தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தி பெறுவேன்…! என்ற “தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்”

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தி பெறுவேன்…! என்ற “தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்”

 

சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகின்றீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள்… ஆனால் உங்களுக்குள் அனைத்தையும் பெறக்கூடிய தகுதி உண்டு….!
1.நீங்கள் ஏன் உங்களை நம்ப மாட்டேன் என்கிறீர்கள்…?
2.நான் (ஞானகுரு) என்னை நம்பியதால் தான் குரு காட்டிய வழியில் அனைத்து சக்திகளையும் பெற முடிந்தது
3.என்னைப் போல் நீங்களும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

விஞ்ஞான உலகத்தால் ஏற்படும் நஞ்சான சூழ்நிலையில் இருந்து மீட்டிக் கொள்ளும் எண்ணங்கள் உங்களுக்குள் வர வேண்டும். தீமைகளிலிருந்து அகற்றிடும் சக்தி உங்களுக்கு வேண்டும்.

அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்… மெய் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்து உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாது வந்து இருளை மாய்க்க வேண்டும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற வேண்டும். இந்த மனித உடலிலிருந்தே ஒளியின் சரீரமாகும் ஆற்றல் பெற வேண்டும்.
1.அந்த அருள் ஞானிகள் எல்லையை நீங்கள் கைப்பற்றி அதை அடைய வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கிறேன்
2.உங்களை நம்புங்கள்… உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள்

ஆகவே… உங்களை மனிதனாக வளர்த்திட்ட உயர்ந்த குணங்களைத் தெய்வ நிலைகளாக எண்ணுங்கள்.

அனைத்தையும் அறிந்திடும் நிலையாக
1.உங்களுக்குள் அமைந்திருக்கும் “கலைவாணி” என்று சர்வத்தையும் அறிந்திடும் ஞானம் உங்களுக்குள் உண்டு.
2.சர்வத்தையும் உங்களுக்குள் வளர்த்திடும் “இலட்சுமி” உண்டு… சர்வத்தையும் உருவக்கிடும் “பராசக்தி” உண்டு
3.அனைத்தையும் அறிந்திடும் “சர்வ சக்தி” உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆகவே… உங்களை முழுமையாக நீங்கள் நம்புங்கள்.

இந்த உணர்வினை அறிந்திடச் செய்திடும்… இந்த உபதேசத்தை இப்பொழுது கேட்டிடும் உணர்வும் உங்கள் உயிரின் நிலையே.

ஆகவே அந்த உணர்வின் தன்மையை நீங்கள் பருகும் நிலையாக ஏங்கினால்… உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனுக்கு நீங்கள் செய்யும் காணிக்கையாக இது அமையும்.

மகரிஷிகள் சென்ற எல்லையை அடைய உங்களுக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசன் நிச்சயம் அதற்கு வழிகாட்டுவான்.
1.எண்ணி எடுக்கும் போது அதையே அவன் விளைய வைக்கின்றான்…
2.மகரிஷிகள் வாழும் எல்லையை அடையச் செய்கின்றான்.

அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும்…! ஆகவே இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் இதன் வழி தியானித்து உயர்ந்த சக்திகளைப் பெறுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை குருநாதர் காட்டிய வழியில் தியானத்தின் மூலம் பெற முடியும்… நிச்சயம் பெறுவேன்…! என்ற தன்னம்பிக்கை கொண்டு செயல்படுங்கள்.

1.நீங்கள் எங்கே சென்றாலும் அருள் ஞானிகளை எண்ணினால் அந்தச் சக்தியை பெற முடியும்
2.எங்கே எந்த இடத்தில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபட முடியும்
3.அத்தகைய சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் (ஞானகுரு).

மூச்சை அடைப்பதற்குப் பதில் நற்சுவாசம் எடுத்து சுவாசத்தின் கனத்தைக் குறைக்க வேண்டும்

மூச்சை அடைப்பதற்குப் பதில் நற்சுவாசம் எடுத்து சுவாசத்தின் கனத்தைக் குறைக்க வேண்டும்

 

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது…!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்…!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது… அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது…? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா…? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது…?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட… பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது…?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.

எல்லோருக்கும் நான் உதவி செய்தேன் என்று சொன்னாலும்… அதிலே பலன் அடைகிறோமா…?

எல்லோருக்கும் நான் உதவி செய்தேன் என்று சொன்னாலும்… அதிலே பலன் அடைகிறோமா…?

 

உதாரணமாக நாம் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்ற காரணத்தால் கோபத்தால் கொதிப்பும்… வேதனை என்ற உணர்வும் எடுத்துக் கொண்டால் அதை நாம் சுவாசிக்கப்படும் பொழுது “உயிரிலே பட்டு” அது கொதித்தெழும் உணர்வாக உடல் முழுவதும் படரச் செய்கின்றது.

ஆனால் உடலை இயக்கப்படும் பொழுது
1.கொதித்தெழும் உணர்வுகளையே அதிகமாக சுவாசிக்கச் செய்து இந்த உணர்வின் சத்தினை உமிழ் நீராக வடித்து விடுகின்றது.
2.ஆகாரத்துடன் இது கலந்து கை கால் குடைச்சல் சோர்வு போன்ற நிலைகள் வந்து விடுகின்றது

கோபம் என்பது கார உணர்ச்சிகள்… வேதனை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. இது இரண்டறக் கலந்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது நமது உடல் அதை இரத்தமாக மாற்றுகிறது.

உதாரணமாக ஒரு இன்ஜினில் ஒரு பக்கம் பெட்ரோலை ஊற்றினால் அதிலிருக்கும் பிஸ்டன் அந்தப் பெட்ரோலை உறிஞ்சி ஆற்றலாக மாற்றி… அந்த இயந்திரத்தினைச் சுழலச் செய்து இயக்கச் செய்கின்றது.

இதே போன்றுதான் நாம் உணவாக எடுத்துக் கொள்வது வயிற்றுக்குள் சென்ற பின் கொதிகலனாகி ஆவியாக மாற்றி அதில் வருவதை இரத்தமாக மாற்றுகின்றது.

இஞ்சினில் உள்ள பிஸ்டன் பெட்ரோலை எப்படி இழுக்கின்றதோ அதே போன்று நாம் இருதய வால்வுகள் இரத்தத்தை இழுத்து… பின் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்கு அனுப்புகின்றது.

ஆனால்
1.இரத்தத்தை இந்தப் பிஸ்டன் அதாவது இருதய வால்வு இழுக்கப்படும் போது…
2.அந்த வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் இரத்தத்தின் வழியாகச் சென்று தாக்கப்படும் பொழுது
3.அந்த வால்வுகள் வீக்கம் அடைய ஆரம்பித்து விடுகின்றது.
4.அவ்வாறு வீக்கம் அடைந்து விட்டால் இருதயம் இயக்கப்படும் பொழுது எரிச்சலும் வலியும் ஏற்படுகின்றது
5.அதாவது அப்போது நெஞ்சு வலி ஏற்படுகின்றது என்று சொல்லலாம்.

உடல் முழுவதும் பரவும் பொழுது உடலிலும் எரிச்சல் ஒரு விதமான கொதிப்பு… மனதிலும் கொதிப்பு… அடுத்து நாம் செம்மையாக எந்த வேலையும் செய்ய முடியாத நிலை உருவாகி விடுகிறது.

நல்லதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாசத்தால் எடுத்துக் கொண்டாலும் உடலுக்குள் இத்தனை வேதனைகளை உருவாக்கிவிடுகிறது. எ
1.எவ்வளவு அழகான உடலாக இருப்பினும் அதை நலியச் செய்துவிடுகிறது. நம் எண்ணங்களையும் நலிவடையச் செய்து விடுகின்றது.
2.அடுத்து நம் சொல்லைக் கேட்பவர்களையும் நம் மீது வெறுப்படைய வைத்து விடுகின்றது.

இப்படித்தான் பாசத்தால் பண்பால் பரிவால் நம்மை அறியாமலேயே சில தீமைகள் உள் புகுந்து விடுகின்றது.

குடும்பத்திற்குள் சிறிது குறை காணும் போது வேதனைப்படுகின்றோம். வெளியிலே பழகுபவர்களிடம் பண்பாக நடந்து கொண்டாலும் நாம் எதிர்பார்த்த நிலைக்கு வரவில்லை என்றால் அங்கேயும் வேதனைப்படுகின்றோம்.

காரணம்… அவர்களுக்கு நாம் உயர்ந்த நிலைகள் கொண்டு உதவி செய்திருப்பினும்… சந்தர்ப்ப பேதத்தால் அவர்கள் நினைவில் அது வராதபடி சிறு குறைகள் செய்து விட்டால்
1.தக்க சமயத்தில் நாம் அவர்களுக்குச் செய்த உதவியை மறந்துவிட்டு
2.எனக்கு இப்படித் தீங்கு செய்கின்றார்களே…! என்று வேதனைப்படுகின்றோம்.

ஆக… நன்மைகள் பல செய்திருப்பினும் நம்மை அறியாமலே தீமைகள் நுழைந்து நம் நல்ல குணங்களை நல்ல உடலை நல்ல மனதைச் செயலற்றதாக ஆக்கி நோயாக மாற்றி விடுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து எத்தனையோ தீமையிலிருந்து விடுபட்டு மீண்டு வந்த நிலையில் இன்று சகலத்தையும் அறியக்கூடிய சக்தி பெற்றிருக்கின்றோம்.

ஆனாலும்… பாசத்தால் பண்பால் பரிவால் நல்லதைச் செய்யும் போது நம்மை அறியாது வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளும் ஊடுருவி நமக்குள் வந்து விடுகின்றது.

பௌர்ணமிக்குப் பின் நிலா சிறுகச் சிறுக தேய்ந்து மறைவது போல் நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கி விடுகிறது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி

 

நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாக இருந்தாலும் மகரிஷிகள் அனைவரும் அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் நிலைத்துள்ளார்கள்.

இன்னொரு மனித உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள்
2.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் “நமக்கு வலு வேண்டும்…”

சாதாரண ஒரு நூலினைக் கொண்டு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அந்த நூல் அறுந்து விடுகின்றது.

இது போன்று தான் சாதாரண மக்களாக இருக்கக்கூடிய நாம்
1.அந்த ஞானிகள் மகரிஷிகளின் மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களை அவருடைய உணர்வுகளை
2.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
3.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை… செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

ஆக… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எப்படிப் பெறுவது…?

சிறு கல்லாக இருந்தால் ஒரு மனிதன் அதைத் தூக்கி விடலாம். அதுவே பெரிய கல்லாக இருந்தால் பலரும் சேர்ந்தால் தான் அதைத் தூக்க முடியும். அதே போன்று ஒரு நூல் அது வலு குறைவாக இருப்பினும்… பல நூல்களை ஒருங்கிணைத்துக் கயிறாகத் திரிக்கும் பொழுது… எடை கூடிய பொருளையும் அதை வைத்துத் தூக்க முடிகின்றது.

அதைப் போன்று தான் “கூட்டுத் தியானங்களின் மூலம்”
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை அனைவருக்குள்ளும் தூண்டச் செய்து
2.அந்த உணர்வால் உந்தித் தியானிக்கும் போது
3.காற்றிலே படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை நம் உடலின் அருகே (நம்மிடம்) கொண்டு வர முடியும்.

ஆலயங்களிலே தேரை வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருங்கிணைந்த நினைவுடன் இழுத்தால் தான் அந்தத் தேர் எல்லை வந்து சேரும்.

ஒருவர் தெற்கே… ஒருவர் கிழக்கே… ஒருவர் மேற்கே… ஒருவர் வடக்கு… என்று அந்த வடத்தினைப் பிடித்து இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது

ஆகையினால்… அந்த மகரிஷிகளின் நினைவலைகளை நீங்கள் முன் வைத்து… அனைவரையும் ஒருங்கிணைத்த நிலைகள் கொண்டு… அந்தச் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணும்படி சொல்கிறோம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்… அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்… தெய்வ குணங்கள் அங்கே வளம் பெற வேண்டும் என்று உங்களை நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்து…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது
2.அந்த சக்தியின் துணை கொண்டு நீங்கள் பெற முடிகின்றது… அதைக் கவர முடிகிறது.

டி.வி..க்களுக்கு “ஆண்டனாவும்” அதற்கென்று சக்தி வாய்ந்த சில நுண்ணியக் கருவிகளையும் பொருத்தி இருப்பார்கள். ஆண்டனா அதனின் துணை கொண்டு தனக்கு முன் இருக்கும் மிக சக்தி வாய்ந்த அலைவரிசைகளைக் கவர்கின்றது.

கவர்ந்து… நிசப்தமான நிலைகள் சீராகத் திரைப்படங்களைக் காட்டுவதும்… ஒருமித்த நிலை கொண்டு இசையோ மற்ற எதுவாக இருந்தாலும் நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.

அது போன்று மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குச் சீராக எப்போதும் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கிறேன். அப்போது நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்தால் அந்தச் சக்தியை எளிதில் பெற முடிகின்றது.

குருநாதர் காட்டிய வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெற வேண்டும்
4.உங்கள் உயிரான ஈசனுக்கு மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்
5.அத்தகைய சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இப்படித்தான் நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அதைப் போன்று தான் நீங்களும் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

உயிர்க் காற்று

உயிர்க் காற்று

 

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி அங்கங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது…!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது… செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.

“காற்று நூல்” தருவது எதற்கப்பா…?

“காற்று நூல்” தருவது எதற்கப்பா…?

 

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் – காத்திடும் விஷ்ணு…!” என்பது.

மூலத்தைக் கணபதி என்றும்…
குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்லவப்பா…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!

ஒரு வழிப்பாதை

ஒரு வழிப்பாதை

 

விஞ்ஞானிகள் ஒரு இராக்கெட்டை பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு விண்ணிலே வீசுவதற்கு “மிகவும் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தான்” அதைச் செயல்படுத்துகின்றார்கள்.

விண்ணின் ஆற்றலை இங்கிருந்து அறிந்துணர்வதற்காக “ரேடர்” என்ற சாதனமும் “எக்ஸ்ரே” போன்ற சில செயலாக்கங்களையும் அதனுடன் பொருத்துகின்றார்கள்.

ரேடர் என்ற நிலையும் எக்ஸ்ரே என்ற நிலையும் வைத்துத் தான் பல பல உணர்வின் தன்மையைக் கண்டறிகின்றனர் விஞ்ஞானிகள்.

இதைப் போன்று தான்
1.மனிதனாக இருக்கும் நாமும் “ஞானிகள் உணர்வின் சக்தியை” நமக்குள் செலுத்தி விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.கண்ணை ரேடராக வைத்து… கண்ணின் நினைவலைகளை எக்ஸ்ரேவாக வைத்து…
3.மற்ற காந்த அலைகளுடன் தொடர்பு கொள்ளும் போது விண்ணின் சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

ஆனால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலி ஒளி என்ற… “காந்தப்புலனின் ஆற்றல் மிக்க நிலைகளை…” அது எந்த அளவிற்கு இணைக்கின்றோமோ அதன் வழி கிடைக்கின்றது.

அதாவது பல காந்தங்கள் (மேக்னட்) கொண்டு சுழற்றப்படும் போது (ஜெனரேட்டர்) எந்த அளவிற்கு மின்சாரம் அதிகமாக அதிலே உற்பத்தி ஆகின்றதோ… அதைப் போன்று நாமும் ஆற்றலைப் பெற முடியும்.

இதைப் போன்று தான்
1.விண்ணிலிருந்து வெளிப்படும் காந்த அலையின் தன்மை அது படர்ந்து பரவி வருவதை… பூமியின் செயல்கள் அது இழக்கச் செய்தாலும்
2.அதே உணர்வின் தன்மையை காந்த அலைகளாக நாம் மோதும் பொழுது
3.ஒரு சீரான நிலைகள் கொண்டு… ஒரு வழிப் பாதையில் நம்முடைய எண்ணங்களை ஒருங்கிணைக்கச் செய்யப்படும் பொழுது
4.உடலை விட்டு உயிராத்மாக்கள் பிரிந்து வெளியே சென்றால் அந்த உணர்வுடன் நாம் தொடர் கொண்டு…
5.அனைவரும் சேர்ந்து ஏக குரலில் நாம் உணர்வின் ஒலியை எழுப்பி உந்தித் தள்ளப்படும் போது
6.அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த முடிகிறது… விண்ணிலிருந்து வரும் சக்திகளைப் பெறவும் முடிகிறது
7.எந்தக் குடும்பத்தில் யார் இதைச் செயல்படுத்தினார்களோ அந்த குடும்பத்தார் ஈர்ப்புக்கு சப்தரிஷி மண்டல ஒளி அலைகள் கிடைக்கின்றது.

ஆகவே… குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவருமே உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்தி… குலதெய்வங்களாக அவர்களை எண்ணி… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வுடன் தொடர்பு கொள்ளும் பொழுது… அந்த ஞானியர்கள் நம் பூமியிலே வாழ்ந்த காலத்தில் அவர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க சக்திகளை சுலபத்தில் நாம் எடுத்துச் சுவாசிக்க முடியும்.

அந்த மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களை நீக்கி…
1.மெய் ஒளியின் சுடராக எப்படி ஆனார்களோ…
2.எந்த விண்ணின் நிலை அடைந்தார்களோ…
3.அவர்கள் சென்ற பாதையில் நாமும் சென்று அதை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

இது தான் ஞானிகள் கண்ட வழி…!

இந்த உடலில் நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம்… காற்று மண்டலம் நச்சாக இருக்கும் இந்த வேளையில் வராகன் எப்படிக் கெட்டதை எண்ணாது… அந்த நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்து எடுத்ததோ இதைப் போன்று தியானம் எடுத்துக் கொண்ட அனைவருமே தனது வாழ்க்கையில் வரக்கூடிய
1.சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ சோர்வோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அதை எல்லாம் பலவீனப்படுத்தும் நிலையாக
2.ஒவ்வொரு நிமிடத்திலும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு
2.மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் உருவாக்கும் ஆற்றலைப் பெற வேண்டும்.

நாம் எண்ணி எடுக்கும் உணர்வுகளைப் பிரம்மமாக இருந்து நம் உயிர் தான் சிருஷ்டிக்கின்றது. ஆகவே உயிரை நாம் ஈசனாக மதிப்போம். அந்த உயிரின் துணை கொண்டு தான் உயர்ந்த சக்திகளை நாம் பெற முடியும். அந்தப் பக்குவத்தைத்தான் இப்பொழுது உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞானிகள் ரேடார் என்ற சாதனத்தைக் கம்ப்யூட்டருடன் இணைத்து விண்ணின் ஆற்றலைச் சுலப நிலைகள் கொண்டு எப்படி அறிந்து கொள்கின்றார்களோ இதைப் போன்று தான்
1.மூதாதையரின் ஆன்மாக்களை நாம் உந்தி விண்ணிலே செலுத்தி ஒளிச் சரீரம் பெறச் செய்யும் போது
2.சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றல் நமக்குள் பெருகுகின்றது… எண்ணும் பொழுதெல்லாம் அது கிடைக்கிறது.

அந்த உணர்வின் தன்மையைச் சுவாசித்து உடலுக்குள் ஒவ்வொரு நிலையிலும் சேர்க்கப்படும் போது மெய் ஒளியின் சுடராக நாம் எடுக்க முடியும்.

ஆகவே… வாழ்க்கையில் வரும் தீமைகளை மறந்து… மெய் ஒளி பெற வேண்டும் என்ற எண்ணங்களை உங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் ஒருங்கிணைத்து… இதைப் பதிவு செய்கிறோம்.

ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறுவதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தகுதி ஏற்படுத்துகின்றோம்
1.மகரிஷிகளும் இதைத்தான் செய்தார்கள்
2.என் குருநாதரும் அதைத் தான் செய்தார்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கும் அதைத் தான் யாம் செய்கின்றோம் (ஞானகுரு).

தொழில் வளம்

தொழில் வளம்

 

தொழிலுக்காக ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.

ஒருவன் நடந்து போகும் போது கீழே விழுவான்… சைக்கிளில் இருந்து விழுவான்… ஒருவன் பராக் பார்த்துக் கொண்டு செல்வான்… ஒருவன் பஸ்ஸை வேகமாக ஓட்டிக் கொண்டு வருவான்… அதற்குள் ஒருவன் குறுக்கே நடப்பான்… வண்டிக்காரன் தொந்தரவு கொடுப்பான்… வேண்டுமென்றே பஸ்ஸுக்கு பஸ் இடைஞ்சல் செய்து கொண்டிருப்பார்கள்.

இதையெல்லாம் பார்க்கக்கூடிய நம் மனம் என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகளை எல்லாம் சுவாசித்து வெறுப்பும் ஆத்திரமும் கோபமும் விரக்தியும் பயம் இது போன்ற எல்லா உணர்வுகளுமே உருவாகின்றது
2.இப்படி நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் எண்ணுவது அனைத்தையும் சதாசிவமாகிக் (உடலாக) கொண்டே உள்ளது.
3.நாம் எண்ணிய இந்த உணர்வின் சக்திகள் உமிழ் நீராகச் சேர்ந்து… உடலுக்குள் கெட்ட சக்தியாக உருவாகின்றது (சதா சிவமாக)
4.அதாவது நல்ல குணங்களுக்குள் இவைகள் ஊடுருவி அசுத்தங்களாகச் சேர்ந்து விடுகிறது.

வராக மூர்த்தியாக (பன்றியாக) இருக்கும் பொழுது கெட்டதை நினைக்காதபடி இருந்தது.

ஆனால் மனிதனாகும் பொழுது இப்பொழுது என்ன செய்கின்றோம்…? கெட்டதை எல்லாம் அதிகமாக நினைக்க வேண்டி வந்துவிடுகிறது.

மனிதனின் உடல் விஷத்தை நீக்கக்கூடிய சக்தி பெற்றதுதான். நல்ல வாசனையான உணவுப் பொருளைச் சாப்பிட்டாலும் அதில் இருக்கக்கூடிய மறைந்துள்ள நஞ்சை நம் உடல் நீக்குகின்றது.

இதைப் போன்று அதிலிருந்து தோன்றிய உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் இருந்தாலும்… நாம் கடைக்குச் செல்லும் பொழுது மேலே சொன்ன அத்தனை சம்பவங்களையும் பார்க்க நேர்ந்தது.

இத்தனை எண்ணங்களுடன் கடையைத் திறந்தால் வியாபாரம் சரியாக இருக்குமா…! ஆகவே… கடையில் சேர்ந்து அமர்ந்த உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

வியாபாரத்திற்காக வாங்கி வைத்த சரக்குகளை எல்லாம் “உற்றுப் பார்த்து”
1.மகரிஷிகளின் அருள் சக்தி இந்தப் பொருள்கள் அனைத்திலும் படர வேண்டும்
2.இதை உபயோகப்படுத்துவோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.அவர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
4.என் சொல் அவர்களுக்கு இனிமையாக வேண்டும்
5.என் பார்வை அவர்களுக்கு உயர்ந்த நிலை பெறச் செய்ய வேண்டும்
6.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
7.என்னுடைய வாடிக்கையாளர் அனைவருமே வாழ்வில் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

இந்த எண்ணங்களுடன் தான் கடையில் இருக்கும் சரக்குகளை நாம் உற்றுப் பார்க்க வேண்டும். எனக்கு வியாபாரமாகவில்லை நஷ்டம் ஆகின்றது என்று எண்ணக் கூடாது.

செய்யும் தொழிலே தெய்வம்…!

அங்கே நீங்கள் தெய்வமாக இருந்து வருவோரின் பசிக்கோ மற்ற நிலைகளுக்கோ பொருளைக் கொடுத்தாலும்… அவர்கள் அதற்காகக் காசு கொடுத்தாலும்… நம் பார்வையால் சொல்லால் உயர்ந்த உள்ளத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நம்மிடம் வாங்கிச் சென்ற பொருளைப் பயன்படுத்தும் போது அவர்களுக்குள் அது மகிழ்ச்சியூட்டும் நிலையாக வரும்.

ஆனால் சங்கட உணர்வுகளை எண்ணிக் கொண்டு கடையில் அமர்ந்து… வரும் வாடிக்கையாளர் இரண்டு தரம் கேட்டால்… பதிலுக்கு நாம் அழுத்தமாகச் சொல்லிவிட்டால் அந்தச் சங்கடத்தால் வெறுப்பாகி வியாபாரம் குறைவாகிவிடும்… நம் நல்ல சரக்கையே மட்டமாக்கி விடும்.
1.நம்முடைய சொல்லே நம்மிடம் அணுக விடாதபடி
2.மற்றவர்களை விலகிச் செல்ல செய்துவிடும்.

அது போன்ற நிலை உருவாகாதபடி தொழிலிலும் நம் சொல்லுக்குள் நல்லதை உருவாக்கும் நற்சக்திகளாக… நல்ல தெய்வங்களாகச் செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் இருக்கக்கூடிய 1008 சக்திகள் கொண்டு நாம் இடும் மூச்சலைகள் பிறருக்கு நன்மையாகும் பொழுது… தொழிலில் நாம் எடுத்துக் கொண்டது நல் உணர்வை ஊட்டும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.

இதைத்தான் “ஓம் நமச்சிவாய…” என்று சொல்வது.

நாம் எடுத்துக் கொண்ட சக்தி சிவமாக சக்தியாகி… சிவாய நம ஓம்… நம் உணர்வுகள் உடலுக்குள் நல் சக்திகளாக விளைந்து அந்தச் சக்தியின் சொல்லின் உணர்வின் நிலையை தான் மற்றவர்களை இயக்கச் செய்கின்றது.

இது தான் “சிவாய நம ஓம்” நமச்சிவாய என்ற தத்துவத்திற்குள் இருக்கக்கூடிய உள் பொருள் இதுதான்.

ஆகவே எங்கே சென்றாலும் அங்கே அமர்ந்து இது போன்று செய்து பழகுங்கள்.

கடைக்குச் சென்று வீட்டுக்கு வந்தாலும்… வீட்டிற்குள் வந்தவுடன் ஆத்ம சுத்தி செய்து…
1.நம் வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.என் சொல் என் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிமை ஊட்ட வேண்டும்
3.என் பார்வை என் வீட்டில் உள்ளவரை நலம் பெற உதவ வேண்டும்
4.குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
5.இது போன்று சிறிது நேரம் எடுக்க வேண்டும்.

ஏனென்றால் வராகனாக இருக்கும் பொழுது அந்தச் சரீரத்திலே இதைத்தான் செய்தது. அப்படிச் செய்து தான் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம் கெட்டதை நீக்கும் ஆற்றலைப் பெற்று வந்துள்ளோம்.

அந்த ஆற்றலை நாம் செம்மையாகப் பயன்படுத்த யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த முறையைத்தான் கையாள வேண்டும்.

இயற்கையின் மூலாதாரம்

இயற்கையின் மூலாதாரம்

 

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக…!” என்ற சொல் சூட்சமத்தில் மனித சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்… அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு “மின்காந்தச் செயலாக” நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவபடி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்…” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி…” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக…” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக…”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக…” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்…” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி… ஆகாயம் என்ற கண்டப் பகுதி… காற்று என்ற இருதயப் பகுதி… நீர் என்ற வயிற்றுப் பகுதி… அக்கினி என்ற குறிப் பகுதி… மண் என்ற மூலப் பகுதி… இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலகோதய நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது…
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை… அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை…!

காற்று நூல்…! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி…” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களூம் ஞானிகளும்.

மனிதனின் கீழ் நோக்கிய ஈர்ப்பு நிலையும்… “ஞானிகளின் மேல் நோக்கிய ஈர்ப்பு நிலையும்…”

மனிதனின் கீழ் நோக்கிய ஈர்ப்பு நிலையும்… “ஞானிகளின் மேல் நோக்கிய ஈர்ப்பு நிலையும்…”

 

பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து… தெளிந்ததை… ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்…!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக… அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்…!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே… மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது… கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து… சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக…”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது…!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்… ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்… வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே…!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெற வேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்…!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்…!”

1.அன்பு சித்தர்களும்… அன்பு மகரிஷிகளும்… அன்பு சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வந்தது
2.இந்தக் கலியில் உண்மையான ஞான வித்துக்களைத் தான்…!

அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது…?