தட்டியவன் திறப்பான்… கேட்பவன் கிடைக்கப் பெறுவான்… தேடியவன் கண்டு கொள்வான்…!

தட்டியவன் திறப்பான்… கேட்பவன் கிடைக்கப் பெறுவான்… தேடியவன் கண்டு கொள்வான்…!

 

ஸ்தூல தேகம் கடந்து சூட்சும தேகத்தில் வாழும் தன்மை நிலை பெற்று விட்டால் சரீரம் கொண்டு துன்பங்களாக உணரும் தன்மைகள் அனைத்தும் துன்பங்களாகத் தோன்றிடாது.

அத்தகைய பாக்கியம் பெற்ற மகான் தான் இயேசு.

வாழ்க்கை நடைமுறை மோதலில் ஏற்படும் உரையாடலில் உணர்ந்திடும் குணங்களையே பெரும் துன்பங்களாகப் பெரிதுபடுத்தியே… எண்ணத்தின் கடுமையாகச் சொற்களின் விஷ வித்துக்களை விதைத்திட்டால்… அதை உரைப்பவனும் அந்த உரையைக் கேட்பவனும் விதைத்திட்ட விதையின் பலனை அறுவடை செய்வானப்பா…!

அதைத் தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்று சொல்வது.

இயேசு மகான் சுட்டிக் காட்டியது அன்பு வழி வாய்மை. சொல்லும் சொல்லிலும் நிதானம் தேவை.

1.உலகோதயத் துன்பங்கள் ஞானிகளுக்கு மக்களால் ஏற்படுத்தப்படும் தன்மைகளில்
2.தேகம் கடந்து வாழும் தன்மையால் ஞானிகளுக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

மெய்ஞானத்தின் முழுமைத்துவம் பெற்றிடும் செயலில் மனத்தின் பக்குவமே மெய்ஞான விழிப்பாகச் செயல் கொண்டு நல்லாக்கம் பெறுதலே உண்மை ஞானத்தின் சிறப்பு.

தனக்கு இழைத்திட்ட துன்பச் செயல்களைக் கூட… கல்வாரி மலை மீது சிலுவையில் அமைக்கப்பட்ட காலத்தில் கூட…… மன்னிக்கும் மனம் படைத்த இயேசுவின் செயலை
1.அவர் பெற்று வளர்ச்சிப்படுத்திக் கொண்ட அவரின் சக்தியை
2.தாமும் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தைக் கொள்வோர் யாரும் இல்லை.

சூட்சும உடல் வாழும் வாழ்க்கை வாழ்ந்து காட்டிட்ட மகான்தான் இயேசு. தியானத்தின் வழியைச் சூட்சுமமாக மறைபொருள் தன்மையில் உரைத்திட்ட போதனைகள்… அவரால் கொண்ட கருத்தின் தெளிவு.

எழுத்தின் வடிவத்தில் சமுதாய நலத்திற்கு அவர் கொண்டிட்ட எண்ணத்தின் சப்த அலைகளை… நேரடியாக ஈர்த்திடும் பக்குவச் செயல் அனைத்தும்… காற்றினில் ஓடிடும் ஒலி அலைகளை… அவர் காட்டிய போதனைகளைப் பெறுவது என்பதெல்லாம் “தியான ஈர்ப்பின் மூலம் தான் பெற முடியும்…”

“உயிர்த்தெழுதல்” தத்துவத்தையே சூட்சும உடல் வாழும் தன்மை கொண்டிட்ட செயலாகத் தத்துவத்தின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது. அது எந்த வகை…? என்ற வினாவுக்கு “ஆத்ம வலு கொண்டிடும் மூலசக்தியே” நிலைக்களன் (சான்று).

உயிர் ஜீவன் கொண்டிட்ட இந்தச் சரீரமே சிலுவையாக…
1.உடல் என்ற சிலுவையில் பொருந்த அமைவு பெற்ற ஆத்மா
2.சக்தி வலுக் கொண்டு மூல சக்தியாகக் கலந்துறவே எழுதல் என்பது சூட்சுமம்.

தான் கொண்ட எண்ணத்தின் வலுவைப் பிறர்க்கும் ஊட்டிடவே… தான் தேடிக் கண்டு கொண்ட நல்லது போன்றே மற்ற மனித ஜீவன்களும் தேடிக்கொள்ள வேண்டும் என்று
1.ஆத்மாவை மறைபொருளாகச் சுட்டிக்காட்டி…
2.தேடிக் கண்டு கொள்பவன் கொள்ள வேண்டிய எண்ணத்தில் சிரத்தை இருந்தால்
3.“தட்டியவன் திறப்பான்…
4.கேட்பவன் கிடைக்கப் பெறுவான்…
5.தேடியவன் கண்டு கொள்வான்…” என்பதில்
6.எண்ணத்தின் செயல்பாட்டிலே “சிரத்தையே அதிமுக்கியம்…” என்று உரைத்தவர் இயேசு.

அவரைக் கூட்டம் கூட்டமாகப் பின் தொடர்ந்து வந்து சூழ்ந்தவர்களுக்கு அவரால் போதனை அளிக்கப்பட்டது என்றும்… குழந்தைகளும் பெண்களும் ஆடவர்களும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் பசியோடு இருந்தவர்களுக்காக அப்பமும் மீனும் அதை இரண்டையும் தூபப்படுத்தி ஆசீர்வதித்து… அனைவரும் உண்ணும் மட்டும் பகிர்ந்தளித்து… சாப்பிட்ட உணவின் மீதம் ஏழு கூடைகளில் நிரப்பப்பட்டது என்று “விவிலிய நூல்…” கூறுகின்ற பொருளின் உண்மையை அறிந்தவர்கள் யார்…?

அதைப் பின்பற்றுபவர்களும்… அதைக் கடைபிடிக்கிறோம் என்று சொல்பவர்களும்… பெற்றிடும் திறன் இல்லாது அது மாற்று நிலை பெற்று விட்டதப்பா.

1.நானே அப்பமாக இருக்கின்றேன்… என்னைப் புசிப்பவன் நித்திய ஜீவனுமாக இருப்பான்…! என்று
2.அவர் உரைத்திட்ட சொல்லிலும் மறைபொருளாகவே கூறப்பட்டது.

இந்த உலகையே காக்கப் போகும் “மகரிஷிகள் நாடான இந்தியா”

இந்த உலகையே காக்கப் போகும் “மகரிஷிகள் நாடான இந்தியா”

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நாளும் வளர்க்க
1.நாம் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு மட்டுமல்லாதபடி…
2.அது வலுவாகும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் இன்னொரு பிறவிக்கு வராதபடி
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதிற்கு நாம் சென்று இந்த உடல் பெற்ற நஞ்சுகளை அங்கே கரைத்து
4.பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.

அதற்கு நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களை விண் செலுத்தினால் அவருடைய தொடர் கொண்டு நாம் அந்த சக்தி எளிதில் பெற முடியும். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி தீய உணர்வுகளை நல்ல அணுக்களாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

எப்படி ஊசி மூலம் மருந்தை ஏற்றி அதை இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்து நோய் உருவாக்கும் அணுக்களை மாற்றி அமைக்கின்றார்களோ அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் எண்ணி
2.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

உடலை உறுப்புகளை உருவாக்கி அணுக்களில் எல்லாம் காந்தம் உண்டு. இதை இணைத்து அங்கே பெருக்கச் செய்ய வேண்டும். உடலில் இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும் நீங்கும். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

கஷ்டம் என்பதைத் தள்ளி விடுங்கள். குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்.

நீங்கள் இடும் மூச்சலைகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலே பரவி இந்தப் பூமியும் பரிசுத்தமாகும் ஊரில் வாழும் மக்கள் அனைவரும் தெளிவாக இது உதவும்.

ஆகவே இந்தத் தியானத்தை மேற்கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பரப்புங்கள்
1.இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றிடுங்கள்
2.அருள் ஞானத்தின் உணர்வைக் குவியுங்கள்… எல்லா இடங்களிலும் பரவச் செய்யுங்கள்
3.இந்த பூமியில் மன பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளை மாற்றி அமையுங்கள்.

அருள் உணர்வு கொண்டு சகோதர உணர்வை வளர்த்து ஒன்றுபட்டு வாழும் சக்தியைப் பெருக்குங்கள் இதை நாம் செய்தோமென்றால் சகோதர உணர்வுகள் வளரும். அருள் ஞானம் பெருகும்.
1.அருள் வாழ்க்கை வாழும் இந்தியாவாக… மகரிஷிகள் நாடாக மாற்றலாம்
2.இதை வைத்து உலகையே மாற்ற முடியும்.

ஏனென்றால் அணுவிசையால் இந்த உலகையே அழித்திடும் தன்மைகள் வரப்படும் பொழுது அந்த அணுக்கதிரியக்கங்கள் பரவாதபடி தடுத்து நிறுத்தும் சக்தி
1.இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் பெறுவோம் என்றால்
2.உலகையும் நாம் காக்கும் திறன் பெற முடியும்… அணுகுண்டுகள் வெடிக்காதபடி நாம் செய்ய முடியும்.
3.விஷத்தன்மை பரவாதபடி கதிரியக்கங்கள் வெளிப்படாதபடி செய்ய முடியும்.

முழுமையாக இதை நம்புங்கள் உங்களுக்கு அந்தத் திறன் உண்டு உலக இருளைப் போக்குவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம். விஞ்ஞானத்தின் செயலினால் வரும் தீமைகளில் இருந்து மக்களை விடுவிப்போம்.

ஆகவே… அருள் உணர்வுடன் வாழ்க்கையை நீங்கள் தொடருங்கள் என்று பிராத்திக்கின்றேன்.

அன்பு தானப்பா கடவுள் – LOVE IS GOD

அன்பு தானப்பா கடவுள் – LOVE IS GOD

 

1.அன்பு வழி காட்டி… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாகச் செயல்படுபவன் …
2.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
3.பிற உயிர்களையும் தன் உயிர் போல நேசிக்கும் செயல்பாடு உடையவனாக இருத்தலும்
4,தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாக வெளிப்படும் பொழுதே
5.போதனையை ஏற்றுத் தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அந்த உபதேசத்தை ஏற்றவன்
6.அந்த நன் நெறியில் பிறழாமல் “அந்த அன்பையே பற்றுக்கோடாகக் கொண்டிட்ட எண்ண செயலினால்…”
7.நல்வழி வகைச் செயலைக் கடைப்பிடிப்போன்… மனிதன் என்ற முழுமை பெறுகின்றான்.

அன்பும் பரிபூரணத்துவம் பெறுகின்றது.

இயேசு காட்டிட்ட அன்பு வழி அதனுடைய நிலைகள் இன்று ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. யாரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம்முடைய வழி…!

மனித எண்ணத்தையும் அன்பு சாமராஜ்யத்தையும் ஆள வந்த அந்த மகானுக்கே தந்த பரிசு “சிலுவையில் ஏற்றப்பட்டதுதான்…” இன்றும் உண்மைகளைப் புகட்டினாலும் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா.

அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை இந்த உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?

குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
1.உலக மக்கள் படும் இன்னல்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு
2.தாய்மையின் உணர்வு கொண்டே ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி
3.உயர்நிலை பெறவே ஊட்டிட்டார் ஊட்டிட்டார் அன்பு கொண்டே ஊட்டிட்டார்.

தாய் முகம் கண்ட குழந்தை தாயிடம் தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களைச் செவிமடுத்தனர்.

ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயல்படாதொழிந்த அந்தக் குழப்ப சூழ்நிலையில்… உண்மையை உணர்த்தி அவர் அளித்திட்ட போதனைகள் மக்களுக்குத் தெளிந்த சிந்தனை அளித்து… அதனால் ஈர்க்கப்பட்டனர் என்றால் “அந்த அன்பின் திறத்தை என்னவென்பது…?”

அன்பு தானப்பா கடவுள்…!

சத்திய நிலை கடைப்பிடித்த அந்த மகான்களுக்கே அவச்சொல் என்றால் சிந்தனா சக்தி செல்லும் வழி தான் என்ன…?
1.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா… கூட்டங்களை அவர் கூட்டினார்…?
2.இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகின்றது.

ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுபவர்… எண்ணிக்கையில் பலர் இருப்பினும் அவர்களும்… வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.

உண்மை வழியை அறிந்து அந்த மகான் காட்டிய வழிதனைக் கடைப்பிடிக்க முயல்வோர் முயலட்டும்.

அன்பு கொண்டு குணங்களின் செயலைத் தன்னில் கண்ட இயேசுபிரான் “சைத்தான்” என்று காட்டியது தீய குணங்களைத்தான்.

தீய குணங்களுக்கு மனம் ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி… அவைகளைப் பக்குவமாக விலக்கிடவே தியானத்தின் வழியாக காட்டப்பட்டது தான் அப்பமும் மீனும்.

வழி தவறிச் செல்லும் ஆடுகளை மீட்க வந்த மேய்ப்பர் என்று அவரை அழைக்கின்றார்கள். நேசிக்கும் மனோபாவத்தை அன்பு நிலையைக் கூற வந்த மகான் இயேசு உபதேசித்த நெறிமுறைகள் அனைத்தும் ஒலி அலைகளாக இந்தப் பூமியின் நாதத்தில் கலந்து சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த அரிய போதனைகளைத் தியான வழி ஈர்ப்பின் செயலில் ஈர்த்தே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ண வலுவிற்குச் சிந்தனை வசப்பட்டு அதை முயற்சி செய்வோர் இல்லையப்பா.

1.நாம் சொல்வது யார் மனதையும் வேதனைப்படுத்துவதற்காக அல்ல.
2.உண்மைகளை கூறினாலும் ஏற்றுக் கொள்வோரும் மிக அரிதாகவே உள்ளனரப்பா
3.அவைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…
4.தியானத்தின் வழிதனில் அதை அறிய முயல்வோர்கள் முயலட்டும்.

ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!

ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!

 

யாம் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை தியானத்தின் மூலம் பெற்றுக் கொண்டே வருகின்றீர்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்கு நீர் எப்படிக் குறைகின்றதோ அது போல் இதற்கு முன்னாடி அறியாது சேர்த்துக் அசுத்தமான உணர்வுகளை நாம் நீக்க முடியும்.

ஆனால்… குறைகளைச் சொல்லித் திருத்தவே கூடாது (இது முக்கியம்).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண் வழி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் அனைத்துமே நம் கண்கள் வழி தான் பதிவானது
3.கண் வழியாகத் தான் நம் உடலுக்குள்ளும் சென்றது
4.அதே கண் கொண்டுதான் மீண்டும் உடலுக்குள் உயர்ந்த சக்திகளைச் செலுத்தவும் முடியும்.
5.அப்படிச் செலுத்தப் பழகிவிட்டால் மீண்டும் இந்த நினைவுகள் கண்களுக்கே வரும்
6.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் பெருக ஆரம்பிக்கும்.

அது பெருகப் பெருக உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள்… பரிவுடன் பார்த்துப் பிறருடைய வேதனைகளை நுகர்ந்தது போன்ற உணர்வுகளை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த ஞானிகள் பெற்ற அருளை நீங்கள் பெறும் போது தீமை நீக்கக்கூடிய சக்தியாக வரும். உங்கள் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் இருளை அகற்றும்.
1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களால் முடியும்.
2.தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்து… பிறர் தீமைகளைப் போக்கும் அருள் ஞானிகளாக நீங்கள் வாழ முடியும்.
3.ஆக… ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

ஏனென்றால் உங்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி பெருக வேண்டும் இருளை நீக்கும் அருள் ஞானம் பெருக வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்… என்று தான் எண்ணி நான் சதா தவமிருக்கின்றேன்.

இதை நான் எண்ண எண்ண… என் உயிரிலே இது பட்டு… எனக்குள் அந்த உமிழ் நீராக மாறுகிறது… அந்தச் சக்திகள் எனக்குள் கூடுகின்றது. உங்களுடைய கஷ்டம் நஷ்டங்கள் எத்தனை நான் கேட்டிருந்தாலும் இதை வைத்து நான் அதை மாற்றி விடுகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற தகுதியை ஏற்படுத்துகின்றேன். ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள்… உங்கள் உடல் ஒரு கோவில்… உங்கள் ஆலயத்தை நான் சுத்தப்படுத்துகின்றேன்.

1.உங்களைச் சுத்தப்படுத்த நான் எண்ணும் பொழுது என் உடலான ஆலயமும் எனக்குள் சுத்தமாகின்றது
2.என்னை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் எனக்குள் அந்தத் தெய்வீக பண்பு கொண்டு
3.அந்த அருளைக் கொண்டு… இருளைப் போக்கும் உணர்வு கொண்டு… “என்றும் ஒளி” என்ற உணர்வைப் பெறச் செய்கின்றது.
4.என்னுடைய எண்ணமே உயிருடன் ஒன்றி… என்றும் ஒளியின் தன்மை பெறுகின்றது

அதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரம் அந்த அருள் சக்தி நீங்கள் அனைவரும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்… அருள் வழி வாழும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற்று… இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று… அருள் வாழ்க்கை வாழ்ந்திட எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்

இருளை நீக்கிடும் முயற்சி இருந்தால் “ஒளியை நிச்சயம் காணுவாய்…”

இருளை நீக்கிடும் முயற்சி இருந்தால் “ஒளியை நிச்சயம் காணுவாய்…”

 

குணங்களை உள் அடக்கும் மறை பேராம்
1.மனித ஆற்றலின் மகோன்னத சக்தியாக வழியறிந்து கொண்டவன்
2.அவன் வழிப்பயணாமாகும் செயலில் தடை எதுவும் கிடையாது.

ஆசையும் மோகமும் வாழ்க்கை அனுபவத்திற்குள் அடங்கும். அவைகளைக் காட்டிலும் சினத்தின் குணமே வலிமை உடையது. மனிதன் சினத்தின் வசம் ஆட்படும் போதெல்லாம் உலக சிருஷ்டியை பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.நாம் ஏனையோரை வழி நடத்த வந்துள்ளோம் அல்லவா…?
2.நாமே கோபப்பட்டால் தகுமா…? என எண்ணிடல் வேண்டும்.

யானைக் கூட்டங்களை வழி நடத்தும் வலிமை கொண்ட மன்மத யானை பக்குவமாக மேய்ச்சல் இடம் காட்டி… அருந்துவதற்கு நீர் நிலையையும் காட்டித் தன் குழுவைப் பாதுகாப்பது போல்… நல் நிலையில் செயல்படுவோம்… உயர்வோம்…! என்ற சிந்தனை கொள்ளல் வேண்டும்.

சகல சிருஷ்டிகளும் அணுத் திறளால் ஆனது. மனிதனும் ஓர் பொருள். “வளர்ந்து கொண்டிருக்கும் உயிராத்ம சக்தியால்…” மனிதன் உயர் நிலை பெறுகின்றான்.

1.மரணத்தை வென்றிடும் மனோதிடம் கொள்ளுதல் தான்
2.சித்தனாகும் உயர்வுக்குப் படிக்கட்டு.

மனத்தினை மெய்ஞானத்தின் பால் செலுத்திவிட்டால்… அது மீண்டும் மாற்று நிலை பெற்றிடா வலிமை கொண்டு விடும். பஞ்சு திரி ஆவதைப் போல்…!

காற்றினால் உந்தப்படும் பஞ்சு அலைக்கழிந்து ஓடுகிறது. அந்தப் பஞ்சானது நீரினை உண்டு விட்டால் விழும் நிலையும்… அதே பஞ்சு நெருப்பினை உண்டு விட்டால்… தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
1.இதை அழியும் நிலை பாடம் என்று எண்ண வேண்டாம்
2.வானுறப் பறக்கும் பருந்துக்கும் பாடமுண்டு
3.சுட்டிக் காட்டுதல் எல்லாமே மனத்தின் பக்குவத்திற்கே.

“வராமல் வந்துற்ற மாமணியை… உயிராத்ம சக்தியை… மெய் உணர்வால் அறிந்து கொண்டிட்ட பின்… அதைச் சாராமல் நீ போவாயோ…?”

இரு வித செயல்நிலைகள் ஒவ்வொரு குணத்தின் செயல்படு நிலையில் சாந்த குணத்தை வளர்க்க… சமமான நிலை நிலைக்க… யாம் சுட்டிக் காட்டிடும்
1.மனத்தின் கரு விழித்து விட்டால்
2.சித்தன் நிலை (உன்) கை வசமே…!

ஆற்றெடுத்த மன வாழ்வில் இரு நிலை தவிர்த்திருத்தல் (நன்மை/ தீமை… இன்பம்/துன்பம்) என்பது
1.ஞானத்தின் பால் திருப்பப்படும் மனமே
2.திரியான பஞ்சு. எண்ணத்தை மறைந்திருக்கும்
3.மாயை எனும் மூட மேக இருள் நீக்கப்படும் போது தான் மனிதன் உயர்கின்றான்.

சூரியனை மறைத்திடும் மேகக்கூட்டம் விலகிடும் செயலில்
1.முன்பாகவே ஒளிக்கதிர்கள் காட்டிடும்
2.அவ்வாதவனின் நிலையை மனத்தின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்.

மேக இருள் விலக்குதல் என்பதே முயற்சி…!

ஞானச்சுடராம் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சூட்சமப் பொருளைச் சுவாசித்திடும் பொழுதே “உணர்ந்து கொள்வீர்கள்…”

உலகைக் காக்க… உலக மக்களைக் காக்க… நம்மைக் காக்க… நாம் செய்ய வேண்டியது

உலகைக் காக்க… உலக மக்களைக் காக்க… நம்மைக் காக்க… நாம் செய்ய வேண்டியது

 

அந்தந்தக் கால கட்டங்களில் குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளை அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காகத் தான் யாம் (ஞானகுரு) சொல்லி வந்தது. அதை ஒன்று சேர்த்துப் பதிவாக்கிக் கொண்டு வந்தால் உங்களுக்குள் உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தியானத்திற்கு முன்
1.பாலோ அல்லது தண்ணீரோ அல்லது ஒரு பதார்த்தத்தை வைத்து
2.தியானம் முடிந்த பின் அந்தப் பொருளை எடுத்து அதில் என்ன வாசனை வருகிறது என்று பாருங்கள்…?
3.நல்ல மணங்கள் அதிலிருந்து வரும். சுவாசிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் அருள் மணம் கிடைக்கும்.

ஒவ்வொருவரும்… ஒவ்வொரு ஊரிலும்… துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை உலகம் முழுவதும் பாய்ச்சி உலக மக்கள் மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகள் அருள் சக்தியும் துருவ மகரிஷிகள் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களிலே படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது
1.ஆங்காங்கே இருக்கக்கூடியவர்கள்… உலகில் எங்கிருந்து தியானம் செய்பவர்களும் இந்த உணர்வுகளை வானிலே பாய்ச்சுங்கள்.
2.மேகங்களைக் கூட்டி மழை பெய்ய வேண்டும் என்று தியானியுங்கள்
3.இப்பொழுது உபதேசிக்கக் கூடிய உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் படரப்பட்டு
4.அந்த மழை நீர் மூலமாக தாவர இனங்களிலே இணைந்து அருள் தாவர இனங்களாக விளையும்.

ஆனால் அதே சமயத்தில் மனித உடலில் எத்தனை வேதனைப்பட்டோமோ நோய்களாக வந்து நம் உடலை வேதனைப்படச் செய்கின்றதோ இந்த உணர்வெல்லாம் என்ன செய்கிறது…?

நாம் எந்தத் தாவர இனத்தை உணவாகப் புசித்தோமோ… நம் உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படும் உணர்ச்சிகள் தாவர இனங்களில் பட்டு அந்தத் தாவர இனத்தையே உண்டு விடுகின்றது. நமக்கு உணவில்லாது ஆக்கி விடுகின்றது.

உரத்தைப் போட்டுப் பூச்சி மருந்தைப் போட்டு பயிர்களை வளர வைத்து மகசூல் எடுக்கலாம் என்று கொண்டு வருவதற்கு முன்
1.நாம் வெளிப்படுத்தக்கூடிய வேதனை என்ற விஷத்தின் தன்மை
2.தாவரங்களில் அதிகமாகப் படர்ந்து விஷத் தாவரங்களாக அது விளைந்து
3.அதையே நாம் மீண்டும் உணவாக உட்கொள்ளும் நிலை ஆகிவிடும்.

ஆகையினால் இதை மாற்றி அமைக்க முதலில் சொன்ன மாதிரி அகஸ்திய மாமகரிஷிகள் உணர்வுகளை வானிலே பாய்ச்சி மேகங்களைக் கூடச் செய்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று மேகங்களில் எண்ணத்தைச் செலுத்தினால் அந்த மழை நீர் தாவரங்களில் பட்டு இணையும்
1.காரணம் எல்லாவற்றிலும் காந்தப் புலனறிவுகள் உண்டு.
2.அந்த அலைகளை எடுத்து நாம் பாய்ச்சி அதற்குள் இணைக்க முடியும்.

எப்படி ஒரு அணு பட்டு அந்தச் சத்தினை நுகர்ந்து அதை வைத்து உடல் பெற்றதோ இதைப்போல இதே சத்தினை நுகர்ந்து அதன் உணர்வின் தன்மை மலமாக்கி அந்தத் தாவர இனங்களுக்கு நாம் பாய்ச்சும் போது நல்ல சத்தாக மாறும்.

பயிரினங்களில் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று இது ஒரு கூட்டமைப்பாகப் பாய்ச்சிப் பாருங்கள்.

1.உங்கள் வயலை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்… பயிரினங்களை நினையுங்கள்
2.அதற்குள் அருள் சக்திகளைப் படரச் செய்யுங்கள்… நல்ல அணுக்கள் உருவாகி நல்ல வளர்ச்சி பெறும்.

வைரஸ் என்ற அணுக்கள் நம் உடலில் பாய்ந்தால் நம்மைக் கொல்கிறது. நம் உறுப்புகளைக் கொல்லக்கூடிய அந்தத் தீய அணுக்களைக் கொன்று நல்ல உறுப்புகளை உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு “அத்தகைய வைரஸ்களாக… மாற்று மருந்தாக உருவாக்குகின்றார்கள்….”

இதே போல் மனிதனான நாம் அருள் உணர்வுகளை மழை மேகத்துடன் கலந்து விட்டால் நல்ல அணுக்களாக உருவாக்க முடியும்.

ஆனால் நாம் இன்று உலகெங்கிலும் என்ன செய்கின்றோம்…?

தவறான உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் மனிதனுக்கு மனிதன் அழிக்க வேண்டும்… மற்றவனைக் கொன்று அவனை வீழ்த்தி விட்டு அவன் செல்வத்தை அபகரித்துத் தான் வாழ வேண்டும்… என்ற உணர்வுகள் தான் அதிகமாகப் படர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த உணர்வுகள் எல்லாம் தாவரங்களில் பட்டால் பயிரினங்களும் அழிகின்றது. உரத்தையும் மருந்தையும் போட்டு விளைய வைத்தாலும் அதை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலுக்குள் விஷத் தன்மை பெருகி நல்ல குணங்களைக் கொன்று குவித்துவிடும் (அது தான் இன்று இயங்கிக் கொண்டுள்ளது)

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் மீள்தல் வேண்டும்.
1.மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி மேகங்களைக் கூடச் செய்து அருள் மழையாக பொழிய வேண்டும்…
2.ஊர் செழிக்கட்டும் நாடு செழிக்கட்டும் என்று இது போன்று நாம் செய்து பழக வேண்டும்.

விவசாயம் செய்பவர்கள் இதைப் போன்று செய்து பழக வேண்டும் உங்கள் நிலத்தை உற்றுப் பார்த்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவை அங்கே உற்றுப் பார்த்து அந்தச் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.
3.பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் என்று நினைவை உணர்வை பாய்ச்சுங்கள்… உங்கள் எண்ணம் அங்கே ஊடுருவும்.

ஏனென்றால் தாவரங்களில் விளைந்ததை உணவாக எடுத்துத் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். அந்த உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாக இருக்கின்றது அந்த எண்ணத்தைக் கொண்டு அருள் உணர்வுகளை நாம் பாய்ச்ச முடியும்

மனிதர்கள் நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்… அவசியம் நாம் இதைச் செய்ய வேண்டும்.

குரு காட்டிய நெறிப்படி தியானிக்க வேண்டும்

குரு காட்டிய நெறிப்படி தியானிக்க வேண்டும்

 

யாம் ஞானகுரு) சொன்ன முறைப்படி யார் இந்தத் தியான வழியினைச் சீராகக் கடைப்பிடித்து வழி நடக்கின்றார்களோ “அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்…”

ஆனால் தீமை என்ற அடிப்ப்படையில் ஆசை நிலையில் அதைக் கொண்டு வந்தால் பாலிலே பாதாமைப் போட்டு பல சத்துக்களைப் போட்டு விஷத்தைப் போட்ட மாதிரி ஆகிவிடும்.

அதாவது செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆசையுடன் தியானத்திற்கு வந்தார்கள் என்றால்… நிச்சயம் அவர்களுக்குக் கெடுதலாகும் அவர்கள் வார்த்தையைக் கேட்டு வழி நடப்பவர்களுக்கும் கெடுதலாகும்.

ஏனென்றால் அவர்கள் ஆசையைக் கூட்டப்படும் பொழுது அதை ஆசை அடுத்தவர்களுக்கும் வந்து சேர்ந்து விடுகின்றது கடந்த காலங்களில் இப்படித்தான் யாம் கொடுத்த பல உயர்ந்த சக்திகளை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.

அதையெல்லாம் எவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்தேன்… ஆனால்
1.நல்லதை எண்ணி ஏங்கி வருபவர்களுக்கு அது எப்படியும் தனித் தனித் தன்மைகளில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று
2.இப்பொழுது விளக்கமாகச் சொல்லி வருகின்றேன்… அருள் உணர்வுகளைக் கிடைக்கும்படி செய்து கொண்டிருக்கின்றேன்..

என்னை நீங்கள் தேடுவதற்குப் பதில் எங்கிருந்தாலும் அங்கே அமர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் பெற வேண்டும்.
1.எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும்
2.சர்வ தோஷங்களையும் நீக்கக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.மறுபடி மறுபடி இந்த உணர்வைக் கூட்டிக் கொண்டே வாருங்கள்.

உட்கார்ந்து தியானியுங்கள்.. இதையே எண்ணி ஒரு பழக்கமாகக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்.

நீங்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
2.உங்களை எண்ணி சதா நான் தவம் இருக்கின்றேன்.

நண்பன் என்று அவன் அமெரிக்காவில் இருந்தாலும் எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்றால் எப்படிப் புரையோடி அவனை இயக்குகின்றதோ… அதே சமயத்தில்… நன்மை செய்தான் என்று எண்ணினால் எப்படி விக்கலாகிறதோ அதைப் போன்று உங்களை எண்ணி நான் தவம் இருக்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஏக்கமாக இருக்கும் பொழுது உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது… ஆகவே ஏங்கித் தியானிக்க வேண்டும்.

ஆனால் “ஆசையை வேறு பக்கம் வைத்து” அவன் இப்படிச் செய்கின்றான்… இவன் ஏன்னைக் கேவலமாகப் பேசுகின்றான்… இவன் என்னைத் தவறாகச் சொல்கின்றான்… என்ற இந்த உணர்வு வரும் போது கலக்கமாகிறது.
1.என்னா சாமி…? எல்லாம் செய்தேன் ஒன்றும் நடக்கவில்லையே…! என்பார்கள்.
2.ஏனென்றால் இந்த ஆசையோடு கலக்கப்படும் பொழுது இந்தக் கலக்கம் தான் வரும்.

ஆகவே… தியானத்தைச் சீராகக் கடைபிடித்து வாருங்கள்… பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுவீர்கள்.

நீங்கள் எல்லோருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி இந்தக் காற்று மண்டலத்திலே சூழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நச்சுத்தன்மைகளை விரட்டக் கூடியவர்களாக நீங்கள் வளர்ச்சி பெற வேண்டும்.

எல்லாருக்கும் அதைக் கிடைக்கக் கூடிய சக்தியாக நீங்கள் பெற்று… விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து மீட்க வேண்டும்.

மெய்ஞானத்தின் முதிர்ச்சி எது…?

மெய்ஞானத்தின் முதிர்ச்சி எது…?

1.மனதில் கொள்ளப்படும் குண நலன்களால்
2.நான் எனும் உயர் நிலையைச் சிறக்கச் செய்திடும் மனிதன்
3.கனிவுறும் ஞான தேசிகனாகின்றான்.

உலகத்தின் இயக்கம் போல் உடலின் இயக்கம்… சமைப்பின் குணம் காட்டும் உணர்வின் அலைகள்… எங்கிலும் ஜீவன் கொண்டே இயங்குகிறது. காலத்தின் இயக்க கதி ஓட்டத்திலிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக் காணல் என்பது ஒவ்வாத செயல்…!

ஆதி சக்தியின் சக்திக்கே சக்தி அளித்திடும் இணக்க இயக்கமாக… ஆத்ம பயிர் வளர்த்தல் என்பதே…
நற்குண…
நன்னெறி கொள்ளும்…
மனத்தின் திட சங்கல்ப…
“உறுதி நிலை…”

மோகம்… கோபம்… அதி ஆசை… என்கின்ற குணங்களின் வளர்ப்பு மனிதனை இயற்கையின் இயக்கத்தில் இருந்து தனிமைப்படுத்திக் காட்டும்.

குணங்களின் முற்றுதல் என்பது
1.நெருப்பைத் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற விறகு போல்
2.”அதிக ஆசையே – வீசும் காற்றாக…” வளர்த்துக் கொண்ட குணங்களின் உராய்வால்
3.மனம் ஆகிய பெருங்காட்டில் அதுவே பற்றிக் கொள்ளும் அக்கினியாகிவிடும்.

நல்ல நிலை வளர்ப்பாக்கும் செயல் இருநிலை தவிர்த்திருத்தல் என்பது சூட்சுமம். உலகின் கண் உற்பாதங்கள் பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில் உரையின் பொருள் மறைத்து உரைப்பதில் பொருள் கிடையாது என்றே மெய்ஞானச் சுடர் ஆக்கும் பக்குவத்தின் பாகமாய் உரைக்கின்றோம்.

ஞானம் என்பது எது…?

பகுத்தறியும் அறிவு பெற்ற மனிதன் அந்த அறிவின் முதிர்வின் பக்குவத்தில் நன்மை தீமைகளை உணர்கின்றான்.
1.நாம் கூறிடும் பக்குவம்…
2.இதற்கும் மேலாக “சமமான நிலை…”

உயிராத்ம சக்தியின் தெய்வீக நிலையை உணர்ந்தே “அதைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று செயல்படுவதில் இருக்கின்றதப்பா ஞானம்…” தீய குணங்கள் விலக்கி நற்குணத் தன்மைகளை கடைப்பிடிக்கும் போது தான் ஞானம் வெளிப்படுகிறது.

1.தன் மனத்தின் உறுதியால்
2.பிறருக்கு நாம் செய்திடும் சேவையாக விளங்கி
3.பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவிர்த்திடுதல் எதுவோ… அதுவே மெய் ஞானத்தின் முதிர்ச்சி…!

மெய் ஞானப் பாடத்தைப் புகட்டும் வழி

மெய் ஞானப் பாடத்தைப் புகட்டும் வழி

 

மனிதன் ஏடறிவால் கற்கின்ற கல்வி…
1.புவியியல் எனப்படுகின்ற உன்னதத் தன்மைகள்
2.உயிரியல் எனப்படுகின்ற சூட்சும நிலைகள்
3.வானியல் என்கின்ற மூலபிரக்ருதி ஆதியின் அந்தம் உணர்ந்து கொள்கின்ற செயல் தன்மைகள் அனைத்தும்
4.மெய்ஞானத்தைக் கூட்டி போதனையின் வழி அறிந்ததைத் தன்னுள் தான் தெளிந்து
5.பெற வேண்டிய உண்மை நிலை எதுவோ அந்நிலையாய் விளங்கிடவே
6.அன்று சித்தர்கள் காட்டிய சீரிய உண்மைகளை இன்றைய புத்தக அறிவால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியுமா…?

கற்கின்ற கல்வியின் சாரங்கள் எந்நிலையாயினும் தொடருமா…? கற்பவை கற்ற நிலையில் வராது.

செவி வழியாக அறிந்து கொண்டிடும் காரிய உண்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு உரைத்திட சொல்லின் கோர்வைகள் மாறுபடா நிலையாக உரைத்திட இயலாத கல்வியின் தன்மை… அறிந்து கொண்டதை கொண்ட வழியிலே உரைத்திட வழி உண்டு.

மெய்ஞானத்தின் வழி உற்றவைகள் (உகந்தவைகள்) நற்குணங்களாகப் பரிணமிக்க நன்னெறி வளர்ப்பில் திட மனது கொள்கின்ற நிலையும்… அற்றவைகள் (ஆகாதவைகள்) என்று உரைக்கின்ற மனிதனின் நடைமுறை வாழ்க்கை செயலில் அதை எண்ணிச் செயல்படும் பொழுது உற்ற பயனே வரும் என்ற எண்ணிடாத் தன்மையாக… அற்றவைகளின் செயலில் அந்நிலையையே மீண்டும் எண்ணி ஏக்கமாகச் செயல்படும் பொழுது அந்த வினையின் தொடரே “விதி…” என யார் தான் உணர்கின்றனர்…?

மெய்ஞானத்தின் சுடராக நீக்கமற விளங்கும் மெய்ஞானச் செல்வங்களே…!
1.”முக்தி…!” என்று பக்தி வழியாக அதை உரைத்திட்டால் உரைக்கின்ற உரையின் முழுமை (உங்களுக்கு) விளங்கிடாது.
2.குழந்தைக்கு மருந்து புகட்டிடும் தாய் சுவையான பதார்த்தங்களைக் காட்டி நோய் அகலக்கூடிய அந்த மருந்தை அளிப்பதை போல்
3.இன்றைய மனித குலத்தையே மனித குணத்தையே பீடித்துள்ள எண்ணத்தில் செயல்படுகின்ற வினைகள் அகல
4.மாமகரிஷிகள் உவந்து (மகிழ்ந்து) ஊட்டுகின்றனர்… இவை அனைத்துமே பாட நிலை தான்.

ஆத்ம பலம் பெற்று… உயிர் ஆத்மக் கலப்பாக… ஆதிசக்தி எனும் “ஜோதித்துவ சங்கமத்தின் சங்கமேஸ்வரனாய்” சிறப்புற விளங்குதலே… சித்தன் சூட்டிய சொல்… அகம் காட்டிடும் அழகு… என்றும் அகலா “ஞான முறுவலாகப் (மகிழ்ச்சிக் குறி) பூத்திட வேண்டுமப்பா…!”

ஞான முறுவல் காட்டிடும் முகம்… அகம் வாழ் ஜெபமாய் சித்தி நிலை பெற்றிருக்கும்…! என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.

1.ஞான முறுவல் கொள்கின்ற மனத்திற்குள் கோபம் ஏது…?
2.கோப குணம் தவிர்த்திட நந்தி ஞான முறுவல் கொள் என்பார்கள் சித்தர்கள்
3.உள்ளன்போடு உவந்து சினம் தவிர்க்கும் உபாயம் விருப்பமோடு செயல் நிலை ஆக்கிடவே இதை உரைக்கின்றோம்.

தியானப் பயிற்சி

தியானப் பயிற்சி

 

1.எம்மை நேரடியாக நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
2.இருக்கும் இடத்திலிருந்து எண்ணினாலே என்னுடைய (ஞானகுரு) அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

அந்தப் பயிற்சியைத் தான் இங்கே கொடுக்கின்றேன்.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். அம்மா அப்பா தான் முதல் தெய்வங்கள் அவர்களால் தான் நாம் உடல் பெற்றோம். அவர்களின் நல்லாசி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று இந்தப் பேருண்மைகளை எல்லாம் எனக்கு உணர்த்தியது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கண்ணிலே ஏங்கி நேராக உற்றுப் பார்த்துத் தியானியுங்கள்.

இப்போது கண் வழியாக அதை இழுத்துக் கவர்கின்றீர்கள் அடுத்து கண்ணின் நினைவு புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அங்கே காந்தம் இருக்கின்றது அதிலே நாம் துருவ நட்சத்திரத்தினைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம்.

ஆனால் வழக்கமாக நாம் மூக்கு வழியாகச் சுவாசிக்கின்றோம். நுகர்கின்றோம் உயிரிலே மோதி அந்த உணர்ச்சிகள் நம்மைத் தெரிய வைக்கின்றது… இயக்குகின்றது.

ஆனால் அதை முதலில் சொன்ன முறைப்படி புருவ மத்தி வழியாகத் துருவ நட்சத்திரத்தை அந்தக் காந்தத்தின் வழி கவரும் பொழுது பிற தீமைகள் சுவாசத்தின் வழி உள்ளே புகாதபடி துருவ நட்சத்திரத்தில் உணர்வுகள் அடைப்பாகி விடுகிறது.

ஆகவே தீமைகள் நமக்குள் போகாது நாம் தடைப்படுத்தி விடுகின்றோம்.

ஆனால் உள்ளே சென்றுவிட்டால் இரண்யன். நல்ல அணுக்களை அது கொன்றுவிடும் அது வேதனை கடும் நஞ்சு அதை நாம் குரு காட்டிய வழியில் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தினை கண்களிலே நினைத்து இங்கே கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா கண்ணைத் திறந்தே தியானியுங்கள். பின் கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் என்று அப்படியே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கிக் கொண்டே இருங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த இரத்தங்களில் அதனைக் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்

சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் கலக்க வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று செலுத்தி விட்டு அடுத்து அந்த இரத்தம் போகும் பாதைகள் அனைத்துமே அந்த இரத்தங்கள் முழுவதுமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

அது உடல் முழுவதும் சுழன்று எல்லா உறுப்புகளுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய எல்லா ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

நாம் மற்றவருடன் பிரியமாக பழகி அன்புடன் இருந்து அவர் திடீர் இறந்து விட்டால் நம் மீது பாசமாக இருந்தால் அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் இருக்கும்.

அவருடைய கெட்டதெல்லாம் இரத்தத்தில் இருந்து கொண்டு நமக்கு அது தொல்லைப்படுத்தும் நிலையாக வரும். நம்முடைய சிந்தனைகளைக் குறைக்கும். அது உடலுக்குள் வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அதனால் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அவசியம் நாம் அந்த நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பரவ வேண்டும் என்று நினைவைச் செலுத்த வேண்டும்.

அடுத்து இந்த வாயு மண்டலங்கள் அதாவது அந்த நரம்பு மண்டலங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அதில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்துங்கள்.

நாம் சர்வ காலம் கண்களில் எத்தனையோ உற்றுப் பார்க்கின்றோம். எக்ஸ்ரே எப்படி ஊடுருவிச் செயல்படுத்துகின்றதோ அது போன்று கண்களால் பார்த்த்து எலும்புக்குள் ஊனாக இருக்கும்.

நான் எதையெல்லாம் பார்க்கின்றோமோ வரிசையில் அங்கே பதிவாக்கிக் கொண்டே இருக்கும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து அதில் இருக்கக்கூடிய ஊனில் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

மீண்டும் புருவ மத்திக்குக் கண்ணின் நினைவைக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே நினைவைச் செலுத்துங்கள்.

இப்படியே மாற்றி மாற்றி எல்லா இடங்களுக்கும் நினைவைச் செலுத்தி பல முறை தியானியுங்கள்.
1.இப்படிச் செய்ய இது என்ன காசா பணமா…? ஒன்றும் இல்லை.
2.உங்கள் நினைவு மட்டும் தான். இதைச் செய்வதற்கு என்ன வந்தது…?
3.சிறிது நாளைக்குப் பழகிக் கொண்டால் தன்னாலே வேலை செய்யும்.

நல்லது திட்டியவனையோ அல்லது உடல்நிலை பற்றிய வேதனையோ திரும்பத் திரும்ப எண்ணுவதற்குப் பதிலாக அருளைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலே போதுமானது.

ஏனென்றால் இனி வரக்கூடிய காலங்கள் மிக விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடியவர்களாக நீங்கள் வரவேண்டும்… அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு பல வகைகளிலும் எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

கடவுளின் அவதாரம் வராக அவதாரம் பன்றி எப்படிச் சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்ல மணத்தை நுகர்கின்றது.

அதே போன்று நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அதன் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து எத்தகைய விஷத்தன்மையாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு உங்கள் சிந்தனை கலையாது உங்கள் வாழ்க்கையை அருள் ஞானத்தை போதிக்கும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

1.இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தோடு இணைய வேண்டும்
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று அதைப் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேசம்.