audio – ஆத்ம சுத்தி

ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் நிலை – விழிக்கும் போதும் உறங்கும் போதும் செய்ய வேண்டியது

விநாயகர் சதுர்த்தி – ஏகாதசி விரதம்

பண்டிகைகளின் சிறப்பு – தீய வினைகளை அனாதையாக்க வேண்டும் – சூரியனின் வேலை

கூட்டுத் தியானத்தின் பலன்கள் – ஆத்ம சுத்தி

கோள்கள் கவரும் சக்திகள் – தீமையைத் தடுக்கும் வழி முறைகள்

விநாயகர் சதுர்த்தி – கடலில் கரைக்கும் முக்கிய காரணம்

இரவிலே வரும் கனவுகளும் – ஆத்ம சுத்தி செய்ய வேண்டியதன் அவசியமும்

ஆத்ம சுத்தி – எமது பிரார்த்தனை

ஆக்கினை – ஆதாரம்

பிராணாயாமம் 

தீமைகளை உடலை விட்டு அப்புறப்படுத்தும் பயிற்சி


பல வகைகளில் வரும் தீமைகளை மாற்றும் நிலைகள்

கண்ணாடி அழுக்கைத் துடைத்தால் முகம் தெரியும், அதுபோல் ஆன்மாவைச் சுத்தப்படுத்துங்கள்

நாம் உருவாக்க வேண்டிய பாதுகாப்புக் கவசம்

உங்களுக்குள் பழமையில் சேர்ந்த உணர்வுகளை எப்படி நீக்கச் செய்கிறோம்

ஆன்மாவைச் சுத்தம் செய்ய நேரம் இல்லை என்று சொல்கின்றார்கள்

எலெக்ட்ரானிக் போன்று ஞானி உணர்வை எடுத்துத் தீமைகளை ரிமோட் செய்யுங்கள்

தியானப் பயிற்சி, ஆத்ம சுத்தி பயிற்சி, தீமையை நீக்கும் பயிற்சி கொடுக்கின்றோம்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அணுக்களாக விளையை வைக்கும் முறை

ஆன்மாவில் பட்ட எரிச்சலை நீக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எடுக்க வேண்டும்

நம் உடலிலுள்ள தீமை என்ற ஓட்டைகளை அடைக்கும் வழி

நம் சொல்லையும் செயலையும் புனிதமாக்கும் பயிற்சி

மன பலம் எப்படிப் பெறுவது…?

தீமைகள் புகாது தடுக்கும் நரசிம்ம அவதாரம்

தீமையான உணர்வுகளை வேக வைக்க வேண்டும்

வேகா நிலை – உயிரில் நஞ்சு அணுகாமல் காத்தவர்கள் மகரிஷிகள்

நண்பர் மேல் பதிவாகும் நல்ல உணர்வும் குறை உணர்வும் குற்ற உணர்வும் மும்முனையாக இயங்கும் நிலை

நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு திரைகளைக் கிழித்தெறிய வேண்டும்

நம்மால் நன்மை பெற்றவர்கள் நமக்கு எதிர்ப்பதமானால் என்ன செய்யவேண்டும்

நான் ஒன்றும் உங்களை மாற்ற முடியாது – நீங்கள் தான் எடுத்து மாற்ற வேண்டும்

தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…!”

குறைகளைக் கேட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

தீமைகளைச் சமப்படுத்தி நல்லதாக மாற்றும் சக்தி

ஜீவான்மாவைத் தூயமையாக்கும் வழி

நோயை நீக்கினாலும் ஊழ்வினை என்ற வித்தை மாற்ற வேண்டும்

பொருளறிந்து செயல்படும் சிந்தித்துச் செயல்படும் அருள் வழி

அதர்மத்திற்குத் துணையாகப் போனால் அதனின் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

Image

Soul Alive

அதர்மத்திற்குத் துணையாகப் போனால் அதனின் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

 

சட்டம் படித்தவர்கள் தங்களுக்குள் உயர்ந்த பண்புகளை வளர்த்திட வேண்டும் என்ற நிலை இல்லாதபடி தீமைகளுக்குத் துணை போகின்றார்கள்.

“படித்துக் கொண்டேன்…!” என்ற நிலைகள் இருந்தாலும் தர்மத்திற்காக வாதிடவில்லை. அதர்மத்திற்காக வாதிடுகின்றார்கள். இது போன்ற நிலைகளில் எந்த அதர்மத்திற்காக வாதிடுகின்றோமோ
1.நியாயத்தை அழித்து வாதிடும் உணர்வுகளை நாம் சுவாசித்தால்
2.அந்தத் தீமையின் விளைவாக சாபமிடுவோரின் உணர்வுகள் நம்மைச் சாடும்.
3.தீமை செய்வோனை நியாயப்படுத்தியும்
4.தீமை செய்யாதவனை தர்மமற்றவன் என்று காட்டப்படும் பொழுது
5.அதிலே பாதிப்படுவோரின் ஆன்மாக்கள் (அவர்கள் இறந்தபின்) உடலுக்குள் வரத்தான் செய்யும்.

இந்தப் பாவி தான்… எனக்குத் துரோகம் செய்தான்…! இவனால் தான் நான் எல்லாமே அநியாயமானது…! என்ற எண்ணங்கள் கொண்டு குறி வைக்கின்றது கூர்மையாக…! வாதிட்டவரின் உருவைத் தன் உடலுக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட பின் அவர்கள் மடிந்த பின்
1.வாதிட்டவர் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் சரி
2.அவருக்குள் புகுந்து அவரையும் துன்பத்திற்குள்ளாக்கும்.
3.தான் அனுபவித்த அதே வேதனையை அங்கே உருவாக்கி அந்த உடலையும் நிச்சயம் வீழ்த்தும்.

இப்படி அவனால் வேதனைப்பட்ட வேதனை அணுக்கள் வளர்ந்து இந்த உடலை விட்டு வெளி வந்த பின் இது பாம்பாகவும் தேளாகவும் தான் பிறக்கும்.

இன்று அதர்மத்திற்காக வாதிடலாம். பொருளும் சம்பாரிக்கலாம். புகழும் அடையலாம். ஆனால் சாப அலைகளின் பின் விளைவால் மறு பிறவியின் தன்மை விஷ ஜெந்துக்களாகத்தான் அமையும். இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்..!

வக்கீலுக்குப் படித்த காந்திஜி இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர்.
1.ஒவ்வொருவரும் உயர வேண்டும் என்று நீ எண்ணு
2.உனக்குள் அந்த உயர்வின் தன்மை வரும்.

குடும்பத்தில் குறைகள் வந்தால் குறையை நீக்கும் மெய் ஞானிகளின் உணர்வை அந்த மகரிஷிகளின் உணர்வை நீ சுவாசி…
1.உனக்குள் ஞானங்கள் தோன்றும்.
2.பாசத்தின் நிலைகள் வளரும்.
3.உனக்குள் பண்பை வளர்க்கச் செய்யும்.
4.பகைமையை அகற்றச் செய்யும்…! என்ற பேருண்மையினுடைய நிலைகளைத் தெளிவாக்கினார் நம் காலத்தில் வாழ்ந்த காந்திஜி.

அவர் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அருள் ஞானி. உலக மக்கள் அனைவரும் ஒன்றே…! என்ற நிலையைப் பறை சாற்றியவர்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து இந்த வாழ்க்கையில் அருள் உணர்வுகளை வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அருள் வாழ்க்கை வாழுங்கள். அருளானந்தம் பெறுங்கள். அதுவே அழியாத செல்வம்.

உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைந்து அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அழியாத நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழுங்கள்.

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

Image

Vali vadam - sukreevan

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

 

1.அகஸ்தியன் துருவனாகி தன் பதினாறாவது வயதில் திருமணமான பின்
2.கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து
3.நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடந்து
4.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி
5.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி நஞ்சினை வென்று
6.பேரருள் பெற்று பேரொளியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் பூமியின் வடதிசையில்
7.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
8.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதை வரிசைப்படுத்தி
9.நம் உடலிள்ள பல கோடி உணர்வுகளுக்கெல்லாம் ரெகார்டு (RECORD) செய்ய வேண்டும். அதாவது பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றோம் என்றால் அதிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் வரிசைப்படுத்தி இணைத்து மாட்டினால் தான் அந்த இயந்திரமே சீராக இயங்கும். மற்றதையும் இயக்கும்.

வரிசைப்படுத்தி மாட்டாமல் முன்னால் போடுவதை பின்னாடியும் பின்னால் போடுவதை முன்னாடி போட்டால் இடைஞ்சல் ஆகும் அல்லவா…! ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தி அதை இயக்க முடியாது.

அதைப் போலத்தான் வரிசைப்படுத்தி நாம் அந்த மெய் உணர்வின் தன்மையை நுகரச் செய்து அந்த உயர்ந்த சக்திகளை ஒவ்வொரு மனிதனும் பெறும் மார்க்கத்தை அன்று காட்டினார்கள். வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களிலிருந்து விடுபட வழி காட்டினார்கள் ஞானிகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை வேண்டித் தன் உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் காலையில் இருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் எத்தனையோ கேட்டுணர்ந்துள்ளோம். அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி உள்ளது.

அதை இழுக்காதபடி நம் உடலுக்குள் உட்புகாதபடி தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
1.இங்கே புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்தக் கதவை அடைத்தல் வேண்டும்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அடைத்து விட்டு அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
1.எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதற்கும் அந்தத் நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று சொல்லி
3.இப்படி அடைத்தவுடனே உள்ளுக்குள் வலுவாகிவிடும்.

உடலுக்குள் வலுவான பின் என்ன செய்யும்…?

கஷ்டப்பட்டதையோ துயரப்பட்டதையோ வேதனைப்பட்டதையோ இழுக்கக்கூடிய சக்தி இல்லை என்றால்
1.எதிலும் பிடிப்பு இல்லாத அந்தத் துன்பமான உணர்வின் அலைகளை
2.சூரியன் கவர்ந்து எடுத்துக் கொண்டு போய்விடும்.
3.நம் உடல்… நம் எண்ணங்கள்… நம் ஆன்மா… அனைத்தும் தூய்மையாகும்.

காற்றடிக்கும் பொழுது தூசி வீட்டுக்குள் வராமல் எப்படிக் கதவை அடைக்கின்றோமோ… அதைப் போல தீமைகள் நமக்குள் புகாதபடி நாம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…! அவ்வளவு தான்…!

சாந்த குணத்தின் வலிமையப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – “PEACE…!”

Image

Spiritual wisdom

சாந்த குணத்தின் வலிமையப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – “PEACE…!”

 

பிரிட்டனிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நம் நாட்டுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அவர்களுக்கு வந்ததற்குக் காரணம்
1.காந்திஜியின் நினைவாற்றல் தானே தவிர
போர் முறை செய்து அல்ல…!

ஆனால் இவருடைய நினைவாற்றலுக்கு எப்படி அந்த வலிமை வந்தது…?

இரு பட்சிகள் மகிழ்ந்து இருக்கும் வேளையில் ஒன்றை வீழ்த்தினான் அன்று வான்மீகி. அது துடிதுடித்துக் கீழே விழுகின்றது. அடுத்து அதனுடன் வந்த இன்னொரு பட்சியையும் அவன் வீழ்த்த அம்பை எய்கின்றான்.

ஆனால் அவன் குறிகள் அனைத்தும் தவறுகின்றது. அந்த இன்னொரு பட்சியை அவனால் வீழ்த்த முடியவில்லை.

ஏனென்றால் அந்த பட்சியின் உணர்வுகளோ தன்னை இவன் வீழ்த்துவான் என்று எண்ணவில்லை. தன் கூட வந்த பட்சி துடித்துக் கீழே விழுந்ததன் மேல் பாசம் கொண்டு அதை அணுகிச் செல்ல வேண்டும் என்றே விரும்புகின்றது.

பாசத்தின் எல்லை கடந்த உணர்வுகளை அந்தப் பட்சி வெளிப்படுத்தும் பொழுது வான்மீகி சுவாசிக்கும் உணர்வுக்குள் இது தாக்கப்பட்டு அவனுடைய குறிகள் அனைத்தும் தவறுகிறது.

இப்படி ஒரு மணி நேரம் ஆன பின் அவன் உடல் கைகள் எல்லாம் சோர்வடைகின்றது. அதன் பின் தான் வான்மீகி அந்தப் பட்சியை உற்றுப் பார்க்கின்றான்.

1.அந்தப் பட்சியின் கண்களிலிருந்து வெளிப்படும் பாச அலைகளை அவன் சுவாசித்த பின்
2.தான் செய்த தவறை உணர்கின்றான்.
3.வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு வானை நோக்கி ஏகுகின்றான்.

பட்சிக்கு இருக்கும் அந்தப் பாசம் தன்னிடம் இல்லையே என்ற அந்த ஏக்கத்தில் விண்ணிலே நினைவைச் செலுத்தும் பொழுது துருவ நட்சத்திரத்தின் அலைகள் அவன் ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டுத் தன்னை அறிகின்றான். மெய்யை உணர்கின்றான்.

ஒரு கொலைகாரனாக இருந்த வான்மீகியின் செயலாக்கங்களை அந்தப் பட்சியின் பாச உணர்வு எப்படி ஒடுக்கியதோ அதைப் போலத்தான் காந்திஜிக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்யும் பொழுது ஆங்கிலேயர்கள் அவருக்குப் பல தொல்லைகள் கொடுக்கும் பொழுதும் அங்கிருக்கும் கருப்பின மக்களை ஆங்கிலேயர்கள் துன்புறுத்தும் பொழுதும் அதிலிருந்து விடுபட வான்மீகியின் இராமாயணக் காவியத்தைப் படித்தார்.

அதன் வாயிலாக வான்மீகி பெற்ற மெய் உணர்வைக் காந்திஜி நுகரப்படும் போதுதான் தன்னுடைய இளமைப் பருவத்தில் தான் செய்த தவறுகளையும் அதனால் மற்றவருக்கு ஏற்பட்ட துன்பங்களையும் உணர்ந்தார்.

உணர்ந்தபின் தீமையிலிருந்து “மக்களை மீட்ட வேண்டும்…!” என்ற எண்ணம் வலுப் பெற்று சாந்தம் கொண்ட உணர்வுகள் கொண்டு தன் எண்ணத்தை மக்களுக்கு பதியச் செய்து மன வலிமை ஊட்டியை ஞானத்தின் அன்பு கொண்டு ஒருக்கிணைந்த நிலையில் ஒன்று சேர்த்தார்.

எதிரி என்ற நிலையில் வேடுவன் (வான்மீகி) அம்பு கொண்டு எய்யப்படும் போது அவன் தாக்கி விடுவான் என்ற நிலை இருப்பினும் பட்சி எவ்வாறு தன் பாசத்தைக் குறிக்கோளாக வைதது அதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டு வந்ததோ அதைப் போல்
1.காந்திஜியும் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டு மடிந்து விடுவேன் என்ற எண்ணவில்லை.
2.மக்களைக் காக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டு வந்தார்.
3.இதைத் தான் வலிமை என்று சொல்வது.

சாந்தத்திற்கு எத்தகைய வலிமை உள்ளது என்று செயல்படுத்திக் காட்டியர் காந்திஜி. இராமயாணக் காவியத்தின் தொடர் வரிசையில் தான் படித்துணர்ந்த தன்மையின் உணர்வு கொண்டுதான் அந்த மகான் செயல்பட்டார்.

நம்முடைய வாழ்க்கையில் ஆவேசமும் ஆத்திரமும் இருப்பினும் தன் குடும்பத்தில் சில சிலை குறைகள் இருந்தாலும் அதை எல்லாம் மாற்றிட காந்திஜி செயல்பட்ட வழியில் சாந்த உணர்வின் வலிமை கொண்டு எதனையும் சாதிக்கும் வல்லமையாக மற்றவர்களுக்கு நல் உணர்வுகளை எடுத்துரைக்கும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும்.

1.மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து வளர்த்து
2.அந்த ஞானத்தால் சாந்தத்தைக் கடைப்பிடித்து
3.அதன் வழியில் குறைகளை எடுத்து எடுத்துச் சொல்வதும்
4.அந்த வலிமை கொண்டு குறைகளால் வரும் வினைகளை எப்படி நீக்குவது என்றும்
5.இந்த உணர்வின் வேகத்தைப் பதிவு செய்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் நிச்சயம் ஒற்றுமை வரும்.
6.ஏனென்றால் நாம் எடுத்து கொண்ட அந்த உணர்வின் எண்ணங்களே நம்மை இயக்குகின்றது.

சாந்த உணர்வின் வலிமை கொண்டு மற்றவர்களை எல்லாம் தன்னுடன் அரவணைத்து இருந்தால்தான் பகைமை உணர்வுகளே மாறுகின்றது என்ற நிலையைத் தெளிவாக எடுத்து அந்த வலுவின் நிலைகள் கொண்டே செயல்பட்டவர் காந்திஜி.

ஒவ்வொரு நிலையிலும் அப்படிச் செயல்பட்டதால் தான் உலக நாடுகள் எல்லாம் அவரைப் பற்றிச் சிந்திக்கின்றது. அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு காந்திஜியின் உயர்ந்த பண்பு கொண்ட உணர்வுகள் அனைவருக்கும் தேவை என்று (இன்றும்) உணர்த்துகின்றனர்.

1.பகைமை உணர்வு கொண்டு மற்றவர்களை அழித்து நம்மை நாம் காத்துக் கொள்வதைக் காட்டிலும்
2.மனிதன் உடலிலும் சரி நாட்டிலும் சரி அந்தத் தீமையை விளைவிக்கும் எண்ணங்களை மாற்றி
3.நமக்குள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் அந்த பகைமையின் நிலைகள் மாறும்.
4.மனிதன் மகிழ்ச்சி நிலை பெறுவான் என்ற உணர்வை உலகுக்கே ஊட்டினார் காந்திஜி.
5.இதன் துணை கொண்டு தான் உலகம் அனைத்துக்கும் சுதந்திரம் கிடைத்தது இந்தியாவிற்கு மட்டுமல்ல…!

நாம் ஒவ்வொருவரும் சாந்த குணத்தின் வலிமையை அவசியம் பெற வேண்டும்.

ஆத்மீக வழியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Spiritual angel

ஆத்மீக வழியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

ஆத்மீகம் என்பது என்ன..?

ஆத்மீக வழிக்குச் செல்வதற்குப் பல நாள் பல பூஜைகள் செய்து… பல பாடல்களைப் பாடி… ஆண்டவன் திருப்பாதத்தை நமஸ்கரித்து வேண்டி… எண்ணத்தையும் செயலையும் அவ்வாண்டவனுக்கே அர்ப்பணித்து… ஆண்டவனின் அருள் ஒன்று பெற்றால் இவ்வுலகமே பெற்ற பூரிப்பு எனக்குக் கிடைக்கும்…!

அவ்வாண்டவனுக்குத் திருப்பணி நடத்துவதுவே… திகட்டாத இன்பம் என்றெல்லாம் நாம் நம்மில் பலரும் நல்லெண்ணம் கொண்டு வழி தெரிந்தும்… தெரியாமலும்…! நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற வழிதனை அவன் பாதம் பணிந்து நின்றே… பல விரதம் பல பூஜை செய்தே… செல்கின்றோம் ஆத்மீக வழி காண…!

1.ஆத்மீக வழியில் உள்ள ஆண்டவன் யாரப்பா..?
2.இந்நிலையில் பூஜிப்பவன் எல்லாம் ஆத்மீக வழியை அடைந்தவனா…?
3.அவன் எண்ணும் ஆண்டவன் யாரப்பா…?

இவ்வழி முறைகளைக் கொண்ட “ஆத்மீக வழிக்கு நான் சென்றுள்ளேன்…!” என்பவனின் எண்ணத்தில்
1.சிறிதளவு புகழ்ச்சிக்கு மகிழும் தன்மையும்
2.இகழ்ச்சிக்கு வருந்தும் தன்மையும் உண்டென்றாலும்
3.அவன் செல்லும் ஆத்மீக வழிக்குப் பயனேதும் இல்லையப்பா…!

நான் ஆண்டவனை வேண்டுகின்றேன் ஆத்மீக வழிக்குச் செல்வதற்குத்தான்…! ஏன் அந்த முருகன் வந்து எனக்கு வழிகாட்டக் கூடாதா…? என் தவறுக்கு – தவறுக்கு முன் தடுக்கும் வழியை அம்முருகன் செய்யக் கூடாதா…? நான் நினைப்பதுவும் செயல்படுத்துவதுவும் அவனே அல்லவா…! என்றே
1.அவ்வாண்டவனைப் “பிற ரூபத்திலேயே…..!”
2.நாம் ஆத்மீக வழியைக் கண்டுணரப் பார்க்கின்றோமப்பா.

ஆத்மீக வழியென்றால் என்ன…? ஆண்டவன் என்பதன் நிலையென்ன…? என்றெல்லாம் பல நிலைகளில் விளக்கியுள்ளேன்.
1.நம்முள் உள்ள ஆண்டவனை…
2.நாம் எண்ணும் சக்தி கொண்டு…
3.நாம் எண்ணும் வழிக்குத்தான்…
4.எவ்வெண்ணத்தில்… எச்சுவாச நிலையைப் பெறுகின்றோமோ…
5.அந்நிலை கொண்டேதான் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையும் வந்தடைகிறது. (இது முக்கியம்)

முன் ஜென்மத்தில் நாம் விட்ட சப்த அலைகளும் நாம் இஜ்ஜென்மத்தில் வாழும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளதினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்ட சுவாசத்தின் முன் ஜென்மத்தின் சப்த அலைகளும் இஜ்ஜென்மத்தின் சப்த அலைகளும் கலந்தேதான் நாம் சுவாசம் எடுக்கின்றோம்.

இக்காற்றினிலே பரிசுத்தமான காற்று… நிர்மலமான காற்று… என்ற நிலை இல்லையப்பா. இக்காற்றில் கலந்துள்ள சப்த அலைகளில் பலர் எடுத்த பலர் எடுத்த என்னும் பொழுது இப்பூமியில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டுள்ள
1.ஜீவனுடன் உள்ள எல்லா சப்த அலைகளும்
2.ஜீவனில்லா இயந்திரங்களின் சப்த அலைகளும் இக்காற்றில்தான் கலந்துள்ளன.

நாம் எடுக்கும் சுவாச நிலைகொண்டு நம்மைச் சுற்றியுள்ள நாம் பிறவி எடுத்த இப்பிறவி மட்டுமல்ல அணுவாக உதித்த காலம் முதற் கொண்டு நாம் விட்ட சப்த அலைகளும் அனைத்துமே நம்மைச் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

நம்மில் கலந்துள்ள இச்சப்த அலைகளில் இஜ்ஜென்மத்தில் நம் எண்ணமும் செயலும் நல்லவைகளாக இருந்திருந்தாலும் முன் ஜென்மத்தின் நன்மை தீமைகள் நம்மைச் சுற்றிக் கொண்டுள்ளதினால் அதனின் இயக்கமும் வரும்.

எண்ணத்திலிருந்து வருவதுதான் குணம். பல ஜென்மங்களின் தொடர்பு கொண்டுதான் நாம் இன்று வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் எப்படி நன்மை தீமை இருந்தன என்கின்றீர்…? என்பீர்கள்…! முன் ஜென்மத்தின் குறையினால் தான் ஜென்மத்தில் மீண்டும் உடல் பெற்று இங்கே வந்துள்ளோம்.

நாம் வாழும் வாழ்க்கையில்
1.நாம் ஆத்மீக வழிக்குச் சென்றிட
2.ஜெபம் செய்து ஆண்டவனின் திருப்பணி செய்து வாழ்வது மட்டும் வழியல்ல…! என்று உணர்தல் வேண்டும்.
3.ஆத்மீக வழிக்குச் செல்லும் வழிமுறையை நல் வழியாக அமைத்துச் சென்றிட வேண்டும்.

இக்காற்றினால் கலந்துள்ள நன்மை தீமை கொண்ட சப்த அலைகளில்… “நல்லதையே…!” நம் சப்த அலைகளில் ஈர்க்கும் சுவாச நிலைபெற்ற அந்த ஜெப நிலையை நாம் அடையும் பக்குவத் தன்மைக்கு வர வேண்டும்.

இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் மன நிலையை அடிபணிய விடாமல் நம் எண்ணமும் சுவாசமும் நம்முள் உள்ள அவ்வாண்டவனைக் கண்டுணர்ந்து
1.நம்மை ஆட்டுவிக்கும் அச்சக்தி நம்முள் உள்ள பொழுது அச்சக்தியை ஆண்டவனாக்கி
2.தீய வாழ்க்கையை விட்டகற்றி
3.கோபத்திற்கும் பகைக்கும் போற்றலுக்கும் நம்மை நாம் அடிபணிய வைத்திடாமல்
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு (ஆத்ம சுத்தி)
5.அன்பு கொண்டு அறத்துடன் வாழ்பவன் ஒவ்வொருவனுமே
6.ஆத்மீக வழிக்குச் சென்ற ஆண்டவன் ஆகின்றான் என்றுணர்தல் வேண்டும்.

ஆகவே ஆத்மீக வழியின் வழியறிந்து அன்பென்னும் சத்தியத்திற்கு அன்பு காட்டி அன்புடனே அருள் கொண்டு வாழ்ந்திடுங்கள்.

இவ்வுலகினில் மட்டுமல்லாமல் இவ்வுலகுடன் தொடர்பு கொண்ட எல்லா உலகிலும் (அகண்ட அண்டத்திலும்) உள்ள நிலையை அறிந்து கொள்ள முடியும்.
1.அவரவர்கள் எந்த எண்ணத்தை எண்ணுகின்றார்களோ
2.அந்த நிலையிலிருந்து அமைவதுதான் அவரவர்களின் நிலையெல்லாம்.

நம் உடலுக்கு நாமெடுக்கும் ஆகாரம் கொண்டுதான் அவ்வுடல் நிலை உள்ளது. இவ்வுடல் என்னும் கூட்டைப் பாதுகாத்திடவே பரிபக்குவ நிலை பல செய்கின்றோம். அதைப் போல
1.இவ்வுடலுடன் கலந்துள்ள
2.இவ்வுடலையே நடத்திச் செல்லும் ஆண்டவன் என்னும் ஆத்மாவுக்கு
3.ஆத்மீக வழி என்ற அன்பு கொண்ட அன்னமிட்டே வளர்த்திடுங்கள்.

மனதை அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Bowing and praying

மனதை அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும். நாம் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நாம் உண்ணும் உணவு நல்ல மணமாகவும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது.

அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு “அமிழ்தமாக… அரும் பெரும் சுவை கூடியதாக… நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது…!”

ஆனால் நாம் நமக்குள் பல கலக்கங்கள் பல கஷ்ட நிலைகள் சோர்ந்த நிலை கொண்டு மனச் சங்கடத்துடன் உள்ள பொழுது நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலும் மனமும் பெரும் சங்கடத்துடனே ஏற்று அதிலுள்ள சுவையும் நம் நாவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாமல் நம் உடல் நிலையும் அதனால் பாதிக்கப்படுகின்றது. நோய் வரக் காரணமாகின்றது.
1.ஒன்று போல் உணவை எல்லோரும் உண்டாலும்
2.அவரவர்கள் நம் மன நிலையைப் பொறுத்துத்தான் உடல் அவ்வாகாரத்தை எடுத்து நம் ஆத்மாவிற்கு அளிக்கிறது.

அதைப் போன்று தான் ஒவ்வொருவரும் தன் சுவாச நிலையும் எண்ண அலைகளும் கொண்டுதான் இவ்வுயிர் இவ்வுடலை இயக்கி வாழ்கின்றோம்.

எப்படி ஒரு பொருளையோ நாம் சமைக்கும் சமையலையோ நம் எண்ணத்தை அதன் மேல் செலுத்திப் பக்குவப்படுத்திப் பதம் பார்த்துச் செய்கின்றோமோ
1.ஏனென்றால் எந்த ஒரு சமையலையும் செய்யும் பொழுது
2.அதன் பதம் அறிந்து செய்தால்தான் அது முழுமை அடைகிறது.

அதைப் போலத்தான் இவ்வுடல் என்னும் கூட்டை
1.இவ்வுள்ளத்தினாலும் இச்சுவாசத்தினாலும் தான் இவ்வுடலுக்குப் பதம் அறிந்து
2.சந்தோஷ நிலை – கோப நிலை என்ற நிலையில் நாம் நம்மைச் சமமாக நிலைப்படுத்திக் கொண்டு
3.இவ்வுடலையே பக்குவப்படுத்தி பதம் அறிந்து
4.நாம் நம் உயிராத்மாவை வணங்கி வாழும் நிலைக்கு நம்மை நாம் பதப்படுத்தி வாழ்ந்திட வேண்டுமப்பா.

நம்மில் நம்மைச் சுற்றி இருக்கும் பல அணுக்களின் உந்தலுக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்திடாமல் “நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்…!”

1.நாம் எடுத்திடும் சுவாச நிலைகள் எல்லாம் நம் உடலுக்கு எந்தெந்த நிலையில் நாம் எடுக்கின்றோமோ
2.அதைக் கொண்டுதான் நன்மையும் தீமையும் அமைகின்றது என்பதனை உணர்ந்து
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச் சமப்படுத்தி வாழ வேண்டும்.

இப்பாட முறை கொண்டு நீங்கள் பகுத்தறிந்து உணர்ந்து நமக்கு முன் உபதேசித்த பல மெய் ஞானிகளின் அருள் வழியில் நடந்து ஏற்றமுடன் நல் எண்ணம் கொண்டே பதப்படுத்தி வாழ்ந்திடுங்கள் பக்குவ நிலையில்.

1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல
2.இவ்வுலகனைத்திலும் உள்ள உயிரணுக்கள் வேறல்ல.
3.அச்சக்தியின் அருளில் உருளும் இவ்வுலகத்தில் உதித்துள்ள உயிரணுக்கள் எல்லாமே ஒரே சொந்தம் தான்.

நம்மை நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை. நம்முள் கலந்ததுதான் எல்லாமே. அந்த எல்லாவற்றிலும் கலந்துள்ளவர் தாம் நாமுமே.

“நான்…!” என்ற தனி நிலை இல்லாத நாம் இவ்வுருளுகின்ற உலகுடன் உலகமாகச் சுற்றி நாம் பெற்ற அருளை நம்முள் ஈர்த்து வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம்.

நல் மனத்துடனும் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம்.

பகையை அகற்றி ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழும் வழி முறை…!

Image

mahatma-gandhi

பகையை அகற்றி ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழும் வழி முறை…!

 

மக்களைக் காக்க வேண்டும் என்று மகாத்மா காந்திஜி எண்ணினார். உயர்ந்த பண்பான எண்ணங்கள் கொண்டு பகைமையற்ற உணர்வைத் தனக்குள் எடுத்து அவரின் ஆன்மா பிரிந்து சென்றாலும்
1.அதற்கு இருப்பிடம் தெரியாது போய்விட்டது.
2.இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவர் எல்லை எது…? என்ற நிலைகள் இல்லாது போய்விட்டது.
3.ஆகவே காந்திஜியின் உயிரான்மாவை நீ விண்ணுக்குச் செலுத்த வேண்டும்…! என்று குருநாதர் சொன்னார்.

நான் அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்து இருக்கிறேன். காந்திஜி மன உறுதி கொண்டு செயல்பட்டது போல உன் வாழ்க்கையில் இந்த அருள் சக்தியை நீ செயல்படுத்துவாயாக…! என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டினார்.

(ஏனென்றால் எனது (ஞானகுரு) குடும்பமும் அன்று அரசியலில் தான் இருந்தது. அதைப் போல அன்றிருந்த பெரும் பகுதியானவர்கள் எல்லாம் தேசிய அளைவில் அரசியலில் தொடர்புடையவர்கள் தான்.)

குருநாதர் அந்த உண்மையை எடுத்துக் காட்டி மக்களை நல்வழிபடுத்திய அந்த உயிரான்மாவை நீ எப்படி விண் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்ன முறைப்படி விண் செலுத்தி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தேன்.

இதை எதறாகச் சொல்கிறோம் என்றால் நம் உடலுக்குள் பல பகைமை உணர்வுகள் உண்டு. நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தூண்டிக் கொண்டிருக்கும் அந்தப் பகைமை உணர்வுகள் செயலற்றதாக மாற்ற வேண்டும் என்றால் காந்திஜியின் நினைவு கொண்டு நம் எண்ணத்தால் வலு கொண்டு செயல்படுத்தும் நிலைகளை நுகர்தல் வேண்டும்.

நமக்குள் பகைமையற்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

கொடுமையான செயல்களையும் தவறு செய்வோரின் உணர்வுகளையும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு இருந்தால் அதை நுகர்ந்தறிந்த பின்
1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் போதும்
2.அந்தத் தவறு செய்யும் உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் விளையும்.
3.நம்மைத் தவறுள்ளோர்களாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து மனிதன் விடுபட வேண்டும். மகான் என்ற நிலைகள் அன்று வாழ்ந்த காந்திஜியை நினைவு கொண்டு அவர் பெற்ற அரு:ள் ஞானத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.தீமைகள் செய்யும் எண்ணங்களை நமக்குள் உருவாக்காதபடி
2.தீமை இல்லாத உடலாக நமக்குள் உருவாக்கி
3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும் என்றும்
4.தீமையற்ற நாடு உருவாக வேண்டும் என்றும்
5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்றும்
6.காந்திஜி வழியில் அவருக்குள் பிறக்கச் செய்த அருள் ஞானத்தின் நிலைகளை
7.நமக்குள் அருள் ஞானத்தின் சகதியாக உருவாக்குதல் வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய வழியில் அவர் பெற்ற அருள் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்கே இதை நினைவு கூறுகின்றோம்.

மற்றவர்கள் யாரையும் குறை கூறாது தன்னைத் தானே உணர்ந்தால் ஒழிய… பிறருக்குப் போதிக்கவும் முடியாது… மற்றவர்களைத் திருத்தவும் முடியாது…!

Image

Self realize

மற்றவர்கள் யாரையும் குறை கூறாது தன்னைத் தானே உணர்ந்தால் ஒழிய… பிறருக்குப் போதிக்கவும் முடியாது… மற்றவர்களைத் திருத்தவும் முடியாது…!

 

உலக நிலைகளில் எடுத்துக் கொண்டால் அரசியலில் யார் முன்னணியில் இருக்கின்றார் என்று பத்திரிக்கைகளில் பார்த்தே இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

சட்ட விரோதமான செயல்களைச் செய்பவனும் நூறு பேரை அடக்கக் கூடியவனாகவும் அவனைக் கண்டாலே மக்கள் அஞ்சக்கூடிய நிலைக்குத் தான் இன்றைய நிலைகளில் அரசியல் பண்புகள் வளர்ந்து விட்டது. நீதியும் நேர்மையும் நல்ல ஒழுக்கங்களும் சீர்படும் பண்புகளும் மறைந்து விட்டது.

அன்றைய காலத்தில் பிரிட்டன் மற்ற உலக நாடுகளை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த பொழுது இதைப் போன்ற நிலைகளைக் கண்டவர் தான் காந்திஜி. இதிலிருந்து விடுபட வேண்டும் என்று தான் அன்று அவர் செயல்பட்டார்.

1.தன்னைத் தானே உணர்ந்தால் ஒழிய…
2.பிறருக்குப் போதித்து தன் நிலையைச் செயல்படுத்த முடியாது.
3.மற்றவர்களைத் திருத்த முடியாது என்ற நிலையை முதலிலே தான் தனக்குள் எடுத்துக் கொண்டு
4.அந்த உண்மைகளை அறிந்து அதன் வழியில் தான் செயலாக்கினார்.

பல கடுமையான தொல்லைகளை காந்திஜி அனுபவித்தாலும் அவர் யாரையும் குறை கூறாது உணர்வின் நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு
1.மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.பகைமையை எப்படி அகற்ற வேண்டும்…?
3.பகையற்ற வாழ்க்கையை நாம் எப்படி வாழ முடியும்…?
4.அரசியலில் இருந்தாலும் அதில் தவறும் போது அதை வழிபடுத்தி நடத்தும் முறைகள் என்ன…?
5.மக்களாட்சி என்ற நிலைகள் வரப்படும் போது மக்கள் நாம் எப்படி வாழ வேண்டும்…?
6.அரசியல் என்றால் என்ன…? என்ற நிலையில் மக்களை காக்கத் தான் அரசு…! என்று உணர்த்தினார்.

அரசில் தலைமை தாங்கும் ஒவ்வொருவரும் நாட்டு மக்களைப் பேணிக் காத்து அறநெறிகள் கொண்டு அரவணைத்து எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்ற நிலையை அவர் செயல் வடிவில் செய்து காட்டினார்.

மக்கள் எல்லோரும் தன்னைத் தான் உணர வேண்டும் என்ற அந்த உண்மையைத்தான் அவர் தெளிவாக உணர்த்தினார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னும் அதைத்தான் சொன்னார்.

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பவர்களே தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாட்சி செய்ய வேண்டும். பல கட்சிகள் வேண்டாம்…! என்று அன்றே சொன்னார்.

ஏனென்றால்
1.தன் உடலுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
2.இந்த உடலில் சேர்க்க வேண்டியது எது…? என்பதை உணர்ந்து
3.தான் கற்றுணர்ந்த உணர்வை அந்த வான்மீகி மாமகரிஷி பெற்ற அருள் சக்தியை தனக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டார்
4.அதனையே பெற வேண்டும் என்று ஏங்கி… அதனையே தான் நுகர்ந்து.. அதன் வழிகளிலேயே நடந்தார்.
5.தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உயர்ந்த குணங்களைத் தனக்குள் எடுத்தார்… அதையே வளர்த்தார்…!

அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் ஒவ்வொருவரும் தன்னைத் தான் உணர்ந்து இந்த வாழ்க்கையை வழி நடத்தினோம் என்றால்
1.நம் நல்ல குணங்களைக் காக்க முடியும். நல்ல பண்புகளை வளர்க்க முடியும்.
2.இந்தப் பிறவியில் நாம் பிறவியில்லா நிலை என்ற அழியாத நிலை பெற முடியும்…!