அன்பு பண்பு பரிவு கொண்டு வாழ்ந்தாலும்… அந்த நல்ல குணங்களைக் காக்கும் சக்தியை நாம் அடிக்கடி எடுக்க வேண்டும்

அன்பு பண்பு பரிவு கொண்டு வாழ்ந்தாலும்… அந்த நல்ல குணங்களைக் காக்கும் சக்தியை நாம் அடிக்கடி எடுக்க வேண்டும்

 

மனிதனாக பின் அன்பும் பண்பும் கொண்டு பாசத்துடன் நாம் வாழ்ந்தாலும் பிறர்படும் துயரத்தையும் அந்தத் துயரச் செயல்களைச் செயல்படுத்துவோரைப் பார்ப்பதும் பிறரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவரையும் நாம் காண நேருகின்றது.

அவர்களை உற்றுப் பார்க்கும் பொழுது “பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றான்” என்ற இந்த உணர்வினை நாம் அறிந்தாலும்… அதை நுகர்ந்து எந்த நல்ல குணத்துடன் நாம் இணைந்து அவர்கள் செய்யும் தவறை உணர்கின்றோமோ… அவர் செய்யும் தவறான உணர்வுகள் இதற்குள் பட்டபின் என்ன நடக்கின்றது…?

சந்தர்ப்பத்தில் நாம் கீழே விழுந்து விட்டால் மேலே எழுந்திருக்க முடியாது ஒருவன் மேலே நம்மை அமுக்கிக் கொண்டிருப்பான் என்றால் எப்படி இருக்கும்…?

இதைப் போன்று நமக்குள் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களில் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று அன்புடன் பண்புடன் பரிவுடன் பார்த்தோம் என்றால்… இந்த இரண்டு குணங்களுடன் நுகரப்படும் பொழுது…
1.அவன் தீமை செய்து கொண்டிருக்கின்றான் என்ற நிலை வந்தாலும்
2.நம் நல்ல அணுக்களில் இது பட்டபின் அவைகள் பலவீனம் அடைகின்றது.
3.ஒருவனைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி உட்கார்ந்தால் எப்படித் துன்பமாக இருக்குமோ
4.அதைப்போல மனிதனை உருவாக்கிய இந்த அணுக்கள் அது வேதனையுடன் துடிக்கத் தொடங்கிவிடும்.
5.நாம் வேதனையுடன் துடிக்கப்படும் பொழுது எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணினால் கீழே தள்ளும் நிலை தான் வரும்.

மனித வாழ்க்கையில் பண்பும் பரிவும் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்கு செய்கின்றான் என்றால் தீங்கு செய்பவனையும் பார்க்கின்றோம்… தீங்கினால் பாதிக்கப்பட்டுப் பதறி அழுபவனையும் பார்க்கின்றோம்.

இரண்டையும் கலந்து இந்த உணர்வுகள் வெளிப்படுவதை நாம் நுகர்ந்தறியும் பொழுது நம் நல்ல குணங்களுடன் இணைந்து விடுகின்றது.

அப்பொழுது நம் நல்ல குணங்கள் அடுத்து ஒரு தரம் செய்தாலும்…
1.நம்மை அறியாமலேயே “என்ன உலகம்…? எந்த நன்மையைச் செய்தாலும் இப்படி ஒரு உலகம் இருக்கின்றதே…!” என்று
2.அந்த உணர்வுகள் நல்லதைப் பேசாது தவறு செய்யும் உணர்வுகளையே நம்மைப் பேச வைத்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு இனிமையான பாடலை டேப்பில் பதிவு செய்து கொண்டிருக்கும் போது அதில் எதிர்மறையாக ஒலி பதிவாகிவிட்டால் நல்ல பாடலையும் அது இடைமறித்து அந்த இனிமையை மடக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் நுகரும் சந்தர்ப்பத்தில்… நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… தீமை செய்பவனையும் அதிலே சிக்குண்டவரையும் இந்த இரண்டு உணர்வையும் நுகரப்படும் பொழுது… அவன் பதறுவதை இந்த வலுக் கொண்ட உணர்வாக உயிர் மாற்றிவிடுகின்றது.

அதே சமயத்தில் நல்ல குணங்களுடன் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த நல்லவனுக்காக நம் எண்ணங்கள் பட்டாலும் அவன் பேசும் வேதனை உணர்வுகளை நல்ல அணுக்களில் பதிந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…! உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை… நல்ல உணர்வுகளை உருவாக்கும் அந்த அணுக்களைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.

அவ்வாறு அது செயலிழக்காமல் இருக்க வேண்டுமென்றால்
1.உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் என்ற நிலை கொண்டு
3.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி.. நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.

நம் நினைவு மிக மிகக் கூர்மையாக இருக்க வேண்டும்

நம் நினைவு மிக மிகக் கூர்மையாக இருக்க வேண்டும்

 

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் பலவாக உள்ள நினைவின் ஓட்டத்தை ஒரு நிலைப்படுத்திப் பல நிலை கொண்ட அமில குணத்தையெல்லாம் ஒரு வழிக்கு வர பழக்கப்படுத்தித் “திசை திருப்பும் ஞான வழி பெறுதல் வேண்டும்…!”

அப்படிப் பெற்றால்…
1.தான் எடுக்கும் சுவாச ஈர்ப்பினால் எந்த ஒரு நற்சக்தியின் பால் தன் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
2.அதே நினைவில் சுவாசம் எடுத்து… அதன் வழித் தொடர் நினைவில்…
3.அத்தொடரில் உள்ள உண்மையின் வளர்ச்சியை நிச்சயமாகப் பெற முடியும்.

ஞானத்தின் பால் செலுத்தப்படும் இந்த ஈர்ப்பு குண நலம் அமையப் பெறும் வழித் தொடரில் சென்றால் “எந்த ஒரு நுண்ணிய அலைத் தொடரையும்…” வளர்ச்சி ஞானத்தினால் பெற முடியும்.

அத்தகைய நுண்ணிய அலைத் தொடரிலிருந்து…
1.நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுடனும் இந்த நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டு
2.இப்பிம்ப உடலிலிருந்து உயிர் ஜீவ சக்தியைத் தனித்துப் பிரித்துச் சென்று எல்லாவற்றையும் அறிய முடியும்.

அதாவது…
1.ஒவ்வொரு அமில குணங்களின் சேர்க்கையையும் அதன் வட்டத்திலிருந்து உயிர் பெறும் ஜீவ நிலையையும்
2.ஒன்றுடன் ஒன்று கலவைப் பட்டு வளரும் நிலையையும்
3.இப்பூமியில் உள்ள கனி வளங்களின் நிலை அறியவும்
4.கனி வளத்திலிருந்து கசிந்து உருகி வரும் திரவ நிலைகளை அறியவும்
5.இப்பூமியின் பூமத்திய ரேகையில் உள்ள உண்மை நிலைகளையும் அறிய முடியும்.

விஞ்ஞான சாதனை கொண்டு செயற்கை மின் அலையின் தொடரினால் செயற்கை மின் அலையிலிருந்து விஞ்ஞானத்தில் கண்டறியும் ஆற்றலைக் காட்டிலும்
1.இஜ்ஜீவ மின் அலையின் சக்தியை வளர்த்துக் கொள்ளும் மனிதனால்
2.தன் உயிராத்மாவை எந்த இடத்திற்கும் சென்று..
3.பூமியின் மேல் மட்டத்தில் உள்ள நிலைகளை அறிவது போல்
4.இந்தப் பூமியின் உட்கோளங்களில் வளர்ந்து வரும் நிலைகளையும் அறியலாம்.

அது மட்டுமல்ல…!

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையும் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலத்தையும் இந்த நுண்ணிய அலையின் சக்தியை வளர்த்துக் கொண்ட மனிதனால் காண முடியும்.

இந்த உடல் அப்படியே ஒரு இடத்தில் இருந்தாலும்… விட்டுச் சென்ற உடலில் அனைத்து உயிரணுக்களும் இந்த நுண்ணிய மின் அலையின் சக்தியின் ஈர்ப்புடன் இயங்கிடும்.

உடலில் உள்ள தசைகளும் மற்ற எல்லா உறுப்புகளும் அதே நிலையில்… அதாவது…
1.உண்டு கழிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்
2.சுவாசம் எடுத்துச் சுவாசம் விட்டு இருக்கக்கூடிய நிலையும் இல்லாமல்
3.இந்த உடல் பிம்பம் எந்த வகைப் பின்னமும் படாமல் அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதை எல்லோராலும் பெற முடியும்…!

ஆனால்
1.மந்திரமும்… மாயமும்…
2.தெய்வீகப் பெரும் சக்தி என்றும்…
3.சாதாரண மனிதனால் முடியாத நிலை என்றும்
4.மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை மனிதன் எடுக்க முடியாமல்…
5.எட்டாத நிலைப்படுத்தி மறைக்கப்பட்டு விட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது.

செயற்கையின் மின் அலையை விஞ்ஞானப்படுத்திச் செயலாக்கும் மனிதனால்… தன் அலையின் தொடர்பிலிருந்தே அச்சூரியனின் ஒளி அலையின் ஈர்ப்பினால்… தன் உயிராத்மாவால்… எந்த ஒரு நுண்ணிய அலையின் வளர்ச்சியையும் ஜீவ உடல் கொண்டு மனிதனால் எடுக்க முடியும்.

இது சாத்தியமே…!

வேதனைப்படவும் கூடாது… வேதனைப்படுவோரைக் கண்டு ரசிக்கவும் கூடாது

வேதனைப்படவும் கூடாது… வேதனைப்படுவோரைக் கண்டு ரசிக்கவும் கூடாது

 

அரசியலில் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் கூடிக் குலாவி மகிழ்வார்கள். ஆனால் கட்சி மாறிவிட்டால் “இவன் துரோகி…! நாட்டுக்கே ஆகாது…” என்று அவன் எவ்வளவு நண்பனாக இருந்து எவ்வளவு உதவி செய்திருந்தாலும் அரக்கத்தனமாகத் தாக்கி… வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

மனிதனுடைய பண்புகள் எந்த அளவிற்கு இருக்கின்றது…? என்று பாருங்கள்.

அரசியலில் மதம் இனம் குலம் என்று மனிதருக்கு மனிதர் உதவி செய்து கொண்டிருந்தாலும்,,, சந்தர்ப்பத்தில் பேதங்கள் வந்துவிட்டால் செய்த நன்மைகளையும் மறக்கச் செய்து தவறுகள் செய்யும் உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது.

காரணம் மனிதனின் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அதன் உணர்வுப்படி உயிர் இயக்குகின்றது. பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனாகப் பிறந்தோம்.

ஆனால்
1.மனிதனான பின் அசுர உணர்வுகள் தனக்குள் நுழைந்து விட்டால்
2.மீண்டும் நரகலோகத்திற்குச் செல்லும் அணுக்களாகத் தனக்குள் மாற்றுகின்றது என்று பொருள்.

இன்று இரக்கமற்று ஒருவரைப் பேசலாம் தொல்லைகளைக் கொடுக்கலாம் அது மட்டுமல்ல அவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கவும் செய்யலாம்.

ஆனால் எதனை இப்படி நாம் உருவாக்கினோமோ இந்த உணர்வுகள்
1.அதை நுகர நுகர நுகர விஷத்தன்மை கொண்ட அணுக்களாக நமக்குள் விளையும்
2.பின் நோயாக விளையும் பொழுது அந்த உணர்வுகள் விஷத்தன்மை கொண்ட மனிதனல்லாத உருவை உருவாக்கும் நிலைகளுக்குச் சென்று விடும்.

அதிகமாக வேதனைப்படுவோரைப் பார்த்து “அவனுக்கு இப்படித்தான் வேண்டும்…” என்ற நிலைகளை நாம் எண்ணி ஏங்கி அந்த வேதனையை ரசித்தோம் என்றால் அடுத்து பாம்பினமாகத் தான் நாம் பிறப்போம்.

அந்த அணுக்களின் மாற்றங்களும்… அதன் உணர்வின் இயக்கங்கள் எப்படி மாறுபடுகின்றது…? இந்த உடல் எப்படி நலிகின்றது…? மனிதனின் உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

1.அவன் செய்ததற்குத் தண்டனை கிடைக்கின்றது…
2/அவன் அனுபவிக்கின்றான்… என்ற எண்ணமே நமக்கு வரக்கூடாது.

அப்போது நாம் எதை எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனுக்குள் நல்ல உணர்வு தோன்ற வேண்டும்… அறியாத நிலையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்குப் பதிலாக… அதிகமாக நம்மைத் தாக்கிப் பேசுகிறான்…! ஆகையினால் அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்து விட்டால்… நம்மால் தாங்க முடியவில்லை என்றால் நமக்குள் கோபமும் கொதித்தெழும் தன்மையும் அவனை அழித்திட வேண்டும் என்ற உணர்வே தூண்டும்.

அந்த உணர்வு தூண்டப்படும் பொழுது
1.தவறு செய்தது அவர்கள்
2.நுகர்ந்தறிந்தது நாம்
3.உயிர் அறியச் செய்கின்றது… அந்த அணுவாக மாற்றி விடுகின்றது
4.அவன் எந்தத் தவறைச் செய்தானோ அதிலிருந்து உருவான அணு நம் உடலில் ஒட்டி வினையாக அது இயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆனால்… நாம் தவறு செய்யவில்லை.

“அவன் கெட வேண்டும்” என்று நாம் தொல்லைகள் கொடுத்தோம் என்றால் அதே உணர்வை நுகரப்படும் பொழுது அதே உணர்வின் அணுக்களாக உடலுக்குள் உருவாகி… அவன் செயல் நம் உடலில் உருவான உணர்வின் தன்மை கொண்டு அந்த அணுக்கள் தன் இரைக்காக உணவுக்காக ஏங்கும் பொழுது… அந்த உணர்வின் செயலாக உடலை இயக்கி விடுகின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே ஒருவர் கடுமையாக நம்மை ஏசுகிறார் என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இதை எடுத்து அந்தத் தீமை விளையாதபடி அந்த மகரிஷியின் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அப்பொழுது
1.அவர் சொல்லும் உணர்வையும் இதையும் இணைத்து நாம் நுகரப்படும் பொழுது
2.அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கும்.
3.அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் கூடும்.
4.இதனை எடுத்து அவன் அறியாத இருளில் இருந்து நீங்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்கு மேலும் அவர் உணர்வு “நம் மீது தாக்கி… நாம் தாங்க முடியாத நிலை இருந்தால்…” அவன் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனுக்குள் அதுவே விளைந்து அவன் உணரட்டும்…! என்று
1.எனக்கு வேண்டாம்…
2.நீயே அனுபவித்து உன்னுடைய உணர்வுகளை அறிந்து… அதன் வழியாக நீ அதை அனுபவித்துப் பார் என்று மட்டும் சொல்லி விடுங்கள்.

அதாவது… எவர் ஒருவர் நீங்கள் கெட வேண்டும் என்ற உணர்வை எண்ணி அதிகமாகத் தூஷிக்கின்றனரோ… அந்தக் காலங்களில் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டாம்

அதுவே அவருக்குள் விளைந்து அவரே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்…! என்ற நிலையைச் சொன்னால் போதும். அது நம்மைப் பாதிக்காது.

சித்தாவது எப்படி…?

சித்தாவது எப்படி…?

 

தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்…?

குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.

அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று… பக்குவம் எய்தி… அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.

நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்…
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ…ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.

புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்…? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.

இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை…
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.

இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.

விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.

எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ… எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ… அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.

“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை…!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.

அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.

அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது… நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.

அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.

இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது…? என்று வினா எழுப்புவான்.

ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.

இரவிலே புலனடங்கித் தூங்கினாலும்… பகலில் நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்கும் விதம்

இரவிலே புலனடங்கித் தூங்கினாலும்… பகலில் நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்கும் விதம்

 

ரோட்டிலே போகும் பொழுது அல்லது பஸ்ஸிலே செல்லும் பொழுது ஒரு விபத்து நடப்பதை நேரடியாகப் பார்க்கின்றோம் அந்த உடல் அப்பொழுது சிதைகின்றது… அந்த மனிதன் அலறும் ஓலங்கள்… அந்த ஒலி அலைகள் அங்கே படர்கின்றது.

அங்கே எத்தனை விதமான ஒலிகள் படர்கின்றதோ சூரியனுடைய காந்த சக்தி அதை எடுத்து வைத்துக் கொள்கின்றது. அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி உடலில் பதிவாக்கி விடுகின்றது.

அந்த உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் பரவி உள்ளது.
1.நாம் இப்படி நுகர்ந்த உணர்வு நமக்குள் பதிவாகி இருக்கப்படும் பொழுது
2.இரவிலே நம்மை அறியாமல் திடுக்… திடுக்… என்று பயப்படுவோம்.

காரணம்… மனிதன் மற்ற சிந்தனை இல்லாது உறங்கப்படும் பொழுது நம் உடலில் இருக்கும் உணர்வுகளில் “அது” வலுவாக இருக்கின்றது.

பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்த விஷம் தான் முன்னணியில் இருக்கும். “சப்…” என்று இருக்கும் ஒரு பொருளில் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னணியில் இருக்கும்.

இதைப் போன்று மனிதனின் வாழ்க்கையில் நல் ஒழுக்கங்களையும்… நல்ல செயல்களையும்… நல்ல நிலைகளையும் பார்த்துணர்ந்த நாம் எதிர்பாராது ஒரு விபத்தைப் பார்க்க நேர்ந்து… அங்கே அவன் உடல் சிதைந்து வேதனையுடன் வெளிப்படுத்திய உணர்வுகளை நம் கருவிழி உடலில் இங்கே பதிவாக்கி… அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின்… “அவன் வேதனைப்பட்டது போன்று அச்ச உணர்வுகள் நமக்குள் உருவாகின்றது…”

அதை நுகர்ந்து அந்த உணர்வின் அணுக்களை அதிகமாக இங்கே பெருக்கி விட்டால்… நாம் புலனடங்கித் தூங்கும் பொழுது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு அதிகமாக இழுத்து…
2.நம் ஆன்மாவிலே வந்து உயிரிலே பட்ட பின் நம்மை அறியாமல் அலறுகின்றோம்… துடிக்கின்றோம்.

சில பேர் மற்றவரிடம் அடிவாங்கிய பின் அந்த அடி தாங்காது எழுந்து ஓடும் நிலை வரும். அதே போல மனிதனாக இருக்கக்கூடிய நிலையில் அதை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தூக்கத்திலே… ஐய்யய்யோ..! யாரோ என்னை அடிக்க வருகின்றார்கள்…! என்று எழுந்து ஓடுபவர்களும் உண்டு.

காரணம்… அடிப்பதை வேடிக்கைதான் பார்த்தார்கள். அந்த உணர்வின் தன்மை கரு விழி பதிவாக்கி விடுகின்றது அவன் உடலில் இருந்து வரக்கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் செல்கின்றது.

அடிப்பவனையும் நாம் பார்க்கின்றோம் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம். இரண்டு உணர்வையும் நம் கருவிழி இங்கே பதிவாக்கி வைத்து விடுகின்றது. இது கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக வருகின்றது.

அக்ரிகல்ச்சரில் பல பொருள்களைச் சேர்த்துப் புதிதாக எப்படி உருவாக்குகின்றார்களோ… அதைப் போல நம்முடைய செயல்கள் சந்தர்ப்பத்தில் நாம் உற்று நோக்கிய உணர்வுகள் அங்கே அடிப்பவனையும்… அடியினால் அரண்டு ஓடக்கூடிய நிலையும்… இரண்டும் கலக்கப்படும் பொழுது உயிர் நுகர்ந்து இதில் எதனின் ஆக்கம் அதிகமாகி “இப்படிச் செய்கின்றானே பாவி…!” என்று ஓடுவதைக் கண்டு அந்த பய உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

இந்தப் பதிவின் துடிப்பு அதிகரிக்கப்படும் பொழுது இரவிலே தூங்கும் பொழுது நமக்குள் “அவன் உருவம்” தெரிவதில்லை ஆனால் யாரோ என்னை அடிக்க வருகின்றார்கள்… என்ற அந்த உணர்வு கொண்டு அஞ்சி… தூக்கத்தில் எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

புலனடங்கித் தூங்கினாலும்…
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வு சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு இந்த உணர்வை இயற்கையில் நாம் எப்படி வாழ்ந்தோமோ (முழித்திருக்கும் போது)
2.அதே செயலாக்கங்களை இரவிலே கொண்டு வருகின்றது.

இப்படி சிலர் தூக்கத்தில் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். ஒரு சிலர் தூங்கும் பொழுது “என்னைக் கொல்கின்றார்களே… என்று சொல்வதையும்; என்னை அமுக்குகின்றனர்… கொல்கின்றனர்…” என்றெல்லாம் வரும்.

இதே போன்று சிலருடைய தாக்குதலான உணர்வுகளை ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறுவதை உற்று நோக்கி அந்த உணர்வினைப் பதிவாக்கினால் மீண்டும் அந்த அதிர்ச்சியின் உணர்வுகள் அது வலுவாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும்போது அதுவும் இயக்கும்.

நண்பன் சொன்னதை அவர் பார்த்தார் ஆனால் நாம் பார்க்கவில்லை. பார்த்து அநியாயம்பா… இப்படி அடித்துக் கொள்கின்றார்கள் என்று அவர்கள் சொன்னால் போதும்.

அவர்களில் பதிவான உணர்வு சொல்லாக வருவதை நமது கண் கவர்கின்றது உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அவர் எதைப் பார்த்தாரோ நாம் அந்த ஆளைப் பார்க்கவில்லை.

அவர் எந்த உணர்வின் வேகத்தைப் பார்த்தாரோ அந்த சொல் நமக்குள் பதிவான பின் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது அந்த மனிதனின் வேதனை நமக்குள் தெரிய வரும்.

வேதனைப்படுகின்றான்… புலம்புகின்றான்… அவனை அடித்துக் கொல்கின்றார்கள் என்ற இந்த உணர்வு நமக்குள் இருப்பதால் “அது உயிரிலே பட்டபின்”
1.அவன் தன்னை அடிக்க வருகிறான் என்று நாம் தூக்கத்தில் எழுந்து ஓடுவோம்
2.அல்லது அடிக்க வருகின்றார்கள் என்று இரவிலே கத்துவோம்.

இதைப் போன்று ஒருவன் குடும்பக் கஷ்டத்தினால் நீரிலே மூழ்கி மூச்சுத் திணறி இறந்து விடுகின்றான். இன்னொருவர் அதைப் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்கள். இது மாதிரி ஆகிவிட்டான்… அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று அங்கே சொல்வார்.

அதைக் கேட்பவர் உணர்வுகளில் அது அப்படியே பதிவாகும். அதே உணர்வின் தன்மை இங்கே வரப்படும் பொழுது அவர் வீட்டில் சங்கடமும் சலிப்பும் இருந்து அன்றைக்கு அவர் தூங்கினால் புலனடங்கிய நேரத்தில் சோர்வு என்று வரப்படும் பொழுது அவர்கள் சொன்னது போல (குளத்திலே விழுந்து மூழ்கி இறந்து விட்டான் இங்கே கத்தினான் என்று சொன்னது)
1.பதிவான அந்த உணர்வுகள் இங்கே வந்து தன்னை அறியாமலே கிணற்றிற்குள் மூழ்குவது போன்று தெரிய வரும்
2.தண்ணீருக்குள் மூழ்கிக் கத்துவது போன்று தெரியும்.

இதுகள் எல்லாம் நமக்குள் பதிவான உணர்வுகள்… நாம் புலனடங்கித் தூங்கினாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை உடலிலே சுழலச் செய்து
2.அதே செயலாக்கங்களைச் செயல்படுத்துகின்றது.

காரணம் நாம் எதைப் பதிவு செய்கின்றோமோ உடலுக்குள் பதிவான அதே உணர்வு மீண்டும் நம்மை இயக்கச் சக்தியாக இயக்குகின்றது.

“இன்று சொல்லும்” பக்தி நெறியில் வளர்ந்ததல்ல… சப்தரிஷிகளின் வளர்ச்சி நிலை

“இன்று சொல்லும்” பக்தி நெறியில் வளர்ந்ததல்ல… சப்தரிஷிகளின் வளர்ச்சி நிலை

 

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால்
1.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்தச் சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.
3.ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.
3.இதை யாரும் மறுக்க முடியாது…!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”

“மரண பயத்தை விட்டால் தான்” உயிராத்மாவின் சக்தி நிலை கூட முடியும்

“மரண பயத்தை விட்டால் தான்” உயிராத்மாவின் சக்தி நிலை கூட முடியும்

 

முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற் பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்,

இன்று நாம் சிந்தனை குலைந்து (TENSION… STRESS…) உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கிய காரணம்

இன்று நாம் சிந்தனை குலைந்து (TENSION… STRESS…) உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கிய காரணம்

 

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அந்தக் காரமான மிளகாயிலும் புழு உருவாகிறது.

அதைக் காட்டிலும் கடுமையான பூச்சி மருந்துகளை அடித்து அந்தப் புழுவைக் கொல்லும் பொழுது புழு சாகின்றது.
1.புழுவைக் கொன்ற அந்த விஷம் ஆவியாக மாறுகின்றது.
2.அந்த மிளகாய்ச் செடியில் புழுவைத் தாக்கிய இந்த விஷம் ஊடுருவுகின்றது.

அந்த மிளகாய்ச் செடியில் விளைந்த மிளகாயை நாம் உணவுப் பதார்த்தங்களில் சேர்த்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நமக்குள் “நோயாகவும்…” மாறுகின்றது.

மனிதன் விஞ்ஞானத்தால் பல விஷப் பூச்சிகளைக் கொன்றாலும் இது இந்த நிலை ஆகின்றது.

முந்தைய காலங்களில் இத்தகைய விஷப் பூச்சிகள் ஏற்பட்டால் அதை இயற்கையான முறைகளைக் கையாண்டு பூச்சிகள் உருவாகாமல் தடுத்தார்கள்.

சாணத்தை எரிக்கும் பொழுது
1.அந்த நெருப்பால் விஷம் ஒடுங்குகின்றது.
2.அப்பொழுது விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் அந்தச் சாம்பலில் கலந்துவிடுகின்றது

மாட்டுச் சாணங்களைச் சாம்பலாக உருவாக்கி அந்த சாம்பலைப் பயிர்களில் தூவி விடுவார்கள். சாம்பலைத் தூவினால் பயிர்களின் உருவான இந்தப் பூச்சிகள் இந்த மணத்தைக் கண்டு மடிந்துவிடும்.

ஆனால் அதற்கு எதிர் நிலையாகப் படும் போது அதை உணவாக உட்கொண்டாலும் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

அந்தச் செடியில் விளைந்து வருவதை உணவாக உட்கொண்டால் நமக்கு நோயில்லாத நிலை வருகின்றது.

தாவர இனக் கழிவுகளைச் சேர்த்துக் குளங்களில் வண்டலாக மாறுகின்றது. இந்த வண்டலையும் சாணத்தையும் கலந்து வரும் போது
1.இந்த மண்களில் விஷப் புழுக்கள் உருவாவதில்லை.
2.சோளமோ மற்ற பருப்போ அதிலே போட்டோம் என்றால் புழுக்கள் அதிகமாக விழுவதில்லை.

புழுக்கள் அதிகமானாலும் சாம்பலையும் வெறும் உப்பையும் கலந்து அதிலே தூவினால் பருப்பு காய்கறிகளில் வரக்கூடிய புழுக்கள் அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

நெற் பயிர்களுக்கும் இதைப் போல சாம்பலும் சாப்பாட்டு உப்பையும் கலந்து தூவினால் அந்த காலங்களில் நெல் பயிரும் நன்றாக இருந்தது.

இப்போது விஞ்ஞான முறைப்படி விஷத்தைத் தூவிப் புழுவைக் கொல்கின்றார்கள்.
1.அதனுடைய முட்டையில் இந்த விஷம் பட்டு
2.இந்த விஷத்தைத் தாங்கக்கூடிய புழுவாக அடுத்து வந்து விடும்.

அடுத்து இதே மருந்தைத் தூவினால் புழு சாவதில்லை.

அதே சமயம் செடிக்குள் விஷத்தன்மை கலந்து கலந்து அதிலே உருவாகும் நெல் மணியிலும் அது கலந்து விடுகின்றது. கத்தரிக்காய் மற்ற எல்லாக் காய்களுக்கும் விஷ மருந்து தூவவில்லை என்றால் அவை விளைவதில்லை.

செடியில் விஷம் கலந்தபின் அதில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும்போது தூவிய விஷம் நம் இரத்த நாளங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கின்றது.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொள்ளும் போது இந்த மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் அதனுடைய செயலாக்கங்களைக் குறைக்கின்றது.

செடியில் தூவிய விஷங்கள் அனைத்தும் ஆவியாக மாறியதைச் சூரியன் எடுத்து வைத்துள்ளது.

ஆக செடியில் விளைந்ததை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் அந்த விஷங்கள் கலந்துவிடுகின்றது.

அதன் வளர்ச்சியில் செடிக்குத் தூவிய மருந்தினைச் சூரியன் ஆவியாகக் கவர்ந்து வைத்துள்ள அந்த விஷங்களை நம் உடலில் உள்ள அணுக்கள் அது இழுக்கும். இழுக்கும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றும்.

நம் ஆன்மாவாக மாற்றும்போது
1.நம் நல்ல குணங்களுடன் சேர்த்து
2.அந்த விஷமான ஆவியைச் சுவாசிக்கும் போது
3.நமக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
4.மனமும் பலவீனப்படுகின்றது.
5.சொல்லிற்குள் நயம் கெடுகின்றது.

விஷம் கலந்த உணர்வுகளை நாம் கலந்தால் எப்படி “ஆ…” என்று அலறுகின்றோமோ இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் போது ஒருவர் செவிகளில் கேட்டபின் அந்த உணர்வுகளை அவர் நுகரும் போது அவரைச் சிந்திக்கும்படி செய்வதற்கு மாறாக “உணர்ச்சிவசப்படும்படிச் செய்கின்றது”.

1.நன்மையின் தன்மையை நீங்கள் சொன்னாலும்
2.சிந்திக்கும் தன்மைகளுக்கு மாறாக
3.வெறுப்பின் தன்மை உருவாக்கும் நிலையே
4.இந்த விஞ்ஞான அறிவால் வருகின்றது.

பண்டைய காலங்களில் எல்லாம் மனிதனுக்குகந்த நிலைகள் கொண்டு காட்டிற்குள் விளைந்த பல பயிரினங்களைச் சேர்த்துத்தான் நெல்லாகவும் மற்ற மற்ற தானியங்களாகவும் உருவாக்கினார்கள்.

பயிரினங்களில் பூச்சிகள் விழாது தடுப்பதற்காக மற்ற தாவர இனங்களை இது உரங்களாக இட்டார்கள். அப்படி இடப்படும் போது இந்த உரங்கள் தாவர இனச் சத்தைக் கொல்லும் பூச்சிகளை வளரவிடாது தடுக்கின்றது

அந்த மெய்ஞான வழியில் உருவாக்கிய நிலைகள் தான் இவைகள்.

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளின் உணர்வை அறியாது செயல்படும் பொழுது மனிதனின் சிந்தனையைக் குறைக்கும் நிலைக்கும் அழிக்கும் நிலைக்குத்தான் கொண்டு செல்கிறது.

உதாரணமாக வீட்டில் சமையல் செய்யும் போது பெண்கள் மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்… பூச்சிக்கொல்லி மருந்து என்று சொல்வார்கள்.

விஷமான அணுக்களைக் கொல்லக் கூடிய சக்தி மஞ்சளுக்கு உண்டு மஞ்சளை உணவுடன் கலந்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்குள் விஷ அணுக்கள் உருவாகாதபடி அது தடுக்கும்.

இப்பொழுது அதையும் மீறி…
1.வேதனையும் வெறுப்பும் கொண்டு பெண்கள் இருந்தால்
2.மஞ்சள் பவுடரையோ அல்லது மஞ்சளையோ கையில எடுத்து வைத்திருந்தால் போதும்… அதில் வண்டு விழுந்துவிடும்.

கடையில் மஞ்சளை அவர்கள் வைத்திருக்கும் வரை ஒன்றும் செய்யாது. அவர்களும் அதைக் காக்க ஒன்றும் செய்வதில்லை… சுத்தமாகத்தான் இருக்கும்.

ஆனால் வீட்டிலே வாங்கிக் கொண்டு வந்து வைத்து
1.அதில் குறிப்பாக வேதனைப்படுவோர் கையில் எடுத்து உபயோகப்படுத்தினார்கள் என்றால்
2.நிச்சயம் வண்டு விழுகும்… முழுவதும் பவுடராக மாறிவிடும்.

காரணம் மனிதனிலிருந்து விளைந்தது நாம் எண்ணி வெளிப்படுத்திய உணர்வுகள் தன்மைகொண்டு மனிதனிலிருந்து உருவாக்கக்கூடிய உயிரணுக்கள் தான் அவைகள் அதிகமாக…!

வான் வீதியில் இது போன்ற அணுக்கள் அதிகமாக உருவாவதில்லை.

1.மனிதன் ஆனபின் மனித உடலில் இருந்து வெளிப்படக்கூடிய மூச்சு கடும் விஷமான நிலைகளில் இப்போது உருவாகின்றது.
2.டைஃபாய்டு மூளைக் காய்ச்சல் இது எல்லாம் இப்போது வருவதற்குக் காரணம் அதுதான். (சிந்தனை குலைந்து மருந்தாக உணவாகும் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் அணுக்கள்)

ஒரு மனிதன் வருகின்றான்… உற்றுப் பார்த்து அவனின் உணர்வை நுகர்கின்றோம் என்றால் நமது உயிரின் நிலைகள் ட்ரான்சாக்ஷ்ன்… ட்ரான்சிஸ்டர் என்றும் சொல்வார்கள்.

அதாவது
1.ரேடியோ எப்படி ஒரு இடத்திலிருந்து அடுத்த நிலைகளுக்கு மாற்றி
2.அந்த ஒலி அலைகளைச் சீராக கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றதோ
3.அதைப் போல நமது உயிர் நாம் நுகரும் உணர்வுகளை மாற்றி நம் உடலுக்குள் கொண்டு செல்வதும்
4.அதன் சிந்தனைப்படி நம்மை இயக்குவதும் உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் (உருவாகி இருக்கும்) அணுக்கள் அது உணவுக்கு ஏங்கும் பொழுது… அந்த உணர்ச்சிகள் உயிருக்கு… அந்தச் சிறுமூளைக்கு… ட்ரான்சாக்ஷ்ன் ஆக வரும்.

உயிருக்குள் வந்தபின் அந்த உணர்வுகள் கண் காது மூக்கு உடலுக்கு இது ஆணையிடும். ஆணையிடும் பொழுது எந்த அணுக்களின் தன்மை அதிகமாக நேசித்ததோ நமது கண் இந்தப் பூமியில் இருப்பதை இழுக்கும்.

ஏனென்றால்… முதலில் உற்றுப் பார்க்கும் போது கருவிழியால் பதிவானது கருவிழியால் நுகர்ந்து நமக்குள் சேர்ந்தது.

உடலில் அப்படிப் பதிவாகும் இந்த உணர்வுகள் கண்ணுக்குள் வந்த பின் இதே காந்தப் புலனறிவு
1.தன் உணவுக்காகக் காற்றிலிருந்து தனக்குள் எடுத்துச் சுவாசிக்கச் செய்து
2.இரத்த நாளங்களில் கலந்து அதிலிருந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.

இது எல்லாம் ஒரு இயந்திரத்திற்குச் சமமாக நம் உடல் இயங்குகின்றது

ஆனாலும் அந்த அணுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறோ… அதற்குள் இந்த உயிருடன் கொண்ட உடலில் எத்தனையோ வேதனைப்படுகின்றோம்…!

வயிற்றிலே வலி வந்தால் தாங்க முடிவதில்லை. இது எல்லாம் அந்த உணர்வின் உயிரின் நிலைகள் இயக்கப்படும் பொழுது வயிற்று வலியை உருவாக்கும் அணுக்களை அது ஆகாரமாக எடுத்து அதிகமாகச் சேர்க்கும் பொழுது நுகர்ந்தபின் இந்த உணர்ச்சிகள் நமக்குத் தெரிகின்றது… வேதனைப்படுகின்றோம்.

இது எல்லாம் இயற்கையின் நிகழ்ச்சிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கும் இருக்கும் ஆண்டவனை… “தனித்த பிம்பத்தில்” காண முடியுமா…! கண்டாலும் நம்புவோமா…!!

எங்கும் இருக்கும் ஆண்டவனை… “தனித்த பிம்பத்தில்” காண முடியுமா…! கண்டாலும் நம்புவோமா…!!

 

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான் அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
2.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் அனைவரும்… உங்களுக்கு நோயோ அல்லது மற்ற குறைபாடுகளோ தற்சமயம் ஏற்பட்டால் அது எல்லாம் இப்பொழுது வந்தது அல்ல.

இளமையில் ஏங்கிப் பெற்ற அல்லது பார்த்துணர்ந்த
1.தீமையான நிலைகளில் இருந்து விடுபட நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் பொழுது விதி என்ற நிலையும்
3.அந்த விதிப்படி வினைகள் விளைந்து நோயாக விளைந்து
4.வேதனை என்ற நிலைகளை நமக்குள் வளர்க்கின்றது.

அந்த விதிப்படி விளைந்த உணர்வுகளை மாற்ற
1.அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து விதி என்ற அந்த இருளை நீக்கி
2.அருள் ஞானிகளுடன் ஒன்றச் செய்வதே மதி.

மனிதன்… மதி என்ற நிலைகள் கொண்டு தான் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது. எத்தனையோ அருள் ஞானம் உருப் பெற்றது.

நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

நமது வாழ்க்கையில் முன் செய்து கொண்ட வினையே இது வருகின்றது. உதாரணமாக… ஒரு விபத்து என்று ஆனாலும் அதனைப் பற்றி நாம் கேட்டுணர்ந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப்பெற்றால்… நம் நல்ல குணங்களும் இருள் சூழச் செய்து விடுகிறது.

அது மட்டுமல்ல… விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த அதே உணர்வுகளும் நம்மை இயக்கப்பட்டு நம்மை அறியாமல் சில நோய்கள் வந்து விடுகிறது… அல்லது விபத்தாகி விடுகின்றது.

இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.எத்தனையோ வினைகளுக்கு ஆளாக்கி அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகிவிடுகிறது.

ஆகவே எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்… உயிர் நாம் எண்ணிய உணர்வை நமக்குள் விளையச் செய்கின்றது “அந்த வலுவாக வளரச் செய்கின்றது…”

ஆகவே எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகள் அருள் சக்தியை நீங்கள் பெறும் அந்தத் தகுதிக்குத் தான்
1.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து
2.வாழ்க்கையில் வந்த இருளை வென்று உடல் பெறும் உணர்வுகளை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் கரைக்கச் செய்து
3.அறிவின் ஒளியாக அவர்களை அங்கே நிலைக்கச் செய்யும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.

“அந்த அறிவின் ஒளியின் தன்மை” நமக்குள் பெறும் போது நம்மை அறியாது வந்த இருளை நீக்கும் ஆற்றலை நாம் பெறுகின்றோம். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையும் தன்மையும் நாம் பெறுகின்றோம்.

அனைவரும் நாம் இதைப் பெறுவோம்… அருள் ஞான வழியில் நாம் செல்வோம்… என்று பிராத்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).