மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் “ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு…!”

Divine Light body

மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் “ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு…!”

 

நல்லதை எண்ணினால் நல்லது நடக்கும். ஆனால் தீமையின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அந்த நன்மைகள் வராது.
1.ஆகவே சொர்க்கவாசலை விட்டு நரக வாசலுக்கே சென்றுவிடும்.
2.நரகலோகத்திற்குச் சென்றால் மீண்டும் மனிதனாகப் பிறக்க எத்தனை காலமாகுமோ …? என்பதைத்தான்
3.ஒரு பரமபதப் படத்தை வைத்துக் காட்டுகின்றனர் ஞானிகள்
4.அதாவது சொர்க்கவாசல் என்று பரமபதத்தைக் காட்டி விளையாட்டு ரூபமாக நமக்கு உணர்த்துகின்றனர் ஞானிகள்.

பன்றி நாய் நரி நண்டு தேள் இவைகள் எல்லாம் அந்தப் படத்தில் கீழே காட்டப்பட்டிருக்கும். தாயங்களை உருட்டுவார்கள். அப்படி உருட்டும் பொழுது இதன் வழி கொண்டு சென்றால் அடுத்து ஒரு சிறிய ஏணி இருக்கும்… பெரிய ஏணியும் இருக்கும்.

சந்தர்ப்பத்தால் சிறிய ஏணியில் ஏறியபின் அடுத்து பல கட்டங்களைத் தாண்டிச் செல்கிறது. அங்கே சென்ற பின் அடுத்து அதன் அருகில்… “முகப்பிலேயே ஒரு விஷப் பாம்பு இருக்கின்றது…!”

தாயக்கட்டையை உருட்டினால் தாயம் விழுந்தால் கீழே வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையில் எதனின் உணர்வின் தன்மையைப் பெறுகின்றோமோ அது நம்மைக் கீழே கொண்டு வந்துவிடுகின்றது.

அதாவது ஒரு மனிதன் வேதனைப்படும் நிலைகளில் செயல்படுகின்றான் என்றால் அதை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால்
1.நம் நல்ல எண்ணங்களை இயக்கிக் கொண்டிருக்கும் விஷம்
2.வேகமாகக் கொண்டு வந்து நம்மைக் கீழே இறக்கிவிடும் என்பதைத்தான்
3.அங்கே உதாரணமாகக் காட்டுகின்றார்கள் பாம்பைப் போட்டு..!

சொர்க்க வாசல் என்று சொல்லும் வைகுண்ட ஏகாதசி அன்று அந்த ஏகாந்த நிலை பெறச் செய்யும் அருள் ஞானத்தை நாம் பெற
1.இந்த வாழ்க்கையில் எத்தனை தடைகள் வருகின்றது…?
2.மீண்டும் மீண்டும் நாம் எப்படித் தேய்பிறையாகின்றோம்…?
3.அப்படி வரும் தடைகளிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்..?

இதைத் தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்…!

அதை எல்லாம் தாண்டி அடுத்து மேலே வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி வந்துவிடுகிறது. “பரமபதம் ஏறப் போகின்றோம்…” என்றாலும் கடைசியில் அங்கே ஒரு பெரிய பாம்பு இருக்கும்.

1.மேலே வந்த பின் நான் வந்துவிட்டேன் என்று எண்ணுவார்கள்…!
2.ஒரு தாயம் முதலிலே விழுந்து விட்டால் நேரடியாகக் கீழே கொண்டு போகும்.
3.அதனுடைய முடிவு எங்கே முடிகிறது…?
4.கீழே பன்றியிடம் தான் விடுகின்றது… பன்றியிடம் வாலைப் போட்டுக் காட்டியிருப்பார்கள்.

பல கோடி உணர்வின் தன்மைகள் கொண்டு நாம் சென்றாலும் அதிலிருந்து விடுபடும் வல்லமை உண்டு. ஏனென்றால் இங்கே வந்தால் பன்றி என்ன செய்கிறது..?
1.சாக்கடையை நுகர்ந்து
2.அதற்குள் இருக்கும் தீமைகளைப் பிளந்து
3.நல்ல உணர்வுகளை நுகர்ந்து
4.அந்த நல்ல உணர்வின் வளர்ச்சி பெற்று “மனிதனாக” அது உருவாக்குகின்றது.

ஆகவே நாம் தீமைகளை அகற்றி ஒளியாக்கும் உணர்வின் தன்மைகளை நமக்குள் வளர்த்தல் வேண்டும். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வருதல் வேண்டும்.

பல கோடி உணர்வுகளைச் சந்தித்தாலும் அதிலிலுள்ள தீமைகளை நீக்கிவிட்டு அருள் ஒளி பெறும் சக்தியாக நாம் வளர வேண்டும்.
1.இவ்வளவு விஷயங்களையும் அந்தப் பரமபதத்தின் மூலம்
2.அழகாக மனிதனுக்குச் சித்தரித்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

முன்னோர்கள் காட்டிய வழியில் மனிதன் வாழ வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

our destination

முன்னோர்கள் காட்டிய வழியில் மனிதன் வாழ வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதர்களால் பல வினாக்கள் எழுப்பப்படலாம். ஆண்டவனை வணங்கி நம்மையே ஆண்டவனாக்கி ஞானம் பெறும் வழியையெல்லாம் இந்த மனித ஆன்மாக்கள் தானே உணர முடிகின்றது.

மிருகங்களுக்கு ஞான உபதேசங்களோ பக்தி வழிபாடோ இல்லை. அவற்றுக்கு இனி வரப் போகும் உலக மாற்றத்திலிருந்து அழியாமல்… இன்றுள்ள நிலையிலிருந்து விடுபட வழி இல்லையா..? என்ற வினா எழும்பலாம்.

மனிதனுக்குத்தான் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவற்றின் நிலை கொண்ட எண்ணத் தொடர் உண்டு. மனிதனால் இன்றைய நிலையில் ஆடை உடுத்தாமல் அம்மணம் கொண்டு வாழ்ந்திட முடியுமா…?

மனிதனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லறப் பிணைப்பைப் பிணைத்து.. குடும்பம் என்ற குடில் அமைத்து பல நிலைகளை மனித ஞானத்தால் பக்குவ மேம்பாடுபடுத்தி… தானாகப் பெய்யும் மழைக்கு வடிகால் அமைத்து வழிப்படுத்தியவன் மனிதன்.

மனிதன் கல்லைச் சிலையாக வணங்கினான். ஆண்டவன் என்ற பக்தி செலுத்த அதே போல் பல பக்குவ மேம்பாடின் ஞானம் பெற்றான் மனிதன்.
1.மனித அமில குணத்தின் ஞான வளர்ச்சி
2.உயர்ந்தோங்கும் ஆற்றல் கொண்ட “அபரிதமான சக்தியின் ஜோதி வளர்ச்சி ஆகும்…!”

இந்த வழித் தொடரின் அமில குண ஞான அறிவாற்றல் கொண்ட மனித வளர்ச்சியின் நிலைக்கொப்ப மேம்பாட்டின் சக்தி மிருக வர்க்கங்களுக்கு வழிப்படவில்லை.

பல ஆயிரம் ஆண்டுகள் மேல் நோக்கிய சுவாசத்தை ஈர்த்து அந்த ஈர்ப்பின் சக்தி அமிலமான மாணிக்கத்தை ஈர்க்க வல்ல குணமுடைய நாக சர்ப்பத்திற்கே அதன் வட்டத் தொடர்ச்சி அமில குணமானது மனித ஞானத்திற்கொப்ப மேம்பாடு பெறவில்லை,

இதே போல் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் மற்ற ஜீவ ஜெந்துக்களுக்கும் மனிதனைக் காட்டிலும் பல சக்தி அமில குணங்கள் மேம்பட்டு வளர்ச்சியுற்றிருந்தாலும் மனிதனைப் போன்ற செயலாக்க வல்ல ஞான வளர்ச்சியின் செயல் கொள்ளும் வழி முறைகள் அவற்றிடம் இல்லை.

மனிதனிலிருந்து தான் எல்லா மிருக இனங்களும் செயல் கொண்டதா என்றால் அதுவுமில்லை. மிருகத்திலிருந்து மனித இனம் வரவில்லை.

ஆனால் மனிதனாக வாழும் நிலையில்
1.இவன் எடுக்கும் நிலை கொண்ட சுவாசத்தினால்
2.ஏழு பிறவியில் இவன் சேமித்த அமில குணத்தின் நிலைக்கொப்ப ஞான ரிஷியாகவும்…
3.மிருகத்தின் நிலையிலும் சென்று விடுகின்றான். இது தான் உண்மை நிலை.

மிருகங்களிலே ஊரும் ஜெந்துக்களிலே அதனதன் நிலைக்கொப்ப பல அறிவு குணங்கள் நிறைந்துள்ளன. மூட்டைப் பூச்சிக்கு மனிதனின் சுவாசமும் மனிதன் “தன்னைப் பிடிக்கப் போகின்றான்..” என்று அறியும் ஆற்றலும் உண்டு. அதே போல் பல்லியைக் கண்டாலும் “தன்னைப் பிடித்துவிடும்…” என்பதை உணரும் ஆற்றலும் அதற்கு உண்டு.
1.ஒவ்வொரு ஜீவராசிக்கும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையும்
2.தன் ஆகாரத்தை ஒரே குறியுடன் எடுக்கவல்ல சக்தியும் உண்டு.

ஆனால் மனிதனுக்கு மூட்டைப் பூச்சி அவனைக் கடித்தால் தான் அவனால் உணர முடிகின்றது. மனிதனுக்குத் தன்னைத் தானே தற்காப்புக் கொள்ளும் அமிலத் தன்மை குறைவு.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவற்றின் வழி பெற்றவன் தான் மனிதன். மனிதன் இயற்கைக் குணமே அவன் ஞானத்தை வளர்க்கும் வழி பெற்ற அமில குணமுடையது தான்.

பூனை.. நாய்… இவை எல்லாம் தன் சுவாசத்தைக் கொண்டு நடப்பதற்கு முதலிலேயே வரப் போகும் நிலையை உணரும் மேம்பாட்டுக் குணமுடையது.
1.இப்படி இயற்கையே கலவையாகி
2.அக்கலவையில் வெளியான உலகில் ஏற்படும் பல கோடி நிலைகளில் கலந்துள்ள நாம்
3.நம் ஞானத்தை நம் முன்னோர்களினால் உணர்த்தப்பட்ட உன்னத வழிக்கோலைச் செயல்படுத்திட வேண்டும்.

ஆண்டவனுக்கு (சிலைக்கு) மாலையை முன் போட்டுத்தான் வணங்குகின்றோம். பின் போட்டு அழகு காண்கின்றோமா…?

எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனுக்கே மாலையை முன் போட்டால் என்ன…? பின் பக்கம் போட்டால் என்ன…? என்று செயல்படுத்தாமல் முன்னின்று ஆண்டவனையும் முன்னோரையும் வணங்குகின்றோம்.

அந்நிலைக்கொப்ப நம் முன்னோர்களின்… முன் வழிப்படுத்திய தத்துவ ஞானத்தின் உண்மையை உணர்ந்து… மெய் ஞானத்தின் சக்தியைத் தன் ஞானத்தால் ஈர்க்க வல்ல ஞானம் பெறுங்கள்.

தீமைகளை வென்றிடும் சூட்சமங்களைப் பற்றி அறிந்து கொண்டால் நம் உணர்வுகளை ஒளியாக்கிட முடியும்

eternal light destinations

தீமைகளை வென்றிடும் சூட்சமங்களைப் பற்றி அறிந்து கொண்டால் நம் உணர்வுகளை ஒளியாக்கிட முடியும்

 

ஆடு மாடு மற்றவைகள் எல்லாம் தனக்குள் உருவாகும் விஷத்தின் தன்மை கொண்டு கடினமான தட்டைகளை (தாவர இனங்களை) தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மை அதை அடிமைப்படுத்தி பிஸ்கெட் போலக் கரைத்து உணவாக்கிக் கொள்கின்றது.

கரைத்துத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் கலந்த உணர்வின் சத்தையும் தனக்குள் எடுத்து
1.வலுவான உடலாகத் தன் உடலை மாற்றுகின்றது.
2.ஆனால் அதே சமயத்தில் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாணம் நல்லவைகளாக இருக்கின்றது.

பல பல விஷ மூலிகைகளையும் ஆடு உணவாக உட்கொள்கின்றது. பின் அந்தச் சாணத்தை அது வெளியிடும் பொழுது எடுத்து நாம் நுகர்ந்து பார்த்தால் நமக்குள் இருக்கும் நஞ்சுகளை அது முறித்து அதை அடக்கிடும் அந்தச் சக்தி பெறுகின்றது.

1.அந்தச் சாணத்தில் வெளிப்படும் மணத்தை நாம் நுகரப்படும் பொழுது
2.நம் இரத்தங்களிலே இது கலக்கப்பட்டு
3.நம்முடைய சுவாசப்பைகளிலேயோ மற்ற உறுப்புகளிலேயோ இருக்கும் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

இதை நீங்கள் பார்க்கலாம்.

அதே சமயத்தில் அந்தச் சாணத்தை வைத்து நம் வீட்டை மெழுகும் பொழுது புவியின் வெக்கையால் அலைகள் வெளிப்படும். அதன் மீது நடந்தால்
1.வீட்டில் இருக்கும் துன்பமான உணர்வுகளை
2.நம் பாதத்தால் கவரப்படும் இந்த உணர்வுகளை அடக்கும் சக்தி பெறுகின்றது.
3.அதனுடைய மணங்களுக்குத் தீமைகளை அடக்கும் சக்தி வருகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் மனித உடலிலோ நாம் சுவைமிக்க உணவை உணவாக உட்கொண்டாலும் நம் உடலுக்குள் சென்ற பின் நம் உடலின் தன்மையோ நஞ்சைப் பிரித்துவிட்டு நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.

அப்படி நல்ல அணுக்களாக மாற்றப்படும் பொழுது தான் நாம் எதனையும் நிதானித்து தெரிந்து கொள்ளும் தன்மையை அடைகின்றோம்.

ஒரு விளக்கு அது எரியப்படும் பொழுது வெளிச்சமாக இருக்கின்றது. அதன் மீது ஒரு கருப்பான பொருளை ஒட்டிவிட்டால் கருப்பின் நிறமே வருகிறது. சிவப்பான பொருளை ஒட்டிவிட்டால் சிவப்பின் நிறமே வருகின்றது.

இதைப் போல் தான் நம் கண்களின் வழியாக வேதனை என்ற உணர்வின் தன்மையைக் கவர்ந்து விட்டால் இந்தக் கண்கள் அந்த வேதனையைத் தான் கவரும் திறன் பெறுகின்றது. அதன் உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அது வருகின்றது.

வேதனை என்ற நிலைகளை நீக்க விஷத்தை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிருடன் வேண்டி அந்த உணர்வை ஏங்கப்படும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஒளியின் அறிவாக நமக்குள் கண்கள் காட்டுகின்றது.

அந்தக் கண்ணின் நிலைகளில் கொண்டு நாம் எந்தத் தீமையை வென்ற உணர்வை எண்ணுகின்றோமோ இந்தக் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் நஞ்சினை மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை ஒளியாக மாற்றும் அந்தப் பருவம் பெறுதல் வேண்டும்.

ஆதிசங்கரருக்குப் பிறகு ஞான மார்க்கத்திற்கு வழிகாட்டும் நிலை இல்லாது போய்விட்டது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

light meditators

ஆதிசங்கரருக்குப் பிறகு ஞான மார்க்கத்திற்கு வழிகாட்டும் நிலை இல்லாது போய்விட்டது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.

அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.

அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.

அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும் சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவு பட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்டிடல் முடியும்.

ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோகமார்க்கங்களும் பக்திமார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.

பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.

அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு இந்நிலை பெற மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெறவேண்டும் என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.

இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?

1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.

 

நான் மிகவும் நல்லவன்.. உயர்ந்தவன்…! என்றாலும் பிறரின் குறை உணர்வுகள் வந்து விட்டால் நாம் எங்கே செல்வோம்…?

Protected cirlce of Polaris

நான் மிகவும் நல்லவன்.. உயர்ந்தவன்…! என்றாலும் பிறரின் குறை உணர்வுகள் ந்து விட்டால் நாம் எங்கே செல்வோம்…?

 

1.நாம் யாரையோ குறை கூறுகின்றோம்
2.எவரையோ குறை கூறுகின்றோம் என்று இருக்கலாம்.
3.ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவாக அந்தக் குறையான உணர்வுகள நம் உடலில் உயிர் உருவாக்கிவிடும்.

யாரைக் குறையாக எண்ணினோமோ அந்தக் குறை உணர்வின் அணுக்களாக மாறுகின்றது. அது நாளடைவில் நம் இரத்தத்தில் கருவின் முட்டையாக மாறுகின்றது.

அது முட்டையாக மாறி…
1.எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த உறுப்புகளில் தேங்கி வெடித்து அணுவாக மாறுகின்றதோ
2.அதனின்றே உணர்வின் தன்மை இது இருப்பிடமாக வைத்து
3.அதன் துணை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி இந்த இரத்தநாளங்களின் வழியாக உயிருக்கு அனுப்புகின்றது.

உயிருக்குள் தூவப்படும் பொழுது நாம் யாரைக் குறையாக எண்ணினோமோ அவை அனைத்தையும் உணவாகக் கொடுத்து இந்த உடலின் உறுப்புகளைக் குறையாக மாற்றி நம்மை வேதனைப்படச் செய்யும்.

பின் அந்த வேதனையிலிருந்து நாம் தப்புவதே மிகவும் கடினம். ஆகவே தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஒருவரைப் பற்றி அந்தக் குறையின் உணர்வு வரப்படும் பொழுது அவர் வாழ்க்கையிலேயும் ஒரு தொழில் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நிலைகளிலோ மேல் வலி… நோய்… மற்ற குறை… எல்லாமே இருக்கும். அவரில் விளைந்த உணர்வுகள் இங்கே இருக்கின்றது.

அவரைக் குறையாக எண்ணிக் கொண்டிருந்தால் அந்தக் குறையைத்தான் இதிலிருந்து நாம் நுகர முடியும். அவர் முதலில் நம்முடன் அன்பு கொண்டு பாசம் கொண்டு பழகியிருந்தால் அந்தக் குறைகளை வேகமாக இழுத்துவிடும்.

ரேடியோ டி.வி.க்களில் ஒலி, ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது அதிலே எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்த ஸ்டேசனைத் தான் எடுக்கும்.

அதைப் போல் தான் ஒருவருடன் நாம் பழகப்படும் பொழுது அந்தப் பதிவின் துணை கொண்டு நமக்குள் அவருடைய உணர்வுகள் எளிதாக வந்துவிடும்.

சுவை மிக்க பாலாக இருந்தாலும் அதற்குள் விஷத்தைக் கலந்து விட்டால் குடித்தால் அந்தப் பாலுக்கு வலு ஏது…? அந்த விஷத்தின் தன்மை போல் தான் உணர்வின் எண்ணங்கள் தூவப்பட்டு அங்கே விஷத் தன்மையை வளர்த்துவிடும்.

இன்றைய செயல் நாளைய சரீரமாகிவிடும். அதைத் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாக்குகின்றார்கள்.

நாம் எடுக்கும் உணர்வுகள் அணுவின் தன்மை அடைந்து விட்டால் தன் உணவின் தன்மையை அது எடுத்துத் தன் இனத்தின் தன்மையைப் பெருக்கப்படும் பொழுது அதன் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் அதிகரித்து நமக்குள் உருப்பெறும் உணர்வுகளை அது உருவாக்கி
1.நாம் எதை எண்ணினோமோ
2.அந்த எண்ணத்தின் வழியாகவே… அடுத்த சரீரத்தைப் பெறச் செய்யும்.

ஆகையினால் பிறரைப் பற்றிக் நாம் குறை கூறும் நிலையோ பிறருடைய நிலைகளை எடுத்து கொண்டால் “தான் உயர்ந்தவன்…!” (நல்லவன்) என்ற நிலைகள் இருப்பினும் அதை மாற்றிவிடும். அதாவது
1.பாதாம் உயர்ந்ததாக இருப்பினும்
2.அதை விஷத்தில் துவட்டி உணவாக உட்கொண்டால்
3.நம்மை மடியச் செய்துவிடும்… பாதாமிற்குச் சக்தியில்லை.
4.ஏனென்றால் விஷத்தின் தன்மையே ஆற்றல் கொண்டது.
5.ஒரு விஷத்தின் இயக்கமே உலகத்தின் இயக்கம்.

சூரியன் விஷத்தின் நிலையால் சுழற்சியின் வேகம் கூடினாலும் அதிலே உருவாகும் உணர்வுகள் நஞ்சினைப் பிரித்திடும் நிலை வருகின்றது.

சூரியன் தன் சுழற்சியால் ஏற்படும் உணர்வுகள் கொண்டு அந்த நஞ்சின் மேல் மோதப்பட்டு வெப்பத்தின் தணல் கூடப்படும் பொழுது விஷத்தைப் பிரித்து விடுகின்றது. (சூரியன் என்றால் நாராயணன்)

விஷத்தைப் பிரித்த பின் அது சிதறி ஓடினாலும் இந்த வெப்பத்தால் உருவான நிலைகள் “ஈர்க்கும் காந்தம்…” என்ற நிலைகள் வருகின்றது. அந்தக் காந்தத்திற்குப் பெயர் லட்சுமி.

காந்தமாகப்படும் பொழுது நகர்ந்து சென்று கோள்களின் விஷத் தன்மையைத் தனக்குள் (லட்சுமி) கவர்ந்து கொண்டாலும் விஷத்தை இந்தக் காந்தம் கவர்ந்து கொண்டால் அது “இலட்சுமணா…”. அது தான் ஒரு அணுவிற்குள் இருக்கும் இயக்கச் சக்தி…!

காந்தத்தால் கவர்ந்து கொண்ட நிலையாக இவ்வாறு ஒரு அணுவின் இயக்கமாகச் சூரியனிலிருந்து வெளிப்படுவதை (நாராயணன்) இந்த உலகத்தில் தன் ஒளியை அனுப்பிக் கொண்டேயிருக்கின்றது.

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்றால் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் சீதாலட்சுமியாக மாறுகின்றது. விஷம் அந்தச் சத்தின் (நாம் பேசியதை) மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அது ஞானமாகின்றது. அந்த ஞானத்தின் வழி கொண்டு தான் அந்த அணுவின் இயக்கம் இருக்கும்.

எதன் வழி கொண்டு எதனில் உருவானதோ அதன் வழி கொண்ட ஈர்ப்புக்குள் சென்று அதை வளர்க்கும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! ஒரு அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் இயக்கத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் போல் தான் நாம் எண்ணும் எண்ணங்கள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.வேதனை என்ற உணர்வுகளோ
2.ஒருவரை வேதனைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டு தன்னை மறந்து அதைச் சொன்னோம் என்றால்
3.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்கி இரத்த நாளங்களில் சுழலச் செய்கின்றது.

அதே போல்..
1.பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணங்களோ
2.பிறரைத் துன்பப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களோ
3.பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணங்களை எவர் எடுத்தாலும் சரி
4.நானே பெரிய சக்தி பெற்றவனாக இருந்தாலும் அந்த விஷத்தை உருவாக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது
5.எனக்குள் இருக்கும் நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும் நிலைகளே வரும்.

நல்லவைகள் எதைச் செய்தாலும் விஷத்தின் ஈர்ப்புக்குள் சென்று அந்த அணுக்களும் (விஷத்தை) உட்கொள்ளா நிலைகள் மறுத்து அந்த அணுக்கள் சோர்வடையத் தொடங்கிவிடும்.

அது சோர்வடைந்து விஷத்தின் தன்மை ஆட்கொண்டால் அனைத்தும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிடுகின்றது. விஷத் தன்மையாக மாறிய பின் நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் விஷமான உயிரினங்களாகத் தான் பிறக்க நேரும்.

அதைப் போன்ற நிலைகள் ஆகாது தடுக்க வேண்டும் என்பதற்குத் தான்
1.விஷத்தை ஒடுக்கிய… நஞ்சினை வென்ற…
2.அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.உங்களுக்குள் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி எடுத்து உங்களுக்குள் சேர்த்து உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.
1.இது ஒன்றும் கஷ்டமில்லை.
2.சிறிது நாள் பழகி விட்டால் பின் தன்னாலேயே இது வரும்.

நெருங்கிக் கொண்டு வரும் உலக மாற்றத்திலிருந்து நம்மைக் காக்கும் கடமை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

SAVE THE EARTH

நெருங்கிக் கொண்டு வரும் உலக மாற்றத்திலிருந்து நம்மைக் காக்கும் கடமை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் கண்டவுடன் மகிழ்கின்றோம். வெயிலில் உள்ள பொழுது நாம் நிழலுக்கு ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையில் தான் உழன்று கொண்டுள்ளோம்.

அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலினுள் கூட்டிக் கொண்டுள்ளோம். இந்த நிலையை மாற்றி நம் ஒளியைக் காண முயல்கின்றோமா…?

கண்ணாடியின் தூசியை அகற்றித் தெளிவாக உருவைக் காணுகின்றோம்.
1.இந்த உடலில் உள்ள அசுத்த அலைகளையும் தீய எண்ணங்களையும் மாற்றி
2.நம்மின் உண்மை அழகைக் காண முயல்கின்றோமா…?

நம்மிடமுள்ள அசுத்த அலைகளை அகற்ற நாம் விழையாமல் “ஆண்டவன் வந்து தானாக அகற்றுவான்…! என்று ஆண்டவனை வேண்டி… அக அழகு காண முயல்கிறோம்…”

ஒரு செம்பில் உள்ள நீரில் அதற்கு மேன்மேலும் நல்ல நீர் ஊற்றும் பொழுது நல்ல நீரும் அசுத்த நீரும் கலந்து வெளிப்பட்ட பிறகு தானாக அனைத்தும் நல்ல நீராகி விடுகின்றது.

அதைப் போல் நம்மில் உள்ள தீய அணுக்களை நாம் எடுக்கும் நல் உணர்வின் ஈர்ப்பினால்… மேன்மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வான அமில குணங்கள் அதிகப்படப்பட… இந்தத் தீய அணுக்கள் பல ரூபத்திலும் வெளிப்பட்டுவிடும்.

1.நம் உடலில் இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆவி ஆத்மா ஏறியிருந்தாலும்
2.தீய அமில குணங்கள் வெளிப்படும் பொழுது
3.அதன் குண அமிலத்திற்குகந்த ஆகாரம் கிடைக்காத தன்மையில்
4.அதன் பாதிப்பான குணத் தூண்டுதலும் நம்மை ஒன்றும் செய்திடாது.

இந்நிலையை உணர்த்தும் தத்துவ ஞானத்தை உணர்ந்து இந்த ஆத்மாக்கள் உயர்ந்தால் தான் சக்தி நிலை கூடும்.

உலக சக்தியும்… அண்டசராசரங்கள் என்று உணர்த்துகின்றனரே… அந்த அனைத்துச் சக்தியையும் உணர்த்த வல்ல சக்தி இந்த உலக ஆத்மாக்களுக்குத் தான் உண்டு.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எச்சக்திக்குமில்லை…!

இதை உணர்த்தும் நிலை இந்த உலகம் நம் பூமியின் நிலை கூடிக் கொண்டேயுள்ளது. உலகச் சுழற்சியில் பல அமில சக்திகளை நம் உலகம் ஈர்த்துக் கொண்டே சுழன்றுள்ள நிலையில் உலகின் உள் நிலையில் உள்ள பல அமிலங்கள் வெளிப்பட்டு விட்டது.

1.இயற்கையாக வெளிப்பட்டது மட்டுமின்றி
2.மனிதனால் பூமியிலுள்ள பல பொக்கிஷத்தை ஈர்த்து எடுத்ததினால்
3.மேல் பாகம் கனத்தும் உள் நிலை வலுவிழந்தும் உள்ள நம் பூமியின் நிலை
4.இந்தக் குறுகிய காலப் போக்கில் தன் நிலையைத் தானாக ஒழுங்குபடுத்தும் நிலை வருகின்றது.

அப்பொழுது நம் நிலை எல்லாம் என்னவாகும்..? என்பதனை உணர்ந்து இந்த உடல் என்ற கோளத்தை நம் நிலைக்குகந்த அமிலங்களைச் சேமித்து நம் உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து ஆத்ம ஞானம் பெறும் அறிவின் பொக்கிஷத்தின் வழித் தொடரை உருவாக்குங்கள்.

நம் மூச்சுக் காற்று வழியாக உருவாகும் நோய்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

breathing effects

நம் மூச்சுக் காற்று வழியாக உருவாகும் நோய்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக ஒரு பக்கம் காற்று மண்டலத்தில் ஒரு விஷம் கலந்த பொருளை விஞ்ஞானத்தால் உருவாக்குகின்றனர்.

ஒரு பேட்டரி செல் தனக்குள் காந்தத்தை உருவாக்கும் சக்தி பெற்றது. அதை எலெக்ட்ரான் (மின்சாரம்) ஆக மாற்றக்கூடிய சக்தி பெற்றது. அதிலே கலந்த இந்த விஷத் தன்மை கொண்ட பொருளை நீக்குவதற்காக நெருப்பிலே இட்டுப் புகையாக மாற்றுகின்றார்கள்.

இந்தப் புகையின் தன்மை வெளி வரும் பொழுது சூரியனின் காந்தப் புலன் அறிவு அதைக் கவர்கின்றது.
1.அது எந்தத் திசை நோக்கிச் செல்கிறதோ அந்தத் திசையில் நாம் செல்வோம் என்றால்
2.அந்த உணர்வை நாம் சுவாசிக்கப்படும் பொழுது நம் சுவாசப் பைக்குள் சென்று
3.அந்தக் கெமிக்கல் நமக்குள் இருக்கும் உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது.
4.அப்படி மடிந்து விட்டால் அந்த உறுப்புகளின் திறன் இழக்கப்படுகின்றது.

இது நம்மை அறியாமலேயே சுவாசத்தின் வழி வரக்கூடிய தீமைகள்.

நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் நமக்குள் மூச்சுத் திணறலும் கடும் நோய்களும் உருவாகின்றது.

ஆனால் நாம் சுவாசித்த கெமிக்கலின் உணர்வுகள் இரத்த நாளங்களுக்குள் சென்று இரத்தத்தில் கலந்து விட்டால்
1.இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னிக்குள் இந்த இரத்தம் புகுந்து வடிகட்டப்படும் பொழுது
2.அதிலிருந்து வெளியே வரும் பொழுது அந்த வடிகட்டும் திறன் இழந்து கிட்னியைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது
3.நாம் சந்தர்ப்பத்தால் சுவாசித்த கெமிக்கல்.

இப்படி இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலை தவறி விட்டால் நம் இரத்த நாளங்களில் தெளிவாக்கும் நிலைகள் இழந்து விடுகின்றது. இதைப் போல் நம் உடலில் நம்மை அறியாமலே வாழ்க்கையில் நுகரும் சக்திகளால் தீமைகள் உருவாகின்றது.

நமக்குள் உருவான இந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது இது நம் சிறு மூளை பாகம் வரையிலும் சுழன்று கொண்டேயிருக்கும்.

இதனின் உணர்வின் தன்மை வளர்ச்சி அடைந்த பின் இந்த வளர்ச்சி நம் உடல்களிலே ஒவ்வொரு நிமிடமும் தன் பசிக்காக ஏங்கும்.. எப்படி ஒரு கோழி கருவுற்ற பின் கேறுகின்றதோ இதைப் போல தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

ஒரு மனிதன் தனக்கு வேண்டிய காரியம் நடக்கவில்லை என்றால் திரும்பத் திரும்ப அந்த வேதனை உணர்வுகளை நுகர்கின்றார். இந்த உணர்வின் தன்மை 48 நாள் ஆகிவிட்டால்
1.கோழி கருவுற்று தனக்குள் முட்டையாக மாறுவது போல்
2.நாம் நுகர்ந்த உணர்வு கருவுற்று அதனின் முட்டையாக உடலுக்குள் மாறுகின்றது.

முட்டையாக ஆன பின் அதனின் செயலாக்கங்கள் அது உள்ளுக்கே அடைபட்டிருக்கின்றது. நம் இரத்த நாளங்களிலே அது சுழலப்படும் பொழுது அது சிறுகச் சிறுக நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஊடுருவி இரத்தத்தின் வழியாக எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கும் நிலை பெறுகின்றது.

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அது இரத்த நாளங்களில் செல்லும் பொழுது நல்ல அணுக்கள் இதை ஏற்க மறுக்கின்றது. அதனின் வட்டத்தில் சென்ற பின் நல்ல அணுக்களும் சோர்வடைகின்றது.
1.அவ்வாறு சோர்வடையத் தொடங்கிவிட்டால்
2.நம் உடலும் சோர்வடைகின்றது… நம் எண்ண வலுவும் குறைந்து விடுகின்றது.

எதனைப் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ… அந்த உணர்வை நுகர முடியாது சென்று விட்டால்… உடலுக்குள் நல்ல உணர்வுகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

சோர்வடைந்தால் மீண்டும் அது நலிவடைந்து கொண்டேயிருக்கும்.

சிலரை நீங்கள் பார்க்கலாம். சாப்பாடு நிறையச் சாப்பிடுவார்கள். இருந்தாலும் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது உறுப்புகளில் அஜீரணச் சக்தி ஏற்படும்.
1.இந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உடல் நலியும் தன்மையே வரும்.
2.ஏனென்றால் நல்ல அணு செல்கள் அது வாடும் தன்மை வருகின்றது.
3.இது எல்லாம் இந்த இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள்.

ஆகவே இதைப் போன்று நாம் எடுக்கும் இந்த உணர்வுகள் அது வந்த பின் இது இடைமறித்துச் செல்லும் பொழுது நம் இருதய வாயில்களில் இது ஊடுருவுகிறது.

நம் இருதயமோ மற்ற இடங்களுக்கெல்லாம் அழுத்தம் கொடுத்து எல்லா உறுப்புகளுக்கும் இரத்தங்களை அனுப்புகின்றது.

1.வெறுப்படையும் உணர்வைக் கொண்ட ஒரு அணுக் கரு
2.அந்த இருதயத் துடிப்பிற்குள் சென்று அதனின் நுழைவாயிலில் அது புகுந்து விட்டால் போதும்.
3.அணுவாக மாறிய நிலையில் வெறுப்பான உணர்ச்சிகளை அதன் வழி கொண்டு பரப்பிக் கொண்டேயிருக்கும்.

இப்படிப் பரப்பும் பொழுது
1.சிறுமூளைக்குள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.தூண்டும் பொழுது (அந்த உணர்ச்சி) உயிரான காந்தப் புலன்களுக்குள் அந்த அறிவின் தன்மையை இயக்குகின்றது.
3.பின் கண்… காது… மூக்கு… உடல்.. என்ற நிலைகளில் இந்த உணர்ச்சிகளை நம் உயிர் ஒலி அலைகளாக மாற்றுகின்றது.

அதன் வழிக் கொண்டு நாம் இதை மூச்சாக வெளியிட்ட சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அதே இனமான சக்திகளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றது. நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

ஆன்மாவாக மாற்றிய நிலைகளிலிருந்து எப்படி ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சுகளாக வந்த பின் அதற்குக் கூவி இரையை எடுக்கும்படிக் கற்றுக் கொடுக்கின்றதோ அதே போல்
1.நமக்குள் உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது
2.நம் உயிர் அதற்கு உணவை ஊட்டிச் சாந்தப்படுத்துகின்றது.

உதாரணமாக நாம் வேதனை கொண்ட உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்ட பின் நீங்கள் “இதெல்லாம் வேண்டாம்… மகிழ்ச்சி கொண்ட நிலைகள் பெறவேண்டும்…! என்று எண்ணினாலும் அதன் உணர்வின் தன்மை வேகத் துடிப்பு கூடும்.
1.அந்த வேதனை உணர்வின் வேகம் அதிகரிக்கும்.
2.எந்தப் பாகத்தில் அந்த உறுப்புகளுக்குள் அது தேங்குகின்றதோ
3.அந்த உறுப்புகளில் வேதனையான ஒலிகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.
4.அதனால் நாம் சிந்தனையும் இழந்துவிடுவோம்.
5.அங்கங்களை இயக்கக்கூடிய சக்தியும் குறைந்து விடும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் நாம் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து சுவாசிக்கும் உணர்வுகள் இப்படிப் பல நிலைகளையும் நோய்களையும் உருவாக்கிவிடுகின்றது.

இதிலிருந்து மீள வேண்டுமா இல்லையா…?

நாம் நல்ல நிலையில் உயர்வதற்குண்டான “கால நேரம் வரட்டும்…!” என்று காத்திருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

importance of good things

நாம் நல்ல நிலையில் உயர்வதற்குண்டான “கால நேரம் வரட்டும்…!” என்று காத்திருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணியே வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.

பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும் என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.

இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.

ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.

நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடனும் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.

ஜெபம் பெறுங்கள்.. நல் உணர்வு பெறுங்கள்… என்றெல்லாம் வழிப்படுத்துகின்றோம். அந்த நிலையில் நம் எண்ணக் கலவை வழிப்படுத்திக் கொண்டு வரும் நிலையில்
1.நம்மை அறியாமல் பிறர் செய்யும்
2.அவர் எடுத்த அமில குணத்தை ஒத்த அலைகள் நம்மை மோதுண்ட நிலையில்
3.அதே சமயத்தில் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது
4.இவரின் நிலையான அமில மோதலின் நிலையால்
5.பல நாட்கள் நாம் நம்முடன் மோதுண்ட அலைகளை அடக்கிப் பழக்கப்பட்ட நிலையில்
6.மற்றோரின் சொல்லிலிருந்து வெளிப்படும் எந்தக் குண எதிர்நிலை மோதலும் நம்மைச் சாடி
7.”அதே உணர்வுடனே நம்மையும் பேசச் செய்யும்…!”

நாம் பெற்ற ஜெபத்தின் வலு என்ன ஆயிற்று…? எங்கே போனது…?

முதலில் நம் நிலையில் பிறரின் சொல் எண்ணத்தைக் கொண்ட அமிலத்திற்கு அடிபணியலாகாது. பல நாள் நமக்குகந்த குணமுடன் வாழ்ந்த நிலையில்
1.ஒருவர் வந்து மற்றொருவரின் மேல் சொல்லப்படும்
2.எந்நிலை கொண்ட சொல்லின் அமிலங்கள் நம்மிடம் சொல்லும் பொழுதும்
3.நாம் அவர் சொல்லும் நிலையை வைத்து… “நம் எண்ணத்தைச் சிதறவிடலாகாது…!” (இது முக்கியம்)

ஆத்ம ஞானம் பெறும் வழித் தொடரில் பல நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு தடவை நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலை கொண்டு “அதன் எண்ணத்தை ஒத்த அமிலத் தன்மை உராய்ந்து கொண்டே தான் உள்ளது…” என்பதனை உணர்ந்து நம் ஆத்ம ஞானம் இருந்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்குகந்த உயர் ஞானத்தைப் பெற இன்றைய கலியில் உள்ள ஆத்மாக்களில் வழி பெறும் பக்குவம் இந்த நாகரீக உலகில் மிகவும் குறைந்து விட்டது. இன்று உணர்த்தப்படும் முறையும் ஏற்கப்படும் வடிவிலில்லை.

1.தன் உண்மை நிலையைத் தான் உணர்ந்தால்
2.தன் உயிராத்மாவின் நிலை உயரும்… ஒளிரும்…! என்ற வழித் தொடர் பெற்றே ஜெப நிலை கொண்டிடுங்கள்.

நம் முன்னோர்கள் மோட்சம் பெறுவதை எப்படி உறுதிப்படுத்துவது…?

Ursa major - Sabdharishi mandalam

நம் முன்னோர்கள் மோட்சம் பெறுவதை எப்படி உறுதிப்படுத்துவது…?

 

முதலிலே மூதாதையர்கள் மனிதனாகப் பிறந்தார்கள். தாய் தந்தையரை உருவாக்கினார்கள். தாய் தந்தையர் நம்மை உருவாக்கினார்கள். அந்தக் குல வழியில் தான் நாம் இன்று வந்துள்ளோம்.

நம் உயிர் ஒளியாக ஆனது. நுகரும் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற மனித உடலைப் பெற்ற நாம் நம் மூன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தச் சூட்சமச் சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும். இது தலையாயக் கடமை…!

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள். ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல அருள் ஒளியுடன் ஒன்றி வாழச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்திட நம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருந்திடல் வேண்டும்.

உதாரணமாகச் சிலர் எண்ணலாம். இது எப்படிச் சாத்தியப்படும் என்று…!

இன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டரில் அதில் உள்ள நாடாக்களில் எதெனெதன் உணர்வைப் பதிவு செய்கின்றோமோ அதை எல்லாம் சீராக இயக்கிக் காட்டுகின்றது. மற்ற இயந்திரங்களையும் இயக்கும் ஆணைகளையும் அது இடுகிறது. இதை ஒரு இராக்கெட்டில் உள்ள செயற்கைக் கோளுடன் பொருத்திவிடுகின்றனர்.

உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது என்றால் அல்லது நட்சத்திரம் இருக்கிறது என்றால் எதன் திசைப் பக்கம் இந்தச் செயற்கைக் கோள் அது செல்ல வேண்டுமோ அந்த நாடாக்களில் இங்கே பதிவு செய்துவிடுகின்றனர்.

அந்த நாடாக்களில் பதிவு செய்து இயந்திரத்தில் போட்ட பின் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
1.எத்திசையின் தன்மை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ
2.அந்தத் திசையில் உள்ள கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகள் இதற்குள் பட்ட பின்
3.அதன் பாதையிலே அது அமைத்து அந்தக் கோளைச் சென்றடைகின்றது இவர்கள் இராக்கெட் மூலம் அனுப்பும் செயற்கைக் கோள்.

அங்கே வட்டமிட்டு அந்தக் கோளின் உணர்வுகளை நுகர்ந்தறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும் அந்த நாடாவின் மூலமாக
1.தரையிலிருப்போர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து இங்கே பதியச் செய்து
2.அதனின் பாதையைச் சீராக அமைத்து உருவாக்குகின்றார்கள்.
3.இப்படித்தான் விஞ்ஞானிகள் செயற்கைக் கோள்களைச் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களுக்கும் அனுப்புகிறார்கள்.

இதைப் போன்று தான் நம் மூதாதையர்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அதனின் துணை கொண்டு அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

அந்த அருள் ஞானியின் சக்திகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “உந்தித் தள்ளி…!” இணையச் செய்ய வேண்டும்.

அங்கே சென்ற பின் இந்த உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. வழி காட்டிடும் அறிவின் ஒளியாக நிலை கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.

1.அதன் வழி கொண்டு அதன் வழியில் நம் முன்னோர்கள் அங்கே வளர
2.அவர்களின் உணர்வுகளை நமக்குள் பெருக்க
3.அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் அருள் ஒளி கொண்டு நம் இருளைப் போக்க நமக்கு உதவுவார்கள்.

இதற்கு முன் நாம் செய்யத் தவறிய நிலைகள் இருந்தாலும் பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் அந்த உயிரான்மாக்கள் புகுந்து இருப்பினும் அதனை நாம் இந்த வழியில்..
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் என்று
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
3.நமக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அது கிடைக்கின்றது.
4.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளிச் சுடராக நம்மையும் வாழச் செய்யும்.
5.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு கொண்டு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.நாமும் அந்த வழியிலேயே சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் தருணம் பெறுகின்றோம்.

இதிலே சொன்ன முறைப்படி செய்வோர் நிச்சயம் இதனை உணரும் பருவம் பெறுவார்கள்.

பசுவுக்கு உகந்த நற்குணங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

KOMATHA

பசுவுக்கு உகந்த நற்குணங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மற்ற மிருகங்களைப் போலவும் மனிதனைப் போலவும் பசுவிற்குப் பல எண்ணங்கள் மாறி மாறி வருவதில்லை. பசுவின் குணமே சாந்தமான.. அமைதி கொண்ட குண நலம் கொண்ட நிலை.

பசுவின் பாலை நாம் அருந்தினால்
1.அதன் குண அமிலத்தைக் கொண்ட சுவாசத்தைக் கொண்டு
2.அதன் உடலில் உதிரமான அந்தப் பாலை நாம் அருந்துவதினால்
3.அதற்குகந்த குண அமிலத்தை நாம் பெறுகின்றோம்.

மற்ற மிருகங்களிலிருந்தும் பாலைப் பெறும் சந்தர்ப்பமிருந்தாலும் நம் முன்னோர்கள் “பசுவின் பாலைத்தான்…” உயர்த்தி வழி காட்டிச் சென்றார்கள்.

அதே போல் பசுவின் குண நிலையை ஒத்த ஆவி ஆத்மாக்கள் ஆவி உலகில் இருப்பதில்லை. குறைந்த நிலையில் தான் அவை இருந்தாலும் அதன் வழித் தொடர்ச்சி பிறப்பில் வருகின்றது.

பசுவின் ஈர்ப்பிற்கு துவேஷ குணம் கொண்ட ஆக்ரோஷமான ஆவிகள் அதன் ஈர்ப்பிலும் அதன் எண்ண அணுக்களிலும் இல்லாததினால்
1.பசுவின் ஹோமம் தெளிக்கப்படும் இடத்திற்கும்
2.பசுவின் எரு சாணத்தைக் கொண்டு நடத்தப்படும் யாகங்களின் புகை மண்டலத்திற்கும்
3.பசுவின் நெய் மருத்துவத்திற்கு உயர்ந்ததாகியதற்கும்
4.பசுவின் சாணத்திலிருந்து ஆண்டவனின் விபூதியைத் திருநீறாக்கி நாம் அணிவதற்கும்
5.நம் முன்னோர்கள் பசுவைத் தெய்வமாக்கிக் காட்டினார்கள்.

இப்பொழுது புரிகிறதா பசுவின் உயர்ந்த சக்தி…!

மனிதனைக் காட்டிலும் மிருகங்களில் பலவற்றிற்குப் பல உன்னத சக்தி குணங்கள் இயற்கையிலேயே அதிகமாகப் படைக்கப்பட்டுள்ளன.

ஆனால் எதனையும் அறியும் ஆற்றல் பெற்ற மனிதனோ தன் நிலை மறந்து வாழ்கின்றான். மனித ஆத்மாக்கள் பிற உலக ஆசைகளுக்கு அழகு பெற்று வாழ விரும்புகின்றான்.

1.தன் உள் அழகை அழகாக்கி… அன்பாக்கி…
2.தன் ஆத்மாவை அழகுற வாழ வழி நடத்த வேண்டும் என்ற சத்தியத்தை உணர்ந்த
3.நம் முன்னோர்களான சித்தர்களால் விளக்கப்பட்ட உயர் ஞானத்தை நாம் ஏற்று வாழ்ந்திட வேண்டும்.