நம் ஞானக் கண்ணினால் நாம் இருந்த நிலை கொண்டே உலக அனைத்திலும் உள்ள நிலைகளை அறிந்து செயல்பட முடியும். நம் ஞானக்கண்ணினால் “நாம் நம்மை மறந்து தியான நிலையில் அமர்ந்து காண்பது அல்ல அந்த ஞானக்கண்ணின் நிலை…”

நாம் சகல நிலை கொண்டும் வாழ்க்கை முறையில் வாழும் பொழுது கோப நிலையில் சாந்த நிலையில் துவேஷ நிலையில் பிறரைப் போற்றும் நிலையில் சோர்வு நிலையில் மகிழ்வு நிலையில் இப்படிப் பல நிலை கொண்ட வாழ்க்கை நிலையில் ஒவ்வொரு நிலைகொண்டும் நாம் இருக்கும் பொழுது நம் சுவாச நிலை நம் உயிரணுவிற்கு எந்த நிலையை ஏற்றுத் தருகின்றதோ அந்நிலையில் இருந்து தான் நம் அகம் புறம் ஞானம் செயல்படுகிறது.

1.நடைமுறையில் சஞ்சலங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையுடனே கலந்து தான் வரும்.
2.வந்ததை எண்ணியோ வருவதை எண்ணிக்கொண்டோ இருந்து என்ன பயன்…?

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு அச்சக்தியில் இருந்து கிடைத்த அந்த ஞானக் கண்ணின் நிலையைப் பெற்று ஆத்மாவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் ஆத்மாவை நம் உடலும் நம் எண்ணமும் காத்துக் கொண்டிருக்கவில்லை.
1.நாம் எடுக்கும் சுவாச நிலையினால் தான் சகலமும் நடக்கிறது.
2.சுவாசம் என்பதனை ஒரு பெரும் பொக்கிஷமாக யாரும் எண்ணுவதில்லை.

நம் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுமே அச்சுவாச நிலையை ஈர்த்து வெளியிடும் தன்மை உள்ளது. இந்நிலையின் உண்மை எல்லாம் அன்றைய சித்தர்கள் தன் ஞான நிலையால் அறிந்து வெளியிட்டார்கள்.

தாவரங்கள் எல்லாவற்றுக்குமே “உயிர் நிலையும்… சுவாச நிலையும் உண்டு…” எல்லாமே அதனதன் தன்மையுடன் தான் இயங்கி ஜீவிக்கின்றன.

பல வகை தாவரங்கள் இவ் ஆறறிவு என்னும் மனிதனால் அழிக்கப்பட்டு விட்டன. அத்தாவரங்களின் மகத்துவத்தை எல்லாம் பல சித்தர்கள் கண்டுணர்ந்து அவற்றை வைத்திய முறைக்கும் வாழ்க்கை முறைக்கும் பயன்படும் நிலையில் எடுத்துரைத்துச் சென்றுள்ளார்கள்.

தாவரங்களிலே உள்ள நிலை கொண்டு தான் “உயிர் காக்கும் மருந்துகளாகப் பயன்படும் எல்லாமே நமக்குக் கிடைத்தன…”

பல கொடிய விஷம் வாய்ந்த தாவரங்களும் உள்ளன. சில வகைப் பச்சிலைகள் கொண்டு நம் சுவாச நிலைக்கு ஈர்க்கும் பொழுது நம்மையே மறக்கச் செய்யும் மயக்க நிலைக்குச் செல்லலாம். இன்னும் சில தாவரங்கள் நாம் காணும் பொழுதே நம்மை ஈர்த்து அந்த நிலைக்கு நம்மைச் சுற்றிக் கொண்டு மனிதன் உடலையே எலும்புக் கூடாக்கி வெளியிடும் தன்மையில் உள்ளன.

இன்னும் சில தாவரங்களின் நிலையைக் கொண்டு அதை அரைத்து நம் உடலில் பூசிக் கொண்டால் இவ் உடல் எந்த நிலையிலும் வயது வித்தியாசம் தெரியாமல்… எந்த வயதில் நாம் பூசிக் கொள்கின்றோமோ அந்த வயதில் இருந்த நிலை போல் என்றும் இருக்க வல்லமை தன்மையுடையது.

இந்நிலை கொண்ட பல வித மூலிகைகளும் நம் உலகிலேயே கலந்து செழித்து வளர்கின்றன. அம் மூலிகையின் உன்னதத் தத்துவத்தை முற்றும் அறிந்தவர் இதுவரை யாரும் இல்லை. அறிந்த நிலையையும் முற்றும் வெளியிட்டவரும் யாரும் இல்லை.

நாமே இந்த பாடத்தில் பல மூலிகைகளின் தன்மையைத் தான் எடுத்துரைத்தோம். அந்த மூலிகையின் பெயரைச் சொல்லவில்லை.
1.முற்றும் சொல்லிவிட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டி வரும்.
2.நாம் தனித்த நிலையில் எதையும் வெளியிடவும் முடியாது.

இந்த நிலை போலத் தான் இவ்வுலக நிலை முதற்கண்டு இவ்வுலகில் நடக்கும் எல்லா நிலைகளும் சந்திரனிலிருந்து சூரியன் முதற்கொண்டு மற்ற எல்லாக் கிரகங்களும் சூரியனுக்கு மேல் பல சூரியன்களும் எல்லா நிலைகளுமே…! தனித்த நிலையில் “நான்” என்ற நிலையில் ஒன்றுமே இயங்கவில்லை.

தீமையை அடக்கி ஆளும் சக்தியை நீங்கள் பெறுங்கள்

தீமையை அடக்கி ஆளும் சக்தியை நீங்கள் பெறுங்கள்

 

இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்துணர்ந்து அதனின் செயலை அறிந்து கொண்ட பின் மக்களுக்கு நீ ஓது என்றார் குருநாதர்
1.நாம் அல்ல…! நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி எல்லாம் இயக்குகின்றது…? பார்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக்கினார்
2.அதைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.

கண்ட அனுபவங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டே வருகின்றேன். எப்படியோ அருள் உண₹சிகளைத் தூண்டித் தூண்டித் தூண்டித் தூண்டி உங்களுக்குள் அந்தச் சக்தியைப் பெறச் செய்கின்றேன்.

கூர்மையாக உங்களைப் பார்க்க வைக்கின்றேன்.
1.நாளை ஏதாவது சந்தர்ப்பத்தால் ஏற்பட்டால் “உடனே ரிமோட் செய்து”
2.எப்படி இருக்கின்றது…? என்ன செய்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் திருந்தி வாழ்வதற்கு இது உதவி செய்ய வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.

உங்களை இயக்காதபடி “அந்தத் தீமையை அடக்கி ஆளும் சக்தி நீங்கள் பெற வேண்டும்” என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது

குரு அருளைப் பெற முயற்சிப்போம். இந்தச் சக்தி பெற்ற பின் அதன் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்… உடல் பெற்ற நஞ்சுகளைக் கரைப்போம்.

அவர்கள் ஒளியாக மாறினால்… அவர்களை மீண்டும் நாம் எண்ணும் பொழுது நம்முடைய பாதை சீராகச் செல்லும் அதனுடைய உணர்வைப் பெற்று நாம் தீமையிலிருந்து விடுபட முடியும்.

அவர்கள் முன்னாடி விண் சென்றால் நாம் அவர்கள் வழியில் பின்னாடி செல்வது எளிதாகும். அவர்கள் ஒளியான உணர்வை நாம் எடுத்து நாமும் ஒளிச் சரீரமாக முடியும். ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம்.

1.இதை எல்லாம் உருவாக்கிப் பேச வைத்தது… உணர்த்துவது யார்…? உயிரான ஈசன் தான்.
2.இந்நேரம் வரை கேட்டறிந்த உணர்வுகளைக் உடலாக உருவாக்குவது யார்…? உங்கள் உயிர் தான்.
நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி “உங்களை அந்த ஞானிகள் உணர்வு வழி நடத்த வேண்டும்” என்ற உணர்வை வைத்துத் தான் பேசினேன் (ஞானகுரு).

நுகர்ந்த உணர்வுகள் எந்த அளவுக்குப் பதிவாகின்றதோ வசிஷ்டர்…! யாம் உபதேசிப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

ஏதோ சொல்கின்றார் சாமியிடம் விபூதி வாங்கிச் சென்றால் போதும் என்றால் கவனம் அதிலே தான் இருக்கும். அந்த அறிவின் ஞானம் நமக்குள் வளராது.

ஆகவே உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து பிறவியில்லா நிலை அடைவோம். இன்னொரு பிறப்பு இல்லாத நிலை அடைய வேண்டும்.
1.எப்படியும் இந்த உடலை விட்டுச் செல்ல வேண்டி வரும்
2.அதற்கு முன் இருளை நீக்கும் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற முற்பட வேண்டும்.

மனிதனின் கடைசி நிலை… அது தான் இராமேஸ்வரத்தில் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தனுசுக்கோடி. தீமைகளை நீக்கி நம் மனதை ஒன்றாக்க வேண்டும் என்ற நிலையில் “இராமன் மனதைக் குவித்து தியானித்தான்” என்று அங்கே காட்டியிருப்பார்கள்.

இன்று நாம் வாழ்வது அனைத்துமே “கனவு தான்…!”

இன்று நாம் வாழ்வது அனைத்துமே “கனவு தான்…!”

 

நம் வாழ்க்கையையே நாம் பெரும் கனவாக்கித் தான் வாழ்கின்றோம். கனவும் நினைவும் கலந்த வாழ்க்கையில் வாழ்கின்றோம். நம்மின் நிழல் நம்மையே சுற்றிக் கொண்டுதான் உள்ளது. நம்மை நாம் நிழலில் தான் காண்கின்றோம்.

நம்மை நாம் நம்முடைய சுய ரூபத்தில் என்று காண்கின்றோம்…?

1.நாம் உறங்கும் நிலையில் காணும் கனவும்
2.நாம் இன்று இருக்கும் நிலை நாளை நினைத்துப் பார்க்கும் நிலையும்
3.நாளை நமக்கு நடக்கப் போகும் நிலையை இன்று காண்பதுவும்… பெரும் கனவுதான்.

நம்மில் ஒளிபடும் பொழுது நம் நிழலை நாம் காண்பதுவும் கனவு தான். நாம் வாழ்ந்த காலம் முடிந்து முடிந்தும் முடியாமலும் நம் உடலை விட்டு ஆத்மா பிரிந்த பிறகும் நடந்தது யாவுமே கனவுதான்.

நிலைத்து நிற்பது எதுவப்பா..?

எல்லாமே கனவாக உள்ள பொழுது நிலைத்து உள்ளது ஒன்றே ஒன்றுதான். அவ்வொன்றுக்காக அவ்வொன்று இருப்பதையே நாம் மறந்து விட்டுக் கனவில் தான் வாழ்கின்றோம்.

1.ஆத்மா என்ற பேரானந்த அந்த ஒரே சொத்தை நாம் மறந்து விட்டு
2.இந்தக் கனவுலகத்தில் இன்னும் நம்மை அறியாமல் நாம்… நம் காலத்தையும் நம் சக்தியையும் சிதறவிட்டு
3.நம் ஆத்மாவிற்கு அதிகத் துன்பத்தை மேன்மேலும் சுமக்கச் செய்து
4.நம் காலத்தையும் நமக்குச் சக்தி அளித்த சகல தேவனின் சக்தியையும் சிதறடித்துத் தான் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.

ஒவ்வொருவருக்குள்ளும் “குருசேத்திரப் போர்” நடந்து கொண்டே இருக்கின்றது

ஒவ்வொருவருக்குள்ளும் “குருசேத்திரப் போர்” நடந்து கொண்டே இருக்கின்றது

 

நாம் தொழில் செய்து கொண்டிருக்கின்றோம்… அந்த இடத்தில் ஒருவன் தவறு செய்கிறான். பார்த்த பின் என்ன ஆகிறது…? “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருசேத்திரப் போர்…!”

1.தப்பு செய்தவனைப் பார்த்த உடனே இந்த உணர்வை நுகருகின்றோம்.
2.கண்கள் பார்க்கின்றது… கருவிழி பதிவாக்குகின்றது.
3.அவன் செய்த தவறான உணர்வுகள் சத்தியபாமா உயிரிலே மோதச் செய்கின்றது.

அவன் மிகவும் மோசமானவன் என்று பார்த்தவுடனே குருச்சேத்திரப் போர் நடக்கின்றது உடலுக்குள் ஆனபின் அவனைக் கெட்டவனாகச் சொல்லித் திட்டும்படி செய்கின்றது… வெளியிலே போகச் சொல்கின்றது. குருசேத்திரப் போர் நடக்கின்றது.

1.வெளியில் போடா…! என்று சொல்லி வேதனைப்படுத்தும் போது அதை ரசிக்கின்றோம்.
2.அந்த ரசிக்கும் தன்மை வந்து விட்டால் நமக்குள் வேதனை வருகின்றது.

நாம் தவறு செய்தோமா…? இல்லையே…! ஆனால் சந்தர்ப்பத்தில் இப்படி வந்ததைத் துடைக்க என்ன வைத்திருக்கின்றோம்…?

அடுத்தாற்போல் அவனை திரும்பப் பார்த்த உடனே அவன் செய்த தவறு நமக்குள் பதிவானது மீண்டும் அந்தத் தவறை உணர்த்தி குருசேத்திரப் போர் ஆரம்பிக்கின்றது.
1.நாளை ஏதாவது செய்து விடுவானா…? என்ற இந்த உணர்வுகள் வருகிறது.
2.ஆகாதவனைக் கண்டாலே இப்படித் தான் இந்த உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது

வீட்டில் சிறிது கலக்கமாக இருந்தால் சந்தேக உணர்வு வந்து கொண்டே இருக்கும். ஆகவே குருசேத்திரப் போர் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

பையன் மீது நம்பிக்கையுடன் இருந்து சொத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றீர்கள். அவன் கொஞ்சம் தவறாக நடக்கின்றான் என்றால் அவனை எண்ணும் போதெல்லாம் குருச்சேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

அப்பொழுது அரக்கன் என்ற அந்த உணர்வு “சீதா” என்ற நல்லதைச் செய்ய விடாதபடி தடுத்துக் கொண்டே இருக்கின்றது வேதனை என்று வந்தபின் மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்கள் அடக்கப்படுகின்றது.

கலி…! தீமைகளைத் தான் வளர்க்க முடிகின்றது நல்லதை வளர்க்க முடியவில்லை. ஆகவே கலியுகமாக இருக்கின்றது.

ஆனால் அந்த உணர்வின் தன்மைகளைத் தெரிந்து கொண்ட பின் கார்த்திகேயா. தீமை புகாது தடுத்துக் கொள்வது சேனாதிபதி. நமது ஞானிகள் இந்தத் தத்துவங்களைக் கொடுத்துள்ளார்கள் சிறிதளவாவது அதை நாம் பின்பற்றுகின்றோமா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

1.உங்களிடம் உபதேசங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவாக்கிப் பதிவாக்கி…
2.அதை நீங்கள் புரிந்து அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியாகி
3.உங்களை அறியாது ஏதாவது தவறுகள் வந்தாலும் உடனே ரிமோட் செய்து
4.உடனே நல்லதாக மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி வர வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பப் பதிவாக்குவது.

தவறு செய்வதைப் பார்த்தால் கோபமான உணர்ச்சிகள் தோன்றுகின்றது. அந்த உணர்வு நம்மை இயக்காதபடி ரிமோட் செய்து விட்டால் நமக்குள் புகாதபடி தடுக்கப்படும். “அவனுக்கு நல்ல அறிவு வரட்டும்” என்று அந்தத் தீமை நமக்குள் புகாது தடுத்திடும் சேனாதிபதி.

ஆகவே குரு வழி என்ன…? நாம் கவர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் வலுப்பெறுகின்றது அது தான் வசிஷ்டர் பிரம்மகுரு.

மற்றவர்கள் செய்யும் உபதேசங்களை இவ்வளவு நேரம் உங்களால் கேட்க முடியுமா…? அவர்கள் என்ன பேசுகின்றார்கள்…! இவர்கள் என்ன பேசுகின்றார்கள்…? திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

இப்போது உங்களுக்குள் எப்படியும் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று குரு காட்டிய வழியிலே “ரெக்கார்ட்” செய்கின்றேன்.
1.அதன் பின் சிறிது நேரம் சிந்தித்தீர்கள் என்றால்
2.ஞானிகள் பெற்ற உணர்வு உங்களுக்குள் அந்த ஞானத்தைப் பேசும்.

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டு சென்றால்… அங்கிருந்து திருடனே வந்தாலும் கூட உடனே அதைத் தெரிந்து கொள்ள முடியும். அந்தச் சுதாரிப்பைக் கொடுக்கும்.

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு வர வேண்டும் என்பதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அதனின் வலிமையைக் காட்டி விடுகின்றது.
1.ஆக மொத்தம் அதைக் காட்டிலும் வலிமையான துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
2.இதன் வலிமையைக் காட்டும் பொழுது தீமையிலிருந்து விடுபட்டு நீங்கள் தெளிந்து வாழ முடியும்.

வேதனை என்ற உணர்வு வந்து விட்டால் கலி. ஆனால் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் கல்கி.

உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி வர வேண்டும் அதைப் பெறச் செய்வதற்கு தான் யாம் உபதேசிப்பது (ஞானகுரு).