நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

 

மனிதனான பின் மனிதனின் வாழ்க்கையில் நல்லது செய்யும் போதும் அறியாது எத்தனையோ சிக்கல்கள் வருகிறது…! எப்படி…?

உயர்ந்த குணங்கள் கொண்டோர் பிறருக்குப் பண்பு கொண்டும் பரிவு கொண்டும் உபகாரம் செய்தால் அதன் விளைவாக எதிர் நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கிறது.

அப்போது… பண்பு கொண்ட அந்த மனிதனுக்குள் விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது இவனையும் வேதனைப்படச் செய்து… நரகலோகத்திற்கே அவனை அழைத்துச் சென்று விடுகின்றது.

1.நல்ல பண்புகளை அவன் எண்ணி ஏங்குகின்றான்…
2.நான் நல்லதைத் தான் செய்தேன்… எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்று ஏங்கி அந்த விஷத்தை வளர்த்துக் கொள்ளும் நிலையில்
3.விஷ அணுக்களை உருவாக்கிக் கொண்டு அந்த வேதனை கொண்டு அவன் மடிகின்றான்.

மடியும் பொழுது எதன் மேல்… யார் மேல் வேதனையாக எண்ணி அவன் வெளி வந்தானோ அந்த உணர்வின் நினைவாற்றல் வந்தபின் அந்த உடலுக்குள் புகுந்து
1.அங்கேயும் இந்த விஷத்தைப் பாய்ச்சி அவனையும் வீழ்த்தி விட்டு
2.விஷமான அணுக்களைப் பெருக்கி முழுமை அடைந்து வெளிவந்த பின்
3.விஷப் பூச்சிகளாக விஷப் புழுக்களாக பாம்பினங்களாக உருமாற்றி விடுகின்றது உயிர்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகி… அதிலிருந்து மீண்டிடும் உணர்வை எடுத்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… எல்லாவற்றையும் அடக்கிடும் நிலை பெற்றவன் தான் மனிதன்.

ஆகவே… வரும் தீமைகளிலிருந்து மனிதன் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதனை நான் (ஞானகுரு) அறிய… இரவும் பகலும் ஒவ்வொரு நொடியிலும் காடு மேடுகளில் எம்மை அலையச் செய்தார் குருநாதர்.

அனுபவ வாயிலாகப் பேருண்மைகளை அறியச் செய்து தீமையிலிருந்து உன்னை மீட்டுக் கொள்ளும் நிலையாக நீ எதைத் தேர்ந்தெடுக்கின்றாய்…? அதை நீ எவ்வழியில் பெற வேண்டும்…?

தீமைகளை நீ செய்யவில்லை என்றாலும் தீமை செய்வோனை நீ உற்று நோக்கினால் அந்த உணர்வினை நீ நுகரப்படும் பொழுது… அதை அறியும் தன்மை வந்தாலும்…
1.ஓம் நமச்சிவாய என்று உன் உயிர் உனக்குள் அதை ஜீவ அணுவாக… உடலாக உருவாக்கி விடுகின்றதே…!
2.மீண்டும்… சிவாய நம ஓம் அவன் இப்படித் தவறு செய்கின்றான்…! என்று நீ திரும்பச் சொல்கின்றாய்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி பெற அந்த அணுக்களும் உனக்குள் பெருகுகின்றது. மனித இனம் என்ற நிலைகளையே மாற்றி உனக்குள் உணர்வுகள் மாறுகின்றது… உருவங்கள் மாறுகின்றது மனிதன் மீண்டும் தேய்பிறையாகத் தான் போக முடிகின்றது.

1.இதிலிருந்து தேய்பிறை ஆகாது உன்னை நீ எவ்வாறு காத்திட வேண்டும்…?
2.எவ்வழியில் உன்னை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.பல அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்தார் குருநாதர்.

அதைத்தான் உங்களுக்கும் சிறுகச் சிறுக சொல்லி வருகின்றோம்.

எனக்கு குருநாதர் தொட்டுக் காட்டியது போன்று உங்கள் உணர்வுகளுக்குள்ளும் ஞானிகளின் உணர்வுகளைத் தொட்டு காட்டி அதை இணைத்து… அதன் மூலம் அவர்கள் பெற்ற அரும்பெரும் சக்திகளை நீங்களும் பெறும் தகுதியாக “இதைப் பதிவு செய்கின்றோம்…”

குரு வழியில் நீங்கள் இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்த நன்மை… அது உங்களுக்குள் என்றுமே நிலைத்திருக்கும் நிலையாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு
2.உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ண குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் “நம்மைக் காத்துக் கொள்ள குருவின் துணை அவசியம் வேண்டும்”

எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் “நம்மைக் காத்துக் கொள்ள குருவின் துணை அவசியம் வேண்டும்”

 

குரு உபதேசித்த உணர்வுகளை நமக்குள் பெற்றுள்ளோம். இன்றைய நிலைகளில் அதை எல்லாம் எளிதாக உங்களிடம் சொல்கின்றேன். ஆனால் “அதை வழி நடத்துவதற்குண்டான சிக்கல்” எனக்குத் தான் (ஞானகுரு) அது தெரியும்.

காரணம்… எத்தனையோ இன்னல்களைக் கண்டுணர்ந்த நான் அன்பு கொண்டு பரிவு கொண்டு உயர வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொரு மக்கள் மத்தியிலும் வந்து
1.உயர்ந்த சக்தி பெற வேண்டும் உணர்வுபூர்வமாக நான் ஊட்டினாலும்
2.அந்த உணர்வு பதிவான அவர்களுக்கும்… சந்தர்ப்பம் அந்த உணர்வை அவர்களுக்குள் அதை வளர விடாது தடுக்கின்றது.
3.அதனால் அவர்கள் அறியாது தவறு செய்யத் துணிவாகும் போது
4.எல்லை கடந்து சிரமப்பட்ட நேரத்தில் அவர்களுக்குள் நல்லது உருப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நான் பாய்ச்சிய பின்னும்
5.அவரை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்கிறது
6.அதனைக் கண்டு எனது மனமும் வேதனைப்படுகின்றது.
7.அந்த வேதனை உணர்வுகள் என்னையும் இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்துச் செல்லும் நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை அன்றே குருநாதர் சொன்னார்.

“நீ உருவாக்கும் உணர்வுகள் நல்லதை மற்றவர்களுக்குப் பாய்ச்சிடும் நிலை பெற்றாலும்” தீமையின் நிலைகள் அவருடைய சிந்தனையைச் செயலற்றதாக மாற்றும்.

1.அத்தகைய வேளையில் நீ எதைச் செய்யப் போகின்றாய்…? உன்னை நீ எவ்வாறு காத்துக் கொள்ளப் போகிறாய்…?
2.உனக்கு மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்
3.நீ நகருக்குள் செல்லப்படும் பொழுது எத்தனை வேதனைகளை நீ படப் போகின்றாய் என்று பார்…! என்று இதைச் சொல்கின்றார்.

பலருக்கு பல நோய்களிலிருந்து விடுபடும் அதற்குண்டான உபாயங்களைச் செயல்படுத்தினாலும் அடுத்து அவர்களுக்கு நல்லதான பின் “இவர் என்ன செய்தார்…?” என்று அவர்கள் என்னைச் சொல்லப்படும் பொழுது
1.மனதார பணம் வாங்காது அவர் நல்ல வழி பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.நல்லதான பின் நுகர்ந்தறிந்தாலும் அவர் செய்யும் தவறுகளும்…
3.வேதனைப்படுத்தும் சொல்களை அவர் சொல்லப்படும் பொழுது அந்த விஷத்தை நுகர்ந்தபின் நீ செய்த நன்மைகள் எப்படி மறைகின்றது…?
4.அந்த விஷத்தின் தன்மை உனக்குள் எப்படி ஆட்கொள்கின்றது…?
5.உன்னை அறியாமலே வெறித் தன்மை கொண்ட செயல்படும் தன்மைகள் உனக்குள் உருவாகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்

தியான வழிகளில் அமைதியும் பண்பும் கொண்டு நீங்கள் வழி நடந்து வந்தாலும் உங்களைச் சீண்டிப் பார்ப்போரும் தூண்டிப் பார்ப்போரும் துன்புறுத்தி அதை வேடிக்கை பார்ப்போரும் “இப்படி இதிலும் பலர் பெருகுவர்…!”

இதைப் போன்ற நிலைகள் இருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத்தான் “எனது குரு காட்டிய அருள் வழியினை” உங்களுக்குள் இந்த உணர்வின் சக்தியைப் பரப்பப்பட்டு இந்த உணர்வின் வலிமையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இதைச் செயல்படுத்துகின்றேன்.

ஆகவே… மனிதனின் பண்புகள் சிறுகச் சிறுக மறைந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தீமையிலிருந்து எப்படி விடுபட வேண்டும்…? என்று உணர்த்தினார்… அதைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றேன்.

உங்களை அறியாது வாழ்க்கையில் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு நஞ்சினை வென்றிடும் வலிமை பெற வேண்டும்… அந்த அருள் ஞானிகள் உணர்வை நுகரும் வலிமை நீங்கள் பெற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராது சில தீமையின் உணர்வுகள் உருவாகி விட்டாலும்
1.உங்கள் நினைவாற்றல் அந்தத் தீமையிலிருந்து அகற்றிடும் சக்தியாக
2.உங்களைக் காத்திடும் நிலையாக வர வேண்டும் என்பதற்குத் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபதேசங்களைக் கொடுக்கின்றேன்.

ஈஸ்வரபட்டர் சொல்லிக் கொடுக்கும் “ஆத்ம சுத்தி”

ஈஸ்வரபட்டர் சொல்லிக் கொடுக்கும் “ஆத்ம சுத்தி”

 

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம்.

நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா “ஆத்ம சுத்தி” என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

அதிகாலையில்… “நம் நினைவுகள் இருக்க வேண்டிய திசை”

அதிகாலையில்… “நம் நினைவுகள் இருக்க வேண்டிய திசை”

அதிகாலையில் 4:00 மணிக்கு என்னை (ஞானகுரு) விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார் குருநாதர்.
1.அதிகாலை நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகள்
2.துருவப்பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை அறியும்படி செய்கின்றார்.

காரணம்… சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுவதைக் கவர்ந்து ஒளி அலைகளாகப் படரச் செய்கின்றது. அதனின் உணர்வுகள் பரவி வரும் பொழுது
1.நம் பூமியின் சுழற்சி வட்டத்தில் துருவப் பகுதி வழியாக… பூமி எவ்வாறு கவர்ந்து இழுக்கின்றது…? என்பதை குருநாதர் தெளிவாக்குகின்றார்.
2.அந்த நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண்பிக்கின்றார்.

விஷத்தன்மையான உணர்வுகளைக் கவரும் அந்தந்தக் கால கட்டங்களில் (சந்தர்ப்பத்தில்)
1.அந்த விஷத்தின் தன்மையை நுகரும்படி செய்து
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து அந்த விஷங்களை எப்படி முறியடிப்பது…? என்ற நிலைகளையும் காட்டுகின்றார்.

ஆகவே துருவப் பகுதியை உற்று நோக்கி காலை 4 மணியிலிருந்து ஆறுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை “ஒரு வழக்கமாக” வைத்துக் கொள்ளும்படி சொன்னார்.

1.காலையிலிருந்து இரவு வரையிலும் பல பல தீமைகளைச் சந்திக்கச் செய்கின்றார்
2.அதை நுகரும் பொழுது அதனால் உடலுக்குள் உபாதைகள் உருவாவதையும் காட்டுகின்றார்
3.பின் காலை நான்கு மணிக்கெல்லாம் குரு துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகரப்படும்போது அந்தத் தீமைகள் ஒடுங்குகின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு சுழல்கின்றது…? அதிலிருந்து வெளிப்படும் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? அதனை எவ்வாறு நீ நுகர வேண்டும்…? என்பதையும் குரு தெளிவாக எனக்குள் உணர்த்துகின்றார். அதை அறிவதற்காகச் சில சில நிகழ்ச்சிகளையும் என் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகின்றார்.

சப்தரிஷி மண்டலங்களின் சக்திகளை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது விஷத்தன்மைகள் எவ்வாறு ஒடுங்குகின்றது…? அதை வைத்து… உனக்குள் வரும் தீமைகளில் இருந்து எவ்வாறு நீ மீள வேண்டும்…? என்று இப்படித்தான் அனுபவரீதியில் எனக்குக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

வாழ்க்கையில் வந்த விஷத்தன்மைகளை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக நிலைத்து விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக எவ்வாறு வாழுகின்றார்கள்…? என்றும் பதினாறு என்ற நிலையில் எப்படி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்…?
1.அதனை நீ பெறுகின்றாயா…? (அல்லது)
2.மூலிகைகளைக் கண்டுபிடித்துப் பிறருடைய துன்பங்களையும் நோய்களையும் போக்கும் “வைத்தியன்” என்ற பெயர் வாங்குகின்றாயா…?

“பல பல தாவர இனங்களைக் கையில் எடுத்துக் கொண்டு” பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்களை ஒடுக்குவதும்… விஷப் பூச்சிகளிடம் காட்டும் போது அவைகள் பம்முவதும்… கடும் விஷம் கொண்ட மிருகங்களையும் அஞ்சி ஓடச் செய்வதும்… போன்ற செயல்களில் ஈடுபட்டு
1.அதன் வழி உன்னுடைய வலிமையைக் காட்டி உன்னுடைய திறமையைக் காட்டி
2.பேரும் புகழும் பெருமையும் அடையும்படி புகழ் தேடச் செல்கின்றாயா…?
3.புகழ் தேடிய பின் அதனின் உணர்வுகள் உன்னை மீண்டும் விஷத்தன்மை அடையச் செய்து அதன் வழி மடிகின்றாயா…? (அல்லது)
4.மனித உடலை மாற்றி விண் செல்கின்றாயா என்று இப்படி பல வினாக்களை எழுப்பினார் குருநாதர்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி… அந்த நெறிப்படி நடந்து உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றேன். அதே உணர்வைத் தான் உங்களுக்கும் இப்போது போதித்துக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

 

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெற வேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

நெஞ்சுப் பகுதியில் “பட படக்கும் துடிப்பலைகள்”

நெஞ்சுப் பகுதியில் “பட படக்கும் துடிப்பலைகள்”

 

கோப குணத்தின் உந்துதலால் நாம் ஈர்த்துக் கொண்டிருக்கும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இரு பாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி…! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்… அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி… இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது…எது எப்பொழுது செயல்படுகிறது…? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி… மோகம்.. தாகம்…” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்… சுவாசமும்… செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்…!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்… மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்… ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி…
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்…!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே…
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்…!

உருவம் அருவம் – அருவம் உருவம்

உருவம் அருவம் – அருவம் உருவம்

 

உலகில் உள்ள அனைத்து மதங்களும்
1.தெய்வம் என்ற நிலையில் உருவத்தைக் காட்டி… அருவத்தின் எண்ணங்களைத் தனக்குள் எண்ணும் பொழுது
2.அந்த உணர்வினை உயிர் நுகர்ந்து உணர்வின் எண்ணங்களாக உருவாக்குகின்றது.
3.ஆனால் எந்த உருவத்தைப் பார்த்தோமோ அந்த உருவத்தின் உணர்வலைகளாக வருகின்றது.

இவருடைய எண்ணங்களும் அதுவும் ஒன்றாக வருகிறது. இது இரண்டும் சேர்த்துத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் நினைவாற்றல் கொண்டு ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

பதிவாகி… பக்தி கொண்டு வாழ்ந்த பின் அந்த மனிதன் இறக்கின்றான் என்றால் அதே பக்தி கொண்ட நிலைகளில் இன்னொரு மனிதன் எண்ணி ஏங்கும்போது
1.எந்தப் பக்தியின் நிலைகளில் எந்த உருவத்தைக் காட்டினார்களோ
2.அந்த உருவத்தின் உணர்வலைகளும் அதனின் இசையின் உணர்வுகளும் கலந்து
3.அந்தச் சொல்லின் தன்மை உணர்வுகள் உணரப்பட்டு… இந்த உணர்வுகள் “ஒளிகளாக” உருவாகின்றது.

அதைப் (தெய்வத்தின் உருவை) பதிவாக்கப்படும் பொழுது இந்த நினைவுகள் இங்கே அந்த எண்ணங்களைத் தோற்றுவித்து வாழ்க்கையை அதன் வழி நடத்தும்படி செய்கின்றது.

அதே சமயத்தில் அவர் இறந்து விட்டாலோ… எதைக் கண் கொண்டு உணர்வின் தன்மை அலைகளாகப் பாய்ச்சியதோ… எதன் எதன் உணர்வின் எண்ணங்களை இதற்குள் பாய்ச்சியதோ… இந்த உணர்வின் அலைகள் சென்ற பின் இதே மந்திரத்தை அவர் சொல்வார் என்றால்
1.எந்த மந்திரம் இவர் உடலுக்குள் உருவாக்கப்பட்டதோ அது ஈர்க்கப்பட்டு இந்த உணர்வின் ஒளிகளை எழுப்பப்பட்டு
2.அதே ரூபத்தையும் உருவாக்கப்படும்… எனக்குக் கடவுள் காட்சி கொடுத்தான் என்று…!

நமக்குள் உள் நின்று இயக்கப்பட்ட உணர்வுகள் தான் நாம் இறந்த பின் அதே உணர்வலைகளை எழுப்படும் போது இந்த அலைவரிசையில் அவர்களுக்கு அந்தந்த மதத்தின் தன்மை கொண்டு
1.உருவம் அருவமாகி… அருவம் உருவமாகி
2.நமக்குள் அருவமாகி அந்த ஒளி அலைகளாக மாற்றும் பொழுது
3.அதை ஒருவர் நுகர்ந்தார் என்றால் அந்த உருவத்தின் உணர்வுகள் அருவ நிலையாகக் காட்சியாகக் கொடுக்கின்றது.

அந்த உணர்வு உடலுக்குள் இயக்கப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… உடலுக்குள் அது பெருகுகின்றது. இது எல்லாம் இயற்கையின் நிலைகள்.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகின் பல நாடுகளிலும் “அவர்கள் தெய்வம்…” என்ற நிலையை உயர்த்திக் காட்டுவதற்காக ஒரு பெண்மணிக்கு மூக்கிலிருந்து “கொம்பு” வருவதாகக் காட்டுவார்கள்… இதுவே தெய்வம்…! என்பார்கள்.

இதை உற்றுப் பார்த்து… காவியப் படைப்புகள் வைத்துக் காட்டப்பட்டு… மந்திர ஒலிகளை எழுப்பி ஜெபிப்பார்கள் என்றால் அதன் வழிப்படி “அந்தக் கடவுள் நம்மைக் காப்பான்…” என்று பதிவாக்கி விடுகின்றார்கள்.

எந்தச் சிலையின் உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றதோ அது நுகர்வோர் உணர்வுகளில் பதிவாக்கப்படுகின்றது. அவர்கள் சொல்லும் மந்திர ஒலிகளும் இதற்குள் கூடி விடுகின்றது.

இவர்கள் இறந்து விட்டால் இதே மந்திரத்தைச் சொல்வார் என்றால்
1.எந்த சிலையின் ரூபத்தைக் காட்டப்பட்டதோ…
2.அதே சிலையின் உருவங்கள் மந்திர ஒலிகளைச் சொல்வோருக்குக் காட்சியாக அளிக்கும்.

“தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது…” என்ற நிலையும் இவர்கள் எண்ண ஒளிகளை அவர்கள் எடுக்கப்படும் பொழுது எந்தெந்த உணர்வுகள் பதிவானதோ அந்த அலைகள் அங்கே படரும்… அதை இவர்கள் அறிய வேண்டியது வரும்

ஆனால் இந்தத் தெய்வம் உன்னைத் தண்டிக்கும்…! என்று அந்த மதத்தின் கீழ் அச்சுறுத்தும் உணர்வு வந்துவிட்டால் தன்னை அறியாது செய்த தவறுக்கு இந்தத் தெய்வம் தண்டனை கொடுக்குமா…? என்ற பயம் வந்து விடுகிறது.

ஏனென்றால் நேர்மையாகச் செல்வோருக்குத் தன்னை அறியாமல் ஒரு தவறு செய்து விட்டால் அச்சுறுத்தும் பய உணர்வுகள் வந்துவிடுகிறது அந்த பயத்தால் “தெய்வம் என்னைத் தண்டித்து விடுமோ…!” என்ற அந்த உணர்ச்சிகள் வந்து விடுகின்றது.

ஓர் வீரிய உணர்வு கொண்டவர்கள் “நீ செய்த தவறுக்குத் தெய்வம் உனக்குத் தண்டனை கொடுக்கும்…” என்று அவரின் வலுக் கொண்ட எண்ணங்களைப் பாய்ச்சுகின்றார்கள்.

கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் இது பதிவாகி விட்டால் இதே உணர்வுகள் அச்சுறுத்தும் உணர்வுகளாகப் பாய்ந்து
1.எந்தத் தெய்வத்தை… எந்த மதத்தின் கீழ்… எதை அடிப்படையாக வளர்த்து வந்தனரோ அவர்கள் ஏற்றிய உணர்வு வந்த பின்
2.அதே உருவத்தின் நிலைகள் இந்த மனித உடலில் வளர்த்துக் கொண்ட சிலையை பார்த்த உணர்வலைகள் இங்கே உருவமாக்கப்பட்டு
3.அருவ நிலைகள் சென்றபின் அதே உணர்வு இங்கே பதிவான நிலை அதே ரூபத்தைக் காட்டும்.
4.ஆனால் “மனிதனுடைய ரூபத்தைக் காட்டாது…” எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளி அலைகளை அங்கே காட்டும்.

நாம் எண்ணி எடுப்பது தான் தெய்வமாகக் காட்டுகின்றது என்று இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

 

தெரிந்தோ தெரியாமலோ நம் உடலுக்குள் அசுர அணுக்கள் புகுந்து விட்டால் தன் அருகிலே இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

நல்ல உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மடிந்துவிட்டால் உடலுக்கு இயக்கச் சக்தியாக மற்றும்… “திரவகப் பொருள்கள்” கிடைக்காது போய்விடும்.

1.நரம்புகளுக்குள் ஒரு விதமான ஆசிட் (அமிலம்) உண்டு
2.அந்தத் திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ மீண்டும் நேராக்குவதோ கடினமாகிவிடும்.
3.மூட்டுகளிலும் இந்தத் திரவங்கள் ஓடப்பபட்டு அது தான் மடக்குவதற்கும் மற்றதுக்கும் இயக்குகிறது.

நாம் பார்க்கின்றோம் விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரங்களுக்கு ஒரு திரவப் பொருட்களை (OIL – LUBRICANTS) அதற்குள் கலக்கின்றார்கள் அப்பொழுது அந்த இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

இன்ஜின்களிலும் இதே போன்று திரவங்களைக் கலக்கின்றனர்… அதற்குள் இருக்கும் பேரிங்… பிஸ்டன்… தேய்வில்லாதபடி ஓடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்டது அந்த அணுக்களின் மலம் திரவமாக மாற்றப்பட்டு நம் உடல் உறுப்புகளில் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகிறது.

உதாரணமாக நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம். நுரையீரலுக்குள் நுண்ணிய அலைகளாக இயக்கச் செய்யும்
1.அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்… திரவம் அதற்குள் சென்ற பின் விரிவடைகின்றது.
2.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதில் உள்ள திரவ அணுக்கள் சுருங்கி இழுக்கும்
3.அந்தக் காற்று புகும் பொழுது மீண்டும் விரிவாகும்.

எப்படி ஒரு காற்றினை அழுத்தி இழுக்கப்படும் பொழுது விரிவாகிறதோ… அந்த அழுத்தத்தைக் குறைக்கப்படும் பொழுது எப்படிக் குறைகின்றதோ… இதைப் போன்று தான் நம் சுவாசப்பைகளை நரம்பில் உள்ள திரவம் இயக்குகின்றது.

நுரையீரலை இயக்கச் செய்யும்…
1.அதாவது அனைத்து உறுப்புகளையும் ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களில் ஆசிட் பவர் குறைந்து விட்டால்
2.அதை இழுத்து விரிவடையச் செய்யும் காற்று நிலைகள் விரிவடைந்து விட்டால் அதிகமாக விரிவடைந்து விடும்.
3.அதே சமயத்தில் அதைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்து விடுகின்றது.

அப்படிக் குறைவடையப்படும் போது நம் நினைவாற்றலையும்… இந்தத் திரவகம் சிறு மூளை பாகம் சென்று ஒன்றுடன் ஒன்று இணைந்து இயக்கப்படும் பொழுது அங்கேயும் அதனுடைய அழுத்தக் குறைவுகள் ஆகி விட்டால் அந்த உறுப்புகளை இயங்காது தடைப்படுத்தி விடுகின்றது… மிகவும் நுண்ணிய நிலைகளில் இப்படி ஆகிவிடுகின்றது.
1.இத்தகைய நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால்
2.தீய அணுக்கள் உடலுக்குள் புகாது தடைப்படுத்தும் சக்தி இழக்கப்படுகிறது.

இவ்வாறு துரித நிலைகள் கொண்டு இந்த விஷத்தன்மை ஊடுருவி விட்டால் விஷ அணுக்களாக உடலுக்குள் உருவாகி அது வளர்ச்சியாகத் தொடங்குகிறது.

அதனால் பொழுது
1.நல்லதைப் பெற முடியாதபடி
2.நல்லதை எண்ண முடியாதபடி
3.நல்லதைக் கேட்க முடியாது ஒரு தடையாகிவிடும்.

என்னிடம் வந்தீர்கள் என்றால் சாமி…! என்னுடைய நோய் குறையவே மாட்டேன் என்கிறது… கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது… குடும்பத்தில் சும்மா சண்டை வந்து கொண்டே இருக்கிறது…! என்றே சொல்வீர்கள்.

“நல்லதைச் சொல்லிக் கேளுங்கள்” என்று நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். எங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றது… அதை எப்படி நாங்கள் சொல்லாமல் இருப்பது…! என்று தான் சொல்வீர்கள்.

ஏனென்றால் எந்த உணர்வு இழுக்கின்றதோ அது தான் இங்கே வரும்.
1.கஷ்டம் என்ற உணர்வு அந்த நினைவாற்றல் வந்து விட்டால்
2.உங்கள் ஆன்மாவின் முன்னணியில் அது தான் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அது உங்கள் உடலுக்குள் நன்மை பயக்கும் சக்தியாக வரும். அதனால் நீங்கள் நலம் பெறுவீர்கள்… உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி வரும்… தொழில்கள் வளம் பெறும்…! என்று நான் சொன்னாலும்…
1.“இதை உங்கள் உணர்வு ஏற்க மறுக்கும்…”
2.நான் சொல்வது அனைத்துமே விரயம் ஆகிவிடும்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்; என் குடும்பம் நலம் பெற வேண்டும்; எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்; குழந்தைகள் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்; குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்; வியாபாரம் பெருக வேண்டும்; வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்; அவர்கள் நலம் பெற வேண்டும்…! என்று இதை ஏங்கிப் பெற்றால் அந்த நல்ல அணுக்கள் உங்களில் வளரும்.

1.நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் குடும்பம் நலமும் வளமும் பெறும் என்று
3.இதைத்தான் உங்களுக்குள் ஊழ்வினை என்று வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
3.அதை நினைவாக்கி வளர்ப்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

ஆகவே நான் கொடுக்கும் நல்லதை மறந்துவிட்டுத் துன்பத்தைச் சொல்லி அத்தகைய பதிவை நீங்கள் வளர்ப்பது உங்களுக்கு நல்லதல்ல…!

அதை மாற்றிக் கொள்ளுங்கள்…!

வாய்ச் சொல் வரும் விதம்

வாய்ச் சொல் வரும் விதம்

 

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்ம சக்தியைக் கேடாக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்ற விதம் அறிந்துணர வேண்டிய ஒன்று.

தீமைகள் தாக்கும் நிலையில் உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாச் செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவைத் அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.அதாவது சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்ம சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.
2.பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.