நான் வருவேன்… “எப்போதும் உன்னுடன்…!”

நான் வருவேன்… “எப்போதும் உன்னுடன்…!”

 

மனமே தான் நீ…! மனத்திற்கும் குரங்கிற்கும் ஒப்பிடுகின்றார்கள்… மனம் ஒரு குரங்கு என்கிறார்கள்…! ஆனால்
1.குரங்கின் நிலை வேறு மனிதன் நிலை வேறு
2.குரங்கின் நிலை ஒரு நிலையிலே தான் உள்ளது.

ஒரு பொருளையோ ஒரு செயலையோ குரங்கின் மனம் எண்ணிவிட்டால் “அதன் நாட்டம் எல்லாம் ஒரு நிலையில் தான் உள்ளது…” குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதை வைத்து மனநிலையும் குரங்கையும் ஒப்பிட்டார்கள்.
1.மனம் அல்ல குரங்கு… குரங்கல்ல மனம்…
2.குரங்கைப் பற்றி மனிதர்கள் கொண்டிருக்கும் அர்த்தம் வேறு… குரங்கிற்கும் மனிதருக்கும் உள்ள நிலை வேறு.
3.குரங்கின் எண்ணம் மாறாது… குரங்கின் செயலும் மாறாது… தன் எண்ணத்திலேயே தான் அது என்றும் உள்ளது.

மனம் – எண்ணம்… எண்ணம் – மனம் எல்லாம் ஒன்றுதான்.

உன் எண்ணம் எங்குள்ளது…? துரிதமான நிலையில் சொல்வதெல்லாம் உன் எண்ணத்திற்கு “உதயம்” வரத்தான்.

பாடத்தில் தடங்கல் வந்தால் பாடத்தின் தன்மையும் மாறி விடுகின்றது. எண்ணமும் செயலும் மாறி விட்டால் உன் நிலையும் மாறி விடுகின்றது.

நம் பிறப்பிலிருந்து ஒவ்வொருவருக்கும்… “அவருடைய வளரும் சூழ்நிலை… பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள்… சுற்றத்தாரின் பழக்கங்கள்…” எல்லாமே கலந்து விடுகின்றது.

இந்த நிலையில்
1.உன்னை நீ உணர வேண்டும்
2.உன் நிலையை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்
3.தன் எண்ணம்… தன் மனம்… தன் செயல்… எல்லாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும்.

இந்த நிலையைப் புரிந்து கொண்டால் எந்நிலையும் கிட்டிவிடும் என்று பகர்ந்துள்ளேன் பலமுறை. குழப்பமுடன் உள்ளாய் இரு தினத்தில் இந்நிலையில் ஏன் குழப்பம்…? உன்னையே நீ காணும் பொழுது…!

எடுத்ததை முடிப்பாய்…! எண்ணியதைச் செய்வாய்…! செயலெல்லாம் அவன் செயல்…! அவன் செயல் என்று வந்த பிறகு மனநிலையை மாற்றி விடாதே…!

உலக நிலை மாறப் போகிறது உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும் தியான நிலையில். கருவின் நிலை வளர்வதற்குள் கருகிவிடும் உலகம் முழுவதுமே உருண்டு விடும்.

இந்நிலையில் உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும். தியான வழியினைப் பயன்படுத்தித் தப்புங்கள். பாவ புண்ணியம் என்ற அணுவின் அணுக்கள் எல்லாம் அணுவுடன் மோதும் நிலையில் உள்ளது.

இவன் வெடிப்பான் அவன் வெடிப்பான் என்று உள்ள பொழுதே இவன் வினை எல்லாம் வெடித்துவிடும் அணுகுண்டாக…! கூடி விட்டான் கூட்டாளியாக… கூட்டத்தினிலே புகுந்து விட்டான். இந்நிலையும் சரி இல்லை… பெரும் அழிவிற்கே இந்நிலை எல்லாம்…!

ஒன்றை ஒன்று ஊடுருபவன…! ஒருவன் நிலையில் நிலையல்ல… தன் நிலையை நிலைநாட்டப் பிறர் நிலையில் ஊடுருவுகின்றான்…. காசு பணம் தேடிடவே கடல் கடலாக அலைகின்றான்.

உன் நிலையை எண்ணிடாமல் அவர் நிலையினை எண்ணுபவன் ஒரு சிலரே… உன் நிலைக்குப் புரிந்திடாது.

இயற்கையின் தாக்கலே பெரும் விஷமாகத் தாக்கிவிடும் (அம்பு எய்து விழும் காட்சி)
1.வருடம் அல்ல நாளல்ல… வருவதெல்லாம் பேரழிவு தான்
2.பூமித் தாயும் தாங்க மாட்டாள்.

அந்த அணுவின் நிலையை. அணுவின் பாடத்திலேயே புரிந்திருக்கும் இவன் விட்ட அணுவெல்லாம் இவனையே தாக்குகின்றது. நல்லெண்ணம் எங்குள்ளது…? தர்ம நியாயம் மறைந்து விட்டது.

செயற்கையுடன் வாழ்பவனுக்கு இயற்கை நிலை எதற்கப்பா…? சீறிடுவாள் இயற்கை அன்னை… இவனின் செயற்கை இவனையே அழித்துவிடும்.

விஞ்ஞானத்தைக் கண்டவன் எல்லாம் மெய்ஞானத்தைக் கண்டானா…?
1.விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்திருந்தால் நல்ல நிலை பெற்றிருக்கலாம்
2.மெய்ஞானத்தையே மறந்திட்டான்.

விஞ்ஞானத்தில் உயிரணுவைச் செய்திடச் சொல் பார்க்கலாம்…!

இயற்கை அன்னை தந்த உயிரணுவை வைத்துத் தான் இவன் விஞ்ஞானம் எல்லாம். விஞ்ஞானம் எல்லாம் அழிவிற்குத் தான்…!
1.இராக்கெட்டின் நிலையிலேயே மறந்திட்டான்
2.பறந்து என்ன பயன் கண்டான்…?
3.தன் நிலையை உணராதவன் செய்திட்டான் இராக்கெட்டை.

தேய்வ ஞானம் மறைந்ததப்பா தெய்வீகமும் மறைந்ததப்பா தேவனையே மறைத்திட்டான் தேவலோகம் சென்று பார்க்கின்றானா…? பார்த்து என்ன பயன் கண்டான்…? பாரில் உள்ளவர்க்குப் பகர்ந்திட்டானா…?

1.அவன் (ஈஸ்வரன்) அருளைப் பெற்றிடப்பா…!
2.அவன் இல்லாமல் யாரும் இல்லை
3.அவனே தான் உலகமப்பா
4.அவனே தான் நீயுமப்பா நானுமப்பா
5.அவனையேதான் நினைத்திட வேண்டுமப்பா
6.கலியின் தன்மையை மாற்றிடப்பா
7.காவியத்தில் வந்திடப்பா
8.கல்கியாக நிலைத்திடப்பா…!

மனிதன் மனதை மாற்றிடுங்கள்…! வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதை எதற்கு…? என்னும் நிலை வேண்டாம். புகட்டிடுங்கள் குழந்தைகளின் மனதிற்கு எல்லாம்.

எல்லோருக்கும் தான்… இதைச் செய்யச் சொல்கின்றேன்…!

இன்றைய கால நிலையைப் பற்றிச் சொல்… மனிதனின் நிலையைப் பற்றி புரிந்திடச் சொல். சிறு குழந்தைக்கும் புரியும் நிலையில் பகர்ந்துவிடு.
1.சிறுவர் சிறுமியருக்கெல்லாம் புரியும் தன்மையிலே அவர் நிலைக்கு நீ சென்று சொல்லி
2.அவரின் அன்பை எல்லாம் பெற்றுக் கொண்டு இன் அன்பைத் தந்துவிடு.
3.நான் வருவேன் உன்னுடன்…!

எந்த நிலைக்குச் சென்றாலும் எவ்விடத்திற்குச் சென்றாலும் புகட்டிடுவாய் பாலரின் மனதிற்குள்ளே. பாலரின் மனதை ஈர்க்கப் பகர்ந்துள்ளேன் இந்தப் பாடம் எல்லாம்.

உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் சீக்கிரம் கிடைக்கும்

உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் சீக்கிரம் கிடைக்கும்

 

நாம் மனிதர்கள் சந்தோஷமான உணர்வுகளைப் பதிவு செய்து கொண்ட பின் சந்தோஷமாக வாழ்ந்த நிலையை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே அன்று நமக்குச் சந்தோஷம் வருகின்றது.

அதே சமயத்தில் கோபமாகப் பேசியருடைய நினைவுகளை நாம் எண்ணினோம் என்றால் நம்மை அறியாமலே வெறுப்பும் கோபமும் அன்று உருவாகின்றது.

அப்பொழுது நம் உடலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது.

ஒரு மனிதன் வேதனையுடன் பேசினால் அதைப் பதிவு செய்து கொண்டால் அந்த மனிதனை மீண்டும் நினைக்கும் பொழுது நம்மை அறியாமலே வேதனை வருகின்றது… மனம் சோர்வடைகின்றது…!

ஒரு தொழிலில் செய்ய வேண்டும் என்று பதிவு செய்து கொண்டால் அந்த நினைவு வருகின்றது ஆனால் தொழில் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அந்த நேரம் சோர்வடைந்து விடுகின்றோம்.

இதைப் போன்று
1.இந்த உடலில் “எதை எதை” நாம் பதிவு செய்து கொள்கின்றோமா
2.அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது நம் கண்ணுக்கே வருகின்றது.
3.கண்ணுக்கு வரும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் நாம் பழகியவர்களின் உணர்வுகள் பரவி உள்ளதை நாம் சுவாசித்து
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு நம் உடலின் மாற்றங்களும் எண்ணங்களும் சொல்களும் வருகின்றது… நம் செயல்களும் அமைகின்றது.

உதாரணமாக நம்மிடம் கோபமாகப் பேசியவர் நினைவு வரும் பொழுது பெண்களாக இருப்பின்… குழம்பு வைக்கும் பொழுது அதில் “காரத்தை” அதிகமாகப் போட்டு விடுவார்கள்.

சலிப்பு கொண்டோரின் நினைவுடன் சமைத்தால் அதிலே “உப்பை” அதிகமாகப் போட்டு விடுவார்கள். ஏனென்றால் நுகர்ந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யும்.

ஆண்களாக இருப்பின்… ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் அந்த நேரம் குறுக்கே யாராவது வந்தார்கள் என்றால்
1.உடனே சலிப்பு வந்துவிடும்… அப்பொழுது கோபம் அதிகரிக்கும்.
2.கோபத்தின் தன்மை வரும் பொழுது வாகனத்தைச் சீராக ஓட்டுவது மிகவும் கடினமாகி விடுகின்றது.
3.கோபம் வந்தபின் அடுத்து நிதானமாக வண்டியையும் ஓட்ட முடியாது… ஓட்டினாலும் சிரமம் தான்.

இதைப் போன்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நமக்குள் பதிவு செய்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது
1.காற்றிலே கலந்துள்ள அந்தந்த உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்து
2.அந்தந்த உணர்வுகள் நம் உடலுக்குள் செல்வதும்… பின் அதைச் செயலாக்கியும் விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம் நினைவு கொள்ளும் பொழுது அது வருகின்றது.

கல்விச்சாலையில் படிக்கும் போது பாடங்களைப் பதிவு செய்து கொண்டால் அதாவது…
1.எந்தப் பாடத்தை பதிவு செய்தோமோ அதை நினைவால் வெளிப்படுத்தும் போது
2.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்து விடுகின்றது.
3.அந்தப் பாடங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அதனுடைய தொடர் வரிசையும்
4.பாட நிலையில் எதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று குறித்த உணர்வுகள் நமக்குள் தெளிவாக வருகிறது.

உதாரணமாக உயர் படிப்பு படிப்பவர்களுக்குப் படிப்பில் பாடங்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதன் தொடர் வரிசையில்… படிக்கும் பொழுதே சோர்வோ சோம்பேறித்தனமோ வந்து விட்டால்… குடும்பம் அல்லது தொழில் அல்லது கொடுக்கல் வாங்கல்களில் பாதிப்பு வந்துவிட்டால்…
1.பாடங்கள் சீராகப் பதிவாகாது… பரீட்சையில் தேர்வதும் மிகக் கடினமாகின்றது.
2.அத்தகையவர் படித்து வருவார் என்றால் மிகவும் கடினம் தான்

உதாரணமாக… குடும்பத்தில் கணவன் மனைவிக்குப் புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் “குழந்தை வேண்டும்” என்று பதிவு செய்தால் அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

அதற்கு மாறாக… “குழந்தை இல்லையே… குழந்தை இல்லையே… இல்லையே…!” என்று இதைப் பதிவு செய்து கொண்ட பின் இந்த உணர்வுகளே அதிகரித்து “புத்திர பாக்கியம் கிடைப்பது” காலதாமதம் ஆகிவிடும். காரணம்…
1.சோர்வும் சஞ்சலமும் அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது
2.அந்த அணுக்கள் வீரியத்தன்மை அடைந்து கரு வளர்ச்சி பெறும் நிலைகளும் தடைப்படுகின்றது அல்லது பலவீனம் அடைகின்றது.

இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொண்ட நிலைகள் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது இப்படிப்பட்ட இயக்கத்திற்கு வருகின்றது இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

“தன் பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும்…” என்று எண்ணலாம். ஆனால் “திருமணம் ஆகவில்லையே…” பிள்ளையைப் பார்க்க வந்து வந்து செல்கின்றனர்…! என்று பதிவு செய்தால்
1.அந்தப் பதிவே மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது ஆன்மாவில் அது கலந்து
2.பெண் பார்க்க வரும் பொழுது அவர்கள் நம்முடைய சோர்வின் நிலைகளை உற்றுப் பார்த்து
3.நம் சொல்லைக் கேட்கப்படும் பொழுது அவர்களும் சோர்வடைகின்றார்கள்.
4.அப்போது நம்முடைய எண்ணமே பார்க்க வந்தவர்கள் உணர்வினை இயக்கி…
5.பேச்சுத் தொடரில் சோர்வின் தன்மை அடையச் செய்து திருமணம் நடைபெறாது தடையாகி விடுகின்றது.
6.நல்லது எண்ணுவதை அந்த இடத்தில் நாம் விட்டு விடுகின்றோம்.

அதை எல்லாம் மாற்றி அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால்… நம் பெண் எங்கே திருமணம் ஆகிச் சென்றாலும் அந்தக் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பத்தில் தொழில் வளம் பெருக வேண்டும்…
1.அந்தச் சக்தி என் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிக்கடி எண்ணினால்…
2.அந்தத் திருமணமாக வேண்டிய பெண்ணும் இப்படி எண்ணினால்…
3.துரிதமாக அதற்கு நல்ல வரன் கிடைக்கும்.
4.எதிர்காலம் நல்ல வாழ்க்கையாகவும் அமையும்
5.அதனுடைய பேச்சும் மூச்சும் அந்தக் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும்… மகிழ்ச்சியை உண்டாக்கச் செய்யும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு அதற்குப் பின் வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியங்களையும் செயல்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி… ஒரு ஐந்து நிமிடம் உடலுக்குள் செலுத்திய பின்… எந்தக் காரியத்திற்குச் செல்கின்றீர்களோ அவை அனைத்தும் காரிய சித்தி ஆக வேண்டும்… எங்கள் சொல் அவர்களை நல்லதாக்க வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும்… என்று “இப்படித்தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்…”

வாழ்க்கையில் வரக்கூடிய எந்த நிலையாக இருந்தாலும் நல்லதாக வேண்டும் என்று இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து செயல்படுத்த வேண்டும்.

ஆகையினால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றீர்கள்… அப்போதெல்லாம் அதை வலுக் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

அதிகாலையில் எப்பொழுது விழிப்பு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் மகரிஷிகளை எண்ணி விட்டு இந்த முறைப்படி அந்தந்த காரியங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி எத்தனையோ மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் உள்ளார்கள்

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
1.உடலுக்குள் சோர்வடைந்த நிலையில் எதுவாக இருந்தாலும் நல்ல மன பலம் பெற்று மன வளம் பெறுவீர்கள்.
2.சிந்தித்துச் செயல்படும் அருள் ஞான சக்தியாக வரும்…
3.உங்கள் காரியங்கள் “அனைத்தும் வெற்றியாகும்…”

செய்து பாருங்கள்…! (ஞானகுரு)

உண்மைச் சக்தியான காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்லவன் “நிச்சயம் ஒளி நிலை பெறுவான்”

உண்மைச் சக்தியான காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்லவன் “நிச்சயம் ஒளி நிலை பெறுவான்”

 

உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து…!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே… எண்ணத்தை விழிப்படையைச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்…?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்…!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே…
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து…
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்…” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கி தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.

செய்யத் தவறியதை… செய்ய மறந்ததை… நாம் அனுதினமும் இப்போது செய்ய வேண்டும்

செய்யத் தவறியதை… செய்ய மறந்ததை… நாம் அனுதினமும் இப்போது செய்ய வேண்டும்

 

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று “புருவ மத்தியில் எண்ணி” ஏங்கித் தியானித்து… அந்த வலுவைக் கூட்டுங்கள்.

அதை வைத்து நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும். காரணம்… நம் மூதாதையர்களுக்கு குலதெய்வங்களுக்கு இதற்கு முன்னாடி நாம் அதைச் செய்ய மறந்து விட்டோம்.

இப்போது
1.சப்தரிஷி மண்டலத்தின் பேர்ருள் பேரொளியை வலுப்பெறச் செய்து
2.மகரிஷிகள் காட்டிய அருள் வழியை உங்களுக்குள் அந்த உணர்வைத் தூண்டி
3.நினைவைத் தன்னிச்சையாக விண்ணை நோக்கிச் செலுத்தும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.
4.அதை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இதே ஏக்கத்தோடு நாம் அனைவரும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு அவரவர்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்களை அந்த சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணைக்க முடியும்.

ஏனென்றால் அந்த வலுவின் தன்மை கொண்டு
1.குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளப்படும் பொழுது அந்த சப்தரிஷி ஈர்ப்பு மண்டலத்தில் செல்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைக்கின்றது
3.அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் அது சுழல்கின்றது.

உதாரணமாக நாம் பூமியின் நிலைகளைக் கடந்து ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றோம். அப்பொழுது பூமியின் ஓடுபாதையில் அது சுழலச் செய்யும் பொழுது அதன் வரிசையில் சுழலுகின்றது.

அதே சமயத்தில் பூமியின் நிலைகள் தென் வடக்கில் சுழலும் போது
1.அந்த சுழலும் தன்மைக்கு இதனுடைய ஈர்ப்பின் வேகத்தைக் கூட்டும் போது அதே ராக்கெட் சுழலுகின்றது.
2.ஆனால் அதனுடைய வேகத்தை குறைத்து பூமியின் சுழல் வட்டத்தில் அதனுடைய சமமான நிலைகள் இருக்கும்போது
3.எந்த ஊரின் நிலையோ அதனின் நிலை கொண்டு அங்கே நிலை கொண்டு அதனைச் செயல்படுத்துகின்றது.

இதை போன்று தான் நாம் எந்த மனித உடலில் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றனரோ
1.அவர்கள் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தி இதனின் வலு துணை கொண்டு
2.நம் மூதாதையர்களுடைய உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை
3.நாம் இந்த முறைப்படி ஆயிரக்கணக்கானோர் வலு கொண்டு விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் செல்கின்றது பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் அந்த ஈர்ப்பு வட்டத்திலே சுழலத் தொடங்கி விடுகின்றது.

விண் செலுத்திய பின் அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும்… துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று ஏங்கினால்…
1.அந்த உணர்வைப் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் கடும் தீமைகளை கூட மாற்றி
2.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இதற்கு முன் நாம் செய்யத் தவறிய அந்த உணர்வு கொண்டு நாம் ஒவ்வொருவரும் இந்த பௌர்ணமி நாளில் இது மாதிரி தொடர்ந்து உந்தித் தள்ளினால்… இன்னொரு உடலுக்குள் பேயாக நின்று அதனை ஆட்டிப் படைத்து அதற்குப் பின் வெளியில் வந்தாலும்… அவர்களுடைய உணர்வுடன் நம் நினைவினை ஆற்றலை பரப்பப்படும் பொழுது (இன்னொரு உடலுக்குள்) இந்த நஞ்சினைக் கரைத்து விட்டு… “விண் செல்லும் உணர்வினைத் தனக்குள் பெரும் தகுதியை ஏற்படுத்துகின்றது…”

ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கி நம்மை சீராட்டி தாலாட்டி வளர்த்த குலதெய்வங்களை “இன்னொரு பிறவியின் நிலை அடையாமல் செய்வதே… நம்முடைய தலையாயக் கடமையாகும்…”

அவரவர் வீடுகளில் இருந்தே இதைப்போல இந்த உணர்வினை எடுத்துச் செயல்படுத்த முடியும். ஒரு கூட்டமைப்பாக ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து எடுத்தோம் என்றால்
1.அவர்களை நாம் துரித நிலைகள் கொண்டு எந்த உடலை விட்டு வெளியில் வந்தாலும்
2.அவர்களுடைய உணர்வு தான் நம் உடலாக இருப்பதனால் நாம் அவர்களை எளிதில் அனுப்ப உதவும்.

ஏனென்றால் இப்பொழுது நாம் சாங்கியத்தில் சுட்ட சாம்பலைக் கங்கையில் அல்லது ஓடும் நீரில் கரைத்தால் பாவம் போய்விடும்… மோட்ச தீபம் ஏற்றினால் அவர் சொர்க்கம் போவார்…! என்று தான் நம்மைச் செய்ய வைத்துள்ளார்கள்.

ஆகவே… காலத்தால் மறைந்த இந்த நிலையை மகரிஷிகளின் அருளால் இதைப் போன்ற மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களை பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

அவர்கள் அங்கு ஒளி நிலை பெற்றால் இந்த உணர்வு கொண்டு நாம் இந்த பூமியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு நாம் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ்ந்து… இங்கு வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ந்து வாழ முடியும்.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம்
2.ஆனால் இப்பொழுது உயிருக்கும் நமக்கும் சொந்தம் இல்லாத நிலைகளில் இருக்கின்றோம்.
3.ஆகவே உயிரின் தன்மையை நாம் சொந்தமாக்க வேண்டும்

ஆக நாம் எதை எண்ணுகின்றோமோ அதனை வைத்து இந்த உயிர் உடலை இயக்குகின்றது. ஆகையினால் “உயிர் தான் நமக்குச் சொந்தம்” என்று யாரும் நாம் எண்ணவே இல்லை.

அவனால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல் என்ற நிலையில் நாம் அவனை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை உருவாக்குகின்றது.

ஒருவருக்கு நாம் கடுமையாகத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது. அதையே (தீமையை) செய்யும்படி செய்கின்றது.

ஒருத்தருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம்… அந்த உணர்வின் தன்மை இந்த உடலை இயக்கிக் காட்டுகின்றது.

ஆனால் தீமையின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
1.அந்தத் தீமையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
2.நம் உடலை அழுகச் செய்து நம்மை வேதனைப்படச் செய்கின்றது‌.

யார் வேதனைப்பட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த வேதனையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து அந்த வேதனையையே நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. ஆகவே நாம் எதுவாக ஆக வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

குடும்ப நிலையில் இருந்து சித்தனாகிக் காட்டு… அது தான் பெரிது…!

குடும்ப நிலையில் இருந்து சித்தனாகிக் காட்டு… அது தான் பெரிது…!

 

அணுவின் தன்மையை அணு அணுவாக ஆரம்ப நிலையிலிருந்து உணர்த்தி உள்ளேன். மனிதன் பிறவி எடுத்த நிலையில் இருந்து உணர்த்தி உள்ளேன். மனிதனின் நிலையில் “ஏழு ஜென்மம்” நமக்கு அளித்த ஆண்டவனின் தீர்ப்பு.

அந்த ஏழு ஜென்மத்தில் நமக்கு அளித்த அருளைப் பெற்றவன் பெரும் முக்தி நிலையைப் பெற்று விடுகின்றான்.

அந்த ஏழு ஜென்மத்திலும் தன் நிலையை உணராமல் தன் ஆசையை அடக்கிடாமல்
1.நான் என்ற இந்த நிலையில் அவன் எடுக்கும் பிறவி எல்லாம் சீரும் சிங்கமாகவும் விஷம் கொண்ட பாம்பாகவும் அணிலாகவும்
2.அவரவர்களுக்குக் கிடைத்த ஏழு சந்தர்ப்பத்தையும் முடிக்காமல் உள்ளவன்..
3.இன்று மிருகத்திற்கு எந்தக் குண நிலை உள்ளதோ அவ்வழியில் பிறக்கின்றான்… அதிலும் ஜென்மங்கள் மாறுபடுகின்றன.

மிருகமாக மாறுபடும் ஜென்மங்களைத் தான் மனிதனும் புசிக்கின்றான். இவன் அணுவே தான் அதற்கும்… அதன் அணுவே தான் இவனுக்கும்…!

ஆயிரம் ஆடுகள் மந்தையில் இருந்தாலும்… அச்சிறுத்தையின் எண்ணம் “ஒரு ஆட்டின் மேலே தான்” உள்ளது. அதன் நிலை என்ன…?
1.அச்சிறுத்தையின் முதல் எதிரி அந்த ஆடு
2.அந்த ஆட்டையே புசிக்கின்றது.

ஒவ்வொரு தன்மையும் இதைப் போல் தான் சுற்றிக் கொண்டே வருகிறது சிறுத்தை அவ்வாட்டை அடித்ததனால்
1.அந்த ஆட்டிற்குத் தான் சாப நிலை தீர்ந்தது.
2.சிறுத்தையின் நிலை சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றது.

அணுவே தான் எல்லாம். மரமும் அணு தான். மரத்தின் கனியும் அணு தான். அந்த அணுவைப் புசிக்கிறோம்… இந்த அணுவைப் புசிக்கக்கூடாதா…? என்ற எண்ணம் உனக்குள்ளே…! “அந்த அணுவின் தன்மை வேறு… இந்த அணுவின் தன்மை வேறு…”

ஏழு ஜென்மத்தில் முக்தி அடையாத மனிதன் மிருகமாகி.. பறக்கும் பறவையாகி… புழுவாகி… மரமாகி… கனியாகி கனியின் தன்மையிலேயே பாவ விமோசனம் பெறுகின்றது.

கனியாகவும் ஆகின்றது பூவாகவும் ஆகின்றது கனியைப் புசிப்பதின் தன்மை புரிகிறதா…? ஆசை மணத்தை அணு அணுவாக அடக்கிடத்தான் இந்த தியான முறை எல்லாம்.

சுவை எல்லாம் அவன் தருவான் சுவைத்திடப்பா சுவையை. முதல் பாட்டிலேயே தந்துள்ளேன்… ஆசை அணுவை அழித்திடுவாய் என்னும் வரியை. அதன் பொருளும் இதுவே தான்.
1.அணு அணுவாக எந்நிலையிலும் அடக்கிட வேண்டும்
2.பெரும் அவசரமும் பதட்டமும் அடைந்து விட்டால் பற்றற்ற நிலை வந்துவிடாது.
3.நம் மனதை உயர்த்திக் கொண்டு நம் நிலைக்கே வந்த நிலையில் வைத்து இருப்பதும் ஒதுக்குவதும்.
4.அவசரம் வேண்டாம் சொன்னதன் பொருள் புரிந்ததா…?

பூவின் மணம் தான் உன் சுவாச நிலைக்கே வருகின்றது தெரியவில்லையா…? எல்லாச் சுவையின் தன்மையையும் தந்தருளினேன்.
1.மூலிகையையின் வாசனைகள் வந்திருக்கும்
2.ஜோதியின் வடிவமும் தந்தருளினேன். அந்நிலையில் உதயத்தைப் புரிந்திட்டாயா… புரியவில்லை… போகர் பற்றி.

காயகல்பம் சாப்பிட்டவர்… அந்தக் காயகல்பம் எதிலிருந்து வந்தது போகர் உடலை அழியாமல் வைத்துள்ளார்.

காட்சி:- மருந்தை எடுத்து இடித்துக் காட்டி இப்படித்தான் வந்ததா…? என்று குருதேவர் கேட்கின்றார்.

காயகல்பம் என்பதெல்லாம் கருணையான மனதினிலே தியான நிலையில் பல மணங்களை எடுத்து உலோகத்தன்மையில் கலந்து அவர் அரைத்தார்.

கடுகளவு காண்பதற்குத் தவம் இருந்தார் பல நாட்கள்…!

மும்மூர்த்தியின் வடிவையே சிலை செய்தார். சிலையின் தன்மையிலே கலந்து செய்தார் இக்காயகல்பத்தினை.
1.சிலையின் உருவிலும் உள்ளது காயகல்பம்
2.போகரின் உடலிலும் உள்ளது காயகல்பம்.

அணுகுண்டு செய்வது பெரிதல்ல. காலங்கள் அழிந்தாலும் தன் நிலையையும் தன் உடலையும் தன் உணர்வையும் அழிந்திடாமல் வைத்துள்ளார்.
1.அந்நிலை உயர்ந்ததா…?
2.வெறும் அணுகுண்டு செய்திடத் தன் சக்தியெல்லாம் அழித்துச் செய்யும் அணுகுண்டி நிலை பெரிதா…?

மனிதனாகப் பிறந்தவருக்கு எல்லோர் உடலிலும் சக்தி நிலை உள்ளது. பிறவிப் பயனும் உள்ளது… அவனவன் எடுக்கும் நிலையில் தான் எல்லாமே உள்ளது.

இனி எந்த நிலைக்குச் சென்றாலும் இந்நிலையை மாற்றி விடாதே… காலத்துடன் மறைந்திடாதே… கல்கியுடன் கலந்துவிடு…! பகர்ந்திடுவேன் பகர்ந்திடுவேன் பல நிலைகளைப் பகர்ந்திடுவேன்….!

உன் நிலையில் உள்ளவர் தான் போகன். அதனால் தான் அந்த வழி காட்டினேன்…. வழியெல்லாம் வகுத்திடுவார் அந்த வழிக்கு வந்துவிடு சீக்கிரம்.

உள்ள நிலையை மாற்றி விடாமல் இந்த வழிக்கு வந்துவிடு. காலம் கனிந்து வரும்… காலம் குறுகியது குறுகியது…! சீக்கிரம் சுவாச நிலைக்கு வா.

பல கோடி நாட்கள் தூங்கிடலாம்… தூங்கும் தூக்கம் தனி அல்ல என்ற நிலைக்கு வந்துவிடு.
1.தியான நிலையில் இருந்திட்டால் அதுவே தான் தூக்கம்
2.அந்நிலையில் காத்திடுவான் உன் உடலையும் அவனே.

இன்றுள்ள பல சித்தர்கள் ஞானிகள் எல்லாமே தன் நிலையை மாற்றிக் கொண்டு அவன் நிலைக்கு வந்தார்கள். உனக்குச் சொல்வது புரிகிறதா…!
1.குடும்ப நிலையில் இருந்து சித்தனாக்கிக் காட்டு…. இந்நிலை தான் பெரிது
2.இதுவும் அவன் அருளே…. மாற்றிடாமல் அவனிடம் வா… போகரே போற்றிடுவார். உன் நிலையை என்று அடித்துக் காட்டுகின்றார் குருதேவர்.

உன் நிலையை முந்துவதற்கும் ஆள் உண்டு. நீ முந்துவாயா? அவர் முந்துவாரா…? பார்க்கலாம்.

கல்கியுகம் பிறந்து விட்டது

கல்கியுகம் பிறந்து விட்டது

 

அனுதினமும் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் துணையால் கருவில் வளரும் சிசுக்களை ஞானக் குழந்தைகளை வளர்த்திட வேண்டும்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்வோர் குடும்பங்களில் கருவில் உருவாகும் குழந்தைகள் அவர்களுக்கு
1.ஒவ்வொரு நொடியிலும் அந்த அருள் ஞானத்தை நாம் கிடைக்கச் செய்ய வேண்டும்
2.உலக ஞானம் பெற வேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்

அந்த அறிவின் ஞானத்தை ஊட்டி “உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வளர வேண்டும்” என்று குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொழுதும்… பால் ஊட்டும் பொழுதும்… தாலாட்டும் பொழுதும்… இதை நாம் செய்து பழக வேண்டும்.

செய்தால்
1.இதன் தொடர் வரிசையில் எதிர்காலச் சந்ததியினர் இந்த வழியிலே வளர்ந்து
2.இந்த நாட்டை உலகத்தைக் காக்கும் சக்திகளாக வருவார்கள்.

இன்று உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பரவிக் கொண்டிருந்தாலும் உலகை மீட்டிடும் அந்தத் தகுதி “தென்னாட்டில் தோன்றியவர்களுக்குத் தான் வரும்…”

உலகப் பேரழிவின் தன்மையை… விஷத்தன்மையால் மடிந்து கொண்டிருக்கும் இந்த நிலைகளை மாற்றிட இது உதவும்.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற உணர்வுகள் உருவாகி மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலைகளே வருகின்றது. அதை ரசித்துப் பார்க்கும் நிலைகள் வருகின்றது ஏனைய நாடுகளில்…!

நம் நாட்டில் அவ்வாறு இல்லை… இப்போது தான் தலை காட்டுகின்றது. உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீது குண்டுகளை வீசுவதும் மற்றவர்களை மடியச் செய்வதும் அதைக் கண்டு ரசிப்பதும் இதைப் போன்ற நிலைகள் வருகின்றது.

மற்ற நாடுகளில் துரித நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது நீர் நிலைகளையும் காற்று மண்டலத்தையும் விஷத்தன்மைகளை பரவச் செய்து மக்களை மடியச் செய்து அதைக் கண்டு ரசித்து அதை சுவாசித்துக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது… அத்தகைய அசுர உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
1.ஆனால் தென்னாட்டில் தோன்றிய “அகஸ்தியன் உணர்வால்” அந்தப் பிழைகள் இங்கே வராது தடுத்து நிற்கின்றது.
2.அவருடைய உணர்வே தான் இங்கே பேசுகின்றது… உபதேசம் கொடுக்கின்றது
3.நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
4.ஏனென்றால் எனக்கு அந்தப் பேசும் தகுதியோ அந்த உணர்வைக் கவரும் தகுதியோ பெற்றவன் அல்ல நான்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அத்தகைய உணர்வின் தன்மை… உலகை மீட்ட…
2.அந்த உணர்வுகளே இயங்குகிறது… அதுவே இயக்கிக் கொண்டுள்ளது.
3.அந்த உணர்வலைகளே பரவிக் கொண்டுள்ளது.

உங்களுடைய நிலைகளுக்கு எண்ணும்பொழுது எனக்கும் லாபம் கிடைக்கின்றது நீங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்து மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை விளையச் செய்யும் போது அந்த உணர்வின் தன்மையால் அந்தப் பேரானந்த உணர்வு இந்தக் காற்று மண்டலத்தில் நானும் சுவாசிக்க நேருகின்றது.

நீங்கள் வளர நான் வளர முடியும்…!

ஆனால் “நான் வளர” நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணினால் உங்களை எல்லாம் நான் அடிமையாக்கத் தான் முடியும். ஆகவே நான் வளர்வதற்காக உங்களை அடிமை ஆக்குவது இல்லை.

குருநாதர் காட்டிய வழியில் நீங்கள் வளர வேண்டும்…!
1.நீங்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று உணர்வினை நான் பெற்று வளர்த்தேன் என்றால்
2.நீங்கள் உயரும் போது அதைக் கண்டு நான் ஆனந்தப்படுகின்றேன்
3.உங்களில் விளைந்த அந்த உணர்வின் சத்து எனக்குள் அதை உயர்ந்ததாக மாற்றும்.

இங்கு விளைந்த (அகஸ்தியர்) வித்து ஒன்றுதான். ஆனால் அது உங்களுக்குள் அது விளைந்து பல பல வித்துக்களாக வளருகின்றது… தீமைகளை அகற்றும் சக்தியாக மாறுகின்றது.
1.அதைக் கண்டு நான் பேரானந்தப் பெரு மகிழ்ச்சி நான் பெறுகின்றேன்
2.அப்பொழுதுதான் பேரின்ப்ப் பெருவாழ்வை எனக்குள் அதை வளர்க்க முடியும்.

ஆகவே நீங்கள் வளர வேண்டும் அதைக் கண்டு நான் மகிழ வேண்டும் இதைப் போல் நீங்கள் ஒவ்வொருவரும்
1.நீங்கள் பார்ப்பவர் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் நிலையில் வளர வேண்டும் என்று இதை எண்ணினால் நீங்களும் வளர்கின்றீர்கள்.
4.இதனுடைய வரிசைச் தொடர் இவ்வாறு வந்தால் தான் நாம் இங்கே வாழ முடியும் வளர முடியும்.

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையிலிருந்து மீளவும் முடியும்.

தாய்க்குச் செய்ய வேண்டிய சேவை

தாய்க்குச் செய்ய வேண்டிய சேவை

 

பூமிக்குள் வெப்பத்தின் தணல் ஆகும் போது ஆவியின் தன்மை அடைந்து ஆவி எடையற்றதாக மாறி மேலே செல்கின்றது.
1.வெப்பத்தினால் எடையற்ற தன்மை மாறினாலும் அதிலே மின்னல்கள் தாக்கப்படும்போது
2.இலகுவாக இருந்த மேகக் கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் பரவுகின்றது.

அந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஒரு பக்கம் மோதி… மற்றொரு பக்கம் மோதும்போது மழையாகப் பெய்கின்றது.

இப்படி அந்த மேகக் கூட்டத்திற்குள்
1.ஆவியின் தன்மையும் ஒளிக்கற்றைகளும் இணைந்து மழையாகப் பெய்யும் பொழுது நீராக வருகின்றது.
2.அதனால் தான் மழை நீர் பெய்யும் பொழுது தாவர இனங்களுக்கு அது உரமூட்டும் உணரவின் சக்தியாகக் கிடைக்கின்றது.

மழை நீர் பெய்தாலே தாவர இனங்கள் அதிகமாகச் செழித்துக் கொழுத்து வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் “அந்த மின் கதிர்கள்… அதனுடைய இயக்கம் துடிப்பின் தன்மையைக் கூட்டுகின்றது…!”

பல கோடி உணர்வுகள் பெற்று நாம் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த மேகக் கூட்டத்தை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தி அதிலே படர வேண்டும் என்று அந்த உணர்வுகளைச் செலுத்த வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் கலந்த மழை நீராக நம் பூமியில் பெய்யும் பொழுது
1.அது தாவர இனங்களில் உள்ள தீமைகளை அகற்றவும்
2.மக்கள் வாழும் பகுதியில் மழையாகப் பெய்யும் பொழுது அருள் உணர்வின் அறிவாக எல்லோரையும் இயக்க இது உதவும்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பாய்ச்சும் இந்த அருள் சக்திகள் மழை நீர் வழியாகக் கலக்கப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலை பெறச் செய்யும்.

ஒவ்வொரு உயிரும் (கடவுள்) ஈசன் என்றும்… அவனால் உருவாக்கப்பட்ட அந்த உடல்கள் ஆலயம் என்றும்… மனித உடலை உருவாக்கிய உயர்ந்த சக்திகள் அங்கே தெய்வங்களகக் கொலுவீற்றிருக்கிறது என்றும்… நாம் மேலே சொன்ன நிலைகளைச் செயல்படுத்தினால்
1.இது நம்மை அறியாமலே நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாகிறது…
2.அதே போல் நம்மை அறியாது அனைவருடைய நிலைகளும் நலம் பெறும் சக்தியாக விளைகின்றது.

எந்தப் பூமியில் பிறந்தோமோ அதுவே நமக்குத் தாயாகின்றது. அந்தத் தாயின் மடி மீது தான் நாம் அமர்ந்துள்ளோம். பூமித் தாயின் சக்தியைக் கூட்டி தீமை புகாது தூய்மைப்படுத்தும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தும் போதுதான் இந்தப் பூமியும் தூய்மையாகிறது.

நம் தாய்க்கு செய்யும் சேவையே இது தான்.
1.ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் பூமியான தாயைக் காக்கவும்
2.உயிரைக் காக்கவும் முயற்சி எடுங்கள்.

தாயால் உருவாக்கப்பட்ட “இந்த உடல்” நம்மை எத்தனையோ வகையில் பேணிக் காத்தது. ஆகவே தாயின் உணர்வே இந்த உடல். இந்த தாயான உடலைக் காக்க வேண்டும்… தாயின் உடலில் பெற்ற உணர்வுகள் தாயான நிலையில் காக்கப்பட வேண்டும் என்று இந்த உண்மையின் உணர்வைப் பெற்றால் மனிதன் தெளிவாகின்றான்.

மனிதன் தெளிவாகும் போதுதான் தெளிந்த உணர்வு கொண்ட உயிராகின்றது. உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது.

அத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்று குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வு வாழ்வோம். பிறவியில்லா நிலை அடையும் நிலையாக… முழுமை பெறும் உணர்வை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரும் இந்த நிலை பெற தியானிப்போம்… தவமிருப்போம்.

“ஒவ்வொரு ஸ்டேஜாகத் தான்” உங்களை வளர்ச்சி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்

“ஒவ்வொரு ஸ்டேஜாகத் தான்” உங்களை வளர்ச்சி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்

 

1.நட்சத்திரங்கள் பிற மண்டலத்தில் இருந்து வருவதை தனது உணர்வின் தன்மையாக எடுத்து
2.மற்றதோடு கலக்கப்படும் பொழுது “மின்னணுவாக” மாறுகின்றது.
3.அதாவது ஒரு கல்லுடன் கல் தட்டினால் “நெருப்பு” (பொறி) வருவது போன்று.

அதிலே முதல் நிலைகள் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் மற்றதுடன் கலக்கப்படும் பொழுது “மின் காந்த ஒளிகளை” உருவாக்குகின்றது. அத்தையை அணுக்களாக மாறும் பொழுது தான் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதனின் துகள்கள் பரவிக் கொண்டே வருகின்றது.

இதற்கு அடுத்து இருக்கக்கூடிய மற்ற நட்சத்திரங்கள் அதனின் வட்டப்பாதை மாறினாலும் உமிழ்த்திய உணர்வுகள் இங்கே பரவி இருப்பதும் அதுவும் மற்ற மண்டலங்களிலிருந்து கவர்வதை இதுவும் கவர்ந்து இதே கலவையாக்குகின்றது.

இப்படி அடுக்கடுக்காக 27 நட்சத்திரங்களின் கலவைகள் ஒவ்வொன்றும் கார்த்திகை நட்சத்திரத்தைப் போன்ற விஷத்தின் தன்மைகள் “கூடுவதும் உண்டு… குறைவதும் உண்டு…!”

இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது/. வானியலில் கடும் விஷத் தன்மைகள் பிரபஞ்சத்தில் இவ்வாறு பரவி வரும் போது
1.ஒவ்வொரு கோளும் துருவப் பகுதியின் வழியாகக் கவர்கின்றது.
2.அலைகளாக தன் உடல் (மண்டலம்) முழுவதும் அது பரவச் செய்வதும் சுழற்சியால் வெப்பம் ஏற்படுவதும்
3.இவை இரண்டும் கலந்தாலும் வெப்பத்தின் தன்மை சுழற்சி ஆகும் போது நடு மையம் அடைந்து விடுகின்றது.

ஆக… வெப்பத்தின் தணல் அதிகமாகி கொதிகலன்கள் கூடி நடு மையம் செல்லப்படும் பொழுது அந்தந்த மண்டலத்தில் “ஈர்க்கப்பட்ட உயிரணுக்கள்” அதனுடன் குவிக்கப்பட்டு உறையப்படும் போது பாறைகளுக்கு இடையில் சிக்கி பாறைகளுக்குள் அணுக்களாக மாறுகின்றது.

1.நமது பூமியிலும் ஆதியில் இவ்வாறு ஏற்பட்ட இந்த அணுவின் தன்மைகள்
2.பாறைக்குள் தேரைகளாகவும் வண்டுகளாகவும் விஷத்தன்மை கொண்ட சில உயிரினங்களாகவும் உண்டு.

இதே போன்று எல்லாக் கோள்களிலும் அது அது ஈர்த்து எடுத்துக் கொண்ட உயிரணுக்கள் அதிலே சிக்குண்டு வளர்ச்சியற்ற நிலையில் வளர்ந்து கொண்டு தான் உள்ளது.

1.நட்சத்திரங்களில் இவை இல்லை… ஆனால் சூரியனில் உண்டு
2.விஷ அணுக்களை உருவாக்கி இருந்தாலும் அதனுடைய கதிரியக்கப் பொறிகள் பெரும் மாற்றங்களை உருவாக்கும் தன்மைகளும் உண்டு.

ஏனென்றால் இதை எல்லாம் யாம் சொல்லிக் கொண்டு வந்தாலும் சிலவைகளைத் தொட்டுத்தான் காட்டலாம். ஏன் முழுமையாகச் சொல்லவில்லை…? என்று நீங்கள் எண்ணலாம்.

பொதுவாக கல்வியில் பாட நிலைகள் கொடுக்கும் பொழுது அது விஞ்ஞானியாக வரப்படும் பொழுது தான் அந்த முழுமை வரும்.
1.முதலில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பார்த்து இணை சேர்த்து உணர்வினைப் பதிவு செய்து
2.பின் ஒவ்வொரு பாட நிலையும் ஒவ்வொரு ஸ்டேஜுக்குக் கூட்டமைப்புகள் வரப்படும் பொழுது தான்
3.கல்வி அறிவையே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் அணுக்களை உங்களுக்குள் யாம் துணுக்குத் துணுக்காகப் பதிவு செய்யப்படும் பொழுது
1.அந்த ஞானிகள் உணர்வுடன் ஒன்றி வளரலாம்…
2.இந்தப் புவியில் வரும் விஷத்தன்மைகளை மாற்றிடும் சக்திகளை நீங்கள் பெறலாம்
3.நீங்கள் அதைப் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.

குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதே போன்றுதான் உங்களுக்குள்ளும் கொடுக்கின்றேன் நீங்கள் இங்கே சமமாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள் நான் காட்டிலும் மேட்டிலும் அவதிப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன் பெற்றேன்.

அதை வளர்க்கும் முறைக்கு…
1.பல எத்தனையோ இன்னல்களை உருவாக்கப்பட்டு
2.அந்த இன்னல்களில் இருந்து அது எவ்வாறு மீள வேண்டும்…? என்ற நிலையில்
3.இன்னலான உணர்வுகள் என் உடலுக்குள் ஊடுருவி… அதனால்
4.உடலில் உருப்பெற்ற அணுக்கள் எவ்வாறு எல்லாம் மாற்றமடைகின்றது என்பதை தன்னில் தானே உணரும்படி செய்தார் குருநாதர்,

உங்களுக்கு யாம் அதையெல்லாம் செய்யவில்லை. உயர்ந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் இப்போது பாய்ச்சப்படுகின்றது.

தாவர இனங்களுக்கு உரம் கொடுத்து அதைச் செழித்து வளரச் செய்வது போன்று உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களிலும்… ஒவ்வொரு ஜீவ அணுக்களிலும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வை உரமாக்குகின்றோம். அதை நுகரும் ஆற்றலையும் பெறச் செய்கின்றோம்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நீங்கள் செல்லப்படும் பொழுது “பேரண்டத்தின் பேருண்மைகளை நீங்கள் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றீர்கள்…”

இப்பொழுது இல்லை என்றாலும்…
1.இதனுடைய வரிசையில்… “யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ… அவர்கள்”
2.இந்த அண்டத்தின் நிலைகள் உங்கள் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது…? என்பதை நிச்சயம் உணர முடியும்.

சுவாசம் எனும் அச்சாணி

சுவாசம் எனும் அச்சாணி

 

காட்சி:-
வண்டியில் சக்கரம் சுழன்று… வண்டி ஓட அது உதவியாக வருகின்றது. ஆகவே வண்டி ஓட அந்தச் சக்கரம் தேவை தான். ஓடும் பொழுது அவ்வாச்சாணி முறிந்து சக்கரம் சுழன்று ஒரு பக்கம் உருண்டோடி விடுகின்றது… வண்டியின் குடை சாய்ந்து விடுகின்றது.

வண்டி ஓட அச்சாணி எப்படி முக்கியமோ அதைப் போன்று இந்த வாழ்க்கை என்ற வண்டி ஓடவும்… உடல் என்ற வண்டி ஓடவும்… அச்சாணி தேவை.

விளக்கம்:-
1.வாழ்க்கை வண்டிக்குப் “பொருளான அச்சாணி” வேண்டும்.
2.இந்த உடல் என்ற வண்டிக்கு இவ்வெண்ண “சுவாச அச்சாணி” வேண்டும்.
3.எண்ணத்தின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் செயலைக் கொண்டு தான் இப்பிம்ப உடலின் ஆரோக்கியத் தன்மையே உள்ளது.

“எண்ணத்தால் தான் அனைத்தும் நடக்கின்றது…” என்று உணர்த்துகின்றேன். ஆனால் இந்த உடலின் உணர்வு நிலை எதன் தன்மை கொண்டது…? என்று கேட்பீர்கள்.

உடலின் உணர்வினால் உணவையும் பசியையும் தாகத்தையும் உறக்கத்தையும் உடல் இச்சையையும் நாம் எண்ணத்தில் எடுப்பதற்கு முதலிலேயே “உணர்வின் உந்தலினால்…” நம் எண்ணத்தால் கொண்ட சுவாசத்தில் உணர்கின்றோம்.

இந்த உணர்வின் நிலை எப்படி ஏற்பட்டது…? எண்ணத்தால் இந்த உணர்வின் அலையை மாற்றி அமைக்க முடியும்.

ஆரம்பக் காலத்தில் இரண்டு வகை குண அமிலச் சேர்க்கையின் ஈர்ப்பில் ஜீவ சக்தி தோன்றியவுடன் அவ்வமில குணம் திடப்பட்டு வளர்ச்சியின் ஜீவ சக்தி உயிர் சக்தி ஏற்படுகிறது.

ஏற்பட்டவுடன் அதன் வளர்ச்சிக்குகந்த ஈர்ப்பின் உணர்வுக்கு மேன்மேலும் தன் உணவைச் சேமித்து… அதன் வட்ட வளர்ச்சி கூடக் கூட உணர்வின் தன்மையும்… உணர்வுக்குகந்த ஈர்ப்பு ஆகாரத்தையும்… சேமித்த இந்த உணர்விலிருந்து தான்… “உருவின் நிலையும் பெறுகின்றது ஜீவ ஆத்மாக்கள்…”

ஆரம்பக் காலத்தின் அமில குணச் சேர்க்கை என்று உணர்த்தியது இந்த உடல் பிம்பத்தைப் பெறத் தக்க அமில குணச் சேர்க்கைக் காலத்தைத்தான் குறிப்பிட்டேன்.

இப்படி இதன் வளர்ச்சி நிலை கூடிக் கூடிப் பல காலமாகச் சேமித்த இந்த உணர்வலையின் வழி சக்தியினால்தான் “எண்ண சக்தியே வலுப் பெற்று” ஜீவ ஆத்மாக்கள் வளர்ந்துள்ளன.

பல பல கோடி ஆண்டுகள் இந்த உணர்வின் அடிப்படை குண அமில ஈர்ப்பை வளர்த்துக் கொண்டு எண்ணியதைச் செயலாக்கும் மனித உரு பிம்ப ஜீவன்களுக்குத் தன் உணர்வின் அலையின் சக்தியும் இந்த எண்ண வளர்ச்சி ஏற்பட்ட ஜீவ உடல் கொண்ட பிறகு…
1.இயற்கையில் உடலில் தன் உணர்வை வெளிப்படுத்தும் செயல் அமிலங்களின் நிலை உள்ளன.
2.எண்ண வளர்ச்சி நிலை கொண்ட மனிதனால் மட்டும்
3.தன் எண்ணத்தால் உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு தன்மையையும் மாற்றி அமைக்க முடியும்.
4.இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் நிலைக்குகந்த செயலினால்
5.இவ்வுணர்வலையையும் மாற்றி அமைக்க முடியும்.
6.இவ்வுடலுக்கு உணவும் தூக்கமும் இச்சையும் தேவையில்லையா…?
7.இதனை மாற்றியமைப்பதனால் உடல் பிம்ப நிலை எப்படி நிலைத்திருக்கும்..?

உடலுக்குத் தேவையான உணவும் உறக்கமும் வேண்டியது தான்.

ஆனால் இவ்வெண்ணத்தின் செயலினால் அதன் பால் அந்த உணர்வின் தன்மைக்குகந்த வழித் தொடரிலேயே நம் எண்ணத்தைச் செலுத்தி அதன் செயலுக்கே நாம் சென்றுவிட்டோம் என்றால் அதே உணர்வின் எண்ண ஈர்ப்பின் லயிப்பில் தான் நம் ஜீவித காலம் அனைத்தும் சென்றுவிடும்.

பலதரப்பட்ட குணமும் பலதரப்பட்ட சுவையும் விரும்பக்கூடிய ஆத்மாக்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை சுவையும் உறங்கும் தன்மையும் இருந்திடும்.

அவனது குண நிலையும் சுவை நிலையும் அவனால் இந்த வாழ்க்கையில் மட்டும் எடுத்ததல்ல. ஆரம்ப அமில குண வளர்ச்சி காலத்திலேயே அவன் ஈர்த்து உணர்ந்த எண்ணத்தின் தொடர்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று வரை உள்ளது. உணர்ச்சியிலும் அவனது உடலின் இச்சையின் நிலையும் இவ்வாரம்பக் காலத்தின் வளர்ச்சியில் வந்தது தான்.

பசியும் தூக்கமும் ஆரம்பக் காலத்தில் குழந்தைப் பிராயத்திலிருந்தே அறிந்து உணர முடிகின்றது. ஆனால் வளர்ந்த பிறகு தான் உடல் இச்சையின் உணர்வு ஏற்படுகின்றது.

தாவரங்கள் அதன் வளர்ச்சியின் அமில குண சேர்க்கையின் சக்தி படிவத்தினால் அதன் பலனை வளர்ந்த பிறகு பூவாகி காயாகிக் கனியாகித் தருகின்றன.

அதைப் போன்று மனித வளர்ச்சியிலும் இவ்வளர்ச்சி முற்றலின் அமிலச் சேர்க்கையின் உணர்வின் நிலை குறிப்பிட்ட வயது வரம்பு சேர்க்கைக்குப் பிறகு வெளிப்படுகின்றது.

இந்த உணர்வின் வழித் தொடரினால் ஏற்படும் இந்நிலைகளை எண்ணத்தின் நிலைக்கொப்ப எப்படி ஒவ்வொரு மனிதனும் வழிப்படுத்தி வாழுகின்றான்…?

1.இந்த உடலின் தேவையான பசிக்கும் தூக்கத்திற்கும் இச்சைக்கும்
2.இவ்வெண்ணப் பழக்கத்தைச் செலுத்திய முறைப்படி அதன் தேவைகளை எல்லாம்
3.இவ்வெண்ணத்தின் பிடியில் அளவுடன் ஒரு நிலைப்படுத்த முடியும்.

தன் எண்ணத்தைக் கொண்டு இவ்வுணர்வின் இச்சைகளை எல்லாம் ஒரு நிலையில்… இவ்வுடலின் பிம்பத்திற்குத் தேவையான அளவுடன் செயல்படுத்தி வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கை… அழகுடனும்… அமைதியுடனும்… மனிதன் மனிதனாக இருக்கவல்ல தன்மையுடனும் இருக்கும்.

தலைப்பென்ன தலைப்பு…! தலைவனையே தலைப்பாக்கு…! தந்திடுவான் சகலத்தையுமே…!

தலைப்பென்ன தலைப்பு…! தலைவனையே தலைப்பாக்கு…! தந்திடுவான் சகலத்தையுமே…!

 

“உரைக்கும் உரை எல்லாம் உனதாக இருந்திடவே” என்பது யாரைப் பார்த்துப் பாடுகின்றார்…?

“உரைத்து விடு ஈஸ்வரா… உரைக்கும் உரை எல்லாம் உரைத்து விடு ஈஸ்வரா…!” எப்பாடளைப் பாடினாலும்
1.முதல் அடியை அவனுக்கு அருளிவிடு
2.தந்திடுவான் அப்பாடலின் தத்துவத்தையே.

உண்ணும் உணவெல்லாம் உனதாகும்
உறங்கும் உறக்கம் எல்லாம் உனதாகும்
உணர்வில் உணர்வாக ஊன்றி விடு…
உலகாண்ட ஈஸ்வரனே…!

உலகை என்னும் பொழுது இந்த ஒரு உலகை மட்டும்தான் குறிக்கும். “உலகாண்ட ஈஸ்வரனே” என்னும் பொழுது அதன் அர்த்தமே வேறு.

இப்பாட்டின் தன்மையில் தான் உலகத்தன்மை எல்லாம் உள்ளது. பாடலை ஆடிக் கொண்டே பாடிவிட்டார்… உணர்வையும் மாற்றிவிட்டார்… தனதாக எண்ணிவிட்டார்… “தந்தேனா என் பாடலை…?”

உனதல்ல எனதல்ல இவ்வுலகம் என்பதன் பொருளும் இதுவே தான். தன் உதயத்துக்கு வந்தது என்று எண்ணிப் பாட்டை பாடி வந்தான்.
1.தலைப்பென்ன தலைப்பு…!
2.தலைவனையே தலைப்பாக்கு…!
3.தந்திடுவான் தனிக்கவிதைகளை.

உன் சஞ்சலத்திற்கு விடையளிக்கின்றேன்…!

மனமான சஞ்சலத்தை வளர விடாமல் மனதில் உள்ள எண்ணத்தைப் பெரும் சஞ்சலம் ஆக்கி விடாமல் “அவனிடம் (ஈசனிடம்) சமர்ப்பித்தால் அவன் அளிப்பான் அதன் விடையை…!”

சித்தர் என்பவர் யார்…? எந்த நிலையில் அவர்கள் உள்ளார்கள்…? என்னும் சஞ்சலம் ஏன் உள்ளது…? சித்தரும் ஞானியும் எப்படி உள்ளார்கள்…? என்ற எண்ணச் சஞ்சலத்தின் உள்ளே தவிக்கின்றாய்.

மனிதனால்… மனிதனால் என்னும் பொழுதெல்லாம் எண்ணுகின்றாய். ஆண் வர்க்கத்தையே. “ஆண்… பெண்” என்னும் மாற்று நிலை எனக்கில்லை (ஈஸ்வரபட்டர்).

உன் சஞ்சலம்…
1.உடலுடன் உள்ள போகர் எப்படி உள்ளார்…?
2.அவரின் உறக்க நிலை என்ன…?
3.உண்ணும் நிலை என்ன…? உடலின் நிலை என்ன…?
4.உடலுடன் உள்ள போகர் அந்நிலையில் என்ன செய்வார்…? என்று எண்ணுகின்றாய்.

“ஈஸ்வரபட்டரான… என் நிலையை எண்ணிப்பார்…” உடலை விட்டு நான் பிரிந்து சென்று விட்டேன் என்ற உண்மையைச் சாமி (ஞானகுரு) சொன்னதை எடுத்துக் கொண்டுள்ளீர்கள்.

போகரின் நிலையில் அவர் எந்த நிலையில் உள்ளார் என்று ஒருவரும் சொல்லாததினால் நீங்களாக அறிந்திட்ட நிலையில் மனச்சஞ்சலம் கொண்டுள்ளீர்கள்.

எந்நிலையில் தெரிந்து கொண்டீர்கள் அவர் நிலையை…? அந்நிலையிலேயே தெரிந்து கொள்ளுங்கள்.
1.அவர் உயிருடன்… உடலுடன்… உலகமுடன் உள்ளார்.
2.அந்த உடலிலிருந்து அவன் ஆன்மா எந்நிலைக்குச் சென்றாலும் அந்த ஆத்மா திரும்பவும் அவர் உடலுக்கே வருகின்றது.
3.அவர் ஆத்மாவுக்கு எடுக்கும் உணவையே அவர் உடலுக்கும் அளிக்கின்றார்.
4.அவர் உடலுக்கு உணவு வேண்டாம் உணர்வும் வேண்டாம்
5.அந்த உடல் எந்நிலையிலும் எந்த நேரத்திலும் அது அமர்ந்த நிலையிலேயே தான் உள்ளது
6.உடலில் உள்ள ஆத்மா தான் எந்த நிலைக்கும் வருகிறது.

அவர் உடலைப் பாதுகாக்கும் தன்மை எல்லாம் “அவரின் தியான நிலையிலேயே” உள்ளது.
1.உடலில் உள்ள ஆத்மாவை எங்கும் பறக்க விடுகிறார். பழனியில் மட்டும் அவரின் ஆத்மா சுற்றவில்லை.
2.பழமுதிர்சோலையிலும் சுற்றுகிறது. பழனியப்பன் எங்கெல்லாம் உள்ளானோ அங்கெல்லாம் செல்கிறது.
3.முருகா…! என்னும் நாமம் எந்த உள்ளத்தில் இருந்து அபயமாக அழைக்கின்றதோ அங்கெல்லாம் செல்கிறது.

“சித்தர்கள் எல்லாம் சோம்பேறி… ஞானிகள் வேலை இல்லாதவர்கள்… என்ற எண்ணம் தான் மனிதருக்குள்ளே…” போகர் அவர் இருந்த நிலையிலேயே அவ்ஆன்மா அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று அருள் பாலிக்கின்றார்.

உலகையே சுற்றுகின்றார்… முருகா…! என்னும் இடமெல்லாம் சுற்றுகின்றார்… இன்றும் உள்ளார்… உலகுடனே கலந்துள்ளார்.

நான் பிறந்த பயனையும் தான் பெற்ற உடலையும் தன் ஆத்மாவையும் உலகுடனே ஒன்றச் செய்துள்ளார். உலகம் அழிந்தாலும் அவர் நிலை அழியாது.

இந்நிலையைப் புகட்டவே உன் நினைவில் கனவைத் தந்தேன் உலகெல்லாம் அழியும் நிலை உள்ள போது மலை மீதுள்ள கோவில் மட்டுமே சிலர் அங்கே இருந்து காட்டியதன் பொருள் இதுதான்.

1.போகரின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
2.ஒவ்வொரு ஞானியின் நிலையும் எண்ணத்தில் வரும்.

ஒவ்வொரு ஞானிக்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது. அவரவர் பூஜித்த முறையிலும் அவரவர் தியானத்தின் தன்மையிலும் அருளியுள்ளார்கள். அப்பரமேஸ்வரனின் அருள் எல்லாம்… “உங்கள் நிலை என்ன…?” என்பதை நீங்களே எண்ணிக் கொண்டு உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள்.

அவர் அருள்வார் நல் ஆசிகளை. இன்றைய பாட நிலை புரிந்ததா…?

இரத்தினகிரி பிறந்திடுவார் பெரும் புலவனாகப் பாடிடுவார் அவர் புகழை…! அவன் அருளில் பிறந்தவன் நீ.

பகர்ந்திடுவாய் பகர்ந்திடுவாய் பரமேஸ்வரனே
பாரெல்லாம் பாடிடவே பகற்ந்திடுவாய் பரமேஸ்வரனே
பஞ்சம் பஞ்சம் என்கிறார்கள் பாமரர்கள்
பாற்கடல் அளவு தந்தாலும் பஞ்சம் தான்
பஞ்சம் என்னும் பசியைப் போக்கிவிட்டு
பரஞ்சோதியானவனை வணங்கிடவே
பகர்ந்துவிடு பரமேஸ்வரா…!